<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 27 Jul 2026 10:31:28 +0000</lastBuildDate><item><title>தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd#comments</comments><guid isPermaLink="false">47670048-d20c-4d56-ac46-c77bc1588526</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:29:19.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>02-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>30 மற்றும் 31-நதேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">946286cd-89ea-423b-9452-24c204f433e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:22:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:22:25.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.</p><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-</p><p>சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். </p><p>சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.</p><p>அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.</p><p>விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் வரும் அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்..!- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai#comments</comments><guid isPermaLink="false">47554ef2-2d03-4022-b7b5-b913c3902cd5</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:52:00.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்,அறநெறி மையம்,ethics centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மலரஞ்சலி</h2><p> அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர்.</p><p>இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.</p><p>அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.</p><p>கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன்.</p><h2>அரசியலில் அறநெறி</h2><p>அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும்.</p><p>அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி  வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பின்னர் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:26:48.593Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments#comments</comments><guid isPermaLink="false">1609cadc-fa9e-4043-9e3c-348f8fdc1e89</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:18:50 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:18:50.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,மேகதாது அணை,துரைமுருகன்,duraimurugan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em>காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.</em></p><p>தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் செயல்படுத்த மறுக்கிறது.</p> <h2>விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தை சொல்லி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.</p><p>காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்து வருகிறது.</p> <h2>மேகதாது அணை</h2><p>இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிதாக அணை கட்டுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.</p><p>மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கடிதம்</h2><p>மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதமும் எழுதி உள்ளார்.</p><p>மேலும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த சூழலில் டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர், கர்நாடகத்தில் உள்ள 4 முக்கிய அணைகளில் 48.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பை சுட்டிக்காட்டியதுடன், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தண்ணீரை திறக்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.</p><p>அதற்கு கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால் தங்களால் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டது.</p><p>இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p> <h2>பெங்களூரு செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி, தான் பெங்களூரு வந்து காவிரி நீர் பிரச்சனை, மேகதாது விவகாரம் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.</p> <h2>துரைமுருகன்</h2><p>இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* முதலமைச்சர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.</p> <p>* காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p><p>* என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பின்னர் தான் தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces#comments</comments><guid isPermaLink="false">8fad5759-b3e8-406a-bf7a-28f2619aed0b</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:15:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:15:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu Chicken Traders Federation,Chicken Sales,கோழி விற்பனை,தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கடைகளில் கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி இந்த கடையடைப்பை அறிவித்துள்ளனர்.</p><p>தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்., “கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை.</p><p>கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால், அவற்றின் உடலில் தீவனம் தங்கி ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கூடுதல் எடையுடன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன.</p><p>தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, இறைச்சியின் தன்மையும், தரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.” என கோழி விற்பனையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். </p><p>தொடர்ந்து கோழி உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். </p><p>இதனை வலியுறுத்தி தற்போது இந்த விற்பனை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதலிக்க மறுத்த ப்ளஸ் 1 மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">a3826c9b-8d4d-491c-98b6-cf4f78932f05</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:08:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:08:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர் தற்கொலை,Chidambaram,சிதம்பரம்,youth suicide,Student Attack,மாணவி கொலை முயற்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Youth Suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியன்.</p><h2>ஒருதலைக்காதல்</h2><p>இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அய்யப்பன், பலமுறை அந்த மாணவியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.</p><p>ஆனால் அந்த மாணவியோ, அய்யப்பனை காதலிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் மாணவி மீது அய்யப்பன் கோபத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.</p><h2>கத்திக்குத்து</h2><p>இதனை அறிந்து கொண்ட அய்யப்பன் மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியை சந்தித்த அய்யப்பன், என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.</p><p>தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். ஆனால் இந்த மிரட்டலுக்கு எல்லாம் மாணவி பயப்படாமல் உன்னை காதலிக்க முடியாது என்று கூறினார்.</p><p>இதனால் கடும் கோபம் அடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.</p><p>இதில் மாணவி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2>விசாரணை</h2><p>மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யப்பனை தேடி வந்தனர்.</p><p>இந்த நிலையில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக  சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியவர் யார் என விசாரணை நடத்தினர்.</p><h2>வாலிபர் தற்கொலை</h2><p>அப்போது அது மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான அய்யப்பன் என்பது தெரியவந்தது. தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் மாணவியை கத்தியால் குத்திய அய்யப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.</p><p>எப்படியும் போலீசார் தன்னை பிடித்து விடுவர் என்று நினைத்த அவர் அரசுகலைக்கல்லூரி பின்பு றம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture#comments</comments><guid isPermaLink="false">90df8396-701c-46f5-b0e6-e655b346b576</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:40:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:40:34.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம் என்றார்.</aside><h2><strong>ஆலோசனைக் கூட்டம்</strong></h2><p>திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான <a href="https://www.maalaimalar.com/topic/அன்பில்-மகேஷ்-பொய்யாமொழி">அன்பில் மகேஷ் பொய்யாமொழி </a>தலைமையில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.</p><p>நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்த போது இளம்பெண் நிர்வாகி ஒருவரின் பேச்சு அங்கிருந்தோரை உலுக்கியது.</p><h2><strong>ரீல்ஸ் மோகம்</strong></h2><p>அவர் பேசுகையில், "இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பலரும் 'ரீல்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும், விளையாட்டுத்தனமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம்?, இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்று  பேசினார்.</p><p>மேலும், "திறமையான ஆளுமைகளும், மாபெரும் தலைவர்களும் கண்ணியம் காத்த தமிழக சட்டமன்றம் இது. தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.  அவரது இந்த  கேள்வி கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரையும் சிந்திக்க வைத்ததுடன், அங்கு ஒரு நிமிடம் பெரும் அமைதியை ஏற்படுத்தியது.</p><h2><strong>அன்போடு திருத்துவோம்...</strong> </h2><p>அழுத பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாகப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "அழாதீர்கள், உங்கள் ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம்" என்று கூறி  தேற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் உடல் மீட்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-students-body-recovered-drowned-in-sea-near-thoothukudi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-students-body-recovered-drowned-in-sea-near-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e76488ac-b696-4406-a96c-598fce253d78</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:40:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:40:03.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students death,தூத்துக்குடி,Thoothukudi,Sea,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/56f0dogf/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/56f0dogf/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (வயது 16). அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் மனோஜ்(16). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். </p> <p>இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் தங்களது நண்பர்களான 5 சிறுவர்களுடன் சேர்ந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைபர் படகில் கடலை சுற்றி வர திட்டமிட்டு சென்றுள்ளனர்.</p><p>அப்போது திடீரென படகு பழுதான நிலையில் படகில் இருந்த சிறுவர்கள் ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கடலில் நீந்தி கரைக்கு சென்று விடலாம் என நினைத்து கடலில் குதித்து நீந்த தொடங்கி உள்ளனர். </p><p>இந்த நிலையில் படகில் இருந்த மற்றொரு சிறுவர் இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து சென்று படகில் இருந்த 3 பேரையும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 சிறுவர்கள் என 5 பேரை மீட்டார்.</p> <p>தொடர்ந்து கடலில் குதித்து நீந்தி சென்று காணாமல் போன ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரை தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். </p><p>இந்நிலையில், இரவு நேரம் என்பதால் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அனைவரும் கரை திரும்பினர்.</p> <p>இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தருவைகுளம் மீனவர்கள் பல்வேறு படங்களுடன் சென்று கடலில் தேடியபோது ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரின் உடல்கள் கடலில் மிதப்பதை கண்டனர். பின்னர் மீனவர்கள் அவர்களது உடல்களை மீட்டு தருவைகுளம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது கிராமமே சோகத்தில் மூழ்கிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.</p><p>தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">423ae281-36a1-48b0-ad5f-b92d9ae43f34</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:32:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:32:37.131Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜ லட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p>கூட்டத்தில் வேளாண்மைத் துறை  அமைச்சர் வினோத் பேசியதாவது:- </p><p>வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு கூட்டம் இதுவரை மண்டல அளவிலான 4 கூட்டம் நடத்தி உள்ளோம். </p><p>இதில் சென்னை தவிர மற்ற மாவட்ட விவசாயி களிடம் கருத்துக்கள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கி உள்ளோம். விவ சாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.</p><p>குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.  விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர வேண்டும்.</p> <p>பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள் வைக்கும் அனைத்து கோரிக்கையும் கவனமாக பரிசீலித்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகள் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>2031-ஆண்டுக்குள் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க திட்டமா?- ரசிகர்கள் எதிர்பார்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move#comments</comments><guid isPermaLink="false">907c871e-417f-4cec-ba84-58e83b72e0f9</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:31:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:31:11.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரசிகர்கள்,Dhanush,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தனுஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தனுஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</aside><h2><strong>நலத்திட்ட உதவிகள்</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. </p><p>இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். </p><p>நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தனித்து நின்று சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.</p><h2><strong>கொடி அறிமுகம்</strong></h2><p>இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். </p><p>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong> </h2><p>தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned#comments</comments><guid isPermaLink="false">6e34b1c0-4e19-4d48-8762-77d0c1f4da54</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:02:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray">மு.க.ஸ்டாலின்</a> மீது தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. </p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>சட்டசபை தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை தலைவராக உள்ள விவரம், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  திருஞானசம்பந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!- ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">f3f26e88-16ef-461b-81e4-f433f689406c</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:38:06.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,காமன்வெல்த் போட்டி,முக ஸ்டாலின்,Raja Muthupandi,ராஜா முத்துப்பாண்டி,Common wealth games 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>வெள்ளிப்பதக்கம்</strong></h2><p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ராஜா முத்துப்பாண்டி</a> வெள்ளிப்பதக்கம் வென்றார். </p><p>ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்ட அவர் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 160 கிலோவும் ஆக மொத்தம் 286 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். </p><h2><strong>பாராட்டுகள்...</strong></h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், <a href="https://maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india">ராஜா முத்துப்பாண்டிக்கு </a>வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>இந்தியாவுக்குப் பெருமை</strong></h2><p>#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.</p><p>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a>-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.<br><br>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா… <a href="https://t.co/hWc8PIZHHK">pic.twitter.com/hWc8PIZHHK</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2081636929226104915?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon#comments</comments><guid isPermaLink="false">747547db-dfb6-46ec-b258-39679ac5f87b</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:15:44 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:15:44.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணவப்படுகொலை</h2><p>காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார். கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> <h2>சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம்</h2><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும்.</p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் கருத்தின்படி விரைவில் முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>* நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது சரியல்ல. பிரதமரே பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.</p><h2>நீட் தேர்வு ரத்து</h2><p>* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி அமைத்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்ட குழுவே</a> ஒரு ஏமாற்ற வேலைதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இதுதான் நம்முடைய இலக்கு. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இணையத்தில் &apos;ஜன நாயகன்&apos; பார்த்தவருக்கு முன்ஜாமின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online#comments</comments><guid isPermaLink="false">ea6334ca-8a2c-46c7-b964-98e6249a84bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:41.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,சென்னை ஐகோர்ட்,Madras HC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</aside><h2><strong>இணையதளத்தில்...</strong></h2><p>சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a> படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின்  ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.</p><p>பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை  சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>முன் ஜாமின்</strong></h2><p>இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/3-big-films-starring-mamitha-baiju-are-releasing-within-a-same-month">ஜனநாயகன்</a> படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது சாட்சியாக இருந்த மனுதாரர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றச்சாட்டிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேற்கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மற்ற சிலரும் ஜாமின், முன் ஜாமின் பெற்றுள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென் வாதிடப்பட்டது.</p><p>போலீஸ் தரப்பில், "படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரரை கைது செய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். படத்தின் சட்டவிரோத வெளியீட்டு அதிகம்பேர் பார்த்து, படக்குழுவினருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மனுதாரரும் இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பதால், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டபோது காவல்துறை தரப்பு சாட்சியாக ​​மனுதாரர் இருந்ததிலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery#comments</comments><guid isPermaLink="false">c599fac6-e775-4aac-8076-6291da065cd1</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:42:02 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:42:02.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,சுங்கவரி கட்டணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>நிதின் கட்கரி</h2><p>நெடுஞ்சாலைகளையே தான் கண்டுபிடித்தது போல, எப்போதும் தற்பெருமை பேசி வருபவர் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. 'நெடுஞ்சாலைத் துறை ஹீரோ” என்று, தனக்குத் தானே தம்பட்டம் அடித்து மகிழ்ச்சி அடையும் அமைச்சராகவும் அவர் இருக்கிறார்.</p> <h2>சுங்கக் கட்டணம் உயர்வு</h2><p>மோடி ஆட்சியில் நெடுஞ்சாலைகள் என்பது, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வழியாக மாறிவிட்டன. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையாலும், மொத்த விற்பனை விலைக் குறியீடு அடிப்படையிலான கணக்கீட்டுச் சொதப்பலாலும், கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p> <p>பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, நடுத்தர குடும்பங்களையும், வாடகை வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘நெடுஞ்சாலைகளை அமைத்து விட்டோம் - இந்தியா வளர்ந்து விட்டது" என்று தினமும் பொய் கதைகளைப் பரப்பி வருகின்றனர்.</p> <h2>மோடி அரசு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 4,200 கோடிக்கு அதிகமாக மோடி அரசு வசூல் செய்து வருகிறது. அதன் பிறகும் அடங்காமல், லாரிகளுக்கு ரூ. 30 வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்தி, மீண்டும் தமிழக மக்களுக்கு 'அல்வா” கொடுத்துள்ளது.</p><p>லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் திருட்டு பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்க கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.</p> <h2>மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டம்</h2><p>தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழகத்திற்கு எந்த திட்டங்களை தராமல், கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. ரெயில்வே துறைக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் தமிழ்நாட்டிற்கு, 'வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்கள்” ஒதுக்காமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டை வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டும் பயன்படுத்திக் கொண்டு, அந்த மரத்தையே வெட்ட நினைக்கும் மோடி அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலுவான குரல் எழுப்புவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal#comments</comments><guid isPermaLink="false">50990a5e-097e-43b0-9552-61c3ee91b16e</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:36:29 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:36:29.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,Common wealth Games,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி,TN player Raja muthupandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Player Raja Muthupandi- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2h2u3nl1/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை</h2><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும்   23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அவர் கூறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி</h2><p>கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.</p><p>இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் தனது அறிமுகத்திலேயே, ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.</p><h2>புள்ளி விவரம்:</h2><p>முத்துப்பாண்டி 'ஸ்னாட்ச்' (snatch) முறையில் 126 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) முறையில் 160 கிலோவையும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் போட்டியை நிறைவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle#comments</comments><guid isPermaLink="false">5d49fff6-e061-4456-b18e-b6ca313e525d</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:24:54.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,வடகிழக்கு பருவமழை,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/phywe3xv/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/phywe3xv/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்தார்.</p><p>கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">அமைச்சர் ஆனந்த்</a> தனது காரில் சென்று கொண்டு இருந்தபோது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் ஆனந்தின் கார் செல்ல முடியவில்லை.</p> <p>உரிய நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், உடனடியாக அரசு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அவர் வந்து சேர்ந்தார்.</p><p>நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் சென்று பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதை மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.</p> <h2>வடகிழக்கு பருவமழை</h2><p>வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி உள்ள நிலையில், கூவம் ஆற்றுப் பகுதியில் நீர் நிலைகளை கள ஆய்வு செய்து, தூர்வாரி பராமரிக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்</p>]]></content:encoded></item><item><title>வெயில் பாதிப்பு, வியர்வை அதிகரிப்பதால் எடை குறைந்த குழந்தை, குறை பிரசவ அபாயம்- கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/risk-of-premature-birth-and-weight-loss-in-the-baby-due-to-the-impact-of-heat-and-increased-sweating</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/risk-of-premature-birth-and-weight-loss-in-the-baby-due-to-the-impact-of-heat-and-increased-sweating#comments</comments><guid isPermaLink="false">5dacbc6f-d595-490c-a658-3162ee38bffc</guid><pubDate>Mon, 27 Jul 2026 06:15:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T06:15:04.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குறை பிரசவம்,கர்ப்பிணி பெண்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xdr3bucx/pregnant.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கர்ப்பிணி பெண்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்ப்பிணி பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/xdr3bucx/pregnant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>2-வது 3-வது மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.</aside><h2><strong>சுட்டெரிக்கும் வெப்பம்</strong></h2><p>தென் மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெப்பம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியதால் வெப்பத்தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். </p><p>கடுமையான வெப்பம் <a href="https://www.maalaimalar.com/topic/கர்ப்பிணி-பெண்கள்">கர்ப்பிணிப் பெண்களின்</a> ஆரோக்கியத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>அபாயம்</strong></h2><p>புழுக்கமான நாட்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறக்கும் அபாயம் அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. 2,09,266 கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டது.</p><p>ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளும் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாய் சூரிய ஒளியில் இருக்கும்போது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது குறைப்பிரசவ அபாயத்தை அதிகரிக்கிறது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.</p><h2><strong>எச்சரிக்கை</strong></h2><p>2-வது 3-வது  மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு ஆளாவது, குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் சூரியக் கதிர்வீச்சு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் இந்திய வெப்பக் குறியீடு, கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான வெப்ப அழுத்தத்தை மிகவும் துல்லியமாக மதிப்பிட முடிந்துள்ளது. வெயில் காலங்களில் கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">3d254325-85d3-4d53-aef2-59666f99b32c</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:22:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:22:35.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,ஏபிஜே அப்துல் கலாம்,APJ Abdul Kalam,annamalai,APJ Abdul Kalam Death Anniversary,Abdul Kalam Death Anniversary</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ztvy5fd1/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/ztvy5fd1/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரன், வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.</p><h2>ஏபிஜே அப்துல் கலாம் நினைவு தினம்</h2><p>முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.</p> <h2>மணிமண்டபம்</h2><p>கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p> <h2>அப்துல் கலாம் நினைவிடம்</h2><p>அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி</p><p>மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.</p> <p>அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ் மற்றும் அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p><h2>அண்ணாமலை</h2><p>இதையடுத்து வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல் கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family#comments</comments><guid isPermaLink="false">fd3ef0a7-c33a-4cf2-a7f9-c054bd5f156c</guid><pubDate>Mon, 27 Jul 2026 05:06:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T05:06:25.359Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,ஐடி ஊழியர் கொலை,Kavin murder case,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9ecgs803/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/9ecgs803/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கவின் ஆணவ கொலை</h2><p>தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>இந்த வழக்கில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், தனது அக்கா உடனான காதலை கைவிட வலியுறுத்தி கவினை அரிவாளால் வெட்டி ஆணவ கொலை செய்தார்.</p> <p>இதைத் தொடர்ந்து சுர்ஜித் சில மணி நேரத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். </p><p>இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணகுமாரி, இவர்களது மகன் சுர்ஜித் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>இந்நிலையில், கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p><p>கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session#comments</comments><guid isPermaLink="false">55ae5324-1ce0-4ca0-a4b1-97cbfb5f99f9</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:56:32 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:56:32.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,ஊழல்,அமைச்சர் மரிய வில்சன்,Mariya Wilson</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r9bnuqqu/mariawilson.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/r9bnuqqu/mariawilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</aside><h2><strong>ஊழல் பட்டியல்</strong></h2><p>த.வெ.க. சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி சென்னை துறைமுகம் தொகுதியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.</p><p>விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், <a href="https://www.maalaimalar.com/topic/மரிய-வில்சன்">நிதி அமைச்சர் மரிய வில்சன்</a> ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.</p><p>இதில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது:-</p><h2><strong>சிறந்த அடித்தளம்</strong></h2><p>முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார். அதன்படி அவர் லஞ்சம்-ஊழல் என்ற வார்த்தை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாத அளவுக்கு சிறந்த அடித்தளம் அமைத்து வருகிறார்.</p><p>தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற போது, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்றால் என்னவென்று தெரியாது போன்று வெளியே சென்றார்கள். அதில் ஒருவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர் (சேகர்பாபு). அவருக்கு நான் இந்த மேடையில் இருந்து சொல்லி கொள்கிறேன்.</p><h2><strong>ஊழல் பட்டியல்</strong></h2><p>நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையை வெளியிட போகிறோம். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்பது அப்போது உங்களுக்கு தெரியும்.</p><h2><strong>'நீட்' தேர்வு விவகாரம்</strong></h2><p>நீங்கள் (எதிர்க்கட்சி) ஒருமையில் பேசி எங்களை கோபப்படுத்தினாலும் நாங்கள் உங்களை போன்று பேச மாட்டோம். உங்களுடைய ஊழல் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு பேசப்போகிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டில் அனைவரும் வாழ போகிறோம். 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நோக்கத்தை சிதைப்பதற்காக இந்த ஆட்சி 60 நாட்கள், 3 மாதம், 6 மாதம் என்று சில பேர் பேசுகிறார்கள். அவர்கள்தான் 5 மாதத்தில் ஆள், 'அட்ரஸ்' இல்லாமல் போக போகிறார்கள்.</p><p>தற்போது 'நீட்' தேர்வை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றது. மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் எப்படி பெரிய மாற்றம் வந்ததோ, அதே போன்று 'நீட்' விவகாரத்தில் நிரந்தர தீர்வை பெற 2029 பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய தலைவர் (முதலமைச்சர் விஜய்) மூலம் சாதிக்கக்கூடிய எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்படும். இதை இந்த நாடு பார்க்க போகிறது.</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p><h2><strong>100 சதவீதம் நன்மை இருக்கும்</strong> </h2><p>விழா முடிந்ததும் அமைச்சர் மரிய வில்சனிடம், 'தமிழக பட்ஜெட்டில் ஊழல் பட்டியல் வெளியிட போகிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதில் எந்த மாதிரியான ஊழல்கள் இடம் பெற்றுள்ளது? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று பதிலளித்தார். மேலும் அவர். '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிக்கிய பெண் பக்தர் மீட்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-devotee-rescued-after-getting-stuck-at-idukku-pillaiyar-temple-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-devotee-rescued-after-getting-stuck-at-idukku-pillaiyar-temple-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">9367f083-2c8e-4446-a5b1-99771d46f53a</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:53:53 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:53:53.748Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai,திருவண்ணாமலை,இடுக்கு பிள்ளையார் கோவில்,பக்தர் மீட்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jrwwtwcc/woman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/jrwwtwcc/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குகை போன்ற வாசல் உள்ளது.</p><p>இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் என்பவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">இடுக்கு பிள்ளையார்</a> கோவில் வாசலில் உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் வெளியே வரமுடியாமல் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியதில் உயிரிழந்தார்.</p> <p>இதைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் நேற்று உடல் பருமனான ஆந்திராவை சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோவிலின் குகை வாசல் வழியாக உள்ளே சென்று வெளி வர முயன்றுள்ளார். ஆனால் அவர் வெளியே வர முடியாமல் சிக்கினார். இதனால் பதறிபோன அவர் கூச்சலிட்டார்.</p><p>அவரை அங்கிருந்தவர்கள் கையை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இந்த காட்சி வீடியோவாக தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தர்மபுரியில் ரெயில் பெட்டியில்  தீவிபத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-in-a-train-coach-in-dharmapuri</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-in-a-train-coach-in-dharmapuri#comments</comments><guid isPermaLink="false">5f0b3937-6564-4053-8f1a-17a89b7e78c6</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:04:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:04:24.625Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Train,ரெயில்,fire,Dharmapuri,தர்மபுரி,தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bymyswf2/fire.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/bymyswf2/fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தருமபுரி ரெயில் நிலையத்தில், பெங்களூரு–சேலம் பேசஞ்சர் ரெயிலின் ஒரு பெட்டியின் கீழ்பகுதியில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.</p><p>பெங்களூரு யஸ்வந்த்பூரில் இருந்து சேலம் நோக்கி இயக்கப்படும் பேசஞ்சர் ரெயில், நேற்று இரவு 7.13 மணியளவில் தருமபுரி ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது ரெயிலின் 5-வது பெட்டியின் கீழ்பகுதியில் உள்ள சஸ்பென்ஷன் ஸ்பிரிங் பகுதியில் திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியது.</p> <p>இதனை கவனித்த ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக ரெயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ரெயில்வே காவல்து றையினர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் இணைந்து விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர். தீ அணைக்கும் பணிகள் காரணமாக ரெயில் சுமார் 47 நிமிடங்கள் தாமதமாக தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டது.</p> <p>சம்பவம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவிலான சேதமும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது. திடீரென ரெயிலில் தீப்பிடித்ததால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.</p><p>ரெயில்வே அதிகாரிகள் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (28.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-33</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-33#comments</comments><guid isPermaLink="false">98d98c85-0d1c-4d40-986b-a8a875410773</guid><pubDate>Mon, 27 Jul 2026 03:02:48 +0000</pubDate><atom:updated>2026-07-27T03:02:48.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qrnu1j3l/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qrnu1j3l/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (28.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>ஐடி காரிடார்</strong></h2><p>எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, பஞ்சாயத்து சாலை, மேப்பிள் அவென்யூ, குளக்கரை தெரு, ஆறுமுகம் நகர் மற்றும் குமரன் நகர், குமரன் நகர், குமரன் நகர் ஆர்.ஈ. நகர், செல்வகணபதி அவென்யூ, சரவணா நகர், கார்ப்பரேஷன் சாலை, செல்வகுமார் அவென்யூ, சீவரம், தணிகாசலம் தெரு, ராமச்சந்திரன் தெரு, காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, எம்.ஜி. சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, எல்லையம்மன் நகர், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகர், ஓ.எம்.ஆர்., திருமலைவ் நகர், ராமன் நகர், திருமலை, சிபிஐ நகர். மெயின் ரோடு, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகர் நகர், விஜிபி சாந்தி நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>மணப்பாக்கம், கிருஷ்ணா நீதிமன்றம், சிஆர்ஆர் புரம், கிருஷ்ணா நகர், பெரியார் சாலை, இந்திரா நகர், மற்றும் எம்ஜிஆர் நகர், ஸ்ரீராம் கார்டன், லட்சுமி நகர், பிள்ளையார் கோவில் தெரு, மைக்ரோ மார்வெல், தர்மராஜபுரம், காசாகிராண்ட் உட்சைட் மற்றும் கோட்டை, டி.வி.எஸ். எமரால்டு.</p><h2><strong>மேடவாக்கம்</strong></h2><p>படேல் கம்பெனி சாலை, ஏரிக்கரை தெரு, சிபிஐ காலனி 1-7வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, பெல் நகர் 1-5வது தெரு, சிவகாமி நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி.</p><h2><strong>வளசரவாக்கம்</strong></h2><p>விருகம்பாக்கம், ஆழ்வார்திரு நகர்.</p><h2><strong>நொளம்பூர்</strong></h2><p>எஸ்&amp;பி கார்டன், விஜிஎன் மான்டே கார்லோ, எஸ்ஆர்ஆர் நகர், ராஜா கார்டன் ஏரியா, குருசாமி சாலை, நொளம்பூர் முதல் மற்றும் இரண்டாம் யூனியன் சாலை, விஜிஎன் நகர் கட்டம் I-IV, பிளாக்ஸ் 1-8வது, கம்பர்சாலை, கவிமணிசாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, எம்.கே.லாட் பல்கலைக்கழகம், ரெட்டி. பனஞ்சோலை தெரு, மாதா கோவில் பகுதி, பெருமாள் கோவில் பகுதி, கஜலட்சுமி நகர், வேம்புலி அம்மன் பகுதி, ஸ்ரீ ராம் நகர், பச்சையப்பன் நகர், சக்தி நகர், பாடசாலை தெரு.</p><h2><strong>ஆதம்பாக்கம்</strong></h2><p>நிலமங்கை நகர், கேசரி நகர், சாந்தி நகர், சுரேந்தர் நகர், பாரதிதாசன் தெரு, பாரத் நகர்.</p>]]></content:encoded></item><item><title>
உத்தவ் தாக்கரே பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray#comments</comments><guid isPermaLink="false">d9eab2e5-c37e-4b46-933d-92bbac76b21c</guid><pubDate>Mon, 27 Jul 2026 02:38:24 +0000</pubDate><atom:updated>2026-07-27T02:38:24.531Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nofhe1vl/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/nofhe1vl/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin">மு.க.ஸ்டாலின்</a> சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.</p> <p>நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட அபரிமிதமான ஆதரவு, உங்களை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும், உங்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்ற மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.</p><p>உங்கள் தளராத போராட்டக் குணத்துடன் சவால்களை முறியடித்து, நீங்கள் நல்ல உடல்நலத்துடனும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026#comments</comments><guid isPermaLink="false">31ef8afe-34cc-49f3-ad59-6c3bec2d6756</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T17:14:33.345Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri">சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</a></p><p>* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.</p><p>* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21">தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</a></p><p>* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.</p><p>* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt">டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!... </a></p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade">ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!... </a></p><p>* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.</p><p>* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended">சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...</a> </p><p>* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. </p><p>* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition">ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</a></p><p>* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999">கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</a></p><p>* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p>* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi">இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!... </a></p><p>*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> •வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke">எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே... </a></p><p>* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள்   ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers">ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</a></p><p>* ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன.</p><p>* சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered">மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!... </a></p><p>*சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><p>*தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains">மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!... </a></p><p>*காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>*ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan">திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</a></p><p>* உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>* திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</a></p><p>* இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.</p><p>* ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr">சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..</a></p><p>* இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் உணவு டெலிவரி</p><p>* வெள்ளை நிற குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protesters-besiege-governor-house-in-chennai-over-neet">தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்</a></p><p>* அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>* தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven">கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!... </a></p><p>*திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.</p><p>*7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur">கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் : அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</a></p><p>* தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் இன்று அதிரடி போராட்டம்.</p><p>* அத்திப்பள்ளி எல்லையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride" rel="nofollow">பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- 'மன்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>* இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-odesa-port-attack-on-indian-sailors-cargo-ship-mv-agl-hit-2-indians-safe-2-missing">உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் - கருங்கடலில் தொடரும் பதற்றம்</a><br></p><p>*எம்வி ஏஜிஎன் என்ற அந்த கப்பல் நேற்று ஒடெசா துறைமுகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>*நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா? - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</a></p><p>*சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா</p><p>*சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</a></p><p>*  திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.</p><p>*  இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது என உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students">Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</a></p><p>* மாணவர்களைத் தாக்கிய சத்யம் பண்டிட்டை கைது செய்ய அரசியல் தலைவர்கள் கடும் வலியுறுத்தல்</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent">கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை</a></p><p>*காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதையும் உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.</p><p>*விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-biopic-superstars-life-story-to-be-made-into-a-film">நான் யானை இல்ல; குதிரை!.. திரைப்படமாக உருவாகும் ரஜினியின் வாழ்க்கை?</a></p><p>*ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அளித்த ஒரு பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியிருந்தார்.</p><p>*சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "நான் யானை இல்ல; குதிரை. டக்குனு எழுதிருச்சிடுவேன்" என கூறியது சிறந்த உதாரணம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans">நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அசாம் அமைச்சர் மகள்.. முதல்வர் ஹிமாந்தா ரியாக்ஷன் இதுதான்</a></p><p>*நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்</p><p>*சமூக வலைத்தளங்களில் அக்கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms" rel="nofollow">தேர்வு சீர்த்திருத்தம்: இன்போசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு</a></p><p>* போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>*  தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh" rel="nofollow">பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்</a></p><p>* தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>* தேசிய தேர்வு முகமைக்கு ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-firecracker-factory-accident-death-toll-rises-to-4-11-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-firecracker-factory-accident-death-toll-rises-to-4-11-arrested#comments</comments><guid isPermaLink="false">09387a25-8ddb-4474-a639-2c6c618f9348</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:29:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:29:49.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>explosion,வெடிவிபத்து,விருதுநகர்,Virudhunagar,Illegal Firecracker,சட்டவிரோத பட்டாசு ஆலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/6gxmzudr/New-Project-2026-07-26T215617.593.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/6gxmzudr/New-Project-2026-07-26T215617.593.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர். </p><h2>சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள தகரக் கொட்டகை ஒன்றில், சட்டவிரோத பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p>இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை இங்கு 5 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயணைப்புப் பணிகளை தொடங்கியுள்ளனர். </p><p>அப்போது இடுபாடுகளில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராமச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><h2>11 பேர் கைது</h2><p>இந்நிலையில் பள்ளபட்டியை சேர்ந்த திருப்பதி என்பவர் இந்த பட்டாசு ஆலையை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளரான திருப்பதி (37), திருத்தங்கலை சேர்ந்த முத்துக்குமார் (41), கணேசன் (50), ஞானசேகரன் (49), நாகார்ஜுன் (29), ராஜசேகர் (36), அந்தோணி ராஜ் (26), ஜெயசேகர் (30), நாரணாபுரத்தை சேர்ந்த முனியசாமி (32), முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சங்கிலி திருமுருகன் (27), அருள் குமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு மறுப்பு.. பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்- சிதம்பரத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-girl-attacked-by-electrician-over-rejected-love-in-chidambaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-girl-attacked-by-electrician-over-rejected-love-in-chidambaram#comments</comments><guid isPermaLink="false">40d1550d-6188-49c6-9cfb-c61061486cdc</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:31:15 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:31:15.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,murder attempt,சிதம்பரம்,youth attempt,மாணவி கொலை முயற்சி,Chidhambaram</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/67rf5pc6/Chidhambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Youth murder attempt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/67rf5pc6/Chidhambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>இவர் அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அய்யப்பன், அந்த மாணவி வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றதாக தெரிகிறது.</p><p>அப்போது அங்கு தனியாக இருந்த மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். மேலும், அந்த மாணவியிடம் அத்துமீறியும் நடக்க முயன்றதாக தெரிகிறது.</p><p>இதனால் அந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த அய்யப்பன் சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். மாணவி தொடர்ந்து சத்தம் எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தான் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து  மாணவியின் கழுத்தை அறுத்தார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><p>இதையடுத்து கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>விசாரணை</h2><p>சிதம்பரம் தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் உறுதி..?- அமைச்சர் வினோத் ரவி முக்கிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-karnataka-trip-vinoth-ravi-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-karnataka-trip-vinoth-ravi-clarifies#comments</comments><guid isPermaLink="false">d8c215bd-a887-433f-8ab9-ec3da8c17111</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:08:03.023Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,கர்நாடகா பயணம்,அமைச்சர் வினோத் ரவி,Minister Vinoth Ravi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/s7qlw1k4/Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth Ravi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/s7qlw1k4/Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.</p><p>இதனிடையே காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.</p><h2>கர்நாடகா பயணம்</h2><p>இந்தநிலையில் காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருகிற 3-ந்தேதி கர்நாடகத்துக்கு வருமாறு முதலமைச்சர் விஜய்க்கு, அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி கர்நாடகா சென்று  பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வார் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி நேற்று முன்தினம் கூறி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்வார் என்று தான் கூறிய  தகவலை அமைச்சர் வினோத் ரவி மறுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அமைச்சர் வினோத் ரவி இன்று காலை கும்பகோணத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><h2>தலைமை அறிவிக்கும்</h2><p>அப்போது அவர்,"மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்றார்.</p><p>பெங்களூரில் நடை பெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் ஆகஸ்டு 3-ந்தேதி கர்நாடகா சென்று முதலமைச்சரை சந்திப்பார் என கூறிய நிலையில் இன்று கர்நாடக பயணம் குறித்து தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm#comments</comments><guid isPermaLink="false">f3666553-0e54-4c03-b39b-529d3156fb26</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:37:04.059Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,TN weather,தமிழக வானிலை,சென்னை வானிலை,chennai Meteorological Centre,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. </p><p>இதன் எதிரொலியால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த மாவட்டங்களில் மழை?</h2><p>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month#comments</comments><guid isPermaLink="false">0f0b452c-93d4-4820-acd3-26abd92fc732</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:14:41.572Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆக.1ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><p>அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. </p><p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு வருகிறார்.</p><p>அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். </p><p>தமிழ்நாடு மக்கள் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed#comments</comments><guid isPermaLink="false">07186606-982e-4657-99d7-2795cdf16df7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:26:39.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,bribery case,Investigation by police,பேரம் வழக்கு,விசாரணை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ளார். தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன்படி நேற்று செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக ரூ.35 கோடி பேர வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.</p><p>இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீசில் ஆஜரானார். அவரிடம் இன்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணை நிறைவடைந்தது.</p><h2>கலைக்க கூடாது</h2><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p>வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.</p>]]></content:encoded></item><item><title>16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">29e936d4-0501-4a2d-a710-d0b1e1d1a353</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:14:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:14:56.612Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,social media,teenagers,சமூக வலைதளங்கள்,பதின் பருவத்தினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். </p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.</p><p>பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும்  ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். </p><p>இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>குழந்தைகளில் நலன் கருதி அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு  ஆஸ்திரேலியா தான். கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. </p><p>இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50&amp;க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.</p><p>இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025&amp;26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.</p><p>குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும் &nbsp;பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும், 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. </p><p>இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.<br><br>அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. </p><p>சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.</p><p>இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் &amp; மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. </p><p>பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.</p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். </p><p>இதனால் உடல் பருமன், விட்டமின்&amp; டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து &nbsp;குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.</p><p>கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. </p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. </p><p>இந்தியாவில் &nbsp;தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31&amp;ஆம் &nbsp;பொருளாக இடம் பெற்றுள்ளது. </p><p>அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.</p><p>குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நட்சத்திர ஹோட்டல், பார்களுக்கான FL3 உரிமம் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">37a47e8a-a235-44d2-b6f7-de5bdd08755d</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:46:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:46:56.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>star hotels,FL 3 License,club bars,FL 3 உரிமம்,நட்சத்திர ஹோட்டல்,கிளப் பார்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FL 3 License  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இயங்கும் பார்களில் மதுபான விற்பனை செய்வதற்கான 'FL 3 உரிமத்தைப்' புதுப்பிக்கத் தவறவிட்ட உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.</p><p>தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் விதிமுறைகளின்படி, நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய அளிக்கப்படும் FL 3 உரிமங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. 2026-2027-ஆம் நிதியாண்டிற்காக இந்த உரிமத்தை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாகப் புதுப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கால அவகாசம் நீட்டிப்பு:</strong></h2><p>நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கத் தவறிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, உரிய அபராதக் கட்டணத்துடன் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு வாய்ப்பளித்துள்ளது.</p><h2><strong>ஆன்லைன் மூலம் விண்ணப்பம்:</strong></h2><p>தகுதியுள்ள உரிமையாளர்கள் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://renew-fl-license.cpe.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் கட்டணத்தைச் செலுத்திப் புதுப்பித்துக் கொள்ளலாம். நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் ஹோட்டல்கள், சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிகள் மற்றும் அனுமதி பெற்ற கிளப் பார்கள் ஆகியவற்றிற்கு இது பொருந்தும்.</p><h2><strong>சட்ட நடைமுறைகள்:</strong></h2><p>ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் மூலம் நேரடி கள ஆய்வு நடத்தப்படும். அனைத்து தீயணைப்புத் துறை சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லாச் சான்றிதழ் மற்றும் கட்டிட அனுமதி ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், கணினி வழியே டிஜிட்டல் கையொப்பமிட்ட புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படும்.</p><h2><strong>சுற்றுலாத் துறை வளர்ச்சி:</strong></h2><p>தமிழ்நாட்டிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், சுற்றுலாத் துறையின் வருவாயை மேம்படுத்தும் நோக்கிலும், நிலுவையில் உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள இந்த கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre#comments</comments><guid isPermaLink="false">8d897152-61d8-4d68-bf18-d6300bac2bce</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:12:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:12:55.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,CCTVFootage,ViralVideo,JusticeForSridhar,பெண்அராஜகம்,WomanAttacksGuard,TheatreFight,காவலாளிமீதுதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WomanAttacksGuard  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p><h2><strong>கார் பார்க்கிங்கில் வெடித்த வாக்குவாதம்</strong></h2><p>மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கில் தற்போது “ஜனநாயகன்” திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. </p><p>நேற்று முன்தினம் காரில் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வந்துள்ளனர். </p><p>அப்போது, அங்கிருந்த முதிய காவலாளி ஸ்ரீதர், காரை பார்க்கிங் பகுதியில் சரியாக நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதில் காவலாளிக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>முதியோரை கண்ணத்தில் அறைந்த இளம்பெண்</strong></h2><p>இந்த நிலையில் படம் முடிந்து அந்த குடும்பத்தினர் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அதே நேரத்தில் மற்றொரு காட்சிக்கு ஒரு கார் உள்ளே வந்தது. </p><p>அதனால் வெளியே செல்லும் காரை நிறுத்திவிட்டு, உள்ளே வந்த காரை அனுமதித்த காவலாளி ஸ்ரீதர், பின்னர் அவர்களை வெளியே செல்லும்படி கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கீழே இறங்கி வந்து, வயதான காவலாளி ஸ்ரீதரின் சட்டையை பிடித்து கிழித்ததுடன், கன்னத்தில் தாக்கினார். இதில் காவலாளியின் சட்டை கிழிந்ததுள்ளது. </p><p>தியேட்டருக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்சியடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் தலையிட்டு அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார்.</p><h2><strong>போலீசார் அதிரடி விசாரணை</strong></h2><p>இந்த சம்பவத்தை அங்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. </p><p>வீடியோ வைரலானதை அடுத்து தாம்பரம் போலீசார், பாதிக்கப்பட்ட காவலாளி ஸ்ரீதரிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்மண்டல குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">41ed62a2-61ff-471f-bc84-261d0f92bc9e</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:53:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:53:55.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,சிடிஆர் நிர்மல் குமார்,ராஜ்மோகன்,ctr nirmal kumar,southzone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Ministers Nirmalkumar and Rajmohan appointed as South Zonal Council members]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில், ஒருங்கிணைப்பை எளிதாக்கும் மத்திய அரசின் உயர்மட்ட மாநிலங்களுக்கு இடையேயான அமைப்பான, தென்மண்டலக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.</p><h3><strong>தென்மண்டல குழு உறுப்பினர்கள் நியமனம்:</strong></h3><p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து, எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளிக் கல்வி, தமிழ் அபிவிருத்தி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இந்த குழுவில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ஆலோசகர் நியமனம்:</strong></h3><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருடன் கூடுதலாக, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசனையும் கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக அரசாங்கம் நியமித்துள்ளது.</p><p>2021 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் கீழ் செய்யப்பட்ட நியமனங்களுக்குப் பதிலாக, 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியிட்ட அரசாணை எண் 461 மூலம் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h3><strong>தென்மண்டலங்கள்:</strong></h3><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>இந்த மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் பொதுவாக உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை தொடர்பான விஷயங்கள், சமூக நலன், சிறுபான்மையினர் நலன், ஆற்று நீர் பிரச்சனைகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன.</p><p>மே மாதம் பதவியேற்ற தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின், முதல் பிரதிநிதித்துவம் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>முன்னாள் தென்மண்டல குழு பிரதிநிதிகள்:</strong></h3><p>முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இந்த குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் :  அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur#comments</comments><guid isPermaLink="false">ad9fcaea-a96f-4fe8-860a-746687af7d4d</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:37:10.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,மேகதாது விவகாரம்,mekedatu,அத்திப்பள்ளி,KarnatakaBorder,Buses Cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduBorderBusesCancelled]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/mekedatu">மேகதாது</a>வில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்</strong></h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.</p><p>அதன்படி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று காலை அத்திப்பள்ளி சாலையில் மறியல் நடைபெற்றது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.</p><h2><strong>தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்</strong></h2><p>இன்று அதிகாலை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கர்நாடகா செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.</p><p>தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பஸ்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் செல்கின்றன.</p><p>கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், "மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது" என அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>ஓசூர் - அத்திப்பள்ளி பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்</strong></h2><p>அதே சமயம், ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் சேவையில் மாற்றம் செய்யவும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது.</p><p>தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணிகள் அவற்றின் மூலம் பெங்களூரு நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.</p><h2><strong>எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு</strong></h2><p>இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எல்லையில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven#comments</comments><guid isPermaLink="false">cd4528bc-5b10-4a1d-bca1-7d625d25438f</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:28:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:28:23.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து சமய அறநிலையத்துறை,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,Coimbatore Temple,HRCEdepartment,கோவை கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/rx1ljyj4/ramwsh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Ramesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/rx1ljyj4/ramwsh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததை தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதி அளித்தார். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்று சமீபத்தில் முதலமைச்சர் விஜய் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும் அமைச்சர்களும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.</p><h2><strong>கோவிலில் ஆய்வு:</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தி முறைகேடாக பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதித்த கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதேபோல் பல கோவில்களிலும் அவர் ஆய்வு செய்து முறைகேடுகளை தடுத்து வருகிறார். தமிழக அரசின் நடவடிக்கையால் ஊழல் மற்றும் லஞ்சம் குறைந்து இருப்பதாக பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.</p><h2><strong>கோவை கோவிலில் உண்டியல் பணம் திருட்டு:</strong></h2><p>இந்நிலையில் கோவையில் கோவில் உண்டியல் பணம் திருட்டு போன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை ‘சஸ்பெண்ட்' செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை நகரின் மையப்  பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் திருவிழா விற்காக 6 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த 15 உண்டியல்களும் கடந்த 15-ந்தேதி அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ஒரு உண்டியலை அங்கு இருந்த சிலர் எண்ணாமல் மறைத்து வைத்திருந்ததையும், அதில் இருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டதையும் சிலர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் கோவையில் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். </p><p>போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அர்ச்சனை டிக்கெட் ஊழியர் பால சுப்பிரமணியன், அலுவலக உதவியாளர்கள் சரவணன், பிரதீப் குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் என தெரியவந்தது.</p><h2><strong>ஊழிர்கள் கைது:</strong></h2><p>இதைத்தொடர்ந்து 4 ஊழியர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் உள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.</p><p>பின்னர் கைதான 4 ஊழியர்களும் உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏனென்றால் கோவில் உண்டியல் திருட்டு நடந்து பல நாட்கள் ஆன நிலையில், அதை கண்டு பிடிக்காமல் அதிகாரிகள் இருந்துள்ளனர்.</p><p>சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன பிறகு திருட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. எனவே கோவில் நிர்வாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோனியம்மன கோவிலின் செயல் அலுவலர் குமார், இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர்கள் ராம்குமார், உதய குமார் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். </p><p>அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பாக கோனியம்மன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான பெண் அதிகாரி ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஒரே நேரத்தில் செயல் அலுவலர் உள்பட  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். </p><p>மேலும் கோவில் பணிகளில் ஊழியர்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? தி.மு.க.வை விளாசிய மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">67de3c10-30e7-4329-8e0d-a58c1a71a3c3</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:26:45 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:26:45.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/2cye8c5r/Congressparty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/2cye8c5r/Congressparty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ், த.வெ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் மாணவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கூட்டமும் வெற்றி விழா கூட்டம் போல் மாறியது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க.வை கடுமையாக விளாசினார்.</p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>அவர் பேசும்போது, ‘நீட் தேர்வால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கூட எதிர்க்கட்சி தலைவர் செல்லவில்ைல. தர்மேந்திர பிரதான் செய்த தவறுகள்தான் அவரது பதவியை பறித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கிறேன். டெல்லியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது. ஆனால் முதல் 3 நாட்கள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கலந்து கொள்ளவில்லை. நேற்று வரை நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் ஏன் திடீரென்று ‘சைலண்ட்’ ஆனார்கள்? எங்களுக்கும், கம்யூனிஸ்டுக்கும் பிரச்சினை உண்டு.</p><p>ஆனாலும் பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரே அணியாக இருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? ராகுலை போலீசார் நடத்திய விதத்துக்கு நாடு முழுவதும் தலைவர்கள் கண்டித்தார்கள். ஆனால் அதற்கும் இந்த இரு கட்சிகளும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நாங்கள் 6 கட்சிகள் ஒரே மேடையில் இருக்கிறோம். </p><p>தமிழ்நாட்டில் இனி நேர்மையான ஆட்சி தொடரும்’ என்றார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு எங்களிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சு. நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்கள் பேச்சு. அதை டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p><p>கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால்தான் சட்டப்படி நீட்டை ஒழிக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். இதை திசை திருப்பும் வகையில் சிலர் அரசியல் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் புகுந்து புகழை திருட பார்த்ததையும் பார்த்தோம். நீட்டை ஒழிக்காமல் விடமாட்டோம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>அமைச்சர் வன்னியரசு</h2><p>பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ்தான் முன்னெடுக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும். எங்கள் அடுத்த இலக்கு இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்பதே முழக்கமாக இருக்கும்’ என்றார்.</p><h2>ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ</h2><p>உலகில் பல நாடுகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஆட்சிகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொண்டதால் மோடி அரசு தப்பித்து கொண்டது. மாணவர்கள் போராட்டம் மோடி கூட்டத்தையும், இந்துத்துவார் அமைப்புகளையும் நடுங்க வைத்துள்ளது. எந்த கட்சியையும் சாராத மாணவர்கள், இளைஞர்கள் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் சேர்ந்து இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள்’ என்றார்.</p><h2>சு.வெங்கடேசன் எம்.பி.</h2><p>மாணவர்கள் போராட்டத்தை பார்த்து பா.ஜனதா நடுங்கி போய் இருக்கிறது. ஆட்சி அதிகாரம், ஆர்.எஸ்.எஸ். நெட்வொர்க் என அனைத்தையும் கிழித்து எறிந்து டெல்லியில் திரண்ட கூட்டம் 29 நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள எழுச்சி புதிய சிந்தனை, புதிய தொழில் நுட்பத்துடன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது தொடரும்’ என்றார்.</p><h2>நவாஸ்கனி எம்.பி.</h2><p>அண்டை நாடுகளில் நடந்த இளைஞர்கள் எழுச்சியை கண்ேடாம். அதேபோல் இங்கும் அசைக்க முடியாததல்ல ஒன்றிய அரசு என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.</p><p>முடிவில் அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.</p><h2>தீப்பந்தம்</h2><p>கூட்டம் முடிந்ததும் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் மாணவர் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் சென்றது. இதை மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் குலாம் அகமது மிர், காங்கிரஸ் நிர்வாகிகள் ரூபி மனோகரன், சிரஞ்சீவி, தணிகாசலம், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், இல.பாஸ்கர், தி.நகர் ஸ்ரீராம், எம்.எஸ்.திரவியம், கராத்தே ரவி, ஜெ.பாலமுருகன், வில்லி வாக்கம் சுரேஷ், பெருங்குடி செந்தில் குரு, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>