<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 12:09:31 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:52:52.797Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status" rel="nofollow">GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!</a></p><p>* வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.</p><p>* இன்று காலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனையானது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns" rel="nofollow">தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>* சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>*  அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today">வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</a></p><p>* வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><p>* வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention">மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</a></p><p>* மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். </p><p>* இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people">பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்</a></p><p>* படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா.</p><p>* மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து</a></p><p>* முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p><p>* மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</a></p><p>* அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>* பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union">9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?<br></a></p><p>*9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>*சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks">சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893, செப்டம்பர் 11-ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.</p><p>* அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day">மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</a></p><p>* கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.</p><p>* இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments">தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு</a></p><p>* முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p><p>* தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking">டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</a></p><p>* அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து வந்தார்.</p><p>* சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action">இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் கெடு ரத்து?</a><br><br>*ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.</p><p>*புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial">69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</a></p><p>* பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. </p><p>* உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun">டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு<br></a><br>*சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.</p><p>*ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance">மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் </a></p><p>* தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்.</p><p>* பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p>]]></content:encoded></item><item><title>‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">7d7a02d0-39ee-4b1f-b98b-16003e676080</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:46:06.308Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai super kings,சென்னை சூப்பர் கிங்ஸ்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration">சாலமன் பாப்பையா </a>வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் உயிரிழந்தார்.</p><p> அவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் இரங்கல் தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் அவரின் மறைவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது. </p><p>சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”</p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!</p><p>தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன.</p><p>தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges#comments</comments><guid isPermaLink="false">1e4e1801-d324-4fa4-ac09-98ced395cba2</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:28:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:28:53.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் இடத்தேர்வை கைவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>நெருக்கடியான பகுதி</h2><p>“புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.</p><p>இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.</p><h2>தற்போதைய சூழலில் அவசியமற்றது</h2><p>விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.</p><p>புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். </p><p>தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12 மீனவ கிராம மக்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டம்.. </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-plan-protest-against-new-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-plan-protest-against-new-secretariat#comments</comments><guid isPermaLink="false">cdec3e03-d394-4b3c-a2bc-170a624e806c</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:57:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:57:20.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,மீனவர்கள்,தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="356" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7cz2s3c5/images-4.jfif" width="639"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7cz2s3c5/images-4.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>எதிர்ப்பு </h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. </p><h2>ஆலோசனை </h2><p>பட்டினப்பாக்கம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களை சேர்ந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-pudupattinam-fishing-village-demand-boundary-demarcation"> மீனவ </a>மக்கள் , புதிதாக அமையவிருக்கும் தலைமைசெயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p> <h2>பாதிப்பு </h2><p>குறிப்பாக இந்த திட்டத்தால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-elections-vijay-party-to-get-majority-of-pattinampakkam">பட்டினப்பாக்கம்</a> உள்ளிட்ட 12 கிராமங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பல ஆண்டுகளாக பூர்வ குடிகளாக உள்ள எங்களை இவ்விடத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்த திட்டத்தினால் முள்ளிகுப்பம், முள்ளிமாநகர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்ன அவர்கள் பயன்படுத்தி வரும் நிலங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும். </p><h2>போராட்டம் </h2><p>ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அப்பகுதியில் அமையவிருக்கும் இந்த திட்டம் கூடுதல் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்று கூறும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். </p><p>இங்கு வசித்து வரும் மக்களிடம் ஆலோசனை கேட்காமலேயே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பட்டா வைத்திருக்கும் நிலத்தை கையகப்படுத்துவதா என்ற கேள்வியையும்  முன் வைத்திருக்கின்றனர். இதனிடையே சிபிஎம் தலைவர் சண்முகம் , அன்புமணி ராமதாஸ், டிடிவி  தினகரன் உள்ளிட்டோரு திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இலக்கிய தமிழை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration#comments</comments><guid isPermaLink="false">16e9f6bb-822a-4f1c-b1ff-853efd980147</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:22.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ solomon pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.</p><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-வது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார்.</p><h2>பேச்சாளர்</h2><p>சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.</p><p>வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.</p><h2>முதல் மேடைப் பேச்சு</h2><p>முதல் மேடைப் பேச்சு 1961-ல் புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா? என்ற விவாதத் தலைப்புகளில், புதுமைக் கவிஞனே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.</p><h2>கட்டுரைகள்</h2><p>சாலமன் பாப்பையா பணிகளுக்கு இடையே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.</p><h2>தமிழாய்வு</h2><p>சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார்.</p><h2>பட்டிமன்றங்கள்</h2><p>சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.</p><p>ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.</p><h2>கடினமான தமிழை எளிய தமிழாக்கியவர்</h2><p>சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.</p><p>திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.</p><p>அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.</p><h2>குடும்பம்</h2><p>இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-sathurthi-thodar-vidumurai-kidukiduvena-uyarntha-vimaan-kattanam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-sathurthi-thodar-vidumurai-kidukiduvena-uyarntha-vimaan-kattanam#comments</comments><guid isPermaLink="false">defc4158-ed32-4fd8-8ae6-ef216e43c124</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:50:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:50:26.028Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான கட்டணம் உயர்வு,விநாயகர் சதுர்த்தி,Ganesh Chaturthi,Flight ticket price</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c45y0amp/TNPSC-1.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ganesh Chaturthi,flight ticket ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c45y0amp/TNPSC-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>விடுமுறை </h2><p>விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி வார இறுதி நாட்களையும் சேர்த்து <a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று</a> நாட்களுக்கு தொடர் விடுமுறையானது விடப்பட்டுள்ளது.</p><h2>கொண்டாட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/spirituality/worship/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">விநாயகர் சதுர்த்தி</a> நாளை குடும்பத்தினருடன் கொண்டாட வெளி ஊர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>உயர்வு </h2><p>தொடர் விடுமுறையை ஒட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu">சென்னை </a>உள்நாட்டு விமான நிலையத்தில், திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், தூத்துக்குடி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில் பயணக்கட்டமானது பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, மும்பை, பெங்களூரு டெல்லி,  செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளது. இந்த விலை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">42943d8b-8b09-491a-bccd-b379b8b56bc2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:35:50 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:35:50.129Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,Maduramangalam,SIPCOT Park,மதுரமங்கலம்,சிப்காட் பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.</p><h2>கையகப்படுத்துதல் நடவடிக்கை தீவிரம்</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. </p><p>அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>புன்செய் நிலங்கள்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. </p><p>அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். </p><p>இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><h2>அரசுக்கு தெரியாமல் இல்லை</h2><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.</p><p>விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், முதலமைச்சர் விஜய் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்  மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. </p><p>இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர் விஜய், </p><p>இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? </p><h2>விமான நிலையம் மாறும்போது, சிப்காட் பூங்கா மாறாதா?</h2><p>விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, </p><p>வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு முதலமைச்சர் விஜய் விடையளிக்க வேண்டும்.</p><h2>பரந்தூர் நீதி, மதுராமங்கலத்திற்கும் கிடைக்க வேண்டும்</h2><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள்தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses#comments</comments><guid isPermaLink="false">87488c09-4874-41ad-935a-3da97fb86ecc</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:11:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:11:13.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Centre,மு.க.ஸ்டாலின்,NEET SS,நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை  பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">மு.க.ஸ்டாலின்</a> வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; </p><p>“மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் தகுதிப் புள்ளிக்கான சதவீத வரம்பைக் குறைக்காததால், நாடு முழுவதும் சுமார் 1,857  ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>இதில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடங்கும்.</p><p>நேற்று, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில், இந்த சதவீத வரம்பைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>எனவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே, இதற்கான வரம்பை 'பூஜ்ஜிய சதவீதத்திற்கு’ குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​மாநிலங்கள் தங்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குத் தகுந்தவாறு சதவீத வரம்பைத் தாங்களாகவே குறைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். </p><p>பொது சுகாதாரம் என்பது மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பாகும்.</p><p>நமது மக்களுக்குக் கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில், நாட்டின் மதிப்புமிக்க சொத்தான மருத்துவ இடங்கள் எதுவும் வீணாக அனுமதிக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns#comments</comments><guid isPermaLink="false">23a549c7-1249-4c1d-a671-cf73ebbc5813</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:00:51.199Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,passed away,cm vijay,முதலமைச்சர் விஜய்,சாலமன் பாப்பையா,saloman paapaiya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaiahh- CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away" rel="nofollow">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p>அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">00905420-5d68-4117-add0-19b1483b8fce</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:32:48.748Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,சாலமன் பாப்பையா,Solomon Pappiah</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappiah -edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p> சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away"> சாலமன் பாப்பையா </a>வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். </p><h2>இபிஎஸ் </h2><p>மறைந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இறப்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-admk-condemns-electricity-tariff-hike-demonstration-tomorrow-on-behalf-of-490486">எடப்பாடி பழனிசாமி </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த </p><p>தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.</p><p>தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.</p> <p>அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people#comments</comments><guid isPermaLink="false">3c4de154-9f81-4f1b-a3b8-219a1b91ac99</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:25:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:10.217Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Rajinikanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார். </p><p>அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையாவின்</a> ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences#comments</comments><guid isPermaLink="false">dbe02827-069a-4c66-a033-8fec594bd458</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:58:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:58:37.832Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vairamuthu,பட்டிமன்றம்,வைரமுத்து,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இந்நிலையில் கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p> <p>சாலமன் பாப்பையாவின் </p><p>மறைவு</p><p>உள்ளத்தை உடைக்கிறது</p><p>பாரதி மறைந்தநாளில்</p><p>பாப்பையாவும்</p><p>மறைந்திருக்கிறார்</p> <p>செப்டம்பர் 11</p><p>தமிழுக்கு நல்லநாள்</p><p>இல்லை போலும்</p><p>பட்டிமன்றத் தமிழ்</p><p>முடிந்துவிட்டதா?</p><p>பாமரத் தமிழ்</p><p>மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p> <p>கல்லூரிகளில்</p><p>பயிற்றுவித்த தமிழைக் </p><p>கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்</p><p>சாலமன் பாப்பையா</p><p>இந்தக் குளத்தில்</p><p>கல்லெறிந்தவர்கள் நூலில்</p><p>அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்</p> <p>சிரிக்க வைத்துச் </p><p>சிந்திக்கவும் வைத்த</p><p>மேடைக் கலைவாணர்</p><p>மறைந்துவிட்டார்</p><p>அவரது நாற்காலி</p><p>காலியாகவே இருக்கும்;</p><p>நிரப்ப முடியாது</p> <p>மதுரைக்கே</p><p>ஒரு வெறுமை வந்துவிட்டது;</p><p>மனம் கலங்குகிறது</p><p>அவரை இழந்து வாடும்</p><p>குடும்பத்தார்க்கும்</p><p>உலகத் தமிழர்களுக்கும்</p><p>ஆழ்ந்த இரங்கல்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away#comments</comments><guid isPermaLink="false">c0aba220-15e6-4e0e-a274-be1a4f1c65bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:25:47 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:25:47.120Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,பட்டிமன்றம்,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/lzh38z9d/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.</p><h2>சாலமன் பாப்பையா</h2><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார்.</p> <h2>கலைமாமணி விருது</h2><p>2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் அவர் பெற்றுள்ளார். பட்டிமன்றத்திற்காக முதல்முறையாக பத்மஸ்ரீ விருதை பெற்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.</p><p>மத்திய அரசின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2021-ம் ஆண்டு பெற்றார் சாலமன் பாப்பையா.</p> <h2>பட்டிமன்றம்</h2><p>அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p><p>தனது எளிமையான நகைச்சுவையான அறிவார்ந்த பேச்சால் பட்டிமன்றத்தை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்.</p> <h2>நகைச்சுவை கதாப்பாத்திரம்</h2><p>பலரும் திரைத்துறையை நோக்கிச் செல்லும் நிலையில் திரைத்துறையினரை பட்டிமன்றம் நோக்கி வரவைத்தவர் பாப்பையா. பட்டிமன்ற நடுவராக மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் சாலமன் பாப்பையா. சிவாஜி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் சாலமன் பாப்பையா நடித்துள்ளார்.</p><p>மதுரையில் காலமான சாலமன் பாப்பையாவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments#comments</comments><guid isPermaLink="false">cd1c765b-82b3-4ac1-93b0-bb899674569c</guid><pubDate>Fri, 11 Sep 2026 07:04:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T07:04:46.400Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,லண்டன்,london,தொழில் முதலீடுகள்,Business Investment</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8l134jbe/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொழில் முதலீடுகளை ஈர்க்க நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>தொழில் முதலீடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் விஜய் நள்ளிரவில் துபாயை சென்றடைந்தார். அங்கிருந்து வேறொரு விமானத்தின் மூலம் இன்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு</h2><p>லண்டனில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">முதலமைச்சர் விஜய்க்கு</a> தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு வசித்து வரும் ஏராளமான தமிழர்கள் விஜயை த.வெ.க. கொடியுடன் வரவேற்றனர்.</p><h2>100 நாட்கள்</h2><p>தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p> <h2>தவெக அரசு</h2><p>இதன்படி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval">த.வெ.க. </a>அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ன் வாயிலாக ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p> <h2>ஐரோப்பிய நாடுகள்</h2><p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து உள்ளதுடன், அவற்றின் மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p> <h2>ஏற்றுமதி</h2><p>நடைமுறைக்கு வந்த இந்தியா–பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p> <h2>முக்கிய நோக்கம்</h2><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும், உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன. </p> <p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறை களில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p><p>மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த ஒரு ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ மாநிலத்தில் அமைக்கப்படும் என <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற ‘சில்வர்ஸ் டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. </p> <h2>வாய்ப்புகள்</h2><p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>லண்டன் சென்றுள்ள குழுவில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், மற்றும் அரசு அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.</p> <h2>வெளிநாட்டு பயணம்</h2><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவருடன் சென்று உள்ள குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 17-ந்தேதி சென்னை திரும்புகிறார்.</p>]]></content:encoded></item><item><title>மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day#comments</comments><guid isPermaLink="false">8e12a7da-f586-4664-9992-912ad02d0918</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:56:52 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:56:52.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathiyar,நினைவு தினம்,மகாகவி பாரதியார்,Memorial Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bharathiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/d81kifoe/bharathi.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.</strong></em></p><p>சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.</p><p>தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.</p><h2>நினைவு நாள்</h2><p>இவர் தனது 39-ம் வயதில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்  11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p><h2>மகாகவி நாள்</h2><p>இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial#comments</comments><guid isPermaLink="false">b6b5ec7d-f18b-4f7e-854b-5ad443aeb122</guid><pubDate>Fri, 11 Sep 2026 06:06:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T06:06:22.596Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Government,தமிழக அரசு,நினைவு தினம்,Memorial Day,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,அமைச்சர்கள் மரியாதை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran memorial Ministers Pay Homage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/m5bpz0ta/ministers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p><h2>இமானுவேல் சேகரனார் நினைவு தினம்</h2><p>ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின்</a> 69ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. </p><h2>அமைச்சர்கள் மரியாதை</h2><p>இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.</p> <p>இதையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a>, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அதிமுக</h2><p>அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.</p><h2>அமைச்சர் வன்னியரசு</h2><p>அதேபோல் அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு மற்றும் நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.</p> <h2>பலத்த பாதுகாப்பு</h2><p>பாதுகாப்பு பணிக்காக தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மணிவண்ணன் உள்ளிட்ட 3 டி.ஐ.ஜி.க்கள், 24 மாவட்ட எஸ்.பி.க்கள், கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance#comments</comments><guid isPermaLink="false">2503d104-8d32-45f9-b1ff-ab6eccf7700c</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:33:34 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:33:34.951Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/w6qmcuae/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.</p><p>மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a>  வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஆட்சி கலையும்</h2><p>ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கலையும் என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து பதில் அளித்த அவர், தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்,  ஆர்.எஸ் பாரதி சொல்வது போல், ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை, தி.மு.க.வினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன.</p> <h2>இடைத்தேர்தலில் வெற்றி</h2><p>தமிழக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றி வாய்ப்பு எட்டுவோம், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அதனை தீர்ப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <h2>கம்யூனிஸ்ட் கட்சிகள்</h2><p>கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த  செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள். மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணையும் என்று தெரிவித்தார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details">முதலமைச்சர் விஜய்</a> உடல் மொழி கிண்டல் செய்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர், 2017-ம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் தனபால் அறையில் சேரை இழுத்து கீழே தள்ளி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் செய்த அராஜகம் எல்லோருக்கும் தெரியும், எனவே, அதனைப் பற்றி எல்லாம் பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6a742ad6-417e-414b-aa3d-8168baf8476d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:46:53.873Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல்</a> சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இதையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்</p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.</p> <p>நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">587acd5d-ae99-4c19-a3cd-2c3a69900965</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:39:46.155Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,வேலைநிறுத்தம்,வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Strike,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>மத்திய அரசு</h2><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>8½ லட்சம் வங்கி ஊழியர்கள்</h2><p>ஆனால், 24 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அரசுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால். வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <h2>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வங்கி ஊழியர்கள்</a> இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">a4e751d5-93b9-4c47-b0dc-bbd16060fd98</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:02:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:02:32.915Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>லட்சக்கணக்கான மக்கள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கல்வி, வேலை, சுய தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ் ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ரெயில்களில் இருக்கைகள் முன்கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பஸ்</a> உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p> <h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p> <p>அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகுமரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-</p> <p>மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p> <h2>நெரிசலுக்கு வாய்ப்பு</h2><p>இதுஒருபுறம் இருக்க, ஏராளமானோர் இன்று தங்கள் சொந்த கார்களிலும், தங்கள் ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதேபோன்று, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் இன்று கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது நிதர்சனம். போலீசார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6935146d-9d06-4369-b262-c6cda00a6b45</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:40:28 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:40:28.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel Sekaran - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதி செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்.9-ந்தேதி பிறந்தார். அவர் ஒரு சமூக நீதிப் போராட்டக்காரரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். படுகாத்து குடியிருப்பு கிராமத்தில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் தனது இளமைக் காலம் தொட்டே தீவிரமாகக் குரல் கொடுத்தார்.</p> <p>இமானுவேல் சேகரன் தனது 18வது வயதிலேயே இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசப்பற்றுடன் செயல்பட்டார்.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக சமத்துவம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் இமானுவேல் சேகரன் பாடுபட்டார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">இமானுவேல் சேகரன்</a> ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இயங்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.</p><p>சாதிய வன்முறைகளின் உச்சகட்டமாக, அவர் தனது 33-வது வயதில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இவருக்கென மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசியலிலும் சமூக நீதியிலும் இவரது தியாகம் ஒரு வரலாற்று அடையாளமாகக் கருதப்படுகிறது.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 10 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-september-2026#comments</comments><guid isPermaLink="false">cd1c0430-b0bb-4648-93d3-063900150d82</guid><pubDate>Thu, 10 Sep 2026 04:09:14 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:30:37.446Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sjr5yp31/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - 'மிசா' கொடுமைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு</a></p><p>* யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது.</p><p>* விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருகிறீர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-another-murder-in-chennai-cm-vijay-planning-hero-style-stunt">சென்னையில் மீண்டும் ஒரு கொலை! - முதலமைச்சர் விஜய் ஹீரோ சாகசம் காட்ட திட்டமா?: கனிமொழி</a></p><p>* தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை!</p><p>* நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/9b814c8d-4771-4bd0-b5f0-cf843398997d">குஜராத்: கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த சாரம்.. சிக்கித் தவித்த 13 பேர் மீட்பு</a></p><p>*மீட்கும் பணி நள்ளிரவையும் தாண்டி தீவிரமாக நடைபெற்றது.</p><p>* அங்கிருந்த பெரிய கிரேன் ஒன்றும் இடிபாடுகளின் மீது சாய்ந்தது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/af314040-a47a-4091-8eea-f052c3a066e1">சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</a></p><p>*சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><p>*இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97d84f96-1449-43af-89c9-086e404098d1">SIR: பாரத ரத்னா பெற்றவருக்கே இந்த நிலைமையா?.. தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடியில் 92 வயது விஞ்ஞானி</a></p><p>*16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.</p><p>*நன்கறியப்பட்ட பிரபலங்களும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/5be92010-e19b-4447-a4f9-35ec13094301">VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து - 2 வீரர்கள் பலி</a></p><p>*வங்கதேச ராணுவம் இதனை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறது.</p><p>*2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c0a6b263-0dad-4f60-b584-9621b723bb3d">பாகிஸ்தானில் ஆப்கான் மாணவர்கள் மருத்துவம் பயில தடை.. ஏற்கனவே படித்து வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு</a></p><p>*படிப்பை நிறைவு செய்யும் தருவாயில் இருக்கும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>*உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/46482b36-cf18-4d8f-b85e-6d948c78e90a">கணவன் மனைவியுடன் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமா? - உச்சநீதிமன்றம் சொன்னது இதுதான்</a></p><p>*கணவனால் கட்டாயப் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்படும் பெண் சந்தேகத்திற்கு இடமின்றி பாதிக்கப்பட்டவரே </p><p>*நாங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-another-brutal-murder-in-chennai">சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை- என்ன பதில் வைத்திருக்கிறார் முதலமைச்சர்?: உதயநிதி</a></p><p>* காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>* தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-10-9-2026">GOLD PRICE TODAY: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/putin-to-visit-india-for-brics-summit-three-russian-military-aircraft-arrive-for-preparatory-and-security-operations">பிரிக்ஸ் மாநாட்டுக்கு இந்தியா வரும் புதின்.. முன்னெச்சரிக்கை பணிகளுக்கு 3 ரஷிய ராணுவ விமானங்கள் வருகை<br></a><br>*இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.</p> <p>*ரஷிய அதிபர் புதின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing">பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் தீ விபத்து.. 5 பேர் பலி - 87 பேர் மாயம்</a></p><p>*இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>*87 பேரைக் காணவில்லை என அந்நாட்டுக் கடலோரக் காவல் படை இன்று தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/announcement-of-candidates-for-the-secular-social-justice-victory-alliance">மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்- மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு</a></p><p>* மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி</a></p><p>* சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு.</p><p>* மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-ask-question-to-tn-govt">கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை என்ன?- அரசுக்கு அன்புமணி கேள்வி</a></p><p>* ஆளும் கட்சியான திமுக, இதில் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்ததுடன், என் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். </p><p>* தமிழ்நாட்டில் இப்போதுள்ள 4038 மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-promises-5000-per-person-to-the-public-if-they-vote-for-the-republican-party-in-the-midterm-elections">இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் - நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி</a></p><p>*அதிபர் பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடையும் போது இடைக் காலத் தேர்தல் (Midterm Election) நடக்கிறது.</p><p>*,000 டாலர் ( 4.4 லட்சம் ரூபாய்) வழங்கப்போவதாக அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/duraimurugan-says-history-will-repeat-itself-through-by-election">இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்</a></p><p>* 2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.&nbsp;</p><p>* எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-elections-admk-and-naam-tamilar-katchi-candidates-to-be-announced-soon">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு</a></p><p>* அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.</p><p>* நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது மதுரையில் சேயோன் படப்பிடிப்பில் உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-recognized-state-political-party-for-tvk">அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது த.வெ.க.: உறுதி செய்தது தேர்தல் ஆணையம்</a></p><p>* தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.</p><p>* திமுக, அதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேமுதிக ஆகிய 6 கட்சிகள் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-first-sit-in-existing-legislative-assembly-and-serve-people">இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் - கனிமொழி</a></p><p>* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.</p><p>* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-voice-of-the-goddess-who-prevents-suicide-lakshmi-saves-the-lives-of-many-even-when-unable-to-walk">தற்கொலையை தடுக்கும் தேவதையின் குரல்.. நடக்க இயலாத நிலையிலும் பலரின் உயிரைக் காப்பாற்றும் லட்சுமி!<br></a></p><p>*இன்று (செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.</p><p>* வேறெதையும் விட மிக மிக அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</a></p><p>* வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>* நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</a></p><p>* டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று பொற்கொல்லர் ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்.</p><p>* தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance">த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் </a></p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு.</p><p>* மிசா ஒடுக்குமுறைக்கு ஆளானவர் மு.க.ஸ்டாலின் தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case">புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</a></p><p>* சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். </p><p>* உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/east-zone-clinches-the-duleep-trophy">துலீப் டிராபி: 13 ஆண்டுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது கிழக்கு மண்டலம்</a></p><p>* கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்தது.</p><p>* ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கும், தொடர் நாயகன் விருது திலக் வர்மாவுக்கும் வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-deal-before-brics-summit-russia-plans-to-sell-105-passenger-planes-in-india">பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பாக வரலாற்று ஒப்பந்தம்: இந்தியாவில் 105 பயணிகள் விமானங்களை விற்பனை செய்ய ரஷியா திட்டம்!... </a></p><p>*இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை இணைக்கும் பிராந்திய வான்வழிப் போக்குவரத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. </p><p>*இந்த பிரம்மாண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரஷியாவின் IL-114-300 ரக டர்போப்ராப் பயணிகள் விமானங்கள் இந்திய சந்தைக்கு வரவுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</a></p><p>* வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><p>* தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th">தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval" rel="nofollow">27 மாதங்களில் மிகப்பெரிய அங்கீகாரம்..!- மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி</a></p><p>* 35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள்.</p><p>* தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test">3வது டெஸ்டில் 5 வீரர்கள் அரை சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு</a></p><p>* பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.</p><p>* இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் உள்பட 5 பேர் அரை சதம் கடந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் அஜெண்டா இதுதான் - முழு விவரம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details#comments</comments><guid isPermaLink="false">4bd5e6ae-68d5-4095-b057-222f2747c831</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:02:45 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:02:45.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,England,Business Investment,இங்கிலாந்து,தொழில் முதலீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். </p><p>நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>துபாய் சென்று அங்கிருந்து லண்டன் பயணிக்கிறார். </p><p>நேற்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும். </p><p>அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். </p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் </a>'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>திட்டம்</h2><p>விஜய் பயணம் குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், </p><p>“தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p><p>முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p> <p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.</p> <p>15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p> <p>குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கன், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன.</p><p>மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. </p><p>இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும். உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன.</p><p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் விஜய் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</p> <p>இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு.</p><p>உலகத்தரம் வாய்ந்த ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' மாநிலத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். </p><p>இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். </p><p>இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு. விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">69495474-cebc-433d-be87-4f4fc990448f</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:57:50.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>actor Ajith Kumar,நடிகர் அஜித்குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Le Mans Cup</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது. </p><h2>முதலமைச்சரின் பயணம் </h2><p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் விஜய் </a>செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார். </p><p>ஒரே சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் அமைந்திருப்பதால், இவ்விரு திரையுலக ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துக் கொள்ளும் இந்த தருணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A special guest will be waving the green flag at Silverstone this weekend!  C. Joseph VIJAY<br><br>The Indian actor and Chief Minister of Tamil Nadu <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>, will be joining us to support our Indian drivers in the UK and officially start the <a href="https://x.com/hashtag/SilverstoneRound?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SilverstoneRound</a> in front of the… <a href="https://t.co/pZiZOKy7yW">pic.twitter.com/pZiZOKy7yW</a></p>&mdash; Le Mans Cup (@LeMansCup) <a href="https://x.com/LeMansCup/status/2098050030162559409?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility#comments</comments><guid isPermaLink="false">f635baaf-11c3-4d4f-bdd4-515b4e867f96</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:36:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:36:20.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கவுண்டம்பாளையம்,தவெக எம்எல்ஏ,TVK MLA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்,kaundampalayam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ்.</p><p>இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் பொறுப்பு</h2><p>இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கும், சட்டப்பேரவைத் தலைவர் JCD பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன்.</p><p>சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன்.</p><p>தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed#comments</comments><guid isPermaLink="false">e08b6ae2-e6ce-44be-9f62-42da6da62bf0</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:33:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:33:23.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Vijay Gold Ring scheme,தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தள்ளுபடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான</a> டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  </p><h2>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</h2><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது. </p><p>இந்நிலையில் ஒரு பைசாவில் தங்க மோதிரம் செய்துதர முன்வந்தத ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தங்கம் தரமற்றதாக இருக்கும்</h2><p>ஹால்மார்க் முத்திரைப் பெறுவதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை 4 ஆயிரத்து 465 ரூபாய்க்கு செய்து தருவதாக செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. </p><p>இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைக் கழகம், மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது, அந்த கழகத்துக்கு தங்கத்தைப் பற்றி என்ன தெரியும் என்று வாதிடப்பட்டது. </p><h2>அரசுக்குதான் லாபம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்குத் தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. </p><p>இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும் என்றும் ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். </p><p>நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections#comments</comments><guid isPermaLink="false">f6b8dd8a-a3df-4a6b-ace0-36d6b972d3f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:37:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:37:06.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சட்டமன்ற தொகுதி,Legislative Assembly,bye election,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK bye election candidate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான</a> வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. </p><p>திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><p>தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சத்யாபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><h3><strong>அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்</strong></h3><p>இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>27 மாதங்களில் மிகப்பெரிய அங்கீகாரம்..!- மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-on-vetri-kazhagam-recognition-and-whistle-symbol-approval#comments</comments><guid isPermaLink="false">d40d6bf7-b20f-4cf6-af14-7a31b127adf9</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:30:14.587Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Election Commission,தேர்தல் ஆணையம்,tvk,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o1io2ajx/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/o1io2ajx/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.</p><p>முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள். </p><p>எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">மதச்சார்பற்ற சமூக நீதி</a>க் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள். </p><p>35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.</p><p>மக்களே… என் சொந்தங்களே… தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.</p><p>ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும்.</p><p>இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆந்திர பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆதவ் அர்ஜூனா? - லண்டன் பயணம் குறித்து அப்பாவு பகீர் கருத்து! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-aadhav-arjuna-plotting-to-topple-the-government-andhra-style-appavu-makes-a-sensational-remark-regarding-the-london-trip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-aadhav-arjuna-plotting-to-topple-the-government-andhra-style-appavu-makes-a-sensational-remark-regarding-the-london-trip#comments</comments><guid isPermaLink="false">a9608cfd-2c7c-45db-bbc8-2d5812aa1b07</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:08:12 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:08:12.896Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அப்பாவு,appavu,என்.டி.ராமாராவ்,N.T. Rama Rao,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ze8bumaa/New-Project-2026-09-10T173652.160.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆந்திர பாணியில் ஆட்சியைக் கவிழ்க்கும் ஆதவ் அர்ஜூனா? - லண்டன் பயணம் குறித்து அப்பாவு பகீர் கருத்து! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ze8bumaa/New-Project-2026-09-10T173652.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திரா பாணியில் ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனாவையும், லண்டன் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறீர்களா? என முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>கல்லாப்பெட்டிக் கூட்டணி</h2><p>“தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து,</p><p> இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் “கல்லாப்பெட்டிகூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட  கட்சிகளை அழைத்து  “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின்  செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் முதலமைச்சர் சார்? </p><p>நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின்  நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது  நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும் முதலமைச்சர் சார்? </p><h2>நாகரிகமில்லா...</h2><p>இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு  எதிராக இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி எதிர்த்து குரல் கொடுத்ததால்  முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா ? </p><h2>ஆந்திர பாணியில் ஆட்சி கவிழ்ப்பு</h2><p>ஒருமுறை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி.இராமராவ் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கவிழ்த்து முதலைமைச்சர் ஆனது போல் </p><p>ஆதவ்அர்ஜூனா முதலமைச்சராகி விடக்கூடாது என்ற பயத்தில் உங்களோடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">லண்டன் அழைத்து செல்கிறீர்களா முதலமைச்சர் சார்</a>?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - அரசுக்கு சிபிஐ வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government#comments</comments><guid isPermaLink="false">01d74bee-3aa3-45ff-8a47-f5cb9e9248ef</guid><pubDate>Thu, 10 Sep 2026 11:45:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T11:45:30.572Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CPI,பட்டினப்பாக்கம்,New Secretariat,pattinapakkam,M. Veerapandian,மு. வீரபாண்டியன்,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/l8pcoxvy/New-Project-2026-09-10T171458.218.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் - அரசுக்கு சிபிஐ வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/l8pcoxvy/New-Project-2026-09-10T171458.218.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">பட்டினப்பாக்கத்தில்</a> முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>முன்மொழிவு தவறானது</h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவு தவறானது. </p><p>மீனவ மக்களின் வாழ்வாதார உரிமைகள், சுடலோரச் சூழலியல், காலநிலைப் பாதிப்புகள், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கியமான நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு ஆகியவை பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கும். </p><p>தமிழ்நாடு அரசு இம்முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.</p><h2>9 பகுதிகளுக்கு பாதிப்பு</h2><p>முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட ஒன்பது மீனவக் குடியிருப்புகள், முன்மொழியப்பட்ட இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ளன.</p><p>சுற்றியுள்ள மீனவக் குடியிருப்புகளின் மக்கள், கடலை வெறும் குடியிருப்புப் பகுதியாக மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அவர்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பொது வளமாகவும் உள்ளது. </p><h2>முடங்கும் மீன் தொழில்கள்</h2><p>மீன்பிடித்தல், படகுகளின் இயக்கம், மீன் இறக்குதல், வலைகள் மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை, சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி சார்ந்த தொழில்கள் இக்கடலோரப் பகுதியைச் சார்ந்தே நடைபெறுகின்றன.</p><p>இத்தகைய குறுகிய கடலோரப் பகுதியில் மிகப்பெரிய நிர்வாக வளாகம், அதனுடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுவது, ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாகியுள்ள கடலோரப் பகுதியை மேலும் பாதிக்கும். </p><p>1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கும், பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுவர்.</p><p>உயர் பாதுகாப்பு கொண்ட அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தின் வருகையால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும், முக்கியப் பிரமுகர்களின் வாகனப் போக்குவரத்து, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பணியமர்த்தல் போன்றவை தவிர்க்க முடியாததாகும். </p><h2>கட்டுப்படுத்தப்படும் அபாயம்...</h2><p>இதன் விளைவாக மக்களுக்கு பொதுவாகச் சொந்தமான கடற்கரைப் பகுதி படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாக பாதுகாப்பு வளாகமாக மாறும் அபாயம் உள்ளது.</p><p>மேலும் காலநிலை அவசரநிலை நிலவும் இன்றைய சூழலில் இத்தகைய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது பொருத்தமற்றதும், ஆபத்தானதுமாகும். </p><p>சென்னையின் கடலோரப் பகுதிகள் புயல்கள், சுடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் அதிகரித்து வரும் ஆபத்தை எதிர்கொள்கின்றன.</p><p>எனவே, அரசு பாதுகாப்பான மாற்று இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>முன்மொழியப்படும் வளாகத்தை பசுமை வளாகம் என்று அழைப்பதால் மட்டும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகிவிடாது.</p><p>நிலையான வளர்ச்சி என்பது பசுமைக் கட்டிடத்தை உருவாக்குவதில் தொடங்குவதில்லை; சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் தொடங்குகிறது.</p><h2>நவீன கட்டமைப்பு அவசியம்... ஆனால்</h2><p>மாநிலத்திற்கு நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவைப்படலாம். ஆனால் நிர்வாக நவீனமயமாக்கல் என்ற பெயரில் உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை ஆக்கிரமிப்பதும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதும், பொதுமக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதும், ஜனநாயகப் பொது வெளியைச் சுருக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>எனவே, தமிழ்நாடு அரசு பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. </p><p>பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடங்களை அரசு பரிசீலிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல், கொடைக்கானலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோவில் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2-person-arrested-in-pocso-law-at-dindigul-and-kodaikanal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2-person-arrested-in-pocso-law-at-dindigul-and-kodaikanal#comments</comments><guid isPermaLink="false">b50501d5-7252-432e-be0d-7db5cf8ad2b5</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:34:01 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:34:01.125Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Harassment,Arrested,போக்சோ சட்டம்,POCSO law,பாலியல் தொல்லை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4t1s3akb/arrest1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/4t1s3akb/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.</strong></em> </p><h2><strong>அரசு பஸ் டிரைவர்</strong></h2><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணியில் இருந்து வருகிறார். தேனியில் இருந்து திண்டுக்கல் வரும் வழித்தடத்தில் பணியாற்றி வந்தார். </p><p>ஆத்தூர் தாலுகாவைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி இந்த பஸ்சில் ஏறி திண்டுக்கல் வந்துள்ளார். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய மாணவியிடம் டிரைவர் சுரேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.</p><p>திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் டிரைவர் சுரேசை போக்சோவில் கைது செய்தனர். </p><h2><strong>போதையில் தொல்லை</strong></h2><p>கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தனது உறவுக்கார பள்ளி மாணவி தாயாரை இழந்த நிலையில் தந்தையுடன் வசித்து வந்தார். மாணவி அடிக்கடி வீட்டுக்கு வந்த நிலையில் அவருக்கு பாலமுருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று போதையில் இருந்த பாலமுருகன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது தந்தையிடம் கூற பயந்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அவர்களது அறிவுரையின் பேரில் சைல்டு லைன் அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-16th#comments</comments><guid isPermaLink="false">9f9aabd6-09b4-453a-8acf-07017f49b588</guid><pubDate>Thu, 10 Sep 2026 10:21:51 +0000</pubDate><atom:updated>2026-09-10T10:21:51.854Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/24cp1500/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/24cp1500/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue#comments</comments><guid isPermaLink="false">0eb3c820-4ea6-4297-9b32-3a345f827d2f</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:45:00 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:45:00.327Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Omni Bus,ஆம்னி பேருந்து,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- ஆம்னி பேருந்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/77zw122a/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில்  ஈடுப்பட்டிருக்கின்றன. அதைத் தடுக்க வேண்டிய கடமையையும், பொறுப்பையும் கொண்ட தமிழக அரசு, இந்தக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக இதுவரை பெயரளவில் கூட எச்சரிக்கை விடுக்காதது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டில் வரும் 14-ஆம் தேதி விநாயகர்  சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளதையொட்டி அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களான சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 3 நாள்கள் தொடர் விடுமுறையைக் கொண்டாடும் வகையில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்டு நாளை செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும்,  மதுரைக்கு ரூ.4000 வரையிலும்,  கோவைக்கு ரூ.6154  வரையிலும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p>வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு  திரும்ப திருச்சியிலிருந்து ரூ.4499, மதுரையிலிருந்து ரூ.4899, கோவையிலிருந்து ரூ.4799 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 300 கி.மீ.க்கும் குறைந்த தொலைவில் உள்ள கும்பகோணத்திற்கு செல்ல ரூ.3179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இந்த கட்டண விகிதத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று வர வேண்டும் என்றால் பேருந்துக்காக  ரூ.34 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் மக்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை விட  அதிக தொகையாகும்.  வரலாறு காணாத கட்டணக் கொள்ளைக்கு எடுத்துக்காட்டு இது தான்.</p><p>இந்தக் கட்டணக் கொள்ளையை தனியார் ஆம்னி பேருந்துகள் ரகசியமாகக் கூட செய்யவில்லை.  இந்தக் கட்டண விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில்  வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து ஊடகங்களிலும் இந்தக்கட்டணக் கொள்ளை தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தவெக அரசு எதுவும் செய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கொள்ளை கொடிகட்டி பறந்தது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கும் போது, பெயரளவுக்காகவாவது கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைப் போல  திமுக அரசு  காட்டிக் கொண்டது.  ஆனால், தவெக அரசு அதையும்  செய்யவில்லை. மாறாக, திமுக ஆட்சியில்  தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்பட்டதை விட 20% முதல் 50% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது தான் தவெக ஆட்சியில்  ஏற்பட்ட மாற்றமா?</p><p>தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை  ஆட்சியாளர்கள் தடுக்க வேண்டும்; அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் அந்த ஆணைகள் மதிக்கப்படவில்லை. ஆனால், தூய சக்தி என்று கூறிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் அதே நிலை  தொடர்வது கவலையளிக்கிறது.  தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் - ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tn-govt-for-tiruvottiyur-youth-murder-case#comments</comments><guid isPermaLink="false">9426f389-e534-4ea7-aab0-93f120494af8</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:27:05 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:27:05.153Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,வாலிபர் கொலை,youth murder</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/zjonvev3/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ் என்ற துறைமுக ஒப்பந்த பணியாளர்  அவரது வீட்டிற்கு அருகிலேயே  கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையில் இத்தகைய கொலைகள் அதிகரித்து வருவது அச்சமும், கவலையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பொய் வழக்கு</strong></h2><p>பிரதீப் இராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியது தொடர்பாக  இரு தரப்புக்கும் இடையே  பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக  காவல்துறையில்  பிரதீப் இராஜ் புகார் செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திலும், துணை ஆணையரிடமும் அவர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், பிரதீப் இராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.</p><p>அதைத் தொடர்ந்து நேற்று முன்நாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில்  தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது குறித்து  பிரதீப் இராஜ் மீண்டும் புகார் செய்துள்ளார். அப்போதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர், தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஊடகங்களிடம் பிரதீப் இராஜ் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு அடுத்த நாளான நேற்றிரவு பிரதீப் இராஜ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.</p><p>பிரதீப் இராஜ் அளித்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால்,  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக  பிரதீப் இராஜையே காவல் ஆய்வாளர் மிரட்டியது தான் எதிரிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது.  உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது தான் காவல்துறையின் கொள்கையா? இந்த  விஷயத்தில் கடமையை செய்யத் தவறிய ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அந்த பதட்டம் தணியும் முன்பே அடுத்தக் கொலை நிகழ்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், இது தான் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?  என வினா எழுப்புகின்றனர்.  சென்னையில்  இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு - திருமாவளவன் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance#comments</comments><guid isPermaLink="false">55f79639-88a9-4fcd-91b8-c10f1f4670e3</guid><pubDate>Thu, 10 Sep 2026 09:14:15 +0000</pubDate><atom:updated>2026-09-10T09:14:15.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,tvk,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/116gjazi/tirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனால் த.வெ.கவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்ற கருத்தை ஏற்கனவே தெளிவுபட கூறியிருக்கிறார்கள். இப்போதும் அதே நிலைபாட்டில் தான் 2 கட்சிகளும் உள்ளன. த.வெ.க. ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிப்பதற்கு இடது சாரி கட்சிகளின் ஆதரவு உண்டு. அதில் எந்த தயக்கவும் இல்லை என்ற கருத்தை அவர்கள் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்கள். </p> <p>தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த நிலைப்பாட்டையும் இப்போதைக்கு அவர்கள் எடுக்கவில்லை. </p><p>தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்துக் கொள்வதில் எந்த நெருடலும் இல்லை. அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று இரு தரப்பிலும் 2 கட்சிகளின் தலைவர்களும் கூறியிருக்கிறார்கள். எனவே புதிதாக உருவாகி இருக்கிற மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 2 கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">மிசா</a> ஒடுக்குமுறைக்கு ஆளானவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-releases-video-regarding-misa-atrocities">மு.க.ஸ்டாலின்</a> தனது உடல் மொழி எதேச்சையானது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்து விட்டார்.</p><p>புதிய தலைமை செயலகம் கட்டுவது தொடர்பாக அந்த பகுதி மக்களின் கருத்துக் களை கேட்டறிந்து இந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - டெண்டர் வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-case-madras-high-court-dismisses-challenging-gold-ring-contract#comments</comments><guid isPermaLink="false">bac3c362-9378-48ab-9259-07f7647f6bf4</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:59:29 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:59:29.733Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,thaimaman gold ring scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/538ec4k6/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகை தரமாக இல்லாவிட்டால் டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தங்க மோதிரம்</a> அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது.</p> <p>ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையை சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை ஐகோர்ட்டில்</a> வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 'தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <p>ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஒரு நகைக்கு ரூ.45 கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை, ரூ.4,465 ரூபாய்க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைகள் கழகம், மருந்து பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது. அந்த கழகத்துக்கு தங்கத்தை பற்றி என்ன தெரியும்' என்று வாதிடப்பட்டது.</p> <p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்கு தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல' எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை- தமிழிசை சவுந்தரராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secularism-only-in-title-tamilisai-soundararajan-criticises-dmk-led-front#comments</comments><guid isPermaLink="false">787662fd-0d26-421c-acaf-362f4847d985</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:44:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:44:30.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tamizhisai soundararajan,tvk,தமிழிசை சவுந்தரராஜன்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai soundararajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wjtz00h9/tamizhisai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. கூட்டணியின் பெயரில் மட்டும்தான் மதச்சார்பின்மை உள்ளதாக முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.</p><p>த.வெ.க. தலைமையில் உருவாகி இருக்கும் புதிய கூட்டணி பற்றி தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மதச்சார்பற்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">சமூகநீதி</a> வெற்றிக் கூட்டணியில் பெயரில் மட்டுமே மதச் சார்பின்மை, செயல்பாட்டில் முழுக்க குழப்பம். புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிற்கான இடைத் தேர்தலை முன்னிட்டு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என்று ஒரு கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள்.</p><p>ஆனால், ஐ.யு.எம்.எல். போன்ற கட்சிகளை கூட்ட ணியில் வைத்துக்கொண்டு, இதை எப்படி ‘மதச்சார்பற்ற கூட்டணி’ என்று அழைக்க முடியும்? மதச்சார்பின்மை என்பது பெயரில் வைத்துக் கொள்ளும் அடையாள மல்ல.</p><p>அனைத்து மதங்களையும் சமமாக அணுகும் கொள்கையாக இருக்க வேண்டும். கொள்கையில் குழப்பம், கூட்டணியில் குழப்பம், பிரதமர் வேட்பாளரில் குழப்பம், மாநில உரிமையில் தோல்வி- ஒட்டுமொத்த மாக இது ஒரு ‘குழப்பமான கூட்டணி’. எனவே, இதை ‘மனிதா பிமானமற்ற, சமூகநீதியற்ற, கொள்கையற்ற குழப்பக் கூட்டணி’ என்றுதான் மக்கள் பார்ப்பார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash#comments</comments><guid isPermaLink="false">2c50ed07-c4c5-4c34-a76e-fed54a2ff48e</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:41:28 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:41:28.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,விஜய்,vijay,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்- விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/xxtsek07/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.</p><p>வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் வாந்தியெடுக்கும் Abuser பொறுக்கிகள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்து இருக்கிறார்கள்.</p><h2><strong>ரத்தம் சிந்திய நிஜம்!</strong></h2><p>மூளையும் மூஞ்சியும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்ட இந்தத் தற்குறிக்கு, சிறைக் கொட்டடியில் MISA கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?</p><p>பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்? மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல, பின்னாடி கையை வைத்து தடவிக்கொண்டு பஞ்சு மெத்தையில் உருள்வதல்ல; அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்!</p><p>Call sheet காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'IT Raid' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் Script பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையே! உனக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?</p><p>முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூகநீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு! ஆனால், இந்த 'டம்மி' முதலமைச்சரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.</p><p>நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு! அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும் கழக உடன்பிறப்புகளும் MISA சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு. </p><h2><strong>காகிதக் கப்பல் மூழ்கும்</strong></h2><p>கொள்கை, சித்தாந்தம் எதுவும்  இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். </p><p>இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம்  தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.</p><p>வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள்.</p><p>காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது… <a href="https://t.co/b9ONe1zPvC">pic.twitter.com/b9ONe1zPvC</a></p>&mdash; DMK IT WING (@DMKITwing) <a href="https://x.com/DMKITwing/status/2097949053216846160?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 4 நாட்களில் 20 காசுகள் உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/egg-price-20-paise-hike-last-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/egg-price-20-paise-hike-last-4-days#comments</comments><guid isPermaLink="false">0f72f049-c710-4ec0-9316-847a74f58c96</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:17:07 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:17:07.414Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Egg,முட்டை,முட்டை விலை,Egg Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ez6exzmq/egg.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ முட்டை]]></media:title><media:description type="html"><![CDATA[ முட்டை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/ez6exzmq/egg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.</strong></em> </p><p>நாமக்கல் மண்டலத்தில் தினசரி 7 கோடிக்கும் அதிகமான <a href="https://www.maalaimalar.com/topic/முட்டை">முட்டைகள்</a> உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. </p><h2><strong>முட்டை விலை தொடர் உயர்வு</strong> </h2><p>இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 535 காசுகளாக இருந்த முட்டை விலை 540 காசுகளாக உயர்ந்தது. </p><p>கடந்த 6-ந்தேதி 520 காசுகளாக இருந்த முட்டையின் விலை அதன் பிறகு தினசரி 5 காசுகள் உயர்ந்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் முட்டை விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். </p><h2><strong>கறிக்கோழி ரூ. 95 ஆக நீடிப்பு</strong> </h2><p>இதே போல கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 95 ரூபாயாக நீடிக்கிறது. முட்டை கோழி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 120 ரூபாயாகவும் நீடிக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு 3,520 அரசு சிறப்பு பஸ்கள்- இன்று முதல் இயக்கப்படுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3520-special-government-buses-to-operate-from-kilambakkam-to-outstation-destinations-starting-today#comments</comments><guid isPermaLink="false">1e8486b6-67cf-487f-a0a8-d017ace75aba</guid><pubDate>Thu, 10 Sep 2026 08:02:30 +0000</pubDate><atom:updated>2026-09-10T08:02:30.418Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/wcg2o8hr/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em> </p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையான 14-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> இயக்கப்படுகிறது. </p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும் நாளை (வெள்ளிக்கிழமை) 1,255 பஸ்களும் 12-ந் தேதி (சனிக்கிழமை) 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. </p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>இன்று முதல் திங்கள்கிழமை வரை பயணம் செய்வதற்கு 95 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்து உள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>