<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 27 Aug 2026 07:23:39 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சமூகநீதி துறையில் புதிய அறிவிப்புகள்- அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:21:18.033Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people#comments</comments><guid isPermaLink="false">4a8a5be9-6b87-4195-9f03-3d3446dc2bfe</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:15:26.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்த 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும். </p><p>* தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு. இத்திட்டத்தில் 2500 காங்கிரிட் வீடுகள் வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும். </p><p>* தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும். </p><p>* ஆதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும். </p><p>* மாணவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும். </p><p>* உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பண்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும். </p><p>* பழங்குடியினர் மருத்துவம், பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்க சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ள அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தப்படும். </p>]]></content:encoded></item><item><title>சுஸ்லான் நிறுவனம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a11e57ce-c4db-444c-9979-815135068b13</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:05:34 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:05:34.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNAssembly,ஆந்திரா,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,Suzlon,சுஸ்லான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தொழிற்பணிகளை மேற்கொண்டு வரும் பிரபல <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan">சுஸ்லான் நிறுவனம்</a> அண்டை மாநிலமான ஆந்திராவிற்குத் தனது முதலீடுகளை முழுமையாக மாற்றிவிட்டதாகப் பரவி வரும் வதந்திகளுக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமான விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 111-ன் கீழ் திருத்த அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், சுஸ்லான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்குவதோடு, தொழில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளதாக தெளிவுபடுத்தினார்.</p><h2>ரூ.500 <strong>கோடி புதிய</strong> முதலீடு மற்றும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு</h2><p>முந்தைய காலங்களில் தமிழ்நாட்டை விட்டுச் சென்ற குறிப்பிட்ட முன்னணி நிறுவனம் ஒன்று, தற்போதைய அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p>ஒரு தொழில் நிறுவனம் ஒரு மாநிலத்தில் செயல்படும் அதேவேளையில், சந்தை வாய்ப்புகளுக்காக அண்டை மாநிலங்களிலும் தனது முதலீடுகளை மேற்கொள்வது இயல்பான வர்த்தக நடைமுறையாகும். எனவே, ஆந்திராவில் சுஸ்லான் செய்துள்ள ஒப்பந்தங்களைத் தமிழ்நாட்டுடன் தவறாகத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் தொழிற்பணிகள் தடங்கலின்றித் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.</p><h2>சின்னப்பிள்<strong>ளை சுயஉதவிக்</strong> குழு </h2><p>பேரவை விவாதத்தின் போது, மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை சுயஉதவிக் குழுவின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாகத் தாம் பேசிய உரையின் சில பகுதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு செய்திகளில் வெளியானதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு தவறாகப் பதிவான கருத்துகள் பேரவைக் குறிப்பில் இருந்து முறைப்படி திருத்தப்பட்டுச் சரியான வடிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-resolution-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">e22d9c5b-058c-4546-ad28-a5c3cd3e8f6b</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:38:54 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:38:54.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,dengue fever,TN assembly,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tqy2o1yg/arunraj.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/tqy2o1yg/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> இன்று தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின், நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, தி.மு.க. எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், டெங்கு காய்ச்சல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். </p><p>இத்தீர்மானத்தின் மீது முதலில் பேசிய எடப்பாடி பழனிசாமி, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில் கட்டுப்பாடு நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். </p><h2><strong>தளி ராமச்சந்திரன் எம்எல்ஏ</strong></h2><p>தமிழகம் முழுவதும் இன்றைக்கு டெங்கு, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெருமளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே டெங்கு, மலேரியா ஆகியவற்றை கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார். </p><h2><strong>சிவகுமார் எம்எல்ஏ</strong></h2><p>டெங்கு, மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த அவையின் மூலமாக அறிய விரும்புவதாக தெரிவித்தார். </p><h2><strong>தி.மு.க. எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம்</strong></h2><p>இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் என்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. முந்தைய ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டதை புள்ளி விவரங்கள் மூலம் நாம் அறியலாம். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு உடனடியாக மருத்துவ முகாம்களை அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><h2><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong></h2><p>டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வீடு வீடாக கண்காணிப்பு.  கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 103 தமிழர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">4fded28d-bd36-44e8-a975-f55684198376</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:27:58 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:27:58.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,சட்டசபை,TN Assembl,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/11k9wg0k/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/11k9wg0k/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெருவெள்ளம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் ஆற்றிய விளக்க உரை-</p><p>நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2>வெள்ள பாதிப்<strong>பு நிலவரம்</strong></h2><p>கும்பகோணம் ‘<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue">சூப்பர் யாத்ரா</a>’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் ஆன்மீகச் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில், நடுவில் சென்ற பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. அதேபோல, சென்னையின் ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலமாக 49 தமிழர்கள் நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நேபாள அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். வெள்ளத்தில் சிக்கிய ஒரு பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்கள் வேறு மாற்றுப் பாதை வழியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தொடர்புகொ<strong>ள்ளத் தொடர் முய</strong>ற்சிகள்</h2><p>மேலும், மகாதேவ் கைலாஷ் யாத்ரா மூலம் சென்ற 49 பேரின் தற்போதைய நிலையை அறியத் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் மூலம் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக அனைவரையும் பாதுகாப்பாகத் தமிழ்நாடு அழைத்து வரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்:  தமிழர்களை உடனடியாக மீட்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/calling-attention-motion-regarding-tamils-stranded-in-nepal-members-urge-immediate-rescue-of-the-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/calling-attention-motion-regarding-tamils-stranded-in-nepal-members-urge-immediate-rescue-of-the-tamils#comments</comments><guid isPermaLink="false">7dfb5469-6870-44a1-939f-8b5613848885</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:13:27.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dfb84dz0/Assembly01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/dfb84dz0/Assembly01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று நேபாள வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</strong> </h2><p>டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் மீட்பு குழு அமைத்து உடனடியாக விவரம் சேகரிக்க வேண்டும் என்றார். </p><h2><strong>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</strong></h2><p>நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை தேவை. சுற்றுலா செல்வோருக்கு மாநில சுற்றச்சூழல் பற்றி முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong></h2><p>டெல்டா பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், </p><p>கேள்வி நேரம் நடக்கும் போது துறை செயலாளர்கள் அவைக்கு வந்து குறிப்பு எடுக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும். எந்தெந்த துறை பிரச்சனை வரும்போது அந்தந்த அரசு துறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர்.</p><p>திமுக எம்எல்ஏ கே.என்.நேரு</p><p>நேரலை என்பது எப்போதும் இருப்பது தான். எனவே துறை செயலாளர்கள் இருக்க வேண்டும். முதலமைச்சர் இல்லையென்றால் முதன்மை செயலாளராவது இருக்க வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 57 தமிழர்கள் மாயம்- போர்க்கால அடிப்படையில் மீட்க சட்டசபையில் எதிர்கட்சிகள் முழக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-flood-57-tamils-missing-opposition-demands-war-footing-rescue#comments</comments><guid isPermaLink="false">18eed60f-7f39-456b-9e5b-c4a111bac3dd</guid><pubDate>Thu, 27 Aug 2026 06:05:09 +0000</pubDate><atom:updated>2026-08-27T06:05:09.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,CM Edappadi palaniswami announces,nepal flood,சட்டசபை,TN Assembl,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin   -Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xxf5j18j/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரில் கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர நிலவரம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments">தமிழ்நாடு சட்டசபையில்</a> விவாதம் நடைபெற்றது.</p><p>இதில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நேபாளத்தில் மாயமான தமிழர்களை மீட்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. நேபாள வெள்ளத்தில் 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட பலர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநில அரசு உடனடியாக அமைத்துள்ள உதவி எண்களுக்கு வந்த அழைப்புகள் எத்தனை, அதன் பேரில் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>அதிமுக <strong>பொதுச்செயலா</strong>ளர் இபிஎஸ் மற்றும் பாமக வலியுறுத்தல்</h2><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலிருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 57 பேரின் நிலையை சுட்டிக்காட்டினார். ஈஷா மையம் சார்பிலும், தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகவும் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பக்தர்கள் தற்போது தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பாக மீட்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் பாமக சட்டமன்ற உறுப்பினர், மாயமான 57 தமிழர்களில் 20 பேர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ மற்றும் காவல் முகாம்களில் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மீதமுள்ள 37 பேரைக் கண்டறியும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்த விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்புகொள்ள 24 மணி நேர உதவி மைய எண்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: முதலில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்குமாறு அமளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-dmk-and-admk-members-arguments#comments</comments><guid isPermaLink="false">1f4dbb1f-bcc3-4c5c-8706-9c8f1aa80073</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:48:18 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:48:18.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,nepal flood,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/t8do3415/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> ஒருநாள் விடுமுறை பின் இன்று கூடியது. சபை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சம் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும் கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார். </p> ]]></content:encoded></item><item><title>மோடி அரசின் துரோகப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறுகிறது- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-modi-govt#comments</comments><guid isPermaLink="false">46c3d081-0c0f-48f2-a114-04226e5a6e1b</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:19:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:19:13.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sarueuiu/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தமிழகத்திற்குச் சேர வேண்டிய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியைத் தடுத்து நிறுத்தி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 5,109 கோடியை விடுவிக்காமல் வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.</p><p>தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.1,788 கோடி, 2025-26 இல் ரூ.1,496 கோடி, நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.1,825 கோடி என மொத்தம் ரூ.5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பெயரளவில் RTE திட்டத்திற்கு ரூ.714 கோடியை மட்டும் பெயரளவுக்கு விடுவித்துவிட்டு, பள்ளிக் கல்விக்கான ஒட்டுமொத்த நிதியையும் பிடித்து வைத்துப் பிளாக்மெயில் செய்வது வெட்கக்கேடானது.</p><h2><strong>கடுமையான நெருக்கடி</strong></h2><p>மத்திய அரசின் நிதியுதவி இல்லாத போதிலும், தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,014 கோடியையும், நடப்பாண்டில் ரூ.647 கோடியையும் ஒதுக்கிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால், மோடி அரசின் இந்த அதிகார மமதையால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் பள்ளிக் கட்டமைப்புப் பணிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>மும்மொழிக் கொள்கை விலக்கு உள்ளிட்ட தமிழகத்தின் நியாயமான குரலை நசுக்கி, பி.எம்.ஸ்ரீ. மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) கட்டாயமாகத் திணிக்கத் துடிக்கும் மோடி அரசின் அரசியல் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா? இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.</p><p>தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அநீதியை உடனடியாகக் கைவிட வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய ரூ.5,109 கோடி கல்வி நிதி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்கக் கோரி மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை ஆழ்வார்பேட்டையில் அதிநவீன கண் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்: முதலமைச்சர் விஜய் பங்கேற்று தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/advanced-eye-surgery-chennai-launch-by-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">96e374fd-5c17-45ba-8c33-61307f1f7f96</guid><pubDate>Thu, 27 Aug 2026 05:07:20 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:07:20.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Dr. Agarwal&apos;s Eye Hospital,Alwarpet eye hospital,ஆழ்வார்பேட்டை,டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xanh32r0/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் புதிய அதிநவீன கண் அறுவை சிகிச்சை தொழில்நுட்பத்தின் அறிமுக விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிய மருத்துவ வசதிகள் மற்றும் நவீன கண் அறுவை சிகிச்சை முறைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.</p><h2>மருத்துவத் து<strong>றையில் புதிய தொழில்</strong>நுட்ப மைல்கல்</h2><p>பொதுமக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சைகளை மிகக் குறைந்த நேரத்திலும் துல்லியமாகவும் வழங்கும் நோக்கில் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly">நவீன அறுவை சிகிச்சை</a> முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண் கண்புரை, விழித்திரை பிரச்சனைகள் மற்றும் ஒளிவிலகல் குறைபாடுகளை அதிநவீன லேசர் மற்றும் கணினி சார்ந்த கருவிகளின் உதவியுடன் மிகக் குறைந்த காயம் மற்றும் விரைவான குணமடையும் வசதியோடு மேற்கொள்ள இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.</p><h2>மருத்து<strong>வ நிபுணர்கள் பங்</strong>கேற்பு</h2><p>இந்த அறிமுக விழாவில் அகர்வால் கண் மருத்துவமனையின் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள், மூத்த நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். நவீன கருவிகளின் செயல்பாடு மற்றும் சிகிச்சையின் நன்மைகள் குறித்து மருத்துவக் குழுவினர் நேரில் விளக்கமளித்தனர். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு இப்புதிய சிகிச்சை முறை பெரும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">5f22d212-4fc0-4d16-87e3-92a3bcb84791</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-27T05:00:18.550Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய் </a></p><p>* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p><p>* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p><p>* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes">ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</a></p><p>* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!</p><p>* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case">3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி</a></p><p>* பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><p>*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi" rel="nofollow">பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ </a></p><p>* சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>* விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்!</a></p><p>* தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனையானது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move" rel="nofollow">ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம் கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஸ்</a></p><p>* நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? </p><p>* சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opportunities-for-12-newcomers-in-the-union-cabinet">மத்திய மந்திரி சபையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு- பிரதமர் மோடி அதிரடி முடிவு</a></p><p>* மந்திரிசபை மாற்றத்தின் போது இளம் மந்திரிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  </p><p>* 2025-ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மந்திரிகள் 51 முதல் 70 வயதை கொண்டவர்களாகவும், 24 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu">தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சுகாதாரத்துறை எச்சரிக்கை</a></p><p>* தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. </p><p>* லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9">நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?- தினகரன் கேள்வி</a></p><p>* லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>* விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/singapore-has-announced-a-major-expansion-of-family-support-as-its-fertility-rate-fell-to-a-record-low">குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.52 லட்சம்: எங்கு தெரியுமா?</a></p><p>* ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை.</p><p>* இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nsa-ajit-doval-to-hold-india-china-boundary-talks-with-wang-yi-in-beijing">சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு</a></p><p>* இந்​தி​யா- சீனா இடையி​லான 25-வது சுற்று பேச்​சு​வார்த்தை பீஜிங்​கில் நடை​பெற்​றது.</p><p>* சீன வெளி​யுறவு மந்திரியை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் சந்​தித்​துப் பேசி​னார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi" rel="nofollow">நேபாளம் வெள்ளப்பெருக்கு: மனிதாபிமான உதவிகளை வழங்க தயார்..!- பிரதமர் மோடி</a></p><p>* நேபாளம் பெருவெள்ளத்திற்கு கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே காரணம் என கூறப்படுகிறது.</p><p>* வெள்ளத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-229-for-6-wickets-in-second-innings-against-india-second-test">இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அபார பந்துவீச்சு: வெற்றியை நெருங்கும் இந்தியா</a></p><p>* இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இந்தியா வெற்றி பெற இன்னும் 4 விக்கெட் தேவை </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/death-toll-in-nepal-flash-flood-rises-to-46-officials">நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு</a></p><p>* அதிகாரிகள் தற்போதைய நிலவரத்தை ஆய்வுசெய்து வருகின்றனர்.</p><p>* நேபாள பிரதமர் பாலன் ஷா அமைச்சரவையின் முக்கிய அவசரக் கூட்டத்தினை கூட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு - சட்டசபையில் அமைச்சர் அருண் ராஜ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inspection-of-all-hospitals-in-tamil-nadu-minister-arun-raj-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">9e33b084-d1ec-4154-b377-5ddb8a987214</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:31:36 +0000</pubDate><atom:updated>2026-08-27T04:31:36.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/yghrzg4w/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீலாது நபியை முன்னிட்டு நேற்று சட்டமன்றம் நடைபெறவில்லை. ஒரு நாள் விடுமுறையை தொடர்ந்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026">சட்டசபையில் இன்று</a> சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><h2>கேள்வி பதில்</h2><h3>பாலங்கள்</h3><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p> <p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p> <p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. </p><p>மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் தற்போதைய சூழ்நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.</p><h2>செஞ்சி அரசு மருத்துவமனை</h2><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p> <h2>கும்மிடிப்பூண்டிஅரசு மருத்துவமனை</h2><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருநெல்வேலி அல்வா விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.340-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike#comments</comments><guid isPermaLink="false">c3b8049a-2467-472c-8c31-2cf30c3afc46</guid><pubDate>Thu, 27 Aug 2026 03:14:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T03:14:50.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sugar,சர்க்கரை,sugar price,சர்க்கரை விலை,திருநெல்வேலி அல்வா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jgs28tj6/halwa.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருநெல்வேலி அல்வா]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநெல்வேலி அல்வா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/jgs28tj6/halwa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சர்க்கரை விலை அதிகரிப்பால் திருநெல்வேலி அல்வா விலை உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><h2><strong>சர்க்கரை விலை</strong></h2><p>அன்றாட வாழ்க்கையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88">சர்க்கரை</a> அத்தியாவசியமாகி விட்டது. பல்வேறு இனிப்புகள் செய்யவும், குறிப்பாக தித்திக்கும் திருநெல்வேலி அல்வா தயாரிப்பதற்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி தண்ணீர் பக்கபலமாக இருந்தாலும், சர்க்கரையும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.</p><p>சர்க்கரையின் தட்டுப்பாடு மற்றும் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ரூ.75-க்கு விற்பனை ஆனது.</p><h2><strong>அல்வா விலை உயர்வு</strong></h2><p>இதனால் திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல மிட்டாய் கடையில் ஒரு கிலோ அல்வா ரூ.320-ல் இருந்து ரூ.20 விலை உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுதவிர மற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu">இனிப்பு</a> வகைகள், மிக்சர், காரசேவு போன்ற கார வகைகளும் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்கப்படுகிறது.</p><p>இதேபோல் ஒரு கிலோ சிப்ஸ் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.380 ஆகவும், பால்கோவா ரூ.500, பால் அல்வா ரூ.500, ஸ்பெஷல் மைசூர் பாகு ரூ.540 ஆகவும் விற்கப்படுகிறது.</p><h2><strong>விலையை உயர்த்த திட்டம்</strong></h2><p>நெல்லை சந்திப்பில் உள்ள மற்றொரு பிரபல கடையில் ஏற்கனவே ஒரு கிலோ அல்வா ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர நெல்லை டவுன் கீழ ரதவீதியில் உள்ள இருட்டுக்கடை அல்வா ரூ.440-க்கும், அதையொட்டி கீழ ரதவீதியில் அமைந்துள்ள மிட்டாய் கடைகளில் அல்வா ரூ.360-க்கும், கல்லத்தி முடுக்கில் உள்ள 2 கடைகளில் அல்வா ரூ.360-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதன் விலையை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாகவும், அது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்தனர். </p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளம்: தமிழக சுற்றுலா பயணிகள் 37 பேர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-37-tourists-from-tamil-nadu-77-isha-foundation-members-missing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-37-tourists-from-tamil-nadu-77-isha-foundation-members-missing#comments</comments><guid isPermaLink="false">77036035-cb9f-4d0d-b2e5-0028664df363</guid><pubDate>Wed, 26 Aug 2026 21:11:22 +0000</pubDate><atom:updated>2026-08-26T21:11:22.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Tourists,சுற்றுலா பயணிகள்,Nepal Floods,தமிழ்நாடு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qoh9yg0c/Nepal-flash-floods.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flash floods]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qoh9yg0c/Nepal-flash-floods.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தின் மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளப்பெருக்கு</a> பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை துண்டித்துள்ள நிலையில், மானசரோவர் யாத்திரை சென்ற பல யாத்ரீகர்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்; மேலும் பலர் அங்கு சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a>, கேரளா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உதவ உதவி எண்களை (helplines) அறிவித்துள்ளன.</p><h2>37 தமிழர்கள் நிலை கேள்விக்குறி:</h2><p>பாதிக்கப்பட்ட இந்தியர்களில் குறைந்தது 59 பேர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் என்று 'சம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்' நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் தகவல் தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் இருந்து சென்ற 57 சுற்றுலா பயணிகளில் 37 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவரவில்லை என்றும், 20 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இந்த சுற்றுலாப் பயணிகள் இமயமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோயம்புத்தூரை சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ஈஷா அறக்கட்டளை, குடியேற்ற மையத்தில் இருந்த தங்கள் அமைப்பை சேர்ந்த 77 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளது.</p><h2>495 பேர் பாதுகாப்பாக திரும்பினர்:</h2><p>"குடியேற்ற அலுவலகத்தில் இருந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை," என்று அதன் நிறுவனர் சத்குரு கூறினார்; அதேவேளையில் 495 பேர் பாதுகாப்பாக திரும்பிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த குறிப்பிட்ட குடியேற்ற மையத்தின் ஊழியர்கள் அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக நேபாள அரசு பின்னர் தெரிவித்தது.</p><p>இதேபோல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பலரும் அண்டை நாடான நேபாளத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. சாலை வழியாக தனது சகாக்களுடன் நேபாளம் சென்றிருந்த விவசாய தலைவர் ராகேஷ் திகாயத், பொக்ஹாராவில் சிக்கிக்கொண்டார்.</p><p>"தற்போதைய சூழல் காரணமாக, சாலை வழியாகப் பயணம் செய்வது சாத்தியமில்லை என்பதால், எங்கள் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு, நாளை விமானம் மூலம் காத்மாண்டு சென்று, அங்கிருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்புவோம்," என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: மீட்புப் பணிகளை உறுதி செய்ய இ.பி.எஸ். வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-urges-action-to-ensure-rescue-operations-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-urges-action-to-ensure-rescue-operations-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">00d78b5e-bf8b-47a2-b3f8-2169168c663b</guid><pubDate>Wed, 26 Aug 2026 15:04:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T15:04:53.915Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,நேபாளம்,nepal,வெள்ளம்,flood</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/k5ut0lji/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/k5ut0lji/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பு, முறையான தகவல் பரிமாற்றத்தை உறுதிசெய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><h2>திடீர் வெள்ளம்</h2><p>நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கலந்தது. இது டிமுரே மற்றும் சியாப்ரு பெசி ஆகிய பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.</p><p>எதிர்பாரா நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை 46 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.</p><h2>100-க்கு மேற்பட்ட இந்தியர் மாயம்</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்தது. இதில் 105 பேர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:</p><p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.</p><p>நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.</p><p>காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி அரசின் OBC விரோத முகமூடி மீண்டும் கிழிந்து விட்டது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/modi-government-anti-obc-mask-torn-again-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/modi-government-anti-obc-mask-torn-again-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">8b291ba9-13b8-4df4-ae9c-2d36ac34cbe4</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:43:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:43:51.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OBC,pm modi,பிரதமர் மோடி,ஓபிசி கிரீமிலேயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nxo18529/PMModiManickamTagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nxo18529/PMModiManickamTagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 11-ந்தேதி வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை (UoI v. Rohith Nathan) முடக்க, மறுஆய்வு/விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள மோடி அரசு, சமூக நீதியை சீர்குலைத்து OBC இளைஞர்களுக்கு வெளிப்படையான துரோகம் இழைக்கிறது.</p><h2>உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது:</h2><p>* 1993 OM விதிகளின்படி கிரீமிலேயர் கணக்கீட்டில் பெற்றோரின் ஊதியம் சேர்க்கப்படக் கூடாது. DoPT-யின் 2004 கடிதம் பொதுத்துறை/தனியார் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடாகும்.</p><p>* பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, 6 மாத காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.</p><p>ஆனால், மோடி அரசோ இத்தீர்ப்பை அமல்படுத்தாமல் நழுவ சிறப்பு அமர்வை நாடுகிறது.</p><h2>ஒன்றிய அரசுக்கு எங்களின் கோரிக்கைகள்:</h2><p>மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க.</p><p>சாக்குப்போக்குகள் கூறாமல், உச்சநீதிமன்றம் விதித்த 6 மாத காலக்கெடுவை முழுமையாகப் பின்பற்றுக.</p><p>இத்தீர்ப்புக்கு முன் OBC பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல் பொதுப் பிரிவில் தள்ளப்பட்ட தேர்வர்களுக்கு UPSC, CSE உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குக.</p><p>ஏழை எளிய <a href="https://www.maalaimalar.com/news/national/west-bengal-obc-quota-suvendu-led-bjp-govt-removes-77-muslim-communities-from-obc-list-with-new-amendment">OBC</a> மாணவர்களுக்கும் EWS போன்ற பொருளாதார ரீதியிலான சலுகைகளை விரிவுபடுத்துக.</p><p>செல்லுபடியாகும் OBC-NCL சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணி/சேர்க்கை நிலையை உயர்த்துக.</p><p>மாநில வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட OBC-NCL சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும். சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>மாநிலங்களின் சுயாட்சியையும், இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அறிக்கையில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு குட் நியூஸ்: செப்.1 முதல் மேட்டூர் அணை நீர் திறப்பு- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-to-open-water-from-sept-1-for-45-days-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-to-open-water-from-sept-1-for-45-days-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">ec602dc7-79dc-4024-b081-7fc9c9ebacfa</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:34:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:34:45.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Cauvery water,#Mettur Dam,மேட்டூர் அணை நீர் திறப்பு,மேட்டூர் அணை நீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydocnllw/matti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ydocnllw/matti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணை செப்.1 முதல் 45 நாட்களுக்கு திறக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.</p><p>மேட்டூர் அணையிலிருந்து 01.09.2026  முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay">முதலமைச்சர் விஜய் </a>உத்தரவிற்கிணங்க, தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரிப் படுகையில் போதிய மழைப்பொழிவு கிடைக்காத நிலையிலும், தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 1 முதல் 45 நாட்களுக்கு, அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார். </p><p>2026–2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><h2>த<strong>மிழ்நாடு அரசின்</strong> தொடர் முயற்சி</h2><p>தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நீர்த் தேவைகள் வலியுறுத்தப்பட்டதுடன்,  உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை உறுதி செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.   </p><p>தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டுள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு,  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய  நீரைப் பெறுவதற்காக இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பதில் இந்த அரசு அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளது.</p><h2>கா<strong>விரி டெல்டா</strong> மாவட்டங்கள்</h2><p>மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டு, குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனையொட்டி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.</p><p>விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும், கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-taken-to-rescue-tamils-stranded-in-nepal-floods-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">a37f6f32-a45b-40b8-a865-5bd82555546e</guid><pubDate>Wed, 26 Aug 2026 14:11:58 +0000</pubDate><atom:updated>2026-08-26T14:11:58.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நேபாளம்,Nepal Floods,முதல்வர் விஜய்,Chief Minister Vijay,Nepal disaster,நேபாள வெள்ளப்பெருக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/63zban69/vj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/63zban69/vj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளம் மற்றும் அதை ஒட்டிய சீனா எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக போடே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.</p><h2>மத்திய அரசு <strong>மற்றும் இந்திய தூ</strong>தரகத்துடன் தொடர்பு</h2><p>நேபாளத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக அவர்களின் தற்போதைய நிலவரத்தைப் பெற்று, அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு கொண்டு வரத் தேவையான உதவிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது.</p><h2>முதலமைச்ச<strong>ர் விஜய் பதிவு</strong></h2><p>இது குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/india-offers-humanitarian-aid-to-flood-hit-nepal-pm-modi">முதலமைச்சர் விஜய்</a>, "நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாகவும் சிக்கியுள்ளதாகவும் வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.</p><h2>உதவி எ<strong>ண்கள் அறிவி</strong>ப்பு</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தகவல்களைப் பெறவும், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்புகொள்ளவும் டெல்லி தமிழ்நாடு இல்லம் மற்றும் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் சார்பில் அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பச் செய்யத் தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!- 
நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-demands-case-against-minister-former-minister-for-giving-bribe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-demands-case-against-minister-former-minister-for-giving-bribe#comments</comments><guid isPermaLink="false">8cb6ffcf-d613-4a9e-8a48-f781327032ce</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:50:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:50:50.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,லஞ்சம்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Bribe</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4hmpmy0b/nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/4hmpmy0b/nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லஞ்சம் கொடுத்த அமைச்சர்-முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>லஞ்சம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். இரு தரப்பினர் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு, லஞ்சம் கொடுத்ததை பகிரங்கமாக சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்ட தற்போதைய நிதியமைச்சர்  மரியவில்சன், முன்னாள் கல்வியமைச்சர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.</p><p>லஞ்சம் கேட்டவர் மீது மரிய வில்சன் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன? </p><p>குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் என்ன சட்டரீதியான குறைபாடுகள் உள்ளன? தனது தனிப்பட்ட நல னுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் குணநலன் கொண்ட மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் அரசு எந்திரம் எப்படி நேர்மை யாக இயங்கும்?</p><p>எனவே, ஒப்பு தல்கள் அல்லது அனுமதிகளைப் பெற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8, ஊழல் செயலுக்குத் துணை போனதற்காக பிரிவு 12, சட்ட நடை முறைகளைத் தவிர்ப்ப தற்காக லஞ்சம் வழங்கி யதற்காக பி.என்.எஸ்.-ன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து, சமரசமின்றி முறை யாக விசாரிக்க வேண்டும்.</p><p>விசாரணை முடியும் வரை, மரிய வில்சனை அமைச்சர வையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்க வேண்டும். </p><p>இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு: 105 இந்தியர்களின் கதி என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/105-indians-missing-in-nepal-flash-flood-16-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/105-indians-missing-in-nepal-flash-flood-16-killed#comments</comments><guid isPermaLink="false">c4fcad1c-6529-4fad-9a89-1aab19b7531d</guid><pubDate>Wed, 26 Aug 2026 11:47:16 +0000</pubDate><atom:updated>2026-08-26T11:47:16.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xjx4yvwm/NeplaFloods001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் வெள்ளப் பெருக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xjx4yvwm/NeplaFloods001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திபெத் எல்லையில் உள்ள நேபாள மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 105 இந்தியர்களை காணவில்லை என்று தெரியவந்துள்ளது.</p><p>திபெத் எல்லையில் உள்ள நேபாளத்தில் உள்ள மலைகளுக்கு இடையில் ஓடும் ஆற்றில் எதிர்பார்க்காத வகையில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்தது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.</p><p>இன்று காலை திபெத்தில் இருந்து திடீரென வெள்ளம் கரைபுரண்டு எழுந்துள்ளது. இந்த வெள்ளம் போதே கோஷி ஆற்றில் கலக்க வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல் நுவாகோட் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணியில் ராணுவம்</h2><p>நேபாள ராணுவம் மீட்பு, தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கிற்கான காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை.</p><p>குறிப்பாக ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே பகுதியில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சியாஃப்ருபெசி என்ற பகுதியில் உள்ள வாகனங்கள், பொருட்கள் உள்ளிட்ட மக்கள் சொத்துகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காத்மாண்டில் இருந்து வடகிழக்கில் திபெத் எல்லையில் இருந்து ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.</p><p>இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 16 ஆக உயிர்ந்துள்ளது.</p><p>தற்போது வரை 400 பேர் மாயமாகியுள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதில் 105 பேர் இந்தியவர்கள் ஆவார்கள் எனக் கூறப்படுகிறது. சேறு சகதியுடன் வெள்ளம் கரைபுரண்டு வாகனங்கள், கட்டுமான திட்டங்கள், பாலங்களை அடித்துச் சென்றுள்ளார் உயிரிழப்பு அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.</p><h2>பனி ஏரி உருகி வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்</h2><p>இந்த வெள்ளம் கனமழையால் ஏற்படவில்லை என்று நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது ஒரு புதிய பனிப்பாறை உருவானதாலோ அல்லது பழைய பனிப்பாறை ஒன்று உடைந்ததாலோ ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே பனி ஏரி உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.</p><h2>தமிழர்கள்</h2><p>இந்த வெள்ளப் பெருக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் சென்னையில் 50 ஆயிரம் வீடுகளுக்கு மக்காத குப்பையை சேகரிக்க பை வினியோகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bags-distributed-to-50000-households-in-south-chennai-for-the-collection-of-non-biodegradable-waste</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bags-distributed-to-50000-households-in-south-chennai-for-the-collection-of-non-biodegradable-waste#comments</comments><guid isPermaLink="false">c96c21aa-36d5-4412-b7c9-19f7ee045be9</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:27:31 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:27:31.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,மக்காத குப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/rbf5nw4e/chennaicorporation.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்காத குப்பையை சேகரிக்க பை வினியோகம் செய்த காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ மக்காத குப்பையை சேகரிக்க பை வினியோகம் செய்த காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/rbf5nw4e/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவன உரிமையாளர்கள் குப்பைகளை தனியாக பிரிக்க வேண்டும். சுகாதாரமற்ற மற்றும் அபாயகரமான கழிவுகளை அந்த இடத்திலேயே சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> சார்பில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்” என்ற 40 நாள் சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. </p><p>வீடுகளில் பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட உள்ளன. மக்கும் குப்பை மக்காத குப்பை, சுகாதார கழிவு மற்றும் ஆபத்தான கழிவு என தரம் பிரித்து சேகரிக்கப்பட உள்ளது. </p><h2><strong>விழிப்புணர்வு ஸ்டிக்கர்</strong></h2><p>இதற்கான விழிப்புணர்வு முதல் கட்டமாக தெற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் 50 ஆயிரம்  வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம் 179-வது வார்டுக்கு உட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. </p><p>தெற்கு வட்டார துணைத் தலைவர் அதாப் ரசூல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேக பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் வீடுகளில் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.</p><p>மண்டலம் 11 முதல் 15 வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக விழிப்புணர்வு நடைபெறுகிறது.  பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவன உரிமையாளர்கள் குப்பைகளை தனியாக பிரிக்க வேண்டும். சுகாதாரமற்ற மற்றும் அபாயகரமான கழிவுகளை அந்த இடத்திலேயே சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ந்தேதி முதல்  அதனை பின்பற்றாவிட்டால் அபராத நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச வசூல்: முதலமைச்சரின் முழக்கம் வெறும் சினிமா வசனம் தானா?- தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9#comments</comments><guid isPermaLink="false">4e766677-baba-476c-b7b4-29ca7e3dd925</guid><pubDate>Wed, 26 Aug 2026 10:07:31 +0000</pubDate><atom:updated>2026-08-26T10:07:31.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,லஞ்சம்,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zme5qv1b/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zme5qv1b/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="http://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிகுந்த வேதனை</strong></h2><p>கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டை ஒன்றுக்கு ரூ.50 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நெல்லைக் கொள்முதல் செய்ய முடியும் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக விவசாயிகள் தங்களது வேதனையையும் ஆதங்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.</p><p>ஏற்கனவே, தவெக அரசு அறிவித்த முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடியை நம்பி ஏமாந்து கடனாளிகளாகியுள்ள விவசாயிகள், மேலும் கடன் பெற்று விளைவித்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்த நிலையில், லஞ்சம் கேட்டு உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகளால், கடந்த 15 நாட்களாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.</p><p>விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளோடு அவர்களின் உழைப்பையும் வீணாக்கிக் கொண்டிருப்பதோடு, விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பாகவே லஞ்சத்திற்கான தொகையை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.</p><p>இதே கடலூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த மாதம் ஆய்வுக்கு வந்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள், லஞ்ச வசூலில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற லஞ்ச வசூல் தொடர்ந்து நடைபெற்று வருவது, தவெக அரசின் மீதான  விவசாயிகளின் நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கச் செய்துள்ளது.</p><p>எனவே, கடுமையான கண்காணிப்பும், உடனடி நடவடிக்கைகளுமே ஊழலை ஒழிக்குமே தவிர, மேடைகளில் பேசப்படும் வீர வசனங்களால் ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்பதை இனியாவது உணர்ந்து, விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சுகாதாரத்துறை எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/swine-flu-spread-on-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">2e9f8376-0a87-471e-92b0-203018c918e6</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:49:43 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:49:43.741Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>health department,சுகாதாரத்துறை,swine flu,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jbui4kd6/swineflu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பன்றிக்காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ பன்றிக்காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jbui4kd6/swineflu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/பன்றிக்காய்ச்சல்">பன்றிக் காய்ச்சல்</a> நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. </p><h2><strong>சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்</strong></h2><p>தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.</p><p>கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும். மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.</p><p>லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.</p><p>அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே இத்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-appoints-seven-ministers-in-charge-for-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-appoints-seven-ministers-in-charge-for-chennai#comments</comments><guid isPermaLink="false">96b5efdc-79b0-4cdc-96b5-302eac806671</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:36:51 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:36:51.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,தமிழ்நாடு அரசு,Chennai,TN Government,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/0zeqg92k/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/0zeqg92k/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழ்நாடு அரசு</a> உத்தரவிட்டுள்ளது.</strong></em></p> <p>சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year">ஆதவ் அர்ஜூனாவுக்கு</a> பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். </p> <p>* திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டல பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ஆலந்தூர் மற்றும் அடையார் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p> <p>* பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>மண்டல வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி கொடுப்பதற்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-says-consulting-with-legal-experts-on-returning-land-to-parandur-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-says-consulting-with-legal-experts-on-returning-land-to-parandur-farmers#comments</comments><guid isPermaLink="false">65f818fd-bdcc-43ed-81fe-0dba07dbd293</guid><pubDate>Wed, 26 Aug 2026 09:28:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T09:28:24.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/fk0dmyzs/rajmohan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/fk0dmyzs/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து பேச வேண்டிய உள்ளது என்றார்.</strong></em> </p><p>தமிழ் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் 143 -வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்&nbsp; திரு.வி.க படத்திற்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.&nbsp;</p><p>முதல்முறையாக இன்றைய தினத்தில் தமிழ்நாடு அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் இசைக்கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.&nbsp;</p><p>பின்னர் <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>விவசாயமும் வேண்டும்... விமான நிலையமும் வேண்டும்...</strong></h2><p>உலகத் தமிழ் மாநாடு நடத்தவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.&nbsp;பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது தாயையும், குழந்தையும் பிரிப்பதற்கு சமம்.&nbsp;</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் அந்த நிலத்தை வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும். விமான நிலையமும் வேண்டும். இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து பேச வேண்டிய உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை- சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-in-government-jobs-for-those-who-studied-in-the-tamil-medium#comments</comments><guid isPermaLink="false">24ca243c-1caf-4b09-9b81-fb4596e70449</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:48:20.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,அரசு பணி,தமிழக கவர்னர்,சட்ட திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கவர்னர் ஆர்.வி.அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/nety8miy/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.</strong></em></p><p>தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010-ம் ஆண்டு “தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்”  கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>சட்ட திருத்த மசோதா</strong></h2><p>அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி டி.என்.பி.எஸ்.சி.மூலம் குரூப்-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையை  பயன்படுத்த முடிகிறது. ஆனால் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20 சதவீத துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங் கப்படுவதில்லை.</p> <p>இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் வழியே புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களில், முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆட்சிக் காலத்தில், 23.1.2026 அன்று, தமிழக அரசு  திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவில், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>ஐகோர்ட் விசாரணை</strong></h2><p>ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.</p><p>தமிழக அரசு சட்ட முன்வடிவு மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வி தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை மற்றும் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>கவர்னர் ஒப்புதல்</strong></h2><p>இந்த நிலையில்  தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டத் திருத்​த மசோதாவுக்கு தற்போது கவர்னர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  இனிமேல் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே இந்த திருத்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>1-ம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள்.</p><p>இதர மொழிகளைப் பயிற்று மொழியாக கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல், வயதின் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ்மொழியினைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, பின்னர் தமிழ்நாட்டில் தங்களது கல்வியினை, சேரும் வகுப்பிலிருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர். பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக தனித்தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் அல்லர்.</p><p>பள்ளிக்குச் சென்று பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள் எழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வராக தேர்வெழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்படி முன்னுரிமை வழங்கப்படத் தகுதியுடையவர்கள் ஆவர்.</p><p>பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை அவர்கள் பயின்ற சம்பந்தப்பட்ட அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்துமா?- உஷாராக இருக்க வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-the-northeast-monsoon-cause-unprecedented-damage-in-chennai#comments</comments><guid isPermaLink="false">fc535fc6-2a72-4941-872e-ffb2ccd945ab</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:45.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருவமழை,வானிலை ஆய்வாளர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/00awxloa/northeastmonsoon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</strong></em></p><p>சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/வடகிழக்கு-பருவமழை">வானிலை ஆய்வாளர்கள்</a> ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி உள்ளனர்.</p><p>கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த நிலையில் தமிழகத்தில் சூப்பர் எல் நினோ இன்னும் 2 மாதங்களில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தீவிர தாக்கம்</strong></h2><p>மிகப்பெரிய சூப்பர் எல் நினோ உருவாகி வருகிறது. வரலாறு காணாத  அளவுக்கு அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகிறது.</p><p>வெப்ப நிலை மாறுபாடு 29.6 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து உள்ளது. இது சராசரி அளவை விட  கூடுதலாக 2.75 டிகிரி செல்சியஸ் அதிகம் எனக் கூறப்படுகிறது. வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திலேயே ஒரு சூப்பர் எல் நினோ முழுமையாக உருவாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள், 2015 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ அளவுக்கு இது இருக்கலாம். அல்லது அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த மேற்கு நோக்கிய காற்று வெடிப்பு  தொடர் நிகழ்வாக உள்ளது. </p><h2><strong>அலட்சியம் வேண்டாம்</strong></h2><p>இதன் காரணமாக கெல்வின் அலைகள் உருவாகி, கடலுக்குள் இருக்கும் கூடுதல் வெப்பத்தை மேல்நோக்கி கொண்டு சென்று எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும்.</p><p>இதன் விளைவாக, மிகப்பெரிய சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திற்குள் உருவாவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது. எல் நினோ பூமியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் இப்போதே விழிப்புடன் இருந்து தயாராக வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்களை கடுமையாக பாதிக்கும்.</p><p>எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும்  தயாராக வேண்டியது அவசியமாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>பெருவெள்ளம்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இந்த பாதிப்பு வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. </p><p>தற்போது சூப்பர் எல் நினோவால் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருப்பது பொதுமக்களிடையே  சற்று பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதனை போக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>யானைக்கவுனியில் விஷவாயு தாக்கி தந்தை-மகன் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/father-and-son-death-death-gas-attack-near-elephant-gate#comments</comments><guid isPermaLink="false">9bcb5b3a-6c4f-4b4d-bf7b-140e7e1a5d0a</guid><pubDate>Wed, 26 Aug 2026 08:17:17 +0000</pubDate><atom:updated>2026-08-26T08:17:17.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஷவாயு தாக்குதல்,Elephant Gate,gas attack,தந்தை மகன் உயிரிழப்பு,Father Son Death,யானைக்கவுனி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Father - Son]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/7020hwrq/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னை யானைக்கவுனி ஏலக்கந்தப்பன் தெரு, பொன்னப்பா சந்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கிணற்றில் தூர்வாரும் பணி இன்று காலையில் நடந்தது.</p><h2>தந்தை-மகன்</h2><p>சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த அய்யனார் (35), அவரது தந்தை ரவி (65) ஆகியோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். </p> <p>3½ அடி அகலம், 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் முதலில் அய்யனார் இறங்கினார். அவர் உள்ளே சென்று சிறிது நேரம் ஆகியும் எந்தவித சத்தமும் இல்லாததால் அவரது தந்தை ரவி கிணற்றில் இறங்கினார். இருவரும் கிணற்றில் இறங்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. </p><p>இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர் ராஜ்குமார் தலைமையில் 5 பேர் அங்கு விரைந்து வந்தனர்.</p> <h2>பிணமாக கிடந்தனர்</h2><p>அவர்கள் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது அய்யனாரும், ரவியும் விஷவாயு தாக்கி கிணற்றில் பிணமாக இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து தீயணைப்புப் படை வீரர்கள் அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். </p><p>வீட்டுக் கிணற்றை தூர்வாரும்போது தந்தையும், மகனும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இதுகுறித்து யானைக் கவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்
கண்துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது!- அன்பில் மகேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahes-criticises-teacher-eligibility-test-exemption-move#comments</comments><guid isPermaLink="false">946df2f5-80cc-4a8c-8a04-0ba5b9a1caf1</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:50:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:50:59.846Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,TET Exam,Directorate of School Education,அன்பில் மகேஷ்,ஆசிரியர்கள் தகுதித்தேர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/5pimw2rq/anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம், கண்துடைப்பு நாடகமாக மட்டும் இருக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>‘ஆசிரியர்கள் தகுதித்தேர்வு விலக்கு தீர்மானம்’ தொடர்பாக த.வெ.க. அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் சங்கங்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.</p><p>இந்த அரசு ஆசிரியர்கள் நலனில் இரட்டைவேடம் போடுகிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதற்கு முதல்நாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆசிரியர் தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது!</p><p>அப்படி குறைத்தால் தேர்விற்கான மதிப்பு குறைந்துவிடும்’ என ஆசிரியர்களுக்கு எதிராக வாதாடியுள்ளது த.வெ.க. அரசு. ஆனால் அதற்கு மறுநாள் தீர்மானம் எனும் பெயரில் நாடகம் ஆடியுள்ளதா எனும் கேள்வி ஆசிரியப் பெருமக்களிடம் எழுந்துள்ளது.</p><p>2025 செப்டம்பர் 1 அன்று ‘அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற வேண்டும்’ என மாண்பமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. </p><p>உடனடியாக அதே நாளில் செய்தியாளர்களைச் சந்தித்து ‘இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்’ என திராவிட மாடல் அரசின் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அறிவித்தோம்.</p><p>அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். </p><p>‘மேல்முறையீடு செய்யப்படும்’ என்ற தலைவர் அவர்களின் அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றார்கள். அதற்காக என்னை நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்கள்.</p><p>2025 செம்படம்பர் 11 அன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கழகமும், திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் மனமறிந்து அவர்களை காக்கும் பணிகளில் இறங்கியது.</p><p>சீராய்வு மனு மீதான தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் சந்தித்து ஆசிரியர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். </p><p>இரண்டு முறை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினோம். அதற்கு அடுத்த நாளே 2025 நவம்பர் 22 அன்று அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களோடு இணைந்து சந்தித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்களை எடுத்துக் கூறினோம். </p><p>ஆசிரியர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு நவம்பர் 25 அன்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அக்கடிதத்தில் ‘ஆசிரியர்களை பாதுகாப்பதுடன் குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படக்கூடாது என்றால் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார்.</p><p>தொடர்ந்து, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். </p><p>மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.</p><p>நவம்பர் 29 அன்று கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘பணி நியமனம்  பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாத்திடுக’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.</p><p>“இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். </p><p>கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள் 2025 டிசம்பர் 12 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கழகத் தலைவர் அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்து, ஆசிரியர்களுக்காக சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>இதற்கிடையில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது.</p><p>தொடர்ந்து வந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.</p><p>2026 ஜனவரி 28 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்டார் அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். </p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி 25 அன்று குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது.</p><p>மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள்(Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம்(SCERT) ஒப்படைக்கப்பட்டது.</p><p>இச்சூழலில்தான் 2026 மே 29ஆம் தேதி சீராய்வு மனு மீது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டது’. இதன் பிறகான சட்டப்போராட்டத்தை புதிதாக வந்த த.வெ.க அரசு மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை!</p><p>முந்தைய நமது திராவிட மாடல் அரசு ஆசிரியர்களுக்காக செய்த சிறப்பு செயல்பாடுகளையும் முடக்கும் வேகத்தில்தான் இந்த அரசு செயலாற்றியது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வர்களுக்காக பயிற்சி கையேடுகள் வழங்குவதிலேயே தாமதம் ஏற்படுத்திய அரசுதான் இவ்வரசு.</p><p>அதோடு நில்லாமல் உயர்நீதிமன்றத்தில் ‘தகுதித்தேர்விற்கான மதிப்பெண்களை குறைக்க முடியாது’ என்று ஆணவமாகவும் வாதாடி உள்ளது என்பது மாற்றத்தை அல்லாமல் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தைதான் கொடுத்துள்ளது.</p><p>இந்த புதிய அரசின் செயல்பாடுகளை என்னவாக விளங்கிக்கொள்ள வேண்டும்? நீதிமன்றத்தில் வாதாடிய அரசின் முகம்தான் உண்மை முகமா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் முகம்தான் உண்மை முகமா?</p><p>இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவதுடன் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆசிரியப் பெருமக்களின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்  </title><link>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-girivalam-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">e47176bc-f4bd-4d3e-807d-e5f8c0296034</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:28:45.825Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,pournami,Pournami Girivalam,பவுர்ணமி கிரிவலம்,Tiruvannamalai temple,பவுர்ணமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/khws4xja/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, ஆவணி மாத பவுர்ணமி திதி நாளை (வியாழக்கிழமை) காலை 9.53 மணிக்குத் தொடங்கி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.29 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட காலமே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், பக்தர்கள் பகலில் கிரிவலம் செல்வதைத் தவிர்த்து மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>பவுர்ணமியை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சிறப்புப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் தீவிரமாகச் செய்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு
முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்- ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/un-security-council-india-calls-to-safeguard-major-maritime-routes#comments</comments><guid isPermaLink="false">825aabb6-112e-41d3-9134-0b69f0fed367</guid><pubDate>Wed, 26 Aug 2026 07:23:23 +0000</pubDate><atom:updated>2026-08-26T07:23:23.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,ஐநா சபை,கப்பல் போக்குவரத்து,united nation,ship transport</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ambassador Harish, Permanent Representative of India to the UN]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/ts5cjj0z/INDIA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.</em></p><p>மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. </p><p>ஐ.நா. பாதுகாப்பு சபையில் மோதல் சூழலில் உணவு என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வத்தனேனி பேசியதாவது:-</p><p>ஆயுத மோதல்களின் மிகக் கடுமையான மனிதாபிமான விளைவுகளில் ஒன்றாக உணவுப் பாதுகாப்பின்மை இருந்து வருகிறது. மோதல்கள்  நடைபெறும் இடங்களுக்கு அப்பாலும் பரவலான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>எரிசக்தி சந்தைகள், உர விநியோகம், கடல்சார் போக்குவரத்து, மனிதாபிமான உதவிகள், விவசாய வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள், உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. </p><p>இதனால் உணவு இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, முறையான வர்த்தகம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுதல் ஆகியவை  தடைகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதோடு, முக்கியமான கடல் வழித்தடங்கள் மற்றும் கடல் சார் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். </p><p>மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான விளைவுகளைக் குறைப்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும்.</p><p>உணவு, உரங்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்திற்குப் பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகள் இன்றியமையாதவை ஆகும். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple#comments</comments><guid isPermaLink="false">67cf9966-5379-4c7f-a434-b7f059bce6d5</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:45:49.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. விடுமுறை தினமான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  திடீர் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் முன்பு, கோவிலின் உட்புறம் மற்றும் கோசாலை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  </p><p>அப்போது பக்தர்கள் நாங்கள் கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் முதல் முறையாக ஆய்வுக்காக வந்திருக்கிறேன். முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது  இணை ஆணையர் தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமா? - தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8#comments</comments><guid isPermaLink="false">30885360-eded-44e2-a432-6a575820ba87</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:17:07.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,இலவச வேட்டி சேலை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காயம் விலை கிலோ ரூ.100 வரை அதிகரிக்கும்- வியாபாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram#comments</comments><guid isPermaLink="false">c8f01b67-4b19-4f9a-8e76-17598e674fd5</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:48:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:48:37.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்-விலை">வெங்காயம்</a> விற்பனைக்கு வருகிறது. தினமும் 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.</p><h2><strong>கடும் தட்டுப்பாடு</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ55-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2><strong>ரூ.100 வரை அதிகரிக்கும்</strong></h2><p>அதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரையிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.</p><p>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது. எல் நினோ வானிலை, மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம்.</p><p>பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், பற்றாக்குறை தொடருவதாலும்,  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை கூட உயரக் கூடும். வழக்கமாக, பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் மாநில அரசு, தோட்டக்கலை மற்றும் உணவு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இப்போதும் தமிழக அரசு இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல்- விரைவில் வெளியிட திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon#comments</comments><guid isPermaLink="false">0c14ffe1-7377-422f-9f54-52773485bc7a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:25:10.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,110 Districts,110 மாவட்டங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்ளது.</strong></em></p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்​டசபை தேர்​தலில் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி​.மு.க.</a> தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய உண்மை கண்டறி​யும் குழு அமைக்​கப்​பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்​படை​யில் சமீபத்​தில் தி.மு.க. செயற்குழு கூட்​டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.</p><h2><strong>பட்டியல் தயார்</strong></h2><p>இந்த கூட்டத்தில் 9 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதில் ‘தி.மு.க. மாவட்​டங்​களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும்’ என்​ற தீர்மானமும் அடங்கும். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்​டங்​கள் அடங்கிய பட்​டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.</p><p>தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளியாகி​ உள்ளது.</p><p>இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறிய​தாவது:-</p><h2><strong>மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை</strong></h2><p>தி.மு.க. செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானங்களின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்​கப்​பட்​டு​விட்​டது. அந்த மாவட்டங்களுக்கு உட்​கட்​சி தேர்​தல் அடிப்​படை​யில் புதிய நிர்வாகி​கள் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். இதற்கு வசதி​யாக முதற்​கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் ஒரு பொறுப்​பாளர் வீதம் புதிய பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்ளது.</p><p>இப்​படி பொறுப்​பாளர்​கள் நியமனம் நடந்​தால், அவர்கள் அடுத்து வரும் உட்​கட்சி தேர்​தலில் மீண்​டும் வெற்​றி​ பெறுவதற்​கான பணிகளை முடுக்கி​ விடு​வார்​கள். அப்​போது உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும், நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்கல் ஏற்​படும் என்று கட்​சி தலைமைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.</p><p>இதனை ஏற்​றுக்கொண்ட தி.மு.க. தலை​வர் மு.க.ஸ்டா​லின், தற்போது பொறுப்​பாளர்​கள் பட்​டியலை அறிவிக்​கும் முடி​வை தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்​பாளர்​கள் அறிவிப்பில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. விரை​வில் 110 மாவட்​டங்​கள் குறித்த அதிகாரப்​பூர்வ பட்​டியலை தி.மு.க. தலைமை வெளியிடும்.</p><p>இவ்​வாறு அவர்​கள்​ கூறினார்கள்​.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi#comments</comments><guid isPermaLink="false">761c1fdd-c36f-45dc-8fe6-98f634bf07d4</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:07:53.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,பெ சண்முகம்,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பரந்தூர் நிலத்தை மாற்று தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த போகிறோம் என அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.</p><p>இந்நிலையில், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுக்குள் பயன்படுத்தாவிடில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியேற்ற சட்டப்படி பரந்தூர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.</p><p>நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமண தடை நீங்குவதற்காக  பரிகாரம் செய்வதாக ஏமாற்றி  இளம்பெண் பாலியல் வன்கொடுமை- ஜோதிடர் மீது பகீர் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-sexually-assaulted-after-being-deceived-with-the-promise-of-a-remedy-to-remove-marriage-obstacles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-sexually-assaulted-after-being-deceived-with-the-promise-of-a-remedy-to-remove-marriage-obstacles#comments</comments><guid isPermaLink="false">49ebc692-25d5-4493-b024-a0153740291f</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:04:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:04:33.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Harassment,Police Investigation,போலீசார் விசாரணை,கோவை ஜோதிடர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/37zcavpg/woman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/37zcavpg/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></em> </p><p>திருப்பூரைச் சேர்ந்தவர்  30 வயது இளம்பெண். இவர் கோவை சரக போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மன உளைச்சல்</strong></h2><p>எனக்கு எனது பெற்றோர் நீண்டகாலமாக திருமண வரன் பார்த்து வந்தனர். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கோவில்களில் பரிகாரங்கள் செய்தல், ஜோதிடர்களை அணுகி ஜாதகம் பார்ப்பது போன்ற செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரன் கிடைக்காததாலும், எனது பெற்றோர் படும் துயரத்தினாலும் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். </p><p>கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு சில பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என கூறினார். பரிகாரம் என்ற பெயரில் பல முறை என்னை நேரில் அழைத்து சந்தித்தார். </p><h2><strong>பணம் பறிப்பு</strong></h2><p>பின்னர் அவரே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். என்னை கட்டாயப்படுத்தி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன்பின் கடன் பிரச்சனை இருப்பதாக கூறி நான் திருமணத்துக்கு சேமித்து வைத்த பணத்தை பறித்தார். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கி விட்டதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றார். பணத்தை அபகரித்துக் கொண்ட பின் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தினார். </p><p>நான் விசாரித்தபோது ஜோதிடர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை சந்தித்து என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே என அழுதேன். அதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து விரட்டி விட்டார். உயர் போலீஸ் அதிகாரி என்னுடைய வாடிக்கையாளராக உள்ளார். அவரிடம் கூறி உன்னை தொலைத்து விடுவேன் என மிரட்டினார். </p><p>ஜோதிட நம்பிக்கையையும், திருமண ஆசையையும் பயன்படுத்தி என்னை நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்து எனது வாழ்க்கையை நாசம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார். </p><p>இந்த புகார் மனுவை அந்த பெண்  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர், கோவை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பி உள்ளார். ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case#comments</comments><guid isPermaLink="false">e49b8ca5-6eae-493d-a1ea-cdfffa5c1d1c</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:33:24.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது</a> இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2><strong>உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை</strong></h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case">தமிழர்களும்</a> மான்  வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><p>கர்நாடக காட்டுப் பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2><strong>பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்</strong></h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p> <p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">1bc7fec1-7dba-43c3-a915-2a640bfc97f0</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:32:33.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,ஓணம் பண்டிகை,onam festival,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஓணம் திருநாளையொட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!</p> <p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!<br><br>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள்… <a href="https://t.co/uB2N9vqo9P">pic.twitter.com/uB2N9vqo9P</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092448413925470496?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual#comments</comments><guid isPermaLink="false">ee7791d9-458d-49fc-83ee-df7603d6b88e</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:22:13.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</strong></em></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்றப் பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.</p><h2><strong>வழக்கம் போல இயக்கம்</strong></h2><p>குறிப்பாக, மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16180) தாம்பரம் வரையிலும், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதேபோல, எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன.</p><p>இதனால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</p>]]></content:encoded></item></channel></rss>