<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 31 Aug 2026 09:29:03 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - 31 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">8cbab00b-8cfb-4b49-bbe3-619e9e0b783c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:28:32.099Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2ul5ien7/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2ul5ien7/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக உறுப்பினர்கள் அமளி </p><p>சினிமா மற்றும் டாஸ்மாக் துறையில் ஊழல் என அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>டாஸ்மாக் விற்பனையை தொடங்கியதும் திமுக தான், மூடியதும் திமுக தான் - கே.என்.நேரு</p><p>மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது - செந்தில்பாலாஜி</p><p>603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது. மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை - செந்தில் பாலாஜி</p><p>தருமபுரியில் பேருந்து நிலையம் ஊருக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் - சவுமியா</p><p>பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை கிராமப்புறங்களுக்கும் நீட்டித்த தவெக அரசுக்கு நன்றி - சவுமியா</p><p>கிராமங்களுக்கான மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - சவுமியா வேண்டுகோள்</p><p>மினி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சவுமியா வேண்டுகோள்</p><p>நகராட்சியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் ரமேஷ் பேச வேண்டும்.</p><p>மல்லாச்சிபுரம் கிராமம் ஊராட்சியில் இருந்த நிலையில் தற்போதுதான் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>மல்லாச்சிபுரம் தற்போதுதான் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை - கேஎன்.நேரு</p><p>மல்லாச்சிபுரம் ஊராட்சியில் 300 பேர் வசிக்கும் நிலையில் நீர், கழிப்பிடம் சாலை உள்ளிட்ட வசதிகளின்றி அவதி.</p><p>கடந்த ஆட்சியில் திருச்சி மல்லாட்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.</p><p>தவெக ஆட்சி அமைந்த பிறகு மல்லாச்சிபுரம் மக்களிடம் சென்று கோரிக்கை கேட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ரமேஷ்</p> <p>கிருதுமால் நதி சாக்கடையாக மாற்றிவிட்டது.</p><p>மதுரையில் கழிவுநீர் அடைப்பு பிரச்சனை அதிகமாக உள்ளது, பாதாள சாக்கடையை மேம்படுத்த வேண்டும் -  எம்எல்ஏ தங்கபாண்டியன்</p><p>திமுக ஆட்சியில் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடிய போதும் வருவாய் அதிகரித்தது எப்படி? என அமைச்சர் வினோத் பதில் கேள்வி</p> <p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக்கில் அதிக வருவாய் எப்படி என்ற திமுகவினரின் கேள்விக்கு அமைச்சர் வினோத் விளக்கம்</p><p>நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கறுப்பு உடை அணிந்து வந்தனர் - கே.என்.நேரு</p><p>சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை, குற்றச்சாட்டு மட்டும் தான் சொல்கிறார்.</p><p>அனைத்து மாநகராட்சிகளையும் தவெக விரைவில் கைப்பற்றும் - அமைச்சர் ஆதவ்</p><p>இப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்றால் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவதில்லை.</p><p>திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர் - அமைச்சர் ஆதவ் </p> <p>ஒவ்வொரு நகரிலும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் லாரியை எதிர்நோக்கி நிற்கின்றனர்.</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகள் ஏதும் முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை - த.வெ.க.</p><p>மத்திய அரசு அறிவுறுத்தலால் கடந்த ஆட்சியில் வரி உயர்த்தப்பட்டது - கே.என்.நேரு</p><p>கடந்த ஆட்சியில் தவறு செய்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் வெளிவந்தது என்றால் மேலிடத்திற்கு பங்கு சரிவர செல்லாததே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மதுரையில் மட்டுமல்ல அனைத்து மாநகராட்சிகளிலும் முறைகேடு நடந்துள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>கடந்த ஆட்சியில் மாநகராட்சிகளில் ஊழல் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுங்கள் ரைவில் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்  - கே.என்.நேரு</p> <p>திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டில் 5 அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டனர்  - கே.என்.நேரு</p><p>மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு - தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டு</p><p>பரிமிளகாய், பொய்யூர் கத்தரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய் உள்ளிட்ட 10 வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு</p><p>அதிக சாகுபடி செய்யும் 40 கரும்பு விவசாயிகள் மகாராஷ்டிரா அழைத்துச் செல்லப்படுவர்.</p><p>பாராமதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் கண்டுணர்வு பயணம் அழைத்துச்செல்லப்படுவர் - அமைச்சர் வினோத்</p> <p>செங்கல்ராயன், திருத்தணி, வேலூர், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகள் ரூ.6 கோடியில் தானியங்கி மயமாக்கப்படும்.</p><p>285 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 600 விற்பனை முனையக்கருவிகள் வழங்கப்படும் -  அமைச்சர் வினோத்</p><p>மூங்கில்துறைப்பட்டு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.8.58 கோடியில் மின் மோட்டார்கள் நிறுவப்படும்.</p><p>தேனி வளர்ப்பினை ஊக்கப்படுத்த ரூ.6.84 கோடியில் தேனி வளர்ப்பு பெட்டி விவசாயிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p> <h2>வேளாண் துறையின் கீழ் அமைச்சர் வினோத் அறிவித்த புதிய அறிவிப்புகள்</h2><p>தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 9 இடங்களில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.</p><p>திருவாரூர், தருமபுரி, ஈரோடு, ராணிப்பேட்டையில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் அமைக்கப்படும்.</p> <p>பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வாசிப்பாளருக்கான உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</p><p>செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 3 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புதிதாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்காக கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் ரூ.10 கோடியில் 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 சிறப்பு இல்லங்கள் ரூ.1.82 கோடியில் கட்டப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்பயிற்சி அளிக்க 10 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <h2>சமூக நலன் மகளிர் உரிமைத்துறை புதிய அறிவிப்புகள்</h2><p>அரசு கட்டடங்களில் குழந்தை மையங்களில் ரூ.12 கோடியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படும்.</p><p>ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஏஐ கூறுகளுடன் கூடிய கல்விசார் காணொளிகள் உருவாக்கப்படும்.</p><p>உயரக்குறைவு மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கான ரூ.1 லட்சம் நிதி வழங்குவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் - அமைச்சர் விக்னேஷ்</p><p>மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அமைச்சர் விக்னேஷ் புதிய அறிவிப்புகள்</p><p>சட்டசபையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் விக்னேஷ் 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கு தரப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நவீன உபகரணம் வழங்கப்படும்.</p> <p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பணியின்போது பலியான தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தமிழர்களை மீட்பது குறித்து திபெத், சீன அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுகிறது.</p><p>305 பேர் கைலாஷ் யாத்ரா பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிற மாநிலம், நாடுகளில் இருந்து சுற்றுலா சென்ற தமிழர்கள் 34 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>கைலாஷ் யாத்திரை சென்றவர்களில் 84 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசித்தோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><h2>நேபாள பெருவெள்ளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை</h2><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 28-ந்தேதி 21 தமிழர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டு சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2>அமைச்சர் விஜய் பாலாஜி பதில்</h2><p>மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம்.</p><p>பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது.</p><p>பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம்.</p><p>கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும்.</p><p>எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.</p> <p>கைத்தறி நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் விலையில்லா வேட்டி-சேலை திட்டம் - ஆஸ்டின்</p> <p>நெசவாளர் சங்கத்தின்ருக்கு முறையாக அழைப்பு விடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் - ஆஸ்டின் </p><p>8 முழ வேட்டிக்கு மாற்றாக 4 முழ வேட்டி கொடுப்பது குறித்து நெசவாளிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை - ஆஸ்டின் குற்றச்சாட்டு</p><p>விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி குறித்து எம்எல்ஏக்கள் ஆஸ்டின் நித்யானந்தன் பேரவையில் கவனஈர்ப்பு கொண்டு வந்தார்.</p><p>விலையில்லா வேட்டி 8 முழத்திற்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கப்படும் என்ற அரசின் ஆணையால் விவசாயிகள் பாதிப்பு - ஆஸ்டின்</p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன்.</p><p>சபாநாயகர் இருக்கையில் முன்னர் அமர்ந்தது போல் அமராமல் இருக்கும் வரை அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் - சபாநாயகர்</p><p>பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என எ.வ.வேலு கூறுகிறார் - தங்கம் தென்னரசு</p><p>பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? </p><p>நான் கூறிய பின்னும் ஓ.எஸ்.மணியன் நின்றுகொண்டே இருக்கிறார்.</p><p>10 பேர் சேர்ந்து எழுந்து நிற்பதை ஏற்க முடியாது. கொறடா உத்தரவை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்  சபாநாயகர்</p> <p>உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது மீம்ஸ் ஆக வருகிறது என புகார் கூறினர் - சபாநாயகர்</p> <p>6 மாதத்தில் ஒலிம்பிக் நகரம் குறித்த நல்ல செய்தி வரும்.</p><p>ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டுமெனில் ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும், அதுதான் அரசின் கொள்கை - அமைச்சர் ஆதவ்</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக புதிய கட்டமைப்பு கொள்கை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><p>விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விடுதிகள் உருவாக்க உள்ளோம் - அமைச்சர் ஆதவ்</p> <p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம்.</p><p>விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும்.</p><p>திமுக அரசு அறிவித்த திட்டத் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய நிலையில் அமைச்சர் ஆதவ் விளக்கம் அளித்தார்.</p> <p>காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் தனியார் பங்களிப்புடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறனுடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும்.</p><p>ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கெனவே உயர்த்திய நிலையில் தற்போது ரூ.3 உயர்த்தி அறிவிப்பு.</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு - சபாநாயகர்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும்.</p><p>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு வன்னி அரசு பதில்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>தீர்த்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள பழைய மடத்தை சுற்றலாத்தலமாக கருதி பாதுகாக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>அரூர் தொகுதி தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? - சம்பத் குமார்</p><p>நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? - எம்எல்ஏ காமாட்சி கேள்வி</p><p>தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.</p><p>சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை</p><p>சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்</p> <p>திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை</p><p>டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்</p><p>ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி - சத்குரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-fait-un-don-de-1-crore-de-roupies-au-fonds-de-secours-n%C3%A9palais-sadhguru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-fait-un-don-de-1-crore-de-roupies-au-fonds-de-secours-n%C3%A9palais-sadhguru#comments</comments><guid isPermaLink="false">ab55930e-6b33-482d-94b8-c550a1e0660d</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:47:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:47:06.907Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா யோகா,sadhguru,nepal flood,சத்குரு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tcw6ly1j/sadhguru.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சத்குரு]]></media:title><media:description type="html"><![CDATA[ சத்குரு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tcw6ly1j/sadhguru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள</a> நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு, “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார். </p><p>இந்நிகழ்வில் <a href="https://www.maalaimalar.com/topic/சத்குரு">சத்குரு</a> பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், 'சரி, இது நேபாளத்தின் பிரச்சனை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.</p><p>மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதியானதும் அல்ல. </p><p>ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். </p><p>இந்தப் பேரழிவிற்கு ‘தெய்வீக காரணங்களை’ கூறுவதோ அல்லது ‘நம்ப முடியாத மாய சக்தி’ என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. </p><p>மிகப்பெரும் பேரிடரைச் சந்தித்திருக்கும் நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ரூ.1 கோடி’ வழங்கப்படும். மேலும் கோவை ஈஷா யோக மையத்தில், நேபாள பெருவெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்காக 'கால பைரவ கர்மா' செய்யப்படும்” எனக் கூறினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மனிஷா கொய்ராலா, இதுபோன்ற பேரழிவில் இருந்து மக்கள் என்ன படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சத்குரு, "ஒரு மனிதனாக, பேரிடர்கள் வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. மனிதனாக வாழ்வதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் நிலையற்றவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் உணர்ந்திருந்தால், நமது வாழ்க்கையை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிட்டு வாழ்வோம். ” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">02add709-3ddd-4145-8f51-bf29426a31ae</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:38:22.078Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,nepal flood,Minister Adhav Arjuna,நேபாள பெருவெள்ளம்,Tamil Pilgrims</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[    Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.</p><h2><strong>வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் உத்தரவிட்டார். </p><p>இதையடுத்து, அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புதுடெல்லி இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.</p><p>ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, புதுடெல்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.</p><h2><strong>சிறப்பு அதிகாரி நியமனம்</strong></h2><p>இந்திய மற்றும் நேபாள அரசுகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அதிகாரியாக ஆஷிஸ் குமார், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.</p><p>அன்றைய தினமே அமைச்சர்கள் குழு புதுடெல்லி சென்று கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்ததுடன், மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.</p><p>ஆகஸ்ட் 28 ஆம் தேதி நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். </p><p>பின்னர் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2><strong>தொடர்பு மீட்பு முயற்சி</strong></h2><p>அதேபோல், வழிதவறியவர்கள் அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 5 பயணிகளின் உறவினர்களை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.</p><h2><strong>பாதுகாப்பான மீட்பு</strong></h2><p>இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா நிறுவனம் மூலம் 57 பேர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளம்</a> சென்றுள்ளனர். இவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>யாத்திரை பயணம்</strong></h2><p>சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் யாத்ரா நிறுவனம் மூலம் 49 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>ஆத்ம யோகா மையம் மூலம் 150 பேர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>பாதுகாப்பு உறுதி</strong></h2><p>சுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற 39 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 36 பேர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.</p><p>அரசு உதவி எண்கள் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, மேலும் 10 பேர் சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றுள்ளனர். </p><p>இவர்களில் ஒருவர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரையும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2><strong>அரசு உதவி எண்கள்</strong></h2><p>மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவல் அறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம். </p><p>அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>தமிழர்கள் மீட்பு</strong></h2><p>இதுவரை அரசு உதவி எண்கள் மூலம் 2,161 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணைந்து செயல்பட மறுக்கும் மேயர்கள்- சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors#comments</comments><guid isPermaLink="false">b53ab144-a409-4a14-9e56-b95d70b1cda8</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:36:27 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:36:27.422Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டினார். </p><p>இதற்கு திமுக எம்எல்ஏ கே.என் நேரு பதிலளிக்கையில், ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் கூட ரூ.5000 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என்று. ஊழல் இருந்தால் அதிகாரம் உங்க கிட்ட இருக்கு. அதைக் கண்டுபிடிங்க. செய்யுங்க. எடுத்த உடனே ஊழல், ஊழல் என்றால் அது எப்படி? அது சரியாக இருக்காது என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>நமக்கான பிரச்சனையை சொல்றேன். நகராட்சி துறையில் திட்டங்கள் தீட்டி விட்டோம். ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்டத்தை போட்டாச்சு.எல்லாம் போட்டுட்டும். ஆனால் இன்றைக்கும் நம்முடைய தாய்குலமான பெண்கள் குடத்தை தூக்கிட்டு லாரிக்காக ஒவ்வொரு ரோட்டிலும் வெய்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் தாய்மார்கள் தண்ணீருக்காக வெய்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க.</p><p>எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணா நீங்க பனையூர் சொன்னா, நாங்க கோபாலபுரம்-ன்னு பேச வருவோம். நாங்க அதைப்பற்றி பேச வரலை. மக்கள் பிரச்சனைகளை பற்றி  பேச வந்திருக்கோம். தண்ணீர் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் கொண்டு சென்று சேர்க்க முடியாத அரசாக இருக்கோம். ஒவ்வொரு பிரச்சனையையும் சட்டமன்ற உறுப்பினர் சொல்லும் போது ஆதாரம் இருக்கா, ஆதாரம் இருக்கா என்று கேட்கிறார். இன்றைக்கு அரசினுடைய பிரச்சனை என்று சொல்கிறேன். </p><p>உள்ளாட்சி துறை இன்றைக்கும் உங்களுடைய கன்ட்ரோலில்தான் இருக்கு. உங்களுடைய மேயர்தான், உங்களுடைய மண்டல பொறுப்பாளர்கள்தான். 25 மாநகராட்சி உங்கக்கிட்ட தான் இருக்கு. நாங்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர். இந்த அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது, ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால் தான் இந்த அரசுடன் மேயர்களுடன், மண்டல பொறுப்பாளர்கள் இணைந்து செயல்படுவதில்லை. சென்னையில் இருக்கிற மேயர் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை. குற்றச்சாட்டை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. எங்களுடைய கோரிக்கை குற்றச்சாட்டை தூக்கி எறிவோம். இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு. இந்த தேர்தலில் 90 சதவீதம் இல்ல 100 சதவீதம் நாங்கள்தான் ஜெயிக்கப்போறோம். அதை இங்க பதிவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார். </p><h2><strong>கேஎன் நேரு</strong> </h2><p>கிட்டத்தட்ட 2500 எம்எல்டி கொடுத்த இடத்தில் 4 ஆயிரம் எம்எல்டி புதிய திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்த பின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம், மாநகராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கருப்பு உடை அணிந்து வந்தனர். மாநகராட்சி மேயர்கள் திமுகவினர் என்றாலும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது, ஆட்சி அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. உங்களுடைய செயலாளரை அழைத்து எந்தெந்த திட்டத்தில் எல்லாம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கேளுங்கள். கேட்டு உடனே நடத்தச் சொல்லுங்கள். கவுன்சிலரோ, மேயரோ அரசு சொல்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தத்தவறினால் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆணையரே அத்திட்டத்தை செயல்படுத்த சொல்லலாம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகள்- அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare#comments</comments><guid isPermaLink="false">f023259f-69e2-4b15-86ad-af3eb100f533</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:15:55.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,மாற்றுதிறனாளி நலத்துறை,Minister Jagadeeswari,Department of Welfare of the Disabled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagatheswari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி  வெளியிட்டார்.</p><p>அவை வருமாறு: </p><p>1. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">பெட்ரோல்</a> அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணம் வழங்கும் திட்டம்</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>2. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்</p><p>தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி</p><p>அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்படும்.</p><p>3. அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் – ரூ.1.77 கோடி ஒதுக்கீடு</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><p>4. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் – ரூ.49 லட்சம் நிதி</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>5. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்</p><p>மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் – ரூ.97 லட்சம்</p><p>அறிவுசார் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51" rel="nofollow">மாற்றுத்திறனாளி</a> குழந்தைகளுக்கென 3 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 2 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 1 ஆண்டு நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>6. கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்.</p><p>கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் – ரூ.10 கோடி நிதி.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>7. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்</p><p>UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்</p><p>தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர/நகர தாழ்தள பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>8. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>9. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி</p><p>பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.</p><p>2013–14ஆம் ஆண்டிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய் - அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again#comments</comments><guid isPermaLink="false">a220595b-54b2-4df9-a289-3df8d207c7a2</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:44:20 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:44:20.138Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் இடம் மாறி அமர்ந்த முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3ggcbcdx/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக பட்ஜெட்</a> கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. </p><p>வார விடுமுறைக்கு பின் கூடிய இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. </p><p>இந்த நிலையில் இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">விஜய்</a>, முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி விவாதத்தை கவனித்தார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த்தின் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் விவாதித்து சபை நடவடிக்கையை கவனித்தார். </p><p>கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அருகே அமர்ந்து முதலமைச்சர் விஜய் விவாதத்தை கவனித்தார். </p><p>முதலமைச்சர் விஜய் சக அமைச்சர்களுடன் இருக்கையில் அமர்ந்து சட்டசபை விவாதத்தை கவனிப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் சம்பள உயர்வு- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff#comments</comments><guid isPermaLink="false">2351bd11-8dc2-4aed-84bb-41ddc66f5ba3</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:41:42.902Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Tasmac,அமைச்சர் வினோத்,Minister Vinoth,டாஸ்மாக் பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/sm6ww0ko/minister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களை கருத்தில் கொண்டு 4 முறை சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் அடிப்படையில், வரும் செப்.1 முதல் ரூ.33,023 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.</p><p>சட்டசபையில்  அமைச்சர் வினோத் இன்று மானிய கோரிக்கையில்  பேசுகையில் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D" rel="nofollow">டாஸ்மாக்</a> நிறுவனத்தின் சில்லறை விற்பனை கடைகளில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இத்துறையில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் தடுக்கவும் பணியாளர்களின் வாழ்வாதார தேவைகளை கவனத்தில் கொண்டும் இந்த அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் நான் நான்கு முறை சங்கப் பிரதிநிதிகள் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன்.</p><p>அந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையிலும் டாஸ்மாக் நிர்வாக குழுவின் முடிவின் அடிப்படையிலும் நான் மேலும் சில அறிவிப்புகளை இந்த சட்டமன்ற பேரவையில் வெளியிடுகிறேன்.</p><p>23 ஆண்டுகளாக தொடர்ந்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது 23 ஆண்டுகளாக 2000 ரூபாயில் ஆரம்பித்து கடைசி வரை 14,000 ரூபாய் வரைக்கும் இந்த 23 ஆண்டுகள் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறோம் சரியான <a href="https://www.maalaimalar.com/sports/a-first-in-india-mumbai-cricket-association-to-provide-equal-pay-to-male-and-female-players" rel="nofollow">ஊதியம்</a> கொடுக்கணும் என்ற அடிப்படையில் மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும் விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும் உதவி விற்பனையாளர்களுக்கு 28,680 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>இதன்மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக  புதிய டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20000 வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p>டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வரும் மூன்று சீருடைகள் துணி மற்றும் தையல் செலவிற்காக ரூ.6000 வழங்கப்படும்</p><p>டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-sanitation-workers-protest-again-794388" rel="nofollow">தூய்மை பணி</a> மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்காக மாதந்தோறும் மாநகரக் கடைகளுக்கு ரூ.5000 நகராட்சி பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4000 கிராமப்புற கடைகளுக்கு ரூ.3000 சில்லறை செலவினங்களை மேற்கொள்ள வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kolathur-election-stalin-petition-verdict-postponed#comments</comments><guid isPermaLink="false">0e8d03ee-930a-4bb3-9e09-7a006c017382</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:24:09.616Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Kolathur,கொளத்தூர்,முக ஸ்டாலின்,தீர்ப்பு ஒத்திவைப்பு,verdict postponed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt- MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0zb91kfq/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun" rel="nofollow">கொளத்தூர் தொகுதி</a>யில், 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.</p><h2>மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்</h2><p>அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு எந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்றுவிட்டன. ஆறு வாக்கு சாவடிகளில்  வாக்குப்பதிவு  எந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.</p><p>முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும்.</p><p>தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை சரிபார்க்கக் கோரி, தேர்தல் முடிவுகள் வெளியான மூன்று நாட்களில், அதாவது மே 7-ந்தேதியே விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால், தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதை தவிர வேறு நிவாரணம் இல்லை என வாதிட்டார்.</p><p>தேர்தல் ஆணையம் தரப்பில், மனுவில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விசாரானைக்கு உகந்தவை அல்ல. எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna">தேர்தல் வழக்கு</a> மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.</p><p>இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் இதே கோரிக்கையுடன் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், இந்த வழக்கை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது.</p><h2>தீர்ப்பு ஒத்திவைப்பு</h2><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலினின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.</p><p>மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கில், 2025-ம்ஆண்டு அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதியளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>இலவச வேட்டி திட்டத்தில் 8 முழம் வேட்டிக்கு பதில் 4 முழம் வேட்டி விவகாரம்- ஆஸ்டின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vijay-balaji-repley-to-austin-question#comments</comments><guid isPermaLink="false">4603eb98-d3df-4c14-9a2b-d5cc524ffde4</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:23:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:23:45.398Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஜய் பாலாஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/blww1ljq/vijaybalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் விரிவாக பதில் அளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தில் திமுக எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசியதாவது :-</p><p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைத்துள்ளது.</p><p>நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டு கலைஞர் அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்  என வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். </p><p>ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசின் புதிய முடிவால் நெசவாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.</p><p>அரசால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நெசவாளர்களின் உண்மை நிலை மற்றும் பாதிப்புகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டின் தெரிவித்தார். பயனாளிகளிடமோ அல்லது நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களிடமோ முறையான அறிவிப்பு கொடுத்துக் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளால் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் 'ஃபார்மாலிட்டி'க்காக மட்டுமே கையெழுத்து பெறப்பட்டுள்ளது.</p><p>நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகப் பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டு, இருப்பில் தேங்கியுள்ளன. நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளன.</p><p>புதிய அரசாணையின்படி 60-ஆம் எண் நூலுக்குப் பதிலாக 40-ஆம் எண் நூலும், 72 இன்ச் அச்சுக்கு பதிலாக 68 இன்ச் அச்சுமாக மாற்றப்பட்டுள்ளதால், நெசவாளர்கள் தங்களது தறிகளை  மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 7 மாதங்கள் தாமதித்து இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டதன் நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்பிய ஆஸ்டின், பாதிக்கப்பட்ட நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டதால் தரமும் கூலியும் குறைந்துள்ளதாக நெசவாளர்கள் கவலைப்படுகின்றனர் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், தேக்கமடைந்துள்ள உற்பத்திப் பொருட்களை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்து, இந்த அரசாணையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று ஆஸ்டின் வலியுறுத்தினார்.</p><p>இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கையில், மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம். பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  மக்கள்  8 முழ  வேஷ்டிக்கு பதிலாக  4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று விரிவாக பதில் அளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் திட்டம் ரத்து இல்லை: மறுசீரமைப்பு செய்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-chemmancheri-sports-city-project-not-cancelled-we-are-restructuring-it#comments</comments><guid isPermaLink="false">4330cd91-b1ee-4588-96e5-fd163705e557</guid><pubDate>Mon, 31 Aug 2026 07:06:38 +0000</pubDate><atom:updated>2026-08-31T07:06:38.717Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7uls85kk/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செம்மஞ்சேரியில் 128 ஏக்கர் பரப்பளவில் ரூ.261 கோடி மதிப்பீட்டில் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, விளையாட்டுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் குறித்தும், முதலமைச்சர் புதிய விளையாட்டுக் கொள்கையை எவ்வாறு வகுத்து வருகிறார் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.</p><p>கடந்த 100 ஆண்டுகளில் நாம் ஒலிம்பிக் பதக்கம் பெற்றதே கிடையாது. இதற்காக புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்பாக 38 மாவட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும் </p><p>மேலும், உலகத் தரத்தில் 10 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும்.</p><p>அதன் தொடர்ச்சியாக, சர்வதேச தரத்தில் ஒலிம்பிக் நகரத்தை உருவாக்கும் நிலையில் அரசு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், தனக்கு இருந்த விளையாட்டுத் துறை அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை  ஆய்வு செய்தபோது, ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், மாறாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.</p><p>ஒரு ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட்டால் அது ஒலிம்பிக் தரத்தில் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனக் கூறிய அமைச்சர், 42 வகையான விளையாட்டுகளை சர்வதேச தரத்தில் நடத்தும் வகையில் புதிய டிபிஆர்  தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p><p>இந்த புதிய திட்டம் முதலமைச்சரின் ஆய்வில் இருப்பதாகவும், கூடிய விரைவில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</p><p>மேலும், உலகத் தரத்திற்கு ஏற்ற வகையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 8.1.2026 அன்று கோரப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். தேர்தலுக்கு முன்புதான் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>முதலமைச்சர் புதிய அறிவிப்பை வெளியிட்டவுடன், அதற்கான பணிகளை ஆறு மாதங்களுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னைக்கு அருகே 128 ஏக்கர் நிலம் கிடைத்தது சாதாரண விஷயம் அல்ல. பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே செம்மஞ்சேரி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது” என்றார்.</p><p>இந்தியாவிலேயே முதல்முறையாக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறும் வகையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிடப்படவில்லை என்றும், மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்குப் பிறகு சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படவில்லை எனக் கூறினார்.</p><p>கூடிய விரைவில் பணிகளைத் தொடங்கி, ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்து, முதலமைச்சர் அவர்களின் கைகளால் ஒலிம்பிக் தரத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி திறக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்ல தூய்மை தேவதைகள்..!- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">97f745b9-55e8-4153-b7cf-3644302d6c51</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:52:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:52:36.920Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Sanitary workers,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/il3s04st/rajmohan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை:</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>பணியின்போது பலியான <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a> குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும்.</p><p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly" rel="nofollow">மகப்பேறு விடுப்பு</a>, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெஞ்ச் மேல் ஏறி கவனத்தை ஈர்க்கலாம்... எ.வ.வேலு- தங்கம் தென்னரசு பேச்சுக்கு புன்னகைத்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-smiled-at-the-remarks-made-by-ev-velu-and-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">62c22fd2-cafe-4092-8a97-880c7c20dd05</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:39:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:39:45.700Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3qwco2jx/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக தி.மு.க. கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் நிலையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவை ரீல்ஸாக வருகின்றன என கே.என்.நேரு கூறுகையில், சபை நேரலை இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களை ஈர்த்துள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வாரத்தில் உரிமை மீறல் குழு தேர்வு நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><h2><strong>எம்.எல்.ஏ.க்களை கொறடாக்கள் கட்டுப்படுத்த வேண்டும்</strong></h2><p>மேலும் சபாநாயகர் கூறுகையில்,  கூச்சல், குழப்பம் ஏற்படும் போது எம்.எல்.ஏ.க்களை கொடறாக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உட்காருங்கள் என்று பல முறை நான் கூறிய பின்னும் ஓ.எஸ். மணியன் நின்று கொண்டே இருக்கிறார். சட்டசபை இருக்கையை விட்டு எழுந்து வந்து ஓடி வருவது தவறு என்றார். </p> <p>இதற்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு பேசுகையில், நீங்கள் சொன்ன கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பேரவை தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு நிற்கலாம், கை தூக்கலாம். உறுப்பினர்களின் குரல் சபாநாயகருக்கு கேட்காத போது முன்னால் வந்து சொல்கிறார்கள் என்றார்.</p><p>சபாநாயகர் பேசுகையில், கையை உயர்த்துவதில் தவறில்லை. என் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் குரல் கொடுப்பதில் தவறில்லை. நான் சொல்வது ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து பேர் எழுந்து நின்று குரல் கொடுத்து இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பரிந்துரைப்பது தேவையில்லை. நானே பார்த்து பார்த்து யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் வாய்ப்பு தருகிறேன்.  இருக்கையை விட்டு எழுந்து  ஓடி வருவது தவறு என்று தான் சொல்கிறேன் என்றார்.</p><p>திமுக கொறடா எ.வ.வேலு, பேரவைத் தலைவர் சொல்வது எப்போதும் விதிக்குட்பட்டு தான் சொல்கிறீர்கள். நாங்களும் விதிக்கு கட்டுப்பட்டுதான் இருக்கிறோம். சில நேரங்களில் எங்களுடைய பக்கத்தில் இருக்ககூடிய உறுப்பினர்களின் குரல் உங்களுக்கு கேட்கவில்லை என்றால் பக்கத்தில் இருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">உறுப்பினர்கள்</a> உதவியா இருந்து சொல்கிறார்கள். அதுதானே தவிர வேறொன்றும் இல்லை. இதே பேரவையில் பேரவைத் தலைவரின் கவனத்தை ஈர்க்க பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கையை தூக்கி கவனத்தை ஈர்த்துள்ளோம் என்றார். </p><p>உடனே  சபாநாயகர் நீங்கள் சொல்லுங்கள் நான் கேட்டுக்கொள்கிறேன். பத்து பேர் சேர்ந்து ஒருவருக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, இத்தனை ஆண்டு காலமாக இங்கே இருந்து கையை மட்டும் உயர்த்தினால் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என்று நாங்கள் நம்பிக்கொண்டு இருந்தோம். இன்றைக்குதான் பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என அண்ணன் எவவேலு மூலம் அறிய கருத்தை புதிய வழிமுறையை எங்களுக்கு காட்டிக்கொடுத்து இருகிறார் என்றார். </p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன். சபாநாயகர் இருக்கையில் முன்பு அமர்ந்தது போல் அமரால் இருந்தால் அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்ற போது முதலமைச்சர் விஜய் புன்னகைத்தப்படி இருந்தார். </p>]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் புதுநகர் வளர்ச்சித் திட்டம் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanchipuram-new-town-development-plan-cancelled#comments</comments><guid isPermaLink="false">9496605b-80e8-4cb9-b1ad-b8e8b671ff80</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:21:17.820Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,காஞ்சிபுரம்,Kanchipuram,Development Project,புதுநகர் வளர்ச்சித் திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/bu7p35vu/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் வரையறுக்கப்பட்ட காஞ்சிபுரம் புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் பாரம்பரிய மறுமலர்ச்சித் திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது.</p><p>சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த கடந்த திமுக ஆட்சியில் புதுநகர் வளர்ச்சி திட்டங்களானது செயல்படுத்தப்பட்டது. </p><p>அதன்படி, காஞ்சிபுரம், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டங்களை அன்றைய திமுக அரசு செயல்படுத்தியது. </p><p>தொடர்ந்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டு, கருத்து கேட்பு கூட்டங்கள் முடிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இறுதியாக் திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலைக்கு வந்தது.</p><p>இந்த நிலையில் அதில் ஒரு திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 62.78 சதுர கி.மீ பரப்பளவில் 18 கிராமங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட அந்த அரசிதழை ரத்து செய்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு அரசிதழை வெளியிட்டுள்ளது.</p><p>இதனால், திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, மறைமலை நகர், திருபெரும்புதூர் ஆகிய புது நகர் வளர்ச்சித் திட்டங்களின் நிலையும் கேள்விக்குறியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">dbb0f447-400a-4617-9207-a2ed1de20cbe</guid><pubDate>Mon, 31 Aug 2026 06:00:21 +0000</pubDate><atom:updated>2026-08-31T06:00:21.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமூக நீதி விடுதிகள்,Social justie hostel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ztwpw1lh/vanni1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p> <p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும். 150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு- சபாநாயகர்</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?- டிடிவி தினகரன் கேள்வி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-10#comments</comments><guid isPermaLink="false">d1587066-8929-4534-becf-924f0da34790</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:49:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:49:36.356Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/q1ens4ff/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விகுறியாக்கியுள்ளதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.</p><h2><strong>வெட்கக்கேடானது</strong></h2><p>மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு  நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையில் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் தவெக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர் விஜய் அவர்கள், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்-ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.</p><p>எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலை உயர்வு முதல் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price#comments</comments><guid isPermaLink="false">47775e76-9689-42b2-8ab2-814b7e94f4b0</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:38:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:38:46.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/d9khe1ft/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>*  பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய். </p><p>* ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கனவே உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 3ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளார். </p><p>* பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கம் அதிக பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்.</p><p>* பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் என அறிவிப்பு. </p><p>* தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும். </p><p>* தூத்துக்கடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும். </p><p>* புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை. </p><p>* Super Critical Thermal Power Plant ரூ.20,800 கோடியில் நிறுவப்படும். </p><p>* காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும். </p><p>* புதிய செமி கண்டக்டர் மூலம் புதிதாக 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.</p><p>* தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். </p><p>*  ரூ.1,762 கோடி மதிப்பிட்டில் மின் பகிர்மான மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் Multi Model Logistics Hub அமைக்கப்படும். </p><p>* கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும். </p><p>* திருச்சி மண்டலத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து மையம் அமைக்கப்படும். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். </p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-affirms-chola-museum-project-in-thanjavur-will-not-be-scrapped#comments</comments><guid isPermaLink="false">d5fc4ee3-bc1d-4c99-865c-87aab0a22182</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:31:15.606Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/y05zvghc/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது.</p><p>மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.</p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.</p> <p>அதன் விவரம் வருமாறு:-</p><p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes" rel="nofollow">அமைச்சர் ஆதவ்</a> பதில் அளித்துள்ளார்.</p><p>"தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். </p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? என்று எம்எல்ஏ காமாட்சி கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதில் அளித்த <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">அமைச்சர் ராஜ்மோகன்</a>," நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் கேள்வி-நேரம்: தீர்த்தமலை கோவில் மேம்பாடு குறித்து அமைச்சர் பதில்... தாரகை கத்பட்டிற்கு முன்வரிசை இடம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-responds-regarding-theerthamalai-temple-development-priority-spot-for-tharahai-cuthbert</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-responds-regarding-theerthamalai-temple-development-priority-spot-for-tharahai-cuthbert#comments</comments><guid isPermaLink="false">af915c12-dc42-426d-93d4-aecb8d8a5209</guid><pubDate>Mon, 31 Aug 2026 05:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T05:22:15.373Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,தமிழக சட்டசபை,TN assembly,Tharahai Cuthbert,தாரகை கத் பட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/xdasive6/congress.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/xdasive6/congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அறிவிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2><strong>தாரகை கத் பட்டுக்கு சட்டசபையில் முன் வரிசையில் இடம்</strong> </h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> வாரவிடுமுறைக்கு பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தாரகை கத் பட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சட்டசபையில் அவருக்கு  முன் வரிசையில்  இடம் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>ஆளும் கட்சி வரிசையில் நான்காவது வரிசையில் இருந்த தாரகை கத் பட்,  தற்போது எதிர்க்கட்சி வரிசையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் சவுமியா அன்புமணி அருகே அமர்ந்து உள்ளார்.</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தீர்த்த மலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்குமா என சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பதிலளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் எனவும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகைத்தருவதாக கூறினார். </p><p>மேலும், தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம் உணவு கூடம் போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வசதிகள் தேவைப்படும் பட்சத்தில் கள ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை மூலம் விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரை தயார் செய்து தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின்  தலைமையிலும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுவின் ஒப்புதலுடன் அரசுக்கு பெறப்படும் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : தங்கப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி! இறங்குமுகத்தில் தங்கம் விலை</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-31-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-31-08-2026#comments</comments><guid isPermaLink="false">54bc43e6-cdbc-490b-95eb-5c359560e35c</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:53:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:53:15.590Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0f0vre3x/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/0f0vre3x/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.</strong></em> </p><h2><strong>தங்கம் விலை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இப்படியாக நீடித்த விலை மாற்றம், கடந்த 6-ந்தேதியில் இருந்து டாப் கியரில் எகிறத் தொடங்கியது.</p><p>கடந்த 1-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 220-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கு விற்பனை ஆனது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 240 என்றும் உயர்ந்தது.</p><p>இப்படியாக விலை உயர்ந்து வந்த சூழலில், அதன் பின்னர் சற்று குறையத் தொடங்கியது. கடந்த 27-ந்தேதி கிராமுக்கு ரூ.285-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 280-ம் குறைந்து இருந்தது.</p><p>இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை குறைந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.295-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 360-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2><strong>அதிரடி குறைவு</strong></h2><p>இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 22-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,910 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை</strong></h2><p>வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><p>26-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,080</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>26-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/concerned-ministers-reply-to-members-questions-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">cd01505d-2df7-4f7e-8513-6e5578cc95a6</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:35:25 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:35:25.164Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/nski2pq5/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> வார விடுமுறைக்குப்பின் இன்று கூடியது. இன்றைய கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாளிகள், நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான கோரிக்கைகளை மீது விவாதம் நடைபெறுகிறது. மேலும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. </p><p>முன்னதாக, சட்டசபையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்</p><p>மதுரை முதல் தேனி செல்லும் சாலையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது  என்றும்  ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா ? இதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பதில் என்ன என்று கேட்பதற்கு பதிலாக போக்குவரத்து துறை அமைச்சரின் பதில் என்ன என்று ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டார்.</p><p>உடனே எழுந்து பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அண்ணே நான்  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என கூறியதால்  சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. உடனே ஓ. பி. எஸ். தான் பேசியதை திருத்திக் கொண்டார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:- டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன. சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். </p><p>எம்எல்ஏ தென்றல் குமார்:- பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா?  என்று கேள்வி எழுப்பினார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-  பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது என்றார்.</p><p>எம்எல்ஏ சத்தியபாமா:- திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:  மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றார். </p><p>எம்எல்ஏ ஜவாஹிருல்லா:- நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன்:- நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்.  ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்: வேறு கட்சியில் இணைய திட்டமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatachalam-quits-dmk#comments</comments><guid isPermaLink="false">d8089aec-8e96-45ee-9b7d-76443acacd07</guid><pubDate>Mon, 31 Aug 2026 04:20:01 +0000</pubDate><atom:updated>2026-08-31T04:20:01.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Thoppu Venkatachalam,தோப்பு வெங்கடாசலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தோப்பு வெங்கடாசலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3m1r9st0/thoou.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தி.மு.க. சார்பில் களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம் தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளார்.</strong></em> </p><p>சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D">தோப்பு வெங்கடாசலம்</a> தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், </p><h2><strong>கசப்பான அனுபங்கள்</strong></h2><p>என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கினீர்கள். அதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை அன்புடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>ஆனால் நான் மாவட்ட கழக செயலாளராக செயல்படுவதற்கும் சட்டசபை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிற காரணத்தால் இனிமேலும் என்னால் கழகத்தில் பயணிக்க என் மனம் இடம் கொடுக்காத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். </p><p>மேலும் தற்போதைக்கு வேறு எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை, முயற்சியும் எடுக்கவில்லை. தற்போதைக்கு வேறு கட்சியில் இணையும் மனநிலையில் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். </p><p>முன்பு, அதிமுகவில் இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk">தோப்பு வெங்கடாசலம்</a>, திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 30 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">197709fa-b7be-4f14-952f-71d97d446d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:18:31.513Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor">தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</a></p><p>* தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்</p><p>* கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue">நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்...</a></p><p>* நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>* அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat">இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்... </a></p><p>* இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.</p><p>* ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery">என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery"> </a>* அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.</p><p>* அரசு மருத்துவமனை ஊழியர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என கர்ப்பிணி கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three">3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</a></p><p>* திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார்.</p><p>* ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்... </a></p><p>*இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies">நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்... </a></p><p>*நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.</p><p>*உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</a></p><p>* 219 தமிழர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.</p><p>* 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days">நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</a></p><p>* நாளைமறுதினம் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு செல்கிறார்.</p><p>* 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-china-erases-tibetan-records">நேபாள வெள்ளப் பேரழிவு: திபெத் மக்களின் பதிவுகளை நீக்கி உண்மையை மறைக்கும் சீனா!... </a></p><p>*திபெத்தின் கைரோங் எல்லைப் பகுதியில் வெள்ளம் வீடுகளையும் சுங்கச் சாவடியையும் அடித்துச் செல்லும் பயங்கர காட்சிகளை திபெத்திய மக்கள் விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். </p><p>*ஆனால், அந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks" rel="nofollow">சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!</a></p><p>*  நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.</p><p>* சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy" rel="nofollow">ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு- த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p>* உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது.</p><p>*  கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 3-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயருமா?- வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அச்சம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-toll-charges-increase-from-midnight-tonight-renewed-anxiety-among-motorists#comments</comments><guid isPermaLink="false">918be1a5-27e3-48b3-8d02-ed8806c16f37</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:10:36 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:10:36.269Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll Gate,சுங்க கட்டணம்,வாகன ஓட்டிகள்,சுங்கச்சாவடி</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ypxm96xy/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கக் கட்டணம் கடந்த ஜூன் மாதம் உயர்த்தப்பட்டதால் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கக் கட்டணம்</strong></h2><p>இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>இந்த சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களிடமிருந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF">சுங்கச்சாவடிகள்</a> மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டுத்திட்ட முறையில் செயல்படுத்தப்படுவதால், சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படுகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படி, குறிப்பிட்ட காலத்திற்கு வாகனங்களிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.</p><h2><strong>வாகன ஓட்டிகள் அச்சம்</strong></h2><p>அந்தவகையில், தமிழ்நாட்டில் மட்டும் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ulundurpettai-toll-gate-price-hike">சுங்கக் கட்டணங்கள்</a> ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு உயர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து அளவு, சாலை பராமரிப்பு செலவு, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் தேர்தல் நடந்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி உயர்த்தப்படும் வழக்கம் இருப்பதால், இன்று நள்ளிரவு மீண்டும் உயர்த்தப்படுமா? என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது.</p><p>இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கட்டண உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. வந்தால் சுமார் ரூ.5 கட்டண உயர்வு இருக்கும்' என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-open-mettur-dam-tomorrow-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">39a6c810-06f8-4822-b1ff-14b5790b4d74</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:05:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T03:05:06.351Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur dam - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/hb0nkn8c/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் இருந்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் மேட்டுர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.</p> <h2>காவிரி நீர்வரத்து</h2><p>இதனால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு பரவலாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.47 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 35 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதனிடையே, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணையில்</a> இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் விஜய் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார்.</p> <h2>பாதுகாப்பு ஏற்பாடுகள்</h2><p>முதலமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மேட்டூர் அணையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced">முதலமைச்சர் விஜய்</a> வரும் வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. </p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>அதாவது முதலமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அவர் செல்லும் வழியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் வலது கரையில் விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p> <h2>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 15-வது நாளாக நீடித்தது.</p> ]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு..! தெற்கு ரெயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-for-special-trains-and-train-service-changed#comments</comments><guid isPermaLink="false">055ca3b2-6df6-44af-981f-73dbe635194a</guid><pubDate>Mon, 31 Aug 2026 02:57:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T02:57:15.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,ரெயில் சேவை மாற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/1w606y62/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை கோட்டத்தில் உள்ள பெடாபாரியா மற்றும் நாயுடுபேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை சென்ட்ரல்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p><p>* சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை), செப்டம்பர் 3,10 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><p>* இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 5,12 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12840), அதற்கு மாற்றாக சென்ட்ரலில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக, இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும்.</p><h2><strong>போத்தனூர்-சம்பல்பூர் இடையே சிறப்பு ரெயில்</strong></h2><p>ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து வருகிற செப்டம்பர் 9-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.08311), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 1.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் நவம்பர் 27-ந்தேதி வரையில் (வெள்ளிக்கிழமை மட்டும்) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (08312), மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும்.</p><h2><strong>மதுரை-கான்பூர் சென்ட்ரல் சிறப்பு ரெயில் நீட்டிப்பு</strong></h2><p>உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), வருகிற செப்டம்பர் 2-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து கான்பூர் சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரெயில் (01926), வருகிற செப்டம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரையில் (சனிக்கிழமை மட்டும்) நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>பிரதமர் வேட்பாளர் விவகாரம்: த.வெ.க. அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் - அமைச்சர் ராஜேஷ் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-threatens-to-exit-from-tvk-ministry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-threatens-to-exit-from-tvk-ministry#comments</comments><guid isPermaLink="false">b65a5611-2191-4adc-8c1c-c7b857a117da</guid><pubDate>Sun, 30 Aug 2026 20:04:48 +0000</pubDate><atom:updated>2026-08-30T20:04:48.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,tvk,rajesh kumar,ராஜேஷ் குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hak682ia/Rajesh-Kumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rajesh Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/hak682ia/Rajesh-Kumar.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> பிரதமர் வேட்பாளராக ஆவார் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. </p><p>இதுஒருபக்கம் இருக்க நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணி துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/aadhav-arjuna">ஆதவ் அர்ஜுனா</a> பேசும் போது தமிழ் நாட்டில் இருந்து பிரதமர் உறுவாக வேண்டும் என்று பேசியிருந்தார். </p><p>இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளராவார் என்ற கருத்து அதிகளவில் பரவத்தொடங்கியது.</p><h2>காங்கிரஸ் எச்சரிக்கை:</h2><p>இதனிடையே தனியார் நிறுவனம் நடத்திய அடுத்த பிரதமர் யார்? என்ற கருத்துகணிப்பில் முதலமைச்சர் விஜய் 3-ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் வலுப்பெற்றது.</p><p>இந்த நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக எற்காவிட்டல் தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><h2>அமைச்சர் திட்டவட்டம்:</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் பதவி ஏற்பு நிகழ்வில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசும் போது, “2029 நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தான்!</p><p>ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் இதற்கு உடன்படவில்லை என்றால், தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்களும் எங்கள் பொறுப்புகளை துறப்போம்,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>2029-ல் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்- விஜய் வசந்த் எம்.பி. உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-set-as-2029-pm-candidate-says-mp-vijay-vasanth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-set-as-2029-pm-candidate-says-mp-vijay-vasanth#comments</comments><guid isPermaLink="false">a7051191-cbb1-4f47-8bb6-be208cd896cb</guid><pubDate>Sun, 30 Aug 2026 16:32:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T16:32:23.557Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,Vijay Vasanth,விஜய் வசந்த்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qngpcsri/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Vasanth MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qngpcsri/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள பள்ளி விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.</p><p>பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>நேபாளத்தில் நடந்த துயர சம்பவத்தில் பல உயிர்களை இழந்துள்ளோம். பலர் காணாமல் போய் உள்ளனர். இதில் தமிழகத்தைச்  சேர்ந்த வர்களும் உள்ளனர்.</p><p>முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் களை டெல்லிக்கு அனுப்பினார். அங்குள்ளவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>2029-ல் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.</p><p>நீட் தேர்வுக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு அமைப்பினர் தீவிர போராட்டம் நடத்தினாலும், ராகுல் காந்தி பிரதமர் இல்லம் முன்பு முற்றுகையிட்டு அதனை கவனத்துக்கு கொண்டு வந்து, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என கூறினார்.</p><p>பாராளுமன்றத்தில் அவர் பேசும்போது தடுத்தாலும் விடாமுயற்சியுடன் தனது கருத்துக்களை எடுத்து வைத்தார். மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். த.வெ.க.வினர் அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.</p><p>2029-ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் எண்ணமாக உள்ளது. பிரதமர் மோடியை எதிர்க்கும் சக்தியாக ராகுல் காந்தி உள்ளார். மோடி அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நன்றாக தெரியும்.</p><p>நீட் தேர்வு பிரச்சி னையில் என்ன நடந்தது என்று அனை வருக்கும் தெரியும். மாற்றம் வேண்டும். இளைஞர்களுக்கான ஆட்சி வேண்டும், மக்களுக்கான ஆட்சி அமைய வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/4-children-killed-rs-3-lakh-compensation-announced#comments</comments><guid isPermaLink="false">79dd29c3-c094-474e-85a0-3ff7e2bf122e</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:39:56 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:39:56.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul,Children dead</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/05copx9t/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/05copx9t/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விபத்து</h2><p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவான ஓட்டுநர் சரவணனை கைது செய்த போலீசார் பால் வேனையும் பறிமுதல் செய்தனர்.</p><h2>நிதியுதவி</h2><p>திண்டுக்கல் வடமதுரை அருகே வாகனம் மோதிய விபத்தில் 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்திகேட்டு வேதடையடைந்தேன் என முதலமைச்சர் விஜய் அறவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>திண்டுக்கல் கோர விபத்தில் 4 குழந்தைகள் பலியான செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். </p><p>உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு குறித்து சர்ச்சை பேச்சு- த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy#comments</comments><guid isPermaLink="false">40ab6f99-0331-4b6f-a772-f466a0791d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 15:01:13 +0000</pubDate><atom:updated>2026-08-30T15:01:13.771Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாடு சட்டசபையில் "ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது" என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க அரசையும் கண்டித்து, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 3-ந் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-</p><h2>கடும் கண்டனம்</h2><p>சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் தவெக.</p><p>அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். </p><p>அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்கள், தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாசாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>தவெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2>ஜல்லிக்கட்டுப் போட்டிகள்</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p>விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது.</p><p>அப்போதைய முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். </p><p>தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் வாலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர்.</p><p>அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.</p><h2>கலாசார பாரம்பரியம்</h2><p>அவசரச் சட்டத்தைத் தொடர்ந்து. எனது தலைமையிலான அப்போதைய அம்மா அரசு தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஐல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல.</p><p>அது தமிழர்களின் கலாசார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது.</p><p>இவ்வாறு ஐல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு கட்டிக்காட்ட விரும்புகிறேன்.</p><h2>கண்டன ஆர்ப்பாட்டம்</h2><p>இந்நிலையில், 'தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை அழிக்கிறது என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரையும்.</p><p>மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் தவெக அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் 'அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானசெல்லூர் K ராஜூ கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும்.</p><p>மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான R.B. உதயகுமார், அழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம் Ex M.LA, அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள். </p><p>முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள்.</p><p>நிர்வாகிகள் கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஐல்லிக்கட்டு காளைபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஐல்லிக்கட்டு நலச் சங்கத்தினர் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுளது அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks#comments</comments><guid isPermaLink="false">eba0b6c5-b0e7-4c4f-90a4-022c222c9edb</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:56:37 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:56:37.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil people,Travels Owner,டிராவல்ஸ் உரிமையாளர்,nepal flood,தமிழர்கள் மாயம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Travels agency]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை குரோம்பேட்டையில் இருந்து நேபாளம் யாத்திரை சென்ற தமிழர்கள் 49 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை என டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>நேபாளத்திற்கு சென்று வந்த குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வெள்ளத்தால் மூடப்பட்ட சீன குடியுரிமை மையத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.</p><p>மலை மீது ஏறி சீனாவுக்கு தப்பி சென்றிருக்கலாம். தற்போது வரை நேபாள அரசு மட்டுமே தகவல் தெரிவிக்கிறது. சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.</p><p>சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">ee7c96b7-80da-41f7-9f67-b471a3ba6b66</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:32:08.797Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Government of Tamil Nadu,M. Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெற்றது அல்ல, திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>விடை இல்லை</h2><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. </p><p>இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மகத்தான தலைவர்கள்</h2><p>தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை, வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். </p><p>நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே பார்த்து விட முடியாது. அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர்.</p><h2>தற்செயலானது அல்ல</h2><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. </p><p>இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். </p><p>அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்நிலையில், இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை ? என்பவை குறித்து முழுமையான நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். </p><p>இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: திமுக எம்பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti#comments</comments><guid isPermaLink="false">41b33bf0-4ea0-454c-8c78-7712dadece55</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:34.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,girl suicide,சிறுமி தற்கொலை,உசிலம்பட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.</p><p>பள்ளிச் சேர்க்கைக்காக சென்ற சிறுமி அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் நிலையில் மனவேதனையில் உயிரை மாய்த்துள்ளார் என கனிமொழி கூறினார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.</p><p>தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">687eebcc-8f78-4ed6-a3ee-6c447123aec9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:03:45.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,Children Death,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">a4d3da7d-7631-4c09-a7cd-9d4c50aa6ead</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:40:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:40:04.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Rain,மழை,Meteorological Centre,Weather,மேற்குதொடர்ச்சி மலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>13 மாவட்டங்களில் மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கள்ளக்குறிச்சிணண, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,2ம் தேதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2>3ம் தேதி மிதமான மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f923f2e9-190a-473c-b6c6-b7707dc8ffe6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:28:12 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:28:12.524Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK Mustafa,தவெக முஸ்தபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தவெக சட்டமன்ற உறுப்பினர்  முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>இந்திய மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? முஸ்தபா ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. </p><p>உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்  முஸ்தபா. </p><p>திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். </p><p>இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழ்நாடு மக்கள் மக்கள் புரிந்துகொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம் அருகே  2 மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam#comments</comments><guid isPermaLink="false">56868c30-f768-405a-b000-8728cc7147e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:04:17.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரக்கோணம்,Arakkonam,3 Person Suicide,PoliceInvestigation,Family Tragedy,Mangammapetai,Tragic Incident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family-Tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ranipet">ராணிப்பேட்டை </a>மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவருக்கு, வள்ளி (23) என்ற மனைவியும், பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். </p><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவரின் மறைவுக்குப் பின், வள்ளி தனது இரண்டு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்தார்.</p><h2>ரெயில் முன் பாய்ந்து கோர முடிவு</h2><p>இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்த தனது இரண்டு மகன்களையும் வள்ளி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அரக்கோணம் - திருத்தணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மங்கம்மாபேட்டை வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற மின்சார ரெயிலின் முன், வள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி திடீரென பாய்ந்துள்ளார்.</p><p>இதில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ரெயில்வே போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். </p><p>உயிரிழந்த வள்ளி மற்றும் அவரது மகன்களான பரத், சந்தோஷ் ஆகிய மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2><strong>தற்கொலைக்கான காரணம் என்ன?</strong></h2><p>கணவர் இறந்ததால் ஏற்பட்ட வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வள்ளி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமா? என்ற பல கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் அரக்கோணம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பள்ளிக்கரணையில் சதுப்புநில பாதுகாப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection#comments</comments><guid isPermaLink="false">5cc3d0c7-c382-4c74-b1b1-1fc4477e7b50</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:30:32 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:30:32.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Sowmiya Anbumani,சதுப்பு நிலம்,Pallikaranai,பள்ளிக்கரணை,Wetland,Pasumai Thaayagam,Save Pallikaranai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss  - Sowmiya Anbumani ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இன்று அதிரடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><h2><strong>பள்ளிக்கரணையில் அன்புமணி பிரச்சாரம்</strong></h2><p>சென்னை மாநகரின் மிக முக்கியமான இயற்கை அரணாக விளங்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை </a>சதுப்பு நிலப் பகுதி ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பள்ளிக்கரணை பகுதியில் நேரடியாகக் களமிறங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><h2><strong>சௌமியா அன்புமணியும் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> அவர்களுடன், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக முக்கிய நிர்வாகியுமான <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">சௌமியா அன்புமணியும்</a> இணைந்து கலந்துகொண்டார்</strong>.</p><p>அவரும் அங்கிருந்த பொதுமக்களிடமும், பெண்களிடமும் சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.</p><h2><strong>சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பு</strong></h2><p>பிரச்சாரத்தின் போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அப்பகுதி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் முக்கியக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்</p><p>சென்னை பெருநகரப் பகுதியை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</a> எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினர். </p><p>இப்பகுதியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு இந்த சதுப்பு நிலமே அடித்தளமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.</p><p>அழியும் நிலையில் உள்ள இந்த இயற்கைச் சூழலையும், அங்கு வாழும் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.</p><h2><strong>பொதுமக்கள் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் கலந்துகொண்டனர். </p><p>அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணியின் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் அரசு அலட்சியம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani#comments</comments><guid isPermaLink="false">8f6614b6-3e9c-48aa-8a17-9aa224d65b60</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:27:21.076Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"><![CDATA[  Anbumani condemns LPG Price Hike]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது.</p><p>நேபாளத்தில் இமய மலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல.</p><p>தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காய்கறி மாலைகள் அணிந்து போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices#comments</comments><guid isPermaLink="false">208b684e-ff1d-4ecb-91d3-663d04dc4460</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:26:35.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,விலைவாசி உயர்வு,price rise,vegetable price hike,Vandavasi,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி,வந்தவாசி,CPIM Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPIM Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசியில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a>யினர் காய்கறி மாலைகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>கிடுகிடுவென உயர்ந்த விலைவாசி</strong></h2><p>கடந்த சில வாரங்களாகவே அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் தக்காளி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>உள்ளிட்ட அன்றாட சமையல் காய்கறிகளின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. </p><p>இந்த திடீர் விலை ஏற்றம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை பதம் பார்த்துள்ளதுடன், பொதுமக்களைப் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.</p><h2><strong>காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்</strong></h2><p>விலைவாசி உயர்வை கவனித்து அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சரமரமாகக் கோர்த்து மாலையாக அணிந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p><p>காய்கறிகளின் விலை உயர்வால் அவை நகையாகவும் மாலையாகவும் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.</p><h2><strong>முக்கிய கோரிக்கைகள்</strong></h2><p>ஆர்ப்பாட்டத்தின் போது, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மாநில அரசுகளுக்கு</a> எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>ஓயாமல் உயர்ந்து வரும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வெளிச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் தரமான மளிகைப் பொருட்களை வழங்க அரசு முன்வர வேண்டும். </p><p>உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தும் பெரு முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்று கோரிக்கைளை முன்வைத்தனர்.</p><h2><strong>மக்கள் ஆதரவு</strong></h2><p>வந்தவாசியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் பெண்ணை தீர்த்துக் கட்டினோம்- வடமாநில தம்பதி வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancheri-woman-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancheri-woman-murder-case#comments</comments><guid isPermaLink="false">194a6100-72e0-4706-9b5d-7f089a4f5bf7</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:45:20.799Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பெண் கொலை,woman murder,பிரியாணி அண்டா,கூடுவாஞ்சேரி,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,Guduvancherry,Guduvancheri woman murder</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3dl60pt6/Guduvancheri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3dl60pt6/Guduvancheri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் ஆக்ராவில் மீட்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து அங்குள்ள  போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி</strong></h2><p>கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவை, ராகுல் என்கிற மொனிருதின் லஸ்கர் அவரது மனைவி பகவதி மாஜி ஆகிய இருவரும் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.</p><p>பின்னர் ஹயாத் நிஷாவின் உடல் சதை பகுதியை பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் போட்டு அதனை சமைத்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்ணை கொன்று இருவரும் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்கிற திகிலூட்டும் கேள்வியும் எழுந்தது.</p><h2><strong>கைது</strong></h2><p>இதை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக இருவரும் நேற்று சிக்கினர். அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் மணிப்பூரில் பதுங்கியிருந்த ராகுல் கைது செய்யப்பட்டார்.</p><p>அதைதொடர்ந்து ஒடிசாவில் வைத்து பகவதி மாஜியையும் போலீசார் கைது செய்தனர்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3z6ivy7p/Guduvancherii.jpg" /></figure><h2><strong>சென்னைக்கு</strong></h2><p>இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த உள்ளனர். போலீசில் சிக்கியதும் கொலைக்கான காரணம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.</p><p>அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டியதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ராகுல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தகாத உறவு</strong></h2><p>நான் எனது மனைவி பகவதிமாஜியுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்தேன். அப்போது ஹயாத் நிஷாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து சென்றார். இருவரும் நெருங்கி பழகியது எனது மனைவி பகவதி மாஜிக்கு பிடிக்கவில்லை. அவர் என்னையும், ஹயாத் நிஷாவையும் கண்டித்தார். இதனால் நான் ஹயாத் நிஷாவுடனான தொடர்பை துண்டித்து விட முடிவு செய்தேன். இதுபற்றி அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன். அதற்கு ஒத்துக்கொள்ளாத ஹயாத் நிஷா எங்களை மிரட்டினார்.</p><p>இது இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் ஹயாத் நிஷாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.</p><h2><strong>வெளியில் தெரியாது</strong></h2><p>சம்பவத்தன்று எங்களது வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டியதால் ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொன்றோம்.</p><p>கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் உடலை வைத்து ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த கொலை தொடர்பாக எதுவும் வெளியில் தெரியாது, தப்பித்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தோம்.</p><p>இவ்வாறு கைதான ராகுல் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>