<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 06:09:03 +0000</lastBuildDate><item><title>சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி - அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister#comments</comments><guid isPermaLink="false">f4eaab3e-5bbb-429b-8de8-c61e76aa4d42</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:08:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:08:36.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,worker death,Virudhunagar accident,விருதுநகர் விபத்து,Sattur Cracker Blast,சாத்தூர் பட்டாசு ஆலை,வன்னியரசு சகோதரி,Fire cracker Factory</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sattur Cracker Blast ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர் </a>அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலையை</a> மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர்.</p><h2>தொழிலாளி பலி</h2><p>மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி வந்த இந்த ஆலையில் சிறு பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஐந்து அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (38) என்ற தொழிலாளி, வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் கலவை தயாரித்துக் கொண்டிருந்தார். </p><p>அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் மீது வழக்கு</h2><p>இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொன்னதாலும், வெடி விபத்தில் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யச் சொன்னதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.</p><h2>ஆலை மேலாளர் கைது</h2><p>இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களான சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசுவின்</a> சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியது, வெடிபொருட்களை கவன குறைவாக கையாண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை கைது செய்ததுடன் தலைமறைவான மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு தர்ணா- எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுப்பு- திமுக எம்எல்ஏக்கள் வௌிநடப்பு
- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:05:10.332Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/q5oxqzu9/Amali.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/q5oxqzu9/Amali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் முன் தர்ணா.. திமுக எம்எல்ஏ கையை பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர்  விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans#comments</comments><guid isPermaLink="false">fc49ff28-54ba-4a17-9c46-f80e955aa42c</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:46:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:46:40.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> இன்று பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது அவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும் ஊழல், முறைகேடுகள் நடந்ததாகவும் பகரிங்கமாக குற்றம்சாட்டினார். </p><h2>விஜய் பேச்சு</h2><p>"திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள். செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது</p><p>பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்." என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசினார்.</p> <h2>திமுகவினர் அமளி</h2><p>முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர்.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.</p><p>ஆனால் அவர்கள் உடனடியாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்ட்டார். இதனிடையே அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p> <h2>அனுமதி</h2><p>இதைத்தொடர்ந்து திமுகவினரின் அமளி அதிகரித்தது. சபாநாயகர் இருக்கை முன்னே சென்று திமுகவினர் கூச்சலிடத் தொடங்கினர். சில திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். </p><p>ஆனால் திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி தரமாட்டேன் என திட்டவட்டமாக கூற, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதனிடையே, தனது மேஜைக்கு அருகே சபாநாயகரை நோக்கி கீழே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்எல்ஏ ஒருவர் எழுந்துகொள்ள அவரது கையை பிடித்து முதலமைச்சர் விஜய் உதவினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly#comments</comments><guid isPermaLink="false">97b07f2c-3314-44bc-aaf9-913194ab0f25</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:45:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:45:04.446Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழ்நாடு சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். </p><p>மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன் சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தார். </p><p>இதனிடையே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். </p><p>இதை அடுத்து,  தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய்  சொல்லியுள்ளார் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர். </p><p>இதனை தொடர்ந்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.37 அடி உயர்வு - 12,000 கனஅடி திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase#comments</comments><guid isPermaLink="false">5a8bd17b-c6fb-4ccc-a98f-5ea3349ca481</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:44:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:44:00.084Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water,டெல்டா பாசனம்,Delta Irrigation,Hogenakkal Water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை குறைவால் நீர்வரத்து குறைந்தது, ஆனால் கர்நாடக மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a> நீர்மட்டம் 92.37 அடியாக உயர்ந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்வரத்து சரிவு</h2><p>கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. </p><p>இதனால் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசனத்துக்கு</a> ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>பெய்த மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. </p><p>இதற்கிடையே அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. </p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 90 அடியை தாண்டியது.</p><h2>பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு</h2><p>இதையடுத்து முதல்- அமைச்சர் விஜய் கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். </p><p>முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிபடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது. </p><p>நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 92.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் 55.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.</p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறையும் நிலை உருவாகி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இதே போல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">ஒகேனக்கல் காவிரி ஆற்றில்</a> இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. </p><p>இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. </p><p>கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான் - சட்டசபையில் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay#comments</comments><guid isPermaLink="false">5c1886a9-0bad-495f-b8c8-a52253014f5b</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:26:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:26:13.232Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* கரூர் கேங் என்று என்னவொறு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர். </p><p>* மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். </p><p>* அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான், இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்</p><p>* திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்?</p><p>* அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. </p><p>* திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது. </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது. </p><p>* திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். </p><p>* மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள த.வெ.க. அரசு இனியும் அப்படி தான் இருக்கும். </p><p>* சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசவில்லை என நக்கல், நையாண்டியாக எதிர்க்கட்சியினர் பேசினார்கள்.</p><p>* ஒவ்வொரு உறுப்பினர் கேள்விக்கும் எல்லா நேரங்களிலும் இடமளித்து பேசுவது தலைமைக்கு அழகல்லா. </p><p>* முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான். </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. </p><p>* திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் FIR பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே. </p><p>* சென்னை விருகம்பாக்கத்தில் 2022-ல் நடந்த திமுக பொதுக்வட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறல் தொடர்பாக பெண் காவலரிடன் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. </p><p>* கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிக்கப்பட்டது. </p><p>* ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் கால தாமதம், திமுக நிர்வாகிகள் காப்பற்றப்ப்டடது என பெரிய பட்டியல் உள்ளது. </p><p>* தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>* மாநிலத்தின் முன்னேற்றம் என்பது குடிமக்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. </p><p>* அரசை குறைகூறும் நோக்கில் கூறிய கருத்துக்களையும் மக்கள் பாதுகாப்பு கருதி பொறுப்புடன் எடுத்துக்கொள்கிறோம். </p><p>* எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடு கூறிய கருத்துகளாக இருந்தாலும் அதில் பாகுபாடு பார்க்க மாட்டோம். </p><p>* யார் மீது பழி போடலாம் என எதிர்க்கட்சிகள் போல் சிந்தித்து பழிபோடும் அரசியலை செய்ய மாட்டோம் என்றார். </p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறு முதலமைச்சர் விஜய் பதிலுரையை முடித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உறுதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly#comments</comments><guid isPermaLink="false">e1b833f6-6433-4f5c-82c9-2632672cdc01</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:17:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:17:19.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,Custodial deaths,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p> <p>தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது, </p><p>"சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசினர். </p><p>காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை.</p> <p>எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படி உரிய விசாரணை மேற்கோள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மாஜிஸ்த்ரேட் விசாரணையும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை.&nbsp;தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது.&nbsp;</p><p>காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்க கண்காணிப்பு, பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது." என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று பெற்று அழிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம்: மக்களிடையே பெரும் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes#comments</comments><guid isPermaLink="false">7a1a6b87-86b5-40eb-a464-10e4a2f6e4cd</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:11:27.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Namma Chennai,பெருநகர சென்னை மாநகராட்சி,Greater chennai corporation,நம்ம சென்னை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed">பெருநகர சென்னை மாநகராட்சிப்</a> பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, மெத்தை, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேகரித்து எாிக்கும் சிறப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 39.93 மெட்ரிக் டன் எடையுள்ள பழைய பழுதுபட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு எாிக்கப்பட்டுள்ளன.</p><p>பொதுவாக வீடுகளைப் புதுப்பிக்கும்போதோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ மக்கள் பயன்படாத சோஃபா, மெத்தைகள் மற்றும் உடைந்த மரச்சாமான்களை வீதி ஓரங்களிலோ அல்லது குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலோ வீசிச் செல்கின்றனர். இதனால் நகரத்தின் தூய்மை கெடுவதோடு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற பெரிய கழிவுப் பொருட்களை எளிதாக அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>39.93 மெட்ரிக் டன் கழிவுக<strong>ள் எாிப்பு</strong></h2><p>கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விசேஷ சேவையின் கீழ், பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 39.93 மெட்ரிக் டன் அளவிலான பயன்பாடற்ற சோஃபா, மெத்தை மற்றும் பழைய பொருட்கள் வீடுகளில் இருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்டுத் தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் எாிக்கப்பட்டுள்ளன.</p><h2>ஒவ்வொ<strong>ரு வார சனிக்கிழமையும் சேவை</strong></h2><p>பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நேரடியாக வீடுகளுக்கே சென்று கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><h2>முன்பதி<strong>வு செய்</strong>யும் எளிய முறைகள்</h2><p>பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு மாநகராட்சியைத் தொடர்பு கொள்ள இரண்டு வழிகள் வழங்கப்பட்டுள்ளன. 'நம்ம சென்னை' செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கோரிக்கை விடுக்கலாம். செயலியைப் பயன்படுத்த முடியாதவர்கள் '94450 61913' என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் அளித்தால், மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை தோறும் நேரடியாக வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களைப் பெற்றுக்கொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச நதி, வன்ம நதி.. இரட்டை அர்த்த பேச்சு பற்றி சட்டசபையில் பொங்கிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">70850bd4-17c6-48c2-9272-bb49c5ed4498</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:02:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:02:08.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.</p> <p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">விஜய் </a>தனது பதிலுரையில்,</p><p>"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர்கள் வைத்த கருத்துக்கள் பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றக்கூடிய சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்பதும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக </p> <p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள். </p><p>பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் இருப்பதும் அதே பெண்கள் தான் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.</p><p>மக்கள் எனக்கு இதற்கு முன் கொடுத்த இடமும், தற்போது கொடுத்த இடமும் கிடைக்க காரணம் நம் வீட்டு பெண்கள் தான். எனவே பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டசபையில் இதே எதிர்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விபட்டியிருக்கிறோம். எனவே வருங்காலத்தில் பெண்களுக்கு அதுபோல நடந்துவிட கூடாது." என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆதாரம் போதுமா?.. சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3#comments</comments><guid isPermaLink="false">18be0a35-96cb-4bac-808a-d16f2fae8acf</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:00:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:00:52.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* 1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கினார். </p><p>* 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது.</p><p>* அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள்.</p><p>* ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம். 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது.</p><p>* கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது.</p><p>* திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது.</p><p>* முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. </p><p>* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?</p><p>* திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்.</p><p>* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>* மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.</p><p>* ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா?.</p><p>* திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>* ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார். </p>]]></content:encoded></item><item><title>காட்டாங்கொளத்தூர் அருகே சோகம்: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed#comments</comments><guid isPermaLink="false">6928a527-f37a-4597-aea3-451e1282072b</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:50:16.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டாங்கொளத்தூர்,TNAssembly,சட்டசபைக் கூட்டத் தொடர்,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeswari,Kattankulathur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagadeeswari  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">சட்டமன்றக் கூட்டத்தொடரில் </a>பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து இன்று அதிகாலை சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். </p><p>அமைச்சரின் அரசு வாகனத்திற்கு முன்பாகக் பாதுகாப்பு வாகனமும், அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் குடும்பத்தினர் பயணித்த அவருக்குச் சொந்தமான மாருதி எர்டிகா காரும் அணிவகுப்பாக வந்துகொண்டிருந்தன. காலை நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><h2>இளைஞ<strong>ர் உயிரிழப்பு</strong></h2><p>ஹோண்டோ டியோ ரக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர், அதிவேகமாக வந்த கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வுத் துறை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இறையன்பு (வயது 26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>வாகன<strong>ம் பறிமுதல்</strong></h2><p>விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>மேலும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, அதிவேகப் பயணமா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளி  ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன! பயணிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked#comments</comments><guid isPermaLink="false">9a235f97-f233-4ea8-9361-06b88685afca</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:24:42 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:24:42.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,IRCTC,train tickets,train tickets sold out,IRCTC இணையதளம்,இந்தின் ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  train tickets sold out   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. </p><p>இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகைக்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், வார இறுதி மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாட்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்திய ரெயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதியின்படி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today">IRCTC இணையதளம் </a>மற்றும் ரெயில் நிலைய கவுண்டர்களில் தொடங்கியது.</p><h2>நிமிடங்களி<strong>ல் தீர்ந்த டிக்கெட்டு</strong>கள்</h2><p>முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னை மத்திய ரெயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மற்றும் தூத்துக்குடி நோக்கிச் செல்லும் முக்கிய விரைவு ரெயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் காலி ஆகின. </p><p>இதனால் இணையவழியிலும் ரெயில் நிலையங்களிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். IRCTC இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால், இணையதள சேவை மந்தமடைந்ததுடன், சில நிமிடங்களிலேயே 'காத்திருப்போர் பட்டியல்' நிலைக்கு ரெயில்கள் சென்றன.</p><h2>அடுத்தடு<strong>த்த நாட்களுக்கான மு</strong>ன்பதிவு அட்டவண</h2><p>நவம்பர் 7 பயணம்: இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.</p><p>நவம்பர் 8 பயணம்: நாளை மறுநாள் (செப்டம்பர் 9) முன்பதிவு செய்யலாம்.</p><p>திரும்பி வருவதற்கான முன்பதிவு: தீபாவளி முடிந்து மீண்டும் பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.</p><h2>சிறப்பு ரெயில்கள் இய<strong>க்கக் கோ</strong>ரிக்கை</h2><p>வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டதால், தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலான சிறப்பு ரெயில்களைத் தெற்கு ரெயில்வே உடனே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c419d21a-38b3-467c-b73b-fcae64bc4b08</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:21:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:21:46.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக சட்டசபை,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார். </p><p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>தனது பதிலுரையில், </p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. </p><p>சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தான் புதிய தொழில்முதலீடுகள் வளரும், வேலைவாய்ப்பு உருவாகும், சுற்றுலாத்துறை வளரும். பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள். எனவே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமான அமைப்பாகும். </p> <p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எந்த அச்சமும் இடையூறும் இன்றி பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் உரிமை இல்லை என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்து இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு.</p> <p>இந்த அவையில் பலரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அரசை குறைகூறும் நோக்கில் கருத்துக்களை கூறியவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையையும் பொறுப்புணர்வையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஏற்பதில் பாகுபாடு காட்டமாட்டோம்.</p><p>சட்டம் ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று அன்றே திருவள்ளுவர், எந்த சார்பும் அற்று யாருக்கும் சார்பு அற்று நடுநிலையுடன் நீதி வழங்குவதே உண்மையான ஆட்சி என கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியையும் காமராஜர் நேராமையான் நிர்வாகத்தையும், பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஏழை எளியோரின் நலனை தனது அரசின் மையமாக கொண்டிருந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது. அது மக்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.</p><p>குற்றத்தை பார்க்கும் பார்வையும் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட நிலைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுக்கிவிட முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.</p><p> ஒவ்வொரு குற்றத்தின் பின்னால் முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைப்பொருள் கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம், அதிகாரம் மீதான போட்டி, கலப்புத்திருமண எதிர்ப்பு, உள்ளூர் அரசியல் உள்ளிட்ட பல சமூக காரணிகள் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம். </p><p>எனவே 30.7.2026 அன்று நடந்த காவல்துறை மாநாட்டில் காவல்துறை பணி குற்றவாளியை கைது செய்வதோடு முடிந்துவிடக்கூடாது. குற்ற சூழலை மாற்றி குற்றம் நடைபெறுவதை தடுப்பதே இலக்கு என வலியுறுத்தினேன். </p><p>இதற்கு ஒவ்வொரு காவல்நிலையமும் அங்கிருக்கும் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சனை குறித்து காவல்துறை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த சட்டமொழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களோடு மட்டும் முடியவில்லை. சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. </p><p>இணைய மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணம் அல்ல. டிஜிட்டல் அறிவு குறைவு, விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது இதற்கு வழிவகுக்கின்றன. எனவே சைபர் குற்றங்களை வளர்க்க, காவல்துறை தொழில்நுட்ப திறனை அதிகரிப்பது மட்டும் போதாது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குற்றத்திற்கு இரையாகாமல் தடுப்பது தான் வெற்றி." என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கடற்கரை- தாம்பரம் இடையே இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயங்கும்- அதிகாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today#comments</comments><guid isPermaLink="false">e2e0f371-b84a-4097-a07e-558eaab213b9</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:11:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:11:00.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,கடற்கரை ரெயில்,Tambaram Train,Beach Train,தாம்பரம் ரெயில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ffwk3mel/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ffwk3mel/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</strong></em></p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சுமார் ரூ.842 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய பகுதியாக, பயணிகள் வசதிக்காக பிரம்மாண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2><strong>மின்சார ரெயில்கள் ரத்து</strong></h2><p>இந்த பணியின் காரணமாக கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் இரவு நேர <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயில்கள்</a> ரத்து செய்யப்பட்டன.</p><p>இந்தநிலையில் இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. </p><p>எனவே, இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடைமுறை தொடரும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார்கள்&quot; - ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ பேச்சு வைரல் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-offered-crores-of-rupees-and-a-ministerial-post-iuml-mlas-remarks-go-viral</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-offered-crores-of-rupees-and-a-ministerial-post-iuml-mlas-remarks-go-viral#comments</comments><guid isPermaLink="false">b054ee61-1870-4b1c-b39e-803213f3044a</guid><pubDate>Mon, 07 Sep 2026 01:09:35 +0000</pubDate><atom:updated>2026-09-07T01:09:35.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IUML,tvk,ஐயுஎம்எல்,தவெக அரசு,சையத்பாருக் பாஷா,Sayed Farooq Basha</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/yxfx68ye/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சையத் பாருக் பாஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ சையத் பாருக் பாஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/yxfx68ye/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“தேர்தலுக்கு பின்னர் கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத் பாருக் பாஷா பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D">இந்திய யூனியன் முஸ்லிம் லீக் </a>மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக <a href="https://www.maalaimalar.com/topic/vaniyambadi">வாணியம்பாடி </a>தொகுதி எம்.எல்.ஏ. சையத்பாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். </p><p>அப்போது அவர், "யாரிடமும் இணைந்து ஏமாந்தது போதும். இனி யாரிடமும் ஏமாற தயாராக இல்லை.</p><p>சட்டமன்றத்தில் சோபா மாடல் அரசு என்று விமர்சனம் செய்து வருகின்றனர். என்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி, கோடியாக பணத்தை எடுத்து வந்து எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொன்னார்கள். </p> <h2>விரட்டி விட்டோம்</h2><p>நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கைக்கு சாய்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையோடு தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.</p><p>த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் கூட்டணிக்கு பின் ஷாஜகானுக்கு தற்போது பூங்கொத்து கொடுத்து அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைவர் கேட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான ஒரு பதவி வழங்கப்பட உள்ளது.</p> <h2>தி.மு.க. முயற்சி</h2><p>கடை கோடியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் நாங்கள் எம்.எல்.ஏ.வும், அமைச்சராகவும் தான் பார்ப்பேன். உங்களால் தான் நான் எம்.எல்.ஏ.வாக ஆகி உள்ளேன். மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் மொழியால் தமிழனாகவும் இனத்தால் இந்தியனாகவும் இருக்கிறோம்.</p><p>அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பதற்காக தி.மு.க. முயற்சி செய்து எங்களை ஆதரிக்க சொன்னதால் எங்களுக்கு அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளாமல் அந்த தருணத்திற்காக தான் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.</p> <p>நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. த.வெ.க. தானாக முன்வந்து கொள்கைக்காக எங்களை ஆதரித்து உள்ளது. ஆகவே ஆட்சியில் பங்கு தருகிறோம் என தானாக முன்வந்து அமைச்சர் பதவியை வழங்கினார்கள்." என பேசியுள்ளார்.</p><p>அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions#comments</comments><guid isPermaLink="false">6ca7f7bb-77ee-46de-b58d-c0fcc3b9831d</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:40:13.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN assembly,தமிழ்நாடு சட்டப்பேரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/mnuhks8q/Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/mnuhks8q/Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">ஜோசப் விஜய்</a> பதிலுரை வழங்க இருப்பதை ஒட்டி சபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு:</h2><p>இதுவரை 18 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு ஆட்சியமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் சூட்டலாம்.</p><p>கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.</p><h2>முதலமைச்சர் பதிலுரை:</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன்.தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும்.</p><p>எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p>இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: ஆனைகட்டியில் வாரச்சந்தையை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market#comments</comments><guid isPermaLink="false">9e0d5e01-6352-4a24-842f-758d171f2083</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:09:37 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:09:37.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,வாரச்சந்தை,weekly market,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi Santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆனைகட்டியில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88" rel="nofollow">வாரச்சந்தை</a> செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இந்த முயற்சிக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் எடுத்த முயற்சியும் முக்கிய பங்காற்றியது. வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக அரசு) உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.</p><p>மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்த வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 10 அடிக்கு நடைமேடை அவசியமா?- சவுமியா அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh#comments</comments><guid isPermaLink="false">aff7c207-7313-4f8b-a9d9-88859280c8ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:16:20.091Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Sowmya Anbumani,சௌமியா அன்புமணி,pallikaranai marsh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dr.Sowmiya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைப்பது அவசியமா என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று பள்ளிக்கரணை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2" rel="nofollow">சதுப்பு நில</a> பகுதிகளை பார்வையிட்டார். </p><p>அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-</p><h2>நடைமேடை தேவையா?</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு கம்பி வேலி போட்டால் போதும். ஆனால் ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைக்கிறார்கள்.</p><p>10 அடிக்கு கான்கிரீட் கிரானைட் போட்டு நடைமேடை அமைப்பது அவசியமா? தடுப்பு சுவர் தேவையா? இது வெள்ளம் வரும் பகுதி.</p><p>சுற்றுச்சுவர் கட்டினால் சதுப்பு நில பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து விடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.</p><p>கடலுக்குள் வெள்ளம் செல்ல வழிவகை செய்ய வேண்டுமே தவிர அதை தடுக்க கூடாது. முக்கியமாக ராம்சார் நிலத்தில் எந்த கட்டுமான பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது. </p><p>அதற்காகத்தான் பசுமை தாயகம் சார்பில் இன்று சதுப்பு நிலப் பகுதிகளை பார்வையிட்டோம். கடன் வாங்கி நடைமேடையும், சுற்று சுவரும் அமைக்கும் திட்டம் மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில்… <a href="https://t.co/CgeA0vZznG">pic.twitter.com/CgeA0vZznG</a></p>&mdash; Sowmiya Anbumani (@Sowmiyanbumani) <a href="https://x.com/Sowmiyanbumani/status/2096545531032195130?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted#comments</comments><guid isPermaLink="false">4a0808f1-09eb-44ac-8b8f-38d8f51ac95e</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:24:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:24:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Murder,கொலை,Police Inspectors,tvk,காவல் ஆய்வாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுப்பட்டுள்ளார்.</p><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>தவெக நிர்வாகி</h2><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">அதிமுக</a>-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்தநிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order" rel="nofollow">தவெக</a>-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது</h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..?- திமுக எம்பி கனிமொழி காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-asks-is-this-a-capital-or-a-murder-city</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-asks-is-this-a-capital-or-a-murder-city#comments</comments><guid isPermaLink="false">f759ca02-0090-45ad-ba32-61349b400cde</guid><pubDate>Sun, 06 Sep 2026 11:55:58 +0000</pubDate><atom:updated>2026-09-06T11:55:58.348Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,சட்டம் ஒழுங்கு,Kanimozhi MP</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/81wi9b9t/kanimozhi-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/81wi9b9t/kanimozhi-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இந்த கொலை சம்பவங்களே சாட்சி என சென்னையில் நடந்த கொலை சம்பவத்தை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில்  தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நடுக்கடலில் நாட்டுப்படகுடன் மூழ்கி தத்தளித்த 4 பேரை மீட்ட மீனவர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-rescued-four-people-who-were-struggling-after-their-country-boat-sank</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-rescued-four-people-who-were-struggling-after-their-country-boat-sank#comments</comments><guid isPermaLink="false">cf15c94b-6f5a-4cb6-a0b8-c2e53a684a29</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:22:21 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:22:21.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள்,படகு,boat,நாட்டுப்படகு மீனவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/v80dvyjc/fishermen.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/v80dvyjc/fishermen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்து, நாட்டு படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை அருகில் இருந்த மற்ற மீனவர்கள் விரைந்து மீட்டனர். </p><p>ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் வேப்ப மரத்துப்பனை மீனவ கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். </p><h2><strong>மீனவர்கள்</strong></h2><p>கடந்த சில தினங்களாக மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் தங்களது நாட்டு படகுகளில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அப்பகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு நாள்தோறும் வழக்கமாக கடலுக்குச் சென்று வருகின்றனர். </p><h2><strong>கடலில் காற்றின் வேகம்</strong></h2><p>இந்த நிலையில் நேற்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் வழக்கத்திற்கு மாறாக திடீரென கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். கடல் சீற்றத்தினால் தாக்குப் பிடிக்க முடியாமல் மீனவர்கள் சென்ற நாட்டுப் படகு அங்குமிங்கும் அலைக் கழித்து ஒரு கட்டத்தில் கடலில் மூழ்கத்தொடங்கியது.</p><h2><strong>நாட்டுப்படகு மூழ்கியது</strong></h2><p>இதையடுத்து அந்தப் படகில் சென்ற நான்கு மீனவர்களும் உயிர் பிழைக்கும் நோக்கில் கடலில் குதித்து தத்தளித்தனர். இதனைப்பார்த்த அப்பகுதியில் மீன்பிடித்த மற்ற மீனவர்கள் விரைந்து செயல்பட்டு, கடலில் மூழ்கிய நாட்டு படகையும், நான்கு மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று கடல் சீற்றத்தில் ஏராளமான நாட்டுப் படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்து விடுவதாகவும், இதனால் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.</p><h2><strong>தூண்டில் வளைவு</strong></h2><p>எனவே தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க அரசு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai#comments</comments><guid isPermaLink="false">6db83b9f-e87e-4ef6-ab9a-21743f390201</guid><pubDate>Sun, 06 Sep 2026 10:21:28 +0000</pubDate><atom:updated>2026-09-06T10:21:28.173Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>farmers,விவசாயிகள்,டெல்டா மாவட்டங்கள்,Delta districts,கல்லணை திறப்பு,Kallanai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kallanai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kyqmxbpb/kallanai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைக்காக அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் ஷாஜகான் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். </p><p>கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.</p><p>அந்த தண்ணீர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-water-sharing-tamil-nadu-karnataka-arguments-supreme-court" rel="nofollow">காவிரி</a> தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக்கு நேற்று வந்தடைந்தது.</p><h2>அமைச்சர்கள் திறந்தனர்</h2><p>கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடந்தது.</p><p>இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக  காவிரியில் வினாடிக்கு 1000 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 500 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ரவி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து, சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களை தூவி வணங்கினர்.</p><p>கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி கோவில் மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88" rel="nofollow">கல்லணை</a> பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆட்சி நடைபெறுவதாக கம்யூனிஸ்டுகள் கூறுவது வேடிக்கையானது- அமைச்சர்  விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/communists-to-claim-that-the-administration-is-being-run-by-government-officials#comments</comments><guid isPermaLink="false">631097a9-048d-4fa1-a531-184c775a39ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:28:57 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:28:57.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,communists,கம்யூனிஸ்டுகள்,அமைச்சர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/58tn802t/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><p>சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.</p><p>வெற்றி பெற்ற சிறப்பு குழந்தைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.</p><h2><strong>அப்போது அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-</strong></h2><p>உலகம் அனைவருக்கும் சமமானது, அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுதான் உண்மையான சமூக நீதி. சிறப்பு குழந்தையின் இயற்கையான வாழ்வையே மறுவாழ்வு என்போம், இப்படித்தான் நம் சமூகத்தின் கட்டமைப்பாக உள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான வாய்ப்பைக் கொடுத்தாலே போதுமானது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கிறேன் என அண்ணா கூறினார்.</p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>ஒரு குழந்தை ஓடி வந்து அவரது மொழியில் சி எம் என கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.</p><p>சிறப்பு குழந்தைகளை சிறு வயதிலேயே கண்டறிய முடியும் அரசு துறையில் இதற்கான திட்டங்களும் உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சி என கம்யூனிஸ்டுகள் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.</p><h2><strong>இதற்கு அமைச்சர் அருண்ராஜ் கூறுகையில்,</strong></h2><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.</p><h2><strong>அரசு</strong></h2><p>திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து உள்ளது.</p><p>இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகள், இந்த ஆட்சியை வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்தையும் தவறு என்று சொல்ல முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>OBC மக்கள் உரிமையை காக்க தீர்மானம் இயற்றுக..!- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights#comments</comments><guid isPermaLink="false">69f7b5a9-95f4-4fee-93f1-59e787146cf8</guid><pubDate>Sun, 06 Sep 2026 09:02:34 +0000</pubDate><atom:updated>2026-09-06T09:02:34.345Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,ஓபிசி,OBC,Resolution,முக ஸ்டாலின்,தீர்மானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/5qwycugn/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! <a href="https://www.maalaimalar.com/search?q=OBC" rel="nofollow">OBC</a> மக்களின் உரிமையைக் காப்பாற்றச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்!</p><p>தற்போது எடுக்கப்பட்டு வரும் #Census2027 கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தோரைக் கணக்கிட ‘open-ended format to record caste details without a pre-determined drop-down list or standardized menu’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>ஓபிசி பட்டியலில் இடம்பெற்றுள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல!</p><p>மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியலைப் பெற்று, தொகுத்து, பதிவேற்றி, அதில் இடம்பெற்றுள்ள சாதிகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கும் வழிமுறையே குழப்பங்களுக்கு இடம் தராது. மாறாக, பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><p>இதனால் இந்தியாவில் 46 இலட்சம் சாதிகள் இருப்பதாகக் குளறுபடியான கணக்கு வரும் என்ற ஆபத்தைச் சமூகநீதியில் அக்கறை கொண்ட பலரும் சுட்டிக்காட்டுவதை அரசு புறந்தள்ளிவிடக் கூடாது.</p><p>சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நோக்கமே பட்டியலினச் சமூக மக்களின் எண்ணிக்கையைப் போல, OBC மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் அவர்களது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-madurai-bench-order-educational-institutions-must-not-ask-for-caste-or-religious-details" rel="nofollow">கல்வி</a>, சமுதாய, பொருளாதார நிலைமையையும் அறிந்துகொள்வதுதான்.</p><p>அப்போதுதான் அவர்கள் அதிகாரம் பெறுவதற்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை வகுக்கவும், அவர்தம் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டவும் அரசுகளால் இயலும்.</p><p>அப்படி இருக்கையில், ஒன்றிய, மாநில அரசுகளின் OBC சாதிகளின் பட்டியலை வைத்து, அதிலிருந்து மக்கள் சாதிப்பெயரைத் தேர்வு செய்யும் முறையைப் பின்பற்றினால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும்.</p><p>தற்போதைய முறையைத் தொடர்ந்தால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணடிக்கப்படும். இதனால் எந்தப் பயனும் இல்லை. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்துவிடும் ஆபத்தைப் புறந்தள்ளக் கூடாது.</p><p>பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறி, ஒரு தவறை நியாயப்படுத்தாமல், குளறுபடிகளுக்கு இடம் தராமல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறுவதற்கான திருத்த நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்து, நீதி வழங்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p><p>தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்றி, உரிய அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-for-the-gram-sabha-meeting-must-be-issued-seven-days-in-advance-kamal-haasan-writes-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">d90f3568-5ca6-4bda-9caf-cc8c27ca7926</guid><pubDate>Sun, 06 Sep 2026 08:36:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T08:36:40.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கிராம சபைக் கூட்டம்,GRAM SABHA MEETING,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,கமல்ஹாசன் எம்பி,MP Kamal Haasan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/kv667yyl/New-Project-2026-09-06T140546.889.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution">கமல்ஹாசன் </a>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;</p><p>“தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.</p><p>வருகிற அக்டோபர்  2-ம் தேதி  நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஊர் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.</p><p>இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு&nbsp; வழங்குகிறேன்:</p><p>பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல் வேண்டும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;மிகவும் குறைவாக உள்ளது. </p><p>உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின்&nbsp;மாதாந்திர மதிப்பூதியமானது&nbsp;2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.<br></p><ul><li><p>தமிழ்நாடு அரசு இந்த மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தப் பரிசீலிக்க வேண்டும். </p></li><li><p>உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல்.</p></li><li><p>கிராம வளர்ச்சித் திட்டமிடலை பொதுமக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஒரு செயல்முறையாக மாற்றுதல்.</p></li><li><p>உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல்.</p></li></ul><ul><li><p>கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்தல்.</p></li><li><p>தங்கள் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்கள் உணரும்போது, கிராம சபையின் மீது நம்பிக்கை அதிகரித்து, மக்கள் பங்கேற்பும் இயல்பாகவே உயரும்.</p></li><li><p>அடிமட்ட அளவில் வலுவான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரத்தை உருவாக்குதல்.</p></li></ul><ul><li><p>காந்தியடிகளின் கிராம ஸ்வராஜ் (கிராம சுயராஜ்யம்) கனவு, அதிகாரம் பெற்ற கிராமங்களையும், பொதுமக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது. </p></li><li><p>அதற்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை, கிராம நிர்வாகத்தில் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதுதான்.</p></li><li><p>கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே பொது அறிவிப்பும், விவாதப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற அரசின் விதியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.</p></li></ul><p>நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/explosion-at-firecracker-factory-owned-by-minister-vanniyarasus-sister-one-person-dead#comments</comments><guid isPermaLink="false">5671fc51-2506-4f5d-b942-9df200cd9cd9</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:30:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:30:48.700Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வெடிவிபத்து,firecracker factory,பட்டாசு ஆலை,Explosion Accident,Minister Vanniyarasu,அமைச்சர் வன்னியரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/x832ox6n/New-Project-2026-09-06T130014.076.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் உள்ள  “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.</p><p>வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் இந்த ஆலை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan">வன்னியரசுவின் </a>சகோதரி எம். ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><h2>போலீஸ் நடவடிக்கை</h2><p>இதனைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா போலீசார், அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.</p><h2>நிவாரணம்</h2><p>இதனிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/it-has-been-created-purely-out-of-sheer-stupidity-vck-general-secretary-sinthanai-selvan#comments</comments><guid isPermaLink="false">92b7858c-248c-41b6-a63d-033e814837c4</guid><pubDate>Sun, 06 Sep 2026 07:16:16 +0000</pubDate><atom:updated>2026-09-06T07:16:16.559Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விசிக,vck,சிந்தனைச் செல்வன்,Sinthanai selvan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” - விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/bmqsup4m/New-Project-2026-09-06T124544.708.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.</p><p>விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues">அமைச்சர் வன்னியரசு</a> திமுகவை விமர்சிக்கும் வகையில் சட்டசபையில் பேசிவருவது தற்போது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.</p><p>இதனால் திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துவருகிறது. </p><p>அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:</p><p>தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.</p><p>சிந்தனையோடும், கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.</p><p>அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.</p><p>எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும் - ஆண்டன் செக்கோவ்”. எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order#comments</comments><guid isPermaLink="false">d607f0cc-03b2-4c72-aa71-54d14e366708</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:56:51 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:56:51.862Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக பிரமுகர் கொலை: ‘வெற்றி சட்டம் -ஒழுங்கு’ நிலை - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/65fkfei7/New-Project-2026-09-06T122517.854.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாற்றில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested">தவெக பிரமுகர் கண்ணன்</a> வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p>அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!</p><p>தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/terrible-in-chennai-thaveka-celebrity-was-hacked-to-death-5-people-arrested#comments</comments><guid isPermaLink="false">6eaedc54-719a-4a5c-85a3-a78285f0ef3a</guid><pubDate>Sun, 06 Sep 2026 06:43:40 +0000</pubDate><atom:updated>2026-09-06T06:43:40.673Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,Chennai,TVK functionary,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/dgz5jlqx/New-Project-2026-09-06T121240.007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில்  வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர்.  அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட  பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><h2>உறவினர்கள் முற்றுகை</h2><p>இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு  முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>காரணம் என்ன?</h2><p>போலீசாரின் ரவுடிகள் பட்டியலில்  ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண்ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. </p><p>அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது </h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-day-chief-minister-vijay-extends-his-wishes#comments</comments><guid isPermaLink="false">19967fd7-7b92-4092-85d5-44f0a189abe5</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:38:48 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:38:48.617Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,காவலர் தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Police Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு காவலர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/87yk3kn8/New-Project-2026-09-06T110811.801.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு மாநில<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day"> முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> காவல்துறையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காவலர் தினத்திற்கு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, </p><p>சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும், தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. </p><p>காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். </p><p>மக்களும், காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/measures-to-strengthen-the-party-edappadi-palaniswami-holds-key-consultation-with-aiadmk-district-secretaries-today#comments</comments><guid isPermaLink="false">07cd5260-311c-4d76-83f2-1f6c24ed2839</guid><pubDate>Sun, 06 Sep 2026 05:14:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T05:14:31.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சியை பலப்படுத்த நடவடிக்கை - அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய  ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/eozh11fi/New-Project-2026-09-06T104341.739.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>தோல்வியால் கட்சிக்குள் மோதல்களும் கிளம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">எடப்பாடி பழனிசாமி </a>மாவட்டம் வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனையின் போது சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியும் விவாதித்துள்ளார். </p><p>புதிதாக  நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனர். அவர்களுடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>வெற்றி பெற வேண்டும்</h2><p>அதிமுகவை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கு  மாவட்ட செயலாளர்கள் அனைவரும், கட்சி நிர்வாகிகளுடன்   ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள்  6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்து துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes#comments</comments><guid isPermaLink="false">b7050a88-009b-4e4c-b312-43aee026db2d</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:34:07 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:34:07.580Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/vltq48zt/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.</strong></em></p><p>தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வருகிறது. அதனால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. தற்போது 60 நாளுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.</p><h2>முன்பதிவு தொடக்கம்</h2><p>இந்நிலையில்,  தீபாவளி பயணத்திற்காக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.</p><h2>விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்</h2><p>ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.</p><p>நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளையும், 7-ம் தேதி பயணத்திற்கு நாளை மறுதினமும் முன்பதிவு நடைபெற உள்ளது.</p><p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வரும் 10-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>இதுதவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.</p><p>ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 6 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-september-2026#comments</comments><guid isPermaLink="false">80cb69aa-4aef-4fbb-a453-ef4e8bfa288c</guid><pubDate>Sun, 06 Sep 2026 04:08:14 +0000</pubDate><atom:updated>2026-09-06T04:08:14.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hnlm7jk/New-Project-2026-09-06T101803.596.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/6hnlm7jk/New-Project-2026-09-06T101803.596.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/c4c30a17-02b6-405c-a1e5-7e81875c2ebc">உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அதிர்ச்சி அறிக்கை</a></p><p>*வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இரண்டிலும் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்துள்ளது.</p><p>*இந்த மாற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted" rel="nofollow">தவெக பிரமுகர் கொலை: காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை</a></p><p>* கண்ணன் நிலைகுலைந்த  நிலையில், சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><p>* ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai" rel="nofollow">கல்லணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு</a></p><p>* டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ministers-open-3000-cusecs-from-kallanai" rel="nofollow"> </a>கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/horrific-accident-in-delhi-pg-hostel-collapses-many-students-trapped-under-the-debris">டெல்லியில் PG விடுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு - இடிபாடுகளுக்கு அடியில் பல மாணவர்கள் சிக்கித் தவிப்பு</a></p><p>*சத்ய நிகேதன் பகுதியில் பல கல்லூரிகள் அமைந்துள்ளதால் அதனை சுற்றிய பகுதியில் மாணவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.</p><p>* அங்கு சுமார் 50 மாணவர்கள் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/volcanic-eruption-rocks-indonesia-flight-services-cancelled">இந்தோனேசியாவை அதிரவைத்த எரிமலை வெடிப்பு.. விமான சேவைகள் ரத்து</a></p><p>*இந்தோனேசியாவில் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.</p><p>*சாம்பல் மேகங்கள் எழும்பி, ஜகார்த்தா, லம்பங் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்குப் பரவின.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights" rel="nofollow">OBC மக்கள் உரிமையை காக்க தீர்மானம் இயற்றுக..!- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஓபிசி பட்டியலில் உள்ளவை வகுப்புகள்தானே தவிர, அவை சாதிகள் அல்ல என்ற மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>*  பொதுமக்கள் கூறும் சாதியின் பெயரைப் பதிவேற்றுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/shafali-verma-scripts-history-becomes-youngest-and-fastest-to-3000-womens-t20i-runs">டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள்: ஷபாலி வர்மா சாதனை</a></p><p>* பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.</p><p>* மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது வீராங்கனை ஆவார் ஷபாலி வர்மா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-ticket-booking-sold-out-in-minutes">தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன</a></p><p>* ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.</p><p>* நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளை முன்பதிவு செய்யலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/a-first-for-the-european-continent-isar-aerospace-successfully-launches-an-orbital-rocket">ஐரோப்பிய கண்டத்திலிருந்து முதல்முறை - ஆர்பிட்டல் ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியது ஐசர் ஏரோஸ்பேஸ்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-price-today-in-chennai-2">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்</a></p><p>* பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>* கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-second-airport-cheyyur-and-gummidipoondi-selected-as-sites</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-second-airport-cheyyur-and-gummidipoondi-selected-as-sites#comments</comments><guid isPermaLink="false">218e1196-a7a5-4bc2-8e68-e3a1e0687f0e</guid><pubDate>Sun, 06 Sep 2026 03:22:14 +0000</pubDate><atom:updated>2026-09-06T03:22:14.891Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,gummidipoondi,Parandur,Tamil Nadu govt,cheyyur,பரந்தூர்,கும்மிடிப்பூண்டி,Chennais second airport,சென்னையின் 2வது விமான நிலையம்,செய்யூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/t67fc1og/New-Project-2026-09-06T045534.618.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையின் 2வது விமான நிலையம் - செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்களை தேர்வு செய்தது தவெக அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/t67fc1og/New-Project-2026-09-06T045534.618.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் 2வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled">விமானம் நிலையம்</a> அமைக்க செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 2 இடங்களை தேர்வு செய்துள்ளது விஜய் தலைமையிலான தவெக அரசு.</p><p>இந்த 2 இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மணலூர் ஆகிய இடங்களை இடங்களை ஆய்வு செய்யுமாறு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>சென்னைக்கு 2வது விமான நிலையம் </h2><p>சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சி என்பது நேற்று இன்று தொடங்கியதல்ல; அது சுமார் 3 தசாப்தங்களாக தொடர்ந்து வரும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட கதையாகும்.</p><p>1999-ல் தேடுதல் தொடங்கியது. அன்று முதல், இன்றுவரை மாறி மாறி அமையும் அரசுகள் பல இடங்களை பார்வையிட்டு, பரிசோதித்து இடத்தை தேர்ந்தெடுத்தாலும், கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.</p><p>1999-ஆம் ஆண்டிலேயே தேடுதல் பணி தொடங்கிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொழில்துறை மையமான ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில், 4,000 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு சாத்தியமான இடத்தை மாநில அரசு 2007-ஆம் ஆண்டில் அடையாளம் கண்டு ஒப்புதல் அளித்தது.  </p><p>இருப்பினும், அரசுக்குச் சொந்தமான நிலம் சுமார் 800 ஏக்கர் மட்டுமே இருந்ததால், தேவையான இன்னும் 3200 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல் என்பது சவாலாக அமைந்தது. மேலும் அடுத்து வந்த அரசு என அரசியல் காரணங்களாலும் இந்த இடம் கைவிடப்பட்டது. </p><h2>பரந்தூர் தேர்வு</h2><p>இச்சூழலில் 2021-ல் திமுக ஆட்சி அமைத்தபோது இந்தத் திட்டம் வேகம் பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, மாநில அரசு திருப்போரூர், பரந்தூர், பண்ணூர் மற்றும் படாளம் ஆகிய இடங்களைப் பட்டியலிட்டது. </p><p>சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுத் தேவைகளை மதிப்பிட்ட பின்னர், பரந்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள பண்ணூர் எனத் தேர்வை இரண்டாக குறைத்தது. </p><p>இவ்விரு இடங்களும் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர்-சுங்குவர்சத்திரம் தொழிற்பேட்டைக்கு அருகில் அமைந்திருந்தன. </p><p>இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியான ஒப்புதலையும், இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து தொழில்நுட்ப-பொருளாதார அனுமதியையும் மாநில அரசுப் பெற்றது. </p><h2>பரந்தூரில் திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகள்</h2><p>பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>இந்த புதிய விமான நிலையம் 13 கிராமங்களில் 5,746 ஏக்கர் பரப்பளவில் ரூ. 29,143 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த க லூயிஸ் பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையையும் தயாரித்தது. </p><p>கட்டுமானப் பணிகள் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டிருந்தன. முதல் கட்டத்திற்கு மட்டும் ரூ.13,854 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><p>விமான நிலையத்துடன் பல சாலை, மெட்ரோ மற்றும் தளவாடத் திட்டங்களும் திட்டமிடப்பட்டிருந்தன.</p><h2>கிளம்பிய எதிர்ப்பு</h2><p>பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, 2022 ஆகஸ்டில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே போராட்டங்கள் தொடங்கின. காரணம் நிலத்திற்கான இழப்பீட்டைத் தாண்டி, இடப்பெயர்வே மக்களை அதிகம் மனம் நோக செய்தது. </p><p>தலைமுறை, தலைமுறையாக பல தசாப்தங்களாக வாழ்ந்த இடத்தைவிட்டு, தங்களுக்கு உணவிட்ட இடத்தைவிட்டு விலகுவது உயிரை உடம்பிலிருந்து பிடுங்குவத்கு சமமானது. கிராமங்களின் ஒரு பகுதி அல்ல, ஒட்டுமொத்த கிராமங்களும் இடம்பெயர வேண்டிய சூழல் நிலவியது.</p><p>ஆண்டுக்கு முப்போக விளைச்சலை தரும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், பல நீர்நிலைகளும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் விவசாயிகளும், சம்பந்தப்பட்ட கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வாதிட்டனர். </p><p>அரசு, நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிக இழப்பீடு வழங்க முன்வந்ததோடு, இடம்பெயரும் குடும்பங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும்  ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 4 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதில் ஏகனாபுரம் போராட்டத்திற்கு மையக்களமாக அமைந்தது. காரணம் ஏகனாபுரம், முன்மொழியப்பட்ட ஓடுபாதையின் வழித்தடத்தில் நேரடியாக அமைந்திருந்தது.&nbsp; </p><h2>போக்கை மாற்றிய தவெக </h2><p>இச்சூழலில்தான் புதிய கட்சித் தொடங்கிய விஜய்,  ஏகனாபுரம் மக்களை சந்தித்து தங்கள் ஆட்சி அமைந்தால் இத்திட்டம் கைவிடப்படும் தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். </p><p>அவர் கூறியவாறே நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்த நிலையில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாவும், மாற்று இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். </p><p>விவசாயிகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என தவெக அரசுக்கூறியது. </p><h2>மாற்று இடம் தேர்வு</h2><p>இந்நிலையில் சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்களாகச் செய்யூர் மற்றும் மணலூர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>தற்போது இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறுகள் (Pre-feasibility study) குறித்த ஆய்வினை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>அவர்களின் தொழில்நுட்ப அறிக்கை வந்த பிறகே சென்னையின் 2-வது விமான நிலையம் அமையப்போகும் இறுதி இடம் எதென்று முடிவாகும். </p><h2>இருப்பினும் சிக்கல்</h2><p>இடம் தேர்வு செய்யப்பட்டாலும்,  புதிய இடமும் அதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நிலம் கையகப்படுத்துதல், இடப்பெயர்வு மற்றும் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுதல் என இங்கும் பல தடைகளை எதிர்கொள்ள நேரும். </p><p>தற்போது இருக்கும் அதே அரசியல் மற்றும் பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்டே இத்திட்டத்தை கொண்டு செல்வதுதான் தவெக அரசுக்கு தற்போது இருக்கும் சவாலாகும். </p>]]></content:encoded></item><item><title>பயணிகள் கவனத்திற்கு.. தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-passengers-diwali-train-ticket-booking-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-passengers-diwali-train-ticket-booking-begins-today#comments</comments><guid isPermaLink="false">3444cb8e-e967-46bd-bd70-09b88cfcc23f</guid><pubDate>Sun, 06 Sep 2026 00:05:08 +0000</pubDate><atom:updated>2026-09-06T00:05:08.967Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,தீபாவளி,Ticket Booking,டிக்கெட் முன்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/d1fzi7d2/tn-12.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் டிக்கெட் முன்பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் டிக்கெட் முன்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/d1fzi7d2/tn-12.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது. </p> <p>சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் <a href="https://www.maalaimalar.com/topic/diwali">தீபாவளி </a>பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்வது வழக்கம்.</p><h2>முன்பதிவு</h2><p>இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. அதனால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது.</p><p>60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை தற்போது இருப்பதால் தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.</p><p>சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.</p><p>நவம்பர் 5-ந்தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது. </p><p>நவம்பர் 6-ந் தேதி பயணம் செய்வதற்கு 7-ந்தேதி (திங்கட்கிழமை)யும் 7ந்தேதி பயணத்திற்கு 8-ந்தேதியும் முன்பதிவு நடைபெற உள்ளது.</p> <p>தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வருகிற 10-ந் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.</p><p>தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குவதால் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் முக்கிய ரெயில் நிலையங்களில் நேரடியாக டிக்கெட் பெற தயாராக உள்ளனர்.</p><p>இது தவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.</p><p>ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>30 இடங்களில் சோதனை.. 241 ஆவணங்களை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை  - கே.என்.நேரு சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/raids-at-30-locations-anti-corruption-department-reports-seizure-of-241-documents-what-did-kn-nehru-say#comments</comments><guid isPermaLink="false">c2546ad8-fb28-438c-9013-4a4294b0e049</guid><pubDate>Sat, 05 Sep 2026 17:07:08 +0000</pubDate><atom:updated>2026-09-05T17:07:08.207Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.என்.நேரு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/nnmfzu96/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கே.என். நேரு வீட்டில் சோதனை</h2><p>அந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">கே.என்.நேருவின்</a> சென்னை, திருச்சி வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p> <h2>சென்னை</h2><p>சென்னை மைலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய இடங்களில் உள்ள <a href="https://www.maalaimalar.com/topic/kn-nehru">கே.என். நேருவுக்கு</a> சொந்தமான இடங்களில் வீடுகளுக்கு இன்று காலை 7 மணி அளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். திருவான்மியூர், அடையாறு, அண்ணா நகர், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>ராஜா அண்ணாமலை புரத்தில் கே.என். நேருவின் தம்பி ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோன்று திருச்சி, கோவை என மொத்தம் 19 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.</p><p>கே.என். நேரு, தி.மு.க. ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் தான் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>திருச்சி</h2><p>திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.</p> <h2>கோவை</h2><p>கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிமடை பகுதியில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. அதேபோன்று கோவை, மசக்காளி பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு இன்று காலை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலை மையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் காலை 7 மணிக்கு அதிரடியாக நுழைந்தனர்.</p><p>ஒவ்வொரு பகுதிக்கும் தலா 4 லஞ்ச ஒழிப்பு போலீசார் வீதம் சென்று அங்கு வீடு மற்றும் அலுவலகத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர்.</p> <h2>பறிமுதல்</h2><p>சோதனையின் முடிவில் கிடைத்த தகவல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.</p><p>அறிக்கையின்படி, தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடந்த சோதனையில் 241 ஆவணங்கள், மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு என்ற புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p> <h2>கே. என். நேரு பேட்டி</h2><p>இதனிடையே திருச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர், "என் வீட்டில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.</p><p>லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி வெல்வோம்.</p><p>சட்டசபையில் அரசை நோக்கி நான் கேள்வி எழுப்புவதால் என்னை மிரட்டுவதற்காக கூட இது போன்ற சோதனையை அவர்கள் செய்யலாம். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 5 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-5-september-2026#comments</comments><guid isPermaLink="false">a50194c3-ec3d-4c7a-b287-9e0350ac3ac4</guid><pubDate>Sat, 05 Sep 2026 06:38:36 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:48:29.615Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/1ky145b1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raids-19-locations-linked-to-former-minister-kn-nehru">முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>* அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. </p><p>* மயிலாப்பூர், ஆர்.ஏ.புரம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-near-sattur-worker-dies">சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு</a></p><p>* சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.</p><p>* அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-chief-mk-stalin-pays-tribute-to-vo-chidambaranar" rel="nofollow">தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார்..!- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>* வ.உ.சிதம்பரனாரின் வீரத்தையும், தேசப்பற்றையும், தியாகத்தையும் இந்நாளில் நினைவுகூர்ந்து போற்றுவோம்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-greetings-to-teachers-who-shape-students-into-good-human-beings" rel="nofollow">மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!</p><p>* சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே இனி ஆசிரியர்களின் பெரும் பணி!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-3">தவெக அரசின் பூச்சாண்டிகளுக்கு அஞ்ச மாட்டோம்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.</p><p>* இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-teachers-day">ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காகத் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!</p><p>* ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-5-9-2026">GOLD PRICE TODAY: நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-caste-wise-census-must-be-conducted-by-incorporating-the-list-of-castes">சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தயாரித்த அந்தப் பட்டியலில் மொத்தம் 2399 சாதிகள் இடம் பெற்றிருந்தன. </p><p>* ஒரு காலத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டிருந்த தாசரி, ஜங்கம் போன்ற வகுப்பினர் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி தான், 1993-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-people-in-tn-safeonly-corrupt-are-not">தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது... ஊழல்வாதிகளுக்கு தான் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் இணைந்து வரும் தேர்தலை எதிர்கொள்ளும்.</p><p>* நாள்தோறும் 7 முதல் 8 மணி நேரம் சட்டசபை நடைபெறுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-will-never-fear-bjp-govt-actions-says-mp-kanimozhi" rel="nofollow">தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது- கனிமொழி எம்பி</a></p><p>* தவெக அரசு, தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளது.</p><p>* மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-hold-consultation-meeting-with-alliance-parties-on-september-9-communist-parties-to-skip">செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் த.வெ.க. ஆலோசனைக் கூட்டம்: கம்யூனிஸ்டு கட்சிகள் புறக்கணிப்பு?</a></p><p>* த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது</p><p>* சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-commission-banned-former-congress-mla-aassan-maulaana-from-contesting-elections-for-3-years">காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை</a></p><p>* கடந்த 2021-ம் ஆண்டு வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் அசன் மவுலானா.</p><p>* அசன் மவுலானா முறையாக கணக்கு காட்டவில்லை என புகார் எழுந்துள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-veerapandian-says-we-will-support-tvk-from-outside">தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம்... கூட்டணியில் இடம்பெறவில்லை - வீரபாண்டியன் திட்டவட்டம்</a></p><p>* தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம்.</p><p>* அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/consultative-meeting-of-tvk-alliance-party-leaders">தவெக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்: திருமாவளவனுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அழைப்பு</a></p><p>*கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>*இக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளிடையேயான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tomorrow-duleep-trophy-final-in-chepauk-ground">துலீப் டிராபி: நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் தெற்கு-கிழக்கு மண்டலங்கள் மோதல்</a></p><p>* கேப்டன் திலக் வர்மா ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-youth-who-cleaned-polluted-river-gets-job-offer-from-dutch-ceo">நதியை மீட்டெடுத்த இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து சி.இ.ஓ அளித்த வேலை வாய்ப்பு!... </a></p><p>*பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு நெதர்லாந்து நிறுவனத்தின் அழைப்பு மட்டுமன்றி, உள்நாட்டிலும் பலதரப்பட்ட ஆதரவுகள் குவிந்து வருகின்றன. </p><p>*தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இவரின் தூய்மைப் பணியைப் பாராட்டியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/namal-former-sri-lankan-president-rajapaksas-son-arrested-over-airbus-deal">ஏர்பஸ் விமான ஊழல் வழக்கில் கைது: நமல் ராஜபக்சே சிறையில் அடைப்பு</a></p><p>* 5 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.</p><p>* அவரை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/disaster-flood-in-nepal-60-year-old-woman-rescued-alive-after-11-days">நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 11 நாட்களுக்குப் பின் 60 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு... </a></p><p>* வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். </p><p>*இந்த பேரதிசய மீட்புச் சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை அளித்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nameboards-mandatory-by-november-1-madras-high-court">நவம்பர் 1-க்குள் கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை: சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவு!... </a></p><p>*இந்த உத்தரவைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தவறினால் மற்றும் கடைகளைக் கண்காணிப்பதில் அலட்சியம் காட்டினால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/video-by-actress-leads-to-36-new-sanitary-napkin-dispensers-at-chennai-airport">நடிகையின் வீடியோவால் எதிரொலித்த கோரிக்கை: சென்னை விமான நிலையத்தில் 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் அமைப்பு!... </a></p><p>*பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். </p><p>*பெண்கள் தங்களின் பயணங்களின் போது நாப்கின்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர் ஏற்படுத்தினார். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/satwik-chirag-pair-enter-final-round-in-china-masters-super-750">சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பெண்கள் பிரிவில் அனைவரும் ஏமாற்றம் அளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு ஆலையில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announces-4-lakh-aid-virudhunagar-blast#comments</comments><guid isPermaLink="false">6fe27d86-c933-4160-9189-907fbb70ad65</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:27:51 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:27:51.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,சிவகாசி,Sivakasi,வெடி விபத்து,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Virudhunagar fireworks factory blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/3mswt1t6/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் அடுத்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மாடசாமி என்பவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியை வழங்கியுள்ளார்.</p><p>விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88">சின்னதம்பி பட்டாசு ஆலையில்</a> செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>இந்த நிலையில் ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><h3><strong>முதலமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒத்தையால் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலையில் இன்று (05.09.2026), எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில்</p><p>அங்கு பணியிலிருந்த மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மாடசாமி (வயது 33), த/பெ. ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரள கார் விபத்தில் பலியான 8 மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆறுதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-condoles-death-of-eight-engineering-students-in-kerala-crash#comments</comments><guid isPermaLink="false">facacd5c-28d3-4cf8-b7e5-e67f7ff8f49c</guid><pubDate>Sat, 05 Sep 2026 16:00:58 +0000</pubDate><atom:updated>2026-09-05T16:00:58.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,ஜோசப் விஜய்,joseph vijay,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/p66lm2e5/Untitled-design-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி காரில் சென்ற எட்டு பொறியியல் மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழகத்தில் இருந்து கேரளம் நோக்கி சென்ற 8 பொறியியல் மாணவர்கள் பயணித்த கார் ஒன்று, திருச்சூர் கடலோரப் பகுதியான கைப்பமங்கலம்-பனம்பிகுன்னுவில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><h3><strong>முதல்வர் விஜய் எக்ஸ் பதிவு</strong></h3><p>இதையடுத்து சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D">ச.ஜோசப் விஜய்</a> ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>திண்டுக்கல் மாவட்டம், தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்றுவரும் எட்டு மாணவர்கள் நேற்று (04.09.2026) காரில் கேரளம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், </p><p>இரவு 11.50 மணியளவில் திருச்சூர் மாவட்டம், கைப்பமங்கலம் கிராமம், பனம்பிக்குன்னு என்ற இடத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் எட்டு மாணவர்களும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.</p><p>உயிரிழந்த எட்டு மாணவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டுவர, அனைத்து அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் விரைவுபடுத்தத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p>இப்பணிகளை ஒருங்கிணைக்க திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட 5 அரசு அலுவலர்கள் உடனடியாக திருச்சூருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து,</p><p>உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.</p><p>அதன்பின் திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>இச்சம்பவத்தால் துயருறும் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்த செயல்முறையை விரைவுபடுத்தி தங்களது சொந்த ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்த மாணவர்களின் உடல்களை தமிழ்நாட்டிலுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி உதவிய கேரளம் மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சையில் சென்னை மெட்ரோ ரெயில் விளம்பரம்-தலைவர்கள் கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-advertisement-controversy-leaders-condemn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-advertisement-controversy-leaders-condemn#comments</comments><guid isPermaLink="false">83745e72-8b2d-4dca-9171-249f9d8bbb4e</guid><pubDate>Sat, 05 Sep 2026 15:12:17 +0000</pubDate><atom:updated>2026-09-05T15:12:17.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,விளம்பர சர்ச்சை,நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,சி.ஐ.டி.யு</media:keywords><media:content height="613" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tretkuor/chennai-metro-advertisement-controversy-2026-09-05-17-10-36.webp" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-05/tretkuor/chennai-metro-advertisement-controversy-2026-09-05-17-10-36.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்</h2><p>சென்னையின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஓன்றாக மெட்ரோ ரெயில் சேவை இயங்கி வருகிறது, குறிப்பாக அனுதினமும் மெட்ரோவில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். </p><p>இந்த நிலையில்  <a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closed-due-to-the-cjp-protest-have-reopened">மெட்ரோ ரெயி</a>லில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பெண் நண்பர் வைத்திருந்தால் 0% வட்டி. ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி 14.40% வட்டி தருகிறது" என்ற வாசகம் அச்சிடப்பட்டிருப்பதே சர்ச்சைக்கான காரணமாகும்.</p><h3>வலுக்கும் கண்டனம்</h3><h2>சி.ஐ.டி.யு. </h2><p>சென்னை மெட்ரோ ரெயிலில் இப்படி ஒரு விளம்பரம் அச்சிடப்பட்டிருப்பது நியாயமா? முதலாளித்துவம் பெண்களை ஒரு போக பொருளாக , விளம்பர பொருளாக , முன்னிறுத்துகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் </p><p>பெண் நண்பரால் ஆதாயம் இல்லை வட்டியால் ஆதாயம் என ஏன் ஒப்பிடுகிறீர்கள் உடனடியாக இந்த விளம்பரத்தை மெட்ரோ நிர்வாக எடுத்திட வேண்டும் என்று, <a href="https://www.maalaimalar.com/news/district/transport-workers-jail-filling-strike-756463">சி.ஐ.டி.யு</a> (CITU) மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் விளம்பரத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.</p><h2>சு. வெங்கடேசன் எம்.பி</h2><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பான பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் அதேவேளையில், அதன் நிலையங்கள் மற்றும் ரெயில்களுக்கு உள்ளே வைக்கப்பட்டுள்ள சில விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிக சமூகத்திற்கு எதிரானதாகவும் உள்ளன.</p><p>குறிப்பாக, மெட்ரோ ரெயிலுக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பரத்தில், “பெண் நண்பர் (Girlfriend) 0% வட்டி தரலாம்...” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய விளம்பரம் பெண்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், ஆழமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics">ஆணாதிக்க மனப்பான்மை</a>யையும் பிரதிபலிக்கிறது. </p><p>பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் மற்றும் அவர்களை வெறும் பொருளாகச் சித்தரிக்கும் இந்த விளம்பரம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>மெட்ரோ ரெயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது.</p><p>இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனைத் காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.என்று தெரிவித்திருகிறார். </p> <h2>அதிருப்தியில் பொதுமக்கள் </h2><p>இந்த விளம்பரம் பெண்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும்,தவறான முறையில் சித்தரிப்பதாகவும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வளைத்தளங்களில் தங்களின் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>