<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 20:13:41 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் - 24 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:36:13.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது - அமைச்சர் மரிய வில்சன்</p><p>தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் வாங்கினர் - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள்.</p><p>திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சிகள் தான் காரணம்.</p><p>கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது.</p><p>சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது திமுக.</p><p>திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>பூஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார் - கோவி.செழியன்</p><p>எங்கள் கூட்டணி கட்சிகளால் தான் உங்கள் ஆட்சி அமைந்துள்ளது - கே.என்.நேரு</p><p>உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள் - கே.என்.நேரு</p><p>யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு - அமைச்சர் ஆதவ்</p><p>2024 திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் - தாரகை கத்பட்</p><p>எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? </p><p>தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக.</p><p>ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக - கே.என்.நேரு</p> <p>தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது. வேறு விவாதங்கள் வேண்டாம் - சபாநாயகர்</p><p>11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை ஆதரித்தது திமுக - செங்கோட்டையன்</p><p>மேகதாது அணை விவகாரம் என்றாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலும் சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறோம். </p><p>தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது. முதலமைச்சருடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்</p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces#comments</comments><guid isPermaLink="false">de436e7c-760f-4907-940a-8c0b0a9a4547</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:19:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாரதிராஜா,BharathiRaja,தேனி,Theni,TNAssembly,சட்டசபை கூட்டத் தொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bharathiraja-Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.</p><h2>ரூ.<strong>2.50 கோடியில் அமையவுள்ள நினைவுச் சி</strong>ன்னம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan">சட்டசபை</a>யில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார். அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என உறுதியளித்தார்.</p><p>இயக்குநர் பாரதிராஜாவிற்கு அவரது சொந்த மண் அமைந்த தேனியிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என்ற இச்செய்தி, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">c7ffd29e-f868-4a05-943e-6743b93a1819</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:16:40.276Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,டிஆர்பி ராஜா,TRB Rajaa,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். தமிழ்நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்சியை, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத ஒரு தொழில் வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு கண்டது. இந்தியா வியந்து பார்த்தது. “நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்” என்று இந்தியாவே வியந்து பார்த்தது.</p><p>தமிழ்நாடு எப்படி இந்த வளர்ச்சி எல்லாம் கொடுக்கிறது என்று நம்மிடம் கற்றுக்கொண்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை செயல்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், தெளிவு எல்லாமே. அதைத் தாண்டி உள்கட்டமைப்பில் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசமிகள் எல்லாம் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.</p><p>அதில் முக்கியமான ஒரு திட்டம்  துறைமுக இணைப்பு. அதேபோல கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும், தரைவழிப் போக்குவரத்தும், அனைத்தும் சரியாக இருந்தால்தான் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான நேரத்தில், உரிய நேரத்தில் துறைமுகத்தை சென்றடையும்; உலகம் எங்கும் அது சென்றடையும். அந்த உள்கட்டமைப்பு மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.</p><h2>தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்</h2><p>இன்று தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள் என்றுதான் சொல்லவேண்டும். பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று த.வெ.க அரசு கைவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு என மிகப்பெரிய அடி. </p><p>ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது அரசு இயந்திரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, ஏன் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும். திட்டத்தைக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல.</p><h2>மீனம்பாக்கம் விமான நிலையம் நமது கட்டுப்பாட்டில் இல்லை</h2><p>மீனம்பாக்கம் விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிலையம். மாநில அரசின் கட்டுப்பாடு அங்கு இருக்காது. ஆனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் சொத்தாக இருந்திருக்கும்.</p><h2>அரசியல் வேண்டாம்</h2><p>பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள். நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.</p><p>இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும். சிந்தனையே இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பரந்தூர் திட்டத்தை கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதற்கு தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்கள் மீது மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு: மேலாண்மை வாரியத்தை அணுக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board#comments</comments><guid isPermaLink="false">7471b8a5-4a96-454a-a14a-0120892c91ba</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:54:34.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,தமிழ்நாடு அரசு,Supreme Court,Tamil Nadu government,Karnataka Government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water-Supreme Court   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சாரப் பங்கு நீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் (CWMA) முறையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழ<strong>க அரசின் மனு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court">காவிரி நீர் </a>ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தினசரி 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும், திமுக விவசாயி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவிலும், பிலிகுண்டுலு எல்லையில் நீர் வரத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p>இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், திங்கள்கிழமை காலை நிலவரப்படி வாரியம் உத்தரவிட்ட நீர் வந்து சேர்ந்திருந்தாலும், அது தற்காலிகமானது என்றும், பருவமழை மற்றும் ஒட்டுமொத்தப் பங்கை ஒப்பீட்டளவில் கணக்கிடும்போது தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சார பங்கு நீர் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் பங்கீட்டு அளவீடு மற்றும் பற்றாக்குறை குறித்த முறையீடுகளை காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முன்னிலையிலேயே முன்வைத்து நிவாரணம் பெறுமாறு தமிழகத்திற்கு அறிவுறுத்தினர். கர்நாடகா அரசு வெளியிடும் நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலு எல்லையை அடையும் நீரின் அளவீடுகள் தொடர்பான புதிய நிலை அறிக்கையை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department#comments</comments><guid isPermaLink="false">f24776da-c475-4fca-9239-882ca0199eb8</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:47:01.573Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை,Higher Education Department,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகள்;</p><h2>ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.5-இன் அடிப்படையிலும், அரசு மற்றும் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் உதவிபெறும் பலவகை கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.19 மற்றும் 20-இன் அடிப்படையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட CAS திட்டம், இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து, 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிதி பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.</p></li><li><p>அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/-ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.</p></li></ul><h2>மாணவர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>மாணாக்கர்கள் உயர்கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக, 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையற்ற கல்விக் கடன் வழங்க 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) செயல்படுத்தப்படும். இதற்கென தொகுப்பு நிதி உருவாக்கப்படும்.  இத்திட்டம் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அரசு கலை மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.</p></li><li><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p></li></ul><h2>கல்வி நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் பிற அறிவிப்புகள்</h2><ul><li><p>உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களின் மின்னுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கென 2026-27 முதல் ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.31.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வித் துறையின் பணியாளர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 500 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும்  தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.</p></li><li><p>செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், “பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" நிறுவப்படும்.</p></li><li><p>அரசு கல்லூரிகளின் ஆய்வக நுகர்பொருட்களின் தேவைகளுக்காக, 270 அரசு கல்லூரிகளுக்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை || (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்க ரூ.36.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை - 2) 2026-27 முதல் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>2026-27ஆம் ஆண்டில், கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை 2-லிருந்து நிலை 1-ஆக தரம் உயர்த்தப்படும்.</p></li><li><p>2026-27 ஆம் ஆண்டில் NAAC அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a859d211-3a94-4276-a64d-c0884c06f0f3</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:23:05.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வருகின்ற பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர்வடிகால் அமைப்புகளின் தற்போதைய திறன் மற்றும் தயார்நிலை குறித்து பள்ளி இடைக்காலக் கட்டமைப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். </p><p>நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர்வடிகால் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த வடிகால்கள் அனைத்தும் மணிக்கு 6 முதல் 7 சென்டிமீட்டர் வரையிலான மழைப் பொழிவை எளிதில் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதைவிட மிக அதிகளவில் மழை பெய்யும் பட்சத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.</p><h2>திண்<strong>மக் கழிவுக</strong>ளால் உருவாகும் சவால்</h2><p>மழை பெய்து முடிந்த பின்பும் தேங்கிய நீர் வடியாமல் தாமதமானால், வடிகால் பாதைகளில் திண்மக் கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதே அதற்கு முதன்மை காரணமாகும். பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் மக்காத பிற குப்பைகள் மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்டு வடிகால்களை முடக்கிவிடுகின்றன. இதனால் மழைநீரின் இயல்பான ஓட்டம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இத்தகைய சூழலை முற்றிலுமாகத் தவிர்க்கவே மாநகராட்சி நிர்வாகம் இரவு பகலாகத் துப்புரவுப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.</p><h2>பொதுமக்<strong>களின் ஒத்துழை</strong>ப்பு அவசியம்</h2><p>மழைநீர் தேங்காமல் நகரம் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 'மக்கும் குப்பை' மற்றும் 'மக்காத குப்பை' எனத் தனித்தனியாகப் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சாலைகளிலோ அல்லது திறந்தவெளி வடிகால்களிலோ குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே வெள்ளப் பாதிப்பற்ற பாதுகாப்பான நகரத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோயில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed#comments</comments><guid isPermaLink="false">2136030f-a2ee-453d-991c-7db8ba234112</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:14:35.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Madurai Bench of the High Court,Palani Dandayuthapani Temple,பழனி தண்டாயுதபாணி கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. </p><p>பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கோயில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியானப் பாதையில் செல்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் சி. வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தவறான ஆவணங்கள் மூலம் இரண்டு தனி நபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரத்தில் முறைகேடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட, இடைத்தரகர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் எனப் பலரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements#comments</comments><guid isPermaLink="false">d3600cf9-aa7a-41e8-884f-4f733662ceb5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:54:19 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:54:19.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவது மற்றும் மாணவர் நலனை முதன்மைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு புதிய திட்டங்களையும், நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அவர் விரிவாக அறிவித்தார்.</p><h2>மரபு சார்ந்த <strong>சொல் மாற்றமும் தொடக்க உ</strong>ரையும்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh">சட்டசபை</a>யில் வழக்கமாக உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களின் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த மரபுசார்ந்த சொற்றொடருக்கு பதிலாக 'அறிமுக உரை' எனப் பயன்படுத்த வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் காலையில் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், தமது உரையை 'அறிமுக உரை' எனக் கூறித் தொடங்கி, பேரவை விவாதத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.</p><h2>மாணவர் மை<strong>யப் பாடத்திட்டமு</strong>ம் கற்பித்தல் முறைகளும்</h2><p>மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், பாடங்களை ஆர்வத்துடன் அணுகவும் புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><h2>கதை <strong>வழிப் பாடங்க</strong>ள்</h2><p>கடினமான பாடங்களை எளிமையாக்கும் வகையில் கதை வடிவிலான பாடத்திட்டம் உருவாக்கப்படும். குறிப்பாக, கணிதப் பாடங்கள் அனைத்தும் கதைகள் மற்றும் நடைமுறை எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>கற்றல் <strong>மதிப்பீடு</strong> </h2><p>மாணவர்களின் கற்றல் திறனை ஒப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில், இனி எந்தவொரு மாணவரையும் 'சராசரி மாணவர்' எனக் குறிப்பிடக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுத்<strong>தளம் மற்றும்</strong> தமிழ் வளர்ச்சி</h2><p> 'TN3 அறிவுத்தளம்' உருவாக்கப்படுவதோடு, தமிழகத்தில் உள்ள 13,259 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 'தமிழ்ப்பேச்சு உயிர் மூச்சு' என்ற சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.</p><h2><strong>உடற்கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனங்கள்</strong></h2><p>பள்ளிகளில் மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கத் துறை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,771 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். ஆசிரியர்களுக்காக முக்கியமான தீர்மானம் நாளை கொண்டு வருவோம்.</p><h2>விளை<strong>யாட்டு நேரம் கட்டா</strong>யம்</h2><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கான  பாடவேளையை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ அல்லது வேறு பாடங்களுக்குப் பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம், சடுகுடு (கபடி) போன்ற பாரம்பரிய விளையாட்டு முறைகள் மீட்டெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் இலவச சீருடைகளுடன் சேர்த்து, சிறப்பு ஸ்போர்ட்ஸ் ஜெர்சியும் வழங்கப்படும்.</p><h2><strong>மாணவர் நலன்</strong></h2><p>தவறுகள் செய்யும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நல்வழிப்படுத்தும் கோணத்திலேயே அணுக வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ள போதிலும், மாணவர்களின் உடல் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புரதச்சத்தை மேலும் அதிகரிக்கும் கோரிக்கை முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் (10 மாணவர்கள் மட்டுமே) மாணவர்கள் இருந்தாலும் அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். தனியார் பள்ளிகள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>உள்கட்ட<strong>மைப்பு மற்றும்</strong> குடிநீர் விநியோகம்</h2><p>அரசு கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், நகர்ப்புற மற்றும் மாநகராட்சி சார்ந்த ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 15 முதல் பயனாளிகளுக்குக் கூட்டுக் குடிநீர் விநியோகம் முறைப்படி தொடங்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய பொருளாதார தடை: ஒரு சொட்டு எண்ணை கூட கிடையாது..! அமெரிக்கா- ஈரான் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz#comments</comments><guid isPermaLink="false">a4ef9431-d083-4537-bd27-e7a1b61a0804</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:41:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:41:22.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,பொருளாதார தடை,country economic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>இதுபற்றி கூறியுள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்  இந்த நடவடிக்கை  ஈரானின் மீதம் இருக்கும் அனைத்துப் பொருளாதார கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியில் இருந்தோ ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளார்.</p><p>இதற்கிடையில், ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் மற்றும் ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>சீனா போன்ற முக்கிய நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணை இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி இருப்பதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue#comments</comments><guid isPermaLink="false">06ef998a-47a7-41b2-b04e-89ffaafe6cf7</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:42.654Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார். பரந்தூருக்கு பதில் மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். </p><p>தவெக அரசின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம் புது இடம் தேர்விற்கு நீண்டநாட்கள் பிடித்து மீண்டும் அந்த இடத்திற்கான பல்வேறு அனுமதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற சில ஆண்டுகள் ஆகலாம். இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடைவாக அமையும்.</p><p>இந்நிலையில் தவெக அரசின் இந்த முடிவிற்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்., </p><p>“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. </p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? </p><p>சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை, தேவைத்தன்மை மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “செயல்முறை”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். </p><p>உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. </p><p>அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?</p><p>மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?</p><p>எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழ்நாட்டிற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூ.35,000-ஆக உயர்வு..!- அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">4718c85a-c988-4a25-898c-6f2c1f1d9183</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:19:41.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Viswanathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வாழ்க்கை என்பது தொடங்குகிறபோது சிலருக்கு வசந்தமாக துவங்கும். சிலருக்கு வசதியாக துவங்கும். ஆனால், எனக்கு வாழ்க்கை துவங்கியபோது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. வாழ்க்கை துவங்குகிறபோது நானே உருவாகி.. உருவாகி.. </p><p>குட்டை குளங்களில், ஓடுகிற நதிகளில் என் ஆடைகளை துவைத்து, பஸ்ஸில் ஏறி பயணம் செய்து.. தினத்தந்தி பத்திரிக்கை வாங்கி தினமும் படித்து, சைக்கிளில் மிதித்த மிதித்து அரசியல் மீதான ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிற ஒரு அரசியல் தலைவர் நான்.</p><p>நாடாளுமன்றத்தில் பணியாற்றியபோது எனது ஆசை தமிழில் சரளமாக பேச முடியுமா..பேசலாமா.. எனக்கு தமிழில்பேச சரளமாக வருமா என்கிற ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது.</p><p>என்நெஞ்சுக்கு கிடைத்திருக்கிற சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாளைய வருவால பிரதமர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்.</p><p>நான் வாய்ப்புகளை மறுக்கப்பட்ட ஒருவன். நான் மறுக்கப்பட்டேன், நான் ஒதுக்கப்பட்டேன், எனக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று மேலிடத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்தேன்.</p><p>அந்த ஆலய மணி என் தலைவனுக்குகேட்டது. மறுநாள் மேலூர் சட்டமன்ற பொது தொகுதியின் வேட்பாளராக ஆக்கப்பட்டேன். </p><p>முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி மந்திரி சபையில் இடம் கொடுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால கனவு, தமிழக அமைச்சரவையில் ஒரு நாளாவது இடம் பெறுமா என்று இருந்தது.</p><p>எம்ஜிஆர் ஆட்சி தொடங்கி, பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. திமுக 96 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் கேட்டோம். முடியாது என்றார்கள். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று சொன்னார்கள்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>அமைச்சர் மானியக் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். கட்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், எவ்வளவு நேரம் பேசுவார்?</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>அனைவரும் பதிலுரையில் அறிமுக உரை வழங்குவது வழக்கம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காலையில் நான்கு நிமிடம் உங்கள் தலைவர் பற்றி மட்டுமே பேசினார். 59 ஆண்டு கனவை பற்றி அமைச்சர் பேசுகிறார், அது அவரின் உரிமை. திமுக 59 ஆண்டுகளாக யாருக்கும் அதிகாரம் தரவில்லை. நாங்கள் கொடுத்திருக்கிறோம். இதுதான் மாற்றம். அதை சொல்கிறார். என்ன தவறு.</p><h2>உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள்</h2><p>மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.</p><p>6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்ற கட்டங்களாக நியமிக்கப்படுவர்.</p><p>கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>NAAC அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டின் 10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.</p><p>கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.36.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியில் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும்.</p><p>கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும். </p><p>அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>“உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">577a6e47-c76b-45e9-a991-b90c52fbac41</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:57:20.750Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijaya Prabhakaran,விஜய பிரபாகரன்,vijayakanth,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. </p><p>தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அவரின் இந்த செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.</p><p>இந்நிலையில் வெற்றிப்பெற்றப் பின் தன்னை வளர்த்துவிட்ட தனது தந்தையான விஜய்காந்தின் நினைவிடத்தை வந்து விஜய் பார்க்காதது ஏன்? என தேமுதிகவின் முக்கியத் தலைவரும், விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>விஜய் முதலமைச்சர் ஆனபிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சென்று சந்தித்தார். இன்றைய தேமுதிக தலைவர் பிரேமலதாவைப் பார்க்கவேண்டும். கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா? பெரியார் சமாதிக்கு சென்றார். விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா?</p><p>என்னைப் பார்க்கவேண்டாம், தேமுதிக அலுவலகம் வரவேண்டாம், பிரேமலதாவை பார்க்கவேண்டாம். உங்கள் அப்பாவை காணவில்லை என்று சட்டமன்றத்தில் விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையே சென்று பார்த்தீர்கள் அல்லவா?</p><p>உங்களை வளர்த்த விஜயகாந்தை சென்று பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>முதலமைச்சர் விஜய் கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்திருந்தது. அப்போது அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைமையாக இருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்த விஜய்யை, பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">9773c581-bf2b-4fc0-bab0-840a08484aef</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:37:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:37:20.768Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், மருத்துவர்கள் </h2><p>“ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு மருத்துவரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் 'திராவிட இயக்கம்' என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.</p><p>அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக, திராவிட முன்னேற்றக் கழகப் பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும். </p><h2>மாற்றம் அல்ல ஏமாற்றம்</h2><p>அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ஆ.ராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.</p><p>எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள் வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இன்றைக்கு நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள்: நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். </p><p>எப்படி தலைவர் கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாப் பேத்திகளுக்கும் தமிழ் பெயரைச் சூட்டியிருக்கிறார்களோ, அதேபோன்று நம்முடைய அமிர்தம் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழாவில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, </p><p>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனப் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்துவார்- நாஞ்சில் சம்பத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles#comments</comments><guid isPermaLink="false">c1beca2b-fa51-464b-8e77-7829cd999110</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:10:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:10:34.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,நாஞ்சில் சம்பத்,nanjil sambath,மாணிக்கம் தாகூர்,முதலமைச்சர் விஜய்,ManickamTagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Viijay- Nanjil sampath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் அடுத்த பிரதமராக முதலமைச்சர் விஜய்தான் வருவார் என்று த.வெ.க.வினர் பேசி வருவதற்கு அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.</p><h2>வேதனை</h2><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மைதான். 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில் கவர்னரை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்.</p><p>14 நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார்.</p><p>நியாயப்படி கவர்னர் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கவில்லை என்பதையும் தாண்டி தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரினால் அழைப்பேன் என்று கவர்னர் கூறியது எங்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. </p><p>நன்றி உணர்வு</p><p>நித்தியத்தை இழந்து நிச்சய தன்மையை உடுத்தி நின்றபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அந்த நன்றி உணர்வோடுதான் இன்றும் இருக்கிறோம். அதற்காகத்தான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 துறை அமைச்சர்களை இடம்பெறச் செய்தோம்.</p><p>1967-க்கு பிறகு காங்கிரஸ் த.வெ.க.வின் பெருந்தன்மையால் அதிகாரமுள்ள கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இந்த பெருந்தன்மையையும் நன்றி உணர்ச்சியையும் ஒருபோதும் முதலமைச்சர் விஜய் பட்டுபோக விடமாட்டார்.</p><h2>விசால மனம்</h2><p>இன்னும் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தி.மு.க. வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த நிலையில் கலைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.</p><p>அப்படி இருந்தும் ஒருவருக்குகூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால் இப்போது 5 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இந்த விசாலமான மனப்பான்மை விஜய்யை தவிர வேறு எந்த தலைவருக்கும் வராது. </p><h2>பிரதமராக...</h2><p>தேசிய அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பது இன்றே தெரியாது. முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவார், ஆக வேண்டும் என்று சொல்வதை எல்லாம் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>த.வெ.க. தொண்டர்கள் தங்கள் ஆர்வம் காரணமாக அவ்வாறு கூறலாம். தங்களை ஆட்கொண்ட தலைவனை பிரதமராக எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. இது காங்கிரஸ் கட்சியை தாக்குவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. </p><p>த.வெ.க.வினர் ரசிகர்கள் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதும் உண்மைதான். ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக மாறி இன்று ஆட்சியை பிடித்து இருக்கிறோம்.</p><p>எனவே அந்த மனநிலை அவர்களிடம் இருப்பது இயல்பானதுதான். தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பிரதமராக யாரும் வந்ததில்லை. </p><p>ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ் பிரதமரானார். கர்நாடகாவில் இருந்து தேவ கவுடா பிரதமர் ஆனார். எனவே தமிழ்நாட்டில் இருந்தும் பிரதமர் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பலாம். அதற்காக நாங்கள் விஜய்தான் பிரதமராக வர வேண்டும் என்று சொல்லவில்லை. அதை காலத்தின் கையில் விட்டு விடுகிறோம்.</p><h2>அதிசயங்கள்</h2><p>இதற்காக காங்கிரசுடன் பகமை பாராட்டும் மன நிலையில் நாங்கள் இல்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொன்னபோது கூட எதிர்வினையாற்றவில்லை.</p><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் நயத்தக்க நாகரீகத்துடனேயே முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்துவார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">deff3f97-8e64-4a76-b089-bc82f5779454</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:58:54.025Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,லஞ்ச ஒழிப்புத்துறை,Directorate of Vigilance and Anti-Corruption,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த திமுக ஆட்சியின்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. </p><p>அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் நிறைய லஞ்சம் வழங்க வேண்டியிருந்ததாக பல கல்வி நிறுவனங்ளின் நிறுவனர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதித்துறை அமைச்சர், இதற்கு தான்கூட ஒரு சாட்சி என்றும், தானும் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; </p><p>“அமைச்சர் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புக்கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே தவறு. </p><p>முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகாரளித்து, உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்.” என தெரிவித்துள்ளார். </p><h2>ரூ. 50 கோடி மானநஷ்ட விவகாரம்</h2><p>தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரையும் இணைத்துப் பேசியிருந்தார்.</p><p>இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஷ், தன்மீதான அவதூறு பேச்சுக்கு 48 மணிநேரத்தில் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>மக்களுக்காக பேசுவதில் எந்த சமரசமும் இல்லை..!- எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-compromise-on-speaking-for-people-mla-kanimozhi-santhosh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-compromise-on-speaking-for-people-mla-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">6ecd313c-8212-4e03-ad50-1616f48eef14</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:10:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:10:30.377Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp1efvpu/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi Santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp1efvpu/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவை கவுண்டம்பாளையத்தில்  நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தரப்பிலிருந்து தமக்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15 லட்சம் பேக்கேஜ் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.</p><p>இவ்வாறு அவர் பேசியதாவது:-</p><p>கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது.</p><p>2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.</p><p>அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. எங்கள் தலைவரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. இருந்தபோதிலும், அப்போதே ‘திமுக ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன்.</p><p>ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.</p><p>இன்று இதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு காரணம், மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது. </p><p>மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதைப் பேசினாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் குரலை எழுப்புவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.</p><p>சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பேசுபவர்கள், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.</p><p>நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.</p><p>கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல நமக்குள் சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து யாரும் நம்முடைய ஒற்றுமையைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.</p><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சபாநாயகருக்கும் தொடர்ந்து பணிச்சுமை ஏற்படுகிறது.</p><p>வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். ஒரு இடத்தையும் பாக்கி வைக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.</p><p>மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அரசியலில் பணம், பொய் பிரசாரம், போலியான கணிப்புகள் ஆகியவற்றை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-for-parandur-airport-issue#comments</comments><guid isPermaLink="false">1b4be611-0d44-4006-9dd4-b5981fcfef51</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:59:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:59:50.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6cx9xjpb/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>அரசிற்கு பெரும் நிதி இழப்பு</strong></h2><p>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து- எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.</p><p>இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன. </p><p>இத்தகைய கடினமான  அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.</p><p>இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூர்</a> விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன. </p><p>ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.<br><br>சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில்,  சென்னைக்கு 2-ஆவது விமான…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2091818583756255540?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/short-sighted-administration-risk-of-jeopardizing-a-decade-of-growth-annamalais-remarks-on-parandur#comments</comments><guid isPermaLink="false">609e5593-9ee4-446d-a5ca-40ffe168abb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:53:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:53:11.313Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,annamalai,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகம்... 10 ஆண்டு வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் - பரந்தூர் குறித்து அண்ணாமலை கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/uqco0mw2/New-Project-2026-08-24T152253.318.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார். மேலும் பரந்தூருக்கு பதில் மாற்று இடங்கள் தேர்ந்தெடுப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>ஆனால் அவை எந்தெந்த இடங்கள் என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதம் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளதாக ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>இன்றைய தினம் சட்டப்பேரவையில், முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். </p><p>அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும். இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். </p><p>சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்கர். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.</p><p>இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து,  உள்ளூர் போக்குவரத்தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.</p><p>ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.</p><p>மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. </p><p>தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். </p><p>மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடவேண்டும் என்பதா? - அமைச்சர் மீது ஆ.ராசா கடும் தாக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-condemned-to-minister-nirmal-kumar#comments</comments><guid isPermaLink="false">6b4b914c-ca1f-4e33-baf0-a0538f66bed3</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:30:23.723Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,a raja,ஆ ராசா,Anna arivalayam,அண்ணா அறிவாலயம்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna arivalayam - A Raja - Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/418rs84w/araja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அண்ணா அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார்.</strong></em></p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">அண்ணா அறிவாலயத்துக்கு</a> வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று பேசினார். </p><h2>ஆ.ராசா</h2><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin">திமுக</a> எம்பி ஆ.ராசா பேசும்போது அமைச்சர் நிர்மல்குமாரை மறைமுகமாக கண்டித்தார். விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-</p> <p>இன்றைக்கு சிலருக்கு காரில் தேசிய கொடி வந்து விட்ட காரணத்தினால் அறிவாலயத்துக்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என்று சில அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். </p><h2>அண்ணா அறிவாலயம்</h2><p>பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப் பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளையடித்துக் கொண்டார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பல முறை வெள்ளையடித்துக் கொண்டார்கள். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது.</p> <p>எனவே அந்த அறிவாலயத்தை குறை சொல்கின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-plan-to-announce-by-elections-for-the-five-vacant-constituencies-in-tamil-nadu-election-commission#comments</comments><guid isPermaLink="false">7cfc8d9e-f55d-462f-84b7-7df4a9e8df1a</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:29:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:29:49.024Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,ECI,இந்திய தேர்தல் ஆணையம்,இடைத்தேர்தல்,Bye-Elections</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mzs76df8/New-Project-2026-08-24T145926.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் மனுக்கள்மீது நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் வரை அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாது என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>மேலும் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதித்த தடையை செப்டம்பர் 8 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமே இந்த மனு மீதான இறுதி விசாரணையை நடத்த முடிவு செய்துள்ள நீதிபதிகள், அதற்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது அனைத்து வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.</p><h2>வழக்கு என்ன?</h2><p>தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்த மொத்தம் 5 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே மற்ற மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.</p><p>இச்சூழலில், ராஜினாமா செய்தவர்கள் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மற்றொரு வேட்பாளரை வெற்றிப் பெற்றவராக அறிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. </p><p>இதனால் இப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நபர் வென்றால், அதே நேரத்தில் பழைய தேர்தல் வழக்கின் தீர்ப்பில் “தோற்ற மாற்று வேட்பாளர் தான் உண்மையான வெற்றியாளர்” என நீதிமன்றம் அறிவித்தால், ஒரே தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ-க்கள் உரிமை கோரும் கடுமையான சட்ட சிக்கல் உருவாகும்.</p><p>சட்டப்பிரிவு 151ன்படி தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, காலியானதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த இயலாது என திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.</p><p>மனுதாரரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  இடைத்தேர்தல் நடத்துவது மாநில அரசு கருவூலத்தைப் பாதிக்கும் என்றும், ஜனநாயக செயல்முறையையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டு ஜூலை.10ம் தேதியன்று ஜூலை.31 வரை மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது.</p><p>பின்னர் அந்த இடைக்கால தடை உத்தரவு ஆக.24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், செப்.8 அன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>லஞ்சம் வாங்கியது உண்மை.. நானே அதற்கு சாட்சி!- அன்பில் மகேஷ் மீது அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maria-wilson-alleges-bribery-against-former-education-minister-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">b78c9361-db28-41a1-8767-c22ae0abf02b</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:14:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:14:29.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,anbil mahesh,TN assembly,அன்பில் மகேஷ்,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria wilson- Ex Minister Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6ie82eze/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீது நிதி அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறயதாவது:-</p><p>உயர்கல்வியில் எண்ணிக்கையா? தரமா? என்கிற கேள்வி எழுகிறது. எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரகள் கொண்டு வந்தோம் என்பது முக்கியமில்லை. தரம்தான் ரொம்ப முக்கியம்.</p><p>முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் விஸ்வநாத் அவர்களும் பங்கேற்றிருந்தார். அப்போது, எத்தனை பள்ளிகள், எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தோம்.</p><p>நாமும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். முன்னாள் அமைச்சர்களும் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர். தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.</p><p>அதில் பார்த்தீர்கள் என்றால், certification என்று சொல்வார்கள். அரசு கலைக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் எத்தனை சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் எடுத்தோம். ஆனால், கடந்த 30, 40 ஆண்டுகளாக ஒன்றுமே இல்லை.</p><p>ஒரு ஐஓஎஸ் சான்றிதழ்கூட வாங்கவில்லை. எந்த சான்றிதழும் வாங்காமல் நாம் இத்தனை ஆண்டுகள் கல்லூரிகளை நடத்தி வந்திருக்கிறோம் என்றால், எப்படி தரம் வரும். </p><p>எண்ணிக்கை மட்டுமே வரும். அதனடிப்படையில், எந்த முயற்சியும் எடுத்ததுபோல் தெரியவில்லை.</p><p>தனியார் கல்லூரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான், வேலைவாய்ப்புகளும் கிடைக்கிறது. </p><p>லஞ்சம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையில் எனக்கும் ஓரளவுக்கு அனுபவம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்தோம். திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது.</p><p>அதில், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு நாள் நான். கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது. இதனை பல இடங்களில் நான் பதிவுசெய்ய விரும்புகிறேன்.</p><p>எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆதாரம் கேட்கின்றனர். சாட்சி கேட்கின்றனர். ஆவண சாட்சி ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இங்கு நானே ஒரு சாட்சி தான். </p><p>முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சபையில் இல்லை என்றாலும், இதைநான் கூறவேண்டும். இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இந்த விவகாரம் 3 நாட்களாக சுற்றுக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.</p><p>அவர்கள் என் மீது வழக்குக்கூட போடட்டும். எதிர்க்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். </p><p>தி.நகரில் எந்த இடத்தில் எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பது குறித்து நானே சொல்ல முடியும். சிறுபான்மை நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வாங்குனீர்கள் இவை அனைத்தும் என்னால் சொல்ல முடியும். இதுதான் சாட்சி. </p><p>இவ்வாறு கூறினார்.</p><p>நிதி அமைச்சர் மரிய வில்சனின், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டிற்கு திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly#comments</comments><guid isPermaLink="false">e7c82704-81b2-461c-b830-c56e1fe4f3d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:04:15.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புதிய இடம்</strong></h2><p>சென்னைக்கு அருகில் <a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூரில்</a> புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில்  இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை.  பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று  முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு  சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ஆம் ஆண்டில்  அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.  சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ஆம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><h2><strong>ஆறாம் இடம்</strong></h2><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்து விட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில் தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும் தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும் தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><h2><strong>வல்லுனர்கள் கவலை</strong></h2><p>2031-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத் தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாதது தான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும்  வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் விட்ட சவால்... சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">eb119c01-46f5-4957-a401-669b99a4923a</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:48:00.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a>, அடுத்த தேர்தலில் திமுக தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்க முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>தி.மு.க.வால் காங்கிரஸ் வென்றது என்றும், காங்கிரஸ் தயவால் தி.மு.க. வென்றது என்றும் 2 கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கு பதில் அளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.கோவி. செழியன், பூஜ்யத்தில் இருந்து வந்தது தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தி.மு.க. தயார் என்று கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. இன்று ஆட்சியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள். கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு தனியா நின்று ஆட்சி நடத்துங்கள் என்றார். </p><p>இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப்பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றார். </p><p>இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், 2024-ல் தி.மு.க.விற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது தி.மு.க., ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது தி.மு.க. என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை திமுக ஆதரித்தது என்றார். </p><p>இதற்கிடையே பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled#comments</comments><guid isPermaLink="false">5bf9ea32-7aa8-4723-9e1c-6903387a07d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:22:27.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.</p><h2><strong>பெருத்த ஏமாற்றம்</strong></h2><p>மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">தமிழ்நாட்டின்</a> தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். </p><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!</p><p>தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dropping Parandur is not Change. It&#39;s an irreversible setback for Tamil Nadu&#39;s growth<br><br>The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s… <a href="https://t.co/QHZdVdK21L">pic.twitter.com/QHZdVdK21L</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2091799886542815579?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கூடலூரில் மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்- வனத்துறை அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/forest-department-minister-says-tiger-terrorizing-the-people-in-gudalur-will-soon-be-captured-and-handed-over-to-a-sanctuary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/forest-department-minister-says-tiger-terrorizing-the-people-in-gudalur-will-soon-be-captured-and-handed-over-to-a-sanctuary#comments</comments><guid isPermaLink="false">6f16aa44-1a75-4e80-a14e-75408e4fdff7</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:07:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:07:29.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,வனத்துறை அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zjbs22jq/ranjithkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zjbs22jq/ranjithkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது  புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கூடலூரில் புலி தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் திராவிட மணி, "கூடலூர் பகுதியில் புலி தாக்கி 2 பேர் இறந்ததால் அந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். உடனடியாக புலியை சுட்டு பிடிக்க வேண்டும், அல்லது மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும். நீலகிரியில் இரண்டு மாதங்களில் 8 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.</p><p>இதை தொடர்ந்து பேசிய பா.ஜ.க உறுப்பினர் போஜராஜன்," கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் புலித் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது.  குண்டு வைத்து புலியை பிடித்து இருந்ததால் உயிரை காப்பாத்திருக்க முடியும்.  பழைய திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலியை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.</p><p>அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம்," புலிகள் தொடர்ந்து  மக்களை தாக்கி வரும் நிலையில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><p>மேலும், பாமக உறுப்பினர் கணேஷ் குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் மட்டுமல்ல அரசு வேலை வழங்க வேண்டும். புலியை கொல்லாமல் மயக்க மருத்து கொடுத்து பிடித்து புலிகள் காப்பகத்தில் அடைக்கவேண்டும் என்றார். </p><p>இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார், " கூடலூரில் இரண்டு பேரை  கொன்ற  புலியை பிடிக்க முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க உடனே உத்தரவிடப்பட்டதாகவும், 3 வனப்படை அமைக்கப்பட்டுள்ளது அத்துடன், 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலும் ஒரு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளது.</p><p>கேமரா மூலம் புலியை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 9 பேர் உயிரிழந்த பிறகு தான் புலி பிடிக்கப்பட்டது. ஆனால் தவெக அரசு 2 பேர் உயிரிழந்தவுடன் புலியை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது  புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur#comments</comments><guid isPermaLink="false">c952113f-8e5e-44f2-b6d1-41d9d2765790</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:04:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:04:29.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,kolathur assembly,தமிழக சட்டமன்ற தேர்தல்,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி,TN Assembly elction 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளரும், கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. </p><p>அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.</p><p>அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. </p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. </p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>தேர்தல் எந்திரம்  தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. </p><p>குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில்  ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. </p><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது. </p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால்</p><p>அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும்.</p><p>மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதன்முறையாக எம்எல்ஏக்கள் பேசுவதை &apos;கன்னிப் பேச்சு என்று குறிப்பிட வேண்டாம்!- பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech#comments</comments><guid isPermaLink="false">aca0502a-2d0b-46ea-9c97-4b042c01ed9f</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:53:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கன்னிப் பேச்சு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> எம்.எல்.ஏ.க்களின் முதல் உரையை கன்னிப் பேச்சு என்று  குறிப்பிடுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி குறிப்பிட வேண்டாம் என்று சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.</p><p>பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேசும் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று கூறுவார்கள்.</p><p>தமிழக சட்டசபையில் இன்றும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>அறிமுக உரை</strong></h2><p>இந்நிலையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</p><p>அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.லதாவும் இதனை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், "கன்னிப் பேச்சு என்ற வார்த்தை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும்" என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்," கடந்த சட்டப்பேரவையிலேயே வானதி சீனிவாசன் இதுபற்றி பேசியுள்ளார். கடந்த அவையிலும் இதனை பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். சௌமியா சொன்னது நல்ல ஆலோசனை. இது ஒரு மரபாக உள்ளது. எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதனை பரிசீலனை செய்யுமாறு வழிமொழிகிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும்- ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year#comments</comments><guid isPermaLink="false">a0a7bf89-3217-46f0-bc5d-cd222555d2d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:36:52.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,govt schools,தமிழக அரசு பள்ளிகள்,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை.</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகள் உடைய கழிப்பறை கட்டுவதற்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.</p><p>முறையான கழிவறை இல்லாததால் 8 மணி நேரம் வரை பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>குற்றம் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><h2>திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம்</h2><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது.</p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரை பற்றி தரக்குறைவு பேச்சு... திமுக எம்எல்ஏவை சாடிய பெண் அமைச்சர் - சபாநாயகர் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation#comments</comments><guid isPermaLink="false">88ef3458-9fdb-4488-95cd-c9ad149be9a5</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:49.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார்.</strong></em> </p><p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும் போது, "முதலமைச்சர் விஜய் பற்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பற்றியும் ஒருமையில்  பேசினார்.</p><p>இந்த பேச்சுக்கு வில்லங்கம் வரும் என்று மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான் பேச விட்டாலும் என்னை வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.</p><p>இது சம்பந்தமாக  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது,</p><p>திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தொழில்துறை அமைச்சரையும் பெண் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசியது கண்டனத்துக்குரியது; திமுகவினர் தேர்தல் தோல்வி மற்றும் ஆற்றாமையால் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.</p><p>அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:- </p><p>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார் . </p><p>அவர்கள் வெளியில் பேசி இருந்தாலும் அது நம்முடைய மாண்பை குலைப்பதாக இருந்தாலும், முதலமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும், அமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும் அதை படித்து பார்த்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி நல்ல முடிவு எடுப்பேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கொடுத்த வாக்கை காப்பாற்றி எங்கள் கண்ணீரை முதலமைச்சர் விஜய் துடைத்துவிட்டார் - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee#comments</comments><guid isPermaLink="false">56211c9d-d0c0-46b2-bf62-2f40ca67c812</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:05:58 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:05:58.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</strong></em></p><p>பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் விமான நிலைய திட்டம்</a> கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.</p><p>அவர் எங்களது கண்ணீரையும், துன்பத்தையும் துடைத்துள்ளார். அவர் எங்களை சந்தித்த போது என்ன கூறினாரோ அதனை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார். எங்கள் பகுதியில் விவசாயம், கிராம மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எங்களது மனக்குழப்பம், துன்பங்கள் நீங்கி உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூரைச்</a> சுற்றி உள்ள  கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ள கொண்டாட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நன்றி கூற முடிவு செய்துள்ளோம்.</p><p>2019-ம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். 1,100 நாட்கள் தாண்டியும்  எங்களது போராட்டம் நீடித்தது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாடர்ன் உடை அணிந்து பெண் சென்ற விவகாரம்: ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்!- கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics#comments</comments><guid isPermaLink="false">0f200107-facd-4311-b533-832215ad2f98</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:53:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:53:12.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும் என கனிமொழி கூறியுள்ளார்.</strong></em> </p><p>காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் கருப்பு உடை அணிந்து, செல்வது  போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என விமர்சித்து சிலர் பதிவு போட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், வீடியோ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. </p><p>இது பிற்போக்குத்தனமான, மனநிலையை காட்டுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றார்.</p><p>இதுகுறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி">கனிமொழி</a> எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>பிற்போக்குத்தனமான மனநிலை</strong></h2><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.</p><p>பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.<br><br>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2091751746834194664?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி- எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation#comments</comments><guid isPermaLink="false">5033f1e5-d957-40fc-a6a7-a683bd6ae8d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:49:20.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தமிழக சட்டசபை,sp velumani,TNAssembly,எஸ்பி வேலுமணி,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- SP Velumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார்.</p><p>அப்போது, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.</p><p>மேற்கொண்டு அவர் கூறியதாவது:-</p><p>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. </p><p>அதிமுக ஆட்சியில் கோவையின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. </p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக. திமுக ஆட்சியில் கோவைக்கன திட்டங்கள் இல்லை. சிட்காட், சாலை, மேம்பாலம் என அதிமுக செய்து நிலுவையில் இருந்த திட்டங்களை திமுக தொடரவில்லை.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது திமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் </p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றியை சுடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு கூறினார்.</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.</p><p>பேச அனுமதி கேட்டபோது பலமுறை முகத்தை கூட திருப்பமாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு என சபாநாயகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என அறிவித்த முதலமைச்சர்- மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">0b3975de-d024-49f8-8eee-d19f5038abe6</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:40:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:40:46.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</strong></em></p><p>சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில்</a> அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இதற்காக சுமார் 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் களம் இறங்கிய பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் தான் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.</p><h2><strong>மகிழ்ச்சி வெள்ளம்</strong></h2><p>இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து இருப்பது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இதற்கான கொண்டாட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு நற்செய்தி!- எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி இலவசப் பயணம்: முழு விவரம் இதோ... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details#comments</comments><guid isPermaLink="false">277e857a-0acd-48f5-b3e0-3e6702585840</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:25:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:25:11.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பெண்களுக்கு இலவச பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. </p><p>எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.</p><h2><strong>அக்டோபர் 2-ந்தேதி வெற்றிப் பயணம்</strong></h2><p>இதனை கருத்தில் கொண்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">மகளிர் கட்டணமில்லா</a> பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.</p><p>அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><p>மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><h2><strong>படிப்படியாக விரிவு</strong></h2><p>இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண  எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.</p><p>இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில்  கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</p><h2><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></h2><p>வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின்  வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.</p><p>தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து  குடும்பங்கள்  முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ரூ.6 ஆயிரம் கோடி</strong></h2><p>இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6183491e-debb-4c13-a618-6f227147e479</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:20:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:20:32.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,திராவிட இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவான்மியூரில்  நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:</p><p>தமிழ்நாட்டில் வீட்டில் ஒரு பட்டதாரி இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.</p><p>திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை.</p><p>சில லட்சம் பேர் செய்த தவறால் கோடிக்கணக்கானர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது.</p><p>இவ்வாறு அவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- கே.என்.நேரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum#comments</comments><guid isPermaLink="false">ce5cc9ae-e709-4893-b01d-ca866cc226f1</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:56:27.002Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,sewage,TN assembly,கே.என்.நேரு,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரையாற்றினார்.</p><p>அப்போது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a>. </p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர். தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர்.</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government" rel="nofollow">மத்திய அரசு</a> ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY :  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை: சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026#comments</comments><guid isPermaLink="false">676ed5f2-a6a6-44cd-9d36-b5f8bbcf541b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:51:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:51:43.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong> </h2><p>இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">24d7b276-5125-4d82-a401-b019c4fd3038</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:48:43.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Train,ரெயில்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக நாளை (25-ந்தேதி) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை 25 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.</p><h2><strong>மின்சார ரெயில்கள்</strong></h2><p>சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>திருமால்பூர் - சென்னை கடற்கரை</strong></h2><p>திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ெரயில், தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை</strong></h2><p>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.</p><h2><strong>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு</strong></h2><p>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மறுநாள் (புதன் கிழமை) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில், வார நாட்களில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 2 மின்சார ரெயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே ஒரு மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் பெறப்போகும் குடும்பங்கள் எவை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually#comments</comments><guid isPermaLink="false">9fee30cb-deea-4bad-b04c-2bfaa0a9ce13</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:27:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:27:27.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,TN assembly,Annapoorani Super 6 Scheme,அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண் முன்னேற்றத்திற்கு</strong></h2><p>நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>மேலும் நமது அரசு மக்களின்  வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.</p><h2><strong>வங்கி கணக்கில்</strong></h2><p>கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">சிலிண்டர்</a> கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.</p><p>இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.</p><h2><strong>3 சிலிண்டர்</strong></h2><p>எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில்  முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.</p><p>எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</p><h2><strong>1 கோடியே 30 லட்சம் பேர்</strong></h2><p>இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.</p><h2><strong>ஜனவரி மாதம் முதல்</strong></h2><p>இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தால் பொருளாதாரம் பாதிக்கும்- தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu#comments</comments><guid isPermaLink="false">581b78ad-5d1b-4d2f-9f45-b1ce547d3993</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:13:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:13:03.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பரந்தூர் விமான நிலையம்,தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,Parandhur Airport,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.</p><h2>திட்டம் ரத்து</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்படுகிறது என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம், இப்போது கைவிட்டால் எப்படி? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திமுகவினர் அனைவரும் எழுந்துநின்று கோஷம் எழுப்பினர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்துநின்று முழக்கமிட்டு எழுப்பிய திமுகவினரை சபாநாயகர் கண்டித்தனர்.</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கல் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தங்கம் தென்னரசு</a> கூறியதாவது:-</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் குறித்து விவாதிக்க ஏற்கனவே 55 விதியின் கீழ் திமுக தீர்மானம் கொண்டு வந்தது.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தனர்.</p><p>முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்ததால் கவனஈர்ப்பு தீர்மானத்தில் விவாதிக்க மறுத்துவிட்டனர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டு மறுக்கப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என விளக்கமறிக்க வாய்ப்பு தரவில்லை.</p><p>பல நாட்களாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் எடுக்காது இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டை நம்பித்தான் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram" rel="nofollow">ஸ்ரீபெரும்புதூர்</a> பகுதிகளில் வந்தன.</p><p>ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் உற்றதால் பரந்தூரில் விமான நிலையம் அமைவது அவசியம்.</p><p>பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர் தான் பரந்தூரை விமான நிலையத்திற்காக தேர்வு செய்தோம்.</p><p>பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தால் பொருளாதாரத்தை பாதிக்கும், அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.</p><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>