<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 16 Sep 2026 18:13:32 +0000</lastBuildDate><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் போட்டியிட 60 வேட்பாளர்கள் மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/60-candidates-file-nominations-for-madurantakam-dharapuram-bypolls#comments</comments><guid isPermaLink="false">58cc1820-2b39-4a6c-8da5-8bb3e71c4a65</guid><pubDate>Wed, 16 Sep 2026 17:15:48 +0000</pubDate><atom:updated>2026-09-16T17:15:48.131Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,bypolls,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தனி தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது. இதில் ஆளும் த.வெ.க. (TVK) மற்றும் எதிர்க்கட்சியான <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 60 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். </p><p>இடதுசாரி கட்சிகள் இத்தொகுதிகளுக்கான தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழகத்தில்</a> நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டிக்கு களமாக அமையவுள்ளன.</p><h2>60 பேர் வேட்புமனு தாக்கல்:</h2><p>தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 40 பேரும் (28 ஆண்கள், 12 பெண்கள்), தாராபுரத்தில் 20 பேரும் (10 ஆண்கள், 10 பெண்கள்) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.</p><p>இருப்பினும், நாளை (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கும் என்றும், அதன்பிறகே களத்தில் உள்ள வேட்பாளர்களின் இறுதி எண்ணிக்கை தெரியவரும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. (TVK) தனது முதல் அரசை அமைத்த பிறகு மாநிலத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதலமைச்சருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க. கட்சிகளுக்கு எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) தலைமை தாங்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரியத் தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி தனி இடதுசாரி அணியாக போட்டியிட போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியாக களமிறங்குகின்றன.</p>]]></content:encoded></item><item><title>“தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-the-left-parties-had-announced-earlier-that-they-were-contesting-the-election-we-would-have-supported-them-seeman#comments</comments><guid isPermaLink="false">a4543cd0-2362-4dbf-919c-f4692bf7a108</guid><pubDate>Wed, 16 Sep 2026 16:28:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T16:28:03.353Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,by election,communists,சீமான்,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தேர்தலில் போட்டியென இடதுசாரிகள் முன்பே அறிவித்திருந்தால் அவர்களை ஆதரித்திருப்போம்” - சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/6kjvb5t4/New-Project-2026-09-16T215708.113.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எதிர்பாராத ராஜிநாமாவால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துள்ளது. அக்.6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களுக்கு இன்றுதான் கடைசி நாள். முடிவுகள் அக்.9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>ஐந்துமுனைப் போட்டி</h2><p>இந்த இடைத்தேர்தலில் ஆளும் தரப்பான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்ட் வெளியிலிருந்து ஆதரவு தந்தநிலையில் இத்தேர்தலிலும் தவெகவிற்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.</p><p>ஆனால் தவெக ஆட்சியின்மீதான அதிருப்தியாலும், தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலும் தனித்து களம் காண்கிறது. </p><p>ஆறு கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில் இன்று தேர்தல் குறித்து செய்தியாளர்களிடையே பேசியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இடதுசாரிகள் முன்னரே போட்டி என அறிவித்திருந்தால் இந்த இடைத்தேர்தலில் இருந்து நாங்கள் விலகி இருப்போம் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர் கூறியதாவது;</p><p>“இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிகளின் இந்த முடிவை பாராட்டுகிறேன். எனினும், இந்த முடிவை இடதுசாரிகள் காலம் தாழ்த்தி எடுத்துவிட்டனர் என்பதில் எனக்கு வருத்தம். நாட்டில் நிலவிய தீய ஆட்சிக்கு இடதுசாரிகள் நெடுங்காலம் துணை நின்று விட்டார்கள். இது வருந்தத்தக்கது.</p><p>எங்களுக்கு புரட்சிக்கர சிந்தனை, போராட்டக் குணத்தை விதைத்து வளர்த்ததே கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான். </p><p>இந்த முடிவை முன்னரே அறிவித்திருந்தால் நாங்கள் போட்டியிடாமல், அவர்கள் நிறுத்தும் வேட்பாளர்களை ஆதரித்திருப்போம். அவர்கள் கொஞ்சம் காலம் தாழ்த்திவிட்டனர். எங்கள் அரசியலில் நாங்கள் உறுதியாக இருப்பதால் தனித்து போட்டியிடுகிறோம்.” என தெரிவித்தார்.  </p>]]></content:encoded></item><item><title>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-expresses-deep-emotion-regarding-the-consecration-ceremony-of-the-madurai-meenakshi-amman-templea-magnificent-symbol-of-tamil-culture#comments</comments><guid isPermaLink="false">db10ce7d-bb92-4b98-9916-352904db8a27</guid><pubDate>Wed, 16 Sep 2026 15:17:25 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:17:25.683Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,Consecration Ceremony,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/l63p5g3e/New-Project-2026-09-16T204642.559.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை<a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-specials"> மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா </a>நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவால் இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். </p><p>தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! </p><p>நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 16 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-september-2026#comments</comments><guid isPermaLink="false">a0811bc2-a555-463b-9aff-906d36ceb0c8</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:17:56 +0000</pubDate><atom:updated>2026-09-16T15:05:09.808Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/x1wtm4iq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-anant-nag-to-be-honoured-with-dadasaheb-phalke-award">தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் ஆனந்த் நாக்</a></p><p>* கடந்த 2025-ம் ஆண்டில் ஆனந்த் நாக் இந்தியாவின் 'பத்ம பூஷன்' விருதை பெற்றுள்ளார்.</p><p>* கடந்த ஆண்டு கேரளாவின் மோகன்லால் தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-2027-auction-to-be-held-in-india">அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தை இந்தியாவில் நடத்த முடிவு: ஐ.பி.எல். நிர்வாகம்</a></p><p>* வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.பி.எல். ஏலம் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது.</p><p>* 2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்படலாம் என தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th">தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/tragedy-in-us-news-helicopter-covering-bus-crash-plummets-killing-three">அமெரிக்காவில் கோரம்: பேருந்து விபத்தை நேரலை செய்த செய்தி நிறுவன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு... </a></p><p>*அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில், சாலை விபத்து தொடர்பான செய்தியை நேரலை கவரேஜ் செய்து கொண்டிருந்த NBC4 செய்தி நிறுவனத்தின் ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</a></p><p>* லண்டனில் தங்கி உள்ள முதலமைச்சர் விஜய் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். </p><p>* தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mysuru-dasara-festival-will-tamil-nadu-cm-vijay-attend-collector-lakshmikant-answers">மைசூரு தசரா விழா: தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்பா?- ஆட்சியர் லட்சுமிகாந்த் பதில்</a></p><p>*மைசூரு  தசரா ஊர்வலத்திற்கு தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. </p><p>*'ஜம்பூ சவாரி' எனப்படும் தசரா யானைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections" rel="nofollow">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.</p><p>* மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா </a></p><p>* வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.</p><p>* வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/chess-olympiad-begins-today-in-uzbekistan-india-aims-to-retain-title" rel="nofollow">உஸ்பெகிஸ்தானில் இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி- பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!</a></p><p>* முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும்.</p><p>* ஒவ்வொரு சுற்றும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu">எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>* வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar">ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</a></p><p>*  எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>* எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்கள் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes">பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</a></p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. </p><p>* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p><p>* பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு</a></p><p>* அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>* தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions">யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன.</p><p>* ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். </p><p>* கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd">காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p>* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை </a></p><p>* சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக பிரமுகரான பி.டி. அரசகுமாரை கைது செய்தனர். </p><p>* அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>“குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/like-the-story-of-falling-flat-on-ones-face-yet-getting-no-dirt-on-the-moustache-having-gone-seeking-a-ministerial-post-premalathas-retort-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">87dcc5b3-2f1e-4038-8e5d-74a2e82d3e8c</guid><pubDate>Wed, 16 Sep 2026 14:33:14 +0000</pubDate><atom:updated>2026-09-16T14:33:14.295Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை... அமைச்சர் பதவிக்காக சென்றுவிட்டு” - திருமாவளவனுக்கு பிரேமலதா பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/opicu6oi/New-Project-2026-09-16T200243.748.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a>, திமுகவை விட்டு கூட்டணிக் கட்சிகள் வெளியேற ஒரு முக்கிய காரணம் தேமுதிக என, அக்கட்சிமீது சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில் திருமாவளவனின் விமர்சனங்கள் குறித்து இன்று பதிலளித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.,</p><h2>மரியாதை உள்ளது...</h2><p>“திருமாவளவன்மீது தேமுதிக மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளது. 2015-ல் இவரும் சேர்ந்ததுதான் மக்கள் நலக்கூட்டணியை அமைத்தார். முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றவர். ஒரே வார்த்தையில் பதில் கூறுவேன். யாரையும் காயப்படுத்தக் கூடாது என பார்க்கிறேன்.</p><p>அவர் எனக்காக பிரசாரம் செய்ததை மறக்கமாட்டேன். அவர் வேண்டுமானால் மாற்றிப் பேசலாம். அதற்கான நன்றியுணர்வு என்னுள் இருக்கிறது.</p><h2>அமைச்சர் பதவிக்காக வெளியேறல்</h2><p>இன்று அமைச்சர் பதவி கிடைத்ததால், அவர் வேறு கூட்டணிக்கு சென்றுள்ளார். கம்யூனிஸ்டுகளைப் போல் விசிகவும் வெளியிலிருந்து ஆதரவு தந்திருக்கலாமே? நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி. </p><p>நீங்கள் வென்றது இரண்டு இடங்கள். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் போயிருக்கிறீர்கள். இதற்காக நீங்கள் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள். மாற்றி மாற்றிப் பேசாதீர்கள்.</p><p>முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அதன் தலைமையும்தான். அப்படிப் பார்த்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளை  ஸ்டாலின் கூடுதலாக கொடுத்திருக்கிறார்; அதை நாங்கள் கேட்க முடியுமா? நாங்கள் ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை?</p><p>அதனால், நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிக மிகத் தவறான செயல். அதை அண்ணன் திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.</p><h2>மீசையில் மண் ஒட்டவில்லை</h2><p>இனிமேலும் அதுபற்றி அவர் பேச மாட்டார் என்று நினைக்கிறேன். மீண்டும் அவர் அதைப் பற்றிப் பேசினால், ‘குப்புற விழுந்தும் என் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாகிவிடும். உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது சென்றீர்கள். </p><p>இதுதான் உண்மை. எதற்காக தேமுதிகமீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி? கூட்டணி தலைமை எடுக்கும் முடிவை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.</p><p>இதனால்தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம் என அவர் கூறினால், இது உண்மைக்கு புறம்பான பதில் என அனைவருக்கும் தெரியும். ” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-is-easy-to-enjoy-a-position-obtained-without-hard-work-selvaperunthagai-hits-back-at-praveen-chakravarty#comments</comments><guid isPermaLink="false">1a97e850-4932-4638-81c9-07bef566cf0c</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:59:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:59:37.322Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,selvaperunthagai,tvk,Praveen Chakravarty,Prime Ministerial candidate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது’ - பிரவீன் சக்கரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n7tiytc2/New-Project-2026-09-16T182626.956.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த சில நாட்களாகவே ‘பிரதமர் வேட்பாளர்’ விவகாரத்தில் தமிழ்நாட்டின் கூட்டணிக் கட்சிகளான தவெக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ்,  பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில் உறுதியாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளேயும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. </p><p>ஆனால் தவெகவினர் முதலமைச்சர் விஜய்யை முன்னிறுத்தி பேசிவருகின்றனர். </p><p>இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் மாநிலத்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijays-act-in-house-a-disgrace-slams-tncc-chief">செல்வப்பெருந்தகை</a>.,</p><p>“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது?” என கருத்து தெரிவித்திருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பற்றி கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார் என கேள்வி எழுப்பினார்.</p><p>இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு பதில்கூறும் வகையில் செல்வப்பெருந்தகை சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.</p><p>வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.</p><h2>சிரித்தால் போதுமா?</h2><p>நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?</p><p>அதற்கு நீண்ட நேரம் முதலமைச்சர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.</p><p>உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதலமைச்சராவது ஒரே ஒரு முறை ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.</p><h2>பாஜக குறித்துப் பேசினாலே..</h2><p>முதலமைச்சர் கூட சொல்ல வேண்டாம். அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளவர்கள் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதலமைச்சரிடம் நமது அணியின் பிரதமர் வேட்பாளர் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவர் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன். </p><p>பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதலமைச்சரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.</p><h2>காலம் பலரை முன்னிறுத்தும்... ஆனால்</h2><p>உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.</p><p>காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்து போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்கிறது. காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.</p><p>தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். </p><p>உரக்கச் சொல்கிறேன்.</p><p>நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/58th-graduation-ceremony-at-agasteesvaram-vivekananda-college-vijay-vasanth-mp-attends</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/58th-graduation-ceremony-at-agasteesvaram-vivekananda-college-vijay-vasanth-mp-attends#comments</comments><guid isPermaLink="false">d8585a1a-5145-4502-8332-0babd7aaf773</guid><pubDate>Wed, 16 Sep 2026 12:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-16T12:33:00.556Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய் வசந்த்,Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,பட்டமளிப்பு விழா,graduation day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/buepmhht/VV.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Congress MP Vijay Vasanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/buepmhht/VV.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 58-வது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE" rel="nofollow">பட்டாளிப்பு விழா</a> நடைபெற்றது. விழாவுக்கு விவேகானந்தா கல்விக் கழக செயலாளர் சி. ராஜன் தலைமை தாங்கி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.</p><p>தலைவர் ஜி.என். பாலமுருகன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் டி.சி.மகேஷ் வரவேற்புரையாற்றி, பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.</p><p>தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் வசந்த் எம்.பி. 390 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.</p><p>அவர் பேசுகையில்,"மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வி மற்றும் அறிவை நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த இலக்குகளைடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும்" என்றார்.</p><p>நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்விக்கழக துணைத்தலைவர்கள் வழக்கறிஞர்கள் கே. எஸ். மணி, ஜி. சந்திரமோகன், பொருளாளர் டாக்டர் எஸ். பிரியதர்ஷினி, இணைச் செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பொறியாளர் பி.வி.ஆனந்த், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தமிழ் துறைத் தலைவர் முனைவர் கே. இளங்குமார் ஒருங்கிணைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்..!- சோதனை நிறைவுக்கு பிறகு அன்பில் மகேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-cadres-unafraid-anbil-mahesh-speaks-after-search#comments</comments><guid isPermaLink="false">16b1e46d-cfd6-411c-ac8d-40d28c72dd6c</guid><pubDate>Wed, 16 Sep 2026 11:23:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T11:23:57.110Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh,Raid,அன்பில் மகேஷ்,சோதனை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n8nebcri/Anbil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh" rel="nofollow">அன்பில் மகேஷ் </a>இல்லத்தில் நடந்த சோதனை நிறைவடைந்தது.</p><p>இதைதொடர்ந்து, தென்னூரில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:</p><p>சந்தேகத்தின் அடிப்படையில் எனது இல்லத்தில் 8 மணி நேரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர்.</p><p>காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்ததில் இருந்து முடியும் வரை முழு ஒத்துழைப்பு தரப்பட்டது.</p><p>எனது வீட்டில் வைத்திருந்த கல்வித்துறை சார்ந்த ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றனர்.</p><p>புதிய தலைமைச் செயலகம், இடைத்தேர்தல் தொடர்பாக பேசியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் தவெக அரசு மேற்கொண்டுள்ளது.</p><p>நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இல்லை நாங்கள், 75 ஆண்டு கால இயக்கம் திமுக.</p><p>மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, திமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.</p><p>எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள் எனக்கு எதிராக செயல்படுமாறு அன்பாக மிரட்டுகின்றனர். இந்த சோதனை உங்களுக்கு இல்லைங்க, அவரை குறிவைத்து தான், அவருக்கு எதிராக சொல்லுங்க என அன்பாக மிரட்டுகிறார்கள்.</p><p>18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறிச்சென்றனர்.</p><p>18ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான பின்னர் நேரடியாக இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்திற்கு செல்வேன்.</p><p>மிசா சட்டம், மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-one-should-attack-vijay-sethupathi-personally-director-seenu-ramasamy#comments</comments><guid isPermaLink="false">3021c4a6-800b-4bff-a089-140c47386e5c</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:58:46 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:58:46.583Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,Bigg Boss,பிக்பாஸ்,Director Seenu Ramasamy,இயக்குநர் சீனு ராமசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் யாரும் தாக்க வேண்டாம் - இயக்குநர் சீனு ராமசாமி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5wba6xdf/New-Project-2026-09-16T162628.003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைத்துவம் குறித்த<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dharmadurai-completes-10-years-did-it-leave-a-lasting-impression-on-the-audience-director-seenu-ramasamys-post"> நடிகர் விஜய் சேதுபதி</a>யின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவசரப்பட்டு அவர்மீது தனிநபர் தாக்குதலை தொடுக்கவேண்டாம் என மக்களிடம் இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“அனைவருக்கும் அன்பான வணக்கம். விஜய் சேதுபதியை உள்ளும், புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.</p><h2>அரசியல் சாயம்</h2><p>மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலேயே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.</p><p>ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். </p><p>அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.</p><h2>வில்லன் கதாபாத்திரங்களிலும்...</h2><p>ஊக்கப்படுத்தப்பட்ட பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலேயே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குநர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் சிக்கியபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர். </p><p>முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. எம்.எல்.ஏ.- தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இணைந்து வடிகால் பணி ஆய்வு- பொதுமக்கள் வியப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-and-former-dmk-mla-jointly-inspect-drainage-work</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-and-former-dmk-mla-jointly-inspect-drainage-work#comments</comments><guid isPermaLink="false">bf3bb37e-50f2-42a5-a78a-67788ae69560</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:38:03 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:38:03.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3uiw13w3/gummidipoondi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ த.வெ.க. எம்எல்ஏ விஜயகுமார் , முன்னாள் எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் இணைந்து வடிகால் பணியை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ த.வெ.க. எம்எல்ஏ விஜயகுமார் , முன்னாள் எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் இணைந்து வடிகால் பணியை ஆய்வு செய்தபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/3uiw13w3/gummidipoondi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கவரைப்பேட்டையில்  எங்கெல்லாம் மழைநீர் வடி கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டு உள்ளது? அவற்றை  எப்படி சீரமைப்பது?  அதற்கான முயற்சிகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து விஜயகுமார் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார்.</strong></em> </p><p>கும்மிடிப்பூண்டி தொகுதி <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க</a> எம்.எல்.ஏ. விஜயகுமார். இவர் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் அதிகாரிகளுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அனைத்து சர்வீஸ் சாலை மற்றும் நெடுஞ்சாலை சுற்றியுள்ள மழைநீர் வடி கால்வாய்கள் முழுவதுமாக அடைப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் சூழல் உருவானது. இதனை அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.</p><p>இந்த ஆய்வின் போது, கவரைப்பேட்டை சர்வீஸ் சாலை வழியாக எம்.எல்.ஏ விஜயகுமார் நடந்து சென்றபோது,  அந்த வழியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜனை சந்தித்து சிறிது நேரம் அமர்ந்து அவரிடம் பேசினார். மேலும், கவரைப்பேட்டையில்  எங்கெல்லாம் மழைநீர் வடி கால்வாய்களில்  அடைப்பு ஏற்பட்டு உள்ளது? அவற்றை  எப்படி சீரமைப்பது?  அதற்கான முயற்சிகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து விஜயகுமார் எம்.எல்.ஏ.கேட்டறிந்தார். </p><p>பின்னர் விஜயகுமார் எம்.எல்.ஏ.வும், முன்னாள் எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜனும் சேர்ந்து வடிகால் பணிகளை ஆய்வு செய்தனர். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">68859268-5c7e-4ad3-a3c4-1c8601164f7b</guid><pubDate>Wed, 16 Sep 2026 10:24:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T10:24:35.904Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ts1ns5rt/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட மற்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகள், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய ராயலசீமா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>கனமழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>18-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: செப்.25-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-thittam-cm-vijay-to-launch-it-on-september-25th#comments</comments><guid isPermaLink="false">c103d95e-fd0f-4275-9b1b-51ba301f6a6e</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:33:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:33:12.314Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மதுரை,madurai,thaimaman gold ring scheme,தாய்மாமன் தங்க மோதிர திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ue0xvdm0/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>தவெக அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 'தாய்மாமன் சீர் திட்டம்' செப்டம்பர் 15-ந்தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning">முதலமைச்சர் விஜயின்</a> லண்டன் பயணம் காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. </p> <p>இந்நிலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செப்டம்பர் 25-ந்தேதி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மதுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd">முதலமைச்சர் விஜய்</a> தொடங்கி வைக்கிறார்.</p><p>தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.  </p> <p>ஜூன் 22, 2026 முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். ஆண்டுதோறும் சுமார் ரூ. 755.83 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், ஏழை எளிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியைக் கௌரவிக்கும் வகையிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பாத்திரத்தில் தலை சிக்கியதால் தவித்த 1½ வயது குழந்தை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-and-half-year-old-child-in-distress-after-head-got-stuck-in-a-vessel</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-and-half-year-old-child-in-distress-after-head-got-stuck-in-a-vessel#comments</comments><guid isPermaLink="false">2ec6fa85-6327-40e1-b820-b63b87242a1e</guid><pubDate>Wed, 16 Sep 2026 09:06:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T09:06:27.897Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>குழந்தை மீட்பு,Child rescue,நரசிம்மநாயக்கன்பாளையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lj0useux/child.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/lj0useux/child.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பாத்திரத்துக்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். </p><p>கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி சம்பவத்தன்று வீட்டில் சமைத்து கொண்டு இருந்தார். அப்போது அவர்களின் 1½ வயது பெண் குழந்தை யாசனாஸ்ரீ வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.</p> <h2>பாத்திரத்தில் சிக்கிய குழந்தை தலை </h2><p>இந்த நேரத்தில் அந்த குழந்தை வீட்டில் கிடந்த சமையல் பாத்திரத்தை உருட்டியபடி இருந்தது. அப்போது அந்த குழந்தையின் தலை எதிர்பாராத விதமாக பாத்திரத்துக்குள் சிக்கி கொண்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பாத்திரத்தில் இருந்து குழந்தையின் தலையை எடுக்க முயன்றும் பலனில்லை.</p>  <h2>தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்</h2><p>இதனால் அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>தகவலின்பேரில் நிலைய இயக்குனர் ஜெகதீஸ் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு பாத்திரத்துக்குள் தலை சிலை சிக்கி தவித்த பெண் குழந்தையை மீட்கும் பணி தொடங்கியது. </p> <p>அப்போது தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை உரிய பாதுகாப்பு கருவி உதவியுடன் மெதுவாக அறுத்து லாவகமாக வெட்டி எடுத்தனர். பின்னர் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.</p> <p>பாத்திரத்துக்குள் தலை சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.13½ லட்சம் கோடி கடன் இருக்கும்போது புதிதாக தலைமைச் செயலகம் தேவையா? - சீமான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-is-a-new-secretariat-necessary-when-there-is-a-debt-of-rs-13-5-lakh-crore#comments</comments><guid isPermaLink="false">d53e8fdd-3a9d-4794-a523-c4ab150d9452</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:49:04 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:49:04.524Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,naam tamilar katchi,New Secretariat,சீமான்,நாம் தமிழர் கட்சி,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/k7ao2to1/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.</p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன் வாங்கி வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்கு புதிய தலைமைச் செயலகம்? தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் பல மேதைகள் அமர்ந்து ஆகச்சிறந்த சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டியிருக்கிறார்கள். </p> <p>ஒருவேளை, தலைமைச் செயலகத்துக்கு அவசியம் ஏற்பட்டால் கருணாநிதி கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனை இருக்கும் கட்டிடத்தை பயன்படுத்தலாம். அதற்காக மருத்துவமனையை வேண்டுமானால் வேறு இடத்திற்கு மாற்றலாம். புதிதாக தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம்.</p> <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய்சேதுபதி </a>தெரிவித்தது, பொதுவான கருத்து. அவர் குறிப்பிட்டது இதற்கு முன்பிருந்த அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைதான் தம்பி விஜய்சேதுபதி தெரிவித்திருந்தார். அதனை விமர்சிப்பது சரியாக இருக்காது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சேதுபதி பேசுவதால் அரசியல் மாறிவிடாது!- ஆனால் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்:  கனிமொழி எம்.எல்.ஏ. சவால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-mla-challenge-vijay-sethupathi#comments</comments><guid isPermaLink="false">910dbdda-593b-4840-bba1-673727ba10f8</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:19:37.949Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய் சேதுபதி,Vijay sethupathi,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் சேதுபதி- கனிமொழி சந்தோஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/ecu2jf5i/kanimozhisanthosh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் செரையம்பாளையம் - நீலாம்பூர் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின்னர், தொகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைப்பது மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">விஜய் சேதுபதி</a> தெரிவித்த கருத்துகள் குறித்து எம்.எல்.ஏ.  கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><figure><img alt="பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/n4k4n1ea/kanimozhi.jpg" /><figcaption>பேருந்து சேவையை தொடங்கி வைத்த கனிமொழி சந்தோஷ்</figcaption></figure><h2><strong>மேல்நிலைப் பள்ளி கொண்டு வர முயற்சி எடுப்போம்</strong></h2><p>செரையம்பாளையம் பகுதியில் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து பேசிய அவர், </p><p>“மாணவர்களின் எண்ணிக்கையை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கான முக்கியத்துவத்தை வழங்குவோம். அந்தப் பகுதியில் மேல்நிலைப் பள்ளி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்” என்றார்.</p><p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் அரசியல் விவாதமாக மாறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,</p><p>“பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. ஜனநாயக நாட்டில் அரசியல் விமர்சனம் செய்வதற்கான கருத்துரிமை அனைவருக்கும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>தலைவர் விஜய் பெயரை குறிப்பிட்டு பேசட்டும்; மக்கள் பதில் சொல்வார்கள்!</strong></h2><p>மேலும் பேசிய <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி-சந்தோஷ்">கனிமொழி சந்தோஷ்</a>,</p><p>“குறிப்பிட்ட ஒரு கட்சியின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால், அந்தக் கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசலாம். எங்கள் தலைவர் விஜய் அவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசட்டும். அதற்கு மக்கள் தங்களுடைய பதிலைச் சொல்வார்கள்.”</p><p>“ஒரு நிகழ்ச்சியில் பொதுவாக பேசப்படும் கருத்துகளை அரசியல் ரீதியாக மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், அரசியல் விமர்சனம் என்றால் அது வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றார்.</p><p>மேலும் அவர், “விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த அரசின் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதே எங்களுடைய முக்கிய நோக்கம்.”</p><h2><strong>இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது</strong></h2><p>“இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கவுண்டம்பாளையம் தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்றார்.</p><h2><strong>மக்கள் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்</strong></h2><p>“அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் இறுதியில் மக்கள் எதை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நேரடியாக காணும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் தங்களது முடிவுகளை எடுப்பார்கள்” என்று கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவு யாருக்கு?- அன்புமணி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-will-pmk-support-in-the-by-election-anbumani-explains#comments</comments><guid isPermaLink="false">fcef2726-0572-4ee1-ae06-ccf65c25dbd2</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:15:34 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:15:34.574Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5gqmad67/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரும் ஆக்போடர் 6ம் தேதி நடைபெறும் 2 தொகுதி இடைத்தேர்தலில், பாமகவின் ஆதரவு கோரி தவெக, திமுக, அதிமுக உங்களை அணுகியதா என்கிற கேள்விக்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.  </p><p>சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>முதலமைச்சர் லண்டன் பயணம்</h2><p>லண்டனில் முதலமைச்சர் ஒப்பந்தம் செய்த நிறுவனம் சென்னையில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.</p><p>லண்டன் சென்று முதலமைச்சர் விஜய் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இங்கேயே செய்திருக்கலாம்.</p><h2>புதிய தலைமை செயலகம் </h2><p>பட்டினபாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முடிவு மிக மிக தவறானது. அதனை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>பட்டினப்பாக்கம் ஒரு குறுகிய பகுதி. சென்னைக்கு வெளியில் ஆயிரம் ஏக்கரில் நிர்வாக நகரம் அமைக்கலாம்.</p><h2>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது.</p><p>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.</p><p>பரந்தூரில் விமான நிலையத்திற்கு பதில் சிப்காட் வந்தால் சுற்றுச்சூழல் பாதிக்காதா?</p><p>பரந்தூரில் எந்த தொழிற்பேட்டையும் அமைக்கக்கூடாது, அப்படி அமைக்க நினைத்தால் நானே போராடுவேன்.</p><p>மக்களுக்கு திமுக, அதிமுகவை பிடிக்கவில்லை, அதனால்தான் முதல்வராக விஜயை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.</p><p>மீண்டும் மீண்டும் பழைய அரசை பழி சொல்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.</p><p>நீங்கள் அவர்களை குறை சொல்வது, அவர்கள் உங்களை குறை சொல்வதும் போதும், மக்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுங்கள்.</p><p>வேலையில்லா திண்டாட்டம், நீர் மேலாண்மை, விவசாயிகளின் துன்பத்தை போக்க நடவடிக்கை எடுங்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவையில் லாட்டரி டிக்கெட் விற்பனை – 3 பெண்கள் உள்பட 6 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/whatsapp-banned-kerala-onam-bumper-lottery-sales-six-arrested#comments</comments><guid isPermaLink="false">6219d919-4095-4687-b100-082087a0906a</guid><pubDate>Wed, 16 Sep 2026 08:00:13 +0000</pubDate><atom:updated>2026-09-16T08:00:13.306Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Kerala Lottery,லாட்டரி டிக்கெட்,Lottery ticket,fake lottery ticket sale,WhatsApp Scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lottery Ticket Sale]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/g27j0me6/Lottery-Ticket-Sale?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில <a href="https://www.maalaimalar.com/topic/lottery-ticket">லாட்டரி சீட்டுகளை</a> வாட்ஸ்-அப் செயலி மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில், 3 பெண்கள் உட்பட 6 பேரை கோயம்புத்தூர் மாவட்ட ஆனைமலை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். </p><p>அவர்களிடமிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 5,900 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2><strong>ரகசிய தகவல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88">கோவை </a>மாவட்டம் ஆனைமலை பாரதி நகரைச் சேர்ந்த கவுதம் (34) என்பவர், கேரள மாநில எல்லையான மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி சீட்டு கடை நடத்தி வருகிறார். </p><p>இவர் தமிழக எல்லையான ஆனைமலை பகுதியில் உள்ள தனது வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளைப் பதுக்கி வைத்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் தமிழக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><h2><strong>5,900 லாட்டரிகள் பறிமுதல்</strong></h2><p>ஆனைமலை போலீசார் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படையினர் கவுதமின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 5,900 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் என்று கண்டறியப்பட்டது.</p><h2><strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் </a>வியாபாரம்</strong></h2><p>போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. </p><p>கைது செய்யப்பட்ட கவுதம் மற்றும் அவரது உறவினர்களான ஜெயசவுந்தராயன் (32), ஜீவானந்தம் (26) ஆகியோர் இணைந்து, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 'ஓணம் பம்பர்' லாட்டரி சீட்டுகளின் புகைப்படங்களை வாடிக்கையாளர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு அனுப்பி வந்துள்ளனர்.</p><p>பரிசு விழுந்தால் பெரும் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு இந்தச் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.</p><h2><strong>6 பேர் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h2><p>இந்தச் சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த கவுதம், ஜெயசவுந்தராயன், ஜீவானந்தம் மற்றும் இவர்களுக்குத் துணையாக இருந்த 3 பெண்கள் என <strong>மொத்தம் 6 பேரை</strong> போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பதற்கான பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வாட்ஸ்-அப் மூலம் பம்பர் லாட்டரி விற்ற கும்பல் சிக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்&apos;: நீரிழிவு மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் பாஜக நன்கொடை- மனோ தங்கராஜ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/profit-from-burning-house-bjp-diabetes-drug-donations#comments</comments><guid isPermaLink="false">9898f70b-97c0-4025-8387-c53e7e19755d</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:45:55 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:45:55.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மனோ தங்கராஜ்,Mano Thangaraj,Lupin,USV,Sun Pharma,Right to Health,Torrent,நீரிழிவு மருந்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mano Thangaraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/o14jlv23/MANO.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள் (Pharma Companies), ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். </p><p>இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, வீடுகள்தோறும் சர்க்கரை நோயாளிகள் பெருகிவரும் இந்த வேளையில், மக்களின் உடல்நலப் பிரச்சனையை வைத்து அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவது மக்கள் நலனுக்கே எதிரானது என்று சாடியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மத்திய பாஜக அரசு</a> Production Linked Incentive (PLI) திட்டத்தின் கீழ், இந்த குறிப்பிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை அரசு மானியமாக வழங்கியுள்ளது. 2024-25ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது. இதில் Sun Pharma, USV, Torrent, Lupin போன்ற முன்னணி பிராண்டுகள் 2025-26 நிதியாண்டில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளன.</p><h2>மருத்து<strong>வர்களுக்கா</strong>ன சலுகை</h2><p>இந்த மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில், விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் அன்பளிப்புகள்,  வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் மற்றும் இலவச மருந்து சாம்பிள்கள் ஆகியவற்றை சலுகைகளாக வழங்குகின்றன.</p><p>இதன் விளைவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். நோயாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றச் செலவிடும் தொகையிலிருந்தே பாஜக தனது கட்சி நிதிக்கான பங்கைப் பெறுகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2>'எரிகிற வீட்<strong>டில் பிடுங்கியது</strong> லாபம்'</h2><p>பாஜக, எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள் இருக்கின்றனர். இந்தியாவில் போலியோ, அம்மை போன்ற பல தீவிர தொற்று நோய்களை வெற்றிகரமாக ஒழித்த வரலாறு உள்ளது. ஆனால், நீரிழிவு நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக மத்திய அரசு அணுகத் தவறிவிட்டது. </p><p>மாறாக, அதை ஒரு நிதி வசூலிக்கும் வாய்ப்பாகவே ஆளும் பாஜக பார்க்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தனது முக்கியத் தீர்ப்புகளில், "இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி வாழ்வுரிமையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் சுகாதார உரிமை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளும் அரசுகள் மக்களுக்கு இந்த சுகாதார உரிமையை இலவசமாகவும் நியாயமான முறையிலும் உறுதி செய்ய வேண்டுமே தவிர, கார்ப்பரேட் லாபத்திற்கும் அரசியல் கட்சி நிதிக்கும் வழியமைக்கக் கூடாது என மனோ தங்கராஜ் தனது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னை திரும்புகிறார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chennai-return-tomorrow-morning#comments</comments><guid isPermaLink="false">7400c974-65f8-4bf8-b209-1bfa480c356c</guid><pubDate>Wed, 16 Sep 2026 07:17:43 +0000</pubDate><atom:updated>2026-09-16T07:17:43.797Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சென்னை விமான நிலையம்,chennai airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/4ob1s1as/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>  கடந்த 10-ந்தேதி லண்டன் சென்றார்.  அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>லண்டனில் தங்கி உள்ள அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி உள்ளார். தனது ரசிகர்களை தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>லண்டன் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ள முதலமைச்சர் விஜய் நாளை காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-says-no-stay-on-madurantakam-dharapuram-byelections#comments</comments><guid isPermaLink="false">8edf1aeb-c15e-4e40-96a2-ced85af11e4b</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:54:23.126Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,byelection poll,மதுராந்தகம்,இடைத்தேர்தல்,Madhurandhagam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bhdzes6v/Chennai-HC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/bhdzes6v/Chennai-HC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மதுராந்தகம், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination" rel="nofollow">தாராபுரம்</a> தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.</p><p>தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த மனுவில், இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள்  எஸ்.எம்.சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,மனுதாரர் தரப்பில், எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்து, மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. வாக்களித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன், ராஜினாமா செய்து இன்னொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.</p><p>அரசிய சாசனத்தின்படி, இதுபோன்ற சூழலில் தேர்தல் ஆணையம் முறைபடுத்தலாம், ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கலாம், என்பதால் இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.</p><p>அப்போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது. மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.இது கேலிக்கூத்தானது.</p><p>இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதால், இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்றனர்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது எழுந்துள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.</p><p>தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கூட, இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டினார். மேலும், ஏற்கெனவே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளவைத்துள்ளது என்று தெரிவித்தார்.</p><p>இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்த நீதிபதிகள், விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி பெரம்பூரில் தொடங்கி வைக்கிறார்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-will-chief-minister-vijay-launch-it-in-perambur-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">86069b22-7250-4cea-afd9-6000afd940c5</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:24:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:24:20.369Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/p9sr0dxl/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/p9sr0dxl/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலை உணவு  திட்டத்தை முதலமைச்சர் விஜய் பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை  ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.</strong></em></p><p>அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டம்</a> ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. திமுக ஆட்சியில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. தற்போதைய த.வெ.க. அரசு இத்திட்டத்தை 8-ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்திருக்கிறது.</p><p>இதற்கான துவக்க விழா பெரியார் பிறந்த நாளான 17ஆம் தேதி நடைபெறும் என்றும், காமராஜர் படித்த விருதுநகரில் உள்ள பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பார் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 17ஆம் தேதி திட்டத்தின் துவக்க விழா சாத்தியமாகுமா? என்பது சந்தேகமாக இருந்தது. </p><p>இப்போது  17-ம் தேதிக்கு பதிலாக 22-ந் தேதி இந்த  திட்டத்தின் துவக்க விழா நடைபெறும் என அரசு செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அரசு செயலாளர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க விழா 17ஆம் தேதிக்கு பதிலாக 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், சென்னையில் இத்திட்டத்தை முதலமைச்சர் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு துவக்கி வைப்பார் என்றும், அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் 22 -ம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்துள்ள அவர், இதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். </p><h2><strong>பெரம்பூர் பள்ளியில் தொடக்கம்?</strong></h2><p>இந்த திட்டத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> பெரம்பூரில் தொடங்கி வைப்பார் என தெரிகிறது. இது பற்றி அதிகாரிகள் நாளை  ஆய்வு செய்து முடிவு எடுக்கிறார்கள்.</p><p>15 ஆயிரத்து 454 பள்ளிகளில் 6-8வரையிலான 15லட்சத்து 14 ஆயிரத்து 274 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-ம்  வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-bypoll-tvk-candidate-sathyabama-files-nomination#comments</comments><guid isPermaLink="false">b1c80023-25e9-46ba-b36b-c002705a83a9</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:18:18 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:18:18.643Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>nomination,தாராபுரம்,வேட்பு மனு தாக்கல்,சத்யபாமா,Tharapuram,sathyabama</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pwqgmhkm/sathyabama1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK Candidate Sathyabama]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/pwqgmhkm/sathyabama1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">இடைத்தேர்தல்</a> அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி நடைபெற உள்ளது.</p><p>இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க. அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகங்களில் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>12, 13, 14-ந் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட் புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><h2>தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்</h2><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று தனது மனுவை தாக்கல் செய்தார்.</p><h2>ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் </h2><p>தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.</p><p>வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதியும் நடைபெறும்.</p><h2>தவெக நிர்வாகி சத்யபாமா</h2><p>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோருடன் சென்று சத்யபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p><p>அமைச்சர்களுடன் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் சத்யபாமா வேட்புமனு தாக்கல் செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismisses-election-petition-against-ev-velu#comments</comments><guid isPermaLink="false">87d90aa9-b386-4632-a5c2-0f9f75bbad16</guid><pubDate>Wed, 16 Sep 2026 06:03:12 +0000</pubDate><atom:updated>2026-09-16T06:03:12.432Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சென்னை ஐகோர்ட்,Madras HC,ev velu,எவ வேலு,தேர்தல் வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sxvouhcr/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/sxvouhcr/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/எவ-வேலு">எ.வ.வேலு</a> 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><h2><strong>மனு தாக்கல்</strong></h2><p>அவரது வெற்றியை எதிர்த்து த.வெ.க. வேட்பாளர் அருள் ஆறுமுகம், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>இதுவரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு தி.மு.க. எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய ராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-my-respectful-tribute-to-ramasami-padayatchiyar-who-championed-rights-of-working-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-my-respectful-tribute-to-ramasami-padayatchiyar-who-championed-rights-of-working-people#comments</comments><guid isPermaLink="false">b0aa4ee8-69a7-475d-927a-2d7c0015609e</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:48:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:48:33.382Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,SS Ramasami Padayatchiyar birthday,எஸ்எஸ் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/54laxno8/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Ramasami Padayatchiyar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/54laxno8/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளி ஐயா ராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh">திமுக</a> தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>விடுதலைப் போராட்ட வீரரும் சமூகநீதிப் போராளியுமான இராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்</p><p>சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் மக்கள் பணியாற்றிய மாபெரும் தலைவரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பங்களித்த சமூகநீதிப் போராளியுமான ஐயா இராமசாமி படையாட்சி அவர்களின் பிறந்தநாளில் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.</p> <p>அவரது கோரிக்கையை ஏற்று ஏ.என். சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சென்னை கிண்டியில் திருவுருவச் சிலை என இராமசாமி படையாட்சியாரைப் போற்றி வணங்கியது கழக அரசு.</p><p>உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வாதாடிய இராமசாமி படையாட்சியாருக்கு என் புகழ் வணக்கம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமசாமி படையாட்சியாரின் மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-ramasami-padayatchiyar#comments</comments><guid isPermaLink="false">6ded9a44-efd4-4255-ab2f-567fe1ac2228</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:21:20 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:21:20.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,SS Ramasami Padayatchiyar birthday,எஸ்எஸ் ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/i8sakdws/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராமசாமி படையாட்சியார்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/i8sakdws/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான  பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>மகத்தான மக்கள் பணி</strong></h2><p>சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  </p><p>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம் என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.  <br><br>மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி,… <a href="https://t.co/yo1YPt9ICv">pic.twitter.com/yo1YPt9ICv</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2100081943211843702?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-financial-assistance-for-tuition-fees-should-also-be-provided-to-students-from-backward-classes-and-most-backward-classes#comments</comments><guid isPermaLink="false">8ca21bf3-ede2-4982-b678-d298e0bdde55</guid><pubDate>Wed, 16 Sep 2026 05:09:02 +0000</pubDate><atom:updated>2026-09-16T05:09:02.875Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/w9ttimyc/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சமூக அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.</p><p>பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.</p><p>பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.</p><p>அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில்  அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.</p><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப்படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார்  கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்</strong></h2><p>எடுத்துக்காட்டாக, 2022-23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை - அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025-26ஆம் ஆண்டில்  2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.</p><p>அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை  ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும்,  அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை  ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.</p><p>அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும்  பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த  உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-case-against-former-dmk-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">2c2e726e-25f1-465e-a82d-805d36729c7d</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:49:10 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:49:10.234Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஊழல் வழக்கு,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்பில் மகேஷ் பொய்யாமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/gab61qlr/anbilmaheshpoyyamozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ்</a> இருந்தபோது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், பள்ளி தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் இளங்கோவன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததின் பேரில் பி.டி.அரசகுமார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><h2><strong>சோதனை</strong></h2><p>இந்த புகார் தொடர்பாக இன்று திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில் மகேஷின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>இதனிடையே, தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார்  பதிவு செய்துள்ளனர். </p><h2><strong>வங்கி கணக்குகள் முடக்கம்</strong></h2><p>இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்ற பிரிவு போலீஸ் தரப்பில் கூறியதாவது:- வழக்கு தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு நம்பிக்கை மோசடி நடந்துள்ளது. மோசடி தொடர்பாக பி.டி.அரசகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதற்கிடையே, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemned-anbil-mahesh-house-raid#comments</comments><guid isPermaLink="false">3dfbf62d-ce8e-49e5-aa3a-9cfec075ed76</guid><pubDate>Wed, 16 Sep 2026 04:47:33 +0000</pubDate><atom:updated>2026-09-16T04:47:33.988Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,anbil mahesh poyyamozhi,முக ஸ்டாலின்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/cia1r52a/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence">அன்பில் மகேஷ்</a> பொய்யாமொழியின் திருச்சி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு என்று திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health">மு.க.ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</p><p>* தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்</p><p>* பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்</p>  <p>* நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம்</p><p>* ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு</p><p>* ராமநாதபுரம் இரட்டைக் கொலை</p> <p>* சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை </p><p>* அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல்</p><p>என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p> <p>இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற த.வெ.க. அரசு.</p> <p>இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை<br><br>▶️ தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள்<br><br>▶️ பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம்<br><br>▶️ நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல்…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2100079595378864300?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் - முதலமைச்சர் விஜய் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-expansion-scheme-cm-vijay-to-launch-it-on-22nd#comments</comments><guid isPermaLink="false">e39da2f8-3e77-473c-8975-a3f851548bd6</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:49:22 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:49:22.296Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Breakfast Scheme,பெருந்தலைவர் காமராஜர்,காலை உணவு திட்டம்,Perunthalaivar Kamarajar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/29m9pbjj/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/29m9pbjj/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 22-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார்.</p> <p>த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றியது. </p><p>அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges">முதலமைச்சர் விஜய்</a> தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. </p><p>ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. </p>  <p>இதற்கிடையே முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். </p><p>இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும், என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>யு.பி.ஐ பரிவர்த்தனைக் கட்டண வசூல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-central-government-should-abandon-the-plan-to-levy-charges-on-upi-transactions#comments</comments><guid isPermaLink="false">ab66fc92-8d56-41c1-b4fc-785c72c5b7c2</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:28:49.103Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Central govt,UPI,யுபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5ayce6ps/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ யுபிஐ பண பரிவர்த்தனை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/5ayce6ps/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>இந்தியாவில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90">யு.பி.ஐ</a> செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2000-க்கும் கூடுதலான  வணிகப் பயன்பாட்டுக்கான பரிவர்த்தனைகளுக்கு அவற்றின் மொத்த மதிப்பில் 0.40 விழுக்காடும், அதிகபட்சமாக ரூ.300-ம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.</p><p>தனிநபர்கள் இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கும், ரூ.2000-க்கும் குறைவான வணிகப் பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  யு.பி.ஐ மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக பணம் பெறும் சிறு வணிகர்களுக்கும் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கும் பொருள் வாங்கும் மக்கள் இந்தக் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை; மாறாக, இந்தக் கட்டணம் வணிகர்களிடமிருந்தே வசூலிக்கப்படும். இதனால், தனிநபர்களுக்கு எந்த வகையிலும்  நேரடியாக பாதிப்பு இல்லை. மாதம் ரூ.1 லட்சம் வரை யு.பி.ஐ மூலம் வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கும் பாதிப்பு இல்லை.</p><h2><strong>மக்களின் துயரம் அதிகரிக்கும்</strong></h2><p>ஆனால், இந்த முறையில் பொதுமக்கள் தான் மறைமுகமாக பாதிக்கப்படுவார்கள்.  பெரு வணிகர்கள் ஒரு பரிமாற்றத்திற்கு அதிகபட்சமாக ரூ.300 வரை பரிவர்த்தனைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள நிலையில், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு இலாபம் குறைவதை அனுமதிக்க மாட்டார்கள். மாறாக, பொருள்களின் விலைகளை உயர்த்தி, இந்தக் கட்டணத்தை மறைமுகமாக பொதுமக்கள் மீது தான் சுமத்துவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரம் இதனால் மேலும் அதிகரிக்கும்.</p><p>பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தும், கொரோனா காலத்தில் நேரடித் தொடர்புகளைத் தவிர்க்கவும் <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-bans-charges-on-upi-transactions-up-to-rs-2000">யுபிஐ</a> மூலமான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டன. இப்போதும் கூட இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு பல இடங்களில் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறை மூலம் கணிசமான அளவில் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டு, வெளிப்படையான பணப்பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள இலாபத்துடன் ஒப்பிடும் போது, இந்த சேவையை இலவசமாக வழங்குவதால் ஏற்படும்  இழப்பு பெரிதல்ல.</p><p>எனவே, ரூ.2000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவத்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். வெளிப்படையான பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்போதுள்ள நடைமுறையே  தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மருத்துவர்கள் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளேன்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-thank-you-to-everyone-who-kindly-inquired-about-my-health#comments</comments><guid isPermaLink="false">f9a85173-2d0e-46ce-9da9-22a7f40b4b68</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:16:21 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:16:21.528Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rbnnb6xc/mkstalin006.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/rbnnb6xc/mkstalin006.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong></em></p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>வைரஸ் தொற்று</strong></h2><p>வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. </p><p>கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.</p><h2><strong>நன்றி</strong></h2><p>தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-crime-branch-police-conduct-raid-at-former-minister-anbil-maheshs-residence#comments</comments><guid isPermaLink="false">19441d58-0e7e-49b2-9e22-a224bdf795bb</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:07:35 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:07:35.334Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh poyyamozhi,Arasakumar,அரசகுமார்,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/054nj3m5/anbilmahesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh poyyamozhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/054nj3m5/anbilmahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar">தி.மு.க. </a>முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர்.</p> <h2>அன்பில் மகேஷ் பொய்யாமொழி</h2><p>இந்த நிலையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">அன்பில் மகேஷ் பொய்யாமொழியின்</a> சென்னை, திருச்சி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இன்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.</p><p>தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அதனை புதுப்பித்தல், நிரந்தர அனுமதி மற்றும் தரம் உயர்த்துவதற்கான சான்றிதழ்களை தமிழக அரசிடம் இருந்து வாங்கு வதற்காக பல லட்சம்  ரூபாய்  முறைகேடாக வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p> <h2>பி.டி.அரசகுமார்</h2><p>தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவன தலைவரும், தி.மு.க. பிரமுகமான புதுக்கோட்டையை சேர்ந்த பி.டி. அரசகுமார்  இதில் இடைத்தரகராக இருந்து பணம் வசூலித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.</p> <p>இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் பி.டி.அரசகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.</p> <h2>ரூ.100 கோடி</h2><p>அந்த வகையில் ரூ.100 கோடி அளவுக்கு தனியார் பள்ளிகளிடம் இருந்து  முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதும் இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.</p><p>தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் தான்  இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.</p> <p>இது தொடர்பாக பி.டி.அரசகுமாருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கூட்டாளிகளாக  ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைதானார்கள். </p><h2>அடுத்தக்கட்ட நடவடிக்கை</h2><p>இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவே அன்பில் மகேஷ் தொடர்புடைய 6 இடங்களில் இன்று போலீசார் அதிரடி சோதனையை நடத்தி இருக்கிறார்கள்.</p> <h2>முறைகேடு</h2><p>பி.டி.அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏராளமான தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அங்கீகாரம் தரம் உயர்த்துதல் உள்ளிட்டவற்றுக்காக லட்சக்கணக்கில் முறைகேடாக பணம்   வசூலிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசகுமார் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.</p>  <h2>வாக்குமூலம்</h2><p>போலீசாரிடம் அரசகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>சோதனை</h2><p>இதன்படியே இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அன்பில் மகேசின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள உதவியாளர் வாலாடி கார்த்திக் வீடு ஆகிய  இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.</p><p>திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் இன்னொரு இடத்தில் சோதனை நடத்தப்பட்டது.</p> <h2>சென்னை போலீசார்</h2><p>இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மற்றும் திருச்சியில் 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>காலை 7 மணியளவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 16 பேர் திருச்சி வந்தனர். பின்னர் நேராக தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் இருந்தார். </p> <p>அவரிடம் பி.டி. அரசகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முறைகேடு ஆதாரங்களை திரட்டும் வகையில் வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.</p>  <h2>தி.மு.க.வினர் திரண்டனர்</h2><p>அந்த வகையில் அன்பில் மகேஷ் மனைவியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு மகளிர் போலீசாரும் வந்தனர். ஆனால் அவர் சென்னையில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த சோதனை தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சோதனை பற்றிய தகவல் அறிந்த அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். </p><p>அதை தொடர்ந்து உள்ளூர் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (17.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-43</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-43#comments</comments><guid isPermaLink="false">b42dee23-a11b-413e-989c-6d3f5f8aa240</guid><pubDate>Wed, 16 Sep 2026 03:05:27 +0000</pubDate><atom:updated>2026-09-16T03:05:27.226Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,தமிழக மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a5ua2i3e/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின் தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின் தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-16/a5ua2i3e/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கோட்டூர்புரம்</strong></h2><p>புதுச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, துலுகாத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong></h2><p>சிட்கோ மகளிர் தொழிற்சாலைகள், மோரை வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம், வாணியசத்திரம், காஞ்சி காமகோடி நகர், ராமாபுரம், கல்லிக்குப்பம், கன்னிகாபுரம், அலமதி, புதுக்குப்பம், சிங்கிள் குப்பம், லட்சுமிநாதபுரம்.</p><h2><strong>கோயம்பேடு மார்கெட்</strong></h2><p>மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெரு, திருவள்ளுவர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.</p><h2><strong>கிண்டி</strong></h2><p>வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1 முதல் 4வது தெருக்கள், அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கேவிகே சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ் பவன் காலனி, டிஎன்எச்பி காலனி.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-16T01:50:10.577Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.</p><p>* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது<br></a></p><p>*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.</p> <p>*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi">சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்<br></a></p><p>* கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.</p><p>*அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!... </a></p><p>*சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. </p><p>*அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:  திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்</a></p><p>* தவெக வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர்.</p><p>* முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it">இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</a><br><br>*ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார்.</p><p>* எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th">தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</a></p><p>* ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official">தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!... </a></p><p>* இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.</p><p>* தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</a></p><p>* தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.</p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம். </p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளில் குளறுபடிகள்: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாயார் பரபரப்பு பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-arrangements-ptr-palanivel-thiagarajan-mother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/meenakshi-amman-temple-consecration-arrangements-ptr-palanivel-thiagarajan-mother#comments</comments><guid isPermaLink="false">951d5a8b-7dd8-4824-a169-882457afe73a</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:57:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:57:23.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uk1k6u7e/Madurai0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uk1k6u7e/Madurai0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற வகையில் நிர்மல் குமார் கும்பாபிஷேகம் குறித்த தகவல்களை அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவரும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாயாருமான ருக்மணி பழனிவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேசம் சீரும் சிறப்புமாக நடைபெறும் இந்நேரத்தில் பக்தர்களின் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை தாண்டி அனைவரும் முறையாக தெரிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், எங்களை எந்த செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அரசின் தலையிட்டுடன் கூடிய தற்போதைய கோவில் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது.</p><h2>அனுமதி அட்டைகள்</h2><p>அனுமதி அட்டைகள் பொறுத்தவரையில் 9 ஆயிரம், 11 ஆயிரம் என தினமும் ஒரு தகவல் வெளி வருகிறது. மிகவும் மதிக்கத்தக்க வகையில் நன்கொடைதாரர்கள், உபயதாரர்களுக்கு அழைப்புகள் சென்று சேர்ந்துள்ளதா? என்பது எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.</p><p>யார் பெயருடம் விட்டுவிடக்கூடாது என்பதற்கான நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம். அதை கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை.</p><p>17-ந்தேதி நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு ருக்மணி பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-bigg-boss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-bigg-boss#comments</comments><guid isPermaLink="false">8ebc1f4e-4f69-403d-bdb7-9c5e930851f6</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:15:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:15:12.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,விஜய் சேதுபதி,Vijay sethupathy,சீமான்,bigg boss 10,பிக்பாஸ் 10</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதியின் கருத்தை தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது.</p><p>ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.</p><p>ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை</p><p>தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என பேசியிருந்தார்.</p><p>விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு</p><p>தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதலமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.</p><p>இதைப் பார்த்து கடுப்பான தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>சீமான் அறிக்கை</p><p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: நெல்லை- மதுரை கூடல் நகர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train#comments</comments><guid isPermaLink="false">09d0af11-e48f-46e6-a904-1f609cc6ccd7</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:52:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:52:31.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Madurai Meenakshi Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்- சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண மதுரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. நாளையில் இருந்து மக்கள் குவிய வாய்ப்புள்ளது.</p><p>இந்த நிலையில் நாளை நெல்லையில் இருந்து மதுரை கூடல் நகருக்கும், நாளை மறுதினம் மதுரை கூடல் நகரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>நாளை நெல்லையில் இருந்து கூடல் நகர்</h2><p>நெல்லையில் இருந்து நாளை (16-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.</p><h2>17-ந்தேதி கூடல் நகரில் இருந்து நெல்லை</h2><p>மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>சிறப்பு ரெயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list#comments</comments><guid isPermaLink="false">4a6d3b4f-3834-4658-8d91-2462f643f3b4</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:12:00.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,தாம்பரம் மாநகராட்சி,arappor iyakkam,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டு திட்டங்களுக்காக வெளியிடப்பட்டிருந்த இரண்டு டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. பணிகள் முடிவடைந்த பின்னர், டெண்டர் விடப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.</p><p>இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுவை அளித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக பாலசந்தர் ஐ.ஏ.எஸ். காத்திருப்புார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெண்டர் முறைகேடு புகார் என்ன?</h2><p>தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.</p><h2>முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:</h2><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/habcfuxx/Tender0001.jpg" /></figure> <p>இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.</p> <h2>ஒப்பந்தம் 1- பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):</h2><p>இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><h2>ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):</h2><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.</p><h2>அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:</h2><p>இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.</p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:</h2><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்</p> <p>2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>3.DVAC கிரிமினல் வழக்கு.</p><p>4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment)</p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting)</p><p>6. டெண்டரில் வெளிப்படைத்தன்மை</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே மாணவர் உயிரிழந்த விவகாரம்: நீதி கேட்ட போராட்டகாரர்கள் மீது காவல் தாக்குதல் - சிபிஐ கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-death-near-madurai-police-attack-on-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-death-near-madurai-police-attack-on-protesters#comments</comments><guid isPermaLink="false">4c41bf12-7764-49b9-9fb8-395d62f43e40</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:49:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:49:10.576Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,மதுரை,CPI,கண்டனம்,Condemn,MADURAI POLICE,காவல்துறை தாக்குதல்</media:keywords><media:content height="429" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9t9n4moj/images-10.jfif" width="713"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPI M. Veerapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9t9n4moj/images-10.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>மாணவர் உயிரிழப்பு</h2><p>மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>உறவினர்கள் போராட்டம் </h2><p>மாணவரின் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய கோரி 9 நாட்களுக்கு மேலாக தமிழ்ச்செல்வன் உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.</p><h2>சிபிஐ கண்டனம் </h2><p>இந்த  நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட  போராட்டகாரர்கள்  மீது மதுரை மாநகர காவல் துறை தாக்குதல் நடத்தியதிற்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனங்களை தெரிவித்துள்ளது.</p> <p>இது குறித்து சமூகவலைத்தள பதிவில் கூறிப்பட்டுள்ளதாவது</p><p>மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவரின் உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர்.</p><p>மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.</p><p>இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது.</p><p>போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.</p><p>காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான நாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்</h2><p>போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு. தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>என இவ்வாறு தனது பதிவில் சிபிஐ தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official#comments</comments><guid isPermaLink="false">f656b603-d908-4720-b3f8-6be8e772a036</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:10:03.307Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,Left-wing candidates,CPI CPM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Left-wing candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>இடதுசாரிகளின் நிலைப்பாடு</strong></h2><p>நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு வழங்கி ஆட்சி அமைக்க உதவின. இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டன. இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination"> இடைத்தேர்தலில்</a> இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.</p><h2>தாராபு<strong>ரம் தொகுதி கம்யூனிஸ்ட்</strong> வேட்பாளர்</h2><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர், தொழில்முறையில் கட்டிட கான்ட்ராக்டராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து, மக்கள் பணிகளிலும் சமூகப் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.</p><h2>மதுராந்தகம் தொகுதி மா<strong>ர்க்சிஸ்ட் வேட்பா</strong>ளர்</h2><p>அதேபோல, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சுகந்தி, இடதுசாரி அமைப்புகளின் மூலம் பல்வேறு களப்போராட்டங்களை முன்னெடுத்துள்ள முதன்மை நிர்வாகியாவார். இடதுசாரி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை விரைவாக அறிவித்துள்ளதால், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணிகள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content:encoded></item></channel></rss>