<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 10:40:58 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:40:22.786Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples">அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை</a></p><p>* கோயில் அறங்காவலர் விண்ணப்ப அவகாசம் ஆகஸ்ட் 12 வரை நீட்டிப்பு!</p><p>* இணையதளம் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தல்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3">சென்னையில் மழைக்கு வாய்ப்பு </a></p><p>* தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-advances-to-second-round-at-china-open-badminton">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பி.வி.சிந்து 21-10 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</a></p><p>* எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.</p><p>* ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/dont-waste-our-time-supreme-court-refuses-urgent-listing-petiton-against-police-action">எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - சுப்ரீம் கோர்ட் சாடல்</a></p><p>* டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>* தாக்குதல் காணொளிகளை எங்களுக்கு பார்க்க ஆர்வமும், நேரமும் இல்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/student-injured-in-delhi-protest-is-stable-say-doctors">டெல்லி போராட்டக்களத்தில் காயமடைந்த மாணவி நலமுடன் உள்ளார்-மருத்துவர்கள் அறிவிப்பு!... </a></p><p>இச்சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும், 118 காவல் துறையினரும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight">பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</a></p><p>* கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்</p><p>* போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns">டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</a></p><p>* வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p><p>* மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-security-concerns-students-protest-16-key-metro-stations-closed">தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!</a></p><p>* ராஜீவ் சௌக், மண்டி ஹவுஸ் உட்பட 16 ஸ்டேஷன்கள் தற்காலிகமாக மூடல்.</p><p>* 3 நிலையங்களில் ஒரு பாதையிலிருந்து மற்றொரு பாதைக்கு மாறுவதற்கான இணைப்பு ரெயில் சேவை தொடர்ந்து இயங்கும். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-advances-to-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* இதில் அதிரடியாக ஆடிய ஆயுஷ் ஷெட்டி முதல் செட்டை 21-17 என வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/west-indies-win-fifth-odi-new-zealand-take-series-3-2">5வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஒருநாள் தொடரை 3-2 என வென்றது நியூசிலாந்து</a></p><p>* ரூதர்போர்ட், ஹெட்மயர் ஜோடி பொறுப்புடன் ஆடி 95 ரன்களை சேர்த்தது. </p><p>* நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, ஜெய்டன் லெனாக்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>* வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices">அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்.</p><p>* மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2">தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p><em><strong>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</strong></em></p><p><em><strong>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</strong></em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam">நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</a></p><p><em>* அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</em></p><p><em>* ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin">தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</a></p><p>* பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><p>* தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</a></p><p>* நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. </p><p>*கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said">விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</a></p><p>* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>* நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p>]]></content:encoded></item><item><title>அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - இந்து சமய அறநிலையத்துறை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples#comments</comments><guid isPermaLink="false">65c6635f-4aee-4618-bb72-bd2b5454e03d</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:34:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:34:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tngovt,TNHRCE,அறங்காவலர்நியமனம்,TempleTrustee,இந்துசமயஅறநிலையத்துறை,TrusteersAppointment,DeadlineExtended</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/w1c7rzhq/TNHRCE" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNHRCE ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/w1c7rzhq/TNHRCE?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 214 முக்கியத் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...</h2><p>'மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இதுவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்காக கடந்த 14.06.2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்களிலும், இத்துறையின் வலைதளத்திலும் விளம்பரம் செய்யப்பட்டது. விண்ணப்பங்களை 22.07.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 12.08.2026 அன்று மாலை 5.45 மணிவரை இணையத்தளம் வாயிலாக பதிவேற்றம் செய்து / நேரில் / அஞ்சல் மூலமாக அந்தந்த திருக்கோயில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்' என்று தெரிவிக்கப்படுகிறது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள                                     214 திருக்கோயில்களுக்கு<br>பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள்நியமனத்திற்கு<br>விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.<a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/RameshOffcl?ref_src=twsrc%5Etfw">@RameshOffcl</a> <a href="https://x.com/TNDIPRNEWS?ref_src=twsrc%5Etfw">@TNDIPRNEWS</a> <a href="https://x.com/hashtag/tnhrce?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tnhrce</a> <a href="https://x.com/hashtag/tndipr?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#tndipr</a> <a href="https://t.co/Bnod0DIsHT">pic.twitter.com/Bnod0DIsHT</a></p>&mdash; TN HRCE (@tnhrcedept) <a href="https://x.com/tnhrcedept/status/2079851239131721971?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மக்கள் பணியைப் புறந்தள்ளி ஜன நாயகன் பட பணிகளில் மும்முரம் காட்டும் அரசு நிர்வாகம் - டிடிவி தினகரன் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-administration-neglects-public-service-to-focus-intensely-on-the-work-related-to-the-movie-jananayagan-ttv-dhinakaran-criticizes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-administration-neglects-public-service-to-focus-intensely-on-the-work-related-to-the-movie-jananayagan-ttv-dhinakaran-criticizes#comments</comments><guid isPermaLink="false">b1583e99-4f62-43a6-9985-b224ab6eaf21</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:31:12 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:31:12.766Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜன நாயகன்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,&apos;Jana nayagan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/8tqhyms4/New-Project-2026-07-22T160043.317.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் பணியைப் புறந்தள்ளி ஜன நாயகன் பட பணிகளில் மும்முரம் காட்டும் அரசு நிர்வாகம் - டிடிவி தினகரன் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/8tqhyms4/New-Project-2026-07-22T160043.317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் அதனை புறந்தள்ளி, ரசிகர் மன்ற நிர்வாகிகளாக நாளை வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்பட பணிகளில் மும்முரம் காட்டி வருவது வெட்கக் கேடானது” என அம முக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இறந்து அழுகிய நிலையில் இருந்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் அங்கன்வாடி மையங்களில் அழுகிய நிலையில் வழங்கப்பட்டிருக்கும் முட்டை குழந்தைகளின் உடல் நலனையும், அவர்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.</p><p>மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், அமைச்சர்களும் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுக்களிக்க ஆர்வம் காட்டுவதும் அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருப்பதும் வெட்கக் கேடானது ஆகும்.</p><p>எனவே, குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர் மீதும், கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் முட்டை உட்பட அனைத்து விதமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்களின் தரத்தை உரிய ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என சமூக நலத்துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஜே.சி.பி. வாகனம் மோதி விபத்து- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-ex-mla-son-dies-for-accident-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-ex-mla-son-dies-for-accident-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5a649cc3-c0d6-49b9-8578-ebf862e0752a</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:28:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:28:17.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,dead,பலி,சென்னை விபத்து,Chennai Accident</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/7dz3vfwn/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விபத்தில் பலியான உலகலாபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/7dz3vfwn/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. </aside><p>மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெரிய புள்ளான். இவர் இந்த தொகுதியில் 2016, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக இருந்தார். </p><p>பெரிய புள்ளானுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவருடன் தனிக்குடித்தனம் சித்து வருகிறார். 2-வது மகள் படித்து வருகிறார். ஒரே மகனான உலகலாபதி (வயது 21) சென்னையில் உள்ள சத்தியபாமா சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். </p><p>இதற்காக உலகலாபதி வேளச்சேரியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கியிருந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வார விடுமுறை நாட்களில் தனது சொந்த ஊரான மேலூருக்கு சென்றுவிடுவார்.</p><h2><strong>விபத்து</strong></h2><p>இந்தநிலையில் இன்று காலை உலகலாபதி தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டார். காந்தி மண்டபம் மேல்பாலத்தில் இருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகம் அருகே சென்ற போது போக்குவரத்து நெரிசலால் உலகலாபதி பிரேக் போட்டார்.</p><p>அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த ஜே.சி.பி. வாகனத்தின் முன்பகுதி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த உலகலாபதி சாலையில் தவறி விழுந்தார். மோதிய வேகத்தில் பின்னால் வந்த ஜே.சி.பி. அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உலகலாபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். </p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>விபத்து குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.</p><p>மேலூர் சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த பெரிய புள்ளான் மகன் விபத்தில் இறந்தது தொகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பலியான உலகலாபதி உடல் மேலூருக்கு கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-3#comments</comments><guid isPermaLink="false">042dc8d6-2b1e-4f34-b420-27d38f0cc641</guid><pubDate>Wed, 22 Jul 2026 10:09:10 +0000</pubDate><atom:updated>2026-07-22T10:09:10.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,சென்னையில் மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/fh0qpx1y/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே இன்று முதல் 26-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs#comments</comments><guid isPermaLink="false">c9bfff35-f33f-4fcd-9b89-f99523f35d25</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:21:28 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:21:28.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,மருத்துவ படிப்பு,BDS,ஆன்லைன் விண்ணப்ப பதிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எம்.பி.பி.எஸ். படிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/1wk3rf8v/medical.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மருத்துவ படிப்புகளில்</a> சேர்வதற்கு மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். </p><p>கடந்த மாதம் 27-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். </p> <p>இந்த நிலையில் இன்று வரை 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இருப்பதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. </p><p>அதன் அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 25-ந்தேதி (சனிக்கிழமை) மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p> <p>இந்திய மருத்துவ ஆணையம் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை தொடங்கிய பிறகுதான் தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கும். </p><p>மாணவர்கள் விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை: பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - மின்வாரியம் அறிவுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-board-monsoon-maintenance-work-must-be-completed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-board-monsoon-maintenance-work-must-be-completed-quickly#comments</comments><guid isPermaLink="false">794e85e4-19dd-43d5-961b-eb5197a7aae9</guid><pubDate>Wed, 22 Jul 2026 09:09:25 +0000</pubDate><atom:updated>2026-07-22T09:09:25.156Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,பருவமழை,monsoon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/lywq590f/tneb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/lywq590f/tneb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.</strong></em></p><p>மின்வாரிய தலைமையிடத்தில் இருந்து அனைத்து மின்வாரிய பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- </p><p>தமிழகம் முழுவதும் பருவமழையையொட்டி தடையற்ற மின்சாரத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னதாகவே மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். </p><p>தமிழ்நாட்டில் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">மின்வாரியத்தில்</a> தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்க வேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதற்கான கொள்முதல் டெண்டரை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பரிதாபமாக காட்சி தரும் கோயம்பேடு பஸ் நிலையம்- சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-terminus-presents-a-pathetic-sight#comments</comments><guid isPermaLink="false">99fd5e41-0ed7-4b24-afbc-190f926bd5b9</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:37:16 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:37:16.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>koyambedu bus stand,கோயம்பேடு பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேடு பஸ் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m4txyi96/koyambedu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது.</aside><h2><strong>கோயம்பேடு பஸ் நிலையம்</strong></h2><p>வெள்ளி விழா கொண்டாட வேண்டிய <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-பஸ்-நிலையம்">கோயம்பேடு பஸ் நிலையம்</a>...</p><p>பார்க்க சகிக்காமல் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அலங்கோலமாக காட்சி அளிப்பது பொதுமக்களை ஆதங்கப்பட வைத்து உள்ளது. சென்னைக்கு வந்தாலே முதலில் நினைவுக்கு வருவது கோயம்பேடு என்ற எண்ணம் பலரது மனதில் நிலைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் நிமிடத்திற்கு ஒரு பஸ் வந்து சென்ற இடம் இன்று கடந்த கால நினைவுகளை சுமந்து நிற்கிறது. </p><p>‘சென்னை தூங்கினாலும், கோயம்பேடு தூங்காது’ என்று சொல்லப்படும் அளவிற்கு 24 மணி நேரமும் இயங்கிய இடமாக இது இருந்தது. கோயம்பேடு பேருந்து நிலையம் என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. பல லட்சம் மக்களின் வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கமும் முடிவும் ஆக இருந்தது. ஆனால் இன்று அது பலரையும் கண்கலங்க வைத்து உள்ளது. </p><h2><strong>பிரமாண்டமான பஸ் நிலையம்</strong></h2><p>1990-களில் சென்னை நகரம் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை சந்தித்தது. அந்த கால கட்டத்தில் வெளியூர் பஸ்கள், விரைவு பஸ்கள் என எல்லா பஸ்களும் பாரிமுனைக்கு தான் வரும். புதிதாக தனியார் பஸ்களும் அதிக அளவில் வரத் தொடங்கியதால் பாரிமுனையில் சமாளிக்க முடியவில்லை. இதற்காக கோயம்பேட்டில் சுமார் 35 ஏக்கரில் புதிய பஸ் நிலையம் கட்ட தீர்மானித்தார்கள். ரூ.103 கோடி செலவில் பிரமாண்டமான பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2002-ம் ஆண்டு  திறக்கப்பட்டது. </p><p>ஒரே நேரத்தில் 300 பஸ்கள் நிறுத்தும் வசதி, தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து சென்றன. தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்தார்கள். பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் ஒரு மடங்காக அதிகரித்தது. </p><p>இந்த பஸ் நிலையம் வெறுமனே பஸ் நிலையமாக தெரியவில்லை. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்று பெயர் பெற்றது. இது மட்டுமல்ல இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட வசதிகள் தமிழகத்திற்கே முன்னோடியாக இருந்தது. விசாலமான காத்திருப்பு மண்டபங்கள், உணவகங்கள், முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தும் இடம், போலீஸ் நிலையம், கழிப்பறைகள் என எல்லாமே திட்டமிட்டு வடிவமைத்து நேர்த்தியாக கட்டப்பட்டது. </p><h2><strong>மெட்ரோ ரெயில்</strong></h2><p>2015-ல் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்ட போது கோயம்பேடு பஸ் நிலையமும் அத்துடன் இணைக்கப்பட்டது. மெட்ரோ ரெயில்களில் வரும் பயணிகளும் எளிதாக பஸ் நிலையத்திற்குள் வந்து சென்றார்கள். இது பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.</p><p>அதுமட்டுமல்ல சுற்றிலும் இருந்த ஓட்டல்கள், உணவகங்கள், லாட்ஜிகள் என்று எல்லாமே பொருளாதார ரீதியாக வளர்ச்சி கண்டன. </p><p>கோயம்பேடு பஸ் நிலையத்தில் நீண்ட வரிசையில் பஸ்கள் நிற்பது, டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதுவது என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கியது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் வந்து சென்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தது என எல்லாமே இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/nsxf4td4/koyambedu0.jpg" /></figure><h2><strong>காலத்தின் கொடுமை</strong></h2><p>ஒரு தலைமுறையே பிரம்மிப்புடன் பார்த்தும், ரசித்தும் பயன்படுத்திய பஸ் நிலையம் இன்று மக்கள் செல்லவே அஞ்சும் இடமாக மாறி இருப்பது காலத்தின் கொடுமை. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் அதிகரித்து வருவதால் கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு என்ற புதிய பஸ் நிலையத்தை அரசு கட்டியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கு மாற்றப்பட்டது. </p><p>வெளிமாநிலங்கள் உள்பட சில இடங்களுக்கு செல்லும் பஸ்கள் மாதவரத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை அருகில் உள்ள சில வழித்தட பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பயணிகள் வருகை பெருமளவு குறைந்தது. </p><p>தற்போது வார நாட்களில் தினமும் குறைவான பயணிகள் மட்டுமே இங்கிருந்து பஸ்களில் செல்கிறார்கள். முன்பு வார நாட்களில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை முன்பதிவுகள் செய்த நிலையில் தற்போது பெங்களூரு, ஓசூர், சேலம், தர்மபுரி, திருப்பதி உள்ளிட்ட சில வழித்தடங்களுக்கு மட்டும் சுமார் 300 முன்பதிவுகள் நடக்கிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/t5er8vwa/koyambedu01.jpg" /></figure><h2><strong>கட்டிடங்கள் சிதிலம்</strong></h2><p>பஸ் நிலையம் வெறிச்சோடி கிடப்பதால் அங்கு வரும் பயணிகளும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். முன்பு இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலித்த இந்த பஸ் நிலையம் இப்போது பல கடைகள் மூடப்பட்டு விட்டதால் ஆங்காங்கே ஒரு சில மின் விளக்குகள் மட்டுமே எரிவதால் களை இழந்து விட்டது. பஸ் நிலையத்திற்குள் வீடு இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்பவர்கள், வெளிமாநில கூலி தொழிலாளர்கள் என்று பலரும் தங்குகிறார்கள்.  முன்பெல்லாம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் கோயம்பேடு கலகலப்பாக இருந்ததால் சமூக விரோத செயல்களும் நடப்பதில்லை. ஆனால் இப்போது ஒரு சிலர் மட்டும் இரவு நேரங்களில் பஸ்சுக்காக செல்லும் போது வழிப்பறி மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். </p><p>போலீஸ் ரோந்தும் இல்லாததால் பொதுமக்கள் உள்ளே செல்லவே அஞ்சுகிறார்கள். கழிப்பறைகளும் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வெளிப்பகுதியில் சிறுநீர், மலம் கழித்து விட்டு செல்வதால் கால் வைத்து நடக்க முடியவில்லை. எந்த பக்கத்தில் திரும்பினாலும் சிகரெட் துண்டுகள்,  மதுபான பாட்டில்கள், குப்பைகள் சிதறி கிடக்கின்றன. கட்டிடங்களும் சிதிலம் அடைய தொடங்கி விட்டது. </p><p>இந்த பகுதியில் இரவு நேரத்தில் செல்போன்கள் பறிப்பது, கையில் கொண்டு செல்லும் பொருட்களை அடித்து பிடுங்கிக் கொண்டு செல்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருவதாக போலீஸ் தரப்பிலும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனாலும் டவுண் பஸ்கள் நிற்கும் இடங்களில் மட்டும் ஒரு சில போலீசார் ரோந்து செல்வதால் மற்ற பகுதிகள் பெரும்பாலும் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. </p><h2><strong>வாகனம் நிறுத்தும் இடம்</strong></h2><p>வாகனம் நிறுத்தும் இடம் காலையில் மட்டுமே செயல்படுகிறது. தர்மபுரிக்கு செல்லும் பயணியை பஸ் ஏற்றி விடுவதற்கு இரவில் காரில் வந்தவரை கார் நிறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. காலை 5 மணிக்கு பிறகுதான் பார்க்கிங் செயல்படத் தொடங்கும். அதுவரை வெளியே காரை நிறுத்தி காத்திருங்கள் என்று சொன்னதாக ஆதங்கத்துடன் கூறினார். </p><p>ஒரு காலத்தில் கூட்டத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இடம் இன்று அமைதி குடிகொண்டுள்ள இடமாக காட்சி அளிக்கிறது. கோயம்பேட்டின் வரலாறு குறையவில்லை. ஆனால் பயணிகளின் காலடி சத்தம் மட்டும் குறைந்துவிட்டது. </p><p>நல்ல திட்டமிடல் இருந்தும் போதிய பயன்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டம். பராமரிப்பு இல்லாததால் கோடிக்கணக்கில் கொட்டி கட்டப்பட்ட பிரமாண்டம் இப்போது சிதைந்து கொண்டு இருக்கிறது. சுகாதாரம், கழிவறை பராமரிப்பு இல்லாததால் சுற்றுச்சூழல் சீர்கேடும் அரங்கேறுகிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவியாபாரிகளின் வருமானம் கடுமையாக பாதித்து உள்ளது. </p><p>‘பஸ்களின் இரைச்சல் குறைந்தாலும், கோயம்பேட்டின் கதைகள் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.’</p><p>‘கோயம்பேடு என்பது வெறும் பஸ் நிலையமல்ல, ஒரு தலைமுறையின் பயண நினைவகம்’.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது - முதலமைச்சர் விஜய் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-arrested-in-delhi-cm-vijay-condemns#comments</comments><guid isPermaLink="false">f351c86b-3c68-4ac0-a539-5b7f5307e35c</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:29:32.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,நீட் தேர்வு,cm vijay,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mf9a2lsc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வு</a> குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.</p> <p>நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும்  வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.</p> <p>நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.</p> <p>நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுல், பிரியங்கா காந்தி கைதுக்கு எதிர்ப்பு- டெல்லியில் காங்கிரசார் போராட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-protest-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-protest-in-delhi#comments</comments><guid isPermaLink="false">41d485e1-a9b9-4512-9e60-00fb3a8bc42f</guid><pubDate>Wed, 22 Jul 2026 08:13:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T08:13:36.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,விஜய் வசந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ioztnm5j/vijayvasanth.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரசார் போராட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரசார் போராட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/ioztnm5j/vijayvasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</aside><h2><strong>மாணவர்கள் போராட்டம்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மோந்திர பிரதான் பதவி விலக கோரி நேற்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். </p><h2><strong>தடியடி</strong></h2><p>போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி பிரதமர் இல்லத்தின் முன்பு காங்கிரசார் நடத்திய தர்ணா போராட்டத்தின் போது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி  மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.</p><h2><strong>கைது</strong></h2><p>ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2><strong>விஜய் வசந்த்</strong></h2><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற குழு பொருளாளரும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்-வசந்த்">விஜய் வசந்த் </a>எம்பி  கலந்து கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sc-allows-cbi-probe-to-armstrong-murder-case#comments</comments><guid isPermaLink="false">c1df5443-f70a-48d9-ba6d-bab5c8c2dc0d</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:48:52 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:48:52.177Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Supreme Court,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங்,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு,Armstrong,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங்- உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3vlbb6wu/armstrong.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள்.</aside><p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.</p><h2><strong>அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பு</strong></h2><p>சென்னை பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பிரபல வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து மற்றவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.</p><p>இதைத்தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/ஆம்ஸ்ட்ராங்-கொலை-வழக்கு">ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை</a> சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்து ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து கடந்த தி.மு.க. ஆட்சியில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.</p><h2><strong>தடை நீங்கியது</strong></h2><p>சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தற்போதைய த.வெ.க. அரசு திரும்பப் பெற்றது. </p><p>இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. </p><h2><strong>சிபிஐ விசாரணைக்கு அனுமதி</strong></h2><p>மேலும், முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளித்தது. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது  சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட இருக்கிறார்கள். இது தொடர்பான ஆவணங்களை செம்பியம் போலீசாரிடம் இருந்து பெற்று இந்த வழக்கில் முழு பின்னணி குறித்தும் விசாரிக்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-take-measures-to-curb-the-rise-in-rice-prices#comments</comments><guid isPermaLink="false">ae833238-8002-40f4-ab75-2add832ca391</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:34:59 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:34:59.520Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,அரிசி விலை உயர்வு,Rice Price Hike</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/hbvl8yum/rice0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>தமிழ்நாட்டில் கடந்த 15  நாள்களுக்கு முன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">அரிசி விலை</a> கிலோவுக்கு  ரூ.15 வரை உயர்ந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் கிலோவுக்கு  ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை  கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>இரு நாள்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.52க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike">பொன்னி அரிசி</a> விலை  இப்போது ரூ.8 விலை உயர்ந்து ரூ.60 ஆகியுள்ளது. மைசூர் பொன்னி, ஆந்திரா பொன்னி ஆகிய அரிசி வகைகளின்  விலை 50 ரூபாயிலிருந்து ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. சன்னரக அரிசி விலை  ரூ.64-லிருந்து ரூ.75 ஆக உயர்ந்திருக்கிறது. இட்லி அரிசி விலை கிலோ ரூ.43-லிருந்து ரூ.50 ஆக அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டை லை ரூ.250 முதல் ரூ.400 வரை உயர்ந்திருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>மக்கள் பாதிக்கப்படக் கூடாது</strong></h2><p>பருவமழை பெய்யாததால் காவிரி பாசன மாவட்டங்களில் கோடை மற்றும் குறுவை பருவ சாகுபடி குறைந்தது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களிலும் நெல் அமோகமாக விளைந்ததாலும்,  நடப்பாண்டில் குறுவை பருவம் இன்னும் முடிவடையாததாலும் இந்த காரணத்தை ஏற்க முடியவில்லை.</p><p>அடுத்த சில மாதங்களில் அரிசி வரத்து குறையும் என்பதை  எதிர்பார்த்து வணிகர்கள் செயற்கையாக விலையை உயர்த்தியிருப்பதாகவே உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. காரணம் என்னவாக இருந்தாலும் அரிசி விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக் கூடாது.</p><h2><strong>மத்திய அரசு</strong></h2><p>அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு  தடை விதிக்க வேண்டும்;  மொத்த வணிகர்களின் அரிசி கையிருப்புக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தையில் அரிசியின் புழக்கத்தை அதிகரித்து விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அதேபோல், மாநில அரசும் அதன் பங்குக்கு  விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள், மொத்த வணிகர்கள் ஆகியோரிடம் உள்ள அரிசியில் 20 விழுக்காட்டை அடக்க விலைக்கு அரசே கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள், கூட்டுறவு விற்பனை அங்காடிகள் ஆகியவற்றின் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வர வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ips-officers-transferred-in-tamil-nadu-2#comments</comments><guid isPermaLink="false">397bd551-542b-4713-b656-5e32645c8148</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:22:18 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:22:18.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,IPS Officers Transferred</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Government]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/07/14/15690241-tn.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த  நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். </p><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழக அரசின்</a> உள்துறை செயலாளர்  மணிவாசன் பிறப்பித்த உத்தரவில்,</p><p>* தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணி செய்து வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>* திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம்.</p> <p>* சென்னை குற்றப்பிரிவு  மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம்.</p><p>*  ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p> இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தை குப்பைத் தொட்டியாக்கும் கேரளம்- டிடிவி தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-kerala-turning-tamil-nadu-into-a-garbage-bin#comments</comments><guid isPermaLink="false">ce7f5532-2fda-475b-9dd4-2d6955096f01</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:07:56 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:07:56.100Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,மருத்துவ கழிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/eagrz31n/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் கேரளத்தின் போக்கை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மருத்துவ கழிவுகள்</strong></h2><p>தென்காசி மாவட்டம், கடையம் அருகே விளைநிலங்களுக்கு அருகே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 டன் அளவிலான மருத்துவக் கழிவுகள் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>கேரள மாநிலத்திலிருந்து கனரக வாகனங்களில் கொண்டு வரப்பட்டு ஜம்பு நதிப் படுகையையொட்டி கொட்டப்பட்டுள்ள காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட கை உறைகள் மற்றும் பிற உயிரி மருத்துவக் கழிவுகள் விவசாய நிலங்களின் வளத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீர் மாசுபடவும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.</p><h2><strong>மெத்தனம்</strong></h2><p>அண்டை மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும், தமிழகத்தை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளைத் தடுக்கத் தவறியுள்ள தவெக அரசின் அலட்சியமும் மெத்தனமும் கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</strong></h2><p>தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது அரசு தெரிவித்து வரும் நிலையில், இத்தனை பெரிய அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்குப் படாமல் தமிழக எல்லைக்குள் நுழைந்தது எப்படி?</p><h2><strong>தீவிர சோதனை</strong></h2><p>எனவே, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றவர்களை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தீவிர சோதனை முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime">தவெக</a> அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/students-arrested-protest-demand-cancellation-of-neet-exam#comments</comments><guid isPermaLink="false">b5a70378-db4c-4c99-a115-4d74449b12d4</guid><pubDate>Wed, 22 Jul 2026 07:02:26 +0000</pubDate><atom:updated>2026-07-22T07:02:26.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,நீட் தேர்வு,Neet exam,Students Arrested,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Students Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/3pclnfqe/students.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழும்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். </p> <p>இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.</p><p>டெல்லியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems"> 'நீட்' தேர்வு</a>க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். </p> <p>சென்னை தி.நகரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் தேர்வை</a> ரத்து செய்யக்கோரி 3-வது நாளாக தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னை எழும்பூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.</p> <p>இதேபோல், திருவொற்றியூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  மேலும், சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.</p><p>கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>அரிசி விலை கிடுகிடு உயர்வு- பொன்னி அரிசி கிலோ ரூ.80-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponni-rice-price-hike#comments</comments><guid isPermaLink="false">440f6e5c-0c51-4177-86a2-34d8bbd159e5</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:48:53 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:48:53.694Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அரிசி,Rice,rice price,அரிசி விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5qsf8on2/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</aside><p>தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் கடைகளில் விற்கும் பொன்னி அரிசி வகைகளை விரும்பி வாங்குகின்றனர்.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் கடந்த 2 வாரமாக <a href="https://www.maalaimalar.com/topic/அரிசி-விலை-உயர்வு">அரிசி விலை</a> கிடுகிடு என உயர்ந்து வருகிறது. கிலோ 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி அரிசி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 10 ரூபாய் விலை ஏறி, ரூ.65 க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த அரிசி விலை மேலும் 15 ரூபாய் உயர்ந்து இப்போது கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.</p><p>25 கிலோ கொண்ட ஒரு சிப்பம் அரிசி 350 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு விலை உயர்ந்து விட்டது. இப்போது இரண்டாவது முறையாக 50 ரூபாயாக இட்லி அரிசி விலை உயர்ந்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் நெல் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.</p><p>இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அரிசி லோடு வருவது அங்கிருந்து வெகுவாக குறைந்துவிட்டது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க கர்நாடகா மாநில வியாபாரிகள் தமிழகத்தில் விளைவிக்கப்படும் நாட்டு பொன்னி ரகத்தை கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நாட்டுப் பொன்னி அரிசி இப்போது ரூ.85-க்கு விற்கப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள வறட்சி, நெல் உற்பத்தியை வெகுவாக பாதித்துவிட்டது. கர்நாடக மாநிலத்தில் விளைச்சல் குறைந்ததால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் கவலை தருவதாக உள்ளது.</p><h2><strong>உற்பத்தி குறைவு</strong></h2><p>இந்த சூழ்நிலையில் தமிழகத்திலும் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த கோடை சாகுபடியில் ஒரு லட்சத்து 88 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 88 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் ஆகி உள்ளது. இது தவிர ஆற்றுப் பாசனத்தில் குறுவை சாகுபடி நடைபெறாத நிலையில் தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தாலும் அரசு நிர்ணயித்த ஒரு லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியானது இந்த ஆண்டு 60,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>பொதுமக்கள் பாதிப்பு</strong></h2><p>அதிலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் மகசூல் குறையும் அபாயம் உள்ளது. எனவே வறட்சி காரணமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பின்னடைவு அரிசி விலை கடுமையாக உயர்வதற்கான காரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-says-people-will-view-him-as-a-hero-only-if-he-does-what-vijay-said#comments</comments><guid isPermaLink="false">e092bc02-419c-4238-87f2-7214e521bb7a</guid><pubDate>Wed, 22 Jul 2026 06:08:11 +0000</pubDate><atom:updated>2026-07-22T06:08:11.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mas6ylv5/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>காணிக்கை</strong></h2><p>திருத்தணி முருகன் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவர் வெள்ளிவேலை காணிக்கையாக செலுத்தினார். </p><p>முன்னதாக <a href="https://www.maalaimalar.com/topic/பிரேமலதா-விஜயகாந்த்">பிரேமலதா விஜயகாந்த்</a> கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். தொடர்ந்து அவர் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>தப்ப முடியாது</strong></h2><p>தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகரிடம் இருந்து தப்ப முடியாது. </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும். </p> <p>நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க விஜய் சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும்  கண்துடைப்பாய் போய்விடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு - பன்னாட்டு நிறுவனங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies#comments</comments><guid isPermaLink="false">a62224b9-de44-451e-8857-7669e074706c</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:59:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:59:38.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,விஐடி பல்கலைக்கழகம்,MoU,VIT,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேலூர் விஐடியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட துணை தலைவர் சேகர் விசுவநாதன்.]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</strong></em></p><h2>விஐடி மாணவர்கள்</h2><p>இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்ய உள்ளன. </p><h2>தின்குவேட் முதலீட்டு நிறுவனம்</h2><p>சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும் முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது. டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும். இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும். </p> <p>ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.</p><h2>வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம்</h2><p>அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.</p> <h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.</p><p>நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement#comments</comments><guid isPermaLink="false">19b2501a-a558-449a-bea8-117154d02c1a</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:38:37.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்,பழனி கோவில் நில மோசடி,Pazhani land scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.</p><p>சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">அறநிலையத் துறை</a>யின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.</p><p>அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.</p><p>இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. </p><p>எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">த.வெ.க</a>. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed#comments</comments><guid isPermaLink="false">630172bd-c140-410f-bbd0-8f4dcb0358f6</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:35:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கனிமவள கொள்ளை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக்  கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும்  தேசிய நெடுஞ்சாலை 66-இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.</p><p>இந்தியாவிற்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. போக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட்பாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக்கொள்ளையும் காரணமாக இருந்தது.</p><h2><strong>புதிய அரசு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள்  கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.</p><h2><strong>ஆய்வு குறைவு</strong></h2><p>கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்து விட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><h2><strong>தென்காசி மாவட்டங்களில்</strong></h2><p>அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் கேரளத்திற்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.</p><p>தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய தடை இன்று வரை விதிக்கப்படவில்லை. அண்மையில் கூட, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை.</p><h2><strong>சட்டவிரோத குவாரிகள்</strong></h2><p>தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல. அதற்குத் தேவை அரசியல் துணிச்சல் தான். கனிமக் கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.- இரண்டாம் கட்டமாக, தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்; இதன் முலம் கனிமக் கடத்தல் குறையும். அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல் மூட வேண்டும்.</p><h2><strong>தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>நான்காவதாக,  சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை  கைவிட வேண்டும்; மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தை மதிப்பை விட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன், குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த காட்பாதர்களும், மாஃபியாக்களும் தான் கனிமக் கடத்தலுக்கு துணையாக இருந்தன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid#comments</comments><guid isPermaLink="false">14417e43-f0b3-461d-abde-a0ef69ede072</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:13:17.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarivarman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகர்கோவில் சிறையில் கைதி மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 34) மாற்று திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர். கடந்த 13-ந்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் இறந்தார்.</p> <p>இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</p> <p>இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிவர்மனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.</p><p>சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டு உள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் கைதிகள் 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.</p> <p>இந்நிலையில் சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை நேசமணிநகர்  போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: &apos;ரெயில் ஒன்&apos; செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31#comments</comments><guid isPermaLink="false">a069eb8b-809a-4d23-95fa-8043462681b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:37:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:37:07.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பயணிகள்,Rail One,Rail One App,ரெயில் ஒன் செயலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ரெயில் ஒன்</strong></h2><p>ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். </p><p>மேலும், ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.</p><h2><strong>சலுகை</strong></h2><p>ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் 6 மாதத்திற்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.</p><h2><strong>3 சதவீத தள்ளுபடி</strong></h2><p>இந்தநிலையில், இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெயில் ஒன் செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும். </p><p>இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/ரெயில்-பயணிகள்">பயணிகள்</a> ரெயில் ஒன் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems#comments</comments><guid isPermaLink="false">131377f1-f50e-47c7-b1eb-6db8532d5444</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:20:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:20:07.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,நீட் தேர்வு,Neet exam,முக ஸ்டாலின்,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், '<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">நீட்</a>' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p> <p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">உதயநிதி</a> கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.</p><p>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</p> <p>* நீட் ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation#comments</comments><guid isPermaLink="false">b29448bf-412c-4327-819b-c136a44e0629</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:12:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:12:49.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaganga,கீழடி அகழாய்வு பணிகள்,Keeladi Excavation,TNSDA,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi Excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங்க கால நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றி வரும் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மை முறைகள் மற்றும் ஒரு புதிய சுதந்திரமான தொழிற்கூடத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மேற்கொண்ட இந்த அகழாய்வில், பல அபூர்வமான தொல்பொருட்களும் ஒரே குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டது தொல்லியலாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்தச் சங்க கால இடத்தில் அகழாய்வுப் பணிகளைப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முறையாக பண்டைய மனிதர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் விரிவான செங்கல் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்த முதன்மைப் பகுதியிலிருந்து தனித்து நிற்கிறது.</p><h2><strong>புதிய தொழிற்கூடத்திற்கான சான்றுகள்:</strong></h2><p>கடந்த 10 கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட கட்டிட அமைப்புகளின் தொடர்ச்சி இதில் காணப்பட்டாலும், 11-ஆம் கட்டத்தில் தோண்டப்பட்ட குழிகள் கீழடி மக்களின் ஒரு 'புதிய தொழிற்கூடத்தை' வெளிப்படுத்துகின்றன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.</p><p>2014 முதல் அகழாய்வு நடைபெற்று வந்த முதன்மைப் பகுதிக்குத் தெற்கே, 2026 மார்ச் மாதம் முதல் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. TNSDA அகழாய்வைக் கைப்பற்றிய 2017-க்குப் பிறகு, தோண்டப்பட்ட அனைத்துக் நான்கு பிரிவுகளிலுமே கட்டிட அமைப்புகளுக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.</p><h2><strong>அகழாய்வு இயக்குநர் விளக்கம்:</strong></h2><p> "பழைய குழிகளுக்கும் புதிய குழிகளுக்கும் இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன. இது இதுவொரு சுதந்திரமாக இயங்கிய தொழிற்கூடப் பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டியிருந்தாலும், இதுவும் கீழடியின் ஓர் தொழிற்பகுதியே என்று நாம் உறுதியாக முடிவுக்கு வரலாம்" என்று கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ் மாசேத்துங் கூறியுள்ளார்.</p><p>மேலும் 7 முதல் 9 குழிகளைத் தோண்டுவதற்குப் பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் கூடுதல் தொல்பொருட்களைக் கண்டெடுத்து, பண்டைய மனிதர்களின் விந்தைகளை மேலும் வெளிக்கொணரலாம் என்று தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.</p><h2><strong>நீர் மேலாண்மையில் தமிழர்களின் தொழில்நுட்பம்:</strong></h2><p>ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது கீழடி அகழாய்வு வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். மூடப்பட்ட கால்வாய், நேர்த்தியாகப் பொருத்தப்பட்ட சுடுமண் குழாய் மற்றும் சுருள் வடிவிலான குழாய் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. </p><p>தொழிலகத் தேவைகளுக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் பண்டைய தமிழர்கள் கையாண்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், அவர்களின் நகரமைப்பையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்துகிறது.</p><h2><strong>1,300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்:</strong></h2><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்கு கண்டெடுக்கப்பட்ட வெள்ளி முத்திரைக் காசுகள், பரந்த செங்கல் அமைப்புகள் மற்றும் குடியிருப்பின் பிரம்மாண்டமான அளவு ஆகியவை தென்னிந்தியாவில் பண்டைய நகர்ப்புற நாகரிகம் இல்லை என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளன. </p><p>சூரியன், பிறை மற்றும் காளை குறியீடுகள் கொண்ட இந்த முத்திரைக் காசுகளும், சூட மணி மற்றும் அகேட் மணிகளும் கீழடி மக்களுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே இருந்த வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.</p><p> "கீழடியில் அடையாளம் காணப்பட்ட 110 ஏக்கர் பரப்பளவில் இதுவரை 2 சதவீதம் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிப்பட்டுள்ள பகுதி ஒரு தொழிற்பகுதியாகும். இங்கு கைவினைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரிவு மக்களும் வாழ்ந்துள்ளனர். தற்போது குடியிருப்பின் மற்றொரு பகுதி வெளிப்பட்டு வருகிறது, ஆனால் பண்பாட்டு மற்றும் மண்பாண்ட வரிசைகளில் எந்த மாற்றமும் இல்லை." என TNSDA-வின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable#comments</comments><guid isPermaLink="false">e304f00c-5c9d-4469-99ff-20689993bb60</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:47:54.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று  அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜூனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.</p> <p>அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p>அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg">பிரியங்கா காந்தி</a> அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். </p> <p>மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</p><p>அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p> <p>நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays#comments</comments><guid isPermaLink="false">17db2fd0-85e3-44f9-bfc2-bb776d17dd23</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:29:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:29:15.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 24 (வெள்ளிக்கிழமை) மற்றும் 25 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 25-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 25-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதாவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>அறிவுறுத்தல்</strong></h2><p>வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணங்களை முன்னரே திட்டமிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31#comments</comments><guid isPermaLink="false">bb0fe696-1890-43f3-b29f-4ae83e0d7d9e</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:14:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:14:38.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>அயப்பாக்கம்</strong></h2><p>ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பட்டு, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.</p><h2><strong>பாரிவாக்கம்</strong></h2><p>அணைகட்டுசேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருகோவில்பத்து.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், நாராயணபுரம், வி.ஜி.பி. ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம். சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட்.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி சாலை, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி தெரு.</p><h2><strong>கவுரிவாக்கம்</strong></h2><p>சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர், வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஐ.வி.டி. கல்லூரி.</p><h2><strong>கே.கே. நகர்</strong></h2><p>கன்னிகாபுரம் 1-வது முதல் 3-வது தெரு வரை, விஜயராகவபுரம் 1-வது முதல் 5-வது தெரு வரை மற்றும் குறுக்குத் தெரு, பீரான்சாஹிப் தெரு, ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏ.வி.எம். அஸ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கபெல்லா, குமரன் காலனி பிரதான சாலை, சாலிகிராமம், 80 அடி சாலை, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை, 14-வது மற்றும் 15-வது செக்டர், கே.கே. நகர் 94-வது முதல் 104-வது தெரு வரை, எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி. லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகப்பாளையம்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பெங்களூர் நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பிலிருந்து ஓட்டல் நெடுஞ்சாலை வரை.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பூந்தமல்லி புற வழிச்சாலை, அம்பாள் நகர், ஆவடி சாலை, சென்னீர்குப்பம், மேட்டு தெரு.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், எப்.சி.ஐ. நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர் 1-வது முதல் 6-வது தெருக்கள் வரை, பாம்பன் சாமிகள் சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வைத்தியலிங்கம் சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், சர்மா நகர், முனியாத்தி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப் அவென்யூ, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், பாரதி நகர், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ராஜாஜி நகர், சக்தி நகர், சஞ்சய் காந்தி நகர், நார்த் செயின்ட் மேரிஸ் சாலை, பி.வி. ஆச்சாரியா தெரு, சரோஜினி தெரு, ஜவாது உசேன் தெரு, சுந்தரேசன் தெரு, எத்திராஜ் தெரு, சாலமன் தெரு.</p>]]></content:encoded></item><item><title>போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet#comments</comments><guid isPermaLink="false">91442214-ee55-44a5-8277-59db325e174b</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:01:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:01:07.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2>நீட் தேர்வில் குளறுபடி</h2><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p><h2>தர்ணா போராட்டம்</h2><p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.</p><p>இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>#<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP</a> முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.</p> <p>ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள  வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues#comments</comments><guid isPermaLink="false">9c7c11b0-75f9-4bb7-9a9c-6c44aa6801bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:53:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:53:45.696Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,NeetExam,நீட் ஊழல்,tvk,முதலமைச்சர் விஜய்,சிஜேபி,CJPProtest,தமிழக வெற்றிக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief minister vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>ஜனநாயக உரிமை மீதான அப்பட்டமானத் தாக்குதல்:</strong></h2><p>நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தவெக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட செயல் ஜனநாயக அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதும் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்." என தமிழக வெற்றிக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><h2><strong>நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:</strong></h2><p>அறிக்கையின் மற்றொரு முக்கிய பகுதியாக, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு நடைமுறை குறித்தும் தவெக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை:</strong></h2><p>நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே, அத்தேர்வின் மீதான பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.</p><p>நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாகக் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>அரசியல் களத்தில் எதிரொலி:</strong></h2><p>நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லிப் போராட்டம் தொடர்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த திடீர் மற்றும் காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi#comments</comments><guid isPermaLink="false">26ea6114-53be-4a5c-b164-006fe547a473</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:13:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:13:49.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்,SFI,இந்திய மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SFI Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/sfi">இந்திய மாணவர் சங்கம்</a> மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>போராட்டம்:</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை மேற்கொண்ட "தன்னிச்சையான" கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த தேசிய தகுதி தேர்வை ரத்து செய்ய கோரியும் இந்திய மாணவர் சங்க (SFI) உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> நடத்தினர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவை வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>தங்கபாலு கண்டனம்:</strong></p><p>மத்திய அரசின் சர்வாதிகார போக்கு மற்றும் ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் என கூறப்படுபவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டித்தார்.</p><p>டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று அவர் விமர்சித்தார். மேலும், இந்த தேசிய பிரச்சினையை கையாண்ட விதம் குறித்து மத்திய அரசு மற்றும் காவல்துறையை அவர் குறை கூறினார்.</p><p>குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதி மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசின் கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், லோக் பவனை முற்றுகையிடும் போராட்ட பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் என்று தங்கபாலு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:07:11.371Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay">தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview">சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity">CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced">உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir">பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board#comments</comments><guid isPermaLink="false">1a70fe52-f8de-41af-9213-0b437c27b2f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:55:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:55:47.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தவெக அரசு,TVK Govt,Tamil Nadu Housing Board</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனம் போடப்பட்டுள்ளது. நியமனத்திற்கான அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, வி. சிவா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.</p><p>முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும், தவெகவின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியதிலும் வி. சிவா முக்கியப் பங்காற்றியுள்ளார்.  </p><p>விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், இவர்தான் அங்கு தேர்தலில் நின்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5d9ff185-cc58-4f78-b281-99298c9016ae</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:44:00.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Secretariat,CMVIJAY,AadhavArjuna,NEETProtest,TherukuralArivu,பாடகர்அறிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay - SingerArivu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாகப் பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் போராட்டம்</strong></h2><p>இன்று பிற்பகல் சுமார் 12:30 மணியளவில் பாடகர் அறிவு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றார். "நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இதுகுறித்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்" எனப் பலத்த கோஷங்களை எழுப்பினார்.</p><h2><strong>போலீசார் நடவடிக்கை:</strong></h2><p>அனுமதியின்றித் தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். </p><p>இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்த பாடகர் அறிவைக் காவல்துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>'கைதான அறிவை கூட்டிட்டு வாங்க" - முதல்வர் விஜய் உத்தரவு</strong></h2><p>பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாருங்கள்" என முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று, அறிவை ஏற்றிச் செல்லப்பட்ட அதே போலீஸ் வாகனத்திலேயே அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பினார்.</p><p>தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>போராட முயன்ற கலைஞர் ஒருவரைத் தடுத்துக் கைது செய்யாமல், உடனே நேரில் அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் தற்போதைய டிரெண்டிங் டாபிக்காக மாறி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview#comments</comments><guid isPermaLink="false">fcd96713-5959-4a7b-ac6b-5ed7f8ba9c9b</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:29:54.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சிறை,Kanimozhi,கனிமொழி,Prison</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. </p><p>தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. </p><h2>3 பிரிவுகளில் வழக்கு</h2><p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார். </p><p>அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><p>புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். அதன்பின், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது.</p><p>திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர்.</p><p>புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர்.</p><p>ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு.</p><p>எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை.</p><p>பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது.</p><p>கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது.</p><p>அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement#comments</comments><guid isPermaLink="false">9f977a06-013c-4c60-ba1d-c5a70a27cbc3</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:15:24.194Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Neet exam,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் தவெக தெரவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ளப் பதிவில்,</p><p>“நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><p>மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">2b3c9456-9f7a-4667-99b1-ee3d66a6b37a</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:36:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:36:26.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Cauvery,Government of Tamil Nadu,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதனை எடுத்துரைத்து, தமிழ்நாடு உரிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,</p><p>“கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60  டி.எம்.சியாக  உயர்ந்திருக்கிறது. </p><p>நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி நடுவர் மன்றம்  மற்றும்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். </p><p>ஆனால்,  கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.</p><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி  74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்துவிட்டது.  காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும்  காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்  அது தமிழ்நாடு உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும்  0.8  டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத்  தொடங்கியிருப்பதையும்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி: தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai#comments</comments><guid isPermaLink="false">274d9b12-f5a8-4a1a-aad5-3a72bffbb7e0</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:29:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:29:20.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.</aside><h2><strong>குறைந்த விலைக்கு தங்கம்</strong></h2><p>சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். </p><p>கடந்த 17-ந்தேதி, நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து, குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார்.</p><p>இதனையடுத்து, தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார். </p><h2><strong>ரூ.63 லட்சம்</strong> </h2><p>அப்போது, குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார். சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும், பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.</p><p>இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை  அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி, “மேலே சென்று பணத்தை வைத்து விட்டு, தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன்” எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.</p><p>சிறிது நேரத்தில், சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி, அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார்.</p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் <a href="https://www.maalaimalar.com/topic/பண-மோசடி">அதிர்ச்சி </a>அடைந்தார்.</p><p>மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது பற்றி  தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம் குமார் மற்றும் உதய்கிரண் ஆகிய 4  பேரை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p> முக்கிய குற்றவாளியான சக்தி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">22ca4b6f-e21d-490c-97b1-21986fa09622</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:22:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:22:43.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Anticipatory bail,சிபிசிஐடி,முன்ஜாமின்,பழனி கோயில்,Palani temple land fraud,Madurai Bench of HC,CB-CID</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். </p><p>இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது. </p><h2>வழக்கின் பின்னணி </h2><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.</p><p>இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார். </p><p>சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். </p><p>இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு நர்சுகள் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex#comments</comments><guid isPermaLink="false">2e226919-ca2b-48ca-9265-a7ea0e1eba02</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:06:48.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,நர்சுகள் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.</aside><h2><strong>பல்வேறு கட்ட போராட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாடு நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/நர்சுகள்-போராட்டம்">போராட்டங்கள்</a> நடந்து வருகின்றன. </p><p>அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் இன்று காலை 7 மணிக்கு  திரண்டனர்.  </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்களை போலீசார் டி. எம். எஸ். வளாகத்திற்குள் ஒரு பகுதியில் முடக்கி வைத்தனர். போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் 7 மணிக்கெல்லாம் அவர்களை போலீசார் வெளியே விடாமல் வளாகத்திற்குள் வைத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2><strong>கோஷங்கள்</strong></h2><p>த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து நர்சுகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். </p><p>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர். </p><p>இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி சுர்ஜித் கூறியதாவது:-  </p><h2><strong>நல்ல தீர்வு</strong></h2><p>6500 செவிலியர்கள் கடந்த 9 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. அவற்றை நிரப்பாமல் காலி பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மாறாக பணியிடங்களை குறைப்பது நிரந்தரமாக்கப்படும் என்ற செவிலியரின்  கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். </p><p>எனவே செவிலியர்களுக்கு எதிராக மீள் பணி அமர்வு முடிவினை அரசு கைவிட வேண்டும். கடந்த ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் சென்றது போல இந்த அரசு செயல்பட வேண்டாம். முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை விரைவில் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">bf9f4b4c-3e24-4d3e-9ce0-a9d94db7a6f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:46:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:46:05.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 23-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item></channel></rss>