<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 25 Jul 2026 08:48:14 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2490f83-5c37-441d-8937-34c77d9fb209</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:48:02.627Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital">'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!... </a></p><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக் நீல நிற சட்டையுடன் தனது மனைவியுடன் மருத்துவமனை நடைபாதையில் நடந்து வரும்போது, அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable">தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</a></p><p>* மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. </p><p>* தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!</a></p> <p>* 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.</p><p>* ஸ்டார்ஷிப் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning">CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!... </a></p><p>இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol" rel="nofollow">சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</a></p><p>* மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>* ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</a></p><p>* 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>* இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land">துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன்</a></p><p>*  பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>* இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka">இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</a></p><p>* மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>* மீனவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/gukesh-praggnanandhaa-vaishali-to-spearhead-indian-challenge-in-chess-olympiad">செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 10 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு</a></p><p>* ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. </p><p>* பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, தமிழகத்தின் வைஷாலி உள்பட பலர் தேர்வாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</a></p><p>*  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>* இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted">அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... </a></p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough">AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் 'Claude Opus 5' அதிகாரப்பூர்வமாக வெளியீடு!... </a></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today">இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ்</a></p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>* பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.</p><p>*  130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change">இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</a></p><p>* கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>* கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </a></p><p>* குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>* உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies">தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் - திருமாவளவன் பேச்சு</a></p><p>* மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. </p><p>* த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso" rel="nofollow">சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</a></p><p>* சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>* புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார்&nbsp;<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a>&nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* மாணவர்கள் போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu">சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</a></p><p>* அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p>* 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests">நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</a></p><p>* கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>* இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths" rel="nofollow">தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>* முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam" rel="nofollow">பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</a></p><p>* நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>* நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur" rel="nofollow">வெற்று வாக்குறுதிகளாலும், அடக்குமுறைகளாலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>* பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>*   ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement" rel="nofollow">முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு: தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</a></p><p>* நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், முழு தொகையையும் ரொக்கமாக கொடுக்க உத்தரவு.</p><p>*  பரபரப்பான விவாகரத்து வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan" rel="nofollow">தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>* கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026">GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai">சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</a></p><p>* இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. </p><p>* டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zim-v-ind-match-today">ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?</a></p><p>* ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது.... </p><p> * தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலம்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol#comments</comments><guid isPermaLink="false">0701eed1-8ac1-4df6-86e1-506c38ae16ba</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:20:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:20:52.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,chennai airport,2ம் கட்ட பணி,மத்திய அமைச்சர் முரளிதர மகாலி,union minister muralidhara Mahali</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai airport- murlidhar mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 2476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விமான நிலையத்தை நவீன மயமாக்கி தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.</p><h2> ரூ.10,762.08 கோடி ஒதுக்கீடு</h2><p>அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் முதல்கட்டமாக ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் பயணிகள் கையாளும் திறன் கொண்ட பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>அதை தொடர்ந்து தற்போது வரை விமான நிலையத்தில் 2-ம் கட்டமாக 2 ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் சுமார் 10,762.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2>ரூ. 236.75 கோடி செலவு</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர மகாலி பேசுகையில்,"கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய உள்கட்டமைப்புக்காக சுமார் 236.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது" என்று கூறினார்.</p><h2>தி.மு.க. எம்.பி. வில்சன் கேள்வி</h2><p>மேலும் தி.மு.க. எம்.பி.  வில்சனின் கேள்விக்கு பதிலளித்த அவர்,"திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரம் மற்றும் தொழில்நுட்பத் பகுதிகள் 76 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.</p><p>மேலும், கோவை விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ஏற்கனவே உள்ள முனைய கட்டிடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land#comments</comments><guid isPermaLink="false">cc2400e2-5a7b-45bf-931d-4327efd57b23</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:07:38.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Makkal Needhi Maiam,நீட் தேர்வு,Neet exam,kamal haasan,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</aside><h2><strong>காந்தி மண்ணில் இடமில்லை...</strong> </h2><p>மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மோதலுக்கு பதிலாக உரையாடல் இடம்பெறுவதை கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் குண்டு துப்பாக்கிகள், மின் அதிர்ச்சி தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை.</p><h2><strong>வினாத்தாள் கசிவு...</strong></h2><p>அதேபோல், பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்கக்கூடாது. இந்த தருணமும் வாய்ப்பும் வினாத்தாள் கசிவுகளை விட பெரியது. தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தை குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் 3 மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">தேர்வினால்</a> ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் இந்த ஆணையம் கேட்க வேண்டும். அரசாங்கம் இதில் ஈடுபட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. </p><p>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.<br><br>Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu. <br><br>Equally, attacks on security personnel and public property must be examined…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2080897683481596084?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">942c968a-de40-4498-94f6-218c0cfdce60</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:47:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:47:42.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,செங்கல்பட்டு,chengalpattu,Kilambakkam,மெட்ரோ ரெயில்,கிளாம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் புறநகர் பகுதி மக்களையும் இணைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><h2>டெண்டர்</h2><p>தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையம் வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்தத் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை திட்டமிட்டு இருக்கும் வழித்தடத்தில் நீட்சியாக செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பாதை டபுள் டக்கர் பாதையாக  அமைவது சிறப்பாகும். </p><p>அதன்படி கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருக்கும் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இந்த மெட்ரோ பாதை அமைய உள்ளது. </p><p>இந்தத் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை, திட்டத்தின் தோராய நிதி மதிப்பு, ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வுசெய்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது: </p><p>செங்கல்பட்டு விரிவாக்க மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தடையற்ற சாலை போக்குவரத்துடன் மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்கப்படும். வெளிவட்ட சாலையுடன் இணைப்புக்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வு பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.</p><p>இந்த மேம்பாட்டு சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை நீட்டிக்கப்பட்ட பாதை செல்லும்.</p><h2>திட்ட மதிப்பீடு ரூ.9,335 கோடி </h2><p>கிளாம்பாக்கம், சென்னை விமான நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் முக்கிய போக்குவரத்து பகுதியை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 13 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் இடம் பெறும். மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case#comments</comments><guid isPermaLink="false">ae414c55-09fe-4ece-9512-c692e6f6043f</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:43:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:43:20.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,senthil balaji,செந்தில் பாலாஜி,tvk,பேரம் வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது.</p><h2>ரூ.35 கோடி</h2><p>ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை அணுகி சிலர் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக ஆசைகாட்டி உள்ளனர்.</p><p>இது தொடர்பாக இளையராஜா எம்.எல்.ஏ. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p>இந்த விவகாரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.</p><p>இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அசோக் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் கரூர் சென்று சம்மனும் அளித்தனர்.</p><p>இதையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தபடியே ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். கடந்த 8-ந்தேதி இருவருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.</p><p>முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25000-க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். </p><p>மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணி, மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.</p><p>இதன்படி செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றனர். </p><h2>இன்று ஆஜர்</h2><p>இதனை தொடர்ந்து  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இன்று காலை 10.30 மணி அளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். இருவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி முதல் நாளான இன்று கையெழுத்து போட்டனர். அவர்களுடன் வக்கீல்களும் உடன் வந்திருந்தனர். இதன் காரணமாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.</p><h2>கலைக்க கூடாது</h2><p>மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட்டு நிபந்தனை விதித்து இருப்பதால் செந்தில் பாலாஜி தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.</p><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>விசாரணை நிறைவு</h2><p>ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக செந்தில்பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.</p><p>விசாரணை முடிந்து வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும்போது,“செய்தியாளர்களிடம் பிறகு பேசுகிறேன்” என கூறிவிட்டு செந்தில் பாலாஜி நகர்ந்து சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் பரபரப்பு சம்பவம்: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest#comments</comments><guid isPermaLink="false">ce17bf03-a292-44f2-a111-51f5d046eb33</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:12.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,உண்டியல் பணம் திருட்டு,koniamman temple,கோனியம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</aside><p>கோவை நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். </p><p>ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனை வழிபட கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><h2><strong>உண்டியல் பணம் திருட்டு</strong> </h2><p>இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததும், கோவில் ஊழியர்களே இத்தகை இழிவான செயலில் ஈடுபட்டதும் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியில் உள்ளது. </p><p>கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. </p><p>மொத்தம் இருந்த 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ந் தேதி கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணினர். அப்போது ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். </p><h2><strong>அதிகாரி விசாரணை</strong> </h2><p>அதன்பேரில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்து விசாரிக்கப்பட்டது. </p><p>விசாரணையில் உண்டியல் பணம் திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோவில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. </p><p>உண்டியல் எண்ணும் பணியின்போது ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு அதனை சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்டியலை டிராலியில் எடுத்துச் சென்று கலையரங்கத்துக்கு பின்னால் வைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து பையில் போட்டு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். </p><h2><strong>4 ஊழியர்கள் கைது</strong> </h2><p>மொத்தம் அதில் ரூ.31 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை ஊழியர் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து பங்கு வைத்துக் கொண்டுள்ளனர். விசாரணையில் 4 பேரும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். </p><p>இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். </p><p>இவர்களில் பாலசுப்பிரமணியம் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வந்து சென்றுள்ளார். சரவணன் பேரூரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். கிருஷ்ணராஜ் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். </p><p>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today#comments</comments><guid isPermaLink="false">3d55457e-d27d-4a87-92c5-8645733dba8e</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:10:14 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:10:14.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Ramadoss,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமதாஸ் பேசிய போது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/t6m7ye6i/ramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.</aside><p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் <a href="https://www.maalaimalar.com/topic/ராமதாஸ்">ராமதாஸ்</a> இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி தந்தை ராமதாசை சந்தித்து பா.ம.க. தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார். </p><p>இதனை தொடர்ந்து விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில்  மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:- </p><p>* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். </p><p>* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். </p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார். </p><p>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>முட்டை விலை ஒரே நாளில் 30 காசுகள் சரிவு - பொது மக்கள் மகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/egg-price-decreased-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/egg-price-decreased-2#comments</comments><guid isPermaLink="false">fa4f779f-0f2e-4d4d-8405-de829fc05089</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:54:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:54:40.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egg,முட்டை,முட்டை விலை,Egg Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/k22pkpf7/egg.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ முட்டை]]></media:title><media:description type="html"><![CDATA[ முட்டை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/k22pkpf7/egg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போது சில்லரை விற்பனை கடைகளில் 8 ரூபாய்க்குஒரு முட்டை விற்கப்படுவதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை குறையும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</aside><p>நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் தினசரி <a href="https://www.maalaimalar.com/topic/முட்டை-விலை">விலை</a> நிர்ணயம் செய்யப்படுகிறது. </p><h2><strong>மீண்டும் உயர்வு</strong> </h2><p>நாமக்கல் மண்டலத்தில் முட்டை வரலாற்றில் உச்ச பட்சமாக கடந்த 16 -ந்தேதி 680 காசுககளாக முட்டை விலை உயர்ந்தது. பின்னர் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த 8 நாட்களாக அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.</p><p>இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது கடந்த மாதம் 7 கோடியாக இருந்த முட்டையின் உற்பத்தி தற்போது 8 கோடியை நெருங்கி உள்ளதால் முட்டைகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலையை 30 காசுகள் குறைக்க முடிவு செய்ய்பட்டது. இதையடுத்து 680 காசுகளாக இருந்த முட்டை விலை 30 காசுகள் சரிந்து 650 காசுகளான நிர்ணயிக்கப்பட்டது. </p><h2><strong>பொது மக்கள் மகிழ்ச்சி</strong> </h2><p>இந்த விலை சரிவு இன்று காலை முதல் அமுலுக்கு வந்துள்ளது. தற்போது சில்லரை விற்பனை கடைகளில் 8 ரூபாய்க்குஒரு முட்டை விற்கப்படுவதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை குறையும் என்பதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p><p>கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 134 ரூபாயாகவும், முட்டை கோழி  விலை ஒரு கிலோ 120 ரூபாயாகவும் நீடிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka#comments</comments><guid isPermaLink="false">90d3f55d-6789-4385-bdf2-2d20d8e6afc2</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:53:33 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:53:33.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rameswaram Fishermen strike,Fishermen strike,மீனவர்கள் வேலை நிறுத்தம்,ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ boat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/iolzxnve/boat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 22-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகும், அதில் இருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கச்சத்தீவு அருகே கைது செய்தது.</p><h2>6-ம் தேதி வரை காவல்</h2><p>இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 9 பேரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இதுதொடர்பாக மீனவர் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில்  இலங்கை கடற்படை கைதுசெய்த  மீனவர்களை மத்திய அரசும், மாநில அரசும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.</p><p>மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் பிரச்சனை  குறித்து முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து முறையிட ஏற்பாடு செய்ய வேண்டும். </p><p>இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து இனி வரும் காலங்களில் பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.</p><p>மீனவர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ராமேசுவரத்தில் இன்று ஒருநாள் மீனவர்கள் அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><h2>மீனவர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் விட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் மீன் வர்த்தகம் அதிகளவில் நடைபெறும். ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரத்தில் மீன்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change#comments</comments><guid isPermaLink="false">80e8a6e4-824a-456e-95cd-a2c5d9fa42f1</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:46:30 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:46:30.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்சார ரெயில்,train service change,Electric Trains,electric trains cancelled,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/i3dvd5af/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</aside><h2><strong>பராமரிப்பு பணிகள்</strong></h2><p>சென்னை சென்ட்ரல்- கூடூர்  பிரிவில் கும்மிடிப்பூண்டி யார்டில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள்  இன்றும், நாளையும் நடக்கிறது. </p><p>இதையொட்டி கும்மிடிப் பூண்டி மார்க்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயில்</a> சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. </p><h2><strong>மின்சார ரெயில் ரத்து</strong></h2><p>இரவு 9.45 மணிக்கு  புறப்படும் மூர் மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே ரத்து  செய்யப்பட்டு உள்ளது. இரவு 11.20 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்-  கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்  பொன்னேரி- கும்மிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளது. </p><p>இரவு 10.35 மணிக்கு புறப்படும். மின்சார ரெயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே  பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 3.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு மூர் மார்க்கெட்டுக்கு வரும் மின்சார ரெயில் கும்மிப்பூண்டி- மீஞ்சூர் இடையே இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>அதிகாலை 4.50 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave#comments</comments><guid isPermaLink="false">c5e4ca33-be97-40b6-8fdc-7d4a61556508</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:34:48 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:34:48.222Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,கிரிவலப்பாதை,ஆந்திர பக்தர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற பகுதி வழியாக பக்தர்கள் வெளியே வரும் காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eowzdqbp/andhra.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</aside><h2><strong>இடுக்கு பிள்ளையார் கோவில்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். </p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>ஆந்திர பக்தர்</strong></h2><p>இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். </p><p>குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர். </p> <p>108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். </p><p>இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso#comments</comments><guid isPermaLink="false">e3236d67-7f9b-4db0-ac7b-6b56a419c118</guid><pubDate>Sat, 25 Jul 2026 06:12:19 +0000</pubDate><atom:updated>2026-07-25T06:12:19.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் உறவு,போக்சோ வழக்கு,இளம்பெண் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant women arrest under POCSO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/v29gtkld/Women.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.</p><p>அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.</p><p>இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.</p><h2>கட்டாய பாலியல் உறவு</h2><p>அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். அந்த பாடப்பிரிவில் இவர்கள் 2 பேர் மட்டுமே படித்துள்ளனர்.</p><p>இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்தது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். சம்பவத்தன்று இளம்பெண் களியக்காவிளையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணின் கட்டாயத்தின் பேரில் இருவரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">பாலியல் உறவு</a> கொண்டுள்ளனர். இதேபோன்ற நிலை பலமுறை தொடர்ந்து நடந்துள்ளது.</p><h2>இளம்பெண் மீது போக்சோ வழக்கு</h2><p>இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். எனினும் கர்ப்பமானதை அவர் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கர்ப்பமானது தெரியவந்தது.</p><p>இதையடுத்து சிறுவனின் வீட்டுக்கு சென்று அவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார் <a href="https://www.maalaimalar.com/news/national/on-bail-telangana-man-kills-wife-children-teen-he-assaulted-and-her-family" rel="nofollow">போக்சோ</a> வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உஷார்! ஊக்கத்தொகை என்ற பெயரில் புதுவகை மோசடி: ஊறுகாய் வியாபாரியின் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-investigation-to-merchant-money-cheating#comments</comments><guid isPermaLink="false">f42c13e7-a762-42cd-aa35-194e72ae7e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:57:41 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:57:41.592Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/9jgzj0p0/cyber.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மகன் படிப்புக்கு ஊக்கத்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் 'அபேஸ்' செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.</aside><h2><strong>படிப்புக்கு ஊக்கத்தொகை</strong></h2><p>சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (வயது 50). இவர், மளிகை கடைகளுக்கு ஊறுகாய் வினியோகம் செய்து வருகிறார். இவரது மகன் மகாலிங்கம். இவர், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.</p><p>இந்தநிலையில், முத்து காமாட்சியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, உங்கள் மகனின் படிப்புக்காக ரூ.48 ஆயிரத்து 500 ஊக்கத்தொகை வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அந்த பணத்தை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அனுப்பிய கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்யுமாறு கூறினார்.</p><h2><strong>பணம் 'அபேஸ்'</strong></h2><p>இதை உண்மை என நம்பிய முத்து காமாட்சி, அந்த கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 250 மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>அதன்பிறகுதான் மர்மநபர் தன்னிடம் நூதன முறையில் பேசி வங்கி கணக்கில் உள்ள பணத்தை 'அபேஸ்' செய்தது தெரியவந்தது. இதுபற்றி அவர் கொடுத்த புகாரின்பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊறுகாய் வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பாச மழையில் நனைந்த குட்டி யானை: செல்பி எடுத்து மகிழும் கிராம மக்கள்...  தாயுடன் சேர்க்க வனத்துறை தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/baby-elephant-drenched-in-a-shower-of-affection-villagers-delight-in-taking-selfies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/baby-elephant-drenched-in-a-shower-of-affection-villagers-delight-in-taking-selfies#comments</comments><guid isPermaLink="false">5e388722-800b-4bba-9310-ec0a8b862339</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:34:31.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராம மக்கள்,வனத்துறை,Elephant,யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/q1aq7jzj/elephant.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ யானைக்கு புல், தீவனங்களை கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ யானைக்கு புல், தீவனங்களை கொடுத்து மகிழ்ந்த கிராம மக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/q1aq7jzj/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தேன்கனிக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த குட்டி யானையை கிராம மக்கள் கொஞ்சி மகிழ்ந்தனர். அந்த குட்டியை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.</aside><h2><strong>குட்டி யானை</strong></h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது கிராம பகுதிகளுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, முட் டைகோஸ் உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.</p><p>இந்த காட்டு யானை கூட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானை ஒன்று கடந்த ஒரு ஆண்டாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. கிராம பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றி வரும் இந்த குட்டி யானை கிராமத்தில் வாழும் பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. கிராம மக்கள் இந்தகுட் டியை பார்த்தவுடன் தங்களது செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது, அதற்கு உணவு கொடுத்து மகிழ்வது என வழக்கமாக நடந்து வருகிறது.</p><h2><strong>திரும்ப வந்துட்டான்...</strong></h2><p>இந்த நிலையில் இந்த குட்டி யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கிராம பகுதிகளுக்குள் வராமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரசந்திரம் என்ற கிராமத்திற்கு வந்து செல்கிறது. குட்டி யானையை பார்த்த கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அதனுடன் போட்டோ மற்றும் செல்பி எடுப்பதும் அதற்கு உணவு வழங்கி கொஞ்சி விளையாடுவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். திரும்ப வந்துட்டான்யா... செல்லக்குட்டி என்று கிராம மக்கள் மகிழும் அதே நேரத்தில், இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் குட்டி யானையை கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.</p><figure><img alt="ஊருக்குள் வந்த குட்டி யானையுடன் விளையாடும் கிராம இளைஞர்கள்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/4dktfv0q/elephant0.jpg" /><figcaption>ஊருக்குள் வந்த குட்டி யானையுடன் விளையாடும் கிராம இளைஞர்கள்</figcaption></figure> <p>குட்டி யானையை அதன் தாயுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், தாய் யானை குட்டியை அதனுடன் சேர்ப்பதில்லை என கூறப்படுகிறது. இருந்த போதிலும் வனத்துறையினர் விடாமுயற்சியாக குட்டியை அதன் தாயுடன் சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கிராம மக்கள் மீண்டும் இந்த குட்டி யானை கிராமத்திற்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths#comments</comments><guid isPermaLink="false">df6c0002-9f9b-4f1e-82fd-17b9fbce5e7e</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:15:40 +0000</pubDate><atom:updated>2026-07-25T05:15:40.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Lockup death,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Ex CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/yb9ejem8/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தொடரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">காவல் மரணங்கள்</a>. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?</p><p>எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p>Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">41a00058-2991-4d7c-b76f-877c0c86fad2</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:35:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:35:42.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,neet protest,பிரதமர் மோடி,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/1u5kmwx3/manickam-tagore1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/1u5kmwx3/manickam-tagore1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><h2>கண் துடைப்பு நாடகம்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தில் "<a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks" rel="nofollow">விரைவு நீதிமன்றங்கள்</a>" அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! </p><p>அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:</p><p>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!</p><p>One more court … </p><p>FTSC சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் 2025-ல் 2,45,579 ஆக உயர்ந்துள்ளன!</p><p>தேர்வு முறையையே ஒழுங்காக நடத்தத் தெரியாத #NTA முற்றிலும் தோல்வியடைந்த ஒரு அமைப்பு!</p><h2>மாணவர்களின் கோரிக்கை </h2><p>பிரதமர் மோடி அவர்களே, மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் தெளிவானவை:</p><p>1. கல்வி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation" rel="nofollow">தர்மேந்திர பிரதான்</a> உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>2. பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>3. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!</p><p>வெற்று வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்தியாவின் இளைஞர்களையும் மாணவர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடியாது!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வினாத்தாள் கசிவு விவகாரத்தில் &quot;விரைவு நீதிமன்றங்கள்&quot; அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! <br><br>அரசு தரவுகளே உண்மையை உடைக்கின்றன:<br><br>880 விரைவு நீதிமன்றங்களில் 13.9 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்கின்றன!<br><br>One more court … <br><br> FTSC சிறப்பு நீதிமன்றங்களில்… <a href="https://t.co/YdNBYce8A7">pic.twitter.com/YdNBYce8A7</a></p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2080846489904165211?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar#comments</comments><guid isPermaLink="false">858d2b1b-ed36-4159-a2b4-79951e3211ea</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:17:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:17:34.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Tamilthai vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/rhoo6wud/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/rhoo6wud/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரின் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?" என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><h2>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவரின் பெயரிலான பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடமா முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!</p><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும்  28-ஆம் தேதி நடைபெறவுள்ள 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் "வந்தே மாதரம்" தேசியப் பாடலும், அடுத்து "ஜன கண மன”  தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகு மூன்றாவதாகத் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். </p><p>மத்திய அரசே வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும்  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><h2>ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வு</h2><p>நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய  துணைவேந்தர் சந்திரசேகர்,"இது ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்குத் தெளிவான மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் பங்கேற்கும் விழாக்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தான்  நடந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>குடியரசுத் தலைவர், ஆளுனர் பங்கேற்கும் மாநில அரசு விழாக்களில் முதலில் தேசியப் பாடல்,  இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்திருந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.</p><p>கடந்த மே 10-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற தமிழக அரசு பதவியேற்கும் விழாவில் முதலில் தேசியப் பாடல், பின்னர் தேசிய கீதம் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்த வரிசை முறைக்கு  தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.</p><p>அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில்,  மாநிலப் பாடல்கள் பாடப்படும் விழாக்களில்  அது தான் முதலில் பாடப்பட வேண்டும்; அதன்பின் தேசியப் பாடல்; மூன்றாவதாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக விளக்கம்  அளிக்கப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால்,  அதையும் மீறி வந்தே மாதரம் என்ற  தேசியப் பாடலைத் தான்  முதலில் பாட வேண்டும் என்று  ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><h2>33-வது பட்டமளிப்பு விழா</h2><p>நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்தை எழுதியவரே  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை  அவர்கள் தான்.  அவரது  பெயர்  தான் நெல்லை பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.</p><p>அங்கும் கூட, மத்திய அரசின் வழிகாட்டுதல்களையும் புறக்கணித்து விட்டு, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவதும்,   அதை பல்கலைக்கழக துணை வேந்தர்  அப்படியே  ஏற்றுக் கொள்வதும் சரியல்ல.  இதை  தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும்  ஆளுனர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்  தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட வேண்டும். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஜூலை   28-ஆம் தேதி நடைபெறவுள்ள  33-வது பட்டமளிப்பு விழாவிலும்  தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப் படுவதை  தமிழ்நாடு அரசும்,  பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026#comments</comments><guid isPermaLink="false">c5ff5fc0-195c-4706-85a9-6c073ca100d0</guid><pubDate>Sat, 25 Jul 2026 04:14:56 +0000</pubDate><atom:updated>2026-07-25T04:14:56.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/edwvlnwx/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/edwvlnwx/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த 17-ந்தேதி வரை குறைந்து கொண்டே வந்தது. பின்னர் 18-ந்தேதிக்கு பிறகு உயரத் தொடங்கியது. தினமும் ஏறுமுகத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நேற்று திடீரென்று தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டதை பார்க்க முடிந்தது.</p><p>அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 500-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>24-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840</p><p>23-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000</p><p>22-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440</p><p>21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760</p><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>24-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>23-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>22-07-2026- ஒரு கிராம் ரூ.245</p><p>21-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan#comments</comments><guid isPermaLink="false">c0e11e07-0061-43ed-9aef-71af7293dc5c</guid><pubDate>Sat, 25 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-25T03:19:50.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,neet protest,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/2v3obqeg/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள், நாட்டின் கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்.</p><p>NEET-UG 2026 என்பது வெறும் தேர்வு அல்ல. கோடிக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவு.</p><p>தேர்வுக் கேள்வித்தாள்கள் கசிந்தன. மே 3 மற்றும் மே 7 நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் மீண்டும் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கேள்வித்தாள் கசிவு</a> நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>பிரதமர் மோடி மவுனம் ஏன்?</h2><p>ஆனால் இந்த ஊழலின் மிகப் பெரிய விலை என்ன?</p><p>21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 21 குடும்பங்களின் வாழ்க்கை என்றென்றும் சோகத்தில் மூழ்கியுள்ளது.</p><p>மாணவர்கள் கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. ஒரு தேர்வை ரத்து செய்ததால் மட்டும் பொறுப்பு முடிவடையாது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi" rel="nofollow">ராகுல் காந்தி</a> தொடர்ந்து வலியுறுத்துவது போல, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த மிகப்பெரிய கல்வி ஊழல் குறித்து பிரதமர் மோடியின் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2>பதவி நீக்கம்</h2><p>இந்திய மாணவர்கள் நியாயமான, வெளிப்படையான, நம்பகமான கல்வி அமைப்பிற்கு தகுதியானவர்கள். தோல்வி, ஊழல், அலட்சியம் ஆகியவற்றிற்கு அல்ல.</p><p>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். இந்தியாவின் கல்வியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 ஜூலை 2026: சர்வ ஏகாதசி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-25-july-2026-sarva-ekadasi#comments</comments><guid isPermaLink="false">45d22806-5f87-46cb-a072-00675a7ce7a0</guid><pubDate>Sat, 25 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-25T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perumal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/16/18711846-perumal.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-9 (சனிக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   ஏகாதசி நண்பகல் 1.55 வரை பிறகு துவாதசி</p><p>நட்சத்திரம் : அனுஷம் காலை 7.29 வரை பிறகு கேட்டை</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு</h2><p>சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி திருமஞ்சனம். கலிய நாயனார் குரு பூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி, திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.</p><p>உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - முயற்சி</p><p>ரிஷபம் - இன்பம்</p><p>மிதுனம் - புகழ்</p><p>கடகம் - செலவு</p><p>சிம்மம் - சுகம்</p><p>கன்னி - வெற்றி</p> <p>துலாம் - உறுதி</p><p>விருச்சிகம் - சிறப்பு</p><p>தனுசு - தனம்</p><p>மகரம் - லாபம்</p><p>கும்பம் - சாந்தம்</p><p>மீனம் - அன்பு</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-july-2026#comments</comments><guid isPermaLink="false">9e297809-3778-431a-83e7-2d092abe8672</guid><pubDate>Fri, 24 Jul 2026 03:41:33 +0000</pubDate><atom:updated>2026-07-24T17:18:26.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zz39nvcd/TodayLive0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-says-its-launching-new-strikes-on-iran-as-clashes-escalate-over-shipping-routes">ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: புதிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா- ஹவுதிக்கு டிரம்ப் எச்சரிக்கை</a></p><p>* செங்கடலில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்</p><p>* ஈரான் மற்றும் ஹவுதிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் கடுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- டிரம்ப்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-govt-treating-students-seeking-accountability-as-enemies-of-nation-sonia-gandhi">மோடி அரசு மாணவர்களை நாட்டின் எதிரிகளாக நடத்துகிறது: சோனியா காந்தி குற்றச்சாட்டு</a></p><p>* மாணவர்களின் கோரிக்கைகள் மிகத் தெளிவானவை மற்றும் நேரடியானவை.</p><p>* இந்திய அரசிடமிருந்து பொறுப்புக்கூறல் மற்றும் கல்விச் சீர்திருத்தத்தை கேட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month">புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை</a></p><p>* தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>* தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-exam-paper-leak-issue-key-decision-to-be-taken-at-cabinet-meeting-pm-modi">நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>* தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை  கூட்டத்தில் விவாதிக்கப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-urges-modi-remove-dharmendra-pradhan-first">வீடியோ வெளியிட்டு அவமதிப்பதா? - தர்மேந்திர பிரதானை முதலில் நீக்குங்கள்: மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்</a></p><p>* பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள்.</p><p>* மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-wangchuk-shares-govt-assurance-no-cases-against-peaceful-july-20-protesters">ஜூலை 20-ந்தேதி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் கிடையாது: மத்திய அரசின் உத்தரவாதத்தை பகிர்ந்த வாங்சுக்</a></p><p>* ஜூலை 20-ந்தேதி மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் பேரணி நடத்தினர்.</p><p>* நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றால் போலீசார் தடியடி நடத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students">மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு</a></p><p>* போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். </p><p>* போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-final-2027-moved-to-the-oval">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி</a></p><p>* கடந்த 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நான்காவது முறையாக இங்கிலாந்தில் நடக்க உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/flood-like-situation-worsens-in-gujarat-22000-relocated-1200-rescued-as">குஜராத்தை துவம்சம் செய்த இடைவிடாத கனமழை: 1200 பேர் மீட்பு, 22 ஆயிரம் பேர் இடம்பெயர்வு</a></p><p>* வால்சாட் மாவட்டத்தில் உள்ள உம்பேர்கான் தாலுகா இந்த கனமழையால் கடுமையாக பாதித்தது. இங்கு 36 மணி நேரத்தில் 1200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.</p><p>* அகமதாபாத்தில் உள்ள 22 தாலுக்காவில் 12 மணி நேரத்தில் 200 மி.மீ.-க்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month">தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு - நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்</a></p><p>* சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்</p><p>* முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital">கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை</a></p><p>* மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.</p><p>* தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-border-force-jawan-kills-2-colleagues">மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை</a></p><p>* சிவம்குமார் மிஸ்ராவை எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.</p><p>* காயம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகாஸ் பிரம்மா சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/india-games-in-commenwealth-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது.</p><p>* இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-students-started-discussing-rahul-said-regarding-neet-exam-issue">நீட் தேர்வு பிரச்சனையில் ராகுல் கூறியதை மாணவர்கள் பேச தொடங்கி உள்ளனர் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* ராகுல் காந்தியை பொருத்தமட்டில், தமிழ்நாட்டுக்கு நீட் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார். </p><p>* ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, மோடி அரசு வந்ததில் இருந்து 152 முறை பேப்பர் லீக் ஆகி இருக்கிறது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/400-year-old-cannon-stolen-at-gunpoint-in-madhya-pradesh">மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை</a></p><p>* பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.</p><p>* சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-lead-the-series-tomorrow-second-t20-match">நாளை 2-வது டி20 போட்டி: ஜிம்பாப்வேக்கு எதிராக தொடரை வெல்லுமா இந்தியா?</a></p><p>* ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.</p><p>* டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/lok-sabha-adjourned-for-the-day-amid-opposition-protest-on-various-issues">எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.</p><p>* சனி, ஞாயிறு என இரு நாள் விடுமுறைக்குப் பிறகு மக்களவை இனி திங்கள்கிழமை கூடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat"> இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை</a></p><p>* சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.</p><p>* பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/cji-kant-no-plea-filed-on-cjp-protest-police-action">மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p>* சமீபத்தில் எந்தவொரு ஆவணமும் தாக்கல் செய்யப்படாத நிலையில் இந்த விவகாரம் எங்கள் முன் குறிப்பிடப்பட்டது.</p><p>* நான் பதிவகத்தில் சரிபார்த்தேன். உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கத்தில் கூட மனு தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-protest-condemning-irregularities-in-neet-exam">நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்</a></p><p>* மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>* மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi">பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>* வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. </p><p>* தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/a-bill-proposing-a-three-year-prison-sentence-for-disrespecting-the-vande-mataram-song-has-been-introduced-in-the-rajya-sabha">வந்தே மாதர பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-seeks-time-until-tomorrow-to-deliberate-on-dharmendra-pradhans-resignation">தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ய நாளைவரை அவகாசம் கோரிய மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-conveys-best-wishes-to-indian-contingent-participating-in-commonwealth-games-in-glasgow">காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* காமன்வெல்த் போட்டிகளில் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .</p><p>* இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ashes-2027-list-of-venues-announced-southampton-to-host-fourth-test">இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் அட்டவணை அறிவிப்பு</a></p><p>* ஆஷஸ் டெஸ்ட் தொடருக்​கான அட்​ட​வணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரி​யம் வெளி​யிட்டது. </p><p>* முதல் போட்டி​ அடுத்த ஆண்டு ஜூன் 18 முதல் 22 வரை நடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/christopher-nolans-the-odyssey-earns-over-rs-100-crore-at-box-office">ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி வசூலித்த ‘தி ஒடிசி'</a></p><p>* தமிழகத்தில் நோலனின் படங்களுக்கு எப்போதும் தனி இடமுண்டு. </p><p>* தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மிரட்டலான வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-politics-shock-president-shahabuddin-resigns-amid-sheikh-hasina-return-row">வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பின்னணியில் ஷேக் ஹசீனா?</a></p><p>*ஏப்ரல் 2023இல் ஷஹாபுதீன் வங்கதேச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  </p><p>*ஹசீனாவை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டதால் அவர் மீதான அரசின் அதிருப்தி அதிகரித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-landslide-in-himachal-13-dead-including-a-6-month-old-infant">இமாச்சலில் திடீர் நிலச்சரிவு - 6 மாதக்குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protest-intensifies-nta-removes-47-officials-en-masse">தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/four-custodial-deaths-in-the-last-five-weeks-chief-minister-vijay-remains-silent">கடந்த 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள்... வாய்திறவாத முதலமைச்சர் விஜய்!</a></p>]]></content:encoded></item><item><title>‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-is-making-repeated-errors-regarding-the-mekedatu-issue-anbumani#comments</comments><guid isPermaLink="false">57dbfa34-b9e6-4abb-9fc0-897bda63166d</guid><pubDate>Fri, 24 Jul 2026 13:07:34 +0000</pubDate><atom:updated>2026-07-24T13:07:34.050Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘மேகதாது விவகாரத்தில் மேலும் மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு’ - அன்புமணி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/1pic2x9n/New-Project-2026-07-24T183532.644.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது மிகவும் தவறான ஒரு நிலைப்பாடு என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும்  வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டிருப்பது  அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>கும்பகோணத்தில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி நமது உரிமை. அதை விட்டுக் கொடுக்க மாட்டோம், கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் பேசவுள்ளார்’’ என்று தெரிவித்தார்.</p><p>கர்நாடகத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தை ஏற்பாடு செய்வது யார்? மத்திய அரசா, கர்நாடக அரசா? என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. </p><p>ஆனால், மேகதாது குறித்து பேச்சு நடத்த முதலமைச்சர் விஜய்க்கு  கர்நாடக அதிகாரிகள் மின்னஞ்சல் வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான்  முதலமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு.</p><p>பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.... அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான்.  அது குறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பது தான்.</p><p>மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகி விடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்?  </p><p>அந்த அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும். இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு  உரிய  உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும்.</p><p>மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே  அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. </p><p>மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண  நடுவர் மன்றம் அமைக்கப் பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை  மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.</p><p>மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள்  போன்றவற்றுடன்  ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை  தீர்மானிக்க வேண்டும். </p><p>மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.</p><p>எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுவரை, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது குறித்தும், மேகதாது விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் வாய் திறவாதது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-has-assigned-new-responsibilities-to-senior-ias-officers-rajesh-lakhoni-and-sivagnanam#comments</comments><guid isPermaLink="false">695046cb-70e3-4bfc-9142-079d657e0d79</guid><pubDate>Fri, 24 Jul 2026 12:23:30 +0000</pubDate><atom:updated>2026-07-24T12:23:30.611Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,IAS officers,ஐஏஎஸ் அதிகாரிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராஜேஷ்  லக்கானி, சிவஞானத்திற்கு புதிய பொறுப்பு வழங்கியது தமிழ்நாடு அரசு !]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nqeydifq/New-Project-2026-07-24T175312.615.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி மற்றும் சிவஞானம் ஆகியோருக்கு புதிய பொறுப்புகளை வழங்க தலைமைச் செயலாளர் சாய்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். </p><p>அதன்படி தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக கஜலக்ஷ்மிக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பிய நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் இப்பணி தலைமைச் செயலாளர் பணிக்கு ஈடான பொறுப்பும், அந்தஸ்தும் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-is-not-about-watching-a-movie-shedding-tears-and-playing-to-the-gallery-premalatha-vijayakanth-criticizes-tvk#comments</comments><guid isPermaLink="false">21de334f-472f-4919-b8bd-37093d6008f5</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:33:55.376Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/7gp9fnux/New-Project-2026-07-24T160340.666.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலோ, முதலமைச்சர் விஜய்யோ இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;</p><p>“இன்றுவரை காவேரியில் தண்ணீர் திறக்கவில்லை. மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா தைரியமாக கூறுகிறது. நம் அரசு என்ன செய்கிறது?</p><p>அதுமட்டுமில்லாமல் நேற்று அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசிவிலை நேற்று மட்டும் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அரிசிக்கே இந்த நிலை என்றால், மற்றப் பொருட்களின் விலையும் உயரும். அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும். வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இது பலகோடி மக்களின் வாழ்வாதாரம். </p><p>எல்நினோ காலநிலை,வறட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மழை இல்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடைமை. </p><p>மீண்டும் ஒரு லாக்கப் மரணம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் என தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு ஒருவரை அடித்துக்கொல்ல அதிகாரம் இல்லை. விசாரியுங்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். மற்ற எந்த அதிகாரமும் காவல்துறைக்கு இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-senthil-balaji-granted-bail-in-the-horse-trading-case#comments</comments><guid isPermaLink="false">4388a41f-fc6e-450a-8bad-fe60979e5882</guid><pubDate>Fri, 24 Jul 2026 10:16:11 +0000</pubDate><atom:updated>2026-07-24T10:16:11.744Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Conditional Bail,நிபந்தனை ஜாமின்,TVK MLA bribery case,தவெக எம்எல்ஏ குதிரைபேர வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/oxep7lad/New-Project-2026-07-24T154553.123.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.</p><p>இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><p>நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று ஆஜரானார். </p><p>நீதிமன்ற உத்தரவிற்கிணங்க ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நாளை முதல் திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது. </p><p>காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு... தாம்பரம்-தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-to-run-between-tambaram-and-tenkasi#comments</comments><guid isPermaLink="false">31d086a4-441e-4209-9d6b-b05a77350359</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:20:10.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855747-12.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Express Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/03/26/1855747-12.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்ற அனைத்து ரெயில்கள் எப்பொழுதுமே நிரம்பியே செல்கின்றன. </p><p>வழக்கமாக இயக்கப்படுகின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் மற்றும் சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் கிடைப்பதில்லை. அனைத்து ரெயில்களின் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விடுகின்றன.</p><p>குறிப்பாக தென்காசி வழியாக செங்கோட்டைக்குச் செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் எப்போதுமே நிரம்பி காணப்படுகின்றன. 2 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்தால் மட்டுமே படுக்கை வசதி கிடைக்கிறது. </p> <p>தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால் தெற்கு ரெயில்வே தாம்பரம்- தென்காசி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமையில் வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. </p><p>இந்த சிறப்பு ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. அதிகாலையில் புறப்பட்டு மாலையில் செல்லக்கூடிய வகையில் விடப்பட்டுள்ளது.</p> <p>சிறப்பு ரெயில் எண்.06135 தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அன்று பிற்பகல் 3.30 மணிக்கு தென்காசி சென்றடைகிறது. </p><p>எண். 06136 சிறப்பு ரெயில் தென்காசியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பிற்பகல் 3.15 மணிக்கு வந்து சேருகிறது. தாம்பரத்தில் இருந்து வரு கிற 30-ந்தேதி, ஆகஸ்ட் 1,6, 8,13,15 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. தென்காசியில் இருந்து வருகிற 31-ந்தேதி, ஆகஸ்ட் 2, 7, 9, 14,16 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. </p><p>இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில்தான் தீவிரமாக இருக்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/taveka-legislators-focused-on-watching-democrat-film-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/taveka-legislators-focused-on-watching-democrat-film-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">3d80c0a5-20a6-49ad-aece-ce2b33bd02b1</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:18:25.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Lockup death,Arunachalam,லாக்அப் மரணம்,அருணாச்சலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pmqu5a1o/Untitled-design-63.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP’s Nainar Nagendran slams TN police after lockup death]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/pmqu5a1o/Untitled-design-63.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலம் கைது: </strong></h3><p>தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த 24 வயதான அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து அவரிடமிருந்த 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.</p><p>அப்போது அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த அருணாச்சலத்தின் தாயாரை இன்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி தெற்கு காவல்துறையால் கைது செய்யப்பட்ட அருணாச்சலம், அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரின் தாயாரிடம் காவல்துறை கூறியுள்ளது. </p><p>மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த அவருக்கு, முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டு ரத்த காயம் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.</p><p>அவரை வைத்துதான் இந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது. அந்த மாதிரியான ஒரு நபரை, காவல்துறை அத்துமீறி வீட்டில் இருந்து இழுத்து கொண்டு போய், அடித்து கொலை செய்திருக்கிறார்கள். </p><p>இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குடும்பத்திற்கு கண்டிப்பாக ஒரு இழப்பீடு வழங்க வேண்டும். இது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வந்திருக்க்கிறது.</p><p>சமீபத்தில் நாகர்கோவிலில் சபரிவர்மன் என்பவரை சிறையில் அடித்ததால் அவர் இறந்தார். இது இரண்டாவது சம்பவம் அல்ல, தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. </p><p>இதே தெற்கு காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் உயிரிழந்தார், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். </p><p>அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், அதற்கான பிரேத பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவமும் அதே தெற்கு காவல் நிலையத்தில் தான் நிகழ்ந்துள்ளது.</p><p>காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர், பெற்ற தாயின் கண்முன்னே மகன் சாகும் அளவிற்கு தடியடி நடத்தியுள்ளனர்.</p><p>தூத்துக்குடியில் முன்னாள் சட்டமன்ற உறுபினர் மார்க்கண்டேயனை கைது செய்யும்போதும், காவல்துறையினர் நாக்கை துருத்தி கொண்டு, ஊடகவியலாளரை மிரட்டும் காட்சிகள் வெளியாகின.</p><p>காவல்துறையை கையில் வைத்திருக்கக்கூடிய தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இதைப்பற்றி வாய்திறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகன் படம் பார்ப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள்.</p><p>வாக்களித்த மக்களுக்கு தங்களது உரிமைகளை பெற்றுத் தருவதில் அக்கறை செலுத்தவில்லை. இதை பொதுமக்களும்பார்த்து கொண்டுருக்கிறார்கள். இந்த அரசிற்கு கடுமையான கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நான் தெரிவிக்கிறேன்.</p><p>இதேபோன்று சாத்தான்குளத்தில் இரண்டு பேர் அடித்து கொலை செய்யப்பட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள், அதன் பிறகு ஆட்சி மாறியது. அதுபோல சிவகங்கை சம்பவத்தில் நிகழ்ந்த லாக்அப் மரணத்திற்கு பிறகு, ஆட்சி மாறியது.</p><p>ஆனால் தற்போது இந்தமாதிரியான சம்பவங்கள் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துள்ளன. கடந்த ஆட்சிகளுக்கும், இந்த ஆட்சிக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-protest-condemning-irregularities-in-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-protest-condemning-irregularities-in-neet-exam#comments</comments><guid isPermaLink="false">22191d5c-976c-4adf-846c-7a4e3c598b15</guid><pubDate>Fri, 24 Jul 2026 09:03:48 +0000</pubDate><atom:updated>2026-07-24T09:03:48.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,students protest,Neet exam,CJP Protest,சிஜேபி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/iouam2v0/protest.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/iouam2v0/protest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>நீட் தேர்வு முறைகேடு</h2><p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் அதனை தடுக்க தவறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>அவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.</p><h2>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</h2><p>கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தி.நகரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சி வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் அவர்களது போராட்டம் நீடித்தது. மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.</p> <h2>காத்திருப்பு போராட்டம்</h2><p>இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கம் சார்பில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் காத்திருப்பு போராட்டம் இன்று நடந்தது.</p><p>பச்சையப்பன் கல்லூரி முன்பு அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மெரினா கடற்கரையிலும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகிறார்கள். </p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டு எதிரே மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.</p> <p>இதேபோன்று தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாணவ- மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் நுழைவாயில் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவர்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இட நெருக்கடி - தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்ய ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/space-constraints-proposal-to-relocate-chennai-secretariat#comments</comments><guid isPermaLink="false">e6a3e7d9-8cde-486a-be95-00b0e3038b11</guid><pubDate>Fri, 24 Jul 2026 08:25:16 +0000</pubDate><atom:updated>2026-07-24T08:25:16.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,தலைமை செயலகம்,Tamil Nadu secretariat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/16/1933024-tn.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/16/1933024-tn.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தலைமைச் செயலகம்</a> மெரினா கடற்கரை சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது.</p><p>ராணுவத்துக்கு சொந்தமான இந்த இடத்திற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது.</p><h2>இட நெருக்கடி</h2><p>இங்குள்ள கோட்டை வளாகத்தில் பாரம்பரிய மிக்க கட்டிடத்தில் தலைமைச் செயலகம் செல்படுவதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அறைகளும் அங்குதான் உள்ளது. இதனால் கடும் இட நெருக்கடியை சந்தித்து வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cm-dk-shivakumar-likely-to-meet-tn-cm-vijay-on-aug-3">முதலமைச்சர்  விஜய் </a>வந்து செல்லும் அவரது அலுவலக அறை பகுதிகள் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் அறைகள் சட்டசபை வளாகத்துக்கு மேலே முதல் மாடியில் இருப்பதால் அங்கும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.</p><p>சட்டசபைக்கு வந்து செல்லும் எம்.எல்.ஏ.க்கள் அமரும் அறைகளும் சிறிய அறைகளாகவே உள்ளன.</p><p>இதனால் இப்போது தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகம், அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்பட இருக்கிறது.</p> <h2>ஜோதிடர் ஆலோசனை</h2><p>இட நெருக்கடி மற்றும் வாஸ்துபடி சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதால் ஜோதிடர் ஆலோசனைக்கிணங்க 10-வது மாடிக்கு செல்ல முதலமைச்சர் விஜய் சம்மதித்ததாக கூறப்படுகிறது. அதன்படி 10-வது மாடியில் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.</p><p>இந்த சூழலில் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்திலும் போதிய இட வசதி கிடையாது. அங்கும் இடநெருக்கடி தொடர்கிறது. இதுபற்றிய விவரமும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனால் தலைமைச் செயலகத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.</p> <h2>கிண்டி கவர்னர் மாளிகை</h2><p>இதற்காக கிண்டி கவர்னர் மாளிகை எதிரே உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்குள் தலைமை செயலகத்தை கொண்டு செல்லலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.</p><p>இந்த இடம் சரியில்லை என்றால் பட்டினப்பாக்கத்தில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.</p><p>ஆனால் இந்த இடங்கள் தலைமைச் செயலகத்துக்கு சரிபட்டு வராது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் வேறு இடங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.</p> <h2>ஓமந்தூரார் வளாகம்</h2><p>2006-ம் ஆண்டு முதலமைராக இருந்த கருணாநிதி கோட்டையில் இடநெருக்கடி இருப்பதை உணர்ந்து, புதிய தலைமைச் செயலகத்தை சட்டமன்றத்துடன் வசதியாக திட்டமிட்டு கட்டினார். 2010-ம் ஆண்டு இந்த புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது.</p><p>அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராக வந்ததும் அதை ஒரு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியதுடன் தலைமைச் செயலகத்தை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார். அதன்பிறகு ராணி மேரி கல்லூரி அருகே தலைமைச் செயலகத்தை கொண்டு வரலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அந்த எண்ணமும் கைவிடப்பட்டது.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>இப்படி ஒவ்வொரு ஆட்சியிலும் தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்தது. அதேபோல் இப்போது த.வெ.க. ஆட்சி வந்ததும் முதலமைச்சர் விஜய்யிடம், தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு பிரச்சனையில் ராகுல் கூறியதை மாணவர்கள் பேச தொடங்கி உள்ளனர் - மாணிக்கம் தாகூர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-students-started-discussing-rahul-said-regarding-neet-exam-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-students-started-discussing-rahul-said-regarding-neet-exam-issue#comments</comments><guid isPermaLink="false">83ddcd5c-dd76-4a6c-95d9-2e70a1551f2a</guid><pubDate>Fri, 24 Jul 2026 07:19:32 +0000</pubDate><atom:updated>2026-07-24T07:19:32.308Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0mr0x377/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் கூட்டரங்கில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாம்  தொடங்கியது.</p><p>இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> எம்.பி., தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர். </p><p>இந்த முகாம் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. முகாமில் மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி, சென்னை மாநகராட்சி குழு தலைவர் எம்.எஸ். திரவியம், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p> <h2>மாணிக்கம் தாகூர்</h2><p>பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>2019-ம் ஆண்டு ராகுல் காந்தி நீட் வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என வாக்குறுதியும் கொடுத்தார். இந்த மாதிரி மோடி வாக்குறுதி கொடுத்தாரா? அண்ணாமலையுடைய உள்குத்து வேலையால், கட்சி 4 சீட்டில் இருந்து ஒரு சீட்டு எம்.எல்.ஏ ஆகிப்போய் அந்த கட்சியினுடைய நிலை பரிதாபமாக உள்ளது. </p> <p>இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறோம் என்று சொன்னார்கள் அனைத்து, மாநிலங்களிலும் மாணவர்களை ஓட விட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து, மாநிலங்களிலும் மோடி எதிர்ப்பு அலை, குறிப்பாக வட இந்தியாவில் வீசுகிறது. மாணவர்களுடைய, புரட்சி பெரிய புரட்சியாக மாறிக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. </p><p>எங்களை, பொருத்தமட்டில் எங்களது கூட்டணி பலமாக இருக்கிறது. தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை தமிழ் நாட்டில் பெறப்போகிறது. ராகுல் காந்தியை பொருத்தமட்டில், தமிழ்நாட்டுக்கு நீட் கிடையாது என்பதில் தெளிவாக இருக்கிறார். </p> <h2>ராகுல்காந்தி</h2><p>அவருடைய, அந்த வாக்குறுதியை தமிழக மக்கள் மிகப் பெரிய அளவில் எப்போதும் மதிப்பார்கள். ராகுல்காந்தி 2 ஆண்டுகளாக வினாத்தாள் கசிவு பற்றி பேசி வருகிறார். அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி கேட்டு வருகிறார். </p><p>ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, மோடி அரசு வந்ததில் இருந்து 152 முறை பேப்பர் லீக் ஆகி இருக்கிறது. ராகுல் காந்தி 2 ஆண்டுகளாக பேசி வந்ததை, தற்போது மாணவர்களும் பேச தொடங்கி விட்டனர். </p><p>ராகுல் காந்தியின் குரல் எவ்வளவு பலமாக மக்களுடைய ஆதரவோடு மேலே எகிறி வருகிறது, என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தியின் விடாமுயற்சியை பாராட்டுகிறோம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:53:51.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said">விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</a></p><p>* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</a></p><p>* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. </p><p>*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin">தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</a></p><p>* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><p>* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</a></p><p><em>* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</em></p><p><em>* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2">தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p><em><strong>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</strong></em></p><p><em><strong>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</strong></em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices">அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்.</p><p>* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/west-indies-win-fifth-odi-new-zealand-take-series-3-2">5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து</a></p><p>* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. </p><p>* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-advances-to-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</a></p><p>* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.</p><p>* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns">டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</a></p><p>* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p>* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight">பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</a></p><p>* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்</p><p>* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors">டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!... </a></p><p>இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action">எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</a></p><p>* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</a></p><p>* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.</p><p>* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3">சென்னையில் மழைக்கு வாய்ப்பு </a></p><p>* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples">அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை</a></p><p>* கோயில் அறங்காவலர் விண்ணப்ப அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!</p><p>* இணையதளம் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-uproar-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>*இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/marco-rubio-iran-demands-strait-of-hormuz-would-set-a-dangerous-precedent-tells-asian-leaders">ஹார்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கோரிக்கை ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும்: ஆசிய தலைவர்களிடம் மார்கோ ரூபியோ எச்சரிக்கை</a></p><p>* மேற்கு ஆசியப் போரில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வந்தாலும், நாங்கள் 100 சதவீதம் ASEAN அமைப்புடன் துணை நிற்கிறோம்.</p><p>* ஒரு நாடு சர்வதேச நீர் வழிப்பாதையை கட்டுப்படுத்தவும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கவும் கட்டணம் செலுத்தாத கப்பல்களை தகர்க்கவும் முடிவு செய்யக்கூடிய ஒரு முன்னுதாரணத்தை மத்திய கிழக்கில் நாம் உருவாக்கினால், அது மிகவும் ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக அமையும்.</p><figure><img alt="Marco Rubio" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z9dpk3e8/MarcoRupio.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/how-to-end-students-protest-rahul-gandhi-clarifies">மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர செய்ய வேண்டியது இதுதான்: ராகுல் காந்தி விளக்கம்</a></p><p>* மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>* நீட் தேர்வில் ஓராண்டுக்கு 1.32 லட்சம் கோடி புழங்குகிறது.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-morning-foods-scheme-name-chang">முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது த.வெ.க. அரசு</a></h2><p>* பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><figure><img alt="Chief Minister Morning Food Scheme" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/jzvgywz8/MorningFoodSCheme.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt">டெல்லி போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி! மாணவர்களுக்கு எச்சரிக்கை - அண்ணாமலை</a></p><p>* போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயற்சி நடக்கிறது.</p><p>* மத்திய அரசு உடனே பேச்சுவார்தை நடத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suvendu-attacks-mamata-abhishek-over-appeasement-politics-corruption">ஊழல், சமரச அரசியல்: மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜியை விளாசிய சுவேந்து அதிகாரி</a></p><p>* இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்தி நீங்கள் (மம்தா) மேற்கொண்ட அந்த வகையான சமரசம் செய்து கொள்ளும் அரசியல், அடிப்படைவாதிகளின் அரசியலை விடவும் மோசமானது.</p><p>* உங்கள் உண்மையான முகத்தை நான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு திருடன் என்பதை உங்கள் வாழ்நாளிலேயே நான் நிரூபிப்பேன்.</p><figure><img alt="Suvendu Adhikari" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5r5brlsh/SuvenduAdhikari002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/david-warner-pleads-guilty-risk-of-prison">குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்: சிறைக்கு செல்ல வாய்ப்பு</a></p><p>* தனது செயல் முட்டாள்தனமானது. </p><p>*மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ind-vs-zim-fear-of-failure-has-no-place-in-this-team-says-india-skipper-shreyas-iyer">இந்த அணியில் தோல்வி குறித்த பயத்திற்கு இடமில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்</a></p><p>* அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. </p><p>* ஆனால் அது அணியை ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமாக்கியுள்ளது.</p><figure><img alt="Shreyas Iyer" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/g61vg3lb/ShreyasIyer0002.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/icc-odi-rankings-gill-misses-top-spot-by-one-point">ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஒரு புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்ட கில்</a></p><p>* ஒருநாள் தொடரில் சுப்மன் கில் 802 புள்ளிகள் பெற்றுள்ளார்.</p><p>* விராட் கோலி, ரோகித் சர்மா இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் முன்னேறினர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">e797383a-6bd9-4d05-9425-4f0d2f466313</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:50:50 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:50:43.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress">நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</a></p><p>* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>* மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</a></p><p>* ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</p><p>* திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</a></p><p>* தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><p>* இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</a></p><p>* த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.</p><p>* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief">அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான 'பிரிட்ஜ்' -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</a></p><p>* உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். </p><p>* சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின் </a></p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026">GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future" rel="nofollow">இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</a></p><p>* கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>* தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party" rel="nofollow">பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி</a></p><p>*ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?</p><p>* தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability">அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்</a></p><p>*இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>*இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks">ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை</a></p><p>*கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்</p><p>*ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam">ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</a></p><p>* ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். </p><p>* இரட்டையர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th">பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</a></p><p>* கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>* கடலில் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh">ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு</a></p><p>* கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p><p>* விசாகப்பட்டினம், ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</a></p><p>* மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. </p><p>* புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</a></p><p>* சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>* வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach">மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</a></p><p>* மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p><p>* மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled">மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை ரத்து</a></p><p>* புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. </p><p>* மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest" rel="nofollow">"நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது"– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</a></p><p>* சோனம் வாங்சுக் தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>* எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority" rel="nofollow">மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p>* தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>* அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet" rel="nofollow">என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு</a></p><p>* நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து  நிற்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coastal-security-drill-in-mamallapuram-and-pulicat">மாமல்லபுரம்- பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: 2 நாட்கள் நடக்கிறது</a></p><p>* இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. </p><p>* பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/young-man-mysterious-death-in-thoothukudi">தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்</a></p><p>* ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அருணாச்சலம் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>* போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today">இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி</a></p><p>* காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p><p>* நாளை பணிக்கு திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam">கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி</a></p><p>* காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக இளைஞர் வாக்குமூலம்.</p><p>* அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/instagram-server-down-again-second-outage-in-a-week-users-unable-to-send-messages">ஒரே வாரத்தில் 2வது முறையாக முடங்கிய இன்ஸ்டாகிராம் - என்ன காரணம்?</a></p><p>* இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மெசஞ்சரில் மெசேஜ் அனுப்ப, பெற முடியாமல் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.</p><p>* தொடர் முடக்கத்திற்கு மெட்டா இன்னும் விளக்கம் தரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted">காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி</a></p><p>* பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். </p><p>* ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention">டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</a></p><p>* அதிகாரிகள் உடனே தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்</p><p>* போக்குவரத்து காரணமாக வழக்கு தாமதமானால் பாதக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order">விதிமீறும் மனமகிழ் மன்றங்கள்: ஆய்வு செய்து கூட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-4">காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன்</a></p><p>*  வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>* காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker" rel="nofollow">நெஞ்சம் கலங்குகிறது..!- தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்</a></p><p>* தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>* அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students">மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</a></p><p>* பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>* பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts">7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest">தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!... </a></p><p> பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.<a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest"> </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss">முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</a></p><p>* முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>* இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-loses-in-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran" rel="nofollow">தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி</a></p><p>* தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது</p><p>* கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-team-to-tour-england-next-year-for-odi-series">ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி</a></p><p>* முதல் ஒருநாள் போட்டி அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.</p><p>* பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20">முதல் டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே</a></p><p>* இந்திய அணியில் அஷோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார்.</p><p>* கடைசி கட்டத்தில் வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled">டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை!... </a></p><p>'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match">சூர்யவன்ஷி அதிரடி: முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா</a></p><p>* முதலில் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 125 ரன்கள் எடுத்தது.</p><p>* இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கைதி அடித்துக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prisoner-death-at-kilpauk-mental-hospital#comments</comments><guid isPermaLink="false">c36d3fc3-b26d-4316-9dee-a0c7cab434a4</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:43:36 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:43:36.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>prisoner death,கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்,Kilpauk Mental Hospital,கைதி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/psgnk73o/kilpauk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/psgnk73o/kilpauk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பலத்த காயமடைந்த ஜாகிர் உயிரிழந்தார்.</strong></em></p><h2>கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம்</h2><p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மனநல காப்பகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகளை மனநல காப்பகத்தில் உள்ள காப்பாளர்கள் கவனித்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.</p> <h2>மாற்றுத்திறனாளி</h2><p>கோவை மாவட்டம் ஆழியார் பகுதியைச் சேர்ந்த ஜாகிர் என்பவரும் மனநல காப்பகத்தில் தங்கியிருந்தார்.</p><p>ஆழியார் பூங்காவில் கடந்த 2024-ம் ஆண்டு படுத்து தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாகிர் பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாகிரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் அனுமதித்து இருந்தனர்.</p> <h2>ஜாகிர் உயிரிழப்பு</h2><p>இந்த நிலையில் இந்த மனநல காப்பகத்தில் தங்கி இருந்த நெல்லையை சேர்ந்த அரவிந்தசாமி என்ற கொலை வழக்கு கைதிக்கும் ஜாகிருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது.</p><p>கழிவறையை பயன்படுத்துவது தொடர்பாக இருவரும் மோதிக்கொண்டு உள்ளனர் அப்போது அரவிந்தசாமி ஜாகிரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி மிதித்துள்ளார்.</p><p>இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த ஜாகிர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>அரவிந்தசாமியை இந்த வழக்கில் கைது செய்து அது தொடர்பான தகவலை கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.</p><p>அரவிந்த்சாமி மனநல காப்பகத்திலேயே தொடர்ந்து இருப்பார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இவர் தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மன நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கு - நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-in-court-after-one-month#comments</comments><guid isPermaLink="false">f825bde0-54d3-44bf-a1b3-9e574144b0ce</guid><pubDate>Fri, 24 Jul 2026 06:06:45 +0000</pubDate><atom:updated>2026-07-24T06:06:45.405Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,senthil balaji,செந்தில்பாலாஜி,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zpodrq5h/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/zpodrq5h/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.</strong></em></p><h2>குதிரை பேரம்</h2><p>ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a>, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு கடந்த 8-ந்தேதி நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருவரும் காலை மற்றும் மாலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.</p><h2>செந்தில்பாலாஜி </h2><p>கடந்த 8-ந்தேதி முன்ஜாமின் கிடைத்த பிறகும் செந்தில்பாலாஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். போலீசார் தேடி வந்த நிலையில் முன்ஜாமின் கிடைத்த பிறகும் அவர் தலைமறைவாக இருந்தார்.</p><p>இதற்கிடையே, குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி, அவரது தம்பியும் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதில், ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு இந்த ஐகோர்ட்டு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளது' என்று வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் எங்களை கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.</p> <p>குதிரை பேர வழக்கில் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என்று ஐகோர்ட்டு முன்ஜாமின் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் நாங்கள் தடுக்கவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால். பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின் 35 (3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.</p> <p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக்கூடாது என கோர முடியாது. முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><h2>செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். சுமார் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில், முன்ஜாமின் நிபந்தனையின்படி சூரிட்டி வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களுடன் செந்தில்பாலாஜி வந்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழக அளவில் முதலிடம்: சுற்றுலாவில் புதிய வரலாறு படைக்கும் திருச்சி மாவட்​டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trichy-top-in-tamilnadu-district-creates-new-history-in-tourism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trichy-top-in-tamilnadu-district-creates-new-history-in-tourism#comments</comments><guid isPermaLink="false">658313fb-19f3-4a84-8622-bc3f993b9957</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:50:53 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:50:53.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருச்சி,சுற்றுலா,thiruchirapalli</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/j7af13t9/Trichy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/j7af13t9/Trichy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுற்–று–லாத்–துறை நாட்–டின் மொத்த உள்–நாட்டு உற்–பத்–தி–யில் (ஜி.டி.பி.) சுமார் 5.22 சத–வீத பங்–க–ளிப்பை வழங்–கு–கிறது. மேலும், இது கோடிக்–க–ணக்–கான மக்–க–ளுக்கு நேர–டி–யா–க–வும், மறை–மு–க–மா–க–வும் வேலை–வாய்ப்–பு–களை உரு–வாக்–கித் தரு–கிறது. ஆன்–மி–கச் சுற்றுலா, மருத்–துவ சுற்–றுலா, கலா–சார சுற்–றுலா, சூழ–லி–யல் சுற்–றுலா என பல பிரி–வு–களில் இந்–திய சுற்–று–லாத்–துறை உலக அள–வில் வேக–மாக வளர்ந்து வரு–கிறது. உல–கப் பொரு–ளா–தார தர–வ–ரி–சை–யில் இந்–தியா தற்–போது 8-வது பெரிய சுற்–று–லாப் பொரு–ளா–தார நாடாக உரு–வெ–டுத்–துள்–ளது.</p><h2>திருச்சி முதலிடம்</h2><p>இந்–தி–யா–வின் ஒட்–டு–மொத்த உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–கள் வரு–கை–யில் உத்–த–ர– பி–ர–தே–சம் முதல் இடத்–தி–லும், தமிழ்–நாடு இரண்டாம் இடத்–தி–லும் உள்–ளன. வெளி–நாட்–டுப் பய–ணி–கள் வரு–கை–யைப் பொறுத்–த–வரை மராட்–டி–யம், குஜ–ராத் போன்ற மாநி–லங்–களுக்கு அடுத்–த–ப–டி–யாக தமிழ்–நாடு மிக முக்–கிய இடத்–தைப் பிடித்–துள்–ளது.</p><p>ஒட்–டு–மொத்–த–மாக கலா–சா–ரம், ஆன்–மி–கம் மற்–றும் மருத்–து–வச் சிகிச்–சை–க–ளுக்–காக இந்–தியா வரும் சுற்–றுலா பய–ணி–க–ளின் முதன்மை தேர்–வா–கத் தமி–ழ–கம் விளங்–கு–கிறது. தமி–ழக சுற்–று–லாத் துறை–யின் அதி–கா–ரப்–பூர்வ சமீ–பத்–திய புள்–ளி –வி–வ–ரங்–க–ளின்–படி கடந்த ஆண்–டில் மட்–டும் தமிழ்–நாட்–டிற்கு சுமார் 30.80 கோடி உள்–நாட்டு சுற்–று–லாப் பய–ணி–களும் மற்–றும் 11.61 லட்–சம் வெளிநாட்டுச் சுற்–று–லாப் பய–ணி–களும் வருகை தந்–துள்–ள–னர்.</p><h2>மாதத்திற்கு 23 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>தமி–ழ–கத்–தில் உள்ள 38 மாவட்–டங்–களில் திருச்சிதான் சுற்–றுலா பய–ணி–களை சுண்டி இழுத்து வரு–வதில் முத–லி–டத்–தில் உள்–ளது. மாதத்–திற்கு சுமார் 23 லட்–சம் சுற்–றுலா பய–ணி–கள் திருச்–சிக்கு வரு–கி–றார்–கள். இதற்கு கார–ணம் திருச்சி தமிழ்–நாட்–டின் மத்–திய பகுதி என்–பது மட்–டும் அல்ல. காஷ்–மீர் முதல் கன்–னி–யா–கு–மரி வரை இயக்–கப்–படும் ரெயில்–களில் பெரும்–பா–லா–னவை திருச்சி வழியாக செல்–வ–தும், திருச்–சி–யில் சர்–வ–தேச விமான நிலை–யம் இருப்–ப–தும் ஒரு கார–ணம் ஆகும்.</p><p>இது தவிர என்.ஐ.டி, மத்–திய சட்–டப்–பல்–க–லைக்–க–ழ–கம், ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.எம். போன்ற மத்–திய அர–சின் கல்வி நிறு–வ–னங்–கள், பாரத மிகு மின் நிலை–யம் (பெல்), துப்–பாக்கி தொழிற்–சாலை போன்ற தொழில் நிறு–வ–னங்–கள் திருச்–சி–யில் அமைந்து இருப்–ப–தும், சென்னைக்கு நிக–ராக நவீன வச–தி–கள் கொண்ட மருத்–து–வ–ம–னை–கள், ஆசி–யா–வி–லேயே உய–ர–மான கோபு–ரத்தை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்–க–நா–தர் கோவில், வானு–யர எழுந்து நிற்–கும் மலைக்–கோட்டை, சக்தி தலங்–களில் முதன்–மை–யான சம–ய–பு–ரம் மாரி–யம்மன் கோவில், புனித லூர்து அன்னை ஆல–யம், நத்–தர் வலி தர்கா உள்–ளிட்ட வழி–பாட்டு தலங்–க–ளை–யும் தன்–ன–கத்தே அடக்கி இருப்–ப–தால் திருச்–சியை நாடி சுற்–றுலா பய–ணி–கள் அதிக அள–வில் வருகை தந்த வண்–ணம் உள்–ள–னர்.</p><p>முக்–கொம்பு மேலணை, புளி–யஞ்–சோலை, பச்–ச–மலை, வண்–ணத்து பூச்சி பூங்கா, பற–வை–கள் பூங்கா, ரெயில் மியூ–சி–யம், அரசு அருங்–காட்–சி–ய–கம், அண்ணா அறி–வி–யல் மைய கோள–ரங்–கம் ஆகி–யவை திருச்சி மாவட்–டத்–தில் உள்ள முக்–கிய சுற்–றுலா மையங்–க–ளா–கும்.</p><h2>மெட்ரோ சேவை</h2><p>இதுகுறித்து சுற்–று–லாத்–துறை அதி–கா–ரி–கள் கூறு–கை–யில், திருச்–சி–யில் இருந்து தமி–ழ–கத்–தின் எந்த ஊருக்–கும் குறிப்–பாக சென்னை, மதுரை, நாகப்–பட்–டி–னம், கோவை ஆகிய நக–ரங்–க–ளுக்கு செல்–வ–தற்–கான நான்கு வழிச்–சாலை வசதி உள்–ளது. இது கார் உள்–ளிட்ட வாக–னங்–களில் பய–ணிப்–ப–வர்–க–ளுக்கு மிக–வும் பய–னுள்–ள–தா–கும்.</p><p>ஒரு இடத்–தில் இருந்து இன்–னொரு இடத்–திற்கு எளி–தாக செல்–வ–தற்–கான வச–தி–களும், அமை–தி–யான சூழ–லும் திருச்–சி–யில் தான் உள்–ளது. அத–னால் தான் சென்–னையை தாண்டி திருச்சி முத–லி–டத்தை பிடித்–துள்–ளது. மேலும் திருச்–சி–யில் சுற்–றுலா பய–ணி–கள் தங்–கு–வ–தற்–கான சர்–வ–தேச தரத்–தி–லான நட்–சத்–திர விடு–தி–கள் அமைந்–தி–ருப்–ப–தும் ஒரு முக்–கிய கார–ணம். மெட்ரோ ரெயில்–சேவை உள்–ளிட்ட வச–தி–களை ஏற்–ப–டுத்தி கொடுத்–தால் சுற்–றுலா மூலம் திருச்சி மேலும் வளர்ச்சி அடை–யும் என்–ற–னர்.</p>]]></content:encoded></item><item><title>போராடும் மாணவர்களுக்கு எதிரான மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் நாளை கண்டன பொதுக்கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-allies-protest-rally-against-centre-over-students-crackdown</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-allies-protest-rally-against-centre-over-students-crackdown#comments</comments><guid isPermaLink="false">97c86c87-fd58-4ed2-8d25-eb87843bfef1</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:40:26 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:40:26.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nj6ltf3q/Congress0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/nj6ltf3q/Congress0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசை காங்கிரஸ் கண்டித்துள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.</p><p>சென்னையில் நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக தங்கள் கண்டனங்களை தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாளை மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராய நகர் பஸ் நிலையம் பின்புறம் முத்துரங்கம் சாலையில் நடைபெற உள்ளது.</p><h2>அமைச்சர்கள் பங்கேற்பு</h2><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்புராயன் எம்.பி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வெங்கடேசன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி எம்.பி., ம.தி.மு.க. கட்சி சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகிறார்கள்.</p><p>இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் ராஜேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார். அமைச்சர் பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரையாற்றுகிறார்.</p><p>கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 27-ந்தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tho-thirumavalavan-vck-protest-august-27-support-students#comments</comments><guid isPermaLink="false">ddddc8e8-30d3-4210-af50-0d30fbbbecec</guid><pubDate>Fri, 24 Jul 2026 05:23:58 +0000</pubDate><atom:updated>2026-07-24T05:23:58.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,Thol Thirumavalavan,தொல் திருமாவளவன்,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-17/3evee4ti/thirumavalavan03.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thol. Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-17/3evee4ti/thirumavalavan03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-</h2><p>நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர்.</p><p>இது தொடர்பாக காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய பேரணியில் மோடி அரசின் காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. ஏராளமான மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><h2>மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்</h2><p>மாணவர்கள், இளைஞர்கள் மீது ஏவப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் வருகிற 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். </p><p>தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி ஆனதற்குப் பிறகு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் 152 முறை கசிந்து, பலமுறை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் 7½ கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.</p><h2>பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்</h2><p>கல்வித் துறையைச் சீரழிக்கும் மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும என்று மாணவர்கள் தன்னெழுச்சியாகக் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். மாணவர்களை சிவில் உடையில் வந்து யார் தாக்கியது என்பதைப் பற்றி இதுவரை டெல்லி காவல்துறை விளக்கம் அளிக்கவில்லை. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பலர் கை, கால்களில் முறிவு ஏற்பட்டும், தலையில் காயம் அடைந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>போராடிவரும் மாணவர்களின் கோரிக்கைகளான கல்வி மந்திரி தர்மேந்தர பிரதான் பதவி விலக வேண்டும். போராடிய மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வேண்டும், மாநில அரசுகளே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நீதிபதி முன்னிலையில் தூத்துக்குடி வாலிபர் உடல் பிரேத பரிசோதனை - வீடியோ பதிவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/post-mortem-thoothukudi-youth-body-conducted-in-presence-of-a-magistrate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/post-mortem-thoothukudi-youth-body-conducted-in-presence-of-a-magistrate#comments</comments><guid isPermaLink="false">bf5b608b-f318-44a4-860e-333912847d3f</guid><pubDate>Fri, 24 Jul 2026 04:53:05 +0000</pubDate><atom:updated>2026-07-24T04:53:05.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Custodial deaths,லாக்கப் மரணங்கள்,Thoothukudi youth death,தூத்துக்குடி வாலிபர் உயிரிழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/532l653l/youth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அருணாச்சலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/532l653l/youth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.</strong></em> </p><p>தூத்துக்குடி அமுதா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 24), இவர் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்</p> <h2>வாலிபர் உயிரிழப்பு</h2><p>இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும்போது வாலிபர் அருணாச்சலம் போலீஸ் நிலையத்தில் வைத்து வலிப்பு வந்து மயங்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் நேற்று உயிரிழந்தார்.</p> <h2>உறவினர்கள் போராட்டம்</h2><p>இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் அருணாச்சலத்தை தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அருணாச்சலத்தின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் </p><p>இதைத்தொடர்ந்து உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p> <h2>பிரேத பரிசோதனை</h2><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges">அருணாச்சலத்தின்</a> உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை பிரேத பரிசோதனை தொடங்கியது. </p><p>பிரேத பரிசோதனை தொடங்குவதற்கு முன்பாக அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தம்பி சுடலைமணி உள்ளிட்ட உறவினர்கள் அவரது உடலை அடையாளம் காண்பிக்க வந்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் முன்னிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதியில் இருந்து வந்துள்ள பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர் குழுவினர் பணியில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய கட்சியின் பெயர், கொடியை அடுத்த மாதம் அறிவிக்கிறார் அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announce-new-partys-name-and-flag-next-month#comments</comments><guid isPermaLink="false">234de14b-b842-4953-ac48-f4862261c6e7</guid><pubDate>Fri, 24 Jul 2026 02:17:09 +0000</pubDate><atom:updated>2026-07-24T02:17:09.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/dauzwdpe/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-24/dauzwdpe/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</strong></em></p><h2>அண்ணாமலை</h2><p>தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை விலகினார்.</p><p>தான் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.</p>  <h2>புதிய கட்சி பெயர்</h2><p>இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து. தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.</p><p>இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.</p> <h2>செப்டம்பரில் மாநாடு</h2><p>கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/topnews/annamalai-warns-students-of-delhi-protest-hijack-attempt">அண்ணாமலை</a> புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/key-aiadmk-functionary-singai-ramachandran-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/key-aiadmk-functionary-singai-ramachandran-resigns#comments</comments><guid isPermaLink="false">7f1cb025-f9b5-4fd1-9608-942e4c7c38ab</guid><pubDate>Thu, 23 Jul 2026 17:01:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T17:01:05.697Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,சிங்கை ஜி ராமச்சந்திரன்,Singai Ramachandran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/620k0cfn/singai.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிங்கை ஜி ராமச்சந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/620k0cfn/singai.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்புத்தூரைச் சேர்ந்த முக்கிய <a href="https://www.maalaimalar.com/topic/aiadmk">அ.தி.மு.க.</a> நிர்வாகியும், அக்கட்சியின் மாணவர் அணி செயலாளருமான சிங்கை ஜி ராமச்சந்திரன், கடந்த சில மாதங்களாக கட்சியில் நிகழ்ந்த அமைப்பு ரீதியான மாற்றங்களை காரணம் காட்டி கட்சியில் இருந்து விலகினார். </p><p>கட்சியில் வகித்த அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் "மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே" விலகுவதாக ராமச்சந்திரன் தெரிவித்தார். தனது மனசாட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தக் கடினமான முடிவை எடுத்தார். </p><p><strong>எக்ஸ் தள பதிவு:</strong></p><p>"என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; அது எப்போதும் என் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது. இது வெறும் அரசியல் கடிதம் அல்ல; என் வாழ்வின் பயணத்தை அசைபோட்டு நான் இதை எழுதுகிறேன்," என்று தனது விலகல் கடிதத்தை 'எக்ஸ்' தளத்தில் பதிவிடும்போது ராமச்சந்திரன் குறிப்பிட்டார்.</p><p>கட்சியுடனான தனது பிணைப்பை நினைவுகூர்ந்த அவர், "'புரட்சித் தலைவி அம்மா' தான் எனக்கு 'ஜி. ராமச்சந்திரன்' என்ற பெயரை சூட்டினார்; சாதாரண ஆலை தொழிலாளியாக இருந்த என் தந்தையை எம்.எல்.ஏ.வாக உயர்த்தியதும் அம்மாதான். என் தந்தையின் திடீர் மறைவுக்கு பிறகு, என் தாயார் உறுதியுடன் நின்று, அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, எனக்கு நல்ல கல்வியை அளித்து என்னை வளர்த்தெடுத்தார்," என்று கூறினார்.</p><p><strong>ஏமாற்றம்:</strong></p><p>"கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் நிகழ்ந்த சில மாற்றங்கள் எனக்கு ஆழ்ந்த ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளன. எனது கருத்துகளையும் கவலைகளையும் கட்சித் தலைமையிடம் விரிவாகவும் நேர்மையாகவும் பகிர்ந்துகொண்டேன். </p><p>ஆனால், நான் காணும் நிகழ்வுகளை என் மனசாட்சியுடன் ஒருபோதும் ஒத்துப்போக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டபோது, ​​இந்தக் கடினமான முடிவை எடுத்தேன்," என்று அவர் தெரிவித்தார்.</p><p>அவர் தகவல் தொழில்நுட்பப் (IT) பிரிவின் மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர், மாநிலத் தலைவர் மற்றும் மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>