<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 25 Aug 2026 09:54:00 +0000</lastBuildDate><item><title>அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-7</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-7#comments</comments><guid isPermaLink="false">c7892b8d-717c-4bff-bad1-fc215556e9e6</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:00:27.587Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,rice price,TTTV Dhinakaran,sugar price,சர்க்கரை விலை,அரிசி விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/wt94xm4l/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/wt94xm4l/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, <a href="https://www.maalaimalar.com/topic/சர்க்கரை-விலை">சர்க்கரை</a>, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.</p><p>இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.</p><p>மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50 % வரையிலும், அரிசியின் விலை 40 % வரையிலும், எண்ணெயின் விலை 60 வ% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes#comments</comments><guid isPermaLink="false">e4b69390-252c-4c05-9082-c4aaf8ec94d2</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:44:46.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,ஓணம் பண்டிகை,onam festival,மகாபலி,mapali</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை ஓணம் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign">எடப்பாடி பழனிசாமி</a>:-</p><p>பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">திருஓணம்</a> திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த  `ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார்.  அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை  வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று  ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.   </p> <p>ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:20:52.077Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். </p><p>மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா</p><p>சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்</p><p>எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி</p><p>பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா</p><p>தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்</p><p>சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> ]]></content:encoded></item><item><title>வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன்  கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops#comments</comments><guid isPermaLink="false">828c54e2-3a4f-4f9a-a7e5-83a5e955129e</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:02:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:02:44.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல்  ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80  என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து  தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.</p><p>எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில்,  வாகன எரிபொருளில்  அதிக அளவில் எத்தனால் கலப்பதை  மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும்,  அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட  மொலாசஸ் எனப்படும்  கரும்பு வெல்லப்பாகு  உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதில்  ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.</p><p>ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில்  58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில்  வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில்  2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த  சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு  அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில்  கரும்பின் கொள்முதல் விலை  உயர்த்தப்படாததும் தான்.  இந்த நிலை மாற்றப்பட்டு  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.</p><p>ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu">சர்க்கரை</a> ஆலைகளுக்கு  ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு  ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.</p><p>ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை  ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383  தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம்  ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.</p><p>இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை  குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி  6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur#comments</comments><guid isPermaLink="false">1739b048-2edd-40f4-a240-8ff068c244e6</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:22:13.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழ்நாடு சட்டசபை,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.- த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். </p><p>அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly">பரந்தூரில்</a> கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும். 1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு.</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும். நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார். </p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,</p><p>விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில  அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை- லாட்டரி மருமகன்: காரசார விவாதத்தை ஏற்படுத்திய பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">24bf06ea-7735-400a-af17-2815def7a06c</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:45:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், நாகர்கோவிலில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம், அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கவில்லை. த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது?. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் என பேசினார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று சொன்னார், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று. எங்களுடைய தலைவரின் முதல் பிரசாரம், காலடி பட்டது விவசாயிகளின் கண்ணீருக்காக. விவசாயத்திற்காக குரல் கொடுப்போம், டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என சொல்லக்கூடியவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக, பரந்தூர் மட்டுமல்ல திருவண்ணாமலையில் மேல்மா விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களுடைய குரலுக்கு பேசியது இல்லை. நேற்றே தெளிவா சொல்லியாச்சு, சென்னை விமான நிலையத்தின் இன்றைய பங்கு என்ன? அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சொல்லியாச்சு. </p><p>ஆனால் நேற்றில் இருந்து தி.மு.க. இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழகத்தின் முதலீடே போய் விடும் என்று சொல்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான், அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பே தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காக மட்டுமே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களோட 10 மடங்கு பொருளாதார இங்கு வந்து இருக்கும். ஏன் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியே எங்கள் முதலமைச்சர் கொடுப்பார் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டார். அதற்கு எந்தவிதமான மாற்றுகருத்தும் கிடையாது. அதற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறி 90 சதவீத நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையும் கொடுத்தாச்சு. கையப்படுத்திய நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? விவசாயிகளுக்கு கொடுக்கப்போறீங்களா? என்பது குறித்து அரசின் விளக்கம் தேவை என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், </p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. பட்டா நிலங்கள் 3,774. 3 போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது. 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது.  சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றார். </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க உள்ளீர்கள் என்று நான் கேட்கட்டுமா? என்றார்.</p><p>இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>இதையடுத்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் அமைத்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போது பிரச்சனை ஏற்படும். மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி 2-வது ரன்வே வரும்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து மக்களை பாதிக்காத வகையில் திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தும் சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். </p><p>இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் தினத்தந்தியைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f1eb2d5d-b8f8-4eec-8454-ac8070fc4593</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:32:39.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Daily Thanthi,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,தினத்தந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்த தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல். 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை என தனியார் பத்திரிகை ஒன்றை குறிப்பிட்டார் அமைச்சர் கீர்த்தனா.</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது என திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் என்றார்.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா என அதிமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகைகூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign#comments</comments><guid isPermaLink="false">15360cbe-9298-43cf-9955-91ea9fafef9f</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:57:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:57:09.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,Sengottaiyan,TN assembly,ADMK mlas resign</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><p>எடப்பாடி ஆவேசம்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக சட்டசபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>ஆஸ்டின் கேள்வி</h2><p>இதில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்தார்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் என்றார்.</p><p>அப்போது எழுந்த உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? என கேஎன். நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் என்றார் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? என கேள்வி எழுப்பினார்.</p><h2>செங்கோட்டையன் பதில்</h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><h2>எடப்பாடி ஆவேசம்</h2><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணின் தலையை சிதைத்து ரெயிலில் இருந்து வீசினார்களா?- தலைமறைவு தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">a781be19-9485-445f-8f30-3687059b2d9b</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:46:42.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Murder,கொலை,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.</p><p>இதுபற்றி அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சென்னையில் இருந்து பெண்ணை கொன்று கொலை செய்து சூட்கேசில் அனுப்பி வைத்த தால் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.</p><h2><strong>வீடியோ காட்சிகள்</strong></h2><p>சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரியில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த அசாமை சேர்ந்த ராகுல், ஒடிசாவை சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல்-பகவதி மாஜி தம்பதியை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>தப்பி ஓட்டம்</strong></h2><p>இது தொடர்பாக அசாம் மற்றும் ஒடிசாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்து சென்று உள்ளன. சென்னையில் 2 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீடியோ காட்சி வெளியில் வந்ததும் தம்பதி உஷாராகி தங்களது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதை தொடர்ந்து தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக இருவரையும் பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlaon5ef/andaa.jpg" /></figure><h2><strong>தலை எங்கே?</strong></h2><p>இதற்கிடையே கொலையுண்ட பெண்ணின் தலை இன்னும் சிக்காமல் உள்ளது. கொலையாளிகள் இருவரும் ஹயாத் நிஷாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் சதை பாகங்கள் பெரிய அண்டாவில் போட்டு சமைத்ததும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெண்ணின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டி எடுத்த தம்பதி துண்டிக்கப்பட்ட தலையை எங்கு வீசினார்கள் என்பதும் தெரியவில்லை.</p><h2><strong>சிதைத்தார்களா?</strong></h2><p>உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்துவிட்டு தலையை துண்டித்த தம்பதி அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்கு நூறாக சிதைத்து தனித்தனியாக வீசி இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் அடைத்து எடுத்து வந்த போது தலையையும் தனியாக ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது ரெயிலில் இருந்தபடியே தலை இருந்த பையை மட்டும் தண்டவாளம் மூலமாக வீசி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2><strong>3 வாரம் தேடுதல்</strong></h2><p>கடந்த 5-ந்தேதி ஆக்ராவில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாளே அங்குள்ள போலீசார் சென்னை வந்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுவிட்டனர். அன்று முதல் பெண்ணின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 வாரங்களாக ஹயாத் நிஷாவின் தலையை தேடி அலையும் போலீசார் அதனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.</p><h2><strong>உயர் போலீஸ் அதிகாரிகள்</strong></h2><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் எப்படி துப்பு துலக்கி கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அசாம் மற்றும் ஒடிசா</strong></h2><p>அசாம் மற்றும் ஒடிசாவில் கொலையாளிகளின் உறவினர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார் அவர்கள் மூலமாக தம்பதி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service#comments</comments><guid isPermaLink="false">0fc5818d-4886-4fc7-8525-00bc3767cd09</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:28:54.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து  ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><p>அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><figure><img alt="ஏ.சி. மின்சாரப் பஸ்கள் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7wxivr7b/bus0.jpg" /><figcaption>ஏ.சி. மின்சாரப் பஸ்கள் </figcaption></figure><p>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. </p><p>அதனை தொடர்ந்து மின்சார பேருந்தில் ஏறி பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பஸ்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.55.58 கோடி மதிப்பில் 120 புதிய பஸ்களையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow">சென்னை</a> தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?: சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open#comments</comments><guid isPermaLink="false">aa9cd81a-e916-41c4-86e7-4290318ec9ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:17:34.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,தமிழக சட்டசபை,TN assembly,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் அமைச்சர் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் பேசும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா? என அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என்றார்.</p><h2>விரைவில் நல்ல செய்தி</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்ச ரும் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>இதுகுறித்து ஏற்கனவே அவையில் கவன ஈர்ப்பு கொடுத்துள்ளோம். ஏற்கனவே குறுவை சாகுபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சர் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை என சபையில் தெரிவித்தார். இப்போது அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீரும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>திறக்கப்படுமா?</h2><p>எனவே இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? அது எப்போது திறக்கப்படும்? திறப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டால்தான் நாற்றங்கால் வைக்கக் கூடிய பணி தொடங்கப்ப டும். எனவே நீர்வளத்துறை அமைச்சர் எப்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.</p><p>மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்ட சபையில் பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026#comments</comments><guid isPermaLink="false">aa630faa-c3c5-4af7-b8ab-79de69559284</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:05:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:05:44.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>கேப்டன் புகழ் நீடுவாழ்க!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-praise-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">48c6610c-a749-4768-90f6-e7da14f8ba68</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:52:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:52:15.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMDK,தேமுதிக,vijayakanth,முக ஸ்டாலின்,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/737hovcr/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விஜயகாந்தின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth">விஜயகாந்த்</a> பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் நீடுவாழ்க!</strong> </h2><p>ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!</p><p>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி </p><p>பிரேமலதாவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!<br><br>அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி… <a href="https://t.co/x2epVGxjgC">pic.twitter.com/x2epVGxjgC</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2092102624015495294?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-passes-tet-exam-exemption-resolution#comments</comments><guid isPermaLink="false">d0983fd4-5d1d-4ba4-ae08-070229f16a84</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:40:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:40:34.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெட் தேர்வு,TET Exam,தனித்தீர்மானம்,TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/10bt3k6y/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">தனித்தீர்மானம்</a> ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள், தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும், டிஜிட்டல் சேவைகள் ஆகிய 3 துறைகள் தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. </p><h2>தனித்தீர்மானம்</h2><p>முன்னதாக, சட்டசபை கூட்டம் தொடங்கியதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோருவது தொடர்பான  தனித்  தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அவர் பேசியதாவது:</p><p>ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்ல; அது மனித வளத்தை உருவாக்கி, சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஒரு உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத்திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறமைகளான, விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளது.</p><h2>ஆசிரியர் தகுதித்தேர்வு</h2><p>தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 23.08.2010-ம் தேதியிட்ட அறிவிக்கையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்குரிய ஒரு தகுதியாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p>ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக, குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித இடையூறும் இன்றி தங்களது பணியைச் சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.9.2025-ம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு (சிவில் அப்பீல்) சுப்ரீம் கோர்ட்டால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவினால், தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வினை பெற இயலும். </p><h2>பணி பாதுகாப்பு</h2><p>மேலும் தேர்ச்சி பெறவில்லையெனில் பணியிழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சீராய்வு மனுவின் மீதான 29.05.2026-ம் நாளிட்ட தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டால் ஆணையிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றிப் பணியாற்றி ஓய்வுபெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும். எனவே, இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்டகால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், தனித் தீர்மானம் முன்மொழியப்படுகிறது.</p><h2>நிரந்தர விலக்கு</h2><p>1. தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010-க்கு முன்பாக அன்றைய நடைமுறையில் இருந்த விதிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, அவர்களின் நீண்டகாலப் பணியனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><p>2. இதற்கேற்ப, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்டத்திருத்தம் மேற்கொண்டு, 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழியாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல், சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.</p><p>3. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப்பலன்கள் எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. </p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் வாசித்தார்.</p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தை ஆதரித்து எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.</p><p>தனித்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:</p><p>20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் தற்போதைய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெறுவது நடைமுறையில் கடினமானது  என்று ஆசிரியர்களின் நலன் கருதி தி.மு.க. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.</p><p>ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்போதைய சட்டச் சூழலில் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் தடைகளை நீக்க, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும், </p><p>மேலும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உரிமைகள், சலுகைகளைப் பெற்றுத் தரும் வகையில் ஒன்றிய அரசு புதிய சட்டங்களை இயற்றும் பட்சத்தில்,  தி.மு.க. எம்.பி.க்கள் அதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவார்கள் என தெரிவித்தார்.</p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது</p>]]></content:encoded></item><item><title>விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-vijayakanth#comments</comments><guid isPermaLink="false">08c3c32a-2a5a-4800-8ba3-9811aac69605</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:39:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:39:46.913Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,DMDK,தேமுதிக,vijayakanth,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜயகாந்த்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbtovj0b/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நடிகரும், தே.மு.தி.க. நிறுவனத் தலைவருமான மறைந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">விஜயகாந்தின்</a> 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரை அரசியல் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>புகழ் வணக்கங்கள்...</strong></h2><p>மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.</p><p>திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன்.<br><br>திரைத்துறையில்… <a href="https://t.co/hH9qLSXkbw">pic.twitter.com/hH9qLSXkbw</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092106246149271783?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் படுகொலை குறித்து தமிழக சட்டசபையில் கேள்வி எழுப்பிய உதயநிதி ஸ்டாலின்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-speech-in-tn-assembly-today#comments</comments><guid isPermaLink="false">3341242b-6bdb-4098-9003-023acb360b17</guid><pubDate>Tue, 25 Aug 2026 04:17:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T04:17:23.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,எதிர்க்கட்சி தலைவர்,TN assembly,opposite leader</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/0we3y0gw/udaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3 தமிழர்கள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.</p><p>அப்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:</p><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு சபாநாயகர், சட்டத்துறை அமைச்சர் நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்- கலெக்டர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collector-announced-tasmac-shops-tomorrow-closed-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collector-announced-tasmac-shops-tomorrow-closed-in-chennai#comments</comments><guid isPermaLink="false">1c212764-e9f3-4e48-8c0d-56798d4504df</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-25T03:21:17.662Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் கடைகள்,tasmac shops,chennai collector,சென்னை கலெக்டர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/tf3l7are/tasmac.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டாஸ்மாக் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/tf3l7are/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மிலாது நபி திருநாளை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.</strong></em></p><p>சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>"மிலாது நபியை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து <a href="https://www.maalaimalar.com/topic/டாஸ்மாக்-கடைகள்">டாஸ்மாக் கடைகள்</a> மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) முதல் எப்.எல்.11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.</p><p>அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-10-districts-until-10-am#comments</comments><guid isPermaLink="false">62aefb2f-3011-4114-8428-09550e24e848</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:44:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:44:08.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/11/24586346-rain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டியும் வருகிறது. நேற்று முன்தினம் இரவில் திடீரென இடி மின்னலுடன் கனமழை கொட்டியதால் வெப்பம் தணிந்தது.</p><h2>சென்னையில் மழை</h2><p>நேற்று காலை முதல் சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருந்த நிலையில், இரவு 8 மணியளவில் திடீரென மழை வெளுக்கத் தொடங்கியது. </p> <p>சென்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">சென்னை வானிலை மையம்</a> தெரிவித்துள்ளது.</p> <p>அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2>கனமழை</h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுவதால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p> <p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். </p><p>தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகள் கவனத்திற்கு.... இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/night-time-electric-trains-cancelled-starting-today#comments</comments><guid isPermaLink="false">0424a501-f209-4d9a-8a0b-afa4d417adf2</guid><pubDate>Tue, 25 Aug 2026 02:05:37 +0000</pubDate><atom:updated>2026-08-25T02:05:37.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,மின்சார ரெயில்கள்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/08/24/4165049-beachtrain.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p> <p>இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மின்சார ரெயில்கள்</a> செல்லும் தண்டவாள பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது. </p><p>எனவே சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 10.20 மணி முதல் 11.59 வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. </p> <p>செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. எனவே, பயணிகள் தங்களுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு பயணம் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் - 24 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-25T01:47:33.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது - அமைச்சர் மரிய வில்சன்</p><p>தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் வாங்கினர் - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள்.</p><p>திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சிகள் தான் காரணம்.</p><p>கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது.</p><p>சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது திமுக.</p><p>திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>பூஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார் - கோவி.செழியன்</p><p>எங்கள் கூட்டணி கட்சிகளால் தான் உங்கள் ஆட்சி அமைந்துள்ளது - கே.என்.நேரு</p><p>உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள் - கே.என்.நேரு</p><p>யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு - அமைச்சர் ஆதவ்</p><p>2024 திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் - தாரகை கத்பட்</p><p>எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? </p><p>தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக.</p><p>ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக - கே.என்.நேரு</p> <p>தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது. வேறு விவாதங்கள் வேண்டாம் - சபாநாயகர்</p><p>11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை ஆதரித்தது திமுக - செங்கோட்டையன்</p><p>மேகதாது அணை விவகாரம் என்றாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலும் சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறோம். </p><p>தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது. முதலமைச்சருடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்</p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces#comments</comments><guid isPermaLink="false">de436e7c-760f-4907-940a-8c0b0a9a4547</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:19:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாரதிராஜா,BharathiRaja,தேனி,Theni,TNAssembly,சட்டசபை கூட்டத் தொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bharathiraja-Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.</p><h2>ரூ.<strong>2.50 கோடியில் அமையவுள்ள நினைவுச் சி</strong>ன்னம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan">சட்டசபை</a>யில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார். அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என உறுதியளித்தார்.</p><p>இயக்குநர் பாரதிராஜாவிற்கு அவரது சொந்த மண் அமைந்த தேனியிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என்ற இச்செய்தி, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">c7ffd29e-f868-4a05-943e-6743b93a1819</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:16:40.276Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,டிஆர்பி ராஜா,TRB Rajaa,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். தமிழ்நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்சியை, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத ஒரு தொழில் வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு கண்டது. இந்தியா வியந்து பார்த்தது. “நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்” என்று இந்தியாவே வியந்து பார்த்தது.</p><p>தமிழ்நாடு எப்படி இந்த வளர்ச்சி எல்லாம் கொடுக்கிறது என்று நம்மிடம் கற்றுக்கொண்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை செயல்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், தெளிவு எல்லாமே. அதைத் தாண்டி உள்கட்டமைப்பில் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசமிகள் எல்லாம் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.</p><p>அதில் முக்கியமான ஒரு திட்டம்  துறைமுக இணைப்பு. அதேபோல கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும், தரைவழிப் போக்குவரத்தும், அனைத்தும் சரியாக இருந்தால்தான் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான நேரத்தில், உரிய நேரத்தில் துறைமுகத்தை சென்றடையும்; உலகம் எங்கும் அது சென்றடையும். அந்த உள்கட்டமைப்பு மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.</p><h2>தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்</h2><p>இன்று தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள் என்றுதான் சொல்லவேண்டும். பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று த.வெ.க அரசு கைவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு என மிகப்பெரிய அடி. </p><p>ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது அரசு இயந்திரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, ஏன் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும். திட்டத்தைக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல.</p><h2>மீனம்பாக்கம் விமான நிலையம் நமது கட்டுப்பாட்டில் இல்லை</h2><p>மீனம்பாக்கம் விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிலையம். மாநில அரசின் கட்டுப்பாடு அங்கு இருக்காது. ஆனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் சொத்தாக இருந்திருக்கும்.</p><h2>அரசியல் வேண்டாம்</h2><p>பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள். நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.</p><p>இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும். சிந்தனையே இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பரந்தூர் திட்டத்தை கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதற்கு தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்கள் மீது மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு: மேலாண்மை வாரியத்தை அணுக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board#comments</comments><guid isPermaLink="false">7471b8a5-4a96-454a-a14a-0120892c91ba</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:54:34.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,தமிழ்நாடு அரசு,Supreme Court,Tamil Nadu government,Karnataka Government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water-Supreme Court   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சாரப் பங்கு நீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் (CWMA) முறையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழ<strong>க அரசின் மனு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court">காவிரி நீர் </a>ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தினசரி 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும், திமுக விவசாயி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவிலும், பிலிகுண்டுலு எல்லையில் நீர் வரத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p>இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், திங்கள்கிழமை காலை நிலவரப்படி வாரியம் உத்தரவிட்ட நீர் வந்து சேர்ந்திருந்தாலும், அது தற்காலிகமானது என்றும், பருவமழை மற்றும் ஒட்டுமொத்தப் பங்கை ஒப்பீட்டளவில் கணக்கிடும்போது தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சார பங்கு நீர் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் பங்கீட்டு அளவீடு மற்றும் பற்றாக்குறை குறித்த முறையீடுகளை காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முன்னிலையிலேயே முன்வைத்து நிவாரணம் பெறுமாறு தமிழகத்திற்கு அறிவுறுத்தினர். கர்நாடகா அரசு வெளியிடும் நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலு எல்லையை அடையும் நீரின் அளவீடுகள் தொடர்பான புதிய நிலை அறிக்கையை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department#comments</comments><guid isPermaLink="false">f24776da-c475-4fca-9239-882ca0199eb8</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:47:01.573Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை,Higher Education Department,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகள்;</p><h2>ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.5-இன் அடிப்படையிலும், அரசு மற்றும் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் உதவிபெறும் பலவகை கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.19 மற்றும் 20-இன் அடிப்படையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட CAS திட்டம், இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து, 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிதி பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.</p></li><li><p>அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/-ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.</p></li></ul><h2>மாணவர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>மாணாக்கர்கள் உயர்கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக, 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையற்ற கல்விக் கடன் வழங்க 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) செயல்படுத்தப்படும். இதற்கென தொகுப்பு நிதி உருவாக்கப்படும்.  இத்திட்டம் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அரசு கலை மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.</p></li><li><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p></li></ul><h2>கல்வி நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் பிற அறிவிப்புகள்</h2><ul><li><p>உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களின் மின்னுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கென 2026-27 முதல் ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.31.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வித் துறையின் பணியாளர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 500 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும்  தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.</p></li><li><p>செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், “பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" நிறுவப்படும்.</p></li><li><p>அரசு கல்லூரிகளின் ஆய்வக நுகர்பொருட்களின் தேவைகளுக்காக, 270 அரசு கல்லூரிகளுக்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை || (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்க ரூ.36.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை - 2) 2026-27 முதல் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>2026-27ஆம் ஆண்டில், கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை 2-லிருந்து நிலை 1-ஆக தரம் உயர்த்தப்படும்.</p></li><li><p>2026-27 ஆம் ஆண்டில் NAAC அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a859d211-3a94-4276-a64d-c0884c06f0f3</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:23:05.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வருகின்ற பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர்வடிகால் அமைப்புகளின் தற்போதைய திறன் மற்றும் தயார்நிலை குறித்து பள்ளி இடைக்காலக் கட்டமைப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். </p><p>நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர்வடிகால் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த வடிகால்கள் அனைத்தும் மணிக்கு 6 முதல் 7 சென்டிமீட்டர் வரையிலான மழைப் பொழிவை எளிதில் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதைவிட மிக அதிகளவில் மழை பெய்யும் பட்சத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.</p><h2>திண்<strong>மக் கழிவுக</strong>ளால் உருவாகும் சவால்</h2><p>மழை பெய்து முடிந்த பின்பும் தேங்கிய நீர் வடியாமல் தாமதமானால், வடிகால் பாதைகளில் திண்மக் கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதே அதற்கு முதன்மை காரணமாகும். பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் மக்காத பிற குப்பைகள் மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்டு வடிகால்களை முடக்கிவிடுகின்றன. இதனால் மழைநீரின் இயல்பான ஓட்டம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இத்தகைய சூழலை முற்றிலுமாகத் தவிர்க்கவே மாநகராட்சி நிர்வாகம் இரவு பகலாகத் துப்புரவுப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.</p><h2>பொதுமக்<strong>களின் ஒத்துழை</strong>ப்பு அவசியம்</h2><p>மழைநீர் தேங்காமல் நகரம் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 'மக்கும் குப்பை' மற்றும் 'மக்காத குப்பை' எனத் தனித்தனியாகப் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சாலைகளிலோ அல்லது திறந்தவெளி வடிகால்களிலோ குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே வெள்ளப் பாதிப்பற்ற பாதுகாப்பான நகரத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed#comments</comments><guid isPermaLink="false">2136030f-a2ee-453d-991c-7db8ba234112</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:14:35.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Madurai Bench of the High Court,Palani Dandayuthapani Temple,பழனி தண்டாயுதபாணி கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. </p><p>பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கோவில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியானப் பாதையில் செல்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் சி. வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தவறான ஆவணங்கள் மூலம் இரண்டு தனி நபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரத்தில் முறைகேடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட, இடைத்தரகர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் எனப் பலரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements#comments</comments><guid isPermaLink="false">d3600cf9-aa7a-41e8-884f-4f733662ceb5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:54:19 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:54:19.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவது மற்றும் மாணவர் நலனை முதன்மைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு புதிய திட்டங்களையும், நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அவர் விரிவாக அறிவித்தார்.</p><h2>மரபு சார்ந்த <strong>சொல் மாற்றமும் தொடக்க உ</strong>ரையும்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh">சட்டசபை</a>யில் வழக்கமாக உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களின் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த மரபுசார்ந்த சொற்றொடருக்கு பதிலாக 'அறிமுக உரை' எனப் பயன்படுத்த வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் காலையில் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், தமது உரையை 'அறிமுக உரை' எனக் கூறித் தொடங்கி, பேரவை விவாதத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.</p><h2>மாணவர் மை<strong>யப் பாடத்திட்டமு</strong>ம் கற்பித்தல் முறைகளும்</h2><p>மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், பாடங்களை ஆர்வத்துடன் அணுகவும் புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><h2>கதை <strong>வழிப் பாடங்க</strong>ள்</h2><p>கடினமான பாடங்களை எளிமையாக்கும் வகையில் கதை வடிவிலான பாடத்திட்டம் உருவாக்கப்படும். குறிப்பாக, கணிதப் பாடங்கள் அனைத்தும் கதைகள் மற்றும் நடைமுறை எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>கற்றல் <strong>மதிப்பீடு</strong> </h2><p>மாணவர்களின் கற்றல் திறனை ஒப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில், இனி எந்தவொரு மாணவரையும் 'சராசரி மாணவர்' எனக் குறிப்பிடக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுத்<strong>தளம் மற்றும்</strong> தமிழ் வளர்ச்சி</h2><p> 'TN3 அறிவுத்தளம்' உருவாக்கப்படுவதோடு, தமிழகத்தில் உள்ள 13,259 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 'தமிழ்ப்பேச்சு உயிர் மூச்சு' என்ற சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.</p><h2><strong>உடற்கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனங்கள்</strong></h2><p>பள்ளிகளில் மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கத் துறை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,771 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். ஆசிரியர்களுக்காக முக்கியமான தீர்மானம் நாளை கொண்டு வருவோம்.</p><h2>விளை<strong>யாட்டு நேரம் கட்டா</strong>யம்</h2><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கான  பாடவேளையை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ அல்லது வேறு பாடங்களுக்குப் பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம், சடுகுடு (கபடி) போன்ற பாரம்பரிய விளையாட்டு முறைகள் மீட்டெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் இலவச சீருடைகளுடன் சேர்த்து, சிறப்பு ஸ்போர்ட்ஸ் ஜெர்சியும் வழங்கப்படும்.</p><h2><strong>மாணவர் நலன்</strong></h2><p>தவறுகள் செய்யும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நல்வழிப்படுத்தும் கோணத்திலேயே அணுக வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ள போதிலும், மாணவர்களின் உடல் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புரதச்சத்தை மேலும் அதிகரிக்கும் கோரிக்கை முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் (10 மாணவர்கள் மட்டுமே) மாணவர்கள் இருந்தாலும் அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். தனியார் பள்ளிகள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>உள்கட்ட<strong>மைப்பு மற்றும்</strong> குடிநீர் விநியோகம்</h2><p>அரசு கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், நகர்ப்புற மற்றும் மாநகராட்சி சார்ந்த ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 15 முதல் பயனாளிகளுக்குக் கூட்டுக் குடிநீர் விநியோகம் முறைப்படி தொடங்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய பொருளாதார தடை: ஒரு சொட்டு எண்ணை கூட கிடையாது..! அமெரிக்கா- ஈரான் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz#comments</comments><guid isPermaLink="false">a4ef9431-d083-4537-bd27-e7a1b61a0804</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:41:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:41:22.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,பொருளாதார தடை,country economic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>இதுபற்றி கூறியுள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்  இந்த நடவடிக்கை  ஈரானின் மீதம் இருக்கும் அனைத்துப் பொருளாதார கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியில் இருந்தோ ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளார்.</p><p>இதற்கிடையில், ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் மற்றும் ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>சீனா போன்ற முக்கிய நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணை இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி இருப்பதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue#comments</comments><guid isPermaLink="false">06ef998a-47a7-41b2-b04e-89ffaafe6cf7</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:42.654Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார். பரந்தூருக்கு பதில் மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். </p><p>தவெக அரசின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம் புது இடம் தேர்விற்கு நீண்டநாட்கள் பிடித்து மீண்டும் அந்த இடத்திற்கான பல்வேறு அனுமதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற சில ஆண்டுகள் ஆகலாம். இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடைவாக அமையும்.</p><p>இந்நிலையில் தவெக அரசின் இந்த முடிவிற்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்., </p><p>“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. </p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? </p><p>சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை, தேவைத்தன்மை மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “செயல்முறை”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். </p><p>உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. </p><p>அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?</p><p>மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?</p><p>எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழ்நாட்டிற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூ.35,000-ஆக உயர்வு..!- அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">4718c85a-c988-4a25-898c-6f2c1f1d9183</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:19:41.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Viswanathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வாழ்க்கை என்பது தொடங்குகிறபோது சிலருக்கு வசந்தமாக துவங்கும். சிலருக்கு வசதியாக துவங்கும். ஆனால், எனக்கு வாழ்க்கை துவங்கியபோது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. வாழ்க்கை துவங்குகிறபோது நானே உருவாகி.. உருவாகி.. </p><p>குட்டை குளங்களில், ஓடுகிற நதிகளில் என் ஆடைகளை துவைத்து, பஸ்ஸில் ஏறி பயணம் செய்து.. தினத்தந்தி பத்திரிக்கை வாங்கி தினமும் படித்து, சைக்கிளில் மிதித்த மிதித்து அரசியல் மீதான ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிற ஒரு அரசியல் தலைவர் நான்.</p><p>நாடாளுமன்றத்தில் பணியாற்றியபோது எனது ஆசை தமிழில் சரளமாக பேச முடியுமா..பேசலாமா.. எனக்கு தமிழில்பேச சரளமாக வருமா என்கிற ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது.</p><p>என்நெஞ்சுக்கு கிடைத்திருக்கிற சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாளைய வருவால பிரதமர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்.</p><p>நான் வாய்ப்புகளை மறுக்கப்பட்ட ஒருவன். நான் மறுக்கப்பட்டேன், நான் ஒதுக்கப்பட்டேன், எனக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று மேலிடத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்தேன்.</p><p>அந்த ஆலய மணி என் தலைவனுக்குகேட்டது. மறுநாள் மேலூர் சட்டமன்ற பொது தொகுதியின் வேட்பாளராக ஆக்கப்பட்டேன். </p><p>முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி மந்திரி சபையில் இடம் கொடுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால கனவு, தமிழக அமைச்சரவையில் ஒரு நாளாவது இடம் பெறுமா என்று இருந்தது.</p><p>எம்ஜிஆர் ஆட்சி தொடங்கி, பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. திமுக 96 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் கேட்டோம். முடியாது என்றார்கள். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று சொன்னார்கள்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>அமைச்சர் மானியக் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். கட்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், எவ்வளவு நேரம் பேசுவார்?</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>அனைவரும் பதிலுரையில் அறிமுக உரை வழங்குவது வழக்கம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காலையில் நான்கு நிமிடம் உங்கள் தலைவர் பற்றி மட்டுமே பேசினார். 59 ஆண்டு கனவை பற்றி அமைச்சர் பேசுகிறார், அது அவரின் உரிமை. திமுக 59 ஆண்டுகளாக யாருக்கும் அதிகாரம் தரவில்லை. நாங்கள் கொடுத்திருக்கிறோம். இதுதான் மாற்றம். அதை சொல்கிறார். என்ன தவறு.</p><h2>உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள்</h2><p>மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.</p><p>6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்ற கட்டங்களாக நியமிக்கப்படுவர்.</p><p>கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>NAAC அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டின் 10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.</p><p>கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.36.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியில் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும்.</p><p>கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும். </p><p>அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">577a6e47-c76b-45e9-a991-b90c52fbac41</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:57:20.750Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijaya Prabhakaran,விஜய பிரபாகரன்,vijayakanth,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. </p><p>தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அவரின் இந்த செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.</p><p>இந்நிலையில் வெற்றிப்பெற்றப் பின் தன்னை வளர்த்துவிட்ட தனது தந்தையான விஜய்காந்தின் நினைவிடத்தை வந்து விஜய் பார்க்காதது ஏன்? என தேமுதிகவின் முக்கியத் தலைவரும், விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>விஜய் முதலமைச்சர் ஆனபிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சென்று சந்தித்தார். இன்றைய தேமுதிக தலைவர் பிரேமலதாவைப் பார்க்கவேண்டும். கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா? பெரியார் சமாதிக்கு சென்றார். விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா?</p><p>என்னைப் பார்க்கவேண்டாம், தேமுதிக அலுவலகம் வரவேண்டாம், பிரேமலதாவை பார்க்கவேண்டாம். உங்கள் அப்பாவை காணவில்லை என்று சட்டமன்றத்தில் விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையே சென்று பார்த்தீர்கள் அல்லவா?</p><p>உங்களை வளர்த்த விஜயகாந்தை சென்று பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>முதலமைச்சர் விஜய் கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்திருந்தது. அப்போது அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைமையாக இருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்த விஜய்யை, பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">9773c581-bf2b-4fc0-bab0-840a08484aef</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:37:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:37:20.768Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், மருத்துவர்கள் </h2><p>“ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு மருத்துவரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் 'திராவிட இயக்கம்' என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.</p><p>அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக, திராவிட முன்னேற்றக் கழகப் பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும். </p><h2>மாற்றம் அல்ல ஏமாற்றம்</h2><p>அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ஆ.ராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.</p><p>எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள் வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இன்றைக்கு நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள்: நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். </p><p>எப்படி தலைவர் கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாப் பேத்திகளுக்கும் தமிழ் பெயரைச் சூட்டியிருக்கிறார்களோ, அதேபோன்று நம்முடைய அமிர்தம் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழாவில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, </p><p>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனப் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்துவார்- நாஞ்சில் சம்பத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles#comments</comments><guid isPermaLink="false">c1beca2b-fa51-464b-8e77-7829cd999110</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:10:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:10:34.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,நாஞ்சில் சம்பத்,nanjil sambath,மாணிக்கம் தாகூர்,முதலமைச்சர் விஜய்,ManickamTagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Viijay- Nanjil sampath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் அடுத்த பிரதமராக முதலமைச்சர் விஜய்தான் வருவார் என்று த.வெ.க.வினர் பேசி வருவதற்கு அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.</p><h2>வேதனை</h2><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மைதான். 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில் கவர்னரை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்.</p><p>14 நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார்.</p><p>நியாயப்படி கவர்னர் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கவில்லை என்பதையும் தாண்டி தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரினால் அழைப்பேன் என்று கவர்னர் கூறியது எங்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. </p><p>நன்றி உணர்வு</p><p>நித்தியத்தை இழந்து நிச்சய தன்மையை உடுத்தி நின்றபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அந்த நன்றி உணர்வோடுதான் இன்றும் இருக்கிறோம். அதற்காகத்தான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 துறை அமைச்சர்களை இடம்பெறச் செய்தோம்.</p><p>1967-க்கு பிறகு காங்கிரஸ் த.வெ.க.வின் பெருந்தன்மையால் அதிகாரமுள்ள கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இந்த பெருந்தன்மையையும் நன்றி உணர்ச்சியையும் ஒருபோதும் முதலமைச்சர் விஜய் பட்டுபோக விடமாட்டார்.</p><h2>விசால மனம்</h2><p>இன்னும் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தி.மு.க. வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த நிலையில் கலைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.</p><p>அப்படி இருந்தும் ஒருவருக்குகூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால் இப்போது 5 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இந்த விசாலமான மனப்பான்மை விஜய்யை தவிர வேறு எந்த தலைவருக்கும் வராது. </p><h2>பிரதமராக...</h2><p>தேசிய அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பது இன்றே தெரியாது. முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவார், ஆக வேண்டும் என்று சொல்வதை எல்லாம் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>த.வெ.க. தொண்டர்கள் தங்கள் ஆர்வம் காரணமாக அவ்வாறு கூறலாம். தங்களை ஆட்கொண்ட தலைவனை பிரதமராக எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. இது காங்கிரஸ் கட்சியை தாக்குவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. </p><p>த.வெ.க.வினர் ரசிகர்கள் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதும் உண்மைதான். ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக மாறி இன்று ஆட்சியை பிடித்து இருக்கிறோம்.</p><p>எனவே அந்த மனநிலை அவர்களிடம் இருப்பது இயல்பானதுதான். தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பிரதமராக யாரும் வந்ததில்லை. </p><p>ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ் பிரதமரானார். கர்நாடகாவில் இருந்து தேவ கவுடா பிரதமர் ஆனார். எனவே தமிழ்நாட்டில் இருந்தும் பிரதமர் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பலாம். அதற்காக நாங்கள் விஜய்தான் பிரதமராக வர வேண்டும் என்று சொல்லவில்லை. அதை காலத்தின் கையில் விட்டு விடுகிறோம்.</p><h2>அதிசயங்கள்</h2><p>இதற்காக காங்கிரசுடன் பகமை பாராட்டும் மன நிலையில் நாங்கள் இல்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொன்னபோது கூட எதிர்வினையாற்றவில்லை.</p><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் நயத்தக்க நாகரீகத்துடனேயே முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்துவார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">deff3f97-8e64-4a76-b089-bc82f5779454</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:58:54.025Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,லஞ்ச ஒழிப்புத்துறை,Directorate of Vigilance and Anti-Corruption,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த திமுக ஆட்சியின்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. </p><p>அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் நிறைய லஞ்சம் வழங்க வேண்டியிருந்ததாக பல கல்வி நிறுவனங்ளின் நிறுவனர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதித்துறை அமைச்சர், இதற்கு தான்கூட ஒரு சாட்சி என்றும், தானும் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; </p><p>“அமைச்சர் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புக்கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே தவறு. </p><p>முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகாரளித்து, உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்.” என தெரிவித்துள்ளார். </p><h2>ரூ. 50 கோடி மானநஷ்ட விவகாரம்</h2><p>தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரையும் இணைத்துப் பேசியிருந்தார்.</p><p>இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஷ், தன்மீதான அவதூறு பேச்சுக்கு 48 மணிநேரத்தில் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக பேசுவதில் எந்த சமரசமும் இல்லை..!- எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-compromise-on-speaking-for-people-mla-kanimozhi-santhosh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-compromise-on-speaking-for-people-mla-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">6ecd313c-8212-4e03-ad50-1616f48eef14</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:10:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:10:30.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp1efvpu/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi Santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp1efvpu/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவை கவுண்டம்பாளையத்தில்  நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தரப்பிலிருந்து தமக்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15 லட்சம் பேக்கேஜ் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>இவ்வாறு அவர் பேசியதாவது:-</p><p>கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது.</p><p>2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.</p><p>அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. எங்கள் தலைவரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. இருந்தபோதிலும், அப்போதே ‘திமுக ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன்.</p><p>ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.</p><p>இன்று இதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு காரணம், மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது. </p><p>மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதைப் பேசினாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் குரலை எழுப்புவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.</p><p>சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பேசுபவர்கள், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.</p><p>நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.</p><p>கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல நமக்குள் சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து யாரும் நம்முடைய ஒற்றுமையைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.</p><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சபாநாயகருக்கும் தொடர்ந்து பணிச்சுமை ஏற்படுகிறது.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். ஒரு இடத்தையும் பாக்கி வைக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.</p><p>மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அரசியலில் பணம், பொய் பிரசாரம், போலியான கணிப்புகள் ஆகியவற்றை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue#comments</comments><guid isPermaLink="false">1b4be611-0d44-4006-9dd4-b5981fcfef51</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:59:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:59:50.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>அரசிற்கு பெரும் நிதி இழப்பு</strong></h2><p>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து- எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.</p><p>இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. </p><p>இத்தகைய கடினமான  அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.</p><p>இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூர்</a> விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. </p><p>ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.<br><br>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில்,  சென்னைக்கு 2-ஆவது விமான…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2091818583756255540?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur#comments</comments><guid isPermaLink="false">609e5593-9ee4-446d-a5ca-40ffe168abb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:53:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:53:11.313Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,annamalai,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். மேலும் பரந்தூருக்கு பதில் மாற்று இடங்கள் தேர்ந்தெடுப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>ஆனால் அவை எந்தெந்த இடங்கள் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதம் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>இன்றைய தினம் சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். </p><p>அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும். இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். </p><p>சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.</p><p>இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து,  உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.</p><p>ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.</p><p>மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. </p><p>தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். </p><p>மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடவேண்டும் என்பதா? - அமைச்சர் மீது ஆ.ராசா கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">6b4b914c-ca1f-4e33-baf0-a0538f66bed3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:30:23.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,a raja,ஆ ராசா,Anna arivalayam,அண்ணா அறிவாலயம்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna arivalayam - A Raja - Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார்.</strong></em></p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா அறிவாலயத்துக்கு</a> வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று பேசினார். </p><h2>ஆ.ராசா</h2><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin">திமுக</a> எம்பி ஆ.ராசா பேசும்போது அமைச்சர் நிர்மல்குமாரை மறைமுகமாக கண்டித்தார். விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-</p> <p>இன்றைக்கு சிலருக்கு காரில் தேசிய கொடி வந்து விட்ட காரணத்தினால் அறிவாலயத்துக்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என்று சில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். </p><h2>அண்ணா அறிவாலயம்</h2><p>பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப் பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பல முறை வெள்ளையடித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது.</p> <p>எனவே அந்த அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission#comments</comments><guid isPermaLink="false">7cfc8d9e-f55d-462f-84b7-7df4a9e8df1a</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:29:49.024Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,ECI,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,Bye-Elections</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள்மீது நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதித்த தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே இந்த மனு மீதான இறுதி விசாரணையை நடத்த முடிவு செய்துள்ள நீதிபதிகள், அதற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது அனைத்து வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>வழக்கு என்ன?</h2><p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த மொத்தம் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மற்ற மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இச்சூழலில், ராஜினாமா செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மற்றொரு வேட்பாளரை வெற்றிப் பெற்றவராக அறிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. </p><p>இதனால் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நபர் வென்றால், அதே நேரத்தில் பழைய தேர்தல் வழக்கின் தீர்ப்பில் “தோற்ற மாற்று வேட்பாளர் தான் உண்மையான வெற்றியாளர்” என நீதிமன்றம் அறிவித்தால், ஒரே தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உரிமை கோரும் கடுமையான சட்ட சிக்கல் உருவாகும்.</p><p>சட்டப்பிரிவு 151ன்படி தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த இயலாது என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.</p><p>மனுதாரரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  இடைத்தேர்தல் நடத்துவது மாநில அரசு கருவூலத்தைப் பாதிக்கும் என்றும், ஜனநாயக செயல்முறையையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு ஜூலை.10ம் தேதியன்று ஜூலை.31 வரை மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது.</p><p>பின்னர் அந்த இடைக்கால தடை உத்தரவு ஆக.24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், செப்.8 அன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் வாங்கியது உண்மை.. நானே அதற்கு சாட்சி!- அன்பில் மகேஷ் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">b78c9361-db28-41a1-8767-c22ae0abf02b</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:29.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,anbil mahesh,TN assembly,அன்பில் மகேஷ்,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson- Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறயதாவது:-</p><p>உயர்கல்வியில் எண்ணிக்கையா? தரமா? என்கிற கேள்வி எழுகிறது. எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம்தான் ரொம்ப முக்கியம்.</p><p>முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் விஸ்வநாத் அவர்களும் பங்கேற்றிருந்தார். அப்போது, எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தோம்.</p><p>நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.</p><p>அதில் பார்த்தீர்கள் என்றால், certification என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை.</p><p>ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால், எப்படி தரம் வரும். </p><p>எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில், எந்த முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை.</p><p>தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. </p><p>லஞ்சம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் எனக்கும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்தோம். திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது.</p><p>அதில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நாள் நான். கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது. இதனை பல இடங்களில் நான் பதிவுசெய்ய விரும்புகிறேன்.</p><p>எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கின்றனர். சாட்சி கேட்கின்றனர். ஆவண சாட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இங்கு நானே ஒரு சாட்சி தான். </p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபையில் இல்லை என்றாலும், இதைநான் கூறவேண்டும். இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இந்த விவகாரம் 3 நாட்களாக சுற்றுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.</p><p>அவர்கள் என் மீது வழக்குக்கூட போடட்டும். எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். </p><p>தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பது குறித்து நானே சொல்ல முடியும். சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வாங்குனீர்கள் இவை அனைத்தும் என்னால் சொல்ல முடியும். இதுதான் சாட்சி. </p><p>இவ்வாறு கூறினார்.</p><p>நிதி அமைச்சர் மரிய வில்சனின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டிற்கு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>