<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 05 Sep 2026 17:21:59 +0000</lastBuildDate><item><title>30 இடங்களில் சோதனை.. 241 ஆவணங்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை  - கே.என்.நேரு சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say#comments</comments><guid isPermaLink="false">c2546ad8-fb28-438c-9013-4a4294b0e049</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:07:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:07:08.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை</h2><p>அந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேருவின்</a> சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னை</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/kn-nehru">கே.என். நேருவுக்கு</a> சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>திருச்சி</h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர்.</p><p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர்.</p> <h2>பறிமுதல்</h2><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>அறிக்கையின்படி, தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>கே. என். நேரு பேட்டி</h2><p>இதனிடையே திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர், "என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.</p><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026#comments</comments><guid isPermaLink="false">a50194c3-ec3d-4c7a-b287-9e0350ac3ac4</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:48:29.615Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies">சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</a></p><p>* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar" rel="nofollow">தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings" rel="nofollow">மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3">தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day">ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026">GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes">சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. </p><p>* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not">தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p><p>* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi" rel="nofollow">தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</a></p><p>* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.</p><p>* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</a></p><p>* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது</p><p>* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years">காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை</a></p><p>* கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா.</p><p>* அசன் மவுலானா முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம்... கூட்டணியில் இடம்பெறவில்லை - வீரபாண்டியன் திட்டவட்டம்</a></p><p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders">தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</a></p><p>*கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>*இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground">துலீப் டிராபி: நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு-கிழக்கு மண்டலங்கள் மோதல்</a></p><p>* கேப்டன் திலக் வர்மா ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo">நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!... </a></p><p>*பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. </p><p>*தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal">ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</a></p><p>* 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.</p><p>* அவரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின் 60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு... </a></p><p>* வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>*இந்த பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!... </a></p><p>*இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport">நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!... </a></p><p>*பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். </p><p>*பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750">சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பெண்கள் பிரிவில் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு ஆலையில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast#comments</comments><guid isPermaLink="false">6fe27d86-c933-4160-9189-907fbb70ad65</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:27:51.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,சிவகாசி,Sivakasi,வெடி விபத்து,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virudhunagar fireworks factory blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மாடசாமி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை வழங்கியுள்ளார்.</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88">சின்னதம்பி பட்டாசு ஆலையில்</a> செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த நிலையில் ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>முதலமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில்</p><p>அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரள கார் விபத்தில் பலியான 8 மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash#comments</comments><guid isPermaLink="false">facacd5c-28d3-4cf8-b7e5-e67f7ff8f49c</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:00:58 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:00:58.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,ஜோசப் விஜய்,joseph vijay,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி காரில் சென்ற எட்டு பொறியியல் மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி சென்ற 8 பொறியியல் மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, திருச்சூர் கடலோரப் பகுதியான கைப்பமங்கலம்-பனம்பிகுன்னுவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h3><strong>முதல்வர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதையடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">ச.ஜோசப் விஜய்</a> ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், </p><p>இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.</p><p>உயிரிழந்த எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p>இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து,</p><p>உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.</p><p>அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சையில் சென்னை மெட்ரோ ரெயில் விளம்பரம்-தலைவர்கள் கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-advertisement-controversy-leaders-condemn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-advertisement-controversy-leaders-condemn#comments</comments><guid isPermaLink="false">83745e72-8b2d-4dca-9171-249f9d8bbb4e</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:12:17 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:12:17.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,விளம்பர சர்ச்சை,நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,சி.ஐ.டி.யு</media:keywords><media:content height="613" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tretkuor/chennai-metro-advertisement-controversy-2026-09-05-17-10-36.webp" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tretkuor/chennai-metro-advertisement-controversy-2026-09-05-17-10-36.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்</h2><p>சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஓன்றாக மெட்ரோ ரெயில் சேவை இயங்கி வருகிறது, குறிப்பாக அனுதினமும் மெட்ரோவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில்  <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closed-due-to-the-cjp-protest-have-reopened">மெட்ரோ ரெயி</a>லில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பெண் நண்பர் வைத்திருந்தால் 0% வட்டி. ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி 14.40% வட்டி தருகிறது" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருப்பதே சர்ச்சைக்கான காரணமாகும்.</p><h3>வலுக்கும் கண்டனம்</h3><h2>சி.ஐ.டி.யு. </h2><p>சென்னை மெட்ரோ ரெயிலில் இப்படி ஒரு விளம்பரம் அச்சிடப்பட்டிருப்பது நியாயமா? முதலாளித்துவம் பெண்களை ஒரு போக பொருளாக , விளம்பர பொருளாக , முன்னிறுத்துகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் </p><p>பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம் என ஏன் ஒப்பிடுகிறீர்கள் உடனடியாக இந்த விளம்பரத்தை மெட்ரோ நிர்வாக எடுத்திட வேண்டும் என்று, <a href="https://www.maalaimalar.com/news/district/transport-workers-jail-filling-strike-756463">சி.ஐ.டி.யு</a> (CITU) மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் விளம்பரத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.</p><h2>சு. வெங்கடேசன் எம்.பி</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரெயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன.</p><p>குறிப்பாக, மெட்ரோ ரெயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், “பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics">ஆணாதிக்க மனப்பான்மை</a>யையும் பிரதிபலிக்கிறது. </p><p>பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மெட்ரோ ரெயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது.</p><p>இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனைத் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்திருகிறார். </p> <h2>அதிருப்தியில் பொதுமக்கள் </h2><p>இந்த விளம்பரம் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும்,தவறான முறையில் சித்தரிப்பதாகவும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வளைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0119ad7d-000f-44f0-b971-e2d6da679dcb</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:42:44 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:42:44.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,sanitary napkin,chennai airport,Vending machines,Actress Latha Rao,சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள்,லதா ராவ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vending Machines  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ofquku0q/NAPKIN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. </p><p>சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சின்னத்திரை நடிகை லதா ராவ் வெளியிட்ட வீடியோ பதிவைத் தொடர்ந்து, விமான நிலைய நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><h2>பிரபல நடிகை <strong>லதா ராவ் ச</strong>ந்தித்த சங்கடம்</h2><p>பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டது. அவசரத்தில் கைவசம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">சானிட்டரி நாப்கின்</a> எடுத்து வரத் தவறியதால், உடனடியாக அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் விசாரித்தபோது, கழிவறைகளில் முன்னர் இருந்த தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முனையத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையில் உள்ள மருந்தகத்திற்கு விரைந்து சென்று நாப்கின் வாங்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் விமானத்தில் ஏறுவதற்கே தாமதமாகும் நிலை உருவானது.</p><p>இந்த அனுபவத்தை வீடியோவாகப் பதிவு செய்து லதா ராவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். பெண்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இடமான பன்னாட்டு விமான நிலையத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் முடங்கிக் கிடப்பது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>தற்கா<strong>லிக ஏற்பாடு</strong></h2><p>நாப்கின் இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாகவே அவை தற்காலிகமாக நீக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பெண் பயணிகளின் உடனடித் தேவையை பூர்த்தி செய்ய உடனடி தற்காலிக ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பெண்கள் கழிவறைகளில் பிரத்யேக தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த எண்ணை அழைத்தால், அடுத்த 2 நிமிடங்களுக்குள் விமான நிலைய பெண் ஊழியர் நேரடியாக வந்து சானிட்டரி நாப்கினை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>36 புதி<strong>ய இயந்திரங்கள் நிறு</strong>வும் பணி</h2><p>இந்த தற்காலிக ஏற்பாட்டைத் தொடர்ந்து, நிரந்தர தீர்வாக சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறைகளில் மொத்தம் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்களை நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகை ஒருவர் துணிச்சலாக எழுப்பிய புகாருக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3fc7e160-4a1c-41fc-874e-a9673ce7b6b8</guid><pubDate>Sat, 05 Sep 2026 13:11:16 +0000</pubDate><atom:updated>2026-09-05T13:11:16.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு,Tamil nameboards,தமிழ்பெயர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ysp8q9vz/high.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார்.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் செயல்படும் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் மொழிக்கு முதன்மை இடம் அளிக்கப்பட வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சட்டப்பூர்வ உத்தரவு பிறப்பித்திருந்தது.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கால அவகாசம் தேவை என்றும், இதற்கெதிராகவும் 'இந்திய சில்லறை வர்த்தகர்கள் சங்கம்' சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow">சென்னை உயர் நீதிமன்றத்தில் </a>மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய பெயர்ப்பலகைகளின் வடிவமைப்பு, எழுத்துரு மற்றும் வண்ணங்களை மாற்றி அமைப்பதற்கு கணிசமான தொகையும் கூடுதல் அவகாசமும் தேவைப்படுவதாகக் கூறி 3 மாத கால அவகாசம் வழங்கக் கோரினார்.</p><h2>உயர் <strong>நீதிமன்றம்</strong> தீர்ப்பு </h2><p>மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுரேந்தர், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பதற்கு வரும் நவம்பர் 1-ஆம் தேதியை இறுதிச் சட்டப்பூர்வ காலக்கெடுவாக நிர்ணயித்து உத்தரவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழ் பெயர் பலகை வைக்கத் தவறினால், சட்டப்படி சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். மேலும், இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி அல்ல இது மாற்றத்திற்கான போட்டி - கனிமொழி எம்.எல்.ஏ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-santhosh-mla-says-this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-santhosh-mla-says-this-is-not-a-competition-for-the-differently-abled-it-is-a-competition-for-change#comments</comments><guid isPermaLink="false">5f682439-cfdd-4cae-98a8-5b161de194cb</guid><pubDate>Sat, 05 Sep 2026 10:04:47 +0000</pubDate><atom:updated>2026-09-05T10:04:47.557Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7w9asf3o/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7w9asf3o/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.</strong></em></p><p>கோவை சரவணம்பட்டியில் Rotaract club of coimbatore Gaalaxy மற்றும் யாழ் ஹோம்ஸ் சார்பில் நடத்தப்பட்ட Indian Para Cricket League கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.</p><p>இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டி, தொடர்ந்து 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. IPL கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடனும், விளையாட்டு உணர்வுடனும் இந்தப் போட்டி நடைபெற்றுவருகிறது.</p><p>நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி-சந்தோஷ்">கனிமொழி</a>,</p><p>“மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நிகழ்ச்சி என்று மட்டும் இதைப் பார்க்க முடியாது. அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.</p><p>இந்தியாவின் 15 மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து, மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. IPL போட்டிகளுக்கு இணையான உற்சாகத்துடன் இந்தப் போட்டி நடைபெற்றது.</p><p>நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.</p><p>‘கடவுளின் குழந்தைகள்’ என்று இவர்களை அழைப்பது மட்டும் போதாது. அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளையும் உரிய தளத்தையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்காக நடத்தப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டி மிகவும் பாராட்டுக்குரியது.</p><p>விளையாட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்கள் மேலும் பல உயரங்களை அடைய தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.</p><p>இத்தகைய சிறப்பான போட்டியை ஏற்பாடு செய்த ரோட்டரி கேலக்சி அமைப்பினருக்கும், இதில் பங்கேற்ற 15 மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என  தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம்- தீபாவளி பண்டிகை ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-festival-train-reservations-begin-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a0f84fa8-bc62-484e-ba86-604466113b3e</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:57:51.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pqb59n5z/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர்.</strong></em> </p><p>சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/தீபாவளி">தீபாவளி</a> பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட   செல்வது வழக்கம். </p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. </p><p>60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை  8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். </p><p>நவம்பர்  5-ந்தேதி பயணம் செய்ய  நாளை முன்பதிவு தொடங்குகிறது.  நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி  (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு  நடைபெற உள்ளது. </p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை  உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப  வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். </p><p>தீபாவளி பண்டிகை முன்பதிவு நாளை தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர். இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர். </p><p>ரெயில்களில் குறைந்த  கட்டணத்தில் பாதுகாப்பாக  குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-experience-moderate-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c9015e34-62ec-4107-8288-9e1c48d94f20</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:51:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:51:10.047Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/pbyi5qr7/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>6-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>7 மற்றும் 8-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9 மற்றும் 10-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 9-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders#comments</comments><guid isPermaLink="false">5c9f5c82-946b-4c32-b87c-c5491b80ec45</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:47:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:47:06.106Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,ஆதவ் அர்ஜுனா,Consultative Meeting,tvk,தவெக கூட்டணி,TVK  Ministers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c736cmg6/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திருமாவளவனுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தமிழக வெற்றிழகம்</a> (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பினை, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் நேரில் வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p>சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p>முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இரண்<strong>டாம் கட்டக் கூட்டம்</strong></h2><p>வரவிருக்கும் 9-ஆம் தேதி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணியில் இடம் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் திட்டவட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside#comments</comments><guid isPermaLink="false">ce3c9857-72f5-44c7-9e26-f9a530b855c6</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:19:09 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:19:09.935Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,வீரபாண்டியன்,Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nlv1intu/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறி உள்ளார்.</p><p>சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் 9-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">தவெக</a> கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது.</p><p>த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p> <p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். </p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">த.வெ.க. </a>ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.</p><p>இந்நிலையில் தி.நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p><p>* மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.</p> <p>* தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழி நடத்துகிறார்கள்.</p><p>* தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை.</p><p>* தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை என மீண்டும் அவர் திட்டவட்டமாக கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த மதுரை-சென்னை விமான சேவை  அக்.25-ந்தேதி முதல் நிறுத்தம்? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-to-chennai-flight-service-operational-for-68-years-to-be-suspended-from-october-25#comments</comments><guid isPermaLink="false">e95be653-8fd9-4c30-89b6-fd85aa77b027</guid><pubDate>Sat, 05 Sep 2026 09:13:10 +0000</pubDate><atom:updated>2026-09-05T09:13:10.070Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,மதுரை,madurai,flight service,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ விமானம்]]></media:title><media:description type="html"><![CDATA[ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/zx8964ol/flight.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</strong></em></p><p>சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் <a href="https://www.maalaimalar.com/topic/விமான-சேவை">விமான சேவை</a> அக்டோபர் 25 முதல் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களால் கடந்த 68 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த இந்த விமான சேவை, கட்டணம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த சேவை நிறுத்தப்பட்டால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் ‘இண்டிகோ’ மட்டுமே ஒரே விமான சேவை நிறுவனமாக நீடிக்கும் நிலை உருவாகும்.</p><h2><strong>கேள்வி</strong></h2><p>போதிய பயணிகள் வருகை இல்லை என்பது உள்ளிட்ட காரணங்கள் சேவை நிறுத்தத்திற்கு சொல்லப்பட்டாலும், அதனை பயண முகவர்களும் சுற்றுலா அமைப்பாளர்களும் மறுத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமை அன்று கூட சென்னையில் இருந்து மதுரைக்கு 159 பயணிகளும், மதுரையிலிருந்து சென்னைக்கு 70 பயணிகளும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>மேலும், சென்னை-மதுரை வழித்தடமே லாபகரமாக இல்லை என்றால், மதுரை-பெங்களூரு இடையேயான சேவை மட்டும் எவ்வாறு லாபகரமாக இயங்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>இத்தடத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, இச்சேவையைத் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயண முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2><strong>அதிருப்தி</strong></h2><p>திருச்சியிலிருந்து ஐதராபாத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய விமான சேவைகளைத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று மதுரை, சிவகாசி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த முகவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><p>அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் சுற்றுலாவுக்கான உச்சக்கட்ட காலமாகும். தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் வரவுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகள் பலர் தென் தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருக்கக்கூடும். </p><p>தற்போது இந்த சேவை ரத்து செய்யப்படுவதால் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மதுரைக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உருவாகி, உள்ளூர் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என மதுரை டிராவல்ஸ் நிர்வாகி கவலை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years#comments</comments><guid isPermaLink="false">9a4cf26c-2853-4ff6-894e-a57d57629115</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:29:20 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:29:20.623Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Election Commission,தேர்தல் ஆணையம்,Aassan Maulaana,அசன் மவுலானா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aassan Maulaana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/vwqripl7/AassanMaulaana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வேளச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur">காங்கிரஸ்</a> சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா. இவர் அந்த தேர்தலில் செய்த செலவு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டினார். அதில் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p>அதாவது ரூ. 37 லட்சம் தேர்தலுக்கு செலவு செய்த நிலையில் 17.03 லட்சம் மட்டுமே செலவிட்டதாக கணக்கு காட்டினாராம். இதை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>கண்டுபிடித்துவிட்டது. நாளிதழ்களில் வெளியான விளம்பரச் செலவுகளை காங்கிரஸ் கமிட்டி ஏற்றதாக கூறி கணக்கு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-is-the-pm-candidate-says-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">30d82500-29f9-470b-9b37-889072c9fc08</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:22:13.449Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Prime Minister,Manickam Tagore,பிரதமர் வேட்பாளர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1xqa91xr/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்து போன கதை: பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான் என்பதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை.</p><p>பிரதமர் வேட்பாளர் விஜய் என அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>தவெக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது;</p><p>முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்.</p><p>வரும் 9-ந்தேதி கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் குறித்து முடிவு செய்யப்படும்.</p><p>பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதம் முடிந்துபோன கதை. முடிந்துபோன விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ராகுல்காந்தி</a>தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தவிர, சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.”</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip#comments</comments><guid isPermaLink="false">fdb2fe14-9df5-4379-9139-1870c7e48483</guid><pubDate>Sat, 05 Sep 2026 08:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-05T08:18:23.550Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,இந்திய கம்யூனிஸ்டு கட்சி,கூட்டணி கட்சிகள்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. நடத்திய முதல் ஆலோசனைக் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/bprcq3tq/allinace.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம் என்றார்.</strong></em></p><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a>வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.</p><h2><strong>கூட்டணி கட்சிகள் ஆதரவுக்கரம்</strong></h2><p>இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.</p><p>இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர்.</p><h2><strong>கூட்டணிக்கு பெயர்</strong></h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை.</p><p>அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. </p><p>இந்த சூழ்நிலையில் த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று தங்கள் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் நேரில் சந்தித்தனர்.</p><p>அதன்படி, சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><h2><strong>2-வது ஆலோசனை கூட்டம்</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நிர்மல்குமார், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு " என்றும், வைகோவை சந்தித்துவிட்டு வெளியே வந்த போது, "முதலமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சரும் பங்கேற்கிறார்" என்றும் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து "த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பங்கேற்போம்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். 9-ந் தேதி நடைபெறும் த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்த பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p>கூட்டம் புறக்கணிப்பா?</p><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு பங்கேற்காத நிலையில், 2-வது கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதா? என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-</p><p>இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு நாளை (இன்று) கூடுகிறது. அதன் பிறகு எங்கள் நிர்வாக, செயல், மாநிலக்குழு கூட இருக்கிறது. முதலமைச்சர் சொன்னதாக அமைச்சர்கள் கூறிய கருத்தையும் அதில் விவாதிப்போம். அப்போதுள்ள சூழலை பத்திரிகை, ஊடகத்தினருக்கு தெரிவிப்போம்.</p><p>இடதுசாரிகள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க.வை ஆதரித்தோம். அதேபோல் மக்கள் அதிகாரத்தில் கவர்னர் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க.வை வெளியில் இருந்து ஆதரித்தோம். கூட்டணி, அமைச்சரவையில் இல்லை. வெளியில் இருந்து ஆதரிப்பதால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக சமரசம் இல்லாமல் குரல் எழுப்புகிறோம்.</p><p>அரசு நல்ல திட்டங்கள், அரசியல் திசையில் நகரும்போது ஆதரிப்போம். முதல் கூட்டம் விருந்து. கூட்டணி குறித்து அதில் பேசுவது உடன்பாடு அல்ல. நாங்கள் சென்றால் அந்த கூட்டணியில் பங்கேற்க இயலாது. விருந்தின் தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் முதலமைச்சரிடம் அதுபற்றி தெரிவித்து பங்கேற்கவில்லை. இப்போது கூட்டணி தொடர்பான அழைப்பு வந்திருக்கிறது. அதுபற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. கட்சிதான் முடிவு செய்யும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">989e47d5-2a3d-41f3-a737-96c46aa32235</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:44:31 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:44:31.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi MP,தவெக அரசு,TVK Govt,கனிமெழி எம்பி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/98d2wm6g/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2>காழ்ப்புணர்ச்சி</h2><p>சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என். நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது. </p><h2>ஜனநாயக விரோதம்</h2><p>மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not#comments</comments><guid isPermaLink="false">7063b894-9df5-40ab-865a-bfdb1050395f</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:38:15 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:38:15.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,கேஎன் நேரு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/sth8p819/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் மதுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p>  <p>திமுக முன்னாள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">அமைச்சர் கே.என்.நேரு</a> வீட்டில் ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது.</p><p>பெண்களை பற்றி அவதூறாக பொதுமேடையில் பேசியதற்காக தான் உதயநிதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p>திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p>  <p>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு குறித்த தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிடும்.</p><p>பிரதமர் வேட்பாளர் குறித்த பேசுவதற்கு காலம் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது, ஊழல்வாதிகளுக்கு தான் பாதுகாப்பில்லை.</p><p>நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;செக்கிழுத்த செம்மல்&quot; வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">fd6ed02a-18f7-49c6-9a86-37d61bd488fb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:30.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வ.உ.சிதம்பரனார்,VO Chidambaram,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VOC-TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/4gvruaw7/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தன்னிகரற்ற வீரத்துடனும், தியாக உணர்வுடனும் போராடி, மக்கள் மனங்களில் சுதேசி உணர்வை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை மட்டுமின்றி, பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, இந்தியர்களின் தன்னம்பிக்கைக்கும், தற்சார்பு உணர்விற்கும் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதோடு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள்.</p><p>தாய்நாட்டின் விடுதலை, சுதேசி உணர்வு, உழைப்பாளர்களின் உரிமை ஆகியவற்றிற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த “செக்கிழுத்த செம்மல்”வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes#comments</comments><guid isPermaLink="false">bdbc6512-251f-4a09-b208-447ddba06edb</guid><pubDate>Sat, 05 Sep 2026 07:02:06 +0000</pubDate><atom:updated>2026-09-05T07:02:06.081Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Central govt,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/ttmjjsoj/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஓபிசி எனப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கிட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் கடைபிடிக்கப்படும் ஓபிசி சாதிகள் பட்டியலை இணைத்து பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டதாகவும்,  ஆனால், அந்தப் பட்டியலில் இருப்பவை வகுப்புகள் தானே தவிர, சாதிகள் இல்லை என்பதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கான கூறப்படும் பலவீனமான காரணம் தானே தவிர ஏற்றுக்கொள்ளத்தக்க வாதம் அல்ல.</p><h2><strong>பிப்ரவரியில் பணி தொடக்கம்</strong></h2><p>இந்தியாவில் கடைசியாக 1931-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சமூகநீதி அமைப்புகளின் வலியுறுத்தல் காரணமாக 95 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இமயமலையை ஒட்டிய மாநிலங்களில் சாதி விவரத்துடன் மக்கள்தொகையை கணக்கெடுக்கும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரும் பிப்ரவரி மாதத்தில் இப்பணி தொடங்கவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> போது, சாதி என்ற வினாவுக்கு எதிரில் காலியிடம் ஒதுக்கப்பட்டு,  அதில் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை எழுதும் முறை பின்பற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த முறைக்கு பதிலாக சாதிவாரி கணக்கெடுப்புக்காக பயன்படுத்தப்படும் செயலியில், மத்திய அல்லது மாநில அரசுகளின் சாதிகளை பட்டியலை இணைத்து, அதிலிருந்து மக்களை அவர்களின் சாதியை தேர்ந்தெடுக்கச் செய்து, பதிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக ஓபிசி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதமும் எழுதினேன். அதைத் தொடர்ந்து காங்கிரசும் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.</p><h2><strong>ஏற்க முடியாதது</strong></h2><p>இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகள்,‘‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முன்பாக, சாதிகள் பட்டியலில் இருந்து சாதியை தேர்வு செய்யும் முறையை பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தான் மத்திய அரசின் ஓபிசி பட்டியலில் இருப்பவை சாதிகள் அல்ல... வகுப்புகள் எனத் தெரியவந்தது. பிச்சை எடுப்பவர்கள், உள்ளூரில் பிறந்தவர்கள் என்பன உள்ளிட்ட பிரிவுகள் ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவை சாதிகள் அல்ல, வகுப்புகள். இதனால் எந்த குழப்பமும் வந்து விடக் கூடாது என்பதால் தான் பட்டியலை இணைப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கேட்டு எழுதும் முறை பின்பற்றப்படுகிறது’’ என்று தெரிவித்ததாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகளின் இந்த வாதம் ஏற்க முடியாதது.</p><p>இந்தியாவின் முதல் ஓபிசி பட்டியல் 1995-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டவையாக  வகைப்படுத்தப்பட்டிருந்தன. காகா கலேல்கர் உருவாக்கிய பட்டியலில் முழுக்க முழுக்க சமூகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அதன்பின் 1980-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம் தேதி மண்டல் தலைமையிலான இரண்டாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஓபிசி பட்டியலில் இந்த எண்ணிக்கை முறையே 3743, 1937 என உயர்த்தப்பட்டிருந்தது. அதற்கு காரணம், சாதியின் அடிப்படையில் மட்டுமின்றி சில தொழில் பிரிவினரையும், நாடோடிக் குழுக்களையும் அவர்களின் சமூக பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஓபிசி பட்டியலில் மண்டல் ஆணையம் இணைத்தது தான்.</p><p>ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மத்திய அரசால் சுட்டிக்காட்டப்பட்ட உள்ளூரில் பிறந்தவர்கள் என்ற வகுப்பினர் அந்தமான் தீவுகளுக்கான ஓபிசி பட்டியலில் 2011-ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டனர்.  தமிழ்நாட்டிலும் இதற்கு எடுத்துக்காட்டுகள் உண்டு. திருநங்கையர் என்பது சாதியின் பெயர் அல்ல. அது மூன்றாம் பாலினம் ஆகும். ஆனால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதால்  அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>வலிமை சேர்க்காது</strong></h2><p>இந்த நடவடிக்கைகளின் நோக்கம் சாதிகளைக் கடந்தும் சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு சமூகநீதி வழங்குவது தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கமும் சமூகநீதி வழங்குவது தான். அவ்வாறு இருக்கும் போது, சில வகுப்புகளை சாதிகளாக  பட்டியலிட்டு பதிவு செய்வதால் எந்த குழப்பமும் ஏற்பட்டு விடாது. அந்த வகுப்புகள் ஓபிசி பட்டியலில் சேர்க்கப் பட்டதன் நோக்கம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி பயன்களை வழங்குவதற்காகத் தான் என்பதால், அவர்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அவர்களை சாதிகளாகவே பதிவு செய்வதில் தவறு இல்லை. அவ்வாறு செய்வதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சிதைந்து விடாது.</p><p>அதே நேரத்தில் சில வகுப்புகளை சாதிகளாக பதிவு செய்யக் கூடாது என்பதற்காக, சாதியின் பெயரை மக்களிடமே கேட்டு பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டால், இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4147 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவரும். இது தான் சாதிவாரி மக்கள்தொகையின் நோக்கத்தையே சிதைத்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதாக அமைந்து விடும். இது சமூகநீதிக்கு வலிமை சேர்க்காது.</p><p>எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதியின் பெயரை மக்களிடம் கேட்டு, பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட்டு, அதற்கு பதிலாக கணக்கெடுப்புக்கான செயலியில் ஓபிசி சாதிகளின்  பட்டியலை இணைத்து அதிலிருந்து சாதியின் பெயரையும் எண்ணையும் தேர்வு செய்யும் முறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்; இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14&amp;ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ ஆணை S.O. 4505(E) -ஐ ரத்து செய்து விட்டு, புதிய ஆணையை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">1b1128df-bb56-4c9f-a87a-d93a224d56a2</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:46:04 +0000</pubDate><atom:updated>2026-09-05T06:46:04.787Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,kn nehru,கேஎன் நேரு,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/fty8o0me/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கே.என்.நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</strong></em></p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்...</strong></h2><p>உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என். நேரு</a> மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். </p><p>இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேரு</a> அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்! என்று கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.<br><br>இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.<br><br>ஆட்சி அமைக்க…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2096100963321065902?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies#comments</comments><guid isPermaLink="false">62959912-832b-4bbd-91d9-a28a22d1dbe6</guid><pubDate>Sat, 05 Sep 2026 04:06:56 +0000</pubDate><atom:updated>2026-09-05T04:06:56.976Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>worker death,பட்டாசு ஆலை வெடிவிபத்து,தொழிலாளி உயிரிழப்பு,Firecracker Factory Explosion,சாத்தூர்,Sattur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker factory explosion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/9ra6ixd1/fireworks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.</p> <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர்</a> அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலை</a>யில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p>இந்த வெடிவிபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் உயிரிழந்தார்.</p><p>கடந்த 3-ந்தேதி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings#comments</comments><guid isPermaLink="false">b899d9ba-f415-4a3a-a365-fa9f25bb7048</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:32:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:32:03.503Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,teachers day,ஆசிரியர் தினம்,Doctor Radhakrishnan,டாக்டர் ராதாகிருஷ்ணன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/c9pr1o58/MKS1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இந்நாளில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகிறது.</p><p>சமுதாயத்திற்கு வழிகாட்டும் ஆசிரியர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அமைகிறது.</p><p>இந்நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் AI காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p>அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">b245a60e-783f-48c0-af5e-7d6f853a099f</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:10:03.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/cmhttp0z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந்தேதி நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர் தினம்</a> கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில், இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். </p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தன்னலமற்ற அர்ப்பணிப்பு</strong></h2><p>இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/7uuoslsr/vijay0.jpg" /></figure><p>மாணவர்களின் மனங்களில் அறிவொளி ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து, அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, திறமைகளுக்கு வழிகாட்டி, எதிர்கால வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துத் தருவதோடு, நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டுவரும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்!</p><p>ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில், மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது… <a href="https://t.co/Gvx0TCnzPg">pic.twitter.com/Gvx0TCnzPg</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2096067257973780903?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru#comments</comments><guid isPermaLink="false">ca35662d-58f7-43da-9ef5-b8eb94a59b15</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:05:53 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:05:53.193Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,கேஎன் நேரு,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-05/mf5kmsvt/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.</p> <p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar">தி.மு.க.</a> ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை </h2><p>அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொட ர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னையில்</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. </p> <p>ராஜா அண்ணாமலை புரத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81">கே.என். நேருவின்</a> தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. </p> <p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>திருச்சி </h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7-30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். </p> <p> இதுபற்றி தகவல் அறிந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர். </p> <p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர். அப்போது அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் பணம் பெற்றதற்கான தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைக்கிறதா என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது.</p> <h2>தடை</h2><p>இந்த சோதனை நடைபெற்றபோது வீட்டில் இருந்து ஆட்களை வெளியில் செல்வதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதேபோன்று வெளியில் இருந்து ஆட்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.</p><p>அப்போது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ளதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சில ஆவணங்கள் குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து வெளியிடப்படும் என போலீசார் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar#comments</comments><guid isPermaLink="false">c7c76065-ae1e-4a6e-b591-e46fc4ac7da5</guid><pubDate>Sat, 05 Sep 2026 03:01:32 +0000</pubDate><atom:updated>2026-09-05T03:01:32.423Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,பிறந்தநாள் வாழ்த்து,Birthday,வஉ சிதம்பரனார்,VO Chidambaram,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/z4ncqs4p/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளர்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>தியாகத் திருவுளம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5.%E0%AE%89.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">வ.உ. சிதம்பரனார்</a> பிறந்தநாள்</p><p>நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி.?</p><p>திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார்.</p><p>இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம்.</p><p>அவற்றுடன், 1908 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirunelveli-halwa-price-hike" rel="nofollow">திருநெல்வேலி</a> எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அம்மாபேட்டை அருகே குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-protest-near-ammapettai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-protest-near-ammapettai#comments</comments><guid isPermaLink="false">0fce54bd-5ccb-431d-a6e5-418d956f8fc2</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:58:59.463Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>குடிநீர் தட்டுப்பாடு,Peoples Protest,drinking water shortage,பொதுமக்கள் சாலை மறியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tbcvjjzp/ammapettai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:title><media:description type="html"><![CDATA[ பொதுமக்கள் சாலை மறியல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tbcvjjzp/ammapettai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.</strong></em></p><p>அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூதப்பாடி ஊராட்சியில் 6-வது வார்டு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.</p><p>இவர்களின் அன்றாட குடிநீர் தேவையை தீர்க்கும் விதமாக பூதப்பாடி பகுதியில் இருந்து போர்வெல் மூலமாகவும் காவிரி ஆற்று குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.</p><p>இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் திடீரென பொதுமக்கள் இன்று காலை 6.45 மணியளவில் அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் திடீரென காலி குடங்களுடன் பெண்கள் <a href="https://www.maalaimalar.com/topic/பொதுமக்கள்-சாலை-மறியல்">சாலை மறியலில்</a> ஈடுபட்டனர்.</p><p>இது குறித்து அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீருக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 4 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026#comments</comments><guid isPermaLink="false">acd0fb12-0d4b-4cd6-aa47-ddb31fcdc0f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:39:01.935Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes">கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.</p><p>* ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish">கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார்.</p><p>* பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration">பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</a></p><p>* இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>* பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026">GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day">அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</a></p><p>* உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். </p><p>* கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5">FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</a></p><p>*எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது.</p><p>* மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>*மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>*நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company">இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா</a><br></p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.</p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/operation-talash-3357-missing-children-rescued-bihar-police-takes-decisive-action">ஆபரேஷன் தலாஷ்: காணாமல் போன 3,357 குழந்தைகள் மீட்பு - அதிரடி காட்டிய பீகார் காவல்துறை<br></a></p><p>*3,359 காணாமல் போன குழந்தைகளை கண்டறிந்துள்ளனர்.<br><br>*குழந்தை திருமணங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள கடத்தல் வழக்குகளையும் மறுவிசாரணை செய்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-tomorrow-chennai-visit">துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வந்து செல்லும் பகுதிகளான மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>* இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா வால்வ் பதிவேட்டை தொடங்கி வைக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arms-paralyzed-in-a-road-accident-doctors-cured-the-condition-by-delivering-electric-shocks-to-the-spinal-cord">சாலை விபத்தில் செயலிழந்த கைகள்.. தண்டுவடத்தில் மின் அதிர்ச்சி தந்து குணப்படுத்திய மருத்துவர்கள்</a></p><p>*பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். </p><p>*தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man">பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</a></p><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தை தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.</p><p>அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-abandon-sanitation-workers-ministers-assure-protesters">தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் - போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர்கள்</a></p><p>* தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம்.</p><p>* தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-governor-arlekar-wishes">கடமையை செய்வதையே கிருஷ்ணர் வாழ்க்கை கற்றுத் தருகிறது - ஆளுநர் அர்லேகர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து</a></p><p>* கரியவன் கருணையில் பெரியவன் இறைவடிவங்களில் பன்முகத்தன்மை கொண்ட பரந்தாமன் </p><p>* இப்படி எல்லா நிலைகளிலும் ஏகமாய் பொருந்தும் இறைவடிவம் இவன் ஒருவனே!<br></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6fc9fe6c-9fe9-4806-89a0-4979806f6196">CJP போராட்டத்தில் மண்டையை உடைத்தேன்.. ஜெயிலுக்கு செல்லவில்லை - பெருமையாக சொன்ன இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை</a></p><p>*தனது தொடர்புகளே தன்னைத் தப்பவைத்ததாக அவர் அந்த பாட்காஸ்டில் பேசியிருக்கிறார்.</p><p>*இப்படிப்பட்ட குற்றவாளிக்கு உங்கள் கட்சியினர் ஏன் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? என ராகுல் கேள்வி </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/namakkal-road-accident-four-students-killed-chief-minister-financial-assistance" rel="nofollow">சாலை விபத்தில் 4 மாணவிகள் பலி- முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு</a></p><p>*  உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவு.</p><p>*   4 பேர் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-military-academy-young-officers-display-combat-skills" rel="nofollow">சென்னை ராணுவ அகாடமியில் இளம் அதிகாரிகளின் தீரச்செயல் நிகழ்ச்சி</a></p><p>* லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.</p><p>* இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/two-workers-rescued-alive-from-tunnel-of-nepal">நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலைய சுரங்கத்தில் இருந்து 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு</a></p><p> *  சுரங்கப் பாதைக்குள் இருந்து மக்கள் பேசுவது குறித்த தகவல் கிடைப்பது ஒரு நம்பிக்கைக்குரிய அறிகுறியாகும்.

* மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/leave-kenya-president-issues-stern-order-to-tata-chemicals-what-is-the-issue">கென்யாவை விட்டு வெளியேறுங்கள்.. டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அதிரடி உத்தரவிட்ட அதிபர் - என்ன பிரச்சனை?</a></p><p>*கென்யா அரசு வெறுமனே இயற்கை வளங்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டும் விரும்பவில்லை.</p><p>*ஆண்டுதோறும் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/detergent-powder-delivered-instead-of-ordered-graphics-card-consumer-commission-orders-30000-compensation">கிராபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் பவுடர் டெலிவரி.. ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு</a><br></p><p>*ரூ.1.98 லட்சம் தொகை முழுமையாகத் திரும்பச் செலுத்தப்பட்டது.</p><p>*மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர் உறுதியாக இருந்துள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e50268af-e749-426a-a317-7ee47149cef8">கம்பத்தில் மோதிய பயணிகள் விமானம்.. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு</a></p><p>*யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று ஸ்ரீநகர் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnca-announces-free-entry-for-duleep-trophy-2026-27-final-in-chennai">துலீப் டிராபி இறுதிப்போட்டி: சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்</a></p><p>* துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.</p><p>* சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/cartographic-colonialism-call-to-adopt-the-equal-earth-map-vote-at-the-un-today">வரைபடக் காலனித்துவம்: ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தை ஏற்க கோரிக்கை - ஐ.நா.-வில் இன்று வாக்கெடுப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-japan-to-play-historic-one-off-t20i">வரலாற்றில் முதல் முறை: இந்தியா, ஜப்பான் மோதும் டி20 போட்டி</a></p><p>* இரு நாடுகளின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.</p><p>* இந்தப் போட்டிக்கு 'சுசூகி கோப்பை' என பெயரிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details#comments</comments><guid isPermaLink="false">233116aa-1b50-49c3-a8f9-c7b054794e2b</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:36:08.097Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>High Court Madurai Bench,caste,கல்வி நிறுவனங்கள்,Educational Institutions,ஐகோர்ட் மதுரை கிளை,சாதி மதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High Court Madurai Bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/17/20212967-maduraihc.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.</p><p>விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88">ஐகோர்ட் மதுரை கிளையில்</a> தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் சாதி விவரங்களை சேகரிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின்போது சாதி, மத விவரங்கள் கேட்கப்படுகின்றன.</p> <p>இதுபோன்ற நடைமுறைகள் மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குகின்றன. இதற்கு தடை 3 விதித்து, உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். </p> <p>நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தும் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் - மருத்துவர்கள் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-dengue-and-swine-flu-cases-in-tn-compared-to-last-year#comments</comments><guid isPermaLink="false">d85e6190-69fd-4c34-8b7e-e97146206ce1</guid><pubDate>Sat, 05 Sep 2026 02:23:48 +0000</pubDate><atom:updated>2026-09-05T02:23:48.592Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,dengue fever,swine flu,தமிழ்நாடு,டெங்கு காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1vaan2ap/denguefever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மழைக்காலம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.</p> <h2>வைரஸ் தொற்றுகள்</h2><p>மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் கொடிய வைரஸ் தொற்றுகளில் டெங்கு மற்றும் பன்றிக் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai">காய்ச்சல்</a> முதன்மையான இடத்தை சமீப ஆண்டுகளாக பெற்றுள்ளன. அந்தவகையில் இந்த இரு நோய்களின் தாக்கம் இந்தியாவில் நடப்பாண்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது.</p><p>அதிலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதை பொது சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.</p> <h2>அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்</h2><p>அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 13 ஆயிரத்து 573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்டவர்களில் 0.06 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது சற்று ஆறுதல் தரும் செய்தி என்றாலும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.</p> <p>கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாதவாரியாக எவ்வளவு பாதிப்புகள் என்ற விவரமும் கிடைத்திருக்கிறது. அதில் ஜனவரியில் 1,722 பேரும், பிப்ரவரியில் 1,322 பேரும், மார்ச்சில் 1,228 பேரும், ஏப்ரலில் 1,201 பேரும், மே மாதத்தில் 1,062 பேரும், ஜூனில் 1,384 பேரும், ஜூலையில் 2,339 பேரும், ஆகஸ்டில் 3,315 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>சென்னை, கோவையில்...</h2><p>அதாவது ஜனவரியில் பாதிப்பின் தாக்கம் ஏற்றம் கண்டு பிறகு குறைந்து வந்து ஜூனில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் பாதிப்புகள் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.</p> <p>கடந்த ஆண்டு ஜூலையில் 1,880 பேர் என்றிருந்த பாதிப்பு இந்த ஆண்டில் 2,339 பேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,832 என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டில் 3,315 ஆக எகிறியுள்ளது.</p><p>இதில் அதிகம் சென்னை மாவட்டத்தில்தான் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்டு வரையிலான தமிழ்நாடு மொத்த டெங்கு பாதிப்பான 13.573-ல் சென்னையில் மட்டும் 2.584 ஆக உள்ளது. அதற்கடுத்தபடியாக கோவையில் 1,999 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <h2>மழைக்காலம்</h2><p>ஆண்டுவாரியான பாதிப்பில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வெகுவாக குறைந்து. ஆண்டு பாதிப்பு 25,533 ஆக இருந்தது.</p><p>இந்த நிலையில் நடப்பாண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான எண்ணிக்கையில் 13,573 ஆக உள்ளது. இன்னும் மழைக்காலம் வேற தொடங்க இருக்கிறது. எனவே நோய் பாதிப்பு எப்படி இருக்கும்? என்பதை கணிக்க முடியாது.</p> <h2>பன்றிக் காய்ச்சல்</h2><p>இதேபோல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">பன்றிக் காய்ச்சல்</a> பாதிப்பைப் பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,558 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பாதிப்புப் பட்டியல்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.</p><p>2010-ம் ஆண்டில் இருந்து பன்றிக் காய்ச்சல் பாதிப்பை ஒப்பிடும்போது, 2024, 2025-ம் ஆண்டை விட நடப்பாண்டில் பாதிப்பு அதிகரித்து இருப்பது புள்ளிவிவரத்தில் தெரிகிறது.</p> <p>2024-ல் 1,777 பேரும், 2025-ல் 1,288 பேரும் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த ஆண்டில் 1,791 ஆக உள்ளது.</p><p>மாதம் வாரியான பாதிப்பில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் பல மடங்கு பாதிப்பு உயர்ந்திருக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் 46 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, இந்த ஆண்டில் 645 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <h2>கவனம் வேண்டும்</h2><p>இவ்விரு நோய்களும் தனிமனிதனின் உடல்நலத்தைப் பாதிப்பதோடு மட்டுமின்றி, சமூகத்தில் ஒரு சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றன.</p><p>எனவே, உரிய விழிப்புணர்வு, சுற்றுப்புறத் தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளே இவற்றின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ளன. மேலும், தனிமனித நடவடிக்கை, சுகாதார பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை முன்னெடுப்புகளை மிகுந்த கவனத்தோடு மக்கள் பின்பற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.</p> <h2>சென்னையில் பாதிப்பு ஏன் அதிகம்?</h2><p>சென்னையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவுவது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது:-</p><p>சென்னையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக இருக்க முக்கிய காரணம் பொது சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாதது தான். மக்கள்தொகை அடர்த்தியாக இருப்பதால், ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று எளிதில் பரவுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காணப்படும் நபர்கள் 5 நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.</p><p>ஆனால், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்கள் முகக்கவசம் கூட அணியாமல் பொது இடங்களுக்கு சென்று நோய் பரவலை அதிகப்படுத்துகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அவர்கள் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பரவும் தன்மை கொண்ட காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p> ]]></content:encoded></item><item><title>நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horror-in-nellai-stone-pelting-attack-during-protest-panchayat-president-dies#comments</comments><guid isPermaLink="false">1d843c77-7ba7-4ad1-b583-69523dd9481f</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:26:44 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:26:44.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Stone Pelting,கல்வீச்சு,Panchayat president,Kannanallur,ஊராட்சி மன்றத் தலைவர்,கண்ணநல்லூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லையில் பயங்கரம் - போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் - ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/dpfl9mci/New-Project-2026-09-04T215556.963.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>கண்ணநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் சென்றுள்ளார்.</p><p>அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மகாராஜன் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார்.</p><p>அப்போது பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இச்சம்பவம் குறித்து வள்ளியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் நெல்லை எஸ்.பி. விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-is-not-part-of-the-tvk-alliance-m-veerapandian#comments</comments><guid isPermaLink="false">b532ad59-32ce-469e-91f4-b9bf77d1822e</guid><pubDate>Fri, 04 Sep 2026 16:08:23 +0000</pubDate><atom:updated>2026-09-04T16:08:23.645Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,tvk,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக கூட்டணியில் இல்லை’ - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/3d2xtgdp/New-Project-2026-09-04T213738.785.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் இன்று அதன் கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தவெக கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது. </p><h2>இடதுசாரித் தலைவர்கள்</h2><p>சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2>வைகோ </h2><p>மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவை அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்தனர். அப்போது கூட்டத்திற்கான அழைப்பிதை வழங்கியதாக கூறப்படுகிறது.</p><h2>திருமாவளவன்  </h2><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் குழு விரைவில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளது. </p><h2>இடதுசாரிகள் மறுப்பு</h2><p>இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்த அழைப்பு என தகவல்கள் வெளியாகி வரும்நிலையில் இடதுசாரி கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடதுசாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கவே அமைச்சர்கள் தன்னை சந்தித்தாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar">பெ.சண்முகம் </a>தெரிவித்துள்ளார்.</p><h2>கூட்டணியில் இல்லை</h2><p>அதுபோல தவெகவின் கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும் தெரிவித்துள்ளார்.  </p><p>தவெக அரசை சிபிஐ கட்சி வெளியில் இருந்து மட்டுமே ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் மட்டுமே இந்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. </p><p>தவெக அமைச்சர்கள் தங்களை வந்து சந்தித்தபோது அரசியல் குறித்துப் பேசினோம் என்றும், அவர்கள் தங்களை அமைச்சர்களாக அல்லாமல் தவெக நிர்வாகிகளாகவே சந்தித்தனர் என்றும் வீரபாண்டியன் விளக்கமளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-protest-temporarily-withdrawn#comments</comments><guid isPermaLink="false">486857ce-4262-4c78-b056-a70c4f48a4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 15:16:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T15:16:42.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Sanitary workers,தூய்மை பணியாளர்கள் போராட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தூய்மைப் பணியாளர்கள் அமைச்சர்கள் சந்தித்தபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் சந்திப்பு - தூய்மைப் பணியாளர் போராட்டம் தற்காலிக வாபஸ்!
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2zfqv7px/1200-675-27556290-thumbnail-16x9-sdew22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தொடர் போராட்டம் </h2><p>சென்னையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு , தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan">தூய்மைப் பணியாளர்கள்</a> தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.</p><p>முதலில் மண்டலவாரியான பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், கடந்த ஒருவாரமாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2>அமைச்சர்கள் சந்திப்பு </h2><p>தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அரசுத்தரப்பில் சந்திக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட  பலதரப்பினரும் கேள்வி எழுப்பினர். </p><p>சட்டப்பேரவையிலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து  பேசினர். அப்போது பேசிய அமைச்சர்கள் கூறியதாவது; </p><p>பழைய ஆட்கள் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-national-convenor-arvind-kejriwal-and-punjab-cm-bhagwant-mann-hold-a-roadshow-in-madhya-pradesh-683442">கஜானாவை காலி </a>செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தனர். </p><p>மேலும் யாருக்கும் தொந்தரவுமின்றி போராடிய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இது ஒரு போராட்டம் இனறி மாநாடு போல் இருக்கிறது , ஆட்சி அமைத்து நூறு நாள் தான் ஆகிறது, அப்படியே யாரையும் விட்டுவிட மாட்டோம், எங்களுக்கு அவகாசம் வேண்டும் தெரிவித்தனர். </p><h2>உறுதியளிப்பு </h2><p>மேலும் அடுத்த மாதம் முதல் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.50 தருவதாகவும், கடந்த காலத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office">தூய்மைப் பணியாளர்கள்</a> மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் உறுதி அளித்தனர். </p><p>மேலும் மண்டலம் 4,7,8-ல் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், பணியாளர்களுக்கு தேவையான அனைத்து கால் , கை உறைகளும் வழங்கப்படும் என்றும், மகப்பேறு விடுப்பு, வார விடுப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர்.  </p><p>அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/oversight-escaped-the-governments-notice-tvk-functionaries-express-regret-over-the-actions-of-the-guziliyamparai-tahsildar#comments</comments><guid isPermaLink="false">841fd341-2cb4-4657-974c-72ed15970b32</guid><pubDate>Fri, 04 Sep 2026 14:47:08 +0000</pubDate><atom:updated>2026-09-04T14:47:08.981Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரசின் கவனத்திற்கு வராமல் தவறு: தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் செயலுக்கு வருத்தம் தெரிவித்த தவெக அமைச்சர்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/7yml0k4m/New-Project-2026-09-04T195814.697.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள், தவெக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்று தமிழ்நாடு அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.</p><p>இந்த தன்னிச்சையான செயலுக்காக அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து மாநிலச் செயலாளர் சண்முகத்திடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.<br><br>தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல்… <a href="https://t.co/t4qRBz16Dw">pic.twitter.com/t4qRBz16Dw</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2095848193854734665?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>இந்த சந்திப்பு தொடர்பான செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam">பெ.சண்முகம் </a>வெளியிட்டுள்ளார்.</p> <h2>வட்டாட்சியர் சுற்றறிக்கை</h2><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதியில் உள்ள இடதுசாரி (சிபிஎம் மற்றும் சிபிஐ) கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.</p><h2>மாணவர் போராட்டக் கட்டுப்பாடு </h2><p>இதேபோல், இடதுசாரி அமைப்புகளின் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைக் கண்காணிக்க உயர் கல்வித்துறையின் மூலம் ஒரு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.</p><p>இடதுசாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து சுற்றறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.</p><p>இந்நிலையில் அமைச்சர்கள் சிபிஎம் அலுவலகம் சென்று விளக்கம் அளித்து, இனி இதுபோன்று நடக்காது என உறுதியளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/broiler-farm-gate-price-in-namakkal-zone-drops-to-rs-95</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/broiler-farm-gate-price-in-namakkal-zone-drops-to-rs-95#comments</comments><guid isPermaLink="false">50e9522b-73bc-4367-b8c1-3d9dbe8da0e5</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:29:25 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:29:25.028Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முட்டை,முட்டை விலை,கறிக்கோழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/drkd7861/kozhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[  கறிக்கோழி பண்ணை]]></media:title><media:description type="html"><![CDATA[  கறிக்கோழி பண்ணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/drkd7861/kozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது.</strong></em> </p><p>நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோாடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. </p><h2><strong>10 லட்சம் கோழிகள்</strong> </h2><p>இந்த பண்ணைகள் மூலம் தினசரி 30 லட்சத்திற்கும் அதிகமான <a href="https://www.maalaimalar.com/topic/கறிக்கோழி">கறிக்கோழிகள்</a> உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக விலை படிப்படியாக சரிந்து தற்போது ஒரு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக நீடிக்கிறது. ஆனாலும் சில்லரை விற்பனை கடைகளில் தற்போது வரை ஒரு கிலோ கறி 250 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. </p><p>520 காசுகளாக நீடிப்பு</p><p>முட்டைக்கோழி விலையில் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 120 ரூபாயாக நீடிக்கிறது. இதே போல நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையிலும் கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் 520 காசுகளாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தனியார் பொறியியல் கல்லூரியில் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி  தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-engineering-college-student-suicide-in-sriperumbudur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-engineering-college-student-suicide-in-sriperumbudur#comments</comments><guid isPermaLink="false">9b594aae-8c3c-4542-b498-da465d43916f</guid><pubDate>Fri, 04 Sep 2026 10:16:29 +0000</pubDate><atom:updated>2026-09-04T10:16:29.329Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,college student suicide,கல்லூரி மாணவி தற்கொலை,கல்லூரி  மாணவர் தற்கொலை முயற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8g7pwyli/suicide.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/8g7pwyli/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள்  சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</strong></em></p><p>சென்னை அருகே உள்ள பூந்தமல்லியை அடுத்த  தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தக் கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் மாணவ-மாணவிகள் தங்கி படிக்கிறார்கள். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து  மாணவ,மாணவிகள் கல்லூரி பஸ் மூலம் சென்று வருகின்றனர். </p><p>இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் <a href="https://www.maalaimalar.com/topic/கல்லூரி-மாணவி-தற்கொலை">மாணவி  தற்கொலை</a> செய்து கொண்ட சம்பவமும், நேற்று மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </p><h2><strong>மாணவி தற்கொலை</strong></h2><p>கல்லூரி வேலை நேரத்தில் மாணவி ஒருவர் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெரின் (19). ஏ.ஐ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர். தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். </p><p>இவரது தந்தை அருள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். தாயார் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.  பெற்றோருக்கு ஷெரின் ஒரே மகள் ஆவார். வழக்கம் போல கல்லூரிக்கு வந்த ஷெரின் திடீ ரென 5-வது மாடிக்கு சென்று அங்கிருந்து  கீழே குதித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில் பெற்றோர் அன்பும், அரவணைப்பும் இல்லாததால் இந்த முடிவை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவியின் தற்கொலை சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்த சக மாணவ, மாணவிகள்  சோகத்தில் இருந்த நிலையில் நேற்று மற்றொரு சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2><strong>மாணவர் தற்கொலை முயற்சி</strong></h2><p>தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் சசிதரன் (19). இவர் நேற்று  கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென 3-வது மாடியில் இருந்து குதித்தார்.  இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன.  உயிருக்கு போராடிய அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சசிதரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>மாணவர் சசிதரன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்றும்  அதனால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  கல்லூரி மாணவர் மாடியில் இருந்து விழுந்து  தற்கொலைக்கு முயன்றதை  கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர். தனியார் பொறியியல் கல்லூரியில் அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவத்தால் மாணவ-மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை நேற்று அறிவித்தது. </p><p>கல்லூரி வளாகத்தில் தங்கிப் படித்த விடுதி மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் அந்த  கல்லூரி 7-ந்தேதி திறக்கப்படும் என்று மாணவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூரில் டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்- மதுபிரியர் புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dead-insects-and-beetles-found-inside-a-tasmac-liquor-bottle-in-tiruchendur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dead-insects-and-beetles-found-inside-a-tasmac-liquor-bottle-in-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">dd5f7986-91d2-44cf-aecd-d4fe5dcc0d7c</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:54:14 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:54:14.367Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபாட்டில்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eqgrx53y/thoothukudi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுபாட்டிலில் இறந்து கிடந்த பூச்சி, வண்டுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/eqgrx53y/thoothukudi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>"பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார்.</strong></em> </p><p>தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி முத்து. கூலித்தொழிலாளி.  இவர் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து 3 மதுபாட்டில்கள் வாங்கி உள்ளார். </p><p>அதில் "பிளாக் பியர்ல் " எனும் வகை மதுபாட்டிலில் இறந்த நிலையில் விஷ பூச்சி, வண்டுகள் இருந்துள்ளது. இதை அறியாமல் வாங்கி மதுவை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் பேச்சிமுத்து தனக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறி உள்ளார். </p><p>இதனையடுத்து வாங்கிய மதுபாட்டிலை பார்த்த போது அதில் இறந்த நிலையில் பூச்சி, வண்டுகள் இருந்ததால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாங்கிய மது பாட்டிலில் இதுபோன்று பூச்சி, வண்டுகள் இருந்துள்ளதாகவும் புகார் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலம் அருகே 7 மாத கர்ப்பிணி கொலையில் காதலன் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lover-arrested-in-7-month-pregnant-woman-murdered-case-near-salem#comments</comments><guid isPermaLink="false">e8c17f52-dcc3-4f0b-9d36-f7c6c695ee42</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:45:52.614Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேலம்,Salem,காதலன் கைது,Pregnant woman murdered,Lover arrested,கர்ப்பிணி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ pregnant woman - arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/h84xc45h/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p> <p>சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோண சமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது மகள் கோகிலா (வயது 23). கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.</p> <h2>7 மாத கர்ப்பிணி</h2><p>திருமணம் ஆகாத கோகிலா கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து கோகிலாவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோகிலாவின் குடும்பத்தினர் இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கோகிலாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கோண சமுத்திரம் கிராமம் அருகே உள்ள கன்னியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரது மகன் அம்மாசி (26) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>அப்போது கோகிலாவின் கர்ப்பத்திற்கு அம்மாசிதான் காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோகிலாவை திருமணம் செய்து கொண்டு வாழும் படி அம்மாசிக்கு அறிவுரை வழங்கினர். அப்போது தனது ஊரில் கோவில் திருவிழா நடப்பதாகவும் திருவிழா முடிந்த பின் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாகவும், அதுவரை கோகிலா தன் வீட்டில் இருக்கட்டும் என கூறிய அம்மாசி கோகிலாவை தன்னுடன் கன்னியாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.</p> <p>இந்நிலையில் அம்மாசியின் வீட்டிலிருந்த கோகிலா கடந்த மாதம் 25-ந் தேதி திடீரென காணாமல் போனதாக அம்மாசி, கோகிலாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காத நிலையில் இதுகுறித்து கோகிலாவின் பெற்றோர் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.</p> <p>இந்நிலையில் நேற்று கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் கிராமம், தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டார்.</p><h2>அம்மாசி கைது</h2><p>போலீசாரின் விசாரணையில் கோகிலாவை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அம்மாசியை கைது செய்தனர். மேலும் அவர் போலீசில் வாக்குமூலமாக கூறியதாவது:-</p> <p>சம்பவத்தன்று இரவு நான் கோகிலாவிடம் நீ கர்ப்பமாக இருப்பதை வெளியில் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டாயே என்று கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கோகிலாவை பலமாக தாக்கினேன். இதில் கோகிலா நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். பின்னர் நான் கோகிலாவை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தேன்.</p> <p>தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டிலிருந்த ஒரு சாக்கு பையில் கோகிலாவின் உடலை திணித்து மூட்டையாக கட்டி எனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று வெள்ளாளபுரம் அருகே உள்ள விவசாய கிணற்றில் வீசினேன். பின்னர் கோகிலா பெற்றோரிடம் கோகிலா மாயமாகி விட்டதாக தெரிவித்தேன். இதையடுத்து அனைவரும் மாயமான கோகிலாவை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து கோகிலாவை தேடுவது போல் நடித்தேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/viral-fever-spread-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b8f3e4b8-122c-40e1-ab62-876ab8ee16ce</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:34:42 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:34:42.834Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வைரஸ் காய்ச்சல்,viral fever</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/sigeffmy/fever.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</strong></em></p><p>சென்னையில் தற்போது புதுவித <a href="https://www.maalaimalar.com/topic/வைரஸ்-காய்ச்சல்">வைரஸ் காய்ச்சல்</a>  வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள். </p><p>சென்னையின் சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஏப்ரல், மே மாதங் களை போன்று பகலில் வெயில் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் மழை காலம் போன்று காணப்படுகிறது.</p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்வது வாடிக்கையாக உள்ளது. ஆனால் அந்த சுவடே தெரியாத அளவுக்கு பகலில் வெயில் வாட்டுகிறது.</p><h2><strong>காய்ச்சல் பாதிப்பு</strong></h2><p>இப்படி  கால நிலை மாற்றம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல், சளி, தொடர் தும்மல் ஆகியவற்றுடன் இருக்கவே முடியாத அளவுக்கு இந்த காயச்சல் ஆண்-பெண் பாகுபாடின்றி அனைவரையும் சாய்த்து விடுகிறது.</p><p>காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களால் எந்த உணவையும் சாப்பிட முடிவதில்லை. வாய் கசப்புடன் சாப்பாடே வேண்டாம் என்கிற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள்.</p><h2><strong>5 நாட்கள் வரை</strong></h2><p>இந்த காய்ச்சல் 5 நாட்கள் வரை நீடிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மனநல, சுகாதார இயக்குனரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.எம். பதூர் மொய்தீன் கூறும் போது, காய்ச்சல் பாதிப்பை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எச்1என்1 என்ற வைரஸ் பாதிப்பால் ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டாலோ  அதன்மூலம் மற்றவருக்கும் எளிதாக பரவி விடுகிறது. எனவே காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>முக கவசங்களையும் அணிந்து கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை இந்த காய்ச்சல் எளிதில் தொற்றி கொள்கிறது. ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் மற்றவர்கள் தற்காப்புக்காக டாக்டர்களின் அறிவுரையுடன் காய்ச்சல் மாத்திரைகளை உட்கொள்ளலாம் என்றார்.</p><h2><strong>மாணவ-மாணவிகள்</strong></h2><p>இந்த காய்ச்சல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சிறிய கிளினிக்குகளிலும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டே அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-request-tn-fishermen-held-in-sri-lankan-prisons-must-be-released-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-request-tn-fishermen-held-in-sri-lankan-prisons-must-be-released-immediately#comments</comments><guid isPermaLink="false">705e5a52-c7d0-4895-8520-70dbcc3855b0</guid><pubDate>Fri, 04 Sep 2026 09:31:52 +0000</pubDate><atom:updated>2026-09-04T09:31:52.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,TN fishermen,தமிழக மீனவர்கள்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-09/0ervb47a/New-Project-2026-07-09T180203.318.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-09/0ervb47a/New-Project-2026-07-09T180203.318.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நமது மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p> <h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூபாய் 5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சொந்தக் கடலில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறிக் கைது செய்வதும், சிறையில் அடைத்து லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதும் தொடர்கதையாகி விட்டது.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>கார்ப்பரேட் நண்பர்களின் வியாபார நலனுக்காக மட்டுமே ஓடிஓடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையிடம் சென்று நம் மீனவர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூட பேச மறுப்பது ஏன்? ரஷியா - உக்ரைன் போரையே நிறுத்துவதாகப் பேசி நாடகம் ஆடும் மோடி தன் சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை வதைக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? ஒருவேளை இவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?</p> <h2>வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்</h2><p>கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளில் வரி விலக்கு கொடுக்கும் இந்த பா.ஜ.க. அரசு, ஏழை மீனவர்களின் இந்த அபராதத் தொகையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவிக்கப் பொறுப்பேற்க வேண்டும்.  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, இந்த அநியாயக் கைதுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, நமது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும்</a> அவர்களது படகுகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாகத் தாயகம் அழைத்து வர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>