<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 05:56:35 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:53:41.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">df79da8f-d5a3-43f5-a71b-ec83de613c34</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:47:28.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர் என்றும் புறக்கணித்தவர்களை நினைவில் கொள்வர் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.</p><p>ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும், அரசியலுக்கு இரண்டாமிடமும் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.</p><p>இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.</p><p>இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.</p><p>தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழகத்துடன் நின்றவர்கள் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.</p><p>இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Those who place their politics above Tamil Nadu’s interests may choose not to attend.<br><br>But those who put Tamil Nadu first, and politics second, will attend the all-party meeting called by the Hon’ble <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> .<br><br>This is not about party politics. <br>It is about Tamil Nadu’s…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2085946567107002548?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">b3991184-e57c-42b5-ace5-74540c0b0c80</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:46:31.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation"> முதலமைச்சர்</a> கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p> <h2>காவிரி பிரச்சனை</h2><p>காவிரிக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <h2>மேகதாது அணை</h2><p>உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death#comments</comments><guid isPermaLink="false">d4e0f825-f54f-4615-9480-b52171d6dd95</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:49.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்,Anwardheen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Advocate Anwardeen- Palani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கே வந்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத் தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். </p><p>அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். </p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ் திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக் கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார்.</p><p>நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் உயிரிழந்துள்ளார்.</p><p>சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறத்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம் - விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக - அதிமுக
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting#comments</comments><guid isPermaLink="false">34619411-edfb-416b-b268-80202383a1a3</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:29.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay  - Inbadurai - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விஜய் தலைமையிலான கூட்டத்தை திமுக - அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <h2>தமிழக அரசு</h2><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">திமுக</a> பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் பாதிப்பு - தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-rises-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-rises-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">5a651e09-fced-4eac-9408-7f0795703305</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:49:51.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN,Rice,விளைச்சல் பாதிப்பு,அரிசி விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/d690cuf9/rice.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/d690cuf9/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.</strong></em> </p><p>அரிசி விலை உயர்வு குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி சாமுவேல் கூறியதாவது:-</p> <h2>பொன்னி சன்னரக அரிசி</h2><p>தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பொன்னி சன்னரக அரிசி</a> தான் அதிகளவில் விற்பனையாகிறது.</p><h2>பாசுமதி அரிசி</h2><p>அதேபோன்று, சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியை சுற்றி இருக்கும் அரிசி ஆலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் நெல் அரவைக்கு வரும். ஆனால், தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், அம்மாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் சென்று அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அரிசி விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னி சன்னரக அரிசி அதிகபட்சமாக 25 சதவீதமும், மோட்டா ரக அரிசி 10 சதவீதமும், பாசுமதி அரிசி 10 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.</p><p>அதன்படி, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.800 ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.</p> <h2>பாசுமதி அரிசி</h2><p>அதே போன்று கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் ஸ்டீம் வகை (சிங்கிள் பாயில்) பொன்னி அரிசி 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இந்த அரிசி விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்கு பிறகு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">7134b44e-716c-4ada-a2d2-fe4a18fe10ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:20:45.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம்,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>56 சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.</p><h2><strong>தாம்பரம்-திருவனந்தபுரம்</strong></h2><p>திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரத்தில்</a> இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.</p><p>மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today#comments</comments><guid isPermaLink="false">99c6bdd2-2d47-4c55-bfd7-ba6c22d4463c</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:12:43.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Amit Shah,அமித்ஷா,Tiruvannamalai,திருவண்ணாமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.</p> <h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். </p> <h2>அமித்ஷா</h2><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">869cca78-822f-44c5-9294-a117bce5c856</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:46:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:46:45.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,போக்சோ சட்டம்,pocso act,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Girl harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</strong></em></p><h2>வீட்டு வேலை</h2><p>சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.</p><p>குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.</p> <h2>சிறுமிக்கு பாலியல் சீண்டல்</h2><p>இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.</p> <h2>உரிமையாளர் கைது</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போக்சோ சட்டத்தின்</a> கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>ஜனநாயகன்</h2><p>'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்- சபாநாயகர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker#comments</comments><guid isPermaLink="false">d8667789-ee6b-46da-83b1-e56969033e3b</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:36:10.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,Biometric system,TN Assembly speaker,சபாநாயகர்,பயோமெட்ரிக்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakarar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.</p><p>பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk#comments</comments><guid isPermaLink="false">f09c8c03-4204-4315-9056-02823619e130</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:13:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:13:34.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</strong></em></p><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">விஜய்</a> தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.</p> <h2>தொகுதி மறுவரையறை</h2><p>இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 7 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-7-august-2026#comments</comments><guid isPermaLink="false">9e161214-bae4-4b21-8ad3-fb9c9fa000ef</guid><pubDate>Fri, 07 Aug 2026 03:49:59 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:54:28.227Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/lt2l5fku/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport"> 80-வது சுதந்திர தினம்: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு</a></p><p>* நாட்டின் 80-வது&nbsp;சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>* விமான நிலையம் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.&nbsp;</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today">முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணை</a></p><p>* சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>* விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-pass-resolution-on-just-tax-distribution" rel="nofollow">தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் இன்று தீர்மானம்</a></p><p>* மாநிலத்தின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/centre-says-tamil-nadu-has-not-sought-changes-to-parandur-green-airport-plan">பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!</a></p><p>* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.</p><p>* தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly" rel="nofollow">தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</a></p><p>* மறைந்த பின்னணி பாடகி ஜானகிக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம்.</p><p>* எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p> <p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டும் கர்நாடகா.</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று கூறினார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/q3vadxbg/vijay2.jpg" /></figure><p>காவிரி நமக்கு உயிர் ஆதாரம், அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>மேகதாது தொடர்பாக அனுமதி அளிக்க கூடாது என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் - முதலமைச்சர்</p> <p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக பயணம் குறித்து யோசித்தது நான் தான், அதற்கு பல விமர்சன கருத்துகள் வந்தன. </p><p>நேர்மறையான விளைவு வரும் என்பதால் தான் பேசித் தீர்க்கும் முடிவு முயற்சி செய்தேன்.</p><p>பகை நாடுகளே பிரச்சனையை பேசி தீர்க்கப் பார்க்கிறோம். பக்கத்து மாநிலத்திடம் பேசி பார்க்க நினைத்தோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி விவகார பேச்சுவார்த்தையில் அவமானம் ஏற்பட்டால் அதனையும் தமிழக மக்களுக்காக தாங்குவேன்.</p><p>காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் தருவார்.</p><p>அரசியலே நாங்கள் தான் எனக்கூறுவோருக்கு குறுவை தொகுப்பு தந்தது குறித்து தெரியாமல் போனது எப்படி?</p><p>தினசரி செய்தித்தாள் வாசித்திருந்தால் தெரிந்திருக்கும்.</p><p>கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நாம் அனைவரும் சேர்ந்து தான் தீர்மானம் நிறைவேற்றினோம். </p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p> <p>பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். மேகதாது அணை தொடர்பான திருத்தத்தை நாங்கள் ஏற்கவில்லை -  இபிஎஸ்</p><p>அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தவெக கூட்டணியினரே கூறுகின்றனர். </p><p>கர்நாடக அணையிலே போதிய நீர் இருந்தும் திறக்கப்படவில்லை - இபிஎஸ்</p><p>காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் மண்டியிட தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>முதலமைச்சருக்கு அவமானம் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான அவமானம் - செல்லசுவாமி</p><p>காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்  - செல்லசுவாமி</p><p>காவிரி பிரச்சனை என்பது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனை. காவிரி விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது தான் தீர்வு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு சென்று தீர்வு எட்டப்படவில்லை - சிபிஐ ராமசந்திரன்</p><p>முதலமைச்சர் 3 ஆண்டுகளாக யாருக்கும் பயந்தது இல்லை. எம்பிக்கள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்பார்களா? - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் காவிரி பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார் - உதயநிதி</p><p>சம்பந்தம் இல்லாத பிரச்சனையை பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டம்</p><p>இங்கேயே அனைத்துக்கட்சியினரும் உள்ள நிலையில் இங்கேயே தீர்மானம் நிறைவேற்றலாம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் மனுக்களை 3 முறை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏன்?</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அவைக்கு தவறான தகவலை அளித்துள்ளார் - அமைச்சர் ஆதவ்</p><p>உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/rwllwdmz/sowmiya.jpg" /></figure><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசுகையில்,</p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை.</p><p>காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>பேச்சுவார்த்தை முயற்சியே தேவையில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமகவும் வலியுறுத்துகிறது என்று கூறினார்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/7f456r52/anand.jpg" /></figure><p>காவிரி விவகாரத்தில் உறுப்பினர்களின் கருத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டு கொள்ளப்பட்டது.</p><p>கர்நாடக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் என கூறினார்.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சமரசமும் செய்யாது.</p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>அனைத்து விவசாயிகளையும் பயிர் காப்பீட்டிற்குள் கொண்டு வர முயற்சி.</p><p>பயிர் காப்பீடு கடந்தாண்டை வி நடப்பாண்டில் 44% கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>காவிரி நீரை கர்நாடகாவிடமிருந்து பெறுவது பல ஆண்டுகளாக சவாலாகவே உள்ளது.</p><p>மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வு கோரி தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வை உறுதி செய்ய வலியுறுத்தி நிதியமைச்சர் மரிய வில்சன் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.</p><p>நிதிப்பகிர்வு தொடர்பான தனித்தீர்மானத்தின் மீது திருத்தம்கோரி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.</p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.</p><p>ஒட்டுமொத்த வருவாய் அதிகாரமும் மத்திய அரசிடம் உள்ளது. செலவினம் மட்டும் மாநில அரசின் கையில் உள்ளது - தங்கம் தென்னரசு</p><h2>தங்கம் தென்னரசு</h2><p>நிதி பங்களிப்பு குறைவதால் தமிழகத்தில் நிதி சுமை அதிகரித்துள்ளது. </p><p>தமிழ்நாடு வரியாக செலுத்தும் 1 ரூபாய்க்கு 21 காசுகள் மட்டுமே திரும்ப கிடைக்கிறது. உ.பி.க்கு ரூ.2-க்கு மேல் தரப்படுகிறது. </p><p>தமிழ்நாடு அளிக்கும் பங்களிப்புக்கு ஏற்றவகையில் மத்திய அரசு நிதியை நமக்கு தருவதேயில்லை.</p><p>மாநிலங்களுக்கு 50 சதவீத நிதிப்பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என திமுக சார்பில் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். </p><p>தனிநபர் தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>வளர்ச்சி அடைந்த மாநிலங்களை பாதிக்காத அளவிற்கு நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்று கூறினார்.</p><p>தவெக அரசு கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக வரவேற்பு.</p><p>தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு கோரி சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம்</p><p>சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானத்தை நிதியமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>இதையடுத்து நியாயமான வரிப்பகிர்வு கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.</p><p>பிரவின் சக்ரவர்த்தி தமிழகத்தின் கொள்கை வடிவமைப்பாளர் என்ற செய்தி உண்மையா? என்று திமுக கேள்வி எழுப்பியது.</p><p>திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்.</p><p>திமுக திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தியவர் ஸ்டாலின்.</p><p>தகவல் அறியும் உரிமை கமிஷனில் உறுப்பினர் நியமிக்காததால் தகவல்களை மக்கள் அறிய முடியவில்லை என்று  ரகுபதி கூறினார்.</p><p>முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில் அளித்தார்.</p><p>அவையில் இல்லாதவர் ஒருவரை பற்றி பேசுவது அவையை மீறிய செயல் என அமைச்சர் விஸ்வநாதன் காட்டம்</p><p>நீர்வளத்துறையில் ஒரு பில் பெற 2 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள் - ரகுபதி</p><p>நீர்வளத்துறையில் பில்களை கிளியர் செய்ய கமிஷன் வாங்கியது கடந்த ஆட்சிக்காலம் - அமைச்சர் ஆனந்த்</p><p>பழக்க தோஷத்தில் பேசாதீர்கள், ஆதாரத்துடன் பேசுங்கள் என ரகுபதிக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்.</p><p>நீங்கள் தந்த பட்ஜெட்டை வைத்து தான் பேசுகிறேன், அப்படி பேசக்கூடாது என்றால் வேறு ஒரு  நிதிநிலை அறிக்கை தாருங்கள் - ரகுபதி</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>கசிவு பற்றி ஆய்வு செய்து அதன் அறிக்கை முதல்வரின் டேபிளில் உள்ளது, அவர் சரியான நேரத்தில் வெளியிடுவார்.</p><p>ஆடிட்டிங் முடிந்துவிட்டது, கசிவு என்றால் என்ன என்பது குறித்து சரியான நேரத்தில் முதலமைச்சர் பேசுவார்.</p><p>முதல்வரிடம் நாங்கள் அளித்த அறிக்கையை படிக்கவே உங்களுக்கு 100 நாட்கள் தேவை என ரகுபதிக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார்.</p><p>விபத்து காப்பீடு திட்டம் குறித்த செய்திகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - ரகுபதி</p><p>விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என ரகுபதி கேள்வி எழுப்பினார்.</p><p>ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விபி ஜி ராம் ஜி சட்டத்தை திமுக எதிர்த்த நிலையில் தற்போது நடைமுறை படுத்தி உள்ளனர் - ரகுபதி</p><p>திமுக உறுப்பினர் ரகுபதி அரசியல் மேடை போல் பேசி கொண்டிருக்கிறார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா- அமைச்சர் ஆதவ்</p><p>தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் அழைத்த கூட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் வருவார்களா? என உதயநிதி பதில் தரட்டும்- அமைச்சர் ஆதவ்</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</h2><p>தொகுதி மறுவரையறையில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்குமே முன்னுதாரணம் திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக 5 மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து எதிர்ப்பை பதிவு செய்தோம். </p><p>எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார்.</p> <h2>அண்ணன் சீர் திட்டம்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும் - ரகுபதி </p><p>ஒவ்வொருவரின் தலை மேல் ரூ.1.28 லட்சம் கடன் உள்ளது - அமைச்சர் மரிய வில்சன்</p><p>கடன் வாங்கி தான் அத்தனை அரசும் செயல்படும் என நிதித்துறை செயலர் கூறினார் - கே.என்.நேரு</p><p>2 மாதத்தில் தவெக அரசு ரூ.20,000 கோடி கடன் வாங்கி உள்ளது. கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது - கே.என்.நேரு</p><p>தவெக அரசு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தருவதாக அறிவித்த நவீன சைக்கிள் திட்டத்திற்கு எம்எல்ஏ சரவணன் பாராட்டு தெரிவித்தார்.</p><h2>எம்எல்ஏ சரவணன்</h2><p>திமுக அரசு ரூ.3,000 விலையில் வழங்கிய சைக்கிளை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.</p><p>முன்னாள் ஆட்சியாளர்கள் வழங்கியதை போல் தரமற்று இல்லாமல், ஹெல்மெட், குடிநீர்பாட்டில் வசதியுடன் நவீன சைக்கிள் தரும் புதிய திட்டத்திற்கு வரவேற்பு.</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை.</p><p>நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது.</p><p>நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது. வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மாற்றம் மாற்றம் என கூறியது பெயர் மாற்றத்தை தானா?  </p><p>அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது தவெக.</p><p>தாலிக்கு தங்கம் திட்டம் அண்ணனின் சீர் திட்டமாக மாறி உள்ளது. </p><p>ஸ்டிக்கர் என்ற வார்த்தை யாருக்காக உருவானது என்பது தெரியும் - நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை தவெக அரசு செயல்படுத்தும்.</p><p>தவெக ஆட்சி அமைந்த உடன் அம்மா உணவகம் பெயர் மாற்றாமல் தரத்தை மேம்படுத்தி செயல்படுத்தி உள்ளோம்.</p><p>அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்துகிறது தவெக அரசு.</p><p>திமுக, அதிமுக என யார் ஆட்சியிலும் அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களை தவெக அரசு தரம் உயர்த்தி தொடர்கிறது.</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை.</p><h2>கே.என்.நேரு விளக்கம்</h2><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்பட்டது.</p><p>அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தான் முதல்வராக இருந்த போது ஸ்டாலினும் கூறினார்.</p><p>அதிமுக கொண்டு வந்த அம்மா உணவகத்தை திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நடத்தினோம், தற்காலிக ஊழியரையும் நீக்கவில்லை.</p><p>திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் செயல்படவில்லை என எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு</p><p>கடந்த ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கான பெயர்களை மாற்ற கூடாது - எடப்பாடி பழனிசாமி</p><p>திமுக, அதிமுக ஆட்சி காலங்களிலும் திட்டங்களுக்கான பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன - செங்கோட்டையன்</p><h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>அம்மா உணவகத்திற்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் கூறியது தவறு.</p><p>இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p> <p>அதிமுக, திமுக ஆட்சியில் அம்மா உணவகம் எப்படி இருந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரியும் - அமைச்சர் ஆதவ்</p><p>சட்டசபையில் இபிஎஸ் பேசிய போது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டு.</p><p>தூய ஆட்சி என சொல்லிக்கொள்ளும் நீங்கள் இபிஎ பேசியபோது நேரலையை துண்டித்தது ஏன்?</p><p>வரும் காலங்களில் அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் இபிஎஸ் பேசும்போது நேரலை துண்டிக்கப்படக்கூடாது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p> <p>திட்டமிட்டு நேரலை துண்டிக்கப்படவில்லை, எதால் நேரலை துண்டிக்கப்பட்டது என்ற காரணம் கண்டறியப்படும் - சபாநாயகர்</p><p>தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் - அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் ஜெயலலிதாவை போல் தைரியமான முடிவெடுக்கிறார்.</p><p>அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்போம் எனக்கூறிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு அமைச்சர் ஆதவ் விளக்கம்</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை குறைந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திடம் போராடித்தான் நீரை பெற்றோம். கர்நாடக அரசு அளித்த விளக்கத்தை தான் அமைச்சர் ஆனந்த் பேரவையில் பதிவு செய்தார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நான் காலேஜ் படிக்கும்போது முதல்வரின் லவ் டுடே படத்தை 6 முறை பார்த்தேன் - திமுக எம்எல்ஏ வசந்த் கார்த்திகேயன் </p> <p>நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு இந்த அரசு நல்ல பெயர்களை எல்லாம் எடுத்துவிட்டு அதன் மீது ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இவர்களின் பட்ஜெட் ரீல்ஸ் பட்ஜெட். இது வெற்றி அரசு அல்ல, வெட்டி அரசு - வசந்த் கார்த்திகேயன்</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட கூடாது. அது விவசாய பகுதி  - பாமக எம்எல்ஏ கணேஷ் குமார். </p><p>மேல்மா விவசாயிகளுடைய கண்ணீருக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும்.  எந்த விவசாயினுடைய அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. -  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>தவெக ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல்.</p> <p>டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர் - அமைச்சர் விக்னேஷ்</p><p>ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும்.</p><p>ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்கு சென்று தான் மதுபானங்களை வாங்க முடியும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>கடந்த ஆட்சியாளர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறினர். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது  - அமைச்சர் விக்னேஷ்</p><p>வருடத்தில் எத்தனை கடைகளை குறைக்க போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>மதுவிலக்கை முதலில் கொண்டுவந்தது யார் என நன்றாக தெரியும், அதற்கு வக்காலத்து வாங்காதீர் - செங்கோட்டையன்</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் அறிவுரை சொல்ல தவறியது ஏன்?</p><p>ஆதாரமில்லாமல் ஊழல் என்று பேச கூடாது  - எ.வ.வேலு</p><p>டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது - அருண்ராஜ்</p><p>திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா? </p><p>திமுக லாட்டரி நிறுவனத்திடமிருந்து ரூ.900 கோடி வாங்கியதா? இல்லையா ? - ஆதவ் அர்ஜூனா</p> <p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? - அமைச்சர் ஆதவ்</p> <p>உதயநிதி</p><p>திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் - அமைச்சர் உதயநிதி</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்க சொல்லுங்கள் - ஆதவ்</p><h2>எ.வ.வேலு</h2><p>தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது.</p><p>தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்று தான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர்.</p><p>தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு.</p><h2> ஓ.பன்னீர்செல்வம்</h2><p>தவறான உதாரணங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார் அமைச்சர் ஆதவ்.</p><p>அகில இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் என எல்லோருமே கட்சிக்கு நன்கொடை வாங்குகிறார்கள்.  </p><p>கட்சிக்கான நிதியை ஊழல் லஞ்சப்பணமாக கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு ஓபிஎஸ் சபாநாயகரிடம் வேண்டுகோள்</p><p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவை குறிப்பிலிருந்து நீக்குமாறு கே.என்.நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p><p>இபிஎஸ் பேசியபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டிய நிலையில், ஒரு நொடி கூட நேரலை துண்டிக்கப்படவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.</p> <p>தவெக அளித்த வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றம் - கணேஷ்</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. </p><p>திட்டங்களின் பெயர்களை மாற்றுங்கள் மாற்றாதீர்கள், ஆனால் திட்டங்கள் தொடரப்பட வேண்டும்.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடரப்பட வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன் என்று கூறினார்.</p> <h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மழை பெய்ய தொடங்கிய நிலையில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும். மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p>அனைத்துக்கட்சியினரையும் அழைத்து சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்.</p><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரேமலதா கூறினார்.</p><p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்  - பிரேமலதா</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான்.</p><p>டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p> <p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பிரேமலதா கோரிக்கை.</p><p>திமுகவின் திட்டங்கள் அனைத்திலும் முக ஸ்டாலின் இருப்பார் - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்</p><h2>திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உரை</h2><p>திமுகவின் திட்டங்கள் அனைத்தையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது.</p><p>பனை மேம்பாட்டு இயக்கம் பனை பாதுகாப்பு இயக்கமாக மாறியுள்ளது.</p><p>பட்ஜெட்டில் பெயர் மாற்றம் மட்டும்தான் இருக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் 25000 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி</p><p>பட்ஜெட்டில் தேடிப் பார்க்கிறேன், இருப்பது போல் இருக்கிறது, கண்ணுக்குப் புலப்படவில்லை.</p><p>கடன் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை, மக்கள் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளோம்.</p><p>திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சர்கள் கடிதம் மூலம் கோரிக்கை</p><h2>சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</h2><p>பொதுவெளியில் ஆபாசமாகப் பேசிய மார்க்கண்டேயனை கட்சித் தலைமை கண்டித்திருக்க வேண்டும்.</p><p>பொதுவெளியில் மார்க்கண்டேயன் பேசியது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அவரிடம் விளக்கம் கேட்டு உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan">எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>* ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்- ராஜ்மோகன்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்: காங்கிரஸ் கொறடா உத்தரவு</a></p><p>* சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 (FCRA Bill) அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படலாம் என வாய்ப்பு</p><p>* அதேபோல் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல "சும்மா ஆட்சி": ஓ.எஸ். மணியன் விமர்சனம்</a></p><p>* சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. </p><p>* அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales">டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.</p><p>* டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tirupur-beat-chepauk-in-tnpl-2026">டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடியால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்</a></p><p>* முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 205 ரன்கள் குவித்தது.</p><p>*  திருப்பூரின் துஷார் ரஹேஜா அவர் 52 பந்தில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உள்பட 102 ரன் குவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-threats-no-late-night-calls-rbi-issues-new-rules-for-loan-recovery">கடன் வாங்கியவர்களை மிரட்டக் கூடாது, இரவு நேரத்தில் போனில் அழைக்கக் கூடாது: வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்</a></p><p>* வசூல் முகவர்கள் தங்களது அடையாளத்தை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.</p><p>* அவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/remarks-made-by-rijiju-in-ls-targeting-opposition-expunged">எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரிஜிஜு பேசிய கருத்துகள் மக்களவைக் குறிப்பில் இருந்து நீக்கம்</a></p><p>* உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவை மற்றும் மாநிலங்களைவக்கு வராதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.</p><p>* எந்த அமைச்சர் அவைக்கு வர வேண்டும் என்பதை எதிர்க்கட்சியால் தீர்மானிக்க முடியாது என்று கிரண் ரிஜிஜு பதில் அளித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">777b0964-b7ca-4297-9f0b-95d11eb7e561</guid><pubDate>Sat, 08 Aug 2026 01:35:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T01:35:19.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,Constituency Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.</p><h2>முதலமைச்சர் அழைப்பு</h2><p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</h2><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றனர். பாமக பங்கேற்பது குறித்து அன்புமணி இன்று காலை 10 மணியளவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h2>புறக்கணிப்பு?</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-praggnanandhaa-on-winning-the-gct-st-louis-rapid-blitz-chess-tournament#comments</comments><guid isPermaLink="false">0f390911-f79f-4801-a45c-6b12b288d17d</guid><pubDate>Fri, 07 Aug 2026 16:20:38 +0000</pubDate><atom:updated>2026-08-07T16:20:38.273Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PragGnanandhaa,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GCT செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/vop0o1ke/New-Project-2026-08-07T215011.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செஸ் தலைநகரமான செயின்ட் லூயிஸில் நடைபெற்ற 2026 கிராண்ட் செஸ் டூர் செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். </p><p>இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்.,</p><p>“அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் &amp; பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரக்ஞானந்தா தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளார். </p><p>சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.   </p><p>இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையான ஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர்  பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/felix-gerald-appointed-as-chairman-of-the-minorities-welfare-commission#comments</comments><guid isPermaLink="false">be362906-aecc-4a6e-947d-c6e450e5009a</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:40:17 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:40:17.107Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Felix Gerald,தவெக அரசு,tvk government,Minorities Welfare Commission,ஃபெலிக்ஸ் ஜெரால்டு,சிறுபான்மையினர் நல ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zgi3i5n1/New-Project-2026-08-07T205553.833.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நியமனத்திற்கான ஆணையை பெற்றநிலையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஃபெலிக்ஸ். </p><p>இவர் இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தவர். </p><h2>ஆணையத் தலைவரின் பணிகள்</h2><ul><li><p>சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல். </p></li><li><p>அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரைச் சென்றடைவதைக் கண்காணித்தல். </p></li><li><p>அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குதல். </p></li></ul><p>தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-allocation-of-rs-28897-crore-to-tackle-drought-and-drinking-water-shortage#comments</comments><guid isPermaLink="false">348a8223-e60e-4211-84b6-5c55a70b1f99</guid><pubDate>Fri, 07 Aug 2026 15:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-07T15:19:57.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,drought relief,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,வறட்சி நிவாரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வறட்சி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.288.97 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/ebz1l2xy/New-Project-2026-08-07T204934.233.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்புகளை சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>எல் நினோ தாக்கம் மற்றும் பருவமழை பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து இந்த அவசர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>கிராமப்புறங்களில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், வறட்சி நிவாரணப் பணிகளுக்காகவும் நிதி பிரிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி பேரூராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.96.41 கோடியும், குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.97.36 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு தடையின்றி லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும், வறண்ட பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரிப் புதுப்பிக்கவும்,  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களைச் சேமித்து தட்டுப்பாடின்றி வழங்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மிகவும் மோசமான முதலமைச்சர்: இது அம்மா ஆட்சியல்ல &quot;சும்மா ஆட்சி&quot;: ஓ.எஸ். மணியன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams#comments</comments><guid isPermaLink="false">500283ec-475c-4bc9-9a97-edf29a2c0b56</guid><pubDate>Fri, 07 Aug 2026 13:28:05 +0000</pubDate><atom:updated>2026-08-07T13:28:05.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OS Manian,TN assembly,தமிழக சட்டசபை |,ஓஎஸ் மணியன்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஓ.எஸ். மணியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/k44wwc25/TNCMVIjayOSManian0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். அதற்கு, அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">ஆதவ் அர்ஜூனா</a> "தற்போது நடைபெறுவது அம்மாவின் ஆட்சிதான்" அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மா ஆட்சி என்கிறீர்கள். ஏன் அம்மா பெயரில் திட்டங்களை வழங்கிடக்கூடாது? என்றார்.</p><p>இந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இது அம்மாவின் ஆட்சிதான் என்று கூறினாரே? என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2>அதற்கு ஓ.எஸ். மணியன் பதில் அளித்து கூறியதாவது:-</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி "சும்மா ஆட்சி". சும்மா ஆட்சியை மறைப்பதற்காக அம்மா ஆட்சி என்று சொல்கிறார்கள். அம்மா உடைய மாண்பை, அம்மா உடைய சிறப்பை., அம்மா அவர்கள் இந்த தமிழகத்திற்காக,, குறிப்பாக ஜீவாதார உரிமைகளுக்காக ஆட்சியில் இருந்தபோதிலும் சரி, ஆட்சியில் இல்லாதபோதிலும் சரி காவிரி நீர் பிரச்சனைக்காக, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்காக, வீராணம் தண்ணீரை கொண்டு வருவதாக இருந்தாலும் சரி அனைத்தையும் சாதித்து காட்டியவர், சட்டம் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று காண்பித்தவர் புரட்சித் தலைவி அம்மா.</p><h2>அம்மா ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது</h2><p>பெண்ணினத்தை உயர்த்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதில் வெற்றிக் கண்டவர் புரட்சித் தலைவர் அம்மா. அம்மாவின் ஆட்சிக்காலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல துணைக் கண்டத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. மாறுதலை ஏற்படுத்தி தந்திருக்கின்ற ஒரு உன்னதமான ஆட்சிதான் அம்மா உடைய ஆட்சி. அம்மா உடைய ஆட்சியை விஜய் உடைய ஆட்சியுடன் ஒப்பிடக் கூடாது.</p><p>வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னரே, அதேபோல விவசாயிகளாக இருந்தாலும், நெசவாளராக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், மீனவராக இருந்தாலும் அவர்கள் எங்கேயோ, வெளிநாட்டில் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கூட, தானே பாதித்தவர் போல நடவடிக்கைகள் எடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.</p><h2>கண்ணீரில் தத்தளிக்கும் விவசாயிகள்</h2><p>ஆனால், விவசாயிகள் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இருந்த முதலமைச்சர்களில் மிகவும் மோசமான முதலமைச்சர் என்றால் அது விஜய்தான். விவசாயிகள் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறோம் தவிர, அவர் கூடியதாக கேட்கவில்லை. மாறுதலாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் தள்ளுபடி சென்று சொன்னீர்கள். சொன்னதை செய்தீர்களா?. இதைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?. அல்லது கஜானாவில் பணம் இல்லை. என்னால் இயலவில்லை, என்னால் செய்ய இயலவில்லை சொல்லியிருக்கிறீர்களா? வாய் திறக்காமல் மவுனமாக இருந்து சாதிப்பது என்பது மோசமான நிலை. இதனால்தான் விஜய் ஆட்சி சும்மா ஆட்சி. தலையில் முக்காடுபோடும் விதமாக அம்மா ஆட்சி என்று அவர்கள் பேசுகிறார்கள்.</p><p>இவ்வாறு ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்: புகார் அளித்தால் வழக்கு பதிய வேண்டும் என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-order-tasmac-administration-overpricing-liquor-sales#comments</comments><guid isPermaLink="false">d3aa5c8a-87d9-4c42-9ef7-fc2bbc799d9c</guid><pubDate>Fri, 07 Aug 2026 12:29:13 +0000</pubDate><atom:updated>2026-08-07T12:29:13.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai High court,சென்னை ஐகோர்ட்,Tasmac,டாஸ்மாக்,over price,கூடுதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/kmkczjdp/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.</p><h2>இனி ரசீது கட்டாயம்</h2><p>இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருக்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஆனாலும், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.</p><h2>நுகர்வோர் புகார் அளிக்கலாம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது என கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.</p><p>அரசு சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் விரட்டிய மக்களை மிரட்டிய யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">f0856870-19a2-4837-9725-e15f4a9eb727</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:57:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:57:12.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,Elephant,யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2zkbtpyg/Elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/2zkbtpyg/Elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>நீலகிரி</strong></h2><p>நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் அடிக்கடி கிராமப்பகுதிகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு யானை கூடலூர்-கேரளம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பள்ளிப்படி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அந்த சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது.</p><h2><strong>கூடலூர்</strong></h2><p>கூடலூர் நெடுஞ்சாலையில் யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகனஓட்டிகள் உடனடியாக வாகனங்களை பின்னோக்கி இயக்கி பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><h2><strong>யானை</strong></h2><p>இதற்கிடையே கூடலூர் நெடுஞ்சாலையில் ஒற்றை யானையை கண்ட பொதுமக்கள் உயரமான கட்டிடங்களில் நின்றுகொண்டு பெரிதாக சத்தம் எழுப்பி சாலையில் உலாவந்த யானையை விரட்ட முயன்றனர். இதனால் மிரண்டு போன யானை ஆக்ரோஷத்துடன் கூச்சலிட்ட மக்களை நோக்கி பாய்ந்து வந்தது. தொடர்ந்து சாலையில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்த யானை, பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக வனப்பகுதிக்கு ஓடி சென்றது.</p><h2><strong>வாகன போக்குவரத்து</strong></h2><p>இதனால் பள்ளிப்படி பகுதியை சேர்ந்த பொது மக்கள் தற்காலிக நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து கூடலூர் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இயல்புநிலைக்கு வந்தது.</p><p>கூடலூர் நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானை அங்குள்ள பொதுமக்களை ஆக்ரோஷத்துடன் தாக்க பாய்ந்து வந்த சம்பவம், கிராமத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-</p><h2><strong>யானைகள் நடமாட்டம்</strong></h2><p>கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றை நெடுஞ்சாலை பகுதியில் சர்வசாதாரணமாக பார்க்க முடிகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து அங்குள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் சுற்றுச்சுவர்களை சேதப்படுத்துகின்றன.</p><h2><strong>விவசாய தோட்டம்</strong></h2><p>விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அங்கு அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு வரும் யானைகளால் அங்கு மனித-விலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><h2><strong>வனத்துறை அதிகாரிகள்</strong></h2><p>எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மேலும் மலையடிவார பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நிற்கும் யானைகள் கூட்டத்தை அடர்வனப்பகுதிக்கு விரட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-puts-an-end-to-rumors-divorce-case-concluded-what-does-the-future-hold-for-vijay-and-sangeetha#comments</comments><guid isPermaLink="false">33ba657d-0626-425e-b2b4-7ba7ded9818e</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:42:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:42:55.672Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sangeetha,ஜோசப் விஜய்,joseph vijay,சங்கீதா,Divorce Petition,விவாகரத்து மனு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்... முடிவுக்கு வந்த விவாகரத்து வழக்கு: விஜய் - சங்கீதா எதிர்காலம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/v5d51v91/New-Project-2026-08-07T171220.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனுவை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து வழக்கை முடித்துவைப்பதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த வழக்கு முடிவுப் பெற்றுள்ளது. </p><p>வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், லண்டனில் இருக்கும் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதியிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசியதாகவும், அப்போது மனப்பூர்வமாக மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.</p><h2>மனைவியான ரசிகை </h2><p>வெவ்வெறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் இந்து முறைப்படி விஜய்யும், சங்கீதாவும் திருமணம் செய்துகொண்டனர்.  விஜய் கிறிஸ்தவர், சங்கீதா இந்து. விஜய்யின் ரசிகையாக இருந்தப் பெண்ணை, அவரது மணப்பெண்ணாக மாற்றியது விஜய்யின் தந்தை இயக்குநர் சந்திரசேகர்தான்.</p><p>இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணமான மறுஆண்டே மகன் ஜேசன் சஞ்சயும், 2005-ல் மகள் திவ்யா சாஷாவும் பிறந்தனர். </p><p>இவ்வாறு இப்பந்தம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நீடித்தநிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்து விஜய்யின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ரசிகர்களை தாண்டி இந்தச் செய்தி அப்போது மட்டுமின்றி இன்றுவரை தமிழ் சினிமாத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்தது.</p><h2>விவாகரத்து மனுவில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள்</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் தனது விவாகரத்துக் கோரிய மனுவில், விஜய் நீண்டநாட்களாக மூன்றெழுத்துப் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்து வருவதாகவும், இது தனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வந்தது தனக்கு மட்டுமின்றி, தனது பிள்ளைகளுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.</p><p>மேலும் இருவருக்கும் இடையே நீண்டநாட்களாகவே இந்த பிரச்னை நிலவிவந்ததாகவும், முன்னரே சங்கீதா விவாகரத்து கோரியதாகவும், இதனால் அவரை விஜய் வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். </p><p>மேலும் இந்த திருமண உறவை ரத்து செய்யக்கோரியதுடன், நிரந்தர ஜீவனாம்சமும், திருமண வீட்டில் தொடர்ந்து வசிக்கும் உரிமையையும் கோரியிருந்தார். </p><h2>மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு</h2><p>விஜய்யின் அரசியல் பிரவேசத்தினாலும், சங்கீதா லண்டனில் இருப்பதாலும், மனுதாரர்கள் ஆஜராகாமல் இந்த விவாகரத்து வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முந்தைய விசாரணையின்போது, ​​இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. அவர்களுக்காக அவரவர் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.</p><p>இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும்நிலையில் விஜய் தரப்பில் இருந்து ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது. ஆனால் சட்டசபை முடிந்தபின் ஆஜராகுமாறு நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.</p><p>மறுபுறம் சங்கீதா காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி அவரிடம் 15 நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன்போது, வழக்கை தொடர தான் விரும்பவில்லை எனவும், முழு சுயநினைவுடன் விவாகரத்து வழக்கை திரும்பப் பெறுவதாகவும் சங்கீதா தெரிவித்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்துள்ளது.</p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேசன் சஞ்சய்</h2><p>விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். </p><p>இந்த நேர்காணல் வெளியான சில நாட்களிலேயே, விவாகரத்து மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. </p><h2>எதிர்காலம் என்ன?</h2><p>சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றதால், சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தபோதிலும், தம்பதியினர் முறைப்படி சமரசம் செய்துகொண்டனரா அல்லது தொடர்ந்து சேர்ந்து வாழ்வார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.</p><p>இருதரப்பினரும் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை எதையும் வெளியிடவும் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டதா?: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-edappadi-palanisami-speech-live-not-cut-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">8a465eb2-fb70-4b57-8bdc-30cf42426622</guid><pubDate>Fri, 07 Aug 2026 11:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-07T11:29:47.137Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/n46vnn99/EPSRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அதிமுக கொண்டு வந்த பெரும்பாலான திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஸ்டிக்கர் என்பதை குறிப்பிட வேண்டும். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் வலியுறுத்தினார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிப்பு எனக் குற்றச்சாட்டு</h2><p>பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது எனக் குற்றம்சாட்டின்னார்.</p><p>இது தொடர்பாக ராஜ்மோகன் பதில் அளிக்கையில் "எடப்பாடி பழனிசாமி பேசும்போது நேரலை துண்டிக்கப்பட்டது என்று அதிமுக உறுப்பினர் வேதனைப்பட்டு கூறினார். உடனே, நான் ஓடோடி சென்று, அதிகாரிகளை அழைத்து அதை காட்டச் சொல்லி கண்களால் பார்த்து வந்து பேரவைத் தலைவர் மூலம் தெரிவிக்கிறேன். ஒரு நொடி கூட நேரலையில் துண்டிக்கப்படவில்லை. நேரலையில் சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய சிரித்த முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.</p><p>மீண்டும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெளியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரலை துண்டிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். இங்கு பதிவு செய்யப்பட்டது. வெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. இதை மறுக்கக் கூடாது" என்றார்.</p><h2>சபாநாயகர் பதில்</h2><p>இதற்கு சபாநாயகர் "நான் அவையில் இருந்து வெளியே சென்றபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன். ஒரு நிமிடம் கூட தடையில்லாமல் நேரலையாக சென்றது என்ற தகவலை எனக்கு தெரிவித்து இருக்கிறார்கள். சில வீடுகளில் பார்க்கும்போது தடை ஏற்பட்டிருக்கலாம். இங்கு இருந்து எந்தவொரு உத்தரவோ, தடையும் செய்யும் எண்ணமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கை: பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-chief-minister-vijay-letter-to-pm-modi-for-bvsc-and-ah-degree-admission#comments</comments><guid isPermaLink="false">a65220f1-f579-4be5-b29f-d13b82a40bf2</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:47:48 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:47:48.754Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x287z6d8/PMModiTVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்  கடிதம் எழுதியுள்ளார்.</p><h2>தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முதலமைச்சர் விஜய் கூறியிருப்பதாவது:-</h2><p>கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &amp; AH) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான மிக முக்கியமான பொருண்மை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.</p><p>இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிமுறைகளின்படி, அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் (Common Entrance Examination) அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறை (Centralized Counselling Process) மூலம் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளதோடு, அதற்கு மாற்று ஏற்பாடாக, மேற்படி 2026-27 கல்வியாண்டு முதல் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த முடியாத பட்சத்தில், நீட் (NEET UG-2026) தேர்வின் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்த முன்மொழிவு, தமிழ்நாடு மாநிலத்திற்குப் பல்வேறு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கால்நடை மருத்துவக் கல்வியானது தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.</p><h2>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல</h2><p>கால்நடை மருத்துவக் கல்வி என்பது வெறும் தொழில்சார் படிப்பு மட்டுமல்ல, மாறாக, மாநிலத்தின் கால்நடை பராமரிப்பை வலுப்படுத்துவதற்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பால்வள மேம்பாட்டினை வலுப்படுத்துவதற்கும், லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குமான நமது முயற்சிகளின் அடித்தளமாகும்.</p><p>இன்று கால்நடை மருத்துவக் கல்வியில் சேர்க்கை பெறும் மாணவர்களே, வரும் ஆண்டுகளில் நமது விவசாயிகளுக்கும், கிராமங்கள் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாகவும் உருவெடுக்கிறார்கள்.</p><p>தமிழ்நாடு, மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கை முறையை பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன். இந்த முறையானது (Model), திறமையான தொழில்முறை வல்லுநர்களைத் தொடர்ந்து உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இத்தேர்வு முறை, சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பயனுள்ள கருவியாகச் செயல்பட்டுள்ளது.</p><h2>தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள்</h2><p>2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாடு அரசு, தொழிற்கல்விப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட பல திறமையான மாணவர்களுக்கு நுழைவு நிலையில் பெரும் தடைகளை நீட் (NEET) உள்ளிட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் ஏற்படுத்துகின்றன என்பதை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p>தேசியத் தேர்வுகள் முகமை (NTA), நீட் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதையும், அண்மையில் சில முறைகேடுகள் காரணமாக, தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி முகமை ஆளான நிலையில், 2024-ஆம் ஆண்டில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கும் வழிவகுத்தன என்பதையும் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக இருக்காது.</p><p>பள்ளிப் படிப்பின் மூலம் வெளிப்படும் தகுதியை பிரதிபலிப்பதற்குப் பதிலாக, சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பலமுறை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளில் பெறப்படும் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது என்ற எண்ணத்தை சமீபத்திய ஆண்டுகளின் அனுபவங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>இத்தகைய நடைமுறையைக் கால்நடை மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கும் விரிவுபடுத்துவது என்பது, அதைப் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும். மேலும், கால்நடை மருத்துவக் கல்வியானது ஒவ்வொரு மாநிலத்தின் வேளாண் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்துடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டுள்ளது.</p><p>கால்நடை மருத்துவ வல்லுநர்களுக்கான தேவை, இத்துறையில் சேரும் மாணவர்களின் பின்புலம் மற்றும் கால்நடைத் துறையின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகள் ஆகியவை நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் கணிசமாக மாறுபடுகின்றன. இந்தச் சூழலில், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அளவுகோல்களைத் தீர்மானிக்கும் உரிமையை அந்தந்த மாநில அரசுகளிடமே விட்டுவிடுவதுதான் சரியானதாக இருக்கும்.</p><p>இத்தகைய அணுகுமுறையே, நமது கூட்டாட்சி அமைப்பை மதிப்பதாக அமைவதோடு, கல்வித் தரத்தைத் தொடர்ந்து உயர்த்தவும், தகுதியான கால்நடை மருத்துவர்கள் உருவாவதை உறுதி செய்யவும் உதவும் என்றும், அதேவேளையில், மாநிலங்கள் தங்களது சமூக பொருளாதார நிலைகளுக்கும் கல்வி அமைப்புகளுக்கும் ஏற்புடைய மாணவர் சேர்க்கைக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளவும் இது வழிவகுக்கும்.</p><p>எனவே, இப்பொருண்மை குறித்து இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்துமாறும், மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கான சேர்க்கையைத் தொடரவோ அல்லது மாணவர் சேர்க்கை அளவுகோல்களை அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கவே அனுமதிக்க வேண்டும்.</p><p>மேலும், இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, கால்நடை மருத்துவக் கல்வியை அனைவரும் சமமாகப் பெறுவதை உறுதி செய்யுமாறும், கிராமப்புற மற்றும் சமூகரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளைப் பாதுகாக்குமாறும், நமது கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநிலங்களின் தங்களுக்கான சட்டபூர்வ கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையை உறுதிசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இப்படி முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/his-name-might-be-removed-from-the-schemes-but-kanimozhis-post-on-karunanidhis-memorial-day#comments</comments><guid isPermaLink="false">ac0b6067-c1f8-4c74-b242-cabd9e2b6434</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:31:35.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Karunanidhi,கருணாநிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திட்டங்களில் இருந்து வேண்டுமானால் அவரது பெயரை நீக்கலாம்... ஆனால்’ - கருணாநிதியின் நினைவு நாளில் கனிமொழியின் பதிவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/fq545iq9/New-Project-2026-08-07T160115.147.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று கட்சித் தொண்டர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் நினைவு நாளன்று திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்தப் பதிவில்.,</p><p>“திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.</p><p>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, “இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்” என்று எழுதப்பட்டிருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கருணாநிதி கொண்டு வந்த சில முக்கியத் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.<br>ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.<br><br>அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, &quot;இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்&quot; என்று எழுதப்பட்டிருக்கிறது!<a href="https://x.com/hashtag/KalaignarForever?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KalaignarForever</a> <a href="https://t.co/ATYAtJ86MY">pic.twitter.com/ATYAtJ86MY</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085587231260262611?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?: பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wont-stay-silent-if-cm-vijay-faces-humiliation-premalatha#comments</comments><guid isPermaLink="false">34a704c3-049f-4aaf-8532-2d6e75fbffc7</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரேமலதா விஜயகாந்த்,Cauvery,TN budget,தமிழக சட்டப்பேரவை,TN assembly,Premalatha Vijayakant,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காவிரி உரிமைக்காக முதல்வர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x2ih0p42/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில்,</p><p>மக்கள் விரும்பும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடரப்பட வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>திமுக மற்றும் அதிமுக என யார் கொண்டு வந்த திட்டமாக இருந்தாலும், அது தொடர வேண்டும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடாக உள்ளது.</p><p>மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவர்களுக்காக தொடர வேண்டும்.</p><p>விருத்தாச்சலத்தை மாவட்டமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தேன்.</p><h3><strong>மழையில் நனையும் நெல் மூட்டைகள்</strong></h3><p>விருத்தாச்சலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை காலங்களில் திறந்தவெளியில் உள்ள நெல்மூட்டைகள் நனைந்து முளைக்கும் அபாயம் உள்ளது. மழை பெய்யும் காலம் என்பதால் நெல்லை சேமிக்க கிடங்குகள் அமைக்க வேண்டும்.</p><p>தமிழகத்தில் பெய்யும் மழைநீரை சேமித்து தன்னிறைவு பெற்றவர்களாக நாம் இருக்க வேண்டும். இப்பொழுது மழைக்காலமாக இருப்பதால் அனைத்து ஏரிகளையும் தூர்வாறி, மழைநீரை சேமிக்க வேண்டும்.</p><h3><strong>ஏரிகளை தூர்வார கோரிக்கை</strong></h3><p>நீருக்காக யாரிடமும் கையேந்தாத நிலைக்கு தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி இல்லை என்பது ஏமாற்றமாக உள்ளது.</p><p>காவிரி நமது உரிமை, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.</p><p>மேகதாது, காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசினால் என்ன?</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்வர் விஜய் முடிவெடுத்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜயும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள், பேசினால் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்?</p><h3><strong>முதல்வரின் பின்னால் தமிழகம் நிற்கிறது</strong></h3><p>முதல்வர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது என்கிறார்கள், அப்படி நடக்க நாங்கள் விட மாட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?</p><p>விருகம்பாக்கம் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடை நீண்ட காலமாக மூடாமல் உள்ளது, அதை அமைச்சர்கள் தலையிட்டு மூடுவதற்கான நடவடிகையில் ஈடுபட வேண்டும்” என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-wife-sangeetha-has-withdrawn-the-divorce-petition#comments</comments><guid isPermaLink="false">fdba5a8f-9480-407b-8876-6d3e95757805</guid><pubDate>Fri, 07 Aug 2026 10:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-07T10:09:55.251Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/x77xwnvh/New-Project-2026-08-07T153934.643.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார். </p><p>மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>இன்று இந்த விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.</p><h2>விவாகரத்து </h2><p>நடிகர் விஜய் பிரபல மூன்று எழுத்து நடிகை ஒருவருடன் உறவில் இருப்பதாகவும், இதனால் தன்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நீண்டநாட்களாக ஒதுக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டி அவரின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். </p><p>கடந்த 2021-ல் இருந்து இந்த பிரச்னை நிலவி வந்ததாகவும் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ்நாடு அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா. </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்: சட்டசபையில் உதயநிதி-ஆதவ் அர்ஜூனா காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">70ebe264-0499-4cde-aa84-b6f1f30028b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:54:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:54:49.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna, udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/27bw2f5v/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம் நடைபெற்றது.</p><h2>டாஸ்மாக் ஊழல் தொடர்பான விவாதம்</h2><p>அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பது பற்றி விளக்கம் அளித்தார். </p><p>மேலும், த.வெ.க. ஆட்சியில் மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் மதுபானம் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்பது தவறான தகவல். டாஸ்மாக் கடைகளுக்கு பணம் செல்லாமல் நேரடியாக நிர்வாகத்திற்கு பணம் செல்லும் வகையில் ஆன்லைன் ஆர்டர். ஆன்லைனில் மது புக்கிங் செய்யப்படுவது மட்டுமே நடக்கும். ஆன்லைனில் ஆர்டர  செய்தாலும் டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானங்களை வாங்க முடியும். மதுவினால் வரும் வருமானத்தை உயர்த்துவோம் என தவெக கூறாது என தெரிவித்தார்.</p><p>இடையில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.</p><h2>ஆதவ் அர்ஜூனா-உதயநிதி விவாதம்</h2><p>அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவின் பொருளாளர் சாராய ஆலை நடத்துகிறாரா? இல்லையா?</p><p>லாட்டரி நிறுவனத்தில் ரூ.900 கோடி திமுகவினர் வாங்கியது குறித்து உதயநிதி சொல்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக நிதி வாங்கியது தொடர்பாக அவரது மாமனாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.</p><p>லாட்டரி நிறுவனத்தில் விற்றது யார் என ஆதவின் மாமனாருக்கு தான் தெரியும், அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என பதில் அளித்தார்.</p><p>ரூ.900 கோடி வாங்கியது உதயநிதியின் அப்பாவுக்கு நன்றாக தெரியும். அவர் இங்கு இல்லை. அவரிடம் கேட்கச் சொல்லுங்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இந்த காரசார விவாதத்தால் அவையில் சிறிது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.</p><p>அதன்பின் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, தொழிலதிபர் மார்ட்டின் ரூ.900 கோடி கொடுத்தது குறித்து பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. தொழில் என்ற அடிப்படையில் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் திமுகவினர் மது ஆலை நடத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் இயக்கங்களுக்கு தொழிலதிபர்கள் நன்கொடை அளிப்பது இயல்பு என கூறினார்.</p><p>அவையில் இல்லாத அப்பா, மாமனார் என பேசுவதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு நேரு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-accuses-dmk-of-sticker-politics-on-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">08d6e277-52dd-42f5-8051-b57a829caf7f</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:30:58 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:30:58.326Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மா உணவகம்,தமிழக சட்டப்பேரவை,Amma Unavagam,Agri Krishnamoorthy,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அதிமுக திட்டங்களுக்கு தவெக அரசு ஸ்டிக்கர்: நலத்திட்டங்கள் மீதான குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ Agri krishnamoorthy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/sbk9zfs0/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார். </p><h3><strong>தவெக தேர்தல் வாக்குறுதி</strong></h3><p>தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர், "நிதி பற்றாக்குறைகளை மட்டுமே காரணம் காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை நிறுத்தக்கூடாது.</p><p>தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தான், தவெக அரசு தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கும். அதில் வாக்குகள் வரவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, தவெக அரசால் செயல்படுத்த முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்கள். </p><p>நிதிநிலை அறிக்கையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.</p><p>அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு பாசன திட்டங்கள் அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.</p><p>அதிமுக ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக போற்றப்பட்டது.</p><p>முழு கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சிறு குறு விவசாயிகள் இன்று கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.</p><h3><strong>அதிமுக நலத்திட்டங்கள் மீது ஸ்டிக்கர்</strong></h3><p>எனவே தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, முழுக்கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தமிழகத்திலே அறிவித்துள்ளது" என்று கூறினார்.</p><p><strong>அமைச்சர் நிர்மல்குமார் பதில்</strong></p><p>இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக அரசின் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “பல திட்டங்கள் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இருந்து வருவதுதான்... ஆனால் பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டன.</p><p>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, புது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><h3><strong>அம்மா உணவகம்</strong></h3><p>இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை மேம்படுத்தி வருகிறோம்.</p><p>அம்மா உணவகம் சரியாக செயல்படாமல் இருந்தது. அதன் பெயர் எதையும் மாற்றாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-sangeetha-divorce-case-adjourned-again-video-appearance-next-hearing-deferred-without-date#comments</comments><guid isPermaLink="false">66c69cfc-3fca-4542-93c7-1518275cc591</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:17:01 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:17:01.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Divorce,விவாகரத்து,Sangeetha,சங்கீதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் - சங்கீதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/1sliqrne/tn-44.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">முதல்வர் விஜய்</a><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-and-sangeetha-divorce-case-hearing-today"> </a>மற்றும் அவரது மனைவியின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><h2>விவாகரத்து</h2><p>த.வெ.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டநிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.</p><p>சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p>இந்த மனு கடந்த பிப்​ர​வரி 26-ந்தேதி விசா​ரணைக்கு வந்​த​போது, செங்​கல்​பட்டு முதலா​வது குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றப்பட்டது. அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <h2>நீதிபதி விசாரணை</h2><p>இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வக்கீலிடம் நீங்கள் ஏன்? வக்காலத்து தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும் முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் மனுவில் மெயில் ஐ.டி. ஏன் குறிப்பிடவில்லை எனவும், விவாகரத்து கேட்டுள்ள இருவரையும் சமரச மையத்துக்குதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.</p> <h2>இன்றைய விசாரணை</h2><p>அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றிருந்ததால், இந்த வழக்கில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>அதேவேளையில், லண்டனில் இருக்கும் சங்கீதா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டிக்கர் ஒட்டும் அரசு.. அக்ரி கிரிஷ்ணமூர்த்தியால் அவையில் வெடித்த விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/opposition-slams-dmk-budget-aiadmk-alleges-broken-promises-and-neglect-of-farmers#comments</comments><guid isPermaLink="false">b81895c1-c737-49dc-ac48-cdeca27c8c9b</guid><pubDate>Fri, 07 Aug 2026 08:01:12 +0000</pubDate><atom:updated>2026-08-07T08:01:12.132Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெயர் மாற்றம்,அம்மா உணவகம்,Amma Unavagam,அக்ரி கிருஷ்ணமூர்த்தி,Agri Krishnamurthy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:title><media:description type="html"><![CDATA[ அக்ரி கிரிஷ்ணமூர்த்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/o6r24xar/tn-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations"> பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>இதில் அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது, </p><p>"மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இல்லை. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களை நிறுத்த கூடாது.</p><p>மக்களின் கவனக்குறைவால் ஆட்சி பீடத்தில் தவெக அரசு உள்ளது. நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்து தான் வாக்குறுதி அளித்தீர்கள்.</p><p>நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து தவெக மக்களை ஏமாற்றி உள்ளது.  வேளாண் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.  </p><p>சிறுகுறு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தவித்து வருகின்றனர். சிறுகுறு விவசாயிகளிடம் பாகுபாடு செய்வது ஏற்புடையதல்ல. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><h2>ஸ்டிக்கர்</h2><p>அம்மா மற்றும் எடப்படியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களுக்கு இந்த ஆட்சியில் வெற்றி திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.</p><p>மாற்றம் மாற்றம் என்றீர்கள். இதுதான் மாற்றமா? பள்ளி கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது, </p><p>அம்மா ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் திட்டம், நவீன பிராண்டட் மிதிவண்டிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டத்திற்கு வெற்றி மடிக்கணினி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர்களுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கிய திட்டத்திற்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது" என கூறினார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஸ்டிக்கர் என்ற வார்த்தை அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எங்கள் ஆட்சியில் நல்ல திட்டங்களை வரவேற்று அதை அப்படியே செயல்படுத்தி உள்ளோம். அம்மா உணவகத்தைப் பெயர் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளோம். </p><p>நிதி ஒதுக்கி இன்று ஒவ்வொரு தெருவிலும் அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. </p><p>கடந்த 5 ஆண்டுகளில் அது எப்படி நடந்தது என்பது உங்களுக்கு தெரியும் " என்றார். </p><h2>கே.என்.நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே. நெஹ்ரு, "அம்மா உணவகத்தித்கு கடந்த ஆட்சி எவ்வளவு செலவு செய்துள்ளோம் என கணக்கு பார்த்தால் தெரியும். மாவட்ட வாரியாக கணக்குகள் உள்ளன. பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது." என்றார். </p><h2>இபிஎஸ்</h2><p>இதன்பின் வேலுமணி, இபிஎஸ் ஆட்சியில் அம்மா உணவகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படவில்லை என கூறினார். </p><p>அப்போது, அவர் தவறான தகவலை கூறுவதாகவும், அம்மா உணவகத்திற்கான நிதி நகராட்சிகளில் இருந்து தான் செல்கிறது, தனியே நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிவித்தார். </p><p>விவாதம் தொடர, இபிஎஸ் எழுந்து, பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதால் தான் இந்த பிரச்சனையே வருகிறது" என்று சுருக்கமாக கூறி முடித்தார். </p><p>இதற்கு பதில் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஆட்சிகளிலும் பெயர் மாற்றங்கள் பரவலாக நிகழ்ந்துள்ளன என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக பங்கேற்குமா? - ஆதவ் அர்ஜுனா கேள்விக்கு உதயநிதி பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-stand-on-delimitation-udhayanidhi-answers-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">757d956f-b982-479a-9085-3e6e0aa964b8</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:23:40 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:23:40.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தமிழக சட்டப்பேரவை,தொகுதி மறுவரையறை,Delimitation,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு குறித்து ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/gmo7gt9o/Untitled-design-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழக சட்டப்பேரவை</a>யில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை குறித்து திமுக எம்.எல்.ஏ எஸ். ரகுபதி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a> பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் லஞ்சம் மிகப்பெரிய குற்றம் என்று அமைச்சர்களிடம் முதலமைச்சர் விஜய் சொல்லி வருகிறார் எனக் கூறினார். </p><h3><strong>தவெக-வில் லஞ்சம் இல்லை</strong></h3><p>அவ்வாறு யாராவது லஞ்சத்தில் ஈடுபட்டால், இங்கு இருக்கும் ஒருவர் கூட அமைச்சராக இருக்க முடியாது என்பதை பதிவு செய்துகொண்டே வருகிறார்.</p><p>இதுவரையிலும் எந்த துறையிலும் அமைச்சர்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை ஒரு ரூபாய் வாங்கியது கிடையாது.</p><p>எம்.எல்.ஏ ஃபண்ட், பார்டி ஃபண்ட் உள்ளிட்டவை வசூலிக்கப்படவில்லை என்பதை இங்கு நாங்கள் பதிவு செய்கிறோம்.</p><p>மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பில் நாங்கள் அடிபணிந்து விட்டதாக ரகுபதி கூறுகிறார். மேகதாது பிரச்சனைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் முக்கிய பிரச்சனையாக தொகுதி மறுவரையறை உருவாகிக் கொண்டிருக்கிறது.</p><p>அதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>நாங்கள் எதிர்கட்சித் தலைவரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், திமுக எம்.பி.க்கள் கலந்து கொள்வார்களா? என்று கேட்கிறேன்.</p><p>எங்களுக்கு டெல்லியில் வந்த தகவலின்படி, தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிநடப்பு செய்யவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p><h3><strong>உதயநிதி பதில்</strong></h3><p>ஆதவுக்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a>, "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முன்மாதிரியாக, அதை முதன்முதலாக பேசியது திராவிட முன்னேற்ற கழகம்தான்.</p><p>கடந்த ஆண்டுகளில் ஐந்து மாநில முதலமைச்சர்களை தமிழகத்திற்கு வரவழைத்து, ஒரு மிகப்பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.</p><p>அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான முடிவை எங்கள் கட்சி தலைவர் எடுப்பார்" என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>அண்ணன் சீர் செய்யவே முடியாது.. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன் - சட்டசபையில் காரசாரம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-debate-dmk-and-thaveg-mlas-clash-over-debt-burden-and-inadequate-allocations#comments</comments><guid isPermaLink="false">c186c13f-e74f-4de5-b4a3-40ab708ec6ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 07:03:52 +0000</pubDate><atom:updated>2026-08-07T07:03:52.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>budget,பட்ஜெட் தொடர்,அண்ணன் சீர் திட்டம்,&apos;Annan Seer&apos; Scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/zd22n5gp/tn-42.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில்,</p><h2>ஸ்டாலின் </h2><p>எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என கேட்டவர்களுக்கு அதில் சொல்கிறேன். மகளிர் உரிமை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார்கள். விடியல் பயணத்திட்டத்தில் இருக்கிறார். </p><p>விடியலை நீக்கி விட்டீர்கள். ஆனால், விடியல் எங்களால் மீண்டும் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அரைகுறையாத்தான் இருக்கிறது. முழுமை பெறவில்லை </p> <h2>அண்ணனின் சீர்</h2><p>அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் அந்த திட்டத்திற்கு வெறும் 812 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளீர்கள்." என தெரிவித்தார்.</p><h2>கடன்</h2><p>இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">மரிய வில்சன்</a>, ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என கூறினார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்" என தெரிவித்தார்.</p> <p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கேஎன் நேரு, "நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் 20,000 கோடி கடன் பெற்றுள்ளீர்கள். எவ்வளவு கடன் என்பது அல்ல, எவ்வளவு வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை தன் பார்க்க வேண்டும்.</p><p>60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காக தான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை பார்க்காதீர்கள், எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசில் பிரவீன் சக்ரவர்த்தியின் ஆதிக்கம்?.. ரகுபதி கேள்விக்கு அமைச்சர் விஸ்வநாதன் பதில்  
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/praveen-chakravarty-row-dmk-mla-questions-congress-mps-role-in-tamil-nadu-policy-minister-viswanathan-denies-any-official-position#comments</comments><guid isPermaLink="false">9aa7399f-2269-4e54-ad3a-8f7fae0eab7d</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:38:21 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:38:21.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரகுபதி,Raghupathi,பிரவீன் சக்கரவர்த்தி,Praveen Chakravarty,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பட்ஜெட் மீதான விவாதம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/bgwqjtxt/tn-41.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution">பட்ஜெட் மீதான விவாதம் </a>நடைபெற்று வருகிறது.</p><p>இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில், "காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டு அரசின் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குவதாக ஒரு ஆங்கில செய்திநாளிதழில் வந்துள்ளது அது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் பதில்</h2><p>இதற்கு பதிலளித்த தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்,</p><p>பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அவையில் அங்கத்தினர் அல்லாதவரை பற்றி பேசுவது என்பது வழக்கத்திற்கு மீறிய செயலாகும்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள் தமிழக அரசின் சார்பாகவோ, அங்கீகாரம் பெற்ற குழுக்களின் சார்பாகவோ எந்த அமைப்பிலும் அங்கத்தினராக இல்லாதவர்.</p> <p>ஊடகங்கள் சமீப காலங்களில் ஒரு செய்தியை பல்வேறு செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையில் வரும் செய்தியை வைத்துக் கொண்டு திமுக முன்னாள் அமைச்சர் சம்பந்தமில்லாத அவையில் இல்லாத நபரை பற்றி கருத்துக்களை சொல்வதை ஏற்புடையதல்ல" என தெரிவித்தார்.</p><p>தவெக – காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்ட பிரவீன் சக்கரவர்த்தி தவெக சார்பில் மாநிலங்கவளை எம்.பியாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமும் செய்யாது: நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-will-not-compromise-on-cauvery-issue-says-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">3d224981-7bc0-4f1b-9852-ebd62e53b534</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:25:49 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:25:49.977Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக சட்டப்பேரவை,Cauvery Issue,tvk,அமைச்சர் ஆனந்த்,MInister N Anand,TM CM Vijay,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Issue Stance: Tamil Nadu asserts rights, presses for due water allocation]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/79mr9m1r/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்டப்பேரவை</a>யில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>காவிரி நீர் டெல்டா மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கான மூலமாகவும் உள்ளது.  காவிரி நதிநீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் ஒழுங்காற்று ஆணையம் மூலம் தமிழ்நாடு உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.</p><p>இருந்தாலும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரி நதிநீர்</a> பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.   </p><p>அதற்கிடையில் கர்நாடக முதலமைச்சர் அந்த நாளை பேச்சுவார்த்தைக்கு உகந்த நாள் அல்ல என்றும், வேறு ஒரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறியதால், குறிப்பிட்ட நாளில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.</p><p>ஜூலை 28 அன்று நடைபெற்ற 139வது காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவில், தமிழ் நாடு தனது உரிமையை வலியுறுத்தியது.  </p><h3><strong>தமிழகத்திற்கு 3500 கனஅடி நீர்</strong></h3><p>இதன்மூலம், 29.07.2026 முதல் 12.087.2026 வரை வினாடிக்கு 3500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி, காவிரி ஒழுங்காற்று ஆணையம் வலியுறுத்தியது.</p><p>ஆனால் கர்நாடகா அறிவுறுத்தலின் பேரில் நீரை அளித்தாலும், பற்றாக்குறை காரணமாக விகிதாசார பங்கீட்டில் 5.379 டி.எம்.சி பற்றாக்குறை இருக்கும் என தமிழ்நாடு சுட்டிக்காட்டியது.</p><p>இருப்பினும் 30.07.2026 அன்று நடந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54ஆவது கூட்டத்தில், குழுவின் முடிவை ஆணையம் உறுதி செய்தது.</p><p>எனினும் கர்நாடக அரசு இதனை முழுமையாக செயல்படுத்தவில்லை. 3500 கன அடி கிடைக்க வேண்டிய இடத்தில், 144 முதல் 619 கன அடி மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை மேலும் அதிகரித்தது.</p><p>எனவே 12.08.2026-க்குள் நீர் வந்து சேருமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடவும், 01.06.2026 முதல் 28.07.2026 வரை உள்ள நிலுவை நீரை உடனடியாக திறந்து விடவும், பற்றாக்குறை விகிதாசார அளவை ஈடுசெய்யவும் தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்தியது.</p><p>தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, 03.08.2056 அன்று உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகாவில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ள போதிலும், 06.08.2026 நிலவரப்படி தமிழ்நாடு பெற்றுள்ள மொத்த நீர் 4.947 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 41.412 டி.எம்.சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p><strong>காவிரி விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது</strong></p><p>காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நிர்வாக, சட்டரீதியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சூழலை கருத்தில்கொண்டு மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும்.</p><p>தமிழ் நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, காவிரி விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் உரிமையை சிறிதும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.</p><p>இவ்வாறு அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நிதி பகிர்வு தீர்மானம்.. திமுக, அதிமுக ஆதரவு - சட்டசபையில் நிறைவேற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fair-tax-share-resolution-tamil-nadu-assembly-passes-special-motion-urging-centre-for-equitable-tax-devolution#comments</comments><guid isPermaLink="false">2de1b385-8055-4520-8ea1-bfa9aaf5decb</guid><pubDate>Fri, 07 Aug 2026 06:11:36 +0000</pubDate><atom:updated>2026-08-07T06:11:36.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Budget session,மரிய வில்சன்,பட்ஜெட் தொடர்,நிதி பகிர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/f21kan6g/tn-40.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><h2>காவிரி விவகாரம் </h2><p>அதன் தொடர்ச்சியாக இன்று  கூடிய அவையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves">மேகதாது அணை </a>குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>இதன் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற, அவருக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆளும் தரப்பு அமைச்சர்கள் அவர்களுக்கு பதிலளித்து பேசினர். </p><p>இதன்மீது பேசிய திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு,  "மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதி பகிர்வை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பொருளாதரத்தைக் கொண்டது. </p><p>மாநில வருவாய்க்கான ஆதாரம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. செலவு பொறுப்பு மாநிலங்களிடம் உள்ளது. வருவாய் ஆதாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. </p><p>மாநிலங்களுக்கான வருவாய் ஆதாரம் குறையும் சூழல் இப்போது உள்ளது. நிதி பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. </p><p>பெண் தொழிலாளர்களின் பங்களிப்பில் முதல் மாநிலம் தமிழ்நாடு, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தின் தூணாக தமிழ்நாடு பொருளாதாரம் உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த புறக்கணிப்பு என்பது தான் கேள்வி" எனப் பேசினார்.   </p> <h2>வரி பகிர்வு தீர்மானம்</h2><p>இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசினர் தனித் தீர்மானத்தை அமைச்சர் மரிய வில்சன் முன்மொழிந்தார்.</p><p>அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் தங்களது பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றுவதற்கு நியாயமான மற்றும் சமமான நிதிப் பகிர்வு முறை இன்றியமையாதது.</p> <p>தமிழ்நாடு தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி, சிறந்த நிதி மேலாண்மை மற்றும் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்ததன் மூலம், தேசிய பொருளாதாரத்திற்கு தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு நடைபெறும்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து நிதி பகிர்வு தொடர்பாக தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அரசு பயப்படுவது ஏன்? - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-row-udhayanidhi-stalin-demands-all-party-meet-in-tamil-nadu-over-karnatakas-fast-tracked-moves#comments</comments><guid isPermaLink="false">6aa45be1-4ad4-413f-8b63-a00bed4f9d62</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:51:56 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:51:56.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/u6o8empb/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண்மை பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது.</p><p>சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் சுருளிவேல் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர்,</p><p>"விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.</p><p>முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிக்கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் என அரசு பதில் அளிக்க வேண்டும்.</p><p>டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும்.</p><p>மேகதாது விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவைக்கு விளக்க வேண்டும்.</p><h2>கர்நாடகா அதிக வேகம்</h2><p>தவெக அரசு அமைந்த பின்னர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">மேகதாது விவகாரத்தில்</a> அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா.</p> <p>மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சந்தித்து நிதி கேட்டுள்ளனர். ஆக.2-ல் பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார் கர்நாடக முதல்வர்.</p><p>கர்நாடகம் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 முன்னாள் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகா முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாவில் அணை கட்ட நிதி உதவி கோரியிருந்தார். ஜல்சக்தி துறை அமைச்சரையும் சந்தித்து மேகதாது அணைக்கட்ட ஒப்புதல் வழங்க கோரிக்கை விடுத்தார்.</p><p>இப்படி கடந்த ஒரு மாதத்தில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பல்வேறு பணிகளை கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுகிறது.</p> <h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>எனவே தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன.</p><p>அனைத்து கட்சிகளும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏன் பயப்படுகிறீர்கள் அல்லது ஏன் தயங்குகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>பேச ஒன்றுமில்லை.. அணை கட்ட கூடாது அவ்வளவுதான் - சௌமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-tamil-nadu-mlas-demand-all-party-meet-over-mekedatu-dam-and-kuruvai-crop-loss#comments</comments><guid isPermaLink="false">1b70709c-e61d-4fce-8557-0d4e619fb7ce</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:39:46.934Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Soumya Anbumani,Cauvery Issue,காவிரி விவகாரம்,சௌமியா அன்புமணி</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:title><media:description type="html"><![CDATA[ சௌமியா அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/af1s2aw2/maalai-malar2026-08-07rwllwdmzsowmiya.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம் </a>தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>சவுமியா அன்புமணி </h2><p>காவிரி விவகாரம் தொடர்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில், </p><p>கர்நாடக அரசு உரிய காலத்தில் காவிரி நீரை ஒருபோதும் திறந்து விட்டது இல்லை. காவிரி நீர் வராத காரணத்தால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகா திறந்து விட்டது உபரிநீரை மட்டும்தான்.</p><p>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்ட முன்னெடுப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது என்று தான் அணை கட்ட திட்டமிட்டுள்ளனர். </p><p>இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும்.  அணை கட்ட வேண்டும், அல்லது கூடாது. அவ்வளவு தான்.   </p><p>நடுவில் என்ன முயற்சி என்ன இருக்கு? நடுவில் முயற்சி செய்வது எல்லாம் தேவையில்லை" என்று தெரிவித்தார். </p> <h2>விஜய்</h2><p>முன்னதாக முதல்வர் விஜய் பேசுகையில், இந்த விவகாரத்தில் பேசுகையில், "பக்கத்துக்கு நாட்டுகிட்டயே பிரச்னையை பேசி தீர்க்க முடியுது. பக்கத்துக்கு ஸ்டேட்டு கிட்ட பேசி பார்க்கலாம்னு நினைச்சேன். </p><p>ஒரு முயற்சியா இதை பண்ணலாம்னு நினைச்சேன்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-surplus-water-released-to-tamilnadu-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">e4c8bf7d-e2a7-469b-8e3f-1d50e12a1ec6</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:36:25 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:36:25.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Cauvery,TN budget,தமிழ்நாடு சட்டப்பேரவை,எடப்பாடி பழனிசமி,Edappadi K Palanisamy,காவேரி,tamilnadu legislative assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Kaveri Water Dispute: Karnataka releases only surplus water to Tamil Nadu despite full reservoirs]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/repzqxna/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இறுதியில் உபரி நீர் மட்டுமே திறக்கப்பட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தெரிவித்தார். </p><p>சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத உரை நடைபெறுகிறது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  </p><p><strong>அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்</strong></p><p>அவர் பேசியதாவது, "மேகதாது விவகாரம் குறித்து கர்நாடகாவில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகத்திலும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்தை கேட்க வேண்டும்.</p><p>அதுனுடன் காவேரி பிரச்சனை வருகின்ற போது, அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதற்காக, டெல்டா மாவட்ட பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளையும் கேட்டு, அதை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பிறகு அரசு அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதுதான் கடந்த காலத்தில் இருந்து பின்பற்றப்படும் வரலாறாக உள்ளது".</p><p><strong>உபரி நீர் மட்டுமே வருகிறது</strong></p><p>"கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் போது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தால் தண்ணீர் பெற வேண்டிய நிலை இருக்கின்றது.</p><p>ஆனால் இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும், தண்ணீர் திறக்க மறுக்கப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையின் படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதினைந்து நாட்களுக்கு தினந்தோறும் 3,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><p>அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தால் டெல்டா மாவட்டத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருப்பார்கள்.</p><p>இப்பொழுது கபினி அணை மற்றும் கர்நாடகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைகளும் நிரம்பிவிட்டன. அதனால் தற்போது உபரி நீர் மட்டும்தான் வந்து கொண்டு இருக்கிறது".</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தி.மு.க ஆட்சியில் மூன்று முறை மனுக்கள் தள்ளுபடி குறித்து ஆதவ் கேள்வி - கே.என். நேரு பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-dispute-three-pleas-rejected-in-supreme-court-heated-assembly-clash-over-stalin-governments-legal-strategy#comments</comments><guid isPermaLink="false">3ab39143-24fd-488e-b97a-6aea2f1566bf</guid><pubDate>Fri, 07 Aug 2026 05:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-07T05:22:42.793Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Cauvery Issue,காவிரி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ், நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/dfewyd2d/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka">கவன ஈர்ப்பு தீர்மானம்</a> தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.</p><h2>ஆதவ் அர்ஜுனா</h2><p>இதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், </p><p>"எதிர்க்கட்சி தலைவர் அவரின் உரையில் ஒரு தவறான தகவலை கொடுத்தார். </p><p>பிரதமருக்கு ஒரு முறை மட்டும் தான் கடிதம் எழுதியதாக கூற, எதிர் தரப்பினர், இரண்டு முறை கூறினார் என கூச்சலிட திருத்திக்கொண்ட ஆதவ், முதல் முறை ஒரு முறை என்று சொல்லிவிட்டு பின்னர் இரண்டு முறை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியதாக தெரிவித்தார். </p><p>அதுமட்டுமில்லாமல் மற்றொரு தவறான தகவல் என்னவென்றால் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்திக்கவில்லை என கூறினார். </p><p>அவைக்கு ஒரு கூடுதல் தகவலாக இன்று மதியம் டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகளை மூத்த அமைச்சர்களை முதலில் சந்திக்க சொல்லி பின்னர் 3.30 மணியளவில் அவர்களை முதல்வர் சந்திக்க போன வாரமே அறிவுறுத்தலை வாங்கிவிட்டார். அது ஒரு பாயிண்ட். </p><p>எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கான விளக்கத்தை அவர் கொடுக்க வேண்டும். </p><p>முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் மேகதாது அணையை கட்டும் திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து திமுக அரசு மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனு மீது கவனமாக வலுவாக ஸ்டாலினின் திமுக அரசு தரப்பு வாதிடவில்லை. அதனால் அதுவும் தலைமை நீதிபதி அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை எதிர்கட்சி தலைவர் வழங்க வேண்டும். நாங்க இப்ப தான் வந்திருக்கோம். அவர்கள் ஏன் மூன்று முறை தோற்றார்கள் என கூற வேண்டும்" என கேட்டுக்கொண்டார். </p> <h2>கே.என் நேரு</h2><p>இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கே.என் நேரு, "மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை. நீங்கள் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்றுதான் சொன்னார்கள். </p><p>அமைச்சர்கள் முதல்வரை புகழ்ந்து பேசுவது இயல்பு. நீங்கள் நல்லபடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய சண்டை வளர்க்க கூடாது. மேகதாது விவகாரம் குறித்து ஒற்றுமையை பற்றி பேசும்போது நீங்கள் வேறுபாட்டை பற்றி பேசுகிறீரர்கள்.</p><p>மேகதாது விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் எப்போதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது வரலாறு" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி  கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-row-tamil-nadu-cm-ready-to-face-humiliation-for-bengaluru-talks-with-karnataka#comments</comments><guid isPermaLink="false">7f2a4b52-f422-4151-bdeb-5a11f9807017</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:53:28.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Udhayanidhi,உதயநிதி,Budget session,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், உதயநிதி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/8zeaqoyt/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly">சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் </a>இன்றைய கூட்டம் தொடங்கிய நிலையில் மேகதாது அணை குறித்தும், காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் தந்தனர். அதை சபாநாயகர் பிரபாகர் ஏற்றுக்கொண்டார். </p><p>தீர்மானத்தின் மீது பேசிய உதயநிதி, காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன் எனவும் பேச்சுவார்த்தை நடத்த விஜய் கர்நாடகா செல்ல இருந்தது உண்மையா என கேள்வி எழுப்பினார். </p> <h2>விஜய் பதில் </h2><p>இதற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசுகையில்,</p><p>"மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் இணைந்து தான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினோம்.</p><p>நாடாளுமன்ற விவகாரத்தில் மத்திய அமைச்சர் முழு விவரங்களை கூறவில்லை என்பதால் மேகதாதுவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அடுத்த நாளே பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.</p><p>காவிரி பிரச்னையை தீர்க்க ஒரு முயற்சியாக கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே என நான் நினைத்தேன்.</p><p>காவிரி பிரச்சனையில் பெங்களூரு செல்ல விரும்பியது நான் தான். பக்கத்து நாட்டுடன் உள்ள பிரச்சனையே பேசி தீர்க்கும் போது பக்கத்து மாநிலக்காரர்களிடம் பேசி பார்க்கலாம் என்று தான் இந்த முடிவை எடுத்தேன்.</p><p>அதில் ஒருவேளை அவமானம் நடந்தால் தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக தான் இருக்கேன் என தெரிவித்தேன்.</p><p>காவிரி நதிநீர் மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது.</p><p>காவிரி விவகாரம் பற்றி நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்குது என்பது தெரிந்திருக்கும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக சட்டமன்றத்தில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condolence-resolution-for-deceased-celebrities-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">4ea24cd6-39d6-495c-9ca0-399ba44c1f1d</guid><pubDate>Fri, 07 Aug 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-08-07T04:22:06.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,இரங்கல் தீர்மானம்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-07/4490egos/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் மறைந்த பிரபலங்களுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.</p><p>அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.</p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல் மறைவுக்கு சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இரங்கல் குறிப்பு வாசித்தார்.</p><p>மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணிக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.</p><p>பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item></channel></rss>