<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 22 Jul 2026 06:00:25 +0000</lastBuildDate><item><title>மாணவர்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு - பன்னாட்டு நிறுவனங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-10-crore-investment-for-student-entrepreneurship-vit-signs-mous-with-multinational-companies#comments</comments><guid isPermaLink="false">a62224b9-de44-451e-8857-7669e074706c</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:59:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:59:38.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vellore,வேலூர்,விஐடி பல்கலைக்கழகம்,MoU,VIT,புரிந்துணர்வு ஒப்பந்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேலூர் விஐடியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முயற்சிக்கு தின்குவேட் முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட துணை தலைவர் சேகர் விசுவநாதன்.]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9twfla14/vit.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</strong></em></p><h2>விஐடி மாணவர்கள்</h2><p>இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்ய உள்ளன. </p><h2>தின்குவேட் முதலீட்டு நிறுவனம்</h2><p>சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும் முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது. டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும். இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும். </p> <p>ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.</p><h2>வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம்</h2><p>அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.</p> <h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.</p><p>நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-july-2026#comments</comments><guid isPermaLink="false">07faf4ec-9c5b-4385-ab8c-543b6cbe670b</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:45:36 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:49:21.345Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/vymt58ob/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/spirituality/increase-in-pilgrim-arrivals-at-tirupati-distribution-of-time-slot-darshan-tickets-cancelled">திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து</a></p><p>* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர். </p><p>* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement" rel="nofollow">பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed">தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-posts-comparing-with-previous-wars">'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!... </a></p><p>டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/wildfire-intensifies-in-the-us">அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!... </a></p><p>சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation">கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!... </a></p><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ben-stokes-century-for-durham">சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!... </a></p><p>ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues">டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!... </a></p><p> "நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/tax-exemption-for-generic-drugs-in-us-for-2-years-donald-trump-announcement">அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...</a> </p><p>"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid">நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</a></p><p><em>* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</em></p><p><em>* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.</em> </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-07-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?</a></p><p><em>* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. </em></p><p><em>* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. </em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems">நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</a></p><p><em>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</em></p><p><em>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable">தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p><em>* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. </em></p><p><em>* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</em></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/the-pain-of-defeat-is-very-intense-messi-melts-on-instagram" rel="nofollow">தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது..!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</a></p><p><em>*  ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி</em></p><p><em>*  மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.</em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31">ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: 'ரெயில் ஒன்' செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays">வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31">சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p>]]></content:encoded></item><item><title>பழனி கோவில் நிலம் மோசடி விவகாரம்- அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-scam-aiadmk-protest-announcement#comments</comments><guid isPermaLink="false">19b2501a-a558-449a-bea8-117154d02c1a</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:38:37 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:38:37.792Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,protest,ஆர்ப்பாட்டம்,பழனி கோவில் நில மோசடி,Pazhani land scam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/a1tuzubu/EPS5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோவில் நிலம் முறைகேடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரி அதிமுக சார்பில் 25ம் தேதி கண்டம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மடத்திற்குச் சொந்தமான நிலம் சம்பந்தமாக முந்தைய திமுக ஆட்சியிலிருந்தே பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன.</p><p>சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதாகத் தெரியவருகிறது.</p><p>தமிழகத்தில் புதிதாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தூய சக்தி அரசு என்று சொல்லிக் கொள்பவர்களின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">அறநிலையத் துறை</a>யின் பராமரிப்பில் இருந்த இந்த நிலம், தற்போது இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன.</p><p>இந்த பத்திரப் பதிவை செய்வதற்காகவே பழனி சார் பதிவாளர் விடுமுறையில் அனுப்பப்பட்டு, கொடைக்கானலில் இருக்கும் சார் பதிவாளரை ஒருநாள் கூத்தாக பழனி அலுவலகத்திற்கு நியமித்துள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.</p><p>அந்த அதிகாரி உயர்நீதிமன்ற வழக்கைப் பற்றியோ, நீதிபதிகளின் அறிவுறுத்தலையோ கருத்தில் கொள்ளாமல் மடத்திற்குச் சொந்தமான நிலத்தை, தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததன் மர்மம் விளங்கவில்லை.</p><p>இந்த நில மோசடி விற்பனை குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் எழுந்ததும், அதிகார வர்க்கம் தங்களை களங்கத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள CBCID மூலம் ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. </p><p>விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும், தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கோடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.</p><p>அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்த அதிகாரி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலத்தை விற்பதற்கான பத்திரம் தயாரித்து, விற்பனைப் பத்திரத்தில் கையெழுத்திட்ட நபர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. </p><p>இந்த நிலத்தை ரூ. 2 கோடிக்கு வாங்கிய இருவர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளன.</p><p>தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் இதுபோல் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடமை.</p><p>இந்தக் கடமையில் எங்களுக்கு உறுதுணையாக அனைத்துத் தரப்பு மக்களும், ஆன்மீகவாதிகளும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். </p><p>இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது. </p><p>எனவே, பழனி, தண்டபாணி சுவாமிகள் மடம் நில விவகாரத்தில், இந்த அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நிறுத்தப்பட வேண்டுமென்றால், நடுநிலையான அமைப்பு ஒன்றின் சார்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p><p>இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">த.வெ.க</a>. அரசைக் கண்டித்தும்; இவ்வழக்கை உடனடியாக CBI வசம் ஒப்படைக்க பொய்க்கால் குதிரை த.வெ.க. அரசை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.7.2026 சனிக் கிழமை காலை 9.30 மணியளவில், பழனியில் - மயில் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழகப் பொருளாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் C. சீனிவாசன் அவர்கள் தலைமையிலும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான டாக்டர் V.P.B. பரமசிவம், Ex. M.L.A., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. K. ரவிமனோகரன், MLA., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-ongoing-mineral-plunder-in-the-southern-districts-must-be-stopped-a-cbi-inquiry-is-needed#comments</comments><guid isPermaLink="false">630172bd-c140-410f-bbd0-8f4dcb0358f6</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:35:50.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,கனிமவள கொள்ளை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8z09bo9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கனிமங்களைக்  கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டையும், கேரளத்தையும் இணைக்கும்  தேசிய நெடுஞ்சாலை 66-இன் வழியாக கனிமங்கள் கடத்தப்படுவது மட்டும் தான் நிறுத்தப்பட்டிருக்கிறதே தவிர,  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து கனிமம் கடத்தப்படுவது கவலையளிக்கிறது.</p><p>இந்தியாவிற்கு இயற்கை கொடுத்த கொடையான மேற்குத் தொடர்ச்சி மலை குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழ்நாட்டில் 8 மாவட்டங்கள் வழியாக பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு பகுதி வரை நீள்கிறது. போக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டிய இந்த மலைப்பகுதி தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறது. குறிப்பாக தென்காசி, நெல்லை மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டு கனிமக் கொள்ளை எல்லையில்லாமல் நடக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் தான் இந்தக் கொள்ளை உச்சத்தை அடைந்தது. நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்திற்கு கடத்தப்படுவது குறித்தும், திமுகவைச் சேர்ந்தவர் இந்தக் கடத்தலுக்கு காட்பாதராக திகழ்ந்தது குறித்தும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினேன். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு கனிமவளக்கொள்ளையும் காரணமாக இருந்தது.</p><h2><strong>புதிய அரசு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகாவது கனிமக் கொள்ளைக்கு முடிவு கட்டப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பல மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை வரவேற்கத்தக்க மாற்றங்களாகத் தோன்றினாலும் களத்தில் இன்று வரை எந்த மாற்றமும் நிகழவில்லை; தென்காசி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமங்கள்  கேரளத்திற்கு கடத்தப்படுவது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார்கள் எழுந்துள்ளன.</p><h2><strong>ஆய்வு குறைவு</strong></h2><p>கனிமக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்காகாக தமிழக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் எந்த பயனும் விளையவில்லை. அரசு இயந்திரத்தை விட அதிநுட்பமான வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் கனிமவள மாஃபியா அதிகாரிகள் துணையுடன் அமைச்சரையும், அரசையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை ஆகும். கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அல்லது உயரதிகாரிகள் வருவதாக இருந்தால் அது குறித்து கனிமக் கொள்ளையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகின்றன. அவர்களும் சுதாரித்துக் கொண்டு கனிமக் கொள்ளை நடக்கவில்லை என்று அமைச்சரை நம்ப வைப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி, கல் குவாரிகளில் அமைச்சர் ஆய்வு நடத்துவதும் அண்மைக்காலமாக குறைந்து விட்டது.</p><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்டிருக்கும் ஒரே மாற்றம் என்னவென்றால், நெடுஞ்சாலைகள் வழியாக இல்லாமல் குறுக்கு வழிகளில் கனிமங்கள் கடத்தப்படுவது தான். கன்னியாகுமரியை மராட்டிய மாநிலம் பன்வேலியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66-இல் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாகத் தான் கனிமவளங்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வந்தன. அதை நானே நேரடியாக பார்த்து பல தருணங்களில் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தேன். அதுமட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் கனிமம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் சென்றதால் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டன. அதனால், களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கனிமங்களைக் கடத்திச் செல்வது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.</p><h2><strong>தென்காசி மாவட்டங்களில்</strong></h2><p>அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி வழியாக வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில்  தேசிய நெடுஞ்சாலையின் வழியாகத் தான் கனிமவளங்கள் கடத்தப்படவில்லையே தவிர, அம்மாவட்டத்தின் கொல்லங்கோடு, கோழிப்போர் விளை, ஊரம்பு, களியல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக குறுக்கு சாலைகளில் புகுந்து கனிமங்களை ஏற்றிச் செல்லும் சரக்குந்துகள் கேரளத்திற்கு பயணிக்கின்றன. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தப்படுவது தடையின்றி தொடர்கிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனிமக்கொள்ளையும் அளவுக்கு அதிகமாக நடைபெறுகிறது.</p><p>தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய தடை இன்று வரை விதிக்கப்படவில்லை. அண்மையில் கூட, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை.</p><h2><strong>சட்டவிரோத குவாரிகள்</strong></h2><p>தென் மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்துவது முடியாத காரியமல்ல. அதற்குத் தேவை அரசியல் துணிச்சல் தான். கனிமக் கொள்ளை மாஃபியா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் அழுத்தங்களைப் பற்றி கவலைப்படாமல் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் கனிமவளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும்.- இரண்டாம் கட்டமாக, தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்லும் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் மூலம் கனிமவளம் கடத்தப்படுவதை கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் அவரது அலுவலக அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்; இதன் முலம் கனிமக் கடத்தல் குறையும். அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் செயல்படும் சட்டவிரோத குவாரிகளை கருணை காட்டாமல் மூட வேண்டும்.</p><h2><strong>தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>நான்காவதாக,  சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பவர்களுக்கு பெயரளவில் தண்டம் விதிப்பதை  கைவிட வேண்டும்; மாறாக அவர்கள் வெட்டி எடுத்த கனிமத்தின் சந்தை மதிப்பை விட 100 மடங்கு அதிக தண்டம் விதிப்பதுடன், குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவை அனைத்தையும் விட முக்கியமானது கடந்த காலங்களில் கனிமக் கடத்தலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை ஊக்குவித்தவர்களையும் தண்டிப்பது தான். முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரம் பெற்றிருந்த காட்பாதர்களும், மாஃபியாக்களும் தான் கனிமக் கடத்தலுக்கு துணையாக இருந்தன. இது இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nagercoil-sabarivarman-murdered-case-transferred-to-cbcid#comments</comments><guid isPermaLink="false">14417e43-f0b3-461d-abde-a0ef69ede072</guid><pubDate>Wed, 22 Jul 2026 05:13:17 +0000</pubDate><atom:updated>2026-07-22T05:13:17.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg" width="1024"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarivarman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/4gy2vpbw/sabarivarman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாகர்கோவில் சிறையில் கைதி மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு ஊரை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 34) மாற்று திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்ததாக கடந்த 9-ந்தேதி தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்து, நாகர்கோவிலில் மாவட்ட சிறையில் விசாரணை கைதியாக அடைத்தனர். கடந்த 13-ந்தேதி வார்டன் மற்றும் சிறை கைதிகள் தாக்கியதில் சபரி வர்மன் இறந்தார்.</p> <p>இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.</p> <p>இந்த வழக்கு தொடர்பாக தடவியல் நிபுணர்கள் சிறையில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் சபரிவர்மனை போலீசார் தாக்கிய அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.</p><p>சிறைச்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை கொண்டு கைது செய்யப்பட்டு உள்ள சிறை கைதிகள் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகிய 3 கைதிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் கைதிகள் 3 பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.</p> <p>இந்நிலையில் சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த வழக்கை நேசமணிநகர்  போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: &apos;ரெயில் ஒன்&apos; செயலி தள்ளுபடி சலுகை மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rail-one-app-discount-offer-extended-until-march-31#comments</comments><guid isPermaLink="false">a069eb8b-809a-4d23-95fa-8043462681b1</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:37:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:37:07.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில் பயணிகள்,Rail One,Rail One App,ரெயில் ஒன் செயலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/5n3n63dt/railone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ரெயில் ஒன்</strong></h2><p>ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து 'ரெயில் ஒன்' என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். </p><p>மேலும், ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டையும் இந்த செயலி மூலம் பெற முடியும்.</p><h2><strong>சலுகை</strong></h2><p>ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரையில் 6 மாதத்திற்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்தல் மற்றும் பயணச்சீட்டுக்காக வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்கும் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டது.</p><h2><strong>3 சதவீத தள்ளுபடி</strong></h2><p>இந்தநிலையில், இந்த சலுகை 2027-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரெயில் ஒன் செயலி மூலம் யு.பி.ஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற எந்தவொரு டிஜிட்டல் கட்டண முறையையும் பயன்படுத்தி முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்தால் மொத்த கட்டணத்தில் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும். </p><p>இதேபோல, 'ஆர்-வாலட்' மூலம் பணம் செலுத்தி 3 சதவீத கேஷ்பேக் சலுகையானது 2028-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி வரையில் வழங்கப்படுவதாக இந்தியன் ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, <a href="https://www.maalaimalar.com/topic/ரெயில்-பயணிகள்">பயணிகள்</a> ரெயில் ஒன் செயலியை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்.ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இந்த சலுகையைப் பெறலாம்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-only-scrapping-neet-will-provide-a-lasting-solution-to-all-these-problems#comments</comments><guid isPermaLink="false">131377f1-f50e-47c7-b1eb-6db8532d5444</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:20:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:20:07.430Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,நீட் தேர்வு,Neet exam,முக ஸ்டாலின்,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/j7vwg76b/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், '<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">நீட்</a>' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p> <p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet">உதயநிதி</a> கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p> <p>இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>* புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.</p><p>* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.</p> <p>* நீட் ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.</p><p>* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-11th-phase-excavation#comments</comments><guid isPermaLink="false">b29448bf-412c-4327-819b-c136a44e0629</guid><pubDate>Wed, 22 Jul 2026 04:12:49 +0000</pubDate><atom:updated>2026-07-22T04:12:49.959Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaganga,கீழடி அகழாய்வு பணிகள்,Keeladi Excavation,TNSDA,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi Excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/9pwg969p/keeladi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சங்க கால நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றி வரும் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மை முறைகள் மற்றும் ஒரு புதிய சுதந்திரமான தொழிற்கூடத்தின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை (TNSDA) மேற்கொண்ட இந்த அகழாய்வில், பல அபூர்வமான தொல்பொருட்களும் ஒரே குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டது தொல்லியலாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்தச் சங்க கால இடத்தில் அகழாய்வுப் பணிகளைப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முறையாக பண்டைய மனிதர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் விரிவான செங்கல் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்த முதன்மைப் பகுதியிலிருந்து தனித்து நிற்கிறது.</p><h2><strong>புதிய தொழிற்கூடத்திற்கான சான்றுகள்:</strong></h2><p>கடந்த 10 கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட கட்டிட அமைப்புகளின் தொடர்ச்சி இதில் காணப்பட்டாலும், 11-ஆம் கட்டத்தில் தோண்டப்பட்ட குழிகள் கீழடி மக்களின் ஒரு 'புதிய தொழிற்கூடத்தை' வெளிப்படுத்துகின்றன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.</p><p>2014 முதல் அகழாய்வு நடைபெற்று வந்த முதன்மைப் பகுதிக்குத் தெற்கே, 2026 மார்ச் மாதம் முதல் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. TNSDA அகழாய்வைக் கைப்பற்றிய 2017-க்குப் பிறகு, தோண்டப்பட்ட அனைத்துக் நான்கு பிரிவுகளிலுமே கட்டிட அமைப்புகளுக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.</p><h2><strong>அகழாய்வு இயக்குநர் விளக்கம்:</strong></h2><p> "பழைய குழிகளுக்கும் புதிய குழிகளுக்கும் இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன. இது இதுவொரு சுதந்திரமாக இயங்கிய தொழிற்கூடப் பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டியிருந்தாலும், இதுவும் கீழடியின் ஓர் தொழிற்பகுதியே என்று நாம் உறுதியாக முடிவுக்கு வரலாம்" என்று கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ் மாசேத்துங் கூறியுள்ளார்.</p><p>மேலும் 7 முதல் 9 குழிகளைத் தோண்டுவதற்குப் பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் கூடுதல் தொல்பொருட்களைக் கண்டெடுத்து, பண்டைய மனிதர்களின் விந்தைகளை மேலும் வெளிக்கொணரலாம் என்று தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.</p><h2><strong>நீர் மேலாண்மையில் தமிழர்களின் தொழில்நுட்பம்:</strong></h2><p>ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது கீழடி அகழாய்வு வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். மூடப்பட்ட கால்வாய், நேர்த்தியாகப் பொருத்தப்பட்ட சுடுமண் குழாய் மற்றும் சுருள் வடிவிலான குழாய் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. </p><p>தொழிலகத் தேவைகளுக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் பண்டைய தமிழர்கள் கையாண்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், அவர்களின் நகரமைப்பையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்துகிறது.</p><h2><strong>1,300-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்:</strong></h2><p>நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்கு கண்டெடுக்கப்பட்ட வெள்ளி முத்திரைக் காசுகள், பரந்த செங்கல் அமைப்புகள் மற்றும் குடியிருப்பின் பிரம்மாண்டமான அளவு ஆகியவை தென்னிந்தியாவில் பண்டைய நகர்ப்புற நாகரிகம் இல்லை என்ற கூற்றைப் பொய்யாக்கியுள்ளன. </p><p>சூரியன், பிறை மற்றும் காளை குறியீடுகள் கொண்ட இந்த முத்திரைக் காசுகளும், சூட மணி மற்றும் அகேட் மணிகளும் கீழடி மக்களுக்கும் வட இந்தியாவுக்கும் இடையே இருந்த வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.</p><p> "கீழடியில் அடையாளம் காணப்பட்ட 110 ஏக்கர் பரப்பளவில் இதுவரை 2 சதவீதம் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிப்பட்டுள்ள பகுதி ஒரு தொழிற்பகுதியாகும். இங்கு கைவினைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரிவு மக்களும் வாழ்ந்துள்ளனர். தற்போது குடியிருப்பின் மற்றொரு பகுதி வெளிப்பட்டு வருகிறது, ஆனால் பண்பாட்டு மற்றும் மண்பாண்ட வரிசைகளில் எந்த மாற்றமும் இல்லை." என TNSDA-வின் கல்வி ஆலோசகர் பேராசிரியர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-crushing-of-democracy-in-capital-strongly-condemnable#comments</comments><guid isPermaLink="false">e304f00c-5c9d-4469-99ff-20689993bb60</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:47:54 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:47:54.782Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-25/l38tsaej/AadhavArjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று  அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜூனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.</p> <p>அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. </p><p>அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் <a href="https://www.maalaimalar.com/news/national/rahul-priyanka-released-from-detention-as-congress-staged-protest-at-lok-kalyan-marg">பிரியங்கா காந்தி</a> அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். </p> <p>மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.</p><p>அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். </p> <p>நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,635 சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1635-special-bus-running-across-tamilnadu-for-weekly-holidays#comments</comments><guid isPermaLink="false">17db2fd0-85e3-44f9-bfc2-bb776d17dd23</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:29:15 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:29:15.790Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/m8a8j7wp/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு தடையின்றி பயணம் செய்ய வசதியாக, சென்னையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் தெரிவித்துள்ளார்.</p><p>பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, வரும் 24 (வெள்ளிக்கிழமை) மற்றும் 25 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பஸ்களும், 25-ந் தேதி (சனிக்கிழமை) 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24-ந் தேதி வெள்ளிக்கிழமை 120 பஸ்களும், 25-ந் தேதி சனிக்கிழமை 120 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதாவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 24 மற்றும் 25-ந் தேதிகளில் தலா 25 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 420 சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>அறிவுறுத்தல்</strong></h2><p>வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் தங்களது பயணங்களை முன்னரே திட்டமிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (23.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-31#comments</comments><guid isPermaLink="false">bb0fe696-1890-43f3-b29f-4ae83e0d7d9e</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:14:38 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:14:38.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/mxc8pspa/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>அயப்பாக்கம்</strong></h2><p>ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பட்டு, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்ராஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர், எல்.பி. சாலை, கலாஷேத்ரா சாலை, ஆர்.கே.நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி அவென்யூ, சிவசுந்தர் அவென்யூ.</p><h2><strong>பாரிவாக்கம்</strong></h2><p>அணைகட்டுசேரி, காவல்சேரி, சோரன்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதுர்மேடு, வயலானல்லூர், திருகோவில்பத்து.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், நாராயணபுரம், வி.ஜி.பி. ராஜேஷ் நகர், கணேஷ் அவென்யூ, வி.எம். சாலை, ஜெயின் அபார்ட்மெண்ட், ரமணியம் ஓஷன் டியூ அபார்ட்மெண்ட், சர்வம் அபார்ட்மெண்ட்.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>மாம்பாக்கம் பிரதான சாலை, பாபு நகர், நீலா நகர், விமலா நகர், பிரின்ஸ் கல்லூரி சாலை, சிவகாமி நகர், நல்லதம்பி நகர், அண்ணா சாலை, நெசவாளர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு, பத்மாவதி நகர், மகேஸ்வரி தெரு.</p><h2><strong>கவுரிவாக்கம்</strong></h2><p>சாந்தி நகர், சிவகாமி நகர், பழனியப்பா நகர், சந்தானம்மாள் நகர், வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஐ.வி.டி. கல்லூரி.</p><h2><strong>கே.கே. நகர்</strong></h2><p>கன்னிகாபுரம் 1-வது முதல் 3-வது தெரு வரை, விஜயராகவபுரம் 1-வது முதல் 5-வது தெரு வரை மற்றும் குறுக்குத் தெரு, பீரான்சாஹிப் தெரு, ஆற்காடு சாலை, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்த்ரா கல்லூரி, ஏ.வி.எம். அஸ்டா, ஏ.வி.எம். ஸ்டுடியோ, கபெல்லா, குமரன் காலனி பிரதான சாலை, சாலிகிராமம், 80 அடி சாலை, ராணி அண்ணா நகர், பி.டி. ராஜன் சாலை, 14-வது மற்றும் 15-வது செக்டர், கே.கே. நகர் 94-வது முதல் 104-வது தெரு வரை, எஸ்.எஸ்.பி. நகர், எஸ்.வி. லிங்கம் சாலை, அழகர்பெருமாள் கோவில் தெரு, விஜயா தெரு, ஒட்டகப்பாளையம்.</p><h2><strong>செம்பரம்பாக்கம்</strong></h2><p>பெங்களூர் நெடுஞ்சாலை, நசரத்பேட்டை சந்திப்பிலிருந்து ஓட்டல் நெடுஞ்சாலை வரை.</p><h2><strong>குமணன்சாவடி</strong></h2><p>பூந்தமல்லி புற வழிச்சாலை, அம்பாள் நகர், ஆவடி சாலை, சென்னீர்குப்பம், மேட்டு தெரு.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>சி.டி.ஓ. காலனி, சசிவரதன் நகர், எப்.சி.ஐ. நகர், காசா கிராண்ட், குட்வில் நகர், மூகாம்பிகை நகர், பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர், சிட்லபாக்கம் ராமகிருஷ்ணா நகர் 1-வது முதல் 6-வது தெருக்கள் வரை, பாம்பன் சாமிகள் சாலை, ஐ.சி.ஐ.சி.ஐ., வைத்தியலிங்கம் சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், சர்மா நகர், முனியாத்தி தெரு, பிரதாப் அவென்யூ, ஆபிரகாம் லிங்கன் தெரு, நசீப் அவென்யூ, மருதுபாண்டியர் தெரு, பாபு தெரு.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்பொழில் நகர், கன்னடபாளையம், பாரதி நகர், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ராஜாஜி நகர், சக்தி நகர், சஞ்சய் காந்தி நகர், நார்த் செயின்ட் மேரிஸ் சாலை, பி.வி. ஆச்சாரியா தெரு, சரோஜினி தெரு, ஜவாது உசேன் தெரு, சுந்தரேசன் தெரு, எத்திராஜ் தெரு, சாலமன் தெரு.</p>]]></content:encoded></item><item><title>போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது  - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arresting-protesters-reveals-ruling-partys-double-standard-regarding-neet#comments</comments><guid isPermaLink="false">91442214-ee55-44a5-8277-59db325e174b</guid><pubDate>Wed, 22 Jul 2026 03:01:07 +0000</pubDate><atom:updated>2026-07-22T03:01:07.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,நீட் தேர்வு,Neet exam,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/idg85s8p/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p><h2>நீட் தேர்வில் குளறுபடி</h2><p>'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.</p><h2>தர்ணா போராட்டம்</h2><p>இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.</p><p>இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</h2><p>இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>#<a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP</a> முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.</p> <p>ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள  வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-vettri-kazhagam-condemns-rahul-gandhi-arrest-and-neet-issues#comments</comments><guid isPermaLink="false">9c7c11b0-75f9-4bb7-9a9c-6c44aa6801bd</guid><pubDate>Wed, 22 Jul 2026 02:53:45 +0000</pubDate><atom:updated>2026-07-22T02:53:45.696Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,NeetExam,நீட் ஊழல்,tvk,முதலமைச்சர் விஜய்,சிஜேபி,CJPProtest,தமிழக வெற்றிக்கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief minister vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-22/z6srb0ba/tvk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் தேர்வால் மாணவர்கள் சந்தித்து வரும் பாதிப்புகளுக்கும் 'தமிழக வெற்றிக்கழகம்' தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அக்கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>ஜனநாயக உரிமை மீதான அப்பட்டமானத் தாக்குதல்:</strong></h2><p>நாட்டின் தலைநகரில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள தவெக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்ட செயல் ஜனநாயக அமைப்பின் மீதான நேரடித் தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளது.</p><p>மேலும், "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும், குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டதும் ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும்." என தமிழக வெற்றிக்கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.</p><h2><strong>நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை:</strong></h2><p>அறிக்கையின் மற்றொரு முக்கிய பகுதியாக, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு நடைமுறை குறித்தும் தவெக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><h2><strong>ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை:</strong></h2><p>நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலே, அத்தேர்வின் மீதான பொதுமக்களின் மற்றும் மாணவர்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலக் கனவுகளும் கேள்விக் குறியாக மாறியுள்ளன.</p><p>நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் திட்டவட்டமாகக் வலியுறுத்தியுள்ளது.</p><h2><strong>அரசியல் களத்தில் எதிரொலி:</strong></h2><p>நீட் தேர்வு விவகாரம் மற்றும் டெல்லிப் போராட்டம் தொடர்பாகத் தமிழக அரசியல் கட்சிகள் பலவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் இந்த திடீர் மற்றும் காட்டமான அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cong-sfi-stage-protest-in-chennai-condemning-police-action-on-students-in-delhi#comments</comments><guid isPermaLink="false">26ea6114-53be-4a5c-b164-006fe547a473</guid><pubDate>Tue, 21 Jul 2026 17:13:49 +0000</pubDate><atom:updated>2026-07-21T17:13:49.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,protest,போராட்டம்,SFI,இந்திய மாணவர் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SFI Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/z715nknk/sfi-protest.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/sfi">இந்திய மாணவர் சங்கம்</a> மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><strong>போராட்டம்:</strong></p><p>நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது டெல்லி காவல்துறை மேற்கொண்ட "தன்னிச்சையான" கைது நடவடிக்கைகளை கண்டித்தும், இந்த தேசிய தகுதி தேர்வை ரத்து செய்ய கோரியும் இந்திய மாணவர் சங்க (SFI) உறுப்பினர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> நடத்தினர்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் ராஜினாமாவை வலியுறுத்தி அவரது இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதை கண்டித்து, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.</p><p><strong>தங்கபாலு கண்டனம்:</strong></p><p>மத்திய அரசின் சர்வாதிகார போக்கு மற்றும் ஜனநாயக குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் என கூறப்படுபவற்றை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டித்தார்.</p><p>டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என்று அவர் விமர்சித்தார். மேலும், இந்த தேசிய பிரச்சினையை கையாண்ட விதம் குறித்து மத்திய அரசு மற்றும் காவல்துறையை அவர் குறை கூறினார்.</p><p>குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் அநீதி மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசின் கொள்கைகளுக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், லோக் பவனை முற்றுகையிடும் போராட்ட பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்தும் என்று தங்கபாலு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T15:07:11.371Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/aap-says-rahul-gandhi-protest-near-pm-house-modi-allowed-it-to-weaken-cjp">CJP போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தியை உட்கார அனுமதித்ததே பிரதமர் மோடிதான்: ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay">தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview">சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amid-cjp-protests-iit-roorkee-asks-students-staff-not-to-partake-in-political-activity">CJP போராட்டம் எதிரொலி: மாணவர்கள், ஸ்டாஃப்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐ.ஐ.டி. ரூர்க்கீ</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/world-cup-hockey-tournament-india-mens-team-announced">உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய ஆண்கள் அணி அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-war-iranian-delegation-in-pakistan-to-hold-talks-with-pm-sharif-field-marshal-munir">பாகிஸ்தானில் ஈரானின் உயர்மட்டக் குழு: பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bengal-cm-blames-previous-tmc-govt-for-loss-of-europe-air-links-mounting-debt-on-state-economy">ரூ. 8 லட்சம் கோடி கடன்: முந்தைய மம்தாவின் திரிணாமுல் அரசு மீது சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/food-delivery-worker-wins-chinas-top-literary-prize">சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-and-devika-sihag-exit-early-at-china-open">சீனா ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியர்கள் ஏமாற்றம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/opposition-parties-disrupt-parliament-both-houses-adjourned-all-day">எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-do-not-drag-us-into-it-delhi-high-court-on-plea-alleging-use-of-force-on-students">மாணவர்கள் போராட்டம் விவகாரத்தில் எங்களை இழுக்காதீர்கள்: டெல்லி உயர்நீதிமன்றம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e">நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-allows-sonam-wangchuk-to-choose-hospital">விருப்பப்பட்ட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி: சோனம் வாங்சுக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/uttarakhand-downpour-dabkeshwar-mahadev-temple-flooded">உத்தரகாண்டில் கனமழை: டப்கேஷ்வர் மகாசிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/number-1-in-rankings-arina-sabalenkas-new-record">தரவரிசையில் நம்பர் 1: அரினா சபலென்காவின் மற்றொரு சாதனை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/both-teams-have-equal-chance-to-win-t20-series-sikandar-raza">இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்பு: டி20 தொடர் குறித்து சிக்கந்தர் ராசா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-country-is-not-your-fathers-property-pm-modi-arvind-kejriwal-slams">"இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, பிரதமர் மோடி!"-அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/be4bfd4a-1099-42c1-a508-04536354f321">பிறந்தநாள் கொண்டாடும் மனநிலையில் இல்லை - மல்லிகார்ஜூன கார்கே</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9">பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4">துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5">கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-slaps-50-tariffs-new-duties-on-key-canadian-imports-under-uscanada-trade-dispute">இது நியாயமே இல்ல.. கனடா மீது 50% வரியை தீட்டிய டிரம்ப் -கார்னி கொந்தளிப்பு<br></a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7">மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/guyana-maritime-tragedy-27-bodies-found-sailors-test-positive">கயானா படகு விபத்து: 27 உடல்கள் மீட்பு; போதைப்பொருள் பரிசோதனையில் மாலுமிகள் சிக்கியதால் பரபரப்பு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-secretary-siva-appointed-as-chairman-of-the-tamil-nadu-housing-board#comments</comments><guid isPermaLink="false">1a70fe52-f8de-41af-9213-0b437c27b2f7</guid><pubDate>Tue, 21 Jul 2026 14:55:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T14:55:47.469Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,தவெக அரசு,TVK Govt,Tamil Nadu Housing Board</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ekr74mcz/New-Project-2026-07-21T202522.818.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். </p><p>அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த புதிய நியமனம் போடப்பட்டுள்ளது. நியமனத்திற்கான அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, வி. சிவா தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.</p><p>முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும், தவெகவின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியதிலும் வி. சிவா முக்கியப் பங்காற்றியுள்ளார்.  </p><p>விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாமல் இருந்திருந்தால், இவர்தான் அங்கு தேர்தலில் நின்றிருப்பார் என்றும் கூறப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பின்னணி பாடகர் அறிவு சந்திப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arivu-secretariat-meeting-with-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">5d9ff185-cc58-4f78-b281-99298c9016ae</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:44:00 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:44:00.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Secretariat,CMVIJAY,AadhavArjuna,NEETProtest,TherukuralArivu,பாடகர்அறிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay - SingerArivu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ytk8hl25/CMVijay-SingerArivu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாகப் பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் போராட்டம்</strong></h2><p>இன்று பிற்பகல் சுமார் 12:30 மணியளவில் பாடகர் அறிவு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றார். "நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இதுகுறித்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்" எனப் பலத்த கோஷங்களை எழுப்பினார்.</p><h2><strong>போலீசார் நடவடிக்கை:</strong></h2><p>அனுமதியின்றித் தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். </p><p>இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்த பாடகர் அறிவைக் காவல்துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.</p><h2><strong>'கைதான அறிவை கூட்டிட்டு வாங்க" - முதல்வர் விஜய் உத்தரவு</strong></h2><p>பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாருங்கள்" என முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று, அறிவை ஏற்றிச் செல்லப்பட்ட அதே போலீஸ் வாகனத்திலேயே அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பினார்.</p><p>தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.</p><p>போராட முயன்ற கலைஞர் ஒருவரைத் தடுத்துக் கைது செய்யாமல், உடனே நேரில் அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் தற்போதைய டிரெண்டிங் டாபிக்காக மாறி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/prison-is-not-new-to-dmk-kanimozhi-mp-interview#comments</comments><guid isPermaLink="false">fcd96713-5959-4a7b-ac6b-5ed7f8ba9c9b</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:29:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:29:54.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,சிறை,Kanimozhi,கனிமொழி,Prison</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8rto6mas/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. </p><p>தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார்.</p><p>கூட்டத்தில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. </p><h2>3 பிரிவுகளில் வழக்கு</h2><p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்தப் பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார். </p><p>அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><p>புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். அதன்பின், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்நிலையில், நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.விற்கு சிறைச்சாலை புதிது கிடையாது. வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது.</p><p>திமுகவினர் பாளையங்கோட்டை சிறைக்கு வருவதைப் பெருமையாகக் கருதுவர்.</p><p>புகார் குறித்து விசாரிக்க கூட அரசு தயாராக இல்லை.</p><p>முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனனையும் சிறையில் அடைக்க முயற்சித்தனர்.</p><p>ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகிறது தவெக அரசு.</p><p>எதிர்க்கட்சிகளை அடக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.</p><p>திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற நடவடிக்கை இல்லை.</p><p>பாஜக பெயரை சொல்ல தயக்கம் காட்டுகிறது.</p><p>கொள்கையை ஒருபோதும் திமுக விட்டுக் கொடுக்காது.</p><p>அதிமுக, திமுக ஒருபோதும் நெருங்கி வந்தது கிடையாது.</p><p>தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-stance-is-that-the-neet-exam-is-not-needed-tvk-statement#comments</comments><guid isPermaLink="false">9f977a06-013c-4c60-ba1d-c5a70a27cbc3</guid><pubDate>Tue, 21 Jul 2026 13:15:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T13:15:24.194Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Neet exam,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு - தவெக அறிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/hbwkr3o7/New-Project-2026-07-21T184509.271.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வு வேண்டாம் என்பதே தங்களின் நிலைப்பாடு என நாடு முழுவதும் எதிரொலிக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் தவெக தெரவித்துள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ளப் பதிவில்,</p><p>“நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டும் எதிர்க்கவில்லை. நீட் தேர்வு என்பது அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு. ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியல் வேலையில் தவெக ஒருபோதும் ஈடுபடாது.</p><p>கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். </p><p>அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை நம் கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறார்.</p><p>மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். </p><p>இதை மீறியும், தொடர்ந்து அவதூறு பரப்பினால், அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவதூறு கழக அரசியலுக்கு முடிவுரை எழுதுவதாகவும் அமையும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிட வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-storage-in-cauvery-dams-rises-to-60-tmc-government-must-secure-tamil-nadus-due-share-of-water-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">2b3c9456-9f7a-4667-99b1-ee3d66a6b37a</guid><pubDate>Tue, 21 Jul 2026 11:36:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T11:36:26.042Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Cauvery,Government of Tamil Nadu,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி அணைகளில் நீரிருப்பு 60 டி.எம்.சியாக உயர்வு: தமிழ்நாட்டிற்கு உரியநீரை அரசு கேட்டுப்பெற வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ohqtcsmm/New-Project-2026-07-21T170553.796.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில், நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதனை எடுத்துரைத்து, தமிழ்நாடு உரிய நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்,</p><p>“கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளின் நீர் இருப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 60  டி.எம்.சியாக  உயர்ந்திருக்கிறது. </p><p>நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.</p><p>காவிரி நடுவர் மன்றம்  மற்றும்  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதம் 9.91 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி என மொத்தம் 41.15 தண்ணீர் வழங்க வேண்டும் . அதன்படி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி இன்று வரை 31.07 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு காவிரியில் வழங்கியிருக்க வேண்டும். </p><p>ஆனால்,  கடந்த 50 நாள்களில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. இன்று வரை கர்நாடகம்  தமிழ்நாட்டுக்கு 28.63 டி.எம்.சி நீரை பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலாக தண்ணீர் இருந்தும் கூட  காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பது மனிதநேயமற்றது.</p><p>மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை நிலவரப்படி  74.7 அடியாக (நீர் இருப்பு 36.87 டி.எம்.சி) குறைந்துவிட்டது.  காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததாலும்,  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதாலும்  காவிரி பாசன மாவட்டங்களில்  குறுவை பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. இதன்பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காததை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்  அது தமிழ்நாடு உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.</p><p>கர்நாடக அணைகளுக்கு கடந்த 20 நாள்களில் மட்டும் 35 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இப்போதும் தினமும்  0.8  டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளையும், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகத்  தொடங்கியிருப்பதையும்  டெல்லியில் நாளை நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை காவிரியில் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி: தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-63-lakh-cheating-case-4-arrested-in-chennai#comments</comments><guid isPermaLink="false">274d9b12-f5a8-4a1a-aad5-3a72bffbb7e0</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:29:20 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:29:20.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,Police Investigation,போலீசார் விசாரணை,money cheating,பண மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/af9101l5/arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.</aside><h2><strong>குறைந்த விலைக்கு தங்கம்</strong></h2><p>சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். </p><p>கடந்த 17-ந்தேதி, நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து, குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும், அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார்.</p><p>இதனையடுத்து, தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார். </p><h2><strong>ரூ.63 லட்சம்</strong> </h2><p>அப்போது, குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார். சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும், பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.</p><p>இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை  அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி, “மேலே சென்று பணத்தை வைத்து விட்டு, தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன்” எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.</p><p>சிறிது நேரத்தில், சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி, அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார்.</p><h2><strong>அதிர்ச்சி</strong></h2><p>அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல், அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் <a href="https://www.maalaimalar.com/topic/பண-மோசடி">அதிர்ச்சி </a>அடைந்தார்.</p><p>மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.</p><h2><strong>கைது</strong></h2><p>இது பற்றி  தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார், ஸ்ரீராம், ராம் குமார் மற்றும் உதய்கிரண் ஆகிய 4  பேரை  கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p> முக்கிய குற்றவாளியான சக்தி தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/vellathurai-who-purchased-palani-temple-land-through-fraud-files-a-petition-seeking-anticipatory-bail#comments</comments><guid isPermaLink="false">22ca4b6f-e21d-490c-97b1-21986fa09622</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:22:43 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:22:43.432Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Anticipatory bail,சிபிசிஐடி,முன்ஜாமின்,பழனி கோயில்,Palani temple land fraud,Madurai Bench of HC,CB-CID</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசடி செய்து பழனி கோயில் நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/c5zi5shc/New-Project-2026-07-21T155215.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>பழனி கோயில் நில மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். </p><p>இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவில் சிபிசிஐடி போலீசாரைப் பதில் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு  விசாரணையை நாளைக்கு (ஜூலை.22) ஒத்திவைத்துள்ளது. </p><h2>வழக்கின் பின்னணி </h2><p>பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலை அடிவாரத்தில், கோயில் மடத்திற்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடம் தற்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.</p><p>இதனை வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் வாங்கியுள்ளார். </p><p>சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான நிலத்தைத் தனியாருக்கு விற்கவோ, கைமாற்றவோ தடை உள்ளது. ஆனால் இதனை மீறியும் மடத்தின் வாரிசு என்று போலியாகக் கூறிக்கொண்ட விழுப்புரம் முருகதாஸ் என்பவரிடமிருந்து, வெள்ளத்துரை மற்றும் பழனியைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவரும் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றியுள்ளனர். </p><p>இந்தக் குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதில் சம்பந்தப்பட்ட, இந்த நிலப் பதிவை மேற்கொண்ட பழனி சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். </p><p>மேலும் இந்த மோசடிப் பதிவு செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மேலும் பத்திரப்பதிவுத்துறை சார்பிலும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. </p><p>இந்நிலையில் தலைமறைவாக உள்ள வெள்ளத்துரை முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு நர்சுகள் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/govt-nurses-protest-in-dms-complex#comments</comments><guid isPermaLink="false">2e226919-ca2b-48ca-9265-a7ea0e1eba02</guid><pubDate>Tue, 21 Jul 2026 10:06:48 +0000</pubDate><atom:updated>2026-07-21T10:06:48.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,நர்சுகள் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ 
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/3j9vc3je/nurse.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.</aside><h2><strong>பல்வேறு கட்ட போராட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாடு நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட <a href="https://www.maalaimalar.com/topic/நர்சுகள்-போராட்டம்">போராட்டங்கள்</a> நடந்து வருகின்றன. </p><p>அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போராட்டம் நடந்தது.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் இன்று காலை 7 மணிக்கு  திரண்டனர்.  </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அவர்களை போலீசார் டி. எம். எஸ். வளாகத்திற்குள் ஒரு பகுதியில் முடக்கி வைத்தனர். போராட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் 7 மணிக்கெல்லாம் அவர்களை போலீசார் வெளியே விடாமல் வளாகத்திற்குள் வைத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், நர்சுகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. </p><h2><strong>கோஷங்கள்</strong></h2><p>த.வெ.க.வின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைத்து நர்சுகளையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். </p><p>முதலமைச்சர் விஜய் இந்த பிரச்சனையில் தலையிட்டு 9 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நர்சுகளை நிரந்தரமாக வேண்டும் என்று அதன் நிர்வாகிகள் வலியுறுத்தினர். </p><p>இதுகுறித்து சங்கத்தின் நிர்வாகி சுர்ஜித் கூறியதாவது:-  </p><h2><strong>நல்ல தீர்வு</strong></h2><p>6500 செவிலியர்கள் கடந்த 9 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது. அவற்றை நிரப்பாமல் காலி பணியிடங்களை குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மாறாக பணியிடங்களை குறைப்பது நிரந்தரமாக்கப்படும் என்ற செவிலியரின்  கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். </p><p>எனவே செவிலியர்களுக்கு எதிராக மீள் பணி அமர்வு முடிவினை அரசு கைவிட வேண்டும். கடந்த ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்து விட்டு செய்யாமல் சென்றது போல இந்த அரசு செயல்பட வேண்டாம். முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை விரைவில் காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-till-july-27th-across-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">bf9f4b4c-3e24-4d3e-9ce0-a9d94db7a6f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:46:05 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:46:05.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/n37k2se7/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 23-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூருக்கு பதில் விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தற்போதுவரை தமிழ்நாடு அரசு கோரவில்லை’ - மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/second-airport-for-chennai-the-tamil-nadu-government-has-not-yet-requested-an-alternative-site-to-parandur-central-government#comments</comments><guid isPermaLink="false">097edde7-d8b9-48ea-8efd-1c2ab8e4098a</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:30:24 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:30:24.758Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,பரந்தூர் விமான நிலையம்,Parandur,Civil Aviation,T.N. govt,airport site,மத்திய விமான போக்குவரத்துத் துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ "The Tamil Nadu government has not yet requested an alternative site for the airport in place of Parandur" – Central Government.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ab8sq356/New-Project-2026-07-21T143402.771.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னைக்காக முன்மொழியப்பட்ட இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு இதுவரையிலும் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை அமைச்சர் முரளிதர் கிசான் மொஹோல் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.</p><p>திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், ‘முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை’ என்று எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.</p><p>“காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு சர்வதேச புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக, தமிழ்நாடு தொழிற்கல்வி கழகத்திற்கு (டிட்கோ) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>2024 செப்டம்பரில் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை ரீதியான விண்ணப்பத்தின்படி, திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ. 10,500 கோடி ஆகும்.” என தெரிவித்தார். </p><h2>பரந்தூர் விமான நிலையத் திட்டம்</h2><p>மத்திய அரசால் சென்னையில் முன் மொழியப்பட்ட இந்த இரண்டாவது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் மொத்த நிலத்தில், சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும் (பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுடையது), மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.</p><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு குறித்த கவலைகள் காரணமாக ஏகனாபுரம் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்கள் இம்மக்களின் போராட்டம் தொடர்ந்தாலும், யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.</p><p>இச்சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, ​​தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய், கடந்தாண்டு ஜனவரி அப்பகுதிக்குச் சென்று, அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். </p><p>போராட்டக் களத்திற்கு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி, தனியார் மண்டபம் ஒன்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு துணை நிற்பதாக உறுதியளித்தார்.</p><p>மேலும் வளர்ச்சியை தடுக்கவில்லை என்றும், மாற்று இடத்தையே தேர்வு செய்ய வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போதுவரை அவர் தலைமையிலான அரசு அமைந்தபிறகும் இந்த இடமாற்றம் தொடர்பாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு எதிராக முழக்கம் - பாடகர் அறிவு கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/slogans-raised-against-neet-exam-singer-arivu-arrested#comments</comments><guid isPermaLink="false">77516b2d-5a97-484d-ab57-83028e4f9e4e</guid><pubDate>Tue, 21 Jul 2026 09:15:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T09:15:55.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,நீட் தேர்வு,Neet exam,Singer Arivu,பாடகர் அறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Singer Arivu arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ovva776v/arivu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தலைமைச் செயலகத்தில் நீட் தேர்விற்கு எதிராக கோஷம் எழுப்பிய பாடகர் அறிவு கைது செய்யப்பட்டார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்திற்குள் 4 பேருடன் வந்து <a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">நீட் தேர்வை</a> ரத்து செய்யுமாறு கோஷமிட்ட பாடகர் அறிவை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>பாடகர் அறிவு (அறிவரசு கலைநேசன்) ஒரு இந்திய சொல்லிசை, பாடலாசிரியர், மற்றும் பின்னணிப் பாடகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றுகின்றார். அனிருத்தின் இசையமைப்பில் மாசுடர் (2021) படத்திற்காக இவர் எழுதிய "வாத்தி இரைடு" பாடலுக்காகவும், தீ உடன் இணைந்து இவர் பாடிய "எஞ்சாய் எஞ்சாமி" என்ற பாடலாலும் புகழ் பெற்றார். பாடகர் அறிவு தவெகவின் கொடிப்பாடலை பாடி உள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>&apos;இது முதலமைச்சர் விஜய் ஆட்சி&apos; என்று சொன்ன பிறகும் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை!- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-farmers-distressed-that-bribes-are-being-demanded-even-after-declaration-that-this-is-cm-vijays-regime#comments</comments><guid isPermaLink="false">f481c958-8a93-499e-9153-ccc98004e726</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:51:17 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:51:17.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,நெல் கொள்முதல்,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/7qykdquq/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</aside><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புகார்</strong></h2><p>தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட கோடை நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">நெல் கொள்முதல்</a> செய்யும் பெயரில் ஒரு மூட்டைக்கு ஒன்றரை கிலோ கூடுதல் எடை கேட்பது, "தூற்றுகிறோம்" என்ற பெயரில் மேலும் ஒன்றரை கிலோ நெல்லை பிடித்தம் செய்வது, அதோடு சுமார் ரூ.120 வரை லஞ்சம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியிருக்கும் விவசாயிகள், லஞ்சம் வழங்க மறுத்தால் "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது" என்ற காரணத்தைக் கூறி கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.</p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>சில தினங்களுக்கு முன்னர், கடலூர் மாவட்டம் மருவாய் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் மேற்கொண்ட ஆய்விலேயே ஒரு நெல் மூட்டைக்கு சுமார் ரூ.50 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal">லஞ்சம்</a> வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் எந்த அளவிற்கு வேரூன்றியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.</p><p>ஏற்கனவே, தேர்தலுக்கு முன் தவெக அளித்த முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி, இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, உரிய நேரத்தில் காவிரி நீர் திறக்கப்படாததால் ஏற்பட்டுள்ள வறட்சி, விதை நெல் மற்றும் உரங்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைவித்த நெல்லை விற்பனை செய்யவே லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தவெக அரசின் விவசாயிகள் மீதான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>"லஞ்சம் கேட்டால், 'இது முதலமைச்சர் விஜய் ஆட்சி' என்று கூறுங்கள்" என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததை நம்பி, அதிகாரிகளிடம் முறையிட்ட விவசாயிகளுக்கு, "நீங்கள் கொடுக்கும் லஞ்சம் எங்களுக்கு மட்டும் அல்ல; மேலிடம் வரை செல்கிறது" என்ற பதிலே கிடைப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுவே முதலமைச்சர் விஜய் கூறிய 'வெளிப்படையான ஆட்சி' என்பதன் உண்மையான பொருளா? என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர்.</p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் விவசாயம் செய்வதே சாத்தியமற்றதாக மாறியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும், அதோடு கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எப்படி ரூ.30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கினார்களோ அதைப்போலவே எங்களுக்கு பின் எங்கள் குடும்பத்திற்கும் கொடுங்கள் என விரக்தியான மனநிலையில் விவசாயிகள் எழுப்பும் கேள்வி அரசின் செயல்பாடுகள் மீதான அவர்களின் விரக்தியையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.</p><p>எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, லஞ்சம் மற்றும் எடை முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகள் எந்தவித இடையூறும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடனும், உரிய விலையுடனும் தங்களது நெல்லை விற்பனை செய்யக்கூடிய சூழலை உறுதி செய்யும் வகையில் நிரந்தர கண்காணிப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் அடுத்த பிரம்மாண்டம்: துறைமுகம்- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/work-on-the-harbour-to-maduravoyal-double-decker-flyover-intensifies#comments</comments><guid isPermaLink="false">b24dc60f-7284-47c4-a0e2-c96083aced2a</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:39:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:39:54.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை,மேம்பால பணிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:title><media:description type="html"><![CDATA[ ஈரடுக்கு மேம்பாலத்தின் முதல் அடுக்குக்கான கார்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/oey5mtne/maduravoyoal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</aside><p>சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் ரூ.3,570 கோடி முதல் ரூ.5,770 கோடி வரையிலான மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த 21 கி.மீ. நீளமுள்ள திட்டம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 தளங்களைக் கொண்டுள்ளது.</p><h2><strong>6 வழிச்சாலை</strong></h2><p>மேல்தளம் துறைமுக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் 6 வழிச்சாலை. இது துறைமுகம் வரை தொடர்கிறது. கீழ்த்தளம் சாதாரண உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும் 4 வழிச்சாலை.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88">மதுரவாயல்</a> முதல் கோயம்பேடு வரை ஒற்றைத் தளம் மட்டுமே இருக்கும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, முதல் அடுக்கில் மொத்தம் 13 இடங்களில் சாய்தளங்கள் (7 ஏறும் வழிகள் மற்றும் 6 இறங்கும் வழிகள்) அமைக்கப்படுகின்றன.</p><p>கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.</p><figure><img alt="ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/cxyuzk8r/maduravoyal0.jpg" /><figcaption>ஈரடுக்கு மேம்பாலத்தின் மாதிரி தோற்றம்</figcaption></figure><h2><strong>போக்குவரத்து நெரிசல் குறையும்</strong></h2><p>இந்த மேம்பாலம் சென்னை துறைமுகம் கதவு எண் 10 (நேப்பியர் பாலம் அருகில்) தொடங்கி, கூவம் ஆற்றின் கரையோரமாக பயணித்து, கோயம்பேடு வழியாகச் சென்று மதுரவாயல் சந்திப்பில் முடிவடைகிறது. துறைமுகம் முதல் கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் போக்கைப் பின்பற்றி ஈரடுக்கு பாலமாக அமைகிறது.</p><p>கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் ஒற்றை அடுக்கு பாலமாகத் தொடர்கிறது. சென்னை துறைமுகத்திற்குச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மேல் தளத்தில் நேரடியாகச் செல்வதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும்.</p><p>நகரின் மையப்பகுதியில் இருந்து கோயம்பேடு அல்லது மதுரவாயல் நோக்கிச் செல்லும் உள்ளூர் வாகனங்கள் சிக்னல்கள் இல்லாத கீழ் தளத்தைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் இலக்கை அடையலாம்.</p><p>செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் ‘பாக்ஸ் கார்டர்’ தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.  </p><h2><strong>கார்டர்கள் பொருத்தும் பணி</strong></h2><p>கடந்த மே மாதம் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், பருவமழை உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் சற்றே தாமதமானது. தற்போது, தினமும் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என மொத்தம் 11 மணி நேரங்கள் தீவிரமாகப் பணிகள் நடந்து வந்தன. தற்போது நாள் ஒன்றுக்கு  16 மணி நேரமாக உயர்த்தி பணிகளை விரைவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.  முதல் அடுக்குக்கான கார்டர்களைப் பொருத்தும் பணி தற்போது தொடங்கி உள்ளது. </p> <p>மொத்தம் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த மேம்பாலத்தின் 15 கி.மீ. பகுதி கூவம் ஆற்றின் வழியே செல்கிறது. இந்த மேம்பாலத்தின் பணிகள் அனைத்தும் நவம்பர் 2027-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களும், 5,500 கனரக வாகனங்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரின் உட்புறச் சாலைகளில் நிலவும் நெரிசலை பெருமளவு குறைக்கும்.</p><h2><strong>சென்னைக்கு வரப்பிரசாதம்</strong></h2><p>வரும் காலங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ம் ஆண்டிற்குள் இந்த உயர்மட்டச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களின் எண்ணிக்கை தினசரி 52,080 ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் திறன் ஆண்டுக்கு 200 மில்லியன் டன்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஈரடுக்கு மேம்பால சாலை சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - முதலமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">03334d6b-6bde-42fe-a82d-3764dba7b6c9</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:24:57 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:24:57.926Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Madras High Court,சென்னை ஐகோர்ட்,பெரம்பூர் தொகுதி,Perambur constituency,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Madras high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-07/t4hvg0wz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் விஜய்க்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.</p><h2>பெரம்பூர் தொகுதி</h2><p>சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice">விஜய்</a> 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதலமைச்சர் விஜய் மொத்தம் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66 ஆயிரத்து 650 வாக்கு பெற்றிருந்தார். </p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெற்றியை எதிர்த்து தி.மு.க.  வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p> தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில்  முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கி இருப்பதாகவும், சொத்து விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை என்பதால் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p> <h2>ஐகோர்ட் நோட்டீஸ்</h2><p>இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என, ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?- பயணிகள் எதிர்பார்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/when-will-the-new-tiruvallur-bus-station-come-into-use-expectations-of-passengers#comments</comments><guid isPermaLink="false">4da0550b-2a0b-4307-b3f5-df19987c73b0</guid><pubDate>Tue, 21 Jul 2026 08:17:11 +0000</pubDate><atom:updated>2026-07-21T08:17:11.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvallur Bus Stand,பயணிகள்,திருவள்ளூர் பஸ் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தை படத்தில் காணலாம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/e83st0to/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.</aside><h2><strong>கடும் நெரிசல்</strong></h2><p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த நிலையம் அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ளது. இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரியபாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.</p><p>தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படும் நிலையத்தில் ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும்.  மேலும் பஸ் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குறுகலாக இருப்பதால் பஸ்கள் உள்ளே சென்று விட்டு வெளியே வரவும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் பஸ்நிலைய பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. </p><h2><strong>மாவட்ட நிர்வாகம்</strong></h2><p>இதைத்தொடர்ந்து  2019-ம் ஆண்டு திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி  மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்றது. </p><p>பஸ் நிலைய பணி இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 4-ந் தேதி முன்கூட்டியே திறக்கப்பட்டது.  பின்னர் மீதம் உள்ள கட்டுமான பணிகளையும் முடித்து மார்ச் 30-ந் தேதி முதல் அனைத்து பஸ்களும் வேடங்கிநல்லுார் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. </p><h2><strong>தாமதம்</strong></h2><p>ஆனால் இன்னும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.  கட்டுமான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பஸ் நிலையத்தின் முன் சாலையை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. </p><p>இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.</p><p>திருவள்ளூரில் கடும் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பஸ்நிலைய பயணிகள் புதிய பஸ்நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். </p><p>புதிய பஸ்நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. பஸ்நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>துணை ஜனாதிபதி வருகை - திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vice-president-visit-ban-on-drone-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">36d83f67-0602-4ab4-b0b3-77cfbae2bbb4</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:43:03 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:43:03.195Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruppur,துணை ஜனாதிபதி,சிபி ராதாகிருஷ்ணன்,CP Radhakrishnan,Vice president,Drones Ban,டிரோன் பறக்க தடை,திருப்பூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CP Radhakrishnan - Drones ban]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/12/29/23909409-cpradhakrishnan.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சிபி.ராதாகிருஷ்ணன்</h2><p>​இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூரில் தங்குகிறார்.</p><h2>அவினாசி லிங்கேஸ்வரர்</h2><p>​டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை கோவை வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 5½ மணிக்கு அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகிறார். அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் அருகில் சுந்தரமூர்த்தி நாயனார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கட்டிட புனரமைப்பு பணியில் ‘சிஜிரானை வரிசைக்கல்’ தொடக்க விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.</p><p>​அதன்பிறகு இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள டாலர் இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கார் மூலமாக புறப்பட்டு அவர் கோவை செல்கிறார்.</p> <p>​<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF">துணை ஜனாதிபதி</a> வருகையை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நாளை மதியம் 1 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி இல்லை. மறுநாள் காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிரோன்கள் பறக்க தடை</h2><p>​துணை ஜனாதிபதி வருகையையொட்டி அவர் செல்லும் வழிகள் மற்றும் வருகைபுரியும் இடங்களில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனீஷ் நாரணவரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-indictment-tvk-govt-2#comments</comments><guid isPermaLink="false">c06bac6b-6b04-4642-9bd5-8b4c9398b0d7</guid><pubDate>Tue, 21 Jul 2026 07:32:28 +0000</pubDate><atom:updated>2026-07-21T07:32:28.292Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/0yn34vyy/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆங்கில நாளிதழில் வெளியான தலையங்கத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தலையங்கம்</strong></h2><p>ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது The Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.</p><p>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.</p><p>ஆட்சியின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">அலங்கோலங்களை</a> எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது <a href="https://x.com/the_hindu?ref_src=twsrc%5Etfw">@The_Hindu</a> நாளேட்டின் இன்றைய தலையங்கம்.<br><br>நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும்… <a href="https://t.co/MDtwEdbL8J">https://t.co/MDtwEdbL8J</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079459769883222427?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:01:47.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,விஜய்,vijay,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge - CM Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram#comments</comments><guid isPermaLink="false">b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:50:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:50:51.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,ADMK protest,அதிமுக ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><p>அ.தி.மு.க.பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>டாஸ்மாக் மதுபானக் கடை</strong></h2><p>சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.</p><p>நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>இடையூறு</strong></h2><p>மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse">அண்ணா திராவிட முன்னேற்றக் கழக</a> திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2><strong>மக்கள் நலன்</strong></h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அம்மன் வேடத்தில் திரிஷா: ஆடித் திருவிழா பேனரால் வெடித்த சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner#comments</comments><guid isPermaLink="false">d6ddd858-cd47-4045-a1f7-e8bd096df244</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:24:54.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi Festival,trisha,திரிஷா,ஆடி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</aside><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ugrz7znu/trisha01.jpg" /></figure><h2><strong>அம்மன் வேடத்தில் திரிஷா</strong></h2><p>ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p> <p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று  தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். </p><h2><strong>2 பேர் மீது வழக்குப்பதிவு</strong></h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect#comments</comments><guid isPermaLink="false">9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:19:55.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,சிவாஜி கணேசன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</h2><p>'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமண்டபம்</h2><p>நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item></channel></rss>