<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 13:20:41 +0000</lastBuildDate><item><title>நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement#comments</comments><guid isPermaLink="false">9f977a06-013c-4c60-ba1d-c5a70a27cbc3</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:15:24.194Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Neet exam,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் தவெக தெரவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ளப் பதிவில்,</p><p>“நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><p>மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:07:21.902Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity">CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced">உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir">பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">2b3c9456-9f7a-4667-99b1-ee3d66a6b37a</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:36:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:36:26.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Cauvery,Government of Tamil Nadu,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதனை எடுத்துரைத்து, தமிழ்நாடு உரிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,</p><p>“கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60  டி.எம்.சியாக  உயர்ந்திருக்கிறது. </p><p>நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி நடுவர் மன்றம்  மற்றும்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். </p><p>ஆனால்,  கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.</p><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி  74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்துவிட்டது.  காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும்  காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்  அது தமிழ்நாடு உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும்  0.8  டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத்  தொடங்கியிருப்பதையும்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி: தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai#comments</comments><guid isPermaLink="false">274d9b12-f5a8-4a1a-aad5-3a72bffbb7e0</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:29:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:29:20.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.</aside><h2><strong>குறைந்த விலைக்கு தங்கம்</strong></h2><p>சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். </p><p>கடந்த 17-ந்தேதி, நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து, குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார்.</p><p>இதனையடுத்து, தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார். </p><h2><strong>ரூ.63 லட்சம்</strong> </h2><p>அப்போது, குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார். சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும், பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.</p><p>இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை  அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி, “மேலே சென்று பணத்தை வைத்து விட்டு, தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன்” எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.</p><p>சிறிது நேரத்தில், சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி, அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார்.</p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் <a href="https://www.maalaimalar.com/topic/பண-மோசடி">அதிர்ச்சி </a>அடைந்தார்.</p><p>மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது பற்றி  தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம் குமார் மற்றும் உதய்கிரண் ஆகிய 4  பேரை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p> முக்கிய குற்றவாளியான சக்தி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">22ca4b6f-e21d-490c-97b1-21986fa09622</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:22:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:22:43.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Anticipatory bail,சிபிசிஐடி,முன்ஜாமின்,பழனி கோயில்,Palani temple land fraud,Madurai Bench of HC,CB-CID</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். </p><p>இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது. </p><h2>வழக்கின் பின்னணி </h2><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.</p><p>இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார். </p><p>சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். </p><p>இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு நர்சுகள் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex#comments</comments><guid isPermaLink="false">2e226919-ca2b-48ca-9265-a7ea0e1eba02</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:06:48.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,நர்சுகள் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.</aside><h2><strong>பல்வேறு கட்ட போராட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாடு நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/நர்சுகள்-போராட்டம்">போராட்டங்கள்</a> நடந்து வருகின்றன. </p><p>அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் இன்று காலை 7 மணிக்கு  திரண்டனர்.  </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்களை போலீசார் டி. எம். எஸ். வளாகத்திற்குள் ஒரு பகுதியில் முடக்கி வைத்தனர். போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் 7 மணிக்கெல்லாம் அவர்களை போலீசார் வெளியே விடாமல் வளாகத்திற்குள் வைத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2><strong>கோஷங்கள்</strong></h2><p>த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து நர்சுகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். </p><p>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர். </p><p>இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி சுர்ஜித் கூறியதாவது:-  </p><h2><strong>நல்ல தீர்வு</strong></h2><p>6500 செவிலியர்கள் கடந்த 9 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. அவற்றை நிரப்பாமல் காலி பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மாறாக பணியிடங்களை குறைப்பது நிரந்தரமாக்கப்படும் என்ற செவிலியரின்  கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். </p><p>எனவே செவிலியர்களுக்கு எதிராக மீள் பணி அமர்வு முடிவினை அரசு கைவிட வேண்டும். கடந்த ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் சென்றது போல இந்த அரசு செயல்பட வேண்டாம். முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை விரைவில் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">bf9f4b4c-3e24-4d3e-9ce0-a9d94db7a6f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:46:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:46:05.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 23-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூருக்கு பதில் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தற்போதுவரை தமிழ்நாடு அரசு கோரவில்லை’ - மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government#comments</comments><guid isPermaLink="false">097edde7-d8b9-48ea-8efd-1c2ab8e4098a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:30:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:30:24.758Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,பரந்தூர் விமான நிலையம்,Parandur,Civil Aviation,T.N. govt,airport site,மத்திய விமான போக்குவரத்துத் துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ "The Tamil Nadu government has not yet requested an alternative site for the airport in place of Parandur" – Central Government.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்காக முன்மொழியப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு இதுவரையிலும் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.</p><p>திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை’ என்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு சர்வதேச புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழிற்கல்வி கழகத்திற்கு (டிட்கோ) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>2024 செப்டம்பரில் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை ரீதியான விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 10,500 கோடி ஆகும்.” என தெரிவித்தார். </p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>மத்திய அரசால் சென்னையில் முன் மொழியப்பட்ட இந்த இரண்டாவது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த நிலத்தில், சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும் (பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுடையது), மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.</p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு குறித்த கவலைகள் காரணமாக ஏகனாபுரம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் இம்மக்களின் போராட்டம் தொடர்ந்தாலும், யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.</p><p>இச்சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ​​தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், கடந்தாண்டு ஜனவரி அப்பகுதிக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>போராட்டக் களத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மண்டபம் ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக உறுதியளித்தார்.</p><p>மேலும் வளர்ச்சியை தடுக்கவில்லை என்றும், மாற்று இடத்தையே தேர்வு செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதுவரை அவர் தலைமையிலான அரசு அமைந்தபிறகும் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:55.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,நீட் தேர்வு,Neet exam,Singer Arivu,பாடகர் அறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Singer Arivu arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து <a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">நீட் தேர்வை</a> ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;இது முதலமைச்சர் விஜய் ஆட்சி&apos; என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime#comments</comments><guid isPermaLink="false">f481c958-8a93-499e-9153-ccc98004e726</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:51:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:51:17.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நெல் கொள்முதல்,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புகார்</strong></h2><p>தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal">லஞ்சம்</a> வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.</p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies#comments</comments><guid isPermaLink="false">b24dc60f-7284-47c4-a0e2-c96083aced2a</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:39:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:39:54.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</aside><p>சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.</p><h2><strong>6 வழிச்சாலை</strong></h2><p>மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">மதுரவாயல்</a> முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.</p><p>கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.</p><figure><img alt="ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cxyuzk8r/maduravoyal0.jpg" /><figcaption>ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்</figcaption></figure><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறையும்</strong></h2><p>இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.</p><p>கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.</p><p>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</p><p>செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.  </p><h2><strong>கார்டர்கள் பொருத்தும் பணி</strong></h2><p>கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு  16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. </p> <p>மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.</p><h2><strong>சென்னைக்கு வரப்பிரசாதம்</strong></h2><p>வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:24:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:24:57.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Madras High Court,சென்னை ஐகோர்ட்,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Madras high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>பெரம்பூர் தொகுதி</h2><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice">விஜய்</a> 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66 ஆயிரத்து 650 வாக்கு பெற்றிருந்தார். </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க.  வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p> தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில்  முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>ஐகோர்ட் நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers#comments</comments><guid isPermaLink="false">4da0550b-2a0b-4307-b3f5-df19987c73b0</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:17:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:17:11.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvallur Bus Stand,பயணிகள்,திருவள்ளூர் பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.</aside><h2><strong>கடும் நெரிசல்</strong></h2><p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.</p><p>தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும்.  மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால் பஸ்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரவும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பஸ்நிலைய பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. </p><h2><strong>மாவட்ட நிர்வாகம்</strong></h2><p>இதைத்தொடர்ந்து  2019-ம் ஆண்டு திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி  மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்றது. </p><p>பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.  பின்னர் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து மார்ச் 30-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் வேடங்கிநல்லுார் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. </p><h2><strong>தாமதம்</strong></h2><p>ஆனால் இன்னும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.  கட்டுமான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் முன் சாலையை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. </p><p>இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.</p><p>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். </p><p>புதிய பஸ்நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ்நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:43:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice president,Drones Ban,டிரோன் பறக்க தடை,திருப்பூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan - Drones ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சிபி.ராதாகிருஷ்ணன்</h2><p>​இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார்.</p><h2>அவினாசி லிங்கேஸ்வரர்</h2><p>​டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5½ மணிக்கு அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் சுந்தரமூர்த்தி நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டிட புனரமைப்பு பணியில் ‘சிஜிரானை வரிசைக்கல்’ தொடக்க விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.</p><p>​அதன்பிறகு இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கார் மூலமாக புறப்பட்டு அவர் கோவை செல்கிறார்.</p> <p>​<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> வருகையை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மதியம் 1 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>​துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழிகள் மற்றும் வருகைபுரியும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2#comments</comments><guid isPermaLink="false">c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:32:28.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தலையங்கம்</strong></h2><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது The Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.</p><p>ஆட்சியின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">அலங்கோலங்களை</a> எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@The_Hindu</a> நாளேட்டின் இன்றைய தலையங்கம்.<br><br>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும்… <a href="https://t.co/MDtwEdbL8J">https://t.co/MDtwEdbL8J</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079459769883222427?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:01:47.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,விஜய்,vijay,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge - CM Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram#comments</comments><guid isPermaLink="false">b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:50:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:50:51.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,ADMK protest,அதிமுக ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><p>அ.தி.மு.க.பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>டாஸ்மாக் மதுபானக் கடை</strong></h2><p>சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.</p><p>நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>இடையூறு</strong></h2><p>மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse">அண்ணா திராவிட முன்னேற்றக் கழக</a> திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2><strong>மக்கள் நலன்</strong></h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அம்மன் வேடத்தில் திரிஷா: ஆடித் திருவிழா பேனரால் வெடித்த சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner#comments</comments><guid isPermaLink="false">d6ddd858-cd47-4045-a1f7-e8bd096df244</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:24:54.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi Festival,trisha,திரிஷா,ஆடி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</aside><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ugrz7znu/trisha01.jpg" /></figure><h2><strong>அம்மன் வேடத்தில் திரிஷா</strong></h2><p>ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p> <p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று  தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். </p><h2><strong>2 பேர் மீது வழக்குப்பதிவு</strong></h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect#comments</comments><guid isPermaLink="false">9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:19:55.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,சிவாஜி கணேசன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</h2><p>'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமண்டபம்</h2><p>நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal#comments</comments><guid isPermaLink="false">3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:56:15.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2><strong>முறைகேடுகள்</strong></h2><p>40 கிலோ எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-கொள்முதல்">நெல் மூட்டையை</a> எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2><strong>தமிழக அரசு</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p>நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-continues-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-continues-to-drop#comments</comments><guid isPermaLink="false">96bd068c-b1fb-4e6a-a4ee-f707931f8ab5</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:44:10.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பவானிசாகர் அணை,bhavanisagar dam,நீர்மட்டம் சரிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/07/1945905-bavanisagar2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhavanisagar Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/07/1945905-bavanisagar2.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கி உள்ளது.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளைநிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி அடி கொண்டது பவானிசாகர் அணை அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். </p><p>கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் எதிரொலியாக தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.</p> <p>தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது.</p><p>இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 58.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 67 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><p>அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி வீதம் என மொத்தம் 1255 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.</p><h2>குண்டேரி பள்ளம்</h2><p>ஆனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.42 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.96 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.22 அடியாகவும் சரிந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026#comments</comments><guid isPermaLink="false">09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:10.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. </p><p>சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை உயர்வு</h2><p>தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled#comments</comments><guid isPermaLink="false">7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:18:27.311Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</aside><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/வைகோ">வைகோ</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பிறந்தநாள் அல்ல</strong></h2><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார்.</p><p>நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><p>வாஜ்பாய் அவர்கள் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துக்கள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார்.</p><h2><strong>பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்</strong></h2><p>திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள்.</p><p>எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் அவர்கள் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன்.</p><p>உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது.</p><h2><strong>எழுச்சி மாநாடு</strong></h2><p>அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை அமைச்சரையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள்.</p><p>“தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை அமைச்சரை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும், காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களையும், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ்சிங் பாதல் அவர்களையும், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம்.</p><p>இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2><strong>மனதைப் புண்படுத்த வேண்டாம்</strong></h2><p>இந்த ஆண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை.</p><p>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன்.</p><p>என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.</p><p>‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.</p><p>இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services#comments</comments><guid isPermaLink="false">0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:19:50.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Cable TV,கேபிள் டிவி,DTH,டிடிஎச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</aside><h2><strong>கேபிள் டி.வி. கட்டணம்</strong></h2><p>மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.</p><p>அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>வரைவு அறிக்கை</strong></h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அரசு">மத்திய அரசின்</a> பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் இல்லை.</p><p>தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30#comments</comments><guid isPermaLink="false">9f86052c-a139-4221-a893-68b35a1821b8</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:04.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>முகலிவாக்கம்</strong></h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2 , தட்டான்குளம்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2><strong>கீழ்க்கட்டளை</strong></h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p><h2><strong>ஆலந்தூர்</strong></h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.</p><h2><strong>பெரும்பாக்கம்</strong></h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்&apos; நிர்வாகம் அதிரடி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement#comments</comments><guid isPermaLink="false">fec29c07-00e4-40ab-b2b0-9b66348b5a71</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:29:32.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,டாஸ்மாக்,liquor procurement ​​,மதுபானங்கள் கொள்முதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்' நிர்வாகம் தொடங்கி உள்ளது.</p><h2>மது விற்பனை</h2><p>தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.</p><p>இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.</p><h2>டாஸ்மாக் நிர்வாகம்</h2><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a>' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.</p> <h2>எலைட் கடைகள்</h2><p>அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2>விரும்பிய மது வகைகள்</h2><p>'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுவகைகளை</a> அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.</p><p>புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளையும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: தி.மு.க. எம்.எல்.ஏ.-வுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:25:25.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4cdbf461-721a-437e-a832-36244f78c95f">விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1">மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</a> </p><p>எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83">துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel">டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/75b67448-3134-400e-9b4c-161914f5ca29">சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000">வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions">டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</a></p><figure><img alt="CJP Leaders Meets JP Nadda" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held">கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ram-temple-donation-theft-case-do-not-politicise-issue-chief-justice-surya-kant">ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat">"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்" - மார்க்கண்டேயன் கூச்சல்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session">நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிணடல் செய்த பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan">29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn">டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody">முதலமைச்சர் விஜய் எலும்பை உடைப்பேன் என பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு</a></p>]]></content:encoded></item><item><title>முதல்வர் எலும்பை உடைப்பேன் என பேச்சு.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் சிறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody#comments</comments><guid isPermaLink="false">a88b860f-b619-463d-8400-2ac4e1853bd9</guid><pubDate>Mon, 20 Jul 2026 16:18:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:18:34.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dmk mla,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,திமுக எம்.எல்.ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tuticorin DMK MLA 15-day remand ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வர் விஜய்யை அச்சுறுத்தும் தொனியில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><h3><strong>விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது:</strong></h3><p>கோவில்பட்டியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜயை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்தற்காக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர்.</p><p>சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. </p><p>திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்ட பல திமுக தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><p>இதையடுத்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வரை அச்சுறுத்தும் வகையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று காலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் விட்டிற்கு சென்று போலீசார் அவரைக் கைது செய்தனர்.</p><p>பின்னர் அவர் மேல் விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கைக்கு எதிராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீதா ஜீவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.</p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “மார்க்கண்டேயனை முன்னறிவிப்பின்றி காலை 6 மணிக்கு காவல்துறை கைது செய்துள்ளனர்.</p><p>இது நீண்ட காலம் நீடிக்காது. அதிகபட்சமாக, இந்த அரசாங்கம் இன்னும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம். அதுவரை மட்டுமே காவல்துறையால் இந்த முறையில் செயல்பட முடியும்," என்று அவர் கூறினார்.</p><h3><strong>எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்:</strong></h3><p>இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn#comments</comments><guid isPermaLink="false">f85786da-0554-49b5-b5a6-e56b64382251</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:57:23.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,CPI,Communist,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam- Veerapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்</h2><p>இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று சென்னை, அம்பத்தூரில் உள்ள சிபிஐ (எம்.எல்) லிபரேசன் அலுவலகமான தோழர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், நா.பெரியசாமி, எம்.ரவி, எஸ்.பாலசுந்தரம், அ.சந்திரமோகன், எஸ்.ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர்.</p><h2>இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-</h2><p>1) டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பாராளுமன்ற நோக்கிச் சென்ற பேரணி மீது தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.</p><p>2) தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் செப்டம்பரில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.</p><p>3) நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.</p><p>4) இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டுப் பிரகடனம் ஆக.4-ல் வெளியிடப்படும். தமிழகத்திற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இந்தப் பிரகடனம் அமையும். மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஆக. 10-க்குள் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>5) அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் வருவாயில் மிகப்பெரும் திருட்டு நடைபெற்றுள்ளது. கோவில் நிர்வாகிகள் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் உறுதியாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately#comments</comments><guid isPermaLink="false">3b4ee343-ac95-4413-8046-fb1337da6cca</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:42:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:42:41.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.</p><h2>ஒப்பந்த ஊழியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18-ஆம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.</p><p>மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர்.</p><p>அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த  தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.</p><h2>தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு</h2><p>அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11  ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின்துறை அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி  அளிக்க  வேண்டும்.  அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan#comments</comments><guid isPermaLink="false">06f47ba7-ac6f-4188-a2b7-603666c303a0</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:18:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:18:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,பா.ம.க. அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்&quot; - மார்க்கண்டேயன் கூச்சல்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat#comments</comments><guid isPermaLink="false">993bfdab-da84-41f7-9902-19ae8d34395f</guid><pubDate>Mon, 20 Jul 2026 14:22:24 +0000</pubDate><atom:updated>2026-07-20T14:22:24.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MarkandayanArrest,DMKMLAArrest,மார்க்கண்டேயன்கைது,ThoothukudiGH,GunpointThreatAllege,துப்பாக்கிமுனைமிரட்டல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MarkandayanArrest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><h2><strong>10 மணி நேர விசாரணை:</strong></h2><p>கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்று, சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். </p><p>இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.</p><h2><strong>துப்பாக்கி முனை மிரட்டல் - எம்.எல்.ஏ. கூச்சல்:</strong></h2><p>மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் வாகனத்தில் இருந்து மார்க்கண்டேயன் இறக்கப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களைப் பார்த்து அவர் திடீரென ஆவேசமாகக் கூச்சலிட்டார். <em><strong>"போலீசார் என்னை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார்கள்!"</strong></em> என அவர் உரத்த குரலில் கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>உடனே அவரைப் போலீசார் சூழ்ந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை அறைக்குள் வேகமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி:</strong></h2><p>கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.</p><p>இது தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். </p><p>மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்களும், திமுக தலைவர்களும் தவெக அரசிற்கு எதிராகத் தீவிர கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project#comments</comments><guid isPermaLink="false">7de47d8a-1164-4560-83b6-e669f53a4786</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:57:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:57:14.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>inspection,CMVIJAY,SolidWasteManagement,திடக்கழிவுமேலாண்மை,ChennaiCorporation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay Inspects waste-to-gas plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார். </p><p>இந்த ஆய்வின் போது, திடக்கழிவுகளில் இருந்து மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.</p><h2><strong>இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு:</strong></h2><p>சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு எரிவாயு தயாரிக்கப்படுகிறது, இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன் எவ்வளவு, மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p>இயந்திரங்களின் இயக்க நிலை மற்றும் தூய்மைப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அவர், பணிகளை மேலும் தொய்வின்றி விரைவுபடுத்த அதிகாரிகளுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2><strong>அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:</strong></h2><p>சென்னை மாநகராட்சியை முழுமையான தூய்மையான நகரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு, வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்குவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மக்களைக் கவர்ந்த எளிமை:</strong></h2><p>முன்னதாக, இந்தத் திடீர் ஆய்விற்காக முதலமைச்சர் வாகனப் பேரணியாகப் புறப்பட்ட போது, வழியெங்கும் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அப்போது தனது காரில் இருந்தபடியே பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்து, அவர்களின் வாழ்த்துக்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">c2e40369-de04-4732-99ec-728d3aaf3c77</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:17:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:17:56.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,DMK,திமுக,Union Ministry,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.</p><p>காவல் துறை அனுமதி மீறி, போராட்டம் நீடித்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்நிலையில், “தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.</p><p>கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும். மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும். அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது” என திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.</p><p>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.</p><p>அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.</p><p>தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! </p><p>மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.<br><br>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்… <a href="https://t.co/jsOdVDS2Te">pic.twitter.com/jsOdVDS2Te</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2079123740814901485?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">e504d393-6838-4a10-960f-d473afe9296d</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:15:25.601Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசியல் சாசன சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை இன்னும் திறக்கவில்லை. இதற்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். உச்ச நீதிமன்றமும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்க்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.</p><p>சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; </p><p>தமிழ்நாடு அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். </p><p>உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். </p><p>ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. </p><p>இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள்.</p><p>ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. </p><p>பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.</p><p>ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>இதனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். </p><p>மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details#comments</comments><guid isPermaLink="false">75b67448-3134-400e-9b4c-161914f5ca29</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:34:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:34:13.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item></channel></rss>