<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 10 Sep 2026 06:23:19 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">cd1c0430-b0bb-4648-93d3-063900150d82</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:17:31.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி</a></p><p>*அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>*,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt">கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி</a></p><p>* ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். </p><p>* தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</a></p><p>* சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு.</p><p>* மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance">மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</a></p><p>* மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing">பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</a></p><p>*இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>*87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை<br></a><br>*இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p> <p>*ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026">GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai">சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</a></p><p>* காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>* தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a">கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</a></p><p>*கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே </p><p>*நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d">பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</a></p><p>*படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>*உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/5be92010-e19b-4447-a4f9-35ec13094301">VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</a></p><p>*வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>*2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97d84f96-1449-43af-89c9-086e404098d1">SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</a></p><p>*16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.</p><p>*நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/af314040-a47a-4091-8eea-f052c3a066e1">சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</a></p><p>*சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><p>*இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d">குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</a></p><p>*மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்றது.</p><p>* அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt">சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி</a></p><p>* தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை!</p><p>* நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</a></p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">e014a44d-7f72-44c7-80b6-0214068a95e2</guid><pubDate>Thu, 10 Sep 2026 06:10:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T06:10:04.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/0bdx8hhn/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? </p><p>கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. திமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம் குறித்த விசாரணை ஆணைய பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினாவாகும்.</p><p>கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள கருணாபுரம் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலக்கப்பட்ட நச்சு சாராயத்தை குடித்தவர்களில் 70 பேர் அடுத்த சில நாள்களில் உயிரிழந்தனர்; மேலும் 161 பேர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் பிழைத்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட  ஆணையத்தின் அறிக்கை, 18 மாதங்களுக்குப் பிறகு  சட்டப்பேரவையில் நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் அரசின் தோல்வி என்று குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம், ‘‘கள்ளச்சாராய வணிகர்களுடன் அதிகாரிகள் கூட்டணி வைத்திருந்தனர். அவர்களின் துணையின்றி, சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நச்சு சாராயம் வந்திருக்க முடியாது. இந்தக் கூட்டணி தகர்க்கப்பட வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் உரிமை ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை</strong></h2><p>கள்ளச்சாராய சாவுகள் நடைபெற்ற ஒரு சில மணி நேரங்களிலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் கள்ளச்சாராய வணிகத்திற்கு திமுகவைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முழு ஆதரவாக இருந்தனர் என்றும், திமுகவைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்பவரும், அவரது கூட்டாளிகளும் தான் நச்சு சாராயத்தை விற்பனை செய்துள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தேன். அப்போதைய ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், அப்போது நானும், பாமகவும் முன்வைத்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தல், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு வழங்குதல், இனிவரும் காலங்களில் கள்ளச்சாராய விற்பனை நடக்காமல் தடுத்தல் ஆகிய 3 வகைகளில் பல்வேறு பரிந்துரைகளையும் நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் அளித்திருந்தது. கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஆணையத்தின் அறிக்கையை  உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 15 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் கூட, அதை  வெளியிடாமல் கிடப்பில் போட்டு வைத்ததிலிருந்தே திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது.</p><p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்கத் தவறியது மட்டுமின்றி, அது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதற்கும், அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் திமுக அரசு தவறி விட்டது. 18 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை இப்போது வெளியிட்டிருக்கும் தவெக அரசு, அதன் பரிந்துரைகள் மீது என்ன நடவடிக்கை  எடுக்கப் போகிறது? என்பது தான் இப்போது எழுந்துள்ள வினா. அதற்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதைத் தடுக்க தனியாக ஒரு மதுவிலக்குப் படையை  உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உணவு, உறைவிடம், கல்வி ஆகிய உதவிகளை வழங்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை தவெக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.  </p><p>இவை அனைத்தையும் விட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தெரிவித்துள்ள ஒரு கருத்தும், அதைச் சார்ந்து அளித்துள்ள பரிந்துரையும் மிகவும் முக்கியமானவை. தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டு, தாராளமாக மது கிடைக்க வசதி செய்யப்பட்டதால், பெரும்பாலான மக்கள் குடிகாரர்களாக மாறி விட்டனர் என்று கவலை தெரிவித்திருக்கும் ஆணையத்தின் அறிக்கை, ‘‘மதுவிலக்கு சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் அரசு கடுமையாக செயல்படுத்தினால் கள்ளச்சாராயத்தையும், பிற போதைப் பொருள்களையும் முற்றிலுமாக ஒழித்து விட முடியும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவணிகத்தைக் குறைத்து   குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்’’ என்றும் பரிந்துரைத்துள்ளது.</p><p>இது தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையான பரிந்துரை ஆகும். எனவே, தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.  மதுவிலக்கு உள்ளிட்ட கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளை  செயல்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized#comments</comments><guid isPermaLink="false">3e59b482-120b-4e7a-9659-a252ce646d5f</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:54:45 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:54:45.870Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,விஎஸ் பாபு,VS Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ வி.எஸ்.பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/h6kpvq5u/vsbabu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.</strong></em> </p><h2><strong>மூச்சு திணறல்</strong></h2><p>சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/விஎஸ்-பாபு">வி.எஸ்.பாபு</a> எம்.எல்.ஏ. திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p>அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அல்லது நாளை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சிறை சென்ற தியாகி&apos; என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?- தவெக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/has-the-fake-image-of-prison-martyr-shattered-and-sparked-panic-thavek#comments</comments><guid isPermaLink="false">a7e7bccd-4225-464c-9ce1-7c3377cc03ba</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:47:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:47:44.166Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,MKStalin,tvk,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rs9mi960/TVK-IT.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து தவெக ஐடி விங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில்,</p><p>மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p>காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p><p>எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p><p>பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p><p>தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p><p>தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><h2>தவெக பதிலடி</h2><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட “சிறை சென்ற தியாகி” என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?</p><p>எதை உலகறியக் கூடாது என்று மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி மகன் வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.</p><p>உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது.</p><p>பல cut-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.</p><p>கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance#comments</comments><guid isPermaLink="false">cff4361e-4fad-4ed6-a8c2-b1fdcb64ed90</guid><pubDate>Thu, 10 Sep 2026 05:45:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T05:45:34.131Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xk97vmdj/TVK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சத்தியபாமா- மரகதம் குமரவேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xk97vmdj/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்த இரு தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தலுக்கான</a> வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.</p><p>இதனிடையே தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். </p><p>இதுதொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்.</p><p>வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.</p><p>1. 35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.LA.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்</p><p>2. 101-தாராபுரம் (தனி) திருமதி.சத்தியபாமா. Ex.MLA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/nEH9s9t231">pic.twitter.com/nEH9s9t231</a></p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097920532931031366?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரசாதங்கள் விலை உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-temple#comments</comments><guid isPermaLink="false">72ccebce-f524-460a-adcd-8ae66df1a657</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:46:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:46:59.892Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>திருப்பரங்குன்றம் கோவில்,பிரசாதம்,thiruparankundram temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1z03pycn/thirupparakundram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/1z03pycn/thirupparakundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பிரசாதங்களின் விலை திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>திருப்பரங்குன்றம் கோவில்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருப்பரங்குன்றம்-கோவில்">திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு</a> நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காக கோவில் நிர்வாகத்தின் கீழ் நேரடியாக தயார் செய்து சர்க்கரை பொங்கல் (100 கிராம்), புளியோதரை (100 கிராம்). ஒரு வடை (50 கிராம்), ஒரு அப்பம் (50 கிராம்), ஒரு லட்டு (50 கிராம்) ஒரு முறுக்கு (50 கிராம்) ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதற்காக கோவிலுக்குள் 3 இடங்களில் பிரசாதம் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசாதங்கள் கடந்த பல ஆண்டுகளாக தலா ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.</p><h2><strong>திடீர் விலை உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் திடீரென்று இன்று முதல் பிரசாதங்கள் விலை உயர்த்தப்படுகிறது. அதாவது வழக்கம் போல 50 கிராம் எடை கொண்ட ஒரு லட்டு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 50 கிராம் முறுக்கு ரூ.10-ல் இருந்து ரூ.25 ஆகவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் எடை கொண்ட மெதுவடை முதல் முறையாக மிளகு வடையாக தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகி விலை உயருகிறது. </p><p>கடந்த காலங்களில் 100 கிராம் எடைகொண்ட புளியோதரையை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆகவும், 100 கிராம் பொங்கலை 150 கிராமாக உயர்த்தி ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து கோவில் துணை கமிஷனர் செல்வி கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பிரசாதங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிரசாதங்களில் எள், ஓமம் சேர்க்கப்பட்டு தரமாகவும், ருசியாகவும், எடையின் அளவு சரியாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார்.</p><p>இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோவிலுக்கு வந்து சென்றதற்கு அடையாளமாகவும், கோவிலில் செய்யக்கடிய பிரசாதம் ருசியாகவும், தரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையால்தான் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதங்கள் வாங்குகிறோம். அதுவும் மிக குறைந்த விலை என்பதால் கூடுதலாக பிரசாதங்கள் வாங்கி செல்கிறோம். ஆனால் பிரசாதத்திற்கு விலை உயர்த்தப்படுகிறது என்பதை கேட்கும் போது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai#comments</comments><guid isPermaLink="false">26561c22-5a44-4c59-905d-e6331b88a301</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:24:33 +0000</pubDate><atom:updated>2026-09-10T04:24:33.716Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சென்னையில் கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kr98i2am/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/kr98i2am/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.</p><p>காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா? </p><p>காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா,, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.</p><p>இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். </p><p>தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2097900236282703980?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt#comments</comments><guid isPermaLink="false">e660e01d-6065-4976-9be7-868ab0060b55</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:53:47 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:53:47.756Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o9cgc28u/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o9cgc28u/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய், ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">திமுக</a> எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a>, தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (11.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-41</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-41#comments</comments><guid isPermaLink="false">b9f02553-3ed4-4f07-82ed-4483c432d422</guid><pubDate>Thu, 10 Sep 2026 03:22:21 +0000</pubDate><atom:updated>2026-09-10T03:22:21.791Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/87cafzrb/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/87cafzrb/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (11.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கிண்டி</strong></h2><p>முனுசாமி தெரு, அச்சுதன் நகர் 1வது, 2வது, 3வது மற்றும் 4வது தெருக்கள், தனகோட்டி ராஜா தெரு, ஜீ தமிழ், CIPET, SS பிளாக், பூந்தமல்லி உயர் சாலை, தெற்கு கட்டம், படவட்டம்மன் கோவில் தெரு, லாசர் தெரு, ராஜ்பவன் கன்னிகாபுரம், குல்மோஹர் அவென்யூ, 1வது ஃபூர்லாங் தெரு, 5வது ஃபர்லாங் தெரு மாந்தோப்பு 1-3வது தெருக்கள், சக்கரபாணி ரோடு, லிங்க் ரோடு, நரசிங்கபுரம் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு.</p><h2><strong>நந்தம்பாக்கம்</strong></h2><p>மகாலட்சுமி நகர், எம்.ஜி.ரோடு, கொளப்பாக்கம், பஜனை கோவில் தெரு, விஐபி அனுகிரஹா, ஆர்விலா, ராமச்சந்திரா நகர், பொழிச்சலூர், பல்லாவரம் மெயின் ரோடு, மாதா டவுன்.</p><h2><strong>நங்கநல்லூர்</strong></h2><p>செங்கழினி அம்மன் கோவில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகமது தெரு, புழுதிவாக்கம் மாநகராட்சி அலுவலகம், புழுதிவாக்கம் மெயின் ரோடு, ராஜேஸ்வரி நகர், செங்கல்வராயன் தெரு, தங்கவேல் தெரு, யூனியன் கார்பைடு காலனி, வேலாயுதம் தெரு, உள்ளகரம், புழுதிவாக்கம்.</p><h2><strong>ஆதம்பாக்கம்</strong></h2><p>மோகனபுரி 1-5வது தெருக்கள், இபி காலனி 1-5வது தெருக்கள் மற்றும் குறுக்குத் தெருக்கள், இபி காலனி மெயின் ரோடு, ஜோசப் காலனி, கணேஷ் நகர், எல்எச் நகர், வேல் நகர்.</p><h2><strong>மடிப்பாக்கம்</strong></h2><p>கக்கன் தெரு, எம்ஜிஆர் 1வது மற்றும் 2வது தெருக்கள், குளக்கரை தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, செங்கழனி அம்மன் கோவில் தெரு, தங்கல் சாலை, சதாசிவம் நகர் 4வது, 5வது மற்றும் 6வது தெருக்கள், ராகவேந்திரா 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெருக்கள், பஜனை 1வது மற்றும் 2வது தெரு, சதாசிவம் நகர் 1வது மற்றும் 2வது இணைப்பு தெருக்கள், மற்றும் சதாசிவம் நகர் 3வது, 4வது மற்றும் 5வது குறுக்கு தெருக்கள்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேத்தேங்கல், நசரத்பேட்டை மேப்பூர், பெங்களூரு டிரங்க் ரோடு, திருமழிசை, மலையம்பாக்கம், அகரம்மேல்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>இரும்புலியூர் இந்திய விமானப்படை, பாரதமாதா தெரு, வால்மீகி தெரு, ஏரிக்கரை தெரு, திருவள்ளுவர் தெரு, கந்தசாமி காலனி, எல்.ஐ.சி. காலனி, குலசேகரன் தெரு, காசியப்பர் தெரு, சுந்தரம் காலனி, சந்தானபாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், சர்மா தெரு, மா.நகர், லட்சுமி நகர், பரலைன்சேரப் தெரு, பரலைன்சேர்ப் தெரு, கணபதி தெரு ரோடு, அந்தோணி தெரு, ராஜேந்திரா நகர், சாலமன் தெரு, கிளப் ரோடு, கல்பனாநகர், ஆஞ்சநேயர் கோவில் தெரு, காளமேகம் தெரு, அகத்தியர் தெரு, நால்வர் தெரு, மோகன் தெரு, பரத்வாஜ் தெரு, கம்பர் தெரு, போரூர் தெரு, மணிமேகலை தெரு, சக்கரவர்த்தி தெரு, கற்பகவிநாயகர் தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, திரு. தெரு, கேகே நகர், ஏரிக்கரை தெரு, ஸ்ரீராம் நகர், தேவநேசன் நகர், பேராசிரியர் காலனி, ஆனந்தபுரம், ஆதிநகர், வினோபா நகர், ஐஏஎப் சாலை.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>வேளச்சேரி மெயின் ரோடு, மேட்டு தெரு, ஓரண்டி அம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் புரம், ராம்ஸ் அண்ட் சீப்ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பு, தண்டீஸ்வரம்.</p><h2><strong>திருமங்கலம்</strong></h2><p>அண்ணாநகர் மேற்கு, டபிள்யூ-பிளாக், பி, சி&amp;டி செக்டார், 11 முதல் 20வது மெயின் ரோடு, திருவள்ளீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்ஸ், மெட்ரோஜோன் பிளாட்ஸ், என்விஎன் நகர், சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், படிக்குப்பம் ரோடு பென் ஃபவுண்டேஷன்ஸ் வரை, எமரால்டு நகர் பிளாட்கள், கோலோன் 1 பிளாட், கிளாசிக் ஏ, கிளாசிக் ஏ. 49A, TV நகர், JN சாலை, ஏசியாட், ரோகினி &amp; பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L பிளாக், பழைய Z பிளாக், AL பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், 12வது மெயின் ரோடு, AF பிளாக், மாத்ரு பிளாக், 2வது சாலை 11வது பிரதான சாலை, AE பிளாக்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 9 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">e412a312-48cc-4e33-837f-678856202328</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:06:50.428Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</a></p><p>* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>* மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa">1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா... </a></p><p>* நட்சத்திரங்கள் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான தோற்றம் கோள் நெபுலா எனப்படுகிறது.</p><p>* நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சிங்க நெபுலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket">ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்...</a></p><p>*  இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam">நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். </p><p>*  தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  </p><p>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</p><p>* களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>* 1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions">ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?... </a></p><p>*ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல.</p><p>*இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law">ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். </p><p>* சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026">GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030">2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!... </a></p><p>*இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. </p><p>*ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!... </a></p><p>*விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>*சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</a></p><p>* 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>* இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்... </a></p><p>*தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும்.</p><p>*செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது</a></p><p>* தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p><p>* வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days">ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி</a></p><p>* ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p>* மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா?... </a></p><p>*மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>*ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days">4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</a></p><p>* கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. </p><p>* நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி  ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/alcaraz-lose-qf-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4.30 மணி நேரம் போராடி பென் ஷெல்டனிடம் வீழ்ந்த அல்காரஸ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai">சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</a></p><p>* டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.</p><p>* சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு </a></p><p>* 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள்.</p><p>* அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்</a></p><p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time">தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் 'தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>* தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!</a></p>]]></content:encoded></item><item><title>வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - &apos;மிசா&apos; கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities#comments</comments><guid isPermaLink="false">47935573-4dbd-40f1-a5f5-9b3eb546f8f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 02:04:13 +0000</pubDate><atom:updated>2026-09-10T02:04:13.289Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,விஜய்,vijay,முக ஸ்டாலின்,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2qnphw2z/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எமர்ஜென்சி காலத்தில் மிசாவில், தான் கைது செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு உள்ளார்.</p><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தளத்தில், வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">விஜய்</a>? என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், </p><p>* மிசா காலத்தில் கைது செய்யப்பட்டபோது சிறையில் எங்களுக்கு பல கொடுமைகள் நடந்தது.</p><p> * காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது.</p> <p>* எதிர்த்து போராடுவதும் அதன் விளைவுகளை சந்திப்பதும் எங்களுக்கு புதியது அல்ல.</p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சட்டசபையில் உள்ள நூலகத்திற்கு சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள்.</p> <p>* சர்காரியாக கமிஷன் பற்றியும் தலைவர் கலைஞர் பற்றியும் தவறான தகவலை முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.</p><p>* அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதலமைச்சர் விஜயும் கூறி உள்ளார்.</p><p>* அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய 95% வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.</p> <p>* பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுவது இங்கு உள்ள எல்லாருக்குமே தெரியும்.</p><p>* தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே?</p><p>* பரவாயில்லை தம்பி. நீங்க இப்போ மாநிலத்தின் முதலமைச்சர். யாரைப்பற்றியும் பேசும்போது கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் மறந்துட்டீங்களே.</p> <p>* தமிழ்நாடு சட்டசபைக்கென ஒரு மாண்பும் மரியாதையும் இருக்கிறது.</p><p>* முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு சட்டசபையில் தேவையில்லாத சர்ச்சைகளை பேச வேண்டாம்.</p><p>* தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது.</p><p>* வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?</p>  <p>* தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p>* வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை திமுகவினர் கைவிட்டு விடக்கூடாது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? <a href="https://t.co/kzpwXi14L8">pic.twitter.com/kzpwXi14L8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2097857590516445226?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்வராக முதல்முறை: இன்றிரவு லண்டன் செல்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight#comments</comments><guid isPermaLink="false">7c6962bf-d0fb-4796-a968-9003fe8193e4</guid><pubDate>Thu, 10 Sep 2026 00:35:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T00:35:46.962Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,Investment,முதலீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/vhzssyg8/Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/vhzssyg8/Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு முறைப் பயணமாக இன்று (செப்.10) இரவு லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.</p><p>முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, தமிழகத்தில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.</p><h2>துபாய் வழியாக லண்டன்பயணம்:</h2><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் பயணிகள் விமானத்தில் துபாய் செல்லும் முதலமைடச்சர் விஜய், அங்கிருந்து வேறு விமானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.11) லண்டன் செல்கிறார்.</p><p>லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.</p><h2>1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்:</h2><p>லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு புறப்பட்டு, துபாய் வழியாக சென்னைக்கு செப்டம்பர் 17-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் வந்தடைகிறார்.</p><p>தமிழகத்தை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்துவதே இலக்கு என தமிழ் நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து இருந்த.</p><p>மேலும், தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாள்களில் வெற்றி முதலீட்டு மாநாட்டை நடத்தி, 104 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா - எம்.பி. துரை வைகோ அளித்த பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections#comments</comments><guid isPermaLink="false">3db4e85e-febb-4e74-b84b-445c7991ee41</guid><pubDate>Wed, 09 Sep 2026 18:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-09T18:30:14.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MDMK,மதிமுக,துரை வைகோ,Durai vaiko,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல்</a> நடத்த முடியாத சூழல் உள்ளது. </p><p>தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆ தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.</p><h2>எம்.பி. துரை வைகோ பேட்டி:</h2><p>"தமிழகத்தின் இரு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எம்.பி துரை வைகோ பதிலளித்துள்ளார். இது குறித்து சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் ம.தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் ம.தி.மு.க. கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.</p><h2>ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்:</h2><p>வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.</p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">635f6d56-d4f1-4cd4-8494-99c05b671605</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:08:53.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>அவசரகதி தேர்வு </h2><p>புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். </p><p>ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><h2>அதிம மக்கள்தொகை கொண்ட குடியிருப்புப் பகுதி</h2><p>110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். </p><p>மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.</p><p>அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். </p><p>இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. </p><h2>மீனவ மக்களின் கோரிக்கை</h2><p>மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். </p><p>இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். </p><p>ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates#comments</comments><guid isPermaLink="false">01de81f8-8845-4f3d-ad8e-4902bef80c3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:56:54 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:56:54.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக் கல்வித்துறை,quarterly exam,காலாண்டு தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.</strong></em></p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">காலாண்டு தேர்வு</a> அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>3 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி: திருமாவளவன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance#comments</comments><guid isPermaLink="false">5984f5ef-1ea5-461c-96d4-01e26d55efe5</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:09.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக கூட்டணி,TVK allaiance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.</strong></em></p><p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</h2><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதை அடுத்து, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது.</p><p>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:</p><p>மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை.</p><p>மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><h2>அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி</h2><p>இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியின் பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்தோம் என்றார்.</p><h2>தவெக தலைமையில் கூட்டணி</h2><p>ஐயூஎம் எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறுகையில், தமிழகத்தில் முதன் முறையாக தவெக ஆட்சியில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என இனி வரும் காலங்களில் தவெக தலைமையில் கூட்டணி தொடரும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி இன்றும், என்றும் தொடரும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>“இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">59bdbf77-0adb-40a8-9d6b-a3cd43b01ccb</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:56:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:56:34.137Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,ByElection,இடைத்தேர்தல்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</a> எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவெக, விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த பெயர் அறிவிப்பு வெளியானது. </p><p>இந்த கூட்டணிப் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன், தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.,</p><p>“இக்கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். </p><p>இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். சமூக நீதி, மதச்சார்பற்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது.</p><p>இந்தக் கூட்டணியின் தலைவர் விஜய். இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். தவெகவில் எம்.பி.க்கள் வந்தபின் அவர்களும் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced#comments</comments><guid isPermaLink="false">f142f807-f274-410f-934b-70e61b11b55c</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:50:10.921Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK alliance,தவெக கூட்டணி,victorious alliance for secularism and social justice,மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இன்றைய கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், விஜய், திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p><p>தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott">இடதுசாரி கட்சிகளான</a> இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இக்கூட்டணியில் இடம்பெறவில்லை. </p><p>முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயரிடப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">967891c8-f083-4abe-bc86-344a110c7791</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:49.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டினப்பாக்கம்,New Secretariat,pattinapakkam,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். </p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். </p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம் </h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p><h2>எதிர்ப்பு </h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>காரணம் ஏற்கனவே இட நெரிசலை சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், இன்னும் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என வாதிடுகின்றனர்.</p><p>மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாதிடுகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சொல் ஒன்று, செயல் வேறு..!- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் தவெக கூட்டணி அரசு- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps#comments</comments><guid isPermaLink="false">4ec11099-93d4-4e82-831a-d7e6aac6924e</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:43:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:43:57.672Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,tvk,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் தவெக கூட்டணி அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த நான்கு மாதங்களாக கனகச்சிதமாக செய்து வரும் திஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தாப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது.</p><p>உரிய நேரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-release-order-to-karnataka-for-tamil-nadu" rel="nofollow">காவிரி</a>யில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி முழுமையாக செய்ய முடியாமல் விவசாயிகளின் இன்னலைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு.</p><p>விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு.</p><p>கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.</p><p>காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யாததால் அவைகள் முளைவிட்டு பாழாகி, பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக நான் எடுத்து வைத்தேன்.</p><p>வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்தினேன்.</p><p>அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி, வழுவூர், கோலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>கடலூர் மாவட்டம்: விருதாச்சலம்</p><p>ராஜேந்திரபட்டினம் - 10,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம்: சாலவாக்கம் அருகே மேல்பெருமநல்லூர் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுபாக்கம் தொழுப்பேடு </p><p>திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம்.</p><p>வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது.</p><p>மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">a7c58c8a-3587-407c-a85d-b5a9bbf625d9</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:40:56.514Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தலைமைச் செயலகம்,Secretariat,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலகம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> அமைந்தால், தற்போது இருக்கும் இட நெருக்கடியைவிட அதிகமான சிக்கலை சந்திக்க நேரிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.</p><p>அப்படி பட்டினப்பாக்கம்தான் இடத்தேர்வு என்றால், அந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. </p><h2>தொலைநோக்குப் பார்வையற்றது</h2><p>இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். </p><p>அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; </p><p>அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>25 வருட தேடல்</h2><p>தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  </p><p>ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. </p><p>எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. </p><h2>நெரிசல்</h2><p>அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல.</p><p>மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். </p><p>இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும்.</p><h2>அடுத்த நூற்றாண்டு தேவை</h2><p>இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். </p><h2>பொருத்தமான இடம் அல்ல</h2><p>முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. </p><p>முதலமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.</p><h2>ஒருங்கிணைந்த நிர்வாக நகரம்</h2><p>உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  டெல்லிக்கு மாற்றப்பட்டது. </p><p>அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த டெல்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுடெல்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. </p><p>1932ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின்   நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. </p><p>தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும். </p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், </p><p>தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - யாருக்காக சட்டத் திருத்தம்? - தவெக அரசுக்கு திமுக கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government#comments</comments><guid isPermaLink="false">38e28103-639b-48e1-b9f2-e680ae04c5c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:47:50.553Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவி செழியன்,தவெக அரசு,tvk government,Govi Chezhian,Private Universities Act Amendment Bill,தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - தவெக அரசின் சட்டத் திருத்தத்திற்கு கோவி. செழியன் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><p>ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல் - <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a>க்கு “எம்.எல்.ஏ.”க்களை மக்கள் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில்கூட, த.வெ.க. அரசின் “அடாவடி” மட்டுமல்ல, </p><p>ஆணவ நடவடிக்கைகள் எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும் என்பதால், நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா - 2026”க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>சட்டத்திருத்த மசோதா</h2><p>நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவில்”, “தனியார் பல்கலைக்கழகம்” அமைக்க சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்; </p><p>சென்னை தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், “Permanent Endowment Fund” ஆக 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இருந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம், 2019-ஐ அவசர அவசரமாக த.வெ.க. அரசு கூட்டத் தொடரின் கடைசி நாளில் திருத்தி நிறைவேற்றியிருக்கிறது.</p><h2>யாருக்காக 12 ஏக்கராக குறைப்பு?</h2><p>உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 24.8.2026 அன்றே நடைபெற்று முடிந்துவிட்டது. 15 நாட்கள் கழித்து இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன்?</p><p>இந்தத் திருத்தம் மூலம் சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த 100 ஏக்கரை 12 ஏக்கர் என அதிரடியாகக் குறைத்திருப்பது யாருக்காக?</p><p>இதுதவிர, மற்ற முனிசிபல் லிமிட் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்ததை, முனிசிபல் லிமிட்டிற்குள் 18 ஏக்கராகவும், கிராமப்புறங்களில் 25 ஏக்கராகவும் குறைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?</p><p>இப்படி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் செலுத்த வேண்டிய Permanent Endowment Fund 50 கோடி ரூபாயை வெறும் 25 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>4 மாதங்களில்...</h2><p>அது மட்டுமின்றி - இப்படி குறைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் சலுகை, ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என “பின்தேதியிட்ட சலுகை” ஏன் வழங்கப்படுகிறது?</p><p>தனியார் பல்கலைக்கழகம் ஒருவேளை திவாலானால் - அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தான் இந்த Permanent Endowment Fund உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>அதைச் சரிபாதியாகக் குறைத்து - ஏன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்குத் த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் உலை வைக்க வேண்டும்?</p><h2>திட்டமிட்டுச் சட்டத் திருத்தம்</h2><p>“கஜானா காலி” எனக் கூறி மின்கட்டணம், சொத்துவரி என மக்கள் தலையில் “வரி வசூல்” என்ற பாறையைத் தூக்கி வைக்க முயற்சிக்கும் த.வெ.க. அரசு, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோரிடம் அதீத கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் திட்டமிட்டுச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது?</p><p>நிதிப் பற்றாக்குறையில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த முடியாமல், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத்தான் இந்த உயர்கல்வி மானியக் கோரிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டதா?</p><p>இப்படித் தளர்வு அளிக்க யார் யார் கோரிக்கை வைத்தார்கள் என்ற விவரமும் இல்லை. அதை அரசு வெளியிடவும் இல்லை!</p><p>புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் “தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து” கேட்டுப் பெற்று, புற்றீசல் போல் எங்கு பார்த்தாலும் தனியார் பல்கலைக்கழகம் என்ற சூழல் உருவானால், பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்ன ஆவது?</p><h2>சமூகநீதிக் கொள்கைக்கு வேட்டு</h2><p>ஏற்கனவே எங்கள் ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்து, அதை நிறைவேற்ற முனைந்தபோது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து அந்த முயற்சியை எங்கள் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் அன்றைய தினம் கைவிட உத்தரவிட்டார்.</p><p>ஆனால், இன்றைக்கோ புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, உயர்கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து - சமூகநீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது?</p><p>ஆகவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், இப்படிப் புதிய “தளர்வுக் கொள்கை” அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, 2026-ஐ த.வெ.க. அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department#comments</comments><guid isPermaLink="false">5c340d2b-b58c-42bb-a794-a1ad96365ac5</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:46:23.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Registration department,தமிழக பதிவுத்துறை,CAG audit,சி.ஏ.ஜி தணிக்கை,வருவாய் இழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CAG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் போது முறையான தணிக்கை இல்லாததால் அரசுக்கு ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் தலைமைத் தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை தெரிவிக்கிறது. 2023-24 நிதி ஆண்டிற்காக வெளியிடப்பட்ட இந்தத் தணிக்கை அறிக்கையில், பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><h2>வருவா<strong>ய் அதிகரித்</strong>தாலும் தொடரும் இழப்புகள்</h2><p>கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மூலமாக தமிழக அரசு ரூ.19,013.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.28% அதிகமாகும். இருப்பினும், பதிவுகளின் போது ஆவணங்களைச் சரிபார்ப்பதில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் குளறுபடிகள் காரணமாகப் பெருமளவு வருவாய் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings">தமிழகம் </a>முழுவதும் உள்ள 647 தணிக்கைக்கு உட்பட்ட அலுவலகங்களில், வெறும் 114 அலுவலகங்களில் மட்டுமே மாதிரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 967 வழக்குகளில் ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>சொத்து மதிப்<strong>பு குறைத்</strong>துக் காட்டுதல்</h2><p>605 வழக்குகளில் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூ.85.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 63 வழக்குகளில் சொத்துக்களின் உண்மையான மதிப்பு மறைக்கப்பட்டு, ரூ.1.07 கோடி கட்டணக் குறைவு செய்யப்பட்டுள்ளது. வெண்பேடு மற்றும் வயலாநல்லூர் பகுதிகளில் 14.94 ஏக்கர் நிலம் தொடர்பான 4 பரிவர்த்தனைகள் ரூ.78.66 கோடிக்குக் கிரையம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதன் மதிப்பு மிக அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.71.16 கோடி மதிப்புக் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7.83 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>அம்பத்தூர் மற்றும் தாமல் பகுதிகளில் ரூ.100.08 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான படிவம் 26AS சான்றுகள் இருந்தபோதிலும், பணப் பரிமாற்றமே இல்லாதது போல் அதிகாரப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரூ.4.99 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரையில் நிலத்தில் இருந்த கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததால் ரூ.17.55 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>கண்கா<strong>ணிப்பு கு</strong>றைபாடு</h2><p>பதிவுத்துறையில் தணிக்கைக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு தணிக்கைக் குழுக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5,428 உள் தணிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், ரூ.323.7 கோடி மதிப்புள்ள 61,109 தணிக்கைப் பத்திகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரியாக ஆய்வு செய்யப்பட்ட 114 அலுவலகங்களிலேயே ரூ.96 கோடி இழப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 533 அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு வெளிவரக்கூடும் என சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?- வானிலை ஆய்வு மையம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-what-will-the-weather-be-like-for-the-next-6-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-what-will-the-weather-be-like-for-the-next-6-days#comments</comments><guid isPermaLink="false">d8874b7e-7218-46b6-b4e8-009bde74ee1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:40:06.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/2v4748w2/IMD.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வானிலை ஆய்வு மையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானிலை ஆய்வு மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/2v4748w2/IMD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-party-meeting-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-party-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">7476cede-f8ab-4cff-8d81-80dfb0785a2c</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:40:05 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:40:05.007Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தவெக,tvk,TVK alliance meeting,கூட்டணி கட்சி கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/uf6yxwr7/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK Head office]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/uf6yxwr7/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சி கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது.</p><h2>2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம்</h2><p>தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிழகம் (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.</p><p>முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். </p><p>கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இந்நிலையில், இதைத்தேர்தல் தொடர்பாக தவெக கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் 2ம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தாரகை கத்பர்ட் மற்றும் பிரவின் சக்ரவர்த்தில் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p><p>விசிக சார்பில் தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p><p>மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, ஐயுஎம்எல் கட்சி சார்பில் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-constituency-has-delivered-different-results-in-every-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-constituency-has-delivered-different-results-in-every-election#comments</comments><guid isPermaLink="false">9c6ec262-a2f5-43cb-907a-2ff6034c8128</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:16:27 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:16:27.187Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,தாராபுரம் தொகுதி,இடைத்தேர்தல்,Dharapuram Constituency</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/20b8xh10/dharapuram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாராபுரம் தொகுதி]]></media:title><media:description type="html"><![CDATA[ தாராபுரம் தொகுதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/20b8xh10/dharapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.</strong></em></p><p>​திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) தொகுதிக்கான <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>​அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமா அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>வேட்பு மனு தாக்கல்</strong></h2><p>​இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும், குறிப்பாக தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.</p><p>​திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்களில், தாராபுரம் தொகுதியில் மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். பெண் வாக்காளர்களின் ஆதிக்கமே இந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும், வாக்காளர்களின் வசதிக்காக 186 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.</p><h2><strong>மாறுபட்ட முடிவுகள்</strong></h2><p>​முன்னதாக, கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 1,99,944 வாக்குகள் பதிவாகின. அதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் திவ்யா 6,026 வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இதுதவிர பல்வேறு சின்னங்களில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பிரித்தனர்.  ​தாராபுரம் தொகுதியின் அரசியல் வரலாற்றை ஆராயும்போது, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், பாட்டளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக 2001-ல் பா.ம.க.வும், 2011 மற்றும் 2026-ல் அதிமுகவும், 2016-ல் காங்கிரசும் வெற்றி பெற்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், பா.ஜ.க.வின் எல்.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பிடித்தார்.</p><p>​இவ்வாறாக ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கைவிடப்பட்டன- தணிக்கை அறிக்கையில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eight-smart-city-projects-in-chennai-were-dropped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eight-smart-city-projects-in-chennai-were-dropped#comments</comments><guid isPermaLink="false">96513549-b721-4a3d-8be7-828c96830270</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:55:29 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:55:29.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஸ்மார்ட் சிட்டி,SmartCity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/aofp13oe/Smartcity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/aofp13oe/Smartcity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் கைவிடப்பட்டன. திட்டமிடாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பகுதிக்கு வெளியே செலவிடப்பட்டு உள்ளது. 2014 நிதியாண்டு முதல் 2024 வரையிலான இத்திட்டங்களில் உள்ள விலகல்களை மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/ஸ்மார்ட்-சிட்டி">ஸ்மார்ட் சிட்டி</a> திட்ட செயலாக்கம் குறித்த செயல்திறன் தணிக்கையின் முடிவுகள் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சென்னைக்காக முதலில் திட்டமிடப்பட்ட 1366.25 கோடி ரூபாய் மதிப்புள்ளான 48 திட்டங்களில் ரூ.279.03 கோடி மதிப்பிலான 8 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. </p><h2><strong>சென்னை மாநகராட்சி</strong></h2><p>இவற்றில் நகர முன் முயற்சியின் கீழ் முன்மொழியப்பட்ட ரூ.248.47 கோடி மதிப்பிலான தெரு விளக்கு கண்காணிப்பு அமைப்பு மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும்.  இத்திட்டங்களை கைவிடுவதற்கு ஆவணங்களில் குறிப்பிட்ட நியாயப்படுத்தல் எதுவும் இல்லை என்று தணிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதே நேரத்தில் திட்டமிடபடாத 20 பணிகள் ரூ.189.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளை சீரமைத்தல் உயிரி வாயு ஆலை, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டை  நவீனமயமாக்குதல், திறன் மிகு வகுப்பறைகள், போக்குவரத்து பூங்காக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஒரு பசுமை கட்டிடம் ஆகியவை இதில் அடங்கும். </p><p>பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பகுதி சார்ந்த மேம்பாட்டு பகுதிக்கு வெளியே ரூ.76.32 கோடி செலவில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக மற்றும் அலுவலக செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.16.23 கோடி திசை திருப்பப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">f886d5a8-04a6-40f6-9fd9-cd69ba1f97a0</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:55:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:55:15.380Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,மு.க. ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/otd71bep/New-Project-2026-09-09T152438.569.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/otd71bep/New-Project-2026-09-09T152438.569.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து, தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned">முதலமைச்சர் விஜய்</a> செய்த செய்கைக்கு விசிக தலைவர் திருமாளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் அமைச்சர் நிர்மல் குமார் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><h2>மனித மாண்புகளுக்கு எதிரானது</h2><p>“காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விஜய் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. </p><p>எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும், மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.</p><h2>அகவையில் மூத்தோரை மதித்தல் வேண்டும்</h2><p>எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு.</p><p>கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். </p><p>எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்படும்.</p><p>முதலமைச்சரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதலமைச்சரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். </p><h2>அமைச்சர் கருத்தை திரும்பப் பெறவேண்டும்</h2><p>மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். </p><p>அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு- போராட்டம் நடத்த முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">e89a2a95-5745-4e62-a234-e0aaab60f9bb</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:30:34.870Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் போராட்டம்,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xknznt1y/TNGovt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xknznt1y/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சீனிவாசபுரம், முள்ளிமா நகர்  பகுதி மீனவர்கள்  புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.</strong></em> </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">புதிதாக தலைமைச் செயலகம் </a>கட்ட  அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை மாநகராட்சியும் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. </p><h2><strong>மீனவர்கள் எதிர்ப்பு</strong></h2><p>சுமார் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் 15 அடுக்கு தளங்களுடன் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>சீனிவாசபுரம், முள்ளிமா நகர்  பகுதி மீனவர்கள்  புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 9 மீனவ கிராமங்கள் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை திரட்டி தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கும் என்றும் மாற்றிடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்துகின்றனர்.</p><p>இது குறித்து மீனவர் சங்க தலைவர் விஜயன் கூறியதாவது:-</p><p>புதிய தலைமைச் செயலகம் இங்கு அமைந்தால் மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள்.</p><p>பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளை உள்ளடக்கியது பள்ளி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படிக்கிறார்கள். </p><p>ஏற்கனவே ஆட்சி புரிந்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள்  பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை. கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் இடத்தை மட்டும் கணக்கில் கொண்டு தலைமைச் செயலத்தை இங்கு கட்ட த.வெ.க. அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதி சீனிவாசபுரத்தில் அனைத்து மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த 9 கிராமங்கள் தவிர பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.</p><p>கூட்டத்தில் தமிழக அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி  தீர்மானம் நிறைவேற்றப்படும். அரசு மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே செடியில் இரு வண்ண டேலியா மலர்கள் - செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dahlia-flowers-of-two-colors-on-a-single-plant-at-the-ooty-botanical-garden</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dahlia-flowers-of-two-colors-on-a-single-plant-at-the-ooty-botanical-garden#comments</comments><guid isPermaLink="false">ecfa2096-1dd0-4c66-b3a7-60a97c06cc59</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:20:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:20:03.389Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலாப் பயணிகள்,Ooty Botanical Garden,ஊட்டி தாவரவியல் பூங்கா,Dahlia Flowers,டேலியா பூக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/jfb19dio/Dahliaflowers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dahlia flowers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/jfb19dio/Dahliaflowers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன. </p><p>இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.</p> <p>குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனை போலவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிலவும் இரண்டாம் சீசனிலும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.</p><p>இந்த நிலையில், 2-ம் சீசனுக்காக அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">தாவரவியல் பூங்கா</a>விற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ண மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் பல செடிகள் பூக்க தொடங்கியுள்ளதால், பூங்காவின் பல பகுதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கியுள்ளன.</p> <p>இதில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது ஒரே டேலியா செடியில் பூத்துள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்கள். ஒரே செடியில் இருவேறு வண்ணங்களில் அழகாக மலர்ந்துள்ள டேலியா பூக்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசிப்பதுடன், அவற்றின் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.</p> <p>பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன. </p> <p>2-ம் சீசனில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெட்டுனியா, சால்வியா, டேலியா, மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்ச்செடிகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றுதல், களைகளை அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் &apos;தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time#comments</comments><guid isPermaLink="false">5176c4c0-1b32-4401-ab08-f05041017518</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:55:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:55:52.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Election King Padmarajan,இடைத்தேர்தல்,தேர்தல் மன்னன் பத்மராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Election King Padmarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.</p><h2>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">மதுராந்தகம்</a>, தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் மன்னன்</h2><p>இந்நிலையில், ‘தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20">பத்மராஜன் </a>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.</p> <p>1988-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், சமீபத்தில் மேல்சபை தேர்தலுக்கு (255-வது முறை) மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அவர் 256-வது முறையாக வேட்பு மனுவை அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media#comments</comments><guid isPermaLink="false">d5a0fb62-3d91-43fe-a5cc-6abe90fadcde</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:46:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:46:07.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,Social Medias,ஏஐ,AI Photos,ஏஐ புகைப்படங்கள்,சமூக வலைத்தளங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது புகைப்படம்-  எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர்.</strong></em> </p><h2><strong>சமூக வலைத்தளங்கள்</strong></h2><p>இன்றைய இளம் தலைமுறையினர் <a href="https://www.maalaimalar.com/topic/ஏஐ">சமூக வலைதளங்களில்</a> சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வயது வித்தியாசமின்றி பலரும் மூழ்கி கிடப்பதையும் காண முடிகிறது.</p><p>இப்படி முகநூலில் பல்வேறு விஷயங்கள் புகைப்படங்களோடு டிரெண்டிங் ஆவது வழக்கம். இதற்கு முன்பு ஜிப்லி புகைப்படங்கள் கார்ட்டூன் வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.</p><h2><strong>லைக்குகள்</strong></h2><p>இந்த நிலையில் தற்போது 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் தங்களது இளம்வயது புகைப்படங்கள் ஏ.ஐ. மூலமாக உருவாக்கி தங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை பெற்று வருகிறார்கள்.</p><p>தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது தோற்றத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் புல்லட்டில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு 80 டிரெண்டிங் என்று பதிவிட்டுள்ளனர்.</p><p>இதே போன்று நடிகர்-நடிகைகள் பலரும், அரசியல் பிரமுகர்களும் ஏ.ஐ. புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly#comments</comments><guid isPermaLink="false">3e18b694-8daa-452b-a0ab-eef498e586ee</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:40:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:40:50.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,dmk protest,கண்டன ஆர்ப்பாட்டம்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து - குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி - அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் - தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று  - அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">விஜய்</a>.</p><p>இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார்.  திராவிட மாடல் ஆட்சி மூலமாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச்  செய்து வருகிறார்.</p><p>கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.</p><p>'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில்<a href="https://www.maalaimalar.com/search?q=%20MISA" rel="nofollow"> MISA </a>(Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தை  கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள்.</p><p>சில அமைச்சர்கள்   சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி,  'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள்.   இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்.  இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் -  மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள்,  அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  கழக உடன்பிறப்புகள்  அனைவரும் கலந்து கொண்டு  முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain#comments</comments><guid isPermaLink="false">75eea6da-c35e-431a-869d-ad04d7e9825d</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:36:38 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:36:38.688Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,பரந்தாமன்,Paranthamen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidate Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்று  மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கூறினார்.</p>  <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <p>இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பிரதிநிதிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced">தி.மு.க.</a> தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். </p><p>இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>  <p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries"> திமுக</a> சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார்.</p><p>இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம்.</p><p>* தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெற்று வெற்றிக்கனியை தலைவரிடம் சமர்பிப்போம்.</p> <p>* மதுராந்தகம் வெற்றியை திமுக தலைமைக்கு சமர்பிப்போம்.</p><p>* தவெக ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p><p>* திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள், அதனால் வெற்றி நிச்சயம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai#comments</comments><guid isPermaLink="false">03e40ea5-907a-4d95-bf31-d39b404aa83e</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:15.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p>பருவமழை காலம் தொடங்க இருப்பதால் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு அதனை  இடிக்க வேண்டுமென்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> கமிஷனர் சமீரன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆபத்தான கட்டிடங்கள்</strong></h2><p>சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் காணுதல், கட்டடத்தில் வசிப்பவர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.</p><p>விரிவான வழிகாட்டுதல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள், பழுதடைந்த சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கப்படுகின்றன. உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் தங்களுக்குரிய வார்டுகளுக்குள் உள்ள ஆபத்தான கட்டடங்களை, வழக்கமான தள ஆய்வுகளின்போது அடையாளம் கண்டு, அந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.</p><h2><strong>நீதிமன்ற வழக்கு</strong></h2><p>கட்டடத்தின் தன்மை, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக, அந்த இடத்தை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அந்த சொத்து அல்லது கட்டிடம் தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கிடையே ஏதேனும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.</p><p>நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குறிப்பிட்ட உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ, அந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.</p><p>கட்டிடத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதியாக மதிப்பிட முடியாத நிலையில், பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி, முறையான கட்டமைப்பு நிலைத்தன்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.</p><p>பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கட்டிடத்திற்கு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அந்த பணிகளின் அளவைப் பொறுத்து நியாயமான காலக்கெடுவிற்குள் அவற்றை மேற்கொள்ளுமாறு கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். </p><p>உரிமையாளர் அந்த அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை மாநகராட்சியால் அந்த கட்டடம் இடிக்கப்படும். மேலும், கட்டிடத்தை இடிப்பதற்காக மாநகராட்சிக்கு ஏற்பட்ட செலவுகள்  கட்டட உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்.</p><p>ஆபத்தான கட்டடத்தை காலி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் அல்லது காலி செய்ய மறுக்கும் எந்த நபரையும், காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றலாம். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கும் தவெக அரசு..! மதுரை மாணவன் கொலை விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond#comments</comments><guid isPermaLink="false">364cf0f1-562a-48a1-a923-56cad4e5af8c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:19:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:19:24.033Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,student death,பள்ளி மாணவன் உயிரிழப்பு,கழிவுநீர் குட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?</p><p>மதுரை அருகே காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களுடன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சமரசமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">கொலை</a> செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.</p><p>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.</p><p>மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days#comments</comments><guid isPermaLink="false">1f0a0b4a-2a1e-414d-a173-73b460fd6f2c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:13:16.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேவை பாதிப்பு,Banks Strike,Banks Closed,வங்கிகள் வேலை நிறுத்தம்,வங்கிகள் மூடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:title><media:description type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/topic/வங்கிகள்">வேலை நிறுத்தம்</a> நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.</p><p>பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p>இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற (வெள்ளிக்கிழமை) வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி  (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள்  நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.</p><p>பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், அந்நிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக பணிகள் இதனால் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் ஏ.டி.எம்.களும் முடங்கக்கூடிய நிலை உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இது குறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:- </p><p>நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.</p><p>மேலும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்ற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகம் மற்றும் அரசு தயக்கம் காட்டுகிறது. </p><p>எனவே நாளை மறுநாள் அனைத்து  வங்கிகளும்  மூடப்பட்டு ஊழியர்கள் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது. சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதை தவிர வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 182 குண்டங்களில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th</link><comments>https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th#comments</comments><guid isPermaLink="false">e2c8189d-96d3-4341-893e-884a6909b10e</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:39:08 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:39:08.460Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabishekam,கும்பாபிஷேகம்,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/q5kvqdx6/meenakshitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/q5kvqdx6/meenakshitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற 17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.</strong></em></p><p>உலக பிரசித்தி பெற்ற மதுரை <a href="https://www.maalaimalar.com/topic/மீனாட்சி-அம்மன்-கோவில்">மீனாட்சி அம்மன் கோவிலில்</a> 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.</p><p>12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று ஆகம விதிகள் கூறியபோதும், கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. அதன் காரணமாக கும்பாபிஷேக பணிகள் தள்ளிப்போனது.</p><p>இந்தநிலையில் தற்போது ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் மீனாட்சி அம்மன் கோவிலில் 186 வகையான திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.</p><p>இதையொட்டி வடக்கு ஆடி வீதியில் 182 யாக குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சுழற்சி முறையில் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகளை மேற் கொண்டு வருகிறார்கள். அதில் முதல் நாளில் மூலவர் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதாவது, மூலவர்களின் சக்தியை தற்காலிகமாக கும்பங்களில் எழுந்தருளச் செய்து, பாலாலய மூர்த்திகளுக்கு பூஜை நடக்கும். இதன் பின் கருவறையில் திருப்பணி, மருந்து சாற்றுதல் தொடங்கியது.</p><p>2-ம் நாளில் யாகசாலைக்கு காவலாக விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், முளைப்பாலிகை வளர்த்தல், மண்ணில் 9 வகை தானியங்கள் முளைக்க வைக்கும் அங்குரார்ப்பணம் நடந்தது.</p><p>3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடைபெறும். இது தான் முக்கிய கட்டம். 182 குண்டங்களில் 182 சிவாச்சாரியார்கள் அமர்ந்து, ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒரு தெய்வத்தை ஆவாகனம் செய்து வருகிறார்கள். இதில் மூல குண்டம்-மீனாட்சி அம்மனுக்கு, பிரதான குண்டம்-சுந்தரேஸ்வரருக்கு, மற்ற குண்டங்கள்-415 பரிவார தெய்வங்களுக்கு, 14 கோபுர கலசங்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>3-ம் நாளான நேற்று யாகசாலையில் மூர்த்தி, சாந்தி, ஸம்ஹிதா ஹோமங்கள் நடைபெற்றது. 4-ம் நாளான இன்று காலை தீர்த்த சங்கிரஹணம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கங்கை, வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீரையும், புனித கிணறுகளில் இருந்து நீர் எடுத்துவருதலும் நடந்தது.  </p><p>ஒவ்வொரு நாளும் வேத பாராயணம், ருத்ர ஜபம், தேவாரம், 108 தாமரை, 1008 சங்கு பூஜை என மந்திர ஒலி ஓயாமல் ஒலித்து வருகிறது. 11-ம் நாளான வருகிற 16-ந்தேதி, முதலில் 415 பரிவார தெய்வங்களான முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், துர்க்கை, முருகன் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும்.</p><p>இதையடுத்து 12-ம் நாள் மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடும்,  17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.</p><p>அன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையின் இறுதி 6 நாட்கள் மூலவர் சன்னதிகளில் மருந்து சாற்றுதல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கும் என்பதால் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக கும்பாபிஷேக திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">e6a7695e-4197-44b1-b8ce-3ae3891595a5</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:38:29.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,by election,வேட்புமனு தாக்கல்,DMK Candidates,இடைத்தேர்தல்,திமுக வேட்பாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>ராஜினாமா</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். </p><p>இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.</p><p>2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில், வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit#comments</comments><guid isPermaLink="false">55d6e3ca-197a-472a-9467-cbd5288bf04f</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:20:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:20:17.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Government employees,8th Pay Commission,Fitment Factor,8-வது ஊதியக் குழு கூட்டம்,ஃபிட்மென்ட் ஃபேக்டர்,ஓய்வூதியதாரர் அமைப்புகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 8th Pay Commission ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு, படிகள் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் குறித்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. </p><h2>சென்னையி<strong>ல் நடந்த க</strong>லந்தாய்வு கூட்டம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">மத்திய அரசு ஊழியர் சங்கங்கள்</a>, ஓய்வூதியதாரர் அமைப்புகள், ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளுடனான இரண்டு நாள் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை 8-வது ஊதியக் குழு சென்னையில் நடத்தியது. நேற்று (செப்டம்பர் 7) மற்றும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8)  நடந்த இக்கூட்டத்தில், ஊழியர் அமைப்புகள் தங்களது கோரிக்கைகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் அகவிலைப்படி சீரமைப்பு குறித்த கருத்துகளைக் குழுவிடம் நேரடியாக அளித்தன. சென்னை கூட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று புதுச்சேரியிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்கிறது.</p><h2>எத்தனை பேர் பயன் <strong>அடைவார்</strong>கள்</h2><p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்புத் துறையைத் தவிர்த்து 2025 டிசம்பர் 31 நிலவரப்படி சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஊதிய உ<strong>யர்வு நில</strong>வரம்</h2><p>ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 6-வது ஊதியக் குழுவில் 1.86 ஆகவும், 7-வது ஊதியக் குழுவில் 2.57 ஆகவும் இருந்த இந்த காரணி, 8-வது ஊதியக் குழுவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசோ அல்லது ஊதியக் குழுவோ இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையோ அல்லது இறுதியான ஊதிய உயர்வு அளவையோ அறிவிக்கவில்லை. எனவே, இணையதளங்களில் உலா வரும் அதிகாரப்பூர்வமற்ற எண்களை ஊழியர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>மத்திய அரசால் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்ட இந்த 8-வது ஊதியக் குழுவிற்கு, தனது இறுதி பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கிவிடும் எனக் கருதப்படுகிறது. அரசாங்கம் அறிக்கையைப் பரிசீலித்து இறுதி முடிவெடுத்த பின்னரே புதிய ஊதியக் கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியும் அரியர்ஸ் விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.</p>]]></content:encoded></item></channel></rss>