<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 26 Jul 2026 19:53:23 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-july-2026#comments</comments><guid isPermaLink="false">31ef8afe-34cc-49f3-ad59-6c3bec2d6756</guid><pubDate>Sun, 26 Jul 2026 03:48:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T17:14:33.345Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/sgf9d9gb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/kandararu-brahmadathan-to-be-new-sabarimala-tantri">சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு</a></p><p>* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.</p><p>* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/revanth-reddy-telangana-assembly-lower-minimum-age-to-contest-ls-assembly-polls-to-21">தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு</a></p><p>* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.</p><p>* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-scripts-history-becomes-1st-indian-to-win-junior-world-championship">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-volunteers-cleaning-the-streets-at-jantar-mantar">ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்</a></p><p>* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt">டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!... </a></p><p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/shock-in-germany-car-attack-at-berlin-pride-parade">ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!... </a></p><p>* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.</p><p>* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/noul-typhoon-prompts-red-alert-in-guangdong-flights-and-trains-suspended">சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...</a> </p><p>* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது. </p><p>* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-cjp-protest-failure-of-central-govt-opposition">ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே</a></p><p>* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.</p><p>* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajnath-singh-lays-wreath-at-the-kargil-war-memorial-to-pay-tribute-to-bravehearts-who-laid-down-their-lives-in-kargil-war-in-1999">கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை</a></p><p>* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.</p><p>* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-demand-end-to-exam-paper-leaks-from-new-education-minister-pralhad-joshi">இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!... </a></p><p>*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p> •வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thanks-to-critics-this-is-just-the-beginning-abijeet-deepke">எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே... </a></p><p>* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள்   ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.</p><p>* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-uk-says-armed-forces-ready-to-defend-country-over-us-bombers">ஈரானின் திடீர் எச்சரிக்கை: இங்கிலாந்தின் அளித்த தரமான பதில்..!</a></p><p>* ஈரானின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகள் தயாராக உள்ளன.</p><p>* சொந்த மண் அல்லது வெளிநாட்டு மண்ணிலும் இருந்து பாதுகாத்துக் கொள்வோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered">மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!... </a></p><p>*சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><p>*தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains">மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!... </a></p><p>*காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>*ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/tirupati-temple-devotees-wait-for-18-hours-for-darshan">திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்</a></p><p>* உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.</p><p>* திருப்பதியில் நேற்று 70,216 பேர் தரிசனம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/no-talks-with-pakistan-except-on-pok-rajnath-singh-on-kargil-vijay-diwas">ஆக்கிரமிப்பு காஷ்மீரை தவிர பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ராஜ்நாத் சிங்</a></p><p>* இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.</p><p>* ​​பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr">சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்..</a></p><p>* இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரையில் உணவு டெலிவரி</p><p>* வெள்ளை நிற குதிரையில் உணவு டெலிவரி செய்த ஜொமாட்டோ ஊழியர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/protesters-besiege-governor-house-in-chennai-over-neet">தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்</a></p><p>* அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>* தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven">கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!... </a></p><p>*திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.</p><p>*7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur">கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் : அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</a></p><p>* தமிழக அரசைக் கண்டித்து கர்நாடக எல்லையில் இன்று அதிரடி போராட்டம்.</p><p>* அத்திப்பள்ளி எல்லையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மறியல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-defence-new-peak-mann-ki-baat-modi-pride" rel="nofollow">பாதுகாப்பு துறையில் இந்தியா புதிய உச்சம்- 'மன்கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>* இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் விண்வெளி துறையில் நிகழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க தருணம் இதுவாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-odesa-port-attack-on-indian-sailors-cargo-ship-mv-agl-hit-2-indians-safe-2-missing">உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் - கருங்கடலில் தொடரும் பதற்றம்</a><br></p><p>*எம்வி ஏஜிஎன் என்ற அந்த கப்பல் நேற்று ஒடெசா துறைமுகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>*நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-pellet-gun-row-police-crackdown-on-peaceful-march-rahul-gandhi-questions-amit-shah">மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்த உத்தரவிட்டது நீங்களா? - அமித் ஷாவுக்கு ராகுல் கடிதம்</a></p><p>*சீருடையின்றி சாதாரண உடையில் மாணவர்களை லத்திகளால் தாக்கியவர்கள் போலீஸ்காரர்களாஅல்லது தன்னார்வலர்களா</p><p>*சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</a></p><p>*  திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.</p><p>*  இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது என உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hindutva-leader-satyam-pandit-caught-on-video-assaulting-neet-protest-students">Video: ஜந்தர் மாந்தர் போராட்டத்தில் இந்துத்துவா தேசியவாத தலைவர் மாணவர்களைத் திட்டி, தாக்கும் காட்சி வைரல்!</a></p><p>* மாணவர்களைத் தாக்கிய சத்யம் பண்டிட்டை கைது செய்ய அரசியல் தலைவர்கள் கடும் வலியுறுத்தல்</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-democratic-space-shrinking-justice-ujjal-bhuyan-warns-of-curbs-on-dissent">கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா?.. இந்தியாவில் சுதந்திரம் சுருங்கி வருவதாக உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை</a></p><p>*காசாவுக்காக போராடுவது தேசபக்தி அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியதையும் உஜ்ஜல் புயான் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.</p><p>*விவாதமும், மாற்றுக்கருத்தும் தான் ஜனநாயகத்தின் சாரம். துரதிஷ்டவசமாக அது குற்றமாக மாற்றப்பட்டு வருகிறது</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/rajinikanth-biopic-superstars-life-story-to-be-made-into-a-film">நான் யானை இல்ல; குதிரை!.. திரைப்படமாக உருவாகும் ரஜினியின் வாழ்க்கை?</a></p><p>*ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அளித்த ஒரு பேட்டியில், தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியிருந்தார்.</p><p>*சந்திரமுகி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "நான் யானை இல்ல; குதிரை. டக்குனு எழுதிருச்சிடுவேன்" என கூறியது சிறந்த உதாரணம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-ministers-daughter-joins-neet-protest-bjp-supporters-slam-her-anti-modi-slogans">நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அசாம் அமைச்சர் மகள்.. முதல்வர் ஹிமாந்தா ரியாக்ஷன் இதுதான்</a></p><p>*நாளை என் மகன் வக்கீல் ஆனால், எனக்கு பிடிக்காத ஒருவருக்கு கூட ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம்</p><p>*சமூக வலைத்தளங்களில் அக்கட்சி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-announces-high-level-panel-for-exam-reforms" rel="nofollow">தேர்வு சீர்த்திருத்தம்: இன்போசிஸ் இணை நிறுவனர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு- பிரதமர் மோடி அறிவிப்பு</a></p><p>* போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.</p><p>*  தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh" rel="nofollow">பிரதமரின் களங்கப்பட்ட பிம்பத்தைச் சரிசெய்யவே புதிய உயர்மட்ட குழு..!- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்</a></p><p>* தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>* தேசிய தேர்வு முகமைக்கு ஒரு முழுநேர தலைமை இயக்குநரைக்கூட அது நியமிக்கவில்லை.</p>]]></content:encoded></item><item><title>சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-firecracker-factory-accident-death-toll-rises-to-4-11-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-firecracker-factory-accident-death-toll-rises-to-4-11-arrested#comments</comments><guid isPermaLink="false">09387a25-8ddb-4474-a639-2c6c618f9348</guid><pubDate>Sun, 26 Jul 2026 16:29:49 +0000</pubDate><atom:updated>2026-07-26T16:29:49.804Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>explosion,வெடிவிபத்து,விருதுநகர்,Virudhunagar,Illegal Firecracker,சட்டவிரோத பட்டாசு ஆலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/6gxmzudr/New-Project-2026-07-26T215617.593.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டவிரோத பட்டாசு ஆலைவிபத்து - உயிரிழப்பு 4ஆக உயர்வு - 11 பேர் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/6gxmzudr/New-Project-2026-07-26T215617.593.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்துள்ளனர். </p><h2>சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை</h2><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள தகரக் கொட்டகை ஒன்றில், சட்டவிரோத பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இங்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p>இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை இங்கு 5 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயணைப்புப் பணிகளை தொடங்கியுள்ளனர். </p><p>அப்போது இடுபாடுகளில் சிக்கி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் ராம்பிரகாஷ், இன்னாசி முத்து, ஐயப்பராஜ் மற்றும் பாண்டித்துரை என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராமச்சந்திரன் என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். </p><h2>11 பேர் கைது</h2><p>இந்நிலையில் பள்ளபட்டியை சேர்ந்த திருப்பதி என்பவர் இந்த பட்டாசு ஆலையை நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளரான திருப்பதி (37), திருத்தங்கலை சேர்ந்த முத்துக்குமார் (41), கணேசன் (50), ஞானசேகரன் (49), நாகார்ஜுன் (29), ராஜசேகர் (36), அந்தோணி ராஜ் (26), ஜெயசேகர் (30), நாரணாபுரத்தை சேர்ந்த முனியசாமி (32), முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சங்கிலி திருமுருகன் (27), அருள் குமார் (35) ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>காதலுக்கு மறுப்பு.. பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்- சிதம்பரத்தில் பரபரப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-girl-attacked-by-electrician-over-rejected-love-in-chidambaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-girl-attacked-by-electrician-over-rejected-love-in-chidambaram#comments</comments><guid isPermaLink="false">40d1550d-6188-49c6-9cfb-c61061486cdc</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:31:15 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:31:15.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர்,murder attempt,சிதம்பரம்,youth attempt,மாணவி கொலை முயற்சி,Chidhambaram</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/67rf5pc6/Chidhambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Youth murder attempt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/67rf5pc6/Chidhambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.</p><h2>பிளஸ்-1 மாணவி</h2><p>இவர் அப்பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை அய்யப்பன், அந்த மாணவி வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றதாக தெரிகிறது.</p><p>அப்போது அங்கு தனியாக இருந்த மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார். மேலும், அந்த மாணவியிடம் அத்துமீறியும் நடக்க முயன்றதாக தெரிகிறது.</p><p>இதனால் அந்த மாணவி சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த அய்யப்பன் சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். மாணவி தொடர்ந்து சத்தம் எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தான் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து  மாணவியின் கழுத்தை அறுத்தார்.</p><h2>மருத்துவமனையில் சிகிச்சை</h2><p>இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><p>இதையடுத்து கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>விசாரணை</h2><p>சிதம்பரம் தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணம் உறுதி..?- அமைச்சர் வினோத் ரவி முக்கிய தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-karnataka-trip-vinoth-ravi-clarifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-karnataka-trip-vinoth-ravi-clarifies#comments</comments><guid isPermaLink="false">d8c215bd-a887-433f-8ab9-ec3da8c17111</guid><pubDate>Sun, 26 Jul 2026 13:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-26T13:08:03.023Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,கர்நாடகா பயணம்,அமைச்சர் வினோத் ரவி,Minister Vinoth Ravi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/s7qlw1k4/Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth Ravi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/s7qlw1k4/Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகம்- கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.</p><p>இதனிடையே காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.</p><h2>கர்நாடகா பயணம்</h2><p>இந்தநிலையில் காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருகிற 3-ந்தேதி கர்நாடகத்துக்கு வருமாறு முதலமைச்சர் விஜய்க்கு, அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்.</p><p>அந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் வருகிற 3-ந்தேதி கர்நாடகா சென்று  பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வார் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி நேற்று முன்தினம் கூறி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்வார் என்று தான் கூறிய  தகவலை அமைச்சர் வினோத் ரவி மறுத்துள்ளார்.</p><p>இது தொடர்பாக அமைச்சர் வினோத் ரவி இன்று காலை கும்பகோணத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><h2>தலைமை அறிவிக்கும்</h2><p>அப்போது அவர்,"மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்றார்.</p><p>பெங்களூரில் நடை பெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் ஆகஸ்டு 3-ந்தேதி கர்நாடகா சென்று முதலமைச்சரை சந்திப்பார் என கூறிய நிலையில் இன்று கர்நாடக பயணம் குறித்து தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-6-districts-of-tamil-nadu-till-7-pm#comments</comments><guid isPermaLink="false">f3666553-0e54-4c03-b39b-529d3156fb26</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:37:04 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:37:04.059Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,TN weather,தமிழக வானிலை,சென்னை வானிலை,chennai Meteorological Centre,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/a2c5s9ek/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. </p><p>இதன் எதிரொலியால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எந்தெந்த மாவட்டங்களில் மழை?</h2><p>தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-next-month#comments</comments><guid isPermaLink="false">0f0b452c-93d4-4820-acd3-26abd92fc732</guid><pubDate>Sun, 26 Jul 2026 11:14:41 +0000</pubDate><atom:updated>2026-07-26T11:14:41.572Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/yoqqr1wq/New-Project-2026-07-26T164421.034.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆக.1ம் தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். </p><p>அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு ஒன்றில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;</p><p>“ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. </p><p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு வருகிறார்.</p><p>அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். </p><p>தமிழ்நாடு மக்கள் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு- செந்தில் பாலாஜியிடம் இன்று 2ம் நாள் விசாரணை நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed#comments</comments><guid isPermaLink="false">07186606-982e-4657-99d7-2795cdf16df7</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:26:39 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:26:39.496Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,bribery case,Investigation by police,பேரம் வழக்கு,விசாரணை நிறைவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/kteuq8rz/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்ஜாமீன் பெற்றுள்ளார். தினமும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன்படி நேற்று செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக ரூ.35 கோடி பேர வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.</p><p>இந்த நிலையில் இன்று 2-வது நாளாக செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி போலீசில் ஆஜரானார். அவரிடம் இன்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணை நிறைவடைந்தது.</p><h2>கலைக்க கூடாது</h2><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p>வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.</p>]]></content:encoded></item><item><title>16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-social-media-use-for-those-under-16-must-be-imposed-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">29e936d4-0501-4a2d-a710-d0b1e1d1a353</guid><pubDate>Sun, 26 Jul 2026 10:14:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T10:14:56.612Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,social media,teenagers,சமூக வலைதளங்கள்,பதின் பருவத்தினர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/h6uvy4dd/New-Project-2026-07-26T154436.459.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். </p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்க வேண்டும்.</p><p>பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும்  ஜனவரி மாதம் முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும். </p><p>இந்த சட்டத்தின்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க முடியாது. ஏற்கனவே தொடங்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகள் ஜனவரி முதல் முடக்கப்படும். ஐரோப்பிய யூனியனில் இத்தகைய தடையை கொண்டு வந்துள்ள முதல் நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>குழந்தைகளில் நலன் கருதி அவர் சமூக ஊடகங்களை பயன்படுத்த முதன்முதலில் தடை விதித்த நாடு  ஆஸ்திரேலியா தான். கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அந்நாட்டில் இந்தத் தடை நடைமுறைக்கு வந்த பிறகு கனடா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளும் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளன. </p><p>இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 50&amp;க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இதே போன்ற தடையை கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்தியாவில் கர்நாடகம் மற்றும் ஆந்திர அரசுகள் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.</p><p>இந்தியாவிலும் சமூக ஊடகங்களை தடை செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களின் வாயிலாக ஆபாச உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு செல்வதாகவும், அதனால் கவனச் சிதறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025&amp;26ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், சமூக ஊடகங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல, உடல்நல பாதிப்புகள் குறித்து விரிவான விளக்கப்பட்டிருந்தது.</p><p>குழந்தைகளின் பதட்டம், மன அழுத்தம், சுயமரியாதைக் குறைவு, இணையவழி சீண்டல்களால் ஏற்படும் &nbsp;பாதிப்புகள் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பது தான் காரணம் என்றும், 16 முதல் 24 வயது பிரிவினர் தான் இத்தகைய பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது. </p><p>இவற்றைத் தடுக்க குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்; ஆன்லைன் வகுப்பு கூட குழந்தைகளுக்கு கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.<br><br>அண்மையில் நடத்தப்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், சமூக ஊடகங்களின் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் திறன் குறைவதாகவும், கவனச் சிதறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. </p><p>சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை தங்களுடன் மாணவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவும், அதனால், அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் குறைவதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.</p><p>இவை அனைத்துக்கும் மேலாக புத்தகங்களையும், கட்டுரைகளையும் படிக்கும் வழக்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது. சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் &amp; மாணவர்கள், ஏதேனும் காணொலியைப் பார்க்கும் போது 8 வினாடிகளுக்குள் அது தங்களை கவரவில்லை என்றால், அவர்கள் அதை தவிர்த்து விட்டு அடுத்த காணொலியைப் பார்க்கச் சென்று விடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. </p><p>பெரியவர்களுக்கே இந்த பிரச்சினை இருக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சொல்லத் தேவையில்லை.</p><p>சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அடிமையான பிறகு விளையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட உடல்திறன் சார்ந்த விளையாட்டுகளை குழந்தைகள் மறந்து விட்டனர். ஆன்லைன் விளையாட்டுகளை மட்டுமே அவர்கள் விளையாட்டாக கருதுகின்றனர். </p><p>இதனால் உடல் பருமன், விட்டமின்&amp; டி குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகளிலிருந்து &nbsp;குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால் சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பது தான் தீர்வாகும்.</p><p>கர்நாடகம், ஆந்திரம், கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை தடை செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், அதை நோக்கிய உறுதியான நடவடிக்கைகளை எந்த மாநில அரசும் மேற்கொள்ளவில்லை. </p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை. </p><p>இந்தியாவில் &nbsp;தொலைத்தொடர்பு (Communication) என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத்தியப் பட்டியலில் 31&amp;ஆம் &nbsp;பொருளாக இடம் பெற்றுள்ளது. </p><p>அதனால், மாநிலப் பட்டியலில் உள்ள பொது சுகாதாரம், குழந்தைகள் நலன் ஆகிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு மாநில அரசுகள் தடை விதித்தாலும் அவை சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் வாய்ப்புள்ளது.</p><p>குழந்தைகளின் உடல் நலன், மன நலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை சமூக ஊடங்களின் பிடியில் இருந்து மீட்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு உடனே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நட்சத்திர ஹோட்டல், பார்களுக்கான FL3 உரிமம் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-to-renew-fl3-licence-for-star-hotels-and-bars-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">37a47e8a-a235-44d2-b6f7-de5bdd08755d</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:46:56 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:46:56.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>star hotels,FL 3 License,club bars,FL 3 உரிமம்,நட்சத்திர ஹோட்டல்,கிளப் பார்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FL 3 License  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/m2647eay/bar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இயங்கும் பார்களில் மதுபான விற்பனை செய்வதற்கான 'FL 3 உரிமத்தைப்' புதுப்பிக்கத் தவறவிட்ட உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது.</p><p>தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் விதிமுறைகளின்படி, நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்ய அளிக்கப்படும் FL 3 உரிமங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. 2026-2027-ஆம் நிதியாண்டிற்காக இந்த உரிமத்தை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாகப் புதுப்பிக்க வேண்டும்.</p><h2><strong>கால அவகாசம் நீட்டிப்பு:</strong></h2><p>நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கத் தவறிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, உரிய அபராதக் கட்டணத்துடன் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு வாய்ப்பளித்துள்ளது.</p><h2><strong>ஆன்லைன் மூலம் விண்ணப்பம்:</strong></h2><p>தகுதியுள்ள உரிமையாளர்கள் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://renew-fl-license.cpe.tn.gov.in வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் கட்டணத்தைச் செலுத்திப் புதுப்பித்துக் கொள்ளலாம். நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனியார் ஹோட்டல்கள், சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிகள் மற்றும் அனுமதி பெற்ற கிளப் பார்கள் ஆகியவற்றிற்கு இது பொருந்தும்.</p><h2><strong>சட்ட நடைமுறைகள்:</strong></h2><p>ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் மூலம் நேரடி கள ஆய்வு நடத்தப்படும். அனைத்து தீயணைப்புத் துறை சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லாச் சான்றிதழ் மற்றும் கட்டிட அனுமதி ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், கணினி வழியே டிஜிட்டல் கையொப்பமிட்ட புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படும்.</p><h2><strong>சுற்றுலாத் துறை வளர்ச்சி:</strong></h2><p>தமிழ்நாட்டிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், சுற்றுலாத் துறையின் வருவாயை மேம்படுத்தும் நோக்கிலும், நிலுவையில் உள்ள உரிமங்களைப் புதுப்பித்துக் கொள்ள இந்த கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது காவலாளியை அடித்து, சட்டையைக் கிழித்த இளம்பெண்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-tears-shirt-slaps-elderly-security-tambaram-theatre#comments</comments><guid isPermaLink="false">8d897152-61d8-4d68-bf18-d6300bac2bce</guid><pubDate>Sun, 26 Jul 2026 09:12:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T09:12:55.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,CCTVFootage,ViralVideo,JusticeForSridhar,பெண்அராஜகம்,WomanAttacksGuard,TheatreFight,காவலாளிமீதுதாக்குதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WomanAttacksGuard  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/7qupw6xf/WomanAttacksGuard?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட மோதலில் முதிய காவலாளியை இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கி, சட்டையைக் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.</p><h2><strong>கார் பார்க்கிங்கில் வெடித்த வாக்குவாதம்</strong></h2><p>மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திரையரங்கில் தற்போது “ஜனநாயகன்” திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. </p><p>நேற்று முன்தினம் காரில் ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க வந்துள்ளனர். </p><p>அப்போது, அங்கிருந்த முதிய காவலாளி ஸ்ரீதர், காரை பார்க்கிங் பகுதியில் சரியாக நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதில் காவலாளிக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>முதியோரை கண்ணத்தில் அறைந்த இளம்பெண்</strong></h2><p>இந்த நிலையில் படம் முடிந்து அந்த குடும்பத்தினர் காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அதே நேரத்தில் மற்றொரு காட்சிக்கு ஒரு கார் உள்ளே வந்தது. </p><p>அதனால் வெளியே செல்லும் காரை நிறுத்திவிட்டு, உள்ளே வந்த காரை அனுமதித்த காவலாளி ஸ்ரீதர், பின்னர் அவர்களை வெளியே செல்லும்படி கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த இளம்பெண் ஒருவர் கீழே இறங்கி வந்து, வயதான காவலாளி ஸ்ரீதரின் சட்டையை பிடித்து கிழித்ததுடன், கன்னத்தில் தாக்கினார். இதில் காவலாளியின் சட்டை கிழிந்ததுள்ளது. </p><p>தியேட்டருக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்சியடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் தலையிட்டு அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார்.</p><h2><strong>போலீசார் அதிரடி விசாரணை</strong></h2><p>இந்த சம்பவத்தை அங்கு வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. </p><p>வீடியோ வைரலானதை அடுத்து தாம்பரம் போலீசார், பாதிக்கப்பட்ட காவலாளி ஸ்ரீதரிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>தியேட்டரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தென்மண்டல குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nirmalkumar-rajmohan-named-to-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">41ed62a2-61ff-471f-bc84-261d0f92bc9e</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:53:55 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:53:55.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,சிடிஆர் நிர்மல் குமார்,ராஜ்மோகன்,ctr nirmal kumar,southzone</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Ministers Nirmalkumar and Rajmohan appointed as South Zonal Council members]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/zxp8c8ha/Untitled-design-84.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில், ஒருங்கிணைப்பை எளிதாக்கும் மத்திய அரசின் உயர்மட்ட மாநிலங்களுக்கு இடையேயான அமைப்பான, தென்மண்டலக் குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது.</p><h3><strong>தென்மண்டல குழு உறுப்பினர்கள் நியமனம்:</strong></h3><p>முதலமைச்சர் சி. ஜோசப் விஜயுடன் இணைந்து, எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் மற்றும் பள்ளிக் கல்வி, தமிழ் அபிவிருத்தி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர் இந்த குழுவில் தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>ஆலோசகர் நியமனம்:</strong></h3><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமாருடன் கூடுதலாக, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசனையும் கவுன்சிலின் இரண்டாவது ஆலோசகராக அரசாங்கம் நியமித்துள்ளது.</p><p>2021 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் கீழ் செய்யப்பட்ட நியமனங்களுக்குப் பதிலாக, 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியிட்ட அரசாணை எண் 461 மூலம் இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h3><strong>தென்மண்டலங்கள்:</strong></h3><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>இந்த மன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் பொதுவாக உள்கட்டமைப்பு மேம்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, எல்லை தொடர்பான விஷயங்கள், சமூக நலன், சிறுபான்மையினர் நலன், ஆற்று நீர் பிரச்சனைகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன.</p><p>மே மாதம் பதவியேற்ற தமிழக வெற்றி கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின், முதல் பிரதிநிதித்துவம் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது.</p><h3><strong>முன்னாள் தென்மண்டல குழு பிரதிநிதிகள்:</strong></h3><p>முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இந்த குழுவில் தமிழக பிரதிநிதிகளாக செயல்பட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம் :  அரசு பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-kannada-protest-halts-tamil-nadu-government-buses-in-hosur#comments</comments><guid isPermaLink="false">ad9fcaea-a96f-4fe8-860a-746687af7d4d</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:37:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:37:10.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Hosur,மேகதாது விவகாரம்,mekedatu,அத்திப்பள்ளி,KarnatakaBorder,Buses Cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduBorderBusesCancelled]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/ype5lzu3/KarnatakaBorder?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி ஆற்றின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/topic/mekedatu">மேகதாது</a>வில் அணை கட்ட வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்</strong></h2><p>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து, கர்நாடகா - தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் இன்று மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.</p><p>அதன்படி, கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் மாநில தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் இன்று காலை அத்திப்பள்ளி சாலையில் மறியல் நடைபெற்றது.</p><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது.</p><h2><strong>தமிழக அரசு பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்</strong></h2><p>இன்று அதிகாலை முதல் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கர்நாடகாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கர்நாடகா செல்லும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.</p><p>தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பஸ்களும் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிச் செல்கின்றன.</p><p>கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரின் அறிவுறுத்தலின்படி, தர்மபுரி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், "மறு உத்தரவு வரும் வரை பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படாது" என அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>ஓசூர் - அத்திப்பள்ளி பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்</strong></h2><p>அதே சமயம், ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் 16 மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றின் சேவையில் மாற்றம் செய்யவும் போக்குவரத்து துறை தயாராக உள்ளது.</p><p>தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், கர்நாடக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால், பெரும்பாலான பயணிகள் அவற்றின் மூலம் பெங்களூரு நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.</p><h2><strong>எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு</strong></h2><p>இந்த மறியல் போராட்டத்தையொட்டி ஜூஜூவாடி, அத்திப்பள்ளி உள்ளிட்ட தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் இரு மாநில போலீசாரும் ஏராளமாகக் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க எல்லையில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-koniamman-temple-donation-box-theft-action-on-seven#comments</comments><guid isPermaLink="false">cd4528bc-5b10-4a1d-bca1-7d625d25438f</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:28:23 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:28:23.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து சமய அறநிலையத்துறை,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,Coimbatore Temple,HRCEdepartment,கோவை கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/rx1ljyj4/ramwsh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Ramesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/rx1ljyj4/ramwsh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததை தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதி அளித்தார். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்று சமீபத்தில் முதலமைச்சர் விஜய் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும் அமைச்சர்களும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.</p><h2><strong>கோவிலில் ஆய்வு:</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தி முறைகேடாக பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதித்த கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதேபோல் பல கோவில்களிலும் அவர் ஆய்வு செய்து முறைகேடுகளை தடுத்து வருகிறார். தமிழக அரசின் நடவடிக்கையால் ஊழல் மற்றும் லஞ்சம் குறைந்து இருப்பதாக பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.</p><h2><strong>கோவை கோவிலில் உண்டியல் பணம் திருட்டு:</strong></h2><p>இந்நிலையில் கோவையில் கோவில் உண்டியல் பணம் திருட்டு போன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை ‘சஸ்பெண்ட்' செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை நகரின் மையப்  பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது. </p><p>இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் திருவிழா விற்காக 6 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த 15 உண்டியல்களும் கடந்த 15-ந்தேதி அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ஒரு உண்டியலை அங்கு இருந்த சிலர் எண்ணாமல் மறைத்து வைத்திருந்ததையும், அதில் இருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டதையும் சிலர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் கோவையில் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p><p>இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். </p><p>போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அர்ச்சனை டிக்கெட் ஊழியர் பால சுப்பிரமணியன், அலுவலக உதவியாளர்கள் சரவணன், பிரதீப் குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் என தெரியவந்தது.</p><h2><strong>ஊழிர்கள் கைது:</strong></h2><p>இதைத்தொடர்ந்து 4 ஊழியர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் உள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.</p><p>பின்னர் கைதான 4 ஊழியர்களும் உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏனென்றால் கோவில் உண்டியல் திருட்டு நடந்து பல நாட்கள் ஆன நிலையில், அதை கண்டு பிடிக்காமல் அதிகாரிகள் இருந்துள்ளனர்.</p><p>சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன பிறகு திருட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. எனவே கோவில் நிர்வாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோனியம்மன கோவிலின் செயல் அலுவலர் குமார், இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர்கள் ராம்குமார், உதய குமார் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். </p><p>அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பாக கோனியம்மன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான பெண் அதிகாரி ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>ஒரே நேரத்தில் செயல் அலுவலர் உள்பட  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். </p><p>மேலும் கோவில் பணிகளில் ஊழியர்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? தி.மு.க.வை விளாசிய மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">67de3c10-30e7-4329-8e0d-a58c1a71a3c3</guid><pubDate>Sun, 26 Jul 2026 08:26:45 +0000</pubDate><atom:updated>2026-07-26T08:26:45.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/2cye8c5r/Congressparty001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/2cye8c5r/Congressparty001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் சார்பில் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராடிய மாணவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ், த.வெ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தி.நகரில் நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகியதால் மாணவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காங்கிரஸ் கூட்டமும் வெற்றி விழா கூட்டம் போல் மாறியது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க.வை கடுமையாக விளாசினார்.</p><h2>இரட்டை நிலைப்பாடு</h2><p>அவர் பேசும்போது, ‘நீட் தேர்வால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல கூட எதிர்க்கட்சி தலைவர் செல்லவில்ைல. தர்மேந்திர பிரதான் செய்த தவறுகள்தான் அவரது பதவியை பறித்துள்ளது. இது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவே பார்க்கிறேன். டெல்லியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது. ஆனால் முதல் 3 நாட்கள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கலந்து கொள்ளவில்லை. நேற்று வரை நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் ஏன் திடீரென்று ‘சைலண்ட்’ ஆனார்கள்? எங்களுக்கும், கம்யூனிஸ்டுக்கும் பிரச்சினை உண்டு.</p><p>ஆனாலும் பா.ஜனதா அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட ஒரே அணியாக இருக்கிறோம். ஆனால் கூட்டணியில் இல்லை என்பதற்காக ஏன் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்? ராகுலை போலீசார் நடத்திய விதத்துக்கு நாடு முழுவதும் தலைவர்கள் கண்டித்தார்கள். ஆனால் அதற்கும் இந்த இரு கட்சிகளும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நாங்கள் 6 கட்சிகள் ஒரே மேடையில் இருக்கிறோம். </p><p>தமிழ்நாட்டில் இனி நேர்மையான ஆட்சி தொடரும்’ என்றார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு எங்களிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சு. நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்கள் பேச்சு. அதை டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையிலேயே முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.</p><p>கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால்தான் சட்டப்படி நீட்டை ஒழிக்க முடியும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். இதை திசை திருப்பும் வகையில் சிலர் அரசியல் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் புகுந்து புகழை திருட பார்த்ததையும் பார்த்தோம். நீட்டை ஒழிக்காமல் விடமாட்டோம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>அமைச்சர் வன்னியரசு</h2><p>பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ்தான் முன்னெடுக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும். எங்கள் அடுத்த இலக்கு இந்தியா முழுவதும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்பதே முழக்கமாக இருக்கும்’ என்றார்.</p><h2>ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ</h2><p>உலகில் பல நாடுகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஆட்சிகள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொண்டதால் மோடி அரசு தப்பித்து கொண்டது. மாணவர்கள் போராட்டம் மோடி கூட்டத்தையும், இந்துத்துவார் அமைப்புகளையும் நடுங்க வைத்துள்ளது. எந்த கட்சியையும் சாராத மாணவர்கள், இளைஞர்கள் அவர்களை ஆதரிக்கும் கட்சிகள் சேர்ந்து இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள்’ என்றார்.</p><h2>சு.வெங்கடேசன் எம்.பி.</h2><p>மாணவர்கள் போராட்டத்தை பார்த்து பா.ஜனதா நடுங்கி போய் இருக்கிறது. ஆட்சி அதிகாரம், ஆர்.எஸ்.எஸ். நெட்வொர்க் என அனைத்தையும் கிழித்து எறிந்து டெல்லியில் திரண்ட கூட்டம் 29 நாட்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது. இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள எழுச்சி புதிய சிந்தனை, புதிய தொழில் நுட்பத்துடன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது தொடரும்’ என்றார்.</p><h2>நவாஸ்கனி எம்.பி.</h2><p>அண்டை நாடுகளில் நடந்த இளைஞர்கள் எழுச்சியை கண்ேடாம். அதேபோல் இங்கும் அசைக்க முடியாததல்ல ஒன்றிய அரசு என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.</p><p>முடிவில் அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.</p><h2>தீப்பந்தம்</h2><p>கூட்டம் முடிந்ததும் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் ஏற்பாட்டில் மாணவர் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் சென்றது. இதை மாணிக்கம் தாகூர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் குலாம் அகமது மிர், காங்கிரஸ் நிர்வாகிகள் ரூபி மனோகரன், சிரஞ்சீவி, தணிகாசலம், எஸ்.ஏ.வாசு, காண்டீபன், இல.பாஸ்கர், தி.நகர் ஸ்ரீராம், எம்.எஸ்.திரவியம், கராத்தே ரவி, ஜெ.பாலமுருகன், வில்லி வாக்கம் சுரேஷ், பெருங்குடி செந்தில் குரு, மயிலை தரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை ஈசிஆர் சாலையில் குதிரை மூலம் உணவு டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியர்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/zomato-delivery-agent-on-horse-rides-through-chennai-ecr#comments</comments><guid isPermaLink="false">ec1dd7f9-ec03-4b8b-9066-018f001769f5</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:34:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:34:44.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai,Zomato,ECR,ZomatoDelivery,HorseDelivery,ViralVideo,Palavakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ZomatoHorseDelivery]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/exsp3ecu/ZomatoHorseDelivery?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக குதிரை மீது ஏறி <a href="https://www.maalaimalar.com/topic/zomato">சொமேட்டோ</a> ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.</p><h2><strong>குதிரையில் செல்லும் உணவு</strong></h2><p>சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பலவாக்கம் பகுதியில் ஜொமாட்டோ ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். </p><p>இரு சக்கர வாகனங்களில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால் இந்த ஊழியர் உணவு பார்சல்களுடன் வெள்ளை நிறக்குதிரை மீது கம்பீரமாகச் சென்றுள்ளார். </p><p>அதிகப்படியான போக்குவரத்துக்கு நெரிசலைக் கடந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையையும் குறைக்கும் வகையிலும், சரியான நேரத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகிக்க இந்த மாறுபட்ட முறையை அவர் கையாண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2><strong>பொதுமக்கள் வரவேற்பு</strong></h2><p>குதிரை மீது சென்ற இந்த ஊழியரை, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துத் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். </p><p>நெட்டிசன்கள் பலரும் "சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான டெலிவரி முறை" என்றும், "டிராஃபிக் ஜாமுக்குச் சரியான தீர்வு" என்றும் இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தடுப்பு வேலியை தாண்டி ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - நீட் தேர்வை ரத்து செய்ய மாணவர் அமைப்பு போராட்டம்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protesters-besiege-governor-house-in-chennai-over-neet#comments</comments><guid isPermaLink="false">dbc81e04-0599-4f80-b7da-2dcfcf819e2e</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:29:06 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:29:06.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆளுநர் மாளிகை,Raj Bhavan,neet protest,நீட் போராட்டம்,AISF,அகில இந்திய மாணவர் அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai NEET Raj Bhavan protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/y6tbsnjm/Untitled-design-82.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பனகல் மாளிகை அருகே நீட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த காக்ரோச் ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் பதவி விலகியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.</p><p>சென்னை பாலன் இல்லத்தில் கடந்த ஒரு வார காலமாக, நீட் தேர்விற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h3><strong>ஆளுநர் மாளிகை முற்றுகை:</strong></h3><p>அப்போது பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்பினருடன் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பினர் இணைந்து, நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சீர்குலைப்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><p>அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை தாண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.</p><p>இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி, காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்றனர்.</p><p>இதன்காரணமாக அந்த பகுதியில் சிறிதி நேரம் போக்குவரத்து இடஞ்சல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு, பாதுகாப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம்: தமிழகத்தின் உரிமைகளை தவெக அரசு காக்கும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-govt-defends-tamil-nadu-rights-in-mekadadu-dispute-minister-athav-arjuna-explains#comments</comments><guid isPermaLink="false">685fdf78-dd79-40e6-920b-7b2f5212440d</guid><pubDate>Sun, 26 Jul 2026 07:22:10 +0000</pubDate><atom:updated>2026-07-26T07:22:10.768Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Stalin,மேகதாது விவகாரம்,மு.க.ஸ்டாலின்,mekedatu,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna -M.K.Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/tccv0pv5/adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் விஜய் தலைமையிலான தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.</p><h2><strong>உண்மைகளுக்குப் புறம்பான குற்றச்சாட்டு:</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அமைதி காப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முற்றிலும் உண்மைகளுக்குப் புறம்பானது.</p><p>டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சட்டப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மேகதாது அணைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:</strong></h2><h2>பி<strong>ரதமரிடம் நேரடியாக வலியுறுத்தல்:</strong></h2><p>கடந்த மே 27 அன்று முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வித ஒப்புதலும் அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p><h2><strong>பிரதமருக்கு விரிவான கடிதம்:</strong></h2><p>கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுமானத்திற்கு 'பூமி பூஜை' செய்ய முயன்ற தகவலைத் தொடர்ந்து, ஜூன் 19 அன்று முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். கீழ்மடை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்தை அமல்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டி, மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் மத்திய நீர் ஆணையத்திற்கும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கோரினார்.</p><h2><strong>சட்டமன்ற தீர்மானம்:</strong></h2><p>மேகதாது திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டங்களில் தமிழகத்திற்கான உரிய நீரைப் பெறவும், கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைத் தடுக்கவும் தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.</p><h2><strong>கடந்த கால தவறுகளே காரணம்:</strong></h2><p>திமுக அரசை விமர்சித்துப் பேசிய அமைச்சர், "கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளின் போது அப்போதைய திமுக அரசு சரியான முறையில் வழக்கை நடத்தத் தவறிவிட்டது. கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட சட்டப்பூர்வத் தவறுகளே, இன்று காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன" என்று சாடினார்.</p><p>மேலும், "காவிரி விவகாரம் என்பது அரசியல் லாபத்திற்கான விஷயம் அல்ல; அது தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமை. தமிழகத்தின் நீர் உரிமையை முழுமையாக மீட்கும் வரை விஜய் அரசு அனைத்து அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ வழிகளிலும் தொடர்ந்து போராடும். </p><p>மாநில நலனுக்கு உதவும் வகையில் யார் அமைதியான மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தாலும் அதை ஏற்க அரசு தயங்காது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோஷ்டிகள் இருந்தால்தான் காங்கிரஸ் கட்சி வளரும்: திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-congress-manickam-tagore-thirunavukkarasar-koshdi-mothal-issuses#comments</comments><guid isPermaLink="false">9600aed7-012a-4e21-a6a7-845278cf0479</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:46:08 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:46:08.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருநாவுக்கரசர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/3lqdod0r/Thirunavukkarasar001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எல்லா அரசியல் கட்சிகளிலும் கோஷ்டிகள் இருக்கும். இதில் கோஷ்டி பூசலுக்கு பெயர் பெற்ற கட்சி காங்கிரஸ். இதற்கு புதிய தலைவர்கள் வரும்போது கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்பார்கள். ஆனாலும் அது இருந்து கொண்டே இருக்கும்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>தற்போது புதிய மாநில தலைவராக பொறுப்பேற்று உள்ள மாணிக்கம் தாகூரும் இனி கோஷ்டி அரசியல் இருக்காது என்று கூறி உள்ளார். மேலும் போஸ்டர்களில் படங்களை போடுவதால் பிரச்சினை வருவதால் ராகுல் படத்தை மட்டும் பெரிதாக போட வேண்டும் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்த நிலையில் மூத்த தலைவரான திருநாவுக்கரசர் ‘எல்லோரும் தங்கள் படங்களையும், தங்களுக்கு பிடித்தமான நிர்வாகிகள் படங்களையும் போட்டுக் கொள்வதில் தவறில்லை. கட்சியில் கோஷ்டி இருப்பது நல்லதுதான். அதனால்தான் கட்சியும் வளருகிறது என்று மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட தலைவர்கள் மத்தியில் உரையாடி இருக்கிறார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருக்கத்தான் செய்யும்.</p><h2>கோஷ்டி தவிர்க்க முடியாது</h2><p>யார் யாருக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை போய் பார்ப்பார்கள். அவர்கள் மூலம் கல்லூரியில் ஒரு அட்மிஷன், போலீஸ் நிலைய விவகாரம், அரசு அலுவலகங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்று வேலைகள் நடக்கும். இதன் மூலம் கட்சியும் வளரும்.</p><p>யாரும் யாரையும் பார்க்க கூடாது. யாருடனும் பேசக்கூடாது. இந்த படங்களை போடக்கூடாது என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படாது.</p><p>காங்கிரசில் காந்தி காலத்திலும் கோஷ்டி இருந்து இருக்கிறது. காமராஜர் காலத்திலும் இருந்து இருக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படி ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஆதரவு கூட்டம் பெருக பெருகதான் கட்சியும் வளர்ந்து இருக்கிறது.</p><p>போஸ்டர்களில் படங்கள் போடுவது பற்றி எம்.ஜி.ஆர். சொல்வார் ‘என்னை எல்லோருக்கும் தெரியும். உங்கள் படங்களையும் போட்டு அச்சிடுங்கள். அப்போதுதான் நீங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். உங்களை மக்கள் அறிந்து கொள்வார்கள்’ என்பார்.</p><h2>பேனர்களில் படங்கள்</h2><p>நீங்களும் ராகுல் படத்தை எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் போட்டு கொள்ளுங்கள். மாநில தலைவர் படத்துடன், மாவட்ட தலைவர்கள் படம் முதல் ஒன்றிய தலைவர்கள் படங்கள் வரை போடுங்கள். அப்போதுதான் மக்கள் மத்தியிலும் நீங்கள் அறி முகம் ஆவீர்கள். அதிகாரிகள் மத்தியிலும் அறிமுகம் ஆவீர்கள்.</p><p>அவ்வாறு அறிமுகம் ஆகி இருந்தால்தான் மக்கள் பிரச்சினைகளுக்காக நீங்கள் அதிகாரிகளை சந்தித்து பேச முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இப்படி மக்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தால்தான் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கட்சியும் வளரும்.</p><p>பூத் லெவலில் இருக்கும் கடை நிலை நிர்வாகிகள் வரை கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இப்படி கட்டமைப்பை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அனைத்து மட்டங்களிலும் பலமாக வைத்துள்ளது. அதே போல் நீங்களும் கட்டமைப்பை பலப்படுத் துங்கள்’ என்றார்.</p><p>காங்கிரஸ் மாநில கமிட்டி கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் திருநாவுக்கர சர் இவ்வாறு பேசியது மாவட்ட தலைவர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-government-rejects-metro-again-coimbatore-madurai-dreams-shattered#comments</comments><guid isPermaLink="false">bacda4a7-ec1e-4870-b721-ef477cdba72f</guid><pubDate>Sun, 26 Jul 2026 06:24:37 +0000</pubDate><atom:updated>2026-07-26T06:24:37.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,central government,Coimbatore Metro,Madurai Metro,கோவை மெட்ரோ,மதுரை மெட்ரோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore-Madurai Metro]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/mfk6gxtt/covai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான 'கோயம்புத்தூர்' மற்றும் ஆன்மீக பண்பாட்டு மையமான 'மதுரை' ஆகிய இரு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இரண்டாவது முறையாக நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><h2><strong>மக்கள்தொகை அளவுகோல் குறைவு:</strong></h2><p>தேசிய மெட்ரோ ரெயில் கொள்கை (2017)-இன் படி, ஒரு நகரில் மெட்ரோ திட்டம் தொடங்க குறைந்தபட்சம் '20 லட்சம் மக்கள்தொகை' இருக்க வேண்டும். 2011 கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் மட்டுமே மக்கள்தொகை உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>பயண நேரச் சேமிப்பு போதாமை:</strong></h2><p>இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ அமைப்பதால் எதிர்பார்த்த அளவு பயண நேரம் குறையாது என்றும், அதிக அளவிலான பயணிகள் பயன்பாடு  இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><h2><strong>மாற்றுப் போக்குவரத்து பரிந்துரை:</strong></h2><p>மெட்ரோ போன்ற பிரம்மாண்ட செலவினத் திட்டங்களுக்குப் பதிலாக, அதிவேகப் பேருந்து போக்குவரத்துச் சேவையை மற்றும் நகர்ப்புற பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.</p><h2><strong>கோவை மெட்ரோ:</strong></h2><p>கோவை மெட்ரோ திட்டம் 39 கிலோமீட்டர் நீளத்தில், அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி வரை மற்றும் உக்கடம்-சத்தியமங்கலம் சாலை வழியாக வலியம்பாளையம் பிரிவு வரை செல்லும். இதில் 32 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்க ரூ.10,740 கோடி மதிப்பிடப்பட்டது.</p><h2><strong>மதுரை மெட்ரோ:</strong></h2><p>அதேபோல், மதுரை மெட்ரோ திட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் நீளத்தில், 26 நிலையங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 23 உயர்மட்ட பாதையிலும், 3 நிலத்தடி பாதையிலும் அமைக்க ரூ.11,360  என கணிக்கப்பட்டது.</p><h2><strong>முந்தைய நிராகரிப்பு:</strong></h2><p>கடந்த ஆண்டு (நவம்பர்) முதன்முறையாகத் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கூடுதல் தரவுகள், மிதக்கும் மக்கள்தொகை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.</p><h2><strong>அரசியல் முரண்பாடுகள்:</strong></h2><p>ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களில் குறைவான மக்கள்தொகை இருந்தபோதிலும் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் ஆளுங்கட்சியும் ஏனைய அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ntk-seeman-nainar-nagendran-bjp-sarath-kumar-birthday-party#comments</comments><guid isPermaLink="false">1f575132-0495-4d73-a3b1-a619f143f52d</guid><pubDate>Sun, 26 Jul 2026 05:18:25 +0000</pubDate><atom:updated>2026-07-26T05:18:25.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sarath kumar,BJP,பாஜக,Seeman,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,சரத் குமார்,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சரத்குமார் பிறந்த நாள் விழா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/9jng6jkq/SarathKumar0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><h2>சீமானுக்கு அழைப்பு</h2><p>பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தங்களது கூட்டணியில் சேருவதற்கு விழா மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.    </p><h2>நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-</h2><p>சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான். இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது. இதுபோன்று மேடை 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும். பார்ப்போம். இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.</p><figure><img alt="சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/lle51vn9/SarathKumar0003.jpg" /></figure> <p>தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது. சரத்குமார் தேசிய உணர்வோடு அவரது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து கொண்டார். நிச்சயமாக அவருக்கு பதவி தேடிவரும்.</p><p>இவ்வாறு நயினார் நாககேந்திரன் பேசினார்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>இவற்றில் அம்பாசமுத்திரம் சட்டம்ன்ற தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சீமானுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-</h2><p>நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும், கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்கள் சாதனையாளராக முடியும்.</p><p>எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்க வேண்டும். என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் தாண்டி வாழ்கிறார்கள். அதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>சீமான் இந்த மண்ணில் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt#comments</comments><guid isPermaLink="false">d3d12106-0d5e-48f6-bd7a-4bb4b5f25288</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:06:53 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:06:53.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu government,டாஸ்மாக் பார்,Tasmac Bar,தமிழக அரசு.,wineshop,மதுக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC Bar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/1anuumb4/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2><strong>100 மீட்டர் சுற்றளவில் பார் அமைக்க அனுமதி:</strong></h2><p>இதுவரை டாஸ்மாக் மதுக்கடையை ஒட்டியே (இணைந்தே) பார் தொடங்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி மதுக்கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பார்களைத் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட உள்ளது.</p><h2><strong>பார் பரப்பளவு அதிகரிப்பு:</strong></h2><p>பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு '15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக' உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்களில் கூடுதல் இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>ஏ<strong>கபோக உரிம நடைமுறைக்குச் முடிவு:</strong></h2><p>புதிய டெண்டர் மற்றும் தளர்வு விதிமுறைகளின் மூலம் குறிப்பிட்ட நபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தொடர்ந்து பார் நடத்தும் பழைய நடைமுறை மாற்றப்பட்டு, புதிய நபர்களுக்கும் ஏலம்/டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு உருவாகும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>டெண்டர் புதுப்பித்தல்:</strong></h2><p>டாஸ்மாக் பார்களுக்கான பழைய உரிமக் காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், புதிய டெண்டர் விதிமுறைகளை இறுதி செய்யும் வரை தற்காலிகமாக பார்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது.</p><h2><strong>கட்டுப்பாடுகள் தீவிரமாக்கம்:</strong></h2><p>பார் அமைப்பதற்கான இட அமைப்பில் தளர்வுகள் தரப்பட்டாலும், பார்களில் பீடி-சிகரெட் விற்பனைக்கான தடை, சிற்றுண்டி மற்றும் குடிநீரை அதிக விலைக்கு விற்கக் கூடாது போன்ற இதர கட்டுப்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/firecracker-factory-explosion-in-sivakasi-2-killed#comments</comments><guid isPermaLink="false">88d03f9b-3963-4196-bacd-db6fdee53653</guid><pubDate>Sun, 26 Jul 2026 04:02:44 +0000</pubDate><atom:updated>2026-07-26T04:02:44.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,Sivakasi accident,சிவசாசி வெடி விபத்து,சிவசாசி பட்டாசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivakasi Fire Accident: Two killed, several injured in fireworks warehouse blast]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/l9zs7bw9/Untitled-design-75.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3><strong>செங்கமலப்பட்டி பட்டாசு வெடி விபத்து:</strong></h3><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் நாக்பூர் மாநில உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.</p><p>இந்த பகுதியில் ராம்பிரகாஷ் என்பவர் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.</p><p>இதையடுத்து இன்று வழக்கம்போல பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாரா விதமாக வெடி விபத்து ஏற்பட்டு, கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது.</p><p>இந்த விபத்து குறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை கொண்டு பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p>இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராம்பிரகாஸ் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒருவர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த விபத்தில் மேலும் பல பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 12 ஆண்டுகளில்  மருத்துவக் கல்லூரிகள், படிப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/medical-colleges-and-seats-more-than-doubled-in-12-years#comments</comments><guid isPermaLink="false">351e2f80-284f-4a2f-a269-8e85672576c0</guid><pubDate>Sun, 26 Jul 2026 02:03:14 +0000</pubDate><atom:updated>2026-07-26T02:03:14.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,MBBS,மருத்துவ படிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவக் கல்லூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-26/r36vjfyh/MedicalCollege0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவக் கல்வித்துறை கடந்த 12 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.</p><h2>மருத்துவ கல்வித்துறை</h2><p>ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது அதன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-more-days-granted-to-apply-for-mbbs">மருத்துவ கல்வித்துறை</a> ஆகும். வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் புதிய நோய்களின் சவால்களை எதிர்கொள்ள போதுமான எண்ணிக்கையில் டாக்டர்களும், மருத்துவ வல்லுனர்களும் இருப்பது இன்றியமையாதது.</p><p>2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்தியாவில் எம்.பி.பி.எஸ். (இளங்கலை) மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் பற்றாக்குறை மிகத்தீவிரமாக இருந்தது.</p><p>இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளை நாடுகின்ற கட்டாயச் சூழல் நிலவியது. மேலும், உள்நாட்டில் டாக்டர்-மக்கள் விகிதமும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தரத்தைவிட குறைவாகவே இருந்தது.</p><h2>12 ஆண்டுகளில்...</h2><p>இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் (2014 முதல் 2026 வரையில்) மருத்துவ கல்வித்துறையில் கட்டமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.</p><p>இதன் விளைவாக, புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதுடன், மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்வி அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது.</p><p>அந்த வகையில் 2014-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்த நிலையில், 2026-ல் 844 ஆக அதிகரித்திருக்கிறது. இது 118.1 சதவீதம் அதிகம்.</p><h2>இருமடங்குக்கு மேல் அதிகரிப்பு</h2><p>இளங்கலை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் 2014-ல் 51 ஆயிரத்து 348 இடங்கள் இருந்த சூழலில், 2026-ல் 1 லட்சத்து 39 ஆயிரத்து 489 ஆக உயர்ந்திருக்கிறது. முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் 2014-ல் 31 ஆயிரத்து 185 ஆக இருந்து, இப்போது 86 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் 12 ஆண்டுகளில் 2 மடங்குக்கு மேல் மருத்துவக் கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்கள் அதிகரித்திருக்கின்றன.</p><p>மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி இடங்களின் இந்த கணிசமான உயர்வு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை உள்நாட்டிலேயே நனவாக்குவதுடன், வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான மற் றும் தரமான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைப்பதை இந்த துணிச்சலான கல்வி விரிவாக்கம் உறுதி செய்யும் என்பகில் சந்தேகம் இல்லை.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2490f83-5c37-441d-8937-34c77d9fb209</guid><pubDate>Sat, 25 Jul 2026 05:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T16:33:52.656Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/8cnfoez2/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zim-v-ind-match-today">ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்- இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?</a></p><p>* ஜிம்பாப்வேக்கு எதிராக இன்று நடக்கும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி களம் காணுகிறது.... </p><p> * தொடரை இழக்காமல் இருக்க ஜிம்பாப்வே முடிந்த வரை கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக அமையும் என நம்பலம்.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/sanam-shetty-indictment-to-fake-is-student-protest-taking-place-at-balan-illam-in-chennai">சென்னை பாலன் இல்லத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் போலியானது- சனம் ஷெட்டி குற்றச்சாட்டு</a></p><p>* இந்த மேடையை அரசியலாக மாற்றினால் அதற்கு நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன். இவர்கள் ஜனநாயகத்துக்காக போராடவில்லை. </p><p>* டெல்லியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. நான் அங்கு போகவில்லை. இப்போதும் சொல்கிறேன். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-07-2026">GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-tagore-urges-removal-of-dharmendra-pradhan" rel="nofollow">தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.</p><p>* கேள்வித்தாள் கசிவு நடந்ததை மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/south-korean-tycoon-ordered-to-pay-6200-crore-divorce-settlement" rel="nofollow">முன்னாள் மனைவிக்கு ரூ.6,200 கோடி இழப்பீடு: தென்கொரிய தொழிலதிபருக்கு சியோல் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!</a></p><p>* நிறுவனத்தின் பங்குகளை விற்காமல், முழு தொகையையும் ரொக்கமாக கொடுக்க உத்தரவு.</p><p>*  பரபரப்பான விவாகரத்து வழக்கில் சியோல் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-third-spot-for-tamil-thai-anthem-at-manonmaniam-sundaranar">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?- அன்புமணி கண்டனம்</a></p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவது இடத்திற்கு  திட்டமிட்டு தள்ளுவது கண்டிக்கத்தக்கது.</p><p>*   ஆளுனர் மாளிகை கட்டாயப்படுத்துவது அப்பட்டமான அதிகார வெளிப்பாடு ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-wont-be-fooled-by-empty-promises-and-repression-manickam-thakur" rel="nofollow">வெற்று வாக்குறுதிகளாலும், அடக்குமுறைகளாலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி நீக்கம் செய்க!</p><p>* பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jyothika-backs-students-protest-against-neet-scam" rel="nofollow">பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான் - நடிகை ஜோதிகா இன்ஸ்டா பதிவு</a></p><p>* நான் பொறுப்புணர்வுடன் நிற்கிறேன்!</p><p>* நான் ஒரு ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-questions-when-chief-minister-will-break-silence-on-custodial-deaths" rel="nofollow">தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?</p><p>* முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-curbs-enter-4th-day-18-stations-closed-today-as-security-tightens-over-neet-protests">நீட் தேர்வு போராட்டம் எதிரொலி: டெல்லியில் 4-வது நாளாக மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்</a></p><p>* கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>* இன்று காலை 7.30 மணி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை 18 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-yatra-resumes-after-6-day-weather-halt-over-6000-pilgrims-leave-jammu">சீரடைந்த வானிலை: 6 நாளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை</a></p><p>* அமர்நாத் யாத்திரை கடந்த 19-ம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது.</p><p>* 223 வாகனங்கள் கொண்ட அணிவகுப்பில் 18வது குழு பயணித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-today-in-center-and-cjp-party-members">தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? - இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* மாணவர்கள் போராட்டம் தற்போது இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minor-boy-allegedly-forced-into-sex-8-month-pregnant-girl-booked-under-pocso" rel="nofollow">சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு- கர்ப்பமான இளம்பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது</a></p><p>* சிறுவனின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.</p><p>* புகாரின் பேரில் இளம்பெண் மீது போலீசார்&nbsp;<a href="https://www.dailythanthi.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B">போக்சோ</a>&nbsp;வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/thirumavalavan-says-we-are-the-reason-for-the-dmk-winning-a-large-number-of-constituencies">தி.மு.க. அதிக தொகுதிகள் வெற்றிக்கு நாங்கள் தான் காரணம் - திருமாவளவன் பேச்சு</a></p><p>* மகாத்மா காந்தி பெயரில் இருந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மாற்றியது பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு. </p><p>* த.வெ.க. ஆட்சியில் விசிகவுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது என்றுதான் இப்போதும் சிலர் இருக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave">திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர் பலி </a></p><p>* குகை  வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். </p><p>* உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/central-to-gummidipoondi-train-service-change">இன்றும், நாளையும் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்</a></p><p>* கும்மிப்பூண்டி- மூர் மார்க்கெட்  இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடைய ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>* கும்மிடிப்பூண்டியில் புறப்பட்டு மூர் மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/pm-modi-greets-indian-lifter-jandukumar-for-commonwealth-bronze" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்- இந்திய வீரர் ஜண்டுகுமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* வலிமையை அதிகரிப்பதற்காக மட்டுமே பளு தூக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.</p><p>*  130.9 புள்ளிகளை பெற்று பதக்க மேடையில் இடம்பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ramadoss-announced-retiring-from-politics-starting-today">இன்று முதல் அரசியல் துறவறம்- ராமதாஸ்</a></p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>* பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/technology/anthropic-claude-opus-5-new-ai-breakthrough">AI-ல் புதிய பாய்ச்சல்: ஆந்திரோபிக் நிறுவனத்தின் 'Claude Opus 5' அதிகாரப்பூர்வமாக வெளியீடு!... </a></p><p>செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் 'ஆந்திரோபிக்' நிறுவனம், தனது அடுத்த தலைமுறை முதன்மை AI மாடலான 'Claude Opus 5'-ஐ உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-deluge-claims-61-lives-705000-people-impacted">அசாமில் தொடரும் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு-7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு... </a></p><p>பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு காரணமாகவே அசாமின் பல மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case" rel="nofollow">ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</a></p><p>*  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். </p><p>* இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/gukesh-praggnanandhaa-vaishali-to-spearhead-indian-challenge-in-chess-olympiad">செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 10 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு</a></p><p>* ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இரு பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. </p><p>* பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, தமிழகத்தின் வைஷாலி உள்பட பலர் தேர்வாகினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-fishermen-strike-for-demanding-the-release-of-fishermen-arrested-by-srilanka">இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்</a></p><p>* மீனவர்கள் சிறை பிடிப்பு விவகாரம் ராமேசுவரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.</p><p>* மீனவர்களுக்கு வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land">துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன்</a></p><p>*  பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.</p><p>* இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/anahat-singh-first-indian-to-reach-world-junior-final-since-2005">உலக ஜூனியர் ஸ்குவாஷ்: 20 ஆண்டுக்கு பின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அனாஹத் சிங்</a></p><p>* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.</p><p>* கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் அனாஹத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu">கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</a></p><p>* 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.</p><p>* இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol" rel="nofollow">சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</a></p><p>* மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>* ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-pakistan-social-media-accounts-blocked-delhi-police-warning">CJP போராட்டம்: பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகள் முடக்கம்-டெல்லி காவல்துறை எச்சரிக்கை!... </a></p><p>இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spacex-starship-13th-test-flight-marks-new-space-history-milestone">ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் 13-வது சோதனை ஓட்டம் வெற்றி! விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை!</a></p> <p>* 20 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.</p><p>* ஸ்டார்ஷிப் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-says-transfer-of-dharmendra-pradhan-to-another-portfolio-is-unacceptable">தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது- ராகுல் காந்தி</a></p><p>* மோடியின் மந்திரிசபையில்  அவரை கல்வித்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுவதே இதற்கான தீர்வு என்று பேசப்பட்டு வருகிறது. </p><p>* தர்மேந்திர பிரதானை அங்கிருந்து மாற்றுவது, பின்னுக்குத் தள்ளுவது அல்லது முன்னுக்கு கொண்டு வருவது போன்ற எந்தவொரு விவாதத்திற்கும் இடமில்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-confronts-police-at-safdarjung-hospital">'என்னை கைது செய்யுங்கள்': மருத்துவமனையில் போலீசாரிடம் சோனம் வாங்சுக் வாக்குவாதம்!... </a></p><p>வைரலான வீடியோவில், சோனம் வாங்சுக்  அவரை வழிமறித்த காவல்துறை அதிகாரியிடம், "என்னை கைது செய்யுங்கள். 3 மணி நேரமாக என்னை ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறீர்கள்? நான் மன அழுத்தத்தால் இறந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு" என ஆவேசமாகப் பேசுவது பதிவாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kanhaiya-kumar-arrested-after-clash-with-officer-at-delhi-kerala-house">அதிகாரியுடன் வாக்குவாதம்: டெல்லி கேரளா ஹவுஸில் காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமார் அதிரடி கைது!</a></p> <p>* கேரளா ஹவுஸில் அதிகாரியுடன் வாக்குவாதம், டெல்லி போலீசால் கைது.</p><p>* அமித் ஷாவின் அராஜகம் என கன்ஹையா கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/students-protest-victory-dharmendra-pradhan-resigns">மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!</a></p> <p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நெருக்கடி முற்றியதால் ராஜினாமா.</p><p>* பிரதமர் மோடிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/compensation-of-rs-1-crore-for-families-of-deceased-students">சிஜேபி தலைவர் மேலும் மூன்று கோரிக்கைகள்</a></p><p>* உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு</p><p>* மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4">சென்னையில் மழைக்கு வாய்ப்பு...</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/its-a-victory-of-democracy-cjp-gen-z-youth-sonam-wangchuk-praise">IT'S A Victory OF DEMOCRAZY-CJP, Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு!... </a></p><p>சோனம் வாங்சுக், இந்த வெற்றியை இளைஞர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி எனப் பாராட்டியுள்ளார். இளைஞர்களின் இந்தத் துணிச்சலான ஜனநாயகப் போராட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக உள்ளது என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-a-look-back-at-his-political-career">மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்: அரசியலில் கடந்து வந்த பாதை</a></p><p>* 2000-ம் ஆண்டு ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.</p><p>* 2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics">பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!... </a></p><p>இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்  தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/congratulations-to-students-across-the-country-we-are-proud-of-you-rahul-gandhi">நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பாராட்டுகள்: உங்களால் பெருமை கொள்கிறோம்- ராகுல் காந்தி</a></p><p>* தர்மேந்திர பிரதான் ராஜினாமா</p><p>* மேலும் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது CJP</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-third-round-talks-with-cjb-protesters-in-delhi">டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை!</a></p><p>* இன்று டெல்லியில் சிஜேபி-யுடன் மத்திய அரசு 3-வது கட்ட பேச்சுவார்த்தை</p><p>* தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 2 கோரிக்கைகளுக்கு ஒப்புதல்</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை முடித்துக் கொள்ளவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gen-z-youth-cockroach-party-delhi-neet-exam-scandal">‘கரப்பான் பூச்சிகள்’ அமைத்த சாம்ராஜ்யம்: டெல்லியை பணியவைத்த Gen Z இளைஞர்களின் வரலாற்று நிகழ்வு!...</a></p><p>உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், வழக்கு ஒன்றின் வாதத்தில் வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என குறிப்பிட்டார் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதி சூரியகாந்த் பதில் கூறும் முன்பாகவே உதயமாகிவிட்டது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’</p><p>3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin">பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்</a></p><p>* காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!</p><p>* நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/peoples-democratic-verdict-arvind-kejriwal-on-people-power">மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!... </a></p><p>ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; அரசுகளும் ஆட்சியாளர்களும் அவர்களின் பணியாளர்களே, எஜமானர்களான பொதுமக்கள் தங்கள் உரிமைகளுக்காக உறுதியுடன் எழுந்து நிற்கும்போது, எவ்வளவு பெரிய ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் பணிந்துதான் ஆக வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/you-made-unyielding-delhi-listen-minister-rajmohan-praises-in-chennai">யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள்!-சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!... </a></p><p>மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும், Gen Z இளைஞர்கள் தங்களது நீதிக்கான கோரிக்கையில் சற்றும் பின்வாங்காமல் போராடினர். இளைஞர்களின் இந்த அமைதியான, ஜனநாயக ரீதியிலான மக்கள் சக்தி போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சிஜேபி அறிவிப்பு</a></p><p>* மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுடன் சிஜேபி பேச்சுவார்த்தை</p><p>* நான்கு வார காலத்திற்குள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ishan-kishan-tilak-varma-blitz-india-set-220-target-vs-zimbabwe">இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா</a></p><p>* இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார்.</p><p>* திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 60 ரன்கள் விளாசல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kayalvizhi-alagiri-slaps-bank-manager-over-lift-repair-row">'லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்': வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!... </a></p><p>அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கயல்விழி அழகிரி மீது அடையாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university">சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!... </a></p><p>மத்திய அரசின் ஆளுநர் மாளிகை விதிகளைச் சுட்டிக்காட்டி முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்', மற்றும் மூன்றாவதாகவே 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-easily-beats-zimbabwe-in-2nd-t20-to-clinch-series">2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா</a></p><p>* யாஷ் தாகூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>* ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bjp-veteran-mm-joshi-says-better-late-than-never-as-pradhan-quits-had-criticised-use-of-force-on-cjp-protesters">ஒருபோதும் இல்லை என்பதை விட காலதாமதம் சிறந்தது: தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து முரளி மனோகர் ஜோஷி</a></p><p>* போராட்டத்தை அமைதியான முறையில் நிறைவு செய்த அனைத்து மாணவர்களையும் நான் பாராட்டுகிறேன்.</p><p>* அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-slams-third-spot-for-tamil-thai-vaazhthu-at-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">2c66a21e-5c7f-4dfb-a000-a1faa95d556c</guid><pubDate>Sat, 25 Jul 2026 14:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-25T14:12:51.880Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Manonmaniam Sundaranar University,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thaai Vaazhthu,CPM Shanmugam,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,பி.சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ubep1up6/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPM Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/ubep1up6/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மூன்றாவதாகப் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையதாகப் பாடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் வலியுறுத்தினார்.</p><h2><strong>பல்கலைக்கழக விழா சர்ச்சை:</strong></h2><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மத்திய அரசின் ஆளுநர் மாளிகை விதிகளைச் சுட்டிக்காட்டி முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்', மற்றும் மூன்றாவதாகவே 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><h2><strong>எந்த நிபந்தனைக்கும் பணியக்கூடாது:</strong></h2><p>தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தருவது அவருக்கு இழைக்கப்படும் பெரும் அவமரியாதை என சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், "ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலைப் பின்வரிசைக்குத் தள்ளுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. </p><p>ஆளுநர் மாளிகையின் இந்த அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு எவ்வித நிபந்தனைக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படுவதை உறுதி செய்திட வேண்டும்" என்றார்.</p><h2><strong>தமிழ்நாடு அரசின் நீண்டகால நடைமுறை:</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவன விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், நிறைவில் தேசிய கீதம் பாடப்படுவதும் பல தசாப்தகால மரபாகும். ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி முறையைக் காரணம் காட்டி, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இந்த மரபை மாற்றுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.</p> ]]></content:encoded></item><item><title>&apos;லிப்ட் பழுது விவகாரத்தில் ஆத்திரம்&apos;: வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த கயல்விழி அழகிரி மீது வழக்குப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kayalvizhi-alagiri-slaps-bank-manager-over-lift-repair-row</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kayalvizhi-alagiri-slaps-bank-manager-over-lift-repair-row#comments</comments><guid isPermaLink="false">0c83bc21-5e7e-4aa9-9f57-232ee3b4e583</guid><pubDate>Sat, 25 Jul 2026 13:54:17 +0000</pubDate><atom:updated>2026-07-25T13:54:17.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>M.K.Alagiri,Kayalvizhi Alagiri,Harsheen Singh,கயல்விழி அழகிரி,மு.க.அழகிரி,ஹர்ஷீன் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vwb4mmq4/kayal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kayalvizhi Alagiri ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/vwb4mmq4/kayal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான மு.க.அழகிரியின் மகளும், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேத்தியுமான 'கயல்விழி அழகிரி', வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்ததாக அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கி அறையில் நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>கட்டட வாடகை ஒப்பந்தம்:</strong></h2><p>சென்னை அடையாறு பகுதியில் கயல்விழி அழகிரிக்குச் சொந்தமான வணிகக் கட்டடத்தில் வங்கியின் வெளிநாடு வாழ் இந்தியர் கிளை  இயங்கி வருகிறது. வங்கியின் கட்டடத்தில் இயங்கி வந்த மின்தூக்கி பழுதானதால், கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டடப் பராமரிப்பாளரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். </p><p>பராமரிப்பாளர் தரப்பிலிருந்து தகுந்த பதில் வராததால், மேலாளர் ஹர்ஷீன் சிங் கட்டட உரிமையாளரான கயல்விழி அழகிரியை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு லிப்ட் பழுது குறித்துத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>சிசிடிவியில் பதிவான தாக்குதல் சம்பவம்:</strong></h2><p>தனக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த கயல்விழி அழகிரி, கடந்த 20ம் தேதி அடையாறில் உள்ள வங்கி கிளைக்கு நேரில் சென்றுள்ளார். மேலாளர் அறையில் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கயல்விழி, ஆத்திரமடைந்து மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் முழுவதும் வங்கியின் பாதுகாப்பு சிசிடிவி கேமராவில் பதிவானது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.</p><h2><strong>காவல்நிலையத்தில் புகார் &amp; வழக்குப் பதிவு:</strong></h2><p>சம்பவம் குறித்து வங்கி மேலாளர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, சிசிடிவி ஆதாரங்களைச் சமர்ப்பித்தார். இதையடுத்து, எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம், அடையாறு காவல் நிலையத்தில் கயல்விழி அழகிரிக்கு எதிராக முறைப்படி புகார் அளித்தார். </p><p>புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கயல்விழி அழகிரி மீது அடையாறு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள்!-சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/you-made-unyielding-delhi-listen-minister-rajmohan-praises-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/you-made-unyielding-delhi-listen-minister-rajmohan-praises-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ad791bf5-62d9-4b7d-9f68-982844e896ba</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:36:23 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:36:23.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,CJPProtest,நீட் தேர்வு எதிர்ப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/364d4282/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/364d4282/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான்பூச்சி ஜனதா கட்சி" அமைப்பின் கீழ் Gen Z இளைஞர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற இளைஞர் எழுச்சிப் கூட்டத்தில் தமிழக அமைச்சர் 'ராஜ்மோகன்' உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார்.</p><h2><strong>டெல்லியைச் செவிசாய்க்க வைத்த இளைஞர் சக்தி:</strong></h2><p>சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற மாணவர் மற்றும் இளைஞர்களின் ஆதரவுப் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எந்தவொரு கோரிக்கைக்கும் எளிதில் செவிசாய்க்காத டெல்லி அதிகார மையத்தை, உங்களின் அஞ்சாத போராட்டத்தால் நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள். எந்தவித திசைதிருப்பலுக்கும் தலைசாய்க்காமல், உங்களின் இலக்கில் உறுதியாக நின்று போராடி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளீர்கள் எனப் பாராட்டினார்.</p><p>நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, மே மாதம் முதல் CJP அமைப்பின் கீழ் இளைஞர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த மாதம் முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற உண்ணாநோன்பு மற்றும் முற்றுகைப் போராட்டங்களின் தீவிரத்தை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.</p><h2><strong>திசைதிருப்பல்களுக்கு தலைசாய்க்காத உறுதி:</strong></h2><p>மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் வந்தபோதும், Gen Z இளைஞர்கள் தங்களது நீதிக்கான கோரிக்கையில் சற்றும் பின்வாங்காமல் போராடினர். இளைஞர்களின் இந்த அமைதியான, ஜனநாயக ரீதியிலான மக்கள் சக்தி போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-vijay-must-drop-plan-to-go-to-karnataka-for-talks-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">adebe9ab-6b7d-4da2-82a5-61dc86aaac2d</guid><pubDate>Sat, 25 Jul 2026 12:15:39 +0000</pubDate><atom:updated>2026-07-25T12:15:39.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Cauvery,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eqa1kqky/MKStalin00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/eqa1kqky/MKStalin00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted">காவிரி</a> நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!</p><p>நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.</p><p>இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.!</p><p>கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!</p><p>பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-congratulates-pmk-founder-ramadoss-as-he-retires-from-politics#comments</comments><guid isPermaLink="false">44a52a62-9613-4ca3-9559-3e5d683f63cb</guid><pubDate>Sat, 25 Jul 2026 11:22:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T11:22:34.061Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,M.K.Stalin,Dr.Ramadoss,மு.க.ஸ்டாலின்,மருத்துவர் ராமதாஸ்,பா.ம.க</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hvcoqo6z/sta.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dr.Ramadoss - M.K.Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hvcoqo6z/sta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளையும் நல்வாழ்த்துச் செய்தியையும் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று தனது 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பு:</strong></h2><p>தனது பிறந்தநாளை முன்னிட்டு, "இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்; இனி அரசியல் பேச மாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன்" என மருத்துவர் ராமதாஸ் அதிரடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சியின் முழு பொறுப்புகளையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கவனித்துக் கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>மு.க.ஸ்டாலின் வாழ்த்து:</strong></h2><p>சமூகநீதிக்கான பல போராட்டங்களை முன்னெடுத்து, முக்கிய குரலாக ஒலித்து வந்த மருத்துவர் ராமதாஸ்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீவிர அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ள நிலையில், அவரது ஓய்வுக்காலம் மனநிறைவோடும், நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் அமைய வாழ்த்துவதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பா.ம.க நிறுவனர் ராமதாஸூக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-extends-birthday-greetings-to-pmk-founder-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-extends-birthday-greetings-to-pmk-founder-ramadoss#comments</comments><guid isPermaLink="false">41460b05-ca3d-49a4-a90c-182aeb3ea123</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:38:22 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:38:22.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ramadoss,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,ராமதாஸ்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hsuqpn4i/TN-CM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ramadoss- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/hsuqpn4i/TN-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமதாஸூக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><h2>நீண்ட ஆயுளுடன்..</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்று முதல் துறவறம்</h2><p>விழுப்புரம் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் மனைவியுடன் ராமதாஸ் பங்கேற்றார். விழா மேடையில் மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்து ராமதாஸ் பேசியதாவது:-</p><p>* எனது 88-வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.</p><p>* அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன், பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார்.</p><p>* தலைசுற்றல் இருந்ததால் 20 நாட்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன் என்றார்.</p><p>பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியபோது விழாவில் கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மழைக்கு வாய்ப்பு... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-4#comments</comments><guid isPermaLink="false">b5261caa-0845-4636-9a6e-24efdd1fbb6f</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:26:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:26:34.216Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x7sgssci/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/x7sgssci/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</aside><h2><strong>மிதமான மழை</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே நாளை முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>நாளை மற்றும் நளை மறுநாள் அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>28 மற்றும் 29-ந்தேதிகளில் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் 64 விவசாய சங்க தலைவர்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-farmers-association-leaders-meet-dmk-leader-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-farmers-association-leaders-meet-dmk-leader-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">580eada8-5a40-4325-a2d9-4a0d4099fc73</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:12:03 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:12:03.091Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/b1f3iftp/mkstalin006.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/b1f3iftp/mkstalin006.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது.</aside><h2><strong>சந்திப்பு</strong></h2><p>சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலினை</a> தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் 64 விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்தனர்.</p><p>அடுத்த மாதம் தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் பிரதானமான உழவர்களின் கோரிக்கை மற்றும் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தி.மு.க. தலைவர் உதவ வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.</p><p>பின்னர் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி வெ.தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:- </p><p>மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தவும் காவிரியின் உரிமை பங்கு நீரை பெறுவதற்கு உதவ வேண்டும்,  தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவு கடன் அனைத்தையும் முழுமையாக அரசு தள்ளுபடி செய்வதற்கு உதவ வேண்டும், கட்டுப்படியாகாத செலவினங்களை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி குவிண்டாலுக்கு ரூ.3500 ஆதரவு விலை கிடைப்பதற்கும்,  பயிர்சாகு படியை ஊக்குவிக்க தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்குவிப்பு நிதி வழங்கிட வேண்டும், வேளாண்மை துறையின் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 வை அரசாணைப்படி முழுமையாக செயல்படுத்தி ஒரு குடையின்கீழ் கொண்டுவர உதவ வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>விவசாய சங்கத் தலைவர் கோவிந்த ராஜ் கூறியதாவது:-</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, இந்த ஆண்டு உரிய நேரத்தில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி முற்றிலுமாக பொய்த்துப் போய்விட்டது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயகரமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><p>மேலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர தி.மு.க. தலைவர் வலுவான குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். எங்களது கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு என்றும் தி.மு.க. பக்கபலமாக இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தர்மேந்திர பிரதான் ராஜினாமா எதிரொலி- சென்னையில் கொண்டாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-erupts-in-celebration-after-union-education-minister-dharmendra-pradhan-resigns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-erupts-in-celebration-after-union-education-minister-dharmendra-pradhan-resigns#comments</comments><guid isPermaLink="false">97d7383d-776f-4e31-ad15-1d7338bd14c3</guid><pubDate>Sat, 25 Jul 2026 10:00:34 +0000</pubDate><atom:updated>2026-07-25T10:00:34.777Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,Resignation,neet protest,ராஜினாமா,நீட் போராட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/86p9bxfn/pradhan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dharmendra pradhan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/86p9bxfn/pradhan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் எதிரொலியால் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><p>இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வந்ததால் போராட்டம் வலுவடைந்தது. மேலும், போராட்டக் களத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் காயங்களும் ஏற்பட்டன.</p><h2>வாங்சுக் உண்ணாவிரதம்</h2><p>இவ்விவகாரம் தொடர்பாக 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்துவந்த சமூக போராளி சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவரைச் சந்தித்து மத்திய அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்ததை அடுத்து இந்தப் போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><h2>ராஜினாமா</h2><p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வந்த சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ராஜினாமா</h2><p>நீட் தேர்விற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். </p><p>தேசிய அளவில் கடந்த 10 நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பதவி விலக வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் விரிவடைந்து வந்த சூழலில், பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சென்னையிலும் கொண்டாட்டம்</h2><p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை அடுத்து சென்னை தி.நகா் பாலன் இல்லத்தில் 6ஆவது நாளாக போராடி வரும் போராட்டக்காரா்கள் வெற்றி முழக்கமிட்டு கொண்டாடி வருகின்றனர்.</p><p>மேலும், அடுத்த 2 நாட்களில் நீட் ரத்து என்ற அறிவிப்பை கேட்கவிருக்கிறோம், அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் ரூ.100 கோடி என்பதே எனக்கு தெரியாது- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-i-was-not-even-aware-that-the-palani-temple-land-was-worth-rs-100-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-i-was-not-even-aware-that-the-palani-temple-land-was-worth-rs-100-crore#comments</comments><guid isPermaLink="false">e2c32241-9183-4000-b67a-2f90074362d3</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:32:39 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:32:39.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Palani temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,பழனி கோவில் நில மோசடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7vrblo17/Ramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7vrblo17/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது.</aside><p>திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a>, திருச்சி கலெக்டர் பிரதிக் தாயளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.</p><h2><strong>எலி தொல்லை</strong></h2><p>பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சமயபுரம் கோவிலில் பணியில் இருந்த மணியக்காரர் பழனி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நேர்மையாக நடைபெற்று குற்றங்களை கண்டறியும் பொருட்டு, நிர்வாக ரீதியான நடவடிக்கையாக அவர் தற்காலிகமாகச் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். </p><p>விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் எலி நடமாட்டம் குறித்த புகார்கள் தொடர்பாக உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, உள்கட்டமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><h2><strong>பழனி விவகாரம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/பழனி-கோவில்-நில-மோசடி">பழனி கோவில்</a> நிலப்பதிவு விவகாரத்தில் தன் மீதும், அரசின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. பழனியில் ஒரு நிலம் உள்ளது.  அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி மதிப்பு பெறும் என இந்த வழக்கிற்கு  பிறகுதான் எனக்குத் தெரியும்.  அதற்கு முன்பு அதன் மதிப்பு எனக்கு தெரியாது. </p><p>ஜூன் 30-ந்தேதியே இந்து சமய அறநிலையத் துறை மூலம்  மேல்முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது. நிலப்பதிவு ஜூலை 7-ந்தேதி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சரிடம் கூறியது நான்தான். </p><h2><strong>மாணவர்கள் போராட்டம்</strong> </h2><p>தற்போது சி.பி.சி.ஐ.டி. முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசு நியாயமான ஆதரவைத் தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் தனது இணையதளத்தில் தெளிவாக  பதிவிட்டு உள்ளார். </p><p>நீட் தேர்வை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே த.வெ.க. அரசின் நிரந்தர தீர்வாகவும் நிலைப்பாடாகவும் உள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அரசு மதிக்கிறது. ஆனால், இதற்குள் புகுந்து முதலமைச்சருக்கு எதிராகத் திசைதிருப்ப முயல்பவர்களை அரசு உரிய முறையில் எதிர் கொள்ளும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 200 பேரின் வங்கி கணக்கு முடக்கம்- போலீசார் நடவடிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-accounts-of-200-individuals-involved-in-ganja-sales-in-coimbatore-city-frozen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-accounts-of-200-individuals-involved-in-ganja-sales-in-coimbatore-city-frozen#comments</comments><guid isPermaLink="false">7b4e052d-30c2-41f4-a0ca-2cc2c60fdb2c</guid><pubDate>Sat, 25 Jul 2026 09:20:11 +0000</pubDate><atom:updated>2026-07-25T09:20:11.952Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,வங்கி கணக்கு முடக்கம்,கஞ்சா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7kx9koek/account.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்கி கணக்கு முடக்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வங்கி கணக்கு முடக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/7kx9koek/account.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>
பத்திர பதிவுத்துறை உதவியுடன் இவர்களின் சொத்து சார்ந்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம். </aside><p>கஞ்சா, போதைப்பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதிய அரசு பொறுப்பேற்றது முதல் கடந்த ஜூன் மாதம் வரை கஞ்சா, போதைப்பொருள் விற்ற 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.</p><p>200 பேர் வங்கி கணக்கு முடக்கம் </p><p>மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 200 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வங்கி பணப்பரிவர்த்தனைகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ள 200 பேரின் ஆவணங்களை பெற்று, சொத்து விபரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:-</p><p>கஞ்சா, போதைப்பொருள் சப்ளை பெரும்பாலும் முடக்கியுள்ளோம். பயன்படுத்துபவர்களின் பெற்றோருக்கு தகவல்களை அளிப்பதுடன், கவுன்சிலிங் ஏற்பாடு செய்துதர உதவி செய்கிறோம். மேலும், போதைக்கு மிகவும் அடிமையான போலீஸ் நிலையம் வாரியாக 5 பேர் வீதம் தேர்வு செய்து, கடந்த மாதம் 100 பேரை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பியுள்ளோம். </p><p>200 பேரின் வங்கிகணக்கு முடக்கியுள்ளோம். பத்திர பதிவுத்துறை உதவியுடன் இவர்களின் சொத்து சார்ந்த தகவல்களை சேகரிக்கவுள்ளோம். அவர்களது உறவினர்களின் சொத்து விபரங்களையும் சேகரித்து அடுத்தகட்டமாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய 2-ம் கட்ட பணிகள் டிசம்பரில் முடிவடையும்..!- மத்திய அமைச்சர் முரளிதர மகாலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-airport-phase-2-completion-union-minister-murlidhar-mohol#comments</comments><guid isPermaLink="false">0701eed1-8ac1-4df6-86e1-506c38ae16ba</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:20:52 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:20:52.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,chennai airport,2ம் கட்ட பணி,மத்திய அமைச்சர் முரளிதர மகாலி,union minister muralidhara Mahali</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai airport- murlidhar mohol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/deeylnvh/chennai-airport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 2476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, விமான நிலையத்தை நவீன மயமாக்கி தரம் உயர்த்தப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.</p><h2> ரூ.10,762.08 கோடி ஒதுக்கீடு</h2><p>அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் முதல்கட்டமாக ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் பயணிகள் கையாளும் திறன் கொண்ட பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.</p><p>அதை தொடர்ந்து தற்போது வரை விமான நிலையத்தில் 2-ம் கட்டமாக 2 ஆண்டுக்கு சுமார் 35 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் சுமார் 10,762.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2>ரூ. 236.75 கோடி செலவு</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர மகாலி பேசுகையில்,"கடந்த 5 ஆண்டுகளில் விமான நிலைய உள்கட்டமைப்புக்காக சுமார் 236.75 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது" என்று கூறினார்.</p><h2>தி.மு.க. எம்.பி. வில்சன் கேள்வி</h2><p>மேலும் தி.மு.க. எம்.பி.  வில்சனின் கேள்விக்கு பதிலளித்த அவர்,"திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரம் மற்றும் தொழில்நுட்பத் பகுதிகள் 76 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது.</p><p>மேலும், கோவை விமான நிலையத்தில் புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி ரூ.51 கோடி மதிப்பில் எல்லைச் சுவர் கட்டும் பணியும், ஏற்கனவே உள்ள முனைய கட்டிடத்தில் ரூ.14 கோடி செலவில் மாற்றங்கள் செய்யும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>துப்பாக்கிகள், தடியடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை- கமல்ஹாசன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamal-haasan-says-there-is-no-place-for-guns-and-lathi-charges-in-gandhis-land#comments</comments><guid isPermaLink="false">cc2400e2-5a7b-45bf-931d-4327efd57b23</guid><pubDate>Sat, 25 Jul 2026 08:07:38 +0000</pubDate><atom:updated>2026-07-25T08:07:38.370Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Makkal Needhi Maiam,நீட் தேர்வு,Neet exam,kamal haasan,கமல்ஹாசன்,மக்கள் நீதி மய்யம்,CJP Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கமல்ஹாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/gfrwlkj3/kamalhaasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.</aside><h2><strong>காந்தி மண்ணில் இடமில்லை...</strong> </h2><p>மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>மோதலுக்கு பதிலாக உரையாடல் இடம்பெறுவதை கண்டு மகிழ்ச்சி. கருத்து வேறுபாட்டிற்கு உரையாடல் அவசியம். இதுவே ஜனநாயகத்தின் செயல் வடிவம். பெல்லட் குண்டு துப்பாக்கிகள், மின் அதிர்ச்சி தடியடிகள் மற்றும் ஆணிகள் பதிக்கப்பட்ட தடிகளுக்கு காந்தியின் மண்ணில் இடமில்லை.</p><h2><strong>வினாத்தாள் கசிவு...</strong></h2><p>அதேபோல், பாதுகாப்பு படையினர் மற்றும் பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் பாரபட்சமாக இருக்கக்கூடாது. இந்த தருணமும் வாய்ப்பும் வினாத்தாள் கசிவுகளை விட பெரியது. தேர்வுகளின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், கல்வி சார்ந்த மன அழுத்தத்தை குறைக்கவும், கல்வியை நவீனமயமாக்கவும் 3 மாத கால செயல் திட்டத்துடன் கூடிய, கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தத்திற்கான ஒரு தேசிய ஆணையத்தை நான் வலியுறுத்துகிறேன்.</p><p>மேலும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">தேர்வினால்</a> ஏற்படும் மனித இழப்புகளை இளம் அனிதாவின் மரணம் முதன்முதலில் வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் குரலையும் இந்த ஆணையம் கேட்க வேண்டும். அரசாங்கம் இதில் ஈடுபட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. </p><p>இப்போது, ​​உரையாடல் நீடித்த சீர்திருத்தத்திற்கு வழிவகுப்பதை நாம் உறுதி செய்வோம். முன்னால் உள்ள பாதை நீண்டது, ஆனால் இந்தியர்கள் அதை ஒன்றாகவே கடக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Glad to see dialogue replacing confrontation. Dissent deserves dialogue. This is democracy in action.<br><br>Pellet guns, electric shock batons and nail-studded lathis have no place in the land of Bapu. <br><br>Equally, attacks on security personnel and public property must be examined…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2080897683481596084?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு மெட்ரோ ரெயில் விரிவாக்கம்: திட்ட அறிக்கை டெண்டர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">942c968a-de40-4498-94f6-218c0cfdce60</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:47:42 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:47:42.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,செங்கல்பட்டு,chengalpattu,Kilambakkam,மெட்ரோ ரெயில்,கிளாம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/6iik9jw0/metro-rail.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் புறநகர் பகுதி மக்களையும் இணைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><h2>டெண்டர்</h2><p>தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையம் வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்தத் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.</p><p>சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை திட்டமிட்டு இருக்கும் வழித்தடத்தில் நீட்சியாக செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பாதை டபுள் டக்கர் பாதையாக  அமைவது சிறப்பாகும். </p><p>அதன்படி கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருக்கும் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இந்த மெட்ரோ பாதை அமைய உள்ளது. </p><p>இந்தத் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை, திட்டத்தின் தோராய நிதி மதிப்பு, ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வுசெய்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது: </p><p>செங்கல்பட்டு விரிவாக்க மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தடையற்ற சாலை போக்குவரத்துடன் மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்கப்படும். வெளிவட்ட சாலையுடன் இணைப்புக்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வு பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.</p><p>இந்த மேம்பாட்டு சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை நீட்டிக்கப்பட்ட பாதை செல்லும்.</p><h2>திட்ட மதிப்பீடு ரூ.9,335 கோடி </h2><p>கிளாம்பாக்கம், சென்னை விமான நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் முக்கிய போக்குவரத்து பகுதியை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 13 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் இடம் பெறும். மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது</p>]]></content:encoded></item><item><title>ரூ.35 கோடி பேரம் வழக்கு: திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம் விசாரணை நிறைவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-and-brother-appear-at-thiruvallikeni-police-station-in-rs-35-crore-bribery-case#comments</comments><guid isPermaLink="false">ae414c55-09fe-4ece-9512-c692e6f6043f</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:43:20 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:43:20.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,senthil balaji,செந்தில் பாலாஜி,tvk,பேரம் வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/wscef67d/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அந்த கட்சியின் தலைவரான விஜய் முதலமைச்சர் ஆனார். இதை தொடர்ந்து விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் நடத்தப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது.</p><h2>ரூ.35 கோடி</h2><p>ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை அணுகி சிலர் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக ஆசைகாட்டி உள்ளனர்.</p><p>இது தொடர்பாக இளையராஜா எம்.எல்.ஏ. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>செந்தில் பாலாஜி</h2><p>இந்த விவகாரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.</p><p>இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அசோக் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீசார் கரூர் சென்று சம்மனும் அளித்தனர்.</p><p>இதையடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தபடியே ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். கடந்த 8-ந்தேதி இருவருக்கும் சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.</p><p>முன்ஜாமீன் உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.25000-க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும். </p><p>மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணி, மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது.</p><p>இதன்படி செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றனர். </p><h2>இன்று ஆஜர்</h2><p>இதனை தொடர்ந்து  செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இன்று காலை 10.30 மணி அளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். இருவரும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி முதல் நாளான இன்று கையெழுத்து போட்டனர். அவர்களுடன் வக்கீல்களும் உடன் வந்திருந்தனர். இதன் காரணமாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.</p><h2>கலைக்க கூடாது</h2><p>மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று கோர்ட்டு நிபந்தனை விதித்து இருப்பதால் செந்தில் பாலாஜி தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.</p><p>செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இருவரும் வழக்கு விசாரணையின்போது தலைமறைவாகக் கூடாது. வழக்கு தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.</p><p>நிபந்தனைகளை மீறினால் விசாரணை நீதிமன்றம் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும்  கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>விசாரணை நிறைவு</h2><p>ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பாக 2 மணி நேரத்திற்கு மேலாக செந்தில்பாலாஜியிடம் திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.</p><p>விசாரணை முடிந்து வந்தவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும்போது,“செய்தியாளர்களிடம் பிறகு பேசுகிறேன்” என கூறிவிட்டு செந்தில் பாலாஜி நகர்ந்து சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவையில் பரபரப்பு சம்பவம்: கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய 4 ஊழியர்கள் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koniamman-temple-hundiyal-money-theft-4-arrest#comments</comments><guid isPermaLink="false">ce17bf03-a292-44f2-a111-51f5d046eb33</guid><pubDate>Sat, 25 Jul 2026 07:24:12 +0000</pubDate><atom:updated>2026-07-25T07:24:12.148Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,உண்டியல் பணம் திருட்டு,koniamman temple,கோனியம்மன் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-25/l8h579zo/koniamman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</aside><p>கோவை நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உள்ளது. கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கிறார்கள். </p><p>ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மனை வழிபட கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. </p><h2><strong>உண்டியல் பணம் திருட்டு</strong> </h2><p>இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் உண்டியல் திருட்டு சம்பவம் நிகழ்ந்ததும், கோவில் ஊழியர்களே இத்தகை இழிவான செயலில் ஈடுபட்டதும் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியில் உள்ளது. </p><p>கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல் உள்ளது. சமீபத்தில் நடந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. </p><p>மொத்தம் இருந்த 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கடந்த 15-ந் தேதி கோவில் வளாகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. கோவில் ஊழியர்கள் மட்டுமல்லாமல் பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உண்டியல் பணத்தை எண்ணினர். அப்போது ஒரு உண்டியலை திறக்காமலேயே ஊழியர்கள் சிலர் அதில் இருந்த பணத்தை திருடி விட்டதாக பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். </p><h2><strong>அதிகாரி விசாரணை</strong> </h2><p>அதன்பேரில் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நேற்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ்குமார் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் ஆய்வு செய்து விசாரிக்கப்பட்டது. </p><p>விசாரணையில் உண்டியல் பணம் திருடப்பட்டது உண்மை என தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கோவில் சீட்டு விற்பனையாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து செயல்பட்டது தெரியவந்தது. </p><p>உண்டியல் எண்ணும் பணியின்போது ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு அதனை சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பின்னர் அந்த உண்டியலை டிராலியில் எடுத்துச் சென்று கலையரங்கத்துக்கு பின்னால் வைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து பையில் போட்டு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். </p><h2><strong>4 ஊழியர்கள் கைது</strong> </h2><p>மொத்தம் அதில் ரூ.31 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை ஊழியர் பாலசுப்பிரமணியன் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து பங்கு வைத்துக் கொண்டுள்ளனர். விசாரணையில் 4 பேரும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர். </p><p>இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ஊழியர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப்குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். </p><p>இவர்களில் பாலசுப்பிரமணியம் கேரளாவைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து வேலைக்கு வந்து சென்றுள்ளார். சரவணன் பேரூரைச் சேர்ந்தவர், பிரதீப் குமார் ரத்தினபுரியில் வசித்து வருகிறார். கிருஷ்ணராஜ் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். </p><p>பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு ஊழியர்கள் கைதான சம்பவம் கோவையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>