<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 18 Sep 2026 07:22:26 +0000</lastBuildDate><item><title>டாஸ்மாக் விவகாரம்: ஊழல் வழக்கில் கைதாகிவிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பதா?- மூலனூர் கார்த்திக்கிற்கு நீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-questions-moolanur-karthik-over-sympathy-bid-after-corruption-arrest#comments</comments><guid isPermaLink="false">d50e3de4-bcdf-428f-a672-d0b494421c6c</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:21:45 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:21:45.673Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஊழல் வழக்கு,corruption case,Chennai High court,நீதிமன்றம்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuqjvouw/CH.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என மூலனூர் கார்த்திக் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். </p><p>இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மனுதாரரை ஏற்கெனவே, 4 நாள்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.</p><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, காவல்துறை தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.</p><p>முன்னதாக கார்த்திக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து வரும் பா.ம.க.வினர்- நிர்வாகிகளை பாராட்டிய அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-praises-pmk-functionaries#comments</comments><guid isPermaLink="false">e4c573c6-18ad-4137-aad8-18c9fd2069ce</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:19:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:19:12.425Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதஸ்,பா.ம.க,அரச மரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/9pfl4wzl/tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டையில் அமைந்துள்ளது மாவீரன் தேசிங்கு நினைவு தூண். இந்த நினைவிடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரச மரம் ஒன்றை நடப்பட்டது.</p><h2><strong>அரச மரம்</strong></h2><p>இந்த மரம் வளர்ந்து தற்போது அந்த பகுதியில் நிழல் தந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் கொள்ளுகாரன்குட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.</p><h2><strong>நெடுஞ்சாலைத்துறை</strong></h2><p>இதற்காக சாலையோரம் உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக அந்த அரச மரத்தை வெட்டி எடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முயற்சித்தனர். இதை அறிந்த பா.ம.க நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.</p><p>அப்போது அவர்கள், மரத்தை வெட்ட வேண்டாம். நாங்கள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் வைத்து நாங்களே பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.</p><h2><strong>மகிழ்ச்சி</strong></h2><p>இதனை தொடர்ந்து பா.ம.க நிர்வாகிகள் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி காப்பாற்றி அருகிலேயே வேறு இடத்தில் மீண்டும் நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் 39-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மாவீரன் தேசிங்கு நினைவு தூணில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தாங்கள் நட்டு, காப்பாற்றப்பட்ட அரச மரம் மீண்டும் துளிர்விட்டிருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.</p><h2><strong>நிர்வாகிகளுக்கு பாராட்டு</strong></h2><p>மரத்தை காப்பாற்றிய கட்சி நிர்வாகிகளை அவர் நேரில் பாராட்டினர். தொடர்ந்து அவர் கூறும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட அரச மரம் நடப்பட்டது. சாலை விரிவாக்க பணிக்காக இந்த மரம் வெட்ட வந்த போது, பா.ம.க நிர்வாகிகள் அதனை வெட்ட வேண்டாம். நாங்கள் மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் பராமரித்து கொள்கிறோம் என தெரிவித்து தற்போது இந்த மரத்தை பராமரித்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இதை தான் அரசு செய்ய வேண்டும். நாங்கள் செய்துள்ளோம். சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:14:56.021Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</a></p><p>* தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம்.</p><p>* பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>* 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days#comments</comments><guid isPermaLink="false">fbc776f2-fbb5-4907-96cb-547712a7720f</guid><pubDate>Fri, 18 Sep 2026 07:10:54 +0000</pubDate><atom:updated>2026-09-18T07:10:54.632Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ti3b5xo8/student2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார்.</p> <p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் தனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">பாரதிதாசன்</a>, ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்களை வாங்குவதற்கான நிதிக்காக தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார்.</p> <p>தனது ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்கள், எதிக்ஸ் கோடு உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். </p><p>இருப்பினும், நிதி கிடைக்காததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரும் மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற உள்ள ஆய்வு தொடர்பான பிரசன்டேஷனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p> <p>மேலும், தனது குடும்பம் மற்றும் கிராமத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சித் துறைக்கு வந்த முதல் தலைமுறை நபர் தான்தான் எனக் குறிப்பிட்ட அவர், தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். </p><p>இதுதொடர்பாக விளக்கம் அளித்த சமூக நீதித்துறை, அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது.</p> <p>இதையடுத்து, மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட புதிய காணொலி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. </p><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a>, பாரதிதாசனின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.</p><p>தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம். அவருக்கான நிதித் தொகை இரண்டு நாட்களுக்குள் விடுவிக்கப்படும்.</p> <p>அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாரதிதாசனைப் போன்ற மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்பதற்காகவே சமூகநீதித் துறை செயல்பட்டு வருகிறது. பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள்- அபராத தொகையை வசூலிக்க சிறப்பு மையங்களுக்கு ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-centres-set-up-to-collect-fines-from-traffic-rule-violators#comments</comments><guid isPermaLink="false">be75904a-04e8-44e2-8b2d-143588b2de38</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:55:12 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:55:12.531Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special camp,fine,சிறப்பு மையம்,Traffic Rules Violation,போக்குவரத்து விதி மீறல்,அபராத தொகை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Traffic rules]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y44y8smh/traffic-rules.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம்  அபராதம் விதிக்கப்படுகிறது.</p><h2>அபராதம்</h2><p>ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வது, செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது  மற்றும் லைசென்ஸ்  இல்லாமலும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதற்காகவும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.</p><p>தானியங்கி எண் பலகை கண்டறிதல் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு போன்றவை மூலம் உருவாக்கப்பட்ட மின் சலான்கள் பற்றி பல வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.</p><p>அதனால் அபராத தொகை செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ளது. பல வாகன ஓட்டிகளுக்கு தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் என்னவென்று தெரியாமல் இருந்து வருகிறார்கள்.</p><p>சென்னையில் பல கோடி ரூபாய் அபராத நிலுவைத் தொகை உள்ளது. இதனை வசூலிக்க போக்கு வரத்து போலீஸ் சார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.</p><h2>சிறப்பு மையம்</h2><p>போக்குவரத்து விதி மீறலுக்காக விதிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மின் சலான்களை வாகன ஓட்டிகள் சரிபார்த்து செலுத்துவதற்கு உதவ சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை நகரம் முழுவதும் 15 சிறப்பு அழைப்பு மையங்களை  அமைத்து வசூலிக்க திட்டமிட்டுள்ளது. </p><p>வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்கள் 10 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். காவல் துறையினர் வாகன ஓட்டிகளை தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள செலான்கள் பற்றி தெரிவிப்பார்கள்.</p><p>மொத்தமாக எஸ்.எம்.எஸ். விழிப்புணர்வுகளை அனுப்புவார்கள். தொலைபேசி அல்லது நேரில் விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.</p><p>வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை ஆன்லைனில் சரி பார்த்து ஆன்லைன் போர்ட்டல்கள், பேடிஎம், தபால் நிலையங்கள் மற்றும் மின் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். </p><p>மது போதை யில் வாகனம் ஓட்டியதற்கான அபராதங்களை நீதிமன்றம் மூலமாக செலுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் நிலுவையில் உள்ள செலான் களை சரி பார்த்து   அபரா தத்தை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.</p><p>15 இடங்கள் போக்குவரத்து போலீசார் அமைத்துள்ள 15 மையங்கள் விவரம் வருமாறு:</p><p> 1) அயனாவரத்தில் உள்ள ஐ.சி. எப். அனெக்ஸ் போலீஸ் பூத் </p><p>2) ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி போலீஸ் பூத் </p><p>3) அபிராமபுரத்தில் உள்ள கிரீன்வேஸ் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>4) அண்ணா சாலையில் உள்ள டவர் க்ளாக் சந்திப்பு போலீஸ் பூத் </p><p>5) அண்ணா நகர் சுழற்சி </p><p>6) அண்ணா ஆர்.சி. போக்குவரத்து போலீஸ் பூத் </p><p>7) மதுரவாயல் போக்கு வரத்து போலீஸ் நிலையம்</p><p> 8) மாதவரம் போக்கு வரத்து காவல் நிலையம் </p><p>9) பூக்கடை போலீஸ் நிலையம்</p><p>10) வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையம் </p><p>11) புளியந்தோப்பு போலீஸ் நிலையம் </p><p>12) மாம்பலம் போலீஸ் நிலையம் </p><p>13) அடையாறு போலீஸ் நிலையம் </p><p>14) கத்திப்பாரா மேம்பா லத்தின் கீழ் உள்ள போக்குவரத்து மவுண்ட் சப்டிவிஷன் வளாகம் </p><p>15)  வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள  தலைமையகம்</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">bf5df2d6-0784-44bb-a52d-bef9f4379c69</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:35:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:35:22.130Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/5d741ecc/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>5 முனைப்போட்டி</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, <a href="https://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.திமு.க</a>, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர்.</p><p>அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>தேர்தல் ஆணையம்</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ எஸ் மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். </p><p>அதிமுக சார்பாக வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>கூடலூரில் 2 பேரை கடித்து கொன்ற புலி கூண்டில் சிக்கியது- பொதுமக்கள் நிம்மதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gudalur-near-tiger-trapped-in-the-cage#comments</comments><guid isPermaLink="false">1182549c-ce82-40ce-a91f-995ad21fbda3</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:24:44 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:24:44.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,புலி,tiger,kumki elephants,கும்கி யானைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tprq1bjk/tiger.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடலூர் அருகே காட்டுப் புலி ஊருக்குள் புகுந்து 2 பேரை அடித்துக் கொன்றது. கடந்த மாதம் 9-ந் தேதி ஓவேலி லாரஸ்டன் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவரையும், 21-ந் தேதி ரவிச்சந்திரனையும் தாக்கிக் கொன்றது. இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கக்கோரியும், அந்த பகுதி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><h2><strong>ரூ.10 லட்சம் நிதியுதவி</strong></h2><p>அதனைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் 50 பேர் சென்னை வந்து முதலமைச்சரிடம் முறையிட வந்தனர். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமாரிடம் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். சட்டசபையிலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அத்துடன் புலி தாக்கியதில் மரணம் அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.</p><p>இதைத்தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார் கூடலூருக்கு நேரில் சென்றபோது அந்த 2 குடும்பத்துக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து தலா ஒரு லட்சம் வீதம் வழங்கினார்.</p> <h2><strong>புலியைப் பிடிக்க ஏற்பாடு</strong></h2><p>இதைத் தொடர்ந்து புலியை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு முதலமைச்சர் விஜய் வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித் குமார், வனத்துறையின் செயலாளர் காகர் லா உஷா, வனத்துறை எச்.ஓ.டி.உதயா, டோக்கரா, நீலகிரி மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் ஏராளமானோர் கூடலூர் பகுதிக்கு சென்று புலியை பிடிக்கும் பணியை முடுக்கி விட்டனர்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/iuf2uiwf/tigerg.jpg" /></figure><h2><strong>கேமராக்கள்</strong></h2><p>200-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கி புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 அதிநவீன டிரோன் கேமராக்களை பறக்கவிட்டு புலியை தேடிக் கொண்டே இருந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய மொத்தம் 244 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தினமும் அந்த கேமராக்கள் பரிசோதிக்கப்பட்டன. முக்கியமான இடங்களில் 13 இரும்புக் கூண்டுகளை அமைத்து அதில் ஆடுகள் கட்டிவைக்கப்பட்டன.</p><h2><strong>புலி சிக்கியது</strong></h2><p>இந்தநிலையில் 28 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கிக்கொண்டது. கூடலூர் நகரைஒட்டிய கே.கே. நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டில் புலி மாட்டிக் கொண்டது.</p><h2><strong>வனத்துறை அதிகாரிகள்</strong></h2><p>அந்த புலி ஆண் புலியாகும். அதற்கு 9 வயது முதல் 10 வயதுக்குள் இருக்கும். கூண்டில் சிக்கிய புலியை வனத்துறையினர் இரவோடு, இரவாக முதுமலைக்கு கொண்டு சென்றனர். புலியை மைசூர் காப்பகத்துக்கு கொண்டு செல்வதா அல்லது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வதா? என்ற வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: விசாரணைக்கு அன்பில் மகேஷ் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-100-crore-bribery-case-anbil-mahesh-appears-for-inquiry#comments</comments><guid isPermaLink="false">b5bbb8aa-80f5-4c81-8764-d982da18aa9c</guid><pubDate>Fri, 18 Sep 2026 06:03:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T06:03:33.597Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>corruption case,பள்ளிக்கல்வித்துறை,anbil mahesh,Education Department,லஞ்ச வழக்கு,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbil Mahesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/36dxob7u/Anbil-mahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் விசாரணைக்காக ஆஜரானார்.</p><p>சென்னை தியாகராயநகரில் செயல்படும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/goondas-act-invoked-against-dmk-pt-arasakumar-rs-100-crore-collected-from-private-school-administrators" rel="nofollow">தனியார் பள்ளி</a> சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது.</p><p>அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.</p><p>இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். </p><p>பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது.</p><p>அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். </p><p>250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள்.</p><h2>வழக்கு</h2><p>அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><p>இதனையடுத்து நேற்று முன்தினம் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.</p><h2>சோதனை</h2><p>சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணி னிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.</p><p>சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். </p><h2>ஆஜர்</h2><p>இந்நிலையில், போலீசாரின் சம்மனின்படி வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜரானார்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days#comments</comments><guid isPermaLink="false">fb1d4f14-ab10-4908-851f-1af56f88aaa5</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:48:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:48:35.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,tvk,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/jjgbv3ns/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.</p><h2><strong>5 முனை போட்டி</strong></h2><p>2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். </p><p>தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.</p><h2><strong>தலைவர்கள்</strong> </h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. </p><p>இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு (அடுத்த வாரம்) அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள்.</p><p>இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. இருப்பதால் முதலமைச்சர் விஜய்யின் பிரசாரம் அதற்கு கை கொடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடம் தேர்வு</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>தாராபுரத்தில் வருகிற 25-ந்தேதியும், அடுத்த மாதம் 2-ந்தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong></h2><p>கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது அவரை பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.</p><p>இந்த நிலையில் தான் தற்போது முதலமைச்சராக விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். இதையொட்டி 2 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.</p><p>த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்களும் 2 தொகுதிகளிலும் பிரசாரத்திற்கு தயாராகி வருகிறார்கள்.</p><p>மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதேபோன்று எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><h2><strong>எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் வருகிற 25, 26-ந்தேதிகளிலும் அடுத்த மாதம் 3-ந்தேதியும் பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதேபோன்று தாராபுரம் தொகுதியிலும் 2 நாட்கள் தங்கியிருந்து அவர் பிரசாரம் செய்ய இருக்கிறார்.</p><h2><strong>சீமான்</strong></h2><p>நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 20-ந்தேதிக்கு பிறகு தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2 தொகுதிகளிலும் அவர் தங்கியிருந்து ஒரு வாரத்திற்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.</p><h2><strong>களை கட்டுகிறது</strong></h2><p>இப்படி இடைத்தேர்தல்களில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட ஆயத்தமாகி வருவதால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தேர்தல் களம் களை கட்டுகிறது.</p><p>தங்களது கட்சித் தலைவர்களை வரவேற்பதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions#comments</comments><guid isPermaLink="false">7ee6c6df-afc4-4d2e-ab58-1570fd9e7c60</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:38:09 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:38:09.419Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,UPI,யுபிஐ,nirmala Sitharaman,jothimani,ஜோதிமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nirmala Sitharaman - Jothimani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/v9j90x1e/jothimani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். </p><p>வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் <a href="https://www.maalaimalar.com/news/national/upi-charges-to-be-04-for-some-payments-above-rs-2000-free-for-consumers">யுபிஐ கட்டணம்</a> செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும்.</p> <p>ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">நிர்மலா சீதாராமனுக்கு</a> காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில்,</p><p>அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். </p> <p>சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">₹2,000-க்கு மேல் உள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% (MDR) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சர் திருமிகு. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.<br><br> அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு… <a href="https://t.co/GeKGI0WBGH">pic.twitter.com/GeKGI0WBGH</a></p>&mdash; Jothimani (@jothims) <a href="https://x.com/jothims/status/2100808374233497608?ref_src=twsrc%5Etfw">September 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations#comments</comments><guid isPermaLink="false">abe5b4e7-5813-4bf8-a48b-43bebe204a97</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:34:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:34:51.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,special bus,வார விடுமுறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பேருந்துகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/176b3d9b/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.</strong></em> </p><p>தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சிறப்பு பேருந்துகள்</strong></h2><p>வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு  முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பேருந்துகள்</a> இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>கிளாம்பாக்கம்</strong></h2><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (18-ந்தேதி) 760 பேருந்துகளும், நாளை (19-ந்தேதி) 520 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 18-ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று 115 பேருந்துகளும், நாளை (19-ந் தேதி) 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து 18 மற்றும் 19-ந்தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 70 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் நாளை மறுநாள் (20-ந் தேதி) அன்று 805  சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், இந்த வார இறுதியில் இன்று 7812 பயணிகளும், நாளை 4001  பயணிகளும் மற்றும் நாளை மறுநாள் 8946 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். </p><p>இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை  மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases#comments</comments><guid isPermaLink="false">5b551e4f-1a82-493c-a5ac-f975f725beeb</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:30:49 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:30:49.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dengue,health department,சுகாதாரத்துறை,Dengue action,டெங்கு காய்ச்சல்,டெங்கு பரவல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dengue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/fgbmsx5q/Dengue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் தினந்தோறும் 200 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 244 நாபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் மட்டும் இதுவர 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>சென்னையில் அதிகம்</h2><p>சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management#comments</comments><guid isPermaLink="false">c6be4775-3fb2-459a-8cca-5967331eb2db</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:07:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:07:21.547Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Anbumani ramadoss,caste census,அன்புமணி  ராமதாஸ்,சாதிவாரி கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ggt8kd91/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது என்று அன்புமணி கூறினார்.</p> <h2>வன்னியா் இட ஒதுக்கீடு</h2><p>வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று உயிா்நீத்த 21 தியாகிகளின் நினைவை  போற்றும் வகையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.</p><h2>சாதிவாரி கணக்கெடுப்பு</h2><p>கூட்டத்தில் பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> பங்கேற்று பேசியதாவது:-</p> <p>ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி தியாகிகளை நினைவூட்டி அவர்களை போற்றி வருகிறோம். போராட்டத்தில் இறந்தவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்களால் இன்று நிறைய இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்கள் பற்றி இன்று வரை மற்றவர்கள் யாரும் பேசவில்லை. </p><p>பா.ம.க. சார்பில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது பலமுறை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை நடத்த முன்வரவில்லை.</p> <h2>இடஒதுக்கீடு போராட்டம்</h2><p>தற்போது முதலமைச்சராக உள்ள விஜய் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார். 95 ஆண்டுகளாக காத்து கிடக்கும் எங்களுக்கு  <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday">முதலமைச்சர் விஜய்</a> சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது. அதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வி அடையாமல் இருக்க முதலமைச்சர் விஜய் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதனால் அதிகம் பயன்பெற போவது பட்டியல் இன பழங்குடியின மக்கள் தான்.</p> <p>இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் 4 இட ஒதுக்கீடு என 6 இட ஒதுக்கீடு பா.ம.க நடத்திய போராட்டத்தால் தான் கிடைத்தது.</p><h2>நீர் மேலாண்மை</h2><p>நீர் மேலாண்மை குறித்து கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்த கட்சியினர் யாரும் சிந்திக்கவில்லை. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு  நீர் மேலாண்மையில் பின்தங்கி உள்ளது. தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக என்ன செய்யப் போகிறார். 2031-ல் நாம் ஆட்சிக்கு வர போகிறோம். அதற்கான சூழ்நிலைகள் நமக்கு அமைந்துள்ளது. எனவே கட்சியில் உள்ளவர்கள் அதனை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>100 ஆண்டுகளுக்கு த.வெ.க ஆட்சி தான் நடக்கும்- மதுரை ஆதீனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-adheenam-says-tvk-will-rule-for-100-years#comments</comments><guid isPermaLink="false">8065bef8-4b00-48a8-8536-dc5808ede3ad</guid><pubDate>Fri, 18 Sep 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-18T05:02:59.921Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,மதுரை ஆதீனம்,Madurai Adheenam,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pi3zbbx5/maduraiaadheenam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்சம் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்று சொல்வதால் 100 ஆண்டுகளுக்கு த.வெ.க. ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கும் என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.</strong></em></p><p>காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வில்வநாத ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-</p><h2><strong>விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. லஞ்சம் வாங்கவும் கூடாது, லஞ்சம் கொடுக்கவும் கூடாது என்று சொன்ன முதலமைச்சர் விஜயை பாராட்டுகிறேன். திருச்செந்தூருக்கு வந்து தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டார் முதல்வர். 100 ஆண்டுகள் வரை த.வெக. ஆட்சி தான் நடக்கும். இடைத்தேர்தல்களிலும் த.வெ.க. தான் வெற்றி பெறும். வரும் அக்.11 ஆம் தேதி மதுரை தமிழச்சங்கத்தின் சார்பில் முதலமைச்சர் விஜய் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்படுகிறது. நூலை அடியேன் தான் வெளியிடவுள்ளேன்.</p><h2><strong>அனைவரும் சமம்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில்களில் பல நல்ல சீர்திருத்தங்களை செய்து வருகிறார். இறைவனுக்கு முன்பு உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்று செயல்படுகிறார். கோவிலுக்குள் கைப்பேசி எடுத்து செல்வதை தவிர்த்திருப்பதும் வரவேற்கத்தக்கது.</p><p>மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நான் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தவன் என்பதாலும், 6 மாதத்துக்கு முன்பே பிள்ளையார் பாளையம் வில்வநாத ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு வருவதாக உறுதியளித்திருந்ததாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இயலவில்லை.</p><p>எங்கள் மடத்துக்கு அருகிலேயே மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் நான் தினசரி அம்மனை தரிசிப்பதும் வழக்கம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute#comments</comments><guid isPermaLink="false">4ad6e1bf-5d2e-4724-88e7-b30355c554ae</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:26:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T04:26:01.888Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,இரட்டைமலை சீனிவாசன்,irattaimalai srinivasan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ irattaimalai srinivasan- Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/wiu7akxf/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூகப்போராளியும் திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான திராவிட மணி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">இரட்டை மலை சீனிவாசன்</a> நினைவு நாளான இன்நாளில் அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, அரசியல் பிரதிநிதித்துவத்திற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த சமூகப் போராளியும், திராவிட இயக்கத்தின் முன்னோடியுமான 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (19.09.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-44</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-44#comments</comments><guid isPermaLink="false">30c88fdc-7d7a-483b-bd53-cba86e19d16d</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:24:35 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:24:35.999Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,chennai power cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/dqx0j3rk/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/dqx0j3rk/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>ஐடி காரிடார்</strong> </h2><p>நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, காரணை, ஏகாட்டூர், ஓஎம்ஆர், படுப்பாக்கம், சிப்காட் சிறுசேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சந்தியா கார்டன்.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் சிகிச்சை: தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-announcement-stating-that-complaints-can-be-lodged-if-private-hospitals-charge-excess-fees</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dengue-fever-announcement-stating-that-complaints-can-be-lodged-if-private-hospitals-charge-excess-fees#comments</comments><guid isPermaLink="false">6730edab-68bf-4ebc-bf1e-4f6ca9073709</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:18:16 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:18:16.208Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>dengue fever,பொது சுகாதாரத்துறை,தனியார் மருத்துவமனை,Private Hospitals,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gyrald05/hospital.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மருத்துவமனை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/gyrald05/hospital.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><h2><strong>டெங்கு காய்ச்சல் சிகிச்சை</strong></h2><p>தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல், அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வார்டில் சிகிச்சை பெற ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், தீவிர சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரையிலும் தினசரி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. </p><h2><strong>புகார் தெரிவிக்கலாம்</strong></h2><p>இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-</p><p>அரசு ஆஸ்பத்திரிகளில், காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கும் வகையில் பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப, முன்னுரிமையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளிலேயே போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் சூழலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.</p><p>அதேநேரம், வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கட்டணம் மாறுபட்டிருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்படும். தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அதே நேரம் வீடுகள், சுற்றுப்புறங்களில் மழை நீர் மற்றும் நன்னீர் தேங்கக்கூடிய வகையிலான பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்றனர். </p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">0b0d0b3e-b359-4366-8382-00d5703ac3b9</guid><pubDate>Fri, 18 Sep 2026 03:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T03:01:30.923Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,bills passed,ஆளுநர் அர்லேகர்,TN Governor Arlekar,மசோதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Governor Arlekar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/7u6hw2m5/tngovernor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> முழு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆக.5-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2026-2027-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும், ஆக.6-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.</p> <p>அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதமும், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்றன. இந்த விவாதத்துக்கு அந்தந்த துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். செப். 8-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.</p> <p>இந்த மசோதாக்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தில், மாநிலத்தில் உலகத் தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பதை எளிதாக்கும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச நிலத் தேவையை 100 ஏக்கரில் இருந்து மண்டலங்களுக்கு ஏற்ப (சென்னையில் 12 ஏக்கர், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கர், இதர பகுதிகளில் 25 ஏக்கர்) குறைக்கவும், நிரந்தர வைப்பு நிதியை ரூ. 50 கோடியில் இருந்து ரூ. 25 கோடியாக குறைக்கவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.</p> <p>விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் பணிகள்) திருத்தச் சட்டம், தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்டம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா, ஊராட்சிகள் 2-ம் சட்ட திருத்த மசோதா, வணிக எளிதாக்கல் திருத்த மசோதா, மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.</p> <p>மொத்தமாக நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>சட்டசபையில் அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளில் எதிர்ப்பை சந்தித்த நகர் ஊரமைப்பு மசோதா, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது, டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்பு கூட்டு வரி விதிக்கும் மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.</p> <p>தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p><p>ஒப்புதல் அளிக்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-session-started">மசோதாக்கள்</a>, தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் கடந்த செப். 15-ந்தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused#comments</comments><guid isPermaLink="false">4582109c-4843-4b2d-8fdd-f30d338593c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 02:27:30 +0000</pubDate><atom:updated>2026-09-18T02:27:30.267Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,வன்னியரசு,minister vanni arasu,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Vanniyarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ir35sr2d/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். </p><p>தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டார்.</p><p>மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.</p> <p>இந்த விவகாரம் தொடர்பாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns">அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</a> திட்டத்தில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் காணொலி தகவலுக்கு தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,</p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p> <p>* வெளிநாட்டில் படிக்கும் மாணவருக்கு ஆண்டிற்கு கல்வி கட்டணம், வாழ்க்கை செலவினம், இதர செலவினங்கள் என ரூ.36 லட்சம் வழங்கப்படுகிறது.</p><p>* மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு முதலாமாண்டுக்கான ரூ.36 லட்சம் வழங்கப்பட்டது.</p> <p>* முதலாமாண்டு தொகைக்கான செலவின வவுச்சர்களை வழங்காமல், 2-ம் ஆண்டுக்கான தொகையை மாணவர் கோரினார்.</p><p>* இருப்பினும் மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்டதோடு, இதர செலவினங்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டது.</p> <p>* 20-8-2026 அன்று ஏற்கனவே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் இதுவரையில் சரியான விளக்கம் இல்லை.</p><p>* மேலும், மாணவர் பயிலும் மலேசிய தேசிய பல்கலை. பதிவாளரிடம் விளக்கம் கேட்டு நேற்று (17-9-2026) இ-மெயில் அனுப்பப்பட்டது.</p> <p>* பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கப்பெற்றவுடன் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.</p><p>* மேற்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவுடன் மாணவர் காணொளி மூலம் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவு செய்துள்ளார்.</p> <p>* வெளிநாடுகளில் பயின்று வரும் 181 மாணக்கர்களில், பாரதிதாசன் தவிர வேறு யாரிடமும் இருந்து புகார்கள் இல்லை.</p><p>* மாணவரது காணொளியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதோடு, கல்வி திட்டத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>இந்நிலையில், அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,</p><p>* ரூ.37 லட்சத்திற்கான பில் அனுப்பினேன், ரூ.36 லட்சம் உதவித்தொகை தந்தார்கள். பில் அனுப்பவில்லை என மீண்டும் மீண்டும் கட்டுக்கதை கட்டுகிறார்கள்.</p> <p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p>திட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னியரசு </a>புகார் கூறியிருந்த நிலையில் மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-september-2026#comments</comments><guid isPermaLink="false">188cc8f4-2e10-453b-a877-d080750f3dbf</guid><pubDate>Thu, 17 Sep 2026 03:55:51 +0000</pubDate><atom:updated>2026-09-18T01:43:41.480Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/wgeqodsr/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-mk-stalin-says-revolutionary-salutations-to-sun-of-rationalism-thanthai-periyar">பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.</p><p>* “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-honour-to-periyar">பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணிப்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!</p><p>* வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது- தமிழ்நாடு அரசு</a></p><p>* தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>* லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் மற்றும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு வழங்கிய தமிழ்ச் சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-passes-bill-granting-trump-full-authority-to-impose-100-tariffs-on-india">இந்தியா மீது 100% வரிவிதிக்க டிரம்புக்கு முழு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றம்</a></p><p>*ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.</p><p>*இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/f-15-brought-down-houthis-shoot-down-saudi-warplane-with-a-missile-in-yemen-video">மண்ணோடு மண்ணான F15.. ஏமனில் சவுதி போர் விமானத்தை ஏவுகணையால் துளைத்த ஹவுதிக்கள்- வீடியோ</a></p><p>*ஹவுதிக்களுக்கு எதிராக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளது.</p><p>*ஒரே வாரத்தில் சவுதி 450 வானவழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமன் குற்றம்சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-upgrade-human-resources-and-infrastructure-without-closing-schools">அரசுப் பள்ளிகளின் மூடுவிழா: பள்ளிகளை மூடாமல், மனித வளம் மற்றும் கட்டமைப்பை உயர்த்துக! - அன்புமணி ராமதாஸ்</a></p><p>* அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. </p><p>* அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-birthday-wishes-to-pm-modi">பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து</a></p><p>* இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.</p><p>* வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-17-9-2026">GOLD PRICE TODAY: சற்றே சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pm-modi-birthday-mk-stalin-anbumani-and-annamalai-wishes">பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து</a></p><p>* பிரதமர் மோடி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் </p><p>* பிரதமர் மோடியின் இடைவிடாத உத்வேகம் லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/chinese-president-collapsed-after-suffering-a-stroke-upon-arriving-in-delhi-for-the-brics-summit-news-spreading-like-wildfire">"பிரிக்ஸ் மாநாட்டுக்கு டெல்லி வந்தபோது பக்கவாதம் வந்து மயங்கி விழுந்த சீன அதிபர்?.." தீயாக பரவும் தகவல் <br></a></p><p>*பிரதமர் மோடி ஏற்பாடு செய்த இரவு விருந்தில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை.</p><p>*ஜி ஜின் பிங்கைப் பார்த்து, "எல்லாம் சரியாக இருக்கிறதா?" என்று பிரதமர் மோடி கேட்டதும் விவாதப் பொருளாக இருந்தது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-union-minister-sudarsana-natchiappan-has-passed-away">மத்திய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்</a></p><p>* காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.</p><p>* 1999ல் மக்களவைக்கு சிவகங்கை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/canada-invited-to-join-the-european-union-trump-turns-red">சிரிப்பு காட்டாதீங்க.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய கனடாவுக்கு வந்த அழைப்பு பற்றி டிரம்ப்<br></a><br>*கனடாவுக்கு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.</p><p>*அமெரிக்காவுக்கு ஏறக்குறைய 70 சதவீத ஏற்றுமதியை செய்து வருகிறது கனடா.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin">ஜமீன்களிலும் பண்ணைகளிலும் அடைபட்டிருந்த அரசியலை பாமரர்களிடம் சேர்த்தது திமுக: உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!... </a></p><p>*ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது.</p><p>*அடக்குமுறைகள், நெருக்கடிகள் மற்றும் புதிய எதிர்ப்புகளை கடந்து கழகம் இன்றளவும் வலிமையோடு நடைபோடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th">நாளை மறுநாள் தி.மு.க. முப்பெரும் விழா- துரைமுருகன் அறிவிப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்திடல் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>* தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/27c55c2c-c8fa-4e2d-83b8-3f5c06a0d286">700 வயது.. இந்தியாவில் உள்ள உலகில் உள்ள மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா?</a></p><p>*ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.</p><p>*வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/stray-dogs-anger-yuvasena-protest-puppies-on-officer-desk">தெருநாய்கள் தொல்லையால் ஆத்திரம்: அதிகாரி மேஜையில் நாய்க்குட்டிகளை விட்டு யுவசேனா வினோத போராட்டம்!... </a></p><p>*நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃபாட் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து ரூபாய் நோட்டு மாலையுடன் போராட்டம் நடைபெற்றது.</p><p>*தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடி கருத்தடை முகாம்களை நடத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip">“முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?”-  வெள்ளை அறிக்கை வெளியிட தினகரன் வலியுறுத்தல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன்கள்தான் என்ன? என்ற கேள்வியும் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.</p><p>*  மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து, எதைப் பற்றியும் கவலையில்லாமல், முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் லண்டனுக்கு சென்று ரீல்ஸ் கன்டென்ட்களைத் தேற்றி வந்திருகிறார் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பு மனு ஏற்பு</a></p><p>* மதுராந்தகத்தில் 48 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். </p><p>* 2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வும் காய் நகர்த்தி வருகிறது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-by-election-collector-inspects-sensitive-polling-stations">மதுராந்தகம் இடைத்தேர்தல்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு</a></p><p>* வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். </p><p>* நெல்வாய் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-speech-in-press-meet-in-chennai">அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை- சட்டப்படி எதிர்கொள்வோம்: ஆர்.எஸ்.பாரதி</a></p><p>* விலைவாசி கடந்த 4 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் இல்லை. பல ஊர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">ரீல்ஸ், ரீல் விடுவதே மிகப்பெரிய சாதனை: தவெக ஆட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி</a></p><p>* திமுக-அதிமுக இடையே கள்ள உறவு என்பது அபத்தம். தவெகவினருக்கு எதுவும் தெரியவில்லை.</p><p>* மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல், தேவையற்ற தேர்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday">சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம்: பெரியார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி...</a> </p><p> * சென்னையில் பெரியாரின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>* மானுடத்தின் மீது பற்றையும், மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவேன் என்ற உறுதிமொழியை முதல்வர் விஜய் வாசித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/centre-informs-madras-highcourt-for-outpatient-department-serviceswould-commence-at-aiims-madurai-from-january-2027">மதுரை எய்ம்சில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ல் செயல்படும்: மத்திய அரசு தகவல்</a></p><p>* இந்த மனு  தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.</p><p>* ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-bangladesh-womens-teams-enter-sf-in-asian-games">ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான், வங்கதேசம்</a></p><p>* மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசம், சீனா அணிகள் மோதவிருந்தன.</p><p>* மைதானம் ஈரமாக இருந்ததால் டாஸ் கூட போடாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/abhishek-sharma-century-in-30-balls-against-afghanistan-3rd-t20-match">3வது டி20 போட்டி: ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா -30 பந்தில் சதமடித்து சாதனை</a></p><p>* டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>* இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-bypolls-nominations-of-58-candidates-accepted#comments</comments><guid isPermaLink="false">354c402e-cc4e-4e23-ae91-0786eecc44dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 17:05:22 +0000</pubDate><atom:updated>2026-09-17T17:05:22.672Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,TN Bypolls,Madurantakam,தமிழக இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தாமன் - மரகதம் குமரவேல் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/6ltm7yyr/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம் மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/dharapuram">தாராபுரம்</a> இடைத்தேர்தல்களுக்கான 58 வேட்பாளர்களின் மனுக்கள், பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. </p><p>ஆளும் <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றின் வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் மனுக்கள் முறையாக இருந்ததாக கண்டறியப்பட்டது. </p><p>இடதுசாரி கட்சிகள் இவ்விரு தொகுதிகளுக்கும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தனித்தொகுதிகளாக உள்ள இவ்விரு தொகுதிகளிலும் சுவாரஸ்யமான ஐந்து முனை போட்டி நிலவவுள்ளது.</p><h2>58 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு:</h2><p>தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதள தகவலின்படி, மதுராந்தகத்தில் 28 வேட்பாளர்களின் மனுக்களும், தாராபுரத்தில் மொத்தம் 30 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவ்விரு சட்டமன்ற தொகுதிகளிலும் பெறப்பட்ட மொத்தம் 91 மனுக்களில், 41 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>ஏப்ரல் 23-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. தனது முதல் அரசை அமைத்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் களம் இதுவாகும்.</p><p>த.வெ.க. நிறுவனரும் முதல்வருமான விஜய், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முறையே முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்தியபாமா ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளார்.</p><p>குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் ஏப்ரல் 23 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அந்தந்த தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள்; பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் த.வெ.க. கட்சியில் இணைந்தனர்.</p><h2>தி.மு.க., த.வெ.க.-வுக்கு நேரடி எதிரணி:</h2><p>மதுராந்தகத்திற்கு ஐ. பரந்தாமனையும், தாராபுரத்திற்கு எஸ். சுகன்யாவையும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தலைமை வகிக்கும் அ.தி.மு.க., மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கனிதா சம்பத் மற்றும் தாராபுரத்தில் கே. பானுமதி ஆகியோரை நிறுத்தி, முழுக்க முழுக்க பெண்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.</p><p>பாரம்பரிய தேர்தல் கூட்டணிகளில் இருந்து விலகி, தனித்த இடதுசாரி முன்னணியாக போட்டியிடப்போவதாக சி.பி.ஐ. (எம்) மற்றும் சி.பி.ஐ. ஆகியவை அறிவித்துள்ளன; இதன் மூலம் அவை தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் நேரடி எதிரணியில் நிற்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் இந்தி மொழி கற்பிப்பதை தடுக்க கூடாது: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hindi-should-not-be-barred-in-tamil-nadu-supreme-court-on-navodaya-schools#comments</comments><guid isPermaLink="false">043065c5-b4a4-407d-8c31-5706087c1eab</guid><pubDate>Thu, 17 Sep 2026 16:16:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T16:16:09.668Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,இந்தி மொழி,hindi language,Navodaya school,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court on Hindi education in Tamil Nadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/de64qpia/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் இந்தி மொழி ஒருபோதும் கற்பிக்கப்படாது என்ற நிலைப்பாட்டை தமிழகம் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது.</p><p>மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைப்பதற்காக நிலத்தை அடையாளம் காணுமாறு, தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த தனது முந்தைய உத்தரவைத் திரும்ப பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.</p><p>தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றம்</a> விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>தமிழக அரசு, இந்தி மொழி உட்பட அவற்றின் மும்மொழிக் கல்வி முறை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கையுடன் முரண்படுகிறது என்ற அடிப்படையில் எதிர்த்து வருகிறது.</p><h3><strong>தமிழக வழக்கறிஞர்</strong></h3><p>தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மாநில அரசின் எதிர்ப்பு என்பது வெறும் மனநிலை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது கல்விக் கொள்கையை வகுப்பதற்கான அதன் அரசியலமைப்பு அதிகாரம் தொடர்பானது என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.</p><p>மேலும் அவர் மாநில அரசு இந்தி மொழிக்கு எதிரானதல்ல என்றும், ஆனால் நவோதயா திட்டத்தில் இந்தி மொழியை முதன்மை மொழியாக வலியுறுத்துவதையே எதிர்ப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.</p><p>மேலும், மத்திய அரசின் திட்டம் விருப்பத்திற்குரியது என்றும், ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு மாநிலத்தை கட்டாயப்படுத்தி நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டார்.</p><h3><strong>உச்ச நீதிமன்ற நீதிபதிகள்</strong></h3><p>இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஏ.ஜி. மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு தமிழகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தினர்.</p><p>மேலும் டிசம்பர் 15, 2025 தேதியிட்ட உத்தரவை நிறைவேற்றவும், முன்மொழியப்பட்ட பள்ளிகளுக்கான பொருத்தமான நிலத்தை அடையாளம் காணவும் மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசத்தை நீதிபதிகள் வழங்கினர்.</p><p>மேலும் நீதிபதிகள், “நீங்கள் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மண்ணில் இந்தி கற்பிக்கப்படாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>உங்கள் மாநிலத்தில் நீங்கள் செய்து வரும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் மேலாக, கூடுதலாக ஒன்றைச் செய்வது உங்கள் தரத்தைக் குறைத்துவிடாது என்று நாங்கள் கூறுகிறோம்.</p><p>டெல்லியிலிருந்து வருவதால் சென்னையின் தரம் குறைந்துவிடாது. சென்னை மக்கள் டெல்லியைப் புறக்கணிக்கக் கூடாது, டெல்லி மக்களும் சென்னையைப் புறக்கணிக்கக் கூடாது.</p><p>இன்று கல்வி, நாளை வேறு ஒன்றாக மாறிவிடும். உங்கள் மனதில் உள்ள இந்த விறைப்புத்தன்மையை நீங்கள் தளர்த்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.</p><p>தமிழகத்தை உடனடியாக நிலம் கையகப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட செலவினத்திற்கு மாநிலத்தைக் கட்டுப்படுத்தவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை.</p><p>டிசம்பர் 2025 பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு தனது அரசாங்கத் திட்டத்தில் பொருத்தமான நிலத்தை அடையாளம் காண மட்டுமே கோரியுள்ளது.</p><p>கடந்த ஆண்டு டிசம்பரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை ஆறு வாரங்களுக்குள் அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.</p><p>அதைத் தொடர்ந்து, மாநில அரசில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி, தமிழக அரசு அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரியது.</p><p>இதையடுத்து முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவைத் திரும்ப பெற நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. அதே நேரத்தில், அதற்குக் கட்டுப்பட மாநில அரசுக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கியதுடன், கொள்கை மற்றும் அதன் செயலாக்கம் குறித்து மத்திய, மாநிலப் பிரதிநிதிகள் தொடர்ந்து கலந்துரையாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.</p><p>தமிழக அரசு தமிழை இரண்டாம் மொழியாக விரும்பினால், அது பரிசீலிக்கப்படக்கூடிய ஒரு விஷயமே, என்று கூறிய நீதிபதி அமர்வு, மாநில மற்றும் மத்திய அரசுகள் தங்களது கல்விச் செயலாளர்கள் மட்டத்தில் கலந்துரையாடுமாறு கேட்டுக்கொண்டது.</p>]]></content:encoded></item><item><title>குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/group-1-exam-hall-ticket-release-tnpsc-notification#comments</comments><guid isPermaLink="false">1d3c700f-172b-45e4-94f2-7b1b8c75fc9a</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:54:20 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:54:20.538Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,hall ticket,ஹால் டிக்கெட்,டிஎன்பிஎஸ்சி,TNPSCGroup1,டிஎன்பிஎஸ்சி குரூப் 1</media:keywords><media:content height="183" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif" width="275"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPSC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/ykh1gi8h/images-12.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>குரூப் 1 தேர்வு </h2><p>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 27, 2026 அன்று முற்பகல் அமர்வில் நடைபெற உள்ளது.இத்தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வானது நடைப்பெற இருக்கிறது.</p><h2>ஹால் டிக்கெட்</h2><p>வரும் 27ம் தேதி நடைப்பெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கான அனுமதி நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது.ஹால்டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது </p><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு எண் 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ,தொகுதி பணிகள்பதவிகளுக்கான முதல்நிலை கொள்குறி வகை மற்றும் ஒளிக்குறி உணரி தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.</p><p>தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு OTR DASHBOARD மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கான ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p> என்று  தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கண்ணீருடன் அரசுக்கு ஆராய்ச்சி மாணவர் கேள்வி ? மாணவரின் கல்விக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/with-tears-research-student-questions-government-udayanidhi-stalin-condemns#comments</comments><guid isPermaLink="false">fb169d85-1316-448d-bd95-ff5d22e900dd</guid><pubDate>Thu, 17 Sep 2026 13:38:04 +0000</pubDate><atom:updated>2026-09-17T13:38:04.505Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Condemn,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png" width="1920"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/1mjxqx4n/TNPSC-4.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கண்ணீர் மல்க கேள்வி</h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijays-visit-to-england-has-proven-to-be-a-successful-one">அரசு </a>தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.</p><p>அதில் என்ன அடிமையா இரு படிக்காதன்னு சொல்லிடுங்கள் என்று வீடியோ வெளியிட்டு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசுக்கு கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்</p> <h2>கண்டனம் </h2><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், ஆதரவாக எதிர்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-brought-feudal-politics-to-common-people-udayanidhi-stalin">உதயநிதி  </a>ஸ்டாலின் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்</p><p>இது குறித்து தனது சமூகவலைத்தளபதிவில் கூறப்பட்டுள்ளதாவது </p><p>சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><p>தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி  தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.</p><h2>இடையூறு ஏற்படக்கூடாது</h2><p>மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.</p> <p>அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">ரீல்ஸ்</a> அரசு துணை நிற்க வேண்டும்.</p><p>என் இவ்வாறு தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார்</p> ]]></content:encoded></item><item><title>மதுரை எய்ம்சில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ல் செயல்படும்: மத்திய அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/centre-informs-madras-highcourt-for-outpatient-department-serviceswould-commence-at-aiims-madurai-from-january-2027</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/centre-informs-madras-highcourt-for-outpatient-department-serviceswould-commence-at-aiims-madurai-from-january-2027#comments</comments><guid isPermaLink="false">8e16b8f2-9ff3-4c40-ae59-d0fb35b2cdab</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:58:16 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:58:16.373Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Central govt,Chennai High court,சென்னை ஐகோர்ட்,மதுரை எய்ம்ஸ்,Madurai AIIMS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/w17wv2ij/aiims.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIIMS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/w17wv2ij/aiims.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p><p>மதுரை தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p>ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கடந்த 2024-ம் ஆண்டு மே 22-ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மொத்த திட்டப்பணிகளையும் 33 மாதங்களுக்குள், அதாவது 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>57 சதவீத பணி நிறைவு</h2><p>இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 31 நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணிகள் நிறைவு அடைந்துள்ளன. அங்கு புறநோயாளிகள் பிரிவு 2027, ஜனவரி 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பணிகள் விரைவாக முடிக்கப்படாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. ஆகவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.</p><p>இந்த மனு  தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 5 பேட்ச் மாணவர்களும் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் தங்கியிருந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் சொந்த வளாகத்திற்கு மாற்றப்பட்டு விட்டனர்.</p><h2>அடுத்த ஆண்டு செயல்படும்</h2><p>எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையான புறநோயாளிகள் பிரிவு 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 57 சதவீத பணி நிறைவு அடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது.</p><p>இவற்றை பதிவுசெய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம்: பெரியார் பிறந்த நாளில் முதலமைச்சர் விஜய் உறுதிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vows-to-build-social-justice-society-on-periyar-birthday#comments</comments><guid isPermaLink="false">6711655a-dc08-48c2-ad4e-7c3a570628bd</guid><pubDate>Thu, 17 Sep 2026 11:03:19 +0000</pubDate><atom:updated>2026-09-17T11:03:19.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>periyar,சமூக நீதி நாள்,Social Justice Day,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,பெரியார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/4n0ouj4a/Untitled-design-64.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Periyar Birth Anniversary Pledge]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/4n0ouj4a/Untitled-design-64.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியாரின் 147வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார்.</p><p>தமிழ்நாட்டில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பெரியாரின்</a> 147வது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   </p><p>சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்களுடன் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்தார். அப்போது,</p><p>”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.</p><p>சுயமரியாதையும், ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன்.</p><p>மானுடத்தின் மீது பற்றையும், மனிதபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்”.</p><p>இவ்வாறு முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையுடன் தங்கச்சங்கிலியை மறந்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-chain-lost-as-retired-officer-immerses-vinayagar-idol-in-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-chain-lost-as-retired-officer-immerses-vinayagar-idol-in-river#comments</comments><guid isPermaLink="false">2677daf4-b2f7-4a36-ba18-7fc120913db9</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:41:40 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:41:40.553Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Cuddalore,கடலூர்,Vinayagar Chaturthi,விநாயகர் சிலை,Uppanar River,Gold Chain Lost,தங்கச்சங்கிலி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7tlpfgqi/Uppanar-River" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Uppanar River ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/7tlpfgqi/Uppanar-River?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் அருகே விநாயகர் சிலையைக் கரைக்கும்போது, கவனக்குறைவாக சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 1½ பவுன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF">தங்கச்சங்கிலியையும் </a>சேர்த்து ஆற்றில் வீசிய ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>பின்னணி</strong></h2><p>நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி விழா </a>கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.</p><p>அந்த வகையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது 62) என்ற ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்துள்ளார்.</p><p> மேலும், அந்த விநாயகர் சிலைக்குத் தனக்குச் சொந்தமான 1½ பவுன் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்.</p><h2><strong>ஆற்றில் வீசப்பட்ட நகை</strong></h2><p>விநாயகர் சதுர்த்தியின் 3-வது நாளான நேற்று, வீட்டில் இருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ராமமூர்த்தி முடிவு செய்தார். இதற்காக நேற்று காலை 9.30 மணி அளவில் கடலூர் தேவனாம்பட்டினம் அருகில் உள்ள உப்பனாற்றுக்கு அவர் சென்றார்.</p><p>அங்கு உப்பனாற்றுப் பாலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து இறுதிப் பூஜைகளைச் செய்த அவர், பக்தி பரவசத்தில் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை எடுக்க மறந்தார். நகையுடன் சேர்த்தே விநாயகர் சிலையை அப்படியே தூக்கி ஆற்றில் வீசினார்.</p><h2><strong>8½ மணி நேரத் தீவிரத் தேடுதல்</strong></h2><p>சிலையைத் தண்ணீரில் வீசிய சில நிமிடங்களுக்குப் பிறகுதான், தங்கச்சங்கிலியைக் கழற்றாமல் சிலையோடு சேர்த்து ஆற்றில் வீசிவிட்டோமே என்ற அதிர்ச்சி உண்மை ராமமூர்த்திக்கு தெரியவந்தது. </p><p>இதனால் பதறிப்போன அவர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆற்றில் இறங்கி நகையைத் தேடத் தொடங்கினார்.</p><p>இதுகுறித்து <strong>கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கும்</strong> உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் ஆற்றில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p>காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மாலை 6.00 மணி வரை சுமார் 8½ மணி நேரம் நீடித்தது.</p><h2><strong>ஏமாற்றத்துடன் திரும்பிய அதிகாரி</strong></h2><p>ஆற்றின் நீரோட்டம் மற்றும் சேறு காரணமாக, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தேடியும் விநாயகர் சிலையோ அல்லது அதனுடன் சென்ற 15 பவுன் தங்கச்சங்கிலியோ கிடைக்கவில்லை.</p><p> தான் தவறுதலாக நகையைத் தொலைத்த இடத்தையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி, மாலை வரை நகை கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடனும் சோகத்துடனும் வீடு திரும்பினார்.</p><p>மறதி காரணமாக விநாயகர் சிலையுடன் 1½ பவுன் தங்க நகையை ஆற்றில் வீசிய சம்பவம் கடலூர் பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ், ரீல் விடுவதே மிகப்பெரிய சாதனை: தவெக ஆட்சியை சாடிய எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government#comments</comments><guid isPermaLink="false">aefa2caa-4d54-4225-9616-5876862da363</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:40:49 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:40:49.957Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/keugwy4k/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS, Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/keugwy4k/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய் அமைச்சர், செயலாளரை ஏன் அழைத்துச் செல்லவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.</strong></em></p><p>சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தொழில் முதலீட்டை ஈர்க்க சென்றிருந்தால் துறைசார்ந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றிருப்பார் விஜய்.</p><p>முதலீட்டை ஈர்க்கும் பயணமா, இன்பச்சுற்றுலா சென்றாரா என மக்கள் கேட்கும் நிலை உள்ளது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்துடன் லண்டனில் ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>மக்கள் பிரச்சனைக்கு சட்டப்பேரவையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு. அமைச்சர்களைக் கேட்டால் மின்வெட்டு இல்லை என கூறுகின்றனர்.</p><p>மின்வெட்டு இல்லை என்றால் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் ஏன்? மக்களின் தூக்கத்தைத் தொலைத்து விட்டது தவெக அரசு. நிர்வாகத் திறமையின்மையே மின்வெட்டுக்கு காரணம்.</p><h2>மின்வெட்டால் மக்கள் போராட்டம்</h2><p>நிர்வாகத் திறமை இல்லாததால் தவெக அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். மின்வெட்டால் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ளது அரசு. கடன் இருக்கும்போது புதிய தலைமைச் செயலகம் எதற்கு?</p><p>தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. </p><p>தவெக ஆட்சியில் அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை 25 சதவீதம் உயர்வு.</p><p>ரீல்ஸ், ரீல் விடுவதே தவெக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளை தவெக அரசு ஏமாற்றிவிட்டது</p><p>திமுக-அதிமுக இடையே கள்ள உறவு என்பது அபத்தம். தவெகவினருக்கு எதுவும் தெரியவில்லை.</p><h2>திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்</h2><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல், தேவையற்ற தேர்தல் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பொன்னேரி-மீஞ்சூர் பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்பு: தொண்டை வலி, சளி, இருமலால் அவதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/many-people-affected-by-fever-in-the-ponneri-minjur-area</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/many-people-affected-by-fever-in-the-ponneri-minjur-area#comments</comments><guid isPermaLink="false">7abde5fa-f119-43d5-a2ed-ff40593791d2</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:28:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:28:09.216Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>fever,பொன்னேரி,ponneri people,காய்ச்சல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/l99uexly/ponneri.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற காத்திருந்த பெண்கள்.]]></media:title><media:description type="html"><![CDATA[ மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற காத்திருந்த பெண்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/l99uexly/ponneri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொன்னேரி மருத்துவமனைக்கு தற்போது காய்ச்சல் பாதித்து அதிக நோயாளிகள் வருகின்றனர். தற்போது காணப்படும் தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.</strong></em> </p><h2><strong>ஏராளமானோர் சிகிச்சை</strong></h2><p>பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு தினமும் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.</p><p>இந்த நிலையில் கடந்த சில நாட்களாக <a href="https://www.maalaimalar.com/topic/காய்ச்சல்">காய்ச்சல்</a> பாதிப்பினால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள்  காய்ச்சலுக்காக வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலைவலி, சளி, இருமல், உடல்வலி அதிகம் உள்ளது.</p><h2><strong>உடல் முழுவதும் வலி</strong></h2><p>இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். பலர் இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தனியார் ஆஸ்பத்திரியிலும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ வார்டில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் நோயாளிகளுக்கு வழங்க வைக்கப்பட்டு உள்ளன.</p><p>இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சமீபத்தில் பெய்த மழைக்கு பின்னர் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலுடன் தொண்டை வலி, சளி, இருமல், தலைவலியும் வருகிறது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடல் முழுவதும் வலியும் ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிப்பிற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றனர்.</p><p>இது குறித்து பொன்னேரி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் கல்பனா கூறியதாவது:-</p><p>பொன்னேரி மருத்துவமனைக்கு தற்போது காய்ச்சல் பாதித்து அதிக நோயாளிகள் வருகின்றனர். தற்போது காணப்படும் தலைவலி, சளி, இருமல், காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சாதாரண வைரஸ் காய்ச்சல் தான். தொடர்ந்து 2 நாளைக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தனியாக மருந்து கடைகளில் மருந்து உட்கொள்வது தவறு. தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். சுடுநீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இருமும் போது கை குட்டையை பயன்படுத்த வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், சளி இருமல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறை- அமைச்சர் காந்திராஜன் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-gandhirajan-inspection-new-online-procurement-procedure-for-cooperative-societies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-gandhirajan-inspection-new-online-procurement-procedure-for-cooperative-societies#comments</comments><guid isPermaLink="false">9367d043-6462-43a5-a53f-eafe71ddb946</guid><pubDate>Thu, 17 Sep 2026 10:15:09 +0000</pubDate><atom:updated>2026-09-17T10:15:09.644Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்டுறவு,Cooperative,Minister Gandhirajan,அமைச்சர் காந்தி ராஜன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c7vrim7g/gandhirajan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் காந்திராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/c7vrim7g/gandhirajan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</strong></em></p><p>நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேவையான நுகர்வுப் பொருட்களை வெளிப்படைத்தன்மையுடன், தரமாகவும் நியாயமான விலையிலும் கொள்முதல் செய்வதற்காக புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்புதிய கொள்முதல் நடைமுறைகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர்காந்திராஜன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>இணையவழி கொள்முதல் முறையின் செயல் முறை, வழங்குநர் பதிவு, விலை நிர்ணயம், தரப் பரிசோதனை மற்றும் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இம்முறையை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்த தேவையான பல்வேறு அறிவுரைகளை அவர் அதிகாரிகளுக்கு வழங்கினார். </p><p>மாநிலம் முழுவதும் உற்பத்தியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு புதிய இணையவழி கொள்முதல் முறை, வழங்குநர் பதிவு மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பாக பல கட்ட பயிற்சிகள் வழங்கி, அதிக எண்ணிக்கையிலான வழங்குநர்களை இம்முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்கள் நியாயமான விலையில் எளிதாக கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.</p><p>இந்நிகழ்வில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கூடுதல் பதிவாளர்  மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சுதர்சன நாச்சியப்பன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- மாணிக்கம் தாகூர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-condolence-sudarsana-natchiappan-passed-away</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-condolence-sudarsana-natchiappan-passed-away#comments</comments><guid isPermaLink="false">e68f9092-97bb-4281-a70c-1a3e1429ff6d</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:58:06 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:58:06.203Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Sudarsana Natchiappan,சுதர்சன நாச்சியப்பன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/kptfw13q/manickam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/kptfw13q/manickam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களது திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.</strong></em></p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  </p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் அறங்காவலராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் இ.எம். <a href="https://www.maalaimalar.com/topic/சுதர்சன-நாச்சியப்பன்">சுதர்சன நாச்சியப்பன்</a> அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.</p><h2><strong>நன்மதிப்பு</strong></h2><p>தனது இளமை பருவத்தில் அன்னை இந்திரா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று 1969 இல் இளைஞர் காங்கிரசில் இணைந்து, காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார். தொடக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், பிறகு சிவகங்கை மக்களவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசின் அரசு நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். 2013 ஆண்டில் டாக்டர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக திறம்பட செயலாற்றி பல்வேறு நன்மதிப்புகளை பெற்றவர்.</p><p>பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க உரிமைக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளை வழங்கியவர். </p><p>டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்களது திடீர் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் மறைவையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று மாலை 4.00 மணியளவில் இரங்கல் கூட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான குலாம் அகமது மிர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள். நாளை மாலை 3 மணியளவில் சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை- சட்டப்படி எதிர்கொள்வோம்: ஆர்.எஸ்.பாரதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-speech-in-press-meet-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-speech-in-press-meet-in-chennai#comments</comments><guid isPermaLink="false">cba8889f-e1a4-4d33-938e-3b20384d586b</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:42:08 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:42:08.677Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,anbil mahesh,அன்பில் மகேஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mdvhy3p0/RSB.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rs bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/mdvhy3p0/RSB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.</strong></em></p><p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.</p><h2>அரசியல் காழ்ப்புணர்ச்சி</h2><p>இதுதொடர்பாக அன்பில் மகேஷ் கூறுகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் ஆக தவெக அரசு மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.</p><p>இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 6 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. </p><p>பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக தான் இந்த அரசு நடைபெற்று வருகிறது.</p><p>அதுமட்டுமல்ல, விலைவாசி கடந்த 4 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் சீரான மின் வினியோகம் இல்லை. பல ஊர்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. </p><h2>பிரச்சனைகளை திசைதிருப்பும் தவெக அரசு</h2><p>இதையெல்லாம் சரிசெய்ய முடியாத அரசு, பிரச்சனைகளை திசைதிருப்பும் போக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு என்கிற பெயரில் மடைமாற்றப் பார்க்கிறது.</p><p>தி.மு.க. வரலாற்றில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு ரெய்டுகளைச் சந்தித்து இருக்கிறோம். எதிலும் உண்மை இல்லாத காரணத்தினால் இதுவரை எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை.</p><p>த.வெ.க. ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது. இதனை எங்களது சட்டத்துறை ஆதாரத்துடன் சேகரித்து வருகிறது. </p><p>த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>வாட்ஸ்-அப் மூலம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் கைது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-supporter-arrested-near-coimbatore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-supporter-arrested-near-coimbatore#comments</comments><guid isPermaLink="false">49546bcd-3ae8-4d9b-a345-73bf78ea1c51</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:22:43 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:22:43.396Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,UP,youth arrested,IS militant,வாலிபர் கைது,ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/p5j9xmnf/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/p5j9xmnf/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வாட்ஸ்-அப்பில் குழுவை தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டிய ஆதரவாளர் கோவையில் கைது செய்யப்பட்டார்.</p><p>இந்தியாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். </p><h2>வாட்ஸ்-அப் குழு மூலம் மூளைச்சலவை</h2><p>சமீபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் வாட்ஸ்-அப் குழுவைத் தொடங்கி வெளிநாட்டில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ஆட்களை திரட்டியது தெரியவந்தது. அந்த அமைப்பின் சித்தாத்தங்களால் ஈர்க்கப்பட்ட அவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலமாக குண்டு தயாரிக்கும் வீடியோக்களை பகிர்ந்ததும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஹேக்கர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாளர்களாக மாற்றியதும் தெரியவந்தது.</p><p>இதையடுத்து அதில் தொடர்புடையவர்களை பிடிக்க தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி கடந்த 12-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஆசம்காத் என்ற இடத்தைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை அந்த மாநில தீவிரவாத தடுப்பு படை பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலில் உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பவரின் மகன் மக்சூத் அலி (வயது 19) என்ற வாலிபருக்கு இதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. </p> <p>மக்சூத் அலியை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூருவில் தங்கியிருந்து அங்குள்ள மனிதவள முகமை நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. உத்தரபிரதேச போலீசார் பெங்களூரு விரைந்து சென்றனர். விசாரித்தபோது மக்சூத் அலி அங்கு இல்லை. அவர் கோவையில் நடைபெறும் ஒரு கண்காட்சியில் பங்கேற்பதற்காக சக ஊழியர்களுடன் சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><h2>கோவையில் கைது</h2><p>இதையடுத்து உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை போலீசாரின் உதவியை நாடினர். போலீசார் தேடி வந்த மக்சூத் அலி, கோவை ஹோப்கல்லூரி அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் தங்கியிருப்பதை கோவை போலீசார் அறிந்தனர். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், கோவை போலீசாரும் இணைந்து அதிரடியாக அந்த ஓட்டலுக்கு சென்று மக்சூத் அலியை கைது செய்தனர். பெங்களூருக்கு புறப்படுவதற்காக அவர் தயார்நிலையில் இருந்துள்ளார். அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து விட்டனர்.  </p> <p>மக்சூத் அலியை தமிழக போலீசார், உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மக்சூத் அலி லக்னோ அழைத்துச் செல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் வாட்ஸ்-அப் குழு மூலம் பயங்கரவாத இயக்கத்தில் சேர இளைஞர்களை தூண்டியது மட்டுமல்லாமல் தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி ஆள் சேர்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-6-districts-imd-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-6-districts-imd-announced#comments</comments><guid isPermaLink="false">33d350c5-d6d7-4e80-bfd7-784098e1eecb</guid><pubDate>Thu, 17 Sep 2026 09:09:03 +0000</pubDate><atom:updated>2026-09-17T09:09:03.196Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/l1v8jpsf/rain1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/l1v8jpsf/rain1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>வானிலை ஆய்வு மையம்</h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.</p> <h2>6 மாவட்டங்களில் கன மழை</h2><p>தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>2 மாவட்டங்களில் கன மழை</h2><p>தமிழகத்தில் நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கு எச்சரிக்கை</h2><p>இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p> <p>நாளை அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இதர அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>“முதலமைச்சர் வந்துவிட்டார்… முதலீடுகள் எப்போது வரும்?”-  வெள்ளை அறிக்கை வெளியிட தினகரன் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-ask-question-to-tn-govt-for-cm-vijay-london-trip#comments</comments><guid isPermaLink="false">a167b81a-b666-42d2-9e00-4d70474ad970</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:32:21 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:32:21.001Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z3ecppma/ttvdhinakaran.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/z3ecppma/ttvdhinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>“மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் வந்துவிட்டார்… அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்று டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கேள்வி</strong></h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தின்போது ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் பெறப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் பயணிகள் விமானத்தில் மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார், முதலீடுகளை குவித்துக்கொண்டு வரப்போகிறார் என தவெகவினர் பரப்பிய ரீல்ஸ்களுக்கும், முதலமைச்சர் முன்னிலையில் முன்மொழியப்பட்ட முதலீடுகளுக்கும் இடையிலான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானதாக அமைந்திருக்கிறது.</p><p>முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சர் விஜய் அவர்களின் அரசுமுறைப் பயணத்தில், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், தொழில் ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் அதன் பொருளாதாரப் பயன்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டிய அரசு நிர்வாகமோ அதற்கு மாறாக மோட்டார் வாகனப் பந்தயத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்; ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் என செய்திகளை வெளியிட்டதன் மூலம், முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம் உண்மையிலேயே மக்களுக்கு பயனளிக்கக்கூடிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><h2><strong>பதிலளிக்க வேண்டிய கட்டாயம்</strong></h2><p>கடந்த 10-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவர்களின் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில், 14-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே முதலீட்டாளர்களைச் சந்தித்ததாகவும், முதலீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.</p><p>ஆறு நாட்கள் அரசுமுறைப் பயணத்தில் முதலீட்டாளர்களைச் சந்தித்த ஒருநாள் போக, மீதமுள்ள ஐந்து நாட்களில் முதலமைச்சர் யார் யாரைச் சந்தித்தார்? தொழில் முதலீட்டை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் உள்ளது.</p><p>அதோடு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Limited) எனும் பன்னாட்டு நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஒரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தையே தனது வெளிநாட்டுப் பயணத்தின் முக்கிய சாதனையாகக் காட்டுவது கேலிக்கூத்தாக உள்ளது.</p><p>மேலும், ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ.3,000 கோடி முதலீடு செய்ய விரும்புவதாகவும், அந்நிறுவனத்தின் பெயரைக்கூட குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு, அத்தகைய முதலீடு உண்மையில் தமிழகத்திற்கு வருமா அல்லது வராதா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.</p><h2><strong>முதலீடுகள் எப்போது வரும்?</strong></h2><p>பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பல்வேறு முக்கியமான திட்டங்களும் அரசு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படும் அளவிற்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தால் கிடைத்த பயன்கள்தான் என்ன? என்ற கேள்வியும் அனைவரின் மத்தியிலும் எழத்தொடங்கியுள்ளது.</p><p>தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களால் சந்தி சிரிக்கும் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்களின் தாராளப் புழக்கம், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம், கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள், அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிர்ப்பு, மாநிலம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என ஒட்டுமொத்த மாநிலமும், மக்களும் அசாதாரண சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து, எதைப் பற்றியும் கவலையில்லாமல், முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் லண்டனுக்கு சென்று ரீல்ஸ் கன்டென்ட்களைத் தேற்றி வந்திருகிறார் என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர்.</p><p>தவெக அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் ஒவ்வொரு முறையும் பழைய சம்பவங்களை திருத்தி பொய் பொய்யாக பேசி, தேவையில்லாத சர்ச்சைகளை ஏற்படுத்தி, சோதனை, ரெய்டு, கைது எனும் பெயரில் அதிகார அமைப்புகளை ஏவியும் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தவெக அரசு, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் ஏமாற்றத்தில் முடிந்ததைத் திசைதிருப்ப முயன்றால், அதற்கான எதிர்வினை மிகக் கடுமையாக இருக்கும்.</p><p>எனவே, ஆட்சிக்கு வந்த நாள் முதல் எதற்கெடுத்தாலும் “வெள்ளை அறிக்கை வெளியிடுவோம், வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்” எனக் கூறிவரும் தவெக அரசு, முதலமைச்சரின் இந்த அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தில் நாள் வாரியாக எந்தெந்த முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்தித்தார்? அதன் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன? எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகும்? இவை அனைத்தும் எத்தனை நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்? என்பது தொடர்பான விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தும் இந்த நேரத்தில், முதலமைச்சரிடம் நாங்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான்: “மக்கள் வரிப்பணத்தில் அரசு முறைப் பயணமாக சென்ற முதலமைச்சர் வந்துவிட்டார்… அவர் ஈர்த்த முதலீடுகள் எப்போது வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் இடைத்தேர்தல்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-by-election-collector-inspects-sensitive-polling-stations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-by-election-collector-inspects-sensitive-polling-stations#comments</comments><guid isPermaLink="false">f9277efe-bbb8-4b93-851a-e8eb0bbc9d43</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:23:18 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:23:18.749Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,Maduranthakam,Chengalpattu Collector,செங்கல்பட்டு கலெக்டர்,மதுராந்தகம் தொகுதி,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/efsoz5bw/collector.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ chengalpattu collector veerappan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/efsoz5bw/collector.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.</p><p>மதுராந்தகம்(தனி) சட்டமன்ற தொகுதி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.</p> <p>இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted">வேட்பு மனுக்கள்</a> பரிசீலனை நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. </p><p>இந்த நிலையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்து உள்ள 74, 75, 76, 77, 1, 2, 62, 63 ஆகிய வாக்குச்சாடி மையங்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்தார்.  அப்போது வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். </p> <p>தொடர்ந்து நெல்வாய் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் வீரப்பன் ஆய்வு செய்து அங்கு மாணவர்களுக்காக சமைக்கப்பட்டு இருந்த உணவினை சாப்பிட்டு பார்த்தார். மேலும் அங்குள்ள அரிசி, மற்றும் பருப்பு ஆகிய உணவு பொருள்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதன் பின்னர் மதுராந்தகம் ஏரி கால்வாயில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வரப்பு கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கலெக்டர் வீரப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய சூரை மீன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/giant-tuna-caught-near-rameswaram-sold-for-rs-22k</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/giant-tuna-caught-near-rameswaram-sold-for-rs-22k#comments</comments><guid isPermaLink="false">d0a1f5ae-c848-4c1a-9959-c428d1d454f3</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:05:42 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:05:42.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameswaram,kerala,fisherman,கேரளா,Tuna,சூரை மீன்,ராமேஸ்வரம்,பாம்பன் வடக்கு கடற்கரை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/orv6yzas/dzgfhgghtfgb.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tuna caught in fisherman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/orv6yzas/dzgfhgghtfgb.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் 112 கிலோ எடை கொண்ட சூரை மீன் சிக்கியது.</p><p>ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து 6 மீனவர்கள் ஒரு நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் வழக்கம்போல் வலையை வீசி மீன்பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்சத அளவு கொண்ட மீன் ஒன்று வலையில் சிக்கியது. மிகவும் சிரமப்பட்டு அந்த மீனைப் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்து பார்த்தபோது, அது 112 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட அரிய வகை சூரை மீன் என்பது தெரியவந்தது.</p><h2><strong>கேரளாவுக்கு அனுப்பி வைப்பு</strong></h2><p>கரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த பிரம்மாண்ட மீனைக் காண அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், அந்த சூரை மீனை உள்ளூர் வியாபாரி ஒருவர் ரூ.22,000 கொடுத்து வாங்கினார். பின்னர் அந்த மீன் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதே போன்று 106 கிலோ எடை கொண்ட பெரிய சூரை மீன் ஒன்று பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>டெங்கு காய்ச்சல் தடுப்பில் அலட்சியம் ஏன்?- தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-question-to-tn-govt-for-dengue-fever-prevent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-question-to-tn-govt-for-dengue-fever-prevent#comments</comments><guid isPermaLink="false">94dec147-db94-4194-ae2f-49e14527d6c0</guid><pubDate>Thu, 17 Sep 2026 08:01:01 +0000</pubDate><atom:updated>2026-09-17T08:01:01.567Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/tgnmtpwj/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/tgnmtpwj/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் என டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வேதனை</strong></h2><p>தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் <a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சலால்</a> பாதிக்கப்பட்டு, அதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.</p><p>டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே 9 பேரின் உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><h2><strong>இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்</strong></h2><p>காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு சுகாதாரத்துறைக்கு உண்டு என்பதை இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.</p><p>எனவே, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, டெங்குவால் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்தும் இந்நேரத்தில், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பு மனு ஏற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dharapuram-by-election-tvk-dmk-and-admk-candidates-nomination-papers-accepted#comments</comments><guid isPermaLink="false">514f34f4-5769-41c3-bf25-8b4191bcc2d8</guid><pubDate>Thu, 17 Sep 2026 07:00:07 +0000</pubDate><atom:updated>2026-09-17T07:00:07.436Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,by election,dharapuram,தாராபுரம்,tvk,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/zztcq8j1/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/zztcq8j1/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க., அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.</p><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெறுகிறது. </p><h2>5 முனைப்போட்டி </h2><p>இந்த 2 தொகுதிகளிலும் 5 முனைப்போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் களம் இறங்கி உள்ளனர். </p> <h2>மதுராந்தகம் தொகுதி</h2><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் வேட்பாளர் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். </p> <h2>தாராபுரம் தொகுதி</h2><p>தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளராக சத்திய பாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளராக பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார்கள்.</p> <h2>வேட்பு மனுக்கள் பரிசீலனை</h2><p>மதுராந்தகத்தில் 48 பேர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் சேர்த்து 99 பேர் போட்டியிடுவதற்கு மனு செய்து இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று நடைபெற்றது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.</p> <p>நாளை மறுநாள் (19-ந்தேதி) வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. </p><h2>தீவிர பிரசாரம்</h2><p>இதற்கிடையே 2 தொகுதிகளிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். </p> <h2>அதிமுக - தவெக போட்டி</h2><p>மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தற்போது த.வெ.க. வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கடந்த தேர்தலில் இவரை பின் தொடர்ந்து த.வெ.க. வேட்பாளரும் அதிக வாக்குகளை பெற்று இருந்தார். இந்த தொகுதியில் தி.மு.க. 3-வது இடத்தையே பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்த தொகுதியில் அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.</p> <h2>திமுக தீவிரம்</h2><p>தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்த தொகுதியில் த.வெ.க. 3-வது இடத்தையே பிடித்து இருந்தது. இதனால் அங்கு வெற்றி பெறுவதற்கு த.வெ.க. தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று விட வேண்டும் என்கிற முனைப்பில் அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. </p><p>இதற்கிடையே 2 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th"> தி.மு.க.வும்</a> காய் நகர்த்தி வருகிறது.</p> <h2>தலைவர்கள் பிரசாரம்</h2><p>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் தொகுதிகளுக்கு நேரில் சென்று தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் 2 தொகுதிகளிலும் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நாளை மறுநாள் தி.மு.க. முப்பெரும் விழா- துரைமுருகன் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-on-sep-19th#comments</comments><guid isPermaLink="false">16659a36-1aac-4050-a6e3-a1400de5fd42</guid><pubDate>Thu, 17 Sep 2026 06:32:25 +0000</pubDate><atom:updated>2026-09-17T06:32:25.643Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/duw1p6oj/DMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ திமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-17/duw1p6oj/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா, தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதால் முதலில் ஒத்திவைக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பின்படி, விழா 19.09.2026 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.</strong></em></p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">முப்பெரும் விழா</a> நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்திடல் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>ஆனால், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். </p><h2><strong>செப். 19-ல்</strong> </h2><p>இந்த நிலையில், தி.மு.க. முப்பெரும் விழா வருகிற சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், </p><p>கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 15.09.2026 அன்று நடைபெறவிருந்த தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததையொட்டி, தற்போது தி.மு.க. முப்பெரும் விழா வருகிற 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்" நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>