<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 09 Aug 2026 22:40:04 +0000</lastBuildDate><item><title>‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/unlikely-that-the-constituency-delimitation-bill-will-be-tabled-during-the-current-session-trichy-siva-mp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/unlikely-that-the-constituency-delimitation-bill-will-be-tabled-during-the-current-session-trichy-siva-mp#comments</comments><guid isPermaLink="false">344e7243-6424-45b0-959c-443d174ad8d6</guid><pubDate>Sun, 09 Aug 2026 16:24:40 +0000</pubDate><atom:updated>2026-08-09T16:24:40.940Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>FCRA Bill,Tiruchi Siva,தொகுதி மறுவரையறை,Delimitation,திருச்சி சிவா,எஃப்சிஆர்ஏ மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/25vfo9og/New-Project-2026-08-09T214957.222.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நடப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை’ - திருச்சி சிவா எம்.பி.!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/25vfo9og/New-Project-2026-08-09T214957.222.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர வாய்ப்பு இல்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். </p><p>மேலும் ஏற்கனவே இதில் திமுகவின் நிலைப்பாடு என்னவென தெரிவித்துவிட்டதாகவும், மசோதாவே தாக்கலாகாதபோது ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>எஃப்சிஆர்ஏ மசோதா தொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்.,</p><p>“நாங்கள் எஃப்சிஆர்ஏ-வை எதிர்க்கிறோம். ஏனெனில், அதில் உள்ள பெரும்பாலான விதிகள் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிரானவை. இதுதொடர்பாக உள்துறை அமைச்சரிடம் பேசப்பட்டுள்ளது. திமுக இந்த மசோதாவை எதிர்ப்பதுடன், இதனை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.” என்றார்.</p><p>தொடர்ந்து தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தவெக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்.,</p><p>“திமுக அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏனெனில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களை கூட்டி எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், தொகுதி மறுவரையறையால் தென்னிந்திய மாநிலங்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருந்தது.</p><p>நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டால் அதை எதிர்ப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p><p>நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். அந்த மசோதா வந்தபோது அதற்கு எதிராக வாக்களித்தோம், அது தோல்வியடைந்தது. பாஜக சந்தித்த முதல் தோல்வி அதுதான் என்று நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில், வரவிருக்கும் கூட்டத்தொடர் நாட்களில் அரசு இந்த மசோதாவை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை; அதைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paddy-bags-lying-unprocured-in-delta-districts-ttv-dhinakaran-condemns-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paddy-bags-lying-unprocured-in-delta-districts-ttv-dhinakaran-condemns-the-government#comments</comments><guid isPermaLink="false">17108896-44df-4f5a-b33a-c927aa354a07</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:57:27 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:57:27.083Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,நெல் மூட்டைகள்,தவெக அரசு,tvk government,sacks of paddy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5onek0ip/New-Project-2026-08-09T212707.122.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் - அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5onek0ip/New-Project-2026-08-09T212707.122.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்டா மாவட்டங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன.</p><p>இயற்கையின் சவால்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டு, மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதே, அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.</p><p>விவசாயப் பெருமக்களின் உழைப்பை மதித்து அவர்களின் நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டிய அரசு நிர்வாகம், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லை எனக்கூறி விவசாயிகளை அலைக்கழித்து, நெல் கொள்முதல் செய்வதில் காட்டும் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.</p><p>காவிரி நீர் பற்றாக்குறை, கடுமையான வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பொய்த்து போன குறுவை சாகுபடி ஆகியவற்றால் உணவு உற்பத்தி குறைந்து அரிசி விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், விவசாயிகள் விளைவித்த நெல்லை கூட உடனடியாக கொள்முதல் செய்ய முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்திடுவதோடு, அவற்றை முறைப்படி கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மணி மியூல் மோசடி - 48 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-mule-scam-837-cyber-criminals-arrested-across-tamil-nadu-within-48-hours</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/money-mule-scam-837-cyber-criminals-arrested-across-tamil-nadu-within-48-hours#comments</comments><guid isPermaLink="false">2923d7a2-a6ea-4214-aa62-5827427c92a1</guid><pubDate>Sun, 09 Aug 2026 15:09:55 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:09:55.629Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cybercrime,Money Mule Scam,மணி மியூல் மோசடி,இணையக் குற்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/94bif579/New-Project-2026-08-09T203932.943.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மணி மியூல் மோசடி - 48 மணிநேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 837 சைபர் குற்றவாளிகள் கைது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/94bif579/New-Project-2026-08-09T203932.943.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் ரூ. 545.27 கோடி அளவிலான “மணி மியூல்” ஆன்லைன் வங்கி கணக்கு மோசடி தொடர்பாக, 48 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>ஆக.6 மற்றும் 7 என இருநாட்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பதிவான 9,804 புகார்களின் அடிப்படையில் இந்த மாபெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே பதியப்பட்ட 601 வழக்குகளுடன் மேலும் 157 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>குற்றவாளிகளிடமிருந்து 204 மொபைல் போன்கள், 185 சிம் கார்டுகள், 114 வங்கி கணக்கு புத்தகங்கள், 29 காசோலை புத்தகங்கள், 73 ஏடிஎம் கார்டுகள், 4 லேப்டாப்கள் மற்றும் ரூ.1.02 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>மேலும் விசாரணைக்காக 155 மொபைல் எண்கள் மற்றும் 58 வங்கி கணக்கு விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><h2>"மணி மியூல்" மோசடி என்றால் என்ன?</h2><p>சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் மூலம் பொதுமக்களை ஏமாற்றிப் பெறும் சட்டவிரோதப் பணத்தை, நேரடியாகத் தங்களின் சொந்தக் கணக்கிற்கு மாற்ற மாட்டார்கள். அதற்குப் பதிலாக, மற்ற நபர்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கோ அல்லது கமிஷன் தொகை கொடுத்தோ பெற்று, அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்து பணத்தை முறைகேடாகப் பிரித்து எடுப்பார்கள். </p><p>இவ்வாறு பயன்படுத்தப்படும் கணக்குகளே 'மியூல் கணக்குகள்' எனப்படுகின்றன.</p><p>கமிஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு உங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டுகள் அல்லது செக் புத்தகங்களை மற்றவர்களிடம் பகிரவோ, விற்கவோ வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T15:07:11.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan">ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை!... </a></p><p>*ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi">காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</a><br><br>*39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>*Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis">காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</a></p><p>* மழைக்கு முன் நெல்லை கொள்முதல் செய்ய அரசு உடனடி நடவடிக்கை வேண்டும்</p><p>* அரிசி விலை ₹10-15 உயர்வு விவசாயிகள் நெல் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15">சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம்</a></p><p>*தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>* இன்று காலை புதுக்சேரி வந்தார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70">என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</a></p><p>*போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த கட்சித் ஊழியரின் குடும்பத்தினரை மம்தா சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><p>*திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8">சீனாவை சுத்துப் போட்ட 'டால்பின்' புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம் - 1,400 விமானங்கள் ரத்து</a></p><p>*சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>*ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><h3> </h3><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow">தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்... </a></p><p>*நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/698d0cc7-b3f4-4343-b134-726625ea4077">ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம் - போதைப்பொருள் பயன்படுத்தினாரா விமானி? - சோதனையில் ஷாக்</a></p><p>*விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா?</p><p>*விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event">கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி!</a></p><p>* கார் தாமதமானதால் மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணம் செய்தார்</p><p>* கூட்டம் காரணமாக கார் தொலைவில் நிறுத்தப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india">இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</a></p><p>* நிதி முறைகேடு புகாரால் ஜுவான் அன்டோனியோவை மாற்ற ஸ்பெயின் முடிவு</p><p>* கனடா தூதர் ஆல்பிரடோவை இந்தியாவுக்கு நியமிக்க ஸ்பெயின் இந்தியாவிடம் ஒப்புதல் கேட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours">வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு!</a></p><p>*"மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" - தி ஜெருசலேம் போஸ்ட்</p><p>*ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!... </a></p><p>*சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  </p><p>*15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival" rel="nofollow">சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</a></p><p>* சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>*  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories" rel="nofollow">யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே பிரதமர் மோடியின் இலக்கு- அமித்ஷா</a></p><p>* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.</p><p>* மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி  ஓய்வு எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos">'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!... </a></p><p>*தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><p>*எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி</a></p><p>* சவுதி அராம்கோவில் ஏற்பட்ட தீ விபத்தை தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள் பாதிப்பின்றி அணைத்தனர்.</p><p>* சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-secretary-to-meet-vvs-laxman-over-player-injuries">முன்னணி வீரர்களின் காயத்தால் திணறி வரும் இந்திய அணி</a></p><p>* இந்திய அணி இலங்கையில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>* வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ns-chaturved-says-this-is-my-best-game-in-my-life">எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த போட்டி: சதமடித்த மதுரை வீரர் சதுர்வேத் பேட்டி</a></p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.</p><p>* ஆட்ட  நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது  தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/brett-lee-admits-vaibhav-sooryavanshis-age-still-doubted-outside-india-is-he-15">எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு: சூர்யவன்ஷி வயது குறித்து பிரெட் லீ</a></p><p>* நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்களை குவித்த சூர்யவன்ஷி 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.</p><p>* வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike">50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</a></p><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers" rel="nofollow">தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி </a></p><p>*  தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.</p><p>* 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry" rel="nofollow">அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</a></p><p>* அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>* வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today" rel="nofollow">சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு </a></p><p>*  15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>* 15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh">செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* திமுக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>* செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes">வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.</p><p>* 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p>]]></content:encoded></item><item><title>காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis#comments</comments><guid isPermaLink="false">8c3d3d5b-9418-4dd8-85f7-c4ae17c13563</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:15:11 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:15:11.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,டெல்டா விவசாயிகள்,நெல்கொள்முதல்,DeltaFarmers,CauveryDelta,DPCIssues,PaddyProcurement</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lbe7wodg/Anbumani-Ramadoss?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் &nbsp;நெல் கொள்முதல் செய்யப்பட்டாமல், மூட்டை மூட்டைகளாக மழைக்காலத்தில் தேங்கி கிடப்பதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><h2>டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு</h2><p>தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 லட்சத்திற்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. </p><p>உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்த நெல்லை குறித்த காலத்தில் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யாதது கண்டிக்கத்தக்கது. </p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், அம்மாப்பேட்டை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, குடவாசல், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளிலும் அமைந்துள்ள கொள்முதல் நிலையங்களில் தான் இந்த அவல நிலை நிலவுகிறது. </p><p>ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல சரக்குந்துகள் வராததால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு அனுப்ப முடியாதது தான் புதிதாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. </p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். </p><p>ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. </p><p>இதற்கு காரணம் அரசின் அலட்சியமும். திட்டமிடல் இல்லாமையும் தான். காவிரி பாசன மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் உடனடியாக கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாவிட்டால் அவை முழுமையாக வீணாகி விடும். </p><p>வறட்சி காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நடப்பாண்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளன. </p><p>இத்தகைய சூழலில் அரும்பாடு பட்டு விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகள் வீணாவதை அரசு அனுமதிக்கக் கூடாது.கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-to-make-the-tamil-thai-vazhthu-mandatory-chief-minister-vijay-to-move-the-motion-in-the-legislative-assembly-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2605e40f-db5d-4958-b68b-477f2637dfbb</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:08:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:08:39.918Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்த்தாய் வாழ்த்து,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,TVK Govt,Tamizh Thai Vazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி தனித்தீர்மானம் - நாளை சட்டப்பேரவையில் முன்மொழிகிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/6bn864oa/New-Project-2026-08-09T183817.665.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், நாளை (ஆக.10) தமிழ்த்தாய் வாழ்த்திற்கென தனித்தீர்மானம் கொண்டுவருகிறார் முதலமைச்சர் விஜய். </p><p>அதாவது மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. </p><p>முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் தொடங்கி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவரை மாநிலத்தின் பாடல் முதலில் பாடப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. </p><p>இதனையொட்டி சமீபத்தில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கூட்டாக இதுதொடர்பாக கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளது. தீர்மானம் முன்மொழியப்பட்ட பின் அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் குறித்து பேசுவர். </p><p>பின்னர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனிடையே கடந்த 2021ம் ஆண்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-helicopter-diverted-heavy-rain-forces-landing-at-tambaram-air-force-station-instead-of-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15</guid><pubDate>Sun, 09 Aug 2026 13:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-09T13:04:48.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,அமித் ஷா,கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/5fu4ow17/tn-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories">அமித் ஷா</a> பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>புதுச்சேரி காவல் துறையின் சேவையை பாராட்டும் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுக்சேரி வந்தார். </p> <h2>விழா</h2><p>புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர், திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.</p><p>விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடியினை காவல் துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அமித் ஷா வழங்கி கவுரவித்தார்.</p> <h2>சென்னை வருகை</h2><p>இதையடுத்து புதுக்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் இன்று மதியம் 3 மணியளவில் சென்னை வந்துகொண்டிருந்தார் அமித் ஷா. ஆனால் சென்னையில் திடீரென கனமழை பெய்ததால் அவரின் ஹெலிகாப்டர் திட்டமிட்டபடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.</p><p>இதனால் சில நேரம் வானிலேயே வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்,தாம்பரம் விமானப் படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.</p><p>அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <h2>மழை</h2><p>அமித் ஷாவின் ஹெலிகாப்ட்டர் மட்டுமின்றி ல்வேறு நகரங்களில் இருந்து வந்த பயணிகள் விமானங்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த சில தினங்களாகவே சென்னையில் கனமழை பெய்து வருகிறது. </p><p>நேற்று மாலை துவங்கிய மழை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, பூந்தமல்லி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-conflict-between-eps-and-us-is-a-healthy-one-sp-velumani#comments</comments><guid isPermaLink="false">e289da25-74c9-435a-a7fe-f792ae61a336</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:58:36 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:58:36.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,EPS,இபிஎஸ்,AIADMK,எஸ்.பி.வேலுமணி,S.P. Velumani</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/xm2wpzg8/New-Project-2026-08-09T172817.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை தொண்டாமுத்தூரில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி.,</p><p>“எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒரு ஐந்து வருடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால், அடுத்து ஆளும் கட்சியாக வரும். ஆனால், தற்போது ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டச் சொல்லி கேட்டோம். </p><p>எடப்பாடி பழனிசாமியும் கூட்டுவதாகத்தான் சொன்னார். அதேபோல தற்போது பிரச்னை வருவது ஏன்? திமுகவுடன் அதிமுக செல்லப்போகிறது என்றபோதுதான் பிரச்னை வந்தது. தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.</p><p>அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் சமாதானமாகிவிட்டோம். அதன்பிறகு கட்சி பொறுப்புகள் வழங்கியதில்தான் முரண்பட்டு இருக்கிறோம். மற்றப்படி எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. உரிமையோடு தலைமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்துவருகிறார். </p><p>பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பிரச்சனை வரும்போது நான் தான் 25 ஆயிரம் பெண்களை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். நாங்கள் இப்போது திமுக எதிர்ப்பில் வலுவாக இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? </p><p>நாங்கள் நியாயமாக இருக்கிறோம். வயது முதிர்வு இல்லாமல் தேவை இல்லாமல் செய்துக் கொண்டிருக்கிறார் பொள்ளாட்சி ஜெயராமன். அவர் தொடர்பான யாரும் எந்தப்பதிவும் போடாதீர்கள். இபிஎஸ்க்கும், எங்களுக்கும் ஆரோக்கியமான மோதல்தான் இருந்துவருகிறது. எல்லோருமே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான்.</p><p>எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் பணியாற்றினோம். இப்போதும் அவர்தான் பொதுச்செயலாளர்தான்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow#comments</comments><guid isPermaLink="false">c82d5205-55f7-477e-8024-1e7960c77764</guid><pubDate>Sun, 09 Aug 2026 11:26:12 +0000</pubDate><atom:updated>2026-08-09T11:26:12.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பிடிஎஸ்,MEdical Counselling,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,எம்பிபிஎஸ் கலந்தாய்வு,MBBS  BDS course</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS-BDS course ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/eld52l2b/medico.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை இளநிலை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது.</p><p>அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அரசின் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி வரை பெறப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 26 முதல் 27 வரை ஒரு நாள் மட்டும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற 16,199 இடங்களுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ளனர்.</p><h2><strong>நாளை வெளியாகிறது</strong></h2><p>மாணவர்கள் விண்ணப்பித்தபோது பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டது. மேலும், சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை மீண்டும் ஒரு அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும் என சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.</p><h2>சரிபார்க்கு<strong>ம் முறைக</strong>ள்:</h2><p>நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><h2>கலந்தாய்வு ந<strong>டைபெ</strong>றும் நாட்கள் </h2><p>தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு (எம்.சி.சி) வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி, வரும் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை முதல் சுற்றுக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அதில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வு இம்மாதம் 31 முதல் செப்டம்பர் 8 வரையும், மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வு செப்டம்பர் 16 முதல் 26 வரையும் நடைபெறும்.</p><h2>வகுப்புகள் தொடக்கம் <strong>எப்போது</strong>?</h2><p>தொடர்ந்து, நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு அக்டோபர் 3 முதல் 5 வரை மேலும் ஒரு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4 முதல் தொடங்கி நடைபெற்று வரும் சூழலில், மாநிலங்கள் அளவில் உள்ள 80 சதவீத அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் பலத்த மழை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-heavy-rain#comments</comments><guid isPermaLink="false">1e15d250-efca-414a-99ad-4b23ee1043f6</guid><pubDate>Sun, 09 Aug 2026 10:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-09T10:23:39.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Rain,மழை,Chennai Rain,சென்னையில் மழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/ry25lrui/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>வானிலை ஆய்வு மையம்</strong></h2><p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டம்</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.</p><h2><strong>மழை</strong></h2><p>இந்நிலையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, வேப்பேரி, அசோக் நகர், பெரியமேடு, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.</p><h2><strong>மக்கள் மகிழ்ச்சி</strong></h2><p>கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பெய்த இந்த மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மயிலாப்பூரில் சாலையில் 4 அடி ஆழத்தில் உருவான ‘திடீர்’ பள்ளம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-foot-deep-sinkhole-opens-up-on-a-road-in-mylapore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-foot-deep-sinkhole-opens-up-on-a-road-in-mylapore#comments</comments><guid isPermaLink="false">b4591c6a-1908-48d7-b453-2dc83e9efb18</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:57:02 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:57:02.554Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sinkhole,Mylapore,பள்ளம்,மயிலாப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/u4ii1gm4/Mylapore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mylapore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/u4ii1gm4/Mylapore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகராட்சியில் 387 கி.மீ. நீளம் கொண்ட 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. 5 ஆயிரத்து 270 கிமீ நீளம் கொண்ட 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. பேருந்து தடச் சாலைகளை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள சாலைத்துறை பராமரித்து வருகிறது. உட்புற சாலைகள் அந்தந்த மண்டலங்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>4 அடி ஆழ பள்ளம்</strong></h2><p>மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை மாநகராட்சி சாலைத்துறை நேரடியாக பராமரித்து வருகிறது. இந்த சாலை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலையாக இருந்து வருகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி, மாறி முதலமைச்சராக இருந்தபோது பயணித்த சாலை இது.</p><h2><strong>நீல்கிரிஸ் சிக்னல்</strong></h2><p>இந்த சாலையில் இன்று காலை நீல்கிரிஸ் சிக்னல் அருகே 20 அடி நீளம், 4 அடி ஆழம், 4 அடி அகலத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது.</p><h2><strong>சரி செய்யப்பட்டது</strong></h2><p>இந்த பாதையில் மெட்ரோ பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஏற்பட்ட இந்த பள்ளம் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவு மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள், நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><h2>ரெடிமிக்ஸ் எந்திரம்</h2><p>பள்ளத்தை சரி செய்ய ரெடிமிக்ஸ் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் பள்ளம் மூடப்பட்டது.</p><h2><strong>அதிகாரிகள் விசாரணை</strong></h2><p>சிமெண்ட் கலவை காய்வதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகும் என்பதால் ராதாகிருஷ்ணன் சாலையில் 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பெரும் விபத்தும், போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.</p><h2><strong>பள்ளம் எப்படி ஏற்பட்டது</strong></h2><p>எனினும் சாலையில் இவ்வளவு பெரிய அளவிலான பள்ளம் எப்படி ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? என்று அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-tomorrow-says-chennai-weather-centre#comments</comments><guid isPermaLink="false">ab9f22ed-569e-4f90-bb5c-27819abd00d3</guid><pubDate>Sun, 09 Aug 2026 09:35:58 +0000</pubDate><atom:updated>2026-08-09T09:35:58.643Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புதுச்சேரி,தமிழகம்,சென்னை வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,rain alert,tamilnadu rain</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/lam4d7i0/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெயில் தாக்கம் காரணங்களால், நாளை (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை <strong>வாய்ப்புள்ள</strong> பகுதிகள்</h2><p>மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள் (கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி) மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><h2>சென்<strong>னை ம</strong>ற்றும் புறநகர் வானிலை</h2><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலையிலோ அல்லது இரவிலோ இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>வெப்<strong>பநிலை நிலவர</strong>ம்</h2><p>மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் நிலவி வந்த உக்கிரமான வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, இதமான சூழ்நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மீனவர்களுக்<strong>கான எச்சரி</strong>க்கை</h2><p>தெற்கு மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்களை பற்றி யார் தவறாக பேசினாலும் கைது செய்ய வேண்டும்: விஷால்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-who-speaks-wrongly-about-women-should-be-arrested-vishal#comments</comments><guid isPermaLink="false">869327c3-5d2c-467c-af12-f669a48d3c2d</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:58:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:58:23.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,Vishal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Equal Action for All Who Misbehave with Women: Vishal Backs Udhayanidhi Arrest]]></media:title><media:description type="html"><![CDATA[ Vishal Backs Udhayanidhi Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/q04yf7gr/Untitled-design-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவசாய போராட்டத்தின்போது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டின் பேரில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கையை நடிகர் விஷால் நியாயப்படுத்தியுள்ளார்.</p><p>திரையுலகில் உள்ள பெண்களைப் பற்றி தகாத கருத்துக்களைத் தெரிவிக்கும் அனைவர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷால் வலியுறுத்தியுள்ளார்.</p><h3><strong>நடிகர் விஷால் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து நடிகர் விஷால் அளித்த பேட்டியில், “அரசியல் சூழல்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, உதயநிதிக்கு என்ன நடந்ததோ அதே போன்ற தண்டனை, நமது அரசியல் களத்தில் பெண்களைப் பற்றி தவறாகப் பேசும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.</p><p>யூடியூபில் இன்னும் பலர் இருக்கிறார்கள்; நமது பெண் சமூகத்தைப் பற்றி வெளிப்படையாக பேசி, தரம் தாழ்ந்த முறையில் தாக்கி பேசும் இன்னும் பலரும் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் அதே போன்ற அணுகுமுறை இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கைது நடவடிக்கை</strong></h3><p>முன்னதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்று உரிமைப் போராட்டத்தின் போது சில இரட்டை அர்த்தங்கள் கொண்ட கருத்தை தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.</p><p>இந்த கைது நடவடிக்கைக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவை எந்தவொரு தனிநபரையும் குறிவைக்காமல் அரசின் செயல்பாடுகளை நோக்கியே இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">e1b0e042-8fa4-425d-a184-1d1f81d54d6f</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:49:05 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:49:05.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,நீதிபதிகள் பதவியேற்பு,judges assumed,Aravind Dharmadhikari,அரவிந்த் தர்மாதிகாரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bpqggp7m/high.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ judges assumed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bpqggp7m/high.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,  புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து 15 பேரை நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது. </p><h2>புதிய <strong>நீதிபதிகளின் விவரம்</strong></h2><p>நியமிக்கப்பட்டுள்ள 15 பேரில், கே.கோவிந்தராஜன், ரஜனீஷ் பத்தியால், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர். விவேகானந்தன், எஸ்.ரவிக்குமார், என்.திலீப்குமார், ஏ.மனோகரன் ஆகிய 8 வழக்கறிஞர்களும், பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ். கார்த்திகேயன், பி. முருகேசன், என்.குணசேகரன் ஆகிய 7 மாவட்ட நீதிபதிகளும் அடங்குவர்.</p><h2>வரலா<strong>ற்று நிகழ்வு</strong></h2><p>சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் கடந்த 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு (10 ஆண்டுகளுக்குப் பின்), ஒரே நேரத்தில் 15 நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். புதிய நீதிபதிகளின் வருகையால் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை வேகம் பெறும் என்றும், நீதித்துறை கட்டமைப்பு மேலும் வலுவடையும் என்றும் வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.</p><p>புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதிகளுக்குத்  மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். "நீதியின் மாண்பையும், அரசமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சம நீதியும் சமூக நீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் அவர்களின் பணி சிறக்கட்டும்" என அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;நாட்டாமை குடும்பம்&apos; என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos#comments</comments><guid isPermaLink="false">2bb74ea7-352c-4928-8cd0-86f6a1b42072</guid><pubDate>Sun, 09 Aug 2026 08:09:34 +0000</pubDate><atom:updated>2026-08-09T08:09:34.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Sarathkumar,நடிகர் சரத்குமார்,Nattamai Family,Nattamaitattoo,சரத்குமார் பிறந்தநாள்,நாட்டாமை குடும்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jm81g5wg/nattamai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actor Sarathkumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/jm81g5wg/nattamai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், தனது தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகளில் "நாட்டாமை குடும்பம்" என்று பச்சை குத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.</p><p>நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><h2>திடீ<strong>ர் யோசனை</strong></h2><p>பேச்சுவார்த்தையின் போது பேசிய அவர், "எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம்' என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது; இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.</p><h2>அடையாள <strong>அட்டை</strong> போல பயன்பாடு</h2><p>என்னைச் சந்திக்க வர விரும்புபவர்களுக்கு கிரீன் கார்டு போல, கையில் இந்த பச்சை குத்திய அடையாளத்தைக் காட்டினால் எளிதாக என்னை அணுக முடியும். விருப்பமுள்ள ஆதரவாளர்கள் கையில் பச்சை குத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>நாட்டா<strong>மை பிம்ப</strong>ம்</h2><p> சரத்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த 'நாட்டாமை' திரைப்படத்தின் பெயரை, தனது ஆதரவாளர்களுக்கான குடும்ப அடையாளப் பெயராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p>நடிகர் சரத்குமாரின் இந்த பேச்சு வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் மற்றும் தொண்டர்களைக் கவர அவர் கையாண்டுள்ள இந்த பச்சை குத்தும் பிரசார உத்தி பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>போதை இல்லா தமிழகம்: சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign#comments</comments><guid isPermaLink="false">b82a3e9d-10e3-4b2d-bb7f-0aac0b17701f</guid><pubDate>Sun, 09 Aug 2026 06:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-09T06:23:44.180Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>college students,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,போதை இல்லா தமிழகம்,மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு,Anti drug campaign</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/7j49oz6s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.</p><h2>உறுதிமொழி</h2><p>அந்த வகையில் போதைப் பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி வருகிறார்.</p><p>தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.</p><p>இதை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.</p><p>சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவியர் ஏராளமானோர் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யுடன் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் சிறப்பாக பணியாற்றிய மதுவிலக்கு போலீசாருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.</p><p>சென்னையில் நிகழ்ச்சி நடைபெறுவதை போன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.</p><h2>மாரத்தான் ஓட்டம்</h2><p>கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி நடைபெற்ற சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மெரீனாவில் தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் விஜய் அதில் பொதுமக்களுடன் இணைந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers#comments</comments><guid isPermaLink="false">acc28ae9-9878-439f-8935-056718d9abd7</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:42:31 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:42:31.174Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,farmers,விவசாயிகள்,மின் இணைப்பு,Electricity</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aqv6hnfp/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK LEADER ANBUMANI]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/aqv6hnfp/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தட்கல் திட்டத்தில் வேளாண் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 8 மாதமாக இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைக் கொண்டு பாசனம் செய்வதற்காக இலவச மின்சார இணைப்புக் கோரி தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்த 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 8 மாதங்களாக மின்இணைப்பு வழங்காமல் மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது.</p><p>வறட்சியால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் உழவர்களிடம் ரூ.1250 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றைத் தவிர தமிழ்நாட்டிலேயே தோன்றி தமிழ்நாட்டுக்குள் பாயும் ஆறுகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.</p><p>காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை உள்ளிட்ட ஆறுகள் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக திகழ்கின்றன என்றாலும், இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் கர்நாடகம் கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருப்பதால், அந்த மாநிலங்கள் மனம் வைத்தால் தான் இவற்றில் தண்ணீர் வரும்.</p><p>அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் பெரிய அளவிலான பாசனத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததால், மாநிலத்தின் ஒட்டுமொத்த பாசனப் பரப்பில் 55% நிலங்கள் மட்டுமே ஆறுகள் மற்றும் கால்வாய் பாசன ஆதாரங்களை நம்பியுள்ளன. மீதமுள்ள 45% நிலங்களில் நிலத்தடி நீரை நம்பித் தான் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.</p><p>நிலத்தடி நீரை நம்பியுள்ள பகுதிகளில் பம்ப் செட்டுகளை இயக்குவதற்காக இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான மின் இணைப்பை பெறுவது தான் உலகில் மிகவும் கடினமான செயலாகும்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்கனவே 23.56 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 லட்சம் பேர் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். </p><p>இலவச மின் இணைப்பை முன்னுரிமை அடிப்படையில் பெறுவதற்காக தட்கல் திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் அவ்வப்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படும்.</p><p>வேளாண் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் இணைப்பு பெறுவற்காக தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு திசம்பர் மாதம் திமுக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திசம்பர் 31&amp;ஆம் தேதி வரை 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். </p><p>அதுமட்டுமின்றி, இலவச மின்சார இணைப்புக்காக   5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத் திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் உழவர்கள் கட்டணம் செலுத்தினர். </p><p>விண்ணப்பித்தவர்களில் முதல்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு 15 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்தது. ஆனால், 8 மாதங்களாகியும் ஒரே ஒரு இணைப்பு கூட வழங்கப்படவில்லை.</p><p>தட்கல் திட்டத்தின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி செய்திருப்பார்கள். ஆனால், மின்சார இணைப்பு வழங்கப்படாததால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் பெரும் இழப்பை சந்தித்திருக்கிறார்கள். </p><p>தட்கல் மின் இணைப்புக்காக  47,554 உழவர்களும் சேர்ந்து சுமார் ரூ.1250 கோடி முன்பணமாக செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு முன்பாக கடந்த 2023&amp;ஆம் ஆண்டில் இதே தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 12,566 உழவர்கள் ரூ.250 கோடிக்கும் கூடுதலாக முன்பணம் செலுத்தியுள்ளனர். </p><p>விண்ணப்பித்த விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் இல்லை. அவர்களில் பெரும்பான்மையினர் வட்டிக்கு கடன் வாங்கி தான் முன்பணத்தை செலுத்தியுள்ளனர். அதற்காக வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், குறுவை சாகுபடி செய்ய முடியாததால் வருவாயும் ஈட்ட முடியாமல் பெரும் துயரத்தில் விவசாயிகள் ஆழ்ந்திருக்கின்றனர். அவர்களின் கடன் சுமை அதிகரித்திருக்கிறது.</p><p>வேளாண் இலவச மின்சாரத்திற்கான இணைப்புக்காக 60,120 உழவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்திருக்கும் மின்சார வாரியம் மின் இணைப்பை வழங்க மறுப்பது பெரும் அநீதி ஆகும். தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களிலிருந்து 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட  வேண்டும் என்பது விதியாகும். </p><p>ரூ.1000 மின் கட்டணம் செலுத்தத் தவறும் விவசாயிகளின் மின் இணைப்பை  உடனடியாக துண்டிக்கும் மின்சார வாரியம், அவர்களிடமிருந்து ரூ.1500 கோடியை வசூலித்து வைத்துக் கொண்டு 12,566 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு மேலாகவும், மீதமுள்ளவர்களுக்கு 8 மாதங்களாகவும் மின்சார இணைப்பு வழங்க மறுப்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதை நியாயப்படுத்த முடியாது.</p><p>திமுக ஆட்சியில் தான் இலவச மின் இணைப்புக்காக உழவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்றாலும், அடுத்த சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தான் மின் இணைப்புகள் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது.</p><p>தேர்தலுக்குப் பிறகு தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திமுக அரசுக்கு போட்டியாக தவெக அரசும் மின் இணைப்பு வழங்காமல் துரோகம் செய்திருக்கிறது, இதை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாதது, பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் ஏற்கனவே பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். </p><p>அவர்களிடம் ரூ.1500 கோடி வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்காமல் அவர்களுக்கு கூடுதல் துயரத்தை அரசு வழங்கக் கூடாது. தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike#comments</comments><guid isPermaLink="false">b54475cd-e2b9-4964-bef0-d89e388cfe2d</guid><pubDate>Sun, 09 Aug 2026 05:15:15 +0000</pubDate><atom:updated>2026-08-09T05:15:15.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'இந்தியா' கூட்டணியால் கடந்த ஏப்ரல் 17 அன்று மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, </p><p>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>காங்கிரஸ் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் தலைவருமான மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!</p><p>கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, </p><p>50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.</p><h2>ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்?</h2><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி!</p><p>* 50% உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41-ல் இருந்து 61 ஆக விரிவடையும்!</p><p>* எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும்.</p><p>*  கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தி, 2001-ல் வாஜ்பாய் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது.</p><h2>பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது</h2><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p>இன்று (ஆகஸ்ட் 9- வெள்ளையனே வெளியேறு நாள்) நடைபெறவுள்ள 'QUIT UNFAIR DELIMITATION MARCH' பேரணி என்பது செயல்முறைகளை விளக்குவதற்கான நிகழ்வு அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் இறையாண்மை, ஜனநாயக உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் அதிகாரப் பாதுகாப்பிற்காக நாம் நடத்தும் உரிமைப் போராட்டம்!</p> <p>நமது மாநிலத்தின் சுயமரியாதையையும் அரசியல் உரிமைகளையும் எவராலும் பறிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்லவே இந்தப் நடைபயணம்.</p><p>மேலும், இந்த அநீதியான தொகுதி மறுவரையறைக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 'Unfair Delimitation' பாடலை உருவாக்கிய தம்பி சலாம் மாஸ் அவர்களுக்கும், அவரது தொடர் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! </p><p>இது நம் அனைவரின் உரிமைக்கானப் போராட்டம்! தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த வாருங்கள்!</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today#comments</comments><guid isPermaLink="false">f2dafb6b-41e5-4970-83f4-827bfdbdfa8b</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:41:40 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:41:40.766Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,நீதிபதிகள்,sworn in,நீதிபதிகள் பதவியேற்பு,New justice</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2lw0mr91/chennai-high-court.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/2lw0mr91/chennai-high-court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கின்றனர்.</p><p>புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p>இதில், மாவட்ட நீதிபதிகளான பி.முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள் சந்திரசேகர், எஸ்.கார்த்திகேயன், பி.முருகேசன், என்.குணசேகரன், என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ஆர்.ஆர்.விவேகானந்தன், எஸ். ரவிக்குமார், வழக்கறிஞர்கள் என்.திலீப்குமார், எ.மனோகரன், கே.கோவிந்தராஜன் ஆகியோர் நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.</p><p>அவர்களின் வாழ்க்கை வரலாறு விவரம் வருமாறு:-</p><p>நீதிபதி கே.கோவிந்தராஜன், 1972-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி பிறந் தார். 1994-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பதிவு செய் தார். 1999-ம் ஆண்டு வரை குளித்தலை கோர்ட்டிலும், அதன்பின்னர் ஐகோர்ட்டிலும் பணியாற்றினார். ஐகோர்ட்டு மதுரை கிளையில், மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்தார்.</p><h2>ரஜினீஸ் பத்தியால்</h2><p>நீதிபதி ரஜினீஸ் பத்தியால் 1973-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பி.ஏ., பி.எல். பட்டத்தை 1996-ம் ஆண்டு முடித்தார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். சட்டப்ப டிப்பை முடித்தார்.</p><h2>என்.ரமேஷ்</h2><p>நீதிபதி என்.ரமேஷ், 1973-ம் ஆண்டு வேலூரில் பிறந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை படித்தார்.</p><p>சிவில் நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றி அந்த பதவியை ராஜி னாமா செய்துவிட்டு, 2009-ம் ஆண்டு மீண்டும் வக்கீலானார். பல் வேறு வழக்குகளில் ஆஜராகி வந்த இவர், மத்திய அமலாக்கத் துறை சிறப்பு குற்றவியல் வக்கீலாக பணியாற்றி வந்தார்.</p><h2>ஜி.கே.முத்துக்குமார்</h2><p>நீதிபதி ஜி.கே.முத்துக்குமார் 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தார். பெங்க ளூரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, வக்கீலாக பதிவு செய்தார். 2020-2021-ம் ஆண்டுகளில் இவர் தமிழ்நாடு அர சின் சிறப்பு அரசு பிளீடராக பணியாற்றினார்.</p><h2>ஆர்.ராஜேஷ் விவேகானந்தன்</h2><p>நீதிபதி ஆர்.ராஜேஷ் விவேகானந்தன், 1975-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார். இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள தாண்டவன்காடு ஆகும். ஸ்ரீவைகுண் டம் கே.ஜி.எஸ். பள்ளியிலும், பணிக்க நாடார் குடியிருப்பில் உள்ள ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.</p><p>மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, 1998-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். முதலில் தந்தையிடம் ஜூனியராக பணி யாற்றி, பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.</p><p>மத்திய அரசின், துணை சொலிசிட்டர் ஜெனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியின் பெயர் ஆர்.முத்துலட்சுமி, மகன் மதுசூ தன் ராமகிருஷ்ணன். நீதிபதியின் தந்தை எஸ்.ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.</p><h2>எஸ்.ரவிக்குமார்</h2><p>நீதிபதி எஸ்.ரவிக்குமார், 1977-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பிறந் தார். சென்னை ஐகோர்ட்டில், வக்கீலாக பணியாற்றி வந்தார். சிவில், கிரிமினல் என்று ஏராளமான வழக்குகளில் ஆஜராகி திறம் பட வாதிட்டார். இவர் புதுச்சேரி மாநில அரசு பிளீடராக பணியாற்றி வந்தார்.</p><h2>என்.திலீப்குமார்</h2><p>நீதிபதி என்.திலீப்குமார், 1980-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி பிறந் தார். சிவகாசியில் உள்ள எஸ்.எச்.என்.வி. மெட்ரிக்குலேசன் பள்ளி யில் பள்ளிப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல் லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார்.</p><p>சென்னை, மதுரை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். இவரது தந்தை நாகராஜன், சிவகாசியில் தொழிலதிபராக உள்ளார். தாயார் பெயர் அமுதா. நீதிபதி திலீப்குமாரின் அக்காள் ஜெயந்தி, சிவகாசி யில் ஆசிரியையாகவும், அண்ணன் தர்மர் விருதுநகர் மாவட்டத்தில் வக்கீலாகவும் உள்ளனர்.</p><p>நீதிபதி என்.திலீப்குமாரின் மனைவி ராஜ முருகேஸ்வரி சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர்களது மகள் நபான்யா மீனாட்சி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். மகன் பெரிய சாமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.</p><h2>எ.மனோகரன்</h2><p>நீதிபதி எ.மனோகரன், 1978-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி பிறந் தார். எஸ்.ஆர்.எம். கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. மைக்ரோ பயா லாஜி பட்டப்படிப்பும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி யில் சட்டப்படிப்பையும், சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்பையும் முடித்து, 2003-ம் ஆண்டு பார் கவுன்சி லில் நீதிபதி எ.மனோகரன் வக்கீலாக பதிவு செய்தார். 2016-2019-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அரசு பிளீடராக பணியாற்றினார்.</p><h2>பி.முருகன்</h2><p>நீதிபதி பி.முருகன் 1974-ம் ஆண்டு மே 20-ந்தேதி பிறந்தார். திரு வண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நீதிபதி பி.முருகன், 1989-ம் ஆண்டு 10-ம் வகுப்பில் பள்ளியில் 3-வது மாணவனாகவும், 1991-ம் ஆண்டு 12-ம் வகுப்பில் முதல் மாணவனாகவும் தேர்ச்சி பெற்றார். திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் பட்டப்படிப்பை முடித்தார். </p><p>சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டில் வக் கீலாக தனியாக பணியாற்றியபோது, முதுகலை சட்டப்படிப்பை முடித்தார். அதைத்தொடர்ந்து 10 முதுகலை பட்டங்களையும், அரசி யல் அமைப்புச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 2011-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழ் நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.</p><h2>எஸ்.கார்த்திகேயன்</h2><p>நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சேலம் மாவட்டம், நங்கவள்ளி கிராமத் தில் பிறந்தார். அரசு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு (1996-2001) சட்டப்படிப்பை முடித்து, பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார்.</p><p>ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிர காஷ், தற்போது ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றினார்.</p><p>2014-ம் ஆண்டு மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை புதுச்சேரி அரசின் சட்டத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.</p><h2>என்.குணசேகரன்</h2><p>நீதிபதி என்.குணசேகரன், 1976-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி கோவையில் பிறந்தார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.எஸ்சி., படித்த நீதிபதி என்.குணசேகரன், கோவை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 2002-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். 2014-ம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றிப் பெற்று நெல்லை மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட் டார். பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி தற் போது, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். </p><h2>எஸ்.அல்லி</h2><p>நீதிபதி எஸ்.அல்லி 1966-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி பிறந்தார். 6 சகோதரிகளுடன் பிறந்த நீதிபதி எஸ்.அல்லி, சீர்காழி தாலுகாவில் உள்ள வடரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியிலும், சிதம்பரம் நந்தனார் பெண்கள் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.</p><p>பின்னர் மாஜிஸ்திரேட்டு பத விக்கான தேர்வில் வெற்றி பெற்று கும்பகோணம் மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளராக பணியாற்றி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.</p><p>இவர்களுடன் நீதிபதிகள் எம்.டி.சுமதி, பி.முருகேசன், டி.திருமகள் ஆகியோரும் பதவி ஏற்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">98520d9a-1e82-4c59-b84f-64eb0a8f8409</guid><pubDate>Sun, 09 Aug 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-08-09T04:40:28.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Minister Ramesh,hindu religious minister</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bulhh1nv/Untitled-design-20.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செப்டம்பர் 1 முதல் முதல் நிலை கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல முடியாது ]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/bulhh1nv/Untitled-design-20.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-</p><p>நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு, கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p>தற்போழுது இருக்கக்கூடிய நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அறக்கட்டளையின் கீழ் அல்லது அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்களில் இருக்ககூடிய நிலங்களாக உள்ளது.</p><p>அந்த நிலத்தை என்ன பயன்பாட்டிற்காக முன்னோர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள் என்று பார்க்கும்போது, கோவில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதிக இடங்களில் கோவில் நிலம் கொடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை மறைத்துவிட்டு, அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் முறைகேடான பத்திரப்பதிவுகளில் சில பேர் ஈடுபடுகின்றனர்.</p><p>இந்த விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன் நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>எந்தவொரு காலத்திலும் இதுபோன்ற கோவில் சொத்துகளும் மற்றும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களும், அதன் உரிய நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.</p><h3><strong>பழனி கோவில் நில மோசடி</strong></h3><p>பழனியில் எவ்வாறு நீதிமன்றத்தின் ஒரு மறுப்பு ஆணையை வைத்துக்கொண்டு, அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்தார்களோ, அந்த மாதிரியான விஷயங்கள் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.</p><p>மேலும் பழனி கோவில் குறித்தான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, “ஏற்கனவே இவர்கள் தனி நீதிபதியையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றி, இதுபோன்ற ஒரு ஆணையை பெற்றுள்ளனர்” என்று நீதிமன்றமே கூறியுள்ளது.</p><h3><strong>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி</strong></h3><p>கடந்த கால ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>இந்த வழக்கு குறித்து, கடந்த ஐந்து வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கோவில் மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h3><strong>மொபைல்போன் தடை</strong></h3><p>ஏற்கனவே கோவில்களுக்குள் மொபைல்போன்களை அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இருந்தது.</p><p>எனவே செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் கோவில்களுக்குள் மொபைல் போன்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்காதது வருத்தம்- ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-regrets-dmk-aiadmk-absence-from-delimitation-talks#comments</comments><guid isPermaLink="false">3c2c9714-c6d1-4b59-9a1e-2b2d476541f1</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:44:23 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:44:23.253Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,ADMK,பா.சிதம்பரம்,திமுக அதிமுக,Delimitation Bill,தொகுதி மறுவரையறை கூட்டம்,P Chidhambaram</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/mn8qcd9f/P-Chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை கூட்டத்தில் திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்காதது வருத்தமளிப்பதாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும் அவர்,"தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஒவ்வொறு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும்" என கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.</p><p>தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் .</p><p>2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். </p><p>தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.</p><h2>பங்கேற்பு</h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும்  கூட்டத்தில் பங்கேற்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் பங்கேற்றனர்.</p><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்</h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>புதிய &apos;சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி&apos;: தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-liquor-prices-to-increase-due-to-environment-and-social-welfare-levy#comments</comments><guid isPermaLink="false">21a85f48-ac4f-48c1-bf2c-44b2f5681dd9</guid><pubDate>Sun, 09 Aug 2026 02:10:20 +0000</pubDate><atom:updated>2026-08-09T02:10:20.927Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுபானம்,Tasmac,மதுபானம் விலை உயர்வு,new tax,புதிய வரி விதிப்பு,Alcohol price increase</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/k82itb1b/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிய வரி விதிப்பால் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயரும்.</p><h2>சுற்றுச்சூழல் வரி</h2><p>தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அரசுக்கு மதுபானங்கள் விற்பனை மூலம் வருவாய் அதிகம் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் த.வெ.க. அரசு மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும். </p><p>காலி மதுபாட்டில்களை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றுக்காக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி்' எனும் புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது.</p><h2>ரூ.20 வரை நிர்ணயம்</h2><p>சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006-ல் திருத்தம் செய்து மசோதாவை தாக்கல் செய்தார். இதில் மதுபானங்களின் விற்பனைக்கு கூடுதலாக 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி' விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><p>இந்த வரி, ஒரு மதுப்பாட்டிலுக்கு அதிகபட்சம் ரூ.20 என நிர்ணயிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள வாட் வரிக்கு மேலாக வசூலிக்கப்படும். மதுபானத்தின் வகை, அளவு மற்றும் கொள்கலனின் அளவைப் பொறுத்து வரி விகிதம் மாறுபடும்.</p><h2>மதுபானம் விலை உயரும்</h2><p>இந்தத் திருத்தத்தின் மூலம், சட்டத்தில் புதிய பிரிவு 3(ஏ) சேர்க்கப்படுகிறது. இதன்படி, தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் ஒவ்வொரு வணிகர்களும், அரசு அறிவிக்கும் விற்பனை நிலையிலேயே இந்த வரியை செலுத்த வேண்டும். கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசு அறிவிக்கை வெளியிட்டதும் இந்த புதிய வரி அமலுக்கு வரும்.</p><p>இதன் மூலம் மதுபானங்கள் விலை உயரும். அதேநேரத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயராது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புதிய வரியால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை விரைவில் உயரலாம் என்ற நிலை உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T17:09:09.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry">55 அடி உயர மரத்தில் ரூ.60,000 செலவில் இரும்புப் படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</a></p> <p>* தூத்துக்குடி இளைஞர் தினகர் 55 அடி பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு அமைத்தார்.</p><p>* பாதுகாப்பான பதநீர் இறக்க ரூ.60,000 செலவில் வளைவு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan">கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்... </a></p><p>*மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><p>*உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss">கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</a></p><p>* 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. </p><p>* 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p>* ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விலகினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian">நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</a></p><p>* மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p> * மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts"> கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </a></p><p>* கேரளத்தில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன.</p><p>*  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair">மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்</a></p><p>* ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>* இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun">தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</a></p><p>* த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>* ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions">கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</a></p><p>* இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>* சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey">ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</a></p><p>* ஈரோட்டில் ஆடு மேய்த்து படித்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மகாராட்டிராவில் பணியாற்றுகிறார்.</p><p>* வறுமையிலும் பெற்றோர் ஆதரவுடன் கணினி முதுகலை பட்டம் முடித்து 2015 UPSC தேர்வில் அகில இந்திய 152-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory">ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</a></p><p>* மகாராஷ்டிரா டெலிவரி நிறுவனங்களுக்கு மின்சார பைக் பயன்படுத்த கட்டாயமாக்கியது.</p><p>* ஒவ்வொரு ஆர்டரிலும் 2% ஓட்டுநர் நல நிதிக்கு செல்லும், ஜிபிஎஸ் காப்பீடு உரிமம் கட்டாயம் கட்டண உச்சவரம்பு விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal">சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</a></p><p>* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர்</p><p>* மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map">சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</a></p><p>* சீனா அருணாச்சலத்தை ஸாங்னான் என பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.</p><p>* லாங்ஜூ தக்லா போர் நினைவிடங்கள் வரைபடத்தில் முக்கியமாக சேர்கப்பட்டன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case">காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</a></p><p>* பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>* அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!... </a></p><p>*மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும்.</p><p>*கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh">நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</a></p><p>* சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்தனர்.</p><p>* ஐ.பி.எல். கோப்பையை கே.கே.ஆர். வென்றபோது அந்த அணியில் ரமண்தீப் சிங் இடம்பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways">பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</a></p><p>* கடந்த ஆட்சியில எனது துறையில் ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம்.</p><p>* இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu">எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</a></p><p>* Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>* இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டசபையில் தனித் தீர்மானம்: தமிழக அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-in-assembly-against-delimitation-tamil-nadu-government#comments</comments><guid isPermaLink="false">cefb2e53-cc97-4028-8f33-4e01f9a14fb9</guid><pubDate>Sat, 08 Aug 2026 16:04:58 +0000</pubDate><atom:updated>2026-08-08T16:04:58.750Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/opxb44cs/TVCMVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.</p><p>இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் (57) அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் (11), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1) மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 19 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</p><h2>புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்</h2><p>இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்கப்படாமல் காப்பது குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்ந்து நீடிப்பது குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும்போதே, ஒவ்வொரு உறுப்பினருக்கும் பாராளுமன்றத்தில் பேசக் கிடைக்கும் நேரம் குறைவாக உள்ளது எனவும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தங்களது கருத்துக்களை முழுமையாக எடுத்துக்கூறுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி கூறினர். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மக்கள்தொகைக்கேற்ப அதிகப்படுத்தப்படவில்லை எனவும் கூறினர்.</p><p>தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் இந்த ஒன்றிய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை இப்போதுள்ள எண்ணிக்கையிலேயே நிரந்தரமாக நிலைநிறுத்திடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை பாராளுமன்றத்தில் நிலை நிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை குறித்த ஒன்றிய அரசின் அரசமைப்பு சட்டத் திருத்தம் மற்றும் புதிய மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>மேலும், 2026-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பின் அரசமைப்பு பிரிவு 81(2)(a)-ன் கீழ் தென் மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதால், சட்ட முன்மொழிவை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும். சர்வ வல்லமை பெற்றதாக தொகுதி மறுவரையறை ஆணையம் உள்ளது. இந்த அதிகாரத்தை குறித்து பாராளுமன்றத்திற்கே இறுதிசெய்யும் அதிகாரம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.</p><p>அனைத்து மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 50% வரை உயர்த்தலாம் என்ற கருத்து மக்களை திசைதிருப்பும் ஆசை வார்த்தை (50% increase of existing Lok Sabha seats is an illusion to sweeten the pill) என்ற கருத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்து வைத்தனர்.</p><h2>தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும்</h2><p>இந்தக் கூட்டத்தின்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேசிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை முன்மொழிவு செயல்படுத்தப்பட்டால், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படுமென்பதால், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கை பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், அதற்குத் தேவையான மற்றும் உரிய சட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.</p><p>மேலும், தற்போது மக்களவை: மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், இதில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்கள்.</p><h2>தனித்தீர்மானம்</h2><p>இதனைத் தொடர்ந்து இறுதியாக தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.</p><p>கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம், தொகுதி மறுவரையறை செய்வதின் மூலம் பாதிக்கும் என்பதால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், தற்போதுள்ள நிலையே தொடரவும், தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்தார்கள்.</p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்.ஆர். மற்றும் சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேலுக்கு த.வெ.க.-வில் முக்கிய பொறுப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iru-vijayabaskar-isakki-subbaiah-maragatham-kumaravelukku-thvekavil-mukkiya-poruppu#comments</comments><guid isPermaLink="false">4397c0c6-2825-4175-94df-cdb2a96c8957</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:30:22 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:30:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,MR Vijayabaskar,எம்ஆர் விஜயபாஸ்கர்,tvk,Isakki Subbaiah,இசக்கி சுப்பையா,சி விஜயபாஸ்கர்,Maragatham Kumaravel,மரகதம் குமரவேல்,C Vijayabaskar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bssjx391/TVKvijayabaskar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.</p><p>அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.</p><h2>மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:-</h2><p>1. Dr. C. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><p>2. M.R. விஜய பாஸ்கர். முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்</p><p>3. இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்</p><h2>துணைப் பொதுச் செயலாளர்கள்:-</h2><p>1. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்</p><p>2. S. ராஜகோபால். நாங்குநேரி</p><p>3. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்</p><p>4. V. குமார் ITI, பல்லாவரம்</p><p>5. S. யுவராஜ். சிங்காநல்லூர்</p><p>6. C.V. தினகரன், திருப்போரூர்</p><p>7. K. மணிகண்டன். DCS, ஆவடி</p><p>8. R.S. மணிகண்டன், வீரபாண்டி</p><p>9. K. அருள்ராஜ், திருவெறும்பூர்</p><p>10. SDR. சாமுவேல் ராஜ் DCT, தூத்துக்குடி</p><p>புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-minister-vignesh-says-big-lobbies-tried-to-approach-us-in-many-ways#comments</comments><guid isPermaLink="false">b6f9c617-a3af-4499-bb91-d00c857ce31c</guid><pubDate>Sat, 08 Aug 2026 15:03:08 +0000</pubDate><atom:updated>2026-08-08T15:03:08.962Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக்,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விக்னேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1znd8oyy/MinisterVignesh0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மது விலக்கும் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கடந்த ஆட்சியில எனது துறைல ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம். இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.</p><p>எவ்வளவோ வகையில், வழியில் என்னை அப்ரோச் செய்யவும், அணுகவும் முயற்சி செய்தாங்க. இது தமிழக வெற்றிக் கழத்தின் ஆட்சி. தமிழக முதல்வரோட ஆட்சி. இங்கு பணத்தால எந்த விசயமும் செய்ய முடியாது. பணம் கொடுக்கிறோம். எப்படியாவது இருக்கிற செட்டப்ப விடுங்க எனக் கூறுகிறார்கள். அதற்கு நாங்கள் வரல. மக்கள் மாற்றம் வேண்டும் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். அதற்காக வந்திருக்கோம்.</p><h2>பெரிய பெரிய லாபிகள்</h2><p>பெரிய பெரிய லாபிகள் என்ன செய்கிறார்கள் என்றால், எங்களை அப்ரோச் செய்ய முடியல. இப்போது எங்களுடைய இமேஜ ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தெரியும். அவர்களால் இந்த மண்ணில் எதுவும் செய்ய முடியாது. மாற்றம் நடந்தே தீரும். டாஸ்மாக் மட்டும் கிடையாது. சுற்றுச்சூழல் துறையிலும் சரி மாற்றம் நடந்தே தீரும். அதனால் ஆபாசத்திற்கும், அவதூறுக்கும் பயபடுவோம் என்று நினைத்து விடாதீர்கள். அது பெரிய தோல்வியை கொடுக்கும்.</p><p>மதுபான பாட்டில்களில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனப் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள போர்டுகளில் இந்த வாசகம் இல்லை என்றால் போடப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்: கனிமொழி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2ca388e5-0855-4a90-b07c-bd6963a071ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:05:03.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,மேகதாது அணை,Kanimozhi MP,Megadadu Dam,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi M.P]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.</p><p>இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மக்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-  </p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>திராவிட முன்னேற்ற கழகம் மிகத்தெளிவாக, முதன்முதலில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐந்து மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். </p><p>அந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட சில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டார்கள். </p><p>அந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறை என்பது தான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது.</p><p>இதையடுத்து தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்ட போது, எங்களுக்கு தேர்தல் முக்கியமில்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் தான் முக்கியம் என திமுக தலைவர் கூறினார்.</p><p>மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களிடம், இந்த மசோதாவிற்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கூறினார்.</p><p>கடந்த காலத்தில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, திமுக-வால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை எடுத்து கூறினோம்.</p><p>அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவில், எந்த இடத்திலும் தமிழ்நாட்டிற்கான பங்கு எந்த விதத்திலும் மாறாது என்று குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><p>அதனால் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் நிராகரித்தோம்.</p><p>இதுவரையில் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்து பேசியதாக தகவல் இல்லை. ஒருவேளை ஒருசில நபரிடம் பேசி இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை அழைத்து, இந்த மசோதா குறித்து கருத்து கேட்கவில்லை.</p><p>தற்பொழுது இந்த மசோதா அறிமுகம் செய்யப்படமாட்டாது என்பது தான் எங்களுக்கு வந்த தகவலாக உள்ளது.</p><p>மேலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இருக்கும் மசோதா குறித்து, எந்தவிதமான தகவலோ அல்லது மசோதாவின் நகலோ எங்களிடம் இல்லை.</p><h3><strong>மேகதாது விவகாரத்தை திசை திருப்ப முயற்சி</strong></h3><p>அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.</p><p>ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அரசாங்கம் கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமை செயலாளர் தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>எங்கள் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு, கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுதினார். எனவே, இதுவே முறையில்லாத ஒன்றாக உள்ளது.</p><p>மேகதாது மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட கூடாது என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.</p><h3><strong>யார் எட்டப்பர்கள்</strong></h3><p>யார் எட்டப்பர்கள் என்றும், தேர்தலுக்கு பின்பு யார் முதுகில் குத்தினார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.</p><p>திமுகவும், அதிமுகவும் மேகதாது விஷயத்தில் ஒருமித்த கருத்தைதான் கொண்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy#comments</comments><guid isPermaLink="false">7c6c4608-dcb2-43e0-8fb2-29eceeee9393</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:27:24.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,பயிர்க்கடன்,மேகதாது அணை விவகாரம்,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><h2>மேகதாது அணை விவகாரம்</h2><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும், அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.</p> <p>இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், வருகின்ற 14.8.2026- வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">b5738a8c-9f5e-426f-a70e-66a984589653</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:12:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:12:29.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,MP Thirumavalavan,TamilNadu loksaba,திருமாவளவன் எம்பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டை வலியுறுத்தி, தமிழக முதல்வர் விஜய்  தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.</p><h2><strong>மக்களவை எம்பிக்கள் எண்ணிக்கை மாறக்கூடாது</strong></h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.</p><h2><strong>எம்பிக்களின் ஒற்றைக் குரல்</strong></h2><p>கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><h2><strong>திமுக, அதிமுக நிலைப்பாடு</strong></h2><p> "தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமையையும் காக்கும் இந்த விவகாரத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதே வலுவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் அரசியல் அதிகாரப் பாதிப்பைத் தடுக்கவே இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்பட்டுத் தொடர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டத்தை கூட்டுவது கேலிக்கூத்து: ஆ. ராசா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">9b8c0fe1-05fe-49e0-b44b-9328a88b0605</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:04:35.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆ ராசா,A Rasa,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆ ராசா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். திமுக எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p><h2>ஆ.ராசா</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ. ராசா, "தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாம கூப்பிடுகிறார்களே, நியாயமா இது. இது கேலிக்கூத்தாக இல்ல. சிறப்பாக இல்ல உங்களுக்கு" என்றார்.</p><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின் போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கூட்டம்</h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>திமுக, அதிமுக புறக்கணிப்பு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது.</p><p>எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.</p><h2>காங்கிரஸ், விசிக எம்.பி.க்கள் பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் விஜய் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">6f9cf4fb-3eb4-4a34-8833-c8e33d6bf1ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:22:32.376Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்வர்தீன்- நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.</p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கு கடந்து வந்த பாதை</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு ஏற்றி சென்ற லாரியை மடக்கிய ஒற்றை யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/erode-single-elephant-truck-tasted-sugarcane</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/erode-single-elephant-truck-tasted-sugarcane#comments</comments><guid isPermaLink="false">849d86a3-88b3-4b05-bc3a-616a6eb38881</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:08:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:08:21.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Elephant,sugarcane,Erode,ஒற்றை யானை,கரும்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a9pm9k7b/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a9pm9k7b/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>சத்தியமங்கலம்</strong></h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.</p><p>சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.</p><h2>லாரிகள்</h2><p>இதேபோல் சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் ஒற்றை யானை கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் காய்கறிகளோடு ஏற்றி வரும் லாரிகளை வாசனை பிடித்து வழிமறித்து கரும்பு காய்கறிகளை பறித்து சாப்பிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>ஒற்றை யானை</strong></h2><p>இந்நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதி விட்டு வெளியேறி உலா வந்து கொண்டிருக்கிறது. கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை தின்று வருகின்றன.</p><h2><strong>போக்குவரத்து பாதிப்பு</strong></h2><p>இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பகுதியில் கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை அந்த ஒற்றை யானை மடக்கியது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p><h2><strong>வனத்துறை</strong></h2><p>யானை வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்தினார். பின்னர் அந்த ஒற்றை யானை தும்பிக்கையால் லாரியின் மேற்பகுதியில் இருந்த கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்து சென்றது இதன் பிறகு அந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து சீரானது. வனத்துறையினர் தாளவாடி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai#comments</comments><guid isPermaLink="false">57bc842d-8eca-4461-b081-dac377f22058</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:27.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி செய்ய ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-being-made-to-provide-free-wi-fi-facilities-at-chennai-beaches-and-parks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-being-made-to-provide-free-wi-fi-facilities-at-chennai-beaches-and-parks#comments</comments><guid isPermaLink="false">8e367fee-5349-4457-abac-a766c4c0ffa6</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:29:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:29:26.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Beach,சென்னை கடற்கரை,இலவச வைபை வசதி,WIFI facility,வைபை வசதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bu37ihnr/wifi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bu37ihnr/wifi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.</p><h2><strong>இலவச வைபை வசதி</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். </p><p>இதற்கான சேவை வழங்குநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey#comments</comments><guid isPermaLink="false">01c82450-180a-4021-a2e3-4ef5298bdd0f</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:12:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:12:05.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women empowerment,VanmathiIAS,வான்மதிஐஏஎஸ்,Wardha Collector,UPSC SuccessStory,ஈரோடு சாதனைப்பெண்,Inspirational Story</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanmathi IAS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படித்து, இன்று தனது கடுமையான உழைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி வான்மதி ஐ.ஏ.எஸ். </p><p>வறுமையைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் கைவிடும் பலருக்கு, இவரது இந்தச் சாதனைப் பயணம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.</p><h2>ஆடு மேய்த்துக் கொண்டே தொடர்ந்த பள்ளிப் படிப்பு!</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதியின் தந்தை ஒரு சாதாரண ஓட்டுநர். அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, வான்மதிக்குச் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. </p><p>தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கும் வான்மதி, மாலை பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடச் செல்ல மாட்டார். மாறாக, தனது குடும்பத்தின் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார். </p><p>அந்தப் பகுதியிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டே, கையில் புத்தகத்தை வைத்துத் தனது பள்ளிப் படிப்பைத் தீவிரமாகப் படித்து முடித்தார்.</p><h2>திருமணப் பேச்சுகளுக்கு நடுவே முதுகலை பட்டம்!</h2><p>பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வான்மதியின் குடும்பத்தினர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். </p><p>ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற வான்மதியின் ஆசையை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு உறுதுணையாக நின்றனர். </p><p>இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>தோல்விகளைத் தாண்டிய UPSC சாதனை!</h2><p>முதுகலை பட்டம் பெற்ற பிறகும் வான்மதியின் கனவு ஓயவில்லை. உயரிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.</p><p>பல மணிநேர உழைப்பு, ஆரம்பக்கட்ட தோல்விகள் எதற்கும் அவர் தொய்வடையவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், வான்மதி அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.</p><h2>மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்!</h2><p>தேர்ச்சி பெற்ற பின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.</p><p>சாதாரண கிராமத்தில் ஆடு மேய்த்த சிறுமி, இன்று நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் வான்மதியின் இந்த வெற்றிக் கதை, தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.</p>]]></content:encoded></item><item><title>அதிக அளவில் சீனி சேர்ப்பு: உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore#comments</comments><guid isPermaLink="false">173753bf-7da9-4f95-b98e-0c2ec9e3cad9</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:01:19.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udangudi Karupatti,உடன்குடி கருப்பட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடன்குடி கருப்பட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கற்பகத்தரு" என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.</p><p>பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.</p><h2>சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்</h2><p>ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.</p><h2>ஜி.எஸ்.டி. மோசடி</h2><p>இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப்பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>ரூ.38 கோடி அபராதம்</h2><p>இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun#comments</comments><guid isPermaLink="false">02f9f9eb-dbe4-40ff-bd6b-75cf2a72d199</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:40:25.378Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,MPs Meeting,எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறையின்</a> போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/q94c6j9k/vijay.jpg" /></figure><h2><strong>புறக்கணிப்பு</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><h2><strong>கூட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது</p><h2><strong>பங்கேற்பு</strong></h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து  கொண்டனர்.</p><h2><strong>ம.தி.மு.க.</strong></h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 4 மேல் சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்- போலீசார் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">d452c51b-d0f1-45e0-90ba-8fe83c01cdba</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:22:32.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வாலிபர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.</strong></em> </p><h2><strong>அமித்ஷா வருகை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை வருகை தர உள்ளார். இதனால் திருவண்ணாமலை மாநகர் மற்றும் கோவில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>பாதுகாப்பு பணி</strong></h2><p>இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற வாலிபர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர். மேலும் சாமி சன்னதி முன்பு சந்தேகப்படும் படியாக நின்றனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். </p><p>வாலிபர்கள் அருகே சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களை சோதனை செய்தனர். </p><p>அவர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.  பின்னர் அந்த கேமரா பொருத்திய கண் கண்ணாடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.</p><p>இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">478d859b-cee7-4151-9df2-11b381faa1c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:08:13.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதா, உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் பங்காக குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவில் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தவுலத் சிங் கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆணையம், 1966-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% என்ற அளவை எட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு சுமார் 3% என்ற அளவிலும், தமிழ்நாட்டில் அதை விட சற்றுக் கூடுதலாகவும் இருந்தது.</p><p>கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கல்விக்கான அரசின் செலவுகள் குறித்த இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை. மாறாக, கல்விக்கான அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.</p><p>புத்தாயிரமாண்டின் தொடக்கமான 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><h2>2010-11-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2010-11ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் இரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது. 2010-ஆம் ஆண்டில் கல்வித்துறை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு முறையே ரூ.10,148 கோடி, ரூ.1751 கோடி என மொத்தம் ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.4,50,474 கோடியில் 2.64% ஆகும்.</p><h2>2020-21-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>மேலும் 10 ஆண்டுகள் கழித்து 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.34,181.73 கோடி, உயர்கல்விக்கு ரூ.5052.84 கோடி என மொத்தம் ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.17,88,074 கோடியாக தமிழகத்தின் பொருளாதாரம் அப்போது வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதில் கல்விக்கு 2.19% மட்டுமே ஒதுக்கப்பட்டது.</p><p>புத்தாயிரமாண்டின் கால் நூற்றாண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி ரூ.40,67,312 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த ஒதுக்கீடு மிக மிகக் குறைவு ஆகும்.</p><h2>3.92 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு 1.30 சதவீதமாக குறைப்பு</h2><p>2000-ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு இப்போது 1.30% ஆக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% அளவுக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,59,439 கோடி நிதி கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதை விட ரூ.1,06,519 கோடி குறைவு ஆகும்.</p><p>பரிந்துரை வழங்கிய கோத்தாரியோ, ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ இப்போது இருந்திருந்தால், இந்த நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள். இந்த அவல நிலைக்கு தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த, ஆட்சி செய்யும் அனைத்துக் கட்சிகளும்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஓர் அரசோ, ஒரு சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவதுதான். அதற்காகத்தான் காமராசர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அரசு பள்ளிகள் அறிவுத் திருக்கோயில்களாக திகழ்ந்தன.</p><h2>அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு</h2><p>ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் வாயிலாக, அரசாங்க பள்ளிகளில் ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது, 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.</p><p>கல்வித்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த புள்ளி விவரங்களின் மூலம் அறிய முடியும். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதனால் கல்வித்தரம் உயரும்; அதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், கல்விக்கான நிதி குறைக்கப்படுவதால் தான் அரசு பள்ளிகள் மிக வேகமாக சீரழிந்து வருகின்றன.</p><h2>தனியார் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு</h2><p>இதே காலகட்டத்தில் பார்த்தால், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத் தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.</p><p>அரசு பள்ளிகள் தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  இதற்காக கலவித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3% என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan#comments</comments><guid isPermaLink="false">9f81d42c-e9aa-4a14-b835-f4154137958e</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:07:33.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mathematics lesson,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Mathematic Stories,கணித பாடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளி மாணவர்களுக்குக் கணித பாடத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, சுலபமாகக் கற்றுக் கொடுக்கும் வகையில் கணித பாடங்களின் தலைப்புகளை மாற்றவும், கதைகள் வழியே கணிதத்தைக் கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.</p><h2>த<strong>லைப்புகள் மாற்றம்</strong></h2><p>மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><h2><strong>கதைகள்</strong> வழியே கணக்கு</h2><p>உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் (Story-based Learning) புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆசிரியர்களுக்கான</strong> புதிய வழிகாட்டுதல்</h2><p> புதிய புத்தகங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.</p><h2>கற்றல் திறன் <strong>மேம்பாடு</strong></h2><p>தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணக்குப் பாடத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p>மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கணிதத் கருத்துகளைப் பிணைத்துப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சியான சூழலில் பாடங்களைக் கற்கவும் இந்த புதிய பாடத்திட்ட மாற்றம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item></channel></rss>