<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 15:15:57 +0000</lastBuildDate><item><title>நடிகர் விஜய் சேதுபதி மீது வசைபாடுபவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும் - சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-big-boss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemn-tvk-fans-attack-vijay-sethupathy-in-big-boss#comments</comments><guid isPermaLink="false">8ebc1f4e-4f69-403d-bdb7-9c5e930851f6</guid><pubDate>Tue, 15 Sep 2026 15:15:12 +0000</pubDate><atom:updated>2026-09-15T15:15:12.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,விஜய் சேதுபதி,Vijay sethupathy,சீமான்,bigg boss 10,பிக்பாஸ் 10</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/p1a2ptdd/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜய் சேதுபதியின் கருத்தை தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் சட்டசபையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதற்காக ஜனநாயக அறை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் அணி ஒரு பிரிவாகவும், எதிர் அணி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகிறது.</p><p>ஆளும் அணியினர் செய்யும் தவறுகளை எதிர் அணியினர் சுட்டிக்காட்ட வேண்டும். போட்டியின் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் நிகழ்ச்சி இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். நிகழ்ச்சி மற்றும் போட்டியாளர்களிடையே உள்ள நிறை, குறைகளை சுட்டிக்காட்டுவார்.</p><p>ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை</p><p>தலைமைத்துவம் குறித்து அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரியாமல்... வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்துவிட்டு, பிரச்சனைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணி மேல் பழியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை என பேசியிருந்தார்.</p><p>விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு</p><p>தலைமைப் பண்பு குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், இவர் முதலமைச்சர் விஜய்யைதான் தாக்கி பேசியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.</p><p>இதைப் பார்த்து கடுப்பான தவெக தொண்டர்கள் விஜய் சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.</p><p>சீமான் அறிக்கை</p><p>இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆகவேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.</p><p>எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்! வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: நெல்லை- மதுரை கூடல் நகர் இடையே சிறப்பு ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-nellai-to-madurai-koodal-nagar-special-train#comments</comments><guid isPermaLink="false">09d0af11-e48f-46e6-a904-1f609cc6ccd7</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:52:31 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:52:31.457Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Madurai Meenakshi Amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை மீனாட்சி அம்மன் கோவில்- சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xqryp6j6/MaduraiTrain0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண மதுரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>பக்தர்கள் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. நாளையில் இருந்து மக்கள் குவிய வாய்ப்புள்ளது.</p><p>இந்த நிலையில் நாளை நெல்லையில் இருந்து மதுரை கூடல் நகருக்கும், நாளை மறுதினம் மதுரை கூடல் நகரில் இருந்து நெல்லைக்கும் முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.</p><h2>நாளை நெல்லையில் இருந்து கூடல் நகர்</h2><p>நெல்லையில் இருந்து நாளை (16-ந்தேதி) மதியம் 1 மணிக்கு புறப்படும் ரெயில் (06001), மதுரைக்கு மாலை 5.35 மணிக்கு வந்து பின்னர் இரவு 6.30 மணிக்கு கூடல் நகர் சென்றடையும்.</p><h2>17-ந்தேதி கூடல் நகரில் இருந்து நெல்லை</h2><p>மறுமார்க்கத்தில் செப்டம்பர் 17-ந்தேதி கூடல் நகரில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06002), மதுரைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து மாலை 5.50 மணிக்கு நெல்லை சென்றடையும்.</p><p>சிறப்பு ரெயில் சேரன்மாதேவி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:38:23.839Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">இனிமேல் UPI வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: மத்திய அரசு</a></p><p>* தனி நபர்களுக்கு இடையிலான UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.</p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official">தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!... </a></p><p>* இடதுசாரி கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.</p><p>* தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th">தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</a></p><p>* ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-marriage-that-turned-a-hockey-player-who-played-for-india-into-an-auto-rickshaw-driverand-the-grim-reality-behind-it">இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!</a><br><br>*ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார்.</p><p>* எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:  திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்</a></p><p>* தவெக வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர்.</p><p>* முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!... </a></p><p>*சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான வி.எஸ்.பாபுவுக்கு கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. </p><p>*அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/drug-trade-using-children-asami-who-hid-in-the-closet-after-seeing-the-police-interesting-caught-by-wifi">சிறுவர்களை வைத்து போதை வியாபாரம்.. அலமாரிக்குள் ஒளிந்த ஆசாமி - இலவச Wifi மூலம் சிக்கிய சுவாரஸ்யம்<br></a></p><p>* கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.</p><p>*அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது<br></a></p><p>*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.</p> <p>*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.</p><p>* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p>]]></content:encoded></item><item><title>டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregulation-issues-tambaram-corporation-commissioner-transfer-to-waiting-list#comments</comments><guid isPermaLink="false">4a6d3b4f-3834-4658-8d91-2462f643f3b4</guid><pubDate>Tue, 15 Sep 2026 14:12:00 +0000</pubDate><atom:updated>2026-09-15T14:12:00.033Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,தாம்பரம் மாநகராட்சி,arappor iyakkam,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/horn77k9/Tambaram001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் மாநகராட்சி சார்பில் இரண்டு திட்டங்களுக்காக வெளியிடப்பட்டிருந்த இரண்டு டெண்டரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. பணிகள் முடிவடைந்த பின்னர், டெண்டர் விடப்பட்டது தொடர்பாக ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.</p><p>இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனுவை அளித்திருந்தது.</p><p>இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக பாலசந்தர் ஐ.ஏ.எஸ். காத்திருப்புார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெண்டர் முறைகேடு புகார் என்ன?</h2><p>தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது.</p><h2>முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:</h2><p>முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/habcfuxx/Tender0001.jpg" /></figure> <p>இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை http://tntenders.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.</p> <h2>ஒப்பந்தம் 1- பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):</h2><p>இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. </p><h2>ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):</h2><p>தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது.</p><h2>அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:</h2><p>இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர்.</p><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது.</p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:</h2><p>இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது.</p><p>1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்</p> <p>2.துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை</p><p>3.DVAC கிரிமினல் வழக்கு.</p><p>4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment)</p><p>5. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting)</p><p>6. டெண்டரில் வெளிப்படைத்தன்மை</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே மாணவர் உயிரிழந்த விவகாரம்: நீதி கேட்ட போராட்டகாரர்கள் மீது காவல் தாக்குதல் - சிபிஐ கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-death-near-madurai-police-attack-on-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-death-near-madurai-police-attack-on-protesters#comments</comments><guid isPermaLink="false">4c41bf12-7764-49b9-9fb8-395d62f43e40</guid><pubDate>Tue, 15 Sep 2026 13:49:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T13:49:10.576Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,மதுரை,CPI,கண்டனம்,Condemn,MADURAI POLICE,காவல்துறை தாக்குதல்</media:keywords><media:content height="429" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9t9n4moj/images-10.jfif" width="713"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPI M. Veerapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9t9n4moj/images-10.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>மாணவர் உயிரிழப்பு</h2><p>மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த வாரம் திங்கட்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. மாணவன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>உறவினர்கள் போராட்டம் </h2><p>மாணவரின் மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய கோரி 9 நாட்களுக்கு மேலாக தமிழ்ச்செல்வன் உடலை வாங்க மறுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.</p><h2>சிபிஐ கண்டனம் </h2><p>இந்த  நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட  போராட்டகாரர்கள்  மீது மதுரை மாநகர காவல் துறை தாக்குதல் நடத்தியதிற்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனங்களை தெரிவித்துள்ளது.</p> <p>இது குறித்து சமூகவலைத்தள பதிவில் கூறிப்பட்டுள்ளதாவது</p><p>மதுரை ஆனையூர் கூடல் புதூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவரின் உடல் முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர்.</p><p>மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்து வருகிறார். அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.</p><p>இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது.</p><p>போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தை பெண் காவலர்கள் காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.</p><p>காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான நாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்</h2><p>போராடிய மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு. தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.</p><p>என இவ்வாறு தனது பதிவில் சிபிஐ தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: இடதுசாரிகளின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-madurantakam-byelection-left-candidates-official#comments</comments><guid isPermaLink="false">f656b603-d908-4720-b3f8-6be8e772a036</guid><pubDate>Tue, 15 Sep 2026 12:10:03 +0000</pubDate><atom:updated>2026-09-15T12:10:03.307Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,Left-wing candidates,CPI CPM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Left-wing candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w7kyavkr/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். </p><p>தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><h2><strong>இடதுசாரிகளின் நிலைப்பாடு</strong></h2><p>நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தவித்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு வழங்கி ஆட்சி அமைக்க உதவின. இதில் மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு வகித்த நிலையில், இடதுசாரி கட்சிகள் மட்டும் அமைச்சரவையில் பங்கேற்காமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டன. இந்நிலையில், காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination"> இடைத்தேர்தலில்</a> இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.</p><h2>தாராபு<strong>ரம் தொகுதி கம்யூனிஸ்ட்</strong> வேட்பாளர்</h2><p>தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) சார்பில் தாலுகா செயலாளராகப் பணியாற்றி வரும் லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள இவர், தொழில்முறையில் கட்டிட கான்ட்ராக்டராகச் செயல்பட்டு வருகிறார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து, மக்கள் பணிகளிலும் சமூகப் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.</p><h2>மதுராந்தகம் தொகுதி மா<strong>ர்க்சிஸ்ட் வேட்பா</strong>ளர்</h2><p>அதேபோல, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) சார்பில் சுகந்தி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் சுகந்தி, இடதுசாரி அமைப்புகளின் மூலம் பல்வேறு களப்போராட்டங்களை முன்னெடுத்துள்ள முதன்மை நிர்வாகியாவார். இடதுசாரி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை விரைவாக அறிவித்துள்ளதால், இடைத்தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணிகள் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தலைமைத்துவம் குறித்த பேச்சு - நடிகர் விஜய் சேதுபதிக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் மிரட்டல் விடுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-on-leadership-tvk-mla-sukumar-issues-a-threat-to-actor-vijay-sethupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-on-leadership-tvk-mla-sukumar-issues-a-threat-to-actor-vijay-sethupathi#comments</comments><guid isPermaLink="false">5ab700c9-3d68-455a-8f8c-b3c8144c5d9d</guid><pubDate>Tue, 15 Sep 2026 11:14:38 +0000</pubDate><atom:updated>2026-09-15T11:14:38.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நடிகர் விஜய் சேதுபதி,Actor vijay Sethupathi,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK MLA Sukumar,தவெக எம்எல்ஏ சுகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hmlb0dst/New-Project-2026-09-15T163901.805.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் விஜய் சேதுபதிக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் மிரட்டல் விடுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/hmlb0dst/New-Project-2026-09-15T163901.805.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘பிக்பாஸ் தமிழ் சீசன் 10’ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சனிக்கிழமை போட்டியாளர்களை சந்தித்த, நிகழ்ச்சியின் தொகுப்பாளர்<a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay"> நடிகர் விஜய் சேதுபதி</a>, தலைமைத்துவத்திற்கான பண்புகள் குறித்து விளக்கியிருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யைத்தான் நடிகர் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருந்ததாக அவரின் இந்த பேச்சுத் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டு பெரும் பேசுபொருளானாது. </p><h2>தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம்</h2><p>இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுக்க அவரின் பேச்சு வெறும் நிகழ்ச்சிகானது மட்டுமே என்றும், வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர் மற்றும் எந்த அமைப்பையும் குறித்தது இல்லை என தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது.</p><h2>மிரட்டல்</h2><p>இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>மேலும் விஜய் சேதுபதியின் மார்க்கெட் சரிந்ததாலேயே முதலமைச்சர் விஜய் குறித்து இவ்வாறு பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><h2>அதிமுக ஆதரவு</h2><p>இதனிடையே இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சட்டரீதியாக துணையாக இருப்போம் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் துறையில் டெண்டர் முறைகேடு... அமைச்சர் சரத்குமாருக்கு தொடர்பு - அறப்போர் இயக்கம் புகார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tender-irregularities-in-the-chief-ministers-department-minister-sarathkumar-linked-arappor-iyakkam-alleges#comments</comments><guid isPermaLink="false">e18453b3-2364-44a9-86b5-cb1a683fdbf9</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:50:01 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:50:01.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டெண்டர் முறைகேடு,Tender Irregularities,arappor iyakkam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,அறப்போர் இயக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/241foeq9/New-Project-2026-09-15T161903.940.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் துறையில் டெண்டர் முறைகேடு... அமைச்சர் சரத்குமாருக்கு தொடர்பு - அறப்போர் இயக்கம் புகார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/241foeq9/New-Project-2026-09-15T161903.940.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">முதலமைச்சர் விஜய்</a> வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் வரும், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சத்து, 90 ஆயிரம் மதிப்பிலான டெண்டர்களில் மிகப்பெரிய கூட்டுச் சதி மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கூட்டுச் சதி குற்றச்சாட்டு </h2><p>பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு பணத்தை ஒதுக்குவதற்காக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மற்றும் அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடாக டெண்டர் நிர்ணயம் செய்து கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கோரிக்கை</h2><p>தவெக ஆட்சியில் ஊழலைப்போம் என்று கூறும் முதலமைச்சர் விஜய் , தன் சொந்தத் துறையிலேயே நடந்துள்ள இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><h2>புகார்</h2><p>இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் அனுப்பியுள்ளது.</p><h2>2 ஒப்பந்தங்களில் முறைகேடு</h2><p>பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி, சிட்லபாக்கம் ரவுண்டானா பணி ஆகிய இரண்டு ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளது. </p><p>பெருங்களத்தூர் பால பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு ஆக.6ம் தேதிதான் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் ஜூலை.29ம் தேதியே அசோகத் தூணை அமைச்சர் சரத்குமார் திறந்துவைத்தார். இதற்கான திறப்பு விழா வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.</p><p>இரண்டாவது சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6 அன்று தான் வெளியிடப்பட்டது. </p><p>ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதியே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. </p><p>இது அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது என அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.</p><h2>தாம்பரம் மாநகராட்சி டெண்டர்கள்</h2><p>மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை அடைந்துள்ளது. </p><h2>அறப்போர் இயக்கத்தின் கோரிக்கை</h2><p>இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழ்நாடு அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும், கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கோரியுள்ளது. </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db3J-yyz6b0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db3J-yyz6b0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><p>அமைச்சர் சரத்குமார் சிலைகளை திறந்துவைத்ததற்கான வீடியோக்கள்</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbYCGUIxiCd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbYCGUIxiCd/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><figure><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FArappor%2Fposts%2Fpfbid02cjDxZAvbvgo8vRdFyLgV4k6EEtRZ7xbPR5udJ9MkHuRuWNj6h9baXZ7qwEEZwL1vl&show_text=true&width=500" width="500" height="761" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மது குடிக்கும் தகராறில் வாலிபர் உள்பட 2 பேர் அடித்துக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2-person-murder-near-ramanathapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2-person-murder-near-ramanathapuram#comments</comments><guid isPermaLink="false">ae74f898-b49b-4459-86d7-bd8cd27ec1ea</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:36:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:36:45.276Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,Murder,கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/acyvrhkg/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/acyvrhkg/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து தேவசேனா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்றுகொண்டது. எனவே கொலையாளிகள் அங்கிருந்து வாகனங்கங்களின் மூலம் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</strong></em></p><p>ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே சின்னமாயாகுளம் கிராமம் அமைந்துள்ளது. </p><h2><strong>மதுக்கூடாரம்</strong></h2><p>அங்குள்ள கடற்கரையை ஒட்டிய மணல் பரப்பில் இரவு நேரங்களில் வாலிபர்கள் அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒருசில சமயங்களில் அவர்களுக்கிடையே வாக்குவாதம், தகராறு ஏற்படுவதும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. </p><p>இதற்கிடையே சின்னமாயாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் என்ற ரியாஸ் (வயது 56) மற்றும் கோபி (38). வயது வேறுபாடு இருந்தபோதிலும் இருவரும் நண்பர்கள் போல் இருந்து வந்துள்ளனர். அதிலும் அவர்கள் கூலிவேலை மற்றும் கிடைக்கும் பணிகளுக்கு ஒன்றாகவே சென்றுள்ளனர். </p><p>அதேபோல் இரவில் பாரதிநகர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்துவதும் வழக்கம்.</p><h2><strong>2 பேர் கொலை</strong></h2><p>இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு சென்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஊருக்குள் ஓடிவந்தனர். அவர்கள் கூறிய தகவலின்படி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, கணேசன் என்ற ரியாஸ், கோபி ஆகிய இருவரும் உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே ஏராளமான மது பாட்டில்களும் சிதறிக்கிடந்தன. </p><p>தகவல் அறிந்த ஏர்வாடி போலீசார் அதிரடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்தவர்களிடையே மது அருந்துவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் கணேசன், கோபி இருவரும் எதிர்தரப்பினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.</p><h2><strong>கொலையாளிகள் யார்?</strong></h2><p>இரவு நேரம், காட்டுப்பகுதி என்பதால் யார், யார் அந்த பகுதிக்கு வந்தார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல் அங்கு சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா போன்ற எந்தவிதமான வசதியும் செய்யப்படவில்லை. எனவே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு ராமநாதபுரத்தில் இருந்து தேவசேனா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அங்கேயே நின்றுகொண்டது.</p><p>எனவே கொலையாளிகள் அங்கிருந்து வாகனங்கங்களின் மூலம் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷிய நாட்டுக்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கொடுமை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/harrowing-ordeal-of-a-student-who-went-to-russia-to-study-medicine-trusting-an-instagram-friend-only-to-be-conscripted-into-the-army</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/harrowing-ordeal-of-a-student-who-went-to-russia-to-study-medicine-trusting-an-instagram-friend-only-to-be-conscripted-into-the-army#comments</comments><guid isPermaLink="false">87e274b9-9efb-41b5-b646-b0399bab1fe8</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:28:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:28:16.017Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Instagram,மருத்துவம்,ரஷிய ராணுவம்,medical,இன்ஸ்டாகிராம்,Russia Army</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uuuyxpca/aruppukkottai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அபினேஷ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அபினேஷ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/uuuyxpca/aruppukkottai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></em> </p><p>விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே  உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ்.  கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் (வயது 32), அபினேஷ் குமார் (28) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்துள்ளனர். </p><h2><strong>இன்ஸ்டாகிராம் நண்பர்</strong></h2><p>இதில் அபினேஷ் குமாருக்கு <a href="https://www.maalaimalar.com/topic/இன்ஸ்டாகிராம்">இன்ஸ்டாகிராம்</a>, முகநூல் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் உண்டு. அதன் மூலம் ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அந்த வகையில், பகிரதன் என்பவர் நெருங்கிய நண்பராக கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளார்.</p><p>இதற்கிடையே சமீபத்தில் அவர் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் போதும், ரஷ்யாவில் மருத்துவ படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக தான் ஏஜெண்டாக செயல்படுவதாகவும் பகிரதன் பொதுவான ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இதைப் பார்த்த அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆர்வம் வந்தது. </p><h2><strong>ரஷியா சென்றார்</strong></h2><p>மேலும் இன்ஸ்டாகிராமில் அவரது நண்பர் அனுப்பியிருந்த விளம்பரத்தை அபினேஷ் குமார் தனது பெற்றோரிடமும் கூறினார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்ற தயாராகினர். இதையடுத்து அபினேஷ் குமார் ரஷியாவில் மருத்துவம் படிப்பதற்கு விண்ணப்பித்து தனது நண்பர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி மாணவர் விசா எடுத்து ரஷியாவிற்கு மருத்துவ படிக்க சென்றுள்ளார். </p><p>மூன்று மாதங்கள் வரை குடும்பத்தாருடன் பேசி வந்த நிலையில் அதன் பின்னர் எந்தவித தொடர்பும் இல்லாமல் போனதால் அபினேஷ் குமாரின் பெற்றோர் கவலை அடைந்தனர்.  பல்வேறு இடங்களில் பேசி தன்னுடையை மகனின் நிலை குறித்து கேட்டு வந்தனர். </p><p>இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டது குறித்து அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வந்துள்ளது. இதற்கிடையே மருத்துவ படிப்புக்கு ரஷியா சென்ற என் மகன் அங்கு ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். என் மகனை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. </p><p>அவரை தமிழக முதல்வர் மீட்டுத் தர வேண்டும் என அவரது தாய் லலிதா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு படிக்க சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.</p><p>இதற்கிடையே அவ்வாறு படிக்கவும், வேலைக்காகவும் சென்றவர்கள் ரஷியாவின் ராணுவத்தில் சேர்த்து விடப்படுவதாக தகவல் வந்தது. </p><p>இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பலரை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் நண்பரை நம்பி ரஷியாவுக்கு மருத்துவம் படிக்க சென்றவர் ராணுவத்தில் சேர்த்து விடப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணா பிறந்தநாளில் ருசிகரம்: நேருக்கு நேர் கைகுலுக்கி, இனிப்பு வழங்கி மகிழ்ந்த தி.மு.க. - அ.தி.மு.க. நிர்வாகிகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-and-aiadmk-functionaries-shook-hands-and-exchanged-sweets-with-delight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-and-aiadmk-functionaries-shook-hands-and-exchanged-sweets-with-delight#comments</comments><guid isPermaLink="false">f66ff385-72a0-4684-89cd-4fe1fcb502cc</guid><pubDate>Tue, 15 Sep 2026 10:13:32 +0000</pubDate><atom:updated>2026-09-15T10:13:32.503Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/mxh9gjz9/tirupur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/mxh9gjz9/tirupur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எப்போதும் எதிரும் புதிருமாக களம் காணும் இரு துருவக் கட்சியினரும், தங்களின் அரசியல் பாகுபாடுகளை மறந்து பொதுவெளியில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</strong></em></p><p>​<a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள்  திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.</p><h2><strong>மரியாதை</strong></h2><p>​அதேநேரத்தில், ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப் படத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p><p>இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில், மிக அருகருகே நடந்ததால் திமுக - அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு அங்கே இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.</p><p>​அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த தி.மு.க. மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும்  நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். பின்னர், ‘அரசியல் அப்புறம், அண்ணா பிறந்தநாள் இப்போது’ என்பது போல, நேருக்கு நேர் கை கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதுமட்டுமன்றி, தாங்கள் வைத்திருந்த இனிப்புகளையும் பரஸ்பரம் ஊட்டி மகிழ்ந்தனர்.</p><p>​எப்போதும் எதிரும் புதிருமாக களம் காணும் இரு துருவக் கட்சியினரும், தங்களின் அரசியல் பாகுபாடுகளை மறந்து பொதுவெளியில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சுவாரஸ்யத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 20-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-receive-rain-until-the-20th#comments</comments><guid isPermaLink="false">7e37754f-c0f5-4103-a883-0a1725e1980d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:57:18.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9fiwrpk3/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/9fiwrpk3/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை, திருப்பூர், கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>18-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், இதர தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>18-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேட்டில் சாலையோரம் வீசப்பட்ட கரும்புகள், விற்பனை மந்தமானதால் விவசாயிகள் வேதனை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sugarcane-dumped-by-roadside-in-koyambedu-as-slow-sales-pain-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sugarcane-dumped-by-roadside-in-koyambedu-as-slow-sales-pain-farmers#comments</comments><guid isPermaLink="false">1be63f72-f978-4365-96db-133f9e0151d9</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:40:25.447Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்,sugarcane,கரும்பு விற்பனை,கரும்பு</media:keywords><media:content height="444" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zqwx6309/images-9.jfif" width="691"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sugarcane]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zqwx6309/images-9.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>கரும்பு விற்பனை</h2><p>விநாயகர் சதுர்த்தி சிறப்பு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து டன் கணக்கில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/2-tons-of-sugarcane-exported-to-sharjah-from-coimbatore-airport-in-2-days-755826">கரும்புகள்</a> கோயம்பேடு சந்தைக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன. </p><p>வழக்கமாக விநாயகர் சதுர்த்தி நாளில் கரும்புகளை மக்கள் வாங்கி செல்வது உண்டு. ஆனால் இந்த ஆண்டு கரும்புகள் அதிக அளவில் விற்பனையாகவில்லை என்று கரும்பு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><h2>வேதனை</h2><p>தமிழ்நாட்டில் பல பகுதிகளில்  இருந்து கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட கரும்புகள் அதிகளவில் விற்பனை ஆகாததால் கரும்பு விற்பனையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p><h2>வீசி செல்லப்பட்ட கரும்புகள்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra">விநாயகர் சதுர்த்தி </a>நாளில் கரும்பு விற்பனை நினைத்தப்படி இல்லாததாலும் அவற்றை மறுபடியும் ஊருக்கு எடுத்து செல்ல முடியாத காரணத்தினாலும் கரும்புகளை கோயம்பேட்டில் உள்ள சாலையோரங்களில் வீசி சென்றுள்ளனர்.</p><p>கரும்பை வெளி ஊர்களிலிருந்து முதலீடுகளை போட்டு ஏற்றி வந்ததாகவும் ,விற்பனையாளர்களுக்கான கூலியை கூட தர இயலாத சூழலில்தான் கரும்பு விற்பனையாகி இருப்பதாகவும் கரும்பு வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>கோரிக்கை </h2><p>கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம்தான் விற்பனை சரிவிற்கு முக்கியமான காரணம் என்று கரும்பு வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் எங்களுக்கு விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளே அமைந்து போனதால் இந்த இடம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியாமல் போனது. இது ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர் . இதனால் கோயம்பேடு மார்கெட்டில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வேறொரு இடத்தை நியமித்து தருமாறு கரும்பு வியபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க முயற்சி: மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக் கூடாது- தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-attempt-to-set-up-new-oil-wells-central-and-state-governments-should-not-grant-permission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-attempt-to-set-up-new-oil-wells-central-and-state-governments-should-not-grant-permission#comments</comments><guid isPermaLink="false">6da6adc1-ad5e-42e9-9bd9-e1d3a3ebd30f</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:35:21 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:35:21.838Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,எண்ணெய் கிணறுகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/lap7noo3/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/lap7noo3/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் புதிதாக 5 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி Hardy Exploration &amp; Production India Limited என்ற நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கும் இயற்கை வளம் நிறைந்த கடல் பகுதிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எண்ணெய் கிணறுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கே இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது கூடுதலாக எண்ணெய் கிணறுகளை அமைக்க முயற்சிப்பது மீனவ மக்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் சூழலை உருவாக்கக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><p>காவிரி டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் செயல்படுத்த முடியாத எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டங்களை அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.</p><p>எனவே, கடல் வளத்தையும், மீன்வளத்தையும், மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் எண்ணெய் கிணறுகளை அமைக்கக் கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதோடு இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை உள்ளிட்ட எவ்வித அனுமதிகளையும் மாநில அரசு வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார் அளித்த திமுக எம்எல்ஏக்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-filed-breach-of-privilege-complaint-against-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">4b0bb086-4004-4b60-8840-c52a5e73dc9d</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:30:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:30:51.731Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ev velu,எவ வேலு,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x5hjg9xj/dmk1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MLAs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/x5hjg9xj/dmk1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறினார்.</p><p>சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination">திமுக</a> சட்டமன்ற கொறடா எ.வ.வேலு சந்தித்தார்.</p><p>மிசா தொடர்பான முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி கொடுத்திருந்த மனுவின் நிலை குறித்து அறிய சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராஜா, எ.வ.வேலு ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர்.</p> <p>அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில் உண்மைக்கு மாறாக பேசிய சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல் குமார்</a> மீது திமுக  சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தனர்.</p><p>புகார் கடிதம் அளித்த திமுக எம்எல்ஏக்கள் குழு தலைமைச்செயலகம் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது,</p> <p>* சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசினர்.</p><p>* சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு.</p><p>* மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முன்னதாக மனு கொடுத்திருக்கிறோம்.</p> <p>* உரிமை மீறல் குழு அமைத்துள்ள நிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை குறித்த முடிவு எடுப்பார்கள்.</p><p>* தவறான செய்தியை சட்டசபையில் பகிர்ந்து கொண்டது விதிமீறல்.</p><p>* இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுகிறது தவெக அமைச்சரவை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி சாமி ஊர்வலத்தில் மோதல்: அரசு பஸ் டிரைவர் அடித்து கொலை - 6 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-clash-bus-driver-murdered-six-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-clash-bus-driver-murdered-six-arrested#comments</comments><guid isPermaLink="false">f81121db-c43d-4f9c-9487-92e28c7b48c8</guid><pubDate>Tue, 15 Sep 2026 09:01:38 +0000</pubDate><atom:updated>2026-09-15T09:01:38.506Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Arrested,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,டிரைவர் கொலை,Driver Murdered</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/swa2uud4/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/swa2uud4/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி விழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>ராஜ கணபதி கோவில்</h2><p>சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது45). மாநகர பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே உள்ள ராஜ கணபதி கோவிலில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு நேற்று இரவு 9.30மணி அளவில் சாமி ஊர்வலம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p> <h2>மோதல்</h2><p>சாமி ஊர்வலம் 13-வது தெரு வழியாக சென்றபோது திடீரென பாதியில் திரும்பியது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாமி ஊர்வலம் தெரு முழுவதும் வந்து செல்ல வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதற்கு பஸ் டிரைவர் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. </p><p>இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசார் அவர்களை தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.</p> <h2>அடித்துக்கொலை</h2><p>எனினும் ஆத்திரம் அடங்காத ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் மீண்டும் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினரும் பயங்கர ஆக்ரோஷத்துடன் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆனந்த் தனது கையால் சீனிவாசன் நெஞ்சில் ஓங்கி குத்தினார். இதில் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். </p><p>மயக்க நிலையில் இருந்த சீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கே‌.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ராமாபுரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் ஐ.டி.ஊழியர் ஆனந்த் உள்பட 6 பேரை கைது செய்தனர். </p> <h2>9 பேரிடம் விசாரணை</h2><p>மேலும் இந்த கொலை தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 9 பேரை பிடித்து மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra">விநாயகர் சதுர்த்தி</a> விழா சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திவ்யபிரபந்தம் பாடுவதில் வடகலை- தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/argument-erupts-again-between-vadakalai-and-thenkalai-factions-over-the-chanting-of-kanchipuram-varadaraja-perumal-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/argument-erupts-again-between-vadakalai-and-thenkalai-factions-over-the-chanting-of-kanchipuram-varadaraja-perumal-temple#comments</comments><guid isPermaLink="false">a05aa997-ca66-4326-805d-bedd81ac4126</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:45:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:45:20.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வாக்குவாதம்,Vadakalai,Thenkalai,வடகலை,தென்கலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iyoacw7f/kancheepuram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வடகலை- தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வடகலை- தென்கலை பிரிவினர் மீண்டும் வாக்குவாதம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iyoacw7f/kancheepuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக மதிக்கப்படவில்லை என்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.</strong></em></p><p>காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உபசன்னதி களான ஸ்ரீவேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நடைபெற்ற உற்சவத்தின் போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக மதிக்கப்படவில்லை என்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். </p><p>அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கோவிலில் முறைப்படி உற்சவங்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:  திமுக, தவெக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-by-election-dmk-and-tvk-candidates-file-nomination#comments</comments><guid isPermaLink="false">b08dca7c-a64e-443b-9d92-900b4e44ecab</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:35:20 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:35:20.083Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன் - மரகதம் குமரவேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p> <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடக்கிறது. இதில் த.வெ.க. சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமன், தாராபுரத்தில் (தனி) வக்கீல் சுகன்யா போட்டியிடுகின்றனர். </p><p>இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று மற்றும் நாளை மட்டுமே உள்ளது. </p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில், தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பரந்தாமன் கூறுகையில், நம்பிக்கைக்குரிய சட்டசபை உறுப்பினருக்காக மதுராந்தகம் மக்கள் திமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital">தவெக</a> வேட்பாளராக களமிறங்கிய விஜய் பெரம்பூர் தொகுதிக்கும் திருச்சி தொகுதிக்கும் கூட புதிதானவர் என்று கூறினார்.</p><h2>மரகதம் குமரவேல்</h2><p>இதேபோல் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.</p> <h2>முதலமைச்சர் விஜய் பிரசாரம்</h2><p>முதலமைச்சர் விஜய் 2 கட்டமாக பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த மாதம் 25-ந்தேதி மதுராந்தகத்தில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.</p><p>27-ந்தேதி தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் அக்டோபர் 2, 3-ந்தேதிகளில் மதுராந்தகம், தாராபுரத்தில் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights</link><comments>https://www.maalaimalar.com/spirituality/rajagopurams-of-the-meenakshi-amman-temple-glowing-amidst-a-flood-of-laser-and-decorative-lights#comments</comments><guid isPermaLink="false">7bfbc60d-9267-4683-a985-70b3f41253c1</guid><pubDate>Tue, 15 Sep 2026 08:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T08:11:11.082Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabishekam,கும்பாபிஷேகம்,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லேசர், அலங்கார ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/rc0l4tmx/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.</strong></em></p><p>அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய் சீர்மிகு நல்லாட்சியில், தொன்மையான கோவில்களைப் பழமை மாறாமல் புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குட முழுக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு <a href="https://www.maalaimalar.com/topic/மீனாட்சி-அம்மன்-கோவில்">மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்</a> குடமுழுக்கு நாளை மறுநாள் 17-ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.</p><p>திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்படக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறை கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் எதிர்புறம் அமைந்துள்ள புதுமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு நுழைவு வாயிலில் தண்ணீர், பிஸ்கெட் உடன் கூடிய பிரசாதப்பை வழங்கப்பட உள்ளது. அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>திருக்குடமுழுக்கினை காண வரும் பக்தர்களுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய  மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர ஊர்திகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் எல்.இ.டி.வண்ணத்திரைகள் பக்தர்கள் திருக்குட முழுக்கினைக் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் பரிவாரமூர்த்திகளுக்கான திருக்குடமுழுக்கு நாளை (16 -ந்தேதி) காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. </p><p>அதனைத் தொடர்ந்து 17 -ந்தேதி அன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் சமகாலக் குடமுழுக்கும், மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது. </p><p>இக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏக்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், கோவில் அறங்காவலர்கள், ஆன்மிகப் பெரியோர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் பங்கேற்புடன் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.   </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2><strong>ராஜகோபுரங்கள்</strong> </h2><p>கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் ஏற்கனவே பல வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வானுயர்ந்த கோபுரங்கள், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்களை பக்தர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கோவிலுக்குள் பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம், நூறு கால் மண்டபம், அம்மன் பிரகாரம், சுவாமி பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. </p><p>இதனை காண காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் நகரில் எந்த பகுதிகளில் இருந்தும் வானுயர கோபுரங்களை பார்க்கும் வகையில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. அது மட்டுமின்றி கோபுரத்தில் இருந்து பொதுமக்களை கவரும் வகையில் லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டு ஒளி பாய்ச்சப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. </p><p>அதேபோல் கோவில் உள்ளேயும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இரவு நேரங்களில் இதற்காக குழந்தைகளுடன் பக்தர்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருகை தருகின்றனர். </p><p>கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-mla-vs-babus-health-stable-hospital#comments</comments><guid isPermaLink="false">0a05444f-5000-4994-a86f-47af8552b63c</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:58:59.056Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Kolathur,கொளத்தூர்,tvk,MLA V.S.Babu,எம்எல்ஏ வி.எஸ்.பாபு,கொளத்தூர் சட்டமன்ற தொகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA V.S.Babu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/oyw5ux3f/vs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்எல்ஏ வி.எஸ்.பாபுக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-mla-hospitalized">வி.எஸ்.பாபுவுக்கு</a> கடந்த 9-ம் தேதி அதிகாலை திடீரென கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். </p><p>மருத்துவமனையில் அவரை பரிசோதித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு தேவையான அவசர மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் உடனுக்குடன் தொடங்கப்பட்டன.</p><h2>சீராக உள்ளதா<strong>க மருத்துவம</strong>னை அறிக்கை</h2><p>தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது தொடர்ந்து சீராக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு தேவையான சுவாச உதவிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதால், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவரான வி.எஸ்.பாபு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனது குடும்பத்துடன் கொளத்தூரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை சீரடைந்து வருவது குறித்த தகவல் அறிந்ததும், அவரது ஆதரவாளர்களும், த.வெ.க. தொண்டர்களும், தொகுதி மக்களும் அவர் விரைவில் முழு உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (16.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-42#comments</comments><guid isPermaLink="false">2db5a3fa-8ef7-4c13-9f4f-4e47c59c7194</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:46:06.885Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/wjl8v1wo/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>பரங்கிமலை</strong></h2><p>ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி ரோடு, நசரதபுரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குவார்ட்டர்ஸ், செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரீசன் 1 முதல் 6வது தெரு, திருவள்ளுவர் நகர், குமரன் நகர், குமரன் தெரு காலனி, பர்மா காலனி, காரையார் கோவில் தெரு, வடக்கு அணிவகுப்பு சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, கடற்படை குடியிருப்பு பகுதி, துளசிங்கபுரம், மரியாபுரம், மதியாஸ் நகர், ஐரோப்பிய லைன், பஜார் சாலை, மேட்டுத் தெரு, ஆற்காடு பேட்டை, மர்பிமான் தெரு, 1வது மற்றும் ஜி.பி. காலனி, டீச்சர்ஸ் காலனி, எம்ஜிஆர் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>பெருங்களத்தூர்-காமராஜர் ஹைரோடு, கணேஷ் நகர், லிங்கம் நகர், ஷர்மிளா நகர், பாரதி அவென்யூ, பாலாஜி நகர், காகபுஞ்சந்தர் நகர், புதிய பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், தேனுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், ராகவேந்திரா கார்டன்.</p><h2><strong>கொரட்டூர்</strong></h2><p>ஆர்எஸ் சாலை, எம்டிஎச் சாலை, தில்லை நகர் மற்றும் விரிவாக்கம், சாவடி தெரு, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை, பிராமண தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, சென்ட்ரல் அவென்யூ தெரு 17-24 மற்றும் 35-41, வன்னியர், கிராமினி தெரு, ரெட்டி தெரு, கஸ்தூரி நகர் 1-3வது தெரு, சிவஸ்தாக்தி நகர் 1-3வது தெரு, TNHB 3வது-8வது தெருக்கள், கிழக்கு அவென்யூ, மொகப்பையர் சாலை, கிரீன் வியூ காலனி, சீயோன் தெரு, நேரு நகர்.</p><h2><strong>ராயபுரம்</strong></h2><p>விஓசி நகர், ஆர்.கே.நகர், திலகர் நகர், எல்லையமுதலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, டி.எச்.ரோடு, டோல்கேட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட்டை, கன்னிகோவில், கல்மண்டபம், கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, தாண்டவராய கிராமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, முதலி தெரு, ஜேவி கோவில் தெரு, ராமானுஜப்பர் தெரு, பால அருணாச்சல தெரு, வழக்கறிஞர் சின்னதம்பி I &amp; II தெரு, நமச்சிவாய செட்டி தெரு, ஜஸ்டிஸ் பந்தலை காலனி தெரு, வெங்கடாசலம் தெரு, தாண்டவராய முதலி தெரு.</p>]]></content:encoded></item><item><title>அம்பாசமுத்திரத்தில் திடீர் கனமழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் - விவசாயிகள் கவலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambasamudram-paddy-bags-soaked-and-damaged-by-unexpected-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">b02b17ea-d49a-4b54-a3f9-5a076e2e4997</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:27:36 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:27:36.937Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விவசாயிகள்,Paddy Procurement,Ambasamudram,அம்பாசமுத்திரம்,Paddy Damaged,Farmers Distress,நெல்மூட்டைகள் சேதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paddy Damaged ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/4ipjky0u/Paddy-Damaged?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">அம்பாசமுத்திரம் </a>மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலையில் பெய்த திடீர் கனமழை காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காகக் குவித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மற்றும் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.</p><p>இதனால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>திடீர் மழையால் வந்த சோதனை</strong></h2><p>நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">நெல்மணிகளை </a>வீடுகளின் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்திருந்தனர்.</p><p>இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் இப்பகுதிகளில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த எதிர்பாராத மழையினால், சாலைகளிலும் வீடுகளின் முன்பும் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டும், நனைந்தும் சேதமடைந்தன.</p><h2><strong>கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்</strong></h2><p>அதேபோல், அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF">விவசாயிகளால் </a>விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் இந்த திடீர் மழையில் சிக்கி நனைந்துள்ளன. முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் மூட்டைகள் அனைத்தும் மழைநீரில் ஊறியுள்ளன.</p><p>கடினமாக உழைத்து, அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வந்த நெல்மணிகள் அனைத்தும் இப்படி மழைநீரில் நனைந்து பாழாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து விவசாயிகள் மிகுந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர்.</p><h2><strong>முளைக்கும் நெல்மணிகள் : விவசாயிகள் கோரிக்கை</strong></h2><p>ஏற்கனவே நனைந்துள்ள நெல்மணிகள், தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88">மழை பெய்தால் </a>காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக முளைத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்மணிகள் முளைத்துவிட்டால் அவற்றை அரசு கொள்முதல் செய்யாது என்பதால் விவசாயிகளுக்குப் பலத்த பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களை விரைவாகத் திறந்து, நெல் மூட்டைகளைத் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் எனப் பாதிப்படைந்த விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் - அமைச்சர் செங்கோட்டையன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-cm-vijay-impact-extends-even-to-hindi-speaking-north-indian-states#comments</comments><guid isPermaLink="false">fed31280-1eb7-457a-a2c2-faa6bffaa680</guid><pubDate>Tue, 15 Sep 2026 07:13:15 +0000</pubDate><atom:updated>2026-09-15T07:13:15.324Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/vyqg9sos/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசவில்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.</p> <p>ஈரோட்டு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D">செங்கோட்டையன்</a> கூறியதாவது:</p><p>* சட்டம்-ஒழுங்கு காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மக்கள் விருப்பங்களை பிரதிபலிக்கும் முதல்வராக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">விஜய்</a> உள்ளார்.</p> <p>* இடைத்தேர்தலில் தவெக வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசம் எந்தளவுக்கு போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.</p><p>* பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு குறைவு, மற்ற மாநிலங்களில் 20 நாட்களாக கூடுதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.</p> <p>* சோலார் மூலம் பெறும் மின்சாரத்தை இரவிலும் பயன்படும் வகையில் சேமித்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாகும்.</p><p>* பேரவையில் எம்எல்ஏக்கள் என்ன பேசினார்கள் என்பதை அனைவரும் கண்கூடாக பார்த்தனர்.</p> <p>* இந்தி பேசும் வடமாநிலங்களில் கூட முதலமைச்சர் விஜயின் தாக்கம் அதிகமாக உள்ளது.</p><p>* முதலமைச்சர் விஜய் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.11,000 கோடி அளவுக்கு தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening#comments</comments><guid isPermaLink="false">0109e3e8-83d8-4c64-900c-0a86bdd86b8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:30:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:30:30.618Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லண்டன் சென்றுள்ளார்.  அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong> </h2><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சந்திப்பு</strong> </h2><p>இந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</p><p>முறையான சந்திப்பு 15ஆம் தேதி இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள ரசிகர்களை அவர் தங்கியுள்ள தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து இன்று லண்டன் வாழ் தமிழர்களை அவர் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">2fb9bf68-bb6b-4b02-838d-ee6f83041cfc</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:17:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:17:53.102Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,minister sengottaiyann</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">செங்கோட்டையன்</a> வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். இந்தநிலையில் இந்த மனு மீது நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn#comments</comments><guid isPermaLink="false">5b45e763-00af-48b7-ac81-d849155f6672</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:15:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:15:52.843Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்வதாக திருமாவளவன் கூறினார்.</p> <p>திருச்சியில் விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections">திருமாவளவன்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.</p><p>* மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>* அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">திமுகவினர் </a>ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.</p> <p>* பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.</p><p>* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">a2e8692f-1cb1-4a9f-b5e9-87d835ee453c</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:02:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:02:49.919Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p>அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.</p><p>பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! என கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! <br><br>அறிவியல், தொழில்நுட்பம்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099735682273210573?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna#comments</comments><guid isPermaLink="false">a35eaaf7-8ab4-4d94-b6f8-291d5c9b34b3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:14:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:14:52.245Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perarignar Anna,tvk,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதனிடையே, அரசியல் தலைவர்கள் அண்ணாவை நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தனி முத்திரை பதித்தவர்</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p>“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"  போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். <br><br>எழுச்சியூட்டும்… <a href="https://t.co/ii2pkrkIxm">pic.twitter.com/ii2pkrkIxm</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099723590484815955?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule#comments</comments><guid isPermaLink="false">7d0cdbb8-0fb1-4493-9e5e-c629cfa13ce6</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:53:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:53:51.562Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். </p> <p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.</p> <p>மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>வாழ்க அண்ணா நாமம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn#comments</comments><guid isPermaLink="false">cd103674-104e-44cf-9076-cae5ede779ea</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:43:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:43:27.668Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-முப்பெரும்-விழா">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலினுக்கு</a> ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. </p><p>அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu#comments</comments><guid isPermaLink="false">92268d81-3b27-407d-aba5-9d9eaaa9698c</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:00:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:00:18.582Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆ ராசா,A Rasa,அவதூறு பேச்சு,சேகர்பாபு,Sekhar Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க.</a> சார்பில் கடந்த 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>அந்த வகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>இதே போல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். </p><p>ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இந்த நிலையில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். </p><p>இதேபோல், தி.மு.க. எம்.பி.ஆ.ராசா மீதும் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை குலைக்க முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute#comments</comments><guid isPermaLink="false">53ce6900-a2e0-45d7-9086-e1b35d0bf1d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:49:16.780Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vairamuthu,Perarignar Anna,வைரமுத்து,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>அண்ணா! </p><p>காலவெளியில்</p><p>உன் இருப்பு சிறிதுதான்</p><p>நீ வாழ்ந்தது</p><p>59.4 ஆண்டுகள்</p> <p>உன் பொதுவாழ்வு</p><p>35 ஆண்டுகள்</p><p>கட்டியெழுப்பிய கட்சியோடு </p><p>19.5 ஆண்டுகள்</p><p>ஆட்சிப் பொறுப்பில்</p><p>வெறும் 22 மாதங்கள்</p> <p>ஆனால்,</p><p>நீ செய்த சாதனை புரிய</p><p>300 ஆண்டு</p><p>வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>உன் பெயர் சொல்லாமல்</p><p>அரசாள இயலாது</p><p>உன் கொள்கை இல்லாமல்</p><p>அரசியல் கிடையாது</p> <p>நீ</p><p>சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;</p><p>சாமானியனாகவே மரித்தவன்</p><p>பூமியின் மீது</p><p>அதிகச் சிலைகள் புத்தருக்கு;</p><p>இந்தியாவில் அம்பேத்கருக்கு;</p><p>தமிழ்நாட்டில் உனக்கு</p> <p>பொன்னடிகளுக்குப் </p><p>புகழ் வணக்கம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever#comments</comments><guid isPermaLink="false">1a3df343-9dba-453e-9171-a1ab64d8cc8e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:36:10.848Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna -  Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p> <p>கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p> <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.</p><p>வாழ்க அண்ணாவின் புகழ்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">19bf33ce-fb4a-410f-8e13-5110265c3977</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:23:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:23:55.157Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Terminus,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று காலை 6 மணி முதல் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</strong></em> </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக வரக்கூடிய பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்கிறதா மேலும் பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார் வருகிறதா என்று இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். </p><p>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடன் போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகரப் பேருந்து அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>ஆய்வு கூட்டம்</strong></h2><p>நேற்றைய தினம் இதே <a href="https://www.maalaimalar.com/topic/கிளாம்பாக்கம்-பேருந்து-நிலையம்">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்</a> வரப்போகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்திற்கு போக்குவரத்துச் செயலாளர் நிர்மல்ராஜ் தாம்பரம் மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations#comments</comments><guid isPermaLink="false">9cb8f4d9-bd41-4d5f-8a0a-34fc565d826e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:03:23.545Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.<br><br>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம்… <a href="https://t.co/NGE7IDb6lU">pic.twitter.com/NGE7IDb6lU</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2099683993079943306?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute#comments</comments><guid isPermaLink="false">2dc05e0c-4697-46b7-9e8b-42ab2722ddeb</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:19:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:19:11.420Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Perarignar Anna,முக ஸ்டாலின்,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case">திமுக</a> தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!</p> <p>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p><p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!<br><br>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!<br><br>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் -… <a href="https://t.co/G35C7yx7j8">pic.twitter.com/G35C7yx7j8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2099668270509125809?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:31:31.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet">முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...</a></p><p>*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate">ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!...</a></p><p>*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்... </a></p><p>* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். </p><p>* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!... </a></p><p>*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother">22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!... </a></p><p>*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.</p><p>*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan"><br></a>*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead">மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</a><br></p><p>*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்... </a></p><p>*பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>* கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed">ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்</a><br><br>*41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p><p>*இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe">பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம் </a><br></p><p>*அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.</p><p>* இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission">ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3ஆம் அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி!</a><br><br>*இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல.</p><p>*திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/cm-vijay-attracts-rs-12300-crore-investments-in-london" rel="nofollow">லண்டனில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* முதலமைச்சராக விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.</p><p>*  இங்கிலாந்து நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland">நாகலாந்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு...</a> </p><p>நாகலாந்தில் விஷ கள்ளச்சாரயம் அருந்தியதால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர்.. மின்வெட்டை சரிசெய்யாதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி. </a></p><p>அமைச்சர் செங்கோட்டையின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டுருந்த போது மின்வெட்டு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">c94b388a-9311-4610-a279-ac26cce88214</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:36:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:36:06.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneerselvam,ஓபிஎஸ்,OPS,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/aiadmk">அ.தி.மு.க.</a> ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதலமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். </p><p>அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/ops">ஓ. பன்னீர்செல்வம்</a> தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2>திடீர் பாதுகாப்பு குறைப்பு:</h2><p>முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது.</p><p>அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு ஆகும்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர்.</p><p>முன்னதாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">62b534a7-0abf-4e9b-9ddd-93f27a9d2926</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:19:37.588Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Ajith,லண்டன்,london,அஜித்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNCM Vijay-Actor Ajith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><h2>அஜித் கார் பந்தயம்</h2><p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார்.</p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><h2>பரிசுகள் பரிமாற்றம்</h2><p>இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார்.</p><h2>வீடியோ வெளியிட்ட விஜய்</h2><p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><p>நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.</p><p>அந்த வீடியோவில், விஜயும்- அஜித்தும் ஆரத்தழுவியது முதல், சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜயை அமரவைத்து நடிகர் அஜித்குமார் காரை ஓட்டியுள்ளது வரை இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வீடியோவை கண்டு, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">7ddfac11-3358-4191-a966-d9f28dde0ba4</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:28:25.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,oil wells,எண்ணெய் கிணறுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பக்கத்தில்;</p><p>வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி  அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன்  நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. </p><p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலைக் கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும்  அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில்  எண்ணெய்க் கிணறுகளும், எரிவாயுக் கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டன. </p><p>பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம்  ஓ.என்.ஜி.சி  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில்  இந்த எண்ணெய்க் கிணறுகளை பராமரித்து வந்தது.  </p><p>2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய்க் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. </p><p>அந்த எண்ணெய்க் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.</p><h2>மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுசூழல் பாதிப்பு</h2><p>வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்;  ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  எண்ணெய்க் கிணறுகளால்  கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. </p><p>இப்போது கூடுதலாக எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது</h2><p>ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்  மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. </p><p>அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன.</p><p>இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி,  அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய்க் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.</p><p>ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட,  எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி  கட்டாயம் ஆகும்.</p><p>இந்த அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கக் கூடாது.</p><p>இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம்  சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி விண்ணப்பித்தது. </p><p>அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை.  அதே அணுகுமுறையைத் தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>