<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 16 Jul 2026 21:30:20 +0000</lastBuildDate><item><title>பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee#comments</comments><guid isPermaLink="false">3a8af81a-4b60-42a2-95c0-7a7a0551504d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:25:38 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:25:38.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,inquiry committee,Dhandayuthapani Swami Mutt,தண்டாயுதபாணி கோயில்,பழனி கோயில்,விசாரணைக்குழு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி மலையடிவாரத்தில் உள்ள ரூ. 100 கோடி மதிப்புள்ள  தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் வெறும் ரூ. 2 கோடிக்கு இரு தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.</p><p>பின்னர் இந்த ஊழல் கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த முறைகேடான நிலப் பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்து  உத்தரவிட்டது.</p><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பொறுப்பில் இருந்து இந்த பதிவை மேற்கொண்ட கொடைக்கானல் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><p>இவர் உட்பட 4 பேர் மீது  கூட்டுச்சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபியும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விசாரணைக்குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name#comments</comments><guid isPermaLink="false">71d02eb9-b241-45e6-9f7a-75b038670059</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:53:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:53:31.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,vck,tvk,AdidravidarWelfare,TrichyPressMeet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டின் ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’யின் பெயரை ‘சமூக நீதித் துறை’ என மாற்றி அரசாணை வெளியிட்டது.</p><p>இந்த பெயர் மாற்றம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>இன்று திருச்சியில் நடைபெற்ற விசிக மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், </p><h2><strong>பெயர் மாற்றம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி!</strong></h2><p>“தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரைச் சமூக நீதித்துறை என்று மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கை எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.</p><h2><strong>'ஆதிதிராவிடர்' சாதிப் பெயர் அல்ல</strong></h2><p>ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதிப் பெயர் கிடையாது. அது சாதி ஒழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுப் பெயர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பெருமைமிகு பெயர். நாங்கள் அந்தப் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், இந்தச் சாதிப் பெயர்களே காலப்போக்கில் மறந்திருக்கும். </p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அந்தப் பெயரைச் சுருக்கி, ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பெயர் போல மாற்றிவிட்டார்கள். நாங்கள் பொருட்படுத்தவில்லை. சாதி பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்களே மாற்றிவிட்டார்கள். 'சமூக நீதி துறை' என்ற பெயர் எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது’ என்று கூறினார்.</p><h2><strong>வன்னி அரசுவின் கோரிக்கை என்ன? – திருமா விளக்கம்</strong></h2><p>அமைச்சர் வன்னி அரசுவின் கோரிக்கையால்தான் பெயர் மாற்றப்பட்டது என்று பரவி வரும் வதந்திகளுக்குத் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.</p><p>“அரசு தரப்பிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை முற்றிலும் வேறானது. ‘நாங்கள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் ஆதிதிராவிடர் நலத்துறையைத்தான் தர வேண்டுமா? ஏன் வேறொரு பொதுத் துறையைத் தரக்கூடாது?’ என்று மட்டும்தான் அவர் கேள்வி எழுப்பினார். </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தலித் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடும் இயக்கம் என்பதை உணர்த்தவே அவர் பொதுவான வேறொரு துறையைக் கேட்டார். ஆனால், வன்னி அரசு சொல்லித்தான் துறையின் பெயர் மாற்றப்பட்டதாக ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது” என விளக்கமளித்தார்.</p><h2><strong>இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை..</strong></h2><p>7 சமூகம் ஒன்றாக சேர்ந்து அருந்ததியர் என்று வாங்கினார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களும் தங்களது சாதி பெயரை மாற்றி அரசாணையை வாங்கிகொண்டார்கள். மற்ற சாதிகள் அனைத்தும் என்னவாக இருந்தாலும் எஸ்சி பட்டியலில் சிலருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.</p><h2><strong>விசிக-வின் அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் நிலைப்பாடு</strong></h2><p>இறுதியாக விசிக-வின் இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன், “அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ அல்லது வன்னி அரசு சொல்லி மாற்றப்பட்டது அல்ல". விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், தமிழ்நாடு அரசு இந்தத் துறையின் பெயரை மீண்டும் பழையபடி ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே மாற்ற வேண்டும். இதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:38:18.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/casper-ruud-enter-qf-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket">பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns">சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children">குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani">அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p>]]></content:encoded></item><item><title>சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">c2bfb142-c5ae-47ff-a213-897762cf2968</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:08:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:08:21.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக அரசு,Childline,Tamil Nadugovernment,சைல்டுலைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ childline-udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தவிப்பிற்குள்ளாகும் மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ‘சைல்டுலைன்’ உதவி மைய ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இது தொடர்பாக, ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இந்தியாவில் ஆபத்திலுள்ள குழந்தைகளைக் காக்கவும், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கவும் '1098' என்ற இலவச தொலைபேசி சேவை 'சைல்டுலைன்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. </p><p>மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இந்த சேவை மாநில அரசுகளின் முழுப் பொறுப்பில்  கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த அவசர உதவி மையங்களை அரசே நேரடியாகக் கண்காணித்து வருகிறது.</p><p>அரசுத் துறை இந்த சேவையைத் தன் வசம் எடுத்த பிறகு, நிதி ஒதுக்கீட்டில் நிலவும் சுணக்கம் காரணமாகப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>2 மாத ஊதிய நிலுவை:</strong></h2><p>சைல்டுலைன் அமைப்பில் பணியாற்றும் களப் பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய மாதங்களிலும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமல், 40 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தங்களின் சொற்ப ஊதியத்திலும் பி.எஃப், மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படைப் பலன்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் பணிகளுக்காகக் களத்தில் செலவிடப்படும் பயணப் படிகள் கூட வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்:</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் நலனுக்கான அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைல்டுலைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p><p>குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் சைல்டுலைன் பணியாளர்கள் முதல்நிலை மீட்பர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கப்படாமல் வாழ்வாதாரம் முடங்கினால், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பணியை விட்டு விலக நேரிடும். </p><p>இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு உடனே தலையிட்டு இந்த நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram#comments</comments><guid isPermaLink="false">5c8754e5-c38c-4e6c-af27-c85a1631c38f</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:03:59 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:03:59.216Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,police,Karti Chidambaram,கார்த்தி சிதம்பரம்,Custodial deaths,லாக்கப் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், </p><p>“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.</p><p>லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாச்சார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும்.</p><p>காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். </p><p>தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children#comments</comments><guid isPermaLink="false">f3065241-9459-4a3e-a077-aa0e72f420f0</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:42:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:42:19.902Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,தமிழக சுகாதாரத்துறை,பாராசிட்டமால்,உடல்நலம்,Paracetamol Syrup,TnHealth Department</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paracetamol for Children]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்துகளில் அதிகளவில் ஆல்கஹால் கலக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடி விளக்கம் அளித்துள்ளது.</p><p>மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பரப்பப்படும் தவறான செய்திகளால் மக்களிடையே தேவையற்ற அச்சம் உருவாவதைத் தடுக்க இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2><strong>சரியான விகிதத்திலேயே ஆல்கஹால் பயன்பாடு:</strong></h2><p>குழந்தைகளுக்கான திரவ வடிவ மருந்துகளில் சில குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கரைப்பதற்காகவும், மருந்து கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காகவும் ஆல்கஹால் மிகக் குறைந்த அளவில், பாதுகாப்பான விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.</p><h2><strong>60 மி.லி பாட்டிலில் எவ்வளவு உள்ளது?</strong></h2><p>பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு இதில் ஆல்கஹால் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய சுகாதாரத்துறை, 60 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு பாராசிட்டமால் மருந்து பாட்டிலில் வெறும் 10% மட்டுமே, அதாவது 6 மி.லி அளவுக்கே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது. இந்த அளவு சர்வதேச மருத்துவ விதிமுறைகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது.</p><h2><strong>95% ஆல்கஹால் என்பதன் நிஜமான அர்த்தம் என்ன?</strong></h2><p>மருந்து பாட்டில்களின் லேபிள்களில் குறிப்பிடப்படும் "95% ஆல்கஹால்" என்ற வார்த்தையை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அது மருந்தில் 95% ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் அல்ல. மாறாக, அந்த மருந்து தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆல்கஹாலின் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் மருத்துவக் குறியீடே அதுவாகும்.</p><p>"மருத்துவக் குறியீடுகளையும், தொழில்நுட்ப வார்த்தைகளையும் தவறாகப் புரிந்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் போது, மருத்துவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். போலிச் செய்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை."</p><p>மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழேயே அனைத்துக் குழந்தை மருந்துகளும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், பெற்றோர்கள் எவ்வித பயமும் இன்றி மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures#comments</comments><guid isPermaLink="false">dcdf47f8-2cdd-4451-be5a-7cbd251ea7de</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:34:01.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக எம்பிக்கள்,DMK MPs,mekedatu dam,மேகதாது அணை,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் இன்று அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மேகதாது அணை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படும் மறுவரையறை மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. </p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், </p><p>“மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.</p><p>ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.</p><p>தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள்!” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani#comments</comments><guid isPermaLink="false">32fcf54d-2c01-4339-98fa-79d4385807a3</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:38:05 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:38:05.495Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமா,PMK,anbumani,Ramadoss,அருள்,Arul,அன்புமணி ராமாதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s6a0hrvm/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ arul-anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s6a0hrvm/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் சூரமங்கலத்தில் பாமக முன்னாள் எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அருள் பேசியதாவது,</p><p>தான் 1989-ஆம் ஆண்டு முதல் கடந்த 2025 வரை கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தியுள்ளேன்.18 முறை சிறைவாசம், ஒரு முறை குண்டர் சட்டம் என என் வாழ்க்கையையே கட்சிக்காக அர்ப்பணித்தேன். </p><p>21 இட ஒதுக்கீடு தியாகிகளில் ஒருவரான குப்புசாமியின் குடும்பத்திற்கு எனது சொந்தச் செலவில் ரூ.18 லட்சம் மதிப்பில் வீடு கட்டி, அதை அண்ணன் அன்புமணி கைகளாலேயே திறந்து வைக்கச் செய்தேன்".</p><h2><strong>அன்புமணி ராமதாஸ் இப்போது மாறிவிட்டார்:</strong></h2><p>அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப மற்றும் அரசியல் மோதல்களின் போது தான் அன்புமணியின் பக்கமே உறுதியாக நின்றேன். "அன்று இருந்த அன்புமணி வேறு, இன்று இருக்கும் அன்புமணி வேறு. </p><p>ராமதாஸ் ஐயாவுடன் நான் இருந்த காரணத்திற்காக என்னை 'துரோகி', 'சாக்கடை' என்று அன்புமணி விமர்சிக்கிறார்" என அவர் ஆதங்கப்பட்டார். மேலும், தங்களை போன்ற உண்மையான உழைப்பாளிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தந்தை-மகன் இருவரும் தற்போது மீண்டும் இணைந்து நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பாமக-வின் வாக்கு வங்கி வீழ்ச்சி:</strong></h2><p>கட்சியின் தற்போதைய நிலைக்கு அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரின் தவறான முடிவுகளே காரணம் என்று அருள் சாடினார். "முன்பு 5.86% ஆக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி, கடந்த ஓராண்டு காலத்தில் இவர்களது செயல்பாடுகளால் வெறும் 2.18% ஆகக் குறைந்துள்ளது" என புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.</p><h2><strong>'அன்புமணியை இனி தலைவராக ஏற்க முடியாது'</strong></h2><p>எனக்கும் அண்ணன் அன்புமணிக்கும் என்ன பிரச்சனை?  எதுவுமே இல்லையே. ஒரே பிரச்சனை உங்களோடு இருந்தது ஒன்றுதான் பிரச்சனை.  "இனிமேலும் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வன்னிய சமுதாயத்தை தங்களது சொந்த நலனுக்காகச் சுரண்டி வாழும் அந்தக் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை" என ஆவேசமாக பேசினார்.</p><h2><strong>இரண்டாக உடைந்த பாமக:</strong></h2><p>அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் எம்பி சதாசிவம் பேசுகையில், "இந்தத் தேதியில் பாமாக்கா இரண்டாக உடைந்தது, ஒரிஜினல் பாமாக்கா இங்கேதான் இருக்கிறது" என்றார்.</p><p>புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறொரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கணிப்புச் சீட்டுகளை ஆய்வு செய்து, ஆடி மாதம் முடிந்த பிறகு (ஆவணி மாதத்தில்) தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அருள் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">fca7771a-ccd1-4f49-b8a1-37c37ce561f3</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:26:39.721Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,navodaya schools,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை” நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜவகர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ஐ மீறாது என்றுக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறும் கடந்த 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைதொடர்ந்து, அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>நவோதயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.</p><p>இங்கு ஏற்கனவே 38 அதிநவீன மாதிரிப் பள்ளிகள், உறைவிட வசதியுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 2024-2025 கல்வியாண்டில் மட்டும் இப்பள்ளிகளில் படித்த 1340 மாணவர்கள் அகில இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். </p><p>நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாடு கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. ஜவகர் நவோதயா போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 3,548.22 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. </p><p>ஆனால் உச்ச நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக இடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.  இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா, ஜவகர் நவோதயா பள்ளி விவகாரம் தொடர்பாக  அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அனைத்து மாநிலங்களிலும் ஜவகர் நவோதயா பள்ளிகள் உள்ளன, ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? </p><p>மத்திய அரசு பள்ளிகளை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன ? உங்களிடம் பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம், உடனடியாக நவோதயா பள்ளிகளை நிறுவுங்கள் என்றா கூறுகிறோம் ? எனக் தமிழக அரசு தரப்புக்கு கேள்விகளை எழுப்பினர்.</p><p>அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது, எனவே இது தொடர்பாக பதிலை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.</p><p>அரசின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விசயத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க முடியாது வேண்டுமெனில் 2 வார கால அவகாசம் வழங்குவதாக கூறினர். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு வார காலம் என்பது மிகவும் குறுகியது, உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதற்கு காலம் பிடிக்கும், எனவே குறைந்தபட்சம் மூன்று வார காலம் அவகாசம் அது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து வாதிட்ட எதிர்மனுதாரரான குமரி மகாசாபா தரப்பு வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 சி.பி.எஸ்.இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது, இந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள். இது தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வியை தடுக்கும் செயலாகும் என வாதிட்டார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர் .மகாதேவன், தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் எனக் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி. நாகரத்னா, மூன்று மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என கூறியபோது, குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். </p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம் , ஆனால் அது 6ம் வகுப்பு முதலே தொடங்கப்பட வேண்டும். அதேவேளையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.</p><p>ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஏனெனில் அந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என தனது கருத்தை ஆழமாக தெரிவித்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள்ளாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாகப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு ஆணையிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாசகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets#comments</comments><guid isPermaLink="false">61f97418-5da0-47e6-a090-3960d3bf4ff4</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:19:31.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,aavin milk,ஆவின் பால் பாக்கெட்,Tamilnadu goverment,Self-Enumeration,சுய கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aavin milk pockets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசின் பொது விநியோகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைவதற்கும், துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும் "சுய கணக்கெடுப்பு" முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இம்முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆவின் நிறுவனம் ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.</p><h2><strong>விழிப்புணர்வுப் பின்னணி:</strong></h2><p>பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக, தங்களின் மொபைல் எண்களைக் கொண்டு தாங்களாகவே பதிவு செய்யும் "சுய கணக்கெடுப்பு" நடைமுறை 'ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை' நடைபெறவுள்ளது.</p><p>இந்தத் தகவலை மாநிலத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய மற்றும் பயனுள்ள வழியாக ஆவின் பால் பாக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தினசரி லட்சக்கணக்கான வீடுகளுக்குச் செல்லும் ஆவின் பால் பாக்கெட்டுகளின் மீது, இந்த சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>முக்கிய விவரங்கள்:</strong></h2><p>•வரும் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை மட்டுமே இந்த இணையவழிப் பதிவு வசதி திறந்திருக்கும்.</p><p>•பதிவை மேற்கொள்ள குடும்பத் தலைவரின் அல்லது ஒரு தகுதியுடைய உறுப்பினரின் மொபைல் எண் அவசியமாகும்.</p><p>•குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று மொபைல் எண் மூலம் உள்நுழைந்து (Login), வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த விவரங்களை எளிமையாகப் பதிவு செய்ய முடியும்.</p><h2><strong>ஆவின் நிறுவனத்தின் முன்முயற்சிக்கு வரவேற்பு:</strong></h2><p>அரசுத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கணக்கெடுப்புகள் குறித்த தகவல்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் தாண்டி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் பாக்கெட்டுகளின் மூலம் கொண்டு செல்வது மிகச் சிறந்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது. </p><p>காலையில் பால் வாங்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்த வாசகத்தைப் படிப்பதன் மூலம், விழிப்புணர்வு அடைந்து விடுபடாமல் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible#comments</comments><guid isPermaLink="false">25c4734f-66ad-4a09-8e8c-e8f4c1fe1b60</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:07:50 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:07:50.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>admk alliance,அதிமுக கூட்டணி,cm vijay,முதல்வர் விஜய்,தவெக அரசு,TVK Govt,முன்னாள் அமைச்சர் ரகுபதி,former minister ragupathy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ragupathy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர்.</p><p>லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரே கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.</p><p>எந்த சோதனைகளையும் தாங்கும் இயக்கம் திமுக. ஊழல் மகாசக்தி, பராசக்தியாக முதல்வர் விஜய் இருக்கிறார் என்பதற்கு கரூரும், பழநியும்தான் எடுத்துக்காட்டு.</p><p>தமிழகத்தில் நிரந்தர கூட்டணியும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது. ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் போகமாட்டோம். </p><p>தனித்து நின்று வெல்லக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த இயக்கமாக திமுகவை மாற்றிக் காட்டுவோம். நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, பாலியல் கொள்ளை நடக்கும் ஆட்சி தவெகவின் ஆட்சி.</p><p>கரூரில் முதல்வர் விஜய் பேசியது ஆணவம், அகங்காரம், இறுமாப்பின் எடுத்துக்காட்டு. அடக்கமாக முதல்வருக்கு ஏற்ற வகையில், அவரின் பேச்சு இல்லை.</p><p>மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து கிண்டல் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இன்று ஒன்றும், நாளை ஒன்றும் பேசுவார்கள்; அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் முடிந்து 5 மாதங்களில் இளம்பெண் டாக்டர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-doctor-dies-by-suicide-five-months-after-marriage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-doctor-dies-by-suicide-five-months-after-marriage#comments</comments><guid isPermaLink="false">48e472e6-39a0-4129-8db3-ae88cbc1a0e6</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:27:57 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:27:57.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,Doctor suicide,டாக்டர் தற்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/alyjhs54/suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/alyjhs54/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 24). எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ள இவர் அதே மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்று வேட்கையுடன் பள்ளிப்படிப்பை முடித்த அவருக்கு எதிர்பார்த்தது போலவே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.</p><h2><strong>திருமணம்</strong></h2><p>தான் படிக்கும் மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதுகலை படிப்பை மதுரையில் தொடர்ந்து படித்து வந்தார். இதற்காக அவர் அதே கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்று வருவது வழக்கம். இதற்கிடையே திருமண வயதை எட்டிய மகளுக்கு அவரது பெற்றோர் மணம் முடித்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் டாக்டரான லாவண்யா, தான் முதுகலை படிப்பையும் படித்து முடித்த பிறகே திருமணம் குறித்து பேசவேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரிடம் கூறிவந்தார். அனால் அவர்களே திருமணம் முடித்து வைப்பதில் உறுதியாக இருந்தனர்.</p><p>இதையடுத்து லாவண்யாவுக்கு திவாகரன் என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்தனர். கோவையில் நடந்த பிரமாண்ட திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் அவருடன் படித்து வரும் சக மாணவிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவரிடம் திருமணமே வேண்டாம் என்று கூறிவந்த நீ எப்படி சம்மதம் தெரிவித்தாய் என்று சக மாணவிகள் கேட்டுள்ளனர்.</p><h2><strong>கருத்து வேறுபாடு</strong></h2><p>அதற்கு பதில் அளிக்க முடியாமல் தவித்த லாவண்யாவுக்கு, திருமணம் செய்து கொண்டதால் தனது முதுகலை மருத்துவப்படிப்புக்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும் மாணவி என்ற வாழ்க்கை முறையில் இருந்து தாம்பத்தியம் என்ற முறைக்கு மாறிவிட்டதால் மருத்துவ படிப்பில் கவனம் சிதறிவிடும் என்றும் அவர் கருதினார். </p><p>இதுபற்றி முதலில் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவர்கள் தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம், தைரியமாக படி என்று தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மனக்குழப்பத்தில் இருந்த டாக்டர் லாவண்யா, தனது கணவரிடம் தன்னுடைய நிலை குறித்து பேசினார். இதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சிகள் என்று சென்றுவந்த லாவண்யாவுக்கு படிப்பில் கவனம் சிதறியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டு, 13-ந்தேதி மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பிய லாவண்யா யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற அவர் மீண்டும் வெளியே வரவில்லை.</p><p>இதற்கிடையே நீண்ட நேரமாக லாவண்யா தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவரது தோழிகள் மற்றும் சக மாணவிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அத்துடன் உள்ளேயிருந்து எந்த பதிலோ, சத்தமோ வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் உடனடியாக விடுதி காவலாளிக்கு தெரிவித்தனர்.</p><h2><strong>குடும்ப பிரச்சனை</strong></h2><p>அவரது உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,  அங்கு டாக்டர் லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த தல்லாகுளம் போலீசார், லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் துயர முடிவை அறிந்து ஓடோடி வந்த அவரது பெற்றோர் உடலை பார்த்து கதறித்துடித்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டாக்டர் லாவண்யாவின் தற்கொலை முடிவுக்கு குடும்ப பிரச்சினையே காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>குறிப்பாக மருத்துவம் படிக்க திருமண வாழ்க்கை தடையாக இருக்கும் என்று கருதிய லாவண்யா இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இதுதவிர வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. விளம்பரத்தில் ‘விஸ்வகுரு’, நிர்வாகத்தில் ‘பூஜ்யகுரு’- மாணிக்கம் தாகூர் கிண்டல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-tease-to-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-tease-to-bjp#comments</comments><guid isPermaLink="false">76da4fa7-49bd-4567-a374-29dfb2952098</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:15:36 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:15:36.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலில் டிடர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் பால் மாநிலம் முழுவதும் வினியேகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>விளம்பரத்துக்கு ‘விஸ்வகுரு’ நிர்வாகத்தில் ‘பூஜ்யகுரு’. இதுதான் பா.ஜனதாவின் லட்சணம். மக்களின் ஆரோக்கியத்தை விட ஊழலே பிரதானம். நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் உணவில் கூட விஷம் கலக்கும் அளவிற்கு பா.ஜனதாவின் ஊழல் ஆட்சி மலிந்துவிட்டது. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம்?</p><p>மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை ஆகிய விசாரணை முகமைகள் இப்போது எங்கே சென்றன?</p><p>மத்திய அரசே செவி சாய். மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனே நிறுத்து. </p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">5868d2fc-868c-4a44-b78a-bf4ef73c1fab</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:42:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:42:04.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை,Armstrong murder,Armstrong</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. </p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கான தடை நீங்கி இருக்கிறது.</p><p>இதன் காரணமாக விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>சி.பி.ஐ. விசாரணை தீவிரமடையும் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மார்க்கெட்டில் சாமந்தி பூ விலை கடும் உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/flower-price-hike-in-koyambedu-market-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/flower-price-hike-in-koyambedu-market-2#comments</comments><guid isPermaLink="false">8756163c-00d2-468f-89b8-df43ea661157</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:32:38 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:32:38.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Flower Price,Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்,பூக்கள் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/nywmwgy3/samanthi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாமந்தி பூ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/nywmwgy3/samanthi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆடி மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுதல், பொங்கல் வைப்பது, தீமிதி திருவிழா உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடக்கும்.</p><p>இதை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு பூ மார்க்கெட்டில்</a> அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டு பூ விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. வரத்து குறைவால் கடந்த சில நாட்களாகவே சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.240வரை விற்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் அதன் விலை மேலும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ சாமந்தி பூ ரூ. 350 வரை விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.120 க்கும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மார்கெட்டில் உள்ள பூக்கடைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.500வரை விற்கப்படுகிறது.</p><p>பூ மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது:- </p><p>ஆடி மாதம் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடக்கும். மேலும் ஆடி பூரம், ஆடி பெருக்கு என அடுத்தடுத்து விஷேச நாட்கள் வருவதால் இனி வரும் நாட்களில் பூ விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.</p><p>கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு :-</p><p>மல்லிகை -ரூ.600,</p><p>கனகாம்பரம்- ரூ.700,</p><p>அரளி - ரூ.250,</p><p>செவ்வரளி- ரூ.400,</p><p>முல்லை- ரூ.500,</p><p>ஜாதி-  ரூ.500,</p><p>சம்பங்கி-ரூ.100.</p>]]></content:encoded></item><item><title>சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">d8fef828-ba0e-4386-bf80-727c7c549106</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:20:42.873Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,தவெக,tvk,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/4h29jnag/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/4h29jnag/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன.</p><p>பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது. அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும், திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.</p><h2>சிறை மரணங்கள்</h2><p>நாகர்கோவில் சம்பவம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதில் அரசு உறுதியாக உள்ளது. தவறு செய்த எவர் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.</p><p>பழனி நில விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில மோசடி புகாரில் தவெகவினருக்கு தொடர்பு இல்லை. எந்த இடத்திலும் அரசு துணை போகவில்லை.</p><h2>பத்திரப்பதிவுத்துறை புதிய மாற்றங்கள்</h2><p>பத்திரப்பதிவுத் துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி 'மினிஸ்டர் கட்டிங்' என பணம் வாங்கினார்; ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்போட்டு 'மினிஸ்டர் கட்டிங்' என தொகையை வசூலித்தார் மூர்த்தி.</p><p>பத்திரப்பதிவுத் துறையில் திமுக ஆட்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>ஒப்பந்தங்கள் ரத்து</h2><p>தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாச்சாரத்திற்கு இடமில்லை. முந்தைய ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது.. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans#comments</comments><guid isPermaLink="false">efb18e55-c917-4aa9-8b00-3cf4aeb3d819</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:26:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:26:15.666Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Food Safety Department,உடல்நலம்,color appalams,Colored papads,கலர் அப்பளம்,உணவு பாதுகாப்புத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/aozla9ek/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ color appalams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/aozla9ek/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்கள் மற்றும் குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல வண்ணங்களில் (சிவப்பு, மஞ்சள், பச்சை) விற்கப்படும் கலர் அப்பளங்களில் மற்றும் வத்தல்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாகவும், சில இடங்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட தொழிற்சாலை சாயங்கள் பயன்படுத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.</p><p>இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வகச் சோதனைகளில், சேகரிக்கப்பட்ட பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனத் தெரியவந்துள்ளது.</p><p>அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த அப்பளம் மற்றும் வத்தல் வகைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் அதிகாரிகளும் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை செய்துள்ளது  பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது.</p><p>சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது  நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .</p><h2><strong>உறுப்புகள் பாதிப்பு:</strong></h2><p>நீண்ட நாட்களாக இந்தச் செயற்கை நிறமிகளை உட்கொள்வதால் புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.</p><p>இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. இந்தத் தரம் குறைந்த சாயங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தங்கி, அவற்றின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.</p><p>விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகள் சேர்த்து அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு அவசரத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகின்றன. விதிகளை மீறும் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தேகத்திற்குரிய அல்லது அதிக அடர் நிறமுள்ள அப்பளங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது.</p>]]></content:encoded></item><item><title>FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian#comments</comments><guid isPermaLink="false">58bddaf4-f18c-4fb7-8221-cebf299bc30d</guid><pubDate>Thu, 16 Jul 2026 07:22:08 +0000</pubDate><atom:updated>2026-07-16T07:22:08.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழச்சி தங்கபாண்டியன்,Tamizhachi thangapandian,எப்எம்ஜிஇ தேர்வு,FMGE Exam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gywhpweq/Tamizhachi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamizhachi thangapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/gywhpweq/Tamizhachi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட கட்டாயமாக எழுத வேண்டிய FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது.</p><p>தேர்வின் கடினத்தன்மை திடீரென உயர்த்தப்பட்டது, வினாத்தாள் அமைப்பில் முன்னறிவிப்பின்றி மாற்றங்கள் செய்யப்பட்டன, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தேர்வர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை.</p><p>தேர்வுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம். அதேநேரத்தில், தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முன்கூட்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதும் அதே அளவிற்கு முக்கியமானது.</p><p>மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் (NBEMS) உரிய விளக்கங்களையும், தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக </p><p>மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns#comments</comments><guid isPermaLink="false">4077737e-1f7c-4c3e-88e8-5d2af007b0b2</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:42:47 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:42:47.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Bribe,ஊழல் புகார்,Corruption,tvk,tn cm vijay,முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/v3y1ypwn/TN-CM-Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/v3y1ypwn/TN-CM-Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊழல் புகார்களில் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>அமைச்சரவைக் கூட்டம்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.</p><p>பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>முதலமைச்சர் எச்சரிக்கை</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஊழல், லஞ்சம் தொடர்பாக  எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். </p><p>கூட்டத்தில் அவர்,"ஊழல் லஞ்சம் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதவிகள் பறிக்கப்படும்.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும், ரீல்ஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை வேண்டாம்" எனவும் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">63c85588-6cbd-4830-b16c-bbfa4d8803ae</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:34:59.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani murugan temple,சிபிசிஐடி,நிலம் மோசடி,Land Cheating,cbcid,பழனி முருகன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/z2xqfdyv/palanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி முருகன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/z2xqfdyv/palanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/பழனி-முருகன்-கோவில்">பழனி</a> அடிவாரம் பூங்கோ ரோட்டில் தண்டபாணி சுவாமிகள் மடம் செயல்பட்டு வந்தது. இந்த மடத்தின் மூலமாக பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கவும், அன்னதானம் வழங்கவும், பழனி முருகனுக்கு கைங்கர்யம் செய்யவும் இந்து மதத்தை வளர்த்தெடுக்கவும், இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக  தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த மடம் பல ஆண்டுகளாக நிர்வாகிகளால் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. </p><h2><strong>ரூ.100 கோடி</strong></h2><p>தண்டபாணி சுவாமிகள் மறைவுக்கு பின்பு அறக்கட்டளையை நிர்வாகம் செய்தவர்கள் இந்த இடம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதனை மாற்றி வணிக ரீதியாக பயன்படுத்த முயற்சி செய்தனர். மேலும் பலரும் இந்த இடத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>முறைகேடாக பதிவு</strong></h2><p>இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தண்டபாணி சுவாமிகள் மடத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துவை தக்கராக நியமித்து மடத்தின் இடத்தை பராமரித்து வந்தனர்.</p><p>தற்போது இந்த இடத்தில் பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி செல்லும் வகையில் கட்டணம் இல்லாத வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான இடத்தை மடத்துக்கு சம்மந்தம் இல்லாத விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் ரூ.2 கோடிக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கடந்த 6-ந் தேதி பழனி சார்பதிவாளர் அலு வலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.</p><h2><strong>விடுப்பில்</strong></h2><p>வழக்கமாக பத்திரப்பதிவு செய்யும் நபரை விடுப்பில் அனுப்பி விட்டு ஜஸ்டின் மணிகண்டன் மூலம் கடந்த 6-ந்தேதி இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி இந்த பத்திரப்பதிவு செய்ய முயன்றபோது அப்போதைய பதிவாளர் ஒத்துழைப்பு அளிக்காததால் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். இதன் பிறகு தான்  கடந்த 3-ந்தேதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் மீண்டும் இடத்தை பதிய அனுமதி கேட்டு 6-ந்தேதி பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்.</p><h2><strong>புகார் மனு</strong></h2><p>இந்த விவகாரம் பற்றி தெரியவந்ததும் பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பதிவுத்துறை தலைவர், துணைத் தலைவர், மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு முறையான ஆவணங்கள் இன்றி செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். மேலும் மோசடியாக பத்திரப்பதிவு செய்தது குறித்து பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். </p><p>இதனைத் தொடர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய 4 பேர் மீது மோசடி, சதி செய்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</p><h2><strong>மாவட்ட பதிவாளர் நீக்கம்</strong></h2><p>மாவட்ட பதிவுத்துறை சார்பிலும் இந்த பத்திரப் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளனர். இதன்படி முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின்  மணிகண்டன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். </p><p>மாவட்ட பதிவாளரான சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  உள்ளார். அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் நிலையில் தன்னை கைது செய்ய தடை விதிக்கக்கோரி ஜஸ்டின் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி நாளை (17-ந்தேதி) இந்த வழக்கை ஒத்திவைத்து அதுவரை ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.</p><h2><strong>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</strong></h2><p>இந்த நிலையில் பழனி கோவில் பத்திர முறைகேடு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை பிறப்பித்தார். இதனை  தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை  இன்று அதிரடியாக தொடங்கினர்.</p><h2><strong>பொய்யான தகவல்</strong></h2><p>இதற்கிடையே  இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை தொடர்புபடுத்தி சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டது. இது குறித்து சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 3 சட்டப்பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வினோத், சூரியகுமார் என்பவர்களை கைது செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.</p><p>இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக  இறங்கியுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்தானலெட்சுமி தலைமையிலான போலீசார் மோசடி குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவர்மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு  மோசடி பின்னணியில் உள்ள அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட உள்ளனர். </p><p>சி.பி.சி.ஐ.டி. விசாரணை  முடிவில் பத்திரப்பதிவு மோசடி பற்றி அனைத்து பின்னணி தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>குதிரை பேரம் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-case-judgment-on-case-seeking-cbi-probe-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-case-judgment-on-case-seeking-cbi-probe-postponed#comments</comments><guid isPermaLink="false">7d44469d-1be7-4a11-bb72-e63465997c1d</guid><pubDate>Thu, 16 Jul 2026 06:25:53 +0000</pubDate><atom:updated>2026-07-16T06:25:53.739Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>chennai highcourt,சிபிஐ விசாரணை,Horse Trading,CBI court verdict,குதிரை பேரம் விவகாரம்,தீர்ப்பு ஒத்திவைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/699izotb/chennai-highcourt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chennai highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/699izotb/chennai-highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குதிரைபேரம் விவகாரம் தொடர்பாக எம்எல்ஏக்கள் அளித்த புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><p>வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்? என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>மற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக மாட்டுமே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>உண்மையை கண்டறிய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற வேண்டியே தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped#comments</comments><guid isPermaLink="false">bc90c86b-e675-4f86-ae42-48922ec37de9</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:38:56 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:38:56.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,சிவி சண்முகம்,CVe Shanmugam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ur06w0hi/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ur06w0hi/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், <a href="https://www.maalaimalar.com/topic/எடப்பாடி-பழனிசாமி">எடப்பாடி பழனிசாமி</a> தலைமையில் ஒரு அணியும் என்று அ.தி.மு.க. 2-ஆக பிரிந்தது.</p><h2><strong>சி.வி.சண்முகம்</strong></h2><p>பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றிணைந்த நிலையில், சி.வி.சண்முகம் மட்டும் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்.</p><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.</p><p>கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளில் மாவட்ட செயலாளர் பசுபதி ஏற்பாட்டில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.</p><h2><strong>மோதல்</strong></h2><p>அப்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் பசுபதி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக செஞ்சியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கடும் மோதல் வெடித்தது. மாவட்ட செயலாளர் பசுபதியின் ஆதரவாளரை தாக்கி தர, தரவென இழுத்து சென்றதுடன், மாவட்ட செயலாளர் பசுபதியின் காரிலும் கல்வீசப்பட்ட சம்பவத்தால்  பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் பசுபதி போலீசிலும் புகார் அளித்துள்ளார்.</p><h2><strong>11 பேரின் கட்சி பதவி பறிப்பு</strong></h2><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட  11 முக்கிய மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>விழுப்புரம் மாவட்ட கழக இணை செயலாளராக இருந்த ஆனந்தி, மாவட்ட பொருளாளராக இருந்த கே.வி.என்.வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள ஜெயபிரகாஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் என்ற கிருஷ்ணன், மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p><p>விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும், மாவட்ட செயலாளர் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">869f4c21-e089-4aa0-b5ce-24b17e4faff6</guid><pubDate>Thu, 16 Jul 2026 05:37:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T05:37:25.253Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொது பட்ஜெட்,TN Assembly meeting,tn cm vijay,தமழிக முதலமைச்சர் விஜய்,தமிழக அமைச்சரவைக் கூட்டம்,General budget</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/rkhpep6m/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/rkhpep6m/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.</p><h2>முதல் சட்டசபை கூட்டம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.</p><p>கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p>நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><h2>அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..</h2><p>இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.</p><p>பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately#comments</comments><guid isPermaLink="false">005e99a8-86fc-4dde-b07b-61166c255c4d</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:35:15 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:35:15.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/68hjkksy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/68hjkksy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாடு காவல்துறையில் காலியிடங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டில் காவலர்கள் நியமனம் நடைபெறாது என்றும், 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. காவல்துறை பணியில் சேர லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் வேளையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்று அறிவிப்பது பெரும் அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் காவலர்கள் நியமனத்தை தாமதப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதன்மை  இடத்தில் உள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் ஆகியவை அரசின் முதன்மைக் கடமையாக மாறியுள்ளன. இதற்காக காவல்துறையில் தனிப்பிரிவுகள்  ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வலுப்படுத்த போதிய எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கு தேவையான காவலர்கள் தமிழக காவல்துறையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.</p><h2><strong>உடனடியாக நிரப்பப்பட வேண்டும்</strong></h2><p>01.01.2025-ஆம் நாள் நிலவரப்படி தமிழக காவல்துறையில் அதிகாரிகள் அல்லாத காவலர்கள் பணியிடங்கள் ஒரு லட்சத்து 17,609 ஆகும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடி எனும் நிலையில், ஒரு லட்சம் மக்களுக்கு 147 காவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. காவல்துறை தலைமை இயக்குனர் முதல் சார்பு ஆய்வாளர் வரையிலான அதிகாரிகள் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் காவல்துறையின் மொத்த பணியிடங்கள் ஒரு லட்சத்து 33,961 ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 167.45 காவல்துறையினர் தான் உள்ளனர். இவற்றில் 10% பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கொண்டால், ஒரு லட்சம் மக்களுக்கு  132 காவலர்கள் மட்டும் தான் இருப்பார்கள். இது சட்டம் - ஒழுங்கைக் காக்க எந்த வகையிலும் போதுமானதல்ல.</p><p>ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் காவலர் பணியிடங்கள் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 600 ஆக இருக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் 60 ஆயிரம் காவலர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட வேண்டும்.  அதுமட்டுமின்றி, ஏற்கனவே காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 3000 முதல் 4000 காவலர்கள் ஓய்வு பெறும் நிலையில் அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அவ்வாறு செய்யப்படுவதில்லை.</p><h2><strong>இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை</strong></h2><p>தமிழ்நாட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயவிப்புத்துறை ஆகியவற்றுக்கு மொத்தம் 3359 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் 2024-ஆம் ஆண்டில் அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  2023-ஆம் ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணியை 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இழுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் அந்த மாதத்தில் தான் பணி நியமன ஆணைகளை வழங்கியது. அதனால், அந்த ஆண்டில் காவலர் ஆள்தேர்வு அறிவிக்கப்படவில்லை.</p><p>அதன்பின் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3644 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை  வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டும் கூட இன்று வரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால் நடப்பாண்டில் காவலர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.</p><h2><strong>பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான்</strong></h2><p>தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நினைத்தால் காவலர் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை காவலர் தேர்வு செய்யப்படுவதை தடுப்பதற்காகவே ஆள்தேர்வு நடைமுறை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் காவலர்கள் பணிக்காக தங்களை தயார் செய்து காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.</p><p>தமிழ்நாட்டில் காவலர் பணிக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு ஆகும். அப்பணிக்கான வயது வரம்பு 18 முதல் 26 வரை ஆகும். ஆண்டுக்கு ஒருமுறை காவலர் நியமனம் செய்யப்பட்டால் 18-26 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு காவலர் தேர்வில் பங்கேற்க 8 முறை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால்,  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காவலர் தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு 4 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. பலர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த பணிக்கு விண்ணப்பிப்பதால் 2 அல்லது 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒருவரிடமிருந்து 4 முதல் 6 முறை பணி வாய்ப்புகளை பறிப்பது மிகப்பெரிய அநீதியாகும்.</p><h2><strong>நியாயப்படுத்தவே முடியாது</strong></h2><p>காவலர் பணிக்கான உடற்தகுதிக்கு உடனடியாக தயாராகிவிட முடியாது. அதற்காக குறைந்தது  6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி செய்ய வேண்டும். 2026-ஆம் ஆண்டில் காவலர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியாகும் என பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும், ஆள்தேர்வு அறிவிக்கை வெளியாகதால் பயிற்சியும், நம்பிக்கையும் வீணாகி விட்டது. இதில் அவர்களின் தவறு எதுவும் இல்லை; ஆனால், தேர்வு வாரியத்தின்  அலட்சியத்திற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதை நியாயப்படுத்தவே முடியாது.</p><p>2025-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட காவலர் தேர்வுக்கான முடிவுகளை, அது தொடர்பான வழக்குகளை முடித்து  உடனடியாக வெளியிட வேண்டும். 2026-ஆம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் காவலர் பணிக்கான வயது வரம்பை பொதுப் பிரிவினருக்கு 30, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32,  பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு 35 ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026#comments</comments><guid isPermaLink="false">2534f389-c0ec-401a-8956-6df7106064dc</guid><pubDate>Thu, 16 Jul 2026 04:20:07 +0000</pubDate><atom:updated>2026-07-16T04:20:07.729Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/m10l3wdh/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/m10l3wdh/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை குறைந்தது</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>11-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>11-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked#comments</comments><guid isPermaLink="false">912f8b8f-f798-4013-b010-ce630a60d7db</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:58:09 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:58:09.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kudankulam Nuclear Power Plant,கூடங்குளம் அணுமின் நிலையம்,NPCIL,ரகசிய ஆவணங்கள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ci57mfl4/ncpil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kudankulam Nuclear Power Plant - NPCIL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ci57mfl4/ncpil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கூடங்குளம் அணுமின் நிலையம்</h2><p>நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அலகுகள் இங்கு தற்போது செயல்பாட் டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்த மின் நிலையம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.</p><h2>ரகசிய ஆவணங்கள் கசிவு?</h2><p>இந்த நிலையில், நேற்று 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வினியோகிப்பாளர் விவரங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை இணையதளம் மூலம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த தகவலை தேசிய அணுசக்தி ஆணையம் மறுத்து உள்ளது.</p><p>இருப்பினும் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">கூடங்குளம் அணுமின் நிலையம்</a> தொடர்பான ரகசிய ஆவணங்கள் கசிந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2>பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்</h2><p>இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தரவு கசிவுக்கும் அணுசக்தி பாதுகாப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்தார்.</p><p>இதுதொடர்பாக NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், பாதுகாப்பு தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை. அணு பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் வெளியேறவில்லை. முக்கிய தகவல்கள் கசிந்தது என்பது உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காமராஜர் பிறந்தநாள் விழா - புகைப்படத்துக்கு &apos;போஸ்&apos; கொடுப்பதில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-birthday-celebration-congress-functionaries-clash-over-posing-for-a-photo</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-birthday-celebration-congress-functionaries-clash-over-posing-for-a-photo#comments</comments><guid isPermaLink="false">63d74255-dc50-4196-b75a-c5da3bd67249</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:46:02 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:46:02.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,காமராஜர்,kamarajar,காமராஜர் பிறந்தநாள்,Kamarajar Birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/nlm3ow44/congress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/nlm3ow44/congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லையில் காமராஜர் பிறந்த நாள் விழாவில் புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>காமராஜர் பிறந்த நாள் விழா</h2><p>பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமையில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், ராபர்ட் புரூஸ் எம்.பி. முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><h2>புகைப்படத்துக்கு 'போஸ்'</h2><p>நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சங்கரபாண்டியன், உமாபதி சிவன் ஆகியோர் அருகருகே நின்றனர். அப்போது புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக் கொண்டனர்.</p> <h2>சமூக வலைதளங்களில் வீடியோ</h2><p>இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நிர்வாகிகள், மோதலில் ஈடுபட்ட 2 பேரையும் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது.</p><p>புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுப்பதில் மூத்த நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>நோட்டீஸ்</h2><p>இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து, மோதலில் ஈடுபட்ட முன்னாள் மாவட்ட தலைவர்கள் உமாபதி சிவன், சங்கர பாண்டியன் ஆகியோருக்கு "உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது?" என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர்  தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed#comments</comments><guid isPermaLink="false">77d9b4d9-0273-427c-811f-5e7dbe6e5148</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:23:20 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:23:20.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வேலைவாய்ப்பு முகாம்,Job Camp</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/g5ipp0ah/job.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/g5ipp0ah/job.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>வேலைவாய்ப்பு முகாம்</strong></h2><p>சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (வெள்ளிக் கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. </p><p>இம்முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினியரிங், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம்.</p><h2><strong>கட்டணம் இல்லை</strong></h2><p>முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. </p><p>இந்த முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை <a href="https://www.tnprivatejobs.tn.gov.in/">www.tnprivatejobs.tn.gov.in</a> என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (17.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-28</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-28#comments</comments><guid isPermaLink="false">bcf0a430-c401-4afa-98b7-1fc8b8b6071d</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:01:49 +0000</pubDate><atom:updated>2026-07-16T03:01:49.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0quguze5/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0quguze5/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>பெசன்ட் நகர்</strong></h2><p>சாஸ்திரி நகர், காமராஜர் சாலை, வால்மீகி தெரு, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, லட்சுமிபுரம், ஸ்ரீ ராம் நகர், குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, பிள்ளையார் கோவில் தெரு, முத்துலட்சுமி தெரு, 1 வது பிரதான சாலை மற்றும் 1 வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு. </p><h2><strong>தரமணி</strong></h2><p>இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கெனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4 வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4 வது தெரு வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>டிடிகே கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி. பிளாட்ஸ், ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, செக் போஸ்ட், என்.எம். சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார் , கஸ்தூரிபாய் நகர்.</p><h2><strong>புழல்</strong></h2><p>சூரப்பட்டு, புழல், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், மெட்ரோவாட்டர், புழல் சிறை 1 2 மற்றும் 3. </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow#comments</comments><guid isPermaLink="false">259bea2a-7484-422f-aecb-3698fce6d091</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:48:25.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,பராமரிப்பு பணி,ரெயில் ரத்து,maintenance work,train cancel,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/30/13575884-beachtrain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Local train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/05/30/13575884-beachtrain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கூடுவாஞ்சேரி பணிமனையில் நாளை(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை இந்த வழித்தடத்தில் 8 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மதியம் 1.35, 2.15, 3 மணி, 4.25 ஆகிய நேரங்களில் கடற்கரை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும். பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 11.28, மதியம் 12.02, 12.30, 1.45 ஆகிய நேரத்திலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.30, 3.15, 4 மணி, 5.24 ஆகிய நேரத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today#comments</comments><guid isPermaLink="false">fe883205-56b0-41e2-a658-beba4d490f0e</guid><pubDate>Thu, 16 Jul 2026 02:35:25 +0000</pubDate><atom:updated>2026-07-16T02:35:25.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,விஜய்,தமிழக அமைச்சரவை,TN Cabinet,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ba7824r4/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/ba7824r4/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.</p><h2>முதல் சட்டசபை கூட்டம்</h2><p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-panchayat-president-veerasamy-expelled-from-the-party">த.வெ.க.</a> அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி கவர்னர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.</p><p>கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>பட்ஜெட் கூட்டத் தொடர்</h2><p>2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.</p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p> <p>நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய புது திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/tn-cm-vijay">விஜய்</a> தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.</p><p>பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.</p><p>அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>லஞ்சம் பெற்றதாக புகார்... கைது செய்யப்பட்ட முன்னாள் த.வெ.க. நிர்வாகிக்கு 15 நாள் சிறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ex-tvk-functionary-arrested-over-bribery-charges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ex-tvk-functionary-arrested-over-bribery-charges#comments</comments><guid isPermaLink="false">c9e306cc-7793-4892-9b66-2d99b24f9c56</guid><pubDate>Wed, 15 Jul 2026 18:33:57 +0000</pubDate><atom:updated>2026-07-15T18:33:57.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,tvk,த.வெ.க. நிர்வாகி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/y9zthy4k/arst.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/y9zthy4k/arst.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாலை ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், த.வெ.க. முன்னாள் நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>சாலை அமைக்கும் பணிக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வீராசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. </p><p><strong>நீக்கம்:</strong></p><p>இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வீராசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.</p><p>இதனிடையே, சாலை ஒப்பந்ததாரர் நவீன், தாழம்பூர் காவல் நிலையத்தில், வீராசாமி தன்னை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பெற்றதாக புகார் தெரிவித்தார். </p><p><strong>நீதிமன்ற காவல்:</strong></p><p>இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், வீராசாமியை கைது செய்தனர்.</p><p>பின்னர், அவரை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீராசாமியை ஜூலை 29ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு: ரிக்டரில் 3.0-ஆக பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-earthquake-strikes-krishnagiri-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-earthquake-strikes-krishnagiri-district#comments</comments><guid isPermaLink="false">69589a27-7149-4871-8081-1ee3721596f2</guid><pubDate>Wed, 15 Jul 2026 17:04:10 +0000</pubDate><atom:updated>2026-07-15T17:04:10.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிருஷ்ணகிரி,Krishnagiri,நில அதிர்வு,Minor earthquake</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/02/12/1835203-earthquake.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/02/12/1835203-earthquake.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் ஒசூர் பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டரில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. </p><p>தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, மண்டல வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டது. </p><p><strong>10 கிலோமீட்டர்:</strong></p><p>அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு-கர்நாடக எல்லைக்கு அருகில் உள்ள தேன்கனிக்கோட்டை - ஓசூர் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது என்றும், இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இத்தகைய அளவிலான நில அதிர்வு நிகழ்வு 'சிறிய அளவிலான நிலநடுக்கம்' என்று வகைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p><strong>எல்லைப் பகுதிகள்:</strong></p><p>நிலநடுக்க மையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளான கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவின் எல்லைப் பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் மக்களால் இது உணரப்பட்டிருக்கலாம்.</p><p>இருப்பினும், இத்தகைய சிறிய அளவிலான நில அதிர்வுகள் பொதுவாக கட்டிடங்கள் அல்லது கட்டமைப்புகளுக்கு எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-order-issued-transferring-various-ias-officers-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-order-issued-transferring-various-ias-officers-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">81e8e662-c4c3-494d-91fe-07595f6adbbf</guid><pubDate>Wed, 15 Jul 2026 16:27:51 +0000</pubDate><atom:updated>2026-07-15T16:27:51.038Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,பணியிட மாற்றம்,IAS officers,ஐஏஎஸ் அதிகாரிகள்,transfers</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/kbxwqzyf/New-Project-2026-07-15T215543.941.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/kbxwqzyf/New-Project-2026-07-15T215543.941.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்  தலைமைச் செயலாளராக இருக்கும்  பிரதீப் யாதவ், இடமாற்றம் செய்யப்பட்டு அதுல் ஆனந்திற்கு பதிலாக நுண், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>அதுல் ஆனந்த் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தீரஜ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு,  உயர்கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார். </p><p>பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் அரசின் செயலாளராக இருக்கும் காகர்லா உஷா, இடமாற்றம் செய்யப்பட்டு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளராக இருக்கும் சுந்தரவல்லி, இடமாற்றம் செய்யப்பட்டு, காகர்லா உஷாக்குப் பதிலாக, பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக இருக்கும் நிர்மல் ராஜ், இடமாற்றம் செய்யப்பட்டு, வள்ளாலாருக்குப் பதிலாக, போக்குவரத்துத் துறையின்  செயலாளராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.</p><p>தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையராக சுப்ரியா சாஹூ நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவராக ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக அருண் ராய் நியமனம்.</p><p>ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து அறநிலையத்துறையின் ஆணையராக ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-july-2026#comments</comments><guid isPermaLink="false">21dc91ac-72de-47f1-9559-28d5824a3d5b</guid><pubDate>Wed, 15 Jul 2026 03:33:07 +0000</pubDate><atom:updated>2026-07-15T15:29:12.153Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/ts4othf4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/ts4othf4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/centre-plans-to-bring-ott-under-censor-purview-sources-amid-satluj-row">OTT தளங்களை தணிக்கை வாரியத்தின் வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்</a></p><figure><img alt="OTT" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/m5qx0hwy/OTT0001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/axar-patel-in-top-10-of-icc-odi-rankings-for-all-rounders">ஐசிசி ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் அக்சர் படேல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-beat-bangladesh-in-first-t20">முதல் டி20 போட்டியில் வெற்றி: வங்கதேசத்தை சுருட்டியது ஜிம்பாப்வே</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-launches-airstrikes-on-greater-tunb-island-strategic-point-in-strait-of-hormuz">ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டர் தன்ப் தீவு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/changed-my-room-in-assembly-madan-mitra-quits-mamata-banerjees-trinamool">மேலும் பின்னடைவு: அதிருப்தி குழுவில் இணைந்த மம்தாவின் நம்பிக்கை நட்சத்திரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-rera-gets-new-chief-panindhra-reddy-after-mass-resignations">தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-rs-100-crore-mutt-property-registration-shifted-to-cbcid-probe">பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-panchayat-president-veerasamy-expelled-from-the-party" rel="nofollow">லஞ்சம் வாங்கிய வீடியோ: த.வெ.க நிர்வாகி அதிரடி நீக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/icc-adds-super-7-stage-at-odi-world-cup-super-10-instead-of-super-8-at-t20-world-cup">உலக கோப்பையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த ஐசிசி</a></p><figure><img alt="ஐசிசி உலக கோப்பை" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/6b5debgo/ICCWorldCup0001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/linda-noskova-enter-in-4th-place-in-wta-ranking">பெண்கள் டென்னிஸ்: தரவரிசையில் 5 இடம் முன்னேறிய லிண்டா நோஸ்கோவா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-indictment-manickam-tagore">ரவீந்திரநாத் தாகூர் பேரன் என்று நினைக்கிறார்- மாணிக்கம் தாகூர் மீது  ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-govt-announce-chief-secretary-post-extend-6-months">தலைமைச் செயலாளர் சாய்குமார் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/public-interest-litigation-filed-in-the-delhi-high-court-seeking-to-save-social-activist-sonam-wangchuk">சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காப்பாற்றக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-consult-with-admk-administrators">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/overcoming-hurdles-jananayagan-is-set-for-release-the-film-crew-has-announced-the-release-date" rel="nofollow">தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்... தேதியை அறிவித்தது படக்குழு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-seats-up-950-additional-medical-seats-and-annual-fee-cap-fixed">தமிழகத்தில் கூடுதலாக 950 MBBS இடங்கள்: கல்விக் கட்டண உச்சவரம்பு நிர்ணயம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sekhar-babu-says-north-chennai-development-scheme-must-be-implemented-immediately">வடசென்னை வளர்ச்சி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்- சேகர்பாபு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iran-strike-missing-indian-sailor-death">கப்பல் மீது ஈரான் தாக்குதல்: மாயமான இந்திய மாலுமி உயிரிழப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/devotees-crowds-at-tirupati-temple-free-darshan-ticket-distribution-stopped">திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு - இலவச தரிசன டிக்கெட் வினியோகம் நிறுத்தம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/new-low-pressure-area-formed-over-bay-of-bengal-2">வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/order-issued-to-photo-food-served-in-social-justice-department-hostels-and-send-images-via-whatsapp">சமூக நீதித்துறை விடுதி உணவுகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்ப உத்தரவு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/jasprit-bumrah-returns-to-odis-after-968-days-shatters-stunning-record-against-england">968 நாளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்த பும்ரா: ஒரே நாளில் இரண்டு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heat-wave-to-hit-tamil-nadu-for-3-days-from-today-meteorological-department" rel="nofollow">தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/tsitsipas-enter-second-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/when-are-you-going-to-eliminate-the-corrupt-people-of-tvk-ttv-dhinakaran-questions-the-chief-minister">"தவெகவின் ஊழல்வாதிகளை எப்போது ஒழிக்கப் போகிறீர்கள்?"- முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-case-filed-against-vijayabaskar-high-court-orders-election-commission-to-respond">விஜயபாஸ்கர் மீது  தி.மு.க. தொடர்ந்த வழக்கு - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/lakshya-sen-ayush-shetty-lose-first-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/modi-stops-ukraine-attack">உக்ரைன் மீதான அணுஆயுதத் தாக்குதலைத் தடுத்த பிரதமர் மோடி!...</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-rejects-tn-government-petition-against-former-dmk-minister-ev-velu">திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-cooperation-is-needed-for-the-drug-eradication-operation-kerala-minister-ramesh-chennithala" rel="nofollow">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு தேவை..!- கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/shanmugam-met-cm-vijay">முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசியது என்ன? - சண்முகம் விளக்கம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/irans-attacks-on-kuwait-and-jordan">அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடைந்தது: குவைத், ஜோர்டான் மீது ஈரான் ராணுவம் தாக்குதல்-டிரம்ப் எச்சரிக்கை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/yusuff-ali-gets-golden-visa">குவைத்தின் முதல் ‘கோல்டன் ரெசிடென்சி’ விசா: இந்தியப் பில்லியனர் யூசுப் அலிக்கு வழங்கி கவுரவம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-a-bribe-is-demanded-at-any-government-office-a-complaint-can-be-lodged-via-whatsapp-at-the-number-9498180936">அனைத்து அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்அப் நம்பர் 9498180936-ல் புகார் செய்யலாம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-great-man-kamaraj-who-provided-dams-for-the-prosperity-of-agriculture-eps-tribute" rel="nofollow">விவசாயம் செழிக்க அணைகள் தந்த மாமனிதர் காமராஜர்..!- இ.பி.எஸ் புகழாரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/had-kamaraj-been-there-he-would-have-praised-me-tamilisai-remembers-prime-minister-modis-speech" rel="nofollow">"காமராஜர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்"- பிரதமர் மோடியின் உரையை மேற்கோள்காட்டிய தமிழிசை!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-inquiry-must-be-ordered-nagercoil-youth-murder-case">சிறையில் நாகர்கோவில் மாற்றுத்திறனாளி இளைஞர் மரணம்... சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! அன்புமணி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kamarajar-birthday-pm-modi-pays-tribute">கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் -  பிரதமர் மோடி புகழாரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thamizhachi-thangapandian-condemned-passing-third-language-exam-in-classes-9-and-10-standard">9, 10-ம் வகுப்புகளில் 3-வது மொழித் தேர்வு தேர்ச்சி - தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajs-fame-will-last-till-tamil-nadu-mk-stalin" rel="nofollow">கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்..!- மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-inaugurate-75-refurbished-railway-stations">புதுப்பொலிவு பெற்ற 75 ரயில் நிலையங்கள் : நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-kamarajar">கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக!- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/two-new-courses-launched-at-the-puducherry-government-dental-college">மாணவர்களுக்கு நற்செய்தி: புதுவை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய படிப்புகள் தொடக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-15-7-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/counseling-for-workplace-transfers-of-non-teaching-staff">ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-124th-birth-anniversary-cm-vijay-pays-tribute">பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள் -  முதலமைச்சர் விஜய் மரியாதை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1215-special-buses-running-across-tamilnadu">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,215 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-slashes-russia-oil-trade">இந்தியாவிற்குப் பெரும் நிம்மதி: ரஷிய எண்ணெய் வர்த்தகத்திற்கான 500% வரியை 100% ஆகக் குறைத்தது அமெரிக்கா!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-oil-trade-trump">ரஷிய எண்ணெய் வர்த்தகம்: இந்தியாவிற்கு 500% வரை கூடுதல் வரி? அமெரிக்க மசோதாவிற்கு டிரம்ப் ஆதரவு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/document-registration-offices-to-operate-with-additional-tokens-tomorrow">மிஸ் பண்ணிடாதீங்க! நாளை கூடுதல் டோக்கன்களுடன் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள்</a></p>]]></content:encoded></item><item><title>பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-rs-100-crore-mutt-property-registration-shifted-to-cbcid-probe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-rs-100-crore-mutt-property-registration-shifted-to-cbcid-probe#comments</comments><guid isPermaLink="false">f6d352f9-54b9-461a-90b1-f26cfd54916b</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:33:13 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:33:13.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamilnadugovernment,PalaniTempleLandScam,CBCIDInquiry,SubRegistrarSuspended,LandFraudCase</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/t1ro2w9i/PalaniTempleLandScam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PalaniTempleLandScam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/t1ro2w9i/PalaniTempleLandScam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி மலையடிவாரத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறித் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றத் தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.</p><h2>வழக்கின் பின்னணி என்ன?</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலையடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. </p><p>1888 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி கோயிலின் பராமரிப்பு மற்றும் ஆன்மீகப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இந்த இடத்தை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றவோ சட்டப்படி அனுமதி யாருக்கும் இல்லை.</p><p>கோயில் நிர்வாகம் இந்த இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, பக்தர்களுக்காக இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வந்தது.</p><p>இந்நிலையில், இந்த நிலத்திற்குச் சம்பந்தமில்லாத தனியார் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், திருப்புகழ் ஆகியோர் தங்களைப் பொறுப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு, கடந்த ஜூலை 6-ஆம் தேதியன்று வெள்ளைதுரை, சேதுபதி ஆகிய இரு நபர்களுக்கு இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்குக் கிரயம் செய்து விற்றுள்ளனர்.</p><h2>ஒரே நாளில் நடந்த முறைகேடு - சார்பதிவாளர் சஸ்பெண்ட்</h2><p>பழனி சார்பதிவாளர் விடுமுறையில் இருந்த சமயம் பார்த்து, கொடைக்கானல் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்குப் பழனி சார்பதிவாளர் அலுவலகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.</p><p>அவர் பொறுப்பேற்ற ஒரே நாளில் தகுதியில்லாத போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அவசர அவசரமாகப் பதிவு செய்துள்ளார்.</p><p>மோசடி வெளிச்சத்திற்கு வந்ததும், கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டார். தற்போது அந்தப் பத்திரப்பதிவு ஆவணங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><h2>உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு..</h2><p>இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்தது முற்றிலும் செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.</p><h2>சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்?</h2><p>இந்த மோசடியின் பின்னணியில் பெரிய அளவிலான சதி மற்றும் பல முக்கியப் புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனப் புகார்கள் எழுந்தன. </p><p>இது தொடர்பாக பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து சம்பந்தப்பட்டிருப்பதால், முறையான மற்றும் தீவிரமான விசாரணைக்காகத் தற்பொழுது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-rera-gets-new-chief-panindhra-reddy-after-mass-resignations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-rera-gets-new-chief-panindhra-reddy-after-mass-resignations#comments</comments><guid isPermaLink="false">5fc8826a-8165-492e-b076-b6b57b9d81f8</guid><pubDate>Wed, 15 Jul 2026 13:25:58 +0000</pubDate><atom:updated>2026-07-15T13:25:58.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamilnadugovernment,TNRERA,PhanindraReddy,ChennaiRealEstate,CivicUpdates</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/0e6wevu0/TNRERA" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNRERA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/0e6wevu0/TNRERA?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அவருடன் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ. நசீர் அகமது மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரீட்டா ஹரிஸ் தக்கர் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>திடீர் மாற்றத்திற்கான பின்னணி..</h2><p>தமிழகத்தில் அண்மைக்கால ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, TNRERA அமைப்பில் இருந்த முந்தைய பொறுப்பாளர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.</p><p>முன்னதாக தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உறுப்பினர்களான எல். சுப்பிரமணியன், டி. ஜெகநாதன் உள்ளிட்டோர் அண்மையில் தங்களது பதவிகளிலிருந்து விலகினர்.</p><p>அனைத்து உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் விலகியதால், புதிய வீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதிலும், நுகர்வோர் வழக்குகளை விசாரிப்பதிலும் முடக்கம் ஏற்பட்டது.</p><p>இதன் காரணமாக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், ரியல் எஸ்டேட் சட்டம் 2016-இன் கீழ் இந்த ஆணையம் தனது சட்டப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.</p><h2>அரசிடமிருந்து 6 மாத அவசர உத்தரவு..</h2><p>சட்டத்தின் பிரிவு 82-ஐப் பயன்படுத்தி, தற்போதைய TNRERA அமைப்பை 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக முடக்கி, அதற்குப் பதிலாக இந்த புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.</p><p>இந்த புதிய குழு அடுத்த 6 மாதங்கள் வரை அல்லது புதிய நிரந்தர ஆணையம் மாற்றி அமைக்கப்படும் வரை, TNRERA-வின் முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி வழக்குகளை விசாரிக்கும்.</p><h2>பணீந்திர ரெட்டியின் நிர்வாக அனுபவம்..</h2><p>1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பணீந்திர ரெட்டி, 35 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். </p><p>அவர் தனது பணிக்காலத்தில் உள்துறை, நிதித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் &amp; குடிநீர் வழங்கல் துறை போன்ற மிக முக்கிய துறைகளின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி நீண்ட நிர்வாக அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/armstrong-murder-case-tamil-nadu-government-withdraws-plea-opposing-cbi-probe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/armstrong-murder-case-tamil-nadu-government-withdraws-plea-opposing-cbi-probe#comments</comments><guid isPermaLink="false">2ab6d0a7-2178-4ad3-b2b4-9006aafb438e</guid><pubDate>Wed, 15 Jul 2026 12:19:12 +0000</pubDate><atom:updated>2026-07-15T12:19:12.466Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,சிபிஐ,cbi,Armstrong murder case,பகுஜன் சமாஜ் கட்சி,bahujan samaj party,ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/2cnx8mxz/New-Project-2026-07-15T174839.372.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு வாபஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/2cnx8mxz/New-Project-2026-07-15T174839.372.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த மனு, தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. </p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறி, அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு உத்தரவிட்டது. </p><p>இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு மேல்முறையீடு செய்தது.  தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே விரிவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என அப்போதைய அரசு சார்பில் வாதிடப்பட்டது.</p><p>இதனையடுத்து சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து தற்போதைய அரசின் நிலைப்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்றுள்ளது தவெக அரசு.</p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் வாங்கிய வீடியோ: த.வெ.க நிர்வாகி அதிரடி நீக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-panchayat-president-veerasamy-expelled-from-the-party</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-panchayat-president-veerasamy-expelled-from-the-party#comments</comments><guid isPermaLink="false">990e7ac4-5c4f-4368-aa27-aca1c09d87db</guid><pubDate>Wed, 15 Jul 2026 11:55:15 +0000</pubDate><atom:updated>2026-07-15T11:55:15.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,பதவி நீக்கம்,expelled,tvk,தவெக நிர்வாகி,TVK Panchayat President</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/pr1cdjt8/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Veerasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/pr1cdjt8/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கல்பட்டு மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் வாங்கியது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.</p><h2>கட்சியில் இருந்து நீக்கம்</h2><p>லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியான நிலையில், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.</p><p>வீராசாமி தவெகவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப் படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="TVK" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/gy6x9d43/TVK1.jpg" /></figure>]]></content:encoded></item><item><title>ரவீந்திரநாத் தாகூர் பேரன் என்று நினைக்கிறார்- மாணிக்கம் தாகூர் மீது  ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-indictment-manickam-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-indictment-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">6a6efa26-4124-4d38-bf8f-bc8ce6c2e685</guid><pubDate>Wed, 15 Jul 2026 10:32:55 +0000</pubDate><atom:updated>2026-07-15T10:32:55.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Congress,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/8nqik2dq/RSBharathi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.எஸ்.பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-15/8nqik2dq/RSBharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்பு செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/ஆர்எஸ்-பாரதி">ஆர்.எஸ்.பாரதி</a> இன்று ஆலந்தூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை</strong></h2><p>காமராஜர் உயிரோடு இருக்கும் போது சென்னை அண்ணா சாலையில் சிலை வைத்தது தி.மு.க. ஆட்சியில் தான்.  காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று சட்டம் இயற்றியவர் கலைஞர் கருணாநிதி தான். அதே போல் காமராஜர் உயிரிழந்த பின் அவருடைய உடலை கிண்டியில் உள்ள இடத்தில் கொட்டும் மழையில், இப்போது இருக்கிற மின்விளக்கு போல் அப்போது இல்லை, அதனால் கார் வெளிச்சத்தில் அடக்கம் செய்தவர் கலைஞர் தான். அப்போது இருந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் காமராஜரின் வாரிசு கருணாநிதி என்று சொன்னார்கள். </p><p>தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை காட்சி தான் நடைபெறுகிறது. அதனால் பட்ஜெட்டில் எதுவும் எதிர்பார்க்க முடியாது.  இப்போது இருக்கக்கூடிய அமைச்சர்கள், சி.பி.ஐ.க்கு நான் மனு எதற்கு கொடுத்தேன் என்று கூட தெரியாமல் பேசுகின்றனர். அரசியலில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னரிடம் மனு கொடுத்ததற்கு அவர் நடவடிக்கை எடுக்கிறாரோ, இல்லையோ நீதிமன்றத்தில்  வழக்கு தொடரும் போது எங்களை கேள்வி கேட்பார்கள். </p><h2><strong>உள்கட்டமைப்பு வசதிகள்</strong> </h2><p>மாணிக்கம் தாகூர், திடீரென்று அரசியலில் மேலே வந்தவர். அதனால் அவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவர் மாணிக்கம் தாகூர். அவர் ரவீந்திரநாத் தாகூர் பேரன் என்று நினைத்துள்ளார்.</p><p>மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது தான் வடசென்னையில் பெரிய அளவில் மாற்றம் உண்டானது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது என்றார்.</p><p>நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் குணாளன் மற்றும் முரளி உட்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item></channel></rss>