<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 05:38:01 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:37:54.231Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today#comments</comments><guid isPermaLink="false">f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:27:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:27:36.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக நிர்வாகிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</aside><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>கடந்த 15-ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடையில் சில நாட்கள் ஆலோசனை நடைபெறாமல் இருந்தது.</p> <h2><strong>மீண்டும் ஆலோசனை</strong></h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">எடப்பாடி பழனிசாமி</a> இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும்  ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். </p><h2><strong>தென்காசி</strong></h2><p>நாளை தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22-ந்தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23-ந்தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.</p><p>24-ந்தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும் 25-ந்தேதி கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். </p><h2><strong>அதிரடி மாற்றங்கள்</strong></h2><p>சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற தேர்தலில் தலைநகரில் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட இருக்கிறார்.</p><p>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins#comments</comments><guid isPermaLink="false">76bc8537-d996-44b1-8933-1f9769709c7b</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:02:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:02:12.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொறியியல் படிப்பு,Engineering,கலந்தாய்வு,Engineering councilling,பொது கலந்தாய்வு,General councilling</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Englineering Coluncilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>என்ஜினீயரிங் படிப்பு</h2><p>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.</p><p>இதில் விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 210 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 1,176 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p>அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேரும், விளையாட்டுப் பிரிவில் 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 139 பேரும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்</h2><p>இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.</p><p>மொத்தம் 3 சுற்றுகளாக <strong><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கலந்தாய்வு</a></strong> நடக்க இருக்கும் நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.</p><p>இதில் பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையில் நடக்கிறது. அதில் பொது தரவரிசையில் இடம்பெற்ற 37,977 முதல் 1,31,093 வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள்.</p><p>3-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதியுடன் நிறைவு பெறு கிறது. அதில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் இடம்பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>31-ந் தேதியுடன் நிறைவு</h2><p>அதேபோல், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக் கும் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அந்த கலந்தாய்வும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.</p><p>மொத்தத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities#comments</comments><guid isPermaLink="false">dc277594-7acd-4341-9e39-17e9e465efe2</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:01:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:01:25.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வாழ்த்துகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன்  46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>உறுதியேற்றுக் கொள்வோம்</strong></h2><p>வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;  தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா அவர்கள் நிறைவேற்றச் செய்தார்.</p><p>மருத்துவர் அய்யா அவர்களால் அப்போது  தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இவை நமது சமூகநீதி போராட்டத்தில்  எட்டப்பட்ட முதல் மைல்கல் தான்.  அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.</p>]]></content:encoded></item><item><title>பண்ணாரி, தாளவாடி பகுதிகளில் சுற்றும் ஒற்றை யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/motorists-fear-elephants-roaming-bannari-and-thalavadi-areas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/motorists-fear-elephants-roaming-bannari-and-thalavadi-areas#comments</comments><guid isPermaLink="false">693109e0-2913-4a7f-834b-6e1ba3a4d716</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:44:19.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Elephant,Erode,ஒற்றை யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nj48woaj/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nj48woaj/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது. இதைபோல் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.</p><p>இந்நிலையில், நேற்று இரவு தாளவாடி அடுத்த பைனாபுரம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.</p> <p>வனத்துறை வாகனத்தில் இருந்த சைரன் ஒலியை எழுப்பி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் யானை மிரண்டு ஓடியது யானை பின்னால் வனத்துறையினர் வாகனத்தில் சென்று தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி பின்னால் விரட்டி சென்றனர். சிறிது தூரம் ஓடிய யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.</p><p>இதை போல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வன பகுதிக்குள் சென்றது.</p><p>பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை , தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகளின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026#comments</comments><guid isPermaLink="false">e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:23:38.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p><p>இதனால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-wishes-to-pv-sindhu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-wishes-to-pv-sindhu#comments</comments><guid isPermaLink="false">6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:08:55.571Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,pv sindhu,பிவி சிந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r4c503mb/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r4c503mb/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</aside><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பி.வி.சிந்து</a> தனது முதல் Super 750 பட்டத்தையும், ஜப்பான் ஓபன் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.</p><p>நேற்று டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியை தோற்கடித்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.</p><p>இறுதிப்போட்டியில் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் 'சூப்பர் 750' பட்டத்தைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பி.வி. சிந்து தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். </p><p>இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே மிகவும் திறமையாக விளையாண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றதால் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். </p><p>தனது ஈடுபாடு, கடின உழைப்பு, தொடர் பயிற்சி, விடா முயற்சி, திறமை ஆகியவற்றால் பி.வி.சிந்து அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதனால் இந்தியாவில் விளையாட்டில் இளைஞர்களுக்கு ஆர்வம் கூடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title">பி.வி.சிந்து</a> அவர்களின் விளையாட்டிற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களும், பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.</p><p>உலக பேட்மிண்டனில் இந்தியாவின் பெருமையை மீண்டும் உயர்த்தியிருப்பதால் இந்தியாவின் விளையாட்டுத் திறமையை உலகமே உற்றுநோக்குகிறது.</p><p>தனது சர்வதேச பயணத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்து உலக அளவில் இந்தியர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பேரும் புகழும் பெற்றுத்தந்திருக்கிறார்.</p><p>பி.வி.சிந்து அவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections#comments</comments><guid isPermaLink="false">baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:01:20.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தவெக புகார்</h2><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயன்</a> கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.</p><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம்  போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மார்க்கண்டேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a>வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:59:03.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather">அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tsitsipas-advances-to-swiss-open-final">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer">போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states">டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!... </a></p><p>இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar">சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title">மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc">இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide">ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi">உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens">மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates">10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral">இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu">'சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா'! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam">எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour">வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital">'சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை'-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience">கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation">நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title" rel="nofollow">பி.வி.சிந்துவின் சாதனை நம் இளம் வீரர்களை ஊக்குவிக்கும்..!- பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir">காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair">பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் - மக்களிடையே பீதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/hyderabad-woman-trapped-in-oman-forced-to-work-15-hours-a-day-without-salary">ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 15 மணி நேர கட்டாய வேலை, சம்பளமின்றி தவிப்பதாக கண்ணீர் வீடியோ!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/will-messi-retire-after-the-world-cup">உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் ஓய்வுபெறும் மெஸ்ஸி?</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/cheran-wins-film-writers-association-election">திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி!</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ticket-booking-for-jana-nayagan-has-started-in-tamil-nadu">தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-support-netanyahu-backs-messi-led-argentina-against-spain">உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி - அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் முழு ஆதரவு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon">மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour">பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் தந்தை.. லடாக்கிற்கே சென்று சமாதானம் செய்த இந்திரா காந்தி! - வரலாற்று பின்னணி</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations">நதிநீர் இணைப்புக்கு எதிராக பழங்குடியினரின் 15 நாள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த போலீஸ் | Madhya pradesh</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b1b94abf-07ac-4c5c-abaf-64430fa84dde">தனுஷ் முதல் TS ஹரிஹரசுதன் வரை..!- தேசிய விருது வென்றவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-re-exam-row-student-alleges-omr-number-change-and-drastic-score-variation">2 மணி நேரத்தில் 540-லிருந்து 167 ஆகக் குறைந்த மதிப்பெண்.. நீட் மறுதேர்வு ரிசல்டில் குளறுபடி - மாணவி குற்றச்சாட்டு  </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/2d93f8ca-a4ae-4465-971d-922317d3dbdf">ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்</a></p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம்  எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned#comments</comments><guid isPermaLink="false">e987724e-e437-406b-93b4-a72b467fd1fb</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:37:15 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:37:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.</p><p>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். </p><p>உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயனின்</a> இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings#comments</comments><guid isPermaLink="false">52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:24:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:24:09.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,திமுக இளைஞர் அணி,Udhayanidhi Stalin,DMK Youth Wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. இளைஞர் அணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</aside><h2><strong>47-வது ஆண்டு</strong></h2><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-இளைஞர்-அணி">தி.மு.க. இளைஞர் அணி</a> இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><p>அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><h2><strong>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!</strong> </h2><p>கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க. இளைஞர் அணி இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. </p><p>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..! என கூறியுள்ளார். </p><p>மேலும் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கியது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் தலைமையிலான <a href="https://x.com/hashtag/MISA_Batch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MISA_Batch</a>-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் <a href="https://x.com/dmk_youthwing?ref_src=twsrc%5Etfw">@dmk_youthwing</a> , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. <br><br>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக்… <a href="https://t.co/W4aRR7yr6T">pic.twitter.com/W4aRR7yr6T</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079035337486270716?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2><strong>தி.மு.க. இளைஞர் அணி</strong></h2><p>1980 ஜூலை 20 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ துணை அமைப்பாக 'இளைஞர் அணி' முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் மாநில அமைப்பாளராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (1980 முதல் 2017 வரை) அவர் இந்த அணியை வழிநடத்தி, கட்சியின் மிக வலுவான அடித்தளமாக மாற்றினார்.  </p><p>தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 2019 ஜூலை 4 முதல் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.  இவரின் தலைமையின் கீழ் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் பல்வேறு சமூகப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.</p><p>கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இல்லந்தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது மற்றும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை இவ்வணி முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (21.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29#comments</comments><guid isPermaLink="false">5b33a5fc-825f-40e7-a24b-9fe745d34aee</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:55:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:55:23.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>ரெட்ஹில்ஸ்</strong></h2><p>புதுநகர், நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, கோமதி அம்மன் நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவாயில், மனிஷ்நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவூர், சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுனியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை விச்சூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong> </h2><p>மாகரல், கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியார் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திர நகர், தேவி கருமாரி அம்மன் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>நூத்தஞ்சேரி பிரதான சாலை, காந்தி நகர் மற்றும் விரிவாக்கம், அக்ஷயம் ரோஹிலைன், ஆர்.கே.ஜே. எலைட், பஜனை கோவில் தெரு, கம்பர் தெரு, வேலவன் காலனி, தென்றல் நகர், தங்கம் நகர், அன்னை அவந்திகா அபார்ட்மெண்ட், பழனி நகர், வேங்கைவாசல்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகை நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம், ரோஜா தெரு, விக்னேஷ் தெரு, கோகுல் தெரு, மனோரஞ்சிதம் தெரு.</p><h2><strong>பாலவாக்கம்</strong></h2><p>விஜிபி லேஅவுட், அண்ணா சாலை, ராம் கார்டன், சாரி அவென்யூ, சீ ஷெல் அவென்யூ, காயிதே மில்லத் தெரு, ஜீவரத்தினம் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, சங்கராபுரம் 1வது மற்றும் 2வது தெரு, பாலவாக்கம் குப்பம் 1வது முதல் 5வது தெரு, ஃபாதர் ஹவுஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை, சிவசாமி அவென்யூ, புஷ்பா அவென்யூ, தாகூர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை 5வது, 6வது மற்றும் 7வது தெரு, சுப்பராவ் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு.</p><h2><strong>நசரத்பேட்டை</strong></h2><p>அகரமேல், ஸ்ரீவாரி நகர், காமராஜர் பிரதான சாலை, பாலாஜி நகர், அம்பாள் சிட்டி, சோழன் நகர், வெங்கடேஸ்வரா நகர், மலையம்பாக்கம், 400 அடி வண்டலூர் நெடுஞ்சாலை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி. நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி காலனி, மேடவாக்கம் பாபு நகர், பாம் கார்டன், ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், மாடம்பாக்கம், பிரதான சாலை, கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி, ஜாய் நகர், பாலா கார்டன், தெற்கு மாட வீதி, காந்தி நகர்.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சிவ சக்தி நகர், 60 மற்றும் 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோனி நகர், ஈ.எஸ்.ஐ அண்ணா நகர்.</p><h2><strong>பெருங்களத்தூர்</strong></h2><p>காந்தி தெரு, நேரு நெடுஞ்சாலை, சேரன் தெரு, ஆர் எம் கே நகர், கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூர்.</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், இ.பி காலனி மேற்கு, லட்சுமி நகர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர் 1வது மற்றும் 3வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை, ராஜா ஸ்ரீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி 1வது முதல் 4வது தெருக்கள், வேம்புலியம்மன் கோவில் தெரு, சிஜிஇ காலனி, ஜெயராம் தெரு.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested#comments</comments><guid isPermaLink="false">aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:47:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:47:45.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p><h2></h2> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த புகாரின் அடிப்படையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-filed-likely-chance-august-first-week">முதலமைச்சர் விஜய்க்கு</a> மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.</p><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><p>விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. </p><p>விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் போராடும்..!- அமைச்சர் ராஜேஷ் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-fights-to-end-neet-exam-minister-rajesh-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-fights-to-end-neet-exam-minister-rajesh-kumar#comments</comments><guid isPermaLink="false">c14db9a4-d1f4-47c7-afd5-ffd9d4bf00b3</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:30:26 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:30:26.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Neet exam,அமைச்சர் ராஜேஷ் குமார்,Minister Rajesh Kumar,நீர் தேர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k9j7lnce/Rajesh-kumar1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajeshkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k9j7lnce/Rajesh-kumar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p>நீட் வினாத்தாள்கள் கசிவு முறைகேடை கண்டித்து மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். </p><p>அதன்படி ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அவர் கலந்துரையாடியபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த நீட் தேர்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது.</p><p>கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதே எதிர்த்தார்கள். முன்பு பள்ளி இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.</p><h2>தனியாருக்கு சாதகமாக</h2><p>இப்போது நீட் தேர்வின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேர்வு முறை தனியாருக்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி பெறுவது சாமானிய மக்களுக்கு சாதாரண விஷயமல்ல.</p><p>கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. எனவே தான் நாடு தழுவிய அளவில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து உள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு என்பது இந்த ஒரு முறை அல்ல, பலமுறை நடந்து உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினைக்காக தொடர்ந்து போராடும்.</p><p>தமிழக அரசு நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை கவர்னர் உரையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. பேட்டியின்போது பீட்டர் அல்போன்ஸ் கோபண்ணா, சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, செழியன், காந்திபன் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-returned-to-chennai-after-concluding-his-london-trip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-returned-to-chennai-after-concluding-his-london-trip#comments</comments><guid isPermaLink="false">e0073bf1-46d9-4603-b592-648a53b4a35b</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:53:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:53:10.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Graduation Ceremony,பட்டமளிப்பு விழா,லண்டன்,london,மு.க.ஸ்டாலின்,இன்பநிதி,Inbanidhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/50ir3r1x/New-Project-2026-07-19T212237.756.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/50ir3r1x/New-Project-2026-07-19T212237.756.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை.19)சென்னை திரும்பினார். </p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பன் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பத்தோடு திமுக தலைவர்கள் லண்டனுக்கு சென்றிருந்தனர். </p><p>கடந்த ஜூலை 3-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு அங்கேயே சில நாட்கள் ஓய்வும் எடுத்தார்.</p><p>இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று அதிகாலை அல்லது காலை 7 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைவதாக இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலையிலேயே திரண்டு உற்சாக வரவேற்பளிக்கக் காத்திருந்தனர். </p><p>ஆனால், லண்டனில் இருந்து அவர் வரவிருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், வருகை தள்ளிப்போனது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-special-trains-from-chennai-to-kerala-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-special-trains-from-chennai-to-kerala-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2d93f8ca-a4ae-4465-971d-922317d3dbdf</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:29:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:29:37.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,kerala,ஓணம் பண்டிகை,onam festival,கேரளா,சிறப்பு ரெயில்கள் இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f5vbzuve/kerala.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam special train to kerala]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f5vbzuve/kerala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.</p><h2>சென்னை எழும்பூரில் இருந்து</h2><p>அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூ ருக்குக்கும், வருகிற 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் மாதம் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மங்களூ ருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>அதேபோல் சென்னை சென்ட்ரல், கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் (06117/06118) அறி விக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் வடக்கு, மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் (06093/06094) இயக்கப்படுகின்றன.</p><p>வரும் ஆகஸ்ட் 9, 16, 23, 30, செப்டம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 10, 17, 24, 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரெயில்கள் (06147/06148) இயக்கப்படுகின்றன.</p><p>இந்த ரெயில்கள், அலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><h2>சென்னை சென்ட்ரலில் இருந்து</h2><p>வருகிற ஆகஸ்ட் 13, 15, 20, 22, 27, 29, செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ர லில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 14, 16, 21, 23, 28, 30, செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ர லுக்கும் சிறப்பு ரெயில்கள் (06117/06118) இயக்கப்படுகின்றன. வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படு கின்றன.</p><p>இந்த ரெயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senji-ezhumalai-appointed-as-aiadmk-organizing-secretary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senji-ezhumalai-appointed-as-aiadmk-organizing-secretary#comments</comments><guid isPermaLink="false">ad0a9f6c-41a6-4ab4-8db8-866ca9b45200</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:25:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:25:25.334Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,Senji Ezhumalai,செஞ்சி ஏழுமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/j02ic7vs/New-Project-2026-07-19T204048.069.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/j02ic7vs/New-Project-2026-07-19T204048.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. செஞ்சி. ஏழுமலையை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். </p><p>ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தார். ஆனால் 2021-ல் கட்சிக்கு எதிராகப் பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். </p><p>பின்னர் ஓபிஎஸ்-ன் உரிமை மீட்புக் குழுவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைய கடந்த மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தனுஷ் முதல் TS ஹரிஹரசுதன் வரை..!- தேசிய விருது வென்றவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-eps#comments</comments><guid isPermaLink="false">b1b94abf-07ac-4c5c-abaf-64430fa84dde</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:45:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:45:55.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhanush,தனுஷ்,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,தேசிய விருது,national award</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5pnntfe5/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5pnntfe5/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,</p><p>சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஷ் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும்,</p><p>கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்குமார் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைவாணன் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள அனல் அரசு அவர்களுக்கும்,</p><p>மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள சுரேன் G அவர்களுக்கும்,</p><p>Non-Feature Films பிரிவில் #Blue படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்,</p><p>விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished#comments</comments><guid isPermaLink="false">f649aab5-4767-4845-9574-2e50ac521bcf</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:10:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:10:51.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Corporation,World Tamil Conference,மாநகராட்சி நடவடிக்கை,உலகத் தமிழ் மாநாடு,பெரியார் தோரண வாயில்,periyar arch</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Periyar arch]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி மதுரை மாநகரின் நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய இடங்களில் பிரமாண்ட தோரண நுழைவாயில் கட்டப்பட்டது. </p><p>தற்போது மாநகர பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பட சாலைகள் விரிவாக்க பணிகள் ஆங்காங்கே மும்முரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இதற்கிடையே நெருக்கடியை தவிர்க்கும் விதமாக மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள தோரண நுழைவாயில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் ஆகியவற்றை அகற்றவேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மேற்கண்ட 2 தோரண நுழைவாயில்களையும் இடிக்க அகற்ற உத்தரவிட்டது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போக்குவரத்து இடையூறு இல்லாமல் தோரண நுழைவாயில்கள் கட்டிக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.</p><p>இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மாட்டுத்தாவணி சாலை நடுவே இருந்த நக்கீரர் தோரண வாயில்  இடித்து அகற்றப்பட்டது. அப்போது தோரண வாயில் இடிந்து பொக்லைன் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் இடிக்கும் பணி நடைபெற்றது.</p><p>பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தோரணவாயில் இடிக்கும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. </p><p>அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் பெரியார் தோரணவாயில் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.</p> <p>மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அமைக்கப்பட்ட நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகரின் பிரதான சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதியில் உள்ள தோரண வாயில்களும் அகற்றப்பட்டு புதிய தோரண வாயில்கள் போக்குவரத்து இடையூறின்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan#comments</comments><guid isPermaLink="false">54689179-bd3b-4c10-8c1f-f12f85a2ccff</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:31:19.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by-election,IUML,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டி நிலவியது.</p><p>இதில் திமுக அணியில் இடதுசாரிகள், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. </p><p>தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பலக் கட்சிகள் தவெக பக்கம் சென்றன. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. ஆனால் கூட்டணி குறித்தும், தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் தெளிவான முடிவை பல கட்சிகளும் எடுக்கவில்லை.</p><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஐயூஎம்எல் தவெகவுடன் இணைந்தே போட்டியிடும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">5680fc1a-f532-4cc9-8afc-d0de95be3931</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:10.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்,முக ஸ்டாலின்,london visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.</p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.</p><p>இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.</p><h2>தொண்டர்கள் திரண்டனர்</h2><p>மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.</p><p>சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.</p><p>தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள். அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.</p><h2>தாமதம்</h2><p>இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது. எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவில் திரும்பி வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் திரும்பி சென்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் ஜனநாயகன் டி-ஷர்ட் தயாரிப்பு பணி தீவிரம்: 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts#comments</comments><guid isPermaLink="false">999d6a8d-1d73-485b-807f-1964cfd8455c</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:31:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:31:38.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JanaNayagan,ஜனநாயகன்,ஜனநாயகன் டிஷர்ட்,Jananayagan Tshirt,திருப்பூர் டெக்ஸ்டைல்,Tiruppu Textile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruppur Textile Jananayagan T-shirt Boom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது.</p><p>இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p>ஜூலை 23இல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சுமார் 1,000 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக, முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும், பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். </p><p>இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் டி-ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூரியர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.</p><p>நடிகராக இருந்து முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்களுக்கு, தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் பெருமளவில் ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு திரைப்பட வெளியீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள், பிரத்தியேகமான ஜனநாயகன் டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றன,” என்று கூறினார்.</p><p>மேலும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கே. சேவா நாதன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த அளவிலான உற்சாகத்தை நாங்கள் கண்டதில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam#comments</comments><guid isPermaLink="false">7c5b8429-8da9-4cf7-97fb-0322ebffe5f3</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:50:34 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:50:34.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மல் குமார்,DMK,திமுக,Nirmal Kumar,former minister murthy,முன்னாள் அமைச்சர் மூர்த்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ murthy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/lqo4hfjt/murthy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப் பதிவு தொடர்பாக, தற்போதைய த.வெ.க. பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.</p><p>இந்நிலையில், முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><h2>மோசடிக்கு யார் உடந்தை?</h2><p>பழனி கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நில மோசடி நடந்துள்ளது. இதில் யார் உடந்தையாக இருந்தார்கள் என்பதை பற்றி விவாதம் எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தும், காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>கோவில்கள் இடத்தை பதிவே செய்யமுடியாது. கோவில், அரசு நிலம், நீர்நிலை, வக்பு இடங்கள் குறித்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் பதிவு இருக்கும் முதல் நாளே டோக்கன் போடப்பட்டிருக்கும். இதில் தெரியாமல் பத்திரப்பதிவு நடைபெற வாய்ப்பில்லை. </p><p>பதிவுத்துறையில் மாவட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உள்ளனர். அமைச்சர் நிர்மல்குமார் நேரடியாக பதில் சொல்லாமல் கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பதிவுத்துறையில் மோசடி என்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் பத்திரப்பதிவு குறித்து யாரும் விமர்சித்தது கிடையாது. சில தவறுகள் நடந்தபோது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.</p><p>519 பத்திரப்பதிவு அலுவலகத்தில் நான் எனது ஆதரவாளர்களை நியமித்ததாகக் கூறுகின்றனர்.  எந்த ஒரு அலுவலகத்திலும் நான் பத்திரப்பதிவு செய்ய சொல்லவில்லை. பொறுப்புள்ள அமைச்சர் இதுபோன்று பொதுவாக பேசக்கூடாது. சட்டத்துறையில் வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் பெறுவதாக அவரது கட்சியைச் சேர்ந்தவரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.</p><p>நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திப்பதே வேலையாக பார்த்து வருகிறார். முதல்-அமைச்சரின் நிழல் அமைச்சராக நிர்மல்குமார் செயல்படுகிறார்.</p> <p>அனைத்து துறைக்கும் நிர்மல்குமார் பதிலளிக்கிறார். அறநிலையத்துறை இடத்தை பதிவுசெய்ய முடியாது, ஆனால் எப்படி பதிவு செய்தனர்? குறிப்பாக ஒரு பதிவாளரை இடமாற்றி பதிவு செய்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டை ஆதாரத்தோடு சொல்லுங்கள். ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்சம் இருக்காது என்றனர், 60 பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தி ரூ.37 லட்சமும், நகராட்சி அலுவலகங்களில் 31 லட்சமும் கைப்பற்றினார்கள். அதற்கு என்ன பதில்? இதற்கு யார் பொறுப்பாவது? </p><h2>ஆதாரத்தை கூறவேண்டும்?</h2><p>மின்சார கட்டணம் இப்போது உயர்ந்துள்ளது. அமைச்சர் தனது இருதுறை சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். கூட்டணி தொடங்கி அனைத்து துறைகள் குறித்து ஆல் இந்தியா அளவில் அவர்தான் பேசி பிரச்சனையை திசைதிருப்புகிறார். 589 பத்திரப்பதிவு அலுவலகங்களில் எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள் எனவும், என் மூலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரத்தை கூறவேண்டும். வணிக வரித்துறையில் லீக்கேஜ் என நிதித்துறை செயலர் கூறியுள்ளார். அவர் இருக்கும்போது தான் வருவாயைப் பெருக்க திட்டம் தீட்டப்பட்டது. </p><p>வணிக வரித்துறையில் ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் இருந்தது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். 2021-ல் 96 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் 2026-ல் ரூ.1 லட்சத்து 43 ஆயி்ரம் கோடியாக வருவாய் வந்துள்ளது. பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்தது பின்னர் 3 சதவீதத்தில் தொடங்கி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. </p><p>நான் 48 ஆண்டுகள் தி.மு.க.வில் உள்ளேன். ஒரே கட்சியில் 48 வருடமாக பொறுப்பில் உள்ளேன். ஆனால் அமைச்சர் நிர்மல் குமார் அ.தி.மு.க.வில் இருந்தார், பின்னர் மாறினார். 3.0 தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் எந்தெந்த நிலங்களை பதியக்கூடாது என விதிகள் வகுக்கப்பட்டன. ஆனால் எப்படி பதிவு செய்தார்கள் என தெரியவில்லை. </p><h2>பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றனர்</h2><p>மூன்று நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கி வருகின்றனர். மக்கள் முடிவை ஏற்றுகொள்கிறோம். வெற்றியையும், தோல்வியையும் பார்த்துள்ளோம். கடந்த 3 மாதத்தில் மின்சாரம் ஆங்காங்கே தட்டுப்பாடாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளில் எங்கும் மின் தடை இல்லை. அவர்கள் பொய்யை திரும்ப திரும்பச் சொல்கின்றனர். </p><p>பத்திரப்பதிவுத் துறை புகார் தொடர்பாக குழு அமைப்பதை வரவேற்கிறோம், புகார் வந்தால் நடவடிக்கைகள் எடுங்கள் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் மின்  நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின் கட்டணம்: தலைமை பொறியாளர் சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-power-consumers-overcharged-bills-chief-engineer-explains#comments</comments><guid isPermaLink="false">cf877f38-1a01-484d-a65f-87d962166f5c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:46:57 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:46:57.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,TANGEDCO,Tamilnadu Electricity,Meter Reading,தமிழ்நாடு மின்வாரியம்,மீட்டர் கணக்கீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Power Consumers overcharged]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/qqxlobkp/Untitled-design-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குளறுபாடுகள் காரணமாக, சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகி உள்ளதாக மின் வாரிய தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது. </p><p>இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.</p><p>மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை, பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை.</p><p>இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால், பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும்.</p><p>மேலும் கால முறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள, மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்.</p><p>மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை, இனிவரும் காலங்களில் அடிக்கடி களஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா&apos;! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu#comments</comments><guid isPermaLink="false">0ec15782-2bb6-4e76-9001-d611335b3a0c</guid><pubDate>Sun, 19 Jul 2026 07:29:12 +0000</pubDate><atom:updated>2026-07-19T07:29:12.302Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tambaram,தாம்பரம்,செங்கல்பட்டு,chengalpattu,Train passengers,ரெயில் பயணிகள்,railway board,ரெயில்வே வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tambaram Chengalpattu 4th line]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/zguk527o/rail-line.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு ரெயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் உட்பட மொத்தம் மூன்று முக்கிய ரெயில் பாதை திட்டங்களுக்கு ரெயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இந்த மூன்று திட்டங்களையும் மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தெற்கு ரெயில்வே மிகமிக விரைவில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்:</strong></h2><p>தெற்கு ரெயில்வேயில் எப்போதும் நெரிசல் மிகுந்த மிக முக்கியமான முதன்மை வழித்தடங்களில், தடையற்ற ரெயில் போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு கூடுதல் ரெயில் பாதைகளை அமைக்க ரெயில்வே வாரியம் தொடர்ந்து ஒப்புதல் வழங்கி வருகிறது. </p><p>சென்னை புறநகர்ப் பகுதியில் மிக அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்டுள்ள வழித்தடமாகத் தாம்பரம்-செங்கல்பட்டு தடம் விளங்குகிறது. இந்தத் தடத்தில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, 713 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்காவது புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு ரெயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2><strong>அரக்கோணம், ஈரோடு வழித்தடம்:</strong> </h2><p>தாம்பரம்-செங்கல்பட்டு தடம் மட்டுமன்றி, மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் இரட்டைப் பாதை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி, அரக்கோணம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் 929 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. </p><p>இதேபோல், ஈரோடு-கரூர் வழித்தடத்தில் 934 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைப் பாதை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கியத் திட்டங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 2,576 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ரெயில்வே வாரியம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்தகட்டப் பணிகளைத் தெற்கு ரெயில்வே தற்போதே உடனே தொடங்கியுள்ளது.</p><h2><strong>தெற்கு ரெயில்வேயின் வருவாய்:</strong></h2><p>இது குறித்துத் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தெற்கு ரெயில்வேயில் விரைவு ரெயில்கள், குறுகிய தூரப் பயணியர் ரெயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் எனத் தினசரி சுமார் 1,400 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது. </p><p>குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 152.75 கோடி மக்கள் தெற்கு ரெயில்வே மூலமாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் வாயிலாக ரெயில்வே துறைக்கு 8,215 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>எதிர்கால இலக்குகள்:</strong></h2><p>கூடுதல் ரெயில் பாதைகள் அமைப்பது, முக்கிய ரெயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது, பண்டிகைக் கால சிறப்பு ரெயில்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் ரெயில்வே துறை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. </p><p>இந்த புதிய மூன்று ரெயில் பாதை திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மற்றும் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.</p><p>இதுமட்டுமன்றி, திருச்சி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களிலும் பல்வேறு புதிய ரெயில் பாதை பணிகள் தற்போது அதிவேகமாக நடந்து வருகின்றன. </p><p>இந்த உள்கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் போது, வரும் 2030-ஆம் ஆண்டில், தற்போது இயக்கப்பட்டு வரும் ரெயில்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 50 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>புதிய வாரச்சந்தை திறக்காததை கண்டித்து காய்கறிகளை சாலையில் கொட்டி வியாபாரிகள்  போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/traders-protest-by-dumping-vegetables-on-the-road</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/traders-protest-by-dumping-vegetables-on-the-road#comments</comments><guid isPermaLink="false">1f254129-89b2-44b6-9d8a-a3f510713ccb</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:57:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:57:51.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>vegetables,traders protest,காய்கறிகள்,வியாபாரிகள்  போராட்டம்,புதிய வாரச்சந்தை,New Weekly Market</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kqnpj5cz/peravorani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Merchants protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/kqnpj5cz/peravorani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>பேராவூரணி</strong></h2><p>தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி வாரச்சந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. </p><h2><strong>புதிய வாரச்சந்தை</strong></h2><p>இந்நிலையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வாரச்சந்தை கடந்த ஒரு ஆண்டாக ரூ. 2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தது. இதற்கிடையில் கடந்த ஒரு ஆண்டாக வாரச்சந்தை தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. தனியார் இடத்தில் பெரும் தொகையை செலவு செய்து சிறு வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். </p><h2><strong>ஏலம் விடப்பட்டது</strong></h2><p>இந்நிலையில் புதுப்பிக்கப்பட்ட பேராவூரணி வாரச்சந்தை கடந்த 9-ம் தேதி பேரூராட்சியில் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த முறை 12 மாத காலத்திற்கு ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது 8 மாதத்திற்கு 21 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த நிலையில், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் வியாபாரிகளிடம் கூடுதலாக லட்சக்கணக்கில் முன்பணம் கேட்பதாகவும், வார வாடகையாக ரூ. 50, 100 கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது ஆயிரக்கணக்கில் வாடகையை உயர்த்தி கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த வாரம் முதல் தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தை நிறுத்தப்பட்டது.</p><h2><strong>சாலை மறியல்</strong></h2><p>இந்நிலையில், இன்று காலை புதிய சந்தைக்கு வியாபாரிகள் வந்தனர். ஆனால் புதிய சந்தை திறந்து விடப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் வாரச்சந்தை அருகே உள்ள பஸ் நிலையம் வாயிலில் இருபுறமும் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இதனால் பேராவூரணி- அறந்தாங்கி சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><h2><strong>கேட்டை உடைத்து சென்றனர்</strong></h2><p>அப்போது வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீரென சந்தையின் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு வியாபாரிகளுக்கு எந்தெந்த கடை, எந்த இடத்தில் ஒதுக்குவது என்பது குறித்து பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வரும் போராட்டத்தால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசிமேட்டில் மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு- மீன் பிரியர்கள் ஏமாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kasimedu-fish-market-prices-rise-due-to-reduced-fish</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kasimedu-fish-market-prices-rise-due-to-reduced-fish#comments</comments><guid isPermaLink="false">adca2875-1ab9-44f9-afa0-9cae9fd56cb9</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:46:01 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:46:01.873Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காசிமேடு,Kasimedu,fish,மீன்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/x8vzamvu/fish.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kasimedu fish market ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/x8vzamvu/fish.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>காசிமேடு</strong></h2><p>காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் மீன் பிரியர்களின் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.</p><h2><strong>விசைப் படகு</strong></h2><p>சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 3 வாரங்களாக ஒரு சிலரின் விசைப்படகுகள் மட்டுமே ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றன. இதனால் இந்த வாரமும் மீன்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.</p><h2><strong>ஆடி மாதம்</strong></h2><p>ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் பிரியர்கள் அதிகாலையிலேயே தேவையான மீன்களை வாங்குவதற்கு காசிமேட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் வரத்து குறைவினால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. </p><h2><strong>சில்லறை விற்பனை</strong></h2><p>கடந்த வாரம் போலவே இந்த வாரமும் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளும் குறைவாகவே காணப்பட்டன. </p><h2>மீன் பிரியர்கள்</h2><p>பெரிய வகை மீன்களின் விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய வகை மீன்களையே மீன் பிரியர்கள் வாங்கி செல்கின்றனர்.</p><h2><strong>பெரிய வகை மீன்கள்</strong></h2><p>வஞ்சிரம், சங்கரா, நண்டு, இறால், ஷீலா, தேங்காய் பாறை, பால் சுறா, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இருந்தும் விலை ஏற்றத்தின் காரணமாக மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.</p><p>விசைப் படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை உணவகங்களுக்கு வாங்கி செல்வதற்கும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் மார்க்கெட்களுக்கு மீன்களை வாங்கி செல்பவர்கள் கூடை கூடையாக சிறிய வகை மீன்களையே வாங்கி செல்கின்றனர்.</p><h2><strong>காசிமேட்டில் மீன்கள் விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:</strong></h2><p>வஞ்சிரம்- 1100</p><p>கொடுவா- 900</p><p>தேங்காய் பாறை -800</p><p>ஷீலா- 800</p><p>பால் சுறா- 800</p><p>சங்கரா- 500</p><p>பாறை- 400</p><p>இறால்-400</p><p>நண்டு -300</p><p>நவரை -300</p><p>பண்ணா-300</p><p>காணங்கத்தை -300</p><p>கடுமா- 300</p><p>நெத்திலி-200.</p>]]></content:encoded></item><item><title>வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா.., கணக்கிடுவது எப்படி?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tneb-electricity-tariff-for-households-been-increased-how-is-it-calculated#comments</comments><guid isPermaLink="false">33a2f5b7-fb34-4f1e-9883-4cc3c3ffd8b6</guid><pubDate>Sun, 19 Jul 2026 06:44:23 +0000</pubDate><atom:updated>2026-07-19T06:44:23.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,திமுக அரசு,மின்சார கட்டணம் பில்,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNEB]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/h48k2pya/TNEB0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும் எனஅறிவித்தார். அதனால் 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு எந்த வித்தியாசமும் கிடையாது. பழைய மாதிரி 100 யூனிட் இலவசமாக வழங்கப்படும்.</p><p>விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபின், தற்போது வீட்டு நுகர்வோர் மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீட்டு நுகர்வோருக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் மீட்டர் கோளாறு காரணமாக கூடுதல் கட்டணத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது. பொதுவாக பொதுமக்களுக்கு கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதில் குழப்பம் நிலவுகிறது.</p><p>தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதாவும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இவரைத் தவிர்த்து திமுக முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனும் சத்தமில்லாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் முறை</h2><p>கடந்த ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வாறு மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்ப்போம். கடந்த திமுக ஆட்சியில் அதாவது 2025-ல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 500 யூனிட் வரை</h2> <p>அதன்படி ஒரு வீட்டு நுகர்வோர் 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டாம். 200 யூனிட் பயன்படுத்தினால் 101 முதல் 200 யூனிட்களுக்கு, ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் என்ற வகையில் 235 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். இந்த நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் இலவசம். அடுத்த 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய் வசூலிக்கப்படும். நீங்கள் அடுத்த 1 யூனிட் (அதாவது 201) பயன்படுத்தினாலும், 400 யூனிட் பயன்படுத்தினாலும் ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி ஒரு நுகர்வோர் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் கட்டணம் (201 முதல் 300 யூனிட்டிற்கு 470 ரூபாய்) செலுத்த வேண்டும்.</p><h2>400 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>400 யூனிட் பயன்படுத்தினாலும் 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி முதல் 100 யூனிட்கள் இலவசம். அதன்பின் 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 என மொத்தமாக 1175 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>500 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500 யூனிட் பயன்படுத்தினால் 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 ரூபாய் விதம் 630 ரூபாய் வசூலிக்கப்படும். 100 யூனிட் வரை இலவசம். 101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். 201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தம் 1805 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மின்சாரம் கணக்கீடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>500-க்கு அதிகமான யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>500-க்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை 4.70 ரூபாய் (1410 ரூபாய்), 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ரூபாய் (630 ரூபாய்), 501 முதல் 600 யூனிட் வரை 8.40 ரூபாய் (840 ரூபாய்), 601 முதல் 800 யூனிட் வரை 9.45 ரூபாய் (1890 ரூபாய்), 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ரூபாய் (2100 ரூபாய்) என வசூலிக்கப்படும்.</p><p>1000 யூனிட்டிற்கு மேல் வீட்டு நுகர் பயன்படுத்தினால், 1 யூனிட்டிற்கு 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். 1000-த்திற்கு உட்பட்ட யூனிட்களுக்கு மேற்பகுதியில் சொன்னவாரு வசூலிக்கப்படும்.</p><h2>தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார கட்டணம் கணக்கீடு</h2><p>முதலமைச்சர் விஜய் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தேவையில்லை என்கிறார். 500 யூனிட்டிற்கு மேல் 1 யூனிட் வசூலித்தாலும் பழைய முறைப்படை கணக்கிடப்படும். அப்படி என்றால், 201 முதல் 500 யூனிட் வரை எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.</p><h2>201 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>ஒரு வீட்டு நுகர்வோர் 201 யூனிட் பயன்படுத்தினார் என்றால், முதல் 200 யூனிட் இலவசம். அடுத்த யூனிட்டிற்கு 4.70 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 500 யூனிட்கள் வரை</h2> <h2>300 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>300 யூனிட் பயன்படுத்தினால் என்றால் 201 முதல் 300 வரை 100 யூனிட்டிற்கு ஒரு யூனிட் 4.70 ரூபாய் விதம் 470 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>420 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>201 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அப்படி பார்த்தால் 400 யூனிட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம் 940 ரூபாய் வசூலிக்கப்படும். 420 யூனிட் பயன்படுத்தினால், முதல் 200 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 201 முதல் 400 யூனிட்டிற்கு 4.70 விதம் 940 ரூபாய், 401 முதல் 500 யூனிட்டிற்கு 6.30 யூனிட் விதம் 20 யூனிட்டிற்கு 126 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1066 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>501 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>501 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 8.40 ரூபாய் என மொத்தம் 2048 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>601 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>601 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 1 யூனிட்டிற்கு 9.45 யூனிட் விதம் 9.45 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 601 யூனிட்டிற்கு 2889.45 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>801 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>801 யூனிட் பயன்படுத்தினால், முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம் வசூலிக்கப்படும். அதன்படி 1 யூனிட்டிற்கு 10.50 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 801 யூனிட்டிற்கு 4780 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2026 மின்சாரம் கணக்கிடு முறை 1000 யூனிட்களுக்கு மேல் (1001 யூனிட்கள்)</h2> <h2>1001 யூனிட் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோர்</h2><p>1001 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் இலவசம். 101 முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட் 4.70 ரூபாய் என்ற விதத்தில் 300 யூனிட்டுகளுக்கு 1410 ரூபாய். 401 முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட் 6.30 விதம் 630 ரூபாய், 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட் 8.40 ரூபாய் விதம் 840 ரூபாய், 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட் 10.50 ரூபாய் விதம்  2100 ரூபாய் வசூலிக்கப்படும். அடுத்த ஒரு யூனிட்டிற்கு 1000 யூனிட்டிற்கு மேல் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 11.55 ரூபாய் என்ற விதத்தில் 11.55 ரூபாய் வசூலிக்கப்படும். மொத்தமாக 1001 யூனிட்டிற்கு 6881.55 ரூபாய் வசூலிக்கப்படும்.</p><h2>2025 மற்றும் 2026 கட்டணம் வேறுபாடு</h2><p>இதனடிப்படையில் 2025-ல் 101 யூனிட் பயன்படுத்தினால் கட்டணம் இல்லை. 2026-லும் அதுதான். 2025-ல் 201 யூனிட் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை. 101 முதல் 200-க்கு 2.35 ரூபாய் விதம் 235 ரூபாய். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 வரை 1 யூனிட் 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்படி 201 யூனிட் பயன்படுத்தினால் 239.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2026-ல் அதாவது தற்போது 200 வரை இலவசம். அடுத்த 1 யூனிட்டிற்கு (201 முதல் 400 யூனிட் வரை 1 யூனிட்டிற்கு 4.70 ரூபாய் விதம்) 4.70 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 300 யூனிட் பயன்படுத்தினால் 705 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 470 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 400 யூனிட் பயன்படுத்தினால் 1175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 940 ரூபாய் செலுத்த வேண்டும்.</p><p>2025-ல் 500 யூனிட் பயன்படுத்தினால் 1805 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது 1507 ரூபாய் செலுத்த வேண்டும். </p><p>2025-ல் 600 யூனிட் பயன்படுத்தினால் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். தற்போதும் 2880 ரூபாய் செலுத்த வேண்டும். 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் இரண்டு காலத்திலும் ஒரு மாதிரியான கட்டணம்தான்.</p>]]></content:encoded></item><item><title>சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/electricity-charges-hike-former-dmk-minister-geetha-jeevan-alleges#comments</comments><guid isPermaLink="false">e3e55438-bc0d-4ac3-ad4f-6d4fbe5f12d5</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:45:29.103Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,கீதா ஜீவன்,geetha jeevan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Geetha Jeevan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/6kymdia8/GeethaJeevan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. அது என்னவென்று தெரியுமா., 500 யூனிட்டிற்கு குறைவாக பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று தெரிவித்தார்.</p><p>கணக்கு போட்டு பார்த்தீர்களா எல்லோரும்., என்ன செய்திருக்காங்க. சத்தமில்லாமல் இன்று இரண்டு மடங்காக விலை ஏற்றப்பட்டிருக்கு. மின்சாரக் கட்டணம் ஏற்றப்பட்டிருக்கு. மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 100 யூனிட் குறைக்கப்பட்டபோது கட்டணம் எவ்வளவு இருந்தது. இப்போது எவ்வளவு இருந்தது என்று பாருங்கள்?.</p><h2>மின் கட்டணம் உயர்வு</h2><p>சத்தமில்லாமல் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 4 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் எந்த அளவிற்கு பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என்ற அறிந்து கொள்ள முடியும்.</p><p>விலைவாசி ஏறுகிறது. எல்லா இடத்திலும் மின்வெட்டு தொடர்ச்சியாக இருக்கிறது. நிறைய இடத்துல யாரும் கேள்வி கேட்க முடியல. புகார் செய்ய முடியல. எதற்கு மின்தடை ஏற்படுகிறது என்பது தெரியல. தவெக ஆட்சிக்கு வந்தபிறகு மின்தடை என்பது சாதாரண ஒரு நிகழ்வாகிவிட்டது. </p><p>பஞ்ச் டயலாக் ஆட்சிக்கு முடிவு கொடுக்கணும். வெறுமன வசனம் பேசி நடித்துவிட்டு மேடைல பேசிகிறாரு. அவ்வளவுதான். </p><p>இவ்வாறு கீதா ஜீவன் பேசினார்.</p><h2>பிரேமலதா விஜயகாந்த்</h2><p>நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் "தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் பெரிதும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கிறது. எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வர் அவர்களும் இந்தப் பிரச்சினைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். </p><figure><img alt="Premalatha Vijayakanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-12/jd9hohil/premalatha.jpg" /></figure> <p>தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையை குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்திற்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.</p><p>மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம்.</p><p>மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழ்நாட்டை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc#comments</comments><guid isPermaLink="false">2e79c09d-24fb-4b9e-8ba0-6c667b591ab6</guid><pubDate>Sun, 19 Jul 2026 04:08:24 +0000</pubDate><atom:updated>2026-07-19T04:08:24.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சிபிஐ,CPI,tvk,சிபிஎம் சண்முகம்,CPM Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/4fq031nd/CPMShanmugam001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>இடதுசாரிகள் ஒரு தனி அணியாக செயல்பட தீர்மானித்திற்கிறோம். இதனால்தான் மூன்று இடது சாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழு என்பதை உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதையை சூழ்நிலையை குறித்து தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? யாருடன் சேர்ந்து போட்டியிடுவது என்பது குறித்து அப்போது பேசுவோம். இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.</p><h2>இடதுசாரிகள் நாங்கள் மாற்று கொள்கை</h2><p>நாங்கள் மாற்று அணி என்று சொல்லவில்லை. மாற்று கொள்கை என்று சொல்கிறோம். உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும்.., வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வறுமை குடியிருப்பு பிரச்சினைகள் போன்ற ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள்.</p><p>இவற்றிற்கு எல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்கைளால் தீர்வே கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் இடதுசாரி கொள்கைகளால் மட்டுமே முடியும்.</p><p>இந்த ஆட்சி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்பதனால ஆதரவு தரல. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, வழக்கு விசாரணை முடிவில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.</p><h2>முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காதது?</h2><p>முதலமைச்சர் எந்தவித கருத்து குறித்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து பதில் அளிக்கவில்லை என்பது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசு சார்பில் பதில் இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது. அமைச்சர்கள் எல்லாம் பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அமைச்சர்கள் நீங்கள் (செய்தியாளர்கள்) சொன்ன அனைத்து கருத்துகளுக்கும் பதில் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலமைச்சர் ஏன் சந்திக்கவில்லை, பேட்டி கொடுக்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கனும்.</p><h2>சமூக நீதித்துறை</h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றுதான் இருந்தது. இரண்டு பிரிவினரையும் பிரதிநிதித்துவம் படுத்துவதாகத்தான் இருந்தது. அப்படி இருந்திருக்கலாம். பெயரை ஏன் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. பெயர் மாற்றிலும், என்ன பெயராக இருந்தாலும் அந்த துறை, அந்த மக்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விசயம். பெயர் மாற்றத்தை விவாதிக்க வேண்டியதில்லை. அந்த துறையை சேர்ந்த மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த துறை என்ற செய்யப்போகிறது, அவர்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறது என்பதுதான் கவலைப்பட வேண்டிய விசயம்.</p><p>இவ்வாறு சண்முகம் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer#comments</comments><guid isPermaLink="false">57029fa3-44b6-44e4-bc7f-ad95197b690f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:55:50 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:55:50.323Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,Gun Fire,rowdy,ரவுடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/t9o6vkbe/gun.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிப்பதற்கு போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குற்ற செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்து வருகிறது. </p><p>இப்படி போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத நேரங்களில் ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும் போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.  இதுபோன்று எல்லை மீறும் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது. </p><h2>பிரபல ரவுடி கருப்பு</h2><p>இந்நிலையில், குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி துப்பாக்கியால் நேற்று இரவு சுட்டு பிடிக்கப்பட்டார். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:</p><p>குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு (என்ற) தமிழழகு. 27 வயதான  இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியான கருப்பு மீது  திருமுடிவாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடும்  உருவாக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீசார் அவரை ஏ பிளஸ் ரவுடியாக சரித்திர பதிவேட்டில் சேர்த்துள்ளனர்.</p><h2>நாட்டு வெடிகுண்டு</h2><p>ரவுடி கருப்பு தனது எதிரி ஒருவரை தீர்த்துக் கட்டுவதற்காக திட்டம் தீட்டி வருவது போலீசுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட பகையால் அந்த நபரை தீர்த்துக்கட்ட ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டைத் தயாரித்து வரும் அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.</p><p>குன்றத்தூர் அருகே உள்ள காவனூர் பகுதியில் பதுங்கி இருந்து ரவுடி கருப்பு நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். </p><p>ரவுடி கருப்புடன் அவரது நண்பரான சூர்யாவும் இருந்தார். நாட்டு வெடிகுண்டு தயாரித்த இடத்திற்குச் சென்றதும் திருமுடிவாக்கம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ் ஏட்டு விஜயகுமார் ஆகியோர் ரவுடி கருப்புவை போலீஸ் வேனில் ஏறுமாறு கூறினார்கள். ஆனால் அவரும், அவரது கூட்டாளி சூர்யாவும் அதற்கு உடன்படவில்லை.</p><p>ரவுடி கருப்பு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஏட்டு விஜயகுமாரை வெட்டினார். இதில் அவருக்கு கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.</p><h2>துப்பாக்கிச்சூடு</h2><p>இதையடுத்து, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தங்களை தற்காத்து கொள்வதற்காக ரவுடி கருப்பு மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ரவுடியின் வலது காலில் குண்டு பாய்ந்து அங்கேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனே, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இருவரும் துரித வேகத்தில் செயல்பட்டு  இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புவின் கூட்டாளியான சூர்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.</p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனராக பிரேமானந்த் சின்கா பொறுப்பேற்ற பிறகு ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் குற்ற செயல்களை ஒழித்துக் கட்டவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.</p><p>அந்த வகையில்தான் ரவுடி கருப்புவின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில்தான் ரவுடியை பிடிக்க சென்ற இடத்தில் அவர் தாக்குதலில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் இந்த நடவடிக்கை மற்ற ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 19 ஜூலை 2026: குமார சஷ்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-19-july-2026-kumara-shasti-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-panchangam-and-important-events-19-july-2026-kumara-shasti-2#comments</comments><guid isPermaLink="false">c9b82f54-a5d3-4b2b-9ba4-88356789772f</guid><pubDate>Sun, 19 Jul 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-07-19T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Murugan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-16/gsqcg08o/muruga7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆடி-3 (ஞாயிற்றுக்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :   பஞ்சமி காலை 8.49 வரை பிறகு சஷ்டி</p><p>நட்சத்திரம் : உத்திரம் இரவு 11.25 வரை பிறகு அஸ்தம்</p><p>யோகம் :  அமிர்தயோகம்</p><p>ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை</p><p>எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்</h2><p>சஷ்டி விரதம். ஸ்கந்த பஞ்சமி, குமார சஷ்டி. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமானுக்கு ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் கோவில்களில் காலை திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். </p><p>திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆர்வம்</p><p>ரிஷபம் - முயற்சி</p><p>மிதுனம் - பெருமை</p><p>கடகம் - இன்பம்</p><p>சிம்மம் - உற்சாகம்</p><p>கன்னி - உதவி</p><p>துலாம் - யோகம்</p><p>விருச்சிகம் - சாதனை</p><p>தனுசு - ஆக்கம்</p><p>மகரம் - பரிசு</p><p>கும்பம் - நன்மை</p><p>மீனம் - உண்மை</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-july-2026#comments</comments><guid isPermaLink="false">326d3728-e557-46b7-b4d5-7103447d079d</guid><pubDate>Sat, 18 Jul 2026 04:01:41 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:38:53.081Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-delhi-travel-on-august-4th">வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f04f11ed-9f6a-4154-9bc9-00e3cdf82551">உலகக் கோப்பை கால்பந்து: 3ம் இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து நாளை மோதல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/8a8f042c-3464-4915-b85c-75f85f017832">உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/318ca44a-4f38-4c04-a47c-3f4e8ce7c27b">"தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம்"- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-removed-from-jantar-mantar-taken-to-hospital">21 நாளாக உண்ணாவிரதம்: மோசமடைந்த உடல்நிலை - சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/212b730d-ea3e-4a1c-8952-40f3d28b929b">விசுவாசத்தின் உச்சம் - எஜமானியை காப்பாற்ற பாம்பிடம் போராடி உயிரை மாய்த்த நாய்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/eee1b286-2e36-4f14-bc4e-280d83d03343">"தமிழ்த் தாயின் ஏக்கம் தீரப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள்"- மு.க.ஸ்டாலின் வாழ்த்து</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b4109ef3-619f-4627-a14f-04da6a8ab601">அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க-வில் இருந்து நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/conspiracy-tvk-government-under-for-meghalaya-project">‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/97077370-3769-42aa-bed7-5394eb95d5ed">பழனி கோவில் நில மோசடியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்- தி.மு.க. பிரமுகர் வீடுகளில் அதிரடி சோதனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/17b67fab-0203-48b8-a4ee-a828e7849f47">ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி சிஎம்டிஏ திவாலானது ஏன்?: வெள்ளை அறிக்கை வேண்டும்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/453aaabb-a60c-4c23-b7e8-5a5b9dab6b35">GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/28a7888e-529f-477f-b5ba-75e342b4fb10">“தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்! - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f48dea31-2cc2-475e-93ea-d7d9b8d81dc0">தொழில்நுட்ப கோளாறு - தனியார் ராக்கெட் விக்ரம்-1 புறப்பாடு தாமதம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/36b5d85b-9ebf-4a4d-8f31-ca6fa859566e">இன்று பிறந்தநாள்: தமிழக அமைச்சர் என்.ஆனந்துக்கு வாழ்த்து தெரிவிக்க குவிந்த தவெக தொண்டர்கள்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b7908e4e-b021-4e94-8d2b-4b33d250653c">வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/65bbec77-2ae2-44ec-98ec-8372cc7edcc5">"என்னை நீக்க அதிகாரம் இல்லை"- தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/981434e0-9e28-4646-8907-cfe4006ccd91">மக்கள் தொகை கணக்கெடுப்பு: இணையதளத்தில் சுயமாக விவரங்கள் பதிவு செய்யும் வழிமுறைகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-hospitalised">சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: சப்தர்ஜங் ஊழியர்களுடன் அவரது மனைவி வாக்குவாதம்!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4811dc25-2c86-4bfd-b81e-5b7fa9d437f0">"தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது"- பிரதமர் மோடி பெருமிதம்!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/fbcc60cb-9c96-4736-a8a0-73f9a9f2cd82">அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tnpsc-group-1-prelims-exam-date-changed">குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. எப்போது தெரியுமா? TNPSC அறிவிப்பு!... </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1b7987f5-57c1-4c96-8c20-0e991acefc96">பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 7 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வியூகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shashi-tharoor-stuck-in-lift-rescued-by-kerala-fire-force">லிஃப்டில் சிக்கிய சசி தரூர் எம்பி: ஹைட்ராலிக் கருவி மூலம் பத்திரமாக மீட்ட கேரள தீயணைப்புத்துறை!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4547580d-f3aa-4b70-94e7-298a4f75e60a">ஆகஸ்டு முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்- முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/abd1ce03-d51e-4923-9fc7-6a37271f030c">சமூக நீதி விடுதிகளில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆய்வு- இன்று அதிரடி உத்தரவுகள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/plastic-rupee-notes-to-be-introduced-in-india-no-more-torn-or-wet-money">பணம் இனி கிழியாது நனையாது:இந்தியாவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்!...</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a1905b8b-554c-48bf-aca2-8242011846d7">கோவில் நில விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா?- அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/147-girls-hospitalised-after-hostel-meal-in-gujarat">குஜராத் அரசு பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி சாப்பிட்ட 147 மாணவிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/3e8b7f29-d0cd-48a9-b2ad-05756d3c3644">"மின் வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்"- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sir-activities-supreme-court">வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதற்கும் குடியுரிமை இழப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை-உச்ச நீதிமன்றம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/engvsind-lords-washington-out-of-indias-third-odi-against-england">லார்ட்ஸ் ஒருநாள் போட்டி: வாஷிங்டன் சுந்தர் விளையாடமாட்டார் என அறிவிப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-blames-us-as-two-tankers-hit-mines-in-hormuz">அமெரிக்கா காட்டிய வழித்தடம்; கண்ணிவெடியில் சிக்கிய 2 கப்பல்கள்: ஈரான் குற்றச்சாட்டு!...</a></p><p>திரைப்படை துறையில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்ககி கவுரவிக்கும். அந்த வகையில் 2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/embassy-warning-over-marriage-scams">சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details">மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை...</a></p><p>சிறந்த இயக்குநர் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>Ekta Ka Prateek ஏக்தா கா பிரதீக் என்ற இந்தி படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய்</p><p>சிறந்த குறும்படம் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>மராத்தி படம் ஹம்சஃபார் (Hamsafar)</p><p>சிறந்த அனிமேசன் (திரைப்படம் அல்லாத படங்கள்):</p><p>ஜோஷி பெனிடிக் இயக்கிய Touched as Water.</p><h2>சிறந்த பாராட்டுக்குரிய படம் (Special Mention): மெய்யழகன்</h2><h2>சிறந்த தமிழ் படம்: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன்</h2><h2>சிறந்த மலையாள படம்: பாசில் முகமதுவின் ஃபெமினிச்சி ஃபாத்திமா</h2><h2>சிறந்த சண்டை பயிற்சியாளர்: மகாராஜா படம்- அனல் அரசு</h2><h2>சிறந்த எடிட்டர்:</h2><p>அமரன் படத்திற்கு சிறந்த எடிட்டிங்- ஆர். கலைவண்ணன்</p><h2>பின்னணி இசை:</h2><p>அமரன் படத்திற்கு ஜி.பி. பிரகாஷ் குமார்</p><h2>சிறந்த இயக்குநர்:</h2><p>அமரன் படம்: ராஜ்குமார் பெரியசாமி</p><h2>சிறந்த நடிகர்:</h2><p>மம்மூட்டி- பிரம்மயுகம்</p><p>கார்த்திக் ஆர்யன்- சந்து சாம்பியன்</p><h2>சிறந்த நடிகை</h2><p>யமி கவுதம்- ஆர்ட்டிக்கிள் 370</p><h2>சிறந்த துணை நடிகை:-</h2><p>சாசனா நமிதாஸ்- மகாராஜா</p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/maharaja-film-wins-two-national-awards">‘மகாராஜா’ திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள்..</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/amaran-wins-three-national-film-awards">3 தேசிய விருதுகளுடன் மகுடம் சூடிய 'அமரன்'!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/dhanush-wins-best-actor-72nd-national-film-awards-meiyazhagan-special-mention">72-வது தேசிய திரைப்பட விருதுகள்: தனுஷிற்கு சிறப்பு அங்கீகாரம்; 'மெய்யழகன்' படத்திற்குப் பாராட்டு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/72nd-national-awards-mammootty-crowned-best-actor">72-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக மகுடம் சூடினார் மம்மூட்டி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/pushpa-2-bags-two-national-film-awards">2 தேசிய விருதுகளைத் தன்வசமாக்கிய 'புஷ்பா 2' திரைப்படம்!... </a></p>]]></content:encoded></item><item><title>ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் விஜய்வசந்த் எம்.பி சந்திப்பு: ரெயில்வே திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanyakumari-railway-upgrades-mp-vijay-vasanth-discusses-passenger-association-demands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanyakumari-railway-upgrades-mp-vijay-vasanth-discusses-passenger-association-demands#comments</comments><guid isPermaLink="false">54a3facb-6ec5-43ac-a1b0-88e2abf6f0ea</guid><pubDate>Sat, 18 Jul 2026 16:38:08 +0000</pubDate><atom:updated>2026-07-18T16:38:08.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ரெயில்வே,kanyakumari,Vijay Vasanth,விஜய் வசந்த்,indian railways,கன்னியாகுமரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/c30wiw40/vijay-vasanth.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ vijay vasanth]]></media:title><media:description type="html"><![CDATA[ vijay vasanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/c30wiw40/vijay-vasanth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து பல்வேறு ரெயில்வே திட்டங்கள், ரெயில் நிறுத்தங்கள், புதிய ரெயில்களின் தேவைகள், ரெயில்கள் நீட்டிப்பு குறித்து கலந்தாலோசனை செய்தார்.</p> <h2>கூட்டம் </h2><p>இன்று நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில், வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில்சேவை, நாகர்கோவில் டவுன் மற்றும் சந்திப்பு ரெயில் நிலையங்களுக்கு 4 வழி சாலையிலிருந்து இணைப்பு சாலைகள், குழித்துறை ரெயில் நிலைய விரிவாக்கம், இரணியல் ரெயில் நிலைய பணிகளை விரைவில் முடிக்க வேண்டும், திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, குழித்துறை ரயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திலிருந்து தக்கலை வரை செல்லும் வகையில் பேருந்து வசதி, ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு போன்ற பல கருத்துக்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.</p> <figure><img alt="vijay vasanth" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/e6g73vre/vijay-vasanth.jpg" /><figcaption>vijay vasanth</figcaption></figure><h2>பாராளுமன்ற கூட்ட தொடர்  </h2><p>பாராளுமன்ற கூட்ட தொடருக்காக டெல்லி செல்லும் பொழுது அமைச்சர் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் இந்த கோரிக்கைகள் முன் வைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.</p><p>இந்த கூட்டத்தில் DRUCC உறுப்பினர் அல் அமீன், ஸ்ரீராம், எட்வர்ட் ஜெனி, ஜெயகுமார், கிருஷ்ணதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களின் ஆதார், சாதி விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவு!-பள்ளிக் கல்வித்துறை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-order-online-registration-of-students-aadhaar-and-caste-details#comments</comments><guid isPermaLink="false">05c30d6a-f037-479a-be6d-d32e1a810c39</guid><pubDate>Sat, 18 Jul 2026 12:13:15 +0000</pubDate><atom:updated>2026-07-18T12:13:15.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தனியார் பள்ளிகள்,அரசு பள்ளிகள்,government schools,private schools,Education Department,பள்ளிக் கல்வித்துறை,dpi,டிபிஐ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ dpi office]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/gc4irtr2/dpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களின் சாதிச் சான்றிதழ் விவரங்களை, பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><h2><strong>EMIS இணையதளத்தில் பதிவு:</strong></h2><p>தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களின் சமூகப் பிரிவு மற்றும் சாதி சான்றிதழ் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.</p><h2><strong>ஆவணங்கள் சரிபார்ப்பு:</strong></h2><p>மாணவர்கள் சேர்க்கையின் போது சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு, இந்த விவரங்கள் ஆன்லைனில் உள்ளீடு செய்யப்பட வேண்டும். தவறுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாகத் திருத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>நலத்திட்டங்கள் தடையின்றி கிடைக்க:</strong></h2><p>மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்கள் தகுதியான மாணவர்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த ஆன்லைன் பதிவு முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2><strong>டிஜிட்டல் மயமாக்கல்:</strong></h2><p>வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் மற்றும் இதர விவரங்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, பள்ளிப் பதிவேடுகளுடன் இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் மேல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.</p><h2><strong>பின்னணி:</strong></h2><p>சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அடையாள அட்டைகளில் சாதி விவரங்கள் இடம்பெறப் போவதாகச் சில தகவல்கள் வெளியாகி விவாதத்தைக் கிளப்பிய நிலையில், "மாணவர்களின் அடையாள அட்டைகளில் எக்காரணம் கொண்டும் சாதி விவரங்கள் அச்சிடப்படாது. அது மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்கும்" என்று தமிழக அமைச்சர்கள் ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்து, அது வெறும் தரவு நெறிப்படுத்துதல் மட்டுமே என விளக்கியிருந்தனர்.</p><p>தற்போது கல்வித்துறையின் உள்நிர்வாகப் பயன்பாட்டிற்காகவும், அரசு நலத்திட்டங்களின் வெளிப்படைத்தன்மைக்காகவும் மட்டுமே இந்த ஆன்லைன் சாதி விவரப் பதிவுப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-july-2026#comments</comments><guid isPermaLink="false">1ef20ff1-dcd7-484e-81a8-ef47dfdd988e</guid><pubDate>Fri, 17 Jul 2026 04:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:57:41.458Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-17/9x9oqe5m/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-time-change-to-nilgiri-and-mangalore">பராமரிப்பு பணி: நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களின் நேரம் மாற்றம்!</a></strong></p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/national/indias-first-private-orbital-rocket-vikram-1-to-launch-on-tomorrow">நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!</a></strong></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-inaugurate-75-railway-stations-today">சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maternity-leave-professor-asserts-her-right-by-going-to-court">மகப்பேறு விடுப்பு - கோர்ட்டுக்கு சென்று உரிமையை நிலைநாட்டிய பேராசிரியை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-7-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம்: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-salutes-to-the-martyrs-on-martyrs-day">தியாகிகள் தினத்தையொட்டி வீரவணக்கங்கள்- முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mamata-faces-tmc-split-over-50-mlas-and-20-mps-quit-as-she-urges-rebels-to-leave-before-july-21">விலகிய எம்.பி.க்கு மிக்க நன்றி.. போகிறவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள் - கெடு விதித்த மம்தா</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-election-data-theft-claim-trump-alleges-china-stole-data-of-220-million-voters">மாபெரும் தேர்தல் மோசடி.. 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளை திருடிய சீனா - டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-airstrikes-on-iran-bridges-us-targets-key-coastal-infrastructure-at-least-7-killed">ஈரானில் பாலங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 7 பேர் பலி.. பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் பதில் தாக்குதல்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/ukraine-defense-minister-fired-zelensky-sacks-drone-war-architect-sparking-nationwide-protests">உக்ரைன் ராணுவத்தில் டிரோன் போர்முறையை அறிமுகம் செய்த பாதுகாப்பு அமைச்சர் நீக்கம் - ஜெலன்ஸ்கியின் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/rohingya-boat-tragedy-over-500-feared-dead-after-two-refugee-boats-vanish-off-myanmar-coast">மியான்மரில் இருந்து தப்பி ரோஹிங்கியா அகதிகள் சென்ற படகுகள் விபத்து.. 500-க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ecr-high-level-road-project-technical-team-formed-to-cut-costs" rel="nofollow">ECR உயர்மட்ட சாலைத் திட்டம்: செலவை குறைக்க தொழில்நுட்பக் குழு அமைப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-van-hit-by-train-three-including-two-children-killed-at-murshidabad-govindpur-crossing-as-suburban-train-rams-vehicle-on-open-railway-track">மேற்கு வங்கம்: பள்ளிக் குழந்தைகள் சென்ற வாகனம் மீது ரெயில் மோதி விபத்து - 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-paddy-bags-piling-up-at-procurement-centres-immediate-removal-required">கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mps-need-tokens-to-breathe-under-modi-government-manickam-thakur-asks" rel="nofollow">எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா?- மாணிக்கம் தாகூர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/over-50-tenders-cancelled-municipal-administration-department-announcement">50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protest-sonam-wangchuk-on-critical-indefinite-fast-as-centre-stays-silent">Day 20: மரணப் படுக்கையில் சோனம் வாங்சுக்.. உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-flags-off-india-made-hydrogen-train" rel="nofollow">இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rohit-sharma-no-more-automatic-selection-after-lord-odi">ஒருநாள் போட்டி அணியில் இனி இடம்பெறமாட்டார்- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் ரோகித் சர்மா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lawyer-paranthaman-slams-vijay-regime-over-palani-land-fraud" rel="nofollow">பழனிக்கே மொட்டை போட்ட ஆட்சி விஜய் ஆட்சி- திமுக வழக்கறிஞர் பரந்தாமன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-sf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pakistan-backs-hafiz-saeed-indias-nia-issues-non-bailable-warrant-over-pahalgam-terror-attack">அவரை ஒன்னும் சொல்லாதீங்க.. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு எதிராக என்ஐஏ பிடிவாரண்ட் - பொங்கிய பாகிஸ்தான்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coonoor-railway-station-revamped-pm-modi-to-inaugurate-it-today">கண்கவர் ஓவியங்களுடன் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரெயில் நிலையம் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-justice-day-icc-rome-statute-and-global-justice-contradictions">சர்வதேச நீதி தினம்.. கடந்து வந்த பாதையும், கடக்க வேண்டிய தூரமும்..</a><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-to-watch-argentina-spain-world-cup-final-live" rel="nofollow">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: அர்ஜென்டினா- ஸ்பெயின் ஆட்டத்தை நேரில் பார்க்கிறார் அதிபர் டிரம்ப்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-rajendra-vishwanath-arlekar-request-to-tn-people">மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/weather-department-warns-of-5-day-heat-spell-in-tamil-nadu" rel="nofollow">தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்..!- வானிலை ஆய்வு மையம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-refuses-urgent-hearing-case-against-election-freebies">தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-made-two-major-mistakes-in-life">வாழ்க்கையில் 2 பெரிய தவறுகளை செய்துவிட்டேன் - வைகோ வேதனை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-malayadipatti-excavation">மலையடிப்பட்டி அகழாய்வு - தமிழர்களின் தொன்மையை‌ மேலும் உலகிற்கு பறைசாற்றும்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/higher-neet-cutoff-to-lead-to-intense-medical-seat-race-jayaprakash-gandhi" rel="nofollow">நீட் தேர்வு முடிவு: கட்-ஆப் மதிப்பெண் உயர்வதால் கடும் போட்டி நிலவும்..! கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-dismissed-ponrajs-petitions-seeking-the-quashing-of-cases">வழக்குகளை ரத்து செய்யக்கோரிய பொன்ராஜின் மனுக்கள் தள்ளுபடி- ஐகோர்ட் உத்தரவு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-indictment-tn-govt">பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தவெக அரசு!- நயினார் நாகேந்திரன் சாடல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/worried-about-neet-results-tamil-nadu-government-mental-health-helpline" rel="nofollow">நீட் தேர்வு முடிவால் பதற்றமா? மாணவர்களின் மனநலம் காக்க தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/58d7359e-20b7-4415-bda3-26c811047319">தமிழகம் உள்பட.. மறுசீரமைக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1f7c43a8-6ddf-4372-a49a-2818290d5d6d">தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன? - திருமாவளவன் கேள்வி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/second-t20-match-bangladesh-set-187-target-for-zimbabwe">2வது டி20 போட்டி: ஜிம்பாப்வே வெற்றிபெற 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/83fb8bd8-9a16-4296-9d74-9fa9c6d8a750">மக்கள் தொகை கணக்கெடுப்பு: சுய விவரங்களை பதிவு செய்த முதலமைச்சர் விஜய்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/andy-burnham-elected-new-labour-party-leader-uk-pm-designate">தொழிலாளர் கட்சி தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்வு: இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jairam-ramesh-explains-dmk-bjp-alliance-claims">திமுக-பாஜக கூட்டணி உண்மையா?: ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-crush-zimbabwe-second-t20-match">அசத்தல் பந்துவீச்சு: 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-criticises-tamil-nadu-over-police-exam-delay">காவலர் தேர்வை தள்ளி வைப்பதா? தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/gyanesh-kumar-a-weapon-of-mass-destruction-for-electoral-rolls-congress-jairam-ramesh">வாக்காளர் பட்டியலுக்கான பேரழிவு ஆயுதம் ஞானேஷ் குமார்: ஜெய்ராம் ரமேஷ் விளாசல்..!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/legendary-west-indies-cricketer-sir-garfield-sobers-no-more">வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்</a></p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-16-july-2026#comments</comments><guid isPermaLink="false">d2c58fb8-0ee8-404c-8bd6-25a23af9564b</guid><pubDate>Thu, 16 Jul 2026 03:36:42 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:17:44.547Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-16/0yiond39/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/libya-migrant-boat-capsize-over-50-dead-or-missing-in-mediterranean-near-libya">லிபியா அருகே அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து.. 50 பேர் மாயம் - உயிரிழப்பு என அச்சம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/private-sector-employment-camp-in-guindy-tomorrow-district-collector-malathi-helen-informed">நாளை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cabinet-meets-today">முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/8-electric-trains-between-beach-and-chengalpattu-cancelled-tomorrow">பயணிகள் கவனத்திற்கு... நாளை 8 மின்சார ரெயில்கள் ரத்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kudankulam-nuclear-power-plant-data-leaked">கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிந்ததா? - NPCIL விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-16-7-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-recruitment-notification-for-police-personnel-must-be-released-immediately">காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/day-19-89-kg-weight-loss-wangchuk-calls-for-the-july-20-rally-in-a-feeble-voice-where-is-rahul">19வது நாள்: 8.9 கிலோ எடை இழப்பு.. தளர்ந்த குரலில் ஜூலை 20 பேரணிக்கு வாங்சுக் அழைப்பு - ராகுல் எங்கே?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/azov-sea-drone-strikes-russian-shipping-halted-exports-disrupted">Sea of Azov: 116 கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்.. ரஷியாவின் கப்பல் போக்குவரத்து முடக்கம் - ஏற்றுமதி பாதிப்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-mall-stabbing-indian-muslim-worker-sohail-stabbed-15-times-in-utah-jewelry-store">மதவெறித் தாக்குதல்.. "நீ முஸ்லிமா?" என கேட்டு அமெரிக்க மாலில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/noida-apartment-fire-ev-blast-kills-2-over-100-residents-rescued">சார்ஜ் ஏறும்போது வெடித்த இ-ஸ்கூட்டர்.. நொய்டா கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி - 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/punjabi-student-on-uk-visa-stabbed-to-death-in-london-24-year-old-granthdeep-kaur-killed-on-uxbridge-road">நிலத்தை விற்று படிக்க அனுப்பிய பெற்றோர்.. லண்டனில் இந்திய மாணவி கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு- எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-is-the-2nd-match-will-india-win-the-one-day-series-against-england" rel="nofollow">இன்று 2வது ஆட்டம்..! இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-meeting-begins" rel="nofollow">தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbcid-investigation-to-rs-100-crore-worth-land-fraud-involving-palani-murugan-temple">பழனி முருகன் கோவிலின் ரூ.100 கோடி நிலம் மோசடி: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/movie-review/homer-odyssey-nolan-film-christopher-nolan-reimagines-odysseus-epic-war-torn-journey-on-screen">எப்படி இருக்கிறது 'தி ஒடிஸி..' மகாகாவியத்திற்கு நியாயம் செய்தாரா நோலன்? - திரைவிமர்சனம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anyone-caught-in-corruption-allegations-will-be-stripped-of-their-position-chief-minister-vijay-warns" rel="nofollow">ஊழல் புகார்களில் யார் சிக்கினாலும் பதவி பறிக்கப்படும்..!- முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-controversy-surrounding-the-fmge-exam-is-worrying-tamilachi-thangapandian" rel="nofollow">FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிக்கிறது..!- தமிழச்சி தங்கபாண்டியன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/color-appalam-bans">அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளத்துக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-enter-qf-round-in-japan-open-badminton">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/toronto-wildfire-smoke-blanket">காட்டுத்தீப் புகை மூட்டம்: உலகின் மிக மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக மாறிய டொராண்டோ!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/convening-of-the-puducherry-legislative-assembly-is-being-postponed">நாளை ஆடிமாதம் தொடக்கம்: புதுவை சட்டசபை கூடுவது தள்ளிபோகிறது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-government-has-no-intention-of-covering-up-prison-deaths-minister-nirmal-kumar" rel="nofollow">சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை- அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/51-sixes-3-centurions-when-t20-arithmetic-was-re-written">ஒரே போட்டியில் 3 சதங்கள், 51 சிக்சர்கள்: தெறிக்கவிட்ட மேஜர் லீக் தொடர் எலிமினேட்டர்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cbi-to-soon-investigate-armstrong-murder-case">ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ. விரைவில் விசாரணை- முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-ragupathi-explain-admk-alliance-is-possible">அதிமுகவுடன் கூட்டணியா? - முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-ex-mla-arul-attacks-anbumani">அன்புமணிக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லை!-பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/alcohol-in-paracetamol-for-children">குழந்தைகளுக்கான பாராசிட்டமால் மருந்தில் ஆல்கஹாலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக சுகாதாரத்துறை!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/childline-workersudhayanidhi-stalin-condemns">சைல்டுலைன் பணியாளர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் இல்லை: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ro-ko-is-the-9th-pair-to-complete-8000-partnership-runs-in-international-cricket">பார்ட்னர்ஷிப்பில் 8,000 ரன்களைக் கடந்த ரோகித் சர்மா-விராட் கோலி ஜோடி</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/casper-ruud-enter-qf-round-in-swiss-open-tennis">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்</a></p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலையில் மாணவிகளுடன் உடற்பயிற்சி செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-exercises-with-girl-students-in-tiruvannamalai#comments</comments><guid isPermaLink="false">4824026b-c21c-4330-af79-58d161e3f7db</guid><pubDate>Sat, 18 Jul 2026 11:15:32 +0000</pubDate><atom:updated>2026-07-18T11:15:32.119Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruvannamalai District,sportsminister,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,விளையாட்டுத்துறைஅமைச்சர்,HockeyGround,FitnessMotivation,SportsDevelopment</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SportsMinister AadhavArjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/413pnip3/SportsMinister-AadhavArjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். </p><p>ஆய்வின் போது, அங்கு பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த மாணவிகளுடன் இணைந்து அவரும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.</p><h2>புதிய ஹாக்கி மைதானம் திறப்பு..</h2><p>திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை இழை ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று முதல் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். </p><p>மைதானத்தை திறந்து வைத்ததுடன் நேரடியாக களத்தில் இறங்கி அங்கு இருந்த மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தார்.</p><h2><strong>மாணவிகளுடன் உடற்பயிற்சி..</strong></h2><p>மைதானத்தில் தடகளம் மற்றும் இதர விளையாட்டுகளுக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மாணவிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் பயிற்சி முறைகள் பற்றி கேட்டறிந்தார். </p><p>தொடர்ந்து, மாணவிகளிடம் பேசிக்கொண்டே ஒரு பயிற்சியாளரைப் போல அவர்களுடன் சேர்ந்து மைதானத்தில் ஓட்டப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். அமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.</p><h2><strong>குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்..</strong></h2><p>மைதான ஆய்விற்குப் பிறகு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தடகளம், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் அமைச்சர் நேரடியாகக் கலந்துரையாடினார். </p><p>அவர்களுக்குத் தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், முறையான தங்கும் விடுதி வசதிகள் மற்றும் சத்தான உணவு முறைகள் தங்கு தடையின்றிக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்து, வீரர்களின் கோரிக்கைகளையும், குறைகளையும் விரிவாகப் பெற்றுக் கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>வரத்து குறைவால் பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலை அதிகரிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-5#comments</comments><guid isPermaLink="false">92eac33e-3f7e-4540-a332-c3ad7100a570</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:30:33 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:30:33.155Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/22gzago9/vegetable.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காய்கறிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/22gzago9/vegetable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்</a> வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.</p><h2><strong>விலை உயர்வு</strong></h2><p>இன்று அதன் விலை மேலும் அதிகரித்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.</p><p>வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120வரையிலும், பீன்ஸ் மற்றும் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.100க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>இதேபோல் கத்தரிக்காய், பீட்ரூட், பாகற்காய், பீர்க்காங்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10முதல் ரூ.20வரை அதிகரித்து உள்ளது. </p><h2><strong>வரத்து குறைவு</strong></h2><p>காய்கறி மொத்த வியாபாரி ஒருவர் கூறும் போது, “கோயம்பேடு சந்தைக்கு இன்று 550லாரிகளில் காய்கறி விற்பனைக்கு வந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை ஒரு சில பகுதிகளில் நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வழக்கத்தை விட குறைந்தது போனதால் காய்கறி விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது” என்றார்.</p><h2><strong>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விலை (கிலோவில்) வருமாறு:-</strong> </h2><p>தக்காளி-ரூ.8முதல் ரூ.18வரை, நாசிக் வெங்காயம்-ரூ.24 முதல் ரூ.30 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50முதல் ரூ.70 வரை, உஜாலா கத்தரிக்காய் - ரூ.50, வெண்டைக்காய்-ரூ.30, பீட்ரூட் - ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.30, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ் -ரூ.25, வெள்ளரிக்காய்-ரூ.35, பச்சை மிளகாய்- ரூ‌.30, இஞ்சி-ரூ.90முதல் ரூ.150வரை.</p>]]></content:encoded></item><item><title>சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீரை குடிக்க தயங்கும் மக்கள்- சென்னை குடிநீர் வாரியம் பராமரிக்குமா?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-hesitant-to-drink-purified-free-drinking-water#comments</comments><guid isPermaLink="false">ba874e62-af87-4e6b-9859-feda466e4809</guid><pubDate>Sat, 18 Jul 2026 10:17:19 +0000</pubDate><atom:updated>2026-07-18T10:17:19.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை குடிநீர் வாரியம்,இலவச குடிநீர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மோசமான நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/uiwfsfxz/water.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பஸ், ரெயில் நிலையங்கள், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை  உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொது மக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி மையம் அமைக்கப்பட்டது. </p><p>மக்கள் அதிகம் கூட கூடிய இடங்களில் இந்த மையம் செயல்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 55 இடங்களில் தானியங்கி குடிநீர் எந்திரத்தை முன்னாள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். </p><h2><strong>மோசமான நிலை</strong></h2><p>கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள்.     தானியங்கி குடிநீர் மையத்தை  சென்னை குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. தானாகவே தண்ணீரை நிரப்பிக் கொள்ளும் வசதியும் அங்கு செய்யப்பட்டுள்ளது.    </p><p>மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்கள் இந்த குடிநீரை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மையமும் மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் இந்த குடிநீர் மையம் களை இழந்து காணப்படுகிறது. </p><p>பெரம்பூர் ஜமாலியா போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள குடிநீர் மையம், பெரம்பூர் பஸ்  நிலையத்தில் உள்ள மையம் ஆகியவை மிக மோசமான நிலையில் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக்கூடிய அந்த மையத்தின் அருகிலேயே குப்பைகளும், தண்ணீரும் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்த தயங்குகிறார்கள். </p><h2><strong>பயன்படுத்த முடியாத நிலை</strong></h2><p>குடிநீர் சுத்தமாக இருந்தால் மட்டும் போதாது, அதனை வழங்கக்கூடிய சுற்று பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும் . குடிநீரை பருகக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். </p><p>அரசு செய்கின்ற நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு முறையாக சென்று பயனடைய வேண்டுமென்றால் அதனை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும்.  ஏதோ திட்டம் செயல்படுகிறது, தண்ணீர் வழங்குகிறோம் என்று நினைத்து கவனிக்காமல் போனதால்  ஒரு சில சுத்திகரிப்பு மையங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-குடிநீர்-வாரியம்">குடிநீர்</a> சுத்திகரிப்பு மையத்தை சுற்றிலும் பராமரிக்காமல் போனதால் மக்கள் அந்த இடத்திற்கு செல்லவே முகம் சுளிக்கிறார்கள். பல கோடி செலவு செய்து மக்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் கட்டணம் இல்லாமல் சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்கினால் அதனை துறை அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.  பெரும்பாலான குடிநீர் மையங்களில் சில்வர் டம்ளர் இல்லை,  அங்கு நின்று குடிநீர் குடிக்கக் கூடிய சூழல் இல்லை, அருவருக்கத்தக்க நிலையில் தான் இந்த மையம் மாறி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் காட்சி பொருளாக மாறிவிடும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content:encoded></item></channel></rss>