<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 07:39:18 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:37:03.140Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p>]]></content:encoded></item><item><title>அப்பாவை காணும்னு சொல்றாங்க... அவர் வந்தா பாதி பேர் இருக்க மாட்டீங்க!- ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments#comments</comments><guid isPermaLink="false">3e104e95-238d-48b7-b70c-e6fcc106943d</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:34:28.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்று பேசினார். அவரது பேச்சின் இறுதியில், அப்பாவை  காணும் என்று  சொல்கிறார்கள். அவர் இங்கு வரும்போது பாதி பேர் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் இருப்போம் என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை இனி தமிழ்நாட்டில் உங்களால் தலை தூக்க முடியாது. மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.</p><p>உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், திமுக விழுந்துள்ளது. ஆனால் விழுந்த வேகத்தில் மீண்டும் எழும் அதுதான் திமுக என்றார்.</p><p>உடனே செங்கோட்டையன், எம்ஜிஆர் இருந்தவரை திமுக வெற்றி பெறவில்லை. </p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார் .</p><p>முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு:- 1980ல் பாராளுமன்றத்தில் திமுக வெற்றி பெற்றது. 1986 இல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.</p><p>செங்கோட்டையன் :- 1980ல் நாடாளுமன்றம் சென்றீர்கள்.. ஆட்சியை கலைத்தீர்கள் ஆனாலும் மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity#comments</comments><guid isPermaLink="false">131143eb-796e-4c95-a05e-f2dff7599e00</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:29:51 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:29:51.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,O Paneerselvam,TN assembly,ஓபன்னீர்செல்வம்,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது, திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>இதைதொடர்ந்து, சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செலவம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>கே.என்.நேரு:</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.</p><p>எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-additional-waiver-on-crop-loans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-additional-waiver-on-crop-loans#comments</comments><guid isPermaLink="false">ba5fe650-dcc8-4595-805c-b3b9d4f66bd7</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:12:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:12:33.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/dbx08hq9/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/dbx08hq9/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கும் முன்பு, தி.மு.க. தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது தவறு, அமைச்சர் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் என எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றி தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* சாதி, மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தொழில் என்றால் அது விவசாயம் தான். </p><p>* உழவுத் தொழில், விவசாயிகளை மதிக்கும் நாட்டில் தான் மக்கள் வளமாக மகிழ்ச்சியாக வாழ முடியும். </p><p>* தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி. </p><p>* த.வெ.க அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. </p><p>* விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளின் படி ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>* ரூ.75ஆயிரத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>* 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி வரை கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. </p><p>* பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். </p><p>* ஆக.7-ல் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. </p><p>* ரூ.75 ஆயிரம் கடன் வாங்கி இருந்தால் 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.</p><p>* ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கினால் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.</p><p>* ரூ.1 லட்சத்துக்கு மேலாக பயிர்க்கடன் பெற்றிருந்தால் ரூ.35 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும். </p><p>* ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்  என்றார்.</p><p>த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் இந்த அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் vs செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sharp-debate-over-subsidy-demand-on-three-departments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sharp-debate-over-subsidy-demand-on-three-departments#comments</comments><guid isPermaLink="false">20b1ef42-9f6e-463d-be1b-be3127ccd974</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:50:36 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:50:36.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,KKSSR Ramachandran,கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/mnbhyboc/Sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KKSSRR-Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/mnbhyboc/Sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ்," முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் நடைபெறுகிறது.</p><p>இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேசுகையில்," கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது" என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,"பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது" என்றார்.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. </p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கும் பட்டா வழங்கினோம்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.</p><p>மத்திய அரசிடம் ரூ.5000 கோடி கேட்கப்பட்ட நிலையில் ரூ.1,000 கோடியைத் தான் கொடுத்தது.</p><p>மத்திய அரசு போதிய நிதி அளிக்காவிடினும் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்?.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம். </p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்:</h2><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம்.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>இவ்வாறு பேசினர்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி - தாரிக் ரஹ்மான் சந்திப்புக்கு குறுக்கே நிற்கும் ஷேக் ஹசீனா.. வங்கதேசம் போட்ட கறார் கண்டிஷன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bangladesh-pm-visit-tied-to-hasina-extradition-demand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bangladesh-pm-visit-tied-to-hasina-extradition-demand#comments</comments><guid isPermaLink="false">5376e955-9d6f-4af9-91b7-3e21b06f2a23</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:20:59 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:20:59.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Bangladesh,வங்கதேசம்,Sheikh Hasina,ஷேக் ஹசீனா,Tarique Rahman,தாரிக் ரஹ்மான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0609aptx/tn-17.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி, ஹசீனா, தாரிக் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி, ஹசீனா, தாரிக் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0609aptx/tn-17.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கதேசத்தில் கடந்த 2024 இல் மாணவர்கள் போராட்டத்தால் அவாமி லீக் ஆட்சி கவிழ்ப்புக்கு பின் அதன் தலைவரும் அப்போதைய பிரதமருமான <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனா</a> இந்தியா தப்பி வந்தார். </p> <h2>வங்கதேசம்</h2><p>இதனிடையே வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் நடந்த இடைக்கால ஆட்சி கடந்த பிப்ரவரியில் நடந்த பொது தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. அந்த தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் புதிய பிரதமர் ஆனார்.</p><p>வங்கதேச மாணவர் போராட்டத்தின்போது அழிவுகரமான தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவருக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதித்தது.</p><p>இந்த சூழலில் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரி இந்தியாவை வங்கதேச அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p>இதனிடையே 2 ஆண்டுகள் பின்னர் முதல் முறையாக இந்த மாதம், ஷேக் ஹசீனா ஆன்லைனில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தனக்கு என்ன நேர்ந்தாலும் தான் இந்த ஆண்டு இறுதியில் <a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-security-alert-sajib-joy-alleges-isi-free-operation-and-extremist-release-in-bangladesh">மீண்டும் வங்கதேசம் </a>செல்வதாக தெரிவித்திருந்தார்.</p> <h2>அழைப்பு</h2><p>வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றபோதே தாரிக் ரஹ்மான் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.</p><p>இந்தியாவின் அண்டை நாடு ஆதலால், அவரின் இந்தியா வருகை அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது. </p><p>சட்டவிரோத குடியேற்றம், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொய்வை கண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.</p> <p>ஆனால் அவர் இதுநாள் வரை இந்தியா வருகை தரவில்லை. இந்த வாரத்தில் திட்டமிடப்பட்டிருந்த தாரிக் ரஹ்மானின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>விரைவில் அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தனது இந்திய வருகைக்கு தாரிக் ரஹ்மான் அரசு நிபந்தனை விதித்துள்ளது.</p> <h2>நிபந்தனை</h2><p>அவரின் இந்திய பயண திட்டத்திற்கு அங்குள்ள அரசியல் காட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த நிபந்தனைகளை தாரிக் அரசு விதித்துள்ளது.</p> <p>நேற்று டாக்காவில் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல் கரீம், ஷேக் ஹசீனா மற்றும் நாடு தப்பிய இதர குற்றவாளிகளை நாடுகடத்துவதில் இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலம் பிரதமர் தாரிக் ரஹ்மான் பயணத்திற்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>முன்னதாக ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பு நடத்த அனுமதித்ததற்கு இந்திய அரசை வங்கதேச அரசு கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை விவகாரம்- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-explain-megamalai-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-explain-megamalai-issue#comments</comments><guid isPermaLink="false">c9ccf613-242c-47fb-aa26-1cde0d252a8f</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:10:26.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0hf8nyzj/nirmakumar0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0hf8nyzj/nirmakumar0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மேகமலை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* 2009-ல் தி.மு.க. ஆட்சியில் தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது. 2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது. </p><p>* 15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர், கடந்த காலங்களில் வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை. </p><p>* மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை த.வெ.க. அரசு செய்யாது. </p><p>* மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் த.வெ.க. அரசு மேற்கொள்கிறது. </p><p>* 2021-ல் புலிகள் காப்பகமாக அறிவித்த போது திமுக முறையாக கையாளவில்லை. </p><p>* 2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்த போது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க. எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனிடையே, மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தி.மு.க. அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது. மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>திமுக வெளிநடப்பு: எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை குறைக்கூறுவதா?- உதயநிதி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-walkout-udayanidhi-anger-over-government-blaming-everything-on-dmk-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-walkout-udayanidhi-anger-over-government-blaming-everything-on-dmk-rule#comments</comments><guid isPermaLink="false">650c062d-2450-4489-9e20-7878f2a624aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:56:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:56:20.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,திமுக வெளிநடப்பு,TNAssembly,DMK Walkout</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fgmt0yxu/udhay.jfif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fgmt0yxu/udhay.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say" rel="nofollow">போதைப்பொருள்</a> குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என குற்றம்சாட்டி சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">உதயநிதி ஸ்டாலின்</a> கூறியதாவது:-</p><p>உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்காத தவெக அரசு, எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை பற்றி பேசுகிறது.</p><p>மாணவர்கள் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எந்த அமைச்சர்களும் துறை சார்ந்து பதிலளிப்பதில்லை, சட்டம்-ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை.</p><p>கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">2a5bfd78-457b-451e-949d-4dac9191e13c</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:54:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:54:02.706Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3k9wfvfy/MegamalaiIssue.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேகமலை விவகாரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேகமலை விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3k9wfvfy/MegamalaiIssue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது என்றார். </p><p>இதனை தொடர்ந்து சட்டசபையில், மேகமலை விவகாரம் தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</strong></h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றம் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</strong> </h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில், வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது. வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர். எந்தவித கருத்து கேட்காமல் காப்புக்காடாக அறிவித்து வனத்துறை கட்டுப்பாடுகளை விதிப்பதால் பழங்குடி மக்கள் அவதி அடைந்துள்ளனர். சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது என கூறினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்</strong> </h2><p>காவல்துறை ஒத்துழைக்காவிடில் ராணுவப்படையை வைத்து மக்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை. கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார். </p><h2><strong>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா</strong> </h2><p>மேகமலை- வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: ஆதவ் அர்ஜூனா Vs உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-aadhv-arjuna-vs-udhayanidhi-stalin-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-aadhv-arjuna-vs-udhayanidhi-stalin-arguments#comments</comments><guid isPermaLink="false">42d2ac57-3f12-4032-bb02-15d56ec3e9a3</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:29:20.463Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,Coimbatore student murder,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qbeeepvu/aadhavudhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qbeeepvu/aadhavudhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>* கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. </p><p>* போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு. </p><p>* கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகமாகியுள்ளது. இது காவல்துறை கொடுத்த அறிக்கை. </p><p>* தி.மு.க. ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கை வைத்து தான் பேசுகிறேன், த.வெ.க.வின் அறிக்கை வைத்து கூறவில்லை. </p><p>* தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன?</p><p>* தி.மு.க. ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்தது. </p><p>* தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்தனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு சட்டசபையில் அமளி ஏற்பட்டது. </p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை ஏற்க முடியாது. அமைச்சர் ஆதவ் எதிர்க்கட்சிகள் குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.  </p><p>இதனை தொடர்ந்து கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி. கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல என தி.மு.க. எம்.எல்.ஏ.வேலு கூறினார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருட்களால் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன என்பதை கூறினோம். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது எனக் கூறுகின்றனர்.  தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. </p><p>போதைப்பொருளுக்கு எதிராக தி.மு.க. எடுத்த நடவடிக்கை, விழிப்புணர்வு செய்த டேட்டா அவரிடம் இருக்கிறது. தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமல்ராஜை எதற்காக ஆணையர் பதவியில் அமர்த்தியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றார்.</p><p>இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. மக்கள், பெண்கள் அனைவரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தினர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-against-ips-officers-brother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-against-ips-officers-brother#comments</comments><guid isPermaLink="false">715e7c8b-a6e7-4c39-995c-f204e58397e6</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:28:53 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:28:53.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,லுக் அவுட் நோட்டீஸ்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,Tasmac scam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b5rsc1wh/tasnac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac shop]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b5rsc1wh/tasnac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>'டாஸ்மாக்' நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக்' முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன், 'டாஸ்மாக்' அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரதேஷ், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றது.</p> <p>இந்த வழக்கில் மதுபான உற்பத்தி ஆலைகள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத 'டாஸ்மாக்' ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p> <p>இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரதேஷை போலீசார் தேடி வருகிறார்கள். அவர். வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை.. கோவை, திருவொற்றியூர் கொலைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-debate-on-coimbatore-and-tiruvottiyur-student-murders-honest-probe-compensation-and-government-job-assured</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-debate-on-coimbatore-and-tiruvottiyur-student-murders-honest-probe-compensation-and-government-job-assured#comments</comments><guid isPermaLink="false">70f68839-debb-4a4c-9f84-e60f94d7b59d</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:25:29 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:25:29.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,Drugs,தமிழக சட்டசபை,rajmohan,Tamil Nadu Legislative Assembly,ராஜ்மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bztc2wbz/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bztc2wbz/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.</p><p>இதன்பின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion">கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் </a>குறித்து புகாரளித மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  </p><p>இந்த விவகாரத்தில் காவல்துறை உடந்தை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உண்மையை மூடி மறைக்க காவல்துறை முயல்வதாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth">அதிமுக எம்எல்ஏ காமராஜ் </a>குற்றம்சாட்டினார்.</p> <p>இதனிடையே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவையில் பேசுகையில்,</p><h2>ராஜ்மோகன்</h2><p>"தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கல்வி சாலைகள் என்பது வரிய எளிய பெற்றோர்களுடைய குழந்தைகளுடைய வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.</p><p>ஒரு பள்ளிக்கூடத்திலும் ஒரு கல்லூரியிலும் வன்முறை சம்பவங்களோ, போதைப் பழக்கங்களோ எதுவும் நடக்கக்கூடாது என்பதே அரசியல் கடந்து இந்த அவையில் உள்ள எல்லோரின் விருப்பம்.</p> <h2>ஈடு செய்ய முடியாத இழப்பு</h2><p>கோவை சம்பவத்தின் பாதிக்கப்பட்ட மாணவனாக இருக்கட்டும், திருவொற்றியூரில் கொல்லப்பட்ட சிறுவனாக இருக்கட்டும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை. ஒவ்வொரு குடும்பத்தின் பரிதவிப்பு எங்கள் பரிதவிப்பு. அவர்களுக்கு அது ஈடு செய்ய முடியாத இழப்பு.</p><p>முதலாவதாக அந்த குடும்பத்திற்கு தேவைப்படும் நேர்மையான போலீஸ் விசாரணை நடைபெற வேண்டும் என முதல்வர் உத்தரவுக்கு இணங்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளோம். மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ள அந்த குடும்பத்தின் துயரத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம். துயரத்தில் துணை நிற்கிறோம்.</p> <h2>நடவடிக்கை</h2><p>உடனடியாக எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த குடும்பத்திற்கு தேவையான இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் நடவடிக்கையை நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே செய்துகொண்டிருக்கிறோம். அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்.</p><p>குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களுக்கு பாதுகாப்பு, நேர்மையான விசாரணை அனைத்தும் செய்யப்படுகிறது. தவெகவின் நிலைப்பாடு ஒன்றுதான். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.</p> <h2>கடமை</h2><p>ஒருவேளை அது கும்பல் மோதலா? போதைப்பொருள் காரணமா, அல்லது வேறு சமூக விரோதிகளுக்கு சம்பந்தம் உண்டா? கல்லூரிகளில் இதற்கு முன்பு இதுபோன்ற வன்முறை நடந்திருக்கிறதா? இனி இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் நேராமையான முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p>பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானது செய்ய வேண்டியது எங்கள் கடமை. கேட்கவேண்டியது அவர்கள் உரிமை. நேற்று எண்களின் சமூக நீதித்துறை அமைச்சர், மற்றும் அமைச்சர் சம்பத் கோவைக்கே நேரில் சென்று அந்த குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்தார்கள்.</p> <h2>ஆறுதல்</h2><p>நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகிய நானும், அமைச்சர் ஆதவும் திருவொற்றியூர் சென்று கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோரின் கை பிடித்து ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவரை தவிர கொல்லப்பட்டவர் மற்றும் கொலை செய்தவர்கள் அனைவரும் சிறுவர்கள். இதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பொறுத்தவரை ஒரு எதிரி கூட தப்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அந்த தாயிடம் நாங்கள் வாக்களித்திருக்கிறோம்.</p> <h2>தண்டனை </h2><p>யாராக இருந்தாலும், எத்தனை வழக்கறிஞர்கள் கொண்டு வந்தாலும், பாதிக்கப்பட்ட அமுதன் மற்றும் தனுஷ் வழக்கு நடத்தி சட்டரீதியாக ஒருவரும் தப்பிக்க முடியாதபடி தண்டனை பெற்றுத்தருவோம். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகளை அழைத்து அதற்கு தேவையான திட்டவட்டமான வலுமுறைகளை வகுத்து வருகிறோம்.</p> <h2>அரசு வேலை</h2><p>திருவொற்றியூரில் கொல்லப்பட்ட தனுஷின் மூத்த சகோதரர் இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவருக்கு எஸ்சிஎஸ்டி பிரிவின் கீழ் அரசு வேலை வழங்க முதல்வர் முடிவு செய்திருக்கிறார்.</p><p>மேலும் நிவாரண தொகையுடன் சிறுவனின் பெற்றோருக்கு மாதம் ரூ.8000 ஓய்வூதியம் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு தான் இன்று சட்டசபைக்கு வந்துள்ளோம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள்? உதயநிதி குற்றச்சாட்டும்.. அமைச்சர் சரத் அளித்த விளக்கமும்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ipl-match-drug-use-row-udayanidhi-vs-minister-sarath</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ipl-match-drug-use-row-udayanidhi-vs-minister-sarath#comments</comments><guid isPermaLink="false">56177fc6-9eb7-4d55-850b-e790618e335a</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:22:24 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:22:24.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,Drugs,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் சரத்,Minister Udhayanithi stalin,Minister Sarath</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rn6p7e4p/Minister-Sarath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sarath- Opposition leader Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rn6p7e4p/Minister-Sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</p><p>இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">போதைப்பொருள்</a> பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது.</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைச்சர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?</p><p>போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து நீக்கி திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது.</p><p>இவ்வாறு உதயநிதி கூறினார்.</p><p>உதயநிதியின் பேச்சுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/did-i-use-drugs-minister-sarath-clarifies-regarding-the-controversial-video" rel="nofollow">அமைச்சர் சரத்</a> பதிலடி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா? </p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது கே.என்.நேரு பேசுகையில்,"கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: அமைச்சரின் விளக்கமும்... அவையில் சலசலப்பும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-ministers-explanation-and-commotion-in-the-house</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-ministers-explanation-and-commotion-in-the-house#comments</comments><guid isPermaLink="false">6dfdb2dc-b7a2-47cf-bc64-dac28d659e73</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:02:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:02:41.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Coimbatore student murder,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rk047ayi/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்- அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்- அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rk047ayi/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசிய பிறகு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-</p><p>* இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><p>* அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>* போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>* போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.</p><p>* போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.</p><p>* போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>* கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.</p><p>* கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>* போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் குடும்பத்தினரிடம் தொடர்பு என்றார்.</p><p>ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது. மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட த.வெ.க. அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?. போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் தி.மு.க. உடனடி நடவடிக்கை எடுத்தது என்றார். </p><p>ஐபிஎல் மேட்ச்சில் த.வெ.க. அமைச்சர் பவுடர் என உதயநிதி ஸ்டாலின் பேசியதும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோவை கல்லூரியில் மாணவன் கொலை - உண்மையை மறைக்க முயலும் காவல்துறை - அதிமுக குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth#comments</comments><guid isPermaLink="false">b86fad6c-d291-4a09-b92d-dbd8ea06acd0</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:50:25 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:50:25.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,போதைப்பொருள்,தமிழக சட்டசபை,Narcotics,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/p69j3t38/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/p69j3t38/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. </p><p>அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார். </p><p>இதன்பின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion">கோவை கல்லூரியில் மாணவன் கொலை </a>விவகாரம் தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>உதயநிதி ஸ்டாலின், கோவை கள்ளக்குறிச்சியில் போதை கும்பல் குறித்த தகவல் கொடுத்த  கல்லூரி மாணவன் அடித்துக்கொள்ள கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசு விளக்கமளிக்க கோரினார். </p><p>தனது முறையின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், </p> <h2>போதைப்பொருள்</h2><p>கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 19 வயதே ஆன பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த அவையின் கவனத்துக்கு அதிமுக சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.</p><p>இந்த கொடுமையான கொலை சம்பவம் குறித்து அமுதன் தயார் மற்றும் தந்தை ஆகியோர் கூறுகையில், எங்கள் மகன் அமுதன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அந்த விடுதியில் சில மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தார்.</p> <p>அவர் புகார் அளித்தது வெளியே கூறப்பட்டுவிட்டதால் அந்த மாணவனை புகாருக்கு உட்படுத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் நிர்வாகம் அந்த மாணவனை அழைத்து வெளியே தங்கிக்கொள்ளும்படி சொல்லிவிடுகிறார்கள்.</p><p>அவர் இரண்டாம் ஆண்டு படிக்கிற நண்பர் அறையில் தங்குகிறார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன் நண்பரோடு கல்லூரிக்கு காலை 9 மணிக்கு வருகிறார். அப்போது தீபக் என்கிற ஒரு மாணவன் மற்றும் அவரோடு 20 பேர் சேர்ந்து அவரை துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மைதானத்திற்கு கொண்டு சென்று அங்கே இரும்பு கம்பிகளால் அடித்தும் கத்திகளால் குத்தியும் கொலை செய்யப்படுகிறார்.</p> <h2>கோஷ்டி மோதலா?</h2><p>இதனால் பெற்றோர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறும்போது, முதல்வர், டீன், பிஆர்ஓ கூறும்போது, அவர் எந்தவிதமான போதைப்பொருள் குறித்த புகார்கள் தெரிவிக்காவில்லை. அந்த நபர்களுக்கும் தங்கள் கல்லூரிக்கும் சம்மதம் இல்லை என்று சொல்கிறார்கள்.</p><p>இன்னும் கொடுமை என்னவென்றால் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது இது சீனியர் ஜூனியர் சண்டை, செல்போன் தொடர்பான பிரச்சனை, இது கோஷ்டி மோதல் என்கிறார். ஒருவரை 20 பேர் தூக்கிச் சென்று கொலை செய்வது எப்படி கோஷ்டி மோதல் ஆகும்.</p> <h2>உண்மையை மறைக்கும் காவல்துறை</h2><p>காவல்துறை உண்மையை மறைக்க முயற்சி செய்கிறது. கல்லூரியும் பெயருக்கு களங்கம் ஏற்படும் என உண்மையை மறைக்கிறது. இதில் அரசு தலையிட்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.</p><p>கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களில் இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை என சொல்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.</p><p>6 லட்சம் நிவாரணமாக அந்த குடும்பத்திற்கு அரசு வழங்கியிருக்கிறது. அது போதாது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் இறந்திருக்கிறார். எனவே அவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.</p> <h2>பள்ளி மாணவன் கொலை</h2><p>அதேபோல திருவொற்றியூரில் தனுஷ் என்கிற பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். அதற்கு அந்த பகுதியில் உலவிய போதைப்பொருள் காரணம் என்கிறார்கள். </p><p>எனவே எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவ்வப்போது குறிப்பிடுவதுபோல பள்ளி, கல்லூரிகளில் எந்த காரணம் கொண்டும் போதைப்பொருள் இருக்கக்கூடாது.</p> <p>அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறுவதை போல அதன் அடிப்படையில் போதைப்பொருள் ஒடுக்கப்பட வேண்டும்.</p><p>பெற்றோர்கள் பயத்தில் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவன் குடும்பத்திற்கு வழங்கியதுபோல திருவொற்றியூர் மாணவனுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி அமர்ந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion#comments</comments><guid isPermaLink="false">8958307b-2f04-4a88-9c70-711a06d72943</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:48:00.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wsam3w51/coimbatore.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wsam3w51/coimbatore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p>அப்போது தீர்மானத்தின் மீது அவை <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">உறுப்பினர்கள்</a> பேசியது பின் வருமாறு:-</p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ் குமார்</strong></h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் இரந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை த.வெ.க. ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது. மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை குறித்து நீதி விசாரணை தேவை.</p><h2><strong>பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன்</strong></h2><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும். </p><h2><strong>சி.பி.எம். எம்.எல்.ஏ. செல்லசாமி</strong></h2><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல், காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வரவேண்டும். </p><h2><strong>சி.பி.எம். எம்.எல்.ஏ. மாரிமுத்து</strong></h2><p>காவல்துறை பொறுப்பற்ற முறையில் உள்ளது. கொல்லப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு நீதி வேண்டும். த.வெ.க. அரசு போதை கலாச்சாரத்தை ஒழிப்பதுடன் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன். </p> <h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கட்பட்</strong></h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில போதைப்பொருளால் அசம்பாவிதம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stlain-speech-to-coimbatore-student-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stlain-speech-to-coimbatore-student-murder-case#comments</comments><guid isPermaLink="false">562e2663-78a0-4e60-bc57-ec6e8cd88fa8</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:28:06.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lk823hqz/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lk823hqz/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது. </p><p>* கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். </p><p>* இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>* அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன். </p><p>* போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டமாக கூறினர். </p><p>* போதைப்பொருள் கும்பல் குறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளான். </p><p>* கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளான். </p><p>* போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.</p><p>* சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>* கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. </p><p>* 100 நாள் சாதனை என பெருமை பேசும் த.வெ.க. அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். </p><p>* காஞ்சிபுரத்திலும் போதைக்கும்பல் இரு இளைஞர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. </p><p>* பள்ளி, கல்லூரிகளில் வன்முறைக்கு எதிராக ஆலோசனை வகுப்புகளை எடுக்க வேண்டும். </p><p>* ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. </p><p>* போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை தொடக்கம்: 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு சபாநாயகர் பாராட்டு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-grants-debate-department-wise-grant-discussions-begin-after-tvk-governments-first-general-and-agriculture-budgets</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-grants-debate-department-wise-grant-discussions-begin-after-tvk-governments-first-general-and-agriculture-budgets#comments</comments><guid isPermaLink="false">c968088d-e1ba-46f7-8645-da0059fc4578</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:13:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:13:22.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழ்நாடு சட்டசபை,tvk,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lsp3gppf/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lsp3gppf/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. </p><p>நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p> <h2>மீண்டும் கூடல்</h2><p>இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது.</p><h2>பாராட்டு </h2><p>இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக ஆட்சி</a> பொறுப்பேற்று 100வது நாள் ஆகியுள்ள நிலையில் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">விஜய் </a>ஆட்சியை சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார். 100 நாளை தொட்டிருக்கும் முதல்வரின் ஆட்சி நூற்றாண்டுகள் கடந்து பேசப்படும் சாதனைகளை செயவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என அவர் தெரிவித்தார். </p><h2>அவை செயல்பாடுகள்</h2><p>முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசிய பின்னர், துறையின் அமைச்சர் கள் செங்கோட்டையன் (வருவாய் துறை). டாக்டர் அருண்ராஜ் (சுகாதாரத்துறை) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>பின்னர், இந்த துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால் வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>அருமை நண்பர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- ரஜினிகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2f8c1ea9-851b-4657-840b-dc315a91077a</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:53:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:53:02.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,Rajinikanth,ரஜினிகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1h9rua37/rajini.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஜினிகாந்த்- திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஜினிகாந்த்- திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1h9rua37/rajini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan">மு.க.ஸ்டாலின்</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல்.திருமாவளவனுக்கு</a> நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதித்தவர்</strong></h2><p>தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன் M.P.அவர்கள்.</p><p>65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">b29a5a86-04b9-406d-90bf-e07e0e78acd4</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:42:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:42:48.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,thirumavalavan,திருமாவளவன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொல். திருமாவளவனுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவனுக்கு</a> முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன் என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் <a href="https://x.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@ThirumaOfficial</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன்.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2089191915321508214?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு இன்று பிறந்தநாள்... பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்: முதலமைச்சர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8b1cccab-04d1-4cd1-b543-04319f71196f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:59:48.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.</p><p>தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!<br><br>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும்… <a href="https://t.co/QyRCaq68lA">pic.twitter.com/QyRCaq68lA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089178494555377852?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வீடியோ: &apos;100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி&apos; - முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era#comments</comments><guid isPermaLink="false">69e176cd-5925-4f8b-9e79-c06c17cadbc9</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:07:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:07:37.552Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்நாடு அரசு,TN Government,tvk,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என பதிவிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</strong></em></p> <p>தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026">விஜய்</a> மே 10-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.</p> <p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான முக்கிய 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> கையெழுத்திட்டார்.</p><p>இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில்,  'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.</p> <p>அதில், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">100 நாள் ஆட்சி <br>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி<br><br>100 Days of Governance <br>A Government for Generations<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/so1MP9Mw96">pic.twitter.com/so1MP9Mw96</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089163922746323414?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வெற்றி ஸ்டிக்கரில் வெற்று விளம்பரம்.. பட்டாசு தொழிலை மொத்தமாக முடக்கும் தவெக அரசு - தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories#comments</comments><guid isPermaLink="false">a1b725af-4149-4816-8c25-581669cc1eb2</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:04:37.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,சிவகாசி,Sivakasi,Thangam Thennarasu,firecracker industry,பட்டாசு தொழில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed">சிவகாசியில் </a>கண்டனப் போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த போராட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தங்கம் தென்னரசு </a>கலந்து கொண்டார்.</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>இதில் பேசிய அவர்,</p><p>"ஒரு அரசு தனது மக்களைக் காப்பதில் எந்த அளவிற்கு முன்முயற்சியுடன் செயல்பட வேண்டுமோ, அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொழிலையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.</p><p>இந்த வட்டாரத்தில் 6,000க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.</p><p>ஆனால், த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த மூன்று மாதங்களில் இந்த தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h2>ஆய்வு</h2><p>அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் விபத்துகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேடியாக முடக்கி நசுக்குவது எந்த வகையில் நியாயமாகும்.</p><p>ஏனெனில், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது அந்த நிர்வாகத்தோடு முடிந்துவிடாது. அந்தத் தொழிற்சாலையை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.</p> <p>முறையாக விதிகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.</p><p>யாராவது சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நாம் வரவேற்கிறோம்.</p><p>ஆனால், முறையாக உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளிலும் திடீர் ஆய்வுகள் என்ற பெயரில் சென்று தொழிலை மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் எங்களுடைய கேள்வி.</p><p>சாதாரண சிறு வணிகர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும் வகையில் ஆய்வுகள் என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.</p> <h2>மாற்றம்</h2><p>இதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக ஆட்சி வந்த உடனே சிவகாசி மாறிவிடும் என்று கூறினீர்கள். இந்த மூன்று மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது.</p><p>பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவோம் என்று கூறினீர்களே, வழங்கினீர்களா?. சிவகாசியில் இருக்கிற தொழில்துறை அமைச்சர், தேர்தல் நேரங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு வந்து ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டார்.</p> <p>அதில் 10 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையமும், ஆம்புலன்ஸ் வசதியும் அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதுகுறித்து எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?</p> <p>மொத்தத்தில், எதை கேட்டாலும் எல்லாமே இல்லை, இல்லை என்று சொல்வதுதான் உங்களுடைய மாற்றம்.</p><p>ஆனால், இருக்கிறது, இருக்கிறது என்று மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களுக்கும் அள்ளித் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.</p><p>தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.1 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய பட்டாசுத் தொழிலை ஏன் நசுங்க செய்கிறீர்கள்?</p> <h2>வெற்றி ஸ்டிக்கர்</h2><p>இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் வழங்க வேண்டிய நிதியைக் குறைத்திருக்கிறீர்கள். பட்டாசுத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்வித்துறை நிதி என பல்வேறு துறைகளிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.</p><p>திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.</p> <p>எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த வெற்றி உண்மையிலேயே மக்களின் வெற்றியாக இருக்கிறதா என்றால் இல்லை.</p><p>அவை வெற்றித் திட்டங்களாக இல்லை; வெற்றுத் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. த.வெ.க. அரசு இந்த மூன்று மாத காலத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. " எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin#comments</comments><guid isPermaLink="false">e286180e-a5da-4932-b51f-1b1d4f6cc627</guid><pubDate>Mon, 17 Aug 2026 00:27:43 +0000</pubDate><atom:updated>2026-08-17T00:27:43.876Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழ் நாடு சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gfrq98hb/TN-Assembly" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gfrq98hb/TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ் நாடு</a> சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/tn-budget">பொது பட்ஜெட்</a> மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.</p><h2>விடுமுறை:</h2><p>அதனைத் தொடர்ந்து, சட்டசபையில் இன்று, 2026-2027-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் (13-ஆம் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ஆம் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. </p><p>நேற்று முன்தினம் (15-ஆம் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.</p><h2>மானியக் கோரிக்கை விவாதம்:</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் கூடுகிறது. பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. அதில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் தொடங்குகிறது.</p><p>முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka#comments</comments><guid isPermaLink="false">4bce81d7-69b1-4d5a-9d35-85995747ecd8</guid><pubDate>Sun, 16 Aug 2026 17:09:07 +0000</pubDate><atom:updated>2026-08-16T17:09:07.067Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று (சனிக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். </p><h2>முதல்வர் கண்டனம்:</h2><p>துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் என விசாரணையில் தெரியவந்தது. மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். </p><p>இந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். </p><p>மேலும், பலர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இந்த சம்பவத்தை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பதிவில், "கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.</p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.</p><p>இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்குப்பதிவு:</h2><p>முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்தது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 16 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026#comments</comments><guid isPermaLink="false">114f1354-2cfc-439f-8ee1-fbc2ae5ae0a8</guid><pubDate>Sun, 16 Aug 2026 03:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-16T16:13:58.057Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/4rqpglxc/TodayLive001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/withdraw-coalition-support-jharkhand-protesters-demand-from-rahul-gandhi">ஜார்க்கண்ட் முதல்வர், ராகுல் காந்தி உருவ பொம்பை எரிப்பு: 20-ந்தேதி சோரன் வீடு முற்றுகை போராட்டம்- மாணவர்கள் அறிவிப்பு</a></p><p>* ராகுல் காந்தி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், உறுதியான நடவடிக்கை பின்பற்றப்படவில்லை.</p><p>* அதனால் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/djokovic-lose-second-round-in-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/chepauk-super-gillies-moves-in-second-place-in-tnpl-points-table">டிஎன்பிஎல்: புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது சேப்பாக்</a></p><p>* முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.</p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-beat-wales-in-hockey-world-cup">உலகக் கோப்பை ஹாக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா</a></p><p>* இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது.</p><p>* கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/asish-banerjee-mamata-banerjee-close-aide-found-dead-at-trinamool-office">முன்னாள் அமைச்சர் கட்சி அலுவலகத்தில் சடலமாக கண்டெடுப்பு: மம்தாவுக்கு நெருக்கமானவர்..!</a></p><p>* கல்வி மற்றும் விவசாயத்துறை அமைச்சராகவும் மம்தா பானர்ஜி அரசின் கீழ் பணியாற்றியுள்ளார்.</p><p>* இந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக-வின் துருபா சஹாவிடம் தோல்வியடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-aiadmk-alliance-not-possible-says-mp-kanimozhi" rel="nofollow">திமுக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை..!- திமுக எம்பி கனிமொழி</a></p><p>* பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p>*  தூத்துக்குடியிலேயே தொடர்ந்து இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/south-railway-revenue-up-8-84-percent-in-2025-26" rel="nofollow">2025-26ம் நிதியாண்டில் தெற்கு ரெயில்வேயில்  ரூ.13,778 கோடி வருவாய்- பொதுமேலாளர் சுப்பாராவ்</a></p><p>* நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 13.48 மில்லியன் டன்களை எட்டியுள்ளோம்.</p><p>* 2025-26-ம் ஆண்டில் 42.184 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/myanmar-approves-return-of-3-lakh-rohingya" rel="nofollow">3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்கிறது மியான்மர்</a></p><p>* தாய் நாட்டிற்கு அழைத்து வர வங்காளதேசத்துடன் இணைந்து மியான்மர் அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.</p><p>*  3 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cannot-fool-the-youth-mr-prime-minister-manickam-thakur-criticism-on-sengottai-speech" rel="nofollow">இளைஞர்களை ஏமாற்ற முடியாது Mr. Prime Minister!- செங்கோட்டையில் பிரதமரின் உரை குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்</a></p><p>* நேற்றைய மோடியின் பேச்சுக்கும், நிஜமான கள யதார்த்தத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி!</p><p>* ரூ.63,000 கோடியில் தொடங்கப்பட்ட பிரதமரின் பயிற்சித் திட்டம் (PMIS) முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8000-cusecs-flow-in-hogenakkal-cauvery" rel="nofollow">ஒகேனக்கல் ஆற்றில் 8,000 கனஅடி நீர் வரத்து..!- பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை</a></p><p>* தமிழகத்திற்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.</p><p>* குடிநீர் தேவைக்காக 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-pm-modi-pay-tribute-to-vajpayee" rel="nofollow">வாஜ்பாய் நினைவு நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி மலரஞ்சலி</a></p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.</p><p>* டெல்லியில் உள்ள நினைவிடத்தில் டெல்லி முதலமைச்சர் ரேகா அஞ்சலி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mob-baying-for-her-shashi-tharoor-backs-mahua-moitra-after-late-night-eviction-bid">நடுராத்திரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியேற்ற முயற்சி: மஹுவா மொய்த்ரா எம்.பி. குற்றச்சாட்டு</a></p><p>* மாலை 6.15 மணியளவில் நான் சர்க்யூட் ஹவுஸ் அறைக்குச் சென்றேன். ஊழியர்கள் எனக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.</p><p>* அந்த அறை தங்குவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. மாலை 7 மணிக்கு எனது அறைக்குத் தேநீர் கொண்டு வரப்பட்டது. இரவு 9.20 மணிக்கு இரவு உணவு அங்கேயே பரிமாறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-beat-australia-in-first-test">டார்வின் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் நொறுக்கியது வங்கதேசம்-சாதனை வெற்றி</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து வென்றது.</p><p>* ஹசன் மகமது ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/match-delayed-due-to-rain-in-second-day-for-srilanka-india-match">இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட்:  மழையால் பாதிப்பு</a></p><p>* சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 134 பந்துகளில் சதம் விளாசினார்.</p><p>* மழையால் ஆட்டம் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- பெ. சண்முகம் வலியுறுத்தல்</a></p><p>* துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>* சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</a></p><p>* நயினார் நாகேந்திரன் தமிழக மக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>* அரசியல் எதிர்ப்பு: விஜய் குடும்பம் பற்றிய அநாகரிக பேச்சுக்கு பல கட்சிகளிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/wtc-points-table-changed-bangladesh-to-enter-the-wtc-final-race">உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்தது வங்கதேசம்</a></p><p>* வங்கதேச அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.</p><p>* இந்திய அணி 48.15 சதவீத புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fe62a5ce-a42c-4356-ac59-ed3a71cf4c4a">நான் அரசியலில் நுழைந்ததே தவறு.. வாழ்நாளில் ஊழல் செய்ததே இல்லை - திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தற்கொலை கடிதம்</a></p><p>* ஆசிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*கட்சி அலுவலகத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.</p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</a></strong></p><p>* அரசு பேச்சுவார்த்தை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p><p>* இழப்பீடு அறிவிப்பு: உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/31932a92-6497-472b-973c-21979f9f4fdd">சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா</a></p><p>*சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்</p><p>* தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம்</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f845adee-a555-4331-baee-b546ce27480c">ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு</a></p><p>*கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம்</p><p>*நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5986a56-482a-401b-b017-f97d0b2c649a">மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</a></p><p>*அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>*அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/697f8b2b-6ea2-4df2-82c8-51a68ab73f25">வாரணாசி விமான நிலையத்தில் சோதனையின்போது வெடித்த துப்பாக்கி.. குண்டடிபட்டு 2 பேர் காயம்</a></p><p>*ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்க வந்திருந்தார்.</p><p>*இரண்டு பாதுகாப்பு ஊழியர்களின் மீது பாய்ந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-ncr-youth-turn-dance-into-business">டெல்லி-என்.சி.ஆரில் உருவெடுக்கும் 'டான்ஸ்பிரீனர்ஸ்': நடனக் கலையை வெற்றிகரமான வணிகமாக மாற்றும் இளைஞர்கள்</a>!</p><p>*இன்றைய டான்ஸ்பிரீனர்ஸ் வெறும் நடனம் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அவர்கள் தங்கள் நிறுவனங்கள் மூலமாகப் பல்வேறு நவீன வணிக மாதிரிகளைச் செயல்படுத்துகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</a></p><p>*இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sudden-ban-on-subsidised-fertiliser-sales-in-madhya-pradesh">மத்தியபிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: காரீஃப் பயிர் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்!</a></p><p>*இந்த தடையால் உரம் கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest">"நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்..."-கைது குறித்து  உதயநிதி நையாண்டி பேச்சு!</a></p><p>* "அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது" என்று நகைச்சுவையாகக் கூறினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action">நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</a></p><p>*நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade">சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</a></p><p>*காவலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நடவடிக்கைக்கு வரவேற்பு!</a></p><p>*த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது,</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">'மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்'-அண்ணாமலை!</a></p><p>*தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction">2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</a></p><p>*பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-solutions-most-diseases-next-10-years-anthropic-ceo-dario-amodei-prediction">அடுத்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான நோய்களுக்கு AI மூலம் தீர்வு: ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடி கணிப்பு!... </a></p><p>*AI-ன் உதவியால் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளை வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.</p><p>*மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையில் AI தொழில்நுட்பம் புகுத்தப்படுவதன் மூலம், ஆய்வுகளின் வேகம் 10 மடங்கு வரை அதிகரிக்கும் என்று டாரியோ அமோடி சுட்டிக்காட்டியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>2029 நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றத்தை விரும்பும் 64 கோடி வாக்காளர்கள்: அண்ணாமலை கணிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/64-crore-voters-seeking-change-in-2029-parliamentary-election-annamalai-prediction#comments</comments><guid isPermaLink="false">094f41f4-7739-48e5-9c94-db94916638d1</guid><pubDate>Sun, 16 Aug 2026 14:28:18 +0000</pubDate><atom:updated>2026-08-16T14:28:18.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நாடாளுமன்றம்,parliament,annamalai,We the Leaders,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/zoe179cy/ana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக, சென்னையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.</p><p>பேரணியின் நிறைவில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue">அண்ணாமலை</a>, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் களம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வரவிருக்கும் 2029 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்த அண்ணாமலையின் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. </p><h2>அ<strong>ரசியல் மாற்றம்</strong></h2><p>செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கிட்டத்தட்ட 64 கோடி வாக்காளர்கள் பெரும் மாற்றத்தை விரும்புவார்கள் என்று குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்காலக் கனவுகளை மையமாகக் கொண்டு வாக்காளர்கள் தங்களது தீர்ப்பை அளிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>எதி<strong>ர்கால அரசியல்</strong> </h2><p>பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்குக் பார்வை கொண்ட தலைமைக்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் பங்களிப்பு இந்த மாற்றத்தில் மிக முக்கியமான காரணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 2029 தேர்தல் இந்திய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என உறுதியாகத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-demands-unbiased-investigation-into-karnataka-forest-shooting#comments</comments><guid isPermaLink="false">36c8bc80-23cd-431c-adff-3170746de036</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:22:17 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:22:17.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,Forest Department,DMDK,பிரேமலதா,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/jw9a5mc3/Premalatha?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் ஹானூர் அருகே மரிமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing">துப்பாக்கிச் சூட்டில் </a>மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக பொது செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மனித உயிர்களை மதிக்காமல் நடந்த இந்த கொடூரத்திற்கு உடனடியாக விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><h2>இது குறித்து பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக மாநிலம்</a> ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.</p><p>வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. </p><p>மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.</p><p>சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p><p>தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும். </p><p>எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மேகதாது விவகாரத்தில் நேர்மையான, தவறு செய்யாத மோடியை இன்றும் நான் நம்புகிறேன்&apos;- அண்ணாமலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-he-still-trusts-honest-modi-on-mekedatu-issue#comments</comments><guid isPermaLink="false">9a118262-c241-4b42-9206-0cbb0718637f</guid><pubDate>Sun, 16 Aug 2026 13:12:50 +0000</pubDate><atom:updated>2026-08-16T13:12:50.975Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமித்தா,அண்ணாமலை,Modi,Amit Shah,மேகதாது,annamalai,மோடி,We the Leaders</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Modi-Annamalai   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/0fh6eip2/annamaka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய அண்ணாமலை, மேகதாது அணை விவகாரம், மத்திய அரசுடனான தொடர்பு, தற்போதைய ஆட்சிமுறை மற்றும் தனது அரசியல் நகர்வுகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.</p><h2>மேகதாது விவ<strong>காரத்தில் பிரத</strong>மர் மோடிக்கு ஆதரவு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government">மேகதாது அணை </a>விவகாரம் குறித்துப் பேசிய அண்ணாமலை, இதில் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்பட்டுள்ளார் என்றும், அவர் மீதான தனது நம்பிக்கை இன்றளவும் தொடர்வதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவில் 15 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில், எல்லைக்குச் சென்று பச்சைத் துண்டு அணிந்து போராட்டம் நடத்துவது, பேருந்துகளை சேதப்படுத்துவது போன்ற விளம்பர அரசியலைத் தாம் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய போலித்தனமான அரசியலால் தமிழர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார்.</p><h2>சுற்றுச்சூழ<strong>ல் இலக்கு</strong> </h2><p>சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, நடப்பு மாதத்திற்குள் 20 லட்சம் மரக்கன்றுகளை நடுவதுதான் தங்கள் அமைப்பின் முதன்மை இலக்கு எனத் தெரிவித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அமைச்சர்கள் மீது முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>டெல்லி பய<strong>ணம் பற்றிய வி</strong>ளக்கம்</h2><p>தலைவர்கள் இனி டெல்லியிலோ, புனித ஜார்ஜ் கோட்டையிலோ, போயஸ் தோட்டத்திலோ, கோபாலபுரத்திலோ அல்லது பனையூரிலோ உட்கார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் அழுத்தமாகக் கூறினார். </p><figure><img alt=" Amit Shah -Annamalai   " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/kwxmttr3/amit.jpg" /></figure><p>மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மை டெல்லிக்கு அழைத்து பொறுப்பேற்கச் சொன்னது உண்மைதான் எனக் குறிப்பிட்ட அவர், தம்மீது அல்லது பா.ஜ.க மீது சந்தேகம் இருப்பவர்கள் நேரடியாக அமித்ஷாவிடமே சென்று கேட்டுத் தெளிவுபெறலாம் என்று சவால் விடுத்தார்.</p><h2>ஒரு வருட <strong>கால அவகா</strong>சம்</h2><p>தான் பா.ஜ.கவின் ‘பி’ டீமாகச் செயல்படுகிறேனா அல்லது கட்சியின் வரம்புகளை மீறி இயங்குகிறேனா என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றத்திற்கு ஒரு வருட கால அவகாசம் அளித்துச் செயல்பட விட வேண்டும் என்றார். இந்த அரசு தவறு செய்தால் தட்டிக் கேட்போம், நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், சரியாக ஆட்சி செய்யத் தவறினால் அரசை வீழ்த்துவோம் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகள் மூடல்: த.வெ.க அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-shops-closure-annamalai-praises-tvk-government#comments</comments><guid isPermaLink="false">09be4588-48bb-4ad3-bd99-9a8271185fcf</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:18:58 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:18:58.434Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,அண்ணாமலை,டாஸ்மாக் கடைகள்,tasmac shops,annamalai,tvk government,த.வெ.க அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai- vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/3cfo6zbm/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ராணி மெய்யம்மை ஹாலில் இருந்து இயற்கை வளங்கள், நிலம், நீர் மற்றும் வனப்பாதுகாப்பை வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பொதுமக்களும் உணர்வுப்பூர்வமாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்சியில் பேசிய அண்ணாமலை தவெக அரசை பாராட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-beaten-to-death-is-tvk-govt-trying-to-cover-up-asks-mp-kanimozhi">தமிழக வெற்றிக் கழகம்</a> (த.வெ.க) தலைமையிலான புதிய அரசு அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், பாஜக முக்கியத் தலைவர் அண்ணாமலை த.வெ.க அரசின் சில குறிப்பிட்ட செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ளதால், அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><h2>டாஸ்<strong>மாக் கடைகள்</strong> மூடல்</h2><p>பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக் கடைகளை த.வெ.க அரசு அதிரடியாக மூடியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது என்றும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய முடிவுகள் பாராட்டத்தக்கவை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</p><h2>பொறு<strong>மை காக்க வலியுறுத்த</strong>ல்</h2><p>த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், உடனடியாக முடிவுகளுக்கு வர இயலாது என்று கூறிய அண்ணாமலை, அரசின் அடுத்தகட்ட திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளின் அமலாக்கத்தைப் பொறுத்திருந்து கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பினும், நன்மைகளை ஆதரிக்கும் அவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரம் போல வாய்மூடி இருக்கக்கூடாது.. கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொலைக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-forest-shooting-three-tamil-men-killed-by-forest-officials-protests-erupt-over-alleged-unjust-firing#comments</comments><guid isPermaLink="false">e5986a56-482a-401b-b017-f97d0b2c649a</guid><pubDate>Sun, 16 Aug 2026 12:10:47 +0000</pubDate><atom:updated>2026-08-16T12:10:47.111Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,மு.க. ஸ்டாலின்,Tamil Nadu government,Forest Department,M.k. stalin,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:title><media:description type="html"><![CDATA[  மு.க.ஸ்டாலின் 

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l0q9j2jk/tn-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies">பேச்சுவார்த்தையை </a>அடுத்து உடல்களை வாங்க சம்மதித்துள்ளனர்.  </p> <p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>ஸ்டாலின் கண்டனம்</h2><p>அந்த வகையில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">மு.க. ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,</p><p>"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.</p> <p>குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.</p><p>அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.</p> <p>மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.</p><p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமநாதபுரம்: லஞ்ச வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corruption-row-ramnathapuram-revenue-inspector-under-graft-probe-given-best-employee-award-later-withdrawn#comments</comments><guid isPermaLink="false">f845adee-a555-4331-baee-b546ce27480c</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:48:09 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:48:09.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,Ramanathapuram,Corruption,ராமநாதபுரம்,ஊழல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறந்த பணிக்கான சான்றிதழ் பெறும் கார்த்திகேயன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/je7tvl2c/tn-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேற்று நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/national/modi-speech-error-and-flag-row-ev-sales-misquote-and-inverted-tricolour-spark-controversy-at-independence-day-event">80 வது சுதந்திர தினம்</a> நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதல்வர் விஜய் </a>கொடியேற்றினார்.</p> <h2>சிறந்த ஊழியர்கள்</h2><p>மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டன.</p><p>அந்த வகையில் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.</p> <h2>விருது</h2><p>நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாறன் ஆகியோர் சிறந்த பணிக்கான சான்றிதழ்களை நகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினர்.</p><p>இதில் நகராட்சியின் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் என்பவருக்கும் சிறந்த பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.</p> <h2>சர்ச்சை</h2><p>ஆய்வாளர் கார்த்திகேயன் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த வழக்கு ராமநாதபுரம் லஞ்ச ஊழல் ஒழிப்பு துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சிறந்த பணியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>ஊழல்</h2><p>கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி லஞ்ச ஊழல் ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கார்த்திகேயன் வங்கி கணக்கில் கடந்த 3 ஆண்டுகளில் ஜி பே மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் பண பறிமாற்றம் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.</p><p>இதையடுத்து முறைகேடான வழியில் பணம் பரிமாற்றம் நடந்ததாக கார்த்திகேயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வரும் நிலையில் கார்த்திகேயனுக்கு சிறந்த பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் கண்டனங்களை குவித்த நிலையில் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழை திரும்ப பெற்றுவிட்டதாக நகராட்சி பொறுப்பு ஆணையர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்து காவலர் உயிரிழப்பு: ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-officer-dies-after-fainting-at-independence-day-parade#comments</comments><guid isPermaLink="false">5516ca60-728f-4167-8101-0cf5b2b525db</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:41:42 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:41:42.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவலர் உயிரிழப்பு,Police constable dies</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/7151n5lw/cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில்  நேற்று நடைபெற்ற 80-வது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george">சுதந்திர தின விழா </a>அணிவகுப்புப் பணியின்போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆவடி சிறப்புக் காவல் படை இசைக்குழு காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.</p><h2>அணிவகுப்புப் ப<strong>ணியின்போது நேர்ந்</strong>த சோகம்</h2><p>சென்னை நேற்று (ஆகஸ்ட் 15) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலரான தர்மராஜ் (வயது 56) பங்கேற்றுத் தன் கடமையை ஆற்றி வந்தார். அணிவகுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராதவிதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார்.</p><h2>மருத்துவமனையி<strong>ல் பலனின்றி</strong> முடிந்த சிகிச்சை</h2><p>மயக்கமடைந்து கீழே விழுந்த காவலர் தர்மராஜை, அங்கிருந்த சக காவலர்களும் மருத்துவக் குழுவினரும் உடனடியாக மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விழாவுக்கு வந்திருந்தோரிடையேயும் சக காவலர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>முதலமை<strong>ச்சர் நிதியு</strong>தவி </h2><p>காவலர் தர்மராஜின் மறைவு செய்தி அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். </p><p>கடமை உணர்வுடன் பணியாற்றிய முதல்நிலைக் காவலர் தர்மராஜின் மறைவு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்த முதலமைச்சர், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினாருக்கு நாவடக்கம் தேவை: சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-needs-to-watch-his-tongue-cpm-urges-legal-action#comments</comments><guid isPermaLink="false">79884528-daef-4639-9c91-42d644f19265</guid><pubDate>Sun, 16 Aug 2026 11:15:54 +0000</pubDate><atom:updated>2026-08-16T11:15:54.179Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Shanmugam,CPM,பெ.சண்முகம்,சிபிஎம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran  CPM  Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/l2cnhqts/cpm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்துத் தனிப்பட்ட முறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொதுவெளியில் கண்ணியம் மீறிப் பேசிய இந்த உரை, தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பையும் பல்வேறு தலைவர்களின் கண்டனங்களையும் அலை அலையாகப் பெற்று வருகிறது.</p><h2>எ<strong>ல்லை மீறிய பேச்சுக்கு</strong> எழுந்த கடும் எதிர்ப்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran">நயினார் நாகேந்திரனின்</a> இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கையில், பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் கண்ணியத்துடனும் பொறுப்புடனும் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் நயினார் நாகேந்திரன் நடந்து கொண்டுள்ளார் என்று சாடியுள்ளார். </p><p>பெண்களை மதிப்பது என்பது பாஜகவின் அகராதியிலேயே இல்லாத ஒன்று என்பது இதன்மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றும், நயினாருக்கு நாவடக்கம் தேவை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><h2>சட்டப்ப<strong>டி நடவடிக்கை எடுக்கக் கோரி</strong>க்கை</h2><p>அரசியல் நாகரிகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தமிழ்நாடு அரசு உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அவதூறு பேச்சுகள் தமிழ்நாட்டின் ஆரோக்கியமான அரசியல் சூழலைச் சீர்குலைக்கும் என்பதால், அரசும் காவல் துறையும் இதில் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் - காலை முதல் நடந்த போராட்டம் வாபஸ் – உடல்களைப் பெற உறவினர்கள் சம்மதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-men-killed-by-karnataka-forest-officials-families-accept-bodies#comments</comments><guid isPermaLink="false">2dd5c183-922f-4126-8d44-c61824703e7a</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:49:40 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:49:40.258Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ld07i6ap/Karnataka?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies">துப்பாக்கிச் சூட்டில்</a> தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.</p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.</p><h2><strong>அரசுத் தரப்பில் முக்கிய உறுதிமொழி</strong></h2><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, அரசுத் தரப்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. </p><p>இதில், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. </p><p>உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>சடலங்களை வாங்க உறவினர்கள் சம்மதம்</strong></h2><p>அரசின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, மைசூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழர்களின் சடலங்களையும் பெற்றுக்கொள்ள அவர்களது குடும்பத்தினரும், கிராம மக்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;நான் கூட இதுக்கு தான் நினைச்சேன்...&apos;-கைது குறித்து  உதயநிதி கிண்டல் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhis-sarcastic-remark-regarding-the-arrest#comments</comments><guid isPermaLink="false">ca38627e-414c-4573-b3a1-0e63a414268e</guid><pubDate>Sun, 16 Aug 2026 10:11:10 +0000</pubDate><atom:updated>2026-08-16T10:11:10.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Udhayanidhi Stalin,tvk,தஞ்சாவூர்,உதயநிதி கைது,udhayanidhi stalin arrested,Thanjavur controversy</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/ih4u65a2/UDHANIYATH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டத்துறை கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a>, தமது சமீபத்திய கைது மற்றும் சிறைவாசம் குறித்து நகைச்சுவையாகப் பேசி அரங்கத்தில் இருந்தவர்களைச் சிரிப்பலையில் மூழ்கடித்தார்.</p><p>கூட்டத்தில் பேசிய அவர், தம்மை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்துக் குறிப்பிடுகையில், "<em>அரசே சொந்தச் செலவில் எனக்கு ஒரு ரோடு ஷோ ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றது போல் இருந்தது"</em> என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், இந்த வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொண்டு தம்மை வெளியில் கொண்டுவந்த திமுக சட்டத்துறை வழக்குரைஞர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>அரசியல் ரீதியாகத் தம் மீது போடப்படும் வழக்குகள் குறித்தும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்துறையின் துணை கொண்டு அனைத்துப் பொய் வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறியடிப்போம் என்றும் உறுதியளித்தார். உதயநிதி ஸ்டாலின் தனது வழக்கமான பாணியில் கிண்டலாகவும் சுவாரஸ்யமாகவும் பேசிய இந்த உரை, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் தற்போது வேகமாகப் பரவி வருகிறது.</p><h2>வழக்கி<strong>ன் பின்னணி</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.</p><h2>சர்ச்சைக்<strong>குரிய பேச்சு</strong></h2><p>தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது பெண் குறித்தும், தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த சில கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் தஞ்சாவூர் கிழக்குக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். பின்னர் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், விசாரணைக்குப் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><h2>“<strong>நான் கூட இதுக்காக தா</strong>ன் நினைச்சேன்”</h2><p>தமது கைது நடவடிக்கை தொடர்பாகப் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அரசு தன் மீது தேவையின்றி வழக்குகளைத் தொடுத்து திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சாடினார். </p><figure><img alt="Udhayanidhi " src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/vt3enpli/UDHAY.jpg" /></figure><p>தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தபோது தனது உதவியாளர் வந்து கைது குறித்துத் தெரிவித்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், "நான் கூட இதுக்காகத்தான் என்னைக் கைது செய்கிறார்கள் என்று நினைத்தேன்" எனக் நையாண்டியாகப் பேசினார். காவிரி மற்றும் மேகேதாது விவகாரங்களில் விவசாயிகள் சந்திக்கும் முக்கியச் சிக்கல்களை மூடிமறைக்கவே இத்தகைய கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின் எதிர்</strong>வினை</h2><p>உதயநிதி ஸ்டாலினின் பேச்சைத் ஆளும்கட்சி மற்றும் எதிர்த்தரப்பு அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளை எந்தக் காலத்திலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு சோடிக்கப்பட்டுள்ளதாக திமுக ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் பதிலளித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொல்ல கர்நாடக வனத்துறைக்கு அதிகாரம்  தந்தது யார்? - டி.டி.வி தினகரன் ஆவேசம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-authorized-the-karnataka-forest-department-to-shoot-and-kill-innocent-tamils-ttv-dhinakaran-fumes#comments</comments><guid isPermaLink="false">07161d91-b762-4a7e-82f9-e15993f3ce30</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:46:49 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:46:49.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,Tamils,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/iyo2jxkv/tn-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கொலை </h2><p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.  </p><p>இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p> <h2>காரணம்</h2><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும் மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.</p><p>சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்ட தாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர். </p><p>இதனிடையே 3 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/p-shanmugam-urges-tn-govt-condemn-karnataka-govt-fake-encounter-of-3-tamilans-in-the-karnataka-forest">கண்டனம் </a>தெரிவித்து வருகின்றனர்.</p> <h2>டிடிவி தினகரன் பதிவு</h2><p>இந்த சூழலில் இதுகுறித்து அமமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ttv-dinakaran">டிடிவி தினகரன் </a>தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>"கர்நாடக மாநில வனப்பகுதிக்கு அருகே வசித்து வந்த அப்பாவி தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பத்தில் நீதி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருவதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், அம்மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.</p><p>பன்னெடுங்காலமாக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்தும், மாடுகளை மேய்த்தும் தங்களது வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கான அதிகாரம் அம்மாநில வனத்துறைக்கு கொடுத்தது யார்?</p><p>இப்படுகொலையை கண்டித்து அப்பகுதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடும் நிலையில், மான் வேட்டையாடியதாலே சுட்டுக் கொன்றதாக அம்மாநில வனத்துறை அளித்திருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல.</p><p>எனவே, கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில அரசிடம் உரிய விளக்கம் கேட்பதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டுவரப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் உடல்களை வாங்க மறுத்து 2-வது நாளாக போராட்டம்: வனத்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-three-tamils-shot-dead-protest-over-bodies#comments</comments><guid isPermaLink="false">2bddb3b0-55a8-4f39-a2bc-866b61b4c428</guid><pubDate>Sun, 16 Aug 2026 09:16:37 +0000</pubDate><atom:updated>2026-08-16T09:16:37.757Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழர்கள் சுட்டுக்கொலை,Tamils ​​shot dead,Karnataka Forest Department,கர்நாடக வனத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Karnataka Tamils ​​shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/eieg7wdl/karnataka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக மாநிலம் சாமராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட  ஆனூர் வனவிலங்கு மண்டலத்தில் உள்ள ஹோலேமுராடி வனப்பகுதிக்குள் நேற்று காலை வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதில் மரியமங்களா கிராமத்தை  சேர்ந்த அந்தோணி சுவாமி, லாசர் டோடியா குமார் மற்றும் ஜெகநாதன் டோடியா பீட்டர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். </p><p>மான்களை வேட்டையாடியதாக கிடைத்த தகவலின் பேரில்  அவர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் உடல்களும்  மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 2 துப்பாக்கிகளும், 20 கிலோ விலங்கு இறைச்சி நிரம்பிய பைகளும் கைப்பற்றப்பட்டதாக காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் உதவி வனத்துறை அதிகாரி மாரிசாமி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns">துப்பாக்கிச் சூடு </a>பற்றிய தகவல் பரவிய உடனேயே, உயிரிழந்தவரின் உறவினர்களும் கிராம மக்களும் ஆத்திரம் அடைந்து ஷக்யா கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தையும் பணியாளர் குடியிருப்புகளையும் முற்றுகையிட்டு அவற்றை சூறையாடினர்.</p><p>பெயர் பலகையைக் கிழித்தெறிந்தும், அலுவலக தளவாடங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வெளியே வீசியும் அவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். மேலும், கல்லிடோடியில் உள்ள வேட்டைத் தடுப்பு முகாமுக்குள் புகுந்து, அங்கிருந்த சொத்துகளையும் சேதப்படுத்தினர்.</p><p>மேலும் அவர்கள் ஆனூர் நகரில் சாலையை மறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்ததால், துறை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர். </p><p>அப்போது கணவரை பறிகொடுத்த பீட்டரின் மனைவி கூறுகையில், எனது கணவர் பீட்டர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மக்காச்சோளப் பயிரைப் பராமரிக்க வயலுக்கு சென்றிருந்தார். தன் கணவர், தனிப்பட்ட விரோதம் காரணமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஒரு பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p>அதுபோல் குமாரின் மனைவி கூறுகையில் "என் கணவர் தவறு செய்திருந்தால் அவரை  கைது செய்து இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் அவ்வாறு செய்யவில்லை. வேண்டும் என்றே திட்டம்  போட்டு கொன்று இருக்கிறார்கள். 2  மகள்கள் இருக்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என கண்ணீருடன் கூறினார். </p><p>அவர்களிடம் போலீஸ் துணை ஆணையர் ஸ்ரீரூபா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.முத்துராஜ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாது காப்புக்காக ரிசர்வ் காவல் படை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் உறவினர்கள் அழுதுகொண்டிருந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதாக கூறி நடத்தப்பட்ட மோதலில் 3 மூன்று பேர் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்ற செயலாகும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 கோடி இழப்பீடும், அரசு வேலைகளும் வழங்கப்பட வேண்டும் என விவசாய தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>இதுகுறித்து  மாநில பட்டு வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை மந்திரி புட்டரங்கஷெட்டி கூறுகையில், வனத்துறையின் பொறுப்பற்றத்தனம் கண்கூடாகத் தெரிகிறது. இந்த வழக்கின் உண்மை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கால் அரசும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று  கூறினார்.</p><h2>நீதிப<strong>தி விசாரணை</strong></h2><p>வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தது குறித்து நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக  முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், காலை 5 மணிக்கு இந்த  சம்பவம் குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. </p><p>அதிகாரிகள் சில விவரங்களை அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் சில பொருட்களும் ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும்," என்றார்.</p><p>இந்த நிலையில் வனத்துறையினர் 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கர்நாடக காவல்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது. வனத்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இறந்த அந்தோணி சாமியின் மனைவி லௌர்டு மேரி அளித்த புகாரின் அடிப்படையில் ஆனூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>முதல் தகவல் அறிக்கையில் அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக, “ஆனூர் பிரிவு வனத்துறை அதிகாரிகள்” குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பதிவு தென் மண்டல ஐ.ஜி. போரலிங்கேகௌடா மற்றும் எஸ்.பி. முத்துராஜு ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் பலி யானவர்களின் உடல்களை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நடந்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>தரக்குறைவான பேச்சுக்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/apologize-to-tamil-nadu-people-for-vulgar-speech-ramesh-condemns-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b7bfbdbb-066d-4104-8c90-0b4b7da28f62</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:40:24 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:40:24.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Apologize,CMVIJAY,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,WomenRespect</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh - Nainar Nagendran ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/e0n1f84c/Minister-Ramesh-Nainar-Nagendran?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன் </a>பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது குறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>"பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!</p><p>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட இல்லாமல், தாய்மார்களும் பெண்களும் முகம் சுளிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>பெண்கள் மீதான அவரது தவறான பார்வை அவரது பேச்சில் தெளிவாக வெளிப்படுகிறது. அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பெண்களை இப்படித்தான் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். தரக்குறைவான பேச்சுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பெண்களின் பெருமையையும், தாயின் அருமையையும் அறியாத மூன்றாம் தர நபரைப் போல இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது அருவருப்பின் உச்சம்!<br><br>ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவராக மட்டுமல்ல, குறைந்தபட்சம் ஒரு சாதாரண மனிதரிடம் இருக்க வேண்டிய நாகரிகம் கூட…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2088644733296075151?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: அன்புமணி கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-forest-anbumani-condemns#comments</comments><guid isPermaLink="false">84ef203b-6544-4f23-8a80-2389e1d40ff5</guid><pubDate>Sun, 16 Aug 2026 08:29:36 +0000</pubDate><atom:updated>2026-08-16T08:29:36.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,anbumani,பாமக,அன்புமணி,#PMK,Fake Encounter,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PMK Leader Anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-16/9en01wrf/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா என்கிற வனப்​பகுதி உள்​ளது.</p><p>இங்​கு சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​துள்ளது. இதனால், வனத்துறையினர் 7 பேர் இரு குழுக்​களாக பிரிந்து கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.</p><p>இந்தநிலையில், தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகுதி​யில் நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யில் ஈடுபட்டனர். அப்​போது, அங்கு மறைந்திருந்த 4 பேர் மீது போலீசார் அதிரடி துப்பாக்கியால் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில், ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த மூன்று பேரும் தமிழர்கள் என தெரியவந்துள்ளது.</p><p>இந்நிலையில், இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் பல்வேறு பகுதிகளில் உள்ள வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீசார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.</p><p>அன்புமணி கண்டனம்</p><p>கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்</p><p>கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும், உயிரிழந்தவர்களினம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் </p><p>பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறை கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>கர்நாடக வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட  அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் முறையே அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>அவர்கள் மூவரும் எந்த வகையான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடாத நிலையில் அவர்களை சாக்யா பகுதி வன அலுவலகத்தைச்  சேர்ந்த  வனக்காவலர்கள் கொடூரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.</p><p>இந்தக் கொலைகளை மறைப்பதற்காக  அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் வனத்துறை  கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p>கொல்லப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். சுமார்  100 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணை கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது,  வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து  வாழ்வாதாரம் தேடி கர்நாடகம் மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் பகுதியில் குடியேறியவர்கள் ஆவர்.</p><p>மரியமங்கலம் காட்டுப்பகுதியில் மான் வேட்டையாடியதற்கோ, இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததற்கோ எந்த சான்றுகளும் இல்லை. கொல்லப்பட்டவர்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படுவதிலும் உண்மையில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.</p><p>கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும்,  மாவட்ட பொறுப்பு அமைச்சருமான  புட்டரங்கா ஷெட்டி,  மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹானூர் சட்டப்பேரவை  உறுப்பினர் மஞ்சுநாத்  ஆகியோர் அதிகாலை நேரத்தில் என்கவுன்டருக்கான தேவை ஏன் வந்தது?  என்று வினா எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் வனத்துறையினரின் செயலைக் கண்டித்துள்ளனர்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட செய்திகள் வெளியாகி வருவதால் உண்மையைக் கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக  முதலமைச்சர்  டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விசாரணையில் உண்மை வெளிவராது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்.</p><p>தமிழர்கள் படுகொலைக்காக கர்நாடக அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பங்களுக்கும் கர்நாடக அரசிடமிருந்து தலா ரூ.1 கோடி இழப்பீட்டை வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item></channel></rss>