<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 30 Jul 2026 11:24:36 +0000</lastBuildDate><item><title>நெல்லை டவுன், பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">2f9a7185-60e6-43ff-9e20-931126ad85f9</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:00:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:00:15.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,நெல்லை,Tirunelveli,Power Cut,petta,பேட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ power cut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை நகர்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மின் நிலையம்</strong></h2><p>கொக்கிரகுளம், பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. </p><h2><strong>மின்தடை</strong></h2><p>எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், பரணி நகர், திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர், நெல்லை டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர்,</p><h2><strong>பேட்டை</strong></h2><p>திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன் நகர், திருமங்கை நகர், செந்தமிழ் நகர், பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுன் கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியில் பகுதியில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:54:50.584Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle" rel="nofollow">சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்</a></p><p>* சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். </p><p>*  8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th">தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p>* மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team">பிரேசில் உடனான பயணம் முடிந்தது: ஓய்வு அறிவித்த நெய்மர்</a></p><p>* உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது.</p><p>* பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india" rel="nofollow">இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</a></p><p>* ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>* மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august">9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!... </a></p><p>*இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>*இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges">தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்... </a></p><p>*தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><p>*ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery" rel="nofollow">சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</a></p><p>*  1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>*   தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-in-commonwealth-games-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும்</p><p>* ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport">கத்திப்பாரா மேம்பாலம் To விமானநிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</a></p><p>* தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>* திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold">3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு</a></p><p>*இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.</p><p>*தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow">முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</a></p><p>* முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</p><p>* முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact">’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!... </a></p><p>*தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>*‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha">மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு</a></p><p>*அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்</p><p>* பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்<br></a><br>*உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.</p><p>*'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call" rel="nofollow">சென்னையில் சிக்கன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</a></p><p>* சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. </p><p>* ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow#comments</comments><guid isPermaLink="false">1c102744-ce1d-48d4-8560-376fd2f3c8c9</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:54 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:54.702Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Anticipatory bail,முன்ஜாமின் மனு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28 அன்று வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. </p><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நாளை வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th#comments</comments><guid isPermaLink="false">6183edef-b964-4e28-9bff-9bc3a9245b18</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:52.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><h2><strong>தமிழக கடலோரப்பகுதிகள்</strong></h2><p>இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>1-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>2 மற்றும் 3-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india#comments</comments><guid isPermaLink="false">5c2ebc1f-6903-4c2b-a401-f2173fd52722</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:06:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:06:15.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,Union Ministry,மத்திய அரசு  India,one teacher,ஆந்திரா,ஒற்றை ஆசிரியர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ School class room]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.</p><h2>மாணவர்-ஆசிரியர் விகிதம்</h2><p>தேசிய கல்விக்கொள்கையின்படி மாணவர்-ஆசிரியர் விகிதம் தேசிய அளவில் வரம்பிற்குள் இருந்தபோதிலும், ஆசிரியர் நியமனத்தில் கடுமையான உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை இந்த தரவு சுட்டிக்காட்டுகிறது.</p><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய அளவிலான மாணவர்-ஆசிரியர் விகிதம் பின்வருமாறு கட்டுக்குள் உள்ளது, தொடக்க நிலை 19, நடுநிலைப்பள்ளி நிலை 17, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF" rel="nofollow">உயர்நிலைப்பள்ளி</a> நிலை 15, மேல் நிலைப்பள்ளி நிலை 23 என்ற விகிதாச்சாரப்படி உள்ளது.</p><h2>ஆந்திரா முதலிடம்</h2><p>ஒற்றை ஆசிரியர் பள்ளி கள் அதிகம் உள்ள மாநில ங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் 16,357 பள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவிலான மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும். நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>மாநிலங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கைப்படி ஆந்திரப் பிரதேசத்தில் 16,357, ஜார்க்கண்ட் 9,827, மகாராஷ்டிரா 9,269, கர்நாடகா 8,042, உத்தரப்பிரதேசம் 7,874, ராஜஸ்தான் 7,200, மேற்கு வங்காளம் 6,769 என்ற நிலையிலும், நடுத்தர எண்ணிக்கை உள்ள மாநிலங்களில் தெலுங்கானா 4,793, தமிழ்நாடு 3,957, அசாம் 3,159, </p><p>இமாச்சலப்பிரதேசம் 3,128, உத்தரகாண்ட் 2,655, சத்தீஸ்கர் 2,461 என்ற எண்ணிக்கையிலும், குறைந்த எண்ணிக்கை உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்படி கேரளா 67, நாகாலாந்து 35, சிக்கிம் 31, லடாக் 28, டெல்லி 7, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1 என்ற எண்ணிக்கையிலும் பள்ளிகள் உள்ளன.</p><h2>காலிப்பணியிடங்கள்</h2><p>மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார். <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-to-ban-religion-names-for-new-govt-schools-colleges-810941" rel="nofollow">அரசுப் பள்ளி</a>களுக்கான தரவு கோரப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பில் அனைத்து வகை நிர்வாகங்களின் (அரசு, உதவிபெறும், தனியார்) கீழ் இயங்கும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான நியமனங்கள் மூலம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவும், எதிர்கால ஆசிரியர் தேவையை முன்கூட்டியே கணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august#comments</comments><guid isPermaLink="false">4fd92567-3f4c-4cdb-b262-4bdc9be77b87</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:53:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:53:59.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,medical colleges,மருத்துவக் கல்லூரிகள்,MBBS Counselling,தமிழ்நாடு,எம்பிபிஎஸ் கலந்தாய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS Counselling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே. நகர் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.</p><h2><strong>கூடுதலாக 50 இடங்கள்:</strong></h2><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 349 மருத்துவ இடங்கள் உள்ளன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,650 உள்ளன. மொத்த 9,999 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>இவற்றையும் சேர்த்து இந்த மொத்த இடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>எண்ணிக்கை உயர வாய்ப்பு:</strong></h2><p>தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ்  இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது  உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 9,999 ஆகும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை அகில இந்திய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற்று   வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. </p><h2><strong>முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு:</strong></h2><p>இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தின் தொடக்கத்தில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p><p>இந்திய மருத்துவ ஆணையத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும். மாநில பொது கலந்தாய்வுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">ab734995-0679-4c52-ab9e-ff48c05b7e61</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:24:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:24:50.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,government arts colleges,உயர்கல்வித் துறை,Principals appointed,தமிழக அரசு கலை கல்லுரி,முதல்வர்கள் நியமனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Principals appointed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்களை நியமிப்பதற்கான பட்டியலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>நீண்ட நாள் கோரிக்கை:</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிரந்தர முதல்வர்கள் இன்றி பொறுப்பு முதல்வர்கள் மூலமே இயங்கி வந்தன. இதனால் கல்வி நிர்வாகம், மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>பணிமூப்பு பட்டியல் பிரச்சனை தீர்வு:</strong></h2><p>பேராசிரியர்களின் பணிமூப்பு சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசாணை வெளியீடு:</strong></h2><p>இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு முதல்வர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 129 இணைப் பேராசிரியர்கள் கொண்ட தகுதிப் பட்டியலுக்கு  உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>கலந்தாய்வு நடைமுறை:</strong></h2><p>தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆகஸ்ட் இறுதிக்குள் பணி நியமனம்:</strong></h2><p>ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள் என்று கல்லூரி கல்வி ஆணையரகம் மற்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகச் சிக்கல்கள் தீர்ந்து, கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery#comments</comments><guid isPermaLink="false">819049a6-c8c0-4e76-a683-504d677c614b</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:19:59.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorandum of Understanding,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,புரிந்துணர்வு ஒப்பந்தம்,சர்வதேச பல்கலைக்கழக வளாகம்,international university campus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை அங்கு நேரில் சென்றிருந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>அதன் பிறகு நிகழ்ச்சிகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழிகாட்டி நிறுவனத்துக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">உயர்கல்வி</a> உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஒப்பந்தங்கள்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை  தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன.</p><p>சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்பட உள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலக ளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். </p><p>புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலி யாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல் கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்ல கலைக்கழக வளாகமாகும்.  1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. </p><p>சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொழில்துறை அமைச்சர்  கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளை ப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆன்லைனில்.. அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">679f7206-3f75-4c3f-bb2a-56e59b3cb992</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:41.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அறநிலையத்துறை,tender,Hindu Religious Charities Department,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,டெண்டர் முறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொதுவான டெண்டர்</h2><p>அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் வழிகாட்டுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">டெண்டர்</a> முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.</p><p>அனைத்து கோவில்களுக்கும் உறுதிமொழி படிவங்கள் டெண்டருக்கான விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கும் முறையான ஒரே மாதிரியான படிவங்களை கொண்டு வந்துள்ளோம். </p><p>தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதை கொண்டு வந்துள்ளோம். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples" rel="nofollow">இந்து சமய அறநிலையத்துறை</a>யில் இருக்கக் கூடிய அனைத்து டெண்டர்களும் இனிமேல் ஆன்லைனில் நடைபெறும்.</p><p>ஆன்-லைனில் டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளி  கோருதலும் நடக்கும், அதற்கான ஏலமும் ஆன்-லைனில் நடைபெறும். </p><p>இதற்கு முன்பு பல கோவில்களில் இ.எம்.டி. என்கிற வைப்புத்தொகை கோவிலுக்கு கோவில் சில இடங்களில் மாறுபட்டு இருந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவாக கொண்டு வந்துள்ளோம். </p><p>அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம். அது இல்லாமல் எந்த டெண்டரையும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஒருவருக்கே காண்டிராக்ட் கொடுக்காமல் 2-3 பேருக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். டெண்டரில் உள்ள விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வந்துள்ளோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance#comments</comments><guid isPermaLink="false">11b5ca90-a677-4c62-a0fb-67bf7eac4d9d</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:11.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.</aside><h2><strong>தமிழ்நாட்டுக்கு பாதகம்</strong></h2><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும். </p><p>மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும். </p><h2><strong>தமிழ்நாடு விழக்கூடாது</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால், நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மத்தியில் உள்ள பா.ஜ.க., கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றனர். இந்த சதியில், தமிழ்நாடு விழக்கூடாது. </p> <p>கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக் கொண்டு இருக்கையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முதலமைச்சர் விஜய்யை யார் அவ்வாறு வழி நடத்துகிறார்? என்று தெரியவில்லை. இது தவறான ஒரு போக்கு. இது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>தைரியம் இருக்கிறதா?</strong> </h2><p>மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். </p><p>அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.</p><p>எனவே மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூர் ஆவது, அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? </p><p>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்திப்பாரா மேம்பாலம் To விமான நிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport#comments</comments><guid isPermaLink="false">a07e2f0b-aa35-48fb-b382-b77183e4482f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:22:13.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமான அழகிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி புதிய பொலிவூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.</aside><h2><strong>‘கேட்-வே ஆப் சென்னை’</strong></h2><p>கத்திப்பாரா மேம்பாலம் முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலான 4.8 கி.மீ தூரப் பகுதியை ரூ.10.50 கோடி மதிப்பீட்டில்  ‘கேட்-வே ஆப் சென்னை’ என்ற பெயரில் நவீன முறையில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> இதை இரண்டு முக்கியப் தொகுப்புகளாகப் பிரித்து உள்ளது.</p><p>முதலாவதாக, விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>‘வி.ஐ.பி. பூங்கா’</strong></h2><p>2-வதாக விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய ‘வி.ஐ.பி. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">பூங்கா</a>’ மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>இதற்காக தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p><p>அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும்.</p><p>இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46a95fd1-f6d9-42dc-b464-2e1d11ce2364</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:57:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:57:36.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,முதலமைச்சர் பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</aside><h2><strong>முதலமைச்சர் பதக்கம்</strong></h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர்</a> பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2><strong>பொதுமக்களுக்கு அனுமதி</strong></h2><p>முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். </p><p>இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact#comments</comments><guid isPermaLink="false">d44ccae2-21a0-4b46-b403-0fbaa19b36dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:52:16 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:52:16.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Pradeep John,பிரதீப் ஜான்,எல் நினோ,El Niño</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EL NINO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்:</strong></h2><p>தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2><strong>சிறப்பு உறுப்பினர்:</strong></h2><p>எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>அரசு வகுத்துள்ள குழுவின் முதன்மைப் பணிகள்:</strong></h2><p>*தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிலவும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது.</p><p>*‘தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’க்கு அதிநவீன தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குவது.</p><p>* பருவமழை பொய்க்கும்போது ஏற்படும் வறட்சியை எதிர்கொள்வதற்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் பெருமழை-வெள்ளப் பெருக்கைச் சமாளிப்பதற்கும் உரிய நீர் மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவது.</p><p>*இக்குழு '2026-27 மற்றும் 2027-28' ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்படும்.</p><h2><strong>எல் நினோ என்றால் என்ன?</strong></h2><p>மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்போது 'எல் நினோ' உருவாகிறது. இதன் காரணமாக உலகளவில் வானிலை சீர்குலைந்து, சில இடங்களில் கடும் வறட்சியும், சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான பெருமழையும் புயலும் ஏற்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் இதன்காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: படங்களில் நடித்த திருநங்கையை திருமணம் செய்த ஆவடி வாலிபர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films#comments</comments><guid isPermaLink="false">8e53cab0-6f62-49b5-ba1f-439c3ec7f916</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:45:03.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Instagram,இன்ஸ்டாகிராம் காதல்,இன்ஸ்டாகிராம்,திருநங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், திருச்செங்கோட்டை சேர்ந்த திருநங்கை ஒருவரும் 7 வருடங்களாக பழகி நேற்று கோபியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.</aside><h2><strong>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்</strong></h2><p>திருநங்கையை திருமணம் செய்து கொண்டது குறித்து தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் ராஜ் கூறும்போது, நான் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவன். கணினி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறேன். </p><p>இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி என்பவர் அறிமுகமானார் .</p><p>அவர் திருநங்கை என்பது எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் எங்களது பழக்கம் சாதாரண நட்பாக தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வருடம் நட்பாக பழகி வந்தோம். அவரை திருச்செங்கோடு நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது . இருந்தாலும் இரண்டு வருடமாக நல்ல நட்புடன் பழகி வந்தோம். பின்னர் நான் தான் எனது காதலை முதல் முதலாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உடனடியாக காதலை ஏற்கவில்லை நண்பர்களாகவே பழகலாம் என்று கூறிவிட்டார். </p><p>பின்னர் அவருக்கும் என்னை பிடித்து நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம் . இந்நிலையில் எங்கள் காதல் விவகாரத்தை எங்கள் வீட்டில் தெரிவித்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் அவரது வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடு நடந்ததால் இனியும் தாமதிக்கக்கூடாது என்பதால் கோபியில் சட்டப்படி சுயமரியாதை செய்து கொண்டோம் என்றார் .</p><p>இதுகுறித்து திருநங்கை கயல்விழி கூறும்போது,</p><p>நான் சினிமாவில் தோற்றம், கந்தமலை, ராவண ராமணன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் தோற்றம், கந்தமலை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரியலான டாசிக் பார்ட்டியில் நடித்து வருகிறேன்.</p><p>முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார். நான் அப்போது சூழ்நிலை காரணமாக காதலை ஏற்கவில்லை. அதன்பிறகு நானும் காதலை ஏற்றுக்கொண்டேன் . </p><p>எங்கள் காதல் விவகாரம் பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்கு திருமணம் செய்து வைத்ததில்லை என்று கூறி சான்றிதழ் தரவில்லை. </p><p>இதனை அவர்கள் வீட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களை பிரிப்பதற்காக பிரவீன் ராஜை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கே அவர் 3  வருடமாக தங்கியிருந்தார். எனினும் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம் . இந்நிலையில் பிரவீன் ராஜிக்கு அவசரமாக வேறொரு பெண்ணை திருமணத்துக்காக நிச்சயம் செய்தனர்.</p><p>இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செங்கோடு வந்தார். அதனை அடுத்து நாங்கள் சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை நாடினோம். எனது பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம் . தற்போது நாங்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறோம். கண்டிப்பாக எனது மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜிக்கு நல்ல மனைவியாகவும், அவரது குடும்பத்தினருக்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன், என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சிக்கன் கடைகள் 
நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call#comments</comments><guid isPermaLink="false">454ac728-5da0-48ec-8fe4-3f1197af4b11</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:30:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:30:19.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Chicken,சிக்கன் தடை,வியாபாரிகள் சங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chicken]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு  தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். </p><p>திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் அதிக அளவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF" rel="nofollow">கோழி கறி</a> விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால்  கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று  தெரிவித்துள்ளது. </p><p>சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.  அதாவது 6 லட்சம் கிலோ  கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை  பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். </p><p>பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். </p><p>ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால்  எங்களது கோரிக்கை குறித்து  கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது. </p><p>சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது. </p><p>சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students" rel="nofollow">கோழி இறைச்சி </a>பயன்பாடு உள்ளது.  அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">54e136d7-8591-468e-8e0d-23d3e0117b09</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:18:30.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2><strong>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</strong></h2><h3><strong>தேர்தலுக்கு முன்பு</strong></h3><p>“5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2><strong>தேர்தலுக்குப் பின்பு</strong></h2><p>50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2><strong>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது</a> திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.</p><p>ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p><p>இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2><strong>அனைத்துக் கட்சிக் கூட்டம்</strong></h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதலமைச்சர்.</p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2><strong>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சனை</strong> </h2><h3><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong></h3><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது.</p> <p>இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2><strong>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</strong></h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">dd58ed12-4ff8-4f85-9c86-ecb58623d7bc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:08:55.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,Doctor muthulakshmi reddy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanismy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy#comments</comments><guid isPermaLink="false">a1283d03-266e-4dfe-adf1-5d0b7ef5a97e</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:28.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மருத்துவ இடங்கள்,Medical seat,முக ஸ்டாலின்,Minister Arunraj,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ இடங்கள் மத்திய தொகுப்பிற்கு சென்ற விவகாரம் தொடர்பாக,"தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக" முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதில் அளித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி</a> இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:-</p><p>2024-ல் 119 இடங்களும், 2025-ல் 149 இடங்களும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை; மத்திய அரசு கட் ஆஃப்-ஐ குறைத்து மாணவர்களை சேர்த்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: கைதாகிறாரா செந்தில் பாலாஜி...?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested#comments</comments><guid isPermaLink="false">919a0d93-b0f5-454e-aafc-411830e83a53</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:34:40.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,wineshops,டாஸ்மாக்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,TASMAC irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong></h2><p>முன்ஜாமீன் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">செந்தில் பாலாஜி</a> தாக்கல் செய்த மனுவை விசாரித்த 'நீதிபதி ஜி.கே.இளந்திரையன்', மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் தெளிவாக உள்ளன." இந்நிலையில், எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>11 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு:</strong></h2><p>தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகளும், 3,240 மதுக் கூடங்களும் (பார்கள்) இயங்கி வருகின்றன. 2021 முதல் 2025 வரை மது விற்பனை உயர்ந்தபோதிலும், அரசுக்கான வருவாய் கணிசமாகக் குறைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  தீவிர விசாரணை நடத்தி, 11 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட '7 பேர்' குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>போலி டெண்டர் மற்றும் கூட்டுச்சதி:</strong></h2><p>2021-ஆம் ஆண்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கிக் கிளையிலிருந்து தொடர்ச்சியான எண்களில் வரைவு காசோலைகளை பிணையத் தொகையாகச் செலுத்தியதன் மூலம் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.</p><h2><strong>பாட்டில் சேகரிப்பு முறைகேடு:</strong></h2><p>45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களைச் சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் ரூ.143 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>14 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:</strong></h2><p>வழக்கின் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>கைது செய்யப்படுகிறாரா?</strong></h2><p>வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை விசாரணைக்காகக் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses#comments</comments><guid isPermaLink="false">50812a59-11f7-47e0-b935-022b7d159d75</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:20:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:20:50.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,EB Charge Hike,தமிழ்நாடு மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</aside><h2><strong>மின் கட்டண உயர்வு</strong></h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">மின் நுகர்வு</a> கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>இணைப்புகள் ஆய்வு</strong></h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப்பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed#comments</comments><guid isPermaLink="false">8cb450a7-a222-4137-a71f-f22739fbdc01</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:06:28.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது.</aside><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கூட்டுச் சதி மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். 120, 167, 409, 109, 420, 61 (2), 201, 316 (5), 13 (2) ஆகிய சட்டப்பிரிவுகளில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>சம்மன்</strong></h2><p>இது தொடர்பாக 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். </p><h2><strong>டிஜிட்டல் ஆவணங்கள்</strong></h2><p>இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">முன் ஜாமின்</a> கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. </p><h2><strong>முகாந்திரம் உள்ளது</strong></h2><p>அப்போது, முதல் தகவல் அறிக்கையில் தன் மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. </p><p>காவல்துறை தரப்பில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை தேவை என கூறப்பட்டது. </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிகே. இளந்திரையன்,  முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது. இதனால் முன் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">32716fed-6e34-446e-93c0-445eb9967389</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:43.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dr Muthulakshmi Reddy,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>சமூகப் போராளி</strong></h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><p>அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர்… <a href="https://t.co/wip3GFieSA">pic.twitter.com/wip3GFieSA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2082681800778981759?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">eb20e855-6883-46b2-8c50-eb948dd67c33</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:52:06.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,cm vijay,முதலமைச்சர் விஜய்,CM Vijay Inspects,Chennai Metro Phase 2,முதலமைச்சர் விஜய் ஆய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspects Travel by Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.</p><h2><strong>அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணம்:</strong></h2><p>தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><h2><strong>பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு:</strong></h2><p>நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><h2><strong>101 அடி உயர மேம்பாலத்தில் பிரம்மாண்ட பாதை:</strong></h2><p>கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்:</strong></h2><p>தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.</p><h2><strong>காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவு:</strong></h2><p>ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026#comments</comments><guid isPermaLink="false">c6636af7-fdb0-4d45-b189-c5a9c6946ff3</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:18:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:18:06.917Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vdfsbd0p/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த 27-ந்தேதி வரை குறைந்து வந்து, அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை குறைந்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 215-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது. <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">நேற்றைய</a> நிலவரப்படி, கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 155-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>29-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,240</p><p>28-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,720</p><p>27-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,960</p><p>26-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><p>25-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,400</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>28-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>27-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>26-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>25-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea#comments</comments><guid isPermaLink="false">15df6957-c24e-4c7e-8872-b85da0d8d5dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:05:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:05:40.196Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/fjr6d0w7/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.</aside><h2><strong>சோதனை</strong></h2><p>தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் எழுப்பப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்து பேசினார். ‘‘பார்ட்டி பண்ட்” என்ற பெயரில் தனியாக பணம் வசூல் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 41 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும், கரூரில் <a href="https://maalaimalar.com/news/tamilnadu/rs-35-crore-bribery-case-questioning-of-senthil-balaji-completed">செந்தில் பாலாஜியின்</a> வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடைபெற்றது. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இதற்கிடையே, டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><h2><strong>முன்ஜாமின் மனு</strong></h2><p>இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p>முன்ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு 3-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore#comments</comments><guid isPermaLink="false">26c9209a-23bf-424f-900b-d027c4101234</guid><pubDate>Thu, 30 Jul 2026 03:20:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T03:20:28.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GST,ஜிஎஸ்டி வரி,GST Tax,ஜிஎஸ்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்ட பெண்மணி ருக்மணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/eucj7d3u/jolarpet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு, ரூ.2.75 கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><h2><strong>125 நாள் வேலை</strong></h2><p>திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த புதூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ருக்மணி (வயது 56). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறார்.</p><p>இந்த நிலையில் 125 நாள் வேலை திட்டத்தில் வந்த கூலி பணத்தை எடுப்பதற்காக நேற்று சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றுள்ளார்.</p><h2><strong>ரூ.2.75 கோடி வரி ஏய்ப்பு</strong></h2><p>அங்கு வங்கியில் இருந்த ஊழியர்கள் நீங்கள் ஆர்.எம்.டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்துவதாகவும், அதன் மூலம் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.2 கோடியே 79 லட்சத்து 19 ஆயிரத்து 420 வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆம்பூர் வட்ட வணிகவரித்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.</p><p>அதன்பேரில் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>இதனால் அதிர்ச்சியடைந்த ருக்மணி, தான் அதுபோன்று தொழில் நிறுவனம் எதுவும் நடத்தவில்லை என்றும், 125 நாள் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசுப்பணி ரத்து - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-incident-govt-job-appointment-cancelled-tn-government-appeals-supreme-court#comments</comments><guid isPermaLink="false">8a23c22c-3f85-41fc-8aa5-a20adce0c24c</guid><pubDate>Wed, 29 Jul 2026 18:06:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T18:06:00.984Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>government job,அரசு பணி,Karur incident,உச்சநீதிமன்றம்,கரூர் விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் <a href="https://www.maalaimalar.com/topic/karur-stampede">கூட்ட நெரிசல்</a> சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/tamil-nadu">தமிழ்நாடு</a> அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>கரூர் வேலுசாமிபுரத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதியன்று நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p><h2>அரசுப்பணி ஆணை:</h2><p>இதையடுத்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதியன்று கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை வழங்கினார்.</p><p>எனினும், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசுப்பணி உத்தரவை ரத்து செய்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.</p><h2>உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:</h2><p>இந்த நிலையில், கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப்பணியை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘களப் போராளிகளைவிட, ரீல்ஸ் போராளிகளைத்தான் இந்த சமூகம் அதிகம் கொண்டாடுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/society-celebrates-reels-warriors-more-than-ground-level-activists-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/society-celebrates-reels-warriors-more-than-ground-level-activists-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">6afd8e04-7797-4507-98d8-e21f759e3ffa</guid><pubDate>Wed, 29 Jul 2026 16:26:43 +0000</pubDate><atom:updated>2026-07-29T16:26:43.332Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Comrade Nallakannu,தோழர் நல்லக்கண்ணு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13fxw4yk/New-Project-2026-07-29T215619.787.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘களப் போராளிகளைவிட, ரீல்ஸ் போராளிகளைத்தான் இந்த சமூகம் அதிகம் கொண்டாடுகிறது’ - உதயநிதி ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/13fxw4yk/New-Project-2026-07-29T215619.787.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், தோழர் நல்லகண்ணு அய்யாவின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டுச் சிலையை திறந்துவைத்தார். ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ எனும் நூலையும் வெளியிட்டார். </p><p>சிலை திறப்புக்கு பின் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“தோழர் நல்லகண்ணு அவர்களுக்குச் சிலை அமைத்திருப்பது மூலமாக, இந்தச் சமூகம் இன்றைக்கு உண்மையில் யாரையெல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலமாக, இந்த அமைப்பினர் மிகத்தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். </p><h2> ரீல்ஸ் போராளிகள்</h2><p>ஏனெனில், இன்றைக்கு மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமூதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.</p><p>“போராடினால் எதுவும் கிடைக்கும்” என்று உறுதியாக நம்பியவர், அய்யா நல்லகண்ணு அவர்கள். அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், சமீபத்தில் டெல்லியில் நடந்த நீட் விலக்குப் போராட்டம்.  டெல்லியில் நடந்த போராட்டத்தையொட்டி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.  </p><p>ஆனால், நீட் எதிர்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது.  என்றைக்கு நீட் முதன்முதலாக வந்ததோ, அன்றிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. </p><p>அய்யா நல்லகண்ணு அவர்கள் எந்த அளவுக்கு எளிமைக்குச் சொந்தக்காரரோ, அதே அளவுக்குப் போராட்டக் குணத்துக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட அய்யா நல்லகண்ணு அவர்களின் சிலையைத் திறந்துவைப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்.</p><h2>ஓரணியில் களத்தில் நிற்கும்!</h2><p>நான் இங்கு வந்ததும், குதிரை பேரம் குறித்துப் பலரும் பேசுவதாக கூறினார்கள். உண்மையாகவே குதிரை பேரம் எங்கு நடக்கிறது என்று, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தோழர் வீரபாண்டியன் அவர்கள் இங்கு வந்தவுடன் என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். </p><p>தலைவர், உங்கள் தந்தையார் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.  எப்போதும்போல அதே தோழமை உணர்வோடுதான் அவர் இங்கே அமர்ந்துள்ளார் என்று நம்புகிறேன்.  ஏனெனில், தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் என்றைக்கும் ஓரணியில் கைகோர்த்துக் களத்தில் நிற்கும்.” என தெரிவித்தார். </p><p>இந்த விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கலந்துகொண்டனர். </p>]]></content:encoded></item><item><title>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/criminal-cases-involving-crimes-against-women-and-children-must-be-disposed-of-expeditiously-madras-high-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/criminal-cases-involving-crimes-against-women-and-children-must-be-disposed-of-expeditiously-madras-high-court-order#comments</comments><guid isPermaLink="false">05beaa90-979d-455c-8fdf-7f13905f51f4</guid><pubDate>Wed, 29 Jul 2026 15:42:30 +0000</pubDate><atom:updated>2026-07-29T15:42:30.800Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,பாலியல் குற்றங்கள்,sexual offences</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/8qm668bj/New-Project-2026-07-29T204306.500.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/8qm668bj/New-Project-2026-07-29T204306.500.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் அனைத்து விசாரணை நீதிமன்றங்களும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் 30 நாட்களில் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவை வலியுறுத்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.</p><p>வழக்கிற்கு தேவையற்ற வாய்தாக்களை வழங்கக் கூடாது என்றும், மிகவும் விதிவிலக்கான காரணங்களுக்கு மட்டுமே எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வாய்தா வழங்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>DGP-க்கு அறிவுறுத்தல்: </h2><p>பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை தமிழ்நாடு டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டமிட்ட செயல்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யுமாறும், </p><p>போக்சோ வழக்குகளில் காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  </p><h2>அரசுக்கு அறிவுறுத்தல்  </h2><p>தொடர்ந்து கடலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள நான்கு போக்சோ நீதிமன்றங்களுக்கு விரைவில் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்னும் அமைக்கப்படாத மேலும் ஆறு போக்சோ நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் மாநில அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>திருவண்ணாமலைக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p>இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்குகளின் விவரங்களைக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழ்நாட்டில் முதற்கட்ட போட்டிகள் ஆக.1 முதல் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-2026-first-phase-of-competitions-in-tamil-nadu-begins-on-august-1</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-2026-first-phase-of-competitions-in-tamil-nadu-begins-on-august-1#comments</comments><guid isPermaLink="false">f57a39ed-b2cf-4a94-ba18-ed89b5e60379</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:35:21 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:35:21.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா கிராமோத்சவம்,sports competitions,விளையாட்டுப் போட்டிகள்,Isha Gramotsavam 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/uj3t3u7y/New-Project-2026-07-29T190331.183.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஈஷா கிராமோத்சவம் 2026: தமிழ்நாட்டில் முதற்கட்ட போட்டிகள் ஆக.1 முதல் தொடக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/uj3t3u7y/New-Project-2026-07-29T190331.183.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சத்குருவின் ஈஷா அறக்கட்டளையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான 'ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள், தமிழ்நாட்டில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. </p><p>இந்தாண்டு 10 மாநிலங்களைச் சேர்ந்த 40,000 கிராமங்களில் இருந்து 80,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கு மொத்தம் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.</p><p>ஈஷா கிராமோத்சவம்</p><p>நம் கிராமங்களில் 60 சதவீத மக்கள் உழைக்கும் வயதில் இருந்தாலும், வேலை வாய்ப்பின்மை மற்றும் நலிவடையும் விவசாயம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் வறுமைக்கும் போதைப்பழக்கத்திற்கும் தள்ளப்படுகிறார்கள். அதேபோல், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு விளையாடுவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போகிறது. </p><p>இந்தச் சூழலை மாற்றி, “கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்ற சத்குருவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 'ஈஷா கிராமோத்சவம்' தொடங்கப்பட்டது.</p><h2>தமிழ்நாட்டில்…</h2><p>தமிழ்நாட்டில் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் முதற்கட்ட கிளஸ்டர் அளவிலானப் போட்டிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. குறிப்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளிலும், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன. மேலும் இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 3-ஆவது மற்றும் 4-ஆவது வார இறுதி நாட்களில் நடைபெறும். </p><p>இந்த தொடர் கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறும். பிரம்மாண்ட இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ivi37ux5/New-Project-2026-07-29T190422.287.jpg" /></figure><h2>பரிசுத்தொகை…</h2><p>ஈஷா கிராமோத்சவ விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு கைப்பந்து (வாலிபால்) போட்டிகளும், பெண்களுக்கு எறிபந்து (த்ரோபால்) போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இதில் பங்கேற்க அனுமதி கிடையாது.</p><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ,,ரூ.50,000-மும் வழங்கப்படும். </p><p>இதுமட்டுமின்றி, கிளஸ்டர், டிவிஷனல் போட்டிகளிலும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.</p><h2>வட மாநிலங்களில்…</h2><p>கடந்தாண்டு வரை தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே நடைபெற்ற வந்த ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு வட மாநிலங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களோடு இணைந்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடத்தப்படுகின்றன.</p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,000 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பெண்கள் உட்பட 80,000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><p>இது குறித்து ஈஷா கிராமோத்சவ ஒருங்கிணைப்பாளர் சுவாமி புலகா கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் ஈஷா கிராமோத்சவம் அளவிலும் தாக்கத்திலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. </p><p>கிராமப்புறங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து கொண்டாடும் வாய்ப்பை கிராமோத்சவம் வழங்குகிறது. தகுதியுள்ள ஒவ்வொரு கிராம அணியையும் இதில் பங்கேற்று விளையாட்டின் மகிழ்ச்சி, தோழமை மற்றும் மாற்றும் சக்தியை அனுபவிக்க அழைக்கிறோம்.” எனக் கூறினார். </p><p>கடந்த 20 ஆண்டுகளில், ஈஷா கிராமோத்சவம் தொடங்கியதில் இருந்து இன்று வரை, சுமார் 35,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2.60 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஈஷா கிராமோத்சவம், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 'தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p>பாரம்பரிய கலைகள், இசை, நடனம், கேளிக்கை விளையாட்டுகள் மற்றும் சுவையான கிராமப்புற உணவுக் கடைகள் எனப் பலவற்றையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து நடத்துவதன் மூலம், கிராமப்புற இந்தியாவின் செழுமையான கலாச்சாரத்தை ஈஷா கிராமோத்சவம் கொண்டாடுகிறது. கிராமோத்சவ திருவிழாவில் வள்ளி கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளைக் கண்டு ரசிக்கலாம். அதோடு கோ-கோ, கிட்டிப்புள், கபடி போன்ற கிராமத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/knufcpfk/New-Project-2026-07-29T190456.100.jpg" /></figure><p>தனிநபர்களையும், சமூகங்களையும் வடிவமைப்பதில் விளையாட்டின் ஆழமான பங்களிப்பு பற்றி சத்குரு கூறுகையில், “வாழ்க்கையை விளையாட்டுத்தனத்தோடு (playful) எதிர்கொள்வதே நாம் வாழ்வதற்கான ஆகச்சிறந்த பொறுப்பான வழியாகும். எப்போதும் வாடிய முகத்தோடு இந்த பூமியில் உலா வருவது முற்றிலும் பொறுப்பற்ற செயல். </p><p>வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தோடு இருப்பது என்பது பொறுப்பான மற்றும் சரியான செயலாற்றும் நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் எப்போது விளையாட்டுத்தனத்தோடு இருக்கிறீர்களோ, அப்போதுதான் உங்களால் எல்லாவற்றின் மீதும் முழு கவனம் செலுத்த முடியும். இந்த குணமிருந்தால் மட்டுமே, உலகில் நடக்கும் எல்லாவற்றிற்கும் உங்களால் உண்மையாக பதில்வினை ஆற்ற முடியும். இல்லையென்றால், வாழ்க்கையின் பாரமே உங்களை அழுத்திவிடும்." எனக் கூறியுள்ளார்.</p><p>கிராமப்புற முன்னேற்றம் மற்றும் அங்குள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட முன்னணி நிறுவனங்கள், இந்த ஈஷா கிராமோத்சவம் 2026-க்கு தங்களது ஆதரவை வழங்குகின்றன. </p><p>இதில் கிராஸ்ரூட் பார்ட்னராக பிரைம் வாலிபால் ‘சென்னை பிளிட்ஸ்’ அணி, மொபிலிட்டி பார்ட்னராக ‘கிராவ்டன் மோட்டார்ஸ்’, ஸ்போர்ட்ஸ் &amp; எக்விப்மென்ட் பார்ட்னராக ‘நிவியா ஸ்போர்ட்ஸ்’, ஆதரவு பார்ட்னராக ‘டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ்’, ஆன்-கிரவுண்ட் சப்போர்ட் பார்ட்னராக ‘வொண்டர் சிமெண்ட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. சிஎஸ்ஆர் பார்ட்னர்களாக ‘சிஜி பவர்’, ‘வரீந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’, ‘ராயல் இன்ஃப்ரா கான்ஸ்ட்ரக்ஷன்’ மற்றும் ‘அகிலிசியம் கன்சல்டிங்’ ஆகிய நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.</p><p>ஈஷா கிராமோத்சவம் 2026-க்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தகுதியுள்ள கிராமப்புற வீரர்கள் <a href="https://ishagramotsavam.sadhguru.org/">ishagramotsavam.sadhguru.org</a> என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 83000 30999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-july-2026#comments</comments><guid isPermaLink="false">b15702b0-04b5-4c16-acc1-8fc7df5584b1</guid><pubDate>Wed, 29 Jul 2026 04:49:34 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:20:01.181Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/g9qg65my/WhatsApp-Image-2026-07-29-at-12.26.56-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/bypoll-campaigning-in-bihar-mp-and-gujarat-ends-with-last-minute-rallies">பீகார், ம.பி., குஜராத்தில் நாளை சட்டசபை இடைத்தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்</a></p><p>* பீகாரின் பங்கிப்பூரில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.</p><p>* 3 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.</p> <h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arun-raaj-sharp-reply-to-dmk-leader-mk-stalin-super-speciality-medical-seats">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது- மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி</a></h2><p>* த.வெ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.</p><figure><img alt="திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் அருண் ராஜ்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f1m52o7k/MKStalinArunraj.jpg" /></figure> <p>* தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-cjp-protest-case-bihar-man-claims-he-was-booked-despite-being-in-russia-for-four-months">நீட் போராட்டம் வழக்கு: ரஷியாவில் இருக்கும் என் மீது எப்.ஐ.ஆர்.- பீகாரை சேர்ந்தவரின் வீடியோவால் காவல்துறை அதிர்ச்சி</a></p><p>* பீகார் மாநிலத்தில் 25-ந்தேதி போராட்டம் தொடர்பாக 694 பேரை கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மைனர் ஆவார்கள்.</p><p>* போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/justin-greaves-sets-new-cricket-bowling-record-with-five-wicket-maiden">டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு அரிய சாதனை படைத்த வெஸ்ட் ஜஸ்டின் கிரீவ்ஸ்</a></p><p>* 11 ஓவரில் வெறும் 27 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.</p><p>* அந்த 5 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக 5 மெய்டன் ஓவர்கள் வீசி எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore">சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</a></p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>* இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-urges-end-to-attacks-on-ships-in-hormuz-strait-at-un-security-council" rel="nofollow">ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்..!- ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறுத்தல்</a></p><p>* சிறிய அமைதிக்கு பிறகு, தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியது மிகவும் கவலையளிக்கிறது.</p><p>*  ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களில் பல இந்தியர்கள் காயமடைந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sooryavanshi-takes-big-strides-in-t20i-rankings">ஐசிசி டி20 தரவரிசை: ஜெட் வேகத்தில் உச்சம் தொட்ட சூர்யவன்ஷி</a></p><p>* ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.</p><p>* நியூசிலாந்தின் டேரில் மிட்செல் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train">மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் முதலமைச்சர் விஜய்...</a></p><p>* சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</p><p>* முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs">அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்</a></p><p>* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p><p>* முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/black-sea-ukraine-port-attack-indian-sailors-trapped" rel="nofollow">உக்ரைன் துறைமுகத்தில் தாக்குதல்- கப்பலில் 13 இந்திய மாலுமிகள் தவிப்பு</a></p><p>*  இந்திய மாலுமிகள் எளிதில் தாக்கப்படக்கூடிய இலக்குகளாக விடப்படக்கூடாது. </p><p>* விரைவாக  நாடு திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/hs-prannoy-enter-second-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தருண் மன்னேபள்ளி வெற்றி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/venus-williams-lose-first-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/west-indies-beat-pakistan-in-90-runs-in-first-test">டிரினிடாட் டெஸ்ட்: 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்</a></p><p>* 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்ஸ்க்கு வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-re-elected-as-pmk-president">பா.ம.க. தலைவராக அன்புமணி மீண்டும் தேர்வு</a></p><p>* பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளில் அன்புமணி அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். </p><p>* மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector">டாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - தமிழ்நாடு அரசு ஆலோசனை</a></p><p>* தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. </p><p>* மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter">மேகதாது அணை விவகாரம்: அரசியல் சாயம் பூசுவதை தவிர்த்து ஒன்றிணைவோம்! - மாணிக்கம் தாகூர்</a></p><p>* தமிழகத்திற்கு பாஜ.க. அரசு செய்த மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>* ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-fir-against-youtubers-over-defamation-of-seeman">சீமான் குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அதிரடி உத்தர... </a></p><p>*சீமான் குறித்து இவ்வளவு கொச்சையாகப் பேசியும் காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சம் காட்டுகிறது.</p><p>* வழக்குத் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/respect-the-power-of-youth-rahul-gandhi-speech-in-lok-sabha" rel="nofollow">இளைஞர்களின் சக்திக்கு மரியாதை கொடுங்கள்..!- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சு</a></p><p>* என்னை எதிர்கொள்ள அமித்ஷாவுக்கு துணிச்சல் இல்லை.</p><p>* மக்களவையில் முட்டாள்கள் என்ற வார்த்தையை ராகுல்காந்தி பேசியதற்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-tragedy-75-dead">அசாம் வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 75 ஆக உயர்வு!</a></p><p>* 81 நிவாரண முகாம்களில் 32,477 பேர் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்</p><p>* உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 9 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-likely-chance-join-to-tvk">த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க.வில் விழும் முதல் விக்கெட்?</a></p><p>* 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடைபெற்று வருகி்னறன. </p><p>* 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-student-protest-opposition-uproar-in-parliament-jp-nadda-sharp-response">டெல்லி மாணவர் போராட்டம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-ஜே.பி. நட்டா காரசார பதில்!...</a></p><p>*காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாட்டின் "ஜனநாயகமும் மக்களும் பாதுகாப்பாக இல்லை" என்று குற்றம் சாட்டினார். </p><p>*செயல்பாட்டாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்" என்று வாதிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-vijay-on-army-to-protect-women-from-tvk-officials">தவெக நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை காக்க எந்தப் படையை அமைக்கப் போகிறார் விஜய்? - நயினார் நாகேந்திரன்</a></p><p>* மேற்கு மாவட்டச் செயலாளர்  விஜய் மோகன் மீது, இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார்கள் கடும் அதிர்ச்சி.</p><p>* சட்டரீதியான மற்றும் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-senthil-balaji">டாஸ்மாக் நிதி முறைகேடு - செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு?</a></p><p>* புதிய அரசு டாஸ்மாக் வருவாயில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய செயல்பாட்டைத் தொடங்குமாறு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கரூரில் செந்தில் பாலாஜி வீடு, நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students">அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் சிக்கன் பிரியாணி- முதலமைச்சர் விஜய் பரிசீலனை</a></p><p>* உடற்கல்வி, ஓவியம் கணினி அறிவியல் மற்றும் தையல் உள்ளிட்ட பாடங்களில் மொத்தம் 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.</p><p>* சங்கங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை மனுக்களை பிரத்தியேக சாப்ட்வேர் மூலம் பதிவேற்றம் செய்து டிஜிட்டல் மயமாக்கப்படும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்</a></p><p>* எதிர்கால தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்.</p><p>* லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/massive-earthquake-in-japan-death-toll-rises-to-13">ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!... </a></p><p>*நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது.</p><p>*கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/commonwealth-games-president-murmu-congratulates-silver-medalists-kulveer-singh-harjinder-kaur">காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</a></p><p>*குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.</p><p>*குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dvac-raid-at-41-locations-across-tamil-nadu">தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை</a></p><p>தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/privatizing-liquor-shops-will-only-increase-alcohol-abuse-anbumani" rel="nofollow">மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி</a></p><p>* மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.</p><p>* தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-nature-aligned-culture-drives-tiger-protection" rel="nofollow">இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி</a></p><p>* உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.</p><p>* மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/verification-of-evm-for-kolathur-constituency-has-begun">கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது</a></p><p>* மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். </p><p>* ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/southwest-monsoon-16-percent-deficit-in-tamil-nadu">தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு</a></p><p>* நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.</p><p>* அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vigilance-raid-senthil-balajis-karur-residence">கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை</a></p><p>* செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.</p><p>* செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mumbai-popular-clubs-licenses-cancelled-health-violations-food-safety-action">மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!... </a></p><p>*உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.</p><p>*பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-russia-sanctions-bill-risk-100-percent-tariffs-on-india-china">அமெரிக்க செனட் சபையில் ரஷியா மீதான தடைகள் மசோதா: இந்தியா, சீனாவிற்கு 100% வரி விதிக்கும் அபாயம்!... </a></p><p>*அமெரிக்க செனட் சபையில் (Senate) ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.</p><p>* ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/paid-menstrual-leave-for-women-high-court-orders-interim-report-to-government">பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!... </a></p><p>*இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p>*கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dharmendra-pradhan-quits-over-neet-gets-rousing-odisha-reception">தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!... </a></p><p>*தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>*பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/police-open-fire-in-pakistan-occupied-kashmir-20-killed-50-injured">பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!... </a></p><p>**காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. </p><p>*பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/postal-charges-to-change-from-the-1st">தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு</a></p><p>* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.</p><p>* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘இன்னும் சில மாதங்களில் ஆந்திராவிலும் பா.ம.க.’ - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-to-expand-to-andhra-pradesh-in-a-few-months-anbumani-ramadoss-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-to-expand-to-andhra-pradesh-in-a-few-months-anbumani-ramadoss-announces#comments</comments><guid isPermaLink="false">64760120-7592-40f2-ba5d-01628483b5e5</guid><pubDate>Wed, 29 Jul 2026 13:11:22 +0000</pubDate><atom:updated>2026-07-29T13:11:22.918Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Andhra,ஆந்திரா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/oab261tb/New-Project-2026-07-29T184057.919.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இன்னும் சில மாதங்களில் ஆந்திராவிலும் பா.ம.க.’ - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/oab261tb/New-Project-2026-07-29T184057.919.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆந்திராவிலும் பாமக தொடங்கப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர்., </p><p>“100 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால், அதற்கு முழு காரணம் ராமதாஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான். இதை சாதி கணக்கெடுப்பு என புரியாதவர்கள் பேசுகிறார்கள். இதை எடுத்தால்தான் தமிழ்நாடு முன்னேறும். அதுதான் நமது இலக்கு. </p><p>2031-ல் பாமக ஆட்சி வரவேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் நம்மால் வெற்றிப்பெற முடியவில்லை. ஆனாலும் தேர்தல் முடிந்து தலைநிமிர்ந்து நின்றுக் கொண்டிருக்கிறோம். மற்ற கட்சிகள் துவண்டு விட்டன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முதலில் குரல் கொடுப்பது பாமகதான்.</p><p>அனுபவம் இல்லாத தவெக அரசுக்கு நாம் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி வருகிறோம். எனக்கு ஈகோ இல்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.</p><p>இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். மக்கள் அங்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக வேலை நடந்துவருகிறது. வருகின்ற சனிக்கிழமை பனையூரில் ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் வருகிறார்கள். அடுத்தக் கட்டத்திற்கு இதனை நாம் எடுத்து செல்லவேண்டும். இதற்கு காரணம் நீங்கள்தான். நம் கொள்கைகள்தான் நமது பலம்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது- மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arun-raaj-sharp-reply-to-dmk-leader-mk-stalin-super-speciality-medical-seats</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arun-raaj-sharp-reply-to-dmk-leader-mk-stalin-super-speciality-medical-seats#comments</comments><guid isPermaLink="false">2a89596a-8e42-4e2a-b53e-d71943634b8a</guid><pubDate>Wed, 29 Jul 2026 12:33:47 +0000</pubDate><atom:updated>2026-07-29T12:33:47.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arun Raj,MK Stalin,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f1m52o7k/MKStalinArunraj.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் அருண் ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/f1m52o7k/MKStalinArunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் அருண் ராஜ் விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தி.மு.க ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தவெக அரசு.</p><h2>முதலைக் கண்ணீர் வடிக்கும் மு.க. ஸ்டாலின்</h2><p>கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு (Super Speciality) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.</p><p>கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு (All India Quota) ஒப்படைக்கப்பட்டன. </p><p>அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை (Cut-off) குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் (All India merit list) மூலம் நிரப்பி வந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><h2>2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் ஒப்படைப்பு</h2><p>குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும்.</p><p>அன்று நீங்கள் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் முதல்வரின் தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டதன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள்.</p><h2>இந்த ஆண்டு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள்</h2><p>இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது.</p><h2>தமிழ்நாட்டிற்கு சிறப்புமிக்க தீர்ப்பு</h2><p>த.வெ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.</p><p>தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர். </p><h2>உச்சநீதிமன்றத்தின் 28.07.2026 தேதியிட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்:-</h2><p>நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ (Super Speciality) இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் (Cut-off) அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>மிக முக்கிய சட்டப் பாதுகாப்பு</h2><p>ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.</p><p>முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.</p><p>தமிழ்நடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒருபடி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><h2>முன்னதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,</h2><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. (https://x.com/pwilsondmk/status/2082283128262180919)</p><p>ஆனால் இன்றோ, மருத்துவப்படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு. உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்</p><p>* தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p> <p>* மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>* நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>* அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p>* தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>* 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? </p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trust-not-considered-personal-property-election-case-against-mk-stalin-quashed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trust-not-considered-personal-property-election-case-against-mk-stalin-quashed#comments</comments><guid isPermaLink="false">c1aee5ce-7a78-4816-acb2-85e3b5d92644</guid><pubDate>Wed, 29 Jul 2026 11:34:00 +0000</pubDate><atom:updated>2026-07-29T11:34:00.722Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2zduko5q/New-Project-2026-07-29T170331.463.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அறக்கட்டளை தனிப்பட்ட சொத்தாக கருதப்படாது: மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/2zduko5q/New-Project-2026-07-29T170331.463.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், அவர் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை தொடர்பான சில விவரங்களை மறைத்ததாக, </p><p>அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட, தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் டி. சிவஞானசம்பந்தம் (73) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.</p><p>இதுகுறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது வேட்புமனுவில் வேட்பாளரின் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்தாகக் கருதப்படாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். </p><p>மேலும், அந்த சொத்துக்களில் மு.க.ஸ்டாலினுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஆதாயமும் அல்லது சம்பந்தமும் இருக்கிறது என்பதை நிரூபிக்க மனுதாரர் தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், இத்தகைய புகார்களுக்குத் தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது என்றும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகாரே தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து தனது மனுவை வாபஸ் பெறுவதாக சிவஞானசம்பந்தம் தெரிவித்தார். </p><p>இதனையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட திட்டம்: அமைச்சர் என்.ஆனந்த் நடவடிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-to-introduce-tourist-boats-in-the-pallikaranai-narayana-puram-lake</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-to-introduce-tourist-boats-in-the-pallikaranai-narayana-puram-lake#comments</comments><guid isPermaLink="false">d7366c4c-0042-4530-b270-6c31cd36cecf</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:28:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:28:45.088Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bussy Anand,புஸ்சி ஆனந்த்,Pallikaranai,பள்ளிக்கரணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ioaszjp4/bussy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/ioaszjp4/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். </aside><p>முதலமைச்சர் விஜய் உத்தரவுப்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>அந்த வகையில் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியினை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் இன்று தொடங்கி வைத்து ராட்சத பொக்லைன் எந்திரத்தில் ஏரிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள், மிதவை தாவரங்கள் மற்றும் மிதவை பொருட்கள் படர்ந்து நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.</p><p>இதே நிலை தொடர்ந்தால் பருவமழை தொடங்கும் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே கடந்த மழை காலங்களில் நாராயண புரம் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு  சுற்றி உள்ள பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. </p><p>எனவே கடந்த காலங்களில் நடந்தது போல் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியை மழைக் காலத்திற்கு முன்பு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி நாராயணபுரம் ஏரியை முற்றிலும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா படகு விடுவதற்கு அதிகாரிகளுடன் அமைச்சர் என்.ஆனந்த் ஆலோசனை நடத்தினார். இது குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தி அவரது உத்தரவுப்படி நாராயணபுரம் ஏரியில் சுற்றுலா படகு விட ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். </p><h2><strong>வேளச்சேரி ஏரி</strong></h2><p>அடுத்ததாக வேளச்சேரி ஏரியினை தூர்வாரும் பணியினை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு நடத்தினார். வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, வேளச்சேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, மிதக்கும் பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி மழைக்காலங்களில் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படவுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்னர் வெள்ள முன்னெச்சரிக்கை பணியாக, திட்டமிடப்பட்டு முடிக்க என்.ஆனந்த் தூர்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, கள ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.</p> <p>இதில் அமைச்சரும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான குமார், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, தெற்கு வட்டார துணை ஆணையாளர்  ஆப்தாப் ரசூல், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியளார் மற்றும் தலைமைப் பொறி யாளர் (பொது), கோபால கிருஷ்ணன்,  சென்னை மண்டல தலைமை பொறி யளார் ஜானகி, பாலாறு வடிநில வட்டம் கண் காணிப்பு பொறியாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்: ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-decided-to-provide-loans-worth-rs-7000-crore#comments</comments><guid isPermaLink="false">2becb775-6771-4523-8502-586826f5239f</guid><pubDate>Wed, 29 Jul 2026 10:16:12 +0000</pubDate><atom:updated>2026-07-29T10:16:12.130Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/vh3ytw33/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</aside><h2><strong>ஆலோசனை</strong></h2><p>தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர் விஜய்</a> தலைமையில் ஆய்வு கூட்டம் தினமும் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் கூட்டுறவு துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகள் மேம்பாடு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். </p><h2><strong>கூட்டுறவு துறை முடிவு</strong> </h2><p>இதனைத் தொடர்ந்து, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சிங்கப் பெண்கள் மேம்பாட்டு திட்டம்’ என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த சமூகத்தினர் தொழில் தொடங்குவதற்காக, தொழில் முனைவோர் கடன்களை வழங்க, கூட்டுறவு துறை முடிவு செய்து உள்ளது. </p><p>இதற்காக இந்த ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக  முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் இளம்பெண்கள், நலிவடைந்த பிரிவினருக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்கும் அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பல வகையான கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO: மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-travelling-metro-train#comments</comments><guid isPermaLink="false">064f7579-92e2-4eda-90d2-583da9c7d502</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:51:31 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:51:31.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Metro Train,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/4ysifqav/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார்.</aside><h2><strong>ஆய்வு</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை மாநகரில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை 4 மணி அளவில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளார்.</p><p>இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் புறப்பட்டு அண்ணாசாலை வந்த முதலமைச்சர் விஜய் ஓமந்தூரார் மெட்ரோ ரெயில் நிலையம் சென்று மெட்ரோவில் பயணம் செய்தார். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையம் வரை பயணம் செய்யும் அவர் அங்கு இறங்கி மெட்ரோ ரெயில் தலைமையகம் மற்றும் கட்டுப்பாடு மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.</p><p>அதன்பிறகு அங்கிருந்து காரில் ஏறி கிண்டி கத்திப்பாரா செல்கிறார். அங்கு பூந்தமல்லி ரோட்டில் நடைபெறும் மெட்ரோ கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.</p><h2><strong>ஆளில்லா மெட்ரோ ரெயில்</strong></h2><p>பின்னர் அங்கிருந்து காரில் போரூர் செல்கிறார். சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட வழித்தடமான போரூர்-பூந்தமல்லி இடையிலான ஆளில்லா மெட்ரோ ரெயிலில் ஏறி பூந்தமல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆளில்லா ரெயிலில் போரூர் வரை பயணிக்கிறார். போரூரில் இறங்கி கார் மூலம் வீட்டுக்கு திரும்புகிறார்.</p> <h2><strong>பாதுகாப்பு</strong></h2><p>முதலமைச்சர் விஜய் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Chief Minister C. Joseph Vijay purchased a ticket to travel on the Chennai Metro Rail. <a href="https://t.co/Mj9hm8jQUn">pic.twitter.com/Mj9hm8jQUn</a></p>&mdash; TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) <a href="https://x.com/TVKWarriorsHQ/status/2082406872175489127?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>அரசு வேலைக்கு தேர்வான 126 பேருக்கு பணி நியமன ஆணைகள் - முதலமைச்சர் விஜய் வழங்கினார்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-handed-over-appointment-orders-to-126-individuals-selected-for-government-jobs#comments</comments><guid isPermaLink="false">2a49bc42-3545-45b8-8efb-667f5fdaee54</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:31:08 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:31:08.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,விஜய்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/bewdw12s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தலைமைச் செயலகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicke%E0%AE%AFn-biryani-with-nutritious-meal-for-government-school-students">முதலமைச்சர் விஜய்</a> இன்று மனித வள மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணி இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</a> மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  </p> <p>மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். </p><h2>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்</h2><p>அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் முதலமைச்சர் விஜய் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். </p> <p>நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>துணிக்கடையில் கைவரிசை - ‘திரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/theft-clothing-store-three-roses-gang-arrested#comments</comments><guid isPermaLink="false">f63606e9-0215-42f2-afb5-fbef569448c5</guid><pubDate>Wed, 29 Jul 2026 09:13:45 +0000</pubDate><atom:updated>2026-07-29T09:13:45.417Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>robbery,women arrested,திருட்டு கும்பல் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/7vs2ob3q/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>துணிக்கடையில் கைவரிசை காட்டிய 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.</strong></em></p><h2>'த்ரீ ரோஸஸ்’ திருட்டு கும்பல்</h2><p>மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்தது.  இதனால் இவர்களுக்கு ‘த்ரீ ரோஸஸ்’ பெண்கள் திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர். சென்னை மாம்பலத்தில் உள்ள துணிக்கடைகளில் 2 இடங்களில் இந்த கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பியது. இதையடுத்து அந்த பெண்களின் புகைப்படத்தை புதுச்சேரி காவல்துறைக்கு தமிழக, ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர்.</p> <h2>புதுச்சேரியில் திருட்டு</h2><p>இந்த நிலையில் தேடப்பட்டு வந்த இந்த 3 பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இதற்காக மாறுவேடத்தில் துணிக்கடைக்குள் போலீசார் நுழைந்தனர். அங்கு அந்த 3 பெண்களையும் போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். </p><h2>பெண்கள் கைது</h2><p>புதுச்சேரி போலீசார் கைதான 3 பெண்களையும் சென்னை மாம்பலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். </p><p>இதையடுத்து 3 பேரையும் மாம்பலம் போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 100 தூய்மை பணியாளர்கள் பாதிப்பு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-sanitation-workers-affected-after-consuming-sambar-containing-a-fallen-lizard</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-sanitation-workers-affected-after-consuming-sambar-containing-a-fallen-lizard#comments</comments><guid isPermaLink="false">71c4017b-c60c-48ae-872e-f9574e4ee9f3</guid><pubDate>Wed, 29 Jul 2026 08:55:01 +0000</pubDate><atom:updated>2026-07-29T08:55:01.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆவடி மாநகராட்சி,lizard,Avadi Corporation,தூய்மை பணியாளர்கள்,பல்லி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/i351zipj/avadi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சாம்பாரில் கிடந்த இறந்து கிடந்த பல்லி]]></media:title><media:description type="html"><![CDATA[ சாம்பாரில் கிடந்த இறந்து கிடந்த பல்லி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/i351zipj/avadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.</aside><h2><strong>உணவு தயாரிப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ஆவடி-மாநகராட்சி">ஆவடி மாநகராட்சி</a> சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு ஆவடி சின்னம்மன் கோவில் அருகே தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>இன்று காலை 7 மணி அளவில் தயார் செய்யப்பட்ட உணவு அந்தந்த மண்டல அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர் உணவு அருந்தும் அறைக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநகராட்சி மண்டலம் 3-ல் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் உணவு வழங்கப்பட்டது.</p><h2><strong>பல்லி</strong></h2><p>அப்போது சாம்பாரில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது. இதனை சாப்பிட்ட தூய்மை பணியாளர்களுக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>இதையடுத்து உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வாகனத்தின் மூலம் ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.  இதில் மிகவும்  உடல் நலம் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் வசந்தா (50), எமிலி (50), குமார் (40), விஜயலட்சுமி (50) ஆகியோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு லேசான பாதிப்பு இருந்ததால் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர்.</p><p>இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பார் மற்றும் உணவுகளை ஆய்வு செய்தனர். </p><p>இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும் போது, கடந்த சிலநாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு தயாரிக்கும் உணவு சுகாதாரமாக இல்லை. உணவில் அடிக்கடி பூச்சிகள் கிடக்கின்றன. மேலும் சாப்பாடு சரிவர வேக வைக்காமல் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம்  புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை” என்று குற்றம் சாட்டினர். இது தொடர்பாக ஆவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>