<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 12 Sep 2026 10:12:25 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-september-2026#comments</comments><guid isPermaLink="false">46d65b0f-475d-4a26-9683-2f1c1d5bcde0</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:05:09 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:03:51.390Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/a3cevkbq/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya">என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!... </a></p><p>*முதலமைச்சர் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. </p><p>*திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</a></p><p>* ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும்.</p><p>* பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு... </a></p><p>*மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>*நாளை பிற்பகல் 2 மணியளவில் ஆதரவு நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5">'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>* துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/isharani-baruah-enter-final-in-vietnam-open-badminton">வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா</a></p><p>* வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-technology-used-for-missile-production-anthropic-exposes-yemen-group">ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணை தயாரிப்பு: ஏமன் குழுவின் முயற்சியை வெளிப்படுத்திய 'ஆந்த்ரோபிக்' நிறுவனம்!... </a></p><p>*வடக்கு ஏமனில் செயல்பட்டு வரும் இந்த அடையாளம் தெரியாத குழு, மூன்று வெவ்வேறு ஆயுத வளர்ச்சித் திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றுள்ளது. </p><p>*இக்குழுவினர் ஒரு நேரடி ராக்கெட் சோதனையையும் நடத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector">தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</a></p><p>* தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.</p><p>* வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/vinayagar-arupadai-veedu-6">ஆனைமுகனின் அறுபடை வீடும், அதன் சிறப்புகளும்</a></p><p>* சித்தி விநாயகர் நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார்.</p><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/zverev-enter-the-final-round-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடந்தன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/congress-leader-harish-rawat-quits-party-posts-after-cash-jewellery-recovered-from-aide-house">உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்</a></p><p>* உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.</p><p>* சோதனையில் உயர்ரக கைக்கடிகாரங்கள், பணம் கைப்பற்றப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</a></p><p>*  இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools">தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</a></p><p>* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election">இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah">மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை</a></p><p>* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். </p><p>* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-shuts-down-pipeline-as-houthis-seize-island-opening-new-front-in-iran-war">முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!</a></p><p>* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு</p><p>* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-12-9-2026">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</a></p><p>&nbsp;* தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.</p><p>* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow">திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்</a></p><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.&nbsp;</p><p>* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p> ]]></content:encoded></item><item><title>என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும் விடமாட்டோம்: மேயர் பிரியா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-not-spare-anyone-who-touches-our-leader-says-chennai-mayor-priya#comments</comments><guid isPermaLink="false">8236e690-eeb9-496f-9bf9-d7b1ede7335a</guid><pubDate>Sat, 12 Sep 2026 10:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-12T10:00:07.031Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,M.K.Stalin,மேயர் பிரியா,மு.க.ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Chennai Mayor Priya,MISA Act,மிசா சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Mayor Priya]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/jrn6a14g/mayor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார்.</p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய், மிசா சட்டம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் இந்த பேச்சைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எதிர்தரப்பினரின் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கி ஆவேசமாக உரையாற்றினார்.</p><h2>தகுதி குறி<strong>த்து மேயர் பிரியா</strong> கேள்வி</h2><p>ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசுகையில், சட்டமன்றத்திற்குள் வந்து எழுத்துக்கூட்டிப் படித்துவிட்டு திமுகவை நோக்கி கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சாடினார். "மிசா சட்டத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? திமுகவை பார்த்து கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது? சட்டமன்றத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று அமைச்சர்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. பயிற்சி வகுப்புகள் நடத்தியும் இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்வது வேடிக்கையானது" எனத் தெரிவித்தார்.</p><p>திரைப்படங்களில் மூன்று மணி நேரம் நடிப்பு காட்டுவது போல, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்து ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார் என்று மேயர் பிரியா விமர்சித்தார். தமிழ்நாட்டின் வரலாற்றில் அண்ணா, கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் தமிழையும் தமிழ்நாட்டையும் வளர்த்தெடுக்க ஆற்றிய பங்களிப்பை இந்த மாநிலத்து மக்கள் நன்கு அறிவார்கள் என்று அவர் குறிப்பிட்டப் பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">திமுக </a>எந்தவொரு பிரச்சனைக்கும் தாமாகச் சென்று வழிவகுக்காது எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, அதேவேளையில் தங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை ஒருபோதும் விட்டுவிடாது என்றும் கூறினார். "என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன் என்பது பழமொழி. அதேபோல் என் தலைவரை தொட்டது யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு மாண்புமிகுந்த பதவியில் இருந்தாலும் திமுக தொண்டர்களாகிய நாங்கள் அவர்களை நிச்சயமாக சும்மா விடமாட்டோம்" என்று தனது கண்டனத்தை பதிவு செய்தார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் ‘துக்ளக் தர்பார்’ முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!- சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">3bb835e6-59b1-4483-99da-073466a73904</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:59:28 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:59:28.506Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,பட்டினப்பாக்கம்,tvk,புதிய தலைமை செயலகம்,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zqnwil2/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று சீமான் கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அவசியம் என்ன?</strong></h2><p>சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த புதிய தலைமைச்செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 9 கிராம மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலகம் அமைக்க தவெக அரசு முடிவெடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.</p><p>தமிழ்நாடு அரசின் களஞ்சியம் காலியாக உள்ளது, அரசுக்கு 10 இலட்சம் கோடி கடன் உள்ளது, ஆண்டுக்கு ஒன்றே முக்கால் இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலை உள்ளது, அதனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று தொடர்ந்து கூறிவரும் தவெக அரசு, வட்டி கட்டவே கடன் வாங்க வேண்டிய அளவிற்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், 1200 கோடிகளை வாரி இறைத்து அவசரகதியில் <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச்செயலகம்</a> கட்ட வேண்டிய அவசியம் என்ன?</p><p>தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்பதாலேயே புதிய தலைமைச்செயலகம் அமைக்கப்படுகிறது என்றால், அதைவிட அதிக இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டிய தேவை என்ன? மக்களின் தேவைக்கா? அல்லது முதல்வரின் தனிப்பட்டத் தேவைக்கா? பரந்தூர் கிராம மக்களின் எதிர்ப்பினை ஏற்று, புதிய வானூர்தி நிலையத்தைக் கைவிட்ட நீங்கள், பட்டினப்பாக்கத்தில் 9 மீனவ கிராம மக்களின் எதிர்ப்பினைக் கருத்திற்கொள்ளாதது ஏன்? 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைவிடவும் உங்களின் தனிப்பட்ட வசதிதான் முதன்மையானதா? இதுதான் மீனவ மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறையா முதல்வர் விஜய் அவர்களே?</p><h2><strong>அவலம்</strong></h2><p>உலகப் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழில் மையங்கள் மற்றும் மீனவ மக்களின் வியாபாரத்தலங்கள் எனப் பட்டினப்பாக்க குறுகிய சாலைகளை ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் மக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால், இப்போதே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்நிலையில், புதிய தலைமைச்செயலகமும் அங்கு அமைக்கப்பட்டால் பட்டினப்பாக்கம் பகுதியே கடுமையாகத் திணற நேரிடும். ஒவ்வொரு நாளும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் வருகைக்காகப் பல மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுகின்ற அவலமும் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குறிப்பாகப் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.</p><p>அதுமட்டுமின்றி, பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள், சட்டமன்றம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தங்கும் விடுதிகள், பொதுமக்கள் காத்திருப்புக்கான இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இத்தனை குறுகிய இடத்திற்குள் எப்படி அமைக்க முடியும்? அப்படியே வலிந்து திணித்து அமைத்தாலும், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததுபோல அடுத்த 100 ஆண்டுகளுக்கு விரிவுப்படுத்துவதற்கு இக்குறுகிய இடம் எப்படிப் போதுமானதாக இருக்க முடியும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? </p><p>எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியானது கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை தாக்கிய ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். எதிர்காலத்திலும் சுனாமியால் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், புவிவெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் தொடர்ந்து உயர்வதால், எதிர்வரும் 2040-2070 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 30 செமீ அளவிற்கு உயர்ந்து சென்னை கடற்கரை பரப்பில் 1.6 கிமீ அளவிற்கு (ஏறத்தாழ 71ச.கீ நிலப்பரப்பு) கடல்மட்டத்திற்கு கீழ் சென்று, நிரந்தரமாக வெள்ளம் சூழ் பகுதியாக மாறும் என்று "காலநிலை மாற்றத்திற்கான சென்னை செயல்திட்ட அறிக்கை"குறிப்பிடும் பகுதிக்குள்ளும் பட்டினப்பாக்கம் வருகிறது என்பதால், அடுத்த 100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் தலைமைச்செயலகம் அமைக்க பட்டினப்பாக்கம் எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்?</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>தான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் சந்தித்த முதல்வர் விஜய் அவர்கள், தற்போது தலைமைச்செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே அங்கு வாருங்கள் என்று துக்ளக் தர்பார் நடத்த முயல்வது வெட்கக்கேடானது.</p><p>ஆகவே, முதல்வர் விஜய் அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக, நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, கடும் இடநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும், சுனாமி ஆபத்தும் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இல்லையென்றால், பாதிக்கப்படும் பட்டினப்பாக்கம் 9 கிராம மீனவமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 9 மீனவ கிராம மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நீங்கள் எது குறித்தும் அச்சம் கொள்ள வேண்டாம்; விளைநிலங்களை அழித்து சேலம் எட்டுவழிச்சாலை அமைக்கவிடமாட்டோம் என்று கூறினோம். அமைக்கவில்லை. விளைநிலங்களை அழித்து பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கவிடமட்டோம் என்றோம். அமைக்க முடியவில்லை; சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் கடலில் பேனா சிலை வைக்கவிடமாட்டோம் என்றோம்; வைக்க முடியவில்லை. அதுபோல 9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகத்தை ஒருபோதும் அமையவிடமாட்டோம். மக்களின் துணையுடன் உறுதியாக தடுத்து நிறுத்துவோம். பட்டினப்பாக்கம் மீனவச்சொந்தங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருங்கள்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 நாட்கள் மின்தடை ஏற்பட்டது ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-day-power-cut-explained-by-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">7cf1d334-1d03-4363-ba9f-d5094c76b388</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:35:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:35:42.082Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,அமைச்சர் நிர்மல்குமார்,மின் தட்டுப்பாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/isvpm9ti/nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.</p><p>தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.</p><p>நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.</p><p>நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண்கள் மீதான தாக்குதல்: முதலமைச்சரின் &apos;பஞ்ச் டயலாக்&apos; என்னவானது?- தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-11#comments</comments><guid isPermaLink="false">54f2efcf-678b-49e7-80d3-7b5eb1c9b5b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 09:28:49 +0000</pubDate><atom:updated>2026-09-12T09:28:49.525Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bp81s2aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/bp81s2aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிகுந்த அதிர்ச்சி</strong></h2><p>சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரைத் தாக்கியதோடு, அதனைத் தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரையும் காவல்துறையினர் தாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.</p><p>ஒருபுறம், முதலமைச்சர் விஜய் காவல்துறையைப் பாராட்டிப் பேசுகிறார். மறுபுறம், காவல் ஆய்வாளர் மிரட்டியதாகப் புகார் அளித்த நபர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு வரும் பெண்கள் மிரட்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு, தாக்கப்படுவதாகவும் வெளியாகும் செய்திகள், தமிழகத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் உணர வேண்டும்</strong></h2><p>பொதுமக்களின் குறைகளைக் களைய வேண்டிய காவல்துறையினரின் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு இடமளிப்பதும், அவர்கள் இழைக்கும் தவறுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமமாகும் என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும்.</p><p>எனவே, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் காவலர்கள் பெண்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரை விரிவாக விசாரித்து, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும்  என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்- அதிகாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-inform-all-precautionary-measures-are-in-place-in-chennai-to-handle-the-monsoon-rains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-inform-all-precautionary-measures-are-in-place-in-chennai-to-handle-the-monsoon-rains#comments</comments><guid isPermaLink="false">9fce7d4d-301e-4249-b65d-44c0f838bad6</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:43:58 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:43:58.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பருவமழை,monsoon,அரசு அதிகாரிகள்,Govt officers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/38tv84uc/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பருவமழையை சமாளிக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/38tv84uc/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</strong></em></p><p>சென்னையில் <a href="https://www.maalaimalar.com/topic/பருவமழை">பருவமழை</a> முன் எச்சரிக்கையாக எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும் என்பதை கண்டறிந்து  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். </p><p>அதன் பின்னர் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதியில் மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றுவதற்கு முன் எச்சரிக்கையாக சுமார் 90 மோட்டார்கள் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனங்கள் சரியாக உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். </p><p>இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். பருவமழை முன் எச்சரிக்கையாக தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதற்கு சுமார் 90 மோட்டார்கள் மற்றும் ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. </p><p>எனவே தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றால் பொது மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?- சிபிஐ(எம்) மாநிலக் குழு நாளை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram#comments</comments><guid isPermaLink="false">0b00c371-3601-40bd-ac17-9dad0bc6f63c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:28:19 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:28:19.522Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,Shanmugam,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,CPM,CPI,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,பெ.சண்முகம்,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/tmursbtr/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம்  இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும். </p><p>தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-proposed-secretariat-project-at-pattinapakkam-must-be-immediately-abandoned-cpi-urges-the-government">இந்திய கம்யூனிஸ்ட்</a> (மார்க்சிஸ்ட்) கட்சி தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது. இத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.</p><h2>மாநிலக் குழு <strong>கூட்டத்தில் விரிவான</strong> ஆலோசனை</h2><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இடைத்தேர்தல் ஆதரவு நிலப்பாடு குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசுகையில், இரு தொகுதிகளின் கள நிலவரங்கள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நாளை பிற்<strong>பகலில் அதிகாரப்பூர்வ</strong> அறிவிப்பு</h2><p>மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், நாளை பிற்பகல் 2 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு வாயிலாக தங்களது ஆதரவு நிலைப்பாடு முறைப்படி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிபிஐ(எம்) கட்சியின் இந்த அறிவிப்பு தொகுதி மறுசீரமைப்பு மற்றும் கூட்டணி கணக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>&apos;ப்யூஸ் போன&apos; த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">a7313323-3311-497d-ad9b-a4580b6b0c9b</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:25:32 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:25:32.866Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,மின் தடை,Power Cut,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/np6hhi2g/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</strong></em></p><p>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-</p><p>நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.</p><h2><strong>பொதுமக்கள் போராட்டம்</strong></h2><p>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சனை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.</p><p>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.</p><p>மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் 'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேற்று முதல் ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் இவை.<br><br>தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்சினை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.<br><br>ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச்… <a href="https://t.co/Qjpr0BQevV">pic.twitter.com/Qjpr0BQevV</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2098685103711134110?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வரத்து குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">c8245893-7090-41ed-aa54-f670ddcb842c</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:13:59 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:13:59.701Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>lemon,எலுமிச்சை பழம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/lhhaz1b7/lemon.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எலுமிச்சை பழம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ எலுமிச்சை பழம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/lhhaz1b7/lemon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரத்துக்கு குறைந்ததால் எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 300க்கு விற்பனை ஆகிறது.</strong></em> </p><p>உடுமலையில் பருவநிலை நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய மத்திய நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். </p><p>அந்த வகையில் ஒரு சில பகுதியில் <a href="https://www.maalaimalar.com/topic/எலுமிச்சை-பழம்">எலுமிச்சை</a> சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் 'ராஜகனி' என்று அழைக்க கூடிய எலுமிச்சையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிகமாக விளைச்சல் கிடைக்கும். இதேபோல் ஏக்கருக்கு 100 செடிகள் வரை நடவு செய்தால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். செடி வகை சமதள பரப்பிலும் கொடி வகை மலை பிரதேசங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.</p><p>நடவு செய்த நாளில் இருந்து மூன்றாம் வருடம் அறுவடைக்கு தயாராகிவிடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு உள்ளதால் அவற்றுக்கான தேவையும் ஆண்டு முழுவதும் இருந்து வருகிறது.</p><h2><strong>கிலோ ரூ. 300</strong></h2><p>வைட்டமின் சி பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை தென்னகத்தை கொண்டு எலுமிச்சை பித்தம், தலை வலி, மலச்சிக்கல், தொண்டை வலி போக்குவதுடன் கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றது. மேலும் கோடைகாலத்தில் எலுமிச்சை சாறுடன் உப்பு நாட்டு சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகமானது உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ ரூபாய் 300 விற்பனை ஆகிறது. </p><h2><strong>வரத்து குறைந்ததால்</strong></h2><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், எலுமிச்சை சாகுபடி உடுமலை காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் உடுமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிலோ ரூபாய் 300 வரை விற்பனை ஆகி வருகிறது. வரத்து குறைவாக உள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதே போல் குமரலிங்கம் பகுதியில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 வரை விற்பனை ஆகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் வருகிற 15-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sep-15th-power-cut-areas-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6cc4ec90-f994-4010-b91c-ec39df5b8d14</guid><pubDate>Sat, 12 Sep 2026 08:01:26 +0000</pubDate><atom:updated>2026-09-12T08:01:26.386Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,chennai power cut,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/d7jhu7ci/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், வருகிற செவ்வாய்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வருகிற 15-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>எஸ்.கே. அவென்யூ, பல்லவா நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர். </p><h2><strong>சேலையூர்</strong></h2><p>புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜல்வாவ் கார்டன், ஜல்வாவுவிகர், குமாரசாமி தெரு, பத்மாவதி நகர் 21 வது தெரு, அலமேலுபுரம். </p><h2><strong>குன்றத்தூர்</strong></h2><p>வழுத்தலம்பேடு கிராமம், விஜயராஜா நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பந்தம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்.எம். அவென்யூ.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி: எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-focus-on-improving-the-energy-sector#comments</comments><guid isPermaLink="false">bc831f30-2f74-4fed-b589-6eea35419037</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:30:36 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:30:36.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,மின் தடை,Power Cut</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cmtxc5gh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீண் விதண்டாவாதப் பேச்சுகளின் மூலம் மக்களை மடைமாற்றுவதை விட்டுவிட்டு, எரிசக்தி துறையை மேம்படுத்துவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கடும் இன்னல்கள்</strong></h2><p>தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகளவில் ஏற்படும் மின்வெட்டால் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே தங்களின் தூக்கத்தைத் தொலைத்து, கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய துறை சார்ந்த அமைச்சர், மக்களை மடைமாற்றும் விதமாக முடிந்து போன கதைகளையும், காலம் கடந்த குற்றச்சாட்டுகளையும் தோண்டி எடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி, ஒட்டுமொத்த எரிசக்தி துறையையும் பாழாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைத் தடையின்றி விநியோகிக்க வேண்டிய தவெக அரசு, அதற்கு மாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டுகளையும், கூடுதல் மின்கட்டணச் சுமையையும் ஏற்படுத்தி, தனது திறனற்ற நிர்வாகத்தை மறைக்க ஏழை, எளிய விளிம்புநிலைப் பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏற்புடையதல்ல.</p><p>எனவே, தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என எரிசக்தி துறையையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/petition-filed-in-high-court-seeking-a-stay-on-maduranthakam-and-dharapuram-by-election#comments</comments><guid isPermaLink="false">cf93d5cb-0e4f-4604-a1d3-635e2961edaf</guid><pubDate>Sat, 12 Sep 2026 07:08:02 +0000</pubDate><atom:updated>2026-09-12T07:08:02.603Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6khbfjl5/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p> <p>கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியில் இணைந்தனர்.</p> <p>இதில் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள, அம்பாசமுத்திரம் பெருந்துறை கரூர் விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force">இடைத்தேர்தல்</a> அறிவிக்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.</p><p>தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாததால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p>  <p>இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தலில் அவர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறையை வகுக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் சுதன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p> <p>அந்த மனுவில், சொந்த அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால், பொதுமக்களின் வரிப்பணத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய உள்ளது. இந்த செலவுகளுக்கு அவர்களை பொறுப்பாக்கும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.</p> <p>மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மக்கள் தீர்ப்பை புறக்கணித்து பதவி விலகுபவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p> <p>இந்த வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். இந்த தொகுதிகளுக்கு தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்பு மனுக்களை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.</p> <p>அதேபோல, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த ஆகும் செலவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-urges-government-itself-must-fully-bear-the-cost-of-the-breakfast-scheme-in-government-schools#comments</comments><guid isPermaLink="false">31bf92c7-ac98-4461-af12-35a2056c644b</guid><pubDate>Sat, 12 Sep 2026 06:01:40 +0000</pubDate><atom:updated>2026-09-12T06:01:40.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/6nb3d7aa/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துவதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்புடையதல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> வரும் 17ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உட்பட, அரசால் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதற்குத் தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.</p><p>பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெறக்கூடிய ஒரு திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>எனவே, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-elections-tvk-sets-up-election-task-force#comments</comments><guid isPermaLink="false">136ac976-440a-4ef8-ac06-cdcb999216b5</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:50:45 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:50:45.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/pxeeeri9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழகத்</a> தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அனைவருக்கும் வணக்கம்,</p><p>வருகின்ற அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். </p><p>தேர்தல் கண்காணிப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் N. ஆனந்த்</p><p>2. அமைச்சர் K.A. செங்கோட்டையன்</p><p>3. அமைச்சர் CTR நிர்மல் குமார்</p><p>தேர்தல் பணிக்குழு</p><p>35-மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி.</p><p>பொறுப்பாளர்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் ராஜ்குமார்</p><p>2. அமைச்சர் தென்னரசு</p><p>3. அமைச்சர் வினோத்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. சரவணமூர்த்தி MLA, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி</p><p>2. தியாகராஜன் MLA, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி</p><p>3. விஜயராஜ் MLA, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி</p><p>4. காமாட்சி MLA, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி</p><p>5.பாலாஜி (எ) மணிகண்டன் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்</p><p>101-தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி:</p><p>பொறுப்பாளர்:  அமைச்சர் அருண்ராஜ்</p><p>இணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>2. அமைச்சர் விஜயலட்சுமி</p><p>3. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்</p><p>துணைப் பொறுப்பாளர்கள்:</p><p>1. பாலமுருகன் MLA, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி</p><p>2. சத்தியபாமா MLA, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி</p><p>3.ராம்குமார் MLA, பல்லடம் சட்டமன்றத் தொகுதி</p><p>4. திலீப் MLA, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி</p><p>5. சத்யா MLA, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி</p><p>மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.</p><p>அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details#comments</comments><guid isPermaLink="false">ff85be4d-9e9c-4bf5-a779-d82ba54da25b</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:28:42.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Govt employees,அரசு ஊழியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/5slhh0sl/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஊழலை ஒழிக்க உதவாது</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் அடுத்த மாதத்திற்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான சிறந்த முயற்சி என்ற வகையில் இந்த நடவடிக்கை  வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை விடுத்து, அரசு ஊழியர்களுக்கு மட்டும் இக்கட்டுப்பாட்டை விதிப்பது நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க உதவாது.</p><p>தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின் 7(3) பிரிவில் முந்தைய திமுக அரசால் கடந்த ஜனவரி மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி அனைத்து நிலை அரசு ஊழியர்களும் ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 31-ஆம் தேதியன்று அவர்களின் பெயரிலும், அவர்களால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகள், வாகனங்கள், நகைகள், வங்கி வைப்பீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்த ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புக்கான தளத்தில்  தனித்தனி படிவத்தில் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு திசம்பர் 31-ஆம்  நாள் நிலவரப்படியான அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.</p><h2><strong>ஊழலை ஒழிக்க முடியும்</strong></h2><p>சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்;  அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அனைவரும் இந்த விதியை மதித்து சொத்துக் கணக்குகளைத் தாக்கல் செய்வது கட்டாயமாகிவிடும். அரசு ஊழியர்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்வது புதிய நடைமுறை அல்ல. கடந்த காலங்களில் பணியில் சேர்ந்த முதல் ஆண்டிலும், அதன்பின் ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இப்போது இந்த நடைமுறை ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் ஊழல் செய்து சொத்து வாங்குவது குறையும்; இதன் மூலம் அரசு நிர்வாகம் படிப்படியாக தூய்மையடையக் கூடும்.</p><p>ஆனால், ஊழல் ஒழிப்புக்கான இந்த நடைமுறைகள் அரசு ஊழியர்களுடன் மட்டும் நின்று விடக்கூடாது. முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இந்த  கட்டுப்பாடு நீட்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழக அரசு நிர்வாகத்திலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல பத்தாண்டுகளாக மலிந்து கிடக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியும்.</p><p>அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் முதன்மையானது லோக் அயுக்தா அமைப்பை  ஏற்படுத்துவது ஆகும். எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள் மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்களோ, அந்த மாநிலங்களில் எல்லாம் அரசு நிர்வாகத்தில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்றாலும் கூட, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் லோக் அயுக்தாவின் அதிகார வரம்புக்குள்ளும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்டு வரப்படவில்லை, சொத்துக்கணக்குகளைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்குள்ளும் கொண்டு வரப்படவில்லை என்றால் ஊழல் ஒழிப்பு என்பது நகைச்சுவையாகவே இருக்கும்.</p><p>ஊழல் ஒழிப்பில் அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்கள் நேர்மையாக இருந்தால் அதிகாரிகளால் ஊழல் செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டும்.</p><p>அதற்கான முதல் நடவடிக்கையாக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித்  தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் நாளில் அவர்களின் அனைத்து வகையான சொத்துகளையும் பொதுவெளியில் வெளியிடுவதை கட்டாயமாக்கி சமூகத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருந்தால், அதுகுறித்து பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி விளக்கம் அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது வாழ்வில் தூய்மையை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கைகளை கட்டாயமாக்கி விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-dmk-defeat-in-by-election#comments</comments><guid isPermaLink="false">630c54b2-fcff-45bc-9611-2bdb385bde81</guid><pubDate>Sat, 12 Sep 2026 05:21:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T05:21:00.815Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,by election,இடைத்தேர்தல்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/08yfcf01/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai">மதுரையில் </a>சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மிசாவில் மு.க.ஸ்டாலின் கைதானார் என்பதற்கான ஆதாரம் இல்லை.</p><p>* மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்பதற்கு தன்னிடம் ஆதாரமுள்ளது.</p> <p>* மிசா குறித்து மீண்டும் மீண்டும் பேசினால் திமுகவுக்கு தான் அழிவு ஏற்படும்.</p><p>* மிசாவில் கைதானதற்கான ஆதாரமே இல்லாத ஒரே தியாகி ஸ்டாலின்தான்.</p><p>* மிசா சட்டத்தில்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றால் Detention Copy அழிக்கப்பட்டது ஏன்?</p> <p>* திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஸ்டாலின் கைது குறித்த Detention Copy அழிக்கப்பட்டது.</p><p>* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.</p><p>* மதுராந்தகத்துக்கும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கும் என்ன சம்பந்தம்?</p> <p>* மதுராந்தகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியி எழும்பூரை சேர்ந்த பரந்தாமனை நியமிப்பதால் என்ன பயன்?</p><p>* இடைத்தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் டெபாசிட் கூட கிடைக்காது.</p><p>* வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பை வழங்கிய திருமங்கலம் பார்முலாவை திமுக செய்தாலும் பயனில்லை.</p> <p>* திருமங்கலம் பார்முலாவை போல் திமுக பல கோடி கொடுத்தாலும் மக்கள் அதை வாங்கிக்கொண்டு தெளிவாக வாக்களிப்பர்.</p><p>* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.</p><p>* இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் விடுமுறை - நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/festival-holiday-severe-traffic-congestion-from-last-night-until-this-morning#comments</comments><guid isPermaLink="false">33cdde8f-eea4-4982-8858-601801b731a7</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:58:35.385Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து நெரிசல்,traffic jam,தொடர் விடுமுறை,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து நெரிசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/4lf4srp9/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</strong></em></p><h2><strong>போக்குவரத்து நெரிசல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய தென் மாவட்ட, வட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார், இருசக்கர வாகனங்கள், குடும்பமாக தனியார் வேன் மற்றும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து என புறப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி டோல்கேட் வரை வாகனங்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.</p><h2><strong>10 லட்சம் வாகனங்கள்</strong></h2><p>தினசரி வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் பயணித்தால் நேற்றைய தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை எட்டு மணி வரை 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தக்க போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.</p><p>இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் இதற்காக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.</p><p>மேலும் கனரக வாகனங்களை ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் 10 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/state-honours-for-the-late-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">0891a13d-d9c1-4ae7-b848-93d89326b635</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:15:37 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:15:37.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு மரியாதை,அமைச்சர் நிர்மல்குமார்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/g108dxs8/SolomonPappaiah.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.</strong></em> </p><p>பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் <a href="https://www.maalaimalar.com/topic/சாலமன்-பாப்பையா">சாலமன் பாப்பையா</a>. கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் தமிழ் அறிஞரும் ஆவார். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். </p><h2><strong>இறுதிசடங்கு</strong></h2><p>சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே சாலமன் பாப்பையாவின் இறுதிசடங்கு இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. </p><h2><strong>அரசு மரியாதை</strong></h2><p>இந்த நிலையில், தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், தமிழஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தலைமை ஆசிரியர்களை சொந்த செலவில் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதா?- அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-expansion-of-the-breakfast-scheme-are-headmasters-being-forced-to-bear-the-costs-themselves#comments</comments><guid isPermaLink="false">c46949a7-f55f-4944-903b-b05b29539de2</guid><pubDate>Sat, 12 Sep 2026 04:00:29 +0000</pubDate><atom:updated>2026-09-12T04:00:29.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/kbd8rdse/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பொருளாதார சுமை</strong></h2><p>தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான  தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார சுமையை  அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசர்  <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவுத் திட்டம்</a> என்ற பெயரில் தந்தைப் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடக்கி வைக்கப்படவுள்ளது.</p><h2><strong>அதிர்ச்சி</strong> </h2><p>பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் புதிய பெயர்ப்பலகைகளை 4க்கு 2 அடி அளவில் ஸ்டீல் குழாய்களில் தயாரித்து நிறுவ வேண்டும்;  பள்ளிகளுக்குத் தேவையான  சமயலறை, உணவுப் பொருள்கள் இருப்பு வைக்கும் அறை, குடிநீர், மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் சார்ந்த குறைகளை களைய வேண்டும்; மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் ஆகியவற்றை வாங்கித் தர வேண்டும் என்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த வசதிகள் அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் செய்ய வேண்டும் என்று அரசு ஆணையிட்டிருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும். இந்த செலவுகளை ஒட்டுமொத்தமாக தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது  அநீதியாகும். காலை உணவுத் திட்டத்திற்காக பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசு,  இந்த வசதிகளை செய்து கொடுப்பதற்காக கூடுதலாக சில லட்சங்களை ஒதுக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதை செய்யாமல், அச்செலவுகளை தலைமை ஆசிரியர்கள் மீது திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஆசிரியர்களால் சமாளிக்க முடியாது.</p><h2><strong>அரசே ஏற்க வேண்டும்</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அரசு மதுக்கடைகள் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை செய்து கொள்வதற்காக அரசு நிதி ஒதுக்காமல், அதை பணியாளர்களின் தலையில் சுமத்தியதால் தான் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாயும், அரசு மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாயும் வசூலிக்கும் நிலை உருவானது. அந்த கலாச்சாரத்தை ஒழிக்க முடியாமல் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. அதே கலாச்சாரத்தை பள்ளிகளுக்கும் நீட்டித்தால் அங்கும் தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். நேர்மையையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளிகளில் தவறுகள் கற்பிக்கப்படக்கூடாது.</p><p>எனவே, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு  மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக திரும்பப் பெற  வேண்டும். காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள்  மற்றும் பிற வசதிகளுக்கான  செலவை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/102-couples-have-registered-to-get-married-at-the-thiruparankundram-temple-tomorrow-all-on-the-same-day#comments</comments><guid isPermaLink="false">1a9bc6c8-7363-43c5-bb89-613ed6328167</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:46:00 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:46:00.622Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,திருப்பரங்குன்றம் கோவில்,முகூர்த்த நாள்,Thirupparankundram Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பரங்குன்றம் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/1zvubmf6/thirupparakundram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நாளை ஒரே நாளில் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><h2><strong>திருப்பரங்குன்றம் கோவில்</strong></h2><p>தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருப்பரங்குன்றம் கோவிலில்</a> மட்டும் தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார். இந்த கோவிலில் தங்களது திருமணம் நடந்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதனால் இந்த கோவிலில் முகூர்த்த நாளில் சராசரியாக 50 முதல் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு மேல் திருமணம் நடக்கிறது.</p><h2><strong>102 ஜோடிகள் பதிவு</strong></h2><p>இந்தநிலையில் ஆவணி மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாளான கடந்த 23-ந்தேதி அன்று ஒரே நாளில் 104 ஜோடிகளுக்கு பதிவு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 17-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வளர்பிறை முகூர்த்தமாகும். நாளை ஒரே நாளில் மட்டும் திருமணம் செய்ய 102 ஜோடிகள் பதிவு செய்துள்ளனர். வருகின்ற 17-ந்தேதிக்கு நேற்று வரை 52 ஜோடிகளுக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.</p><h2><strong>ரூ.4.59 லட்சம் வருமானம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/price-hike-for-prasadam-at-thiruparankundram-temple">திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்</a> முதல் திருமணம் செய்யக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு செய்யப்பட வேண்டும். கோவிலின் திருவாட்சி மண்டப வளாகத்தில் முத்துக்குமாரசுவாமி-தெய்வானை அம்பாள் சன்னதியில் திருமணம் செய்கிறார்கள். இதனை தொடர்ந்து கோவில் கருவறைக்கு மணமக்கள் உள்ளிட்ட 20 பேருக்கு அனுமதி டிக்கெட் மற்றும் திருமண பதிவு கட்டணம் என்று ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தலா ரூ.4,500 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை ஒரே நாளில் 102 ஜோடிகள் திருமணம் செய்ய பதிவு செய்யப்பட்டதில் கோவிலுக்கு ரூ.4 லட்சத்து 59 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ரசாயன குடோனில் தீ விபத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-at-a-chemical-warehouse-near-ambattur-industrial-estate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fire-breaks-out-at-a-chemical-warehouse-near-ambattur-industrial-estate#comments</comments><guid isPermaLink="false">08f38799-2694-4691-9f68-35eee510d16f</guid><pubDate>Sat, 12 Sep 2026 03:01:51 +0000</pubDate><atom:updated>2026-09-12T03:01:51.234Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,Ambattur Fire Accident,அம்பத்தூர் தீவிபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/56sgo922/ambattur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரசாயன குடோனில் தீ விபத்து]]></media:title><media:description type="html"><![CDATA[ ரசாயன குடோனில் தீ விபத்து]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/56sgo922/ambattur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/அம்பத்தூர்-தீவிபத்து">அம்பத்தூர்</a> எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1-வது குறுக்கு தெருவில் ரீச்சம் லேபரெட்டரி கெமிக்கல் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. </p><p>இந்நிறுவனத்தின் குடோனில் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அறிவியல் ஆய்வகங்களுக்கு தேவையான பல்வேறு வகையான ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன.</p><h2><strong>குடோனில் தீவிபத்து</strong></h2><p>இந்நிலையில், நேற்று இரவு சுமார் 9.50 மணியளவில் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் எஸ்டேட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் 9 தீயணைப்பு வீரர்கள், நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குறுகலான பகுதி மற்றும் காற்றின் வேகத்தால் தீ கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 5,000 கிலோ பஞ்சு பெட்டிகள், 20 வகையான ரசாயன கரைப்பான்கள்  2 டன் மற்றும் 100 கிலோ உப்பு உள்ளிட்ட பொருட்கள் தீயில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-amman-temple-kumbabishekam-special-train-service-between-chennai-central-and-madurai#comments</comments><guid isPermaLink="false">feef7073-5d7f-4cc6-bcb6-f834cde07453</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:31:47 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:31:47.190Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,Kumbabishekam,கும்பாபிஷேகம்,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Express Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/cv7tk81a/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</h2><p>* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06153), மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06154), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.</p><p>அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் காலை 5 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th">மதுரை</a> சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><h2>கடற்கரை-மானாமதுரை</h2><p>சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.</p> <p>மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06162), இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tirupati-kudai-rally-traffic-diversions-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">50a5d3ef-f5a9-4041-90cd-207b35cd5635</guid><pubDate>Sat, 12 Sep 2026 02:04:43 +0000</pubDate><atom:updated>2026-09-12T02:04:43.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,போக்குவரத்து மாற்றம்,Traffic Diversion,Tirupati Kudai,திருப்பதி திருக்குடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/59cgc6rd/tirupatikudai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirupathi kudai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-12/59cgc6rd/tirupatikudai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.</p> <p>சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்</h2><p>சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88">திருப்பதி திருக்குடை</a> ஊர்வலம், இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், இந்த திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு. ஊர்வலம் செல்லும் இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதன் விவரம் வருமாறு:-</p><h2>வால்டாக்ஸ் சாலை</h2><p>* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், ஈ.வெ.ரா.பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.</p> <p>* ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, மாலை 3 மணி முதல் வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட் சாலை வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும் ஈ.வெ.ரா.பெரியார் சாலை, முத்து சாமி சாலை மற்றும் ராஜாஜி சாலையையும் பயன்படுத்தலாம்.</p>  <p>* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்க வரும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை நோக்கி செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக போகலாம்.</p> <h2>வேப்பேரி நெடுஞ்சாலை </h2><p>* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டான நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p><p>* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை-ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p> <p>ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.</p><h2>பெரம்பூர் பேரக்ஸ் சாலை</h2><p>* பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக போகலாம்.</p> <h2>ஓட்டேரி சந்திப்பு</h2><p>* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக, ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் போகமுடியாது. அந்த வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக போகலாம்.</p> <p>* ஊர்வலம் கொன்னூர் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலம், மேடவாக்கம் டேங்க் சாலை மற்றும் ஐ.சி.எப். சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து கொன்னூர் பாயிண்ட் நோக்கி வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>திருப்பதி திருக்குடை ஊர்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-12T01:43:50.355Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-more-parties-will-join-secular-social-justice-victory-alliance">மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - அமைச்சர் செங்கோட்டையன் </a></p><p>* தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்த தளபதி இருக்கும் வரை அவர் தான் நிரந்தர முதலமைச்சர்.</p><p>* பல்வேறு மின் உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறோம் விரைவில் மின் உற்பத்தி அதிகரிக்கும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-conference-in-delhi-what-is-the-point-p-chidambarams-question-sasi-tharoors-answer-bjp-is-having-fun">டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி - சசி தரூர் பதில் - காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு<br></a><br>*சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தியா வருகிறார்.</p><p>*ரஷிய அதிபர் புதின் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/69th-death-anniversary-ministers-pay-homage-at-immanuel-sekaran-memorial">69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை</a></p><p>* பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. </p><p>* உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/foreign-workers-60-day-grace-period-for-h-1b-visa-renewal-cancel-trump-action">இந்திய ஊழியர்களுக்கு ஆப்படித்த டிரம்ப்.. H-1B விசா புதுப்பிப்புக்கு வழங்கப்படும் 60 நாள் கெடு ரத்து?</a><br><br>*ஏற்கெனவே விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.</p><p>*புதிய நிறுவனத்தைத் தேடிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-in-number-1-place-in-wta-ranking">டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா</a></p><p>* அரினா சபலென்கா 99 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்து வந்தார்.</p><p>* சிறு வயது கனவு. அதனை அடைந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-reached-london-to-attract-industrial-investments">தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தமிழர்கள் உற்சாக வரவேற்பு</a></p><p>* முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.</p><p>* தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-mahakavi-bharathiyar-memorial-day">மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்</a></p><p>* கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.</p><p>* இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-recalls-swami-vivekanandas-1893-chicago-speech-as-world-marks-5th-anniversary-of-911-attacks">சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1893, செப்டம்பர் 11-ம் தேதி சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார்.</p><p>* அவரது எழுச்சியூட்டும் வார்த்தைகள் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/the-911-attacks-were-just-the-beginning-what-was-the-massive-plot-osama-bin-laden-had-devised-to-destabilize-the-united-states-much-like-the-soviet-union">9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?<br></a></p><p>*9/11 தாக்குதலை ஒரு விளம்பரமாகப் பயன்படுத்தி, உலகளாவிய முஸ்லிம்களைத் தனக்கு ஆதரவாகத் திரட்ட பின்லேடன் முயன்றார்.</p><p>*சவூதி அரேபிய அரச குடும்பம் உட்படத் தனது எதிரி நாடுகளின் ஆட்சியாளர்களை வீழ்த்துவது பின்லேடனின் மற்றொரு இலக்காகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்</a></p><p>* அறிஞர்கள் இடையே இருந்த பட்டிமன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா.</p><p>* பாரதியின் கவிதை தொடங்கி கம்பனின் காவியம் வரை பாமரத் தமிழனனுக்கு பக்குவமாய் அறிமுகம் செய்தவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து</a></p><p>* முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p><p>* மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people">பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்</a></p><p>* படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா.</p><p>* மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dipke-urges-maharashtra-govt-to-talk-to-jarange-warns-against-forcible-intervention">மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை</a></p><p>* மாணவர்களுக்குச் சிறந்த பள்ளிகள், தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காட்டுங்கள். </p><p>* இத்தகைய வசதிகளைச் செய்து தருவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால்தான் மனோஜ் ஜரங்கே போராடிக்கொண்டிருக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-across-country-on-strike-today">வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது</a></p><p>* வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><p>* வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns" rel="nofollow">தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>* சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>*  அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-morning-dip-evening-surge-current-status" rel="nofollow">GOLD PRICE TODAY: காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை- தற்போதைய நிலவரம்!</a></p><p>* வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்துள்ளது.</p><p>* இன்று காலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனையானது. </p>]]></content:encoded></item><item><title>கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-congestion-why-wasnt-a-case-filed-against-vijay-despite-my-insistence-thiruma-lashes-out-at-dmk-and-tvk#comments</comments><guid isPermaLink="false">e9490fc6-00d5-4be7-aefd-b58b67265241</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:53:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:53:37.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் நெரிசல்: நான் வலியுறுத்தியும் விஜய்மீது வழக்குப் போடாதது ஏன்? - திமுக, தவெகமீது திருமா பாய்ச்சல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mbjcs4y6/New-Project-2026-09-11T212258.979.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் விவகாரத்தில் தான் வலியுறுத்தியும் விஜய்மீது திமுக வழக்குப் பதியவில்லை என்றும், தவெகவை குறைத்து மதிப்பிட்டதே திமுக தோல்விக்கும் காரணம் என விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan">திருமாவளவன்</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அவர்.,</p><h2>கரூர் சம்பவத்திற்கு விஜய்யின் தாமதமே காரணம்</h2><p>தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடர வேண்டும் என்று நான் சொன்னேனா, இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை.</p><p>அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம். காலம் தாழ்த்தி வந்தார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது. நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்கிறபோது அதற்கு பொறுப்பேற்கக்கூடிய அத்தனைப் பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த அணுகுமுறை தானே காரணம்.</p><h2>விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்</h2><p>அப்போதே விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமா? வேண்டாமா? திமுகவை குறி வைத்து விஜய் பேசும்போது எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டாமா? </p><p>ஆனால் நீங்கள் (திமுக) பேசவில்லை, நான் பேசினேன். விஜய் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை என்று... அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. </p><p>இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது? விஜய் அதிமுக, பாமக, பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவன் ஆதரவைக் கேட்டார். </p><p>ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்துவிட்டு விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று என்னைக் கேட்கிறார்கள். ஏன்? ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்த திருமாவை கூட்டணிக்குள் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேட்கவில்லை.</p><h2>விஜய்தான் வந்தார்... நாங்கள் போகவில்லை</h2><p>அவர்தானே எங்களிடம் வந்தார். நாங்கள் அவரிடம் போகவில்லையே. அவருக்குதான் தேவை இருந்தது. எங்களுக்கு தேவையில்லையே. கூட்டணிக்கு பெயர் வைக்கும்போது சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று சொன்னார்கள்.</p><p>வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற சொன்னவன் திருமாவளவன்.</p><p>மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இப்படித்தான் உருவானது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-did-the-dmk-bring-the-dmdk-into-the-alliance-against-the-wishes-of-its-coalition-partners-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">dab3e674-7a93-4eee-aeee-b1a7276654f3</guid><pubDate>Fri, 11 Sep 2026 15:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T15:30:00.282Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,thirumavalavan,திருமாவளவன்,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கூட்டணி கட்சிகளின் விருப்பமில்லாமல் தேமுதிகவை, திமுக உள்ளேக் கொண்டு வந்தது ஏன்? - திருமாவளவன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/kfyfpe4z/New-Project-2026-09-11T205404.551.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூட்டணியில் இருந்து விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என விசிக தலைவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance"> திருமாவளவன்</a> குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இதுதொடர்பாக பேசிய அவர்.,</p><h2>திமுகவின் அணுகுமுறை</h2><p>திமுக கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் நான். இன்று அவதூளை அள்ளி வீசுபவர்களுக்கு இது தெரியாது. கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்கமுடியவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.</p><p>காங்கிரஸோடு நல்ல உறவை திமுக பேணியிருந்தால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறியிருக்குமா? தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுடனான திமுகவின் அணுகுமுறை எப்படி இருந்தது? </p><h2>திடீரென உள்ளே வந்த தேமுதிக..</h2><p>தேமுதிகவை திடீரென கூட்டணியில் சேர்த்தது மற்ற கூட்டணியினருக்கு மகிழ்ச்சியை அளித்ததா? தோற்றாலும் ஒன்றாக இருக்கலாம் என முடிவெடுக்கும் அளவில் திமுக - விசிக உறவு இல்லை. </p><p>கூட்டணியை விட்டுவிலக அமைச்சர் பதவி காரணம் இல்லை. திமுகவுடன் நல்லுறவு இல்லாததே காரணம். காங்கிரஸ், இடதுசாரிகள் சென்றபின்தான் விசிக சென்றது. </p><p>இடைத்தேர்தலில் நிற்கமாட்டேன், அமைச்சர் பதவியை ஏற்கமாட்டேன் என தொடக்கத்தில் இருந்தே மறுதலித்தவன் நான்.</p><h2>தவெக கூட்டணிக்கு வன்னி அரசே காரணம்..</h2><p>பின்னர் ஏன் விலகினேன்? ஒரு எளியக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை தவறவிடுவது ஏற்புடையதல்ல. 30 ஆண்டுகள் என்னுடன் விசுவாசமாக பயணித்தவர் வன்னி அரசு. அவருக்காகத்தான் இந்த முடிவு.</p><p>திராவிட இயக்கங்கள் இதை பாராட்ட வேண்டுமா? அவதூறு செய்யவேண்டுமா? திமுக கூட்டணியில் விசிக நீடிக்காத்தற்கு பொறுப்பு திமுகதான். கூட்டணி கட்சிகள் வெளியே சென்றதற்கு திமுகவின் அணுகுமுறை.” </p><p>எனப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு- திருமாவளவன், சீமான் இரங்கல்!
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-death-thirumavalavan-seeman-condolences</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-death-thirumavalavan-seeman-condolences#comments</comments><guid isPermaLink="false">b904b028-d7e9-4258-bdad-6b154cb7b093</guid><pubDate>Fri, 11 Sep 2026 14:49:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T14:49:05.508Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,thirumavalavan,திருமாவளவன்,சீமான்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/jdyvynae/TNPSC-3.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சாலமன் பாப்பையா  மறைவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன்,நாதக தலைவர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/jdyvynae/TNPSC-3.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இழப்பு </h2><p>தமிழில் சிறந்த பட்டிமன்றங்கள், தமிழ்த்துறையில் பேராசிரியர் என தமிழுக்காக தன்னை ஈடுப்படுத்திக்கொண்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று சொந்த ஊரான மதுரையில் காலமானார். </p><h2>திருமாவளவன் இரங்கல் </h2><p>மறைந்த சாலமன் பாப்பையாவிற்கு விசிக தலைவர் தொல் <a href="http://maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-support-tvk-alliance">திருமாவளவன்</a> இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இரங்கல் செய்தி குறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது</p><p>பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழறிஞருமான பேரா.சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. தொண்ணூறு வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றாலும் அவர் இன்று நம்மிடையே இல்லை என்பது கவலையளிக்கிறது. காலமான அய்யாவுக்குவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>பேரா.சாலமன் பாப்பையா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் சங்க இலக்கியங்களில் அவருக்கு ஏற்பட்ட மிகுந்த ஈடுபாடு காரணமாக அந்நூல்களை எளிய நடையிலும், நகைச்சுவையோடும் மாணவர்களுக்கு பயிற்றுவித்துள்ளார்.</p> <h2>வட்டார மொழிகளில் பட்டிமன்றங்கள் நடத்தியவர்</h2><p>திருக்குறள்,புறநானூறு,அகநானூறு மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரைநடைகள் எழுதி உள்ளார்.</p><p>ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே இராமாயணம், மகாபாரதம் போன்ற தலைப்புகளில் மட்டுமே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நடைபெற்று வந்தன. </p><p>அதனை உடைத்தெறிந்து ஆண் - பெண், குடும்பம், கல்வி, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu">பொருளாதாரம்</a> போன்ற சமூகம் சார்ந்த ஆக்கப்பூர்வமான தலைப்புகளில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வட்டார வழக்கு மொழியில் நகைச்சுவையோடு பட்டிமன்றங்களை வழி நடத்தி வந்துள்ளார். ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் பட்டிமன்றங்களில் அவர் பங்கேற்றுள்ளார் என்பது அளப்பரிய சாதனையாகும்.</p><p>பட்டிமன்றத்தை தொடங்கும் போது அன்பு பெரியோர்களே!, அருமைத் தாய்மார்களே!, இனிய குழந்தைகளே; என்று விளிக்கும் வழக்கத்தை அவருக்கென தனித்த அடையாளமாக வைத்துக் கொண்டார்.</p><p>பல்வேறு நாடுகளுக்கு தமிழ்ச் சங்கங்களால் அழைக்கப்பட்டு உரையாற்றும் வாய்ப்புகளை பெற்றவர். அவரது தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு இயக்கங்கள், இலக்கிய அமைப்புகள் அவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. அத்துடன்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.</p><p>எளிய மக்களின் தமிழ்ச் சொல்லாடல்களை பட்டிமன்றத்தின் வாயிலாக தமிழுலகிற்கு கொண்டு சேர்த்த பெருமை கொண்டவர். அத்தகைய தமிழ்ப் பெருந்தகை பேரா.சாலமன் பாப்பையா மறைவென்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.</p><p>ஆகவே,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.</p> <h2>சீமான் இரங்கல் </h2><p> நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/seeman-to-act-in-a-film-produced-by-kamal-haasan-seyon-film-crew-releases-video">சீமான் </a> தனது இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது</p><p>முதுபெரும் தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான, மதிப்பிற்குரிய ஐயா, பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். </p> <p>தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்துபடைக்கும், இலக்கிய சுவைமிகுந்த,  பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த அவருடைய அரும்பணிகள் போற்றுதற்குரியது.</p><p>எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம்,  தமிழ்மறையாம் திருக்குறளுக்கு  எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். ஐயா சாலமன்  பாப்பையா அவர்களின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.</p> <p>ஐயா  அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ்ப்பற்றாளர்களுக்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். </p><p>பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! என்று  தெரிவித்திருக்கிறார்.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சாலமன் பாப்பையா மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/take-care-of-your-health-he-said-and-left-stalin-on-salomon-papayya#comments</comments><guid isPermaLink="false">3f8563d7-cd2f-4f95-87c9-64a1e80e86ec</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:35:17 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:35:17.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MKStalin,மு.க ஸ்டாலின்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="1210" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg" width="1300"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xso7kbo5/WhatsApp-Image-2026-09-11-at-6.01.22-PM-1.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p>பட்டிமன்ற பேச்சால் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை கட்டிப்போட்ட சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று தனது சொந்த ஊரான மதுரையில் காலமானார்.</p> <h2>மு.க .ஸ்டாலின் இரங்கல்</h2><p>இந்நிலையில் இவரின் மறைவிற்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் –<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-helmet-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-tvk-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"> மதுரை </a>மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.</p><p>திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.</p><h2>பாப்பையாவோடுதான் பண்டிகை தொடங்கும்</h2><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah">பண்டிகை </a>நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். </p><p>பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். </p><p>தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>தலைவர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. </p><p>எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும், வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம். </p><p>கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். </p><p>சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.</p><p>தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழுக்கான அவரது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்..! சாலமன் பாப்பையா மறைவு குறித்து சரத்குமார் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-s-legacy-to-tamil-will-forever-endure-says-sarathkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salomon-pappaiya-s-legacy-to-tamil-will-forever-endure-says-sarathkumar#comments</comments><guid isPermaLink="false">49d797af-6499-4b66-aafd-5cfc42793b67</guid><pubDate>Fri, 11 Sep 2026 12:30:59 +0000</pubDate><atom:updated>2026-09-11T12:30:59.324Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarathkumar,சரத்குமார்,மறைவு,சாலமன் பாப்பையா,soloman paapaiah</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xqly3djg/sarath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaihh- Sarathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xqly3djg/sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், நடிகர் சரத்குமார் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  </p><p>“அன்புப் பெரியோர்களே…</p><p>அருமைத் தாய்மார்களே…</p><p>இனிய குழந்தைகளே…”</p><p>என்ற அன்பான குரலின் வாயிலாக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நுழைந்து, தனது இனிய பேச்சாலும், நகைச்சுவை கலந்த நயமான தமிழாலும், பட்டிமன்ற மேடைகளைப் பண்பாட்டின் பெருமைமிக்க அரங்குகளாக மாற்றிய பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.</p><p>தமிழ் மொழிக்கும், இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கும் அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது.  தமிழறிஞரின் மறைவு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு மிகுந்த பேரிழப்பு. </p><p>அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் புகழும், தமிழுக்கான அவரது பங்களிப்பும் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/every-festive-morning-began-with-you-csk-management-condoles-the-passing-of-solomon-pappaiah#comments</comments><guid isPermaLink="false">7d7a02d0-39ee-4b1f-b98b-16003e676080</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:46:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:46:06.308Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai super kings,சென்னை சூப்பர் கிங்ஸ்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ஒவ்வொரு பண்டிகை காலையும் உங்களுடன்தான் தொடங்கும்’ - சாலமன் பாப்பையா மறைவிற்கு சிஎஸ்கே நிர்வாகம் இரங்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/5f5c057f/New-Project-2026-09-11T171326.554.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration">சாலமன் பாப்பையா </a>வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதுரையில் உயிரிழந்தார்.</p><p> அவரின் மறைவிற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் இரங்கல் தெரிவித்து வருகிறது.</p><p>இந்நிலையில் அவரின் மறைவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது. </p><p>சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…!”</p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக் காலையும் உங்களுடன்தான் தொடங்கும். எங்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வைத்த நீங்கள், நம் கொண்டாட்டங்களின் மறக்க முடியாத அங்கம்!</p><p>தமிழறிஞராக, உங்கள் தமிழ்மீதான அன்பும், உங்கள் சொற்களும் பல தலைமுறைகளின் நெஞ்சில் நீங்காத தடம் பதித்தன.</p><p>தமிழுக்கும், பட்டிமன்றத்துக்கும் தங்களின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும், சாலமன் பாப்பையா அய்யா.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-must-abandon-the-move-to-set-up-the-secretariat-at-pattinapakkam-eps-urges#comments</comments><guid isPermaLink="false">1e4e1801-d324-4fa4-ac09-98ced395cba2</guid><pubDate>Fri, 11 Sep 2026 11:28:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T11:28:53.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/b9moxw0q/New-Project-2026-09-11T165825.082.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் இடத்தேர்வை கைவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>நெருக்கடியான பகுதி</h2><p>“புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாக வசித்து வரும் மீனவர்கள், பொதுமக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் என்று மிகவும் நெருக்கடியான பகுதியாகும்.</p><p>இடநெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியில் இருந்த காலங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.</p><h2>தற்போதைய சூழலில் அவசியமற்றது</h2><p>விவசாயிகள் பிரச்சனை, பொதுமக்களின் சமூக நலப் பிரச்சனைகள் இருக்கும் இத்தருணத்தில், கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ. 1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.</p><p>புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டாம் என்று அதிமுக கூறவில்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். </p><p>தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று த.வெ.க. அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமை செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12 மீனவ கிராம மக்கள் போராட்டம் மேற்கொள்ள திட்டம்.. </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-plan-protest-against-new-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-plan-protest-against-new-secretariat#comments</comments><guid isPermaLink="false">cdec3e03-d394-4b3c-a2bc-170a624e806c</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:57:20 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:57:20.415Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போராட்டம்,மீனவர்கள்,தலைமைச்செயலகம்</media:keywords><media:content height="356" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7cz2s3c5/images-4.jfif" width="639"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7cz2s3c5/images-4.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>எதிர்ப்பு </h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. </p><h2>ஆலோசனை </h2><p>பட்டினப்பாக்கம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களை சேர்ந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-pudupattinam-fishing-village-demand-boundary-demarcation"> மீனவ </a>மக்கள் , புதிதாக அமையவிருக்கும் தலைமைசெயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். </p> <h2>பாதிப்பு </h2><p>குறிப்பாக இந்த திட்டத்தால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-elections-vijay-party-to-get-majority-of-pattinampakkam">பட்டினப்பாக்கம்</a> உள்ளிட்ட 12 கிராமங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பல ஆண்டுகளாக பூர்வ குடிகளாக உள்ள எங்களை இவ்விடத்தில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்த திட்டத்தினால் முள்ளிகுப்பம், முள்ளிமாநகர்தான். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் படகுகளை நிறுத்தவும், வலைகளை பின்ன அவர்கள் பயன்படுத்தி வரும் நிலங்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும். </p><h2>போராட்டம் </h2><p>ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அப்பகுதியில் அமையவிருக்கும் இந்த திட்டம் கூடுதல் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்று கூறும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். </p><p>இங்கு வசித்து வரும் மக்களிடம் ஆலோசனை கேட்காமலேயே அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பட்டா வைத்திருக்கும் நிலத்தை கையகப்படுத்துவதா என்ற கேள்வியையும்  முன் வைத்திருக்கின்றனர். இதனிடையே சிபிஎம் தலைவர் சண்முகம் , அன்புமணி ராமதாஸ், டிடிவி  தினகரன் உள்ளிட்டோரு திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இலக்கிய தமிழை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/salamon-pappaiya-turning-pattimandram-into-tamil-peoples-celebration#comments</comments><guid isPermaLink="false">16e9f6bb-822a-4f1c-b1ff-853efd980147</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:56:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:56:22.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ solomon pappaiah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/dhohhz8t/Solomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.</p><p>மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர் சாலமன் பாப்பையா, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களில் நடுவராக அமர்ந்து நகைச்சுவை உணர்வுடன் ஆழமான கருத்துகளையும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியம் கொண்டாடிய நூல்களுக்கு, சாலமன் பாப்பையா உரை எழுதியிருக்கிறார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-வது ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா நடித்தார்.</p><h2>பேச்சாளர்</h2><p>சாலமன் பாப்பையா பள்ளியில் படிக்கும்போது பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசினார். திராவிட இயக்கப் பேச்சாளர்கள் மற்றும் முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் போன்றோரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் திருவள்ளுவர் கழகத் தலைவராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளார், இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன் போன்றோரது பேச்சரங்குகளை ஒருங்கிணைத்தார். அதன் மூலமும், சா. கணேசன், குன்றக்குடி அடிகளார் போன்றோரது சொற்பொழிவுகளைக் கேட்டும், தொடர் வாசிப்புப் பயிற்சியாலும், தன்னை ஒரு பேச்சாளராக வளர்த்துக் கொண்டார்.</p><p>வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.</p><h2>முதல் மேடைப் பேச்சு</h2><p>முதல் மேடைப் பேச்சு 1961-ல் புதுக்கோட்டையில் நிகழ்ந்தது. பாரதி வேதாந்தக் கவிஞனா?, புதுமைக் கவிஞனா? என்ற விவாதத் தலைப்புகளில், புதுமைக் கவிஞனே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே பட்டிமன்ற நிகழ்வுகள் பலவற்றில் பேச்சாளராகக் கலந்துகொண்டார். பட்டிமன்ற நடுவராக உயர்ந்தார். பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் போன்ற தன் குழுவினருடன் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை எனப் பல வெளிநாடுகளில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தினார். 7000-க்கு மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தினார்.</p><h2>கட்டுரைகள்</h2><p>சாலமன் பாப்பையா பணிகளுக்கு இடையே இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவை தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதினார். மாநாட்டு மலர்கள் பலவற்றிலும் அமுதசுரபி, ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், குங்குமம், குமுதம் போன்ற இதழ்களிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இவருடைய 'உரைமலர்கள்' நூல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டது.</p><h2>தமிழாய்வு</h2><p>சாலமன் பாப்பையா புறநாநூறு பாடல்கலை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டார். அகநாநூறு மூன்று தொகுதிகளாக உரை எழுதினார்.</p><h2>பட்டிமன்றங்கள்</h2><p>சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை கண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.</p><p>ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.</p><p>அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.</p><h2>கடினமான தமிழை எளிய தமிழாக்கியவர்</h2><p>சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.</p><p>திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.</p><p>அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும். இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.</p><h2>குடும்பம்</h2><p>இவரது மனைவி ஜெயபாய், ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு தியாகமூா்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனா்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-sathurthi-thodar-vidumurai-kidukiduvena-uyarntha-vimaan-kattanam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-sathurthi-thodar-vidumurai-kidukiduvena-uyarntha-vimaan-kattanam#comments</comments><guid isPermaLink="false">defc4158-ed32-4fd8-8ae6-ef216e43c124</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:50:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:50:26.028Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விமான கட்டணம் உயர்வு,விநாயகர் சதுர்த்தி,Ganesh Chaturthi,Flight ticket price</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c45y0amp/TNPSC-1.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ganesh Chaturthi,flight ticket ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c45y0amp/TNPSC-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>விடுமுறை </h2><p>விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி வார இறுதி நாட்களையும் சேர்த்து <a href="https://www.maalaimalar.com/news/national/congress-issues-whip-to-its-mps-in-rs-ls-asks-them-to-be-present-on-aug-10-to-12">மூன்று</a> நாட்களுக்கு தொடர் விடுமுறையானது விடப்பட்டுள்ளது.</p><h2>கொண்டாட்டம் </h2><p><a href="https://www.maalaimalar.com/spirituality/worship/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81">விநாயகர் சதுர்த்தி</a> நாளை குடும்பத்தினருடன் கொண்டாட வெளி ஊர்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>உயர்வு </h2><p>தொடர் விடுமுறையை ஒட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu">சென்னை </a>உள்நாட்டு விமான நிலையத்தில், திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், தூத்துக்குடி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில் பயணக்கட்டமானது பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>குறிப்பாக சென்னையிலிருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, மும்பை, பெங்களூரு டெல்லி,  செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளது. இந்த விலை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. </p> ]]></content:encoded></item><item><title>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-rule-for-the-airport-and-another-for-the-chip-plant-the-plan-to-acquire-410-acres-of-agricultural-land-in-the-parandur-area-must-be-abandoned-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">42943d8b-8b09-491a-bccd-b379b8b56bc2</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:35:50 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:35:50.129Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,Maduramangalam,SIPCOT Park,மதுரமங்கலம்,சிப்காட் பூங்கா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/mhgyju9w/New-Project-2026-09-11T160516.816.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விமான நிலையத்திற்கு ஒரு நீதி, சிப் ஆலைக்கு ஒரு நீதியா? பரந்தூர் பகுதியில் 410 ஏக்கர் விளைநிலம் எடுப்பதை கைவிட வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா  அமைப்பது உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்பதற்காக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட தவெக அரசு, அதன் எல்லையில் அமைந்துள்ள மதுரமங்கலத்தில் நிலங்களை கையகப்படுத்தி நூற்றுக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அநீதியானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.</p><h2>கையகப்படுத்துதல் நடவடிக்கை தீவிரம்</h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ ஆகிய பகுதிகளில் 410.80 ஏக்கர் புன்செய் விளைநிலங்கள், 11.55 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 423.35 ஏக்கர் நிலங்களை புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்கு கையகப்படுத்துவதற்கான அரசாணை கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. </p><p>அதன்படி கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின்  பட்டியல் கடந்த 27.03.2025ஆம் நாள் நாளிதழ்களிலும், 09.03.2026ஆம் நாள் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப் பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>இது குறித்து நிலங்களின் உரிமையாளர்களை ஓரகடம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய சிப்காட் வளாகங்களின் விரிவாக்கத்திற்கான நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்திற்கு அழைத்து முந்தைய திமுக அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு நிலங்களை வழங்கும்படி கட்டாயப்படுத்துவதாக இந்த நிலம் எடுப்பால் பாதிக்கப்படும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>புன்செய் நிலங்கள்</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிக்கை அளித்த முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்களை தயாரிப்பதற்கான செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் அமைக்கப்படும்; இதற்காக ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவித்தார்.</p><p>அந்தப் பூங்கா அமைப்பதற்காக மதுரமங்கலம் கிராமத்தின் பிரிவு ‘ஆ’ பகுதியில் 14.25 ஹெக்டேர், அதாவது 35.20 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும், அதற்காகவே நிலம் எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மதுரமங்கலம் பகுதியில் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றில் மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அவை தான் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  உழவர்களுக்கு நீடித்த வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகின்றன. </p><p>அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால்  அவற்றின்  உரிமையாளர்களான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, அந்த நிலங்களில் பணியாற்றி வரும் வேளாண் கூலித் தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். </p><p>இந்த உண்மைகளை உணர்ந்தும் நிலங்களைப் பறிக்க தவெக அரசு துடிப்பது மனிதாபிமானமற்றது.</p><h2>அரசுக்கு தெரியாமல் இல்லை</h2><p>செமி கண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படவுள்ள மதுரமங்கலம் கிராமம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படவிருந்த 12 கிராமங்களுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது.</p><p>விமான நிலையத்தின் மையப்பகுதியாக கருதப்படும் பரந்தூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும், முதலமைச்சர் விஜய் நேரில் சென்ற ஏகனாபுரத்திலிருந்து 5 கி.மீ, விமான நிலையத்தின் கிழக்கு எல்லையான சிங்கிலிப்பாடி  கிராமத்தை ஒட்டியும், வடகிழக்கு எல்லையான குணகரம்பாக்கம் கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவிலும்  மதுரமங்கலம் கிராமம் அமைத்திருக்கிறது. </p><p>இந்த உண்மைகள் எதுவும் அரசுக்கு தெரியாமல் இருக்க முடியாது.</p><p>அவ்வாறு இருக்கும் போது பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று கூறி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்ட முதலமைச்சர் விஜய், </p><p>இப்போது மதுரமங்கலத்தில் மட்டும் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருள்கள் உற்பத்திப் பூங்கா அமைப்பதற்காக உழவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை துரத்தியடிப்பது எந்த வகையில் நியாயம்? </p><h2>விமான நிலையம் மாறும்போது, சிப்காட் பூங்கா மாறாதா?</h2><p>விமான நிலையம் அமைப்பதால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் ஏற்படாதா? 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலம் தேவைப்படும் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடியும் போது, </p><p>வெறும் 35 ஏக்கர் நிலம் மட்டுமே தேவைப்படும் செமிகண்டக்டர் பூங்காவையும், 423.35 ஏக்கர் நிலம்  தேவைப்படும் ஒட்டுமொத்த சிப்காட் வளாகத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடியாதா? என்று அங்குள்ள மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு முதலமைச்சர் விஜய் விடையளிக்க வேண்டும்.</p><h2>பரந்தூர் நீதி, மதுராமங்கலத்திற்கும் கிடைக்க வேண்டும்</h2><p>விவசாயிகள் தான் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள்தான் உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். பாதிக்கப்படும் உழவர்களுக்கு நீதி வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது. </p><p>பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அதே நீதி, அதற்கு மிக அருகில் அமைந்துள்ள  மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் பூங்கா அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.</p><p>அதற்காக, மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். செமிகண்டக்டர் பூங்கா உள்ளிட்ட சிப்காட் வளாகத்தை ஏற்கனவே அரசால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களிலோ அல்லது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களிலோ அமைக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-the-central-government-to-lower-the-qualifying-marks-for-neet-super-speciality-medical-courses#comments</comments><guid isPermaLink="false">87488c09-4874-41ad-935a-3da97fb86ecc</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:11:13 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:11:13.446Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Centre,மு.க.ஸ்டாலின்,NEET SS,நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/vr7jq5ad/New-Project-2026-09-11T153929.287.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை  பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-urges-resolution-to-safeguard-obc-rights">மு.க.ஸ்டாலின்</a> வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; </p><p>“மத்திய அரசின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் தகுதிப் புள்ளிக்கான சதவீத வரம்பைக் குறைக்காததால், நாடு முழுவதும் சுமார் 1,857  ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவப் படிப்பு இடங்கள் காலியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. </p><p>இதில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடங்கும்.</p><p>நேற்று, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வழக்கில், இந்த சதவீத வரம்பைக் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>எனவே, முந்தைய ஆண்டுகளைப் போலவே, இதற்கான வரம்பை 'பூஜ்ஜிய சதவீதத்திற்கு’ குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும்போது, ​​மாநிலங்கள் தங்கள் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிற்குத் தகுந்தவாறு சதவீத வரம்பைத் தாங்களாகவே குறைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். </p><p>பொது சுகாதாரம் என்பது மாநிலங்களின் அரசியலமைப்புச் சார்ந்த பொறுப்பாகும்.</p><p>நமது மக்களுக்குக் கூடுதல் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படும் சூழலில், நாட்டின் மதிப்புமிக்க சொத்தான மருத்துவ இடங்கள் எதுவும் வீணாக அனுமதிக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prof-salomon-pappaiya-passes-away-cm-vijay-mourns#comments</comments><guid isPermaLink="false">23a549c7-1249-4c1d-a671-cf73ebbc5813</guid><pubDate>Fri, 11 Sep 2026 10:00:51 +0000</pubDate><atom:updated>2026-09-11T10:00:51.199Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மறைவு,passed away,cm vijay,முதலமைச்சர் விஜய்,சாலமன் பாப்பையா,saloman paapaiya</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Soloman pappaiahh- CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xwuj58jk/salomon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away" rel="nofollow">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் சாலமன் பாப்பையா மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.</p><p>அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irreparable-loss-to-tamil-literary-world-and-debate-field-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">00905420-5d68-4117-add0-19b1483b8fce</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:32:48 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:32:48.748Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,சாலமன் பாப்பையா,Solomon Pappiah</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappiah -edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pksjtdsn/TNPSC.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மறைவு </h2><p> சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away"> சாலமன் பாப்பையா </a>வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். </p><h2>இபிஎஸ் </h2><p>மறைந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இறப்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-admk-condemns-electricity-tariff-hike-demonstration-tomorrow-on-behalf-of-490486">எடப்பாடி பழனிசாமி </a>இரங்கல் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த </p><p>தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.</p><p>தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.</p> <p>அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.</p><p>அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-says-solomon-pappaiah-is-one-who-took-pattimandram-to-common-people#comments</comments><guid isPermaLink="false">3c4de154-9f81-4f1b-a3b8-219a1b91ac99</guid><pubDate>Fri, 11 Sep 2026 09:25:10 +0000</pubDate><atom:updated>2026-09-11T09:25:10.217Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,ரஜினிகாந்த்,Solomon Pappaiah,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Rajinikanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/gnqsm0gk/rajinikanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார். </p><p>அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p> <p>இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p><p>படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE">சாலமன் பாப்பையாவின்</a> ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார் - வைரமுத்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/solomon-pappaiah-passed-away-vairamuthu-condolences#comments</comments><guid isPermaLink="false">dbe02827-069a-4c66-a033-8fec594bd458</guid><pubDate>Fri, 11 Sep 2026 08:58:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T08:58:37.832Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vairamuthu,பட்டிமன்றம்,வைரமுத்து,Solomon Pappaiah,pattimandram,சாலமன் பாப்பையா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Solomon Pappaiah - Vairamuthu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/ymvezc0m/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார்.</p><p>பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pattimandram-judge-solomon-pappaiah-passed-away">சாலமன் பாப்பையா</a> (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.</p><p>இந்நிலையில் கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,</p> <p>சாலமன் பாப்பையாவின் </p><p>மறைவு</p><p>உள்ளத்தை உடைக்கிறது</p><p>பாரதி மறைந்தநாளில்</p><p>பாப்பையாவும்</p><p>மறைந்திருக்கிறார்</p> <p>செப்டம்பர் 11</p><p>தமிழுக்கு நல்லநாள்</p><p>இல்லை போலும்</p><p>பட்டிமன்றத் தமிழ்</p><p>முடிந்துவிட்டதா?</p><p>பாமரத் தமிழ்</p><p>மூச்சை நிறுத்திக்கொண்டதா?</p> <p>கல்லூரிகளில்</p><p>பயிற்றுவித்த தமிழைக் </p><p>கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர்</p><p>சாலமன் பாப்பையா</p><p>இந்தக் குளத்தில்</p><p>கல்லெறிந்தவர்கள் நூலில்</p><p>அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்</p> <p>சிரிக்க வைத்துச் </p><p>சிந்திக்கவும் வைத்த</p><p>மேடைக் கலைவாணர்</p><p>மறைந்துவிட்டார்</p><p>அவரது நாற்காலி</p><p>காலியாகவே இருக்கும்;</p><p>நிரப்ப முடியாது</p> <p>மதுரைக்கே</p><p>ஒரு வெறுமை வந்துவிட்டது;</p><p>மனம் கலங்குகிறது</p><p>அவரை இழந்து வாடும்</p><p>குடும்பத்தார்க்கும்</p><p>உலகத் தமிழர்களுக்கும்</p><p>ஆழ்ந்த இரங்கல்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>