<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 11 Aug 2026 08:51:37 +0000</lastBuildDate><item><title>
Tamil News Live: FCRA திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்  - 11 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">a3c449d5-f099-414e-8242-4ebc0475b347</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:51:10.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடுத்த 6 மாதங்களில் 8000 கோடி கிடைக்க வேண்டுமென்றால் அது ஏன் வரி வருவாயில் சேரவில்லை -எடப்பாடி பழனிசாமி</p><p>2026-2027 வரி வருவாயைப் பார்க்கும்போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாள்கள் தான்.</p><p>100 நாள் செயல் திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும்.</p><p>வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது.</p><p>தவெகவை போல திமுகவும், அதிமுகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளன - எடப்பாடி பழனிசாமி</p><p>வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்</p><h2>எடப்பாடி பழனிசாமி (அதிமுக) உரை</h2><p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.</p><p>FCRA சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் FCRA திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம். 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டுவர முயற்சி</p><p>காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்திவரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவறு செய்தால் சொத்தை முடக்குவதா? - அமைச்சர் வன்னிஅரசு</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>நீட் விலக்கு, FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானம் இரண்டுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்.</p><p>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.</p><p>நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்று தீர்மானம்.</p><p>கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை  நிஜத்தில் நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.</p><p>RSS திட்டங்களை கொண்டுவருவதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது.</p><p>அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பதுதான் பாஜகவின் வேலை.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? அமைச்சர் ஷாஜகான் </p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம்.</p><p>வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p>உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம்.</p><p>முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம்.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு ஐயுஎம்எல் ஆதரவு - அமைச்சர் ஷாஜகான்</p><h2>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் உரை</h2><p>சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலே FCRA திருத்த மசோதா </p><p>16 சிறுபான்மை நல அமைப்பினருடன் திமுக எம்பி வில்சன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மசோதா குறித்த பேசினார்.</p><p>சிறுபான்மை அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போல் செயல்படுகிறது FCRA.</p><p>50 ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த சமூக நல அமைப்புகள் ஒரே கையெழுத்தில் மத்திய அரசின் கைக்கு சென்று விடும்.</p><p>இது சட்டத்தின் பெயரில் துப்பாக்கி முனையில் அடிக்கப்படும் கொள்ளை மட்டுமல்ல சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் கொள்ளை. இந்த தீர்மானத்தை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக ஆதரவு - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>சிறுபான்மையினருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது - சிபிஎம்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சிபிஎம் ஆதரவு</p><p>சிறுபான்மை அமைப்புகளுக்கு வரும் நிதி பறிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் - சிபிஎம்</p><h2>மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உரை</h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு.</p><p>தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு?</p><p>FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது.</p><p>தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் தான் பணம் வருகிறது. அதுவும் கண்காணிக்கப்படுகிறது.</p><p>வெளிநாட்டு நிதி வங்கிகள் மூலம் தான் வரும் போது புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?</p> <h2>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா.</p><p>FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.</p> <h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை </h2><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம்.</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு - எம்எல்ஏ போஜராஜன்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>பிரேமலதா உரை</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதி சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p> <p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றம் - பிரேமலதா</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். FCRA மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது.</p><p>வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>மாணவர்கள் சமூகத்திற்கு இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <p>நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு - உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்</p><p>நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. </p><p>நீட் தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி  - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் - அமைச்சர் ஆதவ்</p><p>பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய்.</p><p>அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய்.</p><p>ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது - அமைச்சர் ராஜ்மோகன் </p><p>நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இதில் மாணவர் நலனே முக்கியம். </p><p>நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். </p><p>நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கும் தெரியும், ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்திற்கு சரியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனரா? என தவெக அரசு விளக்கம் தர வேண்டும்.</p><p>நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்.</p><p>மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார் - திமுக எம்எல்ஏ முத்துராஜா</p><h2>திமுக எம்எல்ஏ முத்துராஜா உரை</h2><p>நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.</p><p>இந்தியாவிலேயே நீட் தேர்வை முதல்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. 2017-ல் அமலுக்கு வந்த நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக.</p><p>நீட் விலக்கு தொடர்பாக 12 மாநில முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.</p> <h2>தமிமுன் அன்சாரி உரை</h2><p>நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது. நிரந்தர தீர்வு தேவை.</p><p>பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக்கட்சி ஆதரவு - தமிமுன் அன்சாரி</p><h2>ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.</p><p>திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p>மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக.</p><p>நீட் பாதிப்பில் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 பேர் உயிரிழந்துள்ளது.</p> <p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - ஓ.எஸ்.மணியன்</p> <p>மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நீட், CUTE உள்ளிட்ட எந்தவிதமான நுழைவுத்தேர்வும் வைக்கக்கூடாது.</p><p>சமூக நீதி, அரசு பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர், ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. நீட் கோச்சிங் என்பது மிகப்பெரிய வணியமயமாகி விட்டது.</p><p>இதுவரை நீட் தேர்வால் நாடு முழுவதும் 500 மாணவர்கள் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர் உயிரிழப்பு. இந்த முறை நீட் வினாத்தாள் கசிவு, அதன்பின் நடந்த தேர்வு நடைமுறைகளால் மட்டும்  13 மாணவர்கள் பலியாகி உள்ளனர் - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>நீட் ரத்து தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.</p><p>2006-ம் ஆண்டே நீட் தேர்வு கொண்டு வர இருந்தபோது அன்புமணி அதனை தடுத்தார்.</p><p>நீட்டில் 110 மதிப்பெண் எடுத்த மாணவர் வசதியாக இருந்தால் மருத்துவராகலாம்.</p><p>590 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரால் மருத்துவராக முடியவில்லை.</p><p>ஆண்டுக்கு 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கிறது.</p><h2>சிபிஐ எம்எல்ஏ செல்லசுவாமி உரை</h2><p>கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது பெரிய துரோகம். அரசுப்பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை</p><h2>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் உரை</h2><p>நீட் தேர்வால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>சமூக நீதியின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது நீட்.</p><p>நாடு முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முறைத்துள்ளன.</p><p>நீட் மட்டுமல்ல எந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.</p><p>நீட் ரத்து தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>நமது மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். தரமான கல்வியை கொடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்.</p><p>நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது.</p><p>தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.</p><p>நீட் பயிற்சி முகாமை அரசே நடத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வு எழுதாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் ஆனவன் நான். ஐஆர்எஸ் ஆவதற்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவன் நான் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு - விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.</p><p>நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.</p><p>தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்</p><h2>சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உரை</h2><p>மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல.</p><p>முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.</p><p>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை - கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது.</p><p>நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது.</p><p>நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன.</p><p>நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.</p><p>தமிழ்நாட்டை வழிநடத்திய திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்களின் அனுபவ பாடங்களை இளம் தலைமுறையினர் கேட்க வேண்டும்.</p><p>அரசியல் களத்தில் பார்வைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்கலாம் -  நித்தியானந்தன் </p> <p>முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் மைக்ரோ டெக் பார்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீர்த்தனா</p><p>வேட்டி, சேலை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் 2.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்.</p><p>பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் -  நித்தியானந்தன் </p> <p>பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும். முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம் - நித்தியானந்தன் </p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் உரையாற்றினார்.</p><p>விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் குறைவு தான்.</p> <p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி</p><p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.</p><p>முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆனந்த்</p><p>கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.</p><p>அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை  - சவுமியா அன்புமணி</p> <p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம்  நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி</p> <h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.</p><p>கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><p>முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.</p><p>பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்</p><p>முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்</p><p>வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.</p><p>திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p>மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p><p>தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்</p><p>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்</p> <p>மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை -  ஓபிஎஸ்</p><p>அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்</p><p>ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.</p><p>ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்</p><p>முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்</p><p>இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்</p><p>உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம்  - ஓ.பன்னீர்செல்வம்</p><p>புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்</p><p>பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்</p><p>செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்</p><p>3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady">நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</a></p><p>* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fcra-amendment-bill-resolution-passed-unanimously-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">461913b9-2b50-46a3-8c0c-075117df2b5e</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:31:20 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:31:20.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,ஜேசிடி பிரபாகர்,speaker prabakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ speaker JCD prabhakar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pr03ohok/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில், FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும். FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><p>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.</p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.</p><p>இதனை தொடர்ந்து FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை.</p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vanni-arasu-welcome-the-resolution-opposing-the-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">032daf7b-837c-4cd5-b8b3-ce18b80788d0</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:30:24 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:30:24.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வன்னி அரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/06vohwhw/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டசபையில் இன்று வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தை அமைச்சர் வன்னி அரசு வரவேற்றார். அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:-</p><p>* FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். </p><p>* நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம், இன்று தீர்மானம். </p><p>* கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை நிஜத்தில் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். </p><p>* ஆர்எஸ்எஸ் திட்டங்களை கொண்டு வருவைதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது. </p><p>*  அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது தான் பாஜகவின் வேலை. </p><p>* கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill">FCRA</a> திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. </p><p>* தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கெனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. </p><p>* 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டு வர முயற்சி. </p><p>* காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவற செய்தால் சொத்தை முடக்குவதா? </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்கு அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா. </p><p>* FCRA சட்டத்திருத்தம் மூலம் நாடு முழுவதும் 37 ஆயிரம் அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாஜக திட்டம்.</p><p>* புதிய சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும். தொண்டு நிறுவனங்களும் அதன் மூலம் செயல்படும் கல்வி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம். </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 6ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 2000-க்கு மட்டும் தான் FCRA பதிவு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்க பாஜக காத்திருக்கிறது. </p><p>* கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்தை முடக்கி அதனை முழுமையாக விற்கக்கூட அரசுக்க அனுமதி தருகிறது புதிய சட்டத்திருத்த மசோதா என்றார். </p>]]></content:encoded></item><item><title>மத்திய அரசின் FCRA மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு பேரவையில்  திமுக-ஐயுஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-iuml-support-against-central-govt-fcra-bill-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">ab4d9502-93b0-4ce2-862b-0b4751825ff3</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:25:08.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,IUML,TNAssembly,ஐயுஎம்எல்,FCRA,தமிழ்நாடு பேரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK and IUML ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/6gqbiy8t/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ள வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த (FCRA) மசோதாவைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசினார்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த FCRA திருத்த மசோதா, குறிப்பாகச் சிறுபான்மையினரால் நடத்தப்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் மிகப்பெரிய தாக்குதலாகும். </p><p>இந்த மசோதாவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து 16 சிறுபான்மை நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.வில்சன் மற்றும் பிரதிநிதிகள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p><h2>அமலாக்<strong>கத்துறை போ</strong>ல் செயல்படும் FCRA</h2><p>தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கும், அச்சத்திலேயே வைத்திருப்பதற்கும் மத்திய அரசால் அமலாக்கத்துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல் இந்த FCRA சட்டமும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினார்.</p><p>கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளை ஆற்றி கட்டிக்காக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசின் ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் அவர்களின் கைக்குச் சென்றுவிடும் ஆபத்து இதில் உள்ளது.</p><h2>ச<strong>ட்டப்பூர்வக் கொள்ளை</strong></h2><p>"இது வெறும் சட்டத்தின் பெயரால் துப்பாக்கி முனையில் நடத்தப்படும் கொள்ளை மட்டுமல்ல; சட்டப்பூர்வமாக அரங்கேற்றப்படும் மிகப்பெரிய கொள்ளை" என்று கடுமையாக விமர்சித்த அவர், இந்த ஆபத்தான தீர்மானத்தை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>ஐயுஎம்எ<strong>ல் ஆதரவு -அமைச்சர்</strong> ஷாஜகான்</h2><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு அமைச்சர் ஷாஜகான் ஆதரவு தெரிவித்து பேசியதாவது, தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம். வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. </p><p>அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம். முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம். கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துவோர் கலங்கிப்போய் உள்ளனர். FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? என அமைச்சர் ஷாஜகான் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FCRA மசோதாவுக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ, அதிமுக ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-and-admk-support-to-fcra-bill#comments</comments><guid isPermaLink="false">f090ea36-bb69-47b9-904a-110aaeefe2e6</guid><pubDate>Tue, 11 Aug 2026 08:11:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T08:11:03.853Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:title><media:description type="html"><![CDATA[ FCRA மசோதா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/pldxwdtx/FCRA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ, அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE">மசோதாவை</a> தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்தார். தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act">FCRA</a> மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு தெரிவித்தது. </p><h2><strong>பாஜக எதிர்ப்பு</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பதாக எம்எல்ஏ போஜராஜன் தெரிவித்தார். இதுதொடர்பாக போஜராஜன் பேசுகையில், </p><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம் என்றார்.</p><h2><strong>ஆதரவு</strong></h2><h2><strong>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</strong></h2><p>FCRA தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா. FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றார். </p><h2><strong>மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு. தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு? FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது என்றார். </p>]]></content:encoded></item><item><title>FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-moved-a-special-resolution-against-the-fcra-act#comments</comments><guid isPermaLink="false">bed6abe2-3edf-4b93-bf1a-e0449200e5ad</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:52:39 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:52:39.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minster Raj Mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0iwx27he/raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:</p><h2>FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும்</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும்.</p><p>FCRA திருத்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர்.</p><p>FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.</p><p>FCRA திருத்த மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>இந்த தீர்மானம் தொடர்பாக தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:</p><p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர், கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கைவாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதிச்சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p><p>FCRA பணம் புறவாசல் வழியாக வந்துவிடாமல் தவெக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>தவறான வழியில் தமிழகத்தில் நுழையும் பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு ரத்து தீர்மானம்- கடும் விவாதத்திற்கு பிறகு ஒருமனதாக நிறைவேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-cancellation-resolution-passed-unanimously</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-cancellation-resolution-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">bbe9ceae-8f37-461f-a982-8de12b383df5</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:49:49 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:49:49.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3m3uk8c6/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3m3uk8c6/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் நுழைவுத்தேர்வுக்கு</a> எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. </p><p>இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக  உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், மாணவர்கள் சமூகத்திற்கும் இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் என்றார். </p><p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments">தி.மு.க.</a> எம்.எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் நீட் சமூக நீதிக்கு எதிரானது, வினாத்தாள கசிவுகள் மாணவர்களின் கனவுகளை கலைக்கிறது. நீட் தேர்வு முறையால் கல்வி மாபிஃயாக்கள் பயனடைகிறார்கள், ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். ஒரே ஒரு நுழைவுத்தேர்வு வழியாக மாணவர்களின் திறமையை தீர்மானிப்பது மிகப்பெரிய தவறு. நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்திய பின்பு மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளனர். டிஜிட்டல் இந்தியா என மேடைக்கு மேடை முழங்கும் பாஜக அரசால் ஒரு தேர்வை கூட சிறப்பாக நடத்த முடியவில்லை என்றார். </p><p>அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய எ.வ.வேலு, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசியவர் காங்கிரசை சேர்ந்த மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானம்: தவெக Vs திமுக காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-cancellation-resolution-tvk-and-dmk-arguments#comments</comments><guid isPermaLink="false">b0aebc88-8200-46df-b583-435bc5b8bc11</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:24:21 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:24:21.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tdifs1y4/tvk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/tdifs1y4/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தவெக மற்றும் தி.மு.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><p>தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், எந்த நுழைவுத்தேர்வும் இருக்க கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு. சட்டப்போராட்டங்கள் எந்த அளவில் உள்ளது என்பதை தமிழக அரசு விளக்கம் வேண்டும். நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார். மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசியிருக்கிறார்.  மின்துறை அமைச்சர் பேசியது குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution">தி.மு.க</a>. எம்.எல்.ஏ. முத்துராஜாவின் இந்த பேச்சுக்கு த.வெ.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஆதர் அர்ஜூனா, நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை, இதில் மாணவர் நலனே முக்கியம். நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கம் தெரியும், ஆதாரம் உள்ளது என்றார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், நீட் விவகாரத்தில் இங்கே பலனடைந்த ஒரு சில மாணவர்களை பற்றி பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார், பல ஆயிரம் மாணவர்களின் நிலை என்ன?. பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம். பாதிக்கப்படும் பல லட்சம் குழந்தைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். </p><p>இதற்கிடையே டெல்லி சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் ஆதரவு தெரிவிக்கவில்லை என தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவிக்க, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய். அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய். ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். மேலும் பல முறை அறிவுறுத்திய பின்னரும் தி.மு.க. எம்எல்ஏ நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் பேசுகிறார் என்று அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டினார். </p><p>இதனிடையே, நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதற்கு, நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. நீட தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது, தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. </p> ]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானத்திற்கு பாமக முழு ஆதரவு!- சவுமியா அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-full-support-for-neet-cancellation-resolution-sowmya-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-full-support-for-neet-cancellation-resolution-sowmya-anbumani#comments</comments><guid isPermaLink="false">931362c0-0f58-433c-b04e-11df413b0865</guid><pubDate>Tue, 11 Aug 2026 07:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T07:16:26.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சவுமியா அன்புமணி,neet,நீட் தேர்வு,தமிழ்நாடு சட்டப்பேரவை,Sowmya Anbumani,TNAssembly,Bhojarajan,எம்.எல்.ஏ போஜராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/sx4evmw1/ggg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowmya Anbumani  Bhojarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/sx4evmw1/ggg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் சவுமியா அன்புமணி முழு ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.</p><p>நீட் தேர்வு முறையால் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத அவலநிலை நீடிக்கிறது. தற்போதுள்ள சூழலில் வெறும் 15 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட ரூ.30 லட்சம் வரை பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலை உள்ளது. இது உண்மையான திறமைக்கு எதிரானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>மாநில<strong>ப் பட்டியலுக்கு மாற்</strong>றம்</h2><p>கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பாமகவின் தொடர் கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர், மாநில அரசே மருத்துவச் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.</p><h2>தீர்மா<strong>னத்திற்கு</strong> ஆதரவு</h2><p>வணிகமயமாக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்படும் இந்தத் தனித் தீர்மானத்தை பாமக முழு மனதுடன் ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.</p><h2><strong>நீட் பயிற்சி மையங்களை அரசே ஏற்று நடத்தலாமே- பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன்</strong> </h2><p>முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன், மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நீட் தேர்வின் அவசியத்தையும், அதன் மூலம் கிடைக்கும் கல்வித் தரத்தையும் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு முறையினால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக, பல்லடத்தில் உள்ள ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.</p><h2>அரசே பயி<strong>ற்சி மையங்களை நடத்த கோரிக்கை</strong></h2><p>தனியார் பயிற்சி மையங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழும் நிலையில், "நீட் பயிற்சி மையங்களை ஏன் அரசே நேரடியாக ஏற்று நடத்தக்கூடாது?" என்ற கேள்வியை முன்வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசே இலவசப் பயிற்சி அளிக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் ரத்து தீர்மானம்- அதிமுக, திமுக, மஜக ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-dmk-support-to-neet-cancellation-resolution#comments</comments><guid isPermaLink="false">c7d8a301-bce7-4f7c-8058-17dba27b042f</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:56:29 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:56:29.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/el5yfk6a/NEET.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நீட்]]></media:title><media:description type="html"><![CDATA[ நீட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/el5yfk6a/NEET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக, அதிமுக, மஜக ஆகிய கட்சிகள் ஆதரித்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட் நுழைவுத்தேர்வுக்கு</a> எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கூறி தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இந்த தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் ஆதரவு அளித்தன. இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.எஸ்.மணியன் தீர்மானத்தின் மீது பேசுகையில், </p><p>நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.  நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக தான் என்றார். </p><p>அ.தி.மு.க.வை தொடர்ந்து நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக பேசிய தமிமுன் அன்சாரி, நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது, நிரந்தர தீர்வு தேவை. பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தி.மு.க.வும் ஆதரவும் தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராஜா பேசுகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம். இந்தியாவிலேயே நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவராக தேர்வு பெற்றவன் நான். நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. எந்த நுழைவுத்தேர்வும் இருக்கக்கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்றார். </p>]]></content:encoded></item><item><title>&apos;கல்வி மாபியாக்களின் கையில் நீட் மையம்&apos;: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அதிரடி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-center-in-hands-of-education-mafia-mla-thali-ramachandran-fiery-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-center-in-hands-of-education-mafia-mla-thali-ramachandran-fiery-speech#comments</comments><guid isPermaLink="false">e809d09e-5dba-4694-9281-d5caad52222b</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:54:17 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:54:17.293Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீட் தேர்வு,Neet exam,TNAssembly,சட்டப்பேரவை கூட்டத்தொடர்,MLA Thali Ramachandran,எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/zkbznay7/ll.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MLA Thali Ramachandran  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/zkbznay7/ll.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் நீட் தேர்வு மற்றும் அதை சுற்றியுள்ள வர்த்தக அமைப்புகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.</p><p>சமூக நீதியின் ஆணிவேராக தமிழ்நாடு திகழ்கிறது. சமூகநீதியின் ஆணிவேரில் வெண்ணீரை ஊற்றுவது போல ஒன்றிய அரசு இளங்கலை மருத்துவப் படிப்பில் நீட் என்ற நுழைவுத்தேர்வவை ஒரு நவீன தீட்டை நுழைத்து தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்திருக்கிது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு அரியலுர் மாணவி அனிதா மற்றும் அவரை தொடர்ந்து அநேக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.</p><h2>கல்வி மா<strong>பியாக்களின்</strong> ஆதிக்கம்:</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam">நீட் தேர்வு </a>முறையை மூலதனமாக வைத்து நாடு முழுவதும் புற்றீசல் போல தனியார் நீட் பயிற்சி மையங்கள் பிரம்மாண்ட வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இத்தகைய மையங்களை அரசியல் பின்புலம் வாய்ந்த 'கல்வி மாபியாக்கள்' தான் இயக்கி வருகிறார்கள் என்று சாடிய அவர், இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.</p><h2>சமூக நீதிக்கு<strong>ம் ஏழை</strong> மாணவர்களுக்கும் பாதிப்பு</h2><p>இவ்வளவு பெரிய தொகையைக் கட்டணமாகச் செலுத்த முடியாத கிராமப்புற, அடித்தட்டு மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவு தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. திறமை இருந்தும் பண வசதி இல்லாத காரணத்தால் ஏழை மாணவர்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. எந்த உயர் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்றார்.  மேலும், பொதுப்பட்டியலில் இருக்கும் நமது கல்விளை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>NEET தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-moved-a-special-resolution-against-the-neet-exam#comments</comments><guid isPermaLink="false">33ee50ff-f7d5-4214-a3d1-ef3b192c3ee2</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:33:09 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:33:09.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,நீட் தேர்வு,Neet exam,தனித்தீர்மானம்,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/utlpz29t/arunraj.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/utlpz29t/arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்வழி மாணவர்கள், சமூக &amp;  பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் முறைகேட்டால் உயிரிழப்பும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சொல்லொணா துயரமும் ஏற்பட்டுள்ளதாக தீர்மானத்தில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  </p><p>தீர்மானத்தை கொண்டு வந்து அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், </p><h2><strong>சொல்லொணா துயரம்</strong></h2><p>* ஒரு மாணவர் 12 ஆண்டாக பள்ளியில் கற்ற கல்வியை விட ஒரு நாள் நடக்கும் தேர்வு அவரது திறமையை மதிப்பிடக்கூடாது. </p><p>* தமிழ்நாடு சமூகநீதியை அடிப்படையாக கொண்ட கல்வியை அளித்த மாநிலம். பல துறைகளில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக உள்ளது. </p><p>* இதன்மூலம் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இயலும். </p><p>* முறைகேடுகளை கருத்தில் கொண்டு நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். </p><p>*  நீட் ரத்து தொடர்பாக உள்ள சட்டங்களில் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். </p><p>* ஒரு மனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டும் குடியரசுத் தலைவர் இசைவு தெரிவிக்கவில்லை. </p><p>* வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் 2026 நீட் இளநிலைத் தேர்வு ரத்தாகி மறுதேர்வு நடத்தப்பட்டது. </p><p>* கடும் உழைப்பில் தேர்வெழுதிய மாணவர்கள் சொல்லொணா துயரம்,  சிலரை உயிரை மாய்த்தப் பரிதாபம். </p><p>* நீட் அமலுக்கு வந்த பின்னர் அடிப்படை சமநிலை கேள்விக்குள்ளாகி உள்ளது. </p><p>* தமிழ்வழி மாணவர்கள், சமூக &amp;  பொருளாதாரத்தில் பின்தங்கியோரின் மருத்துவ கனவை நீட் பறிக்கிறது. </p><p>* வரம்பின்றி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருகவே நீட் வழி வகுக்கிறது. </p><p>* மாணவர்களின் கவனத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து திசைத்திருப்புகிறது நீட் தேர்வு. </p><p>* மாணவர்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்துள்ள நீட் நுழைவுத்தேர்வு அகற்றப்பட வேண்டும். </p><p>* நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. </p><p>* மாநில அரசின் கருத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். </p><p>* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றார். </p><p>மேலும் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>பத்திரப்பதிவை தடை செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை பாதுகாத்தோம்- பி.கே. சேகர்பாபு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-temple-property-saved-p-k-sekar-babu-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-meenakshi-temple-property-saved-p-k-sekar-babu-say#comments</comments><guid isPermaLink="false">c91726e2-7b8a-4ce2-9517-9b1dd9958288</guid><pubDate>Tue, 11 Aug 2026 06:06:22 +0000</pubDate><atom:updated>2026-08-11T06:06:22.670Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,பிகே சேகர்பாபு,PK Sekar Babu,Madurai Meenakshi Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mrw2syka/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/mrw2syka/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- </p><h2><strong>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்</strong></h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சொத்துக்களைப் பாதுகாத்த ஆட்சி, திராவிட மாடல் ஆட்சிதான். 2016-ம் ஆண்டிலேயே அந்தச் சொத்துக்களின் பத்திரப் பதிவிற்குத் தடை கோரி, அன்றைய மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். </p><h2><strong>தி.மு.க. அரசு</strong></h2><p>அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டிலிருந்து வெவ்வேறு மாவட்டங்களில் அந்தப் பத்திரப் பதிவை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அந்த அனைத்து முயற்சிகளையும் தி.மு.க. அரசு முறியடித்தது. 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்து சமய அறநிலையத்துறைச் சொத்துக்களை மீட்டிருக்கின்றோம்.</p><h2><strong>நிலங்கள்</strong></h2><p>பட்டா மற்றும் சிட்டா போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்ததையும் கண்டறிந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.</p><h2><strong>ஸ்ரீரங்கம் கோபுரம்</strong></h2><p>ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பொறுத்தவரை, 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் நிலைகளின் சில பாகங்கள் உதிர்ந்து, கோபுரம் சரிந்தது. அதை அறிந்தவுடனேயே, அன்றைய அமைச்சராக இருந்த கே.என்.நேருவும் நானும் நேரில் ஆய்வு செய்தோம். அப்போது ஜெயபால் என்பவர் ரூ.1.75 கோடி ரூபாய் செலவில் அதனைப் புதுப்பித்துத் தருவதற்கு அனுமதி கேட்டார். </p><h2><strong>கோபுரப்பணிகள்</strong></h2><p>ஒரே மாதத்தில் அனுமதி வழங்கி பணிகள் முடிக்கப்பட்டன. ஆகவே, இந்தக் கோபுரப்பணிகள் எந்த வகையிலும் தாமதிக்கப்படவில்லை. அதற்கு ஸ்டிக்கர் ஒட்டத்தான் அமைச்சர் சென்றிருக்கிறார்.</p><h2><strong>திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் திறன் என்ன என்று ஒரு வருடத்தில் காட்டுவோம். அதிகாரிகளை மிரட்டுவது, “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பேசுவது மட்டுமே கையில் வைத்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம்.</p><h2><strong>மக்கள் பணிகள்</strong></h2><p>அதை பார்த்தாலே, 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய மக்கள் பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய ஆட்சி கடந்த திராவிட மாடல் ஆட்சி என்பது தெரியும்.</p><h2><strong>ஆன்மீகம்</strong></h2><p>ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அதற்கு எதிரானது என்றொரு பிம்பத்தைக் கட்டமைத்திருந்தார்கள். அந்தப் பிம்பத்தை அடித்து நொறுக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் 3-ம் நாள் விவாதம்: சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sowmiya-anbumani-says-failure-to-waive-crop-loans-is-disappointing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sowmiya-anbumani-says-failure-to-waive-crop-loans-is-disappointing#comments</comments><guid isPermaLink="false">44d1fec3-f012-40a8-a5f0-d273daff3fa8</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:54:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:54:26.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,Sowmiya Anbumani,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j4bm90a3/sowmiya0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி- அமைச்சர் ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ சவுமியா அன்புமணி- அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/j4bm90a3/sowmiya0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று சவுமியா அன்புமணி கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க., த.வெ.க. தரப்பில் காரசார விவாதம் நடைபெற்றது. </p><p>விவாதத்தின் போது, தி.மு.க.வினர் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் பேசினார். இதற்கு தி.மு.க.வினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போதுபேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சரும் டென்ஷன் என சொன்னார், அவருக்கும் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளது என பேசினார். </p><p>இதையடுத்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்.எல்.ஏ. சுகுமாருக்கு அறிவுரை வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்திய த.வெ.க. அரசுக்கு வாழ்த்துகள்.</p><h2><strong>ஏமாற்றம்</strong></h2><p>* பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி. </p><p>* நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பா.ம.க. சார்பில் நன்றி, வாழ்த்துகள். </p><p>* பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>* கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் மிக மிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>* 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக் குறைவான தொகை.</p><p>* வீட்டில் பெண்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people">பட்ஜெட்</a> போடும் போது சாப்பாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><h2><strong>தூர்வார வேண்டும்</strong></h2><p>* ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். </p><p>* மழை நீர் கடலில் வீணாக கலந்து விடுகிறது. </p><p>* 10 கி.மீ. ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. தடுப்பணைகள் மூலம் 100 டிஎம்சி நீரை சேமித்து வைக்கப்படும். </p><p>* ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. </p><p>* தமிழ்நாட்டில் உள்ள 27ஆயிரம் குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். </p><p>* நீர் இல்லையென்றால் விவசாயிகள் எப்படி விவசாயம் செய்வார்கள்?. ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.</p><p>*  நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. </p><p>* வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. 3000 பணியிடத்திற்கு 30 ஆயிரம் பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர். </p><p>* தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டுவர வேண்டும். தனியார் துறையிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>* தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றார். </p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>சவுமியா அன்புமணிக்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட த.வெ.க. அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம், விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். </p><p>இதனிடையே, மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>சதுரகிரியில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பக்தர்கள் மலையேற மாவட்ட நிர்வாகம் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncontrolled-forest-fire-in-sathuragiri-devotees-barred-from-climbing-hill#comments</comments><guid isPermaLink="false">e1a08d71-9561-468c-acca-09250e96877e</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:42:42 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:42:42.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சதுரகிரி,Sathuragiri,காட்டுத்தீ,வத்திராயிருப்பு,Vathirairuppu,Thanipparai forest,தாணிப்பாறை வனப்பகுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sathuragiri  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/amulm2us/Sathuragiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறிச் செல்ல மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.</p><h2>திடீரெ<strong>ன பரவிய காட்டு</strong>த்தீ</h2><p>பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர்.</p><p>இந்நிலையில், தாணிப்பாறை வனப்பகுதியில் நேற்று இரவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, காற்றின் வேகம் காரணமாக மலையின் கீழ் பகுதியை நோக்கி கட்டுக்கடங்காமல் பரவத் தொடங்கியது.</p><h2>மாவட்ட ஆட்சிய<strong>ரின் பாதுகாப்பு</strong> உத்தரவு</h2><p>தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு பக்தர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதால், சூழல் சீராகும் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சதுரகிரி மலையேறத் தடை விதிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். </p><p>ஏற்கனவே மலையேறிய பக்தர்கள் அனைவரும் வனத்துறை வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக அடிவாரம் நோக்கித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், வனத்துறை சிறப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியிலும், மலையில் வீசும் காற்றின் திசையைக் கண்காணிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>ஆடி அமாவாசை <strong>தரிசனம் என்னா</strong>கும்?</h2><p>ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிப்பது சிறப்பு என்பதால், இந்தத் திடீர் தடையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பிறகே, ஆடி அமாவாசை நாளில் பக்தர்களை மீண்டும் அனுமதிப்பது குறித்து களநிலவரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என வனத்துறை அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டப்பேரவை தீர்மானத்திற்கு கமல்ஹாசன் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-gets-top-billing-at-government-events-kamal-haasan-welcomes-assembly-resolution#comments</comments><guid isPermaLink="false">f5578667-a029-4e27-9b67-ccfb25526112</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:17:16 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:17:16.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Thai Vazhthu,kamal haasan,TNAssembly,தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,கமல்ஹாசன்,சட்டப்பேரவை 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kamal Haasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/5eh4s18j/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் கட்டாயம் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><h2>கட்<strong>டாய முன்னுரிமை</strong></h2><p>மாநிலத்தின் எந்தவொரு அரசு, கல்வி அல்லது பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், நிகழ்வின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் தன்னாட்சி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>1891-இல் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடல் வரிகள், 1970 முதல் அரசு விழாக்களின் தொடக்கப் பாடலாகவும், 2021 முதல் மாநிலப் பாடலாகவும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><h2>கமல்<strong>ஹாசன் எம்.பி. வர</strong>வேற்பு</h2><p>சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது, வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற சில பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படாமல் தாமதித்துப் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் சட்டப்பூர்வமாக உறுதி செய்யவே இந்தத் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை நிரூபித்துவிட்டது தவெக பட்ஜெட் - ஓபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneerselvam-says-tvk-budget-proven-no-one-can-surpass-stalin-in-thinking-about-welfare-of-people#comments</comments><guid isPermaLink="false">ebad1ce0-a61f-4140-a76e-03416c8e3f95</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:12:53 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:12:53.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,O Panneerselvam,TN budget,தமிழக பட்ஜெட்,TN assembly,tvk,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ O Panneerselvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/kxiy546f/ops1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது. 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபை</a> கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை.</p><p>* மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை.</p> <h2>திராவிட இயக்கம்</h2><p>* திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>* பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>* வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>* கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p> <h2>மின் கட்டணம்</h2><p>* தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும்.</p><p>* மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. </p><p>* மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>* அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>* கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? </p><p>* மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. </p><p>* வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>* திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. </p> <h2>தவெக அரசு</h2><p>* அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>* தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. </p><p>* வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>* மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. </p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>* திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>* மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். </p><p>* நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>* முதலமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> பொறுப்பாக நிதி மேலாண்மை செய்தவர்.</p><p>* மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-drug-pledge-led-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">b720c112-d51c-47f7-a372-6bd95beb288b</guid><pubDate>Tue, 11 Aug 2026 05:00:07 +0000</pubDate><atom:updated>2026-08-11T05:00:07.444Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/516q2uxc/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் விருது மற்றும் பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.</strong></em> </p><p>சென்னை மாநில கல்லூரியில் இன்று போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. </p><h2><strong>உறுதிமொழி</strong></h2><p>இந்த விழாவில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழக <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை வாசித்தார்.</p><p>அதனை மாணவ, மாணவிகள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழா மேடையில் முதலமைச்சர் வாசித்த உறுதிமொழி வருமாறு:-</p><h2><strong>அறிவுரை</strong></h2><p>போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்துக்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். </p><p>போதை பழக்கத்துக்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதை பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் உறுதி மொழியை வாசித்தார்.</p><h2><strong>ஆரவாரம்</strong></h2><p>இந்த விழாவுக்கு முதலமைச்சர் விஜய் வந்த போது மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பலர் விஜய் மேடை ஏறியதும் தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வகையில் கூச்சலும் போட்டனர். </p><p>உறுதிமொழியை வாசிப்பதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் ‘குட்மார்னிங்’. அனைவரும் நன்றாக இருக்கிறீர்களா? உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார். </p><h2><strong>விருதுகள்</strong></h2><p>அப்போதும்  மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்ட பிறகு சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் விருதுகளை வழங்கினார்.</p><p>இதன் பிறகு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி நிர்வாகிகளுடன் மேடைக்கு சென்று முதலமைச்சர் விஜய்யுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.</p><p>முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை! சவரன் ரூ. 2,400 உயர்வு- முழு விவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-11-08-2026#comments</comments><guid isPermaLink="false">ebd10d7e-20cc-43d2-b035-231146529038</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:43:02 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:43:02.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v29o4453/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</strong></em> </p><p>கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் 3-ந்தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கும் விற்பனையானது. 4-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,600-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனையானது.</p><p>5-ந்தேதி காலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-க்கும் விற்பனையான நிலையில் மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,07,840-க்கும் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13,480 விற்பனையானது. 6-ந்தேதி சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,10,000-க்கும், கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கும் விற்பனையானது.</p><p>7-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this">தங்கம்</a> விலை கிராமுக்கு ரூ.150 ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 8-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.1,11,720-க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனையானது. 9-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,11,720-க்கும், ஒரு கிராம் ரூ.13,965-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,950-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,250-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,620</p><p>09-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>08-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,720</p><p>07-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200</p><p>06-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை- செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-ops-and-sengottaiyan-arguments#comments</comments><guid isPermaLink="false">5eb37cbd-d2b1-4e25-84e2-ead7f22ee1fd</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:26:05.529Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செங்கோட்டையன்,Sengottaiyan,O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ செங்கோட்டையன்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/18jg5mfs/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2><strong>பெயர் மாற்றப்பட்டியல்</strong></h2><p>தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏமாற்றின் வடிவமாக ஜொலிக்கும் பட்ஜெட். செய்வதை மட்டும் தான் சொல்வோம் எனக்கூறி அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டம் நடத்தி அமைச்சரவை கூட்டம் நடத்திய பின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக்கழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை பெயர் மாற்றப்பட்டியல் போல் உள்ளது.</p><p>உரிமைத் தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை. </p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன. புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறினார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறுகையில், 5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓ.பன்னீர்செல்வம் சொல்வதை போல் 3 மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் இடம் மாறியிருப்பதற்காக இவ்வளவு துதி பாட வேண்டும் என்று அவசியம் இல்லை என்றார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான் என்றார். </p><p>மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், இடத்தை மாற்றியபோது அவரின் இதயத்தின் அருகே வைத்துள்ள நிழல் படத்தை மாற்றவேண்டாம் என கூறினார் முதலமைச்சர் விஜய். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் யார் படத்தை தற்போது வைத்துள்ளார் என்றார். </p><p>ஓ.பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் என அமைச்சர் ராஜ்மோகன் பேசினார். </p><p>இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறுகையில், அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபை தொடங்கியது... நீட், வெளிநாட்டு பங்களிப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானங்கள் தாக்கல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started#comments</comments><guid isPermaLink="false">beac5d2a-d690-47cf-99f4-9fe51fff1023</guid><pubDate>Tue, 11 Aug 2026 04:02:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T04:02:52.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly,தனித்தீர்மானங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/0brt4tif/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில், நீட் தேர்வை திரும்பப் பெற்று பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார். </p><p>நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு கடந்த 2021-ல் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றிய பின்பும் ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.</p><h2><strong>அமைச்சர் அருண்ராஜ்</strong></h2><p>நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு, நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்த தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.</p> <p>மற்றொரு தீர்மானமாக, வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைப்படுத்தும் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாயே! உன்னைச் செயல் மறந்து மட்டுமல்ல செயல் புரிந்தும் வாழ்த்துவோம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vairamuthu-wishes-tamil-thai-vazhthu-always-comes-first-resolution-passes-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">e95fda52-2c7f-41b0-b13f-d692b97d919d</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:18 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:54:18.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Vairamuthu,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,வைரமுத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/yg6yghrj/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்த்தாய் வாழ்த்தை கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் பொது அமைப்பு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக முதலில் பாட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously">சட்டசபையில்</a> தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அது அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>இதுதொடர்பாக கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>சட்டமன்றத்தில்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்</p><p>தனித் தீர்மானம் இயற்றிய</p><p>தமிழ்நாட்டரசையும்</p><p>ஒருதுளி மறுப்புமின்றி</p><p>ஒருமனதாக</p><p>நிறைவேற்றிக்கொடுத்த</p><p>அனைத்துக் கட்சித்</p><p>தலைவர்களையும்</p><p>பரந்துபட்ட தமிழ் உலகம்</p><p>பாராட்டுகிறது;</p><p>எழுந்துநின்று நன்றி சொல்கிறது</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது</p><p>வெறும் சொற்கூட்டமல்ல;</p><p>அது</p><p>புவியியல், வரலாறு,</p><p>பீடு, பெருமிதம்</p><p>அனைத்தும் கொண்ட</p><p>இனத்தின் குறியீடாகும்</p> <p>தேசிய கீதத்தின் அளவுக்குத்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தைத்</p><p>தமிழர்கள் அனைவரும்</p><p>மனப்பாடம் செய்யவில்லை</p><p>பள்ளியிலிருந்தே அது</p><p>மனப்பாடப் பொருளாக</p><p>மாற்றப்பட வேண்டும்</p> <p>மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர்</p><p>முன்மொழிந்ததைப் போலவே</p><p>அது சட்டமாகவும்</p><p>இயற்றப்பட வேண்டும்</p> <p>தமிழ்த்தாயே!</p><p>உன்னைச்</p><p>செயல் மறந்து மட்டுமல்ல</p><p>செயல் புரிந்தும் வாழ்த்துவோம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 10 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:24:46.848Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> <p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>  <h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்</p><h2>மணப்பாறை தவெக எம்எல்ஏ கதிரவன்</h2><p>மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.</p><p>திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.</p><p>திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.</p><p>திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.</p><p>புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.</p><p>புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2lsd8hib/ministerkeerthana.jpg" /></figure><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.</p><p>நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.</p><p>திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.</p><p>சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது.  உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.</p><p>சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.</p><p>விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.</p><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.</p><p>முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.</p> <h2>தமிமுன் அன்சாரி</h2><p>புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?</p><p>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?</p><p>சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.</p><p>ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.</p> <p>நீட் தேர்வு  வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?</p><p>புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று  கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.</p><p>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை</p><p>காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p><p>ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது  - தமிமுன் அன்சாரி </p><p>கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி </p> <p>தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்</p><p>இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.</p><p>பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.</p><p>பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ</p><p>தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.</p><p>மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.</p><p>வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.</p><p>கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்</p><p>பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.</p><p>விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்</p><p>கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது  - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.</p><p>தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.</p><p>நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.</p><p>அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு </p><p>சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p><p>சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.</p> <p>மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</a></p><p>* தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.</p><p>* ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants">MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!... </a></p><p>*மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><p>*இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia">ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</a></p><p>* உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல்.</p><p>* உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong">ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</a></p><p>* ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* சட்டசபை நோக்கி பேரணி சென்றபோது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11">M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</a></p><p>* தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும்.</p><p>* மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>மெரினா, பெசன்ட் நகரில் 32 இடங்களில் இலவச ‘வைபை’ வசதி- தமிழக அரசு தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-govt-inform-free-wifi-facility-for-32-places-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-govt-inform-free-wifi-facility-for-32-places-in-chennai#comments</comments><guid isPermaLink="false">f79879b8-a367-454f-869a-bad1dcb2e5f1</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:02:43 +0000</pubDate><atom:updated>2026-08-11T03:02:43.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Marina Beach,மெரினா கடற்கரை,Besant Nagar,இலவச வைபை வசதி,பெசன்ட்நகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lxv5lfu8/wifi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  இலவச வைபை]]></media:title><media:description type="html"><![CDATA[  இலவச வைபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lxv5lfu8/wifi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில், தங்கு தடையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் வகையில் இலவச 'வைபை' (Wi-Fi) வசதியைத் தமிழக அரசு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.</strong></em></p><p>தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>இலவச 'வைபை'</strong></h2><p>சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் முதல்கட்டமாக மக்கள் தங்கு தடையின்றி இணைய பயன்பாட்டை பெறும் வகையில் இலவச '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF">வைபை</a>' வசதிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>அதன்படி, மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 5 இடங்களிலும் இலவச 'வைபை' வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.</p><p>பொதுமக்கள் தங்கள் செல்போனில் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-being-made-to-provide-free-wi-fi-facilities-at-chennai-beaches-and-parks">வைபை</a>' ஆன் செய்து 'கிளிக்' செய்தவுடன் வரும் கியூ-ஆர் கோர்டை  'கிளிக்' செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை பதிவு செய்த உடன் 'வைபை' இணைப்பு ஏற்படும். இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்பாட்டில் இல்லாத 'வைபை' வசதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், புதிய 'வைபை' வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 15-க்குள் ஆதார் e-KYC முடிக்காதவர்கள் சிலிண்டர் வாங்க முடியாது.. முடிக்கும் நடைமுறை இதுதான் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/lpg-aadhaar-e-kyc-deadline-cylinder-supply-may-be-halted-for-customers-who-miss-august-15-verification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/lpg-aadhaar-e-kyc-deadline-cylinder-supply-may-be-halted-for-customers-who-miss-august-15-verification#comments</comments><guid isPermaLink="false">5323f4f2-2566-4f78-a0c1-0aea00da25be</guid><pubDate>Tue, 11 Aug 2026 02:12:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T02:12:52.778Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதார்,LPG Cylinder,வீட்டு உபயோக சிலிண்டர்,எல்பிஜி சிலிண்டர்,Aadhaar e-KYC,domestic cylinder</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/qcmfp594/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிலிண்டர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிலிண்டர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/qcmfp594/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் <a href="https://www.maalaimalar.com/news/national/govt-explains-reasons-behind-lpg-cylinder-price-hike">எல்பிஜி கேஸ் சிலிண்டர் </a>பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், ஆதார் e-KYC சரிபார்ப்பை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குகள் முடிக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்பிசிஎல் ஆகிய கேஸ் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.</p><p>e-KYC சரிபார்ப்பை முடிக்காதவர்களுக்கான கேஸ் விநியோகம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதாவது, அந்த தேதிக்கு பின் புதிய சிலிண்டர்களை வாடிக்கையாளர்களால் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது. </p><h2>ஏன்?</h2><p>அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்ட போர் சூழல் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும் சிலிண்டர் முன்பதிவு செய்யும் விதிமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.</p><p>கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க KYC விதிகள் கடுமையாக்கப்பட்டன.</p><p>பிரதமரின் உஜ்வாலா யோஜனா பயனாளிகள் மற்றும் இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட வழக்கமான கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் நுகர்வோர் என வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பயோமெட்ரிக் ஆதார் மூலம் KYC-யை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.</p> <h2>நிறுத்தம்?</h2><p>வரும் ஆகஸ்ட் 15க்குள் இதை செய்து முடிக்காதவர்களுக்கு புதிய கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. அதாவது கேஸ் முன்பதிவு செய்யும் சேவை சரிபார்ப்பு செய்யாதவர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அவர்கள் சரிபார்ப்பை முடித்த பின்னர் மீண்டும் வழங்கப்படலாம்.</p><p>மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் தகுதியையும் வாடிக்கையாளர்கள் இழக்கலாம். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கிடைக்கும் சிலிண்டருக்கும் மானிய தொகை வரமால் போக வாய்ப்புள்ளது.</p><p>இருப்பினும் இதுகுறித்து உறுதிப்படுத்தல் ஏதும் இல்லை. தற்போதைக்கு கெடு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதார் e-KYC சரிபார்ப்பது எப்படி?</h2><p>கூகுள் பிளே ஸ்டோரில் நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் செயலியை ( hp pay, indianoil one, hello bpcl) -ஐ டவுன்லோட் செய்து அதில் மொபைல் எண், நுகர்வோர் எண்-ஐ உள்ளிட்டு லாகின் செய்யவும். </p><p>Update e-KYC என்பதை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். இதன்பின் மீண்டும் பிளே ஸ்டோருக்கு சென்று AadhaarFaceRD என்ற அதிகாரபூர்வ செயலியை பதிவிறக்கவும். </p><p>அந்த செயலி மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கவும்</p><p>ஆன்லைனில் முடிக்க தெரியாதவர்கள் சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூமோ அல்லது கேஸ் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றோ  e-KYC முடிக்கலாம்.</p><p>அதேநேரம் ஏற்கனவே, e-KYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p>சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.957.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady#comments</comments><guid isPermaLink="false">8f861ffe-63f4-45a2-b159-f2ae67e5277e</guid><pubDate>Tue, 11 Aug 2026 00:27:52 +0000</pubDate><atom:updated>2026-08-11T00:27:52.405Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,நீட் தேர்வு,Neet exam,Assembly Session,சட்டமன்ற கூட்டத்தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/esdd16ov/TN-Assembly-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டப்பேரவை கூட்டத்தொடர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/esdd16ov/TN-Assembly-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 11) சட்டமன்ற கூட்டத்தொடரில் <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட் தேர்வு</a> மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (எஃப்.சி.ஆர்.) திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனித்தீர்மானம் கொண்டுவருகிறது.</p><p>2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-ஆவது நாளாக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய் கிழமை) தொடர்ந்து நடைபெற இருக்கிறது.</p><h2>தனித்தீர்மானம்:</h2><p>இந்த நிலையில், மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் அப்போது ஒப்புதல் அளிக்கவில்லை.</p><p>தொடர்ச்சியாக நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இந்தத் தேர்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தேர்வை அகற்ற வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் கோர உள்ளார்.</p><h2>2-ஆவது தீர்மானம்:</h2><p>இதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை தற்போதைய வடிவில் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல் செய்ய உள்ளார்.</p><p>இந்தத் தீர்மானங்களின் மீது விவாதம் இன்றே நடத்தப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பக்தர்கள் கோரிக்கை ஏற்பு: திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாட்டில் தளர்வு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed#comments</comments><guid isPermaLink="false">fd8db5c1-5d27-4013-8525-cf707e61747a</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:37:30.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,நேரக்கட்டுப்பாடு,தரிசனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p><p>பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.</p><p>இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இதனால் ஏற்கனவே இருந்து முறைப்படி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் பழைய அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதில்,</p><p>* தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* ஞாயிறு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுார்கள்.</p><p>* விசேஷ நா்களில தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">f36a38db-27e0-43ab-a243-0f214c930689</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:17:51.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,கிறிஸ்தவம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mary Wilson,Christianity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சர் மரியவில்சனிடம் அவரது தமிழ் உச்சரிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஒரு அறிவுரையாக கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரியவில்சன் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், தனக்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். </p><p>ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? </p><p>“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? </p><p>அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11#comments</comments><guid isPermaLink="false">6a3b4443-9827-4d72-ae24-57a0ad07cae7</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:14.550Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் சேர்க்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும்.</p><p>மாணாக்கர்கள் <a href="https://www.tngasa.in">www.tngasa.in</a> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும்.</p><p>இவ்வாறு உயர் கல்வித்துறை பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a1008beb-bbd5-43ab-91b0-af3bc9b81510</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:19:02.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,Minister Maria Wilson,அமைச்சர் மரியவில்சன்,MLA Rajendran,எம்எல்ஏ ராஜேந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பான விவாத கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய கடையநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.,</p><p>“நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நான் ஒரு சொற்பொழிவாளன், தமிழ் ஆர்வலன் என்ற முறையில் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.</p><p>தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில தொடர்கள் இலக்கண பிழையுடன் அமைந்தன. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ அவையில் வைக்க விரும்பவில்லை. </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வெகுவாக வாதாடி, பலம் சேர்க்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வருங்காலத்தில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிலை இருக்குமானால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர் பிழையின்றி பேச முயற்சிகள் எடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>அதற்கு சபாநாயகர்,  “எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.</p><p>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்.,</p><p>நான் ஒரு கூடைப்பந்து விளையாட்டாளர். தாக்குதல், தற்காப்பு இரண்டும் எனக்குத் தெரியும். எப்போது தாக்கவேண்டும், எப்போது தடுக்கவேண்டும் என எனக்குத் தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புமுறை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.</p><p>இந்த மாமன்றத்தில் அவர் கூறியவாறு கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.</p><p>நான் பைபிள் படித்திருக்கிறேன். கிறிஸ்தவனாக பிறந்துள்ளேன். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டும் என்றால், உங்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து வருடமாக மக்களவையில் இருந்துள்ளார். அவர் பேசியதே கிடையாது. நான் முயற்சி செய்கிறேன். </p><p>நான் உங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா? என  கோவமாக பதிலளித்தார். </p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police#comments</comments><guid isPermaLink="false">2811056b-8722-47c1-9097-cfdf413ef38b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:20:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:20:27.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,police,விசாரணை,investigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு, அதில் விசாரணை தேதி, நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், விசாரணை குறித்த விவரங்கள் காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.</p><p>விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,  “விசாரணை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>காவல் துறையின் விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை; அதேநேரம் துன்புறுத்தல்களை பார்த்து கண்மூடி கொண்டிருப்பதும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government#comments</comments><guid isPermaLink="false">0e2f7477-1049-4ddb-979c-611c6e7c302f</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:43.911Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras HC,Centre,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaazthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>அதாவது அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப்பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என எந்த உத்தரவும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும், தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரி, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநலமனு இன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, “தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என, 2026 ஆகஸ்ட் 9 அன்று மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் தெரிவித்தார்.</p><p>இதன்மூலம் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. </p><h2>தொடங்கிய சர்ச்சை</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். </p><p>இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.</p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். </p><h2>தீர்மானம்</h2><p>இவ்வாறு இவ்விவகாரம் பெரும் பேசுபொருளாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தவெக தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.</p><p>ஆனால் இதற்கு முன்னரே, 2021-ம் ஆண்டே திமுக அரசு மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>NEET தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants#comments</comments><guid isPermaLink="false">edf6cf5d-de74-4c88-a1e3-e1521802950e</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:58:18.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பல் மருத்துவம்,MBBS, BDS Rank List Released,Minister Dr. Arunraj,MBBS, BDS தரவரிசைப் பட்டியல்,அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS, BDS Rank List Released]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><h2>72,633 பேர் <strong>விண்ணப்</strong>பம்</h2><p>MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவில் 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.</p><h2>அரசு <strong>ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்</strong>பு</h2><p>2026-27ஆம் ஆண்டுக்கான MBBS மற்றும் BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,726 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,551 பேர் மாணவர்கள்; 23,375 பேர் மாணவிகள். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,907 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><h2>MBBS-க்<strong>கு 7,157 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்</strong></h2><p>2026-27ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்புக்கு மொத்தம் 7,157 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 4,473 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,684 இடங்களும் உள்ளன.</p><p>BDS படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1,383 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 213 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,170 இடங்களும் உள்ளன.</p><h2><strong>7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு 641 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள்</strong></h2><p>7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்பில் மொத்தம் 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 202 இடங்களும் உள்ளன. BDS படிப்பில் இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வா<strong>க ஒதுக்கீட்</strong>டில் MBBS-க்கு 1,966 இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,966 MBBS இடங்களும், 580 BDS இடங்களும் உள்ளன.</p><h2>Allied <strong>Health Care படி</strong>ப்புகளுக்கும் தரவரிசைப் பட்டியல்</h2><p>மருத்துவம் சார்ந்த Allied &amp; Health Care படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. B.Sc. Nursing, B.Pharm, இணை மருத்துவப் படிப்புகள், Pharm-D, DGNM மற்றும் Diploma in Pharmacy உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 21 முதல் ஜூலை 12, 2026 வரை பெறப்பட்டன.</p><p>Allied and Healthcare Degree Courses-க்கு 66,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 65,475 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்புக்கு 12,657 விண்ணப்பங்களில் 12,263 விண்ணப்பங்களும், Pharm-D 3 ஆண்டு படிப்புக்கு 32 விண்ணப்பங்களில் 29 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. DGNM படிப்புக்கு 18,308 விண்ணப்பங்களில் 17,676 விண்ணப்பங்களும், Diploma in Pharmacy படிப்புக்கு 13,018 விண்ணப்பங்களில் 12,718 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ<strong>ம் சார்ந்த படிப்</strong>புகளில் ஆயிரக்கணக்கான இடங்கள்</h2><p>Allied and Healthcare Degree Courses-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,786 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 3,969 இடங்களும் உள்ளன. B.Sc. Nursing-ல் அரசு ஒதுக்கீட்டில் 400 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11,807 இடங்களும் உள்ளன. B.Pharm படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 7,234 இடங்களும் உள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்பில் 1,011 இடங்களும், 3 ஆண்டு படிப்பில் 72 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன. DGNM படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 2,080 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 5,455 இடங்களும் உள்ளன. Diploma in Pharmacy படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 240 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 6,540 இடங்களும் உள்ளன.</p><h2>MBBS இடங்கள் <strong>அதிகரிப்பு</strong></h2><p>2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த MBBS இடங்களின் எண்ணிக்கை 9,999 ஆகவும், BDS இடங்களின் எண்ணிக்கை 2,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>தமிழக அளவி<strong>ல் விழு</strong>ப்புரம் முதலிடம் </h2><p>நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார், புதுக்கோட்டை ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் சுடர் 696 மதிப்பெண்ணுடன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நாகையை சேர்ந்த தினேஷ் 599 மார்க்குடன் முதலிடம், சேலம் தரணீஷ் 595 மதிப்பெண்ணுடன் 2ஆம் இடம் பிடித்தார். </p><p>இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வா. லோகநாயகி மற்றும் தேர்வுக்குழு துணை இயக்குநர்கள் டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy#comments</comments><guid isPermaLink="false">d84c5dfe-a89f-48cf-b4a7-caf049c50e02</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:31:07.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தமிழ்த்தாய் வாழ்த்து,ரகுபதி எம்.எல்.ஏ.,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதை சொந்த குரலிலே பாட வேண்டும் என்கின்ற உத்தரவு மூலம் அமல்படுத்தப்பட்டது.</p><p>ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டார். திமுக ஆட்சியிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு எல்லா நிகழ்ச்சிகளிலேயும் அது அமல்படுத்தப்பட்டது.</p><h2>ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்</h2><p>எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.</p><p>எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.</p><h2>சட்டம் கொண்டு வர வேண்டும்</h2><p>ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம். கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.</p><p>இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போதை பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகள்- ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs#comments</comments><guid isPermaLink="false">ea68d024-163d-410c-a822-5e808d3609fd</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:30:45.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,போதைப்பொருள்,சிறப்பு படை,Anti drugs,Tamil Nadu Anti-Drugs Force</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில் போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு படைகளில் 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும், சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகளும் உருவாக்கப்படும்.</p><p>ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகள் வீதம் உருவாக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5#comments</comments><guid isPermaLink="false">57affb1f-d167-4536-b976-8583537e951e</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:26:54.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,Chennai Rain,சென்னையில் மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதனால் இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 14-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">58b1b29e-7618-4155-bfdc-0d291db048a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:17:34.677Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலங்களிலும் இதுதொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை தேவையில்லை எனும் நாடகம் ஏன்? தங்கள் பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?</p><p>த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?</p><p>நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?</p><p>அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?</p><p>தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?</p><p>தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் அன்றி வேறல்ல.</p><p>நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பதிலி அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 150 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/150-govt-special-buses-running-for-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/150-govt-special-buses-running-for-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">d706b5b4-1825-401f-9bf8-2277e3711336</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:08:03.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcgorj7c/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcgorj7c/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.</strong></em> </p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு <a href="https://www.maalaimalar.com/topic/சொரிமுத்து-அய்யனார்-கோவில்">சொரிமுத்து அய்யனார் கோவிலில்</a> ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.</p><p>விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.</p><p>இந்த கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுடன் சொரிமுத்து அய்யனார் கோவில் நோக்கி நேற்று படையெடுத்தனர்.</p><p>தொடர்ந்து இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.</p><p>திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், போதை பொருட்கள், மதுபானங்கள், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் பஸ்களை நிறுத்தி பக்தர்களின் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world#comments</comments><guid isPermaLink="false">dd54dbf3-372e-4279-805a-a409c71fb4fe</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:43.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்.</strong></em></p><p>தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்து</a> முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ் நம் உயிர்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.</p><p>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!</p><p>தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.<br><br>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2086745353290965207?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பூனையை காப்பாற்ற முயன்ற போது சோகம்: 8 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite#comments</comments><guid isPermaLink="false">3b08506d-9902-47ae-9468-e5a02f7b0070</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:18.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,Snakebite,ஆவடி,Avadi,திருவள்ளூர்,விஷப்பாம்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ snakebite  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டின் உட்பகுதி இருட்டாக இருந்துள்ளது. </p><p>இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த வளர்ப்புப் பூனை பயங்கரமாகச் சத்தமிட்டு கத்தியுள்ளது. பூனைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த நிச்சிஷ், அதனைத் தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளான். அப்போது, பூனையைத் தாக்க வந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் நிச்சிஷைக் கடித்தது.</p><p>பாம்பு கடித்ததில் வலியால் அலறித்துடித்த சிறுவனை, அவனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>