<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 20 Sep 2026 10:22:18 +0000</lastBuildDate><item><title>சிவகங்கை இரட்டை கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக அரசு வேலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-temporary-government-job-for-the-affected-family</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-temporary-government-job-for-the-affected-family#comments</comments><guid isPermaLink="false">e60db036-080c-47e6-9d03-2c6b1bac637b</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:13:23 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:13:23.899Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivagangai,government job,Double murder,இரட்டை கொலை,அரசுப் பணி,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/l49tzkvc/New-Project-2026-09-20T154232.893.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை கொலை - பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தற்காலிக அரசு வேலை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/l49tzkvc/New-Project-2026-09-20T154232.893.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/amp/story/news/tamilnadu/sivagangai-district-double-murder-case-13-arrested-including-minor">இரட்டைக் கொலை</a> சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையில் தற்காலிக அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.</p><h2>கொலை சம்பவம்</h2><p>கடந்த செப்டம்பர் 16 அன்று சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி என்ற இரு இளைஞர்கள் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். </p><p>இவர்களின் உடல்களை வாங்க மறுத்து, இழப்பீடு மற்றும் அரசு வேலை கோரி உறவினர்கள் 4 நாட்களாகத் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். </p><p>இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இன்று (செப்.20) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><h2>13 பேர் கைது</h2><p>இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிறுவன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காசிமேட்டில் மீன் விற்பனை மந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/purattasi-month-fish-sales-kasimedu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/purattasi-month-fish-sales-kasimedu#comments</comments><guid isPermaLink="false">b3d253a1-c83b-42da-af2f-b1019d20211d</guid><pubDate>Sun, 20 Sep 2026 10:07:38 +0000</pubDate><atom:updated>2026-09-20T10:07:38.931Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புரட்டாசி மாதம்,புரட்டாசி,purattasi,மீன் மார்க்கெட்,காசிமேடு மீன் மார்க்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/xovrsfin/kasimedu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காசிமேடு மீன் மார்க்கெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/xovrsfin/kasimedu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மீன்வாங்க கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.</p><p>காசிமேடு மீன் மார்க்கெட்டில் வார இறுதி நாட்களில் மீன் விற்பனை களை கட்டும். தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ள நிலையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று எதிர்பார்த்த அளவு மீன் விற்பனை இல்லை. மீன்வாங்க கூட்டம் குறைவாக இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம் இன்று களை இழந்து காணப்பட்டது.</p><h2><strong>மீன் பிரியர்கள்</strong></h2><p>எனினும் சிறிய வகை, பெரிய வகை மீன்கள் வரத்து வழக்கம்போல் அதிகமாகவே விற்பனைக்கு வந்து இருந்தன. ஆனாலும் மீன்களை வாங்குவதற்கு மீன் பிரியர்கள், சில்லரை வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.</p><h2><strong>வியாபாரிகள்</strong></h2><p>உணவகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் மொத்த வியாபாரிகள் மீன்களை குறைந்த விலையில் அள்ளி சென்றனர்.</p><p>அதிகாலை முதலே மீன் வாங்க பெரிய அளவில் கூட்டம் இல்லாததால் காசிமேடு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மீன் விலை சற்று குறைவாக இருந்தன. வஞ்சிரம் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கொடுவா ரூ.600, சங்கரா ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது.</p><p>காசிமேட்டில் மீன் விலை (கிலோவில்) வருமாறு:-</p><p>கொடுவா-ரூ.600</p><p>தேங்காய் பாறை-ரூ.500</p><p>ஷீலா-ரூ.400</p><p>பால் சுறா-ரூ.400</p><p>சங்கரா-ரூ.300</p><p>பாறை-ரூ.300</p><p>இறால்-ரூ.300</p><p>நண்டு-ரூ.300</p><p>நவரை-ரூ.300</p><p>பண்ணா-ரூ.300</p><p>காணங்கத்தை-ரூ.300</p><p>கடுமா-ரூ.300</p><p>நெத்திலி-ரூ.200.</p><p>இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலனோர் அசைவ உணவை தவிர்ப்பார்கள். இதனால் மீன் விற்பனை குறைந்து உள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் இதே போல் தான் இருக்கும். மீன்விலை குறைந்து உள்ளது என்றனர்.</p><h2><strong>திருவள்ளூர்</strong></h2><p>திருவள்ளூர் மீன்மார்க்கெட்டில் மீன் மற்றும் இறைச்சி கடையில் விற்பனை மந்தமாக இருந்தது. பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதனால் மீன்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை போல் ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகளும் பொது மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடின. இதனால் இறைச்சி வியாபாரிகள் கவலை அடைந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>‘ரெட்டி கேங்’ துணையோடு ஆட்சி - முதலமைச்சர் விஜய் குறித்து அப்பாவு விமர்சனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-with-the-backing-of-the-reddy-gang-appavu-criticizes-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governance-with-the-backing-of-the-reddy-gang-appavu-criticizes-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">3184afee-8e7c-4012-abd5-f77bae471644</guid><pubDate>Sun, 20 Sep 2026 09:20:36 +0000</pubDate><atom:updated>2026-09-20T09:20:36.240Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,அப்பாவு,tvk,appavu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/symbsyow/New-Project-2026-09-20T144934.739.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ரெட்டி கேங்’ துணையோடு ஆட்சி - முதலமைச்சர் விஜய் குறித்து அப்பாவு விமர்சனம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/symbsyow/New-Project-2026-09-20T144934.739.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">முதலமைச்சர் விஜய் </a>பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்க கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பாக இல்லை.</p><p>காரணம் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் போன்ற வழக்குகளில்  உங்களின்  மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகளை  தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பறிகொடுத்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர். </p><h2>சரணாகதி</h2><p>“தங்களின் டெல்லி எஜமான் பாஜகவின்” நன் மதிப்பை பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிப்பதும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதும், ஒன்றிய அரசு தரவேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் கள்ள மவுனம் சாதிப்பதும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில்  ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் என்று தொடர்ந்து நேரடியாக ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்து விட்டீர்கள்! </p><h2>கல்லாப்பெட்டி கூட்டணி</h2><p>ஆட்சிக்கு வந்த உங்களுக்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீது பற்றோ, தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லாமல், தங்களை சுற்றி இருக்கும் “ரெட்டி கேங் துணையோடு” ஆட்சி, அதிகாரம் மற்றும் பணம் மீது மோகம் கொண்டு பாஜகவின் உதவியோடு ஆட்சி அமைத்து சில கல்லாப்பெட்டி கட்சிகளின் கூட்டணியோடு ஆட்சியில் தொடரும் விஜய் அவர்களே! </p><p>சிலரை சிலநாள் ஏமாற்றலாம்! பலரை பல நாள் ஏமாற்றலாம்! எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது! </p><p>உங்கள் மக்கள் விரோத போக்கை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள். உங்கள் அரசியல் ஆட்டத்திற்கு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 செப்டம்பர் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-september-2026#comments</comments><guid isPermaLink="false">5c5795cf-d6d8-471d-b522-37ad52a569a3</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:45:35 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:49:32.899Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/jup0i7ew/TodayLives2009.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/team-india-enter-final-asian-games-n-womens-cricket">ஆசிய விளையாட்டு: ஷபாலி சதம் - வங்கதேசத்தை சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.</p><p>* நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கையுடன் மோதுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute">உடல்நல குறைவால் சிவாஜிகணேசன் மகள் சாந்தி மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி!</a></p><p>* சிவாஜி கணேசன் மூத்த மகள் சாந்தி 72 வயதில் உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார்.</p><p>* மு.க.ஸ்டாலின் சிவக்குமார் திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் உடல் வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions">தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை...</a></p><p>* தமிழகத்தில் பருவமழை காரணமாக உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரித்து வண்ணம் உள்ளது.</p><p>* காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள், உடனடியாக மருத்துவரை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs">சென்னை - புறநகர் பகுதிகளில் 2500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு!</a></p><p>* சிலைகளை கடலுக்குள் எடுத்துச் செல்ல கிரேன்கள், டிராலிகள் அமைக்கப்பட்டிருந்தன.</p><p>* ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கவும், மத உணர்வை புண்படுத்தும் கோஷம் எழுப்பவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/meesaya-murukku-2-film-explores-struggles-of-music-artists-says-hiphop-aadhi">மீசைய முறுக்கு 2 படம் இசைக் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டத்தை பேசும் – ஹிப்ஹாப் ஆதி.!.</a></p><p>செப்டம்பர் 25 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது... </p><p> மீசைய முறுக்கு 2 அதைவிட மிகவும் பரந்த கதைக்களத்தைக் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/daughter-of-maharashtra-minister-nila-wighe-patil-wins-swedish-parliament-election">மகாராஷ்டிரா அமைச்சரின் உறவினர்"நிலா விகே பாட்டீல்" சுவீடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி.!.</a></p><p>மறைந்த மத்திய அமைச்சர் பாலாசாகேப் விகே பாட்டிலின் பேத்தி.</p><p>சுவீடனில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/elavenil-valarivan-clinches-silver-in-the-womens-10m-air-rifle-individual-final-at-the-asian-games">ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்றார் இளவேனில்</a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனம் மாஸ்கர் 6வது இடம் பிடித்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow">தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்...</a> </p><p>*  தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்ய உள்ளார்.</p><p>* தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நா.த.க சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/you-paid-for-the-ticket-not-for-us-salman-khan">டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்...</a> </p><p>* பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான், உடல் எடை தொடர்பான விமர்சனத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>* தியேட்டரில் படம் பார்ப்பதற்கு தான் டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-sets-7-conditions-for-negotiations-with-us-says-message-is-clear">எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?</a></p><p>* அமெரிக்காவுக்கு ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</p><p>* எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indias-womens-10m-air-rifle-team-has-won">ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி </a></p><p>* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>* தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow">பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்.</a></p><p>சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்..</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்..</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released">கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு</a></p><p>* அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி.</p><p>* ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-once-again-proved-that-he-is-a-careless-politician-mp-cm-mohan-yadav">ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்</a></p><p>* அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார்- ராகுல் காந்தி</p><p>* நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்- ம.பி. முதல்வர்</p>]]></content:encoded></item><item><title>உடல்நல குறைவால் சிவாஜிகணேசன் மகள் சாந்தி மரணம் - மு.க.ஸ்டாலின் அஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/shivajiganesan-daughter-santhi-dies-mk-stalin-pays-tribute#comments</comments><guid isPermaLink="false">67013919-901d-4152-98b7-ce7381c8fb8d</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:19:43 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:19:43.109Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivaji Ganesan,MK Stalin,condolence,Sivakumar,Shanthi Theatre,Sivaji Family,Shanthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pfxde57l/Sivaji-Ganesan-Daughter-Shanthi-Death" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sivaji Ganesan Daughter Shanthi Death - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pfxde57l/Sivaji-Ganesan-Daughter-Shanthi-Death?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/sivaji-ganesan">சிவாஜி கணேசனின்</a> மூத்த மகள் சாந்தி (வயது 72). அவரது கணவர் நாராயணசாமி. சாந்தி கடந்த 10 நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.</p><p>சாந்தியின் மரணம் சிவாஜி குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>சாந்தியின் உடல் வளசரவாக்கம் மேற்கு காமகோடி நகர், அருணாகிரி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுஉள்ளது.</p><h2>மு.க.ஸ்டாலின் அஞ்சலி</h2><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று சாந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.</p><p>அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தலைமை நிலையச்செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/anbil-mahesh-poyyamozhi">அன்பில் மகேஷ் பொய்யாமொழி</a>, முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோரும் சென்று இருந்தனர்.</p><h2>தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-</h2><p>“தலைவர் கலைஞரும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது. </p><p>அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் நாராயணசாமி, மகள்கள் விஜி லட்சுமி, சத்யவதி, சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/sivakumar">நடிகர் சிவக்குமார்</a> மற்றும் திரை பிரபலங்களும் நேரில் சென்று சாந்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.</p><p>சென்னை அண்ணா சாலையில் சிவாஜிகணேசன் தனது மகள் பெயரில்தான் சாந்தி தியேட்டரை கட்டி இருந்தார். இந்த தியேட்டரில் பல்வேறு வெற்றி படங்கள் திரையிடப்பட்டும் உள்ளது. </p><p>சென்னை அண்ணா சாலையில் முக்கிய அடையாளமாக சாந்தி தியேட்டர் பெயர் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு பா.ஜனதா எதிர்ப்பு: உடனே ரத்து செய்யும்படி தேர்தல் ஆணையத்தில் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/byelection-bjp-complaint-against-tvk-star-campaigners-list</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/byelection-bjp-complaint-against-tvk-star-campaigners-list#comments</comments><guid isPermaLink="false">38dc7b9a-a897-4049-8686-2885a871b7f9</guid><pubDate>Sun, 20 Sep 2026 08:00:52 +0000</pubDate><atom:updated>2026-09-20T08:00:52.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாஜக,தவெக,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/poz4ebqd/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக கூட்டணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/poz4ebqd/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கும் த.வெ.க.-வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்துள்ளது.</p><p>தமிழக பா.ஜனதா செயலாளர் கராத்தே தியாகராஜன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.</p><p>இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்-அமைச்சர்   விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன், வி.சி.க. கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்.பி, வன்னி அரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. </p><p>நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் பெயர்</h2><p>இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் த.வெ.க. கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து உள்ளது.</p><p>இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது. சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக் கூத்தாக்கி ஆளும் கட்சியான த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது.</p><p>ஏற்கனவே இதே போன்று ஆம்ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாத வரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.</p><p>எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் த.வெ.க.வுக்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க.வுக்க அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுரை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-scrub-typhus-cases-rise-health-officials-urge-precautions#comments</comments><guid isPermaLink="false">92c6f3f1-ce74-4c17-8f50-74eb61f37d58</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:52:06 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:52:06.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,Ministry of Health and Family Welfare,டெங்கு,சுகாதாரத் துறை,Unni fever,உண்ணி காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/sa701w2w/Untitled-design-26.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Unni Fever]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/sa701w2w/Untitled-design-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார்.</p><p>தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">தமிழக சுகாதார துறை</a> இயக்குநர் தெரிவித்துள்ளார். </p><p>தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், வடகிழக்கு பருவமழையால் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது.</p><h3><strong>சுகாதாரத் துறை இயக்குநர்</strong></h3><p>இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், பருவமழை காரணங்களால் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் மக்களிடையே பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாமல், பலவிதமான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதில் ஒருவகையான காய்ச்சலாக, தற்போது ‘ஸ்க்ரம் டைபஸ்’ (scrub typhus) என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>இந்த வகையான காய்ச்சல் ’ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. இந்தவகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் காணப்படும் ஒட்டுண்ணியாக வாழ்கிறது.</p><p>இந்த பாக்டீரியா முன்பு காட்டுப் பகுதிகளில் இருந்து பரவியது; ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.</p><p>இந்த காய்ச்சல் பாதிப்பின் போது, பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு உடல்வழி, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். </p><p>இந்த வகையான ஏதாவது ஒரு அறிகுறிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.</p><p>மேலும் இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pressure-area-forming-over-andaman-sea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pressure-area-forming-over-andaman-sea#comments</comments><guid isPermaLink="false">af23afef-5c6d-404f-927e-f6c1f901f473</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:47:48 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:47:48.069Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,Low pressure,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அந்தமான்,Andaman sea</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/j51rft9y/chennaimeteorological.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/j51rft9y/chennaimeteorological.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.</p><p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>வடக்கு அந்தமான்</strong></h2><p>வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.</p><h2><strong>காற்றழுத்த தாழ்வு மண்டலம்</strong></h2><p>அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகிற 22-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.</p><h2><strong>பலத்த மழை</strong></h2><p>இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்றும் நாளையும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2><strong>சென்னை</strong></h2><p>சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, மற்றும் நாகை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.</p><h2><strong>மீனவர்கள்</strong></h2><p>தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்று வீசக்கூடிய பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை - புறநகர் பகுதிகளில் 2500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-2500-vinayagar-idols-immersed-in-sea-across-chennai-suburbs#comments</comments><guid isPermaLink="false">d178c33b-9e6f-4557-a1e4-089b9b29605c</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:46:47 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:46:47.340Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Beach,Vinayagar Chaturthi,விநாயகர் சதுர்த்தி 2026,Ganesh Visarjan 2026,விநாயகர் சிலை கரைப்பு,2500 Idols Immersion</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zbprmdwi/Vinayagar-idol-immersion" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idol immersion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/zbprmdwi/Vinayagar-idol-immersion?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி விழா</a> கடந்த 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p><p>அன்றைய தினம் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைத்து வழிப்பட்டனர்.</p><h2><strong>விநாயகர் சிலைகள் கரைப்பு</strong></h2><p>மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய சிலைகள் மற்றும் சிறிய சிலைகள் என 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.</p><p>ஒவ்வொரு நாளும் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தி பாடல்களும் இசைக்கப்பட்டன. இதுபோன்று பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை நேற்றும், இன்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">போலீசார் </a>அனுமதி அளித்து இருந்தனர். </p><p>இதன்படி சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"> விநாயகர் சிலைகள்</a> நேற்று முதல் கரைக்கப்பட்டன.</p><p>சென்னையில் நேற்று சுமார் 200 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தாம்பரம், ஆவடி, சென்னை மாநகர பகுதிகளில் இருந்து இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்கப்பட் டன.</p><h2><strong>பிரமாண்ட ஊர்வலம்</strong></h2><p>சென்னை மாநகரில் 1,562 விநாயகர் சிலைகளும், தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதியில் 636 விநாயகர் சிலைகளும், ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட எல்லைகளில் சுமார் 761 சிலைகளும் நிறுவப்பட்டிருந்த நிலையில் நேற்று கரைத்தது போக மீதமுள்ள அத்தனை சிலைகளும் இன்று கடலில் கரைக்கப்பட்டது.</p><p>இதையொட்டி பிரமாண்ட ஊர்வலமும் நடைபெற்றது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு போலீசார் வழிதடங்களையும் அறிவித்து இருந்தனர்.</p><p>இப்படி போலீஸ் தரப்பில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்கள் வழியாக மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று விழா குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதன்படி சென்னையில் இன்று 1500-க்கும் அதிகமான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் போன்ற கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டது.</p><h2><strong>தாம்பரம்-ஆவடி</strong></h2><p>தாம்பரம் கமிஷனர் அலுவலக பகுதிக்கு உட் பட்ட புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 600 -க்கும் மேற்பட்ட சிலைகளும், ஆவடி பகுதியில் நிறுவப்பட்டிருந்த 700 -க்கும் மேற்பட்ட சிலைகளும் பாலவாக்கம் மற்றும் கோவளம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டது.</p><p>இதேபோன்று ஆவடி கமிஷனர் அலுவலக எல்லைகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் பழவேற்காடு, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 இடங்களில் கரைக்கப்பட்டன.</p><p>இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று 9 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.</p><h2><strong>23 ஆயிரம் போலீசார்</strong></h2><p>சென்னையில் 16,500 போலீசாரும், ஆவடி பகுதியில் 1,500 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 1,300 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.</p><p>கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன்கள் வரவழைக்கப்பட்டு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். சிலைகளை கடலுக்குள் எடுத்து செல்வதற்காக கடற்கரை மணல் பரப்பில் டிராலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.</p><p>அதில் சிலைகளை கிரேன் மூலம் தூக்கி வைத்து கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் விநாயகர் சிலைகளை விழா ஏற்பாட்டாளர்கள் கரைத்தனர்.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்கள்</strong></h2><p>போலீஸ் கமிஷனர்கள் அமல்ராஜ் (சென்னை), பிரேமானந்த் சின்ஹா (தாம்பரம்), செந்தில் குமார் (ஆவடி) ஆகியோரது மேற் பார்வையில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு ஆகியவற்றை கூடுதல் கமிஷனர்கள், இணை ஆணையர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் ஆகியோர் கண்காணித்தனர்.</p><p>அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.</p><p>சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சென்னை மெரினா கடற்கரையில் குதிரை படைகள் மூலமாகவும், கடற்கரை மணலில் செல்லும் ரோந்து வாகனத்திலும் போலீசார் கண்காணித்தார்கள்.</p><h2><strong>பழவேற்காடு</strong></h2><p>பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் சிலைகளை கரைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.</p><p>துணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>விநாயகர் ஊர்வலத்திலும் சிலைகளை கரைக்கும் இடங்களிலும் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடைவிதிக் கப்பட்டு இருந்தது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றவர்கள் மாற்று மதத்தினரை அவமதிக்கும் வகையில் எந்தவித கோஷங்களையும் எழுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதனை போலீசார் முழு மையாக கண்காணித்து தேவையில்லாத வகையில் கோஷம் எழுப்பியவர்களை கண்டித்தனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதலமைச்சர் இன்னும் முடிவு செய்யவில்லை- ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-has-not-yet-decided-on-constructing-a-new-secretariat-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">870d39ac-90e7-4e09-9002-e23576ba4fa2</guid><pubDate>Sun, 20 Sep 2026 07:18:09 +0000</pubDate><atom:updated>2026-09-20T07:18:09.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,தலைமைச் செயலகம்,New Secretariat,புதிய தலைமைச் செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/pw37vtdl/adhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><p>பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><h2><strong>அமைச்சர் </strong>ஆதவ் அர்ஜுனா</h2><p>இந்த நிலையில் இடைத்தேர்தலையொட்டி மதுராந்தகம் தொகுதியில் நடந்தபாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, புதிய தலைமைச் செயலகம் திட்டம் குறித்து பேசியதாவது:-</p><h2><strong>தலைமைச் செயலகம்</strong></h2><p>தலைமைச் செயலகம், செக்ரடரியேட் அதை எல்லோரும் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் அதை செய்துவிடுவோம், இதை செய்துவிடுவோம் என்று பேசுகிறார்கள். பொதுவாக ஒரு திட்டம் அறிவிக்கும் போது அதற்கான இடம்குறித்து விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) பெறுவது வழக்கம். அதன் பிறகுதான் இடத்தை தேர்ந்தெடுப்போம். எனவே அந்த ரிப்போர்ட் வந்த பிறகுதான் அதை அங்கு கட்டலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வார் முதலமைச்சர்.</p><h2><strong>முதலமைச்சர்</strong></h2><p>எனவே மீனவ சகோதரர்களே, சகோதரிகளே தலைமைச் செயலகம் விஷயத்தில் இன்னும் முதலமைச்சர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமைச் செயலகமா? மீனவ மக்களின் வாழ்க்கையா? என்றால் கண்டிப்பாக மீனவ மக்கள் பக்கம்தான் எங்கள் முதலமைச்சர் நிற்பார்.</p><h2><strong>சட்டசபை</strong></h2><p>இன்னொன்று சொல்கிறேன். ஜெயித்து முடித்த பிறகு அவர் தி.மு.க., அ.தி.மு.க. என்று பார்ப்பது கிடையாது. எல்லோருக்கும் நல்லது செய்யுங்கள் என்கிறார். சட்டசபையில் தி.மு.க.வினர் அன்றைக்கு திடீரென சபாநாயகர் முன்பு தர்ணா செய்ததை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். தர்ணாவில் ஈடுபட்ட ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தரையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. அவர் பாவம் என்று முதலமைச்சர் விஜய் கை கொடுத்து தூக்கி விட்டார்.</p><h2><strong>தி.மு.க. போராட்டம்</strong></h2><p>நமது முதலமைச்சரை எதிர்த்து தி.மு.க. போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் நம்முடைய முதலமைச்சர் அவர்களை கைதூக்கி விடுகிறார். இதுதான் எங்கள் அண்ணன். இவ்வளவு தான் எங்கள் அரசியல். பழி வாங்கும் அரசியல் எங்களுக்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் நம்மைப் பற்றி பேசுவது வருத்தமாக உள்ளது.</p><h2><strong>தி.மு.க. ஆட்சி</strong></h2><p>தி.மு.க. ஆட்சி நடந்த போது தி.மு.க.வினர் கமிஷன் வாங்கினார்களா? இல்லையா? என்பதை கம்யூனிஸ்டு கட்சியினர் மனசாட்சியோடு சொல்ல வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தொடர் மழை- சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 3 நாட்களில் 8 அடி உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-in-theni-districts-sothuparai-dam-water-level-hike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-in-theni-districts-sothuparai-dam-water-level-hike#comments</comments><guid isPermaLink="false">6000eedf-b0eb-41f2-90ce-d1bb59cb039c</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:51:11 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:51:11.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மழை,Sothuparai Dam,சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு,அணை நீர்மட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/ll8zyev8/sothuparaidam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sothuparai dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/ll8zyev8/sothuparaidam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி உயர்ந்துள்ளது.</p><h2><strong>மழை</strong></h2><p>தேனி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோசனம் நிலவி வருகிறது. </p><h2><strong>சோத்துப்பாறை அணை</strong></h2><p>மேலும் வறண்டு கிடந்த ஆறு, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி உயர்ந்துள்ளது.</p><h2><strong>வைகை அணை</strong></h2><p>நேற்று முன்தினம் 56 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 64.12 அடியாக உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 19 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் தேவைக்காக 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 25.42 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 41.96 அடியாக உள்ளது. 239 கன அடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1113 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வெளிநாட்டு முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- காளியம்மாள் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/white-paper-on-foreign-investment-must-be-released-kaliyammal#comments</comments><guid isPermaLink="false">2370796c-dd35-4194-ba5d-ae7152b321fb</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:43:21 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:43:21.298Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,காளியம்மாள்,வெள்ளை அறிக்கை,White paper,Kaliyammal</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kaliyammal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/6oc0s0es/kali.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><p>புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் காளியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு சீர்கேடு</strong></h2><p>தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. வெறுமனே சினிமாவில் செய்வது போல ஆக்‌ஷன் காட்டுவதோ, ரீல்ஸ் பண்ணுவதோ ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது. இதற்கு போதிய அனுபவம் தேவை.</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு சென்று வெறும் 12,300 கோடி ரூபாய் மட்டுமே முதலீட்டை ஈர்த்துள்ளார். ஆனால் தொழில்துறை அமைச்சரோ இங்கேயே ரூ.1 லட்சம் கோடி ஈர்த்துள்ளதாகக் கூறுகிறார். வெளிநாடு செல்லும்போது தொழில்துறை அமைச்சரை ஏன் அழைத்துச் செல்லவில்லை? இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய லண்டன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யாமல், இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.</p><h2><strong>மக்கள் ஏமாற்றம்</strong></h2><p>தி.மு.க.வும் நாங்களும் தான் போட்டியாளர்கள் என்ற கட்டமைப்பை நிறுவ த.வெ.க. நினைக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 1.30 கோடிக்கும் அதிகமான தொண்டர்களை கொண்ட இயக்கம். சுறா படத்தில் மீனவர்களுக்காகப் பேசிய விஜய், இன்று நொச்சிக்குப்பம் மக்களை காலி செய்ய பார்க்கிறார். த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.</p><h2><strong>இடைத்தேர்தல்</strong></h2><p>பா.ம.க.வின் முடிவுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்கள் எங்களோடு வந்தால் பலம், வரவில்லை என்றாலும் அவர்களின் முடிவை ஏற்கிறோம். அ.தி.மு.க. மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது. இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சோதனை ஓட்டம் முடிந்து பழனியில் 22-ம் தேதி முதல் மீண்டும் ரோப் கார் இயக்கம்: கோவில் நிர்வாகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-rope-car-to-restart-from-22nd-following-successful-test-run#comments</comments><guid isPermaLink="false">ef840141-b43e-442c-970f-ce019f3177b7</guid><pubDate>Sun, 20 Sep 2026 06:03:05 +0000</pubDate><atom:updated>2026-09-20T06:03:05.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பழனி கோவில்,பழனி கோவில் ரோப் கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோவில் ரோப் கார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/qwlzi3bm/RopeCar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானைப்பாதை, படிப்பாதை வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதுதவிர குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி சென்று வர மின் இழுவை ரெயில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் சென்று விடலாம் என்பதாலும், இயற்கை எழில் கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசிக்கலாம் என்பதாலும் ரோப்காரில் செல்ல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>பக்தர்கள் பாதுகாப்புக்காக ரோப்கார் மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு 1 மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம்.</p><h2>பராமரிப்பு பணிகள்</h2><p>அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூலை 20-ம்தேதி முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி ரோப்கார் தொடர்பான அனைத்து எந்திரங்களும் என்.டி.டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் கொல்கத்தாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சாப்ட் பொருத்தப்பட்டு, கியர் பாக்ஸ் பராமரிப்பு பணியும் நடந்தது. மேலும் கடந்த 16-ம் தேதி புதிய பெட்டிகளை பொருத்தி, மணல் மூட்டைகள், கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.</p><p>ரோப்கார் கீழ்நிலைய பெருந்திட்ட பணிகளில் எந்திரங்கள் உள்ள பகுதிகளில் புதிய மேற்கூரை, பால்சீலிங், பக்கவாட்டு சுவர்களில் கிரானைட் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. மராமத்து பணிகள் முடிவடைந்த நிலையில் வல்லுனர்குழு ஆய்வும் முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (22ம் தேதி) முதல் மீண்டும் ரோப்கார் சேவை பக்தர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கும் என பழனி கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.</p><h2>அலைமோதிய பக்தர்கள்</h2><p>வார விடுமுறையான இன்று கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.</p><p>இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாைத, படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் யானைப்பாதை, படிப்பாதை வழியாக சென்ற பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக 25 மதுபான வகைகள் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/25-new-liquor-varieties-introduced-at-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">ef7b4da3-3b00-4d76-b02c-7d3a18c95903</guid><pubDate>Sun, 20 Sep 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-09-20T05:21:17.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக் கடை,டாஸ்மாக்,மதுபான வகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tasmac shop]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/unm9hk88/tasmac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் கடை</strong></h2><p>தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு  தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மது​பானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.</p><h2><strong>டாஸ்மாக் அதிகாரிகள்</strong></h2><p>டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், புதிய மது வகைகளை அறிமுகம் செய்வது தொடர்பாக மதுபான உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><h2><strong>புதிய மது வகைகள்</strong></h2><p>இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், “டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் புதிய வகை மதுபானம், பீர் விற்பது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது. டாஸ்மாக் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.</p><h2><strong>டாஸ்மாக் சில்லறை விற்பனை</strong></h2><p>டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல், ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாகப் பிரித்து வழங்கும் முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-chief-minister-consultation-with-officials-tomorrow#comments</comments><guid isPermaLink="false">9983140e-4790-4f9c-84d9-55392dc22302</guid><pubDate>Sun, 20 Sep 2026 04:19:03 +0000</pubDate><atom:updated>2026-09-20T04:19:03.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,வடகிழக்கு பருவமழை,டெல்டா,Delta,monsoon</media:keywords><media:content height="415" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif" width="739"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/8aufkj4w/images-17.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>வடகிழக்கு பருவமழை </h2><p>பொதுவாக தமிழகத்தில்  அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில்  வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைகிறது.</p><p>தமிழகத்தின் மொத்த ஆண்டு மழையளவில் பெரும்பகுதி இந்த வடகிழக்கு  பருவமழையில் தான் கிடைக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">டெல்டா</a> மற்றும் இதர மாவட்டங்களின் சாகுபடிப் பணிகளுக்கு இப்பருவமழை மிகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதரமாக இந்த பருவமழை இருக்கிறது.</p><h2>முன்னெச்சரிக்கை </h2><p>இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுக்காப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது </p><h2>முதல்வர் ஆலோசனை </h2><p>வடகிழக்கு பருவழையானது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்வர் விஜய்</a>.</p><p>காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்.</p><p> துறைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல். </p>]]></content:encoded></item><item><title>தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து  நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-campaigns-for-tharapuram-naam-tamilar-candidate-tomorrow#comments</comments><guid isPermaLink="false">bd33f446-a9f5-4b85-b162-af48180e8b55</guid><pubDate>Sun, 20 Sep 2026 03:34:20 +0000</pubDate><atom:updated>2026-09-20T03:34:20.188Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,மதுராந்தகம்,தமிழக இடைத் தேர்தல்,bye election,சீமான்,நாம் தமிழர் கட்சி,Madhuranthakam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hkvylmtx/Untitled-design-22.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NTK campaigns in Dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/hkvylmtx/Untitled-design-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித்தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.   </p><h3><strong>தாராபுரம் வேட்பாளர்கள்</strong></h3><p>தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ப. சத்தியபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். சுகன்யா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கே. பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் (சிபிஐ) சார்பில் பி. லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>மேலும் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எம். கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><h3><strong>நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை</strong></h3><p>இந்த நிலையில் தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து ந.த.க ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முதற்கட்ட தேர்தல் பரப்புரை செய்ய உள்ளதாக, அக்கட்சியின் சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p>தாராபுரம் முருகன் கோவில் அருகில் நாளை (21.09.26) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gram-sabha-meeting-held-in-october-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gram-sabha-meeting-held-in-october-2#comments</comments><guid isPermaLink="false">77b459e8-e6f2-4abe-ad2f-8f143679250d</guid><pubDate>Sun, 20 Sep 2026 02:12:04 +0000</pubDate><atom:updated>2026-09-20T02:12:04.399Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gram Sabha meetings,காந்தி ஜெயந்தி,Gandhi Jayanthi,கிராமசபை கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tgr52xl8/meeting.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/tgr52xl8/meeting.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தவேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.</strong></em></p><p>ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>காந்தி ஜெயந்தியான அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கிராமசபை கூட்டம்</a> நடத்தவேண்டும்.</p><p>கிராம ஊராட்சியின் நிர்வாகம், நிதிநிலை, வளர்ச்சிப் பணிகள், குடிநீர், தூய்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.</p><p>கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடத்தவேண்டும். கூட்டம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் விவாதிக்கப்படும் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.</p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.</p><p>அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>கிராமசபையின் ஒப்புதலுடன் பிற முக்கிய பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.</p><p>கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறையாக பதிவுசெய்து, அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-revenue-expenditure-and-borrowings-last-five-months-data-released#comments</comments><guid isPermaLink="false">8016e719-f3ab-485b-bfd0-3a59c84e992d</guid><pubDate>Sun, 20 Sep 2026 01:51:39 +0000</pubDate><atom:updated>2026-09-20T01:51:39.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/12/23/1996694-tngovt.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Govt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/12/23/1996694-tngovt.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடியாக உள்ளது. இந்த 5 மாத காலகட்டத்தில் அரசின் செலவு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியாக உயர்ந்துள்ளதால், அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 20,349 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கி வருகிறது. அதோடு வரி வருவாயையும், வரியல்லாத வரி யையும் வசூலிக்கும் நடவடிக்கைகளை நவீனப்படுத்தி வருகிறது.</p><p>அந்த வகையில் தமிழக அரசுக்கு மாநில ஜி.எஸ்.டி. வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், ஆயத்தீர்வை மற்றும் மத்திய அரசின் வரி பங்கு ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் வந்து சேர்கிறது. அதுபோல் சேவை கட்டணங்கள், அபராதம் போன்றவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைத்து வருகிறது.</p><p>வருவாய் ஒரு பக்கம் வந்த போதிலும் திட்டப்பணிகள், சம்பளங்கள் வாயிலாக பல்வேறு செலவுகளையும் அரசு செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்றவை அரசுக்கு செலவை ஏற்படுத்துகின்றன. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான கடந்த 5 மாதங்களில் தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் வரவுகள் மற்றும் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><h2>வருவாய் பற்றாக்குறை</h2><p>அந்த வகையில், வரி வருவாய், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியம் வாயிலாக வந்த வருவாய் என தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே 5 மாதங்களில் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வருவாய் மற்றும் செலவை கணக்கிட்டால் வருவாயைவிட செலவு கூடுதலாகி ரூ. 20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><h2>கடன்களுக்கான வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி</h2><p>அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடியாகவும், ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடியாகவும் உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களில் தமிழக அரசு ரூ. 30,021 கோடி கடன் வாங்கியுள்ளது.</p><p>தமிழக அரசுக்கு வந்துள்ள வருவாய் அளவை தனித்தனியாக கணக்கிட்டால் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ. 34,144.06 கோடி. முத்திரைத்தாள், பதிவு கட்டணம் மூலம் ரூ.10,493.30 கோடி. நிலம் விற்பனை மூலம் ரூ.57.16 கோடி. வர்த்தகம் மீதான வரி மூலம் ரூ. 28,164.79 கோடி. மாநில ஆயத்தீர்வை மூலம் ரூ.5,214 கோடி. மத்திய அரசின் வரி பங்கு மூலம் ரூ.24,188 கோடி. இதர வரிகள் மற்றும் தீர்வைகள் மூலம் ரூ. 6,843 கோடி. வரி அல்லாத வருவாய் மூலம் ரூ.5,149 கோடி. மத்திய அரசின் மானியங்கள் மூலம் ரூ.3,537 கோடியாகும்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் காரணமாக அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை: தலைமை செயலாளர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-in-two-constituencies-public-holiday-declared-on-oct-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-in-two-constituencies-public-holiday-declared-on-oct-6th#comments</comments><guid isPermaLink="false">784edd7a-8724-433c-b756-85018e3c2160</guid><pubDate>Sun, 20 Sep 2026 00:15:53 +0000</pubDate><atom:updated>2026-09-20T00:15:53.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0gy86cke/madurantakam-and-dharapuram.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ madurantakam and dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-20/0gy86cke/madurantakam-and-dharapuram.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/by-election">இடைத்தேர்தல்</a> அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>இடைத்தேர்தலை ஒட்டி இரு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விடுமுறை அறிவித்து அரசாணை:</h2><p>இது குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><p>இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.</p><p>இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும்," என கூறப்பட்டுள்ளது.</p><h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு:</h2><p>இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆனது. தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</p><p>முன்னதாக மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><p>அதேபோல் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்.., ரீல்.., இத வெச்சிக்கிட்டு ஆட்சிக்கு வந்துட்டாங்க: இ.பி.எஸ். விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-party-s-capital-is-reels-reel-they-came-to-power-using-this-says-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-party-s-capital-is-reels-reel-they-came-to-power-using-this-says-eps#comments</comments><guid isPermaLink="false">aacd25b3-64d2-4235-bf80-52ed7441eb37</guid><pubDate>Sat, 19 Sep 2026 15:07:16 +0000</pubDate><atom:updated>2026-09-19T15:07:16.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3py41gbi/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்துல ஆட்சிக்கு வந்துட்டாங்க.</p><p>* ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>திட்டத்திற்கு பெயர் மாற்றம்</h2><p>* ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டத்திற்கு பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதிமுக திட்டத்திற்கு வெற்றி என பெயரை சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக.</p><h2>மூலதனமே ரீல்ஸ்.. ரீல்..</h2><p>* அம்மா சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். இந்த திட்டத்தை பெயர் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தொடங்கப்படல.</p><p>* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். பாவம், பிறந்த குழந்தையை ஏமாற்றும் அளவிற்கு ஆயிட்டாங்க. ஒரு கிராம். ஏழைகளுக்கு போடுவதில் தவறு இல்லை. அந்த திட்டத்திற்கு எவ்வளவு வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்க.</p><p>* ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.</p><p>* த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்.., ரீல்.., இதை வைச்சிக்கிட்டு ஆட்சிக்கு வந்துட்டாங்க. </p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">879b7072-039f-46f2-9fb1-c5b930ad6945</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:38:10.731Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced">இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் பரப்புரை தேதி அறிவிப்பு.!</a></p><p> மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல்.</p><p>செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் மேற்கொள்கிறார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-do-not-proof-misa-arrest-issue">மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்</a></p><p>* த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.</p><p>* கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-university-students-union-election-abvp-the-rss-student-wing-wins">டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்.. ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி வெற்றி!<br></a><br>*துணைத் தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட தீபான்சு வெற்றி பெற்றுள்ளார்.</p><p>*கடந்த ஆண்டும் தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளை ஏபிவிபி கைப்பற்றியிருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-speech-in-madurantakam">மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு</a></p><p>* இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம் என்றார்.</p><p>* மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan">சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்.</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan"> </a>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது, அதனை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/on-this-day-yuvraj-singh-hits-six-sixes-in-an-over">வரலாற்றில் இன்று: ஓரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்.!.</a></p><p> யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார்.</p><p>இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை ப்டைத்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/new-cat-species-found-in-bolivia-after-100-years">பொலியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்..!</a></p><p> பொலிவியாவின் அடர்ந்த யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony">கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்</a></p><p>* கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.</p><p>* இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் அடங்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu">தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம்.</a></p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. </p><p>கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p> <p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say">"2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்" - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன?</a></p><p>*செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் </p><p>*முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure">தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</a></p><p>* அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். </p><p>* சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</a></p><p>* த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>* புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p> * காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>* திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud">திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</a></p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue">டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</a></p><p>* டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  </p><p>* டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed">சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </a></p><p>* கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed"><br></a>*மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign">இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</a></p><p>*  தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>* 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue">பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</a></p><p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport">சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</a></p><p>* தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>* மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit">சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</a></p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p><p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately">குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.</p><p>* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea">அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு </a></p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</a></p><p>* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom">வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...</a> </p><p>* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.</p><p>* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் பரப்புரை தேதி அறிவிப்பு.! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-byelection-cm-vijay-campaign-dates-announced#comments</comments><guid isPermaLink="false">9f2fdaab-142c-42ed-b470-644753db5bdb</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:35:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:35:57.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Campaign,தாராபுரம்,மதுராந்தகம்,வேட்பாளர்கள் அறிவிப்பு,by elections,இடைத்தேர்தல்,பரப்புரை</media:keywords><media:content height="288" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ihc9xt6/images-16.jfif" width="479"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/6ihc9xt6/images-16.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல் </h2><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெககட்சியில் இணைந்தனர்.</p><p>இவ்வாறாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தவெகவில் இணைந்த காரணத்தினால் 6 தொகுதிகள் உள்பட சட்டமன்ற தொகுதிகள் காலியான தொகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>தற்போது இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்.6-ம் தேதி  இடைத்தேர்தலானது நடை்பெற இருக்கிறது. </p><h2>இறுதி வேட்பாளர்கள்</h2><p>இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்காக இறுதி வேட்பாளர் பட்டியலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.</p><p> சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்ற காரணத்தினால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27 ஆகவும் தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்களும் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பிரச்சாரம் </h2><p>இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்களின் பட்டியலானது அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் , போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.</p><h2>முதல்வர் பரப்புரை</h2><p>இந்த நிலையில் தவெக சார்பாக போட்டியிடும்  மரகதம் குமரவேலை  ஆதரித்து  முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும்  தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விஜய் மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2 ஆம் தேதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.</p><p>செப்.25ல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும். அக்.2 ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் சென்று வேனில் பரப்புரை செய்ய இருக்கிறார் </p><h2>விறுவிறுப்பான தேர்தல் களம் </h2><p>இடைத்தேர்தல் நடைப்பெறும் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை  அடுத்து தேர்தல் களமானது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.  </p> ]]></content:encoded></item><item><title>மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-do-not-proof-misa-arrest-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-do-not-proof-misa-arrest-issue#comments</comments><guid isPermaLink="false">c1888744-f35b-44d3-8df7-5ca07aa596c5</guid><pubDate>Sat, 19 Sep 2026 14:18:57 +0000</pubDate><atom:updated>2026-09-19T14:18:57.191Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,tvk government,MISA,மிசா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5yglv7be/mks-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mk stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5yglv7be/mks-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா கைதை எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.</strong></em></p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.</p><p>இந்த விழாவில் தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்பட்டன. அதன்பின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:</p><p>மக்களுக்கு உதவாத இந்த உதவாக்கரை ஆட்சியில் என்ன நடக்கிறது?</p><p>நான்கு மாதத்துக்கு முன்னாடி அரிசி பருப்பு, சர்க்கரை எல்லாம் என்ன விலை விற்றது?</p><p>இன்னைக்கு என்ன விலையில் விற்கிறது. இந்த விலைவாசி உயர்வே இந்த ஆட்சியின் லட்சணத்தை சொல்வதற்கு போதும்.</p><h2>கொளத்தூர் மக்களுக்கு நன்றி</h2><p>மாண்பு இழந்த பேரவை நிகழ்வுகளை பார்க்கும் பொழுது கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். </p><p>எனது மிசா கைது பற்றிய யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை.</p><p>எனது தியாகத்திற்கு மதிப்பெண் போடும் அருகதை இல்லை.</p><p>கையில் வைத்த மை காய்வதற்கு முன்னமே ராஜினாமா செய்ய வைத்துள்ளார்கள்.</p><p>ஜனநாயகம் மரணமடைந்து இடைத்தேர்தல் வந்துள்ளது.</p><p>ஒரே நாளில் 8 கொலைகள் அரங்கேறியுள்ளன.</p><p>த.வெ.க.வின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.</p><p>ஜென் சி இளைஞர்களை கவர, அவர்களது மொழியிலேயே பேச வேண்டும்.</p><p>தமிழ்நாட்டைக்காப்போம், தமிழ்நாட்டை மீட்போம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் இடையே தான் போட்டி: மு.க.ஸ்டாலின் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemn-tvk-govt-in-anna-arivalayam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-condemn-tvk-govt-in-anna-arivalayam#comments</comments><guid isPermaLink="false">4e314ea0-b288-4768-8708-e9af03a4ecac</guid><pubDate>Sat, 19 Sep 2026 13:48:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T13:48:27.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தவெக அரசு,tvk government,முப்பெரும் விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rivapmc5/mks-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rivapmc5/mks-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி என தி.மு.க. தலைவர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.</strong></em></p><p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>75 ஆண்டுகள் ஒரு கட்சி நிலைத்திருப்பது சாதாரணம் அல்ல. 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கம்பீரத்துடன் திமுக உள்ளது.</p><p>தி.மு.க பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை.</p><p>எதிரி யார் என கணித்து பணியாற்றி இருந்தால் சட்டமன்ற தேர்தலில் தோல்வியே ஏற்பட்டு இருக்காது.</p><h2>வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்</h2><p>நமக்கும் அவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 17 லட்சம் தான்.</p><p>நமது கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. ஆட்சி நடந்து வருகிறது.</p><p>த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது.</p><h2>தவெகவால் எந்த அலையும் அடிக்கவில்லை</h2><p>தமிழ்நாட்டில் த.வெ.க.வால் எந்த ஒரு அலையும் அடிக்கவில்லை.</p><p>சட்டம்-ஒழுங்கு பற்றி முதலமைச்சர் விஜய்க்கு சிறிதளவும் கவலையில்லை.</p><p>ஜோசியர் செய்வதை செய்தாலே போதும் என்ற எண்ணத்தில் உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>முதலமைச்சர் தினமும் Shooting Modeல்தான் இருக்கிறார்.</p><h2>மக்கள் முன் நடித்து வருகிறார்</h2><p>சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு மக்கள் முன் நடித்து வருகிறார்.</p><p>தவெகவிற்கு முறையாக தமிழக ரீல்ஸ் கழகம் என பெயர் வைத்திருக்க வேண்டும்.</p><p>அவங்க பாஷையில் சொல்லணும்னா, த.வெ.க. ஆட்சியில் இரண்டுக்கு நடுவில் தான் போட்டியே.</p><p>ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: ஆதவ் அர்ஜுனா பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-speech-in-madurantakam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-speech-in-madurantakam#comments</comments><guid isPermaLink="false">1a8e70ca-44cd-424a-b564-d0c5d15acbd6</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:37:22 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:37:22.267Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ஆதவ் அர்ஜுனா,Maduranthakam,ByElection,மதுராந்தகம்,tvk,இடைத்தேர்தல்,Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rsamw3qk/asdav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rsamw3qk/asdav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகத்தில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்றார்.</strong></em></p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் பாக முகவர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:</p><p>த.வெ.க. காணமால் போகும் என சொன்னவர்கள் காணாமல் போய்விட்டனர்.</p><h2>தவெக வெற்றி குறித்து திமுக ஆராய்ச்சி</h2><p>த.வெ.க. எப்படி வென்றது என தி.மு.க.வினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.</p><p>தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி தமிழக பெண்களின் வெற்றி.</p><p>மக்களோடு மக்களாக இருப்பதால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பெயர் தெரிவதில்லை.</p><p>வெறும் இன்ஸ்டாகிராமை வைத்தே தி.மு.க.வை முடித்து விட்டோம்.</p><h2>ஊழல் முற்றிலும் ஒழிப்பு</h2><p>த.வெ.க. ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.</p><p>எ.வ.வேலு என்ன தியாகியா?</p><p>இடைத்தேர்தலிலும் வாக்கிற்கு பணம் கொடுக்க மாட்டோம்.</p><p>எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தற்போது த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.</p><p>எடப்பாடியில் த.வெ.க. போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார்.</p><p>ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக நிற்கவைக்கிறார் இபிஎஸ்.</p><p>மதுராந்தகத்தில் வாக்கிற்கு 10,000 ரூபாய் கொடுத்தாலும் தி.மு.க. டெபாசிட் இழக்கும்.</p><p>கடந்த தேர்தலில் தி.மு.க.வால் கள்ள ஓட்டு போடமுடியவில்லை.</p><p>மரகதம் ராஜினாமா செய்தது ஏன்?</p><p>காசு கொடுத்ததால்தான் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் சேர்ந்தாரா? </p><h2>முதலமைச்சர் விஜய் பிரசாரம்</h2><p>மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.</p><p>கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததா, இல்லையா?</p><p>தி.மு.க. ஊழல் செய்யவில்லை என கம்யூனிஸ்டுகள் சொல்ல முடியுமா என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/explanation-needed-on-letter-about-chennai-airport-management-change-vanathi-srinivasan#comments</comments><guid isPermaLink="false">d71ec685-e820-4250-bac6-7a09358eef01</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:29:25 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:29:25.077Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,சென்னை விமான நிலையம்,vanathi srinivasan,pm modi,chennai airport,பிரதமர் மோடி,வானதி சீனிவாசன்</media:keywords><media:content height="270" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8i41hzmf/hindutamilimporthinduuploadsnews20240226xlarge1206209-1.avif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanathi Srinivasan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/8i41hzmf/hindutamilimporthinduuploadsnews20240226xlarge1206209-1.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தனியாருக்கு  ஒப்படைப்பா ?</h2><p>சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றுவது, அதனை தனியாருக்கு ஒப்படைப்பது தொடர்பாக தமிழக  முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><p>இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்துள்ள செய்து குறிப்பில் தற்போதைய செயல்பாட்டில் குறைபாடுகள் இருப்பதாகவும் ,அதற்காக நிர்வாகத்தை மாற்றுவதற்கு மாற்றம்  தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><h2>எதிர்ப்பு </h2><p>சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றத்திற்கு பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சென்னை விமான நிலைய நிர்வாக மாற்றம் தொடர்பான கடிதத்திற்கு விளக்கம் தேவை என்று பாஜக தலைவர்<a href="http://maalaimalar.com/news/puducherry/vanathi-srinivasan-indictment-tn-govt"> வானதி சீனிவாசன் </a>கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p>இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது</p><p> வரலாற்றுச் சிறப்பு மிக்க, பழமை வாய்ந்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய AAI நிர்வாகத்தை மாற்றி வேறு ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-indictment-dmk-govt-808599">பொதுத்துறை</a> நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது?</p> <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport">விமான நிலையம்</a> கடந்த 2024–25 அறிக்கையின் படி சுமார் 2.24 கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு லாப வருவாயுடன் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தென்னிந்தியாவின் முக்கிய சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு வருகிறது.</p> <h2>தெளிவான விளக்கம் வேண்டும்</h2><p>இதுமட்டுமன்றி தற்போது விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்காக ரூ. 2,467 கோடி நிதியில் வளர்ச்சித் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதிலும், சரக்குகள், பயணிகளைக் கையாள்வதிலும் சிறப்புடன் செயல்பட்டுவரும் AAI நிர்வாகத்தினை மாற்ற வேண்டிய அவசியம் தவெக அரசுக்கு என்ன? இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தை முதல்வர் தரப்பிலிருந்து தரவேண்டியது கடமை.</p><p>மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் எழுதப்பட்ட கடிதம எனது தற்போது வெளிவந்திருப்பதன் கால தாதமம் ஏன்? ஏற்கனவே பரந்தூர் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு தமிழகத்தை 10 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய தவெக அரசு அடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் கைவைத்திருப்பது இந்த அரசு உண்மையாகவே மக்களுக்கான அரசாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது. </p><h2>கடிதத்தை வாபஸ் பெற வேண்டும்</h2><p> சென்னை விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவும் பயணிகள் நலன், ஊழியர்கள் நலன், பொதுத்துறை முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/why-did-vijay-sethupathis-comments-on-bigg-boss-about-chief-minister-vijay-spark-controversy">முதல்வர் விஜய்</a> அவர்கள் அனுப்பிய இக்கடிதத்தினை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>என இவ்வாறு தெரிவித்துள்ளார்</p>]]></content:encoded></item><item><title>சிவகங்கை மாவட்டம் இரட்டை கொலை சம்பவத்தில் சிறுவன் உள்பட 13 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivagangai-district-double-murder-case-13-arrested-including-minor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivagangai-district-double-murder-case-13-arrested-including-minor#comments</comments><guid isPermaLink="false">7a76bb91-c623-4144-bc30-8fe15ecd1097</guid><pubDate>Sat, 19 Sep 2026 12:26:41 +0000</pubDate><atom:updated>2026-09-19T12:26:41.497Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இரட்டை கொலை,கொலைகள்,சிவகங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m42owbdp/Sivaganga0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை கொலை வழக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m42owbdp/Sivaganga0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள துவரலம் கண்மாய் புது குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 24). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபாரில் வேலை பார்த்து வந்தார். இவரும் இவரது நண்பரான சிறுவேலங்குடியை சேர்ந்த பூப்பாண்டி (25) என்பவரும் சிவகங்கை அருகே உள்ள பழமலை நகர் கொடிக்கண் மாய் பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய 2 பேரையும் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.</p><h2>உறவினர்கள் மறியல்</h2><p>இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நடந்தது.</p><h2>30 பேர் கைது</h2><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் போராட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை லேசான தடியடி நடத்தி அங்கிருந்து அகற்றியதுடன், 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்வின், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் காதர் மீரா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.</p><h2>ஆள்மாறாட்டத்தில் கொலை?</h2><p>இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கூலிப்படையினர் என்றும், வேறொரு நபர்களை கொலை செய்வதற்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் இந்த கொலை நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த உறவினர்கள், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.</p><p>இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் (21), அலுபிள்ளைதாங்கியை சேர்ந்த மணிகண்டன் (20), சின்னகண்ணனூரை சேர்ந்த ராஜகோபால் (23), சிவகங்கை மேலரத வீதியை சேர்ந்த சபரிவேலன் (21), கருப்பாயூரணியை சேர்ந்த சுபாஷ் (21) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.</p><p>இந்தநிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிறுவன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">f1ac31ed-8530-443d-b128-1e7e5a260723</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:17:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:17:58.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,கண்டனம்,Condemn,கொலைகள்</media:keywords><media:content height="898" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டம் ஒழுங்கு சீரழிவு</h2><p>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது. நீதி கேட்டு போராடியவர்களையும் இந்த அரசு ஒடுக்குகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism">கனிமொழி எம்.பி</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது </p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p>தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?</p><h2>போராடினால் ஒடுக்குவதா?</h2><p>தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">தவெக</a> அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p><p>நேற்றைய தினம் மதுரையில்  மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டுப் போராடியவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-in-kotturpuram-764713"> இரட்டைக் கொலை </a>செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கைது செய்திருக்கிறது.</p><p>குற்றவாளிகளை ஒடுக்கச் சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்தத் திறனற்ற அரசு?</p><p>என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலை கண்டித்ததால் மாணவி  அடித்து கொலை- காதலனோடு சேர்ந்து சகோதரி வெறிச்செயல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-student-murder-case-2-arrested-in-karur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-student-murder-case-2-arrested-in-karur#comments</comments><guid isPermaLink="false">250133ac-ff20-47a0-9456-9f5594a2e8fd</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:36:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:36:35.523Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,போலீசார் விசாரணை,Murder,கொலை,affair,Police Investigaiton,கள்ளக்காதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/hb4gdn0l/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/hb4gdn0l/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள்கள் வினோதினி (வயது 21),  தர்ஷினி (17). இவர்களில் வினோதினி  கரூர் வெங்கமேட்டில்  உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி  வந்தார். தர்ஷினி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுபற்றி வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தனர். தர்ஷினியின் சகோதரி வினோதினி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து  தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரது குடும்பத்தினரின் செல்போன்கள் உள்ளிட்டவையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.</p><h2><strong>கொடூர கொலை</strong></h2><p>இதில் மாணவியின் சகோதரியான வினோதினி வாலிபர் ஒருவரோடு பழகியது தெரிய வந்தது. அவருக்கு திருமணமான நிலையிலும் வினோதினி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பிளஸ்-2 மாணவியான தர்ஷினி கண்டித்துள்ளார். உனது தொடர்பு பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவேன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த வினோதினியும், கள்ளக்காதலனான மோகன்ராஜ் என்ற வாலிபரும் பிளஸ்-2 மாணவியை கொடூரமாக <a href="https://www.maalaimalar.com/topic/கொலை">கொலை</a> செய்து வீசி இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வினோதினியையும், மோகன்ராஜையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். </p><p>வினோதியின் கள்ளக்காதலனான மோகன்ராஜ் கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் காலனி பகுதியை  சேர்ந்தவர் ஆவார். இவரும், வினோதினியும் செல்போனில் பேசி அதன் மூலமாக தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷயம் தர்ஷினிக்கு தெரிந்த பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்கை என்றும் பாராமல் தர்ஷினியை கள்ளக்காதலனோடு சேர்ந்து வினோதினி தீர்த்துக் கட்டியுள்ளார்.</p><p>இதை தொடர்ந்து மோகன்ராஜை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.</p><h2><strong>காட்டுப்பகுதியில்</strong></h2><p>தர்ஷினியை கொலை செய்து,  உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை வீசியதாக மோகன்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்களுடன்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உடலை தேடும் பணியையும் முடுக்கி விட்டார்.</p><p>மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு அங்குலம் அங்குலமாக மாணவியின் உடலை தேடினார்கள்.</p><p>சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாணவியின் தர்ஷினியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலையொட்டிய பகுதியில் புதர் மண்டிய  இடத்தில் அழுகிய நிலையில் தர்ஷினியின் உடல் கிடந்தது. அருகில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதையும் போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகியதில் தனியாக தலை துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.</p><p>உடல்  மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்கேயே வைத்து  பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.  இதையடுத்து இன்று காலையில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.</p><p>மாணவியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைதான மோகன்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.  அதன் விவரம் வருமாறு:-</p><p>நான் திருப்பூர் மாவட்டம்  காங்கேயத்தில்  உள்ள  தனியார் நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தேன். வினோதினி வெங்கமேட்டில்  உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி  வந்தார். எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம்  ஏற்படவே நெருங்கி பழகி வந்தோம். இது காதலாக மாறியது. 2 வருடங்களாக பழகி வந்தோம். எனக்கு திருமணமான நிலையிலும் நான் வினோதியுடன் பழகி வந்தேன். </p><p>கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி வினோதினியின் வீட்டிற்கு  சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அவரது தங்கை தர்ஷினி யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்? என்று  கேட்டு என்னுடன் தகராறு செய்தார். எனது அக்காவுடன் உனக்கு என்ன பேச்சு? இது சரியில்லை என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தார்.  இதனால் இருவருக்கும் இடையே கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>அப்போது ஆத்திரத்தில் நான்  தர்ஷினியின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டேன். அப்போது அருகில்  இருந்த  பிரிட்ஜில் மோதி தலையில் அடிபட்டது. இதில் தர்ஷினி மயங்கி கீழே விழுந்தார். </p><h2><strong>மோட்டார் சைக்கிளில்</strong></h2><p>தர்ஷினி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து வினோதியும், நானும் வீட்டில் இருந்து தர்ஷினியின் உடலை எனது மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்றோம். பின்னர் வெங்கமேடு-வாங்கல்  இணைப்பு சாலையில்  காமதேனு நகர் பகுதியில்  உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டோம். </p><p>இவ்வாறு மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதை தொடர்ந்து மோகன் ராஜூடன் வினோதினியையும் கைது செய்தனர். </p><p>கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure#comments</comments><guid isPermaLink="false">476e6730-e24c-4f46-b578-8518762f8d12</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:09:13 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:09:13.746Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN Govt,தமிழக அரசு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,tvk,பெ சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/n21dbxgt/shanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/n21dbxgt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு அரசு வெளியிட்ட இரண்டு அரசாணைகள் மூலம் புதிய செவிலியர் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது நிரந்தர பணியிடங்களை மறுக்கும் வகையில் இருப்பதாகவும், மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவும் சிபிஐ(எம்) கட்சி கடுமையாக எதிர்த்து, அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.</strong></em></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு</a> முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் B.Sc (Nursing) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.</p><h2><strong>எதிரானது</strong></h2><p>அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அத்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p>எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released#comments</comments><guid isPermaLink="false">ebebc879-e944-4c6b-b20e-b14521f8efd0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:54:30.248Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்,இறுதி வேட்பாளர் பட்டியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</strong></em> </p><h2><strong>மதுராந்தகம் இடைத்தேர்தல்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2><strong>தாராபுரம்</strong></h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.</p><p>இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது</p><h2><strong>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</strong></h2><p>இதனை தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளதால் இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">e1f7b900-1a56-48d5-8863-7240573ff141</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:38:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:38:33.203Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு பள்ளிகளில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் இப்போது 8ம் வகுப்பு வரை விரிவாக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 22ம் தேதி திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் நேரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.</strong></em></p><p>தமிழக அரசு பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவு திட்டம்</a> 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><h2><strong>காலை உணவு திட்ட விரிவாக்கம்</strong></h2><p>திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud#comments</comments><guid isPermaLink="false">57b8169c-d398-4213-bdc7-019bd938537e</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:32:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:32:18.331Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,srirangam temple,ஸ்ரீரங்கம் கோவில்,நிலம் அபகரிப்பு,land issue,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.</p> <p>* ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை மோசடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் கோவில் நிலத்தை முறைகேடாக அபகரித்துள்ளார்.</p> <p>* கோவில் நிலத்திற்கான மூலப்பத்திரத்தை காணவில்லை என முன்னதாக பதிவு செய்து பின்னர் அந்த இடத்தை அபகரித்துள்ளனர்.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* கோவில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> நிர்வாகி அந்த இடத்தில் கட்சி அலுவலத்தையும் நடத்தி வருகிறார்.</p> <p>* சாதாரண பகுதி செயலாளரால் ஒரு கோவில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முடியுமா? இவரின் பின்னால் இருப்பவர்கள் யார்?</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p> <p>* கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்தவரின் பின்னால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவர்.</p><p>* யார் சொல்லி யாருடைய ஆதரவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது என விசாரணையில் கண்டறியப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue#comments</comments><guid isPermaLink="false">ba64b2d9-0624-44a6-98e7-8d4ba612d32c</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:18:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:18:17.075Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>முதன்மைத் தேவை</strong></h2><p>சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும்,  இதுவரை 9  பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? அவை தென்பட்டால்   என்ன செய்ய  வேண்டும்  என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும்,  விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான  மருத்துவத்தை பெறாததால் தான்  உயிரிழப்புகள்  அதிகரித்திருக்கின்றன.</p><h2><strong>உயிரிழப்புக்கு காரணம்</strong></h2><p>அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும்,  விழிப்புணர்வு இல்லாமையும் தான்.  மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு  2 அல்லது 3 நாள்களில் குணமடையாத  நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின்  தன்மையைக் கண்டறிந்து  மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p>பொதுமக்களும்,  அரசு அமைப்புகளும்  இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.</p><p>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி... 2027-ல் அரசியல் கட்சி தொடங்கும் அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027#comments</comments><guid isPermaLink="false">6b8a564a-9b8a-456c-b224-3b7ccf4bee7d</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:46:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:46:27.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parliament election,நாடாளுமன்ற தேர்தல்,annamalai,We the Leaders,வி த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.</p> <h2>அண்ணாமலை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes">பா.ஜ.க.வில்</a> இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் மக்கள் சேவையை அடிப்படையாக வைத்து போதையில்லா தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான பிரசாரம், மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் மக்களை ஈடுபடுத்தினார்.</p> <p>அடுத்ததாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல், கடலோரம் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தார். இதில் கன்னியாகுமரியில் கடற்கரை தூய்மைப்படுத்துவதிலும், மதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியிலும் அண்ணாமலையே நேரில் கலந்து கொண்டார்.</p> <h2>20 லட்சம் பேர்</h2><p>அக்டோபர் மாதத்தை மகளிர் மாதமாகவும், நவம்பர் மாதத்தை இளைஞர் மாதமாகவும் மையப்படுத்தி பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் தலைமை ஏற்று ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். </p><p>உறுப்பினர்களாக சேரக் கூடியவர்கள் இணைய தளத்தில் உள்நுழைந்து பிறந்த தேதி, மொபைல் எண்ணை கொடுத்து ஓ.டி.பி. பெற்றுதான் உறுப்பினராக சேர முடியும். இது சாதாரண மக்களுக்கு கடினமாக இருப்பதால் ‘மிஸ்டு கால்’ கொடுத்து உறுப்பினராக சேரும் வசதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி அண்ணாமலை விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார். பல்வேறு பணிகள் மூலம் மக்கள் மத்தியில் அமைப்பை கொண்டு சேர்த்து விட்டதால் அடுத்தகட்டமாக அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.</p> <h2>அரசியல் கட்சி</h2><p>அமைப்பு பொது செயலாளராக கரு.நாகராஜனை நியமித்துள்ளார். மேலும் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.</p> <h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் (2027) புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தொடங்கும் கட்சியின் பலத்தை காட்டவும் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி அண்ணாமலை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">93959d93-3110-41b0-b38a-832ab3c74951</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:13:55.016Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>அக். 6-ல் இடைத்தேர்தல்</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து நாளை முதல் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><p>அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><h2><strong>40 பேருக்கு அனுமதி</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன், எம்பிக்கள் ரவிக்குமார், துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், வன்னிஅரசு  உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue#comments</comments><guid isPermaLink="false">a4aeeebf-e710-413a-9a03-c049df6961a6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:52:21.546Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.</p> <p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan">பாரதிதாசன்</a> தற்போது வரை பில் அனுப்பாத நிலையிலும் முழு உதவித்தொகையையும் தவெக அரசு அனுப்பி விட்டது.</p> <p>* திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட வழிமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.</p><p>* திமுக அரசு கேட்டதைப்போல் தான் தற்போது தவெக அரசும் உதவித்தொகைக்கான பில் உள்ளிட்டவற்றை கேட்கிறது.</p> <p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வித்தொகைக்கு விண்ணப்பித்த 609 பேரில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டும் திமுக உதவித்தொகை கொடுத்தது ஏன்?</p> <p>* பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது.</p><p>* மாணவர் பாரதிதாசனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.</p><p>* மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது.</p> <p>* திமுக ஆட்சி காலத்தில் நடந்த கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது திமுக தான்.</p><p>* கவின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விசிக போராடிய பிறகே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.</p> <p>* கவின் படுகொலை விவகாரத்தில் விசிக தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே எப்ஐஆர் போட்டது திமுக அரசு. பாதிக்கப்பட்டோர் மீது எப்படி வழக்கு பதிவீர்கள் என ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பினோம்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">e57ce181-dd37-42e8-a704-0ae0c6a9eaa2</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:39:05 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:39:05.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,சென்னை விமான நிலையம்,pm modi,chennai airport,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பொதுத்துறை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது பயணிகள், ஊழியர்கள் மீது சுமை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-விமான-நிலையம்">சென்னை விமான நிலைய</a> நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><h2><strong>பிரதமருக்கு கடிதம்</strong></h2><p>இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதலமைச்சர்  விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். </p><p>சென்னை விமான நிலையம் தனியார்மயமாக்க முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாக வெளியான செய்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்குத் துணைப்போகக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதத்தை எழுதி இருந்தால் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், </p><p>இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p>பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan#comments</comments><guid isPermaLink="false">00ed0913-d804-48ee-b711-845013a323f6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:02:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:02:40.466Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உத்தரவின்படி, மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">பாரதிதாசன்</a> என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>இதையடுத்து வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் வன்னிஅரசு உறுதி அளித்து இருந்தார்.</p><p>இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.</p><p>ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.36 லட்சத்தை 2-வது ஆண்டாக முழுமையாக மாணவர் பாரதிதாசன் பெற்றுள்ளார். </p><p>மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்திலும், சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> அவர்களின் உத்தரவின்படியும் எஞ்சிய தொகையான ரூ.23.95 லட்சமும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit#comments</comments><guid isPermaLink="false">9aa707b3-6eaf-41fb-8004-5bcfae6bee7f</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:09:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:09:20.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மெரினா கடற்கரை,Chennai Marina Beach,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்,International Coastal Cleanup Day,சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marina beach - Governor Arlekar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.</p><p>சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. </p> <p>இந்த நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</a>, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">ஆளுநர் அர்லேகர்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p> <p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">மெரினா கடற்கரையை</a> சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.</p><p>* இருப்பினும், உலகம், நாடு மற்றும் மாநிலம் முழுவதும்  ‘கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், நாம் மீண்டும் இங்கு கூடியுள்ளோம்.</p><p>* கடற்கரை, சுற்றுப்புறம், வீடுகளை தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.</p>  <p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item></channel></rss>