<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 28 Aug 2026 13:28:43 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: பிரேமலதா வாழ்த்து- நன்றி தெரிவித்தார் சபாநாயகர் - 28 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026#comments</comments><guid isPermaLink="false">9bc913c5-ed9d-43ae-847f-c4bc775f64fc</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-28T11:40:41.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு இது ஒரு புதிய அரசியல் அனுபவம். சட்டமன்றம் இன்று கோட்டைக்குள் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் நடைபெற்று வருகிறது. அரசியலும், அரசின் செயல்பாடுகளும் பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாறி வருகின்றன- அமைச்சர் ராஜ்குமார்</p><p>திமுக, அதிமுக இருவரும் ஒருவர் ஆளுங்கட்சி என்றால் மற்றவர் எதிர்க்கட்சி, ஒருவர் இந்த பக்கம் அமர்ந்தால் மற்றவர்கள் அந்த பக்கம் அமர்வார்கள். இப்படி மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள், முதல்வர் விஜய் வாயிலாக ஒரு புதிய தீர்ப்பை எழுதியுள்ளார்கள்- அமைச்சர் ராஜ்குமார்.</p><p>வால்பாறையில் 40 எஸ்டேட்டில் செல்போன் டவர் இல்லை" என வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்து சிலர் கமெண்ட் அடிக்க, "டவர் இல்லாததால் தான் எம்எல்ஏ ஆனேன். டவர் இருந்திருந்தால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வந்திருக்கும் என கலகலப்பாக பதிலளித்தார்.</p><p>மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். ஐகோர்ட் கிளை உள்ளிட்டவை மதுரையில் உள்ளன.</p><p>சென்னையில் மட்டுமே நிர்வாக மையங்கள் குவிந்து கிடப்பதால், தென்மாவட்ட மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மதுரையை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>கான்பிடன்ஸுக்கும், ஓவர் கான்பிடன்ஸுக்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான். கான்பிடன்ஸ் ஆளுங்கட்சியாக இந்த சபையில் அமர்ந்திருக்கிறது. ஓவர் கான்பிடன்ஸை நாம் தான் தேடி பார்க்க வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>என் கோரிக்கைகளை சொல்ல நேரம் கொடுங்கள், அதையெல்லாம் நான் சொல்லாவிட்டால் மக்கள் என்னை அடித்து விடுவார்கள். அனைத்தையும் சொல்லாமல், நீ வரக்கூடாது என்று மக்கள் கூறிவிட்டார்கள். 760 கி.மீ., தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு கொஞ்சம், நேரம் கொடுங்க..!- வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் கோரிக்கை.</p><p>வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருந்த போது, நேரம் கடப்பதை குறிக்கும் விதமாக மணி அடித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நினைவூட்டிய போது, "அய்யோ.. பெல் அடிக்காதீங்க, எனக்கு சாமி வந்துவிடும். நிறுத்து என்று சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன்" என அவர் கூற, திமுகவினர் சிரிக்க, "உண்மை தான், எனக்கு சாமி வந்துவிடும், இதோ பாருங்க, எனக்கு இப்போதே ஒரு மாதிரி ஆகிறது" என்று தன் தோற்றத்தை அவர்களிடம் காண்பித்தார்.</p><p>2016ல் தேர்தலில் நின்று ஒருவர் தோற்க, மக்கள் வாக்களிக்கவில்லையே என அவருடைய மகள், 2 நாட்களாக உண்ணாமல் கவலையில் இருந்தார். 2026ல் மீண்டும் அவர் தேர்தலில் நின்றார், திருமணமான அந்த பெண், ஓட்டளிக்க ஐதராபாத்தில் இருந்து வந்தார். </p><p>யாருக்கு ஓட்டளித்தாய் என மகளிடம் அவர் கேட்ட போது, "அப்பா நீ ஜெயிச்சிடுவ, நான் உனக்கு ஓட்டு போடவில்லை, எங்க அண்ணனுக்காக விசில் சின்னத்தில் போட்டேன்" என்று அந்த மகள் கூறியுள்ளார். அந்த எம்எல்ஏ இந்த சபையில் இருக்கிறார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அறிவிப்பாக வெளியிடுவார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>ஆளும் அரசு செய்ய வேண்டியதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை- கே.என்.நேரு</p><p>தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் விளக்கம்.</p><p>தவெக நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலை எதிர்கட்சியினர் வாசித்த நிலையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்.</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் JCD பிரபாகர்.</p><p>அவை உறுப்பினர்கள் அனைவரது சார்பாக வாழ்த்துவதாக தெரிவித்த சபாநாயகருக்கு அமைச்சர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.</p><p>ஜல்லிக்கட்டு என்ன Gladiator போட்டியா? ஊருக்கு வெளியே கட்டிய மைதானத்தால் பிரயோஜனம் இல்லை - அமைச்சர் நிர்மல் குமார்</p><p>ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனால் புதிய மைதானம் கட்டப்பட்டது - திமுக MLA எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டியதற்கு பதிலாக அந்த தொகையை சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருக்கலாம்- தவெக MLA கருப்பையா</p><p>திருவள்ளூர் தொட்டா ரெட்டி குப்பத்தில் ஆசிட் ஊற்றி பெண் எரித்துக்கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்- பிரேமலதா</p><p>அனைத்து சகோதரர்களுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் எனக் கூறிய பிரேமலதாவுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். </p><p>கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது, அதனால்தான் கைவிடப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். </p><p>கலைஞரின் சேவையைப் பாராட்டி தமிழ்நாட்டின் சிற்பி என பேனா சிலை அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கருத்து கேட்டு மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் கலைஞர் பேனா சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போதைய பொருளாதார நிலையில் கலைஞருக்கு பேனா சிலை வேண்டாம் என்று தான் மு.க.ஸ்டாலின் கூறினார்- எ.வ.வேலு</p><h2><strong>கடலில் பேனா சிலை எதற்கு? அருண்ராஜ்</strong></h2><p>நிதியில்லை என்றால் கலைஞரின் பேனா சிலையை கடலில் வைக்க முயன்றது ஏன்?. நிதி பற்றாக்குறை என்று கூறித்தான் 24 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தினீர்கள். இன்னொருத்தரை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்க்க தான் சட்டமன்ற உறுப்பினருக்கு கார் வழங்குகிறார் முதலமைச்சர் என  அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><p>விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த போது ரூ.10 கோடியில் பதக்கம் கூட தராமல் இருந்தது ஏன்?. உங்களை போல் நாங்களும் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டுமா என செங்கோட்டையனுக்கு கேஎன் நேரு கேள்வி எழுப்பினார். </p><p>செஸ் போட்டிகளை போலத்தான் கார் ரேஸை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி நடத்தினார்- கேஎன் நேரு</p><p>நீங்கள் கார் ரேஸை கொச்சைப்படுத்தவில்லை, கார் ரேஸ் வீரர்களை கொச்சைப்படுத்துகிறீர்கள்- உதயநிதி ஆவேசம்</p><p>சென்னை நகரத்திற்குள் இரவு நேரத்தில் முதன்முறையாக கார் ரேஸ் நடத்தி சாதித்து காட்டினோம்- உதயநிதி</p><p>கார் ரேஸ் ரூ.24 கோடியில் நடத்தினீர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு கார் தருவதை கேள்வி கேட்கிறீர்களே நியாயமா? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். </p><p>தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்கள் பல கார்கள் வைத்திருந்து பலன் இல்லை, கார் எடுத்துக் கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை, மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தாது எம்எல்ஏக்கு கார் தநந்து என்ன பயன்? என திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கேள்வி எழுப்பினார். </p><p>சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமத்துவ சுடுகாடு வைத்துள்ள ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்-அமைச்சர் வன்னி அரசு</p><p>ஏகனாபுரம் பகுதியில் புதிதாக ஒரு சமூக நல கூடம் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>புதிய சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும்- வன்னிஅரசு</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது- வன்னி அரசு</p><p>அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக்களத்திற்கு சென்றுவிடுவேன்- வன்னி அரசு</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் த.வெ.க. அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்- வன்னி அரசு</p><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதம் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது என வன்னி அரசு மகிழ்ச்சி அடைந்தார்.</p><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. திமுகவும், விசிகவும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமின்றி கொள்கைக் கூட்டணியாக செயல்பட்டது - உதயநிதி ஸ்டாலின்</p><p>என் அரசியல் ஆசான் திருமாவளவன் தான் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>வெற்றி பெற்ற திமுகவினர் திருமாவளவனுக்கு நன்றி கூறவில்லை என அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும் போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம்- அமைச்சர் </p><p>அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது- அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்ட சட்டசபையில் நன்றி தெரிவத்தார் அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது வெற்றியை விட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி- வன்னி அரசு</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்- வன்னி அரசு</p><p>பேரவையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை- சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான உரையை தொடங்கிய அமைச்சர் வன்னி அரசு</p><p>நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர வேறு தவறாக கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்</p><p>நன்றி சொல்ல தகுதியில்லை என தமிமுன் அன்சாரியை பார்த்து எப்படி கூற முடியும்? என அமைச்சர் ஷாஜகானுக்கு கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</p><p>கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து அமைச்சர் ஒருவர் சபையில் பேசியிருந்தார். இடஒதுக்கீடு வழங்கியதற்காக கலைஞர் கருணாநிதிக்கு ராமதாஸ் மஞ்சள் துண்டு அணிவித்தார். பாராட்டு விழா நடத்தி அந்த மேடையிலேயே கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார் ராமதாஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார். </p><p>திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் நன்றி கெட்டத்தனமாக வெளியே வரவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காதர் மொய்தீன் கூறினார்- நிர்மல்குமார்</p><p>யாரால் வென்றோம் என திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் ஷாஜகான் பேசியதே நன்றி உணர்வுதானே- சபாநாயகர்</p><p>எந்த துறை சார்ந்த அமைச்சர் பதலளிக்க வேண்டுமோ அவருக்குத்தான் சட்டசபை விவாதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்- சபாநாயகர்</p><p>தேவையற்ற வார்த்தைகளை பேசாமல் இருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் ஷாஜகான் குறித்து தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு  அமளி ஏற்பட்டது.</p><p>IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்</p><p>ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்</p><p>சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</p><p>வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்</p><p>வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p><strong>வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்</strong> </p><p>வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்</p><p>மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு</p><p>மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார். </p><p>இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு</p><p>பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்</p><p>அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி</p><p>துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்</p><p>த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</p><p>தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை</p><p>சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.</p>]]></content:encoded></item><item><title>11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு மின் ஒப்பந்தம் கோரியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders#comments</comments><guid isPermaLink="false">d34bb41c-3424-4886-b66f-0896a966ac71</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:28:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:28:33.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,இலவச சைக்கிள் திட்டம்,நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு அரசு</a> மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.</p><h2><strong>இணையதளங்கள்</strong></h2><p>நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் வரும் நாளை முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a>, <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a> என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.</p><p>செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும்.</p><p>இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5  மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியபாளையம் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam#comments</comments><guid isPermaLink="false">00274a7b-ca02-436e-aed6-faafc0adf6e4</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:14:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:14:42.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண் கொலை,woman murder,ஆசிட் வீச்சு,Acid throw</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/h8qyxqcz/murder.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/h8qyxqcz/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள்.</strong></em></p><p>பெரியபாளையம் அருகே உள்ள தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் அருகில் உள்ள வயல்வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். </p><h2><strong>ஆந்திரா பெண்</strong></h2><p>இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா(40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். </p><p>இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது. அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில்  செல்போன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள். அருணா உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய் வீட்டிற்கு வந்தபோது கொலை செய்யப்பட்டு உள்ளார். அணிந்து இருந்த நகைகள் அப்படியே உள்ள நிலையில் அருணா கொலை செய்யப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>பொதுமக்கள் அச்சம்</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டத்தில்  அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடம்பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார். </p><p>தற்போது ஊத்துக்கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3b371b18-89bc-45f3-a1fb-c24b152798ad</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:51:37.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 1-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 1-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements#comments</comments><guid isPermaLink="false">7853d1d3-07cc-470e-93e1-adf57eaafa29</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:21:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:21:30.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,nepal flood,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லியும் விரைந்தனர். </p><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், கும்பகோணத்தை தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம், </p><p>நேபாளத்தை தளமாகக் கொண்ட சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்குச் சென்றிருந்ததில், அக்குழுவில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். </p><p>கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து ஐந்து பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தர்மபுரியிலிருந்து ஒருவர், திருச்சியிலிருந்து நான்கு பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து இரண்டு பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர், சென்னையிலிருந்து ஆறு பேர் மற்றும் புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர்.</p><p>இந்நிலையில் மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. </p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு </a>காரணமாக திரிசூலி மற்றும் போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை 480-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">0ccb38f0-167f-45d1-991e-98559b59757b</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:04:45.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,price hike,விலைவாசி உயர்வு,assembly,Iran War,ஈரான் போர்,சட்டசபை,அத்தியாவசியபொருட்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Price Hike - TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததாக உதயநிதி, எடப்பாடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். </p><p>ஈரான் போர், வறட்சியே காரணம் என அமைச்சர் விளக்கி, ரேஷன், பசுமை கடைகள் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><h2><strong>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h2><p>விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றது. இதனால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.</p><p>குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட விலை வாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><h2><strong>விலைவாசி உயர்வு - உதயநிதி</strong></h2><p>விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தி பருப்பு, ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கபட்டது.</p><p>இந்த ஆட்சியில் மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு, இன்றைக்கு 75 ரூபாயாக விற்பனை ஆகிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய் இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய் இன்றைக்கு கிலோ 180 ரூபாய்.</p><p>மே மாசம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40 இன்னைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் வரை வந்துள்ளது.</p><p>எனவே முதல்-அமைச்சர் தலைமையில் நிதி, உணவு கூட்டுறவு உள்ளிட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்ற அளவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி </a>வலியுறுத்தல்.</p><h2><strong>கடும் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> கூறுகையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ. 20 வரை உயர்ந்து விட்டது சர்க்கரை ஒரு கிலோ 48 லிருந்து 72 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மஞ்சள் ஒரு கிலோ 200 ல் இருந்து 250 ஆகவும் மிளகாய் கிலோ ரூ.200 ல் இருந்து 300 ஆகவும் வெல்லம் ஒரு கிலோ 55 லிருந்து 75 ஆகவும் புளி கிலோ ரூ. 150 ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>அரிசி தட்டுப்பாடு</strong></h2><p>இப்போது இங்கும் வறட்சி ஆந்திராவிலும் வறட்சி. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். </p><p>இதைத் தொடர்ந்து கணேஷ்குமார்(பா.ம.க ) தாரகை கத் பட், (காங்கிரஸ்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி எடுத்துச் சொன்னார்கள்.</p><h2><strong>உணவுத்துறை அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இதைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:- ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>நம் மாநிலத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறி உள்ளது. எனவே 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><h2><strong>விலைக் கட்டுப்பாடு</strong></h2><p>எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதனை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். </p><p>அரிசி சர்க்கரை உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களையும் விலையையும் மானிட்டர் செய்கிறோம். மக்களுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். </p><p>இதனால் வாரா வாரம் எந்த பொருளின் விலை அதிகமாகிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.</p><p>எனவே ரேசன் கடைகள் மட்டுமல்லாமல் பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும்.</p><p>எனவே விலைக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">b5502e91-183e-4273-80cd-c819909ce11e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:56:36.570Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perambur,tvk,பெரம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</strong></em></p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட  கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணா தெரு இடையே போதுமான சாலை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது. </p><p>எனவே இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.</p><p>இந்த நிலையில் தனது சொந்த தொகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி கணபதிதெரு, ராம கிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்ல முடியும். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்க்கு</a> எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை  கண்டறிந்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">5f108595-788b-461d-9735-8a47542324f9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:39 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:39.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வறட்சி பாதிப்பு</strong></h2><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p> <p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது;  வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மிமீ அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும் தான்.</p><h2><strong>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்</strong></h2><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை-
அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers#comments</comments><guid isPermaLink="false">65d5911c-cc30-45a3-8621-17db84d1664e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:16:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:16:59.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rivers,TN assembly,ஆறுகள்,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவை யில் இன்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்புச்சுவர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>இதனைத் தடுக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/national/boy-swam-from-dharamdar-bay-to-gateway-of-india-in-8-hours-576322" rel="nofollow">வங்காள விரிகுடா</a> கடலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப் பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே, கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் மூலம் வீரன் கோயில்திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்டபட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறுவது டன், நிலத்தடி நீர் செறி வூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அது பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>வெள்ளாற்றில் ரூ.194 கோடியில் தடுப்பணை மேலும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆதிவராக நல்லூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தில் நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.</p><p>தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</a> தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றுப் பகுதியில், ஓடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீண்ட காலமாக கலந்ததன் காரணமாக ஆகாயத்தாமரை, சீமைக்கரு வேலம் உள்ளிட்ட செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்  விஜய்யின் அறிவுறுத்தலின் படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies#comments</comments><guid isPermaLink="false">4709b298-fd6f-4f21-8ccb-ab1d2a4efc7f</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:55:57.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,by-election,சென்னை ஐகோர்ட்டு,இடைத்தேர்தல்,cm vijay,முதலமைச்சர் விஜய்,ராஜினாமா,Election Petition</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ By-Election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜினாமா செய்தபோது வழக்கு இல்லை, தடையை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.</p><h2><strong>இடைத்தேர்தலுக்கு தடை</strong></h2><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் <a href="https://www.maalaimalar.com/topic/chennai-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><h2><strong>ராஜினாமா செல்லும்</strong></h2><p>இந்த வழக்கில் எதிர் மனுதாரர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய் </a>தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.</p><p>காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத் தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல. தொகுதியின் வாக்காளருமல்ல.</p><h2><strong>வழக்கு உள்நோக்கம்</strong></h2><p>திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.</p><h2><strong>இடைத்தேர்தல் அவசியம்</strong></h2><p>5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.</p><p>திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>தடை நீக்குக</strong></h2><p>இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பல முனைப் போட்டி நடந்து உள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail#comments</comments><guid isPermaLink="false">889cb67e-f14a-4a9e-9b34-0a85e6df6b15</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:49:21 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:49:21.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,புழல் சிறை,Puzhal Jail,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</strong></em></p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவ்வப்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். </p><p>கடந்த மாதம் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி, நெமிலிசேரியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். </p><h2><strong>திடீர் ஆய்வு</strong></h2><p>இன்று திடீரென புழல் ஜெயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.  அவர் வருவதை கேள்விபட்டதும் ஜெயில் வாசலில் ஏராளமானவர்கள் திரண்டனர். முதலமைச்சர் விஜய் சென்ற கார் நேரடியாக ஜெயில் வளாகத்துக்குள் சென்றது. அங்கு அவரை சிறைத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். </p><p>அதை தொடர்ந்து தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</p><p>அதைத் தொடர்ந்து ஜெயிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்த்து கைதிகளிடம் பேசி குறகைளை கேட்டார். பின்னர் அதிகாரிகளிடம் சிறைத்துறைக்கு என்னென்ன தேவை என்று கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புழல் காவல்நிலையத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">fce9a202-2657-484a-a277-cffa3f2e4ed2</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:05.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமத்துவ இடுகாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிவிப்புகள்</h2><p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு. சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.</p><p>ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும்.</p><h2>"மேலவளவு" கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம்</h2><p>மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit#comments</comments><guid isPermaLink="false">e44701c9-aa9a-41a4-8a46-c4712e99a404</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:19:30.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,சென்னை ஐகோர்ட்,ஆதவ் அர்ஜூனா,Madras highcourt,அவதூறு வழக்கு,defamation case,முக ஸ்டாலின்,Minister Adhav Arjuna,திமுக ஐடிவிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna - MK Stalin  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்தார். இதற்கு செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், " தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a>, கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படக் கூடிய திமுக ஐடி விங்க் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி ஒரு பதிவை வெளியாகியுள்ளது.</p><p>அதில் "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்புலான போதை பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது த.வெ.க அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.</p><h2><strong>வைரல் பதிவு</strong></h2><p>இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த பதிவை 2,600 பேர் மறு பதிவு செய்துள்ளனர் 4,400 பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். 150 பேர் பதிலும் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதள கணக்கை பராமரித்து வருகின்றது. எனவே இந்த பதிவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தான் பொறுப்பு.</p><h2><strong>இழப்பீடு கோரிக்கை</strong></h2><p>இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார். </p><p>எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும். </p><p>அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>நோட்டீஸ் உத்தரவு</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். </p><p>இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல- ஐகோர்ட் நீதிபதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">c160a0ce-83f3-4b49-91d2-b490a6f3d434</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:12:56.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,maria wilson,மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>தமிழக நிதி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மரிய வில்சன்</a>, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.</p><h2><strong>நீதிபதி கேள்வி</strong></h2><p>புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-order-exemption-granted-to-minister-maria-wilson-from-appearing-in-the-case-regarding-the-assault-on-his-brother">மரிய வில்சன்</a> தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வக்கீல்,  சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்,  வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுக்கள்- திமுக வேட்பாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases#comments</comments><guid isPermaLink="false">e513aceb-839a-4d2b-96c5-65a730453321</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:10:20.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,ஆதவ் அர்ஜூனா,chennai highcourt,Aadhav Arjuna,நீதிமன்றம் உத்தரவு,திமுக வேட்பாளர்கள்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/27xkihb3/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Minister Adhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/27xkihb3/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் வழக்கில், தி.மு.க. வேட்பாளர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக முதலமைச்சர்  விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். </p><p>அவரின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">வில்லிவாக்கம் </a>தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன், தொகுதி வாக்காளர் சிவராஜ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர்களுக்கும், வாக் காளர்களுக்கும் உத்தர விட்டு, விசாரணையை செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-110-districts-created-within-the-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-110-districts-created-within-the-dmk#comments</comments><guid isPermaLink="false">d96da6ae-db40-492b-9b46-9aa4be5bad65</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:01:48 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:01:48.637Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,110 மாவட்டங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/iaik31cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/iaik31cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து 110-ஆக அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.</strong></em></p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம், கொள்கை - அமைப்புமுறை - செயல்பாடுகள் – உடன்பிறப்புகள் என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்திருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில்தான் அமைந்துள்ளன.</p><p>அந்த அடிப்படையில், கடந்த 22.8.2026 அன்று நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.</p><p>கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை கழக அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை நடத்திடவும் – பல்வேறு அமைப்புரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது மாவட்டக் கழகங்கள் குறித்த தீர்மானமாகும்.</p><p>அதில், தற்போதுள்ள மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கையை 77-இலிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/110-மாவட்டங்கள்">110-ஆக</a> அதிகரித்து, எந்தெந்தத் தொகுதிகள் எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் கழகத் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து, கழக மறுசீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கழக முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். அதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டக் கழகங்களில் தற்போதுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கழக மாவட்டங்களின் அடிப்படையில், நகர – ஒன்றிய – பகுதி – பேரூர் – வட்ட – கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், கழக மறுசீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>இது கன்னி உரை அல்ல.. வன்னி உரை..!- சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-this-is-vanni-speech-not-maiden-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-this-is-vanni-speech-not-maiden-speech#comments</comments><guid isPermaLink="false">4550ac16-db5d-426f-aa93-551ac6ac790b</guid><pubDate>Fri, 28 Aug 2026 06:51:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T06:51:42.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,TN assembly,vanni arasu,தமிழக சட்டசபை |,வன்னி அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2ddhu5h5/vanni.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2ddhu5h5/vanni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்கம் தென்னரசு, கனிமொழி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு உள்ளிட்ட அத்தனை திமுக உறுப்பினர்களுக்கு நன்றி.</p><p>அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் வன்னி அரசு நன்றி தெரிவித்தார்.</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள். </p><h2>சாதி ஒழிப்பு</h2><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலை களத்தில்.. சாதிய ஒழிப்பு களத்தில்.. என்றோ நான் கொல்லப்பட்டிருக்கலாம்.</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் தவெக ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு. அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும்போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம். ஆனால், எங்களுக்கு யாரும் இதுவரை நன்றி கூறவில்லை.</p><h2>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி</h2><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. மு.க.ஸ்டாலினுக்கும், திருமாவளவனுக்கும் இடையே இருந்த கூட்டணி தேர்தல் கூட்டணி கிடையாது, அது கொள்கை கூட்டணி.</p><p>என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன் என பலமுறை குறிப்பிட்டுள்ளேன். விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதும் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது.</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம்- பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-praggnanandhaa-grand-chess-tour-2026-champion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-praggnanandhaa-grand-chess-tour-2026-champion#comments</comments><guid isPermaLink="false">6f74293f-c4bf-43af-bdaa-ed00d12141fd</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:38:47 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:38:47.755Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,பிரக்ஞானந்தா,முதலமைச்சர் விஜய்,Praggnanadhaa,Grand Chess Tour,கிராண்ட் செஸ் டூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4irc63jv/praggnanandha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chess champion praggnanandha- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4irc63jv/praggnanandha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்காவில் நடந்த கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் <a href="https://www.maalaimalar.com/sports/first-indian-to-win-the-grand-chess-tour-praggnanandhaa-makes-history" rel="nofollow">சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் </a>என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.</p><p>இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்… <a href="https://t.co/q55B3CdcbD">pic.twitter.com/q55B3CdcbD</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2093204008341282919?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிளஸ் 1 மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் சம்பத் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sampath-kumar-announces-277-crore-for-plus-one-student-bicycles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sampath-kumar-announces-277-crore-for-plus-one-student-bicycles#comments</comments><guid isPermaLink="false">4c7dcc07-2e1e-4169-9671-ade1e629b986</guid><pubDate>Fri, 28 Aug 2026 05:15:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T05:15:05.147Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் சம்பத்குமார்,Minister sambathkumar,Modern cycle,நவீன சைக்கிள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sambathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/3cjpkkhq/sambathkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிளஸ் 1 மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை குறித்து அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்தார்.</p><p>அப்போது, மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரையாற்றினார். </p><p>இதற்கு,<a href="http://maalaimalar.com/search?q=%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow"> பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை</a>க்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என கே.என்.நேரு விமர்சித்தார். </p><p>தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதவது:-</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்.</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்.</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டுள்ளது.</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்.</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது. மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர், எங்களை அழைத்து அறிவுறுத்தினார்.</p><p>ஆபத்து காலத்தில் காக்கும் 108 ஆம்புலன்ஸ்போல் தமிழக மக்கள் அச்சம் போக்க தவெகவுக்கு 108 எம்எல்ஏக்களை கொடுத்துள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>புதிய அரசின் கீழ் விலைவாசி உயர்வு.. சட்டமன்றத்தில் உதயநிதி, இபிஎஸ் கவன ஈர்ப்பு - அமைச்சர் விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rising-prices-under-the-new-government-udhayanidhi-and-eps-raise-the-issue-in-the-assembly-minister-offers-clarification#comments</comments><guid isPermaLink="false">3749ef41-0e6f-4f62-9ddb-e3ae56f4a634</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:44:10 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:44:10.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,விலைவாசி உயர்வு,Rising prices,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/rj1a1dac/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026">சட்டமன்றத்தில் </a>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசுகையில், "அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. </p><p>அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 6 மாதங்களில் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். </p><p>குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய், இன்றைக்கு 75 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய், இன்று கிலோ 80 ரூபாய், மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150, இன்றைக்கு ரூ.180, மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.40, இன்று ரூ.80 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மக்கள் இதனால் மிகவும் பாதித்திருக்கிறார்கள். மளிகை கடை பக்கம் செல்வதையே குறைத்து வருகிறார்கள் என செய்தி வருகிறது. </p><p>ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். </p><p>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. </p><p>அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோக திட்டத்தை அறிவித்தார்.</p><p>அதன் மூலம் பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கினார். கடுகு, சீரகம் , வெந்தையம் உள்ளிட்ட 10 மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள். கலைஞர் தொடங்கி வைத்த திட்டம் தற்போதுவரை நடந்து வருகிறது.</p><p>தற்போது வழங்கும் அளவை விட கூடுதலாக வழங்க வேண்டும் என இந்த அரசு ஆவன செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு அமைச்சர்கள், அதன் துறை அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.</p><h2>இபிஎஸ்</h2><p>அதிமுக தலைவர் இபிஎஸ் பேசுகையில், "அரசி விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை கிலோ ரூ.48 இல் இருந்து ரூ.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கிலோ ரூ.200 இல் ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. மிளகாய் ரூ.200 இல் இருந்து தற்போது ரூ.300க்கு விற்கிறது.</p><p>வெள்ளம் ரூ.58 இல் இருந்து தற்போது ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. புளி, பருப்பு விலைகளும் அதிகரித்துள்ளது. எண்ணெய் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நமக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்தும் குறைந்துள்ளது. அதிமுக அரசு இருந்தபோது விலை ஏற்றத்தின்போது எந்த பொருள் விலை ஏறுகிறதோ, அந்த பொருள் எந்த மாநிலத்தில் எங்கு குறைவாக உள்ளதோ அங்கிருந்து இறக்குமதி செய்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்து விற்கப்பட்டது. </p><p>அதனால் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். எனவே இந்த அரசும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்." என தெரிவித்தார்.</p><h2>விளக்கம்</h2><p>இதற்கு விளக்கம் அளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன், " ஈரான் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நமது மாநிலத்தில் மட்டுமல்ல, அதிக உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவிலும் ரூபாய் ஏறியுள்ளது. எல்லா இடங்களிலும் விலை ஏறத்தான் செய்திருக்கிறது.</p><p>நமது முதலமைச்சர் தலைமையிலான கமிட்டியில் வாராவாரம் 41 பொருட்களுக்கு உண்டான விலையை தினமும் கண்கணிக்கிறோம். வெங்காயம், உருளைக்கிழங்கு, அரசி என எல்லா பொருட்களையும் கண்காணிக்கிறோம். </p><p>விலை உயர்வு அதிக உள்ளவற்றை கண்டறிந்து கடந்த காலங்களில் என்ன நடைமுறைப்படுத்தினோமோ அதை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் விலையை குறைக்க முயன்று வருகிறோம்.</p><p>ரேஷன் கடைகள் மூலமாக மட்டுமல்ல, அங்கன்வாடி பசுமை கடைகள் மூலமாகவும் சென்ற ஆட்சிக்காலங்களை போல இப்போதும் கண்டிப்பாக செய்யப்படும்" என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இரண்டாவது நாளாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-28-08-2026#comments</comments><guid isPermaLink="false">64531ed8-cab6-4e55-895a-00d44c71593d</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:36:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T04:36:05.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/y2gwkogj/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இதனை தொடர்ந்து நேற்று தங்கம் இரண்டு முறை குறைந்தது. காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கும் மாலை கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>இன்றும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p> <h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்| 27 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-august-2026#comments</comments><guid isPermaLink="false">fdcac3cc-5277-4752-b476-f0f1c8922a11</guid><pubDate>Thu, 27 Aug 2026 04:02:06 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:32:57.974Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/zok08jg6/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மானிய கோரிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில் சட்டசபைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வருகை</p><p>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். </p><p>வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். </p><p>கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p><p>தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார். </p><p>செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</p><p>கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். </p><p>சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார். </p><p>H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த முதியவர், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை உள்ளதா? என்று உறுப்பினர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, H1N1 வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். H1N1 வைரஸ் குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை நிலவுவதாக எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தென்காசியில் உள்ள இருளர், காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு சாதிச்சான்று கிடைக்க நடவடிக்கை தேவை. வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு தென்காசியில் வைச பிள்ளை என்றுதான் சாதி சான்று தருகின்றனர் என எம்எல்ஏ ராஜா எழுப்பிய கேள்விக்கு, குறும்பர், நாயக்கர் மலைவாழ் நாயக்கர் என்று சாதி சான்றிதழ் தருவதில் சிக்கல் உள்ளது. சாதிச்சான்றிதழ் கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம், அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். </p><p>சோழிங்கநல்லூரில் உள்ள ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என எம்எல்ஏ சரவணன் கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ஆட்சியர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p>திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி இல்லை என அதிமுக எம்எல்ஏ அரி எழுப்பிய கேள்விக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. பயனாளிகளை கணக்கில் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறினார். </p><p>என்னுடைய திருவெறும்பூர் தொகுதியில் மழைக்காலத்தில் நெல் வீணாவதை தடுக்க குடோன்கள் கட்டித் தரப்படுமா?- எம்எல்ஏ நாவல்பட்டு விஜி.</p><p>செப்டம்பரில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்பட நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறோம். தார்பாய் மூலமாக நெல்மணியை காய வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும், கோரிக்கை வந்தாலும் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><p>ராமநாதபுரம் பணங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எப்போது அமைக்கப்படும் என எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் எழுப்பிய கேள்விக்கு, 2026-27 கொள்முதல் பருவத்தில் நடக்கும் சாகுபடிக்கு ஏற்றவாறு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்தார். </p><p>மொடக்குறிச்சியில் நீர்நிலை புறம்போக்கு எனக் கூறி 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா மறுக்கப்படுவதாக தவெக எம்.எல்.ஏ. சண்முகன் கூறியதற்கு, நீர் ஓடக் கூடிய இடமாக இல்லை என்றால் பரிசீலித்து நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். </p><p>“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்” என தவெக எம்.எல்.ஏ., ஈசிஆர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர்,“சோழிங்கநல்லூரை தனி மாவட்டமாக அல்லது தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். 7 ஊராட்சிகள் செங்கல்பட்டிலும் 20 வார்டுகள் சென்னை மாநகராட்சியிலும் இருப்பதால் இரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கும் சென்று மக்கள் அவதியடையும் சூழ்நிலை உள்ளது” என்றார்.</p><p>கலசப்பாக்கம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படுமா? என்று உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சாலை வசதி மேம்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?- எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ராதாபுரம் தொகுதி பணகுடியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது குறித்து குழு மூலம் ஆய்வு செய்து ஆட்சியர் மூலம் நடவடிக்கைகள் எடுப்போம்- அமைச்சர் வெங்கடரமணன்.</p><h2>அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த பாமக எம்எல்ஏ</h2><p>சட்டமன்றத்தில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறுகையில்," செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன். மறுநொடியே DM-ஐ அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.</p><p>சிசேரியன் மிக சிறப்பாக சிசேரியன் நடைபெற்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.</p><p>கோவை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் உள்ளனர். கூடுதல் நியமனம் அவசியம். Liver Transplantation சிகிச்சை செய்யவும் அரசு முன்வர வேண்டும் என்று அதிமுகவின் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தினார்.</p><p>அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. முதல் முறையாக 284 உயர்சிறப்பு மருத்துவர் பணியிடம் உருவாக்கி இருக்கிறோம். Liver Transplantation தேவை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.</p><p>நேபாள விவகாரம்.. எதிர்கட்சிகள் கோரிக்கை ஏற்பு</p><p>தமிழகத்தில் இருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில், அவர்கள் விளக்கும் முன்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதிலளிக்க, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அமைச்சருக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் எடுத்துரைக்க சபாநாயகர் வாய்ப்பளித்தார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறைபின் இன்று கூடியது. சபைகூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார். </p><p>அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சர் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்:- </p><p>நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல. </p><p>அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார். </p><p>மேலும், கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்- ஜே.சி.டி.பிரபாகர். </p><p>நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.</p><p>எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.</p><p>தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- உதயநிதி</p><p>நேபாளம் சென்ற தமிழர்கள் 57 பேர் மாயம், அரசு தரிதமாக செயல்பட்டு அவர்களை தாயகம் மீட்டுவர நடவடிக்கை தேவை.  நேபாளத்திற்கு கோவை ஈஷா மூலம் ஆன்மிக பயணம் சென்றோரின் நிலை என்ன?- இபிஎஸ்.</p><p>திருக்குறுங்குடி நம்பி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் பாதை, காலம் செல்ல செல்ல குறுகிக்கொண்டே செல்கிறது. பொதுமக்களின் வசதிக்காக அதன் பாதையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?- எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன்</p><p>எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணணின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகளிடம் பரிசீலித்து ஆவண செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>நேபாள சம்பவம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்,"பேச்சின் இறுதியில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஐடியா ஒன்றை தந்தார்.</p><p>அவர்"காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால், எந்தந்த பகுதிகளில் காலநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் தெரிவித்தால், சுற்றுலா செல்பவர்களுக்கும், மீட்பு பணிகளுக்கும் வசதியாக இருக்கும்" என்றார்.</p><p>நேபாள நாட்டில் கைலாஷ் யாத்திரைக்கு தமிழகத்தை சேர்ந்த 103 பேர் பல குழுக்களாக சென்றுள்ளனர். நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட ரஸ்வா மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 34 பேரின் விவரங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் குறித்த விவரங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- சட்டசபையில் நேபாள வெள்ளம் தொடர்பான கவன ஈர்ப்புக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில்.</p><p>அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலிறுத்தியுள்ளார்.</p><p>கேள்வி நேரம் இருக்கும்போது துறையின் செயலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அதனைக் குறிப்பு எடுக்க வேண்டும். துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என்பதனை சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும்- உதயநிதி</p><p>டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவும் நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கை என்ன என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ்,"டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது கொசு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது. </p><p>டெங்கு காய்ச்சல் தொடர்பாக 2  நாட்களுக்கு முன்னர் அனைத்து இயக்குநர், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.</p><p>ஏடிஎஸ் கொசுவால் டெங்கு பாதிப்பு ஏற்படுவதால் வீடுகளை சுற்றி கொசு உற்பத்தியாகாமல் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு.</p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் கூடுதலாக 300 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என்றாலும் நிலை கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் முதலீடு செய்த நிறுவனம் ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளது. சுஸ்லாண் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றதாக செய்தி பரவும் நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்.</p><p>மேலும் அவர்,"பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து சென்ற நிறுவனம் அரசின் நடவடிக்கையால் தற்போது ரூ.500 கோடியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>சின்னபிள்ளை சுயஉதவி குழு மூலம் மதுரையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு என நான் பேசியது திருத்தி வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.</p><p>கீர்த்தனாவின் திருத்த அறிக்கை.. ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய திமுக..</p><p>விதியின் கீழ் திருத்த அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் கீர்த்தனாவுக்கு உரிமை இருக்கிறது. அதே விதியில், திருத்தக் குறிப்பை பேரவை கூடும் அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் தகவலுக்காக வைக்க வேண்டும். எனவே, இதை ஒழுங்குப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்-  திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின்.</p><p>நிச்சயமாக, வருங்காலங்களில் திருத்த அறிக்கையை அரை மணி நேரத்திற்கு முன்பாக உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வர அமைச்சர்கள் முன்வர வேண்டும்- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.</p><p>சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் சிறப்பாக நடந்தது. முதன்முறையாக 9:43 மணி நேரம் தொடர்ந்து அவை நடந்தது. இருப்பினும், நேரம் காரணமாக அறிவிப்பவர்களுக்கு, அவையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைப் போக்கும் வகையில், இனி அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அமைச்சர்கள் பேசும் நடைமுறை கொண்டுவரப்படும்- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.</p><p>அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். அது சரியா?- அமைச்சர் தங்கம் தென்னரசு.</p><p>என்னுடைய கருத்து, க்ளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்கிற கவலை- சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இந்தப் படம் ஓடாது, நன்றாக இருக்காது. எனவே, முன்பே க்ளைமாக்ஸ் போட்டுவிடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>படம் நன்றாக இருந்தால், பொறுமையாக இருந்து மக்கள் கடைசி வரை க்ளைமாக்ஸ் பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், இந்த படம் ஓடாது, நன்றாக இருக்காது, எனவே முன்பே க்ளைமாக்ஸ் போட்டு விடுவோம் என்பது போல இருக்கிறது- எதிர்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>இப்போதெல்லாம் படத்திற்கு இரு க்ளைமாக்ஸ் இருக்கிறது. படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் அவை வருகிறது. மாற்றத்தை விரும்ப வேண்டும். நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்புவதில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்புவதில்லை- அமைச்சர் வன்னி அரசு.</p><p>சட்டமன்றத்தில் கேள்வி, விடை நேரம் நிறைவு பெற்று பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர்-சமூகநீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சமூகநீதித்துறையில் புதிய அறிவிப்புகள்</p><p>ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, மருத்துவம், திருமண உதவி தொகை வழங்கி பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ திட்டம்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாமாக்கருக்கு ரூ.160 கோடியில் 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும்- வன்னி அரசு.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை.</p><p>தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும்.</p><p>ஆதி திராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும்- வன்னி அரசு</p><p>மாணாக்கருக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றுமு் கல்விக்கு உகந்த தகுமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை.</p><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு 'அறிவொளி ஆசிரியர் விருது மற்றும் அறிவொளி காப்பாளர் விருது' வழங்கப்படும்.</p><p>இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையான முயற்சிகளைப் பாராட்டி, சிறந்த கற்பித்தல் நடைமுறைகள் ஊக்குவிக்கப்படும்- வன்னி அரசு</p><p>ஊடகத் துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித்தொகை வழங்கும் “ஊடகத்திறன் ஊக்குவிப்பு திட்டம்” செயல்படுத்தப்படும் என பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் அமைச்சர் வன்னி அரசு.</p><p>இதன் மூலம் மாணாக்கர் ஊடக நிறுவனங்களில் நடைமுறை பயிற்சி பெற்று, தொழில்முறைத் திறன்களை வளர்த்துக் கொண்டு ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி.</p><p>பள்ளி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1400ல் இருந்து ரூ.1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.1500ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி மாதாந்திர உணவு கட்டணம் வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு </p><h2>சென்னையில் பழங்குடியினர் பண்பாட்டு மையம்</h2><p>நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னை மாநகருக்கும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை நந்தனத்தில் ‘பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்</h2><p>பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்' செயல்படுத்தப்படும்- அமைச்சர் வன்னிஅரசு</p><h2>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு</h2><p>தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க ‘அகம் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு, 2500 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>சமூகநீதி விடுதிகளுக்கு Fridge</h2><p>சமூக நீதி விடுதிகளில் 20 கல்லூரி விடுதிகளுக்கு Inverter, fridge, Water Purifiers w 940 பள்ளி விடுதிகளுக்கு Inverter, Water Purifiers வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை</h2><p>1,238 சமூகநீதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் உள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் ரூ.26.85 கோடியில் தரமான கொசுவலைகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><h2>பூம்பொழில் தங்கும் வசதிகள்</h2><p>மலைப்பகுதிகளில் பழங்குடியின வாழ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளம், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் வாழ்வியலை கண்டு மகிழும் வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த 'பூம்பொழில் தங்கும் வசதிகள்' ஏற்படுத்தப்படும். </p><p>உள்ளூர் பழங்குடியின இளைஞர்களுக்கு வழிகாட்டி பயிற்சி வழங்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><h2>சிறப்பு அங்கன்வாடி மையங்கள்</h2><p>பழங்குடியின குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்கவும், படித்த பழங்குடியின இளைஞர்களுக்கு வசிப்பிடத்திற்கு அருகே வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 250 இடங்களில் ‘சிறப்பு அங்கன்வாடி மையங்கள்' உருவாக்கப்படும்- அமைச்சர் வன்னி அரசு.</p><p>பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நிதியுதவி தொடர்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.</p><p>அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு நவீன சிகைதிருத்தும் அழகு நிலையம் அமைக்க நிதியுதவி வழங்கப்படும்.</p><p>சலூன் கடை அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் என 100 பேருக்கு ரூ.1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.</p><p>மதுரை, தேனி, திண்டுக்கல்லில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ரூ.4.50 கோடியில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ளப்படும்</p><p>ரூ.3 கோடியில் மிக பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் புதிதாக உருவாக்கப்படும்</p><p>பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த 5,000 பேருக்கு இஸ்திரி பெட்டி வழங்கப்படும்.</p><p>தலித் மக்களில் 28 சதவீதம் பேர் குடிசைகளில் தான் உள்ளனர். 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை.</p><p>அமைச்சர் ஆதவ் பேசியபோது திமுகவினர் எழுந்துநின்று கோஷம் எழுப்பிய நிலையில் நாங்களும் எழுந்து நிற்போம் என ஆதவ் பேசினார்.</p><p>மேலும் அவர், எத்தனை மாற்று சாதியினர் அர்ச்சகராக தற்போது வரை கோவில்களில் உள்ளனர் என தகவல் எடுத்து நான் கொடுக்கிறேன்.</p><p>திமுக அரசாணை போட்டது, விழா நடத்தியது ஆனால் 32 பேருக்கு மட்டும் பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. 5 ஆண்டு ஆட்சியில் இருந்தது திமுக, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றிபெற முடியவில்லை. அந்த வழக்கை தொடுத்தது யார்?- அமைச்சர் ஆதவ்</p><p>கோவி செழியன்- இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டோருக்காக தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடு கட்டி தந்தது திமுக அரசு தான்.</p><p>5 ஆண்டுகளுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர், 5 ஆண்டுக்கும் தவெக ஆட்சி இருக்கும் என சபாநாயகர் திட்டவட்டம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு </h2><p>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 32 பேருக்கு அர்ச்சகர் பணிநியமன ஆணை திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.</p><p>சில நல்ல மனம் படைத்தவரகள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தினால் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல்.</p><p>அர்ச்சகர் வழக்கில் தனி குழு அமைத்து உச்சநீதிமன்றத்தில சட்ட போராட்டம் நடத்தியது திமுக அரசு.</p><h2>அமைச்சர் ஷாஜகான்</h2><p>சிறுபான்மையினருக்கு 18 அறிவிப்புகளை கொடுத்து சரித்திரம் படைத்துள்ளது தவெக அரசு.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலை செய்வது ஒவ்வொரு அரசின் கடமை. திமுக ஏன் இதுவரை ஒரு தலித்தை கூட பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக்கவில்லை?- அமைச்சர் ராஜ்மோகன்.  </p><p>ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கொடுத்தது தமிழக வெற்றிக் கழக அரசு. கடந்த தேர்தலில் 4 பேர் விசிக சார்பில் வெற்றி பெற்று வந்திருந்தோம், ஆனால் திமுக அரசு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை- வன்னி அரசு. </p><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்குவங்க், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள்.</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு கோப்பைகளை எங்கேயோ தூக்கிபோட்டுவிட்டது கடந்த திமுக அரசு.</p><p>தமிழக வெற்றிக் கழக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>அண்ணன் சேகர்பாபு, பெரியார் பெயரை உச்சரிக்கவே கூடாது. கடந்த ஆட்சி பெரியார் பெயரை பெயரளவில் சொல்லிவிட்டு, அனைத்து ஜாதியினர் திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். எல்லாம் பேப்பரில் தான் இருக்கிறது.</p><p>வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளும் கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்கக் கூடாது.</p><p>இணக்கமான சுழ்நிலையை சுமுகமாக நடத்தவேண்டும் என்பது தான் அவையின் நோக்கம்: சபாநாயகர்</p><p>விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தவிர்த்து மற்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.</p><p>சட்டப்பேரவையில் கடந்த 3 நாளாக சண்டை மட்டுமே நடந்து வருகிறது.</p><p>சட்டமன்றத்தில் சண்டையைப் பார்க்க நாங்கள் வரவில்லை.</p><p>ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதால் என்ன பயன்?</p><p>சட்டசபையில் நடைபெறும் சண்டையால் மக்களுக்கு என்ன பயன்? - பிரேமலதா</p><p>தமிழக சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை விதிகளை கருத்தில் கொண்டு விரைவில் விடுவிக்க வேண்டுகிறேன்</p><p>புளியங்குடி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.</p><p>தென்மலையில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தரவேண்டும்.</p><p>பூலித்தேவன் மணிமண்டபத்தை பராமரிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ. ராஜா</p><p>சென்னையின் பழமையான தொகுதி ராயபுரம் மற்றும் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நட்சத்திர தொகுதி என்றுக் கூறுவார்கள். ஆனால் அதன் நிலை சொல்வதற்கு இல்லை.</p><p>ஏழ்மை நிலையில் இருக்கும் மக்கள் அங்கு நிறைய இருக்கிறார்கள். அங்கு வீடுகள் இன்று வசிக்கும் 850 குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்று வேண்டுகிறேன். </p><p>காசிமேடு மீன் சந்தையை புதிப்பித்துத் தர வேண்டுகிறேன். மீனவர்களுக்கு தற்போது தரப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். </p><p>ராயபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப பூங்கா அமைக்கவேண்டும். இதன்மூலம் வடசென்னை இளைஞர்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். </p><p>அதிக கொள்ளளவு கொண்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும் - ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு அரசுக்கு வைத்த கோரிக்கைகள்.</p><p>விலையில்லா விருந்தகத்தை பார்த்துதான் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தனர். அதுபோல தாய்மாமன் தங்க மோதிரத் திட்டமும் எப்போதிலிருந்து நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இப்போதுதான் திட்டமாக அறிவித்துள்ளோம். - சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு</p><p>தேர்தலுக்கு முன்னர் என்னைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சிரிப்பார். ஆனால் முதல் மாநாட்டிற்கு பிறகு அவர் எனக்கு நிறைய இடைஞ்சல்களை கொடுத்தார். - விஜய் தாமு </p><p>அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>ஈலுவாத்தியா சமூதாயத்தில் தமிழக முழுவதும் சுமார் 15 லட்சம்பேர் வசிக்கிறாரகள். இவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் கன்னியாகுமரி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த முறை ஜூலை 2020ல் நானும் சமூதாயத் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பரிந்துரை செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வசிக்கும் ஈலுவாத்தியா சமூதாய மக்களுக்கு பிசி சான்றிதழ் ஆவாணம் செய்யப்பட்டது.</p><p>வங்கி பணிகளில் பணிப்புரிய விரும்புவோருக்கு ஓபிசி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>இதன் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு  பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.</p> <p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார்</p><p>தமிழ்நாடு சட்டம் 45-ன் கீழ் 1994-ன்படி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்கள் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் ஒரு சமூகத்தை சேர்த்தல் அல்லது நீக்குதல் தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணயைத்தின் பரிந்துரைகளை பெற்று அரசு பரிசீலனை செய்யப்படும் அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தாஹிராவுக்கு வாய்ப்பு... திமுக எதிர்ப்பு</p><p>திமுக கொறடா எ.வ.வேலு:</p><p>அலுவல் ஆய்வு குழு என்று உள்ளது, அதன் படி தான் அவை நடக்கிறது. அந்த பட்டியலில் இல்லாதவரை பேச அனுமதிப்பது எப்படி? </p><p>இதுக்கு எந்த முன் உதாரணமும் இல்லை. அனுபவம் உள்ள முன்னவர் செங்கோட்டையன், இது பற்றி சொல்ல வேண்டாமா?</p><p>சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை ஏன் நம்பியிருக்க வேண்டும்? என்று சி.வி.சண்முகம் கேள்வி. </p><p>நம்மிடம் உள்ள பட்டியலை வைத்து மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.</p><p>மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என ஜனார்த்தனன் கமிட்டி சொன்னதால் அதை பின்பற்றினோம் என்று எ.வ.வேலு கூறினார்.  </p><p>இடம் மாறி அமர்ந்த முதல்வர்</p><p>சட்டப்பேரவையில் தனது இருக்கையிலிருந்து எழுந்துவந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா நடுவே அமர்ந்த முதலமைச்சர் விஜய்.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்களின் வசதிக்காக வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் - போக்குவரத்துக்கழகம் அதிரடி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-buses-to-velankanni-for-the-convenience-of-devotees-transport-corporations-prompt-announcement#comments</comments><guid isPermaLink="false">86c873f1-15eb-4acf-90fb-96339c0a8196</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:27:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:27:45.661Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,special bus,velankanni temple,வேளாங்கண்ணி கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ns4o5iim/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.</strong></em></p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> நேற்று முதல் வருகிற செப்டம்பர் 10-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.</p><p>வேளாங்கண்ணி மாதா கோவிலில் 29-ந் தேதி (நாளை) கொடியேறுவதை முன்னிட்டு 28-ந் தேதி (இன்று) சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்பு பேருந்துகளும், 29-ந் தேதி வேளாங்கண்ணியிலிந்து சென்னைக்கு 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. </p><p>அதே போல் செப்டம்பர் 8-ந் தேதி கொடி இறங்குவதை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.</p><p>மற்ற நாட்களில் தேவைக்கேற்ப சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீமானுக்கு ஆதரவாக நிற்பேன்- ட்விஸ்ட் வைத்த நடிகை விஜயலட்சுமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-vijayalakshmi-support-to-seeman#comments</comments><guid isPermaLink="false">d2edc1d2-665c-4f18-85a7-297ade517fb6</guid><pubDate>Fri, 28 Aug 2026 03:11:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T03:11:45.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,Naam Thamizhar katchi,Vijayalakshmi,விஜயலட்சுமி,சீமான்,நாம் தமிழர் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்-விஜயலட்சுமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/2l3w7op7/vijayalakshmi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">சீமான்</a> தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் இருதரப்புக்கும் சுப்ரீம் கோர்ட்டில் சமரசம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF">விஜயலட்சுமி</a> ஒரு புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆதரவாக நிற்பேன்...</strong></h2><p>நாம் தமிழர் கட்சியினரின் வாயை அடைக்க வேண்டும் என்றால் உடனே ‘விஜயலட்சுமி... விஜயலட்சுமி...' என்று எனது பெயரை கூறி விடுகிறார்கள். ஒரு வாரமாக பார்க்கிறேன். சீமானையும், என்னையும், நாம் தமிழர் கட்சியையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி விமர்சித்து வருகிறார்கள்.</p><p>ஒருவர் தவறை உணர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-quashes-vijayalakshmi-case-791918">மன்னிப்பு</a> கேட்கும்போது, அவர்களை வாழ விடவேண்டும். அதுதான் மனித நேயம். அதைத்தான் நானும் செய்தேன். ஆனால் தொடர்ந்து எனது வாழ்க்கை பற்றியும், சீமான் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டே இருப்பீர்கள் என்றால், இனி நான் சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்.</p><p>நாம் தமிழர் கட்சிக்கு நான் ஆதரவாக பேசுவதால், உடனே ‘ஒரு பெரிய தொகை செட்டில் பண்ணிட்டாங்க போல...' என்று பேசவேண்டாம். ஏனெனில், என்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது.</p><p>இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</p><p>இத்தனை நாட்களாக சீமானுக்கு எதிரான கருத்துக்களுடன் வீடியோ வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மறைமுகமாக தமிழக வெற்றி கழகத்தினரை தாக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருப்பதாக பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் அதிகம்: கிட்டத்தட்ட 10 மணி நேரம் அவை நடைபெற்று சாதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-for-almost-ten-hours-sets-new-record#comments</comments><guid isPermaLink="false">724fee64-988e-4391-afa3-c825dcbcba65</guid><pubDate>Thu, 27 Aug 2026 18:26:40 +0000</pubDate><atom:updated>2026-08-27T18:26:40.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்நாடு சட்டசபை,Tamil Nadu assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/xtdvqu84/TN-Assembly-2.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/tn-assembly">சட்டப்பேரவை</a> வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. </p><h2>அமைச்சர்களுடன் அமர்ந்த முதலமைச்சர்:</h2><p>வழக்கம்போல், இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p>மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டார். சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார்.</p><h2>சுமார் 10 மணி நேரம்:</h2><p>மானிய கோரிக்கை விவாதத்தை கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், நேற்று முன்தினம் (ஆகஸ்ட். 25) போலவே சட்ட பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது.</p><p>எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது. இன்று மட்டும் அதிகபட்சமாக சட்டப்பேரவை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-law-against-honor-killings-to-be-enacted-soon-minister-vanni-arasu-announces-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">99784b40-5da4-4375-bb8c-979d501f72fa</guid><pubDate>Thu, 27 Aug 2026 14:36:14 +0000</pubDate><atom:updated>2026-08-27T14:36:14.441Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Honor Killing,ஆணவப்படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,special law,சிறப்புச் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆணவக் கொலைக்கு எதிராக விரைவில் சிறப்பு சட்டம் இயற்றப்படும் - சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/cvx4u29p/New-Project-2026-08-27T200551.413.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகக் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். </p><p>ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணவப்படுகொலை தடுப்பு ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசித்து நிச்சயம் சட்டம் இயற்றப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வன்னி அரசு.,</p><p>“வன்கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், சமத்துவம் மற்றும் சமூகநீதியை நிலைநாட்டி, அனைவரிடையேயும் இணக்கமான சூழலை உருவாக்க அரசு முயன்றுவருகிறது. </p><p>இருப்பினும் தங்கள் சொந்தப் பிள்ளைகளையே ஆணவக்கொலை செய்யும் சம்பவல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன. </p><p>சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் ஆணவப்படுகொலை சம்பவங்களை தடுப்பதற்கு, சிறப்பு சட்டம் இயற்றுவதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. </p><p>இக்குழு அரசு அலுவலர்களுடனும் கலந்து ஆலோசித்து கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்துகளைப் பெற்று அறிக்கை தயார் செய்யவேண்டிய நிலை உள்ளதால், பாஷா குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தக் குழுவின் பரிந்துரைகள் பெறப்பட்ட உடன், ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்று திறந்த மனதோடு அறிவிக்கிறேன்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பொறுப்பான கார் உரிமையில் நிதித் திட்டமிடல் வகிக்கும் பங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-does-used-car-maintainance-cost-in-india#comments</comments><guid isPermaLink="false">5b355145-0b89-4b4d-8653-908e2eb43cb4</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:33:12 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:33:12.775Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,கார்,கார் பராமரிப்பு,car maintainance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1bpese07/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான மக்கள் ஒரு காரை வாங்குவதற்கு முன் பல வாரங்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். ஆனால் அந்தக் காரை வைத்திருப்பதற்கு உண்மையில் எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க அதே அளவு நேரம் செலவிடுபவர்கள் மிகச் சிலரே.</p><p>வாங்குதல் என்பது வெறும் தொடக்கம் மட்டுமே. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ், பழுதுபார்ப்பு, தேய்மானம் ஆகியவை ஒவ்வொரு மாதமும் அமைதியாக, தொடர்ச்சியாக பின்தொடர்கின்றன. ஒரு திட்டமில்லாமல், இவை ஒருபோதும் அத்தகைய செலவுகளைத் தாங்குவதற்கு உருவாக்கப்படாத ஒரு குடும்ப பட்ஜெட்டின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.</p><h2>ஒரு காரை வாங்குவது ஒருமுறை மட்டும் செய்யும் செலவு அல்ல ஏன்?</h2><p>ஆன்-ரோடு விலையும் EMI-யும் தான் பெரும்பாலான வாங்குபவர்கள் கவனம் செலுத்தும் எண்கள். ஆனால் இரண்டுமே முழு கதையையும் சொல்வதில்லை. உரிமையின் இரண்டாம் ஆண்டு முதல், ஒரு காரை ஓட்டுவதற்கான செலவில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸிங், பார்க்கிங், டோல், அவ்வப்போது தேவைப்படும் பழுதுபார்ப்பு ஆகியவை அடங்கும். இந்த செலவுகள் EMI-க்கு அப்பால் மொத்த மாதாந்திர கடமையைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.</p><p>அந்த இடைவெளியில்தான் உரிமை பட்ஜெட்டுகள் அமைதியாக சிதைந்துவிடுகின்றன. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு காரை ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை வைத்திருக்கின்றன. நிதி கடமை கடன் காலத்தில் மட்டுமல்ல, முழு காலத்திலும் தொடர்கிறது. எதையும் கையெழுத்திடுவதற்கு முன் இதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுவது தான் கார் உரிமையை மன அழுத்தமாக இல்லாமல் நிர்வகிக்கக் கூடியதாக ஆக்குகிறது.</p><h2>காரை வாங்கிய விலைக்கு அப்பால் அதை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகள் என்ன?</h2><p>பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு வாங்குதல் முடிந்த பின்னரும் ஒட்டுச் செலவுகள் தொடர்கின்றன. எரிபொருள், சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பார்க்கிங் கட்டணங்கள், டோல், எதிர்பாராத பழுதுபார்ப்புகள் ஆகிய அனைத்தும் மொத்த உரிமை செலவில் பங்களிக்கின்றன. இந்த செலவுகளில் அடங்குவன: </p><p><strong>எரிபொருள்:</strong> இது எந்த விதிவிலக்கும் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவு. காரை எவ்வளவு தூரம் ஓட்டுகிறோம், என்ன பாதைகளில் செல்கிறோம், இன்ஜின் எவ்வளவு திறமையாக இயங்குகிறது என்பதைப் பொறுத்து இது மாறுபடும்.</p><p><strong>இன்சூரன்ஸ் புதுப்பித்தல்:</strong> முதல் ஆண்டில் ஆன்-ரோடு விலையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் ஆண்டு முதல் இது ஒரு தனி வருடாந்திர செலவாக மாறும். இதற்கு பல வாங்குபவர்கள் பட்ஜெட் ஒதுக்கியிருக்க மாட்டார்கள்.</p><p><strong>சர்வீஸிங்:</strong> உரிமையாளர் திட்டமிடட்டும் இல்லையோ, காருக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் கவனிப்பு தேவை. ஒரு சர்வீஸை தவிர்ப்பது சேமிப்பாகத் தோன்றலாம். ஆனால் பின்னர் அதை சரிசெய்ய அதிக செலவாகும்.</p><p><strong>டயர்களும் பிரேக்குகளும்:</strong> இவை பயன்பாட்டால் தேய்ந்து, அவ்வப்போது மாற்றப்பட வேண்டும். வருடத்திற்கு சுமார் 15,000 கி.மீ. ஓடும் ஒரு கார், பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டயர் செட் மாற்றப்பட வேண்டியிருக்கும்.</p><p><strong>பேட்டரி:</strong> பெரும்பாலான கார் பேட்டரிகள் 4-5 ஆண்டுகள் நீடிக்கும். மாற்றுவது ஒருமுறை மட்டுமே ஏற்படும், ஆனால் தவிர்க்க முடியாத செலவு.</p><p><strong>பார்க்கிங்கும் டோலும்:</strong> தினசரி செலவுகள், இவை படிப்படியாக ஒரு காரை வைத்திருப்பதன் மற்றும் பயன்படுத்துவதன் மொத்த செலவை அதிகரிக்கக் கூடும்.</p><p><strong>தேய்மானம்:</strong> எரிபொருள் அல்லது சர்வீஸிங் போலல்லாமல் இது நேரடி செலவு அல்ல. ஆனால் காலப்போக்கில் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கிறது.</p><p><strong>திட்டமிடப்படாத பழுதுபார்ப்புகள்:</strong> வாரண்டி முடிந்தவுடன் ஒவ்வொரு பழுதுபார்ப்பும் உரிமையாளரின் சொந்த பணத்தில் இருந்து தான். எதிர்பாராத பழுதுபார்ப்புகளுக்கு ஒரு அவசர நிதியை ஒதுக்கி வைப்பது, பராமரிப்பு தேவைகள் ஏற்படும்போது திடீர் நிதி நெருக்கடியைத் தவிர்க்க உதவும்.</p><h2>ஒரு நிலையான கார் உரிமை பட்ஜெட்டை உருவாக்க நிதி திட்டமிடல் எவ்வாறு உதவுகிறது?</h2><p>எந்தவொரு கார் உரிமை பட்ஜெட்டின் தொடக்க புள்ளியும், வெறும் EMI அல்ல, மாதாந்திர முழு எண்ணிக்கை. அனைத்தும் மீண்டும் நிகழும் மற்றும் அவ்வப்போது ஏற்படும் உரிமை செலவுகளும், பின்னர் எதிர்பாராத செலவுகளாக கருதப்படுவதற்குப் பதிலாக, ஆரம்பத்திலிருந்தே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.</p><p>கார் தொடர்பான செலவுகளுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பது, சர்வீஸிங், டயர் மாற்றங்கள், சிறிய பழுதுபார்ப்புகள் ஆகியவற்றை மற்ற நிதி இலக்குகளை பாதிக்காமல் ஈடுகட்ட உதவும்.</p><h2>ஒவ்வொரு கார் உரிமையாளரின் நிதி திட்டத்திலும் இன்சூரன்ஸ் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?</h2><p>இன்சூரன்ஸ் தான் புதுப்பித்தல் மாதம் வரும் வரை பெரும்பாலான வாங்குபவர்கள் குறைத்து மதிப்பிடும் செலவு. முதல் ஆண்டு இன்சூரன்ஸ் ஆன்-ரோடு விலையில் அமைதியாக இணைக்கப்பட்டிருக்கும். 13வது மாதம் அதை மாற்றிவிடும். ₹18,000 புதுப்பித்தல் அறிவிப்பு வந்திறங்குகிறது, ஆனால் பட்ஜெட்டில் அதற்காக எதுவும் ஒதுக்கப்படவில்லை.</p><p>பிரீமியத்தைத் தாண்டி, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கார் இன்சூரன்ஸ் பாலிசி தான், முன்கூட்டியே கணிக்க முடியாதவற்றை உள்வாங்கும் நிதி வழிமுறையாக செயல்படுகிறது. ஒரு விபத்து, ஒரு திருட்டு, ஒரு வெள்ளம், ஒரு மூன்றாம் தரப்பு பொறுப்புக் கோரிக்கை. உரிமையின் முதல் மாதத்திலிருந்தே வருடாந்திர புதுப்பித்தலுக்காக பட்ஜெட் ஒதுக்குவது, 13வது மாதத்தில் தொகையைத் தேடி அலைவதற்குப் பதிலாக, கார் உரிமையில் மிகவும் பொதுவான நிதி அதிர்ச்சிகளில் ஒன்றை நீக்கும் ஒரு எளிய பழக்கமாகும்.</p><h2>சாலையில் எதிர்பாராத நிதி அபாயங்களுக்கு கார் உரிமையாளர்கள் எவ்வாறு தயாராகலாம்?</h2><p>எதிர்பாராத நிதி அபாயங்களுக்குத் தயாராவது, அந்த அபாயங்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் தொடங்குகிறது. பெரும்பாலான கார் உரிமையாளர்களுக்கு, இவை பொதுவாக மூன்று வகைகளில் அடங்கும்: வாகனத்திற்கு ஏற்படும் சேதம், மற்றொருவருக்கு ஏற்படும் பொறுப்பு, மற்றும் வாகனம் பழுதுபார்க்கப்படும்போது ஏற்படும் தற்காலிக இடையூறு.</p><p>வாகனத்திற்கு ஏற்படும் சேதம்தான் மிகவும் தெரியும் ஒன்று. எலக்ட்ரானிக்ஸ் நிறைந்த நவீன காரின் பழுதுபார்ப்பு பில், மிதமான சேதத்திற்குக் கூட லட்சக்கணக்கில் செல்லலாம். திருட்டு அல்லது முழுமையான இழப்பு, கடன் தொடர்ந்து கொண்டிருக்கும்போதே வாகனத்தையே முழுமையாக அகற்றிவிடும்.</p><p>மூன்றாம் தரப்பு பொறுப்பு என்பது குறைவாகத் தெரியக்கூடிய, ஆனால் பெரியதாக இருக்கக்கூடிய அபாயம். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், மற்றொருவருக்கு ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டிற்கு மேல் வரம்பு இல்லை. போதுமான இன்சூரன்ஸ் இல்லாத பட்சத்தில், அந்தப் பொறுப்பு நேரடியாக வாகன உரிமையாளர் மீது விழும்.</p><p>மூன்றுக்கும் தயாராவது ஒரே சில படிகளில் தொடங்குகிறது. காரின் இன்றைய உண்மையான மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாலிசியைத் தேர்ந்தெடுக்கவும். இடைவெளியில்லாமல் அதை செயலில் வைத்திருக்கவும். இன்சூரன்ஸ் தீர்க்கும் தொகைக்கும் உண்மையான பழுதுபார்ப்பு செலவுக்கும் இடையே விழும் தொகைகளுக்கு சில பணத்தை ஒதுக்கி வைக்கவும். இவை சிக்கலான படிகள் அல்ல, ஆனால் இவை அனைத்தும் சேர்ந்துதான், ஒரு சம்பவம் ஒரு நீடித்த நிதிப் பிரச்சினையாக மாறுவதைத் தடுக்கின்றன.</p><h2>நீண்டகால உரிமை செலவுகளை நிர்வகிப்பதில் காம்ப்ரிஹென்சிவ் பாதுகாப்பு என்ன பங்கு வகிக்கிறது?</h2><p>அடிப்படை மூன்றாம் தரப்பு பாலிசி மற்றவர்கள் மீதான பொறுப்பை மட்டுமே உள்வாங்குகிறது. இது காரையே முற்றிலும் பாதுகாப்பின்றி விட்டுவிடுகிறது. காம்ப்ரிஹென்சிவ் கார் இன்சூரன்ஸ் விபத்துகள், திருட்டு, தீ, இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றால் ஏற்படும் சொந்த-வாகன சேதத்தை, மூன்றாம் தரப்பு பொறுப்புடன் சேர்த்து உள்வாங்குகிறது.</p><p>இங்கு ஆட்-ஆன்கள் முக்கியமானவை. ஜீரோ டெப்ரிசியேஷன் கவர் என்பது பாகங்கள் தேய்மான மதிப்பில் அல்ல, முழு மாற்று செலவில் தீர்க்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கார்களுக்கு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. என்ஜின் பாதுகாப்பு, நீர் உட்புகுதல் அல்லது எண்ணெய் கசிவால் ஏற்படும் சேதத்தை உள்வாங்குகிறது, இது நிலையான பாலிசிகளில் விலக்கப்பட்டுள்ளது. ரிட்டர்ன் டு இன்வாய்ஸ் கவர், முழுமையான இழப்பு தீர்வு, தேய்மானத்திற்குப் பின் காரின் மதிப்பை அல்ல, அசல் வாங்கிய விலையை பிரதிபலிக்கிறது என்பதை உறுதி செய்கிறது.</p><p>இந்த ஆட்-ஆன்கள் ஒவ்வொன்றும், அவை உள்வாங்குவதன் ஒரு சிறு பகுதியே செலவாகும். உரிமைக் காலம் முழுவதும், இவை பழுதுபார்ப்பு மற்றும் கோரிக்கைகளின் சொந்த பண செலவை கணிசமாகக் குறைக்கின்றன. இதுதான் இன்சூரன்ஸ் வெறும் ஒரு சட்ட முறைமையாக இல்லாமல் ஒரு நிதி திட்டத்தின் பகுதியாக மாறும் விதம்.</p><h2>ஸ்மார்ட் நிதி முடிவுகள் ஒரு காரின் ஆயுள் மற்றும் மதிப்பை எவ்வாறு நீட்டிக்க முடியும்?</h2><p>நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கார் ஓட்ட செலவு குறைவாக இருக்கும். இறுதியில் விற்கும்போது அதன் மதிப்பையும் சிறப்பாக தக்க வைத்திருக்கும். ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பின் நிதி பலன் இரண்டு முனைகளிலும் தெரியும், அதாவது உரிமைக் காலத்தில் குறைந்த ஓட்ட செலவுகள் மற்றும் முடிவில் சிறந்த மறுவிற்பனை விலை.</p><p>உற்பத்தியாளரின் சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுவது, சிறிய பிரச்சினைகள் விலையுயர்ந்தவையாக மாறுவதைத் தடுக்கிறது. சர்வீஸ் பதிவுகளை முழுமையாக வைத்திருப்பது மறுவிற்பனையின் போது உண்மையான மதிப்பைச் சேர்க்கிறது. வாங்குபவர்கள் ஒரு முழுமையான ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போது தொடர்ந்து அதிக விலை கொடுக்கிறார்கள். ஏனெனில் இது தாங்கள் வாங்குவது என்ன என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கிறது.</p><p>நோ கிளைம் போனஸை (NCB) புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் உரிமை செலவுகளைக் குறைக்க முடியும். காலப்போக்கில், அதிக NCB இன்சூரன்ஸ் புதுப்பித்தல் பிரீமியங்களில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தலாம்.</p><h2>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளரை வரையறுக்கும் பழக்கங்கள் என்ன?</h2><p>ஒரு நிதிரீதியாக பொறுப்புள்ள கார் உரிமையாளர், வாகனத்தை ஒருமுறை மட்டும் எடுக்கும் முடிவாக அல்லாமல், தொடர்ந்து சுறுசுறுப்பான மேலாண்மை தேவைப்படும் ஒன்றாகக் கருதுகிறார்.</p><p>நடைமுறையில் இதன் பொருள், முதல் நாளிலிருந்தே முழு மாதாந்திர உரிமை செலவிற்காக பட்ஜெட் ஒதுக்குவது. காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்து, புதுப்பிக்கும்போது கவரேஜை மறுஆய்வு செய்வது, சாம் இன்சூர்டு இன்னும் காரின் மதிப்பையும் உரிமையாளரின் உண்மையான ஆபத்தையும் பிரதிபலிக்கிறதா என்பதை சரிபார்ப்பது. பதிவு, இன்சூரன்ஸ், PUC ஆவணங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, ஏனெனில் காலாவதி ஆவது சட்ட மற்றும் நிதி ரீதியான ஆபத்தை ஒரே நேரத்தில் உருவாக்குகிறது.</p><p>சில முடிவுகள் அவ்வப்போது வரும். காரை எங்கு சர்வீஸ் செய்வது, ஒரு பழுதுபார்ப்புக்கு கோரிக்கை வைப்பது நல்லதா அல்லது நேரடியாக செலுத்துவது நல்லதா, மற்றும் ஒரு கட்டத்தில், காரை தொடர்ந்து ஓட்டுவது இன்னும் நிதி ரீதியாக அர்த்தமுள்ளதா அல்லது புதிதாக ஒன்றுக்கு மாறுவது புத்திசாலித்தனமான நகர்வா என்பது. இவை எதுவும் சிக்கலானவை அல்ல. இவை வெறுமனே இயல்பாக இல்லாமல் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட வேண்டும்.</p><h2>முடிவுரை</h2><p>பொறுப்புள்ள கார் உரிமை என்பது சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தாண்டியது. வருடங்களாக அதைப் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வரும் செலவுகளுக்கு திட்டமிடுவதும் இதில் அடங்கும். சர்வீஸிங், இன்சூரன்ஸ் புதுப்பித்தல்கள், பழுதுபார்ப்புகள், தேய்மானம் போன்ற செலவுகள் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும்போது, கார் உரிமை மேலும் கணிக்கக்கூடியதாகவும் நிதி ரீதியாக நிலையானதாகவும் மாறுகிறது. ஒரு கவனமான நிதி திட்டம், உரிமையாளர்கள் தங்கள் நீண்டகால நிதி நிலைமையின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தங்கள் வாகனத்தின் பலன்களை அனுபவிக்க உதவுகிறது.</p><h2>Reference Links:</h2><p>https://fintoolbaba.com/blog/hidden-cost-owning-car-india</p><p>https://fintoolbaba.com/blog/used-car-maintenance-cost-india</p><p>https://tukkbook.in/car-ownership-cost-calculator/</p><p>https://www.godigit.com/motor-insurance/car-insurance/ncb-in-car-insurance </p>]]></content:encoded></item><item><title>சட்ட மன்றமா? சண்டை மன்றமா? ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை சுமூகமாக செல்கிறது - பிரேமலதா ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/things-proceed-smoothly-as-long-as-aadhav-arjuna-doesnt-speak-is-this-a-legislative-assembly-or-an-arena-for-brawls-premalatha-fumes#comments</comments><guid isPermaLink="false">c2cf0b6e-6936-4d71-b7a0-e233cf80c78a</guid><pubDate>Thu, 27 Aug 2026 13:20:57 +0000</pubDate><atom:updated>2026-08-27T13:20:57.807Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,தமிழ்நாடு சட்டப்பேரவை,Tamil Nadu  Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அவை அமைதியாக செல்கிறது... இது சட்ட மன்றமா? சண்டை மன்றமா? - பிரேமலதா ஆவேசம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ygjzyjqn/New-Project-2026-08-27T184358.336.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளுக்கு நாள் தவெக - திமுக வார்த்தை போர் அதிகரித்து வருகிறது. </p><p>இந்நிலையில் இன்று இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த்.,</p><p>“மக்கள் பிரச்னைகளை பேசுவதற்குதான் சட்டசபை. கருத்துகளை ஒரு 5 நிமிடம் பகிரலாம். ஆனால் மாலை 6.30 மணிவரை ஒருவரை ஒருவர் குறை சொல்வது, சண்டை போடுவதுதான் நடக்கிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்னப் பலன்?</p><p>இதுவரை ஆட்சி செய்த அனைத்துக் கட்சிகளும் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆட்சியை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மக்களும், நாங்களும் துணைநிற்போம்.</p><p>இரவு முழுவதும் பேசவேண்டியவற்றை தயார் செய்துவருகிறோம். ஆனால் எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. எப்போது பார்த்தாலும் சட்டமன்றத்தில் சண்டை, சண்டை, சண்டை. மக்களுக்கு இதனால் என்னப் பயன்? </p><p>இங்கு மக்களுக்காக பேசவேண்டும். அவர்களுக்காகத்தான் இந்த சட்டமன்றம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நேற்று முன்தினம் 2 மானியக் கோரிக்கை குறித்துக்கூட பேசமுடியவில்லை. </p><p>பேசியவர்களேதான் பேசுகிறார்கள். இது சட்டமன்றம், சண்டை மன்றம் அல்ல. ஆதவ் அர்ஜூனா பேசாதவரை அமைதியாக செல்கிறது. அவர் பேச ஆரம்பித்தால் சண்டை ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கக்கூடாது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி அளிக்கவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-director-appointed-for-chennai-metro#comments</comments><guid isPermaLink="false">e664474e-912f-431c-aaf0-eff34953eaa9</guid><pubDate>Thu, 27 Aug 2026 12:43:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T12:43:13.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai metro,சென்னை மெட்ரோ,IAS Ashish Chatterjee,cadre Tamil Nadu,ஐஏஎஸ் ஆஷிஷ் சாட்டர்ஜி,தமிழ்நாடு கேடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மெட்ரோவுக்கு புதிய இயக்குநர் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ozyek7qg/New-Project-2026-08-27T180843.371.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த எம்.ஏ.சித்திக் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் புதிய நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். </p><p>இந்நிலையில் எம்.ஏ. சித்திக்குக்குப் பதிலாக, புதிய நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் சாட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.</p><p>1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஆஷிஷ் சாட்டர்ஜி, சமீபத்தில் மத்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்து, தமிழ்நாடு அரசுப்பணிக்கு மீண்டும் மாற்றப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கு முன்பு இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படவில்லை- ஐகோர்ட்டில் முதலமைச்சர் தரப்பு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-use-of-children-in-poll-campaign-cm-explains-to-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-use-of-children-in-poll-campaign-cm-explains-to-high-court#comments</comments><guid isPermaLink="false">169c414f-e476-41bd-83d6-f72da5b40da2</guid><pubDate>Thu, 27 Aug 2026 11:50:03 +0000</pubDate><atom:updated>2026-08-27T11:50:03.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தவெக,Election campaign,தேர்தல் பிரச்சாரம்,tvk,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ltyrlrkb/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai high court- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/ltyrlrkb/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.</p><p>முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>பிரச்சாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதற்காக எனது வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p><p>தேர்தல் செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதை மறைத்ததாக கூறும் புகார்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.</p><p>வழிபாட்டு தலங்களில் பிரச்சாரம் செய்ததாகக்கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரங்கள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/akash-the-youth-beaten-to-death-for-being-a-dalit-shocking-details-from-the-cb-cid-police-perpetrators-remain-unarrested#comments</comments><guid isPermaLink="false">54f8b488-b829-4b34-981e-8a63fdd04173</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:16:07 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:16:07.473Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிசிஐடி,மானாமதுரை,Manamadurai,cbcid,Akash Delison,Akash Delison case,ஆகாஷ் டெலிசன்,ஆகாஷ் டெலிசன் வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தலித் என்பதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ்... சிபிசிஐடி அதிர்ச்சி தகவல் - கைது செய்யப்படாத காவல் குற்றவாளிகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/5nmu6o3p/New-Project-2026-08-27T154534.527.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டு, தவெக ஆட்சியில் தகனம் செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனின் உடல். காவல்துறை மரணம் என்றபோதும், கைது செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த அரசும் சரி, உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆட்சியில் இருந்த, தற்போது இருக்கும் அரசும் சரி இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.</p><p>பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்படாமலேயே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகாஷ் டெலிசனின் மரணத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-the-police-responsible-for-the-death-of-young-man-akash-what-did-he-say-in-his-statement-812857">ஆகாஷ்</a> ஒரு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் (தேவேந்திர குல வேளாளர்) என்பதாலேயே அடித்துக் கொல்லப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. </p><p>முழுவிவரம் என்ன காண்போம். </p><h2>குற்ற வழக்கில் மார்ச் மாதம் கைது</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர்.</p><p>இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.</p><p>கைதின்போது தப்பி செல்ல முயன்ற ஆகாஷ் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</p><p>இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8-ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஆகாஷை அடித்தே கொன்றதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். </p><p>இதில் சம்பந்தப்பட்ட போலீசாரை கைதுசெய்யக்கோரி ஆகாஷின் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வழக்கு பூதாகரமாக, </p><p>ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த மார்ச் 13ஆம் தேதி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.</p><h2>சிபிசிஐடிக்கு மாற்றம்</h2><p>இதனிடையே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆகாஷின் தந்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.</p><p>இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆகாஷ் குடும்பத்தின் போராட்டம் தொடர்ந்தது. இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆனபின்னும் ஆகாஷின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.</p><h2>உடல் தகனம்</h2><p>வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், ஆகாஷின் உடலை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் போலீசார் கைது செய்யப்படாததால் உடலை பெற்றோர் வாங்கவில்லை. இதனால் முறைப்படி ஆகாஷின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி, அவரது உடலை காவல்துறையே தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>இதனைத்தொடர்ந்து ஜூன்.17ம் தேதி ஆகாஷின் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது. </p><h2>சிபிசிஐடி அறிக்கை தாக்கல்</h2><p>இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகாஷ் டெலிசன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொல்ல திட்டமிட்டு இந்த கொலை நிகழ்ந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு காவலர்களும் ஆதிச்ச சாதியை சேர்ந்தவர்கள் என்றும், ஆகாஷ் தலித் என்பதை அறிந்தே அவரை ஆள் நடமாட்டம் இல்லாத யூகலிப்டஸ் காடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஈரசாக்கை வலது காலில் கட்டி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட, ஃபேட் எம்பாலிசம் என்ற பக்களவிளைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். </p><h2>இதுவரை கைது செய்யப்படாத குற்றவாளிகள்</h2><p>இதில் முக்கிய குற்றவாளி ஆய்வாளர் திலீபன் உட்பட ஆறுபேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகாஷின் மரண வாக்குமூலத்தின் இந்த அனைத்து சம்பவங்களும் கூறப்பட்டநிலையில், தற்போதுவரை குற்றவாளிகள் ஆறுபேரும் கைது செய்யப்படவில்லை.</p><p>மேலும் இந்த வழக்கு தொடர்பாக 16 பேர்மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஆறு பேர்மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆகாஷ் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்!- டி.டி.வி. தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-tvk-government-must-take-concrete-measures-to-curb-sand-mining#comments</comments><guid isPermaLink="false">77dae2b1-7353-4b48-a2f0-31b3ea70f512</guid><pubDate>Thu, 27 Aug 2026 10:08:23 +0000</pubDate><atom:updated>2026-08-27T10:08:23.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,மணல் கொள்ளை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி. தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/sp0rwalh/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, மணல் கொள்ளையைத் தடுக்க உருப்படியான நடவடிக்கைகளை தவெக அரசு மேற்கொள்ள வேண்டும்! டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பெரும் அச்சம்</strong></h2><p>திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> <h2><strong>விமர்சனங்கள்</strong></h2><p>சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறையே, பொதுமக்கள் தாமாக முன்வந்து அளிக்கும் புகார்கள் மீது அலட்சியம் காட்டி வருவதன் பின்னணியில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-9">ஆளுங்கட்சியினர்</a> மற்றும் அரசு அதிகாரிகள் சிலரின் தலையீடு இருப்பதாகவும், மணல் கொள்ளையில் சில சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாக ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p>எனவே, கடந்த திராவிட ஆட்சிகளைக் குறைகூறிக் காலம் கடத்துவதை விடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை அரசியல் பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.2,280 குறைவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-27-08-2026#comments</comments><guid isPermaLink="false">662d510d-4933-4521-a79a-0159072209cd</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:48:50 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:48:50.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/bde117eh/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சில நாட்களாக உயர்வு, சரிவு மாறி வந்த தங்கம் விலை இன்று முக்கிய திருப்பத்தை கண்டுள்ளது. திங்கட்கிழமை உயர்ந்த விலை, செவ்வாய்க்கிழமை சிறு சரிவுக்கு பின், விடுமுறை நாளில் நிலைத்திருந்தது. இன்று காலை குறைந்த விலைக்கு மேலாக, இரண்டாவது முறையாக பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு, சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்திருப்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கவனத்துக்குரிய மாற்றமாகும்.</strong></em></p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான திங்கட்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் செவ்வாய்கிழமை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. </p><p>இந்த இன்று காலை தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 940-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. </p> <h2><strong>மேலும் குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 285 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 725-க்கும் சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>25-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>25-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-likely-to-receive-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aa79fe3c-6cc0-47fa-85f6-a4edb5dc3548</guid><pubDate>Thu, 27 Aug 2026 09:30:47 +0000</pubDate><atom:updated>2026-08-27T09:30:47.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/1d9jluzn/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 2-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 31-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 31-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல- ஆதவ் அர்ஜூனா ஆவேச பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-it-wont-be-good-for-you-if-i-start-speaking#comments</comments><guid isPermaLink="false">7a32a64d-6ca1-4860-b612-743095e26d51</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:50:13 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:50:13.816Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/gvj3hu82/aadhavarjuna0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.  அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு கொண்டு  வந்தது திமுக அரசு. அம்பேத்கர் அயலக திட்டத்தை  கொண்டு வந்தது திமுக. சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்கு வங்கம், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள். மத்திய அரசு பாஜக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தப்பிக்க கூடாது என்று கூறினார். </p><h2><strong>கோவி செழியன்</strong></h2><p>அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும். சாதி வாரி கணக்கெடுக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பேச்சிற்கு த.வெ.கவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>திமுக எம்எல்ஏ பேசியது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 2015 முதல் 2021 வரை திமுகவுக்கு பணியாற்றியது எல்லோருக்கு தெரியும், உங்கள் தலைவருக்கும் என் பணியும் தெரியும்.  உண்மையான பணியாற்றியவன் நான். உங்கள் அப்பாவிடன் தான் கேட்க வேண்டும், நான் சொல்ல ஆதரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல.  நான் பணி செய்தவரை என் பணியை முடித்துவிட்டு அடுத்த பணிக்கே வந்துவிட்டேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய சபாநாயகர், வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்க கூடாது என்றார். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு &apos;SOFA MODEL&apos; என திமுக கிண்டல்: சட்டசபையில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/debate-on-dalit-representation-in-assembly-dmk-members-uproar-over-minister-vanni-arasu-speech#comments</comments><guid isPermaLink="false">3eadc35d-aedb-4682-a883-351daa87ce2e</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:35:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:35:04.185Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,vck,திமுக அரசு,தமிழ்நாடு சட்டசபை,TNAssembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8y1dbrrr/vann.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை பேரவையில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்து, எதிர்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் எழுந்து நின்று முழக்கமிட்டதால் அவையில் கடுமையான கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது.</p><h2>த<strong>லித் பிரதிநிதித்துவ</strong>ம்</h2><p>பேரவையில் உரை நிகழ்த்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people">அமைச்சர் வன்னி அரசு</a>, தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தன்னைச் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச விடாமல் தடுப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.</p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் ஏன் பங்கு வழங்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தலித் தலைவர்களைப் பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதைச் சுட்டிக்காட்டி பெருமை பேசுவது, அவர்களைச் சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே காட்டுகிறது என்றும் சாடினார்.</p><h2>சோஃபா மாட<strong>ல் என கிண்</strong>டல்</h2><p>விசிகவுக்கு வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டபோது எதிர்த்தரப்பினர் கொதிப்படைந்தனர். இதற்கிடையே அமைச்சர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, திமுக உறுப்பினர்கள் 'சோஃபா மாடல்' என்று கிண்டல் செய்து குரல் எழுப்பினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, அமைச்சரின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பலர் ஆவேசமாக எழுந்து நின்று ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். அமைச்சர் வன்னி அரசுவை மேலும் பேச விடாமல் தடுத்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் கடுமையான காரசாரமான சூழல் நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்- முதலமைச்சர் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-order-4-ministers-team-going-to-delhi#comments</comments><guid isPermaLink="false">2080bfe0-1b16-4e1d-a6b8-470d7afd489f</guid><pubDate>Thu, 27 Aug 2026 08:08:04 +0000</pubDate><atom:updated>2026-08-27T08:08:04.976Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/oemdy6j2/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</strong></em> </p><p>நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும்  தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த  ஆலோசனையில்  தலைமைச் செயலாளர் சாய்குமார் அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். </p><p>அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து  கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம்  அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார். </p><p>இதனை தொடர்ந்து, நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக 4 அமைச்சர்களை டெல்லி செல்ல முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal">விஜய்</a> உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர். </p><p>அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும்,  4 அமைச்சர்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p><p>மேலும் ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எ.ஸ் தலைமையிலான குழுவை நேபாளம் காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்- முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-ministers-and-officers-for-recover-for-tamils-stranded-in-nepal#comments</comments><guid isPermaLink="false">c8698168-02bc-4933-819c-f5baaf184101</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:39:39 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:39:39.121Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8lemffbn/vijaycm.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/8lemffbn/vijaycm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின்னர், நேபாளம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்கள் மற்றும் அங்கு சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், </p><p>கைலாஷ் மானசரோவர் ஆன்மிக பயணம் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களையும் போர்க்கால அடிப்படையில் மீட்கத் தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan">அரசு</a> தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். </p><p>இந்த நிலையில், நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி தவிக்கும்  தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். </p><p>இந்த  ஆலோசனையில்  தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழர்களின் நிலை பற்றி கேட்டறிந்து அவர்களுக்கு  தேவையான உதவிகளை செய்து  கொடுக்கும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அவர்களை பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு  வலியுறுத்தினார்.  </p><p>ஏற்கனவே தூதரக அதிகாரிகள் மூலம் டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் மீட்பு பணி விவரம் சேகரிக்கும் நிலையில் ஆலோசனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்குப் புதிய நலத்திட்டங்கள்: அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-announced-new-welfare-schemes-for-adi-dravidars-and-tribal-people#comments</comments><guid isPermaLink="false">4a8a5be9-6b87-4195-9f03-3d3446dc2bfe</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:15:26 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:15:26.049Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/09p2tk11/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> சமூக நீதித்துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்த 100 சமுதாய கூடங்கள் கட்டப்படும். </p><p>* தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு. இத்திட்டத்தில் 2500 கான்கிரிட் வீடுகள் வழங்கப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.160 கோடியில் 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும். </p><p>* தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும். </p><p>* ஆதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண்- விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைக்கப்படும். </p><p>* மாணவர்களுக்கு பாதுகாப்பு, சுகாதாரமான மற்றும் கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும். </p><p>* உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் பண்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும். </p><p>* பழங்குடியினர் மருத்துவம், பொறியியல் உயர்கல்வியை அதிகரிக்க சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் அறிவு திறனை மேம்படுத்திக்கொள்ள அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தப்படும். </p>]]></content:encoded></item><item><title>சுஸ்லான் நிறுவனம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/end-to-rumors-regarding-suzlon-industries-minister-clarifies-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a11e57ce-c4db-444c-9979-815135068b13</guid><pubDate>Thu, 27 Aug 2026 07:05:34 +0000</pubDate><atom:updated>2026-08-27T07:05:34.148Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNAssembly,ஆந்திரா,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,Suzlon,சுஸ்லான் நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-27/s01fyvy9/moni.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தொழிற்பணிகளை மேற்கொண்டு வரும் பிரபல <a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-floods-intense-efforts-to-rescue-103-tamils-minister-rajmohan">சுஸ்லான் நிறுவனம்</a> அண்டை மாநிலமான ஆந்திராவிற்குத் தனது முதலீடுகளை முழுமையாக மாற்றிவிட்டதாகப் பரவி வரும் வதந்திகளுக்குத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமான விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்றத்தில் விதி எண் 111-ன் கீழ் திருத்த அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அவர், சுஸ்லான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்குவதோடு, தொழில் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவே ஆந்திராவிலும் முதலீடு செய்துள்ளதாக தெளிவுபடுத்தினார்.</p><h2>ரூ.500 <strong>கோடி புதிய</strong> முதலீடு மற்றும் 500 பேருக்கு வேலைவாய்ப்பு</h2><p>முந்தைய காலங்களில் தமிழ்நாட்டை விட்டுச் சென்ற குறிப்பிட்ட முன்னணி நிறுவனம் ஒன்று, தற்போதைய அரசின் தீவிர முயற்சியால் மீண்டும் மாநிலத்திற்கு ஈர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் திட்டங்களைத் தொடங்கவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 500 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p>ஒரு தொழில் நிறுவனம் ஒரு மாநிலத்தில் செயல்படும் அதேவேளையில், சந்தை வாய்ப்புகளுக்காக அண்டை மாநிலங்களிலும் தனது முதலீடுகளை மேற்கொள்வது இயல்பான வர்த்தக நடைமுறையாகும். எனவே, ஆந்திராவில் சுஸ்லான் செய்துள்ள ஒப்பந்தங்களைத் தமிழ்நாட்டுடன் தவறாகத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் தொழிற்பணிகள் தடங்கலின்றித் தொடரும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.</p><h2>சின்னப்பிள்<strong>ளை சுயஉதவிக்</strong> குழு </h2><p>பேரவை விவாதத்தின் போது, மதுரை மாவட்டத்தில் சின்னப்பிள்ளை சுயஉதவிக் குழுவின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாகத் தாம் பேசிய உரையின் சில பகுதிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு செய்திகளில் வெளியானதாக அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு தவறாகப் பதிவான கருத்துகள் பேரவைக் குறிப்பில் இருந்து முறைப்படி திருத்தப்பட்டுச் சரியான வடிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.</p> ]]></content:encoded></item></channel></rss>