<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 08:26:56 +0000</lastBuildDate><item><title>என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet#comments</comments><guid isPermaLink="false">cb520269-d41e-4340-adb1-abbc12440c69</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:26:47 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:26:47.344Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாரி செல்வராஜ்,mari selvaraj,DELHI PROTEST,neet protest,டெல்லி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qqibb2gg/Mari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mari selvaraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qqibb2gg/Mari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும்  வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.</p><p>நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து  நிற்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீட் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.</p><p>போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் <br>எத்திசையில் இருந்து ஒலித்தாலும் அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும்  வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன்.<br>நீட் எனும் ஆணவபோக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து…</p>&mdash; Mari Selvaraj (@mari_selvaraj) <a href="https://x.com/mari_selvaraj/status/2080156422223093787?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">e797383a-6bd9-4d05-9425-4f0d2f466313</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:50:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:05:56.152Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority" rel="nofollow">மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p>* தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>* அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest" rel="nofollow">"நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது"– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</a></p><p>* சோனம் வாங்சுக் தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>* எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled">மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை ரத்து</a></p><p>* புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. </p><p>* மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach">மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</a></p><p>* மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p><p>* மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</a></p><p>* சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>* வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</a></p><p>* மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. </p><p>* புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh">ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு</a></p><p>* கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p><p>* விசாகப்பட்டினம், ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th">பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</a></p><p>* கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>* கடலில் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam">ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</a></p><p>* ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். </p><p>* இரட்டையர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks">ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை</a></p><p>*கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்</p><p>*ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability">அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்</a></p><p>*இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>*இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி</a></p><p>*ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?</p><p>* தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party" rel="nofollow">பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>* தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future" rel="nofollow">இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</a></p><p>* கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026">GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின் </a></p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief">அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான 'பிரிட்ஜ்' -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</a></p><p>* உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். </p><p>* சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</a></p><p>* த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.</p><p>* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</a></p><p>* தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><p>* இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</a></p><p>* ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</p><p>* திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress">நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</a></p><p>* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>* மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>&quot;நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது&quot;– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest#comments</comments><guid isPermaLink="false">2618feb4-481f-4bcf-9e13-1bc3e037ec4f</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:36:41 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:36:41.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kamalhassan,Delhi Students Protest,neet protest,கமல்ஹாசன் எம்பி,டெல்லி போராட்டம்,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jyqvq4qn/kamal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamalhassan MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/jyqvq4qn/kamal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p><p>கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</p><p>இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிகொடுத்திருக்க வேண்டும்.</p><p>அதற்குப் பதிலாக, நம் பிள்ளைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்.</p><p>கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சியும், ஆர்வத்திற்குப் பதிலாகப் பதட்டமும், தகுதிக்குப் பதிலாகக் குற்றச்செயல்களும் இடம்பெறும் ஓர் அமைப்பு அழுகிப்போனது.</p><p>ஒரு தேசத்தின் பிள்ளைகள் பதில்களுக்குப் பதிலாகத் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும்போது, ​​அந்த தேசம் தோல்வியடைகிறது.</p><p>சோனம் வாங்சுக், இனிவரும் பயணத்திற்கு தேசத்திற்கு உங்கள் மனசாட்சி தேவைப்படும். தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>இந்தியப் பிள்ளைகளுக்கு: நீங்கள் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள். இப்போது நாடு உங்களுக்காகத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach#comments</comments><guid isPermaLink="false">1a104067-af83-4991-865e-3d6346655e05</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:23:21 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:23:21.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Marina Beach,மெரினா கடற்கரை,நீட் தேர்வு,Neet exam,CJP Protest,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெரினா கடற்கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xafj5noq/marina.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் முறைகேடு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்</a> வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <h2>மாணவர்கள் போராட்டம்</h2><p>கடந்த 20-ந்தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p> <h2>போலீசார் குவிப்பு</h2><p>இதையடுத்து மெரினா கடற்கரை பகுதியில் 2 துணை ஆணையர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். பீக் ஹவர்ஸில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><p>மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் தவிர்த்து வேறு யாரும் செல்கிறார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் மெரினாவிற்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city#comments</comments><guid isPermaLink="false">ac5fd1c2-a9bc-4dca-97ce-24c2962eb5cf</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:20:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:20:06.860Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,பூங்காக்கள்,வாகன நிறுத்துமிடம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zrvku9q7/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</aside><p>சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மேம்பாலங்கள் போக்குவரத்தை எளிதாக்கினாலும் மேம்பாலத்தின் கீழ் பகுதி சரிவர பராமரிக்கப்படாமல் குப்பை கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன.</p><p>இவற்றை சுத்தமாக வைத்திருக்கவும், பூங்காக்கள் அமைக்கவும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">மாநகராட்சி</a> திட்டமிட்டு வருகிறது.</p><h2><strong>வாகன நிறுத்துமிடம்</strong></h2><p>தியாகராய நகரில் ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் மற்றும் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் தலா 10 கார்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதில் கலைவாணர் மேம்பாலத்தின் கீழே, நடைபாதையுடன் சிறுவர் விளையாட்டு பகுதி உருவாக்கப்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p><p>ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன நிறுத்துமிடங்கள், புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தில் வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் இலவசமாக இருக்கும்.</p><h2><strong>மாநகராட்சி திட்டம்</strong></h2><p>சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>மியூசிக் அகாடமி மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை, ரங்கராஜபுரம் மேம்பாலம், ஜி.கே.மூப்பனார் சாலை, பாந்தியன் ரோடு மேம்பால பகுதியில் அலங்கார விளக்கு வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது.</p><p>இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு இடத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதால் அதற்கேற்ப வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு வருவதாகவும் இந்த பணிகள் விரைவில் செய்து முடிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august#comments</comments><guid isPermaLink="false">7fc352b6-b21a-4e4a-98ad-2cced5bc1b22</guid><pubDate>Thu, 23 Jul 2026 07:02:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T07:02:27.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,தாம்பரம் ரெயில் நிலையம்,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4ddlpy9/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</aside><h2><strong>எழும்பூர் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன.  விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது. </p><p>நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள்,  எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட  பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. </p><p>இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன. </p><h2><strong>இரும்பு பாலம்</strong></h2><p>இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.  500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p><p>அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை  வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது. </p><h2><strong>புறநகர் மின்சார ரெயில் சேவை</strong></h2><p>இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p>அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.</p><p>இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அறந்தாங்கி சுபா தியேட்டரில் திரைக்கு முன் முள்வேலி- &apos;ஜன நாயகன்&apos; பார்க்க வந்த ரசிகர்கள் அதிர்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fans-shocked-by-barbed-wire-fence-in-front-of-screen-at-arantangi-theatre#comments</comments><guid isPermaLink="false">abeba1b9-6f65-4f7e-bc2f-986fc912429c</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:47:58 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:47:58.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தியேட்டர்,Theatre,aranthangi,அறந்தாங்கி,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Theatre in Aranthangi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uorsjjo2/Theatre.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா தியேட்டரில் இன்று வெளியான '<a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/jana-nayagan-movie-review" rel="nofollow">ஜன நாயகன்</a>' திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p><p>இந்நிலையில், வழக்கமாக இல்லாத வகையில் திரைக்கு முன்பகுதியில் முள் வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்தது. இதனால் திரைக்கு அருகில் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.</p><p>திரைக்கு முன் முள் வேலி அமைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் திரையரங்கின் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது</p><p>இந்த விவகாரம் அறந்தாங்கி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th#comments</comments><guid isPermaLink="false">78cca09f-dfcb-4cca-a7cc-461789708c57</guid><pubDate>Thu, 23 Jul 2026 06:12:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T06:12:38.131Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/29/1958097-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/29/1958097-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை எதிர்த்து கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</em></p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <h2>இந்துஸ்தான் ஆயில் நிறுவனம்</h2><p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 புதிய கடல்சார் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்காக இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.  </p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>ஆனால் தற்போது, கடலில் இக்கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.  மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தியும், குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தின் சார்பில் வருகின்ற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், பரங்கிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p>  <p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும், அமைப்புச் செயலாளரும், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளருமான சொரத்தூர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தாமோதரன்,  கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.   </p> <p>இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைமை நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்.  </p><p>இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet#comments</comments><guid isPermaLink="false">fb879081-8f7c-48b2-b4f7-fa00e1a355b7</guid><pubDate>Thu, 23 Jul 2026 05:32:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T05:32:17.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fp93vmen/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fp93vmen/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! என்று கூறியுள்ளார்.</aside><h2><strong>போராட்டம் தீவிரம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட்</a> வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். </p><h2><strong>உண்மையான நோக்கம்!</strong> </h2><p>இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையை மேற்கொள்காட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>நீட் தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்</p><p>அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!</p><p>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">NEET தேர்வில் மட்டுமல்ல, <a href="https://x.com/hashtag/NEET?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NEET</a> தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்களின் இன்றைய <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@the_hindu</a> Op-Ed கட்டுரை!<br><br>ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET… <a href="https://t.co/ZHTG4sN6Wg">pic.twitter.com/ZHTG4sN6Wg</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2080155596410724566?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>முன்னதாக, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">மு.க.ஸ்டாலின்</a> கூறியிருந்ததாவது:- தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தார். </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet#comments</comments><guid isPermaLink="false">9e5d783a-a69f-48d5-b982-750e66d19749</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:33:52 +0000</pubDate><atom:updated>2026-07-23T04:33:52.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,நீட் தேர்வு,Neet exam,முக ஸ்டாலின்,CJP Protest,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது <a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">போராட்டம்</a> நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.</p> <p>கடந்த 20-ந்தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது. போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நீட் தேர்வை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் இது என திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-and-justice-cannot-exist-together-mk-stalin">மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* நீட் 3 முக்கிய வாக்குறுதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 1. சுமையைக் குறைத்தல், 2. வணிகமயமாக்கலை ஒழித்தல், 3. தரத்தை மேம்படுத்துதல். இந்த ஒவ்வொரு அம்சத்திலும் நீட் தோல்வியடைந்துள்ளது.</p> <p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது, அவ்வளவு தான்.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது. சமீபத்திய நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>* தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (24.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-32</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-32#comments</comments><guid isPermaLink="false">71e0bf3b-3fad-4e78-a7f1-6796ad1682b0</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:47:59 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:47:59.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,தமிழக மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zyjhqqpm/powercut1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zyjhqqpm/powercut1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் 1-வது முதல் 4-வது தெரு வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்.ஆர் நகர், தனலட்சுமி நகர், எம்.ஆர்.எப். நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.</p><h2><strong>பூவிருந்தவல்லி</strong></h2><p>ஜெ.ஜெ. நகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம்நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி.</p><h2><strong>புழல்</strong></h2><p>மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோவில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.</p><h2><strong>போரூர்</strong></h2><p>சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யூ, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்.சி. பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கல், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர், குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.</p><h2><strong>ஐ.டி. காரிடார்</strong></h2><p>எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>எல்.பி. சாலை, 1-வது முதல் 4-வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ, 1-வது முதல் 3-வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், சீனிவாசமூர்த்தி அவென்யூ, திருவேங்கடம் தெரு, 1-வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.</p><h2><strong>பெசன்ட் நகர்</strong></h2><p>கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, கடற்கரை சாலை, ருக்மணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு.</p><h2><strong>கொட்டிவாக்கம்:</strong></h2><p>நியூ கடற்கரை சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2-வது மற்றும் 7-வது பிரதான சாலை, 36-வது, 58-வது மற்றும் 59-வது குறுக்குத் தெரு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு, வாட்டர்லேண்ட் டிரைவ்.</p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>அம்பத்தூர்</strong></h2><p>என்.ஆர்.எஸ். சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ். நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், சீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம், பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட்.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress#comments</comments><guid isPermaLink="false">9407e7b9-cc0a-44d6-bd7f-b368176dfa11</guid><pubDate>Thu, 23 Jul 2026 03:14:46 +0000</pubDate><atom:updated>2026-07-23T03:14:46.944Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நீட் தேர்வு,Neet exam,TTTV Dhinakaran,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uckry6sc/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்
]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uckry6sc/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ? என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அரசியல் ஆயுதம்</strong></h2><p>2010 ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு என்ற கருத்தை உருவாக்கி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்விற்கு</a> அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த காங்கிரஸ் கட்சி,  இன்று அதே நீட் தேர்வுக்கு எதிராக  தெருக்களில் இறங்கிப் போராடுவது மாணவ, மாணவியர்களின் உணர்வுகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் கீழ்த்தரமான செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.</p><p>நீட் தேர்வை எதிர்த்து தற்போது போலிப் போராட்டம் நடத்தும் காங்கிரஸ், 2010 ஆம் ஆண்டு தான் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வு அறிமுகப்படுத்த முயன்றது தவறு என்பதை தற்போதாவது ஒப்புக்கொள்கிறதா ? அல்லது அப்போது எடுத்த முடிவு சரி என்றால் தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-police-holds-high-level-meetings-after-protest-violence">போராட்டங்கள்</a> அரசியல் காரணங்களுக்காகவா ? என்பதை நாட்டு மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்.</p><h2><strong>ஜனநாயகப் படுகொலை</strong></h2><p>தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சாலைகளில் இறங்கி போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி, வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பொதுமக்களுக்கு எத்தகைய சிரமத்தையும் ஏற்படுத்தாமல், முறையாக முன் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் அமைதியாக போராடலாம் என அதிகாரத் தொணியில் பதிலளிக்கும் தவெக அரசு, டெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இல்லம் முன்பாக எவ்வித அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி அவர்களை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>தனது கடந்தகால தவறுகளையும், முடிவுகளையும் மூடி மறைத்து, மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலன் எனும் முகமுடியை அணிந்து கொண்டு காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுக்கும் இப்போராட்டம், மாணவ, மாணவியர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme#comments</comments><guid isPermaLink="false">fec1387f-c209-4120-886f-c049790d5435</guid><pubDate>Thu, 23 Jul 2026 02:46:59 +0000</pubDate><atom:updated>2026-07-23T02:46:59.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Breakfast Scheme,காலை உணவு திட்டம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wa6sibrh/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Breakfast Scheme]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wa6sibrh/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.</strong></em> </p><p><em><strong>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>சத்துணவு திட்டம்</h2><p>தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்கும்போதெல்லாம், சில முக்கிய திட்டங்களை புதிதாக பொலிவுபடுத்துவது வழக்கம். அதில் முதன்மை பெறும் திட்டம், சத்துணவு திட்டமாகும்.</p><p>ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை. முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.</p> <h2>காமராஜர்</h2><p>காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.</p> <h2>தி.மு.க. ஆட்சி</h2><p>மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் 37 ஆயிரத்து 447 பள்ளிகளில் படிக்கும் 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.</p> <h2>த.வெ.க. அரசு</h2><p>தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் படிக்கும் 15 லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயனடைவார்கள்.</p> <h2>காமராஜர் பெயர்</h2><p>இந்த நிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang">பெருந்தலைவர் காமராஜர்</a> காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p> <p>ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளின் வருகை மற்றும் உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு மாணவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.71 என்ற செலவில், 210 வேலை நாட்களுக்காக ரூ.343.55 கோடியை செலவிட நிதி அனுமதியை அரசு அளித்துள்ளது.</p><h2>டெண்டர் அறிவிப்பு</h2> <p>இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் உணவு வழங்குபவர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>டெண்டரில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நகர்ப்புற வாழ்வாதார குழு, சமூக சேவை அமைப்புகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அரசு அதிகாரிகளுடன் ‘ஜன நாயகன்’ படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-enjoyed-watching-the-movie-jana-nayagan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-enjoyed-watching-the-movie-jana-nayagan#comments</comments><guid isPermaLink="false">e2d6c1e0-7eaf-4df3-bb6e-58197818d487</guid><pubDate>Wed, 22 Jul 2026 16:26:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T16:26:35.610Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/kst6vm0m/New-Project-2026-07-22T215600.764.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசு அதிகாரிகளுடன் ‘ஜன நாயகன்’ படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/kst6vm0m/New-Project-2026-07-22T215600.764.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ளப் படம் ஜன நாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களுக்கு பிறகு இப்படம் நாளை (ஜூலை.23) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. </p><p>இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' திரைப்படத்தை சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட அரங்கில் கண்டுகளித்தார். </p><p>முதலமைச்சர் விஜய் உடன் அரசு தலைமைச் செயலக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சிறப்புத் திரையிடலில் படத்தை பார்த்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>‘நீட்டும், நீதியும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது’ - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-and-justice-cannot-exist-together-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-and-justice-cannot-exist-together-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">859ed3c7-0d33-428e-88b5-69bde7c34c96</guid><pubDate>Wed, 22 Jul 2026 15:44:42 +0000</pubDate><atom:updated>2026-07-22T15:44:42.058Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,neet,நீட்,மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ekmchp7q/New-Project-2026-07-22T211423.716.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீட்டும், நீதியும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது’ - மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ekmchp7q/New-Project-2026-07-22T211423.716.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், </p><p>“நீதியும், நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. அடிப்படையில் நீட் தேர்வு நியாயமற்றது. எல்லா மாநிலங்களைப் பற்றியும் என்னால் பேச முடியாது என்றாலும், தமிழ்நாட்டைப் பற்றி என்னால் உறுதியாகப் பேச முடியும். </p><p>பாஜகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து தீர்மானங்களையும், மசோதாக்களையும் நிறைவேற்றியுள்ளது.</p><p>நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யுங்கள். </p><p>நாளை வெளியாகவுள்ள 'தி இந்து' நாளிதழில் எனது கருத்துக்கட்டுரையை வாசியுங்கள்; அதில் நீட் தேர்வு ஏன் அடிப்படையில் நியாயமற்றது மற்றும் அது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘இந்த ஒற்றை வாக்குறுதி அளித்தால் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன்’ - சோனம் வாங்சுக்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-end-the-hunger-strike-if-this-single-promise-is-made-sonam-wangchuk#comments</comments><guid isPermaLink="false">f0bb39ec-9511-41aa-93ec-428b40df262c</guid><pubDate>Wed, 22 Jul 2026 14:39:35 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:39:35.515Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>hunger strike,Sonam Wangchuk,உண்ணாவிரதப் போராட்டம்,சோனம் வாங்சுக்,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/62nifyct/New-Project-2026-07-22T193259.446.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்த ஒற்றை வாக்குறுதி அளித்தால் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன்’ - சோனம் வாங்சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/62nifyct/New-Project-2026-07-22T193259.446.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'சலோ சன்சத்' பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் மீது சட்டரீதியான அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்று மத்திய  அரசு உறுதியளித்தால் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். </p><p>மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், மருத்துவமனையில் தன்னைச் சந்தித்ததற்கும் , தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்ததற்கும் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.</p><p>நியாயமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய கல்விமுறையை கோரியதுதான் மாணவர்களின் ஒரே குற்றம். இதைவைத்து அவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் ஜனநாயக நிறுவனங்கள்மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார். </p><p>இந்த உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்காதபட்சத்தில் தனது உண்ணாவிரதத்தை காலவரையின்றி தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T14:33:51.580Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/icc-odi-rankings-gill-misses-top-spot-by-one-point">ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட கில்</a></p><p>* ஒருநாள் தொடரில் சுப்மன் கில் 802 புள்ளிகள் பெற்றுள்ளார்.</p><p>* விராட் கோலி, ரோகித் சர்மா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ind-vs-zim-fear-of-failure-has-no-place-in-this-team-says-india-skipper-shreyas-iyer">இந்த அணியில் தோல்வி குறித்த பயத்திற்கு இடமில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்</a></p><p>* அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. </p><p>* ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.</p><figure><img alt="Shreyas Iyer" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/g61vg3lb/ShreyasIyer0002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/david-warner-pleads-guilty-risk-of-prison">குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்: சிறைக்கு செல்ல வாய்ப்பு</a></p><p>* தனது செயல் முட்டாள்தனமானது. </p><p>*மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suvendu-attacks-mamata-abhishek-over-appeasement-politics-corruption">ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி</a></p><p>* இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது.</p><p>* உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.</p><figure><img alt="Suvendu Adhikari" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5r5brlsh/SuvenduAdhikari002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt">டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்களுக்கு எச்சரிக்கை - அண்ணாமலை</a></p><p>* போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடக்கிறது.</p><p>* மத்திய அரசு உடனே பேச்சுவார்தை நடத்த வேண்டும்.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang">முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு</a></h2><p>* பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="Chief Minister Morning Food Scheme" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/jzvgywz8/MorningFoodSCheme.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/how-to-end-students-protest-rahul-gandhi-clarifies">மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்</a></p><p>* மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>* நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/marco-rubio-iran-demands-strait-of-hormuz-would-set-a-dangerous-precedent-tells-asian-leaders">ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கோரிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்: ஆசிய தலைவர்களிடம் மார்கோ ரூபியோ எச்சரிக்கை</a></p><p>* மேற்கு ஆசியப் போரில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வந்தாலும், நாங்கள் 100 சதவீதம் ASEAN அமைப்புடன் துணை நிற்கிறோம்.</p><p>* ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும்.</p><figure><img alt="Marco Rubio" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z9dpk3e8/MarcoRupio.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>*இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples">அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை</a></p><p>* கோயில் அறங்காவலர் விண்ணப்ப அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!</p><p>* இணையதளம் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3">சென்னையில் மழைக்கு வாய்ப்பு </a></p><p>* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</a></p><p>* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.</p><p>* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action">எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</a></p><p>* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors">டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!... </a></p><p>இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight">பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</a></p><p>* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்</p><p>* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns">டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</a></p><p>* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p>* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</a></p><p>* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.</p><p>* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-advances-to-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/west-indies-win-fifth-odi-new-zealand-take-series-3-2">5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து</a></p><p>* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. </p><p>* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices">அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்.</p><p>* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2">தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p><em><strong>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</strong></em></p><p><em><strong>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</strong></em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</a></p><p><em>* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</em></p><p><em>* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin">தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</a></p><p>* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><p>* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</a></p><p>* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. </p><p>*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said">விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</a></p><p>* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p>]]></content:encoded></item><item><title>ஈரோடு மாநகர பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு - 4 ஆயிரம் லிட்டர் குறைக்கப்பட்டதாக புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shortage-of-aavin-milk-in-erode-city-area-complaint-that-supply-has-been-reduced-by-4000-liters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shortage-of-aavin-milk-in-erode-city-area-complaint-that-supply-has-been-reduced-by-4000-liters#comments</comments><guid isPermaLink="false">2c74fc1c-3e2e-42b5-a4ad-f5256a94bdbe</guid><pubDate>Wed, 22 Jul 2026 13:54:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T13:54:36.843Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,ஈரோடு,Aavin,Government of Tamil Nadu,Erode,ஆவின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/0egsniuw/New-Project-2026-07-22T192412.575.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈரோடு மாநகர பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு - 4 ஆயிரம் லிட்டர் குறைக்கப்பட்டதாக புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/0egsniuw/New-Project-2026-07-22T192412.575.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மாவட்ட ஆவின் நிறுவனம் சித்தோடு பகுதியில் இயங்கி வருகிறது. மாவட்டம் முழுவதும் கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், ஆவின் நிறுவனத்தில் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>ஈரோடு மாவட்டத்தில் தினசரி ஒன்றரை லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதில் பாக்கெட் பால் விற்பனை தவிர்த்து தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆவின் பாலக முகவர்கள் நல சங்கத்தின் செயலாளர் அய்யாசாமி கூறியதாவது:</p><p>ஈரோடு ஆவின் விற்பனை செய்யும் பால் முழுமையாக முகவர்கள் மூலமாகவே விற்பனை செய்யப்படுகிறது. பால் முகவர்களாகிய நாங்கள்தான் பால் பூத்துகள் மூலமாகவும், கடைகள் மூலமாகவும் பால் விநியோகம் செய்து வருகிறோம். வழக்கமாக முகவர்களுக்கு 49 ஆயிரம் லிட்டர் பால் வழங்கப்பட்டு வந்தது. </p><p>ஆனால் கடந்த 10 நாட்களாகவே ஒவ்வொரு முகவருக்கும் சுமார் 12 லிட்டர் கொண்ட 7 டிரே பால்வரை குறைவாக விநியோகம் செய்யப்படுகிறது.  இதை கணக்கிட்டால் ஒட்டு மொத்தமாக சுமார் 5 ஆயிரம் லிட்டர் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.</p><p>கடைக்காரர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் பால் விநியோகம் செய்ய முடியவில்லை. ஆவின் நிறுவனத்தில் கேட்டால் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டோம். அதற்கு, ஈரோட்டில் கொள்முதல் விலை உயர்வு காரணமாக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இது தற்காலிகம், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு ஆவின் நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது என முகவர்களுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது. இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இதுபோன்று பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. என கூறியுள்ளார்.</p><p>சித்தோடு பகுதியை சேர்ந்த விவசாயி சிவசுப்பிரமணியன் கூறியதாவது: </p><p>கோடை காலத்தில் பால் உற்பத்தி குறைவதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைவது வழக்கம். ஆனால், தற்போது தீவின தட்டுப்பாட்டால் பால் உற்பத்தி குறைந்திருக்கிறது. அதே நேரம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் தொகையை விட தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலை கொடுப்பதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வரத்து குறைந்து இருக்கிறது. </p><p>இதனால், ஆவினில் இருந்து பால் விநியோகம் குறைந்திருப்பது உண்மை. அதுமட்டுமின்றி, ஈரோடு ஆவின் நிறுவனத்தில் இருந்து சென்னைக்கு தினசரி 50 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. தற்போது பால் தட்டுப்பாடு காரணமாக ஈரோடு ஆவின் நிறுவனத்தில் வெண்ணெய், நெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதுகுறித்து ஈரோடு ஆவின் பொது மேலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது:</p><p>ஆவினில் பால் தட்டுப்பாடு எதுவும் இல்லை. தினசரி 64 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்கிறோம். திருமணம் உள்ளிட்ட விஷேச நாட்களில் 66 ஆயிரம் லிட்டர் வரை விநியோகம் செய்யப்படும். இதுவரை தட்டுப்பாடு இல்லை” என்றார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt#comments</comments><guid isPermaLink="false">e0e86280-5e40-4122-af0b-16a6183085c6</guid><pubDate>Wed, 22 Jul 2026 12:20:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T12:20:15.110Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hijack,annamalai,DelhiProtest,NEETProtest,StudentsProtest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/24o8ffbk/Annamalai" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/24o8ffbk/Annamalai?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தை சில சக்திகள் தங்களுக்கு சாதகமாக திசைதிருப்ப முயற்சிப்பதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரான அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவ அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>நாடாளுமன்ற முற்றுகை பேரணியின் போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடந்ததால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பாதுகாப்பு காரணமாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><h2>இதுகுறித்து அண்ணாமலையின் கேள்வி..</h2><h4>ஹைஜாக் எச்சரிக்கை: </h4><p>போராடும் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீட் விசாரணைக்கு தொடர்பில்லாதவர்கள் தற்போது போராட்ட மேடையில் உள்ளனர்.</p><h4>பேச்சுவார்த்தை தாமதம் ஏன்: </h4><p>பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு தாமதம்? போராட்டம் வன்முறையாக மாறும் வரை காத்திருந்தது யார்?</p><h4>பொறுப்பேற்காதது ஏன்?</h4><p>கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. இதற்கு இதுவரை மத்திய அரசு பொறுப்பேற்காதது ஏன்?</p><h2>அண்ணாமலையின் கோரிக்கை</h2><p>மத்திய அரசு மாணவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் அவர்களின் கவலைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும்.</p><p>"ஒரு நாட்டின் உண்மையான வலிமை இளைஞர்கள். மாணவர்கள் கல்வி அமைப்பின் நேர்மையில் நம்பிக்கை இழந்தால் அது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளும்" என  எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது’ - காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-release-water-to-tamil-nadu-karnataka-firm-at-cauvery-management-authority-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-release-water-to-tamil-nadu-karnataka-firm-at-cauvery-management-authority-meeting#comments</comments><guid isPermaLink="false">60feb336-5a39-47fd-bc49-4cff66dd4da6</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:53:24 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:53:24.706Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,தமிழ்நாடு,CWMA</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/p2rhp1gg/New-Project-2026-07-22T170715.160.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது’ - காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/p2rhp1gg/New-Project-2026-07-22T170715.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது என டெல்லியில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 53-வது கூட்டத்தில், கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. </p><p>காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக உள்ளது. தற்போதிருக்கும் தண்ணீர் தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானது என்பதால், தமிழ்நாட்டிற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் தர வாய்ப்பில்லை என பிடிவாதம் காட்டியுள்ளது.</p><p>இன்று நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் நேரில் பங்கேற்கவில்லை. மாறாக கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு தரப்பில் சுப்ரியா சாகு, சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>இக்கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில்  வலியுறுத்தப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang#comments</comments><guid isPermaLink="false">691128ad-2556-411e-b250-da938f4da5d5</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:33:55.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>morning foods,காலை உணவு திட்டம்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/jzvgywz8/MorningFoodSCheme.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Morning Food Scheme]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/jzvgywz8/MorningFoodSCheme.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு காலையில் உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்திற்கு முதல்வரின் காலை உணவு திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.</p><h2>காலை உணவுத் திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு</h2><p>விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும். தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.</p><h2>பெயர் மாற்றம்</h2><p>இந்த நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>ஏற்கனவே விடியல் மகளிர் பயணம் என்பது மகளிர் பயணம் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயர் அப்படியே நீடிக்கப்படுகிறது. அம்மா உணவகம் பெயரும் மாற்றப்படவில்லை.</p><h2>பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை</h2><p>மாநிலம் முழுவதும் சுமார் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 20.59 லட்சம் குழந்தைகள். 6 முதல் 8-ம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவாக்கத்திற்குப் பிறகு, மாநிலம் முழுவதும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் வரை பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-excesses-by-the-tamil-nadu-police-must-be-stopped-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-excesses-by-the-tamil-nadu-police-must-be-stopped-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">86573322-ac44-4cf6-bdd1-cd1e21d58e53</guid><pubDate>Wed, 22 Jul 2026 11:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-22T11:01:20.988Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3gah6sop/New-Project-2026-07-22T163046.653.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3gah6sop/New-Project-2026-07-22T163046.653.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம்  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து தலைநகர் டெல்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.  </p><p>சோனம் வாங்சுக் கைது அதைத் தொடர்ந்து மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல்துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள்ளனர். அனைத்தும் வீடியோக்களாக வெளிவந்துள்ளது.</p><p>நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.  நேற்று முன்தினம் முதல் சென்னையில் ஓரிடத்தில் அமர்ந்து போராட வழியில்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு காவல்துறையால் அலைக்கழிக்கப்படுகின்றனர். </p><p>மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது. இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். </p><p>காவல்துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும்  கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல். இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல்துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.</p><p>போராடும் உரிமையை நசுக்குகின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கிற மாநில முதலமைச்சர்  ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப்போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும். </p><p>நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும். எனவே, தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples#comments</comments><guid isPermaLink="false">65c6635f-4aee-4618-bb72-bd2b5454e03d</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:34:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:34:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tngovt,TNHRCE,அறங்காவலர்நியமனம்,TempleTrustee,இந்துசமயஅறநிலையத்துறை,TrusteersAppointment,DeadlineExtended</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/w1c7rzhq/TNHRCE" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNHRCE ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/w1c7rzhq/TNHRCE?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 214 முக்கியத் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...</h2><p>'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை 22.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 12.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்' என்று தெரிவிக்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள                                     214 திருக்கோயில்களுக்கு<br>பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள்நியமனத்திற்கு<br>விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/RameshOffcl?ref_src=twsrc%5Etfw">@RameshOffcl</a> <a href="https://x.com/TNDIPRNEWS?ref_src=twsrc%5Etfw">@TNDIPRNEWS</a> <a href="https://x.com/hashtag/tnhrce?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tnhrce</a> <a href="https://x.com/hashtag/tndipr?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tndipr</a> <a href="https://t.co/Bnod0DIsHT">pic.twitter.com/Bnod0DIsHT</a></p>&mdash; TN HRCE (@tnhrcedept) <a href="https://x.com/tnhrcedept/status/2079851239131721971?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மக்கள் பணியைப் புறந்தள்ளி ஜன நாயகன் பட பணிகளில் மும்முரம் காட்டும் அரசு நிர்வாகம் - டிடிவி தினகரன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-administration-neglects-public-service-to-focus-intensely-on-the-work-related-to-the-movie-jananayagan-ttv-dhinakaran-criticizes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-administration-neglects-public-service-to-focus-intensely-on-the-work-related-to-the-movie-jananayagan-ttv-dhinakaran-criticizes#comments</comments><guid isPermaLink="false">b1583e99-4f62-43a6-9985-b224ab6eaf21</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:31:12 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:31:12.766Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜன நாயகன்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,&apos;Jana nayagan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/8tqhyms4/New-Project-2026-07-22T160043.317.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் பணியைப் புறந்தள்ளி ஜன நாயகன் பட பணிகளில் மும்முரம் காட்டும் அரசு நிர்வாகம் - டிடிவி தினகரன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/8tqhyms4/New-Project-2026-07-22T160043.317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது” என அம முக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</p><p>மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.</p><p>எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜே.சி.பி. வாகனம் மோதி விபத்து- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-ex-mla-son-dies-for-accident-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-ex-mla-son-dies-for-accident-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5a649cc3-c0d6-49b9-8578-ebf862e0752a</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:28:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:28:17.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,dead,பலி,சென்னை விபத்து,Chennai Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/7dz3vfwn/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலியான உலகலாபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/7dz3vfwn/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. </aside><p>மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரிய புள்ளான். இவர் இந்த தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக இருந்தார். </p><p>பெரிய புள்ளானுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் தனிக்குடித்தனம் சித்து வருகிறார். 2-வது மகள் படித்து வருகிறார். ஒரே மகனான உலகலாபதி (வயது 21) சென்னையில் உள்ள சத்தியபாமா சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். </p><p>இதற்காக உலகலாபதி வேளச்சேரியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊரான மேலூருக்கு சென்றுவிடுவார்.</p><h2><strong>விபத்து</strong></h2><p>இந்தநிலையில் இன்று காலை உலகலாபதி தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டார். காந்தி மண்டபம் மேல்பாலத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சென்ற போது போக்குவரத்து நெரிசலால் உலகலாபதி பிரேக் போட்டார்.</p><p>அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த ஜே.சி.பி. வாகனத்தின் முன்பகுதி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த உலகலாபதி சாலையில் தவறி விழுந்தார். மோதிய வேகத்தில் பின்னால் வந்த ஜே.சி.பி. அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உலகலாபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். </p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>விபத்து குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.</p><p>மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பலியான உலகலாபதி உடல் மேலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3#comments</comments><guid isPermaLink="false">042dc8d6-2b1e-4f34-b420-27d38f0cc641</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:09:10.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,சென்னையில் மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே இன்று முதல் 26-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs#comments</comments><guid isPermaLink="false">c9bfff35-f33f-4fcd-9b89-f99523f35d25</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:21:28 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:21:28.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,மருத்துவ படிப்பு,BDS,ஆன்லைன் விண்ணப்ப பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.பி.பி.எஸ். படிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவ படிப்புகளில்</a> சேர்வதற்கு மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். </p><p>கடந்த மாதம் 27-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். </p> <p>இந்த நிலையில் இன்று வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இருப்பதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. </p><p>அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p> <p>இந்திய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். </p><p>மாணவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை: பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மின்வாரியம் அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-board-monsoon-maintenance-work-must-be-completed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-board-monsoon-maintenance-work-must-be-completed-quickly#comments</comments><guid isPermaLink="false">794e85e4-19dd-43d5-961b-eb5197a7aae9</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:09:25 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:09:25.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,பருவமழை,monsoon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/lywq590f/tneb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/lywq590f/tneb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.</strong></em></p><p>மின்வாரிய தலைமையிடத்தில் இருந்து அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- </p><p>தமிழகம் முழுவதும் பருவமழையையொட்டி தடையற்ற மின்சாரத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னதாகவே மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்வாரியத்தில்</a> தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கான கொள்முதல் டெண்டரை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight#comments</comments><guid isPermaLink="false">99fd5e41-0ed7-4b24-afbc-190f926bd5b9</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:37:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:37:16.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>koyambedu bus stand,கோயம்பேடு பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</aside><h2><strong>கோயம்பேடு பஸ் நிலையம்</strong></h2><p>வெள்ளி விழா கொண்டாட வேண்டிய <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-பஸ்-நிலையம்">கோயம்பேடு பஸ் நிலையம்</a>...</p><p>பார்க்க சகிக்காமல் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அலங்கோலமாக காட்சி அளிப்பது பொதுமக்களை ஆதங்கப்பட வைத்து உள்ளது. சென்னைக்கு வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது கோயம்பேடு என்ற எண்ணம் பலரது மனதில் நிலைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நிமிடத்திற்கு ஒரு பஸ் வந்து சென்ற இடம் இன்று கடந்த கால நினைவுகளை சுமந்து நிற்கிறது. </p><p>‘சென்னை தூங்கினாலும், கோயம்பேடு தூங்காது’ என்று சொல்லப்படும் அளவிற்கு 24 மணி நேரமும் இயங்கிய இடமாக இது இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமும் முடிவும் ஆக இருந்தது. ஆனால் இன்று அது பலரையும் கண்கலங்க வைத்து உள்ளது. </p><h2><strong>பிரமாண்டமான பஸ் நிலையம்</strong></h2><p>1990-களில் சென்னை நகரம் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. அந்த கால கட்டத்தில் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள் என எல்லா பஸ்களும் பாரிமுனைக்கு தான் வரும். புதிதாக தனியார் பஸ்களும் அதிக அளவில் வரத் தொடங்கியதால் பாரிமுனையில் சமாளிக்க முடியவில்லை. இதற்காக கோயம்பேட்டில் சுமார் 35 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் கட்ட தீர்மானித்தார்கள். ரூ.103 கோடி செலவில் பிரமாண்டமான பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு  திறக்கப்பட்டது. </p><p>ஒரே நேரத்தில் 300 பஸ்கள் நிறுத்தும் வசதி, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் ஒரு மடங்காக அதிகரித்தது. </p><p>இந்த பஸ் நிலையம் வெறுமனே பஸ் நிலையமாக தெரியவில்லை. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்று பெயர் பெற்றது. இது மட்டுமல்ல இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட வசதிகள் தமிழகத்திற்கே முன்னோடியாக இருந்தது. விசாலமான காத்திருப்பு மண்டபங்கள், உணவகங்கள், முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தும் இடம், போலீஸ் நிலையம், கழிப்பறைகள் என எல்லாமே திட்டமிட்டு வடிவமைத்து நேர்த்தியாக கட்டப்பட்டது. </p><h2><strong>மெட்ரோ ரெயில்</strong></h2><p>2015-ல் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்ட போது கோயம்பேடு பஸ் நிலையமும் அத்துடன் இணைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில்களில் வரும் பயணிகளும் எளிதாக பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றார்கள். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.</p><p>அதுமட்டுமல்ல சுற்றிலும் இருந்த ஓட்டல்கள், உணவகங்கள், லாட்ஜிகள் என்று எல்லாமே பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டன. </p><p>கோயம்பேடு பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் பஸ்கள் நிற்பது, டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுவது என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து சென்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தது என எல்லாமே இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/nsxf4td4/koyambedu0.jpg" /></figure><h2><strong>காலத்தின் கொடுமை</strong></h2><p>ஒரு தலைமுறையே பிரம்மிப்புடன் பார்த்தும், ரசித்தும் பயன்படுத்திய பஸ் நிலையம் இன்று மக்கள் செல்லவே அஞ்சும் இடமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு என்ற புதிய பஸ் நிலையத்தை அரசு கட்டியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கு மாற்றப்பட்டது. </p><p>வெளிமாநிலங்கள் உள்பட சில இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை அருகில் உள்ள சில வழித்தட பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது. </p><p>தற்போது வார நாட்களில் தினமும் குறைவான பயணிகள் மட்டுமே இங்கிருந்து பஸ்களில் செல்கிறார்கள். முன்பு வார நாட்களில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை முன்பதிவுகள் செய்த நிலையில் தற்போது பெங்களூரு, ஓசூர், சேலம், தர்மபுரி, திருப்பதி உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் சுமார் 300 முன்பதிவுகள் நடக்கிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/t5er8vwa/koyambedu01.jpg" /></figure><h2><strong>கட்டிடங்கள் சிதிலம்</strong></h2><p>பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதால் அங்கு வரும் பயணிகளும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். முன்பு இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலித்த இந்த பஸ் நிலையம் இப்போது பல கடைகள் மூடப்பட்டு விட்டதால் ஆங்காங்கே ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிவதால் களை இழந்து விட்டது. பஸ் நிலையத்திற்குள் வீடு இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள், வெளிமாநில கூலி தொழிலாளர்கள் என்று பலரும் தங்குகிறார்கள்.  முன்பெல்லாம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் கோயம்பேடு கலகலப்பாக இருந்ததால் சமூக விரோத செயல்களும் நடப்பதில்லை. ஆனால் இப்போது ஒரு சிலர் மட்டும் இரவு நேரங்களில் பஸ்சுக்காக செல்லும் போது வழிப்பறி மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். </p><p>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வெளிப்பகுதியில் சிறுநீர், மலம் கழித்து விட்டு செல்வதால் கால் வைத்து நடக்க முடியவில்லை. எந்த பக்கத்தில் திரும்பினாலும் சிகரெட் துண்டுகள்,  மதுபான பாட்டில்கள், குப்பைகள் சிதறி கிடக்கின்றன. கட்டிடங்களும் சிதிலம் அடைய தொடங்கி விட்டது. </p><p>இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்போன்கள் பறிப்பது, கையில் கொண்டு செல்லும் பொருட்களை அடித்து பிடுங்கிக் கொண்டு செல்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருவதாக போலீஸ் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் டவுண் பஸ்கள் நிற்கும் இடங்களில் மட்டும் ஒரு சில போலீசார் ரோந்து செல்வதால் மற்ற பகுதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. </p><h2><strong>வாகனம் நிறுத்தும் இடம்</strong></h2><p>வாகனம் நிறுத்தும் இடம் காலையில் மட்டுமே செயல்படுகிறது. தர்மபுரிக்கு செல்லும் பயணியை பஸ் ஏற்றி விடுவதற்கு இரவில் காரில் வந்தவரை கார் நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. காலை 5 மணிக்கு பிறகுதான் பார்க்கிங் செயல்படத் தொடங்கும். அதுவரை வெளியே காரை நிறுத்தி காத்திருங்கள் என்று சொன்னதாக ஆதங்கத்துடன் கூறினார். </p><p>ஒரு காலத்தில் கூட்டத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இடம் இன்று அமைதி குடிகொண்டுள்ள இடமாக காட்சி அளிக்கிறது. கோயம்பேட்டின் வரலாறு குறையவில்லை. ஆனால் பயணிகளின் காலடி சத்தம் மட்டும் குறைந்துவிட்டது. </p><p>நல்ல திட்டமிடல் இருந்தும் போதிய பயன்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டம். பராமரிப்பு இல்லாததால் கோடிக்கணக்கில் கொட்டி கட்டப்பட்ட பிரமாண்டம் இப்போது சிதைந்து கொண்டு இருக்கிறது. சுகாதாரம், கழிவறை பராமரிப்பு இல்லாததால் சுற்றுச்சூழல் சீர்கேடும் அரங்கேறுகிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவியாபாரிகளின் வருமானம் கடுமையாக பாதித்து உள்ளது. </p><p>‘பஸ்களின் இரைச்சல் குறைந்தாலும், கோயம்பேட்டின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.’</p><p>‘கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்’.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns#comments</comments><guid isPermaLink="false">f351c86b-3c68-4ac0-a539-5b7f5307e35c</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:29:32.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,நீட் தேர்வு,cm vijay,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வு</a> குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.</p> <p>நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும்  வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p> <p>நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.</p> <p>நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுல், பிரியங்கா காந்தி கைதுக்கு எதிர்ப்பு- டெல்லியில் காங்கிரசார் போராட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-protest-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-protest-in-delhi#comments</comments><guid isPermaLink="false">41d485e1-a9b9-4512-9e60-00fb3a8bc42f</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:13:36.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,விஜய் வசந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ioztnm5j/vijayvasanth.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரசார் போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரசார் போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ioztnm5j/vijayvasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</aside><h2><strong>மாணவர்கள் போராட்டம்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மோந்திர பிரதான் பதவி விலக கோரி நேற்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். </p><h2><strong>தடியடி</strong></h2><p>போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி பிரதமர் இல்லத்தின் முன்பு காங்கிரசார் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி  மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.</p><h2><strong>கைது</strong></h2><p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2><strong>விஜய் வசந்த்</strong></h2><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்-வசந்த்">விஜய் வசந்த் </a>எம்பி  கலந்து கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">c1df5443-f70a-48d9-ba6d-bab5c8c2dc0d</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:48:52 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:48:52.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Supreme Court,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு,Armstrong,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்- உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள்.</aside><p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/ஆம்ஸ்ட்ராங்-கொலை-வழக்கு">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை</a> சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.</p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. </p><h2><strong>சிபிஐ விசாரணைக்கு அனுமதி</strong></h2><p>மேலும், முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது  சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices#comments</comments><guid isPermaLink="false">ae833238-8002-40f4-ab75-2add832ca391</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:34:59.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,அரிசி விலை உயர்வு,Rice Price Hike</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>தமிழ்நாட்டில் கடந்த 15  நாள்களுக்கு முன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அரிசி விலை</a> கிலோவுக்கு  ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு  ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை  கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">பொன்னி அரிசி</a> விலை  இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின்  விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை  ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>மக்கள் பாதிக்கப்படக் கூடாது</strong></h2><p>பருவமழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும்,  நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.</p><p>அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை  எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாகவே உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக் கூடாது.</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்;  மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு  விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2#comments</comments><guid isPermaLink="false">397bd551-542b-4713-b656-5e32645c8148</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:22:18 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:22:18.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,IPS Officers Transferred</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த  நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். </p><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> உள்துறை செயலாளர்  மணிவாசன் பிறப்பித்த உத்தரவில்,</p><p>* தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி செய்து வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</p> <p>* சென்னை குற்றப்பிரிவு  மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>*  ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p> இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin#comments</comments><guid isPermaLink="false">ce7f5532-2fda-475b-9dd4-2d6955096f01</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:07:56 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:07:56.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,மருத்துவ கழிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மருத்துவ கழிவுகள்</strong></h2><p>தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.</p><h2><strong>மெத்தனம்</strong></h2><p>அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</strong></h2><p>தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><h2><strong>தீவிர சோதனை</strong></h2><p>எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime">தவெக</a> அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam#comments</comments><guid isPermaLink="false">b5a70378-db4c-4c99-a115-4d74449b12d4</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:02:26.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,Students Arrested,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழும்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். </p> <p>இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.</p><p>டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems"> 'நீட்' தேர்வு</a>க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். </p> <p>சென்னை தி.நகரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை</a> ரத்து செய்யக்கோரி 3-வது நாளாக தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p> <p>இதேபோல், திருவொற்றியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  மேலும், சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</p><p>கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike#comments</comments><guid isPermaLink="false">440f6e5c-0c51-4177-86a2-34d8bbd159e5</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:48:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:48:53.694Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிசி,Rice,rice price,அரிசி விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</aside><p>தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர்.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் கடந்த 2 வாரமாக <a href="https://www.maalaimalar.com/topic/அரிசி-விலை-உயர்வு">அரிசி விலை</a> கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் விலை ஏறி, ரூ.65 க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த அரிசி விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து இப்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.</p><p>25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விலை உயர்ந்து விட்டது. இப்போது இரண்டாவது முறையாக 50 ரூபாயாக இட்லி அரிசி விலை உயர்ந்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.</p><p>இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது அங்கிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85-க்கு விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><h2><strong>உற்பத்தி குறைவு</strong></h2><p>இந்த சூழ்நிலையில் தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது. இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>பொதுமக்கள் பாதிப்பு</strong></h2><p>அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது. எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said#comments</comments><guid isPermaLink="false">e092bc02-419c-4238-87f2-7214e521bb7a</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:08:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:08:11.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>காணிக்கை</strong></h2><p>திருத்தணி முருகன் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவர் வெள்ளிவேலை காணிக்கையாக செலுத்தினார். </p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/பிரேமலதா-விஜயகாந்த்">பிரேமலதா விஜயகாந்த்</a> கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். தொடர்ந்து அவர் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>தப்ப முடியாது</strong></h2><p>தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகரிடம் இருந்து தப்ப முடியாது. </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். </p> <p>நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க விஜய் சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும்  கண்துடைப்பாய் போய்விடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு - பன்னாட்டு நிறுவனங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies#comments</comments><guid isPermaLink="false">a62224b9-de44-451e-8857-7669e074706c</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:59:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:59:38.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,விஐடி பல்கலைக்கழகம்,MoU,VIT,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேலூர் விஐடியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட துணை தலைவர் சேகர் விசுவநாதன்.]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</strong></em></p><h2>விஐடி மாணவர்கள்</h2><p>இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்ய உள்ளன. </p><h2>தின்குவேட் முதலீட்டு நிறுவனம்</h2><p>சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும் முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது. டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும். இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும். </p> <p>ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.</p><h2>வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம்</h2><p>அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.</p> <h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.</p><p>நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement#comments</comments><guid isPermaLink="false">19b2501a-a558-449a-bea8-117154d02c1a</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:38:37.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்,பழனி கோவில் நில மோசடி,Pazhani land scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.</p><p>சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">அறநிலையத் துறை</a>யின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.</p><p>அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.</p><p>இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. </p><p>எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">த.வெ.க</a>. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>