<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 29 Aug 2026 13:36:40 +0000</lastBuildDate><item><title>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc9d3b6e-8bdb-44c2-b768-5e8e3f754b09</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:36:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:36:30.435Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-</p><p>சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது. மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p>இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. இந்த ஆட்சியில் கடன்தான் அதிகரிக்கும். தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கம் என்றால் அது அதிமுகதான். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களுடைய பிரச்சினையை முதன்முதலாக கொண்டு செல்லும் கட்சி அதிமுக.</p><h2>கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும்</h2><p>எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட் ஆனது. இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியின் லட்சணம் இதுதான். கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டிற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம். </p><p>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை. அப்படி இருந்தால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தாளவாடியில் வாகனங்களை வழிமறித்து சாலையில் உலா வந்த ஒற்றை யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">1ffeecab-bef4-4938-85ba-7a485d5fffd4</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:05:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:05:43.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elephant,தாளவாடி,Thalavady,யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t3vhabvb/Elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t3vhabvb/Elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>சத்தியமங்கலம்</strong></h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.</p><p>சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.</p><h2><strong>வாகன ஓட்டிகள் அச்சம்</strong></h2><p>நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி சாலையில் வாகனங்களை வழிமறித்து கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் உலா வந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.</p><h2><strong>தாளவாடி</strong></h2><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகம் வசிக்கின்றன. தற்போது இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காட்டு யானைகள் சாலையில் உலா வருவதும் கரும்பு லாரிகளை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.</p><h2><strong>ஒற்றை காட்டு யானை</strong></h2><p>மேலும் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்களையும் வழி மறிப்பதும் வாகனங்களில் கரும்பு உள்ளதா என சோதனை செய்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில் தாளவாடி கும்டாபுரம் வனச்சாலையில் ஒற்றை காட்டு யானை கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் சாலையில் உலா வந்தது.</p><h2><strong>போக்குவரத்து பாதிப்பு</strong></h2><p>இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி நீண்ட தூரம் இயக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரம் உலா வந்த யானை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் செல்ல தொடங்கின. </p><h2><strong>வனப்பகுதி சாலையில்</strong></h2><p>தொடர்ச்சியாக கும்டாபுரம் வனப்பகுதி சாலையில் கரும்பு லாரிக்காக காத்திருக்கும் ஒற்றை யானையை அடர்ந்த வனப் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:30:48.318Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th">தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam">மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>* நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory">விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய்</a></p><p>* இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>* இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/gas-cylinder-subsidy-to-be-increased-by-rs-50-in-puducherry-cm-rangasamy-announces"> புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு</a></p><p>* புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>* பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai">இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</a></p><p>* இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர்.</p><p>* கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools">அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</a></p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a></p><p>* விளையாட்டு விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது.</p><p>* விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe">திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</a></p><p>* 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>* திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram">பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</a></p><p>* கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>* இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9">626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை</a></p><p>*2,500 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>*திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues">எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சினைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள்.</p><p>* குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</a></p><p>* எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>*  நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india">விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</a></p><p>* விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>* ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip">4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</a></p><p>* பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.</p><p>*உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026"> GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th#comments</comments><guid isPermaLink="false">819d25ab-d26b-4810-896e-0272414a56fc</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:28:27.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 02ந்தேதிகளில் வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>03-ந்தேதி வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>04-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 02-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam#comments</comments><guid isPermaLink="false">2dbe83cb-b9ea-45f1-ac59-a598445860a6</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:08:52.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,மாணவி தற்கொலை,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. </p><p>மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர்.</p><h2><strong>எப்போது முடிவுக்கு வரும்?</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட்</a> தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது.</p><p>நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும் ?</p><p>நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் நரேந்திர மோடி அரசின் கல் நெஞ்சமும், பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory#comments</comments><guid isPermaLink="false">4e5b9e79-21f9-42d7-b034-7dd8783bacf0</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:55:35 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:55:35.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/தேசிய-விளையாட்டு-தினம்">தேசிய விளையாட்டு தினம்</a> (National Sports Day) கொண்டாடப்படுகிறது. </p><p>அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">விளையாட்டு வீரர்கள்</a>, வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.  </p><p>சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் ! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.<br> <br>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு… <a href="https://t.co/2PDvmOIngQ">pic.twitter.com/2PDvmOIngQ</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2093612370937663954?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு: தான் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth#comments</comments><guid isPermaLink="false">703e276b-5b7e-4a2a-ab46-6fb62c248e83</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:44:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:44:55.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பையா எம்.எல்.ஏ.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா நேற்று சட்டசபையில் பேசும்போது, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech">அதிமுக </a>உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்த நிலையில் கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருப்பையா எம்.எல்.ஏ. கூறியதாவது:-</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அவர்கள் தவறான வழிக்கு போகக் கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு பில்டிங்கிற்குள் அடைக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மிக்கது. வரலாறு மிக்கது. தொன்மை வாய்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நம்முடைய சமூகம் கொண்டு வந்தது என்பது தெரியும்.</p><p>ஜல்லிக்கட்டு மறையாமல், மங்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நானும் ஒருவன். 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடைபட்டது. நான் சட்டமன்ற உறுப்பினரான பின், அம்மாவிடம் கடிதம் கொடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி 84 நிபந்தனைகளுடன் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்தான். அப்போது இருந்து மாவட்ட ஆட்சியர் உதவி புரிந்தார்.</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்தனும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் சொன்னனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது.</p><h2>84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்</h2><p>நான் சொன்னது அம்மா அரசு நடக்கும்போது. 4 வருடம் தடைபட்டிருக்கும்போது 84 நிபந்தனைகளுடன் நடத்தியது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான்தான். தடை போடுவதற்கு என்ன இருக்கு? தடையே கிடையாது. ஜல்லிக்கட்டு நடைபெறும். </p><p>இளைஞர்கள் அவர்களுடைய வீரத்தை சந்தோசமான பறைசாற்றுவார்கள். சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நான் எம்.எல்.ஏ.-வாக இருந்தபோது சர்க்கரை ஆலை நன்றாக செயல்பட்டது. அங்கு (ஜல்லிக்கட்டு அரங்கம்) செலவழிக்கப்பட்ட பணம் சர்க்கரை ஆலைக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், 5 மாவட்ட விவசாயிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், மில் நன்றாக ஓடியிருக்கும். அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>கலைஞர் நூற்றாண்டு விழா என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை செய்தது. அது மேச்சல் தரிசு நிலம். இந்த பகுதியில் எந்தவொரு கல்லூரியும் கிடையாது. 90 ஏக்கர் நிலத்தில் கால்நடை பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நான். அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலும் அளிக்கப்பட்டது.</p><p>அந்த மேச்சல் நிலத்தை சுற்றுலாத் துறைக்கு கொடுத்து, சுற்றுலாத்துறைக்கு நிலம் இல்லாமல் உள்ளது. சுற்றுலாத்துறை வேறொரு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும்</h2><p>இளைஞர்களை ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது. இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும். ஒரு மாடு வந்தது என்றால் திமிலை இழுத்து பிடிக்க வேண்டும். ஸ்பெயின் போன்ற ஐரோப்பா நாடுகள் மாதிரி ஒரு கட்டடத்திற்குள் விட்டு அதை ஒருவர் பிடிக்கிற மாதிரி ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. இது நம்முடைய பாரம்பரியம். கலாசாரம். நம் முன்னோர்கள் வளர்த்து வைத்துள்ள பாரம்பரியம், பண்பாடு, தமிழர்களின் உணர்வு. அதை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>தவெக-வின் தலைவர் இளைஞர்களை நம்பி இருக்கிறார். அவர்களை கொச்சை படுத்துவோமா?. அவர்களை சுதந்திரமாக விடுங்கள் என்று சொல்கிறோம்.</p><p>இவ்வாறு சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொன்று பிரியாணி அண்டாவில் சமைத்தார்களா?- கைதான தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple#comments</comments><guid isPermaLink="false">973b3ff0-ae63-42c4-899f-9d01849323d1</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:14:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:14:51.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பிரியாணி அண்டா,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.</strong></em> </p><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>ஆக்ராவில் போலீசார் அதனை கண்டுபிடித்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. </p><h2><strong>கூடுவாஞ்சேரியில்</strong></h2><p>இதை தொடர்ந்து ஆக்ரா போலீசார் சென்னைக்கு வந்து அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation">சென்னை சென்ட்ரல் ரெயில்</a> நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து  நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை கூடுவாஞ்சேரியில் வைத்து வடமாநில வாலிபரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. </p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று விசாரித்தார்கள்.</p><p>கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் பெண்ணின் உடல் பாகங்களை பெரிய பிரியாணி அண்டாவில் போட்டு வாலிபரும், அவருடன் இருந்த பெண்ணும் சமைத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><p>இதையடுத்து பெண்ணை கொலை செய்த மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடினார்கள். ஆனால் இருவரும் சென்னையில் இருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><p>இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அசாம் மற்றும் ஒடிசாவுக்கு சென்ற 2 தனிப்படை போலீசார் அங்கு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில் கொலையாளியான மொனிருதின் லஸ்கர் மணிப்பூர் மாநிலத்திற்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கைது</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மொனிருதின் லஸ்கரை கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அசாம் மாநிலத்தில் கிருஷ்ணாபூரில் வசித்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் முதலில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மணிப்பூருக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வைத்து மொனிருதின் லஸ்கரை பிடித்துள்ளனர். </p><p>மொனிருதின் லஸ்கர் கைதான நிலையில் அவரது மனைவி பகவதி மாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனால் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்கள்  மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி பதுங்கி இருந்த பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர். </p><p>இதை தொடர்ந்து கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. </p><p>ஒரே இடத்தில் வேலை செய்த மொனிரு தின் லஸ்கர்- நிஷா இடையே பழக்கம் ஏற்பட்டு நிஷா கர்ப்பம் ஆகி உள்ளார். மொனிரு தின் லஸ்கரிடம் திருமணம் செய்யுமாறு நிஷா கூறிய போது தனக்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார். </p><p>இதனால் தனது மனைவியுடன் மொனிரு தின் லஸ்கர் நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொனிரு தின் லஸ்கர் தனது இளம் மனைவியுடன் சென்று நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்குவாதமாக மாறி அடித்து கொன்றனர். நிஷாவின் தலையை வெட்டிய தம்பதி ரத்தம் வெளியில் செல்லாதவாறு பிரியாணி அண்டாவில் பிடித்துள்ளனர். </p><p>இதனையடுத்து உடலில் உள்ள சதையை வெட்டி பிரியாணி அண்டாவில் வைத்து எலும்பை மட்டும் சூட்கேசில் அடைத்து ஆக்ரா ரெயிலில் நிலையத்தில் சூட்கேசை விட்டுவிட்டு இருவரும் மணிப்பூர் தப்பிய நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-admk-ministers-to-pay-tribute-on-1st</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-admk-ministers-to-pay-tribute-on-1st#comments</comments><guid isPermaLink="false">5e0d13ae-5c9b-46ea-bc8a-941c06e6b997</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:50:12 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:50:12.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,பூலித்தேவன் பிறந்தநாள்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g5gsr17j/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g5gsr17j/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்துவார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <p>மாமன்னர் பூலித்தேவன் 311-வது பிறந்தநாளான வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு, `தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும் செவல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, பாஸ்கரன், ராஜலெட்சுமி, சி.த. செல்லப்பாண்டியன், சண்முகநாதன், இன்பதுரை எம்.பி., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3df9cd1b-b985-4f92-8996-a34f0d55e92d</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:23:39.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TN fishermen,தமிழக மீனவர்கள்,இலங்கை சிறை,SriLanka Jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். </p> <h2>தமிழக மீனவர்கள்</h2><p>ஒரு மாதத்திற்குப் பின்பு, இலங்கை நீதிமன்றம் அவர்களில் 3 மீனவர்களை, விடுதலை செய்தது. ஒரு மீனவர் 2-வது முறையாக, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்ய ப்பட்டிருந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>இந்த நிலையில் அந்த மீனவர் கடந்த 17-ந் தேதி விடுதலை செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மே மாதம் 10-ந் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். </p> <h2>சென்னை வந்தனர்</h2><p>அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும் கைது</a> செய்தனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் அறிவுறுத்தறையின் பெயரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>அதன் பின்பு கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விமானம் மூலம், 7 மீனவர்களையும், நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் 7 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools#comments</comments><guid isPermaLink="false">fd6ee79d-a9c7-4780-8540-f11f5350f467</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:49:29.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,govt schools,அரசு பள்ளிகள்,காலை உணவு திட்டம்,Morning Breakfast</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</strong></em> </p><p>தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் அடுத்தடுத்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.</p><h2><strong>விரிவாக்கம்</strong></h2><p>இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டத்தை</a> அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாரத்தின் 5 நாட்களும் மாணவ, மாணவிகளுக்கு ரவா உப்புமா, ரவா கிச்சடி, வெண் பொங்கல், சேமியா கிச்சடி, ரவா கேசரி மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு விரிவாக்கம் செய்தது. </p><p>இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">காலை உணவு திட்டத்தை</a> ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.268 கோடி நிதி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. </p><p>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. எனினும் விழா நடைபெறுவதாக கூறப்படும் கே.வி.எஸ். பள்ளியில் தற்போது இருந்தே முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் வரும் வழித்தடங்கள், விழா நடைபெறும் இடம், மாணவ, மாணவிகளை சந்திப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.</p><p>விருதுநகர் கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) பள்ளியில் ஒருபுறம் இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரின் வருகை குறித்து தற்போது வரை அரசு சார்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes#comments</comments><guid isPermaLink="false">5b71f544-0823-4dbc-b365-d74c5cdeafdf</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:26:05.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - National Sports Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases">ஆதவ் அர்ஜுனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p>ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.</p> <p>தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.</p><p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்- 3 தனிப்படையினர் தீவிர விசாரணை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-woman-murder-case-youth-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-woman-murder-case-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">7d6ef0c1-eb26-4794-a3bf-d59449f0d407</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:07:53.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பெண் கொலை,woman murder,ஆசிட் வீச்சு,Acid throw,Andhra Woman Murder,ஆந்திர பெண் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/0us28myg/aruna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருணா]]></media:title><media:description type="html"><![CDATA[ அருணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/0us28myg/aruna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</strong></em> </p><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார். </p><h2><strong>பெண் கொடூர  கொலை</strong></h2><p>பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகெ எவயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் திராவகம் ஊற்றி சிதைக்கப்பட்டிருந்தது. </p><p>தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன. </p><p>இதனால் இது திருட்டுக்காக நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> அல்ல என்பது தெரியவந்தது. மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளத்தை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர். </p><h2><strong>3 தனிப்படைகள்</strong></h2><p>அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam">கொலையாளிகளை</a> பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. வினோத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு செல்போன் கிடந்தது. அதில் பதிவான அழைப்பு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு, அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அருணா திருமண வீட்டிலிருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரைச் சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர்.</p><h2><strong>வாலிபர் சிக்கினார்</strong></h2><p>அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.</p><p>அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.</p> <p>இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதிவான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe#comments</comments><guid isPermaLink="false">7f565151-e836-4f82-a3a7-913a082b07e4</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:59:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,தமிழர்கள்,Tamil people,TN Government,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <em><strong>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p> <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing">நேபாளத்தில்</a> கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானார் மாயமாகி உள்ளனர்.</p><p>நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடரில் சிக்கியவர்களை தேடி மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.</p> <h2>சுற்றுலா சென்ற தமிழர்கள்</h2><p>நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely">தமிழர்களும்</a> இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.</p> <h2>21 தமிழர்கள் மீட்பு</h2><p>21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.</p><p>இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</p> <h2> 39 தமிழர்கள் பாதுகாப்பு</h2><p>திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.</p><p>நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues#comments</comments><guid isPermaLink="false">04b342cc-ee31-4e82-8d0b-7ee881f16f91</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:04:19.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Drugs,போதை பொருள்,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.</strong></em></p><p>மதுரை காந்தி மியூசியத்தில்  தனியார் பள்ளி சார்பில் இன்று போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-நிர்மல்குமார்">அமைச்சர் நிர்மல்குமார்</a> கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>உரிமை உள்ளது</strong></h2><p>போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட எல்லா வடிவிலும் கிடைக்கிறது. இதுகுறித்து தெரிந்தால் மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது உங்கள் அண்ணனோட அரசு. நீங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு தான் இது. 100 சதவீத உரிமை உங்களுக்கு உள்ளது.</p><p>மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது இடையூறு வந்தாலோ, போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள். உங்களுக்கு வேலை பார்க்க தான் த.வெ.க. அரசு உள்ளது. போதை பொருள் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் எடுத்து கூற வேண்டும். காவல்துறை முன்புபோல இல்லை.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோபிசன், மதார் பதூருதின் என்ற முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  </p><h2><strong>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம்</strong></h2><p>அண்மையில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாவில் முதலாவதாக பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் முதலாவதாக பள்ளியின் பாடலும், அதனை தொடர்ந்து கடவுள் வாழ்த்தும் பாடப்பட்டது. 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நடைமுறை விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram#comments</comments><guid isPermaLink="false">779dc20b-15e6-46bb-a636-7938597d6106</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:02:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:02:33.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>murdered,விசிக,vck,Pallavaram,பல்லாவரம்,விசிக நிர்வாகி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3ddziton/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3ddziton/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பல்லாவரம் அருகே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</strong></em></p><p>பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் நேற்று மாலை விசிக நிர்வாகி அன்பழகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அன்பழகன் கொலை வழக்கில் ஈடுபட்ட 7 முக்கிய கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்</p><p>தொழில் போட்டி காரணமாக விசிக நிர்வாகி அன்பழகனை அவரது நண்பர் வீனஸ் என்பவர் தலைமையிலான கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் </p>  <p>கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்த அன்பழகன் மற்றும் வீனஸ் இருவரும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.</p> <p>இதனை அடுத்து குறுகிய காலத்தில் அன்பழகனின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p>ஒரு கட்டத்தில் வீனஸ் செய்து வரும் தொழில்களுக்கு அன்பழகன் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவரை கொலை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் நேற்றைய தினத்தில் வீனஸ் தலைமையிலான கூலிப்படையினர் அன்பழகனை திருநீர்மலையில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் வைத்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>தற்போது நாகல்கேணி பகுதியை சேர்ந்த வீனஸ், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், காஞ்சிபுரத்தை சேர்ந்த விமல், நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த முகேஷ் கண்ணா, குரோம்பேடை பகுதியை சேர்ந்த ஹரிஹரன், பல்லாவரம் விஷ்னுகுமார், மண்ணிவாக்கம் கார்த்திகேயன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale#comments</comments><guid isPermaLink="false">33881fcd-38d3-430f-8930-cb3c56fc5034</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:52:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:52:05.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் செங்கோட்டையன்</a> கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஒவ்வொரு துறையாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.</p><h2><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தும், சென்னை புழல் சிறைக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை குடிநீர் திட்டப்பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நேபாள துயர சம்பவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் கள நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சட்டசபையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india#comments</comments><guid isPermaLink="false">e4871e37-a5e7-41cf-9246-a3f248e1fbe5</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:41:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:41:55.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><h2>மேஜர் தியான் சந்த்</h2><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <h2>துரோணாச்சார்யா விருது</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வில் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல்நலத்தை வளர்க்கும் ஒரு அத்தியாவசியக் கலை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.</p> <p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு வாழ்வியலாக மாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்</p> <p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்!</p><p>விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p> <p>பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கூடலூர் அருகே புலியை பிடிக்கும் பணியில் களமிறங்கிய கும்கி யானைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kumki-elephants-deployed-to-capture-a-tiger-near-gudalur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kumki-elephants-deployed-to-capture-a-tiger-near-gudalur#comments</comments><guid isPermaLink="false">0894195c-c831-4a25-ab95-88eeeab9123b</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:08:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:08:24.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,புலி,tiger,kumki elephants,கும்கி யானைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/owgp040s/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/owgp040s/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு புலி ஒரே மாதத்தில் அந்த பகுதியை சேர்ந்த 2 பேரை அடித்து கொன்றது. இதனால் அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.</p> <h2>கும்கி யானைகள்</h2><p>ஓவேலி மலைப்பகுதியில் அடர்ந்த வனம், தேயிலை-காப்பி தோட்டங்கள் மற்றும் புதர்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் அந்த புலியின் இருப்பிடத்தை நேரடியாக கண்டறிவதில் சவால்கள் ஏற்பட்டு உள்ளன.</p><p>இதையடுத்து புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் தேடுதல் பணியை மேலும் தீவிரப்படுத்த கும்கி யானைகளை பயன்படுத்துவது என்று வனத்துறை முடிவு செய்தது.</p> <p>அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அடர்ந்த புதர்கள் மற்றும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத வனப்பகுதிகளிலும் கும்கிகள் உதவியுடன் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.</p><h2>வனத்துறை எச்சரிக்கை</h2><p>இதற்கிடையே ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையின்றி தனியாக வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். </p> <p>புலியின் நடமாட்டம் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். புலியை நேரில் பார்க்க நேரிட்டால் அருகே செல்லவோ, புகைப்படம்- வீடியோ எடுக்க பின்தொடரவோ கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டை இழிவுப்படுத்தி பேசுவதா?- தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech#comments</comments><guid isPermaLink="false">5098c24c-62db-49a4-8add-42a34cfd63d4</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:49:00 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:49:00.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/m1e0rd4a/ADMKOffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக தெரிவித்துள்ளது.</strong></em> </p><p><a href="http://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.தி.மு.க. </a>தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><h2><strong>சந்தேகம்</strong></h2><p>சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?</p><p>மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?</p><h2><strong>மன்னிப்பு கேட்க வேண்டும்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize">ஜல்லிக்கட்டிற்கு</a> தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.</p> <p>தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!</p><p>(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும்)</p><p>இவ்வாறு கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழரின் பாரம்பரியமான <a href="https://x.com/hashtag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#ஜல்லிக்கட்டு</a> விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.<br><br>ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி…</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2093554912043085899?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஏர்டெல்லின் புதிய சிம்கார்டு பெற அதிக கட்டணம் வசூல்… ரூ.40,000 அபராதம் விதித்த மாவட்ட நுகர்வோர் ஆணையம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-charges-for-a-new-airtel-sim-card-district-consumer-commission-imposes-a-fine-of-rs-40000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-charges-for-a-new-airtel-sim-card-district-consumer-commission-imposes-a-fine-of-rs-40000#comments</comments><guid isPermaLink="false">92cd87dc-3b5d-4db2-b47b-6ff020c45e79</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:23:56 +0000</pubDate><atom:updated>2026-08-29T04:23:56.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>airtel,Simcard,ஏர்டெல்,சிம்கார்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g45eyvr0/simcard.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சிம்கார்டு]]></media:title><media:description type="html"><![CDATA[ சிம்கார்டு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g45eyvr0/simcard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொலைந்து போன சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம்கார்டு பெற ஏர்டெல் நிறுவனத்தின் முகவர் அதிக கட்டணம் வசூல் செய்த புகாரை அடுத்து பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><h2><strong>அதிக கட்டணம் வசூல்</strong></h2><p>செங்கல்பட்டில் வசிக்கும் சரிதா என்பவர் கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவறவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 22.09.2025 அன்று செங்கல்பட்டில் உள்ள மணி மார்க்கெட்டிங் என்ற ஏர்டெல் நிறுவன ஷோரூமில் புதிய சிம்கார்டு கேட்டு வாய்மொழியாக விண்ணப்பித்துள்ளார். அப்போது தொலைந்து போன சிம் கார்டு அவரின் தந்தை காந்தி என்பவரின் பெயரில் இருப்பதாகவும், அதை மாற்றிக் கொடுக்க 650 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அவரிடம் தெரிவித்துள்ளனர். </p><p>இதையடுத்து அவர் தன்னுடைய கணவரின் வங்கிக்கணக்கில் இருந்து 650 ரூபாயை ஜிபே மூலம் செலுத்தியுள்ளார். புதிய <a href="https://www.maalaimalar.com/topic/ஏர்டெல்">சிம்கார்டு</a> பெற அதிக கட்டணம் வசூல் செய்வதாக அப்போது அவர் முறையிட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான பதில் வழங்கப்படாமலும் அலட்சியமாகவும் அந்த ஷோரூமின் உரிமையாளர் பதில் கூறியுள்ளார். மேலும் ரசீதை தனக்கு வழங்குமாறு கேட்டுள்ளார். அதன் பின்பு 17 நாட்கள் அலைகழித்து கட்டணம் செலுத்தியதற்கான ரசீது அவருக்கு வழங்கப்பட்டது.</p><h2><strong>வழக்கு</strong></h2><p>இதைத் தொடர்ந்து புதிய சிம் கார்டு கட்டண விவரம் கேட்டு ஏர்டெல் நிறுவனத்திற்கு அவரின் கணவரும் வழக்கறிஞருமான ஜெயவேல் மெயில் அனுப்பியுள்ளார். டூப்ளிகெட் சிம் கார்டு பெற 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது எனவும் பெயர் மாற்றத்திற்கு எவ்வித கட்டணமும் கிடையாது எனவும் ஏர்டெல் நிறுவனம் அவருக்கு பதில் அளித்தது. இதைத் தொடர்ந்து ஏர்டெல் முகவரான மணி மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் மீது சரிதா வழக்கு தொடர்ந்தார். </p><p>வழக்கை விசாரணை செய்த செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 27.08.2026 அன்று சரிதாவிற்கு இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.  அதன்படி வாடிக்கையாளரிடம் அதிகப்படியாக வசூல் செய்யப்பட்ட ரூ.600 ரூபாயை 22.09.2025 அன்றைய தேதியிலிருந்து 24% வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். </p><p>வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது, சேவைக் குறைபாடு மற்றும் நேரமிழப்பை ஏற்படுத்தியதற்கு நிவாரணமாக ரூ.25,000, வழக்கு செலவிற்காக 15,000 என 40,000 ரூபாயை வாடிக்கையாளருக்கு அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் காசிபாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/108-foot-tall-anjaneyar-statue-being-prepared-for-its-inauguration-in-rameswaram#comments</comments><guid isPermaLink="false">9c0a7621-8966-4984-bd45-bcaeec3c080c</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:47:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:47:51.429Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameshwaram temple,ராமேசுவரம் கோவில்,anjaneyar statue,ஆஞ்சநேயர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:title><media:description type="html"><![CDATA[ 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/9oqg4c4w/anjaneyar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ராமேசுவரத்தில் 108 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.</strong></em></p><h2><strong>108 அடி உயர சிலை</strong></h2><p>ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உருவான வரலாற்றில் ஆஞ்சநேயர் மிக முக்கிய இடம்பெறுகிறார். எனவே ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் வடமாநில அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.</p><p>இந்த பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பாதத்தில் இருந்து தலை வரையிலும் ஆஞ்சநேயர் சிலை முழுவதும் கான்கிரீட் மூலம் கட்டி சிமெண்டு பூச்சு முடிவடைந்துவிட்டன. தற்போது முகத்தை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு காற்நால் சிலை சேதமடைவதை தடுக்கும் வகையல் ரசாயனம் கலந்த சிமெண்டு பூசி, அதற்கான வர்ணங்கள் மூலம் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.</p><h2><strong>பிரதமர் திறந்து வைக்கிறார்</strong></h2><p>இந்த 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இலங்கையை நோக்கி பார்ப்பதை போன்று கட்டப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த சிலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி ராமேசுவரம் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.</p><p>அதன்பின்பு ராமேசுவரம் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் குஜராத், சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தவெக MLA கருப்பையா மன்னிப்புக் கோர வேண்டும்- சீமான் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-urges-tvk-mla-karuppaiya-must-apologize#comments</comments><guid isPermaLink="false">bb5de6d4-c26c-429e-83df-3e6f320e30f7</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:35:11.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தவெக,Naam Thamizhar katchi,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு,சீமான்,நாம் தமிழர் கட்சி,தவெக எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சீமான்]]></media:title><media:description type="html"><![CDATA[ சீமான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/q74z56g3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/topic/சீமான்">சீமான்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.</p><h2><strong>மோசமான பார்வை</strong></h2><p>அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்; அதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை முற்றிலும் நியாயமானது. உழவர்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?</p><p>தமிழ்நாட்டு தெருவுக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?</p><p>வாடிவாசலில் நின்று காளையை எதிர்கொள்வது பண்பாட்டு சீரழிவு? ஆனால், அரசு விற்கும் மது குடித்து உடலையும், குடும்பத்தையும், பொருளாதாரத்தையும் இழப்பது இளைஞர்களின் முன்னேற்றமா?</p><p>இளைஞர்களை மதுவை நோக்கி அழைத்துச் செல்லும் சாராயக்கடைகளை மூடச் சொல்ல உங்களுக்குத் துணிவு இருக்கிறதா? இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், உழவோடும் இணைக்கும் ஏறுதழுவுதலை மட்டும், சீரழிவு என்று சொல்லும் துணிவு எங்கிருந்து  உங்களுக்கு வந்தது?</p><p>குடிக்கிற இளைஞன் சீரழியவில்லை; காளையை வளர்க்கிற இளைஞன் சீரழிகிறானா? மதுப்புட்டியைத் தூக்குகிற கை நல்ல கை; காளையின் திமிலைத் தழுவுகிற கை கெட்ட கையா? சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது?</p><p><a href="https://www.maalaimalar.com/topic/ஜல்லிக்கட்டு">ஜல்லிக்கட்டு</a> என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழர்களின் வேளாண்மையோடும், கால்நடை வளர்ப்போடும், நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்போடும், கிராமியப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு. ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக ஓர் உழவர் குடும்பம் ஆண்டுக்கணக்கில் அதனைத் தனது குடும்ப உறுப்பினரைப் போல வளர்க்கிறது. அதன் உணவு, உடல்நலம், பராமரிப்பு என அத்தனையிலும் அக்கறை செலுத்துகிறது. "ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால், திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்சொல்லால் தரப்பட்டவள்..."-  ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது கலிப்பாடல், </p><h2><strong>வேதனையளிக்கிறது</strong></h2><p>இதை எல்லாம் அறியாமல், அந்த வாழ்வியலைப் புரிந்துகொள்ளாமல், அந்த மண்ணின் வரலாற்றை உணராமல், “இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா? அதுவும் உலகமே அறிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தனது தொகுதிக்குள் கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்தே இப்படியொரு கருத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது  மெரினா கடற்கரையிலும் தமிழ்நாட்டின் வீதிகளிலும் உலக நாடுகளின் தெருக்களிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டது எதற்காக?</p><p>“எங்கள் மாடு! எங்கள் மண்! எங்கள் உரிமை! எங்கள் ஜல்லிக்கட்டு!” என்று தங்களது இனத்தின் அடையாளத்தைக் காக்கத்தானே போராடினார்கள்?</p><p>அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இளைஞர் எழுச்சியையும் “சீரழிவு” என்று சொல்வீர்களா?</p><p>ஒரு மக்கள் நலத்திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதியை மற்றொரு திட்டத்திற்கு பயன்படுத்துவதை எதிரியாக நிறுத்துவது சரியான அரசியல் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு நிதி கொடுத்ததால் மருத்துவமனை வேண்டாமா? மருத்துவமனை கட்டியதால் சாலை போடக்கூடாதா? என்ன மாதிரியான கருத்துருவாக்கம் இது?</p><p>தமிழர்களின் அடையாளத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டை இழிவுபடுத்திவிட்டு தமிழர்களுக்கு நல்லாட்சி தர முடியாது.</p><p>ஜல்லிக்கட்டு தமிழர்களின் விளையாட்டு மட்டுமல்ல; அது எமது மண்ணின் அடையாளம்! அது வெறும் காளையும் மனிதனும் மோதும் களம் அல்ல; மனிதனுக்கும் மாட்டிற்குமான ஆயிரமாண்டுப் பந்தத்தின் பண்பாட்டு வெளிப்பாடு!</p><p>எனவே, தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான ஏறுதழுவுதலை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என்று சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சீமான் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death#comments</comments><guid isPermaLink="false">27416285-57d3-4b96-b0a3-0d42b1dc72b5</guid><pubDate>Sat, 29 Aug 2026 03:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:30:31.161Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students death,accident,விபத்து,மாணவர்கள் உயிரிழப்பு,madurantakam car accident,மதுராந்தகம் கார் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Car accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/ausl8hsf/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் அருகே காரின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகினர்.</strong></em></p> <p>சென்னையில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். </p> <p>கார் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்புற டயர் திடீரென வெடித்து சிதறியது.</p><p>இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>இந்த விபத்தில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> <p>தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: பிரேமலதா வாழ்த்து- நன்றி தெரிவித்தார் சபாநாயகர் - 28 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-august-2026#comments</comments><guid isPermaLink="false">9bc913c5-ed9d-43ae-847f-c4bc775f64fc</guid><pubDate>Fri, 28 Aug 2026 04:01:44 +0000</pubDate><atom:updated>2026-08-29T03:09:13.879Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/85q6eeqo/prematha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை.</p><p>தொடங்கியது சட்டசபை- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரை</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்</p><p>த.வெ.க. அரசு அமைந்தது முதல் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>துவரம் பருப்பு, அரிசி, சர்க்கரை, எண்ணெய் விலைவாசி உயர்வால மக்கள் அவதி- உதயநிதி ஸ்டாலின்</p><p>வறட்சி காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து வந்த அரிசியின் வரத்தும் குறைந்ததால் விலை உயர்வு- எடப்பாடி பழனிசாமி</p><p>அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>பண்டிகை காலங்களில் மளிகை பொருள் தொகுப்பு தருவதை போல் ரேஷனில் தற்போதும் வழங்க வேண்டும்- தாரகை கத்பட்</p><p>பண்டிகை காலம் வருவதால் அத்தியாவசிய பொருட்களும் ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும்- சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>எரிபொருள் விலை உயரும் நேரத்தில் மளிகை பொருட்கள் பதுக்கல், அதனால் விலை உயர்வு சாதாரணம்- சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>ஈரான் போர், எரிபொருள் விலை உயர்வால் தான் விலைவாசி பொருட்களும் விலை உயர்ந்துள்ளது- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>வெங்காயம் உள்ளிட்ட 41 பொருட்களுக்கான விலையை தினமும் கவனித்து வருகிறோம்- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>உணவுத்துறை அமைத்து கண்காணித்து வரும் நிலையில் விலை அதிகமாக உள்ள பொருளை அரசு விற்பனை செய்ய நடவடிக்கை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>கடந்த ஆட்சிகளில் நடந்தது போல் ரேஷன் கடை மூலம் மட்டுமல்ல பசுமை அங்காடி மூலமும் பொருட்கள் வழங்க நடவடிக்கை அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை- அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>பருவமழைக்கு முன்னதாக சென்னையில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருவதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு நிதிவிடுவிக்கவில்லை- சேகர்பாபு</p><p>இந்தாண்டு மழைப்பொழிவு கூடுதலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை- சேகர்பாபு</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை- அமைச்சர் சம்பத்குமார் பதிலுரை அளித்து வருகிறார். </p><p>மக்கள் நலன் என்று கூறி தன் மக்கள் நலனை மட்டும் பார்த்தனர் என எம்ஜிஆர் பாடல் பாடி அமைச்சர் சம்பத்குமார் உரை</p><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும் அமைச்சர் பாடிய எம்ஜிஆர் பாடலுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை- கே.என்.நேரு</p><p>விஜய் தமிழ்நாடு முதலமைச்சராவார் என 12 ஆண்டுகளுக்கு மு ன்பே கணித்தவர் அமைச்சர் ஆனந்த்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத நிலை இருக்க கூடாது, வாய்ப்பு கிடைத்தால் எந்த சமூகமும் உயரும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>ஒரு தலைமுறையை மாற்ற வேண்டுமென்றால் அந்த தலைமுறைக்கு கல்வியை கொடுக்க வேண்டும்- அமைச்சர் சம்பத்குமார்</p><p>5 லட்சம் மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி வழங்குவதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு- அமைச்சர் சம்பத்குமார்</p><p>விடுதிகளில் காலி பணியிடங்கள் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் பூர்த்தி செய்ய நடவடிக்கை- அமைச்சர் சம்பத்குமார்</p><p>பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹெல்மெட், குடிநீர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர்</p><p>மாதந்தோறும் விடுதியில் ஆய்வு நடைபெறுகிறது, மாணவர் விடுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய அனுமதி- அமைச்சர்</p><p>575 விடுதிகளில் கண்காணிப்பு கேமராமக்கள் பொருத்தப்பட்டுள்ளன- அமைச்சர் சம்பத்குமார்</p><p>கனவுகளுடன் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதியும் செய்து கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p>விடுதியை ஆய்வு செய்தபோது மாணவர்களுடன் உரையாடிய முதலமைச்சர் எங்களை அழைத்து அறிவுறுத்தினார்- அமைச்சர்</p><p><strong>வன்னியர் இடஒதுக்கீடு- சட்டசபையில் வாக்குவாதம்</strong> </p><p>வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீட்டுக்கு எதிராக ஸ்டாலினின் உறவினர் வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டனர்-சிவி சண்முகம்</p><p>வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுக்கு முட்டுக்கட்டை என சிவி சண்முகம் நேற்று பேரவையில் பேசியது தவறு- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>வன்னியருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக சிவி சண்முகம் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும்- எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>10.5% ஒதுக்கீட்டை வழங்கக்கூடாது என 2021-ல் நடந்த சபையில் தீர்மானம், ஸ்டாலின் உறவினர் வழக்கு தொடர்ந்தார்-சிவி சண்முகம்</p><p>வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டதாக சிவி சண்முகம் பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>வன்னியருக்கான உள்இடஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக வன்னியர் சங்கத்தினர் போராடி வருகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு உழைத்த முக ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி- சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான்</p><p>ஒரு கையில் குர்ஆனையும் மறு கையில் அரசியலமைப்பை தாங்கிப் பிடியுங்கள் எங்களை வழிநடத்தியவர் காதர் மொய்தீன்- அமைச்சர் ஷாஜகான்</p><p>IUML அலுவலகத்துக்கு வந்த முதல் முதலமைச்சர் விஜய் தான். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சி நல்ல திசை நோக்கி செல்கிறது- அமைச்சர் ஷாஜகான்</p><p>அமைச்சர் ஷாஜகான் குறித்து தமிமுன் அன்சாரி பேசிய பேச்சு  அமளி ஏற்பட்டது.</p><p>தேவையற்ற வார்த்தைகளை பேசாமல் இருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எந்த துறை சார்ந்த அமைச்சர் பதலளிக்க வேண்டுமோ அவருக்குத்தான் சட்டசபை விவாதத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்- சபாநாயகர்</p><p>யாரால் வென்றோம் என திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் ஷாஜகான் பேசியதே நன்றி உணர்வுதானே- சபாநாயகர்</p><p>திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக காதர் மொய்தீன் கூறினார்- நிர்மல்குமார்</p><p>திமுக கூட்டணியில் இருந்து ஐயூஎம்எல் நன்றி கெட்டத்தனமாக வெளியே வரவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கலைஞர் மஞ்சள் துண்டு அணிந்தது குறித்து அமைச்சர் ஒருவர் சபையில் பேசியிருந்தார். இடஒதுக்கீடு வழங்கியதற்காக கலைஞர் கருணாநிதிக்கு ராமதாஸ் மஞ்சள் துண்டு அணிவித்தார். பாராட்டு விழா நடத்தி அந்த மேடையிலேயே கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தார் ராமதாஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடர்பில்லை- பாமக எம்எல்ஏ கணேஷ்குமார். </p><p>மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படும்- அமைச்சர் சம்பத்குமார் அறிவிப்பு</p><p>நன்றி சொல்ல தகுதியில்லை என தமிமுன் அன்சாரியை பார்த்து எப்படி கூற முடியும்? என அமைச்சர் ஷாஜகானுக்கு கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>நன்றி சொல்லியிருக்க வேண்டும் என்று தான் கூறினாரே தவிர வேறு தவறாக கூறவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பேரவையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை- சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான உரையை தொடங்கிய அமைச்சர் வன்னி அரசு</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்- வன்னி அரசு</p><p>எனது வெற்றியை விட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி- வன்னி அரசு</p><p>தமிழ்நாட்டின் முக்கிய ஊடகங்கள், பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட்ட சட்டசபையில் நன்றி தெரிவத்தார் அமைச்சர் வன்னி அரசு</p><p>எனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த பாமக நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகள்- அமைச்சர் வன்னி அரசு</p><p>சாதி ஒழிப்பு களத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது- அமைச்சர் வன்னி அரசு</p><p>தமிழ்த்தேசிய பேரியக்கம் த.வெ.க. ஆட்சியில் இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வரலாறு- அமைச்சர் வன்னி அரசு</p><p>அமைச்சர்கள் மானியக்கோரிக்கை மீது பேசுவார்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம், இன்று எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது- அமைச்சர் வன்னி அரசு</p><p>கூட்டணியில் வெற்றி கிடைக்கும் போது அது இருதரப்புக்கும் பொருந்தும், நாங்கள் நன்றி கூறிவிட்டோம்- அமைச்சர் </p><p>வெற்றி பெற்ற திமுகவினர் திருமாவளவனுக்கு நன்றி கூறவில்லை என அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><p>என் அரசியல் ஆசான் திருமாவளவன் தான் என ஏற்கனவே கூறியிருக்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>திருமாவளவனுக்கும் எனக்கும் இருந்த உறவு அண்ணன் தம்பி போன்ற உறவு. திமுகவும், விசிகவும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமின்றி கொள்கைக் கூட்டணியாக செயல்பட்டது - உதயநிதி ஸ்டாலின்</p><p>விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறுகிறேன் என உதயநிதி கூறியதம் முதன்முறையாக நன்றி கிடைத்துள்ளது என வன்னி அரசு மகிழ்ச்சி அடைந்தார்.</p><p>எங்கள் இலக்கு என்பது சமூகநீதி, சமத்துவம்; அதன் அடிப்படையில் தான் த.வெ.க. அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளோம்- வன்னி அரசு</p><p>அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக்களத்திற்கு சென்றுவிடுவேன்- வன்னி அரசு</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை, நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது- வன்னி அரசு</p><p>புதிய சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்படும்- வன்னிஅரசு</p><p>ஏகனாபுரம் பகுதியில் புதிதாக ஒரு சமூக நல கூடம் கட்டித்தரப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமத்துவ சுடுகாடு வைத்துள்ள ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்-அமைச்சர் வன்னி அரசு</p><p>சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்- அமைச்சர் வன்னி அரசு</p><p>எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை, மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தாது எம்எல்ஏக்கு கார் தநந்து என்ன பயன்? என திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கேள்வி எழுப்பினார். </p><p>எம்எல்ஏக்கள் பல கார்கள் வைத்திருந்து பலன் இல்லை, கார் எடுத்துக் கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>தொகுதியை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கார் ரேஸ் ரூ.24 கோடியில் நடத்தினீர்கள், சட்டமன்ற உறுப்பினருக்கு கார் தருவதை கேள்வி கேட்கிறீர்களே நியாயமா? என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். </p><p>சென்னை நகரத்திற்குள் இரவு நேரத்தில் முதன்முறையாக கார் ரேஸ் நடத்தி சாதித்து காட்டினோம்- உதயநிதி</p><p>நீங்கள் கார் ரேஸை கொச்சைப்படுத்தவில்லை, கார் ரேஸ் வீரர்களை கொச்சைப்படுத்துகிறீர்கள்- உதயநிதி ஆவேசம்</p><p>செஸ் போட்டிகளை போலத்தான் கார் ரேஸை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி நடத்தினார்- கேஎன் நேரு</p><p>விளையாட்டு துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த போது ரூ.10 கோடியில் பதக்கம் கூட தராமல் இருந்தது ஏன்?. உங்களை போல் நாங்களும் ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டுமா என செங்கோட்டையனுக்கு கேஎன் நேரு கேள்வி எழுப்பினார். </p><h2><strong>கடலில் பேனா சிலை எதற்கு? அருண்ராஜ்</strong></h2><p>நிதியில்லை என்றால் கலைஞரின் பேனா சிலையை கடலில் வைக்க முயன்றது ஏன்?. நிதி பற்றாக்குறை என்று கூறித்தான் 24 மாதங்களாக மகளிர் உரிமைத்தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தினீர்கள். இன்னொருத்தரை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்க்க தான் சட்டமன்ற உறுப்பினருக்கு கார் வழங்குகிறார் முதலமைச்சர் என  அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><p>கலைஞரின் சேவையைப் பாராட்டி தமிழ்நாட்டின் சிற்பி என பேனா சிலை அமைக்க எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கருத்து கேட்டு மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் கலைஞர் பேனா சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போதைய பொருளாதார நிலையில் கலைஞருக்கு பேனா சிலை வேண்டாம் என்று தான் மு.க.ஸ்டாலின் கூறினார்- எ.வ.வேலு</p><p>கலைஞருக்கு பேனா சிலை வைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது, அதனால்தான் கைவிடப்பட்டது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். </p><p>அனைத்து சகோதரர்களுக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் எனக் கூறிய பிரேமலதாவுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார். </p><p>திருவள்ளூர் தொட்டா ரெட்டி குப்பத்தில் ஆசிட் ஊற்றி பெண் எரித்துக்கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்- பிரேமலதா</p><p>திமுக ஆட்சியில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை கட்டியதற்கு பதிலாக அந்த தொகையை சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருக்கலாம்- தவெக MLA கருப்பையா</p><p>ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. அதனால் புதிய மைதானம் கட்டப்பட்டது - திமுக MLA எ.வ.வேலு</p><p>ஜல்லிக்கட்டு என்ன Gladiator போட்டியா? ஊருக்கு வெளியே கட்டிய மைதானத்தால் பிரயோஜனம் இல்லை - அமைச்சர் நிர்மல் குமார்</p><p>சட்டப்பேரவையில் அமைச்சர் விக்னேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சபாநாயகர் JCD பிரபாகர்.</p><p>அவை உறுப்பினர்கள் அனைவரது சார்பாக வாழ்த்துவதாக தெரிவித்த சபாநாயகருக்கு அமைச்சர் விக்னேஷ் நன்றி தெரிவித்தார்.</p><p>தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் விளக்கம்.</p><p>தவெக நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலை எதிர்கட்சியினர் வாசித்த நிலையில் அமைச்சர் ஆனந்த் விளக்கம்.</p><p>ஆளும் அரசு செய்ய வேண்டியதை நினைவூட்டிக்கொண்டே இருப்பது தான் எதிர்கட்சிகளின் வேலை- கே.என்.நேரு</p><p>மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் அறிவிப்பாக வெளியிடுவார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>2016ல் தேர்தலில் நின்று ஒருவர் தோற்க, மக்கள் வாக்களிக்கவில்லையே என அவருடைய மகள், 2 நாட்களாக உண்ணாமல் கவலையில் இருந்தார். 2026ல் மீண்டும் அவர் தேர்தலில் நின்றார், திருமணமான அந்த பெண், ஓட்டளிக்க ஐதராபாத்தில் இருந்து வந்தார். </p><p>யாருக்கு ஓட்டளித்தாய் என மகளிடம் அவர் கேட்ட போது, "அப்பா நீ ஜெயிச்சிடுவ, நான் உனக்கு ஓட்டு போடவில்லை, எங்க அண்ணனுக்காக விசில் சின்னத்தில் போட்டேன்" என்று அந்த மகள் கூறியுள்ளார். அந்த எம்எல்ஏ இந்த சபையில் இருக்கிறார்- அமைச்சர் என்.ஆனந்த்</p><p>வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருந்த போது, நேரம் கடப்பதை குறிக்கும் விதமாக மணி அடித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நினைவூட்டிய போது, "அய்யோ.. பெல் அடிக்காதீங்க, எனக்கு சாமி வந்துவிடும். நிறுத்து என்று சொல்லுங்கள் நிறுத்திவிடுகிறேன்" என அவர் கூற, திமுகவினர் சிரிக்க, "உண்மை தான், எனக்கு சாமி வந்துவிடும், இதோ பாருங்க, எனக்கு இப்போதே ஒரு மாதிரி ஆகிறது" என்று தன் தோற்றத்தை அவர்களிடம் காண்பித்தார்.</p><p>என் கோரிக்கைகளை சொல்ல நேரம் கொடுங்கள், அதையெல்லாம் நான் சொல்லாவிட்டால் மக்கள் என்னை அடித்து விடுவார்கள். அனைத்தையும் சொல்லாமல், நீ வரக்கூடாது என்று மக்கள் கூறிவிட்டார்கள். 760 கி.மீ., தூரத்தில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு கொஞ்சம், நேரம் கொடுங்க..!- வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் கோரிக்கை.</p><p>கான்பிடன்ஸுக்கும், ஓவர் கான்பிடன்ஸுக்கும் ஒரே ஒரு சிறிய வித்தியாசம் தான். கான்பிடன்ஸ் ஆளுங்கட்சியாக இந்த சபையில் அமர்ந்திருக்கிறது. ஓவர் கான்பிடன்ஸை நாம் தான் தேடி பார்க்க வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். ஐகோர்ட் கிளை உள்ளிட்டவை மதுரையில் உள்ளன.</p><p>சென்னையில் மட்டுமே நிர்வாக மையங்கள் குவிந்து கிடப்பதால், தென்மாவட்ட மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மதுரையை நிர்வாக தலைநகராக மாற்ற வேண்டும்- மதுரை தெற்கு தவெக எம்எல்ஏ கோபிசன்.</p><p>வால்பாறையில் 40 எஸ்டேட்டில் செல்போன் டவர் இல்லை" என வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி என்கிற சுதாகர் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் இருந்து சிலர் கமெண்ட் அடிக்க, "டவர் இல்லாததால் தான் எம்எல்ஏ ஆனேன். டவர் இருந்திருந்தால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வந்திருக்கும் என கலகலப்பாக பதிலளித்தார்.</p><p>திமுக, அதிமுக இருவரும் ஒருவர் ஆளுங்கட்சி என்றால் மற்றவர் எதிர்க்கட்சி, ஒருவர் இந்த பக்கம் அமர்ந்தால் மற்றவர்கள் அந்த பக்கம் அமர்வார்கள். இப்படி மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு 2026ஆம் ஆண்டு தமிழக மக்கள், முதல்வர் விஜய் வாயிலாக ஒரு புதிய தீர்ப்பை எழுதியுள்ளார்கள்- அமைச்சர் ராஜ்குமார்.</p><p>தமிழ்நாட்டிற்கு இது ஒரு புதிய அரசியல் அனுபவம். சட்டமன்றம் இன்று கோட்டைக்குள் மட்டும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையிலும் நடைபெற்று வருகிறது. அரசியலும், அரசின் செயல்பாடுகளும் பொதுமக்களின் அன்றாட உரையாடலாக மாறி வருகின்றன- அமைச்சர் ராஜ்குமார்</p>]]></content:encoded></item><item><title>நேபாள வெள்ளத்தில் உயிர்தப்பிய 21 தமிழர்கள் சென்னை திரும்பினர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely#comments</comments><guid isPermaLink="false">7f575d16-0498-408e-8054-14a8f29de14d</guid><pubDate>Fri, 28 Aug 2026 20:46:24 +0000</pubDate><atom:updated>2026-08-28T20:46:24.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழர்கள்,Tamil people,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilans Arrive Chennai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/hdfxftjt/Tamilans-arrive-chennai.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/nepal-floods">வெள்ளத்தில்</a> சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>கடந்த புதன்கிழமையன்று நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>இந்த சூழலில், நேபாளத்துக்கு சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்த தமிழக முதலமைச்சர்<a href="https://www.maalaimalar.com/topic/vijay"> விஜய்</a>, மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்யவும், தொடர்பு கொள்ள இயலாதவர்களின் நிலையை கண்டறிந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தி இருந்தார்.</p><h2>டெல்லியில் தமிழக அமைச்சர்கள்:</h2><p>அதன்படி தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் டெல்லியில், மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்தனர்.</p><p>அப்போது, நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.</p><h2>சென்னை திரும்பிய தமிழர்கள்:</h2><p>இந்நிலையில் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு, 21 தமிழர்களுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம் மதியம் 3.45 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதன்பின்னர் தமிழர்கள் 21 பேரையும் தமிழ்நாடு அமைச்சர்கள் நேற்று நேரில் வரவேற்றனர்.</p><p>இதன்பின்னர் இரவு 8 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று இரவு 11.15 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்த 21 பேரையும் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.</p><p>மீட்கப்பட்ட 21 நபர்களும் திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை இனிப்புகள் வழங்கி உறவினர்கள் வரவேற்றனர்.</p>]]></content:encoded></item><item><title>“எந்த திட்டமானாலும் விவசாய நிலங்களை எடுத்துதான் ஆகவேண்டும்” - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/any-project-inevitably-requires-acquiring-agricultural-land-sengottaiyan-speaks-on-the-hosur-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/any-project-inevitably-requires-acquiring-agricultural-land-sengottaiyan-speaks-on-the-hosur-airport#comments</comments><guid isPermaLink="false">c731e01f-c152-4e3c-bbb4-6197c83f5461</guid><pubDate>Fri, 28 Aug 2026 15:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-28T15:41:52.115Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu assembly,தமிழ்நாடு சட்டப்பேரவை,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்,Hosur Airport,ஓசூர் விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w4khvodt/New-Project-2026-08-28T211130.040.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “எந்த திட்டமானாலும் விவசாய நிலங்களை எடுத்துதான் ஆகவேண்டும்” - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/w4khvodt/New-Project-2026-08-28T211130.040.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை மீதான மானியக்கோரிக்கைகள் விவாதத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. உறுப்பினருமான பாலகிருஷ்ண ரெட்டி (ஓசூர்) பங்கேற்று பேசினார். அப்போது.,</p><p>“ஓசூரில் விமான நிலையம் தேவை இல்லை. இது என் குரல் அல்ல. விவசாயிகளின் குரல். பரந்தூரில் விவசாய நிலங்கள், விவசாயிகளின் கவலையை அரசு கவனத்தில் எடுத்தது போன்று ஓசூர் விவசாயிகளின் கோரிக்கையையும் அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். </p><p>ஓசூரில் ஏற்கனவே மேம்பாட்டு திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களுடைய நிலங்களை கொடுத்துள்ளார்கள். ஓசூரில் ஏற்கனவே தனியார் விமான நிலையம் செயல்படுகிறது. அந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் இருக்கிறது. பரந்தூர் விவசாயிகளின் குரலை கேட்டது போன்று ஓசூர் விவசாயிகளின் குரலையும் கேளுங்கள்.</p><p>நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் விவசாயிகளின் நிலத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம். ஓசூர் விவசாயிகளின் கவலையை உணர்ந்து புதிய விமான நிலையத்திட்டத்தை முதல்-அமைச்சர் கைவிட வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.</p><p>அப்போது அவை முன்னவர் செங்கோட்டையன் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறுகையில், “எந்தவொரு திட்டத்தை கொண்டு வர வேண்டுமென்றாலும் விவசாய நிலங்களைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. கர்நாடகாவைவிட ஓசூருக்கு வரும்போது நிறைய திட்டங்கள், வளர்ச்சி கிடைக்கும். அதனால்தான் அங்கு நிலங்களை எடுக்கிறோம்” என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் - தமிழ்நாடு அரசு மின் ஒப்பந்தம் கோரியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/scheme-to-provide-modern-bicycles-to-class-11-students-tamil-nadu-government-invites-e-tenders#comments</comments><guid isPermaLink="false">d34bb41c-3424-4886-b66f-0896a966ac71</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:28:33 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:28:33.256Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,இலவச சைக்கிள் திட்டம்,நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/mwklmhky/cycle.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நவீன மிதி வண்டிகள், தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காகத் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு அரசு</a> மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.</p><h2><strong>இணையதளங்கள்</strong></h2><p>நடப்பு 2026-27-ம் கல்வியாண்டிற்காக 11-ஆம் வகுப்பு படிக்கும் 2,37,133 மாணவர்களுக்கும், 2,95,255 மாணவிகளுக்கும் என மொத்தம் 5,32,388 நவீன மிதிவண்டிகள், அவற்றுடன் தலைக்கவசம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தகுதியான உற்பத்தி நிறுவனங்கள் வரும் நாளை முதல் செப்டம்பர் 28, 2026 பிற்பகல் 3 மணி வரை <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a>, <a href="https://tntenders.gov.in/nicgep/app">https://tntenders.gov.in</a> என்ற இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.</p><p>செப்டம்பர் 8, 2026 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் நடைபெறும்.</p><p>இதில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கான மாதிரி மிதிவண்டிகளைச் செப்டம்பர் 28, 2026 மாலை 5  மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் செப்டம்பர் 29, 2026 அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணையவழியாகத் திறக்கப்படும். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக விநியோகிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியபாளையம் அருகே முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொடூர கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam#comments</comments><guid isPermaLink="false">00274a7b-ca02-436e-aed6-faafc0adf6e4</guid><pubDate>Fri, 28 Aug 2026 10:14:42 +0000</pubDate><atom:updated>2026-08-28T10:14:42.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பெண் கொலை,woman murder,ஆசிட் வீச்சு,Acid throw</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/h8qyxqcz/murder.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/h8qyxqcz/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள்.</strong></em></p><p>பெரியபாளையம் அருகே உள்ள தொட்டாரெட்டி குப்பம் கிராமம், வெள்ளக்குளம் அருகில் உள்ள வயல்வெளி அருகே இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்டு இருந்தது.</p><p>இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். </p><h2><strong>ஆந்திரா பெண்</strong></h2><p>இதில் கொலையுண்ட பெண் ஆந்திர மாநிலம், நாகலாபுரம் அருகே உள்ள நின்ரை, சவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருணா(40) என்பது தெரிந்தது. அவர் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள பதட்டூர் கண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். </p><p>இந்நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயம் இருந்தது. அவரது முகம் முழுவதும் எரிக்கப்பட்டது போல் கருப்பு கிரீஸ் பூசப்பட்டு இருந்தது. அவர் அணிந்து இருந்த  தாலி மற்றும் கம்மல் உள்ளிட்டவை அப்படியே உள்ளன.</p><p>கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில்  செல்போன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். பெண் கொடூரமாக ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கொலையுண்ட அருணாவின் கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது ஒரு மகன், மகள் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்கள். அருணா உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாய் வீட்டிற்கு வந்தபோது கொலை செய்யப்பட்டு உள்ளார். அணிந்து இருந்த நகைகள் அப்படியே உள்ள நிலையில் அருணா கொலை செய்யப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p><h2><strong>பொதுமக்கள் அச்சம்</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டத்தில்  அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல் கடம்பத்தூர் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய தகராறில் வாலிபர் கொல்லப்பட்டார். </p><p>தற்போது ஊத்துக்கோட்டை அருகே பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இதே போல் நேற்று முன்தினம் இரவு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.12 லட்சத்தை கொள்ளையர்கள் அள்ளி சென்று உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-thunderstorms-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3b371b18-89bc-45f3-a1fb-c24b152798ad</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:51:37 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:51:37.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ebm5rj05/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மற்றும் 3-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 1-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 1-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/21-tamils-returning-to-chennai-from-nepal-tonight-tamil-nadu-government-makes-arrangements#comments</comments><guid isPermaLink="false">7853d1d3-07cc-470e-93e1-adf57eaafa29</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:21:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:21:30.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,nepal flood,நேபாள பெருவெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளத்தில் இருந்து இன்றிரவு சென்னை திரும்பும் 21 தமிழர்கள் - தமிழ்நாடு அரசு ஏற்பாடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/lz4ug0i3/New-Project-2026-08-28T143320.090.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கியுள்ள 21 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் விமானம் மூலம் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>கைலாஷ் மானசரோவர் யாத்திரை எனப் பல்வேறு பயணங்களுக்காக நேபாளம் சென்றிருந்த 101 தமிழர்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.</p><p>இந்த மீட்பு பணிகள் தொடர்பாக ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா, தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் நேற்று டெல்லியும் விரைந்தனர். </p><p>சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்த ராஜ்மோகன், கும்பகோணத்தை தளமாகக் கொண்ட சூப்பர் யாத்ரா நிறுவனம், </p><p>நேபாளத்தை தளமாகக் கொண்ட சாம்ராட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கொண்ட குழு நேபாளத்திற்குச் சென்றிருந்ததில், அக்குழுவில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். </p><p>கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து ஐந்து பேர், தஞ்சாவூரிலிருந்து 16 பேர், தர்மபுரியிலிருந்து ஒருவர், திருச்சியிலிருந்து நான்கு பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரிலிருந்து இரண்டு பேர், நாமக்கல்லிலிருந்து ஒருவர், மயிலாடுதுறையிலிருந்து ஏழு பேர், சென்னையிலிருந்து ஆறு பேர் மற்றும் புதுச்சேரியிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டவர்களில் அடங்குவர்.</p><p>இந்நிலையில் மத்திய அமைச்சகம் அறிவித்த தகவலின்படி, மீட்கப்பட்ட 21 பேரும் இன்று தமிழ்நாடு வரவுள்ளனர். காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் விமானம் 3.45க்கு டெல்லி வரவுள்ளது. அங்கிருந்து 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. </p><h2>நேபாள பெருவெள்ளம்</h2><p>நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆக.26ம் தேதி ஏற்பட்ட பயங்கர <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு </a>காரணமாக திரிசூலி மற்றும் போதேகோஷி ஆறுகளில் கடுமையான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடரால் இதுவரை 480-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/iran-war-blamed-for-price-rise-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">0ccb38f0-167f-45d1-991e-98559b59757b</guid><pubDate>Fri, 28 Aug 2026 09:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-28T09:04:45.990Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,price hike,விலைவாசி உயர்வு,assembly,Iran War,ஈரான் போர்,சட்டசபை,அத்தியாவசியபொருட்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Price Hike - TN Assembly ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/ywgqfiwo/Price-Hike-TN-Assembly?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததாக உதயநிதி, எடப்பாடி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். </p><p>ஈரான் போர், வறட்சியே காரணம் என அமைச்சர் விளக்கி, ரேஷன், பசுமை கடைகள் மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p><h2><strong>எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a></strong></h2><p>விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எந்த பொருளை எடுத்தாலும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு விலை உயர்ந்திருக்கின்றது. இதனால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.</p><p>குறிப்பாக இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து அத்தியாவசிய பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் கூட விலை வாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.</p><h2><strong>விலைவாசி உயர்வு - உதயநிதி</strong></h2><p>விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியில் சிறப்பு பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தி பருப்பு, ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கபட்டது.</p><p>இந்த ஆட்சியில் மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு, இன்றைக்கு 75 ரூபாயாக விற்பனை ஆகிறது.</p><p>மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய் இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய் இன்றைக்கு கிலோ 180 ரூபாய்.</p><p>மே மாசம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40 இன்னைக்கு ஒரு கிலோ 70 ரூபாய் வரை வந்துள்ளது.</p><p>எனவே முதல்-அமைச்சர் தலைமையில் நிதி, உணவு கூட்டுறவு உள்ளிட்ட துறை அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்கின்ற அளவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி விலைவாசி உயர்வை கட்டுபடுத்த உடனடியாக நல்ல தீர்வை காண வேண்டும் என்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி </a>வலியுறுத்தல்.</p><h2><strong>கடும் விலைவாசி உயர்வு - எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> கூறுகையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோ ரூ. 20 வரை உயர்ந்து விட்டது சர்க்கரை ஒரு கிலோ 48 லிருந்து 72 ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>மஞ்சள் ஒரு கிலோ 200 ல் இருந்து 250 ஆகவும் மிளகாய் கிலோ ரூ.200 ல் இருந்து 300 ஆகவும் வெல்லம் ஒரு கிலோ 55 லிருந்து 75 ஆகவும் புளி கிலோ ரூ. 150 ல் இருந்து 250 ஆக உயர்ந்துள்ளது.</p><h2><strong>அரிசி தட்டுப்பாடு</strong></h2><p>இப்போது இங்கும் வறட்சி ஆந்திராவிலும் வறட்சி. இதனால் ஆந்திராவில் இருந்து வரும் அரிசி வரத்து குறைந்துவிட்டது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்க வேண்டும். </p><p>இதைத் தொடர்ந்து கணேஷ்குமார்(பா.ம.க ) தாரகை கத் பட், (காங்கிரஸ்) டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) செல்ல சுவாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோரும் விலைவாசி உயர்வு பற்றி எடுத்துச் சொன்னார்கள்.</p><h2><strong>உணவுத்துறை அமைச்சர் விளக்கம்</strong></h2><p>இதைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:- ஈரான் போரால் தான் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>நம் மாநிலத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் விலைவாசி ஏறி உள்ளது. எனவே 41 அத்தியாவசியப் பொருட்களின் விலையை கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியா வசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><h2><strong>விலைக் கட்டுப்பாடு</strong></h2><p>எந்த பொருள் விலை அதிகமாக இருக்கிறதோ அதனை கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். </p><p>அரிசி சர்க்கரை உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களையும் விலையையும் மானிட்டர் செய்கிறோம். மக்களுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளோம். </p><p>இதனால் வாரா வாரம் எந்த பொருளின் விலை அதிகமாகிறது என்பதையும் கண்காணிக்கிறோம்.</p><p>எனவே ரேசன் கடைகள் மட்டுமல்லாமல் பசுமை கடைகள் மூலமாகவும் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கும்.</p><p>எனவே விலைக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று கூறி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது: முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/peoples-thanks-to-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">b5502e91-183e-4273-80cd-c819909ce11e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:56:36 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:56:36.570Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perambur,tvk,பெரம்பூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/furepv2d/perambur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</strong></em></p><p>பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட  கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணா தெரு இடையே போதுமான சாலை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்தது. </p><p>எனவே இப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் 30 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாமல் இருந்தது.</p><p>இந்த நிலையில் தனது சொந்த தொகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி கணபதிதெரு, ராம கிருஷ்ணன் தெரு இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இதன் மூலம் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்ல முடியும். இதனை அப்பகுதி மக்கள் வரவேற்று உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கணபதி தெரு, ராமகிருஷ்ணன் தெரு இடையே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.</p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்க்கு</a> எங்களது நன்றி. இதுபோலவே, பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள், கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் மற்றும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை  கண்டறிந்து மாற்றி அமைப்பது உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மோசமாக பாதிக்கப்பட்ட தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க என்ன தயக்கம்?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-question-to-tn-govt#comments</comments><guid isPermaLink="false">5f108595-788b-461d-9735-8a47542324f9</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:17:39 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:17:39.905Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/g89lhy44/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வறட்சி பாதிப்பு</strong></h2><p>கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சுமார் 30% அளவுக்கு குறைவாக பெய்திருப்பதால் பாதிக்கப்பட்டுள்ள 101 வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.  இத்தகைய சூழலில் கர்நாடகத்தை விட கொடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படாதது ஏன்? என்ற வினா எழுகிறது.</p> <p>கர்நாடகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை கர்நாடகத்தில் 666 மி.மீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 465 மி.மீ மழை மட்டுமே பெய்திருக்கிறது;  வழக்கமாக சாகுபடி செய்யப்படும் 84.10 லட்சம் ஹெக்டேருக்கு பதிலாக 60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 71 விழுக்காடு மட்டுமே  சாகுபடி செய்யப்பட்டிருப்பது தான் 101 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு காரணமாக கூறப்பட்டிருக்கிறது.</p><p>ஆனால், தமிழகத்தின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.  ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 180 மிமீ அளவுக்கு மட்டுமே மழை பெய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டு  6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில்  சுமார் 2 லட்சம்  ஏக்கரில் மட்டுமே  குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 30% மட்டும் தான்.</p><h2><strong>பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்</strong></h2><p>தமிழகத்தில் மொத்தம் உள்ள 14,141 நீர்நிலைகளில், 4208 நீர்நிலைகள், அதாவது 29.25% நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. மேலும், 5,814 நீர்நிலைகளில் 1% முதல் 25% வரை மட்டுமே நீர் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பயனளிக்கும் வகையில் தண்ணீர் இல்லை.  காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி, கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் 737 நீர்நிலைகளில் 694 நீர்நிலைகள், அதாவது 95% தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.</p><p>நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து விட்டதால்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் கருகுகின்றன.  இதே நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால் தமிழ்நாட்டில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து  ஏற்பட்டிருக்கிறது.  நிலைமை இந்த அளவுக்கு மோசமாக மாறியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து வறட்சி தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.</p><p>எனவே, தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதமும், குறுவை சாகுபடி செய்து நீரின்றி பயிர்கள் வாடியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதமும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். சம்பா சாகுபடி செய்யமுடியாத நிலை  உருவாகும் சூழலில் அதனால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10000 உதவி வழங்க வேண்டும். நிலமில்லா தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25,000 வழங்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை-
அமைச்சர் என்.ஆனந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-allocates-rs-972-crore-to-safeguard-key-tamil-nadu-rivers#comments</comments><guid isPermaLink="false">65d5911c-cc30-45a3-8621-17db84d1664e</guid><pubDate>Fri, 28 Aug 2026 08:16:59 +0000</pubDate><atom:updated>2026-08-28T08:16:59.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rivers,TN assembly,ஆறுகள்,அமைச்சர் என் ஆனந்த்,MInister N Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/4twzznhh/Minister-Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரூ.972 கோடியில் கொள்ளிடம்-வெள்ளாறு, நொய்யல் ஆறுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவை யில் இன்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பதில் அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் தடுப்புச்சுவர் பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>இதனைத் தடுக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/news/national/boy-swam-from-dharamdar-bay-to-gateway-of-india-in-8-hours-576322" rel="nofollow">வங்காள விரிகுடா</a> கடலிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப் பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே, கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>இந்தத் திட்டத்தின் மூலம் வீரன் கோயில்திட்டு, கொட்டாமேடு, கவரப்பட்டு, ஜெயங்கொண்டபட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், கொள்ளிடம் உள்ளிட்ட பல கிராமங்கள் பயன்பெறுவது டன், நிலத்தடி நீர் செறி வூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.</p><p>இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அது பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>வெள்ளாற்றில் ரூ.194 கோடியில் தடுப்பணை மேலும், கடல் நீர் உட்புகுவதைத் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஆதிவராக நல்லூர் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தில் நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு துறையின் பரிசீலனையில் உள்ளது.</p><p>தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதைத் தடுக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</a> தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p>திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் மங்கலம் பாலம் முதல் மணியகாரம் பாளையம் பாலம் வரையிலான நொய்யல் ஆற்றுப் பகுதியில், ஓடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் வழியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நீண்ட காலமாக கலந்ததன் காரணமாக ஆகாயத்தாமரை, சீமைக்கரு வேலம் உள்ளிட்ட செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.</p><p>இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்  விஜய்யின் அறிவுறுத்தலின் படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-files-plea-to-allow-byelections-in-five-barred-constituencies#comments</comments><guid isPermaLink="false">4709b298-fd6f-4f21-8ccb-ab1d2a4efc7f</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:55:57 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:55:57.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,by-election,சென்னை ஐகோர்ட்டு,இடைத்தேர்தல்,cm vijay,முதலமைச்சர் விஜய்,ராஜினாமா,Election Petition</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ By-Election]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/6s2heicu/By-Election?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜினாமா செய்தபோது வழக்கு இல்லை, தடையை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.</p><h2><strong>இடைத்தேர்தலுக்கு தடை</strong></h2><p>தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் <a href="https://www.maalaimalar.com/topic/chennai-high-court">சென்னை ஐகோர்ட்டில்</a> பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.</p><p>தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.</p><h2><strong>ராஜினாமா செல்லும்</strong></h2><p>இந்த வழக்கில் எதிர் மனுதாரர், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய் </a>தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.</p><p>காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத் தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல. தொகுதியின் வாக்காளருமல்ல.</p><h2><strong>வழக்கு உள்நோக்கம்</strong></h2><p>திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.</p><h2><strong>இடைத்தேர்தல் அவசியம்</strong></h2><p>5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.</p><p>திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>தடை நீக்குக</strong></h2><p>இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பல முனைப் போட்டி நடந்து உள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-suddenly-inspection-puzhal-jail#comments</comments><guid isPermaLink="false">889cb67e-f14a-4a9e-9b34-0a85e6df6b15</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:49:21 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:49:21.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,புழல் சிறை,Puzhal Jail,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:title><media:description type="html"><![CDATA[ புழல் ஜெயிலை தொடர்ந்து காவல் நிலையத்திலும் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/9tzoqulb/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</strong></em></p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> அவ்வப்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார். </p><p>கடந்த மாதம் எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி, நெமிலிசேரியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனம், கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். </p><h2><strong>திடீர் ஆய்வு</strong></h2><p>இன்று திடீரென புழல் ஜெயிலில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.  அவர் வருவதை கேள்விபட்டதும் ஜெயில் வாசலில் ஏராளமானவர்கள் திரண்டனர். முதலமைச்சர் விஜய் சென்ற கார் நேரடியாக ஜெயில் வளாகத்துக்குள் சென்றது. அங்கு அவரை சிறைத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். </p><p>அதை தொடர்ந்து தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் கைதிகள் உற்சாகம் அடைந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் உங்களை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார்.</p><p>அதைத் தொடர்ந்து ஜெயிலின் மற்ற பகுதிகளையும் சுற்றிப்பார்த்து கைதிகளிடம் பேசி குறகைளை கேட்டார். பின்னர் அதிகாரிகளிடம் சிறைத்துறைக்கு என்னென்ன தேவை என்று கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து புழல் காவல்நிலையத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/equal-burial-grounds-village-councils-10-lakh-reward-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">fce9a202-2657-484a-a277-cffa3f2e4ed2</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:44:05 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:44:05.684Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,சமத்துவ இடுகாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/dvx0u6t9/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு- அமைச்சர் வன்னி அரசு</p><p>சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்தார்.</p><p>அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என அமைச்சர் வன்னி அரசு தனது உரையை தொடங்கினார்.</p><p>அவர் கூறியதாவது:-</p><p>என்னை கைது செய்ய வேண்டும் என முழக்கமிடப்பட்ட அதே சபையில் என்னை அமரவைத்து அழகு பார்த்திருக்கிறார் திருமாவளவன்.</p><p>விடுதலை புலிகளுக்கு ஆதரவு அளித்ததால் திருமாவளவனை கைது செய், வன்னி அரசுவை கைது செய் என 2007-ல் சட்டசபையில் முழக்கமிட்டனர்.</p><p>எனது வெற்றியைவிட வன்னி அரசுவின் வெற்றிதான் முக்கியமானது என எனக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட உதயநிதிக்கு நன்றி. சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தீக்கிரையாக்கப்பட்ட குடிசைகளின் சம்பலில் இருந்து வந்தவன் நான். அமைச்சர் இருக்கையில் என்னை அமர வைத்த திருமா நாளையே அழைத்தாலும் போராட்டக் களத்திற்கு சென்றுவிடுவேன்.</p><p>பதவி, பரிசுக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாங்கள் பதவிக்காக போனோம் என யாரும் சொல்ல முடியாது. பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவிடமாட்டோம் என்கின்றனர். ஆனால், 234 தொகுதியிலும் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அறிவிப்புகள்</h2><p>சமத்துவ இடுகாடு வைத்துள்ள ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு. சாதிய பிரச்சனைகள் அதிகம் நடக்கும் கிராமங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்திற்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்.</p><p>ஏகனாபுரம் மக்களின் கோரிக்கைக்கு இணங்க புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும்.</p><h2>"மேலவளவு" கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம்</h2><p>மேலவளவு கிராமம் தொடர்ந்து சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி அங்கு அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும். சாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும் என அமைச்சர் வன்னி அரசு அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/high-court-notice-to-mk-stalin-in-athav-arjuna-defamation-suit#comments</comments><guid isPermaLink="false">e44701c9-aa9a-41a4-8a46-c4712e99a404</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:19:30 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:19:30.464Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,சென்னை ஐகோர்ட்,ஆதவ் அர்ஜூனா,Madras highcourt,அவதூறு வழக்கு,defamation case,முக ஸ்டாலின்,Minister Adhav Arjuna,திமுக ஐடிவிங்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Adhav Arjuna - MK Stalin  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/qet8hbc0/Adhav-Arjuna-MK-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்தார். இதற்கு செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், " தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a>, கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படக் கூடிய திமுக ஐடி விங்க் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி ஒரு பதிவை வெளியாகியுள்ளது.</p><p>அதில் "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்புலான போதை பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது த.வெ.க அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.</p><h2><strong>வைரல் பதிவு</strong></h2><p>இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த பதிவை 2,600 பேர் மறு பதிவு செய்துள்ளனர் 4,400 பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். 150 பேர் பதிலும் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதள கணக்கை பராமரித்து வருகின்றது. எனவே இந்த பதிவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> தான் பொறுப்பு.</p><h2><strong>இழப்பீடு கோரிக்கை</strong></h2><p>இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார். </p><p>எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும். </p><p>அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.</p><h2><strong>நோட்டீஸ் உத்தரவு</strong></h2><p>இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார். </p><p>இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல- ஐகோர்ட் நீதிபதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-judge-condemned-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">c160a0ce-83f3-4b49-91d2-b490a6f3d434</guid><pubDate>Fri, 28 Aug 2026 07:12:56 +0000</pubDate><atom:updated>2026-08-28T07:12:56.742Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,maria wilson,மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/pi4vhwim/mariawilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. அவர் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற முடியாது என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.</strong></em></p><p>தமிழக நிதி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D">மரிய வில்சன்</a>, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்‌.</p><h2><strong>நீதிபதி கேள்வி</strong></h2><p>புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-hc-order-exemption-granted-to-minister-maria-wilson-from-appearing-in-the-case-regarding-the-assault-on-his-brother">மரிய வில்சன்</a> தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வக்கீல்,  சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p>இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக்கூற நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். மனுதாரர் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பினார்.</p><p>அப்போது புதுச்சேரி காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல்,  வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்துள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>