<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 06:01:15 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் - 2 செப். 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">83338c15-7a2e-4b27-825a-a67aff274e36</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:53:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:00:26.472Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7mkf4u6m/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7mkf4u6m/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்</p><p>மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.</p><p>அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார் </p> <p>உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்</p> <p>வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்</p> <p>மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்</p><p>வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்</p><p>காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல. </p><p>பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு</p><p>காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்</p><p>தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p> <p>தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்</p> <p>அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்</p><p>விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை</p><p>இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி</p><p>மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</p> <p>நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்</p><p>ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி</p> <p>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம். </p><p>ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</p><p>விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். </p><p>ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.</p><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்</p> <p>ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.</p><p>விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">405d1a70-f417-4532-a87a-030b2e232001</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:48:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:48:20.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |,substations,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,துணை மின் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம். </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது, துணை மின்நிலையம் அமைத்துத் தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார்," குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p>தொடர்ந்து, திருத்துறைப்பூண்டியில் 110KV <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">துணை மின்நிலையம்</a> தேவை என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது" என்றார். </p><p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது என எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றம்சாட்டினார்.</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>மேலும் அவர்,"இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பு கடிக்கு மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">453b2bad-995a-4584-ae30-861755d1c8c7</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:29:32.576Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பாம்பு கடிக்கு அரசு  ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதன் விவரம் வருமாறு,</p><p>பண்ருட்டி மோகன்:- பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா?</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது.</p><p>முன்னாள் அமைச்சர் கே என் நேரு :-    </p><p>திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி புள்ளம்பாடி ஒன்றியம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டு வருகிறது. நிறைய கிராமங்களை கொண்ட பகுதி. அதை தரம் உயர்த்தி முழு நேர ஆரம்ப நிலை  மருத்துவமனையாகமாற்றி தர வேண்டும். அப்படி தந்தால் அந்த பகுதியில் இருக்கிற பாம்பு கடிக்கான  மருந்துகள் எல்லாம் 24 மணி நேரம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். கட்டிட வசதி இருக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly">மருத்துவத்துறை</a> சார்பில் நலம் செயலி உள்ளது. அதன் மூலம் மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி:-</p><p>ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :</p><p>இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசும் திட்டத்தில் வைத்துள்ளது.  எனவே அனைத்து நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும்.</p><p>முஸ்தபா (த வெ க ):- மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே அதற்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ்:- </p><p>உறுப்பினரின் கோரிக்கையின் படி ஆய்வு செய்து அவர் கேட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>பெரியகுளம் சபரி ஐங்கரன்:- </p><p>தேனி அரசு மருத்துவமனையில் போதுமான பாம்புக்கடி சிகிச்சைக்காக வருவோருக்கு படுக்கை வசதி இல்லை அதனை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் - கூடுதல் படுக்கை வசதிகள் நிச்சயம் செய்து கொடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்:-</p><p>பாம்பு கடிக்கு சமீபத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் இறந்துள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கான தடுப்பு மருந்து உள்ளதா? தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு எத்தனை பேர் இறந்துள்ளனர்? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>அமைச்சர் அருண் ராஜ் :-</p><p>இந்த ஆண்டு பாம்பு கடிக்கு 9,519பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 837 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் இறந்துள்ளனர். பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்து அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கைவசம் உள்ளது. </p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p><p>40 நிமிடம் மொத்த கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே பயணிகள் ரெயில் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet#comments</comments><guid isPermaLink="false">821babad-3ef2-420b-a4c5-3de5fa2c30f8</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:26:39.527Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,ரெயில் சேவை,rail service,தெற்கு ரெயில்வே,பயணிகள் ரெயில் ரத்து,passenger rail cancel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Passenger train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடுபேட்டை இடையே நாளை (3-ந்தேதி) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" rel="nofollow">சூலூர்பேட்டை</a>யில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.</p><p>* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill#comments</comments><guid isPermaLink="false">7161e74d-9200-4144-a17e-5b3fa775ed0b</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:09:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:09:36.964Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சர்க்கரை ஆலை,கரும்பு சாகுபடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் ஒன்றாம்  தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவற விடுவது சரியானதல்ல.</p><h2><strong>ஐயம்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து  செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><p>அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி பரப்பு குறைவு</strong></h2><p>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம்,  வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.</p><p>அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008-09 ஆம் ஆண்டுகளில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ஆம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022-23ஆம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை  69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.</p><p>தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை கரும்பு சாகுபடி செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும்,  அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை  அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது தான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.</p><p>மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம்  535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின் போது பயன்படுத்திக் கொள்ள 381 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே  ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவைக் காலத்திலும், இவர்களில்  244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால் தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கிக் கிடக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக  ரூ.709.50 சேர்த்து  டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில்   இது ரூ.4300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல.</p><p>இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50% வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் இலாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும், பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நாக தோஷம்... ஜலதோஷம்... சட்டசபையில் கலகல விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">70e4947b-a7a3-49c4-84c3-b6f9c9b7d092</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:58:09.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்து வருகிறார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், </p><p>சட்டசபை ஆரம்பித்து அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு நிறைய தொகுதிகளில் பாம்பு கடி உள்ளதாக அறிகிறேன். அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவை தலைவர் முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசாக  மேற்கொண்டு இருக்கிறோம். தோஷம், பில்லி சூனியம் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை என்றார்.</p><p>இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றி தான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காணவேண்டும் என்றார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">982aaba5-0e13-4c0a-92e2-a952b20fb50a</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:32:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:32:19.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். </p><p>முதலில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முதலில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளன. ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார். </p><h2><strong>எம்எல்ஏ மோகன்</strong> </h2><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு Freezer Box மற்றும் CT Scan வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 Freezer Box மற்றும் தேவை இருப்பின் CT Scan வசதி ஏற்படுத்தி தரப்படும். கடலூர் மருத்துவமனைக்கு நிகராக பண்ருட்டி மருத்துவமனையை தரம் உயர்த்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>மேலும், வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தலைவாசல் தாலுகாவிற்கு புதிய மருத்துவமனை வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு தலைவாசல் தாலுகாவுக்கு மருத்துவமனை கட்டிக்கொடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு, மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தம்- மாநகராட்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4c5f7599-0fa4-44f6-a407-25e52ffcf660</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:40:35.175Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,AC Bus Station,ஏசி பஸ் நிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்</strong></h2><p>இந்த நிலையில், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சமீரன், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. </p><p>இந்த பஸ் நிறுத்தங்களில், கண்காணிப்பு கேமராக்கள், வைபை வசதி, சாய்வுதளப் பாதை, பஸ் வழித்தடத் தகவல்கள், மின்விளக்கு வசதி, பாதுகாப்பான கண்ணாடி, சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்- அடுத்த மாதம் முதல் அமல்படுத்த முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october#comments</comments><guid isPermaLink="false">48e05f7d-b562-4f61-a52c-05f0643f3ce4</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:31:21.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Silver,ஹால்மார்க்,வெள்ளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை வருகிற அக்டோபர் மாதம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong></em></p><h2><strong>ஹால்மார்க் முத்திரை</strong></h2><p>வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் வருகிற அக்டோபர் மாதம் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/வெள்ளி">வெள்ளி</a> நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>தூய்மை தரம்</strong></h2><p>2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'SILVER' என்ற வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம்.</p><p>ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.</p><h2><strong>தண்டனை-அபராதம்</strong></h2><p>பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ஸ்டெர்லிங் வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:27:14.642Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> <p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - பிரேமலதா</p>]]></content:encoded></item><item><title>CMDA உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda#comments</comments><guid isPermaLink="false">b8b68a3e-3696-426b-b2dd-24c94f5655d2</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:26:19.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஎம்டிஏ,CMDA,MLA Revanth Charan,எம்.எல்.ஏ. ரேவந்த் சரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Charan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரவாயல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.</p><p>சென்னை பெருநகரப் பகுதிக்கான திட்டமிடல், வளர்ச்சிப் பணிகள், கட்டிட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ் வழங்குதல் இதன் முதன்மையான பணியாகும். தலைமையகம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.</p><p>1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">05f4f282-9fcc-41fb-8e6f-3908ed72e18f</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:01:34.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,சேவல் சண்டை,Cockfighting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார். </p><p>இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அந்த மனுவில், “கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். </p><p>போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. </p><p>எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? </p><p>போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இரண்டாம் கருவறை: அமைச்சர் பர்வேஸ் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb#comments</comments><guid isPermaLink="false">97ea5aa1-07db-4f52-a1e2-a60d0554cdb5</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் பர்வேஸ்,TN Minister Parvesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பின்னர், பதிலுரை அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.</p><h2>அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</h2><p>புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆன இந்த எளியவனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்த இரண்டாம் கருவறையாம் தளபதிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.</p><p>எல்லோரும் உயிலை எழுதி தருவார்கள். நான் அவருக்கு என் உயிரையே எழுதி தருகிறேன். விஜய்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்</p><p>Ever Rest இல்லாமல் உழைக்கும் Everest ஆக உயர்ந்து நிற்கிறார் முதல்வர்.</p><p>காலத்தை குறிப்பிட கி.மு., கி.பி. சொல்வார்கள். அரசியலில் இனி விஜய்க்கு முன், விஜய்க்கு பின்  (வி.மு., வி.பி.,) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும், லஞ்சமும் விஜயின் சாட்டை அடிக்கு பயந்து தலை தெறித்து ஓடிவிட்டது.</p><p>இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition#comments</comments><guid isPermaLink="false">88802761-962c-4915-8f45-ac358650a2b6</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:27:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:27:13.084Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Resignation,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,ராஜினாமா,Esakki Subaya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றப் பேரவை விதிகளின்படி, ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை  திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு விதியும் இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதாகவும் பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் இந்த விளக்கமும், அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><h2>இடைத்தேர்தலே தீர்வு</h2><p>இசக்கி சுப்பையா பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்துவது மட்டுமே சட்டப்படியான ஒரே தீர்வு எனச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>சபாநாயகரின் பதில்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் தரப்பிலிருந்து இசக்கி சுப்பையாவிற்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.</p><h2>இசக்கி சுப்பையாவின் மறுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு</h2><p>இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. </p><p>அப்போது தனது ராஜினாமா மனுவை திரும்பப் பெறுவதாகவும், இடைத்தேர்தல் வரும்வரை தனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>இதுதொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மலைவாழ் மக்களுக்கு நீங்கள் செய்த வேலை எந்த லட்சணத்துல இருக்கு... திமுக, அதிமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues#comments</comments><guid isPermaLink="false">cd2cb305-f51f-42b3-8196-4d6166ffbeae</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:08:55.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina">தமிழக சட்டசபை</a>யில் இன்றைய மானியக் கோரிக்கையின்போது மலைவாழ் மக்கள் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவும் ஆன எ.வ. வேலு பேசும்போது "மலைவாழ் பகுதி என்பது நீண்ட நெடிய ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அதன்பின் அரசு வந்தபோதுதான் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.</p><h2>திமுக-தான் அதிகமாக செய்தது</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுனாமரத்தூர் என்ற மலை உள்ளது. அங்கு 200 கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையிலும் அதுபோன்ற எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. சில நேரங்களில் போக்குவரத்திற்குக் கூட வசதி இல்லை. ஒத்தையடி பாதை கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் உண்டு.</p><p>அந்தந்த ஆட்சிகள் வந்தபோதுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவர்கள் சொல்கிற பகுதி முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அங்கு காலம் காலமாக இருந்தார்கள். உழுதார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தம் கிடையாது. இப்படிப்பட்ட நிலைதான்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டபோது, நான் நேரடியாக சென்று 13 ஆயிரம் பேருக்கு நில உரிமை பட்டா கொடுத்திருக்கிறேன். அதனால் முழுமை அடைந்ததாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று செய்ய வேண்டியுள்ளது. நாங்களும் ஜாதி சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கொடுத்தோம். தேவை இருக்கிறது. நீங்களும் முடிக்க முடியாது. மலைப்பகுதியில் அவ்வளவு கிராமங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியில் முடிந்த அளவிற்கு சொய்திருக்கிறோம். அதிகம் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான்" என்றார்.</p><p>அதன்பின் "மலைாவாழ் மக்கள் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேர்தான். 5 வருடத்திற்குள் கொடுக்க முடியும். திரும்ப திரும்ப சொல்கிறேன். நான் குறைகளை சொல்லவில்லை. போதாமைகளை சொல்கிறேன்" என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><h2>அதிமுக அமைச்சர் கால் படாத இடமே இல்லை</h2><p>பின்னர் அதிமுக உறுப்பினர் எழுந்து "2011 முதல் 2016 வரை அதிமுக அமைச்சர் காலடி படாத இடமே மலையில் கிடையாது. மலைக்கு தேவையான அனைத்தையும் அதிமுக செய்து கொடுத்தது. இந்த அளவிற்காவது இருப்பதற்கு அம்மாவின் அதிமுகதான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பீல்டிங்கிலும் அம்மா பெயரும், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் பெயரும் இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>உடனே வன்னி அரசு "செய்தியை திரித்தி திருப்பு வாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள். கீழ் தீவனூர், மேல் தீவனூரில் இப்போதும் நீங்கள் சென்று பார்க்கலாம்., 10 கி.மீ. சாலைகள் இல்லை. நாங்கள் நடந்து சென்றோம். ஆட்சியர் உள்ளிட்டோர் வந்தார்கள். இன்றும் சாலை இல்லாத கிராமம் இருக்கு.</p><p>இப்படிப்பட்ட ஒரு கிராமத்தைதான் நீங்கள் தத்தெடுத்திருக்கீங்க, நீங்கள் வேலை பார்த்திருக்கீங்க, அப்படின்னா, என்ன லட்சணத்தில் இருக்குன்னு இந்த இடத்தில் நான் சொல்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நாங்கள் செய்தோம், நீங்கள் செய்தோம் என்பதல்ல, தேவைப் பற்றி சொல்கிறோம். கோரிக்கைகள் பற்றி சொல்கிறோம். மக்கள் வலியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வலியை பற்றி பேசாமல், செய்தோம் என்று சொன்னால், சாவல் விடுகிறேன். நீங்க வாங்க, மேல் தூவனூர், கீழ் தூவனூரில் சாலை இல்லை. நாங்கள் போட சொல்லியிருக்கிறோம். தொடங்கியிருக்கிறோம்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">0a5355db-679c-415a-b4db-154c0f053cea</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:24:27.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.</p><p>ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை</h2><p>ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">e5dde014-c9c2-4814-8800-5dffb8bc7850</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:02:00.936Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சிபிஎம்,Thoothukudi Sterlite firing case,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் காவல்துறை அதிகாரிகள்மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக தமிழ்நாடு அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் கொலைக்கு காரணமான அதிகாரிகள்மீது உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். </p><p>இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். </p><p>அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. </p><p>31.08.2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும், தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன. </p><p>சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. </p><p>பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதரவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், </p><p>உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கிரிப்டோகரன்சி மோசடி: முதலீட்டாளர்கள் நெருக்கடியால் திண்டுக்கலில் 25 வயது வாலிபர் தற்கொலை; பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing#comments</comments><guid isPermaLink="false">4900ec49-ef34-4636-ad7f-9d64f29b72c9</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:26:49 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:26:49.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,Multi-Level Marketing,FQL Investment Trading,பொருளாதார குற்றப்பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பல அடுக்கு சந்தைப்படுத்தல் பெயரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், முதலீடு செய்தவர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ராஜா என்ற 25 வயது வாலிபர் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>40 நா<strong>ட்களில் பண</strong>ம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை</h2><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களாக 'எஃப்.க்யூ.எல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility">இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்</a>', 'எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலி' மற்றும் 'வி.ஜி இன்வெஸ்ட்மென்ட் குரூப் சிண்டிகேட்' ஆகிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. இதில் முதலீடு செய்தால் தினமும் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்றும், 40 முதல் 45 நாட்களுக்குள் முதலீட்டுத் தொகை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது.</p><h2>கிரிப்டோ <strong>வாலட்க</strong>ளுக்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து ரொக்கம், கூகுள் பே மற்றும் யுபிஐ மூலமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி 'டெதர்'  எனப்படும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, சந்தேகத்திற்குரிய எஃப்.க்யூ.எல் டிஜிட்டல் வாலட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, செயலி மூலம் பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. கூடுதல் பணம் செலுத்தினால்தான் கணக்கை இயக்க முடியும் எனக் கூறிய நிறுவனத்தினர், திடீரென செயலியை முற்றிலுமாக முடக்கிவிட்டு தலைமறைவாகினர்.</p><h2>பணத்தை இ<strong>ழந்தவர்கள் முற்</strong>றுகை</h2><p>இந்தத் திட்டத்தை நம்பி தனது பகுதி மக்களை பெருமளவில் முதலீடு செய்ய தூண்டியவர்  ராஜா நிதி நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ராஜாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களின் தொந்தரவைத் தாங்க முடியாமலும், பணத்தைத் திரும்பத் தர வழியில்லாமலும் மன உலைச்சலுக்கு ஆளான ராஜா, தனது வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும், அவரிடம் கொடுத்த பணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>பொருளா<strong>தார குற்றப்பிரிவு</strong>க்கு விசாரணை மாற்றம்</h2><p>பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் திரண்டு புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், 'பைனான்ஸ்' வாலட்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் இந்த மோசடியில் இருப்பதால், வழக்கு விசாரணையை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>21 பேர் கைது</strong></h2><p>இவ்வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதன்மை அமைப்பாளர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கிரிப்டோ வாலட்களை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f4f14f3-8c6b-4bf7-a382-3415522374d1</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:44:35.109Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,President Donald Trump,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,</p><p>“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது. </p><h2>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்</h2><p>திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.</p><p>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?</p><h2>தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது</h2><p>இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை. </p><p>அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது. </p><p>விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1141394-d3c2-450a-8717-e6dc577da6c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:25:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:25:53.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 3-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன்: திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-suicide-case-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-suicide-case-police-investigation#comments</comments><guid isPermaLink="false">6103087d-9209-4bfb-ad92-2b6f2f75140a</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:57:51.185Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,young woman suicide,இளம்பெண் தற்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e0nj8ynt/suicide.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e0nj8ynt/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.</strong></em></p><p>ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த மூப்பன்வலசை கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால்-மணிமேகலை. இவர்களது மூத்த மகள் சரிதா. பி.எஸ்சி. பட்டதாரி. </p><h2><strong>வாலிபருடன் காதல்</strong></h2><p>பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது நெருக்கமாக இருப்பது போன்று செல்போனில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.</p><p>காதலன் லோகேஷின் நடத்தை சரி இல்லாததை அறிந்த சரிதா அவருடன் இருந்த காதலை வெறுத்தார். லோகேஷின் செல்போன் அழைப்புகளையும் தவிர்த்தார். அவரிடம் இருந்து முழுவதுமாக விலகினார்.</p><h2><strong>திருமணம் நிச்சயம்</strong></h2><p>இந்த நிலையில் சரிதாவுக்கு ஏர்வாடி அருகேயுள்ள மெய்யன் வலசை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். அதற்கு சரிதாவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. </p><p>தன்னை விட்டு வேறொருவரை சரிதா திருமணம் செய்யப்போவதை அறிந்த லோகேஷ் ஆத்திரம் அடைந்தார். சரிதாவிடம் பேசிய அவர், உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவேன். அவ்வாறு செய்யக்கூடாது என்றால் நான் கேட்கும்போதெல்லாம் நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு சரிதா ஒப்புக்கொள்ளாததால் லோகேஷ், சரிதாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.</p><p>மேலும் அந்த புகைப்படத்தை சரிதா திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகனுக்கும் அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாப்பிள்ளை உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.</p><h2><strong>திருமணம் நின்றது</strong></h2><p>இதையடுத்து மணமகன் வீட்டார், சரிதாவின் பெற்றோரை செல்போனில் அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று கூறியதுடன், அவரது செயல்பாடுகள் குறித்து புகார்களையும் தெரிவித்துள்ளனர். இதனால் சரிதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருமணம் நின்று விட்டதாக உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. </p><h2><strong>மணப்பெண் தற்கொலை</strong></h2><p>திருமணத்திற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்கள் திருமணம் நின்று போனதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே திருமணம் நின்று போனதால் அவமானம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த சரிதா நேற்று வீட்டு அறையின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><p>இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.</p><p>இதற்கிடையே தலைமறைவான லோகேசை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கருத்துச் சுதந்திரம் முதல் நீதித்துறை வரை முடக்கம்: வி-டெம் அறிக்கையைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt#comments</comments><guid isPermaLink="false">37ea99b8-76d6-4718-be31-3591494b3d47</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:35:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:35:27.101Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஸ்வீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வி-டெம்’ (V-Dem Institute) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜனநாயக அறிக்கையில், இந்தியாவில் மக்களாட்சி நெறிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்தியுள்ளது; பா.ஜ.க. அரசின் இந்த ஜனநாயக விரோத, அடக்குமுறைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிக வன்மையாகக் கண்டிக்கிறது!</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அண்ணல் அம்பேத்கரும், பண்டித ஜவஹர்லால் நேருவும் தொலைநோக்குப் பார்வையோடு கட்டமைத்த இந்திய ஜனநாயகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் திட்டமிட்டுச் சிதைத்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு ‘தேர்தல் சர்வாதிகார நாடாக’ சீரழிய வைத்து தலைகுனியச் செய்துள்ளது.</p><p>சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாடு ஒழிப்புக்கான குழுவும் (UN CERD) வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவது குறித்தும், சட்ட அமலாக்க அமைப்புகளின் முறைகேடுகள் குறித்தும் சுட்டிக்காட்டி கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.</p><p>வி-டெம் அறிக்கையின்படி, தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106- வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயகக் குறியீட்டில் 105-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தை நோக்கித் தொடங்கிய சரிவு, மோடி ஆட்சிக் காலத்தில் உச்சகட்ட சர்வாதிகாரமாக உருவெடுத்து, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>வி-டெம் அறிக்கையில் அம்பலமாகியுள்ள பா.ஜ.க. அரசின் முக்கிய ஜனநாயகப் படுகொலைகள் :</strong></h2><h2><strong>1. கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரப் படுகொலை</strong></h2><p>ஆளும் பா.ஜ.க. அரசின் தவறுகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டும் சுயேச்சையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் தணிக்கைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகளவில் பத்திரிகைத் தணிக்கை மற்றும் ஊடக ஒருதலைப்பட்சப் போக்கு மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.</p><h2><strong>2. கல்வி மற்றும் கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம் முடக்கம்</strong> </h2><p>பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களின் தன்னாட்சி சிதைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரமான ஆய்வு மற்றும் கருத்துப் பகிர்வுக்கான உரிமை திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாட்டுச் சுதந்திரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள 41 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><h2><strong>3. அரசியலமைப்பு நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு</strong></h2><p>மக்களாட்சியின் தூண்களாக விளங்கும் தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சுதந்திரமான தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தன்னாட்சி உலகளவில் வீழ்ச்சியடைந்துள்ள 28 நாடுகளில் இந்தியாவும் தீவிரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. </p><h2><strong>4. நீதித்துறை சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் முடக்கம்</strong></h2><p>நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்ப்புகளைப் புறந்தள்ளுவதுடன், மக்கள் பிரச்சினைகளைப் பேசும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பும் விவாதங்களும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றன. அரசின் அத்துமீறல்களை நாடாளுமன்றம் விசாரித்துத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ள 20 முன்னணி நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது.</p><h2><strong>5. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை</strong></h2><p>சமூக நீதிக்காகவும், சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும் களத்தில் நிற்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் குரல்வளை நெரிக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மக்கள் உரிமை அமைப்புகளை ஒடுக்குதல் மற்றும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்தியா முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.</p><h2><strong>6. தேர்தல் சர்வாதிகாரப் போக்கு</strong></h2><p>பெயரளவில் தேர்தல்களை நடத்திக் கொண்டு, மறுபுறம் உண்மையான கருத்துச் சுதந்திரம், அமைப்புகள் கூடும் உரிமை, குடிமை உரிமைகள் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவற்றை அடியோடு வேரறுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்தியா ‘தேர்தல் சர்வாதிகார நாடாகவே’ வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2008 முதல் தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் (LDI) -0.309 புள்ளிகள் வரை சரிந்து, உலகளவில் அதிக மக்களாட்சிச் சரிவைச் சந்தித்த டாப்-3 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதிவாகியுள்ளது.</p><p>‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்’ என்று உலக நாடுகளின் மத்தியில் வெற்று முழக்கமிடும் பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கும் தலைகுனிவிற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?</p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மக்களாட்சி மாண்புகளையும் காக்க தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கம் சமரசமின்றி களத்தில் நின்று போராடும்! சர்வாதிகார மோடி அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூரில் விவசாயி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur#comments</comments><guid isPermaLink="false">e180d857-19e4-43fd-84cc-3d7c802feffd</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:21:05.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,விவசாயி,Farmer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">மேட்டூர் அணை</a> மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர்  ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p> <p>மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த காலக்கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும்.</p> <h2>மழை குறைவு</h2><p>மேட்டூர்அணையில் தண்ணீர் இருப்பை தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் குடிநீருக்காக திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p> <p>இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.</p> <h2>90 அடியை தாண்டிய நீர்மட்டம்</h2><p>இதன்காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.</p> <p>அதன்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சேலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு   காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏக்கள் மற்றும் கலெக்டர் இளம்பகவத் மற்றும்  போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். </p> <p>வரவேற்பை பெற்றுக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் மேட்டூர் புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களை பார்த்த முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தப்படி சென்றார்.</p><p>மேலும் விஜய்யை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மேட்டூர் அணை பகுதிக்கு வந்தடைந்தார். </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>பின்னர் முதலமைச்சர் விஜய் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்விசையை 11.40 மணிக்கு இயக்கி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் பூக்கள், நெல் மணிகளை தூவி வணங்கி வரவேற்றார். </p> <h2>புகைப்பட கண்காட்சி</h2><p>தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் அணையின் இதய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீராய்வு நிலவறையை பார்வையிட்டார். மேலும் மேட்டூர் அணையின்  இடது புறமுள்ள  மின்நிலையத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நின்ற கட்சி நிர்வாகிகள், விவசாயிகளை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சர் நெல் மணியை கொடுத்தார். விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்தனர். அப்போது அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/buls44qh/vijay4.jpg" /></figure><h2>முதல் முறையாக</h2><p>முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். </p><p>இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து  விடப்பட்ட நிலையில் பின்னர் நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் நீர்திறப்பு 12ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதனால் அணையின் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின்உற்பத்தி தொடங்கப்படும். </p> <h2>விவசாயி வீட்டில் முதலமைச்சர்</h2><p>இந்நிலையில் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றார். அங்கிருந்த மூதாட்டி முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். </p><p>இதுதொடர்பாக விவசாயி கூறுகையில், முதலமைச்சர் திடீரென எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today#comments</comments><guid isPermaLink="false">4a0cac46-804b-4f42-b26d-303c3c832c2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:48:29 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:48:29.379Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்போன் தடை,இந்து சமய அறநிலையத்துறை,HRCE Department,Mobile Ban,Devotees Notice,TN Temple Mobile Ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mobile Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி, ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தடுப்ப தற்காக கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்துசமய அறநிலையத்துறை</a> இன்று முதல் தடை விதித்துள்ளது.</p><h2>தொடரும் தடை உத்தரவு</h2><p>ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 52 பெரிய கோவில்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன் தடை </a>விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>இன்று முதல் தடை அமல்</h2><p>சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை வைக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>அவர்கள் செல்போன்களை கொடுத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று சென்றனர்.</p><h2>சென்னையில் தடை அமல்</h2><p>இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீர ராகவர் கோவில், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் தடை</h2><p>பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும் செல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட தால் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் பக்தர்கள் செல்போன்களை கொடுத்து விட்டு கோவிலுக்குள் சென்றனர்.</p><p>உள்ளூர் பக்தர்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் சென்ற வாகனத்திலும் செல்போன்களை வைத்து விட்டு சென்றதை காணமுடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>முழுநேர தலைவர், உறுப்பினர்-செயலாளரையும் நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா: அமைச்சர் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary#comments</comments><guid isPermaLink="false">9b0c5edc-babf-4404-aa55-ca659061c339</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:45:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:45:51.850Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது,</p><p>1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-எப்  பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் அதன் சிக்கல் தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறன.</p><p>எனவே, நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</p><p>இதன் மூலம், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல்பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவார்.</p><p>திட்டப் பரப்பிடம் அல்லாத பிற, பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும்.</p><p>இந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும்,</p><p>நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>அதற்கு ஏற்ப சட்ட  திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.</p><p>இவ்வாறு  கூறப்பட்டுள்ளது </p>]]></content:encoded></item><item><title>ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடி- இளைஞர் தற்கொலை: தடுக்கத் தவறிய காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility#comments</comments><guid isPermaLink="false">0883208d-4789-4919-aebc-7bd3fd793273</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:29:32.784Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நிதி நிறுவன மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டு</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை இலட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.</p><h2><strong>மோசடி</strong></h2><p>தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய  3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம்  ரூ.2000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.</p><p>ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும்  அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.</p><h2><strong>பொறுப்பேற்பு</strong></h2><p>இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு நாளில் உயிர் தப்பினோம் - நேபாள வெள்ளத்தில் இருந்து மீண்ட கோவை பக்தர்களின் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal#comments</comments><guid isPermaLink="false">8e2eec39-afe8-4d81-b71a-6aba84714d4f</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:13.676Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>rescue,nepal flood,நேபாள பெருவெள்ளம்,தமிழர்கள் மீட்பு,Coimbatore Devotees,கோவை பக்தர்கள்,Kailash Yatra</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தில்</a> கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.</p><h2>தமிழர்கள் மீட்பு</h2><p>வெள்ள பாதிப்பில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழகத்தில்</a> இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பலரும் சிக்கி நேபாளம், திபெத் போன்ற இடங்களில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். </p><p>அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர்.</p><p>அந்த வகையில் கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் விமானம் மூலமாக இன்று கோவை வந்தனர்.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>ரோஜா பூக்களை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.</p><p>சொந்த ஊர் திரும்பியவர்கள் பதட்டத்துடனேயே இருந்தனர். அவர்கள் நேபாளத்தில் அவர்கள் சந்தித்த பெரும் துயரம் குறித்து கண்கலங்கியபடி பேசினர்.</p><h2>பிரேமா (திருப்பூர் கணியம்பூண்டி)</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து பெரும் துயரம் அடைந்தோம். நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பாதிப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு முன்பு தான் கடந்திருந்தோம். </p><p>அதனால் உயிர் தப்பினோம். பாதிப்பு நடந்த மறுநாள் தான் எங்களுக்கு விவரமே தெரியவந்தது. இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பத்திரமாக அனைவரும் ஊருக்கு திரும்பி விட்டோம்.</p><h2>தனசேகரன் (புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு)</h2><p>நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம். நாங்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட படி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டோம். </p><p>தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது தான் இந்த தகவல் கிடைத்தது. உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம்.</p><p>எங்கள் உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு எங்கள் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம். </p><p>நேற்று காலை தான் நேபாளத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>மோகனா (திருப்பூர் ஊத்துக்குளி)</h2><p>நாங்கள் அனைவரும் 18-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றோம். நாங்கள் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது இந்த தகவல் எங்களது உறவினர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.</p><p>உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம். சம்பவம் நடந்த வெள்ள பகுதியை நாங்கள் அதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்புதான் கடந்து வந்து இருந்தோம். அதன் பிறகு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்து விட்டன.</p><p>ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவியாக இருந்தன. இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>சரோஜா, ரதி (சத்திய மங்கலம்)</h2><p>நாங்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்று இருந்தோம். எங்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகள் வந்தனர்.</p><p>இந்த வெள்ள சம்பவத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உதவியாளர் ஒருவரின் உடன் பிறந்த அண்ணன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுற்றுப்பயணத்தில் இருந்த போது தகவல் கிடைத்தது. </p><p>அந்த உதவியாளர் அவரது அண்ணனை இழந்தாலும் கடைசி வரை எங்களுடன் இருந்து வந்தார்.</p><p>நாங்கள் இருந்த பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததால் நைலம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். எங்களை சீன ராணுவம் 2 வாகனத்தில் வந்து பத்திரமாக கொண்டு வந்து விட்டனர்.</p><p>இந்த சம்பவத்தில் எவ்வளவு பேர் இறந்தனர், மாயமானார்கள் என்பது குறித்து அங்குள்ள மக்கள் பதட்டத்துடன் பேசிக் கொண்டனர். மொழி தெரியாததால் எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>நேபாளத்தில் இருந்து திரும்பிய பெற்றோரை வரவேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த அஜய் என்பவர் கூறியதாவது:-</h2><p>நாங்கள் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் மோகனா (47), சந்திரகுமார் (57) கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து 39 பேருடன் நேபாள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றனர்.</p><p> 2 வாரம் அவர்கள் அங்கு சுற்றுப்ப யணம் செய்து ஆன்மீக தரிசனம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>26-ந் தேதி நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்து பெற்றோரை தொடர்பு கொண்டோம். அவர்களுடன் செல்போனை எடுத்து பேசினர். </p><p>அதன்பிறகே நாங்கள் சற்று நிதானம் ஆனோம். அவர்கள் மானசரோவர் என்ற இடத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சம்பவம் நடந்த போது ஏதோ நிலச்ச ரிவு ஏற்பட்டது போன்ற உணர்வை சந்தித்ததாகவும் கூறினர்.</p><p>சீனா எல்லையில் இருந்த தால் எனது பெற்றோர் உள்ளிட்ட குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு சாலைகள் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் திட்டமிட்ட படி திரும்ப முடியவில்லை. சீன ராணுவம் எல்லையை கடக்க உதவியுள்ளனர். </p><p>அதன் பிறகு எனது பெற்றோர் மற்றும் குழுவி னர் டெல்லி வந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். இன்று காலை அவர்களை நேரில் பார்த்தபிறகு தான் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல்  மலிவு விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd#comments</comments><guid isPermaLink="false">8166eb79-70c7-48ae-b34a-ee81a6677170</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:54:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:54:26.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Onion,வெங்காயம்,ரேஷன் கடை,TN assembly,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</strong></em> </p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன்  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> பேசியதாவது, </p><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது. </p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயங்கள்</a> போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பிரதான விற்பனை பண்டகசாலைகள் உறுப்பினர் அவர்களுக்கு அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுக்கவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு விளக்கம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina#comments</comments><guid isPermaLink="false">c97ac038-192e-41be-93ac-9efdca842916</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:08.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,காமராஜர்,TN assembly,Tharahai Cuthbert,தாரகை கத்பட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam Thennarasu - Tharahai Cuthbert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தாரகை கத்பட்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district">சட்டசபையில்</a> காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">தாரகை கத்பட்</a> பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு மெரினா கடற்கரையில் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>வரலாற்றில் இந்த பேரவையின் பிழையான செய்திகள் பதிவாகி கூடாது என்ற நோக்கத்தோடு விளக்கம் அளிக்கிறேன்.</p><p>1975-ம் ஆண்டு காமராஜர் இயற்கை எழுதினார். அவர் மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினார்.</p><h2>காமராஜர்</h2><p>இங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காமராஜர் இல்லத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். காமராஜர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.</p> <h2>ராஜாஜி மண்டபம்</h2><p>அவரது உடலை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வந்து உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கிண்டியில் காந்தி மண்டபத்தில் அருகில் அவருக்கும் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஆக இருந்தவர் இதனை பாராட்டினார்.</p> <h2>ராஜா ராம் நாயுடு</h2><p>பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழவில்லை. அப்பொழுதே உறுப்பினர் ராஜா ராம் நாயுடு மேலவையில் பேசியதை அவையில் மேற்கோள் காட்டி</p><h2>கலைஞர்</h2><p>காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அந்த இடத்தை கேட்டார்கள். ஆகையால் கிண்டியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. காமராஜர் சமாதி மேற்கொள்ள அப்போதைய முதலமைச்சர் கலைஞர் இரவெல்லாம் தூங்காமல் அந்த பணியை மேற்கொண்டார் என ராஜாராம் நாயுடு சட்ட மேல் அவையில் பேசியதே சாட்சி. திமுக ஆட்சியில் காமராஜருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>சபாநாயகர்:-</h2><p>அந்த காலத்தில் கட்சி மாறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.</p><h2>காங்கிரஸ் தாரகை கத்பட்:-</h2><p>நான் பேசியது மெரினாவில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றுதான், சமாதி மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொண்டார்கள்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் கூடாது - காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha#comments</comments><guid isPermaLink="false">d5652352-a818-44a3-b9a2-c4359c159861</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:02.866Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Tamil Nadu Pollution Control Board,Vinayagar Chaturthi 2026,Kanchipuram Collector Sneha,கலெக்டர் சினேகா,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chaturthi 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி </a>விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காஞ்சீபுரம் </a>மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்களுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">மாவட்ட கலெக்டர்</a> சினேகா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.</p><h2>கூட்டத்தில் கலெக்டர் சினேகா கூறியதாவது,</h2><p>எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்பு துறை போன்ற அரசு அலுவலகங்களின் தடையின்மைச் சான்று பெற்று சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து சிலை நிறுவுவதற்கான அனுமதியை சிலை அமைப்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.</p><h2>சுற்றுச்சூழல் பாதுகாப்பு</h2><p>மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளும், சிலைகளுக்கு வண்ணங்கள் பயன்படுத்துவதையும் ரசாயனங்கள் இல்லாத வகையில் சிலைகள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p> சிலைகள் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p>கூடாரங்கள் தீப்பற்றக் கூடிய வகையில் இல்லாத வகையில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.</p><p>பூஜையின் போது ஒலி பெருக்கி அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலையின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதிய மின் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.</p><h2>நல்லிணக்கம் அவசியம்</h2><p>அரசியல் கட்சிகள் வகுப்புவாத தலைவர்களுக்கு ஆதரவாக பேனர்கள் போர்டுகள் அமைக்கக் கூடாது. பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். </p><p>பொது அமைதி, பொது பாதுகாப்பு மத நல்லிணக்கத்தை பேணுவதற்காக வருவாய் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை சிலை அமைப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.</p><h2>கரைப்பு கட்டுப்பாடு</h2><p>மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.</p><p>சிலைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சிலைகள் கரைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.</p><h2>சுத்தம் வலியுறுத்தல்</h2><p>சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் போன்றவற்றின் கரையோரங்களில் உள்ள சிலைகளை கரைக்கும் இடங்களில் எஞ்சியிருக்கும் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து அகற்ற வேண்டும். </p><p>சிலைகள் கரைக்கும் நீரின் தரம் மதிப்பீட்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கரைப்பதற்கு முன்னும் கரைத்த பின்பும் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>அனுமதி கட்டாயம்</h2><p>சிலை அமைப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை துறை சார்ந்த அலுவலர்கள் தனி பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். </p><p>கள ஆய்வு மேற்கொண்டு அரசின் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். </p><p>பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என்று கூறினார்.</p><h2>அதிகாரிகள் பங்கேற்பு</h2><p>கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) ரெங்கநாதன் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த புதிய அறிவிப்புகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">9b5d1de7-0a74-4e51-bf76-7cd82efd4074</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:28:42.607Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</strong></em></p><p>கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">புதிய அறிவிப்புகள்</a> :-</p><p>1) திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதர் அங்காடிகள் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர் அங்காடிகள் "கதர் வாரியத்தின் முகம்" என்பதை கருத்தில் கொண்டு அவற்றை நவீனப்படுத்துவது அவசியமாகும். அதன்படி ஏற்கனவே திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இயங்கும் கதரங்காடிகள் புதிய வடிவமைப்பு மற்றும் உட்புற அலங்காரங்களுடன் கூடிய நவீன அனுபவ அங்காடியாக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>2) கதர் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.</p><p>3) திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலைத்தேன் அலகு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மத்திய கதர் ஆணை குழு உதவியுடன் அமைக்கப்படும்.</p><p>4) திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் வள்ளியூர் பனை பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.</p><p>5) தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><h2><strong>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் முகமது பர்வேஸ்  புதிய அறிவிப்புகள்...</strong></h2><p>1) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல பதிவு செய்துள்ள வாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமானத் திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 76 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் "கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்" நிறுவப்படும்.</p><p>2) தமிழ்நாடு தொழிலாளர்களின் கட்டுமானத் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழிற்பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு ஆண்டுதோறும் "முதலமைச்சரின் கட்டுமானத் தொழிலாளர் வெற்றி விருதுகள்" பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.</p><p>3) தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான நிதியினை 3 கோடியே 4 இலட்சம் ரூபாயிலிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>4) பெருநகரங்ளுக்கு வேலை தேடி வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய இடை நேர தங்குமிடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>5) பதிவு பெற்ற 1000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்பு திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு "அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றி கரங்கள்" திட்டம் 15 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.</p><p>6) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் 10 இலட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.</p><p>7) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 1000 தொழிலாளர்களுக்கு, இ-பைக் வாங்குவதற்கு வங்கி மூலம் பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.</p><p>8) தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் மற்றும் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில், 1000 தொழிலாளர்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிட 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் 1000 தொழிலாளர்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.</p><p>9) கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமான வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வர்ணம் பூசுதல் வேலை உள்ளிட்ட பல தொழில் இனங்களில், நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதிய இழப்பீட்டுத் தொகையுடன் கூடிய ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி,50,000 தொழிலாளர்களுக்கு 48 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.</p><p>10) கட்டுமானத்தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வினை மேம்படுத்தி விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்புமாதிரிகள் மற்றும் சுயபாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு நடமாடும் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மையங்கள் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>11) தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவ்வாரியத்தின் மறுசீரமைப்பு இணையதளம் செய்யப்படும்.</p><p>12) ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மென்பாடக் குறிப்புகள்  வழங்குவதற்காக, மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு 15 68 இலட்சத்து ஆயிரம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>13) கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்கள் அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாரியத்தின் இணையதள சேவைகளை வழங்கும் வகையில் 50 வசதி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>14) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 1 கோடி ரூபாய் செலவில் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.</p><p>15) "ஐடிஐ வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம்" மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய 7 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பதிலளிக்க திணறிய அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">6b77c1e5-0a68-4ebd-806a-8f5284a59bf6</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:17:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:17:35.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeshwari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கேள்வி நேரத்தின் போது விளையாட்டுத்துறை சம்பந்தமாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 23 கேள்விகளுக்கு சளைக்காமல் தொடர்ச்சியாக பதில் அளித்தார்.  </p><p>அதன் பிறகு பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர்  நேரடியான பதில் அளிக்காமல் தன்னிடம் இருந்த ஒரு குறிப்பை பார்த்து  பதிலை வாசிக்க ஆரம்பித்தார். </p><p>தொடர்ந்து துணை கேள்விகள் கேட்கும் போதும் அதே பதிலை மீண்டும் கூற ஆரம்பித்தார்.</p><p>அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் காந்திராஜ், வினோத்  மற்றும் முன்னிருக்கையில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அவரிடம் சில  ஆலோசனை கூறினர்.</p><p>இதையடுத்து அவர் எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலை கைவிட மறுப்பு- விஷம் வைத்து கொலை... ரம்பத்தால் உடல் துண்டு துண்டாக வெட்டு! அதிர வைத்த கூடுவாஞ்சேரி கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details#comments</comments><guid isPermaLink="false">8a7519c4-f376-41ac-a83e-92cb76fc7f27</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:58:35.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,affair,தம்பதி கைது,Couple Arrest,கள்ளக்காதல்,Guduvancherry Woman Murder,கூடுவாஞ்சேரி பெண் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர். ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கூடுவாஞ்சேரி-பெண்-கொலை">கூடுவாஞ்சேரி</a> மசூதி தெருவில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அசாமை  சேர்ந்த ராகுல் அவரது  மனைவி பகவதி மாஜி ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>ரெயிலில்</strong></h2><p>கடந்த மாதம் ஹயாத் நிஷாவை கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில்  வைத்து கொலை செய்த பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியதுடன் தலையையும் துண்டித்து அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து சூட்கேசில் அடைத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.</p><p>இது தொடர்பாக ஆக்ரா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.</p><h2><strong>மணிப்பூரில் கைது</strong></h2><p>இதை தொடர்ந்து ராகுல், பகவதி மாஜி இருவரையும் மணிப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.</p><p>போலீஸ் விசாரணையில் இந்த கொலை தொடர்பான பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><p>கொலையுண்ட ஹயாத் நிஷாவுக்கு முறைப்படி ஒடிசா மாநிலத்தில் பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹயாத் நிஷா அவரை பிரிந்துள்ளார்.</p><p>இதன் பிறகு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒடிசாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 2-வது கணவருடன் ஒன்றாக ஒடிசாவில் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹயாத் நிஷா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார்.</p><h2><strong>சென்னையில் காதல்</strong></h2><p>இதன் பின்னர் கூடுவாஞ்சேரிக்கு வந்து தனது 19 வயது மகனுடன் தங்கி இருந்துள்ளார். மகன் ஏ.சி. மெக்கானிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.</p><p>ஹயாத் நிஷாவும் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போதுதான் 3-வதாக அவருக்கு ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகினார்கள். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.</p><h2><strong>மனைவிக்கு தெரியாமல்</strong></h2><p>ராகுல் மனைவிக்கு தெரியாமலேயே ஹயாத் நிஷாவுடனான காதலை வளர்த்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் பல முறை சந்தித்து பேசியதின் விளைவாக ஹயாத் நிஷா கர்ப்பமானார்.</p><p>இதை தொடர்ந்து அவர் ராகுலிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் ராகுலோ எனக்கு திருமணமாகி நான் மனைவியுடன் வசித்து வரும் நிலையில் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து வந்துள்ளார். </p><h2><strong>மிரட்டல்</strong></h2><p>ஆனால் ஹயாத் நிஷா தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீதான் தந்தை. எனவே அதற்கு பொறுப்பேற்று என்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி ராகுல் தனது மனைவி பகவதி மாஜியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன் பிறகு பகவதி மாஜியும் ஹயாத் நிஷாவை கண்டித்துள்ளார். </p><p>எங்கள் குடும்ப வாழ்க்கையில் நீ தலையிடாதே. எங்களை நிம்மதியாக வாழ விடு என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹயாத் நிஷா அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து இருவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>உங்கள் இருவருடன் ஒரே வீட்டில் கூட நான் தங்கி கொள்கிறேன் என்று ஹயாத் நிஷா கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்தனர். </p><p>இதன்படி கடந்த 3-ந்தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் வைத்து சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து ஹயாத் நிஷாவை ராகுலும், பகவதி மாஜியும் சேர்ந்து  சத்தம் இல்லாமல் கொலை செய்துள்ளனர். </p><h2><strong>ரம்பம்</strong></h2><p>இதற்காக கடைக்கு சென்று கத்தி, ரம்பம் ஆகியவற்றை புதிதாக வாங்கி உள்ளனர். அதை வைத்து தான் கொலை செய்த பிறகு ஹயாத் நிஷாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்து உள்ளனர். </p><p>ரம்பத்தை வைத்து தலை மற்றும் கை,கால்களை துண்டித்து சூட்கேசில் அடைத்து இருக்கிறார்கள். கத்தியை வைத்து சதை பாகங்களை அறுத்துள்ளனர். இதற்காக யூடியூப் மூலம் வீடியோ காட்சிகளை இருவரும் போட்டு பார்த்து உள்ளனர்.</p><p>சூட்கேசில் எளிதாக உடல் பாகங்களை அடைப்பதற்காகவே சதை பகுதி முழுவதையும் வெட்டி எடுத்ததுடன் தலை முடியையும் வழித்து எடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னர் சதை பாகங்களை பெரிய அண்டாவில் போட்டு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக அதில் வினிகர் உள்ளிட்ட திரவங்களை ஊற்றி உள்ளனர்.</p><p>யூடியூப் பார்த்து உடல் அழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோக்களை ராகுலும், பகவதி மாஜியும் தெரிந்து கொண்டனர். இப்படி பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர்.</p><p>ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே எங்கள் கனவு - அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district#comments</comments><guid isPermaLink="false">227698bb-ba84-4932-93df-ee269690fdfa</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:57:18.784Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்,Jawaharlal Nehru stadium,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டசபை</h2><p>சட்டசபையில் வினா–விடை நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a>, விளையாட்டு கட்டமைப்புகள் தொடர்பாக சுமார் 23 எம்எல்ஏக்கள் கேட்ட துணை கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது </p> <h2>பாரம்பரிய விளையாட்டுகள்</h2><p>தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து, அனைத்து விளையாட்டு கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் உருவாக்க பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாநில அளவிலான போட்டிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p> <h2>விளையாட்டு வீரர்கள்</h2><p>கிராமப்புறங்களில் மைதானங்களில் மண் தரையில் விளையாடுவதால் மாணவ மாணவிகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க, மேட் அமைத்து விளையாடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் காவிரியில் வளர்ந்தவன். டெல்டா பகுதிகளில் இருந்து அதிகளவில் வேகமாக ஓடக்கூடிய வீரர்கள் உருவாகின்றனர்.</p> <h2>கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம்</h2><p>தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் நீச்சல் வீரர்களும், தென் மாவட்டங்களில் கபடி வீரர்களும் அதிகளவில் உள்ளனர். கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம் உருவாக்கப்படும் </p><h2>நேரு ஸ்டேடியம்</h2><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னை நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது கனவு. மற்ற மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என அரசு கருதுகிறது . எதிர்காலத்தில் 36 ஆயிரம் பேர் அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p> <p>நன்னிலம் பகுதியில் விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார் நன்னிலம் பகுதியில் இருந்து ஒரு ஒலிம்பிக் வீராங்கனை உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாது. குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் முழுமையான வசதிகளை செய்து கொடுக்க முடியும் </p> <p>ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நிதி கேட்காமல் மினி ஸ்டேடியம் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.</p><p>சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். கல்வராயன் மலை, உதகை, குன்னூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளையாட்டுக்கான சிறப்பு நிகழ்வுகள் போதிய அளவில் நடைபெறவில்லை.</p> <h2>விளையாட்டு அரங்கம்</h2><p> இப்பகுதிகளில் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள நிலையில், விளையாட்டை மலைவாழ் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p> ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையும் விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம், ஜிம், ஓடுதளம் உருவாக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>2029-ல் தேர்தல் சூழல் மாறும் போது நாடாளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக மாறும்- ஆதவ் அர்ஜூனா பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament#comments</comments><guid isPermaLink="false">06f869b5-88ba-4081-9fbe-e1081b6c3a24</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:31:26.666Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது :-</p><p>இன்றைய தினம் தங்கை அனிதாவின் நினைவு தினம், 2017 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா 1176 மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தாலும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி பெற முடியாத போது, நம்முடைய தங்கை உயிர் மாய்த்தார் </p><p>மூன்று  முதலமைச்சர்கள்  இந்த அவையிலும், திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்  இன்றைய முதலமைச்சர் விஜய்யும் நீட்டுக்கு எதிராக இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், செவி சாய்க்காத  அரசாக மத்திய அரசு  உள்ளது.</p><p>அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கைக்காக போராடி இருக்கிறோம் அண்ணா கனவு கண்ட இட ஒதுக்கீட்டிற்காக போராடி இருக்கிறோம், ஆனால் அனைவரும் சேர்ந்து இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வர இருக்கும் காலகட்டத்தில்  அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.</p><p>2029 ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும் பொழுது, அனிதாவின் நினைவு நாளான இன்று பாராளுமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> தூக்கி எறியப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும்.</p><p>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும்,</p><p>இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில் அளிக்கும் வகையில் அரசியல் சூழல் மாறும், அனிதாவின் கண்ணீருக்கு விடை தேடி  நாம் ஒரு அரசியலை மேற்கொள்வோம்  என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் அனிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு மற்றும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். </p><p>15 நாட்களுக்கு முன்பாகவே நினைவேந்தல்  கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை இதனை ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர் .</p><p>அனிதாவின் சகோதரர் மணி  என்னை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>நீட் எதிர்ப்பு மரண தொடர்பாக இந்தியாவில் நேரிட்ட முதல் மரணம் அனிதாவின் மரணம். </p><p>அனிதா மரணம் அடைந்தபோது நம்முடைய  முதலமைச்சர் அன்றைக்கு வீட்டில் நேரடியாக சென்று விசாரித்தார்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அன்று சென்றிருந்தார்,</p><p>ஆளும் கட்சியும் இன்று நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசாங்கம் அனுமதி  மறுத்து இருக்கிறது.</p><p>ஏன் அனுமதி மறுத்திருக்கிறது என்ற கேள்வியும் கேட்க விரும்புகிறேன். அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். </p><p>இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் கூறியதாவது,</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா நடைபெறுவதால், இன்னும் சில நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p>வேறொரு நாளில் அனுமதி கேட்டால் அனுமதி அது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். அனிதாவின் நினைவு நாளான  இன்றாவது அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.</p><p>எதிர்க்கட்சித்  தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது, இத்தோடு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தான் கூட்டம் வரும் நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.</p><p>நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில் அங்கு பெரிய கூட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p>நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் அரசு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-</p><p>உடனடியாக இந்த சூழல் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுடன் பேசி மாற்று  இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பூட்டப்பட்ட பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi#comments</comments><guid isPermaLink="false">8d4e4562-cb93-432e-a9b6-ff7a1e9cde77</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:26:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:26:07.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகாசி,Sivakasi,firecracker explosion,Virudhunagar district,firecracker shop,பட்டாசு கடை தீ,விருதுநகர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker shop ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான <a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion">பட்டாசு கடைகள்</a> மற்றும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே பூட்டப்பட்டிருந்த ஒரு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>ரூ.20 லட்சம் பட்<strong>டாசுகள் எரிந்து</strong> சாம்பல்</h2><p>கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகக் கொடூரமாக வெடித்துச் சிதறின. இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் முற்றிலும் வெடித்து சிதறி சாம்பலாகின.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பல மணி நேரம் போராடி எரியும் தீயைக்ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பூட்டப்பட்ட கடை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>போ<strong>லீசார் தீவிர விசாரணை</strong></h2><p>விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">e8817533-71fe-4da5-afbd-33f9ad464cdd</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:09:01 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:09:01.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay - mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <h2>கர்நாடகாவில் மழை</h2><p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய் </h2><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார்.</p><p>சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.</p> <h2>உற்சாக வரவேற்பு </h2><p>பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலமைச்சர் விஜய்</a> திறந்து வைத்தார்.  காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.</p><p>மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p> <p>முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside#comments</comments><guid isPermaLink="false">9661ae8a-b754-46b6-9be4-a4e44c22d2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:58.008Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,சென்னை ஐகோர்ட்,Madras HC,H raja,எச் ராஜா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்.பி., கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/எச்-ராஜா">எச்.ராஜா</a>, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். </p><p>இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் , எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. </p><p>இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச்ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026#comments</comments><guid isPermaLink="false">f39e5adb-650a-4c5b-96e8-cc82fc561033</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:44:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:44:56.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து960-க்கும் விற்றது. </p><h2><strong>சற்று உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை குறைவு</strong></h2><p>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect#comments</comments><guid isPermaLink="false">080b7fa5-c0c6-46b0-b23b-e69286bb509b</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:25:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:25:40.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பூலித்தேவர்,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Puli thevar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டும்செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராகப் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> விளங்கினார்.</p> <p>இவரது காலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையின் வீரம் செறிந்த காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர்.</p><p>ஆற்காடு நவாப் முகமது அலியும் அவனுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயக் கம்பெனியும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முயன்றபோது, பூலித்தேவன் திறை (வரி) செலுத்த மறுத்துவிட்டார்.</p> <p>ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கருதி, பிற பாளையக்காரர்களான மேற்குப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டமைப்பை உருவாக்கினார். இதில் மாவீரன் ஒண்டிவீரன் போன்ற தளபதிகள் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.</p><p>பூலித்தேவனை அடக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட முகமது யூசுப்கான் பலமுறை நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டார். ஆரம்பத்தில் பூலித்தேவனின் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் கான்சாஹிப் திணறினார்.</p> <p>நீண்ட போர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப் படைகளின் உதவியோடு 1761-இல் நெற்கட்டும்செவல் கோட்டையைக் கான்சாஹிப் கைப்பற்றினார்.</p><p>கோட்டையை இழந்தாலும் பூலித்தேவன் சோர்வடையாமல், மறைவிடங்களில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.</p><p>இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாகப் போராடிய மாவீரர்களில் பூலித்தேவன் குறிப்பிடத்தக்கவர். </p> <p>இந்நிலையில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p> <p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>