<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 17 Jul 2026 10:38:13 +0000</lastBuildDate><item><title>நாளை முதல் 24-ந்தேதி வரை சென்னை-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled#comments</comments><guid isPermaLink="false">5c889a44-f678-482a-a3dd-19bf43dc564d</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:37:08.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Trains cancelled,ரெயில்கள் ரத்து,Mumbai rain,மும்பையில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 9 <a href="https://www.maalaimalar.com/topic/எக்ஸ்பிரஸ்-ரெயில்கள்">எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a> மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பெய்து வரும்  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><h2><strong>ரெயில்கள் ரத்து</strong></h2><p>மும்பை ஜி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல்  இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் மெயில் (எண்-22157) நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதே போல சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ஜி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும் 9 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p>திருச்சி-அகமதாபாத், மதுரை-லோக் மணியா, காரைக்கால்-லோக் மணியா, இக்டா நகர்- சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-திருச்சி, லோக் மணியா திலக்-மதுரை, ராஜ் கோட்-கோவை உள்ளிட்ட 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் படத்தை அகற்ற கூறியதால் மணலி மண்டல குழு கூட்டத்தில் த.வெ.க.-தி.மு.க. உறுப்பினர்கள் மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-and-dmk-members-clash-manali-zonal-team-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-and-dmk-members-clash-manali-zonal-team-meeting#comments</comments><guid isPermaLink="false">c9c0daf8-9368-4b08-8c32-1fec238cd0d1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:27:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:27:26.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yvefrxod/manali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yvefrxod/manali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் இன்று தொடங்கியது. உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>கூட்டத்தில் பரபரப்பு</strong></h2><p>கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது த.வெ.க.வை சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. டாக்டர் ரவி ஆகியோர் வந்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை எப்படி கூட்ட அரங்கில் வைக்கலாம் என்று திருவெற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். </p><p>அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி, புதிதாக அ.தி.மு.க.வில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த  முல்லை ராஜேஷ் ஆகியோரும் பேசினர். இதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>உறுப்பினர்கள் வெளியேறினர்</strong></h2><p>இதைத்தொடர்ந்து மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் பேசும் போது, “மக்கள் பிரச்சனை பற்றி பேச நாங்கள் கூறி உள்ளோம். போட்டோ பிரச்சனை அல்ல” எனக்கூறி இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து கூட்டத்தை ரத்து செய்து விட்டு  வெளியேறினார். அவரை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.</p><p>உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டத்தில் தீர்மானங்களை இயற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் ரவியும், செந்தில் குமாரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.</p><p>இதுகுறித்து மண்டலகுழு தலைவர் ஆறுமுகம் கூறும் போது, மக்கள் பிரச்சனை பேசுவதற்காக கூட்டம் கூடினோம். ஆனால் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை உள்ளே கூட்டி வந்தார், மேலும்  அனைவரையும் ஒருமையில் பேசினார். </p><p>இதனால் இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என கூறி ரத்து செய்துவிட்டு வெளியேறி விட்டேன்.வேறொரு நாளில் கூட்டம் நடைபெறும். மக்கள் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்போம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:17:50.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p>]]></content:encoded></item><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt#comments</comments><guid isPermaLink="false">413070be-154d-4ec3-8c64-11c2a39a32c1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:15:47.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,TN Govt,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக அரசு</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கடும் அதிர்ச்சி</strong></h2><p>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுபான வகைகளை</a> அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2><strong>அரசு உணர வேண்டும்</strong></h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். “More Choices, More chances”</p><p>எனவே, ஒருவேளை முதல்வர் விஜய் அவர்களுக்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! <br><br>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை… <a href="https://t.co/JYRKje19Oq">pic.twitter.com/JYRKje19Oq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2078053807179870419?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases#comments</comments><guid isPermaLink="false">37bf1f11-eaf5-4420-af38-794e19872452</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:01:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:01:01.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,ponraj,பொன்ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yxrq8i37/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yxrq8i37/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான <a href="https://www.maalaimalar.com/topic/பொன்ராஜ்">பொன்ராஜுக்கு</a> எதிராக கடந்த மார்ச் 26-ந்தேதி அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் மே 12-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். </p><h2><strong>ரத்து செய்ய கோரி</strong></h2><p>இந்த 2 வழக்குகளையும் ரத்து  செய்யக் கோரி ஐகோர்ட்டில் பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை  நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது பொன்ராஜ் தரப்பில், யூ டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. </p><blockquote>தற்போது அமைச்சர்களாக உள்ள 2 பேர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது.</blockquote><p>போலீஸ் தரப்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு  ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால்  வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது.</p><h2><strong>மனுக்கள் தள்ளுபடி</strong></h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,  பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இன்று இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi#comments</comments><guid isPermaLink="false">adf4f21b-471e-4ac5-98a1-77da6fb5417a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:59:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:59:58.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,neet exam results,நீட் தேர்வு முடிவு,கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி,நீட் கட்-ஆப்,Jayaprakash gandhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Educationist Jayaprakash Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மே மாதம்  நடந்தது. தேர்வு நடப்பதற்கு முன்பே  வினாத்தாள் வெளியாகி  நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. </p><p>அதைத்தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 20 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். </p><p>இதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த  பான்சூல்  பன்சால் ஆகிய இருவரும் 720 மதிப்பெண்ணுக்கு 715 பெற்று முதலிடத்தை பிடித்தனர். </p><p>கடந்தாண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>இதனால் நீட் கட்-ஆப்  மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது  என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது:- </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட்  தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.</p><p>நீட் தேர்வில் 690-க்கு மேல் கடந்த ஆண்டு ஒருவரும் பெறவில்லை. ஆனால் இந்த வருடம் 85 பேர்   இடம் பெற்றுள்ளனர். அதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 1367 பேர் கடந்தாண்டு பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,080 பேர் வாங்கியுள்ளனர்.</p><p>550 மதிப்பெண்ணுக்கு மேல் இந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 12,280- ஆக இருந்தது. 500 மதிப்பெண்ணுக்குமேல் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். இது கடந்த வருடம் 52,217 ஆக இருந்தது.</p><p>இந்த மறு தேர்வு முடிவை வைத்துப் பார்க்கும்போது நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.</p><p>நீட் மறு தேர்வு கடினமாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டு தேர்வை விட இந்த வருடம் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின்         மருத்துவமனைகளில்  மட்டுமன்றி மாநில அரசு களின் மருத்துவுமனைகளிலும் சேர்ந்து படிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.</p><p>எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவ கல்லூரிகளில்  சேர்வதற்கு 680-க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். நாட்டின் தலை சிறந்த  மருத்துவமனைகளில் சேர்வதற்கு உயர் மதிப்பெண் அவசியமாகும்.</p><p>தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை  அதிகரிக்ககூடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை நாடகமாடிய காதலன் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder#comments</comments><guid isPermaLink="false">ac488206-84b9-4f09-a26d-c10c224ecd79</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:48:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:48:08.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,Murder,கொலை,affair,கள்ளக்காதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4oww2xmr/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4oww2xmr/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஅழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மயில் (வயது 31). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். </p><h2><strong>குழந்தைகள் அதிர்ச்சி</strong></h2><p>இந்தநிலையில் நேற்று காலை முனியசாமி வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மாலையில் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அங்குள்ள அறையில் மயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஏராளமான ரத்தம் வெளியேறி உயிரிழந்து கிடந்தார். அவரது கையில் கத்தி ஒன்றும் இருந்தது.</p><p>இதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக எண்ணி திரண்டு வந்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் மயில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மல்லாங்கிணறு போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்துகிடந்த மயில் கையில் இருந்த கத்தியை கைப்பற்றி அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.</p><h2><strong>கள்ளக்காதல்</strong></h2><p>தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மயிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆகாத உதயகுமார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் உதயகுமாரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து அவரது கணவரிடம் கூறியுள்ளனர். அவர் மற்றும் உறவினர்கள் கண்டித்தபோதிலும், மயில் அதனை கண்டுகொள்ளவில்லை. உதயகுமார், மயில் இடையேயான கள்ளத்தொடர்பு தடையின்றி தொடர்ந்து வந்துள்ளது.</p><p>இந்தநிலையில் நேற்று காலை மயில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த உதயகுமார் அங்கு வந்துள்ளார். அப்போது மயில் வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் யார், உனக்கும், அவருக்கும் என்ற தொடர்பு என்று கேட்டு உதயகுமார் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கொலை</strong></h2><p>இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மயிலை கீழே தள்ளி, அவரது கை, கால்களை பிடித்துக்கொண்டு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கைகளால் மூடினார். இதனால் உதயகுமாரின் பிடியில் இருந்து மீள முடியாத மயில் ஒருசில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  </p><p>பின்னர் இந்த கொலையை மறைக்க திட்டமிட்ட உதயகுமார், அங்கிருந்து செல்லும் முன்பு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை இறந்து கிடந்த மயிலின் கையில் சொருகி வைத்தார். இதன் மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் தெரியும் என எண்ணினார். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் உதயகுமார் சிக்கிக்கொண்டார்.  </p><p>இதையடுத்து இன்று காலை கள்ளகாதலன் உதயகுமாரை மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மயிலை கொலை செய்துவிட்டு, கத்தியை அவரது கையில் வைத்துவிட்டு தப்பியதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவில் குதிரை பேரம் - அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office#comments</comments><guid isPermaLink="false">f7a1b243-ba3d-4595-ad7f-0cd37320beaf</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:33:56.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். </p><p>இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்து எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சார்பில் புகார் மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>சென்னை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.</p><p>அந்தக் கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் இன்று டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு அளித்தனர்.</p> <p>பின்னர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-</p><p>குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் இன்று மனு அளித்து உள்ளோம். குதிரை பேர நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.</p><p>தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்திலேயே பேரவைத் தலைவரிடம் 11 மணியளவில் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணியளவில் மேலே சென்று அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அதன் பிறகு பேரவை தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. தமிழக சட்டப்பேரவை மரபுகளுக்கும் முரணானதாகும்.</p><p>இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று மனு அளித்திருக்கிறோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இன்பதுரை எம்.பி. கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation#comments</comments><guid isPermaLink="false">4e557384-0f37-4163-83db-faca1ae68939</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:11:14 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:11:14.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் -  அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அகழாய்வில்  நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life#comments</comments><guid isPermaLink="false">8331f636-dc97-4adf-9dce-af7fe3c3110f</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:51:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:51:23.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>2 பெரிய தவறுகள்</h2><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><h2>திமுக</h2><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><h2>அதிமுக</h2><p>என் வாழ்க்கையில் 2 பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அ.தி.மு.க.வுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p> <h2>திமுக</h2><p>2017-ம் ஆண்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. </p><h2>ஒளிமயமான எதிர்காலம்</h2><p>இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொது வாழ்வில் இருப்போரும், பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">402b10a0-8008-42a8-a4ac-71028c029bb0</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:38:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:38:11.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN weather,heatwave,Chennai Meteorological Center,தமிழகத்தில் வெப்பம்,வெப்பம் அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9evjipxt/heat-wave.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heat wave in Tamilnadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9evjipxt/heat-wave.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- </p><p>உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும்.</p><p>வெப்பத்தின் அளவு இயல்பை விட அதிக அளவில் இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெயில் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதன்படி, வரும் 21ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.</p><p>அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அசவுகரியம் ஏற்படலாம்.</p><p>சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை, இரவு நேரத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கும் கடலோர மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people#comments</comments><guid isPermaLink="false">c0e966b7-6f9f-4713-9c42-8c5469adfe02</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:34:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:34:53.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,தமிழக கவர்னர்,Governor Rajendra Vishwanath Arlekar,கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/plchwg5i/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/plchwg5i/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.</aside><p>மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் நோக்கில், நாட்டின் மிக முக்கியமான தேசிய தரவு சேகரிப்புப் பணிகளில் ஒன்றான 2027-ஆம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத்</a> தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.  சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.</p><h2><strong>முழு ஒத்துழைப்பு</strong></h2><p>இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">கணக்கெடுப்புத்</a> தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும். இந்நிகழ்வில்,  தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை நிறைவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலுக்கு நம்பகமான தரவுகளை வழங்கும் ஒரு முக்கிய தேசியப் பணியே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்காக, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2><strong>நம்பிக்கை</strong></h2><p>சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும் </p><p>வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, ​​மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள்.</p><p>ஆளுநர் அவர்கள், 2027-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகக் கருதி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களின் செயல்மிகு ஒத்துழைப்பு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் கள்ளநோட்டுகள் பறிமுதல்- மலேசிய பெண்ணிடம் போலீஸ் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/counterfeit-notes-seized-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/counterfeit-notes-seized-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b3f7b89f-c113-4b9b-a9fd-9b5198a122cd</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:48:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:48:55.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீசார் விசாரணை,கள்ளநோட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/u2hwag60/notes.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/u2hwag60/notes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை போலீசார் கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கள்ள நோட்டு விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</aside><p>இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். </p><p>அந்த வகையில் இந்திய ரூபாய் நோட்டுக்களை அவர்கள் அதிக அளவில் புழக்கத்தில் விடுவதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இது போன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது நாட்டுக்குள் <a href="https://www.maalaimalar.com/topic/கள்ளநோட்டு">கள்ள நோட்டுகளை</a> புழக்கத்தில் விடுவதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கள்ளநோட்டுகள் தொடர்ந்து புழக்கத்திலேயே இருந்து வருகிறது. </p><h2><strong>சென்னையில்</strong></h2><p>அந்த வகையில் சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் தற்போது சிக்கி உள்ளது. இதற்கு முன்னரும் பலமுறை கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இருப்பினும் இந்த முறை பிடிப்பட்டு உள்ள கள்ள நோட்டு கும்பலுக்கு சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.</p><p>இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணி பற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-</p><h2><strong>திருவல்லிக்கேணி</strong></h2><p>சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவல்லிக்கேணி  தசூதீன் கான் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று லாட்ஜ் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  </p><h2><strong>ரூ.11 லட்சம்</strong></h2><p>இதில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 300  ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியது.  25 ஆயிரம் மதிப்புள்ள யூரோ கரன்சிகள்  மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.</p><p>கள்ள நோட்டுகளை வைத்து இருந்தவரை பிடித்து திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.</p><h2><strong>சபீக் ரகுமான்</strong></h2><p>கள்ளநோட்டுகளை வைத்து இருந்த நபரின் பெயர் சபீக் ரகுமான் என்பது தெரிய வந்தது. 37 வயதான இவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்துள்ளார்.</p><p>சபீக் ரகுமான் டூர்ஸ் அன்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.  அப்போதுதான் அவருக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.  </p> <h2><strong>தஞ்சையை சேர்ந்தவர்</strong></h2><p>சபீக் ரகுமானிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (44) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரி யவந்தது. ரவிச்சந்திரனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் திருவோணம் ஆகும். அவர் தற்போது தஞ்சை பிலோ மினா நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.</p><p>இவர் சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கான ஏஜெண்டாக செயல்பட்டு இருப்பதை போலீசார்  கண்டு பிடித்தனர்.</p><h2><strong>வணிக நிறுவனங்கள்</strong></h2><p>இவர் தஞ்சையில் இருந்து சென்னைக்கு சென்று அங்கு வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கி கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். </p><p>இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் மலேசியாவில் வேலை பார்த்து உள்ளார். அப்போதுதான் அவருக்கு  கள்ளநோட்டு கும்பலோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பெரிய அளவில் அவர் பணமும் சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>வியாபாரிகள்</strong></h2><p>மலேசியாவில் இருந்து ஊருக்கு வந்த பின்னர் தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பில் இருந்தபடியே கள்ள நோட்டுகளை வாங்கி அதனை சத்தம் இல்லாமல் வியாபாரிகளிடம் புழக்கத்தில் விட்டு இருக்கிறார்.</p><p>ரவிச்சந்திரன் மூலமாக சபீக் ரகுமானுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்து இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இதை தொடர்ந்துதான் ரவிச்சந்திரனும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்.</p><p>சென்னையில் இருந்து தஞ்சைக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.</p><p>ரவிச்சந்திரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளன. அந்த பணத்தின் பின்னணி பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>மலேசிய பெண்</strong></h2><p>கைதான இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கள்ள நோட்டு கும்பலுடன் மலேசியாவை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண் தொடர்பில் இருந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்து  கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் தலைவியாக செயல்பட்ட போதுதான் போலீஸ் பிடியில் அவர் சிக்கி உள்ளார்.</p><p>நேற்று  காலையிலேயே போலீசார் அவரை பிடித்து விட்டனர். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து புவனேஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. </p><h2><strong>காப்பகத்தில்</strong></h2><p>இதன் பின்னர் நேற்று இரவு அவரை காப்பகத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்த போலீசார் இன்று காலையில் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.</p><p>சென்னையில் தங்கி இருந்து புவனேஸ்வரி கடந்த ஒரு மாதமாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>மேலும் ஒரு பெண்</strong></h2><p>கள்ளநோட்டு கும்பலுடன் சேர்ந்து பரிமளா என்ற பெண்ணும் செயல்பட்டு வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இவரும் புவனேஸ்வரியுடன் தி.நகர் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளார்.</p><p>இவர்கள் மூலமாகத்தான் ரவிச்சந்திரனுக்கு கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பரிமளா மலேசியா சென்றுள்ளார். அவரை பிடிப்பதற்கும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.</p> <h2><strong>அச்சடிப்பு</strong></h2><p>கள்ளநோட்டுகளை மலேசியாவில் அச்சடித்து பல்வேறு வழிகளில் அவர்கள் தமிழகத்திற்கு கடத்தி வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விமானம் மூலமாகவும் அவர்கள் கள்ள நோட்டுகளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.</p><p>கைதானவர்கள் நடத்திய சோதனையில் பாஸ்போர்ட்டுகளும் இருந்தன.  அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் இந்த கும்பலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னணி பற்றியும் மத்திய மாநில போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள்.</p><p>இதை தொடர்ந்து சென்னை போலீசார் கள்ள நோட்டு கும்பலின் சர்வதேச பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் முடிவில் கள்ள நோட்டு விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today#comments</comments><guid isPermaLink="false">d13a151c-63b4-4634-a4bb-9a8305aced12</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:43:03.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>pm modi,பிரதமர் மோடி,Coonoor railway station,குன்னூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wv31m43f/coonoor1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coonoor railway station]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wv31m43f/coonoor1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது.</p><h2>குன்னூர் ரெயில் நிலையம்</h2><p>இந்த நிலையில் குன்னூர் ரெயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிப்பது என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அரசின் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>தொடர்ந்து குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் ஆர்ச்,  செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது.</p> <figure><img alt="Coonoor railway station" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pxx3me0w/coonoor.jpg" /></figure> <p>மேலும் இந்த ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வனவிலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.</p> <h2>பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்</h2><p>குன்னூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு நவீன அம்சங்களுடன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த ரெயில் நிலையத்தை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> இன்று மாலை காணொளி காட்சி மூலம்  திறந்து வைக்கிறார்.</p><figure><img alt="PM Modi" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/zwaindm1/modi1.jpg" /></figure> <p>இந்த நிகழ்ச்சியில் கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud#comments</comments><guid isPermaLink="false">c5ad2760-c7dc-4316-9316-171961cb87fe</guid><pubDate>Fri, 17 Jul 2026 07:05:06 +0000</pubDate><atom:updated>2026-07-17T07:05:06.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,pazhani,தவெக விஜய்,Palani,பழனி,பழனி நில மோசடி,பரந்தாமன்,Parandhaman</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cfjq32cw/parandhaman1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Lawyer Parandhaman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/cfjq32cw/parandhaman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி நில மோசடி விவகாரத்தில், குற்றவாளிகளை காப்பாற்ற அறநிலையத்துறை அமைச்சர் முயற்சி என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-</p><p>பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடியில் அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>பழனிக்கு அருகே உள்ள சார்பதிவாளரை அழைக்காமல் 67 கி.மீ. தொலைவில் உள்ள சார்பதிவாளரை வரவழைத்து முறைகேடு செய்துள்ளனர்.</p><p>தனிநபர்கள் இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதன் பின்னணியில் சதி உள்ளது. அமைச்சர் ஒரு தகவலை கூறுகிறார். நீதிமன்றத்தில் வேறு தகவல் கூறப்படுகிறது.</p><p>பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் ஊடகத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர்.</p><p>தனிநபர்களை காப்பாற்ற, குற்றவாளிகளை மறைக்கும் வகையில் அமைச்சர் பேசுவதன் நோக்கம் என்ன?</p><p>பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>பழனி நிலம் விவகாரத்தில் குற்றவாளியை மறைக்க தவெக அரசு துணை போகிறது.</p><p>பழனியில் மொட்டை போடுவது வழக்கம்; ஆனால் பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும்!- அன்புமணி எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-a-resto-bar-plan-is-not-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-a-resto-bar-plan-is-not-needed#comments</comments><guid isPermaLink="false">323364f9-0979-4712-8c95-ddc75583610b</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:54:39 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:54:39.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,ரெஸ்டோ பார் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e6d3x9s3/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e6d3x9s3/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொபார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்</p><h2><strong>பிற்போக்குத்தனமான செயல்</strong></h2><p>ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள்HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும்,  அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.</p><h2><strong>அரசு செய்யக் கூடாது</strong></h2><p>ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை;  மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும் தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத் தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு  அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும்.</p><p>மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவது தான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது.</p><p>அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோபார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோபார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும்.</p><p>அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும்  காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவது தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை  அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள்  ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது. அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200&amp;க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன.</p><p>ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.</p><p>ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தந்தை  பெரியார், பெருந்தலைவர் காமராசர், தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர் மதுவை கடுமையாக எதிர்த்தார்கள். தந்தை பெரியார் கள்ளுக்கடைகள் தேவையில்லை என்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்; காமராசர் அவரது ஆட்சியில் மதுவிலக்கை தீவிரமாக கடைபிடித்தார். அவர்களின் வழியில் வந்ததாக பெருமிதப்பட்டுக் கொள்ளும் தவெக அரசு ரெஸ்டோபார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.</p><p>ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அதன் காரணமாக மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் &amp; ஒழுங்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்.  முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியது தான். திமுக அரசு செய்த அதே தவறை த.வெ.க. அரசும் செய்யக் கூடாது.</p><p>சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொபார்களை அமைப்பதற்கு உரிமம்  வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.</p> ]]></content:encoded></item><item><title>சமாதானபுரத்தில் ரூ.15 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை: எம்.பி. விஜய் வசந்த் திறந்து வைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vasanth-mp-opening-new-ration-shop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vasanth-mp-opening-new-ration-shop#comments</comments><guid isPermaLink="false">6879b127-71b6-446f-90e3-c4ae99dea8eb</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:37:44 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:37:44.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,விஜய் வசந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0pn1s8ts/vijayvasanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0pn1s8ts/vijayvasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதிய நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2025 - 2026 ஆம் நிதியாண்டில் ரூ.15 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த நவீன கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.</p><p>பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த புதிய நியாயவிலைக் கடையை, இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்-வசந்த்">விஜய் வசந்த்</a> ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, திட்டத்தின் விவரங்கள் அடங்கிய கல்வெட்டினையும் அவர் திறந்து வைத்து, பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்கினார்.</p><h2><strong>முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு</strong></h2><p>இந்தத் திறப்பு விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.</p><p>கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர், பொ.அன்பரசி ராமராஜன் M.A., வட்டார தலைவர் டேனியல், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், ஜா.பிரபா, 15 வது வார்டு உறுப்பினர் உட்பட அகஸ்தீஸ்வரம் தமிழக வெற்றி கழக முக்கிய நிர்வாகிகளும், பொதுமக்கள் மற்றும் R.பாண்டியராஜ் உதவி செயற்பொறியாளர், து.பூதப்பாண்டி அகஸ்தீஸ்வரம் முதல்நிலை பேரூராட்சி செயல் அலுவலர், ராஜாரமேஷ்  இளநிலை பொறியாளர் கலந்து கொண்டனர்.</p><p>புதிய நியாயவிலைக் கடை திறக்கப்பட்டதன் மூலம், சமாதானபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இனி நீண்ட தூரம் செல்லாமல் தங்கள் பகுதிகளிலேயே தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த டாஸ்மாக் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">14763f1b-b7ed-431b-a3f3-509159b8a35d</guid><pubDate>Fri, 17 Jul 2026 06:00:31 +0000</pubDate><atom:updated>2026-07-17T06:00:31.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/g1zfc3jn/Liquor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் நிர்வாகம் மேலும் 54 நிறுவன மதுபானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது மதுப்பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</aside><h2><strong>ஏக்கம்</strong></h2><p>தமிழகத்தில் இயங்கி வரும் <a href="https://www.maalaimalar.com/topic/டாஸ்மாக்">டாஸ்மாக்</a> கடைகளில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விஸ்கி, பிராந்தி, ரம், ஒட்கா, பீர் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் மதுபானங்களே மதுப்பிரியர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன. மீதம் உள்ள நிறுவன மதுபான வகைகள் போதுமான வரவேற்பை பெறவில்லை.</p><p>பண்டிகை காலங்கள் உள்ளிட்ட தேவை அதிகமாக உள்ள நேரத்தில் மட்டும் அவை விற்பனையாகின்றன. இதுபோல புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விற்பனையாகும் பிரபல நிறுவனங்களின் மதுபான வகைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லையே என்ற ஏக்கம் மதுப்பிரியர்களிடம் இருந்து வருகிறது.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இந்த சூழலில், மதுப்பிரியர்களின் தாகத்தை தணிக்க மேலும் 54 நிறுவனங்களின் பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட மதுபான வகைகளை டாஸ்மாக் பல்வேறு கட்டங்களாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மதுபானங்கள் விரைவில் மதுக்கடைகளுக்கு வந்துவிடும். தேர்வு செய்து மதுபானங்களை வாங்க முடியும் என்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.</p><p>இதுகுறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "வாடிக்கையாளர்களின் விருப்பம் கடந்த சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்திருக்கிறது. பிரீமியம் மற்றும் வரவேற்பு அதிகம் உள்ள பிராண்டு மதுபானங்களை கேட்கிறார்கள். அவர்களின் தேவையை அறிந்து, நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தி புது மதுபான வகைகளை அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளோம் " என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement#comments</comments><guid isPermaLink="false">b35ae71b-e7cf-4f71-b228-cc506d367c81</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:55:34 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:55:34.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Municipality,tenders,நகராட்சி,டெண்டர்கள் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/nsgs8mqx/tngovernment.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால், ஒட்டுமொத்தமாக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">முதலமைச்சர் விஜயின்</a> வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர்களை சமர்பிக்க குறுகிய நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்கள், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்கள், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்கள், மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>டெண்டர் கோரி டெண்டர் சமர்ப்பிப்பதற்கு ஒன்று முதல் 4 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>நிர்வாக காரணங்களுக்காக 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நகராட்சி நிர்வாகத்துறையால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு பணி, வாரச்சந்தை கடைகள், புதிய போர்வெல் அமைக்கும் பணி தொடர்புடைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks#comments</comments><guid isPermaLink="false">ad4833b4-83f0-4337-9719-fb0f28b97742</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:47:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:47:11.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,parliament,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/mq52kz1g/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>"நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது. அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது; மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக்கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக்கூடாது! </p><p>அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?</p><p>​போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது!</p><h2>​பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்:</h2><p>- நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்!</p><p>- நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த 'புதிய இந்தியா'வின் லட்சணமா?</p><p>- மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்!</p><p>​இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. </p><p>மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required#comments</comments><guid isPermaLink="false">5648f024-8af0-453d-8706-59c5b84f42d6</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:26:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:26:55.398Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,Anbumani ramadoss</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/me8p63bd/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>கொள்முதல் பணி முடக்கம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது.</p><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்  உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில்  தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.</p><h2><strong>ஏமாற்றம்</strong></h2><p>இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும்  நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும்,  கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை  திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும்  வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.</p> <h2><strong>கொள்முதல் செய்யமுடியாத நிலை</strong> </h2><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.</p><p>ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.</p><h2><strong>உறுதி செய்ய வேண்டும்</strong></h2><p>கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில்  கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும்,   கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.</p><p>எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs#comments</comments><guid isPermaLink="false">febd8fdd-0ca4-404a-92b2-2e482f9bdd2b</guid><pubDate>Fri, 17 Jul 2026 05:07:57 +0000</pubDate><atom:updated>2026-07-17T05:07:57.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,ECR,ஈசிஆர்,திருவான்மியூர்-உத்தண்டி,உயர்மட்ட சாலை,Thiruvanmiyur- uthandi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ECR Road]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/0oxlfwgv/ECR-Road.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஈசிஆர்-ல் திட்டமிடப்பட்ட 13.3 கி.மீ நீளமுடைய 4 வழிச்சாலை உயர்மட்ட பாதை திட்டச் செலவை குறைக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>திருவான்மியூர்-உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டச் செலவில் இருந்து 600 கோடி ரூபாய் குறைக்க தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) தொழில்நுட்ப குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>ஈசிஆர் உயர்மட்ட சாலைக்கு ரூ.2,100 கோடியாக இருந்த திட்ட மதிப்பை ரூ.1500 கோடியாக குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.</p><p>தூண் அமைப்பு, அடித்தளம், சாலை அகலம், கட்டுமான பொருள் போன்றவை தேவைக்கு மீறி உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தேவைக்கு அதிகமாக உள்ள விவரக்குறிப்புகளை மாற்றி அமைத்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை செலவு குறைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய மாற்றங்களை ஏற்க மறுத்தால் திட்டத்திலிருந்து ஒப்பந்ததாரர் விலகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day#comments</comments><guid isPermaLink="false">3bc451da-ca1b-4955-8dcf-65319100f906</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:51:13 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:51:13.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-06/gav3hyx1/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள் என்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> தெரிவித்துள்ளார். </p><h2><strong>வீரவணக்கங்கள்</strong></h2><p>தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.</p><h2><strong>தன்னலமற்ற தியாகம்</strong></h2><p>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், நமது மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத் தொடர் உண்ணாவிரதமிருந்து இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனார், ‘ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை சுதந்திரப் போராட்டத்திற்கு அளித்து, இந்திய விடுதலைக்காக சர்வதேச ஆதரவைத் திரட்டிய, வீரத்தியாகி செண்பகராமன் ஆகியோரின் அயராத உழைப்பும் தன்னலமற்ற தியாகமும் என்றென்றும் போற்றத்தக்கது.</p><p>இத்தகைய தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோருக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டு எனது வீரவணக்கங்கள்.<br><br>ஆங்கிலேயரின் அதிகாரச் செருக்கை வேரறுக்கும் வகையில், சென்னை புனித…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2077973465156702497?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:48:17.487Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani">அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children">குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns">சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket">பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/casper-ruud-enter-qf-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்</a></p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026#comments</comments><guid isPermaLink="false">6c0cc3c8-73f7-48ae-8b2f-9b1940e87443</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:17:53 +0000</pubDate><atom:updated>2026-07-17T04:17:53.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/jledb4zm/gold05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு  ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை சரிவு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <figure><img alt="Silver" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/fanjnwfj/silver.jpg" /></figure> <h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><p>12-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>12-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore#comments</comments><guid isPermaLink="false">42de31d8-3243-4dad-bb31-0c8d132d0c38</guid><pubDate>Fri, 17 Jul 2026 03:06:11 +0000</pubDate><atom:updated>2026-07-17T03:06:11.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Express trains,தெற்கு ரெயில்வே,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/duyh0fsf/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வேயில்</a> மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் - சென்னை மற்றும் மங்களூரு - சென்னை இடையிலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புறப்படும் மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நேர மாற்றம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. மாற்றப்பட்ட புதிய கால அட்டவணையின் விவரங்கள் பின்வருமாறு:</p><h2><strong>மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் வருகை நேரம் காட்பாடி மற்றும் அரக்கோணம் நிலையங்களில் மாற்றப்பட்டுள்ளது.</p><p><strong>காட்பாடி ரெயில் நிலையம்:</strong> காலை 4.08 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 3.53 மணிக்கு முன்னதாகவே வந்தடையும்.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> காலை 4.53 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 4.43 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு மெயில் எக்ஸ்பிரஸ்</strong></h2><p>மங்களூருவில் இருந்து சென்னை வரும் இந்த ரெயிலின் நேரமும் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் நிலையங்களில் சில நிமிடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.</p><p><strong>அரக்கோணம் ரெயில் நிலையம்:</strong> அதிகாலை 4.40 மணிக்கு வருவதற்குப் பதிலாக, இரண்டு நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 4.38 மணிக்கு வந்தடையும்.</p><p><strong>திருவள்ளூர் ரெயில் நிலையம்:</strong> காலை 5.05 மணிக்கு வருவதற்குப் பதிலாக, காலை 5.03 மணிக்கு வந்தடையும்.</p><h2><strong>பயணிகள் கவனத்திற்கு</strong></h2><p>அடுத்த மாதம் 20-ஆம் தேதி முதல் இந்த ரெயில்களில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண நேரத்தை இந்த புதிய கால அட்டவணையின்படி திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (18.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/power-cut-areas-in-chennai-tomorrow-18-07-2026#comments</comments><guid isPermaLink="false">1d4c01cb-161d-44ca-868e-fa73b10b2c3d</guid><pubDate>Fri, 17 Jul 2026 02:51:25 +0000</pubDate><atom:updated>2026-07-17T02:51:25.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/3pw84p21/powercut1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>தில்லைகங்காநகர்</strong></h2><p>நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலட்சுமிநகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ். காலனி வேளச்சேரி, இ.பி. காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.</p><h2><strong>பஞ்செட்டி</strong></h2><p>அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோவில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, குமரன் நகர், டி.என்.எச்.பி., அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒ.எம்.ஆர்., நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜே.பி.ஆர்., செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.தெரு.</p><h2><strong>நங்கநல்லூர்</strong></h2><p>ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு.</p><h2><strong>பொன்னேரி</strong></h2><p>பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே. நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>பழைய அலமாதி, அலமாதி ஏ காலனி, வெண்மணி நகர், பால் பண்னை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.</p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>மேடவாக்கம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர் சாலை, ஈச்சாங்காடு தொழிற்பேட்டை, பல்லாவரம் ரேடியல் சாலை.</p><h2><strong>ஒட்டியம்பாக்கம்</strong></h2><p>வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் முழுவதும், நேதாஜி நகர், காரணை பிரதான சாலை, ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, ஜோன்ஸ், கிரஷர் சாலை.</p><h2><strong>போரூர்</strong></h2><p>பனிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 4-வது பிரதான சாலை, 2-வது மற்றும் 3-வது கிரசென்ட் பார்க் சாலை, 3-வது பிரதான சாலை, ராமச்சந்திர ஆதித்தனார் சாலை.</p><h2><strong>பூந்தமல்லி</strong></h2><p>டிரன்க் சாலை, ஆஞ்சநேயர் கோவில் தெரு, வைதீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சோழம்பேடு சாலை, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், அர்ஜுன நகர், செந்தில் நகர், சீனிவாச நகர், பிருந்தாவனம் அவென்யூ.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலை.</p><h2><strong>ஈஞ்சம்பாக்கம்</strong></h2><p>பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, வி.ஜி.பி. லேஅவுட், ஷாலிமார் கார்டன், விமலா கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கவுரியம்மன் கோவில் தெரு, ஜெகஜீவன்ராம் அவென்யூ, சோழமண்டல் தேவி நகர், சேஷாத்ரி அவென்யூ, பெத்தல் நகர் 1-வது தெரு, பொன்னுரங்கன் தெரு.</p><h2><strong>நீலாங்கரை</strong></h2><p>கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பே வாட்ச் பார்ம், டீச்சர்ஸ் காலனி, வொர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா தெரு, சங்கர் தெரு, பூம்புகார் தெரு, ஜோனி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஆர்.கே.வி. அவென்யூ, கட்டபொம்மன் நகர், பி.வி. வைத்தியலிங்கம் தெரு.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பெரியார் நகர், அபிராமி நகர், வி.ஜி.என். அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி. நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி பைபாஸ், ரேடியன் மற்றும் ஷோபா அபார்ட்மெண்ட்.</p><h2><strong>காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை</strong></h2><h2><strong>தியாகராயர்நகர்</strong></h2><p>ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி. போர்ஷோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பி.ஆர்.ஓ. குவார்ட்டர்ஸ், ஆர்.கே.மடம், ஆர்.கே.நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கே.வி.பி. கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி. ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டிகிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகபுரம், சாந்தோம் நெடுஞ்சாலை, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-registration-department-sets-up-inquiry-committee#comments</comments><guid isPermaLink="false">3a8af81a-4b60-42a2-95c0-7a7a0551504d</guid><pubDate>Thu, 16 Jul 2026 15:25:38 +0000</pubDate><atom:updated>2026-07-16T15:25:38.125Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,inquiry committee,Dhandayuthapani Swami Mutt,தண்டாயுதபாணி கோயில்,பழனி கோயில்,விசாரணைக்குழு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் நில மோசடி: பத்திரப்பதிவுத் துறை சார்பில் விசாரணைக்குழு அமைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி முருகன் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், முறைகேடுகளை முழுமையாக ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட புதிய விசாரணைக் குழு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் குழுவில் கூடுதல் பதிவுத் தலைவர், உதவி பதிவுத் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி மலையடிவாரத்தில் உள்ள ரூ. 100 கோடி மதிப்புள்ள  தண்டபாணி சுவாமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்டு சிலர் வெறும் ரூ. 2 கோடிக்கு இரு தனிநபர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.</p><p>பின்னர் இந்த ஊழல் கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த முறைகேடான நிலப் பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்து  உத்தரவிட்டது.</p><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் பொறுப்பில் இருந்து இந்த பதிவை மேற்கொண்ட கொடைக்கானல் சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><p>இவர் உட்பட 4 பேர் மீது  கூட்டுச்சதி, ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபியும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த விசாரணைக்குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/adi-dravidar-debate-thiruma-asserts-term-is-a-generic-anti-caste-identity-not-a-caste-name#comments</comments><guid isPermaLink="false">71d02eb9-b241-45e6-9f7a-75b038670059</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:53:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:53:31.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,vck,tvk,AdidravidarWelfare,TrichyPressMeet</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சமூக நீதித்துறை என்ற பெயர் மாற்றத்தை அரசு திரும்பப் பெறவேண்டும்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/t7jjkann/Untitled-design-2026-07-16T195256.001.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, தமிழ்நாட்டின் ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’யின் பெயரை ‘சமூக நீதித் துறை’ என மாற்றி அரசாணை வெளியிட்டது.</p><p>இந்த பெயர் மாற்றம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். </p><p>இன்று திருச்சியில் நடைபெற்ற விசிக மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், </p><h2><strong>பெயர் மாற்றம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி!</strong></h2><p>“தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயரைச் சமூக நீதித்துறை என்று மாற்றிவிட்டார்கள். இந்த நடவடிக்கை எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.</p><h2><strong>'ஆதிதிராவிடர்' சாதிப் பெயர் அல்ல</strong></h2><p>ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதிப் பெயர் கிடையாது. அது சாதி ஒழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுப் பெயர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பெருமைமிகு பெயர். நாங்கள் அந்தப் பெயரை மட்டுமே பயன்படுத்தியிருந்தால், இந்தச் சாதிப் பெயர்களே காலப்போக்கில் மறந்திருக்கும். </p><p>ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று அந்தப் பெயரைச் சுருக்கி, ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பெயர் போல மாற்றிவிட்டார்கள். நாங்கள் பொருட்படுத்தவில்லை. சாதி பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்களே மாற்றிவிட்டார்கள். 'சமூக நீதி துறை' என்ற பெயர் எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது’ என்று கூறினார்.</p><h2><strong>வன்னி அரசுவின் கோரிக்கை என்ன? – திருமா விளக்கம்</strong></h2><p>அமைச்சர் வன்னி அரசுவின் கோரிக்கையால்தான் பெயர் மாற்றப்பட்டது என்று பரவி வரும் வதந்திகளுக்குத் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.</p><p>“அரசு தரப்பிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை முற்றிலும் வேறானது. ‘நாங்கள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் ஆதிதிராவிடர் நலத்துறையைத்தான் தர வேண்டுமா? ஏன் வேறொரு பொதுத் துறையைத் தரக்கூடாது?’ என்று மட்டும்தான் அவர் கேள்வி எழுப்பினார். </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தலித் கட்சி மட்டுமல்ல, அது அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடும் இயக்கம் என்பதை உணர்த்தவே அவர் பொதுவான வேறொரு துறையைக் கேட்டார். ஆனால், வன்னி அரசு சொல்லித்தான் துறையின் பெயர் மாற்றப்பட்டதாக ஒரு தவறான கருத்து பரப்பப்படுகிறது” என விளக்கமளித்தார்.</p><h2><strong>இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை..</strong></h2><p>7 சமூகம் ஒன்றாக சேர்ந்து அருந்ததியர் என்று வாங்கினார்கள், தேவேந்திர குல வேளாளர்கள் அவர்களும் தங்களது சாதி பெயரை மாற்றி அரசாணையை வாங்கிகொண்டார்கள். மற்ற சாதிகள் அனைத்தும் என்னவாக இருந்தாலும் எஸ்சி பட்டியலில் சிலருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை.</p><h2><strong>விசிக-வின் அதிகாரப்பூர்வ கோரிக்கை மற்றும் நிலைப்பாடு</strong></h2><p>இறுதியாக விசிக-வின் இறுதி முடிவை திட்டவட்டமாக அறிவித்த திருமாவளவன், “அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ அல்லது வன்னி அரசு சொல்லி மாற்றப்பட்டது அல்ல". விசிக-வின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், தமிழ்நாடு அரசு இந்தத் துறையின் பெயரை மீண்டும் பழையபடி ‘ஆதிதிராவிடர் நலத்துறை’ என்றே மாற்ற வேண்டும். இதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">c2bfb142-c5ae-47ff-a213-897762cf2968</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:08:21 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:08:21.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக அரசு,Childline,Tamil Nadugovernment,சைல்டுலைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ childline-udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/o33rthd3/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தவிப்பிற்குள்ளாகும் மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ‘சைல்டுலைன்’ உதவி மைய ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இது தொடர்பாக, ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இந்தியாவில் ஆபத்திலுள்ள குழந்தைகளைக் காக்கவும், அவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கவும் '1098' என்ற இலவச தொலைபேசி சேவை 'சைல்டுலைன்' என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்பட்டு வந்தது. </p><p>மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இந்த சேவை மாநில அரசுகளின் முழுப் பொறுப்பில்  கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த அவசர உதவி மையங்களை அரசே நேரடியாகக் கண்காணித்து வருகிறது.</p><p>அரசுத் துறை இந்த சேவையைத் தன் வசம் எடுத்த பிறகு, நிதி ஒதுக்கீட்டில் நிலவும் சுணக்கம் காரணமாகப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>2 மாத ஊதிய நிலுவை:</strong></h2><p>சைல்டுலைன் அமைப்பில் பணியாற்றும் களப் பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு முந்தைய மாதங்களிலும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்படாமல், 40 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>தங்களின் சொற்ப ஊதியத்திலும் பி.எஃப், மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படைப் பலன்கள் மற்றும் குழந்தைகள் மீட்புக் பணிகளுக்காகக் களத்தில் செலவிடப்படும் பயணப் படிகள் கூட வழங்கப்படுவதில்லை என ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்:</strong></h2><p>இந்த விவகாரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தைகள் நலனுக்கான அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சைல்டுலைன் பணியாளர்களின் ஊதியப் பிரச்னையைத் தீர்த்து வைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.</p><p>குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் சைல்டுலைன் பணியாளர்கள் முதல்நிலை மீட்பர்களாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பின் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்கப்படாமல் வாழ்வாதாரம் முடங்கினால், அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் பணியை விட்டு விலக நேரிடும். </p><p>இதனால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு உடனே தலையிட்டு இந்த நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-cannot-be-blamed-for-custodial-deaths-there-needs-to-be-a-change-in-police-culture-karti-chidambaram#comments</comments><guid isPermaLink="false">5c8754e5-c38c-4e6c-af27-c85a1631c38f</guid><pubDate>Thu, 16 Jul 2026 14:03:59 +0000</pubDate><atom:updated>2026-07-16T14:03:59.216Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,police,Karti Chidambaram,கார்த்தி சிதம்பரம்,Custodial deaths,லாக்கப் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லாக்கப் மரணங்களுக்கு அரசை குறைகூற முடியாது... காவல்துறை கலாச்சாரத்தில் மாற்றம் வேண்டும் - கார்த்தி சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/jp8kt4sq/New-Project-2026-07-16T193257.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், </p><p>“ஒரு அரசுக்கு அவகாசம் கொடுக்கவேண்டும். பட்ஜெட், திட்டங்களை வைத்துதான் தவெக அரசு குறித்துக் கூறலாம். 5 வருடம் நிலையாக தவெக அரசு நடக்கும். அவர்களுக்கு எந்தக் கட்சி எம்.எல்.ஏக்களும் தேவையில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களை நான் ஏற்கவில்லை. அது தேவையில்லாதது.</p><p>லாக்கப் மரணம் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடக்கிறது. இதில் அரசைக் குறைக்கூற முடியாது. இது காவல்துறையின் கலாச்சார சீரழிவு. காவல்துறையினர் இன்னும் காலனித்துவக் காவல் துறையாகவே செயல்படுகிறார்கள். காலனித்துவ மனநிலை காவல்துறைக்கு மாறவேண்டும்.</p><p>காவல்துறை சீர்திருத்தக் குழுவை அரசு அமைக்கவேண்டும். அனைத்து நிலை காவலர்களுக்கும் மறுபயிற்சி அளிக்கவேண்டும். ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது காவல்துறை. அதனால்தான் அவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள். </p><p>தவெக நிர்வாகிகள்மீது குற்றச்சாட்டு வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கிறது. ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் அரசு பொறுப்பேற்க முடியாது. அந்தக் குற்றத்தில் அரசு ஒரு அங்கம் வகிக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children#comments</comments><guid isPermaLink="false">f3065241-9459-4a3e-a077-aa0e72f420f0</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:42:19 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:42:19.902Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,தமிழக சுகாதாரத்துறை,பாராசிட்டமால்,உடல்நலம்,Paracetamol Syrup,TnHealth Department</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paracetamol for Children]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/fchj2yvo/PARACETOMAL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்துகளில் அதிகளவில் ஆல்கஹால் கலக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிரடி விளக்கம் அளித்துள்ளது.</p><p>மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பரப்பப்படும் தவறான செய்திகளால் மக்களிடையே தேவையற்ற அச்சம் உருவாவதைத் தடுக்க இந்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2><strong>சரியான விகிதத்திலேயே ஆல்கஹால் பயன்பாடு:</strong></h2><p>குழந்தைகளுக்கான திரவ வடிவ மருந்துகளில் சில குறிப்பிட்ட மூலப்பொருட்களைக் கரைப்பதற்காகவும், மருந்து கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்காகவும் ஆல்கஹால் மிகக் குறைந்த அளவில், பாதுகாப்பான விகிதத்தில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.</p><h2><strong>60 மி.லி பாட்டிலில் எவ்வளவு உள்ளது?</strong></h2><p>பொதுமக்கள் அச்சப்படும் அளவிற்கு இதில் ஆல்கஹால் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய சுகாதாரத்துறை, 60 மி.லி கொள்ளளவு கொண்ட ஒரு பாராசிட்டமால் மருந்து பாட்டிலில் வெறும் 10% மட்டுமே, அதாவது 6 மி.லி அளவுக்கே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது என்று புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது. இந்த அளவு சர்வதேச மருத்துவ விதிமுறைகளின்படி முற்றிலும் பாதுகாப்பானது.</p><h2><strong>95% ஆல்கஹால் என்பதன் நிஜமான அர்த்தம் என்ன?</strong></h2><p>மருந்து பாட்டில்களின் லேபிள்களில் குறிப்பிடப்படும் "95% ஆல்கஹால்" என்ற வார்த்தையை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். அது மருந்தில் 95% ஆல்கஹால் கலக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் அல்ல. மாறாக, அந்த மருந்து தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆல்கஹாலின் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் மருத்துவக் குறியீடே அதுவாகும்.</p><p>"மருத்துவக் குறியீடுகளையும், தொழில்நுட்ப வார்த்தைகளையும் தவறாகப் புரிந்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்குக் காய்ச்சல் அல்லது உடல்நலக்குறைவு ஏற்படும் போது, மருத்துவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்தகங்களில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். போலிச் செய்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை."</p><p>மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் கடுமையான கண்காணிப்பின் கீழேயே அனைத்துக் குழந்தை மருந்துகளும் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதால், பெற்றோர்கள் எவ்வித பயமும் இன்றி மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளைத் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-will-raise-their-voices-against-the-mekedatu-dam-mk-stalin-assures#comments</comments><guid isPermaLink="false">dcdf47f8-2cdd-4451-be5a-7cbd251ea7de</guid><pubDate>Thu, 16 Jul 2026 13:34:01 +0000</pubDate><atom:updated>2026-07-16T13:34:01.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக எம்பிக்கள்,DMK MPs,mekedatu dam,மேகதாது அணை,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள் - மு.க.ஸ்டாலின் உறுதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/k1qwwzi2/New-Project-2026-07-16T190311.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் இன்று அக்கட்சியின் எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் ஆன்லைன் வாயிலாக நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மேகதாது அணை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் மீண்டும் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படும் மறுவரையறை மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. </p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், </p><p>“மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.</p><p>ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.</p><p>தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவார்கள்!” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani#comments</comments><guid isPermaLink="false">32fcf54d-2c01-4339-98fa-79d4385807a3</guid><pubDate>Thu, 16 Jul 2026 12:38:05 +0000</pubDate><atom:updated>2026-07-16T12:38:05.495Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமா,PMK,anbumani,Ramadoss,அருள்,Arul,அன்புமணி ராமாதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s6a0hrvm/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ arul-anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/s6a0hrvm/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் சூரமங்கலத்தில் பாமக முன்னாள் எம்எல்ஏ இரா.அருள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட அருள் பேசியதாவது,</p><p>தான் 1989-ஆம் ஆண்டு முதல் கடந்த 2025 வரை கட்சியின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முன்னின்று நடத்தியுள்ளேன்.18 முறை சிறைவாசம், ஒரு முறை குண்டர் சட்டம் என என் வாழ்க்கையையே கட்சிக்காக அர்ப்பணித்தேன். </p><p>21 இட ஒதுக்கீடு தியாகிகளில் ஒருவரான குப்புசாமியின் குடும்பத்திற்கு எனது சொந்தச் செலவில் ரூ.18 லட்சம் மதிப்பில் வீடு கட்டி, அதை அண்ணன் அன்புமணி கைகளாலேயே திறந்து வைக்கச் செய்தேன்".</p><h2><strong>அன்புமணி ராமதாஸ் இப்போது மாறிவிட்டார்:</strong></h2><p>அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்ப மற்றும் அரசியல் மோதல்களின் போது தான் அன்புமணியின் பக்கமே உறுதியாக நின்றேன். "அன்று இருந்த அன்புமணி வேறு, இன்று இருக்கும் அன்புமணி வேறு. </p><p>ராமதாஸ் ஐயாவுடன் நான் இருந்த காரணத்திற்காக என்னை 'துரோகி', 'சாக்கடை' என்று அன்புமணி விமர்சிக்கிறார்" என அவர் ஆதங்கப்பட்டார். மேலும், தங்களை போன்ற உண்மையான உழைப்பாளிகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, தந்தை-மகன் இருவரும் தற்போது மீண்டும் இணைந்து நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2><strong>பாமக-வின் வாக்கு வங்கி வீழ்ச்சி:</strong></h2><p>கட்சியின் தற்போதைய நிலைக்கு அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரின் தவறான முடிவுகளே காரணம் என்று அருள் சாடினார். "முன்பு 5.86% ஆக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கி, கடந்த ஓராண்டு காலத்தில் இவர்களது செயல்பாடுகளால் வெறும் 2.18% ஆகக் குறைந்துள்ளது" என புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.</p><h2><strong>'அன்புமணியை இனி தலைவராக ஏற்க முடியாது'</strong></h2><p>எனக்கும் அண்ணன் அன்புமணிக்கும் என்ன பிரச்சனை?  எதுவுமே இல்லையே. ஒரே பிரச்சனை உங்களோடு இருந்தது ஒன்றுதான் பிரச்சனை.  "இனிமேலும் அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. வன்னிய சமுதாயத்தை தங்களது சொந்த நலனுக்காகச் சுரண்டி வாழும் அந்தக் குடும்பத்திற்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை" என ஆவேசமாக பேசினார்.</p><h2><strong>இரண்டாக உடைந்த பாமக:</strong></h2><p>அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் எம்பி சதாசிவம் பேசுகையில், "இந்தத் தேதியில் பாமாக்கா இரண்டாக உடைந்தது, ஒரிஜினல் பாமாக்கா இங்கேதான் இருக்கிறது" என்றார்.</p><p>புதிய கட்சி தொடங்குவதா அல்லது வேறொரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கணிப்புச் சீட்டுகளை ஆய்வு செய்து, ஆடி மாதம் முடிந்த பிறகு (ஆவணி மாதத்தில்) தங்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அருள் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-you-blocking-central-government-schools-supreme-court-questions-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">fca7771a-ccd1-4f49-b8a1-37c37ce561f3</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:26:39.721Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,navodaya schools,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மத்திய அரசுப் பள்ளிகளை ஏன் தடுக்கிறீர்கள்? - தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/cwmj6e4z/New-Project-2026-07-16T165618.908.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை” நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜவகர் நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ஐ மீறாது என்றுக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்குமாறும் கடந்த 2017 செப்டம்பர் 11ம் தேதி உத்தரவிட்டது.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைதொடர்ந்து, அந்த வழக்கு கடந்த 2017 டிசம்பர் 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிறுவ எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>நவோதயா பள்ளிகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழி என்ற மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.</p><p>இங்கு ஏற்கனவே 38 அதிநவீன மாதிரிப் பள்ளிகள், உறைவிட வசதியுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. 2024-2025 கல்வியாண்டில் மட்டும் இப்பள்ளிகளில் படித்த 1340 மாணவர்கள் அகில இந்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். </p><p>நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே தமிழ்நாடு கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. ஜவகர் நவோதயா போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 3,548.22 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. </p><p>ஆனால் உச்ச நீதிமன்றம், நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவது தொடர்பாக இடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.  இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா, ஜவகர் நவோதயா பள்ளி விவகாரம் தொடர்பாக  அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், அனைத்து மாநிலங்களிலும் ஜவகர் நவோதயா பள்ளிகள் உள்ளன, ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? </p><p>மத்திய அரசு பள்ளிகளை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? தற்போது தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது எனவே அவர்களின் நிலைப்பாடு என்ன ? உங்களிடம் பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை தானே கண்டறிய கூறுகிறோம், உடனடியாக நவோதயா பள்ளிகளை நிறுவுங்கள் என்றா கூறுகிறோம் ? எனக் தமிழக அரசு தரப்புக்கு கேள்விகளை எழுப்பினர்.</p><p>அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழக அரசு தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது, எனவே இது தொடர்பாக பதிலை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.</p><p>அரசின் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விசயத்தில் நிலைப்பாட்டை தெரிவிக்க 12 வார கால அவகாசம் வழங்க முடியாது வேண்டுமெனில் 2 வார கால அவகாசம் வழங்குவதாக கூறினர். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு வார காலம் என்பது மிகவும் குறுகியது, உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதற்கு காலம் பிடிக்கும், எனவே குறைந்தபட்சம் மூன்று வார காலம் அவகாசம் அது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து வாதிட்ட எதிர்மனுதாரரான குமரி மகாசாபா தரப்பு வழக்கறிஞர் பிரியதர்ஷினி, ஏற்கனவே தமிழ்நாட்டில் 1500 சி.பி.எஸ்.இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகிறது, இந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இந்தியை காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறார்கள். இது தமிழ்நாடு மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய தரமான கல்வியை தடுக்கும் செயலாகும் என வாதிட்டார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர் .மகாதேவன், தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பையே எதிர்க்கிறார்கள் எனக் கூறினார்.</p><p>இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி. நாகரத்னா, மூன்று மொழிக் கொள்கை என்பது இந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என கூறியபோது, குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மும்மொழி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார். </p><p>அதற்கு பதிலளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா, மும்மொழி கொள்கை என்பது இருக்கலாம் , ஆனால் அது 6ம் வகுப்பு முதலே தொடங்கப்பட வேண்டும். அதேவேளையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையை கட்டாயமாக்குவது மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.</p><p>ஒன்பதாம் வகுப்பில் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஏனெனில் அந்த மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள் என தனது கருத்தை ஆழமாக தெரிவித்தார்.</p><p>இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு இடங்களை கண்டறிவது தொடர்பாக மூன்று வார காலத்திற்குள்ளாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாகப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு ஆணையிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாசகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/awareness-slogan-on-aavin-milk-packets#comments</comments><guid isPermaLink="false">61f97418-5da0-47e6-a090-3960d3bf4ff4</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:19:31 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:19:31.804Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,aavin milk,ஆவின் பால் பாக்கெட்,Tamilnadu goverment,Self-Enumeration,சுய கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aavin milk pockets]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/vl3u5dcq/aavin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசின் பொது விநியோகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு சார்ந்த திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடைவதற்கும், துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும் "சுய கணக்கெடுப்பு" முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இம்முறை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஆவின் நிறுவனம் ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.</p><h2><strong>விழிப்புணர்வுப் பின்னணி:</strong></h2><p>பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக, தங்களின் மொபைல் எண்களைக் கொண்டு தாங்களாகவே பதிவு செய்யும் "சுய கணக்கெடுப்பு" நடைமுறை 'ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை' நடைபெறவுள்ளது.</p><p>இந்தத் தகவலை மாநிலத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய மற்றும் பயனுள்ள வழியாக ஆவின் பால் பாக்கெட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தினசரி லட்சக்கணக்கான வீடுகளுக்குச் செல்லும் ஆவின் பால் பாக்கெட்டுகளின் மீது, இந்த சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>முக்கிய விவரங்கள்:</strong></h2><p>•வரும் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை மட்டுமே இந்த இணையவழிப் பதிவு வசதி திறந்திருக்கும்.</p><p>•பதிவை மேற்கொள்ள குடும்பத் தலைவரின் அல்லது ஒரு தகுதியுடைய உறுப்பினரின் மொபைல் எண் அவசியமாகும்.</p><p>•குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று மொபைல் எண் மூலம் உள்நுழைந்து (Login), வீடுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த விவரங்களை எளிமையாகப் பதிவு செய்ய முடியும்.</p><h2><strong>ஆவின் நிறுவனத்தின் முன்முயற்சிக்கு வரவேற்பு:</strong></h2><p>அரசுத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கணக்கெடுப்புகள் குறித்த தகவல்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்கள் தாண்டி, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பால் பாக்கெட்டுகளின் மூலம் கொண்டு செல்வது மிகச் சிறந்த உத்தியாகப் பார்க்கப்படுகிறது. </p><p>காலையில் பால் வாங்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்த வாசகத்தைப் படிப்பதன் மூலம், விழிப்புணர்வு அடைந்து விடுபடாமல் தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible#comments</comments><guid isPermaLink="false">25c4734f-66ad-4a09-8e8c-e8f4c1fe1b60</guid><pubDate>Thu, 16 Jul 2026 11:07:50 +0000</pubDate><atom:updated>2026-07-16T11:07:50.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>admk alliance,அதிமுக கூட்டணி,cm vijay,முதல்வர் விஜய்,தவெக அரசு,TVK Govt,முன்னாள் அமைச்சர் ரகுபதி,former minister ragupathy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ragupathy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/qfs4zlcu/ragupathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழக மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>எங்கு சென்றாலும் தவெகவினர் கஞ்சா விற்பனை செய்கிறார்கள். திருமயம் தொகுதியில் தவெகவில் இருக்கக்கூடிய பலர் மணல் கடத்துகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர்.</p><p>லஞ்சம் வாங்காத விஜய் சார், சிறுவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய் சார், அந்த மேலிடம் யார்? உங்கள் ஆட்சியில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரே கொஞ்சம் கண்களை விழித்துப்பாருங்கள்.</p><p>எந்த சோதனைகளையும் தாங்கும் இயக்கம் திமுக. ஊழல் மகாசக்தி, பராசக்தியாக முதல்வர் விஜய் இருக்கிறார் என்பதற்கு கரூரும், பழநியும்தான் எடுத்துக்காட்டு.</p><p>தமிழகத்தில் நிரந்தர கூட்டணியும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது. ஆனால் நாங்கள் அதிமுக பக்கம் போகமாட்டோம். </p><p>தனித்து நின்று வெல்லக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த இயக்கமாக திமுகவை மாற்றிக் காட்டுவோம். நித்தம் நித்தம் கொலை, கொள்ளை, பாலியல் கொள்ளை நடக்கும் ஆட்சி தவெகவின் ஆட்சி.</p><p>கரூரில் முதல்வர் விஜய் பேசியது ஆணவம், அகங்காரம், இறுமாப்பின் எடுத்துக்காட்டு. அடக்கமாக முதல்வருக்கு ஏற்ற வகையில், அவரின் பேச்சு இல்லை.</p><p>மற்ற மாநிலங்கள் நம்மை பார்த்து கிண்டல் செய்கின்றனர். கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் இன்று ஒன்றும், நாளை ஒன்றும் பேசுவார்கள்; அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருமணம் முடிந்து 5 மாதங்களில் இளம்பெண் டாக்டர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-doctor-dies-by-suicide-five-months-after-marriage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-doctor-dies-by-suicide-five-months-after-marriage#comments</comments><guid isPermaLink="false">48e472e6-39a0-4129-8db3-ae88cbc1a0e6</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:27:57 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:27:57.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,Doctor suicide,டாக்டர் தற்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/alyjhs54/suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/alyjhs54/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 24). எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ள இவர் அதே மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதுகலை படித்து வருகிறார். சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்று வேட்கையுடன் பள்ளிப்படிப்பை முடித்த அவருக்கு எதிர்பார்த்தது போலவே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.</p><h2><strong>திருமணம்</strong></h2><p>தான் படிக்கும் மருத்துவத்துறையில் மிகப்பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதுகலை படிப்பை மதுரையில் தொடர்ந்து படித்து வந்தார். இதற்காக அவர் அதே கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார். வார விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்று வருவது வழக்கம். இதற்கிடையே திருமண வயதை எட்டிய மகளுக்கு அவரது பெற்றோர் மணம் முடித்து வைக்க எண்ணி மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் டாக்டரான லாவண்யா, தான் முதுகலை படிப்பையும் படித்து முடித்த பிறகே திருமணம் குறித்து பேசவேண்டும் என்று தொடர்ந்து பெற்றோரிடம் கூறிவந்தார். அனால் அவர்களே திருமணம் முடித்து வைப்பதில் உறுதியாக இருந்தனர்.</p><p>இதையடுத்து லாவண்யாவுக்கு திவாகரன் என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்தனர். கோவையில் நடந்த பிரமாண்ட திருமண விழாவில் உறவினர்கள் மற்றும் அவருடன் படித்து வரும் சக மாணவிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது அவரிடம் திருமணமே வேண்டாம் என்று கூறிவந்த நீ எப்படி சம்மதம் தெரிவித்தாய் என்று சக மாணவிகள் கேட்டுள்ளனர்.</p><h2><strong>கருத்து வேறுபாடு</strong></h2><p>அதற்கு பதில் அளிக்க முடியாமல் தவித்த லாவண்யாவுக்கு, திருமணம் செய்து கொண்டதால் தனது முதுகலை மருத்துவப்படிப்புக்கு இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மேலும் மாணவி என்ற வாழ்க்கை முறையில் இருந்து தாம்பத்தியம் என்ற முறைக்கு மாறிவிட்டதால் மருத்துவ படிப்பில் கவனம் சிதறிவிடும் என்றும் அவர் கருதினார். </p><p>இதுபற்றி முதலில் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவர்கள் தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம், தைரியமாக படி என்று தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மனக்குழப்பத்தில் இருந்த டாக்டர் லாவண்யா, தனது கணவரிடம் தன்னுடைய நிலை குறித்து பேசினார். இதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே உறவினர்கள் இல்ல நிகழ்ச்சி, விருந்து நிகழ்ச்சிகள் என்று சென்றுவந்த லாவண்யாவுக்கு படிப்பில் கவனம் சிதறியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இந்தநிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டு, 13-ந்தேதி மீண்டும் கல்லூரி விடுதிக்கு திரும்பிய லாவண்யா யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற அவர் மீண்டும் வெளியே வரவில்லை.</p><p>இதற்கிடையே நீண்ட நேரமாக லாவண்யா தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவரது தோழிகள் மற்றும் சக மாணவிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அத்துடன் உள்ளேயிருந்து எந்த பதிலோ, சத்தமோ வரவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் உடனடியாக விடுதி காவலாளிக்கு தெரிவித்தனர்.</p><h2><strong>குடும்ப பிரச்சனை</strong></h2><p>அவரது உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,  அங்கு டாக்டர் லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த தல்லாகுளம் போலீசார், லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் துயர முடிவை அறிந்து ஓடோடி வந்த அவரது பெற்றோர் உடலை பார்த்து கதறித்துடித்தனர்.</p><p>இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் டாக்டர் லாவண்யாவின் தற்கொலை முடிவுக்கு குடும்ப பிரச்சினையே காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>குறிப்பாக மருத்துவம் படிக்க திருமண வாழ்க்கை தடையாக இருக்கும் என்று கருதிய லாவண்யா இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இதுதவிர வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. விளம்பரத்தில் ‘விஸ்வகுரு’, நிர்வாகத்தில் ‘பூஜ்யகுரு’- மாணிக்கம் தாகூர் கிண்டல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-tease-to-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-tease-to-bjp#comments</comments><guid isPermaLink="false">76da4fa7-49bd-4567-a374-29dfb2952098</guid><pubDate>Thu, 16 Jul 2026 10:15:36 +0000</pubDate><atom:updated>2026-07-16T10:15:36.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலில் டிடர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் பால் மாநிலம் முழுவதும் வினியேகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>விளம்பரத்துக்கு ‘விஸ்வகுரு’ நிர்வாகத்தில் ‘பூஜ்யகுரு’. இதுதான் பா.ஜனதாவின் லட்சணம். மக்களின் ஆரோக்கியத்தை விட ஊழலே பிரதானம். நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் உணவில் கூட விஷம் கலக்கும் அளவிற்கு பா.ஜனதாவின் ஊழல் ஆட்சி மலிந்துவிட்டது. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம்?</p><p>மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை ஆகிய விசாரணை முகமைகள் இப்போது எங்கே சென்றன?</p><p>மத்திய அரசே செவி சாய். மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனே நிறுத்து. </p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">5868d2fc-868c-4a44-b78a-bf4ef73c1fab</guid><pubDate>Thu, 16 Jul 2026 08:42:04 +0000</pubDate><atom:updated>2026-07-16T08:42:04.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை,Armstrong murder,Armstrong</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/sxglivyv/Armstrong010.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. </p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கான தடை நீங்கி இருக்கிறது.</p><p>இதன் காரணமாக விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>சி.பி.ஐ. விசாரணை தீவிரமடையும் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>