<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 21:38:29 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:29:20.774Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history">காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* காவிரி விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. </p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana" rel="nofollow">அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</a></p><p>*  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>* ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet">மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </a></p><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p> <p>​​<a href="https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt">திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</a></p><p>* ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்பரங்குன்றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்தது.</p><p>* ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar" rel="nofollow">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர்.</p><p>* இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland">மாவீரர் தீரன் சின்னமலை 'அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்' என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</a></p><p>* அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர் தீரன் சின்னமலை  </p><p>* 221வது நினைவுநாள் தமிழகமெங்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship">இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய 'மெலோடி டிராமிசு' அறிமுகம்!</a></p><p>* பார்லே மெலோடி டிராமிசு இந்தியா-இத்தாலி நட்பை கொண்டாடுகிறது.</p><p>* மோடி+மெலோனி மீம்ஸ் உண்மை சாக்லேட்டாக மாறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds">பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</a></p><p>* பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் 1,145 வாக்குகள் முன்னிலை  </p><p>* 4-வது சுற்றில் ஜன சுராஜ் 6,269 வாக்குகள் பெற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal" rel="nofollow">பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</a></p><p>* வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court">காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு</a></p><p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended">பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்</a></p><p>* திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>* முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5">பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 239/5</a></p><p>* ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.</p><p>* பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi">அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி... </a></p><p>*பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>*CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu" rel="nofollow">ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</a></p><p>* தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.</p><p>* விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker">கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!... </a></p><p>*தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர்.</p><p>*அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down">லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!</a></p><p>* அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம்.</p><p>* அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support">ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: 'ஸ்விகி,சொமேட்டோ' மூலம் உணவளித்து ஆதரவு!... </a></p><p>*ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>*மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram">ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p>* செயிண்ட் கோபைன், ரெனால்ட்-நிசான், டெய்ம்லர் நிறுவனங்களை பார்வையிட்டார்  </p><p>* ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc">பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!... </a></p><p>*தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>*இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns">டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</a></p><p>* 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.</p><p>* ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies">ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!... </a></p><p>*டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். </p><p>*அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt">ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</a></p><p>* அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. </p><p>* இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger">எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!... </a></p><p>*டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>*அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/subhadeep-ghosh-replaces-t-dilip-as-india-men-fielding-coach">இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பீல்டிங் கோச்: யார் அவர்?</a></p><p>* இந்திய மகளிர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்தியா ஏ (India A) அணியுடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் அசாம் மாநிலத்தின் சீனியர் ஆண்கள் அணிக்கும் பயிற்சியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">a8b62a42-1079-4780-99da-9027714eea23</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:01.227Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,mekedatu dam,மேகதாது அணை,Government of Tamil Nadu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரக் கோரி, தமிழ்நாடு அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன்படி காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, அதற்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது புதிய மனுவில் வலியுறுத்தியுள்ளது.</p><p>மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.</p><p>இதனை கருத்தில்கொண்டே கர்நாடக அரசின் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால் அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடகா முரண்டு பிடித்துவருகிறது. </p><p>சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த சில பதில்கள் தமிழ்நாட்டிற்கு சாதகமற்று இருந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு புதிய மனுக்களை தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur#comments</comments><guid isPermaLink="false">e60721ba-7eb3-4b31-8fdc-e76dae3e0b8f</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:13:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:13:33.443Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வேங்கைவயல் வழக்கு,வேடசந்தூர்,Vedasandur,Vengaivayal case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில் உள்ள தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மாணவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து தொட்டியின் உள்ளே பார்த்தப்போது தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. மேலும் அதில் ஒரு எச்சரிக்கை குறிப்பும் இருந்துள்ளது.</p><p>இதனைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக ஆசியர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வடமதுரை போலீசார் வந்து சம்பவ இடத்தில் பார்வையிட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமாரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். </p><p>இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வேங்கைவயலில் இதேபோல அரங்கேறிய சம்பவத்திலேயே இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாதநிலையில், மீண்டும் அதேபோன்ற கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. </p><h2>வேங்கைவயல் வழக்கு </h2><p>புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பவர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>இந்த வழக்கில் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.</p><p>விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளித்து நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஆனால் தற்போதுவரை வரை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. </p>]]></content:encoded></item><item><title>ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt#comments</comments><guid isPermaLink="false">910ded4b-cd01-4b89-b390-4efa095a23eb</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:43:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:43:12.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Nara Lokesh,நாரா லோகேஷ்,ChandraBabu Naidu,சந்திரபாபு நாயுடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சந்திரபாபு நாயுடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளமாக அறியப்பட்ட ராயலசீமா பகுதி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளின் மூலமும் ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.</p><p>வறட்சி மற்றும் குறைந்த வாய்ப்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த ராயலசீமா, இப்போது புதிய வரலாற்றை எழுதி வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷின் முதலீட்டாளர் ஈர்ப்பு முயற்சிகள் இதற்குப் பின்னணியாக உள்ளன.</p><h2>ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள்</h2><p>அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p>இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், மின்னணுவியல் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை, சிமெண்ட் மற்றும் தோட்டக்கலை ஆகிய துறைகளில் வரவிருக்கும் திட்டங்களால் உண்மையான முதலீட்டு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.</p><h2>சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடம்</h2><p>சென்னை- பெங்களூரு மற்றும் பெங்களூரு- ஐதராபாத் ஆகிய இரண்டு முக்கிய தொழில் வழித்தடங்களின் சந்திப்பில் ராயலசீமா அமைந்துள்ளதால், அதற்கு ஒரு முக்கிய மூலோபாய அனுகூலம் கிடைத்துள்ளது.</p><p>புவியியல் அமைப்பைப் போலவே கொள்கை முடிவுகள், விரைவான அனுமதி நடைமுறைகள் மற்றும் பெரிய அளவிலான நில இருப்பு ஆகியவையும் இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. மாநிலத்தின் மொத்த தொழில் பயன்பாட்டு நிலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை ராயலசீமா பகுதியிலேயே அமைந்துள்ளன.</p><p>மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) ஆகிய துறைகளுக்கான பிரத்யேகக் கொள்கைகளும் இதற்குப் பெரிதும் உதவுகின்றன.</p><p>மூலதன மானியங்கள், முத்திரைத் தாள் கட்டண விலக்குகள், மாநில ஜிஎஸ்டி (SGST) திரும்பப் பெறுதல் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் ஆகியவை இம்மாநிலம் வழங்கும் பிற ஈர்ப்புகளாகும்.</p><p>ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில், மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானம் (AMCA) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரால் அது தொடங்கி வைக்கப்பட்டது. வெறும் 38 நாட்களில், இத்திட்டம் ஒப்புதல் கட்டத்திலிருந்து அடிக்கல் நாட்டு விழா வரை முன்னேறியுள்ளது.</p><h2>சிமெண்ட் நிறுவனங்கள் உற்பத்தித் திறன்</h2><p>அல்ட்ராடெக், இந்தியா சிமெண்ட்ஸ், ராம்கோ மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ போன்ற சிமெண்ட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளன. இப்பகுதியின் அனந்தபுரத்தில் முதன்முறையாக பேரீச்சை போன்ற அரிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.</p><p>பாதுகாப்பு, மின்னணுவியல், மின்சார வாகன உற்பத்தி மற்றும் வேளாண் பதப்படுத்துதல் திட்டங்களுடன், ராயலசீமா தென்னிந்தியாவின் அடுத்த முக்கிய தொழில் மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.</p><p>வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் பகுதியாகவும், மறக்கப்பட்ட இடத்திலிருந்து போர் விமானங்கள் வரையும் இடமாகவும் மாறியுள்ள ராயலசீமா, இனி பின்தங்கியிருக்கவில்லை. அதுவே முன்னணியில் உள்ளது.</p><p>இவ்வாறு ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc#comments</comments><guid isPermaLink="false">6122e182-1437-4edd-82a2-7eb7bc0c2e9f</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:10:18.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,உயர்நீதிமன்றம்,High Court,Tamilnadu Government,Bike taxis,பைக் டாக்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bike taxi
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் அரசு உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.</p><p>மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p>இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><h2><strong>அரசு தரப்பு வாதம்:</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கொள்கை முடிவு:</strong></h2><p>இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தார்.</p><h2><strong>பொதுமக்கள் விழிப்புணர்வு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது. பைக் டாக்சிகளில் பயணத்தின் போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.</p><h2><strong>விரைவு முடிவு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில் மத்திய அரசு சட்டப்படியும் வழிகாட்டுதலின்படியும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி உள்ளதாக வாதிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் கொள்கை முடிவு அறிவிப்புகளைத் தலைமை நீதிமன்றம் உற்றுநோக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram#comments</comments><guid isPermaLink="false">50d2b10c-b4b8-4166-a73b-d54cbb894075</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:41:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:41:26.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Sriperumbudur,Renault Nissan,cm vijay,முதலமைச்சர் விஜய்,CMVijay Inspection,Oragadam SIPCOT,ஒரகடம் சிப்காட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspection ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதலமைச்சர் ஜோசப்</a> விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழில் வளாகங்களில் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.</p><h2><strong>செயிண்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் ஆய்வு:</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான 'செயிண்ட் கோபைன்' உலகத்தரம் வாய்ந்த கண்ணாடி தயாரிப்பு வளாகத்தில் தனது முதல் ஆய்வை முதலமைச்சர் மேற்கொண்டார்.</p><p>தமிழக அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த ஆலை மிகப்பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>அங்கு தயாரிக்கப்படும் அதிநவீன கண்ணாடி உற்பத்திப் பிரிவுகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். </p><p>முதலமைச்சரின் வருகையை ஒட்டி, அப்பகுதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>ரெனால்ட்-நிசான் நிறுவனத்திலும் ஆய்வு:</strong></h2><p>கண்ணாடி ஆலை நிறுவன ஆய்வை முடித்து விட்டு, அதனைத் தொடர்ந்து ஒரகடம் பகுதியிலேயே அமைந்துள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்-நிசான் தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். </p><p>முதலமைச்சர் விஜய்க்கு அங்கிருந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><h2><strong>அடுத்த இலக்கு: ஒரகடம் 'டெய்ம்லர் இந்தியா' ஆலை:</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அடுத்ததாக ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' மற்றும் 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற்பத்தித் தொழிற்சாலைக்கு ஆய்வுக்காக விரைந்துள்ளார்.</p><p>சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான வணிக வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். </p><p>உலகப் புகழ்பெற்ற 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட நவீன பஸ்கள், கனரக லாரிகள் மற்றும் பஸ் சேஸ்கள் இங்கு சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.</p><p> தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அடுத்ததாகநேரில் ஆய்வு செய்ய உள்ளார்.</p><h2><strong>பயணத்தின் முக்கிய நோக்கம்:</strong></h2><p>தமிழகத்தை இந்தியாவின் முதன்மை முதலீட்டு மையமாக மாற்றுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். </p><p>பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை நேரில் மதிப்பீடு செய்வதன் மூலமும், தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் மாநிலத்தில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview#comments</comments><guid isPermaLink="false">671cefc7-e4f4-4052-b966-d6530d921be0</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:36:22 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:36:22.795Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,EPS,இபிஎஸ்,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவில் மோதல் வெடித்தது. இபிஎஸ்மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.</p><p>அப்போது இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் இன்னும் மோதல் முற்ற சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் இபிஎஸ்.</p><p>பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்டு எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சுமூகமாக சென்றனர். அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. </p><p>வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.</p><p>இதனிடையே விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும் இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி.சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். </p><p>சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியில் இருந்து பிரிந்த அனைவரையும் மீண்டும் சேர்க்கவேண்டும். எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு டாக்டர் வீட்டில்  40 பவுன் நகை கொள்ளை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/40-pound-jewelry-robbery-in-chengalpattu-doctor-house</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/40-pound-jewelry-robbery-in-chengalpattu-doctor-house#comments</comments><guid isPermaLink="false">d2b1c14c-3bf3-493f-9a59-cab4ec49c4d0</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:32:11.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,நகை கொள்ளை,jewelry robbery</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1pr7cjae/jewelry.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1pr7cjae/jewelry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.  </aside><p>வேலூர், சத்துவாச்சாரி ஏரியூரை சேர்ந்தவர் முனிரத்தினம். ஐ-கோர்ட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (வயது 70). கணவர் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் சேல்ஸ்மேனாகவும், 2-வது மகன் புருஷோத்தமன் செங்கல்பட்டில் டாக்டராக  பணியாற்றி வருகின்றனர்.  </p><p>அம்பிகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்ப்பதற்காக செங்கல்பட்டிற்கு சென்றுார். அன்று இரவு அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் அம்பிகாவின் வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டனர். மர்ம நபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.  பூஜை அறையில் பையில் இருந்த 40 நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.  </p><p>நேற்று காலை அம்பிகாவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பாலாஜி என்பவர் கீழே வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.  அம்பிகா நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu#comments</comments><guid isPermaLink="false">5dfdd6e4-c4f9-4b14-b883-aace79585c4e</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:50.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,தவெக அரசு,TVK Govt,பட்டாசு தொழிற்சாலை,fire works</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசு ஆலைகள், விற்பனையகங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் கெடுபிடி செய்வதா? என்றும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இத்தகைய கெடுபிடிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் பொருளியல் வரைபடத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும். லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்வது சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பட்டாசு உற்பத்தித் தொழிலே ஆகும். </p><p>ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.6000 கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இத்தொழிலை நம்பி ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றனர். </p><p>நமது நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பட்டாசுத் தொழிலும், அதனை நம்பியிருக்கும் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களும், தொழிலாளர்களும் இன்று த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகளினால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.</p><p>சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீதோ அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்து சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மீதோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை யாரும் தவறு என்று சொல்லப்போவதில்லை. மனித உயிர்களின் பாதுகாப்பும். விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. </p><p>ஆனால், அரசின் அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு. உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர் உரிமம், மெட்ராஸ் உரிமம் மற்றும் பிற முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் அவற்றை முறைப்படி புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், "அதிரடி ஆய்வு" என்ற பெயரில் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை.</p><p>தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலகட்டத்தில், பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கவிருக்கும் நேரத்தில், அதிகாரிகளின் இந்தத் தேவையற்ற அதிரடி சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்?</p><p>இந்தத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுப்பட்டுள்ள நிலையில், அரசின் தேவையற்ற கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது. அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.</p><p>சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் "ஆய்வு" என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் இந்த த.வெ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி. தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு. பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.</p><p>உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம்?- மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">eca776b7-d056-427a-b3f4-3d3ac76271c4</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:41.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trisha,திரிஷா,திரிஷா நற்பணி மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</aside><p>அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி, மதுரையில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாடு  முழுவதும் பேசுபொருளாக மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. </p><p>அதிலும் பல மீட்டர் அளவுக்கு இடம்பெறும் போஸ்டர்கள் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  அந்தவகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> தொடர்பான போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. </p><h2><strong>நற்பணி மன்றம்</strong></h2><p>தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையாக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner">திரிஷா</a> தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். </p><p>இந்தநிலையில், மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த போஸ்டரில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில், முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p>அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet#comments</comments><guid isPermaLink="false">d5913084-a038-4ed4-84d8-cbd360907412</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:41:41.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்சி ஆனந்த்,tvk,Minister Bussy Anand</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி அமைச்சர் என்.ஆனந்த் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அமைச்சர் ஆனந்த் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகரில் திடீரென ஆய்வு பணிகளை மேற்கொண்டார். </p><h2><strong>பொதுமக்களிடம் கலந்துரையாடல்</strong></h2><p>ஆய்வின்போது <a href="https://www.maalaimalar.com/topic/புஸ்சி-ஆனந்த்">அமைச்சர் என்.ஆனந்த்</a> பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கழிப்பிட வசதி மற்றும் வீட்டு வசதி என அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கைகள் வைத்தனர். </p><p>கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் என்.ஆனந்த் முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உடனடியாக மொபைல் கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு செய்தார். </p><p>தொடர்ந்து நிரந்தரமாக கழிப்பிட வசதி மற்றும் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என பொதுமக்களிடம் கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய் எப்போதும் ஏழை மக்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவர்.</p><p>உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார் எனக்கு கூறினார்.</p><p>இதைக்கேட்ட பொது மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.  தொடர்ந்து திடீர் நகரில் உள்ள கூவம் ஆற்றில் அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆற்றின் கரையோர பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தபோது கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து இருப்பதை கண்டார். </p><p>இதனால் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுவதை அறிந்த அமைச்சர் என். ஆனந்த் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி கூவம் ஆற்றை தூர் வாரவும் உத்தரவிட்டார். </p><p>தூர்வாரும் பணிகளை வருகிற மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.</p><p>ஆய்வின் போது சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தன.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் தண்ணீர் வராதது ஏமாற்றம் அளித்தது - புதுமண தம்பதி பேட்டி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery#comments</comments><guid isPermaLink="false">04d56682-5038-48db-95de-84a2758f5d8c</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:30:37.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,புதுமண தம்பதி,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi perukku festival Couple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. இது  பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய இளங்கோவன் -காவ்யா தம்பதியினர் கூறும்போது, </p><h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>திருமணத்துக்கு பின் முதல் முறையாக இன்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">ஆடிப்பெருக்கு</a> விழாவை கொண்டாட வந்தோம். ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து மகிழ்வதே முதலில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் காவிரி ஆற்றில் குளிக்க முடியாதது ஏமாற்றமாகி விட்டது. </p> <h2>மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு</h2><p>தண்ணீர் வராத காரணத்தினால் நாங்கள் வீட்டிலிருந்து குளித்துவிட்டு இங்கு புறப்பட்டு வந்தோம். பின்னர் மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு செய்தோம். தண்ணீர் வராத காரணத்தினால் வழக்கமான கூட்ட த்தையும் பார்க்க முடிய வில்லை என்றனர்.</p><p>பொதுமக்கள் சிலர் கூறுகையில், <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2">ஆடிப்பெருக்கு</a> நாளன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்து புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். கரைபுரண்டு ஓடும் புதுவெள்ளத்தில் கால்களை வைத்து, காவிரித் தாயை வேண்டி, பூக்களையும் மங்களப் பொருட்களையும் ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்வதே அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இந்த ஆண்டு கண் எட்டும் தூரம் வரை வெறும் மணல் பரப்பாகவே காட்சியளிக்கிறது.</p> <h2>காவிரி வறண்டது</h2><p>பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வரும் தண்ணீரில் நீராடி வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜீவ நதியான காவிரியில் நீர்வரத்தின்றி வறண்டு கிடப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது. </p> <p>விவசாயிகள் கூறுகையில், “ஆடிப்பெருக்கு நாளன்று காவிரியில் நீர் பொங்கி வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் விவசாயம் செழித்து வளரும் என்பது எங்களின் தலைமுறை நம்பிக்கை. காவிரி அன்னைக்கு சிறப்புப் படையலிட்டு, ஆற்று நீரைக் தலையில் தெளித்து வழிபாடு செய்தால்தான் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். தற்போது ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டதால், வறண்ட மணல் பரப்பிலேயே நின்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்புகிறோம். இந்த ஆண்டு விவசாய பணிகள் எவ்வாறு அமையப் போகிறதோ என்ற கவலையும் பயமும் எங்களை ஆட்கொண்டுள்ளது என்றார். </p> <h2>புதுமண தம்பதி</h2><p>புதுமண தம்பதி வசந்த் - அம்மு கூறும்போது, தண்ணீர் இல்லையென்றாலும் மனசு இருந்தால் வருவார்கள். இயற்கையை நாடி, மனமிருந்தால் தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கும் உணவளியுங்கள். அதுவும் உயிர்கள் தானே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">108460f2-4e02-4da1-8337-34004387d56b</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:17:52.915Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!</p><p>விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக்  ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?</p><p>முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.</p><p>மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?</p><p>விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?</p><p>நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.</p><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.</p><p>காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended#comments</comments><guid isPermaLink="false">7c8fbf05-c7cc-43d6-a5d9-7044ef3e0218</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:34:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:34:58.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,land scam,சிபிசிஐடி,நிலமோசடி,cbcid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பழனி கோவில்</h2><p>பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>இவ்வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த 27ந் தேதி முதல் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினந்தோறும் ஆஜராகி வருகிறார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஷஜீதா, டி.எஸ்.பி. அஜய்தங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>சி.பி.சி.ஐ.டி. </h2><p>அதன்படி இன்று திண்டுக்கல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி. </a>அலுவலகத்தில் ஆஜராகும் ஜஸ்டின் மணிகண்டன் தனது முன்ஜாமினுக்கு பழனி நீதிமன்றத்தை அணுக உள்ளார்.</p><p>அவர் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், தேனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு பத்திரப்பதிவு செய்யப்பட்டதா? என தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கை பத்திரப்பதிவு த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன்மீதான விசாரணை நடைபெற உள்ளது.</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.</p> <p>மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார். </p><h2>பத்திரப்பதிவு</h2><p>இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்தபோது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.</p> <p>புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மா வாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தற்போது தேனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.</p><p>ஏற்கனவே திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <p>ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை பணி செய்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடி பதிவுகள் நடத்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதால் ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-thandayuthapani-temple-land-scam-case-cb-cid-arrests-4">பழனி கோவில் நிலமோசடி</a> வழக்கில் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p> <h2>பணியிடை நீக்கம்</h2><p>இந்நிலையில் பழனியில் நிரந்தரமாக பணிபுரிந்து வந்த சார்பதிவாளர் பாலசந்தர், உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பணிபுரிந்து வந்த பாலசந்தர் ஜூன் முதல் வாரத்தில்தான் பழனிக்கு மாறுதலாகி வந்துள்ளார். அவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை சரிபார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்துள்ளார். </p><p>ஆனால் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த பாலசந்தர் இந்த முறைகேடு பத்திரப்பதிவை கண்காணிக்காமல் விட்டுள்ளார். அதன் காரணமாகவும் இந்த புகாரில் தகவல்களை மறைத்ததற்காக உதவி பெண் அலுவலர் சிவசங்கரியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து... அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many#comments</comments><guid isPermaLink="false">bf54e55c-958c-400a-896e-4297e2716d6d</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:11:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senogttaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">கே.ஏ. செங்கோட்டையன்</a>, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>நிரந்தர முதலமைச்சர்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் மாண்புமிகு வெற்றி தளபதியுடைய தலைமையில் தமிழகம் சிறப்பான முறையில் எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு அயரால் உழைத்து வருகிறார்கள். அவரை பொறுத்தவரையும் விவசாயிகள் மீது வைத்திருக்கிற பேரன்பு அளப்பெரியதாக இருக்கிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்திலே தஞ்சையிலே பேசுகையில், அடுத்து எனக்கு ஒரு ஜென்மம் இருக்குமேயானால் நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருக்கிறார். </p><p>அந்த அடிப்படையில் தங்களுடைய காளைகளை காங்கியம் என்று சொல்லப்படுகிற உயர்தர காளைகளை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்து பரிசுகளை பெறுவதற்காக விவசாயிகள் இங்கே பெருந்திரளாக வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பாக, இங்கே வருகை தந்திருக்கிற அனைவர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நம்முடைய பகுதியிலே வாழுகிற மக்கள் காங்கியம் காளை, காங்கியம் கரை மாடுகள் என்று சொன்னால் உயர்தரமான காளை மாடுகள் என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் மருத்துவ குணம் பெறுவதற்கு இங்கே இருக்கிற நம் பசுவின் பாலை தான் அருந்த வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.  காங்கியம் பசுமாட்டின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என்பதை பல்வேறு புள்ளி விவரங்களை மருத்துவர் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எல்லா விவசாயிகளும் எல்லா நலமும் பெற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்கும்போது தமிழ்நாட்டிலயும் அதே மாதிரி அனைத்து கட்சிகளும் இருக்கணும். அதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டணும்னு அரசியல் கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் என்று செய்தியாளர் கூறியதற்கு, பொதுவாக எல்லோரும் ஒருங்கிணைந்து தான் அந்த பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதிலே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஒரு மாநிலத்திலே அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்று உதாரணம் காட்டி எங்களிடத்திலே கேள்வி கேட்பதை காட்டிலும் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தமிழ்நாட்டினுடைய நம்முடைய தமிழ் மக்களுக்காக தஞ்சைதரனிலேயே இருக்கின்ற காவிரி டெல்டா பகுதியில் வாழுகிற விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்த கனவு நிறைவேறுகிற காலம் துவங்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது வெற்றிக்கரமாக நடைபெற நல்ல ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் காலம் என்றைக்கும் பொற்காலமாக அமையும் என்றார். </p><p>மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டேங்குறார் என்று செய்தியாளர் கூற, அவர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. ஆகவே தான் வாய் திறப்பதில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/IDZ9PqHXZNw"></iframe></figure>]]></content:encoded></item><item><title>​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt#comments</comments><guid isPermaLink="false">b29f3fc5-7de3-4c2f-8f98-df88ad84d874</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:38:42.187Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Supreme Court,சுப்ரீம் கோர்ட்,திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,திருப்பரங்குன்றம் தீபம்,Thiruparankundram Deepam Case,திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:title><media:description type="html"><![CDATA[ ​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/jnb5c0yg/supremecourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்.</aside><p>திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த டிச.1-ந்தேதி உத்​தர​விட்டார்.</p><p>ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோவில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரிவித்தனர்.</p><p>இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரிகளுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.</p><p>இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோவில் நிர்​வாகம் தரப்​பில் <a href="https://www.maalaimalar.com/topic/சுப்ரீம்-கோர்ட்">சுப்ரீம் கோர்ட்டில்</a> மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-</p><p>அறநிலையத்துறை தரப்பு:- உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்த பார்க்கிறார்கள்.</p><p>நீதிபதிகள்:-  கார்த்திகை தீபம் என்று அந்த தீப தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா? </p><p>அறநிலையத்துறை ஆணையர்:- தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து புதிய ஒரு நடைமுறையை புகுத்த பார்க்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்? ஏற்கனவே நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.</p><p>நீதிபதிகள்:- தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.</p><p>எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு:- சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி வழக்கை இழுத்து அடித்து வருகிறார்கள்.</p><p>நீதிபதிகள்:- சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருந்தது? </p><p>அறநிலையத்துறை தரப்பு:- பல்வேறு ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதிருந்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் அனைத்தையும் தற்போது நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.</p><p>நீதிபதிகள்:- இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதார்கள் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு 8 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet#comments</comments><guid isPermaLink="false">c936eac8-02c0-4506-a078-e056eec870cb</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:28:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:28:09.379Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/nnyrgz69/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/nnyrgz69/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:</p><p>* குறுவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது.</p><p>* ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் கிடக்கின்றது.</p><p>* நிர்வாக திறனற்ற அரசாக தவெக அரசு உள்ளது.</p> <h2>மத்திய அரசு</h2><p>* ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை.</p><p>* ஆட்சி அமைந்து 3 மாதங்களாகியும் முதல்வர் வாயில் இருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை.</p><p>* மகாராஷ்டிரா நாக்பூரில் ரெயிலில் இருந்து விவசாயிகள் பாதியில் இறக்கிவிடப்பட்டது குறித்து முதல்வர் வாய் திறக்காதது ஏன்?</p><p>* மத்திய அரசை பகைத்தால் பிரச்சனை வரும் என்பதால் பாஜக என்ற பெயரை உச்சரிக்காத அளவு தைரியசாலி தவெக.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப்போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என முதல்வருக்கு கூறினோம்.</p><p>* முதலமைச்சரை பார்க்க சென்ற விவசாயிகளை குண்டுக்கட்டாக கைது செய்தது தமிழக அரசு.</p><p>* கர்நாடக முதல்வரை பார்க்க நினைக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">முதலமைச்சர் விஜய்</a> தமிழக விவசாயிகளை அழைத்து பார்க்காதது ஏன்?</p> <p>* செய்தியாளர்களை பார்த்ததும் திருடனை போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர்.</p><p>* பள்ளிகள் மட்டுமல்ல கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து போட்டு கொண்டிருக்கின்றனர்.</p><h2>ரீல்ஸ் போடும் அரசு</h2><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p><p>* வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்து சென்று பூஜை போடுகிறார் வேளாண் அமைச்சர்.</p><p>* அமைச்சர்கள் மட்டும் அல்ல அவர்களின் சொந்தக்காரர்களும் ஆய்வுக்கு செல்கின்ற அளவுக்கு ரீல்ஸ் மோகம் முத்தி உள்ளது.</p> <p>* மக்கள் மன்றத்தில் மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் தொடங்கி உள்ளது திமுக.</p><p>* திருட்டு லாட்டரி விற்றவர், திருட்டு விசிடி விற்றவர், பிளாக்கில் டிக்கெட் விற்றவர் என மொத்த கேபினட்டும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது.</p><h2>காவிரி தண்ணீர்</h2><p>* 5 ஆண்டுகளாக காவிரியில் முறையாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.</p><p>* தினமும் மக்களை திசைதிருப்பும் வேலையை முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.</p><p>* தினமும் 4 மணிக்கு ஒரு ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் வேலையை செய்கிறார் முதலமைச்சர்.</p> <p>* திமுக கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2>தவெக ஆட்சி</h2><p>* அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா விவசாயியா பொறக்கனும் என பேசிய முதல்வர் ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே பண்ணலாமே.</p><p>* தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிக பாதிப்புக்கு உள்ளானது விவசாயிகள் தான்.</p><p>* நீர் இல்லாததால் குறுவை சாகுபடியில்லாமல் 14 லட்சம் விவசாயிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது அவமானம் என நினைக்கிறார் முதல்வர் விஜய்.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>* ஊரான் வீட்டு நெய்யில் இன்று அவர் வீட்டுக்கு ஸ்வீட் செய்கிறார் முதல்வர்.</p><p>* கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி தங்கள் ஒற்றுமையை காட்டி உள்ளனர்.</p><p>* சம்பா சாகுபடிக்காக விவசாய பொருட்கள், உரங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.</p><p>* ஆக.5 பட்ஜெட் கூட்டத்தில் சும்மா விட மாட்டோம், மக்கள் மன்றம், நீதிமன்றம் என எங்கும் குரல் எழுப்புவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana#comments</comments><guid isPermaLink="false">cd89f950-541e-4bbd-a1cf-c5ad7cad6cdc</guid><pubDate>Mon, 03 Aug 2026 07:07:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T07:07:08.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qgp24s8h/Minister-Rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qgp24s8h/Minister-Rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் செய்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. விரும்பத்தகாத கோஷங்கள் எழுப்பினார்கள், பதாகைகள் வைத்தார்கள், முதல்வரை இழிவுபடுத்திச் சில இடங்களில் பேசினார்கள்.</p><p>ஆனால் தாயுள்ளம் கொண்ட தலைவன், தாயுள்ளத்தோடு தன் மீது எந்த வசவாளர்கள் வசைபாடினார்களோ 'வாழ்க வசவாளர்கள்' என்று அண்ணா வழியில், நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>மாணவர்களுடன் தானும் இருக்கிறேன் என்பதைத்தான் தலைவர் இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு முதல்வருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி.</p><p>பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் பல முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.</p><p>திரையில் மட்டுமே நடிக்கக்கூடியவர் எங்கள் தலைவர் விஜய்.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. ஒரு வலைத்தளத்தில் கூட சில தகவல்கள் வெளியாகி இருந்தது. அது முழுக்க முழுக்க தற்போது இருக்கக்கூடிய கள நிலவரத்தை உள்வாங்காமல் அதை வெளியிட்டிருந்தார்கள்.</p><p>உண்மை என்னவென்றால், முன்பு இருந்த ஆட்சி பெரியதாக எந்த தொழில் முதலீட்டையுமே ஈர்க்கவில்லை.  </p><p>ஆனால், அமைச்சர் கீர்த்தனா அவர்களின் தலைமையில் துறை முதல் மூன்று மாதங்களிலேயே, மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளார். அவர்கள் முதல் 6 மாதத்தில் தொட்டதை கீர்த்தனா 50 நாட்களில் முடித்திருக்கிறார்.</p><p>ஒரு பெண், ஒரு மாண்புமிகு அமைச்சர், ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது. அவர் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாவீரர் தீரன் சின்னமலை &apos;அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்&apos; என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland#comments</comments><guid isPermaLink="false">2968e7b5-6690-4d6f-848f-0dd41e02f816</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:38:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:38:58.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி,Dheeran Chinnamalai,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,தீரன் சின்னமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/pue8en38/Udhayanidhi-Dheeran-Chinnamalai" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi - Dheeran Chinnamalai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/pue8en38/Udhayanidhi-Dheeran-Chinnamalai?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221 - வது நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் தியாக நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. </p><p>இதனை முன்னிட்டு, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p><h2><strong>"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" - வீரமுழக்கம்!</strong></h2><p>தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுக்குச் சவால் விடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளைத் தனது செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார். </p><p>"சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" என்று வீறுகொண்டு முழக்கமிட்டு, வரிப்பணத்தை மக்களுக்கே மீட்டுக் கொடுத்த தீரன் சின்னமலையின் அசாத்திய துணிச்சலையும், அவரது தியாகத்தையும் நாம் என்றும் நெஞ்சில் ஏந்திப் போற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!<br><br>ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.<br><br>‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன்… <a href="https://t.co/aLeicCaI3h">pic.twitter.com/aLeicCaI3h</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2084153071551021331?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர்</strong></h2><p>ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், அவர்களின் அடிமைத்தனத்தை வேரறுக்கவும் தன் வாழ்நாளின் இறுதிவரை அன்னைத்தமிழ் மண்ணின் உரிமைகளைக் காக்கப் போராடியவர் தீரன் சின்னமலை. </p><p>நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் செய்த உயரிய தியாகமும், அஞ்சாத வீரமும் தமிழர்களின் வரலாற்றில் நீங்காப் புகழுடன் என்றும் நிலைத்திருக்கும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.</p><h2><strong>தமிழகம் முழுவதும் மலர் தூவி மரியாதை</strong></h2><p>தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி, ஓடாநிலை, மற்றும் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரது திருவுருவச் சிலைகளுக்கும், திருவுருவப் படங்களுக்கும் முதலமைச்சர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்களும் மாலை அணிவித்து, மலர் தூவி தங்களது வீரவணக்கத்தைச் செலுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நீண்ட நாட்களாக கட்டணம் செலுத்தாவிட்டால் தானியங்கி முறையில் மின் இணைப்பு துண்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/automatic-disconnection-of-electricity-supply-if-payment-is-not-made-for-an-extended-period</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/automatic-disconnection-of-electricity-supply-if-payment-is-not-made-for-an-extended-period#comments</comments><guid isPermaLink="false">660b23e7-5396-45ed-afdf-4bbc9e22e967</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:31:08 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:31:08.701Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் இணைப்பு,மின் கட்டணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qx0g9kr6/EBhike.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின் இணைப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/qx0g9kr6/EBhike.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் (டான்செட்கோ) நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக  துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி, அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.</p><h2><strong>மின் இணைப்பு துண்டிப்பு</strong> </h2><p>இனி 6  மாதங்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு நேரில் கடிதம் வழங்கப்படாமல், <a href="https://www.maalaimalar.com/topic/மின்-இணைப்பு">மின் இணைப்பு</a> துண்டிக்கப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு நோட்டீசிற்கான இணையதள லிங்க் அடங்கிய எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதன் பின்னரும் 90 நாட்களுக்குள் நிலுவையை  செலுத்தாவிட்டால் கணக்கு நிரந்தரமாக முடிக்கப்படும்.</p><p>தற்போது வீட்டிற்கு மீட்டர் கணக்கெடுத்ததில் இருந்து 20 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், அதற்குள் செலுத்த தவறினால் சேவை துண்டிக்கப்படுகிறது. நிலுவையிலுள்ள கணக்குகளை நிரந்தரமாக முடிக்கப் பொறியாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகளுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய அமலாக்கம் குறித்து நுகர்வோர் ஆர்வலர்களும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அபராதம்</strong> </h2><p>கட்டண அவகாசம் முடிந்த 7 நாட்களில் மின் இணைப்பைத் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது நேரடியாக  களத்தில் துண்டிக்கப்படுமா? அல்லது பதிவேட்டில் மட்டும் துண்டிக்கப்படுமா? என்பதில் தெளிவில்லை என சென்னை  பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரம் நேரில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அறியாமல் அதைப் பயன்படுத்தினால், பின்னர் அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>மேலும், ஓய்வுபெற்ற அதிகாரி நீலகண்ட பிள்ளை, இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்  எந்த விதிகளின் கீழ் வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதுடன், வைப்புத்தொகை திரும்ப பெற இன்னமும் மனுக்களை நேரடியாகத் தர வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.  இதற்கு  பதிலளித்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள், 2022ல் திருத்தப்பட்ட விதிகளின்படியே இது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைப்புத்தொகை திரும்பப்பெறும் நடைமுறையும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history#comments</comments><guid isPermaLink="false">544a5daa-af4e-422d-abb3-28d033c954a4</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:27:49.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,Cauvery Issue,காவிரி விவகாரம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">காவிரி</a> நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.</p> <h2>கன்னட அமைப்புகள் போராட்டம்</h2><p>இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4% டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.</p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித்துள்ளது. </p><h2>தீரன் சின்னமலை நினைவுநாள் </h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p> <p>* காவிரி பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வரலாறே தவெகவுக்கு தெரியவில்லை.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும்.</p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session#comments</comments><guid isPermaLink="false">fc5973cd-2c3b-436b-87bb-5d4081c66250</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:18:13.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தமிழக அமைச்சரவை,TN Cabinet,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.</aside><p>திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.</p><p>பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>ஆட்சி அமைத்ததில் இருந்தே முதலமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.</p><p>தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதலமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.</p><p>சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே ‘களை’ எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.</p><h2><strong>4 அமைச்சர்கள்</strong></h2><p>இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.</p><p>இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் தயாரித்த ரகசிய செயல் திறன் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் குறித்தும் முதலமைச்சர் விஜய் விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்க இருப்பதால் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">7cd4075f-a2dc-4f78-a20a-5e0a7160f054</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:58.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vilathikulam MLA Markandayan -  Madras high court
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">முதலமைச்சர் விஜய்</a>க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><h2>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்</h2><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">தி.மு.க. எம்.எல்.ஏ. </a>மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p> <h2>தூத்துக்குடி கோர்ட்</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை கடந்த 30-ந்தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான தி.மு.க.வின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p> <h2>நிபந்தனை ஜாமின்</h2><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.</p><p>மேலும், மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed#comments</comments><guid isPermaLink="false">96522846-585b-4488-9646-e01ba97353aa</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:24:09.518Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல் 9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.</p><p>கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&amp;ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.</p><p>தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994&amp;95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996&amp;ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997&amp;ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998&amp;99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994&amp;95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000&amp;ஆம் நாளில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994&amp;95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.</p><p>அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995&amp;ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.</p><p>இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998&amp;99ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008&amp;ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020&amp;21ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004&amp;ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016&amp;ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.</p><p>அதற்கான காரணம், 1994&amp;95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10&amp;ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல... மாறாக அரசு செய்த தவறு தான். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.</p><p>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998&amp;99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்&amp;ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10&amp;ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23&amp;ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.</p><p>தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">ca01fae4-69dd-46b4-b770-2071daf215a6</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:31:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:31:39.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dheeran Chinnamalai,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,தீரன் சின்னமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை - முதலமைச்சர் விஜய்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரன் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார்.</strong></em></p><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.</p><p>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p> <p>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.<br><br>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக… <a href="https://t.co/1bXR5IKJVE">pic.twitter.com/1bXR5IKJVE</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2084128801680961594?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title> ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் &apos;ஷவர்கள்&apos; அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river#comments</comments><guid isPermaLink="false">b1da5847-f857-4bd2-b0b1-bed7a8903003</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:18:58.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,பக்தர்கள் புனித நீராடல்,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shower]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2> ஆடிப்பெருக்கு விழா</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும்.</p><p>கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.</p> <h2>வறண்ட காவிரி</h2><p>ஆனால் இந்த ஆண்டுபருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.</p> <h2>காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை</h2><p>ஆனாலும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடிப்பெருக்கு</a> நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.</p> <h2>குளிப்பதற்கு ஏற்பாடு</h2><p>காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. </p><p>இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட வசதியாக பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>ஷவர் அமைப்பு</h2><p>இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p><p>தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district#comments</comments><guid isPermaLink="false">9eb64882-40cf-454c-9d10-3fc8b9e78281</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:40:25.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,தனியார் தொழிற்சாலைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</aside><h2><strong>ஒரகடம் பயணம்</strong></h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>"பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>கண்ணாடி தொழிற்சாலை</strong></h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead#comments</comments><guid isPermaLink="false">2d88e209-61ed-4a6c-8b01-2e83a868fadc</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:33:06.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,மதுரை,madurai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் <a href="https://www.maalaimalar.com/topic/trichy">திருச்சி</a> சென்ற போது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீரராம், அவரது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது குழுந்தை பிரனிதா உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை:</h2><p>மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இருசக்கர வாகனத்தின் மீது தனது கார் மோதுவதை தவிர்க்க காரை ஓட்டி வந்த ஸ்ரீராரம் காரை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.</p><h2>பெரும் சோகம்:</h2><p>இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலேயே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:04:47.979Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay">நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</a></p><p>*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.</p><p>* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches">'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!... </a></p><p>*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi">தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</a></p><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/broad-peak-avalanche-in-pakistan-claims-life-of-record-breaking-climber-nirmal-purja">பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!... </a></p><p>*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics">டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</a></p><p>* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்</p><p>* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</a></p><p>* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். </p><p>* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-added-to-bangladesh-squad-for-darwin-test">ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.</p><p>* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji">'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!... </a></p><p>*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. </p><p>*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai">இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</a></p><p>* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்</p><p>* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life">வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</a></p><p>* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.</p><p>* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-enter-final-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned">கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!... </a></p><p>*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn">மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.</p><p>* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years">6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!... </a></p><p>*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband">மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</a></p><p>* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு</p><p>* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore" rel="nofollow">புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்</a></p><p>* கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p>* நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence" rel="nofollow">காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</a></p><p>* கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>* அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயு கசிவு- 6 பேர் மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised#comments</comments><guid isPermaLink="false">c5401b03-cb80-4f15-9172-7ef08d4da95a</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:08:57.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவமனையில் அனுமதி,சேலம்,Salem,hospitalized,gas leakage,ஆலை வாயு கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gas leakage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் சேகோ (Sago) ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.</p><p>இதில், பாதிக்கப்பட்ட 6 பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,வாயு கசிவை தடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஒரு மணி நேரமாக வாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">396e4b0d-61a0-4dd7-8287-6816f99b50d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:51:37.189Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,tamil nadu farmers,தமிழ்நாடு விவசாயிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி தண்ணீர் திறப்பு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை  அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். </p><p>அதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா வழியாக டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதன்போது மகாராஷ்டிராவின் பாதிவழியில் அம்மாநில காவல்துறை விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>அவர்கள் கைது செய்யப்பட்டனரா என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.</p><p>ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.</p><p>நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள  நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.</p><p>டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence#comments</comments><guid isPermaLink="false">1106cd40-e860-4a44-b10c-bd513937884c</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:31:47.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,இபிஎஸ்,Edappadi pazhanisamy,காதர் மொகிதீன்,Kadhar mohideen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kadhar Mohideen- EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>மறைந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று இரவு தமிழகம் வரும் காவிரி நீர்: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight#comments</comments><guid isPermaLink="false">de884910-4ea1-4d5b-ac6a-633491a1a5c3</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:30:23.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,காவிரி நீர்,மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட குடிநீர் தேவைக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p>அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு இதுவரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால்  13 மாவட்டங்களில் சுமார் 16.4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி காணப்படுகிறது.</p><p>குறிப்பாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பா, தாளடி விவசாயத்துக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர். </p><p>இதேபோல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.</p><h2>தண்ணீர் திறக்க உத்தரவு</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொலி மூலம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் கர்நாடகம் தண்ணீர் தரமறுப்பது பற்றியும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு பற்றியும் விளக்கினர்.</p><p>அதே போல் கர்நாடக அதிகாரிகள் அணைகளில் தற்போது போதுமான தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட குழு தலைவர் கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திடம்  கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.</p><p>அது நிராகரிக்கப்பட்டு  தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. </p><h2>மழை தீவிரம்</h2><p>இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை முதல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>கர்நாடக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை ஆகிய 4 அணைகளும் குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக  கொண்டுள்ளது.</p><p>தற்போது குடகு மாவட்டத்திலும், வயநாடு மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><p>இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாரங்கி அணை முழுவதும் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.</p><p>2,859 அடி உயரம்  கொண்ட இந்த அணையில் இருந்து  வினாடிக்கு 10 ஆயிரத்து 58 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேராக  கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>மேலும், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>இதனால்  கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையின் உயரம் 2,284 அடி  ஆகும். இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நேற்று மாலை 3 மணிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p><p>பின்னர் இரவு 8 மணிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் இரவு 10 மணிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள பிடர ஹள்ளி பாலம் நீரில் மூழ்கியது.</p><p>கபினி ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அங்குள்ள  காவிரி நீர்ப்பாசன கழகம்  தெரிவித்துள்ளது.</p><h2>23 ஆயிரம் கன அடியாக திறப்பு</h2><p>இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கபினி அணையில் இருந்து  தமிழகத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. 25 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.</p><p>பின்னர் காலை 8 மணி அளவில் மீண்டும் வினாடிக்கு   9,958 கன  அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது. வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>இதனால்  இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே  காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கிருஷ்ண ராஜசாகர்  அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர்  அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட  உபரி நீர்   காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை  நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலி குண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து   தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><p>ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று காலை 500 கன அடியாகவும், மாலையில் அது 600 கன அடியாகவும் இருந்தது. இன்று  காலையில் நீர்வரத்து 500  கன அடியாக உள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்  கொட்டுகிறது.</p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்  என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். அவர்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பரிசலில் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். </p><h2>மேட்டூர் அணை</h2><p>அதே நேரத்தில்  மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியிலிருந்து 47 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p>கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்  மேட்டூர் அணைக்கு வரும்போது நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருமாநில அரசுகளுக்கிடையே காவிரி பிரச்சினை நிலவி வரும் நிலையில் தற்போது மழை காரணமாக தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">36cda716-09f5-41eb-936a-62e7d67fcc58</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:57:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:57:28.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,Government of Tamil Nadu,தமிழ்நாடு,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பிரச்னைகளை கண்டித்து டெல்லியில் ஆக.4ம் தேதி போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகளை, மகாராஷ்டிரா அரசு நடுவழியில் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கோரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்.,</p><p>“காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான  நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து  டெல்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக  தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை,</p><p>மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழ்நாடு உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உண்டு. </p><p>அவர்களின் போராட்டத்தைத்  தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின்  உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.</p><p>டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை  எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைமை மீது அதிருப்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">dcec4765-bf0a-443e-8e4d-9a1def9e0be9</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:40:37.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,தோப்பு வெங்கடாசலம்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu venkatasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்துறை, பவானி சட்டமன்ற தொகுதிகளில் பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி  ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்த போது 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். சில மாதங்களில் அவரை வருவாய்த்துறை அமைச்சராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.</p><p>2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த தோப்பு வெங்கடா சலம், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். </p><p>கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி யையும் பறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.</p><p>அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனும், சு.முத்துசாமியும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 2009-ம் ஆண்டில் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் செங்கோட்டையனின் கரம் வலுவானது. </p><p>செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்த பிறகு கிட்டத்தட்ட ஈரோடு மாவட்ட அ.தி.மு.க .தோப்பு வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. </p><p>தோப்பு வெங்கடாசலம், 2016-ம் ஆண்டு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்தபோது தோப்பு வெங்கடாசலத்திற்கு பதவி தரவில்லை.</p><p>2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு 9,900 வாக்குகளை பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின் தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.</p><p>2025-ம் ஆண்டு பெருந்துறை, பவானி ஆகிய 2 தொகுதி களையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.</p><p>கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட திலிருந்து இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேகமாக பணியாற்றினார்.பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகள் எப்போதும் அ.தி.மு..கவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.</p><p>2026 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதி களிலும் நிச்சயம் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்ப ணிப்பேன் என்று கூறி பணியாற்றி வந்தார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தோப்பு வெங்க டாசலம் தோல்வி அடைந்தார். </p><p>பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். விரைவில் பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.</p><p>இன்னும் ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். பெருந்துறை  இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும் அவர் த.வெ.க.விலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவை அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் கூறிவிட்டார். எனவே மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th#comments</comments><guid isPermaLink="false">bde37d70-2a2a-43fa-938c-0794e9e54f29</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:14:40.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,New Bus Stand,புதிய பேருந்து நிலையம்,public,திருவள்ளூர்,பொதுமக்கள் வரவேற்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க. பஸ் நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.</p><p>அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பெரிய பாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.</p><p>இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது.</p><p>எனவே புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. </p><p>அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப் டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர்  கவிதா தெரிவித்துள்ளார். </p><p>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn#comments</comments><guid isPermaLink="false">f66677cd-7529-48c6-9a03-16ce0738f923</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:38:22.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery Issue,காவிரி நீர் பிரச்சனை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks">கபினி அணை</a> நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.</p><h2>4 அணைகளில் 74.05 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது</h2><p>கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது.</p><p>ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.</p><h2>கபினி அணை உபரி நீரை தேக்கி வைக்க முடியாது</h2><p>ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால்தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக 14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது.</p><p>ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன்பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில்தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.</p><h2>மேகதாது அணை</h2><p>கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p>மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும்தான் இருக்கும். அதனால்தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.</p><h2>தமிழக அரசு இரையாகி விடக் கூடாது</h2><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து  தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned#comments</comments><guid isPermaLink="false">441bf6f8-ee15-4180-b31c-e070e92ca259</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:34:21.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Sabarimala,Tamilnadu Government,கேரளாவில் கனமழை,Kerala Rains,Pamba river,பம்பை ஆறு,கேரளா கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarimala ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழக அரசும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளன. </p><p>கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2><strong>நிலச்சரிவு எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். &nbsp;இந்நிலையில், பம்பை, சந்நிதானம் செல்லும் மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தமிழக அரசு &amp; தேவஸ்வம் வாரிய அறிவுறுத்தல்:</strong> </h2><p>பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "கனமழை காரணமாக பம்பை மற்றும் சந்நிதானத்திற்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், தற்போதைய சூழலில் சபரிமலைப் பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது." &nbsp; </p><h2><strong>பயணத்தை ஒத்திவைத்தல்:</strong> </h2><p>'நிறபுத்தரி' வழிபாட்டுக்காக வரும் ஐயப்ப பக்தர்கள் வானிலை சீரடையும் வரை தங்களது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2><strong>ஆற்றுக்குச் செல்லத் தடை:</strong></h2><p>பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஆற்றில் இறங்குவதோ அல்லது குளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். &nbsp;பக்தர்கள் உள்ளூர் நிர்வாகம், தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மட்டும் தான் தண்ணீரை விட அரசியல் முக்கியமாக உள்ளது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b5f7349c-ac68-4fe1-a7f5-047d19bfddd5</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:19:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:19:33.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Cauvery,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manickam Tagore says politics prioritized over water issues]]></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தொகுதி  மறுவறையறை என்பது, தமிழகர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானது. </p><p>இந்த மசோதா சாமானிய மக்களுக்கு எதிராக வர உள்ளது, இதற்கு நாங்கள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவிப்போம்.</p><p>கடந்த 2026 ஏப்ரல் 17 அன்று தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.</p><p>அப்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமயத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகள் மாநிலங்களவையில் அங்கம் வகித்ததால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.</p><p>தற்போது இந்த மூன்று கட்சிகளை தவிற, வேறு எந்த கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்கிறதோ, அது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்.</p><p>காங்கிரஸ் கட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 13 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மாநிலங்களவை உறுபினர்கள் உள்ளனர்.</p><p>அவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.</p><p>இந்த மசோதா கடந்த 2026 ஏப்ரல் 17ஆம் தேதி, தோற்கடிக்கப்பட்ட போது இருந்த மனநிலை தான், தற்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.</p><h3><strong>காவிரி விவகாரம்</strong></h3><p>கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை பொறுத்தவரையில், அவர் அம்மாநிலத்தின் நலனுக்காக தான் குரல் கொடுப்பார்.</p><p>நான் எனது தமிழ்நாடு மாநிலத்திற்கு தான் ஆதரவாக குரல் கொடுக்க முடியும். தமிழ்நாட்டின் நலன் தான் எனக்கு முக்கியம்.</p><p>தமிழக முதல்வர் இதுகுறித்து கர்நாடகா சென்று பேசுவதாக இருந்தால், அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நம்முடைய பிரச்சனை எப்படியாவது தமிழகத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என்பது தான்.</p><p>தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்நாடகாவை பொறுத்தவரையில், அவர்களுக்கு அரசியலை விட தண்ணீர் தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக நிற்கிறார்கள்.</p><p>ஆனால் தமிழ்நாட்டில் தண்ணீரை விட அரசியல் தான் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான், நாட்டு நலனை விட, கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் நடவடிக்கையால் தடை நீங்கியது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. அதிரடி விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal#comments</comments><guid isPermaLink="false">37892d03-caa7-4994-a4c5-d876c619ecb1</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:52:12 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:52:12.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.</p><h2>29 பேர் கைது</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வக்கீல் அஸ்வத்தாமன் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர், அறிவுரை கழகத்தில் முறையீடு செய்து, குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்கினார்கள். மேலும் சிலர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வந்த சென்னை போலீசார் 7,800 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தார்.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது.</p><h2>சிபிஐ விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது</h2><p>இதற்கிடையே தமிழகத்தில் விஜய் தலைமை யிலான த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது. இதையடுத்து ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் தமிழக போலீசாரிடம் பெற்றனர். இதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அதிரடி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.</p><h2>தனியாக வழக்கு</h2><p>இன்னும் ஓரிரு நாள்களில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட உள்ளார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலையில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ள 27 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 27 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், இந்த வழக்கில் ரவுடிகளுக்கு, பல வழிகளிலும் அரசியல் பிரமுகர்கள் பலர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.</p><h2>விசாரணை தொடங்கியது</h2><p>இதைத்தொடர்ந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் வக்கீல் ஆனந்தன் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால்தான் அவரது சார்பில் கோர்ட்டில் முறையிட்டனர். தி.மு.க. ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்கிற தகவல்களை திரட்டுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்களின் பெயர் அடிபடுகிறது. அவர்கள் மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டி இருந்தனர்.</p><h2>அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்</h2><p>எனவே அடுத்த கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இருப்பதை தொடர்ந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.</p><p>இப்போது சி.பி.ஐ. விசாரணை தொடங்கி உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஏதோ ஒரு வகையில் உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>