<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 07 Sep 2026 13:13:33 +0000</lastBuildDate><item><title>த.வெ.க. பிரமுகர் கொலையில் கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">cc5a13de-9af1-4763-97dd-48701ababb0e</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:24:23 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:24:23.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கொலை வழக்கு,Murder case,சென்னை,தவெக பிரமுகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/0x5k59yl/murderr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெசன்ட்நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் அ.தி.மு.க.வில் வட்டச் செயலாளராகப் பணியாற்றிவிட்டு, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். </p><h2><strong>கண்ணன் கொலை</strong></h2><p>ஐ.டி. நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த கண்ணன், நேற்று முன்தினம் இரவு 9. மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.</p><p>அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், கண்ணனை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. கண்ணனின் நண்பர்கள் கற்களை வீசி தடுக்க முயன்ற போதும், கொலையாளிகள் அவர்களை மிரட்டிவிட்டு கண்ணனை வெட்டி கொன்றனர். இந்தக் கொலை தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியது.</p><h2><strong>கைது</strong></h2><p>இதனை ஆய்வு செய்த போலீசார், அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்களான ராகேஷ், நரேஷ், ஹரிஹரன், மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>விசாரணையில், இந்தக் கொலைக்கு 17 ஆண்டு கால பகையே காரணம் என்பது தெரியவந்தது. கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவாவை, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். அதேபோல், 2016-ல் பரணியின் தந்தை வேலுவும் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்திற்கு கண்ணன் தான் முக்கிய காரணம் என்று கருதிய பரணி, நேரம் பார்த்து காத்திருந்து பழி தீர்த்துள்ளார்.</p><h2><strong>வாக்குமூலம்</strong></h2><p>கைதான பரணி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் “கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் எங்களைச் சந்தித்து பேசினார். தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும், பழைய பகையை மறந்து சமாதானமாகப் போகலாம் என்றும் கூறினார்.</p><p>அப்போது நான் படிப்பில் கவனம் செலுத்துவதாகக் கூறி அவரை நம்ப வைத்தேன். ஆனால், என் தந்தை மற்றும் பெரியப்பாவைக் கொன்ற அவர், சமீபத்தில் ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு அந்தப் பகுதியில் பெரிய ஆள் போல வலம் வந்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை உயிரோடு விட்டால் மீண்டும் எங்களுக்கு ஆபத்து என்று கருதினேன்.</p><h2><strong>ஆன்மா சாந்தி அடைந்துள்ளது</strong></h2><p>அதனால்தான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டினேன். இப்போதுதான் என் தந்தை மற்றும் பெரியப்பாவின் ஆன்மா சாந்தி அடைந்துள்ளது.” என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><h2><strong>கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி</strong></h2><p>இதற்கிடையே கொலையான கண்ணன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதால், அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தவறியதாக அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகியோரை காத்திருப்போர்பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-hold-by-elections-in-two-assembly-seats-on-october-6#comments</comments><guid isPermaLink="false">bd000964-0d2b-4cdb-b9d1-797ee2f8b640</guid><pubDate>Mon, 07 Sep 2026 12:23:51 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:23:51.916Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Election Commission,தேர்தல் ஆணையம்,by election,இடைத்தேர்தல்,தமிழக தொகுதிகள்,TN Constitution</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vote]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/gn3omoav/EC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி 2 தொகுதிகளில் இடைதே்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>அக்டோபர் 6ம் தேதி தாராபுரம், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death" rel="nofollow">மதுராந்தகம்</a> தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தாராபுரம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ராஜினாமா செய்திருந்தார்.</p><p>மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>முக்கிய தேதிகள்</h2><p>வரும் செப்டம்பர் 9ம் தேதி அன்று வேட்புமனு தொடக்கம்.</p><p>செப்டம்பர் 16ம் தேதி அன்று- வேட்புமனு கடைசி நாள்.</p><p>செப்டம்பர் 17ம் தேதி- வேட்புமனு பரிசீலனை</p><p>அக்டோபர் 6ம் தேதி- வாக்குப்பதிவு</p><p>அக்டோபர் 9ம் தேதி- வாக்கு எண்ணிக்கை</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: முதலமைச்சர் பேசியது எதற்கும் ஆதாரம் கிடையாது..!- உதயநிதி- 07 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-07-september-2026#comments</comments><guid isPermaLink="false">8c774a06-0db5-4dde-8aa8-7f7fb7910b2b</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:57:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T12:07:49.091Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/bazo2c3e/Udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ரவி சங்கர் பேசிக்கொண்டிருந்தபோது, நேரத்தின் அருமை உங்களுக்கு தெரியும்... பலர் பேச வேண்டியுள்ளது. பலரிடம் நீங்கள் சாட்டையை சுழற்றியவர்!" என மாற்று சபாநாயகர் விஜய் சரவணன் கூறினார்.</p><p>அதற்கு, “10 நிமிடத்தைத் தாண்ட மாட்டேன்... எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்!" என துணை சபாநாயகர் ரவி சங்கர் பதிலளித்தார். இருவரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.</p><p>ஒரு பெண்ணாக, இந்த சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டம், துயரம் என்பதை பகிர விரும்புகிறேன். பத்திரிக்கையாளராக என்னை ட்ரோல் செய்தால், தாங்கிக் கொள்வேன்.</p><p>ஆனால் எங்கள் அண்ணனை சேர்த்து என்னை பேசும் போது, அதன் பிரதிபலிப்பு வேறுவிதமாக இருக்கும். படிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கேலி செய்யும் ஆண்களுக்கு சொல்கிறேன், அடுத்த சட்டமன்றத்தில் எங்கள் பேச்சு இதை விட சிறப்பாக இருக்கும்.</p><p>நீங்கள் ட்ரோல் செய்வதால், எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தமில்லை- அமைச்சர் ஜெகதீஸ்வரி உருக்கம்</p><p>மாசு அடைந்த காற்றால் பொருளாதார இழப்பு ரூ.11,000 கோடியாக உள்ளது நல்ல காற்று இருந்தால் சென்னையில் இருப்பவர்கள் ஆயுட் காலம் 4 ஆண்டுகள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது: சென்னையில் ஏன் காற்று மாசுபடுகிறது என ஐ.ஐ.டி செய்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும்- சவுமியா அன்புமணி</p><p>சென்னையில் நல்ல காற்றே இல்லை.  இந்தியாவில் இருக்கக்கூடிய நகரங்களில் கடைசி இடத்தில் சென்னை உள்ளது சுவாசிக்க தகுதி இல்லாத காற்றை சென்னை மக்கள் சுவாசித்து வருகிறார்கள்- சவுமியா அன்புமணி</p><p>மாற்றுத் தலைவராக சட்டப்பேரவையை வழி நடத்திய தஞ்சை சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு பதிலாக, சட்டப்பேரவையில் இல்லாத முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெகவில் இணைந்து செயல்பட்டு வரும் வெல்லமண்டி நடராஜன் பெயரை குறிப்பிட்டு அழைக்க, பின்னர் சுதாரித்துக் கொண்ட தஞ்சை சரவணன், மன்னிக்கவும் கே.பி அன்பழகன் என கூறி அவரை பேச அழைத்தார்.</p><p>"பழனி ஆண்டவர் எனக்கு அள்ளி தந்தார், தமிழக முதல்வரும் எனக்கு அள்ளித்தந்தார், இங்கு அமர வைத்தார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்"- பழனி முருகன் தனக்கு அள்ளித்தந்ததாக அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரன் பேசியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><p>பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றி, ராம்சார் குறியீடு பெற்றதை அங்கீகரித்தாலே, அங்குள்ள மக்களின் வீடுகள் காப்பாற்றப்படும். பள்ளிக்கரணையில் நடைபாதை அமைத்துள்ளனர். அதற்கு என்ன அவசியம் இருக்கிறது? தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, சிமெண்ட் பைப் போட்டுள்ளனர்-  சவுமியா அன்புமணி</p><p>சாலை ஓரங்களில் நடைபாதை இல்லை. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 10 அடி அகலத்திற்கு கான்கிரீட் போட்டு நடைபாதை அமைத்துள்ளார்கள். தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து, 10 அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர் அமைத்துள்ளார்கள்- சவுமியா அன்புமணி</p><p>பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசும்போது, மானியக் கோரிக்கைகள் மீது விரிவாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார். அதனால், காலம் போவதே தெரியவில்லை. வாழ்த்துகள் என மாற்று சபாநாயகரும், தஞ்சை சட்டமன்ற உறுப்பினருமான விஜய் சரவணன் புகழாரம் சூட்டினார்.</p><p>திருவண்ணாமலை மாவட்டம் மதுரா கிருஷ்ணாவரம் கிராமத்தில், வழியில் கிணறு உள்ளதால், சுடுகாடு வழியாகவே மக்கள் சென்று வருகின்றனர். இதனால், அந்த ஊரில் பெண் கொடுப்பதற்கும், பெண் எடுப்பதற்கும் மக்கள் தயங்குகின்றனர்- ஆரணி அதிமுக MLA ஜெயசுதா பேசியதும் மேஜையை தட்டி சிரித்த பாமக MLA கணேஷ்குமார்.</p><p>தொழிற்சாலைகளில் வேலை கொடுக்கிறார்கள். மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுப்பார்களா? ஏனென்றால், புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவாகலாம். இதுதான் வளர்ச்சியா? மக்களின் உயிரைப் பணயம் வைத்து தொழிற்சாலைகளும் வளர்ச்சியும் தேவையா?-  சவுமியா அன்புமணி</p><p>குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் டையாக்சின் உள்ளது என பள்ளிக்கரணையில் கூறுகிறார்கள். கடலூரில் இளநீரில் டையாக்சின் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதையெல்லாம் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.</p><p>'வளர்ச்சி, வளர்ச்சி' என்று கூறி புற்றுநோயை வளர்த்து வைத்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் இப்படிப்பட்ட வளர்ச்சிதான்- பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சவுமியா அன்புமணி.</p><p>காற்று, நீர், ஒலி சார்ந்த சுற்றுச்சூழல் அளவுருக்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க, தொழிற்சாலை ஆய்வுகள், மாசுபாடு தொடர்பான நிகழ்வுகள், பொதுமக்கள் புகார்களின் போது விரைவான அறிவியல் அடிப்படையிலான மதிப்பீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ள, நவீன சுற்றுச்சூழல் பகுப்பாய்வுக் கருவிகள் பொருத்தப்பட்ட 5 நடமாடும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு வாகனங்கள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் இயக்கப்படும்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ்.</p><p>தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் காற்று தர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் 80 இடங்களில் உணரிகை (சென்சார்) அடிப்படையிலான தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் ரூ.8 கோடியில் நிறுவப்படும்- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வே.க. ராஜீவ்.</p><p>சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும்.</p><p>சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>"இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் STAR-ல் பதிவேற்றம் செய்யப்படும்.</p><p>மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் STAR இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்"-அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>வனத்துறையின் பல்வேறு நிலையில் பணியாற்றி வரும் சுமார் 6,260 சீருடை பணியாளர்கள் (Frontline Staff), பணியில் இருக்கும் போது சீருடை அணிந்த நிலையில் பேருந்துகளில் பயணிக்க, ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு ரூ.200 என்ற சலுகைக் கட்டணத்தில் ரூ.1.50 கோடி செலவில் பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அடையாள அட்டையாக (Smart Identity Card) வழங்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>ஊழலுக்கு எதிரான, ஊழலில் ஊறித் திளைத்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதுமான அற்புதமான உரையாக முதலமைச்சர் விஜய்யின் உரை அமைந்தது- சட்டசபையில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்.</p><p>ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும்.</p><p>பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் . Settlement, Release, Partition, Revocation Settlement உள்ளிட்ட குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15.10.2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>நாளைய தீர்ப்பை கேட்டவர் அல்ல, இன்றைய தீர்ப்பை எழுதியவர். கில்லியாக களம் கண்டவர், இன்று மக்கள் மனதில் தடம் பதித்தவர். துப்பாக்கி சத்தம் தேவையில்லை, அவர் சொல் ஒன்று போதும் தீப்பொறி பறக்க. மாஸ்டராய் திரையில், நம் வாத்தியார் வழியில் வந்த நம் அன்பு வாத்தியார்- தவெக அண்ணாநகர் எம்எல்ஏ ராம்குமார்</p><p>"போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளைத் தடுக்க, சான்றிதழ் எண்கள் API மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுபடுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்"- அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்</p><p>"மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படும்"- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவிப்பு.</p><p>மாற்று சபாநாயகராக தஞ்சாவூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் அமர்ந்த போது, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் விஜய்க்கு வணக்கம் தெரிவிக்க, பதிலுக்கு முதல்வர் விஜய்யும் புன்னகைத்தபடி அவருக்கு பதில் வணக்கம் வைத்து, 'எப்படி..' என கண் அசைவில் கேட்க, சபை முழுக்க மேஜையை தட்டி தவெகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.</p><p>“வரிவிதிப்பு, தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் 'முகம் அறியாத' நடைமுறை விரிவுபடுத்தப்படும்”- வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்.</p><p>திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி என தவறான தகவல் சொல்கின்றனர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.</p><p>திமுக தீயசக்தி என்று சொன்ன எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>திமுகவினரை போல் கோடிகளை கொட்டி அமைக்கப்பட்ட அரசு இல்லை, கோடிக்கணக்கான மக்களின் விஜய் சர்கார்- ராஜ்மோகன்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் மீது தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். இது மிகவும் தவறு என்று அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் அக்காட் ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்க வைத்தவர் யார் என மக்கள் அறிவர்.</p><p>திராவிட முன்னேற்றக் கழகம் தான் குதிரை பேரம் நடத்தியது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.</p><p>தமிழக வெற்றிக் கழகம் மீது எதிர்க்கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டை வைத்து சென்றுள்ளனர்.</p><p>ஐயுஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சபையின் வெளியே பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்.</p><p>மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஒத்துழைப்புடன் தவெகவுக்கு கடிதம் வந்தது.</p><p>எந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தவெக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>ஐயுஎம்எல் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.</p><p>மே 8ம் தேதி இரவு உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும்.</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது.</p><p>2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல- அமைச்சர் ஷாஜகான்.</p><p>“திருவண்ணாமலை பொதுக்குழுவில் நான் தவறாக பேசியதாக சித்தரிக்கிறார்கள். எங்கள் தலைவர் சொன்னதை தான், நான் பேசினேன். திமுகவும் அதிமுகவும் இணைந்து முதல்வரை தேர்வு செய்ய முயன்றார்கள் என்று கூறியதை தான் நான் சொன்னேன். தரகர்கள் பலரும் சுயநலத்திற்காக பேரம் பேசியிருப்பார்கள்”- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ சையது பரூக்.</p><p>கேப்டன் விஜயகாந்தை எப்படியெல்லாம் சங்கடத்திற்கு உள்ளாக்கினரோ அதே வேலையை தான் இப்போதும் செய்கின்றனர். </p><p>கேப்டன் குறித்து தவறான தகவல் பரப்பியோர்போல் இப்போதும் திமுகவினர் ஃபேக் ஐடி உருவாக்கி செயல்படுகின்றனர்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>திமுகவினர் போலி கணக்கு மூலம் தவெக பெயரில் சமூக ஊடக கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புகின்றனர்.</p><p>தவெகவினர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் பெண்களை அவதூறாக பேசினால் நடவடிக்கை என்றுதான் முதலமைச்சர் கூறியுள்ளார்- அமைச்சர் நிர்மல் குமார்.</p><p>சமூக ஊடகங்களில் பெண்கள் குறித்து விமர்சிக்கும் தவெகவினரும் உள்ளனர், அவர்களையும் கண்டிக்க வேண்டும்- தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா.</p><p>பெண்களை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய முதலமைச்சருக்கு வரவேற்பு- பிரேமலதா.</p><p>"சட்டம் ஒழுங்கு பிரச்சினையில், ஜாதி மறுப்பு திருமணமும் காரணமாக இருப்பதாக முதல்வர் பேசினார். சமூக பிரச்சினையான கலப்பு திருமணம் தொடர்பான முக்கிய கருத்தை தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்"- முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு அமைச்சர் வன்னிஅரசு நன்றி</p><p>முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று சொல்வது போல் அம்மா ஜெயலலிதா எனச் சொல்ல வேண்டும் என வேலுமணி கோரிக்கை வைத்தார்.</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று சொல்வதனால் அவர்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம்- வன்னி அரசு.</p><p>பஞ்சமி நிலங்களை கண்டறிய ஏற்கனவே இருந்த ஆணையத்தைவிட சிறப்பான ஆணையம் அமைக்கப்படும்- அமைச்சர் வன்னிஅரசு.</p><p>திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்- உதயநிதி ஸ்டாலின்</p><p>முதலமைச்சர் பேசியது ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக ஐயுஎம்எல் எம்எல்ஏ பேசியுள்ளார்.</p><p>திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா? ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>முதல்வரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறுப்பினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திரைப்பட ரிலீஸ்க்காக கொடநாடு சென்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக முதலமைச்சர் விஜய் மீது வழக்கு உள்ளது.</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் வழக்கு உள்ளது-  உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுகவினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்ற தான் நாங்களும் கூறுகிறோம்.</p><p>நேற்று நடந்த கொலை பற்றி பேசும்போது 1970-களுக்கு செல்கிறார், சர்காரியா கமிஷனுக்கு செல்கிறார் முதலமைச்சர்.</p><p>முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தது ஒரு பெரிய விபத்து, அவருக்கு மிசாவை பற்றி பேச தகுதியில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்</p><p>சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை- உதயநிதி ஸ்டாலின்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>சட்டசபைக்கு நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திமுக உறுப்பினர்களை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்த அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.</p><p>கவிஞர் கண்ணதாசன் திமுகவை பற்றி Short &amp; Sweetஆ ஒன்னு சொன்னாரு 'பேசிப்பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை' இதுதான் திமுக.. இவ்ளோதான் திமுக- பதிலுரையின்போது முதல்வர் விஜய் பேச்சு.</p><p>சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அறையில், அவர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை.</p><p>வன உயிரினங்களால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது சேதத்தின் தன்மைக்கேற்ப, அந்த இழப்பிற்கு உரிய நிவாரணமாக அமையும் வகையில் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரத்தின் மரபணு பண்புகளை வகைப்படுத்துதல் மற்றும் மரபணு மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ளும் நோக்கில், "தமிழ்நாடு பனைமர மரபணு பாதுகாப்பு மற்றும் மரபணு மேம்பாட்டுத் திட்டம்" ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்பரவலைத் தடுக்க, வனவிலங்குகளைப் பாதுகாக்க, வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை (Zoonotic Diseases) தடுக்க, நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ພໍ (Mobile Wildlife Forensic and Disease Diagnostic Laboratory) ரூ.1 கோடி செலவில் தென் தமிழ்நாட்டில் தயார் நிலையில் வைக்கப்படும்-அமைச்சர் ரஞ்சித் குமார்.</p><p>தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 இயற்கைப் பூங்காக்கள் (Nature Parks) உருவாக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.10 கோடி செலவிடப்படும்-  வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார்</p><p>5 ஆண்டுகளில் தமிழ்நாடு வனத்தீ மேலாண்மைத் திட்டம் ரூ.60.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்- அமைச்சர் ரஞ்சித்குமார்.</p><p>தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வனப்படை ரூ.100.72 கோடியில் மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்தப்படும் என அமைச்சர் ரஞ்சித்குமார் அறிவிப்பு.</p><p>என்னை நிர்பந்தம் செய்வதுபோல் திமுகவினர் நடந்து கொள்வதால் சபையில் பேச அனுமதிக்க முடியாது- சபாநாயகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.</p><p>எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>தொடர்ந்து திமுக அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார். அமைதியாக இருக்கையில் அமருங்கள்- சபாநாயகர்.</p><p>திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் எதிர்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை.</p><p>திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய் சொல்லியுள்ளார்- சபாநாயகர்.</p><p>சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் பரிந்துரை.</p><p>முதலமைச்சர் பதிலுரையின்போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன்- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.</p><p>சட்டசபையில் பேச அனுமதி கோரி அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள சபாநாயகர் இருக்கை முன்பாக அமர்ந்து தர்ணா.</p> <p>பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று குரல் கொடுத்து தொடர் அமளி.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது- சபாநாயகர்.</p><p>முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினருக்கு சபாநாயகர் கண்டிப்பு.</p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறே பதிலுரையை முதலமைச்சர் விஜய் முடித்தார்.</p><p>பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ மகன் வீட்டில் வேலைபார்த்த பெண் பாதிக்கப்பட்டபோது உடனடி நடவடிக்கை இல்லை.</p><p>தவெக ஆட்சியில் குற்றம் செய்வோர் மீது கட்சி பாகுபாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் காலதாமதம், திமுக நிர்வாகிகள் காப்பாற்றப்பட்டது என பெரிய பட்டியல் உள்ளது- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் தரன் மனைவி சிவசங்கரி காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்தார்.</p><p>கோவில் ஊழியர் மட்டும் கைது செய்யப்பட்டார். ஆய்வாளரை அறைந்த குற்றவாளி ஜாமின் பெற திமுக உதவியாக இருந்தது- முதலமைச்சர் விஜய்.</p><p>சென்னை விருகம்பாக்கத்தில் 2022ல் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலரிடம் அத்துமீறல்.</p><p>பெண் காவலரின் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது- முதலமைச்சர் விஜய்.</p><p>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்று முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் எப்ஐஆர் பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே.</p><p>கடலூர் எம்.பி சுரேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிப்பு- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள தவெக அரசு இனியும் அப்படி தான் இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை; ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது.</p><p>அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தம்- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது.</p><p>திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்.</p><p>திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் எதற்கு ரத்து செய்யப்பட்டது ஏன்?- முதலமைச்சர் விஜய்.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்.</p><p>செய்யும் தவரையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். </p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>கரூர் கேங்க் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்- முதலமைச்சர் விஜய்.</p><p>மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான். இறைவனும், இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய். </p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா? முதலமைச்சர் விஜய் கேள்வி</p><p>மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?- முதலமைச்சர் கேள்வி</p><p>முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கை- முதலமைச்சர் விஜய்</p><p>திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம் - முதலமைச்சர் விஜய்</p><p>அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள் - முதலமைச்சர் விஜய்</p><p>25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சு</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசி வருகிறார். </p><p>தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள்- முதலமைச்சர் விஜய்</p><p>எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருகின்றனர், மிசா வரலாறு நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும்- முதலமைச்சர் விஜய்</p><p>பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை, அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசுவதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒரு எம்எல்ஏ ஆர்தோ சர்ஜன் போல் பேசுகிறார், சட்டமன்றத்தில் எலும்பை உடைப்பாராம்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் உட்பட அனைவரையும் தரம் தாழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கருத்துரிமை, பேச்சுரிமையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என முதலமைச்சர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். </p><p>காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை துறை வாரியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால் குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பது அவசியம்- முதலமைச்சர்</p><p>காவல்நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை- முதலமைச்சர்</p><p>போதைப்பொருள் தடுப்புப்படை நடவடிக்கைகளால் போதை என்கிற மரத்தின் ஒரு சில கிளைகளை அகற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் விஜய்</p><p>காவலில் எந்த மரணம் நடைபெற்றாலும் எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்- முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் நடவடிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் விஜய்</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் தற்போது ஆழமாக வேரூன்றி நிற்கிறது- முதலமைச்சர் </p><p>ஊழலற்ற நேர்மையான ஆட்சி செய்வதே தவெக அரசின் நோக்கம், அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்பட வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>கோவை அமுதன் கொலை, சென்னை தனுஷ்குமார் கொலை சம்பவத்தில் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றத்திற்கு போதை கலாச்சாரம் காரணம் என ஒற்றை வார்த்தை கூறி தப்பிப்பது நல்ல பண்பு அல்ல- முதலமைச்சர்</p><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச் சம்பவங்களை கூறி ஒதுங்கிச் செல்ல எனது மனம் இடம் தரவில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு காவல் நிலையங்களும் தங்களுக்கு எல்லைக்குட்பட்ட மக்களின் நெருக்கமான தொடர்பாக ஏற்படுத்த வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சொத்து தகராறு, பழிவாங்கும் மனப்பான்மை கூட குற்றத்திற்கான காரணமாக இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல- முதலமைச்சர் விஜய்</p><p>ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னும் குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம்- முதலமைச்சர் விஜய்</p><p>எதிர்க்கட்சியினர் கூறிய கருத்தாக இருந்தாலும் அதில் உண்மை உள்ளதா என ஆராய்ந்து சரி செய்வதில் பாகுபாடில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>யாரிடமும் சார்பின்றி நடுநிலை தவறாது நீதி வழங்குவதே சரியான ஆட்சி என திருவள்ளுவர் கூறியுள்ளார்- முதலமைச்சர் விஜய்</p><p>குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராயினும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே த.வெ.க. அரசின் நிலைப்பாடு- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்- முதலமைச்சர் விஜய்</p><p>சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும்- முதலமைச்சர் விஜய்</p><p>சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை- முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை தொடங்கியது.</p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்த சட்டமுன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு கோரி முழக்கம் எழுப்பி வருகின்றனர். </p><p>2026-ம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் அரசினர் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் அமைச்சர் செங்கோட்டையன்- இதனை தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடியது.</p><p>தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கேள்வி எழுப்புவோம் - திமுக கொறடா எ.வ.வேலு திட்டவட்டம்</p><p>சட்டசபைக்கு உறுப்பினர்கள் வருகை.</p><p>காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க உள்ளார். </p><p>3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. </p>]]></content:encoded></item><item><title>இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை..!- கனிமொழி எம்.பி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-assembly-has-become-circus-tent#comments</comments><guid isPermaLink="false">282c2737-3e2f-4036-b36c-5af42819cdf0</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:35:33 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:35:33.265Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,தமிழக சட்டசபை,Kanimozhi MP,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3cfw7kr5/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாறு பேச வேண்டுமென்றால், நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும், அதன் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.</p><p>தலைவர் கலைஞரைப் பற்றியோ, தி.மு.க.வைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக்  கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் வரை, எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு ஒரு கூட்டமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.</p><p>காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்க வேண்டிய<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow"> முதலமைச்சர்</a>, எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல், நீண்ட சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு, எதிர்வினை வந்துவிடுமோ என்ற பயத்தில் விவாதத்தையே சபாநாயகர் தவிர்த்திருக்கிறார்.</p><p>கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்க ஒத்திகை பார்த்தும், அந்த மானியக் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் பேசியது சொற்பமே. மற்றவை எல்லாம் காலம் காலமாகப் பரப்பப்பட்ட வதந்திகளையும், சமீபத்திய WhatsApp factory பொய்களையும் கலந்து, முதலமைச்சருக்கு ஒரு பிரதியைக் கொடுத்துவிட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.</p><p>சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் &amp; பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது. </p><p>ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது...</p><p>Not everything loud is true</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல்..!- சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு நயினார் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shouting-slogans-is-indecent-politics-nainar-slams-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">76000a8d-330f-4ce2-b26c-6c6d54832c3e</guid><pubDate>Mon, 07 Sep 2026 11:00:31 +0000</pubDate><atom:updated>2026-09-07T11:00:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்,TN CM Viijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/cibr4z7x/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கத்தி கூப்பாடு போடுவது அநாகரிகமான அரசியல் என சட்டசபையில் முதலமைச்சர் விஜயின் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> அவர்களே! </p><p>உங்கள் அடுக்கடுக்கான வசனங்களை கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல. </p><p>உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன, உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன, நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களை தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். </p><p>அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.</p><p>சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கென புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும். </p><p>ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்த தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே,"தந்தை, மகன்" கதையெல்லாம் தமிழக மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">ba45ccd4-d222-4b47-902f-bf00e0b44ad2</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:44:17 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:44:17.114Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,DMK,திமுக,தவெக,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/anpzzui1/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார்.</p><h2><strong>தமிழ்நாடு சட்டசபை</strong></h2><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>சபாநாயகர்</strong></h2><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.</p><h2><strong>தி.மு.க. எம்.எல்.ஏ.</strong></h2><p>இதனை தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார். திடீரென தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழுந்திரிக்க தடுமாறினார். உடனே முதலமைச்சர் விஜய் எழுந்து அவரை கைகொடுத்து தூக்கி விட்டார். இந்த காட்சிகளை நேரலையாக மக்கள் பார்த்ததோடு சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>‘நான் பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/he-is-exposing-himself-as-a-bjp-slave-dmk-responds-to-chief-minister-vijays-remarks#comments</comments><guid isPermaLink="false">17fa7207-f2f0-4b45-a0d6-fe6077617a23</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:41:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:41:52.078Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,டிகேஎஸ் இளங்கோவன்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,T.K.S. Elangovan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பாஜக அடிமை என்று தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார்’ - முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதில்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4hc74aos/New-Project-2026-09-07T160508.160.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a>, முந்தைய திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டிப் பேசினார்.</p><p>இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது;</p><p>“என்ன அமலாக்கத்துறை அறிக்கை? அவரால் எப்படி அமலாக்கத்துறையின் அறிக்கையை மேற்கோள் காட்ட முடியும்? அமலாக்கத்துறை ஒன்றும் தமிழ்நாடு அரசின் முகமை அல்ல. அது ஒரு மத்திய அரசின் முகமை. ‘நான் பா.ஜ.க-வின் அடிமை’ என்று அவரே தன்னைத் தானே அம்பலப்படுத்துகிறார்.</p><p>மிசா சட்டத்தின் கீழ் திமுகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தான் கைது செய்யப்பட்டனர், அதிமுக உறுப்பினர்கள் அல்ல. </p><p>இந்தியா முழுவதும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர், ஆனால் அவர்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட்டனர். </p><p>மேலும், இந்த மிசா சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக இந்திரா காந்தி பின்னர் வருத்தம் தெரிவித்தார்.” என தெரிவித்தார்.</p><h2>உதயநிதியின் விமர்சனம்</h2><p>முதலமைச்சரின் சட்டப்பேரவை பேச்சுத் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“அமலாக்கத்துறை சொன்ன விஷயங்கள் எல்லாம் முதலமைச்சர் படித்துக் காட்டினார். அதெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. மூன்று கோப்புகளை திறக்க சொன்னார்கள் என சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. </p><p>அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற குற்றச்சாட்டுகளைத்தான் இவர் வந்து சட்டசபையில் படித்துக் காட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.</p><p>ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்துவிட்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கு இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும். </p><p>திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ இதுவரைக்கும் யாரும் அதுபோல் தண்டிக்கப்படவில்லை.</p><p>முதலமைச்சர் மீது கூடத்தான் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதை மறைத்ததாக அவர் மீது ஒரு வழக்கு இருக்கிறது. </p><p>வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால், ரொம்ப லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் ஓப்பனாக ஒத்துக்கொண்டவர்தான் இன்று இருக்கக்கூடிய இந்த டம்மி முதலமைச்சர்.</p><p>அதுமட்டுமல்ல, இங்கு இருக்கக்கூடிய பொதுப்பணித்துறை அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு இருக்கிறது. நடந்துகொண்டிருக்கிறது. இப்படி அவர்களுடைய கட்சியில் ஊழல் செய்துகொண்டு இருக்கிறார்.</p><p>விஜயபாஸ்கர், கு.பா கிருஷ்ணன் இப்படி பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள் மீது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கின்றன.” என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-13th#comments</comments><guid isPermaLink="false">638bd9e7-b6c8-4f23-8c1b-73a737505ed3</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:29:24 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:29:24.086Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4fky32ml/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>9-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>10-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>11-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12 மற்றும் 13-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>9-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில், அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறத்தப்படுகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர்  கோவில் ஆவணித்திருவிழா: வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/thiruchendur-temple-worship-2</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/thiruchendur-temple-worship-2#comments</comments><guid isPermaLink="false">199ae4b4-3581-40b0-90f3-a0001c63afc8</guid><pubDate>Mon, 07 Sep 2026 10:27:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T10:27:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruchendur temple,thiruchendur,Aavani,ஆவணித்திருவிழா,Aavani Festival,திருச்செந்தூர்,திருச்செந்தூர்  கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d3c5ri1h/TCRkovilph.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/d3c5ri1h/TCRkovilph.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா. கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று காலை உருகுசட்ட சேவை நடந்தது. தொடர்ந்து வெட்டிவேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.</p><h2><strong>சுவாமி தரிசனம்</strong></h2><p>மாலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பின்புறமாக நடராஜர் அலங்காரத்தில், சிவன் அம்சமாக காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வீதி உலா முடிந்து மேலக்கோவில் வந்த சுவாமிக்கு மீண்டும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து பந்தல் மண்டபம் முகப்பில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.</p><h2><strong>திருவிழா</strong></h2><p>8-ம் நாள் திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகருக்கு பந்தல் மண்டபத்தில் உள்ள வெள்ளை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேல் கோவில் சேர்தல் நடந்தது.</p><h2><strong>அலங்காரம்</strong></h2><p>தொடர்ந்து அங்கு சுவாமி சண்முகருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவிலை அடைகிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயு கந்த பெருமானும், தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி விட்டு மேலக்கோவிலுக்கு வந்து சேர்கிறார்கள்.</p><p>திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள்    ( 9-ந் தேதி)  நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>சரபோஜி  கல்லூரி தமிழ்பாடத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் கவிதை நூல் இணைப்பு..! 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/saraboji-college-tamil-syllabus-director-seenu-ramasamy-poetry-book-included</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/saraboji-college-tamil-syllabus-director-seenu-ramasamy-poetry-book-included#comments</comments><guid isPermaLink="false">1886e17c-862f-4b59-9d60-37d8c4bb8a7d</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:57:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:57:46.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சீனு ராமசாமி,தமிழ்பாடம்,கவிதை நூல்,தஞ்சை  சரபோஜி மன்னர் கல்லூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1g6lu7np/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 
Seenu Ramasamy
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1g6lu7np/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழ்பாடம்</h2><p>பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் சீனுராமசாமியின் நூலானது பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-seenuramasamy-post-goes-viral-689947"> சீனுராமசாமி </a> தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது</p><p> பெருமைக்குரிய தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில் என் கவிதை நூல்கள் இணைக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>சீனுராமசாமி</h2><p>சீனுராமசாமி அக்டோபர் 13, 1973 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார் . இவர் தமிழில் திரைப்படம் , திரைக்கதை வசனம், சிறுகதை ஆகியவற்றை தமிழுலகத்திற்கு படைப்புகளாக வெளியிட்டுள்ளார்</p><p>இளங்கலைத் (B.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட 'தயை' மற்றும் முதுகலைத் (M.A.) தமிழ்ப் பாடத்திட்டத்தில் மீ பதிப்பகம் வெளியிட்ட 'நிலத்தவள்' ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>என் படைப்புகளைத் தேர்வு செய்த தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பாடத்திட்டக் குழுவினருக்கு என் இதயபூர்வமான நன்றியும் வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>நூல்கள்</h2><p>ஒளிரும் வகுப்பறைகள்,பெறும் மௌனங்கள் - கவிதைகள் மற்றும் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு.நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல் கவிதை நூல்,புகார்பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - பரவலாக அறியப்பட்ட<a href="https://www.maalaimalar.com/video/maalaimalar-9"> கவிதை</a> மற்றும் படைப்புத் தொகுப்பு,மணல் உயிர் - சினிமாவுன் ஆன்மா,தயை,ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் போன்ற கவிதை , சிறுகதை போன்ற நூல்களை சீனுராமசாமி வெளியிட்டுள்ளார்.</p><h2>சமுதாயத்தின் எதார்த்தம்</h2><p>பொதுவாக சீனுராமசாமியின் படங்கள், பெண்களின் கதாப்பாத்திரத்திற்கு முன்னுரிமை ,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-build-over-150-new-social-justice-hostels-vanni-arasu"> சமூக வாழ்வியலின் </a>எதார்த்த தன்மை ,குடும்ப கட்டமைப்பின் வாழ்வியல் ஆகியவற்றை இவரின் திரைப்படங்கள் பிரதிப்பலிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>“காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-vacancies-will-be-filled-soon-chief-minister-vijay-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-vacancies-will-be-filled-soon-chief-minister-vijay-announces#comments</comments><guid isPermaLink="false">2d8ff55d-7de4-4890-91fb-396d63f182f6</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:57:02 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:57:02.607Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,vacancies,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காலிப்பணியிடங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/82a3y5lj/New-Project-2026-09-07T152632.557.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “காவல்துறையில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/82a3y5lj/New-Project-2026-09-07T152632.557.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4">முதலமைச்சர் விஜய்</a>.,</p><p>“காவல்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் போலீசாருக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது; விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.</p><p>மாணவர்கள் குற்றத்தில் ஈடுபடாத வகையில் வழிநடத்துவதும்  பொறுப்பாகும். சமூக சூழல், குடும்ப பிரச்சனை, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் குற்றச்செயலில் ஈடுபடும் இளம் வயதினர்;</p><p>இதற்கெல்லாம் யார் மீது பழிப்போடலாம் என நினைக்கும் எதிர்க்கட்சியினர் அவர்களுக்கு இணையாக நாமும் 2021-25 வரை நடந்த குற்றச்சம்பவங்களை குறிப்பிட மனம் இடம் தரவில்லை.</p><p>கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களை சந்தித்தார். இனி பெண்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.</p><p>தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறாக பேச வேண்டாம். காவல் நிலையத்தில் உயிரிழப்பு என்பது சாதாரணமான நிகழ்வு அல்ல, காவல்துறை மீதான நம்பிக்கையை பாதிக்கும் பிரச்சனை.</p><p>மக்கள் பாதுகாப்பிற்காக தங்களது உயிரையும், குடும்ப நலனையும் பொருட்படுத்தாமல் காவலதுறையினர் பணியாற்றுகின்றனர்.</p><p>குற்றம் தெருவில் மட்டுமல்ல இணையத்திலும் நடைபெறுவதால், குற்றம் நடக்கும் முன்பே கண்டறிந்து தடுப்பதும் போலீசாரின் கடமை.”</p><p>இவ்வாறு அவர் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வினரின் அமளி, தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-enjoying-to-dmk-darna-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-enjoying-to-dmk-darna-in-assembly#comments</comments><guid isPermaLink="false">d9f72bca-a909-4370-af20-ad8021e7a6ae</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:32:32 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:32:32.727Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4qqslow5/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ தர்ணாவை சிரித்தபடி பார்த்த எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/4qqslow5/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார்.  மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து, பதிலளித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் செய்து அமளியில் ஈடுபட்டனர். இதனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> அமைதியாக சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. </p>]]></content:encoded></item><item><title>விடுதலை அடைந்து 80 ஆண்டுகள்: தொடரும் தீண்டாமைப் பேரவலம்! - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-80-years-since-independence-the-continuing-tragedy-of-untouchability#comments</comments><guid isPermaLink="false">c471d204-ac2d-4842-87b8-59a558450115</guid><pubDate>Mon, 07 Sep 2026 09:10:14 +0000</pubDate><atom:updated>2026-09-07T09:10:14.946Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தற்கொலை முயற்சி,தீண்டாமை கொடுமை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/2w31muu6/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அநீதிகள்</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பட்டியலினத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பணியிடத்தில் தமக்கு இழைக்கப்பட்ட தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவத்திற்காக மேலூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். பட்டியலினப் பணியாளருக்கு சாதியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகள் கண்டிக்கத்தக்கவை.</p><p>தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும்  சசிகலா உள்ளிட்ட சில பணியாளர்களுக்கு எதிராக தீண்டாமைக் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,  ஊராட்சி மன்றத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான  தேநீர்க் குவளைகளை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு, காகிதக் குவளைகளைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அதுமட்டுமின்றி, கம்பூர் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் பெண்மணியின் காலணியை தூக்கி வரும்படி சசிகலா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்  அவரது கணவர் டி.பிரகாஷ்  குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2><strong>தற்கொலை முயற்சி</strong></h2><p>கம்பூர் ஊராட்சி மன்றத்தில் தமக்கு  இழைக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பே  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்துள்ளார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களிடமும் சசிகலா புகார் செய்துள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தான் சசிகலா இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இந்தியா விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலின மக்களின் சமூக, பொருளாதார  முன்னேற்றத்திற்காக ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அவர்களின் முன்னேற்றத்திற்காகவும்,  சமூக நல்லிணக்கத்திற்காகவும் அரசு பதவிகளில் இருப்பவர்கள் துணை நிற்க வேண்டும். ஆனால், அவர்களே தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகளை முன்னெடுப்பவர்களாக இருப்பதை அனுமதிக்க முடியாது.</p><p>தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வரையிலும் புகார் அளிக்கப்பட்ட பிறகும் கூட, அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஏற்க முடியாது. தீண்டாமையை அரசே ஊக்குவிக்கிறதோ  என்ற ஐயத்தைத் தான் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.  இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி,  உண்மை நிலையை  வெளிக்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக வனத்துறையை  மேம்படுத்த ரூ.100.72 கோடியில்  திட்டம் - அமைச்சர் ரஞ்சித் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forest-development-scheme-worth-rs-100-72-crore-announced#comments</comments><guid isPermaLink="false">1cd4fa5b-9b31-45a3-98b6-d2f17845614d</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:45:28 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:45:28.038Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,வனத்துறை,Forest Department,TN assembly,minister ranjith kumar,அமைச்சர் ரஞ்சித் குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ranjith kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/f5e4b57i/Ranjith-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் வனத்துறை மானிய கோரிக்கை மீதான புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஆர். வீ.ரஞ்சித் குமார் வெளியிட்டார். </p><p>அந்த அறிவிப்புகள் வருமாறு:-</p><p>வனப்பாதுகாப்பு வன உயிரின மேலாண்மை மனித வனவிலங்கு மோதல் தணித்தல் மற்றும் கள அளவிலான அமலாக்க பணிகளில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ள வனத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 2026 முதல் 2031 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு வனப் பணி படை ரூ.100.72 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.</p><p>தமிழ்நாடு வனத் தீ மேலாண்மை திட்டம் ரூ 60.58 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.</p><p>வனத்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1947 சீருடை பணியாளர்களுக்கு 12 கோடி ரூபாய் செலவில் அறிமுக பயிற்சி அளிக்கப்படும்.</p><p>அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 இயற்கை பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாநில வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மர தடயவியல் மற்றும் மரப்பொருள் பகுப்பாய்வு மையம் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.</p><p>நடமாடும் வன உயிரின தடயவியல் மற்றும் நோயை கண்டறியும் ஆய்வகம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.</p><p>மனித வனவிலங்கு மோதல் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பல்வேறு வகையான சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும்.</p><p>பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 சூரிய ஆற்றல் மின்னாற்றலில் இயங்கும் படகுகள் வாங்கப்படும்.</p><p>வனத்துறையில் பணிபுரியும் சுமார் 6260 சீருடை பணியாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் செலவில் இலவச பேருந்து பயண அட்டை, ஸ்மார்ட் அட்டையாக வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: முதலமைச்சர் விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-4#comments</comments><guid isPermaLink="false">e1846cb6-eb34-4b3a-b5db-73ce35fb37a1</guid><pubDate>Mon, 07 Sep 2026 08:25:38 +0000</pubDate><atom:updated>2026-09-07T08:25:38.298Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1lr9t5md/vijay04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும் என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபை</a> கூட்டம் 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர்  இன்று காலை கூடியது. சட்டசபையில் கடந்த 3-ந்தேதி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் பதில் உரை</strong></h2><p>இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சிகளின் சட்ட மன்ற குழு தலைவர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினர். இன்று சட்டசபை கூடியதும் அவை முன்னவர் செங்கோட்டையன் எழுந்து பேச தொடங்கினார். அப்போது தி.மு.க.வினர் எழுந்து நின்று கோஷம் போட்டனர். முதலமைச்சர் விஜய்யின் இன்றைய பதில் உரை மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் சட்டசபையில் இன்று ஆவேசமாக பதில் அளித்தார்.</p><p>அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக ஆதாரப்பூர்வமாக முன் வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண்களை பற்றி....</strong></h2><p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்களை தரம் தாழ்ந்து பேச வேண்டாம். இங்கு வன்ம நதி ஓடுகிறது. பெண்களை பற்றி இரட்டை அர்த்தங்கள், 3 அர்த்தங்களை எல்லாம் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள்.</p><p>இதற்கு முன்பு நான் இருந்த இடமும், இப்போது எனக்கு கொடுக்கப்பட்ட இடமும் பெண்கள் கொடுத்ததுதான். பெண்களை பற்றி தேவையில்லாமல் பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>கடந்த காலத்தில் இதே சட்டமன்றத்தில் மேடம் ஜெயலலிதா இன்றைய எதிர்க்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை கேள்விப்பட்டு உள்ளோம்.</p><h2><strong>வன்மம் வேண்டாம்</strong></h2><p>அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் வன்மம் வேண்டாம்.சட்டசபைக்குள்ளேயே ஒரு உறுப்பினர் எலும்பை உடைப்பேன் என்கிறார். இதுதான் அரசியலா? இது எதற்கு? இதையெல்லாம் மக்கள் பார்த்துதான்... பார்த்து தான்... இன்றைக்கு அந்த பக்கத்தில் (எதிர்க்கட்சி வரிசையில்) அமர்ந்து இருக்கிறார்கள். நான் இதை  அறிவுரையாக சொல்லவில்லை. இதுதான் ரியாலிட்டி.</p><p>தி.மு.க. மூத்த உறுப்பினர் ஒருவர் தங்களுக்கு ஓட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். இதே மக்கள் தானே கடந்த 50, 60 ஆண்டு களாக உங்களுக்கும் வாக்களித்தார்கள்.</p><h2><strong>நல்ல பண்பு அல்ல</strong></h2><p>2021 முதல் 2025 வரை நடைபெற்ற குற்றச்சம்பவங்களை ஒப்பிட்டு கூற மனம் இடம் தரவில்லை. போதைக் கலாச்சாரம் என்ற ஒற்றை வார்த்தையை கூறி தப்பிப்பது அரசின் நல்ல பண்பு அல்ல.</p><p>மாணவர்களுக்கு சரியான பாதை இதுவரை வகுத்துத் தரவில்லை என்பது தான் உண்மை. இத்தகைய நிகழ்வுகளை மேம்போக்காக எதிர்கொள்ளாமல் அனைத்து குடும்பங்களில் ஒருவனாக பொறுப்புடன் சிந்தித்து மாணவர் சமுதாயத்தை பொறுப்பானவர்களாக உருவாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். ஊழலற்ற நேர்மையான அரசை வழங்குவதே இந்த அரசின் நோக்கம்.</p><h2><strong>என் சொந்தங்கள்</strong></h2><p>அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை ஏற்க முடியாது. அரசு ஊழியர்கள் தங்களின் பணியில் நேர்மையாக இருக்க வேண்டும். அவப்பெயர் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.</p><p>மிசாவை பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும். நடந்தது, நடக்க போறது எல்லாத்தையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.</p><p>நம் அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. 8 கோடி மக்கள் என் சொந்தங்கள். அவர்களுக்கு அடையாளமாகவே அரசு இருக்கும்.</p><h2><strong>எம்.ஜி.ஆர். பாட்டு</strong></h2><p>மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றே தான் கருத்தில் கொள்வோம் என அன்றே பாடினார் எம்.ஜி.ஆர். அது இவர்களுக்காகதான்.</p><p>என் டேபிளில்  3 பைல் இருக்கு என்றேன். அதை ஓபன் பண்றதுக்கு முன்பு ஒரு சாம்பிள் பார்ப்போம். சர்க்காரியா கமிஷனில் உள்ளதை பார்க்கலாம். வீராணம் திட்டத்திற்கு தனி சேப்டர் உள்ளது.</p><p>அந்த கால கட்டத்தில் வீராணம் டெண்டர் வேணும் என்றால் 2 சதவீதம் கமிஷன் கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டதாக கூறியுள்ளனர்.</p><p>பொன் விழா கண்ட கட்சியின் பவள விழா கண்டது தான்சர்க்காரியா கமிஷன் அறிக்கை.</p><h2><strong>மக்களுக்கு தெரியும்</strong></h2><p>கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. எங்கள் அமைச்சர் கருணாநிதி எனக்கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்டேன். இது எல்லாம் நாங்கள் சொல்லும் குற்றச்சாட்டு இல்லை. </p><p>சர்க்காரியா கமிஷனில் அந்த அறிக்கை கொடுத்து இருக்கும் குற்றச்சாட்டு. </p><p>இன்று எங்கள் அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா என்று கூறுபவர்களுக்கு அவர்களை பற்றி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டாமா?</p><h2><strong>பக்கத்திலே ஆதாரம்</strong></h2><p>மிஸ்டர் கிளீன் என சொல்லிக்கொள்கிறார்களே அப்போதே அப்படினா, இப்போ யோசித்து பாருங்கள். பார்ட்டி பண்ட் என்று சொல்லும் போது ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் அவர்கள் பக்கத்தில் தான் உள்ளது. (முன்னாள் அமைச்சர் நேருவை நோக்கி கையை காட்டினார்.)</p><p>அமலாக்கத்துறை பார்ட்டி பண்டு குறித்து ஆதாரம் கொடுத்து இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த போது 7.5 முதல் 10 சதவீதம் வரை வாங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.</p><h2><strong>யார் இந்த ரத்தீஷ்?</strong></h2><p>டாஸ்மாக்  துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தவறாக அதை பயன்படுத்தினார். அவரது சகோதரர் தலையீடும் இருந்தது. அதுமட்டுமல்ல ரத்தீஷ் என்பவரும் தலையிட்டுள்ளார். அவர் டி.ஆர்.ஒ. உடன் இணைந்து டிரான்ஸ்பர் போன்றவற்றையும் செய்திருக்கிறார். யார் இந்த ரத்தீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர். த.வெ.க ஆட்சி அமைந்த பின் ஏன் துபாய் சென்று ஓடி ஒளிந்துள்ளார்.</p><p>போன ஆட்சியில் டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சில அதிகாரிகளும்  உள்ளனர். இந்த  ரத்தீஷ் உத்தரவு படி தான் டி.ஆர்.ஒ. மாற்றப்பட்டுள்ளார்.</p><h2><strong>கேங்க் தலைவர்கள் யாரு?</strong></h2><p>நம்ம ஆட்சி வந்தவுடன் அவர் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொண்டார். தி.மு.க. எதை எப்போது செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல. கரூர் கேங். அந்த கேங் தலை வர்கள் யாரு?</p><p>விஞ்ஞான ஊழல் குறித்து தெரியுமா? இது தான் அது. ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என்று கேட்டீர்களே? இது போதுமா? இந்த 2 துறையின் ஆதாரத்தை ஓபன் பண்ணதுக்கே இப்படி இருக்கே? ஆதாரம் போதுமா?</p><h2><strong>போலி பிம்பமும்</strong></h2><p>தி.மு.க. இருக்கும் இடத்தில் தான் தப்பு நடக்கும்... தி.மு.க. தான் தப்பே செய்யும். ஊழல் என்று சொன்னால் எல்லோரும் எழுந்து கொள்வார்கள்... உடனே ஆதாரம் கேட்பார்கள். இவர்களின் போலி பிம்பமும் போலி பிராண்டும் உடைக்கப்படும்.</p><p>நம்ம நண்பர்கள் பேசும் போது ஊழல்  என்று பேசினாலே சொன்னாலே உடனே இங்கு எழுந்துடுவாங்க. ஆனால் ஊழல் பண்ணவில்லை என  சொல்லமாட்டார்கள்.  மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர்.</p><h2><strong>மக்கள் அன்பு</strong></h2><p>மக்கள் அன்புக்கு முன் நீங்கள் தோற்பது உறுதி.  மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன். இறைவனும் இயற்கையும் மக்களும் நம்மபக்கம் தான் இருப்பாங்க. இங்கே அமைச்சர் ராஜ்மோகன் சொன்னது தான் நியாபகம் வருது. நான் சும்மாவே காட்டு காட்டு காட்டுவேன்.</p><p>கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது இயல்பு தான். மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு இருப்பதால் 3-ந்தேதி நான் பேசவில்லை. விவரங்கள் எடுத்து வைத்து கொண்டு பேசவேண்டும் என்று தான்  அன்று பேசவில்லை.</p><p>இந்த ஆட்சியில் திட்டங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.</p><h2><strong>திட்டங்கள் ரத்து</strong></h2><p>ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் பல  தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களை  ரத்து செய்துள்ளனர்.</p><p>உதாரணம் அம்மா மினி கிளீனிக். அதே போல் 4 வருடம் கழித்து தான் லேப்டாப் கொடுத்தார்கள்.</p><h2><strong>அரசு முனைப்பு</strong></h2><p>மக்களை சீரழித்தது போதாது என்று கனிம வளங்களை சீரழித்து இருக்கிறது. தி.மு.க. பல ஆண்டுகளாக தேங்கியுள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கில் எழுந்த சர்ச்சை என்னவென்றால்  எப்.ஐ.ஆர். பதியாமலிருந்தது தான். தி.மு.க. ஆட்சியில் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யாமல் தடுத்து இருக்கிறார்கள். அதில் சில சாம்பிள் மட்டும் படிக்கிறேன்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காலந்தாழ்த்தி அறிக்கையை சமர்பித்ததற்காக உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்தது. எங்களது ஆட்சியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றில் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><h2><strong>ஆக்ரோஷம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் பேசும்போது அவரது முகம் கோபத்தில் கொந்தளித்தது. பேச்சும் ஆக்ரோஷமாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>புழல் அருகே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் ‘திடீர்’ ராட்சத பள்ளம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-giant-pothole-on-the-chennai-kolkata-highway</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sudden-giant-pothole-on-the-chennai-kolkata-highway#comments</comments><guid isPermaLink="false">7582395e-4287-4381-b0f4-604b1e5f619f</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:58:01 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:58:01.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புழல்,Puzhal,pothole,பள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kla6g1jn/Puzhal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kla6g1jn/Puzhal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை–கொல்கத்தா நெடுஞ்சாலையில் புழல் அருகே ஏற்பட்ட ராட்சத பள்ளம் காரணமாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். </p><p>புழல் அருகே மாதவரம் நோக்கி செல்லும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சுமார் 15 அடி அகலத்திற்கும் 25 அடி ஆழத்திற்கும் இந்த பள்ளம் காணப்பட்டது. தரையில் புதைக்கப்பட்டு உள்ள ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது.</p><h2><strong>சாலையில் பள்ளம்</strong></h2><p>எப்போதும் பரபரப்பாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் கடும்போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளம் ஏற்பட்ட போது அந்த பகுதியில் வாகனங்கள் செல்லாததால் அசம்பா விதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. </p><h2><strong>போக்குவரத்து நெரிசல்</strong> </h2><p>இந்த திடீர் பள்ளம் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரிக்குச் செல்கின்ற மாணவ - மாணவிகள் மற்றும் அலுவலகங்கள் சென்றவர்கள் வாகன நெரிசலில் சிக்கி சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் செங்குன்றம் செல்லும் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>பதிலற்ற பதிலுரை- உதயநிதி விமர்சனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-4#comments</comments><guid isPermaLink="false">23c9af89-ad0d-4648-b3f9-df68d596bbb2</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:45:37 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:45:37.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,விஜய்,vijay,Udhayanidhi Stalin,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zowdbajk/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zowdbajk/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em> </p><h2><strong>சட்டசபையில் அமளி</strong></h2><p>தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிகை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதி ஸ்டாலின்</a> தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். </p><p>இந்த நிலையில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். </p><p>இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>dummy CM</strong></h2><p>அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?</p><p>பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.</p><p>எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? <br><br>பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.<br><br>எதிர்க்கட்சியின் பதிலைக்…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2096861333694406854?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/grocery-prices-on-rise</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/grocery-prices-on-rise#comments</comments><guid isPermaLink="false">a5ab3c51-e84a-4170-a7ad-55390ca3924f</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:14:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:14:40.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விலை உயர்வு,price hike,Grocery prices,மளிகை பொருட்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kc7blwwz/grocery.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/kc7blwwz/grocery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது.</p><p>தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 20 சதவீதம் வரை சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளன.</p><h2><strong>கடந்த மாதம்</strong></h2><p>கடந்த மாதம் கிலோ ரூ.220-க்கு விற்கப்பட்ட மிளகாய் வற்றல் தற்போது 270 முதல் 300 ரூபாய்க்கு மேல் வரை விற்கப்படுகிறது. தனியா விலை ரூ.150-ல் இருந்து ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>பூண்டு விலை</strong></h2><p>பூண்டு கிலோ 150-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.280 முதல் ரூ.300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இரண்டு மடங்கு பூண்டு விலை கூடியிருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>எண்ணெய்</strong></h2><p>அதேபோல சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்திருப்பது கவலை அளித்துள்ளது. சூரிய காந்தி ரீ பைண்டு சமையல் எண்ணெய் கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.150 ஆக உயர்ந்துள்ளது. ரூ.150 ஆக பாமாயில் விலை தற்போது ரூ.185 ஆக அதிகரித்துள்ளது.</p><h2><strong>வெல்லம்</strong></h2><p>கடந்த மாதம் வரை 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெல்லம் தற்போது ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. இதே போல ரூ.700க்கு விற்கப்பட்ட முந்திரி கிலோ தற்போது ரூ.950 ஆக கூடியுள்ளது. பாதாம் பருப்பு 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை விலை மட்டும் குறைந்துள்ளது. கிலோ ரூ.70 ஆக இருந்த சர்க்கரை தற்போது ரூ.55 ஆக குறைந்துள்ளது.</p><h2><strong>அரிசி</strong></h2><p>மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளான அரிசியின் விலையும கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூடியுள்ளது. 26 கிலோ சாப்பாடு அரிசி மூட்டை ரூ.300 ரூபாய் முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளது. ரூ.1000 ஆக இருந்த அரிசி மூட்டை ரூ.1500 ஆகவும் ரூ.1500 ஆக இருந்த மூட்டை ரூ.2000 ஆகவும் உயர்ந்துள்ளது.</p><h2><strong>நெல் வரத்து குறைந்தது</strong></h2><p>அரிசி விலை உயர்க்குவுக் முக்கிய காரணம் நெல் வரத்து குறைந்தது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு அதிக அளவில் அரிசி வருகிறது. அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தமிழகத்துக்கான வரத்தும் குறைந்துள்ளது.</p><h2><strong>அரிசி வியாபாரிகள்</strong></h2><p>இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. புதிய அரிசி வரத்தை தொடங்கும் போது தான் விலை குறையும் என்று அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>காய்கறிகள் விலை</strong></h2><p>மளிகை பொருட்களின் விலை மட்டுமல்லாது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. இவற்றின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளன. தக்காளி, உருளைக்கிழங்கு விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரி த்துள்ளதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். </p><h2><strong>மாதாந்திர பட்ஜெட்</strong></h2><p>அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மாதாந்திர செலவு அதிகரிக்கிறது. இதனால் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. பொருட்களை போதுமான அளவு வாங்க முடியவில்லை. வருகின்ற பண்டிகை காலங்களில் இது பொதுமக்களை அதிகளவு பாதிக்கும் என்பதால் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>25 ஏக்கர் நிலப்பரப்பளவில் பட்டினப்பாக்கத்தில் அமைகிறது புதிய தலைமை செயலகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-is-coming-up-in-pattinapakkam-spanning-an-area-of-25-acres</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-secretariat-is-coming-up-in-pattinapakkam-spanning-an-area-of-25-acres#comments</comments><guid isPermaLink="false">e14b7e6c-75c7-4714-b609-56726622dc6c</guid><pubDate>Mon, 07 Sep 2026 07:08:44 +0000</pubDate><atom:updated>2026-09-07T07:08:44.637Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தலைமை செயலகம்,புதிய தலைமை செயலகம்,New Secretariat</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/e50fry3b/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமை செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமை செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/e50fry3b/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><p>ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரியமிக்க இந்த தலைமை செயலகத்தில் சட்டமன்ற கட்டிடமும் இயங்கி வருகிறது.</p><h2><strong>போதுமான இடவசதி இல்லை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">தலைமை செயலகம்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் வாகன நெரிசலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை.</p><p>தலைமை செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் எண்ணிக்கையும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் சட்டசபையில் அவர் சமீபத்தில் அறிவித்தார். அதன் அடிப்படையில் அதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.</p><h2><strong>25 ஏக்கர் நிலம்</strong></h2><p>25.16 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பிரதான கட்டிடம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளாக கட்டப்பட உள்ளது. சாந்தோம் பிரதான சாலையில் இருந்து அணுகு சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தின் இன்றைய வழிகாட்டு மதிப்பு ஒரு சதுர அடி  ரூ.22,000 ஆகும். நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.2047 கோடியாக உள்ளது. புதிய தலைமை செயலகம்-சட்டமன்ற வளாகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின் டெக் சிட்டிக்கு எதிரே உள்ள நிலம்   ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பது சிறப்பாகும்.</p><p>அரசின் முறையான கோரிக்கைகளை தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மயிலாப்பூரில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை ஒரு பொதுத்துறைக்கு பயன்படுத்துவதற்காக அனுமதி அளித்துள்ளது. </p><p>இந்த நிலப்பகுதி 1958-ல் வீட்டு வசதி திட்டங்களுக்கு கையகப்படுத்தப்பட்டன. 1963 முதல் 1968-ம் ஆண்டு இடையான 1112 அரசு ஊழியர் குடியிருப்புகளும் 96 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும் கட்டப்பட்டன. </p><p>1986-ல் மேலும் 60 குடியிருப்புகளும் 1998-ல் 112 குடியிருப்புகளும் கட்டப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1380 ஆனது.  இவற்றில் 1284 குடியிருப்புகள் சிதலமடைந்ததால் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதில் இருந்து அந்த இடம் காலியாக உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தனது சொந்த 96 குடியிருப்புகளை இடிப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. </p><p>இந்த நிலையில் சென்னை மாவட்ட கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிலத்தை பயன்படுத்துவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தெரிவித்துள்ளது. </p><p>இதே போல தலைமை செயலகம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 இடத்தை வழங்கவும் கமிஷனர் சமீரன் ஒப்புதல் வழங்கி உள்ளார். நிலம், சாலை அமைப்பதற்கும் சில பயன்பாடுகளுக்கும் வருவாய்த் துறையின் கீழ் உள்ள கூடுதல் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது?- உதயநிதி ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-what-standing-does-the-chief-minister-have-to-speak-about-misa#comments</comments><guid isPermaLink="false">214cb1c5-13a0-4c6b-941d-f2f49be1b1ce</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:53:54 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:53:54.159Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/jcmz9a1e/udhayanidhi02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/jcmz9a1e/udhayanidhi02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>*  சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.</p><p>* முதலமைச்சர் விஜய் மீதே வழக்கு உள்ளது.  ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக வழக்கின் போது தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஒப்புக்கொண்டவர் முதலமைச்சர் விஜய். </p><p>* பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.</p><p>* வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>* எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.</p><p>* முதலமைச்சரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறவினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். </p><p>* கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?</p><p>* விஷ்ணு ரெட்டி, சுஜய் மற்றும் அனில் கன்ட்ரோலில் கனிமவளம் உள்ளது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டுகிறேன். </p><p> * ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். </p><p>* முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்.</p><p>* முதலமைச்சர் பேசியதற்கு ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.</p><p>* திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா, ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும். </p><p>* திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம், அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். </p><p>* மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. </p><p>* கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக IUML எம்எல்ஏ பேசியுள்ளார். </p><p>*  வெளிப்படையாக குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-cm-vijay-3#comments</comments><guid isPermaLink="false">1906caed-b082-4104-a2ce-b754ea61620d</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:28:39 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:28:39.878Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/judpxv4q/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/judpxv4q/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை முதலமைச்சர் விஜய் ஒப்புவித்துள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* சட்டசபையில், முதலமைச்சர் விஜய் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை வைத்து பேசினார். </p><p>* தற்போது திமுக ஆட்சி நடைபெறவில்லை, தவெக ஆட்சி நடைபெறுவதை நீங்கள் நம்புங்கள் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.</p><p>* முதலமைச்சருக்கு 15 கேள்விகளை முன்வைத்திருந்தேன். ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்கவில்லை.</p><p>* முதலமைச்சர் பேசி முடித்ததும் விளக்கம் அளிக்க அனுமதிக்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்தோம். </p><p>* பேச அனுமதிப்பேன் என கூறிய சபாநாயகர் மீண்டும் யாருடைய அழுத்தத்தினாலோ என்னமோ அனுமதியை மறுத்துவிட்டார்.</p><p>* திங்கள்கிழமை பதிலளிப்பதாக சொல்லி கடந்த வியாழக்கிழமை ஓடிவிட்டார் முதலமைச்சர் விஜய்.</p><p>* மனப்பாடம் செய்து ஒப்பிவித்தல் போட்டியைபோல் தவறான கருத்துக்களை ஒப்புவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>* பஞ்ச் டயலாக் என ரீல்ஸ்க்காக மட்டுமே இன்றும் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்.</p><p>* பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் முதலமைச்சர் விஜய்.</p><p>* தி.மு.க.வினர் மீது வழக்கு இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்களும் கூறுகிறோம். </p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-07-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-07-09-2026#comments</comments><guid isPermaLink="false">30614a3f-a74d-480d-9126-29fa9cf55256</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:14:10 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:14:10.276Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/o8ujij5t/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/o8ujij5t/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 130 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.</p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 130 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>05-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p><p>04-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880</p><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>05-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>04-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி பலி - அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sattur-fireworks-factory-blast-worker-killed-case-against-four-including-minister-vanniyarasu-sister#comments</comments><guid isPermaLink="false">f4eaab3e-5bbb-429b-8de8-c61e76aa4d42</guid><pubDate>Mon, 07 Sep 2026 06:08:36 +0000</pubDate><atom:updated>2026-09-07T06:08:36.539Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>fire accident,worker death,Virudhunagar accident,விருதுநகர் விபத்து,Sattur Cracker Blast,சாத்தூர் பட்டாசு ஆலை,வன்னியரசு சகோதரி,Fire cracker Factory</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sattur Cracker Blast ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/6qktawma/Sattur-Cracker-Blast?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">சாத்தூர் </a>அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பட்டாசு ஆலையை</a> மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர்.</p><h2>தொழிலாளி பலி</h2><p>மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி வந்த இந்த ஆலையில் சிறு பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஐந்து அறைகளைக் கொண்ட இந்த ஆலையில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.</p><p>இந்தநிலையில் நேற்று முன்தினம் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (38) என்ற தொழிலாளி, வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் கலவை தயாரித்துக் கொண்டிருந்தார். </p><p>அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>4 பேர் மீது வழக்கு</h2><p>இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொன்னதாலும், வெடி விபத்தில் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யச் சொன்னதால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டுள்ளது.</p><h2>ஆலை மேலாளர் கைது</h2><p>இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களான சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசுவின்</a> சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியது, வெடிபொருட்களை கவன குறைவாக கையாண்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.</p><p>இதில் சாத்தூர் தாலுகா போலீசார் ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை கைது செய்ததுடன் தலைமறைவான மற்ற மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சபாநாயகர் முன் தர்ணா.. திமுக எம்எல்ஏ கையை பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர்  விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mlas-outraged-by-chief-minister-vijays-remarks-commotion-ensues-as-they-surround-the-speaker-and-shout-slogans#comments</comments><guid isPermaLink="false">fc49ff28-54ba-4a17-9c46-f80e955aa42c</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:46:40 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:46:40.124Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக எம்எல்ஏக்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/3x24nqqf/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. </p><p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay">முதலமைச்சர் விஜய்</a> இன்று பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது அவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும் ஊழல், முறைகேடுகள் நடந்ததாகவும் பகரிங்கமாக குற்றம்சாட்டினார். </p><h2>விஜய் பேச்சு</h2><p>"திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள். செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது</p><p>பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது.</p><p>திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள்." என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசினார்.</p> <h2>திமுகவினர் அமளி</h2><p>முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருந்தபோதே திமுக எம்எல்ஏக்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று முழக்கமிடத் தொடங்கினர்.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய் </a>சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பேச அனுமதி வேண்டும் என்று திமுகவினர் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.</p><p>ஆனால் அவர்கள் உடனடியாக பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்துவிட்ட்டார். இதனிடையே அவை முன்னவரான செங்கோட்டையன் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p> <h2>அனுமதி</h2><p>இதைத்தொடர்ந்து திமுகவினரின் அமளி அதிகரித்தது. சபாநாயகர் இருக்கை முன்னே சென்று திமுகவினர் கூச்சலிடத் தொடங்கினர். சில திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எழுந்து, திமுகவினர் பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் சபாநாயகர் திமுகவினருக்கு பேச அனுமதி அளிப்பதாக தெரிவித்தார். </p><p>ஆனால் திமுகவினர் மீண்டும் கூச்சலிட்டதால் அனுமதி தரமாட்டேன் என திட்டவட்டமாக கூற, திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதனிடையே, தனது மேஜைக்கு அருகே சபாநாயகரை நோக்கி கீழே தரையில் அமர்ந்திருந்த மூத்த திமுக எம்எல்ஏ ஒருவர் எழுந்துகொள்ள அவரது கையை பிடித்து முதலமைச்சர் விஜய் உதவினார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-members-leaves-from-assembly#comments</comments><guid isPermaLink="false">97b07f2c-3314-44bc-aaf9-913194ab0f25</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:45:04 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:45:04.446Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழ்நாடு சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் இருந்து தி.மு.க.வினர் வெளிநடப்பு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/rps2xeb6/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். </p><p>மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கிடையே குறுக்கிட்ட அவை முன்னவர் செங்கோட்டையன் சட்டமன்ற நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தார். </p><p>இதனிடையே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் பேச அனுமதியுங்கள் என முதலமைச்சர் விஜய் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். </p><p>இதை அடுத்து,  தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதிக்குமாறு முதலமைச்சர் விஜய்  சொல்லியுள்ளார் என சபாநாயகர் தெரிவித்தார். ஆனால் திமுக உறுப்பினர்கள் பேச மீண்டும் அனுமதி மறுத்தார் சபாநாயகர். </p><p>இதனை தொடர்ந்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடக மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.37 அடி உயர்வு - 12,000 கனஅடி திறப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-today-water-release-for-irrigation-from-mettur-dam-12000-cusecs-increase#comments</comments><guid isPermaLink="false">5a8bd17b-c6fb-4ccc-a98f-5ea3349ca481</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:44:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:44:00.084Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water,டெல்டா பாசனம்,Delta Irrigation,Hogenakkal Water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/zv3ma52q/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை குறைவால் நீர்வரத்து குறைந்தது, ஆனால் கர்நாடக மழையால் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை</a> நீர்மட்டம் 92.37 அடியாக உயர்ந்து, டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><h2>நீர்வரத்து சரிவு</h2><p>கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. </p><p>இதனால் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசனத்துக்கு</a> ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகாவில் </a>பெய்த மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. </p><p>இதற்கிடையே அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 4-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. </p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 90 அடியை தாண்டியது.</p><h2>பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு</h2><p>இதையடுத்து முதல்- அமைச்சர் விஜய் கடந்த 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். </p><p>முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட தண்ணீர் பின்னர் படிபடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வந்தது. </p><p>நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.</p><p>மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 92.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 512 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் 55.40 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.</p><p>அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் குறையும் நிலை உருவாகி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இதே போல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81">ஒகேனக்கல் காவிரி ஆற்றில்</a> இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. </p><p>இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. </p><p>கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான் - சட்டசபையில் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-speech-after-anna-mgr-and-ntr-it-is-vijay#comments</comments><guid isPermaLink="false">5c1886a9-0bad-495f-b8c8-a52253014f5b</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:26:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:26:13.232Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1pn48i12/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* கரூர் கேங் என்று என்னவொறு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள் ஆவலாக உள்ளனர். </p><p>* மக்களை ஏமாற்றிய போலி பிம்பம், திமுகவின் பிராண்ட் உடைக்கப்படும். </p><p>* அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான், இறைவனும் இயற்கையும் என்றுமே நம் பக்கம் தான் இருப்பார்கள்</p><p>* திமுக அரசு பொறுப்பேற்றதும் அதிமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது ஏன்?</p><p>* அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், அம்மா பைக், ஆடு மாடு வழங்கும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. </p><p>* திமுக ஆட்சியில் மூடுவிழா கண்ட திட்டங்களுக்கு பட்டியலிட்டால் ஒரு நாளே போதாது. </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் 4 ஆண்டுகள் மடிக்கணினி கொடுக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டது. </p><p>* திமுக செய்த தவறுகளை மக்கள் நினைவில் வைத்திருப்பதால் தான் தேர்தலில் தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். </p><p>* மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக உள்ள த.வெ.க. அரசு இனியும் அப்படி தான் இருக்கும். </p><p>* சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசவில்லை என நக்கல், நையாண்டியாக எதிர்க்கட்சியினர் பேசினார்கள்.</p><p>* ஒவ்வொரு உறுப்பினர் கேள்விக்கும் எல்லா நேரங்களிலும் இடமளித்து பேசுவது தலைமைக்கு அழகல்லா. </p><p>* முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பதுதான். </p><p>* திமுக ஆட்சிக்காலத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. </p><p>* திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றபோது அரசியல் தலையீட்டால் FIR பதிவதில் கால தாமதம் அனைவரும் அறிந்ததே. </p><p>* சென்னை விருகம்பாக்கத்தில் 2022-ல் நடந்த திமுக பொதுக்வட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்துமீறல் தொடர்பாக பெண் காவலரிடன் புகாரை வாபஸ் பெற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 2023-ல் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. </p><p>* கடலூர் எம்பி ரமேஷ் முந்திரி ஆலையில் பணியாற்றியவர் மரணம், தற்கொலை என சித்தரிக்கப்பட்டது. </p><p>* ஆளுங்கட்சியினர் தொடர்புடைய வழக்கில் கால தாமதம், திமுக நிர்வாகிகள் காப்பற்றப்ப்டடது என பெரிய பட்டியல் உள்ளது. </p><p>* தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>* மாநிலத்தின் முன்னேற்றம் என்பது குடிமக்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது. </p><p>* அரசை குறைகூறும் நோக்கில் கூறிய கருத்துக்களையும் மக்கள் பாதுகாப்பு கருதி பொறுப்புடன் எடுத்துக்கொள்கிறோம். </p><p>* எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்தோடு கூறிய கருத்துகளாக இருந்தாலும் அதில் பாகுபாடு பார்க்க மாட்டோம். </p><p>* யார் மீது பழி போடலாம் என எதிர்க்கட்சிகள் போல் சிந்தித்து பழிபோடும் அரசியலை செய்ய மாட்டோம் என்றார். </p><p>எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு குரலை பார்த்து சிரித்தவாறு முதலமைச்சர் விஜய் பதிலுரையை முடித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உறுதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/impartial-inquiry-into-police-deaths-cm-vijay-assures-assembly#comments</comments><guid isPermaLink="false">e1b833f6-6433-4f5c-82c9-2632672cdc01</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:17:19 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:17:19.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,Custodial deaths,காவல் மரணங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/dyij7nvt/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.</p> <p>தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது, </p><p>"சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசினர். </p><p>காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை.</p> <p>எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படி உரிய விசாரணை மேற்கோள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மாஜிஸ்த்ரேட் விசாரணையும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p> <p>ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை.&nbsp;தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது.&nbsp;</p><p>காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்க கண்காணிப்பு, பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது." என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>பழைய பொருட்களை வீடுகளுக்கே சென்று பெற்று அழிக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம்: மக்களிடையே பெரும் வரவேற்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-corporation-scheme-collecting-old-items-from-homes#comments</comments><guid isPermaLink="false">7a1a6b87-86b5-40eb-a464-10e4a2f6e4cd</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:11:27 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:11:27.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,Namma Chennai,பெருநகர சென்னை மாநகராட்சி,Greater chennai corporation,நம்ம சென்னை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/l8gjef6e/CHENNA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed">பெருநகர சென்னை மாநகராட்சிப்</a> பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, மெத்தை, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேகரித்து எாிக்கும் சிறப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் இதுவரை 39.93 மெட்ரிக் டன் எடையுள்ள பழைய பழுதுபட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு எாிக்கப்பட்டுள்ளன.</p><p>பொதுவாக வீடுகளைப் புதுப்பிக்கும்போதோ அல்லது பண்டிகைக் காலங்களிலோ மக்கள் பயன்படாத சோஃபா, மெத்தைகள் மற்றும் உடைந்த மரச்சாமான்களை வீதி ஓரங்களிலோ அல்லது குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலோ வீசிச் செல்கின்றனர். இதனால் நகரத்தின் தூய்மை கெடுவதோடு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்படுகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற பெரிய கழிவுப் பொருட்களை எளிதாக அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.</p><h2>39.93 மெட்ரிக் டன் கழிவுக<strong>ள் எாிப்பு</strong></h2><p>கடந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த இந்த விசேஷ சேவையின் கீழ், பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இதுவரை 39.93 மெட்ரிக் டன் அளவிலான பயன்பாடற்ற சோஃபா, மெத்தை மற்றும் பழைய பொருட்கள் வீடுகளில் இருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்டுத் தூய்மைப் பணியாளர்களால் பாதுகாப்பான முறையில் எாிக்கப்பட்டுள்ளன.</p><h2>ஒவ்வொ<strong>ரு வார சனிக்கிழமையும் சேவை</strong></h2><p>பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நேரடியாக வீடுகளுக்கே சென்று கழிவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்கின்றனர். இந்த எளிய நடைமுறையால் வீடுகளில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எறிய சிரமப்பட்டு வந்த சென்னை மக்களுக்குப் பெரு பெருமூச்சு அளிப்பதாக அமைந்துள்ளது.</p><h2>முன்பதி<strong>வு செய்</strong>யும் எளிய முறைகள்</h2><p>பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கு மாநகராட்சியைத் தொடர்பு கொள்ள இரண்டு வழிகள் வழங்கப்பட்டுள்ளன. 'நம்ம சென்னை' செயலி வழியாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கோரிக்கை விடுக்கலாம். செயலியைப் பயன்படுத்த முடியாதவர்கள் '94450 61913' என்ற வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் அளித்தால், மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை தோறும் நேரடியாக வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களைப் பெற்றுக்கொள்வர்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச நதி, வன்ம நதி.. இரட்டை அர்த்த பேச்சு பற்றி சட்டசபையில் பொங்கிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-are-aware-of-the-humiliations-jayalalithaa-suffered-in-this-very-assembly-at-the-hands-of-this-very-opposition-party-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">70850bd4-17c6-48c2-9272-bb49c5ed4498</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:02:08 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:02:08.025Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uwtob23t/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார்.</p> <p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">விஜய் </a>தனது பதிலுரையில்,</p><p>"பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் உறுப்பினர்கள் வைத்த கருத்துக்கள் பரிசீலித்து முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>குற்றத்தில் சிக்கக்கூடிய இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவதற்கு முன்பே காப்பாற்றக்கூடிய சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் மக்கள் அச்சமின்றி வாழவேண்டும் என்பதும் ஊழலற்ற நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். </p><p>கருத்துரிமை, பேச்சுரிமை என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.   அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக் கூடாது. ஆர்த்தோ சர்ஜன் போல பேரவைக்குள்ளேயே எலும்பை உடைப்பேன் என்று ஒரு எம்.எல்.ஏ. பேசுகிறார். சட்டப்பேரவையில் எலும்பை உடைப்பேன் என்று பேச்சு எதற்கு இதுதான் அரசியலா? இப்படிப் பேசி பேசித்தானே, இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். </p><p>தி.மு.க.வினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை. மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும். </p><p>இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள்.</p> <p>அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் மக்களையும் பெண்களையும் தரம் தாழ்ந்து பேசுவது வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். சமீப காலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதியாக ஓடுகிறது. வன்ம நதியாக ஓடுகிறது. இதை மக்கள் பார்க்கிறார்கள். </p><p>பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதை பெண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நம் வீட்டில் இருப்பதும் அதே பெண்கள் தான் என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்.</p><p>மக்கள் எனக்கு இதற்கு முன் கொடுத்த இடமும், தற்போது கொடுத்த இடமும் கிடைக்க காரணம் நம் வீட்டு பெண்கள் தான். எனவே பெண்களை பற்றி அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தன் கடமையை செய்யும்.</p><p>இது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டசபையில் இதே எதிர்கட்சியால் எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விபட்டியிருக்கிறோம். எனவே வருங்காலத்தில் பெண்களுக்கு அதுபோல நடந்துவிட கூடாது." என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆதாரம் போதுமா?.. சட்டசபையில் கர்ஜித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-indictment-dmk-3#comments</comments><guid isPermaLink="false">18be0a35-96cb-4bac-808a-d16f2fae8acf</guid><pubDate>Mon, 07 Sep 2026 05:00:52 +0000</pubDate><atom:updated>2026-09-07T05:00:52.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/1gb6jerd/vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக ஆட்சிக்காலத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தை காட்டி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது:-</p><p>* 1970 களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கு சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு கமிஷன் கேட்டது தொடர்பாக ED அறிக்கை வைத்து முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கினார். </p><p>* 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரின் மருமகன் டெண்ருக்கு ரூ.29 லட்சம் தவணை முறையில் லஞ்சம். கலைஞர் கருணாநிதி மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கை தான் பேசுகிறேன். முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளது.</p><p>* அரசியல் பாரம்பரியம் தெரியுமா சீனியாரிட்டி தெரியுமா என பேசுவோர் குறித்து தான் மக்களுக்கு எடுத்து சொல்கிறேன். சர்க்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படியுங்கள்.</p><p>* ஆதாரத்தை பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தேடுவது தான் திமுகவின் பழக்கம். 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி திமுக பெற்றதாக அமலாக்கத்துறையை கூறியுள்ளது.</p><p>* கட்சி நிதியில் நேரடி பயனாளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி இருந்ததாக ED அறிக்கையில் உள்ளது.</p><p>* திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் அறிக்கையில் உள்ளது.</p><p>* முன்னாள் அமைச்சருடன் பல ஐஏஎஸ் அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. </p><p>* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?</p><p>* திமுகவினர் எப்போது எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள்.</p><p>* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>* மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.</p><p>* ஆதாரம் வேணும் ஆதாரம் வேணும் என சொல்வோர்களுக்கு தற்போது ஆதாரம் போதுமா?.</p><p>* திமுக இருக்கும் இடத்தில் தான் தவறு நடக்கும், தவறு நடக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும்.</p><p>* ஊழல் செய்வோர் தான் ஆதாரம் கேட்பர், ஊழலே செய்யாதோர் அமைதியாக இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார். </p>]]></content:encoded></item><item><title>காட்டாங்கொளத்தூர் அருகே சோகம்: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tragedy-near-kattankolathur-minister-jegatheswaris-car-hits-youth-killed#comments</comments><guid isPermaLink="false">6928a527-f37a-4597-aea3-451e1282072b</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:50:16.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காட்டாங்கொளத்தூர்,TNAssembly,சட்டசபைக் கூட்டத் தொடர்,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeswari,Kattankulathur</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagadeeswari  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/wdgw1ne5/minidatte.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p>தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly">சட்டமன்றக் கூட்டத்தொடரில் </a>பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து இன்று அதிகாலை சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். </p><p>அமைச்சரின் அரசு வாகனத்திற்கு முன்பாகக் பாதுகாப்பு வாகனமும், அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் குடும்பத்தினர் பயணித்த அவருக்குச் சொந்தமான மாருதி எர்டிகா காரும் அணிவகுப்பாக வந்துகொண்டிருந்தன. காலை நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><h2>இளைஞ<strong>ர் உயிரிழப்பு</strong></h2><p>ஹோண்டோ டியோ ரக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர், அதிவேகமாக வந்த கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வுத் துறை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இறையன்பு (வயது 26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>வாகன<strong>ம் பறிமுதல்</strong></h2><p>விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>மேலும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, அதிவேகப் பயணமா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தீபாவளி  ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன! பயணிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/diwali-train-tickets-sell-out-within-minutes-passengers-shocked#comments</comments><guid isPermaLink="false">9a235f97-f233-4ea8-9361-06b88685afca</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:24:42 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:24:42.693Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Diwali,IRCTC,train tickets,train tickets sold out,IRCTC இணையதளம்,இந்தின் ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  train tickets sold out   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/uxv2pkhz/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன. </p><p>இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பண்டிகைக்கு முன்னதாகவே சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், வார இறுதி மற்றும் பண்டிகைக்கு முந்தைய நாட்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்திய ரெயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதியின்படி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today">IRCTC இணையதளம் </a>மற்றும் ரெயில் நிலைய கவுண்டர்களில் தொடங்கியது.</p><h2>நிமிடங்களி<strong>ல் தீர்ந்த டிக்கெட்டு</strong>கள்</h2><p>முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னை மத்திய ரெயில் நிலையம், எழும்பூர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை மற்றும் தூத்துக்குடி நோக்கிச் செல்லும் முக்கிய விரைவு ரெயில்களின் அனைத்து டிக்கெட்டுகளும் காலி ஆகின. </p><p>இதனால் இணையவழியிலும் ரெயில் நிலையங்களிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். IRCTC இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பயணிகள் டிக்கெட் பதிவு செய்ய முயன்றதால், இணையதள சேவை மந்தமடைந்ததுடன், சில நிமிடங்களிலேயே 'காத்திருப்போர் பட்டியல்' நிலைக்கு ரெயில்கள் சென்றன.</p><h2>அடுத்தடு<strong>த்த நாட்களுக்கான மு</strong>ன்பதிவு அட்டவண</h2><p>நவம்பர் 7 பயணம்: இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (செப்டம்பர் 8) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.</p><p>நவம்பர் 8 பயணம்: நாளை மறுநாள் (செப்டம்பர் 9) முன்பதிவு செய்யலாம்.</p><p>திரும்பி வருவதற்கான முன்பதிவு: தீபாவளி முடிந்து மீண்டும் பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.</p><h2>சிறப்பு ரெயில்கள் இய<strong>க்கக் கோ</strong>ரிக்கை</h2><p>வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்டதால், தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகக் கூடுதலான சிறப்பு ரெயில்களைத் தெற்கு ரெயில்வே உடனே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/everyone-is-equal-before-the-law-no-matter-who-they-are-chief-minister-vijays-response-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">c419d21a-38b3-467c-b73b-fcae64bc4b08</guid><pubDate>Mon, 07 Sep 2026 04:21:46 +0000</pubDate><atom:updated>2026-09-07T04:21:46.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தமிழக சட்டசபை,பட்ஜெட் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/c360gad3/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்துள்ளார். </p><p>அவையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>தனது பதிலுரையில், </p><h2>சட்டம் ஒழுங்கு</h2><p>ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பதால் மட்டுமோ தொழிற்சாலைகள் வருவதால் மட்டுமோ தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் உண்மையான முன்னேற்றம் இருக்கிறது. </p><p>சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தான் புதிய தொழில்முதலீடுகள் வளரும், வேலைவாய்ப்பு உருவாகும், சுற்றுலாத்துறை வளரும். பெண்களும் இளைஞர்களும் சுதந்திரமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள். எனவே காவல்துறை குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், மக்களின் நம்பிக்கைக்கு அடித்தளமான அமைப்பாகும். </p> <p>சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாகவும், சட்டத்தையும், பிறரின் உரிமைகளையும் மீறுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் இருக்க வேண்டும். ஒரு காவலர் இந்த இரண்டு பண்புகளையும் கொண்டவராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எந்த அச்சமும் இடையூறும் இன்றி பணியை நேர்மையாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.</p><p>முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்திற்கும் காவல்துறையின் சட்டபூர்வ நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் உரிமை இல்லை என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளி யாராக இருந்தாலும் எந்த கட்சியை சார்ந்து இருந்தாலும் நடவடிக்கை வேண்டும் என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே இந்த அரசின் நிலைப்பாடு.</p> <p>இந்த அவையில் பலரும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அரசை குறைகூறும் நோக்கில் கருத்துக்களை கூறியவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் அக்கறையையும் பொறுப்புணர்வையும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து ஏற்பதில் பாகுபாடு காட்டமாட்டோம்.</p><p>சட்டம் ஒழுங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று அன்றே திருவள்ளுவர், எந்த சார்பும் அற்று யாருக்கும் சார்பு அற்று நடுநிலையுடன் நீதி வழங்குவதே உண்மையான ஆட்சி என கூறியுள்ளார். தந்தை பெரியார் சமூக நீதியையும் காமராஜர் நேராமையான் நிர்வாகத்தையும், பேரறிஞர் அண்ணா மக்கள் நல ஆட்சியை வலியுறுத்தினார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஏழை எளியோரின் நலனை தனது அரசின் மையமாக கொண்டிருந்தார். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்க்கும்போது காவல்துறை என்பது அதிகாரத்தின் அடையாளமாக இருக்கக்கூடாது. அது மக்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் அடையளமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.</p><p>குற்றத்தை பார்க்கும் பார்வையும் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்ட நிலைக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்றுவிட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி மற்றவர்கள் ஒதுக்கிவிட முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியது அல்ல.</p><p> ஒவ்வொரு குற்றத்தின் பின்னால் முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம். கடந்த காலங்களில் சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதைப்பொருள் கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம், நிலம், அதிகாரம் மீதான போட்டி, கலப்புத்திருமண எதிர்ப்பு, உள்ளூர் அரசியல் உள்ளிட்ட பல சமூக காரணிகள் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம். </p><p>எனவே 30.7.2026 அன்று நடந்த காவல்துறை மாநாட்டில் காவல்துறை பணி குற்றவாளியை கைது செய்வதோடு முடிந்துவிடக்கூடாது. குற்ற சூழலை மாற்றி குற்றம் நடைபெறுவதை தடுப்பதே இலக்கு என வலியுறுத்தினேன். </p><p>இதற்கு ஒவ்வொரு காவல்நிலையமும் அங்கிருக்கும் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் நிலவும் பிரச்சனை குறித்து காவல்துறை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த சட்டமொழுங்கு என்பது தெருவில் நடைபெறும் குற்றங்களோடு மட்டும் முடியவில்லை. சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. </p><p>இணைய மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெறுகின்றன. இதற்கு தொழில்நுட்பம் மட்டும் காரணம் அல்ல. டிஜிட்டல் அறிவு குறைவு, விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை, சரிபார்க்காமல் முதலீடு செய்வது இதற்கு வழிவகுக்கின்றன. எனவே சைபர் குற்றங்களை வளர்க்க, காவல்துறை தொழில்நுட்ப திறனை அதிகரிப்பது மட்டும் போதாது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து செயல்படும் ஒரு வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குற்றத்திற்கு இரையாகாமல் தடுப்பது தான் வெற்றி." என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>கடற்கரை- தாம்பரம் இடையே இன்று முதல் இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயங்கும்- அதிகாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/officer-inform-night-time-electric-trains-between-beach-and-tambaram-will-operate-as-usual-starting-today#comments</comments><guid isPermaLink="false">e2e0f371-b84a-4097-a07e-558eaab213b9</guid><pubDate>Mon, 07 Sep 2026 03:11:00 +0000</pubDate><atom:updated>2026-09-07T03:11:00.315Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,கடற்கரை ரெயில்,Tambaram Train,Beach Train,தாம்பரம் ரெயில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ffwk3mel/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/ffwk3mel/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.</strong></em></p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சுமார் ரூ.842 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய பகுதியாக, பயணிகள் வசதிக்காக பிரம்மாண்ட இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2><strong>மின்சார ரெயில்கள் ரத்து</strong></h2><p>இந்த பணியின் காரணமாக கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாகவும் இரவு நேர <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயில்கள்</a> ரத்து செய்யப்பட்டன.</p><p>இந்தநிலையில் இன்று முதல் கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. </p><p>எனவே, இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும். அடுத்தகட்டமாக ரெயில் மாற்றங்கள் குறித்த புதிய அறிவிப்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வரும் வரையில் இதே நடைமுறை தொடரும்" என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார்கள்&quot; - ஐ.யு.எம்.எல் எம்.எல்.ஏ பேச்சு வைரல் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-offered-crores-of-rupees-and-a-ministerial-post-iuml-mlas-remarks-go-viral</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-offered-crores-of-rupees-and-a-ministerial-post-iuml-mlas-remarks-go-viral#comments</comments><guid isPermaLink="false">b054ee61-1870-4b1c-b39e-803213f3044a</guid><pubDate>Mon, 07 Sep 2026 01:09:35 +0000</pubDate><atom:updated>2026-09-07T01:09:35.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IUML,tvk,ஐயுஎம்எல்,தவெக அரசு,சையத்பாருக் பாஷா,Sayed Farooq Basha</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/yxfx68ye/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சையத் பாருக் பாஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ சையத் பாருக் பாஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/yxfx68ye/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“தேர்தலுக்கு பின்னர் கோடிக்கணக்கான பணத்துடன் அமைச்சர் பதவி தருவதாக கூறினார்கள்' என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. சையத் பாருக் பாஷா பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D">இந்திய யூனியன் முஸ்லிம் லீக் </a>மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக <a href="https://www.maalaimalar.com/topic/vaniyambadi">வாணியம்பாடி </a>தொகுதி எம்.எல்.ஏ. சையத்பாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். </p><p>அப்போது அவர், "யாரிடமும் இணைந்து ஏமாந்தது போதும். இனி யாரிடமும் ஏமாற தயாராக இல்லை.</p><p>சட்டமன்றத்தில் சோபா மாடல் அரசு என்று விமர்சனம் செய்து வருகின்றனர். என்னையும், ஷாஜகானையும் சந்தித்து கோடி, கோடியாக பணத்தை எடுத்து வந்து எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக சொன்னார்கள். </p> <h2>விரட்டி விட்டோம்</h2><p>நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல, கொள்கைக்கு சாய்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கையோடு தான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.</p><p>த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் கூட்டணிக்கு பின் ஷாஜகானுக்கு தற்போது பூங்கொத்து கொடுத்து அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று தலைவர் கேட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான ஒரு பதவி வழங்கப்பட உள்ளது.</p> <h2>தி.மு.க. முயற்சி</h2><p>கடை கோடியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளையும் நாங்கள் எம்.எல்.ஏ.வும், அமைச்சராகவும் தான் பார்ப்பேன். உங்களால் தான் நான் எம்.எல்.ஏ.வாக ஆகி உள்ளேன். மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் மொழியால் தமிழனாகவும் இனத்தால் இந்தியனாகவும் இருக்கிறோம்.</p><p>அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பதற்காக தி.மு.க. முயற்சி செய்து எங்களை ஆதரிக்க சொன்னதால் எங்களுக்கு அந்த கொள்கை ஏற்றுக்கொள்ளாமல் அந்த தருணத்திற்காக தான் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.</p> <p>நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. த.வெ.க. தானாக முன்வந்து கொள்கைக்காக எங்களை ஆதரித்து உள்ளது. ஆகவே ஆட்சியில் பங்கு தருகிறோம் என தானாக முன்வந்து அமைச்சர் பதவியை வழங்கினார்கள்." என பேசியுள்ளார்.</p><p>அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதப்பொருளாக மாறியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலமைச்சர் விஜய் இன்று பதிலுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-cm-vijay-to-answer-opposition-questions#comments</comments><guid isPermaLink="false">6ca7f7bb-77ee-46de-b58d-c0fcc3b9831d</guid><pubDate>Mon, 07 Sep 2026 00:40:13 +0000</pubDate><atom:updated>2026-09-07T00:40:13.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN assembly,தமிழ்நாடு சட்டப்பேரவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/mnuhks8q/Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-07/mnuhks8q/Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">ஜோசப் விஜய்</a> பதிலுரை வழங்க இருப்பதை ஒட்டி சபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துவிட்டார். இந்த நிலையில், அரசினர் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு:</h2><p>இதுவரை 18 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு ஆட்சியமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் சூட்டலாம்.</p><p>கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.</p><h2>முதலமைச்சர் பதிலுரை:</h2><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன்.தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும்.</p><p>எல்லாவற்றிற்கும் தெளிவான பதில் சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.</p><p>இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>10 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: ஆனைகட்டியில் வாரச்சந்தையை திறந்து வைத்தார் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-kanimozhi-santhosh-inaugurates-anaikatti-weekly-market#comments</comments><guid isPermaLink="false">9e0d5e01-6352-4a24-842f-758d171f2083</guid><pubDate>Sun, 06 Sep 2026 15:09:37 +0000</pubDate><atom:updated>2026-09-06T15:09:37.456Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,வாரச்சந்தை,weekly market,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi Santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/8uy9w1zf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆனைகட்டியில் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.</p><p>ஆனைகட்டி பகுதி மக்களின் கடந்த 10 ஆண்டுகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கான இடத்தை வாடகைக்கு எடுத்து <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88" rel="nofollow">வாரச்சந்தை</a> செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இந்த முயற்சிக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் எடுத்த முயற்சியும் முக்கிய பங்காற்றியது. வாரச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஆனைகட்டி மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தமிழக வெற்றிக் கழக அரசு (தவெக அரசு) உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.</p><p>மேலும், மலைவாழ் மக்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் வகையில் சந்தை தொடர்ந்து செயல்படுவதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்த வாரச்சந்தை மூலம் ஆனைகட்டி மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதி மக்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 10 அடிக்கு நடைமேடை அவசியமா?- சவுமியா அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/soumiya-anbumani-questions-10-foot-walkway-around-pallikaranai-marsh#comments</comments><guid isPermaLink="false">aff7c207-7313-4f8b-a9d9-88859280c8ca</guid><pubDate>Sun, 06 Sep 2026 13:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-06T13:16:20.091Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Sowmya Anbumani,சௌமியா அன்புமணி,pallikaranai marsh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dr.Sowmiya Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ekoco165/sowmya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைப்பது அவசியமா என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று பள்ளிக்கரணை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2" rel="nofollow">சதுப்பு நில</a> பகுதிகளை பார்வையிட்டார். </p><p>அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-</p><h2>நடைமேடை தேவையா?</h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு கம்பி வேலி போட்டால் போதும். ஆனால் ரூ.21 கோடி செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி நடைமேடை அமைக்கிறார்கள்.</p><p>10 அடிக்கு கான்கிரீட் கிரானைட் போட்டு நடைமேடை அமைப்பது அவசியமா? தடுப்பு சுவர் தேவையா? இது வெள்ளம் வரும் பகுதி.</p><p>சுற்றுச்சுவர் கட்டினால் சதுப்பு நில பகுதிக்கு தண்ணீர் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து விடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள்.</p><p>கடலுக்குள் வெள்ளம் செல்ல வழிவகை செய்ய வேண்டுமே தவிர அதை தடுக்க கூடாது. முக்கியமாக ராம்சார் நிலத்தில் எந்த கட்டுமான பணிகளையும் மேற் கொள்ளக் கூடாது. </p><p>அதற்காகத்தான் பசுமை தாயகம் சார்பில் இன்று சதுப்பு நிலப் பகுதிகளை பார்வையிட்டோம். கடன் வாங்கி நடைமேடையும், சுற்று சுவரும் அமைக்கும் திட்டம் மக்களுக்கு தேவையில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில்… <a href="https://t.co/CgeA0vZznG">pic.twitter.com/CgeA0vZznG</a></p>&mdash; Sowmiya Anbumani (@Sowmiyanbumani) <a href="https://x.com/Sowmiyanbumani/status/2096545531032195130?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தவெக பிரமுகர் கொலை: காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kannan-murder-case-two-chennai-police-officers-shifted#comments</comments><guid isPermaLink="false">4a0808f1-09eb-44ac-8b8f-38d8f51ac95e</guid><pubDate>Sun, 06 Sep 2026 12:24:31 +0000</pubDate><atom:updated>2026-09-06T12:24:31.628Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Murder,கொலை,Police Inspectors,tvk,காவல் ஆய்வாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-06/ks80mhmw/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுப்பட்டுள்ளார்.</p><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ரோகிணியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>தவெக நிர்வாகி</h2><p>சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">அதிமுக</a>-வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.</p><h2>ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை</h2><p>இந்தநிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.</p><p>இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.</p><p>இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். </p><p>கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-functionarys-murder-udhayanidhi-stalin-criticizes-the-state-of-law-and-order" rel="nofollow">தவெக</a>-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><h2>5 பேர் கைது</h2><p>சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>