<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 20:28:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T15:45:45.294Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome">கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும்.</p><p>* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</a></p><p>*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram">ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</a></p><p>* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். </p><p>* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory">வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</a></p><p>*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்</p><p>*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event">ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</a></p><p>* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/nda-meet-under-modi-20-dissident-tmc-mps-join-ncpi-and-attend-alliance-meeting">என்.டி.ஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய 20 அதிருப்தி எம்.பிக்கள் பங்கேற்பு<br></a></p><p>*கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக பிராந்திய கட்சியில் இணைந்தனர்.</p><p>*சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.</p><p>* ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu">தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-chaos-house-adjourned-amid-demand-to-debate-exam-scams-and-student-protest-assault">மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரைஒத்திவைப்பு</a><br></p><p>*உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள்.</p><p>*அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-ministers-selfie-video-blocked-meta-apologises-over-technical-glitch">பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்: தொழில்நுட்பக் கோளாறு எனக் கூறி மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம் !... </a></p><p>*தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>*இது குறித்து நேரில் ஆஜராகி விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர்களுக்கு  மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years">22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</a></p><p>* சாதாரண உணவு செரிக்கவில்லை ஆயில் மட்டுமே உணவு</p><p>* 22 ஆண்டுகளாக பழைய இன்ஜின் ஆயிலை குடிக்கும் குமார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2">தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல்</a></p><p>* இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>* மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics">காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை</a></p><p>* மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-126-for-7-wickets-in-third-day-against-pakistan-first-test">பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் திணறல்</a></p><p>* பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.</p><p>* வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/jadeja-returns-saransh-jain-earns-callup-for-sri-lanka-tests">இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஜடேஜா ரிடர்ன்ஸ்</a></p><p>* இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>* ம.பி.யைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் சரன்ஷ் ஜெயின் முதல் முறை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</a></p><p>* காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><p>* நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-free-probe-no-harsh-action-against-minors-in-neet-protest-cases">போராட்டத்தில் கைதான 18 வயதுக்கு உட்பட்டோரை விடுவிக்க வேண்டும்.. போலீஸ் அடக்குமுறை மீது விசாரணை உண்டு - உச்சநீதிமன்றம்</a></p><p>*பாஜக ஆளும் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.</p><p>*குற்றப்பின்னணி உடையவர்கள் மீதான நடவடிக்கைக்கு எந்த தடையும் இல்லை </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-j20-stealth-jets-massed-at-border-sparking-fresh-ladakh-tensions">எல்லையில் சீனா 'ஸ்டெல்த்' போர் விமானங்கள் குவிப்பு: லடாக்கில் மீண்டும் பதற்றம்!... </a></p><p>*சீனா ஆண்டிற்கு சுமார் 100 முதல் 120 J-20 விமானங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>*தற்போதைய நிலவரப்படி, சீனாவிடம் சுமார் 300 முதல் 500 வரையிலான J-20 விமானங்கள் பயன்பாட்டில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vijayan-urges-kerala-govt-to-withdraw-cases-against-neet-protest-supporters">மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெறுக: கேரள மாநில முதல்வர் சதீசனுக்கு பினராயி விஜய் கடிதம்</a></p><p>* ஒற்றுமையை தெரிவிக்கும் வகையிலும், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இணைந்தீர்கள்.</p><p>* அதேவேளையில் கேரளாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இது என்ன நியாயம்?.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/powder-lawsuit-nears-resolution-johnson-johnson-agrees-to-pay-53000-crore-in-compensation-to-settle-cancer-related-cases">புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award">இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p>* தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வருகிறார் டிராட்ஸ்கி மருது.</p><p>* 2023-ல் நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது பங்களித்திருந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-cabinet-approves-lakshmi-yojana-to-provide-monthly-rs-2500-to-women">பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்</a></p><p>* விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.</p><p>*ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/atp-singles-world-rankings-novak-djokovic-fits-in-at-fifth-spot">டென்னிஸ் தரவரிசை: இரு இடம் முன்னேறி டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த ஜோகோவிச்</a></p><p>* ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.</p><p>* ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/priyanka-gandhi-why-are-you-scared-of-youths-of-this-country-who-gave-you-right-to-suppress-students">பொதுத் தேர்வுகள் முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா: மக்களவையில் பட்டாசாக வெடித்த பிரியங்கா காந்தி</a></p><p>* நாட்டின் இளைஞர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மாணவர்களை அடக்குவதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது?</p><p>* தேர்வு முறை தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. ஆனால் ஒரு மாஃபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-cancelled-bihar-tour-realising-bjp-will-lose-bankipur-bypoll-tejashwi">பங்கிபூர் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதால் பிரதமர் பயணம் ரத்து: சாடிய தேஜஸ்வி</a></p><p>* 3 மாநில சட்டசபை தொகுதிகளுக்கு ஜூலை 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><p>* பிரதமரின் பயணம் குறித்து மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/d-gukesh-and-javokhir-sindarov-fide-world-championship-tie-geneva-nov-25-to-dec-15">உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு</a></p><p>* இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டின.</p><p>* அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த FIDE முடிவு செய்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan">மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-parts-ways-with-ryan-ten-doeschate-and-t-dilip">ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை: இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்களை தேடுகிறது பிசிசிஐ</a></p><p>* ரியான் டென் டோசேட் 2024-ம் ஆண்டு இலங்கை தொடரின்பொது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.</p><p>* பிசிசிஐ அவருடன் இரண்டு வருட ஒப்பந்தம் போட்டிருந்தது. தற்போது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swati-maliwal-attacks-kejriwal-over-alleged-paper-leak-in-punjab-calls-cjp-aaps-b-team">ஆம் ஆத்மியின் பி டீம்தான் CJP: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு</a></p><p>* பஞ்சாபில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து சி.ஜே.பி.யோ, கெஜ்ரிவாலோ பேசுவதில்லை.</p><p>* பஞ்சாப் கல்வி மந்திரி உடனே பதவி விலக வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-need-211-runs-to-win-against-west-indies-first-test">டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார்.</p><p>* பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்து வீசிய மொகமது அப்பாஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/nirupama-devi-fails-commonwealth-games-womens-63kg-weightlifting">காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதல் போட்டியில் நிருபமா தேவி ஏமாற்றம்</a></p><p>* ஸ்னட்ச் முறையில் 93 கிலோ எடையை தூக்கினார்.</p><p>* க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் மூன்று முறை முயற்சி செய்தும் தோல்வியடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issueedappadi-palaniswami-slams-central-minister-over</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issueedappadi-palaniswami-slams-central-minister-over#comments</comments><guid isPermaLink="false">5f067494-0373-4326-a396-bdbe8dc47c59</guid><pubDate>Tue, 28 Jul 2026 15:07:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T15:07:12.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,மேகதாது அணை,mekedatu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a79ufi0c/EPS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகாதாது அணை- எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/a79ufi0c/EPS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு, மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராஜ் பூசண் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ""காவிரி நீர் தொடர்பான பிரச்சனை பற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு கர்நாடகம் தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. அந்தத் தீர்ப்பில், காவிரி நீர் தீர்ப்பாயம் 2007-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு பொருத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது" என்றார்.</p><p>இந்த நிலையில், மத்திய இணை அமைச்சரின் பதிலுக்கு தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p><h2>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>காவிரி நதிநீர் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.</p><h2>காவிரி விவகாரத்தில் போற்றத்தக்க இறுதித் தீர்ப்பு</h2><p>பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எனது (எடப்பாடி பழனிசாமி) தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.</p><p>அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் அழுத்தம் காரணமாக மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது.</p><p>இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், (ப.எண்.342) ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.</p><h2>பிரதமருக்கு கடிதம்</h2><p>மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை பிரதமருக்கு கடிதங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வலியுறுத்தினேன். மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன். தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அதிமுக பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.</p><p>2018-ஆம் ஆண்டு காவிரி நதிநீர் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் மிகத் தெளிவாக "காவிரி ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.</p><h3>காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி</h3><p>காவிரி நதி தமிழகத்தின் ஜீவநதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பின்பு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இச்சூழ்நிலையில், மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுபோன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில்கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-misrepresent-the-central-government-on-the-mekedatu-issue-tamilisai-soundararajan#comments</comments><guid isPermaLink="false">75bb14ee-5af2-4798-98a5-3781701b223e</guid><pubDate>Tue, 28 Jul 2026 13:35:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T13:35:42.751Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,mekedatu dam,மேகதாது அணை,Tamilisai Soundararajan,central government,தமிழிசை சௌந்தரராஜன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/83k8azqa/New-Project-2026-07-28T190518.173.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/83k8azqa/New-Project-2026-07-28T190518.173.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை தவறாக சித்தரிக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“மத்திய அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சத்தைத்தான் தெளிவுபடுத்தினாரே தவிர, மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. </p><p>ஒரு சட்டரீதியான விளக்கத்தைத் தமிழ்நாட்டின் உரிமைகளை மறுப்பதாகத் திரித்துக் கூறக்கூடாது. எந்தவொரு திட்டமும் சட்டப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்; அத்திட்டம் குறித்துத் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது.</p><p>இப்பிரச்சினையை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, தவெக அரசும், அதன் கூட்டணிக் கட்சியான தமிழ்நாடு காங்கிரஸும், உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்திற்காக, அதாவது காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கான நியாயமான பங்கைப் பெறுவதற்காக போராட வேண்டும்.</p><p>இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 28.337 டி.எம்.சி. நீரில், தமிழ்நாடு வெறும் 3.442 டி.எம்.சி. அளவிலான நீரை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, நமது விவசாயிகளைக் காக்க, தமிழ்நாட்டிற்கான உரிய நீர் பங்கை விடுவிக்கக் கோருவதே உடனடித் தேவையாக இருக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், அதன் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதியாக நின்றது; இனியும் தொடர்ந்து உறுதியாக நிற்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>“எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-never-tolerate-our-mother-tongue-being-pushed-to-third-place-tvk#comments</comments><guid isPermaLink="false">fefb5ed2-f6dc-4254-bae7-719d5aa1afa3</guid><pubDate>Tue, 28 Jul 2026 12:55:17 +0000</pubDate><atom:updated>2026-07-28T12:55:17.250Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” - தவெக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/9ibca7jt/New-Project-2026-07-28T182456.536.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரையேக் கொண்ட திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தற்போது தவெக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.</p><p>அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.  </p><p>எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பாடலை எழுதியவரின் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-wrote-the-song-secured-third-place-in-the-university-level-tamil-thai-vazhthu-competitionwhat-is-the-tamil-nadu-governments-stance-on-this-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">de76134d-4fbb-4b4f-9bca-df538a699bcf</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:50:27 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:50:27.394Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,P. Shanmugam,பெ சண்முகம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாடலை எழுதியவர் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/iybaa5r7/New-Project-2026-07-28T171758.030.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே அமைந்த பல்கலைக்கழகத்திலேயே, அப்பாடலுக்கு முன்னுரிமை தராமல் 3-வது இடத்திற்குத் தள்ளியது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. </p><p>இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 21</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், </p><p>“மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? </p><p>தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் இதுதொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-president-mk-stalin-wishes-artist-trotsky-marudhu-iyal-award#comments</comments><guid isPermaLink="false">8ff87ffa-6d0a-4e48-948e-3d2e10d3308a</guid><pubDate>Tue, 28 Jul 2026 11:21:06 +0000</pubDate><atom:updated>2026-07-28T11:21:06.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்,trotsky marudhu,டிராட்ஸ்கி மருது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ trotsky marudhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/7orsts2r/maruthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான  ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.</p><p>நேர்த்தியான கோட்டோவியர் என்பதோடு அனிமேஷன் எனப்படும் இயங்குபடக் கலை, கணினி வரைகலை ஆகியவற்றிலும் தொடர்ந்து இயங்கி வந்த அவரது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக நமது திராவிட மாடல் அரசில் அவரை நியமித்தோம். 2023-ம் ஆண்டு நமது அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் டிராட்ஸ்கி மருது அவர்கள் பங்களித்திருந்தார். </p><p>தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஆர்வத்துடனும், அதுவரை இருந்து வந்த தவறான மனச்சித்திரங்களைக் கலைத்துப் போடும் வகையிலும் அவர் கொண்டு வந்த வாளோர் ஆடும் அமலை போன்ற பங்களிப்புகளால் தமிழர் வரலாற்றுக்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.</p><p>தமிழ் மரபை உலகின் நவீனச் சிந்தனைப் போக்குகளோடு இணைக்கின்ற பாலமாக விளங்கி வரும் ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்நாள் சாதனைகளுக்கான தக்க அங்கீகாரமாக இவ்விருது அமைவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>‘ஏசி, வாஷிங்மெஷின்’ இல்லாத வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-14000-electricity-bill-for-a-house-without-an-ac-or-washing-machine</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-14000-electricity-bill-for-a-house-without-an-ac-or-washing-machine#comments</comments><guid isPermaLink="false">b612f3a3-c537-4103-aed3-1bf74a21096d</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:46:53 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:46:53.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின் கட்டணம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/ilygfg5q/EB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசீர்வாதம் வீட்டிற்கு வந்த மின் கட்டணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/ilygfg5q/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தவறுதலாக  ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார். </aside><h2><strong>ஏ.சி., வாஷிங்மெஷின் இல்லை</strong></h2><p>அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆசீர்வாதம். அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். 2 அறைகள் கொண்ட இவரது வீட்டில் ஏ.சி., வாஷிங்மெஷின் எந்திரங்கள் இல்லை. வழக்கமாக ரூ.800 முதல் ரூ.850 வரை மின்கட்டணம் செலுத்தி வந்தார்.</p><p>இந்த நிலையில் இந்த மாதம் அவருக்கு ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மின்கட்டணம் உயர்வு குறித்து விளக்கம் கேட்பதற்காக அவர் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோதும் அங்கிருந்த ஊழியர்கள் முறையான பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. </p><h2><strong>ரூ.14,234 மின் கட்டணம்</strong></h2><p>எனவே தவறுதலாக  ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார். </p><p>இது குறித்து அவர் கூறும் போது, ஒவ்வொரு முறையும் ரூ.800 வரைக்கும் தான் மின் கட்டணம் வரும். எங்கள் வீட்டில் ஏ.சி, வாஷிங்மெஷின் போன்ற அதிக மின் பயன்பாடு உள்ள பொருட்கள் கிடையாது. எனவே குறைவான மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது திடீரென 14 ஆயிரத்து 234 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் படி செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. </p><p>இது எப்படி என்று தெரியவில்லை. மின் கட்டணம் ரீடிங் எடுக்க வருபவர்கள் 60 நாள் கழித்தும் 70 வது நாள் தான் வருகிறார்கள். அதுவும் அட்டையில் எழுதுவது கிடையாது. இதே போல் பலருக்கு மின் கட்டணம் உயர்ந்து வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>லாரி மோதியதில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மின் கம்பம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">759e8949-c2d7-4b8c-bb1b-c41cc8e031d8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:35:38 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:35:38.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>lorry accident,லாரி விபத்து,accident,மின் கம்பம்,electrical pole,விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1qnluoyp/ElectricalPole.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electrical Pole]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/1qnluoyp/ElectricalPole.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.</p><h2><strong>நெடுஞ்சாலை</strong></h2><p>இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் திருவள்ளூர் அருேக முருக்கஞ்சேரி கிராமம் சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் நோக்கி லாரி ஒன்று வந்தது.</p><h2><strong>லாரி விபத்து</strong></h2><p>திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த இரும்பு மின்கம்பத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. லாரி மோதிய வேகத்தில் அந்த மின்கம்பம் சரிந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் விழுந்தது.</p><h2><strong>பொதுமக்கள் ஓட்டம்</strong></h2><p>அந்த நேரத்தில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை சாலையிலேய போட்டு விட்டு அலறியடித்து ஓடினர். மேலும் மின்கம்பம் சரிந்து விழுந்த இடம் அருகே பஸ்நிறுத்தம் இருந்தது. அதில் பஸ்சுக்காக காத்திருந்த பொதுமக்களும் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>மின்சாரம் துண்டிப்பு</strong></h2><p>நடுரோட்டில் மின்கம்பமும், மின்கம்பிகளும் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பம் சரிந்து விழுந்தபோது சாலையில் மற்ற வாகனங்கள் எதுவும் செல்லாததாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.</p><h2><strong>மின் ஊழியர்கள்</strong></h2><p>தகவல் அறிந்ததும் கூடப்பாக்கம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ஜே.சி.பி.எந்திரத்தின் உதவியுடன் சாலையில் கிடந்த மின்கம்பத்தை அகற்றி மின்கம்பிகளை துண்டித்தனர்.</p><h2><strong>கிராமங்கள்</strong></h2><p>மின்கம்பம் சரிந்த போது அருகில் இருந்த மேலும் 2 மின்கம்பங்களும் வளைந்து சேதம் அடைந்து உள்ளன. அதனையும் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக புட்லூர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், முருக்கஞ்சேரி, திருவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>நடுரோட்டில் மின்கம்பம் சரிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணவாளநகர் போலீசார் மின்கம்பம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>மின்வாரிய அதிகாரிகள்</strong></h2><p>சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்வினியோகம் சீராக இன்று மாலை ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பம் சரிந்து விழுந்த சம்ப வத்தால் அப்பகுதி இன்று காலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பெரும் சதி வலை பின்னப்படுகிறது! அரசுக்கு எச்சரிக்கைத் தேவை!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mekedatu-dam-issue-a-big-conspiracy-web-is-being-woven-the-government-needs-a-warning#comments</comments><guid isPermaLink="false">e6711096-4b52-41cb-9a21-650a419621c8</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:32:44 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:32:44.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jm972awy/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பான எனது வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி, ‘‘காவிரி சிக்கல் தொடர்பாக 16.02.2026-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் மேற்கொள்ள  தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பிற பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று  எங்கும் கூறப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு சான்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பில்  ஏதோ ஒரு பகுதியை மட்டும் காட்டி, காவிரியில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக மத்திய அரசின் ஆதரவுடன் மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவதைத் தான் இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும். உலக அளவிலான ஒப்பந்தங்களிலும் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது.</p><p>‘‘புதிய பாசன அணை அல்லது சிறிய அணைக்கட்டுகளை கட்ட வேண்டும் என்று மைசூர் அரசு விரும்பும் போது, அதற்கு பொருத்தமான விதிகளின்படி மெட்ராஸ் மாகாண அரசிடமிருந்து முன்கூட்டியே ஒப்புதல்  பெற வேண்டும். புதிய அணை தொடர்பான அனைத்து விவரங்களும் மெட்ராஸ் மாகாண அரசுக்கு முன்கூட்டியே  அனுப்பப்பட்டு, பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பாக ஒப்புதல் பெறப்பட வேண்டும்’’ "When the Mysore Government desires to construct any "New irrigation Reservoir" or any new anicut requiring the previous consent of the Madras Government under the last preceding Rule, the full information regarding the proposed work shall be forwarded to the Madras Government and the consent of that Government shall be obtained previous to the actual commencement of work’’ என்று ஒப்பந்தங்களில் மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p><p>மாநிலங்களவையில் மத்திய அமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 16.02.2026-ஆம் நாளிட்ட தீர்ப்பின் முதல் அம்சமாக, இந்த ஒப்பந்தங்களின் கூறுகள் இப்போதும் செல்லும் என்று கூறப்பட்டிருக்கிறது.‘‘After coming into force of the 1947 Act, the doctrine of paramountcy has no room for application as the Government of India became the full sovereign authority. The two agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the agreements cover the areas of larger public interest which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct’’  (1947 ஆம் ஆண்டின் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய அரசு முழுமையான இறையாண்மை பெற்ற அதிகார அமைப்பாக மாறியதால், மேலாதிக்கக் கோட்பாடு செயல்படுவதற்கு இனி இடமில்லை. 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளின் இரு ஒப்பந்தங்களும் எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை; மேலும் அவை இந்தியாவின் இறையாண்மையின் எந்தவொரு அம்சத்தையும் பாதிக்கவுமில்லை. மாறாக, இந்த ஒப்பந்தங்கள் எந்தவொரு அரசியல் கூறுகளும் இல்லாத, பரந்த பொது நலன் சார்ந்த விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியுள்ளன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தங்கள் செயலற்றவை என்றோ அல்லது முற்றிலும் காலாவதியானவை என்றோ ஆகிவிடாது) என்று கூறப்பட்டுள்ளது. கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்பது தான் இதன் பொருள் ஆகும். இந்த உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல்.</p><p>அதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும்?</p><p>இந்த அடிப்படையில் தான் சிவசமுத்திரம் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட போது, அது திருப்பி அனுப்பப்பட்டதாக 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9&amp;ஆம் தேதி அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு முன் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த கஜேந்திர ஷெகாவத் அவர்களை, கடந்த 16.07.2021-ஆம் ஆண்டு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியது. அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று உறுதியளித்தார். இவற்றுக்கெல்லாம் மாறான நிலைப்பாட்டை இப்போது நீர்வளத்துறை அமைச்சர் சவுத்ரி மேற்கொள்ள வேண்டிய தேவை என்ன?</p><p>காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளன. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததே தவறு ஆகும். தமிழகத்திற்கு எதிரான இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை. அதன்  தொடர்ச்சியாக இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும்.</p><p>மாநிலங்களவையில் நான் எழுப்பிய இன்னொரு வினாவுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் இராஜ் பூஷன்,  கடந்த ஜூலை 16-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 25.31 டி.எம்.சி நீரில் 3.37 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை கர்நாடக அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.</p><p>கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று பிற்பகல் நிலவரப்படி  64  டி.எம்.சி தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வருகிறது. ஆனாலும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது என்றால் அங்குள்ள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு சட்டத்தை மதிக்காதவர்கள்; மனிதநேயமற்றவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போதே அரை டி.எம்.சி தண்ணீர் கூட கொடுக்காதவர்கள், மேகதாது அணையை கட்ட அனுமதித்தால் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-chief-minister-writes-to-vijay-urging-a-review-of-export-restrictions-on-construction-materials#comments</comments><guid isPermaLink="false">836a4f48-f32e-411f-9f77-4c02a86ddbed</guid><pubDate>Tue, 28 Jul 2026 10:27:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T10:27:49.312Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,Construction materials,முதலமைச்சர் விஜய்,Satheesan,கட்டுமானப் பொருட்கள்,கேரள முதலமைச்சர் சதீசன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் - விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/soqvx8iu/New-Project-2026-07-28T155126.274.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் நெடுஞ்சாலைப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளதாக சுதீசன் சுட்டிக் காட்டியுள்ளார். </p><p>தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் நன்மை பயக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் சதீசன் குறிப்பிட்டுள்ளார். </p><h2>எதற்காக இந்தக் கடிதம்? </h2><p>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு சமீபத்தில் தடை விதித்தது. தமிழ்நாடு அரசின் இந்த திடீர் தடையால், கேரளாவில் நடைபெற்று வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.</p><p>இதனைத்தொடர்ந்து இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. </p><h2>தமிழ்நாடு மக்கள் கூறுவது என்ன?</h2><p>கேரளாவில் ஏராளமான கனிமவளங்கள் இருக்கும்நிலையில், அங்கு வெட்டி எடுக்காமல், தமிழ்நாட்டின் வளங்களை கேட்பது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் பட்டம் வழங்கினார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-governor-provided-nellai-manonmaniam-sundaranar-university-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">8149677f-0f95-477e-8137-8e5c4f9a9cee</guid><pubDate>Tue, 28 Jul 2026 09:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-28T09:02:42.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Governor,பட்டமளிப்பு விழா,தமிழ்நாடு ஆளுநர்,Convocation Ceremony,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation ceremony]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/x4cngl4g/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi">பட்டமளிப்பு விழா</a> இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. </p><p>விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>நிகழ்ச்சியில் கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார்.</p><p>பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை ஆகியோர் செய்து இருந்தனர்.</p> <p>விழாவில் 37 ஆயிரத்து 877 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 12 ஆயிரத்து 932 மாணவர்களும், 24 ஆயிரத்து 945 மாணவிகளும் அடங்குவர். முன்னதாக அந்த மாணவ-மாணவிகளுடன் ஆளுநர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை ஆர்.டி.ஓ. பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p> <h2>2 பதக்கங்கள் வென்ற 2 மாணவிகள் </h2><p>இந்த ஆண்டு 2 மாணவிகள் தலா 2 பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். வாசுதேவநல்லூர் வியாசா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி லலிதா குமாரி இளநிலை பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றதற்காக தினத்தந்தி பொன்விழா பதக்கம், டாக்டர் எஸ். ராமச்சந்திரன் பதக்கம் உள்ளிட்ட 2 பதக்கங்களை பெற்றார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>அதேபோல், பல்கலைக்கழக மாணவி நந்தினி இளநிலை பட்டப்படிப்பில் 2 பல்கலைக்கழகப் பதக்கங்களை பெற்றார்.</p><p>பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony">தமிழ்த்தாய் வாழ்த்து</a> 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-condemns-singing-tamil-thai-vazhthu-third-at-convocation-ceremony#comments</comments><guid isPermaLink="false">18de5582-9e55-4796-8a5f-71d3eb88daaf</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:47:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:47:49.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi,கனிமொழி,பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Convocation Ceremony - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/sqqxp475/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக தான் பாடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் தமிழக அரசும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கண்டிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அதன் தொடர்ச்சியாக ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எஸ்.முருகன், தி.மு.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் விழாவை புறக்கணித்தனர்.</p> <h2>கனிமொழி கண்டனம்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம்  தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. </p><p>வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரம்- அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-desilting-works</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-desilting-works#comments</comments><guid isPermaLink="false">bda268e1-23fa-4cf2-9852-cb375dbd2956</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:33:23.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bussy Anand,புஸ்சி ஆனந்த்,மழை வெள்ளம்,தூர்வாரும் பணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/r94a6zm0/bussyanand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு செய்த போது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/r94a6zm0/bussyanand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி பருவமழையை எதிர்கொண்டு தமிழகம் முழுவதும் சுமார் 36 ஆயிரம் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.</aside><h2><strong>அமைச்சர் என்.ஆனந்த்</strong></h2><p>சென்னை கோயம்பேடு அருகில் உள்ள கூவம் நதி, துரைபாக்கம், ஒக்கியம் மவுடு பகுதிகளில் தூர்வாரும் பணியினை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>இதை தொடர்ந்து இன்று காலை அமைச்சர் என்.ஆனந்த் மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப் பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி, அடுத்ததாக சோழிங்கநல்லூர் வட்டம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையின் இணைப்பு  மேம்பாலம் அருகே அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம்  கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.</p><h2><strong>அடையாறு ஆறு</strong> </h2><p>சென்னை நகரின் 3 முக்கிய ஆற்றுப்படுகையில் ஒன்றாகும். அடையாறு ஆறு ஆதனூர் ஏரியில் இருந்து உருவாகி மொத்தம் 42.38கி.மீ நீளத்திற்கு பயணித்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. </p><p>சென்னை மாநகராட்சியின் எல்லைக்குள் ஓடும் இந்த ஆற்றில் ஆகாயத் தாமரைகள் மிதவைத் தாவரங்கள் மற்றும் மிதவைப் பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>நீர்வளத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொள்வதன் காரணத்தினால்  அடையாறு ஆற்றில்  விமான நிலைய ஓடுபாதை  கீழ் நீரோட்டப்பாதை  முதல் திரு.வி.க பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரத்தில் பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை பெருநகர பகுதிகளான  மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் அடையாறு ஆற்றில் மழை மற்றும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்வது ஆகும். </p><h2><strong>பக்கிங்ஹாம்</strong></h2><p>சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் அதிக அளவில் ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் பொருட்கள் மேலே உள்ள பள்ளிக்கரனை மற்றும் ஒக்கியமடுவு போன்ற பகுதிகளில் இருந்து  நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு, நீர் கடத்தும் திறனை  குறைக்கின்றது. </p><p>எனவே பருவ மழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு அமைச்சர் என்.ஆனந்த் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். </p><p>முன்னதாக மணப்பாக்கத்தில் ராணுவ அதிகாரிகள் அகாடமி அருகில் நடைபெறும் பாலப் பணியையும் அமைச்சர் ஆனந்த் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துரிதப்படுத்தினார்.</p><p>நிகழ்ச்சியில் அமைச்சர் விஜய்பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் ஈ.சி.ஆர். பி.சரவணன், எம்.ஹரிஷ், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மரு. சமீரன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆப்தாப் ரசூல், சென்னை கலெக்டர் மாலதி ஹெலன், தலைமை பொறியாளர்.எம்.ஜானகி, நீர்வளத் துறை பொறியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-letter-to-pm-modi#comments</comments><guid isPermaLink="false">db7e2cf8-dfbd-408b-a665-cc2fa024de9d</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:18:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:18:26.818Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை,pm modi,tvk,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jfxoptsc/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டுவோம் என்று கர்நாடகா மாநில அரசு தெரிவித்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. </p><h2><strong>மேகதாது அணை</strong></h2><p>ஆனால் மேகதாது அணை தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து உள்ளது. அதை விரைவில் மத்திய அரசிடம் வழங்க உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை தமிழக முதலமைச்சர் விஜய் சந்தித்து பேச உள்ளார்.</p><p>இதற்கிடையே மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்ற மேல்-சபையில் பா.ம.க எம்.பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய ஜல்சக்தி துறையின் இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி கூறும்போது, காவிரி பிரச்சனை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானத்தையும் கட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">தமிழகம்</a>, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. </p><h2><strong>அதிகாரம் உள்ளது</strong></h2><p>அதேபோல் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் 18-வது பிரிவு சரியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. அதன்படி எந்தவொரு மாநிலமும் தனது எல்லைக்குட்பட்ட காவிரி நீர் பயன்பாட்டை முறையாக அனுபவிக்க உரிமை, அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது என்றார்.</p><p>மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசு பதில் அளித்து உள்ளது.</p><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-</p><p>மேகதாது அணை தொடர்பாக மாநிலங்களவையில் ஜல்சக்தி இணை மந்திரி அளித்த பதில்  ஏமாற்றம் அளிக்கிறது. கீழ்நிலை ஆற்று மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான தற்போதைய சட்ட நிலை மற்றும் நிலைபெற்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. </p><h2><strong>மத்திய அரசு தலையிட வேண்டும்</strong></h2><p>கர்நாடகா - ஆந்திரா  இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதில் கீழ்நிலை ஆற்று மாநிலத்தின் ஒப்புதல் முற்றிலும் அவசியம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  காவேரி நதி வெறும் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அது தென்னிந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் குடிமக்களின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. </p><p>மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை நிர்வகிக்கும் அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீது நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு, தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் பாதுகாப்பது இன்றியமையாதது.</p><p>நீதி, கூட்டாட்சி நல்லிணக்கம் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகளை உண்மையுடன் செயல்படுத்துதல் ஆகிய பரந்த நலன் கருதி மத்திய அரசு தலையிட வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்- உதயநிதி சாடல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-2#comments</comments><guid isPermaLink="false">3ee397c1-aea0-4967-9690-60c6a9c9dd5a</guid><pubDate>Tue, 28 Jul 2026 08:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-28T08:02:20.537Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,கர்நாடகா,Karnataka,Udhayanidhi Stalin,mekedatu dam,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hgbq3qq9/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி</a> கூறியிருப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.</p><p>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.</p><p>இந்த பிரச்சனையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.</p><h2><strong>வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்...</strong></h2><p>கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. </p><p>இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாதுவில் அணை</a> கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.<br><br>டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற  காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2082005391068852234?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>VIDEO : 22 ஆண்டுகளாக எஞ்சின் ஆயிலை குடித்து வாழும் விசித்திர மனிதர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/man-living-on-engine-oil-for-22-years#comments</comments><guid isPermaLink="false">dcfa47f3-6f71-49a4-b5fa-dabdada0b5e2</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:52:25.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sabarimala,Hosur,ஓசூர்,OilKumar,ஆயில்குமார்,StrangeIncidents,Drinksengineoil</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Drinksengineoil ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/rb80s6b8/Drinksengineoil?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓசூரில் பொதுமக்கள் முன்னிலையில் சபரிமலை பக்தர் ஒருவர், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பழைய இன்ஜின் ஆயிலை மளமளவெனக் குடித்த விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>டீக்கடையில் நடந்த விபரீதம்</strong></h2><p>கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48). கூலித் தொழிலாளியான இவர், ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து, ஓசூர் வழியாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். </p><p>நேற்று மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் அவர் டீ குடித்தார். அதன் பின், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு பாட்டில் பழைய இன்ஜின் ஆயிலை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே வேகமாக குடித்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.</p><h2><strong>யார் இந்த "ஆயில் குமார்"?</strong></h2><p>அங்கே இருந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, "நான் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் இந்த பழைய இன்ஜின் ஆயிலைக் குடித்து வருகிறேன். இதனால் அனைவரும் என்னை 'ஆயில் குமார்' என்றே அழைக்கிறார்கள். </p><p>மெக்கானிக் கடைகளுக்குச் சென்று இந்த ஆயிலை வாங்கிக் கொள்வேன். எனக்குச் சாதாரண உணவுகள் எதுவும் செரிப்பதில்லை, உடல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. </p><p>அதனால் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எப்போதாவது ஒருமுறை டீ குடிப்பேன், மற்றபடி இந்த ஆயில் தான் என் உணவு" என்று கூறினார்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/gh2M2rVLwJA"></iframe></figure><h2><strong>மருத்துவர்களின் எச்சரிக்கை</strong></h2><p>குமார் 22 ஆண்டுகளாக இப்படிச் செய்வதாகக் கூறினாலும், இது அரியவகை உளவியல் அல்லது உடல்நிலை மாற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. </p><p>வாகன இன்ஜின் ஆயிலில் காரீயம் போன்ற ஆபத்தான நச்சு இரசாயனங்கள் நிறைந்துள்ளதால், இதைப் பின்தொடர்ந்து பொதுமக்கள் யாரும் இத்தகைய உயிருக்கே ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியிருப்பது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா? - அண்ணாமலை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-central-government-backed-down-on-cauvery-issue-for-karnataka-election-politics#comments</comments><guid isPermaLink="false">aacebb18-cb12-4acd-b27d-fd2c122a911c</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:41:35 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:41:35.731Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,mekedatu dam,மேகதாது அணை,annamalai,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/t0qx0y09/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று  வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>கடந்த 16.02.2018 அன்று, உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. </p> <p>கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். </p> <p>இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மத்திய அரசு</a> தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.  </p><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?</p> <p>தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-priority-must-be-given-to-tamil-thai-vazhthu-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">39d1dd9f-6c4b-4e22-87fc-ea4f11c05acc</guid><pubDate>Tue, 28 Jul 2026 07:14:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T07:14:12.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-01/qc3dsbz7/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெறுகிறது. </p> <p>இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils">அர்லேக்கர்</a> பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்குகிறார். </p><h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். அதேபோல இன்று முனைவர் பட்டம் பெற இருந்த மகேஷ்குமார் அகர்வாலும் விழாவில் பங்கேற்கவில்லை.</p> <h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவதை அனுமதிக்க முடியாது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் தரப்பில் பல வழிகாட்டுதல்களை கொடுத்து வருகிறார்கள். அது ஏற்புடையதல்ல.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்</h2><p>* தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும்.</p><p>* பாஜக ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில பாடல்களே முதலில் பாடப்படுகிறது.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வதாக பாடுவது தவறான விஷயம்.</p><p>* தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils#comments</comments><guid isPermaLink="false">0e3a6dbd-fb23-4ff6-854c-1a988ff15ac7</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:38:31 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:38:31.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். </p><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">பட்டமளிப்பு விழா</a> நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p> <p>இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது.</p><p>இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!</p> <p>மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event#comments</comments><guid isPermaLink="false">8ef67113-a6bf-46e1-bed8-121cb5a8f6be</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:07:45.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Tamil Thai Vazhthu,DGP Mahesh Kumar Agarwal,ஆளுநர் விழா,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DGP Mahesh Kumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய்க்கான வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">அமைச்சர் விஸ்வநாதன்</a> அறிவித்துள்ளார். </p><p>இதேபோல் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>இந்நிலையில், காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram#comments</comments><guid isPermaLink="false">601be04c-23e7-46af-ab93-fbca9fbc4a4e</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:01:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:01:36.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Instagram,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</aside><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p><p>இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள். </p><p>அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். </p><h2><strong>எண்ணிக்கை உயர்வு</strong></h2><p>எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்யை</a> பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p>மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2><strong>பிரசார களம்</strong></h2><p>இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</p><p>த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதலமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome#comments</comments><guid isPermaLink="false">658ce874-710f-48e2-a290-2fd6e5b921bf</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:34:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:34:49.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>தமிழ்நாட்டிலிருந்து  கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது.  இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன். அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><h2><strong>சிபிஐ விசாரணை</strong></h2><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் கோர விபத்து: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் - 2 பேர் பலி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-in-viluppuram-two-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-in-viluppuram-two-death#comments</comments><guid isPermaLink="false">40f52814-8b82-4eef-8afa-17f06c9cba7f</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:33:29 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:33:29.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,விழுப்புரம்,accident,Viluppuram,விபத்து</media:keywords><media:content height="216" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-17/e2027d2q/New-Project-2026-04-17T181635.312.jpg" width="360"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-17/e2027d2q/New-Project-2026-04-17T181635.312.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர்(வயது26). </p><h2>விபத்து</h2><p>இவர் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி(45) என்பவருடன் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.</p><p>இவர்களது மோட்டார் சைக்கிள் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.</p><p>அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது.</p> <h2>சொகுசு பஸ்</h2><p>இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாசரும், பூபதியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் சென்னையில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி சொகுசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை ராணிப்பட்டையே சேர்ந்த டிரைவர் சரவணன் இயக்கி வந்தார்.</p><p>அவர் விபத்தில் சிக்கி இளைஞர்கள் சாலையில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார்.  ஆனால் அதற்குள்ளாகவே பஸ் சாலையில் விழுந்து கிடந்த பூபதியின் மீது ஏறிவிட்டது. </p> <h2>வாலிபரின் மீது ஏறியது</h2><p>இதில் பூபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். லாசர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><p>விபத்து நிகழ்ந்ததும், சொகுசு பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டார். அப்போது சொகுசு பஸ்சின் பின்னால் வந்த   காரும், அதன்பின்னால் வந்த டெம்போ டிராவலரும் அடுத்தடுத்து வந்து பஸ்சின் மீது மோதி விபத்தில் சிக்கி கொண்டன.</p> <p>இதில் காரின் முன்பகுதி முழுவதும் சொகுசு பஸ்சின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.</p><h2>அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்</h2><p>அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் காரில் பயணித்த சென்னை முடிச்சூரை சேர்ந்த ஜான் அன்பழகன்(வயது50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த சாலமன்(55), டிரைவர் பாலாஜி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த லாசர், சாலமன், டிரைவர் பாலாஜி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <h2>2 பேர் உயிரிழப்பு</h2><p>உயிரிழந்த ஜான் அன்பழகன், பூபதி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>தொடர்ந்து சொகுசு பஸ்சின் அடியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள், டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.</p><p>இந்த விபத்தால்  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டது எப்படி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதனை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி &apos;நோ சவுண்ட்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">73f8a45a-6f0b-4ed2-9e36-2e8cb2d6fdcd</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:25:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:25:56.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,government buses,Tamilnadu Government,tnstc,போக்குவரத்து கழகம்,அரசுப் பேருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Buses ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் பலர் செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சிலர் ஹெட்போன், இயர்போன் மூலம் இசை கேட்பார்கள். ஆனால் ஒரு சிலர் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது அல்லது படம் பார்ப்பது உண்டு. செல்போனில் பேசும் போது கூட மிகவும் சத்தமாக பேசுவதை காண முடியும். இது சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் அரு கருகே இருக்கும் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.</p><p>இதுபோன்ற தகராறுகள் பஸ்களில் நடைபெறாமல் இருக்க பஸ்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக செயலாளர் நிர்மல்ராஜ், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்</strong>:</h2><p>பொதுப் போக்குவரத்து வாகனங்களில்  பயணிகள் பயணிக்கும்போது,  மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-ன் விதி 5(10)-ன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-ன் படி, சக பயணி களுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும். </p><p>இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன், ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் வீடியோ படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.</p><h2><strong>இயர்போன், ஹெட்போன் மூலம் பாடல்:</strong></h2><p>‘புளூடூத்’ அல்லது இயர்போன், ஹெட்போன் பயன்படுத்தி சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்கு வரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். </p><h2><strong>விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:</strong></h2><p>பேருந்தினுள் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 'கைபேசியில் 'ஸ்பீக்கர் ஒலி' வேண்டாம் - அமைதியான பயணம், பாதுகாப்பான பயணம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அறிவுறுத்தல்:</strong></h2><p>பேருந்தைக் கிளப்பும் முன்பும், பயணத்தின்போதும் பயணிகள் இந்த நடைமுறையைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்து அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபகாலமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பலர், தங்கள் கைபேசியில் சத்தமாக ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், உரத்த குரலில் பேசுவதும் அதிகரித்துள்ளதாகக் கடலூர், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன. அமைதியான மற்றும் அசவுகரியமில்லாத பயண அனுபவத்தை உறுதிசெய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today#comments</comments><guid isPermaLink="false">ae8e71c2-d68d-4814-b553-48df2a7c6c6e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:21:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:21:25.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலுக்கு செல்ல தடை,ராமேசுவரம் மீனவர்கள்,Rameswaram Fishermens</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/g37ezrr7/rameshwaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/g37ezrr7/rameshwaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </aside><h2><strong>மீன்பிடிக்க செல்ல தடை</strong></h2><p>தமிழகத்தில் சூப்பர் எல் நினோ காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப தாக்குதல் இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.</p><p>இந்தநிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் நேற்று முதல் அதிகமாக இருந்து வருகிறது. இது இன்று உயர்ந்து 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>இதன் எதிரொலியாக தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று காலை கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.</p><h2><strong>வேலையிழப்பு</strong></h2><p>இதையடுத்து பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பருவநிலை மாற்றம், இலங்கை கடற்படையினரால்  மீனவர்கள் சிறைப்பிடிப்பு, விரட்டியடிப்பு, வேலை நிறுத்த போராட்டம், தற்போது சூறாவளி காற்றால் கடலுக்கு செல்ல தடை போன்ற காரணங்களால் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடியில் தவித்து வருகிறார்கள். இந்த மீன்பிடி தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">df8285ae-a575-486a-81f8-c4959b161654</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:10:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:10:12.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</aside><p>முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார் </a>இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.</p><h2><strong>நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி</strong></h2><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">சென்னை ஐகோர்ட் மதுரை கிளை</a> அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.</p><p>கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு ஐகோர்ட் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event#comments</comments><guid isPermaLink="false">0ceb1613-c7e5-4002-9b5c-53c3f3ae5d55</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:52:04 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:52:04.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Convocation Ceremony,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.</p><h2>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>வை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>மதுரையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. இன்று முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் அறிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறும் நிலையில் ஆளுநரை கண்டித்து புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்த நிலையில் நெல்லை எம்எல்ஏ முருகனும் அறிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">3ddf92d1-7dde-4bed-a8bb-a3ea89fbab72</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:41:00.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அறமும், மனிதநேயமும் மீறல்</strong></h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2><strong>பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்</strong></h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money#comments</comments><guid isPermaLink="false">759c7085-57f0-4762-b6cc-7e8540acf0b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:44:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:44:37.710Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,petitions,taluk office,தாலுகா அலுவலகம்,மனுக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்: பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை என மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஓட்டிய நோட்டீசால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</aside><h2><strong>தாலுகா அலுவலகம்</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறிவித்ததாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டாமாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த வினோத கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>வலைதளங்களில் வைரல்</strong></h2><p>தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தாசில்தாரின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august#comments</comments><guid isPermaLink="false">8d6a229e-c132-444e-b854-6ab8084e9a65</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:30.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,EPFO,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</aside><h2><strong>கோளாறு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி</a> நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளில் யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (சைட்ஸ் 2.01) நடைமுறைப்படுத்தியது. இந்த தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்தாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறிப்பாக, பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிக்கல், வருங்கால் வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது. கோரிக்கைகளை பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.</p><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>வழக்கமாக விண்ணப்பித்த 3 நாட்களில் (குறைந்தபட்சம்) <a href="https://www.maalaimalar.com/news/national/labour-ministry-makes-epf-contributions-beyond-rs-1800-voluntary">சந்தாதாரர்களுக்கு</a> பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இது அவர்களுடைய அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவிக்கரமாக இருந்தது. ஆனால் சமீப நாட்களில் விண்ணப்பித்து 1% மாதம் ஆகியும் சந்தாதாரர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யும் பணியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p><p>அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.</p><h2><strong>நோக்கம்</strong></h2><p>வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை, வங்கி கணக்குகளுடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் அறை இடம் மாற்றம் - நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement#comments</comments><guid isPermaLink="false">ac67d8d3-82b5-4b9e-b829-ec119b8621f3</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:16:03.271Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,முதலமைச்சர் விஜய்,St George building,Namakkal Kavignar Maligai,நாமக்கல் கவிஞர் மாளிகை,புனித ஜார்ஜ் கோட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது. </p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7964c801-77f7-432c-8b4e-30b00670d610</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:10:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:10:18.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டக்குழு,montek singh ahluwalia,தமிழ்நாடு வருவாய்,Planning commission,tamilnadu income,மான்டேக் சிங் அலுவாலியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Govt forms Montague Singh Ahluwalia panel to identify new income sources]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். </p><p>தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>இதையடுத்து தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். </p><p>இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.</p><p>மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:06:26.523Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects">கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!...</a> </p><p>*தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும்.</p><p>*தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit">பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!... </a></p><p>*பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><p>*பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre">வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' கெடு!... </a></p><p>*டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்</p><p>*போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games">காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</a></p><p>* நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார்.</p><p>* கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">68164548-be22-457c-aad8-5c8120a51d23</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:42:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:42:16.989Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>relief,நிவாரணம்,Virudhunagar Firecracker Accident,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>”விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ்(வயது 32) த/பெ ரவீந்திரன், </p><p>ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன். இன்னாசிமுத்து (வயது 44) த/பெ. சிங்கராஜ் மற்றும் நாராணாப்புரத்தைச் சேர்ந்த  பாண்டித்துரை (35) த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய கட்டாயமில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government#comments</comments><guid isPermaLink="false">c3007898-f7f7-4fca-aa1b-7f8306f31e5e</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:25:47.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, </p><p>“காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். </p><p>இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit#comments</comments><guid isPermaLink="false">6f1b30b3-e90f-451f-b720-0a0bfeb871aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:29:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:29:18.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Tiruvannamalai,திருவண்ணாமலை,Tiruvannamalai temple,Idukku Temple,திருவண்ணாமலை கிரிவலப்பாதை,இடுக்கு பிள்ளையார் கோயில்,Idukku Pillaiyar Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruvannamalai Idukku Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் கோயில்.  இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.</p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>பக்தர் உயிரிழப்பு:</strong></h2><p>இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.</p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><h2><strong>கோயில் நிர்வாகம் அறிவிப்பு:</strong></h2><p>இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>பிரசித்தி பெற்ற இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழிப்பாதை மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்டதாகும். இதனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான வழிப்பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\</p>]]></content:encoded></item><item><title>கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">96b2f9f7-d2e6-43e5-9a40-4d3873361de1</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:10:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:10:35.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,தமிழ்நாடு அரசு,Madras High Court,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,government jobs,அரசுப்பணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p><h2>நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.</p><p>கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant#comments</comments><guid isPermaLink="false">6d629442-691c-4e87-abab-975642cda654</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:37:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:37:03.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,சுத்திகரிப்பு நிலையம்,cm vijay,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,கோயம்பேடு,RO plant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay inspects reviews Chennai Sewage Plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.</p><p>தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்பு சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் ஆகிய இடங்களில் திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிந்தார்.</p><p>ஏற்கனவே நான்கு இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தற்போது தொழில்துறை தேவைக்கு வழங்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.</p><p>இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p><p>இந்த சுத்திகரிப்பு ஆலையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கொள்ளளவு செயல்பாட்டில் உள்ளது.</p><p>இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், அந்த நீரை கொண்டு வாகனங்கள் மற்றும் ரெயில் பெட்டிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா, புரளியா?- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">69ebd9f7-8f47-4cc6-90b6-657091cf5527</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:31.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டாஸ்மாக் கடைகள்,Tasmac,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், RTI சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அல்லது எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>"மூடப்பட்ட” டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?</p><p>"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்" என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>“மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதிலில்லை. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு. </p><p>மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும்,"அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்" என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது.</p><p>அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?</p><p>உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects#comments</comments><guid isPermaLink="false">6e6d268e-444f-4814-8972-4c1dc30f58bc</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:28.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore metro train,Madurai Metro,மதுரை மெட்ரோ,CPI Veerapandiyan,கோயம்புத்தூர் மெட்ரோ,CPI வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPI  Veerapandiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை (DPR), போதுமான மக்கள் தொகை இல்லை மற்றும் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனக் கூறி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><p>ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரு நகரங்களின் வேகமான வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. </p><h2><strong>கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை:</strong></h2><p>மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை ,கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது.</p><p>2017 மெட்ரோ ரெயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை&nbsp;ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.</p><h2><strong>மாற்றாந்தாய் மனப்பான்மை:</strong></h2><p>ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை மற்றும் மதுரைக்கு சமமான&nbsp;மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா,போபால்,பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p>உடனடியாக கோவை,மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ,ஒன்றிய பாஜக அரசை&nbsp;&nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு&nbsp;வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசு இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு எவ்வித அரசியலும் செய்யாமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>