<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 23 Aug 2026 11:27:37 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 23 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026#comments</comments><guid isPermaLink="false">6d7f3163-989e-430c-80b7-807a84f93590</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-23T11:26:15.565Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கியச் செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://maalai-malar.quintype.com/story/f254e3a1-ccc2-4f1b-9b12-f7ae39c8310b">ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 37 பேர் காயம்</a></p><p>*குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>*டோக்கியோ நகரில் நிலநடுக்க அதிர்வுகள் மிகவும் பலமாக உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண் முன்னே சுட்டுக் கொலை</a></p><p>*சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>*பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest">இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான் பாடம்</a><br><br>*சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது.</p><p>*இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-gill-cross-half-century-against-srilanka-second-test">2வது டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்: அரை சதம் கடந்த படிக்கல், சுப்மன் கில்</a></p><p>* டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* 3வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் ஜோடி 100 ரன்களைக் கடந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/linda-noskova-marie-bouzkova-won-the-title-in-cincinnati-open-tennis-womens-doubles">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது செக் குடியரசு ஜோடி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day">திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</a></p><p>* ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது.</p><p>* காலை முதலே பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage">இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!</a></p><p>* சென்னை பெரம்பூரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு பரபரப்பு பேச்சு.</p><p>* கருணாநிதியே நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் என சவால் விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts">வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</a></p><p>* தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.</p><p>* இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today">டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</a></p><p>* புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம்பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><p>* டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test">2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்தை நசுக்கி பழி தீர்த்தது ஆஸ்திரேலியா</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது.</p><p>* ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today">மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!... </a></p><p>*வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting">தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</a></p><p>* தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு.</p><p>* ஓபிஎஸ் பேசுகையில் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments">இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>* 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty">வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!... </a></p><p>*செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். </p><p>*கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!... </a></p><p>*கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது.</p><p>*தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply">வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</a></p><p>* தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்- அமைச்ரச் ஜெகதீஸ்வரி</p><p>* காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும்</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates#comments</comments><guid isPermaLink="false">e0a01fa7-cc22-4b9f-824f-672a3de7ee0b</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:32:56 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:32:56.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா,Sports,விளையாட்டுப் போட்டிகள்,ISHA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Isha Gramahotsavam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈஷா சார்பில் நடத்தப்படும் 'ஈஷா கிராமோத்சவம்' 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சிறப்பாக நடைபெற்றன.</p><p>தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன.</p><p>இதில், கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.</p><p>இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். </p><p>கனிமொழி சந்தோஷ் பேசுகையில்,“சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். </p><p>ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும். </p><p>நமது முதலமைச்சர் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். </p><p>தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.</p><p>மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த ஈஷா நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. </p><p>விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. </p><p>விளையாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும்" எனக் கூறினார். </p><p>இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. </p><p>கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. </p><p>தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும். </p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ஒரு கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. </p><p>ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.</p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">35a6bab0-b377-44e2-9eb4-af26dc4b96fe</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:19:57.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி வி.கே.வெங்கடேசன் என்பவரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>தொடர் தஞ்சாவூர் பயணம்</h2><p>கடந்த சில மாதங்களாகவே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். அப்படியே நான் வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னைக் கைது செய்து, அவர்களே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள். </p><p>இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். </p><p>நாம் பேசவில்லை என்றாலும், பரவாயில்லை, கீழே இருந்து பேசி, நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள். இன்றைக்கு அந்தமாதிரி அண்ணன் துரை.சந்திரசேகரன் அவர்கள் சில வார்த்தைகளைக் கூறி, என்னை மாட்டிவிட்டிருக்கிறார்.</p><p>அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும். பரவாயில்லை, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது, இந்த உதயநிதி என்பது இந்த அரசுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.</p><h2>கைதுக்கு அஞ்சுபவன் அல்ல</h2><p>கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். </p><p>நான் கலந்துகொண்டு என் தலைமையில் நடந்தது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டார்கள். நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன்.  </p><p>கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை, இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் என்றேன், ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன். </p><p>தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்று சொன்னேன். அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது. </p><p>அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைக் கைது செய்தார்கள். </p><h2>சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? </h2><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று நாங்களெல்லாம் குறிப்புகளெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோம். </p><p>ஆனால், நாங்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் எழுந்து பதில் சொல்வது கிடையாது. நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.</p><p>ஒரு மூன்று அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த மூன்று அமைச்சர்கள்தான் எழுந்து பதில் சொல்கிறார்கள். அதுவும் நாங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புவது போலத்தான் இருக்கிறது. திசை திருப்பும் உத்திகள் அவ்வளவுதான்.</p><p>உதாரணத்திற்கு, அன்று செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் மானியக் கோரிக்கையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்? மின்சாரக் கட்டணம் இந்த மூன்று மாதங்களில் அதிகமாகிவிட்டது. அளவீட்டைச் சரியாக எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. </p><p>ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவது போல ஒரு பதிலைக் கூறுகிறார். </p><p>தொடர்ந்து இந்த அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. அமைச்சர் பெருமக்களும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்கு வரவில்லை. </p><p>அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அன்று ஒரு நான்கு ரீல்ஸ் கிடைத்தால் போதும். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இன்று அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.</p><h2>இந்தியாவின் முதன்மை மாநிலம்</h2><p>இதையே சற்றுப் பின்னோக்கி பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நம்முடைய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார். </p><p>11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவில் வளரும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இன்று அதைக்கொண்டு போய் பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். </p><p>இன்றைக்கு இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">1ac5ae58-4864-40e0-b5af-11b9a8d5545e</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:13:36.289Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Forest Service officers,Project Directors,DRDA,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்,வனப்பணி அலுவலர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வனப்பணி அலுவலர்களை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><h2>மக்களுடன் நேரடியாக தொடர்புள்ளத் துறை</h2><p>தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக  இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும்  தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.</p><p>தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான். </p><h2>வனப்பணிக்கும், கிராம ஊரகப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத</h2><p>கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித்  தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. </p><p>இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரும் தான். </p><p>வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.</p><h2>டிஎன்பிஎஸ்பி மூலம் பணித்தேர்வு</h2><p>ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். </p><p>இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். </p><p>அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.</p><h2>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம்</h2><p>இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். </p><p>அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குனர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். </p><p>ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குநர்களாக நியமிப்பதை தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.</p><p>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த  நியாயமான காரணங்களும் இல்லை. </p><p>இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.</p><h2>துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கும் நிலை</h2><p>ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான  அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். </p><p>இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களுக்கும் இடையே சரியான  ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.</p><p>இன்னொருபுறம், தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு  வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் பதவிக்கு ஒப்பானதாகும். </p><p>இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குநர், துணை இயக்குநர், இனை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். </p><p>மாறாக, திட்ட இயக்குநர் பணிக்கு  அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால்,  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி  உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.</p><p>எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். </p><p>அதற்கு பதிலாக திட்ட இயக்குநர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it#comments</comments><guid isPermaLink="false">a4ee280e-d5bc-417d-9bc2-d14d00313afc</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:56:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:56:45.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,CPI(M)</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சியில் சிபிஎம் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><p>“கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, </p><p>மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 21 அன்று இரவு கிளியூர் கிராமத்தைக் கடந்து காரை நிறுத்தியிருந்தபோது, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சித் தலைவர்களையும், கட்சியின் பெயரையும் மிக அசிங்கமாகத் திட்டி, காரிலிருந்த கட்சிக் கொடி மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். </p><p>மேலும், தோழர்கள் அனைவரையும் கொலைவெறியோடு தாக்கியுள்ளனர். வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்' கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார். </p><p>இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் போராடி வருகின்றனர். </p><p>இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், காயமடைந்த தோழர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறை இதுவரை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது.</p><p>பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, </p><p>கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage#comments</comments><guid isPermaLink="false">139ce1b0-8026-4f4d-b548-f3b5e472da41</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:43:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:43:25.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>EPS,MKStalin,Perambur,tvk,Kolathur MLA,கொளத்தூர் எம்எல்ஏ,விஎஸ்பாபு,VSBabu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sr5l8v2c/VS-Babu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VS Babu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sr5l8v2c/VS-Babu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெரம்பூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வொன்றில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">கொளத்தூர் தொகுதி </a>சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு பேசினார். </p><p>மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் ஆவேசமாக உரையாற்றிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தளபதி 5 நிமிஷம் வந்தாரு... 'கொத்து பரோட்டா' போட்டாரு!</h2><p>மேடையில் வி.எஸ்.பாபு பேசுகையில், "எல்லோரும் சொல்கிறார்கள் விஜய் பேச மாட்டேன்கிறார் என்று. ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் இவர்கள் அனைவரும் ஓடிப் போய்விடுவார்கள். </p><p>தேர்தல் நேரத்தில் எனக்காகப் பிரச்சாரம் செய்ய நமது தலைவர் விஜய் வெறும் 5 நிமிடம் தான் கொளத்தூருக்கு வந்தார். தளபதி வந்தாரு, ஒரு 'கொத்து பரோட்டா' போட்டாரு, அத்தோடு தேர்தல் முடிந்தது! அவர் வந்த அன்றே கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகள் எல்லாம் ஜொலித்தன. </p><p>கூட்டத்தில் கூடிய 25,000 முதல் 30,000 பேரைப் பார்த்த போதே நான் ஜெயிப்பது உறுதி என்று கணித்துவிட்டேன்" என்றார்.</p><h2>"கருணாநிதி நின்றிருந்தால் கூட தோற்கடித்திருப்பேன்"</h2><p>தொடர்ந்து திமுக தலைமைக்கு சவால் விடுத்த அவர், "எதிரே நின்றது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அவரது அப்பாவாக (கலைஞர் கருணாநிதி) இருந்தாலும் சரி, நமது தலைவர் விஜய்யின் அலைக்கு முன்னால் தவெக தான் ஜெயித்திருக்கும். </p><p>இந்தத் தேர்தலில் கருணாநிதியே நின்றிருந்தால் கூட நான் அவரைத் தோற்கடித்திருப்பேன்" என்று கூறினார்.</p><h2>திமுக விற்கு சவால்!</h2><p>திமுகவின் வாரிசு அரசியலைச் சாடிய வி.எஸ்.பாபு, "திமுகவில் கடைசி வரைக்கும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மடடும்தான் பதவியில் இருப்பார்கள். </p><p>முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது இனி ஒரே ஒருமுறை எம்.எல்.ஏ ஆகிவிட்டால் கூட, என் ஒரு பக்க மீசையை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மேடையில் பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.</p><h2>ஸ்டாலினுக்கும் தெரியாது, உதயநிதிக்கு பூஜ்ஜியம்!</h2><p>தொடர்ந்து பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கே ஒன்றும் தெரியாது. இப்போது இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பூஜ்ஜியம், ஒன்றுமே தெரியாது. </p><p>இதற்கெல்லாம் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம். எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் அவர்களைப் பற்றியும், எடப்பாடியாரைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். இனி அவர்கள் யாரும் தேற மாட்டார்கள்" என்று சாடினார்.</p><h2>இனி தமிழ்நாட்டில் ஒரே கட்சி தவெக தான்!</h2><p>"தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஊரையே குட்டி ஒன்றாகத் திரட்டி மாபெரும் கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளார் உறுப்பினர் சிவா அவர்கள். </p><p>இதுதான் தவெக! இதுதான் நம் கட்சி! இனி தமிழ்நாட்டில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது; இருக்கப்போவது ஒரே ஒரு கட்சி, அது நமது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்வர் ஜோசப் விஜய்</a>யின் தவெக மட்டும்தான்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day#comments</comments><guid isPermaLink="false">529f9f86-5b0b-44de-b5e0-abb9f181d34b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:14:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:14:48.515Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்ட நெரிசல்,Murugan temples,சுபமுகூர்த்தம்,முருகன் கோவில்கள்,Muhurtham,heavy rush</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடை பெற்றது. </p><p>திருப்போரூர், திருத்தணி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஜோடிகளின் திருமணத்தால் கோவில் வளாகங்களில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகையும் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.</p><p>திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை முதலே  ஏராளமானோர் சென்றதால் பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><h2>திருப்போரூர்</h2><p>திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவில் வளாகத்தில் இன்று 75 திருமணங்கள் நடந்தன. கோயிலையொட்டி பதிவு செய்யப்படாத திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருமணத்துக்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால்  கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. </p><p>கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் திருமணத்துக்கு வந்தவர்கள் பக்தர்கள் திணறினர். கோயில் வெளிப்புற வளாகம் முழுவதும் திருமணங்கள் நடைபெற்றதால் சுற்றி வரக் கூட முடியாத சூழ்நிலை நிலவியது.</p><p>இதேபோல், கோவில் மாடவீதியைச் சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட  மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது. போலீசார் காலை முதல் மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் கோயில் வாகன நிறுத்தும் இடங்களுக்கு அனுப்பியதால் மாட வீதிகளில் ஓரளவு நெரிசல் குறைந்து காணப்பட்டது.</p><h2>திருத்தணி</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் இன்று 75-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. மணமக்களின் உறவினர்கள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர் கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.</p><figure><img alt="heavy rush" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/egkfqr28/rush-2.jpg" /></figure><p>அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வீதியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மேலும் திருத்தணி நகரம் முழுவதும் உள்ள தனியார் திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் மலைப்பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.</p><h2>குன்றத்தூர்</h2><p>குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மட்டும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. </p><p>இதுகுறித்து திருமணத்திற்கு வந்தவர்கள் கூறும்போது, கோவில் நிர்வாகம் சார்பில் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலில் திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் கூட்ட நெரிசல் காரணமாக வெளியே செல்லவே திணறினர் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today#comments</comments><guid isPermaLink="false">02db3332-fcd3-4c7d-94f5-878b4c6aa393</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:37:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:37:36.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியன் ஆயில்,LPG gas cylinder,Oil companies,சமையல் எரிவாயு சிலிண்டர்,e-KYC,e-KYC நடைமுறை,எண்ணெய் நிறுவனங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LPG Gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது. இந்தச் சரிபார்ப்பை உடனடியாக முடிக்காவிட்டால் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவதோடு, சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.</p><h2><strong>இன்றே கடைசி நாள்</strong></h2><p>இந்தியன் ஆயில், <a href="https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july">பாரத் பெட்ரோலியம்</a> மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் e-KYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. முறைகேடான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டிய மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனைச் செய்யாத பட்சத்தில், வீட்டு உபயோக விலையில் சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, வர்த்தக ரீதியிலான அதிகக் கட்டணம் செலுத்த நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>மானி<strong>யம் நிறுத்தப்படும் அ</strong>பாயம்</h2><p>மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சமையல் எரிவாயு மானியத் தொகையானது பயனாளி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. e-KYC நடைமுறை முடிவடையாவிட்டால், இந்த மானியத் தொகை ரத்து செய்யப்படும். மேலும், புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முயலும் போது, கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டி முன்பதிவு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><h2>சரி<strong>பார்ப்பை எளிதாக நிறை</strong>வு செய்வது எப்படி?</h2><p>வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்பு அட்டையைக் காண்பித்து கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் e-KYC சரிபார்ப்பை உடனடியாக முடித்துக் கொள்ளலாம்.</p><p>இதுதவிர, அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி செயலி மூலமாகவும், ஆதார் முக அடையாளச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் சில நிமிடங்களில் இச்சேவையை நிறைவு செய்ய முடியும்.</p><p>கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், சமையல் எரிவாயு சேவையில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் உடனடியாகத் தங்களின் e-KYC நடைமுறையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting#comments</comments><guid isPermaLink="false">49ae8816-3c1b-468f-bf53-a5740f94112d</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:31:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:31:25.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,OPaneerselvam,மாவட்ட செயலாளர்,District Secretary,ஓபன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/51a6u2d9/OPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ o panneerselvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/51a6u2d9/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D">ஓ.பன்னீர்செல்வம்</a> பேசுகையில், பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என தெரிவித்தார்.</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் முக்கிய பிரமுகர்கள் 8 பேர் வரை பேசினார்கள். இதில் தலைமையை  கேள்வி கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.</p><p>முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் மற்றும் பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி பேசுகையில், எல்லா</p><p>பதவிகளுக்கும் 2 முறை மட்டுமே பதவியில் இருக்கமுடியும் என்று விதிகளை கொண்டு வரும்போது மாவட்டச் செயலாளருக்கு மட்டும் 3 முறை பதவி கொடுக்கப்படுவது ஏன்? அதையும் பரிசீலியுங்கள் என கேட்டுள்ளனர்.</p><p>திருவிடைமருதூர் ராமலிங்கம், ஈரோடு கனிமொழி, பிரபு, கஜேந்திரன், திருத்துறைப்பூண்டி இளையராஜா, முகமது சசி உள்ளிட்டோரும் கட்சி எடுத்த முடிவுகள் பற்றி பேசினார்கள்.</p><p>அப்போது சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நன்றாக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் பேசுவது அந்த அளவுக்கு இல்லை. ஒரு எம்.எல்.ஏ. ஆளும் கட்சியைப் பார்த்து மாமன், மச்சான் என்றெல்லாம் பேசுகிறார். இப்படியெல்லாம் பேசலாமா? ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசச் சொல்லுங்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.</p><h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், நான் சமீபத்தில்தான் புதிதாக கட்சியில் சேர்ந்தேன். தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.தான். இனி பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என கலகலப்பாக தெரிவித்தார்.</p><h2>தலைமைக்கு விதிவிலக்கு</h2><p>தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>வயது நிர்ணயம்: மாவட்ட செயலாளர்கள் பதவி குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-age-limit-explained-by-rs-bharathi-on-district-secretary-posts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-age-limit-explained-by-rs-bharathi-on-district-secretary-posts#comments</comments><guid isPermaLink="false">da945873-7041-464f-8368-40d3b4617acc</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:28:54.924Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆர்எஸ் பாரதி,RS Bharati</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/jmcrso7s/RSBharati001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்எஸ் பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/jmcrso7s/RSBharati001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்துள்ள தி.மு.க. இப்போது கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.</p><p>இதற்காக தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக்குவதுடன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மாவட்டச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். கிளை கழகம் முதல் ஒன்றியம் வரை 2 முறை மட்டுமே அந்த பொறுப்பில் இருக்க முடியும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p>கிளை செயலாளர் வயது வரம்பு 45, வட்டச்செயலாளர் வயது வரம்பு 50, பேரூர், பகுதி, நகர, ஒன்றிய செயலாளர் வயது 60-க்குள் இருக்க வேண்டும் என்றும் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>இதுமட்டுமின்றி 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய கழகம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒன்றிய செயலாளர்களின் குறிப்பிட்ட வார்டு எல்கையும் குறுகிவிடும்.</p><p>கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட கிளை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கிளைச் செயலாளர் பதவியும் உருவாக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><h2>சிலருக்கு கசப்பானதாக இருக்கும்</h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயற்குழுவில் இதுபற்றி பேசுகையில், கட்சியின் நிர்வாக அமைப்பில் பல மாறுதல்களை செய்ய இருக்கிறோம். இது கடுமையானதாகத்தான் இருக்கும். சிலருக்கு கசப்பானதாக இருக்கும் என்றும் கூறிய அவர் நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p><p>இது தி.மு.க.வில் சாதக-பாதகங்களை ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், தி.மு.க.வில் பேரூர் கழகம், பகுதி கழகம், நகர ஒன்றிய செயலாளர் பதவியில் இருப்பவர்களில் பெரும்பாலும் 60 வயதை தாண்டியவர்கள்தான் உள்ளனர்.</p><p>அப்படி இருக்கையில் பலருக்கு அந்த பதவி இனி கிடைக்காது என்பதால் அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதே சமயத்தில் இந்த பதவிகளுக்கு புதியவர்கள் வரும்போது கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புது ரத்தம் பாய்ச்சப்படுவது போல் வேகமாக பணியாற்றுவார்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும் என்று கூறுகின்றனர்.</p><h2>இதுபற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து வருமாறு:-</h2><p>தி.மு.க.வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் கட்சியில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 110 மாவட்டச் செயலாளர்கள் பதவி உருவாக்கப்படுகிறது.</p><p>இதன் மூலம் இளம் தலைமுறையினருக்கு கட்சியில் பல்வேறு பதவிகள் கிடைக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் புதிய 110 மாவட்டங்களுக்கான அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பார். வருவாய் கோட்ட அளவில் இந்த மாவட்டங்கள் இடம்பெறும். அதன் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயற்குழு கூட்டப்படும்.</p><p>தலைமை கழகக்தின் வழி காட்டுதலின்படி 15 நாட்கள் என்ற கால வரையறைக்குள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும். அதன் பிறகு தலைமை கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இந்த பட்டியல் தலைமை கழகத்துக்கு வந்ததும் தேர்தல் நடைமுறை தொடங்கும். </p><p>முதலில் கிளை கழகத்துக்கு தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகு வட்டம், பேரூர், பகுதி, நகரம், ஒன்றிய செயலாளர் பதவிக்கு தேர்தல் நடக்கும். அதன் பிறகு மாவட்டச் செயலாளர், கட்சித் தலைவர் தேர்தல் என படிப்படியாக நடக்கும்.</p><p>உட்கட்சி தேர்தல் நடந்து முடியும் வரை மாவட்டச் செயலாளர்கள் அந்த பதவியில் நீடிப்பார்கள். மாவட்டச் செயலாளர் தேர்தல் வரும்போது 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 3 முறை பதவி வகித்தவர்கள் அந்த பகுதிக்கு போட்டியிடமாட்டார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments#comments</comments><guid isPermaLink="false">1c05b944-c56a-41c7-b384-50cb33944379</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:14:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:14:20.932Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PK Sekar Babu,சேகர்பாபு,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9in4ymng/MinisterRamesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9in4ymng/MinisterRamesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார் என்று அமைச்சர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்  திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஜனநாயகம் </h2><p>சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.</p><p>சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.</p><p>எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?</p><h2>முன்னாள் அமைச்சருக்கு பயம்</h2><p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.</p><p>தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.</p><p>கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து விட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.</p><h2>சினிமா கிடையாது</h2><p>கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty#comments</comments><guid isPermaLink="false">63250c71-e2b2-48cc-9686-3064deccf72a</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:10:52.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மக்கள்தொகை கணக்கெடுப்பு,Government School Teacher,jewelry snatched,Vandalur railway station,நகை பறிப்பு,வண்டலூர் ரெயில் நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9z1v3b0u/snatching.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  jewelry snatched]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/9z1v3b0u/snatching.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை வண்டலூர் அருகே விடுமுறை நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியைத் தாக்கி, அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (49). இவர் ஊனமாஞ்சேரியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். விடுமுறை நாளான நேற்று, ஊனமாஞ்சேரி பகுதியில் அரசு உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காகச் சென்றுள்ளார். மாலை வேளையில் பணி அனைத்தையும் முடித்துக் கொண்டு, மீண்டும் தன் வீட்டிற்குச் செல்வதற்காக <a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">வண்டலூர் ரெயில் நிலையம் </a>அருகே அமைந்துள்ள மேம்பாலத்தில் ஏறி, படிக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.</p><h2>துணிகரத் <strong>தாக்குதல்</strong> </h2><p>செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திடீரென ஆசிரியை செல்வியைக் கீழே தள்ளித் தாக்கியுள்ளான். தாக்குதலால் நிலைதடுமாறிய ஆசிரியையின் கழுத்தில் இருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளான்.</p><p>இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை செல்வி, சங்கிலியைக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டவாறே கொள்ளையனுடன் கடுமையாகப் போராடினார். இருப்பினும், அந்த மர்ம நபர் பலவந்தமாகச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, தண்டவாளம் வழியாக ஓடித் தப்பித்துவிட்டான். கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><h2>காவல்துறை <strong>விசாரணை</strong></h2><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஒட்டேரி காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கீழே கிடந்த 2 பவுன் மாங்கல்யம் மீட்கப்பட்டு ஆசிரியையிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டப்பகலில் அரசுப் பணிக்கு வந்த இடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி ஆசிரியை செல்வி காவல்துறையினரிடம் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒட்டேரி காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா  காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முகமூடி அணிந்து தப்பிய அந்த வாலிபரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply#comments</comments><guid isPermaLink="false">23641bb3-2b09-470d-b8e9-431128ebfdb8</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:46:05 +0000</pubDate><atom:updated>2026-08-23T04:46:05.350Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,தவெக,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,tvk,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/uw5zw0nx/ManickamTagore001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/uw5zw0nx/ManickamTagore001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>எடப்பாடி பழனிசாமி வயதுக்கு மரியாதை கொடுத்து அன்பாக சொல்கிறேன், அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் ஒரு மாணவியின் தற்கொலை நடைபெற்றது. நீட் நடத்தப்படக் கூடாது என்று அப்போதே சொல்லியிருக்கலாம்.</p><h2>ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்தில் நீட் நடைபெறாது</h2><p>2019 தேர்தலுக்கு முன்னதாக நீட் நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் கண்டிசன் போட்டிருந்தால் அவர்கள் நீட்டை ரத்து செய்து இருப்பார்கள். அந்த தைரியம் கிடையாது. பழியை மட்டும் காங்கிரஸ் மீது போடுவது. இப்போதும் சொல்கிறோம், ராகுல் காந்தி பிரதமாக பதவி ஏற்றவுடன் போடப்போகும் முதல் கையெழுத்துகளில் ஒன்று தமிழகத்தில் நீட் நடைபெறாது என்பதுதான்.</p><p>விஜய் பிரதமராக வேண்டும் என்று த.வெ.க. அமைச்சர்கள் சிலர் சொல்கிறார்கள். அவர்கள் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர். அதை மாற்ற முடியாது.</p><p>இந்தியாவின் சூழ்நிலை எப்படி உள்ளது என்று இந்தியாவுக்கே தெரியும். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளின் அதிகாரங்களை பிடுங்குவதிலும், அமலாக்கததுறை மற்றும் சி.பி.ஐ. பயன்படுத்திவதிலும், கட்சிகளை உடைப்பதிலும், ஜனநாயத்தை இல்லாமல் ஆக்குவதும், தொகுதி மறுவரையறையை கொண்டு வந்து எங்கெல்லாம் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் விழுந்ததோ, அதையெல்லாம் தொகுதியாக்க முயற்சிக்கிறது பாஜக.</p><h2>எங்களுடைய Mode வேற</h2><p>அதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவர்களுடைய Mode வேற. எங்களுடைய Mode வேற. ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சினை, ஒரு மாவட்டம் மற்றொரு மாவட்டத்துக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சனைக்கே நீதிமன்றத்திற்கு செல்கிறோம்.</p><p>காவிரி ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்குமான பிரச்சினை. எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்தவர்கள். எங்களுடைய நிலை மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்கக் கூடாது. நாங்கள் இருக்கும் வரைக்கும் வைக்க விடமாட்டோம். இதுதான் எங்களுடைய நிலை.</p><h2>மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது</h2><p>கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் முதல் தற்போதைய முதல்வர்கள் வரை அவர்களுடைய எண்ணம் மேகதாது கட்டுவது. இதற்கு முக்கிய பொறுப்பு மத்திய அரசு கையில் உள்ளது. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால் மேகதாது கட்ட முடியாது. மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். டி.கே. சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வந்து விடும் என்று சொல்வது எல்லாம் கதை. அதை நம்பக்கூடாது. மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது. தமிழக காங்கிரஸ் அதை எதிர்ப்போம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.</p><p>மேலும், தவெக-வின் 100 நாட்கள் ஆட்சி சாதனை விளக்கம் கூட்டத்தில் அமைச்ரச் ஜெகதீஸ்வரி பேசும்போது "தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்" எனக் கூறியிருந்தார்.</p><p>இது குறித்து மாணிக்கம் தாகூரிடம் கேட்கப்பட்டதற்கு "காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும். த.வெ.க.வினர் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர்.</p><p>டெல்லிக்கு போனாலும் தளபதி விஜய் பத்திதான் பேச்சு. ஏன் நாளைக்கு அந்த டெல்லியே அவரோடதா கூட ஆகலாம் என்று அமைச்சர் ஸ்ரீநாத் பேசியிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts#comments</comments><guid isPermaLink="false">789f3856-658d-4548-a356-1846ff326113</guid><pubDate>Sun, 23 Aug 2026 02:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-23T02:48:20.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மாவட்ட செயலாளர்,District Secretary,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ehlxgdm6/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 20  மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p>தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுக்வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.</p><p>இந்த விறுவிறுப்பான சூழ்நிலையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><h2>பதவி இழக்க வாய்ப்பு</h2><p>குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பு விதிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்த்தால் 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என தெரிகிறது. ஏனென்றால் இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். </p><p>இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்கமுடியாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>20 பேர் யார்?</h2><p>செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், தற்போது தி.மு.க.வில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 15 ஆண்டுகள் பதவி வகித்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.</p><p>காஞ்சிபுரம் வடக்கு: தா.மோ.அன்பரசன்-66 வயது, 25 ஆண்டு</p><p>காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர்-71 வயது</p><p>தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74 வயது</p><p>நெல்லை மேற்கு: ஆவுடையப்பன்-81 வயது, 28 ஆண்டு</p><p>மதுரை மாநகர்: கோ.தளபதி-70 வயது, 18 ஆண்டு</p><p>மதுரை வடக்கு: மூர்த்தி-67 வயது, 27 ஆண்டு</p><p>சிவகங்கை: பெரியகருப்பன்-66 வயது, 27 ஆண்டு</p><p>விருதுநகர் தெற்கு: சாத்தூர் ராமச்சந்திரன்-77 வயது, 26 ஆண்டு</p><p>அரியலூர்: எஸ்.எஸ்.சிவசங்கர்-55 வயது, 20 ஆண்டு</p><p>புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 72 வயது </p><p>திருவாரூர்: பூண்டி கலைவாணன்-62 வயது, 19 ஆண்டு</p><p>தஞ்சை வடக்கு: அன்பழகன் - 72 வயது</p><p>தேனி தெற்கு: கம்பம் ராமகிருஷ்ணன் - 77 வயது</p><p>திருப்பூர் மத்தியம்: செல்வராஜ் - 70 வயது</p><p>ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77 வயது</p><p>சேலம் கிழக்கு: எஸ்.ஆர்.சிவலிங்கம் - 75 வயது</p><p>கடலுர் கிழக்கு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-68 வயது, 34 ஆண்டு</p><p>விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71 வயது</p><p>திருவண்ணாமலை தெற்கு: ஏ.வ.வேலு - 75 வயது</p><p>ராணிப்பேட்டை: ஆர்.காந்தி-80 வயது, 30 ஆண்டு</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:24:52.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</a></p><p>* இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.</p><p>* 2011-ல் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</a></p><p>* சேலம் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>* திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally">டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஸ்டார்க்.</p><p>* டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டுகள் ஆதரவில் தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது - சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam#comments</comments><guid isPermaLink="false">12707b5b-56fc-4b61-ada6-41c414624a73</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:39:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:39:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Communist protest,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,Chief Secretary Saikumar IAS,தலைமை செயலாளர் சாய்குமார்,Saidapet Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தற்போதைய தமிழ்நாடு அரசு அமைவதற்கும், அது தொடர்ந்து நீடிப்பதற்கும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> தான் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த அரசியல் அடிப்படை கூட தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிபிஎம் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/p-shanmugam">பெ. சண்முகம்</a> ஆவேசமாக முழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் சித்தாந்த சாய்மானத்தைக் கண்டித்தும், அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சிபிஎம் </a>சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><h2>இந்த ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறியிருப்பதாவது:</h2><p>நாங்கள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?</p><p>ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கையில் முடக்க நினைப்பது ஏன்? நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல. </p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதும் பல்வேறு தடைகளைச் சந்தித்த வரலாறு கொண்டது. அதிகாரிகளுக்கு உத்தரவு போடத் தெரியும் என்றால், அதை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். </p><p>அதிகாரிகள் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.</p><h2>"மிரட்டுவது காவல்துறை... பொதுநலனுக்காகப் போராடுவது மாணவர்கள்!"</h2><p>ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவது மாணவர் அமைப்புகள் அல்ல, மாறாகக் காவல்துறையினர்தான் என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "எங்கள் மாணவர்கள் பொதுநலன் கருதி, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டங்களை நடத்துகிறார்கள். </p><p>அதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்வது உண்மையா என்பதை அரசு தெளிவுபடுத்தி, பொய் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.</p><h2>தேர்தல் ஆணையம் நியமித்த சாய்குமாரை உடனே நீக்குங்கள்!</h2><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் இந்த அரசால் நேரடியாக இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய சண்முகம், "உயர் கல்வித்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பிய அரசு, அதேபோல் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். </p><p>நீங்கள் யாரை வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலாளராகக் கொண்டு வாருங்கள், ஆனால் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்கு" என்றார்.</p><h2>முழுமையாகத் திரும்பப் பெறப்படாத பல்கலைக்கழக சுற்றறிக்கை!</h2><p>தவறு செய்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, உயர் கல்வித்துறை செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறை கமிஷனர் போட்ட உத்தரவு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது; மற்றபடி பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற சுற்றறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. அரசாங்கம் இதில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p><h2>யார் கையில் ஆட்சி? முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும்!</h2><p>மிக முக்கியமான அரசியல் கேள்வியாக, "தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்று சண்முகம் வலியுறுத்தினார்.</p><p>மேலும், "இடதுசாரிகளின் ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது. எனவே, இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்து ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா? இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காவல்துறை தரப்பில் உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டாலும், பல்கலைக்கழக உத்தரவுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனக் கூறி சிபிஎம் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று <a href="https://x.com/hashtag/CPIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPIM</a> சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற… <a href="https://t.co/T0VZSUXp99">pic.twitter.com/T0VZSUXp99</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2091088457808646388?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மாமா- மச்சான் என சட்டமன்றத்தில் பேசக்கூடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">59b09fb8-5c0a-4780-9669-3dc748682e2f</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:28:47.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துரை முருகன்,DMK,திமுக,Durai Murugan</media:keywords><media:content height="1948" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg" width="3464"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரைமுருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் மாமா- மச்சான் என்று பேசக்கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அக்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லும் காட்சிகள், ரீல்ஸ் ஆக வெளியிடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>மேலும், தவெக- திமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சில சமயங்களில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய வகையில் சில வார்த்தைகளை உறுப்பினர்கள் பேசி விடுகிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin">திமுக </a>சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மாமா என்று கூறினார். இந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். சில உறுப்பினர்கள் இவ்வாறு உறவு முறை குறித்து பேசுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.</p><p>அப்போது "சட்டப்பேரவையில் மாமா, மச்சான் என்ற உறவு முறை எல்லாம் வைத்து பேசக்கூடாது" என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.</p><h2>இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p><p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>387-வது மெட்ராஸ் தினம்: ‘சென்னை டு மெட்ராஸ்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening#comments</comments><guid isPermaLink="false">e6f08638-ba4f-4970-80e7-972827378e35</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:39:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:39:27.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெட்ராஸ் தினம்,அமைச்சர் ராஜ்மோகன்,MadrasDay387,ChennaiToMadras,MadrasHistory,ChennaiTourism,AnnaCentenaryLibrary,சென்னை டு மெட்ராஸ்,அமைச்சர் செ.ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 387th Madras Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் தொன்மையான வரலாறு, செழுமையான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. </p><p>இதன் முக்கிய நிகழ்வாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life">சென்னை முதல் மெட்ராஸ்</a>” என்ற தலைப்பிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (22.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டனர்.</p><h2>கருப்பு-வெள்<strong>ளை புகைப்பட</strong>ங்களின் அரிதான தொகுப்பு</h2><p>சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல்.ராமச்சந்திரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த அரிதான கருப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முதன்மைச் சிறப்பம்சமாகும். இவை சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன. 22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பார்வையிடலாம்.</p><h2>பாரம்பரிய நடைப்<strong>பயணங்</strong>கள் </h2><p>மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் ‘மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்’ இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி, ‘இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் - 2026’ கட்டுரைப் போட்டி, ‘கலைகள் நாம்’ குழுவின் சுவர் ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bamfnhwf/jjj.jpg" /></figure><p>மேலும், வரலாற்று அறிஞர் வி.ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம், ‘நம் வீடு, நம் ஊரு, நம் கதை’ குழுவினர் செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, விக்டோரியா பொது மண்டபத்தில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் ‘சைக்ளிங் யோகிஸ்’ குழுவின் சைக்ளிங் பேரணி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றன.</p><h2>புதுமையான இ<strong>லச்சினை மற்றும்</strong> நூல்கள் வெளியீடு</h2><p>சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்துவின் மண்ணிசைப் பாடல்கள், கரகம், ஒயில் மற்றும் மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. </p><p>சென்னையின் உணவு மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் ‘டேஸ்ட் ஆஃப் சென்னை’ இலச்சினை, காமிக் லைப்ரரி தயாரித்த ‘தி லாஸ்ட் டிராம்’ புத்தகமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவான காணொளிகளும் வெளியிடப்பட்டன. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா, இணை இயக்குநர் திரு. மு.சேக் மன்சூர் உட்பட உயர் அலுவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2#comments</comments><guid isPermaLink="false">eb10ac32-134d-467c-9630-d5d81c428fa8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:06:34.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped#comments</comments><guid isPermaLink="false">fc9f570f-93da-4cfa-ac56-5fc6b3571c1c</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:01:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:01:57.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">வீ த லீடர்ஸ்</a> அமைப்புக்கு தனி இணைய தள பக்கத்தை அண்ணாமலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார். இதன் வழியே உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.</p> <p>இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார். இப்போது கட்சியின் இந்த மாத பணிகள், ஏற்கனவே நடத்தி முடித்து இருக்கும் பணிகள், அடுத்து திட்டமிட்டுள்ள பணிகள் ஆகியவை முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.</p> <p>பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எங்கள் இணைய தளம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>புதிய அம்சங்களை அலசி, ஆராய்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?- அரசுக்கு அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report#comments</comments><guid isPermaLink="false">ab828108-5118-4fbd-b06b-511225c77f9a</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:00:11.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,chennai flood,திருப்புகழ் குழு அறிக்கை,சென்னை வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த  பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.</p><p>அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்,  ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர்  முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை &amp;வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின்  பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.</p><p>நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய  அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு  வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.</p><p>என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின்  அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை  யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?</p> <p>திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு  பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.</p><p>சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும்  இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு  திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.</p><p>திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை  முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு  திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk#comments</comments><guid isPermaLink="false">8149cdc4-21e7-4022-8da4-37002b75c1d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:49:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:49:14.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</strong></em></p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க. </a>தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>குறிப்பாக இளைஞர்களுக்கும் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றும் அனைவருக்கும் பொறுப்புகள் கிடைக்கும் வகையில் கட்சி பதவிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளராக 3 முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p> <p>இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.</p><p>செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-</p><h2>புது ரத்தம்</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>சென்னை</h2><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p> <p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்க ழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். </p><p>தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p> <h2>திருத்தப்பட்டது</h2><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆளை மாற்றுவதைவிட சுய பரிசோதனை முக்கியம்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">86b1fb65-8301-454a-a6f6-c67480b443f1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:47:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:47:12.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,MKStalin,செயற்குழு கூட்டம்,DMK meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.</p><p>திமுக வலுமையாக இருக்க காரணம் அமைப்பு முறை தான். நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.</p><p>ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுய பரிசோதனை முக்கியம்.</p><p>மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.</p><p>ஊருக்கே வெளிச்சம் விளக்கிற்கு அதன் கீழ் இருக்கும் இருட்டு தெரியாது. </p><p>புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். தனக்கு இணையாக யாரும் இருக்க கூடாது என எண்ணுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூரில் மண் சரிந்து ஒப்பந்த தொழிலாளி பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/contract-worker-dies-in-soil-collapse-in-thiruvottiyur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/contract-worker-dies-in-soil-collapse-in-thiruvottiyur#comments</comments><guid isPermaLink="false">67319f1c-4029-4cfd-b501-e8c420119f2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:29:33.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி பலி,Worker Dead</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/urz74lpv/tiruvottiyur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/urz74lpv/tiruvottiyur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</strong></em></p><p>சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராமத் தெருவில் வினோத் குமார் என்பவரின் வீட்டில் 4-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீட்டுக்குள் தேங்கியதால் அவதி அடைந்த அவர்கள்  முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்தனர்.</p><h2><strong>மண் சரிந்தது</strong></h2><p>புகாரின் பேரில் சாத்துமா நகர் தெருவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி மூலம் புதியதாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேரைக் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தன.</p><p>இந்த பணியில் ஒப்பந்த ஊழியர்களான மனோகர், சேட்டு, சந்தியா, ராணி, செல்வம், பூமி நாதன் ஆகியோர் நேற்று இரவு 10 மணியளவில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய பொழுது திடீரென  மண் சரிவு ஏற்பட்டது.</p><p>தோண்டப்பட்ட பள்ளத்தில் மளமளவென மண் சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர். 2 பேர் உடனடியாக மேலே ஏறிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 32) என்பவர் மண் சரிவில் சிக்கிக்கொண்டார். </p><h2><strong>தொழிலாளி பலி</strong></h2><p>உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமி நாதனை மீட்கும் முயற்சியில் சக ஊழியர்கள் ஈடுபட்டனர். அவரை மீட்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். </p><p>சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பூமி நாதனை பிணமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police#comments</comments><guid isPermaLink="false">3edce0f7-8422-4c0f-b942-50927300d263</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:24:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:24:34.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac scam,டாஸ்மாக் முறைகேடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் ஆனார்.</strong></em></p> <h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">டாஸ்மாக் முறைகேடு</a> தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.</p> <h2>செந்தில்பாலாஜி</h2><p>இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. சென்னையில் ஆழ்வார் பேட்டையில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடமும் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.</p> <p>டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குவதில் மதுபானங்களை கொள்முதல் செய்தல், மதுபானங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் முறைகேடு நடந்திருப்பதாக கூறியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று ஆஜர் ஆன செந்தில்பாலாஜியிடம் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life#comments</comments><guid isPermaLink="false">ab466092-cb8f-4a20-b713-6251c6bbf725</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:08:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:08:34.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,சென்னை தினம்,Chennai Day,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்”  நல்வாழ்த்துகள்!</p><p>வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.</p><p>சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.  அனைவருக்கும் சமவாய்ப்பும்,  பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். </p><p>வளரட்டும் சென்னைப் பெருநகரம்!</p><p>உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தை​யூ​ரில் காதல் விவகாரத்தில் இளை​ஞர் ஆண​வக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns#comments</comments><guid isPermaLink="false">2dca97b4-101e-40f6-8d02-9f7a90832640</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:06:45.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலம் பண்பாட்டு மையம்,ThaiyurHonourKilling,PraveenKumar,NeelamCulturalCentre,CasteViolence,ஆண​வக் கொலை,தை​யூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thaiyur HonourKilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார், மாற்​றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒரு​வரைக் காத​லித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் வீட்​டா​ரின் கடும் எதிர்ப்​பையும் மீறி தொடர்ந்த காதலால் ஆத்திரமடைந்த கும்பல், பிர​வீன் குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்​டியது. அப்​பகு​தி வாசிகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், சிகிச்சை பல​னின்றி பரி​தாபமாக உயி​ரிழந்தார்.</p><h2>4 பே<strong>ர் கை</strong>து </h2><p>இச்​சம்​பவம் குறித்து வழக்​குப்​ப​திவு செய்த திருப்​போரூர் காவல்​துறை அதிகாரிகள், தை​யூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு​மலை, மணி​கண்​டன், நந்​தீஸ், கவு​தம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த படுகொலையில் தொடர்​புடைய தலை​மறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்​படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>OMR சாலை<strong>யில் திடீர்</strong> மறியல்</h2><p>பிர​வீனின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு பழைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">மகாபலிபுரம் </a>சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.</p><h2>நீலம் பண்பாட்<strong>டு மையம்</strong> கண்டனம்</h2><p>இயக்​குநர் பா.ரஞ்​சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ இக்கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ள அம்மையம், சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback#comments</comments><guid isPermaLink="false">f65978a4-0615-40a8-925d-659fe3c0a771</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:00:31.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>செயற்குழு கூட்டம் </h2><p>இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சியை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p> <p>தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக </a>தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:</p><p>* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.</p> <h2>தேர்தல் தோல்வி</h2><p>* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. </p><p>* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.</p><p>* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. </p><p>* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!</p> <p>* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.</p><p>* திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.</p><p>* இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.</p><p>* தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.</p> <p>* தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.</p><p>* அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சூட்கேசில் உடல் பாகங்கள்... பிரியாணி அண்டாவில் மைதா மாவு தடவிய சதை! சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation#comments</comments><guid isPermaLink="false">a20ce649-31fd-424e-97d7-e4340688d0cd</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:35:57.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையை அடுத்த கூடுவாஞ்ரிசேயில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதி இந்த கொடூரக் கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.</p><h2><strong>ஆக்ராவில்</strong></h2><p>வண்டலூரில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>சென்ட்ரல் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 5-ந்தேதி சிகப்பு நிற சூட்கேசை அம்மாநில போலீசார் மீட்டனர்.</p><p>சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்திய போலீசார் சென்னைக்கு வந்தும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் துணையுடன் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.</p><p>இதில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சூட்கேசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்து விட்டு சென்றது யார்? என்பதை முதலில் கண்டறிந்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஒன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த சூட்கேசை ஒரு ஆணும், பெண்ணும் எடுத்து வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்துவிட்டு செல்வது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.</p><h2><strong>பூங்கா ரெயில் நிலையம்</strong></h2><p>அந்த கேமரா காட்சிகளை பதிவு செய்து கொண்ட போலீசார் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்து கொண்டு வழக்கு விசாரணையை வேகப்படுத்தினார்கள்.</p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெளியில் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் எந்தப்பக்கமாக சென்றுள்ளார்கள் என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை போட்டுப்பார்த்தனர். இதில் இருவரும் பூங்கா ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மின்சார ரெயிலில் கூடுவாஞ்சேரிக்கு சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இளம்தம்பதி என்பதும் தெரிய வந்தது.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கிய இந்த தம்பதி அங்கிருந்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக கண்டுபிடித்த போலீசார் தாங்கள் வைத்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அக்கம் பக்கத்தில் காட்டி விசாரித்தனர்.</p><p>இதில் போலீசார் அடையாளம் கண்ட தம்பதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுடன் பெண் ஒருவரும் தங்கி இருந்துள்ளார். அவர் தான் கொலை செய்யப்ப்டட ஹயாத் நிஷா என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.</p> <h2><strong>கொடூர கொலை</strong></h2><p>ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவரது 19 வயது மகன் ஏ.சி. மெக்கானிக்காக தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். ஹயாத் நிஷா மட்டும் இளம் தம்பதியோடு ஒரே வீட்டில் வசித்து வந்தபோது தான் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.</p><p>இதை தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில், ஹயாத் நிஷாவின் துண்டிக்கப்பட்ட உடலின் சதை பாகங்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.</p><figure><img alt="கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5pqg0dgn/guduvan.jpg" /><figcaption>கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.</figcaption></figure><h2><strong>மைதா மாவு</strong></h2><p>அந்த சதைகள் மீது மைதா மாவையும் தடவி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.  வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருந்த நிலையில் அண்டாவில் போட்டு வைக்கப்பட்டிருந்த சதை பாகங்களுடன், காய்கறிகளும் காணப்பட்டது. சதை மற்றும் காய்கறிகள் வேக வைத்தது  போன்று இருந்தது. இதுவும் போலீசாரை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்தது.  </p><p>இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அண்டாவில் போட்டு தம்பதி சமைத்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. </p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி என்பதால் இந்த வழக்கு விசாரணையை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.</p><h2><strong>தேடுதல் வேட்டை</strong></h2><p>கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலையாளிகளான தம்பதியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த 5-ந்தேதி சூட்கேசில் உடல் மீட்கப்பட்ட நிலையில் கொலை நடந்து தற்போது 2 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தப்பிச் சென்று எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2><strong>செல்போன் எண்கள்</strong></h2><p> இதை தொடர்ந்து இளம் தம்பதி பயன்படுத்திய  செல்போன் எண்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே அவர்கள் தலையை எங்கு வீசினார்கள் என்பது தெரிய வரும் என்பதால் அவர்களை தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>அழுகி இருக்கும்</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பெண் கொலை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தலையை வெளியில் எங்காவது வீசி இருந்தால் இந்நேரம் அது அழுகிப் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தலையை தேடி கண்டுபிடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>மின்சார ரெயில்</strong></h2><p>கூடுவாஞ்சேரியில் இருந்து பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து மின்சார ரெயிலில் தான் எடுத்துச் சென்று உள்ளனர். பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி பின்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூட்கேசை வைத்து விட்டு சத்தமில்லாமல் ரெயில் நிலையத்தை விட்டு இருவரும் வெளியேறி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் சேகர்பாபு தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p>கூடுவாஞ்சேரி மசூதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம  சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother#comments</comments><guid isPermaLink="false">313e9ee0-e4d1-49ac-bed8-53510b5b32bf</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:19:52.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai387,MadrasDay,NammaChennai,ProtectChennai,ChennaiHeritage,சென்னை387,மெட்ராஸ்டே,நம்மசென்னை,சென்னையைக்காப்போம்,சென்னைதினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai day 387]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் தலைநகரமும், தென்னிந்தியாவின் முதன்மைப் பெருநகரமுமான சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையிலேயே ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி நகரை உருவாக்க அடித்தளமிட்டார். இச்சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் நினைவாகவே இம்மாநகரம் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai">சென்னை</a>' என்று பெயரிடப்பட்டது.</p><h2>தோற்றமும் <strong>வளர்ச்சியும்</strong></h2><p>முன்னணிப் பத்திரிகையாளர்களான சசி நாயர், வின்சண்ட் டி சொஸா மற்றும் முத்தையா ஆகிய மூவரின் சிந்தனையில் உதித்து, 2004 ஆம் ஆண்டு முதல் இந்நாள் சிறப்பாக நினைவுகூரப்பட்டு வருகிறது. </p><figure><img alt="chennai central" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/etg8ir7u/centrel.jpg" /></figure><p>தொடக்கத்தில் சில கருப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்காட்சிகளுடன் எளிய முறையில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டம், இன்று புகைப்படக் கண்காட்சிகள், பிரம்மாண்ட உணவுத் திருவிழாக்கள், பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் மாரத்தான் ஓட்டங்கள் எனப் பல பரிமாணங்களில் நகரின் மூலைமுடுக்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படும் மக்கள் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.</p><h2>நம்ம சென்னை<strong>யின் பெருமை</strong>மிக்க வரலாறு</h2><p>வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னை, இன்று தனது 387-வது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடுகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/rarjf9wr/uu.jpg" /></figure><p>மதராசப்பட்டணம், மெட்ராஸ் எனக் காலப்போக்கில் உருமாறி இன்று அதிநவீன தொழிற்கேந்திரமாக வளர்ந்து நிற்கும் இம்மாநகரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பழமையான வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களையும், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கே கொண்டு கம்பீரமாக விளங்குகிறது.</p><h2>நகரக் <strong>கட்டமைப்</strong>பு</h2><p>வானுயர்ந்த கட்டிடங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், முன்னணி கல்வி நிறுவனங்கள் எனச் சென்னை அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இருப்பினும், நகரக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகப் பல கடுமையான நெருக்கடிகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருகிறது. ஒரு மாநகரத்தின் செழுமையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களான நீர்வழித்தடங்களும் நிலவழித்தடங்களும் இன்று பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. </p><p>1935-ஆம் ஆண்டு வரை கண்ணாடி போலத் தெளிந்த நீரைக் கொண்டிருந்த கூவம், அடையாறு ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் இன்று கழிவுநீர் செல்லும் வழிகளாக மாறிப்போயின. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/gdheai9h/yoga.jpg" /></figure><p>மற்றொரு புறம், நகரின் பல பகுதிகளில் முறையற்ற ஆக்கிரமிப்புகளால் சாலைகள் சுருங்கி, வாகனப் பெருக்கத்தின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அன்றாடப் பிரச்சனையாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும், கோடையில் குடிநீருக்கு லாரிகளை நம்பி நிற்கும் அவலமும் தொடர்கிறது.</p><h2>எதிர்கா<strong>லத் தேவைகள்</strong></h2><p>சென்னை மாநகரத்தை வாழத் தகுதியுள்ள உயிர்ப்பான நகரமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உடனடியாகப் பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவையாகின்றன. ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் மீட்டெடுத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதே முதன்மைப் பணியாகும். நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் காண முடியும். </p><p>அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிப்பது அவசியமாகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/q38u61dp/merina.jpg" /></figure><p>அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் இன்றி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.</p><h2>பிறந்த நா<strong>ளில் நாம் அனைவ</strong>ரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி</h2><p>பெற்றெடுத்த தாயைப் போற்றிப் பாதுகாப்பதைப் போல, நமக்கு வாழ்வளித்த வளர்ப்பு அன்னையான சென்னை மாநகரையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான கடமையாகும். இந்த 387-வது பிறந்தநாளில் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை நாம் அனைவரும் மனதார ஏற்போம்:</p><p>* நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையோ நெகிழிப் பொருட்களையோ எறியாமல் நகரைத் தூய்மையாக வைப்போம்.</p><p>* இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க மாட்டோம்.</p><p>* சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி, ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்துப் போக்குவரத்து சீராக இயங்க ஒத்துழைப்போம்.</p><p>* அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சிங்காரச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா கூட்டணியில் தவெக இணையும்..!- அமைச்சர் ஷாஜகான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan#comments</comments><guid isPermaLink="false">5e60b5a2-9063-4860-88c1-787ebb79770c</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:16:41.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்தியா கூட்டணி,India alliance,tvk,அமைச்சர் ஷாஜகான்,minister shajahan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MInister Shajahan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும் என அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து நெல்லையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும்.</p><p>திமுகவை இத்தனை ஆண்டுகாலம் பல்லக்கில் தூக்கி சுமந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.</p><p>திமுகவுடன் நீண்ட கால அரசியல் பயணம் செய்தோம், தற்போது ஏற்பட்ட அரசியல் சூழல் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் உள்ளோம்.</p><p>தவெக அரசில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் பங்கேற்றுள்ளதை திமுகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் முடிவு என்பது மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது.</p><p>தவெக இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><p>திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a0c797bc-87a6-4c3b-b192-c919d5b1bf3a</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:12:03.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,தமிழக சட்டசபை,Viduthalai chiruthaigal katchi,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது என்றார்.</strong></em></p><p>திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்‌ <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல். திருமாவளவன்</a> அளித்த பேட்டியில் கூறியதாவது:- </p><p>தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த லட்சக்கணக்கான வி.சி.க.வினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். </p><p>மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர்.தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். </p><h2><strong>மாநில சுயாட்சி</strong></h2><p>மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. </p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது.</p><h2><strong>அ.தி.மு.க.</strong></h2><p>தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சௌகார்-ஜானகி">சௌகார் ஜானகி</a> மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award#comments</comments><guid isPermaLink="false">811cdc0e-3c77-45b2-bff8-004fde612411</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:57:39.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்,தேசிய நல்லாசிரியர் விருது,National Teachers Awards</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆசிரியர் தினத்தை</a> முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p> <p>இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!  </p><p>நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் மெட்ரோ ரெயிலில் மெட்ராஸ் தின கொண்டாட்டம்: கேக் வெட்டி இசை நிகழ்ச்சியுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5a74636a-a1f7-4db6-b8f7-6c9ca383764c</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:55:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:55:33.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras Day,மெட்ராஸ் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ராஸ்-தினம்">சென்னைக்கு</a> வயது 387.</p><p>அன்றைய சென்னை முதல் இன்றைய சென்னை வரை இந்த நகரத்தின் தோற்றத்தையும், மாற்றத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவெடுத்து வரும் மாற்றங்கள் ஆஹா... நம்ம சென்னை என்று கர்வப்பட வைக்கிறது.</p><p>வரலாற்று சிறப்புமிக்க சென்னையின் வயது ஆங்கிலேயர்கள் 1639-ம் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வாங்கிய காலத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. சென்ன பட்டணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நமது நகரம் 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.</p><p>சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் போல் கொண்டாடி மகிழ்கிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.</p><h2><strong>கொண்டாட்டம்</strong></h2><p>இந்த ஆண்டு புதுமையாக மெட்ரோ ரெயிலையே இசை கச்சேரி அரங்கமாக மாற்றி  கொண்டாட திட்டமிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த தனியார் நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்ட 30 நிமிடங்களிலேயே முன்பதிவும் முடிந்தது.</p><p>இரவு 11 மணிக்கு வழக்கமான மெட்ரோ ரெயில் சேவை முடிந்ததும் கொண்டாட்டத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திரண்டார்கள்.</p><figure><img alt="கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2ubejr0a/Madrasday.jpg" /><figcaption>கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்.</figcaption></figure><p>நள்ளிரவு 12 மணிக்கு ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் அடையாள சின்னத்துடன் வந்தவர் பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அப்போது ‘ஹேப்பி பர்த்டே டூ சென்னை’ என்று உற்சாகமாக பாடினார்கள்.</p><p>அதன் பிறகு அனைவரும் மெட்ரோ ரெயிலில் ஏறினார்கள். அந்த ரெயில் நகரும் அரங்கமாக மாற்றப்பட்டு இருந்தது. கானா இசைக் குழுவினர் ரெயிலுக்குள் கச்சேரியை தொடங்கியதும் ரெயில் புறப்பட்டது.</p><p>விமான நிலையம் வரை சென்று விட்டு மீண்டும் கோயம்பேட்டுக்கு திரும்பியது. சுமார் 2 மணி நேரம் ரெயிலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஆட்டம் பாட்டத்துடன் சென்னையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த பயணத்தில் பொதுமக்கள் ஈடுபாடு அதிகமாக இருந்தது.</p><p>வித்தியாசமாக நடந்த இந்த நிகழ்ச்சி இந்தியாவிலேயே முன்மாதிரி நிகழ்ச்சியாக அமைந்ததாக கூறினார்கள். இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினார்கள்.</p><p>வழக்கமாக அமைதியான பயணத்திற்கு பெயர் பெற்ற மெட்ரோ ரெயில் இன்று சென்னைவாசிகளின் உற்சாகக் குரல்களாலும் கானா பாடல்களாலும் விழா கோலம் பூண்டது. இந்தியாவில் முதல் முறையாக ஓடும் ரெயிலிலேயே இப்படி ஒரு கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. </p><p>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</p><p>‘மெட்ராஸ் டே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பேட்டி வருமாறு:-</p><h2><strong>வேதாந்தன் - வேளச்சேரி</strong></h2><p>மெட்ரோ ரெயிலில் நடந்த சென்னை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. கானா பாடல்கள் உட்பட பழைய காலத்துப் பாடல்கள் முதல் தற்போதைய டிரெண்டிங் பாடல்கள் வரை அனைத்தும் அருமையாகப் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சி மனதிற்குப் பெரு மகிழ்ச்சியளித்தது. அடுத்தமுறை விமானத்தில் இதுபோன்று சென்னை தினத்தைக் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><h2><strong>அரவிந்தன் - கோயம்பேடு</strong></h2><p>சூப்பர் சென்னை இணையதளத்தின் மூலம் மெட்ரோ ரெயிலில் கொண்டாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து நண்பர்களுடன் வந்தேன். மெட்ரோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என்றும் மறக்க முடியாத இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அடுத்த முறை இதைவிடப் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்  மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளைக் கொண்டாடியது சென்னை வாசிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தை சிறப்பாக நடத்துகிறார் ஜே.சி.டி பிரபாகர்..! மு.க.ஸ்டாலின் பாராட்டியதை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">24a0af8e-e7fe-4321-85b3-21b9acb33a4e</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:35:06.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Vairamuthu,கவிஞர் வைரமுத்து,முக ஸ்டாலின்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar- Vairamuthu-MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் முதலமைச்சர்</p><p>மு.க.ஸ்டாலின் அவர்களை</p><p>நட்பின் நிமித்தமாய்</p><p>நலம்கேட்கச் சென்றேன்;</p><p>பொன்னாடை அணிவித்தேன்</p><p>ஞானபீடத்தின் பெருமையறிந்து</p><p>வீட்டுக்கே வந்து வாழ்த்திய</p><p>அந்நாள் முதலமைச்சர்,</p><p>பெற்றுவந்த விருதுக்காக</p><p>மீண்டுமொரு</p><p>பொன்னாடை அணிவித்தார்</p><p>பொன்னாடைக்குப்</p><p>பொன்னாடை</p><p>“எதைக் கொடுக்கிறாயோ</p><p>அதையே பெறுவாய்”</p><p>என்ற முதுமொழி</p><p>என் மூளைக்குள் ஓடியது</p><p>ஒருவரை ஒருவர் </p><p>கொண்டாடிக் கொண்டோம்</p><p>சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை</p><p>முக்கால் மணிநேரம் </p><p>இருவரும் கண்டுகொண்டிருந்தோம்</p><p>"ஜே.சி.டி பிரபாகர்</p><p>சிறப்பாக நடத்துகிறார்</p><p>சட்டமன்றத்தை" என்றார்</p><p>தி.மு.க தலைவர்</p><p>"சட்டமன்றத்தின்</p><p>ஆட்ட நாயகன்" என்று</p><p>சமூக ஊடகங்கள் </p><p>சபாநாயகரைப் பேசுகின்றன</p><p>என்றேன்</p><p>"அப்படியா" என்றார்</p><p>ஓர் அழகான காஃபி </p><p>குடித்து முடித்து</p><p>வாழ்த்தி விடைகொண்டேன்</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people#comments</comments><guid isPermaLink="false">82df1885-1389-427c-97a4-c2d919721c7b</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:25:53.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>வங்கித் துறையில் ஏழை எளிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் அடிப்படை வங்கி கணக்கு. நோ பிரில்ஸ் அக்கவுண்ட் அதாவது அலங்காரம் இல்லாத வங்கி கணக்கு என்ற பெயரில் ஏழை மக்களுக்காகவே இந்த கணக்கு துவங்கப்பட்டது. பின்னாளில் இந்த கணக்கிற்கு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்று பாஜக அரசாங்கம் பெயரிட்டது. 56 கோடி அத்தகைய கணக்குகளில் 53 கோடி கணக்குகள் அரசு வங்கிகளால் திறக்கப்பட்டன. அத்தகைய கணக்குகளுக்கு அபராதம் விதிக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.</p><h2><strong>ஏழை மக்களை வதைக்கிறது</strong></h2><p>மாதம் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து நேரடியாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணம் எடுக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; இதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஆக ஒவ்வொரு முறையும் 17 ரூபாய் 70 பைசா அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதாக தெரிகிறது.</p><p>எனவே ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று தெரிகிறது. ஒருபுறம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்த அரசு கடந்த பாராளுமன்ற தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பண பரிவர்த்தனைக்கு மீண்டும் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வாறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மக்களுக்கும் அபராதம் என்று விதித்து எல்லா வகையிலும் ஏழை மக்களை வதைக்கிறது இந்த அரசு.</p><p>2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி இந்த அரசு தள்ளியது. இருப்பினும் 2017 ஜனவரி மாதம் இருந்த பணப்புழக்கமான 9 லட்சம் கோடியில் இருந்து இன்று 43 லட்சம் கோடி அளவிற்கு</p><p>பணப்புழக்கம் உயர்ந்துள்ளது. அதாவது இன்றளவிலும் கணிசமான பகுதி மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் மின்சார வசதி இல்லாமல் பனப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை நிலையை தான் இது பிரதிபலிக்கிறது. இந்த மக்களை கட்டணம் என்ற பெயரில் தண்டிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.</p><p>ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp">மோடி</a> அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் வரங்களை  பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes#comments</comments><guid isPermaLink="false">747f592f-c3af-432f-9765-b36b6175fa64</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:19:47.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,சென்னை தினம்,Chennai Day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p> <p>ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள் படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம். ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p>இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">சென்னை நாளில்</a> நாம் அனைவரும் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்..!- சென்னை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration#comments</comments><guid isPermaLink="false">28292802-a1e1-497b-9e7f-d08486f3bcb2</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:05:10 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:05:10.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சென்னை தினம்,Chennai Day,mk staiin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/conmy0lh/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/conmy0lh/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அதன்படி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!</p><p>101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!</p><p>மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.</p><p>சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!</p><p>தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history#comments</comments><guid isPermaLink="false">ac118da6-1afd-49cb-a349-6699f5e408b7</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:32:19 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:32:19.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,சென்னை தினம்,Chennai Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yh1zeqm0/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yh1zeqm0/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் என்று திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.</strong></em> </p><h2>மெட்ராஸ் மாகாணம்</h2><p>சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். </p><p>வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் சென்னையை விலைக்கு வாங்கியது. அப்போது, 'மதராசபட்டிணம்' என்று அழைக்கப்பட்ட சென்னை விடுதலை பெற்ற பின்னர் 'மெட்ராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டது.</p> <h2>சென்னப்ப நாயக்கர் </h2><p>கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.</p> <h2>சென்னை தினம்</h2><p>பத்திரிகையாளர்கள் சசி நாயர், வின்சென்ட் டி சோஸா மற்றும் வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா ஆகியோரின் முயற்சியால் 2004-ம் ஆண்டு முதன்முதலில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சென்னை தினம்</a> கொண்டாடப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.</p> <h2>சென்னை மாநகரம்</h2><p>சென்னை மாநகரம் இன்று தனது 387-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 387 ஆண்டுகள் ஆகிறது.</p><h2>கனிமொழி</h2><p>சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate">திமுக</a> எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p><p>வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம்.</p><p>சென்னை நாள் வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times#comments</comments><guid isPermaLink="false">08d8bae2-eabc-421e-b798-0daaa96159c8</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:19:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:19:17.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,kerala,ஓணம் பண்டிகை,onam festival,chennai airport,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/94lexwei/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Airport  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/94lexwei/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவின் பாரம்பரிய மற்றும் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும் மலையாளி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் ரெயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.</p><h2>விமான கட்ட<strong>ணங்கள் கி</strong>டுகிடு உயர்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-t5-5g-india-launch-confirmed">ரெயில்</a> மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p>சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களான கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் விமானங்களின் கட்டணப் பட்டியல் விவரம்:</p><h2>செ<strong>ன்னை - கொச்சி வழித்த</strong>டம்</h2><p>வழக்கமாக சென்னை - கொச்சி இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் சராசரியாக ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், ஓணம் பண்டிகை நெருங்கியதை ஒட்டி தற்சமயம் ஒரே நாளில் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது.</p><h2>சென்னை - <strong>திருவனந்தபுரம் வழி</strong>த்தடம்</h2><p>அதேபோல், சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ப<strong>யணிகள் வேதனை மற்றும் அரசு நடவடிக்கைக்கான எதிர்பார்</strong>ப்பு</h2><p>திடீரென விமானக் கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். கட்டண உயர்வு அதிகமாக இருந்தாலும், குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வேறு வழியின்றி கூடுதல் தொகையைக் கொடுத்துப் பயணிப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். </p><p>பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற செயற்கையான கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>