<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 09 Sep 2026 20:27:18 +0000</lastBuildDate><item><title>இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுமா - எம்.பி. துரை வைகோ அளித்த பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-vaiko-answers-on-mdmk-contesting-in-by-elections#comments</comments><guid isPermaLink="false">3db4e85e-febb-4e74-b84b-445c7991ee41</guid><pubDate>Wed, 09 Sep 2026 18:30:14 +0000</pubDate><atom:updated>2026-09-09T18:30:14.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MDMK,மதிமுக,துரை வைகோ,Durai vaiko,by elections,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16wij2tx/Durai-Vaiko.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த தொகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல்</a> நடத்த முடியாத சூழல் உள்ளது. </p><p>தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆ தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது.</p><h2>எம்.பி. துரை வைகோ பேட்டி:</h2><p>"தமிழகத்தின் இரு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எம்.பி துரை வைகோ பதிலளித்துள்ளார். இது குறித்து சென்னை பனையூரில் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-</p><p>மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் ம.தி.மு.க. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் தான் போட்டியிட வாய்ப்புள்ளதாக நினைக்கின்றேன். ஆனால் ம.தி.மு.க. கண்டிப்பாக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.</p><h2>ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்:</h2><p>வருகின்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவரது வெற்றிக்கு ம.தி.மு.க. உறுதுணையாக இருக்கும் என வைகோ அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.</p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த கூட்டணிக்குள் வந்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இடதுசாரி கட்சிகள் அவர்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சி தொடரவேண்டும் என அவர்களது ஆதரவை தொடர்ந்து தருகின்றனர். நிச்சயமாக இந்த கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் இடம்பெறும் என நான் நம்புகிறேன்," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-must-abandon-the-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam-ttv-dhinakaran-urges#comments</comments><guid isPermaLink="false">635f6d56-d4f1-4cd4-8494-99c05b671605</guid><pubDate>Wed, 09 Sep 2026 16:08:53 +0000</pubDate><atom:updated>2026-09-09T16:08:53.632Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,பட்டினப்பாக்கம்,தலைமைச் செயலகம்,Secretariat,pattinapakkam,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/m3lc0lsh/New-Project-2026-09-09T213812.974.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>அவசரகதி தேர்வு </h2><p>புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் இருப்பது உண்மைதான். </p><p>ஆனால், அதற்காக பொதுமக்களுக்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தை அவசரகதியில் தேர்வு செய்வது ஏற்புடையதல்ல.</p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><h2>அதிம மக்கள்தொகை கொண்ட குடியிருப்புப் பகுதி</h2><p>110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு இதுவரை அரசாணைகள் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை மட்டும் அவசரமாகத் தேர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். </p><p>மேலும், குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசல், எதிர்காலத்தில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கான குறைந்த வாய்ப்புகள் ஆகியவை உள்ள நிலையில், அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும்.</p><p>அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். </p><p>இத்தகைய சூழலில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என அதிக எண்ணிக்கையிலானோர் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. </p><h2>மீனவ மக்களின் கோரிக்கை</h2><p>மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். </p><p>இத்தகைய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை முறையாகக் கேட்டறியாமல் அங்கு தலைமைச் செயலகம் அமைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கையாகவே அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக அரசின் நிர்வாகத் தலைமையிடமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முக்கிய மையமாகவும் செயல்பட வேண்டிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும்போது, பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிவது அவசியமாகும். </p><p>ஆனால், எவருடனும் முறையாகக் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சிகள்கூட விரிவாக விவாதிக்க முடியாத வகையில் 110 விதியின் கீழ் இத்திட்டத்தை அறிவித்து, தற்போது அவசரகதியில் இடத்தையும் தேர்வு செய்திருப்பது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், போக்குவரத்திற்கும், அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், போதிய இடவசதி, எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்பு, சிறந்த போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-school-education-announced-quarterly-exam-dates#comments</comments><guid isPermaLink="false">01de81f8-8845-4f3d-ad8e-4902bef80c3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:56:54 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:56:54.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக் கல்வித்துறை,quarterly exam,காலாண்டு தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/s84q2dib/exam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.</strong></em></p><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">காலாண்டு தேர்வு</a> அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.</p><p>இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:</p><p>1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>3 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.</p><p>11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி: திருமாவளவன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-not-election-allaiance-constitution-secured-alliance#comments</comments><guid isPermaLink="false">5984f5ef-1ea5-461c-96d4-01e26d55efe5</guid><pubDate>Wed, 09 Sep 2026 14:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-09T14:18:09.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக கூட்டணி,TVK allaiance</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ejjix5xw/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இது தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.</strong></em></p><p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><h2>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</h2><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதை அடுத்து, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டது.</p><p>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:</p><p>மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை.</p><p>மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><h2>அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி</h2><p>இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியின் பெயரை ஒருமனதாகத் தேர்வு செய்தோம் என்றார்.</p><h2>தவெக தலைமையில் கூட்டணி</h2><p>ஐயூஎம் எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கூறுகையில், தமிழகத்தில் முதன் முறையாக தவெக ஆட்சியில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என இனி வரும் காலங்களில் தவெக தலைமையில் கூட்டணி தொடரும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான கூட்டணி இன்றும், என்றும் தொடரும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>“இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-candidates-for-the-by-election-will-be-announced-tomorrow-manickam-tagore#comments</comments><guid isPermaLink="false">59bdbf77-0adb-40a8-9d6b-a3cd43b01ccb</guid><pubDate>Wed, 09 Sep 2026 13:56:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T13:56:34.137Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,ByElection,இடைத்தேர்தல்,TVK alliance,தவெக கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/vr890ywb/New-Project-2026-09-09T192411.614.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</a> எனப் பெயரிடப்பட்டுள்ளது. </p><p>தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவெக, விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த பெயர் அறிவிப்பு வெளியானது. </p><p>இந்த கூட்டணிப் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன், தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். </p><p>அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.,</p><p>“இக்கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். </p><p>இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். சமூக நீதி, மதச்சார்பற்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது.</p><p>இந்தக் கூட்டணியின் தலைவர் விஜய். இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். தவெகவில் எம்.பி.க்கள் வந்தபின் அவர்களும் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 9 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-september-2026#comments</comments><guid isPermaLink="false">e412a312-48cc-4e33-837f-678856202328</guid><pubDate>Wed, 09 Sep 2026 04:10:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:52:58.076Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/oqgphfis/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time">தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் 'தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><p>* தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்</a></p><p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு </a></p><p>* 'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள்.</p><p>* அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் விஜய்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai">சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</a></p><p>* டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.</p><p>* சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/alcaraz-lose-qf-in-us-open-tennis">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4.30 மணி நேரம் போராடி பென் ஷெல்டனிடம் வீழ்ந்த அல்காரஸ்</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.</p><p>* இந்தப் போட்டி சுமார் 4 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days">4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</a></p><p>* கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. </p><p>* நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி  ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit">8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா?... </a></p><p>*மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>*ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days">ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி</a></p><p>* ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p>* மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது</a></p><p>* தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p><p>* வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்... </a></p><p>*தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும்.</p><p>*செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</a></p><p>* 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>* இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/andhra-government-appoints-chiranjeevi-daughter-to-key-post">ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!... </a></p><p>*விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>*சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/anthropic-researcher-warns-humanity-may-end-by-2030">2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!... </a></p><p>*இந்த தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியை யாரும் குறைவாக மதிப்பிடக் கூடாது. </p><p>*ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-9-9-2026">GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law">ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். </p><p>* சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/odisha-forest-rescue-raises-orangutan-trafficking-suspicions">ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு: வனவிலங்கு கடத்தல் கும்பலின் சதியா?... </a></p><p>*ஒராங்குட்டான்கள் இந்தியாவில் இயற்கையாக வாழும் உயிரினம் அல்ல.</p><p>*இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த மழைக்காடுகளை மட்டுமே பூர்வீகமாகக் கொண்டவை. </p><p>1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி</p><p>* களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>* 1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam">நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். </p><p>*  தமிழக அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  </p><p><a href="https://www.maalaimalar.com/sports/netflix-aims-to-secure-global-broadcast-rights-for-asian-t20-cricket">ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி - உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்...</a></p><p>*  இந்தியா-ஜப்பான் மோதும் ஆசிய டி20 கிரிக்கெட் பயிற்சி போட்டி செப்டம்பர் 22 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/1000-years-dust-gas-lion-nebula-photo-released-by-nasa">1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ - புகைப்படத்தை வெளியிட்ட நாசா... </a></p><p>* நட்சத்திரங்கள் வெளியேற்றும் அயனியாக்கப்பட்ட வாயு மற்றும் தூசிக்களால் உருவான தோற்றம் கோள் நெபுலா எனப்படுகிறது.</p><p>* நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி சிங்க நெபுலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today">மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்</a></p><p>* செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. </p><p>* மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secular-social-justice-victory-alliance-name-of-the-tvk-led-alliance-announced#comments</comments><guid isPermaLink="false">f142f807-f274-410f-934b-70e61b11b55c</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:50:10 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:50:10.921Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK alliance,தவெக கூட்டணி,victorious alliance for secularism and social justice,மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/x02i1m9q/New-Project-2026-09-09T181657.630.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இன்றைய கூட்டத்தில் மாணிக்கம் தாகூர், விஜய், திருமாவளவன், காதர் மொய்தீன், வைகோ ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p><p>தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-parties-meeting-left-parties-boycott">இடதுசாரி கட்சிகளான</a> இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இக்கூட்டணியில் இடம்பெறவில்லை. </p><p>முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என பெயரிடப்பட்டிருந்தது. </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/city-corporation-and-district-collector-grant-approval-for-the-new-secretariat-to-be-built-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">967891c8-f083-4abe-bc86-344a110c7791</guid><pubDate>Wed, 09 Sep 2026 12:00:49 +0000</pubDate><atom:updated>2026-09-09T12:00:49.699Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டினப்பாக்கம்,New Secretariat,pattinapakkam,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/roacbaep/New-Project-2026-09-09T173008.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். </p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். </p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம் </h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p><h2>எதிர்ப்பு </h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனவர்கள், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists">அன்புமணி</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>காரணம் ஏற்கனவே இட நெரிசலை சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், இன்னும் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என வாதிடுகின்றனர்.</p><p>மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாதிடுகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சொல் ஒன்று, செயல் வேறு..!- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் தவெக கூட்டணி அரசு- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-alliance-betrays-people-on-promises-eps#comments</comments><guid isPermaLink="false">4ec11099-93d4-4e82-831a-d7e6aac6924e</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:43:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:43:57.672Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,tvk,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tk6xx2qq/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் கொள்முதல் செய்வதில் அலட்சியம் காட்டும் தவெக கூட்டணி அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஏய்த்துப் பிழைக்கும் தொழிலை கடந்த நான்கு மாதங்களாக கனகச்சிதமாக செய்து வரும் திஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தாப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது.</p><p>உரிய நேரத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-release-order-to-karnataka-for-tamil-nadu" rel="nofollow">காவிரி</a>யில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி முழுமையாக செய்ய முடியாமல் விவசாயிகளின் இன்னலைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு.</p><p>விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய அரசு.</p><p>கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சீர்குலைந்துபோன சட்டம்-ஒழுங்கினை சீர்செய்வோம் என்று மார்தட்டிப் பேசிவிட்டு, தறிகெட்டு ஓடும் குதிரையைப் போல், குற்றச் சம்பவங்கள் மேலும் மேலும் பெருகி வரும் நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த பொய்க்கால் அரசு, ஆட்சி இயந்திரத்தை முறையாக சுழற்றத் தெரியாமல், அனுபவமின்மை காரணமாக கை பிசைந்து நிற்கும் இந்த அரசுக்கு, சொல் புத்தியும் இல்லை; சுய புத்தியும் இல்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.</p><p>காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை உரிய நேரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் செய்யாததால் அவைகள் முளைவிட்டு பாழாகி, பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்று கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விரிவாக நான் எடுத்து வைத்தேன்.</p><p>வெட்ட வெளியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் முளைத்து வீணாய் போனதையும், அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்தினேன்.</p><p>அந்த நேரத்தில், குறைகளைச் சொல்லும் சட்டமன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தும் நோக்கில் த.வெ.க. அமைச்சர்கள் பதில்களை சொன்னார்களே தவிர, வீணாய் போகும் நெல்மணிகளை பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கடந்த சில நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால், சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்-மானம்பாடி, நல்லிச்சேரி மற்றும் பல பகுதிகள், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் சாலை ஓரங்களில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>மயிலாடுதுறை மாவட்டம் நலத்துக்குடி, வழுவூர், கோலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>கடலூர் மாவட்டம்: விருதாச்சலம்</p><p>ராஜேந்திரபட்டினம் - 10,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம்: சாலவாக்கம் அருகே மேல்பெருமநல்லூர் சுமார் 20,000 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்.</p><p>செங்கல்பட்டு மாவட்டம்: அச்சிறுபாக்கம் தொழுப்பேடு </p><p>திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் சுமார் 50,000 மெட்ரிக் டன் நெல் மழையில் நனைந்து சேதம்.</p><p>வானத்தை வில்லாய் வளைப்போம், விண்மீன்களை பூமிக்கு கொண்டு வந்து மக்களுக்கு வெளிச்சம் தருவோம் என்பதுபோல், முடியாத அனைத்தையும் செய்து காட்டுவோம் என்று வாய்ப்பந்தல் போடுவதை இந்த அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை போக்குவது நியாய விலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் அரிசிதான். அந்த அரிசியின் ஆதாரமாக திகழக்கூடிய நெல்மணிகள் வீணாய் போவதை வேடிக்கை பார்க்கும் இந்த அரசின் போக்கை ஏற்க முடியாது.</p><p>மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடும் போக்கை உடனடியாக கைவிட்டு, விவசாயிகள் விளைவித்த நெல்மணிகளை முழுமையாக கொள்முதல் செய்து, விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டுமென்று விளையாட்டு மாடல் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/secretariat-should-not-be-established-in-congested-pattinapakkam-anbumani-insists#comments</comments><guid isPermaLink="false">a7c58c8a-3587-407c-a85d-b5a9bbf625d9</guid><pubDate>Wed, 09 Sep 2026 11:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T11:40:56.514Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தலைமைச் செயலகம்,Secretariat,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெருக்கடியான பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/7d6b7m9q/New-Project-2026-09-09T171013.295.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் சமீபத்தில் அறிவித்தார்.</p><p>அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலைமைச் செயலகம் சென்னை, பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam">பட்டினப்பாக்கத்தில்</a> அமைந்தால், தற்போது இருக்கும் இட நெருக்கடியைவிட அதிகமான சிக்கலை சந்திக்க நேரிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.</p><p>அப்படி பட்டினப்பாக்கம்தான் இடத்தேர்வு என்றால், அந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. </p><h2>தொலைநோக்குப் பார்வையற்றது</h2><p>இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1,200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். </p><p>அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. </p><p>அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; </p><p>அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>25 வருட தேடல்</h2><p>தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  </p><p>ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. </p><p>எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. </p><h2>நெரிசல்</h2><p>அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல.</p><p>மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். </p><p>இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும்.</p><h2>அடுத்த நூற்றாண்டு தேவை</h2><p>இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். </p><h2>பொருத்தமான இடம் அல்ல</h2><p>முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. </p><p>முதலமைச்சர் விஜய் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது.</p><h2>ஒருங்கிணைந்த நிர்வாக நகரம்</h2><p>உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  டெல்லிக்கு மாற்றப்பட்டது. </p><p>அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த டெல்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுடெல்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. </p><p>1932ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின்   நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. </p><p>தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும். </p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், </p><p>தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - யாருக்காக சட்டத் திருத்தம்? - தவெக அரசுக்கு திமுக கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-was-the-land-requirement-for-setting-up-a-private-university-in-chennai-reduced-from-100-acres-to-12-acres-covi-chezhian-of-tvk-questions-the-government#comments</comments><guid isPermaLink="false">38e28103-639b-48e1-b9f2-e680ae04c5c6</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:47:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:47:50.553Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கோவி செழியன்,தவெக அரசு,tvk government,Govi Chezhian,Private Universities Act Amendment Bill,தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னையில் தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் - தவெக அரசின் சட்டத் திருத்தத்திற்கு கோவி. செழியன் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/zszijdvv/New-Project-2026-09-09T161030.537.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><p>ஆட்டுக்குத் தாடியை அளந்து வைத்திருப்பது போல் - <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a>க்கு “எம்.எல்.ஏ.”க்களை மக்கள் கொடுத்திருக்கும் இந்த நேரத்தில்கூட, த.வெ.க. அரசின் “அடாவடி” மட்டுமல்ல, </p><p>ஆணவ நடவடிக்கைகள் எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்களின் உயர்கல்விக் கனவைச் சிதைத்துவிடும் என்பதால், நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கும் “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா - 2026”க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>சட்டத்திருத்த மசோதா</h2><p>நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ள “தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்ட மசோதாவில்”, “தனியார் பல்கலைக்கழகம்” அமைக்க சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 100 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்; </p><p>சென்னை தவிர மற்ற பகுதிகளில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் வேண்டும் எனவும், “Permanent Endowment Fund” ஆக 50 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இருந்த தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம், 2019-ஐ அவசர அவசரமாக த.வெ.க. அரசு கூட்டத் தொடரின் கடைசி நாளில் திருத்தி நிறைவேற்றியிருக்கிறது.</p><h2>யாருக்காக 12 ஏக்கராக குறைப்பு?</h2><p>உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் 24.8.2026 அன்றே நடைபெற்று முடிந்துவிட்டது. 15 நாட்கள் கழித்து இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் இவ்வளவு அவசரமாகக் கொண்டு வந்திருப்பது ஏன்?</p><p>இந்தத் திருத்தம் மூலம் சென்னை மாநகர எல்லைக்குள் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க இருந்த 100 ஏக்கரை 12 ஏக்கர் என அதிரடியாகக் குறைத்திருப்பது யாருக்காக?</p><p>இதுதவிர, மற்ற முனிசிபல் லிமிட் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவை என்றிருந்ததை, முனிசிபல் லிமிட்டிற்குள் 18 ஏக்கராகவும், கிராமப்புறங்களில் 25 ஏக்கராகவும் குறைத்திருப்பதன் உள்நோக்கம் என்ன?</p><p>இப்படி தனியார் பல்கலைக்கழகம் அமைக்கச் செலுத்த வேண்டிய Permanent Endowment Fund 50 கோடி ரூபாயை வெறும் 25 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.</p><h2>4 மாதங்களில்...</h2><p>அது மட்டுமின்றி - இப்படி குறைக்கப்பட்ட 25 கோடி ரூபாய் சலுகை, ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகமாக அனுமதி அளிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என “பின்தேதியிட்ட சலுகை” ஏன் வழங்கப்படுகிறது?</p><p>தனியார் பல்கலைக்கழகம் ஒருவேளை திவாலானால் - அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பினை உறுதி செய்யத்தான் இந்த Permanent Endowment Fund உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>அதைச் சரிபாதியாகக் குறைத்து - ஏன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்குத் த.வெ.க. அரசு ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் உலை வைக்க வேண்டும்?</p><h2>திட்டமிட்டுச் சட்டத் திருத்தம்</h2><p>“கஜானா காலி” எனக் கூறி மின்கட்டணம், சொத்துவரி என மக்கள் தலையில் “வரி வசூல்” என்ற பாறையைத் தூக்கி வைக்க முயற்சிக்கும் த.வெ.க. அரசு, ஏற்கனவே மாணவர்களின் பெற்றோரிடம் அதீத கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏன் திட்டமிட்டுச் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது?</p><p>நிதிப் பற்றாக்குறையில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த முடியாமல், தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத்தான் இந்த உயர்கல்வி மானியக் கோரிக்கையில் பல்கலைக்கழகங்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டதா?</p><p>இப்படித் தளர்வு அளிக்க யார் யார் கோரிக்கை வைத்தார்கள் என்ற விவரமும் இல்லை. அதை அரசு வெளியிடவும் இல்லை!</p><p>புதிய சட்டத் திருத்தம் மூலம் புதிய பொறியியல் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும் “தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து” கேட்டுப் பெற்று, புற்றீசல் போல் எங்கு பார்த்தாலும் தனியார் பல்கலைக்கழகம் என்ற சூழல் உருவானால், பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்ன ஆவது?</p><h2>சமூகநீதிக் கொள்கைக்கு வேட்டு</h2><p>ஏற்கனவே எங்கள் ஆட்சியில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் சலுகை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வந்து, அதை நிறைவேற்ற முனைந்தபோது கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால், மக்களின் கருத்திற்கு மதிப்பளித்து அந்த முயற்சியை எங்கள் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்கள் அன்றைய தினம் கைவிட உத்தரவிட்டார்.</p><p>ஆனால், இன்றைக்கோ புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. அரசு, உயர்கல்வியில் ஏழை, எளிய மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேரும் வாய்ப்பைத் தட்டிப் பறித்து - சமூகநீதிக் கொள்கைக்கு ஏன் வேட்டு வைக்கிறது?</p><p>ஆகவே, அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், இப்படிப் புதிய “தளர்வுக் கொள்கை” அறிவித்துத் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவித்து, உயர்கல்வியை வணிகமயமாக்கும் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, 2026-ஐ த.வெ.க. அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cag-audit-flags-rs-96-crore-loss-in-tamil-nadu-registration-department#comments</comments><guid isPermaLink="false">5c340d2b-b58c-42bb-a794-a1ad96365ac5</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:46:23 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:46:23.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Registration department,தமிழக பதிவுத்துறை,CAG audit,சி.ஏ.ஜி தணிக்கை,வருவாய் இழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  CAG]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ndl1dcpz/cag.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் போது முறையான தணிக்கை இல்லாததால் அரசுக்கு ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் தலைமைத் தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை தெரிவிக்கிறது. 2023-24 நிதி ஆண்டிற்காக வெளியிடப்பட்ட இந்தத் தணிக்கை அறிக்கையில், பதிவுத்துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><h2>வருவா<strong>ய் அதிகரித்</strong>தாலும் தொடரும் இழப்புகள்</h2><p>கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் மூலமாக தமிழக அரசு ரூ.19,013.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 8.28% அதிகமாகும். இருப்பினும், பதிவுகளின் போது ஆவணங்களைச் சரிபார்ப்பதில் ஏற்பட்ட அலட்சியம் மற்றும் குளறுபடிகள் காரணமாகப் பெருமளவு வருவாய் கசிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. <a href="https://www.maalaimalar.com/news/national/india-food-safety-crackdown-shocking-findings">தமிழகம் </a>முழுவதும் உள்ள 647 தணிக்கைக்கு உட்பட்ட அலுவலகங்களில், வெறும் 114 அலுவலகங்களில் மட்டுமே மாதிரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 967 வழக்குகளில் ரூ.95.97 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது அம்பலமாகியுள்ளது.</p><h2>சொத்து மதிப்<strong>பு குறைத்</strong>துக் காட்டுதல்</h2><p>605 வழக்குகளில் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு ரூ.85.84 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 63 வழக்குகளில் சொத்துக்களின் உண்மையான மதிப்பு மறைக்கப்பட்டு, ரூ.1.07 கோடி கட்டணக் குறைவு செய்யப்பட்டுள்ளது. வெண்பேடு மற்றும் வயலாநல்லூர் பகுதிகளில் 14.94 ஏக்கர் நிலம் தொடர்பான 4 பரிவர்த்தனைகள் ரூ.78.66 கோடிக்குக் கிரையம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதன் மதிப்பு மிக அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.71.16 கோடி மதிப்புக் குறைக்கப்பட்டு, அரசுக்கு ரூ.7.83 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>அம்பத்தூர் மற்றும் தாமல் பகுதிகளில் ரூ.100.08 கோடி பணப்பரிமாற்றம் நடந்ததற்கான படிவம் 26AS சான்றுகள் இருந்தபோதிலும், பணப் பரிமாற்றமே இல்லாதது போல் அதிகாரப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ரூ.4.99 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரையில் நிலத்தில் இருந்த கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கில் காட்டாமல் மறைத்ததால் ரூ.17.55 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>கண்கா<strong>ணிப்பு கு</strong>றைபாடு</h2><p>பதிவுத்துறையில் தணிக்கைக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும், 2023-24 ஆம் நிதியாண்டில் ஒரு தணிக்கைக் குழுக்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5,428 உள் தணிக்கைகள் நிலுவையில் உள்ளதாகவும், ரூ.323.7 கோடி மதிப்புள்ள 61,109 தணிக்கைப் பத்திகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதிரியாக ஆய்வு செய்யப்பட்ட 114 அலுவலகங்களிலேயே ரூ.96 கோடி இழப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 533 அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு வெளிவரக்கூடும் என சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?- வானிலை ஆய்வு மையம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-what-will-the-weather-be-like-for-the-next-6-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-what-will-the-weather-be-like-for-the-next-6-days#comments</comments><guid isPermaLink="false">d8874b7e-7218-46b6-b4e8-009bde74ee1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:40:06 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:40:06.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/2v4748w2/IMD.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வானிலை ஆய்வு மையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வானிலை ஆய்வு மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/2v4748w2/IMD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 1.5 கிமீ உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>13-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-party-meeting-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-alliance-party-meeting-begins#comments</comments><guid isPermaLink="false">7476cede-f8ab-4cff-8d81-80dfb0785a2c</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:40:05 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:40:05.007Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,தவெக,tvk,TVK alliance meeting,கூட்டணி கட்சி கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/uf6yxwr7/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK Head office]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/uf6yxwr7/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சி கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது.</p><h2>2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம்</h2><p>தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிழகம் (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.</p><p>முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது. </p><p>அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். </p><p>கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இந்நிலையில், இதைத்தேர்தல் தொடர்பாக தவெக கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் 2ம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தாரகை கத்பர்ட் மற்றும் பிரவின் சக்ரவர்த்தில் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p><p>விசிக சார்பில் தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p><p>மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, ஐயுஎம்எல் கட்சி சார்பில் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-constituency-has-delivered-different-results-in-every-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-constituency-has-delivered-different-results-in-every-election#comments</comments><guid isPermaLink="false">9c6ec262-a2f5-43cb-907a-2ff6034c8128</guid><pubDate>Wed, 09 Sep 2026 10:16:27 +0000</pubDate><atom:updated>2026-09-09T10:16:27.187Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,தாராபுரம் தொகுதி,இடைத்தேர்தல்,Dharapuram Constituency</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/20b8xh10/dharapuram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாராபுரம் தொகுதி]]></media:title><media:description type="html"><![CDATA[ தாராபுரம் தொகுதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/20b8xh10/dharapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.</strong></em></p><p>​திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) தொகுதிக்கான <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>​அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமா அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><h2><strong>வேட்பு மனு தாக்கல்</strong></h2><p>​இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும், குறிப்பாக தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.</p><p>​திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 வாக்காளர்களில், தாராபுரம் தொகுதியில் மட்டும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண் வாக்காளர்களும், 8 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். பெண் வாக்காளர்களின் ஆதிக்கமே இந்த தொகுதியின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும், வாக்காளர்களின் வசதிக்காக 186 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.</p><h2><strong>மாறுபட்ட முடிவுகள்</strong></h2><p>​முன்னதாக, கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 1,99,944 வாக்குகள் பதிவாகின. அதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் திவ்யா 6,026 வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இதுதவிர பல்வேறு சின்னங்களில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பிரித்தனர்.  ​தாராபுரம் தொகுதியின் அரசியல் வரலாற்றை ஆராயும்போது, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், பாட்டளி மக்கள் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக 2001-ல் பா.ம.க.வும், 2011 மற்றும் 2026-ல் அதிமுகவும், 2016-ல் காங்கிரசும் வெற்றி பெற்றன. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், பா.ஜ.க.வின் எல்.முருகனை வீழ்த்தி வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பிடித்தார்.</p><p>​இவ்வாறாக ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கைவிடப்பட்டன- தணிக்கை அறிக்கையில் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eight-smart-city-projects-in-chennai-were-dropped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eight-smart-city-projects-in-chennai-were-dropped#comments</comments><guid isPermaLink="false">96513549-b721-4a3d-8be7-828c96830270</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:55:29 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:55:29.994Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Chennai Corporation,சென்னை மாநகராட்சி,ஸ்மார்ட் சிட்டி,SmartCity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/aofp13oe/Smartcity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/aofp13oe/Smartcity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் கைவிடப்பட்டன. திட்டமிடாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பகுதிக்கு வெளியே செலவிடப்பட்டு உள்ளது. 2014 நிதியாண்டு முதல் 2024 வரையிலான இத்திட்டங்களில் உள்ள விலகல்களை மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/ஸ்மார்ட்-சிட்டி">ஸ்மார்ட் சிட்டி</a> திட்ட செயலாக்கம் குறித்த செயல்திறன் தணிக்கையின் முடிவுகள் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சென்னைக்காக முதலில் திட்டமிடப்பட்ட 1366.25 கோடி ரூபாய் மதிப்புள்ளான 48 திட்டங்களில் ரூ.279.03 கோடி மதிப்பிலான 8 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. </p><h2><strong>சென்னை மாநகராட்சி</strong></h2><p>இவற்றில் நகர முன் முயற்சியின் கீழ் முன்மொழியப்பட்ட ரூ.248.47 கோடி மதிப்பிலான தெரு விளக்கு கண்காணிப்பு அமைப்பு மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும்.  இத்திட்டங்களை கைவிடுவதற்கு ஆவணங்களில் குறிப்பிட்ட நியாயப்படுத்தல் எதுவும் இல்லை என்று தணிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அதே நேரத்தில் திட்டமிடபடாத 20 பணிகள் ரூ.189.66 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீர் நிலைகளை சீரமைத்தல் உயிரி வாயு ஆலை, கண்ணம்மாபேட்டை சுடுகாட்டை  நவீனமயமாக்குதல், திறன் மிகு வகுப்பறைகள், போக்குவரத்து பூங்காக்கள் மற்றும் சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஒரு பசுமை கட்டிடம் ஆகியவை இதில் அடங்கும். </p><p>பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பகுதி சார்ந்த மேம்பாட்டு பகுதிக்கு வெளியே ரூ.76.32 கோடி செலவில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதும் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>மேலும் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக மற்றும் அலுவலக செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.16.23 கோடி திசை திருப்பப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-ministers-body-language-goes-against-human-dignity-nirmal-kumar-must-withdraw-his-remarks-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">f886d5a8-04a6-40f6-9fd9-cd69ba1f97a0</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:55:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:55:15.380Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,மு.க. ஸ்டாலின்,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/otd71bep/New-Project-2026-09-09T152438.569.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சரின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது; நிர்மல்குமார் தனது கருத்தை திரும்ப பெறவேண்டும் - திருமாவளவன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/otd71bep/New-Project-2026-09-09T152438.569.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து, தற்போதைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-explain-body-languge-is-certain-action-not-planned">முதலமைச்சர் விஜய்</a> செய்த செய்கைக்கு விசிக தலைவர் திருமாளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>மேலும் அமைச்சர் நிர்மல் குமார் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><h2>மனித மாண்புகளுக்கு எதிரானது</h2><p>“காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், விஜய் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. </p><p>எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும், மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.</p><h2>அகவையில் மூத்தோரை மதித்தல் வேண்டும்</h2><p>எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு.</p><p>கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை. அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். </p><p>எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனத்துடன் இருத்தல் நலம் பயப்படும்.</p><p>முதலமைச்சரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதலமைச்சரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும். </p><h2>அமைச்சர் கருத்தை திரும்பப் பெறவேண்டும்</h2><p>மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். </p><p>அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு- போராட்டம் நடத்த முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fishermen-oppose-construction-of-secretariat-at-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">e89a2a95-5745-4e62-a234-e0aaab60f9bb</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:30:34 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:30:34.870Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மீனவர்கள் போராட்டம்,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xknznt1y/TNGovt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xknznt1y/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சீனிவாசபுரம், முள்ளிமா நகர்  பகுதி மீனவர்கள்  புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.</strong></em> </p><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">புதிதாக தலைமைச் செயலகம் </a>கட்ட  அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை மாநகராட்சியும் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. </p><h2><strong>மீனவர்கள் எதிர்ப்பு</strong></h2><p>சுமார் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் 15 அடுக்கு தளங்களுடன் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். </p><p>சீனிவாசபுரம், முள்ளிமா நகர்  பகுதி மீனவர்கள்  புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 9 மீனவ கிராமங்கள் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களை திரட்டி தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கும் என்றும் மாற்றிடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்துகின்றனர்.</p><p>இது குறித்து மீனவர் சங்க தலைவர் விஜயன் கூறியதாவது:-</p><p>புதிய தலைமைச் செயலகம் இங்கு அமைந்தால் மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள்.</p><p>பட்டினப்பாக்கம், சாந்தோம், மயிலாப்பூர் பகுதிகளை உள்ளடக்கியது பள்ளி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படிக்கிறார்கள். </p><p>ஏற்கனவே ஆட்சி புரிந்த தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள்  பட்டினப்பாக்கத்தை தேர்வு செய்யவில்லை. கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் இடத்தை மட்டும் கணக்கில் கொண்டு தலைமைச் செயலத்தை இங்கு கட்ட த.வெ.க. அரசு முடிவு செய்துள்ளது. வருகிற 15-ந்தேதி சீனிவாசபுரத்தில் அனைத்து மீனவ அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த 9 கிராமங்கள் தவிர பழவேற்காடு முதல் கோவளம் வரை உள்ள மீனவ மக்களின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.</p><p>கூட்டத்தில் தமிழக அரசின் இந்த முடிவைக் கைவிடக்கோரி  தீர்மானம் நிறைவேற்றப்படும். அரசு மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரே செடியில் இரு வண்ண டேலியா மலர்கள் - செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dahlia-flowers-of-two-colors-on-a-single-plant-at-the-ooty-botanical-garden</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dahlia-flowers-of-two-colors-on-a-single-plant-at-the-ooty-botanical-garden#comments</comments><guid isPermaLink="false">ecfa2096-1dd0-4c66-b3a7-60a97c06cc59</guid><pubDate>Wed, 09 Sep 2026 09:20:03 +0000</pubDate><atom:updated>2026-09-09T09:20:03.389Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Tourists,சுற்றுலாப் பயணிகள்,Ooty Botanical Garden,ஊட்டி தாவரவியல் பூங்கா,Dahlia Flowers,டேலியா பூக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/jfb19dio/Dahliaflowers.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dahlia flowers]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/jfb19dio/Dahliaflowers.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன. </p><p>இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.</p> <p>குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனை போலவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிலவும் இரண்டாம் சீசனிலும் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.</p><p>இந்த நிலையில், 2-ம் சீசனுக்காக அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">தாவரவியல் பூங்கா</a>விற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான வண்ண மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் பல செடிகள் பூக்க தொடங்கியுள்ளதால், பூங்காவின் பல பகுதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்க தொடங்கியுள்ளன.</p> <p>இதில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது ஒரே டேலியா செடியில் பூத்துள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மலர்கள். ஒரே செடியில் இருவேறு வண்ணங்களில் அழகாக மலர்ந்துள்ள டேலியா பூக்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசிப்பதுடன், அவற்றின் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.</p> <p>பசுமையான பூங்காவிற்கு நடுவே மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் மலர்ந்துள்ள டேலியா மலர்கள் பார்வையாளர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளன. </p> <p>2-ம் சீசனில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பெட்டுனியா, சால்வியா, டேலியா, மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்ச் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்ச்செடிகளுக்கு தேவையான தண்ணீர் ஊற்றுதல், களைகளை அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார் &apos;தேர்தல் மன்னன்’ பத்மராஜன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-election-king-padmarajan-files-nomination-for-256th-time#comments</comments><guid isPermaLink="false">5176c4c0-1b32-4401-ab08-f05041017518</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:55:52 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:55:52.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Election King Padmarajan,இடைத்தேர்தல்,தேர்தல் மன்னன் பத்மராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Election King Padmarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/pejyhzfv/padmarajan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.</p><h2>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain">மதுராந்தகம்</a>, தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் மன்னன்</h2><p>இந்நிலையில், ‘தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் மேட்டூரைச் சேர்ந்த கே. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%20">பத்மராஜன் </a>தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.</p> <p>1988-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், சமீபத்தில் மேல்சபை தேர்தலுக்கு (255-வது முறை) மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அவர் 256-வது முறையாக வேட்பு மனுவை அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ai-generated-photos-of-80s-kids-are-trending-on-social-media#comments</comments><guid isPermaLink="false">d5a0fb62-3d91-43fe-a5cc-6abe90fadcde</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:46:07 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:46:07.183Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>AI,Social Medias,ஏஐ,AI Photos,ஏஐ புகைப்படங்கள்,சமூக வலைத்தளங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது புகைப்படம்-  எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/acouu3pk/AIphotos.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர்.</strong></em> </p><h2><strong>சமூக வலைத்தளங்கள்</strong></h2><p>இன்றைய இளம் தலைமுறையினர் <a href="https://www.maalaimalar.com/topic/ஏஐ">சமூக வலைதளங்களில்</a> சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். அதே நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வயது வித்தியாசமின்றி பலரும் மூழ்கி கிடப்பதையும் காண முடிகிறது.</p><p>இப்படி முகநூலில் பல்வேறு விஷயங்கள் புகைப்படங்களோடு டிரெண்டிங் ஆவது வழக்கம். இதற்கு முன்பு ஜிப்லி புகைப்படங்கள் கார்ட்டூன் வடிவில் வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.</p><h2><strong>லைக்குகள்</strong></h2><p>இந்த நிலையில் தற்போது 80 கிட்ஸ் ஏ.ஐ. புகைப்படங்களை 80களில் வெளியான ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அணிந்திருப்பது போன்ற ஸ்டைலான உடைகளுடன் உருவாக்கி வருகின்றனர். அனைத்து தரப்பினரும் தங்களது இளம்வயது புகைப்படங்கள் ஏ.ஐ. மூலமாக உருவாக்கி தங்களது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை பெற்று வருகிறார்கள்.</p><p>தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சதீஷ் முதலமைச்சர் விஜய்யுடன் இருப்பது போன்ற இளம்வயது தோற்றத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப சமூக வலைதள பக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் இளம் வயது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் புல்லட்டில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு 80 டிரெண்டிங் என்று பதிவிட்டுள்ளனர்.</p><p>இதே போன்று நடிகர்-நடிகைகள் பலரும், அரசியல் பிரமுகர்களும் ஏ.ஐ. புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-to-hold-statewide-protest-over-cm-vijays-remarks-in-assembly#comments</comments><guid isPermaLink="false">3e18b694-8daa-452b-a0ab-eef498e586ee</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:40:50 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:40:50.285Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,DMK,திமுக,dmk protest,கண்டன ஆர்ப்பாட்டம்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/wvo9k5f8/Anna-arivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து - குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி – போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியைக் கைப்பற்றி - அதுவும் ஆட்சி அமைக்கும் வலிமையைப் பெறமுடியாத மைனாரிட்டி நிலைமை என்பதால் - தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளைக் கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று  - அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதலமைச்சராகியிருக்கிறார் நடிகர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">விஜய்</a>.</p><p>இப்பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாரா? என்றால் இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை அரைகுறையாகச் செய்து ஏமாற்றி வருகிறார்.  திராவிட மாடல் ஆட்சி மூலமாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினார். நிறுத்த முடியாத திட்டங்களுக்கு பெயரை மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைச் சிறப்பாகச்  செய்து வருகிறார்.</p><p>கொலை - கொள்ளை அதிகமாகிவிட்டது. போதை பொருள் நடமாட்டமும் - பாலியல் வன்முறையும் அதிகமாகிவிட்டது. பல்வேறு குற்றச்செயல்களில் த.வெ.க. நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். அதற்கு எந்த நடவடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.</p><p>'தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்' என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள். இதில் இருந்து திசை திருப்புவதற்காக தனது டயலாக் சூட்டிங் மேடையாக தமிழ்நாடு சட்டமன்றத்தை முதலமைச்சர் மாற்றி விட்டார்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதலமைச்சர் தலைவர் கலைஞரையும் - இந்தியாவின் புகழை தோகா மாநாட்டில் நிலைநாட்டிய பொருளாதார மேதை முரசொலி மாறனையும், திருமணம் ஆன ஐந்தே மாதத்தில், 23 வயதில்<a href="https://www.maalaimalar.com/search?q=%20MISA" rel="nofollow"> MISA </a>(Maintenance of Internal Security Act) அவசரநிலைச் சட்டத்தில் கைதாக்கப்பட்டு சிறைச்சாலை சித்திரவதைகளை அனுபவித்து, ஓராண்டு காலம் சிறையில் இருந்த தியாகத்தைச் செய்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தியாகத்தை  கொச்சைப்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது. அரசியல் உலகில் இத்தகைய அருவெறுப்பான உரையை சட்டமன்றம் கண்டிருக்காது.</p><p>அவரது உரை மூலமாக சட்டமன்றத்தின் மாண்பு – மரபு - வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கிறது. படங்களாக அந்த அவையில் நிற்கிறவர்கள் தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்திருப்பார்கள்.</p><p>சில அமைச்சர்கள்   சட்டமன்றத்தில் தான் பேசுவது தவறு என்று தெரிந்தே பேசி,  'மீம்ஸ்', 'ரீல்ஸ்'-ஐ வெளியிடுகிறார்கள். நேரலை மூலமாக மக்களை சென்றடைந்த பிறகு அதை ஒப்புக்கு அவைக்குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்கிறார்கள்.   இப்படியாக தந்திர மேடையாக சட்டசபையை த.வெ.க. அரசு பயன்படுத்துகிறது.</p><p>ஆட்சியின் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதலமைச்சர் விஜய் மாறியிருக்கிறார்.  இவரது இப்பேச்சைக் கண்டிக்கும் வகையில், தி.முக.. சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 12.09.2026 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடைபெறும்.</p><p>இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் -  மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள்,  அனைத்து சார்பு அணிகளில் உள்ள நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்  கழக உடன்பிறப்புகள்  அனைவரும் கலந்து கொண்டு  முதலமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்... அதனால் வெற்றி நிச்சயம் - வேட்பாளர் பரந்தாமன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/paranthaman-says-dmk-cadres-have-a-strong-presence-on-ground-therefore-victory-is-certain#comments</comments><guid isPermaLink="false">75eea6da-c35e-431a-869d-ad04d7e9825d</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:36:38 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:36:38.688Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,பரந்தாமன்,Paranthamen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidate Paranthamen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/dj4gaqxh/paranthaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்று  மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கூறினார்.</p>  <p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <p>இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பிரதிநிதிகளுடன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced">தி.மு.க.</a> தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். </p><p>இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>  <p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries"> திமுக</a> சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார்.</p><p>இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.</p><p>* இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம்.</p><p>* தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெற்று வெற்றிக்கனியை தலைவரிடம் சமர்பிப்போம்.</p> <p>* மதுராந்தகம் வெற்றியை திமுக தலைமைக்கு சமர்பிப்போம்.</p><p>* தவெக ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.</p><p>* திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள், அதனால் வெற்றி நிச்சயம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/action-initiated-to-identify-and-demolish-a-dangerous-building-in-chennai#comments</comments><guid isPermaLink="false">03e40ea5-907a-4d95-bf31-d39b404aa83e</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:30:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:30:15.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/1k6ituja/building.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p>பருவமழை காலம் தொடங்க இருப்பதால் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் கண்டு அதனை  இடிக்க வேண்டுமென்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மாநகராட்சி</a> கமிஷனர் சமீரன் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>ஆபத்தான கட்டிடங்கள்</strong></h2><p>சென்னை மாநகராட்சியில் ஆபத்தான கட்டிடங்களை அடையாளம் காணுதல், கட்டடத்தில் வசிப்பவர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க வேண்டும்.</p><p>விரிவான வழிகாட்டுதல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள், பழுதடைந்த சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக வழங்கப்படுகின்றன. உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோர் தங்களுக்குரிய வார்டுகளுக்குள் உள்ள ஆபத்தான கட்டடங்களை, வழக்கமான தள ஆய்வுகளின்போது அடையாளம் கண்டு, அந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.</p><h2><strong>நீதிமன்ற வழக்கு</strong></h2><p>கட்டடத்தின் தன்மை, வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக, அந்த இடத்தை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அந்த சொத்து அல்லது கட்டிடம் தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கிடையே ஏதேனும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.</p><p>நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது நீதிமன்றத்தால் குறிப்பிட்ட உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டிருந்தாலோ, அந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.</p><p>கட்டிடத்தின் கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதியாக மதிப்பிட முடியாத நிலையில், பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அல்லது சென்னை ஐ.ஐ.டி. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி, முறையான கட்டமைப்பு நிலைத்தன்மைச் சான்றிதழ் பெற வேண்டும்.</p><p>பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் கட்டிடத்திற்கு பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அந்த பணிகளின் அளவைப் பொறுத்து நியாயமான காலக்கெடுவிற்குள் அவற்றை மேற்கொள்ளுமாறு கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்த வேண்டும். </p><p>உரிமையாளர் அந்த அறிவிப்பின்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சென்னை மாநகராட்சியால் அந்த கட்டடம் இடிக்கப்படும். மேலும், கட்டிடத்தை இடிப்பதற்காக மாநகராட்சிக்கு ஏற்பட்ட செலவுகள்  கட்டட உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும்.</p><p>ஆபத்தான கட்டடத்தை காலி செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறும் அல்லது காலி செய்ய மறுக்கும் எந்த நபரையும், காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றலாம். </p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்க்கும் தவெக அரசு..! மதுரை மாணவன் கொலை விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-seeks-uncompromising-investigation-students-body-in-sewage-pond#comments</comments><guid isPermaLink="false">364cf0f1-562a-48a1-a923-56cad4e5af8c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:19:24 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:19:24.033Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,student death,பள்ளி மாணவன் உயிரிழப்பு,கழிவுநீர் குட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/h5xsyzxp/kanimozhi-MP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?</p><p>மதுரை அருகே காணாமல் போன 11ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களுடன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சமரசமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">கொலை</a> செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது.</p><p>சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.</p><p>மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/risk-of-severe-service-disruption-due-to-banks-remaining-closed-for-four-days#comments</comments><guid isPermaLink="false">1f0a0b4a-2a1e-414d-a173-73b460fd6f2c</guid><pubDate>Wed, 09 Sep 2026 08:13:16 +0000</pubDate><atom:updated>2026-09-09T08:13:16.757Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சேவை பாதிப்பு,Banks Strike,Banks Closed,வங்கிகள் வேலை நிறுத்தம்,வங்கிகள் மூடல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:title><media:description type="html"><![CDATA[ வங்கி மூடல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/gh85sdju/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</strong></em></p><p>வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் <a href="https://www.maalaimalar.com/topic/வங்கிகள்">வேலை நிறுத்தம்</a> நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது.</p><p>பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள், கூட்டுறவு, கிராமிய வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் வங்கி கிளைகளை மூடி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.</p><p>இந்த வேலை நிறுத்தத்தையொட்டி வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் நடக்கின்ற (வெள்ளிக்கிழமை) வங்கிகள் முழுமையாக மூடப்படுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 13-ந்தேதி  (ஞாயிற்றுக்கிழமை) பொது விடுமுறையாகும். 14-ந்தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறையாகும். 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வங்கிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>வார இறுதி நாள் தொடங்கி வாரத்தின் முதல் நாள் வரை 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் சேவை கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளிலும் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கக்கூடும். பல்லாயிரக்கணக்கான காசோலை பரிமாற்றங்கள்  நடைபெறாமல் பாதிப்பு ஏற்படும்.</p><p>பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், அந்நிய செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட வர்த்தக பணிகள் இதனால் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் ஏ.டி.எம்.களும் முடங்கக்கூடிய நிலை உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இது குறித்து அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:- </p><p>நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகளுக்கு பிரதி மாதம் சனி, ஞாயிறு விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது.</p><p>மேலும் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் மற்ற கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நிர்வாகம் மற்றும் அரசு தயக்கம் காட்டுகிறது. </p><p>எனவே நாளை மறுநாள் அனைத்து  வங்கிகளும்  மூடப்பட்டு ஊழியர்கள் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கிக் கிளைகள் செயல்படாது. சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம். மையங்களும் இயங்குவதற்கு வாய்ப்பில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கமும் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதை தவிர வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 182 குண்டங்களில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th</link><comments>https://www.maalaimalar.com/spirituality/meenakshi-amman-temple-kumbabishekam-on-sep-17th#comments</comments><guid isPermaLink="false">e2c8189d-96d3-4341-893e-884a6909b10e</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:39:08 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:39:08.460Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Kumbabishekam,கும்பாபிஷேகம்,மீனாட்சி அம்மன் கோவில்,meenakshi amman temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/q5kvqdx6/meenakshitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/q5kvqdx6/meenakshitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற 17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.</strong></em></p><p>உலக பிரசித்தி பெற்ற மதுரை <a href="https://www.maalaimalar.com/topic/மீனாட்சி-அம்மன்-கோவில்">மீனாட்சி அம்மன் கோவிலில்</a> 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 17-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.</p><p>12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்று ஆகம விதிகள் கூறியபோதும், கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. அதன் காரணமாக கும்பாபிஷேக பணிகள் தள்ளிப்போனது.</p><p>இந்தநிலையில் தற்போது ரூ.32.28 கோடி மதிப்பீட்டில் மீனாட்சி அம்மன் கோவிலில் 186 வகையான திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 6-ந்தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மறுநாள் முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.</p><p>இதையொட்டி வடக்கு ஆடி வீதியில் 182 யாக குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் சுழற்சி முறையில் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகளை மேற் கொண்டு வருகிறார்கள். அதில் முதல் நாளில் மூலவர் மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு பாலாலயம் செய்யப்பட்டது. அதாவது, மூலவர்களின் சக்தியை தற்காலிகமாக கும்பங்களில் எழுந்தருளச் செய்து, பாலாலய மூர்த்திகளுக்கு பூஜை நடக்கும். இதன் பின் கருவறையில் திருப்பணி, மருந்து சாற்றுதல் தொடங்கியது.</p><p>2-ம் நாளில் யாகசாலைக்கு காவலாக விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், முளைப்பாலிகை வளர்த்தல், மண்ணில் 9 வகை தானியங்கள் முளைக்க வைக்கும் அங்குரார்ப்பணம் நடந்தது.</p><p>3-ம் நாள் முதல் 10-ம் நாள் வரை கும்ப ஸ்தாபனம் மற்றும் ஹோமங்கள் நடைபெறும். இது தான் முக்கிய கட்டம். 182 குண்டங்களில் 182 சிவாச்சாரியார்கள் அமர்ந்து, ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒரு தெய்வத்தை ஆவாகனம் செய்து வருகிறார்கள். இதில் மூல குண்டம்-மீனாட்சி அம்மனுக்கு, பிரதான குண்டம்-சுந்தரேஸ்வரருக்கு, மற்ற குண்டங்கள்-415 பரிவார தெய்வங்களுக்கு, 14 கோபுர கலசங்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ளது.</p><p>3-ம் நாளான நேற்று யாகசாலையில் மூர்த்தி, சாந்தி, ஸம்ஹிதா ஹோமங்கள் நடைபெற்றது. 4-ம் நாளான இன்று காலை தீர்த்த சங்கிரஹணம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கங்கை, வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து புனித நீரையும், புனித கிணறுகளில் இருந்து நீர் எடுத்துவருதலும் நடந்தது.  </p><p>ஒவ்வொரு நாளும் வேத பாராயணம், ருத்ர ஜபம், தேவாரம், 108 தாமரை, 1008 சங்கு பூஜை என மந்திர ஒலி ஓயாமல் ஒலித்து வருகிறது. 11-ம் நாளான வருகிற 16-ந்தேதி, முதலில் 415 பரிவார தெய்வங்களான முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், துர்க்கை, முருகன் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும்.</p><p>இதையடுத்து 12-ம் நாள் மகா பூர்ணாஹூதி மற்றும் கடம் புறப்பாடும்,  17-ந்தேதி காலை தான் உச்சகட்டமாக யாகசாலையில் உள்ள புனித நீர் நிரம்பிய கலசங்கள், சிவாச்சாரியார்களின் தோளில் சுமந்து, மேள தாளத்துடன் கோபுர உச்சிக்கும், கருவறை விமானத்திற்கும் கொண்டு செல்லப்படும். காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் விமானம், சுந்தரேஸ்வரர் விமானம், ராஜகோபுர கலசங்களில் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.</p><p>அன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. யாகசாலை பூஜையின் இறுதி 6 நாட்கள் மூலவர் சன்னதிகளில் மருந்து சாற்றுதல், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கும் என்பதால் பக்தர்களுக்கு தரிசனம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>முன்னதாக கும்பாபிஷேக திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>2 தொகுதிகளில் இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-elections-in-two-constituencies-dmk-candidates-announced#comments</comments><guid isPermaLink="false">e6a7695e-4197-44b1-b8ce-3ae3891595a5</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:38:29 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:38:29.966Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,by election,வேட்புமனு தாக்கல்,DMK Candidates,இடைத்தேர்தல்,திமுக வேட்பாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Candidates]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/is5rlcv0/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>ராஜினாமா</h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். </p><p>இதேபோல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்பட்டது.</p><h2>விரிவான ஆலோசனை</h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a> அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர்.</p><p>2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p><h2>திமுக வேட்பாளர்கள்</h2><p>இந்நிலையில், வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p>தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>8-வது ஊதியக் குழு கூட்டம்: 35 லட்சத்துக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்குமா? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8th-pay-panel-consultation-over-3-5-million-central-govt-staff-may-benefit#comments</comments><guid isPermaLink="false">55d6e3ca-197a-472a-9467-cbd5288bf04f</guid><pubDate>Wed, 09 Sep 2026 07:20:17 +0000</pubDate><atom:updated>2026-09-09T07:20:17.332Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Government employees,8th Pay Commission,Fitment Factor,8-வது ஊதியக் குழு கூட்டம்,ஃபிட்மென்ட் ஃபேக்டர்,ஓய்வூதியதாரர் அமைப்புகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 8th Pay Commission ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/ti1fwn4g/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். </p><p>மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு, படிகள் மற்றும் ஓய்வூதிய மாற்றங்கள் குறித்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழுவின் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. </p><h2>சென்னையி<strong>ல் நடந்த க</strong>லந்தாய்வு கூட்டம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/bank-employees-nationwide-strike-on-11th-demanding-five-day-workweek-and-various-demands">மத்திய அரசு ஊழியர் சங்கங்கள்</a>, ஓய்வூதியதாரர் அமைப்புகள், ரெயில்வே மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரதிநிதிகளுடனான இரண்டு நாள் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை 8-வது ஊதியக் குழு சென்னையில் நடத்தியது. நேற்று (செப்டம்பர் 7) மற்றும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 8)  நடந்த இக்கூட்டத்தில், ஊழியர் அமைப்புகள் தங்களது கோரிக்கைகள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் அகவிலைப்படி சீரமைப்பு குறித்த கருத்துகளைக் குழுவிடம் நேரடியாக அளித்தன. சென்னை கூட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று புதுச்சேரியிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்கிறது.</p><h2>எத்தனை பேர் பயன் <strong>அடைவார்</strong>கள்</h2><p>மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ் தகவல்களின்படி, 2026 மார்ச் 1 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 35.77 லட்சம் சிவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், பாதுகாப்புத் துறையைத் தவிர்த்து 2025 டிசம்பர் 31 நிலவரப்படி சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் என ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஊதிய உ<strong>யர்வு நில</strong>வரம்</h2><p>ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழுவின் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ எவ்வளவு இருக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 6-வது ஊதியக் குழுவில் 1.86 ஆகவும், 7-வது ஊதியக் குழுவில் 2.57 ஆகவும் இருந்த இந்த காரணி, 8-வது ஊதியக் குழுவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஊகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசோ அல்லது ஊதியக் குழுவோ இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையோ அல்லது இறுதியான ஊதிய உயர்வு அளவையோ அறிவிக்கவில்லை. எனவே, இணையதளங்களில் உலா வரும் அதிகாரப்பூர்வமற்ற எண்களை ஊழியர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p>மத்திய அரசால் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்ட இந்த 8-வது ஊதியக் குழுவிற்கு, தனது இறுதி பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இக்குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கிவிடும் எனக் கருதப்படுகிறது. அரசாங்கம் அறிக்கையைப் பரிசீலித்து இறுதி முடிவெடுத்த பின்னரே புதிய ஊதியக் கட்டமைப்பு அமலுக்கு வரும் தேதியும் அரியர்ஸ் விவரங்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.</p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hogenakkal-boat-operate-after-24-days#comments</comments><guid isPermaLink="false">c288bf01-0509-4c76-b71a-75ae4c8dc64e</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:44:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:44:15.198Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,Hogenakkal,boat service,பரிசல் இயக்கம்,ஒகேனக்கல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22dx8e5f/hogenakkal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/22dx8e5f/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர்.</p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.</p> <h2>பரிசல் இயக்க அனுமதி</h2><p>நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்லில்</a> மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசலில் பயணம் செய்தனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p> <h2>மேட்டூர் அணை </h2><p>மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிய தொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%20">மேட்டூர் அணையின்</a> நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-nomination-filing-begins#comments</comments><guid isPermaLink="false">61a4fd50-a9ee-46af-a4cb-51b3bffcdf1f</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:19:44 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:19:44.184Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/53cu51d1/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. </p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p>  <h2>வேட்பு மனு தாக்கல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. </p><p>இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.</p> <p>இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.</p> <h2>தேர்தல் நடத்தை விதிகள் அமல்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். </p><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>தேர்தல் ஆணையம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றப்பட்டு வருகின்றன.</p><p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய தீவிரமாகி உள்ளன.</p><p>மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-consult-with-2-constituency-district-secretaries#comments</comments><guid isPermaLink="false">dc53b8fb-6550-4993-abb9-b36be2feed16</guid><pubDate>Wed, 09 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-09T06:15:56.738Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,முக ஸ்டாலின்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/evc2fb7o/MKStalin002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.</strong></em></p><h2><strong>ராஜினாமா</strong></h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதே போல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில்  இணைந்தார்.</p><p>அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படுகிறது.</p><h2><strong>விரிவான ஆலோசனை</strong></h2><p>இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த தேர்தலில் த.வெ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து களம் காண வேண்டி இருப்பதால் தேர்தல் வியூகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.</p><p>இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக  யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-details-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-water-level-details-4#comments</comments><guid isPermaLink="false">8c8900d7-900f-4e69-8ad9-3da4eaee2e9e</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:43:32 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:43:32.392Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i19vxwjs/mettur.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:title><media:description type="html"><![CDATA[ மேட்டூர் அணை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/i19vxwjs/mettur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது.</strong></em> </p><p>கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a> நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர்  திறந்து விடப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அங்கிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைத்து விட்டனர்.</p><h2><strong>பரிசல் இயக்க தடை</strong></h2><p>இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் இன்று 25-வது நாளாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிய தொடங்கியது. </p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. </p><p>அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு வினாடிக்கு 12ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.38 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தள்ளிப்போகிறதா... தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்?- அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation#comments</comments><guid isPermaLink="false">aefec534-103e-4254-a579-d45785989d3f</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:34:43 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:34:43.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Minister Arunraj,TN Goldring scheme</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/bpypvbrt/AR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88" rel="nofollow">ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை</a>யில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை, அமைச்சர் அருண் ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.</p><p>இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- </p><p>எலும்பு மஜ்ஜை தானம்</p><p>குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>எலும்பு மஜ்ஜை தானம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் அதற்கான பதிவு தொடங்கப்பட உள்ளது.</p><p>ரத்த தானம், கண் தானம்போல் ஸ்டெம்செல் தானத்திற்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது.</p><p>தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள பிரச்சனை சரி செய்யப்படும், தரம் உயர்த்தப்படும்.</p><h2>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் வழங்கப்பட உள்ள தங்கத்தில் எவ்வித குறையும் இருக்காது.</p><p>916 தங்கம் தானா? என முறையாக சோதனை செய்த பின்னரே தங்க மோதிரம் திட்டத்திற்கு தங்கம் அனுப்பப்படும்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தரப்படும் மோதிரத்தையும் பயனாளர்கள் சோதனை செய்து கொள்ளலாம்.</p><p>தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் காரணமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போகிறது.</p><p>ஏற்கனவே நிர்ணயித்த தேதியில் திட்டத்தை தொடங்க முடியவில்லை. இத்திட்டம் தொடங்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-strict-implementation-of-the-anti-smoking-law#comments</comments><guid isPermaLink="false">acf23728-6c5a-4d2d-acaa-2f0069c14ebd</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:23:28 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:23:28.852Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/tm4yv6lq/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும்  3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக அளவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் கூட,  சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.</p><h2><strong>ஆபத்து</strong></h2><p>இங்கிலாந்திலிருந்து வெளிவரும் லான்செட் குழுமத்தின் ஆன்லைன் மருத்துவ இதழான The Lancet Public Health-இல் வெளியாகியுள்ள ஆய்வுக்கட்டுரையில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால்  2023-ஆம் ஆண்டில் மட்டும் 3 லட்சத்து 25,600 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 1990-ஆம் ஆண்டில் இதே முறையில் ஏற்பட்ட 2 லட்சத்து 17,700 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும் போது இது 49.56% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களின் உயிரிழப்பு விகிதல் 61.74 விழுக்காடும், பெண்களின் உயிரிழப்பு  38.35 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோரின் எண்ணிக்கை 37.50 கோடியில் இருந்து 44.40 கோடியாக வெறும் 18.40% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50% அளவுக்கு அதிகரித்திருப்பது தான் இந்த விவகாரத்தின் தீவிரத்தையும், ஆபத்தையும் உணர்த்தியுள்ளது.</p><p>இந்தியாவில் இந்த அளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம் பொது இடங்களில் புகை பிடிப்பது கட்டுப்படுத்தப்படாதது தான். சமூக அக்கறை சிறிதும் இல்லாமல் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் வழக்கம் இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அவ்வாறு புகைப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிக்கும் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தான், 2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த போது,  பொது இடங்களில் புகைப்பிடிப்பதை  தடை செய்யும் சட்டத்தைக் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றி 2008-ஆம் ஆண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினேன். அதன்பிறகு தான் திரையரங்குகள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும்  பிறர் புகைத்து வெளியிடும் புகையை சுவாசிக்காமல் நடமாடும் ஆரோக்கியமான சூழ்நிலை உருவானது.</p><p>பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு என்றாலும் கூட, அதை நடைமுறைப்படுத்தும் கடமையும், பொறுப்பும் மாநில அரசுகளுக்குத் தான் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.</p><p>எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 02.10.2008 முதல் கடந்த 2024 மார்ச் 31-ஆம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு வெறும் 68 பேர் மட்டும் தான் பொது இடங்களில் புகைப்பிடித்ததாகக் கூறி அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது; அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்து சராசரியாக ரூ.177 மட்டும் தான் தண்டமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இந்தச் சட்டம்  எவ்வளவு அலட்சியமாக செயல்படுத்தப்படுகிறது என்பதை உணரலாம்.</p><p>2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரையிலான காலத்தில் இந்த சட்டத்தின்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் நடப்பாண்டுக்கான மருத்துவத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்படவில்லை. இதனால், இந்த சட்டத்தின் அடிப்படையில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய அரசு விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.</p><p>நேரடியாக புகைப்பிடிப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுமோ, அவை அனைத்தும் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிகரெட்  புகையில் கலந்துள்ள நிகோட்டின் என்ற வேதிப்பொருளை உள்ளிழுக்கும் போது, அது மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் இரத்த நாளங்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இதய நோய், பக்கவாதம், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease - COPD), ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களும் சிகரெட் புகையை மக்கள் சுவாசிப்பதால் ஏற்படுகின்றன. இந்த நோய்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களும், குழந்தைகளும் தான்.</p><p>பெண்களும், குழந்தைகளும் எந்தத் தவறும் செய்யாதவர்கள். பொதுவெளிகளில் யாரோ சிலர் சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த ஒரே பாவத்திற்காக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 56,900 பெண்கள் உயிரிழக்கும் கொடுமையை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. எனவே, பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>‘கள்’ இறக்கப் பரிந்துரை - நயினார் நாகேந்திரன் வரவேற்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-welcome-recommendations-to-palmwine#comments</comments><guid isPermaLink="false">1dda40c6-a219-47f3-99af-06bde9157832</guid><pubDate>Wed, 09 Sep 2026 05:08:13 +0000</pubDate><atom:updated>2026-09-09T05:08:13.162Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,நயினார் நாகேந்திரன்,தமிழக அரசு,கள்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/16fk7oo8/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.</strong></em> </p><p>தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தார்மீக வெற்றி</strong></h2><p>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். மண்ணின் மைந்தர்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தவும், கிராமப்புறப் பொருளாதாரத்தில் புதிய ஒளியேற்றவும் இந்தப் பரிந்துரை ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.</p><p>இரசாயனக் கலப்புள்ள மது அரக்கனுக்கு எதிராக  பா.ஜ.க. தொடுத்த அறப்போர்களில், "மக்களின் உயிரைக் குடிக்கும் நச்சு மதுவை ஒழித்து, மண்ணின் பானமான கள்ளை அனுமதிக்க வேண்டும்" என்ற முழக்கம் எப்போதும் ஓங்கி ஒலித்துள்ளது. கள்ளுக்கு ஆதரவாக நான் தொடர்ந்து வாதிட்டும் வந்துள்ளேன். இந்நிலையில் இன்றைய ஆணையத்தின் பரிந்துரை மூலம் பாஜகவின் நீண்டகாலப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது.</p><p>எனவே, விவசாயிகளின் வாடிய முகத்தில் புன்னகை பூக்கவும், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் கருநிழல் தமிழகத்தை விட்டு விலகவும்,  த.வெ.க.  அரசு இந்தப் பரிந்துரையை வெறும் காகிதத்தோடு நிறுத்திவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல், உரிய பாதுகாப்பு விதிகளுடன் கள் இறக்கவும், சந்தைப்படுத்தவும் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் 'வசந்தத்தை' ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வர் விஜயை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">‘கள்’ இறக்கப் பரிந்துரைத்துள்ள நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறேன்!<br><br>மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான &#39;கள்&#39; இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன்.…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2097536838433206628?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>நெருக்கடியான பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வேண்டாம்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-no-need-hq-in-pattinapakkam#comments</comments><guid isPermaLink="false">9128e893-0c38-4af6-8f3f-688d0310bde9</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:58:15 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:58:15.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,பட்டினப்பாக்கம்,புதிய தலைமை செயலகம்,pattinapakkam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/xwlu6gvz/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதகங்களை விட பாதகங்களே அதிகம்</strong></h2><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைக்கு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருந்த நிலையில், பட்டினப்பாக்கம் பகுதியில் அந்த வளாகம் அமைக்கப்படவிருப்பதாக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் அது தொலைநோக்குப் பார்வையற்றதாகவே இருக்கும்.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 3-ஆம் தேதி அவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் மற்றும் அனைத்துத் துறை அலுவலகங்கள் அடங்கிய நிர்வாக வளாகம் ரூ.1200 கோடி செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த சில நாள்களாகவே சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தப் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறையில் ஆவணங்கள் இல்லாத 1.20 ஏக்கர் நிலம் உள்பட மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் 15 மாடி கட்டிடமாக புதிய வளாகம் அமைக்கப்படும்; அதில் அனைத்து வசதிகளும் இடம் பெறும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.  கடந்த 25 ஆண்டுகளாகவே புதியத் தலைமைச் செயலகத்திற்கான தேடல் நீடித்துக் கொண்டே இருக்கிறது.  ஆனாலும், இடம் அடையாளம் காண்பது முதல் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 80%க்கும் கூடுதலான பணிகள் முடிந்த நிலை வரை பல்வேறு கட்டங்களில் அம்முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இப்போது புதிய அரசால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. எனினும், புதிய தலைமைச் செயலக வளாகம் பட்டினப்பாக்கத்தில் தான் அமையும் என்றால் அதனால் ஏற்படும் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்.</p><h2><strong>நெரிசல்</strong></h2><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் போக்குவரத்து நெரிசல் ஆகும். சாந்தோம் சாலையிலும், பசுமைவழிச் சாலையிலும் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்காகத் தான் லூப் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் தான் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயம், புகழ்பெற்ற பள்ளிக் கூடங்கள், பத்திரப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளன. இவற்றுடன் புதிய தலைமைச் செயலகமும் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p>அடுத்ததாக, புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம், அனைத்துத் துறை அலுவலங்களைக் கொண்ட வளாகம் அமைக்க இப்போது அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 26.36 ஏக்கர் நிலம் போதுமானதல்ல. மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வளாகம் 15 மாடிக் கட்டிடமாக கட்டப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எப்.எஸ்.ஐ விதிகளின்படி அதற்கேற்ற வகையில் காலி இடமும், பசுமைப் பரப்பும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவை தவிர ஓர் தலைமைச் செயலக வளாகம் செயல்படும் இடத்தில், தீயவிப்பு நிலையம், அவசர மருத்துவ வசதிகள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரப்பட வேண்டியது கட்டாயமாகும். இத்தகைக் கட்டமைப்பு வசதிகளையும் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தினால், இப்போதுள்ள தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பட்டதைப் போன்ற இட நெருக்கடி மிக விரைவில் புதிய வளாகத்திலும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.</p><h2><strong>பாமகவின் கோரிக்கை</strong></h2><p>புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள்,  புதிய வளாகம் அடுத்த நூறாண்டுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு பட்டினப்பாக்கம் பொருத்தமான இடம் அல்ல என்பது தான் எனது கருத்து. முதலமைச்சர் விஜய் அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் இதற்காக சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை  அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை ஆகும்.</p><p>ஓர் அரசின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்வது தலைமைச் செயலகம் தான். அத்தகைய தலைமைச் செயலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது; அதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகம்  முழுவதும் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கிய கடந்த ஒரு நூற்றாண்டாக ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளில் அதற்கானத் தீர்வு ஒருங்கிணைந்த நிர்வாக நகரம் அமைப்பதாகவே இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்தியா தான் வழிகாட்டியாக இருந்துள்ளது.</p><p>ஆங்கிலேயர் ஆட்சியில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசின் தலைமைச் செயலகம் கொல்கத்தாவில்  இருந்து  தில்லிக்கு மாற்றப்பட்டது. அப்போது மொகலாயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்த தில்லியில் போதிய இட வசதிகள் இல்லாததால், புதுதில்லி என்ற நிர்வாக நகரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு 1911-ஆம் ஆண்டு திசம்பர் 12-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் திறப்பு விழா செய்யப்பட்ட அந்த நகரத்தில் தான் ஆங்கிலேயர் காலம் தொடங்கி இன்று வரை அரசின் தலைமைச் செயலகம், சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, உச்சநீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.</p><p>மலேஷியாவில் இதே போன்ற சிக்கல் ஏற்பட்ட போது, கோலாம்பூரில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள புத்ரஜெயாவில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டு 1999-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. தென் அமெரிக்காவின் பிரேசில் இன்னும் ஒரு படி மேலே சென்று தலைநகரத்தையே ரியோடி ஜெனிரோ நகரத்திலிருந்து 928  கி.மீ தொலைவில் பிரேசிலியா என்ற புதிய நிர்வாக நகரத்தை உருவாக்கி அங்கு மாற்றியது.</p><p>2001-ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கிழக்குக் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி தமிழ்நாட்டுக்கான தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம் ஆகியவற்றையும்  சென்னைக்கு வெளியில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரமாக உருவாக்க வேண்டும்.</p><p>அதில் தலைமைச் செயலகம், சட்டப்பேரவைச் செயலகம், அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கான மாளிகைகள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வசதிகள், தேசிய, உலகத் தலைவர்கள் வருகை தருவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்,  தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவைச் செயலகத்தில் பணியாற்றும் செயலாளர்கள் நிலையிலான இ.ஆ.ப அதிகாரிகள் தொடங்கி கடைநிலைப் பணியாளர்கள் வரை அனைத்துப் பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், உள் விளையாட்டு அரங்குகள், வணிக வளாகங்கள் என ஒரு நகரத்திற்கு என்னென்ன அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும்  கட்டமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை உள்ளிட்ட 5 பயணிகள் ரெயில் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/5-passenger-train-including-chennai-central-sulurpet-cancelled#comments</comments><guid isPermaLink="false">34f2e2bb-3c6b-4184-b4f3-3f2e6efe30ea</guid><pubDate>Wed, 09 Sep 2026 03:14:35 +0000</pubDate><atom:updated>2026-09-09T03:14:35.100Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,பயணிகள் ரெயில்,passenger train,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o1m5hoxg/passengertrian.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ பயணிகள் ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o1m5hoxg/passengertrian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பராமரிப்பு பணி காரணமாக சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் பெடபரியா-நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரை (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதையொட்டி சில பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-</p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.66039), சூலூர்பேட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் பயணிகள் ரெயிலும் (66042) நாளை ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66041) நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர் பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (66040) நாளை ரத்து செய்யப்படுகின்றன. </p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் (66003) நாளை ரத்து செய்யப்படுகிறது. </p><p>இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituency-by-elections-filing-of-nomination-begins-today#comments</comments><guid isPermaLink="false">49db7356-6110-402b-932c-2b190a94a6d0</guid><pubDate>Wed, 09 Sep 2026 02:52:57 +0000</pubDate><atom:updated>2026-09-09T02:52:57.696Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-09/o8f0vn26/petition.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.</p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். ஆனால் அவர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தேர்தல் ஆணையம் </a>அறிவித்தது. இந்தநிலையில், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.</p> <h2>வேட்புமனு தாக்கல்</h2><p>தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆர்.டி.ஓ.வுமான பெலிக்ஸ்ராஜா தலைமையிலான அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். </p><p>தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இதற்காக தேர்தல் பிரிவு அலுவலகம் அமைக்கப்பட்டு, வேட்புமனு படிவங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு பணிகளுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். இதற்காக 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் வீரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் த.வெ.க., தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p> <h2>கட்டுப்பாட்டு அறை</h2><p>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-constituency-facing-a-by-election-for-the-first-time">மதுராந்தகம்</a> தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தொலைபேசி வாயிலாக பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 1800-425-7088, 044-27427412 ஆகிய தொலைபேசி எண்களில் எந்த நேரமும் தெரிவிக்கலாம்.</p> <h2>வாக்காளர்கள் விவரம்</h2><p>மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 886 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 738 பெண் வாக்காளர்கள். 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர்.</p><p>தேர்தல் பணிகளை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>சுவர் விளம்பரங்கள் அகற்றம்</h2><p>தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p> <p>மேலும், வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் பிரசார கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகன ஊர்வலம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-september-2026#comments</comments><guid isPermaLink="false">271c6b9f-172f-4ef3-bb75-008623eab7d3</guid><pubDate>Tue, 08 Sep 2026 03:42:33 +0000</pubDate><atom:updated>2026-09-09T01:33:59.434Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-08/uj2yvx5o/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று பொதுத்துறை, அயலக தமிழர் நலன், மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி, ஓய்வூதியங்களும் ஓய்வுக்கால நன்மைகளும், போக்குவரத்து ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடக்க உள்ளது. </p><p>அமைச்சர்கள் செங்கோட்டையன், மரிய வில்சன், பார்த்திபன், தென்னரசு ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவார்கள்.</p> <h2>சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு உரை</h2><p>பேரவைக்கு என்று மரபுகள் உள்ளன. முதலமைச்சர் கண்ணியமாகவே பேசுவார்.</p><p>அவை மரபை மீறி முதலமைச்சர் பேசி இருக்கிறார்.</p><p>நீதி விசாரணையில் இருப்பதை பேச அனுமதி இல்லை.</p><p>நேற்று பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசும்போது நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.</p><p>அமலாக்கத்துறை அறிக்கையை முதலமைச்சர் விஜய் பேசியது அவையை மீறிய செயல், விதிக்குட்பட்டது அல்ல என்பது திமுக கருத்து.</p><p>ஜனநாயகத்திற்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார் மு.க.ஸ்டாலின் - எ.வ.வேலு </p> <p>பெரியார் கொள்கையை ஏற்றுள்ள திராவிட கழக தலைவர் வீரமணி கூட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சிறையில் இருந்தார் - எ.வ.வேலு</p><p>மிசா சட்டத்தை பற்றி முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக எதிர்ப்பு </p><p>நேற்று மாறன் பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார், அவைக்குள் இல்லாதவர் பற்றி பேசக்கூடாது என விதியில் உள்ளது -  எ.வ.வேலு </p> <p>கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்காரியா கமிஷனே கூறிவிட்டது.</p><p>குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் கூறிவிட்டது - எ.வ.வேலு</p><p>முதலமைச்சர் விஜய் ஆதாரம் இன்றி பேசிய அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் - எ.வ.வேலு</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>விசாரணையையோ நீதிமன்றத்தை பற்றியோ நேற்று முதலமைச்சர் விஜய் பேசவில்லை.</p><p>கலைஞர் எங்கெங்கு எல்லாம் பணம் வாங்கினார் என்பது ஏற்கனவே சர்காரியாக கமிஷனில் உள்ளது. </p><p>திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்கு கூட இருக்கலாம், அது எல்லாம் மிசா வழக்கு ஆகாது.</p> <p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, பெண்கள் தொடர்பான வழக்கிற்கு தான் கைது செய்யப்பட்டார்.</p><p>21-வது அம்ச திட்டம் என்று அம்மையார் இந்திரா காந்தி குறித்து மோசமாக பேசியதால் தான் ஸ்டாலின் கைது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஸ்டாலின் கைது குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்</p><p>எம்ஜிஆரும் அவையில் சர்காரியா கமிஷன் குறித்து பேசி உள்ளதால் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் - செங்கோட்டையன்</p><p>என்னை பேச விடமாட்டார்கள், தவெகவினர் பேசினாலே பயந்து எழுந்து நின்று கூச்சல் போடுவர் - அமைச்சர் ஆதவ்</p><p>மறைந்தவர்கள் பற்றியும் அவையில் இல்லாதவர் பற்றியும் முதலமைச்சர் பேரவையில் பேசுவது நியாயமில்லை - கே.என்.நேரு</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்று காட்டும் பொறுப்பு தவெக அரசுக்கு உள்ளது.</p><p>திமுக ஆட்சியில் நடந்தவற்றை ஒவ்வொரு துறையாக கிளீன் செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>ஊழல் என்ற புற்றுநோயை திமுக உருவாக்கி உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியின் மீது சர்காரியா கமிஷனிடம் புகார் அளித்ததே கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கல்யாண சுந்தரம் தான் - அமைச்சர் ஆதவ்</p><p>சட்டசபையில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசியபோது ஒரு நிமிடம் கூட திமுகவினர் கவனிக்கவில்லை -சபாநாயகர் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் திமுகவினர் என் அனுமதியின்றி போஸ்டர்களை காட்டினீர்கள்.</p><p>சர்காரியாக கமிஷன் செய்தி பற்றி பலமுறை மாமன்றத்தில் பேசப்பட்டுள்ளது.</p><p>மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி - சபாநாயகர்</p><p>நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய எதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை - சபாநாயகர்</p> <p>சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் அமளி</p><p>2 நாட்களாக பிரச்சனையில் ஈடுபடும் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேறுங்கள் - அவை முன்னவர் செங்கோட்டையன்</p><p>அவையின் மாண்பை எப்படி குறைக்க வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டு திமுக உறுப்பினர்கள் வந்துள்ளீர்கள்.</p><p>சட்டசபையை நடத்தவிடாமல் தடைசெய்யும் நோக்கத்திலேயே திமுக உறுப்பினர்கள் வந்துள்ளனர் - சபாநாயகர்</p><p>அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று தொடர்து திமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.</p><p>சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்தும், சூழ்ந்து நின்றும் திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பி வருகின்றனர்.</p><p>திமுக கொறடா எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன், அனைவரும் இருக்கையில் அமருங்கள் - சபாநாயகர்</p><p>சட்டசபை மாண்பை குலைக்கும் வகையில் செயல்படும் திமுக உறுப்பினர்களை அவை காவலர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு</p><p>சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்திருந்த திமுக எம்எல்ஏக்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர்.</p><h2>சபாநாயகர் உரை</h2><p>திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?</p><p>சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம்.</p><p>அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.</p><p>பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்</p> <p>அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?</p><p>முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.</p><p>தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. </p><p>என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி - சபாநாயகர்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்</h2><p>கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி முறைகேடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரிமை மீறல் புகார்.</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுத்துள்ளது திமுக.</p><p>தாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றெண்ணி எதிர்கால பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அனுமதியின்றி எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2000 கோடி எடுக்கப்பட்டது குறித்த விசாரணை தேவை.</p><p>80 பணிகளுக்கு எதிர்கால பட்ஜெட்டில் முன்கூட்டியே ரூ.2,000 கோடி ஒதுக்கியது மிகப்பெரிய தவறு - அமைச்சர் ஆதவ்</p><p>பட்ஜெட் அனுமதி இல்லாமலேயே 14-1-2026 அரசாணை மூலம் 2026-27-ம் ஆண்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி எடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பட்டியலில் உள்ள சாதி அடிப்படையில் மட்டும் பதிவு செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரி தமிழ்நாடு அரசு சார்பில் தீர்மானம்</p><p>பதிவேற்றம் செய்யப்பட்ட சாதிகளின் பட்டியலில் இருந்து சாதி விவரத்தை குறிப்பிடும் வகையில் வழிவகை செய்யக்கோரி தீர்மானம்</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரம் தொடர்பான திறந்தவெளி முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்</p><p>சாதி பற்றிய திறந்தவெளி பதிவுமுறையை மத்திய அரசு கைவிடக்கோரி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தீர்மானம்</p><h2>அதிமுக  சி.வி.சண்முகம் உரை</h2><p>நான் கவுண்டர் என கூறுவேன், வன்னியர் குல சத்திரியர் என சான்றிதழில் உள்ளது.</p><p>ஒரே சாதி பல்வேறு பிரிவுகளின் பெயரில் இருக்கிறது.</p><p>கடலூரில் படையாட்சி எனவும் சென்னையில் நாயக்கர் எனவும் கூறிக்கொள்வர்.</p><p>யாதவர்கள் தங்களது சாதி அடையாளத்தை 1931-ல் சரியாக தீர்மானித்துவிட்டனர்.</p><p>சுதந்திரத்திற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு - 4147 சாதிகள் இருந்தன.</p><p>2011-ல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது - சி.வி.சண்முகம்</p><p>நான் சார்ந்த சமூகம் ஓபிசி பட்டியலில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை எடுப்போம் என்று தான் மத்திய அரசு கூறி இருக்கிறது.</p><p>சாதிப்பட்டியலை வைத்துக்கொண்டு கணக்கெடுப்பு நடத்தவும். சாதிப்பட்டியலை டவுன்லோடு செய்து மக்களே பார்க்கும் வசதி தேவை - சி.வி.சண்முகம்</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>இந்தியாவிலேயே கடந்த 100 வருடங்களாக சமூகநீதிக்கான குரலை எழுப்பும் மாநில அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.</p><p>சமூகநீதிக்காக பிரதமர், முதலமைச்சர் பதவியை இழந்தவர்களின் வழியில் தவெக அரசும் தீர்மானம் நிறைவேற்றுகிறது.</p><p>தமிழகத்தில் மட்டும் மொத்தம் 370 சாதிகள் உள்ள நிலையில் மத்திய அரசின் பட்டியலில் 290 சாதிகள் மட்டுமே உள்ளது.</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் தவெக அரசின் கோரிக்கை</p><p>ரூ.12,000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு, மாநில  அரசுக்கு ஏற்றவாறு சாதிப்பெயரின் பட்டியல் தேவை.</p><p>சமத்துவமான மரியாதையுடன் வாய்ப்பையும் தருவதுதான் சமூக நீதி - அமைச்சர் ஆதவ் </p><p>மக்களிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் பட்டியல் வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - சி.வி.சண்முகம்</p><p>உயர் ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் ஆகியவை மிக முக்கிய பொது சுகாதார பிரச்சனைகள்.</p><p>தமிழ்நாட்டு மக்கள் நாளொன்றுக்கு 7 முதல் 8 கிராம் உப்பு உட்கொள்கின்றனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது - தவெக எம்எல்ஏ பல்லவி</p> <p>பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.</p><p>மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள் -  பல்லவி</p> <p>வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.</p><p>வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்  -  பல்லவி</p><p>போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.</p><p>இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன் -  பல்லவி</p> <p>என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும்.</p><p>சட்டசபையில் முதன்முறையாக பேசிய திருவிக  நகர் எம்எல்ஏ பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல்லவி பேசினார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-budget-session-ends-today">பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு</a></p><p>* பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.</p><p>* முதல்வர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-3-district-collectors-included-14-ias-officers-transferred">தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்</a></p><p>* சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம்.</p><p>* இன்னசென்ட் திவ்யா பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமனம்.</p>]]></content:encoded></item></channel></rss>