<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 20 Aug 2026 15:41:58 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">93b3f2e7-5044-4111-8cf3-3a4d554048e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-08-20T14:03:03.871Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EV Velu-MInister Adhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops">மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</a></p><p>* 717 கடைகள் மூடல்: பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதன் முகவரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.</p><p>* 10 ரூபாய் கூடுதல் கட்டண எச்சரிக்கை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.</p><p>மகளிரை தொழில் முனைவோராக்க சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்</p><p>அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக தரம் உயர்த்தப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக கூட்டுறவு அமைப்புகளை மாற்ற மாநில கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>விவசாயிகளுக்கு ரூ.5000 கோடியில் ஊரக தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்- - அமைச்சர் காந்திராஜ்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><p>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><p>ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும்.</p><p>பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை.</p><p>இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசு ரேஷனுக்கு வாங்கப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன் உரை</h2><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும்.</p><p>வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும்.</p><p>தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.</p><p>தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது.</p><p>ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை.</p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது.</p><p>ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும் - எடப்பாடி பழனிசாமி</p><p>ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் - அதிமுக எம்எல்ஏ காமராஜ்</p><p>திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார்.</p><p>எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?</p><p>ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? - எ.வ.வேலு</p><p>சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் ரேஷன் கடைகளில் தரப்படுகிறது.</p><p>சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம்.</p><p>தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது.</p><p>அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா - எ.வ.வேலு</p><p>சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை - கே.என்.நேரு திட்டவட்டம்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை.</p><p>எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா?</p><p>எம்எல்ஏவுக்க உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார்.</p><p>எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் நினைத்தார்.</p><p>ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>இந்த ஆட்சி அந்த ஆட்சி என பேசவில்லை, அவரவர் மனசாட்சிக்கு தெரியும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை பற்றி. பேரவையில் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசி சாப்பிடவில்லை, மனசாட்சிப்படி உண்மையை பேச வேண்டும்.</p><p>சுகர் குறைவதற்காக ரேஷன் அரிசியை கஞ்சி வைத்து குடிக்கும் கே.என்.நேருவை வாழ்த்துகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ரேஷன் அரிசியை எல்லா மக்களும் உண்கின்றனர், சர்க்கரை அளவு குறைவதால் சாப்பிடுகின்றனர் - கே.என்.நேரு</p><p>ஆட்டுக்கும் கோழிக்கும் ரேஷன் அரிசி என அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு</p><p>தூய்மையான வெள்ளையான அரிசி ரேஷன் கடையில் தரும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக நடவடிக்கை.</p><p>கே.என்.நேரு உள்ளிட்டோர் சுகர் குறையும் என்பதால் ரேஷன் அரிசி தான் உண்கின்றார் - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை ஆட்டுக்கும் கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தினர்.</p><p>சன்னரக நெல்லுக்கு உற்பத்தி உயர செய்யும் நோக்கில் ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியது திமுக அரசு தான்.</p><p>தவெக ஆட்சியில் அதிகமாக நெல் திறந்தவெளியில் தான் உள்ளது. திமுக குடோனில் வைத்து நெல்லை முளைக்கவிடாமல் பாதுகாத்தது - எம்எல்ஏ சக்கரபாணி</p><p>திமுக ஆட்சியில் எந்த கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகளின் செல்போன் எண், புகார் பெட்டி இல்லை.</p><p>நெல் கொள்முதல் நிலையத்தின் வெளியே உள்ள நெல்லையும் உரிய முறையில் பயன்படுத்த தவெக அரசு நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன்</p> <p>நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகமாக கொள்முதல் செய்ததாக திமுக மார்தட்டி கொள்கிறது. ஆனால் சாலையில் உள்ளது நெல் - உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்</p><p>தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடல், எங்கெங்கு மூடல் என்பதை முகவரியுடன் பட்டியலாக தரவும் அரசு தயார் - அமைச்சர் விக்னேஷ்</p><p>பட்டாசு ஆலை உள்ளிட்ட விவகாரத்தில் பிரச்சனை முடிந்தும் போராட்டம் நடத்துவதால் தான் அரசியல் என்கிறோம் - அமைச்சர் கீர்த்தனா</p><h2>பட்டாசு ஆலை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - திமுக எல்எல்ஏ தங்கம் தென்னரசு</h2><p>பட்டாசு ஆலை உரிமம் ரத்து, சீல் விவகாரத்தில் திமுக மட்டுமல்ல பொது அமைப்புகளும் போராட்டம் நடத்துகிறது.</p><p>விதிமுறை மீறி ஆலைகளை ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் சிறு ஆலையையும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.</p><p>முந்தைய காலத்தில் ஆண்டு கணக்கில் பதில் இல்லா கேள்விகளுக்கு உள்ளது, முந்தைய காலம் என்றதும் பயப்பட வேண்டாம் - சபாநாயகர்</p><p>மின்கட்டண உயர்வு, மின் கணக்கீடு முறையில் குழப்பம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி</p><p>கொள்கை விளக்க குறிப்பு நள்ளிரவில் வருகிறது. 3 நாட்களுக்கு முன் கொடுத்தால் படித்துவிட்டு பேசலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>கேள்விகள் கொடுத்து பல நாட்கள் ஆகிறது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.</p><p>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தாமதப்படுத்துவது அவையை அவமதிக்கும் செயல் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி, நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எந்த என்எல்சி தேர்வு வைக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மயிலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை எந்தவித அறிவிப்பும் இன்று மீண்டும் திறந்துள்ளனர்.</p><p>செஞ்சியில் மூடிவிட்டு தற்போது கிராம பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை தேவை - எம்எல்ஏ சிவி சண்முகம்</p><p>சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 மாதமாக ஆந்திராவில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குங்கள். </p><p>ஆந்திராவில் மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 7 விசைப்படகுகளையும் ஆந்திர அரசு விடுவிக்கவில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்</p><p>ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.</p> <p>மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை  - கோவி செழியன்</p> <p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு</p><p>10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.</p><p>அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.</p><p>மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்</p><p>அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்</p> <p>ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.</p><p>அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.</p><p>மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <h2>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்</h2><p>மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.</p><p>சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.</p><p>மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து</p><p>மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்</p><h2>மீனவர் பலி - அமைச்சர் ஆதவ் விளக்கம்</h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.</p><p>புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.</p><p>மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p> <p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.</p><p>மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்</p><p>மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்</p> <p>அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.</p><p>நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.</p><p>காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">d706d07d-3f97-41b8-b7c5-54547fe5f1bd</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:30:27 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:30:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்கடை,tasmac closure,cm vijay,முதலமைச்சர் விஜய்,tvk government,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh,717 Tasmac Closed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vignesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் மதுக்கடைகள்</a> முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ்</a> இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.</p><p>தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பின்படி, தற்போது 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.</p><h2>இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,</h2><p>"முதலமைச்சரின் உத்தரவின்படி 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடை</a>களும் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம். </p><p>இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தகுதி நீக்க நடவடிக்கை - மனுவை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">eedf42e4-a28d-40d3-bee0-50fe10b60f5d</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:17:12.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,ADMK MLA,floor test,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,நம்பிக்கை தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIADMK MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றத்தில்</a> தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>நம்பிக்கை கோரும் தீர்மானம்</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதற்கு ஆதவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.</p><p>தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அதிமுக-வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.</p><h3><strong>அதிமுக எம்.எல்.ஏ.க்கள்</strong></h3><p>இதற்கிடையே மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.</p><p>இந்த மனுவை ஏற்று, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள் அமர்வு, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் மனு அளித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.</p><p>மேலும், சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்களை மன்னித்து கடிதம் அளித்து விட்டால், தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்றும் நீதிபதிகள் கூறினர்.</p><p>இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது: முதல் மந்திரி சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit#comments</comments><guid isPermaLink="false">198ebf7d-c1b2-4c82-8e55-e4614f536f4e</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:15:00.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல் மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல் மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் நலன் கருதி நாங்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்துள்ளோம்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என நான் கருதுகிறேன். அதனால்தான் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.</p><p>எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் உள்ள மற்ற அனைத்து நீரும் — ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் — தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் உறுதி அளித்துள்ளேன்.</p><p>எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் இதுகுறித்து முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.</p><p>முன்னதாக, மேகதாது அணை குறித்து பேசிய கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:</p><h2>மேகதாது அணையால் தமிழகத்துக்கே  பலன்</h2><p>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.</p><p>நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை.</p><p>கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நதிநீர்ப் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகரவேண்டிய நேரம்.</p><p>தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது. மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன்வைத்தது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் டிரைவுக்காக தலைமை செயலகத்திற்கு வந்த மகேந்திரா கார்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat#comments</comments><guid isPermaLink="false">c09bea12-8f24-49f0-9bf4-77924a1887d5</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:11:57.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Test Drive,Bolero Neo,XUV700,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,MLA Cars,புதிய கார் அறிவிப்பு,Mahindra Cars,மகேந்திரா கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mahindra Cars - Test Drive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்ட</a>சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</strong></h2><p>தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தின் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டார்.</p><p>கார்கள் மட்டுமின்றி, அவற்றை முறையாகப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ. 75,000 பராமரிப்புப் படி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.</p><h2><strong>சட்டசபையில் எழுந்த கோரிக்கை</strong></h2><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பேரவையில் பேசிய சில உறுப்பினர்கள், "கார்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மக்கள் பிரதிநிதிகளின் நீண்டதூரப் பயணங்களுக்கும், பாதுகாப்பு வசதிகளுக்கும் ஏதுவாக 'டொயோட்டா இன்னோவா' ரக கார்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் குவிந்த கார்கள்</strong></h2><p>உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கார் நிறுவனங்களின் மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p>அங்கு மகிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான XUV, 7XO, பொலிரோ நியோ ஆகிய கார்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்காகவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அடுத்தகட்ட நடவடிக்கை</strong></h2><p>இந்தக் கார்களின் மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொகுசுப் பயணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, எந்த கார் இறுதி செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா? எ.வ.வேலுவின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f125b0fb-a7c5-459e-98c5-1fbb4fd103c5</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:53:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:53:04.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ev velu,எவ வேலு,தள்ளுபடி,Farm Loan Waiver,பயிற்கடன்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav arjuna- EV Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். 4வது முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று தான் கேட்கிறோம். </p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed#comments</comments><guid isPermaLink="false">37927f62-6f95-4480-aebf-a633129bec14</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:25:23.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qlvgjmz/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qlvgjmz/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2><strong>முற்றிலும் முரண்பாடு</strong></h2><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.</p><p>தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் ஜோசப் விஜயின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.</p><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வடபழனி முருகன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1#comments</comments><guid isPermaLink="false">e48428f5-7d5a-4182-a92e-46c4a8da8668</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:15:55.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வடபழனி முருகன் கோவில்,vadapalani,HRCE Department,VadapalaniMuruganTemple,MobilePhone Ban,செல்போன்தடை,இந்து சமயஅறநிலையத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadapalani Murugan Temple ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF">வடபழனி</a> அருள்மிகு ஆண்டவர் முருகன் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a>யின் புதிய வழிகாட்டுதலின்படி, கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கவும், ஆன்மீக அமைதியை நிலைநாட்டவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?</strong></h2><p>கோவிலின் கருவறை, பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளுக்குள் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">ரீல்ஸ் செய்வது</a> முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அல்லது திரைத்துறையினரை கோவில் வளாகத்திற்குள் வைத்து வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ அனுமதி இல்லை.</p><p>தடையை மீறி ரகசியமாக செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் சென்றால், அவை பாதுகாப்பு ஊழியர்களால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பக்தர்கள் போன்களை எங்கு ஒப்படைக்க வேண்டும்?</strong></h2><p>கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.<strong> பக்தர்களின்</strong> வசதிக்காக தெற்கு கோபுரம் அருகில் ஏற்கனவே இருந்த காலணி பாதுகாப்பு இடம் தற்போது செல்போன் பாதுகாப்பு மையமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்று செல்லலாம். சாமி தரிசனம் முடித்து திரும்பும்போது மீண்டும் டோக்கனை காண்பித்து செல்போனை பெற்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. </p><p>கோவில் முன்புற பகுதியில் இடது மற்றும் வலது புறத்தில் 2 இடங்களில் காலணி வைக்கும் இடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி நாள்: சென்னையில் இருந்து வெளியூருக்கு நாளை அரசு சிறப்பு பஸ் வசதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-government-bus-services-from-chennai-to-outstations-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-government-bus-services-from-chennai-to-outstations-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7f60bb4e-27e2-4360-af5d-54b81c5eeae7</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:07:55.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,weekly holiday,வார விடுமுறை,Speical Bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7nhdnvwc/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அரசு சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரசு சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7nhdnvwc/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி  நாட்களில் <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> இயக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) 22 மற்றும் 23-ந் தேதி விடுமுறை நாட்களையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. </p><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 890 பஸ்களும் 22-ந்தேதி சனிக்கிழமை 820 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 110 பேருந்துகளும் 22-ந்தேதி 110 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் விடப்படுகிறது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக 465 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்கு 18,762  பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 10,461 பேரும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 17,678 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். </p><p>கூட்ட நெரிசலை தவிர்க்க <a href="https://www.tnstc.in/OTRSOnline/">www.tnstc.in</a>  மற்றும் டி.என்.எஸ்.டி.சி. மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th#comments</comments><guid isPermaLink="false">2a59159a-4b28-4039-b251-1f93360488b2</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:35:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:35:05.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24 மற்றும் 25-ந்தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>20-ந்தேதி முதல் 24-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளை காக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் விஸ்வநாதன்  விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-explain-government-takes-action-to-protect-the-rights-of-students-and-youth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-explain-government-takes-action-to-protect-the-rights-of-students-and-youth#comments</comments><guid isPermaLink="false">e37b3068-a318-40f9-99ce-f78daadde33f</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:50:20.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/twgum574/viswanathan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/twgum574/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.மாரிமுத்து பேசும்போது, இடதுசாரிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம், மேலும், உயர் கல்வித்துறை இடதுசாரி மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை சேகரித்து அனுப்ப அரசு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இப்படி உரிமைக்காக போராடும் சுதந்திர நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளலாமா? என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், குஜிலியம்பாளையம் வட்டாட்சியர் தலைமை இடத்திலிருந்து தகவல்கள் சேர்க்க அனுப்பப்பட்டவர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதத்தை எழுதி விட்டார். எனக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர் பணியிட மாற்றம் செய்து விட்டோம், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.</p><h2><strong>உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</strong> </h2><p> அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரி இயக்குனரகம் உடனடியாக மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையினை  திரும்ப பெறப்பட்டது.  மாணவர்கள் இளைஞர்கள் நியாயமான உரிமைகளை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை  ஒலிபரப்ப வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station#comments</comments><guid isPermaLink="false">ac149770-fa3b-425f-ac22-5cc64dd36f63</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:40:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:40:36.223Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>நோக்கத்தை நிறைவேற்ற உதவாது</strong></h2><p>சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  உள்ள பண்பலை வானொலி நிலையம் (அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த  மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில்,  அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவில்லை. மாறாக,  தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.</p><p>பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்  வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக  சென்னை மற்றும்  டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.</p><p>அதிலும் குறிப்பாக  ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.</p><p>எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.  சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும்,  கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till#comments</comments><guid isPermaLink="false">63efacc9-c1ff-4979-989f-ca6c7dcd95fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:57:11.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,நீட் தேர்வு,Neet exam,காவிரி நீர்,Cauvery water,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>இந்த மாநாட்டில், வலுவான மாநிலங்கள்- வலுவான இந்தியா என கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், </p><p>* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் தான் முக்கிய பங்களிப்பு தரும் இயந்திரம். </p><p>* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. </p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference">காவிரி</a> விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். </p><p>* காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். </p><p>* மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. </p><p>* தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை.</p><p>* கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். </p><p>* மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம். </p><p>* போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். </p><p>* போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள்  இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>* 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.  மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>* முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சனையை அணுக வேண்டும். </p><p>* கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்க வேண்டும். </p><p>* வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை  மீட்டெடுக்க வேண்டும். </p><p>* சிறப்பு சலுகை கேட்கவில்லை, நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம் என்று பேசியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கி எம்.எல்.ஏ-க்களுக்கு இலவச கார் எதற்கு?- சீமான் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas#comments</comments><guid isPermaLink="false">08709dd9-c6e8-457f-874e-fee99c48d782</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:51:06.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,TN Govt,தமிழக அரசு,சீமான்,தவெக அரசு,TVK Govt,எம்எல்ஏக்களுக்கு கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நல திட்டங்கள் நிறைய உள்ள நிலையில் கடன்வாங்கி அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?  </p><p>ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?</p><p>ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?</p><p>அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? </p><p>விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? </p><p>மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?</p><p>தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?</p><p>அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?</p><p>மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்துவதா?- சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">41201b23-1652-4f96-9d24-0d0aca06e04d</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:27:22.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ரேஷன் அரிசி,ration rice,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>எம்எல்ஏ கே.என்.நேரு :- சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை என்றார். </p><p>எம்எல்ஏ எ.வ.வேலு :- சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் <a href="https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna">ரேஷன்</a> கடைகளில் தரப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம். தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது. அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?. ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில், ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன்: ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் என்றார். </p><p>எடப்பாடி பழனிசாமி:- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது. ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும்.</p><p>அமைச்சர் வெங்கட்ரமணன் </p><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும். தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது. ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும். பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை. இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசி ரேஷனுக்கு வாங்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-death-penalty-priest-sexual-abuse-four-girls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-death-penalty-priest-sexual-abuse-four-girls#comments</comments><guid isPermaLink="false">7e08e44a-6004-436d-bcd6-3869fa1f03e1</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:22:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:22:38.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,priest,தூக்கு தண்டனை,பாதிரியார்,Sexual Harassment,Death Penalty</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bxr6i87g/Preist.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Preist Abraham]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/bxr6i87g/Preist.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B" rel="nofollow">போக்சோ</a> சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   </p><p>நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியில் கிறிஸ்தவ சபை உள்ளது.</p><h2>பாலியல் தொல்லை</h2><p> இங்கு பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஆபிரகாம் (வயது 47). இவர் கடந்த 2022-ம் ஆண்டு, திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்து, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தார். </p><p>மேலும், இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமிகளை அவர் கடுமையாக மிரட்டி உள்ளார்.</p><h2>பாதிரியார் கைது</h2><p>இது குறித்த புகாரின் பேரில், தேவர்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பாதிரியார் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.</p><p>இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜராகி திறமையாக வாதாடினார்.</p><h2>தூக்கு தண்டனை</h2><p>போலீசாரின் வலுவான ஆதாரங்கள் மற்றும் அரசு வக்கீலின் வாதங்கள் மூலம் பாதிரியார் ஆபிரகாம் மீதான <a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot" rel="nofollow">பாலியல் வன்கொடுமை</a> குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. </p><p>இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளி ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  </p><h2>ரூ.10 லட்சம் இழப்பீடு</h2><p>மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும், தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். </p><h2>பாதிரியாருக்கு தூக்கு</h2><p>தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில்  போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு நெல்லை  போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறை ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில் கள்ளச்சாராயம்  குடித்து 4 பேர் பரிதாப பலி: 18 பேர் மருத்துவமனையில் அனுமதி- காவல்துறை தீவிர விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fake-liquor-deaths-in-gujarat-four-killed-18-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fake-liquor-deaths-in-gujarat-four-killed-18-hospitalised#comments</comments><guid isPermaLink="false">1a54f5c5-96ec-4e9d-9b5a-91a5ccfbee52</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:20:17 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:20:17.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,மதுவிலக்கு,கள்ளச்சாராயம்,GujaratLiquor,Bhavnagar,SpuriousLiquor,GujaratPolice,பவ்நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2zv0teup/drugs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gujarat Liquor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/2zv0teup/drugs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத் மாநிலத்தின் பவ்நகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 18 பேர் பவ்நகரில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>பவ்நகர் மாவட்டம் கோகா தாலுகாவிற்கு உட்பட்ட கர்கடி கிராமத்தில், கடந்த (ஆகஸ்ட்) 16-ஆம் தேதி நடைபெற்ற ஒரு தனியார் விருந்தில் சிலர் மது அருந்தியுள்ளனர். இந்த <a href="https://www.maalaimalar.com/news/national/old-vehicles-e10-petrol-return-central-government-consideration">மதுபானம்</a>, இந்தியாவின் பிரபல நிறுவனமான ‘ராயல் ஸ்டேக்’ பிராண்டின் பெயரில் போலி முத்திரையிடப்பட்டு, அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.</p><h2>கள்ளச்சா<strong>ராய பலி</strong></h2><p>கள்ளச்சாராயம் குடித்ததில் கார்த்திக் மக்வானா (40), உபேந்திர கோஹில் (25), கன்சியாம்சின் ஜடேஜா (50) மற்றும் நரேந்திர யாதவ் ஆகிய 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் 18 நபர்களில்,  2 பேர்  மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்படுகின்றனர். </p><p>2 பேர் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். 10 பேர் சீரான உடல்நிலையுடன் சிகிச்சையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அகமதாபாத் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு பவ்நகர் சர் தகத்சிங்ஜி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><h2>காவல்<strong>துறை விசார</strong>ணை</h2><p>மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜி.எஸ். மாலிக் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. பவ்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் பாண்டே தலைமையில் 16 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு, கடத்தலில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அகமதாபாத் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் தலைமையில் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நடத்திய சோதனையில், மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தல் பாதை அகமதாபாத் வழியே சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், சுமார் 500 கிராமங்களின் பஞ்சாயத்துத் தலைவர்களுடன்இணைந்து காவல்துறையினர் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.</p><p>கள்ளச்சாராயம் மாதிரி தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 'ராயல் ஸ்டேக்' பெயரில் சந்தேகத்திற்குரிய வகையில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை வாங்கவோ உட்கொள்ளவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் சொன்னதும் பிரமாண பத்திரத்தில் உள்ளதும்.. கார் இல்லை என்று சொன்ன எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-mlas-car-allowance-row-asset-details-of-jothimani-shanmugan-and-sabari-aingaran-go-viral-after-car-demand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-mlas-car-allowance-row-asset-details-of-jothimani-shanmugan-and-sabari-aingaran-go-viral-after-car-demand#comments</comments><guid isPermaLink="false">6a17b14a-8dd6-454d-953e-84ce58fc4fe8</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:10:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:10:12.751Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,MLAs,எம்எல்ஏக்கள்,tvk,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/upxa4p5m/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம் ]]></media:title><media:description type="html"><![CDATA[  ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/upxa4p5m/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay">ஆளுக்கொரு காரும்</a>, கார் டிரைவர் மற்றும்  வாகன செலவுக்கு ரூ.75000  படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். </p><p>இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால் கடந்த வாரம் போடப்பட்டது.  </p><p>சட்டமன்றத்தில் அவர் வைத்த கோரிக்கையில், "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி வாகனம் கிடையாது. வாடகை வண்டியில் தான் வருகிறேன்.</p><p>தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை.</p><p>ஒரு செயலாளரை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கு வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்கு முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். </p><p>எனவே வாகன வசதியும் மற்றவைகளும் செய்து கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.</p><h2>நிறைவேற்றிய முதல்வர் விஜய்</h2><p>இதைத்தொடர்ந்து நேற்று சட்டசபையில் விதி எண் 110இன் கீழ், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படியாக மாதம் ரூ.75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>அறிவித்தார்.</p> <h2>வரவேற்ற எம்எல்ஏக்கள்</h2><p>இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பல எம்எல்ஏக்கள் பேசினர். குறிப்பாக மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சண்முகன், "INNOVA கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றார்</p><p>பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசுகையில், "கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. முதல்வர் எனக்கு வேலை வழங்கினார். கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். இப்போது காரும் வழங்கியுள்ளார்" என்றார்.</p> <p>இந்நிலையில் கார் கேட்ட விசிக எம்எல்ஏ ஜோதிமணி, இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தவெக எம்.எல்.ஏ சண்முகன், ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் ஆகிய மூவரும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த அவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p> <h2>சொத்து மதிப்பு</h2><p>விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனது பிரமாண பத்திரத்தில், தனக்கு டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மனைவியிடம் 25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருப்பதாகவும், தனக்கு 50 லட்சம் மதிப்புல்ல அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 லட்சம் 47 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தவெக எம்.எல்.ஏ சண்முகன் தன்னிடம் டொயோட்டா, வோல்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 4 கார்கள் உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். </p> <p>மேலும் தனது அசையும் சொத்து ரூ.6 கோடி 49 லட்சம், அசையா சொத்து ரூ.31 கோடி, மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடி 52 லட்சம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய ஜோதிமணி, சபரி ஐங்கரன், சண்முகம்  தன்னிடம் டாடா டிகோர் கார் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சத்துக்கு 76 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்களின் கேள்விக்கு பதில் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/demand-for-action-against-officials-who-failed-to-answer-mlas-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/demand-for-action-against-officials-who-failed-to-answer-mlas-questions#comments</comments><guid isPermaLink="false">e2793839-065c-4546-9934-4502434f976b</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:05:06.640Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஆஸ்டின்,ஓ பன்னீர்செல்வம்,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kwc41q8t/TNGovt.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/kwc41q8t/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், இந்த அரசு பதவியேற்ற பின் நாங்கள் ஆயிரக்கணக்கான கேள்விகளை கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்பதால் கேள்வி நேரம் வைக்கப்படவில்லை. இதனால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுகின்றனர். </p><p>கேள்விகள் கொடுத்து 93 நாட்கள் ஆகிவிட்டது. விதிப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் பதில்கள் தயாரிக்க வேண்டும் அதிகாரிகள் மெத்தனபோக்கால் கால தாமதம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காதவர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கத்தை சபாநாயகர் கேட்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் அனுப்பாமல் தாமதப்படுத்துவதும் அவையை அவமதிக்கும் செயல் என்றார்.</p><h2><strong>ஓ.பன்னீர்செல்வம்</strong> </h2><p>கடந்த சட்டமன்ற நிகழ்வுகளில் 2001ல் 20 கேள்விகளுக்கு கூட விடைகள் அளிக்கும் சூழல் இருந்தது. இவை எல்லாம் கடந்த காலங்களில் நடந்தவை. நான் அமைச்சராக இருந்த போது எனக்கு மட்டும் 2 கவன ஈர்ப்பு மற்றும் கேள்விகள் வரும். சட்டசபையில்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதை அந்தந்த தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றார். </p><h2><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</strong></h2><p>நான் குறிப்பேடுகளை எடுத்து பார்த்தேன். கடந்த காலத்திலும் நீண்ட நாட்களாக பதில் வராத கேள்விகள் உள்ளன. 2021 கொடுத்த கேள்விகளுக்கு  2025 ஆம் ஆண்டு வரை பதிலே வராமலும்  இருந்திருக்கிறது. ஆனாலும் நான் அதிகாரிகளிடம் விரைவாக பதில்களை தயாரித்து அனுப்புங்கள் என கூறியுள்ளேன். தற்போது 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் வந்துள்ளன. ஆனால் ஒரே துறையின்  பதிலாக  இருப்பதால் கூடுதலாக பதில் வந்தவுடன் விரைவில் கேள்வி நேரம் சட்டசபையில் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: மேகதாது அணை குறித்து பேசிய டி.கே.சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference#comments</comments><guid isPermaLink="false">acd8f44f-0b0f-4547-a6d1-ecc30becad2f</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:49:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:49:11.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wrl9dqam/TKShivakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wrl9dqam/TKShivakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும் என்று டி.கே.சிவக்குமார் பேசியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவே அமித்ஷா சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோவளம் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.</p><p>பின்னர் அனைத்து மாநில முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு விருந்து சாப்பிட்டார். அதை தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலிலேயே அமித்ஷா தங்கினார்.</p><h2><strong>மாநாடு தொடங்கியது</strong></h2><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>காலை 10.30 மணிக்கு தொடங்கிய மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கினார். மாநாட்டு குழுவின் துணைத் தலைவரான முதலமைச்சர் விஜய் வரவேற்று பேசினார்.</p><p>மாநாட்டில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த்மோகன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல் -மந்திரி சதீசன், தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுபாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி ஆளுநர் கைலாஷ் நாதன், </p><p>தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன், தலைமை செயலாளர் சாய் குமார், கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் மற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 2 அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்றார்கள்.</p><p>இந்த <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">மாநாட்டில்</a> பங்கேற்ற கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மேகதாது அணை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது:-</p><p>* மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். </p><p>* மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. </p><p>* நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும்</p><p>* ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை.</p><p>* கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. </p><p>* நதி நீர் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகர வேண்டிய நேரம்.</p><p>* தண்ணீர் நம்மை ஒன்று சேர்க்க வேண்டும்; பிரித்து விடக்கூடாது.</p><p>* மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன் வைத்தது என்றார். </p><p>அவரை தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பேசுகையில், </p><p>*  புதுச்சேரியின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம்.</p><p>* கோதாவரி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே குடிநீர், பாசனத்திற்காக கூடுதலாக நீர் திறக்க வேண்டும். </p><p>* குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையில் இருந்து புதுச்சேரிக்கு பிரத்யேக குழாய் அமைக்க வேண்டும். </p><p>* சங்கராபரணி- தென்பெண்ணையாறை இணைக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். </p><h2><strong>விவாதம்</strong> </h2><p>அதை தொடர்ந்து தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மாநிலங்கள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவுகள், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது, ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் தொடர்புடைய விவகாரங்கள், நதிநீர் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது, பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட பொதுவான மாநில விவகாரங்கள் பற்றியும் செயலாக்கத்தில் ஏற்படும் சிக்கல்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசி கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna#comments</comments><guid isPermaLink="false">51ad0ffb-f32b-46b5-96f5-c494bc1e3ee4</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:39:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:39:05.686Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் அரிசி,தமிழக சட்டசபை |,தமிழக சட்டசபை கூட்டத்தொடர்,TNAssembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,TNAssemblySession,RationRice,FoodDepartment,AdhavArjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jx21fy23/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jx21fy23/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர். விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் ஏற்பட்டது.</p><h2>ரேஷன் கடை<strong>களில் சன்ன ரக அரிசி வழங்கிட</strong> நடவடிக்கை</h2><p>சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company">ஆதவ் அர்ஜுனா</a>, பொதுமக்கள் அனைவருக்கும் ரேஷன் கடைகளில் உயர்தரமான அரிசி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிக உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். ரேஷன் அரிசி பெரும் பகுதி இட்லி மாவு தயாரிக்க மட்டுமே பயன்படும் நிலையைக் குறிப்பிட்டு, மக்கள் நேரடியாகச் சமைத்து உண்ணக்கூடிய சன்ன ரக அரிசியை வழங்கிடவே சன்ன ரக நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><h2>அமைச்சர் <strong>ஆதவ் அர்ஜுனாவின்</strong> விளக்கம்</h2><p>விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாம் சிறுவயதில் இருந்தபோது ரேஷன் கடைகளில் நிறம் மாறிய அரிசியே கிடைத்தது. நம் சட்டமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசியை சமைத்து உண்கிறோமா? மனசாட்சிப்படி பேச வேண்டும். 90 சதவீத மக்கள் ரேஷன் அரிசியை நேரடியாகச் சமைப்பதில்லை.</p><p>இந்நிலையை மாற்றவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சமைக்க உகந்த சன்ன ரக நெல்லுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார். நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார். எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைத்தார். ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார்.</p><p>மேலும், இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை. எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா? எம்எல்ஏவுக்கே உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும். இவ்வாறாக சட்டப்பேரவையில் உணவுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்தில் ரேஷன் அரிசி தரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ulundurpettai-toll-gate-price-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ulundurpettai-toll-gate-price-hike#comments</comments><guid isPermaLink="false">d8f3f410-8f6e-4cc9-b0e1-b11953acda4b</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:36:28 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:36:28.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Toll Gate,உளுந்தூர்பேட்டை,Ulundurpettai,சுங்கச்சாவடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/n44pud4p/tolgate.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/n44pud4p/tolgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.</p><h2><strong>சுங்கச்சாவடி</strong></h2><p>அந்த வகையில் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் இன்று காலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.5-ல் இருந்து ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. </p><h2><strong>செங்குறிச்சி சுங்கச்சாவடி</strong></h2><p>செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தற்போது பலமுறை பயணிக்கும் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் அதே கட்டணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.</p><h2><strong>லாரி, பஸ்</strong></h2><p>இதேபோன்று ஒருமுறை பயணிக்கும் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் லாரி, பஸ்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 15 ரூபாய் உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது. </p><h2><strong>சுங்க கட்டணம்</strong></h2><p>தற்போது லாரிக்கு ரூ.380 சுங்க கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ரூ.20 வரை உயர்த்தப்பட்டு ரூ.400 ஆக வசூலிக்கப்பட உள்ளது. பஸ்சுக்கு ரூ.240 வசூலிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.250 ஆக வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>1-ந் தேதி முதல் உயர்வு</strong></h2><p>இதேபோன்று செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக வரும் மல்டி ஆக்சில் வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. செங்குறிச்சி சுங்கச்சாவடியில் இந்த புதிய கட்டண உயர்வு முறையானது செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு தொழிலாளர் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்படுகிறது: சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">fd7453fb-cca6-4c49-b1b8-fac01ca70dbc</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:17:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:17:57.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ctu7rkd0/keerthana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு- அமைச்சர் கீர்த்தனா]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு- அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/ctu7rkd0/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் அமைச்சர்  தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு எனும் பெயரில் நடைபெறும் இடையூறுகளால் அங்குள்ள பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, 6 மாதமாக ஆய்வு நடந்து வருவதாகவும், 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளது என்றும், சிவகாசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.</p><p>மேலும், 177 பட்டாசு ஆலை விதிமீறல் கண்டறிந்து உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியவர் 13-ஆம் தேதிக்கு முன்பே பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் அங்கே ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிவாரணமாக  நம் தலைவர் 4 லட்சம் கொடுத்து துணை நின்றவர் என தெரிவித்தார்.</p><p>மேலும் அவர் கூறுகையில் பிரச்சனையை தீர்த்து வைத்த பிறகும் எதிர்க்கட்சியினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதில் அரசியல் புகுத்தப்படுகிறது என்று கூறினார். இதற்கு தங்கம் தென்னரசு போராட்டத்திற்கான காரணத்தை மறுபடியும் விளக்கினார்.</p>]]></content:encoded></item><item><title>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி- சவுமியா அன்புமணி குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mla-sowmya-anbumani-slams-nlc-as-heartless-company#comments</comments><guid isPermaLink="false">9d3bd43a-acbe-4ecf-991a-2d5b920f0ea1</guid><pubDate>Thu, 20 Aug 2026 06:08:10 +0000</pubDate><atom:updated>2026-08-20T06:08:10.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,NLC,என்எல்சி,TN assembly,Sowmya Anbumani,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3pox0jl9/Sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA Sowmya Anbumani- Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3pox0jl9/Sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் விவாதத்தின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,"தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்" என்று கூறினார். </p><h2>பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி</h2><p>தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF" rel="nofollow">என்எல்சி</a> தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள்.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எதற்கு என்எல்சி தேர்வு வைக்க வேண்டும். மண்ணின் மைந்தர்கள் அவர்கள். </p><p>என்எல்சி கொடுக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்கு புறம்பான தகவல். விவசாயிகளுக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை.</p><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>என்எல்சி நிறுவனம் குறித்து உண்மையாகவே பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். சிஎஸ்ஆர் நிதியில் இருந்து ஒதுக்காமல் இதுவரை நிறைய பிரச்சனைகளை செய்திருக்கலாம். அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். </p><p>ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95" rel="nofollow">தவெக</a> அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>ஆட்சி வந்து 3 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. கமிட்டி அமைத்திருக்கிறோம். முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக தகவல்கள் விரைவில் வழங்கப்படும்.</p><p>கண்டிப்பாக நாங்கள் யாருக்கு எதிராகவும் நடந்துக்கொள்ள மாட்டோம். விவசாயிகளுக்கு கண்டிப்பாக ஆதரவாக இருப்போம். மக்களுக்கும் ஆதரவாக இருப்போம். </p><p>என்எல்சி நிறுவனம் அப்படி இருப்பது உண்மையானால் தவெக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வகுப்பறைகளை மாற்ற நினைக்கும் முயற்சிகளை மாணவர்கள் வீழ்த்துவார்கள்- சு.வெங்கடேசன் எம்பி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/su-venkatesan-says-students-will-thwart-attempts-to-change-the-classrooms#comments</comments><guid isPermaLink="false">5526a442-8313-42fe-921b-6ddb5e12d6d9</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:38:30 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:38:30.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,சு வெங்கடேசன்,Tamilisai Soundararajan,தமிழிசை சவுந்தரராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சு.வெங்கடேசன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tq3gc3mu/suvenkatesan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/topic/சு-வெங்கடேசன்">சு.வெங்கடேசன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியது.</p><h2><strong>நாடாளுமன்றத்திற்கே வரவில்லை</strong></h2><p>மாணவர்களின் பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையைச் சீர்குலைக்க நீங்கள் செய்யும் பட்டவர்த்தன முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட கல்வித் துறையின் மோசடிகள் அனைத்தும். அதற்கு எதிராக இந்திய மாணவர்கள் துணிவோடு களத்தில் நிற்கிறார்கள். </p><p>பெல்லட் குண்டுகளையும், ஆணி பொறுத்திய லத்திகளையும் துணிவோடு எதிர் கொண்டு அவர்கள் களத்தில் நின்றார்கள். ஆனால், மாணவர்களைத் தாக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல்  உள்துறை அமைச்சர் 20 நாளாக நாடாளுமன்றத்திற்கே வரவில்லை.</p><p>இந்த உண்மையை எதிர் கொள்ள முடியாமல் வெளிப்படுவதுதான் இன்றைய கதறல்கள் எல்லாம்.</p><p>தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நடத்திய சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டத்தின் முடிவுகளும், தமிழிசை செளந்தரராஜனின் X தள பதிவும் ஒரே திசையில் மாணவர்களையும், இடது சாரிகளையும் குற்றம் சாட்டுகிறது.</p><p>“திமாமி நக்சல்” என பிரதம் பட்டம் சூட்டிய நபர்களின் பட்டயலைத் தயார் செய்ய துவங்குகிறீர்கள்.</p><p>சங்கமாகச் செயல்படும் மாணவர் உரிமையை சங்கிகள் கூட்டத்தால் தடுத்துவிட முடியாது. </p><p>அறிவியல் மனப்பான்மை கொண்ட வகுப்பறைகளை மாட்டு மூத்திரத்தின் மேன்மையை விளக்கும் மேடையாக மாற்ற நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மாணவர்கள் வீழ்த்திக் காட்டுவார்கள் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை, போராட்டம் தேவையில்லை என்ற கரடுதட்டிப் போன பழமைவாதத்தின் குரலைச் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே தூக்கி குப்பையில் வீசியவர்கள் நமது மாணவர்கள். அவர்களின் அறிவார்ந்த அரசியல் பார்வையும், தீர்க்கமான போராட்டமும்தான் விடுதலைப் போராட்டத்தை மேலும்… <a href="https://t.co/78oOJiuqAS">https://t.co/78oOJiuqAS</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2090290445138198799?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>VIDEO: தொடங்கியது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: அருகருகே அமர்ந்த முதலமைச்சர் விஜய்- டி.கே.சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-state-chief-ministers-conference-started#comments</comments><guid isPermaLink="false">cb36fd62-7fd2-4e70-beee-fb6ee0c8232d</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:29:38 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:29:38.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/qh63ifkn/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியது.</strong> </h2><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள ஃபிஷர்மேன்ஸ் கோவ் ஹோட்டலில் முதல்-மந்திரிகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council">மாநாடு</a> தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரள முதல்-மந்திரி சதீசன் உள்ளிட்டோரும் அரசு அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council, which comprises the states of Andhra Pradesh, Karnataka, Keralam, Tamil Nadu and Telangana, and the Union Territories of Puducherry, Andaman and Nicobar… <a href="https://t.co/UFta3U3bAo">pic.twitter.com/UFta3U3bAo</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090308839333879956?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>மேலும், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பங்கேற்காத நிலையில் துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா பங்கேற்றுள்ளார். புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுவார் என்பதால் முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க துணை நிலை ஆளுநர், முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் அந்தமான், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். </p><p>இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அருகருகே அமர்ந்துள்ளனர். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council <a href="https://t.co/uPteMKrIRk">pic.twitter.com/uPteMKrIRk</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090306978988142664?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>தென்மாநிலங்களுக்கு இடையேயயான உறவை சுமூகமாக பேணும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. </p><p>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு தொடங்கியதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் விஜய் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Chengalpattu, Tamil Nadu | Union Home Minister Amit Shah chairs the 31st Meeting of the Southern Zonal Council<br><br>The Union Home Minister was felicitated by Tamil Nadu CM Vijay at the event.<br><br>The Southern Zonal Council comprises the states of Andhra Pradesh, Karnataka,… <a href="https://t.co/ZbwL0VCh7N">pic.twitter.com/ZbwL0VCh7N</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2090307645609759086?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் இதுவரை நிதி தாமதமாக வழங்கப்படவில்லை- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-rebuts-claims-of-late-payments-in-ambedkar-overseas-education-plan#comments</comments><guid isPermaLink="false">079175d1-8c56-40e4-bdf2-ceea9f3c6fec</guid><pubDate>Thu, 20 Aug 2026 05:25:45 +0000</pubDate><atom:updated>2026-08-20T05:25:45.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/1814953k/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று தொடங்கிய நிலையில், அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்தார். மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" target="_blank">வன்னி அரசு</a> பதில் அளித்தார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>அம்பேத்கர் அயலக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officers-warns-novel-scam-targeting-parents-with-promises-of-educational-scholarships" rel="nofollow">கல்வி உதவி தொகை</a> கிடைக்கவில்லை என மலேசியாவில் பயிலும் தமிழக மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தவறான, அரசியல் உள்நோக்கத்துடனான குற்றச்சாட்டு.</p><p>மாணவரின் குற்றச்சாட்டை ஆராயாமல் அரசியல் கட்சிகள் உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுகின்றன.</p><p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை.</p><p>மற்ற மாணவர்களுக்கு வந்துவிட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><h2>கோவி செழியன்</h2><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்த்தியுள்ளேன்.</p><p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-08-2026#comments</comments><guid isPermaLink="false">105d1234-c1ff-452f-881f-80f9c59420c4</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:45:01 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:45:01.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/vjusha2y/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p>சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. </p><p>இதற்கிடையே, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.</p><h2><strong>அதிரடி உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், இன்று தங்கம் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையாகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>15-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன்.. நினைவு தினத்தில் முதல்வர் விஜய் புகழஞ்சலி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-cm-pays-tribute-vijay-honors-ondiveerans-sacrifice-against-british-rule-on-remembrance-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-cm-pays-tribute-vijay-honors-ondiveerans-sacrifice-against-british-rule-on-remembrance-day#comments</comments><guid isPermaLink="false">9f600b5f-0413-4db5-820b-0514b314cfca</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:42:03 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:42:03.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Ondiveeran Memorial Day,ஒண்டிவீரன் நினைவு தினம்,பூலித்தேவர்,Puli Thevar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqi5m5e/tn-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஒண்டிவீரன், விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஒண்டிவீரன், விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/fqqi5m5e/tn-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக போராடி வீரமரணமடைந்த ஒண்டிவீரன்  நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20) அனுசரிக்கப்படுகிறது.</p><p>இதையொட்டி முதல்வர் விஜய் அவரது வீரத்தை மெச்சும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>தமிழக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதவில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>கூறியதாவது, </p><p>"ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!</p> <p>மாவீரன் <a href="https://www.maalaimalar.com/sirappukatturaigal/puli-thevan-birthday-today-657249">பூலித்தேவனின் </a>படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம் !</p> <p>வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சவுதியில் மீனவர் பலி- சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதமும், அமைச்சரின் விளக்கமும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-mayiladuthurai-fishermen-dead-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-mayiladuthurai-fishermen-dead-issue#comments</comments><guid isPermaLink="false">01a7f0ea-a7ec-47df-83b1-f48e0fbe0e67</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:26:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:26:04.468Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7r4y062h/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7r4y062h/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a>  கூட்டத்தொடர் தொடங்கியதும் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. </p><p>அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-</p><p>* சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் உயிரிழந்தார். </p><p>* உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* சவுதியின் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>* காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது என்றார். </p><p>இதற்கிடையே பேசிய சபாநாயகர், சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம் நடைபெறும் என தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான் என்றார். </p><p>எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசுகையில், அவசரம் கருதி எடுக்கப்படும் பிரச்சனைகளுக்கு 15 நாட்கள் கழித்து பதில் வந்தால் எப்படி?  அவசரம் என்பதால் தான் சிறப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் என்றார். </p><p>அதற்கு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து எம்எல்ஏ சிவக்குமார் பேசுகையில், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தரவேண்டும் என்றார். </p><h2><strong>சிபிஐ ராமச்சந்திரன்</strong></h2><p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழர்கள் மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong> </h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலியாகி உள்ளார். புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு: கோவளத்தில் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chief-ministers-of-southern-states</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-chief-ministers-of-southern-states#comments</comments><guid isPermaLink="false">36951dd6-8723-4043-b936-09af6f957368</guid><pubDate>Thu, 20 Aug 2026 04:07:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T04:07:16.836Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Amit Shah,அமித்ஷா,தென்மாநில முதல்-மந்திரிகள்,south states CM</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/8h7e4efd/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/8h7e4efd/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah">அமித்ஷா</a> தலைமையில் 31-வது தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு சென்னை மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று  நடக்கிறது.</p><h2>அமித்ஷா</h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் சென்னை வந்தடைந்தார்.</p> <p>சென்னை விமானநிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளும் வரவேற்றனர். அதன்பின் அமித்ஷா காரில் கோவளத்திற்கு மாநாடு நடைபெ றும் நட்சத்திர ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.</p> <h2>முதலமைச்சர் விஜய் வரவேற்பு</h2><p>அங்கு நட்சத்திர ஓட்டலில் மத்திய மந்திரி அமித்ஷாவை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas">முதலமைச்சர் விஜய்</a> பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா துணை முதல்-மந்திரி மல்லுப்பட்டி விக்ரமர்கா, அந்தமான்-நிக்கோபர் தீவுகள் துணை நிலை கவர்னர். லட்சத்தீவு அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாநில உயர்அதிகாரிகள் வந்திருந்தனர்.</p> <p>அவர்களும் மத்திய மந்திரி அமித்ஷாவை வரவேற்றனர். அதனை தொடர்ந்து அமித்ஷா சிறிது நேரம் கலந்துரையாடினார். அமித்ஷாவும், விஜய்யும் சந்தித்து சிறிது நேரம் பேசினர். அதன்பின் இரவு விருந்தில் அனைவரும் உணவருந்தினர். இரவில் அந்த ஓட்டலில் அமித்ஷா தங்கினார்.</p><p>மாநாட்டில் பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இன்று மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிப்பதாகவும், அவருக்கு பதிலாக கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது.</p> <h2>மாநாடு</h2><p>இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அதே ஓட்டலில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென் மண்டல குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தென் மண்டல குழுவின் தலைவராக அமித்ஷாவும், துணை தலைவராக முதலமைச்சர் விஜய்யும் உள்ளனர். இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், நீர் பங்கீடு, கல்வி, சுகாதாரம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>நாட்டின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் 'பாரத குழு' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ள மண்டல குழு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும் மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்தும் வகையிலும் இம்மாநாடு நடைபெறுகிறது.</p> <h2>காவிரி விவகாரம்</h2><p>மாநாட்டில் தொகுதி மறுசீரமைப்பு, காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது அணை விவகாரம், 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகாவிடம் தமிழக அரசு தரப்பில் பேசி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <p>இந்நிலையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.</p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர் விஜய் கோவளம் சென்றடைந்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-between-chennai-central-to-mangaluru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-train-between-chennai-central-to-mangaluru#comments</comments><guid isPermaLink="false">d49f4fde-0b2a-4c49-88af-087ba60c58e8</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:42:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:42:16.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,ஓணம் பண்டிகை,onam festival</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wnut6wjw/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/wnut6wjw/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</strong></em></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ஓணம்-பண்டிகை">ஓணம் பண்டிகையை</a> முன்னிட்டு சென்னை சென்ட்ரல்-மங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 28-ந் தேதி இரவு 11.50 மணிக்கு மங்களூருவிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06127) இயக்கப்படுகிறது. </p><p>அதே போல, மங்களூருவில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (06128) இயக்கப்படுகிறது.</p><h2><strong>முக்கிய நிறுத்தங்கள்</strong></h2><p>இந்தச் சிறப்பு ரெயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பய்யன்னூர், நீலேஸ்வரம், காஞ்ஞங்காடு மற்றும் காசர்கோடு ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-department-employment-camp-on-august-22-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/private-department-employment-camp-on-august-22-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4f7d3cf8-b942-4481-be77-6a22874750bf</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:33:16 +0000</pubDate><atom:updated>2026-08-20T03:33:16.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Employment Camp,வேலைவாய்ப்பு முகாம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/77tnczqs/employement.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேலைவாய்ப்பு முகாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேலைவாய்ப்பு முகாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/77tnczqs/employement.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 22-ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.</strong></em> </p><p>சென்னை அசோக்நகரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தப்படவுள்ளது.</p><h2><strong>ஆட்கள் தேர்வு</strong></h2><p>இந்த வேலைவாய்ப்பு முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழில்கல்வி பெற்றவர்கள், என்ஜினீயரிங் பட்டம், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம்.</p><p>இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.</p><p>இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தப்படும் நபர்களின், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அணுகியோ, https://forms.gle/W4Kvwo9LeMZg4sKS7 என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொண்டு பயன்பெறுமாறு சென்னை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: காவிரி விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-20T02:23:26.016Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> <p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><p>வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி</p><p>தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.</p><p>3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2> ஐ.பெரியசாமி உரை</h2><p>நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.</p><p>விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?</p> <p>மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.</p><p>எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்</p><p>150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.</p><p>தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி</p><p>ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி</p><p>ஜல்லி,  எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி</p><p>பெருமளவு கனிமவள பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதாக தொடர் புகார் வந்தன.</p><p>கனிம வளத்தை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு தடை விதித்த ஒரே தமிழக முதல்வர் விஜய் தான்.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், குவாரிகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் சொல்கிறேன் - அமைச்சர் பிரபு</p><p>2016 - 2020 வரை கொரோனா காலம் என்பதால் தான் பசுமை வீடு திட்டத்தை அதிமுக காலத்தில் சரியாக செய்ய முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி</p><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இடங்களில் இடிந்து தொங்குகிறது. தவெக ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் 50 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வீட்டின் தரத்திற்கு கட்டும் பயனாளிகள் தான் பொறுப்பு - கே.என்.நேரு</p><p>கனவு கண்டாலும் கூட திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் 3 மாதத்தில் இடிந்தது - அமைச்சர் மரியவில்சன்</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 56,000 கனஅடி தண்ணீரை தாங்கும் அளவிற்கு பாலம் கட்டப்பட்டது.</p><p>கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் மட்டுமே அணை இடிந்தது.</p><p>கல்லணை இன்னும் இடிந்து போகவில்லை தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் அணைகள் இடிந்து விழுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதை  எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் ஆதவ்</p><p>நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களை போல் அல்ல - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சபாநாயகர் அறிவுரை</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுரை</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி</p><p>நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது.</p><p>கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன - சவுமியா அன்புமணி</p><p>சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர்களால் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. </p><p>ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் அனுபவத்தை நான் மதிக்கிறேன்.</p><p>எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத தவெக கோட்டையாக இனி காட்பாடி இருக்கும் - தவெக எம்எல்ஏ சுதாகர் </p> <p>காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை - தவெக எம்எல்ஏ சுதாகர்</p><p>துரைமுருகனை குறிப்பிட்டு தவெக எம்எல்ஏ பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு</p><p>9 முறை காட்பாடி எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என சொல்வது சரியல்ல.</p><p>தன்னைப் பார்த்து பிற எம்எல்ஏக்கள் செயல்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர் துரைமுருகன்.</p><p>காட்பாடி தொகுதியில் என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லுங்கள். அவையில் இல்லாதவர் பற்றி பேசுவது சரியல்ல - எ.வ.வேலு</p><p>காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பான நீங்கள் என்ன செய்தீர்கள்.</p><p>அச்சம் என்ற வார்த்தையே எங்கள் தலைவரின் அகராதியில் இல்லை -  அமைச்சர் அருண்ராஜ்</p> <p>காவிரி பிரச்சனை 1987-ல் எம்ஜிஆர் காலத்திலேயே வழக்கு தொடர்ந்தோம். </p><p>அதிமுக, திமுக அரசாங்கம் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் பேசலாம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>திமுகவின் துரோகம் என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் யாரும் எந்த துரோகமும் செய்ய முடியாது - கே.என்.நேரு</p><p>காவிரி விவகாரத்தில் இந்த அவையில் பல விவாதங்கள் நடந்துள்ளன - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>ஒருமையில் பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும். பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொள்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p>பைத்தியம் போல் பேசுவதாக திமுக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவையில் பேசும் வார்த்தையா இது? </p><p>அடிக்கப் பாய்வது போல் வருகின்றனர். திமுகவினர் அடிக்கப் பாய்வதுபோல் வருகிறார். கையை ஓங்குகிறார் -  அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ராஜ்மோகன் பேசக்கூடாது - கே.என்.நேரு</p><p>காவிரி விவகாரம் - சட்டசபையில் காரசார விவாதம்</p><p>காவிரி விவகாரத்தில் வழக்கு வாபஸ் பெற்றதற்கான காரணத்தை விளக்கமாக பேரவையில் ஏற்கெனவே கூறி உள்ளோம்.</p><p>காவிரி பகுதியில் பிறந்து, அங்கே வளர்ந்த விவசாயிகளான நாங்கள் எப்படி காவிரி நீரை விட்டுக் கொடுப்போம்.</p><p>பிரதமர் எங்களை அழைத்து சமாதானம் பேசினார். வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது - கே.என்.நேரு விளக்கம்</p> <p>பிரதமர் பேச்சை கேட்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தான் திமுக மீது குற்றச்சாட்டு, உண்மை ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காவிரி பிரச்சனையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் - சபாநாயகர்</p><p>அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முதல்வரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் - சபாநாயகர்</p><p>177.25 டிஎம்சி தமிழகத்திற்கு உரிமை என்ற தீர்ப்பு கிடைத்த பின் ஆணையம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்தது.</p><p>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ஆணையம் அமைத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சாரும்  - ஓ.எஸ்.மணியன்</p><p>சர்கார் போஸ்டரை கிழிக்காமல் இருந்திருந்தால் இன்று அதிமுகவிற்கு இந்த நிலை வந்திருக்காது.</p><p>சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி வரும், போகும். விஜய்யின் ரசிகன் என்பதே நிரந்தரமான ஒன்று. ரூ.2 கோடி ஒரு பக்கமும், விஜய் படம் ஒரு பக்கமும் இருந்தால், நிச்சயம் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்யின் படத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள்.</p><p>சபாநாயகர் எங்கள் கட்சிக்கு கிடைத்த வரம் என்றுதான் கூறவேண்டும். அவர் கேட்ட தொகுதி கிடைக்காவிட்டாலும், வேறு தொகுதி வழங்கப்பட்டு வெற்றிப்பெற்றார்.</p><p>மரியவில்சன் எவ்வாறு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற பயம் இருந்தது. ஆனால் அவர் தெளிவாக, மிகச்சிறப்பாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். - அமைச்சர் ஆனந்த்</p><h2>சர்க்கார் பேனரை கிழித்ததால் ஆட்சியை இழந்த அதிமுக: அமைச்சர் என்.ஆனந்த்</h2><p>* முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிப் பழகியவன் நான்.</p><p>* சாதி, மதம், பணம் எதுவுமே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எடுபடவில்லை.</p>]]></content:encoded></item><item><title>மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-met-home-minister-amit-shah#comments</comments><guid isPermaLink="false">3abe17e7-d068-4d9d-9206-97bf3837628b</guid><pubDate>Wed, 19 Aug 2026 21:18:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T21:18:54.040Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4wygd99o/Amit-shah-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit shah and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/4wygd99o/Amit-shah-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மாநில முதல்வர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டின் தென்மண்டலக் குழுவின் துணை தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.</p><p>இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு அவர் வருகை தந்தார். நட்சத்திர ஹோட்டலுக்கு வருகை தந்த அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் வரவேற்றார்.</p><p>முதல் அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று அமித் ஷாவை சந்தித்தார். இரவு நடைபெறும் உணவு விருந்தில் அமித்ஷா மற்றும் விஜய் உள்பட மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு காவல்துறை மீதான புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு துவக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/for-public-attention-a-dedicated-wing-to-report-corruption-allegations-against-the-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/for-public-attention-a-dedicated-wing-to-report-corruption-allegations-against-the-police#comments</comments><guid isPermaLink="false">a43ee758-2c3d-49f0-8b46-83beae2ac968</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:36:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:36:44.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,Internal Vigilance Cells,உள்-கண்காணிப்புப் பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wvwbn9pz/New-Project-2026-08-19T220456.991.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் கவனத்திற்கு... தமிழ்நாடு காவல்துறை மீதான புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு துவக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wvwbn9pz/New-Project-2026-08-19T220456.991.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காவல் துறையில் போலீசார் மீதான ஊழல், லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற புகார்களைத் தெரிவிக்க மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக புதிய விசாரணை தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. </p><p>அதன்படி சென்னை காவல் துறையினர் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க 78717 23000 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களுக்கும் தனித்தனி மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>இதன்மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிமையாக வாட்ஸ்அப் மற்றும் மொபைல் எண்கள் மூலம் அனுப்பலாம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>புகார் அளிப்பவர்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது. </p><p>அனைத்து புகார்களும் உரிய காலக்கெடுவுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஊழலற்ற காவல்துறையை உறுதிசெய்ய மக்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் தமிழ்நாடு டிஜபி அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> உள்-கண்காணிப்புப் பிரிவுகளின் செயல்பாடுகள் மூத்த காவல் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் சர்கார் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-consequence-of-107-fools-occupying-the-house-aiadmk-hits-back-at-minister-anands-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-consequence-of-107-fools-occupying-the-house-aiadmk-hits-back-at-minister-anands-criticism#comments</comments><guid isPermaLink="false">6cb698e7-0453-4ac3-8f72-1f8c19e8ea95</guid><pubDate>Wed, 19 Aug 2026 16:20:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T16:20:36.119Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Sarkar,சர்கார்,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jh6h8qye/New-Project-2026-08-19T214648.607.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்ததன் விளைவு’ - அமைச்சர் ஆனந்தின் விமர்சனத்திற்கு அதிமுக பதிலடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/jh6h8qye/New-Project-2026-08-19T214648.607.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் ஆனந்த், விஜய் நடித்த சர்கார் படப்பேனரை கிழித்ததால்தான் அதிமுக ஆட்சியை இழந்தது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆனந்தின் இந்தப் பேச்சுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அதிமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததை அஇஅதிமுக குறித்து சட்டமன்றத்தில் பேசியுள்ள அமைச்சர் ஆனந்துக்கு கண்டனம்!</p><p>நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அதைத் தவிர எல்லாவற்றையும் பேசினார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.</p><p>அவர் அவரது கட்சி குறித்தும், அவரது தலைவர் குறித்தும் பேசியது பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. பிளாக் டிக்கெட் வித்தது எல்லாம் ஒரு வரலாறா? என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதும் இல்லை.</p><p>ஆனால், தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வை சீண்டும் வகையில் பேசியிருக்கிறார். அதற்கான எதிர்வினையை நிச்சயம் அவர் எதிர்கொள்ள வேண்டும்.</p><p>அதாவது, சர்கார் திரைப்பட பேனர்களை கட்சித் தொண்டர்கள் கிழித்ததால் தான் அஇஅதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லையாம். அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் அவையை ஆக்கிரமித்து இருப்பதால் இந்த அலங்கோலத்தை கேட்கும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது.</p><p>உலகில் வாழும் தமிழர்கள் உள்ளமெல்லாம் வீற்றிருக்கும் உன்னதத் தாய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி, தவறான வகையில் அரசியல் ரீதியாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பார்களா என்ன?</p><p>அப்போதும் சரி, </p><p>இப்போதும் சரி,</p><p>எப்போதும் சரி,</p><p>எங்கள் இதயதெய்வங்களை பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இந்த இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான்! அவனது அரசியல் எதிர்வினை, எதிரிகளின் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடும்!</p><p>அதே சர்கார் படத்தில் நீங்கள் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த “அம்மா லேப்டாப்”களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள்? அன்று பழித்து பேசிய ஜெயலலிதாவின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கேவலமாக இல்லையா?</p><p>2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழ்நாடு மக்களின் சாதாரான எண்ணப்படி தான் எங்கள் வெற்றி வாய்ப்பு நழுவியது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம்.</p><p>அதனால், “பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே” என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே..!!</p><p>(பி.கு. : சர்கார் பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் இலவச விளம்பரம் கிடைத்ததற்காக..!!)” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘கஜானா காலி... கார் மட்டும் எப்படி? இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்’ - திமுக எழிலன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-treasury-is-empty-how-is-this-alone-possible-it-should-be-given-only-to-those-who-do-not-own-a-car-dmks-ezhilan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-treasury-is-empty-how-is-this-alone-possible-it-should-be-given-only-to-those-who-do-not-own-a-car-dmks-ezhilan#comments</comments><guid isPermaLink="false">01fb97ca-60f5-4380-8ff8-1b766685301a</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:57:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:57:36.751Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Car,கார்,Ezhilan Naganathan,எழிலன் நாகநாதன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/oxlt7gq6/New-Project-2026-08-19T212651.799.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கஜானா காலி... இது மட்டும் எப்படி? கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டும்’ - திமுக எழிலன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/oxlt7gq6/New-Project-2026-08-19T212651.799.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களில் கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும் என முதலமைச்சர் அறிவிப்பு தொடர்பாக திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவ அணிச் செயலாளருமான எழிலன் நாகநாதன் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, உதவியாளர் வழங்குவது மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது தொடர்பானது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3 கோடி அளவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த எம்.எல்.ஏ. நிதி என்ற நடைமுறையை முத்தமிழறிஞர் கலைஞர்தான் கொண்டு வந்தார்.</p><p>ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படைப் பொறுப்பு என்ன? சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவுகளை விவாதிப்பது, அவற்றை சட்டங்களாக மாற்றுவதற்கான பணிகளில் பங்கேற்பது, மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பது, அவர்களின் தேவைகளுக்கான திட்டங்களை உருவாக்குவதில் பங்களிப்பது, தொகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது என்பதுதான். அதற்காகத்தான் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டது.</p><p>ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி என்ற அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்கிறது என்றால், ஐந்து ஆண்டுகளில் ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கணிசமான நிதியை நேரடியாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. </p><p>இப்போது அரசாங்கமே பொருளாதார நெருக்கடி இருப்பதாகச் சொல்கிறது. கடுமையான நிதிக் கட்டுப்பாட்டில் அரசு செயல்படுகிறது என்று கூறுகிறது. அப்படியிருக்கும்போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவாக கார், உதவியாளர், சம்பளம், பெட்ரோல் மானியம் போன்ற சலுகைகளை வழங்குவது அவசியமா?</p><p>ADR உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், தற்போதைய சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ஏழை, எளிய, சாமானிய மக்களை சட்டமன்றத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறும்போது, உண்மையில் யாருக்கு வாகனம் தேவைப்படுகிறது, யாருக்கு தேவையில்லை என்பதை அவர்களுடைய அஃபிடவிட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாமே? </p><p>பெரிய அளவிலான சொத்துகளையும், வாகனங்களையும் வைத்திருக்கும் ஒருவருக்கும், உண்மையில் வாகன வசதி இல்லாத ஒருவருக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்குவது சரியான அணுகுமுறையா?. தேவைப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் உதவி வழங்கும் முறையை உருவாக்கலாம். </p><p>இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒருபுறம் விவசாயக் கடன் தள்ளுபடி, பல்வேறு நலத்திட்டங்கள், நிதிப் பற்றாக்குறை என்று கூறுகிறீர்கள். மறுபுறம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார், உதவியாளர், பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறீர்கள். இது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்த கேள்வியை எழுப்புகிறது.</p><p>மேலும், முந்தைய ஆட்சியினர் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றார்கள், கடுமையான நிதிச்சுமையை விட்டுச் சென்றார்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமே, இப்போது இப்படிப்பட்ட புதிய செலவினங்களை அறிவிக்கும்போது, அது இரட்டை நிலைப்பாடாக உள்ளது. ” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் எவ்வளவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-salary-of-tamil-nadu-mlas#comments</comments><guid isPermaLink="false">9c9623b6-26da-47a8-93ce-0a20efc166bf</guid><pubDate>Wed, 19 Aug 2026 15:35:55 +0000</pubDate><atom:updated>2026-08-19T15:35:55.029Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gepyy7tp/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/gepyy7tp/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கார் வழங்கப்படும். வாகனப்படி 75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். உதவியாளர்படி 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.</p><h2>அடிப்படை சம்பளம்</h2><p>அதன்படி ஒரு எம்.எல்.ஏ. இதற்கு முன்னதாக அடிப்படை சம்பளம் மற்றும் படிகள் மூலமாக 1.05 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றனர். தற்போது அது 1.80 லட்சம் கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>அடிப்படை ஊதியம் முன்னதாக 30 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது அது 30 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.</p><p>மாதாந்திரப்படி 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போதும் அது 10 ஆயிரமாக உள்ளது. தொகுதிப்படி 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அது அப்படியே உள்ளது, அஞ்சல் படி 2500 ரூபாய், தொலைபேசிப்படி 7500 ரூபாய், தொகுப்புப்படி 5 ஆயிரம் ரூபாய் என இருந்தது. தற்போதும் அதுவே நீடிக்கிறது.</p><h2>கார் மற்றும் உதவியாளர் படி</h2><p>தற்போது வாகனப்படி 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. உதவியாளர் படி 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது. அத்துடன் காரும் வழங்கப்படுகிறது.</p><p>ஒரு தொகுதிக்கு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு 3.54 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 பேருக்கு மருத்துவ இடம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shanmuganathan-kanagavalli-charitable-trust-free-neet-coaching-centre-in-magudanchavadi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shanmuganathan-kanagavalli-charitable-trust-free-neet-coaching-centre-in-magudanchavadi#comments</comments><guid isPermaLink="false">69397f32-7464-4a83-91d5-e394140d3958</guid><pubDate>Wed, 19 Aug 2026 14:55:52 +0000</pubDate><atom:updated>2026-08-19T14:55:52.993Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/rs4jbmhe/0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/rs4jbmhe/0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் மாணவர்களுக்காக ஒரு இலவச நீட் (NEET) பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. பயிற்சி பெறுவதில் தடைகளை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.</p><p>கங்கா ஹாஸ்பிடல்ஸ் (Ganga Hospitals) நிறுவனத்தால் 2024-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்மையம், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள், பாடக் குறிப்புகள், வழிகாட்டுதல் மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றை அவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதச் செலவுமின்றி வழங்குகிறது.</p><p>திருமதி காயத்ரி, டாக்டர் சண்முகநாதன் மற்றும் திருமதி கனகவள்ளி ஆகியோரின் பேத்தி ஆவார். சண்முகநாதன்- கனகவள்ளி பேத்தியான Curi மருத்துவமனை நிர்வாக இயக்குநர் திருமதி காயத்ரி 2024-ம் ஆண்டில் சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளையின் இலவச நீட் (NEET) பயிற்சி மையத்தை தொடங்கினார்.</p><p>இந்த அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேருக்கு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்பில் இடம் கிடைத்துள்ளது.</p><p>நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கான இடம் கிடைப்பது குறித்து காயத்ரி கூறுகையில் "மற்ற தொழில்களுடன் ஒப்பிடுகையில், உங்கள் பிள்ளை மருத்துவராவதில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. குறிப்பாக, அவர்கள் தங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்கும்போது அந்தச் சிறப்பு இன்னும் அதிகமாகிறது.</p><p>என் பையன் அல்லது பொண்ணு டாக்டர் என்று சொல்வதில், அந்த வார்த்தைகளின் நேரடிப் பொருளைத் தாண்டி ஆழமான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அது ஒரு அமைதியான மரியாதை, கண்ணியம் மற்றும் வேலைக்கான உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அக்குடும்பத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் அது உருவாக்கித் தரும் வாழ்க்கைப்பாதை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை மிகச் சிறப்பானவை.</p><p>பல மாணவர்களுக்கு, வகுப்பறைக்குச் செல்வதே ஒரு தினசரித் தடையாக இருந்தது. சிலர் வகுப்பிற்குச் செல்ல ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் பயணம் செய்துவிட்டு, பின்னர் வீட்டிற்குத் திரும்பி, இரவில் படிப்பதற்கு முன்பு வீட்டிலும் வயலிலும் சிறுசிறு வேலைகளைச் செய்தனர். இந்தத் தடைகள் பெரும்பாலும் உந்துதல் அல்லது ஆர்வத்தைப் பற்றியதாக இல்லை, மாறாக அணுகல் தொடர்பானவையே இருந்தது. அருகில் பயிற்சி மையம் இல்லை, பயிற்சி கட்டணம் செலுத்த வழியில்லை. தமிழில் வாசிப்பு பொருட்களுக்குப் பற்றாக்குறை. குறிப்பாகப் பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான ஊக்கமின்மை. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மையம் தனது பெண் மாணவர்களுக்காக ஒரு தங்கும் விடுதி வசதியை அமைத்தது.</p><figure><img alt="சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/3h0rzs5d/0001.jpg" /></figure> <p>கற்பித்தல் முறையானது, ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிராமல், ஒவ்வொரு மாணவரையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. நாங்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை மட்டும் கற்பிக்கவில்லை. நாங்கள் கற்பித்துக் கொண்டும், வாழ்க்கைப் பாடங்கள் வெளிப்படுவதைக் கண்டுகொண்டும் இருந்தோம்.</p><p>ஒவ்வொரு மாணவரையும், அவர்களின் அச்சங்கள் மற்றும் கற்றல் இடைவெளிகளையும் புரிந்துகொண்டு, அவர்கள் தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்வியில் பயின்றாலும் சரி, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வாசிப்புத் திட்டத்தை வடிவமைக்க ஆசிரியர்கள் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.</p><p>வாராந்திரத் தேர்வுகள், விடைத்தாள் குறித்த கலந்துரையாடல்கள், புதன்கிழமை மாலை நேர காணொளிச் சந்திப்புகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் நிலையான தினசரி கால அட்டவணை போன்றவை மையத்தின் செயல்பாட்டு நடைமுறையாக இருந்தது.</p><p>மகுடஞ்சாவடியில் உள்ள வகுப்பறைகளிலிருந்து மருத்துவக் கல்லூரிகளின் வளாகங்கள் வரை நீளும் இவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்றார்.</p> ]]></content:encoded></item></channel></rss>