<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 08 Sep 2026 08:40:59 +0000</lastBuildDate><item><title>புலிப்பட வருவாயை மறைத்த உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-moral-standing-does-the-noble-soulwho-concealed-income-worth-croreshave-to-speak-about-misa-dayanidhi-maran-lashes-out#comments</comments><guid isPermaLink="false">a438ee47-dc91-4585-b7b4-e71485d2a00b</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:34:23 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:34:23.105Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தயாநிதி மாறன்,Dayanidhi Maran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊழலைப் பற்றிப் பேசும் உத்தமருக்கு மிசாவைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? - தயாநிதி மாறன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/srm12zrk/New-Project-2026-09-08T140045.996.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (செப்.8) காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order">முதலமைச்சர் விஜய்</a>, திமுகமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p>அப்போது மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்டவை குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறம் கடுமையான கண்டனங்களை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்., </p><p>ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?</p><p>அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?</p><h2>உள்ளூர் பத்திரிக்கையாளர்களுக்கே அஞ்சும் ஒருவர்</h2><p>உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். </p><p>உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறனைப் பற்றிப் பேசலாமா?</p><h2>விஜய்யை அவமதித்த காங்கிரஸ் </h2><p>இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, </p><p>“பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய்மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, </p><p>உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய்யை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?</p><h2>மிசாவை பற்றிப்பேசும் அருகதை முதலமைச்சருக்கு இருக்கிறதா?</h2><p>அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? </p><p>போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.</p><h2>கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால்...</h2><p>கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்!</p><p>தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜி வழக்கு: அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-case-tamil-nadu-govt-affidavit-supreme-court#comments</comments><guid isPermaLink="false">290cf31d-9ef4-47d0-b3fa-301c61430c19</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:24:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:24:07.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Supreme Court,செந்தில் பாலாஜி வழக்கு,Senthil Balaji case,உச்சநீதிமன்றம்,Senthil Murugan,Washington Dhanasekaran,வி.செந்தில் முருகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji Case]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/vbg23aka/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை</p><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies">தமிழக போக்குவரத்துத் துறையில் </a>வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வாஷிங்டன் தனசேகரன் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வி.செந்தில் முருகன் புதிய சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.</p><h2>த<strong>மிழக அரசு விளக்கம்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதில் உரிமை கோர அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>அரசுத் தரப்பு வழக்கறிஞர் மாநில அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதியை நிலைநாட்டவே நியமிக்கப்படுகிறாரே தவிர, குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பயனளிக்கும் வகையில் நியமிக்கப்படுவதில்லை. எனவே, சிறப்பு வழக்கறிஞரைத் தேர்வு செய்வதும் நியமிப்பதும் முற்றிலும் மாநில அரசின் நிர்வாக அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வழக்கு விசாரணை<strong>யின் மு</strong>ன்னேற்றம்</h2><p>புதிய சிறப்பு வழக்கறிஞராக வி.செந்தில் முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இந்த பிரமாணப் பத்திரத்தில் விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு தொடர்பாகத் தமிழக அரசு தன் தரப்பு விளக்கத்தைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>என் இசையால் உயிர் பெற்ற குழந்தை: இளையராஜா நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ilaiyaraaja-says-child-brought-to-life-by-my-music#comments</comments><guid isPermaLink="false">3d7ca5dc-0372-4158-8b82-1d9852176830</guid><pubDate>Tue, 08 Sep 2026 08:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-08T08:18:57.262Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>இளையராஜா,ilaiyaraaja,மஞ்சணத்தி திரைப்படம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8zks1dm/ilaiyaraaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்றார்.</strong></em></p><p>மாரி செல்வராஜ் இயக்கத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/இளையராஜா">இளையராஜா</a> இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘மஞ்சணத்தி’. படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை”  விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.</p><p>படப்பிடிப்பை இளைய ராஜா கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.</p><h2><strong>காடுமேடுகளில்</strong></h2><p>விழாவில் இளையராஜா பேசியதாவது:-</p><p>நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.</p> <p>உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”</p><h2><strong>உயிர்பெற்ற குழந்தை</strong></h2><p>ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: நிரந்தரக் கிடங்குகளை  விரைந்து அமைக்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-13-lakh-bags-of-paddy-damaged-by-rain-permanent-warehouses-must-be-constructed-quickly#comments</comments><guid isPermaLink="false">e8bc29b7-d7a6-4e82-822a-1a5d885b9d8b</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:58:02 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:58:02.046Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் மூட்டைகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/3nw9yxig/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மழையில் நனைந்து முளைத்து விட்டன</strong></h2><p>செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த  சுமார் 13 லட்சம் <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-மூட்டைகள்">நெல் மூட்டைகள்</a> கடந்த சில நாள்களில்  பெய்த மழையில் நனைந்து சேதமடைந்திருக்கின்றன.  அவற்றில் பல்லாயிரம் நெல் மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுகி விட்டன.  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தியும் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை அரசு நிர்வாகம் பொறுப்பின்றி மழையில் நனைய விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சமத்துவபுரத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள  திறந்தவெளிக் கிடங்கில் 50 ஆயிரம் டன், அதாவது 12.50 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டன. அதே செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த புள்ளேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கிடங்கிலும் பல்லாயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டன. கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தை அடுத்த இராஜேந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள திறந்தவெளிக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டன.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நேற்றோ அதற்கு முதல் நாளோ கொள்முதல் செய்யப்பட்டவை அல்ல. பல வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டு  சேமித்து வைக்கப்பட்டவை தான். அவை உரிய காலத்தில் கிடங்குகளுக்கோ, அரவை ஆலைகளுக்கோ கொண்டு செல்லப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உரிய காலத்தில் அங்கிருந்து  அகற்றாத அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.</p><h2><strong>நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்</strong></h2><p>வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து  சேதமடைகின்றன.</p><p>இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தான். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 80 லட்சம் டன் நெல் உள்பட மொத்தம் 120 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் அதிகபட்சமாக 2025-26ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால்,  நெல் கொள்முதலை மேற்கொள்ளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட  கிடங்குகள் தான் உள்ளன. இது தமிழ்நாட்டில் விளையும் உணவு தானியங்களில்  வெறும் 15% மட்டும் தான். இது போதுமானதல்ல.</p><p>மழையில் நனைந்து சேதமடைந்த  நெல் மூட்டைகளை பயன்படுத்த முடியாது. அவற்றை அரவை செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால் துர்நாற்றம் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கும். இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக  பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்- த.வெ.க. எம்.எல்.ஏ.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-pallavi-says-please-forgive-me-if-i-have-spoken-inappropriately#comments</comments><guid isPermaLink="false">c9100d1f-4daf-481f-9ddf-70655808438d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:45:52 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:45:52.769Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,பல்லவி,Pallavi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:title><media:description type="html"><![CDATA[ திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9xsifhwk/pallavi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி பேசியதாவது:-</p><p>* போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.</p><p>* பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>* மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள்.</p><p>* வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>* வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.</p><p>* போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>* இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.</p><p>* என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார். </p><p>இதனிடையே, சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2,000 கோடி முறைகேடு: அமைச்சர் ஆதவ்  புகார் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:34:51.980Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/un7xbzuk/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.</p><p>சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக  நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.</p><p>போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் -  பல்லவி</p> <p>வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்  -  பல்லவி</p><p>பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் -  பல்லவி</p> <p>போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி</p> <p>உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு- ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-extends-stay-on-announcement-of-by-elections-for-5-constituencies#comments</comments><guid isPermaLink="false">2aae0f17-1b37-40ef-954f-5f0592417a9d</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:29:40.723Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை ஐகோர்ட்,Madras HC,5 Constituency By Election,5 தொகுதி இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/1kio8yc8/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ந்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.</strong></em></p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக கட்சியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><p>இந்த வழக்கில், முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17 -ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், ராஜினாமா செய்து, அதை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல மனுவைத் தாக்கல் செய்துள்ள மனுதாரர் சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்தவரோ அல்ல, வாக்காளரும் அல்ல. திருச்சி கிழக்கு தொகுதியில மக்கள் பிரதிநிதி இல்லாமல் காலவரையின்றி இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார். இதே போல் தடையை நீக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமைநீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெருந்துறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முரளிதர், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு இன்று காலையில் நிராகரிக்கப்பட்டதாகவும் எனவே தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் உத்தரவு நகல் கிடைக்கப்பெறவில்லை என்றும் வந்தபின் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களை கேட்ட நீதிபதிகள், இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 28-ந்தேதி நடைபெறும் என உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reports-indicate-that-chief-minister-vijay-will-personally-watch-ajiths-race#comments</comments><guid isPermaLink="false">3d4ca011-cf01-4a8a-9c5d-8280652a7b4e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:10:30 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:10:30.177Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ajith,Car race,அஜித்,கார் ரேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ny9xl2qj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</strong></em> </p><h2><strong>லண்டன் பயணம்</strong></h2><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>லண்டனில் வரும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. </p><p>முன்னதாக, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். மேலும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இரு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். </p><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து இருந்தார். அஜித் கூறுகையில், மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு- தேர்தல் நடத்தை விதிகள் அமல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-bypoll-oct-6-voting-model-code#comments</comments><guid isPermaLink="false">b829217f-57e3-43a5-be5d-117c2123d70e</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:04:16 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:04:16.749Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Satyabhama,மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி,இடைத்தேர்தல்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,Madhuranthakam,Dharapuram Constituency,சத்யபாமா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Satyabhama-Maragatham Kumaravel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/v56f1r9m/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6">இடைத்தேர்தல்</a> தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.</p><p>கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை துறந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.</p><h2>தேர்தல் அட்<strong>டவணை விவரங்</strong>கள்</h2><p>தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வேட்புமனுத் தாக்கல் நாளை (செப்டம்பர் 9) தொடங்குகிறது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க இறுதிக்காலம் நிர்ணயிக்கப்பட்டு, பரிசீலனைக்குப் பின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.</p><p>அக்டோபர் 6-ஆம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><h2>நடத்தை <strong>விதிகள்</strong> </h2><p>தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அரசின் புதிய நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை இவ்விரு தொகுதிகளிலும் செயல்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் சார்பாகப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகத் துணை ராணுவப் படையினரும், மத்திய தேர்தல் கண்காணிப்பாளர்களும் விரைவில் வருகை தர உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறது- எ.வ.வேலு ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tvk-is-running-a-reels-administration-ev-velu#comments</comments><guid isPermaLink="false">2f56c055-ca8c-4f4c-b63f-1eba7d8516f6</guid><pubDate>Tue, 08 Sep 2026 07:03:07 +0000</pubDate><atom:updated>2026-09-08T07:03:07.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எவ வேலு,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/eddgtspj/velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>சட்டசபை வளாகத்தில் தி.மு.க. கொறடா எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-</strong></h2><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ‘காவல்துறை, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எடுத்து வைத்தார். இந்த ஆட்சி பொறுப்புக்கு வந்த 116 நாட்களில் 550 குற்றங்கள் நடந்துள்ளன. அதில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டார். இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் அளிப்பார் என்றுதான் எதிர்பார்த்தோம். </p><h2><strong>திட்டமிட்டு பேசினார்</strong></h2><p>எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசும் போது, ‘27 நிமிடங்கள் வரை அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு அவை விதிகளை மீறி அதாவது நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக விவாதிக்கக் கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி அமலாக்கத்துறை தெரிவித்துள்ள தகவல்களை முழுமையாக படித்தார். இது சட்டசபை விதிகளை மீறிய செயல்.</p><h2><strong>மிசா</strong></h2><p>மிசா பற்றி பேசும் போது அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதால் உடல் அசைவுகளை எல்லாம் செய்து காட்டினார். மிசா என்பது எல்லோருக்கும் தெரியும். மிசா கொடுமையை அனுபவித்தவர் எங்கள் தலைவர். அவர் ரியல் ஆட்சி நடத்தினார். ஆனால் இப்போது ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது. ரீல்ஸ் எடுப்பதற்காகவே நேற்று சினிமா பாணியில் பேசினார்.</p><h2><strong>ரீல்ஸ்</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் பற்றி ஏற்கனவே பலமுறை விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கலைஞரும் பல முறை பதில் அளித்து இருக்கிறார். இப்போது நாங்கள் பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டை பாக்கு பற்றி அவர் பேசுகிறார். 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு தகவலையும் சொல்கிறேன். சபாநாயகர் இருக்கையில் சத்யபாமா எம்.எல்.ஏ.வை அமர வைத்ததும் இதுவரை எந்த பெண் எம்.எல்.ஏ.வும் அமர்ந்ததில்லை என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால் காங்கிரசை சேர்ந்த பொன்னம்மாள், யசோதா, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த லீமாரோஸ் இப்படி பல பெண் தலைவர்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்த வரலாறு உண்டு என்பதை மறந்து விட்டார்கள்.</p><h2><strong>நிரூபிக்க முடியவில்லை</strong></h2><p>சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது ஆஜரான எம்.ஜி.ஆரே தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கமிஷன் விசாரணை முடியும் போது 28 புகார்கள் கூறப்பட்டதாகவும், ஆனால் எதையும் நிரூபிக்க முடியவில்லை என்று அந்த வழக்கையே மூடிவிட்டார்.</p><p>அதே போல் முதலமைச்சர் நேற்றைய பேச்சின் போது முரசொலி மாறன் பற்றியும் பேசினார். முரசொலிமாறனை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்ட போது அந்த குடும்பத்தினர் இன்றைய முதலமைச்சரையும் டெல்லிக்கு அழைத்து சென்றனர். முதலாளியாக இருந்து அந்த குடும்பம் சினிமாவில் நடிப்பதற்காக கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டவர்தான்.</p><h2><strong>சர்வாதிகாரம்</strong></h2><p>அப்படிப்பட்டவர் இன்று முரசொலிமாறனை கொச்சைப்படுத்தி பேச என்ன அவசியம் வந்தது. எனவேதான் நேற்று முதலமைச்சர் பேசியது தவறு. மிசாவை பற்றி குறிப்பிட்டது தவறு. சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியது தவறு. எனவே அந்த பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. நடுநிலை போல் செயல்பட்ட சபாநாயகர் இன்று சர்வாதிகாரத்தின் உச்சத்துக்கே சென்று எங்களை வெளியே தூக்கி போட்டு உள்ளார். ஜனநாயகத்தின் மரபுகள் கெட்டு போய் உள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு தொடருமா? - சண்முகம் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-shanmugam-clarifies-will-support-for-tvk-continue-for-5-years#comments</comments><guid isPermaLink="false">d37d5494-e8ed-4224-90b1-2c9e72c10d95</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:59:40 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:59:40.822Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Shanmugam,CPIM,தமிழக சட்டசபை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,TN assembly,tvk,சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/pfea26kl/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மாநில செயலாளர் சண்முகம் கூறினார்.</p><p>சென்னை சைதாப்பேட்டையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</a> மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* நாளை நடைபெறும் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது.</p><p>* சட்டமன்றம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மன்றமாக நடக்க வேண்டும்.</p> <p>* ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.</p><p>* சட்டசபை மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. அவர்களின் சொந்த பணத்தில் நடக்கவில்லை.</p><p>* ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்தாரா?</p> <p>* உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதலமைச்சர் விஜய் பதில் அளிக்கவில்லை.</p><p>* நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற வகையில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்.</p><p>* சட்டசபை சண்டை மன்றமாகவும் கத்துவதற்கான மன்றமாகவும் நடைபெறுவதை கண்டிக்கிறோம்.</p> <p>* மிசா குறித்த அமைச்சர் நிர்மர்குமாரின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு.</p><p>* சேற்றை வாரி வீசுவதை போன்று அமைச்சர்கள் பேசக் கூடாது.</p><p>* தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்த்து கொண்டிருக்கின்றனர்.</p> <p>* தவெக அமைச்சர்கள் முதலில் நிறைய படிக்க வேண்டும் என்று நான் அறிவுரை கூறுகிறேன்.</p><p>* வரலாறு தெரியாது திமுகவின் மீது இருக்கும் வெறுப்பில் சகட்டு மேனிக்கு பேசுவது தவறு.</p><p>* 3  கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார்.</p> <p>* ஊழலில் நடவடிக்கை என்பதில் கம்யூனிஸ்ட் உறுதியாக உள்ளது,  தவெக உறுதியாக உள்ளதா என்றுதான் சந்தேகம் எழுகிறது.</p><p>* வீணான விவாதங்களில் சட்டசபை நேரம் விரயம் ஆவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.</p><p>* வரும் தேர்தல்களை கூட்டணியாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என தவெக அமைச்சர்கள் கூறினர்.</p> <p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami">தவெக</a> அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.</p><p>* தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டு ஆதரவு தொடர வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாட்டை பொருத்தது.</p><p>இவ்வாறு அவர்  கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு 10-ந் தேதி வரை பெறலாம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-byelection-applications-to-contest-on-behalf-admk-can-be-submitted-until-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/edappadi-palaniswami-byelection-applications-to-contest-on-behalf-admk-can-be-submitted-until-the-10th#comments</comments><guid isPermaLink="false">71a3504f-4a2a-44f3-b8d1-f133c34298c6</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:40:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:40:54.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi  Palaniswami,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6wie47zg/epss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/6wie47zg/epss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். </p><h2><strong>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-</strong></h2><p>மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமைக்கழகத்தில் இன்று (8-ந் தேதி) முதல் 10-ந் தேதி (வியாழக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.</p><h2><strong>படிவங்கள்</strong></h2><p>தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, 10-ந் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது- கே.பாலகிருஷ்ணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/k-balakrishnan-says-cpm-will-not-participate-in-the-meeting-of-tvks-alliance-parties#comments</comments><guid isPermaLink="false">29449ff1-b528-40e1-b1c8-12ad7809b6ac</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:16:37 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:16:37.168Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/udt1s6dn/CPM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்று சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனைக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவித்து இருந்தனர். </p><p>அதன்படி, முதலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு பேசிய சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.வின்</a> கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது என  தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.வெ.க. கூட்டணியில் இல்லை, அதனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். கடந்த மாத கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்போது எப்படி செல்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை என்றார். </p><p>இதனால் நாளை நடைபெறும் கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனை தொடர்ந்து, சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. </p><p>ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்பது குறித்து தெரியவரும். </p><p>முன்னதாக த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்பதில்லை என அறிவித்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த தென்னக ரெயில்வே திட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railways-plan-to-increase-number-of-tracks-to-15-at-tambaram-railway-station#comments</comments><guid isPermaLink="false">984a1694-761c-4a86-a963-7fe142b531b4</guid><pubDate>Tue, 08 Sep 2026 06:12:39 +0000</pubDate><atom:updated>2026-09-08T06:12:39.351Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Indian Railway,சென்னை எழும்பூர்,தென்னக ரெயில்வே,தாம்பரம் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Railway Station ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e4xpty8g/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. </p><p>சென்னை புறநகர் மற்றும் தொலைதூர ரெயில் பயணங்களில் மிக முக்கியமான முனையமாக விளங்கும் தாம்பரம் ரெயில் நிலையத்தை, நகரின் இரண்டாவது பெரிய ரெயில் செயல்பாட்டு மையமாக மேம்படுத்த தென்னக ரெயில்வே விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள தண்டவாளங்களின் எண்ணிக்கையை 10-ல் இருந்து 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2>முதன்<strong>மை முனையமாக மாறும் தா</strong>ம்பரம்</h2><p>சென்னையின் மூன்றாவது ரெயில் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம் ரெயில் நிலையம், இந்த விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked">சென்னை எழும்பூர்</a> ரெயில் நிலையத்தை விட பெரிய மையமாக உருவெடுக்கும். இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கும் நாட்டின் பிற வட மாநிலங்களுக்கும் இயக்கப்படும் தொலைதூர ரெயில் சேவைகளை தாம்பரத்தில் இருந்தே தடையின்றி இயக்க முடியும். மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலவும் கடும் போக்குவரத்து மற்றும் நடைமேடை நெரிசலுக்கு இது பெரிய தீர்வாக அமையும்.</p><h2>நடைமேடை <strong>விரிவாக்கம்</strong> </h2><p>தற்போது தாம்பரம் நிலையத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் நடைமேடைகளை நீட்டிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், நிலையத்தின் வடக்குப் பகுதியில் ரூ.19 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது நடைமேடைப் பாலம் மற்றும் அதனுடன் இணைந்த பயன்பாட்டுப் பகுதிகளும் மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். கிழக்குப் பகுதியில் அமைந்த பாரதமாதா சாலையுடன் புதிய அணுகுசாலையை இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><h2>ரூ.<strong>19 கோடியில் ந</strong>வீன உள்கட்டமைப்பு</h2><p>ஆண்டுதோறும் 3.50 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையம் ‘பிரிவு 1’ தரவரிசையில் உள்ளது. இங்கு வருகை தரும் பயணிகள், குறிப்பாக மூத்த குடிமக்கள் நீண்ட தூர ரெயில்களை அணுகுவதில் சிரமம் அடைவதைத் தவிர்க்க பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய நடைமேடைப் பாலத்தில் நவீன காத்திருப்போர் அறை மற்றும் உயர்த்தப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 9 மின்தூக்கிகள் மற்றும் 10 தானியங்கிப் படிக்கட்டுகள் நிறுவப்பட உள்ளன.</p><h2>விரிவான திட்<strong>ட அறிக்கை</strong> </h2><p>தாம்பரம் ரெயில் நிலையத்தை சர்வதேச தரத்திலான பெரிய முனையமாக முழுமையாக மறுசீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரெயில் நில மேம்பாட்டு ஆணையம் தற்போது தயாரித்து வருகிறது. இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் போது, தென் சென்னைப் பிராந்தியத்தின் மிக முக்கியப் போக்குவரத்து மையமாக தாம்பரம் உருவெடுக்கும்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் - விசாரணை அறிக்கை சட்டசபையில் சமர்ப்பிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/inquiry-report-on-kallakurichi-illicit-liquor-deaths-submitted-to-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">4d16b5c0-ef22-4b5b-ab31-e3c862ee38c4</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:57:25 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:57:25.729Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Illegal Liquor Death,kallakurichi,கள்ளச்சாராயம்,கள்ளக்குறிச்சி விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/jbkepu5h/kallakuruchi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பாக இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.</p> <h2>கள்ளக்குறிச்சி</h2><p>கடந்த 2024-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். </p><p>இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.</p> <h2>நீதியரசர் கோகுல்தாஸ்</h2><p>இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி தனது இறுதி அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.</p><p>நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly">சட்டசபையில்</a> சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் தரப்பில் கடுமையான அலட்சியமும் கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது என்று நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>இதுதொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">கள்ளச்சாராயம்</a> விற்பனைக்கு பெயர் போன பகுதிகளிலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது. </p><p>கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகளே இதற்கு பொறுப்பு. </p> <p>கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மற்றும் கச்சிராப்பாளையம் வட்டங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இந்நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள்.</p><p>விழுப்புரம் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட கள்ளச்சாராய துயர சம்பவத்திலிருந்து இச்சம்பவம் நிகழ்ந்த 2024 வரை பணியாற்றிய இச்சம்பவத்திற்கு பொறுப்பான பல்வேறு பதவிகளை வகித்துவந்த அதிகாரிகள் மீது துறை சார்ந்த விசாரணையை தொடங்கிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கல்வி கற்ற திறன்மிக்க திறன்சாரா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க கோகுல்தாஸ் ஆணையம் பரிந்துரையும் செய்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திடீர்ன்னு சாமி வந்துடுச்சு.. சட்டசபையில் ஆவேசமாக துள்ளிய திமுக எம்.எல்.ஏ! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/suddenly-possessed-dmk-mla-leaps-about-furiously-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">0f569b2c-2297-42e0-9693-70504e558409</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:50:54 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:50:54.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,தமிழக சட்டசபை,திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/dgu96ips/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அவையில் இருந்து வெளியேற்றப்படும் திமுக எம்எல்ஏ சாமி ஆடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026">தமிழ்நாடு சட்டசபை</a>யில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சபாநாயகர் </a>நிராகரித்தார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.</p> <h2>வெளியேற்றம்</h2><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார்.</p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டு அமளி செய்தனர்.</p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</p> <h2>சாமி ஆடிய எம்எல்ஏ</h2><p>அதன்படி திமுக எம் எல் ஏ க்களை அவைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது வால்பாறை தொகுதி திமுக எம் எல் ஏ குட்டி (எ) சுதாகர் சாமி வந்ததுபோல் ஆவேசம் அடைந்தார்.</p><p>சட்ட சபையில் கோஷம் எழுப்பிய படி தரையில் அமர்ந்திருந்த அவர் திடீரென துள்ள ஆரம்பித்தார்.</p> <p>இதைப் பார்த்த சபாநாயகர், அவருக்கு உடல்நிலை சரியில்லை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.</p><p>அதை தொடர்ந்து 5 பேர் அவரை பாதுக்காப்பாக பத்திரமாக வெளியேற்றினார்கள்.</p><p>அப்போது அவர் தனக்கு திடீரென சாமி வந்து விட்டதாக தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தோப்பு வெங்கடாசலம் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-thoppu-venkatachalam-petition#comments</comments><guid isPermaLink="false">726949df-fa59-4383-a8f2-0e6b7479c53e</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:44:14 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:44:14.269Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,சென்னை ஐகோர்ட்,Madras HC,பெருந்துறை தொகுதி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/zknnh4wq/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</strong></em></p><p>கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.</p><p>இதனிடையே,தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.</p><p>பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட்  தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பதும், தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-praise-tvk-members-and-edappdi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">399d7177-ff64-4e58-87fb-1ff3ab6931c6</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:32:26 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:32:26.710Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uy5spdte/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில், முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து தேவையில்லை, நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக்காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர். </p><p>இதன்பின், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-</p><p>* திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>* சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம் உள்ளது.</p><p>* அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>* பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்.</p><p>* அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>* முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>* தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>* என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.2000 கோடி.. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எ.வ. வேலு செய்த வேலை - சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா புகார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-2000-crore-the-move-made-by-ev-velu-in-the-confidence-of-returning-to-poweraadhav-arjuna-levels-allegations-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">2458f3a7-14ce-40bf-b38a-9b9216aeceee</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:29:03 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:29:03.854Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,Tamil Nadu Legislative Assembly,E.V. Velu,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜுனா, எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/9m5i58ma/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த  பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>சட்டசபையின் கடைசி நாள் இன்று. நேற்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>காவல்துறை மானிய கோரிக்கை பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly">சர்க்காரியா கமிஷன் </a>குறித்து பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் மறுத்த நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்தன. </p><p>அப்போது எழுந்த விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கொறடா எ.வ. வேலு குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். </p> <p>ஆதவ் அர்ஜுனா அவையில் பேசியதாவது, "சட்டப்சபையின் உரிமை மீறல் பிரச்னையை நாங்கள் கொண்டுவந்தோம். </p><p>தமிழ்நாடு சட்டசபை விதிகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மற்றும் இன்றைய எம்எல்ஏ எவ வேலு 2021 - 2026 ஆம் காலகட்டத்தில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்தபோது 14.1.2026 நாளிட்ட அரசாணை எண் 06 மூலம் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் 80 பணிகளுக்கு ரூ.2000 கோடி முன்கூட்டிய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அத்தொகை 2026-27 இல் மொத்த திட்ட அனுமதிக்குள் சரிசெய்யப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>ஆனால் அந்த நேரத்தில் அந்த மானிய கோரிக்கைக்கள் சட்டசபையில் அப்போது வாக்களிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. </p><p>இருப்பினும் இப்பணிகளுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டு 2025-26 நிதியாண்டிலே 80 பணி ஆணைகளும் வழங்கப்பட்டு எதிர்கால பட்ஜெட் புரொவிஷன் மீது ரூ.2000 கோடி காமிட்ட் லயபிலிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது சட்டமன்ற நடைமுறைக்கு எதிரானது.</p><p>சட்டமன்றத்தில் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி வந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ. 2000 கோடியை ஒதுக்கியுளளனர். </p><p>இதனால் மானிய கோரிக்கையை பரிசீலித்து அனுமதி வழங்கும் சட்டசபையின் அதிகாரம் செயல்முறையில் பறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்பற்ற செயல் குறித்த அறிக்கையை ஆய்வக்கு சட்டமன்றம் அனுப்ப வேண்டும் என கோருகிறேன்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர்- எ.வ.வேலு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-indictment-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ee457877-b141-41b1-8b0d-e317a510952b</guid><pubDate>Tue, 08 Sep 2026 05:13:50 +0000</pubDate><atom:updated>2026-09-08T05:13:50.801Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/q9ln2jpq/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து தி.மு.க. வினர்கள் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு கூறுகையில், </p><p>தி.மு.க.வை அசிங்கப்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை சினிமா பாணியில் முதலமைச்சர் பேசினார். அமலாக்கத்துறை பற்றி முதலமைச்சர் பேசிய நிலையில் பதிலளிக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார். </p><p>தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறுகையில், </p><p>* எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம். </p><p>* காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை.</p><p>* மிசாவைப் பற்றி பேசிய போது முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய மோசமான உடல்மொழியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். </p><p>* மிசாவில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர். </p><p>* முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதலமைச்சர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?</p><p>* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பெண் மாற்று தலைவரே இதுவரை இல்லை என்று ரீல்ஸ் போடுவதற்காக சத்யபாமாவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-evicted-from-the-assembly-by-marshals#comments</comments><guid isPermaLink="false">ecbd125c-054c-4a37-9d93-bf40b7d57bdb</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:13.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க.வினர் அவைக்காவலர்களால் வெளியேற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/qzb0zobr/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a>  சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில்,</p><p>முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>அப்போது பேசிய சபாநாயகர், இதுபொதுக்கூட்ட மேடை அல்ல, இது உங்கள் கட்சிக்கூட்டம் அல்ல. அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள். பேரசையை நடத்தவிடாமல் தடை செய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர். தி.மு.க. கொறடா எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு பேச அனுமதி தருகிறேன் என்றார். </p><p>சபாநாயகர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். </p><p>அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், 2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றுங்கள் என்றார். </p><p>இருப்பினும் சபாநாயகர், தி.மு.க. கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் என பல முறை கூறினார். ஆனால் தி.மு.க. உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் அவை காவலர்களை அழைத்து அமளியில் ஈடுபடும் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்றினர். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது  - சபாநாயகர் சொன்ன காரணம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-remarks-cannot-be-expunged-from-the-house-records-speaker-asserts-firmly#comments</comments><guid isPermaLink="false">79bf8e1a-84e4-42dc-9f6e-4e65a2d83517</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:54:04 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:54:04.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,விஜய்,தமிழக சட்டசபை,சபாநாயகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/e3v99a53/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் நேற்று சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியவற்றை அவைகுறிப்பில் இருந்து நீக்க முடியாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.</p> <p>நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலைச்சர் விஜய்</a>, 1970களில் ஒரு நபர் விசாரணை ஆணையமான சர்க்காரியா கமிஷன், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa">திமுக ஊழல்கள் </a>செய்ததாக தந்த அறிக்கை பற்றியும் அதை முன்வைத்து கடந்த திமுக ஆட்சியில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தையும் குறிப்பிட்டு பேசினார். </p><p>அதில் குறிப்பாக, வீராணம் திட்டத்தின் கீழ் குழாய் தயாரிப்பு டெண்டருக்காக  அப்போதைய திமுக அரசின் கீழ் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன்,  சத்யநாராயணா பிரத்ர்ஸ் என்ற நிறுவனத்திடம் இன்ஸ்டால்மென்டில் ரூ.29 லட்சம் லஞ்சம் வாங்கினார் எனவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர்  ஒதுக்க கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் எனவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் பேசினார். </p><h2></h2><h2>திமுக வலியுறுத்தல்</h2><p>இவை அனைத்தும் குற்றச்சாட்டுகள் தவிர எதுவும் நிரூபிக்கப்படவில்லை ஆதலால், திமுக நேற்று அவையில் கடும் அமளியில் ஈடுபட்டது. மேலும் சபாநாயகர் பேச அனுமதி தராததால் அவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.</p><p>இந்த சூழலில் இன்று அவை தொடங்கியதும் திமுக கொறடா எவ வேலு, நேற்று முதலமைச்சர் விஜய், சர்க்காரியா கமிஷன் பற்றி பேசிய விஷயங்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.</p> <h2>சபாநாயகர் பதில் </h2><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர்,</p><p>"நேற்று இந்த சபையில் முதலமைச்சர் பதிலுரை அளித்தார். அவர் பேச ஆரம்பித்து முடிக்கும் வரைக்கும் திமுக உறுப்பினர்கள் யாராவது அதை கவனித்து கேட்டீர்களா என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.</p><p>எனது அனுமதி இல்லாமல் போஸ்டர்களை எல்லாம் கொண்டுவந்து காண்பித்தீர்கள். அதற்கு நான் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நிமிடம் கூட அவர் பேச்சை யாருக்கும் கேட்கவில்லை. சத்தம் போட்டுகொண்டு தான் இருந்தீர்கள்.</p><p>முதலைச்சர் நேற்று அவையில் பேசிய சில ஆதாரங்களை முன்கூட்டியே என்னிடம் காட்டினார். அவைகள் இந்த அவையிலே சர்க்காரியா கமிஷன் பற்றி எப்படி எல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><p>பலமுறை சொல்லப்பட்ட செய்தியை தான் அவர் படித்தார். புதிதாக எதுவும் சொல்லவில்லை. மிசாவிலே முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அது உண்மை செய்திதான். முரசொலி மாறன் பற்றி ஏற்கனவே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை தான் அவர் குறிப்பிட்டார்.</p><p>அமலாக்கத்துறையை பற்றி சொல்லும்போது பொதுத் தளத்தில் இருக்கும் செய்தியை தான் இங்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அதை அவையில் சொல்வது பொருத்தமானது தான். நீங்கள் (திமுக) ஆட்சியில் இருக்கும்போது அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களை நீங்கள் வெளியிடுவதற்கோ நடவடிக்கை எடுக்கவோ வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனால் புதிய அரசாங்கம், அமலாக்கத்துறை கொடுத்த ஆணவம் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ளது.</p><p>அமலாக்கத்துறை சொன்னத்தை தான் முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே தவிர தீர்ப்பு பற்றியோ, அதன் மீதான நடவடிக்கை பற்றியோ அவர் பேசவில்லை.</p><p>ஒரு துறை, ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது என்று குறிப்பிடுவதில் தவறில்லை. எனவே அவைகுறிப்பில் இருந்து அவர் பேசியதை நீக்க வேண்டிய தேவை இல்லை என்று நான் அறிவிக்கிறேன்" என தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்றும் எதிரொலித்த சர்காரியா அறிக்கை- மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-mk-stalin-was-not-arrested-under-misa#comments</comments><guid isPermaLink="false">872789a9-e61b-46d2-b1df-1df975a71def</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:34:13 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:34:13.329Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/y8koiaw1/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று பொதுத்துறை, போக்குவரத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக, சர்க்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு பேசினார். அப்போது எ.வ.வேலு பேசியதாவது:-</p><p>* பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார். அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>* நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>* நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>* அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>* ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின்.</p><p>* பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார்.</p><p>* நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது.</p><p>* கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது. </p><p>* குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது.</p><p>* சர்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கம் வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-</p><p>* விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை. </p><p>* கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியா கமிஷனில் உள்ளது. </p><p>* திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது. </p><p>* முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது. </p><p>* 21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது என்றார். </p><p>மு.க.ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt-2#comments</comments><guid isPermaLink="false">ccd4d006-a24c-4c1c-9a02-1d63c4de64a1</guid><pubDate>Tue, 08 Sep 2026 04:12:22 +0000</pubDate><atom:updated>2026-09-08T04:12:22.326Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தற்கொலை,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/ob52yb8t/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தற்கொலை</strong></h2><p>பல்லாவரத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட் தேர்வு</a> அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>​"இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட நரேந்திர மோடி  அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை!</p><p>இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது? மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><h2><strong>துணை நிற்போம்</strong></h2><p>அன்பு மாணவச் செல்வங்களே, தற்கொலை எதற்கும் தீர்வல்ல; ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள்! இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம்.</p><p>மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்! என்று பதிவிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் தம்பி சாய் அபினவ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.<br><br>​&quot;இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது&quot; என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட <a href="https://x.com/narendramodi?ref_src=twsrc%5Etfw">@narendramodi</a> அரசு அதை…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2097161577640480945?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (09.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-40#comments</comments><guid isPermaLink="false">82855979-78a1-436e-aa88-474a6203a4cb</guid><pubDate>Tue, 08 Sep 2026 02:48:42 +0000</pubDate><atom:updated>2026-09-08T02:48:42.470Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/iumo6wv4/powercut3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</strong></em></p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>போரூர்</strong></h2><p>மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரிய பனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டம் கட்டளை, சிக்கராயபுரம், கொள்ளசேரி.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>முகலிவாக்கம், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், சுபஸ்ரீ நகர், கமலா நகர், காமாட்சி நகர், சக்தி நகர், எம்.கே.எம். பள்ளி சாலை, மாரியம்மன் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வி.வி. கோவில் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, தேஸ்மா கார்டன், கேதார் மருத்துவமனை சாலை.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்யுடன் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் சந்திப்பு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-praises-chief-minister-vijays-firm-stance-on-upholding-the-dignity-of-women</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-praises-chief-minister-vijays-firm-stance-on-upholding-the-dignity-of-women#comments</comments><guid isPermaLink="false">b6bf0378-7a0b-408a-a12b-3fb059abb791</guid><pubDate>Mon, 07 Sep 2026 16:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:32:56.766Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,கனிமொழி சந்தோஷ்,Kanimozhi Santosh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6o05p0sz/New-Project-2026-09-07T220142.772.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்களின் கண்ணியத்தை காக்கும் முதலமைச்சர் விஜய்யின் உறுதியான நிலைப்பாட்டிற்கு MLA கனிமொழி சந்தோஷ் பாராட்டு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6o05p0sz/New-Project-2026-09-07T220142.772.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பெண்களின் கண்ணியத்தையும், பொதுமக்களின் மரியாதையையும் பாதுகாக்கும் வகையில், அவதூறாகவும் இழிவாகவும், பேசுபவர்களுக்கு எதிராக எந்தச் சூழலிலும் சமரசம் செய்ய முடியாது என முதலமைச்சர் விஜய் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்த உறுதியான கருத்துக்கு, சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.</p><p>சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களைப் பற்றியும் பொதுமக்களைப் பற்றியும் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.</p><p>முதலமைச்சரின் இந்தக் கருத்து, பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துவதாக MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் அவர் கூறியதாவது:</p><p>“பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு எதிராக முதலமைச்சர் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாடு, என்னைப் போன்ற பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. </p><p>பெண்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது என்பதை முதலமைச்சர் அவர்களின் இன்றைய சட்டப்பேரவை கருத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.</p><p>பொதுமக்களையும், குறிப்பாக பெண்களையும் அவமதிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்.”</p><p>என்று தெரிவித்தார்.</p><p>முதலமைச்சரின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு நேரில் வாழ்த்து மற்றும் பாராட்டுகளைத் தெரிவிக்கும் வகையில், MLA கனிமொழி சந்தோஷ், இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T16:13:52.036Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>வன உயிரினங்களால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது சேதத்தின் தன்மைக்கேற்ப, அந்த இழப்பிற்கு உரிய நிவாரணமாக அமையும் வகையில் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில், "தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும் மரபணு மேம்பாட்டுத் திட்டம்" ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ພໍ (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூ.1 கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும்-அமைச்சர் ரஞ்சித் குமார்.</p><p>தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி செலவிடப்படும்-  வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திமுகவினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்ற தான் நாங்களும் கூறுகிறோம்.</p><p>நேற்று நடந்த கொலை பற்றி பேசும்போது 1970-களுக்கு செல்கிறார், சர்காரியா கமிஷனுக்கு செல்கிறார் முதலமைச்சர்.</p><p>முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தது ஒரு பெரிய விபத்து, அவருக்கு மிசாவை பற்றி பேச தகுதியில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திரைப்பட ரிலீஸ்க்காக கொடநாடு சென்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக முதலமைச்சர் விஜய் மீது வழக்கு உள்ளது.</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் வழக்கு உள்ளது-  உதயநிதி ஸ்டாலின்.</p><p>வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>முதல்வரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறுப்பினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்</p><p>கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>முதலமைச்சர் பேசியது ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக ஐயுஎம்எல் எம்எல்ஏ பேசியுள்ளார்.</p><p>திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா? ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஏற்கனவே இருந்த ஆணையத்தைவிட சிறப்பான ஆணையம் அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு.</p><p>"சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஜாதி மறுப்பு திருமணமும் காரணமாக இருப்பதாக முதல்வர் பேசினார். சமூக பிரச்சினையான கலப்பு திருமணம் தொடர்பான முக்கிய கருத்தை தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"- முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு அமைச்சர் வன்னிஅரசு நன்றி</p><p>முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று சொல்வது போல் அம்மா ஜெயலலிதா எனச் சொல்ல வேண்டும் என வேலுமணி கோரிக்கை வைத்தார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வதனால் அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம்- வன்னி அரசு.</p><p>சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து விமர்சிக்கும் தவெகவினரும் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும்- தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா.</p><p>பெண்களை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சருக்கு வரவேற்பு- பிரேமலதா.</p><p>திமுகவினர் போலி கணக்கு மூலம் தவெக பெயரில் சமூக ஊடக கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்.</p><p>தவெகவினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் பெண்களை அவதூறாக பேசினால் நடவடிக்கை என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>கேப்டன் விஜயகாந்தை எப்படியெல்லாம் சங்கடத்திற்கு உள்ளாக்கினரோ அதே வேலையை தான் இப்போதும் செய்கின்றனர். </p><p>கேப்டன் குறித்து தவறான தகவல் பரப்பியோர்போல் இப்போதும் திமுகவினர் ஃபேக் ஐடி உருவாக்கி செயல்படுகின்றனர்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>“திருவண்ணாமலை பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். எங்கள் தலைவர் சொன்னதை தான், நான் பேசினேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து முதல்வரை தேர்வு செய்ய முயன்றார்கள் என்று கூறியதை தான் நான் சொன்னேன். தரகர்கள் பலரும் சுயநலத்திற்காக பேரம் பேசியிருப்பார்கள்”- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பரூக்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.</p><p>மே 8ம் தேதி இரவு உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும்.</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது.</p><p>2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல- அமைச்சர் ஷாஜகான்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை வைத்து சென்றுள்ளனர்.</p><p>ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையின் வெளியே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்.</p><p>மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒத்துழைப்புடன் தவெகவுக்கு கடிதம் வந்தது.</p><p>எந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தவெக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்காட் ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைத்தவர் யார் என மக்கள் அறிவர்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் தான் குதிரை பேரம் நடத்தியது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது மிகவும் தவறு என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>திமுகவினரை போல் கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட அரசு இல்லை, கோடிக்கணக்கான மக்களின் விஜய் சர்கார்- ராஜ்மோகன்.</p><p>திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி என தவறான தகவல் சொல்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.</p><p>திமுக தீயசக்தி என்று சொன்ன எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>“வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் 'முகம் அறியாத' நடைமுறை விரிவுபடுத்தப்படும்”- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>மாற்று சபாநாயகராக தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமர்ந்த போது, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு முதல்வர் விஜய்யும் புன்னகைத்தபடி அவருக்கு பதில் வணக்கம் வைத்து, 'எப்படி..' என கண் அசைவில் கேட்க, சபை முழுக்க மேஜையை தட்டி தவெகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>"மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்"- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு.</p><p>"போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளைத் தடுக்க, சான்றிதழ் எண்கள் API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்"- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>நாளைய தீர்ப்பை கேட்டவர் அல்ல, இன்றைய தீர்ப்பை எழுதியவர். கில்லியாக களம் கண்டவர், இன்று மக்கள் மனதில் தடம் பதித்தவர். துப்பாக்கி சத்தம் தேவையில்லை, அவர் சொல் ஒன்று போதும் தீப்பொறி பறக்க. மாஸ்டராய் திரையில், நம் வாத்தியார் வழியில் வந்த நம் அன்பு வாத்தியார்- தவெக அண்ணாநகர் எம்எல்ஏ ராம்குமார்</p><p>ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும்.</p><p>பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் . Settlement, Release, Partition, Revocation Settlement உள்ளிட்ட குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15.10.2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>ஊழலுக்கு எதிரான, ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதுமான அற்புதமான உரையாக முதலமைச்சர் விஜய்யின் உரை அமைந்தது- சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.</p><p>வனத்துறையின் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் சுமார் 6,260 சீருடை பணியாளர்கள் (Frontline Staff), பணியில் இருக்கும் போது சீருடை அணிந்த நிலையில் பேருந்துகளில் பயணிக்க, ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு ரூ.200 என்ற சலுகைக் கட்டணத்தில் ரூ.1.50 கோடி செலவில் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக (Smart Identity Card) வழங்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>"இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் STAR-ல் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் STAR இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.</p><p>சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் ரூ.8 கோடியில் நிறுவப்படும்- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்.</p><p>காற்று, நீர், ஒலி சார்ந்த சுற்றுச்சூழல் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, தொழிற்சாலை ஆய்வுகள், மாசுபாடு தொடர்பான நிகழ்வுகள், பொதுமக்கள் புகார்களின் போது விரைவான அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, நவீன சுற்றுச்சூழல் பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட 5 நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படும்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.</p><p>குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் டையாக்சின் உள்ளது என பள்ளிக்கரணையில் கூறுகிறார்கள். கடலூரில் இளநீரில் டையாக்சின் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.</p><p>'வளர்ச்சி, வளர்ச்சி' என்று கூறி புற்றுநோயை வளர்த்து வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் இப்படிப்பட்ட வளர்ச்சிதான்- பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி.</p><p>தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள். மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுப்பார்களா? ஏனென்றால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகலாம். இதுதான் வளர்ச்சியா? மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொழிற்சாலைகளும் வளர்ச்சியும் தேவையா?-  சவுமியா அன்புமணி</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மதுரா கிருஷ்ணாவரம் கிராமத்தில், வழியில் கிணறு உள்ளதால், சுடுகாடு வழியாகவே மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அந்த ஊரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் மக்கள் தயங்குகின்றனர்- ஆரணி அதிமுக MLA ஜெயசுதா பேசியதும் மேஜையை தட்டி சிரித்த பாமக MLA கணேஷ்குமார்.</p><p>பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசும்போது, மானியக் கோரிக்கைகள் மீது விரிவாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அதனால், காலம் போவதே தெரியவில்லை. வாழ்த்துகள் என மாற்று சபாநாயகரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் புகழாரம் சூட்டினார்.</p><p>சாலை ஓரங்களில் நடைபாதை இல்லை. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி அகலத்திற்கு கான்கிரீட் போட்டு நடைபாதை அமைத்துள்ளார்கள். தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்துள்ளார்கள்- சவுமியா அன்புமணி</p><p>பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றி, ராம்சார் குறியீடு பெற்றதை அங்கீகரித்தாலே, அங்குள்ள மக்களின் வீடுகள் காப்பாற்றப்படும். பள்ளிக்கரணையில் நடைபாதை அமைத்துள்ளனர். அதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, சிமெண்ட் பைப் போட்டுள்ளனர்-  சவுமியா அன்புமணி</p><p>"பழனி ஆண்டவர் எனக்கு அள்ளி தந்தார், தமிழக முதல்வரும் எனக்கு அள்ளித்தந்தார், இங்கு அமர வைத்தார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"- பழனி முருகன் தனக்கு அள்ளித்தந்ததாக அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பேசியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><p>மாற்றுத் தலைவராக சட்டப்பேரவையை வழி நடத்திய தஞ்சை சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பதிலாக, சட்டப்பேரவையில் இல்லாத முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெகவில் இணைந்து செயல்பட்டு வரும் வெல்லமண்டி நடராஜன் பெயரை குறிப்பிட்டு அழைக்க, பின்னர் சுதாரித்துக் கொண்ட தஞ்சை சரவணன், மன்னிக்கவும் கே.பி அன்பழகன் என கூறி அவரை பேச அழைத்தார்.</p><p>சென்னையில் நல்ல காற்றே இல்லை.  இந்தியாவில் இருக்கக்கூடிய நகரங்களில் கடைசி இடத்தில் சென்னை உள்ளது சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள்- சவுமியா அன்புமணி</p><p>மாசு அடைந்த காற்றால் பொருளாதார இழப்பு ரூ.11,000 கோடியாக உள்ளது நல்ல காற்று இருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஆயுட் காலம் 4 ஆண்டுகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது: சென்னையில் ஏன் காற்று மாசுபடுகிறது என ஐ.ஐ.டி செய்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்- சவுமியா அன்புமணி</p><p>ஒரு பெண்ணாக, இந்த சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டம், துயரம் என்பதை பகிர விரும்புகிறேன். பத்திரிக்கையாளராக என்னை ட்ரோல் செய்தால், தாங்கிக் கொள்வேன்.</p><p>ஆனால் எங்கள் அண்ணனை சேர்த்து என்னை பேசும் போது, அதன் பிரதிபலிப்பு வேறுவிதமாக இருக்கும். படிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கேலி செய்யும் ஆண்களுக்கு சொல்கிறேன், அடுத்த சட்டமன்றத்தில் எங்கள் பேச்சு இதை விட சிறப்பாக இருக்கும்.</p><p>நீங்கள் ட்ரோல் செய்வதால், எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை- அமைச்சர் ஜெகதீஸ்வரி உருக்கம்</p><p>சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசிக்கொண்டிருந்தபோது, நேரத்தின் அருமை உங்களுக்கு தெரியும்... பலர் பேச வேண்டியுள்ளது. பலரிடம் நீங்கள் சாட்டையை சுழற்றியவர்!" என மாற்று சபாநாயகர் விஜய் சரவணன் கூறினார்.</p><p>அதற்கு, “10 நிமிடத்தைத் தாண்ட மாட்டேன்... எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்!" என துணை சபாநாயகர் ரவி சங்கர் பதிலளித்தார். இருவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>செல்வாக்குமிக்க  நபர்கள் மீதுள்ள ஊழல்  வழக்குகளை விசாரிப்பது கடினம்- சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu#comments</comments><guid isPermaLink="false">849fd3f5-3876-4f24-ad1a-4baa5510872f</guid><pubDate>Mon, 07 Sep 2026 15:30:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T15:30:13.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்</media:keywords><media:content height="363" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg" width="735"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/r2ao8zf6/750x450406735-justice-n-anand-venkatesh-and-madras-hc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சாத்தியமற்றது </h2><p>இந்த நாட்டில் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதுள்ள வழக்குகளை  விசாரிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court">சென்னை உயர்நீதிமன்றம் </a>அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது. </p><h2>விசாரணை </h2><p>முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் வழக்கில் வேலுமணியுடன் சேர்த்து தொடர்புடைய மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதத்தைக் கண்டித்து அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற <a href="https://www.maalaimalar.com/news/national/bill-on-disrespect-to-vande-mataram-passed-in-the-rajya-sabha">அவமதிப்பு</a> மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.</p><h2>மத்திய அரசு</h2><p>இது தொடர்பாக மத்திய அரசு சார்பில்  தெரிவிக்கப்பட்டதில், வழக்கு தொடர அனுமதி கோரி  தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம் தேதி கிடைக்கப் பெற்று அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது என்று விளக்கம் அளித்திருந்தது.</p><h2>தமிழக அரசு </h2><p>இதற்கு தமிழக அரசின் பதிலாக இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.</p><h2>அதிருப்தி </h2><p>இந்த நிலையில் இந்த  வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4"> ஊழல் </a>வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு அதிகமான சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும் என அதிருப்தி தெரிவித்தார்.</p><p>மேலும் வழக்கில் தற்போதையை நிலை என்னவென்று காணொலி வாயிலாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-speaker-must-act-impartially-communist-party-of-india-insists#comments</comments><guid isPermaLink="false">bb47b4f7-6e8c-41ab-8c49-c97c7c20c6a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 14:48:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T14:48:04.839Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,CPI,ஜேசிடி பிரபாகர்,M. Veerapandian,மு. வீரபாண்டியன்,JCT Prabhakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1emd1zzl/New-Project-2026-09-07T201642.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தின் மரபையும், ஜன நாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.</p><p>அத்துடன் சமூக வலைதளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.</p><p>உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும்.</p><p>எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/give-due-respect-to-mlas-speaker">சபாநாயகர் </a>நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-scene-from-the-movie-sura-opposition-leader-udhayanidhi-stalins-instagram-story-grabs-attention#comments</comments><guid isPermaLink="false">51e5edb9-0863-4029-aa05-ba455999dcfd</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:35:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:35:40.080Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,சுறா,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Sura</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுறாப் பட காட்சி - கவனம் ஈர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டா ஸ்டோரி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4h7n5rdt/New-Project-2026-09-07T185908.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை உடன் முடிகிறது. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையில், காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது திமுகமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா, சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பலவற்றை குறிப்பிட்டு பேசினார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எழுந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவை நடுவே தர்ணாவிலும் ஈடுபட்டனர். </p><p>தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பதிலளிக்க சட்டப்பேரவைத் தலைவர் நேரம் தரவில்லை என வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4">உதயநிதி ஸ்டாலின்</a>.,</p><p>தவெகவின் நூறு நாள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரத்துடன் தாங்கள் சுட்டிக்காட்டியதாகவும், அதற்குப் பதிலளிக்க முடியாமல் முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளைத் தங்கள் மீது சுமத்தியுள்ளார் என்றும் கூறினார். </p><p>மேலும் அவை அனைத்தும் வழக்குகள்தான் என்றும், முதலமைச்சர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.</p><h2>இன்ஸ்டாகிராம் ஸ்டோரி</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><p>அதில் முதலமைச்சர் விஜய் நடித்த சுறா படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DIDg05DutpY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>‘எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாக கையாளும் முதலமைச்சர்’ - விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-chief-minister-who-handles-pressures-with-ease-no-matter-how-many-there-are-vijays-father-sa-chandrashekhar-speaks-with-pride</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-chief-minister-who-handles-pressures-with-ease-no-matter-how-many-there-are-vijays-father-sa-chandrashekhar-speaks-with-pride#comments</comments><guid isPermaLink="false">6f35b203-b2bf-4da2-9890-bcd31618e662</guid><pubDate>Mon, 07 Sep 2026 13:15:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T13:15:19.798Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>எஸ்.ஏ.சந்திரசேகர்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,S.A. Chandrasekar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9od8e0ih/New-Project-2026-09-07T184450.589.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாக கையாளும் முதலமைச்சர்’ - விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பெருமிதம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/9od8e0ih/New-Project-2026-09-07T184450.589.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பதவி, தனிப்பட்ட வாழ்க்கை என பலவகையிலிருந்து வரும் அழுத்தங்களையும், இக்கட்டான சூழல்களையும் முதலமைச்சர் விஜய் மிகவும் நிதானத்துடனும், எளிதாகவும் கையாள்வது ஒரு தந்தையாக தனக்குப் பெருமையளிப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><p>“எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், அதை எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாகப் பெருமை பெற்ற நேரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>சட்டமன்ற பேச்சு</h2><p>சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையின் போது திமுகவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions">முதலமைச்சர் விஜய்</a> பேசினார். </p><p>முதலமைச்சர் விஜய் உரையாற்றும்போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப் பகுதிக்குச் சென்று தர்ணாவிலும் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கைகளுக்கு பிறகு முதலமைச்சர் விஜய்யை அவரது பெற்றோர்கள் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளனர்.</p><p>அதனைத்தொடர்ந்து இந்தப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">cc5a13de-9af1-4763-97dd-48701ababb0e</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:24:23 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:24:23.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் அ.தி.மு.க.வில் வட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். </p><h2><strong>கண்ணன் கொலை</strong></h2><p>ஐ.டி. நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 9. மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.</p><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்ற போதும், கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கைது</strong></h2><p>இதனை ஆய்வு செய்த போலீசார், அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டு கால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவாவை, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அதேபோல், 2016-ல் பரணியின் தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி, நேரம் பார்த்து காத்திருந்து பழி தீர்த்துள்ளார்.</p><h2><strong>வாக்குமூலம்</strong></h2><p>கைதான பரணி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் “கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் எங்களைச் சந்தித்து பேசினார். தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாகப் போகலாம் என்றும் கூறினார்.</p><p>அப்போது நான் படிப்பில் கவனம் செலுத்துவதாகக் கூறி அவரை நம்ப வைத்தேன். ஆனால், என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடு விட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன்.</p><h2><strong>ஆன்மா சாந்தி அடைந்துள்ளது</strong></h2><p>அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது.” என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி</strong></h2><p>இதற்கிடையே கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறியதாக அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6#comments</comments><guid isPermaLink="false">bd000964-0d2b-4cdb-b9d1-797ee2f8b640</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:23:51.916Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் ஆணையம்,by election,இடைத்தேர்தல்,தமிழக தொகுதிகள்,TN Constitution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vote]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death" rel="nofollow">மதுராந்தகம்</a> தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தாராபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்திருந்தார்.</p><p>மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>முக்கிய தேதிகள்</h2><p>வரும் செப்டம்பர் 9ம் தேதி அன்று வேட்புமனு தொடக்கம்.</p><p>செப்டம்பர் 16ம் தேதி அன்று- வேட்புமனு கடைசி நாள்.</p><p>செப்டம்பர் 17ம் தேதி- வேட்புமனு பரிசீலனை</p><p>அக்டோபர் 6ம் தேதி- வாக்குப்பதிவு</p><p>அக்டோபர் 9ம் தேதி- வாக்கு எண்ணிக்கை</p>]]></content:encoded></item><item><title>இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை..!- கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent#comments</comments><guid isPermaLink="false">282c2737-3e2f-4036-b36c-5af42819cdf0</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:35:33 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:35:33.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,தமிழக சட்டசபை,Kanimozhi MP,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p><p>தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக்  கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.</p><p>காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow"> முதலமைச்சர்</a>, எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.</p><p>கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.</p><p>சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் &amp; பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. </p><p>ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...</p><p>Not everything loud is true</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல்..!- சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு நயினார் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">76000a8d-330f-4ce2-b26c-6c6d54832c3e</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:00:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்,TN CM Viijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> அவர்களே! </p><p>உங்கள் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல. </p><p>உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன, உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன, நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். </p><p>அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.</p><p>சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும். </p><p>ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே,"தந்தை, மகன்" கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">ba45ccd4-d222-4b47-902f-bf00e0b44ad2</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:44:17 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:44:17.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,DMK,திமுக,தவெக,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார்.</p><h2><strong>தமிழ்நாடு சட்டசபை</strong></h2><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.</p><h2><strong>தி.மு.க. எம்.எல்.ஏ.</strong></h2><p>இதனை தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார். திடீரென தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழுந்திரிக்க தடுமாறினார். உடனே முதலமைச்சர் விஜய் எழுந்து அவரை கைகொடுத்து தூக்கி விட்டார். இந்த காட்சிகளை நேரலையாக மக்கள் பார்த்ததோடு சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘நான் பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">17fa7207-f2f0-4b45-a0d6-fe6077617a23</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:41:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:41:52.078Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,டிகேஎஸ் இளங்கோவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,T.K.S. Elangovan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a>, முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;</p><p>“என்ன அமலாக்கத்துறை அறிக்கை? அவரால் எப்படி அமலாக்கத்துறையின் அறிக்கையை மேற்கோள் காட்ட முடியும்? அமலாக்கத்துறை ஒன்றும் தமிழ்நாடு அரசின் முகமை அல்ல. அது ஒரு மத்திய அரசின் முகமை. ‘நான் பா.ஜ.க-வின் அடிமை’ என்று அவரே தன்னைத் தானே அம்பலப்படுத்துகிறார்.</p><p>மிசா சட்டத்தின் கீழ் திமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தான் கைது செய்யப்பட்டனர், அதிமுக உறுப்பினர்கள் அல்ல. </p><p>இந்தியா முழுவதும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர். </p><p>மேலும், இந்த மிசா சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி பின்னர் வருத்தம் தெரிவித்தார்.” என தெரிவித்தார்.</p><h2>உதயநிதியின் விமர்சனம்</h2><p>முதலமைச்சரின் சட்டப்பேரவை பேச்சுத் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“அமலாக்கத்துறை சொன்ன விஷயங்கள் எல்லாம் முதலமைச்சர் படித்துக் காட்டினார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மூன்று கோப்புகளை திறக்க சொன்னார்கள் என சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. </p><p>அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற குற்றச்சாட்டுகளைத்தான் இவர் வந்து சட்டசபையில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.</p><p>ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும். </p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அதுபோல் தண்டிக்கப்படவில்லை.</p><p>முதலமைச்சர் மீது கூடத்தான் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது. </p><p>வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்று இருக்கக்கூடிய இந்த டம்மி முதலமைச்சர்.</p><p>அதுமட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. இப்படி அவர்களுடைய கட்சியில் ஊழல் செய்துகொண்டு இருக்கிறார்.</p><p>விஜயபாஸ்கர், கு.பா கிருஷ்ணன் இப்படி பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கின்றன.” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th#comments</comments><guid isPermaLink="false">638bd9e7-b6c8-4f23-8c1b-73a737505ed3</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:29:24 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:29:24.086Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12 மற்றும் 13-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>9-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில், அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறத்தப்படுகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்  கோவில் ஆவணித்திருவிழா: வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/thiruchendur-temple-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/thiruchendur-temple-worship-2#comments</comments><guid isPermaLink="false">199ae4b4-3581-40b0-90f3-a0001c63afc8</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:27:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:27:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruchendur temple,thiruchendur,Aavani,ஆவணித்திருவிழா,Aavani Festival,திருச்செந்தூர்,திருச்செந்தூர்  கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d3c5ri1h/TCRkovilph.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d3c5ri1h/TCRkovilph.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா. கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று காலை உருகுசட்ட சேவை நடந்தது. தொடர்ந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.</p><h2><strong>சுவாமி தரிசனம்</strong></h2><p>மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு மீண்டும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.</p><h2><strong>திருவிழா</strong></h2><p>8-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகருக்கு பந்தல் மண்டபத்தில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோவில் சேர்தல் நடந்தது.</p><h2><strong>அலங்காரம்</strong></h2><p>தொடர்ந்து அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவிலை அடைகிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயு கந்த பெருமானும், தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி விட்டு மேலக்கோவிலுக்கு வந்து சேர்கிறார்கள்.</p><p>திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்    ( 9-ந் தேதி)  நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சரபோஜி  கல்லூரி தமிழ்பாடத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் கவிதை நூல் இணைப்பு..! 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/saraboji-college-tamil-syllabus-director-seenu-ramasamy-poetry-book-included</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/saraboji-college-tamil-syllabus-director-seenu-ramasamy-poetry-book-included#comments</comments><guid isPermaLink="false">1886e17c-862f-4b59-9d60-37d8c4bb8a7d</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:57:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:57:46.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனு ராமசாமி,தமிழ்பாடம்,கவிதை நூல்,தஞ்சை  சரபோஜி மன்னர் கல்லூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1g6lu7np/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
Seenu Ramasamy
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1g6lu7np/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழ்பாடம்</h2><p>பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் சீனுராமசாமியின் நூலானது பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-seenuramasamy-post-goes-viral-689947"> சீனுராமசாமி </a> தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது</p><p> பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் என் கவிதை நூல்கள் இணைக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>சீனுராமசாமி</h2><p>சீனுராமசாமி அக்டோபர் 13, 1973 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார் . இவர் தமிழில் திரைப்படம் , திரைக்கதை வசனம், சிறுகதை ஆகியவற்றை தமிழுலகத்திற்கு படைப்புகளாக வெளியிட்டுள்ளார்</p><p>இளங்கலைத் (B.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட 'தயை' மற்றும் முதுகலைத் (M.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் மீ பதிப்பகம் வெளியிட்ட 'நிலத்தவள்' ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>என் படைப்புகளைத் தேர்வு செய்த தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பாடத்திட்டக் குழுவினருக்கு என் இதயபூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>நூல்கள்</h2><p>ஒளிரும் வகுப்பறைகள்,பெறும் மௌனங்கள் - கவிதைகள் மற்றும் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு.நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் கவிதை நூல்,புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - பரவலாக அறியப்பட்ட<a href="https://www.maalaimalar.com/video/maalaimalar-9"> கவிதை</a> மற்றும் படைப்புத் தொகுப்பு,மணல் உயிர் - சினிமாவுன் ஆன்மா,தயை,ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் போன்ற கவிதை , சிறுகதை போன்ற நூல்களை சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.</p><h2>சமுதாயத்தின் எதார்த்தம்</h2><p>பொதுவாக சீனுராமசாமியின் படங்கள், பெண்களின் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை ,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu"> சமூக வாழ்வியலின் </a>எதார்த்த தன்மை ,குடும்ப கட்டமைப்பின் வாழ்வியல் ஆகியவற்றை இவரின் திரைப்படங்கள் பிரதிப்பலிக்கிறது.</p>]]></content:encoded></item></channel></rss>