<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 21 Jul 2026 06:57:21 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-july-2026#comments</comments><guid isPermaLink="false">e1a983bf-6930-4a96-8d7d-aee2f254884f</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:01:21 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:55:47.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4243r6xf/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/ajit-doval-honoured-with-lokmanya-tilak-national-award">தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு 'லோக்மான்ய திலகர் விருது'!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/deadly-flash-floods-in-eastern-afghanistan-20-killed">ஆஃப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப்பெருக்கு: 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ca9c7d59-6f3b-4f07-939f-20fe3e86130f">நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874">அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35">கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a">நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0462a245-3b74-4003-834b-ab1c2c54d599">ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cce69c86-57c0-4546-a672-e41cbf604cc5">வறட்சியால் வாடும் கிராம மக்கள் மழை வேண்டி நடத்திய தவளைத் திருமணம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nta-warns-against-fake-omr-sheets-neet-ug-2026">NEET-UG 2026: போலியான OMR விடைத்தாள்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை-NTA எச்சரிக்கை!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a">ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/spain-second-world-cup-triumph-madrid-fans-historic-celebration">ஸ்பெயின் உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டம்: மேட்ரிட் நகரில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/single-call-from-virat-kohli-pv-sindhu-back-on-record-breaking-path-with-japan-open-title">விராட் கோலியின் ஒரே ஒரு போன் கால்: ஜப்பான் ஓபன் வெற்றியுடன் சாதனைப் பாதைக்குத் திரும்பிய பி.வி.சிந்து!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4">நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781">GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/diljit-dosanjh-supports-student-protests-despite-anti-national-tag-fears">'மீண்டும் என்னை தேசவிரோதி என்பார்கள்': மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தில்ஜித் தோசாஞ்ச்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27">தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikkim-tunnel-landslide-rescue-27-workers-trapped-methane-leak-hampers-operations">Sikkim: நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் 27 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு - மீத்தேன் வாயு கசிவால் மீட்பதில் சிக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-dharna-continues-protest-march-to-parliament-over-dharmendra-pradhan-resignation-keeps-delhi-on-edge">இன்றும் பாராளுமன்றம் நோக்கி பேரணி தொடரும் - CJP அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6718ca4f-394f-4ce0-8f4d-f2a524f402dc">இங்கிலாந்து புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ce5bfe19-8180-4674-acf1-75b69c84a40e">வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்- ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3">கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/9f86052c-a139-4221-a893-68b35a1821b8">சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/74493a2e-1175-4349-bd50-436bf3bd4bc3">போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு</a></p> ]]></content:encoded></item><item><title>கட்டுமான அனுமதிக்கான கட்சி நிதி வசூல் நிறுத்தம் - வீடுகள் விலை குறைகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/collection-party-funds-construction-permits-halted-housing-prices-to-drop#comments</comments><guid isPermaLink="false">a4d618d4-266a-4a6e-b6c1-6738d4a795b5</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:51:51.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN Government,Building permit,party funds,House prices,கட்சி நிதி,வீடுகள் விலை,கட்டிட அனுமதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ House]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lgp703kf/house.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கட்டுமான அனுமதி வழங்க வசூலிக்கப்பட்ட கட்சி நிதி நிறுத்தப்பட்டதால் வீடுகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது.</p><h2>கட்சி நிதி</h2><p>சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பிலும், நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. சார்பிலும், கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இதில், அடுக்குமாடி திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும்போது சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை கட்சி நிதி என்ற பெயரில், கடந்த காலங்களில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.</p><p>கட்டிட அனுமதிக்கான கோப்புகள் அதிகாரிகள் வசம் இருந்தாலும், அதில் உள்ள விபரங்களை பெறும் அரசியல் புள்ளிகள் கட்டுமான நிறுவனங்களை அணுகி கட்சி நிதி கேட்பது உண்டு. இதற்கு உடன்படாத நிறுவனங்களுக்கு, கட்டிட அனுமதி நிறுத்தி வைக்கப்படும். இதில் கட்சிநிதி கொடுப்பதற்கான செலவையும் கட்டுமான நிறுவனங்கள், வீட்டின் விலையில் சேர்த்து, மக்களிடம் வசூலித்து வந்தன. இதனால், வீடுகளின் விலைகள் வெகுவாக உயர்ந்தன.</p> <h2>தமிழக அரசு</h2><p>இந்த நிலையில், கட்டிட அனுமதி வழங்க கட்சி நிதி வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் முடிவை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம் ஆகியவை வரவேற்றுள்ளன.</p><h2>வீடுகள் விலை</h2><p>இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:</p><p>கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டதால், கட்டுமான நிறுவனங்களுக்கு செலவு மிச்சமாகி உள்ளது. இதன் பயனை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. புதிதாக அறிவிக்கப்படும் குடியிருப்பு திட்டங்களில், வீடுகள் விலையை சதுரடிக்கு 100 ரூபாய் வரை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது!- நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-police-personnel-must-not-compromise-their-dignity#comments</comments><guid isPermaLink="false">92218ea6-e31e-429a-9c51-3ff04bfe209d</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:36:39 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:36:39.598Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,காவல்துறை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rea5olea/NainarNagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல் துறை கண்ணியம் தவறக்கூடாது; தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரின் நாகரிகமற்ற செயலுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ஜ.க. மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/நயினார்-நாகேந்திரன்">நயினார் நாகேந்திரன்</a> எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிகையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை “வாடா, போடா” என ஒருமையில் சாடியுள்ள, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு அவர்களின் நாகரிகமற்ற செயல் கண்டனத்திற்குரியது. </p><p>காக்கிச் சட்டைக்கென்று ஒரு தனி மரியாதையும், கண்ணியமும் உண்டு என்பதை மறந்து விட்டு, காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரியே “பேட்டை ரவுடி” போல இப்படி பொதுவெளியில் சண்டைக்கு நிற்பது ஒட்டுமொத்த காவல்துறையின் பிம்பத்தையும் சிதைத்து விடும். </p><h2><strong>அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்</strong></h2><p>ஏற்கனவே தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்களால், காவல்துறையின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையும், பாதுகாப்புணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வரும் நிலையில், காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் தங்களது “Decorum”-மை கடைபிடிக்க வேண்டும். </p><p>மேலும், காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இயக்கும் முதல்வர் விஜய் அவர்கள், காவல்துறையை வெறும் “ஏவல்துறை”யாக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத் துறையின் அடிப்படை உரிமைகள் மீது தொடரும் இதுபோன்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது! <br><br>முதல்வர் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களிடம் பேட்டி பெற முயன்ற பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதோடு, நாக்கைத் துருத்திக் கொண்டு அவர்களை… <a href="https://t.co/jkyp77jzq5">pic.twitter.com/jkyp77jzq5</a></p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2079447132038439274?ref_src=twsrc%5Etfw">July 21, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அலுவலகத்தை மாற்றும் முதலமைச்சர் விஜய்? - ஆஸ்தான ஜோதிடர் ஆலோசனை காரணமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-shifting-his-office-due-to-astrologers-advice#comments</comments><guid isPermaLink="false">ba20a9ec-75bf-4a28-8321-0857667f4874</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:26 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:26.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தலைமை செயலகம்,Astrologer,Secretariat,ஜோதிடர்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vzzz7g2d/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் அறை இடம் மாறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2>முதலமைச்சர் அறை, அலுவலகம்</h2><p>சென்னை காமராஜர் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. கோட்டை கட்டிடத்தின் முதல் தளத்தில், முதலமைச்சர் அறை, அலுவலகம் உள்ளது. இதேபோல், அமைச்சர்கள் அலுவலகம், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறை, நூலகம் உள்ளிட்டவை அந்தக் கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன.</p><h2>இட நெருக்கடி</h2><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes">முதலமைச்சர் விஜயை</a> சந்திக்க நாள்தோறும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் வந்து செல்கின்றனர்.</p><p>தற்போதுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகத்தை, கோட்டை கட்டிடத்திற்கு அருகே உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆஸ்தான ஜோதிடர்</h2><p>தற்போது, 10-வது மாடியில் கருத்தரங்க கூடமும், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவருந்தும் கூடமும் உள்ளது. அவற்றை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, 10-வது மாடி முழுவதுமே முதலமைச்சர் அறை மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இடநெருக்கடியால், முதலமைச்சர் அறை மாற்றப்பட இருப்பதாக கூறப்பட்டாலும், வாஸ்துபடி தற்போதைய அறை சரியில்லை என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும், தொடர்ந்து உச்சத்தில் இருக்க உயரமான கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும், அதுவும் கடலை பார்த்தபடி முதலமைச்சர் அறை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. </p><p>அதன்படியே, முதலமைச்சர் அறை மற்றும் அலுவலகம் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்பட்டாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர் தகவல் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-on-august-5th#comments</comments><guid isPermaLink="false">0462a245-3b74-4003-834b-ab1c2c54d599</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:13:07 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:13:07.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/vgdr7ezj/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</aside><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு பதவி ஏற்ற பிறகு முதல் சட்டசபை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. நிறைவு நாளில் முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.</p><h2><strong>தமிழக பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், 2026-2027-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய், பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வரை அவர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.</p><p>இதனிடையே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">ஆகஸ்ட்</a> முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.</p><h2><strong>ஆகஸ்ட் 5-ல் பட்ஜெட்</strong></h2><p>இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:-</p><p>ஆகஸ்ட் 5-ந்தேதி காலை 10 மணிக்கு 2026-27-ம் ஆண்டுக்கான  நிதி நிலை அறிக்கை சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 6-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். </p><h2><strong>நேரலை</strong></h2><p>மேலும் அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக இருக்கும். கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடத்தப்படும் என்பது அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எம்எல்ஏக்களை கைது செய்ய சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்றார். </p><p>தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கார்கே பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mallikarjun-kharge-birthday-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">4bc2c025-bc8f-40ba-b9a5-719999b95e35</guid><pubDate>Tue, 21 Jul 2026 06:01:47 +0000</pubDate><atom:updated>2026-07-21T06:01:47.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,விஜய்,vijay,mallikarjun kharge,மல்லிகார்ஜூன கார்கே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mallikarjun Kharge - CM Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/rcideyp7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை 27-ல் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-protest-on-july-27th-in-nerkundram#comments</comments><guid isPermaLink="false">b51c3442-a2ff-48bd-8e96-25961e36ed3a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:50:51 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:50:51.951Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,ADMK protest,அதிமுக ஆர்ப்பாட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/xqn4k21n/EdappadiPalaniswami0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மதுரவாயல் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><p>அ.தி.மு.க.பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>டாஸ்மாக் மதுபானக் கடை</strong></h2><p>சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு விடியா திமுக அரசால் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.</p><p>நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள், வேலைக்குச் செல்வோர் என மக்கள் அதிகம் புழங்கும் இந்த இடத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி விடியா திமுக ஆட்சியில், கழகத்தின் சார்பில் பொதுமக்களுடன் இணைந்து முறையிட்டதைத் தொடர்ந்து, இக்கடை விரைவில் மூடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டும் தற்போதுவரை மூடப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிவாழ் மக்களும், நாள்தோறும் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்களும் பல்வேறு வகையில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.</p><h2><strong>இடையூறு</strong></h2><p>மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றிவிட்டதாகக் கூறும் த.வெ.க. அரசு, நெற்குன்றம் பல்லவன் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாதது வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>இந்நிலையில், மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் அரசுப் பள்ளி, வழிபாட்டுத் தலம், பேருந்து நிழற்குடை இவைகளுக்கு அருகில் விடியா திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse">அண்ணா திராவிட முன்னேற்றக் கழக</a> திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் சார்பில், 27.7.2026 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், மதுரவாயல் பகுதி, நெற்குன்றம் N.T. பட்டேல் சாலை அம்மா உணவகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><h2><strong>மக்கள் நலன்</strong></h2><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான  S. கோகுல இந்திரா அவர்கள் தலைமையிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் K.S. ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த, கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அம்மன் வேடத்தில் திரிஷா: ஆடித் திருவிழா பேனரால் வெடித்த சர்ச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trisha-in-goddess-attire-controversy-erupts-over-aadi-festival-banner#comments</comments><guid isPermaLink="false">d6ddd858-cd47-4045-a1f7-e8bd096df244</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:24:54.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadi Festival,trisha,திரிஷா,ஆடி திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்ச்சையான கோவில் திருவிழா பேனர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/82c60g32/trisha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் உள்ள நடிகை திரிஷா சமீப காலமாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். அவர் ஏதாவது ஒரு போஸ்ட் போட்டால்கூட அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளாகி வருகிறது. இந்த நிலையில், நடிகை திரிஷாவை அம்மன் போல சித்தரித்து ரசிகர்கள் வைத்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</aside><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/ugrz7znu/trisha01.jpg" /></figure><h2><strong>அம்மன் வேடத்தில் திரிஷா</strong></h2><p>ஆடி மாதம் தொடங்கினால் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவிழா தொடர்பாக வித்தியாசமாக வைக்கப்படும் பேனர்கள் வைரலாகும். அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி ஆத்தூர் பயணியர் மாளிகை பகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் ஒரு பேனரில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்கு பின்னால், ராவணன் தலை இருப்பது போன்றும்... அதற்கு கீழே நடிகை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE">திரிஷா</a> அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டிருந்தது.</p> <p>இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதனை பார்த்த நெட்டிசன்கள், கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கும் சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று  தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். </p><h2><strong>2 பேர் மீது வழக்குப்பதிவு</strong></h2><p>மேலும் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இரவோடு இரவாக பேனரில் இருந்து நடிகை திரிஷா புகைப்படம் மாற்றப்பட்டது. திரிஷா படம் இருந்த இடத்தில் வேறு ஒரு பெண் அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற படத்தை ஒட்டி வைத்தனர்.</p><p>இதற்கிடையே, ஆத்தூர் பயணியர் மாளிகை முன்பு அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீசார் கடைவீதியை சேர்ந்த சந்துரு, தலைவாசல் பகுதியை சேர்ந்த கோகுல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இச்சம்பவம் கோவில் திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nadigar-thilagam-sivaji-ganesan-memorial-day-minister-rajmohan-pays-respect#comments</comments><guid isPermaLink="false">9f91e859-c0ba-46cc-87d6-9e9266d1249a</guid><pubDate>Tue, 21 Jul 2026 05:19:55 +0000</pubDate><atom:updated>2026-07-21T05:19:55.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,சிவாஜி கணேசன்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/lwskqxiy/sivaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன்  மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.</p><h2>நடிகர் திலகம் சிவாஜி கணேசன்</h2><p>'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>மணிமண்டபம்</h2><p>நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.</p> <h2>அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை</h2><p>இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">அமைச்சர் ராஜ்மோகன்</a> திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p> ]]></content:encoded></item><item><title>நெல் கொள்முதலில் தொடரும் கையூட்டு: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதைத் தடுக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-measures-to-prevent-the-deduction-of-rs-325-per-quintal#comments</comments><guid isPermaLink="false">3d3bc2a1-17f0-450c-8f98-a70fff36d1f4</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:56:15.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/zxmts0af/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கவலை</strong></h2><p>தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களில் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை கட்டாயமாகக் கையூட்டு பறிக்கப்படும் கொடுமை இன்னும் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உணவு அமைச்சர் மேற்கொண்ட கள ஆய்விலேயே கையூட்டு வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கவலையளிக்கிறது.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் 1.60 லட்சம் ஏக்கரில் கோடை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் உழவர்களுக்கு பெரும் துயரமாக மாறியிருக்கிறது. ஒருபுறம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் தங்களில் நெல்லை விற்பனை செய்வதற்கு  ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம் கொள்முதல் நிலையங்களில் ஊழல் தொடர்கிறது.</p><h2><strong>முறைகேடுகள்</strong></h2><p>40 கிலோ எடை கொண்ட <a href="https://www.maalaimalar.com/topic/நெல்-கொள்முதல்">நெல் மூட்டையை</a> எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை உழவர்கள் தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக கூடுதலாக எடை வைத்து கொள்முதல் செய்வதன் வாயிலாகவும், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாகவும் 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வகையில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரொக்கமாக ரூ.150, நெல்லாக ரூ.175 என மொத்தம்  ரூ.325 கையூட்டாக பறிக்கப்படுகிறது. தனியார் வணிகர்களை விட அரசு  கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.500 முதல் ரூ.600 வரை கூடுதல் விலை கிடைக்கிறது என்பதால் தான் அரசு கொள்முதல் நிலையங்களைத் தேடி உழவர்கள் வருகிறார்கள். அதற்காக அவர்களை வாரக் கணக்கில் காத்திருக்க வைப்பதும், குவிண்டாலுக்கு ரூ.325 வரை கையூட்டாக பறித்துக் கொள்வதும் பெரும் அநீதி. இதே நிலை தொடர்ந்தால் உழவர்கள் தனியார் வணிகர்களிடம் நெல்லை விற்கத் தயாராகி விடுவார்கள்.அப்படி  ஒரு நிலை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசியே கிடைக்காத நிலை உருவாகி விடும்.</p><p>காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை  தமிழக அரசு மறுக்க முடியாது. சில நாள்களுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் இது குறித்து ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர், நெல் விற்பனை செய்த உழவர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார். கொள்முதலுக்காக கையூட்டு ஏதேனும் கொடுத்தீர்களா? என்று அமைச்சர் கேட்டபோது, எதிர்முனையில் இருந்த உழவர் முட்டைக்கு ரூ.50 கையூட்டு கொடுத்ததாக தெரிவிக்கிறார். இதைத் தொடர்ந்து உழவரிடம் கையூட்டு வாங்கிய கொள்முதல் நிலைய எழுத்தரை பணியிடை நீக்கம் செய்ய அமைச்சர் ஆணை பிறப்பிக்கிறார். இவற்றைப் பார்க்கும் போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் நடப்பதைத் தடுக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், கொள்முதல் நிலைய  ஊழலுக்கான காரணங்களை கண்டுபிடித்து சரி செய்யாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக கடைநிலை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால் ஊழல் ஒழியப்போவதில்லை; உழவர்களும் பயனடையப் போவதில்லை.</p><h2><strong>தமிழக அரசு</strong></h2><p>நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து கையூட்டு வழங்கப்படுவதற்கு கொள்முதல் நிலையப் பணியாளர்கள் தரப்பில் சில நியாயங்கள் கூறப்படுகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப் படவில்லை. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல என்றெல்லாம் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இதை சரி செய்தால் மட்டும் தான் கொள்முதல் நிலைய ஊழலை ஒழிக்க முடியும்.</p><p>நெல் கொள்முதல் நிலைய கையூட்டு கலாச்சாரம் புதிதாக தோன்றியதில்லை. பல ஆண்டுகளாகவே இந்த சுரண்டல்  தொடர்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் உழவர்கள் வாக்களித்தனர். அவர்களின் விருப்பத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதிக்காமல் கொள்முதல் நிலைய சுரண்டல்களை தடுத்து, உழவர்களிடமிருந்து கையூட்டு இல்லாமல் உடனுக்குடன் நெல் வாங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-continues-to-drop</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/water-level-in-bhavanisagar-dam-continues-to-drop#comments</comments><guid isPermaLink="false">96bd068c-b1fb-4e6a-a4ee-f707931f8ab5</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:44:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:44:10.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பவானிசாகர் அணை,bhavanisagar dam,நீர்மட்டம் சரிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/07/1945905-bavanisagar2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bhavanisagar Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/07/1945905-bavanisagar2.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கி உள்ளது.</p><h2>பவானிசாகர் அணை</h2><p>ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது. பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளைநிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது. மொத்தம் 105 அடி அடி கொண்டது பவானிசாகர் அணை அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். </p><p>கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வந்தது.</p><h2>நீர்வரத்து அதிகரிப்பு</h2><p>இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் எதிரொலியாக தொடர்ந்து பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.</p> <p>தற்போது நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன் காரணமாக அணை நீர்மட்டமும் குறைய தொடங்கியுள்ளது.</p><p>இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 58.21 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 67 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><p>அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி வீதம் என மொத்தம் 1255 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.</p><h2>குண்டேரி பள்ளம்</h2><p>ஆனால் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.42 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.96 அடியாகவும், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 15.22 அடியாகவும் சரிந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: நாளுக்கு நாள் ஏறும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-21-07-2026#comments</comments><guid isPermaLink="false">09a0f3aa-bfc4-4f11-9908-070d3eb4e781</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:19:10 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:19:10.695Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-29/8jne1dbu/Gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. </p><p>சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.</p><h2>தங்கம் விலை நிலவரம்</h2><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2>வெள்ளி விலை உயர்வு</h2><p>தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</h2><p>20-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p> ]]></content:encoded></item><item><title>தனது 83 ஆவது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்படுகிறது!- வைகோ </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-announced-my-83rd-birthday-celebration-is-being-cancelled#comments</comments><guid isPermaLink="false">7b73f680-bc22-4187-be2e-eb93e6e20d27</guid><pubDate>Tue, 21 Jul 2026 04:18:27 +0000</pubDate><atom:updated>2026-07-21T04:18:27.311Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைகோ,vaiko,MDMK,மதிமுக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வைகோ]]></media:title><media:description type="html"><![CDATA[ வைகோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/mahwcxp7/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</aside><p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/வைகோ">வைகோ</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பிறந்தநாள் அல்ல</strong></h2><p>நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கலிங்கப்பட்டி ஆரம்ப பாடசாலையில் என்னை சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.</p><p>என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழில் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.</p><p>எம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார்.</p><p>நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளை சேர்த்துவிட்டார்கள் என்றேன்.</p><p>வாஜ்பாய் அவர்கள் கவிஞர் அல்லவா? கணமும் தாமதிக்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்தநாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துக்கள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார்.</p><h2><strong>பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்</strong></h2><p>திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டார்களே! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள்.</p><p>எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச்செயலாளர் சகோதரர் ஜீவன் அவர்கள் பலரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்.</p><p>இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நீங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழவாகக் கொண்டாட கழக முன்னணியினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன்.</p><p>உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது.</p><h2><strong>எழுச்சி மாநாடு</strong></h2><p>அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாடவில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.</p><p>தி.மு.கழகம், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை அமைச்சரையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சிபுரத்தில் நடத்தினார்கள்.</p><p>“தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?” என்று மாநாட்டில் கேட்டேன்.</p><p>தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை அமைச்சரை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும், காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களையும், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ்சிங் பாதல் அவர்களையும், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம்.</p><p>இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.</p><h2><strong>மனதைப் புண்படுத்த வேண்டாம்</strong></h2><p>இந்த ஆண்டு ‘வைகோ 83’ என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை.</p><p>இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க முற்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன்.</p><p>என் புகைப்படம் போட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.</p><p>‘வைகோ 83’ என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.</p><p>இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுமானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், நீங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த திட்டமா?- மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/central-govt-explain-is-there-a-plan-to-hike-charges-for-cable-tv-and-dth-services#comments</comments><guid isPermaLink="false">0a27f43c-cc74-4fdc-8d32-fd9577d92fa3</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:19:50 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:19:50.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Cable TV,கேபிள் டிவி,DTH,டிடிஎச்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/8g82lewl/cable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</aside><h2><strong>கேபிள் டி.வி. கட்டணம்</strong></h2><p>மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.</p><p>அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>வரைவு அறிக்கை</strong></h2><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/மத்திய-அரசு">மத்திய அரசின்</a> பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-</p><p>இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் இல்லை.</p><p>தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (22.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-30#comments</comments><guid isPermaLink="false">9f86052c-a139-4221-a893-68b35a1821b8</guid><pubDate>Tue, 21 Jul 2026 03:10:04 +0000</pubDate><atom:updated>2026-07-21T03:10:04.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/nfuqkutf/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>கோவிலம்பாக்கம்</strong></h2><p>வடக்குப்பட்டு ஓம் சக்தி நகர், சுபிக்ஷா அவென்யூ, சுசிலா நகர், பெரியார் சாலை, வடக்குப்பட்டு பிரதான சாலை, திருவேங்கடம் நகர், திருவள்ளூர் தெரு, நாவின்ஸ், விஷ்ராந்தி, செல்வகணபதி நகர், சத்யா நகர்.</p><h2><strong>ராமாபுரம்</strong></h2><p>ராயலா நகர், காந்தி நகர், நேரு நகர், குமரன் நகர்,ஜெயபாலாஜி நகர், வள்ளுவர் சாலை, ஜி ஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், கங்கை அவன்யு, மாந்திநாயகம் தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>முகலிவாக்கம்</strong></h2><p>சுரேஷ் நகர், உதயா நகர், குருசாமி நகர், சந்தோஷ் நகர், அவலன்சேரி, லக்ஷ்மி நகர், ஒத்தவாடை தெரு, ஏவி மல்லீஸ், ப்ரைம் எக்ஸ், மேக்ஸ் வொர்த் நகர் பேஸ்1, நாராயணன் நகர் பேஸ்1, 2 , தட்டான்குளம்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி நகர் 1 வது முதல் 3வது பிரதான சாலை வரை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகா நகர், ஹரியன் தெரு, பாரத் நகர், மாரியம்மன் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சரோஜினி தெரு, ஆபீசர் லேன், வெட்டரன் லேன்.</p><h2><strong>கீழ்க்கட்டளை</strong></h2><p>ஈஸ்வரி நகர், நியூ காலனி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ், லத்தீப் காலனி, காமராஜர் நகர்.</p><h2><strong>ஆலந்தூர்</strong></h2><p>எம்.கே.என். சாலை, அஷர்கானா, ஆலந்தூர் பிரதான சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி. சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருணீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம் பகுதி, சாந்திநிகேதன் அபார்ட்மெண்ட்ஸ், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், குரோவ் அபார்ட்மெண்ட்ஸ், மஸ்தான் கோரி அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, வேளச்சேரி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீஸ் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி, மண்ணடியம்மன் மற்றும் பழனியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ் பகுதி, அம்பேத்கர் நகர், மடுவங்கரை.</p><h2><strong>பெரும்பாக்கம்</strong></h2><p>டிஎச்எஸ்சிபி பிளாக் எண் ஏஐ, ஏஜே, ஏகே, பிளாக் எண் 8 முதல் 86 வரை மற்றும் 152 முதல் 158 வரை, கிருஷ்ணா நகர், கோகுல் நகர், சௌமியா நகர், பெரும்பாக்கம் பிரதான சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை, பாரதியார் தெரு, அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, விமலா நகர், நல்லதம்பி தெரு, கோல்டன் அவென்யூ, சரஸ்வதி தெரு, சிவகாமி தெரு, சி.பி.ஐ. காலனி 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ஜனனி நகர், சிதம்பரம் நகர், மலையம்பாக்கம், ரகுநாதபுரம், இந்திர நகர், செல்வராஜ் நகர், சாதிக் நகர், சிவானந்த நகர், ஸ்ரீராம் நகர், சக்ரா நகர், ஓம் சக்தி நகர், முத்துசாமி நகர், வீரா ஆஞ்சநேயர் கோவில் தெரு, மல்லிகா தியேட்டர், குன்றத்தூர் பிரதான சாலை.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சி.டி.எச் சாலை, போலீஸ் கன்வர்சன் ஹால் முதல் ஹோட்டல் ஏ மற்றும் பி வரை, சரஸ்வதி நகர், தென்றல் நகர்.</p>]]></content:encoded></item><item><title>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறை - ‘டாஸ்மாக்&apos; நிர்வாகம் அதிரடி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-new-procedure-liquor-procurement#comments</comments><guid isPermaLink="false">fec29c07-00e4-40ab-b2b0-9b66348b5a71</guid><pubDate>Tue, 21 Jul 2026 02:29:32 +0000</pubDate><atom:updated>2026-07-21T02:29:32.037Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,டாஸ்மாக்,liquor procurement ​​,மதுபானங்கள் கொள்முதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-21/4flrvvvq/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுபானங்கள் கொள்முதலில் புதிய நடைமுறையை ‘டாஸ்மாக்' நிர்வாகம் தொடங்கி உள்ளது.</p><h2>மது விற்பனை</h2><p>தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'டாஸ்மாக்' கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான வகைகளை 11 நிறுவனங்களிடம் இருந்தும், 'பீர்' வகைகள் 6 நிறுவனங்களிடம் இருந்தும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.</p><p>இதில் பிரபல அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நடத்தும் நிறுவனங்களும் அடங்கும். எந்த நிறுவனத்தின் மதுபானம் அதிகம் விற்பனையாகிறதோ, அவை கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகள் மட்டும் 60 முதல் 70 சதவீதம் வரையில் கொள்முதல் செய்யப்பட்டது.</p><h2>டாஸ்மாக் நிர்வாகம்</h2><p>இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. அரசு அமைந்தவுடன் '<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D">டாஸ்மாக்</a>' நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6-ந் தேதி அன்று 'டாஸ்மாக்' நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிகளவு மதுபானங்களை கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.</p> <h2>எலைட் கடைகள்</h2><p>அதன்படி அனைத்து நிறுவனங்களிடம் இருந்து சரிசமமாக மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. உயரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் 'எலைட்' கடைகளில் பிரீமியம், மீடியம் ரக மதுவகைகளில் ஒரு பெட்டி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.</p><h2>விரும்பிய மது வகைகள்</h2><p>'டாஸ்மாக்' கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண ரக மதுபான வகைகளை அனைத்து மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சமமாக கொள்முதல் செய்தால், மதுபிரியர்கள் விரும்பும் மது வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது மறைமுகமாக குறிப்பிட்ட நிறுவனத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-decides-to-introduce-54-more-liquor-brands">மதுவகைகளை</a> அதிகளவில் கொள்முதல் செய்வதற்கு புறவழி செயல் போன்று அமைந்துவிடும். மதுபிரியர்கள் விரும்பாத மதுபானங்கள் விற்பனையாகாமல் அப்படியே கடையில் தேங்கிவிடும்' என்பது 'டாஸ்மாக்' ஊழியர்களின் கருத்தாக உள்ளது.</p><p>புதுச்சேரி போன்று அண்டை மாநிலங்களில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளையும் 'டாஸ்மாக்' நிர்வாகம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்பது மதுபிரியர்களின் விருப்பமாக இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: தி.மு.க. எம்.எல்.ஏ.-வுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:25:25.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4cdbf461-721a-437e-a832-36244f78c95f">விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1">மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</a> </p><p>எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83">துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel">டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/75b67448-3134-400e-9b4c-161914f5ca29">சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000">வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions">டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</a></p><figure><img alt="CJP Leaders Meets JP Nadda" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held">கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project">சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ram-temple-donation-theft-case-do-not-politicise-issue-chief-justice-surya-kant">ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat">"துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்" - மார்க்கண்டேயன் கூச்சல்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-dig-at-56-year-old-youth-rahul-gandhi-ahead-of-monsoon-session">நான் 56 வயது இளைஞர்களை பற்றி பேசவில்லை: ராகுல் காந்தியை மறைமுகமாக கிணடல் செய்த பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan">29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn">டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody">முதலமைச்சர் விஜய் எலும்பை உடைப்பேன் என பேசிய திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை 15 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு</a></p>]]></content:encoded></item><item><title>முதல்வர் எலும்பை உடைப்பேன் என பேச்சு.. திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் சிறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-will-break-your-bones-dmk-mla-markandeyan-gets-15-day-judicial-custody#comments</comments><guid isPermaLink="false">a88b860f-b619-463d-8400-2ac4e1853bd9</guid><pubDate>Mon, 20 Jul 2026 16:18:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T16:18:34.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dmk mla,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,திமுக எம்.எல்.ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tuticorin DMK MLA 15-day remand ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/qfbd3obs/Untitled-design-43.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வர் விஜய்யை அச்சுறுத்தும் தொனியில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.</p><h3><strong>விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது:</strong></h3><p>கோவில்பட்டியில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜயை அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்தற்காக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று, விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர்.</p><p>சட்டமன்றத் தேர்தலில் திமுக-விற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. </p><p>திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் உள்ளிட்ட பல திமுக தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><p>இதையடுத்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வரை அச்சுறுத்தும் வகையில் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>இதைத்தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலர் பாலசுப்ரமணியன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.</p><p>அதனைத் தொடர்ந்து, இன்று காலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் விட்டிற்கு சென்று போலீசார் அவரைக் கைது செய்தனர்.</p><p>பின்னர் அவர் மேல் விசாரணைக்காக தூத்துக்குடியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கைக்கு எதிராக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கீதா ஜீவன் மற்றும் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதையடுத்து முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து, கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், காவல்துறை அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.</p><p>பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “மார்க்கண்டேயனை முன்னறிவிப்பின்றி காலை 6 மணிக்கு காவல்துறை கைது செய்துள்ளனர்.</p><p>இது நீண்ட காலம் நீடிக்காது. அதிகபட்சமாக, இந்த அரசாங்கம் இன்னும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கலாம். அதுவரை மட்டுமே காவல்துறையால் இந்த முறையில் செயல்பட முடியும்," என்று அவர் கூறினார்.</p><h3><strong>எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்:</strong></h3><p>இந்நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல்: இடதுசாரிகள் கட்சிகள் கண்டன அறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cjp-protest-police-lathi-charge-students-and-youth-rally-in-delhi-left-parties-issue-condemn#comments</comments><guid isPermaLink="false">f85786da-0554-49b5-b5a6-e56b64382251</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:57:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:57:23.282Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,CPI,Communist,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam- Veerapandian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/crc9v48g/Communistgs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><h2>தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்</h2><p>இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று சென்னை, அம்பத்தூரில் உள்ள சிபிஐ (எம்.எல்) லிபரேசன் அலுவலகமான தோழர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், நா.பெரியசாமி, எம்.ரவி, எஸ்.பாலசுந்தரம், அ.சந்திரமோகன், எஸ்.ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர்.</p><h2>இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-</h2><p>1) டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பாராளுமன்ற நோக்கிச் சென்ற பேரணி மீது தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.</p><p>2) தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் செப்டம்பரில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.</p><p>3) நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.</p><p>4) இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டுப் பிரகடனம் ஆக.4-ல் வெளியிடப்படும். தமிழகத்திற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இந்தப் பிரகடனம் அமையும். மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஆக. 10-க்குள் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>5) அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் வருவாயில் மிகப்பெரும் திருட்டு நடைபெற்றுள்ளது. கோவில் நிர்வாகிகள் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் உறுதியாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்க: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-electricity-board-contract-workers-confirm-employee-immediately#comments</comments><guid isPermaLink="false">3b4ee343-ac95-4413-8046-fb1337da6cca</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:42:41 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:42:41.345Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,TNEB,தமிழ்நாடு மின்சார வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ppx7fxyc/AnbumaniRamadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு மின் வாரியத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும்பகுதியை மின்சார வாரியத்திலேயே கழித்து விட்ட நிலையில், தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதை முந்தைய அரசுகள் ஏற்கவில்லை.</p><h2>ஒப்பந்த ஊழியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பு</h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மின்சாரத்துறை அமைச்சரோ, அடுத்த 6 அல்லது 7 மாதங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரத் தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். பணி நிலைப்புக்காக கோரிக்கை விடுத்தால், பணி நீக்கத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடுவதை எதிர்த்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர்கள் ஜூன் 22 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்சாரத் துறை அமைச்சரை ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடந்த 18-ஆம் தேதி மதுரையில் சந்தித்து பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது குறித்து அமைச்சர் உத்தரவாதம் அளிக்கவில்லை.</p><p>மின்சார வாரிய ஒப்பந்தப் பணியாளர்களை விதிகளை பின்பற்றி பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பத்தாண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மின்சார வாரியத்தில் 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய ஊழியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பணி நிலைப்பு பெற தகுதி பெற்ற கடலூர் மாவட்ட மின் வாரிய ஊழியர்கள், மாவட்ட தொழிலாளர் நலத்துறை ஆய்வாளரிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு முறையிட்டனர்.</p><p>அவர்கள் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த தொழிலாளர் நல ஆய்வாளர்கள் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு 2004 முதல் 2007 வரை பல்வேறு கட்டங்களாக ஆணையிட்டனர். ஆனால், அந்த ஆணையை அரசு செயல்படுத்தாததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த  தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில் 2015-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் 480 நாள்கள் தொடர்ந்து பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசுக்கு ஆணையிட்டது.</p><h2>தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு</h2><p>அதை எதிர்த்து மின்வாரியம் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு செய்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அந்த வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரியத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என மீண்டும் ஆணையிட்டது. ஆனால், அதன்பின் 11  ஆண்டுகளாகியும் அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நலனில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறை இவ்வளவு தான்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தவெக ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய முயல்பது நியாயமல்ல. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் ஒப்பந்த பணியாளர்களின் பிரதிநிதிகளை மின்துறை அமைச்சர் அல்லது மின் துறை செயலாளர் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி  அளிக்க  வேண்டும்.  அதன் மூலம் ஒரு மாதமாக நீடிக்கும் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>29-ந்தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ்- வடிவேல் ராவணன் கூட்டு அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-general-council-meeting-on-the-29th-joint-announcement-by-anbumani-ramadoss-and-vadivel-ravanan#comments</comments><guid isPermaLink="false">06f47ba7-ac6f-4188-a2b7-603666c303a0</guid><pubDate>Mon, 20 Jul 2026 15:18:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T15:18:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,பா.ம.க. அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-08/44dc8lm6/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-</p><p>பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக்கூட்டம் வரும் 29.07.2025 (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் (Confluence) அரங்கத்தில் நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&quot;துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்&quot; - மார்க்கண்டேயன் கூச்சல்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-politics-mla-arrest-dmk-mla-markandeyan-held-over-alleged-defamatory-speech-against-cm-vijay-claims-gunpoint-threat#comments</comments><guid isPermaLink="false">993bfdab-da84-41f7-9902-19ae8d34395f</guid><pubDate>Mon, 20 Jul 2026 14:22:24 +0000</pubDate><atom:updated>2026-07-20T14:22:24.802Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MarkandayanArrest,DMKMLAArrest,மார்க்கண்டேயன்கைது,ThoothukudiGH,GunpointThreatAllege,துப்பாக்கிமுனைமிரட்டல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MarkandayanArrest  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7g1hea6e/MarkandayanArrest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><h2><strong>10 மணி நேர விசாரணை:</strong></h2><p>கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்று, சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். </p><p>இந்த வழக்கின் விசாரணை நடைமுறைகள் முடிந்ததைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, மருத்துவப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் காவல்துறை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.</p><h2><strong>துப்பாக்கி முனை மிரட்டல் - எம்.எல்.ஏ. கூச்சல்:</strong></h2><p>மருத்துவமனை வளாகத்திற்குள் போலீஸ் வாகனத்தில் இருந்து மார்க்கண்டேயன் இறக்கப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களைப் பார்த்து அவர் திடீரென ஆவேசமாகக் கூச்சலிட்டார். <em><strong>"போலீசார் என்னை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகிறார்கள்!"</strong></em> என அவர் உரத்த குரலில் கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>உடனே அவரைப் போலீசார் சூழ்ந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை அறைக்குள் வேகமாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி:</strong></h2><p>கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.</p><p>இது தொடர்பாக ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். </p><p>மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்களும், திமுக தலைவர்களும் தவெக அரசிற்கு எதிராகத் தீவிர கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-chennai-waste-to-gas-project#comments</comments><guid isPermaLink="false">7de47d8a-1164-4560-83b6-e669f53a4786</guid><pubDate>Mon, 20 Jul 2026 12:57:14 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:57:14.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>inspection,CMVIJAY,SolidWasteManagement,திடக்கழிவுமேலாண்மை,ChennaiCorporation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMVijay Inspects waste-to-gas plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7ak60zmj/CMVijay-Inspects-waste-to-gas-plant?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு நேரில் சென்று அதிரடி கள ஆய்வு நடத்தினார். </p><p>இந்த ஆய்வின் போது, திடக்கழிவுகளில் இருந்து மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.</p><h2><strong>இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு:</strong></h2><p>சென்னையில் சேகரிக்கப்படும் கழிவுகளைக் கொண்டு எவ்வாறு எரிவாயு தயாரிக்கப்படுகிறது, இந்த மையத்தின் தினசரி உற்பத்தித் திறன் எவ்வளவு, மற்றும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p>இயந்திரங்களின் இயக்க நிலை மற்றும் தூய்மைப் பணிகளை நேரடியாக ஆய்வு செய்த அவர், பணிகளை மேலும் தொய்வின்றி விரைவுபடுத்த அதிகாரிகளுக்குப் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2><strong>அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:</strong></h2><p>சென்னை மாநகராட்சியை முழுமையான தூய்மையான நகரமாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள அரசு, வீடுகளிலேயே மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வாங்குவதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>மேலும், திடக்கழிவு மேலாண்மை விதிகளை அலட்சியப்படுத்தும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மக்களைக் கவர்ந்த எளிமை:</strong></h2><p>முன்னதாக, இந்தத் திடீர் ஆய்விற்காக முதலமைச்சர் வாகனப் பேரணியாகப் புறப்பட்ட போது, வழியெங்கும் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>அப்போது தனது காரில் இருந்தபடியே பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்து, அவர்களின் வாழ்த்துக்களைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">c2e40369-de04-4732-99ec-728d3aaf3c77</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:17:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:17:56.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,DMK,திமுக,Union Ministry,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.</p><p>காவல் துறை அனுமதி மீறி, போராட்டம் நீடித்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்நிலையில், “தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.</p><p>கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும். மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும். அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது” என திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.</p><p>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.</p><p>அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.</p><p>தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! </p><p>மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.<br><br>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்… <a href="https://t.co/jsOdVDS2Te">pic.twitter.com/jsOdVDS2Te</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2079123740814901485?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">e504d393-6838-4a10-960f-d473afe9296d</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:15:25.601Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசியல் சாசன சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை இன்னும் திறக்கவில்லை. இதற்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். உச்ச நீதிமன்றமும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்க்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.</p><p>சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; </p><p>தமிழ்நாடு அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். </p><p>உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். </p><p>ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. </p><p>இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள்.</p><p>ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. </p><p>பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.</p><p>ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>இதனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். </p><p>மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details#comments</comments><guid isPermaLink="false">75b67448-3134-400e-9b4c-161914f5ca29</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:34:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:34:13.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/e-service-centre-employees-hunger-stike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/e-service-centre-employees-hunger-stike#comments</comments><guid isPermaLink="false">d548ba35-28e2-40d4-8835-8a83f0ffba5f</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:50:06 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:50:06.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு இ சேவை மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/i8s8aky5/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/i8s8aky5/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய  ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. </aside><h2><strong>போராட்டம்</strong></h2><p>தமிழ்நாடு தரவு உள்ளிட்டாளர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. </p><p>தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய  ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. </p><h2><strong>பலர் பங்கேற்பு</strong></h2><p>போராட்டத்திற்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி. மாநில தலைவர் சுகுமாரன் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் மனோஜ் குமார் கோரிக்கை உரையாற்றினார். மாலதி சிட்டிபாபு, குப்புசாமி, முருகேஷ், செந்தில்குமார், கண்ணன், சசிரேகா, சபரீஷ் சுகுமார் எம்எஸ் பாண்டி சையத் வினோலியா அப்துல் பால விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p><p>கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்ற  வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தள்ளிப் போடப்பட்டது. புதிய அரசும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெருங்குடி அருகே தாயை உரலால் அடித்து கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-near-perungudi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-near-perungudi#comments</comments><guid isPermaLink="false">dd629166-fb80-4749-8602-c90f969cbfe8</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:36.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,தாய் கொலை,மகன் கைது,mother murder,Son Arrest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9hx18s8p/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9hx18s8p/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெருங்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாபு லால் (வயது 48). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். </p><p>இவரது மனைவி சென்னி தேவி(43). இவர்களுக்கு ராகேஷ்(19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.</p><h2><strong>படுகொலை</strong></h2><p>மகன் ராகேஷ் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் உள்ளார். ராகேசுக்கு சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  </p><p>இதற்காக  தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.  இந்த நிலையில் பாபுலால் தனது உறவினர் இறந்து விட்டதால் ராஜஸ்தான் சென்று விட்டார்.</p><p>நேற்றிரவு சென்னி தேவி உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.  </p><p>இன்று அதிகாலையில்  திடீரென  எழுந்த ராகேஷ் தூங்கிக் கொண்டிருந்த தாயார் சென்னிதேவியை துண்டால் கழுத்தை நெறித்து காய்கறி வெட்டும் கத்தியால் குத்தினார். பின்னர் உரலால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனை கண்டு சென்னிதேவியின் மகள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார். </p><p>தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட சென்னி தேவி உடலை  பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>ராகேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><h2><strong>ரவுடி குத்திக்கொலை</strong></h2><p>சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம்.நகரை சேர்ந்த நாகராஜ் மகன் பலி ஆடு என்ற அஜய் (வயது 20). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்த காஜல் (24) என்ற திருநங்கையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமதாஸ் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் திருநங்கையை இறக்கி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் வந்தனர்.</p><p>அவர்கள் திடீரென்று அஜய்யை சுற்றி வளைத்து தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அஜய் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில்  கீழே விழுந்தார்.  சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>சினிமாவில் வருவது போல கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்ணாரபேட்டை  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.  அஜய்யை  கொன்றவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அஜய்யும், அவரது நண்பரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தனர். பின்னர் இருவரும் இன்ஸ்டாவில் தனித்தனியாக ரீல்ஸ் போட தொடங்கினர்.</p><p>இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரனை நடைபெற்று வருகிறது.</p><p>சென்னையில் ஒரே  நாளில் ரவுடி, பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாகனம் மோதி விபத்து - காயம் அடைந்த குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vehicle-collision-monkeys-gathered-around-an-injured-monkey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vehicle-collision-monkeys-gathered-around-an-injured-monkey#comments</comments><guid isPermaLink="false">f57c86c7-c3f7-4bd6-9ed2-2c45ec5587fd</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:51:30 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:51:30.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>accident,விபத்து,Monkey injury,குரங்கு காயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rm84ewck/monkey.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Monkeys]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rm84ewck/monkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அடையாளம் தெரியாத கார் ஒன்று குரங்கின் மீது மோதியதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. </p><h2>ஆழியாறு அணை</h2><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அருகே பூங்கா உள்ளது. </p><p>இன்று காலை பூங்கா அருகே உள்ள சாலையோரம் 5 வயது மதிக்கத்தக்க குரங்கு நின்று கொண்டு இருந்தது. </p><p>அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, அந்த குரங்கின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. </p><h2>பிஸ்கட் கொடுக்க முயன்ற குரங்கு </h2><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப்பயணிகள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். வலியால் துடித்த குரங்கு, அங்கிருந்து மெதுவாக ஒரு மரத்தின் அடியில் வந்து படுத்துக் கொண்டது. அந்த குரங்கால் அடுத்த எழும்பவே முடியவில்லை. ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. </p><p>இதனை பார்த்த சக குரங்குகள், காயம் அடைந்த குரங்கை தடவி தேற்றுவதும், அதனை எழும்பச் சொல்லி முயற்சித்ததும் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு ஒரு படிமேலாக குட்டி குரங்கு ஒன்று பிஸ்கெட் எடுத்துச் சென்று காயம் அடைந்த குரங்குக்கு கொடுக்க முயன்றது. ஆனால்  காயம் அடைந்த குரங்கால் சாப்பிட முடியவில்லை. </p><h2>வனத்துறையினர் சிகிச்சை</h2><p>இந்த காட்சியை பார்த்து அங்கு நின்ற பெண்கள் கண் கலங்கினர்.  இதற்கிடையே பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>வனத்துறை ஊழியர்கள் காயம் அடைந்த குரங்கை மீட்டுச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>திருப்பூரில் இரவும் பகலுமாக தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">7cdbf3a7-f253-4c3a-ae00-20d3e1640ec5</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:45:29.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</aside><h2><strong>ஜனநாயகன்</strong></h2><p>தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான ‘<a href="https://www.maalaimalar.com/topic/ஜன-நாயகன்">ஜனநாயகன்</a>’ வருகிற 23 -ந்தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், திருப்பூரின் ஜவுளித்துறை புதிய வர்த்தக உச்சத்தைத் தொட்டுள்ளது.</p><h2><strong>அசுர வேகம்</strong></h2><p>​திரைத்துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தொண்டர்களிடமும் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக, முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்தியேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், மிகக்குறுகிய காலக்கட்டமே இருப்பதால், தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><figure><img alt="ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mr4eq1f5/tirupur.jpg" /><figcaption>ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</figcaption></figure> <h2><strong>குவியும் ஆர்டர்கள்</strong></h2><p>​இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><p>​இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள் அனைத்தும், இந்த பிரத்தியேக ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரம்  ஒதுக்கி, தொழிலாளர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>முதலமைச்சர் விஜய்யின் இந்த இறுதித் திரைப்படத்திற்கான வரவேற்பு தமிழக எல்லையைத் தாண்டியும் எதிரொலித்து வருகிறது. கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கான ஆடைகளுக்கான ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வந்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.</p><figure><img alt="திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/w3pplyvb/Jana02.jpg" /><figcaption>திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</figcaption></figure> <p>அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதலமைச்சரைக் காணப்போகும் ஆவலில், ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டி-ஷர்ட் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலுக்கும் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தைத் தந்துள்ளதாகத் தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் இல்லாத த.வெ.க.வின் காமராஜர் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் - ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years#comments</comments><guid isPermaLink="false">249e1dfe-24f8-4c3c-aef3-bc827fa75546</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:42:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:42:13.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,P Chidambaram,ப சிதம்பரம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.</p><h2>காமராஜர் பிறந்தநாள் விழா</h2><p>மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரசாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><h2>காங்கிரஸ் ஆட்சி</h2><p>தமிழ்நாட்டில் நடைபெற்ற காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. காமராஜரின் ஆட்சிக்காலம் அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியது. </p><p>அந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சே இல்லை. எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதேபோல் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத செயல்பாடுகள், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் போன்றது.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் பத்திரப் பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பள்ளி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார். </p><p>நிச்சயம் முதலமைச்சர் விஜய்யின் அரசு அதனையும் சாதிக்கும் என்று தான் நம்புகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்றார். காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>நிகழ்ச்சியில் தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon">காங்கிரஸ்</a> கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது, என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருடு போன அம்மனின் 10 சவரன் நகை- சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it#comments</comments><guid isPermaLink="false">3303220c-f05a-4073-a86a-b8c6ffa25071</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:31:26 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:31:26.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மன் நகை திருட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருடு போன நகையை சாமியாடி கண்டுபிடித்த பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. </p><h2><strong>நகை திருட்டு</strong></h2><p>இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் அனைத்தையும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. கோவிலில் பல இடங்களில் தேடியும் செயினை கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மனை வழிபட வந்ததுபோல் நடித்த மர்மநபர் செயினை திருடி சென்று இருப்பது தெரிந்தது. </p><p>இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் தங்க செயினை கண்டு பிடிக்க முடியவில்லை.</p><h2><strong>அருள்வாக்கு</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தார்கள். </p><p>அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்து சாமியாடினார். மேலும்  அருள்வாக்கும் கூறினார்.</p><p>அவர் சாமியாடியபடி “எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது” என்று கூறியபடி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் அவர் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது அவரது கையில் திருடுபோனதாக கூறப்பட்ட அம்மன் நகை இருந்தது.  “என் நகை திருடு போல... இங்க தான் இருக்கு...” என்று சொல்லிய படி பக்தர்களிடம் காண்பித்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>பக்தர்கள் பரவசம்</strong></h2><p>அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்மநபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர். </p><p>மேலும் சிலர் சாமியாடிய பெண் மாயமான நகையை எப்படி கண்டுபிடித்தார்? என்ற பதில் தெரியாமலும் கேள்விகள் எழுப்பினர். எது எப்படியோ? கோவிலில் திருடுபோன நகை கிடைத்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். </p><p>பின்னர் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருடு போன அம்மன் நகையை சாமியாடிய பெண் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse#comments</comments><guid isPermaLink="false">4cdbf461-721a-437e-a832-36244f78c95f</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:05:09.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,சிவி சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதற்காக சென்னை செல்ல திண்டிவனத்தில் திரண்டிருந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a> தலைமையில் எம்.எல். ஏ.க்கள் அணி திரண்டனர்.</p><p>இவர்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பின்னர் மனம் மாறி எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து விட்டனர். </p><h2><strong>கட்சி பதவிகள் பறிப்பு</strong></h2><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.</p><p>தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில் கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">ஆதரவாளர்கள்</a> 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். </p><h2><strong>கூண்டோடு ராஜினாமா</strong></h2><p>இந்த நிலையில், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 1000-த்திற்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>அதன்படி இன்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர். </p><p>பின்னர் அவர்கள் 5 வேன்கள், 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் அங்கு தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். </p><p>முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon#comments</comments><guid isPermaLink="false">91e43621-4260-4d6e-a68b-3951a98df00e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:53:08 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:53:08.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,TN Congress,தமிழக காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1cou2g6w/TNCongress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக காங்கிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1cou2g6w/TNCongress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வட்டார, நகர, பேரூர் தலைவர்களை பொறுத்தவரை சுமார் ஆயிரம் பேர் பொறுப்புக்கு வருவார்கள். புதிய ரத்தம் பாய்ச்சும் போது கட்சி வளர்ச்சி அடையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-காங்கிரஸ்">தமிழக காங்கிரசுக்கு</a> புதிய மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேரடியாக தேர்வு செய்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 77 மாவட்ட தலைவர்களுக்கும் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை மகாபலிபுரத்தில் நடக்கிறது. முகாம் நடைபெறும் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாள் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>புதிய நிர்வாகிகள்</strong></h2><p>இந்த பயிற்சி முகாம் முடிந்ததும் வட்டார, நகர, பேரூர் தலைவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு வட்டார அளவிலும் நேரில் சென்று விசாரிப்பார்கள். அப்போது தகுதியானவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் மாநில தலைவர் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த பணிகளை இன்னும் 2 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.</p><p>வட்டார, நகர, பேரூர் தலைவர்களை பொறுத்தவரை சுமார் ஆயிரம் பேர் பொறுப்புக்கு வருவார்கள். புதிய ரத்தம் பாய்ச்சும் போது கட்சி வளர்ச்சி அடையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</p><p>அதே நேரம் மாநில நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் மாநில நிர்வாகிகள் நியமித்து சுமார்  8 வருடங்கள் ஆகி விட்டது. எனவே மாநில நிர்வாகிகளையும் விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு - வன்னி அரசு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned#comments</comments><guid isPermaLink="false">1f8bbfc9-0341-4360-9d1e-5d91ca03e89e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:34.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vanni arasu,வன்னி அரசு,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.</p><h2>அனிதா ராதாகிருஷ்ணன்</h2><p>ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.</p><p>மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections">மார்க்கண்டேயன்</a> முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்து பேசி இருந்தார்.</p><p>கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது, விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.</p> <h2>எலும்பை உடைப்போம்</h2><p>சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.</p><p>கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.</p><p>கொத்து பரோட்டா போட போறாராம். உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>பா.ம.க.வின்  19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget#comments</comments><guid isPermaLink="false">454180a1-952a-429d-9307-925bdaf59cb4</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:13:18.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,வேளான் நிழல் நிதிநிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க.சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.</aside><p>பின்னர் நிருபர்களிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அவர்</a> கூறியதாவது:-</p><p>2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><h2><strong>வேளாண் துறை</strong></h2><p>2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு‌.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446 சதவீதம் அதிகம்.</p><p>வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.</p><p>வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.</p><p>நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.</p><h2><strong>பாமக தேர்தல் அறிக்கை</strong></h2><p>கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.</p><p>பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.</p><p>கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பாமக">பாமக</a> தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும். </p><p>உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.</p><p>நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.</p><h2><strong>நெல் கொள்முதல்</strong></h2><p>வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.</p><p>நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><p>தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாகும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்படும்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.</p><p>காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.</p><p>அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.</p><p>நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.</p><p>நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.</p><p>நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.</p><p>நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக, அரசால் பாதுக்காக்க முடியவில்லை.  தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">38fac6f0-6cb4-47b4-af57-e554afb49bb7</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:42:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:42:54.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN Govt,தமிழக அரசு,முக ஸ்டாலின்,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</aside><h2><strong>கண்டனம்</strong></h2><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">மார்க்கண்டேயன்</a> அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன</strong></h2><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.</p><p>"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கைது செய்வது ஏன்?</strong></h2><p> தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</p><p>மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?</p><p>ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079089859294310618?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மசினகுடி, மாயார், சிங்காரா சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-tourist-vehicles-on-masinagudi-mayar-and-singara-roads-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-tourist-vehicles-on-masinagudi-mayar-and-singara-roads-starting-today#comments</comments><guid isPermaLink="false">fd674f56-07f8-42b2-9a31-4e6ef3ff0e7c</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:39:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:39:04.714Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ban,Tourist vehicles,masinagudi,சுற்றுலா வாகனங்கள் தடை,முதுமலை புலிகள் காப்பகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cziwahim/vehiclesban.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகனங்களுக்கு தடை
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cziwahim/vehiclesban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன. இந்த பாதை அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது.</p><h2>கிராம சாலைகள்</h2><p>இதனால் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி செல்ல வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஊட்டி நோக்கி வரும் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.</p><h2>ஐகோர்ட் உத்தரவு</h2><p>இந்த நிலையில் அந்த சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கவும், இணைப்பு சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்ட சவாரி வாகனங்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p> <h2>வாகனங்களுக்கு தடை</h2><p>இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி மசினகுடி சாலையில் அங்கீககரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மட்டுமே செல்ல ஏதுவாக, அந்த சாலையில் வனத்துறையினர் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.</p><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">e93913c8-1048-4b2b-9e4f-a8c2845ee326</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:12:51.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,World Chess Day,உலக சதுரங்க நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay -  Praggnanandhaa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>உலக சதுரங்க நாளான இன்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்</h2><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள். </p><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>சர்வதேச சதுரங்க தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த நாளை சதுரங்க விளையாட்டுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.</p><h2>பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு</h2><p>1924-ம் ஆண்டு ஜூலை 20 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் 'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு' (FIDE) தொடங்கப்பட்டது.</p><p>'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ஐ சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாட யுனெஸ்கோ (UNESCO) முன்மொழிந்தது.</p><p>2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக சதுரங்க நாளாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.</p><h2>சதுரங்கம்</h2><p>சதுரங்கம் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது வியூகங்களை வகுத்தல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் மூளையின் உடற்பயிற்சிக் கூடமாகும்.</p><p>மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் பள்ளிகளில் சதுரங்கத்தை ஒரு கல்விச் கருவியாக மாற்றுவதை இந்நாள் ஊக்குவிக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th#comments</comments><guid isPermaLink="false">f2396a00-20a1-4788-a8ef-47068797740b</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:01:53 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:01:53.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உள்ளூர் விடுமுறை,aadi krithigai,Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ஆடிக்கிருத்திகை</strong></h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.</p><p>கோவிலில் ஆண்டு தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிக்கிருத்திகை">ஆடிக்கிருத்திகை</a> விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா அடுத்த மாதம் 6-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.</p><p>இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>உள்ளூர் விடுமுறை</strong></h2><p>இதையடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><p>திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 6.8.2026 அன்று செயல்பட வேண்டும். </p><p>இந்த விடுமுறைநாளை ஈடுசெய்யும் பொருட்டு 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>