<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 13 Sep 2026 08:15:39 +0000</lastBuildDate><item><title>தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">845555ed-e43d-4e56-8205-947402e27db8</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:58:43.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.</p><p>கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில்,  இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.</p><p>சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.</p><p>நமது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய்</a> லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.</p><p>சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.</p><p>இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:55:42.156Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7fa9907e-8373-460a-8eea-1a87138cf85c</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:51:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:51:09.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,அதிமுக.,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் தற்போதைய நிதியமைப்பைக் கடுமையாக சாடியுள்ளார். அரசு பெரும் கடனில் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற அவசியமற்ற அறிவிப்புகள் வெளியாவது குறித்து அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.</p><h2>புதிய தலைமை<strong>ச் செயலகம் தே</strong>வையா?</h2><p>மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். "தற்போது இருக்கும் தலைமைச் செயலகக் கட்டமைப்பே போதுமானது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு இத்தகைய திட்டங்களைக் கையில் எடுக்கலாம்" என்று அவர் கூறினார். மேலும், புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொருத்தமான இடமல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சரின் லண்ட</strong>ன் பயணம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் </a>குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பதற்கு எவ்விதப் போதிய ஆதாரங்களும் அல்லது அதிகாரப்பூர்வத் தகவல்களும் இல்லை என குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பயணங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்ததற்கான எந்தவிதப் புகைப்படங்களோ விளக்கங்களோ வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>2 தொகுதிகளிலும் <strong>அதிமுக</strong> மகத்தான வெற்றி பெறும்</h2><p>தவெகவில் இணைந்துள்ள முன்னாள் நிர்வாகிகள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் குறித்துப் பேசிய அவர், "கட்சியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு அங்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் அவர்களை மக்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்" என்று தெரிவித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே மகத்தான வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னம்பிக்கையுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">207ff3eb-e8ca-4b4f-a96d-35a34c4d7bf0</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:03:32.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை சதுர்த்தி விழா கொண்டாட்டம்- தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip#comments</comments><guid isPermaLink="false">a497fa23-4fa6-4e14-b226-322b9d72151b</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:41:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:41:41.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. </p><p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.</p><h2><strong>ஒரு லட்சம் சிலைகள்</strong></h2><p>சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்</strong></h2><p>சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.</p><h2><strong>3 ஆயிரம் சிலைகள்</strong></h2><p>இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்</strong></h2><p>விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும்.</p><p>தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.</p><h2><strong>10 அடிக்கு மேல்</strong></h2><p>* விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது.</p><p>* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.</p><p>* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.</p><h2><strong>24 மணி நேரமும்</strong></h2><p>* சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.</p><p>* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பர பலகைகைள வைக்கக்கூடாது.</p><p>* தீ விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.</p><p>* விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-boldly-confront-the-dmks-atrocities-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">ddd3d8b8-cd5d-419d-b7f3-1ebf30623ed8</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:08:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:08:37.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தி.மு.க.வின் அட்டூழியங்களை நேர்மையாக எதிர்கொள்வோம்” - அமைச்சர் நிர்மல் குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/fjrqo0lj/New-Project-2026-09-13T113806.056.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">அமைச்சர் நிர்மல் குமார் </a>தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. </p><p>அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுகவினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் நிர்மல்குமார் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். </p><p>இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சைக் குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“மேடைபோட்டு என்னை பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?</p><h2>திமுகவின் ஆயுதம்</h2><p>நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழ்நாடு மக்கள், குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?</p><p>எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.</p><h2>மக்களால் கண்காணிக்கப்படுகிறது</h2><p>தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?</p><p>திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர்.</p><p>அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ?</p><p>குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.</p><p>நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழ்நாடு அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.</p><h2>திமுகவால் மட்டுமே...</h2><p>புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister#comments</comments><guid isPermaLink="false">e6924869-ee04-49ef-8adb-8a333f164972</guid><pubDate>Sun, 13 Sep 2026 05:51:33 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:51:33.302Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,A. Raja,ஆ. ராசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/q3o4kxci/New-Project-2026-09-13T112023.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இக்கூட்டத்தொடரின்போது காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். </p><p>அப்போது திமுகவை கடுமையாடி சாடிய அவர், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் செய்கை ஒன்றையும் செய்தார்.</p><h2>முதலமைச்சர் விளக்கம்</h2><p>இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட தவெகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் விஜய்யின் இந்த செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.</p><p>இதனைத்தொடர்ந்து தன்னுடைய உடல்மொழி எதேச்சையானது என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டது இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்திருந்தார். </p><h2>அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமின்றி பேச்சு</h2><p>இதனிடையே மு.க.ஸ்டாலின் ஒன்றும் மிசாவில் கைது செய்யப்படவில்லை, அவர் இந்திரா காந்தியை தவறாக பேசியதால் பெண்வழக்கில் கைது செய்யப்பட்டார், இதற்கு ஒன்றும் திமுக ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் பேசியிருந்தார்.</p><p>அமைச்சர் நிர்மல்குமார் வரலாற்றை திரித்துப் பேசுவதாகவும், ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது உண்மை எனவும் அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் அமைச்சர் நிர்மல்குமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே பேசிவந்தார். </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தவெகவின் இந்தப் பேச்சினை கண்டித்து நேற்று (செப்.12) திமுக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசியிருந்தார்.</p><p>இக்கூட்டத்தில் பேசியிருந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post"> எம்.பி. ஆ.ராசா</a>,  அமைச்சர் நிர்மல் குமாரை காட்டமான மொழியில் விமர்சித்திருந்தார். ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையாக தவெக கூட்டணித் தலைவர்கள் மட்டுமின்றி திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். </p><h2>வருத்தம் தெரிவிப்பு</h2><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ராசா. வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;</p><p>“தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்  ‘அடையாளத்தை’, உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு  உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த  ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’  ‘உண்மையை’  உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;</p><p>என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T05:01:37.585Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</a></p><p>* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு</p><p>* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah">மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை</a></p><p>* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். </p><p>* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election">இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools">தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</a></p><p>* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</a></p><p>*  இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house">உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</a></p><p>* உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.</p><p>* சோதனையில் உயர்ரக கைக்கடிகாரங்கள், பணம் கைப்பற்றப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p> <p><a href="https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6">ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</a></p><p>* சித்தி விநாயகர் நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector">தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</a></p><p>* தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.</p><p>* வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய 'ஆந்த்ரோபிக்' நிறுவனம்!... </a></p><p>*வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>*இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/isharani-baruah-enter-final-in-vietnam-open-badminton">வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா</a></p><p>* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5">'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>* துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு... </a></p><p>*மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>*நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆதரவு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</a></p><p>* ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும்.</p><p>* பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya">என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!... </a></p><p>*முதலமைச்சர் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. </p><p>*திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled">மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!... </a></p><p>*17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>*செப்-24 பணி நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/brics-delhi-declaration-2026-unanimous-condemnation-us-attack-on-iran">ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம்: BRICS மாநாட்டில் 'டெல்லி பிரகடனம் 2026' ஒருமனதாக ஏற்பு!... </a></p><p>*ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தைப் பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பையும் சர்வதேச சட்ட விதிமுறைகளையும் அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. </p><p>*ராணுவ மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உச்சக்கட்ட நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: &quot;யாகாவா ராயினும் நாகாக்க..&quot; கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post#comments</comments><guid isPermaLink="false">2d659edc-f023-44bf-9da8-54befb34360a</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:51:03 +0000</pubDate><atom:updated>2026-09-13T04:51:03.936Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,ஆ.ராசா,MP Kanimozhi,ஆ.ராசா பேச்சு,a.raja,Guard the tongue,யாகாவா ராயினும் நாகாக்க</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ycmbeyxs/KANI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய கருத்துகள் மாநில அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்திவிட்டதாக கூறி திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><h2>ஆ.ராசா சர்<strong>ச்சை பேச்சு</strong></h2><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது. மாற்றுக் கட்சியினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் தரக்குறைவாகச் சாடி<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns"> ஆ.ராசா </a>பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தோழமைக்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>கனிமொ<strong>ழி எம்பி எக்ஸ் தள ப</strong>திவு</h2><p>இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ள சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருக்குறள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><a href="/individual/yagavarayinum-naa-kaakka-shooting-spot" class="entity-link" entity-id="378804" entity-name="யாகாவாராயினும் நாகாக்க படப்பிடிப்பு தளம்" entity-slug="yagavarayinum-naa-kaakka-shooting-spot" entity-type-id="5367" entity-type-slug="individual">"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"</a></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்<br>சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2098984905552359487?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><p>என்ற திருக்குறளை அவர் எவ்விதக் கூடுதல் விளக்கமுமின்றிப் பதிவிட்டுள்ளார். </p><p>ஒருவர் எதைக் காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும், இல்லையெனில் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர் என்பதே இதன் பொருளாகும். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதே திமுகவின் மூத்த பெண் தலைவரும் எம்பியுமான கனிமொழி இந்தத் திருக்குறளைப் பதிவிட்டிருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை பெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/poet-vaairamuthu-urges-pm-modi-to-declare-thirukkural-as-indias-national-book</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/poet-vaairamuthu-urges-pm-modi-to-declare-thirukkural-as-indias-national-book#comments</comments><guid isPermaLink="false">b5745b82-e75a-4884-90a1-cb1659621e66</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:20:08 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:20:08.345Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,கவிஞர் வைரமுத்து,திருக்குறள்,thirukkural,poet vairamuthu,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dcl494gz/vaira.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poet Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/dcl494gz/vaira.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.</p><p>தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து உலகறியச் செய்து வருவதைப் பாராட்டினார்.</p><h2>டெல்லி வந்து <strong>பாராட்டு</strong>வோம்</h2><p>ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி பரிசளித்த நிகழ்வை வைரமுத்து நினைவு கூர்ந்தார். உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.  இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns">வைரமுத்து</a>, ஒரு மதத்தைச் சார்ந்த குரானையோ அல்லது பகவத் கீதையையோ வழங்காமல் திருக்குறளைப் பிரதமர் வழங்கிய காரணம், அது எந்தவொரு குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழியைக் கடந்து மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான தத்துவங்களை எடுத்துரைப்பதே ஆகும் என்று பாராட்டினார்.</p><h2>தேசிய நூலா<strong>க அறிவி</strong>க்க வேண்டும்</h2><p>உலக அரங்கில் திருக்குறளின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் பிரதமருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த வைரமுத்து, திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.  அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் மதுரை மல்லிகைப் பூவோடும், சேலத்து மாம்பழக் கூடையோடும் டெல்லிக்கு நேரில் வந்து பிரதமரை வியந்து பாராட்டுவோம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். </p><h2>தேசிய அ<strong>ந்தஸ்து</strong></h2><p>திருக்குறள் மதச்சார்பற்ற பண்பையும், உலகளாவிய மானுட மதிப்புகளையும் கொண்டுள்ளதால், அதற்குத் தேசிய நூல் அந்தஸ்து வழங்குவது தமிழ் மொழிக்கும், ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்திற்கும் உலகளவில் மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் என அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் மேடைகளில் கண்ணியம் தவறும் திமுகவினர்: சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leaders-losing-decency-on-political-stages-cpm-state-secretary-p-shanmugam-condemns#comments</comments><guid isPermaLink="false">a8c5c63c-1dee-41c3-a296-a9347327854f</guid><pubDate>Sun, 13 Sep 2026 03:01:04 +0000</pubDate><atom:updated>2026-09-13T03:01:04.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Shanmugam,CPM,ஆ.ராசா,a.raja,பெ.சண்முகம்,சிபிஎம்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/4721ilvh/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam- A.Raja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/4721ilvh/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency"> ஆ.ராசா</a> பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசாவின் பேச்சைக் கடுமையாகச் சாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குச் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>சிபிஎம் <strong>கடும் கண்</strong>டனம்</h2><p>அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அரசியல் மேடைகளில் கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, தனிப்பட்ட நபர்களின் குடும்பத்தினரையும் பெண்களையும் கொச்சைப்படுத்திப் பேசுவது சகித்துக் கொள்ள முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>கண்ணியம் தவ<strong>றும் திமுகவினர்</strong></h2><p>திமுகவின் முன்னணி தலைவர்கள் பலர் சமீபகாலமாகக் பொதுவெளியிலும் மேடைகளிலும் பேசும்போது கண்ணியம் தவறி பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. மாற்றுக் கட்சியினரின் தாயாரைக் குறிவைத்துத் தாக்குவதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.</p><h2><strong>ஸ்டாலி</strong>னுக்கு வேண்டுகோள்</h2><p>மாற்றுக் கட்சியினரின் தாயாரையும் பெண்களையும் இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பேச்சில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் கடமையை திமுக தலைவர் நிறைவேற்றுவார் என்றும், இத்தகைய அவதூறு பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் நம்புவதாக பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை அரசுப் பள்ளியில் பழங்குடியின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/investigation-against-headmistress-who-made-tribal-students-clean-toilets-in-coimbatore-government-school#comments</comments><guid isPermaLink="false">d3023a89-af9c-40e8-807f-8ceb463a6a4d</guid><pubDate>Sat, 12 Sep 2026 21:03:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T21:03:51.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tribal people,Coimbatore,கோவை,government school,பழங்குடியினர்,அரசுப் பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வைரல் படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/w619inro/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூர் அருகே உள்ள பழமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>குஞ்சூர்பதி கிராமத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 40 <a href="https://www.maalaimalar.com/news/national/using-caste-words-not-offence-under-sc-st-act-allahabad-high-court">பழங்குடியின </a>மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். </p><p>மாணவர்கள்  சிலர் கழிப்பறையை  சுத்தம் செய்யும் புகைப்படங்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வைரலாக பரவி வருகிறது.</p><p>பள்ளிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">தூய்மைபணியாளர்கள் </a>சரியாக வருவதில்லை என்ற காரணத்தை கூறி, தலைமையாசிரியை மாணவிகளை இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தியதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>இதனால் குழந்தைகளுக்கு கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவிகளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது மட்டுமின்றி, பள்ளி நிர்வாகம் மீது மேலும் பல தீவிர புகார்களைப் பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் முன்வைத்துள்ளனர். </p> <h2>பிற குற்றச்சாட்டுகள்</h2><p>வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி ஒரு மாணவியை தலைமையாசிரியை பிரம்பால் கடுமையாகத் தாக்கியதில், அந்த சிறுமியின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>பள்ளியின் குடிநீர்த் தொட்டிகள் தூய்மைப்படுத்தப்படாமல், அதில் தவளைகள் மிதப்பதாகப் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து சேதமாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களுக்கு சரியான உணவும் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டு எழுந்துள்ளது.</p> <h2>விசாரணை</h2><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு குழந்தை நலக் குழு (CWC) உறுப்பினர்கள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தி, விரிவான அறிக்கையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு சமர்ப்பித்துள்ளனர்.</p><p>முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>பழங்குடியின சிறுவர்கள் பயிலும் அரசுப் பள்ளியில் நடைபெற்றுள்ள இந்த மனித உரி மீறல் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- மின்வாரியம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-electricity-board-adds-2000-mw-to-stabilise-grid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-electricity-board-adds-2000-mw-to-stabilise-grid#comments</comments><guid isPermaLink="false">80adfa4a-8833-4287-bd69-3ed05945f382</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:44:43 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:44:43.301Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity,Electricity board,மின்வாரியம்,megawatts,மெகாவாட் மின்வாரியம்,மின்சார கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bwmyr3rp/electricity.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electricity board]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bwmyr3rp/electricity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மின் வாரியம் கூறியிருப்பதாவது:-</p><p>இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-</p><p>இந்த ஆண்டு கோடைக்காலம் எதிர்பாராத வகையில் நீடித்ததன் காரணமாக, மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/increase-in-wind-power-generation-in-coimbatore" rel="nofollow">மின் உற்பத்தி</a>யும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சில நேரங்களில் மின்னழுத்தக் குறைபாடு போன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக 2000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்போது மின் தொகுப்பின் (Grid) நிலைமை சீராகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளது. மேலும், மின் கட்டமைப்பு மாறுபாடுகள் மற்றும் மின் விநியோக நிலைமையை தொடர்ந்து மின்வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் உரிய உத்தரவுகள் வழங்கி வருகிறது.</p><p>மின்விநியோக பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மின்தடை ஏற்பட்ட பகுதிகளில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.</p><p>மின்தடை ஏற்படும் நிகழ்வுகளை எந்தவித அலட்சியமும் இன்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும் என களப்பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின்தடைகளை இயன்றவரை தவிர்க்கவும் களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்களுக்கு நாள் முழுவதும், குறிப்பாக இரவு நேரங்களிலும், சீரான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.</p><p>மேலும், மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் இயங்கும் நுகர்வோர் சேவை மையமான 'மின்னகம்' தை "94987 94987" என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பண்டிகை கால கட்டண கொள்ளை: விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதித்து தமிழக அரசு அதிரடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-season-fare-fraud-omni-buses-fined-rs-17-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-season-fare-fraud-omni-buses-fined-rs-17-lakh#comments</comments><guid isPermaLink="false">0db58c4b-a812-4b45-910f-e7c1c533d0aa</guid><pubDate>Sat, 12 Sep 2026 15:25:31 +0000</pubDate><atom:updated>2026-09-12T15:25:31.203Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Omni buses,ஆம்னி பேருந்துகள்,ஆம்னி பேருந்து கட்டணம்,Vinayagar Chaturthi,Tamilnadu Government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4xvrcoab/omni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni buses]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4xvrcoab/omni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் எழுந்தன. இப்புகார்களின் அடிப்படையில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு, கட்டணக் கொள்ளை மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு சுமார் 17 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><h2>மாநி<strong>லம் தழுவிய வாகன சோத</strong>னை</h2><p>போக்குவரத்து ஆணையர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் மற்றும் மாநிலத்தின் முக்கியச் சுங்கச்சாவடிகளில் தீவிர தணிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 2,379 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் நேரில் ஏறி ஆய்வு செய்துள்ளனர். </p><p>பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 400 ஆம்னி பேருந்துகளுக்குத் தணிக்கை அறிக்கைகளுடன் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kisshttps://www.maalaimalar.com/news/topnews/spectacular-scene-in-london-chief-minister-vijay-runs-to-hug-ajith-shares-loving-kiss">இ-சலான்</a>' வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் சோதனைகளின் மூலம் விதிமீறிய பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் 16.93 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டண முறைகேடுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் தொடர்பான விதிமீறல்களிலும் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செல்லுபடியாகும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிறைபிடித்துள்ளனர். தீவிர விதிமீறல்களில் ஈடுபட்ட 7 ஆம்னி பேருந்துகள் மேற்கொண்டு இயங்குவதற்கு உடனடித் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆன்லைன் <strong>பயணச்சீட்டு</strong> ரத்து </h2><p>பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் முன்விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் திடீரென ரத்து செய்துவிட்டு, அதிக விலைக்கு விற்கும் சட்டவிரோதப் போக்கைத் தடுக்க அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளின் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிர்வாகமே அப்பயணிகளுக்கு உடனடியாக மாற்றுப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் வகையில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய முயலும் நிறுவனங்களின் பேருந்து அனுமதிச் சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.</p><h2>புகார்களுக்குக் க<strong>ட்டணமில்லா தொலைபேசி எண்</strong></h2><p>அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்துப் பொதுமக்கள் கட்டணமில்லாத் தொலைபேசி எண் (1800 425 6151) மூலமாகவும், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாகவும் உடனுக்குடன் புகார் அளிக்கலாம் எனத் தமிழகப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதியோர் ஓய்வூதியத் தொகை தாமதம் ஏன்?- தமிழ்நாடு அரசு விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delay-in-old-age-pension-disbursement-tamil-nadu-government-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delay-in-old-age-pension-disbursement-tamil-nadu-government-clarification#comments</comments><guid isPermaLink="false">eb8836c1-a1f1-4e0e-a5dc-c6d7fb0516ef</guid><pubDate>Sat, 12 Sep 2026 14:21:57 +0000</pubDate><atom:updated>2026-09-12T14:21:57.588Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Pension,உதவித்தொகை,old age pension scheme,முதியோர் ஓய்வூதியம்</media:keywords><media:content height="429" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aasg0eau/images-6.jfif" width="713"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aasg0eau/images-6.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>தாமதம் </h2><p>தமிழ்நாட்டில் செப்டம்பர் மாத முதியோர் ஓய்வுதியத் தொகை வரவு வைக்கப்படுவதில்  தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-some-trains-including-the-vande-bharat-and-vaigai-express-are-delayed">தாமதம் </a>மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><h2>அரசு தரப்பு விளக்கம் </h2><p>செப்டம்பர் மாத ஓய்வுத்தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழ அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வேளாண் தொழிலாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற பிரிவினருக்கு 12 வகையான திட்டங்களின் கீழ் 35,37,372 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். </p><p>இவர்களில், சுமார் 15,56,674 ஓய்வூதியப் பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026-ல் வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே வரவு வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய முதியோர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/will-even-a-fraudulent-pension-scheme-not-be-implemented-during-the-dmk-regime-says-anbumani-ramadoss-804851">ஓய்வூதியத் திட்டம்</a>, இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் சுமார் 19,20,858 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.</p><p>மேற்காணும் திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான (செப்டம்பர் 2026- வழங்கப்படும்) ஓய்வூதியத் தொகையை, இந்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள SNA-SPARSH நிதிப் பரிவர்த்தனை தளத்தின் மூலம் இம்மாதம் முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>இத்திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, இந்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.</p><h2>தொடர் விடுமுறை </h2><p>இந்நிலையில், 11.09.2026 முதல் 14.09.2026 வரை இந்திய அரசு அலுவலகங்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/holidays-transport-corporation-achieves-rs-344-crore-revenue-through-special-buses">தொடர் விடுமுறை</a> என்பதால், மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள், தங்களது ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், ஓய்வூதியத் தொகை 14.09.2026 முதல் உரிய முறையில் வழங்குவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் நாகரிகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் பேச்சு..!- திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-a-raja-remarks-condemned-manikam-thakur-slams-political-indecency#comments</comments><guid isPermaLink="false">f8faba66-c957-4162-b1c3-7bf02c4e185c</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:42:05 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:42:05.498Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மாணிக்கம் தாகூர்,ஆ ராசா,Manickam Tagore,Aa Rasa</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmv5vdyc/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ A Rasa- Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmv5vdyc/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசா அவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-     </p><p>அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசா அவர்களின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது!</p><p>மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது.</p><p>தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.</p><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள திரு.௮.ராசா MP அவர்கள் இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே திமுகவை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிர சிந்தனைதான்!</p><p>கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!- தவெக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pure-power-honest-rule-will-torment-the-slaves-tvk-says</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pure-power-honest-rule-will-torment-the-slaves-tvk-says#comments</comments><guid isPermaLink="false">8dba23f9-55ab-4136-a542-fb6bac6eaddd</guid><pubDate>Sat, 12 Sep 2026 13:08:22 +0000</pubDate><atom:updated>2026-09-12T13:08:22.258Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,TVK It wing,தூயசக்தி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/v3qz2nrz/TVK1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/v3qz2nrz/TVK1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவேசமாக அலறினாலும் சத்தமாக கதறினாலும்  தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது என தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பொதுவெளியில் ஆபாச மொழியில்</p><p>வன்மத்தோடு வசைபாடுவதிலும், கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும் தீயசக்தியின் அடிவருடிகளே!</p><p>கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து, ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!</p><p>தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது, ஆவேசமாக அலறினாலும் </p><p>சத்தமாக கதறினாலும்  தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!</p><p>தீயசக்திக்கு மக்கள் மீண்டும் </p><p>பாடம் புகட்டப் போவது</p><p>உறுதி  உறுதி உறுதி!</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மதுரையில் செப்.16, 17 உள்ளூர் விடுமுறை: மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-declares-local-holiday-sept-16-17-for-meenakshi-amman-temple-kumbabishekam-exams-rescheduled#comments</comments><guid isPermaLink="false">28985ddb-37ac-41df-8205-efb45ff3aeaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:30:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:30:35.672Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple,Local holidays,மதுரை மாநகரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/fwt1rm50/madura.jpg" width="1290"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Meenakshi Amman Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/fwt1rm50/madura.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk">மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில்</a> வரும் 17-ஆம் தேதி மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுவதால், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பக்தர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் நகரின் போக்குவரத்து அமைதியை சீரமைக்கும் நோக்கில், செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வு தேதிகளில் திடீர் மாற்றம்</h2><p>மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இந்த இரண்டு நாள் விடுமுறையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறை காரணமாக, ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் செப்டம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த காலாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. </p><p>இத்தேர்வுகள் செப்டம்பர் 18 முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அக்டோபர் மாதத்தில் வரும் இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்-24 பணிநாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>யாகசாலை</strong> பூஜைகள்</h2><p>கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான பூர்வாங்க மற்றும் சிறப்பு பூஜைகள் கடந்த 6-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திருக்கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் 12 கால யாக பூஜை வேள்விகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள்ளான சுப முகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது. முதலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிகளின் தங்க விமானங்களுக்கும், தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே நிறைவேற்றப்பட உள்ளது.</p><h2>நகர் முழுதும் ப<strong>லத்த பாதுகாப்பு</strong></h2><p>பெருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், சிறப்புப் போக்குவரத்து வசதிகள், 8,000-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான நிறுத்துமிடங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச்செயலகம் அரசாணை.. அவசரக்கதியில் அரசு செயல்படகூடாது - சிபிஎம் சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-govt-should-not-act-in-haste-cpm-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-govt-should-not-act-in-haste-cpm-shanmugam#comments</comments><guid isPermaLink="false">c9b0287c-28ea-4936-af03-e1ade21e03d1</guid><pubDate>Sat, 12 Sep 2026 12:06:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T12:06:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,தலைமைச்செயலகம்,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9d6wh3ee/pshanmug-2026-09-12-07-21-20.webp" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P. Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9d6wh3ee/pshanmug-2026-09-12-07-21-20.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தலைமைச்செயலகம் </h2><p>பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.</p> <h2>அவசரக்கதி</h2><p>நில வகை மாற்றம் செய்து அனைவருக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில்  வடசென்னை மாவட்டக் குழு சார்பாக, மிண்ட் அருகில் கண்டன <a href="http://maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly">ஆர்ப்பாட்டம் </a>நடைபெற்றது.</p><p>போராட்டத்தில் பங்கெடுத்தபின் செய்தியாளரகளை சந்தித்த சிபிஎம் தலைவர் பெ . சண்முகம் </p><p>பட்டினப்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதற்கான அரசாணையை அவசர அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள், இந்த இடம் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியிருக்கிறது எனபதால் யாருக்கும் இதில் மாறுப்பட்ட கருத்து கிடையாது என்றும், ஆகவே தலைமைச்செயலகத்தை பொருத்தமான வேறு ஒரு இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அனைத்துக் கட்சி கூட்டம் </h2><p>இது போன்ற தலைமைச்செயலகம் அல்லது அரசு தலைமை அலுவலகங்கள் ஒரு நீண்ட காலத்திற்கான கட்டுமானம் என்கிற முறையில், இது போன்ற பிரச்சனைகளில் அரசு அவசரகதியில் செயல்படக்கூடாது  என்பதை வற்புறுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>எதிர்ப்பு </h2><p>ஏற்கனவே பட்டினப்பாக்கத்தில் பல  மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் இந்த புதிய திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். </p><p>இந்த புதிய தலைமைச்செயலக விவகாரத்தில் பல்வேறு கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam">தமிழ்நாடு</a> அரசாங்கம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் பெ. சண்முகம் கூறியிருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமரக் கதைகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது..! - திமுக மீது தவெக கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-can-no-longer-be-deceived-by-false-stories-thaveka-attacks-dmk#comments</comments><guid isPermaLink="false">7d7cb73e-e07a-42d3-93b0-d08d9ea12aa0</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:53:38 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:53:38.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,தவெக,முதலமைச்சர் விஜய்,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK vs TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/9qmcc9mr/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய் போராளியின் பிம்பம் உடைந்துவிட்டதே என பதறி திமுகவினர் போராட்டம் நடத்துவதாகவும், கத்தினாலும் கதறினாலும் இனி கட்டுமரக்கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம் என தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!</p><p>மஞ்சள் துண்டு தந்தை முதல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">ஆபாசநதி</a> வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.</p><p>கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.</p><p>கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி மாநகராட்சி சொத்துவரி செலுத்த செப்டம்பர் 30 கடைசி நாள்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-municipal-corporation-property-tax-payment-last-date-september-30#comments</comments><guid isPermaLink="false">f245f8ea-8f84-4f10-82d9-292968e1ef65</guid><pubDate>Sat, 12 Sep 2026 11:18:41 +0000</pubDate><atom:updated>2026-09-12T11:18:41.739Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,propertytax,Thoothukudi Corporation,Tax Deadline,TN UrbanEpay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoothukudi Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/qk0nn7d7/Thoothukudi-Corporation?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF">தூத்துக்குடி </a>மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பொதுமக்கள், நடப்பு 2026-2027-ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான சொத்து வரியைச் செலுத்துவதற்கு வரும் செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>பொதுமக்கள் தங்களின் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2><strong>வரிகளைச் செலுத்தும் எளிமையான வழிமுறைகள்</strong></h2><p>பொதுமக்கள் நெரிசலின்றி எளிதாக வரி செலுத்துவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது<strong>. </strong>மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்களுக்கு நேரடியாகச் சென்று வரியைச் செலுத்தலாம். வரி வசூல் மையங்களில் உள்ள QR Code மூலமாகவும் நேரடியாகவும், விரைவாகவும் கட்டணத்தைச் செலுத்த முடியும். </p><p>பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக வரி செலுத்த <a href="https://tnurbanepay.tn.gov.in/">www.tnurbanepay.tn.gov.in </a>என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பயன்படுத்தலாம்.</p><h2><strong>சனிக்கிழமைகளிலும் மையங்கள் செயல்படும்</strong></h2><p>பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வரி செலுத்துவதற்கு வசதியாக ஒரு முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து, அனைத்து சனிக்கிழமைகளிலும் மாநகராட்சி கணினி வரி வசூல் மையங்கள் வழக்கம் போல் இயங்கும். </p><p>செயல்படும் நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆகும்.</p><h2><strong>மாநகராட்சியின் வேண்டுகோள்</strong></h2><p>கடைசி நேர நெரிசலையும், தாமதக் கட்டணங்களையும் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (செப்டம்பர் 30-க்குள்) தங்களது வரிகளைச் செலுத்த வேண்டும். </p><p>பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணமே மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே பரப்பரப்பு, பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-old-central-theatre-fire-near-meenakshi-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-old-central-theatre-fire-near-meenakshi-temple#comments</comments><guid isPermaLink="false">51b1146f-d4e8-42e6-aeac-5a07cf5c787e</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:30:54 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:30:54.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,திரையரங்கம்,Fire accidents,தீ விபத்து</media:keywords><media:content height="539" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8qkyr0au/image-16.avif" width="828"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Central Theatre, madurai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/8qkyr0au/image-16.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தீ விபத்து </h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த திரையரங்கில் பயங்கரமான தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. </p><h2>சென்ட்ரல் தியேட்டர் </h2><p>சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே அமைந்திருக்கிறது இந்த சென்ட்ரல் தியேட்டர். இந்த திரையரங்கம் பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p> <h2>பரப்பரப்பு </h2><p>மதுரையின் பழமையான திரையங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த  திரையரங்கம் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு மூடப்பட்டு பழைய பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்காக மாற்றப்பட்ட நிலையில், திடீரென அப்பகுதி பற்றி எரிய தொடங்கியுள்ளது.</p><p>புகையானது அதிகமாக பரவி நிலையில் அப்பகுதியே புகை மூட்டமானது. தகவலின்பேரில் அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். </p><p>மீனாட்சி கோவில் புதுபிக்கப்பட்டு குடமுழுக்கானது நடைப்பெற இருக்கும் நிலையில் இச்சம்பவமானது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-18th#comments</comments><guid isPermaLink="false">d702b4d7-2cb4-4303-9bc1-66dd9d0b6831</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:30:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:30:28.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/aw3z7t73/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>17-ந்தேதி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 16-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya#comments</comments><guid isPermaLink="false">8236e690-eeb9-496f-9bf9-d7b1ede7335a</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:00:07.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,M.K.Stalin,மேயர் பிரியா,மு.க.ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Chennai Mayor Priya,MISA Act,மிசா சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Mayor Priya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கி ஆவேசமாக உரையாற்றினார்.</p><h2>தகுதி குறி<strong>த்து மேயர் பிரியா</strong> கேள்வி</h2><p>ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில், சட்டமன்றத்திற்குள் வந்து எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு திமுகவை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடினார். "மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? திமுகவை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. பயிற்சி வகுப்புகள் நடத்தியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.</p><p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சித்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் அண்ணா, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்க ஆற்றிய பங்களிப்பை இந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டப் பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">திமுக </a>எந்தவொரு பிரச்சனைக்கும் தாமாகச் சென்று வழிவகுக்காது எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, அதேவேளையில் தங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது பழமொழி. அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு மாண்புமிகுந்த பதவியில் இருந்தாலும் திமுக தொண்டர்களாகிய நாங்கள் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டோம்" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">3bb835e6-59b1-4483-99da-073466a73904</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:59:28.506Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,பட்டினப்பாக்கம்,tvk,புதிய தலைமை செயலகம்,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று சீமான் கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அவசியம் என்ன?</strong></h2><p>சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச்செயலகம்</a> கட்ட வேண்டிய அவசியம் என்ன?</p><p>தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?</p><h2><strong>அவலம்</strong></h2><p>உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p>அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? </p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.</p><p>ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">7cf1d334-1d03-4363-ba9f-d5094c76b388</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:35:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:35:42.082Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,அமைச்சர் நிர்மல்குமார்,மின் தட்டுப்பாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.</p><p>நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.</p><p>நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்: முதலமைச்சரின் &apos;பஞ்ச் டயலாக்&apos; என்னவானது?- தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-11#comments</comments><guid isPermaLink="false">54f2efcf-678b-49e7-80d3-7b5eb1c9b5b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:28:49.525Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bp81s2aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bp81s2aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிகுந்த அதிர்ச்சி</strong></h2><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>ஒருபுறம், முதலமைச்சர் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் உணர வேண்டும்</strong></h2><p>பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும்.</p><p>எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும்  என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்- அதிகாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-inform-all-precautionary-measures-are-in-place-in-chennai-to-handle-the-monsoon-rains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-inform-all-precautionary-measures-are-in-place-in-chennai-to-handle-the-monsoon-rains#comments</comments><guid isPermaLink="false">9fce7d4d-301e-4249-b65d-44c0f838bad6</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:43:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:43:58.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,monsoon,அரசு அதிகாரிகள்,Govt officers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/38tv84uc/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/38tv84uc/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</strong></em></p><p>சென்னையில் <a href="https://www.maalaimalar.com/topic/பருவமழை">பருவமழை</a> முன் எச்சரிக்கையாக எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும் என்பதை கண்டறிந்து  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். </p><p>அதன் பின்னர் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கு முன் எச்சரிக்கையாக சுமார் 90 மோட்டார்கள் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். </p><p>இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். பருவமழை முன் எச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 மோட்டார்கள் மற்றும் ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. </p><p>எனவே தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram#comments</comments><guid isPermaLink="false">0b00c371-3601-40bd-ac17-9dad0bc6f63c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:28:19.522Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Shanmugam,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,பெ.சண்முகம்,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government">இந்திய கம்யூனிஸ்ட்</a> (மார்க்சிஸ்ட்) கட்சி தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. இத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>மாநிலக் குழு <strong>கூட்டத்தில் விரிவான</strong> ஆலோசனை</h2><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இடைத்தேர்தல் ஆதரவு நிலப்பாடு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசுகையில், இரு தொகுதிகளின் கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாளை பிற்<strong>பகலில் அதிகாரப்பூர்வ</strong> அறிவிப்பு</h2><p>மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நாளை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு வாயிலாக தங்களது ஆதரவு நிலைப்பாடு முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஐ(எம்) கட்சியின் இந்த அறிவிப்பு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி கணக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">a7313323-3311-497d-ad9b-a4580b6b0c9b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:25:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:25:32.866Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,மின் தடை,Power Cut,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</strong></em></p><p>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-</p><p>நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.</p><h2><strong>பொதுமக்கள் போராட்டம்</strong></h2><p>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.<br><br>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.<br><br>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச்… <a href="https://t.co/Qjpr0BQevV">pic.twitter.com/Qjpr0BQevV</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2098685103711134110?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">c8245893-7090-41ed-aa54-f670ddcb842c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:13:59 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:13:59.701Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>lemon,எலுமிச்சை பழம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/lhhaz1b7/lemon.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எலுமிச்சை பழம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ எலுமிச்சை பழம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/lhhaz1b7/lemon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரத்துக்கு குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 300க்கு விற்பனை ஆகிறது.</strong></em> </p><p>உடுமலையில் பருவநிலை நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய மத்திய நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். </p><p>அந்த வகையில் ஒரு சில பகுதியில் <a href="https://www.maalaimalar.com/topic/எலுமிச்சை-பழம்">எலுமிச்சை</a> சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் 'ராஜகனி' என்று அழைக்க கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிகமாக விளைச்சல் கிடைக்கும். இதேபோல் ஏக்கருக்கு 100 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். செடி வகை சமதள பரப்பிலும் கொடி வகை மலை பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>நடவு செய்த நாளில் இருந்து மூன்றாம் வருடம் அறுவடைக்கு தயாராகிவிடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.</p><h2><strong>கிலோ ரூ. 300</strong></h2><p>வைட்டமின் சி பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தென்னகத்தை கொண்டு எலுமிச்சை பித்தம், தலை வலி, மலச்சிக்கல், தொண்டை வலி போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடைகாலத்தில் எலுமிச்சை சாறுடன் உப்பு நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூபாய் 300 விற்பனை ஆகிறது. </p><h2><strong>வரத்து குறைந்ததால்</strong></h2><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடுமலை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் உடுமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூபாய் 300 வரை விற்பனை ஆகி வருகிறது. வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதே போல் குமரலிங்கம் பகுதியில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வருகிற 15-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6cc4ec90-f994-4010-b91c-ec39df5b8d14</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:01:26.386Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,chennai power cut,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், வருகிற செவ்வாய்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>எஸ்.கே. அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர். </p><h2><strong>சேலையூர்</strong></h2><p>புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21 வது தெரு, அலமேலுபுரம். </p><h2><strong>குன்றத்தூர்</strong></h2><p>வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்.எம். அவென்யூ.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector#comments</comments><guid isPermaLink="false">bc831f30-2f74-4fed-b589-6eea35419037</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:30:36.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,மின் தடை,Power Cut</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கடும் இன்னல்கள்</strong></h2><p>தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.</p><p>எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election#comments</comments><guid isPermaLink="false">cf93d5cb-0e4f-4604-a1d3-635e2961edaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:08:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:08:02.603Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p> <p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர்.</p> <p>இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம் பெருந்துறை கரூர் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">இடைத்தேர்தல்</a> அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.</p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p>  <p>இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.</p> <p>மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.</p> <p>அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools#comments</comments><guid isPermaLink="false">31bf92c7-ac98-4461-af12-35a2056c644b</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:40.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force#comments</comments><guid isPermaLink="false">136ac976-440a-4ef8-ac06-cdcb999216b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:50:45 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:50:45.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகத்</a> தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்,</p><p>வருகின்ற அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். </p><p>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் N. ஆனந்த்</p><p>2. அமைச்சர் K.A. செங்கோட்டையன்</p><p>3. அமைச்சர் CTR நிர்மல் குமார்</p><p>தேர்தல் பணிக்குழு</p><p>35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி.</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் ராஜ்குமார்</p><p>2. அமைச்சர் தென்னரசு</p><p>3. அமைச்சர் வினோத்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. சரவணமூர்த்தி MLA, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி</p><p>2. தியாகராஜன் MLA, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி</p><p>3. விஜயராஜ் MLA, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி</p><p>4. காமாட்சி MLA, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி</p><p>5.பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர் விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p><p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.</p><p>அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details#comments</comments><guid isPermaLink="false">ff85be4d-9e9c-4bf5-a779-d82ba54da25b</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:28:42.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Govt employees,அரசு ஊழியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஊழலை ஒழிக்க உதவாது</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.</p><p>தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 31-ஆம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில்  தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம்  நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2><strong>ஊழலை ஒழிக்க முடியும்</strong></h2><p>சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக் கூடும்.</p><p>ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த  கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.</p><p>அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை  ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.</p><p>ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதற்கான முதல் நடவடிக்கையாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election#comments</comments><guid isPermaLink="false">630c54b2-fcff-45bc-9611-2bdb385bde81</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:21:00.815Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,இடைத்தேர்தல்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மதுரையில் </a>சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானார் என்பதற்கான ஆதாரம் இல்லை.</p><p>* மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்பதற்கு தன்னிடம் ஆதாரமுள்ளது.</p> <p>* மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவுக்கு தான் அழிவு ஏற்படும்.</p><p>* மிசாவில் கைதானதற்கான ஆதாரமே இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின்தான்.</p><p>* மிசா சட்டத்தில்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றால் Detention Copy அழிக்கப்பட்டது ஏன்?</p> <p>* திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஸ்டாலின் கைது குறித்த Detention Copy அழிக்கப்பட்டது.</p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* மதுராந்தகத்துக்கும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கும் என்ன சம்பந்தம்?</p> <p>* மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியி எழும்பூரை சேர்ந்த பரந்தாமனை நியமிப்பதால் என்ன பயன்?</p><p>* இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.</p><p>* வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பை வழங்கிய திருமங்கலம் பார்முலாவை திமுக செய்தாலும் பயனில்லை.</p> <p>* திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p><p>* இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை - நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning#comments</comments><guid isPermaLink="false">33cdde8f-eea4-4982-8858-601801b731a7</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:58:35.385Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து நெரிசல்,traffic jam,தொடர் விடுமுறை,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</strong></em></p><h2><strong>போக்குவரத்து நெரிசல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய தென் மாவட்ட, வட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார், இருசக்கர வாகனங்கள், குடும்பமாக தனியார் வேன் மற்றும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து என புறப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி டோல்கேட் வரை வாகனங்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</p><h2><strong>10 லட்சம் வாகனங்கள்</strong></h2><p>தினசரி வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் பயணித்தால் நேற்றைய தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை எட்டு மணி வரை 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தக்க போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் இதற்காக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>மேலும் கனரக வாகனங்களை ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் 10 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">0891a13d-d9c1-4ae7-b848-93d89326b635</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:15:37.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மரியாதை,அமைச்சர் நிர்மல்குமார்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</strong></em> </p><p>பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் <a href="https://www.maalaimalar.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a>. கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் தமிழ் அறிஞரும் ஆவார். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். </p><h2><strong>இறுதிசடங்கு</strong></h2><p>சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே சாலமன் பாப்பையாவின் இறுதிசடங்கு இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. </p><h2><strong>அரசு மரியாதை</strong></h2><p>இந்த நிலையில், தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், தமிழஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>