<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 12:09:20 +0000</lastBuildDate><item><title>காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">d9ca7ce2-f075-4138-8c50-3a0ba584b4aa</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:05:04.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna Medals,cm vijay,முதலமைச்சர் விஜய்,அண்ணா பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/medals-awarded-to-193-police-officers-and-employees-chief-minister-mk-stalins-order-788651">அண்ணா பதக்கம்</a> வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>முதலமைச்சர் பதக்கங்கள் </h2><p>தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும்,  பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>180 பேருக்கு அண்ணா பதக்கம் </h2><p>அந்த வகையில், இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும்;</p><p>சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும்,  ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத் தளபதி வரையிலான 5 நபர்களுக்கும்;</p><p>விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும்  தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும், அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். </p><h2>அண்ணா வீரதீர பதக்கம்</h2><p>மேலும், கடந்த மே மாதம் 19-ந்  தேதி அன்று நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை  மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய  நிலையில்,  9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கட லுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். </p><p>இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர்  மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி,  தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து  அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.</p><p>கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு “முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்”  வழங்கிட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.</p><p>மேற்கண்ட பதக்கங்கள், முதலமைச்சர் விஜய்யால் பின்னர் விழாவில் வழங்கப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து நிற்பது அவர்களுக்கான உரிமை சுதந்திரம்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections#comments</comments><guid isPermaLink="false">a9971f49-790a-4b68-8d3f-b2c2999232c5</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:48:12 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:48:12.247Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,சிபிஐ,CPI,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம் உப்பளம் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தமிழக அரசு</a> ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதில் உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ் சண்முகவேல்,சிவாகர்  பால்ராஜ், பாலசுப்ரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் செய்யும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹூண்டாய் தென்கொரிய நிறுவனம் தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.</p><p>கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உப்பள தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>இந்த கோரிக்கையை விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இந்த மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இடதுசாரி கட்சிகள் தொடக்கத்தில் இருந்து த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறி வந்தார்கள். அதன் அடிப்படையில் ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.</p><p>ஆனால் நாங்கள் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்து நிற்போம் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.</p><p>இது அவர்களுக்கான உரிமை சுதந்திரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். இந்த 2 தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம். </p><h2>ஆ.ராசா பேச்சு</h2><p>தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.வின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.</p><p>அவர் இதுபோன்ற உரையை ஆர்ப்பாட்டத்தில் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது தி.மு.க.வுக்கு எதிராக போய் முடியும்.</p><p>அண்மையில் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எங்கள் இயக்கத் தோழர்கள் பேச மாட்டார்கள், அந்த மாண்பு பாதுகாக்கப்படும் பொருளில் பேசி இருந்தார்.</p><p>ஆனால், ஆ.ராசா மற்றும் முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட உரை என்பது முதலமைச்சரையே ஓருமையில் பேசுவது மற்றும் அவர்களின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது  எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் பேச்சாக தெரியவில்லை. </p><p>தி.மு.க. மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains#comments</comments><guid isPermaLink="false">2ba416ed-d7b5-4934-8078-ffa8d8e8fcf9</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:36:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:36:16.527Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,communists,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்,M Veerapandian,மு வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் தங்களின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">வீரபாண்டியன்</a> விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்;</p><h2>வாக்குறுதி </h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் இடது சாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். த.வெ.க. அரசுக்கு ஆதரவு நிலை நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.  </p><p>ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட வேண்டும். </p><p>அதற்காக வெளியில் இருந்து ஆதரவு தருகின்றோம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசு  என்னென்ன வாக்குறுதிகளை தருவதாக கூறியிருந்ததோ, அதனை நிறைவேற்ற வேண்டும்.</p><p>ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று  எம்.எல்.ஏ.வாக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு  மற்றொரு கட்சியில் இணைந்து செயல்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. </p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>அ.தி.மு.க.வில் வெற்றி  பெற்றவர்கள்   ராஜிநாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்தது தவறு என்பதை நாங்கள் ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. </p><p>அதனால் ஏற்பட்டுள்ள அந்த காலி இடத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில்  த.வெ.க.வை ஆதரித்தால் தவறான  முன் உதாரணமாக மாறிவிடும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். </p><p>மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை  கூட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் தனித்துப் போட்டியிடு கின்றோம். </p><p>இடைத்தேர்தல் பிரசாரத்தை, அரசியல் பிரசார களமாக பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். </p><h2>மக்கள் குரல்</h2><p>மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை   இந்த அரசு செயல்படுத்த வேண்டும், தமிழ்நாடு திட்டங்களுக்கு   முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்வது போன்றவை இந்த தேர்தல் பிரசாரத்தின் மையமாக அமையும்.  </p><p>மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு குரலாக எங்கள் பிரச்சார வியூகம் இருக்கும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மட்டுமல்ல.  நல்ல விஷயங்களை எடுத்து சொல்வோம். </p><p>த.வெ.க. அரசு தவறான முடிவுகளை எடுத்தால் அதனை கண்டிப்போம். பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களை  தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது போன்ற நல்ல விஷயங்களை வரவேற்கின்றோம்.  </p><p>இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடை பெறுகிறது. அதில் எங்கள் இரு கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிப்போம். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளை தொடங்குவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் தவெகவுக்கு பின்னடைவு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">c81dc6be-af3d-4621-9450-b906c85cd20b</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:12:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:12:24.257Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்,communist parties,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்ட் கட்சிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் த.வெ.க.வுக்கு பின்னடைவு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து வேலூரில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார். </p><p>தமிழ்நாட்டை பொறுத்த வரையில், மத நல்லிணக்கம் நிறைந்த நாடு. ஜாதி, மத பாகுபாடு இன்றி இந்த அரசு இயங்கி வருகிறது.</p><p>எல்லோரும் சமம் என்ற அடிப்படையில், அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>2 இயக்கங்களும் தேவையில்லை. ஒரு புதிய ஆட்சி வேண்டும், மலர வேண்டும் என்று பெண்களும், இளைஞர்களும் நல்ல மனது கொண்ட அத்தனை பேரும் ஆதரவின் அடிப்படையில், இன்று சிறந்த ஆட்சி தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார்.</p><p>நிலவரி இங்கு அமலில் இல்லை. நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய் துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் 1500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஆட்சியைப் போல் அல்லாமல் அனை வருக்கும் விரைந்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>வெறும் பட்டா என்று காகித அளவில் இல்லாமல், இடத்தை தேர்வு செய்து எல்லை கல் அமைத்த பிறகுதான் பட்டா வழங்குகிறோம்.</p><p>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர். கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா..?- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case#comments</comments><guid isPermaLink="false">f41a5c23-b227-4e1b-91a9-ebf046002fb8</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:41:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:41:05.189Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,மாணவன் மரணம்,kanimpzhi mp</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.</p><p>உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘கல்வியே கடவுள்’, ‘போய் படிடா தம்பி’ வாசகங்களுடன் அசத்தும் வினோத விநாயகர் சிலை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue#comments</comments><guid isPermaLink="false">3754dbdf-eb8f-4fd1-aecc-b1895194bc5a</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:23:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:23:19.363Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vinayagar idol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு விழாவையொட்டித் தமிழகத்தின் பல பகுதிகளில் விதவிதமான மற்றும் வினோதமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். சினிமா, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, நடப்புச் சூழலுக்கு ஏதுவாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விநாயகர் சிலை ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p><h2><strong>கல்வியின் அவசிய</strong>ம் </h2><p>சென்னை மணலி பெரியதோப்பு பகுதியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கைகளில் புத்தகங்கள் ஏந்தியவாறும், வழிபாட்டுடன் சேர்த்துப் படிப்பே வாழ்வின் மிக முக்கிய தெய்வம் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘கல்வியே தெய்வம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், செல்போன் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடும் இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பும் வகையில் ‘போய் படிடா தம்பி’ என்ற சுவாரஸ்யமான அறிவுரை வாசகமும் விநாயகர் சிலையின் பீடத்திலும் பின்புறத்திலும் இடம்பெற்றுள்ளது.</p><p>பக்தியோடு சேர்த்து இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை அப்பகுதி மக்களும், குறிப்பாக மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்சிலையின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுபோன்ற அர்த்தமுள்ள விழிப்புணர்வு சிலைகளே இக்காலத்திற்குத் தேவை" எனக் கருத்து தெரிவித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாவடக்கம் தேவை, இல்லையெனில் மக்கள் ஓரங்கட்டுவார்கள்..!- தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">ac5c6079-bc91-45e9-82ff-49b2665d8677</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:06:05.268Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் அவர்களைப் பற்றி திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் தரக்குறைவான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.</p><p>ஆனால், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் அரசியல் நாகரிகமாகாது.</p><p>‘பாரம்பரிய கட்சி’ என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுக, தனது அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அந்தப் பாரம்பரியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டாமா?</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயக அரசியலின் அடிப்படை என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். ஒருவரை விமர்சிக்கும்போது அவரது பதவிக்கும், தனிப்பட்ட மரியாதைக்கும் மதிப்பளிக்க வேண்டும்.</p><p>குறிப்பாக, பெண்களை மதிப்போம் என்று பேசும் அரசியல் கட்சியினர், பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் எந்த அளவுக்கு தரக்குறைவாக இருக்கின்றன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல. உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, பொதுவெளியில் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது எந்த வகையான அரசியல் பண்பாடு என்பதை திமுக தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே மதிக்காமல் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும். அரசியல் விமர்சனங்கள் மக்கள் பிரச்சினைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p>நாவடக்கம் தேவை. இல்லையெனில், மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தேர்தல் மூலம் மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>தொடர்ந்து அவதூறான மற்றும் மரியாதைக்குறைவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டால், மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நிலை விரைவில் உருவாகும்.</p><p>எனவே, தனிநபர் தாக்குதலையே அரசியலாகக் கருதும் போக்கை திமுக கைவிட்டு, மக்கள் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும்.</p><p>அரசியல் நாகரிகத்தை காப்பதும், ஜனநாயக மாண்பை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பொறுப்பு என்பதை திமுக தலைமை உணர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns#comments</comments><guid isPermaLink="false">b347ee35-e430-4806-83f0-5f637437f50a</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:41:01 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:41:01.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>periyar,உதயநிதிஸ்டாலின்,UdayanidhiStalin,பெரியார்</media:keywords><media:content height="270" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோட்டில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளான செப்.17 அன்று, விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். திராவிடர் கழகம் சார்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்படும்.</p><p>இந்நிலயில் இந்தாண்டு இந்த பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் இந்து முன்னணியினர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தை காரணம் காட்டி, ஈரோடு காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. </p><p>இந்த அனுமதி மறுப்பு விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day">பேரறிஞர் அண்ணா</a> பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><h2>யாருக்காக இந்த மடைமாற்றம்?</h2><p>முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian">பெரியார்</a>, அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p>பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? </p><h2>காவி எஜமானர்கள்</h2><p>காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கீழ் சென்றுவிட்டதா? </p><p>பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:27:37.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission">ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3ஆம் அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி!</a><br><br>*இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல.</p><p>*திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe">பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம் </a><br></p><p>*அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.</p><p>* இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed">ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்</a><br><br>*41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p><p>*இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்... </a></p><p>*பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>* கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead">மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</a><br></p><p>*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan"><br></a>*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother">22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!... </a></p><p>*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.</p><p>*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!... </a></p><p>*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்... </a></p><p>* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். </p><p>* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate">ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!...</a></p><p>*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet">முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...</a></p><p>*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p>]]></content:encoded></item><item><title>ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3வது அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission#comments</comments><guid isPermaLink="false">e1af1315-61fb-47c6-8f7b-b3175627a547</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:24:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:24:43.828Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கனிமொழி,மு.க. ஸ்டாலின்,இந்தியா கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தேசிய அளவில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.</p> <p>தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைத்து <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p>108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இரு இடதுசாரி கட்சிகள் ஆதரவில் ஆட்சி நடத்தி வருகிறது. </p><p>தங்கள் பக்கம் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட மேற்கூறிய கட்சிகள் தவெக வசம் சென்றதால், திமுக கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக தேசிய அரசியலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் பயணித்த திமுக தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் உள்ளது. </p><p>2029 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. </p> <h2>மூன்றாம் அணி</h2><p>எனவே பாஜகவின் என்டிஏ, காங்கிரசின் இந்தியா கூட்டணியை தவிர்த்து மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடொன்று அதிகம் ஒட்டாமலேயே இருந்து வருகின்றன. </p><p>ஜம்மு காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் சிவசேனா, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா என இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அதிகம் காங்கிரசோடு இணக்கம் காட்டாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்தி பூத்தாற்போலவே இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கிறது.</p> <p>இதுதவிர மேற்கு வங்கத்தில் தோல்வியுற்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கம்பேக் கொடுக்க காத்து கிடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தோற்றதனால் தேசிய அரசியலில் மம்தா கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் வெளியான செய்தியும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. </p><p>மம்தாவுக்கு காங்கிரஸ் எப்போதுமே வேப்பங்காய் தான். அதேபோல் கேரளாவில் தோல்வியை சந்தித்த பினராயி விஜயனின் சிபிஐஎம் அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரசுக்கு எப்போதும் எதிரணியே. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதுவும் காங்கிரஸ் - பாஜக இரண்டுக்கும் ஆகாது.</p><h2>ஸ்டாலின் பிளான்</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">ஸ்டாலின் </a>தமிழக முதல்வராக இருந்தபோது இந்தியா கூட்டணியில் முக்கியஸ்தராக செயல்பட்டார். அதேநேரம் பினராயி விஜயன், மம்தா பானர்ஜியோடும் நல்ல உறவை பேணினார். மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆகியோரும் ஸ்டாலினுக்கு நெருக்கம்.</p><p>அதுபோல கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.</p><p>திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றவுடன் காங்கிரஸ் அத்துக்கொண்டு சென்றதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல" என எக்ஸ்சில் பதிவிட்டிருந்தார்.</p><p>இவ்வாறு முதல்வராக இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் ஒரு முகத்தை சம்பாதித்து வைத்துள்ளார். தற்போது காலமும் காட்சியும் மாறிய சூழலில் அதுவே அவருக்கு கை கொடுக்கிறது.</p> <h2>கனிமொழி தூது</h2><p>தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியதுதான் தற்போதைய டாக்.</p><p>மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.</p> <p>தொகுதி மறுவரையரை, மூன்றாவது அணி உருவாக்குவது ஆகியவை குறித்து கனிமொழி தாக்கரேவிடம் பேசியதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.</p><p>அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷின் மனைவியான மக்களவை எம்.பி., டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார். அடுத்ததாக மம்தா பானர்ஜியையும் சந்திக்க உள்ளார்.</p> <h2>திமுக தலைமையில் டீம்</h2><p>இதன்மூலம் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளையும், என்டிஏ - இந்தியா கூட்டணி என இரண்டிலும் இல்லாமல் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் அணி போடுவதே திமுகவின் மாஸ்டர் பிளான் என அரசியல் நோக்கர்கள் நினைக்கின்றனர்.</p><p>இதற்கான அச்சாரமே கனிமொழி மேற்கொண்ட சந்திப்புகள் எனலாம். இது தேசிய அளவில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் முதலமைச்சர் விஜய்-அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள் - புகைப்படங்கள் வைரல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral#comments</comments><guid isPermaLink="false">525f1482-7caa-4df6-8280-988c00fc7488</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:25:14 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:25:14.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Ajith,முதலமைச்சர் விஜய்,நடிகர் அஜித்,Chief Minister Vijay-,London Car race</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Actor Ajith ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார். </p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><p>இந்த சந்திப்பின்போது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">முதலமைச்சர் விஜய்</a> நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை  வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை  அன்பு பரிசாக வழங்கினார்.</p><p>திரையுலகில் பல ஆண்டுகளாக இருவேறு பாதைகளில் பயணித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜயும் அஜித் குமாரும், வெளிநாட்டில் அதுவும் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வில் சந்தித்து கொண்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் விளையாட்டு தளங்களில் இரு பெரும் பிரபலங்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவித்துக் கொண்ட இந்தக் காட்சி, சர்வதேச அளவில் தமிழர்களின் பெருமையை உயர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year#comments</comments><guid isPermaLink="false">492ce286-4e71-48c9-b385-2a4e311c8fcd</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:22:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:22:38.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,Captain Vijayakanth,தேமுதிக கட்சி,DMDK 22ndYear,Captain Legacy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha - Vijayakanth ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> அக்கட்சியின் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான மடல் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அதில், கட்சியின் வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்ததோடு, மறைந்த தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் லட்சியங்களை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2><strong>ஊழலற்ற நேர்மையான மக்கள் ஆட்சி!</strong></h2><p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான மக்கள் ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சிதான் நமது <a href="https://www.maalaimalar.com/topic/dmdk">தேசிய முற்போக்கு திராவிட கழகம்</a>. </p><p>நமது கழகம் வெற்றிகரமாக 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று பெருமையுடன் 22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தொண்டர்களின் அர்ப்பணிப்பு</strong></h2><p>கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கழகக் கொடியைக் கொண்டு சேர்த்த தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.</p><p>"தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து சாதனை படைத்த நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. </p><p>கட்சியின் தொடக்க மாநாட்டில் சுமார் <strong>28 லட்சம் பேர்</strong> திரண்டு கலந்து கொண்டது இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது" என பிரேமலதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.</p><h2>2026 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற சாதனைகள்!</h2><p>கட்சியின் தற்போதைய அரசியல் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர், முதல் முறையாக இந்த ஆண்டு (2026) நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினரை தே.மு.தி.க. பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். </p><p>அதேபோல், இந்த 2026-ஆம் ஆண்டில் மீண்டும் <strong>விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்</strong> நம்கட்சி வெற்றி பெற்று, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">கேப்டனின் </a>கம்பீரக் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளோம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><h2>தெய்வமாக வாழும் கேப்டன் விஜயகாந்த்!</h2><p>மறைந்த தலைவர் விஜயகாந்த் குறித்து பிரேமலதா விஜயகாந்த் எழுதியுள்ளதாவது:</p><p><br>"என்றென்றும் நமக்குத் துணையாக நின்று நம்மையும் நமது கழகத்தையும் வழிநடத்திய நமது அன்புத் தலைவர், புரட்சிக் கலைஞர் கேப்டனை வணங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவோம்.</p><p>நமது தலைவர் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, இன்று நம்மிடையே தெய்வமாக இருக்கிறார். அவரது புகழும் மனிதநேயமும், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் தமிழக மக்கள் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.</p><p>"கேப்டன் வாழ்ந்தார், இருந்தார், அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்று உருகி எழுதியுள்ளார்.</p><p>தலைவர் எதற்காகக் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே தற்போதைய தே.மு.தி.க. தொண்டர்களின் முதன்மையான கடமை என்று கூறி, அனைவரும் இந்த நன்நாளில் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு பிரேமலதா விஜயகாந்த் தனது கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin#comments</comments><guid isPermaLink="false">c9883d78-843d-42bf-ac4e-8a5edda35216</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:24:18.805Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,M.K.Stalin,மு.க.ஸ்டாலின்,தி.மு.க,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க தலைவர்களின் விவாதங்கள் மேடைப்பேச்சுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழ<strong>னிசாமிக்கு கண்</strong>டனம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a> வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்றும், பொறுப்புள்ள தலைவர்கள் பேசும் பேச்சில் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>தி.மு.க<strong>-வின் அரசியல் கலாசார</strong>ம்</h2><p>தி.மு.க-வினரின் மேடைப் பேச்சுகளை கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார். தி.மு.க-வினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். ஆபாசப் பேச்சுதான் தி.மு.க-வின் DNA. எதிர்கட்சித்தலைவர் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. பேச்சில் சிறிதும் அறமில்லாத ஒருவர் எப்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>கட்சியை <strong>எப்படி ஒழுங்காக வை</strong>த்திருப்பார்?</h2><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காத மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும்?</p><p>தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசு, மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையின்  நீர்வரத்து 8,618 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs#comments</comments><guid isPermaLink="false">f84c0004-5015-404f-81cb-73fb66b9b522</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:20:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:20:02.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,நீர்வரத்து,டெல்டா பாசனம்,Delta Irrigation,Cauvery river,Hogenakkal Water,mettur dam water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்லில் பரிசல் தடை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்லில் </a>நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. </p><p>இன்று சற்று குறைந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லில் வந்து கொண்டிருக்கிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் <a href="https://www.maalaimalar.com/topic/cauvery-water">காவிரி ஆற்றில்</a> பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. </p><p>இந்த தடை தொடர்ந்து 3-வது நாளாக அமலில் உள்ளது.</p><p>தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த தண்ணீர் நேராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு </a>வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 2,495 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 5,227 கன அடியாகவும், மாலையில் 7,598 கன அடியாகவும் அதிகரித்தது.</p><p>இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது. நீர் மட்டம் 88.21 அடியாகவும், நீர் இருப்பு 50.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.</p><p>அணையிலிருந்து காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசன</a> சம்பா சாகுபடிக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள் குவிந்தனர்</h2><p>விடுமுறை நாளான இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். </p><p>மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நின்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p>இதேபோல் மேட்டூர் அணையை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகை தந்தனர். அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு அருகாமையில் உள்ள அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-9</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-9#comments</comments><guid isPermaLink="false">9ebfcaf4-18ee-4643-a875-ac35533abe44</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:11:22 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:11:22.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,கொழுக்கட்டை,உச்சிப்பிள்ளையார்,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ictert92/MALAIKOTTAI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ictert92/MALAIKOTTAI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 150 கிலோ எடையுள்ள மாபெரும் கொழுக்கட்டை தயாரித்து, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ வீதம் படையல் செய்யப்பட்டது. </p><p>திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் எழுந்தருளியுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று மாபெரும் கொழுக்கட்டை நிவேதனம் செய்யப்படுவது வழக்கம்.</p><h2><strong>கொழுக்கட்டை படையல்</strong></h2><p>அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் சமையல் கூடத்தில் 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. இந்த பிரமாண்ட கொழுக்கட்டை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இன்று காலை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ வீதம் கொண்டு செல்லப்பட்டது. தொட்டில் கட்டி சுமந்து செல்லப்பட்ட கொழுக்கட்டையை சுவாமிக்கு படைத்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.</p><h2><strong>பூஜைகள்</strong></h2><p>பூஜைகள் முடிந்த பின்னர், கொழுக்கட்டை பிரசாதமாக உடைக்கப்பட்டு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விநாயக பெருமானுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</p><h2>விநாயகர் சதுர்த்தி விழா</h2><p>முன்னதாக இன்று காலை 4.30 மணிக்கு கண–பதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்ய திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>பிள்ளையார்பட்டி</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.</p> <h2><strong>சிறப்பு அலங்காரம்</strong></h2><p>அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><h2><strong>மோதகம் படையல்</strong></h2><p>அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில் அங்குச தேவரும், சிவனின் அஸ்திர தேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.</p><h2><strong>சாமி தரிசனம்</strong></h2><p>சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு மாவட்டத்தில் 628 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-8#comments</comments><guid isPermaLink="false">ba103ae9-b693-4f3b-91af-941c03f3765e</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:49:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:49:24.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுஇடங்களில் பொதுமக்கள், இந்து அமைப்பினர் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்தனர். இந்த சிலைகள் கடல், ஏரிகள், குளங்களில் கரைக்கப்பட உள்ளன.</p><h2><strong>வழிபாடு</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மொத்தம் 628 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு மேற்பார்வையில், 7 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 25 காவல் ஆய்வாளர்களுடன் மொத்தம் 790 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p><p>மேலும் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழி காட்டி நெரிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது  - திருமாவளவன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">7a550d3c-43ab-4778-8354-ef07a801745a</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:41:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:41:29.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,புதிய தலைமை செயலகம்,New Secretariat,pattinapakkam,பட்டினம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.</p> <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam"> புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம்</h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p> <h2>எதிர்ப்பு</h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance">திருமாவளவன்</a>, “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான்.</p><p>அதேபோன்று, பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை.  </p><p>அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet#comments</comments><guid isPermaLink="false">5c63894d-fb4f-4535-a476-a3c26f51a10a</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:14:55.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idols ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தி </a>விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுப் பூஜிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.</p><p>கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதில், சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாகப் பேசுவது போன்ற பாணியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், தேர்தல் சமயங்களில் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரம் செய்ததை நினைவூட்டும் வகையில் சைக்கிள் ஓட்டுவது போல் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் நடித்த 'கில்லி' படத்தின் பிரபல கபடி காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><h2>ரசிக<strong>ர்க</strong>ள் வரவேற்பு</h2><p>இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க சிலைகளைக் காண அப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். 'விஜய் விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்தச் சிலைகளுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா மற்றும் அரசியலின் தாக்கம் வழிபாட்டு முறைகளிலும் எதிரொலிப்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ad882bdc-39fb-411a-856c-e6b5833e6fa7</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:13:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:13:54.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,cm vijay,முதலமைச்சர் விஜய்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay extends Vinayagar Chaturthi greetings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தியை</a> கொண்டாடும் வகையில் பக்தர் பெருமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தியும் வழிபட்டு வருகின்றனர். </p><p>அந்த வகையில் தமிழகத்தில் விநாயகரை வழிபடும் மக்களுக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><h3><strong>விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p>மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!</p><p>இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு, அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">968dfb94-7717-46c2-a2a2-1085c2a1005c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:00:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:00:20.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிள்ளையார்பட்டி,Pillaiyarpatti,விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று (விநாயகர் சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தமிழகத்தில் இவ்விழா வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டும் விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு இன்று காலையிலேயே மாநிலம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.</p><h2>வழிபாடு</h2><p>குறிப்பாக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புலியகுளம் முந்தி விநாயகர் கோயில், தாமிரபரணி நதிக்கரை உச்சிஷ்ட மகா கணபதி கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டன.</p><p>தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 3,000 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.</p><p>விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் மற்றும் பூ, பழம், வாழை இலை உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar">பொருட்களின் விலை</a>யும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance#comments</comments><guid isPermaLink="false">9d8cec7a-593d-4002-a9e2-24849e5788cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 22:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T22:38:52.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/vck">விடுதலை சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும அவர் கூறினார்.</p><p>சிவகாசியில் வி.சி.க. தலைவர் தொல். <a href="https://www.maalaimalar.com/topic/thirumavalavan">திருமாவளவன்</a> செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, "மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருந்தார். </p><p>ஆனால், தி.மு.க. போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது த.வெ.க.விற்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க.வுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.</p><h2>பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது:</h2><p>நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தி.மு.க.வின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.</p><p>த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். </p><p>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:22:22.912Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed">பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </a></p><p>*இந்த நெடுஞ்சாலை கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p><p>*பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit">இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்</a><br></p><p>*இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை</p><p>* பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series">ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா <br></a></p><p>*36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>* பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days">3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</a> </p><p>*ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>*செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated">என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</a></p><p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்<br></a></p><p>*அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>* அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் <br><br></p>]]></content:encoded></item><item><title>சென்னைக்கு 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/3565-special-government-buses-to-chennai#comments</comments><guid isPermaLink="false">64a35e42-3787-4196-8105-f0b29febb695</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:57:51.970Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,special bus,சிறப்பு பேருந்து,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gk111i9w/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை  கிடைக்கிறது.</p><p>இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால்  அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.</p><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திரு நெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கடந்த வியாழக்கிழமை 585 சிறப்பு பஸ்களும், கடந்த வெள்ளிக்கிழமை 1,255 பஸ்களும், கடந்த 12-ந் தேதி 1,030 பஸ்களும், 13-ந் தேதி  650 பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மேற்கண்ட இந்த நாட்களில் 585 பஸ்களும் இயக்கப்படுகிறது.</p><p>பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p> <p>மாத வரத்தில் இருந்து  கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தலா 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.</p><p>மேலும் 14-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 765 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.</p><h2>சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்</h2><p>தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.</p><p>தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நாளை சென்னைக்கு திரும்ப 2,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p>நாளை மறுநாள் சென்னைக்கு 1,325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கோழைகள்தான் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள்..!- திமுகவிற்கு தவெக பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-cowards-weaponise-obscenity-and-defamation-tvk#comments</comments><guid isPermaLink="false">b6a94ba9-9d39-4134-b801-4b9d641edb16</guid><pubDate>Sun, 13 Sep 2026 15:16:20 +0000</pubDate><atom:updated>2026-09-13T15:16:20.357Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,தவெக ஐடி விங்,TVK It wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xk27xikz/TVK2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான் என்று <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a>வின் கருத்துக்கு கடுமையாக விமர்சித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது.</p><p>தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதபோதுதான் கோழைகள் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள். ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான்.</p><p>மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், தொண்டர்கள் குறித்து எப்போது கொத்தடிமைகள் ஆபாச வசைபாடத் தொடங்கினார்களோ, அப்போதே அவர்களின் அரசியல் தரம் எவ்வளவு கேவலமானது என்பதை உலகுக்குப் பறைசாற்றிவிட்டார்கள்.</p><p>கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பற்றி கொத்தடிமைகளுக்கு வகுப்பெடுக்காத கொத்து பரோட்டாவின் இயலாமை, பவளவிழா பாப்பாவின் பகுமானத்தைப் பல் இளிக்க வைக்கிறது.</p><p>ஆபாசநதியையும் வன்மநதியையும் வகைதொகையில்லாமல் ஓடவிட்டு, கீழ்த்தரமான அரசியலைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்?</p><p>அமைதியாக இருக்கிறார்கள், ஆபாசத்தையும் அவதூறையும் வீசி இவர்களை வீழ்த்திவிடலாம் என்று எண்ணினால், மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்து நிற்கும் பவளவிழா பாப்பா என்பதை எச்சரிக்கையாக அல்ல...</p><p>ரொம்ப டீசென்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவ்வபிள்லா சொல்லிக்கிறோம்!</p><p>இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-1562-vinayagar-idols-permission-for-worship#comments</comments><guid isPermaLink="false">904d0234-523e-489a-94d8-4bdfad7bd3a1</guid><pubDate>Sun, 13 Sep 2026 14:00:22 +0000</pubDate><atom:updated>2026-09-13T14:00:22.432Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chathurthi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ghikg55y/VC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வருகின்றன.</p><p>விநாயகர் சிலை வழிபாடுகள், ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>தமிழகத்தைப் பொறுத்தவரை பொது மக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.</p><p>உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்தில் 892 விநாயகர் சிலை அமைக்க அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/892-vinayaka-idols-approved-across-thiruvallur-district#comments</comments><guid isPermaLink="false">67f79f5f-d890-48a8-9abc-0dd92274d5ab</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:58:44 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:58:44.775Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,விநாயகர் சதுர்த்தி,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Vinayagar Chathurthi,திருவள்ளூர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">வருவாய்த் துறை</a>, காவல்துறை, உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளிடம் உரிய தடையில்லாச் சான்றும் அனுமதியும் பெற வேண்டும்.</p><p>சிலைகள் சுற்றுச் சூழலுக்கு உகந்த களி மண்ணால் மட்டுமே செய்யப்பட வேண்டும். ரசாயன வர்ணங்கள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த சாயங்களைப் பயன்படுத்தக் கூடாது.</p><p>இதர வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் சிலைகள் வைக்க அனுமதி இல்லை.</p><p>மேலும், சிலைகளின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தலா 2 நபர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.</p><p>மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதாகைகள் வைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. மேலும், பட்டாசு வெடிக்கத் தடை உள்ளது.</p><p>இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவள்ளூரில் 166 இடங்களிலும் ஊத்துக் கோட்டையில் 239 இடங்களிலும் திருத்தணியில் 294 இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் 193 இடங்களிலும் என மொத்தம் 892 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல் மாவட்டம் சார்பில் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar#comments</comments><guid isPermaLink="false">484a4efd-89f8-4b69-8a00-6a99fba86ccd</guid><pubDate>Sun, 13 Sep 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-09-13T12:10:16.317Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>பூக்கள் விலை உயர்வு,Vinayagar Chadurthi,பூஜை மலர்கள்,flower market,மலர் சந்தை,Rise in flower prices</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ flower price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/yihsl38x/images-7.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>நாளை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip">விநாயகர் சதுர்த்தி</a> கோலகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் பூஜைக்காக பயன்படுத்தப்படும் மலர்களின் விலை சந்தையில் கணிசமான உய்ர்ந்துள்ளது.</p><h2>விலை உயர்வு </h2><p>முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் உள்ளூர் சந்தை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.</p><p>குறிப்பாக,  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/selvaakkum-mikka-napargal-meethulla-oozhal-vazhakkugalai-visaarippathu-kadinam-chennai-uyarneethimandram-karuthu">சென்னை</a> கோயம்பேடு, திண்டுக்கல், மதுரை, தோவாளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய சந்தைகளில் பூக்களின் விலைு கணிசமாக உய்ர்ந்துள்ளது. </p><h2>நிர்ணயம்</h2><p>கடந்த வாரம் கிலோ ரூ.500க்கு  விற்பனையான மல்லிகை பூ இன்று ரூ.2000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாலை கட்ட பயன்படும் சம்பங்கி, செவ்வந்தி, ரோஸ், அரளி, செண்டுமல்லி  உள்லிட்ட பூக்களின் விலையும்  கடுமையாக உயர்துள்ளது. மேலும், சாமந்தி ரூ.250-க்கும், முல்லை ரூ.900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls#comments</comments><guid isPermaLink="false">5d3bc319-fcbb-4f31-b12d-c5229e636388</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:52:27 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:52:27.387Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,திமுக,உதயநிதி ஸ்டாலின்,தவெக,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ji0kn7rt/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-5" rel="nofollow">உதயநிதி ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.</p><p>திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-</p><p>காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது, விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொது மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.</p><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.</p><p>பொது மக்களின் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து 4 மாதங்களாகியும் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு மார்க்கெட்டில் களைகட்டிய விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-market-vinayagar-chaturthi-pooja-items-sales#comments</comments><guid isPermaLink="false">4bbb7e4d-34f0-4c59-bba9-583b73772de9</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:20:25 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:20:25.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கோயம்பேடு மார்க்கெட்,விநாயகர் சதுர்த்தி,sale,விற்பனை,vinayakar chadhurthi,Koyembedu market</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Koyembedu Market]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/90ie3cts/market.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாளை 14-ந் தேதி கொடுக்கிறது. இதையொட்டி பொது மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் பல்வேறு வகையான தோற்றம் கொண்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.</p><p>பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விநாயகர் சிலை, குடை, மாவிலை, தோரணம், எருக்கம் பூ மாலை, கரும்பு, வாழை கன்று, அவல், பொரி, ஆப்பிள், சாத்துக்குடி, பேரிக்காய் விளாங்காய், வாழை இலை, தேங்காய், வாழைத்தார் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.</p><p>கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 50-க்கும் லாரிகளில் கரும்பு கட்டுகளும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் விளாங்காய், ஆந்திரா மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து 100 வாகனங்களில் சோளம்.</p> <p>திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் ஆந்திராவில் இருந்து 50 வாகனங்களில் கரும்பு கட்டுகளும், கொடைக் கானல், ஏற்காடு, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பேரிக்காய், விழுப்புரம் மற்றும் கர்நாடகாவில் இருந்து கொய்யா 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் பழங்கள்.</p> <p>கடலூர் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏறத்தாழ 30 லாரிகளில் மஞ்சள் வாழைத்தார்கள், ஆந்திரா, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாழை கன்றுகள், கர்நாடக மாநிலம் மற்றும் பட்டுக்கோட்டை பொள்ளாச்சி, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய் மற்றும் ஆந்திராவில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் சாத்துக்குடி பழங்கள்.</p><p>திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அவல், பொரி, கடலை வியாபாரிகளும் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளனர்.</p><p>அதிகாலையில் காய்கறி பழங்கள் பூ மற்றும் பூஜை பொருட்கள் வாங்கி செல்ல ஒரே நேரத்தில் குவிந்த சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தால் பூஜை பொருட்களின் விற்பனை களை கட்டியது இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள “ஏ” மற்றும் “இ” சாலை, கோயம்பேடு- விருகம்பாக்கம் இணைப்பு சாலை, மதுரவாயல் -பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.</p><p>வியாபாரி ஒருவர் கூறும்போது:-</p><p>அங்காடி நிர்வாகம் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை மேலும் ஒலிபெருக்கி மூலம் கரும்பு உள்ளிட்ட பூஜை பொருட்கள் எங்கெங்கு விற்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியவில்லை இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சுற்றி உள்ள சாலைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்களில் கரும்பு, சோளம், கம்பு வாழை கன்று உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் தேக்கமடைந்த நிலையில் உள்ளது இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றார்.</p><p>கோயம்பேடு சந்தையில் பூஜை பொருட்கள், பழம் மற்றும் பூக்கள் விற்பனை விலை விபரம் வருமாறு :-</p><p>விநாயகர் சிலை 1அடி-ரூ.250முதல் ரூ350வரை, குடை-ரூ.25, எருக்கம் பூ மாலை ஒன்று-ரூ.50, அருகம்புல் கட்டு ஒன்று-ரூ.40, மாவிலை ஒரு கொத்து-ரூ.20, தோரணம் 4 எண்ணிக்கை- ரூ.30, சோளம் ஒரு மூட்டை (90எண்ணிக்கை) - ரூ.600.</p><p>வெற்றிலை ஒரு கவுளி (80எண்ணிக்கை) -ரூ.80, வாழை இலை ஒன்று-ரூ.15, பூசணிக்காய் -ரூ. 100வரை, தேங்காய் ஒன்று -ரூ.50, மஞ்சள் வாழைத்தார் ஒன்று -ரூ.600வரை, வாழை கன்று ஒரு கட்டு (10 எண்ணிக்கை) ரூ.150, கம்பு கட்டு ஒன்று (50எண்ணிக்கை) -ரூ.150, கரும்பு ஒரு கட்டு (20 எண்ணிக்கை) - ரூ.300முதல் -ரூ.500வரை.</p><p>ஆப்பிள் 1கிலோ ரூ.150, சாத்துக்குடி ஒரு கிலோ-ரூ.70, கொய்யா 1கிலோ- ரூ.150, மாதுளை 1கிலோ -ரூ.200வரை, விளாங்காய் 1கிலோ- ரூ.100, பேரிக்காய் 1கிலோ ரூ.150, களாக்காய் ஒரு படி -ரூ.50, கருப்பங்காய் ஒரு படி -ரூ.50.</p><p>நாவல்பழம் ஒரு படி -ரூ.800, அவல் சிறிய பாக்கெட்-ரூ.10, பொரி 1படி -ரூ.30, கடலை சிறிய பாக்கெட்-ரூ.10, நாட்டு சர்க்கரை சிறிய பாக்கெட்-ரூ.10, சாமந்தி பூ 1கிலோ-ரூ.350வரை, பன்னீர் ரோஜா கிலோ- ரூ.250வரை, சாக்லேட் ரோஜா கிலோ- ரூ.300வரை, மல்லி 1கிலோ- ரூ.1500, முல்லை 1கிலோ- ரூ.900, கனகாம்பரம் 1கிலோ- ரூ.1300, அரளி 1கிலோ- ரூ.400, சம்பங்கி 1கிலோ- ரூ.600.</p>]]></content:encoded></item><item><title>தற்காலிக பணி நியமனத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 18-ந்தேதி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/temporary-appointments-protest-tamil-nadu-nurses-september-18#comments</comments><guid isPermaLink="false">c2c2f316-3de3-420f-8e88-d9acf99fe2a3</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:12:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:12:52.237Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>nurses protest,TN Health Department,மருத்துவத்துறை,செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்,Against Contract Jobs,Permanent Jobs For Nurses,Nurses Agitation,தமிழ்நாடு செவிலியர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nurses Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kzqp4i47/Nurses-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் காலிப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">செவிலியர்கள் </a>மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் சசிகலா, பொதுச் செயலாளர் சுபின், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><h2>தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் அறிக்கை:</h2><p>மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4,724 பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமிக்க உள்ளது. மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88">அரசு மருத்துவமனை</a>களில் கடுமையான செவிலியர் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, சுமார் 4.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்.</p><p>இந்த தற்காலிக முறையில் பணி அமர்த்தப்படும் செவிலியர்களுக்கு வரும் காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. </p><p>இந்த தற்காலிக செவிலியர்கள் பொது சுகாதார துறையின் கீழ் கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.</p><p>மருத்துவத் துறையின் ஊழியர்கள் நிரந்தர தன்மையோடு இருந்தால் மட்டுமே அந்த துறை தொடர்ந்து நிரந்தர தன்மையுடன் இயங்கும் எனவே அரசு, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் நலனையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும். </p><p>அனைத்து பணியாளர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும். தற்காலிக பணி நிரந்தர ஆணையை திரும்பப் பெறக் கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/contest-in-thattanchavady-too-ntk-announces-by-election-candidates#comments</comments><guid isPermaLink="false">96399577-bba9-4927-b248-cda564329b8c</guid><pubDate>Sun, 13 Sep 2026 10:11:11 +0000</pubDate><atom:updated>2026-09-13T10:11:11.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாதக,by election,சீமான்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோப்புப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தட்டாஞ்சாவடியிலும் போட்டி - இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது நாதக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/knokh2uh/New-Project-2026-09-13T153900.270.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 6 தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. </p><p>இதில் அசாமின் ஒரு நாடாளுமன்ற தொகுதியும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டமன்ற தொகுதிகளும் அடங்கும். </p><h2>தமிழ்நாட்டில் 2 தொகுதிகள்</h2><p>அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. </p><h2>3 தொகுதிகளில் போட்டி</h2><p>அந்தவகையில் இத்தேர்தலில் களம் காணும் நாம் தமிழர் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, தாராபுரத்தில் கார்த்திகாவும், மதுராந்தகத்தில் ஜானகிராமன், தட்டாஞ்சாவடியில் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2>5 முனைப் போட்டி </h2><p>இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">இடதுசாரிகள்</a> என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. </p><p>இடதுசாரிகள் இன்று தாங்கள் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அறிவித்த நிலையில், நாளை மறுநாள் (செப்.15) வேட்பாளர்களை அறிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-made-to-immerse-vinayagar-idols-at-four-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">37690713-77e0-4e09-b385-32aaddd4a6f8</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:56:00 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:56:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xeljbesb/Vinayagarr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>சென்னையில் 4 இடங்களில் சிலைகளை கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.</p><p>சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் மற்றும் வழித்தடங்கள் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் 17 வழித் தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.  சென்னை, நுங்கம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, ஆர்.கே.நகர், புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்பேட்டை, அயனாவரம் ஆகிய இடங்களில் மற்றும் இதன் சுற்றுப்புற இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக சென்று, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இதே போல, அடையாறு, திருவான்மியூர் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், நீலாங்கரை பல்கலை நகர் கடலிலும், வடசென்னை பகுதியான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலிலும் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-announce-candidates-day-after-tomorrow-cpm-contests-in-madurantakam#comments</comments><guid isPermaLink="false">c91a6f74-9d0a-4dd5-bf81-715f8a37e434</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:19:45 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:19:45.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,by election,இடைத்தேர்தல்,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="395" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg" width="907"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்கும் இடதுசாரிகள் - மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/0dqzjx4q/WhatsApp-Image-2026-09-13-at-2.35.05-PM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தனித்துப் போட்டி </h2><p>சமீபத்தில் இடைத்தேர்த்ல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சிகளின் மாநில செயலாளர்கள் அறிவித்துள்ளனர். </p><p>அதன்படி தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.,</p><p>“தவெகவிற்கு ஆதரவு  இல்லை என்பதால் திமுகவிற்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இந்த இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தலாகவே இருக்கிறது. </p><h2>வேட்பாளர் அறிமுகம்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட உள்ள இடதுசாரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் (செப்.15) அறிவிக்கப்பட உள்ளனர்.” என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். </p><h2>ஐந்து முனை</h2><p>தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்கவில்லை. கம்யூனிஸ்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதன் மூலம் ஐந்து முனை போட்டியாக தேர்தல் களம் மாறியிருக்கிறது. இடதுசாரிகளின் இந்த அறிவிப்பால் தேர்தல் களம் பரப்பரப்பாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தென் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-warning-heavy-rain-thunderstorm-today#comments</comments><guid isPermaLink="false">b1db0471-771b-4da3-b653-ea6f0b001270</guid><pubDate>Sun, 13 Sep 2026 09:02:47 +0000</pubDate><atom:updated>2026-09-13T09:02:47.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,வானிலை ஆய்வு மையம்,Meteorological Department,கனமழை எச்சரிக்கை,heavy rain warning</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Heavy rain warning ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ienpanq2/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் தமிழக மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.</p><h2>இடி மின்னல் <strong>மற்றும்</strong> பலத்த காற்று எச்சரிக்கை</h2><p>கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மழை பெய்யும் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இடி மின்னல் நிகழும் போது திறந்தவெளிகளிலோ மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram#comments</comments><guid isPermaLink="false">59c18f07-edc6-46ae-bc4d-84a093fd6e82</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:46:42 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:46:42.850Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,by election,CPI,dharapuram,தாராபுரம்,இடைத்தேர்தல்,மு.வீரபாண்டியன்,M Veerapandian</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/3cwnyxeu/New-Project-2026-09-13T141250.695.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இடைத்தேர்தல்</h2><p>அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.</p><p>இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.</p><p>தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், கூட்டணியில் இடம்பெறாததால் இந்த இடைத்தேர்தலில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-to-announce-byelection-support-tomorrow-madurantakam-dharapuram">இடதுசாரிகள் </a>யாருக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. </p><p>இந்நிலையில் தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எந்தக் கூட்டணியிலும் இல்லை</h2><p>செய்தியாளர்களிடம் பேசிய அவர்., “இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.</p><p>ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே சிபிஐ தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அமைச்சரவையிலும் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.</p><h2>ஐந்துமுனை போட்டி</h2><p>இது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். இடதுசாரிகள் இந்த தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம். சிபிஐ இந்த முடிவை எடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி உடன் எங்கள் கருத்தை பகிர்ந்தோம். </p><p>இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி மதுராந்தகத்தில் போட்டியிட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த செய்தியை பெ.சண்முகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.</p><p>இடதுசாரிகள் கூட்டோடு சிபிஐ தாராபுரத்தில் போட்டியிடுகிறது. நாங்கள் 60,70 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது. விழுமியங்களை பற்றி நின்றுள்ளோம். </p><p>உழைக்கும் மக்களின் உரிமைக் குறலாக ஒலித்துள்ளார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் உழைக்கும் மக்களின் குரலை, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழகம் நலன்சார்ந்த குரலை இடதுசாரிகள் சட்டமன்றத்தில் எழுப்புவோம், முழங்குவோம். </p><p>அதற்காக தமிழ் உலகம் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apprentice-recruitment-in-southern-railway-the-conspiracy-to-hand-over-opportunities-meant-for-tamils-to-people-from-other-states-must-be-thwarted-anbumani#comments</comments><guid isPermaLink="false">5ce1adb9-04db-4d43-8122-8d8b5376c536</guid><pubDate>Sun, 13 Sep 2026 08:22:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T08:22:59.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தெற்கு ரயில்வே,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின்  வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை  முறியடிக்க வேண்டும் - அன்புமணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/y62a542b/New-Project-2026-09-13T135149.186.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள 6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-ministers-and-members-of-the-legislative-assembly-must-also-disclose-their-asset-details">அன்புமணி ராமதாஸ்</a> வலியுறுத்தியுள்ளார்.</p><p>மேலும் இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தெற்கு ரயில்வேயின்  தமிழ்நாடு எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில்    தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காக 6,171 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க  தெற்கு ரயில்வே  முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.</p><h2>6,171 பயிற்சி இடங்கள்</h2><p>தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்திய பணிமனை, சேலம், பெரம்பூர் கேரஜ் மற்றும் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், கோவை, அரக்கோணம் பொறியியல் பணிமனை,  கோவை போத்தனூர் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிமனை  ஆகிய இடங்களில்  6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன.  </p><p>அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான அறிவிக்கையில் தான்  விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. </p><p>22.07.2002 தேதியிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்றும் 05.05.1984 - தேதியிட்ட  தொழில் பழகுநர் தேர்வு வழிகாட்டி விதிமுறைகளின்படி பணி இடங்களில் இருந்து 100 கி.மீ சுற்றளவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். </p><p>ஆனால்,  இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில்  நியமிக்கப்படுவதற்கு  எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என  2019-ஆம் ஆண்டில் விதிகள் மாற்றப்பட்டன.</p><h2>விதிமீறல்</h2><p>ஆனால், இந்த  விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் நியமன அறிவிக்கையில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.  </p><p>அதுமட்டுமின்றி, தட்சிண கன்னடா பகுதி, ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் பகுதி மற்றும் கேரளாவில் இருப்பவர்களும், அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு போன்ற பிற மாநிலங்களில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>வேலைவாய்ப்பு உரிமை</h2><p>இதன் மூலம் தமிழ்நாடு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.</p><p>கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே  தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். </p><p>தொழில் பழகுநர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. </p><h2>தமிழ்நாடு அரசு அழுத்தம் தர வேண்டும்</h2><p>அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு இளைஞர்களின் தொழில் பழகுநர் வாய்ப்புகளை  பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை  தெற்கு ரயில்வே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். </p><p>தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை  தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு அழுத்தம்  தர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/industrial-tour-without-the-industries-minister-only-the-chief-minister-can-say-whom-he-went-to-meet-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">845555ed-e43d-4e56-8205-947402e27db8</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:58:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:58:43.603Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொழில்துறை அமைச்சரின்றி தொழிற்பயணம்: யாரை பார்க்கச் சென்றார் என முதலமைச்சர்தான் கூற வேண்டும் - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/d8b50pn1/New-Project-2026-09-13T132637.629.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><p>“சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. சட்டசபையில் நடந்தவற்றை மக்கள் பார்த்துள்ளனர். பல்வேறு சபாநாயகர்களை இந்த சட்டமன்றம் பார்த்துள்ளது.</p><p>கடந்த காலங்களில் பல இனம், பல மதங்களை சேர்ந்தவர்கள் சபாநாயகர்களாக பணியாற்றிய நிலையில்,  இன்று மதம் சார்ந்த ஒரு சபாநாயகர், மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிந்தது. இதை நான் சொன்னால் தவறாக முடியும்.</p><p>சட்டமன்ற நிகழ்வை பலர் ரசித்தனர், சிலர் ஆதரித்தனர், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குதிரை பேரத்தால் சட்டமன்ற தேர்தல் முடிந்த 3 மாதத்திலேயே இடைத்தேர்தல்.</p><p>நமது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய்</a> லண்டன் சென்றுள்ளார். உடன் யார் யாரோ எல்லாம் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் முதலீடுகளை ஈர்க்கத்தான் சென்றுள்ளரா? இந்த 3,4 நாட்களில் எத்தனைப் பேரை சந்திக்க முடியும்? இதெல்லாம் ஒரு கேள்விக்குறி.</p><p>சொந்த வேலைக்காக சென்றுள்ளார் என்றால், நாம் எதுவும் கேட்கமுடியாது. ஆனால் முதலீட்டாளர்களை ஈர்க்க சென்றுள்ளார் என்றால், யார் யாரை சந்தித்தார், எத்தனை கோடி முதலீடு வருகிறது? என்பதை எல்லாம் அவர் அறிவிக்க வேண்டும்.</p><p>இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அது சந்தர்ப்பவாத அரசியலாக கருதப்படும். ” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">7fa9907e-8373-460a-8eea-1a87138cf85c</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:51:09 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:51:09.375Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,அதிமுக.,tvk,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/at55x74e/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் தற்போதைய நிதியமைப்பைக் கடுமையாக சாடியுள்ளார். அரசு பெரும் கடனில் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பது போன்ற அவசியமற்ற அறிவிப்புகள் வெளியாவது குறித்து அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.</p><h2>புதிய தலைமை<strong>ச் செயலகம் தே</strong>வையா?</h2><p>மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். "தற்போது இருக்கும் தலைமைச் செயலகக் கட்டமைப்பே போதுமானது. தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு இத்தகைய திட்டங்களைக் கையில் எடுக்கலாம்" என்று அவர் கூறினார். மேலும், புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொருத்தமான இடமல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.</p><h2>முதலமை<strong>ச்சரின் லண்ட</strong>ன் பயணம் </h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/car-race-flagged-off-by-chief-minister-vijay-ajiths-team-impresses-by-securing-3rd-place">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் </a>குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பதற்கு எவ்விதப் போதிய ஆதாரங்களும் அல்லது அதிகாரப்பூர்வத் தகவல்களும் இல்லை என குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பயணங்களில் தொழில் முதலீடுகளை ஈர்த்ததற்கான எந்தவிதப் புகைப்படங்களோ விளக்கங்களோ வெளியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>2 தொகுதிகளிலும் <strong>அதிமுக</strong> மகத்தான வெற்றி பெறும்</h2><p>தவெகவில் இணைந்துள்ள முன்னாள் நிர்வாகிகள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் குறித்துப் பேசிய அவர், "கட்சியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கு அங்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் அவர்களை மக்கள் நிச்சயமாக தோற்கடிப்பார்கள்" என்று தெரிவித்தார். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே மகத்தான வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னம்பிக்கையுடன் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">207ff3eb-e8ca-4b4f-a96d-35a34c4d7bf0</guid><pubDate>Sun, 13 Sep 2026 07:03:32 +0000</pubDate><atom:updated>2026-09-13T07:03:32.448Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/2prmt44l/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியை அன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p>இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.</p><p>காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும என தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை சதுர்த்தி விழா கொண்டாட்டம்- தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-vinayagar-chaturthi-worhip#comments</comments><guid isPermaLink="false">a497fa23-4fa6-4e14-b226-322b9d72151b</guid><pubDate>Sun, 13 Sep 2026 06:41:41 +0000</pubDate><atom:updated>2026-09-13T06:41:41.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="720" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/utc6h9ty/Vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. </p><p>தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் தங்களது பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள்.</p><p>ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.</p><h2><strong>ஒரு லட்சம் சிலைகள்</strong></h2><p>சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலுமே விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் நாளை பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்படுகிறது.</p><h2><strong>போலீஸ் கமிஷனர்</strong></h2><p>சென்னையில் கடந்த ஆண்டு 1,519 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று இந்த முறையும் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதேபோன்று ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட சிலைகளும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட சிலைகளும் வைக்கப்பட உள்ளன.</p><h2><strong>3 ஆயிரம் சிலைகள்</strong></h2><p>இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நாளை பூஜைக்காக நிறுவப்பட உள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, வழிபாடு செய்வது குறித்தும், சிலைகளை அமைதியான முறையில் கடலில் கரைப்பது குறித்தும், விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 29 இந்து அமைப்புகளை சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கட்டுப்பாடுகள்</strong></h2><p>விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><p>விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகே விழாவை நடத்துபவர்கள் சிலைகளை நிறுவ வேண்டும்.</p><p>தீயணைப்புத்துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.</p><h2><strong>10 அடிக்கு மேல்</strong></h2><p>* விநாயகர் சிலைகள் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களால் செய்திருக்க கூடாது.</p><p>* நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்தில் இருந்து 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.</p><p>* பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது.</p><h2><strong>24 மணி நேரமும்</strong></h2><p>* சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நியமிக்க வேண்டும்.</p><p>* நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் அரசியல் கட்சிகள் அல்லது மதரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான விளம்பர பலகைகைள வைக்கக்கூடாது.</p><p>* தீ விபத்தை தடுக்கும் வகையில் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாப்புகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>* விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 4 சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று அமைதியான முறையில் கடலில் கரைக்க வேண்டும்.</p><h2><strong>பட்டாசு வெடிக்க தடை</strong></h2><p>* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை.</p><p>* விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>