<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 06:36:56 +0000</lastBuildDate><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">c33e0a3a-d0c2-41d7-9b7f-b2228a269e51</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:12:55.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Deep depression,வங்கக்கடல்,bay of bengal,காற்றழுத்த தாழ்வு பகுதி,Indian meterological centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Weather]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்குவங்கம்- ஒடிசா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆகஸ்டு 18ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மழை </h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>காற்றழுத்த தாழ்வு பகுதி</h2><p>இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:58:52.729Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">04b5bf12-8ff6-4cf5-a171-735058433306</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:19:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:19:58.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,காவிரி நீர்,Manickam Tagore,Cauvery Issue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran- Anbumani ramadoss- Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு நீர் திறந்ததை எதிர்க்கும் கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.</p><p>ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயேபி. எஸ். எடியூரப்பா மற்றும்  பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><p>தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது!</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரே இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. </p><p>ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் </p><p>நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா? </p><p>தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா? </p><p>பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>19-ம் தேதி வரை நீடிக்கும் மழை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19#comments</comments><guid isPermaLink="false">37956728-e8e3-40f1-84bf-d6e617e4480f</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:23.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,சென்னை,Chennai,Heavy Rain,கனமழை எச்சரிக்கை,weather report,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது:-</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை (17-ந்தேதி) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 18-ந்தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை யும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 19-ந்தேதி நீல கிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery#comments</comments><guid isPermaLink="false">ce122d1e-24c5-4d47-8398-083e3855f290</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:22.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery river,நீர் வரத்து அதிகரிப்பு,ஒகேனக்கல் காவிரி ஆறு,parisal,hogenakkal cauvery river,பரிசல் இயக்கத்திற்கு தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒகேனக்கல்</h2><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதன்எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>முல்லைப் பெரியாறு அணை</h2><p>முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 920.30 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 122.95 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3,212.10 மில்லியன் கனஅடியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office#comments</comments><guid isPermaLink="false">c66486f8-c18d-41ba-8df8-20a9201cb771</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:39:46.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசிஷ் பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/rz8uv3cp/AsishBanerjee001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட் வசித்து வந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆசிஷ் பானர்ஜி. இவர் தனது வீட்டு அருகில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>தூக்கில் தொடங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உடல் உடற்கூறு சோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h3>5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆகிஷ் பானர்ஜி</h3><p>இவர் ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோது, துணை சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.</p><p>இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார். ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா என்ற பகுதியில் வசித்து வந்தார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும், ஏராளமான தொண்டர்கள் அலுவலத்திற்கு வெளியே குவிந்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர்</h2><p>அவர் கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என போலீசார் தீவிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister..!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech#comments</comments><guid isPermaLink="false">35a37a4f-cfd1-4027-bf5e-64061a8cb7c3</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:58:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:58:24.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Independence Day,சுதந்திர தினம்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக பேசிய பிரதமரே இளைஞர்கள் வாழ்வோடு விளையாடாதீர் எனவும் நிர்வாக சீட்கேட்டை புள்ளிவிவரங்களே அப்பட்டமாக சொல்கின்றன. இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr.Prime Minister எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p>2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ரூ.29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.</p><p>தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர். </p><p>சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன. </p><p>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">8a8a70a3-2b28-4c92-b725-9de674c09b2f</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:40:24.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,DMK MP Kanimozhi,திமுக எம்பி கனிமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பாலியல் குற்றச்சாட்டு</h2><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.</p><p>ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p>குற்றச்சாட்டுகள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடை பெறுவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசை எதிர்த்து...</h2><p>'எதிர்ப்போம், எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ இதுவரை மத்திய அரசை எதிர்த்து எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை.</p><p>2 நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது.</p><h2>தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி</h2><p>எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது.</p><p>தமிழகத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter#comments</comments><guid isPermaLink="false">ebb5148e-5468-45ff-842c-b523da1719b0</guid><pubDate>Sat, 15 Aug 2026 18:15:21 +0000</pubDate><atom:updated>2026-08-15T18:15:21.909Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,கரூர்,Karur,KULITHALAI,குளித்தலை,sexual assault on a minor girl</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது பேத்தியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்த இளைஞனை பாட்டி அரிவாளால் வெட்டிய  சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தில் தாய் தந்தையுடன் அந்த 4 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறாள். நேற்று சிறுமியை பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பக்கத்து வீட்டு இளைஞனிடம் கேட்டுள்ளார்.</p><p>சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் சிறுமியை பாட்டியின் வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்</p><p>வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பாட்டியிடம் கூறியிருக்கிறாள்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த 55 வயது பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனைத் தேடிச் சென்றுள்ளார்.</p><p>குளித்தலை பகுதியில் உள்ள ஒரு டீக் கடை அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.</p><p>10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.</p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.</p><p>சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><p>படுகாயம் அடைந்த இளைஞன், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.</p> <p>பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 55 வயது பாட்டியைக் கைது செய்தனர்.</p><p>சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உள்நோக்கம் இல்லை.. முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் சொன்ன விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism#comments</comments><guid isPermaLink="false">15343f8d-4d2b-43bb-bc84-73f249570674</guid><pubDate>Sat, 15 Aug 2026 17:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-15T17:35:46.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,விஜய்,vijay,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் "அப்பாவை காணோம்" என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark">கண்டனங்கள் </a>எழுந்து வரும் நிலையில் அதற்கு அவர் வில்லகம் அளித்துள்ளார். </p><p>பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. </p> <h2>சர்ச்சை பேச்சு</h2><p>இதில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள்.</p><p>வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.</p> <h2>கண்டனம்</h2><p>நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகமானது என தவெக தரப்பில் இருந்தும் பிற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த நடிகை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">குஷ்புவும் </a>நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில்,</p><p>"ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. </p><p>தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:23:49.053Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test">இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</a></p><p>* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</a></p><p>* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status">மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</a></p><p>* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement">இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</a></p><p>* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.</p><p>* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</a></p><p>* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><p>* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech#comments</comments><guid isPermaLink="false">1904e4d4-7bc0-4386-93a6-3dff7b9414cf</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:07.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,குஷ்பு,Khushbu,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ khushbu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.</p><h2>பெண்கள் பகடைக்காய் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். </p><p>நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement#comments</comments><guid isPermaLink="false">7e0e97f5-781c-4b81-8497-b3bc393f1f4c</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:03:33.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,M.K.Stalin,தமிழக அரசியல்,Secretary,DMK.,மு.க.ஸ்டாலின்,இளைஞர்கள்,youthsDistrict,மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ M.K. Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>தொண்டர்களின் கருத்துக்கள்</strong></h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தலில் நடந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. </p><p>இவை அனைத்தையும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் இருக்கும் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தற்போது தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் சரியான முறையை கடைபிடிக்காதவர்களின் பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>இளைஞர்களுக்கு வாய்ப்பு</strong></h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போது, எம்.எல்.ஏ.க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்</strong></h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து சரிந்து வரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்- சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3#comments</comments><guid isPermaLink="false">994871da-dc36-416d-bf9a-069405a1020b</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:41 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:41.013Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Veeranam Lake,வீராணம் ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:title><media:description type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</strong></em></p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே <a href="https://www.maalaimalar.com/topic/வீராணம்-ஏரி">வீராணம் ஏரி</a> அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 24 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் ஏரியை வந்தடைகிறது.</p><h2><strong>சிக்கல்</strong></h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.  அதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. </p><p>எனவே சிறப்பு கவனம் செலுத்தி  கடந்த மாதம் ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது தடைப்படாமல் நடைபெற்றது.</p><p>தற்போது ஏரியில் 41.25 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</p><p>அந்த தண்ணீரும் போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை தொடர்ந்து நயினார் நாகேந்திரன்.. அரசியல் களத்தில் தொடரும் நாகரிகமற்ற பேச்சுகள்..!- அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">a0fe0110-bcf2-4e53-9392-6f6a945fdfb6</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:10:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:10:35.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,annamalai,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow"> திமுக</a>வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. </p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம்.  ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்திலிருந்து வெளிமாநில விமான சேவை தொடர &apos;உடான்&apos; திட்டத்தை 7 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem#comments</comments><guid isPermaLink="false">17cd6b02-173f-4ded-9fdd-fb098cb4c8b6</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:53:13.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம்  விமான நிலையத்தில்  இருந்து  கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான விமான சேவை  தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த விமான நிலையத்திற்கான  உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.</strong></em></p><p>சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே. இராம் மோகன் நாயுடுக்கு  மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><p>மாண்புமிகு விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. இராம்மோகன் நாயுடு அவர்களுக்கு,</p><p>வணக்கம்!</p><p>தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.</p><p>சேலம் கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் 33 ஆண்டுகளுக்கு முன் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்றாலும், அங்கிருந்து வணிகரீதியிலான விமானப்போக்குவரத்து சேவை அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அதே ஆண்டில்  தொடங்கப்பட்டாலும் கூட அது நீடிக்கவில்லை. அதன்பிறகும் பல முறை விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், அவை போதிய ஆதரவின்றி அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படுவதே வாடிக்கையானது.</p><p>எளிய மக்களும் விமானத்தில் பறப்பதை சாத்தியமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட உடான் ((UDAN-Ude Desh ka Aam Naagrik) ) திட்டத்தின் கீழ் 2018&amp;ஆம் ஆண்டில் சேலம் &amp; சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டாலும் 2021&amp;ஆம் ஆண்டில் மீண்டும் நிறுத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த உடான் 5.2 திட்டத்தின் படி 2023&amp;ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26&amp;ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவை தவிர உடான் திட்டத்தில் இல்லாமல் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது.</p> <p>சேலத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்தில் 11 முறையும், சென்னை மற்றும் கொச்சிக்கு வாரத்தில் 7 முறையும், ஐதராபாத்துக்கு வாரத்தில் 4 முறையும் தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  சேலம் விமான நிலைய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் உடான் 5.2 திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்ட சலுகைகள் தான்.</p><p>சேலம் போன்ற நகரங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் போது தொடக்க நிலையிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. காலப்போக்கில் தான்   அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். அதுவரை தனியார் விமான  நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்காக நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் தான் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன.</p><p>உடான் 5.2 திட்டம் வரும் அக்டோபர் 25&amp;ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான சேவையை நிறுத்த தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. அந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு மட்டுமே  விமான சேவை இயக்கப்படும். அது சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.</p><p>இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து விமானங்களை இயக்குவதற்கான  உடான் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஆனால், அந்தத் திட்டத்தின் காலவரையறை தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை தடுக்கிறது. உடான் திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே   செயல்படுத்தப்படுகிறது. ஒரு இரண்டாம் நிலை நகரத்திலிருந்து தொடங்கப்படும் விமான சேவை தற்சார்பு நிலையை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அவ்வாறு இருக்கும் போது 3 ஆண்டுக்கு மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.</p><p>சேலத்திலிருந்து கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை தொடங்கப்பட்ட போது ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இப்போது 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது   60% முதல் 70% என்ற அளவுக்கு உயரும் போது விமான நிறுவனங்கள் அரசின் நிதி உதவியின்றி  விமானங்களை இயக்க முடியும். சேலம் &amp; சென்னை சேவை அப்படித் தான் நடைபெற்று வருகிறது.</p><p>உடான் 5.2 சேவை நிறுத்தப்படுவதால் சேலம் விமான நிலையம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களின் சிறிய விமான நிலையங்களும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் கல்புர்கி, சிவமோகா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உடான் திட்ட சலுகைகள் அக்டோபர் மாதம் கைவிடப்பட இருப்பதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள உடான் 5.2 திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதன்பின் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டால், அதற்காக ஆகும்  செலவில் பாதியை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.</p><p>தமிழ்நாட்டிலும் சேலத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் தொடர்வதை உறுதி செய்வதற்காக உடான் 5.2 திட்டத்தை 2028&amp;ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். கர்நாடக அரசு முன்வைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், 2028&amp;ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் உதவியுடன் உடான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்தும் ஆராய வேண்டும்; சேலம் நகரிலிருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகளை  தொடங்குவதற்கு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks#comments</comments><guid isPermaLink="false">7c59db67-a391-4c69-b720-c5e147420b64</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:47:28.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரும் 17-ந்தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th#comments</comments><guid isPermaLink="false">5d6220dd-18cb-470b-8275-1393057da1b1</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:21:47.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p> <h2>புதுவை மற்றும் காரைக்கால்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>4 மாவட்டங்களில் கன மழை</h2><p>17-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p>வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதி</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns#comments</comments><guid isPermaLink="false">1ad3c2b3-339c-413b-8031-071817d3dfeb</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:09:59.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Raj mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் "அப்பாவை காணவில்லை" என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights" rel="nofollow">முதலமைச்சர்</a> கூறியதற்கு எதிராக நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.</p><p>திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><h2>டிஜிபி அலுவலகத்தில் புகார்</h2><p>முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">குற்றவியல் நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark#comments</comments><guid isPermaLink="false">a39310c7-e973-4a29-9a10-f432241366e4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:51:57.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,cm vijay,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni arasu - Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். </p> <h2>வன்னி அரசு</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p> <h2>பாஜக</h2><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.</p> <p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அண்ணாமலை தலைமையில் நாளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa5285d8-ce14-47ac-8b30-90d59ef02f2a</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:46:13.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.</strong></em>  </p><p>வீ த லீடர்ஸ் அமைப்பை <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> தொடங்கியது முதல் சமூக முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்டை காரணங்களை கண்டறிந்து அதுபற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், மாரத்தான், இளைஞர்களை சந்தித்து உரையாடுதல் போன்றவற்றை நடத்தினார்கள்.</p><h2><strong>50 லட்சம்  மரக்கன்றுகள்</strong></h2><p>இந்த மாதம் சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஏரி, கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதில் இந்த மாதம் மட்டும் சின்னக் கலைவாணர் மறைந்த விவேக் பெயரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அந்த பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.</p><p>கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைகளை தூய்மை படுத்தும் பணிகளை அண்ணாமலை தொடங்கி வைத்தார். 3-ந்தேதி மதுரையில் வைகை ஆற்றை தூய்மை படுத்தும் பணிகளையும், மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கி வைத்தார்.  சென்னையில் நாளை (16-ந்தேதி) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.</p><p>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.  பேரணிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில் நிர்வாகிகள் மாதவரம் எம்.மனோகரன், கிருஷ்ண மூர்த்தி, வெங்கடேஸ்வரா, லயன். பி.செல்லதுரை, எஸ்.தியாகராஜன், ஏ.செல்வ குமார், பி.மகாலிங்கம்,  ஏ.நிர்மல்ராஜ், கிஷோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். மேலும்  நடிகர் விவேக் மனைவி அருள் செல்வி விவேக், ஆங்கிலிட்டன் சர்ச் அருட்தந்தை சாமுவேல் குணசேகரன் ஆகியோரும் உடன் நடந்து செல்கிறார்கள்.</p><p>ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பேரணி நிறைவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.</p><p>பேரணியில், மரங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பசுமையான தமிழகத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது ஆகியவை குறித்து வலியுறுத்தப்படுகிறது.</p><p>நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலை முறையையும் பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பு ஆகும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று முகப்பேர் வெங்கடேஸ்வரா லயன் பி.செல்லத்துரை, எஸ்.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">573bb2a9-c377-4aab-98ca-0433c3688bc6</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:25:08.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 80-வது  சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி  மரியாதை செலுத்தப்பட்டது.</strong></em></p><h2><strong>தி.மு.க.</strong></h2><p>அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தின விழா</a> நடந்தது. அவர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் கவி, அன்பு துரை, வி.எஸ். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>பா.ஜ.க.</strong></h2><p>பா.ஜ.க.  கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில செயலாளர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கம்யூனிஸ்டு</strong></h2><p>தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை  அலுவலகத்தில் மாநில செயலாளர் வீர பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் (அகில இந்திய பொதுச் செயலாளர்) ராஜா, நிர்வாகிகள் வகிதா நிஜாம், டாக்டர் ரவீந்திரநாத், சிவா, ஏழுமலை, டாக்டர் சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். கட்சியின் செங்கொடியை சம்பத் ஏற்றினார். நிர்வாகிகள் குணசேகரன், வேல்முருகன், செல்வா, ஜான்சிராணி, ராஜசேகரன் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.</p><h2><strong>அரசு அலுவலகங்கள்</strong></h2><p>கோகுல மக்கள் கட்சி சார்பில் உள்ளகரத்தில் அதன் நிறுவனத் தலைவர் எம் .வி. சேகர்  தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.</p><p>தெற்கு ரெயில்வே சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர்  சுப்பாராவ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின்  அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.  சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர்  சைலேந் திர சிங் தேசியக்கொடி ஏற்றி  இனிப்பு வழங்கினார். </p><p>சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இயக்குனர்  பர்வீஸ், பொது மேலாளர் சுகுமாரன், தலைமை பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், வைதேகி, புஷ்பலதா, சித்ரா, சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><p>ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் ஐ.சி.எப். பொது மேலாளர் மனிஷ் அகர்வால் தேசியக்கொடி ஏற்றினார். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்தா ராம்  தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலைய இயக்குனர் ஜெய காந்தன் தேசியக் கொடி யேற்றினார்.</p><h2><strong>சார்பு நீதிபதி</strong></h2><p>திருவொற்றியூர் கோர்ட்டில்  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றினார். நிகழ்ச்சியில்  உரிமையியல் நீதிபதி ரேவந்த் கலந்து கொண்டார்.  மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அவருடன் உதவி ஆணையர் அரவிந்த் செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திலிப் குமார் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.</p><p>திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை தலைவர் மதுரை வீரன் ஏற்றி வைத்தார். விழாவில், செயலாளர் எம். காமாட்சி, ராமசாமி சேகர் சோலையப்பன் கே.ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா  மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டிய ராஜன், ராஜேந்திரன், பாலன் பழனியப்பன் பால்ராஜ் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.</p><p>மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேலாண்மை இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.</p><h2><strong>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம்</strong></h2><p>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் திருவள்ளுவர் நகர் குடியிருப்புவாசிகள்  கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">f0bc7817-a1ce-4715-ae22-199cfd2bb0b4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:28.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,Brands Enrica,என்ரிகா நிறுவனம்,மதுபானக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brands Enrica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான என்ரிகா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு விநியோகம் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.</p><h2>உணவு <strong>பாதுகாப்புத் து</strong>றை ஆய்வு</h2><p>முன்னதாக, பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற FSSAI பரிந்துரைத்திருந்தது.</p><h2>டாஸ்மாக் நி<strong>ர்வாகத்தின்</strong> முந்தைய நடவடிக்கை</h2><p>FSSAI அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுவிலக்கு </a>மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், குறிப்பிட்ட 11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>மீண்டும் <strong>விற்பனைக்கு அனும</strong>தி </h2><p>தடை விதிக்கப்பட்ட குறுகிய கால இடைவெளியில், உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடைமுறை மறுபரிசீலனைகளுக்குப் பிறகு, அந்த 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence#comments</comments><guid isPermaLink="false">b11f6f15-df47-45b7-b36b-8d7e0a371ebd</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:12:03.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.</strong></em></p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ஜிகே-வாசன்">ஜி.கே.வாசன்</a> தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.</p><p>பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது, </p><p>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.</p><p>சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார். </p><p>மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">b16d31c2-2ac6-4055-b1cf-470ccf5352af</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:16:36.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,அமைச்சர் ராஜேஷ்குமார்,Minister rajeshkumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi- Minister Rajesh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.</p><p>இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:- </p><p>ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை  என்பதையே இது காட்டுகிறது.</p><p>அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.</p><p>ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.</p><p>ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.</p><p>ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில்- ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ac3ca49a-46bb-4cfb-b846-cbd3543eb1eb</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:56:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:56:53.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,ஏசி மின்சார ரெயில்,AC Electric Train</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>2025-26 நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.26 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும். சென்னை கோட்டம் 43.2 98 கோடி பயணிகளை ஏற்றி சென்றதுடன் 11.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 6.20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 3559  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதுடன் 1557 கூடுதல் பெட்டிகள்  இணைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார</a> ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ரெயில் சேவை தொடங்கும்.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மறு சிரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை 2 மாதம் தாமதமாகலாம். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 26  ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 13  ரெயில் நிலையங்களில் புதிதாக வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  26 லிப்ட்டுகள், 7 எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. </p><p>மாற்றுத்திறனாளிகளுக்காக 16 ரெயில் நிலையங்களில் அடிப்படையான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார சேவையில் ஆதம்பாக்கம் ரெயில்  நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வளைவான பகுதி என்பதால் ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் ஏறி இறங்குவதில்  அதிக சிரமம் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>தாம்பரம்- கடற்கரை மின்சார ரெயில் இயக்கத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேத்துப்பட்டு நிலையத்தில் சிக்னல் காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. பாஸ்ட் மின்சார  ரெயிலுக்காக மற்ற மின்சார ரெயில்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் தெரியவந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி- உதயநிதி ஸ்டாலின் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">a86f17f4-4630-40c7-8ee5-f71949b071b8</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:23:39.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,TN Govt,Udhayanidhi Stalin,தமிழக அரசு,போதைப்பொருள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">தனுஷ்</a>, 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2><strong>தோல்வி</strong></h2><p>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.</p><p>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.</p><p>போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.</p><p>நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.</p><p>குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.</p><p>மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். </p><p>இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? </p><p>இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2088504581903008194?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரக் கொலை-இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested#comments</comments><guid isPermaLink="false">a0a3611d-9962-49fe-9243-5b6a5c8c8098</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:18:54.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,student murdered,Crime,பிளஸ்-2 மாணவர் கொலை,கொடூரக் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ student murdered]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2><strong>‘சீனியர்’ தகராறு: பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சோகம்</strong></h2><p>சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (16), விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மாணவர்களிடையே யார் ‘சீனியர்’ என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பள்ளி முடிந்து அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் அடங்கிய கும்பல் தனுஷை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. </p><p>இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>மெரினா <strong>கடற்கரை அரு</strong>கில் வாலிபர் சடலமாகக் கண்டெடுப்பு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தின் பின்புறப் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலையானவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சாகா (27) என்பதும், பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say"> அடித்துக் கொலை </a>செய்யப்பட்டதும் தெரியவந்தது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ope72x7n/murdere.jpg" /></figure><p>இக்கொலை தொடர்பாக, மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பீகாரைச் சேர்ந்த சன்னிசதா (26) என்பவரைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர்.</p><h2>வயல்வெ<strong>ளி சமாதியில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாவின் மூத்த மகன் ரஞ்சன் (18). இவர் தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி ஒன்றின் மீது ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். </p><p>விசாரணையில், இரும்பு உருக்கு ஆலையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஞ்சனும், அவரது நெருங்கிய நண்பரான காமேஷ் (22) என்பவரும் சம்பவத்தன்று இரவு ஒன்றாக மது அருந்தியதும், போதையில் ஏற்பட்ட முன்பகைத் தகராறில் காமேஷ், ரஞ்சனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷை பாதிரிவேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b7210659-da6f-416b-bdde-a539d5296185</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:40:25.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,flag hoist,கொடியேற்றம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனித்த நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியதாவது:- </p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம். </p><p>நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலம்: வானில் மிதந்த வண்ணமயமான பட்டங்களை ரசித்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration#comments</comments><guid isPermaLink="false">92a47d7b-710a-43ee-b1c2-337cf189abb2</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:32:40.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,பட்டம் விடும் திருவிழா,மாமல்லபுரம்,Mamallapuram  Kite flying festival,giant kites,Tamil Nadu Tourism Development,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mamallapuram  Kite flying festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில், 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. </p><p>சுதந்திர தின வார இறுதியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டம் பறக்கவிடும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் உருவான பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டுப் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.</p><h2>திருவி<strong>ழா தொடக்</strong>கம் </h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters">பட்டம் விடும் திருவிழா </a>நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழாவில் இந்தியா (தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம்) மட்டுமின்றி தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் பறக்கவிடும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>வானை அல<strong>ங்கரித்த பட்டங்கள்</strong></h2><p>கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.</p><h2>கடல்வாழ் <strong>உயிரினங்</strong>கள்</h2><p>ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லபுபு மற்றும் ராட்சத ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்களிலான காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெரிதும் கவர்ந்தன.</p><h2>த<strong>மிழர்களின் பாரம்பரியக் கலை பட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாட்டின் "ஸ்கைட்டர்ஸ்"  குழுவினர் தங்களின் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களை வானில் பறக்கவிட்டு நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்புப் பட்டங்கள் வானில் ஜொலித்து இரவை மேலும் அழகாக்கின.</p><h2>குடும்பங்களு<strong>க்கான கொண்</strong>டாட்டம்</h2><p>இந்த பட்டம் விடும் திருவிழா முற்றிலும் இலவச அனுமதி கொண்ட ஒரு குடும்பக் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களுக்கான கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் விற்பனைச் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஃபார்முலா 1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.</p><p>விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் சிறப்புத் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உரிமையை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights#comments</comments><guid isPermaLink="false">f7b3787b-30ca-4b1d-b276-aa4748fb6139</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:45:42.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.</p><p>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.<br><br>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர… <a href="https://t.co/cdkC6Psq0x">pic.twitter.com/cdkC6Psq0x</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2088454865311936800?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day#comments</comments><guid isPermaLink="false">e103d90e-1e4f-4555-ace3-f6680a88f03e</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:11:16.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Independence Day,சுதந்திர தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினம்</a> இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!</p><p>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!</p><p>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!</p><p>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!  என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!<br><br>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!<br><br>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம்… <a href="https://t.co/TeA3zZ0SQ9">pic.twitter.com/TeA3zZ0SQ9</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2088464998813319176?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">b8e4e90b-deb5-43b1-ba54-1b5207e3429c</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:54:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:54:35.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். மேலும் விருது பெற்றவர்களின் விவரம்:- </p><p>* மாநில இளைஞருக்கான விருது இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டது. </p><p>* மாநில இளைஞருக்கான விருதை பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா பெற்றுக்கொண்டனர்.</p><p>* கே.கே. நகர் அரசு மருத்துவனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்த் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது. </p><p>* திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. </p><p>* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷன் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது. </p><p>* திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* அதிகளவில் பணியமரித்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதை திருப்பூரின் SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. </p><p>* மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவம்..!- ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters#comments</comments><guid isPermaLink="false">4dca3263-4a38-49f6-8b2e-f3f8a64b6f8e</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:53:16.301Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pension,Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,சுதந்திர போராட்ட வீரர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் பிரபலமானவர்கள் உள்பட பெயர் தெரியாத ஒவ்வொரு சுதந்திர வீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.</p><p>அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி</p><p>வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.</p><h2>நிதியுதவி உயர்வு</h2><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு.</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights#comments</comments><guid isPermaLink="false">c9d109e8-bc7f-4999-aa95-4e2f8bb4f764</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:36:29.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>* தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட வீர வணக்கங்கள். </p><p>* கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்த மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். </p><p>* அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்றுசேரும்போது சாதி, மதம், இனம் அனைத்தும் உடைத்து நொறுங்கும். மதம், மொழி என அனைத்தும் உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம். </p><p>* உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். </p><p>* லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>* தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும். </p><p>* பொது வாழ்வில் சமரம் இருக்கக்கூடாது, மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் த.வெ.க. அரசு செயல்படுகிறது. </p><p>* அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டத்தை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம். </p><p>* தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. </p><p>* விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது. </p><p>* தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.</p><p>* அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. </p><p>* தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. </p><p>* தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, உலகளவில் வளர்ந்த நாட்டுக்கு இணையாக உயர்த்த உறுதியேற்போம். </p><p>* அரசு அலுவலகம் தேடி வரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். </p>]]></content:encoded></item><item><title>80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george#comments</comments><guid isPermaLink="false">cce06d55-5b1e-46fd-950c-a63c41f901e6</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:45.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,தேசியக்கொடி,Indian flag,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> வருகை தந்தார்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் <a href="https://www.maalaimalar.com/news/district/tn-legislative-assembly-will-convene--january-5" rel="nofollow">ஜார்ஜ் கோட்டை</a> கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai#comments</comments><guid isPermaLink="false">8e7d0d1d-2842-416f-b7b5-fe1d721241b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:11:39.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,கோவை,Chennai High court,சென்னை ஐகோர்ட்,kovai,Flag Parade,police dept,தேசிய கொடி பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.</p><p>அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? </p><p>அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?</p><p>அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?</p><p>தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?</p><p>ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.</p><p>முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.</p><p>அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.</p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.</p><p>காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aaccb31f-a792-4758-8e9d-0dee8a973b1a</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:12:58.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tea party,தேநீர் விருந்து,ஆளுநர் மாளிகை,Independence Day,சுதந்திர தினம்,lok bhavan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok bhawan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து கிடையாது என தெரிவித்துள்ளது.</p><h2>சுதந்திர தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.</p><p>தேசத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர்தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.</p><h2>தேநீர் விருந்து</h2><p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்தன.</p><p>இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து</p><p>கிடையாது. நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat#comments</comments><guid isPermaLink="false">bd638139-f808-48d9-92c5-d1137465199b</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:41:41.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><p>சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>அமைப்பு ரீதியாக தி.மு.க.வுக்கு 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p>தற்போது இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்படும் செயற்குழுவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.</p><p>செயற்குழு கூட்டம் பற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சைதை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது -  ஆர்.எஸ்.பாரதி சாபம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">39106f1f-89f8-4111-9617-b38e740a1108</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:37:11.522Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,Ma Subramanian,மா சுப்பிரமணியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டுள்ளார்.</strong></em></p><p>சென்னை காரம்பாக்கத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja">திமுக</a> விழாவில் பேசிய அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: </p><h2>தவெக ஆட்சி</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சிப் பொறுப்பேற்றதும் வீட்டு வரி எல்லாம் உயர்ந்து விட்டதாம். அதுபற்றி நமக்கு என்ன கவலை. </p><p>இனிமேல் நாம் அனைவரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் வாக்களித்தவர்கள் தான். அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிறகு தான் புத்தி வரும். </p> <h2>மா.சுப்பிரமணியன்</h2><p>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது.</p><p>மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டுபோட்டே தவெக வெற்றி பெற்றுள்ளது.</p><h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள். 5 ஆண்டுகள் ஓய்வெடுப்போம்.</p><p>பேருந்து நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item></channel></rss>