<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 10:39:30 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது- 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:27:34.677Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! </p><p>உதயநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்</p><p>இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் </p><p>விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்</p><p>உதயநிதி கைதுக்கு எதிரான மனு- உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது</p><p>விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல்நிலையத்தில் மதிய உணவுக்காக உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். </p><p>கைது செய்யப்பட்டவருக்கு வெளி உணவை கொடுக்கக்கூடாது- காவல்துறை</p><h3>உதயநிதி பேச்சு: நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல- திருமாவளவன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்- திவ்யா சத்யராஜ்</p><p>பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தவறு- கம்யூனிஸ்டுகள்</p><p>பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி சட்டசபைக்குள் வர தகுதியில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்- சிபிஎம்</p><p>ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு எதற்கு? உதயநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்- கிருஷ்ணசாமி</p><p>காவல்துறைக்கு என்ன புகார் வந்திருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்</p><h3>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! சட்டம் தன் கடமையை செய்யும்! - அமைச்சர் ராஜ்மோகன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தாமதம்</p><h3>உதயநிதி பேச்சுக்கும், கைதுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய <br>திரு. <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a> அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது<br><br>திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக…</p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2084544938986148016?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனாம்பேட்டை சிக்னலில் திமுகவினர் போராட்டம்</p><p>புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது- நெல்லை முபாரக்</p><p>தஞ்சையில் காலணிகளை வீசி தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.<br><br>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத்…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2084526048126054735?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p><strong>உதயநிதி ஸ்டாலின் கைது..நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள்</strong></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி ஸ்டாலின் கைது- த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பு</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I wholeheartedly welcome the arrest of Udayanidhi Stalin today. It is definitely a bold step by the Tamil Nadu police and the <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a>  and I hope this arrest would be lesson to others who is not bothered about the dignity of women.  Now it is for the courts to…</p>&mdash; Narayanan Thirupathy (@narayanantbjp) <a href="https://x.com/narayanantbjp/status/2084521915126091843?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சியினர் மீது த.வெ.க. அரசு அடக்குமுறை செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை- கே.பி.முனுசாமி</p><h3>சட்டம் தனது கடமையைச் செய்யும்- ஜி.கே.வாசன்</h3><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.</p><p>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.</p><p>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.<br><br>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.<br><br>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.<br><br>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.<br>சட்டம் தனது கடமையைச் செய்யும்.</p>&mdash; G.K.Vasan (@GK__Vasan) <a href="https://x.com/GK__Vasan/status/2084531754493174137?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைது - தூத்துக்குடியில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் </p><p> நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது  ஜனநாயக விரோத செயல் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி</p><p>உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தி.மு.க. நிர்வாகிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்- திமுக</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்</p><p>சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் -கனிமொழி</p><p>உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்</p><p>உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி</p><p>ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது</p><p>அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்</p><p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin#comments</comments><guid isPermaLink="false">389a5892-6935-487c-927f-f77a46e38258</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:22:23.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்சனையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சனையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதியை</a> மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமினில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போராடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!</p><p>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them#comments</comments><guid isPermaLink="false">511dfbf6-0670-411b-a1f4-837eb2899425</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:09:40.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21&amp;ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500&amp;க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai#comments</comments><guid isPermaLink="false">9cf7defd-926c-4de9-9848-01a3403bb02a</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:48:40.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஸ்ரீலங்காவின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</strong></h2><p>இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>6 மற்றும் 7-ந்தேதிகளில்  தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை முதல் 7-ந்தேதி வரை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">365191ab-dbba-4f54-9415-7bf0e5f788b8</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:27:41.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,சென்னை ஐகோர்ட்,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court - Udhayanidhi Stalin ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி</a> ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <h2>சென்னை உயர்நீதிமன்றம்</h2><p>இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு  சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை தொடங்கியது.</p><p>அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.</p> <p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது எதிரொலி - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">df6b9f60-76a8-4ee1-9cfe-4997af60ad2b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:47:52 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:47:52.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் விரைந்து வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  உள்ளிட்ட மூத்த  நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</p> <p>அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளனர். இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பயந்து செய்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சி தலைவரை அச்சுறுத்த முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections#comments</comments><guid isPermaLink="false">62ff126f-f8ba-413f-a581-0d6e93cf0846</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:29:44.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இந்நிலையில், தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>* பி.என்.எஸ். பிரிவு 196 - சமூகங்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள்.</p><p>* பிரிவு 192 - கலவரம் அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதல்.</p><p>* பிரிவு 352 - அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் அல்லது தூண்டுதல்.</p><p>* பிரிவு 79 - பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கிலான சொல், சைகை அல்லது செயல்.</p><p>* பிரிவு 296(பி) - ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகள்/வெளிப்பாடுகளைப் பொதுவெளியில் பயன்படுத்துதல்.</p> <p>* பிரிவு 61 - குற்றம் செய்யத் தூண்டுதல் அல்லது உடந்தையாக இருப்பது.</p><p>* பிரிவு 351(2) - குற்றவியல் மிரட்டல்.</p><p>* பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் - பிரிவு 4 - பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான குற்றம்.</p><p>* ஐ.டி. ஆக்ட் - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6677e33f-1a68-43a0-85e5-cda25052c637</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:08:19.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami, Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h2><p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைதுசெய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை வரவேற்புக்குரியது..!-பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud#comments</comments><guid isPermaLink="false">03b58188-a3eb-4362-9cd8-9e517b2c9e73</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:23:22.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Udhayanidhi Stalin,Narayanan,நாராயணன்,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-Narayanan BJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாராட்டுப் பதிவு:</strong></h2><p>இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள நாராயணன், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை "வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது" எனப் புகழ்ந்துள்ளார். தைரியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்துக் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதைத் தடுக்கும் அரணாக அமையும்.</p><h2><strong>பேச்சுரிமையா? பெண்களின் கண்ணியமா?:</strong></h2><p>பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அரசியல் அந்தஸ்தை வைத்து யாரும் சட்டத்திற்கு மேல் தப்பித்துவிட முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சித்தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? - திமுக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">0fde85db-e84f-4d0a-8e46-31db22a07727</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:22:23.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது என்று திமுக தெரிவித்துள்ளது.</strong></em></p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>த.வெ.க அரசு</h2><p>காவிரி பிரச்சனைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest">உதயநிதி</a> முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.</p> <h2>ஆபாச எதிர்ப்பு போராளி</h2><p>எதிர்க்கட்சித்தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சனை குறித்து பேசியதை, ’ஆபாசமாகப் பேசினார்’, ’இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?</p><p>’வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க – இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?</p><p>இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க. மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.</p> <h2>பாஜக அரசு</h2><p>‘மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.</p><p>நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!</p> <p>‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க. அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறது.</p><h2>காவிரி பிரச்சனை</h2><p>அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சனையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?</p> <p>நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!</p><p>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.</p> <p>எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.</p><p>பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சட்டமன்றத்தில் பங்கேற்பதை தடுக்கவே கைது&apos;-உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி சீற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest#comments</comments><guid isPermaLink="false">d5f520db-efdb-4267-803d-e6415b969cef</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:00:10.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி எம்பி,MP Kanimozhi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, "நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>பழிவாங்கும் நடவடிக்கை எனில் வழக்கு தொடரட்டும்:</strong></h2><p>கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது அரசிற்கு தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அவர் மீது வழக்கு தொடரட்டும். நீதிமன்றம் அது குறித்துத் தீர்ப்பு வழங்கட்டும்."</p><h2><strong>அடக்குமுறை அரசியல்:</strong></h2><p>திமுகவை ஓர் எதிர்க்கட்சியாக நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அரசு இது போன்ற அடக்குமுறைக் கையாடல்களில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.</p><h2><strong>அச்சத்தின் வெளிப்பாடு:</strong></h2><p>நாளை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சியின் வெளிப்படையான பயத்தையும் கோழைத்தனத்தையுமே காட்டுகிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது: ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வாய்ப்பூட்டு சட்டத்திற்கு இணையான நடவடிக்கை - பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">dd095868-bf01-4be5-8f45-af12bf3dcf28</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:59:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:59:05.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>தே.மு.தி.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>எதிர்க்கட்சித் தலைவராக உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy">உதயநிதி ஸ்டாலின்</a> பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. </p> <p>கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும். </p><p>ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. </p> <p>அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.</p> <h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். </p><p>எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics#comments</comments><guid isPermaLink="false">52568da0-3987-4643-971f-f0e4921e946b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:41:47.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,trisha,திரிஷா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மேகதாது அணை</h2><p>மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி ஸ்டாலின்</a> அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.</p> <p>அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபுறம் உதயநிதி கைது.. மறுபுறம் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி!-பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3b9ca7a6-09c8-487b-84af-b6c8e99c90b4</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:32:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,senthil balaji,செந்தில்பாலாஜி,தமிழ்நாடு,Udhayanidhi arrested,உதயநிதி கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi arrested ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் முக்கிய நிகழ்வுகளால் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில், மறுபுறம் நிபந்தனை ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தனது சகோதரருடன் வருகை தந்தார்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை:</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில் எழுந்த சர்ச்சை புகாரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.</p><p>அவரது வீட்டு வாசலில் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், காவல்துறை அவரைக் கைது செய்து வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்:</strong></h2><p>இந்த பரபரப்பான நிகழ்வுகள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, வழக்கின் நிபந்தனை ஜாமீன் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சகோதரர் அசோக்குமாருடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். </p><p>வழக்கு நிபந்தனைகளின்படி, தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே அவர் அங்கு வருகை புரிந்தார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து பதிவேட்டில் தங்களது கையொப்பத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர்.</p><h2><strong>அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு:</strong></h2><p>திமுகவின் முக்கிய தலைவர்கள் மீதான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் காவல் நிலைய ஆஜர் நிகழ்வுகள், தமிழக அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் ஒரே நேரத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் -  உதயநிதி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy#comments</comments><guid isPermaLink="false">48b2b7f0-f3bf-4bd1-b2fe-0b4dc74e25e7</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:17:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:17:30.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்படுகிறார். </p> <p>போலீசார் கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது உதயநிதி கூறியதாவது:</p><p>* என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.</p><p>* திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.</p><p>* பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p> <p>* விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது.</p><p>* திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான்.</p><p>* நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்குகிறேன். சட்டப்படி சந்திப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament#comments</comments><guid isPermaLink="false">ecc0dc87-02dc-412b-801a-ab575ef3b792</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:03:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:03:37.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,tvk,trisha,நடிகை திரிஷா,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  DMK MPs-Parliament ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான 'உதயநிதி ஸ்டாலின்' காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்' திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் தவெக அரசை விமர்சித்து அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீலாங்கரையில் வைத்து உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.</p><h2><strong>உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறியதாகக் குற்றச்சாட்டு:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு முன்பாக, "காலை 12 மணி வரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன முழக்கம்:</strong></h2><p>இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். தொடர்ந்து, "கைது செய்யாதே! கைது செய்யாதே!""எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!" என முழக்கங்களை எழுப்பித் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். </p><h2><strong>தமிழகம் முழுவதும் போராட்டம்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுவதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியலிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சை பேச்சு - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">fd51c769-b350-4e6a-b94b-1433ceef9bb7</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:49:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:49:48.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.</strong></em></p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.</p><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் எனவும் காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியை கைது செய்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நண்பகல் 12 மணி வரை கைது செய்ய வேண்டாம் என ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்திய நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest#comments</comments><guid isPermaLink="false">9be2939f-f3cf-460f-bfda-890da3365155</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:29:09.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் 6 பிரிவில் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</strong></em></p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது  6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் என காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p>  ]]></content:encoded></item><item><title>&quot;சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்&quot; - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e5edf0c7-d9e9-441e-ae96-6fa2a7296288</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:19:02.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin and Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சர்ச்சை பேச்சு:</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உதயநிதி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ், சேப்பாக்கம் தொகுதி MLA உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>எக்ஸ் பதிவு:</h2><p>இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! <br><br>உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2084363049625162222?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai#comments</comments><guid isPermaLink="false">5dd87837-ad51-48b3-9ae3-52c1e55e3108</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:43:46.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீசார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/la49wpeg/udhayani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</aside><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில், த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமார் வருகை தந்தார். அப்போது அவர், உதயநிதி கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். அதற்கு  முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  உதயநிதி ஒத்துழைப்பு தருவார் என்று கூறியதுடன் அவரது வழக்கறிஞர் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று தெரிவித்தார். </p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வருகை தந்துள்ளார்.  இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>திரிஷா குறித்து விமர்சனம் - உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தவெகவினருக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/criticism-of-cm-vijay-tvk-protest-condemning-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">458814c5-1fb2-461c-a539-f772a41206e4</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:36:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T04:36:50.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bussy Anand - Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/r1m33cry/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய் குறித்து விமர்சனம் செய்ததற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சை மாவட்டம் பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அப்போது அவர், நடிகை திரிஷா பற்றி அவதூறாக சில விஷயங்களை பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு தவெக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet">புஸ்ஸி ஆனந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.</p> <p>அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.</p><p>Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.</p> <p>அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?.</p><p>அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை?. </p><p>மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த தவெக அழைப்பு விடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal#comments</comments><guid isPermaLink="false">6690ffa7-7b23-46f1-8eb3-a69986deac37</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:49:00.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hogenakkal,Kabini Dam,கபினி அணை,காவிரி நீர்,Cauvery water,ஒகேனக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளேகால் வந்தடைந்தது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yjfvypld/kabinidam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.</strong></em></p><h2>காவிரி நீர்</h2><p>கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">கபினி அணை</a>யும் ஏறக்குறைய நிரம்பி விட்டது என்றே சொல்லலாம். நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282.59 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும்.</p> <p>நேற்று காலை நிலவரப்படி அணையில் 18.61 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 746 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight">காவிரியில்</a> திறக்கப்பட்டு உள்ளது. அதாவது 3-வது நாளாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் நேற்று கொள்ளேகால் வந்தடைந்தது. அங்கிருந்து கரைபுரண்டு ஓடி வந்த தண்ணீர் இன்று அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon#comments</comments><guid isPermaLink="false">e13cd54a-bcfb-4ae3-a1b3-1fd829699eaa</guid><pubDate>Tue, 04 Aug 2026 03:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-04T03:44:46.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை தேர்தல்,TN Assembly election</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bgbq325g/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.</aside><h2><strong>பா.ஜ.க. தோல்வி</strong></h2><p>சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/பாஜக">பா.ஜ.க.</a> ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற இடங்களில் கடும் தோல்வியை சந்தித்தது. வாக்கு சதவீதமும் 3 சதவீதத்திற்கு கீழ் வந்தது. இது பா.ஜ.க. தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதைத்தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, மத்திய பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பினர். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>இதற்கிடையே, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையும் கட்சியில் இருந்து விலகி, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில துணைத்தலைவராக இருந்த கரு.நாகராஜன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறினர்.</p><h2><strong>தலைவர் பட்டியலில் யார், யார்?</strong></h2><p>இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தவும், இளைஞர்களை ஈர்க்கவும் கட்சியில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் விரைவில் புதிய தலைவரை நியமிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் மாநில தலைவராக பதவியேற்றிருந்தார். அவரது தலைமையில் ஒரே ஒரு தேர்தலை மட்டும் சந்தித்த நிலையில் இந்த மாற்றம் நிகழ இருக்கிறது.</p><p>புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. புதிய தலைவர் பட்டியலில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, சரத்குமார், மாநிலச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், வினோஜ் பி.செல்வம் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>மேலும், மத்திய மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமனையும் தமிழக அரசியலுக்கு கொண்டு வரலாமா? என்பது குறித்தும் மத்திய பா.ஜ.க. தலைமை யோசித்து வருகிறது. விரைவில் தமிழக பா.ஜ.க. புதிய தலைவர்</p><p>யார்? என்பது தெரிந்து விடும். </p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-night-time-electric-trains-between-chennai-beach-and-tambaram-cancelled#comments</comments><guid isPermaLink="false">3773c46c-a8d7-4c91-8ccb-ed7f7577efe3</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:56:09.340Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Electric Trains,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/iy0spvjw/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</aside><h2><strong>நடைமேம்பால பணி</strong></h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக, நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணி காரணமாக, வருகிற 5-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையில் 9 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டும், 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர மாற்றம் செய்யப்பட்டும் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 30-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த பணியின்போது மின்சார ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.</p><h2><strong>மின்சார ரெயில் சேவைகள் ரத்து</strong></h2><p>இதனைதொடர்ந்து, 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்கள்-ரத்து">மின்சார ரெயில் </a>வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரெயில் சேவை நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வருகிற 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் நடைபெற உள்ளது. இதனால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்படும் மின்சார ரெயில் சேவைகளின் விவரங்கள் வருமாறு:-</p><h2><strong>வாரநாட்களில்...</strong></h2><p>*சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><h2><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></h2><p>இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* மேலும், சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9308bd0d-1d99-4bfb-82cb-a6ca58413490</guid><pubDate>Tue, 04 Aug 2026 02:51:04 +0000</pubDate><atom:updated>2026-08-04T02:51:04.627Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay -  Marie Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dwyogk3f/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. </strong></em></p><h2>த.வெ.க. அரசின் பட்ஜெட்</h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">த.வெ.க. அரசின்</a> முதல் பட்ஜெட், சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார்.</p> <h2>நிதி அமைச்சர் மரிய வில்சன்</h2><p>அதன்படி சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது 2026-2027-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார்.</p><h2>எத்தனை நாள் நடைபெறும்?</h2><p>நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள், அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.</p> <p>பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதங்கள் 10-ந் தேதி தொடங்கும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கலாம் என்றும் தெரிகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>த.வெ.க. அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால், அனைத்துத்துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">விஜய்</a> ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <h2>மகளிர் திட்டம்</h2><p>த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளான ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் 60 வயது வரை ரூ.2,500 என்ற மதிப்புமிகு மகளிர் திட்டம், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர், வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்டவற்றில் எவையெல்லாம் இந்த பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது? என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.</p> <h2>மேகதாது அணை பிரச்சனை</h2><p>அதே நேரம் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை, மின்வெட்டு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் என பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>மேலும், முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள், அரசினர் தீர்மானங்கள், அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள் போன்றவற்றையும் இந்த கூட்டத்தொடரில் எதிர்பார்க்கலாம். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் தனது கையை வீசி செய்கை செய்ததில் எந்த தவறும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ள நிலையில், அதுவும் இந்த தொடரில் எதிரொலிக்கலாம் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T16:29:20.774Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history">காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* காவிரி விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. </p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajmohan-accuses-false-propaganda-keerthana" rel="nofollow">அமைச்சர் கீர்த்தனா மீது திட்டமிட்டு, வன்மத்தோடு பொய் பரப்புரை..!- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு</a></p><p>*  நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனைவரின் வழக்குகளை முதல்வர் விஜய் ரத்து செய்திருக்கிறார்.</p><p>* ஒரு இளம் அமைச்சர் அவருடைய சாதனைகளை திட்டமிட்டு சிறுமைப்படுத்த முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-entire-joker-team-sits-in-cabinet">மொத்த ஜோக்கர் கூட்டமும் அமைச்சரவையில் உள்ளது - உதயநிதி </a></p><p>* கர்நாடகா செல்வதாக நாடகம் ஒன்றை ஆடினார் முதலமைச்சர் விஜய்.</p><p>* ரீல்ஸ் போடும் ஒரு அரசை இந்தியாவே இதுவரை கண்டது இல்லை.</p> <p>​​<a href="https://www.maalaimalar.com/news/national/thiruparankundram-deepam-case-supreme-court-ask-question-tn-govt">திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி</a></p><p>* ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்பரங்குன்றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்தது.</p><p>* ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-of-parliament-both-houses-adjourned-amid-continued-uproar" rel="nofollow">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>* எதிர்க்கட்சி உறுப்பினர்ள் முழக்கமிட்டனர்.</p><p>* இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-remembered-as-defender-of-tamil-motherland">மாவீரர் தீரன் சின்னமலை 'அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர்' என உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!</a></p><p>* அன்னைத்தமிழ் மண் காத்த மாவீரர் தீரன் சின்னமலை  </p><p>* 221வது நினைவுநாள் தமிழகமெங்கும் மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parle-launches-melody-tiramisu-to-celebrate-india-italy-friendship">இந்தியா - இத்தாலி நட்புறவை கொண்டாட பார்லேயின் புதிய 'மெலோடி டிராமிசு' அறிமுகம்!</a></p><p>* பார்லே மெலோடி டிராமிசு இந்தியா-இத்தாலி நட்பை கொண்டாடுகிறது.</p><p>* மோடி+மெலோனி மீம்ஸ் உண்மை சாக்லேட்டாக மாறியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/purnia-bypoll-prashant-kishor-leads-bjp-candidate-in-early-counting-rounds">பங்கிபூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க-வை முந்தி பிரசாந்த் கிஷோர் அதிரடி முன்னிலை!</a></p><p>* பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் 1,145 வாக்குகள் முன்னிலை  </p><p>* 4-வது சுற்றில் ஜன சுராஜ் 6,269 வாக்குகள் பெற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/vinesh-phogat-on-brijbhushan-singh-acquittal-we-will-appeal" rel="nofollow">பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்பு: மேல்முறையீடு செய்வோம்..!- வினேஷ் போகத்</a></p><p>* வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல்  துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issue-tn-government-files-case-in-supreme-court">காவிரி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு</a></p><p>* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.</p><p>* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended">பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்</a></p><p>* திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>* முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wi-vs-pak-2nd-tes-port-of-spain-west-indies-1st-day-stumps-239-for-5">பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் நாளில் 239/5</a></p><p>* ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன்கள் உடனும், ராஸ்டன் சேஸ் 36 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.</p><p>* பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அலி 17 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/american-education-row-will-you-show-your-degree-certificate-cjp-founder-abhijit-dipke-questions-pm-modi">அமெரிக்க கல்வி சர்ச்சை: உங்கள் டிகிரி சர்டிபிக்கேட்டை காட்டத் தயாரா?-பிரதமர் மோடிக்கு CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கேள்வி... </a></p><p>*பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் நான் பெற்ற கல்விக்கடன் மூலமே எனது கல்வி செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டன. </p><p>*CJP கட்சியின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் போராட்டங்களுக்கான நிதியை, முழு வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களிடமிருந்தே திரட்டத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu" rel="nofollow">ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</a></p><p>* தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.</p><p>* விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-cabinet-expansion-20-new-ministers-take-oath-today-gs-patil-elected-speaker">கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு-சபாநாயகராக ஜி.எஸ்.பாட்டீல் தேர்வு!... </a></p><p>*தற்போது, ​​கர்நாடகாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 34 அமைச்சர்களுக்கு எதிராக, முதலமைச்சர் உட்பட 14 அமைச்சர்களே உள்ளனர்.</p><p>*அமைச்சர் வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாலை 4.05 மணிக்கு நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/lsg-captaincy-buzz-aiden-markram-plays-down">லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் குறித்த கேள்விக்கு மார்கிராம் அளித்த பதில்..!</a></p><p>* அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம்.</p><p>* அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-continues-in-ranchi-swiggy-zomato-orders-show-support">ராஞ்சியில் தொடரும் மாணவர்கள் போராட்டம்: 'ஸ்விகி,சொமேட்டோ' மூலம் உணவளித்து ஆதரவு!... </a></p><p>*ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் கடந்த பல நாட்களாகத் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>*மெக்டொனால்ட்ஸ் உணவு பொட்டலங்கள் முதல் சூடான இந்திய உணவுகள் வரை தினமும் நூற்றுக்கணக்கான டெலிவரி முகவர்கள் மைதானத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram">ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p>* செயிண்ட் கோபைன், ரெனால்ட்-நிசான், டெய்ம்லர் நிறுவனங்களை பார்வையிட்டார்  </p><p>* ஆயிரக்கணக்கானோர் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc">பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!... </a></p><p>*தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>*இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/karntaka-cabinet-congress-mla-yashavantaraya-gouda-patil-resigns">டி.கே. சிவக்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எம்.எல்.ஏ. ராஜினாமா</a></p><p>* 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது.</p><p>* ஆனால் அரசு அமைக்கப்பட்டபோது, ​​இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-us-war-tensions-hormuz-strait-deal-trump-claims-iran-denies">ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!... </a></p><p>*டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். </p><p>*அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt">ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</a></p><p>* அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. </p><p>* இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-recalls-losing-minister-post-urges-patience-amid-karnataka-cabinet-expansion-anger">எனக்கும் ஒருமுறை அமைச்சர் பதவி கை நழுவியது!-அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் சமாதானம்!... </a></p><p>*டி.கே.சிவகுமார், "அனைவருக்கும் ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க முடியாது, பொறுமை காக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>*அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கடும் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/subhadeep-ghosh-replaces-t-dilip-as-india-men-fielding-coach">இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பீல்டிங் கோச்: யார் அவர்?</a></p><p>* இந்திய மகளிர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்தியா ஏ (India A) அணியுடனும் பணியாற்றியுள்ளார் மற்றும் அசாம் மாநிலத்தின் சீனியர் ஆண்கள் அணிக்கும் பயிற்சியளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-complete-ban-must-be-imposed-on-the-construction-of-a-dam-at-mekedatu-tamil-nadu-government-files-a-new-petition-in-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">a8b62a42-1079-4780-99da-9027714eea23</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:54:01 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:54:01.227Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,mekedatu dam,மேகதாது அணை,Government of Tamil Nadu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாதுவில் அணைக்கட்ட முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் -  தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4aqiab9n/New-Project-2026-08-03T212330.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற்றுத்தரக் கோரி, தமிழ்நாடு அரசு இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன்படி காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்றும், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, அதற்கு முற்றிலும் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது புதிய மனுவில் வலியுறுத்தியுள்ளது.</p><p>மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.</p><p>இதனை கருத்தில்கொண்டே கர்நாடக அரசின் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால் அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடகா முரண்டு பிடித்துவருகிறது. </p><p>சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த சில பதில்கள் தமிழ்நாட்டிற்கு சாதகமற்று இருந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு புதிய மனுக்களை தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-vengaivayal-like-incident-human-excreta-found-in-a-school-drinking-water-tank-in-vedasandur#comments</comments><guid isPermaLink="false">e60721ba-7eb3-4b31-8fdc-e76dae3e0b8f</guid><pubDate>Mon, 03 Aug 2026 15:13:33 +0000</pubDate><atom:updated>2026-08-03T15:13:33.443Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வேங்கைவயல் வழக்கு,வேடசந்தூர்,Vedasandur,Vengaivayal case</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/4e8s1389/New-Project-2026-08-03T204311.407.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில் உள்ள தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. </p><p>இந்நிலையில் இன்று மாணவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து தொட்டியின் உள்ளே பார்த்தப்போது தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. மேலும் அதில் ஒரு எச்சரிக்கை குறிப்பும் இருந்துள்ளது.</p><p>இதனைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக ஆசியர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வடமதுரை போலீசார் வந்து சம்பவ இடத்தில் பார்வையிட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமாரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். </p><p>இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வேங்கைவயலில் இதேபோல அரங்கேறிய சம்பவத்திலேயே இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாதநிலையில், மீண்டும் அதேபோன்ற கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. </p><h2>வேங்கைவயல் வழக்கு </h2><p>புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பவர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. </p><p>இந்த வழக்கில் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.</p><p>விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளித்து நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஆனால் தற்போதுவரை வரை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. </p>]]></content:encoded></item><item><title>ராயலசீமா ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளம்: சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் இன்று வரலாறு- ஆந்திரா அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rayalaseema-writes-new-story-under-naidu-leadership-andhra-govt#comments</comments><guid isPermaLink="false">910ded4b-cd01-4b89-b390-4efa095a23eb</guid><pubDate>Mon, 03 Aug 2026 14:43:12 +0000</pubDate><atom:updated>2026-08-03T14:43:12.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,ஆந்திர பிரதேசம்,Nara Lokesh,நாரா லோகேஷ்,ChandraBabu Naidu,சந்திரபாபு நாயுடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சந்திரபாபு நாயுடு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/vjy0mj3p/Chandrababunaidu0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒரு காலத்தில் வறட்சியின் அடையாளமாக அறியப்பட்ட ராயலசீமா பகுதி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சிகளின் மூலமும் ஒரு புதிய வரலாற்றை எழுதி வருகிறது என்று ஆந்திரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.</p><p>வறட்சி மற்றும் குறைந்த வாய்ப்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த ராயலசீமா, இப்போது புதிய வரலாற்றை எழுதி வருகிறது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷின் முதலீட்டாளர் ஈர்ப்பு முயற்சிகள் இதற்குப் பின்னணியாக உள்ளன.</p><h2>ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள்</h2><p>அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 4.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது மூன்று லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலான 200 திட்டங்களை உள்ளடக்கியது.</p><p>இருப்பினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், மின்னணுவியல் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி, பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறை, சிமெண்ட் மற்றும் தோட்டக்கலை ஆகிய துறைகளில் வரவிருக்கும் திட்டங்களால் உண்மையான முதலீட்டு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.</p><h2>சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடம்</h2><p>சென்னை- பெங்களூரு மற்றும் பெங்களூரு- ஐதராபாத் ஆகிய இரண்டு முக்கிய தொழில் வழித்தடங்களின் சந்திப்பில் ராயலசீமா அமைந்துள்ளதால், அதற்கு ஒரு முக்கிய மூலோபாய அனுகூலம் கிடைத்துள்ளது.</p><p>புவியியல் அமைப்பைப் போலவே கொள்கை முடிவுகள், விரைவான அனுமதி நடைமுறைகள் மற்றும் பெரிய அளவிலான நில இருப்பு ஆகியவையும் இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. மாநிலத்தின் மொத்த தொழில் பயன்பாட்டு நிலத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை ராயலசீமா பகுதியிலேயே அமைந்துள்ளன.</p><p>மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் சரக்கு போக்குவரத்து (லாஜிஸ்டிக்ஸ்) ஆகிய துறைகளுக்கான பிரத்யேகக் கொள்கைகளும் இதற்குப் பெரிதும் உதவுகின்றன.</p><p>மூலதன மானியங்கள், முத்திரைத் தாள் கட்டண விலக்குகள், மாநில ஜிஎஸ்டி (SGST) திரும்பப் பெறுதல் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் ஆகியவை இம்மாநிலம் வழங்கும் பிற ஈர்ப்புகளாகும்.</p><p>ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில், மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானம் (AMCA) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரால் அது தொடங்கி வைக்கப்பட்டது. வெறும் 38 நாட்களில், இத்திட்டம் ஒப்புதல் கட்டத்திலிருந்து அடிக்கல் நாட்டு விழா வரை முன்னேறியுள்ளது.</p><h2>சிமெண்ட் நிறுவனங்கள் உற்பத்தித் திறன்</h2><p>அல்ட்ராடெக், இந்தியா சிமெண்ட்ஸ், ராம்கோ மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ போன்ற சிமெண்ட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளன. இப்பகுதியின் அனந்தபுரத்தில் முதன்முறையாக பேரீச்சை போன்ற அரிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.</p><p>பாதுகாப்பு, மின்னணுவியல், மின்சார வாகன உற்பத்தி மற்றும் வேளாண் பதப்படுத்துதல் திட்டங்களுடன், ராயலசீமா தென்னிந்தியாவின் அடுத்த முக்கிய தொழில் மையமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.</p><p>வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து முதலீடுகளை ஈர்க்கும் பகுதியாகவும், மறக்கப்பட்ட இடத்திலிருந்து போர் விமானங்கள் வரையும் இடமாகவும் மாறியுள்ள ராயலசீமா, இனி பின்தங்கியிருக்கவில்லை. அதுவே முன்னணியில் உள்ளது.</p><p>இவ்வாறு ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-approval-for-bike-taxis-fine-for-violations-tn-govt-to-madras-hc#comments</comments><guid isPermaLink="false">6122e182-1437-4edd-82a2-7eb7bc0c2e9f</guid><pubDate>Mon, 03 Aug 2026 12:10:18 +0000</pubDate><atom:updated>2026-08-03T12:10:18.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,உயர்நீதிமன்றம்,High Court,Tamilnadu Government,Bike taxis,பைக் டாக்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ bike taxi
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/625rp9hw/tamil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் அரசு உரிய கொள்கை முடிவை எடுக்கும் வரை பைக் டாக்சிகளை இயக்குவதற்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறி பைக் டாக்சிகளை இயக்கினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.</p><p>மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை சாமானிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும், பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் இலக்கை அடையும் வசதியாகவும் செயல்படுகின்றன. </p><p>இருப்பினும், இதற்கென மாநில அரசு தெளிவான விதிகளை வகுக்காததால், காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர். ஆனால், பைக் டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல், ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை (Motor Vehicle Aggregator Guidelines) உடனடியாக உருவாக்க வேண்டும் என கோரப்பட்டது.</p><h2><strong>அரசு தரப்பு வாதம்:</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடுகையில், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் 'கும்டா' (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>கொள்கை முடிவு:</strong></h2><p>இந்த விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளது. கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி யாரேனும் பைக் டாக்சி இயக்கினால் தொடர்ந்து அபராதம் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்தார்.</p><h2><strong>பொதுமக்கள் விழிப்புணர்வு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அரசு விளம்பரப்படுத்தவோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தவோ கூடாது. பைக் டாக்சிகளில் பயணத்தின் போது விபத்து ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.</p><h2><strong>விரைவு முடிவு:</strong></h2><p>பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில் மத்திய அரசு சட்டப்படியும் வழிகாட்டுதலின்படியும் பைக் டாக்சிகளுக்கு அனுமதி உள்ளதாக வாதிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் கொள்கை முடிவு அறிவிப்புகளைத் தலைமை நீதிமன்றம் உற்றுநோக்கி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram#comments</comments><guid isPermaLink="false">50d2b10c-b4b8-4166-a73b-d54cbb894075</guid><pubDate>Mon, 03 Aug 2026 11:41:26 +0000</pubDate><atom:updated>2026-08-03T11:41:26.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Sriperumbudur,Renault Nissan,cm vijay,முதலமைச்சர் விஜய்,CMVijay Inspection,Oragadam SIPCOT,ஒரகடம் சிப்காட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspection ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/teuaqqeb/CM-Vijay-Inspection?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புதிய உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கவும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D"> முதலமைச்சர் ஜோசப்</a> விஜய் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிப்காட் தொழில் வளாகங்களில் நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.</p><h2><strong>செயிண்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் ஆய்வு:</strong></h2><p>ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் மாம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் பன்னாட்டு நிறுவனமான 'செயிண்ட் கோபைன்' உலகத்தரம் வாய்ந்த கண்ணாடி தயாரிப்பு வளாகத்தில் தனது முதல் ஆய்வை முதலமைச்சர் மேற்கொண்டார்.</p><p>தமிழக அரசுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த ஆலை மிகப்பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. </p><p>அங்கு தயாரிக்கப்படும் அதிநவீன கண்ணாடி உற்பத்திப் பிரிவுகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். </p><p>முதலமைச்சரின் வருகையை ஒட்டி, அப்பகுதியின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2><strong>ரெனால்ட்-நிசான் நிறுவனத்திலும் ஆய்வு:</strong></h2><p>கண்ணாடி ஆலை நிறுவன ஆய்வை முடித்து விட்டு, அதனைத் தொடர்ந்து ஒரகடம் பகுதியிலேயே அமைந்துள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட்-நிசான் தொழிற்சாலைக்கும் முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டார். </p><p>முதலமைச்சர் விஜய்க்கு அங்கிருந்த அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><h2><strong>அடுத்த இலக்கு: ஒரகடம் 'டெய்ம்லர் இந்தியா' ஆலை:</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அடுத்ததாக ஒரகடம் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைந்துள்ள 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' மற்றும் 'டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்' உற்பத்தித் தொழிற்சாலைக்கு ஆய்வுக்காக விரைந்துள்ளார்.</p><p>சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலை இந்தியாவின் மிகப்பிரம்மாண்டமான வணிக வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். </p><p>உலகப் புகழ்பெற்ற 'பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட நவீன பஸ்கள், கனரக லாரிகள் மற்றும் பஸ் சேஸ்கள் இங்கு சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.</p><p> தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அடுத்ததாகநேரில் ஆய்வு செய்ய உள்ளார்.</p><h2><strong>பயணத்தின் முக்கிய நோக்கம்:</strong></h2><p>தமிழகத்தை இந்தியாவின் முதன்மை முதலீட்டு மையமாக மாற்றுவதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். </p><p>பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தித் திறனை நேரில் மதிப்பீடு செய்வதன் மூலமும், தொழில்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் மாநிலத்தில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-do-not-want-the-posts-given-by-eps-sasikala-and-ttv-dhinakaran-must-be-inducted-into-the-party-sp-velumanis-interview#comments</comments><guid isPermaLink="false">671cefc7-e4f4-4052-b966-d6530d921be0</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:36:22 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:36:22.795Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,EPS,இபிஎஸ்,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இபிஎஸ் அளித்த பதவிகள் வேண்டாம்... சசிகலா, டிடிவி தினகரை கட்சியில் சேர்க்க வேண்டும்’ - எஸ்.பி.வேலுமணி பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/s7v9g3qo/New-Project-2026-08-03T160549.781.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவில் மோதல் வெடித்தது. இபிஎஸ்மீதான அதிருப்தியில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர், விராலிமலை விஜயபாஸ்கர்கள் என முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஒரு அணியாக திரண்டனர்.</p><p>அப்போது இவர்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் இன்னும் மோதல் முற்ற சிவி சண்முகம் உள்ளிட்டப் பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் இபிஎஸ்.</p><p>பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்டு எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சிலர் சுமூகமாக சென்றனர். அவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கினார் இபிஎஸ். ஆனால் பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பதவிமட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. </p><p>வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதனால் அப்பொறுப்புகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அறிவித்தனர்.</p><p>இதனிடையே விஜயபாஸ்கர்கள் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். மேலும் இந்த உட்கட்சி பூசல் விவகாரமும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்கவேண்டும் எனவும் இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்கமாட்டோம் என மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள். அதுபோல இபிஎஸ் முதலமைச்சர், பொதுச்செயலாளர் ஆவதற்கும் உழைத்தவர் சி.வி.சண்முகம். தொடர்ந்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை தொடரக்கூடாது. கட்சி பலப்படுத்தப்பட வேண்டும். </p><p>சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியில் இருந்து பிரிந்த அனைவரையும் மீண்டும் சேர்க்கவேண்டும். எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை அளித்தால், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறோம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு டாக்டர் வீட்டில்  40 பவுன் நகை கொள்ளை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/40-pound-jewelry-robbery-in-chengalpattu-doctor-house</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/40-pound-jewelry-robbery-in-chengalpattu-doctor-house#comments</comments><guid isPermaLink="false">d2b1c14c-3bf3-493f-9a59-cab4ec49c4d0</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:32:11 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:32:11.007Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,நகை கொள்ளை,jewelry robbery</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1pr7cjae/jewelry.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/1pr7cjae/jewelry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.  </aside><p>வேலூர், சத்துவாச்சாரி ஏரியூரை சேர்ந்தவர் முனிரத்தினம். ஐ-கோர்ட்டில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அம்பிகா (வயது 70). கணவர் இல்லாததால் தனியாக வசித்து வருகிறார். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரில் சேல்ஸ்மேனாகவும், 2-வது மகன் புருஷோத்தமன் செங்கல்பட்டில் டாக்டராக  பணியாற்றி வருகின்றனர்.  </p><p>அம்பிகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மகனை பார்ப்பதற்காக செங்கல்பட்டிற்கு சென்றுார். அன்று இரவு அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் அம்பிகாவின் வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டனர். மர்ம நபர்கள் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.  பூஜை அறையில் பையில் இருந்த 40 நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.  </p><p>நேற்று காலை அம்பிகாவின் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருக்கும் பாலாஜி என்பவர் கீழே வந்தார். வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்பிகாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.  அம்பிகா நேற்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழில் செய்வோரை முடக்குவதா?- தங்கம் தென்னரசு கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/are-officials-using-inspections-to-crack-down-on-fireworks-industry-asks-thangam-thenarasu#comments</comments><guid isPermaLink="false">5dfdd6e4-c4f9-4b14-b883-aace79585c4e</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:50 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:50.960Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,தவெக அரசு,TVK Govt,பட்டாசு தொழிற்சாலை,fire works</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/af78x2bo/Thangam-thennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசு ஆலைகள், விற்பனையகங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகள் கெடுபிடி செய்வதா? என்றும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இத்தகைய கெடுபிடிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் பொருளியல் வரைபடத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் விருதுநகர் மாவட்டத்தின் அச்சாணியாகவும். லட்சக்கணக்கான ஏழை எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்வது சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பட்டாசு உற்பத்தித் தொழிலே ஆகும். </p><p>ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.6000 கோடி அளவில் வர்த்தகம் நடக்கும் இத்தொழிலை நம்பி ஏறத்தாழ 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணி செய்கின்றனர். </p><p>நமது நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பட்டாசுத் தொழிலும், அதனை நம்பியிருக்கும் மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களும், தொழிலாளர்களும் இன்று த.வெ.க. அரசின் தேவையற்ற கெடுபிடிகளினால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.</p><p>சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீதோ அல்லது பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்து சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் மீதோ சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை யாரும் தவறு என்று சொல்லப்போவதில்லை. மனித உயிர்களின் பாதுகாப்பும். விதிமுறைகளைப் பின்பற்றுவதும் எப்போதுமே முதன்மையானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. </p><p>ஆனால், அரசின் அனைத்துச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டு. உரிய அரசுத் துறைகளிடம் நாக்பூர் உரிமம், மெட்ராஸ் உரிமம் மற்றும் பிற முறையான உரிமங்களைப் பெற்று, ஆண்டுதோறும் அவற்றை முறைப்படி புதுப்பித்துத் தொழில் நடத்திவரும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில், "அதிரடி ஆய்வு" என்ற பெயரில் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் கடும் கண்டனத்திற்குரியவை.</p><p>தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலகட்டத்தில், பட்டாசு உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கவிருக்கும் நேரத்தில், அதிகாரிகளின் இந்தத் தேவையற்ற அதிரடி சோதனைகள் தொழில்முனைவோரிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டப்பூர்வமாக வரி செலுத்தி, உரிமம் பெற்று வணிகம் செய்யும் வர்த்தகர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி, ஆய்வுகள் என்ற பெயரில் அவர்களின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்குவது எந்தவிதத்தில் நியாயம்?</p><p>இந்தத் தொழிலில் பெருமளவில் கிராமப்புறப் பெண்களும், எளிய மக்களுமே ஈடுப்பட்டுள்ள நிலையில், அரசின் தேவையற்ற கெடுபிடிகளால் தொழிற்சாலைகளும் கடைகளும் முடங்கும்போது. அதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் அன்றாட ஊதியமிழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.</p><p>சிவகாசி மாநகரத்தின் வர்த்தகச் சங்கிலி அறுந்துபோனால், அது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும், மாநிலத்தின் வர்த்தகச் சூழலையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, சட்டப்பூர்வமாக உரிமம் பெற்று இயங்கும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையகங்களில் "ஆய்வு" என்ற பெயரில் நடத்தப்படும் அச்சுறுத்தல்களையும், கெடுபிடிகளையும் இந்த த.வெ.க அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>பட்டாசுத் தொழிலை முடக்குவதற்குப் பதிலாக, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி. தொழில்முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும் பாதுகாப்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.</p><p>வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு. பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் எவ்வித அச்சமுமின்றித் தங்களது வணிகத்தைத் தொடரத் தேவையான சூழலை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.</p><p>உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களையும், விற்பனையாளர்களையும், வணிகப் பெருமக்களையும் அச்சுறுத்தும் போக்கு தொடருமானால், கழகத் தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதி பெற்று, பட்டாசுத் தொழில் உரிமையாளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கச் சிவகாசியில் மாபெரும் ஜனநாயக வழியிலான போராட்டத்தை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம்?- மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-the-trisha-welfare-association-recognized-by-the-government-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">eca776b7-d056-427a-b3f4-3d3ac76271c4</guid><pubDate>Mon, 03 Aug 2026 10:09:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T10:09:41.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trisha,திரிஷா,திரிஷா நற்பணி மன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/u5f4ui2m/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</aside><p>அரசியலாக இருந்தாலும் சரி, ஆன்மிகமாக இருந்தாலும் சரி, மதுரையில் ஒட்டப்படும் பிரமாண்ட போஸ்டர்கள் தமிழ்நாடு  முழுவதும் பேசுபொருளாக மாறுவது காலங்காலமாக நடந்து வருகிறது. </p><p>அதிலும் பல மீட்டர் அளவுக்கு இடம்பெறும் போஸ்டர்கள் அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  அந்தவகையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> தொடர்பான போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. </p><h2><strong>நற்பணி மன்றம்</strong></h2><p>தமிழ் சினிமா உலகின் பிரபல நடிகையாக வலம் வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner">திரிஷா</a> தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதேபோல் திரிஷா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். </p><p>இந்தநிலையில், மதுரையில் முதன்முறையாக திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டு ரசிகர் மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் திரிஷா அரசியலுக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>அந்த போஸ்டரில் தமிழக வீரமங்கை வேலுநாச்சியார் வழியில் தமிழக சங்க வரலாற்றில், முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவுக்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்ற வாசகத்தோடும், எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும், மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்... என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p>அந்த போஸ்டரில் வீரமங்கை வேலுநாச்சியாரின் படம் மற்றும் திரிஷா படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-inspection-to-saidapet#comments</comments><guid isPermaLink="false">d5913084-a038-4ed4-84d8-cbd360907412</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:41:41.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்சி ஆனந்த்,tvk,Minister Bussy Anand</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சைதாப்பேட்டை திடீர் நகரில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/t8eohbw6/bussyanand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவுபடி அமைச்சர் என்.ஆனந்த் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p>நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அமைச்சர் ஆனந்த் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட திடீர் நகரில் திடீரென ஆய்வு பணிகளை மேற்கொண்டார். </p><h2><strong>பொதுமக்களிடம் கலந்துரையாடல்</strong></h2><p>ஆய்வின்போது <a href="https://www.maalaimalar.com/topic/புஸ்சி-ஆனந்த்">அமைச்சர் என்.ஆனந்த்</a> பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கழிப்பிட வசதி மற்றும் வீட்டு வசதி என அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கைகள் வைத்தனர். </p><p>கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் என்.ஆனந்த் முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உடனடியாக மொபைல் கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு செய்தார். </p><p>தொடர்ந்து நிரந்தரமாக கழிப்பிட வசதி மற்றும் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றி தரப்படும் என பொதுமக்களிடம் கூறினார். தமிழக முதலமைச்சர் விஜய் எப்போதும் ஏழை மக்களின் நலனில் தீவிர அக்கறை கொண்டவர்.</p><p>உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அவர் செய்து கொடுப்பார் எனக்கு கூறினார்.</p><p>இதைக்கேட்ட பொது மக்கள் அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.  தொடர்ந்து திடீர் நகரில் உள்ள கூவம் ஆற்றில் அமைச்சர் என்.ஆனந்த் ஆய்வு செய்தார். ஆற்றின் கரையோர பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தபோது கூவம் ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து இருப்பதை கண்டார். </p><p>இதனால் மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்படுவதை அறிந்த அமைச்சர் என். ஆனந்த் ஆகாயத்தாமரை செடிகள் அனைத்தையும் உடனடியாக அகற்றி கூவம் ஆற்றை தூர் வாரவும் உத்தரவிட்டார். </p><p>தூர்வாரும் பணிகளை வருகிற மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.</p><p>ஆய்வின் போது சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தன.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் தண்ணீர் வராதது ஏமாற்றம் அளித்தது - புதுமண தம்பதி பேட்டி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-couple-says-disappointment-over-lack-of-water-in-cauvery#comments</comments><guid isPermaLink="false">04d56682-5038-48db-95de-84a2758f5d8c</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:30:37 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:30:37.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,புதுமண தம்பதி,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadi perukku festival Couple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/6xoqupdk/couple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. இது  பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய இளங்கோவன் -காவ்யா தம்பதியினர் கூறும்போது, </p><h2>ஆடிப்பெருக்கு விழா</h2><p>திருமணத்துக்கு பின் முதல் முறையாக இன்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">ஆடிப்பெருக்கு</a> விழாவை கொண்டாட வந்தோம். ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து மகிழ்வதே முதலில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் காவிரி ஆற்றில் குளிக்க முடியாதது ஏமாற்றமாகி விட்டது. </p> <h2>மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு</h2><p>தண்ணீர் வராத காரணத்தினால் நாங்கள் வீட்டிலிருந்து குளித்துவிட்டு இங்கு புறப்பட்டு வந்தோம். பின்னர் மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு செய்தோம். தண்ணீர் வராத காரணத்தினால் வழக்கமான கூட்ட த்தையும் பார்க்க முடிய வில்லை என்றனர்.</p><p>பொதுமக்கள் சிலர் கூறுகையில், <a href="https://www.maalaimalar.com/spirituality/aadi-perukku-2">ஆடிப்பெருக்கு</a> நாளன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்து புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். கரைபுரண்டு ஓடும் புதுவெள்ளத்தில் கால்களை வைத்து, காவிரித் தாயை வேண்டி, பூக்களையும் மங்களப் பொருட்களையும் ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்வதே அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இந்த ஆண்டு கண் எட்டும் தூரம் வரை வெறும் மணல் பரப்பாகவே காட்சியளிக்கிறது.</p> <h2>காவிரி வறண்டது</h2><p>பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வரும் தண்ணீரில் நீராடி வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜீவ நதியான காவிரியில் நீர்வரத்தின்றி வறண்டு கிடப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது. </p> <p>விவசாயிகள் கூறுகையில், “ஆடிப்பெருக்கு நாளன்று காவிரியில் நீர் பொங்கி வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் விவசாயம் செழித்து வளரும் என்பது எங்களின் தலைமுறை நம்பிக்கை. காவிரி அன்னைக்கு சிறப்புப் படையலிட்டு, ஆற்று நீரைக் தலையில் தெளித்து வழிபாடு செய்தால்தான் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். தற்போது ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டதால், வறண்ட மணல் பரப்பிலேயே நின்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்புகிறோம். இந்த ஆண்டு விவசாய பணிகள் எவ்வாறு அமையப் போகிறதோ என்ற கவலையும் பயமும் எங்களை ஆட்கொண்டுள்ளது என்றார். </p> <h2>புதுமண தம்பதி</h2><p>புதுமண தம்பதி வசந்த் - அம்மு கூறும்போது, தண்ணீர் இல்லையென்றாலும் மனசு இருந்தால் வருவார்கள். இயற்கையை நாடி, மனமிருந்தால் தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கும் உணவளியுங்கள். அதுவும் உயிர்கள் தானே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-person-who-played-the-role-of-a-son-of-the-soil-farmer-on-screen-is-maintaining-a-studied-silence-mk-stalins-criticism#comments</comments><guid isPermaLink="false">108460f2-4e02-4da1-8337-34004387d56b</guid><pubDate>Mon, 03 Aug 2026 09:17:52 +0000</pubDate><atom:updated>2026-08-03T09:17:52.915Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மு.க.ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg" width="1501"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர் கள்ள மௌனம் காக்கிறார்’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kthe3y7k/New-Project-2026-08-03T144712.254.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!</p><p>விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக்  ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?</p><p>முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.</p><p>மேகதாது அணையை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?</p><p>விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?</p><p>நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.</p><p>விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.</p><p>காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடி - சார்பதிவாளர், பெண் உதவி அலுவலர் பணியிடை நீக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-case-sub-registrar-and-assistant-officer-suspended#comments</comments><guid isPermaLink="false">7c8fbf05-c7cc-43d6-a5d9-7044ef3e0218</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:34:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:34:58.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,பழனி கோவில்,land scam,சிபிசிஐடி,நிலமோசடி,cbcid</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/9behzefp/New-Project-2026-07-16T205514.573.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பழனி கோவில்</h2><p>பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். </p><p>இவ்வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கடந்த 27ந் தேதி முதல் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தினந்தோறும் ஆஜராகி வருகிறார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஷஜீதா, டி.எஸ்.பி. அஜய்தங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p> <h2>சி.பி.சி.ஐ.டி. </h2><p>அதன்படி இன்று திண்டுக்கல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி. </a>அலுவலகத்தில் ஆஜராகும் ஜஸ்டின் மணிகண்டன் தனது முன்ஜாமினுக்கு பழனி நீதிமன்றத்தை அணுக உள்ளார்.</p><p>அவர் பணிபுரிந்த பழனி, கொடைக்கானல், தேனி, வடமதுரை, ஒட்டன்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு பத்திரப்பதிவு செய்யப்பட்டதா? என தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கை பத்திரப்பதிவு த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு அதன்மீதான விசாரணை நடைபெற உள்ளது.</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலவிஜய். இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.</p> <p>மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார். </p><h2>பத்திரப்பதிவு</h2><p>இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்தபோது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்.</p><p>இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.</p> <p>புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மா வாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தற்போது தேனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி இன்று திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.</p><p>ஏற்கனவே திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.</p> <p>ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை பணி செய்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் மோசடி பதிவுகள் நடத்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்துள்ளதால் ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2>பணியிடை நீக்கம்</h2><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-thandayuthapani-temple-land-scam-case-cb-cid-arrests-4">பழனி கோவில் நிலமோசடி</a> வழக்கில் மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p> <h2>பணியிடை நீக்கம்</h2><p>இந்நிலையில் பழனியில் நிரந்தரமாக பணிபுரிந்து வந்த சார்பதிவாளர் பாலசந்தர், உதவி அலுவலர் சிவசங்கரி ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பணிபுரிந்து வந்த பாலசந்தர் ஜூன் முதல் வாரத்தில்தான் பழனிக்கு மாறுதலாகி வந்துள்ளார். அவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என நிறுத்தி வைத்திருந்த ஆவணங்களை சரிபார்க்காமல் ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவு செய்துள்ளார். </p><p>ஆனால் விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு வந்த பாலசந்தர் இந்த முறைகேடு பத்திரப்பதிவை கண்காணிக்காமல் விட்டுள்ளார். அதன் காரணமாகவும் இந்த புகாரில் தகவல்களை மறைத்ததற்காக உதவி பெண் அலுவலர் சிவசங்கரியும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: முதலமைச்சர் விஜய் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து... அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-if-chief-minister-vijay-opens-his-mouth-it-spells-danger-for-many#comments</comments><guid isPermaLink="false">bf54e55c-958c-400a-896e-4297e2716d6d</guid><pubDate>Mon, 03 Aug 2026 08:11:34 +0000</pubDate><atom:updated>2026-08-03T08:11:34.257Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,Minister Senogttaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/w1lqlz0m/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">கே.ஏ. செங்கோட்டையன்</a>, ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>நிரந்தர முதலமைச்சர்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் மாண்புமிகு வெற்றி தளபதியுடைய தலைமையில் தமிழகம் சிறப்பான முறையில் எல்லா துறைகளிலும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு அயரால் உழைத்து வருகிறார்கள். அவரை பொறுத்தவரையும் விவசாயிகள் மீது வைத்திருக்கிற பேரன்பு அளப்பெரியதாக இருக்கிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்திலே தஞ்சையிலே பேசுகையில், அடுத்து எனக்கு ஒரு ஜென்மம் இருக்குமேயானால் நான் ஒரு விவசாய குடும்பத்திலே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று குறிப்பிட்டு இருக்கிறார். </p><p>அந்த அடிப்படையில் தங்களுடைய காளைகளை காங்கியம் என்று சொல்லப்படுகிற உயர்தர காளைகளை இந்த கண்காட்சிக்கு கொண்டு வந்து பரிசுகளை பெறுவதற்காக விவசாயிகள் இங்கே பெருந்திரளாக வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களுடைய சார்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பாக, இங்கே வருகை தந்திருக்கிற அனைவர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>நம்முடைய பகுதியிலே வாழுகிற மக்கள் காங்கியம் காளை, காங்கியம் கரை மாடுகள் என்று சொன்னால் உயர்தரமான காளை மாடுகள் என்பதை நாம் அறிவோம். அதே நேரத்தில் மருத்துவ குணம் பெறுவதற்கு இங்கே இருக்கிற நம் பசுவின் பாலை தான் அருந்த வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.  காங்கியம் பசுமாட்டின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர முடியும் என்பதை பல்வேறு புள்ளி விவரங்களை மருத்துவர் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். எல்லா விவசாயிகளும் எல்லா நலமும் பெற வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் இருக்கும்போது தமிழ்நாட்டிலயும் அதே மாதிரி அனைத்து கட்சிகளும் இருக்கணும். அதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டணும்னு அரசியல் கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் என்று செய்தியாளர் கூறியதற்கு, பொதுவாக எல்லோரும் ஒருங்கிணைந்து தான் அந்த பணிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதிலே கருத்து வேறுபாடுகள் இல்லை. ஒரு மாநிலத்திலே அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்று உதாரணம் காட்டி எங்களிடத்திலே கேள்வி கேட்பதை காட்டிலும் எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த தமிழ்நாட்டினுடைய நம்முடைய தமிழ் மக்களுக்காக தஞ்சைதரனிலேயே இருக்கின்ற காவிரி டெல்டா பகுதியில் வாழுகிற விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு. அந்த கனவு நிறைவேறுகிற காலம் துவங்கப்பட்டிருக்கிறது. ஆகவே அது வெற்றிக்கரமாக நடைபெற நல்ல ஒரு முதலமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் காலம் என்றைக்கும் பொற்காலமாக அமையும் என்றார். </p><p>மேலும், மேகதாது அணை விவகாரம் குறித்து முதலமைச்சர் வாய் திறக்க மாட்டேங்குறார் என்று செய்தியாளர் கூற, அவர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. ஆகவே தான் வாய் திறப்பதில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/IDZ9PqHXZNw"></iframe></figure>]]></content:encoded></item></channel></rss>