<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 05 Aug 2026 22:41:35 +0000</lastBuildDate><item><title>தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee#comments</comments><guid isPermaLink="false">95200614-beda-4d3c-b0b4-3c7afc0d1194</guid><pubDate>Wed, 05 Aug 2026 20:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T20:22:15.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK Vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM VIjay with Maira Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஆகஸ்ட் 05) தாக்கல் செய்தார்.</p><p>தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>காலை 10.00 மணிக்கு பட்ஜெட் தாக்கலை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்து மதியம் 12:31 மணிக்கு உரையை முடித்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை தொடர்ந்தும்.</p><h2>ஒரு ரூபாயில் வரவு:</h2><ul><li><p>பொதுக்கடன் -33.1%</p></li><li><p>கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1%</p></li><li><p>மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3%</p></li><li><p>மத்திய வரிகளில் பங்கு - 11.9%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%</p></li></ul><h2>ஒரு ரூபாயில் செலவு:</h2><ul><li><p>மூலதனச் செலவு -10.9%</p></li><li><p>வட்டி செலுத்துதல் -15.0%</p></li><li><p>உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2%</p></li><li><p>கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9%</p></li><li><p>சம்பளங்கள் - 17.3%</p></li><li><p>ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0%</p></li><li><p>கடன் வழங்குதல் - 1.9%</p></li><li><p>செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8%</p></li></ul><h2>2 ஆண்டுகள் அவகாசம்:</h2><p>பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது உரையில், "போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும். போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">deadc17b-3c5a-4722-97af-bb8886b653d4</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:05:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:05:15.541Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>“தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர். </p><p>தமிழ்நாட்டின் ரூ.10 லட்சம் கடன் சுமையை திமுகதான் ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போதே நிதியமைச்சர் ஏற்படுத்த முயன்றார். நான் அப்போதே கடன் வாங்குவதற்கான அளவுகோல்களை விளக்கியிருந்தேன்.  </p><p>தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன். </p><p>இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் வாங்குவது அதிகரிக்கும் என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி இந்த ஆண்டு நிகர கடன் வாங்கியுள்ளனர். இதே அளவு சென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தவெக அரசு கடனாக வாங்குவார்கள். </p><p>நாங்கள் ஆட்சியை விட்டு போகும்போது ரூ.1 லட்சம் நிகர கடன்தொகை வாங்கினோம். இப்போது அவர்கள் கூடுதலாக ரூ.22 ஆயிரம் கோடி வாங்கியுள்ளார்கள். ரூ.7000 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. </p><p>மூலதனச் செலவுகளையே திமுக செய்யாததைப் போல ஒரு தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டில் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 59,662 கோடி. தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவிற்கு ரூ.56,985 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. </p><p>திமுக செல்லும் வேளையில் மாநில வரி வருவாய் ரூ. 2 லட்சத்தி 29 ஆயிரம். இப்போது ரூ.2 லட்சத்தி 26 ஆயிரம் கோடி. அதிலும் ரூ.3000 கோடி ரூபாய் குறைவாக காட்டுகிறார்கள். வெள்ளை அறிக்கையில் எந்தெந்த விஷயங்களை திமுகவிற்கு எதிராக கூறினார்களோ, பட்ஜெட்டில் அந்த துறைகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளனர். </p><p>திமுக திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி என்றுக்கூட அறிவிக்கவில்லை. தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளார்கள். அதைவைத்து என்ன செய்யமுடியும்?</p><p>டெல்டா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சொற்ப நிதியினை ஒதுக்கியுள்ளனர். இதுதான் நிலைமை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget#comments</comments><guid isPermaLink="false">2108b207-9e99-4c5e-87d3-0cbca419acf0</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:16:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:16:55.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK IT Wing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத்திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.</p><p>மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.</p><h2>ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார்</h2><p>ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.</p><p>எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கூறும்போது மாற்றம் மாற்றம் என்ற பெயரைத்தான் மாற்றியுள்ளனர் என்று விமர்சித்திருந்தார். இதற்கும் த.வெ.க. ஐ.டி. விங் பதில் கொத்துள்ளது.</h2><p>மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?. திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த  மீள்வதற்கான மாற்றம்தான். அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.</p><p>மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.</p><p>ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுக-வின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்ந்தால் நல்லது.</p>]]></content:encoded></item><item><title>நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam#comments</comments><guid isPermaLink="false">55c71ebb-c79f-402b-8793-3497bb646890</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:28:06.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>manikandan,neelam productions,மணிகண்டன்,மக்கள் காவலன்,Makkal Kavalan,நீலம் புரொடக்ஷன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் புதியப் படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தோஷ் குமார் எழுதி, இயக்கும் இப்படத்திற்கு நிவாஷ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் எனும் வசனம் அதில் இடம்பெற்றுள்ளது. </p><p>படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">6c875a8a-dad9-4e78-9210-c3b92f10b948</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:16:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:16:19.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நல அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதேநேரம் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, பல துறைகள் தனியார் உடன் கூட்டிணைவது ஏற்கத்தக்கத்தல்ல எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு - தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.</p><p>புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.</p><h2>வரவேற்கத்தக்க அறிவிப்புகள் </h2><p>பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத் துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், </p><p>அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><h2>கல்வித்துறையில் ஏமாற்றம்</h2><p>மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும். 10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். </p><p>இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. </p><p>பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. </p><p>ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><h2>வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை</h2><p>இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதி ர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.</p><p>அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.</p><h2>விபிஜி - ராம்ஜி திட்டம்</h2><p>விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். </p><p>விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். </p><p>இதற்கான நிதிப் பகிர்வுக்கு ஒன்றிய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. </p><p>சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.</p><p>தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.</p><p>பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். </p><p>ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அயல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.</p><p>சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.</p><p>புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். </p><h2>அறிவிப்புகள் வரவேற்க்கத்தக்கது... ஆனால்,</h2><p>மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். </p><p>நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். </p><p>தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court#comments</comments><guid isPermaLink="false">aabf1062-a482-4e37-b006-c23dc450ddb0</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:30:40.588Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>சென்னை முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் தேவரஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்தபோது, ​​நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><h2>நுகர்வோர்க்கான பலன்கள்</h2><p>நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கும் முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்படும்.</p><p>மதுபானங்களின் சரியான விலை மற்றும் விவரங்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியவரும். கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது பெறப்படும் புகார்களுக்கு இந்த ரசீதுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும்.</p>]]></content:encoded></item><item><title>‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism#comments</comments><guid isPermaLink="false">5728041e-3da7-4074-9ea7-7c514afa3ee7</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:56:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:56:54.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சீமான்,TVK budget,தவெக பட்ஜெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என இன்றைய தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., </p><p>“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. </p><p>தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது. </p><p>முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. </p><p>தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!</p><p>தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, </p><p>பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. </p><p>மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.</p><p>சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். </p><p>பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். </p><p>பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில்  பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. </p><p>மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.</p><p>மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். </p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. </p><p>நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது. </p><p>மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>வெற்று அறிக்கை தான் த.வெ.க பட்ஜெட்- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-budget-is-empty-report-says-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-budget-is-empty-report-says-seeman#comments</comments><guid isPermaLink="false">60df1da1-7042-4882-9b50-20de05d35dc7</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:43:26 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:43:26.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தமிழக பட்ஜெட்,TNBudget,சீமான்,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/49mjqn32/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/49mjqn32/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026- 2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக பட்ஜெட் 2026</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">d3996c5b-605b-433f-b4c6-7eee8d26aca1</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:15:49.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Price Money,ஊக்கத்தொகை,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p><h2>பதக்கப் பட்டியலில் 4-வது இடம்</h2><p>சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். செல்வ பிரபு வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆண்டு பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடம் பிடித்தது.</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்மைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.</p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவதாவது:</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நேரில் வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை  கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme#comments</comments><guid isPermaLink="false">1ed913d9-63a5-41df-a287-9aca36b5d5f1</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:38:42.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt"> டாஸ்மாக்</a> மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் &nbsp;தொடங்கப்பட்டிருப்பதாகவும் &nbsp;வெளியாகியுள்ள செய்திகள் &nbsp;அதிர்ச்சி அளிக்கின்றன. &nbsp;மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.</p><p>மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் &nbsp;<a href="https://tasmace2e.in/">https://tasmace2e.in/</a>&nbsp;என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.</p><p>இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h2>மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</h2><p>மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக &nbsp;டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</p><p>தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.<br><br>மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். &nbsp;ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும்.</p><h2>35039 நியாய விலைக் கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 35,039 &nbsp;நியாயவிலைக் கடைகள் &nbsp;செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் &nbsp;உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத &nbsp;அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.</p><p>டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி &nbsp;அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது &nbsp;மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து &nbsp;மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.</p><h2>வாதம் அபத்தானது</h2><p>மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.<br><br>தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், &nbsp;அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் &nbsp;மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>&nbsp;இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி- அமைச்சர்: 05 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026#comments</comments><guid isPermaLink="false">26a830e4-6e1c-496e-877c-f6d4a71ea964</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:34:59.889Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-another-shock-gold-rates-jump-second-time-today" rel="nofollow">GOLD PRICE TODAY: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ஒரே நாளில் 2வது முறையாக எகிறிய தங்கம் விலை</a></p><p>* காலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360க்கு விற்பனை.</p><p>* வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast" rel="nofollow">'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>* தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-comments-tn-budget">தவெக அரசின் பட்ஜெட்டுக்கு '0' மார்க்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை. </p><p>* மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>2026-2027ம் ஆண்டிற்கான நிதிநிலை குறித்த பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் தாக்கல் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-comments-tn-budget">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</a></p><p>* யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.</p><p>* நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?</p><p>அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரை காப்பீடு. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி. இதற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத்தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்ழுடும். சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாளு ஆறுகள் உருவாக்கப்படும்- அமைச்சர்</p><p>அனைத்து தேர்வு முகமைகளின் ஆண்டு தேர்வுத் திட்டம் வெளியிடப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>அனைவருக்கும் தரமான வீடு: ரூ. 1,253 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>நிதி நிலையை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவை- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. 2026-27ஆண்டில் மாநில வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி இருக்கும் என கணிப்பு. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய் என நிதி அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 3000 கோவில்களில் திருப்பணி மற்றும் திருமுழுக்கு நடத்தப்படும்</p><p>தமிழர் பாரம்பரியத்தை உலகறிய செய்வோம் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நாட்டுப்புற கலைஞர் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>ஆண்டுதோறும் 2.5 லட்சம் முதியவர்கள் புனித பயணம் மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்மிகப் பயணிகளின் வசதிக்காக திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணியில் ஓய்வு இல்லங்கள் நிறுவ ரூ.60 கோடி ஒதுக்கீடு</p><p>நகர்புறத்தை ஒட்டிய கிராம மேம்டபாட்டுத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தின் பல பகுதிகளில் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் உணவு சுற்றுலா வழித்தடம் அறிமுகம்</p><p>தமிழ்நாட்டின் உணவு சுற்றுலா வழித்தடங்கள் ரூ.20 கோடியில் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.14,830கோடி ஒதுக்கீடு</p><p>உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு</p><p>உணவு மற்றும் கலைத்திருவிழாக்கள் நடத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>காவல்துறை புதிய குடியிருப்பு வளாகத் திட்டம் ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் நதிச்சுற்றுலா திட்டத்திற்காக ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு</p><p>வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி ஒதுக்கீடு</p><p>பத்திர பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு</p><p>மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற வளாகம் உருவாக்கப்படும்.</p><p>சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைக்க ரூ.1375 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு</p><p>தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு</p><p>மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம். </p><p>கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.</p><p>தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயிால் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு</p><p>நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம். </p><p>பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு</p><p>நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை</p><p>மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,252 கோடி ஒதுக்கீடு</p><p>போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</p><p>செயற்கை நுண்ணறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழு அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்க ரூ.163 கோடி ஒதுக்கீடு</p><p>நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12கோடி ஒதுக்கீடு</p><p>விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். </p><h2><strong>எந்த துறைக்கு எவ்வளவு நிதி</strong></h2><p>பள்ளிக்கல்வித்துறை ரூ.44,527 கோடி, உயர்கல்வித்துறை ரூ.8,393 கோடி, தொழிலாளர் நலத்துறை ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கம் ரூ.44,527 கோடி, கூட்டுறவுத்துறை ரூ.8,028 கோடி, வேளாண் துறை ரூ.14,984.</p><p>சமூக நீதித்துறை ரூ.3,937 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ.1,485 கோடி, சமூக நலத்துறை ரூ.9,818 கோடி, மருத்துவத்துறை ரூ.3937 கோடி.</p><p>டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டம்-ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p><p>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் - ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய கேர் மையங்கள் அமைக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்- ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p><p>சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>திருநர்களுக்கு திறன்பயிற்சி சுயத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும். </p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி அமையங்களுக்கு புதிய கட்டிடம்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p> <p>காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய்- மரிய வில்சன்</p><p>காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு</p><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- மரிய வில்சன்</p><p>பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு</p><p>போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு- தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்கிள திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் அறிவிப்பு</p><p>மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம்- இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம் - இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>டெண்டர்களை கண்காணிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.15ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்பு- மரிய வில்சன்</p><p>த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் மரிய வில்சன்</p><p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது- மரிய வில்சன்</p><p>மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்- மரிய வில்சன்</p><p>முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர்- மரிய வில்சன்</p><p>தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்- மரிய வில்சன்</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது- மரிய வில்சன்</p><p>புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்</p><p>வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி- மரிய வில்சன்</p><p>தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி-மரிய வில்சன்</p><p>2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட  மாநிலமாக மாற்ற திட்டம் </p><p>சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்</p><p>குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு</p><p>தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது- மரிய வில்சன்</p><p>தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி- மரிய வில்சன்</p><p>3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்</p><p>பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="முதலமைச்சர் விஜய்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/32znrfa9/vijay.jpg" /><figcaption>முதலமைச்சர் விஜய்</figcaption></figure><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.</p><p>முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை</p><p>சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">0f90c6a1-9f93-41fe-bec9-52cf54e89571</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:14.267Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனால்  தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இதில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பெயர் மாற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.</p><p>இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க செயல்படுத்தியதாகவே உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வித்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடா?: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget#comments</comments><guid isPermaLink="false">47c88557-c9cf-4a5f-a6c9-ea9cf17c0b3a</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:15:51.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhyanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயதநிதி ஸ்டாலின்- ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான் என அமைச்சர் ராஜ்மோகன் &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இது குறைவு என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.</p><h2>இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>&nbsp;வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக் கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!</p><p>&nbsp;2025-26 திமுகபட்ஜெட்டில்பள்ளிக்கல்விக்குஒதுக்கப்பட்டநிதி 46,767 கோடிரூபாய். இதில், இடைக்காலபட்ஜெட்டுக்குமுன்புவரைசெலவிடப்பட்டதொகை 42,351 கோடிரூபாய்மட்டும்தான்.</p><p>இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.</p><p>&nbsp;அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.</p><h2>2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு</h2><p>வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.&nbsp;</p><p>வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&nbsp;</p><p>இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.</p><p>இவ்வாறு ராஜ்மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ் விலை உயர்வு- கிலோ ரூ.100-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-6#comments</comments><guid isPermaLink="false">0e8bfbc5-47ac-4a7c-9c5b-f6bfc078e76d</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:18:18.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்,காய்கறி விலை,Vegetable price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/d7ozu5d3/vegetable.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/d7ozu5d3/vegetable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு மார்க்கெட்டுக்கு</a> தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது. இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. </p><h2><strong>வரத்து குறைவு</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. எனினும் நாளை ஆடி கிருத்திகை என்பதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறையவில்லை. இதனால் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் காய்கறி விற்பனை விறுவிறுப்பாகவே நடந்தது.  </p><p>வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் கேரட் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><h2><strong>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு:-</strong> </h2><p>தக்காளி-ரூ.8முதல் ரூ.16 வரை, நாசிக் வெங்காயம்-ரூ.28 முதல் ரூ.36வரை, சின்ன வெங்காயம்- ரூ.50முதல் ரூ.75வரை, உருளைக்கிழங்கு-ரூ.16, கத்தரிக்காய் -ரூ.30, வெண்டைக்காய்-ரூ.40, அவரைக்காய் -ரூ.40,ஊட்டி பீட்ரூட் -ரூ.60, முருங்கைக்காய்-ரூ.35, பீர்க்கங்காய்-ரூ.40, பன்னீர் பாகற்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.40, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.17, சவ்சவ் -ரூ.10, சுரக்காய்-ரூ.10, புடலங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்- ரூ.25, பச்சை மிளகாய்-ரூ‌.35, இஞ்சி-ரூ.75முதல் ரூ.150வரை.</p>]]></content:encoded></item><item><title>&apos;Blast Blast&apos; இல்ல..‘Waste Waste&apos; என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast#comments</comments><guid isPermaLink="false">81d38a15-c21c-4f4a-9e2a-8b116406cf69</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:11:46 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:11:46.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-years-needed-for-fiscal-reforms-montek-singh-ahluwalia-panel" rel="nofollow">நிதிநிலை அறிக்கை</a>யை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><h2>Waste waste..</h2><p>இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து முன்னா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், </p><p>'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!</p><p>அதுமட்டுமல்ல, இது <a href="https://www.maalaimalar.com/search?q=dravida%20model" rel="nofollow">திராவிட மாடல்</a> அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!</p><p>அதுமட்டுமல்ல, </p><p>- ரூ.2,500 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">மகளிர் உரிமைத் தொகை</a>,</p><p>- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,</p><p>- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,</p><p>- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!</p><p>மொத்தத்தில், </p><p>சொந்தமாகவும் யோசிக்காத - </p><p>சொன்னதையும் செய்யாத - </p><p>சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக பட்ஜெடுக்கு '0' மார்க்</h2><p>தமிழக பட்ஜெட் குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,"த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க். தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p>மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a> அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.</p><p>திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?</p><p>தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பரஸ்பரம் வணக்கம் தெரிவித்த முதலமைச்சர் விஜய்- உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings#comments</comments><guid isPermaLink="false">e3fe0fcd-9155-462f-881b-d4c98fa59f08</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:05:47.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/58ekxqij/udhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/58ekxqij/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வின் போது, முதலமைச்சர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு அவை உறுப்பினர்களிடையே கவனத்தை பெற்றது.</aside><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபை</a> கூட்டத்தொடர் தொடங்கியதும், காலை 9:57 மணி அளவில் முதலமைச்சர் விஜய் சபை மண்டபத்திற்குள் நுழைந்தார். அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவாறு அவர் தனது இருக்கையை நோக்கிச் சென்றார்.</p><p>அதனைத் தொடர்ந்து, காலை 9:58 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆடிக்கிருத்திகை: திருத்தணி கோவிலுக்கு முதியோர், கர்ப்பிணிகள் வரவேண்டாம் - கலெக்டர் வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-krithigai-elderly-people-and-pregnant-women-not-to-visit-tiruttani-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-krithigai-elderly-people-and-pregnant-women-not-to-visit-tiruttani-temple#comments</comments><guid isPermaLink="false">44710f5a-4286-4507-b26f-bd1e89e0dc37</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:49:02 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:49:02.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani temple,aadi krithigai,திருத்தணி முருகன் கோவில்,திருவள்ளூர் கலெக்டர்,Tiruvallur Collector,ஆடி கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rqfvnd06/tiruttanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruttani temple
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/rqfvnd06/tiruttanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>ஆடிக்கிருத்திகை விழா</h2><p>திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-krithigai-murugan-worship-3">ஆடிக்கிருத்திகை </a>விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணி, நாளை(6-ந்தேதி) ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. </p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் நாளை சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.</p><h2>திருவள்ளூர் கலெக்டர்</h2><p>திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>திருத்தணி முருகன் கோவிலில் நாளை(6-ந்தேதி)ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 முதல் 7 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>இருப்பினும் அதிக பக்தர்கள் வருகை காரணமாக திருத்தணி நகரத்துக்குள் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு கருதி மேற்படி தினங்களில் நேரடி தரிசனத்திற்கு வருகை புரிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p> <h2>பக்தர்கள் நேர்த்திக்கடன்</h2><p>ஆடிபரணியை முன்னிட்டு அதிகாலை முதலே திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.  ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், தலைமுடி காணிக்கை செய்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோவிலில் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மாலையில் சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.</p> <p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷீபம் திமான் தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மலைக்கோவில் திருக்குளம் நல்லான்குளம், மேல் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <p>நகராட்சி சார்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கோவிலுக்கு சென்று வர கோயில் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.ரமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், வி.சுரேஷ்பாபு, மோகனன். ஜி, உஷாரவி, மு.நாகன் மற்றும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-session-until-september-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-session-until-september-8#comments</comments><guid isPermaLink="false">5e0547ff-340b-46b8-a629-a77ee94e629b</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:25:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:25:57.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,maria wilson,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட் 2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yupdns97/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yupdns97/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><p>பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்பதை தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.</p><p>அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக வேளாண் பட்ஜெட் நாளை சட்டமன்றத்தில் நடைபெறும். வரும் ஆகஸ்டு 7ம் தேதி (நாளை மறுநாள்) முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். </p><p>செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆகஸ்டு 8,9ம் தேதிகள் அரசு விடுமுறை, ஆகஸ்டு 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை  நடைபெறும்.</p><p>ஆகஸ்டு 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் நாட்களை அதிகரிக்க திமுக, பாமக கோரியாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தான் தொடர்கிறது. ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களிடம் விசாரணை தொடர்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பட்ஜெட்டுக்கு &apos;0&apos; மார்க்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-comments-tn-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-comments-tn-budget#comments</comments><guid isPermaLink="false">dad72e15-41f5-45fd-8025-1fd8998fdbce</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:19:09 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:19:09.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/jk24c2nl/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/jk24c2nl/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டை</a> சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-</p><h2><strong>திமுக ஆட்சி தான்</strong></h2><p>* த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க். </p><p>* தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை. </p><p>* மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. </p><p>* திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். </p><p>* திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?</p><p>* தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.</p><p>* இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்கிறது பட்ஜெட். தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.</p><p>* திமுக ஆட்சியின் சாதனையை ஒப்புக்கொண்ட நிதியமைச்சருக்கு திமுக சார்பில் நன்றி. </p><p>* ஒலிம்பிக் சிறப்பு மையம் என அனைத்தும் திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் தான். </p><p>* மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>* கல்விக்கான நிதியை தவெக அரசு குறைத்துள்ளது. </p><p>* ஆடிப்பெருக்கு நாளில் கூட காவிரியில் நீர் இன்றி செய்துள்ளது தவெக அரசு. </p><p>* 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர் வரத்து குறைந்தது. </p><p>* 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள், 5 சாதி ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது. </p><p>* மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கு தவெக அரசுக்கு வக்கில்லை. </p><p>* தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை. </p><p>* பட்ஜெட் தாக்கலின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில் நான் எந்த கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை. </p><p>* விவசாயிகள் பிரச்சனைக்காக பேசிய என்னை கைது செய்து அலைக்கழித்ததை தமிழக மக்களே நேற்று பார்த்தனர். தவெக ஆட்சியின் பிரச்சனைகளை மடைமாற்றவே தன்னை காவல்துறை கைது செய்தது. </p><p>* என்னை மட்டுமல்ல திமுகவினர், திமுக GEN Z பிரிவினரையும் கைது செய்கின்றனர், அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசுகின்றனர். </p><p>* மின்சாரம் வருவது பிரச்சனையாக இருந்த நிலையில், 3.5 லட்சம் மக்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. </p><p>* நீட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்காமல் போராடியோர் மீது தாக்குதல் நடத்துகிறது தவெக அரசு.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>300 திருக்குறளை சொல்லும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை - பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-5000-incentive-for-students-reciting-300-thirukkural</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-5000-incentive-for-students-reciting-300-thirukkural#comments</comments><guid isPermaLink="false">49dd62dc-d441-4d00-b030-73e3c3ef61a2</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:07:35 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:07:35.705Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9bak9l8r/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Budget Education Boost: ₹5,000 incentive for primary students reciting 300 Thirukkural]]></media:title><media:description type="html"><![CDATA[ Education department budget aid - Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9bak9l8r/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நிதிநிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>தமிழக பள்ளி கல்வித்துறை</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி 300 திருக்குறளை மனப்பாடம் செய்து சொல்லும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும் சூப்பர் கிளீன் கேம்பஸ் (பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருத்தல்) திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட அறிக்கையில், 3,734 பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கூவம் நதியை சீரமைத்து மேம்படுத்துதல், ஏசி மின் பேருந்து உள்ளிட்ட அறிவிப்புகளை பாராட்டுகிறேன் - பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-welcome-restoration-improvement-of-cooum-river-and-electric-ac-buses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-welcome-restoration-improvement-of-cooum-river-and-electric-ac-buses#comments</comments><guid isPermaLink="false">58baf336-ffec-4e49-8569-9f92a39c18aa</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:03:08.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bnjzkc2v/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bnjzkc2v/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/lioness-special-force-gets-rs-354-crore-allocation">பட்ஜெட்டை</a> நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p> <h2>விவசாய கடன்</h2><p>* விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம்.</p><p>* தவெக அரசு பட்ஜெட்டில் வாசித்த திட்டங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.</p><p>* <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">தமிழக பட்ஜெட்டில்</a> புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.</p><p>* வாக்குறுதிகளை திட்டங்களாக செயல்படுத்த வேண்டும்.</p> <h2>தவெக பட்ஜெட்</h2><p>* தவெக அரசு பட்ஜெட்டில் வாசித்த திட்டங்கள் சொல்லாக இல்லாமல் செயலாக மாற்ற வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.</p><p>* நீர் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>* மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற எந்த அறிவிப்பும் இல்லை.</p><p>* ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் தமிழகத்தில் கடன் உள்ளது என்ற அறிவிப்பு வேதனை தருகிறது.</p> <h2>கூவம் நதி சீரமைப்பு</h2><p>* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்று தனி தொழிற்சாலைகள் குறித்து அறிவித்து இருக்க வேண்டும்.</p><p>* தமிழக அரசு கடனை எப்படி அடைக்க போகிறது என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.</p><p>* வரவை விட செலவு அதிகமாக உள்ளது கவலை அளிக்கிறது.</p><p>* கூவம் நதியை சீரமைத்து மேம்படுத்துவதான அறிவிப்பு, ஏசி மின் பேருந்து அறிவிப்பு, சாலைகளை சீரமைக்கும் திட்டங்களை பாராட்டுகிறேன்.</p> <p>* முந்தைய ஆட்சியில் இருந்து அதிகமாக கடன் உள்ள  நிலையில் மேலும் பல புதிய திட்டங்களால் இன்னமும் கடன் அதிகரிக்கும்.</p><p>* கடன் இல்லா நாடு தான் சுமையில்லா நாடு, சுமையில்லாத நாடாக தமிழகம் மாற வேண்டும் என்பதே தேமுதிக நிலைப்பாடு.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lioness-special-force-gets-rs-354-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lioness-special-force-gets-rs-354-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">0797a20d-5662-4f12-b53c-b4b9942e1dca</guid><pubDate>Wed, 05 Aug 2026 08:00:24 +0000</pubDate><atom:updated>2026-08-05T08:00:24.657Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,maria wilson,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட் 2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/a4bzl9wa/singapen.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/a4bzl9wa/singapen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><p>இந்நிலையில், காவல்துறைக்கும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து அறிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, 5000 காவலர் குடும்பம் பயன்பெறும் வகையில் காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்க ரூ.431 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பதற்கும், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதை திறம்பட நிர்வகிப்பதற்கும், காவல் துறையினருக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இன்றியமையாதவையாகும். இந்த நோக்கில், மாவட்டங்களில் காவல் துறையினருக்கான குடியிருப்பு வளாகங்களைக் கட்டுவதற்காக 431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை</h2><p>பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பெண்கள் தலைமையிலான காவல் பணிகள், அவசரகால நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்குத் தேவையான காவலர்கள், கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்காக 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய &apos;வெற்றி 150&apos; திட்டம்: 100 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் அமைச்சர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-vektri-150-scheme-to-boost-rural-livelihoods-rs-100-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-vektri-150-scheme-to-boost-rural-livelihoods-rs-100-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">4099954d-16f3-45b1-aade-11647015a0a3</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:50:50 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:50:50.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kzftm751/work.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kzftm751/work.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் 'வெற்றி 150' என்ற புதிய கூடுதல் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மத்திய அரசால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வளர்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ மூலமாக தமிழ்நாடு அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>40% நிதிச் சுமை:</strong></h2><p>புதிய நிதிப் பங்கீட்டு முறையின்படி, மொத்த திட்ட நிதியில் இதுவரை இல்லாத அளவாக 40 சதவீத நிதியை மாநில அரசே ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>மாநில அரசின் பங்களிப்பு (ரூ.5,057 கோடி):</strong></h2><p>நிதிச் சுமை இருப்பினும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் வரலாறு காணாத பங்களிப்பான ரூ.5,057 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.12,642 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.</p><h2><strong>150 நாட்கள் வேலை உறுதி:</strong></h2><p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 100 நாட்கள் (அல்லது 125 நாட்கள்) பணி முடித்த குடும்பங்களுக்கு, கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, மொத்த வேலைநாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படுகிறது. </p><p>இப்புதிய 'வெற்றி 150' வாழ்வாதாரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பை நம்பி இருக்கும் ஏழை, எளிய குடும்பங்கள் இதன் மூலம் நேரடிப் பயன்பெறுவர்.</p><h2><strong>அரசின் இலக்கு:</strong></h2><p>கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையைச் சீரமைக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் வருவாயை அதிகரிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்படுத்தப்படும் முறைகள் குறித்து விரைவில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு..!- நிதி அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/708-crore-allocation-for-hindu-religious-endowments-department-finance-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/708-crore-allocation-for-hindu-religious-endowments-department-finance-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">6be8e7f7-9100-4c6e-b8dd-19033fcd9324</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:35:07 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:35:07.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,maria wilson,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட் 2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bz9zl0vb/wilson1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/bz9zl0vb/wilson1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p>நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><p>இந்நிலையில், அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   </p><p>அதன்படி, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 3000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>1000 ஆண்டுகள் பழமையான 213 கோவில்கள் புனரமைக்கப்படும்.</p><p>உணவு மற்றும் கலைத் திருவிழாக்களுக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் உணவுச்</p><p>சுற்றுலா வழித்தடங்கள் அறிமுகம் செய்யப்படும்.</p><p>நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>200 சிறந்த நாட்டுப்புற கலைக்குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாள் நிகழ்ச்சி நடத்தி வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சுற்றுலா- கலை, பண்பாட்டுது் துறைக்கு ரூ.775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-comments-tn-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-comments-tn-budget#comments</comments><guid isPermaLink="false">1dc9a5b6-901e-4054-b0e6-316cfaf11f65</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:33:52 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:33:52.630Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,TN budget,தமிழக பட்ஜெட்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kwgji5ey/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kwgji5ey/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-பட்ஜெட்">பட்ஜெட்டை</a> சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</p><h2><strong>ஸ்டிக்கர்</strong></h2><p>* த.வெ.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. </p><p>* பட்ஜெட்டில் எந்த முக்கியமான அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றம். </p><p>* சிறந்த பட்ஜெட்டை அறிவிப்போம் என முதலமைச்சரும், அமைச்சரும் கூறினார்கள், ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. </p><p>* த.வெ.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. </p><p>* ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி புதிய திட்டமாக பட்ஜெட்டில் த.வெ.க. அரசு அறிவித்துள்ளது. </p><p>* ஆட்சி பொறுப்பேற்ற 85 நாட்களில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் த.வெ.க. அரசு அறிவிக்கவில்லை. </p><h2><strong>விளக்கம் இல்லை</strong></h2><p>* யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை. </p><p>* தேர்தலின்போது த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று.</p><p>* மானிய சிலிண்டர், இலவச பேருந்து அறிவிப்பு, இளைஞர்களுக்கு வேலை போன்ற எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை. </p><p>* விவசாயிகளுக்கான கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. </p><p>* வருவாய் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை இருக்கும் போது இதனை எப்படி த.வெ.க. அரசு சரி செய்யும்?</p><p>* நிதி பற்றாக்குறையை எப்படி சரி செய்வோம் என்பது குறித்து த.வெ.க. அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. </p><p>* நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?</p><p>* வருவாய் இல்லாமல் புதிய திட்டங்களை த.வெ.க. அரசால் எப்படி நிறைவேற்ற முடியும்.</p><p>* திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது.</p><p>* கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும், வேறு வழியில்லை.</p><p>* லீக்கேஜ், லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.</p><p>* நிதி பற்றாக்குறையை சரி செய்ய அமைக்கப்படும் 5 நபர் குழு எப்படி கடன் வாங்குவது என யோசனை தருவார்கள் போல.. என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய் - நிதி அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-finance-minister-says-tn-government-total-debt-stands-at-rs-1098-lakh-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-finance-minister-says-tn-government-total-debt-stands-at-rs-1098-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">8359d66e-c3b9-480a-a678-b174258384aa</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:24:57 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:24:57.698Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/45pob8xi/MarieWilson6.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/45pob8xi/MarieWilson6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மரிய வில்சன்</a> தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது:</p><p>* போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும்.</p> <p>* போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.</p><p>* தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது.</p><p>* தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும்.</p><p>* கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.</p> <p>* 2026-27 வருவாய் பற்றாக்குறை ரூ.57,775 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>* மாநிலத்தில் நிதி நிலை, நிலை இல்லாமல் உள்ளது.</p><p>* தமிழக அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>சட்டசபையில்  நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் 2.32 மணி நேரம் உரையாற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-water-resources-rs-9264-crore-allocation-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-water-resources-rs-9264-crore-allocation-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">9567208f-c454-4141-ba66-c6ad03455bcf</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:23:36 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:23:36.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8goz1flc/Untitled-design-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Budget Water Allocation: ₹9,264 crore for water resources and river restoration projects]]></media:title><media:description type="html"><![CDATA[ Budget for Water Allocation - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8goz1flc/Untitled-design-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நிதிநிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>நீர்வளத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், நதிகள் மீட்பு குறித்தும் தாமிரபரணி, வைகை மற்றும் காவிரி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறு ஆய்வுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து காவிரி மற்றும் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நிதிச் சீரமைப்புக்கு 2 ஆண்டுகள் தேவை: உண்மையான பயனாளிகளை கண்டறிய மான்டேக் சிங் அலுவாலியா குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-years-needed-for-fiscal-reforms-montek-singh-ahluwalia-panel</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-years-needed-for-fiscal-reforms-montek-singh-ahluwalia-panel#comments</comments><guid isPermaLink="false">3ed71697-9116-4816-ac71-d576b3b20b75</guid><pubDate>Wed, 05 Aug 2026 07:19:48 +0000</pubDate><atom:updated>2026-08-05T07:19:48.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/3y57d5oj/mara.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MARIE WILSON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/3y57d5oj/mara.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட முழுமையான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை சீரமைக்கவும், நலத்திட்டங்களை முறையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளது.</p><h2><strong>நிதி நிலைமை மற்றும் வருவாய் மதிப்பீடு:</strong></h2><h2><strong>மொத்த வருவாய்:</strong></h2><p>2026-27 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.3,50,027 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2><strong>வருவாய் பற்றாக்குறை:</strong></h2><p>மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் நிதி நிலைமையை முழுமையாகச் சீரமைத்து சமநிலைக்குக் கொண்டுவர குறைந்தது 2 ஆண்டுகள் வரை தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2><strong>உண்மையான பயனாளிகள் கண்டறிதல்:</strong></h2><p>அரசின் நிதி ஆதாரங்களைச் சரியாகப் பயன்படுத்த, நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியான உண்மையான பயனாளிகளை நேர்மையாக ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மான்டேக் சிங் அலுவாலியா குழு:</strong></h2><p>நிதி ஆதாரங்களை பெருக்கவும், கசிவுகளைத் தடுக்கவும், பயனாளிகள் ஆய்வை முறைப்படுத்தவும் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான உயர்மட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், நீண்டகால நிதிப் பாதுகாப்பையும், தகுதியுள்ள அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வதையும் அரசு முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம் - நிதி அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-we-will-firmly-oppose-projects-infringe-upon-tn-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-we-will-firmly-oppose-projects-infringe-upon-tn-rights#comments</comments><guid isPermaLink="false">91b6a284-a6a7-4605-aa15-518e72efcb58</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:56:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:56:14.508Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/u0ri3lz9/MarieWilson5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson - Cauvery water]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/u0ri3lz9/MarieWilson5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai"> பட்ஜெட்டை</a> நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>* மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்.</p><p>* முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும்.</p> <p>* காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>* காவிரி, வைகை, தாமிரபரணி நதிகள் மறுசீரமைப்பு மற்றும் நதிகள் மீட்புக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு</p><p>* நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு</p><p>* நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு</p> <p>* பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>* காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>* நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம். </p><p>* சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு</p> <p>* காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>* விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு</p><p>* தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயரில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் </p><p>* கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.</p> <p>* கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம். </p><p>* மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம்: அமைச்சர் மரிய வில்சன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palm-development-corporation-with-rs-16-crore-funding-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palm-development-corporation-with-rs-16-crore-funding-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">3055be23-d1ed-403e-8334-0256080bf7fb</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:42:56 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:42:56.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/acbg0qqq/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Budget Palm Development Boost: New corporation with ₹16 crore aid to support palm farmers]]></media:title><media:description type="html"><![CDATA[ ₹16 crore aid to support palm farmers - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/acbg0qqq/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக நிதி நிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>பனை மேம்பாட்டு கழகம்</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>பதநீர், பனங்கருப்பட்டி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><h3><strong>ஆடை உற்பத்தி</strong></h3><p>மேலும் ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர்-க்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 1000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-500-crore-allocated-to-procure-1000-ac-electric-buses-for-chennai#comments</comments><guid isPermaLink="false">07eb3f8b-5e09-499d-af96-05d83cc60ef0</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:35:13 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:35:13.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c52nj2dj/bus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AC Bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/c52nj2dj/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>* நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p> <p>* சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p> <p>* சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>* போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் சேவை: 3 புதிய வழித்தட நீட்டிப்புக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/draft-report-submitted-to-government-for-3-new-chennai-metro-extensions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/draft-report-submitted-to-government-for-3-new-chennai-metro-extensions#comments</comments><guid isPermaLink="false">b8f1a095-bbca-4838-8331-50da90b7c892</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:34:10 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:34:10.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தவெக,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m3ix0bhp/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m3ix0bhp/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தொலைதூரப் பகுதிகளை நகருடன் இணைக்கவும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 3 புதிய முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 புதிய வழித்தடங்களின் விவரங்கள்:</strong></h2><h2><strong>1. சென்னை விமானநிலையம் -கிளாம்பாக்கம் (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்)</strong></h2><p>தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மிக விரைவாகவும் தடையின்றியும் சென்றடைய இது பெரிதும் உதவும். சென்னை வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் துவங்கும்.</p><h2><strong>2. கோயம்பேடு-பட்டாபிராம் (ஆவடி வழியாக):</strong></h2><p>மேற்கு சென்னை மற்றும் ஆவடி, பட்டாபிராம் பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.</p><h2><strong>3.பூந்தமல்லி-சுங்குவார்சத்திரம் (ஸ்ரீபெரும்புதூர் வழியாக):</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வரவிருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய இணைப்புக்கு இப் பாதை முக்கியப் பங்காற்றும். </p><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறைப்பு:</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் தொழிற்சாலை மண்டலங்கள் நேரடியாக நகரின் மையப்பகுதியுடன் இணைக்கப்படும். ஜி.எஸ்.டி சாலை (GST Road) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஆவடி ரெயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய முக்கியப் போக்குவரத்து மையங்கள் மெட்ரோ நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் 2026: மீனவர், கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-funds-for-fishermen-and-livestock</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-funds-for-fishermen-and-livestock#comments</comments><guid isPermaLink="false">bc1418fd-2fac-49e5-8d42-5772cd268a57</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:31:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:31:51.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,மத்திய பட்ஜெட் 2026,maria wilson,மரிய வில்சன்,Budget2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nmytrdv1/Maria-wilson3.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nmytrdv1/Maria-wilson3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>இதில், மீனவர்கள், கால்நடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளதாவது:-</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும்.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு.</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12 கோடி ஒதுக்கீடு.</p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு.</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு.</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு. விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு.</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு. </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100% மானியத்துடன் வழங்கப்படும்.</p><p>கைம்பெண், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,000 பேருக்கு 100% மானியத்துடன் 5 வெள்ளாடுகள் வழங்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு. பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஹஜ் புனித யாத்திரை மானியம் ரூ.35,000-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hajj-sacred-pilgrimage-subsidy-raised-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">5604335a-e0ca-4729-8d80-67c3cee04cba</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:13:16 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:13:16.893Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r94x3bxk/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Tamil Nadu Hajj Aid: Pilgrims to get additional Rs 10,000 support]]></media:title><media:description type="html"><![CDATA[ Haj aid - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r94x3bxk/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நிதி நிலை அறிக்கை 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.</p><h3><strong>ஹஜ் புனித யாத்திரை</strong></h3><p>இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான மானியம் ரூ.25,000 இல் இருந்து, ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>இதன் மூலம் இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்திற்கு முன்பை விட ரூ.10,000 மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h3><strong>சிறுபான்மை நல அரசு</strong></h3><p>தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மகளிர் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> கபர்ஸ்தான்கள் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி நிது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பட்ஜெட்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல திட்டங்களுக்கு முக்கிய நிதி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-budget-major-fund-allocation-for-adi-dravidar-and-tribal-welfare-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-budget-major-fund-allocation-for-adi-dravidar-and-tribal-welfare-schemes#comments</comments><guid isPermaLink="false">5a9ca02f-7cba-4ab1-a4da-2dd9f71ec546</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:12:44 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:12:44.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,நிதி அமைச்சர் மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yrre8v7e/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MARIE WILSON]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/yrre8v7e/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களிடையே தொழில் முனைவுத் திறனை ஊக்குவிக்க மூலதன மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக 'ரூ.165 கோடி' நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்:</strong></h2><p>நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை விரிவாக மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இத்திட்டத்தின் கீழ் 'ரூ.300 கோடி' நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆன்றோர்  மேம்பாட்டுத் திட்டம்</strong>:</h2><p>பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்திற்காக 'ரூ.250 கோடி' ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மண்ணின் மகள்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாய தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் 'மண்ணிள் மகள்' திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு விவசாயம் செய்திடத் தேவையான நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். திருத்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><h2><strong>கூடுதல் ஒதுக்கீடுகள்:</strong></h2><p>* ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம்: ரூ.25,225 கோடி</p><p>* பழங்குடியினருக்கான துணைத் திட்டம்: ரூ.2,079 கோடி</p><p>* சமூகநீதித் துறைக்கான மொத்த ஒதுக்கீடு: ரூ.3,937 கோடி</p><p>சமூகநீதியைக் வெறும் சொல்லாக அல்லாமல், செயலில் காட்டும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-7432-crore-allocated-for-farmers-electricity-subsidy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-rs-7432-crore-allocated-for-farmers-electricity-subsidy#comments</comments><guid isPermaLink="false">3de84d7e-67f1-43bf-b317-e2f466338d22</guid><pubDate>Wed, 05 Aug 2026 06:10:17 +0000</pubDate><atom:updated>2026-08-05T06:10:17.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/eof8ebl8/MarieWilson3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/eof8ebl8/MarieWilson3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>* சமூக நீதித்துறைக்கு ரூ.3937 கோடி ஒதுக்கீடு</p><p>* ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p> <p>* மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>* தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>* கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>* சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>* <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">தமிழக பட்ஜெட்டில்</a> கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p>  <p>* டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>* விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>* டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>* ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு</p> <p>* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>* வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-165-crore-allocation-for-ambedkar-industrial-pioneers-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-165-crore-allocation-for-ambedkar-industrial-pioneers-scheme#comments</comments><guid isPermaLink="false">d342987c-c7ec-481d-b79c-062d7f21df85</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:58:09 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:58:09.197Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,Budget2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/363luuig/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Ambedkar Industrial Pioneer Scheme: ₹165 crore allocation to boost SC/ST entrepreneurs in Tamil Nadu]]></media:title><media:description type="html"><![CDATA[ Ambedkar Industrial Pioneer Scheme - Minister Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/363luuig/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>தமிழக பட்ஜெட் 2026</strong></h3><p>2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.</p><p>மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.   </p><h3><strong>அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்</strong></h3><p>இதையடுத்து அவர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான ஊக்குவிக்கும் திட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.</p><p>மூலதன மாணியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்குவோருக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது.</p><p>தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.</p><h3><strong>அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்</strong></h3><p>மேலும் அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவி தொகை திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>இதன்மூலம் 362 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/budget-announces-rs-23357-crore-for-health-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/budget-announces-rs-23357-crore-for-health-sector#comments</comments><guid isPermaLink="false">0357fcf3-241d-4a58-869b-a369db6cd545</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:53:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:53:38.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,TNBudget,மத்திய பட்ஜெட் 2026,maria wilson,மரிய வில்சன்,Budget2026,TVKVijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5sjpt5hk/Maria-wilson2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/5sjpt5hk/Maria-wilson2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். </p><p>இதில், சுகாதாரத் துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய் கேர் மையங்கள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இதற்காக, ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட்: எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-2026-allocations-for-various-sectors#comments</comments><guid isPermaLink="false">cb940b76-fe0f-4364-9896-c82da5341eeb</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:52:38 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:52:38.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kttebe1c/MarieWilson2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/kttebe1c/MarieWilson2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced">பட்ஜெட்</a> இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பட்ஜெட்டில்</a> இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>* போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>* TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p> <p>* 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>* அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5.32 லட்சம் ஜென்சி மாணவர்களுக்கு நவீன மிதி வண்டி வழங்க ரூ.272 கோடி ஒதுக்கீடு</p><p>* பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். </p><p>* விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p> <p>* காலை உணவுத்திட்டத்திற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>* முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய். காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>* தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம்.</p> <p>* அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>* பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p><p>* 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>* கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p> <p>* இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>* தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>* யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>* கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.</p>  <p>* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு</p><p>* புதிதாக 5 தொழிற்பள்ளி நிலையங்கள் நிறுவ தமிழக பட்ஜெட்டில் ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>* வெற்றி திறன் பயிற்சி திட்டத்திற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு.</p><p>* அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஏஐ புதிய தொழிற்பிரிவு உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>* மின்சார வாகனம் மற்றும் மின்கலன் பராமரிப்பு பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கிடு</p><p>* பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஏஐ திறன் பயிற்சி அளிக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>திருநர்களின் பாதுகாப்பிற்கும் சுயதொழிலுக்கும் முக்கியத்துவம்: ரூ.50,000 மானியக் கடன் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/transgender-safety-and-self-employment-priority-rs-50000-subsidised-loan-announced#comments</comments><guid isPermaLink="false">4db899c3-724d-4f69-aba9-35d62ef5bbc7</guid><pubDate>Wed, 05 Aug 2026 05:48:17 +0000</pubDate><atom:updated>2026-08-05T05:48:17.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,தமிழக பட்ஜெட்,tvk,TNBudget,மரிய வில்சன்,Budget2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zyu1hbru/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marie wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zyu1hbru/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), திருநர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் முக்கிய சமூக நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள்:</h2><p>திருநர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், உணவு, உளவியல் ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்கும் வகையில் மேலும் 5 முக்கிய மாவட்டங்களில் 'அரண்' காப்பகங்கள்/தங்குமிடங்கள் புதிதாக அமைக்கப்படும்.</p> <h2><strong>ரூ.50,000 வரை மானியத்துடன் கடன்:</strong></h2><p>திருநர்களின் தொழில்முனைவை ஊக்குவிக்கவும், அவர்களின் சுயமரியாதையுடனான வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வங்கிகள் மூலம் தொழில் தொடங்க ரூ.50,000 வரை மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.</p><h2><strong>திறன் பயிற்சி:</strong></h2><p>சுயதொழில் தொடங்க விரும்பும் திருநர்களுக்கு சிறப்புத் தொழிற்பயிற்சிகளும், தொழில்முனைவோர் பயிற்சிகளும் அரசு சார்பில் வழங்கப்படும்.அசமூகத்தில் திருநர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களை முதன்மைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>