<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 17 Aug 2026 19:55:59 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:20:12.354Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உயிரோடு இருக்கும் பெண்ணிற்கு இறந்ததாக சான்றிதழ்: கலெக்டரின் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint#comments</comments><guid isPermaLink="false">23127582-a5af-4918-a629-fced1d610b5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:02:37.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,இறப்பு சான்றிதழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறப்பு சான்றிதழ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரோடு இருக்கும்போது வி.ஏ.ஓ. இறந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரையில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பெருமாள் என்பவர் யார்? என்று கேட்டுள்ளனர். அதற்கு என்னுடைய மகன்தான் என அந்த பெண்மணி கூறியுள்ளார். அப்போது பெருமாளுடைய அம்மா இறந்து விட்டதாகவும், இறந்து போன பெருமாளின் அம்மாவிற்கு நிலமும், நகையும் உள்ளது. அதை பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார். அதன் விசாரணை நடத்த வந்துள்ளோம் என போலீசார் சென்னதை கேட்டு அந்த பெண் அதிர்ந்துள்ளார்.</p><p>நான் இங்கு உங்கள் முன் உயிரோடு நிற்கிறேன். நான் இறந்ததாக எப்படி கூறலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் என்னுடைய மகன் பெருமாள் சுமார் 6 மாதத்திற்கு முன் இறந்து போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்போது போலீசார் நீங்கள் இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாங்க. இதுதான் சான்றிதழ் என காண்பித்துள்ளனர். ஆனால், அந்த பெண் நான் உயிரோடு இருக்கிறேன் என அடித்துச் சொல்லியுள்ளார். பின்னர்தான் சுந்தரி என்ற தனது மருமகள் போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அப்படி என்றால் ஆதார் கார்டு உடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். அங்கு போலீசாரிடம் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் காட்டியுள்ளார். உடனே போலீசார், விஏஓ-வை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளனர்.</p><p>அந்த பெண்மணியும் வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று, நான் உயிரோடு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ.-விடம் முறையீடு</h2><p>அதற்கு வி.ஏ.ஓ. நாங்கள் ஆதாரத்துடன்தான் சான்றிதழ் வழங்கியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். நான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் செல்கிறேன் என்று கூறிய பின்னரும் வி.ஏ.ஓ. சொன்னதை திரும்பவும் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இறப்பு சான்றிதழை தாருங்கள் என்று கேட்க, அவரும் வழங்கியுள்ளார்.</p><p>இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என சமாதானம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஏதும் தேவையில்லை. ஏன் வழங்கப்பட்டது என்று கேட்டு தீர்வு வேண்டும் எனக் கூறியுள்ளார்.</p><h2>கலெக்டரிடம் புகார்</h2><p>இறுதியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் பெண்மணிக்கு இறந்ததாக சான்றிதழ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman#comments</comments><guid isPermaLink="false">fc05a74b-6863-4e41-a81d-642ceacb1c2a</guid><pubDate>Mon, 17 Aug 2026 14:51:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T14:51:33.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt,பரந்தாமன்,Parandhaman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rwwmea9d/Parandhaman001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly">திமுக</a> சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது ‘இட்ஸ் எ பிகினிங் ஆஃப் ஏ நியூ எரா’ என்று சொன்னார். உண்மைதான், இது ஒரு நியூ எரா—100 நாளில் 546 குற்றச் சம்பவங்களைச் செய்த ஒரு நியூ எரா!. இன்னைக்கு விஜய்யினுடைய சர்க்கஸ் சர்க்கார் ஆட்சியின் சாதனை இது. 'பெண்கள் பாதுகாப்பு ரொம்ப நான் ஸ்ட்ரிக்ட்டா வச்சிருப்பேன்'னு சொன்னார். ஆனால், இன்னைக்கு பெண்களுக்கான பாதுகாப்பு எந்த அளவில் தமிழ்நாட்டில் இருக்கின்றது என நாட்டு மக்களுக்கே நன்றாகத் தெரியும். தவெக கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு பலவீனமான சர்க்காராகத்தான் இது.</p><h2>கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது</h2><p>போதை கலாச்சாரத்திலிருந்து நம்ம பசங்களை மீட்கணும், அவங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்குனு சொன்னார். ஆனால் போதை பழக்கமும் கடத்தலும் இங்க தீவிரமாக இருக்கிறது. கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது, விற்கப்படுகிறது என்று காவல்துறைக்குத் தகவல் கொடுத்த கோவை கல்லூரி மாணவன் அமுதனுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத வெட்கக்கேடான சர்க்கஸ் சர்க்கார் அரசுதான் இந்த விஜய்யின் அரசு.</p><p>காவல்துறையைக் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர். 'ஜென்-ஜி' பிள்ளைகள் எல்லாம் உங்களுக்கு ஆர்வமாக வாக்களித்தார்களே, இந்த முதலமைச்சருக்கு, இன்னைக்கு 'ஜென்-ஜி'கள் மட்டும் ஏறத்தாழ 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்றைக்குக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொலைப் பழியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த 100 நாளில் பல குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி 546 குற்றச் சம்பவங்கள் இருக்கு. இந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த குற்றங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கிட்டீங்களா?</p><p>கோவையில் போதைப்பொருளைப் பற்றித் தகவல் கொடுத்ததாகச் சொல்லி, அமுதன் என்கிற மாணவனை அடித்துக் கொன்றுள்ளனர். அந்த மாணவன் போதை பொருள் பற்றி கொடுத்த தகவலை காவல்துறையே போதை கும்பலிடம் கொடுத்துள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் என்ன சொல்றாரு? 'இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல்'னு சொல்லிட்டு வழக்கின் தன்மையை திசைதிருப்புறார்.</p><p>நான் கேட்கிறேன் முதலமைச்சர் அவர்களே, இளைஞர்களுக்கான அரசு' என்று நீங்கள் மார்தட்டிக் கொள்கிறீர்கள். இளைஞர்கள் மூலமாகவே ஆட்சிக்கு வந்தேன் என்று சொல்லுகிற நீங்கள், ஒரு இளைஞன் குற்றம் நடைபெறுகிறது என்று காவல்துறைக்குச் சொன்ன ரகசியத்தைக் காப்பாற்றாத காவல்துறை—அப்படிப்பட்ட காவல்துறை வைத்திருக்கும் உங்களுக்கு முதலமைச்சராக இருப்பதற்கு கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்ற கேள்வியைத்தான் உங்களை நோக்கி நான் கேட்கிறேன்.</p><p>அமுதனுடைய தாயார் சொல்லுகிறார்கள், அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி  எங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால், ஆளுகிற அரசின் மீது இந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை! எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மீதுதான் நம்பிக்கை இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.</p><h2>இரண்டு அமைச்சர்களை ஓட விட்டிருக்கிறார்கள்</h2><p>நேற்றைக்கு திருவொற்றியூரில் இரண்டு அமைச்சர்களை (ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன்) ஓடவிட்டிருக்கிறார்கள். இந்த 100 நாள் சாதனை என்னவென்று சொன்னால், அமைச்சர்களை தலைதெறிக்க ஓட வைத்ததுதான் இந்த 100 நாள் சாதனை. இதே மாதிரி தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட பையனை அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செஞ்சிருக்காங்க. திருவெறும்பூரில் இரண்டு தவெக காரங்க ஒருத்தரை வெட்டிக் கொலை பண்ணியிருக்காங்க.</p><p>விருதுநகரில் ஒரு பள்ளிப் பெண்ணைத் துன்புறுத்தியதைத் தட்டிக் கேட்ட அப்பாவை வெட்டிக் கொன்றிருக்காங்க. காஞ்சிபுரத்தில் கோயில் திருவிழாவில் இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றிருக்காங்க. திருப்பூர்ல காதலை மறுத்த பெண்ணைக் கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த அம்மாவையும் இளைஞர்களையும் கொன்றிருக்காங்க. ஈரோட்டில் ஃபேன்சி ஸ்டோருக்குள் புகுந்து ஒரு பெண்ணைக் கத்தியால் குத்தியிருக்காங்க. இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் நடந்த குற்றச் சம்பவங்கள்.</p><p>அம்பத்தூர் புதூரில் ஆட்டோவில் ஒரு பெண்ணை உட்கார வச்சு கழுத்தை அறுத்து ரோட்டில் வீசியிருக்காங்க. இந்த மாதிரியான குற்றச் சம்பவங்கள் எல்லாம் இதற்கு முன்னாடி நடந்ததே இல்லை. சினிமா படத்தில் வருகிற மாதிரியான கொலைக் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கும்மிடிப்பூண்டியில் 17 வயசு இளைஞனைக் கொன்று கல்லறை மேல போட்டு, சில கொலைச் சம்பவங்களைச் செய்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுகிறார்கள். இதெல்லாம் எந்தக் கலாச்சாரத்தைக் காட்டுகிறது?</p><p>ஒரு திரைத்துறையிலிருந்து வந்தவர் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர். அதனுடைய விளைவு என்னவென்றால், நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக இருக்கலாம், நடித்த ஹீரோயிசத்தைப் பார்த்து இன்னைக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.</p><h2>வேலூரில் தலைமைப் பெண் காவலர் கொலை</h2><p>வேலூரில் தலைமைப் பெண் காவலரையே குத்திக் கொன்றிருக்கிறார்கள். இதைவிட என்ன கேவலம் இருக்கு? வெட்கமாக இல்லை முதலமைச்சருக்கு? காவல்துறையைத் தன் கையில் வச்சிருக்கக்கூடிய முதலமைச்சர், காவல்துறையிடம் தகவலைக் கொடுக்கும் பையனைக் காப்பாற்றுவதற்கு வக்கில்லை இந்த காவல்துறைக்கு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கைதின் போது, சாலைகளில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞரைப் பார்த்து இரண்டு கையை வைத்து அடிப்பார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ். எந்தக் காவல் ஆணையர் ஒரு கைது நடவடிக்கைக்கு ஸ்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள்? இருக்கிற வேலையை விட்டுவிட்டு வேறு வேலையை நீங்கள் செய்வதனால்தான் இந்த குற்றச் சம்பவங்கள் நடக்கிறது.</p><p>கோயம்புத்தூரில் இதே மாதிரி நகைக்காக ஒரு வயதான பெண்ணைக் கொன்றிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் பச்சிளம் குழந்தையிலிருந்து பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தா சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவேன்'னு சொன்னாரே, இதான் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் லட்சணமா?.</p><p>இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்! நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது. இந்த 100 நாட்களில் செய்ததெல்லாம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. விலைவாசி பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை என எதையும் சரிசெய்ய முடியாமல் பல்லிளிக்குது இந்த 100 நாள் ஆட்சி.</p><p>இவ்வாறு பரந்தாமன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வி.சி.க மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜயின் வாழ்த்துக் கடிதம்: மேடையில் பெருமிதத்துடன் வாசித்துக் காட்டி நன்றி தெரிவித்த திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-vck-conference-letter-read-on-stage#comments</comments><guid isPermaLink="false">60e1a4e9-ce0b-4bb9-b5d3-cc3e47985f66</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:36:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:36:19.506Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’  கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பெருமையுடன் படித்துக் காட்டினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் தோழமையையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.</p><h2>முதலமைச்<strong>சர் விஜய் கடி</strong>தம்..</h2><p>அந்த கடிதத்தில், அன்பிற்குரிய அண்ணன் <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">திருமாவளவன் </a>அவர்களுக்கு வணக்கம், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடமும் தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே தெரிவித்தோம். </p><p>எங்கள் செயற்குழு நிறேவேற்றிய தீர்மானத்தில் நிரந்தர அரசியல் தீர்மானத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேலும் பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக்கொள்கையே தமிழகத்தின் இறுதியான மொழிக்கொள்கை என்று அறிவித்துள்ளோம்.</p><p>இந்நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்மொழி பெருமையையும் தமிழர் உரிமைகளின் அவசியத்தையும் தமிழ்தேசியத் தேவைகளையும் உண்மைத் தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் இம்மாநாடு தமிழ் சமூகத்தில் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள் ஆக்கப்பூர்மான விவாதங்கள் மற்ற புதிய கொள்கை நோக்கங்கள் உருவாக ஒரு முக்கிய தளமாக அமையும் என நம்புகிறேன்.</p><p>இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்சமூகத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும். தமிழும் தமிழரும் உயரட்டும்..தமிழ்நாடு வளம் பெறட்டும் என முதலமைச்சர் விஜய் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.</p><h2>நெஞ்<strong>சார்ந்த நன்றி</strong></h2><p>வாழ்த்துக் கடிதத்தை வாசித்து முடித்த திருமாவளவன், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதலமைச்சர் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். எளிய மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கும் விசிகவின் இந்த மாநாட்டிற்கு முதல்வரின் வாழ்த்து மேலும் உற்சாகத்தையும் எழுச்சியையும் அளித்துள்ளதாக அவர் மாநாட்டு மேடையில் சுட்டிக்காட்டினார்.</p><h2>கூட்ட நெரிச<strong>லால் சீக்கிரம் முடி</strong>ந்த உரை </h2><p>மாநாட்டுத் திடலில் கட்டுக்கடங்காத அளவில் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. திருமாவளவன் மேடையில் பேசத் தொடங்கியதும், அவரைக் காண்பதற்காக தொண்டர்கள் முன்னோக்கி தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். திடலின் கொள்ளளவைக் கடந்து மக்கள் அலைமோதியதால், சூழலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு தொண்டர்களின் பாதுகாப்பிற்காக விசிக தலைவர் திருமாவளவன் தனது நீண்ட உரையை விரைவாக முடித்துக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணமே இதுதான்: இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-this-reason-behind-chief-minister-vijay-victory#comments</comments><guid isPermaLink="false">97b04102-cc5c-43e2-9a6b-56f7bef8e60c</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:31:35 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:31:35.514Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0mrjc8x8/VijayAnbumani001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்திருக்கு. கடந்த 10 நாட்களாக மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களில் கொலைகள் நடந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதை மற்றும் மது. இதை இன்னும் கட்டுப்படுத்தனும். ஓரளவிற்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இது போதுமானது கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமை ஆகியிருக்கிறார்கள். அதை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகள் வரும்.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நாங்கள் படிப்படியாக மதுவை குறைப்போம் என்றார்கள். அவர்கள் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால் மது வழிகளை அதிகப்படுத்துவற்கான பல முயற்சிகளை நடத்தியிருக்காங்க. வருவாயை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்பதற்கான அலுவாலியா தலைமையில் ஐவர் குழு அமைத்திருக்கிறார்கள். டாஸ்மாக்கில் எப்படி வருவாயை உயர்த்தலாம் என்பது போன்ற Terms கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது டாஸ்மாக்கில் செயலி கொடுத்து ஆன்லையில் புக் செய்யலாம். தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்பது தேவையில்லாதது. இவ்வளவு கொலைகள் நடந்திருப்பது இதனால்தான்.</p><h2>விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம்</h2><p>த.வெ.க. தலைவர் விஜய் வெற்றி பெற்றதற்கு காரணம், கடந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது. அன்றாடம் கொலைகள் நடந்து கொண்டிருக்கு. இந்த காரணத்திற்காகத்தான் அனைத்து மக்களும் சேர்ந்து விஜய்க்கு வாக்கு அளித்தார்கள்.</p><p>அந்த பிரச்சினையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை அவரின் கீழ்தான் உள்ளது. இதை முதலமைச்சர் பார்க்க வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>பாஜக என பேச்சு வந்தால் அன்புமணி சைலன்ட் மோடுக்கு செல்கிறார்: மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp#comments</comments><guid isPermaLink="false">52328fce-8e2f-4c90-aff5-0340968c0182</guid><pubDate>Mon, 17 Aug 2026 13:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-17T13:11:25.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்- மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xqtni9w9/AnbumaniramadossManickamTagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகா அரசு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-to-release-cauvery-water-state-assures-12000-cusecs-per-day-to-tamil-nadu-in-supreme-court">காவிரி</a> மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் வேறு வழியில்லாமல் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டது.</p><p>கர்நாடகாவை உரிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்தார்.</p><p>இதற்கிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் வைத்தார்.</p><h2>இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-</h2><p>அன்புமணி ராமதாஸ் அவர்களை நாம் சும்மா விட்டுவிடக் கூடாது. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லும் அவர், இதையும் மறந்து விடக்கூடாது. தண்ணீர் திறந்துவிடும்போது, அதை மறிக்கும் பாஜக-வினர் பற்றி பேசமால் ஏன் சைலன்ட் மோடுக்கு போய்விடுகிறார்? என்று தெரியவில்லை.</p><h2>சைலன்ட் மோடுக்கு செல்லும் அன்புமணி</h2><p>பாஜக என்று பேச்சு வந்தாலும் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். ஏனென்றால் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுதான காரணம். மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதற்காக ஊழல் செய்தது விளைவாக இன்னும் வழங்கு நிலுவையில் உள்ளதால், பா.ஜ.க. ஆட்டுவிக்கின்ற பொம்மை போன்று அன்புமணி செயல்படுகிறார்.</p><p>அவரை பொறுத்தமட்டில் தமிழர்கள் மீது அவ்வளவு அன்பு இருக்கிறது என்றால், குரல் கொடுப்பதாக நினைத்தால் பா.ஜ.க செய்யும் அட்டூழியத்தையும், தண்ணீர் திறந்து விடும் கர்நாடக அரசுக்கு எதிராக போராடும் பாஜக-வையும் அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாரா? என்பது முக்கியம்.</p><p>இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தவெகவுடன் கூட்டணி: விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்- திருமாவளவன்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">ccc889d5-40bb-49ea-b6c3-e2a2fc0c1e14</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:49:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:49:22.323Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,tvk,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alliance with TVK]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/o8smxoam/gg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening">தமிழக வெற்றிக் கழகத்துடன்</a> (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p><h2>சகோ<strong>தரத்துவ உ</strong>றவு</h2><p>மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் ஜோசப் விஜய் அவர்களுடனான நட்புறவையும், கூட்டணி குறித்து எடுக்கப்பட்ட முடிவையும் விரிவாகப் பேசினார். "இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். </p><p>விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ஆ<strong>ளுங்கட்சியாக</strong> வரவேண்டும்</h2><p>இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலத் தொடக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vck-tamil-national-uprising-conference-ulundurpet-grand-opening#comments</comments><guid isPermaLink="false">571479ec-cd20-4587-bf9f-73f5a4baf661</guid><pubDate>Mon, 17 Aug 2026 12:34:17 +0000</pubDate><atom:updated>2026-08-17T12:34:17.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,உளுந்தூர்பேட்டை,Ulundurpet,தமிழ் தேசிய எழுச்சி மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/9lrpv9nc/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறைப்படி தொடங்கியது. </p><p>தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால், உளுந்தூர்பேட்டை பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மாநாட்டுத் திடல் முழுமையாக நிரம்பி வழிவதோடு, வாகனப் போக்குவரத்தும் அப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>தலை<strong>வர்கள் பங்</strong>கேற்பு</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet">விடுதலைச் சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். எழுச்சிப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த மாநாட்டில், தமிழக அரசியல் சூழல், தமிழ் தேசிய உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்த முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><h2>மிகுந்த <strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>மாநாட்டின் முத்தாய்ப்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் பேரணித் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றவுள்ளார். வரவிருக்கும் தேர்தல் அரசியல், தமிழ் தேசியத்தின் தேவை மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக அவர் பேசவிருக்கும் கருத்தாழமிக்க உரையை கேட்க மாநாட்டுத் திடலில் கூடியுள்ள மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு, மாநாடு அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் ஊழல் புகார்- காரசார விவாதம்: அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு திமுக, அதிமுக கடும் எதிர்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-remarks-trigger-dmk-aiadmk-protest-in-assembly#comments</comments><guid isPermaLink="false">273bad99-1e24-4747-a44c-f7af95f86042</guid><pubDate>Mon, 17 Aug 2026 11:19:19 +0000</pubDate><atom:updated>2026-08-17T11:19:19.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/uh5esrcr/Arunraj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில், சுகாதாரத்துறை மானிய கோரிக்கையின் மீது அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்தார்.</p><p>அப்போது,"திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும் லஞ்சத்தை எதார்த்தமாக மாற்றி விட்டார்கள். அதுதான் பிரச்சனை" என்றார்.</p><p>கடந்த ஆட்சியாளர்கள் ஊழலை அன்றாட வாழ்வின் எதார்த்தமாக பார்த்ததாக அமைச்சர் அருண்ராஜ் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.</p><p>ஊழலை எதார்த்தமாக பார்த்த கடந்த ஆட்சியாளர்கள் என அமைச்சர் அருண்ராஜ் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எந்த கட்சி என்றே அமைச்சர் அருண்ராஜ் குறிப்பிடவில்லை, ஊழல் என்றால் திமுகவினர் கத்துவது ஏன் என அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மேலும்," கடந்த ஆட்சியாளர்களில் அதிமுகவும் உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், திமுகவினர் ஏன் அமளி" எனவும் அமைச்சர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.</p><p>மதவாத சக்தியை எதிர்த்தால் போதும், ஊழல் ஒரு பொருட்டல்ல என்பது அரை நூற்றாண்டில் தமிழகத்தின் வேதனை.</p><p>ஊழல் இல்லா ஆட்சி தருவோம் என நம்பிக்கையுடன் முதலமைச்சர் சொல்ல காரணம் நாங்கள் நேர்மையாக தேர்தலை சந்தித்து வென்றதுதான்.</p><p>கட்சி தொடங்கும் முன்னே ஓட்டுக்கு பணம் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் நின்று நிரூபித்தார். </p><p>நல்ல அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்று உறுதுணையாக இருப்பார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் முழுமையாக நம்பினார். </p><p>முதல்கோணல் முற்றுலும் கோணல் என்பது போல் ஊழல் கலாச்சாரத்திற்கு தேர்தலில் லஞ்சம் கொடுப்பது முதல் விஷயம்.</p><h2>யாரை ஊழல்வாதி என்கிறீர்கள்?- எ.வ.வேலு கேள்வி</h2><p>ஊழல் செய்தார்கள் என யாரை கூறுகிறீர்கள், அண்ணாவையா? எம்ஜிஆரையா? ஜெயலலிதாவையா, கலைஞரயைா?</p><p>கடந்த கால ஆட்சியாளர்கள் என குறிப்பிடும் அமைச்சர் அருண்ராஜ் திராவிட இயக்கங்களை குறிப்பிட்டு யாரை பேசுகிறார்?</p><h2>ஓ.எஸ்.மணியன்</h2><p>ஊழல் வழக்குகள் உள்ள இரண்டு முன்னாள் அமைச்சர்களை தவெகவில் சேர்த்துக்கொண்டீர்களே.</p><p>ஊழலை பற்றிபேசும் அருகதை தவெகவிற்கு கிடையாது.</p><h2>சபாநாயகர் அறிவுரை</h2><p>தகுந்த ஆதாரத்துடன் ஊழல் என குறிப்பிட்டு பேச வேண்டும், பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.</p><p>ஊழல் குறித்து அமைச்சர் பேசியதும் அதற்கு திமுக, அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>ஊழல் குறித்து நடத்தப்பட்ட அனைத்து பேச்சும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரிப்பு  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetables-price-hike-in-koyambedu-market</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetables-price-hike-in-koyambedu-market#comments</comments><guid isPermaLink="false">f125b295-4e35-4324-864e-b217c24367c4</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:30:11 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:30:11.443Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்,காய்கறி விலை உயர்வு,vegetables price hike</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4uyvaixm/vegetable.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காய்கறி]]></media:title><media:description type="html"><![CDATA[ காய்கறி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/4uyvaixm/vegetable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு</a> காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் காய்கறிகள், வெங்காயம் உள்ளிட்டவை விலை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட் மற்றும் பீன்ஸ் விலையும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகி வருகிறது. இதேபோல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ 35-க்கு விற்கப்பட்ட நாசிக் வெங்காயம் ரூ.40ஆக அதிகரித்து உள்ளது.</p><p>ஒரு கிலோ ரூ30-க்கு விற்ற வெள்ளரிக்காய் ரூ.40-க்கும், ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற மாங்காய் 2மடங்காக அதிகரித்து ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.120-க்கு விற்ற பச்சை பட்டாணி ரூ.150-க்கும், ஒரு கிலோ ரூ.30-க்கு விற்ற பச்சை மிளகாயின் விலையும் 2மடங்காக அதிகரித்து ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும், ஊட்டி கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120 வரையும், பச்சை பட்டாணி ஒரு கிலோ ரூ.200-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><p>தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>குத்தகை முறையில் நடத்துனர்களை நியமிக்கும் உ.பி. நிறுவனம்: திமுக ஒப்பந்தத்தை தவெக தொடருவது ஏன்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">05cb1664-256d-4554-a0af-99c3d4299d70</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:22:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:22:12.938Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5ck4iiv5/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/5ck4iiv5/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்,  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிப்போருக்கு பேருந்து நிறுத்தங்களில் பயணச்சீட்டு வழங்குவதற்காக 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தவெக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>ஒப்பந்தக் காலம்</strong></h2><p>சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளைச்  சேர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் 3858 பேருந்துகளை இயக்கி வருகிறது. இவற்றை  இயக்குவதற்குத் தேவையான 18,898 பணியிடங்களில் 6,000க்கும்  மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய அரசும், மாநகரப் போக்குவரத்துக் கழகமும் குத்தகை முறைப் பணியாளர்களைக் கொண்டு நிரப்பி வருகின்றன.</p><p>அந்த வரிசையில் இப்போது 1797 நடத்துனர்களை குத்தகை முறையில் நியமிப்பதற்கான ஒப்பந்தம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து புதிய நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இவர்கள் தேர்வு செய்யப்படுவர். குத்தகை முறையில் நியமிக்கப்படும் நடத்துனர்களின் ஒப்பந்தக் காலம் 11 மாதங்கள் ஆகும். அவர்களுக்கு மாத ஊதியமாக அனைத்துப் படிகள், வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு உள்பட ரூ.26,743 வழங்கப்படும். சென்னையில் அடையார், குரோம்பேட்டை, வடபழனி, தண்டையார்பேட்டை, அயனாவரம், அண்ணாநகர் பணிமனைகளுக்கு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பணியில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த குத்தகை முறை நடத்துனர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோரப்பட்டன. மொத்தம் 3297 ஓட்டுனர்கள், 1895 ஓட்டுனர்கள் என மொத்தம் 5192 பேரை நியமிப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் முதல்கட்டமாகத் தான் இப்போது 1797 நடத்துனர்களை தேர்ந்தெடுத்து குத்தகை முறையில் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1500 நடத்துனர்கள் மற்றும் 1895 ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து வழங்கும் ஒப்பந்தங்களும் சில நிறுவனங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளன.</p><p>இதில் கொடுமை என்னவென்றால், திமுக ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்களை தவெக அரசு வழங்கியிருப்பது தான். திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்ட பல ஒப்பந்தங்களை, அவற்றில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி தவெக அரசு ரத்து செய்திருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அவற்றை பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றிருக்கிறது. ஆனால், குத்தகை முறை பணி நியமனங்கள் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் சுரண்டக் கூடியவை என்பதை அறிந்தும் அவற்றை தவெக அரசு தொடர்வது ஏன்? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் வினா.</p><h2><strong>மக்களுக்கு விளக்க வேண்டும்</strong></h2><p>திமுக ஆட்சியில் தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் &amp; நடத்துனர்களை நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. குத்தகை முறையில் நியமிக்கப்படும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுவார்கள் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறியும். அதுமட்டுமின்றி, குத்தகை முறையில் நடைபெறும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் தான் குத்தகை முறை பணி நியமனங்களை தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையும், சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சமூகநீதி தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்றும் தவெக கூறி வருகிறது. அப்படிப்பட்ட  தவெக, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத, உழைப்பைச் சுரண்டக்கூடிய  குத்தகைமுறை பணி நியமனங்களை நடைமுறைப்படுத்துவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.</p><p>மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒட்டுமொத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களின் எண்ணிக்கை 18,898 ஆகும். இவற்றில் திமுக ஆட்சிக்காலத்திலேயே 3692 ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது நியமிக்கப்படும் 1797 பேரையும் சேர்த்தால் குத்தகை பணியாளர் எண்ணிக்கை 4989 ஆக அதிகரிக்கும். மேலும் 1500 நடத்துனர்கள், 1895 ஓட்டுனர்கள் நியமிக்கப்படும் போது இந்த எண்ணிக்கை 8384 ஆக உயரும். இது மொத்த ஓட்டுனர், நடத்துனர் எண்ணிக்கையில் 45% ஆகும். ஒரு நிறுவனத்தில் 45% பணியாளர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டால், அங்கு சமூகநீதியும், சமநீதியும் எங்கிருந்து தழைக்கும்? மனித உரிமை எவ்வாறு மலரும்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.</p><p>அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறை நியமனங்களை ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டு எந்த அரசாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொள்கைகளில் தவெக அரசுக்கு நம்பிக்கை இருந்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள்,  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் குத்தகை முறை நியமனங்களை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்; காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய அடிப்படையில் உடனே நிரப்ப வேண்டும். </p>]]></content:encoded></item><item><title>பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-accompanied-by-strong-winds</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-accompanied-by-strong-winds#comments</comments><guid isPermaLink="false">03d1b266-9014-43d4-abed-f4fa1ca0eb81</guid><pubDate>Mon, 17 Aug 2026 10:00:38 +0000</pubDate><atom:updated>2026-08-17T10:00:38.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/iqg6yeg5/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/iqg6yeg5/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>கனமழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>19-ந்தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 21-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை- எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-achievements-in-100-days-of-tvk-rule-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-achievements-in-100-days-of-tvk-rule-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">6350d9e0-d527-4f9a-a8cf-c772b1738ba6</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:59:37.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,TN Govt,Edappadi pazhanisamy,தவெக அரசு,TVK Govt,100 நாள் சாதனை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6oipcrjb/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/6oipcrjb/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.</p><h2>100 நாள் சாதனை</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.</p><p>இதில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கி கூறப் பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் விஜய் ஏற்க னவே கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பேசியதும் இடம்பெற்றுள்ளது. வீடி யோவின் முடிவில் ‘பிரியமு டன் விஜய்’ என்று முதலமைச்சர் விஜய்யின் கையெழுத்தும் இடம்பெற்று உள்ளது.</p><p>அந்த வீடியோவில் விஜய் பேசி இருப்பதாவது:-</p><h2>ஒரு புதிய தொடக்கம்</h2><p>சி.ஜோசப் விஜய் என்னும் நான், வாங்க... எல்லோரும் சேர்ந்து ஒரு பிரெஷ் ஆட்சி, ஒரு புதிய ஆட்சியை கொடுப்போம். இது ஒரு புதிய தொடக்கம். புதிய சகாப்தம்.</p><p>பெண்கள் பாதுகாப்பை மிகவும் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தில் இருந்து நமது பசங்களை காப்பாற்ற வேண்டியது நமது அரசினுடைய பொறுப்பு. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், பஸ் வசதி இந்த மாதிரி விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம்.</p><p>இது உங்களுடைய ஆட்சி, உங்களுக்கு அதில் எந்தவித மான சந்தேகமும் வேண்டாம். இந்த நேரத்தில் இதை நான் சொல்லணும். அரசியலுக்கு வந்த உங்கள்  விஜய்யை, விஜய் தம்பி, விஜி தம்பி, அண்ணா நீ வாண்ணா, நண்பா, நீ வா நண்பா நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று சொல்லி அவ்வளவு உறவா என்னை ஏற்றுக் கொண்டீர்கள். 8 கோடி மக்களும் என் மக்கள்தானே. நம்பிக்கையா இருங்க.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசி உள்ளார்.</p><h2>சிங்கப்பெண் அதிரடிப்படை</h2><p>மேலும் அந்த வீடியோ வில் தமிழக அரசின் திட்டங்களான 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, ‘அண்ணன் சீர்’, 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு  பட்டுப்புடவை, சிறப்பு பேதைப்பொருள் தடுப்பு படை, பெருந்தலை வர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்க ளுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதியு டன் கூடிய நவீன பிராண்டட் மிதி வண்டிகள், வெற்றி வீடு திட்டம் ஆகிய திட்டங்கள் இடம்பெற்று உள்ளன. மேலும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026-ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்ற சாதனையும் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>இந்நிலையில், 100 நாள் தவெக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>100 நாள் தவெக ஆட்சியில் எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அறிவிக்கவும் இல்லை.</p><p>தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த 100 நாள் ஆட்சியில் சாதனை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>போதையால் நிகழும் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை தேவை!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-urgent-action-is-needed-to-prevent-crimes-driven-by-substance-abuse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-urgent-action-is-needed-to-prevent-crimes-driven-by-substance-abuse#comments</comments><guid isPermaLink="false">f6be4729-5e8e-4c5a-8adb-4d92be33ba57</guid><pubDate>Mon, 17 Aug 2026 09:36:03 +0000</pubDate><atom:updated>2026-08-17T09:36:03.664Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,போதைப்பொருள்,Drugs</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vpgu9239/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vpgu9239/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காஞ்சிபுரம் மாவட்டம்  படுநெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில்  மது போதையால்  ஏற்பட்ட மோதல் காரணமாக சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் என்ற இரு இளைஞர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</p><h2><strong>கவலை</strong></h2><p>அதேபோல்,  சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் 25 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை,  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நரேஷ்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில்  ராதா என்ற பெண்  நகைக்காக கொலை என கடந்த 24 மணி நேரத்தில்  5 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரை மாவட்டத்தில்  மட்டும் கடந்த 10 நாள்களில்  8 கொலைகள்,  கோவை மாவட்டத்தில் 11 நாள்களில் 4 படுகொலைகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான கொலைகளின் பின்னணி போதைப்பொருள் புழக்கம் மற்றும் பயன்பாடு  என்பதாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள்களின்  புழக்கத்தை வேகமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசரத் தேவை  ஏற்பட்டிருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.</p><p>தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் போதைப்பொருள்களின் வணிகமும், பயன்பாடும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தன. அதனால் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்ததால் தான்  கடந்த <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">ஆட்சியை</a> மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். புதிய ஆட்சியிலும் இதே நிலை தொடருவது சரியல்ல.</p><p>எனவே, தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் வணிகம், அதன் விளைவாக நிகழும் கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டுமா?- காரசார விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/must-one-stand-up-during-the-chief-ministers-arrival-speaker-puts-an-end-to-the-heated-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/must-one-stand-up-during-the-chief-ministers-arrival-speaker-puts-an-end-to-the-heated-debate#comments</comments><guid isPermaLink="false">a8c3796c-b77f-4bbc-a5d4-c8aad90f58e9</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:58:12 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:58:12.509Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்,JCD Prabhakar,சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fzb8ghhd/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fzb8ghhd/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் வரும்போது அனைவருக்கும் வணக்கம் தெரிவிப்பது வழக்கம். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  அவரை நேருக்கு நேர் முகம் கொடுத்து பார்ப்பதில்லை. வணக்கமும் தெரிவிப்பதில்லை.</p><p>இது பற்றி  <a href="https://maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity">அமைச்சர் ரமேஷ்</a> சட்டசபையில் குறிப்பிட்டார்.  அவர் கூறுகையில்,  முன்னாள் முதலமைச்சருக்கு  (ஓ.பி.எஸ்)சிறிய வேண்டுகோள். எங்களுக்கு எப்படி  முதலமைச்சர் அறிவுரை வழங்கினாரோ அதைப் போலவே எதிர்க்கட்சித் தலைவருக்கும்  நீங்கள் கண்ணியம் பற்றி  அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.</p><p>8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் வரும் போது அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை கொடுக்கும் கண்ணியத்தை சொல்லித் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.</p><p>இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தினார்.</p><p>உடனே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து, எதிர்க்கட்சித் தலைவரை பற்றி அமைச்சர்  சொல்கிறார். திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எங்கள் தலைவர் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்தது இல்லை. எனவே அது ஒரு குற்றம்  இல்லை. அது அவரவர்  எண்ணம் நடைமுறை.</p><p>எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என சொல்லி பேசுவதெல்லாம் தேவையற்றது என்றார்.</p><p>இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பேரவைத் தலைவர் வரும் போது மட்டுமே அவை உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும். முதலமைச்சர் நேராக தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் சொல்வது தான் மரபு.  முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். </p><p>இதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்கையில், சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. சட்டசபைக்குள் முதலமைச்சர் வந்த போது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அவைக்கு முதலமைச்சர் வரும்போது எழுந்து நின்று மரியாதை அளிப்பது அவரவர் விருப்பம், கட்டாயப்படுத்தவில்லை என்றார். </p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் சாதனை மலர் - முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-tvk-government-100-day-achievements-booklet#comments</comments><guid isPermaLink="false">63fe7d20-a361-4c5c-8742-cc65221dd287</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:31:15.669Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்நாடு அரசு,TN Government,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v7xr4fei/vijay2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/v7xr4fei/vijay2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் 100 நாள் சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10-ந்தேதி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.</p> <p>தலைமைச் செயலகத்தில முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான 3 முக்கிய கோப்புகளில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">முதலமைச்சர் விஜய்</a> கையெழுத்திட்டார்.</p> <p>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a>,  'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>தவெக ஆட்சி அமைத்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசின் 100 நாள் சாதனை மலரை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p> <p>அரசு பொறுப்பேற்று 100 நாட்களில் நிறைவேற்றிய சாதனைகளை விளக்கிடும் வகையில் மலர் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நலனை இலக்காகக் கொண்ட அரசின் 100 நாள் சாதனை மலர் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>நேரில் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-procedure-for-property-registration-without-the-need-for-an-in-person-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-inaugurated-the-procedure-for-property-registration-without-the-need-for-an-in-person-visit#comments</comments><guid isPermaLink="false">7c7e9bfc-0e29-4488-b1f2-1ec2f2ba9561</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:26:39.026Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,ஆன்லைன் பத்திரப்பதிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/7k1ycajg/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு அரசு</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் உள்ள மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களைப் பதிவுத்துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு மூலம் மட்டுமே கட்டாயமாகப் பதிவுசெய்யும் நடைமுறையைத் தொடங்கி வைத்தார்.</p><p>பதிவுத்துறையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">ஆவணப்பதிவு</a> நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவுசெய்யும் முறையினை ஏற்கனவே பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (Anywhere Registration) பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.</p><p>பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இம்முறையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆகிய ஆவணங்களைத் தற்போது பதிவு செய்யலாம். இம்முறையில் ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க இயலும் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வருகைதர வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.</p><h2><strong>ஆவணப்பதிவு முறை</strong></h2><p>1. பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.</p><p>2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.</p><p>3. ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.</p><h2><strong>தொழில்நுட்பத் தேவைகள்</strong></h2><p>இணைய இணைப்பு, UIDAI அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறத் திரை (புகைப்படம் எடுப்பவரின் பின்புறத்தில் வைத்திருக்க வேண்டும்), புகைப்படக் கருவி (Webcam) ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.</p><h2><strong>வருகையில்லா ஆவணப்பதிவின் முக்கிய அம்சங்கள்</strong></h2><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்திற்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.</p><p>திருத்தத்திற்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களைத் திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.</p><p>பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட பயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும்.</p><p>பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது.</p><p>60 நாட்கள் முடிந்த பின்னர், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு (Certified Copy) விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.</p><h2><strong>வருகையில்லா ஆவணப்பதிவின் பாதுகாப்பு அம்சங்கள்</strong></h2><p>ஆவணத்தின் பதிவுச் சான்றுரை (Endorsement) ஒவ்வொரு முறையும் மாறுபடும் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் (Dynamic Random Five Colours) அச்சிடப்படும். சான்றிட்ட நகல் கோரப்படும் போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும்; அசல் நிற டிஜிட்டல் நகல் பொதுமக்களின் உள்நுழைவில் 60 நாட்கள் வரை கிடைக்கும். இதனால் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் இடம்பெற்ற நிற அமைப்பை ஆவண உரிமையாளர் அறிந்துகொள்ள இயலும்; போலி ஆவணம்  உருவாக்குவதைத் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி ஆகிய விவரங்கள் இடம்பெறும். பதிவு அலுவலர் ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிடுவார். காகித ஆவணத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கலாம். டிஜிட்டல் ஆவணம் மாற்றம் செய்யப்பட்டால், டிஜிட்டல் கையொப்பச் சரிபார்ப்பில் “X” குறியீடு தோன்றுவதன்மூலம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறியலாம்.</p><p>பொதுமக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனைப்பிரிவிற்கான முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான முதல் வீடு விற்பனை ஆவணத்தை பதிவுத்துறையில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.</p><p>இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>NEET விவகாரம்: அதிமுக- காங்கிரஸ் இடையே கடும் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash#comments</comments><guid isPermaLink="false">98b53713-3555-4783-9a38-4349d123c796</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:13:55.354Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,ADMK,அதிமுக,neet,​​Congress,நீட் விவகாரம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vvgud2w5/Thalavadi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajeshkumar-EPS-Thalavaai sundharam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vvgud2w5/Thalavadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் நீட் நுழைவுத் தேர்வு மானிய கோரிக்கை விவாதத்தின் போது அதிமுக- காங்கிரஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் பேசுகையில்,"</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது </p><p>கன்னியாகுமரியில் சித்தா மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி என சட்டசபையில் தளவாய் சுந்தரம் பேச்சு</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி</p><p>நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்கள் வயிற்றில் அடித்தது யார்?.</p><p>பாஜக கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி என்றார்கள். ஆனால் சாதித்து காட்டி இருக்கிறார்.</p><p>6 புதிய மாவட்டங்களை உருவாக்கியவர் எடப்பாடி பழனிசாமிதான். " என்றார்.</p><h2>அமைச்சர் ராஜேஷ் குமார்:</h2><p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது. விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை என  2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். </p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழனிசாமி:</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை. </p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் 100 நாள் ஆட்சி: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி !!- டி.டி.வி.தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-5#comments</comments><guid isPermaLink="false">6d2438ff-916e-4478-ba06-e3077d0c51f9</guid><pubDate>Mon, 17 Aug 2026 08:01:58 +0000</pubDate><atom:updated>2026-08-17T08:01:58.806Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bleo63zg/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bleo63zg/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும், குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதாக இதுவரை தெரியவில்லை.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி. தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக </a>ஆட்சியமைந்து இன்றோடு 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. முதல் 100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய அரசு, ஏமாற்றத்தையும், அதிருப்தியையுமே விதைத்துள்ளது.</p><p>அரசு நிர்வாகத்தை முதல் 100 நாட்களில் முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், அந்த அரசு செல்லும் திசையை குறிப்பிட்ட நாட்களில் நிச்சயமாக கண்டறிய முடியும். இந்த 100 நாட்களில் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய அரசு நிர்வாகம், தனக்கும் மக்கள் நலனுக்கும் எந்தவகையிலும் சம்பந்தமேயில்லாதைப் போல சமூகவலைத்தளத்தில் ரீல்ஸ் போடுவதையே பிரதான வேலையாக செய்துவந்துள்ளது.</p><h2><strong>அந்த வகையில் கடந்த 100 நாட்களில்...</strong></h2><p>* கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு. புதிதாக காவலர்களை நியமிக்காமல், இருக்கும் காவலர்களை வைத்தே புதிய அதிரடிப்படை என்ற வேடிக்கை அறிவிப்பு.</p><p>* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அமைச்சர், ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்த பின்னும் எந்தவித விசாரணையும் இல்லை.</p><p>* பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி பட்டிதொட்டி எங்கும் பரவியிருக்கும் போதைப் பொருள் கலாச்சாரம். இதை குறித்து தகவல் தரும் மாணவர்கள் படுகொலை.</p><p>* போதைப்பொருள் விற்பனை தொடங்கி பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் வரை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தொடர்பு.</p><p>* தற்போதைய அமைச்சர் ஒருவர், தேர்தலுக்கு முன்பாக உடல்நலம் சரியில்லாத தனது குழந்தையை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச்சென்று வெள்ளை நிற பவுடரை தனது ATM கார்டு மூலம் உடைத்துத் தந்ததை அவரே THUG MOMENT என ரீலாக வெளியிட, அதுபோதைப்பொருளோ? என பலர் சந்தேகம் எழுப்பியும் இதுவரை எந்தவிசாரணையும், நடவடிக்கையும் இல்லை.</p><p>* விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதாக தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பின்பு குளறுபடியோடு அறிவிக்கப்பட்ட தள்ளுபடி. இன்று வரை விவசாயிகள் போராடியும் எந்தப்பயனும் இல்லை.</p><p>* காவிரி நதிநீர், மேகதாது அணை மற்றும் குறுவை சாகுபடி விவகாரத்தில் தொடரும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு.</p><p>* மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதிக்கு மாறாக 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவசம் என ஏமாற்று அறிவிப்பு.</p><p>* முதலமைச்சர் தொகுதியில் தொடங்கி, அனைத்து பகுதிகளிலும் அறிவிக்கப்படாத இரவுநேர மின்வெட்டு.</p><p>* தமிழகம் எங்கும் திடீரென உயர்த்தப்பட்ட மின்கட்டணம், மக்கள் போராட்டத்திற்குப் பின் மின் கணக்கீட்டில் குளறுபடி என்று திசை திருப்பினர். அதுவும் இன்றுவரை தீர்க்கமுடியவில்லை.</p><p>*  சென்னை மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசிக்காமல் ஏதேச்சதிகாரத்தோடு உயர்த்தப்பட்ட சொத்துவரி, மக்களின் தொடர் கேள்விக்குப்பின் கைவிடப்பட்டது.</p><p>* அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் என அரசு நிர்வாகத்திற்குள் ஆளுங்கட்சியினரின் தலையீடு.</p><p>* உதவியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் என தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு உயர் பதவி வழங்கி தன்னை நவீன கலிகுலா மன்னர் என நிரூபித்தார் முதலமைச்சர்  ஜோசப் விஜய் அவர்கள்.</p><p>* அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சொந்தக் கட்சியினரிடமே லஞ்சம் கேட்பதாக தவெக நிர்வாகிகள் புகார்.</p><p>* கடந்த திராவிட ஆட்சிகளில் அறிமுகப்படுத்தி செயல்படுத்திய திட்டங்களுக்கு வெற்றி என வெட்டியாக பெயர் சூட்டி ஸ்டிக்கர்</p><p>ஒட்டுதல்.</p><p>* சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் அறைகள் வரை அதிகரித்திருக்கும் ரீல்ஸ் மோகம்.</p><p>* அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளாகவே எலிகள் சுற்றித்திரியும் அவல நிலை.</p><p>* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகள் முதல், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கும் உணவு வரை வழங்கப்படும் உணவின் தரம் கேள்விக்குறி.</p><p>* பழனி முருகன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலம் தனி நபர் பெயரில் முறைகேடாக பத்திரப்பதிவு, அதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலிக்குச் சொந்தமான நிலம் மோசடி பத்திரபதிவு என தினம்தோறும் வரும் நிலமோசடி புகார்கள்.</p><p>* மக்களுக்கும், மாநிலத்திற்கும் எந்தவகையிலும், துளியளவிலும் பயன்படாத நிதிநிலை அறிக்கை.</p><p>* விவசாயிகளின் உண்மையான வலியைக் கூட உணராமல் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை.</p><p>* கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலகத்தில் பல கோடி ரூபாய் செலவில் அறையை மாற்றும் முதலமைச்சர்.</p><p>* உண்மையான முதலீடுகளை கொண்டுவருவதிலும் வேலைவாய்ப்பை பெருக்குவதிலும் அக்கறையின்மை.</p><p>* தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடாத நிலையில் இந்த தமிழக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை மடைமாற்ற அவசியமற்ற தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>இப்படியாக தவெக அரசின் இந்த 100 நாட்களில் நடைபெற்ற குழப்பங்களையும், குளறுபடிகளையும் அடுக்கும் நிலையில், ஏதேனும் மக்கள் நலனுக்கென ஆக்கப்பூர்வமான திட்டங்கள் ஏதேனும் கொண்டு வரப்பட்டதாக இதுவரை தெரியவில்லை. நிர்வாகக் குழப்பம், திட்டமிடலின்மை, ரீல்ஸ் மற்றும் விளம்பர மோகம் மட்டுமே இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">100 நாட்கள்</a> தவெக ஆட்சியின் அடையாளங்களாக மாறியுள்ளன. முதல் 100 நாட்கள் ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தடுமாற வைத்திருக்கும் தவெக அரசு, இனிவரும் நாட்களிலாவது மக்கள் நலனுக்கான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்க முன்வர வேண்டும் என இந்நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அப்பாவை காணும்னு சொல்றாங்க... அவர் வந்தா பாதி பேர் இருக்க மாட்டீங்க!- ராமச்சந்திரன் பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-minister-sengottaiyan-vs-kkssr-ramachandran-agruments#comments</comments><guid isPermaLink="false">3e104e95-238d-48b7-b70c-e6fcc106943d</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:34:28.335Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/vk35d3rd/KKSSR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பங்கேற்று பேசினார். அவரது பேச்சின் இறுதியில், அப்பாவை  காணும் என்று  சொல்கிறார்கள். அவர் இங்கு வரும்போது பாதி பேர் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் இருப்போம் என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, எங்கள் முதலமைச்சர் இருக்கும் வரை இனி தமிழ்நாட்டில் உங்களால் தலை தூக்க முடியாது. மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.</p><p>உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், திமுக விழுந்துள்ளது. ஆனால் விழுந்த வேகத்தில் மீண்டும் எழும் அதுதான் திமுக என்றார்.</p><p>உடனே செங்கோட்டையன், எம்ஜிஆர் இருந்தவரை திமுக வெற்றி பெறவில்லை. </p><p>புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் உள்ளவரை திமுக வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்றார் .</p><p>முன்னாள் அமைச்சர்  கே.என்.நேரு:- 1980ல் பாராளுமன்றத்தில் திமுக வெற்றி பெற்றது. 1986 இல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது.</p><p>செங்கோட்டையன் :- 1980ல் நாடாளுமன்றம் சென்றீர்கள்.. ஆட்சியை கலைத்தீர்கள் ஆனாலும் மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை படைத்தவர் எம்ஜிஆர். என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கு ஓபிஎஸ் கற்றுக்கொடுக்க வேண்டும்- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ops-should-teach-opposition-leader-about-house-dignity#comments</comments><guid isPermaLink="false">131143eb-796e-4c95-a05e-f2dff7599e00</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:29:51 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:29:51.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,O Paneerselvam,TN assembly,ஓபன்னீர்செல்வம்,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/gec5e66s/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது, திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>இதைதொடர்ந்து, சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செலவம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்குள் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் வலியுறுத்தினார்.</p><p>கே.என்.நேரு:</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை.</p><p>எதிர்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என அமைச்சர் ரமேஷ் கூறுவதை ஏற்க முடியாது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-additional-waiver-on-crop-loans</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-additional-waiver-on-crop-loans#comments</comments><guid isPermaLink="false">ba5fe650-dcc8-4595-805c-b3b9d4f66bd7</guid><pubDate>Mon, 17 Aug 2026 07:12:33 +0000</pubDate><atom:updated>2026-08-17T07:12:33.626Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பயிர்க்கடன் தள்ளுபடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/dbx08hq9/vijay02.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/dbx08hq9/vijay02.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>த.வெ.க. அரசு பொறுப்பேற்று 100-வது நாளை ஒட்டி 110 விதியின் கீழ் பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். முன்னதாக முதலமைச்சர் விஜய் பேச்சை தொடங்கும் முன்பு,&nbsp; வனத்துறை அமைச்சர்&nbsp; ரஞ்சித் குமார் பேசும்போது , மறைந்த திமுக தலைவரின் பெயரை சொல்லி&nbsp; பேசியதற்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய்&nbsp; அதற்காக&nbsp; வருத்தம்&nbsp; தெரிவித்தார். கட்சி&nbsp;தலைவர் பெயரை&nbsp; சொல்லி பேசியது தவறு. அவர் சார்பாக நான் மன்னிப்பு ( சாரி )&nbsp; கேட்கிறேன்&nbsp; என்றார்.</p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றி தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2><strong>விவசாயம் மட்டுமே</strong></h2><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி. உலகில்  சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே.</p><p>உலகின் ஓர் மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள் உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்குகிறதோ அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.</p><h2><strong>ரூ.75 ஆயிரம் தள்ளுபடி</strong></h2><p>தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.</p><p>அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு குறு-சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி ரூபாய் 75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரமும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு அதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19.6.26 அன்று ஆணையிடப்பட்டது.</p><h2><strong>ரூ.5,267 கோடி</strong></h2><p>இதில் 31.7.2026 வரை ரூபாய் 5267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர் கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தனர். </p><p>இதனை தொடர்ந்து 7.8.2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட் டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாக பரிசீலிக்கப்பட்டது.</p><h2><strong>12 தவணைகளாக</strong></h2><p>கடந்த காலங்களில் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும் அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது. </p><p>2021-ம் ஆண்டில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் நமது அரசுக்கு தற்போது இல்லை.</p><p>இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட கடிதத்தில் அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது.</p><h2><strong>கூடுதல் தள்ளுபடி</strong></h2><p>இந்த வழிகாட்டுதலின் படியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.</p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகவும், 75 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்படும்.</p><p>இதன் மூலம் 75 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2 லட்சத்து 38 ஆயிரத்து 264 விவசாயிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படும்.</p><p>இதனால் ஏற்கனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக 40 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.</p><h2><strong>கூடுதல் நிதி சுமை</strong> </h2><p>இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும் தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக 6220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் vs செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sharp-debate-over-subsidy-demand-on-three-departments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sharp-debate-over-subsidy-demand-on-three-departments#comments</comments><guid isPermaLink="false">20b1ef42-9f6e-463d-be1b-be3127ccd974</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:50:36 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:50:36.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,KKSSR Ramachandran,கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/mnbhyboc/Sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KKSSRR-Minister Sengottaiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/mnbhyboc/Sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது பேசிய அமைச்சர் அருண்ராஜ்," முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் நடைபெறுகிறது.</p><p>இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் பேசுகையில்," கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது" என்றார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்,"பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது" என்றார்.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை. </p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கும் பட்டா வழங்கினோம்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.</p><p>மத்திய அரசிடம் ரூ.5000 கோடி கேட்கப்பட்ட நிலையில் ரூ.1,000 கோடியைத் தான் கொடுத்தது.</p><p>மத்திய அரசு போதிய நிதி அளிக்காவிடினும் புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்?.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம். </p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்:</h2><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை.</p><h2>கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன்:</h2><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம்.</p><h2>அமைச்சர் செங்கோட்டையன்:</h2><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>இவ்வாறு பேசினர்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை விவகாரம்- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-explain-megamalai-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-explain-megamalai-issue#comments</comments><guid isPermaLink="false">c9ccf613-242c-47fb-aa26-1cde0d252a8f</guid><pubDate>Mon, 17 Aug 2026 06:10:26 +0000</pubDate><atom:updated>2026-08-17T06:10:26.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister nirmalkumar,அமைச்சர் நிர்மல்குமார்,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0hf8nyzj/nirmakumar0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/0hf8nyzj/nirmakumar0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> மேகமலை விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* 2009-ல் தி.மு.க. ஆட்சியில் தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது. 2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது. </p><p>* 15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர், கடந்த காலங்களில் வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை. </p><p>* மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை த.வெ.க. அரசு செய்யாது. </p><p>* மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் த.வெ.க. அரசு மேற்கொள்கிறது. </p><p>* 2021-ல் புலிகள் காப்பகமாக அறிவித்த போது திமுக முறையாக கையாளவில்லை. </p><p>* 2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்த போது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றார்.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தி.மு.க. எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>இதனிடையே, மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். </p><p>இதையடுத்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தி.மு.க. அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது. மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். திமுக தவறவிட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>திமுக வெளிநடப்பு: எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை குறைக்கூறுவதா?- உதயநிதி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-walkout-udayanidhi-anger-over-government-blaming-everything-on-dmk-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-walkout-udayanidhi-anger-over-government-blaming-everything-on-dmk-rule#comments</comments><guid isPermaLink="false">650c062d-2450-4489-9e20-7878f2a624aa</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:56:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:56:20.733Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,திமுக வெளிநடப்பு,TNAssembly,DMK Walkout</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fgmt0yxu/udhay.jfif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fgmt0yxu/udhay.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say" rel="nofollow">போதைப்பொருள்</a> குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என குற்றம்சாட்டி சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p>மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">உதயநிதி ஸ்டாலின்</a> கூறியதாவது:-</p><p>உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்காத தவெக அரசு, எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை பற்றி பேசுகிறது.</p><p>மாணவர்கள் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எந்த அமைச்சர்களும் துறை சார்ந்து பதிலளிப்பதில்லை, சட்டம்-ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை.</p><p>கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மேகமலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/meghamalai-issue-members-debate-the-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">2a5bfd78-457b-451e-949d-4dac9191e13c</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:54:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:54:02.706Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Megamalai Issue,மேகமலை விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3k9wfvfy/MegamalaiIssue.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேகமலை விவகாரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மேகமலை விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/3k9wfvfy/MegamalaiIssue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி சட்டசபையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். </p><p>இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது என்றார். </p><p>இதனை தொடர்ந்து சட்டசபையில், மேகமலை விவகாரம் தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. </p><h2><strong>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</strong></h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது. மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றம் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</strong> </h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில், வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது. வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர். எந்தவித கருத்து கேட்காமல் காப்புக்காடாக அறிவித்து வனத்துறை கட்டுப்பாடுகளை விதிப்பதால் பழங்குடி மக்கள் அவதி அடைந்துள்ளனர். சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது என கூறினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்</strong> </h2><p>காவல்துறை ஒத்துழைக்காவிடில் ராணுவப்படையை வைத்து மக்களை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை. கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார். </p><h2><strong>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா</strong> </h2><p>மேகமலை- வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: ஆதவ் அர்ஜூனா Vs உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-aadhv-arjuna-vs-udhayanidhi-stalin-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-aadhv-arjuna-vs-udhayanidhi-stalin-arguments#comments</comments><guid isPermaLink="false">42d2ac57-3f12-4032-bb02-15d56ec3e9a3</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:29:20 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:29:20.463Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,Coimbatore student murder,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qbeeepvu/aadhavudhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/qbeeepvu/aadhavudhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று அமைச்சர் ஆதவ் கேள்வி எழுப்பினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>* கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. </p><p>* போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு. </p><p>* கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகமாகியுள்ளது. இது காவல்துறை கொடுத்த அறிக்கை. </p><p>* தி.மு.க. ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கை வைத்து தான் பேசுகிறேன், த.வெ.க.வின் அறிக்கை வைத்து கூறவில்லை. </p><p>* தி.மு.க. உறுப்பினர் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டரை வயது சிறுமி பலியானதற்கு தி.மு.க. ஆட்சியில் எடுத்த நடவடிக்கை என்ன?</p><p>* தி.மு.க. ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்தது. </p><p>* தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் தி.மு.க.வை மக்கள் தூக்கி எறிந்தனர் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு சட்டசபையில் அமளி ஏற்பட்டது. </p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சை ஏற்க முடியாது. அமைச்சர் ஆதவ் எதிர்க்கட்சிகள் குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.  </p><p>இதனை தொடர்ந்து கேள்வி நேரத்திலும், கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி. கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல என தி.மு.க. எம்.எல்.ஏ.வேலு கூறினார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருட்களால் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன என்பதை கூறினோம். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது எனக் கூறுகின்றனர்.  தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. </p><p>போதைப்பொருளுக்கு எதிராக தி.மு.க. எடுத்த நடவடிக்கை, விழிப்புணர்வு செய்த டேட்டா அவரிடம் இருக்கிறது. தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமல்ராஜை எதற்காக ஆணையர் பதவியில் அமர்த்தியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றார்.</p><p>இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது எங்கள் நோக்கம் அல்ல. மக்கள், பெண்கள் அனைவரும் போதைப்பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தினர் என்றார். </p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு லுக் அவுட் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-against-ips-officers-brother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-case-lookout-notice-issued-against-ips-officers-brother#comments</comments><guid isPermaLink="false">715e7c8b-a6e7-4c39-995c-f204e58397e6</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:28:53 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:28:53.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,லுக் அவுட் நோட்டீஸ்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,Tasmac scam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b5rsc1wh/tasnac.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tasmac shop]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b5rsc1wh/tasnac.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>'டாஸ்மாக்' நிறுவனத்தில் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 'டாஸ்மாக்' முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன், 'டாஸ்மாக்' அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், பாஸ்கர் மற்றும் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் ரதேஷ், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றது.</p> <p>இந்த வழக்கில் மதுபான உற்பத்தி ஆலைகள், சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத 'டாஸ்மாக்' ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.</p> <p>இந்த வழக்கில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரதேஷை போலீசார் தேடி வருகிறார்கள். அவர். வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை.. கோவை, திருவொற்றியூர் கொலைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-debate-on-coimbatore-and-tiruvottiyur-student-murders-honest-probe-compensation-and-government-job-assured</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-debate-on-coimbatore-and-tiruvottiyur-student-murders-honest-probe-compensation-and-government-job-assured#comments</comments><guid isPermaLink="false">70f68839-debb-4a4c-9f84-e60f94d7b59d</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:25:29 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:25:29.803Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,Drugs,தமிழக சட்டசபை,rajmohan,Tamil Nadu Legislative Assembly,ராஜ்மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bztc2wbz/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/bztc2wbz/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார்.</p><p>இதன்பின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion">கோவை கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் </a>குறித்து புகாரளித மாணவன் 20 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  </p><p>இந்த விவகாரத்தில் காவல்துறை உடந்தை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உண்மையை மூடி மறைக்க காவல்துறை முயல்வதாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth">அதிமுக எம்எல்ஏ காமராஜ் </a>குற்றம்சாட்டினார்.</p> <p>இதனிடையே பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அவையில் பேசுகையில்,</p><h2>ராஜ்மோகன்</h2><p>"தமிழ்நாட்டை பொறுத்தவரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், கல்வி சாலைகள் என்பது வரிய எளிய பெற்றோர்களுடைய குழந்தைகளுடைய வாழ்நாள் கனவை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.</p><p>ஒரு பள்ளிக்கூடத்திலும் ஒரு கல்லூரியிலும் வன்முறை சம்பவங்களோ, போதைப் பழக்கங்களோ எதுவும் நடக்கக்கூடாது என்பதே அரசியல் கடந்து இந்த அவையில் உள்ள எல்லோரின் விருப்பம்.</p> <h2>ஈடு செய்ய முடியாத இழப்பு</h2><p>கோவை சம்பவத்தின் பாதிக்கப்பட்ட மாணவனாக இருக்கட்டும், திருவொற்றியூரில் கொல்லப்பட்ட சிறுவனாக இருக்கட்டும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் எங்கள் குழந்தை. ஒவ்வொரு குடும்பத்தின் பரிதவிப்பு எங்கள் பரிதவிப்பு. அவர்களுக்கு அது ஈடு செய்ய முடியாத இழப்பு.</p><p>முதலாவதாக அந்த குடும்பத்திற்கு தேவைப்படும் நேர்மையான போலீஸ் விசாரணை நடைபெற வேண்டும் என முதல்வர் உத்தரவுக்கு இணங்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளோம். மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்துள்ள அந்த குடும்பத்தின் துயரத்தில் நாங்கள் பங்கெடுக்கிறோம். துயரத்தில் துணை நிற்கிறோம்.</p> <h2>நடவடிக்கை</h2><p>உடனடியாக எஸ்சி எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த குடும்பத்திற்கு தேவையான இழப்பீடு அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் நடவடிக்கையை நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலேயே செய்துகொண்டிருக்கிறோம். அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்.</p><p>குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களுக்கு பாதுகாப்பு, நேர்மையான விசாரணை அனைத்தும் செய்யப்படுகிறது. தவெகவின் நிலைப்பாடு ஒன்றுதான். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.</p> <h2>கடமை</h2><p>ஒருவேளை அது கும்பல் மோதலா? போதைப்பொருள் காரணமா, அல்லது வேறு சமூக விரோதிகளுக்கு சம்பந்தம் உண்டா? கல்லூரிகளில் இதற்கு முன்பு இதுபோன்ற வன்முறை நடந்திருக்கிறதா? இனி இதுபோல நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் நேராமையான முழுமையான விசாரணை நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.</p><p>பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானது செய்ய வேண்டியது எங்கள் கடமை. கேட்கவேண்டியது அவர்கள் உரிமை. நேற்று எண்களின் சமூக நீதித்துறை அமைச்சர், மற்றும் அமைச்சர் சம்பத் கோவைக்கே நேரில் சென்று அந்த குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்தார்கள்.</p> <h2>ஆறுதல்</h2><p>நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகிய நானும், அமைச்சர் ஆதவும் திருவொற்றியூர் சென்று கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோரின் கை பிடித்து ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவரை தவிர கொல்லப்பட்டவர் மற்றும் கொலை செய்தவர்கள் அனைவரும் சிறுவர்கள். இதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை பொறுத்தவரை ஒரு எதிரி கூட தப்பிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அந்த தாயிடம் நாங்கள் வாக்களித்திருக்கிறோம்.</p> <h2>தண்டனை </h2><p>யாராக இருந்தாலும், எத்தனை வழக்கறிஞர்கள் கொண்டு வந்தாலும், பாதிக்கப்பட்ட அமுதன் மற்றும் தனுஷ் வழக்கு நடத்தி சட்டரீதியாக ஒருவரும் தப்பிக்க முடியாதபடி தண்டனை பெற்றுத்தருவோம். </p><p>இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வி துறை அதிகாரிகளை அழைத்து அதற்கு தேவையான திட்டவட்டமான வலுமுறைகளை வகுத்து வருகிறோம்.</p> <h2>அரசு வேலை</h2><p>திருவொற்றியூரில் கொல்லப்பட்ட தனுஷின் மூத்த சகோதரர் இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். அவருக்கு எஸ்சிஎஸ்டி பிரிவின் கீழ் அரசு வேலை வழங்க முதல்வர் முடிவு செய்திருக்கிறார்.</p><p>மேலும் நிவாரண தொகையுடன் சிறுவனின் பெற்றோருக்கு மாதம் ரூ.8000 ஓய்வூதியம் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு தான் இன்று சட்டசபைக்கு வந்துள்ளோம்" என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள்? உதயநிதி குற்றச்சாட்டும்.. அமைச்சர் சரத் அளித்த விளக்கமும்..</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ipl-match-drug-use-row-udayanidhi-vs-minister-sarath</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ipl-match-drug-use-row-udayanidhi-vs-minister-sarath#comments</comments><guid isPermaLink="false">56177fc6-9eb7-4d55-850b-e790618e335a</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:22:24 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:22:24.973Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போதைப்பொருள்,Drugs,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் சரத்,Minister Udhayanithi stalin,Minister Sarath</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rn6p7e4p/Minister-Sarath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sarath- Opposition leader Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rn6p7e4p/Minister-Sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபை 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</p><p>இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">போதைப்பொருள்</a> பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது.</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைச்சர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?</p><p>போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரை கட்சியிலிருந்து நீக்கி திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது.</p><p>இவ்வாறு உதயநிதி கூறினார்.</p><p>உதயநிதியின் பேச்சுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/did-i-use-drugs-minister-sarath-clarifies-regarding-the-controversial-video" rel="nofollow">அமைச்சர் சரத்</a> பதிலடி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது. அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா? </p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது கே.என்.நேரு பேசுகையில்,"கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: அமைச்சரின் விளக்கமும்... அவையில் சலசலப்பும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-ministers-explanation-and-commotion-in-the-house</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-ministers-explanation-and-commotion-in-the-house#comments</comments><guid isPermaLink="false">6dfdb2dc-b7a2-47cf-bc64-dac28d659e73</guid><pubDate>Mon, 17 Aug 2026 05:02:41 +0000</pubDate><atom:updated>2026-08-17T05:02:41.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,Coimbatore student murder,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rk047ayi/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்- அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்- அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/rk047ayi/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசிய பிறகு அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:-</p><p>* இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><p>* அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>* அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>* போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>* போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.</p><p>* போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை.</p><p>* போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>* கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.</p><p>* கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>* போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் குடும்பத்தினரிடம் தொடர்பு என்றார்.</p><p>ஜாபர் சாதிக் உடன் தி.மு.க. ஆட்சியில் இருந்த முதலமைச்சர் உடன் தொடர்பு என அமைச்சர் கூறியதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின் போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது. மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட த.வெ.க. அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா?. போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் தி.மு.க. உடனடி நடவடிக்கை எடுத்தது என்றார். </p><p>ஐபிஎல் மேட்ச்சில் த.வெ.க. அமைச்சர் பவுடர் என உதயநிதி ஸ்டாலின் பேசியதும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>கோவை கல்லூரியில் மாணவன் கொலை - உண்மையை மறைக்க முயலும் காவல்துறை - அதிமுக குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-murder-at-coimbatore-college-aiadmk-accuses-police-of-trying-to-conceal-the-truth#comments</comments><guid isPermaLink="false">b86fad6c-d291-4a09-b92d-dbd8ea06acd0</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:50:25 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:50:25.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,போதைப்பொருள்,தமிழக சட்டசபை,Narcotics,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/p69j3t38/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காமராஜ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காமராஜ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/p69j3t38/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> இன்று மீண்டும் கூடியது. மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. </p><p>அவை தொடக்கத்தில், தவெக ஆட்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளதற்கு சபாநாயகர் பிரபாகர் பாராட்டு தெரிவித்தார். </p><p>இதன்பின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion">கோவை கல்லூரியில் மாணவன் கொலை </a>விவகாரம் தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>உதயநிதி ஸ்டாலின், கோவை கள்ளக்குறிச்சியில் போதை கும்பல் குறித்த தகவல் கொடுத்த  கல்லூரி மாணவன் அடித்துக்கொள்ள கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அரசு விளக்கமளிக்க கோரினார். </p><p>தனது முறையின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ காமராஜ் பேசுகையில், </p> <h2>போதைப்பொருள்</h2><p>கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 19 வயதே ஆன பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த அவையின் கவனத்துக்கு அதிமுக சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.</p><p>இந்த கொடுமையான கொலை சம்பவம் குறித்து அமுதன் தயார் மற்றும் தந்தை ஆகியோர் கூறுகையில், எங்கள் மகன் அமுதன் கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் அந்த விடுதியில் சில மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தார்.</p> <p>அவர் புகார் அளித்தது வெளியே கூறப்பட்டுவிட்டதால் அந்த மாணவனை புகாருக்கு உட்படுத்தப்பட்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் நிர்வாகம் அந்த மாணவனை அழைத்து வெளியே தங்கிக்கொள்ளும்படி சொல்லிவிடுகிறார்கள்.</p><p>அவர் இரண்டாம் ஆண்டு படிக்கிற நண்பர் அறையில் தங்குகிறார். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன் நண்பரோடு கல்லூரிக்கு காலை 9 மணிக்கு வருகிறார். அப்போது தீபக் என்கிற ஒரு மாணவன் மற்றும் அவரோடு 20 பேர் சேர்ந்து அவரை துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் மைதானத்திற்கு கொண்டு சென்று அங்கே இரும்பு கம்பிகளால் அடித்தும் கத்திகளால் குத்தியும் கொலை செய்யப்படுகிறார்.</p> <h2>கோஷ்டி மோதலா?</h2><p>இதனால் பெற்றோர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் கூறும்போது, முதல்வர், டீன், பிஆர்ஓ கூறும்போது, அவர் எந்தவிதமான போதைப்பொருள் குறித்த புகார்கள் தெரிவிக்காவில்லை. அந்த நபர்களுக்கும் தங்கள் கல்லூரிக்கும் சம்மதம் இல்லை என்று சொல்கிறார்கள்.</p><p>இன்னும் கொடுமை என்னவென்றால் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது இது சீனியர் ஜூனியர் சண்டை, செல்போன் தொடர்பான பிரச்சனை, இது கோஷ்டி மோதல் என்கிறார். ஒருவரை 20 பேர் தூக்கிச் சென்று கொலை செய்வது எப்படி கோஷ்டி மோதல் ஆகும்.</p> <h2>உண்மையை மறைக்கும் காவல்துறை</h2><p>காவல்துறை உண்மையை மறைக்க முயற்சி செய்கிறது. கல்லூரியும் பெயருக்கு களங்கம் ஏற்படும் என உண்மையை மறைக்கிறது. இதில் அரசு தலையிட்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும்.</p><p>கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களில் இன்னும் சிலர் கைது செய்யப்படவில்லை என சொல்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.</p><p>6 லட்சம் நிவாரணமாக அந்த குடும்பத்திற்கு அரசு வழங்கியிருக்கிறது. அது போதாது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் இறந்திருக்கிறார். எனவே அவர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.</p> <h2>பள்ளி மாணவன் கொலை</h2><p>அதேபோல திருவொற்றியூரில் தனுஷ் என்கிற பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளான். அதற்கு அந்த பகுதியில் உலவிய போதைப்பொருள் காரணம் என்கிறார்கள். </p><p>எனவே எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவ்வப்போது குறிப்பிடுவதுபோல பள்ளி, கல்லூரிகளில் எந்த காரணம் கொண்டும் போதைப்பொருள் இருக்கக்கூடாது.</p> <p>அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறுவதை போல அதன் அடிப்படையில் போதைப்பொருள் ஒடுக்கப்பட வேண்டும்.</p><p>பெற்றோர்கள் பயத்தில் இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவன் குடும்பத்திற்கு வழங்கியதுபோல திருவொற்றியூர் மாணவனுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறி அமர்ந்தார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coimbatore-student-murder-case-members-debate-on-the-call-attention-motion#comments</comments><guid isPermaLink="false">8958307b-2f04-4a88-9c70-711a06d72943</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:48:00.001Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கோவை மாணவன் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wsam3w51/coimbatore.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலையான மாணவன் அமுதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/wsam3w51/coimbatore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p>அப்போது தீர்மானத்தின் மீது அவை <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">உறுப்பினர்கள்</a> பேசியது பின் வருமாறு:-</p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ் குமார்</strong></h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் இரந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை த.வெ.க. ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது. மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கோவை, திருவொற்றியூர் மாணவர்கள் கொலை குறித்து நீதி விசாரணை தேவை.</p><h2><strong>பா.ஜ.க. எம்.எல்.ஏ. போஜராஜன்</strong></h2><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும். </p><h2><strong>சி.பி.எம். எம்.எல்.ஏ. செல்லசாமி</strong></h2><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல், காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வரவேண்டும். </p><h2><strong>சி.பி.எம். எம்.எல்.ஏ. மாரிமுத்து</strong></h2><p>காவல்துறை பொறுப்பற்ற முறையில் உள்ளது. கொல்லப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு நீதி வேண்டும். த.வெ.க. அரசு போதை கலாச்சாரத்தை ஒழிப்பதுடன் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன். </p> <h2><strong>காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கட்பட்</strong></h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில போதைப்பொருளால் அசம்பாவிதம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கோவை மாணவன் கொலை கோஷ்டி மோதல் அல்ல- உதயநிதி பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stlain-speech-to-coimbatore-student-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stlain-speech-to-coimbatore-student-murder-case#comments</comments><guid isPermaLink="false">562e2663-78a0-4e60-bc57-ec6e8cd88fa8</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:28:06.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lk823hqz/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lk823hqz/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபை</a> 4 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. அப்போது, கோவை மாணவன் கொலை தொடர்பாக தி.மு.க. கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><p>இதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது. </p><p>* கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். </p><p>* இருதரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>* அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன். </p><p>* போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டமாக கூறினர். </p><p>* போதைப்பொருள் கும்பல் குறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்ததால் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளான். </p><p>* கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டுள்ளான். </p><p>* போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு எச்சரிக்கை சம்பவமாக இருக்கிறது.</p><p>* சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>* கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது. </p><p>* 100 நாள் சாதனை என பெருமை பேசும் த.வெ.க. அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். </p><p>* காஞ்சிபுரத்திலும் போதைக்கும்பல் இரு இளைஞர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. </p><p>* பள்ளி, கல்லூரிகளில் வன்முறைக்கு எதிராக ஆலோசனை வகுப்புகளை எடுக்க வேண்டும். </p><p>* ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. </p><p>* போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபை தொடக்கம்: 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு சபாநாயகர் பாராட்டு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-grants-debate-department-wise-grant-discussions-begin-after-tvk-governments-first-general-and-agriculture-budgets</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/assembly-grants-debate-department-wise-grant-discussions-begin-after-tvk-governments-first-general-and-agriculture-budgets#comments</comments><guid isPermaLink="false">c968088d-e1ba-46f7-8645-da0059fc4578</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:13:22 +0000</pubDate><atom:updated>2026-08-17T04:13:22.079Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழ்நாடு சட்டசபை,tvk,Tamil Nadu Legislative Assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lsp3gppf/tn-9.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபை ]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/lsp3gppf/tn-9.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. </p><p>நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்மை அமைச்சர் வினோத் ஆகியோர் தங்களது பதிலுரையை கடந்த 12-ந்தேதி வழங்கினார்கள்.</p> <h2>மீண்டும் கூடல்</h2><p>இந்தநிலையில் 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் மீண்டும் தொடங்கியது. இன்று முதல் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது.</p><h2>பாராட்டு </h2><p>இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தவெக ஆட்சி</a> பொறுப்பேற்று 100வது நாள் ஆகியுள்ள நிலையில் முதல்வர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era">விஜய் </a>ஆட்சியை சபாநாயகர் பிரபாகர் பாராட்டினார். 100 நாளை தொட்டிருக்கும் முதல்வரின் ஆட்சி நூற்றாண்டுகள் கடந்து பேசப்படும் சாதனைகளை செயவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என அவர் தெரிவித்தார். </p><h2>அவை செயல்பாடுகள்</h2><p>முதல் நாளான இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசிய பின்னர், துறையின் அமைச்சர் கள் செங்கோட்டையன் (வருவாய் துறை). டாக்டர் அருண்ராஜ் (சுகாதாரத்துறை) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>பின்னர், இந்த துறையின் சார்பில் புதிய அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால் வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>அருமை நண்பர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- ரஜினிகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rajinikanth-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">2f8c1ea9-851b-4657-840b-dc315a91077a</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:53:02 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:53:02.998Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,Rajinikanth,ரஜினிகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1h9rua37/rajini.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரஜினிகாந்த்- திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரஜினிகாந்த்- திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1h9rua37/rajini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan">மு.க.ஸ்டாலின்</a> உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல்.திருமாவளவனுக்கு</a> நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>சாதித்தவர்</strong></h2><p>தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் தொல்.திருமாவளவன் M.P.அவர்கள்.</p><p>65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">b29a5a86-04b9-406d-90bf-e07e0e78acd4</guid><pubDate>Mon, 17 Aug 2026 03:42:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T03:42:48.107Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,thirumavalavan,திருமாவளவன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்- முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/xapu501c/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொல். திருமாவளவனுக்கு முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவனுக்கு</a> முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன் என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் <a href="https://x.com/thirumaofficial?ref_src=twsrc%5Etfw">@ThirumaOfficial</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.<br><br>தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, மக்கள் பணியில் தொடர்ந்து  ஈடுபட விழைகிறேன்.</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2089191915321508214?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>திருமாவளவனுக்கு இன்று பிறந்தநாள்... பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்: முதலமைச்சர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8b1cccab-04d1-4cd1-b543-04319f71196f</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:59:48 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:59:48.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ தொல். திருமாவளவன்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/b10ojuyj/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல். திருமாவளவன்</a> இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!</p><p>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.</p><p>தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!<br><br>சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும்… <a href="https://t.co/QyRCaq68lA">pic.twitter.com/QyRCaq68lA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089178494555377852?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வீடியோ: &apos;100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி&apos; - முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-video-released-100-day-administration-represents-peoples-conscience-for-an-era#comments</comments><guid isPermaLink="false">69e176cd-5925-4f8b-9e79-c06c17cadbc9</guid><pubDate>Mon, 17 Aug 2026 02:07:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T02:07:37.552Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழ்நாடு அரசு,TN Government,tvk,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/1a7sb81x/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என பதிவிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</strong></em></p> <p>தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-august-2026">விஜய்</a> மே 10-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.</p> <p>தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான முக்கிய 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> கையெழுத்திட்டார்.</p><p>இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில்,  'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.</p> <p>அதில், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">100 நாள் ஆட்சி <br>ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி<br><br>100 Days of Governance <br>A Government for Generations<a href="https://x.com/hashtag/CMJosephVijay%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CMJosephVijay‌</a> <a href="https://t.co/so1MP9Mw96">pic.twitter.com/so1MP9Mw96</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2089163922746323414?ref_src=twsrc%5Etfw">August 17, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>வெற்றி ஸ்டிக்கரில் வெற்று விளம்பரம்.. பட்டாசு தொழிலை மொத்தமாக முடக்கும் தவெக அரசு - தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-protest-dmk-condemns-tveka-government-inspections-crippling-licensed-factories#comments</comments><guid isPermaLink="false">a1b725af-4149-4816-8c25-581669cc1eb2</guid><pubDate>Mon, 17 Aug 2026 01:04:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T01:04:37.671Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,சிவகாசி,Sivakasi,Thangam Thennarasu,firecracker industry,பட்டாசு தொழில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம் தென்னரசு ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/fpuwtty0/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் ஆய்வு என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்டித்து விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fireworks-factory-accident-near-sivakasi-3-killed">சிவகாசியில் </a>கண்டனப் போராட்டம் நடைபெற்றது.</p><p>இந்த போராட்டத்தில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தங்கம் தென்னரசு </a>கலந்து கொண்டார்.</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>இதில் பேசிய அவர்,</p><p>"ஒரு அரசு தனது மக்களைக் காப்பதில் எந்த அளவிற்கு முன்முயற்சியுடன் செயல்பட வேண்டுமோ, அதேபோல் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கும் தொழிலையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.</p><p>இந்த வட்டாரத்தில் 6,000க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.</p><p>ஆனால், த.வெ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த மூன்று மாதங்களில் பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.</p><p>கடந்த மூன்று மாதங்களில் இந்த தொழிலை நசுக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p> <h2>ஆய்வு</h2><p>அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் விபத்துகளைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் ஒரேடியாக முடக்கி நசுக்குவது எந்த வகையில் நியாயமாகும்.</p><p>ஏனெனில், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டால் அது அந்த நிர்வாகத்தோடு முடிந்துவிடாது. அந்தத் தொழிற்சாலையை நம்பியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை என்னவாகும் என்பதை அதிகாரிகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.</p> <p>முறையாக விதிகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை.</p><p>யாராவது சட்டவிரோதமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதை முழுமையாகத் தடுத்து நிறுத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை நாம் வரவேற்கிறோம்.</p><p>ஆனால், முறையாக உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளிலும் திடீர் ஆய்வுகள் என்ற பெயரில் சென்று தொழிலை மொத்தமாக முடக்குவது எந்த வகையில் நியாயம் என்பதுதான் எங்களுடைய கேள்வி.</p><p>சாதாரண சிறு வணிகர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்படும் வகையில் ஆய்வுகள் என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.</p> <h2>மாற்றம்</h2><p>இதை உடனடியாக நிறுத்த வேண்டும். தவெக ஆட்சி வந்த உடனே சிவகாசி மாறிவிடும் என்று கூறினீர்கள். இந்த மூன்று மாதங்களில் என்ன மாற்றம் வந்துள்ளது.</p><p>பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்குவோம் என்று கூறினீர்களே, வழங்கினீர்களா?. சிவகாசியில் இருக்கிற தொழில்துறை அமைச்சர், தேர்தல் நேரங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு வந்து ரீல்ஸ் எடுத்துப் பதிவிட்டார்.</p> <p>அதில் 10 கி.மீ. சுற்றளவுக்கு ஒரு தீயணைப்பு நிலையமும், ஆம்புலன்ஸ் வசதியும் அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதுகுறித்து எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?</p> <p>மொத்தத்தில், எதை கேட்டாலும் எல்லாமே இல்லை, இல்லை என்று சொல்வதுதான் உங்களுடைய மாற்றம்.</p><p>ஆனால், இருக்கிறது, இருக்கிறது என்று மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களுக்கும் அள்ளித் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.</p><p>தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.1 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்ததாக விளம்பரம் செய்கிறீர்கள். ஆனால், உங்கள் காலடியில் இருக்கக்கூடிய பட்டாசுத் தொழிலை ஏன் நசுங்க செய்கிறீர்கள்?</p> <h2>வெற்றி ஸ்டிக்கர்</h2><p>இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் வழங்க வேண்டிய நிதியைக் குறைத்திருக்கிறீர்கள். பட்டாசுத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்வித்துறை நிதி என பல்வேறு துறைகளிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.</p><p>திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.</p> <p>எல்லாவற்றிலும் வெற்றி, வெற்றி என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். ஆனால் அந்த வெற்றி உண்மையிலேயே மக்களின் வெற்றியாக இருக்கிறதா என்றால் இல்லை.</p><p>அவை வெற்றித் திட்டங்களாக இல்லை; வெற்றுத் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. த.வெ.க. அரசு இந்த மூன்று மாத காலத்தில் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. " எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item></channel></rss>