<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 06:20:54 +0000</lastBuildDate><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins#comments</comments><guid isPermaLink="false">61a4fd50-a9ee-46af-a4cb-51b3bffcdf1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:19:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:19:44.184Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. </p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p>  <h2>வேட்பு மனு தாக்கல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் நடத்தை விதிகள் அமல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். </p><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>தேர்தல் ஆணையம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p><p>மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 9 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">e412a312-48cc-4e33-837f-678856202328</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:17:42.906Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</a></p><p>* 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>* இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!... </a></p><p>*விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>*சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030">2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!... </a></p><p>*இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. </p><p>*ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026">GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law">ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். </p><p>* சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions">ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?... </a></p><p>*ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல.</p><p>*இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. </p><p>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</p><p>* களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>* 1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam">நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். </p><p>*  தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  </p><p><a href="https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket">ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்...</a></p><p>*  இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa">1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா... </a></p><p>* நட்சத்திரங்கள் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான தோற்றம் கோள் நெபுலா எனப்படுகிறது.</p><p>* நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சிங்க நெபுலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</a></p><p>* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>* மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries#comments</comments><guid isPermaLink="false">dc53b8fb-6550-4993-abb9-b36be2feed16</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:15:56.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,முக ஸ்டாலின்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.</strong></em></p><h2><strong>ராஜினாமா</strong></h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதே போல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில்  இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படுகிறது.</p><h2><strong>விரிவான ஆலோசனை</strong></h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த தேர்தலில் த.வெ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து களம் காண வேண்டி இருப்பதால் தேர்தல் வியூகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-details-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-details-4#comments</comments><guid isPermaLink="false">8c8900d7-900f-4e69-8ad9-3da4eaee2e9e</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:43:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:43:32.392Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i19vxwjs/mettur.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i19vxwjs/mettur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.</strong></em> </p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a> நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர்  திறந்து விடப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அங்கிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைத்து விட்டனர்.</p><h2><strong>பரிசல் இயக்க தடை</strong></h2><p>இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் இன்று 25-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிய தொடங்கியது. </p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. </p><p>அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தள்ளிப்போகிறதா... தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்?- அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation#comments</comments><guid isPermaLink="false">aefec534-103e-4254-a579-d45785989d3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:34:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:34:43.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Minister Arunraj,TN Goldring scheme</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88" rel="nofollow">ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை</a>யில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை, அமைச்சர் அருண் ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- </p><p>எலும்பு மஜ்ஜை தானம்</p><p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>எலும்பு மஜ்ஜை தானம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அதற்கான பதிவு தொடங்கப்பட உள்ளது.</p><p>ரத்த தானம், கண் தானம்போல் ஸ்டெம்செல் தானத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது.</p><p>தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரச்சனை சரி செய்யப்படும், தரம் உயர்த்தப்படும்.</p><h2>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது.</p><p>916 தங்கம் தானா? என முறையாக சோதனை செய்த பின்னரே தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கம் அனுப்பப்படும்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தரப்படும் மோதிரத்தையும் பயனாளர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது.</p><p>ஏற்கனவே நிர்ணயித்த தேதியில் திட்டத்தை தொடங்க முடியவில்லை. இத்திட்டம் தொடங்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law#comments</comments><guid isPermaLink="false">acf23728-6c5a-4d2d-acaa-2f0069c14ebd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:23:28.852Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும்  3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.</p><h2><strong>ஆபத்து</strong></h2><p>இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால்  2023-ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990-ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு  38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பது தான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது,  பொது இடங்களில் புகைப்பிடிப்பதை  தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008-ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும்  பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.</p><p>பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட, அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.</p><p>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31-ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம்  எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.</p><p>2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.</p><p>நேரடியாக புகைப்பிடிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட்  புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.</p><p>பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>‘கள்’ இறக்கப் பரிந்துரை - நயினார் நாகேந்திரன் வரவேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine#comments</comments><guid isPermaLink="false">1dda40c6-a219-47f3-99af-06bde9157832</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:08:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:08:13.162Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,கள்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.</strong></em> </p><p>தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தார்மீக வெற்றி</strong></h2><p>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.</p><p>இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக  பா.ஜ.க. தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும்,  த.வெ.க.  அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜயை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறேன்!<br><br>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான &#39;கள்&#39; இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2097536838433206628?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">9128e893-0c38-4af6-8f3f-688d0310bde9</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:58:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:58:15.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்,pattinapakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதகங்களை விட பாதகங்களே அதிகம்</strong></h2><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><h2><strong>நெரிசல்</strong></h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><h2><strong>பாமகவின் கோரிக்கை</strong></h2><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. முதலமைச்சர் விஜய் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  தில்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த தில்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுதில்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ஆம் ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928  கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.</p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்,  தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை உள்ளிட்ட 5 பயணிகள் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled#comments</comments><guid isPermaLink="false">34f2e2bb-3c6b-4184-b4f3-3f2e6efe30ea</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:14:35 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:14:35.100Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,பயணிகள் ரெயில்,passenger train,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o1m5hoxg/passengertrian.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o1m5hoxg/passengertrian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பராமரிப்பு பணி காரணமாக சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதையொட்டி சில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-</p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66039), சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் பயணிகள் ரெயிலும் (66042) நாளை ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66041) நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66040) நாளை ரத்து செய்யப்படுகின்றன. </p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது. </p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today#comments</comments><guid isPermaLink="false">49db7356-6110-402b-932c-2b190a94a6d0</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:52:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:52:57.696Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.</p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். </p><p>தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்காக தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>வாக்காளர்கள் விவரம்</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண் வாக்காளர்கள். 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.</p><p>தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>சுவர் விளம்பரங்கள் அகற்றம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p> <p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:33:59.434Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி</p> <p>பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் -  பல்லவி</p> <p>வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்  -  பல்லவி</p><p>போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் -  பல்லவி</p> <p>என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.</p><p>சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக  நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today">பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</a></p><p>* பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.</p><p>* முதல்வர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred">தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p>* சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம்.</p><p>* இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred#comments</comments><guid isPermaLink="false">286c8267-d331-483e-8f1e-8542fe5a6ef3</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:48:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:48:57.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y6tplyec/TNGovt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y6tplyec/TNGovt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக அப்துல் ரசாக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம்</h2><p>முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் டான்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஸ்ரேயா சிங், தொழில் கல்வித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.</p><p>சிப்காட் நிர்வாக இயக்குநராக வீர் பிரதாப் சிங், திருச்சி மாநகராட்சி ஆணையராக என். பொன்மணி நியமனம். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்தரின் சரண்யா நியமனம்.</p><p>சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம். இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.</p>]]></content:encoded></item><item><title>“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” - திமுக பரந்தாமன் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/going-home-to-post-a-tweet-after-doing-everything-else-shows-that-you-have-not-yet-become-honourable-posts-dmks-paranthaman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/going-home-to-post-a-tweet-after-doing-everything-else-shows-that-you-have-not-yet-become-honourable-posts-dmks-paranthaman#comments</comments><guid isPermaLink="false">0b119d33-8c4a-4fed-8718-b48715b73491</guid><pubDate>Tue, 08 Sep 2026 15:32:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T15:32:37.097Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,பரந்தாமன்,Paranthaman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/thzd4nge/New-Project-2026-09-08T183521.576.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” - திமுக பரந்தாமன் பதிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/thzd4nge/New-Project-2026-09-08T183521.576.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay">முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை</a> கேலி செய்யும் வகையில் சைகை ஒன்றை செய்திருந்தார். </p><p>அவரின் இந்த செயலுக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, அது தன்னுடைய எதேச்சயான செயல் எனவும், உள்நோக்கம் கொண்டது இல்லை என்றும் விளக்கமளித்திருந்தார். </p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய்யின் இந்த விளக்கம் தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“எல்லாவற்றையும் செய்துவிட்டு பின்பு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது இன்னும் நீங்கள் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது.</p><p>முதல்முறையாக நீங்கள் செய்திருந்தால் உங்களின் இந்த விளக்கத்தை உண்மையென மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>ஆனால் தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்திராத கீழ்த் தரமான செயலை நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றப்பிறகு இது இரண்டாவது முறையாக செய்திருக்கிறீர்கள்.</p><p>எனவே வேண்டும் என்றே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்திருக்கிறீர்கள்.</p><p>உழைப்பைத்தந்து, தியாகத்தை தந்து இந்த முதலமைச்சர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பின் வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள்.</p><p>ஊதாரித்தனமான வசனங்கள் பேசி, வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால் முதலமைச்சர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்.</p><p>காவல்துறை மானியத்தின் பதிலுரையில் பதிலே இல்லாத பதிலுரையை அளித்த வரலாற்றைப் படைத்த முதலமைச்சர் தாங்கள்.</p><p>எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு நீங்கள் பதில் அளிக்கத்தெரியாத பொம்மை முதலமைச்சர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்.</p><p>எனவே பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல் மாண்புமிகு முதலமைச்சர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnattin-kaatru-maasuppaduthalai-arasu-kattupadutha-venum-nainar-nagendran-valiuruthal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnattin-kaatru-maasuppaduthalai-arasu-kattupadutha-venum-nainar-nagendran-valiuruthal#comments</comments><guid isPermaLink="false">64562d83-e409-4d1b-9b51-67cf0766b3b3</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:58:11 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:58:11.084Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,காற்று மாசு,Nayinar Nagendran</media:keywords><media:content height="798" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/izi0yjqt/DSC7701.jfif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/izi0yjqt/DSC7701.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>வலியுறுத்தல் </h2><p>தமிழகத்தின் காற்று மாசுப்படுதலை கட்டுப்படுத்த  தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  வலியுறுத்தியுள்ளார். </p><p>இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது </p><p>தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ், முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தி, காற்றின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்யும் “ஸ்வச் வாயு சர்வேக்ஷன்” என்ற தேசிய மதிப்பீட்டில், தமிழகத்தின் தலைநகரான சென்னை 35-ஆவது இடத்திற்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. </p><p>இந்தியாவிலேயே மக்கள் நெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மாசடைந்து வருவதை தற்போது ஆட்சியில் உள்ள அரசாவது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். </p><p>நுரையீரல் நோய்கள், இதய நோய்கள் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகளையும், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவமழை மாற்றத்தையும் தூண்டிவிடும் இந்த காற்று மாசடைதல் தொடர்வது, ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.</p><p>எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள தொழிற்சாலைகளிலும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தும் “மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்கள்" பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை ஆளும் அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.என இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-release-order-to-karnataka-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-release-order-to-karnataka-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">184ed8fc-ec70-4467-a145-68ba5ce5f3a2</guid><pubDate>Tue, 08 Sep 2026 14:35:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T14:35:49.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,தண்ணீர் திறப்பு,Cauvery water,Cauvery water distribution,காவிரி மேலாண்மை ஆணையம்,காவிரிநீர்</media:keywords><media:content height="270" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8pul3n72/images-2.jfif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water distribution]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/8pul3n72/images-2.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>உத்தரவு </h2><p>காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court">காவிரி</a> மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>15 நாட்கள் </h2><p>இந்த உத்தரவின் படி கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai">நீர்</a> திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>அழுத்தம் </h2><p>இந்த ஆண்டு  மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">டெல்டா</a> பாசனத்திற்காக வழக்கமான தண்ணீர் திறக்கப்படவில்லை.</p><p>கால தாமதத்திற்கு பிறகே கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மொத்தம் 177.25 டி.எம்.சி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற சூழல் இருக்கும் நிலையில் போதிய மழை இல்லை என கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறப்பத்தில்  காலம் தாழ்த்தி வருகிறது.</p><p>கர்நாடகாவில் கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott#comments</comments><guid isPermaLink="false">5ad41596-1a77-4273-96c2-cd0df9ba9bd0</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:53:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:53:25.561Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPIM,CPI,ஆலோசனைக் கூட்டம்,Consultative Meeting,tvk,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y7nypqwq/New-Project-2026-09-08T192255.158.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் - இடதுசாரிகள் புறக்கணிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y7nypqwq/New-Project-2026-09-08T192255.158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை (செப்.9) நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். </p><p>எனினும், இக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பதாக கே. பாலகிருஷ்ணன் மற்றும் பெ. சண்முகம் ஆகியோர் உறுதிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கவில்லை என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>ஆளுநர் ஆட்சி அமையக்கூடாது என்பதற்காகவே வெளியில் இருந்து ஆதரவு அளித்ததாகவும், அமைச்சரவையிலோ அல்லது அவர்களது கூட்டணியிலோ தாங்கள் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளனர். </p><h2>முந்தைய கூட்டமும் புறக்கணிப்பு</h2><p>கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தவெக-வின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தையும் இடதுசாரிகள் புறக்கணித்திருந்தனர். </p><p>இதன் மூலம், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டணி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருப்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/allegation-of-inappropriate-physical-conduct-dmk-lodges-complaint-against-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d5a5f480-2f5c-4d1a-b82f-2786544facdc</guid><pubDate>Tue, 08 Sep 2026 13:11:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T13:11:33.314Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடல்கேலி செய்கை - முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/b0xjtixd/New-Project-2026-09-08T183521.576.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார்.</p><p>இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய அந்த செய்கை திட்டமிட்ட உடல்மொழி இல்லை என்றும், தான் பேசும்போது எதார்த்தமாக வெளிப்பட்டது என்றும், யாரையும் புண்படுத்தும் செயல் இல்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இந்நிலையில் முதலமைச்சரின் இந்த செயல்தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அவை உரிமை மீறல் புகார் மனுவை அளித்துள்ளார் திமுக துணைக் கொறடா கோவி.செழியன்.</p><p>சட்டமன்றத்தில் இல்லாத முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முரசொலி மாறன் குறித்து பேசியது, சர்க்காரியா ஆணையம், நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி பேசியது ஆகியவை சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது. எனவே, முதலமைச்சர் விஜய்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/megamalai-hill-encroachment-case-hearing-postponed-to-sept-22-supreme-court#comments</comments><guid isPermaLink="false">99fdafc3-6a75-4129-be8f-9640a85c5c40</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:54:49 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:54:49.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்சநீதிமன்றம் உத்தரவு,உச்சநீதிமன்றம்,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Megamalai issue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mszy340t/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒத்திவைப்பு </h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">நீதிபதிகள்</a> விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் வேறோரு அமர்வில் ஆஜரான நிலையில், இந்த வழக்கை தள்ளி வைக்க வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று  விசாரணையை செப் 22 க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. </p><h2>மேகமலை விவகாரம்</h2><p>மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும், இலவம் பஞ்சு தோட்டங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், அங்கு யாருக்கும் பட்டா வழங்க கூடாது என்றும், மின் மற்றும் நீர் இணைப்புகளை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவில்லையென்றால் ராணுவத்தை அனுப்புவோம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. </p><h2>அரசு தரப்பு </h2><p>இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அறிவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று தனது வாதத்தை அரசு முன்வைத்திருந்தது. இதற்கு <a href="https://www.maalaimalar.com/news/national/retirement-age-of-judges-raised-to-62">உச்சநீதிமன்றம், </a>ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி உத்தரவிட்டிருந்தது.</p><h2>போராட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion">மேகமலை</a> புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 4600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மேகமலை ஆக்கிரமிப்புக்களை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் அகற்ற உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விசாரணையானது செப் 22 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today#comments</comments><guid isPermaLink="false">e8b49f67-7e6f-4a87-bc72-e03e9e014388</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:47:47 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:47:47.650Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Budget session,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்,பட்ஜெட் கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ jcd prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/tarx8rnb/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.</strong></em></p><p>தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>சுமார் ஒரு மாத காலமாக நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன.</p><h2>தனித்தீர்மானங்கள்</h2><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் உள்பட பல்வேறு தனித்தீர்மானங்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.</p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><h2>திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்</h2><p>இன்று காலை அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p><h2>தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned#comments</comments><guid isPermaLink="false">da534a84-44fb-4e21-83b6-769ad170c740</guid><pubDate>Tue, 08 Sep 2026 12:20:29 +0000</pubDate><atom:updated>2026-09-08T12:20:29.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Body language,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,உடல்மொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/u0i0z3sd/cm-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</strong></em></p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>மிசா சட்டத்தில் கைது மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார். </p><h2>தலைவர்கள் கண்டனம்</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்கு உரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும் என கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p><h2>தன்னிச்சையாக வெளிப்பட்டது</h2><p>இந்நிலையில், மானிய கோரிக்கையின் போது என்னுடைய பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">ef28800c-b0f2-48eb-8d06-4b7731cb709d</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/t8hge11a/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கொலை</strong></h2><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிய போது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p><h2><strong>பழி தீர்த்த பயங்கரம்</strong></h2><p>போலீஸ் விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p><h2><strong>வாக்கு மூலம்</strong></h2><p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்கு மூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>3 பள்ளி மாணவர்கள்</strong></h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>போலீசார் தீவிர விசாரணை</strong></h2><p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/this-is-a-dysfunctional-government-edappadi-palaniswami-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">bc2b5556-d17d-4ad1-b995-77c28e361ddc</guid><pubDate>Tue, 08 Sep 2026 11:06:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T11:06:59.581Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” - தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/xipnqmit/New-Project-2026-09-08T163358.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி</a> இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>சபை நேரம் வீணடிக்கப்படுகிறது</h2><p>சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. </p><p>அவர்கள் பேச முற்படும்போது, ஆளுங்கட்சியினர் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர்கள்மீது சுமத்தி, இருதரப்பினரும் மாறி, மாறி அவை நேரத்தை வீண்டிக்கின்றனர்.</p><p>10 மணிநேரம் அவை நடக்கிறது என பெருமையாக பேசுகின்றனர். ஆனால், அதில் 3 மணிநேரம்தான் மக்களின் பிரச்னை பேசப்படுகிறது. மீதமிருக்கும் 7 மணிநேரம் ஆளும் கட்சியினராலும், எதிர்க்கட்சியினராலும் வீண்டிக்கப்படுகிறது. </p><h2>மூன்றே அமைச்சர்கள்தான்</h2><p>பலதுறைகள் இருந்தாலும், அனைத்து துறைகளுக்கும் பெரும்பாலும் மூன்று அமைச்சர்களே எழுந்து பதில் கூறுகின்றனர். மற்ற அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அந்தந்த துறையின் அமைச்சர்கள், அந்தந்த துறைக்கு பதில் சொல்லவேண்டும். </p><h2>கேள்விகளுக்கு பதிலே இல்லை</h2><p>காவல்துறை, தீயணைப்புத்துறை முதலமைச்சருடையது. வியாழன்கிழமை இத்துறைகள்மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக தரப்பில் நான் சில கருத்துகளை பகிர்ந்துகொண்டேன். </p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. </p><p>ஒரே பதில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், எப்போது என தெரிவிக்கவில்லை.</p><h2>எஃப்கியூஎல் மோசடி</h2><p>மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் எஃப்.க்யூ.எல். மோசடியில் பணத்தை இழந்துள்ளனர். ரூ.1,000 கோடி மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை.</p><p>இப்படி பல கேள்விகளுக்கு பதில் இல்லை. பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவுகள் சரியாக செயல்படவில்லை. இதனை இந்த அரசு கண்காணிக்க வேண்டும்.</p><h2>நீண்டகால குற்றங்கள்</h2><p>பதிலுரையில் பேசிய முதலமைச்சர், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் சீண்டல்கள், போதைப்பொருள் குற்றங்கள் எல்லாம் நீண்டகாலமாக இருக்கும் குற்றங்கள், உடனே நிறுத்தமுடியாது என்கிறார். </p><p>அது தவறு. ஒரு பொறுப்புடைய முதலமைச்சர்தான் அவர்கீழ் இருக்கும் காவல்துறையை வைத்து தடுக்கவேண்டும். அவரே இப்படி ஒரு பதிலை வழங்கினால், மக்கள் பிரச்னைகளை யாரிடம் சொல்லமுடியும்? இது ஒரு செயலிழந்த அரசாங்கம்.</p><p>இவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முழுமையாக சீர்கெட்டுவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்தநிலை தொடரக்கூடாது. அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். </p><h2>ஊழல்</h2><p>இந்த ஆட்சி வந்த பிறகுதான் ஊழல் அதிகமாகி உள்ளது. அரசு அலுவலங்களில் நடக்கும் தவறுகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கட்டுபடுத்தப்படும். எல்லா ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தது. </p><p>இவர்கள் ஆட்சியில் மட்டும்தான் செயல்படுவதுபோல் பேசுவது. அதற்கு ஒரு ரீல் போடுகிறார்கள். லஞ்சம் இல்லையென்றால், சோதனையின்போது பணம் எவ்வாறு கைப்பற்றப்படுகிறது?</p><p>இந்த ஆட்சியில் லஞ்சம் அதிகரித்துள்ளது. நகராட்சித்துறை முதலமைச்சரின்கீழ் உள்ளது. ஆனால் வேறு அமைச்சர் பதில் சொல்கிறார்? அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் செயல்படுத்தக்கூடிய அமைப்பு நகராட்சி அமைப்பு.</p><p>ஆனால் அத்துறை சரியாக செயல்படுத்தப்படவில்லை. அதனால்தான் இன்று சட்டப்பேரவையில் இவ்வளவு குற்றச்சாட்டுகள் அரசின்மீது. இனியாவது முதலமைச்சர் அவர் துறையை கண்காணிக்க வேண்டும். இது விவசாயிகளை காக்கும் அரசு கிடையாது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி: அ.தி.மு.க.7 முறை, தி.மு.க. 6 முறை வென்ற வரலாறு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time#comments</comments><guid isPermaLink="false">9bc506a5-8c0a-4cbb-b18c-4e6b1a8707e6</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:39:01 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:39:01.927Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,by election,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/sjrsgajm/Madurantakam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுராந்தகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/sjrsgajm/Madurantakam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.</strong></em></p><p>மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்ததால் இத்தொகுதி காலியானது.</p><p>இதையடுத்து இந்த தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.</p><h2><strong>காங்கிரஸ்</strong></h2><p>மதுராந்தகம் சட்டசபை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தனித்தொகுதி ஆகும். இந்த தொகுதியில் மொத்தம் 2,12,639 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,04,496 பேர். பெண் வாக்காளர்கள் 1,08,078 பேர் ஆவர். மதுராந்தகம் சட்டசபை தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.பரமேஸ்வரன் வெற்றி பெற்றார். 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றியது. </p><p>அக்கட்சியின் வேட்பாளர் ஓ.வெங்கடசுப்பா ரெட்டி வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பி.பரமேஸ்வரன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 3-வது முறையாக அத்தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.</p><p>அதன் பிறகு 1967-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை தி.மு.க. முதல் முறையாக சந்தித்தது. அந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க. தன் வசமாக்கிக்கொண்டது. தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட குளத்தூர் கோதண்டம் வெற்றி பெற்றார். </p><p>பின்னர் 1971 மற்றும் 1977 தேர்தல்களிலும் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க.வே கைப்பற்றியது. அந்த 2 தேர்தல்களிலும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதுராந்தகம் சி.ஆறுமுகம் வெற்றி பெற்றார்.</p><p>1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.உக்கம்சந்த் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 1984 தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. மதுராந்தகம் சி.ஆறுமுகம் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.</p><p>1989 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.டி.உக்கம்சந்த் போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் 3-வது முறையாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது.  அக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.சொக்கலிங்கம் எம்.எல்.ஏ. ஆனார். 1996 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 4-வது முறையாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர் பெ.வாசுதேவன் எம்.எல்.ஏ.வாக தேர்தெடுக்கப்பட்டார்.</p><p>2006-ம் ஆண்டு தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட காயத்ரி தேவி வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டுக்கு பிறகு மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.</p><p>2011 தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. 5-வது முறையாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக கணிதா சம்பத் தேர்தெடுக்கப்பட்டார். 2016 தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். இதன் மூலம் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. 7 முறை வெற்றி பெற்று வரலாறு படைத்து உள்ளது. தி.மு.க. 6 முறை வென்றுள்ளது. அ.தி.மு.க. தொடங்கப்பட்ட பிறகு தி.மு.க. 4 முறை வெற்றி பெற்றுள்ளது.</p><p>2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார். த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் எழில்மலை 62,090 ஓட்டுகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். </p><p>தி.மு.க. வேட்பாளர் எஸ்.அமுலு பொன்மலர் 59,838 வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்றிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/preparations-for-the-by-elections-in-the-maduranthakam-and-dharapuram-constituencies-have-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/preparations-for-the-by-elections-in-the-maduranthakam-and-dharapuram-constituencies-have-begun#comments</comments><guid isPermaLink="false">5132e21b-c858-4ed2-9976-4a6d1e5ba6ec</guid><pubDate>Tue, 08 Sep 2026 10:10:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T10:10:52.201Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mh8t0hdi/madurathankam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுராந்தகம் பகுதியில் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் பகுதியில் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/mh8t0hdi/madurathankam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாராபுரத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படைகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.</p><p>தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (9-ந்தேதி) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p><h2><strong>தேர்தல் பணிகள்</strong></h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டுசெல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களும் கிழித்து அப்புறப்படுத்தப்பட்டன.</p><h2><strong>தேர்தல் அலுவலர்</strong></h2><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (9-ந்தேதி) தொடங்க உள்ளதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரப்பன், மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் நரேந்திரனை, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலராக நியமித்து உள்ளார்.</p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வரு கின்றன. அந்த கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. மேலும் அந்தந்த கட்சிகளின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் தேர்தல் பணிகளுக்கு தயாராகி வருகிறார்கள்.</p><h2><strong>மரகதம் குமரவேல்</strong></h2><p>2021 மற்றும் 2026 சட்டசபை தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்றிருந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். தி.மு.க. வேட்பாளர் அம்முலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.</p><p>ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் எழில் கேத்தரினை விட அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.</p><h2><strong>வேட்பாளர் யார்?</strong></h2><p>சமீபத்தில் மரகதம் குமரவேல், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>எனவே மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. த.வெ.க.வில் இணைந்த மரகதம் குமரவேல் மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2><strong>தாராபுரம்</strong></h2><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளதால், அப்பகுதியில் அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.</p><p>​தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்களால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தார். இதனால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அ.தி.மு.க. கோட்டை</strong></h2><p>தாராபுரம் தொகுதி எப்போதுமே அ.தி.மு.க.வின் பலம் வாய்ந்த கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி தங்களது செல்வாக்கை நிரூபிக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தொகுதியில் பிரபலமான ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றியை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><p>முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா த.வெ.க.வில் இணைந்துள்ள நிலையில், தாராபுரத்தில் வெற்றி பெற்று சட்டசபையில் தங்களது குரலைப் பதிவு செய்ய த.வெ.க. திட்டமிட்டுள்ளது. </p><p>தாராபுரத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படைகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தண்டையார்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் சட்ட விரோத குடிநீர் மோட்டார்கள் பறிமுதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/drinking-water-motors-confiscation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/drinking-water-motors-confiscation#comments</comments><guid isPermaLink="false">7c92dfbd-3fdf-4600-9091-d39c272d05da</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:38:20 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:38:20.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Water,குடிநீர்,குடிநீர் மோட்டார்கள்,Drinking water motors</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/06/1928008-1.webp" width="1500"><media:title type="html"><![CDATA[ பறிமுதல் செய்யப்பட்ட மின் மோட்டார்கள்.
]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/06/1928008-1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெருங்குடி மண்டலம்- கொட்டிவாக்கம், கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் அழுத்த குறைபாடு தவிர்க்கப்பட்டு அனைத்து நுகர்வோருக்கும் சீரான மற்றும் சமமான குடிநீர் வினியோகம் உறுதி செய்யும் வகையில் மண்டலம் 1 முதல் 15 வரை அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. </p><h2><strong>குடிநீர்</strong></h2><p>இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் இணைப்புகள் மற்றும் பொது குழாய்களின் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின்னோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய சட்டவிதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள்</strong></h2><p>இந்த நிலையில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட எம்.கே.பி. நகர், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பஸ் நிலையம், முகப்பேர், அண்ணா நகர் மண்டலத்துக்குட்பட்ட சூளைமேடு, தேனாம்பேட்டை மண்டலம்-வள்ளுவர் கோட்டம், கிரீம்ஸ் ரோடு டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் மண்டலம்- எம்.ஜி.ஆர்.நகர், அடையாறு மண்டலம்- தரமணி, பெருங்குடி மண்டலம்- கொட்டிவாக்கம், கந்தன்சாவடி ஆகிய இடங்களில் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.</p><h2><strong>மோட்டார்கள் பறிமுதல்</strong></h2><p>34 மின்மோட்டார்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாறு மண்டலத்தில் மட்டும் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த 55 குடிநீர் உறிஞ்சும் மின் மாட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 89 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சும் மின் மோட்டா்களை பயன்படுத்தக் கூடாது எனவும் மீறுவோரின் மீது உரிய சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கண்காணிப்பு பணிகள்</strong></h2><p>இந்த சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-thunder-and-lightning-in-chennai-over-the-next-three-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-accompanied-by-thunder-and-lightning-in-chennai-over-the-next-three-days#comments</comments><guid isPermaLink="false">2f19613a-28b4-49be-972e-c9ee0c0b7207</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:25:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:25:18.190Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gphf1okq/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/gphf1okq/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 12-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது - பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-paranthaman-asked-what-standing-cm-vijay-to-speak-about-misa#comments</comments><guid isPermaLink="false">6abad820-07ff-46f9-b19a-0f788dd77f9c</guid><pubDate>Tue, 08 Sep 2026 09:17:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T09:17:22.661Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/wjp770yv/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.</p>  <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி எழுப்பிய 15 கேள்விகளுக்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">விஜய்</a> பதில் அளிக்கவில்லை.</p> <p>* 13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சர் பதில் அளிப்பதே மரபு.</p><p>* பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என நிர்மல்குமார் கூறுகிறார்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa">மிசா</a> பற்றி பேசுவதற்கு முதலமைச்சர் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல்குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை.</p><p>* மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா?</p><p>* மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றிய ஆணைய அறிக்கையில் தெளிவாக உள்ளது.</p> <p>* முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா?</p><p>* ஆதாரம் வேணும், ஆதாரம் வேணும்னு கேட்டீங்களே, போதுமா? நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன் என முதல்வர் வசனம் பேசுகிறார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/body-shaming-is-unacceptable-whoever-the-person-may-be-pe-shanmugam-condemns-chief-minister-vijays-action#comments</comments><guid isPermaLink="false">c37754d5-f50b-4f47-9856-9d45910fbd9e</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:55:06 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:55:06.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மு.க.ஸ்டாலின்,பெ.சண்முகம்,P Shanmugam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உருவக்கேலி செய்வதை யாராக இருந்தாலும் ஏற்கமுடியாது’ - முதலமைச்சர் விஜய்யின் செய்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iaek3ia8/New-Project-2026-09-08T142242.805.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.</p><p>இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு,“சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயல்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years">பெ.சண்முகம் </a>விமர்சித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><h2>கேள்விக்கான எந்தப் பதிலும் இல்லை</h2><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்டவை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.</p><p>மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. </p><p>முதலமைச்சர் ஆக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். </p><p>தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.</p><p>அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது.</p><h2>உருவக்கேலி</h2><p>உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். </p><p>சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். </p><h2>யாராக இருந்தாலும்...</h2><p>கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. </p><p>ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழிக்குப் பழியாக அரங்கேறிய சம்பவம் -  த.வெ.க. பிரமுகர் படுகொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionary-murdered-3-school-students-arrested-in-swift-action#comments</comments><guid isPermaLink="false">f224b1d8-b033-4539-9e99-7355a568d3ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:43:18 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:43:18.198Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Students Arrested,tvk,தவெக பிரமுகர் கொலை,பள்ளி மாணவர்கள் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/h2zjxqqo/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. பிரமுகர் படுகொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu">த.வெ.க. </a>பிரமுகர்  கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>அப்போது 2  மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்,  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> பிரமுகர் கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியபோது கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்றனர் இருப்பினும் கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். </p> <p>இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும்  பதைபதைப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக  அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.</p> <h2>பழி தீர்த்த பயங்கரம்</h2><p>போலீஸ்  விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டுகால பகையே காரணம் என்பது தெரியவந்தது.</p><p>கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா, 2016-ல் பரணியின் தந்தை வேலு ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி திட்டம் போட்டு இந்த கொலையை செய்திருப்பது அம்பலமானது. இப்படி பழிக்கு பழியாக கொலை அரங்கேறியது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. </p> <p>“என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடுவிட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன். அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக் கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது" என வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>3 பள்ளி மாணவர்கள்</h2><p>இதற்கிடையே இந்த கொலை வழக்கில் மேலும் 4  பேர் போலீசில் சிக்கி உள்ளனர் இவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர். கல்லூரி மாணவர் பரணியின் நண்பர்களான இவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p> <p>சென்னை மாநகரில் பரபரப்பாக அரங்கேறிய துணிகர கொலை சம்பவத்தில் கல்லூரி மாணவரோடு சேர்ந்து பள்ளி மாணவர்களும் கொலையில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் போலீசார் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  இதைத்தொடர்ந்து கொலையின் முழு பின்னணி குறித்தும் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-cheating-case-order-issued-to-return-rajendra-balajis-passport#comments</comments><guid isPermaLink="false">323c73d5-c609-4010-9633-f4947f28819a</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:40:59 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:40:59.933Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Rajendra Balaji,ராஜேந்திர பாலாஜி,பண மோசடி வழக்கு,money cheating case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜேந்திர பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/14rrd5fo/rajendrabalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.</strong></em> </p><p>கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/ராஜேந்திர-பாலாஜி">கே.டி.ராஜேந்திரபாலாஜி</a>  ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2><strong>8 பேர் மீது வழக்கு</strong></h2><p>பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மேலும் பண மோசடியில் ஈடுபட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.</p><p>இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு தடையின்றி ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>மேலும் அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்ற அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாஸ்போட்டை வழங்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புலிப்பட வருவாயை மறைத்த உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out#comments</comments><guid isPermaLink="false">a438ee47-dc91-4585-b7b4-e71485d2a00b</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:34:23 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:34:23.105Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாநிதி மாறன்,Dayanidhi Maran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழலைப் பற்றிப் பேசும் உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (செப்.8) காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order">முதலமைச்சர் விஜய்</a>, திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>அப்போது மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறம் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்., </p><p>ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?</p><p>அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?</p><h2>உள்ளூர் பத்திரிக்கையாளர்களுக்கே அஞ்சும் ஒருவர்</h2><p>உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். </p><p>உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறனைப் பற்றிப் பேசலாமா?</p><h2>விஜய்யை அவமதித்த காங்கிரஸ் </h2><p>இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, </p><p>“பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய்மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, </p><p>உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய்யை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?</p><h2>மிசாவை பற்றிப்பேசும் அருகதை முதலமைச்சருக்கு இருக்கிறதா?</h2><p>அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? </p><p>போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.</p><h2>கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால்...</h2><p>கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!</p><p>தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜி வழக்கு: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court#comments</comments><guid isPermaLink="false">290cf31d-9ef4-47d0-b3fa-301c61430c19</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:24:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:24:07.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,செந்தில் பாலாஜி வழக்கு,Senthil Balaji case,உச்சநீதிமன்றம்,Senthil Murugan,Washington Dhanasekaran,வி.செந்தில் முருகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies">தமிழக போக்குவரத்துத் துறையில் </a>வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.</p><h2>த<strong>மிழக அரசு விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதில் உரிமை கோர அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதும் நியமிப்பதும் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை<strong>யின் மு</strong>ன்னேற்றம்</h2><p>புதிய சிறப்பு வழக்கறிஞராக வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் இசையால் உயிர் பெற்ற குழந்தை: இளையராஜா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music#comments</comments><guid isPermaLink="false">3d7ca5dc-0372-4158-8b82-1d9852176830</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:18:57.262Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,ilaiyaraaja,மஞ்சணத்தி திரைப்படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்றார்.</strong></em></p><p>மாரி செல்வராஜ் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/இளையராஜா">இளையராஜா</a> இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘மஞ்சணத்தி’. படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை”  விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>படப்பிடிப்பை இளைய ராஜா கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.</p><h2><strong>காடுமேடுகளில்</strong></h2><p>விழாவில் இளையராஜா பேசியதாவது:-</p><p>நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.</p> <p>உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”</p><h2><strong>உயிர்பெற்ற குழந்தை</strong></h2><p>ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை  விரைந்து அமைக்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly#comments</comments><guid isPermaLink="false">e8bc29b7-d7a6-4e82-822a-1a5d885b9d8b</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:58:02.046Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் மூட்டைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மழையில் நனைந்து முளைத்து விட்டன</strong></h2><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 13 லட்சம் <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-மூட்டைகள்">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில்  பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன.  அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு  சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.</p><h2><strong>நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்</strong></h2><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  சேதமடைகின்றன.</p><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட  கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில்  வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த  நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்- த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately#comments</comments><guid isPermaLink="false">c9100d1f-4daf-481f-9ddf-70655808438d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:45:52.769Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,பல்லவி,Pallavi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:title><media:description type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி பேசியதாவது:-</p><p>* போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.</p><p>* பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>* மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள்.</p><p>* வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>* வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.</p><p>* போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>* இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.</p><p>* என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார். </p><p>இதனிடையே, சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு- ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">2aae0f17-1b37-40ef-954f-5f0592417a9d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:29:40.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்,Madras HC,5 Constituency By Election,5 தொகுதி இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.</strong></em></p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக கட்சியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><p>இந்த வழக்கில், முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 -ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். இதே போல் தடையை நீக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமைநீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று காலையில் நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 28-ந்தேதி நடைபெறும் என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race#comments</comments><guid isPermaLink="false">3d4ca011-cf01-4a8a-9c5d-8280652a7b4e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:10:30 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:10:30.177Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,Car race,அஜித்,கார் ரேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>லண்டனில் வரும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. </p><p>முன்னதாக, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். மேலும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இரு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். </p><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து இருந்தார். அஜித் கூறுகையில், மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு- தேர்தல் நடத்தை விதிகள் அமல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code#comments</comments><guid isPermaLink="false">b829217f-57e3-43a5-be5d-117c2123d70e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:04:16 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:04:16.749Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Satyabhama,மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி,இடைத்தேர்தல்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,Madhuranthakam,Dharapuram Constituency,சத்யபாமா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Satyabhama-Maragatham Kumaravel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6">இடைத்தேர்தல்</a> தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை துறந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.</p><h2>தேர்தல் அட்<strong>டவணை விவரங்</strong>கள்</h2><p>தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை (செப்டம்பர் 9) தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க இறுதிக்காலம் நிர்ணயிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.</p><p>அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>நடத்தை <strong>விதிகள்</strong> </h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசின் புதிய நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இவ்விரு தொகுதிகளிலும் செயல்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பாகப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகத் துணை ராணுவப் படையினரும், மத்திய தேர்தல் கண்காணிப்பாளர்களும் விரைவில் வருகை தர உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறது- எ.வ.வேலு ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu#comments</comments><guid isPermaLink="false">2f56c055-ca8c-4f4c-b63f-1eba7d8516f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:03:07.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எவ வேலு,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>சட்டசபை வளாகத்தில் தி.மு.க. கொறடா எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></h2><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ‘காவல்துறை, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எடுத்து வைத்தார். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த 116 நாட்களில் 550 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் அளிப்பார் என்றுதான் எதிர்பார்த்தோம். </p><h2><strong>திட்டமிட்டு பேசினார்</strong></h2><p>எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசும் போது, ‘27 நிமிடங்கள் வரை அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு அவை விதிகளை மீறி அதாவது நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி அமலாக்கத்துறை தெரிவித்துள்ள தகவல்களை முழுமையாக படித்தார். இது சட்டசபை விதிகளை மீறிய செயல்.</p><h2><strong>மிசா</strong></h2><p>மிசா பற்றி பேசும் போது அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் உடல் அசைவுகளை எல்லாம் செய்து காட்டினார். மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>ரீல்ஸ்</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கலைஞரும் பல முறை பதில் அளித்து இருக்கிறார். இப்போது நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டை பாக்கு பற்றி அவர் பேசுகிறார். 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு தகவலையும் சொல்கிறேன். சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா எம்.எல்.ஏ.வை அமர வைத்ததும் இதுவரை எந்த பெண் எம்.எல்.ஏ.வும் அமர்ந்ததில்லை என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால் காங்கிரசை சேர்ந்த பொன்னம்மாள், யசோதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீமாரோஸ் இப்படி பல பெண் தலைவர்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்த வரலாறு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.</p><h2><strong>நிரூபிக்க முடியவில்லை</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது ஆஜரான எம்.ஜி.ஆரே தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கமிஷன் விசாரணை முடியும் போது 28 புகார்கள் கூறப்பட்டதாகவும், ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த வழக்கையே மூடிவிட்டார்.</p><p>அதே போல் முதலமைச்சர் நேற்றைய பேச்சின் போது முரசொலி மாறன் பற்றியும் பேசினார். முரசொலிமாறனை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்ட போது அந்த குடும்பத்தினர் இன்றைய முதலமைச்சரையும் டெல்லிக்கு அழைத்து சென்றனர். முதலாளியாக இருந்து அந்த குடும்பம் சினிமாவில் நடிப்பதற்காக கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டவர்தான்.</p><h2><strong>சர்வாதிகாரம்</strong></h2><p>அப்படிப்பட்டவர் இன்று முரசொலிமாறனை கொச்சைப்படுத்தி பேச என்ன அவசியம் வந்தது. எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசியது தவறு. மிசாவை பற்றி குறிப்பிட்டது தவறு. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே அந்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. நடுநிலை போல் செயல்பட்ட சபாநாயகர் இன்று சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே சென்று எங்களை வெளியே தூக்கி போட்டு உள்ளார். ஜனநாயகத்தின் மரபுகள் கெட்டு போய் உள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - சண்முகம் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years#comments</comments><guid isPermaLink="false">d37d5494-e8ed-4224-90b1-2c9e72c10d95</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:59:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:59:40.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Shanmugam,CPIM,தமிழக சட்டசபை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,TN assembly,tvk,சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</a> மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது.</p><p>* சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மன்றமாக நடக்க வேண்டும்.</p> <p>* ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.</p><p>* சட்டசபை மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அவர்களின் சொந்த பணத்தில் நடக்கவில்லை.</p><p>* ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்தாரா?</p> <p>* உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.</p><p>* நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற வகையில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்.</p><p>* சட்டசபை சண்டை மன்றமாகவும் கத்துவதற்கான மன்றமாகவும் நடைபெறுவதை கண்டிக்கிறோம்.</p> <p>* மிசா குறித்த அமைச்சர் நிர்மர்குமாரின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.</p><p>* சேற்றை வாரி வீசுவதை போன்று அமைச்சர்கள் பேசக் கூடாது.</p><p>* தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர்.</p> <p>* தவெக அமைச்சர்கள் முதலில் நிறைய படிக்க வேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன்.</p><p>* வரலாறு தெரியாது திமுகவின் மீது இருக்கும் வெறுப்பில் சகட்டு மேனிக்கு பேசுவது தவறு.</p><p>* 3  கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார்.</p> <p>* ஊழலில் நடவடிக்கை என்பதில் கம்யூனிஸ்ட் உறுதியாக உள்ளது,  தவெக உறுதியாக உள்ளதா என்றுதான் சந்தேகம் எழுகிறது.</p><p>* வீணான விவாதங்களில் சட்டசபை நேரம் விரயம் ஆவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.</p><p>* வரும் தேர்தல்களை கூட்டணியாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தவெக அமைச்சர்கள் கூறினர்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami">தவெக</a> அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.</p><p>* தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டு ஆதரவு தொடர வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாட்டை பொருத்தது.</p><p>இவ்வாறு அவர்  கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>