<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 07:03:02 +0000</lastBuildDate><item><title>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய நடவடிக்கை- அமைச்சர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-inform-measures-taken-for-express-darshan-at-the-tiruvannamalai-arunachaleswarar-temple#comments</comments><guid isPermaLink="false">67cf9966-5379-4c7f-a434-b7f059bce6d5</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:45:49 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:45:49.897Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ரமேஷிடம் பக்தர்கள் விரைவு தரிசனம் குறித்து கோரிக்கை வைத்த காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/um6dcgsl/ministerramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்</a> ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது. விடுமுறை தினமான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>இந்த நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  திடீர் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரம் முன்பு, கோவிலின் உட்புறம் மற்றும் கோசாலை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கிருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  </p><p>அப்போது பக்தர்கள் நாங்கள் கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் கோவிலில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் முதல் முறையாக ஆய்வுக்காக வந்திருக்கிறேன். முழுமையாக கோவில் நடைமுறைகள், தரிசனம் குறித்து ஆய்வு செய்த பிறகு விரைவு தரிசனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது  இணை ஆணையர் தரணிதரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">5f22d212-4fc0-4d16-87e3-92a3bcb84791</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:41:05.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-26-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை இன்றைய நிலவரம்!</a></p><p>* தங்கம் விலை ஒரு கிராம் ரூ.15,010-க்கு விற்பனையானது.</p><p>* ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கு விற்பனையானது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi" rel="nofollow">பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ </a></p><p>* சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>* விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case">3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி</a></p><p>* பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><p>*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes">ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</a></p><p>* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!</p><p>* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p><p>* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய் </a></p><p>* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p><p>* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p> ]]></content:encoded></item><item><title>விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு திட்டமா? - தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-8#comments</comments><guid isPermaLink="false">30885360-eded-44e2-a432-6a575820ba87</guid><pubDate>Wed, 26 Aug 2026 06:17:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T06:17:07.948Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,இலவச வேட்டி சேலை,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/s7le0edi/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்திலேயே வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்காக நெசவாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் தருவாயிலும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அத்தொழிலையே நம்பியிருக்கும் சுமார் 3 லட்சம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>கூடுதல் தரம் கொண்ட புதிய ரக நூலில் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் வகையில், கடந்த ஜூலை மாதமே முதற்கட்டமாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான உற்பத்தியைத் தொடங்குவதற்கு நெசவாளர்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>உற்பத்தி, நெசவு, தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோகம் என குறுகிய காலத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்காமல் அரசு காட்டும் அலட்சியம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்திலும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருக்கிறதா? அல்லது ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வெளிமாநில நிறுவனங்களுக்கு வழங்கியதைப் போல, இத்திட்டத்தையும் வெளிமாநில நிறுவனங்களுக்கு தாரை வார்க்க தவெக அரசு முடிவு செய்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் பயனாளிகளைச் சென்றடையும் வகையிலும், சுமார் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையிலும், விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிடுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>வெங்காயம் விலை கிலோ ரூ.100 வரை அதிகரிக்கும்- வியாபாரிகள் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onion-prices-will-rise-up-to-rs-100-per-kilogram#comments</comments><guid isPermaLink="false">c8f01b67-4b19-4f9a-8e76-17598e674fd5</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:48:37 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:48:37.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:title><media:description type="html"><![CDATA[ வெங்காயம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/10om71eu/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்-விலை">வெங்காயம்</a> விற்பனைக்கு வருகிறது. தினமும் 55-க்கும் மேற்பட்ட லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த சில நாட்களாகவே படிப்படியாக குறைந்து வருகிறது.</p><h2><strong>கடும் தட்டுப்பாடு</strong></h2><p>மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.</p><p>வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கையிருப்பில் உள்ள வெங்காயத்தை முதல் கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, கவுகாத்தி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 45 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம், தற்போது கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்து ஒரு கிலோ ரூ55-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><h2><strong>ரூ.100 வரை அதிகரிக்கும்</strong></h2><p>அதேபோல் சின்ன வெங்காயம் விலையும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.80 வரையிலும், வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.</p><p>தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</p><p>இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது. எல் நினோ வானிலை, மகாராஷ்டிராவில் பெய்த பருவம் தவறிய மழை மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வினியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு காரணம்.</p><p>பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், பற்றாக்குறை தொடருவதாலும்,  ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரை கூட உயரக் கூடும். வழக்கமாக, பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் மாநில அரசு, தோட்டக்கலை மற்றும் உணவு குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மூலம் மகாராஷ்டிராவில் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது. இப்போதும் தமிழக அரசு இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க.வில் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல்- விரைவில் வெளியிட திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/list-of-110-new-dmk-districts-plan-to-release-soon#comments</comments><guid isPermaLink="false">0c14ffe1-7377-422f-9f54-52773485bc7a</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:25:10 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:25:10.595Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,110 Districts,110 மாவட்டங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/p5tnpnzg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்ளது.</strong></em></p><p>தமிழகத்தில் நடந்து முடிந்த சட்​டசபை தேர்​தலில் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி​.மு.க.</a> தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய உண்மை கண்டறி​யும் குழு அமைக்​கப்​பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்​படை​யில் சமீபத்​தில் தி.மு.க. செயற்குழு கூட்​டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.</p><h2><strong>பட்டியல் தயார்</strong></h2><p>இந்த கூட்டத்தில் 9 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதில் ‘தி.மு.க. மாவட்​டங்​களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும்’ என்​ற தீர்மானமும் அடங்கும். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்​டங்​கள் அடங்கிய பட்​டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.</p><p>தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளியாகி​ உள்ளது.</p><p>இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறிய​தாவது:-</p><h2><strong>மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை</strong></h2><p>தி.மு.க. செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானங்களின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்​கப்​பட்​டு​விட்​டது. அந்த மாவட்டங்களுக்கு உட்​கட்​சி தேர்​தல் அடிப்​படை​யில் புதிய நிர்வாகி​கள் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். இதற்கு வசதி​யாக முதற்​கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் ஒரு பொறுப்​பாளர் வீதம் புதிய பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்ளது.</p><p>இப்​படி பொறுப்​பாளர்​கள் நியமனம் நடந்​தால், அவர்கள் அடுத்து வரும் உட்​கட்சி தேர்​தலில் மீண்​டும் வெற்​றி​ பெறுவதற்​கான பணிகளை முடுக்கி​ விடு​வார்​கள். அப்​போது உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும், நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்கல் ஏற்​படும் என்று கட்​சி தலைமைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.</p><p>இதனை ஏற்​றுக்கொண்ட தி.மு.க. தலை​வர் மு.க.ஸ்டா​லின், தற்போது பொறுப்​பாளர்​கள் பட்​டியலை அறிவிக்​கும் முடி​வை தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்​பாளர்​கள் அறிவிப்பில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. விரை​வில் 110 மாவட்​டங்​கள் குறித்த அதிகாரப்​பூர்வ பட்​டியலை தி.மு.க. தலைமை வெளியிடும்.</p><p>இவ்​வாறு அவர்​கள்​ கூறினார்கள்​.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்..!- சிபிஐ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi#comments</comments><guid isPermaLink="false">761c1fdd-c36f-45dc-8fe6-98f634bf07d4</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:07:53.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,பெ சண்முகம்,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பரந்தூர் நிலத்தை மாற்று தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த போகிறோம் என அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.</p><p>இந்நிலையில், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுக்குள் பயன்படுத்தாவிடில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியேற்ற சட்டப்படி பரந்தூர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.</p><p>நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருமண தடை நீங்குவதற்காக  பரிகாரம் செய்வதாக ஏமாற்றி  இளம்பெண் பாலியல் வன்கொடுமை- ஜோதிடர் மீது பகீர் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-sexually-assaulted-after-being-deceived-with-the-promise-of-a-remedy-to-remove-marriage-obstacles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-woman-sexually-assaulted-after-being-deceived-with-the-promise-of-a-remedy-to-remove-marriage-obstacles#comments</comments><guid isPermaLink="false">49ebc692-25d5-4493-b024-a0153740291f</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:04:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:04:33.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,Harassment,Police Investigation,போலீசார் விசாரணை,கோவை ஜோதிடர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/37zcavpg/woman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/37zcavpg/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</strong></em> </p><p>திருப்பூரைச் சேர்ந்தவர்  30 வயது இளம்பெண். இவர் கோவை சரக போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மன உளைச்சல்</strong></h2><p>எனக்கு எனது பெற்றோர் நீண்டகாலமாக திருமண வரன் பார்த்து வந்தனர். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு கோவில்களில் பரிகாரங்கள் செய்தல், ஜோதிடர்களை அணுகி ஜாதகம் பார்ப்பது போன்ற செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். எனக்கு திருமண வரன் கிடைக்காததாலும், எனது பெற்றோர் படும் துயரத்தினாலும் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். </p><p>கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு சில பரிகாரங்களை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என கூறினார். பரிகாரம் என்ற பெயரில் பல முறை என்னை நேரில் அழைத்து சந்தித்தார். </p><h2><strong>பணம் பறிப்பு</strong></h2><p>பின்னர் அவரே என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். என்னை கட்டாயப்படுத்தி பலமுறை என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன்பின் கடன் பிரச்சனை இருப்பதாக கூறி நான் திருமணத்துக்கு சேமித்து வைத்த பணத்தை பறித்தார். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கி விட்டதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பெற்றார். பணத்தை அபகரித்துக் கொண்ட பின் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தினார். </p><p>நான் விசாரித்தபோது ஜோதிடர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விவரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை சந்தித்து என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே என அழுதேன். அதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து விரட்டி விட்டார். உயர் போலீஸ் அதிகாரி என்னுடைய வாடிக்கையாளராக உள்ளார். அவரிடம் கூறி உன்னை தொலைத்து விடுவேன் என மிரட்டினார். </p><p>ஜோதிட நம்பிக்கையையும், திருமண ஆசையையும் பயன்படுத்தி என்னை நம்பவைத்து எனது வாழ்க்கையை சீரழித்து எனது வாழ்க்கையை நாசம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார். </p><p>இந்த புகார் மனுவை அந்த பெண்  திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருப்பூர், கோவை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பி உள்ளார். ஜோதிடர் மீது இளம்பெண் ஒருவர் கூறியுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case#comments</comments><guid isPermaLink="false">e49b8ca5-6eae-493d-a1ea-cdfffa5c1d1c</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:33:24.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது</a> இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2><strong>உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை</strong></h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case">தமிழர்களும்</a> மான்  வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><p>கர்நாடக காட்டுப் பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2><strong>பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்</strong></h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p> <p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">1bc7fec1-7dba-43c3-a915-2a640bfc97f0</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:32:33.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,ஓணம் பண்டிகை,onam festival,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஓணம் திருநாளையொட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!</p> <p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!<br><br>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள்… <a href="https://t.co/uB2N9vqo9P">pic.twitter.com/uB2N9vqo9P</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092448413925470496?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual#comments</comments><guid isPermaLink="false">ee7791d9-458d-49fc-83ee-df7603d6b88e</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:22:13.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</strong></em></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்றப் பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.</p><h2><strong>வழக்கம் போல இயக்கம்</strong></h2><p>குறிப்பாக, மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16180) தாம்பரம் வரையிலும், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதேபோல, எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன.</p><p>இதனால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes#comments</comments><guid isPermaLink="false">e951cf9b-efa9-4a7b-973b-72a9b7c2976d</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:11:25.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,ஓணம் பண்டிகை,onam festival,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jmgh3whk/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jmgh3whk/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p><h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது</p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் ஓணம் திருநாளையொட்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam">திமுக</a> தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p> <p>பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p><p>மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்களுக்கு நற்செய்தி: நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/extra-registration-tokens-for-avani-avittam-and-pournami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/extra-registration-tokens-for-avani-avittam-and-pournami#comments</comments><guid isPermaLink="false">47115c6a-1ae9-4410-92f2-258ce714ad7b</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:09:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:09:06.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Registration,பத்திரப்பதிவு,Avani Avittam,ஆவணி அவிட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lmhwckgj/registration.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ பத்திரப்பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ பத்திரப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lmhwckgj/registration.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால்  கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழக அரசின் <a href="https://www.maalaimalar.com/topic/பத்திரப்பதிவு">பத்திரப்பதிவுத்துறை</a> தலைவரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் அறிவிப்பு</strong></h2><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி (நாளை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அலுவலக வாரியாக டோக்கன் விவரங்கள்</strong></h2><p><em><strong>ஒரு சார்பதிவாளர் அலுவலகங்கள்:</strong></em> வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p><em><strong>இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்கள்:</strong></em> வழக்கமான 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p><em><strong>அதிக பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள்:</strong></em> 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p>ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">ffdc11a5-128a-4a41-82ed-a6da11380b64</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:34:50.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மிலாது நபி,Milad Un Nabi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qy8au0on/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qy8au0on/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான <a href="https://www.maalaimalar.com/news/amp/story/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature">மிலாது நபியை</a> கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில்,</p><p>இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p> <p>மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p><p>இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!<br><br>மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092433784222482934?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயுடன் இந்திய கடலோர காவல் படை தலைவர் பரமேஷ் சிவமணி சந்திப்பு - கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security#comments</comments><guid isPermaLink="false">91974828-d155-40a4-81c1-4b845db6d875</guid><pubDate>Tue, 25 Aug 2026 17:10:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T17:10:39.363Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,கடலோர காவல் படை,ICG,Paramesh Sivamani,பரமேஷ் சிவமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/dyl2he4z/Paramesh-Sivamani-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paramesh Sivamani and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/dyl2he4z/Paramesh-Sivamani-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, சென்னையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ச ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.</p><p>கடலோர பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR), சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்திய கடலோர காவல் படை முன்னாள் வீரர்களின் நலன் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>தலைமை இயக்குநர் விளக்கம்:</h2><p>கடல்சார் அவசரநிலைகளின் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, மீன்பிடி படகுகளில் 'துயர எச்சரிக்கை ஒலிபரப்பிகள்' (DAT) மற்றும் கட்டாய உயிர் காக்கும் உபகரணங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், தமிழக மீனவர்கள் உட்பட பலரின் உயிரை காப்பாற்றிய வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விளக்கினார். </p><p>குறிப்பாக, சமீபத்திய புயல் காலங்களில் உயிரிழப்புகள் ஏதுமின்றி பாதுகாத்த கடலோர காவல் படையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு பிந்தைய மீட்பு பணிகளில் மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.</p><h2>மீனவ சமூகத்தின் பாதுகாப்பு:</h2><p>தமிழக காவல் துறை, கடலோர காவல் படை, மீன்வள துறை மற்றும் மாநிலத்தின் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வலுவான கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடலோரக் காவல் படை கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் தலைமை இயக்குநர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>பிராந்திய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் தமிழக அரசுக்கு இடையே உள்ள பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:42:59.237Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> <h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்</p><p>தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்</p><p>பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா</p><p>எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி</p><p>சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். </p><p>மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை</p><p>வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்</p><p>கனிம வளத்துரையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>வணடல் மண் எடுக்கும் நடவடிக்கையை எளிமையாக்க வேண்டும். மூன்று துறை நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும்- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>பரமக்குடியில் ஒலிம்பிக் மைதானம் உருவாக உள்ளது- பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்., இன்னும் இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. அது TVKவுக்கும் TVK-வுக்கும் இடையில்தான் போட்டி கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>இல்லை இல்லை இல்லை என்றுதான் எனது தொகுதி உள்ளது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>அமராவதி ஆற்றில் ஆழ்துறை கிணறு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>எனது தொகுதியில் சிட்கோ ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>கரூரில் விமான நிலையம் கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வர செயற்கை நுண்ணறிவு முக்கிய காரணியாக இருக்கும்: ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>சென்னையை நோக்கி வரும் ஏராளமான இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு பூமி வேளச்சேரி- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>குடிநீர், மின்சாரம், சாலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல சிரமம் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் படிக்க, எழுத முடியாமல் இருந்தாலும் சரி. வாய்ஸ் இருந்தால் போதும். ஏ.ஐ. புகாரை அறிந்து தானாகவே துறைக்கு கொண்டு சென்றுவிடும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>அரசு கேபிள் டி.வி. மற்றும் நிர்வாகம் தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் முதலமைச்சர் DashBoard 2.0 உருவாக்கப்படும்</p><p>புத்தாக்க வாய்ப்பு மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்.</p><p>கடைசியில் இருக்கும் கிராமம் வரை டிஜிட்டல்</p><p>300 புதிய ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும்</p><p>ஐஐடி உடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி</p><p>தரவு தள கட்டமைப்புகள் அமைக்கப்படும்</p><p>வெற்றித் தமிழ் இணையதளம்</p><p>ஏ.ஐ. ஆலோசனைக்குழு அமைத்தல்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலுரை</p><p>* குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மக்களுக்கு நன்றி</p><p>* 104 நிறுவனங்களுடன் MOU ஏற்பட்டுள்ளது.</p><p>* 25 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன.</p><p>* தற்போதுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் டிரைலர்தான்.</p><p>* முதலீட்டார்கள் வருவதற்கு காரணம் லஞ்சம் இல்லை என்பதுதான்.</p><p>* அந்நிய முதலீடு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.</p><p>* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>* ஜவுளித்துறையில் 16 திட்டங்கள்</p><p>* 58 சிப்காட் பூங்காவில் 8-ல் தண்ணீர் வசதி இல்லை.</p><p>* ஓசூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி.</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* மனைகள் தொடர்பாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்</p><p>* விபத்துகளை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு</p><p>* செமிகண்டக்டர் துறையில் ஊக்கத்தொகை திட்டம்</p><p>* வெற்றி மகளிர் மேம்பாட்டுத் திட்டம்</p><p>*  உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.</p> <p>கனிம வளத்துறை அமைச்சர் TK பிரபு பதிலுரை</p><p>* காணாமல் போன மலைகள். பட்டியலிட்ட அமைச்சர்</p><p>* 320 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான குன்றுகள், மலைகள் காணாமல் போகின.</p><p>* கழிவு கற்களை மறுசுழற்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.</p><p>* 198 சட்டவிரோத குவாரிகளில் கண்டறியப்பட்ட FIR போடப்பட்டுள்ளது.</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme">முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை: அமைச்சர் கீர்த்தனா அறிவித்த முக்கிய அறிவிப்புகள்</a></p><p>* உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு மழைக்கால வரும் நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொண்ட ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme">இயற்கை வளங்கள் துறை: சட்டசபையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் டி.கே. பிரபு</a></p><p>* சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.</p><p>* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என தவெக கொள்கை பிரகடனம் செய்யத் தயாரா? - அன்புமணி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-tvk-ready-to-declare-a-policy-stating-that-it-will-not-acquire-agricultural-lands-for-any-project-anbumani-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-tvk-ready-to-declare-a-policy-stating-that-it-will-not-acquire-agricultural-lands-for-any-project-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">ec5c5c2e-826b-430d-93d5-e1c5925c0637</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:05:25 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:05:25.007Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vop3rkjs/New-Project-2026-08-25T213456.588.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என தவெக கொள்கை பிரகடனம் செய்யத் தயாரா? - அன்புமணி கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vop3rkjs/New-Project-2026-08-25T213456.588.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுரங்கம் உள்ளிட்ட வேறு எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என கொள்கை பிரகடனம் செய்ய தவெக தயாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><h2>தொழில்துறை அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது</h2><p>கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், மூன்றாம் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், </p><p>மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மத்திய அரசிடம் பேசி இச்சிக்கலுக்கு  தீர்வு காண வேண்டியது தானே? என்று தொழில்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். </p><p>கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்  தொழில்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.</p><h2>போராட்டங்கள் அமைச்சருக்கு தெரியாது</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தொழில்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் முழுக்க முழுக்க உழவர்களின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. </p><p>விவாதத்தின் போது பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலக்கரி வெட்டியெடுத்து ஆண்டுக்கு ரூ.1300 கோடிக்கும் கூடுதலாக இலாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், அம்மாவட்ட மக்களுக்கு  எதிராக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். </p><p>ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய  என்.எல்.சி நிறுவனம், புதிய திட்டங்களுக்காக மேலும் 60000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதாகவும், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  </p><p>அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவன் அவர்களும் இதே கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார்.</p><p>அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர், உழவர்களின் நலன்களைக் காப்பதற்கு உத்தரவாதம் அளிக்காமல், ‘‘என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது; மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கு பேசி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்’’ என்று கூறியிருக்கிறார். </p><p>என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்ட வரலாறு தெரியாததால் தான் அவர் இவ்வாறு  பேசியிருக்கிறார்.</p><h2>அமைச்சர் பிறந்திருக்கக் கூடமாட்டார்</h2><p>1950ஆம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், 1980களில் விளை நிலங்களை அளவுக்கு அதிகமாக கையகப்படுத்தியது மட்டுமின்றி, அவற்றுக்கு உரிய விலை வழங்காமலும்,  நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமலும் துரோகம் செய்து வந்தது. </p><p>அதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தி தான் கடலூர் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறது. </p><p>என்.எல்.சிக்கு  எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள்  தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்துறை அமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார். அதனால் தான், போராட்ட வரலாறு தெரியாமல் அறியாமையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமா? மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோமா? என்பது  குறித்த எந்தக் கவலையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்ததில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக பாமக போராடி வெற்றி பெற்றுள்ளது. </p><p>என்.எல்.சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டங்கள் தான்.</p><h2>5% தமிழ்நாடு அரசிடம் உள்ளது</h2><p>கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் என்.எல்.சி நிறுவனத்தின் தரகர்களாக செயல்பட்டு, காவல்துறை உதவியுடன் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்தனர். </p><p>வயலில் ராட்சத எந்திரங்களை இறக்கி கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்களை அழித்தனர். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடியது பாட்டாளி  மக்கள் கட்சி தான். அதன் பயனாகத் தான் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம், வடசேரி நிலக்கரித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏலப்பட்டியலில் இருந்து நீக்கியது. </p><p>காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால் வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது.</p><p>நெய்வேலி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால், அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பாமக மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். </p><p>இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகள் தமிழ்நாடு அரசிடம் தான் உள்ளன. தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளர் தான் என்.எல்.சியின் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரும் சமூக அநீதி வேலையை செய்வதே தமிழ்நாடு அரசு தான்.</p><h2>திமுகவிற்கும், தவெகவிற்கும் என்ன வித்தியாசம்?</h2><p>அதனால், தமிழ்நாடு அரசு மறுத்தாலோ, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தாலோ, அதற்கு எதிராக என்.எல்.சி நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது. </p><p>இதை செய்வோம் என்று சொல்வதற்கு பதிலாக  மத்திய அரசிடம் கூட்டணி கட்சிகள் பேச வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த தவெக அரசுக்கும், முந்தைய திமுக அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்?</p><h2>தவெக அரசுக்கு எதிராக போராடுவேன்</h2><p>அதே விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேஷ் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் அந்த நிலங்களை உழவர்களிடம் அரசு ஒப்படைக்குமா? என்று கேட்ட போது, 2013ஆம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி  விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று  கூறினார். </p><p>அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று  2013ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு திட்டம் கைவிடப்பட்டால், அந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவற்றின் பழைய உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>அதன்படி தான் மேற்குவங்க மாநிலம் சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு மாறாக பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்த நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழில்திட்டங்களைச் செயல்படுத்த தவெக அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராடுவேன்.</p><h2>தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா?</h2><p>விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். </p><p>இவை வரவேற்கப் பட வேண்டிய நிலைப்பாடுகள். ஆனால், முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக பரந்தூர் விமான நிலையத்  திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்போம், என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. </p><p>விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா?</p><p>தொழில் வளர்ச்சியை விட விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்று கூறும் தவெக அரசு, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், சிப்காட் தொழில்பூங்காவாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே ஒரு சென்ட் வேளாண் நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். </p><p>அதைச் செய்ய தவெக அரசு தயாரா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வளங்கள் துறை: சட்டசபையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் டி.கே. பிரபு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme#comments</comments><guid isPermaLink="false">30d487b4-4851-495c-9259-58db82d9c474</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:42:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:42:08.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,TK Prabhu,டிகே பிரபு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7ta37q45/TKPrabhu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister TK Prabhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7ta37q45/TKPrabhu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் டி.கே. பிரிவு அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>1. புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் ஒருங்கிணைந்த மின்னணு கனிம மேலாண்மை தளம் அமைக்கப்படும்.</p><p>2. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், மாநில அளவிலான சுரங்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>3. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைகோள் அடிப்படையிலான சுரங்க கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.</p><p>4. தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Mineral Resources Development Corporation Limited) στ பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>5. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.</p><p>6. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், குண்டுபெரும்பேடு மற்றும் வெள்ளரை கிராம ஏரியில் 60 கோடி ஆண்டுகள் பழமையான தாவர புதைப்படிமங்களை பாதுகாக்க தாவர புதைப்படிம பூங்கா அமைக்கப்படும். மேலும், கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் குவாரிகளில் பொது-தனியார் (Public Private Partnership) முறையின் மூலம் சுரங்கச் சுற்றுலா மையங்கள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>7. சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.</p><p>8. அரவைக் கற்கள் (ஆட்டுக்கல், அம்மிக்கல்) மற்றும் கற்சிலைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு தேவையான சாதாரணக் வரும் சிறு தொழில்முனைவோர்க்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கற்கள் தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு, தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.</p><p>9. பொதுமக்கள் மற்றும் கனிமம் சார்ந்த தொழில்முனைவோருக்கு உதவிட குறை தீர்ப்பு மையம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை: அமைச்சர் கீர்த்தனா அறிவித்த முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme#comments</comments><guid isPermaLink="false">9c36dc57-9b2e-4d61-bef1-a6561ec1a6f8</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:26:18 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:26:18.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qz2m6pdn/Keerthana0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qz2m6pdn/Keerthana0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:-</p><p>1. சிப்காட் தொழிற்பூங்காக்களில் இயங்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இரண்டாம் கட்டமாக 2,500-மேற்பட்ட தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கட்டிடம் ரூ.130 கோடி திட்ட மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும்.</p><p>2. சிப்காட் தொழிற்பூங்காக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள சிப்காட் தொழிற்பூங்காக்கள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சுற்றுசூழலுக்கு உகந்த தொழிற்பூங்காக்களாக மேம்படுத்தப்படும். மேலும், பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு குழந்தைகள் பராமரிப்பு (Creches), தீயணைப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.</p><p>3. உலகளாவிய போட்டி சூழலை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், உடனடியாக தங்களது தொழில் நிறுவன செயல்பாட்டினை துவக்கிட ஏதுவாக, கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug &amp; Play) உருவாக்கப்படும்.</p><p>4. சிப்காட் தொழிற்பூங்காக்களில், தொழில் நிறுவனங்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வதில் 100% வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் விவரம் மற்றும் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ள காலி மனை விவரம் அதே போன்று புதியதாக உருவாகி வரும் தொழிற் பூங்காக்களின் ஒதுக்கீட்டிற்கான காலி மனை விவரம் ஆகிய அனைத்தும் Digital முறையில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையிலும், தொழில்மனைகளை எளிதாக அடையாளம் கண்டறிந்து, பூங்காவின் அமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தெளிவான முப்பரிமாண மேம்பாடு குறித்த புரிதலை முதலீட்டாளர்களுக்கு வழங்க ஒரு காட்சிப்படுத்தலை (3D Visualisation) 2 வகையிலும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமாக மேம்படுத்தப்படும்.</p><p>5. தூத்துக்குடி மாவட்டத்தில், ரூ.5,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 20,000 புதிய வேலைவாய்ப்புகளை வகையில், உருவாக்கும் முடிவைத்தானேந்தல் பகுதியில், சுமார் 2,570 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்படும்.</p><p>6. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.7,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா (e-vehicle manufacturing industrial park) A நிறுவனத்தால் அமைக்கப்படும்.</p><p>7. விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஓமந்தூர் பகுதியில் சுமார் 229 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.</p><p>8. நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில் சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.</p> <p>9. சிப்காட் நிறுவனம் ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆயத்த தொழிற்கூட வசதிகளுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா ஒன்றை புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் திரப்பிடங்கி எனும் இடத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>10. சிப்காட் தொழிற்பூங்காக்களில் பாதுகாப்பு இணக்கப்பாடுகள் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்துடன் கூடிய டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு (Digital Monitoring System) செயல்படுத்தப்படும்.</p><p>11. தமிழ்நாட்டினை குவாண்டம் தொழில்நுட்ப பாதுகாப்பு (Quantum Safe TN) மாநிலம் என்ற நிலைக்கு கொண்டு சென்று நிதிநுட்ப நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், வான்வெளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் தரவுகளுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆய்வு சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில மேற்கொள்ளப்படும்.</p> <p>12. சிவகாசி, இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன், 1,000-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அலகுகளைக் கொண்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 கோடி வருமானம் ஈட்டி, ஏறத்தாழ 5 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்து வருகிறது. பாதுகாப்பு, நிலைத்தன்மை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், சிவகாசி பைரோடெக்னிக்ஸ் பொது வசதி மையம் (Sivakasi Pyrotechnics Common Facility Centre -SPCFC) அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு விரிவான திட்ட அறிக்கை ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கும்.</p><p>13. தமிழ்நாட்டில் துறையில் செமிகண்டெக்டர் முதலீட்டை ஈர்ப்பதற்கு; மத்திய அரசின் SEMICON 1.0 திட்டத்தில் முழுமையாக பயன்பெற இயலவில்லை. தற்போது SEMICON 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாநிலத்தில் அமையவுள்ள செமிகண்டெக்டர் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரத்யேக ஊக்கத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>14. தமிழ்நாடு இயக்கம், உலகளாவிய ஏற்றுமதி பசுமை மாற்றம் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்திறன் முன்னெடுப்பு மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து ஆராய ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.</p><p>15. உலகளாவிய திறன் மையங்கள் துறையில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்படும்.</p><p>16. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.</p><p>17. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் செயல்படுத்தப்பட்டு நிறுவனங்களுக்கான வரும் MSME (Bill Finance-பட்டியல் நிதியுதவி) திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற ஒரு சில அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வசதி விரிவுபடுத்தப்பட்டு, இனி அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 500 MSME நிறுவனங்கள் ரூ.600 கோடி நிதியுதவி பெறும்.</p><p>18. தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் தொழில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, உதவி, கடன் பங்களிப்பு தொகையில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். மேற்பட்ட மகளிர் முனைவோர்கள் பயன்பெறுவர். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.</p> <p>19. குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் செயல்முறைகள் முழுமையாக (End to end) மின்னணுமயமாக்கப்படும்.</p><p>20. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொண்ட ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>21. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காற்றாலைப் பண்ணைகளை புதுப்பிக்கவும், மேலும் சூரிய மின்சார மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>22. உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு மழைக்கால வரும் நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>23. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு (Vettri Double Fortified Salt) என்ற வணிக பெயரில் நியாய மற்றும் விற்பனை விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் செய்யப்படும்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">8283cad4-3206-4683-88d3-1fe0ca58eacc</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:49:39.393Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,National Commission for Women,தேசிய மகளிர் ஆணையம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் ஆக.3ம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது நடிகை ஒருவர் குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.</p><p>இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் காவல்துறை அவரை கைதும் செய்து, பின்னர் விடுவித்தது. </p><p>இதனைத்தொடர்ந்து தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார். </p><p>அந்த புகார் மனுவில் நடிகை குறித்தப் பேச்சுக்கு உதயநிதி விளக்கம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். </p><p>மேலும் அவர்மீது உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் உதயநிதிமீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar#comments</comments><guid isPermaLink="false">18644742-be20-4f1a-9740-d723e7befaf1</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:24:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:24:23.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,minister kumar,அமைச்சர் குமார்,AI Department,ஏஐத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரைவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார்.,</p><p>“1.5 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய எங்களுக்கு இந்த ஒருத்துறை போதும். 54 துறைகளிலும் இந்த ஒரு துறைதான் மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கியமானது. </p><p>உங்களுடைய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரவேண்டுமா செயற்கை நுண்ணறிவுதான் முக்கியம். என்னைத் தேர்ந்தெடுத்த வேளச்சேரி மக்கள் இனி சாலை, மின்சாரம், குடிநீர் என எந்தப் பிரச்னை என்றாலும் அதை அரசிடம் கொண்டுசெல்ல இனி சிரமப்பட வேண்டாம். ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ தெரிந்திருக்க தேவையில்லை. வேளச்சேரி தொகுதிக்கு தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>அதில் பிரச்னைகளை தாய்மொழியில் வாக்குமூலமாக கொடுத்தாலே ஏஐ மூலமாக சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தானாக சென்றுவிடும். இப்போது வேளச்சேரிக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>வெகுவிரைவாக அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாடு ஏஐ விஷன் என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும். சி.எம்.2.0 டேஷ்போர்டு ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? ஓசூரா? ராமேஸ்வரமா? - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">a6028c36-76cd-4b6e-8d01-963c3cafddd0</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:11:24 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:11:24.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameswaram,Parandur Airport,Hosur,tamilnadu assembly,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana" width="1500"><media:title type="html"><![CDATA[ Keerthana ]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டப்பேரவையில்</a> இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து தொழில்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.</p><h2><strong>ஓசூரா? ராமேஸ்வரமா?</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் திட்டம்</a> கைவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளான ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களிலுமே புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடத் தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.</p><p>ராமேஸ்வரம் அருகே புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக உச்சிப்புளி அல்லது கீழக்கரை ஆகிய இரண்டு உத்தேச இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. </p><p>ஓசூரிலும் புதிய உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் பரிசீலனையில் உள்ளன என்று சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.</p><h2>மாற்றுத் தொழில் திட்டங்கள்</h2><p>பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். </p><p>பரந்தூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளதால், அங்கு விமான நிலையம் அமைத்தால் சென்னைக்கு கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டம் ரத்தாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார். </p><p>ஏற்கனவே மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வீணாக்காமல், அங்குள்ள மக்களுக்கும் மண்ணுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தொழில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப விவசாயிகளுக்கு அளிக்கப்படாது  என்றும் சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.</p><h2><strong>இறுதி முடிவு என்ன?</strong></h2><p>சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதால், அதற்குப் பதிலளித்துப் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இந்த விமான நிலையத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது குறித்தும், அதற்கு மாற்றாக ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் புதிய விமான நிலையங்களுக்கான இடத் தேர்வுகள் தீவிரமாக நடந்து வருவது குறித்தும் அமைச்சர் விரிவாக விளக்கமளித்துப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government#comments</comments><guid isPermaLink="false">7dcd4af3-fde6-4fb8-997b-9705ec65be97</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:00:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:00:41.488Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,Thanjavur,Akash,தஞ்சாவூர்,இளைஞர் ஆகாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த வாரம் பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>அப்போது அவசர வேலை காரணமாக அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஆகாஷ் என்பவர் வழிவிடுவாறு அங்கு இருந்த விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். </p><p>இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரகீம் என்பவர் இளைஞரிடம் சென்றுப் பேசியுள்ளார்.</p><p>அப்போது காவலர் இளைஞரின் கன்னத்தில் அடிக்க, உடனே சற்றும் தாமதிக்காமல் இளைஞரும் காவலர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p><p>தொடர்ந்து அவர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருநாள் சிறைக்கு பின் அவரை விடுவித்திருந்தனர். இந்நிலையில் காவலரை அறைந்ததால் தனது பணி போய்விட்டதாக இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் ஒரு பிறந்தநாள் பேனரை அகற்றியதற்காக விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் நாங்கள் இருவரும் (போலீசார்) பாதிக்கப்பட்டுள்ளோம். </p><p>என்மீதான வழக்கை போலீசார் ரத்துசெய்யவேண்டும், காவலர் ரகீம் மீதான வழக்கையும் ரத்துசெய்யவேண்டும். போலீசாரை அடித்ததால் என் வேலை போய்விட்டது. எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கின்றன. எனக்கு ஏதேனும் வேலை வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும். மாற்றம் வேண்டும் என்பதற்காக நானும் தவெகவிற்குதான் வாக்களித்தேன்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை’ - பெ.சண்முகம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">93c08ac0-809e-466b-8e75-dca7d541a913</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:59:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:59:39.946Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,P. Shanmugam,பெ.சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kgyyis4x/New-Project-2026-08-25T172914.153.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை’ - பெ.சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kgyyis4x/New-Project-2026-08-25T172914.153.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் திட்டமான பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார். பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>தவெக அரசின் இந்த முடிவிற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். குறிப்பாக திமுக தலைவர்கள் பலர் நேற்று இந்த விவகாரம் குறித்து பல பின்னடைவுகளை குறிப்பிட்டு விளக்கிப் பேசியிருந்தனர். </p><p>ஆனால் விமான நிலையம் அமையப்போகிறது என அப்பகுதியில் திமுக தலைவர்கள் பலர் இடம் வாங்கிப்போட்டுவிட்டதால் இந்த அக்கறை என தவெக விமர்சித்தது. </p><p>இந்நிலையில் பரந்தூர் விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?</p><p>இந்த விஷயத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘தூயசக்தியின் முகமூடியை கிழித்தெறிய ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்’ - டிடிவி தினகரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-have-lodged-a-complaint-with-the-governor-to-tear-off-the-mask-of-pure-power-thuya-sakthi-ttv-dhinakaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-have-lodged-a-complaint-with-the-governor-to-tear-off-the-mask-of-pure-power-thuya-sakthi-ttv-dhinakaran#comments</comments><guid isPermaLink="false">bc5da45c-352f-4be1-87a4-b6a4c6cc9f96</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:46:14 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:46:14.845Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Governor Rajendra Arlekar,ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbmse1if/New-Project-2026-08-25T171553.601.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தூயசக்தியின் முகமூடியை கிழித்தெறிய ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன்’ - டிடிவி தினகரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mbmse1if/New-Project-2026-08-25T171553.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சிகளில் இணைவது தொடர்பாக, தவெக அரசு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து இன்று புகாரளித்தார். </p><p>ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.,</p><p>என்ன முகாந்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள்? அவர்களுக்கு அமைச்சர் பதவி என ஆசைவார்த்தை காட்டுகிறார்களா? இந்த நடைமுறை தொடரந்துகொண்டே செல்கிறது.</p><p>பதவி ஆசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யும் இந்த தவறு தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மாற்று கட்சியினரை ஆசைக்காட்டி தங்கள் பக்கம் இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.</p><p>சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஓநாய்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை காட்டவேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அதை ஆவணம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு: கைதாகும் போது தற்கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடிய கொள்ளையன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-stand-robber-stabs-himself-to-escape-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/koyambedu-bus-stand-robber-stabs-himself-to-escape-police#comments</comments><guid isPermaLink="false">a89fe167-d3ce-4b1f-a29d-5ac5a8356430</guid><pubDate>Tue, 25 Aug 2026 11:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T11:43:27.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Crime,koyambedu bus stand,Suicide threat,police chasing,தற்கொலை மிரட்டல்,கோயம்பேடு,Robber Escapes</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/cdornp2j/Koyambedu-Robber" width="1500"><media:title type="html"><![CDATA[ Koyambedu]]></media:title><media:description type="html"><![CDATA[ Koyambedu Robber]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/cdornp2j/Koyambedu-Robber?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">கோயம்பேடு </a>பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பணத்தையும், செல்போனையும் திருடிய கொள்ளையன் ஒருவன், போலீசாரிடம் மாட்டிக்கொண்டதும் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>மழையால் நேர்ந்த அவதி</strong></h2><p>வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் சொந்தமாக ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார்</p><p>சைக்கிளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">கோயம்பேடு </a>100 அடி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.</p><p>அப்போது திடீரென பலத்த மழை பெய்ததால், மழையில் இருந்து தப்பிக்க கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்றார். நீண்ட தூரப் பயணம் மற்றும் நள்ளிரவு நேரம் என்பதால், அசதி காரணமாக பேருந்து நிலையத்திலேயே அருள் படுத்துத் தூங்கியுள்ளார்.</p><h2><strong>நள்ளிரவில் கைவரிசை</strong></h2><p>நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், தூங்கிக் கொண்டிருந்த அருளின் அருகே ஒரு மர்ம வாலிபர் வந்து அமர்ந்தார். அருள் நன்கு தூங்குவதைக் நோட்டமிட்ட அந்த நபர், மெதுவாக அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.2,800 ரொக்கப் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களைத் திருடினான். திருடிய பொருட்களுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.</p><h2><strong>பொதுமக்களிடம் சிக்கிய திருடன்</strong></h2><p>அப்போது அந்த வாலிபரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரைச் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். </p><p>தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சபாநாயகம் மற்றும் போலீஸ்காரர் பாண்டிச்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளையனைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டு முறைப்படி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.</p><h2><strong>தற்கொலை மிரட்டல்</strong></h2><p>யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை திடீரென வெளியில் எடுத்தான். "யாராவது என் அருகில் வந்தால் கழுத்தை அறுத்துக் கொள்வேன்" என்று கத்தியபடி, தன் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொண்டான்.</p><p>ரத்தம் சொட்டச் சொட்ட தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதற்குள், அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.</p><h2><strong>தீவிரத் தேடுதல் வேட்டை</strong></h2><p>பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸ் பிடியில் இருந்த கொள்ளையன் தனக்குத்தானே கத்திக்குத்து நிகழ்த்தித் தப்பிய சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. </p><p>தப்பியோடிய மர்ம கொள்ளையன் யார்? அவனுக்குக் காயம் பலமாக இருக்கிறதா? என கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வழக்கு - முதலமைச்சர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/election-case-high-court-warns-chief-minister-vijay-and-aadhav-arjuna#comments</comments><guid isPermaLink="false">3096e592-ff13-4941-a8ba-b2fb73b81c2a</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:44:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:44:09.656Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6f7pxl77/New-Project-2026-08-25T161347.208.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தேர்தல் வழக்கு - முதலமைச்சர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனாவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6f7pxl77/New-Project-2026-08-25T161347.208.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. </p><p>இதேபோல, ஆதவ் அர்ஜூனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது.</p><p>கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன் என்றார். தொடர்ந்து 2 வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கினார். </p><p>அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஏய்... நிறுத்துடா வண்டிய... என்னய்யா போலீஸ் நீ... போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-women-brought-traffic-to-a-standstill-while-intoxicated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-women-brought-traffic-to-a-standstill-while-intoxicated#comments</comments><guid isPermaLink="false">8c003d62-d021-47be-845e-965be7066fd4</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:35:56 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:35:56.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Drugs,போதை,இளம்பெண்கள்,Young Womens</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bd11mi31/womens.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ போதையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இளம்பெண்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bd11mi31/womens.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது.</strong></em> </p><p>ஏய்... வண்டியை நிறுத்து... என்று இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் நின்று ஆக்ரோஷமாக சத்தம் போட்டதை கேட்டதும் மற்றொரு பக்கம் வழியாக சென்று விடலாம் என்று வண்டியை ஒருவர் திருப்பினார். உடனே அந்த வண்டியின் முன்பு போய் நின்றபடி போயிருவியா நீ... என்று அவரையும் மிரட்டினார் அந்த பெண்மணி. </p><p>சுடிதாரில் காட்சி அளித்த 2 இளம்பெண்கள் புழல் ஜி.என்.டி. ரோட்டில் மாலை நேரத்தில் நடத்திய ‘அட்ராசிட்டி’ காட்சிகள்தான் இது. </p><p><em>‘தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்</em></p><p><em>இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி..</em></p><p><em>என் கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி’</em></p><p>என்ற கதையில் அந்த 2 பெண்களும் <a href="https://www.maalaimalar.com/topic/போதை">மதுவை</a> ஊற்றிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹாயாக வந்து கொண்டு இருந்தார்கள். அவர்களோடு வாலிபர் ஒருவரும் கம்பெனிக்காக உடன் வந்தார். மப்பு ஏறிய நிலையில் வண்டி எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? என்று எதுவும் தெரியாமல் வண்டி வந்துக் கொண்டு இருந்தது. </p><p>புழல் சந்திப்பில் வாகனங்கள் அந்த மாலை வேளையில் நெரிசலில் வரிசைக்கட்டி நின்றன. ஆனால் அந்த பெண்களின் வண்டி மட்டும் அவர்களை போலவே அங்கும் இங்குமாக தள்ளாடியபடி வந்தது. அப்போது ஒரு வாகனத்தின் மீது அந்த பெண்கள் வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டது.  அவ்வளவுதான்... வண்டியைவிட்டு ஆவேசமாக கீழே இறங்கிய ஒரு பெண் தலைமுடியை வாரி சுருட்டி கட்டியபடி கோதாவில் இறங்கினார். ‘ஏய்... என் வண்டியையே இடிச்சிட்டியா?’ யார்டா நீ... என்று ஆவேசமாக கத்தினார். </p><p>அதைக்கேட்டதும் எம்மா... இடிச்சது நீ... பழி என் மீதா? என்பது போல் அந்த வாகன ஓட்டி பரிதாபமாக ஆளைவிட்டால் போதும் என்று வாகனத்தை நகர்த்த தொடங்கினார். ஆனால் ஆவேசத்தில் இருந்த அந்த பெண்கள் நடுரோட்டில் இறங்கி நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து பேட்டை ரவுடிகளை போல் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசி ஆட்டம் போட்டனர். </p><p>அப்போது ஒரு லாரி நெருங்கி வந்தது. அதை பார்த்ததும் ஏய் இடிச்சுடுவியா நீ... இடிச்சுட்டு போ பார்க்கலாம் என்றார். இந்த களேபரத்தால் ரோட்டில் வாகனங்கள் எதுவும் நகர முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அதை பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த பெண்களை சமாதானப்படுத்த வந்தனர். கிட்டே வந்த போதுதான் அவர்கள் மப்பில் இருப்பது அவர்களுக்கே தெரிந்தது. </p><p>ஒருவர் வண்டியை ஓரங்கட்டுங்கள் என்றார். அதைக் கேட்டதும் ‘என்னய்யா சொல்ற... என் வண்டியை ஓரங்கட்ட சொல்றியா? எங்க ஊராக இருந்தால் சீனே வேற...’ என்றார். உடனே அங்கிருந்த ஆண்கள் சிலர் உங்களுக்கு எந்த ஊரும்மா? என்றதும் என் ஊரு துபாய் தெரியுமா? என்றனர். பார்த்தாலே தெரியுது என்றபடி அங்கிருந்த ஆண்களில் ஒருவர் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார்.  அருகில் நின்ற போக்குவரத்து போலீஸ்காரரும் நிலைமை எல்லை மீறி செல்கிறதே என்று தவித்தபடி அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அந்த பெண்கள் சமாதானம் ஆகவில்லை. என்னய்யா போலீஸ் நீ... (அதற்கு பிறகு பேசிய வார்த்தைகள் அச்சில் சேர்க்க முடியாதவை).</p><p>அடங்காமல் நடுரோட்டில் ஆடிக் கொண்டு இருந்த அந்த பெண்களை எப்படி அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவித்த போலீஸ்காரர் ஒருவழியாக மற்ற போலீஸ்காரர்களையும் வரவழைத்து 2 பெண்கள் மற்றும் அவருடன் வந்திருந்த இன்னொரு வாலிபரையும் சேர்த்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  அவர்கள் யாரும் தன்னிலையில் இல்லை என்பதை போலீசார் உணர்ந்து கொண்டனர். அவர்களை விசாரித்த போது ஒரு பெண்ணுக்கு 17 வயது சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவருக்கு வயது 18 அயப்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனைவரும் போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று மகளிர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து இருந்தனர்.</p><p>இந்த சம்பவம் புழல் பகுதியில் சிறிது நேரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை கேமராவுக்குள் அடக்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் இணைய தளங்களில் வைரலாக பரவ விட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றக் கண்ணியம் காக்கப்பட வேண்டும்: சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உருக்கமான வேண்டுகோள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-makes-an-earnest-appeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-jcd-prabhakar-makes-an-earnest-appeal#comments</comments><guid isPermaLink="false">6d4431c6-b8e3-4a74-a66a-70b5bd1a5332</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:26:49 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:26:49.089Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN assembly,tvk,சட்டசபை,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,J.C.D. Prabhakar,Speaker J.C.D. Prabhakar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yqrl63s1/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ J.C.D. Prabhakar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yqrl63s1/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவையின் விவாதங்களின் போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly">சட்டசபை </a>உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும், அவையின் மரபுகள் மீறப்படுவது குறித்தும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் மன்றமான சட்டமன்றத்தை ஜனநாயகப் பண்புகளோடு நடத்த உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>ஜனநா<strong>யக உணர்வோடு அவையை நடத்</strong>தும் கடமை</h2><p>சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "மாண்புமிகு உறுப்பினர்களுக்கு நான் வருத்தத்துடன் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். மிகுந்த ஜனநாயக உணர்வோடும் அன்போடும் சபை கண்ணியத்தை மீறாமல் அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்த சபையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ, அப்படி இருக்க வேண்டும் என்றுதான் முதலமைச்சர் அளித்த இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.</p><h2>இரு தரப்பு <strong>எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள்</strong> குறித்து அதிருப்தி</h2><p>தொடர்ந்து பேசிய சபாநாயகர், பேரவையில் சில உறுப்பினர்கள் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஆளுங்கட்சி தரப்பிலும் சில எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் தவறாகவும் அவையின் மரபுகளுக்கு முரணாகவும் இருப்பதாக அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். மக்கள் நலன் சார்ந்த சட்டமன்ற விவாதங்களின் தன்மையைக் குறைக்கும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.</p><p>அவையின் கட்டுப்பாட்டைப் பேண வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்தாலும், எந்தவொரு உறுப்பினரையும் பேரவையில் இருந்து நீக்கவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ தாம் விரும்பவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். "யாரையும் அவையில் இருந்து நீக்கிவிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், உறுப்பினர்கள் அனைவரும் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, அவையின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-3#comments</comments><guid isPermaLink="false">622b3b97-d8b1-493c-81a6-bce0e15a73a7</guid><pubDate>Tue, 25 Aug 2026 10:15:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T10:15:42.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bujuekhd/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bujuekhd/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>29-ந்தேதி மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-7</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-7#comments</comments><guid isPermaLink="false">c7892b8d-717c-4bff-bad1-fc215556e9e6</guid><pubDate>Tue, 25 Aug 2026 09:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T09:00:27.587Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,rice price,TTTV Dhinakaran,sugar price,சர்க்கரை விலை,அரிசி விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/wt94xm4l/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/wt94xm4l/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அரிசி, <a href="https://www.maalaimalar.com/topic/சர்க்கரை-விலை">சர்க்கரை</a>, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்களைக் கடந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்துள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு உள்ளிட்ட தொடர் கட்டண மற்றும் வரி உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.</p><p>இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த முடியாதது தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது.</p><p>மேலும், அடுத்தடுத்த பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக சர்க்கரையின் விலை 50 % வரையிலும், அரிசியின் விலை 40 % வரையிலும், எண்ணெயின் விலை 60 வ% வரையிலும் உயர்ந்திருப்பதால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளதோடு, அவர்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அளவை தேவைக்கேற்ப உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - தலைவர்கள் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-edappadi-palaniswami-and-leaders-wishes#comments</comments><guid isPermaLink="false">e4b69390-252c-4c05-9082-c4aaf8ec94d2</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:44:46 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:44:46.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,ஓணம் பண்டிகை,onam festival,மகாபலி,mapali</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/ff5zdgl8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாளை ஓணம் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign">எடப்பாடி பழனிசாமி</a>:-</p><p>பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">திருஓணம்</a> திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த  `ஓணம்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார்.  அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை  வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று  ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.   </p> <p>ஜாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓணம் விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.</p><p>அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.</p> <p>மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் ஓணம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க ரேஷன்  கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்: அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-to-mitigate-the-impact-of-the-rise-in-white-sugar-prices-an-additional-2-kg-should-be-provided-at-ration-shops#comments</comments><guid isPermaLink="false">828c54e2-3a4f-4f9a-a7e5-83a5e955129e</guid><pubDate>Tue, 25 Aug 2026 08:02:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T08:02:44.788Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/41ttxzp1/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்லாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல்  ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80  என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து  தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 என்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.</p><p>எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில்,  வாகன எரிபொருளில்  அதிக அளவில் எத்தனால் கலப்பதை  மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும்,  அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை சர்க்கரை உற்பத்தியை விட  மொலாசஸ் எனப்படும்  கரும்பு வெல்லப்பாகு  உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.  இதில்  ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.</p><p>ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில்  58.85 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில்  வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில்  2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த  சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற்பத்திச் செலவு  அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில்  கரும்பின் கொள்முதல் விலை  உயர்த்தப்படாததும் தான்.  இந்த நிலை மாற்றப்பட்டு  சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.</p><p>ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu">சர்க்கரை</a> ஆலைகளுக்கு  ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமானம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு  ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.</p><p>ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை  ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்பட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383  தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம்  ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.</p><p>இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை  குறைப்பதற்காக பொங்கல் திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி  6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும்- அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-says-alternative-livelihood-schemes-will-be-launched-in-parandur#comments</comments><guid isPermaLink="false">1739b048-2edd-40f4-a240-8ff068c244e6</guid><pubDate>Tue, 25 Aug 2026 07:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-25T07:22:13.243Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழ்நாடு சட்டசபை,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/9sgbnifi/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது என அமைச்சர் கீர்த்தனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. தி.மு.க.- த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். </p><p>அதற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளிக்கையில், விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது. உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். </p><p>அமைச்சர் கீர்த்தனா கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly">பரந்தூரில்</a> கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் மாற்று தொழில் திட்டங்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும். 1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு.</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும். நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம். பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார். </p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு,</p><p>விமான நிலையம் அமைப்பது மத்திய அரசாங்கத்திற்கு உட்பட்டது. நிலம் கையகப்படுத்துவது மட்டும் தான் மாநில  அரசின் பணி. மாநில அரசாங்கத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளை அழைத்து பேசினோம். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்டன. ஏகனாபுரம், பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை- லாட்டரி மருமகன்: காரசார விவாதத்தை ஏற்படுத்திய பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-project-cancelled-issue-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">24bf06ea-7735-400a-af17-2815def7a06c</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:45:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:45:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- தங்கம் தென்னரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/o9dr12q7/Assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலையம் ரத்து விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டின் பேசுகையில், நாகர்கோவிலில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம், அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கவில்லை. த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக எத்தனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டது?. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் என பேசினார். </p><p>இதுதொடர்பாக அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> விமான நிலையமா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர், முதலமைச்சர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று சொன்னார், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று. எங்களுடைய தலைவரின் முதல் பிரசாரம், காலடி பட்டது விவசாயிகளின் கண்ணீருக்காக. விவசாயத்திற்காக குரல் கொடுப்போம், டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என சொல்லக்கூடியவர்கள் பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராக, பரந்தூர் மட்டுமல்ல திருவண்ணாமலையில் மேல்மா விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டம் போட்டது தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களுடைய குரலுக்கு பேசியது இல்லை. நேற்றே தெளிவா சொல்லியாச்சு, சென்னை விமான நிலையத்தின் இன்றைய பங்கு என்ன? அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சொல்லியாச்சு. </p><p>ஆனால் நேற்றில் இருந்து தி.மு.க. இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழகத்தின் முதலீடே போய் விடும் என்று சொல்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான், அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பே தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காக மட்டுமே பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. 5 வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் ரெடி. உங்களோட 10 மடங்கு பொருளாதார இங்கு வந்து இருக்கும். ஏன் என்றால் ஊழல் இல்லாத ஆட்சியே எங்கள் முதலமைச்சர் கொடுப்பார் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முதலமைச்சர் ரத்து செய்துவிட்டார். அதற்கு எந்தவிதமான மாற்றுகருத்தும் கிடையாது. அதற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக கூறி 90 சதவீத நிலம் கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையும் கொடுத்தாச்சு. கையப்படுத்திய நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? விவசாயிகளுக்கு கொடுக்கப்போறீங்களா? என்பது குறித்து அரசின் விளக்கம் தேவை என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், </p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. பட்டா நிலங்கள் 3,774. 3 போகம் விளைவிக்கக்கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தது. 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. 48 சதவீதம் அதாவது 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டும் தான் கையகப்பட்டுத்தப்பட்டு உள்ளது.  சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாக தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றார். </p><p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசுகையில், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்க உள்ளீர்கள் என்று நான் கேட்கட்டுமா? என்றார்.</p><p>இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. </p><p>இதையடுத்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் பகுதியை தேர்வு செய்தோம். எந்த இடத்தில் அமைத்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போது பிரச்சனை ஏற்படும். மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி 2-வது ரன்வே வரும்? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து மக்களை பாதிக்காத வகையில் திட்டம் தொடங்கப்படும். மத்திய அரசு அனுமதி அளித்தும் சென்னை விமான நிலையத்தை ஏன் விரிவாக்கம் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். </p><p>இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் தினத்தந்தியைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-keerthana-praises-daily-thanthi-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f1eb2d5d-b8f8-4eec-8454-ac8070fc4593</guid><pubDate>Tue, 25 Aug 2026 06:32:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T06:32:39.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Daily Thanthi,TN assembly,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா,தினத்தந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xe11fd6e/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்த தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்தார். </p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறுகையில், தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல். 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை என தனியார் பத்திரிகை ஒன்றை குறிப்பிட்டார் அமைச்சர் கீர்த்தனா.</p><p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது என திமுக கொறடா எ.வ.வேலு தெரிவித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமார், அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் என்றார்.</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா என அதிமுக உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p><p>அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகைகூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversy-in-tn-assembly-for-admk-mlas-resign#comments</comments><guid isPermaLink="false">15360cbe-9298-43cf-9955-91ea9fafef9f</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:57:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:57:09.505Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,Sengottaiyan,TN assembly,ADMK mlas resign</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ edappadi palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s8h7fesa/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><p>எடப்பாடி ஆவேசம்</p><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக சட்டசபையில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.</p><h2>ஆஸ்டின் கேள்வி</h2><p>இதில் பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி. சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என தெரிவித்தார்.</p><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம். பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் என்றார்.</p><p>அப்போது எழுந்த உறுப்பினர் தளவாய் சுந்தரம், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என பேசினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? என கேஎன். நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் என்றார் சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? என கேள்வி எழுப்பினார்.</p><h2>செங்கோட்டையன் பதில்</h2><p>அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் என்றார்.</p><p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது பேசிய  அமைச்சர் செங்கோட்டையன், காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசமாகக் கேட்டார்.</p><h2>எடப்பாடி ஆவேசம்</h2><p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்தார்.</p><p>அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயக்ர் ஜேசிடி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது என்றார் சபாநாயகர்.</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.</p><p>மக்கள் பிரச்சனைகளைக் கேட்டு நிறைவேற்றுவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என  அமைச்சர் ஆதவ் தெரிவித்தார்.</p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பெண்ணின் தலையை சிதைத்து ரெயிலில் இருந்து வீசினார்களா?- தலைமறைவு தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">a781be19-9485-445f-8f30-3687059b2d9b</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:46:42 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:46:42.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Murder,கொலை,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vmj3n1um/murdercasee.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.</p><p>இதுபற்றி அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சென்னையில் இருந்து பெண்ணை கொன்று கொலை செய்து சூட்கேசில் அனுப்பி வைத்த தால் சென்னைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.</p><h2><strong>வீடியோ காட்சிகள்</strong></h2><p>சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட பெண் கூடுவாஞ்சேரியில் வைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த அசாமை சேர்ந்த ராகுல், ஒடிசாவை சேர்ந்த பகவதி மாஜி ஆகிய இருவரும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ராகுல்-பகவதி மாஜி தம்பதியை பிடிப்பதற்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>தப்பி ஓட்டம்</strong></h2><p>இது தொடர்பாக அசாம் மற்றும் ஒடிசாவுக்கு 2 தனிப்படைகள் விரைந்து சென்று உள்ளன. சென்னையில் 2 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். வீடியோ காட்சி வெளியில் வந்ததும் தம்பதி உஷாராகி தங்களது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்கள் இருக்கும் இடத்தை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>இதை தொடர்ந்து தம்பதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரது செல்போன் எண்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மூலமாக இருவரையும் பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vlaon5ef/andaa.jpg" /></figure><h2><strong>தலை எங்கே?</strong></h2><p>இதற்கிடையே கொலையுண்ட பெண்ணின் தலை இன்னும் சிக்காமல் உள்ளது. கொலையாளிகள் இருவரும் ஹயாத் நிஷாவை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதுடன் சதை பாகங்கள் பெரிய அண்டாவில் போட்டு சமைத்ததும் போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பெண்ணின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டி எடுத்த தம்பதி துண்டிக்கப்பட்ட தலையை எங்கு வீசினார்கள் என்பதும் தெரியவில்லை.</p><h2><strong>சிதைத்தார்களா?</strong></h2><p>உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்துவிட்டு தலையை துண்டித்த தம்பதி அதனை அடையாளம் தெரியாத அளவுக்கு சுக்கு நூறாக சிதைத்து தனித்தனியாக வீசி இருக்கலாமா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. கூடுவாஞ்சேரியில் இருந்து சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் அடைத்து எடுத்து வந்த போது தலையையும் தனியாக ஒரு பையில் வைத்து எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது ரெயிலில் இருந்தபடியே தலை இருந்த பையை மட்டும் தண்டவாளம் மூலமாக வீசி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.</p><h2><strong>3 வாரம் தேடுதல்</strong></h2><p>கடந்த 5-ந்தேதி ஆக்ராவில் பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாளே அங்குள்ள போலீசார் சென்னை வந்து கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டுவிட்டனர். அன்று முதல் பெண்ணின் தலையை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 3 வாரங்களாக ஹயாத் நிஷாவின் தலையை தேடி அலையும் போலீசார் அதனை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.</p><h2><strong>உயர் போலீஸ் அதிகாரிகள்</strong></h2><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலீசுக்கு பெரும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் எப்படி துப்பு துலக்கி கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>அசாம் மற்றும் ஒடிசா</strong></h2><p>அசாம் மற்றும் ஒடிசாவில் கொலையாளிகளின் உறவினர்களை பிடித்து விசாரித்து வரும் போலீசார் அவர்கள் மூலமாக தம்பதி பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-new-ac-electric-bus-service#comments</comments><guid isPermaLink="false">0fc5818d-4886-4fc7-8525-00bc3767cd09</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:28:54 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:28:54.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ புதிய ஏ.சி. மின்சாரப் பஸ்கள் சேவையை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/bvl7c2hu/bus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து  ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><p>அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். </p><figure><img alt="ஏ.சி. மின்சாரப் பஸ்கள் " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7wxivr7b/bus0.jpg" /><figcaption>ஏ.சி. மின்சாரப் பஸ்கள் </figcaption></figure><p>130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது. </p><p>அதனை தொடர்ந்து மின்சார பேருந்தில் ஏறி பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பஸ்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.55.58 கோடி மதிப்பில் 120 புதிய பஸ்களையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow">சென்னை</a> தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?: சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-tell-tn-assembly-mettu-dam-when-open#comments</comments><guid isPermaLink="false">aa9cd81a-e916-41c4-86e7-4290318ec9ed</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:17:34.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,தமிழக சட்டசபை,TN assembly,Minister Anand,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/kye81r44/anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் அமைச்சர் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என்ற கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பதிலளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன், மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? என கேள்வி எழுப்பினார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. கோவி செழியன் பேசும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் எப்போது தண்ணீர் திறக்கப்படும் என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். அணை எப்போது திறக்கப்படும்? அரசு அறிவிக்க இயலுமா? என அரசின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன் என்றார்.</p><h2>விரைவில் நல்ல செய்தி</h2><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த், மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்ச ரும் அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>இதுகுறித்து ஏற்கனவே அவையில் கவன ஈர்ப்பு கொடுத்துள்ளோம். ஏற்கனவே குறுவை சாகுபடி தண்ணீர் திறக்கப்படவில்லை. இது சம்பந்தமாக நீர்வளத்துறை அமைச்சர் அணையில் தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை என சபையில் தெரிவித்தார். இப்போது அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. தண்ணீரும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.</p><h2>திறக்கப்படுமா?</h2><p>எனவே இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? அது எப்போது திறக்கப்படும்? திறப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டால்தான் நாற்றங்கால் வைக்கக் கூடிய பணி தொடங்கப்ப டும். எனவே நீர்வளத்துறை அமைச்சர் எப்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்தார்.</p><p>மேட்டூர் அணை திறப்பது தொடர்பாக பல்வேறு எம்.எல்.ஏ.க்களும் இன்று சட்ட சபையில் பேசினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : சற்று குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-25-08-2026#comments</comments><guid isPermaLink="false">aa630faa-c3c5-4af7-b8ab-79de69559284</guid><pubDate>Tue, 25 Aug 2026 05:05:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T05:05:44.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/y37wua91/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p>ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்துள்ளதால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், வார தொடக்கநாளான நேற்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 15-ந்தேதியில் இருந்து நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><h2><strong>சற்று குறைந்த தங்கம் விலை</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 10-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,240</p><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>24-08-2026- ஒரு கிராம் ரூ.275</p><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item></channel></rss>