<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 03 Aug 2026 06:28:08 +0000</lastBuildDate><item><title>காவிரி பிரச்சனை: தவெக அரசுக்கு வரலாறே தெரியவில்லை - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-cauvery-issue-tvk-government-is-ignorant-of-history#comments</comments><guid isPermaLink="false">544a5daa-af4e-422d-abb3-28d033c954a4</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:27:49.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,Cauvery Issue,காவிரி விவகாரம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-27/4qxem44x/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/the-mekedatu-project-is-the-only-solution-to-the-cauvery-issue-dk-shivakumar">காவிரி</a> நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.</p> <h2>கன்னட அமைப்புகள் போராட்டம்</h2><p>இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4% டி.எம்.சி. நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.</p> <h2>சுப்ரீம் கோர்ட்</h2><p>இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித்துள்ளது. </p><h2>தீரன் சின்னமலை நினைவுநாள் </h2><p>சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 221-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p> <p>* காவிரி பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பான வரலாறே தவெகவுக்கு தெரியவில்லை.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும்.</p><p>* கர்நாடக அரசாங்கம் அரசியல் கட்சி தலைவர்களை விவசாயிகளை மதித்து அனைத்து கட்சியை கூட்டியது.</p><p>* காவிரி நீர் விவகாரத்தில் அதிமுக, திமுக ஆட்சியில் எவ்வளவு போராட்டம் நடந்தது என மக்களுக்கு தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 03 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-03-august-2026#comments</comments><guid isPermaLink="false">3d51818e-8311-4109-ba52-03a94a3844a8</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:19:55.785Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/orsv477b/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session">சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</a></p><p>* தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>* சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sexual-assault-case-court-acquits-brij-bhushan-singh" rel="nofollow">பாலியல் குற்றச்சாட்டு- பிரிஜ் பூஷண் சிங்கை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு</a></p><p>* நீதிபதி அஷ்வினி பன்வார் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>* டெல்லி போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்து, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court">முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின்</a></p><p>* திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><p>* திமுக எம்.எல்.ஏ. தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/kerala-rains-landslide-death-toll-rises-to-9" rel="nofollow">கேரளத்தில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு</a></p><p>* படகு கவிழ்ந்து மாயமான மீனவர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.</p><p>*  விழிஞ்ஞம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி படகு கவிழ்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed">காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி</a></p><p>* 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். </p><p>* தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-3-8-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை கடந்த 28-ந்தேதி முதல் மாற்றம் இல்லாமல் விற்பனையாகி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute">தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p><p>* சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river">ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் 'ஷவர்கள்' அமைப்பு</a></p><p>* ஆடிப்பெருக்கு நாளில் சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வர்.</p><p>* காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indians-spend-most-time-app">இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடும் செயலி - ஆய்வில் புதிய தகவல்</a></p><p>* ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.</p><p>*&nbsp;வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவது் தெரிய வந்துள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reserve-bank-begins-consultations-today-will-there-be-a-change-in-bank-loan-interest-rates">ரிசர்வ் வங்கி இன்று முதல் ஆலோசனை- வங்கிக்கடன் வட்டியில் மாற்றம் வருமா?</a></p><p>* ரெப்போ ரேட்டை மாற்றியமைப்பது பற்றி முடிவு செய்து, 5-ந் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பார்.</p><p>* ரெப்போ ரேட் மாற்றப்படுமா என்பது குறித்து 10 பொருளாதார நிபுணர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</a></p><p>* ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</p><p>* "பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை கூட்டத்தொடருக்கு பின் அதிரடி: 4 அமைச்சர்களை மாற்ற முதலமைச்சர் விஜய் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-4-ministers-change-after-assembly-session#comments</comments><guid isPermaLink="false">fc5973cd-2c3b-436b-87bb-5d4081c66250</guid><pubDate>Mon, 03 Aug 2026 06:18:13 +0000</pubDate><atom:updated>2026-08-03T06:18:13.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தமிழக அமைச்சரவை,TN Cabinet,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/v24ngth4/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.</aside><p>திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.</p><p>பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>ஆட்சி அமைத்ததில் இருந்தே முதலமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.</p><p>தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதலமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார். </p><p>அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.</p><p>சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே ‘களை’ எடுக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.</p><h2><strong>4 அமைச்சர்கள்</strong></h2><p>இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.</p><p>இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் தயாரித்த ரகசிய செயல் திறன் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் குறித்தும் முதலமைச்சர் விஜய் விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்க இருப்பதால் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mla-markandayan-conditional-bail-granted-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">7cd4075f-a2dc-4f78-a20a-5e0a7160f054</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:43:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:43:58.747Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vilathikulam MLA Markandayan -  Madras high court
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/emsnyk78/Markandayan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district">முதலமைச்சர் விஜய்</a>க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார்.</p><h2>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்</h2><p>இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">தி.மு.க. எம்.எல்.ஏ. </a>மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.</p> <h2>தூத்துக்குடி கோர்ட்</h2><p>இதையடுத்து, தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2-வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதை கடந்த 30-ந்தேதி விசாரித்த கோர்ட்டு அந்த ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மார்க்கண்டேயன் சார்பில் அவரது வழக்கறிஞரான தி.மு.க.வின் சரவணன் அண்ணாதுரை இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p> <h2>நிபந்தனை ஜாமின்</h2><p>இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.</p><p>மேலும், மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.</p> ]]></content:encoded></item><item><title>காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-unresolved-grievances-of-the-police-personnel-must-be-addressed#comments</comments><guid isPermaLink="false">96522846-585b-4488-9646-e01ba97353aa</guid><pubDate>Mon, 03 Aug 2026 05:24:09 +0000</pubDate><atom:updated>2026-08-03T05:24:09.518Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/57vib675/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல் 9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது  நியாயமல்ல.</p><p>கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&amp;ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கும் நீதி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை.</p><p>தமிழக காவல்துறைக்கு 1198 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை 1994&amp;95ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டு, போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 500 பேருக்கு 1996&amp;ஆம் ஆண்டிலும், 600 பேருக்கு 1997&amp;ஆம் ஆண்டிலும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 98 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு 1998&amp;99ஆம் ஆண்டில் 968 சார் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 1994&amp;95 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாததை சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அவர்களுக்கு 22.05.2000&amp;ஆம் நாளில் நியமன ஆணை  வழங்கப் பட்டது. ஆனால், அவர்களுக்கு 1994&amp;95ஆம் ஆண்டின் பணி மூப்பு வழங்கப்படாதது தான் சிக்கல் ஆகும்.</p><p>அதைவிட பெரிய அநீதி என்னவென்றால், 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில்  நியமிக்கப்பட்ட 98 சார் ஆய்வாளர்களில் இருவருக்கு மட்டும் 1995&amp;ஆம் ஆண்டின் பணிமூப்பு வழங்கப்பட்டு    காவல் ஆய்வாளராகவும், காவல் துணை கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதமுள்ள  96 பேர் காவல் ஆய்வாளர் என்ற நிலைக்கு மட்டுமே உயர்ந்துள்ளனர். அவர்களின் 46 பேர் ஓய்வு பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களும் 3 ஆண்டுகளில் ஓய்வு பெறுவார்கள்.</p><p>இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அவர்களுடன் நிற்கவில்லை. அவர்களுக்குப் பிறகு இன்று வரை பணியில் சேர்ந்த அனைத்து காவல் சார் ஆய்வாளர்களுக்கும் அநீதி தொடர்கிறது. இவர்களுக்குப் பிறகு 1998&amp;99ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட 968 காவல் சார் ஆய்வாளர்களுக்கு 2008&amp;ஆம் ஆண்டில் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், 2020&amp;21ஆம் ஆண்டில் துணை கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், 2004&amp;ஆம் ஆண்டில் சார் ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இப்போது துணை கண்காணிப்பாளர்களாகவும், 2016&amp;ஆம் ஆண்டில் தேர்வான ஆய்வாளர்களுக்கு இப்போது  ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதவி உயர்வு வழங்கப்படவில்லை.</p><p>அதற்கான காரணம், 1994&amp;95ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டவர்களில் மணிமாறன் உள்ளிட்ட சிலர், தங்களுக்கு 1995-ஆம் ஆண்டு பணிமூப்பு வழங்க ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை தான். இந்தத் தடை வரும் 10&amp;ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்காததற்கு காரணம் அவர்கள் செய்த தவறு அல்ல... மாறாக அரசு செய்த தவறு தான். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1198 காவல் சார் ஆய்வாளர்களுக்கு ஒரே கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரே பணி மூப்பு வழங்கப் பட்டிருந்தாலோ இந்த சிக்கல் எழுந்திருக்காது; இரு தலைமுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.</p><p>காவல்துறை பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் கழித்து பணியில் சேருவதும், 6 முதல்  9 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காமல் எத்தகைய மனவலியை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். இந்தத் தவறை அரசு தான் சரி செய்ய வேண்டும். 1994&amp;95ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2000&amp;ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்குவது தான் இந்த சிக்கலுக்குத் தீர்வு ஆகும். அதை செய்வதுடன் 1998&amp;99, 2004, 2016 ஆகிய ஆண்டுகளில் காவல் சார்&amp;ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய பணிமூப்பும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டை இது குறித்த வழக்கு வரும் 10&amp;ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அரசு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் 30 ஆண்டு கால சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.</p><p>அதேபோல், காவல்துறை பணிகளில் சேருவதற்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பணியில் உள்ள காவலர்களுக்கு  ஒதுக்கப்பட்டுள்ள 20% இடங்களில் போட்டியிடும் தமிழ்வழிக் கல்வியில் படித்த காவலர்களுக்கு அதற்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், அதே துறையின் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வில் மீண்டும் அனுபபிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி 23&amp;ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததாலும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதாலும் அந்த சட்டம் காலாவதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அந்த சட்டத்தை மீண்டும் இயற்றி காவல் சார் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் போட்டியிடும் தமிழ்வழியில் கற்ற காவலர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.</p><p>காவல்துறையினருக்கு படி வழங்குவதிலும் பாகுபாடு காட்டப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரையிலான நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணிக்கான படிகள், பணி ஆபத்து படிகள் ஆகியவை அதே துறையில் பணியாற்றும் விரல் ரேகை வல்லுனர்களுக்கு வழங்கப்ப்படுவதில்லை. சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் விரல்ரேகை பிரிவினருக்கு உணவுப்படி கூட வழங்கப்படுவதில்லை. இந்த பாகுபாடு உடனடியாக களையப்பட வேண்டும்.</p><p>தமிழக அரசு நினைத்தால் காவல் துறையினரின் இந்தக் குறைகள் அனைத்தையும் ஒரே நாளில் தீர்க்க முடியும். இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்துக் குறைகளையும் தமிழக அரசு தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>தீரன் சின்னமலை வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dheeran-chinnamalai-memorial-day-cm-vijay-pay-tribute#comments</comments><guid isPermaLink="false">ca01fae4-69dd-46b4-b770-2071daf215a6</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:31:39 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:31:39.040Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dheeran Chinnamalai,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,தீரன் சின்னமலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை - முதலமைச்சர் விஜய்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/q4s3v0mz/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரன் தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார்.</strong></em></p><p>சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.</p><p>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் வீரம், தன்னம்பிக்கை, தேசப்பற்று மற்றும் தியாக உணர்வு காலம் கடந்தும் நம் தலைமுறைகளை ஊக்குவித்து வருகிறது. </p> <p>சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தன் உயிர் மூச்சைக் கொடையாகக் கொடுத்த மாவீரனின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.<br><br>கிழக்கிந்திய கம்பெனியின் வரி வசூலையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு, தாய்நாட்டின் விடுதலைக்காக… <a href="https://t.co/1bXR5IKJVE">pic.twitter.com/1bXR5IKJVE</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2084128801680961594?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title> ஆடிப்பெருக்கு விழா - மக்கள் வசதிக்காக படித்துறையில் &apos;ஷவர்கள்&apos; அமைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-perukku-festival-installation-showers-at-river#comments</comments><guid isPermaLink="false">b1da5847-f857-4bd2-b0b1-bed7a8903003</guid><pubDate>Mon, 03 Aug 2026 04:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-03T04:18:58.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Cauvery,aadi perukku,ஆடிப்பெருக்கு,பக்தர்கள் புனித நீராடல்,காவிரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ shower]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/kpl91ebl/shower.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2> ஆடிப்பெருக்கு விழா</h2><p>தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும்.</p><p>கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.</p> <h2>வறண்ட காவிரி</h2><p>ஆனால் இந்த ஆண்டுபருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.</p> <h2>காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை</h2><p>ஆனாலும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">ஆடிப்பெருக்கு</a> நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.</p> <h2>குளிப்பதற்கு ஏற்பாடு</h2><p>காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. </p><p>இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.</p> <h2>போலீசார் பாதுகாப்பு</h2><p>ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட வசதியாக பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன.</p> <h2>ஷவர் அமைப்பு</h2><p>இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.</p><p>தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சர் விஜய்... தனியார் தொழிற்சாலைகளை பார்வையிடுகிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-today-visit-kancheepuram-district#comments</comments><guid isPermaLink="false">9eb64882-40cf-454c-9d10-3fc8b9e78281</guid><pubDate>Mon, 03 Aug 2026 03:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-03T03:40:25.285Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,தனியார் தொழிற்சாலைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/eoqi738c/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் தனியார் தொழிற்சாலைகளை முதலமைச்சர் விஜய் இன்று நேரில் பார்வையிடுகிறார்.</aside><h2><strong>ஒரகடம் பயணம்</strong></h2><p>காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடத்தில் அமைந்துள்ள சிப்காட் தொழிற் வளர்ச்சி மையத்தில், 'டெய்ம்லர் பஸஸ் இந்தியா' என்ற நிறுவனம் சார்பில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ‘டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகனங்கள்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>"பாரத்பென்ஸ்' மற்றும் 'மெர்சிடிஸ்-பென்ஸ்' முத்திரையிடப்பட்ட பஸ்களையும், 'பஸ் சேஸ்'களையும் உற்பத்தி செய்கிறது. வணிக வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தை இன்று <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>கண்ணாடி தொழிற்சாலை</strong></h2><p>அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கத்தில் செயல்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான செயின்ட் கோபின் நிறுவனமும், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>இந்த நிறுவனம் உலகத்தரத்திலான கண்ணாடி தயாரிப்பு வளாகத்தை விரிவுபடுத்தி உள்ளது. இதனை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து நிசான் கார் கம்பெனியையும் முதலமைச்சர் விஜய் பார்வையிடுகிறார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுரை அருகே பயங்கர விபத்து - சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/car-accident-near-madurai-4-dead#comments</comments><guid isPermaLink="false">2d88e209-61ed-4a6c-8b01-2e83a868fadc</guid><pubDate>Mon, 03 Aug 2026 02:33:06 +0000</pubDate><atom:updated>2026-08-03T02:33:06.050Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கார் விபத்து,Car accident,மதுரை,madurai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/h328g1vi/accident-1.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><p>சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் <a href="https://www.maalaimalar.com/topic/trichy">திருச்சி</a> சென்ற போது, மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் ஸ்ரீரராம், அவரது மனைவி ரஞ்சனா, ஒன்றரை வயது குழுந்தை பிரனிதா உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><h2>தீவிர சிகிச்சை:</h2><p>மேலும், மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களுக்கு மேலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>இருசக்கர வாகனத்தின் மீது தனது கார் மோதுவதை தவிர்க்க காரை ஓட்டி வந்த ஸ்ரீராரம் காரை வலது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு காரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.</p><h2>பெரும் சோகம்:</h2><p>இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து, இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலையிலேயே நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 2 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">48999084-21c9-4682-8ced-862e589bbdef</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:01:11 +0000</pubDate><atom:updated>2026-08-02T17:04:47.979Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death">IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</a></p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues">கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தொடர்கிறது!... </a></p><p>*இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முயற்சித் நிலையில் இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>*கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-jump-to-fourth-after-day-10-australia-continue-to-lead-medal-standings">காமன்வெல்த் விளையாட்டு: டாப் 5 பட்டியலில் சட்டென முன்னேறிய இந்தியா</a></p><p>* இந்திய அணி இதுவரை 13 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.</p><p>* காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/gautam-gambhir-warned-questions-will-be-asked-with-india-in-tough-fight-for-wtc-final-spot">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறனும், இல்லைனா... எச்சரித்த கம்பீர்</a></p><p>* அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்படும்.</p><p>* ஏனென்றால், நாம் சொந்த மண்ணில் தோற்றிருக்கிறோம். </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mumbai-indians-have-denied-hardik-pandya-negotiations-with-csk-or-other-outfits-at-present">ஹர்திக் பாண்ட்யா விடுவிப்பா? - மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விளக்கம்</a></p><p>* கடந்த 3 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றம் அளித்தது.</p><p>* ஹர்திக் பாண்ட்யாவை வாங்க பெரும்பாலான அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders">ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</a></p><p>* மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது.</p><p>* இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-says-us-halts-military-attack-on-iran">ஈரானுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை ரத்து செய்தது அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!... </a></p><p>*உலகின் நன்மைக்காகவும், ஈரானின் எதிர்கால வாழ்விற்காகவும் இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.</p><p>*அமெரிக்கப் படைகள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இல்லாத அளவிற்குத் தயாராக இருக்கின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay">நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</a></p><p>*காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம்.</p><p>* நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches">'WE THE LEADERS' இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!... </a></p><p>*கடற்கரை தூய்மை இயக்கம் கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.</p><p>* சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi">தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</a></p><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/broad-peak-avalanche-in-pakistan-claims-life-of-record-breaking-climber-nirmal-purja">பாகிஸ்தான் பிராட் பீக் சிகரத்தில் பனிச்சரிவு: புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பலி!... </a></p><p>*ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p>*உலகின் 8,000 மீட்டருக்கு மேல் உயரமுள்ள 14 சிகரங்களையும் வெறும் '6 மாதங்கள் மற்றும் 6 நாட்களில்' ஏறி சாதனை படைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics">டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</a></p><p>* ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது குழப்பத்தை ஏற்படுத்தும்</p><p>* கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக தான்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy">கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</a></p><p>* ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். </p><p>* ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-won-the-title-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு வீராங்கனை உன்னதி ஹூடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/litton-das-added-to-bangladesh-squad-for-darwin-test">ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்வினில் நடைபெறுகிறது.</p><p>* வங்கதேச அணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷான்டோ செயல்படுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji">'நான் சிறையைப் பார்த்தவன்'- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!... </a></p><p>*காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. </p><p>*அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-should-people-who-love-india-settle-in-dubai">இந்தியாவை நேசிப்பவர்கள் ஏன் துபாயில் குடியேற வேண்டும்? - விவேக் ஒபராய் மற்றும் ஆர். மாதவனை விமர்ச்சித்த ராஜ் தாக்கரே!</a></p><p>* மோடியை புகழும் நடிகர்கள் ஏன் துபாய் சென்றனர்</p><p>* இந்தியா நன்றாக இருந்தால் வெளிநாட்டில் ஏன் வாழ்கிறீர்கள்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/250-km-in-2-hours-donor-heart-races-via-vande-bharat-to-save-life">வந்தே பாரத் ரெயிலில் பறந்து வந்த இதயம்: சாதித்து காட்டிய இந்திய ரெயில்வே</a></p><p>* சூரத்தில் இருந்து புறப்​பட்டு அகம​தா​பாத்​துக்கு 2 மணி நேரத்தில் வந்தடைந்தது.</p><p>* இந்​திய ரெயில்வேயின் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வு இது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-enter-final-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned">கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!... </a></p><p>*கேரளாவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது.</p><p>*இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn">மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.</p><p>* ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-china-border-trade-resumes-after-6-years">6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா-சீனா எல்லை வர்த்தகம்!... </a></p><p>*இந்த வர்த்தகப் பாதையில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் படையினர் தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>*இந்த எல்லை வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நவம்பர் மாதம் வரை மட்டுமே நடைபெறும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-tv-actress-aditi-sharma-files-complaint-against-husband">மும்பை சின்னத்திரையில் பரபரப்பு: கணவர், புகுந்த வீட்டினர் மீது நடிகை அதிதி சர்மா புகார்!</a></p><p>* கணவர் சந்தேகம் மாமியார் நகை பறித்ததாக அதிதி குற்றச்சாட்டு</p><p>* கோரேகான் போலீஸ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/puduchcheri-july-gst-collection-203-crore" rel="nofollow">புதுச்சேரியில் ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. ரூ.203 கோடி வசூல்</a></p><p>* கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.4 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p>* நாட்டின் நிகர ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1,81,237 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence" rel="nofollow">காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</a></p><p>* கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>* அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் வாயு கசிவு- 6 பேர் மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gas-leak-at-sago-factory-near-athur-6-hospitalised#comments</comments><guid isPermaLink="false">c5401b03-cb80-4f15-9172-7ef08d4da95a</guid><pubDate>Sun, 02 Aug 2026 16:08:57 +0000</pubDate><atom:updated>2026-08-02T16:08:57.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவமனையில் அனுமதி,சேலம்,Salem,hospitalized,gas leakage,ஆலை வாயு கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gas leakage]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/j531snbs/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் சேகோ (Sago) ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.</p><p>இதில், பாதிக்கப்பட்ட 6 பேரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்,வாயு கசிவை தடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த ஒரு மணி நேரமாக வாயு கசிவை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-heading-to-delhi-for-a-protest-stopped-in-nagpur-udhayanidhi-condemns-the-move#comments</comments><guid isPermaLink="false">396e4b0d-61a0-4dd7-8287-6816f99b50d1</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:51:37.189Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,tamil nadu farmers,தமிழ்நாடு விவசாயிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டெல்லிக்கு போராட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் நாக்பூரில் தடுத்து நிறுத்தம் - உதயநிதி கண்டனம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/auy37bs9/New-Project-2026-08-02T212112.071.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி தண்ணீர் திறப்பு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை  அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். </p><p>அதற்காக தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா வழியாக டெல்லிக்குச் சென்றுள்ளனர். இதன்போது மகாராஷ்டிராவின் பாதிவழியில் அம்மாநில காவல்துறை விவசாயிகளை நாக்பூரில் தடுத்து நிறுத்தி அவர்களை திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p><p>அவர்கள் கைது செய்யப்பட்டனரா என்பன குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.</p><p>ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.</p><p>நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள  நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.</p><p>டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காதர் மொகிதீன் மகன் இறப்பு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/death-of-kadhar-mogitheen-son-edappadi-palanisamy-condolence#comments</comments><guid isPermaLink="false">1106cd40-e860-4a44-b10c-bd513937884c</guid><pubDate>Sun, 02 Aug 2026 15:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-02T15:31:47.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,இபிஎஸ்,Edappadi pazhanisamy,காதர் மொகிதீன்,Kadhar mohideen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kadhar Mohideen- EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/5a23wl1g/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனின் மகன் கலீலூர் ரஹ்மான் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் திரு. காதர் மொகிதீன் அவர்களின் மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.</p><p>பாசமிகு மகனை இழந்து வாடும் காதர் மொகிதீன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>மறைந்த கலீலூர் ரஹ்மான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்று இரவு தமிழகம் வரும் காவிரி நீர்: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-to-reach-tamil-nadu-tonight#comments</comments><guid isPermaLink="false">de884910-4ea1-4d5b-ac6a-633491a1a5c3</guid><pubDate>Sun, 02 Aug 2026 14:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-02T14:30:23.762Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,காவிரி நீர்,மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kkp6vxmi/cauvery.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட குடிநீர் தேவைக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.</p><p>அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு இதுவரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால்  13 மாவட்டங்களில் சுமார் 16.4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி காணப்படுகிறது.</p><p>குறிப்பாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பா, தாளடி விவசாயத்துக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர். </p><p>இதேபோல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.</p><h2>தண்ணீர் திறக்க உத்தரவு</h2><p>இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொலி மூலம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் கர்நாடகம் தண்ணீர் தரமறுப்பது பற்றியும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு பற்றியும் விளக்கினர்.</p><p>அதே போல் கர்நாடக அதிகாரிகள் அணைகளில் தற்போது போதுமான தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட குழு தலைவர் கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திடம்  கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.</p><p>அது நிராகரிக்கப்பட்டு  தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. </p><h2>மழை தீவிரம்</h2><p>இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை முதல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><p>கர்நாடக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை ஆகிய 4 அணைகளும் குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக  கொண்டுள்ளது.</p><p>தற்போது குடகு மாவட்டத்திலும், வயநாடு மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. </p><p>இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாரங்கி அணை முழுவதும் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.</p><p>2,859 அடி உயரம்  கொண்ட இந்த அணையில் இருந்து  வினாடிக்கு 10 ஆயிரத்து 58 கன அடி நீர்  திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேராக  கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>மேலும், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>இதனால்  கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையின் உயரம் 2,284 அடி  ஆகும். இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நேற்று மாலை 3 மணிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p><p>பின்னர் இரவு 8 மணிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் இரவு 10 மணிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள பிடர ஹள்ளி பாலம் நீரில் மூழ்கியது.</p><p>கபினி ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அங்குள்ள  காவிரி நீர்ப்பாசன கழகம்  தெரிவித்துள்ளது.</p><h2>23 ஆயிரம் கன அடியாக திறப்பு</h2><p>இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கபினி அணையில் இருந்து  தமிழகத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. 25 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.</p><p>பின்னர் காலை 8 மணி அளவில் மீண்டும் வினாடிக்கு   9,958 கன  அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது. வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.</p><p>இதனால்  இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே  காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கிருஷ்ண ராஜசாகர்  அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.</p><p>இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர்  அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட  உபரி நீர்   காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை  நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலி குண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து   தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><p>ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று காலை 500 கன அடியாகவும், மாலையில் அது 600 கன அடியாகவும் இருந்தது. இன்று  காலையில் நீர்வரத்து 500  கன அடியாக உள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்  கொட்டுகிறது.</p><p>இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்  என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். அவர்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பரிசலில் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். </p><h2>மேட்டூர் அணை</h2><p>அதே நேரத்தில்  மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியிலிருந்து 47 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p>கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர்  மேட்டூர் அணைக்கு வரும்போது நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருமாநில அரசுகளுக்கிடையே காவிரி பிரச்சினை நிலவி வரும் நிலையில் தற்போது மழை காரணமாக தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-farmers-dropped-off-in-nagpur-government-must-seek-explanation-from-maharashtra-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">36cda716-09f5-41eb-936a-62e7d67fcc58</guid><pubDate>Sun, 02 Aug 2026 12:57:28 +0000</pubDate><atom:updated>2026-08-02T12:57:28.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,Government of Tamil Nadu,தமிழ்நாடு,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாக்பூரில் இறக்கிவிடப்பட்ட தமிழ்நாடு விவசாயிகள்: மகாராஷ்டிராவிடம் அரசு விளக்கம் கோரவேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பிரச்னைகளை கண்டித்து டெல்லியில் ஆக.4ம் தேதி போராட்டம் நடத்த சென்ற தமிழ்நாடு விவசாயிகளை, மகாராஷ்டிரா அரசு நடுவழியில் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் கோரவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்.,</p><p>“காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி, மத்திய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான  நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து  டெல்லியில் நாளை மறுநாள் மத்திய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக  தொடர்வண்டி முலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்களை,</p><p>மராட்டிய மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி்யுள்ளனர். தமிழ்நாடு உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு உண்டு. </p><p>அவர்களின் போராட்டத்தைத்  தடுப்பதற்காக அவர்களை மராட்டிய காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின்  உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது.</p><p>டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை  எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மராட்டிய அரசிடமும், காவல்துறையிடமும் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மராட்டிய அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. தலைமை மீது அதிருப்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா தோப்பு வெங்கடாசலம்?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dissatisfaction-with-dmk-leadership-will-thoppu-venkatasalam-join-aiadmk#comments</comments><guid isPermaLink="false">dcec4765-bf0a-443e-8e4d-9a1def9e0be9</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:40:37 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:40:37.017Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ADMK,அதிமுக,தோப்பு வெங்கடாசலம்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu venkatasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/8rhzqucg/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. கலைக்கப்பட்டு அதிலிருந்த பெருந்துறை, பவானி சட்டமன்ற தொகுதிகளில் பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி  ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு விட்டது.</p><p>அ.தி.மு.க.வில் இருந்த போது 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். சில மாதங்களில் அவரை வருவாய்த்துறை அமைச்சராக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார்.</p><p>2 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த தோப்பு வெங்கடா சலம், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். </p><p>கே.ஏ.செங்கோட்டையன் வகித்து வந்த வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை பறித்த ஜெயலலிதா ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பதவி யையும் பறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் கொடுத்தார்.</p><p>அதற்கு முன்பு வரை ஈரோடு மாவட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையனும், சு.முத்துசாமியும் அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளாக இருந்தனர். 2009-ம் ஆண்டில் சு.முத்துசாமி தி.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் செங்கோட்டையனின் கரம் வலுவானது. </p><p>செங்கோட்டையனின் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்த பிறகு கிட்டத்தட்ட ஈரோடு மாவட்ட அ.தி.மு.க .தோப்பு வெங்கடாச்சலத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. </p><p>தோப்பு வெங்கடாசலம், 2016-ம் ஆண்டு மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><p>அந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் வெற்றி பெற்ற போதிலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்தபோது தோப்பு வெங்கடாசலத்திற்கு பதவி தரவில்லை.</p><p>2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு 9,900 வாக்குகளை பெற்றார். தேர்தல் தோல்விக்கு பின் தோப்பு வெங்கடாச்சலம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.</p><p>2025-ம் ஆண்டு பெருந்துறை, பவானி ஆகிய 2 தொகுதி களையும் பிரித்து ஈரோடு மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.</p><p>கட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட திலிருந்து இவ்விரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வளர்ச்சிக்காக வேகமாக பணியாற்றினார்.பெருந்துறை மற்றும் பவானி சட்டமன்ற தொகுதிகள் எப்போதும் அ.தி.மு..கவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.</p><p>2026 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதி களிலும் நிச்சயம் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அர்ப்ப ணிப்பேன் என்று கூறி பணியாற்றி வந்தார். ஆனால் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். தோப்பு வெங்க டாசலம் தோல்வி அடைந்தார். </p><p>பின்னர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். விரைவில் பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து தோப்பு வெங்கடாசலம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.</p><p>இன்னும் ஒரு வாரத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். பெருந்துறை  இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வலுவான வேட்பாளரை நிறுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதன்படி தோப்பு வெங்கடாசலத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும் அவர் த.வெ.க.விலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவை அறிவிப்பேன் என தோப்பு வெங்கடாசலம் கூறிவிட்டார். எனவே மீண்டும் அவர் அ.தி.மு.க.வில் இணைவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 10ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-thiruvallur-bus-terminal-begins-operations-on-10th#comments</comments><guid isPermaLink="false">bde37d70-2a2a-43fa-938c-0794e9e54f29</guid><pubDate>Sun, 02 Aug 2026 10:14:40 +0000</pubDate><atom:updated>2026-08-02T10:14:40.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,New Bus Stand,புதிய பேருந்து நிலையம்,public,திருவள்ளூர்,பொதுமக்கள் வரவேற்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/0s2mdxq9/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் ராஜாஜி சாலையில் தற்போது செயல்பட்டு வரும் திரு.வி.க. பஸ் நிலையம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.</p><p>அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் செயல்பட்டு இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பெரிய பாளையம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  ஆனால் இங்கு ஒரே நேரத்தில் 10 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.</p><p>இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுாரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது.</p><p>எனவே புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.</p><p>இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. </p><p>அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப் டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர்  கவிதா தெரிவித்துள்ளார். </p><p>திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வருவதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-the-mekedatu-dam-had-already-been-built-even-the-water-now-being-released-from-kabini-would-not-have-reached-tn#comments</comments><guid isPermaLink="false">f66677cd-7529-48c6-9a03-16ce0738f923</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:38:22.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery Issue,காவிரி நீர் பிரச்சனை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks">கபினி அணை</a> நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில் நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.</p><h2>4 அணைகளில் 74.05 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது</h2><p>கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 64% ஆகும். கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது.</p><p>ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில், தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.</p><h2>கபினி அணை உபரி நீரை தேக்கி வைக்க முடியாது</h2><p>ஆனால், கபினி அணை நிரம்பிய நிலையில் அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால்தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில், அந்த அணைக்கு 10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட அதிகமாக 14470 கன அடி நீரை திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் சேமித்து வைக்கிறது.</p><p>ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன்பின் அதன் உபரி நீரையும் கிருஷ்ணராஜசாகர் அணையில்தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.</p><h2>மேகதாது அணை</h2><p>கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும். அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.</p><p>மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும்தான் இருக்கும். அதனால்தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.</p><h2>தமிழக அரசு இரையாகி விடக் கூடாது</h2><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து  தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளாவில் கனமழை-பம்பையில் நிலச்சரிவு அபாயம்: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kerala-heavy-rains-trigger-landslide-risk-in-pamba-sabarimala-devotees-warned#comments</comments><guid isPermaLink="false">441bf6f8-ee15-4180-b31c-e070e92ca259</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:34:21 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:34:21.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Sabarimala,Tamilnadu Government,கேரளாவில் கனமழை,Kerala Rains,Pamba river,பம்பை ஆறு,கேரளா கனமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sabarimala ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/64qmy627/sabarimala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பா நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றில் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் பத்தனம் திட்டா மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழக அரசும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளன. </p><p>கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2><strong>நிலச்சரிவு எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள சிறப்பு 'நிறபுத்தரி' பூஜையைக் காண பக்தர்கள்  திட்டமிட்டிருந்தனர். &nbsp;இந்நிலையில், பம்பை, சந்நிதானம் செல்லும் மலைப்பாதைகள் மற்றும் வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>தமிழக அரசு &amp; தேவஸ்வம் வாரிய அறிவுறுத்தல்:</strong> </h2><p>பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. "கனமழை காரணமாக பம்பை மற்றும் சந்நிதானத்திற்கு செல்லும் மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், தற்போதைய சூழலில் சபரிமலைப் பயணத்தை மேற்கொள்வது ஆபத்தானது." &nbsp; </p><h2><strong>பயணத்தை ஒத்திவைத்தல்:</strong> </h2><p>'நிறபுத்தரி' வழிபாட்டுக்காக வரும் ஐயப்ப பக்தர்கள் வானிலை சீரடையும் வரை தங்களது பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2><strong>ஆற்றுக்குச் செல்லத் தடை:</strong></h2><p>பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஆற்றில் இறங்குவதோ அல்லது குளிப்பதோ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். &nbsp;பக்தர்கள் உள்ளூர் நிர்வாகம், தேவஸ்வம் வாரியம் மற்றும் காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மட்டும் தான் தண்ணீரை விட அரசியல் முக்கியமாக உள்ளது: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-in-tamil-nadu-politics-matters-more-than-water-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">b5f7349c-ac68-4fe1-a7f5-047d19bfddd5</guid><pubDate>Sun, 02 Aug 2026 08:19:33 +0000</pubDate><atom:updated>2026-08-02T08:19:33.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணிக்கம் தாகூர்,Cauvery,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Manickam Tagore says politics prioritized over water issues]]></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/38l1ab8o/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தொகுதி  மறுவறையறை என்பது, தமிழகர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரானது. </p><p>இந்த மசோதா சாமானிய மக்களுக்கு எதிராக வர உள்ளது, இதற்கு நாங்கள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவிப்போம்.</p><p>கடந்த 2026 ஏப்ரல் 17 அன்று தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.</p><p>அப்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமயத்தில் அதிமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகள் மாநிலங்களவையில் அங்கம் வகித்ததால், அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.</p><p>தற்போது இந்த மூன்று கட்சிகளை தவிற, வேறு எந்த கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்கிறதோ, அது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்.</p><p>காங்கிரஸ் கட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 13 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மாநிலங்களவை உறுபினர்கள் உள்ளனர்.</p><p>அவர்கள் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.</p><p>இந்த மசோதா கடந்த 2026 ஏப்ரல் 17ஆம் தேதி, தோற்கடிக்கப்பட்ட போது இருந்த மனநிலை தான், தற்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.</p><h3><strong>காவிரி விவகாரம்</strong></h3><p>கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை பொறுத்தவரையில், அவர் அம்மாநிலத்தின் நலனுக்காக தான் குரல் கொடுப்பார்.</p><p>நான் எனது தமிழ்நாடு மாநிலத்திற்கு தான் ஆதரவாக குரல் கொடுக்க முடியும். தமிழ்நாட்டின் நலன் தான் எனக்கு முக்கியம்.</p><p>தமிழக முதல்வர் இதுகுறித்து கர்நாடகா சென்று பேசுவதாக இருந்தால், அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நம்முடைய பிரச்சனை எப்படியாவது தமிழகத்திற்கு தண்ணீர் வர வேண்டும் என்பது தான்.</p><p>தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்நாடகாவை பொறுத்தவரையில், அவர்களுக்கு அரசியலை விட தண்ணீர் தான் முக்கியமாக உள்ளது. அவர்கள் காவிரி விவகாரத்தில் ஒன்றாக நிற்கிறார்கள்.</p><p>ஆனால் தமிழ்நாட்டில் தண்ணீரை விட அரசியல் தான் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான், நாட்டு நலனை விட, கட்சி மட்டுமே முக்கியமாக உள்ளது.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக அரசின் நடவடிக்கையால் தடை நீங்கியது: ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. அதிரடி விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-launches-probe-into-armstrong-murder-after-tamil-nadu-withdraws-appeal#comments</comments><guid isPermaLink="false">37892d03-caa7-4994-a4c5-d876c619ecb1</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:52:12 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:52:12.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Armstrong murder case,ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ve3qgrej/ArmstrangMurdercase.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.</p><h2>29 பேர் கைது</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வக்கீல் அஸ்வத்தாமன் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார்.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர், அறிவுரை கழகத்தில் முறையீடு செய்து, குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்கினார்கள். மேலும் சிலர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><h2>குற்றப்பத்திரிகை</h2><p>ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வந்த சென்னை போலீசார் 7,800 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தார்.</p><p>இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது.</p><h2>சிபிஐ விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது</h2><p>இதற்கிடையே தமிழகத்தில் விஜய் தலைமை யிலான த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது. இதையடுத்து ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் தமிழக போலீசாரிடம் பெற்றனர். இதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அதிரடி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.</p><h2>தனியாக வழக்கு</h2><p>இன்னும் ஓரிரு நாள்களில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட உள்ளார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.</p><p>ஆம்ஸ்ட்ராங் கொலையில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ள 27 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 27 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், இந்த வழக்கில் ரவுடிகளுக்கு, பல வழிகளிலும் அரசியல் பிரமுகர்கள் பலர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.</p><h2>விசாரணை தொடங்கியது</h2><p>இதைத்தொடர்ந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் வக்கீல் ஆனந்தன் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால்தான் அவரது சார்பில் கோர்ட்டில் முறையிட்டனர். தி.மு.க. ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.</p><p>இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்கிற தகவல்களை திரட்டுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்களின் பெயர் அடிபடுகிறது. அவர்கள் மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டி இருந்தனர்.</p><h2>அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்</h2><p>எனவே அடுத்த கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இருப்பதை தொடர்ந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.</p><p>இப்போது சி.பி.ஐ. விசாரணை தொடங்கி உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஏதோ ஒரு வகையில் உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீட்டுக்கு எதிரான போராட்டம்: மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-opposition-student-cases-withdrawn-announces-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-opposition-student-cases-withdrawn-announces-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">7af422ba-2214-4ca3-aa81-0ab0154801b7</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:00:43.314Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9dgxhm58/Untitled-design-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ NEET Protest Cases Dropped: All Student FIRs to be Withdrawn in Tamil Nadu]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/9dgxhm58/Untitled-design-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><p>டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் குளறுபடிக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் மாணவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.</p><p>முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படியும், ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து, டெல்லி ஜந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். </p><p>நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.</p><p>சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. </p><p>இந்தநிலையில் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>தமிழக முதலமைச்சர் விஜய்-யின் உத்தரவின் பேரில், பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;நான் சிறையைப் பார்த்தவன்&apos;- திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான பின் செந்தில் பாலாஜி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-did-not-run-or-hide-i-have-seen-prison-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">57abe684-6195-419f-85e4-cba13d9a4588</guid><pubDate>Sun, 02 Aug 2026 07:00:15 +0000</pubDate><atom:updated>2026-08-02T07:00:15.647Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,தமிழக வெற்றிக் கழகம்,tvk,Triplicane police station,திருவல்லிக்கேணி காவல் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/wggfu6wi/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/wggfu6wi/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.</p><h2><strong>ஓடி ஒளியவில்லை:</strong></h2><p>"நான் எந்த தவறும் செய்யவில்லை. சட்டத்திற்கு அஞ்சி நான் எங்கும் ஓடி ஒளியவும் இல்லை. ஏற்கனவே சிறைவாசத்தைப் பார்த்தவன் நான், அதனால் இந்த அரசியல் பழிவாங்கல் வழக்குகளுக்கு எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.</p><h2><strong>முன்ஜாமீன் நடைமுறை:</strong></h2><p> உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வழக்கறிஞர்களைச் கலந்தாலோசிக்க கால அவகாசம் கோரப்பட்டதாகவும், தற்போது நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார்.</p><h2><strong>வழக்கில் பெயரே இல்லை:</strong></h2><p>"காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-இல் எனது பெயரோ அல்லது எனது சகோதரர் அசோக் குமாரின் பெயரோ தொடக்கத்தில் இடம்பெறவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பின்னணியில் எங்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட ரீதியாக இந்தப் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்பேன்" என்று கூறினார்.</p><h2><strong>அரசுக்குக் கண்டனம்:</strong></h2><p>மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அரசியல் எதிரிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்வதிலேயே அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதனடிப்படையில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விசாரணைக்கு விளக்கமளித்து வருகிறார்.</p>]]></content:encoded></item><item><title>கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார்: காவிரி தொடர்பாக முதல்வர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-tn-cm-vijay-nirmal-kumar-dmk-former-miniser-regupathy#comments</comments><guid isPermaLink="false">a6b8055e-91cc-4247-9cab-2555db8696f7</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:43:22 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:43:22.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Regupathy,Cauvery Issue,காவிரி நீர் பிரச்சனை,ரகுபதி எம்.எல்.ஏ.,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/l9m3e131/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் முதலமைச்சர் விஜய்- முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/l9m3e131/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், காவிரி நீரை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தினமும் உயர்நிலைக் கூட்டங்களைக் கூட்டி வருகிறார். டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களைச் சந்திக்கிறார். முன்னாள் முதலமைச்சர்கள், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அறிவித்திருக்கிறார்.</p><h2>தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு</h2><p>ஆனால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு மெத்தனத்தோடும் மிதப்போடும் செயல்பட்டு வருகிறது. கட்சித்தாவல் வல்லுநர் நிர்மல் குமார் ஒருபடி மேலே சென்று த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவது போல கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். காவிரி நடுவர் மன்றம் கண்ட தலைவர் கலைஞர் குறித்தும் அவதூறாகப் பேசியிருக்கிறார்.</p><p>தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜயோ, நீர்வளத்துறைக்கு அமைச்சரான ஆனந்தோ மேகதாது அணை தொடர்பாக இதுவரை வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் குறித்த நிர்மல் குமாரின் கருத்தையும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை எனும் அவரது நிலைப்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.</p><h2>முதலமைச்சர் விஜயின் நிலைப்பாடு என்ன?</h2><p>ஊடகங்களைச் சந்தித்தால் தனது இமேஜ் சரிந்துவிடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அஞ்சுவதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால், காவிரி போன்ற முக்கியப் பிரச்சினையில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவருக்கு இருக்கிறது. மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எல்லாவற்றிலும் வாய்மூடியே இருப்பது தமிழ்நாட்டில் பலவீனமான ஆட்சி இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். அண்டை மாநிலங்கள் மட்டுமல்ல, இங்குள்ள ஆளுநரும் நமது மாநில அரசைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதற்கே இது வழிவகுக்கும்.</p><p>மாநிலத்தின் உயிர்ப் பிரச்சினைகளில் கூட யாரையும் கலந்தாலோசிக்காமல் முதலமைச்சர் உறக்கத்தில் இருப்பதும், வார இறுதி நாட்களில் Complete Rest Mode-க்குச் சென்று விடுவதும் காவிரி விவசாயிகளைக் கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நமது முதலமைச்சரையும் அரசையும் நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. மழை பெய்து கர்நாடகம் தானாகத் தண்ணீர் திறந்துவிட்டால்தான் உண்டு எனும் அளவுக்கு அவநம்பிக்கையில் அவர்களைத் த.வெ.க. அரசு தள்ளுவது கடும் கண்டனத்துக்குரியது.</p><h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும். தான்தோன்றித்தனமாகப் பேசியுள்ள அமைச்சர் நிர்மல் குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.</p><p>மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு ரகுபதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டி.கே. சிவக்குமார் உடன் சேர்ந்து கொண்டு திமுக முட்டுக்கட்டை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaveri-water-dispute-tamil-nadu-politics#comments</comments><guid isPermaLink="false">b01d8145-0253-4ca0-952e-689efd80ab22</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:25:50 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:25:50.630Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,DK Shivakumar,டிகே சிவகுமார்,Cauvery,சிடிஆர் நிர்மல்குமார்,ctr nirmal kumar,காவேரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/420qae4d/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery political row: Nirmalkumar blames DMK-Karnataka ties for confusion]]></media:title><media:description type="html"><![CDATA[ Nirmalkumar blames Dk shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/420qae4d/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>கர்நாடக முதல்வருடன் திமுக நெருங்கிய உறவு</strong></h3><p>சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>காவிரி நதிநீர் தொடர்பாக நேற்று காலை முதல்வர் பல தரப்பு ஆலோசனையை முடித்துவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, வழக்கறிஞர் உமாபதியிடம் வழக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காவிரி குறித்தான வழக்கை திமுக அவசரமாக ஐந்து மணிக்குமேல் பதிவு செய்கிறார்கள். </p><p>இந்த மாதிரி ஒரே மாநிலத்தில் காவிரி நதி நீர் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டால், அது பல்வேறு விதமான குழப்பத்தை ஏற்படுத்தி, மாநிலத்திற்கான உரிமைகளை பின்னோக்கித் தள்ளும்.</p><p>திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் காவிரி பிரச்சனை குறித்து கடந்த ஐந்து வருடங்களாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை. </p><p>கடந்த முப்பது ஆண்டுகளாக காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது திமுக-வும் அதன் தலைவர் கருணாநிதியும்தான். மறுபடியும் அதே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.</p><p>மற்றொரு புறம் காவிரி பிரச்சனை தொடர்பாக சரியான முடிவை எடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், அதிமுக செயல்பட்டு வருகிறது.</p><p>இந்த மாதிரியான சூழலில் தமிழக மக்களின் உரிமைகளை காக்க, நாளை உச்சநீதிமன்றத்தில் முதல்வரின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது.</p><p>திமுக-விற்கும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே இருக்கும் நெருங்கிய உறவு, இந்த மாதிரியான பல குழப்பங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது. </p><p>இந்த மாதிரியான செயல்களை திமுக குறைத்து கொள்ள வேண்டும். முதலில் மக்கள் உங்களுக்கு அளித்த தீர்ப்பை குறித்து உணருங்கள்.</p><p>தமிழகத்திற்கு எதிரான இந்த செயல்பாடுகளை, நீங்கள் தொடர்ந்து செய்யாதீர்கள். இந்த பிரச்சனைக்கு தமிழக முதல்வர் சுமூகமான வழியில் தீர்வை காண அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டார்.</p><p>ஆனால் அனைத்து வகையிலும், கர்நாடக முதல்வருடன் திமுக சேர்ந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வருகிறது.</p><p>முதலமைச்சர் விஜய் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.</p><p>தமிழகத்திற்கு 17 டி.எம்.சி காவிரி நீர் வர வேண்டி இருக்கிறது, வினாடிக்கு 3,500 கன அடி என்பது மட்டும் போதாது.</p><p>ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்க கூடாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி அழுத்தம் கொடுத்தார்.</p><p>ஜெயலலிதாவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கருணாநிதி செய்தது போல், தற்போது செய்கிறார்கள்.</p><p>த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஷயத்தில், பெரும்பாலான பணங்கள் பெங்களூரில் இருந்துதான் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p>திமுக தலைமை எவ்வாறு பெங்களூரில் இருந்து, பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது. பெங்களூர் உடன் திமுக தலைமை அவ்வளவு நெருக்கமாக உள்ளது.</p><p>கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தலைமை சொல்வதை கேட்பதே இல்லை, மாறாக திமுக சொல்வதைத்தான் கேட்கிறார்.</p><p>இவ்வாறு அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 3, 4 ஆகிய தேதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-36</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-36#comments</comments><guid isPermaLink="false">3c4209f9-6aef-4ff5-94c9-e6d8b47a865b</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:24:01 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:24:01.035Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/hhiepebk/powercut.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ powercut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/hhiepebk/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் நாளை (3-ந்தேதி) மற்றும் நாளை மறு நாள் (4-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">மின் தடை </a>செய்யப்படுகிறது.  </p><h2><strong>3-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</strong></h2><h2><strong>அம்பத்தூர்:</strong> </h2><p>கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயல் சாலை.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா பிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி பிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் பிளாட்ஸ்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோவில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.</p><h2><strong>4-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</strong></h2><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>சாரதி நகர், தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை, மாதவமணி அவென்யூ, சீதாராம் நகர்.</p><figure><img alt="powercut area" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3ps0f1ux/powercutt.jpg" /></figure><h2><strong>அடையாறு</strong></h2><p>காந்தி மண்டபம் சாலை, சர்தார் பட்டேல் சாலை, கோட்டூர்புரம், ஸ்ரீ நகர் காலனி, வெங்கடாபுரம், சின்னமலை, தரமணி, எல்லையம்மன் கோயில் தெரு, காணகம், கலிகுன்றம், பள்ளிப்பட்டு, ஸ்ரீராம் நகர், நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, கே.பி. நகர் 1 வது முதல் 5வது பிரதான சாலைகள், அடையாறு 6வது பிரதான சாலை, கோவிந்தராஜபுரம், பக்தவத்சலம் நகர் 1வது முதல் 5வது சாலைகள்.</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>அஷ்டலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், குமரன் நகர், ஏ.என். காலனி, மணிமங்கலம் பிரதான சாலை, சாஸ்திரி நகர், கணேசபுரம் பிரதான சாலை.</p><h2><strong>மேடவாக்கம்</strong></h2><p>பெரும்பாக்கம் சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், அந்தோணி நகர், பஜனை கோயில் தெரு, நுக்கம்பாளையம் சாலை, மாடம்பாக்கம் கண்ணதாசன் தெரு, கருணாநிதி 1வது முதல் 7வது தெருக்கள் வரை, விசாலாட்சி நகர், ஜான் தெரு, தாமஸ் தெரு, விக்னராஜபுரம் 6வது தெரு, கோபாலபுரம் நகர், விக்னராஜபுரம் மோஹி ப்ளோரன்ஸ், குரு கணேஷ் நகர், பார்த்தசாரதி நகர், பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர், வள்ளல் பாரி நகர், சாய் பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், துளுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, அருண் நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயபால் நகர், மல்லிகேஸ்வரன் நகர், ஆதிசாமி நகர்.</p><h2><strong>செயின்ட் தாமஸ் மவுண்ட்</strong></h2><p>ராமர் கோயில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை, நசரத்புரம், கணபதி காலனி, வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், போலீஸ் குடியிருப்பு, செவன் ஹில்ஸ் தெரு, மீனம்பாக்கம், பாண்டியன் தெரு, மாரிசன் 1வது முதல் 6வது தெரு வரை, திருவள்ளுவர் நகர், எம்.கே.என் சாலை, குமரன் நகர், குளத்துமேடு, மாங்காளியம்மன் கோயில் தெரு, டிபன்ஸ் காலனி, பர்மா காலனி, கரையார் கோயில் தெரு, நார்த் பரேட் சாலை, இந்திரா நகர், அதிகாரி பயிற்சி அகாடமி, நேவி ரெசிடென்சி பகுதி, வுட்கிரீக் கன்ட்ரி, துளசிங்கபுரம், மாரியாபுரம், மாத்தியாஸ் நகர், ஐரோப்பியன் லைன், பஜார் சாலை, மேட்டு தெரு, ஆர்காட் பேட்டை, ஹாப்மேன் 1வது மற்றும் 2வது தெரு, வி.ஜி.பி முர்பி சதுக்கம், நோபல் தெரு, கண்ணன் காலனி, ஆசிரியர் காலனி, எம்.ஜி.ஆர் நகர்.</p><p>இவ்வாறு மின்வாரிய கூடுதல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்: ராகுல்காந்திக்கு தயாநிதி மாறன் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-rights-dmk-mp-dayanidhimaran-critics-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">94902f0e-104c-4d2c-a6ed-dc16343a39df</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:13:49 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:13:49.457Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,தயாநிதி மாறன்,Dayanidhi Maran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dq23y48w/dayanidhimaran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தயாநிதி மாறன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/dq23y48w/dayanidhimaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களவை திமுக எம்.பி. தயாநிதி மாறன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்!</p><p>தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு #CauveryRights குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்!</p><p>காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் #MekedatuDam-க்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்!</p><p>#NEET தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!</p><h2>துரோகிகள்</h2><p>பாஜக-வின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெக-வின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே!</p><p>ஆட்சியையும் அமைச்சர்களையும் விமர்சித்து X-இல் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே!</p><p>டெல்லி போலீசுக்கு சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் #NEETProtest மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!</p><p>தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது!</p><p>அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!</p><p>இவ்வாறு தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.</p><h2>ராகுல் காந்தி</h2><p>காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி நேற்று தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை ஆதரிப்பவர்கள் எட்டப்பவர்கள் என்று திமுக-வை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் தயாநிதிமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;WE THE LEADERS&apos; இயக்கம் சார்பில் கடற்கரை தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-beach-cleanup-campaign-annamalai-launches#comments</comments><guid isPermaLink="false">e85064c9-91a0-4470-8331-0357ee507de8</guid><pubDate>Sun, 02 Aug 2026 06:13:27 +0000</pubDate><atom:updated>2026-08-02T06:13:27.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,kanyakumari,annamalai,கன்னியாகுமரி,We the Leaders,வி த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ajwq5zec/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/ajwq5zec/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வி த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'கடற்கரை தூய்மை இயக்கம்' கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணியை 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் கே.அண்ணாமலை நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>தென் மாவட்டங்களில் கடற்கரை தூய்மைப் பணி:</strong></h2><p>கன்னியாகுமரி தொடங்கி திருநெல்வேலியின் உவரி, தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு மற்றும் திருச்செந்தூர் ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்தத் தூய்மைப் பிரசார இயக்கம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடலோரச் சூழலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு:</strong></h2><p>இந்தத் தூய்மைப் பணியில் 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மீனவச் சமூகத்தினர் திரளாகக் கலந்துகொண்டு கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியைத் தொடர்ந்து, அப்பகுதி மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் அண்ணாமலை கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் வாழ்வாதாரச் சவால்களையும் கேட்டறிந்தார்.</p><p> 'வி த லீடர்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான திறன் பயிற்சி போன்ற ஆறு முக்கிய தலைப்புகளில் மக்கள் சார்ந்த களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.</p><p>அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலியுறுத்தி இந்த மாநிலத் தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரேசன் கடைகளில் விடுபட்டவர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-camp-today-to-register-fingerprints-of-left-out-ration-cardholders#comments</comments><guid isPermaLink="false">384670cd-ccb6-431c-b8aa-3e46d3c62264</guid><pubDate>Sun, 02 Aug 2026 05:26:18 +0000</pubDate><atom:updated>2026-08-02T05:26:18.972Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,Ration Card,ரேசன் கடைகள்,ரேசன் கார்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கைவிரல் ரேகை பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/b8xsi8or/RationCard001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்நாட்டில் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடைக்கு சென்று பதிவு செய்வது அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது.</p><h2>சிறப்பு முகாம்</h2><p>கை விரல் ரேகை அல்லது கருவிழி பதிவை மேற்கொள்ள ஏற்கனவே பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி பலர் கைவிரல் ரேகையை பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இன்று விடுபட்ட பயனாளிகளுக்கு ரேகையை பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது.</p><p>இதில் ஏராளமானோர் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். பணி நிமித்தமாக வேறு ஊர்களில் இருப்பவர்கள் அங்கு அருகில் உள்ள எந்த ரேசன் கடைக்கும் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு செல்பவர்கள் ஆதார் அட்டை நகலையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>இது குறித்து உணவுத்துறை அதிகாரி கூறியதாவது:-</h2><p>மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை வைத்து உணவு பொருட்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் பயனாளிகளின் உண்மைத் தன்மையை அறிய கைவிரல் ரேகை அல்லது கருவிழிரேகை பதிவு செய்வது என்பது கட்டாயம்.</p><p>அப்போதுதான் எவ்வளவு உணவுப் பொருள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் சிலர் ரேசன் கார்டுகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளனர். எனவே அவற்றை சரி செய்ய ரேசன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பெறப்படுகிறது.</p><p>அப்போதுதான் உண்மைத்தன்மை தெரிய வரும். எனவே கைரேகை பதியாதவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பாக இன்று ரேசன் கடைகளில் சிறப்பு முகாம் மாலை 6 மணி வரை நடத்தப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.</p><p>இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நானும் கோட் ஷூட் போட்டால்.., முதல்வர் விஜயை சீண்டிய விஜய பிரபாகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-i-wear-coat-suit-too-vijay-prabhakaran-jabs-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">35c745ba-bd37-4140-8e82-900991004501</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:57:39.328Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,Vijaya Prabhakaran,DK Sivakumar,Cauvery</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/02q6pyyf/Untitled-design-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Cauvery Protest Politics: Vijay Prabhakaran slams CM Vijay over Karnataka issue]]></media:title><media:description type="html"><![CDATA[ Vijay Prabhakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-03/02q6pyyf/Untitled-design-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>விஜய பிரபாகரன் ஆவேசம்</strong></h3><p>காவிரியில் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக சார்பில் ஒகேனக்கல் காவிரி அருகே போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். </p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>முன்னாள் தி.மு.க. ஆட்சியை போடோ ஷூட் நடத்துவதாக கூறினார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய, நமது முதல்வர் விஜய் அவர்கள் என்ன செய்கிறார்?. ஒகேனக்கலுக்கு வந்து ஏன் உங்களால் மக்களை சந்திக்க முடியவில்லை. </p><p>கடந்த ஐ.பி.எல். போட்டியில் கோப்பை வென்றபோது, விராட் கோலியை கர்நாடகாவிற்கு வரும்படி அம்மாநில முதல்வர் கூறினார். அன்றைக்கு அங்கு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அப்போதும் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.</p><h3><strong>காவிரி பிரச்சனை</strong></h3><p>ஆனால் முதல்வர் விஜயை தற்போது மட்டும் கர்நாடகாவிற்கு வரவேண்டாம், நிலைமை மோசமாக இருக்கிறது என்று டி.கே. சிவகுமார் கூறுகிறார்.</p><p>தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த ஒரே தலைவர் விஜயகாந்த் தான்.</p><p>இன்றைக்கு நானும் கோட் ஷூட் கண்ணாடி எல்லாம் போட்டால், நானும் அழகாகதான் இருப்பேன். முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு முதலில் செல்லுங்கள்.</p><p>இன்றைக்கு ஜனநாயகன் ஓடவில்லை என்றால் மட்டும் எல்லாரும் கண்ணீர் விடுகிறார்கள் என்று முதல்வர் கூறுகிறார். தவெக கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாரும் கர்நாடகாவை நோக்கி ஓடு ஓடு என்று ஓடுங்கள்.</p><p>உண்மையான வேட்டைக்காரன் வீரப்பன் இல்லாதது வருத்தமாக உள்ளது. அவர் தான் உண்மையான வேட்டைக்காரர்.</p><p>இன்றைக்கு வீரப்பன் இல்லை, ஆனால் நான் உங்களுடன் கடைசி வரை இருப்பேன்.</p><p>இந்த காவிரி உங்களுக்கு மட்டும் அல்லது எங்களுக்கு மட்டும் கிடையாது. நாம் அனைவருக்கும் பொதுவானது.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டம்</strong></h3><p>நீட் தேர்விற்கு எதுக்கு சீன் போடுகிறீர்கள். இதை நாம் பின்னால் பிரதமர் மோடியிடம் கேட்கலாம். இன்றைக்கு கர்நாடகாவில் ஆட்சி நடத்துவது காங்கிரசாக உள்ளது.</p><p>இன்றைக்கு திமுக-வால் வென்ற காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலத்திலும் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது.</p><p>எனவே இந்த பிரச்சனைக்கு ராகுல் காந்திதான் பதில் கூற வேண்டும், மோடி கிடையாது. இப்படித்தான் நம்ம மக்களை திருப்புகிறார்கள்.</p><p>அதற்காக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு என்ற சொல்ல வரவில்லை. பிரதமர் மோடியும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வர வேண்டும்.</p><p>நீட் தேர்விற்கு எதிராக போராடிய அபிஜீத் தீப்கேவிடம் நான் ஒன்றை கேட்கிறேன். டெல்லி வரை போராட முடிந்த உன்னால், தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை.</p><p>ஏனென்றால் முட்டாள்கள் அங்கே அதிகம், தமிழ்நாட்டில் அறிவாளிகள்தான் அதிகமாக உள்ளனர். முட்டாள் கூட்டத்தை நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் அறிவாளிகள் கூட்டத்தை ஏமாற்ற முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கபினி அணையில் நீர் திறப்பு 10,000 கன அடியாக குறைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-water-release-cut-to-10000-cusecs-warning-to-riverbank-residents-continues#comments</comments><guid isPermaLink="false">2d4860d1-2c2e-4f21-89de-7b70324dedf8</guid><pubDate>Sun, 02 Aug 2026 04:20:00 +0000</pubDate><atom:updated>2026-08-02T04:20:00.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka,Tamil Nadu government,Cauvery,Kabini Dam,கபினி அணை,காவிரி நதிநீர்,கர்நாடகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3m3lmmn3/gabuini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kabini Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/3m3lmmn3/gabuini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாததால் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுபடி தமிழகத்துக்குரிய நீரை திறந்துவிட கர்நாடகம் மறுத்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் வறண்டு வருகின்றன.</p><p>இந்த விவகாரம் தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. (நாள் ஒன்று 3500 கனடி வீதம் 15 நாட்களுக்கு) நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகம் மறுத்துவிட்டது. தொடர்ந்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இயற்கையே தற்போது கைகொடுத்துள்ளது.</p><p>கபினி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.</p><h2><strong>தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு:</strong></h2><p>கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று முன்தினம் 2,282 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11,747 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பும் தருவாயில் இருந்ததால், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.</p><h2><strong>நீர்த் திறப்பு நிலவரம்:</strong></h2><p>காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் வயநாடு பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. கபினி அணையில் இருந்து நேற்றிரவு 25 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நிலையில்,  இன்று காலை நிலவரப்படி காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p><h2><strong>தமிழக எல்லைக்கு நீர்வரத்து:</strong></h2><p>கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கர்நாடக-தமிழக எல்லையான 'பிலிகுண்டுலு' பகுதி வழியாக தமிழகத்திற்கு வந்தடையும்.</p><h2><strong>மேட்டூர் அணைக்கு எதிர்பார்ப்பு:</strong></h2><p>இந்த உபரிநீர் அடுத்த சில நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு  வந்து சேரும் என நீர்வளத் துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். காவிரி ஆற்றுப் படுகை மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை மேய்க்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>IUML தேசியத் தலைவர் காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-offers-condolences-on-iuml-president-kader-mohideen-sons-death#comments</comments><guid isPermaLink="false">8723cf6d-e1da-437b-a9d8-ff77d931cfb7</guid><pubDate>Sun, 02 Aug 2026 03:35:56 +0000</pubDate><atom:updated>2026-08-02T03:35:56.443Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காதர் மொய்தீன்,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y58sv7jc/TNCMVijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கே.எம். காதர் மொகிதீன் மகன் மறைவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/y58sv7jc/TNCMVijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.</p><p>தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களின் மூத்த மகனார் டாக்டர் கே.எம். கல்லீலுர் ரஹ்மான் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.</p><p>அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் சாஹிப் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்குகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mbbs-medical-counselling-for-admission-to-medical-courses-begins-on-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mbbs-medical-counselling-for-admission-to-medical-courses-begins-on-4th#comments</comments><guid isPermaLink="false">87682301-6a94-4357-b136-bb3cd034e112</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:30:41 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:30:41.636Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மருத்துவ கவுன்சிலிங்,MBBS Counselling</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kk6mtb2r/MBBS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவக் கல்லூரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/kk6mtb2r/MBBS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு 4-ந்தேதி தொடங்கி நடைபெறும் என்று மத்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.</p><h2>72,627 மாணவர்கள் விண்ணப்பம்</h2><p>தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு 70 ஆயிரத்து 486 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.</p><p>மேலும் விண்ணப்பிக்க கடந்த 26-ந்தேதி காலை 10 மணி முதல் 27-ந்தேதி பிற்பகல் 3 மணி வரையில் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 2,141 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 72 ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.</p><p>மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று விண்ணப்பித்த மாணவர்களும், அவர்களது பெற் றோர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.</p><h2>முதற்கட்ட கலந்தாய்வு</h2><p>இந்த நிலையில் நாடு முழுவதும், நீட் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பட்டியலை மத்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, முதற்கட்ட அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு வருகிற 4-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான கலந்தாய்வு வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, 4 கட்ட கலந்தாய்வு மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசம் அக்டோபர் 10-ந்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள 72 ஆயிரத்து 627 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? சி.பி.எம். சண்முகம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kabini-dam-how-did-the-dam-fill-up-in-just-two-days-cpm-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">6acfcd40-874a-4846-927f-4501ee55a9f9</guid><pubDate>Sun, 02 Aug 2026 02:02:46 +0000</pubDate><atom:updated>2026-08-02T02:02:46.426Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue,காவிரி நீர்  பிரச்சனை,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/8c8nn4q9/P-Shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPM P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/8c8nn4q9/P-Shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது என பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. இதனால் மேட்டூர் அணை வரண்டு காணப்படுகிறது. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">காவிரி</a> மேலாண்மை ஆணையம் நாள் ஒன்றுக்கு 3500 கனஅடி விதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டது.</p><p>அப்போது அணைகளில் தண்ணீர் இல்லை. தண்ணீர் திறந்து விட முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்். மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று போராட்டம் நடத்தினர்.</p><h2>கனமழை</h2><p>இதற்கிடையே கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு அதிக அளவில் நீர் வந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பிற்காக நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது 10 ஆயிரம், 25 ஆயிரம் கனஅடி நீர் என அதிகரித்தது.</p><p>குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார். தற்போது உடனடியாக அணை நிரம்பியது எப்படி? என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக பெ. சண்முகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று (நேற்று) வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.</p><h2>காவிரி கண்காணிப்புக் குழு</h2><p>காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை, குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.</p><p>இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!</p><p>இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பதி கோவிலில் வேளாண்மை அறிக்கை நகலுடன் அமைச்சர் சாமி தரிசனம் - இணையத்தில் புயலை கிளப்பிய விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tiruppati-kovilil-velanmai-nidhi-nilai-arikkai-internettil-kadumaiyana-vivatham#comments</comments><guid isPermaLink="false">7f102b3c-dc4a-4d5d-8fcd-6f48a9628efd</guid><pubDate>Sat, 01 Aug 2026 16:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:33:51.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Su Venkatesan,Tamilisai Soundararajan,எம்.பி. சு வெங்கடேசன்,Tamilnadu budget,தமிழிசை செளந்தரராஜன்,நிதி நிலை அறிக்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Political Storm in Tirupati: Minister criticised for taking budget document to temple like an offering]]></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai sondararajan and su. venkatesan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/cyhemrm1/Untitled-design-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>திருப்பதியில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை</strong></h3><p>திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் தமிழக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், வேளாண்மை நிதி நிலை அறிக்கையின் வரைவு நகலை கொண்டு சென்று சாமி தரிசனம் செய்தார்.</p><p>இதையடுத்து தவெக அமைச்சரின், இந்த செயல் இணையத்தில் விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>சு. வெங்கடேசன் </strong></h3><p>இதுகுறித்து முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணங்கள் கடவுளுக்குச் செய்யப்படும் காணிக்கைகளோ அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல. </p><p>அவை, பொதுப் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் அரசியலமைப்பு ஆவணங்கள். ஒரு தனிநபரின் சொந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்த அரசாங்க ஆவணங்களை வழங்குவது முறையற்றது,” என்று அவர்  கூறினார். </p><p>இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. சுந்தரராஜன் கூறுகையில், மரிய வில்சன் பொது பட்ஜெட் ஆவணங்களை ஒரு தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வாரா என்றும் அரசு மதச்சார்பற்றது என்ற உண்மையை மறந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>தமிழிசை செளந்தரராஜன் பதிவு</strong></h3><p>இந்நிலையில் வெங்கடேசன் கருத்துக்கு தமிழக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,</p><p>“இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கோயில் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இவ்வளவு பொங்கும் வெங்கடேசன் அவர்களே, சாமானிய இந்துக்களின் காணிக்கையை, கோயில் பணத்தை ஏன் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறீர்களா?</p><p>அவரவர் நம்பிக்கையில் நீங்கள் தலையிடுவது எந்த வகையில் நியாயம்?,” என்று கேள்வி எழுப்பினார்.</p><h3><strong>சு. வெங்கடேசன் பதில் கேள்வி</strong></h3><p>இந்த பதிவிற்கு எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைச்சரின் வழிபாட்டை இங்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை. அரசு ஆவணம் பூஜைக்கு உட்படுத்த வேண்டிய பொருளில்லை.</p><p>கோயில் பணத்தை அரசாங்கம் எங்கும் எடுக்கவில்லை. ஆனால், பிரதமர் மோடி திறந்து வைத்த அயோத்தி கோயிலுக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 முறை திருடியிருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் 200 கோடிக்கும் மேல்.</p><p>இராமனுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையை களவாடியவர்கள் குறித்து நேற்றுகூட நாடாளுமன்றத்தின் வாயிலில் போராடிவிட்டு வருகிறேன்.</p><p>இராமர் கோயில் திருட்டு குறித்து தேசமே பேசிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இது வரை பேசியதுண்டா?” என்று மருத்துவர் தமிழிசையின் பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T16:09:02.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk">எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</a></p><p>* ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. </p><p>* கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar">'இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..': கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல... </a></p><p>*அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.</p><p>*காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu">தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: 'உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'-ராகுல் காந்தி பரபரப்பு.</a>.. </p><p>*தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம்.</p><p>*அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!... </a></p><p>*சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p><p>*ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver">பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</a></p><p>* தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். </p><p>* இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-approaches-supreme-court-seeking-immediate-directions-for-release-of-cauvery-water-to-tamil-nadu">காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்து விட உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அவசர மனு</a></p><p>* கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.</p><p>* வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-dispute-approaching-supreme-court-only-legal-solution-minister-nirmal-kumar">காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுதாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்... </a></p><p>•கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.</p><p>•கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam">இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p>* இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift">இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</a></p><p>* தடை நீக்கி இடைத்தேர்தல் நடத்த முன்னாள் அமைச்சர்கள் மனு</p><p>* நீதிமன்றம் தடை நீக்குமா என அரசியல் பரபரப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners">காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</a></p><p>* ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.</p><p>* இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/commonwealth-games-tn-cm-vijay-money-announce-to-triple-jump-medal-winners#comments</comments><guid isPermaLink="false">d901d2a2-8fec-4423-be01-725821fb0c78</guid><pubDate>Sat, 01 Aug 2026 14:20:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T14:20:49.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காமன்வெல்த் போட்டி,தவெக விஜய்,Glasgow,commonwealth game,tn cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg" width="1280"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரவீன் சித்ரவேல், செல்வ பிரபு- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l05z4o5c/VIjayprice0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாவது:-</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்</p><p>தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைதேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijayabaskar-mr-vijayabaskar-seek-byelection-ban-lift#comments</comments><guid isPermaLink="false">4cf1ebd3-cb70-4803-b596-b15eb7db22ab</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:19:11 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:19:11.530Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசியல்,ByElection,இடைத்தேர்தல்,Ex Minister MR Vijayabaskar,C Vijayabaskar,Election2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ C Vijayabaskar  - MR Vijayabaskar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ync1syok/C-Vijayabaskar-MR-Vijayabaskar?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் விராலிமலை மற்றும் கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர்களான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">சி.விஜயபாஸ்கர்</a> மற்றும்<a href="https://www.maalaimalar.com/topic/mr-vijayabaskar"> எம்.ஆர். விஜயபாஸ்கர் </a>ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ளனர்.</p><h2><strong>வழக்கின் பின்னணி:</strong></h2><p>கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என கடந்த ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றம் தடை விதித்திருந்தது.</p><h2><strong>முன்னாள் அமைச்சர்களின் வாதம்:</strong></h2><p>தற்போது இந்தத் தடையை நீக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது மனுவில், "இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், அதனால் எந்தவொரு சிக்கலான சூழ்நிலையும் எழ வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேபோல் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் பிரதிநிதிகள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) இல்லாமல் தொகுதி மக்கள் நீண்ட நாட்கள் பாதிக்கப்படக் கூடாது" என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2><strong>அரசியல் எதிர்பார்ப்பு:</strong></h2><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் தொகுதிப் பணிகள் தொய்வடைந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. </p><p>நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கி இடைத்தேர்தலுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எட்டப்பர்கள்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-redistribution-supporters-are-ettappans-of-tamil-nadu-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">7e235c21-1734-420d-a921-0ab63d1db38e</guid><pubDate>Sat, 01 Aug 2026 13:14:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T13:14:37.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Rahul Gandhi calls BJP plot a threat to Tamil Nadu in Delimitation Betrayal Remark]]></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/j1kwv0mc/Untitled-design-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள் தமிழ்நாட்டிற்கு எட்டப்பர்களாக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><p>இந்த முகாமின் நிறைவு நாளான இன்று ராகுல் காந்தி பங்கேற்று, மாவட்டத் தலைவர்களிடம் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.</p><h3><strong>தொகுதி மறுவரையறை</strong></h3><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-</p><p>தொகுதி மறுவரையறை என்பது தமிழக மக்களிடம் இருந்து அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சதியாக உள்ளது. </p><p>தமிழ்நாட்டு வரலாற்றில் எட்டப்பர் என்ற பாத்திரம் ஒன்று உள்ளது. எட்டப்பர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகத்தை விளைவிக்கும் ஒருவராக குறிப்பிடப்படுகிறது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு யார் ஆதரவு அளித்தாலும், அவர்கள் தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறையை ஆதரிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் துரோகம் இழைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியை அனுமதிப்பதாக உள்ளது.</p><p>இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் 21ஆம் நூற்றாண்டின் எட்டப்பர்களாக இருக்கிறார்கள்.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழர்களும் மற்றும் தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழகத்தை சேர்ந்த கட்சிகளும் தொகுதி மறுவரையறையை மக்களவையில் தோற்கடிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வென்றது: கபினியில் தண்ணீர் திறப்பு- கே.ஆர்.எஸ். அணையிலிருந்தும் தண்ணீர் திறக்க அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-nature-has-prevailed-10000-cusecs-released-from-kabini-dam-water-must-also-be-released-from-the-krishna-raja-sagara-dam#comments</comments><guid isPermaLink="false">e3ca4116-457a-426f-903d-b77361888d10</guid><pubDate>Sat, 01 Aug 2026 12:47:09 +0000</pubDate><atom:updated>2026-08-01T12:47:09.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,Kabini Dam,கபினி அணை,Cauvery Water Issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கபினி அணை- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/sfpgmxco/Anbumani0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>கர்நாடகத்தில் காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை நிரம்பி வழிவதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இன்னும் எவ்வளவு காலத்திற்கு திறக்கப்படும், தமிழகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமா? என்பதெல்லாம் அடுத்த சில வாரங்களுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைப் பொறுத்தே அமையும். எனினும் இயற்கையின் கொடையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிம்மதியளிக்கிறது.</p><h2>கபினி அணை</h2><p>கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 2281 அடியாகவும், நீர் இருப்பு 17.50 டி.எம்.சியாகவும் இருந்தது. அணை நிரம்புவதற்கு இன்னும் 3 அடியும், 2 டி.எம்.சி நீருமே தேவை என்ற நிலையில், வினாடிக்கு 11747 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நாளைக்குள் அணை நிரம்பி விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாகவே நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது இயற்கையின் கொடையே தவிர கர்நாடக அரசின் விருப்பம் அல்ல.</p><h2>ஹாரங்கி அணை</h2><p>காவிரி பாசன மாவட்டங்களுக்கு குறைந்த பட்சம் சம்பா பருவத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது 40 முதல் 45 டிஎம்சி தண்ணீர் தேவை. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் கபினி அணையிலிருந்து தண்ணீர் வருவதும் நிறுத்தப்பட்டு விடும். அதனால் தமிழகத்திற்கு பயன் கிடைக்காது.</p><p>இன்னொரு அணையான ஹாரங்கி நிரம்பி வழிவதால் அதிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது.</p><h2>கே.ஆர்.எஸ். அணை</h2><p>எனவே, வெள்ளம் போல் வரும் கூடுதல் நீரை சேமித்து வைக்க வசதியாக கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும். அதை இன்னும் ஒரு வாரத்திற்கு தொடருவதன் மூலம் தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>