<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 19 Aug 2026 11:49:52 +0000</lastBuildDate><item><title>பழனி நில மோசடி வழக்கு: கைதான சார்பதிவாளர், பத்திர எழுத்தருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-land-scam-case-arrested-sub-registrar-one-day-police-custody-for-document-writer#comments</comments><guid isPermaLink="false">7a996519-cb08-4083-b319-e34b4c386f16</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:45:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:45:47.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போலீஸ் காவல்,சார்பதிவாளர்,Sub Registrar,பழனி நில மோசடி,Pazhani land scam,பத்திர எழுத்தர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani land scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ex289hr6/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.35 ஏக்கர் நிலம் முறை கேடாக ரூ.2 கோடிக்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் (48), விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் (56), நிலம் வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளை த்துரை (60), பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி (67), வக்கீல் அன்வர்தீன் (65), ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் (38) ஆகியோரை கைது செய்தனர்.</p><h2>ஒரு நாள் காவல்</h2><p>மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பழனியைச் சேர்ந்த வக்கீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தலை மறைவான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொடைக்கானலில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் கொண்டு வந்தபோது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.</p><p>திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்ப டும் ஜஸ்டின் மணிகண்டனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்னும் முழுமையான விசாரணை நடத்தவில்லை.</p><p>அதே போல் பத்திர எழுத்தர் ஜெயபிரகாசிடமும் விசாரணை நடத்த முடிய வில்லை. இதன் காரணமாக அவர்கள் 2 பேரயும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. </p><p>இன்று மாலை 5.30 மணிக்குள் விசாரணையை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணைக்காக ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ் ஆகியோர் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜரான நிலையில் அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.</p><h2>ஜாமீன் மனுக்கள்</h2><p>இதனிடையே ஜஸ்டின் மணிகண்டன் தனது உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போல் பத்திர எழுத்தர் ஜெபிரகாஷ் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.</p><p>நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சிவச்சந்திரன், வழக்கின் முதன்மை குற்றங்கள், கூட்டுச்சதி, நீதிமன்ற உத்தரவு மீறல் ஆகியவற்றை சுட்டிக் காட்டி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து அவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>மதுரை சிறையில் அடைக்கப்ப ட்டுள்ள முருகதாஸ் சார்பிலும் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கும் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை: கார்த்தி சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-karti-chidambaram-says-i-do-not-believe-that-we-need-large-families-in-a-technology-driven-world#comments</comments><guid isPermaLink="false">315b3b38-1c0e-4a7a-bd2c-77182d10af3f</guid><pubDate>Wed, 19 Aug 2026 11:24:27 +0000</pubDate><atom:updated>2026-08-19T11:24:27.297Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,கார்த்தி சிதம்பரம்,karthi chidambaram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ப சிதம்பரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0827uty/KathiChidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் (ஓராண்டு) ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly">மகப்பேறு விடுப்பு</a> வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>அதேபோல் இன்று தமிழக முதலமைச்சர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தொகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கார் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-</h2><p>தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். அதேவேளையில், தந்தையர்களுக்கும் தந்தைமை விடுப்பு (paternity leave) வழங்கப்பட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் சுமை பெண்களின் மீது மட்டுமே இருக்கக்கூடாது. ஆண்களும் அந்த பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்.</p><p>ஆனால், குடும்பத்தின் அளவை அதிகரிக்க முனையும் அல்லது மூன்றாவது குழந்தையை பெற ஊக்குவிக்கும் எந்தவொரு சலுகையையோ அல்லது அரசுத் திட்டத்தையோ நான் முழுமையாக எதிர்க்கிறேன். நமக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற மக்கள் தொகைதான் தேவை.</p><p>வெறும் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகை நமக்கு தேவையில்லை. தொழில்நுட்பம் சார்ந்த இந்த உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை. சிறிய, ஆரோக்கியமான மற்றும் அதிகக் கல்வி அறிவு பெற்ற மக்கள் தொகையே போதுமானது</p><p>இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.</p><p>தமிழக அரசு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வாகனங்களை வழங்குவது குறித்த கேள்விக்கு, "எம்.பி.க்கள் கார்கள் கேட்கவில்லை என்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் அழுத்தம் தரவேண்டும்- முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-asks-cm-vijay-to-step-up-pressure-on-centre-over-cauvery-dispute#comments</comments><guid isPermaLink="false">ef32720e-a269-4379-b2a3-77c98436005e</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:56:11 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:56:11.759Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாமா,அன்புமணி ராமதாஸ்,Anbumaniramadoss,CMVIJAY,CauveryWaterIssue,TamilNaduPolitics,MekedatuDam,காவிரிஉரிமை,முதல்வர்விஜய்,மேகதாதுஅணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2k618max/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பிரச்சனை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அனைத்துக் கட்<strong>சிக் கூட்டத்தை கூ</strong>ட்ட வேண்டும்</h2><p>காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுக்கத் <a href="https://www.maalaimalar.com/news/national/kummidippundi-koodur-between-new-rail-route-union-cabinet-approval">தமிழக முதல்வர் விஜய்</a> உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் விஜய் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.</p><h2>அதிகாரி<strong>களின் பேச்சை மட்டும் கேட்</strong>கக்கூடாது</h2><p>புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்குக் காவிரி விவகாரம் தொடர்பான நீண்டகால அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் போதிய அனுபவம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அன்புமணி, வெறும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே நம்பி முதல்வர் முடிவெடுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டார். </p><p>அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.</p><h2>மாணவர் போரா<strong>ட்டங்கள்</strong></h2><p>மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிப்பதற்கு யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் மற்றும் மாநிலத்தின் உரிமைசார்ந்த கோரிக்கைகளுக்காக இளைஞர்களும் மாணவர்களும் குரல் கொடுப்பதைக் தடுக்க முடியாது என்றார். மேலும், சொந்தமாக கார் இல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அரசு உரிய வசதிகளையும் சலுகைகளையும் வழங்கிச் செயல்பட வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>இனி மாநிலங்களில் பதிவு செய்ய தேவையில்லை- டாக்டர்களுக்கு தனித்துவ அடையாள எண்: தேசிய மருத்துவ ஆணையம் புதிய நடைமுறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-new-procedure-by-the-national-medical-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/unique-identification-number-for-doctors-new-procedure-by-the-national-medical-commission#comments</comments><guid isPermaLink="false">58be7c88-6372-4b7a-8c59-b4c5c605c89c</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:31:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:31:29.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>National Medical Commission,தேசிய மருத்துவ ஆணையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wxit8b22/doctors.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wxit8b22/doctors.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தனித்​துவ அடை​யாள எண் முறை மூலம் ஒரு மருத்​து​வருக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​படும் நடவடிக்​கைகளை மாநில பதிவேட்​டிலும், தேசிய பதிவேட்​டிலும் உடனே அறிந்​து​கொள்ள முடி​யும்.</strong></em> </p><p>மருத்​து​வர்​கள் பதிவு மற்​றும் மருத்​துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதி​களில் தேசிய மருத்​துவ ஆணையம் மாற்றங்​கள் செய்து அரசிதழில் வெளி​யிட்​டுள்​ளது.</p><p>அதன்​படி, மாநில மருத்​துவ கவுன்​சிலில் மருத்​து​வர் பதிவு செய்தவுடன், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் நெறி​சார் வாரியம் மூல​மாக அவருக்கு தனித்​து​வ​மான அடை​யாள எண் உரு​வாக்​கப்​படும்.</p><h2><strong>தனித்​துவ அடை​யாள எண்</strong></h2><p>இந்த எண் வழங்​கப்​பட்ட பிறகு, அந்த மருத்​து​வர் நாட்​டின் எந்த மாநிலத்​திலோ அல்​லது யூனியன் பிரதேசத்​திலோ தனி​யாக மீண்டும் பதிவு செய்ய தேவை​யில்​லாமல் இந்​தியா முழு​வதும் மருத்​துவ பயிற்சி மேற்​கொள்ள தகுதி பெறு​வார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்​தின் குறி​யீடு, மாநில மருத்​துவ கவுன்​சில் பதிவு எண் ஆகியவை உள்​ளடங்​கி​யிருக்​கும் வகையி​லான தனித்​துவ அடை​யாள எண்​ணாக இது இருக்​கும்.</p><p>தனித்​துவ அடை​யாள எண் முறை மூலம் ஒரு மருத்​து​வருக்கு எதி​ராக மேற்​கொள்​ளப்​படும் நடவடிக்​கைகளை மாநில பதிவேட்​டிலும், தேசிய பதிவேட்​டிலும் உடனே அறிந்​து​கொள்ள முடி​யும். ஏற்​கெனவே மாநில மருத்​துவ கவுன்​சில்​களில் பதிவு செய்​துள்ள மருத்துவர்​கள், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் இணை​யதளத்​தில் குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் தங்​களது விவரங்​களை புதுப்பித்து தனித்​துவ அடை​யாள எண்ணை பெற்​றுக்கொள்ள வேண்​டும்.</p> <p>இதற்​காக எந்​தவொரு கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது. இதுதொடர்​பாக பொது​மக்​கள் மற்​றும் மருத்​து​வத்​துறை சார்ந்​தவர்​கள் தங்களின் கருத்​துகளை​யும், ஆட்​சேபனை​களை​யும் 30 நாட்​களுக்​குள் சமர்ப்​பிக்​கலாம்​ என்​று ஆணையம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-appointed-as-vice-chairman-of-the-southern-zonal-council#comments</comments><guid isPermaLink="false">a31d1182-c123-45ae-a4d8-ab360a498018</guid><pubDate>Wed, 19 Aug 2026 10:27:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T10:27:29.403Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>joseph vijay,முதலமைச்சர் விஜய்,SOUTHERN ZONAL COUNCIL,தென்மண்டல கவுன்சில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/1fx32uti/New-Project-2026-08-19T155708.370.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதலமைச்சர் விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். </p><p>நாளை தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளநிலையில், இந்த நியமனம் வந்துள்ளது. </p><h2>தென்மண்டல கவுன்சில் என்றால் என்ன?</h2><p>தென் மண்டல கவுன்சில் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பாகும். </p><p>மத்திய அரசால் அவ்வப்போது கூட்டப்படும் தெற்கு மண்டல குழு, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களை ஒன்றிணைக்கிறது.</p><p>முன்னதாக தென் மண்டல கவுன்சிலின் தமிழ்நாடு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-student-protests-will-the-left-continue-to-turn-a-blind-eye-dmk-asks#comments</comments><guid isPermaLink="false">082c2b7e-3701-43df-a7c2-fa0933eb57c8</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:54:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:54:37.600Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,இடதுசாரிகள்,leftists,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணவர்கள் போராட்டத்திற்கு தடை: இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா? - திமுக கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/r0sbkzgh/New-Project-2026-08-19T151547.066.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்லில் இடதுசாரிகளின் விவரங்களை திரட்டக் கூறியது, மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்படை தடுக்கக் கூறியது உள்ளிட்ட உத்தரவுகள் முதலமைச்சர் விஜய்க்கு தெரியாமல் வெளியிடப்பட்டதா என்றும், இத்தகைய உத்தரவுகளை கண்டும் காணாமல் இடதுசாரி கட்சிகள் இருக்கப் போகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>இதுதொடர்பாக திமுக தலைமையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.</p><p>இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.</p><p>அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?</p><p>ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.</p><p>த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஏ.ஐ-யில் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம் - பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-warn-public-risk-of-confidential-information-shared-on-ai-being-stolen#comments</comments><guid isPermaLink="false">e9e51902-e23f-41f1-9c89-00b3c4a4f33e</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:34:31 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:34:31.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,போலீசார் எச்சரிக்கை,police warning,AI,செயற்கை நுண்ணறிவு,ஏஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/fiv0ez4f/ai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>உலகெங்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகத்தில் உருவெடுத்து வரும் சூழலில், 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ)மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெருநிறுவன ஊழியர்கள் வரை அனைவரும் தங்களின் சந்தேகங்களைத் தீர்க்கவும், வேலைகளை எளிதாக்கவும் ஏ.ஐ. செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p> <p>​தொழில்நுட்பம் தரும் அளப்பரிய நன்மைகளுக்கு இடையே, சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை உணர்ந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏ.ஐ.-யை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.</p> <p> அதன்படி சிக்கலான தரவுகளை நொடிகளில் பகுப்பாய்வு செய்வது, மொழியாக்கம், புதிய யோசனைகளை உருவாக்குவது, கல்வி கற்றலை எளிதாக்குவது என மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8F%E0%AE%90">ஏ.ஐ. </a>முன்னணியில் உள்ளது.</p> <p>இணையத்தில் நாம் பகிரும் தகவல்கள் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் இந்தத் விபரங்களை திருடி, 'டீப்பேக்' உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் ஆன்லைன் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தும் பேராபத்து நிலவுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதன்படி  கடவுச்சொல், வங்கிக் கணக்கு எண்கள், ஆதார் மற்றும் பேன் கார்டு போன்ற மிக முக்கியமான தனிப்பட்ட விவரங்களை எக்காரணம் கொண்டும் ஏ.ஐ. தளங்களில் உள்ளீடு செய்யக் கூடாது.</p> <p>அதேபோல்  உடல்நலக் குறைபாடு, மருந்து மாத்திரைகள் மற்றும் மனநலச் சிகிச்சை சார்ந்த சந்தேகங்களுக்கு ஏ.ஐ. வழங்கும் பதில்கள் பொதுவான தகவல்கள் மட்டுமே. தகுதியான மருத்துவ நிபுணரின் நேரடி ஆலோசனைக்கு இது மாற்றாகாது.</p> <p>மேலும் சட்டத்திற்குப் புறம்பான அல்லது பிறரின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய ஏ.ஐ.-யின் உதவியை நாடக்கூடாது. திருமணம், வேலைவாய்ப்பு, நிதி மற்றும் குடும்பப் பிரச்னைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஏ.ஐ. அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்பி எடுக்கக்கூடாது. அதை ஒரு துணைத் தகவலாகக் கொண்டு, நம்பகமான நபர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.</p> <p> இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-</p><p>​"ஏ.ஐ. என்பது மனித மூளைக்கு மாற்றல்ல; அது ஒரு வழிகாட்டும் கருவி மட்டுமே. இன்று பல இணைய பயனர்கள் தங்களின் வங்கி ரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை ஏ.ஐ. செயலிகளில் பதிவேற்றம் செய்வதால், அவை தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று நிதியிழப்புக்கும், மன உளைச்சலுக்கும் வழிவகுக்கிறது.மேலும், தவறான நோக்கங்களுக்காகவோ அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலோ <a href="https://www.maalaimalar.com/news/national/anthropic-launches-free-claude-sonnet-5-new-agentic-ai-model-now-available-globally-for-all-users">ஏ.ஐ. </a>தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், சைபர் குற்றப் பிரிவுச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>தொழில்நுட்பத்தை நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம் – பொறுப்புடன் வாழ்வோம்' என்பதை பொதுமக்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்றாலும், கவனமும் விழிப்புணர்வுமே நமது டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tvk-government-has-withdrawn-the-order-banning-students-from-participating-in-left-wing-protests#comments</comments><guid isPermaLink="false">49841eb0-9aa8-481a-bed0-12aa377e807a</guid><pubDate>Wed, 19 Aug 2026 09:25:24 +0000</pubDate><atom:updated>2026-08-19T09:25:24.796Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,protest,Students,மாணவர்கள்,Tamil Nadu govt,போராட்டங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l4zqdmyd/New-Project-2026-08-19T145456.651.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றுள்ளது. </p><p>மாணவர்கள் சார்ந்தப் பிரச்னைகளிலும், சில பொதுப் பிரச்னைகளிலும் இடதுசாரிகளின் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொண்டு போராடுவது வழக்கம். </p><p>சமீபத்தில் கூட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள் தரப்பில் சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் மாணவர்கள் அமைப்புகள் கலந்துகொண்டன. </p><p>இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி கட்சிப் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்தது. </p><p>இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கரப்பான்பூச்சி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்றும், இது தவெக அரசின் “தர்க்கமற்ற” மற்றும் “பகுத்தறிவற்ற” முடிவு என்றும் விமர்சித்திருந்தார்.</p><p>முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: காவிரி விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் - 19 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-august-2026#comments</comments><guid isPermaLink="false">532f6d4f-39f1-4437-8daa-00952ab7e206</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:51:34.305Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/553nhbv2/speaker.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>177.25 டிஎம்சி தமிழகத்திற்கு உரிமை என்ற தீர்ப்பு கிடைத்த பின் ஆணையம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்தது.</p><p>நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து ஆணையம் அமைத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சாரும்  - ஓ.எஸ்.மணியன்</p><p>அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முதல்வரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள் - சபாநாயகர்</p><p>காவிரி பிரச்சனையில் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் - சபாநாயகர்</p><p>பிரதமர் பேச்சை கேட்டு ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக தான் திமுக மீது குற்றச்சாட்டு, உண்மை ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காவிரி விவகாரத்தில் வழக்கு வாபஸ் பெற்றதற்கான காரணத்தை விளக்கமாக பேரவையில் ஏற்கெனவே கூறி உள்ளோம்.</p><p>காவிரி பகுதியில் பிறந்து, அங்கே வளர்ந்த விவசாயிகளான நாங்கள் எப்படி காவிரி நீரை விட்டுக் கொடுப்போம்.</p><p>பிரதமர் எங்களை அழைத்து சமாதானம் பேசினார். வழக்கை வாபஸ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது - கே.என்.நேரு விளக்கம்</p> <p>காவிரி விவகாரம் - சட்டசபையில் காரசார விவாதம்</p><p>திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ராஜ்மோகன் பேசக்கூடாது - கே.என்.நேரு</p><p>ஒருமையில் பேசுவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும். பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்து கொள்வதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.</p><p>பைத்தியம் போல் பேசுவதாக திமுக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர். சட்டப்பேரவையில் பேசும் வார்த்தையா இது? </p><p>அடிக்கப் பாய்வது போல் வருகின்றனர். திமுகவினர் அடிக்கப் பாய்வதுபோல் வருகிறார். கையை ஓங்குகிறார் -  அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>காவிரி விவகாரத்தில் இந்த அவையில் பல விவாதங்கள் நடந்துள்ளன - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>திமுகவின் துரோகம் என்பதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் யாரும் எந்த துரோகமும் செய்ய முடியாது - கே.என்.நேரு</p><p>காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் பேசலாம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>காவிரி பிரச்சனை 1987-ல் எம்ஜிஆர் காலத்திலேயே வழக்கு தொடர்ந்தோம். </p><p>அதிமுக, திமுக அரசாங்கம் தொடர்ந்து காவிரி நீருக்காக போராடிக்கொண்டு இருக்கிறோம் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் தொடர்பான நீங்கள் என்ன செய்தீர்கள்.</p><p>அச்சம் என்ற வார்த்தையே எங்கள் தலைவரின் அகராதியில் இல்லை -  அமைச்சர் அருண்ராஜ்</p> <p>9 முறை காட்பாடி எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் எதுவும் செய்யவில்லை என சொல்வது சரியல்ல.</p><p>தன்னைப் பார்த்து பிற எம்எல்ஏக்கள் செயல்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டவர் துரைமுருகன்.</p><p>காட்பாடி தொகுதியில் என்ன செய்யப் போகிறேன் என்பதை சொல்லுங்கள். அவையில் இல்லாதவர் பற்றி பேசுவது சரியல்ல - எ.வ.வேலு</p><p>துரைமுருகனை குறிப்பிட்டு தவெக எம்எல்ஏ பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு</p> <p>காட்பாடி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை - தவெக எம்எல்ஏ சுதாகர்</p><p>காட்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த துரைமுருகன் அனுபவத்தை நான் மதிக்கிறேன்.</p><p>எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத தவெக கோட்டையாக இனி காட்பாடி இருக்கும் - தவெக எம்எல்ஏ சுதாகர் </p><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர்களால் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. </p><p>ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p> <p>அத்திக்கடவு - அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும் - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.</p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன - சவுமியா அன்புமணி</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது.</p><p>நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன - சவுமியா அன்புமணி</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சபாநாயகர் அறிவுரை</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதம் பற்றி மட்டும் பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுரை</p><p>நம்முடைய முதலமைச்சர் மற்ற முதலமைச்சர்களை போல் அல்ல - அமைச்சர் ஆதவ்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு புகழ்ச்சி பிடிக்காது என்பதை  எம்எல்ஏக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் ஆதவ்</p><p>கல்லணை இன்னும் இடிந்து போகவில்லை தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் அணைகள் இடிந்து விழுகிறது - அமைச்சர் ஆதவ்</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>திருவண்ணாமலையில் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 56,000 கனஅடி தண்ணீரை தாங்கும் அளவிற்கு பாலம் கட்டப்பட்டது.</p><p>கொள்ளளவை விட பல மடங்கு அதிகமாக தண்ணீர் வந்ததால் மட்டுமே அணை இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் 3 மாதத்தில் இடிந்தது - அமைச்சர் மரியவில்சன்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>கனவு கண்டாலும் கூட திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது - அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்</p><p>வீட்டின் தரத்திற்கு கட்டும் பயனாளிகள் தான் பொறுப்பு - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள் நிறைய இடங்களில் இடிந்து தொங்குகிறது. தவெக ஆட்சியில் கட்டப்படும் வீடுகள் 50 ஆண்டுகள் வரை தரமாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>2016 - 2020 வரை கொரோனா காலம் என்பதால் தான் பசுமை வீடு திட்டத்தை அதிமுக காலத்தில் சரியாக செய்ய முடியவில்லை - எடப்பாடி பழனிசாமி</p><p>பெருமளவு கனிமவள பொருட்கள் அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதாக தொடர் புகார் வந்தன.</p><p>கனிம வளத்தை அண்டை மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு தடை விதித்த ஒரே தமிழக முதல்வர் விஜய் தான்.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், குவாரிகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் சொல்கிறேன் - அமைச்சர் பிரபு</p><p>ஜல்லி,  எம் சாண்ட் தேவை அதிகரிப்பு, பல குவாரிகள் மூடல் காரணமாக கட்டுமான பொருட்கள் விலை உயர்வு.</p><p>எம்.சாண்ட், ஜல்லி உற்பத்தி திறனை அதிகரிக்க தவெக அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? - எடப்பாடி பழனிசாமி</p><p>ரூ.12,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் 150 நாட்கள் வேலை கொடுப்பது சாத்தியமில்லை - ஐ.பெரியசாமி</p><p>150 நாட்கள் வேலை அளிக்க வேண்டும் என்றால் ரூ.30,000 கோடி தேவைப்படும்.</p><p>தமிழ்நாட்டில் எந்த நதியும் ஓடவில்லை, அனைத்து பகுதிகளிலும் வறட்சி - ஐ.பெரியசாமி</p><p>மக்களுக்கு சேவையே முதலமைச்சரின் நோக்கம்.</p><p>எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்க தயாராக உள்ளோம் - அமைச்சர் ஆனந்த்</p><h2> ஐ.பெரியசாமி உரை</h2><p>நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள் என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர்.</p><p>விபிஜி ராம் திட்டத்தில் 150 நாட்கள் வேலை தருவது சாத்தியமற்றது. ஏட்டு கத்தரிக்காய் கூட்டுக்கு உதவாது என்பது போல் இந்த திட்டம், அரசு அறிவித்தபடி 150 நாள் வேலை தர முடியுமா?</p> <p>3 துறைகளில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டுமே என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறினார்.</p><p>ஊழல் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அதை வெளியிட வைத்து விடாதீர்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் தொடர்பான அனைத்தும் ஆதாரங்கள் எனது மேஜையில் அமைச்சர் வைத்துள்ளார் - முதலமைச்சர் விஜய்</p><p>தவறு நடந்து இருக்கலாம் என ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>வளமான கிராமங்களை உருவாக்கும் நோக்கத்தில் தான் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.</p><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழ்நாடு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? - ஐ.பெரியசாமி</p><p>அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? கொள்கைத் தலைவர் என கூறும் அண்ணா பெயரை மாற்றியது ஏன்? - ஐ. பெரியசாமி</p><h2>ஐ.பெரியசாமி  உரை</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி.</p><p>கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - அமைச்சர் ஆனந்த்</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது - ஐ.பெரியசாமி</p><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்.</p><p>ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது - ஐ.பெரியசாமி</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு - புஸ்ஸி ஆனந்த்</p><p>வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை - புஸ்ஸி ஆனந்த்</p><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன - ஐ.பெரியசாமி </p><p>நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை - அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்</p><p>சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்தில் எடுக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுகவினர் வெளிநடப்பு.</p><p>சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>நாடே மெச்சும் வகையில் முதலமைச்சர் அறிவிப்பு</p><p>ரூ.300 கோடியில் பெரம்பூரில் மருத்துவமனை அமைப்பதற்கு வரவேற்பு.</p><p>வடசென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு</p> <p>வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு</p><p>நான் ரெயிலில்தான் சட்டசபைக்கு வந்து செல்கிறேன். வேலையும் கொடுத்து காரும் கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி - எம்எல்ஏ சபரி ஐங்கரன்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - மன்னார்குடி அமமுக எம்எல்ஏ காமராஜ் வரவேற்பு</p><p>பால் கொள்முதல் விலை உயர்வுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வரவேற்பு</p><p>முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி - அமைச்சர் ஷாஜகான்</p><p>முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஏற்கனவே எம்எல்ஏ ஒருவருக்கு அனைத்துப்படிகளும் சேர்த்து ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>ஏற்கனவே சட்டமன்ற அமர்வுகள் நடக்கும்போது தினப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.</p><p>வாகனத்திற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்.</p><p>ஒரு உதவியாளரை நியமித்து கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.</p><p>5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய் உரை</h2><p>முதலமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.</p><p>7 புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும்.</p><p>பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38 -ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தி அறிவிப்பு -முதலமைச்சர் விஜய் </p><p>ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை.</p><p>கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் விதி 110 கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிடுகிறார்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>சட்டசபையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>கல்லாகி போனது மகனின் மனம்...  வயதான தாயை வீல்சேருடன் ரெயிலில் தள்ளி கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-in-tiruttani#comments</comments><guid isPermaLink="false">0d488b9d-c678-4fa3-b496-14b74202a05a</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:30:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:30:03.472Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,தாய் கொலை,மகன் கைது,mother murder,Son Arrest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/cz2jvb2p/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</strong></em></p><p>மண்ணுக்கு மரம் பாரமாக தெரிவதில்லை...</p><p>மரத்துக்கு கிளை பாரமாக தெரிவதில்லை....</p><p>பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமாக தெரிவதில்லை.</p><p>தான் பெற்ற குழந்தை முடமாகி போனாலும் அந்த குழந்தைக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்கிறாள் தாய். ஆனால் பாழாய் போன பிள்ளைகளின் மனம் மட்டும் வயதான காலங்களில் பெற்றோரை அனாதையாக தவிக்க விட்டு செல்வதை கேள்விப்படும் போது மனித நேயம் உள்ள ஒவ்வொருவரின் இதயமும் நடுங்கி போகிறது. </p><p>தொலை தூரங்களில் இருந்து கண் தெரியாத, நடக்க இயலாத தாய், தந்தையரை நகரப் பகுதிகளில் அழைத்து வந்து வீதிகளில் விட்டு சென்ற சம்பவங்களை கேள்விப்பட்டு இருப்போம். இப்படி கல்லாகி போன பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கடைசி காலத்தில் படுத்தும் பாடுகளை பார்க்கும் போது இப்படியும் பிள்ளைகள் இருப்பார்களா? என்று கேட்க தோன்றுகிறது. </p><p>வீட்டில் இருக்கும் அம்மா தனது மகனிடம்  உடம்பு சரியில்லையப்பா... ஆஸ்பத்திரிக்கு போகணும் என்றால் பர்சில் இருந்து ரூபாயை எடுத்துக் கொடுத்து ஆட்டோ பிடித்து போய் வா என்று சொல்லி விட்டு மகன் வேலைக்கு போய் விடுகிறான். நடக்க முடியாத அந்த பரிதாபத்துக்குரிய தாய் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ பிடித்து செல்வார். அதுவே மனைவிக்கு லேசான தலைவலி என்று அறிந்ததும் அலுவலகத்திற்கு பாதிநாள் விடுப்பு போட்டு விட்டு ஓடி வந்து ஆதரவாக அணைத்தபடியே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வார். ஆனால் இந்த வாழ்க்கை வீட்டில் முடங்கி கிடக்கும் பெற்றோரால் கிடைத்தது என்பதை ஏனோ மனங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறது. </p><p>கடைசி காலத்தில் இப்படித்தான் வயதானவர்களை வீதியில் விட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்ததால்தான் இன்று வீதிகள் தோறும் முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன. </p><p>அப்படி இருந்தும் கொல்லும் அளவிற்கு பிள்ளைகள் மனம் கல்லாகி போவதை நினைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது. அப்படி ஒரு சம்பவம் திருத்தணி அருகே அரங்கேறி இருக்கிறது. </p><p>திருத்தணியில் இருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் மணவூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிப்பட்டு மூதாட்டி ஒருவர் சடலமாக கிடந்தார். முதிர்ந்த அந்த தேகம் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடந்தது. பக்கத்திலேயே ஒரு வீல்சேரும் சுக்குநூறாகி துண்டு துண்டாக அங்கொன்றும், இங்கொன்றுமாக கிடந்தது.</p><p>அதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது. எப்படி இந்த மூதாட்டி ரெயிலுக்குள் விழுந்தார். வீல்சேரில் தானாக வந்து விழுந்தாரா? அல்லது யாராவது தள்ளிக் கொண்டு வரும் போது தவறி விழுந்து விட்டாரா? என்று பல கோணங்களில் யோசித்தார்கள். ஆனால் பெற்ற மகனே தள்ளி கொன்று இருப்பார் என்று அவர்களால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை. </p><p>அடையாளம் காண்பதற்காக விசாரித்த போது  அந்த மூதாட்டி திருவாலங்காடு ஒன்றியம், மணவூரை சேர்ந்த பத்மாவதி என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்த போது கிடைத்த தகவல்களை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போனார்கள். </p><p>மணவூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சேஷாத்திரி-பத்மாவதி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மனைவி, குழந்தைகளுடன் எல்லோரும் சந்தோசமாக வாழ்கிறார்கள். இளைய மகன் பார்த்தசாரதி (43) இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.  சேஷாத்திரி உயிருடன் இருந்தவரை திடகாத்திரமாக நடமாடிய பத்மாவதியை கொஞ்சம் கொஞ்சமாக முதுமை ஆட்கொண்டது. 72 வயதான பத்மாவதியால் நடமாட முடியவில்லை. வீட்டில் படுத்தபடுக்கையாகி விட்டார்.  மகன்களுக்கு தாயை பார்த்துக் கொள்வது யார் என்பதில் போட்டி எழுந்தது. என்னால் முடியாது என்று ஆளாளுக்கு கை கழுவி விட்டனர். கடைசியில் பார்த்தசாரதி தாயை பார்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டாலும் வீட்டில் மனைவி, மாமியாரை பார்த்துக் கொள்வதற்கு முகம் சுளித்தார். </p><p>என்னால் எல்லாம் உங்க அம்மாவை  கவனித்துக் கொள்ள முடியாது என்று கணவரோடு சண்டை போட்டு விட்டு கோபத்தில் குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். </p><p>கடந்த 3 மாதமாக தனி மரமாக தவித்த பார்த்தசாரதி, மனைவி பிரிந்து சென்ற சோகத்திலும் கட்டிலில் படுத்த படுக்கையாக கிடந்த தாயை சரியாக பராமரிக்க முடியாமலும் தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையே வெறுத்து போன பார்த்தசாரதி தனக்கு பாரமாக கருதிய தாயை கொன்று விட முடிவு செய்து உள்ளார்.</p><p>தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று இரவு தாய் பத்மாவதியை வீல்சேரில் தூக்கி அமர்த்தி இருக்கிறார். வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் நம் பிள்ளை வெளியே சுற்றி விட்டு வரலாம் என்று அழைத்து செல்கிறானோ என்று மனதிற்குள் நினைத்த அந்த தாயின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. </p><p>வீல்சேரை தள்ளியபடியே மணவூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் பார்த்தசாரதி சென்று கொண்டு இருந்தார். ரெயில் நிலையத்தில் மின் வெளிச்சங்களும் சுற்றிலும் கேட்ட வெளி உலக சத்தங்களும் பத்மாவதிக்கு உடலில் புதுதெம்பை கொடுத்தது. ஆனால் இன்னும் சில நிமிடங்களில் நாம் பெற்ற பிள்ளையே நம்மை கொல்லப் போகிறான் என்பது அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. </p><p>தூரத்தில் இருந்து பயங்கர ஒலி எழுப்பியபடி வேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. மகனின் கருணையால் பல மாதங்களுக்கு பிறகு ரெயிலை பார்க்கிறோம் என்று அந்த தாய் நிச்சயம் நினைத்து இருப்பார். ஆனால் மறுகணமே மின்னல்வேகத்தில் பார்த்தசாரதி வீல்சேருடன் தாயை ரெயில் முன்பு தள்ளிவிட்டார்.  கண்ணிமைக்கும் நேரத்தில் வீல்சேருடன் பத்மாவதியும் சின்னாபின்னமாக சிதைந்து போனார். </p><p>சுமையாக இருந்த தாயை தூக்கி வீசி விட்டோம் என்ற நிம்மதியோடு பார்த்தசாரதி வீடு திரும்பினார். ஆனால் போலீசாரின் பார்வை பலகோணங்களில் இருக்கும் அல்லவா அப்படித்தான் அந்த ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வீல்சேரில் பெண் ஒருவரை தள்ளி கொண்டு வந்ததையும் ரெயிலில் தள்ளி விட்டதையும் பார்த்தனர்.</p><p>இதை அடிப்படையாக வைத்து பார்த்தசாரதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர். அப்போதுதான் நடந்த சம்பவங்களை பார்த்தசாரதியும் விவரித்து இருக்கிறார். </p><p>அடப்பாவி இப்படி ஒரு காரியத்தை எப்படிடா செய்தாய்? ஊரில் எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கிறது? அங்கு கொண்டு விட்டு இருந்தால் கூட உனக்கு இப்படி கொலை பழி வந்து இருக்காதே? என்று போலீசாரும் பார்த்தசாரதியிடம் தெரிவித்து ஆதங்கப்பட்டனர்.</p><p>கைது செய்யப்பட்ட பார்த்தசாரதி கொலை வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்.</p>]]></content:encoded></item><item><title>எடை குறைவாக வரும் அரிசி மூட்டைகள்..! ரேஷன் கடை பணியாளர்கள் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ration-shops-get-underweight-rice-sacks-staff-complain#comments</comments><guid isPermaLink="false">48c82ab3-327e-44b0-9ebe-0176d01e216c</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:26:29 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:26:29.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரேஷன் கடை,ration shop,அரிசி மூட்டைகள்,பணியாளர்கள்,Rice bags,Ration employee</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ration shops]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/pzqdugy7/Ration-shop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் எடை குறைவாக வருவதால் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.</p><h2>எடை குறைவாக வழங்கப்படும் அரிசி</h2><p>தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.</p><p>ஆனால், இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேள்வி கேட்டால், "எங்களுக்கே அரிசி மூட்டை எடை குறைவாகத்தான் வருகிறது. அப்படி இருக்கும்போது, உரிய எடையில் எப்படி பொதுமக்களுக்கு அரிசியை வழங்க முடியும்" என்று வருத்தம் தெரிவித்தனர்.</p><p>சமீபத்தில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு காரணமான அரசு அதிகாரிகளும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>தரமில்லாத அரிசி</h2><p>50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் அளவு ஒரு பக்கம் குறைகிறது என்றால், மற்றொரு பக்கம் தரமான அரிசியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.</p><p>அதாவது,"நல்ல தரமான அரிசியை வெளிச்சந்தைக்கு திருப்பி விட்டுவிட்டு, தரமில்லாத, பழைய அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அதுவும் எடை குறைவாகவே வழங்கப்படுகிறது" என்ற புகார் பல ஆண்டுகளாக உள்ளது.</p><h2>அரசுக்கு கோரிக்கை</h2><p>அதனால், நெல் கொள்முதலில் தொடங்கி நெல் அரவை, கிடங்கு, போக்குவரத்து, ரேஷன் கடை என முழு விநியோக சங்கிலியையும் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு குறிப்பாக உணவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>நமது கையைவிட்டு போகும் தமிழகத்தின் நீர்வளம்..!- சவுமியா அன்புமணி வைத்த முக்கிய கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-vanishing-water-resources-sowmya-anbumani-urgent-request#comments</comments><guid isPermaLink="false">b043f64d-d62c-4448-9b07-1c9c9df0c259</guid><pubDate>Wed, 19 Aug 2026 08:00:37 +0000</pubDate><atom:updated>2026-08-19T08:00:37.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,சவுமியா அன்புமணி,TN assembly,Water resources,Sowmya Anbumani,நீர்வளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK MLA Sowmya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dn3grwin/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தின்போது, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசினார்.</p><p>அப்போது சவுமியா அன்புமணி கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன. நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து.</p><p>இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.</p><p>சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது. கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். </p><p>நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.</p><p>தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன என்றார். </p><p>அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,"சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும்" என்றார்.</p><h2>சவுமியா அன்புமணி</h2><p>அத்திக்கடவு- அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.</p><p>காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.</p><p>தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். </p><p>தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்</h2><p>குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசியல் களத்தில் உருவாகிறது புதிய கூட்டணி: இடைத்தேர்தலில் ஒன்றாக களம் காண திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-alliance-is-taking-shape-in-the-tamil-nadu-political-arena-plans-are-underway-to-contest-the-by-election-together#comments</comments><guid isPermaLink="false">bb0549f6-990b-4275-860c-ecc443acd038</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:56:39 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:56:39.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,velmurugan,வேல்முருகன்,by election,Krishnasamy,கிருஷ்ணசாமி,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்- கிருஷ்ணசாமி- வேல்முருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/vsxgk1sy/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</strong></em></p><p>தமிழக அரசியல் களத்தில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் முளைத்து தங்களது பணிகளை தீவிரமாக செய்த போதிலும், அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.</p><p>அதே நேரத்தில் த.வெ.க. தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வேறு எந்த கட்சிகளும் செய்யாத சாதனையை முதலமைச்சர் விஜய் செய்து காட்டியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.</p><h2><strong>புதிய கூட்டணி</strong></h2><p>தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இதற்கு முன்பு பல்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை முன்னிறுத்தி  உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி தோல்வியையே தழுவியது. </p><p>இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.</p><p>சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில் கிருஷ்ணசாமி குறிப்பிட்ட தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். </p><p>தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த வேல்முருகனும் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களம் கண்டது.  இந்த தேர்தலில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்தால் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளே பின்னுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மற்ற கட்சிகளும் படுதோல்வியை தழுவின.  </p><p>இந்த நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் புதிதாக சீமான், வேல்முருகன், கிருஷ்ணசாமி ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஆணவத்தோடு பேசுவதா..?- கர்நாடக முதல்வருக்கு சீமான் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemns-karnataka-cm-over-killing-of-three-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-condemns-karnataka-cm-over-killing-of-three-tamils#comments</comments><guid isPermaLink="false">4814cf24-1252-450b-84cd-7995ddccbe97</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:27:48 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:27:48.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,Karnataka CM,Fake Encounter,கர்நாடக முதலமைச்சர்,தமிழர்கள் சுட்டுக்கொலை,சீமானம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dyu69dsk/Seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Seeman-D.K.Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/dyu69dsk/Seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனப்பகுதிக்குள் மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு கர்நாடக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D" target="_blank">முதல்வர் டி.கே.சிவக்குமார்</a> பேசுவதா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்சியோ இல்லாது கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்.</p><p>தமிழர்களையும், தமிழ்நாட்டின் தன்மான உணர்வையும் சீண்டிப் பார்க்கும் வகையிலான கர்நாடக அரசின் போக்கைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். </p><p>ஒவ்வொரு முறையும் காவிரி நதிநீரில் தமிழர்களுக்கான உரிமையையும், பங்கீட்டையும் கேட்டு நாங்கள் போராடும் போதெல்லாம் இனவெறியைத் தூண்டிவிட்டு, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத் தாக்கி, தமிழர்களின் வணிகத்தலங்களைத் தகர்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி,</p><p>தமிழர்களை ஏதிலிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டியடிக்கும் கன்னட இனவெறியின் நீட்சியாகவே, மூன்று தமிழர்கள் வனப்பகுதிக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அத்துப்பாக்கிச்சூடு தமிழர்கள் என்பதாலேயே, திட்டமிட்டு நடத்தப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" target="_blank">இனப்படுகொலை</a>யாகும். </p><p>மான் வேட்டையாடியதாகப் பொய்யானக் குற்றச்சாட்டைக் கூறி, மூன்று குற்றமற்ற தமிழர்களைக் கொன்றுகுவித்ததோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கருத்துகூட சொல்லக்கூடாது; கண்டனம்கூட தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் சிவக்குமார் பேசியிருப்பது மிக மோசமான அடாவடித்தனத்தின் வெளிப்பாடு.</p><p>கர்நாடக மாநிலத்துக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேட்கக்கூடாதெனக் கூறுவாரென்றால், காவிரி நதிநீரைத் தராது வஞ்சிக்கும் கர்நாடக அரசின் மீதுள்ள கோபத்தில் தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் நாளைத் தாக்கினாலும் கேள்விகேட்காது இருந்துவிடுவாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? </p><p>தமிழ்நாட்டுக்குள் வாழும் கன்னடர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என இருந்துவிடுவாரா? மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொலைசெய்யப்பட்டு, அதில் தொடர்புடைய வனத்துறையினர் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்யப்படவோ, அம்மாநில அரசின் சார்பில் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்கவோ செய்யாத சிவக்குமாருக்கு, எங்களைப் பேசக்கூடாதெனச் சொல்வதற்கான உரிமையையும், துணிவையும் யார் கொடுத்தது?</p><p>கர்நாடகாவுக்குள் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் கேள்வி கேட்கக் கூடாதெனச் சொல்ல நீங்கள் யார்? நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு முதல்வராக இருக்கலாம். எங்கள் இனத்தவருக்கு உத்தரவுப் பிறப்பிக்கவோ, கட்டளையிடவோ உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது? </p><p>ஒவ்வொரு முறையும் கர்நாடகாவில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin" target="_blank">தமிழர்கள்</a> மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதெல்லாம் தமிழ்நாடும், தமிழர்களும் சனநாயகத்தன்மையோடு நடந்து கொள்வதை ஏமாளித்தனமெனக் கருதினால், உங்கள் அறியாமைக்கு நாங்கள் பொறுப்பல்ல பெருமக்களே!</p><p>தமிழர்கள் திருப்பி அடித்தால் என்ன நடக்குமென்பதை தமிழீழத்தில் உலகம் பார்த்தது. முப்படைகளைக் கொண்ட மகத்தான மக்கள் இராணுவத்தைக் கட்டியெழுப்பி, உலக வல்லாதிக்கங்களை எதிர்த்துச் சண்டையிட்ட மாவீரத்தைப் போர்க்களத்திலே நிகழ்த்திக் காட்டிய புறநானூற்றுத் தலைவன் பெருமாவீரன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்; </p><p>எல்லையைக் காத்து நின்ற வனக்காவலன் வீரப்பனாரின் வாரிசுகள் நாங்கள். எங்கள் சனநாயக உணர்வைக் கோழைத்தனமெனக் கருதினால், அதற்கான பெரும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.</p><p>தமிழர்கள் எனும் மூத்தத் தேசிய இனத்தின் குடிகளைச் சீண்டுவது போலவும், அவமதிப்பது போலவும் பேசுவதைக் கைவிட்டு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் நாவடக்கிப் பேச வேண்டும். கன்னடர் எனும் தேசிய இனத்தையும், அதன் குடிகளையும் ஆரத்தழுவி முழுதாய் நேசிக்கிறோம். </p><p>பேரன்பு கொண்டு அம்மக்களோடு உறவுபாராட்ட எண்ணுகிறோம். அதற்காக, தமிழ்த்தேசிய இனத்தின் மீது பகைமையும், வெறுப்பும் கொண்டு, கர்நாடக அரசு செய்யும் அட்டூழியங்களை இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.</p><p>தமிழர்களின் பரந்த மனப்பான்மையையும், பெருந்தன்மையையும், சனநாயக உணர்வையும் அலட்சியப்படுத்திச் செயல்பட முனைந்தால், பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. </p><p>தமிழ்நாடு என்பது உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கான வரலாற்றுத்தாயகம். உலகின் எந்த மூலையில் தமிழர்களுக்கு ஒரு இன்னல் விளைந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து ஆதரவுக்குரல்கள் ஒலிக்கத்தான் செய்யும். அதனைக் கேள்வி கேட்பதற்கு கர்நாடக முதல்வர் சிவக்குமாருக்கு எந்த உரிமையுமில்லை.</p><p>ஆகவே, மூன்று அப்பாவித்தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கர்நாடக அரசின் வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவுசெய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, மூன்று பேரின் குடும்பத்தாருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.</p><p>அதற்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட 10 முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/10-importatnt-announcements-made-by-cm-vijay-in-the-legislative-assembly-today#comments</comments><guid isPermaLink="false">b376bd66-c011-4e75-8153-d1234172830a</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:17:08 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:17:08.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/d4js6b08/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> பேசியதாவது:-</p><p>உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரை காக்கும் பசுவை தெய்வமாக போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில் ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காக பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாக கூறப்படும் போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.</p><p>தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரம்  பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>தற்போது 4.3 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 8.2 சதவீதம் இதர சத்துக்கள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்கத் தொகையாக 1 லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய் 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளை சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது. </p><h2><strong>ரூ.41 ஆக உயர்வு</strong></h2><p>கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில் நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.</p><p>தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்கத் தொகையை 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளது.</p><p>இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டுக்கு ரூபாய் 360 கோடியும் செலவாகும்.</p><h2><strong>சமமான மருத்துவ சேவை</strong></h2><p>ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது. அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. மருத்துவம் என்பது சலுகை அல்ல. ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. </p><p>ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தை தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்பு ணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி, ஏழை, பணக்காரர், கிராமம்,  நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைக்க செய்வதை முதன்மையான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது நமது அரசு.</p><p>மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யில் சில அறிவிப்புகளை சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்.</p><h2><strong>பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி</strong></h2><p>வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில்  400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி அமைக்கப்படும்.</p><p>முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ஆண்டொன்றுக்கு தற்போது உள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.</p><h2><strong>7 செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில் தரமான மருத்துவ சேவைக்கு தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் ரூ.351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.</p><p>7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 பி.எஸ்.சி. செவிலியர் மாணவர்கள் இடங்கள் உருவாக்கப்பட்டு ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1925 கூடுதல் மாணாக்கர் இடங்கள், இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட 12 துணை மருத்துவ படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.</p><h2><strong>புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்</strong></h2><p>தமிழ்நாட்டில்  அதிகரித்து வரும் புற்றுநோய்களை தடுக்கவும், தரமான சிகிச்சை வழங்கவும் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு மிஷன் ரூ.677 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.471 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ஜி+14 தளங்களுடன் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். மேலும் 5 மண்டல புற்றுநோய் மையங்கள், தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில்  நிறுவப்படும். முதல்கட்டமாக ராஜாஜி ஆஸ்பத்திரியில் ரூ.84 கோடியில் ஜி+8 தளங்களுடன் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும்.</p><p>ரோபாட்டிக் அறுவை சிகிச்சை லீனியர் ஆக்சுலரேட்டர் லினக் கதிர் வீச்சு நவீன கருவிகள் இலக்கு மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.106 கோடியே 17 லட்சம் வழங்கப்படும். டாக்டர்களுக்கு பயிற்சி, நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றுக்காக ரூ.2 கோடியே 77 லட்சம் அளிக்கப்படும். மேலும் தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1.22 லட்சம் பெண்களுக்கு ரூ.8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எச்.பி.வி. டி.என்.ஏ. பரி சோதனை மேற்கொள்ளப்படும். மொத்தம் ரூ.673 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் செல்வதை தடுத்த ஒரே முதல்வர்- அமைச்சர் பிரபு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-blocked-mineral-exports-to-neighbouring-states-says-minister-prabhu#comments</comments><guid isPermaLink="false">cd16d219-2c1b-42d5-bd58-2b81a00a46cc</guid><pubDate>Wed, 19 Aug 2026 07:10:00 +0000</pubDate><atom:updated>2026-08-19T07:10:00.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கனிம வளங்கள்,அமைச்சர் பிரபு,Minister Prabhu,Mineral exports</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Prabhu- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/wkqq5hmv/Minister-Prabhu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான  விவாதத்தில்  திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசினார் அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு அமைச்சர் என் ஆனந்த் அவ்வப்போது விளக்கம் அளித்தார்.</p><p>அப்போது நடந்த விவாதம்:-</p><p>அமைச்சர் என் ஆனந்த்:- அண்ணனின்  மாவட்டம்  கொடைக்கானலில் தாண்டிக்குடி பகுதிக்கு எங்கள் தலைவர் ஒரு முறை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு    கீழே  இறங்கி வரும் போது ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்தார். ஆனால் அங்கு ஒரு பகுதியில் சாலை வசதியில்லை. அங்கு நம்ம சொந்த செலவில் சாலை போட்டுவிடலாமா என கேட்டார்.</p><p>அப்போது நம்மை பேனர் வைக்கவே விடமாட்றாங்க. ரோடு எப்படி போடுறதுனு கேட்டேன். நான் பதவியேற்ற 5 வது நாள் அந்த தாண்டிக் குடி கிராமத்திற்கு சாலை போட வேண்டும் என முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்தது . இன்னிக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு வேலை தொடங்கியுள்ளது.</p><p>நூறு நாட்கள் திட்டத்திற்கு ரூ.12,600 கோடி வேண்டும்.  ரூ 7,586 கோடியில் தமிழக அரசு முதல் அமைச்சர் 5057 கோடி ஒதுக்கி இருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கண்டிப்பாக 150 நாட்கள் வேலை கொடுக்கப்படும் என்பதை இந்த நேரத்துல நாங்கள் தெரிவித்துகொள்கிறேன். இது செய்ய முடியுமா அப்படி என்றெல்லாம், பணம் இருக்குதா என்றெல்லாம் பார்த்து தான், ஒவ்வொரு திட்டத்தையும் தினந்தோறும் செயல்படுத்தும் முதல்வர் தான் எங்களுடைய முதல்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>எங்களுக்கு தெரியும் எப்படி பேசணும் இப்ப எப்படி ஆட்சி இருக்கின்றது என்பது.எல்லாம் உங்களுக்கு தெரியும். அதனால அதெல்லாம் கருத்தில் கொண்டு சொல்லுங்கள்.</p><p>மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறவர் தான் எங்கள் முதல்வர். அதனால தான் இந்த மாதிரி எல்லாம் தயவு செய்து சொல்லாதீங்க.</p><p>நாங்க எல்லாம் சொல்ல ஆரம்பித் தோம் அப்படின்னா நிறைய விஷயங்கள் நாங்கள் பேச வேண்டியதாக இருக்கும். ஆகவே நீங்கள் எந்த ஒரு ஆலோசனையாக இருந்தாலும் நீங்கள் அதை தாராளமா சொல்லுங்கள் எங்களுடைய முதல்வர் 234 சட்டமன்ற தொகுதிக்கும் முதல்வர்.</p><p>மக்களுக்கு என்ன பிரச்சனை மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை மட்டும் செய்யக்கூடிய முதல்வராக இருப்பார் </p><p> நான் அடிக்கடி  உங்களிடம்  குறுக்கிட சங்கடமாக இருக்குது அதனால தயவு செய்து நீங்கள் எதுவாக இருந்தாலும் எந்த ஒரு விஷயம் ஆனாலும் உங்களுடைய தொகுதி விஷயம் உங்களுடைய மாவட்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அமைச்சர் பிரபு :</p><p>இதுவரைக்கும் தமிழக வரலாற்றிலேயே நம்ம மக்களுக்கான சேவையை பூர்த்தி செய்வதற்கு இங்கு உள்ள கனிம வளங்களை நம்ம மக்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஒரு நோக்கத்தோடு அண்டை மாநிலத்திற்கு செல்லும் கனிம வள த்திற்கு தடை போட்ட ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்கள் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கக் கூடாதா?: சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு வலியுறுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case#comments</comments><guid isPermaLink="false">1aa87ca9-01ae-4b12-837c-a10099f29946</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:58:16.395Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,சிபிஐ,cbi,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/618hcgzw/Anbumaniramadoss0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக வனப்பகுதியில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழர்கள்-சுட்டுக்கொலை">3 தமிழர்கள்</a> அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த விவகாரம் என்பதால் அது குறித்து தமிழக அரசோ, தமிழக அரசியல் கட்சிகளோ எந்தக் கருத்தும் தெரிவிக்கக்கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கவும், சிபிஐ விசாரணை கோரவும் தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>ஏற்றுக்கொள்ள முடியாது</strong></h2><p>கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,‘‘எந்த மாநிலமும் இன்னொரு மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது. தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது கர்நாடகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு  பிரச்சனை என்பதால் அதில் தமிழக அரசு தலையிட முடியாது. தமிழ்நாடு அதன் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும்; நாங்கள் எங்கள் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பகுதியில் 3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அம்மாநிலத்தின் சட்டம் &amp; ஒழுங்கு சார்ந்த சிக்கல் என்று கூறுவதே இந்த விவகாரத்தை திசை திருப்பும் செயலாகும். காணாமல் போன மாடுகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு ஒவ்வொரு நாளும் புதிய ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர்  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் வனத்துறையினரின்  விளக்கத்தை ஏற்க மறுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.</p><p>3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து புத்தம் புதிய காலணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உயிரிழந்தவர்களில் ஒருவர் அணிந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டு இருந்தால் புதிய காலணிகள் கரைபடாமல் இருக்க வாய்ப்பில்லை என காவல்துறை அதிகாரிகளில் சிலரே கூறியுள்ளனர். இந்த ஐயங்களை போக்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை ஆகும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக உண்மையை மூடி மறைக்க கர்நாடக அரசு முயல்கிறது. இத்தகைய தருணத்தில் கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டியது தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். இதை செய்யக்கூடாது என்று சொல்ல இந்தியா சர்வாதிகார நாடும் அல்ல... கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சர்வாதிகாரியும் இல்லை என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களோ, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்களோ இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் தாக்கப்படும் போது அல்லது படுகொலை செய்யப்படும் போது, அதைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தவும்  பாதிக்கப்பட்டவர்களின் பூர்வீக மாநிலம் அல்லது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் சிக்கலில் மத்திய அரசே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வரலாறு உண்டு. காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அதை தமிழ்நாடு கண்டித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 1991&amp;92ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில்  பாட்டாளி மக்கள் கட்சியினர் 05.01.1992-ஆம் நாள் கர்நாடகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p> <p>கடந்த பத்தாண்டுகளில் கோவா மாநிலத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை தாக்கப்பட்ட போது அதற்கு கர்நாடக சட்டப்பேரவையே கண்டனம் தெரிவித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் பிகாரைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்ட போது, அதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்ததும், அவர்களின் கோரிக்கையை ஏற்று மராட்டிய முதலமைச்சருக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களே  கடுமையான வார்த்தைகளில் கடிதம் எழுதியதும் நடந்தது. அதனால், கர்நாடகத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசவும், நீதிக்காக போராடவும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.</p><p>எனவே, கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக அரசு நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்று இனியும் நம்பிக் கொண்டிருப்பது தவறு ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது- அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-can-never-come-to-power-again-says-minister-anand#comments</comments><guid isPermaLink="false">38c1639c-93e7-4356-9864-2ecfcadb9989</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:46:07 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:46:07.772Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,TN assembly,Adhav Arjuna,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav- Minister Anand-DMK MLA E.V.Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/5o327yst/ANand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>அப்போது, தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.</p><p>நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்ப திரும்ப சொல்கிறேன் என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p><h2>அமைச்சர் மரியவில்சன்</h2><p>திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்தது.</p><h2>திமுக எம்எல்ஏ எ.வ.வேலு</h2><p>வரலாறு காணாத அளவுக்கு மழை, வெள்ளப்பெருக்கு அணை இடிந்தது. வரலாறு காணாத அளவுக்கு நீர் வந்ததநன் கரணமாகத்தான் தென்பெண்ணையில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது.</p><p>தென்பெண்ணை ஆற்றில் 3 லட்சம் கன அடி நீர் கரைபுரண்டு ஓடியதால்தான் பாலம் இடிந்து விழுந்தது.</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>சோழர் கால கல்லணை இன்றும் தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் 3 மாதத்தில் பாலம் இடிந்து விழுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு: விஜய் முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது எப்போது?- டிடிவி தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-6#comments</comments><guid isPermaLink="false">ba661510-c74e-4f2f-a2ce-1063a5780b2c</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:40:18 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:40:18.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8or528gb/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்விடக் குடியிருப்புப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பொதுமக்கள் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பதற்றத்துடன் ஓடியதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காணொளிக் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.</p><h2><strong>கவலை</strong> </h2><p>கடந்த இரு நாட்களில் மட்டும் காஞ்சிபுரம் அருகே இரட்டைக் கொலை, திருப்புவனம் அருகே இளைஞர் குத்திக் கொலை, நெய்வேலியில் இளைஞர் வெட்டிக் கொலை, திருப்பூர் அருகே வடமாநில இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை என, தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சந்தி சிரிக்கும் அளவிற்குச் சென்றிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.</p><p>அதேபோல  சேலம் வாழப்பாடியில் சமூகநீதி விடுதியில் தங்கி பயிலும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல், தஞ்சாவூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, சேலம் கொண்டலாம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை, ஈரோடு அருகே 85 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது என, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><h2><strong>காலக்கொடுமை</strong></h2><p>இப்படி, தினந்தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம் என, ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றமான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், தவெக அரசும் அதன் முதலமைச்சரும் தங்களது முதல் 100 நாள் அலங்கோல ஆட்சியை சாதனையாக அறிவித்து பல கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது காலக்கொடுமையாகும்.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து கால அவகாசம் தேவை என்பதையும், தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களுக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம் என்பதையும் வாடிக்கையாகக் கூறி வரும் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்போது தான் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்குவார்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>எனவே, குற்றச் சம்பவங்கள் அரங்கேறிய பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார்... &apos;இன்னோவா&apos; காரா கொடுத்தா நல்லாருக்கும்- அப்ளிகேஷன் போட்ட உறுப்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">7b5484dc-445b-4e24-9aa3-036c05fac6fd</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:24:42 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:24:42.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/a3a6396y/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் இன்று 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்து நன்றி கூறினார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டமன்றத்தில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், எம்எல்ஏக்களுக்கு கார் உள்ளிட்ட  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அவர் அறிவிப்பை வெளியிடும் போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஜோதிமணி பலமுறை எழுந்து கும்பிட்டபடியே நின்று கொண்டிருந்தார். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced">முதலமைச்சர்</a> பேசி முடித்ததும் அதன் பின்  ஜோதிமணி பேசியதாவது,</p><p>நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்குவதாக அறிவித்துள்ள முதலமைச்சர் வாகனத்துக்கு ஓட்டுநர் மட்டுமின்றி மாத வாகன படி ரூ.75,000 அலுவலக உதவியாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்ததை மிகவும் வரவேற்று நன்றி தெரிவிக்கிறேன்.</p><p>நான் கேட்டதை நிறைவேற்றி தந்த முதலமைச்சருக்கும் பேரவை தலைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். </p><h2><strong>தாரகை கத்பட் (காங்கிரஸ்)</strong></h2><p>முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு  புல்லரிக்கக் கூடிய விஷயம். சட்டசபைக்கு பொருளாதாரப் பின்புறம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வந்துள்ளார்கள். அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான வாகனம்  ஓட்டுனர்களுக்கு  சம்பளம் உதவியாளர்களுக்கான சம்பளம் வழங்கி இருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.  இது எதிர்க்கட்சிக்கு கூட சந்தோஷமான ஒரு விஷயம்தான். ஆனால் அவர்களால் வெளிப்படுத்த முடியாது.  நாங்கள் அங்கிருந்தாலும் அதைத்தான் செய்வோம்.</p><p>இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. முதலமைச்சர் காப்பீடு திட்டம் 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாய் உயர்த்தப்பட்டது. அனைத்து மக்களுக்கும் காப்பீடு திட்டத்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்படும்..</p><p>முதலமைச்சருக்கு காங்கிரஸ்  கட்சியின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.</p><h2><strong>செல்லசுவாமி (சி பி எம் )</strong></h2><p>பால் கொள்முதல் விலை அதிகரிப்பு அதேபோல  கார் தொடர்பாக அறிவிப்பு இன்பமாக இருக்கிறது. ஏற்கனவே முன் காலத்தில் ஊதிய உயர்வு கொடுத்த போது இது போன்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று கூறிய போதும் மக்களின் வரி பணத்தில் இருந்து கொடுப்பது ஏற்புடையது இல்லை என்று சொல்லுவோம். ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் எண்ணத்தை பாராட்டுகிறோம்.</p><p>எங்கள் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக என்ன என்பதைக் கேட்டு அதை நாங்கள் உட்படுவோம்  அறிவிப்பிற்கு நன்றி கூறுகிறோம்.</p><h2><strong>கல்லாணை (த.வெ.க)</strong></h2><p>மதுரை ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் பிரிவு அறிவிப்பிற்கு நன்றி  முதல்வர் கொடுக்கும் காரில் செல்வது மகிழ்ச்சி. அனைத்துக்கும் நன்றி.</p><h2><strong>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்</strong></h2><p>பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் ஏற்றி தந்து உள்ளார். மருத்துவ துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனமும் உதவியாளரும் வழங்கியுள்ளார். இதற்கு இரு கரங்களைக் கூப்பி வணங்குகின்றோம்.</p><p>இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல மறைமுகமாக ஓட்டுநர்களுக்கு வேலைவாய்ப்பு உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு, சுற்றி சுற்றி பம்பரமாய் வேலை செய்வதற்காக புதிய வாகனத்தை தந்துள்ளார். </p><p>என்ன தருவார் எதை தருவார் என்று எண்ணுவதற்கு முன்னே பொன்னை தருவார் பொருளை தருவார். போதாது போதாது என்றால் தன்னையே தரக்கூடிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.</p><h2><strong>சத்தியபாமா (த வெ க )</strong></h2><p>மக்களுக்காக பணியாற்ற வேண்டும். அதில் எந்தவித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என முதலமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் கொடுத்தது இன்ப அதிர்ச்சியை வழங்கி உள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி</strong></h2><p>பால் உற்பத்தியாளரின் கோரிக்கை அறிந்து தாயுள்ளத்தோடு அவர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தியதற்கு நன்றி.</p><h2><strong>மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)</strong> </h2><p>கரும்பு கொள்முதல்களை உயர்த்தியது மட்டுமின்றி பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் பால்  வார்த்துள்ளார். அவருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>காங்கிரஸ் எம்எல்ஏ</strong></h2><p>கொடுக்குறதுதான் கொடுக்குறீங்க 'இன்னோவா' காரா கொடுத்தா நல்லாருக்கும் என்றார். </p><h2><strong>சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</strong></h2><p>பால் கொள் முதல் விலை உயர்வு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது, ஒரே நாளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் பெறுவதும், மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>பா.ம.க கணேஷ்குமார்</strong></h2><p>சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மட்டுமில்லாமல் உதவியாளர் என சிறப்பு அறிவிப்பு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார். </p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான் வாகனம் தருகிறார்கள்.</p><h2><strong>கணேஷ்குமார்</strong></h2><p>முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நோக்கி செல்லும் எங்கள் பயணத்திற்கு வேகம் வழங்கி இருப்பதைதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார். </p><h2><strong>பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்</strong></h2><p>கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. தற்போது முதல்வர் எனக்கு வேலையும் வழங்கியிருக்கிறார். காரும் வழங்கியுள்ளார் என்றார்.</p><h2><strong>சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு</strong></h2><p>ரூ. 5 லட்சம் காப்பீட்டை அதிகரித்து கொடுங்கள் என எங்கள் தலைவர் கேட்டதுண்டு அதை அதிகரித்து கொடுத்துள்ளார். இது வரவேற்கத்தக்க ஒன்று என்றார்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை: திமுக - தவெக இடையே காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rural-development-water-resources-grant-request-dmk-tvk-clash#comments</comments><guid isPermaLink="false">d4a0f70b-684f-4c8f-8985-019a74c9c705</guid><pubDate>Wed, 19 Aug 2026 06:04:56 +0000</pubDate><atom:updated>2026-08-19T06:04:56.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,அமைச்சர் ஐ.பெரியசாமி,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N.Anand- I.Periyasamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/2jwb585h/I-Periyasamy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்.</p><p>இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி உரை:</h2><p>திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.</p><p>தொகையை உயர்த்தி எண்ணிக்கையை குறைத்துவிட்டனர்.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை.</p><p>வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு.</p><h2>ஐ.பெரியசாமி: </h2><p>தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது.</p><h2>ஐ.பெரியசாமி</h2><p>அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.</p><p>கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.</p><p>வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான். வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிதி தந்தாலும் தற்போது விலை உயர்ந்துள்ளதால் நிதி பற்றாக்குறை தான்.</p><p>வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றிவிட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.</p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை. மக்கள் இன்னும் குடிசையில் தான் வசிக்கின்றனர்.</p><h2>ஐ.பெரியசாமி:</h2><p>கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? மறுமலர்ச்சி திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது.</p><h2>அமைச்சர் பிரபு:</h2><p>திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 100 கோடி மெட்ரிக் ஜல்லி உற்பத்தி, 85 கோடி டன் மெட்ரிக் டன் தான் பயன்படுத்தியுள்ளனர். </p><h2>அமைச்சர் ஆனந்த்:</h2><p>வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். </p>]]></content:encoded></item><item><title>ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் என் மேஜையில் தான் உள்ளது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-all-the-evidence-regarding-the-corruption-is-right-here-on-my-desk#comments</comments><guid isPermaLink="false">1bf8ee24-370a-4881-8166-0d610eecddfa</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:52:47 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:52:47.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,I Periyasamy,TN assembly,ஐ பெரியசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/hu5iwaxe/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி பேசுகையில், வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்து விட்டது என்றார். </p><p>அதற்கு அமைச்சர் ஆனந்த், வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார். அதனை தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமி, அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது. கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும். வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான் என்று பேசினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், </p><p>சமஸ் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகத்தை எ.வ.வேலு குறிப்பிட்டிருந்தார். விஜய் 100 : ஊழலுக்கு எதிரான ஓர் அடி என சமஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் என ஒப்புக்கொண்ட ஐ.பெரியசாமிக்கு நன்றி என்றார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசுகையில், </p><p>முந்தைய ஆட்சியில் 3 துறைகளை ஆய்வு செய்த அறிக்கை என் மேஜையில் உள்ளது. கோப்புகள் என்னிடம் இருப்பதாக நிதியமைச்சர் கூறியிருந்தார். அது உண்மை தான். ஆதாரங்கள் அனைத்தும் என் மேஜையில் தான் உள்ளது. அந்த கோப்புகளை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள், எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்போம்.  மக்களிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று எனக்கு தெரியும், பேசிவிட்டு தான் வந்துள்ளேன். நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாலவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் இல்லையா? என்றார். </p><p>எம்எல்ஏ ஐ பெரியசாமி பேசுகையில்,  நான் அன்பாக, அக்கறையாக, ஆசையாக பேசியதால் தான் மக்கள்  என்னை 7 முறை எம்எல்ஏவாக வெல்ல வைத்துள்ளனர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை ரூ.3  உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-price-must-be-raised-by-at-least-7-rupees-per-litre#comments</comments><guid isPermaLink="false">b16f33b7-b906-41d5-8a23-1dc7002b4386</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:27:54 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:27:54.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,ஆவின் பால் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/skdyp5yo/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபையில் இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh">முதலமைச்சர் விஜய்</a> 110 விதியின் கீழ், ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். </p><p>இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>போதுமானது அல்ல</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு  ரூ.3  உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும்,  ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து  ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும்  என்று  முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார்.  பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.</p><p>தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட  லிட்டருக்கு  ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு  ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அதிமுக வெளிநடப்பு: தவெக ஆட்சி வந்த வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்..!-எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-stages-walkout-edappadi-says-tvk-government-heading-towards-ruin#comments</comments><guid isPermaLink="false">c96479d7-33b9-4c83-87b8-7b17d289d52c</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:23:59 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:23:59.863Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டமன்றம்,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/eymutj78/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுக்க மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.</p><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>இதைதொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடல் தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தவெக அரசு சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கின்றனர்.</p><p>கடற்கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு மீனவர் பலியான நிலையில் மேலும் 4 மீனவர்கள் சவுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>அரசாங்கம் நடக்கவில்லை, ரீல்ஸ் மட்டும்தான் போடுகின்றனர். எதற்கு கத்துகிறார்கள் என தெரியாமலேயே கத்துகிறார்கள்.</p><p>எந்த அளவுக்கு வேகமாக தவெக ஆட்சி வந்துள்ளதோ, அதே வேகத்தில் படுபாதாளத்திற்கு சென்றுவிடும்.</p><p>மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் உடலை மீட்பது தொடர்பான நடவடிக்கை எடுக்காமல் தவெக அரசு தட்டிக் கழிக்கிறது.</p><p>துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் உயிரிழப்பு குறித்து பேசும்போது தவெக எம்எல்ஏக்கள் சிரிக்கின்றனர்.</p><p>3 மீனவர்கள் உடல் ஒருவாரமாக தமிழகம் கொண்டுவர முடியாமல் தவிக்கின்றனர். இதைவிட என்ன முக்கியமானது உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா? </title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-19-08-2026#comments</comments><guid isPermaLink="false">61682066-552e-42d9-9247-5178c656669a</guid><pubDate>Wed, 19 Aug 2026 05:17:21 +0000</pubDate><atom:updated>2026-08-19T05:17:21.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/osvftska/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்து அதாவது கடந்த 2 நாட்களாக சற்று உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,205-க்கும் சவரனுக்கு  680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக விலைமாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>15-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><p>14-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>15-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>14-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>எம்எல்ஏக்களுக்கு கார்... முதலமைச்சர் அறிவிப்பால் இன்ப அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-shocking-cm-vijay-announced#comments</comments><guid isPermaLink="false">b11e170b-c5d8-493d-991f-8ab14a5ac665</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:36:03.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8347zcxc/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், தொகுதி பணியை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாகனம் வழங்கப்படும். </p><p>* வாகனத்திற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகனப்படி, ஓர் உதவியாளரை நியமித்து ஊதியம் தர மாதத்திற்கு ரூ.25ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். </p><p>சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி வாகனம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் நடப்பு சட்டசபை தொடரிலேயே முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி: அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி</p><p>அமைச்சர் ராஜ்மோகன்: முதலமைச்சர் விஜயால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.</p><p>அமைச்சர் ஷாஜகான்: முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.</p><p>எம்எல்ஏ காமராஜ்: முதலமைச்சர் கொடுக்கும் காரில்தான் செல்வதே கெத்து. </p><p>பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.25 லட்சமாக உயர்வு- முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-chief-ministers-medical-insurance-coverage-raised-to-rs-25-lakh#comments</comments><guid isPermaLink="false">ecb2dbba-3c35-4bfb-8858-0d6f17826781</guid><pubDate>Wed, 19 Aug 2026 04:20:41 +0000</pubDate><atom:updated>2026-08-19T04:20:41.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/6wp3cc7v/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> தொடங்கியது. சபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோன்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.</p><p>* முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும். </p><p>* ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும். </p><p>* 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும். </p><p>* பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை. கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.</p><p>* ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும். </p><p>* முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.</p><p>* 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை பக்தர்கள் கவனத்திற்கு... செப்டம்பர் 1-ந்தேதி முதல் வரும் புது ரூல்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1</link><comments>https://www.maalaimalar.com/spirituality/ban-on-carrying-mobile-phones-inside-the-tiruvannamalai-arunachaleswarar-temple-starting-september-1#comments</comments><guid isPermaLink="false">796fa815-ea13-4822-b9f7-76a2c1cca795</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:54:30 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:54:30.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,செல்போன் தடை,Tiruvannamalai temple,cellphone ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவண்ணாமலை கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/ohus83y7/tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>கோவில் இணை ஆணையர் பரணிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>செல்போன்களுக்கு தடை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்</a> பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் சுற்றறிக்கை உத்தரவின்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் கோவிலுக்குள் உள்ளே செல்போன்கள் எடுத்துச் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>எனவே, பக்தர்கள் செல்போன் எடுத்து வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><h2><strong>பாதுகாப்பு மையங்கள்</strong></h2><p>மேலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல ஏதுவாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் அருகில் 2 இடங்களிலும், வடக்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 2 இடங்களிலும், தெற்கு திருமஞ்சன கோபுரம் அருகில் ஒரு இடத்திலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் பக்தர்கள் தங்களது செல்போன்களை ரூ.5 கட்டணமாக செலுத்தி ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம். சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவுடன் டோக்கன்களை காண்பித்து பாதுகாப்பு மையங்களில் இருந்து செல்போன்களை பெற்றுக் கொள்ளலாம்.</p><h2><strong>பறிமுதல் செய்யப்படும்</strong></h2><p>இந்த உத்தரவினை மீறி கோவிலுக்குள் மறைமுகமாக எடுத்துச் செல்லும் செல்போன்களை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மின்வாரியத்தில் முறைகேடு: தமிழகத்தில் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anti-corruption-department-raids-40-locations#comments</comments><guid isPermaLink="false">d9d6622d-6e8e-46c7-a6c9-4f8c6b869b6d</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:36:36 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:36:36.925Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்,லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை,DVAC Raid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ transformer]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/8vgkl34f/transformer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சாதனங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.</p><p>இதைதொடர்ந்து <a href="http://maalaimalar.com/search?q=%20%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">லஞ்ச ஒழிப்பு</a> போலீசார் இது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.</p> <p>தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது தான் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன. </p><h2>அதிரடி சோதனை</h2><p>இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். </p> <p>மின்வாரியத்துக்கு தேவையான பொருட்கள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில் பேட்டைகளில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.</p><p>மின்சாதனப் பொருட்கள் வாங்கியதில் தான் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அது தொடர்பான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இந்த சோதனை நடந்து உள்ளது.</p> <h2>சென்னை</h2><p>சென்னையில் 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அண்ணாநகரில் 3 இடங்களிலும், பெருங்குடியில் 4 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.</p><p>இதை தவிர மின்வாரியம் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் வளாகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.</p><p>சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. </p> <h2>14 தொழிற்சாலைகள்</h2><p>அதில் ஏராளமான மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் அடங்கும். இந்த தொழிற்சாலைகளில் இருந்து மின்வாரியத்துக்கு தேவையான பொருட்கள் பெருமளவு வாங்கப்பட்டு உள்ளது. </p><p>இதை தொடர்ந்து இங்கு உள்ள ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனம் உள்பட மொத்தம் 14 தொழிற்சாலைகளில் இன்று சோதனை நடைபெற்றது.  இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொது மேலாளர்களின் இல்லங்கள் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் சோதனை நடத்தினார்கள். இதுபோன்று மற்ற 13 இடங்களிலும் டி.எஸ்.பி.  தலைமையில் சோதனை நடந்தது.</p> <p>தொழிற்சாலை மற்றும் நிறுவன அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றையும், கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>சில தொழிற்சாலைகள்  காலை வேளையில் திறக்கப்படாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் நுழைவாயிலில் தொழிற்சாலை நிர்வாகிகளின் வருகைக்காக காத்திருந்து உள்ளே சென்றதையும் காண முடிந்தது.</p> <h2>செங்கல்பட்டு</h2><p>செங்கல்பட்டு மாவட்டத்திலும் இந்த சோதனை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. </p><p>இதை தவிர திருச்சி, கரூர், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் மின்வாரியம் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் சிப்காட் வளாகங்களில் இன்று காலை 7.30 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் அலுமினியப் பொருட்களை கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று உள்ளது.</p> <h2>ஒப்பந்தங்கள்</h2><p>மின்வாரியத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பணம் செலுத்தி அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இப்படி மின்சாதனப் பொருட்கள் வாங்கப்பட்டதில் எந்த மாதிரியான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது பற்றிய தகவல்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டியுள்ளனர்.</p> <h2>தொடர் சோதனை</h2><p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-members-thanks-to-cm-vijay">முதலமைச்சர் விஜய்</a> ஆட்சியில் அமர்ந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர். </p><p>முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனையும் நடந்து உள்ளது. இந்த நிலையில் தான் மின்வாரியத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>MTC எச்சரிக்கை: பயணிகளிடம் முறையற்ற வகையில் நடந்தால் டிரைவர்கள், நடத்துனர்கள் மீது நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mtc-warns-bus-conductors-and-drivers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mtc-warns-bus-conductors-and-drivers#comments</comments><guid isPermaLink="false">74aeb9f8-c24e-4aa9-8ce0-c9979fec484d</guid><pubDate>Wed, 19 Aug 2026 03:08:23 +0000</pubDate><atom:updated>2026-08-19T03:08:23.988Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,மாநகர போக்குவரத்து கழகம்,MTC,bus passengers,பயணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/xa4zaxwy/bus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/xa4zaxwy/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயணிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் டிரைவர்கள், நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/மாநகர-போக்குவரத்து-கழகம்">மாநகர போக்குவரத்துக் கழகம்</a> சார்பில் அனைத்து டிரைவர்கள், நடத்துனர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>புகார்</strong></h2><p>சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமானது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை நாள்தோறும் இயக்கி வருகிறது. பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் பெறப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாகவும், 2 அல்லது 3 பஸ்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் எந்த பஸ்சும் நிற்காமல் செல்வதாகவும், பஸ்சை பிடிப்பதற்காக ஓடிவரும் பயணிகளிடம் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையற்ற வகையில் பேசுதல், அடுத்த பஸ்சில் பயணம் செய்யுமாறு கூறுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p>பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவது முதன்மையான கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, சாதாரண கட்டண பஸ்கள் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் தவறாமல் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்.</p><h2><strong>ஒழுங்கு நடவடிக்கை</strong></h2><p>2 அல்லது அதற்கு மேற்பட்ட பஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு நிறுத்தத்திற்கு வந்தாலும், டிரைவர் பஸ்சை பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பயணிகளை ஏறி, இறங்கி செல்ல அனுமதிக்க வேண்டும். பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், மாணவ, மாணவிகள் பஸ்சில் பாதுகாப்பாக ஏறி, இறங்க தேவையான உதவிகளை வழங்க வேண்டும். பயணிகளிடம் கடுமையாக பேசுதல், அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.</p><p>பயணிகளை ஏற்ற மறுத்தல் மற்றும் முறையற்ற வகையில் நடந்துகொள்ளுதல் ஆகியவை கடுமையான ஒழுங்கீனச் செயலாக கருதப்பட்டு புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.</p><p>எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தங்களது பணிமனை சார்ந்த டிரைவர், நடத்துனர்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-19T02:55:57.757Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு  - சிவி சண்முகம்</p> <p>உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்</p><h2>ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை</h2><p>விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.</p><p>திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.</p><p>5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.</p><p>வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.</p><p>அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன் </p><p>உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.</p><p>ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்</p><p>கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி</p><h2>அதிமுக எம்எல்ஏ மணி</h2><p>தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.</p><p>தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.</p><p>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.</p><p>விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது -  அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி </p><p>விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.</p><p>வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது?  - அதிமுக</p><p>பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.</p><p>சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி</p><p>எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை</h2><p>விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.</p><p>கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் -  பிரேமலதா விஜயகாந்த்</p><p>மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.</p><p>இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</p><p>விளையாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும்</p><p>* மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>* சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.</p><p>* பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும்.</p><p>* ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகள் நடத்தப்படும்.</p><p>* திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி.</p><p>* ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு.</p><p>* விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும்</p><p>* திருநர்களுக்கான போட்டி நடத்தப்படும்.</p><p>* கோவையில் என்.சி.சி. அகாடமி</p><p>நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.</p><p>* சென்னை- கோவை- தூத்துக்குடி இணைக்கும் விரைவு தொழில் தர விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை</p><p>* ரூ. 500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்</p><p>* கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்</p><p>* சென்னை- புதுவை இடையே படகு போக்குவரத்து</p><p>* 2027 முதல் சாலை விதிகள் மேலும் கடுயைமாக்கப்படும்</p><p>* பேட்ச் ஒர்க்கை ஒழிக்க புதிய திட்டம்</p><p>* ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>* பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>* நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்</p><p>பொதுப்பணி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 30 மாடிகள் கொண்ட அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்களின் அனைத்து தரவுகளையும் ஒன்றிணைக்க DashBoard உருவாக்கப்படும்.</p><p>* கட்டிடங்களின் பராமரிப்பை ஊழல் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்</p><p>* பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு  பொதுப்பணித்துறையில் சலுகைகளுடன் வாய்ப்பு</p><p>* பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறை எளிமைப்படுத்தப்படும்</p><p>* வெளிப்படை தன்மையுடன் டெண்டர்கள் உருவாக்கப்படும்.</p><p>* டெண்டர்களில் இனிமேல் பினாமிகளுக்கு இடம் கிடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod">சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</a></p><p>* 2 வருடத்தில் மாற்றம்: பறக்கும் ரெயில் இயக்கம், பராமரிப்பு அனைத்தும் அடுத்த 2 ஆண்டில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.</p><p>* ஒரே டிக்கெட் வசதி: மெட்ரோ, பறக்கும் ரெயில் இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஸ்மார்ட் கார்டு மற்றும் டிக்கெட் பயன்படுத்தலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders">பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p>* பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><p>* பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test">காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</a></p><p>* இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket">டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்</a></p><p>* இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3238126c-896e-4bed-9149-071b01c586dc</guid><pubDate>Tue, 18 Aug 2026 17:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T17:22:21.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,Tamil Anthem,தமிழ் தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ் தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், சமீபத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மாநில பாடலை பின்னுக்குத் தள்ளவில்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">சென்னை</a> உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய உத்தரவு கோரி, சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசு விளக்கம்:</h2><p>அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம் என்று மனுதாரர் வாதிட்டார். மனுவின்படி, அரசு நிகழ்ச்சிகள் வந்தே மாதரத்துடன் தொடங்க வேண்டும் என்று கோரும் ஜனவரி 28-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய அவர் கோரினார்.</p><p>மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 9-ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிக்கையை சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p>மாநில கீதங்கள் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும், தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>வரிசை குறித்த சர்ச்சை:</h2><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினத்தன்று இதே வரிசைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், முதலில் தமிழ் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.</p><p>பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ்நாட்டில், பாடல்களின் வரிசை குறித்த சர்ச்சை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வழக்கமான உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை அப்போதைய தி.மு.க. அரசு நிராகரித்தது.</p>]]></content:encoded></item><item><title>வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">fd07eabb-b9ab-4ccf-a041-5ac4541d38e4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:55:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:55:11.675Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,P. Shanmugam,பெ.சண்முகம்,Chief Minister D.K. Shivakumar,முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.</p><p>இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.</p><p>கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">511f68c8-865d-486c-85ac-71ad706cd46c</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:43:46.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாடு அரசு,Udhayanidhi Stalin,Government of Tamil Nadu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர் மாநாட்டின்போது, முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் இதுதொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் பாணியையே எதிரொலித்தார்.</p><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.</p><p>த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. </p><p>அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். </p><p>இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders#comments</comments><guid isPermaLink="false">0041543c-4de4-4f1e-875a-637b78e8043a</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:44:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பொதுப்பணித்துறை,PWD,TN Assembl,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><h2>பொதுப்பணித் துறை</h2><p>தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:</p><p>அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு பன்னடுக்கு எழில் மிகு மற்றும் உலகத்தரமான கட்டடங்களை அமைத்தல்.</p><p>இந்த அறிவிப்பின் மூலம் விலைமதிப்பிட முடியாத அரசு நிலங்கள் சேமிக்கப்பட்டு, அவற்றின் உச்சபட்ச பயன்பாடு உறுதி செய்யப்படும்.</p><p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><p>ஒரு கோடி ரூபாய்வரை திட்ட மதிப்புள்ள பொதுப்ப்பணித்துறை ஒப்பந்தங்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.</p><p>ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நிறுவுதல்.</p><p>இந்தக் கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத் தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><h2>ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மேலும் எளிமை</h2><p>பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod#comments</comments><guid isPermaLink="false">7251a269-6fd0-4362-9b59-19ca2129a4fd</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:26:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:26:36.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SouthernRailway,சென்னைமெட்ரோ,ChennaiMetro,MRTSChennai,பறக்கும்ரயில்,CMRLUpdates,MetroMRTSMerge,மெட்ரோஇணைப்பு,தமிழக போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMRL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் முழுமையாக இணைப்பதற்கான இறுதி ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.</p><h2><strong>அடுத்த 2 ஆண்டுகளில் முழு மாற்றம்!</strong></h2><p>சென்னையில் தற்போது தெற்கு ரெயில்வேயால் இயக்கப்பட்டு வரும் கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவை, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, பறக்கும் ரெயிலின் செயல்பாடுகள், ரெயில்களை இயக்குதல் மற்றும் அனைத்து சொத்துக்களின் பராமரிப்பு உரிமைகளும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளன.</p><h2><strong>15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு</strong></h2><p>பறக்கும் ரெயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு மற்றும் மத்திய ரெயில்வே துறைக்கு இடையே நடைபெற்று வந்தன. </p><p>பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பிற்கு ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>மெட்ரோ நிறுவனத்துடன் பறக்கும் ரெயில் திட்டத்தை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">பறக்கும் ரெயில்</a> நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சொத்துக்களை மெட்ரோவிடம் ஒப்படைத்தல். எதிர்காலத்தில் ரெயில்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது தொடர்பான முக்கிய விவரங்கள். ரெயில் நிலையங்களைப் புதுப்பித்து மெட்ரோ தரத்திற்கு உயர்த்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?</h2><p>இந்த இணைப்பின் மூலம் சென்னை மக்களுக்குப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் மேம்படவுள்ளன.</p><p>பயணிகள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே டிக்கெட் அல்லது ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படும்.</p><p>தற்போது போதிய பராமரிப்பின்றி இருக்கும் பறக்கும்ரெயில் நிலையங்கள் அனைத்தும் மெட்ரோ ரெயில் நிலையங்களைப் போலத் தூய்மையாகவும், நவீன வசதிகளுடனும் (லிஃப்ட், எஸ்கலேட்டர், பாதுகாப்பு வசதிகள்) மாற்றப்படும்.</p><p>மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஒன்றோடொன்று தடையின்றி இணைக்கப்படுவதால் பயண நேரம் பெருமளவு குறையும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself#comments</comments><guid isPermaLink="false">53f6ce25-9375-4881-bfc4-2ccf596d4f28</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:14:17.924Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,INDIA’S DEBT,இந்தியக் கடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027ம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக இருக்கும் என 2026-27ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை தாக்கலில் மத்திய அரசு தெரிவித்தது. </p><p>மார்ச் 2026 வரை மொத்தக் கடன் ரூ.197 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மொத்த நிலுவைக் கடன்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட ரூ. 17.6 லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனிடையே தமிழ்நாடு அரசின் கடனும் சமீப காலமாக பெரும் விவாதப்பொருளாக மாநில அரசியலில் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன்தொகை தற்போதுவரை ரூ.13.18 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் இந்தியாவின் கடனே இன்றே அடைக்கலாம் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஒரு யோசனையை வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர்.,</p><p>“முதலமைச்சரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8ea53d88-a05b-4243-bb75-ea5af1d114a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:28:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:28:42.226Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதான் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக - விசிக கூட்டணித் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை, விசிகத் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது;</p><p>“தவெகவோடு நாங்கள் இணைந்து 100 நாட்கள் ஆகின்றன. அவர்களோடு இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்பதை நேற்று (ஆக.17) மாநாட்டிலேயே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.</p><p>ஆளுங்கட்சியோடு பயணத்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தையும் மாநாட்டில் முன்வைத்தேன். இன்று கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன்மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி.</p><p>இதனை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்களது அரசின் நிலைப்பாடு இருக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6932b807-6052-4e03-be35-ec95a15adb2e</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:59.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a> கூறியதாவது:</p><p>சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>சென்னை கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போல் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.</p><p>வெற்றி சட்டமன்ற உறுப்பினர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.</p><p>நம்ம சாலை செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்,</p><p>வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.</p><p>தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து</p><h2>கடுமையாகும் சாலை விதிகள்</h2><p>சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.</p><p>நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.</p><p>ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.</p><p>பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பத்தில் 3 டாக்டர்கள்! நீட் தேர்வில் வென்று நெசவாளர் மகன்கள் அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet#comments</comments><guid isPermaLink="false">05ef3ac8-f141-4e96-ab8b-c5e092d49692</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:45:17.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,NeetExam,Tirunelveli,மருத்துவக்கல்லூரி,தமிழ்நாடு,GovtSchoolStudents,MedicalSeats</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtSchoolStudents]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><h2>விடாமுயற்சி<strong>யால் வெ</strong>ன்ற மூத்த மகன்</h2><p>ராம்குமாரின் மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 2 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash">நீட் தேர்வு </a>எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழலில், சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>ஒரே முயற்<strong>சியில் சாதித்த</strong> இரட்டையர்கள்</h2><p>அண்ணன் வழியைப் பின்பற்றி, அவரது இரட்டைச் சகோதரர்களான அருண் மற்றும் தரண் ஆகிய இருவரும் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.</p><h2>மருத்து<strong>வக் கல்லூரிக</strong>ளில் இடம்</h2><p>அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item></channel></rss>