<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 18 Jul 2026 07:38:02 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026#comments</comments><guid isPermaLink="false">326d3728-e557-46b7-b4d5-7103447d079d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:01:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:35:08.499Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/epwadjm9/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/epwadjm9/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/981434e0-9e28-4646-8907-cfe4006ccd91">மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5">"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c">வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e">இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0">தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10">“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47">ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97077370-3769-42aa-bed7-5394eb95d5ed">பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601">அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343">"தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்"- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b">விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital">21 நாளாக உண்ணாவிரதம்: மோசமடைந்த உடல்நிலை - சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b">"தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்"- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/8a8f042c-3464-4915-b85c-75f85f017832">உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551">உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th">வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</a></p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-procedures-for-self-registering-details-online#comments</comments><guid isPermaLink="false">981434e0-9e28-4646-8907-cfe4006ccd91</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:26:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:26:41.196Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,இணையதளம்,Website,மக்கள் தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான இணையதளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/983swwsn/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள் தொகை கணக்கெடுப்பு</a>  பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்     கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும் அதற்கு முன்னதாக  வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது. </p><h2><strong>வழிமுறைகள்</strong></h2><p>இது நேரடியாகவும்,  இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பாகவும் நடக்கிறது. இந்த சுய கணக்கெடுப்பு எவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற  வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை இணைய தளம் பதிவு செய்ய முதலில் <a href="https://se.census.gov.in/">http:/se.census.gov.in</a>   உள் நுழையுங்கள், மாநிலத்தை தேர்ந்தெடுங்கள், கேப்சாவை உள்ளிடுங்கள். </p><p>2-வதாக குடும்பத்தினர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி (விருப்பத்திற்குரியது) ஆகியவற்றை உள்ளிடவும். குடும்பத் தலைவரின் பெயரை பின்னர் மாற்ற முடியாது.  ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  ஒரு முறை பதிவு செய்யப்பட்டால் அதே எண்ணை வேறு எந்த குடும்பத்திற்கும் பயன்படுத்த முடியாது. </p><p>3-வதாக விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓ.டி.பி.யை உள்ளிடவும். (தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியை பின்னர் மாற்ற முடியாது).</p><p>பின்னர்  மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தபால் அஞ்சல் எண், கிராமம் , நகரம், பகுதியை  பதிவு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்கள் இருப்பிடத்தை வரைபடத்தில் கண்டறிய வேண்டும். உங்கள் சரியான குடியிருப்பு கட்டிடத்தை அடையாளம் காணவும் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்தவும் சிவப்பு குறியீட்டை வரைபடத்தில் இழுக்கவும். </p><p>தொடர்ந்து கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். உதவி குறிப்புகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அத்தியாவசிய தகவல், குறிப்புகளின் வழிகாட்டுதலுடன் வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு கேள்வித்தாளை நிரப்ப வேண்டும்.  இணையத்தில் உள்ளிடப்பட்ட அனைத்து தரவையும் சரிபார்க்க முன்னோட்ட திரையை பயன்படுத்தவும். பதிவுகளை திருத்தலாம். பின்னர் சமர்ப்பிக்க வரைவை சேமிக்கலாம், அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். </p><h2><strong>சமர்ப்பித்தல்</strong> </h2><p>உங்கள் தரவை பூட்ட இறுதியாக சமர்ப்பிக்கவும் என்பதை கிளிக் செய்யவும். இறுதி சமர்ப்பிப்புக்கு பிறகு மாற்றங்கள் செய்ய முடியாது. சமர்ப்பிக்கப்பட்ட பின் தங்களது மொபைல் எண்ணிற்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக பெறப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-government-orders-a-ban-on-the-transfer-of-officials-until-august-31">கணக்கெடுப்பாள</a>ர் உங்கள் வீட்டிற்கு வரும் போது உங்கள் எஸ்.இ. ஐ.டி. அவரிடம் பகிர வேண்டும். கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை சரி பார்த்து திருத்தங்கள் இருப்பின் சரி செய்வார். </p><p>இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி இணையத்தில் சுய விவரங்களை பதிவு செய்யலாம்.</p>]]></content:encoded></item><item><title>விளவங்கோடு  சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நினைவு ஜெபம் - விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-prayer-for-vilavancode-mla-praveens-mother-mp-vijay-vasanth-participates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-prayer-for-vilavancode-mla-praveens-mother-mp-vijay-vasanth-participates#comments</comments><guid isPermaLink="false">2c3368fc-4cdb-4033-8684-059cb5094ea2</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:25:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:25:42.027Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,kanyakumari,Vijay Vasanth,விஜய் வசந்த்,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/58tqqna2/vijayvasanth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/58tqqna2/vijayvasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் தாயார் நான்காம் நாள் நினைவு ஜெபத்தில் கன்னியாகுமரி விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றார்.</p><p>விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் கடந்த 14-ந்தேதி மரணமடைந்தார். அவர்களது 4-ம் நினைவு ஜெபம் இன்று பாறசாலையை அடுத்த சிறிய கொல்லா இல்லத்தில் வைத்து நடைபெற்றது. </p><p>நிகழ்ச்சிக்கு தென் கேரளா சி.எஸ்.ஐ. பேராயர் பினிஸ்டான் பென் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பு பொதுச் செயலாளரும் எம்பி.யுமான கே.சி வேணுகோபால், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்,எம்பி, கேரளா காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சனல், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், </p><p>முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர். பினுலால் சிங், மீனவர் அணி மாநில தலைவர் ஜோர்தான் மற்றும் கேரளா தமிழக சி.எஸ்.ஐ. போதகர்கள், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மரணமடைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவீன் அவர்களின் தாயார் தங்கம் தாம்சன் அவர்களது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/aadi-thapasu-festival-begins-at-sankaranarayana-swamy-temple</link><comments>https://www.maalaimalar.com/spirituality/aadi-thapasu-festival-begins-at-sankaranarayana-swamy-temple#comments</comments><guid isPermaLink="false">21c794c9-3015-45d1-ab6e-d3d8d53b2bce</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:17:22 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:17:22.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சங்கரநாராயண சுவாமி கோவில்,aadi thapasu,ஆடித்தபசு விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dq8tl5rp/aadithapasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/dq8tl5rp/aadithapasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி  கோவில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் நாளில் தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு திருவிழா மிக முக்கிய திருவிழா ஆகும். </p><h2><strong>கொடியேற்றம்</strong></h2><p>இந்த  ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோமதி அம்பாள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா நடந்தது.</p><p>காலை 7.05  மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் இரவு மண்டகப்படியில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.</p><p>விழாவில் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டம்  நடைபெறுகிறது. ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தவமிருக்கும் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணனராக காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு  கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. </p><h2><strong>பக்தர்களுக்கு காட்சி</strong></h2><p>தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தங்கச்சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயணசுவாமியாக  ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து  29-ந் தேதி (புதன்கிழமை) சுவாமி அம்பாள் இரண்டு சப்பரங்களில் ஒரே நேரத்தில் சப்தா வர்ணத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. </p><p>கொடியேற்ற விழாவில் தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், அ.தி.மு.க. மாநில மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கவுசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் லட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;என்னை நீக்க அதிகாரம் இல்லை&quot;- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasoundari-says-district-secretary-has-no-power-to-expel-her#comments</comments><guid isPermaLink="false">65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:13:57 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:13:57.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk,ஞானசவுந்தரி,Gnanasoundhiri</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gnanasoundhari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/3on4j6y6/gnanasoundhari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசௌந்தரி இன்று காலை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>ஞானசவுந்தரி விளக்கம்</h2><p>இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:-</p><p>என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலாளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம்.</p><p>முதல்வர் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்துகிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன்" என அவர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீக்கம் ஏன்?</h2><p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞராக நியமிக்க கோரியும்  உயர்நீதிமன்றத்தில் ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் ஞானசவுந்தரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில், எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-amma-mini-clinics-will-be-restarted#comments</comments><guid isPermaLink="false">fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82</guid><pubDate>Sat, 18 Jul 2026 07:07:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T07:07:09.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,அம்மா மினி கிளினிக்குகள்,amma mini clinic,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/52c4uvm9/MinisterArunRaj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை</h2><p>சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். உயர் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு வார்டுகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.</p><p>பின்னர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் 22 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட 'நலம் ஏ.ஐ.' வாட்ஸ்அப் செயலி வாயிலாக, 1.25 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதேபோன்று, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நெஞ்சக சிகிச்சை பிரிவில் தொடங்கப்பட்ட புறநோயாளிகள் இணைய முன்பதிவு நடைமுறையால் 500 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனைக்கு காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது.</p> <h2>மருத்துவ படிப்பு</h2><p>மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாலை நேர மினி கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அம்மா மினி கிளினிக்</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. போதிய திட்டமிடல் இல்லாமல் தொடங்கப்பட்டதாக கூறி அவை தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது <a href="https://www.maalaimalar.com/news/puducherry/tvk-cadres-crowded-tn-minister-bussy-anand-house">த.வெ.க.</a> அரசு அந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முனைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!- மாணிக்கம் தாகூர் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/since-2014-152-exam-paper-leaks-nationwide-manickam-tagore-slams#comments</comments><guid isPermaLink="false">55c3d3e3-7a0c-44ad-b10e-be7db6b357cc</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:40:31.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,question paper leak,bjp govt,தேர்வுத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Congress leader Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/1qvuqyy4/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்; மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டும் 60%-க்கும் மேற்பட்ட முறைகேடுகள் ஏன்" என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>மேலும் அவர்,"இளைஞர்கள் எதிர்காலத்தை கெடுக்கும் Doubtful Engineஆக பாஜக அரசு மாறிவிட்டது; பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? தேர்வுத்தாள் கசிவு குறித்து மத்திய கல்வி அமைச்சரிடம் என்ன பதில் உள்ளது?" என்றார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>2014 முதல் நாடு முழுவதும் 152 தேர்வுத்தாள் கசிவுகள்!</p><p>​இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!</p><p>​பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது! </p><p>மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்</p><p>அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-why-did-the-cmda-go-bankrupt-lacking-even-the-funds-to-pay-salaries#comments</comments><guid isPermaLink="false">17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:23:07 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:23:07.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/2t9w01k1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.எம்.டி.ஏ அமைப்பின் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கையேந்தும் நிலை</strong></h2><p>சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அடுத்த மாதத்திற்கான ஊதியம் வழங்கக் கூட பணமின்றி திவாலாகி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் உதவி கேட்டு கையேந்தும் நிலைக்கு சி.எம்.டி.ஏ தள்ளப்பட்டது ஏன்? என்ற உண்மை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். 1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட  இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சியில்</strong> </h2><p>ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு பணம் இல்லை என்பதால், உடனடியாக மானியம் மற்றும் நிதியுதவியாக ரூ.200 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்மையில் சி.எம்.டி.ஏ. கடிதம் எழுதியதைத் தொடர்ந்து தான் அதன் அவலநிலை அம்பலமாகி உள்ளது. சி.எம்.டி.ஏ அமைப்புக்கு இன்றைய நிலையில் சுமார் ரூ.3500 கோடி அளவுக்கு கடன் பொறுப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ. அமைப்பு இயல்பாக செயல்பட்டிருந்தால் இவ்வளவு சுமை ஏற்பட வாய்ப்பில்லை.</p><p>ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் சி.எம்.டி.ஏ மூலம் சென்னையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தான் சி.எம்.டி.ஏ. இவ்வளவு பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சி.எம்.டி.ஏ.வின் முதன்மைப் பணி என்பது கட்டுமானப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது தான். அதற்காக வசூலிக்கப்படும் மிகக் குறைந்த கட்டணம் தான் சி.எம்.டி.ஏ.வின் ஒற்றை வருவாய் ஆதாரம் ஆகும். அதைக் கொண்டு தான்  ஊழியர்களுக்கான ஊதியம், நிர்வாகச் செலவுகள்  ஆகியவற்றை சி.எம்.டி.ஏ. சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. அமைப்பின் நிர்வாகம் நடைபெற்று வந்தது.</p><h2><strong>நிதியை கொள்ளையடிக்க சதி</strong></h2><p>சென்னைக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய சுமை சி.எம்.டி.ஏ மீது சுமத்தப்பட்டதால் தான் அதன் நிதி நிலை மோசமடைந்தது. சென்னை மாநகரில் மிகப்பெரிய அளவில்  கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மேற்கொள்ள வேண்டியது தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் பணி ஆகும்.  சி.எம்.டி.ஏ. என்பது அடிப்படையில் ஒழுங்கு முறை அமைப்பு ஆகும். அத்தகைய அமைப்பின் மீது கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு சுமத்தப்பட்டது அதன் நிதியை கொள்ளையடிக்க நடந்த சதி ஆகும்.</p><p>முந்தைய திமுக ஆட்சியின் கடைசி ஓராண்டில் ஊழலும், கொள்ளையும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. ஊழல் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல ஆட்சியாளர்கள் துணிந்திருந்தனர். 2025-26ஆம் ஆண்டிலேயே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத சாலைத் திட்டங்களுக்கு 2026-27ஆம்  ஆண்டு நிதிநிலை அறிக்கை நிதியிலிருந்து ரூ.2000 கோடி  ஒதுக்கி ஒப்பந்தம் வழங்கும் அளவுக்கு திமுக அரசு விதிமீறல்களை அரங்கேற்றியது. இதற்கு காரணம் நிதி இல்லாத நிலையிலும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தம் விட்டு கையூட்டு வசூலிக்க வேண்டும் என்ற பேராசை தான். இதை கடந்த ஜனவரி மாதத்திலேயே அறிக்கை மூலம் அம்பலப்படுத்தி கண்டனம் தெரிவித்திருந்தேன்.</p><h2><strong>ஊதியம்</strong></h2><p>நெடுஞ்சாலைத் துறையை நிர்வகித்தவர்கள் அடுத்த ஆண்டுக்கான நிதியில் முன்கூட்டியே ஒப்பந்தம் வழங்கி ஊழல் செய்தால், சி.எம்.டி.ஏவை நிர்வகித்தவர்கள் தங்கள் பங்குக்கு ஊழல் செய்வதற்காக ஒழுங்குமுறை அமைப்பான சி.எம்.டி.ஏவை கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்து, அதற்கான ஒப்பந்தங்களின் மூலம் ஊழல் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் அந்த பேராசை தான் சி.எம்.டி.ஏவை ஊதியம் வழங்குவதற்கு கூட நிதி இல்லாத நிலைக்கு தள்ளியுள்ளது.</p><p>சி.எம்.டி.ஏ அமைப்பை உட்கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தியவர்கள் யார்? சி.எம்.டி.ஏ அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் யார், யாருக்கு வழங்கப்பட்டன?  அவற்றில் ஊழல்கள், முறைகேடுகள் நடந்தனவா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதே நேரத்தில் சி.எம்.டி.ஏ அமைப்பின்  பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேவையான நிதியை உதவியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-cbcid-probe-dmk-leaders-raids#comments</comments><guid isPermaLink="false">97077370-3769-42aa-bed7-5394eb95d5ed</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:18:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:18:09.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,பழனி கோவில்,pazhani,சிபிசிஐடி,cbcid</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pazhani Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/ej8oi7f8/pazhani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில், அலங்காரப் பணி செய்பவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது.</p><p>நெல்லையில் அலங்காரப் பணி செய்யும் சண்முக சுந்தரம் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p><p>வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பழனியில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் காலை முதலே சோதனை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>பழனி நில மோசடி விவகாரம்</h2><p>திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடி பதிவு செய்யப் பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>7 பிரிவுகளில் வழக்கு</h2><p>இந்த வழக்கில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளைத்துரை ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.</p><p>சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சம்மந்தப்பட்ட ஆவணம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி பதிவுக்காக சமர்ப்பிக் கப்பட்டது. அப்போதைய சார்பதி வாளர் பாலச்சந்தர் பதிவு செய்ய மறுத்து விட்டார்.</p><p>கடந்த ஏப்ரல் 10-ந் தேதி ரிட் மனு மீதான வழக்கில் ஆவணத்தை பதிவு செய்யு மாறு சார்பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் ஜூலை 3-ந் தேதி சார்பதிவாளர் பால சுந்தரம் பதிவு செய்தார். </p><p>பாலசுந்தரம் விடுப்பில் சென்ற காரணத்தால் மாவட்ட பதிவாளர் அனுமதியுடன் ஜூலை 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை ஜஸ்டின் மணிகண்டன் பொறுப்பில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் இந்த மனு பதிவு செய்யப் பட்டது என்றும், அதற்கு எண் ஒதுக்கீடு செய்து கலெக்டருக்கு பரிந்துரைக்க மட்டுமே தான் செய்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். </p><p>இதனையடுத்து ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்கி வருகிற 27-ந் தேதி முதல் ஆகஸ்ட்டு 3-ந் தேதி வரை திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கில் விசாரணையும் அகஸ்ட் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><h2>அதிகாலையில் சோதனை</h2><p>இந்நிலையில் இன்று காலை திண்டுக்கல் ரவுண்டு ரோடு லிங்கா அவென்யூ பகுதியில் அமைந்துள்ள ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீட்டில் சி.பி.சி.ஐ.டி.</p><p>டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் 8 பேர் கொண்ட போலீசார் விசாரணைக்கு வந்தனர். அப்போது அவரது வீட்டில் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>வங்கி கணக்கு விபரங்கள், பத்திரப்பதிவு செய்த நாளிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் அவரது செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.</p><p>இதே போல் பத்திரப்பதிவு செய்தபோது சாட்சி கையெழுத்து போட்ட வர்களின் விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். அதில் பழனி இடும்பன் கோவில் அருகே உள்ள லெட்சுமணன் என்பவரும் ஒருவர் என்பதால் அவரது  வீட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிகாலை சென்றனர். </p><p>ஆனால் அவர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கேட்டபோது தனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து அங்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதே போல் சாட்சி கையெழுத்திட்ட மேலும் சிலரது வீடுகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரைந்துள்ளனர். லெட்சு மணன் இப்பகுதியின் தி.மு.க. வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.</p><p>சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அரசியல் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சேதுபதி, வெள்ளைத்துரை ஆகியோர் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project#comments</comments><guid isPermaLink="false">8d3cd558-62ac-43d1-b95c-b53eed65cc54</guid><pubDate>Sat, 18 Jul 2026 06:06:16 +0000</pubDate><atom:updated>2026-07-18T06:06:16.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Police Investigation,போலீசார் விசாரணை,tvk,Meghalaya Project,மேகாலயா புராஜெக்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfyogev7/Vijay04.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yfyogev7/Vijay04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</aside><p>ஊத்தங்கரை  <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> எம்.எல்.ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்ப்பதற்காக ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணையை  தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2><strong>திருநாவுக்கரசு</strong></h2><p>சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு  என்பவர் மேலும் சிலருடன் சேர்ந்து இளையராஜா எம்.எல்.ஏ.வை அணுகி சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க எடுக்கும் நிலைப்பாட்டை மீறி அவர்கள் சொல்லும்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் ரூ.35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும். அவ்வாறு செயல்பட மறுத்ததால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்தான் போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.</p><p>இந்த வழக்கில் திருநாவுக்கரசோடு தொடர்பில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.</p><h2><strong>அதிரடி விசாரணை</strong></h2><p>போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில்  திருநாவுக்கரசு மேலும் சிலருடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>“மேகாலயா பிராஜெக்ட்” என்ற பெயரிட்டு  15 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கு இவர்கள் காய்  நகர்த்தி இருப்பதும் தெரிய வந்து உள்ளதாக போலீசார் கூறி உள்ளனர்.  திருநாவுக்கரசுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>செல்போன் தொடர்புகள்</strong></h2><p>திருநாவுக்கரசின் செல்போன் தொடர்புகள் அவரது வாட்ஸ்அப்  உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்துக்கும் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.</p><p>த. வெ. க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக திருநாவுக்கரசு படிப்படியாக மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களிடம்  செல்போன் மூலமாக தெரிவித்து வந்துள்ளார்.</p><p>வாட்ஸ் அப் வழியாகவும் தகவல்களை பரிமாறி இருக்கிறார். இது போன்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் அவரது நட்பு வட்டத்தில் இருந்த பலர் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பதிலும் அனுப்பி இருக்கிறார்கள்.</p><h2><strong>மேலும் பலர்</strong></h2><p>இதையெல்லாம் மையமாக வைத்து தான் இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இதன் மூலம்  த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில்  திருநாவுக்கரசரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் சிலரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><p>அவருடன் வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறியவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><h2><strong>விமர்சகர்கள்</strong></h2><p>இதன் முடிவில் இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பலரும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேகாலயா மாநிலத்தில் அடிக்கடி அரங்கேறுவது போன்ற ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபட்டதால் கைதானவர்கள் அதற்கு ‘மேகாலயா புராஜெக்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-wishes-to-tamil-nadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-wishes-to-tamil-nadu-day#comments</comments><guid isPermaLink="false">28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:41:40 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:41:40.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,TamilNadu Day,தமிழ்நாடு நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kv8j5gls/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/kv8j5gls/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். முன்னதாக நவம்பர் 1-ந்தேதி கொண்டாடப்பட்ட நிலையில், 2022 முதல் ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. </p><p>இந்நிலையில், ஜூலை 18-ந்தேதியான இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>எண்ணில்லா போராட்டங்களாலும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களாலும், நம் அன்னைத் தமிழ் நிலத்தின் பெயரை மீட்டளித்திட்ட நாள் இது.</p> <p>நம் கழகம் பெற்ற அதிகாரத்தால், நம் தாய்நிலம் தலைநிமிர்ந்து, தெற்கிலிருந்து தொடங்கும் இத்துணைக் கண்டத்தின் வரலாற்றை முழங்கும் இனமானச் சொல்லாக நிலைப்பெற்றுவிட்டது,  நம் தமிழ்நாடு!</p><p>பேரறிஞர் அண்ணா <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day">தமிழ்நாடு</a> என்று பெயர் சூட்டிய இந்நாளில், மாநில உரிமைகளைக் காத்திட உறுதிகொள்வோம். </p><p>“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasaundari-who-filed-a-case-against-minister-anand-has-been-removed-from-the-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gnanasaundari-who-filed-a-case-against-minister-anand-has-been-removed-from-the-tvk#comments</comments><guid isPermaLink="false">b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601</guid><pubDate>Sat, 18 Jul 2026 05:19:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T05:19:08.676Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,புஸ்ஸி ஆனந்த்,Bussy Anand,tvk,ஞானசவுந்தரி,Gnanasoundhiri</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4syrnrnv/TVK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Bussy Anand- Gnanasoundhari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/4syrnrnv/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வழக்கறிஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞரான நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி தவெகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>ஆன்லைன் மூலம் தவெகவில் இணைந்து எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து குற்றச்சாட்டு சுமத்திய ஞானசவுந்தரி நீக்கப்பட்டுள்ளார்.</p><p>எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-details-14</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bhavanisagar-dam-water-level-details-14#comments</comments><guid isPermaLink="false">d199cc0d-9786-4b00-a21c-35c7f4ce4090</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:53:56 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:53:56.784Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பவானிசாகர் அணை,bhavanisagar dam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/27/2037047-bhavanisagardam.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhavanisagar Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/03/27/2037047-bhavanisagardam.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது <a href="https://www.maalaimalar.com/topic/பவானிசாகர்-அணை">பவானிசாகர் அணை</a>. 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி கொண்டது பவானிசாகர் அணை. அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். </p><p>கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் எதிரொலியாக தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.</p><h2><strong>நீர்வரத்து</strong></h2><p>தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59. 19 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 197 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><p>அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி வீதம் என மொத்தம் 1255 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.</p><p>ஆனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.45 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 20.20 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.26 அடியாகவும் சரிந்துள்ளது .</p>]]></content:encoded></item><item><title>திருப்பூர் அருகே லாரி மீது சுற்றுலா வாகனம் மோதி விபத்து - 3 பேர் பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-near-tiruppur-lorry-collides-with-tourist-vehicle-3-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-near-tiruppur-lorry-collides-with-tourist-vehicle-3-dead#comments</comments><guid isPermaLink="false">ecba5eae-cb61-4e84-922f-ccaf806b1e8d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:50:23 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:50:23.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,Death,accident,விபத்து,திருப்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yv9zl3ab/accident.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/yv9zl3ab/accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சுற்றுலா</h2><p>​திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, புச்சிரெட்டிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(30). இவரது மனைவி தேன்மொழி(26). இவர்களது குழந்தை சுபஸ்ரீ. இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த குமார், காவியா, இலக்கியா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.</p><p>​அதன்படி அவர்கள் அனைவரும் நேற்று இரவு திருத்தணியில் இருந்து ஈக்கோ  கார் ஒன்றில் அனைவரும் ஊட்டி நோக்கிப் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.</p><h2>விபத்து</h2><p>​இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, ரோட்டின் ஓரத்தில் கியாஸ் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துது.  அப்போது  லாரியின் மீது கார் எதிர்பாராவிதமாக பயங்கரமாக மோதி நசுங்கியது. </p><p>விபத்தின் இடிபாடுகளில் சிக்கி விஜய் மற்றும் குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.</p> <h2>உயிரிழப்பு</h2><p>​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி போலீசார் மற்றும் பொதுமக்கள், காரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை மீட்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்யின் மனைவி தேன்மொழி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. </p><p>மேலும், இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கார் டிரைவர் உட்பட 2 பேர் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி சுபஸ்ரீ, காவியா, இலக்கியா ஆகிய 3 பேர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>​விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><h2>போலீசார் வழக்குப்பதிவு</h2><p>​சுற்றுலா சென்ற போது கணவன்-மனைவி உள்பட 3 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்&quot;- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day#comments</comments><guid isPermaLink="false">eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:24:59 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:24:59.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TamilNadu Day,Perarignar Anna,தமிழ்நாடு நாள்,முக ஸ்டாலின்,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jibkuk7k/MKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jibkuk7k/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மதராஸ் டூ தமிழ்நாடு</h2><p>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அப்போதைய மதராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது.</p><h2>மு.க.ஸ்டாலின் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய நாள் இந்நாள் என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.</p><p>எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.</p><p>1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!</p><p>தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-7-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-7-2026#comments</comments><guid isPermaLink="false">453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:20:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T04:20:19.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25441318-gold3.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/01/27/25441318-gold3.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </p><p>தங்கம் விலையானது நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு  ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கு விற்பனையானது.</p><h2>தங்கம் விலை உயர்வு</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை நிலவரம்</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><p>14-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>13-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,600</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>14-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>13-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>&quot;தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்&quot;- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-extends-greetings-on-tamil-nadu-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-extends-greetings-on-tamil-nadu-day#comments</comments><guid isPermaLink="false">318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:48:09 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:48:09.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,TamilNadu Day,தமிழ்நாடு நாள்,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jopxjc12/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Chif Minister Joseph Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/jopxjc12/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை ஒட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>அதில்,"தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  </p><p>சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dog-sacrifices-life-fighting-a-snake-to-save-its-mistress</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dog-sacrifices-life-fighting-a-snake-to-save-its-mistress#comments</comments><guid isPermaLink="false">212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:24:39 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:24:39.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dog,kanyakumari,snake,கன்னியாகுமரி,பாம்பு,நாய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/o8hw3lnj/dog1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Snake - Dog]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/o8hw3lnj/dog1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ் (வயது 35). இவர் திருவனந்தபுரம் கோட்டத்தில் ரெயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களோடு காயத்ரியின் தாயார் பத்மகுமாரியும் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றையும் வளர்த்து வந்தனர். </p><p>நேற்று முன்தினம் மாலை பத்மகுமாரி வீட்டின் பின்புறம் உள்ள திண்ணையில் இருந்து இரவு சமையல் செய்வதற்கான பொருட்களை எடுத்து தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருந்த இடத்தின் அருகில் திடீரென சுமார் 7 அடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. இதை பார்த்ததும் பத்மகுமாரி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விகேசும், அவரது மனைவியும் வீட்டின் பின்புறம் ஓடோடி வந்தனர். </p> <p>அதே நேரத்தில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாய் சிஞ்சானும் அங்கே ஓடி வந்து பத்மகுமாரியின் முன்னே படம் எடுத்து நின்ற பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது. அப்போது பாம்பு சீறியபடி சிஞ்சானை கடித்தது. இதனால் ஆவேசமடைந்த அந்த நாய், பாம்பை கடித்து 2 துண்டாக்கி சின்னாபின்னமாக்கியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து இறந்தது. அதே போல் உடல் துண்டான பாம்பும் இறந்தது. </p><p>தனக்கு தினமும் சோறு போட்டு வளர்த்த எஜமானியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் போராடி தனது உயிரை மாய்த்துக்கொண்ட செல்லப்பிராணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th#comments</comments><guid isPermaLink="false">e1e171a2-e32d-4e7d-ad87-89a79d9593dd</guid><pubDate>Sat, 18 Jul 2026 03:02:55 +0000</pubDate><atom:updated>2026-07-18T03:02:55.892Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/66ghszo5/Vijay05.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/66ghszo5/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கோரிக்கையை ஏற்று புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.</aside><h2><strong>புத்தக வெளியீட்டு விழா</strong></h2><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரையை புத்தகமாக தயாரித்துள்ளார். இந்த புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி நடக்க இருக்கிறது.</p><h2><strong>ராகுல் காந்தி</strong></h2><p>இந்த புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><h2><strong>டெல்லி அரசியல்</strong></h2><p>இந்த நிகழ்வில், பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக வெளியீடு மூலம் டெல்லி அரசியலில் முதலமைச்சர் விஜய் தடம் பதிக்க இருக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதி மாணவர் விடுதியில் முதல்வர் திடீர் விசிட்.. பல புகார்களை அடுக்கிய மாணவர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/social-justice-student-hostel-cm-visit-exposes-poor-conditions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/social-justice-student-hostel-cm-visit-exposes-poor-conditions#comments</comments><guid isPermaLink="false">57e00050-041a-463a-8f08-8a9b8def8ad2</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:33:55 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:33:55.798Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Government Hostel,CM Vijay visit,Social Justice Hostel,அரசு விடுதி,முதல்வர் விஜய் ஆய்வு,சமூக நீதி விடுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/31yfse3b/Untitled-design-27.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay visits Social Justice Hostel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/31yfse3b/Untitled-design-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அங்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்களில் ஒருவர், விடுதியில் நிலவும் குறைகள் குறித்து புகார் தெரிவித்தார். </p><p>அப்போது அந்த மாணவர் கூறியதாவது:-</p><p>விடுதி உணவுகள் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாடு அரசு பல வசதிகளுடன் விடுதி ஏற்பாடு செய்து கொடுத்தும், அதிகப்படியான குறைகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.</p><p>இது சம்பந்தமாக கடந்த ஆண்டு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக, இங்கு உள்ள மாணவர்கள் எல்லோரும் முற்றுகை போராட்டம் நடத்தினோம்.   </p><p>விடுதியில் புழுக்கள் உள்ள அசைவ உணவுகளை சமைப்பது தொடர்பாக புகார் கூறப்பட்டதையடுத்து, அப்போது ஐந்து நாட்கள் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. </p><p>ஆனால் அதையடுத்து மீண்டும் தரமற்ற நிலையிலேயே உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.</p> <p>இங்கு வசிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்துகொண்டும், டிஎன்பிஎஸ்சி போன்ற அரசாங்க உத்தியோகங்களுக்கு படித்து கொண்டும் இரவு நேரத்தில் 10 மணியளவில் விடுதிக்கு வருகின்றனர்.</p><p>அப்போது விடுதியின் கதவுகள் மூடப்படுகிறது, இதன் காரணமாக மாணவர்கள் வெளியில் படுத்து தூங்கும் அவலநிலை ஏற்படுகிறது.</p><p>அப்போது வெளியில் இருக்கும் மாணவர்களிடம் அங்கிருக்கும் ரவுடி கும்பல்களால் தொல்லை ஏற்படுகிறது.</p><p>விடுதியில் வாலிபால் மைதானம் தயார் செய்யப்பட்டு பல மாதங்களாக உள்ளது. ஆனால் மாணவர்கள் அதை பயன்படுத்த மறுக்கப்பட்டு வருகிறது.</p><p>விடுதி காப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். 64 கேமரா இருக்க வேண்டிய இடத்தில் மிகக்குறைவான அளவிலேயே கேமராக்கள் உள்ளது.</p><p>கழிப்பறை கட்டிடங்கள் உடைந்து போய், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.</p><p>விடுதி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.</p><p>இவ்வாறு அந்த மாணவர் தமிழக முதல்வர் விஜய்யிடம் அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/topnews/delimitation-bill-bjp-will-seek-dmks-support-union-minister-ramdas-athawales-statement</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/delimitation-bill-bjp-will-seek-dmks-support-union-minister-ramdas-athawales-statement#comments</comments><guid isPermaLink="false">0a157e74-3ad7-4b42-be32-dcedafc8bf35</guid><pubDate>Fri, 17 Jul 2026 16:12:40 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:12:40.977Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Ramdas Athawale,Constituency Delimitation Bill</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e51uv3my/New-Project-2026-07-17T214224.268.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை மசோதா: ‘திமுகவிடம் பாஜக ஆதரவு கேட்கும்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/e51uv3my/New-Project-2026-07-17T214224.268.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனான சந்திப்பிற்கு பிறகு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவருமான ராம்தாஸ் அத்வாலே சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் தலித் சமூகத்தினர் மீதான வன்கொடுமைகள், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 352 கலப்பு திருமணங்கள் நடந்துள்ளன. இது வரவேற்கத்தக்கது.</p><p>அமைச்சர்கள் சம்பத்குமார், வன்னியரசு அளித்த துறை சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும். கடந்த முறை தோல்வி அடைந்த பெண்களுக்கான இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை ஆகிய 2 மசோதாக்களும் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பான்மையுடன் நிறைவேறும்.</p><p>இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் - தி.மு.க. உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 20 எம்.பி.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்ததன் மூலம் இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.</p><p>காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தி.மு.க. எடுக்கும் அல்லது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லையென்றாலும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற ஆதரவு தெரிவிக்குமாறு தி.மு.க.விடம் பா.ஜனதா தலைமை பேச்சுவார்த்தை நடத்தும். தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.</p><p>த.வெ.க. அரசு ஆட்சியமைக்க தேசிய ஜனநாய கூட்டணி கட்சியின் ஆதரவை கேட்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தி.மு.க. கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும். அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூகநீதி துறை என பெயர் மாற்றியது வரவேற்கத்தக்கது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T16:02:20.467Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more">வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh">வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay">காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match">அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims">திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate">தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750">மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe">2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d">தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/58d7359e-20b7-4415-bda3-26c811047319">தமிழகம் உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline" rel="nofollow">நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட ரமணன் நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-venkata-ramanan-appointed-as-consumer-goods-corporation-head</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-venkata-ramanan-appointed-as-consumer-goods-corporation-head#comments</comments><guid isPermaLink="false">8e96a84e-eeea-4b3a-848b-ac4198c58487</guid><pubDate>Fri, 17 Jul 2026 15:55:33 +0000</pubDate><atom:updated>2026-07-17T15:55:33.906Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,Venkataramanan,TNCSC,அமைச்சர் வெங்கட ரமணன்,நுகர்பொருள் வாணிபக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/lhunbo22/New-Project-2026-07-17T212238.136.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவராக அமைச்சர் வெங்கட ரமணன் நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/lhunbo22/New-Project-2026-07-17T212238.136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புதிய தலைவராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கான சிறப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.</p><p>இந்த நியமனத்தின் மூலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் (ரேஷன் கடைகள்) ஆகிய பணிகளை அமைச்சர் நேரடியாக மேற்பார்வையிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay#comments</comments><guid isPermaLink="false">51bc473f-9b16-4134-998f-9aeca235a8d8</guid><pubDate>Fri, 17 Jul 2026 14:49:02 +0000</pubDate><atom:updated>2026-07-17T14:49:02.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,TN Govt,Udhayanidhi Stalin,தமிழக அரசு,police recruitment,காவலர் தேர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n4z42gy8/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/n4z42gy8/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.</p><p>ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.</p><p>சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. </p><p>இதன்மூலம் ஏற்கனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம்-ஒழுங்கையும், காவல்துறை பணியின்மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.</p><p>எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-17T13:26:05.748Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/casper-ruud-enter-qf-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket">பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns">சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children">குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani">அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p>]]></content:encoded></item><item><title>மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-self-enumeration-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-self-enumeration-online#comments</comments><guid isPermaLink="false">83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:36:37 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:36:37.996Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uyk2qxkp/CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/uyk2qxkp/CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில் தனது சுய விவரங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு இணையத்தில் முதலமைச்சர் விஜய் பதிவு செய்துள்ளார்.</p><p>மேலும்,"மக்கள் தொகை சுய கணக்கெடுப்புக்கு உண்மையான விவரங்களை வழங்குமாறு"  தமிழக மக்களிடம் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!  </p><p>நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். </p><p>இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!  </p><p>உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!  <br><br>நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை,  நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும்.  எனவே,… <a href="https://t.co/fvA6pX24Jq">pic.twitter.com/fvA6pX24Jq</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2078079650815971589?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-confirms-he-will-contest-the-by-election</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-confirms-he-will-contest-the-by-election#comments</comments><guid isPermaLink="false">c428288d-dc4a-40ab-9209-022bfb9fb094</guid><pubDate>Fri, 17 Jul 2026 12:11:16 +0000</pubDate><atom:updated>2026-07-17T12:11:16.045Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாதக,by-election,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/117sjzcp/New-Project-2026-07-17T174054.841.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திய சீமான்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/117sjzcp/New-Project-2026-07-17T174054.841.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது இடைத்தேர்தல் குறித்துப் பேசிய அவர்,  </p><p>“நான் ஒன்றும் மன்னன் இல்லை, மந்திரி மகன் இல்லை; கூப்பிட்டால் கூட்டம் வருவதற்கு. தோற்றுப்போனாலும் 20 லட்சம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளார்கள். பாரதிராஜா காரியத்திற்கு சென்றபோது பெரியவர் ஒருவர் என்னிடம் பேசினார்.</p><p>“மகனே, 50 உறுப்பினர்களோடாவது சட்டமன்றம் செல்வாய் என நினைத்தேன்; நடக்கவில்லை. விட்டுவிடாதே, இந்த இடைத்தேர்தலில் நின்று நீ உள்ளேப் போகவேண்டும்.” என தெரிவித்தார். உறுதியாக போகிறேன் என சிரித்தவாறே சொன்னேன். </p><p>‘இந்த சிரிப்போடு உள்ளே போகவேண்டும்’ என தெரிவித்தார். இதன்மூலம் சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. </p><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாதக போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட நாதக வெல்லவில்லை. 4.02 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதனிடையே எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமாவால் இடைத்தேர்தல் சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.</p><p>இதில் சீமான் போட்டியிடுவாரா என யூகங்கள் எழுந்துவந்தநிலையில் அதனை உறுதிப்படுத்துமாறு பேசியுள்ளார் சீமான். </p>]]></content:encoded></item><item><title>‘பாஜக - தவெக இணைப்பு வேலையைப் பார்த்து வருகிறார் வைகோ... விரைவில் மதிமுக காணாமல் போகும்’ - மல்லை சத்யா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaigai-is-working-on-the-bjp-tvk-merger-mdmk-will-soon-vanish-mallai-sathya</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaigai-is-working-on-the-bjp-tvk-merger-mdmk-will-soon-vanish-mallai-sathya#comments</comments><guid isPermaLink="false">1d00fc06-08db-42e7-a6b2-6f71a5a0ccaa</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:30:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:30:01.909Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>mallai sathya,மல்லை சத்யா,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/asvk0q31/New-Project-2026-07-17T165939.627.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாஜக - தவெக இணைப்பு வேலையைப் பார்த்து வருகிறார் வைகை... விரைவில் மதிமுக காணாமல் போகும்’ - மல்லை சத்யா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/asvk0q31/New-Project-2026-07-17T165939.627.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், </p><p>“பாஜக - தவெக இடையேயான இணைப்புப் பணியை வைகோ செவ்வனே செய்துவருகிறார். இன்று திமுகவிற்கு என்ன நடக்கிறதோ, நாளை தவெகவிற்கு அது நடக்கும். தான் சொன்னதை தவெக செய்யவில்லை என்றால், விமர்சிப்பார் வைகோ. 32 ஆண்டுகள் என்னை வழிநடத்தியவர். 32 ஆண்டுகளில் கடைசி 4 ஆண்டுகள் அவருடைய மகனுக்காக என்னிடம் பாராமுகமாக இருந்தார். </p><p>என்னை வெளியேற்ற திருச்சியில் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிக்கைவிட்டார். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வைகோ பல நாடகங்களை நடத்தினார், அவர் மகன் அதன்பின் நின்று இயக்கியவர். அதனால் எனக்கு எந்த இழப்பும் இல்லை.</p><p>நாங்கள் வெளியேறிய பின் தற்போது அந்த இயக்கம் காணாமல் கரைந்துபோய் வருகிறது. சுதந்திரா கட்சி ராஜகோபாலாச்சாரி காலத்திலேயே காணாமல் போனது. தமிழரசு கழகம் ம.பொ.சி காலத்திலேயே காணாமல் போனது. சிவாஜி கணேசன் கட்சியும் இரண்டு ஆண்டுகளிலேயே காணாமல் போனது.  இந்த வரலாற்றில் தற்போது இணையவுள்ள கட்சி மகன் திமுக. </p><p>மகன் கனடாவின் டொரோண்டோவில் செட்டில் ஆகிவிடுவார். பாஜக - தவெக இணைப்பு வேலைய வைகோ பார்த்து வருகிறார்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-asks-what-is-dmk-position-on-delimitation-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-asks-what-is-dmk-position-on-delimitation-issue#comments</comments><guid isPermaLink="false">1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:26:27 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:26:27.597Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Thol Thirumavalavan,தொல் திருமாவளவன்,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pp4ttqf2/thiruma.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/pp4ttqf2/thiruma.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">திருமாவளவன்</a> இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?</p><p>எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>திமுக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.</p><p>தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உள்ளது.</p><p>இந்தியா கூட்டணியின் நிலைப்பாடுடன் இணைந்து விசிக பயணிக்கும்.</p><p>சேலத்தில் அம்பேத்கர் சிலையை 5 ஆண்டுகளாக திறக்க முடியவில்லை.</p><p>கடந்த ஆட்சியின்போது அம்பேத்கர் சிலையைத் திறக்க முயன்றோம்.</p><p>சிலைகளைத் திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.</p><p>தமிழகத்தில் மட்டும்தான் அம்பேத்கர் சிலையைத் திறக்க அனுமதி பெற முடியவில்லை.</p><p>தவெக அரசு அம்பேத்கர் சிலைகளைத் திறக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அம்பத்தூரில் பொது மக்களிடம் வரவேற்பை பெற்ற “நம்ம எம்.எல்.ஏ.” செயலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambattur-public-welcomes-namm-mla-mobile-app</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambattur-public-welcomes-namm-mla-mobile-app#comments</comments><guid isPermaLink="false">a002072e-5aed-4245-a6a5-211004d7554f</guid><pubDate>Fri, 17 Jul 2026 11:12:29 +0000</pubDate><atom:updated>2026-07-17T11:12:29.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்பத்தூர்,நம்ம எம்எல்ஏ செயலி,Ambatture,Namma MLA App</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/2n3xwxxv/MLA.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ambatture MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/2n3xwxxv/MLA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அம்பத்தூர் தொகுதி மக்கள் தங்கள் பகுதி குறைகளை தெரிவிக்கவும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை அறியவும் அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன் “நம்ம எம்.எல்.ஏ.” என்ற புதிய செயலியைத் தொடங்கியுள்ளார்.</p><p>இந்த செயலியின் மூலம் தொகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைப் புகைப் படம் எடுத்தோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ மனுவாகப் பதிவு செய்ய முடியும்.</p><p>அவ்வாறு பொதுமக்கள் பதிவு செய்த மனுக்கள் மற்றும் கோரிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பதை இந்தச் செயலி மூலமாகவே அவர்கள் தொடர்ந்து கண்காணித்துத் தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுமட்டுமின்றி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அரசுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தகவல்களையும் இந்தச் செயலி மூலம் மக்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துள்ள எம்.எல்.ஏ. ஜி.பாலமுருகன், இதன் மூலம் மக்களுடன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருக்க முடியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்து உள்ளார்.</p><p>அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:-</p><p>அம்பத்தூர் மக்களுக்கு வணக்கம். இந்த செயலில் உங்கள் குறைகளை நீங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யலாம். இதுவெறும் செயலி மட்டுமல்ல உங்களுக்கும் எனக்கும் உண்டான நேரடி தொடர்பாக உள்ளது. கோரிக்கைகளை சரி செய்ய எங்களது குழு தயார் நிலையில் உள்ளது. </p><p>நீங்கள் அனுப்பும் குறை கள் உடனுக்குடன்  48 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டு எனது நேரடி கண்காணிப் பில் இந்த செயலி இருந்து வரும். உங்களுக்காக உழைக்க நான் இருக்கிறேன். நாம் இணைந்து இன்னும் சிறப்பாக அம்பத்தூரை உருவாக்குவோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline#comments</comments><guid isPermaLink="false">207fb194-4c6d-44c7-aeb1-4104f40b10e7</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:52:12 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:52:12.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,neet,நீட்,NEET EXAM Result,நீட் தேர்வு முடிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/q85exuk6/TN-govt.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neet result- TN Govt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/q85exuk6/TN-govt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தை பயன்படுத்த தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>நீட் மறுதேர்வு</h2><p>கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று நடைபெற்ற நீட் 2026 மறுதேர்வில், நாடு முழுவதும் 551 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் அமைக்கப்பட்ட 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.</p><p>இத்தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.</p><h2>நீட் மறுதேர்வு முடிவு</h2><p>தேசியத் தேர்வுகள் முகமை நேற்று (வியாழக்கிழமை) நீட் இளநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் உள்ள இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் (AYUSH) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு 11.21 லட்சம் தேர்வர்கள் தகுதி பெற்றுள்ளனர்.</p><p>பஞ்சாப்பை சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவை சேர்ந்த பன்சுல் பன்சால் ஆகியோர் 720-க்கு 715 மதிப்பெண்களை பெற்று கூட்டாக முதலிடத்தைப் பிடித்தனர்.</p><h2>நட்புடன் உங்களோடு..</h2><p>மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகளை பெற 14416 அல்லது 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>2026-27 கல்வியாண்டின் நீட்தேர்வு முடிவுகள் நேற்று (16.07.2026) வெளியாகி உள்ளது.</p><p>மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.</p><p>எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனநல ஆலோசனைகள் பெறுவதற்கு தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. </p><p>இச்சேவை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை முதல் 24-ந்தேதி வரை சென்னை-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-mumbai-express-trains-cancelled#comments</comments><guid isPermaLink="false">5c889a44-f678-482a-a3dd-19bf43dc564d</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:37:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:37:08.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Trains cancelled,ரெயில்கள் ரத்து,Mumbai rain,மும்பையில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/xl3ywcxd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> 9 <a href="https://www.maalaimalar.com/topic/எக்ஸ்பிரஸ்-ரெயில்கள்">எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a> மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் பெய்து வரும்  கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் காரணமாக சென்னை சென்ட்ரல்-மும்பை இடையே இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><h2><strong>ரெயில்கள் ரத்து</strong></h2><p>மும்பை ஜி.எஸ்.டி.-சென்னை சென்ட்ரல்  இடையே இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் மெயில் (எண்-22157) நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. </p><p>இதே போல சென்ட்ரலில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் ஜி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 24-ந்தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும் 9 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.</p><p>திருச்சி-அகமதாபாத், மதுரை-லோக் மணியா, காரைக்கால்-லோக் மணியா, இக்டா நகர்- சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-திருச்சி, லோக் மணியா திலக்-மதுரை, ராஜ் கோட்-கோவை உள்ளிட்ட 9 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலின் படத்தை அகற்ற கூறியதால் மணலி மண்டல குழு கூட்டத்தில் த.வெ.க.-தி.மு.க. உறுப்பினர்கள் மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-and-dmk-members-clash-manali-zonal-team-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-and-dmk-members-clash-manali-zonal-team-meeting#comments</comments><guid isPermaLink="false">c9c0daf8-9368-4b08-8c32-1fec238cd0d1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:27:26 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:27:26.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yvefrxod/manali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yvefrxod/manali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் இன்று தொடங்கியது. உதவி ஆணையர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>கூட்டத்தில் பரபரப்பு</strong></h2><p>கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது த.வெ.க.வை சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. டாக்டர் ரவி ஆகியோர் வந்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை எப்படி கூட்ட அரங்கில் வைக்கலாம் என்று திருவெற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமார் கேள்வி எழுப்பினார். </p><p>அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி, புதிதாக அ.தி.மு.க.வில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த  முல்லை ராஜேஷ் ஆகியோரும் பேசினர். இதற்கு தி.மு.க.உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>உறுப்பினர்கள் வெளியேறினர்</strong></h2><p>இதைத்தொடர்ந்து மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் பேசும் போது, “மக்கள் பிரச்சனை பற்றி பேச நாங்கள் கூறி உள்ளோம். போட்டோ பிரச்சனை அல்ல” எனக்கூறி இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து கூட்டத்தை ரத்து செய்து விட்டு  வெளியேறினார். அவரை தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.</p><p>உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டத்தில் தீர்மானங்களை இயற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் ரவியும், செந்தில் குமாரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.</p><p>இதுகுறித்து மண்டலகுழு தலைவர் ஆறுமுகம் கூறும் போது, மக்கள் பிரச்சனை பேசுவதற்காக கூட்டம் கூடினோம். ஆனால் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களை உள்ளே கூட்டி வந்தார், மேலும்  அனைவரையும் ஒருமையில் பேசினார். </p><p>இதனால் இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என கூறி ரத்து செய்துவிட்டு வெளியேறி விட்டேன்.வேறொரு நாளில் கூட்டம் நடைபெறும். மக்கள் பிரச்சனைகளை நாங்கள் தீர்ப்போம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt#comments</comments><guid isPermaLink="false">413070be-154d-4ec3-8c64-11c2a39a32c1</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:15:47 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:15:47.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,TN Govt,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக அரசு</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/jiijhsdg/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கடும் அதிர்ச்சி</strong></h2><p>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுபான வகைகளை</a> அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. </p><p>கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்களின் பின்னணியில், பெரும்பாலும் போதைப் பழக்கமே ஒளிந்திருக்கையில், மது உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு. அதை விட்டு விட்டு, மதுபான வகைகளைக் கூட்டி, மக்களை போதைக்கு அடிமையாக்குவது அல்ல. </p><h2><strong>அரசு உணர வேண்டும்</strong></h2><p>எப்போவாவது வெளியூர்களுக்கு டூர் சென்றால் மட்டும் தான் குறிப்பிட்ட வகை மதுபானம் கிடைக்கும் என்றிருக்கும் நிலையை மாற்றி, கைக்கு எட்டும் தூரத்திலேயே எல்லா வகை மதுபானங்களையும் கொண்டு வருவது, இளைஞர்களிடையே குடிப்பழக்கத்தை அதிகரிக்கும் என்பதை ஆளும் அரசு உணர வேண்டும். “More Choices, More chances”</p><p>எனவே, ஒருவேளை முதல்வர் விஜய் அவர்களுக்கு, அதிகளவிலான மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தால் அதை உடனடியாகக் கைவிட வேண்டும்! முடிந்தவரையில் டாஸ்மாக் கடைகளைக் குறைத்து தமிழகத்தில் மதுவிற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்!</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு! <br><br>“டாஸ்மாக் கடைகளை மூடுகிறோம்” என பக்கத்திற்கு பக்கம் சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கும், முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 54 நிறுவனங்களின் மதுபான வகைகளை… <a href="https://t.co/JYRKje19Oq">pic.twitter.com/JYRKje19Oq</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2078053807179870419?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases#comments</comments><guid isPermaLink="false">37bf1f11-eaf5-4420-af38-794e19872452</guid><pubDate>Fri, 17 Jul 2026 10:01:01 +0000</pubDate><atom:updated>2026-07-17T10:01:01.840Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,ponraj,பொன்ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yxrq8i37/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/yxrq8i37/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக, அரசியல் விமர்சகரும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான <a href="https://www.maalaimalar.com/topic/பொன்ராஜ்">பொன்ராஜுக்கு</a> எதிராக கடந்த மார்ச் 26-ந்தேதி அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் மே 12-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர். </p><h2><strong>ரத்து செய்ய கோரி</strong></h2><p>இந்த 2 வழக்குகளையும் ரத்து  செய்யக் கோரி ஐகோர்ட்டில் பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை  நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது பொன்ராஜ் தரப்பில், யூ டியூப் சேனல் பேட்டியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மட்டுமே மனுதாரர் பதிலளித்தார். மற்றபடி பெண்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை. </p><blockquote>தற்போது அமைச்சர்களாக உள்ள 2 பேர், தேர்தலுக்கு முன் அளித்த புகார்கள் மீது புதிய அரசு பொறுப்பேற்ற பின், எந்தவித ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என வாதிடப்பட்டது.</blockquote><p>போலீஸ் தரப்பில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர், இதுபோல பேசியிருக்க கூடாது. அவரது பேச்சு  ஒட்டுமொத்த பெண்களை குறிக்கும் வகையில் பொதுப்படையாகவே உள்ளது. மனுதாரரின் பேச்சு அடங்கிய வீடியோக்கள், இன்னும் இணையதளத்தில் உள்ளன. வழக்கு முதல் தகவல் அறிக்கை என்ற நிலையில் மட்டுமே உள்ளதால்  வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதம் முன் வைக்கப்பட்டது.</p><h2><strong>மனுக்கள் தள்ளுபடி</strong></h2><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன்,  பொன்ராஜின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இன்று இந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. பொன்ராஜ் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து, அவரது மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi#comments</comments><guid isPermaLink="false">adf4f21b-471e-4ac5-98a1-77da6fb5417a</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:59:58 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:59:58.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,neet exam results,நீட் தேர்வு முடிவு,கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி,நீட் கட்-ஆப்,Jayaprakash gandhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Educationist Jayaprakash Gandhi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/wwswywzh/jayaprakash.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மே மாதம்  நடந்தது. தேர்வு நடப்பதற்கு முன்பே  வினாத்தாள் வெளியாகி  நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. </p><p>அதைத்தொடர்ந்து ஜூன் 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 20 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். </p><p>இதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆரியன் குப்தா மற்றும் அரியானாவைச் சேர்ந்த  பான்சூல்  பன்சால் ஆகிய இருவரும் 720 மதிப்பெண்ணுக்கு 715 பெற்று முதலிடத்தை பிடித்தனர். </p><p>கடந்தாண்டை ஒப்பிடும்போது நீட் தேர்வு முடிவில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>இதனால் நீட் கட்-ஆப்  மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது  என்று கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும்  கூறியதாவது:- </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நீட்  தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கட்-ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.</p><p>நீட் தேர்வில் 690-க்கு மேல் கடந்த ஆண்டு ஒருவரும் பெறவில்லை. ஆனால் இந்த வருடம் 85 பேர்   இடம் பெற்றுள்ளனர். அதேபோல 600 மதிப்பெண்ணுக்கு மேல் 1367 பேர் கடந்தாண்டு பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 9,080 பேர் வாங்கியுள்ளனர்.</p><p>550 மதிப்பெண்ணுக்கு மேல் இந்த ஆண்டு 38 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு 12,280- ஆக இருந்தது. 500 மதிப்பெண்ணுக்குமேல் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பெற்றுள்ளனர். இது கடந்த வருடம் 52,217 ஆக இருந்தது.</p><p>இந்த மறு தேர்வு முடிவை வைத்துப் பார்க்கும்போது நீட் கட்-ஆப் மதிப்பெண் உயர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கடுமையான போட்டி ஏற்படக்கூடும்.</p><p>நீட் மறு தேர்வு கடினமாக இருந்தாலும் கூட கடந்த ஆண்டு தேர்வை விட இந்த வருடம் மாணவ, மாணவிகள் அதிக அளவில் மதிப்பெண்களை குவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின்         மருத்துவமனைகளில்  மட்டுமன்றி மாநில அரசு களின் மருத்துவுமனைகளிலும் சேர்ந்து படிப்பதற்கு கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.</p><p>எய்ம்ஸ், ஜிப்மர், ராணுவ மருத்துவ கல்லூரிகளில்  சேர்வதற்கு 680-க்கும் மேல் மதிப்பெண் பெற வேண்டும். நாட்டின் தலை சிறந்த  மருத்துவமனைகளில் சேர்வதற்கு உயர் மதிப்பெண் அவசியமாகும்.</p><p>தமிழகத்தைப் பொறுத்த வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண் 30 முதல் 36 வரை  அதிகரிக்ககூடும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை நாடகமாடிய காதலன் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/boyfriend-arrested-for-illegal-girlfriend-murder#comments</comments><guid isPermaLink="false">ac488206-84b9-4f09-a26d-c10c224ecd79</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:48:08 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:48:08.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,Murder,கொலை,affair,கள்ளக்காதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4oww2xmr/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/4oww2xmr/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஅழகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி, கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மயில் (வயது 31). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். </p><h2><strong>குழந்தைகள் அதிர்ச்சி</strong></h2><p>இந்தநிலையில் நேற்று காலை முனியசாமி வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பிள்ளைகளும் பள்ளிக்கு சென்றிருந்தனர். மாலையில் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அங்குள்ள அறையில் மயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஏராளமான ரத்தம் வெளியேறி உயிரிழந்து கிடந்தார். அவரது கையில் கத்தி ஒன்றும் இருந்தது.</p><p>இதைப்பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக எண்ணி திரண்டு வந்தனர். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் மயில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மல்லாங்கிணறு போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்துகிடந்த மயில் கையில் இருந்த கத்தியை கைப்பற்றி அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.</p><h2><strong>கள்ளக்காதல்</strong></h2><p>தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மயிலுக்கு அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆகாத உதயகுமார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் உதயகுமாரை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்து அவரது கணவரிடம் கூறியுள்ளனர். அவர் மற்றும் உறவினர்கள் கண்டித்தபோதிலும், மயில் அதனை கண்டுகொள்ளவில்லை. உதயகுமார், மயில் இடையேயான கள்ளத்தொடர்பு தடையின்றி தொடர்ந்து வந்துள்ளது.</p><p>இந்தநிலையில் நேற்று காலை மயில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த உதயகுமார் அங்கு வந்துள்ளார். அப்போது மயில் வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அவர் யார், உனக்கும், அவருக்கும் என்ற தொடர்பு என்று கேட்டு உதயகுமார் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>கொலை</strong></h2><p>இதில் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மயிலை கீழே தள்ளி, அவரது கை, கால்களை பிடித்துக்கொண்டு கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கைகளால் மூடினார். இதனால் உதயகுமாரின் பிடியில் இருந்து மீள முடியாத மயில் ஒருசில விநாடிகளில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  </p><p>பின்னர் இந்த கொலையை மறைக்க திட்டமிட்ட உதயகுமார், அங்கிருந்து செல்லும் முன்பு, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை இறந்து கிடந்த மயிலின் கையில் சொருகி வைத்தார். இதன் மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டதுபோல் தெரியும் என எண்ணினார். ஆனால் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் உதயகுமார் சிக்கிக்கொண்டார்.  </p><p>இதையடுத்து இன்று காலை கள்ளகாதலன் உதயகுமாரை மல்லாங்கிணறு போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் மயிலை கொலை செய்துவிட்டு, கத்தியை அவரது கையில் வைத்துவிட்டு தப்பியதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரியாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவில் குதிரை பேரம் - அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horse-trading-admk-complaint-at-dgps-office#comments</comments><guid isPermaLink="false">f7a1b243-ba3d-4595-ad7f-0cd37320beaf</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:33:56 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:33:56.202Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,Horse Trading,குதிரை பேரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/timrhpnw/admk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். </p><p>இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்து எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சார்பில் புகார் மனுக்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>சென்னை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.</p><p>அந்தக் கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஐ.எஸ். இன்பதுரை எம்.பி. ஆகியோர் இன்று டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து மனு அளித்தனர்.</p> <p>பின்னர் அக்ரிகிருஷ்ண மூர்த்தி அளித்த பேட்டி வருமாறு:-</p><p>குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் இன்று மனு அளித்து உள்ளோம். குதிரை பேர நிகழ்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளோம்.</p><p>தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்திலேயே பேரவைத் தலைவரிடம் 11 மணியளவில் ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணியளவில் மேலே சென்று அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. அதன் பிறகு பேரவை தலைவர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. தமிழக சட்டப்பேரவை மரபுகளுக்கும் முரணானதாகும்.</p><p>இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இன்று மனு அளித்திருக்கிறோம். </p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார். </p><p>இன்பதுரை எம்.பி. கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்போன்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation#comments</comments><guid isPermaLink="false">4e557384-0f37-4163-83db-faca1ae68939</guid><pubDate>Fri, 17 Jul 2026 09:11:14 +0000</pubDate><atom:updated>2026-07-17T09:11:14.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழாய்வு,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அகழாய்வில் கிடைத்த தொல் பொருட்கள் -  அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/at4oj3nf/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அகழாய்வில்  நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தென்காசி மாவட்டம், கரிவலம் வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தொல்லியல் தளத்தில் அகழாய்வு கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் நுண்கற்கால கற்கருவிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் ஆன தக்களிகள், வட்டச்சில்லுகள், சுடுமண் மணிகள், சூதுபவள மணிகள், ஆடி மணிகள், தங்கத்திலான மணி, செவ்வக பகடைக்காய், இரும்பு பொருட்கள் மற்றும் செப்பு நாணயங்கள் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>இவை தவிர சங்க கால சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், முழுமையான பானைகள், மூடியுடன் கூடிய கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், துளையிடப்பட்ட கிண்ணங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. </p><p>சங்க காலத்தில் இரும்புக் கருவிகள், ஆடி மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் நெசவு தொழிற்கூடங்கள் சிறப்புற செயல்பட்டதற்கான கட்டமைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன‌. தொடர் தொல்லியல் பணிகளும், அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளும் தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும் என நம்புகிறோம். </p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life#comments</comments><guid isPermaLink="false">8331f636-dc97-4adf-9dce-af7fe3c3110f</guid><pubDate>Fri, 17 Jul 2026 08:51:23 +0000</pubDate><atom:updated>2026-07-17T08:51:23.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/y6pl4rqh/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B">வைகோ</a> தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2>2 பெரிய தவறுகள்</h2><p>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.</p><h2>திமுக</h2><p>கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.</p><h2>அதிமுக</h2><p>என் வாழ்க்கையில் 2 பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">ம.தி.மு.க.</a> தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அ.தி.மு.க.வுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.</p> <h2>திமுக</h2><p>2017-ம் ஆண்டில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.</p><p>வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிப்பிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. </p><h2>ஒளிமயமான எதிர்காலம்</h2><p>இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.</p><p>உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொது வாழ்வில் இருப்போரும், பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>