<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 16 Aug 2026 13:41:51 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:38:21.967Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25">வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்</a></p><p>*ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>*இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5986a56-482a-401b-b017-f97d0b2c649a">மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</a></p><p>*அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>*அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f845adee-a555-4331-baee-b546ce27480c">ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு</a></p><p>*கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம்</p><p>*நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/31932a92-6497-472b-973c-21979f9f4fdd">சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா</a></p><p>*சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்</p><p>* தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம்</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</a></strong></p><p>* அரசு பேச்சுவார்த்தை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* இழப்பீடு அறிவிப்பு: உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fe62a5ce-a42c-4356-ac59-ed3a71cf4c4a">நான் அரசியலில் நுழைந்ததே தவறு.. வாழ்நாளில் ஊழல் செய்ததே இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தற்கொலை கடிதம்</a></p><p>* ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்</a></p><p>* வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.</p><p>* இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</a></p><p>* நயினார் நாகேந்திரன் தமிழக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>* அரசியல் எதிர்ப்பு: விஜய் குடும்பம் பற்றிய அநாகரிக பேச்சுக்கு பல கட்சிகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</a></p><p>* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match">இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</a></p><p>* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.</p><p>* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting#comments</comments><guid isPermaLink="false">36c8bc80-23cd-431c-adff-3170746de036</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:17.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,DMDK,பிரேமலதா,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் ஹானூர் அருகே மரிமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing">துப்பாக்கிச் சூட்டில் </a>மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக பொது செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மனித உயிர்களை மதிக்காமல் நடந்த இந்த கொடூரத்திற்கு உடனடியாக விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது குறித்து பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக மாநிலம்</a> ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. </p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்&apos;- அண்ணாமலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue#comments</comments><guid isPermaLink="false">9a118262-c241-4b42-9206-0cbb0718637f</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:12:50.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்தா,அண்ணாமலை,Modi,Amit Shah,மேகதாது,annamalai,மோடி,We the Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Annamalai   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மேகதாது அணை விவகாரம், மத்திய அரசுடனான தொடர்பு, தற்போதைய ஆட்சிமுறை மற்றும் தனது அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>மேகதாது விவ<strong>காரத்தில் பிரத</strong>மர் மோடிக்கு ஆதரவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">மேகதாது அணை </a>விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான தனது நம்பிக்கை இன்றளவும் தொடர்வதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், எல்லைக்குச் சென்று பச்சைத் துண்டு அணிந்து போராட்டம் நடத்துவது, பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற விளம்பர அரசியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போலித்தனமான அரசியலால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார்.</p><h2>சுற்றுச்சூழ<strong>ல் இலக்கு</strong> </h2><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நடப்பு மாதத்திற்குள் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் தங்கள் அமைப்பின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>டெல்லி பய<strong>ணம் பற்றிய வி</strong>ளக்கம்</h2><p>தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் அழுத்தமாகக் கூறினார். </p><figure><img alt=" Amit Shah -Annamalai   " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kwxmttr3/amit.jpg" /></figure><p>மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மைதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மீது அல்லது பா.ஜ.க மீது சந்தேகம் இருப்பவர்கள் நேரடியாக அமித்ஷாவிடமே சென்று கேட்டுத் தெளிவுபெறலாம் என்று சவால் விடுத்தார்.</p><h2>ஒரு வருட <strong>கால அவகா</strong>சம்</h2><p>தான் பா.ஜ.கவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறேனா அல்லது கட்சியின் வரம்புகளை மீறி இயங்குகிறேனா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் அளித்துச் செயல்பட விட வேண்டும் என்றார். இந்த அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், சரியாக ஆட்சி செய்யத் தவறினால் அரசை வீழ்த்துவோம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகள் மூடல்: த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government#comments</comments><guid isPermaLink="false">09be4588-48bb-4ad3-bd99-9a8271185fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:18:58.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,அண்ணாமலை,டாஸ்மாக் கடைகள்,tasmac shops,annamalai,tvk government,த.வெ.க அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai- vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் இருந்து இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்சியில் பேசிய அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi">தமிழக வெற்றிக் கழகம்</a> (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவர் அண்ணாமலை த.வெ.க அரசின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>டாஸ்<strong>மாக் கடைகள்</strong> மூடல்</h2><p>பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது என்றும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய முடிவுகள் பாராட்டத்தக்கவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><h2>பொறு<strong>மை காக்க வலியுறுத்த</strong>ல்</h2><p>த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது என்று கூறிய அண்ணாமலை, அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கத்தைப் பொறுத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நன்மைகளை ஆதரிக்கும் அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing#comments</comments><guid isPermaLink="false">e5986a56-482a-401b-b017-f97d0b2c649a</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:10:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:10:47.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">பேச்சுவார்த்தையை </a>அடுத்து உடல்களை வாங்க சம்மதித்துள்ளனர்.  </p> <p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ஸ்டாலின் கண்டனம்</h2><p>அந்த வகையில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.</p> <p>குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.</p><p>அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.</p> <p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn#comments</comments><guid isPermaLink="false">f845adee-a555-4331-baee-b546ce27480c</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:48:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:48:09.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,Ramanathapuram,Corruption,ராமநாதபுரம்,ஊழல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேற்று நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">80 வது சுதந்திர தினம்</a> நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதல்வர் விஜய் </a>கொடியேற்றினார்.</p> <h2>சிறந்த ஊழியர்கள்</h2><p>மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டன.</p><p>அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p> <h2>விருது</h2><p>நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர்.</p><p>இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>ஆய்வாளர் கார்த்திகேயன் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த வழக்கு ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊழல்</h2><p>கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கார்த்திகேயன் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் கண்டனங்களை குவித்த நிலையில் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade#comments</comments><guid isPermaLink="false">5516ca60-728f-4167-8101-0cf5b2b525db</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:41:42.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவலர் உயிரிழப்பு,Police constable dies</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில்  நேற்று நடைபெற்ற 80-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george">சுதந்திர தின விழா </a>அணிவகுப்புப் பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆவடி சிறப்புக் காவல் படை இசைக்குழு காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.</p><h2>அணிவகுப்புப் ப<strong>ணியின்போது நேர்ந்</strong>த சோகம்</h2><p>சென்னை நேற்று (ஆகஸ்ட் 15) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலரான தர்மராஜ் (வயது 56) பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றி வந்தார். அணிவகுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.</p><h2>மருத்துவமனையி<strong>ல் பலனின்றி</strong> முடிந்த சிகிச்சை</h2><p>மயக்கமடைந்து கீழே விழுந்த காவலர் தர்மராஜை, அங்கிருந்த சக காவலர்களும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விழாவுக்கு வந்திருந்தோரிடையேயும் சக காவலர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமை<strong>ச்சர் நிதியு</strong>தவி </h2><p>காவலர் தர்மராஜின் மறைவு செய்தி அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். </p><p>கடமை உணர்வுடன் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் தர்மராஜின் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்த முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action#comments</comments><guid isPermaLink="false">79884528-daef-4639-9c91-42d644f19265</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:15:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:15:54.179Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Shanmugam,CPM,பெ.சண்முகம்,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran  CPM  Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கண்ணியம் மீறிப் பேசிய இந்த உரை, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் பல்வேறு தலைவர்களின் கண்டனங்களையும் அலை அலையாகப் பெற்று வருகிறது.</p><h2>எ<strong>ல்லை மீறிய பேச்சுக்கு</strong> எழுந்த கடும் எதிர்ப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">நயினார் நாகேந்திரனின்</a> இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கையில், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் நயினார் நாகேந்திரன் நடந்து கொண்டுள்ளார் என்று சாடியுள்ளார். </p><p>பெண்களை மதிப்பது என்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத ஒன்று என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றும், நயினாருக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>சட்டப்ப<strong>டி நடவடிக்கை எடுக்கக் கோரி</strong>க்கை</h2><p>அரசியல் நாகரிகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அவதூறு பேச்சுகள் தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அரசியல் சூழலைச் சீர்குலைக்கும் என்பதால், அரசும் காவல் துறையும் இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies#comments</comments><guid isPermaLink="false">2dd5c183-922f-4126-8d44-c61824703e7a</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:49:40.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">துப்பாக்கிச் சூட்டில்</a> தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><h2><strong>அரசுத் தரப்பில் முக்கிய உறுதிமொழி</strong></h2><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அரசுத் தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. </p><p>இதில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. </p><p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சடலங்களை வாங்க உறவினர்கள் சம்மதம்</strong></h2><p>அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, மைசூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களின் சடலங்களையும் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்...&apos;-கைது குறித்து  உதயநிதி கிண்டல் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest#comments</comments><guid isPermaLink="false">ca38627e-414c-4573-b3a1-0e63a414268e</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:11:10.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Udhayanidhi Stalin,tvk,தஞ்சாவூர்,உதயநிதி கைது,udhayanidhi stalin arrested,Thanjavur controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a>, தமது சமீபத்திய கைது மற்றும் சிறைவாசம் குறித்து நகைச்சுவையாகப் பேசி அரங்கத்தில் இருந்தவர்களைச் சிரிப்பலையில் மூழ்கடித்தார்.</p><p>கூட்டத்தில் பேசிய அவர், தம்மை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்துக் குறிப்பிடுகையில், "<em>அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது"</em> என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், இந்த வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொண்டு தம்மை வெளியில் கொண்டுவந்த திமுக சட்டத்துறை வழக்குரைஞர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>அரசியல் ரீதியாகத் தம் மீது போடப்படும் வழக்குகள் குறித்தும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்துறையின் துணை கொண்டு அனைத்துப் பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறியடிப்போம் என்றும் உறுதியளித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும் சுவாரஸ்யமாகவும் பேசிய இந்த உரை, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.</p><h2>வழக்கி<strong>ன் பின்னணி</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>சர்ச்சைக்<strong>குரிய பேச்சு</strong></h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது பெண் குறித்தும், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><h2>“<strong>நான் கூட இதுக்காக தா</strong>ன் நினைச்சேன்”</h2><p>தமது கைது நடவடிக்கை தொடர்பாகப் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அரசு தன் மீது தேவையின்றி வழக்குகளைத் தொடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சாடினார். </p><figure><img alt="Udhayanidhi " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vt3enpli/UDHAY.jpg" /></figure><p>தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபோது தனது உதவியாளர் வந்து கைது குறித்துத் தெரிவித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் கூட இதுக்காகத்தான் என்னைக் கைது செய்கிறார்கள் என்று நினைத்தேன்" எனக் நையாண்டியாகப் பேசினார். காவிரி மற்றும் மேகேதாது விவகாரங்களில் விவசாயிகள் சந்திக்கும் முக்கியச் சிக்கல்களை மூடிமறைக்கவே இத்தகைய கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின் எதிர்</strong>வினை</h2><p>உதயநிதி ஸ்டாலினின் பேச்சைத் ஆளும்கட்சி மற்றும் எதிர்த்தரப்பு அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளை எந்தக் காலத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு சோடிக்கப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் பதிலளித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்ல கர்நாடக வனத்துறைக்கு அதிகாரம்  தந்தது யார்? - டி.டி.வி தினகரன் ஆவேசம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes#comments</comments><guid isPermaLink="false">07161d91-b762-4a7e-82f9-e15993f3ce30</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:46:49.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Tamils,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.  </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்ட தாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர். </p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கண்டனம் </a>தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>டிடிவி தினகரன் பதிவு</h2><p>இந்த சூழலில் இதுகுறித்து அமமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ttv-dinakaran">டிடிவி தினகரன் </a>தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>"கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பத்தில் நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.</p><p>பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார்?</p><p>இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies#comments</comments><guid isPermaLink="false">2bddb3b0-55a8-4f39-a2bc-866b61b4c428</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:16:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:16:37.757Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Tamils ​​shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில்  அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும்  மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns">துப்பாக்கிச் சூடு </a>பற்றிய தகவல் பரவிய உடனேயே, உயிரிழந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆத்திரம் அடைந்து ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர்.</p><p>பெயர் பலகையைக் கிழித்தெறிந்தும், அலுவலக தளவாடங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வெளியே வீசியும் அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். மேலும், கல்லிடோடியில் உள்ள வேட்டைத் தடுப்பு முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்த சொத்துகளையும் சேதப்படுத்தினர்.</p><p>மேலும் அவர்கள் ஆனூர் நகரில் சாலையை மறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்ததால், துறை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர். </p><p>அப்போது கணவரை பறிகொடுத்த பீட்டரின் மனைவி கூறுகையில், எனது கணவர் பீட்டர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மக்காச்சோளப் பயிரைப் பராமரிக்க வயலுக்கு சென்றிருந்தார். தன் கணவர், தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p>அதுபோல் குமாரின் மனைவி கூறுகையில் "என் கணவர் தவறு செய்திருந்தால் அவரை  கைது செய்து இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் அவ்வாறு செய்யவில்லை. வேண்டும் என்றே திட்டம்  போட்டு கொன்று இருக்கிறார்கள். 2  மகள்கள் இருக்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கண்ணீருடன் கூறினார். </p><p>அவர்களிடம் போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீரூபா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாது காப்புக்காக ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் அழுதுகொண்டிருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதாக கூறி நடத்தப்பட்ட மோதலில் 3 மூன்று பேர் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி இழப்பீடும், அரசு வேலைகளும் வழங்கப்பட வேண்டும் என விவசாய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதுகுறித்து  மாநில பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை மந்திரி புட்டரங்கஷெட்டி கூறுகையில், வனத்துறையின் பொறுப்பற்றத்தனம் கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழக்கின் உண்மை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><h2>நீதிப<strong>தி விசாரணை</strong></h2><p>வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக  முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், காலை 5 மணிக்கு இந்த  சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. </p><p>அதிகாரிகள் சில விவரங்களை அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் சில பொருட்களும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும்," என்றார்.</p><p>இந்த நிலையில் வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி லௌர்டு மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>முதல் தகவல் அறிக்கையில் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, “ஆனூர் பிரிவு வனத்துறை அதிகாரிகள்” குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பதிவு தென் மண்டல ஐ.ஜி. போரலிங்கேகௌடா மற்றும் எஸ்.பி. முத்துராஜு ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலி யானவர்களின் உடல்களை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7bfbdbb-066d-4104-8c90-0b4b7da28f62</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:40:24.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Apologize,CMVIJAY,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,WomenRespect</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh - Nainar Nagendran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>"பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!</p><p>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!<br><br>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2088644733296075151?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: அன்புமணி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">84ef203b-6544-4f23-8a80-2389e1d40ff5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:29:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:29:36.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி,#PMK,Fake Encounter,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK Leader Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா என்கிற வனப்​பகுதி உள்​ளது.</p><p>இங்​கு சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்ளது. இதனால், வனத்துறையினர் 7 பேர் இரு குழுக்​களாக பிரிந்து கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.</p><p>இந்தநிலையில், தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகுதி​யில் நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யில் ஈடுபட்டனர். அப்​போது, அங்கு மறைந்திருந்த 4 பேர் மீது போலீசார் அதிரடி துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மூன்று பேரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீசார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.</p><p>அன்புமணி கண்டனம்</p><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்</p><p>கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும், உயிரிழந்தவர்களினம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட  அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார்  100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது,  வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து  வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.</p><p>மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?  என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக  முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">61a55577-3f12-45dd-bad4-976e8dac4a7f</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:24:20 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:24:20.799Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Fake Encounter,P Shanmugam,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/71hzmw0y/Pshanmugam0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகா தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><p>தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அன்புமணி ராமதாஸ்</h2><p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிடடுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு: அரசுடன் கைகோர்க்க பொதுமக்களுக்கு அமைச்சர் என்.ஆனந்த் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-500-crore-waterbodies-restoration-minister-n-anandhs-call-to-join-hands-with-government#comments</comments><guid isPermaLink="false">2a30a7fe-5a6b-4c19-8684-537dbec91caf</guid><pubDate>Sun, 16 Aug 2026 07:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T07:09:40.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,Water bodies,நீர்நிலைகள் சீரமைப்பு,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/j3t91jbd/Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பருவமழை காலம் சென்னை மக்களுக்கு பெரும்பாலும் சோதனை காலமாக இருக்கிறது.</p><p>முன்கூட்டியே எவ்வளவு திட்டமிட்டதாக கூறினாலும் மழை போட்டுதாக்கத்தான் செய்யும். இப்போது புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த பருவமழை சவாலை சந்தித்து சமாளிக்க புதுமையான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. </p><p>அதன்படி, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள், கூவம் ஆறு மற்றும் நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளை தீவிரமாக தொடங்கி உள்ளது. </p><p>கிராமப்புறங்களில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் கிராமப்புற நீர்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் மாபெரும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் நாளை (17-ந்தேதி)தொடங்கப்பட உள்ளன.</p><p>முதலமைச்சர்  விஜய் உத்தரவின்படி, வளர்ச்சியடைந்த பாரதம்- கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வரத்துக் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>இதன்படி, மாநிலம் முழுவதும் 10,185 நீர்வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை தூர்வாரி புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.</p><p>ரூ.500 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகளில் தேங்கியுள்ள மண், கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றி, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமிக்க முடியும்.</p><p>இதன் மூலம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்த்தேக்கத் திறன் அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் விவசாயப் பாசனத்துக்கு தேவையான நீர்வளம் கிடைப்பதற்கும் இந்தப் பணிகள் பெரும் உதவியாக அமையும். மேலும் வெள்ளப் பாதிப்பையும் குறைக்கும்.</p><p>அதீத மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களில், நீர்வரத்துக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது காரணமாக மழைநீர் தேங்கி விவசாய நிலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.</p><p>தற்போது மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் மூலம் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளைச் சென்றடைய வழிவகை செய்யப்படும். இதனால் மழைநீரை சேமிப்பதோடு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் வெள்ள அபாயத்தையும் குறைக்க முடியும்.</p><h2>பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு</h2><p>தமிழகத்தின் கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பது அரசின் பணியாக மட்டுமின்றி, பொது மக்களின் பங்களிப்பும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, இந்தப் புனரமைப்புப் பணிகளில் உள்ளாட்சி அமைப்புகள், ஊர் பொது மக்கள் மற்றும் தன்னார்வ லர்களின் பங்களிப்பும் இடம்பெற உள்ளது.</p><p>முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த மாபெரும் பணியில்  அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்  என்.ஆனந்த், அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>பயன்கள் </h2><p>கிராமப்புற நீர்வளத்தை காக்கும் நீண்டகால நடவடிக்கை மழைநீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், விவசாயத்துக்கான பாசன வசதியை மேம்படுத்துதல், வெள்ளப்பாதிப்பைத் தடுப்பது என பல்வேறு நோக்கங்களை ஒருங்கிணைத்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>10,185 வரத்துக் கால்வாய்கள், 809 நீர்நிலைகள் என ஆயிரக்கணக்கான நீர்வள ஆதாரங்கள் ஒரே கட்டமாக புனரமைக்கப்படுவது, தமிழகத்தின் கிராமப்புற நீர்வளப் பாதுகாப்பில் முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.</p><p>வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகள் முன்னெடுக்கப்படு வதால், வரும் மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாகப் பயன்படுத்து வதற்கான அடித்தளமாக உருவாகும்.</p><p>மேற்கண்ட தகவலை நீர்வளத் துறை தெரிவித்து உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளிட்ட தமிழக அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-government-releases-list-of-farm-loan-waiver-beneficiaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-government-releases-list-of-farm-loan-waiver-beneficiaries#comments</comments><guid isPermaLink="false">73c49561-78ea-4c66-aa30-5b053972a550</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:43:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:43:42.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,பயிர்க்கடன்,Crop,Farm Loan Waiver,farm loan,விவசாய பயிர்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/w3i9vs7d/crop.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Crop ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/w3i9vs7d/crop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களின் பட்டியலை, தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.</p><p>தமிழகத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில், பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, 2025 மே முதல், இந்த ஆண்டு பிப்ரவரி வரை, கூட்டுறவு நிறுவனங்களில், பயிர்க்கடன் பெற்ற, 14.43 லட்சம் விவசாயிகளின், 5,932 கோடி ரூபாய் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்தது.</p><p>மாவட்ட வாரியாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகள், அவர்களின் தள்ளுபடி தொகை விபரம் ஆகியவை, இணையதளத்தில் 'www.kooturavu.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுதும் உள்ள வி.ஏ.ஓ., அலுவல கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில், பயிர்க் கடன்தள் தள்ளுபடி திட்ட பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-pressure-forms-over-bay-of-bengal#comments</comments><guid isPermaLink="false">c33e0a3a-d0c2-41d7-9b7f-b2228a269e51</guid><pubDate>Sun, 16 Aug 2026 06:12:55 +0000</pubDate><atom:updated>2026-08-16T06:12:55.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Deep depression,வங்கக்கடல்,bay of bengal,காற்றழுத்த தாழ்வு பகுதி,Indian meterological centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Weather]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/mbd5i0vz/weather.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மேற்குவங்கம்- ஒடிசா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆகஸ்டு 18ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>மழை </h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை காரணமாக இன்று முதல் 21-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.</p><h2>காற்றழுத்த தாழ்வு பகுதி</h2><p>இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பருவமழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் விவகாரம்: கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-dispute-nainar-and-anbumani-must-question-karnataka-bjp-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">04b5bf12-8ff6-4cf5-a171-735058433306</guid><pubDate>Sun, 16 Aug 2026 05:19:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T05:19:58.193Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,காவிரி நீர்,Manickam Tagore,Cauvery Issue</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran- Anbumani ramadoss- Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9f0e9ixz/Manic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிற்கு நீர் திறந்ததை எதிர்க்கும் கர்நாடக பாஜகவினரை நயினார், அன்புமணி தட்டிக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால், முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.</p><p>ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு வரவுள்ள நிலையை உணர்ந்து, தனது நிலையைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு தற்போது கபினியிலிருந்து முறைப்படி தண்ணீரைத் திறந்துவிடத் தொடங்கியுள்ளது.</p><p>இந்த மாதத் தொடக்கத்திலேயேபி. எஸ். எடியூரப்பா மற்றும்  பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தனர்.</p><p>தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு முறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையிலும், அதைத் தடுத்து நிறுத்த அணை முற்றுகை நாடகங்களை அறிவித்துப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுத்து நிறுத்தத் துடிக்கும் பாஜகவின் இந்த வன்மமும் தமிழர்களுக்கு எதிரான துரோகமும் மன்னிக்க முடியாதது!</p><p>பாஜகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் மீது பழி போடுவதற்கு முன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரே இருந்தாலும் தவறு செய்தால் தமிழகத்தின் உரிமைக்காகத் தட்டிக்கேட்க நாங்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. </p><p>ஆனால், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராகச் செய்யும் இந்த அப்பட்டமான துரோகத்தைத் தட்டிக்கேட்க முடியாமல் </p><p>நயினார் நாகேந்திரன் அண்ணா எங்கே போனீர்கள்? கூட்டணி கட்சி தலைவர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்? ஏன் கூனிக் குறுகி மவுனம் காக்கிறீர்கள்?</p><p>தமிழ்நாட்டைப் பற்றியும் நமது விவசாயிகளைப் பற்றியும் இவர்களுக்குக் கவலையே இல்லையா? </p><p>தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உங்கள் கட்சியினரைக் கண்டிக்க வக்கில்லாமல் இங்கு வந்து அரசியல் நாடகம் நடத்துவதுதான் பாஜகவின் லட்சணமா? </p><p>பாஜகவின் இந்த நயவஞ்சகக் கொல்லைப்புற அரசியலும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டன!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>19-ம் தேதி வரை நீடிக்கும் மழை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-weather-heavy-rain-warning-for-chennai-and-neighbouring-districts-till-19#comments</comments><guid isPermaLink="false">37956728-e8e3-40f1-84bf-d6e617e4480f</guid><pubDate>Sun, 16 Aug 2026 04:51:23 +0000</pubDate><atom:updated>2026-08-16T04:51:23.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,சென்னை,Chennai,Heavy Rain,கனமழை எச்சரிக்கை,weather report,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/emb1id6j/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது:-</p><p>தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.</p><p>இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை (17-ந்தேதி) செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 18-ந்தேதி செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை யும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>வருகிற 19-ந்தேதி நீல கிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery#comments</comments><guid isPermaLink="false">ce122d1e-24c5-4d47-8398-083e3855f290</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:45:22 +0000</pubDate><atom:updated>2026-08-16T03:45:22.507Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery river,நீர் வரத்து அதிகரிப்பு,ஒகேனக்கல் காவிரி ஆறு,parisal,hogenakkal cauvery river,பரிசல் இயக்கத்திற்கு தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hogenakkal ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/54ni1xv5/hogenakkal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஒகேனக்கல்</h2><p>தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர் வரத்து 6500 கன அடியிலிருந்து 8000 கன அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதன்எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 4385 கன அடியில் இருந்து 6,179 கன அடியாக அதிகரித்துள்ளது.</p><p>மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.31 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 43.27 மில்லியன் கன அடியாக உள்ளது.</p><p>மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,179 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. </p><p>இதன் எதிரொலியால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 8000 கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><h2>முல்லைப் பெரியாறு அணை</h2><p>முல்லைப் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 920.30 கன அடியாக உள்ள நிலையில் தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 122.95 கனஅடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3,212.10 மில்லியன் கனஅடியாக உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister..!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech#comments</comments><guid isPermaLink="false">35a37a4f-cfd1-4027-bf5e-64061a8cb7c3</guid><pubDate>Sun, 16 Aug 2026 02:58:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T02:58:24.277Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Independence Day,சுதந்திர தினம்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/htp16ixw/Manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காக பேசிய பிரதமரே இளைஞர்கள் வாழ்வோடு விளையாடாதீர் எனவும் நிர்வாக சீட்கேட்டை புள்ளிவிவரங்களே அப்பட்டமாக சொல்கின்றன. இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr.Prime Minister எனவும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>மோடி அரசின் பிரம்மாண்ட விளம்பரங்களுக்குப் பின்னால் இருக்கும் அவலங்களை, நாடாளுமன்ற நிதிக் குழுவின் 40-வது அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.</p><p>5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p>2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ₹2,000 கோடியில் வெறும் ரூ.29.29 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 98.5% நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பியனுப்பப்பட்டுள்ளது.</p><p>தொழிற்துறையினர் மூலம் 2.45 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகக் கூறிய நிலையில், சேர்ந்தது வெறும் 16,060 பேர் மட்டுமே. அதிலும் 53.6% பேர் பாதியிலேயே வெளியேறியுள்ளனர். </p><p>சொற்ப உதவித்தொகை, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கிராமப்புற இளைஞர்களும் பெண் வேட்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செங்கோட்டையில் வெறும் விளம்பர வெளிச்சத்திற்காகப் பேசிவிட்டு, நிதியைப் பயன்படுத்தும் திறனின்றி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடுவதை மோடி அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உங்கள் நிர்வாகச் சீர்கேட்டைப் புள்ளிவிவரங்களே அப்பட்டமாகச் சொல்கின்றன. </p><p>இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">8a8a70a3-2b28-4c92-b725-9de674c09b2f</guid><pubDate>Sun, 16 Aug 2026 01:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T01:40:24.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,DMK MP Kanimozhi,திமுக எம்பி கனிமொழி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/o5xfm9qo/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என்று கனிமொழி எம்.பி. திட்டவட்டமாக கூறினார்.</p><p>இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பாலியல் குற்றச்சாட்டு</h2><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகள் எழும்போது, அவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்துகிறது.</p><p>ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p>குற்றச்சாட்டுகள் வந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோ, கைது செய்வதோ நடை பெறுவதில்லை. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2>மத்திய அரசை எதிர்த்து...</h2><p>'எதிர்ப்போம், எதிர்ப்போம்' என்று வாய் வார்த்தையாக கூறுகிறார்களே தவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் மத்திய அரசை எதிர்த்து எதையும் அவர்கள் பேசுவதில்லை என்பதுதான் உண்மை.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரோ, அமைச்சர்களோ இதுவரை மத்திய அரசை எதிர்த்து எந்த கேள்வியையும் எழுப்பியதாக எனக்கு நினைவில்லை.</p><p>2 நாட்களுக்கு முன்பு கனிம வளம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருவாயையும் பெரிய அளவில் பாதிக்கக்கூடியது.</p><h2>தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி</h2><p>எந்தவிதமான விவாதமும் இல்லாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க. அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.</p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் திட்டங்களை நீட்டித்திருப்பது நிச்சயமாக வாழ்த்துக்குரியது.</p><p>தமிழகத் தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கனவாக இருக்கலாம். நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கரூர்: 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter#comments</comments><guid isPermaLink="false">ebb5148e-5468-45ff-842c-b523da1719b0</guid><pubDate>Sat, 15 Aug 2026 18:15:21 +0000</pubDate><atom:updated>2026-08-15T18:15:21.909Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,கரூர்,Karur,KULITHALAI,குளித்தலை,sexual assault on a minor girl</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது பேத்தியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்த இளைஞனை பாட்டி அரிவாளால் வெட்டிய  சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தில் தாய் தந்தையுடன் அந்த 4 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறாள். நேற்று சிறுமியை பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பக்கத்து வீட்டு இளைஞனிடம் கேட்டுள்ளார்.</p><p>சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் சிறுமியை பாட்டியின் வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்</p><p>வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பாட்டியிடம் கூறியிருக்கிறாள்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த 55 வயது பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனைத் தேடிச் சென்றுள்ளார்.</p><p>குளித்தலை பகுதியில் உள்ள ஒரு டீக் கடை அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.</p><p>10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.</p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.</p><p>சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><p>படுகாயம் அடைந்த இளைஞன், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.</p> <p>பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 55 வயது பாட்டியைக் கைது செய்தனர்.</p><p>சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உள்நோக்கம் இல்லை.. முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் சொன்ன விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism#comments</comments><guid isPermaLink="false">15343f8d-4d2b-43bb-bc84-73f249570674</guid><pubDate>Sat, 15 Aug 2026 17:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-15T17:35:46.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,விஜய்,vijay,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் "அப்பாவை காணோம்" என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark">கண்டனங்கள் </a>எழுந்து வரும் நிலையில் அதற்கு அவர் வில்லகம் அளித்துள்ளார். </p><p>பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. </p> <h2>சர்ச்சை பேச்சு</h2><p>இதில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள்.</p><p>வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.</p> <h2>கண்டனம்</h2><p>நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகமானது என தவெக தரப்பில் இருந்தும் பிற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த நடிகை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">குஷ்புவும் </a>நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில்,</p><p>"ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. </p><p>தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:23:49.053Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test">இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</a></p><p>* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</a></p><p>* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status">மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</a></p><p>* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement">இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</a></p><p>* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.</p><p>* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</a></p><p>* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><p>* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech#comments</comments><guid isPermaLink="false">1904e4d4-7bc0-4386-93a6-3dff7b9414cf</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:07.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,குஷ்பு,Khushbu,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ khushbu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.</p><h2>பெண்கள் பகடைக்காய் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். </p><p>நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement#comments</comments><guid isPermaLink="false">7e0e97f5-781c-4b81-8497-b3bc393f1f4c</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:03:33.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,M.K.Stalin,தமிழக அரசியல்,Secretary,DMK.,மு.க.ஸ்டாலின்,இளைஞர்கள்,youthsDistrict,மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ M.K. Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>தொண்டர்களின் கருத்துக்கள்</strong></h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தலில் நடந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. </p><p>இவை அனைத்தையும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் இருக்கும் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தற்போது தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் சரியான முறையை கடைபிடிக்காதவர்களின் பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>இளைஞர்களுக்கு வாய்ப்பு</strong></h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போது, எம்.எல்.ஏ.க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்</strong></h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து சரிந்து வரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்- சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3#comments</comments><guid isPermaLink="false">994871da-dc36-416d-bf9a-069405a1020b</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:41 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:41.013Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Veeranam Lake,வீராணம் ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:title><media:description type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</strong></em></p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே <a href="https://www.maalaimalar.com/topic/வீராணம்-ஏரி">வீராணம் ஏரி</a> அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 24 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் ஏரியை வந்தடைகிறது.</p><h2><strong>சிக்கல்</strong></h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.  அதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. </p><p>எனவே சிறப்பு கவனம் செலுத்தி  கடந்த மாதம் ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது தடைப்படாமல் நடைபெற்றது.</p><p>தற்போது ஏரியில் 41.25 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</p><p>அந்த தண்ணீரும் போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை தொடர்ந்து நயினார் நாகேந்திரன்.. அரசியல் களத்தில் தொடரும் நாகரிகமற்ற பேச்சுகள்..!- அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">a0fe0110-bcf2-4e53-9392-6f6a945fdfb6</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:10:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:10:35.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,annamalai,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow"> திமுக</a>வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. </p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம்.  ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்திலிருந்து வெளிமாநில விமான சேவை தொடர &apos;உடான்&apos; திட்டத்தை 7 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem#comments</comments><guid isPermaLink="false">17cd6b02-173f-4ded-9fdd-fb098cb4c8b6</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:53:13.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம்  விமான நிலையத்தில்  இருந்து  கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான விமான சேவை  தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த விமான நிலையத்திற்கான  உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.</strong></em></p><p>சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே. இராம் மோகன் நாயுடுக்கு  மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><p>மாண்புமிகு விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. இராம்மோகன் நாயுடு அவர்களுக்கு,</p><p>வணக்கம்!</p><p>தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.</p><p>சேலம் கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் 33 ஆண்டுகளுக்கு முன் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்றாலும், அங்கிருந்து வணிகரீதியிலான விமானப்போக்குவரத்து சேவை அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அதே ஆண்டில்  தொடங்கப்பட்டாலும் கூட அது நீடிக்கவில்லை. அதன்பிறகும் பல முறை விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், அவை போதிய ஆதரவின்றி அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படுவதே வாடிக்கையானது.</p><p>எளிய மக்களும் விமானத்தில் பறப்பதை சாத்தியமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட உடான் ((UDAN-Ude Desh ka Aam Naagrik) ) திட்டத்தின் கீழ் 2018&amp;ஆம் ஆண்டில் சேலம் &amp; சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டாலும் 2021&amp;ஆம் ஆண்டில் மீண்டும் நிறுத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த உடான் 5.2 திட்டத்தின் படி 2023&amp;ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26&amp;ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவை தவிர உடான் திட்டத்தில் இல்லாமல் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது.</p> <p>சேலத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்தில் 11 முறையும், சென்னை மற்றும் கொச்சிக்கு வாரத்தில் 7 முறையும், ஐதராபாத்துக்கு வாரத்தில் 4 முறையும் தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  சேலம் விமான நிலைய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் உடான் 5.2 திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்ட சலுகைகள் தான்.</p><p>சேலம் போன்ற நகரங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் போது தொடக்க நிலையிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. காலப்போக்கில் தான்   அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். அதுவரை தனியார் விமான  நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்காக நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் தான் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன.</p><p>உடான் 5.2 திட்டம் வரும் அக்டோபர் 25&amp;ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான சேவையை நிறுத்த தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. அந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு மட்டுமே  விமான சேவை இயக்கப்படும். அது சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.</p><p>இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து விமானங்களை இயக்குவதற்கான  உடான் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஆனால், அந்தத் திட்டத்தின் காலவரையறை தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை தடுக்கிறது. உடான் திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே   செயல்படுத்தப்படுகிறது. ஒரு இரண்டாம் நிலை நகரத்திலிருந்து தொடங்கப்படும் விமான சேவை தற்சார்பு நிலையை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அவ்வாறு இருக்கும் போது 3 ஆண்டுக்கு மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.</p><p>சேலத்திலிருந்து கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை தொடங்கப்பட்ட போது ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இப்போது 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது   60% முதல் 70% என்ற அளவுக்கு உயரும் போது விமான நிறுவனங்கள் அரசின் நிதி உதவியின்றி  விமானங்களை இயக்க முடியும். சேலம் &amp; சென்னை சேவை அப்படித் தான் நடைபெற்று வருகிறது.</p><p>உடான் 5.2 சேவை நிறுத்தப்படுவதால் சேலம் விமான நிலையம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களின் சிறிய விமான நிலையங்களும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் கல்புர்கி, சிவமோகா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உடான் திட்ட சலுகைகள் அக்டோபர் மாதம் கைவிடப்பட இருப்பதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள உடான் 5.2 திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதன்பின் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டால், அதற்காக ஆகும்  செலவில் பாதியை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.</p><p>தமிழ்நாட்டிலும் சேலத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் தொடர்வதை உறுதி செய்வதற்காக உடான் 5.2 திட்டத்தை 2028&amp;ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். கர்நாடக அரசு முன்வைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், 2028&amp;ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் உதவியுடன் உடான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்தும் ஆராய வேண்டும்; சேலம் நகரிலிருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகளை  தொடங்குவதற்கு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks#comments</comments><guid isPermaLink="false">7c59db67-a391-4c69-b720-c5e147420b64</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:47:28.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரும் 17-ந்தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th#comments</comments><guid isPermaLink="false">5d6220dd-18cb-470b-8275-1393057da1b1</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:21:47.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p> <h2>புதுவை மற்றும் காரைக்கால்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>4 மாவட்டங்களில் கன மழை</h2><p>17-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p>வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதி</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns#comments</comments><guid isPermaLink="false">1ad3c2b3-339c-413b-8031-071817d3dfeb</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:09:59.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Raj mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் "அப்பாவை காணவில்லை" என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights" rel="nofollow">முதலமைச்சர்</a> கூறியதற்கு எதிராக நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.</p><p>திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><h2>டிஜிபி அலுவலகத்தில் புகார்</h2><p>முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">குற்றவியல் நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark#comments</comments><guid isPermaLink="false">a39310c7-e973-4a29-9a10-f432241366e4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:51:57.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,cm vijay,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni arasu - Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். </p> <h2>வன்னி அரசு</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p> <h2>பாஜக</h2><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.</p> <p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அண்ணாமலை தலைமையில் நாளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa5285d8-ce14-47ac-8b30-90d59ef02f2a</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:46:13.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.</strong></em>  </p><p>வீ த லீடர்ஸ் அமைப்பை <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> தொடங்கியது முதல் சமூக முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்டை காரணங்களை கண்டறிந்து அதுபற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், மாரத்தான், இளைஞர்களை சந்தித்து உரையாடுதல் போன்றவற்றை நடத்தினார்கள்.</p><h2><strong>50 லட்சம்  மரக்கன்றுகள்</strong></h2><p>இந்த மாதம் சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஏரி, கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதில் இந்த மாதம் மட்டும் சின்னக் கலைவாணர் மறைந்த விவேக் பெயரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அந்த பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.</p><p>கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைகளை தூய்மை படுத்தும் பணிகளை அண்ணாமலை தொடங்கி வைத்தார். 3-ந்தேதி மதுரையில் வைகை ஆற்றை தூய்மை படுத்தும் பணிகளையும், மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கி வைத்தார்.  சென்னையில் நாளை (16-ந்தேதி) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.</p><p>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.  பேரணிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில் நிர்வாகிகள் மாதவரம் எம்.மனோகரன், கிருஷ்ண மூர்த்தி, வெங்கடேஸ்வரா, லயன். பி.செல்லதுரை, எஸ்.தியாகராஜன், ஏ.செல்வ குமார், பி.மகாலிங்கம்,  ஏ.நிர்மல்ராஜ், கிஷோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். மேலும்  நடிகர் விவேக் மனைவி அருள் செல்வி விவேக், ஆங்கிலிட்டன் சர்ச் அருட்தந்தை சாமுவேல் குணசேகரன் ஆகியோரும் உடன் நடந்து செல்கிறார்கள்.</p><p>ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பேரணி நிறைவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.</p><p>பேரணியில், மரங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பசுமையான தமிழகத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது ஆகியவை குறித்து வலியுறுத்தப்படுகிறது.</p><p>நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலை முறையையும் பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பு ஆகும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று முகப்பேர் வெங்கடேஸ்வரா லயன் பி.செல்லத்துரை, எஸ்.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">573bb2a9-c377-4aab-98ca-0433c3688bc6</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:25:08.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 80-வது  சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி  மரியாதை செலுத்தப்பட்டது.</strong></em></p><h2><strong>தி.மு.க.</strong></h2><p>அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தின விழா</a> நடந்தது. அவர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் கவி, அன்பு துரை, வி.எஸ். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>பா.ஜ.க.</strong></h2><p>பா.ஜ.க.  கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில செயலாளர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கம்யூனிஸ்டு</strong></h2><p>தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை  அலுவலகத்தில் மாநில செயலாளர் வீர பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் (அகில இந்திய பொதுச் செயலாளர்) ராஜா, நிர்வாகிகள் வகிதா நிஜாம், டாக்டர் ரவீந்திரநாத், சிவா, ஏழுமலை, டாக்டர் சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். கட்சியின் செங்கொடியை சம்பத் ஏற்றினார். நிர்வாகிகள் குணசேகரன், வேல்முருகன், செல்வா, ஜான்சிராணி, ராஜசேகரன் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.</p><h2><strong>அரசு அலுவலகங்கள்</strong></h2><p>கோகுல மக்கள் கட்சி சார்பில் உள்ளகரத்தில் அதன் நிறுவனத் தலைவர் எம் .வி. சேகர்  தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.</p><p>தெற்கு ரெயில்வே சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர்  சுப்பாராவ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின்  அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.  சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர்  சைலேந் திர சிங் தேசியக்கொடி ஏற்றி  இனிப்பு வழங்கினார். </p><p>சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இயக்குனர்  பர்வீஸ், பொது மேலாளர் சுகுமாரன், தலைமை பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், வைதேகி, புஷ்பலதா, சித்ரா, சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><p>ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் ஐ.சி.எப். பொது மேலாளர் மனிஷ் அகர்வால் தேசியக்கொடி ஏற்றினார். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்தா ராம்  தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலைய இயக்குனர் ஜெய காந்தன் தேசியக் கொடி யேற்றினார்.</p><h2><strong>சார்பு நீதிபதி</strong></h2><p>திருவொற்றியூர் கோர்ட்டில்  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றினார். நிகழ்ச்சியில்  உரிமையியல் நீதிபதி ரேவந்த் கலந்து கொண்டார்.  மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அவருடன் உதவி ஆணையர் அரவிந்த் செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திலிப் குமார் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.</p><p>திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை தலைவர் மதுரை வீரன் ஏற்றி வைத்தார். விழாவில், செயலாளர் எம். காமாட்சி, ராமசாமி சேகர் சோலையப்பன் கே.ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா  மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டிய ராஜன், ராஜேந்திரன், பாலன் பழனியப்பன் பால்ராஜ் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.</p><p>மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேலாண்மை இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.</p><h2><strong>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம்</strong></h2><p>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் திருவள்ளுவர் நகர் குடியிருப்புவாசிகள்  கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">f0bc7817-a1ce-4715-ae22-199cfd2bb0b4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:28.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,Brands Enrica,என்ரிகா நிறுவனம்,மதுபானக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brands Enrica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான என்ரிகா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு விநியோகம் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.</p><h2>உணவு <strong>பாதுகாப்புத் து</strong>றை ஆய்வு</h2><p>முன்னதாக, பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற FSSAI பரிந்துரைத்திருந்தது.</p><h2>டாஸ்மாக் நி<strong>ர்வாகத்தின்</strong> முந்தைய நடவடிக்கை</h2><p>FSSAI அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுவிலக்கு </a>மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், குறிப்பிட்ட 11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>மீண்டும் <strong>விற்பனைக்கு அனும</strong>தி </h2><p>தடை விதிக்கப்பட்ட குறுகிய கால இடைவெளியில், உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடைமுறை மறுபரிசீலனைகளுக்குப் பிறகு, அந்த 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence#comments</comments><guid isPermaLink="false">b11f6f15-df47-45b7-b36b-8d7e0a371ebd</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:12:03.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.</strong></em></p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ஜிகே-வாசன்">ஜி.கே.வாசன்</a> தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.</p><p>பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது, </p><p>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.</p><p>சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார். </p><p>மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">b16d31c2-2ac6-4055-b1cf-470ccf5352af</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:16:36.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,அமைச்சர் ராஜேஷ்குமார்,Minister rajeshkumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi- Minister Rajesh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.</p><p>இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:- </p><p>ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை  என்பதையே இது காட்டுகிறது.</p><p>அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.</p><p>ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.</p><p>ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.</p><p>ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item></channel></rss>