<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 14 Aug 2026 16:28:52 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 14 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-14-august-2026#comments</comments><guid isPermaLink="false">af13e0d5-379a-4bc4-aa06-6d0f8775e507</guid><pubDate>Fri, 14 Aug 2026 04:11:55 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:46:21.485Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/qowhh7gn/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow">நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு</a></p><p>* தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை.</p><p>* பொறுப்பு ஆளுநர் அர்லேகர் நாளை கேரளா செல்ல உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-first-test-starts-tomorrow-in-galle">இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்</a></p><p>* சாய் சுதர்சன் இடமான 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கல் ஆடுகிறார்.</p><p>* நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-351-for-6-in-day-2-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் ஹசன் தமிம் சதம்: 2ம் நாள் முடிவில் வங்கதேசம் 351 ரன்கள் குவிப்பு</a></p><p>* வங்கதேச அணியின் கேப்டன் ஷாண்டோ 84 ரன்னில் அவுட்டானார்.</p><p>* வங்கதேசம் அணி ஆஸ்திரேலியாவை விட 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iran-president-to-come-to-delhi-for-brics-summit">பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்</a></p><p>* பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.</p><p>* பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat" rel="nofollow">தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</a></p><p>* கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>* சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist">சுற்றுலா வந்தபோது படிப்புக்காக மாமல்லபுரம் சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </a></p><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.</p><p>சி.பி.எஸ்.இ. தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை மைக்கேலை சேர்த்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty">மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல.</p><p>* ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/ben-shetton-won-the-title-in-canada-open">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது</p><p>* பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers" rel="nofollow">80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</a></p><p>* விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.</p><p>*  தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-surpasses-kapil-dev-in-test-wickets-key-stats">டெஸ்டில் 435 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* மிட்செல் ஸ்டார்க் 106 டெஸ்டுகளில் விளையாடி 435 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 12-வது இடத்தில் உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/iga-swiatek-won-the-canada-open-title">கனடா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்தது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6b62221a-9257-4791-9768-a6df9df77d5f">தேசப் பிரிவினை எனும் கருப்பு சரித்திரம்.. நினைவு தினத்தில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்</a></p><p>*மத வன்முறைகளில் தோராயமாக 2 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>* சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர நேரிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay">கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</a></p><p>* கரூர் உயிரிழப்பு: அரசு வேலை ரத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு இடைக்கால தடை</p><p>* "அரசு முடிவில் நீதிமன்றம் தலையிடலாமா?" என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d433f424-d7c6-4cae-b9dd-54826286d05d">ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம்</a></p><p>*20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>*ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar" rel="nofollow">வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும்.</p><p>* திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/uk-train-derailment-11-injured-as-passenger-train-overturns-near-lewes">இங்கிலாந்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான பயணிகள் ரெயில்</a></p><p>*தெற்கு இங்கிலாந்தின் லூயிஸ் நகருக்கு அருகே நடந்த இந்த விபத்தில் ரெயிலின் 3 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.</p> <p>*ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</a></p><p>* சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>* தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-14-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை அதிரடி குறைவு - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-belgium-diamond-ring-row-senators-probe-if-trump-gift-linked-to-eu-diamond-tariff-waiver">321 வைரங்கள் பதித்த மோதிரம்.. பெல்ஜியத்தில் இருந்து டிரம்புக்கு வந்த பரிசு - உடனே ரத்தான வைர இறக்குமதி வரி - சர்ச்சை</a></p><p>*321 வைரங்கள், மரகதம், மாணிக்கக் கற்கள் மற்றும் 18 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த மோதிரம்.</p> <p>*வைரங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nalsar-graduation-row-students-oppose-cji-suryakant-invite-over-remarks-and-protest-case-handling">U Turn அடித்த பார் கவுன்சில்.. தலைமை நீதிபதி வருகையை எதிர்த்த சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கம்</a></p><p>*மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டார்.</p><p>* துணைவேந்தர் மற்றும் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-earthquake-34-magnitude-quake-jolts-nashik-at-dawn-no-major-damage-reported">மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்</a></p><p>*மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p>*ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4:29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/modis-hug-based-foreign-policy-rahul-hugging-the-congress-leader-what-was-said-about-meloni">மோடியின் கட்டிப்பிடி வெளியுறவு கொள்கை.. காங்கிரஸ் தலைவரை கட்டிப்பிடித்த ராகுல் - மெலோனி குறித்து சொன்ன விஷயம்!</a></p><p>*"என்னை மெலோனி என்று நினைத்து கட்டிப்பிடிக்கவில்லையே?" என்று கேட்டார்</p><p>*மேலும் ஒரு படி மேலே சென்று மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்தார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jharkhand-gen-alpha-student-protest-headmaster-transfer-order-cancelled">ஜென் ஆல்பா போராட்டம் வெற்றி.. பள்ளித் தலைமை ஆசிரியர் இடமாற்றம் ரத்து | Jharkhand</a></p><p>*காவல் நிலையத்தின் மீதும் மாணவர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் ஒரு காவலர் காயமடைந்தார்</p><p>*வாக்குவாதம் முற்றி அவர் ஒரு மாணவனை அறைந்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/praggnanandhaa-suffers-first-loss-vincent-keymer-checkmates-in-sinquefield-cup-round-three">Sinquefield Cup: மூன்றாம் சுற்றில் பிரக்யானந்தா அதிர்ச்சி தோல்வி</a></p><p>*இரண்டாம் சுற்றில் உலக சாம்பியன் ஜெவோகிர் சின்டாரோவை வீழ்த்தினார்.</p><p>*மூன்றாவது சுற்றில் செக்மேட் ஆனார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51">வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</a></p><p>* 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார்.</p><p>*  2026-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-monsoon-session-rs-175-crore-has-been-lost-so-far">இது முதல் முறை அல்ல... நாடாளுமன்ற முடக்கத்தால் ரூ.175 கோடி வீணடிப்பு</a></p><p>* மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலேயே சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றம் இயங்குகின்றன.</p><p>* நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்பட ஒரு நிமிடத்துக்கு ரூ.26 லட்சம் செலவு ஆகும். </p> ]]></content:encoded></item><item><title>கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai#comments</comments><guid isPermaLink="false">8e7d0d1d-2842-416f-b7b5-fe1d721241b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:11:39.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,கோவை,Chennai High court,சென்னை ஐகோர்ட்,kovai,Flag Parade,police dept,தேசிய கொடி பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.</p><p>அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? </p><p>அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?</p><p>அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?</p><p>தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?</p><p>ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.</p><p>முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.</p><p>அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.</p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.</p><p>காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aaccb31f-a792-4758-8e9d-0dee8a973b1a</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:12:58.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tea party,தேநீர் விருந்து,ஆளுநர் மாளிகை,Independence Day,சுதந்திர தினம்,lok bhavan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok bhawan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து கிடையாது என தெரிவித்துள்ளது.</p><h2>சுதந்திர தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.</p><p>தேசத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர்தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.</p><h2>தேநீர் விருந்து</h2><p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்தன.</p><p>இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து</p><p>கிடையாது. நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat#comments</comments><guid isPermaLink="false">bd638139-f808-48d9-92c5-d1137465199b</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:41:41.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><p>சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>அமைப்பு ரீதியாக தி.மு.க.வுக்கு 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p>தற்போது இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்படும் செயற்குழுவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.</p><p>செயற்குழு கூட்டம் பற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சைதை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது -  ஆர்.எஸ்.பாரதி சாபம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">39106f1f-89f8-4111-9617-b38e740a1108</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:37:11.522Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,Ma Subramanian,மா சுப்பிரமணியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டுள்ளார்.</strong></em></p><p>சென்னை காரம்பாக்கத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja">திமுக</a> விழாவில் பேசிய அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: </p><h2>தவெக ஆட்சி</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சிப் பொறுப்பேற்றதும் வீட்டு வரி எல்லாம் உயர்ந்து விட்டதாம். அதுபற்றி நமக்கு என்ன கவலை. </p><p>இனிமேல் நாம் அனைவரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் வாக்களித்தவர்கள் தான். அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிறகு தான் புத்தி வரும். </p> <h2>மா.சுப்பிரமணியன்</h2><p>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது.</p><p>மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டுபோட்டே தவெக வெற்றி பெற்றுள்ளது.</p><h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள். 5 ஆண்டுகள் ஓய்வெடுப்போம்.</p><p>பேருந்து நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers#comments</comments><guid isPermaLink="false">bd2384a6-b8b5-424b-b3d8-f17e72062fd9</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:31:15.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,Police department,காவல் துறை அதிகாரிகள்,சிறப்பு பதக்கம்,Special awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு பதக்கம்</h2><p>2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு  சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். </p><p>அவர்கள் விவரம் வருமாறு:-</p><h2>திருவள்ளூர்</h2><p>1. சி.ஜெயஸ்ரீ,  காவல் துணை கண்காணிப்பாளர்,  கும்மிடிபூண்டி  உட்கோட்டம்,   திருவள்ளுர் மாவட்டம்.</p><p>2.  நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர்,  திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர்  மாவட்டம்.</p><p>3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம்,  கோவை மாநகரம்.</p><p>4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு,  குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை,  திருச்சி மாநகரம்.</p><h2>கோவை-சென்னை</h2><p>5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு,  கோவை மாநகரம்.</p><p>6. வி.கோமதி, காவல்துறை உதவி தலை வர், நிர்வாகம்,   காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.</p><p>7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம்,  பெரம்ப லூர் மாவட்டம்.</p><p>8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலைய னூர் காவல் நிலையம்,   விழுப்புரம் மாவட்டம்.</p><p>9.கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம்,   சிவகங்கை மாவட்டம்.</p><p>10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி  மாநகரம்.</p><h2>காவல் பதக்கம்</h2><p>இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள், சார் நிலை அலுவலர்களுக்கு  2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-</p><p>1. டாக்டர் வி.சசி மோகன்,  காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.</p><h2>சென்னை-கரூர்</h2><p>2.தெ.சண்முக பிரியா,  காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம்,  சென்னை. </p><p>3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.</p><p>4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.</p><p>5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம்,  கரூர் மாவட்டம்.</p><h2>தங்கப் பதக்கம்</h2><p>விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும்.</p><p>மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac#comments</comments><guid isPermaLink="false">02299041-60df-454d-8b69-83354c2a55dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:09:44.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுபான விற்பனை,liquor sale,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த 11ம் தேதி ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்," டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் 11 வகைகளின் விற்பனையை நிறுத்தவும், மேலும் எப்.எல். 2 மற்றும் எப்.எல். 3 உரிமதாரர்களுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த உத்தரவின் கீழ் வி.எஸ்.ஓ.பி. எக்சா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 ரகங்கள் வருகின்றன.</p><p>இவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாளம்  நுகர்வோருக்கு விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழிகாட்டுதல்களை மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர்  டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist#comments</comments><guid isPermaLink="false">ffe373a5-cedc-4935-9484-23cfbc87bcfa</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:39:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:39:09.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ireland,அயர்லாந்து,Education,Engineer,என்ஜினீயர்,boy adopted,சிறுவன் தத்தெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boy - Michael]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர்  அவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</strong></em></p> <h2>மைக்கேல் சாப்ட்வேர் என்ஜினீயர்</h2><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவதை மனிதநேய சேவையாக செய்து வருகிறார். </p> <h2>மாமல்லபுரம் சுற்றுலா </h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது பூஞ்சேரியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 5) என்ற சிறுவன் ஒருவன் கல்வி கற்க முடியாமல் வறுமையிலும், பொருளாதாரம் இல்லாமலும் சிரமப்படுவதை அறிந்தார். </p><p>இதையடுத்து சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார். சிறுவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</p> <h2>சிபிஎஸ்இ </h2><p>இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை சேர்த்தார். தொடர்ந்து படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்புவது, போனில் தன்னம்பிக்கை ஊட்டுவது, ஆங்கிலம் சரளமாக பேச ஆன்லைன் பயிற்சி கொடுப்பது என மாணவனை ஊக்கப்படுத்தி வந்தார். </p> <h2>மழலையர் பட்டமளிப்பு விழா</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நன்னடத்தை, எழுத்தழகு, விடுப்பு எடுக்காமை, ஆங்கில உச்சரிப்பு உள்ளிட்ட நற்குணங்களுக்காக சிறுவன் சர்வேசுக்கு மழலையர் பட்டம் வழங்கப்பட்டது. </p> <h2>பட்டமளிப்பு நிகழ்ச்சி</h2><p>இதை நேரில் பார்பதற்காக மைக்கேல் அயர்லாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரம் வந்தார். பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். </p><p>மேலும் மைக்கேல், தான் தத்தெடுத்து படிக்க வைக்கும் சிறுவன் சர்வேசை மேடையில் பாராட்டி மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களை வியக்க வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty#comments</comments><guid isPermaLink="false">6e7ec2bf-ff8a-49d7-9303-33794cb6711a</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,alcohol,டாஸ்மாக் கடைகள்,Tasmac,மதுக்கடைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மது அருந்தும் மாணவிகள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது.</p> <h2>இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?</h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.</p> <h2>என்ன தண்டனை?</h2><p>இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?</p> <h2>மதுக்கடைகள்</h2><p>ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?</p> <h2>ஆன்லைனில் முன்பதிவு</h2><p>ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும்போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.</p> <h2>மதுவிலக்கு</h2><p>எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை- மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects#comments</comments><guid isPermaLink="false">49ccc8dd-008e-442f-add3-bb4ebd3e84d1</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:04:32.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கிருஷ்ணகிரி,Krishnagiri,தனிப்படைகள் அமைப்பு,Sexual Harassment,Special team</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnagiri Sexual Harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். </p><p>மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay#comments</comments><guid isPermaLink="false">1f6b3a46-0c4a-4c05-a9ee-bdebef648ac8</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:48:20.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,கரூர்,Highcourt,Karur,Tamilnadu Government,madurai bench,tvk,உச்சநீதிமன்றம்,InterimStay,இடைக்காலதடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduGovernment  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த செப்டெம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூரில் நடைபெற்ற</a> தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலையை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கினார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மனு</h2><p>இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக்கிளை, வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கும் உத்தரவிட்டது. </p><p>இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசு வேலையினை ரத்து செய்ய மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p><p>மேலும், எதிர் மனுதாரர்களான சீனி மற்றும் அகமது ஆகியோரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த முடிவு அரசு எடுத்த கொள்கை முடிவு, இதை எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆணை வழங்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் யார்? என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை கேள்வி எழுப்பினர்.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் - உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular#comments</comments><guid isPermaLink="false">485efbe3-49bd-4ac7-aa3a-f6578b394d67</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:16:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:16:42.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை ஐகோர்ட்,national flag,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras high court - National Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</strong></p><h2>உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் என உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.</p><p>முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>சுதந்திர தின கொண்டாட்டம்</h2><p>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>சென்னை கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> நாளை கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைக்கிறார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உயர்நீதிமன்றத்தில்</a> நாளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்ற தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை.</p><p>உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் துயரத்தை பார்க்காமல் அறை மாற்றத்தில் கவனம் செலுத்துகிறார் முதலமைச்சர் விஜய்!- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps#comments</comments><guid isPermaLink="false">df79a00e-f168-454f-941a-b85e2a9bd1a9</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:15:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:15:53.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.</p><p>அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</p><p>காவிரியில் நமக்குரிய நீரை பெற்றுத் தராத தவெக அரசு ரீல்ஸ் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>ரீல்ஸ் மட்டும் போட்டு வரும் தவெக அரசானது விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.</p><p>ரீல்ஸ் போடுவதும் ரீல் விடுவதும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேலையாக உள்ளது. </p><p>விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன.</p><p>தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம் தான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம். மக்கள் முக்கியமில்லை.</p><p>நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அறை மாற்றுகிறார்.</p><p>நடிகர் என்பதால் அறை நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள்.</p><p>விவசாயிகள் உணவுக்கே வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><p>நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு, முதலமைச்சர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை. 50 ஆண்டுகாலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வரலாறு தெரியாமல் தவெக அரசு செயல்படுகிறது.</p><p>போராடி, வாதாடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிப்பதில்லை. பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா?</p><p>வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார்.</p><p>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தவெக அரசுக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.</p><p>கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகும் நிலையில் தவெகவுக்கு காவிரி போராட்ட வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. கூட்டணியில் கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுமாறு வலியுறுத்தியும் தவெக அரசு கேட்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வழக்குகளில் இருந்து தப்பிக்க பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி- அமைச்சர் நிர்மல் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-bjp-secret-alliance-to-escape-cases-says-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">703c5aed-0189-44d3-ba30-5c83a3e9f34d</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:20:22.862Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,DMK,திமுக,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/lusrdzel/Minister-Nirmal-Kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>வழக்குகளில் இருந்து வெளிவருவதற்காக பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயற்சி செய்தது.</p><p>சொத்துக்களை குடும்பத்தை காப்பதற்காக நேரடியாக கூட்டணி வைக்க திமுக முயன்றது.</p><p>தொகுதி மறுவரையறை குறித்த வாக்கெடுப்பின்போது, அதற்கு எதிராக வாக்களிப்பார்களா இல்லையா என திமுக இப்போதுவரைா சொல்லவில்லை.</p><p>அனைத்திற்கும் ஆதாரம் உள்ளதால், கொஞ்ச நாள் காலம் தள்ளிபோகலாம் ஆனால் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியாது.</p><p>கட்சி நிதி எல்லாமே அரசுக்கான நிதியாக மாறியுள்ளதால் ரூ.15,000 கோடி வருவாய்.</p><p>தேநீர் விருந்துக்கு செல்லவில்லை என கனிமொழி கூறுவது நம்பும்படியாக இல்லை. தேநீர் விருந்து நடைபெறும் என கனிமொழிக்கு தெரியாமலா அங்கு சொன்றார்? சீட் மாற்றம் குறித்து அந்த நாளில் தான் பேசவேண்டுமா?</p><p>பிரச்சனை வரும்போதெல்லாம் திமுகவினர் கூச்சமே இல்லாமல் டெல்லியில் சென்று காலில் விழுவார்கள்.</p><p>கடந்த ஆட்சியில் அரசுடன் புிரந்துணர்வு ஒப்பந்தம் நடந்தாலும் அதற்கு பின் குடும்பத்தினருடன் ஒர ஒப்பந்தம்.</p><p>நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் கலந்து கொள்வது குறித்த தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.</p><p>கோவையில் மாணவன் கொலை வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தான் கொல்லப்பட்டுள்ளார். கோவை மாணவர், கைது நடவடிக்கை தொடர்கிறது. தவறு எங்கு நடந்தாலும் அதற்கு யார் காரணமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தமிழகத்தில் எங்குமே சொத்து வரி உயர்த்தப்படவில்லை, சொத்து வரியை முறைப்படுத்தி உள்ளோம். திமுக ஆட்சியில் சென்னையில் பெரிய குடியிருப்புகளிலும் சொத்துவரி முறைப்படுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளது.</p><p>மதுரையில் சொத்த வரி முறைகேடு செய்யப்பட்டது. திமுக மேயர் கணவர் கைது செய்யப்பட்டார்.</p><p>தவெக அரசு யாருடன் பேசினாலும் வெளிப்படையாகதான் இருக்கும். மக்கள் நலனுக்காக மட்டுமே மத்திய அரசுடன் பேசுவோம்.</p><p>திருச்சி சிவா மத்திய அமைச்சர் ஆக உள்ளதாக கூறப்படுவதை திமுக தற்போது வரை மறுக்கவில்லை. </p><p>தன்னுடன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என காண்பிக்கவே எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக்கொடி ஏற்றுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow#comments</comments><guid isPermaLink="false">8f0254f4-4302-4a1b-baa2-99c8945e5d4f</guid><pubDate>Fri, 14 Aug 2026 05:11:01 +0000</pubDate><atom:updated>2026-08-14T05:11:01.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,national flag,Independence Day,தேசியக்கொடி,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ National flag - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/2e50uf9z/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் நாளை தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார்.</strong></em></p> <h2>சுதந்திர தின விழா</h2><p>இந்தியாவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a> நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து நாளை காலை 8.20 மணிக்கு முதலமைச்சர் விஜய் புறப்படுவார்.</p><p>மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வரும்போது அவரது காரின் முன்பும், பின்பும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அவர் அழைத்து வரப்படுவார்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சென்னை கோட்டை கொத்தளத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka">முதலமைச்சர்</a> காலை 8.35 மணிக்கு வந்திறங்குவார். அங்கு அவரை தலைமைச் செயலாளர் சாய் குமார் வரவேற்பார்.</p><p>பின்னர் அங்கு தென்னிந்திய பகுதிகளின் ராணுவத் தலைமையக படைத்தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை மரபுப்படி முதலமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.</p> <h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதலமைச்சரை தலை மைச் செயலாளர் அழைத்து வருவார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரி யாதையை முதலமைச்சர் ஏற்பார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய், திறந்த ஜீப்பில் ஏறிச்சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார்.</p><p>இந்த அணிவகுப்பில் சிறப்பு காவல் படைகள், கேரள சிறப்பு காவல்படை, காவல் பெண் கமாண்டோக்கள், சென்னை பெண்கள் காவல் பிரிவு, கடலோர பாதுகாப்பு குழுமம், நீலகிரி படைப்பிரிவு, குதிரைப்படை போலீசார் பங்கேற்பார்கள்.</p><h2>தேசியக்கொடி ஏற்றுகிறார்</h2><p>பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதலமைச்சர் விஜய் செல்வார். காலை 8.45 மணிக்கு அங்கிருக்கும் கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக அவர் ஏற்றி வைக்கிறார். அப்போது மூவர்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்படும். தேசியக் கொடி ஏற்றப்படும்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைப்பார்கள்.</p> <p>அதைத்தொடர்ந்து சுதந்திர தின உரையை முதலமைச்சர் விஜய் அங்கிருந்தபடி நிகழ்த்துவார். அப்போது சில புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார். சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் வாரிசுகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார்.</p><h2>விருதுகள்</h2><p>அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் விஜய் வழங்குவார்.</p><p>மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றியோர். அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கிய நிறுவனங்கள், மருத்துவர் ஆகியோருக்கான விருதுகளையும் முதலமைச்சர் வழங்குவார். அதைத் தொடர்ந்து சமூகப் பணியாளர்கள் விருது, சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான விருதுகளும் வழங்கப்படும்.</p> <h2>தகைசால் தமிழர்</h2><p>தகைசால் தமிழர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 10 லட்சமாகும். பின்னர் விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்வார். அதைத் தொடர்ந்து கோட்டை கொத்தளத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முதலமைச்சர் இனிப்புகளை வழங்குவார்.</p> <h2>சுதந்திர தின விழா</h2><p>சென்னை கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவை காண மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் என பல தரப்பினரும் கோட்டைக்கு வருவார்கள். அவர்களுக்காக அங்குள்ள சாலையின் ஓரத்தில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. காலை 9.30 மணியளவில் விழா நிறைவு பெறும். பின்னர் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு முதலமைச்சர் விஜய், சுதந்திர தின வாழ்த்துகளை கையசைத்து தெரிவித்தபடி காரில் புறப்பட்டுச் செல்வார்.</p> <p>இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள் அமர்வதற்காக கோட்டை கொத்தளத்துக்கு எதிரே அலங்கரிக்கப்பட்ட தனித்தனியான பந்தல்களில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சபாநாயகர், அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், தியாகிகளின் குடும்பத்தினர். அரசு உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.</p> <h2>உளவுத்துறை எச்சரிக்கை</h2><p>இதற்காக கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் அணிவகுப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது.</p><p>சுதந்திரதின விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளது.</p> <h2>ஒரு லட்சம் போலீசார்</h2><p>அதையொட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வயது ஒரு தடையல்ல: 51 வயதில் மருத்துவ கனவை நனவாக்கி சாதித்த மாற்றுத்திறனாளி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51#comments</comments><guid isPermaLink="false">62a6f917-03f8-4e39-875d-bea1dabc0b04</guid><pubDate>Fri, 14 Aug 2026 03:46:27 +0000</pubDate><atom:updated>2026-08-14T03:46:27.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Nagapattinam,நாகப்பட்டினம்,Neet exam,மருத்துவ படிப்பு,medical course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Suresh kumar - Medical Education]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/y885b0c5/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார்.</strong></em></p><h2>எம்.பி.பி.எஸ். சீட்</h2><p>நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது பூர்த்தி செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர் எம்.பி.பி.எஸ். சீட்டை தட்டிப்பறித்து இளைஞர் பட்டாளத்துடன் படிப்பில் போட்டி போட தயாராகியிருக்கிறார்.</p> <h2>மருத்துவ படிப்பு ஆசை</h2><p>"சாதிக்க வயது ஒரு தடையில்லை" என்பதற்கு சுரேஷ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார். பள்ளிப்படிப்பை முடித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மருத்துவ படிப்பை</a> படிக்க ஆசைப்பட்ட சுரேஷ்குமாருக்கு அப்போது அது சாத்தியப்படவில்லை.</p> <h2>மருத்துவ கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் 2022-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு ஆசை மீண்டும் பொறித்தட்ட நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதினார். ஆனால் அதில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் தாயும், மகளும் சேர்ந்து மருத்துவ இடங்களை தேர்வு செய்த செய்தி அவருக்கு மேலும் உந்துதலை கொடுத்தது.</p> <h2>நீட் தேர்வு</h2><p>அதன் அடிப்படையில் 2026-ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை </a>எழுதி 192 மதிப்பெண் எடுத்திருந்த சுரேஷ்குமார். 2019-ல் நடந்த விபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தை சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில், நேற்று நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.</p><h2>சுரேஷ்குமார்</h2><p>இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், 'ரத்த பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். இப்போது என்னுடைய வேலையை உதறிவிட்டு, படிப்பை தொடர போகிறேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க போகிறேன். நிச்சயம் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து டாக்டராக வலம் வருவேன்' என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-august-2026#comments</comments><guid isPermaLink="false">6b1cd842-7f06-457b-93b8-c38a9bb7ae73</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:13:24 +0000</pubDate><atom:updated>2026-08-14T02:46:39.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3ajhq5r5/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action">ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்</a></p><p>* ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>* மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 9 பேரை படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th">2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்</a></p><p>* துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கிறார்.</p><p>* தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-to-continue-until-trumps-term-ends-warns-irgc-adviser">டிரம்ப் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் - ஈரான் தடாலடி</a></p><p>*அமெரிக்க ராணுவம் நினைத்ததை விட பலவீனமாக இருப்பதை இந்தப் போரின் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவித்தார்.</p><p>*பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/afghanistan-girls-denied-secondary-and-higher-education-under-taliban-rule">மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான்.. ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு</a></p><p>*2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும்</p><p>*முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jantar-mantar-season-2-protest-cjbp-alleges-hall-cancellations-and-threats-blocking-meetings-in-delhi">'ஜந்தர் மந்தர் சீசன் 2' போராட்டத்தை அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>*தலைகீழாக தொங்கவிடப்படுவீர்கள் என்று மிரட்டியுள்ளனர்.</p><p>*சீசன் 2 போராட்டம் தொடங்கும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/old-modi-congress-leaders-wedding-reception-clip-not-linked-to-revati-sule-event-fact-check-confirms">ஆளே மாறிட்டீங்க.. திருமண விழாவில் மோடியுடன் கார்கே கலகல - வீடியோ உண்மையா?</a></p><p>*கார்கே, "நீங்கள் ஆள் கொஞ்சம் மாறிவிட்டீர்கள்" என கூற, அதற்கு மோடி "ஓ அப்படியா" என கூறுவது பதிவாகியுள்ளது.</p><p>*தற்போதைய நிகழ்வோடு இதற்கு எவ்வித தொடர்பும் இல்லை</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/haridwar-ganga-pollution-outrage-7000-tonnes-of-plastic-and-urine-bottle-waste-cleared-after-kanwar-yatra">சிறுநீர் நிரம்பிய பாட்டில்கள்.. கன்வர் யாத்திரை நிறைவில் ஹரித்வாரில் 7 ஆயிரம் டன் குப்பைகள்</a></p><p>*கங்கை நதி உற்பத்தியாகும் இமயமலைப் பகுதியான கங்கோத்ரியிலும் இதே போன்ற சூழலே நிலவுகிறது.</p><p>*சுமார் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் ஹரித்வாருக்கு வருகை தந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed">எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</a></p><p>* எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. </p><p>* எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b0aaf1c8-3178-4559-b174-fc3eb50e1661">தந்தை மறைந்த 5வது நாளில் ஆடுகளத்திற்கு திரும்பிய மெஸ்ஸி - ரசிகர்கள் நெகிழ்ச்சி</a></p><p>*நீங்கள் எனது தந்தையும், நண்பனும், பிரதிநிதியும் ஆவீர்கள்</p><p>*கால்பந்தில் தான் தொடர்வது குறித்து உறுதியாக தெரியவில்லை என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-13-8-2026">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p>சென்னை கிண்டியில் 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' தொடங்கியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு.</p><p>சென்னையில் நடைபெறும் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு.</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்த கையெழுத்தாகிறது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/z3y0ou8m/keerthana.jpg" /></figure><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு - அமைச்சர் கீர்த்தனா</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது - அமைச்சர் கீர்த்தனா</p> <p>முதலமைச்சர் முன்னிலையில் இந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது.</p><p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p> <p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.</p><p>தனியார் நிறுவனங்களில் பணி பெற்றோருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-mumbai-landslide-kurla-six-killed">மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: கட்கோபர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 6 பேர் பரிதாப பலி; மீட்புப் பணிகள் தீவிரம்!...</a> </p><p>*7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>*நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மிகவும் குறுகலான பாதைகளைக் கொண்டதாக இருப்பதால், பெரிய இயந்திரங்களை அங்கு கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/digital-arrest-scam-10-74-crore-popular-social-media-influencer-held-in-pune">ரூ.10.74 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் புனேயில் கைது!</a></p><p>* ரூ.10.74 கோடி மோசடி: புனே 82 வயது முதியவரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என பணம் பறிப்பு.</p><p>* இன்ஃப்ளூயன்ஸர் கைது: ரீல்ஸ் பிரபலம் ரோஹன் ஜாதவ் போலி வங்கி கணக்கு கொடுத்ததாக போலீஸ் கைது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-uproar-kharge-demands-case-over-purification-ritual-after-his-speech">என்னைத் தீண்டத்தகாதவனாக நடத்துகிறீர்கள்.. மாநிலங்களவையில் கொந்தளித்த கார்கே - என்ன நடந்தது?</a></p><p>*என்னைத் தீண்டத்தகாதவராக நடத்தி, மேடையைச் 'சுத்தம்' செய்து அவமானப்படுத்துகிறீர்கள்.</p><p>*கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த சடங்கு நடத்தப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/telangana-rice-mills-raid-government-recovers-rs-700-crore-paddy-dues">தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!... </a></p><p>*தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. </p><p>*நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-issues-new-regulations-for-loan-interest-rates-across-india">கடன் வட்டி விகிதங்களில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியீடு!</a></p><p>* புதிய விதிகள் ஏப்ரல் 1, 2027 முதல் அமல்: வங்கிகள், NBFC அனைத்திற்கும் தினசரி குறையும் நிலுவை வட்டி கட்டாயம்.</p><p>* பழைய கடன் மாற்றம் 2029 வரை: ஒருமுறை மட்டும் வாய்ப்பு, கூடுதல் கட்டணம் வசூலிக்கவோ வட்டி உயர்த்தவோ கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-all-out-198-runs-against-bangladesh-in-first-test">வங்கதேசம் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்</a></p><p>* வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bali-island-tragedy-passenger-boat-fire-211-rescued-19-year-old-woman-dead">பாலி தீவு அருகே பயங்கரம்: பயணிகள் படகில் தீ விபத்து - 211 பேர் மீட்பு, இளம் பெண் பலி!</a></p><p>* பாலி தீவு அருகே லோம்போக் சென்ற 'புத்ரி யாஸ்மின்' படகில் அதிகாலை 4:15 மணிக்கு தீப்பிடித்தது.131 பேர் என்ற பட்டியல் இருந்தும் 211 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். </p><p>* இந்த விபத்தில் 19 வயது இந்தோனேசிய பெண் உயிரிழந்தார், மேலும் 5 பேரை தேடும் பணி நடக்கிறது</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhirs-head-coach-job-safe-or-unsafe-bccis-decision-made">தொடர் தோல்வி எதிரொலி: 2027 உலகக் கோப்பை வரை பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா கம்பீர்?</a></p><p>* இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் காயத்தால் விலகினர்.</p><p>* கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 டிசம்பர் வரை இருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-announce-squad-for-first-test-against-india">இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை அணி அறிவிப்பு</a></p><p>* இலங்கை, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் காலேயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த டெஸ்ட் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/nellai-royal-kings-beat-kovai-kings-in-tnpl-2026">டிஎன்பிஎல்: ரித்திக் ஈஸ்வரன் அதிரடியில் கோவையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது நெல்லை</a></p><p>* முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 162 ரன்களை எடுத்தது.</p><p>* நெல்லை அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது.</p>]]></content:encoded></item><item><title>புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டவை தான்: முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja#comments</comments><guid isPermaLink="false">167608f3-be1f-4010-bbeb-8277a4f8260b</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:29:18 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:29:18.233Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TRB Raja,டிஆர்பி ராஜா,tvk,MoU,முதல்வர் விஜய்,CMVIJAY,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3dkr8c4h/Untitled-design-49.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 75% ஒப்பந்தங்கள் DMK ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டவை என டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Investment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3dkr8c4h/Untitled-design-49.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கிண்டியில் நடைபெற்ற "வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026" நிகழ்வில் முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புதிய தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியுள்ளன.</p><p>மேலும் தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள், 104 ஒப்பந்தங்கள் மூலம் ஒட்டுமொத்த முதலீடுகள் ரூ.1,02,514 கோடியைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். </p><h3><strong>முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா</strong></h3><p>இந்நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 75% திமுக ஆட்சியில் பேசி முடிக்கப்பட்டவையே என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><p>“எனது தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாக அதன் தொழில் வளர்ச்சி ஆகியவற்றை விட முக்கியமானது எனக்கு வேறொன்றும் இல்லை. </p><p>எங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்கு மகிழ்ச்சியையே தருகின்றன. ஆட்சியில் எந்த அரசு இருந்தாலும். </p><p>அதனால்தான், இன்று அறிவிக்கப்பட்ட 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. இன்றைய தொழில்முனைவோர் மாநாட்டில் செய்தியாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பதே தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலை முன்னிறுத்துவதில், சென்னையைச் சேர்ந்த வணிகச் செய்தியாளர்கள் மிக வலுவான பங்களிப்பை அளித்து வந்துள்ளனர்.</p><p>அப்படிப்பட்டவர்களை ஏன் இந்த மாநாட்டிலிருந்து விலக்கி வைத்தார்கள்? மேலும், அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?</p><p>கிடைத்த தகவல்களைத் தொகுத்துப் பார்க்கையில் பின்வரும் உண்மைகள் தெரியவருகின்றன:</p><p>சுமார் 70 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (மொத்த முதலீட்டு மதிப்பில் 75% மற்றும் வேலைவாய்ப்புகளில் 83%-ஐக் கொண்டவை) ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்களாகவோ அல்லது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 'திராவிட மாடல்' அரசால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட முதலீட்டு முயற்சிகளாகவோ உள்ளன.</p><p>'டைட்டன்' நிறுவனத்துக்கான ரூ.1,000 கோடி மதிப்பிலான முதலீடு என்பது, TIDCO மூலமாக அந்த நிறுவனத்துடன் மாநில அரசுக்கு ஏற்கனவே உள்ள உறவின் அடிப்படையில் அமைந்ததாகும்.</p><p>புதிய அல்லது புதிதாக அமையக்கூடிய முதலீடுகள் அனைத்தையும் தாராளமாக கணக்கில் கொண்டாலும், அவை மொத்தம் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே; இது மொத்த முதலீட்டு மதிப்பில் சுமார் 23% மற்றும் வேலைவாய்ப்புகளில் 15% மட்டுமே ஆகும்.</p><p>நான் மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், தொழில் விரிவாக்கம் வரவேற்கத்தக்கது.</p><p>முதலீட்டு முயற்சியை இறுதி முதலீடாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு வேலைவாய்ப்பும் வரவேற்கத்தக்கது.</p><p>ஆனால், முந்தைய ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட, பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட ஒரு முதலீட்டை, வெறும் புதிய மாநாடு ஒன்றில் முன்வைக்கப்பட்டதற்காக மட்டும் 'புதிய சாதனை' என்று கூறிவிட முடியாது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் தொழில் வெற்றி என்பது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் சொத்தும் அல்ல; திமுகவும் இதை மதித்து வந்துள்ளது.</p><p>அதனால்தான், பன்முகத் திறமை கொண்ட எங்கள் தொழில் சூழலமைப்பின் வலிமையையும், எங்கள் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் சிறப்புகளையும் நாங்கள் முன்னிலைப்படுத்திப் பெருமை கொண்டோம்.</p><p>முந்தைய அரசு ஒரு தொழில் சூழலமைப்பை உருவாக்கியது, முதலீட்டாளர்களை ஈர்த்தது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, முதலீட்டு முயற்சிகளை வளர்த்தெடுத்தது மற்றும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது.</p><p>தற்போதைய அரசு புதிதாகக் கொண்டுவரும் விஷயங்களை நியாயமான கண்ணோட்டத்துடன் அணுகுவதோடு, அது உண்மையில் செய்து முடித்தவற்றுக்கான அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும்.</p><p>இதன் காரணமாகவே, 'இந்தியத் தொழில்முனைவோர் சங்கம்' இன்று முன்வைத்த கருத்து கவனத்திற்குரியதாகிறது.</p><p>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீடுகள், உற்பத்திகள், வேலைவாய்ப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், ஆகிய இன்று ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டும்.</p><p>அவர்கள் அதை ஆய்வு செய்யட்டும். எது உண்மையாகவே புதியது, எது விரிவாக்கம் சார்ந்தது, எது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளட்டும்.</p><p>விளம்பரங்களில் கூறப்படுவது போல அந்த எண்கள் ஈர்க்கக்கூடியதாக இருந்தால், வெளிப்படைத்தன்மை அந்தச் சாதனையை மேலும் வலுப்படுத்தும். தமிழ்நாடு இதற்குச் சற்றும் குறைவானதை ஏற்காது.</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை கொள்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-pm-modi-to-review-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-pm-modi-to-review-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">d564e1ef-e139-4e40-ac7f-3e1498b700ca</guid><pubDate>Thu, 13 Aug 2026 16:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T16:13:55.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Modi,பிரதமர் மோடி,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,முதல்வர் விஜய்,CMVIJAY</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g1i2hwzb/Untitled-design-48.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை நிலைநிறுத்தம் மற்றும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கோரி முதல்வர் விஜய், மோடிக்கு கடிதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Delimitation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/g1i2hwzb/Untitled-design-48.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில்:-</p><p>ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை பரிசீலிக்க வேண்டும்.</p><p>மேலும் அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><p>நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்தல்; பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள் மீது தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நடைபெற்ற விவாதங்கள், இதன்மூலம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.</p><p>இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.</p><p>அந்த தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடரவும்,</p><p>மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கு (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்),</p><p>மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தை 2.2:1 என்ற நிலையில் பேணுவதற்கும்,</p><p>தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும்,</p><p>தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பகிர்வை, ’மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்’ நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் பின்னணியில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மேற்கொள்ளப்பட்டால், 1967-தமிழ்நாட்டின் மறுவரையறை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது.</p><p>மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்கு பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய மாற்றியமைக்கும் மறுறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக உள்ளது.</p><p>தீர்மானத்தில் பின்வருன வலியுறுத்தப்பட்டுள்ளன:</p><p>1) மக்களலையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்.</p><p>2) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிவேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதாவது மாநிலங்களுக்கு தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.</p><p>3) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) ஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை றுத்துகிறது.</p><p>மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீர்மனைத்தின் நகலை இதனுடன் இணைத்திருக்கிறேன்.</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பேரவையால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை பரிசிலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கையில் உள்ள 49 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-urges-release-of-49-indian-fishermen-held-in-sri-lanka#comments</comments><guid isPermaLink="false">922c421c-3636-4e4c-82f0-e65dd42e5413</guid><pubDate>Thu, 13 Aug 2026 15:44:59 +0000</pubDate><atom:updated>2026-08-13T15:44:59.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படை,அமைச்சர் ஜெய்சங்கர்,Jaisankar,tamilnadu fisherman,SriLanka Jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/od8k3ryq/Untitled-design-47.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 49 மீனவர்களை விடுவிக்க வெளியுறவுத்துறைக்கு முதல்வர் விஜய் கோரிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/od8k3ryq/Untitled-design-47.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>மேலும் மீனவர்களின் மீன்பிடி படகை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் முதலமைச்சர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h3><strong>வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்</strong></h3><p>இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், “12.08.2026 அன்று இரவு IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.</p><p>இந்த சம்பவம் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் தனிப்பட்ட கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் ஏற்பட்டு மிருந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.</p><p>இந்த நாள் வரையில் 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாக தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h3><strong>விரைந்து நடவடிக்கை</strong></h3><p>மேலும், இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இந்த விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிர்மதியையும் அளிக்கும்.</p><p>இந்த கடிதம் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின், உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 17-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-17th#comments</comments><guid isPermaLink="false">10293906-78d5-4ae3-b618-a66a79d53813</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:30:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:30:55.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hutmt8ns/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hutmt8ns/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>17-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 17-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 17-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி: தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-urges-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-urges-tn-govt#comments</comments><guid isPermaLink="false">bbc6220a-8e21-4ede-90b2-fbb415889e59</guid><pubDate>Thu, 13 Aug 2026 10:18:09 +0000</pubDate><atom:updated>2026-08-13T10:18:09.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,தமிழக அரசு,பட்டாசு ஆலை வெடி விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hsj0shq4/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/hsj0shq4/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.  சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், ஒருவர் படுகாயமடைந்திருப்பதும் வேதனைக்குரியது.</p><p>தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து குணமடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது.</p><p>பட்டாசு ஆலைகளில் அன்றாடம் வேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளிகளின் உயிருக்கு எப்போது ஆபத்து நேரும் என்று தெரியாமலேயே உழைக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். அப்படியென்றால் பட்டாசு ஆலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.</p><p>தமிழக அரசும் பட்டாசு ஆலைகளை தொடர் கண்காணிப்பின் மூலம் ஆய்வு செய்து முறையாக சரியாக இயக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.</p><p>பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க தொடர்ந்து தாமதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/continued-delay-in-launching-metro-rail-service-on-the-poonamallee-vadapalani-route</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/continued-delay-in-launching-metro-rail-service-on-the-poonamallee-vadapalani-route#comments</comments><guid isPermaLink="false">25165cc3-94e9-40f8-b87f-134930159d51</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:43:54 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:43:54.439Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பூந்தமல்லி,Poonamallee,Metro Train,Chennai metro,சென்னை மெட்ரோ,vadapalani,வடபழனி,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b5nbt29/Metro.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b5nbt29/Metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</strong></em> </p><p>சென்னையில் 2ம் கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் ஒன்றாகும். </p><h2><strong>பாதுகாப்பு</strong></h2><p>இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும் கோடம்பாக்கம் பவர் அவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்ட பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும் 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் இதில் இடம் பெறுகின்றன. </p><p>4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக பூந்தமல்லி- வடபழனி வரை 14.6 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. </p><p>பல கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்க பிப்ரவரி மாதம் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><h2><strong>முதலமைச்சர் ஆய்வு</strong></h2><p>ஆனால் சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமானது. தேர்தல் முடிந்து புதிதாக த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">விஜய்</a> கடந்த சில நாட்களுக்கு முன்பு மெட்ரோ ரெயிலில் பயணித்து திட்டத்தை ஆய்வு செய்தார்.  அப்போது அவரிடம் பூந்தமல்லி- வடபழனி -மெட்ரோ ரெயில் சேவை  தொடங்குவதில் உள்ள தாமதம் குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.</p><p>இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க  தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கடிதம் எழுதி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தேதி தரப்படவில்லை. </p><p>5 மாதங்களாக சேவையை தொடங்குவதற்கான தேதி இறுதிச் செய்யப்படாததால் பொதுமக்கள் வெறுப்பில் உள்ளனர். பணிகள் முடிந்த பிறகு கூட அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர தாமதம் செய்வதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். </p><h2><strong>அதிகாரி தகவல்</strong></h2><p>இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- </p><p>இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீதமும் மாநில அரசு 50 சதவீதமும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது  பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால் இன்னும் தேதி உறுதி செய்யப்படவில்லை. இது பற்றி முதலமைச்சரிடமும் தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் தகவல் வரலாம் என்று எதிர்பார்க்கிறோம். மெட்ரோ ரெயில் சேவையை காணொளி  மூலம் திறந்து வைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரதமர் திறப்பு விழா தேதி தருவதில் உள்ள  தாமதம் தான். மத்திய நகர்ப்புற  வளர்ச்சித் துறையிடம் இருந்து தகவல் வந்த ஓரிரு நாட்களில்  சேவை தொடங்கும். </p><h2><strong>தினமும் சோதனை</strong></h2><p>இதற்கிடையில் இந்த வழித்தடத்தில் தினமும் டிரைவர் இல்லாமல்  சோதனை நடைபெறுகிறது.  சேவை தொடங்கிய முதல் 3 மாதங்கள் டிரைவருடன் மெட்ரோ ரெயில் இயங்கும். அதன் பின்னர் டிரைவர் இல்லாமல்  இயக்கப்படும். </p><p>இந்த வழித்தடத்தில் 13 மெட்ரோ ரெயில்கள் இயக்க தயாராக உள்ளன. கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக சேவையை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.  கூடுதலாக 25 மெட்ரோ ரெயில்கள் தயாராக இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனையும் பயன்படுத்துவோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து- 3 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed#comments</comments><guid isPermaLink="false">1d19f918-9823-4ab5-80cb-905db94349ec</guid><pubDate>Thu, 13 Aug 2026 09:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T09:32:51.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,வெடி விபத்து,Fireworks,Bomb Explosion,பட்டாசு ஆலை விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9v15s619/sivakasi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakasi explosion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9v15s619/sivakasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.</p><p>சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள கிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>வெடி விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து புகை மூட்டமாக உள்ளதால் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் - எங்கே தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fine-of-rs-5000-for-unmarried-youths-consuming-alcohol#comments</comments><guid isPermaLink="false">3174c857-cb28-4891-a333-f208e450aa3d</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:28:02 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:28:02.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுப்பழக்கம்,Nagapattinam,நாகப்பட்டினம்,Youngsters,அபராதம்,இளைஞர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fine youths consuming alcohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/34xo83wg/youths-.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.</strong></em></p><h2>விழுந்தமாவடி</h2><p>போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>விழிப்புணர்வு பேனர்</h2><p>இந்த நிலையில், மதுப் பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.</p>  <h2>அபராதம்</h2><p>அதில், பொதுமக்கள் கவனத்திற்கு... நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன் பொதுசுகாதாரம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு 02.08.2026 முதல் ஊரில் திருமணம் ஆகாதவர்கள் (இளைஞர்கள்) மது அருந்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p> <h2>குடிபோதை</h2><p>மேலும் திருமணம் ஆகாதவர்கள் மது அருந்துவதை ஆதாரத்துடன் நீரூபிக்கப்பட்டால் ரூ.5,000/- அபராதம் வசூலிக்கப்படும். இதனுடன் திருமணம் ஆனவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ பிரச்சனைகள் ஏற்பட்டு நமது ஊருக்கு வரும் பட்சத்தில் ரூ.5,000/-அபராதம் வசூலிக்கப்படும். “இந்த நல்ல முயற்சிக்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்”.</p> <h2>மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!</h2><p>இன்றைய சரியான முடிவு நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் மதுவை தவிர்போம், நம் எதிர்கால வாழ்கையையும், நம் சமூகத்தையும் பாதுகாப்போம்... ‘மதுவை ஒழிப்போம்! மக்களை காப்போம்!!” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், விழுந்தமாவடி ஊர் மக்களின் இத்தகைய முடிவு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு- 35 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/periyar-dam-extra-water-opened-vaigai-dam-level-touches-35-feet#comments</comments><guid isPermaLink="false">5a02e2ce-fdfd-4eb3-9358-992d4ec804d5</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:13:55.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தண்ணீர் திறப்பு,vaigai dam,Periyar dam,வைகை அணை,பெரியாறு ஆணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaigai Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/622nj05n/dam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.</p><p>மேலும், முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு வனப்பகுதிகளில் பெய்யும் மழை மூலம் வைகையாறு வழியாக வைகை அணையை வந்து சேருகிறது.</p><p>மேலும் முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஆண்டு சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழை முற்றிலும் இன்றி மூல வைகையாறு வறண்டது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.</p><p>தற்போது கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முல்லை பெரியாறு அணை நீர்–மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>இன்று காலை அணையின் நீர்மட்டம் 34.97 அடியாக உள்ளது. 220 கன–அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 604 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><h2>பெரியாறு அணை</h2><p>முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. 687 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 800 கனஅடி நீர் திறக்–கப்படுகிறது. அணையில் 3212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.</p><p>மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.30 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 56.58 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. </p><p>சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. பெரியாறு அணை 19, தேக்கடி 3 மி.மீ. மழை–யளவு பதவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>821 பணியிடங்களை மட்டும் நிரப்புவதா?: இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-filling-only-821-vacancies-the-youth-must-not-be-betrayed#comments</comments><guid isPermaLink="false">9950d984-9895-4b2b-b6ca-659f33808f04</guid><pubDate>Thu, 13 Aug 2026 08:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-13T08:08:39.172Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,காலி பணியிடங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/czq3nwsz/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &amp;2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி  அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.</p><p>இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.</p><p>2011&amp;ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, 2021 ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&amp;ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&amp;ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&amp;ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும்  வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.</p><p>தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.</p><p>ஆனால்,  பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது;  அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.</p><p>2026&amp;ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக  அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு   உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு  வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை தாண்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-crossed-80-feet#comments</comments><guid isPermaLink="false">5ded8579-50a0-4616-ad46-ecd53638976b</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:41:47.841Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,Hogenakkal,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,ஒகேனக்கல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/zd9v02bk/metturdam3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது.</strong></em></p><h2>தென்மேற்கு பருவமழை</h2><p>கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. </p> <h2>நீர்மட்டம்</h2><p>இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 8448 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 109.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>ஒகேனக்கல் பரிசல் இயக்க தடை</h2><p>இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு</a> நேற்று மாலை வினாடிக்கு 8583 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 7833 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.</p> <h2>80 அடியை தாண்டியது</h2><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.31 அடியாக இருந்தது. கர்நாடகாவில் மழையின் தீவிரம் அதிகரித்து உபரிநீர் திறப்பு அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்..!- பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/historic-resolutions-passed-in-assembly-golden-kodi-armstrong-welcome#comments</comments><guid isPermaLink="false">2e5fc61b-2ac4-4bc5-b130-929a2b587760</guid><pubDate>Thu, 13 Aug 2026 07:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-13T07:10:18.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தீர்மானங்கள் நிறைவேற்றம்,பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Porkodi Armstrong]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/ckb6x8m6/porkodi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சட்டமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட சரித்திர சிறப்புமிக்க  தீர்மானங்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் விளிம்பு நிலை மக்களின் மருத்துவக் கல்வியை கருத்தில் கொண்டும் மருத்துவக்கல்வி கார்ப்பரேட் மயமாவதை தடுத்து நிறுத்தும் பொருட்டும் கொண்டு வரப்பட்ட நீட் ஒழிப்பு தனித்தீர்மானம், சிறுபான்மையினரின் கல்வி  நிறுவனங்கள் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களை முடக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும்  வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்சி ஆர்ஏ) திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக் கீட்டை தாமதப்படுத்தாமல் நிறைவேற்ற வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானம், தமிழகத்தின் 7.18 சதவீத நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை  குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானம் என தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அனைத்து தீர்மானங்களையும்  தமிழ்மாநில பகுஜன் சமாஜ் கட்சி  பாராட்டி வரவேற்கிறது.</p><p>மேலும், நம் மாநில  நலன் கருதியும் மக்களின் நலன் கருதியும் இதுபோன்று எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை  தமிழக முதல்வர் முன்னெடுத்தாலும்  தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி அதை வரவேற்பதோடு அரசுக்கு உறுதுணையாகவும் நிற்கும் என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறது. தொடரட்டும் நல்லவை மட்டும். பாராட்டுகள்.</p><p>இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு- 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avid-group-7000-crore-investment-creates-12000-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avid-group-7000-crore-investment-creates-12000-jobs#comments</comments><guid isPermaLink="false">216cc896-27f0-4b3a-b2c2-b6e5865f360f</guid><pubDate>Thu, 13 Aug 2026 06:39:51 +0000</pubDate><atom:updated>2026-08-13T06:39:51.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலீட்டாளர்கள் மாநாடு,Memorandum of Understanding,தவெக அரசு,TVK Govt,புரிந்துணர்வு ஒப்பந்தம்,Tamilnadu conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3qfavcq3/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3qfavcq3/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.</p><p>சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.</p><p>அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><h2>97 புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>முதலமைச்சர் முன்னிலையில் ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>ஹிந்துஜா குரூப் நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</p><p>அக்னி கோல் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.</p><p>டைட்டன் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>மின் வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வைலட் தமிழகத்தில் ரூ.777 கோடி முதலுடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>கேப்லின் குரூப் நிறுவனம் ரூ.925 கோடியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>ஜே.கே. டயர்ஸ் ரூ.5,143 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>தூத்துக்குடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.250 கோடி முதலீடு செய்கிறது ஸ்கை ரூட்.</p><p>ரூ.1000 கோடியில் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>செயிண்ட் கோபைன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.2,000 கோடி முதலீடு செய்தவற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>அவிட் குரூப் ரூ.7000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மலம், 12,000 பேருக்கு வேலை வாய்ப்பு.</p><p>ரூ.400 கோடி முதலீட்டில் 1500 பேருக்கு வேலை தரும் வகையில் தூத்துக்குடியில அக்னிகுல் காஸ்மோஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்.</p><p>அமெரிக்காவை சேர்ந்த FORTUNE நிறுவனம் 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.477 கோடி முதலீடு செய்கிறது.</p><p>ஜப்பானின் YKK நிறுவனம் திருவள்ளூரில் ரூ.1651 கோடி முதலீட்டில் 4,316 பேருக்கு வேலை தரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.</p><p>ஷைலி என்ஜினீயரிங் பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீடு.</p><p>ஆஸி.ன் Avid Group திருவள்ளூர், தூத்துக்குடியில் ரூ.7000 கோடி முதலீட்டில் 12,000 பேருக்கு வேலை தரும் வகையில் ஒப்பந்தம்.</p><p>ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான BIZER தமிழகத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>ஜெர்மனி நாட்டை சேர்ந்த டைம்லர் நிறுவனம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.4,000 கோடி முதலீடு செய்கிறது. </p><p>WOWsemi நிறுவனம் கோவையில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டம்.</p><p>அடுத்த 2 ஆண்டில் ரூ.75 கோடி முதலீட்டில் Wafer on Wheels அனுபவ மையம், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளில் 75,000-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து, 15,000 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.</p><p>ரஷியாவின் முன்னணி வங்கியான SBER BANK தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/victory-tamil-nadu-investors-conference-97-mous-signed#comments</comments><guid isPermaLink="false">c3578f43-c350-48a1-9b70-2f19fbaef8e9</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:54:00 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:54:00.142Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,முதலீட்டாளர்கள் மாநாடு,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/9vnhop3k/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது.</p><p>சென்னை கிண்டியில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>அதன்படி, தவெக அரசு ஆட்சியமைத்து முதன்முறையாக நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.</p><p>மாநாட்டில் 1,06,998 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.</p><p>100 நாட்களுக்குள் தவெக அரசு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தொழில்துறையில் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமாகிறது.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>தமிழக வெற்றிக்கழகத்தில் 100 நாள் ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு.</p><p>முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழக அரசின் அனைத்து துறைகளும் ஓரணியில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து: திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரெயில் நிறுவனம் டெண்டர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/boat-traffic-on-buckingham-canal-metro-rail-corporation-tenders-to-prepare-project-report#comments</comments><guid isPermaLink="false">72ce0f65-8521-4344-ac81-c5f0b9729fe6</guid><pubDate>Thu, 13 Aug 2026 05:52:28 +0000</pubDate><atom:updated>2026-08-13T05:52:28.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,மெட்ரோ ரெயில்,Water Metro Project,வாட்டர் மெட்ரோ திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/1b6sx24n/Metrowater.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது.</strong></em></p><p>சென்னை பெருநகரை சுற்றி ஓடும் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் போன்றவை பருவமழை காலங்களில் வெள்ளப்பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒரு காலத்தில் ஆறுகளாக இருந்த இவை தற்போது குறுகி கால்வாயாக சுருங்கி விட்டது. </p><h2><strong>முகம் சுளிக்க வைக்கிறது</strong></h2><p>பெருகிவரும் குடியிருப்புகள், மக்கள் நெருக்கத்தின் காரணமாக கால்வாய்கள் ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. பெருநகர சென்னை என்ற அந்தஸ்தை சென்னை பெற்றாலும் இந்த கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.  </p><p>ஆங்கிலேயர் காலத்தில் படகு போக்குவரத்து பக்கிங்காம் கால்வாயில் இருந்துள்ளது. காலப்போக்கில் அந்த அடையாளமே தெரியாமல் கூவமாக மாறிவிட்டது.</p><h2><strong>தூய்மைப்படுத்த முயற்சி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ரோ-ரெயில்">சென்னை</a> பெருநகரை அழகுப்படுத்தும் விதமாக பல்வேறு  திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றையும் தூய்மைப்படுத்த முயற்சி மேற்கொண்டது. </p><p>இந்த நிலையில் ‘வாட்டர் மெட்ரோ திட்டம்’  என்ற புதிய முயற்சி மூலம் பக்கிங்காம் கால்வாயை புதுப்பித்து அதில் படகு போக்குவரத்து தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.</p><p>சென்னையில் வாட்டர் மெட்ரோ சேவையை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரையின் அடிப்படையில் அதன் சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. </p><h2><strong>படகு போக்குவரத்து</strong></h2><p>எண்ணூரில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை 53 கி. மீட்டருக்கு இந்த கால்வாயில் படகு போக்குவரத்து தொடங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். </p><p>சென்னையை அழகுப்படுத்தும் நோக்கு மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மூலம் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. </p><h2><strong>திட்ட அறிக்கை</strong></h2><p>முதற்கட்டமாக முட்டுக்காடு-நேப்பியர் பாலம் வரை 30 கிலோ மீட்டருக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை முழுமையாக வாட்டர் மெட்ரோ திட்டம் கொண்டு வர திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்த புள்ளியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. </p><p>இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கப்படும். அதன் பின்னர் இதனை செயல்படுத்துவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/platforms-1-to-5-at-egmore-railway-station-closed#comments</comments><guid isPermaLink="false">b13b98c2-a7dc-4379-af06-ac5a9086fa0f</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:47:35 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:47:35.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ எழும்பூர் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/4kbngydy/chennaiegmore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.</strong></em></p><h2><strong>மறுசீரமைப்பு பணி</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரம்</a> நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2><strong>தண்டவாளங்கள் மூடல்</strong></h2><p>இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'மறுசீரமைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும். </p><p>தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்' என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காந்தியவாதி பிராங்க்ளின் ஆசாத் காந்தி அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-dedication-of-gandhian-franklin-azad-gandhi-is-praiseworthy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-dedication-of-gandhian-franklin-azad-gandhi-is-praiseworthy#comments</comments><guid isPermaLink="false">04e91e46-76f1-425d-b5a6-8afdf53b7612</guid><pubDate>Thu, 13 Aug 2026 04:40:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T04:40:19.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,காந்தியவாதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/mxy952lz/annamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மூத்த காந்தியவாதி டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்திக்கு அண்ணாமலை பாராட்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ மூத்த காந்தியவாதி டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்திக்கு அண்ணாமலை பாராட்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/mxy952lz/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்திய சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதி டாக்டர் சி. பிராங்க்ளின் ஆசாத் காந்திக்கு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, ஐயா டாக்டர் சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.</p><p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரசாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.</p><p>திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 1½ மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம். </p><p>ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஐயா டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, ஐயா டாக்டர் திரு. சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு… <a href="https://t.co/Te7L92TZmf">pic.twitter.com/Te7L92TZmf</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2087732989769683225?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நாளை சென்னையில் மின் தடை: திருவொற்றியூர் பகுதி மக்களின் கவனத்திற்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-37</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-37#comments</comments><guid isPermaLink="false">fae66a03-afd4-4968-b0e1-a1850eac1c54</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:41:23.002Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,தமிழக மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3m65t831/powercut.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின் தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/3m65t831/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><p>டி.எச். சாலை, ராஜா கடை, திருச்சினாங்குப்பம், கன்னிகோவில் தெரு, அப்பர்சாமி கோவில் தெரு, கணக்கர் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, மார்கெட் லேன், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, சாத்தாங்காடு பகுதி, நியூ தெரு, வசந்தா நகர், ஜான்ரவார் தெரு, ஐய்யப்பள்ளி தோட்டம், ஷேசாச்சல கிராமணி தெரு, திலகர் நகர், சின்னமேட்டுபாளையம், பெரியமேட்டுபாளையம், மேற்கு மற்றும் வடக்கு மாட வீதி, பிகேஎன் காலனி, வீரராகவன் தெரு, குமரன் நகர், கோமாதா நகர், பிபிடி சாலை.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,120 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2120-special-buses-operated-across-tamil-nadu-for-the-weekend#comments</comments><guid isPermaLink="false">401765eb-4351-43b6-9f18-aa8771f20002</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:30:16 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:30:16.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Special buses,சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-13/93vrv0zd/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.</strong></em> </p><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து முனையங்கள் மற்றும் பிற நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்புப் பேருந்துகளை</a> இயக்க தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. </p><p>இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம் பேருந்து முனையம்</strong></h2><p>கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 505 சிறப்புப் பேருந்துகள், 15-ந் தேதி (சனிக்கிழமை) 570 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>கோயம்பேடு பேருந்து முனையம்</strong></h2><p>கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்,  15-ந் தேதி (சனிக்கிழமை) 110 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>மாதவரம் பேருந்து முனையம்</strong></h2><p>மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு  14 மற்றும் 15-ந் தேதிகளில் நாள் ஒன்றுக்கு தலா 80 சிறப்புப் பேருந்துகள்.</p><h2><strong>பிற மாவட்டங்கள் &amp; சென்னை திரும்பும் பேருந்துகள்</strong></h2><p>வெளி மாவட்டங்கள் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. </p><h2><strong>சென்னை/பெங்களூரு திரும்பும் வசதி</strong></h2><p>வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவைகேற்ப பல்வேறு இடங்களில் இருந்து 465 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-tamil-nadu-on-16th#comments</comments><guid isPermaLink="false">69e290e0-9203-4e37-a49e-9521cbe22b26</guid><pubDate>Thu, 13 Aug 2026 03:25:47 +0000</pubDate><atom:updated>2026-08-13T03:25:47.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/22/26891876-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துணை ஜனாதிபதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D">சி.பி.ராதாகிருஷ்ணன்</a> செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். </p> <h2>பட்டமளிப்பு விழா</h2><p>அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர்னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.</p> <p>அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.</p> <p>இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர்  கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/9-rameswaram-fishermen-arrested-sri-lankan-navy-action#comments</comments><guid isPermaLink="false">1019d4c2-1f3e-4e80-877d-245498ffb156</guid><pubDate>Thu, 13 Aug 2026 02:58:19 +0000</pubDate><atom:updated>2026-08-13T02:58:19.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srilankan Navy,தமிழக மீனவர்கள் கைது,இலங்கை கடற்படை,Fishermen Arrested,TN Fishermens Arrest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/09/9104140-fishermen.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/02/09/9104140-fishermen.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.</strong></em></p><h2>ராமேஸ்வரம் மீனவர்கள்</h2><p>ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர்.</p> <h2>இலங்கை கடற்படை</h2><p>நடுக்கடலில் மீன்பிடித்தபோது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். விசைப் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். </p> <h2>மீனவர்கள் வேதனை</h2><p>5 நாட்களுக்கு முன்பு ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதியில் கரை ஒதுங்கியதால் 11 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">மீனவர்கள் கைது</a> செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். </p><p>இந்தநிலையில் மீண்டும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்தது ராமேசுவரம் மீனவர்களை வேதனை அடையச்செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026#comments</comments><guid isPermaLink="false">2688edc8-8b1b-44e4-a900-ccc79547ce8d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:59:22 +0000</pubDate><atom:updated>2026-08-13T01:58:49.309Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</a></p> <p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்</p><p>மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை  அல்ல சமூக நீதி.</p><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.</p><p>உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.</p><p>ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.</p><p>நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்</p><p>மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி</p><p>முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.</p><p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக  உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி</h2><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?</p><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p> <p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது -  எம்எல்ஏ ராமச்சந்திரன்</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா</p><h2>தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை</h2><p>சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?</p><p>தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.</p><p>10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.</p><p>முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.</p><p>தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.</p> <h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை</h2><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?</p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p> <p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும். </p><p>தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் -  பாமக எம்எல்ஏ</p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p> <p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.</p><p>தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.</p><p>இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு</p> <h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.</p> <h2>தமிமுன் அன்சாரி  உரை</h2><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா</p><p>2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா</p> <p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்</p><h2>தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்</h2><p>வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்</p><p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்</p><h2>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.</p> <p>மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.</p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p> <p>திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.</p><p>Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி</p><p>2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். </p><p>ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.</p><p>Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.  </p><p>33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p> <p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <p>5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p> <p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.</p><p>போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.</p><p>புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்</p><p>தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு</p> <p>3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ</p><p>மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு</p><p>சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்</p><p>பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.</p><p>குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு வெற்றி பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் </p><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் - அமைச்சர் மரிய வில்சன் </p> <h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும்.</p><p>எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம்.</p><p>திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p> <p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு - அமைச்சர் மரிய வில்சன் </p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது.</p><p>திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>விபி ஜிராம்ஜி திட்டம், கடன் தள்ளுபடி, 200 யூனிட் மானியத்துக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p> <p>முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்று சிறப்பாக விளக்கம் தந்த நிதியமைச்சர் மரியவில்சனுக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>திருத்த பட்ஜெட்டில் வருவாய் அதிகரிக்க வேண்டுமே? </p><p>ரூ.16,000 கோடி அதிக வருவாய் என்றால் பட்ஜெட்டில் ஏன் வித்தியாசம்? - எடப்பாடி பழனிசாமி </p><p>60 நாளில் சொந்த வரி வருவாயை உயர்த்தி இருக்கிறோம் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><h2>திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>3 மாதத்தில் ரூ.15,000 கோடி வருவாய் என சொன்ன நிலையில் எதன் வழியாக வந்தது என விளக்கம் தருக.</p><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.7,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை.</p><h2>நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</h2><p>ஆயத்தீர்வு துறை மூலமாக ரூ.1,500 கோடி, மோட்டார் வாகன வரி ரூ.750 கோடி வருவாய் வந்துள்ளது.</p><p>அதிக கடன் வாங்கக்கூடாது என்பதில் முதலமைச்சர்  விஜய் உறுதியாக உள்ளார்.</p><h2>வேளாண் அமைச்சர் வினோத் உரை</h2><p>திமுக தலைவர் ஸ்டாலின் தவெக வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார்.</p><p>தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்.</p><p>இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார்.</p><p>வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.</p> <p>பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றி உள்ளோம்.</p><p>தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது - அமைச்சர் வினோத்</p><p>ரூ.134 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு காப்பீடு - அமைச்சர் வினோத்</p> <p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் வினோத்</p><p>அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது - அமைச்சர் வினோத்</p><p>சூரியனுக்கே வியர்த்தது என்ற அமைச்சரின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி</p><p>இதுவரை யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன வசதி செய்து தருமாறு விசிக எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்,"கிள்ளி கொடுப்பவர் அல்ல, அள்ளி கொடுப்பவர் முதல்வர்; எம்எல்ஏ கோரிக்கையை முதல்வர் கவனம் கொண்டு செல்கிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-10-ips-officers#comments</comments><guid isPermaLink="false">46d5636d-973b-4adc-95cd-2de9a779ad14</guid><pubDate>Wed, 12 Aug 2026 15:52:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T15:52:44.932Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/pzkntppc/New-Project-2026-08-12T212222.632.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி.,</p><p>அபின் தினேஷ் மொடக்கிற்கு பதிலாக சிபிசிஐடி டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>பால நாகதேவி வகித்த சைபர் கிரைம் ஏடிஜிபி பொறுப்பிற்கு அபின் தினேஷ் மொடக் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>சிஐடியின் க்யூ பிராஞ்ச் எஸ்.பி.யாக ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பியாக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகர் காவல்நிலைய துணை ஆணையராக அர்பிதா ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p><p>தமிழ்நாடு கமாண்டோ எஸ்.பி.யாக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை கடலோர பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாக செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>