<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 21:33:28 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">d8cd286b-4c31-474c-af85-099af23fd194</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:27:01.093Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a></p><p>* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</a></p><p>* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை</p><p>* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent">இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</a></p><p>* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது.&nbsp;</p><p>* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple">ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</a></p><p>* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026">GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead"> மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி  குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு</a></p><p>*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே</a></p><p>*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்</p><p>*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education">நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை</a></p><p>*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை</p><p>*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</a></p><p>*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.</p><p>*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti">ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</a></p><p>*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்</p><p>*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces">ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india" rel="nofollow">இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</a></p><p>* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case">பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு<br></a><br>*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது</p><p>*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை</a></p><p>* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <p> <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops">மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</a></p><p>* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><p>* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns">இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</a></p><p>* இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</a></p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p><p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute" rel="nofollow">அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!</a></p><p>* தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினர்.</p><p>* இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji" rel="nofollow">செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு </a></p><p>* பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. </p><p>* அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-india-in-commonwealth-games">காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்: இன்று தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-elena-svitolina-enter-qf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா, எலினா ஸ்விடோலினா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue">காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* கர்நாடக முதல்-மந்திரி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். </p><p>* பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation">தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்</a></p><p>* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.</p><p> * கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/masood-ruled-out-of-second-test-against-west-indies-with-finger-injury">வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: காயத்தால் விலகிய ஷான் மசூத்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 9-வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்: நூதன போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்</a></p><p>* ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.</p><p>* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா</a></p><p>* 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என உத்தரவு</p><p>* தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகாவில் போராட்டம்</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-sf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* அரையிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly">மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</a></h2><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்.</p><p>* ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</a></p><p>*  பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>*  600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்கினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">சிறப்பாக பணியாற்றிய கவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>*  மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/glasow-commonwealth-games-asmita-dey-storms-into-the-women-48kg-semi-finals">காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை அஸ்மிதா டே</a></p><p>* இந்தியா பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது.</p><p>* ஆஸ்திரேலியா 51 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/anirudh-chandrasekar-pair-enter-sf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அனிருத் ஜோடி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி தோல்வி அடைந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept">செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</a></p><p>* கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.</p><p>* டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu">திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.</p><p>* 5 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview">மின்கட்டண உயர்வு விவகாரம்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சிவசங்கர் பதிலடி</a></p><p>* தன் இயலாமையை மறைக்க தி.மு.க. திட்டங்களின் பெயரை மாற்றுகிறது தமிழக அரசு.</p><p>* மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-jana-nayagan-screening-stopped-across-karnataka-amid-cauvery-water-dispute">காவிரி விவகாரம்: கர்நாடக தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட ஜன நாயகன் படம்</a></p><p>* தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>* கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online">மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.</p><p>* சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay">அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க: முதலமைச்சர் விஜயை எச்சரிக்கும் அன்புமணி</a></p><p>* முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறாங்க.</p><p>* மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திருவாங்க. அப்படின்னு ஏதோ ஒரு எண்ணத்துல இருக்கிறாரு. எவ்வளவு பேர பார்த்துட்டாங்க.</p>]]></content:encoded></item><item><title>அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க: முதலமைச்சர் விஜயை எச்சரிக்கும் அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">c692df20-4d71-40eb-83f4-825ae352ef5c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:05:42.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery Issue,காவிரி அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/bjf1xqp6/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- அன்புமணிராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/bjf1xqp6/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம், காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து பேசினார்.</p><h2>அப்போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-</h2><p>நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அந்தமானில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் ஒரு திட்டத்தை அவர் எதிர்க்கிறார். காடுகள் அழிக்கப்பட இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.</p><p>அதேபோல்தான் மேகதாது அணை திட்டமும். சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும். 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழித்து அணை கட்ட வேண்டுமா?. அதற்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்புங்கள்.</p><h2>ராகுல் காந்தி சொல்லத் தயாரா?</h2><p>இந்த ஒரேயொரு கேள்வியை அவரிடம் கேளுங்கள். அந்தமானில் காடுகளை அழிக்கக்கூடாது என்கிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் மேகதாதுவில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழிக்கக் கூடாது என்று அவர் சொல்வாரா?. சொல்லனும்.</p><h2>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யனும்</h2><p>முதலமைச்சருக்கு விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து வாக்களித்தார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அவர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இன்னும் 15 முதல் 16 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிச்சா கூட்டுறவு வங்கி கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதை செய்யனும். அது ஒருபக்கம்.</p><p>காவிரி முழுவதும் வறண்ட பகுதியாக இருக்கு. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக சுமார் ஆறரை லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒன்றரை லட்சத்திற்கு மேல் போகுமா? என்று தெரியவில்லை. அடுத்து சம்பா வருது, அதற்கு தண்ணீர் இருக்குமா? என்று தெரியவில்லை.</p><h2>அப்படி என்ற நமக்கும் கர்நாடகாவுக்கும் பிரண்ட்ஷிப்</h2><p>இப்போது நமக்கு தண்ணீர் வேண்டும். முறைப்படை, ஒப்பந்தத்தின்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி நமக்கு தண்ணீர் கொடுத்திருக்கனும். கொடுக்கல. அதைக்கூட கேட்கல. அப்படி என்ற நமக்கும் கர்நாடகாவுக்கும் பிரண்ட்ஷிப்.</p><p>தற்போது அரிசி விலை 10 ரூபாய் ஏறியிருக்கு. குறுவை சாகுபடி இல்லை என்றால் 30 ரூபாய் ஏறும். இதுபோன்ற மறைமுக பிரச்சினை வரும். இதை முதலமைச்சர் புரிந்து கொள்ளனும். Back Door பேச்சுவார்த்தை என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.</p><h2>தேர்தல் வரை டி.கே. சிவக்குமார் விடப்போவது யார்</h2><p>இவை இரண்டும் வெளிப்படையான பிரச்சினை. வெளிப்படையாக அணுக வேண்டும். முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறாங்க. மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திருவாங்க. அப்படின்னு ஏதோ ஒரு எண்ணத்துல இருக்கிறாரு. எவ்வளவு பேர பார்த்துட்டாங்க. இப்போது இருப்பது டி.கே. சிவக்குமார். அவரது தொகுதியில வருது மேகதாது அணை. அவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று திட்டமிட்டிருக்காரு.</p><p>தேர்தல் வரை அவர்கள் விடப்போவது கிடையாது. இன்னும் பிடிவாதமா இருப்பாரு. இன்னும் பதற்றமான சூழ்நிலையை கொண்டு வருவாரு. இதை வைத்துதான் தேர்தலில் வெற்றி திட்டமிட்டுள்ளார். இந்த சூழ்ச்சியில் போய் விஜய் விழக்கூடாது.</p><p>இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு - 2 பேரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmak-corruption-two-arrested-by-anti-corruption-officials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmak-corruption-two-arrested-by-anti-corruption-officials#comments</comments><guid isPermaLink="false">3814061e-f3f1-46fd-983d-0ca89f04a775</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:20:42.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac,Vigilance Department,டாஸ்மாக்,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh1e7c1e/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Two close aides of ex-minister Senthil Balaji arrested in Tasmac Scam]]></media:title><media:description type="html"><![CDATA[ Ex-minister Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh1e7c1e/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேட்டில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.</p><p>டாஸ்மாக்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கோவை, நாமக்கல், திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.</p><h3>டாஸ்மாக் முறைகேட்டில் 7 பேர் மீது வழக்குப்பதிவு</h3><p>இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இவர்கள் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.</p><p>இதற்கிடையில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் நடந்ததாக, ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீதும், அவரது தம்பி அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும் இந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.</p><p>இதையடுத்து செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமீன் நிபந்தனைப்படி அவர்கள் இருவரும், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்கள்.</p><h3><strong>2 பேர் கைது</strong></h3><p>இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் என்பவர்களை போலீசார் கைது செய்தனர்.</p><p>இவர்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>86% வாக்குப்பதிவு: தமிழ்நாடு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/86-voter-turnout-election-commissioner-gyanesh-kumar-praises-tamil-nadu-voters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/86-voter-turnout-election-commissioner-gyanesh-kumar-praises-tamil-nadu-voters#comments</comments><guid isPermaLink="false">d71366ea-f878-4244-86e9-10d5530363b1</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:12:09 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:12:09.264Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Gyanesh Kumar,தமிழ்நாடு,ஞானேஷ்குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hhosw2mt/New-Project-2026-07-31T201028.560.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 86% வாக்குப்பதிவு: தமிழ்நாடு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hhosw2mt/New-Project-2026-07-31T201028.560.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது மனைவியுடன் கோவை வந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,</p><p>“தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான சுமார் 4.93 கோடி வாக்குகள் என்பது, சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்தில் பதிவான மிக அதிகபட்ச வாக்குகள் ஆகும். அதேபோல, சுமார் 86 சதவீத வாக்குப்பதிவை எட்டியதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்து வாக்காளர்களையும் நான் பாராட்டுகிறேன்.</p><p>இதுவும் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும். அமிர்தா விஸ்வா வித்யபீடம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக எனது மனைவி அனுராதாவுடன் இன்று கோவை வந்துள்ளேன். </p><p>தென்னிந்தியாவில் வளர்ந்துவரும் முக்கிய நகரங்களில் மட்டும் கோவை இல்லை, உலகத்தரம் வாய்ந்த கல்விமுறை, ஜவுளித் தொழில்கள், பொறியியலிலும் சிறந்து விளங்குகிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online#comments</comments><guid isPermaLink="false">325c3654-c986-43c9-bfd2-b54f26b3aa57</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:03:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:03:46.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Online,Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,ஆன்லைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/1jmhryct/udhaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/1jmhryct/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக இணைய தளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டமாக நடத்தப்படும். சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.</p><p>2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும், அதற்கு முன்னதாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது.</p><h2>சுயவிவரக் கணக்கெடுப்பு</h2><p>இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்பு தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும்.</p><p>இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரின் விவரங்களை இணைய தளத்தில் பதிவுசெய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.</p><h2>மக்கள் பங்கேற்க அழைப்பு</h2><p>இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன். </p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின்கட்டண உயர்வு விவகாரம்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சிவசங்கர் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview#comments</comments><guid isPermaLink="false">c6b6dfea-cc9c-44fc-af74-c52df00320f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:09:43.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,EB Bill,SS Sivasankar,எஸ்.எஸ்.சிவசங்கர்,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/syr3exak/sivasankar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sivasankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/syr3exak/sivasankar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்களது தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார். </p><p>கேள்வி கேட்ட நிருபர்களில் ஒருவரே, “என்னுடைய நண்பரின் வீட்டிற்கே கூடுதல் மின் கட்டணம் வந்திருக்கிறது” என்று கூறினார். அதற்குப் பதில் சொல்லாமல், “வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்” என்று அமைச்சர் கூறுகிறார்.</p><h2>வாட்ஸ்அப்பில் வந்தால் நம்பகமற்றதா?</h2><p>வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் பார்க்கக் கூடாதா? இன்ஸ்டாகிராமில் வந்த செய்தியைத்தான் பார்க்க வேண்டுமா? இன்ஸ்டாகிராமில் வந்தால் நம்பகமானது, வாட்ஸ்அப்பில் வந்தால் நம்பகமற்றதா?</p><p>என்னிடமும் ஒரு வாட்ஸ்அப் செய்தி இருக்கிறது. அதில் தமிழ்நாடு மின்வாரியத்தின் CMD அருண்ராய் IAS வெளியிட்டுள்ள அறிக்கையில், “In view of widespread complaints regarding high electricity bills during the month of July, Tamil Nadu Electricity Board has decided to conduct a re-inspection of high variation in consumption cases through responsible senior officers” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.</p><p>இதைப் பார்த்து பேசக்கூடாதா? இதை ஆதாரமாகக் கொண்டு கருத்து சொல்லக்கூடாதா? ஒரு பொறுப்பான அமைச்சர், கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், எதிர்க்கட்சியினரை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசுவது சரியல்ல. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் அரசியல் அனுபவம், வயது, வகித்த பதவிகள் ஆகியவற்றை அறிந்த பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். இன்று நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்யவேண்டும்; அதற்கான வாழ்த்துகள். ஆனால், அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது பொருத்தமல்ல.</p><p>நிர்மல் குமார் பல துறைகளில் கருத்து சொல்லும் “multi-talented minister” ஆகவும், அமைச்சரவையின் “mouthpiece minister” ஆகவும் செயல்படுகிறார். ஒரு நாள் மருத்துவம் குறித்து பேசுவார்; மற்றொரு நாள் தச்சு வேலை, பிளம்பிங் போன்றவற்றை தொழிலாகத் தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்குவார்; பிறகு சட்டத்துறையைப் பற்றிப் பேசுவார். ஆனால், தன்னுடைய துறையில் வெளியாகியுள்ள CMD-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையே அவருக்குத் தெரியாமல் பேசுவது வருத்தமளிக்கிறது.</p><p>“எந்தப் புகாரும் வரவில்லை” என்று அவர் கூறுகிறார். ஆனால் CMD அறிக்கையில் “widespread complaints” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகார்கள் இல்லையென்றால், மீள் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?</p><p>ஒருபுறம் “புகாரே வரவில்லை” என்கிறார்; மறுபுறம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதாகச் சொல்கிறார். இது முரண்பாடான நிலைப்பாடு அல்லவா? முதலில் மின்துறை எவ்வாறு இயங்குகிறது, அதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை ஒரு மாதமாவது, இரண்டு மாதமாவது முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகு பேட்டியளிக்க வேண்டும்.</p><h2>மின்வெட்டுக்கு ஒவ்வொரு காரணம் கூறும் அமைச்சர்</h2><p>மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் கூறுகிறார். ஒரு நாள் அதிகாரிகளையே குற்றம்சாட்டுகிறார். மற்றொரு நாள் எதிர்க்கட்சியினரே ஃபியூஸ் கேரியர்களை திருடிச் சென்றதாகச் சொல்கிறார். பிறகு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்கிறார். இவ்வாறு மாறிமாறி காரணங்களைச் சொல்வதற்குப் பதிலாக, முழுமையான ஆய்வு நடத்தி உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.</p><p>மின்துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய மிக முக்கியமான துறை. சில நாட்களுக்கு முன் தொழில் முனைவோர்களைச் சந்தித்தபோது, “இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது; எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.</p><p>எனவே, பிறருக்கு அறிவுரை கூறுவது, நையாண்டி செய்வது போன்றவற்றை விடுத்து, மக்களின் பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணும் நடவடிக்கைகளில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>CMD வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையையே அடிப்படையாகக் கொண்டு, “புகார்கள் வந்துள்ளதால் ஆய்வு நடத்துகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லலாம். அதற்கு பதிலாக உண்மையை மறைத்து, முரண்பட்ட விளக்கங்களை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.</p><p>மொத்தத்தில், இந்த அரசு பல பிரச்சனைகளை மறைத்து சமாளிக்க முயல்கிறது என்ற எண்ணமே மக்களிடம் உருவாகியுள்ளது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை, பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு நேரடியாக பதில் அளித்து, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே நல்லாட்சிக்கான அடையாளமாக இருக்கும்.</p><h2>காரணமில்லாமல் விமர்சிக்க மாட்டோம்</h2><p>தவிர்க்க முடியாத, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பொதுமக்களின் பிரச்சனைகள் இன்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள்தான் ஆகிறது என்பதற்காக அதை விமர்சிக்கக் கூடாது என கூறுகிறார்கள். நாங்களும் காரணமில்லாமல் விமர்சிக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாங்களும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாக, அவர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எங்கள் கடமை.</p><p>அந்தக் கடமையின் அடிப்படையில்தான் எங்கள் தலைவர் மின்துறை பிரச்சனைகள் குறித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு உரிய பதில் அளிக்காமல், தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல. அதனால், அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டி பேச்சை தவிர்த்து, மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>தனது இயலாமையை மறைக்க திட்டங்களின் பெயரை மாற்றி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியும் என்று இந்த அரசு நினைக்கிறது. ஆனால் அது சாத்தியமல்ல. தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களே முழுமையாக தங்களது செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்று கருதுவது தவறான எண்ணம்.</p><p>அதனால்தான் இன்று திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, நிறங்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம், அவற்றின் வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறாகும். உண்மையில், அந்தத் திட்டங்களைப் பார்த்தாலே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் மக்களுக்கு நினைவிற்கு வருகிறது.</p><p>அதேபோல், இணையதளங்களின் நிறங்களை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது போன்றவை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய வேலைகள். ஆனால் ஆட்சி மாறினால் அவை மீண்டும் மாற்றப்படலாம். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், பெயர் மாற்றங்களால் அல்ல; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே முடியும்.</p><h2>வரலாற்றில் பெயர் பெற...</h2><p>இன்றும் மக்களைக் கேட்டால், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உரிமைப் பெண் திட்டம் போன்றவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டவை என்று கூறுவார்கள். அதைப் போலவே, தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயரை வழங்கியவர் அண்ணா என்பதையும், மாநில முன்னேற்றத்தில் கலைஞர் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். வரலாற்றில் பெயர் பெற வேண்டுமென்றால் செயல்களால் பெற வேண்டும்; பெயர் மாற்றங்களாலும், நிறம் மாற்றங்களாலும் அல்ல. </p><p>மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையே பலவீனமாகக் கருதி அரசு செயல்படக் கூடாது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்களே முரண்பட்ட கருத்துகளை வெளியிடுவது அரசின் ஒருங்கிணைப்பின்மையைக் காட்டுகிறது. ஒரு அமைச்சர் ஒரு கருத்தைக் கூற, மற்றொரு அமைச்சர் அதை மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>மறைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?</h2><p>விஜய் அவர்கள் இங்கே வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் கூறுகிறார். அப்படி என்றால் இங்கிருந்து யாரவாது முதல்வர் விஜய் அங்கு வர இருப்பதாக தெரிவித்திருக்க வேண்டும். அதனால்தான் தற்போது வர வேண்டாம் என அந்த முதல்வர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் இப்படி மறைத்து மறைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? தவெக கூட்டணி கட்சிகளே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இப்போதும் கள்ள மவுனம் காத்து வருகிறது இந்த அரசு.</p><p>எல்லாவற்றிற்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சனை வெடிக்காது என நினைக்கின்றனர் ஆனால் அந்த அமைதியே ஒருகட்டத்தில் அரசிற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் புரட்சியாக வெடிக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders#comments</comments><guid isPermaLink="false">406b961e-63d9-45d8-9cde-1e1ee07d2064</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:02:29 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:02:29.917Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Drinking water,நிதி ஒதுக்கீடு,Fund Allocation,குடிநீர்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gzjqdypk/New-Project-2026-07-31T193156.661.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gzjqdypk/New-Project-2026-07-31T193156.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. </p><p>இகூட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு, தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம், நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம், நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம், </p><p>கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு,  குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு,  பால்வளம், மீன்வளம் - மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். </p><p>இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் வினோத், மரிய வில்சன் மற்றும் துறைவாரியான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">e82d6ce7-04c7-475e-9325-168e1732ee86</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:36:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:36:15.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Medal,Police department,ஜோசப் விஜய்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவலர்களுக்கு பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- DGP Maheshkumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தி் நடைபெற்ற காவல்துறை விருது வழங்கும் விழாவில் காவல்துறை அணிவகுப்புடன் முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><p>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</p><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தா் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.</p><h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><h2>பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு</h2><p>ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>புதிய ரோந்து வாகனங்கள்</h2><p>கடலோரற காவல் நிலையங்களின் ரோந்து, கண்காணிப்பு பணிக்கக 42 மகேந்திரா தார் வாகன சேவைய முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p>96 ஹோண்டா யூரிகார்ன் இருசக்க வாகனங்களின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சாகச நிகழ்ச்சிகள்</h2><p>காவல்துறை விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகளை முதலமைச்சர் விஜய்  கண்டு ரசித்தார்.</p><h2>மோப்ப நாய் ராக்கி</h2><p>முதலமைச்சர் விஜய்க்காக பூங்கொத்து எடுத்து வந்த மோப்பநாய் ராக்கி.</p><h2>நினைவு பரிசு</h2><p>தமிழக காவல்துறை சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கி கவரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">dca8573e-81b3-4ddb-8e45-eafc1a326628</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:32:21 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:32:21.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election commision,Chennai High court,சென்னை ஐகோர்ட்,by election,ban extend,தடை நீட்டிப்பு,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</p><h2>முதல்வர் விஜய் ராஜினாமா</h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.</p><p>அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>5 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இதற்கிடையே, இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.</p><h2>தேர்தல் ஆணையத்துக்கு தடை</h2><p>மனுதாரர், தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><h2>தடை நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals#comments</comments><guid isPermaLink="false">1ea9daee-4f56-4c7e-96cf-1364ab03e25f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:12:51.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,medals,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,காவலர்களுக்கு பதக்கம்,CM Vijay Honour</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி வருகிறார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.</p><p>முன்னதாக, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know#comments</comments><guid isPermaLink="false">59130b1f-fe3a-4a35-92d1-a56e93cca63f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:06:28.015Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,Seenu Ramasamy,சீனு ராமசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு... ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு இன்னும் சுற்றுசூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் வன அனுமதி கோரியும் எந்த முன்மொழிவும் தங்களிடம் வைக்கப்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தியது. </p><p>இந்நிலையில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்னும் பெறாத முக்கிய அனுமதிகள் என இயக்குநர் சீனு ராமசாமி, தற்போதைய தமிழ்நாடு சூழலுக்கு தேவையான சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><ul><li><p>வன அனுமதி: மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட (Stage I &amp; Stage II) வன அனுமதிகள் பெறப்படவில்லை.</p></li><li><p>சுற்றுச்சூழல் &amp; வனவிலங்கு அனுமதி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (EC) அனுமதியும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதியும் பெறப்படவில்லை.</p></li><li><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல் நிலுவையில் உள்ளது.</p></li><li><p>தொழில்நுட்ப அனுமதிகள்: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆகியவற்றின் இறுதித் தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.</p></li><li><p>நீதிமன்ற வழக்குகள்: உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழ்நாடு அரசு மற்றும் 'பூவுலகின் நண்பர்கள்' உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p></li></ul><p>இத்தனை சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்கின்றன தரவுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">d354dd0a-4aaa-4a6a-af44-2ba68a5a1973</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:54:41 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:54:41.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">மேகதாது</a> அணையை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கையை எதிர்த்து என தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>தனி நடுவர் மன்றம்</h2><p>தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><h2>அதிமுக வழக்கு</h2><p>பின்னர் அதிமுக, பாமக கட்சிகள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தேவையில்லாதது எனக் கூறினர். இந்த நிலையில் தீர்மானத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>இவ்வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர், சட்டமன்றச் செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>* 2018-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p>* தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர வாரியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.</p><p>* உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை. தமிழக அரசு போராடித்தான் தண்ணீரை பெறக் கூடிய நிலை இருந்து வருகிறது.</p><p>* கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணை கட்டுவோம் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.</p><p>* மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டின் டெல்லா பகுதி பாலைவனமாகிவிடும். </p><p>* காவிரி 20 மாவட்டங்ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.</p><p>* த.வெ.க. அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஏதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சட்டசபையில் தனித்தீர்மானம் வைக்கப்பட்டது.</p><h2>முதல்வர் விஜய் முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்</h2><p>* முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.</p><p>* எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஒரு கருத்தை முன்வைத்தார்.</p><p>* முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். இது தவறானது.</p><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p>* பிறகு விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாகத்தான் நாங்கள் சட்டமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour#comments</comments><guid isPermaLink="false">e66ae593-5db5-4142-8b3a-6d96719641f6</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:50:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:50:59.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல்துறை பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் பதக்கம்</h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்குகிறார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்குகிறார்.</p><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெக கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors#comments</comments><guid isPermaLink="false">ba7a9247-5b82-421a-8240-2e7eb94fe3fb</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:48:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:48:28.511Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tnstc,tvk,டிஎன்எஸ்டிசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெகவின் கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளன.</p><p>செயலி மட்டுமின்றி, தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறத்தையும் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>நிறங்களைத் தாண்டி, கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களையும் தவெக அரசு மாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">af6f0be1-4ee7-4e4b-8d42-bdee9a6ce6b8</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:33:16 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:33:16.859Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,vijay,mekedatu dam,மேகதாது அணை,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>த.வெ.க. ஆட்சி</h2><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.</p> <p>குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க.வின் சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.</p> <p>கர்நாடக முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">காவிரி மேலாண்மை ஆணையம்</a> பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார். </p> <p>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளி வந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p><h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>முதலமைச்சர் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை மந்திரி அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சரின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed#comments</comments><guid isPermaLink="false">0b86b1de-e4d4-43e0-8b45-265e77a8d086</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:08:45 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:08:45.550Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கடந்த ஆட்சியில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்பதற்கு பதில் பொது விநியோகத் திட்டம் என குறிப்பிட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><h2>தொடர்ந்து மாற்றப்படும் திட்டப் பெயர்கள்</h2><p>தவெக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. முன்னதாக, நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அறிக்கை வெளியாகி உள்ளது.</p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக நியாய விலைக்கடைப்  பொருட்களை வழங்கும் ஒரு சிறப்புச் சமூக நலத் திட்டமாகும்.</p><p>கூட்டுறவுத் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி நாளை சென்னை வருகை - நீட் தேர்வால் பலியான மாணவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">927ec171-3941-4572-a12f-e012d4cf8db6</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:47:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:47:02.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார்.</em> </p><h2>பயிற்சி முகாம்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23 -ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.</p><p>இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது. </p><h2>ராகுல் காந்தி</h2><p>முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல்காந்தி</a> நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.</p> <p>அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.</p><p>அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.</p> <p>அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கின்றனர். </p> <h2>உளவுத்துறை தகவல்</h2><p>ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு விதிப்பு - பக்தர்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-restrictions-imposed-for-darshan-at-thiruchendur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-restrictions-imposed-for-darshan-at-thiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">56483a6b-8cab-47bb-809f-8c7fd7114f70</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:25:13 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:25:13.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,தரிசனம்,நேர கட்டுப்பாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ykm5fjkn/tiruchendurtemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tiruchendur temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ykm5fjkn/tiruchendurtemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்</a> பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p> <p>இந்நிலையில் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. </p> <p>இதுகுறித்து கோவில் நிர்வாகம் எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைத்து உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது என பேனர் வைத்துள்ளனர். </p> <p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவில் நிர்வாகத்தால் பக்தர்கள் தரிசனம் குறித்து எந்தவித அறிவிப்பும் முறையாக தெரிவிக்கப்படாமலும், பக்தர்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக கோவில் நிர்வாகம் நடந்து கொள்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">4f587f8d-dfc9-4f28-beb3-057e3998db64</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:21:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:21:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Supreme Court,Tasmac,உச்சநீதிமன்றம் உத்தரவு,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2w2kq617/Senthil-balaji1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji- Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2w2kq617/Senthil-balaji1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு</h2><p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28ம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது.</p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance" rel="nofollow">செந்தில் பாலாஜி</a> அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.</p><h2>மேல்முறையீடு</h2><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டது.</p><p>உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.</p><p>இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>இடைக்கால தடை</h2><p>முன்ஜாமின் வழங்கிய தலைமை நீதிபதி மேலும் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81" rel="nofollow">கைது</a> செய்யக்கூடாது. </p><p>புலன் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு தருவதை நாங்கள் உறுதி செய்கிறோம், தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்.</p><p>பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.</p><p>இடைக்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.</p><p>இவ்வாறு கூடிய எச்சரிக்கை மற்றும் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">33537704-d9ec-41fb-923c-ecb1af2df4fe</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:00:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:00:28.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,பல் மருத்துவர்,இரட்டை கொலை,Anna Nagar,dental doctor,அண்ணாநகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/icmgh0y8/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Double Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/icmgh0y8/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில்  பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p>பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><p>சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் அஷ்ரப் நிஷா குடும்பத்தோடு வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில்  3 மகன்களுடன் ஒரே வீட்டில் அவர் இருந்தார்.</p><p>இந்த நிலையில் அஷ்ரப் நிஷாவின் இளைய மகனான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவுக்கும், அவரது அண்ணன்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.</p><h2>கொடூர கொலை</h2><p>இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தாய் அஷ்ரப் நிஷா, தம்பி அஷ்ரப் அகமது  இருவரையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர். மேலும் கழுத்தையும் நெறித்து இருக்கிறார்கள்.</p><p>இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் வீட்டிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.</p><h2>நாடகம்</h2><p>தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரும் நாடகம் ஆடினார்கள். இன்று காலையில் இருவரும் உயிர் இழந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது. தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.</p><p>இதுபற்றி தகவல் கிடைத்ததும், அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள்.</p><p>போலீஸ் விசாரணையின்போது சகோதரர்கள் இருவரும் தங்களது தாயும், தம்பியும் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவே தெரிவித்தனர்.</p><h2>காட்டிக்கொடுத்த காயங்கள்</h2><p>அஷ்ரப் நிஷாவின் முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அஷ்ரப் அகமதுவின் இடுப்பு, கைகள், கால்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து சகோதரர்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரிடமும் போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p>இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். </p><h2>கைது</h2><p>இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.</p><p>கொலையுண்ட தாய், மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சகோதரர்களின் மனைவி, மகன், மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>இந்த இரட்டை கொலை சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளி வியாபாரி அடித்துக்கொலை - நாகர்கோவில் சிறையின் துணை ஜெயிலர் இடமாற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sabari-varma-murdered-case-nagercoil-prison-deputy-jailer-transferred</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sabari-varma-murdered-case-nagercoil-prison-deputy-jailer-transferred#comments</comments><guid isPermaLink="false">c690ae0c-a297-4a15-9f4b-f1a92fb160a6</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:40:31.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ag1ktey2/sabarivarman1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபரிவர்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ag1ktey2/sabarivarman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததாக கூறி சபரி வர்மனை தென்தாமரை குளம் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.</p> <h2>சபரிவர்மன் கொலை</h2><p>இந்தநிலையில் அவர் சிறைக்குள் வைத்தே அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சபரிவர்மனை கை-கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொன்ற 3 சிறைக் காவலர்கள் மற்றும் 8 விசாரணை கைதிகள் என 11 பேரை கைது செய்தனர். </p> <h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் நாங்குநேரி சிறையிலும், கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி.</a> விசாரணைக்கு மாற்றப்பட்டது. </p><p>இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களும் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு  சாஜிதா நாகர்கோவில் சிறைக்கே சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். </p> <p>இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 கைதிகளிடமும், நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் 3 பேரிடமும், நெல்லை மற்றும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இந்த விசாரணையில் சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டிவைத்து சரமாரியாக அடித்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. சபரிவர்மன் கொலையில் மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.</p> <h2>இடமாற்றம்</h2><p>இந்தநிலையில் நாகர்கோவில் சிறை துணை ஜெயிலராக இருந்த சம்பத், பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, பாளையங்கோட்டை சிறையின் துணை ஜெயிலராக இருந்த பழனி ராஜன், நாகர்கோவில் துணை ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேபோல் சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் பதிலாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து 3 புதிய சிறை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance#comments</comments><guid isPermaLink="false">c85e5b1d-8c39-4885-9d95-dcd34a3de133</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:24:38.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,மனு தாக்கல்,Tasmac,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,new plea</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.</p><p>முன்ஜாமின் நபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு அளிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த மனுவில்,"டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முனஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது. </p><p>அதனால், நேரில் ஆஜராக இயலாது என்று இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு செந்தில் பாலாஜ நேற்று கடிதம் எழுதியுள்ளதாக" செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.</p><p>முன்ஜாமின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வரும் ஆகஸ்டு 5ம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரவேன் என செந்தில் பாலாஜி உத்தரவாதம் அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops#comments</comments><guid isPermaLink="false">d7271818-1db0-490e-a972-9fffbbb6863f</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:02:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:02:51.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p> <p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. </p> <p>இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில் இன்றைய தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை இராஜாஜி அவர்கள் ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் இராஜாஜி அவர்களின் எச்சரிக்கையையும் மீறி சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector"> மதுக்கடைகள்</a> இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200-க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p> <p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:00:41.355Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call" rel="nofollow">சென்னையில் சிக்கன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</a></p><p>* சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. </p><p>* ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்<br></a><br>*உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.</p><p>*'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha">மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு</a></p><p>*அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்</p><p>* பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact">’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!... </a></p><p>*தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>*‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow">முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</a></p><p>* முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</p><p>* முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold">3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு</a></p><p>*இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.</p><p>*தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport">கத்திப்பாரா மேம்பாலம் To விமானநிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</a></p><p>* தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>* திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும்</p><p>* ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-in-commonwealth-games-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery" rel="nofollow">சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</a></p><p>*  1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>*   தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges">தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்... </a></p><p>*தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><p>*ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august">9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!... </a></p><p>*இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>*இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india" rel="nofollow">இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</a></p><p>* ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>* மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team">பிரேசில் உடனான பயணம் முடிந்தது: ஓய்வு அறிவித்த நெய்மர்</a></p><p>* உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது.</p><p>* பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th">தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p>* மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle" rel="nofollow">சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்</a></p><p>* சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். </p><p>*  8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/stephen-fleming-appointed-england-mens-test-coach-joe-root-returns-as-captain">இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமனம்</a></p><p>* சிஎஸ்கே அணியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த 13-ம் தேதி விலகினார்.</p><p>* இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bmw-to-cut-several-thousand-jobs-in-latest-blow-to-german-auto-sector">அடுத்த ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை நீக்கும் BMW நிறுவனம்</a></p><p>* ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p><p>* மந்தமான பொருளாதார சூழலாலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-qualifies-for-javelin-throw-final-in-commonwealth-games">காமன்வெல்த் விளையாட்டு: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா</a></p><p>* இந்திய அணி இதுவரை மொத்தம் 15 பதக்கங்கள் வென்றுள்ளது.</p><p>* இந்தியாவின் ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/lorenzo-musetti-enter-qf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers">விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து வருகிறது தவெக அரசு.</p><p>* திமுக சார்பில் தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>*  தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon#comments</comments><guid isPermaLink="false">2f51a6cb-41be-4811-b6ec-8c7e03591360</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:55:57.765Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை விவகாரம்,Megadatu dam,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-</p><p>சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்த ரொட்டீன் செக் அப் செய்கிறோம்.</p><p>மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. </p><p>கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.</p><p>மேகதாது பிரச்சனை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. </p><p>மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.</p><p>தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">85bd1c2f-6361-48a4-a8cc-f2807d168fd7</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:30:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:30:33.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mekedatu Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.</strong></em></p><p>காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.</p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>நாடாளுமன்றம்</h2><p>இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.</p> <h2>மத்திய மந்திரி பதிலால் சர்ச்சை</h2><p>இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதி லில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங் கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.</p><p>மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.</p> <h2>பிரதமருக்கு முதல்வர் கடிதம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">பிரதமர் மோடி</a>க்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருந்தார். அதில், </p><p>காவிரி நதி வெறும் நீருக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையும், நீதித்துறை முடிவுகளையும் நிலைநாட்ட பிரதமர் இதில் தலையிட வேண்டும்.</p> <p>மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும். நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பாகும் என்ற தெரிவித்து இருந்தார்.</p> <p>இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆலோசனை</h2><p>இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">0b0d36cd-abed-4e9b-81af-9196f7e87448</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:21:00.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபநாசம்,aadi amavasai,Karaiyar Sorimuthu Ayyanar Temple,ஆடி அமாவாசை,காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Karaiyar Sorimuthu Ayyanar Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக் கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.</em></p> <p>மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சொரிமுத்து அய்யனார் கோவில்</h2><p>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h2>சோதனைச்சாவடி</h2><p>கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <h2>அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி</h2><p>ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <p>ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.</p> <p>ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam#comments</comments><guid isPermaLink="false">bc163fba-c454-463d-943e-5b53eed5facb</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:05:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:05:57.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தாம்பரம் ரெயில் நிலையம்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்களை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூர்</a> வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h2><strong>தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் ரெயில்கள்</strong></h2><p>வழக்கமாக சென்னை எழும்பூர் வரை வந்து செல்லும் கீழ்க்கண்ட ரெயில்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரத்துடன்</a> நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே மறுமார்க்கமாக இயக்கப்படும்.</p><p>*  தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16866)  மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16160) கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20636) சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22154).  </p><h2><strong>மாம்பலம் வரை இயக்கப்படும் ரெயில்</strong></h2><p>திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12654) தற்காலிகமாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கிருந்தே மீண்டும் திருச்சிக்குப் புறப்படும்.  </p><h2><strong>பயணிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h2><p>மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குப் பதிலாக, தங்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தாம்பரம் அல்லது மாம்பலம் ரெயில் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் தேவை காவிரி தண்ணீர்- ஜி.கே.வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">a7903532-b596-4895-964c-211d7e1f1d7b</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:32:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:32:05.724Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,ஜிகே வாசன்,காவிரி நீர்,Cauvery water,காவிரி மேலாண்மை ஆணையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</aside><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரியில் </a>தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>மறுக்கக்கூடாது</strong></h2><p>குறிப்பாக <a href="https://www.maalaimalar.com/topic/காவிரி-மேலாண்மை-ஆணையம்">காவிரி மேலாண்மை ஆணையம்</a> ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல</p><p>அவசியமானதும் கூட.</p><p>ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது.</p><h2><strong>கர்நாடக அரசு</strong></h2><p>எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீண்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (01.08.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35#comments</comments><guid isPermaLink="false">eca887a6-7bf8-4789-8715-d1a8e34d5b01</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:20:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:20:27.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>மாங்காடு</strong></h2><p>அம்பாள் நகர், பத்மாவதி நகர், அட்டிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யு, எஸ்எஸ் கோவில் தெரு, மேலண்டை மாட வீதி, பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, நியூ போலீஸ் ஸ்டேஷன், எம்ஜிஆர் நகர், ஏஎஸ் நகர் பட்டூர், அப்பாவு நகர், வெள்ளீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>மாடம்பாக்கம்</strong></h2><p>ராஜ்பாரிஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் பிரதான சாலை, ராகேஷ் ஷர்மா நகர், விக்டோரியா பார்ம் ஹவுஸ், கோவிலஞ்சேரி, கிரஞ்ச் அண்ட் கரி, குறிஞ்சி நகர், அகரம் தென், திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே. அவென்யூ.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>காமகோட்டி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.</p><h2><strong>திரிசூலம்</strong></h2><p>பிவிஆர் மால், சந்தை சாலை, ஆறுமலைச் சாவடி, ஹார்பர் ஆர்ட்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோவில் தெரு, ராணி அண்ணா நகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை பிரதான சாலை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஜி.இ. நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல் &amp; டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல் காமராஜபுரம், திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன் தெரு, அன்னை மேரி தெரு, வினாய நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோசஸ் அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள் வரை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>வரதராஜ பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் பிரதான சாலை, பிஎஸ்சிபிஎல், போலினேனி ஹில்சைடு அபார்ட்மென்ட்ஸ், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசங்கழனி பிரதான சாலை, கரணை பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மால்ஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மென்ட், ஆர்.சி. பிளாசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், ஏரிக்கரை சாலை, வரதபுரம்.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.</p><h2><strong>பூவிருந்தவல்லி</strong></h2><p>பூவிருந்தவல்லி பகுதியில் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் 33 கி.வோ மற்றும் 11 கி.வோ அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளான பழைய பஸ்பார் குழாய்கள் மற்றும் சேதமடைந்த கிளாம்ப்களை மாற்றும் பணிகள் நடைப்பெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office#comments</comments><guid isPermaLink="false">13a6d5ed-da70-49b4-a3b3-becbb7f09d1a</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:02:20.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</em></p><h2>மின் தடை</h2><p>தமிழகத்தில் நிலவும் தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். </p><p>பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்மாற்றிக் கோளாறுகள் தாமதமாவதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து உள்ளது.</p> <h2>சென்னையில் மின்வெட்டு</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இரவில் வீட்டிற்கு வந்தால் மின் வெட்டு என்ற நிலை சென்னை மற்றும் புறநகர் மக்களை குமுற வைத்துள்ளது.</p> <h2>பொதுமக்கள் மறியல்</h2><p>இரவில் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல், மின்வாரியத்தை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>இந்நிலையில், திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery">த.வெ.க. ஆட்சி</a> அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...</p><p>முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை.</p> <p>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p><p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p>இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...<br><br>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.<br><br>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… <a href="https://t.co/6FubNiIFPa">https://t.co/6FubNiIFPa</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2083002205204852971?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஏசி பயன்பாடு</h2><p>வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>மின் வாரியம்</h2><p>மின்தடை தொடர்பாக பொதுமக்கள் "மின்னகம்" மையத்திற்கு தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பை சரி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது.</p><p>பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்மாற்றி பழுது காரணமாக ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition#comments</comments><guid isPermaLink="false">166c7ac5-6e7f-4db0-9f33-783655edeef2</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:07:00.264Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Supreme Court,உச்ச நீதிமன்றம்,DVAC,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுவிற்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. </p><p>தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது முன்ஜாமினோ வழங்கிவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. </p><h2>முன்ஜாமினை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்</h2><p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக்  நிறுவனத்தின் மதுபான ஒப்பந்தங்கள், பார் டெண்டர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் முக்கிய தகவல்களுக்காக செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யவேண்டியது அவசியம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு </h2><p>உயர் நீதிமன்றம் முன்ஜாமினைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism#comments</comments><guid isPermaLink="false">83c469b8-e369-417a-a7ee-f0414322e962</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:57:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:57:38.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திராவிடர் கழகம்,dravidar kazhagam,மு.க.ஸ்டாலின்,tvk,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இருசக்கர பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். </p><p>இதனைத்தொடர்ந்து இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதியே அனுமதி கேட்டநிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; </p><h2>போராட்டத்தைக் கண்டு பா.ஜ.க.வைவிட த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது</h2><p>“தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? </p><p>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?</p><p>கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. </p><p>அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/she-is-a-goddess-the-madurai-bench-of-the-high-court-grants-legal-personhood-to-the-thamirabarani-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/she-is-a-goddess-the-madurai-bench-of-the-high-court-grants-legal-personhood-to-the-thamirabarani-river#comments</comments><guid isPermaLink="false">7e8b2443-b308-4b5e-8ec9-b1c25a922927</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:35:35.440Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,தாமிரபரணி,tamirabarani river,HC of Madurai Bench</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5vjgzb2t/New-Project-2026-07-30T200508.587.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5vjgzb2t/New-Project-2026-07-30T200508.587.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் விடுவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றை ஒரு சட்டபூர்வ நபராக அங்கீகரித்தும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. </p><p>தாமிரபரணி வெறும் நதி மட்டுமல்ல, அது இந்துக்களால் தெய்வமாக வழிபடப்படுவதால் அதற்கு ஆளுமை அந்தஸ்து வழங்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.</p><h2>அவள் ஒரு தெய்வம்</h2><p>“தாமிரபரணி நதி இந்துக்களால் ஒரு தெய்வமாக வணங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அது ஒரு நபரின் தன்மையைக் கொண்டுள்ளது. ஆகையால், தாமிரபரணி ஒரு நதி என்பதால் அல்ல, மாறாக அவள் ஒரு தெய்வம் என்பதால் நாங்கள் அவளது ஆளுமையை அங்கீகரிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். </p><p>அவளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. அது பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களில் காணப்படும் சட்டப்பூர்வ விதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், நதியின் சொந்த உரிமைகளையும் மீறுவதாகும். இதன்மூலம் அவள் தனது உள்ளார்ந்த மதிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறாள்.” என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. </p><h2>அஸ்திக்கும் மட்டும் அனுமதி </h2><p>நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், மே 7 முதல் மே 28 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின்போது, ​​86 முதல் 90 டன் வரையிலான ஆடைகள், 2.2 டன்  சாம்பல், 1,385 கிலோகிராம் நெகிழி கழிவுகள், 220 கிலோகிராம் கண்ணாடிப் புட்டிகள் மற்றும் 374 கிலோகிராம் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து, மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிமன்றம், தாமிரபரணியில் துணிகள் மற்றும் இதரப் பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதித்தது.</p><p>ஆனால் இந்தியர்கள் ஆறுகள் மற்றும் கடல்நீருடன் கொண்டுள்ள ஆன்மிகரீதியான உணர்வுகளையும், அதற்காக அங்கு அவர்கள் செய்யும் சடங்குகளையும் கருத்தில்கொண்டு இறந்தவர்களின் சாம்பலை மட்டும் ஆற்றில் கரைக்க அனுமதி அளித்துள்ளது. </p><p>சுடப்படாத பானையில் மட்டுமே சாம்பலை எடுத்து செல்லவேண்டும் எனவும், மேலும் பானைகளுடன் சாம்பலை ஆற்றில் வீசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. </p><h2>மனிதன் மாறவேண்டும்</h2><p>இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், மனிதர்கள் அதை கடைபிடித்து அவர்களது இயல்பை மாற்றினால்தான் மாற்றம் நிகழும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>“இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சட்டங்கள் மட்டும் போதாது. கடுமையான அமலாக்கம்கூட நோக்கத்தை அடையாது. மனித இயல்பு மாற வேண்டும். மேலும், அது தார்மீகத் தலையீடுகளால் மட்டுமே சாத்தியமாகும். ஓர் உதாரணம் உடனடியாக நினைவுக்கு வருகிறது. முட்டையிடுவதற்காக மேற்குக் கடற்கரைக்கு வரும் ஆமைகள் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன. ஒரு பிரபலமான மத போதகர், பிரசவத்திற்காகத் தாய்வீட்டிற்கு வரும் மகள்களுடன் அந்த ஆமைகளை ஒப்பிட்டார். </p><p>இவ்வாறு, அந்தச் செய்தி ஆழமாகப் பதியவைக்கப்பட்டது. சட்டத்தால் தடுக்க முடியாததை, கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தடுத்தது. எனவே, நீதித்துறை ஆன்மீகச் சூழலியலுடன் தன்னை மேலும் மேலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ,” என நீதிபதிகள் தெரிவித்தனர். </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான 'ஆனந்தவிலாஸ்' மண்டபத்தை நிர்வகித்து வந்த சீவனுபாண்டியன் என்பவருக்கு, அது ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி அரசு சார்பில் நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில்தான் மேல்குறிப்பிட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த இடம் "ஆற்றுப் புறம்போக்கு" என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையை ஆற்றிலிருந்து பிரிக்க முடியாது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.</p>]]></content:encoded></item><item><title>விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers#comments</comments><guid isPermaLink="false">57b51e1e-ba1f-4a9a-9970-fa16dbb36a0d</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:18:35.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,farmers,விவசாயிகள்,Udhayanidhi Stalin,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2mq29fgi/udayaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2mq29fgi/udayaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>மாபெரும் ஆர்ப்பாட்டம்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகதாட்டு பிரச்சனையை கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதல் மந்திரியை சந்திக்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது...</p><p>இப்படி தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் ஷூட்டிங் மாடல் தவெக அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திமுக சார்பில் தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம்... விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என தெரிவித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின் அறிக்கை</h2><p>முன்னதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்</p>]]></content:encoded></item><item><title>‘அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது’ - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-aiadmk-has-ended-poovai-jaganmoorthy-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-aiadmk-has-ended-poovai-jaganmoorthy-announces#comments</comments><guid isPermaLink="false">acd85e82-3c2d-46d7-89b4-98c051d2f9dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:31:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:31:14.028Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,புரட்சி பாரதம் கட்சி,puratchi bharatham katchi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ymrosgy/New-Project-2026-07-30T190049.553.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது’ - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ymrosgy/New-Project-2026-07-30T190049.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறிவிட்டதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணி முடிந்துவிட்டதாகவும், இப்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். </p><h2>அதிமுகவுடனான கூட்டணி</h2><p>நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்துவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதத்திற்கு போட்டியிட சீட்டு வழங்காவிடினும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. </p><p>அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெற்றது. இத்தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தி 4 இடங்களை கோரியநிலையில், அதிமுக 1 சீட்டு மட்டுமே வழங்கியது. அந்த ஒரு இடத்திலும் தோல்வியைத் தழுவியது.</p><h2>வெறியேறிய கட்சிகள்</h2><p>தற்போதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days#comments</comments><guid isPermaLink="false">3c535016-e598-47aa-ab61-96b3ae17cb69</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:39:42 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:39:42.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,தமிழ்நாடு,CWRC</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி தண்ணீர் திறக்க CWMA உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நேற்று காவிரி ஒழுங்குமுறைக்குழு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி நீர் திறக்க பரிந்துரைத்ததை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்தநிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.</p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகவிற்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.</p><h2>கூட்டத்தில் கர்நாடகா முன்வைத்த வாதம் என்ன?</h2><p>காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும், தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா வாதிட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,748 கன அடி நீர் பாய்ந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை பிலிகுண்டுலுவில் 178 கன அடி நீர் மட்டுமே பாய்வதாக கர்நாடகா தெரிவித்தது. </p><p>காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 99 டிஎம்சி அளவை விடக் கணிசமாகக் குறைவு என்றும் தெரிவித்தது. </p>]]></content:encoded></item><item><title>வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">d7a730ab-aa9e-4a59-9402-7c8da398df03</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:37:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:37:13.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Leopard,வாகன ஓட்டிகள்,Pollachi,Motorists,பொள்ளாச்சி,சிறுத்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vt0wjbei/Leopard.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Leopard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vt0wjbei/Leopard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி மற்றும் ரொட்டிக்கடை பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் உலா வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ரொட்டிக்கடையில் செல்வக்குமார் என்பவருடைய வீட்டில் உள்ள கோழியை பிடிப்பதற்காக சிறுத்தை வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதமே வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.</p><h2><strong>வைரல்</strong></h2><p>இந்நிலையில் நேற்று இரவு ஐயர்பாடி துணை மின் நிலையம் அருகில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து கம்பீரமான நடையுடன் சிறுத்தை சென்றுள்ளதை கண்ட சுற்றுலா பயணிகள் படம்பிடித்து தற்போது வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். அது வைரலாகி வருகிறது.</p><h2><strong>சிறுத்தை</strong></h2><p>எனவே வனத்துறை இதனை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தைகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி அருகே உள்ள வெட்டிக்குழி பகுதியில் கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோழிகள், ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.</p><h2><strong>சிக்கியது</strong></h2><p>இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூண்டு அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். இதன் பலனாக நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.</p><p>பின்னர் சிறுத்தையை பரியாரம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வனத்துறையினர், வன விலங்கு மருத்துவர் டாக்டர் மிதுன் தலைமையிலான குழுவின் மூலம் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டனர்.</p><h2><strong>காயம்</strong></h2><p>அப்போது, கூண்டின் இரும்பு கம்பியில் மோதியதால் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது தவிர, சிறுத்தை முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சாலக்குடி வனக்கோட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில், சிறுத்தை பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் கோழிகளை வேட்டையாடியது இதைவிட பெரிய சிறுத்தை என்றும், அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடக்கூடும் என்றும் வெட்டிக்குழி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உறுதியானால், கூடுதல் கூண்டுகள் அமைத்து பிடிக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை டவுன், பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">2f9a7185-60e6-43ff-9e20-931126ad85f9</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:00:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:00:15.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,நெல்லை,Tirunelveli,Power Cut,petta,பேட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ power cut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை நகர்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மின் நிலையம்</strong></h2><p>கொக்கிரகுளம், பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. </p><h2><strong>மின்தடை</strong></h2><p>எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், பரணி நகர், திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர், நெல்லை டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர்,</p><h2><strong>பேட்டை</strong></h2><p>திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன் நகர், திருமங்கை நகர், செந்தமிழ் நகர், பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுன் கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியில் பகுதியில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow#comments</comments><guid isPermaLink="false">1c102744-ce1d-48d4-8560-376fd2f3c8c9</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:54 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:54.702Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Anticipatory bail,முன்ஜாமின் மனு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28 அன்று வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. </p><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நாளை வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>