<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 19:56:09 +0000</lastBuildDate><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes#comments</comments><guid isPermaLink="false">aad04445-e3cd-4e37-b461-9820ba755831</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:59:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:59:01.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  </p> <p>முதலமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">தாய்மாமன் தங்க மோதிரம் </a>திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <p>அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், </p><p>"<a href="https://www.maalaimalar.com/topic/tvk-govt">தமிழ்நாடு அரசு</a> தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. </p><p>கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p> <h2>பிரசவங்கள்</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல்பதிவாகியுள்ளது. </p><p>இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. </p><p>இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தங்க மோதிரம்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். </p><p>இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICMEயில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும்100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p> <h2>செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் தவிர்த்து</h2><p>இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p> <h2>கூட்டம் </h2><p>இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:37:23.242Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>* 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</a></p><p>* தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம்.</p><p>* பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue">மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</a></p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>*  ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly">நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது:  அன்புமணி</a></p><p>* உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்.</p><p>* முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles">டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</a></p><p>* டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​</p><p>* ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan">22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol">மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</a></p><p>* மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. </p><p>* அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games">ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா, இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>* இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent">சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</a></p><p>* சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>* என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்றார் ரேணு.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</a></p><p>* 107 மையங்களில் (Hubs)  தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>* இத்திட்டம் தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties">சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</a></p><p>* ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன.</p><p>* ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி</p><p>* தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn">இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி</a></p><p>* பா.ம.க. நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p>* அன்புமணியின் அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed">நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது.</p><p>* இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed#comments</comments><guid isPermaLink="false">9f77bde9-7ec9-42c1-ae1f-248735ee20c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:22:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:22:50.564Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.</p><p>இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை. தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை</h2><p>இந்தியைத் திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தாங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p><p>இந்திய சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர், குஜராத் நிலநடுக்கம் என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை, வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>எனவே, இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</p><h2>இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை</h2><p>இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே, தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாகத் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.</p><h2>அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை</h2><p>அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.</p><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.</p><p>மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்</h2><p>இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn#comments</comments><guid isPermaLink="false">1c9c4a2c-20fc-4a51-9b33-2ab4aa5b856e</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:58:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:58:24.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,Anbumani Ramadass,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை போட்டியிடுகின்றன. அங்கு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது எனக்கூறிய அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.</p><p>பா.ம.க. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அன்புமணியின் இந்த அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign#comments</comments><guid isPermaLink="false">3c642763-99a9-4cba-a414-55a86edddb21</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:46:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:46:34.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர்.</p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராஜினாமா செய்த இந்த இரண்டு தொகுதி எம்.எல்.ஏ.க்களும், த.வெ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் தேர்தல் பிரசாரம்</h2><p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 நாட்கள் என 6 நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளார்.</p><p>த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தவெக சார்பில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.</p><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பரவலை தடுக்காதது அரசின் அலட்சிய போக்கு : சீமான் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">ade8befa-0260-4fd8-b942-bb96e0737ce6</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:35:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:35:55.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,dengue fever,டெங்கு ஒழிப்பு நடவடிக்கை,dengue fever death,dengue fever Tamil Nadu,சீமான் கண்டனம்,டெங்கு,சீமான்,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="280" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif" width="478"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>டெங்கு</h2><p>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு அனைத்து மாவட்டங்களிலும்  நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மிகுந்த கவலையும், வேதனையும் அளிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்திருக்கிறார். </p><h2>அலட்சியபோக்கு கண்டனத்திற்குரியது</h2><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. </p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. </p><h2>ஆறுதல்</h2><p>சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும்  நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். </p><h2>தீவிர நடவடிக்கை வேண்டும் </h2><p>மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். </p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள். </p><p>டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்</h2><p>தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p> <p>மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">f4affd7a-b471-4247-8b18-82d78471d60b</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:08:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:08:33.885Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Cauvery Water Issue,உச்சநீதிமன்றம்,காவிரி நீர் விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.</p><p>அந்த மனுவில் "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 நாட்களுகு்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் போரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முறையான விசாரணை நடத்தாமல் நீக்கியது கண்டனத்திற்குரியது: கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation#comments</comments><guid isPermaLink="false">42cb0003-7aa6-4f9d-b60d-71b597086c22</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:46:37.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th#comments</comments><guid isPermaLink="false">e012354f-feca-4961-a902-90c3283de520</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:33:00.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TVK Govt,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் </p><p>தாய்- சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><h2>ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தினமும் 100 குழந்தைகள்</h2><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs)  தினமும் </p><p>100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p>இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்த்து கதறும் சின்னஞ்சிறுசுகள்.... அப்பா தண்ணீரில் போடாதீங்க பிளீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11#comments</comments><guid isPermaLink="false">fd261211-0f85-4383-9390-e0f915deccf4</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:55:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:55:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chatuthi,vinayagar,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச்சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.</p><p>அழகிய வேலைப்பாடுகளுடன் விதவிதமாக வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தூக்கிப்போடும் போது அது ஐதீகமாக தெரிந்தாலும், மனதில் லேசான கவலையும் தோன்றாமல் இருப்பதில்லை. கண் எதிரில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் உடைந்து நொறுங்கி சிதறுவது ஒன்றிரண்டு நாட்கள் மனக்கண் முன்பு வந்து செல்ல தவறுவதில்லை. அந்த உணர்வை பெரியவர்கள் வெளிக்காட்டுவதில்லை.</p><h2><strong>விநாயகர் சிலை</strong></h2><p>ஆனால் பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>விநாயகர் சதுர்த்திக்காக சிறு பிள்ளையார் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் விளையாட்டு தனத்தோடு வழிபட்டாலும் அந்த சிலைகளோடு ஒன்றிவிடுகிறார்கள். பின்னர் கரைப்பதற்காக பூக்களால் அலங்காரம் செய்து சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளின் அருகில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். வீட்டில் நடக்கும் பூஜையை போல்தான் வெளியிலும் எடுத்து வந்து அப்பா-அம்மா பூஜை செய்கிறார்கள் என்று அதுவரை சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் சிலையை எடுத்து தண்ணீரில் போடப்போகும் போதுதான் உடைந்து நொறுங்கி விடுகிறார்கள்.</p><h2><strong>சென்னை பட்டினப்பாக்கம்</strong></h2><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு விநாயகர் சிலையை கரைக்க விடாமல் குழந்தை ஒன்று அடம்பிடித்தது. ஒரு வழியாக சிலையை கடலில் போட்டு திரும்பினாலும் ‘எனக்கு பிள்ளையார் சாமி’ வேணும்... என்று கண்ணீர் விட்டு அழுத குழந்தையிடம்,</p><p>“நீ எங்க செல்லக்குட்டித்தானே?”</p><p>“ம்”</p><p>“அப்போ அப்பா சொல்றதை கேட்பியா...”</p><p>“ம்”</p><p>“நம்ம செல்ல விநாயகரும் கடலில் குளித்துவிட்டு வந்து விடுவார்.. சரியா...?”</p><p>“அப்போ... நாம நின்னு கூட்டிட்டு போவோப்பா...”</p><p>“நாம வெயிட் பண்ண வேண்டாம்... அவர் வேகமாக வருவார்.”</p><p>நாம் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்துவிடுவார் பாரேன் என்று அந்த குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/2jvd26jz/vinayaga.jpg" /></figure><h2><strong>குழந்தை</strong></h2><p>ஆந்திர கடலோரங்களில் நடந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு குழந்தை விநாயகர் சிலையை கட்டித் தழுவியபடி ‘நான் விடமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அந்த குழந்தையை சமாதானப்படுத்தி சிலையை எடுத்து சென்று கரைப்பதற்கு பெற்றோர் பெரும்பாடுபட்டனர்.</p><p>ஒரு குழந்தைக்கு தாவணி எல்லாம் போட்டு அழைத்து வந்திருந்தார்கள். அதுவரை உற்சாகமாக இருந்த அந்த குழந்தையும் விநாயகர் சிலையை கடலில் போடப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ‘பிளீஸ்பா... வேண்டாம்பா... வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்று சிலையை கட்டிப்பிடித்து கதறியது.</p><h2><strong>விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்</strong></h2><p>இன்னொரு குட்டிகுழந்தை அவளது தந்தை விநாயகர் சிலையை தூக்கியதும் கொண்டு செல்லவிடாமல் தடுத்து தன்னிடம் கொடுத்து விடும்படி கெஞ்சி அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தாய் அந்த குழந்தையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டார். இன்னொரு குழந்தையின் சிறு பிள்ளைத்தனமான எதிர்ப்பையும் மீறி அந்த குழந்தையின் பெற்றோர் சிலையை கடலில் கொண்டு போட்டனர். அதை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத அந்த குழந்தையை சிறிது நேரம் சமாதானப்படுத்தவே முடியவில்லை. சிலை கரைக்க வந்திருந்த பலரும் அந்த குழந்தையை சமாதானப்படுத்த நீண்டநேரம் போராடினார்கள்.</p><p>விநாயகரோடு ஒன்றிவிட்ட குழந்தைகள் விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்தான் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>பெண் ஊழியருக்கு கத்திக்குத்து: சட்டம்- ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு- கனிமொழி எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism#comments</comments><guid isPermaLink="false">b3ebf810-6f76-4750-aa55-01d96f41290c</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:29:40.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi MP,கனிமொழி எம்.பி.,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. அரசு ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>நடந்தது என்ன?</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.</p><h2>கத்திக்குத்து</h2><p>இங்கு காடாம்புலியூர் அடுத்த புறங்கணியை சேர்ந்த திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். மருந்தகத்தை திறந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.</p><h2>சிகிச்சை</h2><p>வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்த ஊழியர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அருகே அந்த வாலிபர் நின்றிருந்தார்.</p><p>உடனடியாக அவர்கள், அந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/applications-for-new-drinking-water-and-sewage-connections-in-the-chennai-corporation-area-can-be-submitted-only-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/applications-for-new-drinking-water-and-sewage-connections-in-the-chennai-corporation-area-can-be-submitted-only-online#comments</comments><guid isPermaLink="false">f9f844a4-daa2-42b3-b328-f14ae75f350e</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:38:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:38:24.492Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Drinking water,சென்னை குடிநீர் வாரியம்,sewage,Chennai Water Board,குடிநீர்,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ycyw86fh/online.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ycyw86fh/online.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் புதிய இணைப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சரியான ஆவணங்கள் சமர்ப்பித்தால் 15 நாட்களில் செயல்முறை நிறைவு செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம்.</strong></em></p><p>சென்னை பெருநகர பகுதியில் எல்லை விரிவாக்கம் காரணமாக வட சென்னை மற்றும் தென் சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. </p><h2><strong>திட்டங்கள்</strong></h2><p>மக்கள் தொகை மற்றும் வணிக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அப்பகுதிகளில் பாதுகாப்பான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">குடிநீர் வழங்குதல்</a> மற்றும் முறையான கழிவுநீர் அகற்றுதல் வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகி உள்ளது. </p><p>இதனை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் புதிதாக இணைக்கப்பட்ட வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகத் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்களை கட்டமைக்கும் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மணலி மண்டலத்திற்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடையன் குப்பம், கடப்பாக்கம், மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, மாதவரம், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர், நெற்குன்றம், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இதேபோல சின்ன சேக்காடு, போரூர், நெற்குன்றம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம்,  உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><h2><strong>விண்ணப்பிக்கும் முறை</strong> </h2><p>புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரியத்தின் (<a href="https://wsc.chennaimetrowater.in/#/nc/login">https://wsc.chennaimetrowater.in/#/nc/login</a>) என்ற  இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். </p><p>பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய பொறியாளரால் விண்ணப்பதாரரின் வளாகம் ஆய்வு செய்யப்படும். விண்ணப்பதாரர் இணைய வழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும். </p><p>விண்ணப்பதாரர் வழங்கும் விபரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால் விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.</p><p>ஏற்கனவே உள்ள குடிநீர் அல்லது கல்லூரி இணைப்புகளை புதுப்பித்தல் அல்லது வேறு இடத்திற்கு மாற்றுதல் போன்றவற்றிற்கு ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும். </p><p>பொதுமக்களின் வசதிக்காகவும் அனைவரும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை பெற்றிட ஊக்குவிக்கும் வகையிலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இணைப்பு கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். </p><p>எனவே புதிதாக குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning#comments</comments><guid isPermaLink="false">710e3bde-ad57-470f-8990-93222a27c027</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:21:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:21:26.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வடக்கு உள் தமிழகம் மற்றும் மராத்வாடா-அரபிக்கடல் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>பெண் நிர்வாகி புகார்: கருப்பு முருகானந்தம் மீது பாஜக நடவடிக்கை..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint#comments</comments><guid isPermaLink="false">34531e1b-63bb-43c7-956a-2d45905c0fef</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:13:53.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகபெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கு மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்திருந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாவும் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்திருந்தார்.</p><p>இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>விளக்கம்</h2><p>இதனிடையே, கருப்பு முருகானந்தம் "அந்தப் புகார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் மீதான புகாரோ அல்லது குற்றச்சாட்டுகளோ என்னவென்று தெரியாமல் என்னால் எதற்கும் பதிலளிக்க முடியாது. விவரங்களை அறிந்த பிறகு, இது குறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே இயக்க சென்னைக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரெயில்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/35-new-metro-trains-have-arrived-in-chennai-to-operate-between-poonamallee-and-lighthouse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/35-new-metro-trains-have-arrived-in-chennai-to-operate-between-poonamallee-and-lighthouse#comments</comments><guid isPermaLink="false">b2ff5217-0056-43a2-9d37-efe85747f0fa</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:08:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:08:01.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,Chennai metro,சென்னை மெட்ரோ,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1xta24y7/chennaimetro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1xta24y7/chennaimetro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.</strong></em> </p><h2><strong>மெட்ரோ ரெயில்</strong></h2><p>சென்னையில் <a href="https://www.maalaimalar.com/topic/மெட்ரோ-ரெயில்">மெட்ரோ ரெயில்</a> 2-ம் கட்ட திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் 4-வது வழித்தடத்தில்   மெட்ரோ ரெயில் இயக்க தயாராக உள்ளது. பூந்தமல்லி -கலங்கரை விளக்கம் வரை  உள்ள இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை அனைத்து பணிகளும் முடிந்து ரெயில்களை இயக்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>இறுதி கட்ட பணிகள்</strong></h2><p>ஆனால் மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான உத்தரவு வரவில்லை. இதனால் 4 மாதமாக  இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க  முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர் மட்ட பாதையில் 92 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கட்டிட அலங்காரப் பணிகள் மற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. </p><p>சுரங்கப்பாதையில் 54 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த  வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan#comments</comments><guid isPermaLink="false">295fa2f5-f2af-4b55-9758-eac983b4dbae</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:54:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:54:21.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு திட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* ஏற்கனவே, 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பலன் அடைகிறார்கள். 37,440 பள்ளிகள் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கம் மூலமாக மேலும் 15,450 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.</p><h2>பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 34.64 லட்சம்</h2><p>* புதிதாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 141 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலமாக 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 மாணவர்கள் காலை தோறும் உணவு பெறுவார்கள்.</p><p>* 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced"> காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் </a>தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 38 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.</p><p>* தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றும் இன்றும் இருமொழிக் கொள்கைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துதான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு கிடையாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எந்த மொழிக்கும் எதிரானது தமிழ்நாடு அரசு அல்ல. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.</p><h2>உணவு மெனு தயாரிக்க கமிட்டி</h2><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு என்ற வகையில் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன வகையிலான உணவு என்ற மெனுவை தயாரிக்க புதிய கமிட்டியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றங்களைத் தடுக்கத் தவறிய காவல்துறை, நீதி கேட்போரைக் கைது செய்வதா?- டி.டி.வி.தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-condemns-tn-police-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-condemns-tn-police-department#comments</comments><guid isPermaLink="false">3363679c-dc81-4647-bac6-d50c2feda8c1</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:34:03 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:34:03.278Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,இரட்டை கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nok96c28/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nok96c28/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கைது</strong></h2><p>சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களும், பொதுமக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>தவெக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்தே கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்வதோடு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>அதோடு, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, சட்டத்தை மதிக்காமல் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு மாறாக, அக்குற்றங்கள் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதும், அன்றாடம் நடைபெறும் குற்றங்களுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசிக் கொண்டிருப்பதுமே, குற்றம் செய்வோருக்கு அறவே பயமில்லாத ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எனவே, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனக் கூறுவதா?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court#comments</comments><guid isPermaLink="false">ad7e05ad-627b-46ca-8acc-ffd9256bc812</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:19:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:19:22.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CCTV,highcourt madurai branch,சிசிடிவி,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்ணை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் 36 மணி நேரம் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தது தொடர்பான வழக்கில், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவிடக்கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government">உயர்நீதிமன்ற மதுரைக்கிளை</a>யில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.</p><p>உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி..</p><p>அப்போது போலீஸ் தரப்பில் 15 நாட்கள் மட்டுமே சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். CCTV கேமராக்களைப் பராமரிக்க வேண்டிய கடமை எஸ்.பி.க்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியரை மிரட்டி ரூ.11 லட்சம் பறிப்பு: பிரபல ரவுடிகள் உள்பட 4 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-employee-money-robbery-4-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-employee-money-robbery-4-arrested#comments</comments><guid isPermaLink="false">7f589471-9f8d-41f1-9436-a2ee2a6664cc</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:17:05 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:17:05.616Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,பணம் கொள்ளை,money robbery,ரவுடிகள் கைது,bank employee,வங்கி ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tdv7yz17/arrested1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tdv7yz17/arrested1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று முன்தினம் சென்னை பாரிமுனை பகுதியில் இவருக்கு தெரிந்த நபரிடம் செலவுக்காக ரூ.11 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் அங்கு இருந்து புறப்பட்டு தியாகராய நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.</p> <p>அப்போது 4 பேர் கும்பல் கார்த்திகேயனை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து கார்த்திகேயன் சென்னை பாண்டிபஜார் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><p>புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சென்னை தேனாம்பேட்டை உதவி ஆணையர் ஜமால் மற்றும் பாண்டிபஜார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம கும்பலின் இரு சக்கர வாகனத்தின் எண்களை வைத்து விசாரணை செய்ததில் சென்னை வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. </p><p>இதனையடுத்து தனிப்படை போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண்கு மார் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகள் ஆனந்த செல்வன் ( 32 ) சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பப்லு (32) திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முகமது பாசில் (32) என்பது தெரிய வந்தது.</p><p>இவர்களிடம் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரம் பணம் மற்றும் ஒரு பைக், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஆனந்த செல்வன் மற்றும் பப்லு ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பது தெரியவந்தது. </p><p>பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி ரூ.11 லட்சத்துக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்த பணம் ஹவாலா பணமா? என்றும் கார்த்திகேயன் ரூ.11 லட்சம் பணம் வைத்து இருப்பது இந்த கும்பலுக்கு எப்படி தெரியவந்தது யாராவது தகவல் கொடுத்தார்களா? எனவும் பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly#comments</comments><guid isPermaLink="false">b896709e-de23-458e-aa46-ddcc2c75c571</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:33:41.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என அன்புமணி கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/சொத்து-வரி">சொத்து வரி</a> உயர்வு, வரி அல்லாத வருவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>விலக்கு</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்து வரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை  மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில  அரசும்  கடைபிடிக்கிறது.</p><p>உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.</p><p>எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">205de3fb-cba8-4ce2-8b8c-bb6fee35daa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:58:14 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:58:14.978Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,டிஆர்பி ராஜா,TRB Rajaa,லண்டனன் பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டி.ஆர்.பி.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ho197nbu/TRBRaaja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அதனை தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று மேற்கொண்ட முதலீடுகள் குறித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip">வெள்ளை அறிக்கை</a> வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-</p><h2><strong>ரீல் விடுகிறது தவெக அரசு</strong></h2><p>* முதலீடுகளில் அரசியல் இருக்கக்கூடாது என நினைத்து நானே சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறினேன். </p><p>* தொழில் முதலீடு தொடர்பாக தினம் தினம் த.வெ.க. அரசு ரீல் விடுகிறது.</p><p>* ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><h2><strong>வெளிநாட்டில் மானத்தை வாங்காதீர்கள்</strong></h2><p>* முதலமைச்சர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே உள்ள மருத்துவமனை அருகே நின்று கத்துகின்றனர். </p><p>* வெளிநாட்டுக்கு சென்று தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள். </p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>* ரூ.3000 கோடி முதலீடு செய்யும் நிறுவனத்தின் பெயரையே சொல்லாதது ஏன்? </p><h2><strong>பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?</strong></h2><p>* லண்டனில் கார் பந்தயத்தை பார்க்கச் செல்கிறேன் என்றால் யார் என்ன சொல்லப்போகிறார்கள். </p><p>* எஃப்1 கார் பந்தயம் நடத்த 2 ஆயிரம் ஏக்கம் நிலம் தேவை, அதை எந்த இடத்தில் எடுக்கப்போகிறார்கள்? </p><p>* உண்மையான தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு எப்போது வரும்? </p><p>* ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார்.</p><p>* வெளிநாடுகளில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எவ்வளவு முதலீடு என நாள்தோறும் அறிக்கை வெளியிட்டோம். </p><p>* முதலமைச்சர் வெளிநாடு செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பின்பும் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை? </p><p>* வெற்றி முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் வெற்று முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். </p><p>* திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலீடுகளை தாங்கள் கொண்டு வந்ததாக த.வெ.க. அரசு கூறுகிறது. </p><p>* திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் உடனுக்குடன் தகவல்களை தந்தோம். </p><p>* முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை என கூறினார். </p>]]></content:encoded></item><item><title>மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue#comments</comments><guid isPermaLink="false">efe69372-2e40-4620-8ed7-ace969ebdfdc</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:53:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:53:44.689Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பாபிஷேகம்,Kumbhabhishekam,Madurai Meenakshi Amman temple,மதுரை மீனாட்சியம்மன் கோவில்,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/hcxaehfc/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.</p> <p>சென்னை அண்ணாசாலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">அமைச்சர் நிர்மல்குமார்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது:</p><p>* மக்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் இன்றி மதுரை <a href="https://www.maalaimalar.com/spirituality/madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-devotees-worship">மீனாட்சியம்மன் கோவில்</a> குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.</p><p>* மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பாஸை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.</p> <p>* பாஸ் என்ன நிறம் என்பதே முந்தைய நாள் தான் எனக்கு தெரிய வந்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்கான பாஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை அறநிலையத்துறை தான் எடுத்தது.</p><p>* கும்பாபிஷேகத்திற்காக 9,000 பாஸ்கள் ஆன்லைன் மற்றும் கோவில் நிர்வாகம் தான் கொடுத்தது.</p> <p>* மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக டோக்கன் எனது குடும்பத்தினருக்கு கூட நான் கொடுக்கவில்லை.</p><p>* திமுக ஆட்சியில் அவர்களுடைய கட்சி சார்ந்த குடும்பத்தினர் தான் முன்வரிசையில் இருப்பர்.</p><p>* திமுகவை சேர்ந்த சிலர் தான் சில பிரச்சனைகளை கிளப்பினார்கள்.</p> <p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எவ்வித விதிமீறலும் இல்லை.</p><p>* மின்சார தட்டுப்பாடு என்பது அனைத்து மாநிலங்களிலும் உள்ளது.</p> <p>* ஆர்.கே.நகர், ஸ்டான்லி நகரில் பிஎஸ்என்எல் வேலையின்போது மின்வாரிய ஒயருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் மின்தடை ஏற்பட்டது.</p><p>* மின் பற்றாக்குறையால் கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது.</p><p>* மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையை சரியான முறையில் கையாண்டுள்ளோம்.</p> <p>* கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட 1 லட்சம் மின் கம்பங்களை சரி செய்ய 5 மாதங்கள் தேவைப்பட்டது.</p><p>* பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.</p><p>* 10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.</p> <p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p><p>* தலைமை நீதிபதியை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவமதித்த புகார் பற்றி எனக்கு தெரியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் முதலீடுகள்: அதிகாரிகளுடன்  முதலமைச்சர் விஜய் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-holds-talks-on-london-investments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-holds-talks-on-london-investments#comments</comments><guid isPermaLink="false">93cf9f28-e934-47ba-a8d3-8bba031e1825</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:51:07 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:51:07.969Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>london,Discussion,cm vijay,முதலமைச்சர் விஜய்,லண்டன் பயணம்,ஆலோசனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0ifb1huh/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/0ifb1huh/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன் முதலீடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.</p><h2>லண்டன் பயணம்</h2><p>தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் விஜய் 12-ந்தேதி, உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள 'ரேஸ் கண்ட்ரோல்' மற்றும் 'ரேஸ் சர்க்யூட் பகுதிகளை பார்வையிட்டார்.</p><p>14-ந்தேதி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், புதிய தொழில் முதலீட்டுக்கான கடிதம் என மொத்தம் 15,300 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய் ஆலோசனை</h2><p>இந்த நிலையில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.</p><p>அதைபோல வரும் 22-ம் தேதி காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் 25-ம் தேதி 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் தொடக்கம் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கப்பட உள்ளது. தங்கமோதிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கும் தேதி, இடம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.</p><h2>ஒப்பந்தம்</h2><p>முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில், சென்னை DLF DOWNTOWN தரமணி வளாகத்தில் வால்கிரீன்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் விவகாரம்: ஊழல் வழக்கில் கைதாகிவிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பதா?- மூலனூர் கார்த்திக்கிற்கு நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest#comments</comments><guid isPermaLink="false">d50e3de4-bcdf-428f-a672-d0b494421c6c</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:21:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:21:45.673Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,corruption case,Chennai High court,நீதிமன்றம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என மூலனூர் கார்த்திக் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac" rel="nofollow">மதுபானங்கள்</a> கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.</p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p><p>முன்னதாக கார்த்திக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து வரும் பா.ம.க.வினர்- நிர்வாகிகளை பாராட்டிய அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries#comments</comments><guid isPermaLink="false">e4c573c6-18ad-4137-aad8-18c9fd2069ce</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:19:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:19:12.425Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதஸ்,பா.ம.க,அரச மரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டையில் அமைந்துள்ளது மாவீரன் தேசிங்கு நினைவு தூண். இந்த நினைவிடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரச மரம் ஒன்றை நடப்பட்டது.</p><h2><strong>அரச மரம்</strong></h2><p>இந்த மரம் வளர்ந்து தற்போது அந்த பகுதியில் நிழல் தந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2><strong>நெடுஞ்சாலைத்துறை</strong></h2><p>இதற்காக சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அந்த அரச மரத்தை வெட்டி எடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சித்தனர். இதை அறிந்த பா.ம.க நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.</p><p>அப்போது அவர்கள், மரத்தை வெட்ட வேண்டாம். நாங்கள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வைத்து நாங்களே பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இதனை தொடர்ந்து பா.ம.க நிர்வாகிகள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி காப்பாற்றி அருகிலேயே வேறு இடத்தில் மீண்டும் நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 39-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாவீரன் தேசிங்கு நினைவு தூணில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தாங்கள் நட்டு, காப்பாற்றப்பட்ட அரச மரம் மீண்டும் துளிர்விட்டிருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.</p><h2><strong>நிர்வாகிகளுக்கு பாராட்டு</strong></h2><p>மரத்தை காப்பாற்றிய கட்சி நிர்வாகிகளை அவர் நேரில் பாராட்டினர். தொடர்ந்து அவர் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரம் நடப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்காக இந்த மரம் வெட்ட வந்த போது, பா.ம.க நிர்வாகிகள் அதனை வெட்ட வேண்டாம். நாங்கள் மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்து தற்போது இந்த மரத்தை பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இதை தான் அரசு செய்ய வேண்டும். நாங்கள் செய்துள்ளோம். சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days#comments</comments><guid isPermaLink="false">fbc776f2-fbb5-4907-96cb-547712a7720f</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:10:54.632Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்.</p> <p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">பாரதிதாசன்</a>, ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கான நிதிக்காக தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார்.</p> <p>தனது ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள், எதிக்ஸ் கோடு உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். </p><p>இருப்பினும், நிதி கிடைக்காததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ள ஆய்வு தொடர்பான பிரசன்டேஷனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>மேலும், தனது குடும்பம் மற்றும் கிராமத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சித் துறைக்கு வந்த முதல் தலைமுறை நபர் தான்தான் எனக் குறிப்பிட்ட அவர், தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். </p><p>இதுதொடர்பாக விளக்கம் அளித்த சமூக நீதித்துறை, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.</p> <p>இதையடுத்து, மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட புதிய காணொலி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. </p><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a>, பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.</p><p>தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம். அவருக்கான நிதித் தொகை இரண்டு நாட்களுக்குள் விடுவிக்கப்படும்.</p> <p>அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாரதிதாசனைப் போன்ற மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே சமூகநீதித் துறை செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள்- அபராத தொகையை வசூலிக்க சிறப்பு மையங்களுக்கு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators#comments</comments><guid isPermaLink="false">be75904a-04e8-44e2-8b2d-143588b2de38</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:55:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:55:12.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special camp,fine,சிறப்பு மையம்,Traffic Rules Violation,போக்குவரத்து விதி மீறல்,அபராத தொகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Traffic rules]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம்  அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>அபராதம்</h2><p>ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது  மற்றும் லைசென்ஸ்  இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.</p><p>தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.</p><p>அதனால் அபராத தொகை செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ளது. பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள்.</p><p>சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்கு வரத்து போலீஸ் சார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.</p><h2>சிறப்பு மையம்</h2><p>போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை  அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. </p><p>வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல் துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள செலான்கள் பற்றி தெரிவிப்பார்கள்.</p><p>மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள். தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.</p><p>வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். </p><p>மது போதை யில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை சரி பார்த்து   அபரா தத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.</p><p>15 இடங்கள் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:</p><p> 1) அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத் </p><p>2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத் </p><p>3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>5) அண்ணா நகர் சுழற்சி </p><p>6) அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத் </p><p>7) மதுரவாயல் போக்கு வரத்து போலீஸ் நிலையம்</p><p> 8) மாதவரம் போக்கு வரத்து காவல் நிலையம் </p><p>9) பூக்கடை போலீஸ் நிலையம்</p><p>10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் </p><p>11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம் </p><p>12) மாம்பலம் போலீஸ் நிலையம் </p><p>13) அடையாறு போலீஸ் நிலையம் </p><p>14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்குவரத்து மவுண்ட் சப்டிவிஷன் வளாகம் </p><p>15)  வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள  தலைமையகம்</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">bf5df2d6-0784-44bb-a52d-bef9f4379c69</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:35:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:35:22.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>5 முனைப்போட்டி</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, <a href="https://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.திமு.க</a>, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.</p><p>அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>தேர்தல் ஆணையம்</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ எஸ் மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>அதிமுக சார்பாக வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலி கூண்டில் சிக்கியது- பொதுமக்கள் நிம்மதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage#comments</comments><guid isPermaLink="false">1182549c-ce82-40ce-a91f-995ad21fbda3</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:24:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:24:44.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,புலி,tiger,kumki elephants,கும்கி யானைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர் அருகே காட்டுப் புலி ஊருக்குள் புகுந்து 2 பேரை அடித்துக் கொன்றது. கடந்த மாதம் 9-ந் தேதி ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரையும், 21-ந் தேதி ரவிச்சந்திரனையும் தாக்கிக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கக்கோரியும், அந்த பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2><strong>ரூ.10 லட்சம் நிதியுதவி</strong></h2><p>அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் 50 பேர் சென்னை வந்து முதலமைச்சரிடம் முறையிட வந்தனர். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமாரிடம் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அத்துடன் புலி தாக்கியதில் மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூடலூருக்கு நேரில் சென்றபோது அந்த 2 குடும்பத்துக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினார்.</p> <h2><strong>புலியைப் பிடிக்க ஏற்பாடு</strong></h2><p>இதைத் தொடர்ந்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு முதலமைச்சர் விஜய் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், வனத்துறையின் செயலாளர் காகர் லா உஷா, வனத்துறை எச்.ஓ.டி.உதயா, டோக்கரா, நீலகிரி மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கூடலூர் பகுதிக்கு சென்று புலியை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டனர்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuf2uiwf/tigerg.jpg" /></figure><h2><strong>கேமராக்கள்</strong></h2><p>200-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 அதிநவீன டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு புலியை தேடிக் கொண்டே இருந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய மொத்தம் 244 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தினமும் அந்த கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. முக்கியமான இடங்களில் 13 இரும்புக் கூண்டுகளை அமைத்து அதில் ஆடுகள் கட்டிவைக்கப்பட்டன.</p><h2><strong>புலி சிக்கியது</strong></h2><p>இந்தநிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கிக்கொண்டது. கூடலூர் நகரைஒட்டிய கே.கே. நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் புலி மாட்டிக் கொண்டது.</p><h2><strong>வனத்துறை அதிகாரிகள்</strong></h2><p>அந்த புலி ஆண் புலியாகும். அதற்கு 9 வயது முதல் 10 வயதுக்குள் இருக்கும். கூண்டில் சிக்கிய புலியை வனத்துறையினர் இரவோடு, இரவாக முதுமலைக்கு கொண்டு சென்றனர். புலியை மைசூர் காப்பகத்துக்கு கொண்டு செல்வதா அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதா? என்ற வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry#comments</comments><guid isPermaLink="false">b5bbb8aa-80f5-4c81-8764-d982da18aa9c</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:03:33.597Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>corruption case,பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,Education Department,லஞ்ச வழக்கு,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்காக ஆஜரானார்.</p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/goondas-act-invoked-against-dmk-pt-arasakumar-rs-100-crore-collected-from-private-school-administrators" rel="nofollow">தனியார் பள்ளி</a> சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது.</p><p>அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். </p><p>பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். </p><p>250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>வழக்கு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><h2>சோதனை</h2><p>சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். </p><h2>ஆஜர்</h2><p>இந்நிலையில், போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">fb1d4f14-ab10-4908-851f-1af56f88aaa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:48:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:48:35.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><h2><strong>5 முனை போட்டி</strong></h2><p>2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள்</strong> </h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. </p><p>இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடம் தேர்வு</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரத்தில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 2-ந்தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2><strong>எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>சீமான்</strong></h2><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2 தொகுதிகளிலும் அவர் தங்கியிருந்து ஒரு வாரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.</p><h2><strong>களை கட்டுகிறது</strong></h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது.</p><p>தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions#comments</comments><guid isPermaLink="false">7ee6c6df-afc4-4d2e-ab58-1570fd9e7c60</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:38:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:38:09.419Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,UPI,யுபிஐ,nirmala Sitharaman,jothimani,ஜோதிமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman - Jothimani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். </p><p>வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">யுபிஐ கட்டணம்</a> செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p> <p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">நிர்மலா சீதாராமனுக்கு</a> காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில்,</p><p>அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். </p> <p>சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">₹2,000-க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% (MDR) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br> அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு… <a href="https://t.co/GeKGI0WBGH">pic.twitter.com/GeKGI0WBGH</a></p>&mdash; Jothimani (@jothims) <a href="https://x.com/jothims/status/2100808374233497608?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations#comments</comments><guid isPermaLink="false">abe5b4e7-5813-4bf8-a48b-43bebe204a97</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:34:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:34:51.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பேருந்துகள்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு  முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (18-ந்தேதி) 760 பேருந்துகளும், நாளை (19-ந்தேதி) 520 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 18-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று 115 பேருந்துகளும், நாளை (19-ந் தேதி) 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் நாளை மறுநாள் (20-ந் தேதி) அன்று 805  சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை  மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases#comments</comments><guid isPermaLink="false">5b551e4f-1a82-493c-a5ac-f975f725beeb</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:30:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:30:49.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,health department,சுகாதாரத்துறை,Dengue action,டெங்கு காய்ச்சல்,டெங்கு பரவல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தினந்தோறும் 200 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 244 நாபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவர 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>சென்னையில் அதிகம்</h2><p>சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management#comments</comments><guid isPermaLink="false">c6be4775-3fb2-459a-8cca-5967331eb2db</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:07:21.547Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Anbumani ramadoss,caste census,அன்புமணி  ராமதாஸ்,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது என்று அன்புமணி கூறினார்.</p> <h2>வன்னியா் இட ஒதுக்கீடு</h2><p>வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவை  போற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>கூட்டத்தில் பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> பங்கேற்று பேசியதாவது:-</p> <p>ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகளை நினைவூட்டி அவர்களை போற்றி வருகிறோம். போராட்டத்தில் இறந்தவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களால் இன்று நிறைய இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்கள் பற்றி இன்று வரை மற்றவர்கள் யாரும் பேசவில்லை. </p><p>பா.ம.க. சார்பில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை நடத்த முன்வரவில்லை.</p> <h2>இடஒதுக்கீடு போராட்டம்</h2><p>தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். 95 ஆண்டுகளாக காத்து கிடக்கும் எங்களுக்கு  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday">முதலமைச்சர் விஜய்</a> சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வி அடையாமல் இருக்க முதலமைச்சர் விஜய் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் அதிகம் பயன்பெற போவது பட்டியல் இன பழங்குடியின மக்கள் தான்.</p> <p>இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் 4 இட ஒதுக்கீடு என 6 இட ஒதுக்கீடு பா.ம.க நடத்திய போராட்டத்தால் தான் கிடைத்தது.</p><h2>நீர் மேலாண்மை</h2><p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது. தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக என்ன செய்யப் போகிறார். 2031-ல் நாம் ஆட்சிக்கு வர போகிறோம். அதற்கான சூழ்நிலைகள் நமக்கு அமைந்துள்ளது. எனவே கட்சியில் உள்ளவர்கள் அதனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் நடக்கும்- மதுரை ஆதீனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years#comments</comments><guid isPermaLink="false">8065bef8-4b00-48a8-8536-dc5808ede3ad</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:02:59.921Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,மதுரை ஆதீனம்,Madurai Adheenam,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று சொல்வதால் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.</strong></em></p><p>காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வில்வநாத ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-</p><h2><strong>விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவும் கூடாது, லஞ்சம் கொடுக்கவும் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் விஜயை பாராட்டுகிறேன். திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார் முதல்வர். 100 ஆண்டுகள் வரை த.வெக. ஆட்சி தான் நடக்கும். இடைத்தேர்தல்களிலும் த.வெ.க. தான் வெற்றி பெறும். வரும் அக்.11 ஆம் தேதி மதுரை தமிழச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. நூலை அடியேன் தான் வெளியிடவுள்ளேன்.</p><h2><strong>அனைவரும் சமம்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இறைவனுக்கு முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று செயல்படுகிறார். கோவிலுக்குள் கைப்பேசி எடுத்து செல்வதை தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவன் என்பதாலும், 6 மாதத்துக்கு முன்பே பிள்ளையார் பாளையம் வில்வநாத ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை.</p><p>எங்கள் மடத்துக்கு அருகிலேயே மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் நான் தினசரி அம்மனை தரிசிப்பதும் வழக்கம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute#comments</comments><guid isPermaLink="false">4ad6e1bf-5d2e-4724-88e7-b30355c554ae</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:26:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:26:01.888Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,இரட்டைமலை சீனிவாசன்,irattaimalai srinivasan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ irattaimalai srinivasan- Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகப்போராளியும் திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான திராவிட மணி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">இரட்டை மலை சீனிவாசன்</a> நினைவு நாளான இன்நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (19.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-44</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-44#comments</comments><guid isPermaLink="false">30c88fdc-7d7a-483b-bd53-cba86e19d16d</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:24:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:24:35.999Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/dqx0j3rk/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/dqx0j3rk/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>ஐடி காரிடார்</strong> </h2><p>நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, காரணை, ஏகாட்டூர், ஓஎம்ஆர், படுப்பாக்கம், சிப்காட் சிறுசேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சந்தியா கார்டன்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் சிகிச்சை: தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-announcement-stating-that-complaints-can-be-lodged-if-private-hospitals-charge-excess-fees</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-announcement-stating-that-complaints-can-be-lodged-if-private-hospitals-charge-excess-fees#comments</comments><guid isPermaLink="false">6730edab-68bf-4ebc-bf1e-4f6ca9073709</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:18:16 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:18:16.208Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>dengue fever,பொது சுகாதாரத்துறை,தனியார் மருத்துவமனை,Private Hospitals,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gyrald05/hospital.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவமனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gyrald05/hospital.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><h2><strong>டெங்கு காய்ச்சல் சிகிச்சை</strong></h2><p>தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல், அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வார்டில் சிகிச்சை பெற ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், தீவிர சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரையிலும் தினசரி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. </p><h2><strong>புகார் தெரிவிக்கலாம்</strong></h2><p>இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>அரசு ஆஸ்பத்திரிகளில், காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கும் வகையில் பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, முன்னுரிமையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளிலேயே போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் சூழலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.</p><p>அதேநேரம், வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கட்டணம் மாறுபட்டிருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதே நேரம் வீடுகள், சுற்றுப்புறங்களில் மழை நீர் மற்றும் நன்னீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றனர். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">0b0d0b3e-b359-4366-8382-00d5703ac3b9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:01:30.923Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,bills passed,ஆளுநர் அர்லேகர்,TN Governor Arlekar,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆக.5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p> <p>அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.</p> <p>இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாக குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.</p> <p>விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.</p> <p>மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>சட்டசபையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பை சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.</p> <p>தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>ஒப்புதல் அளிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started">மசோதாக்கள்</a>, தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப். 15-ந்தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item></channel></rss>