<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 07 Aug 2026 14:28:21 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 7 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026#comments</comments><guid isPermaLink="false">9e161214-bae4-4b21-8ad3-fb9c9fa000ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:49:59 +0000</pubDate><atom:updated>2026-08-07T14:12:54.318Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026">டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடியால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</a></p><p>* முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 205 ரன்கள் குவித்தது.</p><p>*  திருப்பூரின் துஷார் ரஹேஜா அவர் 52 பந்தில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உள்பட 102 ரன் குவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales">டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.</p><p>* டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல "சும்மா ஆட்சி": ஓ.எஸ். மணியன் விமர்சனம்</a></p><p>* சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. </p><p>* அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</a></p><p>* சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 (FCRA Bill) அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம் என வாய்ப்பு</p><p>* அதேபோல் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan">எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>* ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- ராஜ்மோகன்</p><h2>சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</h2><p>பொதுவெளியில் ஆபாசமாகப் பேசிய மார்க்கண்டேயனை கட்சித் தலைமை கண்டித்திருக்க வேண்டும்.</p><p>பொதுவெளியில் மார்க்கண்டேயன் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அவரிடம் விளக்கம் கேட்டு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் கடிதம் மூலம் கோரிக்கை</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உரை</h2><p>திமுகவின் திட்டங்கள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.</p><p>பனை மேம்பாட்டு இயக்கம் பனை பாதுகாப்பு இயக்கமாக மாறியுள்ளது.</p><p>பட்ஜெட்டில் பெயர் மாற்றம் மட்டும்தான் இருக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் 25000 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>பட்ஜெட்டில் தேடிப் பார்க்கிறேன், இருப்பது போல் இருக்கிறது, கண்ணுக்குப் புலப்படவில்லை.</p><p>கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை, மக்கள் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளோம்.</p><p>திமுகவின் திட்டங்கள் அனைத்திலும் முக ஸ்டாலின் இருப்பார் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பிரேமலதா கோரிக்கை.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான்.</p><p>டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p> <p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்  - பிரேமலதா</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மழை பெய்ய தொடங்கிய நிலையில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும். மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p>அனைத்துக்கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.</p><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. </p><p>திட்டங்களின் பெயர்களை மாற்றுங்கள் மாற்றாதீர்கள், ஆனால் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடரப்பட வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்.</p> <p>தவெக அளித்த வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றம் - கணேஷ்</p><p>இபிஎஸ் பேசியபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டிய நிலையில், ஒரு நொடி கூட நேரலை துண்டிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.</p> <p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவை குறிப்பிலிருந்து நீக்குமாறு கே.என்.நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p><h2> ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தவறான உதாரணங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார் அமைச்சர் ஆதவ்.</p><p>அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் என எல்லோருமே கட்சிக்கு நன்கொடை வாங்குகிறார்கள்.  </p><p>கட்சிக்கான நிதியை ஊழல் லஞ்சப்பணமாக கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு ஓபிஎஸ் சபாநாயகரிடம் வேண்டுகோள்</p><h2>எ.வ.வேலு</h2><p>தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது.</p><p>தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்று தான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர்.</p><p>தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்க சொல்லுங்கள் - ஆதவ்</p><p>உதயநிதி</p><p>திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் - அமைச்சர் உதயநிதி</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா? </p><p>திமுக லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி வாங்கியதா? இல்லையா ? - ஆதவ் அர்ஜூனா</p> <p>டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது - அருண்ராஜ்</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் அறிவுரை சொல்ல தவறியது ஏன்?</p><p>ஆதாரமில்லாமல் ஊழல் என்று பேச கூடாது  - எ.வ.வேலு</p><p>மதுவிலக்கை முதலில் கொண்டுவந்தது யார் என நன்றாக தெரியும், அதற்கு வக்காலத்து வாங்காதீர் - செங்கோட்டையன்</p><p>வருடத்தில் எத்தனை கடைகளை குறைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கடந்த ஆட்சியாளர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினர். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது  - அமைச்சர் விக்னேஷ்</p><p>ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும்.</p><p>ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்கு சென்று தான் மதுபானங்களை வாங்க முடியும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர் - அமைச்சர் விக்னேஷ்</p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல்.</p> <p>திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட கூடாது. அது விவசாய பகுதி  - பாமக எம்எல்ஏ கணேஷ் குமார். </p><p>மேல்மா விவசாயிகளுடைய கண்ணீருக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.  எந்த விவசாயினுடைய அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு இந்த அரசு நல்ல பெயர்களை எல்லாம் எடுத்துவிட்டு அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இவர்களின் பட்ஜெட் ரீல்ஸ் பட்ஜெட். இது வெற்றி அரசு அல்ல, வெட்டி அரசு - வசந்த் கார்த்திகேயன்</p><p>நான் காலேஜ் படிக்கும்போது முதல்வரின் லவ் டுடே படத்தை 6 முறை பார்த்தேன் - திமுக எம்எல்ஏ வசந்த் கார்த்திகேயன் </p> <p>கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை குறைந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் போராடித்தான் நீரை பெற்றோம். கர்நாடக அரசு அளித்த விளக்கத்தை தான் அமைச்சர் ஆனந்த் பேரவையில் பதிவு செய்தார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவை போல் தைரியமான முடிவெடுக்கிறார்.</p><p>அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் எனக்கூறிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் - அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>திட்டமிட்டு நேரலை துண்டிக்கப்படவில்லை, எதால் நேரலை துண்டிக்கப்பட்டது என்ற காரணம் கண்டறியப்படும் - சபாநாயகர்</p><p>தூய ஆட்சி என சொல்லிக்கொள்ளும் நீங்கள் இபிஎ பேசியபோது நேரலையை துண்டித்தது ஏன்?</p><p>வரும் காலங்களில் அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் பேசும்போது நேரலை துண்டிக்கப்படக்கூடாது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p> <p>சட்டசபையில் இபிஎஸ் பேசிய போது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டு.</p><p>அதிமுக, திமுக ஆட்சியில் அம்மா உணவகம் எப்படி இருந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ஆதவ்</p><h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>அம்மா உணவகத்திற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் கூறியது தவறு.</p><p>இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p> <p>திமுக, அதிமுக ஆட்சி காலங்களிலும் திட்டங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன - செங்கோட்டையன்</p><p>கடந்த ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கான பெயர்களை மாற்ற கூடாது - எடப்பாடி பழனிசாமி</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு</p><h2>கே.என்.நேரு விளக்கம்</h2><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்பட்டது.</p><p>அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தான் முதல்வராக இருந்த போது ஸ்டாலினும் கூறினார்.</p><p>அதிமுக கொண்டு வந்த அம்மா உணவகத்தை திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடத்தினோம், தற்காலிக ஊழியரையும் நீக்கவில்லை.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தவெக அரசு செயல்படுத்தும்.</p><p>தவெக ஆட்சி அமைந்த உடன் அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் தரத்தை மேம்படுத்தி செயல்படுத்தி உள்ளோம்.</p><p>அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்துகிறது தவெக அரசு.</p><p>திமுக, அதிமுக என யார் ஆட்சியிலும் அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை தவெக அரசு தரம் உயர்த்தி தொடர்கிறது.</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை.</p><p>ஸ்டிக்கர் என்ற வார்த்தை யாருக்காக உருவானது என்பது தெரியும் - நிர்மல்குமார்</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மாற்றம் மாற்றம் என கூறியது பெயர் மாற்றத்தை தானா?  </p><p>அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது தவெக.</p><p>தாலிக்கு தங்கம் திட்டம் அண்ணனின் சீர் திட்டமாக மாறி உள்ளது. </p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது. வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை.</p><p>நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது.</p><p>நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><h2>எம்எல்ஏ சரவணன்</h2><p>திமுக அரசு ரூ.3,000 விலையில் வழங்கிய சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.</p><p>முன்னாள் ஆட்சியாளர்கள் வழங்கியதை போல் தரமற்று இல்லாமல், ஹெல்மெட், குடிநீர்பாட்டில் வசதியுடன் நவீன சைக்கிள் தரும் புதிய திட்டத்திற்கு வரவேற்பு.</p><p>தவெக அரசு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தருவதாக அறிவித்த நவீன சைக்கிள் திட்டத்திற்கு எம்எல்ஏ சரவணன் பாராட்டு தெரிவித்தார்.</p><p>2 மாதத்தில் தவெக அரசு ரூ.20,000 கோடி கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது - கே.என்.நேரு</p><p>கடன் வாங்கி தான் அத்தனை அரசும் செயல்படும் என நிதித்துறை செயலர் கூறினார் - கே.என்.நேரு</p><p>ஒவ்வொருவரின் தலை மேல் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அண்ணன் சீர் திட்டம்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும் - ரகுபதி </p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</h2><p>தொகுதி மறுவரையறையில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்குமே முன்னுதாரணம் திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக 5 மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து எதிர்ப்பை பதிவு செய்தோம். </p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.</p> <p>தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் அழைத்த கூட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் வருவார்களா? என உதயநிதி பதில் தரட்டும்- அமைச்சர் ஆதவ்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா- அமைச்சர் ஆதவ்</p><p>திமுக உறுப்பினர் ரகுபதி அரசியல் மேடை போல் பேசி கொண்டிருக்கிறார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>விபி ஜி ராம் ஜி சட்டத்தை திமுக எதிர்த்த நிலையில் தற்போது நடைமுறை படுத்தி உள்ளனர் - ரகுபதி</p><p>ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விபத்து காப்பீடு திட்டம் குறித்த செய்திகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - ரகுபதி</p><p>விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என ரகுபதி கேள்வி எழுப்பினார்.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கசிவு பற்றி ஆய்வு செய்து அதன் அறிக்கை முதல்வரின் டேபிளில் உள்ளது, அவர் சரியான நேரத்தில் வெளியிடுவார்.</p><p>ஆடிட்டிங் முடிந்துவிட்டது, கசிவு என்றால் என்ன என்பது குறித்து சரியான நேரத்தில் முதலமைச்சர் பேசுவார்.</p><p>முதல்வரிடம் நாங்கள் அளித்த அறிக்கையை படிக்கவே உங்களுக்கு 100 நாட்கள் தேவை என ரகுபதிக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.</p><p>நீங்கள் தந்த பட்ஜெட்டை வைத்து தான் பேசுகிறேன், அப்படி பேசக்கூடாது என்றால் வேறு ஒரு  நிதிநிலை அறிக்கை தாருங்கள் - ரகுபதி</p><p>பழக்க தோஷத்தில் பேசாதீர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள் என ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்.</p><p>நீர்வளத்துறையில் பில்களை கிளியர் செய்ய கமிஷன் வாங்கியது கடந்த ஆட்சிக்காலம் - அமைச்சர் ஆனந்த்</p><p>நீர்வளத்துறையில் ஒரு பில் பெற 2 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் - ரகுபதி</p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.</p><p>அவையில் இல்லாதவர் ஒருவரை பற்றி பேசுவது அவையை மீறிய செயல் என அமைச்சர் விஸ்வநாதன் காட்டம்</p><p>திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.</p><p>திமுக திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தியவர் ஸ்டாலின்.</p><p>தகவல் அறியும் உரிமை கமிஷனில் உறுப்பினர் நியமிக்காததால் தகவல்களை மக்கள் அறிய முடியவில்லை என்று  ரகுபதி கூறினார்.</p><p>பிரவின் சக்ரவர்த்தி தமிழகத்தின் கொள்கை வடிவமைப்பாளர் என்ற செய்தி உண்மையா? என்று திமுக கேள்வி எழுப்பியது.</p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம்</p><p>சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>இதையடுத்து நியாயமான வரிப்பகிர்வு கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.</p><p>தவெக அரசு கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக வரவேற்பு.</p><p>தனிநபர் தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>வளர்ச்சி அடைந்த மாநிலங்களை பாதிக்காத அளவிற்கு நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என திமுக சார்பில் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். </p><h2>தங்கம் தென்னரசு</h2><p>நிதி பங்களிப்பு குறைவதால் தமிழகத்தில் நிதி சுமை அதிகரித்துள்ளது. </p><p>தமிழ்நாடு வரியாக செலுத்தும் 1 ரூபாய்க்கு 21 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. உ.பி.க்கு ரூ.2-க்கு மேல் தரப்படுகிறது. </p><p>தமிழ்நாடு அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்றவகையில் மத்திய அரசு நிதியை நமக்கு தருவதேயில்லை.</p><p>நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.</p><p>ஒட்டுமொத்த வருவாய் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. செலவினம் மட்டும் மாநில அரசின் கையில் உள்ளது - தங்கம் தென்னரசு</p><p>நிதிப்பகிர்வு தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திருத்தம்கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.</p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.</p><p>பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7f456r52/anand.jpg" /></figure><p>காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.</p><p>கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/rwllwdmz/sowmiya.jpg" /></figure><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,</p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.</p><p>காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.</p><p>உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்</p><p>இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி</p><p>முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  - செல்லசுவாமி</p><p>முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி</p><p>காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர். </p><p>கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்</p><p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை -  இபிஎஸ்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.</p><p>காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.</p><p>அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?</p><p>தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.</p><p>கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன. </p><p>நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.</p><p>பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.</p> <p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்</p><p>மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/q3vadxbg/vijay2.jpg" /></figure><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.</p> <p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <p>தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly" rel="nofollow">தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</a></p><p>* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.</p><p>* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan">பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</a></p><p>* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution" rel="nofollow">தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</a></p><p>* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today">முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை</a></p><p>* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport"> 80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</a></p><p>* நாட்டின் 80-வது&nbsp;சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p> ]]></content:encoded></item><item><title>மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல &quot;சும்மா ஆட்சி&quot;: ஓ.எஸ். மணியன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams#comments</comments><guid isPermaLink="false">500283ec-475c-4bc9-9a97-edf29a2c0b56</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:05.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OS Manian,TN assembly,தமிழக சட்டசபை |,ஓஎஸ் மணியன்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஓ.எஸ். மணியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். அதற்கு, அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">ஆதவ் அர்ஜூனா</a> "தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சிதான்" அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மா ஆட்சி என்கிறீர்கள். ஏன் அம்மா பெயரில் திட்டங்களை வழங்கிடக்கூடாது? என்றார்.</p><p>இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இது அம்மாவின் ஆட்சிதான் என்று கூறினாரே? என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>அதற்கு ஓ.எஸ். மணியன் பதில் அளித்து கூறியதாவது:-</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி "சும்மா ஆட்சி". சும்மா ஆட்சியை மறைப்பதற்காக அம்மா ஆட்சி என்று சொல்கிறார்கள். அம்மா உடைய மாண்பை, அம்மா உடைய சிறப்பை., அம்மா அவர்கள் இந்த தமிழகத்திற்காக,, குறிப்பாக ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சியில் இருந்தபோதிலும் சரி, ஆட்சியில் இல்லாதபோதிலும் சரி காவிரி நீர் பிரச்சனைக்காக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக, வீராணம் தண்ணீரை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் சாதித்து காட்டியவர், சட்டம் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று காண்பித்தவர் புரட்சித் தலைவி அம்மா.</p><h2>அம்மா ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது</h2><p>பெண்ணினத்தை உயர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றிக் கண்டவர் புரட்சித் தலைவர் அம்மா. அம்மாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக் கண்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. மாறுதலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒரு உன்னதமான ஆட்சிதான் அம்மா உடைய ஆட்சி. அம்மா உடைய ஆட்சியை விஜய் உடைய ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது.</p><p>வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னரே, அதேபோல விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளராக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், மீனவராக இருந்தாலும் அவர்கள் எங்கேயோ, வெளிநாட்டில் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட, தானே பாதித்தவர் போல நடவடிக்கைகள் எடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.</p><h2>கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்</h2><p>ஆனால், விவசாயிகள் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருந்த முதலமைச்சர்களில் மிகவும் மோசமான முதலமைச்சர் என்றால் அது விஜய்தான். விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறோம் தவிர, அவர் கூடியதாக கேட்கவில்லை. மாறுதலாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை. இதனால்தான் விஜய் ஆட்சி சும்மா ஆட்சி. தலையில் முக்காடுபோடும் விதமாக அம்மா ஆட்சி என்று அவர்கள் பேசுகிறார்கள்.</p><p>இவ்வாறு ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales#comments</comments><guid isPermaLink="false">d3aa5c8a-87d9-4c42-9ef7-fc2bbc799d9c</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:13 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:13.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai High court,சென்னை ஐகோர்ட்,Tasmac,டாஸ்மாக்,over price,கூடுதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.</p><h2>இனி ரசீது கட்டாயம்</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருக்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஆனாலும், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><h2>நுகர்வோர் புகார் அளிக்கலாம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.</p><p>அரசு சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் விரட்டிய மக்களை மிரட்டிய யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">f0856870-19a2-4837-9725-e15f4a9eb727</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:57:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:57:12.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,Elephant,யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2zkbtpyg/Elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2zkbtpyg/Elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>நீலகிரி</strong></h2><p>நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு யானை கூடலூர்-கேரளம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிப்படி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அந்த சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.</p><h2><strong>கூடலூர்</strong></h2><p>கூடலூர் நெடுஞ்சாலையில் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகனஓட்டிகள் உடனடியாக வாகனங்களை பின்னோக்கி இயக்கி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2><strong>யானை</strong></h2><p>இதற்கிடையே கூடலூர் நெடுஞ்சாலையில் ஒற்றை யானையை கண்ட பொதுமக்கள் உயரமான கட்டிடங்களில் நின்றுகொண்டு பெரிதாக சத்தம் எழுப்பி சாலையில் உலாவந்த யானையை விரட்ட முயன்றனர். இதனால் மிரண்டு போன யானை ஆக்ரோஷத்துடன் கூச்சலிட்ட மக்களை நோக்கி பாய்ந்து வந்தது. தொடர்ந்து சாலையில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானை, பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஓடி சென்றது.</p><h2><strong>வாகன போக்குவரத்து</strong></h2><p>இதனால் பள்ளிப்படி பகுதியை சேர்ந்த பொது மக்கள் தற்காலிக நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து கூடலூர் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.</p><p>கூடலூர் நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை அங்குள்ள பொதுமக்களை ஆக்ரோஷத்துடன் தாக்க பாய்ந்து வந்த சம்பவம், கிராமத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-</p><h2><strong>யானைகள் நடமாட்டம்</strong></h2><p>கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை நெடுஞ்சாலை பகுதியில் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அங்குள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகின்றன.</p><h2><strong>விவசாய தோட்டம்</strong></h2><p>விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளால் அங்கு மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2><strong>வனத்துறை அதிகாரிகள்</strong></h2><p>எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மேலும் மலையடிவார பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நிற்கும் யானைகள் கூட்டத்தை அடர்வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha#comments</comments><guid isPermaLink="false">33ba657d-0626-425e-b2b4-7ba7ded9818e</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:55.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sangeetha,ஜோசப் விஜய்,joseph vijay,சங்கீதா,Divorce Petition,விவாகரத்து மனு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது. </p><p>வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>மனைவியான ரசிகை </h2><p>வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர்.  விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.</p><p>இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர். </p><p>இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.</p><h2>விவாகரத்து மனுவில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார். </p><h2>மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு</h2><p>விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, ​​இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.</p><p>இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.</p><p>மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.</p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்</h2><p>விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். </p><p>இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><h2>எதிர்காலம் என்ன?</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p>இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8a465eb2-fb70-4b57-8bdc-30cf42426622</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:29:47.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிப்பு எனக் குற்றச்சாட்டு</h2><p>பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.</p><p>மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.</p><h2>சபாநாயகர் பதில்</h2><p>இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission#comments</comments><guid isPermaLink="false">a65220f1-f579-4be5-b29f-d13b82a40bf2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:47:48.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:-</h2><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.</p><h2>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல</h2><p>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும்.</p><p>இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.</p><h2>தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள்</h2><p>2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும். மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது.</p><p>கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.</p><p>இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவே அனுமதிக்க வேண்டும்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இப்படி முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day#comments</comments><guid isPermaLink="false">ac0b6067-c1f8-4c74-b242-cabd9e2b6434</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:31:35.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Karunanidhi,கருணாநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்தப் பதிவில்.,</p><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.</p><p>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்” என்று எழுதப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?: பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha#comments</comments><guid isPermaLink="false">34a704c3-049f-4aaf-8532-2d6e75fbffc7</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரேமலதா விஜயகாந்த்,Cauvery,TN budget,தமிழக சட்டப்பேரவை,TN assembly,Premalatha Vijayakant,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி உரிமைக்காக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடர வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.</p><h3><strong>மழையில் நனையும் நெல் மூட்டைகள்</strong></h3><p>விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். இப்பொழுது மழைக்காலமாக இருப்பதால் அனைத்து ஏரிகளையும் தூர்வாறி, மழைநீரை சேமிக்க வேண்டும்.</p><h3><strong>ஏரிகளை தூர்வார கோரிக்கை</strong></h3><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><h3><strong>முதல்வரின் பின்னால் தமிழகம் நிற்கிறது</strong></h3><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடை நீண்ட காலமாக மூடாமல் உள்ளது, அதை அமைச்சர்கள் தலையிட்டு மூடுவதற்கான நடவடிகையில் ஈடுபட வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition#comments</comments><guid isPermaLink="false">fdba5a8f-9480-407b-8876-6d3e95757805</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:55.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>இன்று இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.</p><h2>விவாகரத்து </h2><p>நடிகர் விஜய் பிரபல மூன்று எழுத்து நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீண்டநாட்களாக ஒதுக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். </p><p>கடந்த 2021-ல் இருந்து இந்த பிரச்னை நிலவி வந்ததாகவும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா. </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்: சட்டசபையில் உதயநிதி-ஆதவ் அர்ஜூனா காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">70ebe264-0499-4cde-aa84-b6f1f30028b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:54:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:54:49.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna, udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றது.</p><h2>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்</h2><p>அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி விளக்கம் அளித்தார். </p><p>மேலும், த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர். ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும். ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்க முடியும். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது என தெரிவித்தார்.</p><p>இடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜூனா-உதயநிதி விவாதம்</h2><p>அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா?</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என பதில் அளித்தார்.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்கச் சொல்லுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.</p><p>அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார்.</p><p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">08d6e277-52dd-42f5-8051-b57a829caf7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:58.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மா உணவகம்,தமிழக சட்டப்பேரவை,Amma Unavagam,Agri Krishnamoorthy,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதிமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர்: நலத்திட்டங்கள் மீதான குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Agri krishnamoorthy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார். </p><h3><strong>தவெக தேர்தல் வாக்குறுதி</strong></h3><p>தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், "நிதி பற்றாக்குறைகளை மட்டுமே காரணம் காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை நிறுத்தக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தான், தவெக அரசு தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கும். அதில் வாக்குகள் வரவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, தவெக அரசால் செயல்படுத்த முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்கள். </p><p>நிதிநிலை அறிக்கையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு பாசன திட்டங்கள் அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.</p><p>அதிமுக ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக போற்றப்பட்டது.</p><p>முழு கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சிறு குறு விவசாயிகள் இன்று கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.</p><h3><strong>அதிமுக நலத்திட்டங்கள் மீது ஸ்டிக்கர்</strong></h3><p>எனவே தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, முழுக்கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தமிழகத்திலே அறிவித்துள்ளது" என்று கூறினார்.</p><p><strong>அமைச்சர் நிர்மல்குமார் பதில்</strong></p><p>இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக அரசின் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “பல திட்டங்கள் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இருந்து வருவதுதான்... ஆனால் பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டன.</p><p>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, புது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h3><strong>அம்மா உணவகம்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை மேம்படுத்தி வருகிறோம்.</p><p>அம்மா உணவகம் சரியாக செயல்படாமல் இருந்தது. அதன் பெயர் எதையும் மாற்றாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date#comments</comments><guid isPermaLink="false">66c69cfc-3fca-4542-93c7-1518275cc591</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:17:01.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">முதல்வர் விஜய்</a><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today"> </a>மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><h2>விவாகரத்து</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p> <h2>இன்றைய விசாரணை</h2><p>அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டிக்கர் ஒட்டும் அரசு.. அக்ரி கிரிஷ்ணமூர்த்தியால் அவையில் வெடித்த விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers#comments</comments><guid isPermaLink="false">b81895c1-c737-49dc-ac48-cdeca27c8c9b</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:01:12.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெயர் மாற்றம்,அம்மா உணவகம்,Amma Unavagam,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,Agri Krishnamurthy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, </p><p>"மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது. நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது.  வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  </p><p>சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><h2>ஸ்டிக்கர்</h2><p>அம்மா மற்றும் எடப்படியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் வெற்றி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.</p><p>மாற்றம் மாற்றம் என்றீர்கள். இதுதான் மாற்றமா? பள்ளி கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, </p><p>அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், நவீன பிராண்டட் மிதிவண்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர்களுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கிய திட்டத்திற்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது" என கூறினார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஸ்டிக்கர் என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்களை வரவேற்று அதை அப்படியே செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம். </p><p>நிதி ஒதுக்கி இன்று ஒவ்வொரு தெருவிலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. </p><p>கடந்த 5 ஆண்டுகளில் அது எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் " என்றார். </p><h2>கே.என்.நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே. நெஹ்ரு, "அம்மா உணவகத்தித்கு கடந்த ஆட்சி எவ்வளவு செலவு செய்துள்ளோம் என கணக்கு பார்த்தால் தெரியும். மாவட்ட வாரியாக கணக்குகள் உள்ளன. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது." என்றார். </p><h2>இபிஎஸ்</h2><p>இதன்பின் வேலுமணி, இபிஎஸ் ஆட்சியில் அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார். </p><p>அப்போது, அவர் தவறான தகவலை கூறுவதாகவும், அம்மா உணவகத்திற்கான நிதி நகராட்சிகளில் இருந்து தான் செல்கிறது, தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்தார். </p><p>விவாதம் தொடர, இபிஎஸ் எழுந்து, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது" என்று சுருக்கமாக கூறி முடித்தார். </p><p>இதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சிகளிலும் பெயர் மாற்றங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? - ஆதவ் அர்ஜுனா கேள்விக்கு உதயநிதி பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">757d956f-b982-479a-9085-3e6e0aa964b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:23:40.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தமிழக சட்டப்பேரவை,தொகுதி மறுவரையறை,Delimitation,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு குறித்து ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழக சட்டப்பேரவை</a>யில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ எஸ். ரகுபதி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a> பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் மிகப்பெரிய குற்றம் என்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சொல்லி வருகிறார் எனக் கூறினார். </p><h3><strong>தவெக-வில் லஞ்சம் இல்லை</strong></h3><p>அவ்வாறு யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், இங்கு இருக்கும் ஒருவர் கூட அமைச்சராக இருக்க முடியாது என்பதை பதிவு செய்துகொண்டே வருகிறார்.</p><p>இதுவரையிலும் எந்த துறையிலும் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஒரு ரூபாய் வாங்கியது கிடையாது.</p><p>எம்.எல்.ஏ ஃபண்ட், பார்டி ஃபண்ட் உள்ளிட்டவை வசூலிக்கப்படவில்லை என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம்.</p><p>மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் நாங்கள் அடிபணிந்து விட்டதாக ரகுபதி கூறுகிறார். மேகதாது பிரச்சனைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தொகுதி மறுவரையறை உருவாகிக் கொண்டிருக்கிறது.</p><p>அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>நாங்கள் எதிர்கட்சித் தலைவரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்று கேட்கிறேன்.</p><p>எங்களுக்கு டெல்லியில் வந்த தகவலின்படி, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்யவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p><h3><strong>உதயநிதி பதில்</strong></h3><p>ஆதவுக்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a>, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரியாக, அதை முதன்முதலாக பேசியது திராவிட முன்னேற்ற கழகம்தான்.</p><p>கடந்த ஆண்டுகளில் ஐந்து மாநில முதலமைச்சர்களை தமிழகத்திற்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.</p><p>அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான முடிவை எங்கள் கட்சி தலைவர் எடுப்பார்" என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>அண்ணன் சீர் செய்யவே முடியாது.. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன் - சட்டசபையில் காரசாரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations#comments</comments><guid isPermaLink="false">c186c13f-e74f-4de5-b4a3-40ab708ec6ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:03:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:03:52.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>budget,பட்ஜெட் தொடர்,அண்ணன் சீர் திட்டம்,&apos;Annan Seer&apos; Scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில்,</p><h2>ஸ்டாலின் </h2><p>எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என கேட்டவர்களுக்கு அதில் சொல்கிறேன். மகளிர் உரிமை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார்கள். விடியல் பயணத்திட்டத்தில் இருக்கிறார். </p><p>விடியலை நீக்கி விட்டீர்கள். ஆனால், விடியல் எங்களால் மீண்டும் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அரைகுறையாத்தான் இருக்கிறது. முழுமை பெறவில்லை </p> <h2>அண்ணனின் சீர்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் அந்த திட்டத்திற்கு வெறும் 812 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளீர்கள்." என தெரிவித்தார்.</p><h2>கடன்</h2><p>இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">மரிய வில்சன்</a>, ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என கூறினார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்" என தெரிவித்தார்.</p> <p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கேஎன் நேரு, "நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் 20,000 கோடி கடன் பெற்றுள்ளீர்கள். எவ்வளவு கடன் என்பது அல்ல, எவ்வளவு வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை தன் பார்க்க வேண்டும்.</p><p>60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காக தான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை பார்க்காதீர்கள், எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசில் பிரவீன் சக்ரவர்த்தியின் ஆதிக்கம்?.. ரகுபதி கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில்  
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position#comments</comments><guid isPermaLink="false">9aa7399f-2269-4e54-ad3a-8f7fae0eab7d</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:38:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:38:21.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரகுபதி,Raghupathi,பிரவீன் சக்கரவர்த்தி,Praveen Chakravarty,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில், "காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் பதில்</h2><p>இதற்கு பதிலளித்த தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்,</p><p>பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.</p> <p>ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல" என தெரிவித்தார்.</p><p>தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்ட பிரவீன் சக்கரவர்த்தி தவெக சார்பில் மாநிலங்கவளை எம்.பியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்யாது: நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">3d224981-7bc0-4f1b-9852-ebd62e53b534</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:25:49.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக சட்டப்பேரவை,Cauvery Issue,tvk,அமைச்சர் ஆனந்த்,MInister N Anand,TM CM Vijay,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Issue Stance: Tamil Nadu asserts rights, presses for due water allocation]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்டப்பேரவை</a>யில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான மூலமாகவும் உள்ளது.  காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாடு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.</p><p>இருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நதிநீர்</a> பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.   </p><p>அதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர் அந்த நாளை பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.</p><p>ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவில், தமிழ் நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.  </p><h3><strong>தமிழகத்திற்கு 3500 கனஅடி நீர்</strong></h3><p>இதன்மூலம், 29.07.2026 முதல் 12.087.2026 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி ஒழுங்காற்று ஆணையம் வலியுறுத்தியது.</p><p>ஆனால் கர்நாடகா அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.</p><p>இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.</p><p>எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 3500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.</p><p>எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.2026 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.</p><p>தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2056 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகாவில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p><strong>காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது</strong></p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்.</p><p>தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நிதி பகிர்வு தீர்மானம்.. திமுக, அதிமுக ஆதரவு - சட்டசபையில் நிறைவேற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution#comments</comments><guid isPermaLink="false">2de1b385-8055-4520-8ea1-bfa9aaf5decb</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:36.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Budget session,மரிய வில்சன்,பட்ஜெட் தொடர்,நிதி பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><h2>காவிரி விவகாரம் </h2><p>அதன் தொடர்ச்சியாக இன்று  கூடிய அவையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves">மேகதாது அணை </a>குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர். </p><p>இதன்மீது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு,  "மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி பகிர்வை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதரத்தைக் கொண்டது. </p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. செலவு பொறுப்பு மாநிலங்களிடம் உள்ளது. வருவாய் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. </p><p>மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரம் குறையும் சூழல் இப்போது உள்ளது. நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. </p><p>பெண் தொழிலாளர்களின் பங்களிப்பில் முதல் மாநிலம் தமிழ்நாடு, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தின் தூணாக தமிழ்நாடு பொருளாதாரம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த புறக்கணிப்பு என்பது தான் கேள்வி" எனப் பேசினார்.   </p> <h2>வரி பகிர்வு தீர்மானம்</h2><p>இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.</p> <p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves#comments</comments><guid isPermaLink="false">6aa45be1-4ad4-413f-8b63-a00bed4f9d62</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:51:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:51:56.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர்,</p><p>"விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.</p><h2>கர்நாடகா அதிக வேகம்</h2><p>தவெக அரசு அமைந்த பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">மேகதாது விவகாரத்தில்</a> அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா.</p> <p>மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சந்தித்து நிதி கேட்டுள்ளனர். ஆக.2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர்.</p><p>கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.</p><p>இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன.</p><p>அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>பேச ஒன்றுமில்லை.. அணை கட்ட கூடாது அவ்வளவுதான் - சௌமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss#comments</comments><guid isPermaLink="false">1b70709c-e61d-4fce-8557-0d4e619fb7ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:39:46.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Soumya Anbumani,Cauvery Issue,காவிரி விவகாரம்,சௌமியா அன்புமணி</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம் </a>தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>சவுமியா அன்புமணி </h2><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில், </p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். </p><p>இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.  அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான்.   </p><p>நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை" என்று தெரிவித்தார். </p> <h2>விஜய்</h2><p>முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், இந்த விவகாரத்தில் பேசுகையில், "பக்கத்துக்கு நாட்டுகிட்டயே பிரச்னையை பேசி தீர்க்க முடியுது. பக்கத்துக்கு ஸ்டேட்டு கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன். </p><p>ஒரு முயற்சியா இதை பண்ணலாம்னு நினைச்சேன்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">e4c8bf7d-e2a7-469b-8e3f-1d50e12a1ec6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:36:25.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Cauvery,TN budget,தமிழ்நாடு சட்டப்பேரவை,எடப்பாடி பழனிசமி,Edappadi K Palanisamy,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kaveri Water Dispute: Karnataka releases only surplus water to Tamil Nadu despite full reservoirs]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இறுதியில் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தெரிவித்தார். </p><p>சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  </p><p><strong>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்</strong></p><p>அவர் பேசியதாவது, "மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.</p><p>அதுனுடன் காவேரி பிரச்சனை வருகின்ற போது, அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காக, டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, அதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பிறகு அரசு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் கடந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படும் வரலாறாக உள்ளது".</p><p><strong>உபரி நீர் மட்டுமே வருகிறது</strong></p><p>"கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தால் தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது.</p><p>ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதினைந்து நாட்களுக்கு தினந்தோறும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><p>அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள்.</p><p>இப்பொழுது கபினி அணை மற்றும் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைகளும் நிரம்பிவிட்டன. அதனால் தற்போது உபரி நீர் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது".</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தி.மு.க ஆட்சியில் மூன்று முறை மனுக்கள் தள்ளுபடி குறித்து ஆதவ் கேள்வி - கே.என். நேரு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy#comments</comments><guid isPermaLink="false">3ab39143-24fd-488e-b97a-6aea2f1566bf</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:22:42.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம்</a> தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், </p><p>"எதிர்க்கட்சி தலைவர் அவரின் உரையில் ஒரு தவறான தகவலை கொடுத்தார். </p><p>பிரதமருக்கு ஒரு முறை மட்டும் தான் கடிதம் எழுதியதாக கூற, எதிர் தரப்பினர், இரண்டு முறை கூறினார் என கூச்சலிட திருத்திக்கொண்ட ஆதவ், முதல் முறை ஒரு முறை என்று சொல்லிவிட்டு பின்னர் இரண்டு முறை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார். </p><p>அதுமட்டுமில்லாமல் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என கூறினார். </p><p>அவைக்கு ஒரு கூடுதல் தகவலாக இன்று மதியம் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை மூத்த அமைச்சர்களை முதலில் சந்திக்க சொல்லி பின்னர் 3.30 மணியளவில் அவர்களை முதல்வர் சந்திக்க போன வாரமே அறிவுறுத்தலை வாங்கிவிட்டார். அது ஒரு பாயிண்ட். </p><p>எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கான விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும். </p><p>முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மேகதாது அணையை கட்டும் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து திமுக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனு மீது கவனமாக வலுவாக ஸ்டாலினின் திமுக அரசு தரப்பு வாதிடவில்லை. அதனால் அதுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எதிர்கட்சி தலைவர் வழங்க வேண்டும். நாங்க இப்ப தான் வந்திருக்கோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். </p> <h2>கே.என் நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என் நேரு, "மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னார்கள். </p><p>அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவது இயல்பு. நீங்கள் நல்லபடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய சண்டை வளர்க்க கூடாது. மேகதாது விவகாரம் குறித்து ஒற்றுமையை பற்றி பேசும்போது நீங்கள் வேறுபாட்டை பற்றி பேசுகிறீரர்கள்.</p><p>மேகதாது விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் எப்போதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி  கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka#comments</comments><guid isPermaLink="false">7f2a4b52-f422-4151-bdeb-5a11f9807017</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:53:28.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Udhayanidhi,உதயநிதி,Budget session,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly">சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் </a>இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி, காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>விஜய் பதில் </h2><p>இதற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசுகையில்,</p><p>"மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினோம்.</p><p>நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.</p><p>காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.</p><p>காவிரி பிரச்சனையில் பெங்களூரு செல்ல விரும்பியது நான் தான். பக்கத்து நாட்டுடன் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்கும் போது பக்கத்து மாநிலக்காரர்களிடம் பேசி பார்க்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன்.</p><p>அதில் ஒருவேளை அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன் என தெரிவித்தேன்.</p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p><p>காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">4ea24cd6-39d6-495c-9ca0-399ba44c1f1d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:22:06.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,இரங்கல் தீர்மானம்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.</p><p>அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.</p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.</p><p>பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>8-வது நினைவு தினம்: கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-death-anniversary-mk-stalin-pays-floral-tributes-at-karunanidhi-memorial#comments</comments><guid isPermaLink="false">8fc1b3f7-6334-4353-92ee-fe46084b307d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:09:39.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Karunanidhi,கருணாநிதி நினைவு தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/3jkdcqs5/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, தி.மு.க. தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p><p>தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது</p> <h2>கலைஞர் கருணாநிதி</h2><p>திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ந்தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந்தேதி கலைஞர் கருணாநிதி காலமானார். கருணாநிதியின் 8-வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.</p> <h2>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் கலைஞர் கருணாநிதி நினைவுநாளையொட்டி தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ள அமைதிப் பேரணி, இன்று காலை சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டது. இதனைத்தொடர்ந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.</p> <p>இந்த அமைதிப் பேரணியில், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today#comments</comments><guid isPermaLink="false">454ae348-88a9-4963-ade3-1cab68ef905d</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:05:07 +0000</pubDate><atom:updated>2026-08-07T03:05:07.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce case,Sangeetha,சங்கீதா,விவாகரத்து வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Sangeetha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/wt7yisno/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.</strong></em></p> <h2>விவாகரத்து கோரி மனு</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">விவாகரத்து கோரி</a> கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p> <p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. </p> <figure><img alt="Vijay - Sangeetha" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7ncd5hlv/vijay.jpg" /></figure> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p> <h2>மெயில் ஐ.டி.</h2><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">bd4a888a-7924-4116-8918-441971e7a88e</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:29:49.168Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினம்,chennai airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v8l19o07/chennaiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v8l19o07/chennaiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் முன்கூட்டியே வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>5 அடுக்கு பாதுகாப்பு</h2><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா</a> வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மீனம்பாக்கம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">விமான நிலையத்தில்</a> இன்று முதல் வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் இருந்த 3 அடுக்கு பாதுகாப்பு, தற்போது 5 அடுக்காக பலப்படுத்தி, விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.</p>  <p>இதையொட்டி பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் உடைமைகளில் திரவப்பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>துப்பாக்கி ஏந்திய போலீஸ்</h2><p>மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் விமான நிலைய நுழைவாயில், விமானங்கள் நிறுத்தும் பகுதிகள் என விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரும் தொடர்ந்து ரோந்து வருகின்றனர்.</p><p>பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் 20-ந் தேதி வரையில் விடுமுறை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளி பகுதியில் சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> <p>விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பார்வையாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக தடை அமுலில் உள்ளது. முக்கிய பிரமுகர்களை வரவேற்க, வழி அனுப்ப வருபவர்களுக்கு சிறப்பு பாஸ்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p> <h2>முன்கூட்டியே வர அறிவுறுத்தல்</h2><p>கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் காரணமாக உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரத்துக்கு முன்னதாகவும், பன்னாட்டு பயணிகள் 35 மணி நேரத்துக்கும் முன்பாகவும் விமான நிலையத்துக்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>  <h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>மேலும் விமான நிலைய வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்கள் பறக்க விடுதல், அதிக சக்தி கொண்ட லேசர் விளக்குகளை பயன்படுத்துதல், கியாஸ் நிரப்பிய பலூன்களை பறக்க விடுதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், இதனால் பயணிகள் அச்சப்பட வேண்டாம். பாதுகாப்பு சோதனைகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution#comments</comments><guid isPermaLink="false">1947f1f5-f6a1-452a-a983-575a52820009</guid><pubDate>Fri, 07 Aug 2026 02:26:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T02:26:21.573Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தனித்தீர்மானம்,தமிழக சட்டமன்றம்,Tax allocation,resloution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sukaud4w/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sukaud4w/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் இன்று அரசு தீர்மானம் கொண்டு வருகிறது.</p><h2>சிறந்த தமிழகம்</h2><p>தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிய உள்ளார்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாததாகும்.</p><p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p>மேலும், மத்திய வரிகளின் பகிர்வு என்பது சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற் றும் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகள் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், எந்த வித பாதகமான நிலையிலும் வைக்கப்படக்கூடாது.</p><h2>உரிய நிதிப்பகிர்வு</h2><p>இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை இந்த அவை கொண்டு வந்துள்ளது.</p><p>அதன்படி, மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். மத்திய வரிகளின் பகிர்விற்கான வெளிப்படையான, சமமான நடைமுறையை பின்பற்ற வேண்டும். </p><p>மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வளமேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக, மத்திய வரிகளின் பகிர்விற்கான அளவுகோல்கள், எந்த மாநிலத்தையும் பாதகமான நிலையில் வைக்காதவாறு அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>குரல் வாக்கெடுப்பு</h2><p>இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் விவாதிப்பார்கள். அதன் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மானம் விடப்படும். அதிக வாக்கு கிடைக்கும்பட்சத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய கைத்தறி நாள்: நெசவாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-message-on-national-handloom-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-message-on-national-handloom-day#comments</comments><guid isPermaLink="false">523b808f-2c82-4ae6-8c03-04d125bf7c62</guid><pubDate>Fri, 07 Aug 2026 01:21:10 +0000</pubDate><atom:updated>2026-08-07T01:21:10.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெசவாளர்கள்,handloom weavers,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தேசிய கைத்தறி நாள்,National handloom day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1pkd4eu6/vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1pkd4eu6/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய கைத்தறி நாளை ஒட்டி தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>12வது தேசிய கைத்தறி நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வெற்றித்தறி விற்பனை நிலையம், மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெற்றித்தறி விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் கைத்தறி பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட உள்ளார்.</p><p>மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p><h2>தேசிய கைத்தறி நாள்</h2><p>தேசிய கைத்தறி நாளை ஒட்டி, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை அதிகரிக்கவும், நெசவாளர்களுக்கென உயரிய கௌரவத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்யும் கைத்தறித் தொழிலின் பெருமையைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கைத்தறி நெசவாளர்களைப் போற்றும் வகையில், 7.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>கைத்தறி நெசவாளர்கள் தமிழ்நாட்டின் தலைமுறை தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி இரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.</p><p>எண்ணிக்கையில் இத்தொழில் மூலம் மகளிர் அதிக வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித் துறை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.</p><p>நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம், தொடர் வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டுவசதி திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்கிறேன். இவற்றை நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இத்திட்டமானது, தமிழக நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பிரீமியம் தர நிலை, சிறந்த கைவினைத் திறன் மற்றும் நவீன வண்ணங்களுடன் நேர்த்தியாக ஆடை நெய்து, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய வகையில் நவீன காட்சிப்படுத்துதல் வழியே சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கிடும்.</p><p>இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த அரசு, கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறை நெசவாளர்களுக்கு இருக்கும் என உறுதி அளிக்கிறேன்.</p><p>உறுதுணையாக "கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம்; கைத்தறிப் பொருட்களை வாங்கி ஆதரிப்போம்" என்ற உணர்வுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கைத்தறித் தொழில் மேலும் வளர்ச்சியடைந்து, நமது நெசவாளர்களின் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கீழடி அகழாய்வு முடிவுகளில் இலங்கைத் தமிழ் வம்சாவளியினருக்கு தொடர்பு: மரபியல் துறைத் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head#comments</comments><guid isPermaLink="false">fe79bd08-91bf-455f-a44a-5aa9c9314e74</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:38:03 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:38:03.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழ்வாராய்ச்சி,keezhadi,Sivagalai excavation,கீழடி,சிவகலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Keeladi-Adichanallur DNA Analysis: South Asian and Sri Lankan Tamil ancestry connection revealed]]></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi-Adichanallur excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF">கீழடி</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆதிச்சநல்லூர்</a> பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மனித டி.என்.ஏ பகுப்பாய்வில், அங்கு வசித்தவர்கள் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் மற்றும் தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையில் உள்ள பண்டைய டிஎன்ஏ ஆய்வகம், முக்கிய தொல்பொருள் தளங்களிலிருந்து சிதைந்த டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து 75,000-க்கும் மேற்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த கண்டுபிடிப்புகளை எட்டியுள்ளது.</p><h3>மரபியல் துறைத்தலைவர் பேட்டி </h3><p>இதுகுறித்து மரபியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. குமரேசன் கூறுகையில், “கீழடி மக்கள் பயன்படுத்தி வந்த  சுடுகாடான கொந்தகையிலிருந்து சுமார் 75,000 தரவுகளும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலையில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளிலிருந்து முறையே சுமார் 9,000 மற்றும் 6,000 தரவுகளையும் நாங்கள் பிரித்தெடுத்துள்ளோம். </p><p>இந்த தரவுகள் தென்னிந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் தெற்காசியர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அல்லீல் அதிர்வெண்களைக் (allele frequencies) காட்டுகின்றன.</p><p>நாங்கள் மேலும் பல தரவுகளை பிரித்தெடுத்து பதப்படுத்த விரும்புகிறோம். மேலும் சில மாதிரிகளிலிருந்தே அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். </p><p>பல்வேறு முறைகளை பயன்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><p>நாங்கள் மேலும் இரண்டு சுற்றுகளுக்கு செல்வோம், தரவுகள் உறுதியானவுடன், அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச இதழ்களில் வெளியிடுவோம். </p><p>ஆராய்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்காக, அதன் கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட விரும்புகிறோம்.</p><p>சங்க இலக்கியம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் குறிப்புகளைப் பயன்படுத்தி பல விஷயங்களில் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அது இல்லாமல், இந்தப் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கீழடி மற்றும் சிவகலை அகழாய்வுகள்</strong></h3><p>கீழடி என்பது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையைச் (ASI) சேர்ந்த கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவால் 2014-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சங்க கால தளமாகும். இது கார்பன் காலக்கணிப்பின்படி 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தேதியிடப்பட்டுள்ளது.</p><p>சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனத் தேதியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், உருக்கப்பட்ட இரும்பிற்கான அறியப்பட்ட மிகப்பழமையான தேதிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.</p><p>டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு இணையாக, மனித இடம்பெயர்வைத் தவிர, வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகளின் இனங்களையும், அதன் மூலம் அவற்றின் இடம்பெயர்வு முறையையும் அடையாளம் காண்பதற்காக, அந்த ஆய்வகம் புரதங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது. </p><p>பயன்படுத்தப்பட்ட பானைகளில் கொலஸ்ட்ரால் இருப்பது, அங்கு வசித்த மக்கள் இறைச்சியை உட்கொண்டனர் என்பதற்கு சான்றாக அமைகிறது.</p><p>புதிய உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள், பண்டைய தமிழர்கள் பல்வேறு வகையான அரிசி மற்றும் தினையைப் பயிரிட்டு, குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நுட்பமான சமையல் மரபுகள் தோன்றியதைக் காட்டி, பண்டைய விவசாயப் பழக்கவழக்கங்களை வெளியே கொண்டுவந்துள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட அரிசி மாதிரிகளிலும், கொடுமணலில் இருந்து பெறப்பட்ட தினையிலும் கண்டறியப்பட்ட கரிம மூலக்கூறுகள், நெய், பீன்ஸ், கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் அரிசி உட்கொள்ளும் ஒரு உணவுமுறையை வெளிப்படுத்துகின்றன.</p><p>குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கிய மேற்கோள்களை பயன்படுத்தி இந்தக் கருத்துக்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது - அமைச்சர் ஜெய்சங்கருக்கு  முதலமைச்சர் விஜய் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-the-external-affairs-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-the-external-affairs-minister#comments</comments><guid isPermaLink="false">2767d815-b8a5-403c-8d8e-377a629e001b</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:53:06.605Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Fishermen,Sri Lankan navy,இலங்கை கடற்படை,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தமிழ்நாடு மீனவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxwvh3qp/New-Project-2026-08-06T212224.402.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxwvh3qp/New-Project-2026-08-06T212224.402.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிகளைப் பெற்ற பிறகு, மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். </p><p>கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது பலத்த நீரோட்டம் காரணமாகப் படகு நெடுந்தீவு கடல் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>உடனே மீனவர்கள் படகை இந்தியக் கடல் பகுதிக்கு திருப்ப முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அங்குவந்த வந்த இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் அவர்களை வழிமறித்து, சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டி,  11 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.</p><p>கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாடு மீனவர்களையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>அதில், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைதானவர்களையும், படகையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். </p><p>மேலும் இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே, இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-prime-minister-urging-the-speedy-implementation-of-the-godavari-cauvery-gundar-linking-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-prime-minister-urging-the-speedy-implementation-of-the-godavari-cauvery-gundar-linking-project#comments</comments><guid isPermaLink="false">8caa5d26-b1fc-4eb9-9e0e-f6b05f190dbf</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:33:39.995Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Cauvery-Godavari-Gundar Link Project,காவிரி - கோதாவரி -குண்டாறு இணைப்புத் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bkcu7aqs/New-Project-2026-08-06T210312.645.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bkcu7aqs/New-Project-2026-08-06T210312.645.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட மத்திய ஐல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்தரவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். </p><h2>நீர்த்தேவைக்கு அண்டை மாநிலத்தை சார்ந்திருக்கும் தமிழ்நாடு</h2><p>அக்கடிதத்தில், தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. </p><p>மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், </p><p>தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது. என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முன்னுரிமை அடிப்படையில் கோதாவரி- காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை பரிசீலிக்கவும்</h2><p>மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி - காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீரை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை, கோதாவரி - பெண்ணாறு -பாலாறு - வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஜய், இந்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி- காவிரி -குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். </p><h2>தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்</h2><p>ஆகவே, தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி -காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட, அதற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக சிறப்பு நோக்கு அமைப்பை (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும், வெற்றிக்கரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் </h2><ul><li><p>எனவே ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும், தேசிய மேம்பாட்டு முகமைக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். </p></li><li><p>தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். </p></li><li><p>காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும்.</p></li><li><p>இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல் மற்றும்</p></li></ul><ul><li><p>இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்</p></li></ul><p>இத்திட்டம் தொடர்பாக பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்தி தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
 - 6 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026#comments</comments><guid isPermaLink="false">cea48297-4a0d-4b97-9bab-77c908ac9582</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:58:33.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-pakistan-clash-headlines-womens-asia-cup-2026-schedule">மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதி அறிவிப்பு</a></p><p>* மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் தொடங்குகிறது.</p><p>* முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet">தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</a></p><p> * தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு.</p><p>* இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-to-hold-presidential-election-on-august-20-ec">வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்</a></p><p>* அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ஜூலை 24-ம் தேதி ராஜினாமா செய்தார்.</p><p>* நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/medvedev-zverev-lose-second-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ், ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/carlos-alcaraz-withdraws-from-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 2 வீரர் விலகல்</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.</p><p>* கார்லோஸ் அல்காரஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-want-to-kill-people-i-just-want-a-deal-with-iran-says-trump">"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!</a></p><p>* டிரம்ப் மக்கள் உயிரை காக்க ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்</p><p>* அமெரிக்கா இஸ்ரேல் ஆயுதம் வைத்திருக்கும் வரை நாங்களும் தொடர்வோம் என்றது ஈரான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes">அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்</a></p><p>* காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.</p><p>* பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-ashmita-chaliha-enter-qf-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தன்வி ஷர்மா, அஷ்மிதா சலிஹா காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் அனைவரும் வெளியேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-rybakina-enter-next-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் கோகோ காப், ரிபாகினா வெற்றி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது</p><p>* முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-beat-west-indies-in-second-test">2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்</a></p><p>* பாகிஸ்தானின் அப்துல்லா ஷபிக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p>* இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism" rel="nofollow">வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்</a></p><p>* வேளாண் பட்ஜெட்டில் ரூ.470.92 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டு.</p><p>* இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again" rel="nofollow">மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</a></p><p>* தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் நிகழ்வு நடைபெற்றது.</p><p>* அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day">சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</a></p><p>* சுதந்திர தினம் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை</p><p>* பாதுகாப்பு அதிகரிப்பு, பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வருவதற்கு உத்தரவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</a></p><p>* முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும்.</p><p>* செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.</p><p>சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் முழு விவரம் வருமாறு:</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jug0dj1h/ministervinoth.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது முதலமைச்சர் குறித்து பேசிய அமைச்சர் வினோத் இறுதியாகவும் முதலமைச்சர் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.</p><p>அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் மட்டும் நீக்குவதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.</p><p>கடந்த 2 மணி நேரமாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><p>பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் - அமைச்சர் வினோத்</p><p>நடப்பாண்டில் கூடுதலாக 2.50 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் - அமைச்சர் வினோத்</p> <p>விதை இருப்பை அதிகரிக்கும் வகையில் மேலும் 150 விதை பயிர் தொகுப்பு ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 லட்சம் சந்தன மரம், 50,000 தேக்குமரம் உள்ளிட்ட மரங்களை நடுவதற்கு திட்டம்</p><p>மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் தருவதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு</p><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25% மூலதன மானியம் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்குவதற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு</p><p>வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கால்நடை தீவனம் ஒரு கிலோ ரூ.2 மானிய விலையில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு</p><p>2026-2027 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>உதகையில் வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம்</h2><p>உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி, 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பலகை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</p> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.4.8 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்ட 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்ட, மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>225 ஏக்கர் பரப்பளவு வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கத்திற்காக ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><p>மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னையில் 100% மானியத்தில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்த திட்டம்.</p><p>தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சமபங்கு நிதியாக உறுப்பினருக்கு தலா ரூ.5000 வழங்க ரூ.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பொறியியல் விரிவாக்க, பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி ஒதுக்கீடு.</p><p>வேளாண்மையில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்தும் திட்டங்களுக்கான செயல்விளக்கங்ளுக்கு ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><h2>வேளாண் இயந்திரங்கள் </h2><p>உழவர்களுக்கு வேளாண் பொருட்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த ரூ.20.31 கோடி ஒதுக்கீடு</p><p>புதிதாக 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிக்காக வான் மகள் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும்.</p><p>57,000 மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் மற்றும் கருவி வழங்க ரூ.227.2 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு </p><p>தென்னை பதப்படுத்தும் கழகம்  ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/gi2bnhlf/coconut.jpg" /></figure><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும் என அறிவிப்பு</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>அளவு கடந்த ஊட்டச்சத்து உள்ள தமிழ்நாடு தளிர்கீரை திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு</p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.</p> <p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்</p><p>மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p> <p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு  - அமைச்சர் வினோத்</p><p>நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.</p><p>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு</p><p>பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு</p> <p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/phbqf2zv/paddy.jpg" /></figure><p>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ogk40j0p/compost.jpg" /></figure><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு -  வேளாண் அமைச்சர்</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p> <p>5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத் </p><p>மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p> <p>பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.</p><p>இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத் </p><p>விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது. </p><p>நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.</p><p>டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.</p> <p>செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.</p><p>வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்   - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம்  - அமைச்சர் வினோத்</p> <p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8smd7lya/vinoth2.jpg" /></figure><p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/baakw511/speaker.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5ady734p/udhayanidhi.jpg" /></figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/x2lizk1n/vijay.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xpjmrorm/dmk2.jpg" /></figure><p>சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.</p> <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</p><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet#comments</comments><guid isPermaLink="false">fe1a75ab-dbec-4be5-b390-5a02a0a2a227</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:13:35.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,தொகுதி மறுவரையறை,Delimitation,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. </p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்படுகிறது.</p><p><strong>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</strong></p><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. </p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இல்லை - பெ. சண்முகம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">5eccd42c-9d50-4a1a-b748-3147bc0001b9</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:16:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:16:49.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் அறிக்கை இல்லை - பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று வேளாண்துறை அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். </p><p>இந்நிலையில் வேளாண் அறிக்கை விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>வரவேற்கத்தக்கது</h2><p>“வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது,</p><p>வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும், வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே, விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவது, மனித உழைப்பை முற்றிலும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்புக் கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><h2>தொடர்கதை</h2><p>விவசாயத்திற்கு முக்கியம் தரமான விதை, உரம், பாசன உத்தரவாதம், சந்தை வாய்ப்பு கொள்முதல் உத்தரவாதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்படுவதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர்கதையாக உள்ளது. </p><p>ஆனால், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.</p><p>காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது, மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>சட்டப்பேரவை தேர்தலின்போது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும், </p><p>விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ. 15,000 வழங்கப்படும் என்பதும், 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது. </p><p>பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்-கோவை இடையே 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் விரைவில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettupalayam-coimbatore-memu-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettupalayam-coimbatore-memu-train#comments</comments><guid isPermaLink="false">c0b11d04-e9b5-484f-b81e-34ba023c0033</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Memu Train,மெமு ரெயில்,Mettupalayam,மேட்டுப்பாளையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xe8chdx6/trainmemu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ memu train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xe8chdx6/trainmemu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் ரெயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>மேட்டுப்பாளையம்-கோவை இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மெமு ரெயில்</strong></h2><p>பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, இந்த சேவையை 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயிலாக மாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><h2><strong>ரெயில்வே நிர்வாகம்</strong></h2><p>இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கோவைக்கு 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் அறிமுகம் செய்து அடுத்த வாரம் 10 அல்லது 12-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>8 ரெயில் பெட்டிகள்</strong></h2><p>அதே நேரத்தில், 12 பெட்டிகள் கொண்ட மெமு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகள் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2><strong>திண்டுக்கல்</strong></h2><p>கோவை மண்டலத்தில் ஏற்கனவே மெமு ரெயில் பெட்டிகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கோவையில் இருந்து சேலம் மற்றும் கோவையிலிருந்து திண்டுக்கல் வரை மெமு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>ரெயில் சேவை</strong></h2><p>அதே சமயம், கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை மெமு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். எனவே, தற்போது பயன்பாட்டில் உள்ள 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகளை சென்னைக்கு திருப்பி அனுப்பாமல், அவற்றை கோவையிலேயே தக்கவைத்து, கோவையில் இருந்து பொள்ளாச்சி அல்லது பழனி அல்லது திண்டுக்கல் அல்லது சேலம் ஆகிய வழித்தடங்களில் புதிய மெமு ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>இதன்மூலம் தினமும் பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள். எங்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து, சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">30c68336-4319-40d8-9078-c4dc2948c086</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:37:23.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,compensation,இழப்பீடு,Tiruvallur ammonia leak,திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>மூன்று பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>ஜூன் 21ம் தேதி ஆலையில் ஏற்பட்ட இந்த அமோனியா கசிவில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.</p><p>முன்னதாக மூவரின் ஜாமின் மனுவையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணி: மூலக்கடையை வந்தடைந்தது &apos;நீலகிரி&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai#comments</comments><guid isPermaLink="false">7366444b-c6e4-4cce-98a1-a58a1df38830</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:43:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:43:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,Chennai Metro Rail,சென்னை மெட்ரோ ரெயில்,Nilagiri,மெட்ரோ ரெயில்,நீலகிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் நீலகிரி எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்தது.</p><p>சுரங்கம் தோண்டும் இயந்திரமான நீலகிரி வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.</p><p>இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல்  நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. </p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>இதில், 'நீலகிரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரெயில் நிலையத்திலிருந்து மூலக்கடை இரயில் நிலையம் வரையிலான (up line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.</p><p>மொத்தம் 819 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும்.</p><p>ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் வரும் மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப் பாதை பகுதி பல பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தது; குறிப்பாக, 'நீலகிரி' (S 96) என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்ததோடு, அப்பகுதியில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு தடையின்றி மாற்று நீர் ஆதாரங்களை அமைத்துக் கொடுத்து இப்பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><p>சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் திரு. கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் திரு. PSS நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு. விஜய குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor#comments</comments><guid isPermaLink="false">cb5e13c2-f58b-4b0e-a73a-1472a27568c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:09:44.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,தமிழ்த்தாய் வாழ்த்து,Rajendra Vishwanath Arlekar,ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,Tamizh Thai Vaazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டாக கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு, பல்கலைக்கழக விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்திலும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படவும் வழிவகை செய்யுமாறு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர். </p><p>ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெளிவான மற்றும் முன்கூட்டிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். </p><p>2021ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநில கீதமாக இப்பாடலே இருந்து வருவதாகவும், 5 தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலே முதலில் இசைக்கப்பட்டு வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது கூட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்ததை எம்.பி.க்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது தமிழ் மக்களையும், அந்தப் பல்கலைக்கழகம் யாருடைய பெயரால் அமைந்துள்ளதோ, அந்தப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையையும் அவமதிப்பது போல் உள்ளதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>அரசு நிறுவனங்கள் “கண்ணியத்துடனும், சர்ச்சைகள் இன்றியும்” தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, தாங்கள் இந்தக் கோரிக்கையை ஒரு புகாராக அல்ல, மாறாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். </p><h2>கடிதத்திற்கான காரணம் என்ன?</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே இந்த சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது. </p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இணைந்து இந்தக் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு எழுதியுள்ளனர். </p>]]></content:encoded></item></channel></rss>