<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 19 Jul 2026 12:45:38 +0000</lastBuildDate><item><title>5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished#comments</comments><guid isPermaLink="false">f649aab5-4767-4845-9574-2e50ac521bcf</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:10:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:10:51.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Corporation,World Tamil Conference,மாநகராட்சி நடவடிக்கை,உலகத் தமிழ் மாநாடு,பெரியார் தோரண வாயில்,periyar arch</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Periyar arch]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி மதுரை மாநகரின் நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய இடங்களில் பிரமாண்ட தோரண நுழைவாயில் கட்டப்பட்டது. </p><p>தற்போது மாநகர பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பட சாலைகள் விரிவாக்க பணிகள் ஆங்காங்கே மும்முரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இதற்கிடையே நெருக்கடியை தவிர்க்கும் விதமாக மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள தோரண நுழைவாயில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் ஆகியவற்றை அகற்றவேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மேற்கண்ட 2 தோரண நுழைவாயில்களையும் இடிக்க அகற்ற உத்தரவிட்டது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போக்குவரத்து இடையூறு இல்லாமல் தோரண நுழைவாயில்கள் கட்டிக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.</p><p>இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மாட்டுத்தாவணி சாலை நடுவே இருந்த நக்கீரர் தோரண வாயில்  இடித்து அகற்றப்பட்டது. அப்போது தோரண வாயில் இடிந்து பொக்லைன் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் இடிக்கும் பணி நடைபெற்றது.</p><p>பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தோரணவாயில் இடிக்கும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. </p><p>அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் பெரியார் தோரணவாயில் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.</p> <p>மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அமைக்கப்பட்ட நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகரின் பிரதான சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதியில் உள்ள தோரண வாயில்களும் அகற்றப்பட்டு புதிய தோரண வாயில்கள் போக்குவரத்து இடையூறின்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan#comments</comments><guid isPermaLink="false">54689179-bd3b-4c10-8c1f-f12f85a2ccff</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:31:19.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by-election,IUML,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டி நிலவியது.</p><p>இதில் திமுக அணியில் இடதுசாரிகள், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. </p><p>தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பலக் கட்சிகள் தவெக பக்கம் சென்றன. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. ஆனால் கூட்டணி குறித்தும், தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் தெளிவான முடிவை பல கட்சிகளும் எடுக்கவில்லை.</p><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஐயூஎம்எல் தவெகவுடன் இணைந்தே போட்டியிடும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:36.906Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation">நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience">கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital">'சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை'-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour">வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam">எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu">'சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா'! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral">இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates">10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens">மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi">உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide">ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc">இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title">மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar">சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!...</a></p><p>இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states">டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer">போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tsitsipas-advances-to-swiss-open-final">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather">அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p>]]></content:encoded></item><item><title>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">5680fc1a-f532-4cc9-8afc-d0de95be3931</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:10.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்,முக ஸ்டாலின்,london visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.</p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.</p><p>இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.</p><h2>தொண்டர்கள் திரண்டனர்</h2><p>மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.</p><p>சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.</p><p>தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள். அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.</p><h2>தாமதம்</h2><p>இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது. எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவில் திரும்பி வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் திரும்பி சென்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் ஜனநாயகன் டி-ஷர்ட் தயாரிப்பு பணி தீவிரம்: 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts#comments</comments><guid isPermaLink="false">999d6a8d-1d73-485b-807f-1964cfd8455c</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:31:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:31:38.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JanaNayagan,ஜனநாயகன்,ஜனநாயகன் டிஷர்ட்,Jananayagan Tshirt,திருப்பூர் டெக்ஸ்டைல்,Tiruppu Textile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruppur Textile Jananayagan T-shirt Boom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது.</p><p>இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p>ஜூலை 23இல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சுமார் 1,000 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக, முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும், பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். </p><p>இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் டி-ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூரியர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.</p><p>நடிகராக இருந்து முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்களுக்கு, தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் பெருமளவில் ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு திரைப்பட வெளியீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள், பிரத்தியேகமான ஜனநாயகன் டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றன,” என்று கூறினார்.</p><p>மேலும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கே. சேவா நாதன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த அளவிலான உற்சாகத்தை நாங்கள் கண்டதில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam#comments</comments><guid isPermaLink="false">7c5b8429-8da9-4cf7-97fb-0322ebffe5f3</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:34.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,DMK,திமுக,Nirmal Kumar,former minister murthy,முன்னாள் அமைச்சர் மூர்த்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ murthy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப் பதிவு தொடர்பாக, தற்போதைய த.வெ.க. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>மோசடிக்கு யார் உடந்தை?</h2><p>பழனி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>கோவில்கள் இடத்தை பதிவே செய்யமுடியாது. கோவில், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு இருக்கும் முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். இதில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. </p><p>பதிவுத்துறையில் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பதிவுத்துறையில் மோசடி என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு குறித்து யாரும் விமர்சித்தது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.</p><p>519 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆதரவாளர்களை நியமித்ததாகக் கூறுகின்றனர்.  எந்த ஒரு அலுவலகத்திலும் நான் பத்திரப்பதிவு செய்ய சொல்லவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதல்-அமைச்சரின் நிழல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார்.</p> <p>அனைத்து துறைக்கும் நிர்மல்குமார் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவுசெய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர்? குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ.37 லட்சமும், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சமும் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது? </p><h2>ஆதாரத்தை கூறவேண்டும்?</h2><p>மின்சார கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது. அமைச்சர் தனது இருதுறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் அவர்தான் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறார். 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கூறவேண்டும். வணிக வரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும்போது தான் வருவாயைப் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. </p><p>வணிக வரித்துறையில் ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் இருந்தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 2021-ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026-ல் ரூ.1 லட்சத்து 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது. பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்தது பின்னர் 3 சதவீதத்தில் தொடங்கி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. </p><p>நான் 48 ஆண்டுகள் தி.மு.க.வில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன். ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் அ.தி.மு.க.வில் இருந்தார், பின்னர் மாறினார். 3.0 தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியக்கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. </p><h2>பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றனர்</h2><p>மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வருகின்றனர். மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம். வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். கடந்த 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின் தடை இல்லை. அவர்கள் பொய்யை திரும்ப திரும்பச் சொல்கின்றனர். </p><p>பத்திரப்பதிவுத் துறை புகார் தொடர்பாக குழு அமைப்பதை வரவேற்கிறோம், புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மின்  நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம்: தலைமை பொறியாளர் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains#comments</comments><guid isPermaLink="false">cf877f38-1a01-484d-a65f-87d962166f5c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:46:57.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,TANGEDCO,Tamilnadu Electricity,Meter Reading,தமிழ்நாடு மின்வாரியம்,மீட்டர் கணக்கீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Power Consumers overcharged]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது. </p><p>இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><p>மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை.</p><p>இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால், பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.</p><p>மேலும் கால முறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள, மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.</p><p>மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை, இனிவரும் காலங்களில் அடிக்கடி களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா&apos;! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">0ec15782-2bb6-4e76-9001-d611335b3a0c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:29:12.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,தாம்பரம்,செங்கல்பட்டு,chengalpattu,Train passengers,ரெயில் பயணிகள்,railway board,ரெயில்வே வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Chengalpattu 4th line]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மொத்தம் மூன்று முக்கிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இந்த மூன்று திட்டங்களையும் மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரெயில்வே மிகமிக விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்:</strong></h2><p>தெற்கு ரெயில்வேயில் எப்போதும் நெரிசல் மிகுந்த மிக முக்கியமான முதன்மை வழித்தடங்களில், தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் ரெயில் பாதைகளை அமைக்க ரெயில்வே வாரியம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. </p><p>சென்னை புறநகர்ப் பகுதியில் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள வழித்தடமாகத் தாம்பரம்-செங்கல்பட்டு தடம் விளங்குகிறது. இந்தத் தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு ரெயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2><strong>அரக்கோணம், ஈரோடு வழித்தடம்:</strong> </h2><p>தாம்பரம்-செங்கல்பட்டு தடம் மட்டுமன்றி, மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் இரட்டைப் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, அரக்கோணம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. </p><p>இதேபோல், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கியத் திட்டங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,576 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ரெயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்டப் பணிகளைத் தெற்கு ரெயில்வே தற்போதே உடனே தொடங்கியுள்ளது.</p><h2><strong>தெற்கு ரெயில்வேயின் வருவாய்:</strong></h2><p>இது குறித்துத் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரெயில்வேயில் விரைவு ரெயில்கள், குறுகிய தூரப் பயணியர் ரெயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் எனத் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. </p><p>குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 152.75 கோடி மக்கள் தெற்கு ரெயில்வே மூலமாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக ரெயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>எதிர்கால இலக்குகள்:</strong></h2><p>கூடுதல் ரெயில் பாதைகள் அமைப்பது, முக்கிய ரெயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, பண்டிகைக் கால சிறப்பு ரெயில்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ரெயில்வே துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. </p><p>இந்த புதிய மூன்று ரெயில் பாதை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.</p><p>இதுமட்டுமன்றி, திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் பல்வேறு புதிய ரெயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடந்து வருகின்றன. </p><p>இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில், தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயில்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய வாரச்சந்தை திறக்காததை கண்டித்து காய்கறிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள்  போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/traders-protest-by-dumping-vegetables-on-the-road</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/traders-protest-by-dumping-vegetables-on-the-road#comments</comments><guid isPermaLink="false">1f254129-89b2-44b6-9d8a-a3f510713ccb</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:57:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:57:51.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vegetables,traders protest,காய்கறிகள்,வியாபாரிகள்  போராட்டம்,புதிய வாரச்சந்தை,New Weekly Market</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kqnpj5cz/peravorani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Merchants protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kqnpj5cz/peravorani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>பேராவூரணி</strong></h2><p>தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி வாரச்சந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. </p><h2><strong>புதிய வாரச்சந்தை</strong></h2><p>இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை கடந்த ஒரு ஆண்டாக ரூ. 2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டாக வாரச்சந்தை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. தனியார் இடத்தில் பெரும் தொகையை செலவு செய்து சிறு வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். </p><h2><strong>ஏலம் விடப்பட்டது</strong></h2><p>இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட பேராவூரணி வாரச்சந்தை கடந்த 9-ம் தேதி பேரூராட்சியில் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த முறை 12 மாத காலத்திற்கு ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது 8 மாதத்திற்கு 21 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த நிலையில், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் வியாபாரிகளிடம் கூடுதலாக லட்சக்கணக்கில் முன்பணம் கேட்பதாகவும், வார வாடகையாக ரூ. 50, 100 கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது ஆயிரக்கணக்கில் வாடகையை உயர்த்தி கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் முதல் தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தை நிறுத்தப்பட்டது.</p><h2><strong>சாலை மறியல்</strong></h2><p>இந்நிலையில், இன்று காலை புதிய சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர். ஆனால் புதிய சந்தை திறந்து விடப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் வாரச்சந்தை அருகே உள்ள பஸ் நிலையம் வாயிலில் இருபுறமும் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2><strong>கேட்டை உடைத்து சென்றனர்</strong></h2><p>அப்போது வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீரென சந்தையின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு வியாபாரிகளுக்கு எந்தெந்த கடை, எந்த இடத்தில் ஒதுக்குவது என்பது குறித்து பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வரும் போராட்டத்தால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- மீன் பிரியர்கள் ஏமாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kasimedu-fish-market-prices-rise-due-to-reduced-fish</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kasimedu-fish-market-prices-rise-due-to-reduced-fish#comments</comments><guid isPermaLink="false">adca2875-1ab9-44f9-afa0-9cae9fd56cb9</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:46:01 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:46:01.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu,fish,மீன்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/x8vzamvu/fish.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kasimedu fish market ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/x8vzamvu/fish.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>காசிமேடு</strong></h2><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.</p><h2><strong>விசைப் படகு</strong></h2><p>சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன. இதனால் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.</p><h2><strong>ஆடி மாதம்</strong></h2><p>ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் பிரியர்கள் அதிகாலையிலேயே தேவையான மீன்களை வாங்குவதற்கு காசிமேட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வரத்து குறைவினால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. </p><h2><strong>சில்லறை விற்பனை</strong></h2><p>கடந்த வாரம் போலவே இந்த வாரமும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளும் குறைவாகவே காணப்பட்டன. </p><h2>மீன் பிரியர்கள்</h2><p>பெரிய வகை மீன்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.</p><h2><strong>பெரிய வகை மீன்கள்</strong></h2><p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால், ஷீலா, தேங்காய் பாறை, பால் சுறா, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இருந்தும் விலை ஏற்றத்தின் காரணமாக மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.</p><p>விசைப் படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை உணவகங்களுக்கு வாங்கி செல்வதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் மார்க்கெட்களுக்கு மீன்களை வாங்கி செல்பவர்கள் கூடை கூடையாக சிறிய வகை மீன்களையே வாங்கி செல்கின்றனர்.</p><h2><strong>காசிமேட்டில் மீன்கள் விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:</strong></h2><p>வஞ்சிரம்- 1100</p><p>கொடுவா- 900</p><p>தேங்காய் பாறை -800</p><p>ஷீலா- 800</p><p>பால் சுறா- 800</p><p>சங்கரா- 500</p><p>பாறை- 400</p><p>இறால்-400</p><p>நண்டு -300</p><p>நவரை -300</p><p>பண்ணா-300</p><p>காணங்கத்தை -300</p><p>கடுமா- 300</p><p>நெத்திலி-200.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா.., கணக்கிடுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated#comments</comments><guid isPermaLink="false">33a2f5b7-fb34-4f1e-9883-4cc3c3ffd8b6</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:44:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:44:23.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,திமுக அரசு,மின்சார கட்டணம் பில்,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனஅறிவித்தார். அதனால் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.</p><p>விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூடுதல் கட்டணத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது.</p><p>தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இவரைத் தவிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் சத்தமில்லாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் முறை</h2><p>கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வாறு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்ப்போம். கடந்த திமுக ஆட்சியில் அதாவது 2025-ல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 500 யூனிட் வரை</h2> <p>அதன்படி ஒரு வீட்டு நுகர்வோர் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தினால் 101 முதல் 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் என்ற வகையில் 235 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய் வசூலிக்கப்படும். நீங்கள் அடுத்த 1 யூனிட் (அதாவது 201) பயன்படுத்தினாலும், 400 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நுகர்வோர் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் கட்டணம் (201 முதல் 300 யூனிட்டிற்கு 470 ரூபாய்) செலுத்த வேண்டும்.</p><h2>400 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>400 யூனிட் பயன்படுத்தினாலும் 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 என மொத்தமாக 1175 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>500 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500 யூனிட் பயன்படுத்தினால் 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 ரூபாய் விதம் 630 ரூபாய் வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை இலவசம். 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தம் 1805 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>500-க்கு அதிகமான யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500-க்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை 4.70 ரூபாய் (1410 ரூபாய்), 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ரூபாய் (630 ரூபாய்), 501 முதல் 600 யூனிட் வரை 8.40 ரூபாய் (840 ரூபாய்), 601 முதல் 800 யூனிட் வரை 9.45 ரூபாய் (1890 ரூபாய்), 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ரூபாய் (2100 ரூபாய்) என வசூலிக்கப்படும்.</p><p>1000 யூனிட்டிற்கு மேல் வீட்டு நுகர் பயன்படுத்தினால், 1 யூனிட்டிற்கு 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். 1000-த்திற்கு உட்பட்ட யூனிட்களுக்கு மேற்பகுதியில் சொன்னவாரு வசூலிக்கப்படும்.</p><h2>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார கட்டணம் கணக்கீடு</h2><p>முதலமைச்சர் விஜய் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தேவையில்லை என்கிறார். 500 யூனிட்டிற்கு மேல் 1 யூனிட் வசூலித்தாலும் பழைய முறைப்படை கணக்கிடப்படும். அப்படி என்றால், 201 முதல் 500 யூனிட் வரை எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.</p><h2>201 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>ஒரு வீட்டு நுகர்வோர் 201 யூனிட் பயன்படுத்தினார் என்றால், முதல் 200 யூனிட் இலவசம். அடுத்த யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 500 யூனிட்கள் வரை</h2> <h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தினால் என்றால் 201 முதல் 300 வரை 100 யூனிட்டிற்கு ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>420 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அப்படி பார்த்தால் 400 யூனிட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். 420 யூனிட் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட்டிற்கு 4.70 விதம் 940 ரூபாய், 401 முதல் 500 யூனிட்டிற்கு 6.30 யூனிட் விதம் 20 யூனிட்டிற்கு 126 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1066 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>501 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>501 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 8.40 ரூபாய் என மொத்தம் 2048 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>601 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>601 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 1 யூனிட்டிற்கு 9.45 யூனிட் விதம் 9.45 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 601 யூனிட்டிற்கு 2889.45 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>801 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>801 யூனிட் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி 1 யூனிட்டிற்கு 10.50 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 801 யூனிட்டிற்கு 4780 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>1001 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>1001 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம்  2100 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த ஒரு யூனிட்டிற்கு 1000 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 11.55 ரூபாய் என்ற விதத்தில் 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1001 யூனிட்டிற்கு 6881.55 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மற்றும் 2026 கட்டணம் வேறுபாடு</h2><p>இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200-க்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் 239.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 470 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் 1175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 940 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் 1805 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 1507 ரூபாய் செலுத்த வேண்டும். </p><p>2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போதும் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.</p>]]></content:encoded></item><item><title>சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">e3e55438-bc0d-4ac3-ad4f-6d4fbe5f12d5</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:45:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,கீதா ஜீவன்,geetha jeevan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Geetha Jeevan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. அது என்னவென்று தெரியுமா., 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்தார்.</p><p>கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு. மின்சாரக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கு. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்?.</p><h2>மின் கட்டணம் உயர்வு</h2><p>சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடத்திலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. நிறைய இடத்துல யாரும் கேள்வி கேட்க முடியல. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியல. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. </p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும். வெறுமன வசனம் பேசி நடித்துவிட்டு மேடைல பேசிகிறாரு. அவ்வளவுதான். </p><p>இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><figure><img alt="Premalatha Vijayakanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-12/jd9hohil/premalatha.jpg" /></figure> <p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.</p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc#comments</comments><guid isPermaLink="false">2e79c09d-24fb-4b9e-8ba0-6c667b591ab6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:08:24.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,சிபிஎம் சண்முகம்,CPM Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட தீர்மானித்திற்கிறோம். இதனால்தான் மூன்று இடது சாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதையை சூழ்நிலையை குறித்து தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து அப்போது பேசுவோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.</p><h2>இடதுசாரிகள் நாங்கள் மாற்று கொள்கை</h2><p>நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம். உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும்.., வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை குடியிருப்பு பிரச்சினைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.</p><p>இவற்றிற்கு எல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்கைளால் தீர்வே கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே முடியும்.</p><p>இந்த ஆட்சி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்பதனால ஆதரவு தரல. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடிவில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.</p><h2>முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காதது?</h2><p>முதலமைச்சர் எந்தவித கருத்து குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசு சார்பில் பதில் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஏன் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கனும்.</p><h2>சமூக நீதித்துறை</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றுதான் இருந்தது. இரண்டு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகத்தான் இருந்தது. அப்படி இருந்திருக்கலாம். பெயரை ஏன் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. பெயர் மாற்றிலும், என்ன பெயராக இருந்தாலும் அந்த துறை, அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். பெயர் மாற்றத்தை விவாதிக்க வேண்டியதில்லை. அந்த துறையை சேர்ந்த மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த துறை என்ற செய்யப்போகிறது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விசயம்.</p><p>இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer#comments</comments><guid isPermaLink="false">57029fa3-44b6-44e4-bc7f-ad95197b690f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:55:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:55:50.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Gun Fire,rowdy,ரவுடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிப்பதற்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்ற செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து வருகிறது. </p><p>இப்படி போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத நேரங்களில் ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும் போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.  இதுபோன்று எல்லை மீறும் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. </p><h2>பிரபல ரவுடி கருப்பு</h2><p>இந்நிலையில், குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி துப்பாக்கியால் நேற்று இரவு சுட்டு பிடிக்கப்பட்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:</p><p>குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு (என்ற) தமிழழகு. 27 வயதான  இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியான கருப்பு மீது  திருமுடிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடும்  உருவாக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் அவரை ஏ பிளஸ் ரவுடியாக சரித்திர பதிவேட்டில் சேர்த்துள்ளனர்.</p><h2>நாட்டு வெடிகுண்டு</h2><p>ரவுடி கருப்பு தனது எதிரி ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டம் தீட்டி வருவது போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட பகையால் அந்த நபரை தீர்த்துக்கட்ட ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டைத் தயாரித்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.</p><p>குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் பகுதியில் பதுங்கி இருந்து ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். </p><p>ரவுடி கருப்புடன் அவரது நண்பரான சூர்யாவும் இருந்தார். நாட்டு வெடிகுண்டு தயாரித்த இடத்திற்குச் சென்றதும் திருமுடிவாக்கம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ் ஏட்டு விஜயகுமார் ஆகியோர் ரவுடி கருப்புவை போலீஸ் வேனில் ஏறுமாறு கூறினார்கள். ஆனால் அவரும், அவரது கூட்டாளி சூர்யாவும் அதற்கு உடன்படவில்லை.</p><p>ரவுடி கருப்பு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஏட்டு விஜயகுமாரை வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தங்களை தற்காத்து கொள்வதற்காக ரவுடி கருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ரவுடியின் வலது காலில் குண்டு பாய்ந்து அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனே, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இருவரும் துரித வேகத்தில் செயல்பட்டு  இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புவின் கூட்டாளியான சூர்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனராக பிரேமானந்த் சின்கா பொறுப்பேற்ற பிறகு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் குற்ற செயல்களை ஒழித்துக் கட்டவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.</p><p>அந்த வகையில்தான் ரவுடி கருப்புவின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் ரவுடியை பிடிக்க சென்ற இடத்தில் அவர் தாக்குதலில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த நடவடிக்கை மற்ற ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஜூலை 2026: குமார சஷ்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-19-july-2026-kumara-shasti-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-19-july-2026-kumara-shasti-2#comments</comments><guid isPermaLink="false">c9b82f54-a5d3-4b2b-9ba4-88356789772f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-3 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   பஞ்சமி காலை 8.49 வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.25 வரை பிறகு அஸ்தம்</p><p>யோகம் :  அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>சஷ்டி விரதம். ஸ்கந்த பஞ்சமி, குமார சஷ்டி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமானுக்கு ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். </p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆர்வம்</p><p>ரிஷபம் - முயற்சி</p><p>மிதுனம் - பெருமை</p><p>கடகம் - இன்பம்</p><p>சிம்மம் - உற்சாகம்</p><p>கன்னி - உதவி</p><p>துலாம் - யோகம்</p><p>விருச்சிகம் - சாதனை</p><p>தனுசு - ஆக்கம்</p><p>மகரம் - பரிசு</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - உண்மை</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026#comments</comments><guid isPermaLink="false">326d3728-e557-46b7-b4d5-7103447d079d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:01:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:38:53.081Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th">வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551">உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/8a8f042c-3464-4915-b85c-75f85f017832">உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b">"தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்"- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital">21 நாளாக உண்ணாவிரதம்: மோசமடைந்த உடல்நிலை - சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b">விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343">"தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்"- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601">அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97077370-3769-42aa-bed7-5394eb95d5ed">பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47">ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10">“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0">தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e">இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c">வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5">"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/981434e0-9e28-4646-8907-cfe4006ccd91">மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0">"தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது"- பிரதமர் மோடி பெருமிதம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82">அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed">குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா? TNPSC அறிவிப்பு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96">பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force">லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a">ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c">சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money">பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a1905b8b-554c-48bf-aca2-8242011846d7">கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat">குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644">"மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sir-activities-supreme-court">வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதற்கும் குடியுரிமை இழப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை-உச்ச நீதிமன்றம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/engvsind-lords-washington-out-of-indias-third-odi-against-england">லார்ட்ஸ் ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz">அமெரிக்கா காட்டிய வழித்தடம்; கண்ணிவெடியில் சிக்கிய 2 கப்பல்கள்: ஈரான் குற்றச்சாட்டு!...</a></p><p>திரைப்படை துறையில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்ககி கவுரவிக்கும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/embassy-warning-over-marriage-scams">சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details">மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை...</a></p><p>சிறந்த இயக்குநர் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>Ekta Ka Prateek ஏக்தா கா பிரதீக் என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய்</p><p>சிறந்த குறும்படம் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>மராத்தி படம் ஹம்சஃபார் (Hamsafar)</p><p>சிறந்த அனிமேசன் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>ஜோஷி பெனிடிக் இயக்கிய Touched as Water.</p><h2>சிறந்த பாராட்டுக்குரிய படம் (Special Mention): மெய்யழகன்</h2><h2>சிறந்த தமிழ் படம்: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன்</h2><h2>சிறந்த மலையாள படம்: பாசில் முகமதுவின் ஃபெமினிச்சி ஃபாத்திமா</h2><h2>சிறந்த சண்டை பயிற்சியாளர்: மகாராஜா படம்- அனல் அரசு</h2><h2>சிறந்த எடிட்டர்:</h2><p>அமரன் படத்திற்கு சிறந்த எடிட்டிங்- ஆர். கலைவண்ணன்</p><h2>பின்னணி இசை:</h2><p>அமரன் படத்திற்கு ஜி.பி. பிரகாஷ் குமார்</p><h2>சிறந்த இயக்குநர்:</h2><p>அமரன் படம்: ராஜ்குமார் பெரியசாமி</p><h2>சிறந்த நடிகர்:</h2><p>மம்மூட்டி- பிரம்மயுகம்</p><p>கார்த்திக் ஆர்யன்- சந்து சாம்பியன்</p><h2>சிறந்த நடிகை</h2><p>யமி கவுதம்- ஆர்ட்டிக்கிள் 370</p><h2>சிறந்த துணை நடிகை:-</h2><p>சாசனா நமிதாஸ்- மகாராஜா</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards">‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/amaran-wins-three-national-film-awards">3 தேசிய விருதுகளுடன் மகுடம் சூடிய 'அமரன்'!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-wins-best-actor-72nd-national-film-awards-meiyazhagan-special-mention">72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/72nd-national-awards-mammootty-crowned-best-actor">72-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக மகுடம் சூடினார் மம்மூட்டி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/pushpa-2-bags-two-national-film-awards">2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!... </a></p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் விஜய்வசந்த் எம்.பி சந்திப்பு: ரெயில்வே திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanyakumari-railway-upgrades-mp-vijay-vasanth-discusses-passenger-association-demands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanyakumari-railway-upgrades-mp-vijay-vasanth-discusses-passenger-association-demands#comments</comments><guid isPermaLink="false">54a3facb-6ec5-43ac-a1b0-88e2abf6f0ea</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:38:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:38:08.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,kanyakumari,Vijay Vasanth,விஜய் வசந்த்,indian railways,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/c30wiw40/vijay-vasanth.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ vijay vasanth]]></media:title><media:description type="html"><![CDATA[ vijay vasanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/c30wiw40/vijay-vasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து பல்வேறு ரெயில்வே திட்டங்கள், ரெயில் நிறுத்தங்கள், புதிய ரெயில்களின் தேவைகள், ரெயில்கள் நீட்டிப்பு குறித்து கலந்தாலோசனை செய்தார்.</p> <h2>கூட்டம் </h2><p>இன்று நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில், வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில்சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் சந்திப்பு ரெயில் நிலையங்களுக்கு 4 வழி சாலையிலிருந்து இணைப்பு சாலைகள், குழித்துறை ரெயில் நிலைய விரிவாக்கம், இரணியல் ரெயில் நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, குழித்துறை ரயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திலிருந்து தக்கலை வரை செல்லும் வகையில் பேருந்து வசதி, ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு போன்ற பல கருத்துக்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.</p> <figure><img alt="vijay vasanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/e6g73vre/vijay-vasanth.jpg" /><figcaption>vijay vasanth</figcaption></figure><h2>பாராளுமன்ற கூட்ட தொடர்  </h2><p>பாராளுமன்ற கூட்ட தொடருக்காக டெல்லி செல்லும் பொழுது அமைச்சர் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.</p><p>இந்த கூட்டத்தில் DRUCC உறுப்பினர் அல் அமீன், ஸ்ரீராம், எட்வர்ட் ஜெனி, ஜெயகுமார், கிருஷ்ணதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details#comments</comments><guid isPermaLink="false">05c30d6a-f037-479a-be6d-d32e1a810c39</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:13:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:13:15.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனியார் பள்ளிகள்,அரசு பள்ளிகள்,government schools,private schools,Education Department,பள்ளிக் கல்வித்துறை,dpi,டிபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dpi office]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழ் விவரங்களை, பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>EMIS இணையதளத்தில் பதிவு:</strong></h2><p>தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களின் சமூகப் பிரிவு மற்றும் சாதி சான்றிதழ் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><h2><strong>ஆவணங்கள் சரிபார்ப்பு:</strong></h2><p>மாணவர்கள் சேர்க்கையின் போது சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு, இந்த விவரங்கள் ஆன்லைனில் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகத் திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்க:</strong></h2><p>மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் தகுதியான மாணவர்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த ஆன்லைன் பதிவு முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மயமாக்கல்:</strong></h2><p>வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் மற்றும் இதர விவரங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, பள்ளிப் பதிவேடுகளுடன் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் இடம்பெறப் போவதாகச் சில தகவல்கள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "மாணவர்களின் அடையாள அட்டைகளில் எக்காரணம் கொண்டும் சாதி விவரங்கள் அச்சிடப்படாது. அது மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும்" என்று தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்து, அது வெறும் தரவு நெறிப்படுத்துதல் மட்டுமே என விளக்கியிருந்தனர்.</p><p>தற்போது கல்வித்துறையின் உள்நிர்வாகப் பயன்பாட்டிற்காகவும், அரசு நலத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மைக்காகவும் மட்டுமே இந்த ஆன்லைன் சாதி விவரப் பதிவுப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:57:41.458Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline" rel="nofollow">நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/58d7359e-20b7-4415-bda3-26c811047319">தமிழகம் உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d">தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe">2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750">மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate">தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims">திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match">அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay">காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh">வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more">வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</a></p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:17:44.547Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani">அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children">குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns">சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket">பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/casper-ruud-enter-qf-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்</a></p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் மாணவிகளுடன் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">4824026b-c21c-4330-af79-58d161e3f7db</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:15:32.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai District,sportsminister,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,விளையாட்டுத்துறைஅமைச்சர்,HockeyGround,FitnessMotivation,SportsDevelopment</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SportsMinister AadhavArjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><p>ஆய்வின் போது, அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவிகளுடன் இணைந்து அவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.</p><h2>புதிய ஹாக்கி மைதானம் திறப்பு..</h2><p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று முதல் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். </p><p>மைதானத்தை திறந்து வைத்ததுடன் நேரடியாக களத்தில் இறங்கி அங்கு இருந்த மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தார்.</p><h2><strong>மாணவிகளுடன் உடற்பயிற்சி..</strong></h2><p>மைதானத்தில் தடகளம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகள் பற்றி கேட்டறிந்தார். </p><p>தொடர்ந்து, மாணவிகளிடம் பேசிக்கொண்டே ஒரு பயிற்சியாளரைப் போல அவர்களுடன் சேர்ந்து மைதானத்தில் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2><strong>குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்..</strong></h2><p>மைதான ஆய்விற்குப் பிறகு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தடகளம், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் அமைச்சர் நேரடியாகக் கலந்துரையாடினார். </p><p>அவர்களுக்குத் தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், முறையான தங்கும் விடுதி வசதிகள் மற்றும் சத்தான உணவு முறைகள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்து, வீரர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் விரிவாகப் பெற்றுக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>வரத்து குறைவால் பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலை அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-5#comments</comments><guid isPermaLink="false">92eac33e-3f7e-4540-a332-c3ad7100a570</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:30:33 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:30:33.155Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/22gzago9/vegetable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காய்கறிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/22gzago9/vegetable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்</a> வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>இன்று அதன் விலை மேலும் அதிகரித்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.</p><p>வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120வரையிலும், பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.100க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதேபோல் கத்தரிக்காய், பீட்ரூட், பாகற்காய், பீர்க்காங்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10முதல் ரூ.20வரை அதிகரித்து உள்ளது. </p><h2><strong>வரத்து குறைவு</strong></h2><p>காய்கறி மொத்த வியாபாரி ஒருவர் கூறும் போது, “கோயம்பேடு சந்தைக்கு இன்று 550லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு சில பகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்தது போனதால் காய்கறி விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது” என்றார்.</p><h2><strong>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விலை (கிலோவில்) வருமாறு:-</strong> </h2><p>தக்காளி-ரூ.8முதல் ரூ.18வரை, நாசிக் வெங்காயம்-ரூ.24 முதல் ரூ.30 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50முதல் ரூ.70 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.50, வெண்டைக்காய்-ரூ.30, பீட்ரூட் - ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.30, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ் -ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.35, பச்சை மிளகாய்- ரூ‌.30, இஞ்சி-ரூ.90முதல் ரூ.150வரை.</p>]]></content:encoded></item><item><title>சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீரை குடிக்க தயங்கும் மக்கள்- சென்னை குடிநீர் வாரியம் பராமரிக்குமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water#comments</comments><guid isPermaLink="false">ba874e62-af87-4e6b-9859-feda466e4809</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:17:19.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை குடிநீர் வாரியம்,இலவச குடிநீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசமான நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை  உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம் அமைக்கப்பட்டது. </p><p>மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் இந்த மையம் செயல்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 55 இடங்களில் தானியங்கி குடிநீர் எந்திரத்தை முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். </p><h2><strong>மோசமான நிலை</strong></h2><p>கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.     தானியங்கி குடிநீர் மையத்தை  சென்னை குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. தானாகவே தண்ணீரை நிரப்பிக் கொள்ளும் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.    </p><p>மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்கள் இந்த குடிநீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மையமும் மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் இந்த குடிநீர் மையம் களை இழந்து காணப்படுகிறது. </p><p>பெரம்பூர் ஜமாலியா போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள குடிநீர் மையம், பெரம்பூர் பஸ்  நிலையத்தில் உள்ள மையம் ஆகியவை மிக மோசமான நிலையில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய அந்த மையத்தின் அருகிலேயே குப்பைகளும், தண்ணீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். </p><h2><strong>பயன்படுத்த முடியாத நிலை</strong></h2><p>குடிநீர் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, அதனை வழங்கக்கூடிய சுற்று பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும் . குடிநீரை பருகக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>அரசு செய்கின்ற நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு முறையாக சென்று பயனடைய வேண்டுமென்றால் அதனை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும்.  ஏதோ திட்டம் செயல்படுகிறது, தண்ணீர் வழங்குகிறோம் என்று நினைத்து கவனிக்காமல் போனதால்  ஒரு சில சுத்திகரிப்பு மையங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">குடிநீர்</a> சுத்திகரிப்பு மையத்தை சுற்றிலும் பராமரிக்காமல் போனதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்லவே முகம் சுளிக்கிறார்கள். பல கோடி செலவு செய்து மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கட்டணம் இல்லாமல் சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்கினால் அதனை துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  பெரும்பாலான குடிநீர் மையங்களில் சில்வர் டம்ளர் இல்லை,  அங்கு நின்று குடிநீர் குடிக்கக் கூடிய சூழல் இல்லை, அருவருக்கத்தக்க நிலையில் தான் இந்த மையம் மாறி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் காட்சி பொருளாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்&quot;- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/withdraw-power-tariff-hike-and-end-power-cuts-premalatha-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/withdraw-power-tariff-hike-and-end-power-cuts-premalatha-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:58:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:58:56.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Electricity,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,மின்வெட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pgeraf75/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijatakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/pgeraf75/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தொடர்ச்சியான மின் வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின் வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும். </p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போலி பத்திரப்பதிவு மோசடியில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் - அமைச்சர் நிர்மல்குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-everyone-involved-in-fraudulent-document-registration-scam-will-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-everyone-involved-in-fraudulent-document-registration-scam-will-be-arrested#comments</comments><guid isPermaLink="false">0ae6ea80-66e4-4702-8c87-da14c7257ddc</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:29:22 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:29:22.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,நில மோசடி,Land fraud,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/03rlibqe/Ministernirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/03rlibqe/Ministernirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>மின்துறையில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தற்போது எந்த உறுதியும் அளிக்க முடியாது. முதலில் எத்தனை ஒப்பந்த பணியாளர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு முடிவெடிக்கப்படும்.</p><h2>தி.மு.க. ஆட்சி</h2><p>கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் பத்திர பதிவுத்துறையில் முறைகேடு நடந்துள்ளது. முந்தைய அமைச்சரின் காலத்தில் ஊழல் மலிந்திருந்தது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding">பழனி போலி பத்திரப்பதிவு மோசடி</a> தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இதுபோன்ற மோசடி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கோவில் நிலங்கள் மட்டுமல்லாமல், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து போலி பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கலாம். போலி பத்திரப்பதிவு மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>மேலும், பத்திரப்பதிவுத் துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. அதிக புகார்கள் வருவதால் இதற்கென தனிப்பிரிவு அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசிக்கப்படும். </p><h2>போலி பத்திரப்பதிவு</h2><p>போலி பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் வழங்கினால் குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை விதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-imposed-rameswaram-fishermen-venturing-out-to-sea-for-the-second-consecutive-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-imposed-rameswaram-fishermen-venturing-out-to-sea-for-the-second-consecutive-day#comments</comments><guid isPermaLink="false">f1844282-0ba4-495b-a79b-4f4f780c8e5c</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:16:49 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:16:49.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராமேசுவரம் மீனவர்கள்,கடல் செல்ல தடை,Fishing ban,Rameshwaram Fishermen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/h93kjkf2/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishing Boats]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/h93kjkf2/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.</p><h2>வானிலை ஆய்வு மையம் </h2><p>தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் வருகிற 21-ந் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது‌. அதே நேரத்தில் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அவ்வப்போது ராட்சத அலைகள் எழும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><h2>கடல் கொந்தளிப்பு</h2><p>அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி நேற்று வழங்கப்படவில்லை. </p><p>இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ள பகுதியில் இருந்து விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் பெருமளவு கடலுக்கு செல்லவில்லை.</p><p>2-வது நாளான இன்று ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக இன்றும் மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.</p><h2>மீன்பிடி தடை</h2><p>ராமேசுவரம், மண்டபத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தடை காரணமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. </p> <p>நாளை விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிக அளவில் இருக்கும் என்ற நிலையில் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் மீன் வரத்து இல்லை. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.</p><p>தனுஷ்கோடியில் கடந்த  2 நாட்களாக வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி  தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும்  போலீசாரும் தனுஷ்கோடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவிலில் ரூ.100 கோடி மோசடி - நிலம் வாங்கியவர், விற்றவர் தலைமறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-fraud-at-palani-temple-buyer-and-seller-of-land-absconding#comments</comments><guid isPermaLink="false">11720d56-6f4f-4d60-a8ac-0936026e8c74</guid><pubDate>Sat, 18 Jul 2026 09:02:05 +0000</pubDate><atom:updated>2026-07-18T09:02:05.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,நில மோசடி,சிபிசிஐடி,Land fraud,cbcid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/whvsujcm/palanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Palani Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/whvsujcm/palanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பழனி கோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடியில் நிலம் வாங்கியவர், விற்றவர் தலைமறைவாகி உள்ளனர்.</p><h2>பழனி கோவில்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்தில் அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான தக்காராக பழனி கோவில் இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கோவில் நிர்வாகம் அந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது. ரூ.100 கோடி மதிப்பிலான அந்த நிலம் கடந்த ஆண்டு முதல் பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.</p><h2>பத்திரப்பதிவு மோசடி</h2><p>கடந்த ஜூலை 6ம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலம் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திர பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நிலத்தை பத்திர பதிவு செய்தது தொடர்பாக கோவில் நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழனி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி ஆகிய 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p> <h2>சி.பி.சி.ஐ.டி. விசாரணை</h2><p>இந்த வழக்கில் தண்டபாணி சுவாமி மடத்தின் நிலத்தை தனியாருக்கு பத்திர பதிவு செய்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பழனி அடிவாரம் போலீசிடமிருந்து வழக்கு விசாரணை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.</p><p>வழக்கு விசாரணைக்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids">சி.பி.சி.ஐ.டி.</a> மதுரை எஸ்.பி. ஷஜிதா திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருகை தந்தார். புகார் அளித்த கண்காணிப்பாளர் முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, கண்காணிப்பாளர் சிவனேசன், கோவில் நிலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்ட ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. சின்னச்சாமி ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வரவழைக்கப்பட்டனர்.</p><p>சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்களும் கொண்ட வரப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரிடமும் 4 மணிநேரம் எஸ்.பி. ஷஜிதா விசாரணை மேற்கொண்டார். இதனிடையே ஒட்டன்சத்திரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சஞ்சை காந்தியை வரவழைத்து மடத்துக்கு உரிய நிலம் சம்பந்தமான ஆவணங்களை பெற்றனர்.</p> <h2>அனைவரும் தலைமறைவு</h2><p>தொடர் கிடுக்குப்பிடி விசாரணையால் தேவஸ்தான அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளைத்துரை, சேதுபதி ஆகிய அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களது செல்போன் எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பத்திர பதிவு நாளில் சாட்சி கையெழுத்திட்டோரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். </p><p>முறைகேடாக கோவில் நிலத்தை விற்ற, வாங்கியவர்களின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் நிலத்தை வாங்கிய சேதுபதியின் புகைப்படம் மற்றும் நிலம் தொடர்பான வில்லங்கச்சான்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. </p> <h2>பத்திரப்பதிவு</h2><p>பத்திரப்பதிவு நடந்த விவரம் குறித்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. பத்திர பதிவுக்கான ஆவணங்கள் கொடுத்தபோது பழனி சார்பதிவாளர் அதனை வாங்கியுள்ளார். ஆனால் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் உள்ளதாக வைத்துவிட்டு விடுமுறையில் சென்றுவிட்டார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா, கொடைக்கானலில் பணியில் இருந்த ஜஸ்டின் மணிகண்டனை ஒருநாள் விடுமுறைக்காக வரவழைத்து ரூ.100 மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். பதிவு முடிந்ததும் அவர் கொடைக்கானலுக்கு மீண்டும் பணிக்கு சென்று விட்டார். இதனால் இந்த முறைகேட்டில் பல அதிகாரிகள், பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினால் இந்த முறைகேட்டின் பின்புலமாக இருந்தவர்கள் யார் என தெரியவரும்.</p><p>சசிகலா கடந்த 6 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தவர். பல அதிகாரிகள் மாற்றப்பட்ட போதும் இவர் மட்டும் மாற்றப்படாமல் இருந்துள்ளார். எனவே இவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பின்புலமாக இருந்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/h-raja-condemned-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/h-raja-condemned-annamalai#comments</comments><guid isPermaLink="false">a1905b8b-554c-48bf-aca2-8242011846d7</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:57:29 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:57:29.562Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,அண்ணாமலை,H raja,எச் ராஜா,annamalai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/fqiuyst9/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா ]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/fqiuyst9/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, கோவில் நிலங்கள் தொடர்பாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>உண்மைக்கு புறம்பாக</strong></h2><p>பொள்ளாச்சியில் நடந்த என்.ஜி.ஓ. கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது என்னுடைய பெயரை இழுத்து விட்டு தன் பக்கத்தில் நியாயம் இருப்பது போல் <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> பேசி இருக்கிறார். அதில் கோவில் இடத்தை பராதீனப்படுத்தலாம் என்று நான் கூறியதாக கூறி இருக்கிறார்.</p><p>இப்போதைய முதலமைச்சர் விஜய் அரசில் சபாநாயகர் சட்டசபையில் பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். ஏன் குரானில் இருந்து தேவார பாடல்களில் இருந்து மேற்கோள் காட்டவில்லை? அப்படியானால் இந்த அரசு ஜனநாயக அரசு இல்லையா? இதை கண்டிக்க துணிச்சல் இல்லாத அரசியல் தலைவர்கள் எச்.ராஜா அப்படி பேசிவிட்டார் என்று நான் 2024-ல் பேசியதை தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் பேசி இருக்கிறார்.</p><h2><strong>பொய்</strong></h2><p>நான் எடப்பாடி பழனிசாமியை 2 முறை சந்தித்து இருக்கிறேன். அப்போது கோவில்களுக்கு சொந்தமான 4 லட்சத்து 76 ஆயிரம் ஏக்கர் நிலம், மனைகள், கட்டிடங்கள் அளக்கப்படவில்லை. கையகப்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன். எந்த விதத்திலும் நான் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது கிடையாது.</p><p>நான் கட்சி பணிக்காக சென்ற போது உள்ளூர் விவசாயிகள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்பவே நான் அவர்களிடம் சொன்னேன். கோவில் இடங்களை கையகப்படுத்த  முடியாது. தி.மு.க. அரசு மக்களின் பட்டா இடங்களை கைப்பற்றுவதை அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தேன். முதலில் அது கோவில் சொத்தா? பட்டா இடமா? என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். இதை தவறாக சுட்டிக்காட்டி என் பெயரையும் சேர்த்து இழுத்து விட்டு பொய் கூறி இருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inspects-social-justice-hostel-issues-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inspects-social-justice-hostel-issues-orders#comments</comments><guid isPermaLink="false">abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:38:12 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:38:12.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Government Hostel,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,Social Justice Hostel,சமூகநீதி விடுதிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/oegrbb69/Vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/oegrbb69/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><h2>முதலமைச்சர் திடீர் ஆய்வு</h2><p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார்.</p><h2>குவிந்த புகார்கள்</h2><p>* விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>* தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.</p><p>* இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.</p><p>* விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர். அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய் உத்தரவு</h2><p>சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் நேற்று ஆய்வு கொண்ட நிலையில் சமூக நீதித்துறை இன்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.</p><p>முதலமைச்சரிடம் நேற்று மாணவர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>உணவுப்பட்டியலை உடனடியாக மாற்றி, சிலிண்டர் தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்ட இட்லி, சப்பாத்தியை மீண்டும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>எம்.சி ராஜா விடுதியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கைப்பந்து மைதானத்தை மாணவர் பயன்பாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>விடுதியில் தங்கியிருந்து வெளியே பகுதிநேர பணிக்கு செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week#comments</comments><guid isPermaLink="false">4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:28:14 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:28:14.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3yws98fk/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3yws98fk/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட் </a>மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. </p><p>பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை  தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 22-ந்தேதி வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். </p><h2><strong>அமைச்சரவை கூட்டம்</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும், தமிழக பட்ஜெட் எந்த தேதியில் தாக்கல் செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.</p><p>இந்த நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>ஆகஸ்டு முதல் வாரம்</strong></h2><p>ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 16 நாட்களாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-govt-officers">முதலமைச்சர் விஜய்</a> எல்லா துறை ரீதியாக அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். தினமும் 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் செலவிட்டு ஆலோசனை நடத்தி உள்ளார். </p><p>நிறைய தகவல்களை பரிமாறி உள்ளோம்.  தமிழக அமைச்சரவை கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்து இருக்கிறது. வரும் நாட்களில் ஆகஸ்டு முதல் வாரத்தில் நல்லபடியாக தமிழக வெற்றிக்கழக அரசின்  முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 100 சதவீதம் எல்லோரும் வரவேற்கிறார்கள்.</p><p>கடந்த 55 நாட்களாக எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா துறை ரீதியாக நாங்கள் பார்த்து கொண்டு தான் வருகிறோம். சந்தோஷமாக இருக்கிறார்கள். மக்கள் வரவேற்கும் போது நீங்களும் வரவேற்பு தெரிவியுங்கள். சந்தோஷமாக இருப்போம்.</p><h2><strong>மக்கள் வரவேற்பு</strong></h2><p>தமிழக வெற்றிக்கழக ஆட்சி  6 மாதத்தில் கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறியாமையில் பேசி வருகிறார். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை, பாவம் அதனால் தான் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பது மாதிரி தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை, தி.மு.க. தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முதலில் தலைவணங்க வேண்டும்.</p><p>தமிழக முதலமைச்சரின், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் 27 பேர் தேர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-27-chennai-corporation-school-students-pass</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-27-chennai-corporation-school-students-pass#comments</comments><guid isPermaLink="false">975cb51b-9360-4c3f-8109-342816e3b0ae</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:15:52 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:15:52.673Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,Chennai Corporation school,சென்னை மாநகராட்சி பள்ளி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hlph9vt4/Neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/hlph9vt4/Neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.</p><p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வு</a> முடிவு வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 66 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். </p><p>தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை விவரம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிற்கு வந்து உள்ளது. </p><p>நீட் தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாணவர் வேங்கடபதி 720 மதிப்பெண்ணுக்கு 705 பெற்று முதலிடம் வகித்தார். சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்த 122 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 27 பேர் மட்டுமே தேர்ச்சிக்கான தகுதியைப் பெற்றனர்.</p> <p>12 மாணவர்களும், 17 மாணவிகளும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சாய் சரண் என்ற மாணவர் 369 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்க உள்ளது.</p><p>இது தவிர தமிழக முழுவதும் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த சலுகையின் கீழ் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர் விவரம் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா?  TNPSC அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed#comments</comments><guid isPermaLink="false">d4c2b4ba-7e94-4320-9ea1-37279659605b</guid><pubDate>Sat, 18 Jul 2026 08:09:25 +0000</pubDate><atom:updated>2026-07-18T08:09:25.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,TNPSC Announcement,டிஎன்பிஎஸ்சி,TNPSCGroup1,டிஎன்பிஎஸ்சி குரூப் 1,TNPSC அறிவிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gayn5az1/tnpsc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  TNPSC Announcement]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gayn5az1/tnpsc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதியை அதிரடியாக மாற்றி உள்ளது. செப்டம்பர் 6ம் தேதி நடைபெற இருந்த குரூப் 1 தேர்வு, செப்டம்பர் 27ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் பெரும்பாலான துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் வாரியாக தேர்வு நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, குருப் 4 என பல்வேறு தேர்வுகளை நடத்தி, இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்  காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து அதிரடியாக சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரூப் 1 தேர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 1 தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது. அதாவது, குரூப் 1  முதல் நிலை தேர்வு செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், அதனை டிஎன்பிஎஸ்சி மாற்றி உள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.06.2026 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026 மநடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனவே, தேர்வர்கள் இதற்கு ஏற்றவாறு தங்கள் திட்டங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.  குரூப் 1 முதல்நிலைத் தேர்வு மூலம் 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  துணை ஆட்சியர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறும்.</p><p>குரூப் 1 தேர்வு மூலம் தேந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின்படி அடிப்படை ஊதியம் ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வழங்கப்படும்.  இதில் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பல்வேறு படிகளும் வழங்கப்படும். பணியில் தொடக்க நிலையிலேயே ரூ.80,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் இருக்கும். எனவே, குரூப் 1 முதல்நிலை தேர்வு தயாராகுபவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online#comments</comments><guid isPermaLink="false">981434e0-9e28-4646-8907-cfe4006ccd91</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:26:41.196Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,இணையதளம்,Website,மக்கள் தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இணையதளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகை கணக்கெடுப்பு</a>  பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்     கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும் அதற்கு முன்னதாக  வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது. </p><h2><strong>வழிமுறைகள்</strong></h2><p>இது நேரடியாகவும்,  இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பாகவும் நடக்கிறது. இந்த சுய கணக்கெடுப்பு எவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற  வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை இணைய தளம் பதிவு செய்ய முதலில் <a href="https://se.census.gov.in/">http:/se.census.gov.in</a>   உள் நுழையுங்கள், மாநிலத்தை தேர்ந்தெடுங்கள், கேப்சாவை உள்ளிடுங்கள். </p><p>2-வதாக குடும்பத்தினர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (விருப்பத்திற்குரியது) ஆகியவற்றை உள்ளிடவும். குடும்பத் தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது.  ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அதே எண்ணை வேறு எந்த குடும்பத்திற்கும் பயன்படுத்த முடியாது. </p><p>3-வதாக விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி.யை உள்ளிடவும். (தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியை பின்னர் மாற்ற முடியாது).</p><p>பின்னர்  மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தபால் அஞ்சல் எண், கிராமம் , நகரம், பகுதியை  பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்கள் இருப்பிடத்தை வரைபடத்தில் கண்டறிய வேண்டும். உங்கள் சரியான குடியிருப்பு கட்டிடத்தை அடையாளம் காணவும் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும் சிவப்பு குறியீட்டை வரைபடத்தில் இழுக்கவும். </p><p>தொடர்ந்து கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். உதவி குறிப்புகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அத்தியாவசிய தகவல், குறிப்புகளின் வழிகாட்டுதலுடன் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு கேள்வித்தாளை நிரப்ப வேண்டும்.  இணையத்தில் உள்ளிடப்பட்ட அனைத்து தரவையும் சரிபார்க்க முன்னோட்ட திரையை பயன்படுத்தவும். பதிவுகளை திருத்தலாம். பின்னர் சமர்ப்பிக்க வரைவை சேமிக்கலாம், அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். </p><h2><strong>சமர்ப்பித்தல்</strong> </h2><p>உங்கள் தரவை பூட்ட இறுதியாக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும். இறுதி சமர்ப்பிப்புக்கு பிறகு மாற்றங்கள் செய்ய முடியாது. சமர்ப்பிக்கப்பட்ட பின் தங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக பெறப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">கணக்கெடுப்பாள</a>ர் உங்கள் வீட்டிற்கு வரும் போது உங்கள் எஸ்.இ. ஐ.டி. அவரிடம் பகிர வேண்டும். கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை சரி பார்த்து திருத்தங்கள் இருப்பின் சரி செய்வார். </p><p>இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி இணையத்தில் சுய விவரங்களை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>விளவங்கோடு  சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நினைவு ஜெபம் - விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-prayer-for-vilavancode-mla-praveens-mother-mp-vijay-vasanth-participates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-prayer-for-vilavancode-mla-praveens-mother-mp-vijay-vasanth-participates#comments</comments><guid isPermaLink="false">2c3368fc-4cdb-4033-8684-059cb5094ea2</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:25:42.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,kanyakumari,Vijay Vasanth,விஜய் வசந்த்,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/58tqqna2/vijayvasanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/58tqqna2/vijayvasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நான்காம் நாள் நினைவு ஜெபத்தில் கன்னியாகுமரி விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றார்.</p><p>விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் கடந்த 14-ந்தேதி மரணமடைந்தார். அவர்களது 4-ம் நினைவு ஜெபம் இன்று பாறசாலையை அடுத்த சிறிய கொல்லா இல்லத்தில் வைத்து நடைபெற்றது. </p><p>நிகழ்ச்சிக்கு தென் கேரளா சி.எஸ்.ஐ. பேராயர் பினிஸ்டான் பென் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பு பொதுச் செயலாளரும் எம்பி.யுமான கே.சி வேணுகோபால், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்,எம்பி, கேரளா காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சனல், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், </p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங், மீனவர் அணி மாநில தலைவர் ஜோர்தான் மற்றும் கேரளா தமிழக சி.எஸ்.ஐ. போதகர்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரணமடைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-thapasu-festival-begins-at-sankaranarayana-swamy-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-thapasu-festival-begins-at-sankaranarayana-swamy-temple#comments</comments><guid isPermaLink="false">21c794c9-3015-45d1-ab6e-d3d8d53b2bce</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:17:22 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:17:22.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சங்கரநாராயண சுவாமி கோவில்,aadi thapasu,ஆடித்தபசு விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dq8tl5rp/aadithapasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dq8tl5rp/aadithapasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி  கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். </p><h2><strong>கொடியேற்றம்</strong></h2><p>இந்த  ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.</p><p>காலை 7.05  மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.</p><p>விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம்  நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு  கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. </p><h2><strong>பக்தர்களுக்கு காட்சி</strong></h2><p>தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக  ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து  29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;என்னை நீக்க அதிகாரம் இல்லை&quot;- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her#comments</comments><guid isPermaLink="false">65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:13:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:13:57.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk,ஞானசவுந்தரி,Gnanasoundhiri</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gnanasoundhari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ஞானசவுந்தரி விளக்கம்</h2><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:-</p><p>என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம்.</p><p>முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்துகிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீக்கம் ஏன்?</h2><p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞராக நியமிக்க கோரியும்  உயர்நீதிமன்றத்தில் ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் ஞானசவுந்தரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில், எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted#comments</comments><guid isPermaLink="false">fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:07:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:07:09.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,அம்மா மினி கிளினிக்குகள்,amma mini clinic,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை</h2><p>சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். உயர் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு வார்டுகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.</p><p>பின்னர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்ட புறநோயாளிகள் இணைய முன்பதிவு நடைமுறையால் 500 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.</p> <h2>மருத்துவ படிப்பு</h2><p>மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அம்மா மினி கிளினிக்</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக கூறி அவை தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது <a href="https://www.maalaimalar.com/news/puducherry/tvk-cadres-crowded-tn-minister-bussy-anand-house">த.வெ.க.</a> அரசு அந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முனைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!- மாணிக்கம் தாகூர் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams#comments</comments><guid isPermaLink="false">55c3d3e3-7a0c-44ad-b10e-be7db6b357cc</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:40:31.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,question paper leak,bjp govt,தேர்வுத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Congress leader Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்; மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டும் 60%-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் ஏன்" என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும் அவர்,"இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் Doubtful Engineஆக பாஜக அரசு மாறிவிட்டது; பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? தேர்வுத்தாள் கசிவு குறித்து மத்திய கல்வி அமைச்சரிடம் என்ன பதில் உள்ளது?" என்றார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!</p><p>​இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!</p><p>​பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது! </p><p>மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்</p><p>அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries#comments</comments><guid isPermaLink="false">17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:23:07 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:23:07.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கையேந்தும் நிலை</strong></h2><p>சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். 1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட  இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சியில்</strong> </h2><p>ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான்  ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள்  ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.</p><h2><strong>நிதியை கொள்ளையடிக்க சதி</strong></h2><p>சென்னைக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுமை சி.எம்.டி.ஏ மீது சுமத்தப்பட்டதால் தான் அதன் நிதி நிலை மோசமடைந்தது. சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில்  கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் பணி ஆகும்.  சி.எம்.டி.ஏ. என்பது அடிப்படையில் ஒழுங்கு முறை அமைப்பு ஆகும். அத்தகைய அமைப்பின் மீது கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சுமத்தப்பட்டது அதன் நிதியை கொள்ளையடிக்க நடந்த சதி ஆகும்.</p><p>முந்தைய திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழலும், கொள்ளையும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. ஊழல் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஆட்சியாளர்கள் துணிந்திருந்தனர். 2025-26ஆம் ஆண்டிலேயே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு 2026-27ஆம்  ஆண்டு நிதிநிலை அறிக்கை நிதியிலிருந்து ரூ.2000 கோடி  ஒதுக்கி ஒப்பந்தம் வழங்கும் அளவுக்கு திமுக அரசு விதிமீறல்களை அரங்கேற்றியது. இதற்கு காரணம் நிதி இல்லாத நிலையிலும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு கையூட்டு வசூலிக்க வேண்டும் என்ற பேராசை தான். இதை கடந்த ஜனவரி மாதத்திலேயே அறிக்கை மூலம் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருந்தேன்.</p><h2><strong>ஊதியம்</strong></h2><p>நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம் வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.</p><p>சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன?  அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின்  பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids#comments</comments><guid isPermaLink="false">97077370-3769-42aa-bed7-5394eb95d5ed</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:18:09.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,பழனி கோவில்,pazhani,சிபிசிஐடி,cbcid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில், அலங்காரப் பணி செய்பவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது.</p><p>நெல்லையில் அலங்காரப் பணி செய்யும் சண்முக சுந்தரம் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p><p>வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழனியில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>பழனி நில மோசடி விவகாரம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி பதிவு செய்யப் பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>7 பிரிவுகளில் வழக்கு</h2><p>இந்த வழக்கில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><p>சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சம்மந்தப்பட்ட ஆவணம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி பதிவுக்காக சமர்ப்பிக் கப்பட்டது. அப்போதைய சார்பதி வாளர் பாலச்சந்தர் பதிவு செய்ய மறுத்து விட்டார்.</p><p>கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ரிட் மனு மீதான வழக்கில் ஆவணத்தை பதிவு செய்யு மாறு சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் ஜூலை 3-ந் தேதி சார்பதிவாளர் பால சுந்தரம் பதிவு செய்தார். </p><p>பாலசுந்தரம் விடுப்பில் சென்ற காரணத்தால் மாவட்ட பதிவாளர் அனுமதியுடன் ஜூலை 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் இந்த மனு பதிவு செய்யப் பட்டது என்றும், அதற்கு எண் ஒதுக்கீடு செய்து கலெக்டருக்கு பரிந்துரைக்க மட்டுமே தான் செய்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். </p><p>இதனையடுத்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கி வருகிற 27-ந் தேதி முதல் ஆகஸ்ட்டு 3-ந் தேதி வரை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கில் விசாரணையும் அகஸ்ட் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>அதிகாலையில் சோதனை</h2><p>இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோடு லிங்கா அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் சி.பி.சி.ஐ.டி.</p><p>டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் விசாரணைக்கு வந்தனர். அப்போது அவரது வீட்டில் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>வங்கி கணக்கு விபரங்கள், பத்திரப்பதிவு செய்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் அவரது செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.</p><p>இதே போல் பத்திரப்பதிவு செய்தபோது சாட்சி கையெழுத்து போட்ட வர்களின் விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதில் பழனி இடும்பன் கோவில் அருகே உள்ள லெட்சுமணன் என்பவரும் ஒருவர் என்பதால் அவரது  வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிகாலை சென்றனர். </p><p>ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கேட்டபோது தனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து அங்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதே போல் சாட்சி கையெழுத்திட்ட மேலும் சிலரது வீடுகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்துள்ளனர். லெட்சு மணன் இப்பகுதியின் தி.மு.க. வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>