<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 18 Aug 2026 17:25:52 +0000</lastBuildDate><item><title>தமிழ் தாய் வாழ்த்தை முதலில் பாட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-bar-on-singing-tamil-anthem-before-vande-mataram-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">3238126c-896e-4bed-9149-071b01c586dc</guid><pubDate>Tue, 18 Aug 2026 17:22:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T17:22:21.449Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை உயர்நீதிமன்றம்,Tamil Anthem,தமிழ் தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/chyem2zt/Chennai-High-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் 'தமிழ் தாய் வாழ்த்து' பாடலை முதலில் பாடுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், சமீபத்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை மாநில பாடலை பின்னுக்குத் தள்ளவில்லை என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">சென்னை</a> உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்குவதை உறுதி செய்ய உத்தரவு கோரி, சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு விசாரணையின்போது இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.</p><h2>மத்திய அரசு விளக்கம்:</h2><p>அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் முடிப்பது தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியம் என்று மனுதாரர் வாதிட்டார். மனுவின்படி, அரசு நிகழ்ச்சிகள் வந்தே மாதரத்துடன் தொடங்க வேண்டும் என்று கோரும் ஜனவரி 28-ஆம் தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய அவர் கோரினார்.</p><p>மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூலை 9-ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவிக்கையை சுட்டிக்காட்டினார். அந்த அறிக்கையின்படி, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை அடுத்தடுத்து பாடப்பட வேண்டும் என்றும், தேசிய கீதத்திற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.</p><p>மாநில கீதங்கள் குறித்து அந்த அறிவிப்பில் எதுவும் கூறப்படவில்லை என்றும், தமிழ் தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட வேண்டும் என்று அதில் நிபந்தனை விதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><h2>வரிசை குறித்த சர்ச்சை:</h2><p>தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தினத்தன்று இதே வரிசைமுறைதான் பின்பற்றப்பட்டது என்றும், முதலில் தமிழ் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியது.</p><p>பாரம்பரியமாக அரசு நிகழ்ச்சிகள் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கும் தமிழ்நாட்டில், பாடல்களின் வரிசை குறித்த சர்ச்சை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. </p><p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனது வழக்கமான உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியதை அடுத்து, இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. இந்த கோரிக்கையை அப்போதைய தி.மு.க. அரசு நிராகரித்தது.</p>]]></content:encoded></item><item><title>வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/would-karnataka-remain-a-silent-spectator-if-kannada-people-were-affected-in-other-states-p-shanmugam-asks#comments</comments><guid isPermaLink="false">fd07eabb-b9ab-4ccf-a041-5ac4541d38e4</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:55:11 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:55:11.675Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,P. Shanmugam,பெ.சண்முகம்,Chief Minister D.K. Shivakumar,முதலமைச்சர் டி.கே.சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடகா வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா? - பெ.சண்முகம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/zrpqwewy/New-Project-2026-08-18T212452.389.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்.,</p><p>“கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>உலகில் தமிழ் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும்.</p><p>இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. </p><p>வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம்.</p><p>கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-tamils-shot-dead-in-karnataka-the-tamil-nadu-governments-failure-to-condemn-the-incident-is-shocking-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">511f68c8-865d-486c-85ac-71ad706cd46c</guid><pubDate>Tue, 18 Aug 2026 15:43:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:43:46.812Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தமிழ்நாடு அரசு,Udhayanidhi Stalin,Government of Tamil Nadu,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: கண்டனம் தெரிவிக்காத தமிழ்நாடு அரசின்  நிலைப்பாடு அதிர்ச்சியளிக்கிறது - உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hvkn9mr8/New-Project-2026-08-18T211244.382.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக வனத்துறையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் நாளை நடைபெற உள்ள தென்மாநில முதலமைச்சர் மாநாட்டின்போது, முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் இதுதொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டுப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் பாணியையே எதிரொலித்தார்.</p><p>தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.</p><p>த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. </p><p>அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும். </p><p>இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.</p><p>இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 18 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-august-2026#comments</comments><guid isPermaLink="false">c27daa42-6f88-4a58-93d9-0737d7f66078</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T15:08:20.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/2xvhx5yb/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/rishabh-pant-becomes-first-indian-and-fastest-to-hit-100-sixes-in-test-cricket">டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 சிக்சர்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்</a></p><p>* இலங்கை அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இந்தியா சார்பில் மானவ் சுதர் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/srilanka-need-288-runs-to-win-in-lats-day-against-india-first-test">காலே டெஸ்ட்: நான்காம் நாள் முடிவில் இலங்கை 84/4 - வெற்றியின் விளிம்பில் இந்தியா</a></p><p>* இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders">பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a></p><p>* பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><p>* பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod">சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</a></p><p>* 2 வருடத்தில் மாற்றம்: பறக்கும் ரெயில் இயக்கம், பராமரிப்பு அனைத்தும் அடுத்த 2 ஆண்டில் மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.</p><p>* ஒரே டிக்கெட் வசதி: மெட்ரோ, பறக்கும் ரெயில் இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஸ்மார்ட் கார்டு மற்றும் டிக்கெட் பயன்படுத்தலாம்.</p><p>பொதுப்பணி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 30 மாடிகள் கொண்ட அரசு அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்களின் அனைத்து தரவுகளையும் ஒன்றிணைக்க DashBoard உருவாக்கப்படும்.</p><p>* கட்டிடங்களின் பராமரிப்பை ஊழல் இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்</p><p>* பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு  பொதுப்பணித்துறையில் சலுகைகளுடன் வாய்ப்பு</p><p>* பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறை எளிமைப்படுத்தப்படும்</p><p>* வெளிப்படை தன்மையுடன் டெண்டர்கள் உருவாக்கப்படும்.</p><p>* டெண்டர்களில் இனிமேல் பினாமிகளுக்கு இடம் கிடையாது.</p><p>நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.</p><p>* சென்னை- கோவை- தூத்துக்குடி இணைக்கும் விரைவு தொழில் தர விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>* தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை</p><p>* ரூ. 500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்</p><p>* கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்</p><p>* சென்னை- புதுவை இடையே படகு போக்குவரத்து</p><p>* 2027 முதல் சாலை விதிகள் மேலும் கடுயைமாக்கப்படும்</p><p>* பேட்ச் ஒர்க்கை ஒழிக்க புதிய திட்டம்</p><p>* ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>* பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>* நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும்</p><p>விளையாட்டுத்துறைக்கான மானியக்கோரிக்கை மீதான பதிலுரையில் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:-</p><p>* 38 விளையாட்டு மாவட்டத்தில் விளையாட்டு விடுதி தொடங்கப்படும்</p><p>* மாற்று திறனாளிகளுக்கு தனிப்பட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>* சென்னையில் பாரா ஒலிம்பிக் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.</p><p>* பெண்களுக்கான சிங்கப்பெண் விளையாட்டு திருவிழா நடத்தப்படும்.</p><p>* ஆண்டுதோறும் கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகள் நடத்தப்படும்.</p><p>* திறமையான மாணவர்களை கண்டுபிடித்து ஒலிம்பிக் பயிற்சி.</p><p>* ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை அதிகரிப்பு.</p><p>* விளையாட்டு சங்கங்கள் பிரச்சனை இருந்தால் SDAT சங்கத்தை ஏற்று நடத்தும்</p><p>* திருநர்களுக்கான போட்டி நடத்தப்படும்.</p><p>* கோவையில் என்.சி.சி. அகாடமி</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</p><p>லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>மாணவர் படுகொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு போதையே காரணம்.</p><p>இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு - பிரேமலதா விஜயகாந்த்</p> <p>சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் மாணவர் விடுதிகள் சுத்தம் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளன.</p><p>கர்நாடகா, ஆந்திரா, இலங்கை எந தமிழர்கள் அனைத்து இடங்களிலும் தாக்கப்படுகின்றனர் -  பிரேமலதா விஜயகாந்த்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><p>போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் உரை</h2><p>விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>தேவைப்படும் பட்சத்தில் கலந்துரையாடி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எம்எல்ஏக்களிடம் அதிகாரிகள் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>வண்டல் மண் பிரச்சனைக்காக 4 எம்எல்ஏக்கள் நேரில் சென்றபோது சேலம் ஆட்சியர் அவமதித்து விட்டார்.</p><p>சேலம் ஆட்சியருக்கு 47 முறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பேசவில்லை - எம்எல்ஏ மணி</p><p>பக்கத்து ஊருக்கு கூட போகாது - அமைச்சர் பிரபு</p><p>வண்டல் மண் பாகிஸ்தானுக்கா செல்கிறது?  - அதிமுக</p><p>விவசாயிகளை மாஃபியாக்கள் எனக்கூறுவதை ஏற்க முடியாது என இபிஎஸ் கூறியதற்கு நான் விவசாயிகளை குறிப்பிடவில்லை என அமைச்சர் பிரபு பதில் அளித்தார்.</p><p>வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் - எடப்பாடி பழனிசாமி </p><p>விவசாயிகள் என்ற பெயரில் வண்டல் மண்ணை அதிகம் அள்ளும் மாஃபியாக்களை விட மாட்டோம்.</p><p>விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது -  அமைச்சர் பிரபு</p><h2>அதிமுக எம்எல்ஏ மணி</h2><p>தமிழ்நாட்டில் சாலை புரட்சியை உருவாக்கியவர் இபிஎஸ்.</p><p>தொலைநோக்குடன் பல மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இபிஎஸ்.</p><p>கட்டாய விளையாட்டு, உடற்பயிற்சிக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா? - மெய்யநாதன் கேள்வி</p><p>உலக செஸ் போட்டியை முதல் முதலில் தமிழ்நாட்டில் நடத்தியவர் ஜெயலலிதா.</p><p>ரூ.29 கோடியில் செஸ் போட்டியை நடத்தியவர் ஜெயலலிதா - சபாநாயகர்</p><p>விளையாட்டு விடுதியில் ஏசி பொருத்தித் தர வேண்டும்.</p><p>வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்க வேண்டும்.</p><p>அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் திட்டம் தொடர வேண்டும் - எம்எல்ஏ மெய்யநாதன் </p><h2>ஆலங்குடி தொகுதி திமுக எம்எல்ஏ மெய்யநாதன் உரை</h2><p>விருது பெறும் வீரர்களுக்கான ஊக்கத்தொகை கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்தது.</p><p>திமுக ஆட்சியில் 48 மணி நேரத்தில் உயரிய ஊக்கத்தொகை கிடைத்தது.</p><p>5 ஆண்டு கால ஆட்சியில் 6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாததாக்கி சட்டத்திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசால் நீட்டை நீக்க முடியாதா? - சிவி சண்முகம்</p><p>மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நீட்டை நீக்கி இருக்கலாம்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீட்டை தொடர்வதாக பாஜக கூறுவது எல்லாம் ஏமாற்று வேலை.</p><p>உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த 6 மாதங்களில் கனிமவள சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு  - சிவி சண்முகம்</p> <p>காங்கிரஸ், பாஜக உடலில் இருப்பது ஒரே ஜீன் தான்.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட் தொடர்வதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார் - சிவி சண்முகம்</p><p>வைபவ் சூர்யவன்ஷி போல் குழந்தைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டும்.</p><p>டிஎன்பிஎஸ்சியில் 8 உறுப்பினர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.</p><p>தமிழகத்தில் அளவுக்க அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.</p><p>மத்திய அரசிடம் பேசி சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சிவக்குமார்</p><p>8 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது தூர்வாரும் பணி நடைபெற்றது.</p><p>ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது - சிவி சண்முகம்</p><h2>மானியக் கோரிக்கை விவாதம் - விக்கிரவாண்டி பாமக எம்எல்ஏ சிவக்குமார் உரை</h2><p>விக்கிரவாண்டியில் தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும்.</p><p>விக்கிரவாண்டியில் சிங்கப்பெண் சிறப்புப் படை காவல் நிலையம் தேவை.</p><p>நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?</p> <p>காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை  - தாரகை கத்பட்</p> <p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் வரவேற்பு.</p><p>மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை - தாரகை கத்பட்</p><p>இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது  - தாரகை கத்பட்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டியதற்க நன்றி. </p><p>காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது - தாரகை கத்பட்</p><h2>மானியக்கோரிக்கை விவாதம் - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் உரை</h2><p>எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>செம்மேடு - தாழம்பட்டு சாலை பெரிய ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர  வேண்டும் -  எம்எல்ஏ ராஜேந்திரன்</p><h2>என்எல்சி தொழிலாளர்கள் நலன் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உரை</h2><p>சுற்றுவட்டார கிராமங்களின் மேம்பாட்டிற்கு என்எல்சி 3% சிஎஸ்ஆர் நிதி தர வேண்டும்.</p><p>சிஎஸ்ஆர் நிதி தொடர்பாக என்எல்சியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/0nckklvs/thahira.jpg" /></figure><p>அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் நடத்தினார்.</p><p>அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,.</p><p>தளபதியால் நான், தளபதிக்காகவே நான், என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் நன்றியுடன் நடந்து கொள்வேன் - எம்எல்ஏ தாஹிரா</p> <p>என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>எங்கள் தலைவர் கட்சியில் பதவி கொடுத்தபோது அவருடன் பக்கத்தில் அமரவைத்து கவுரவித்தார்.</p> <h2>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? என எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</h2><p>தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p> <p>ராணிப்பேட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாலாஜா அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - எம்எல்ஏ தாஹிரா</p><h2>ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்எல்ஏ தாஹிரா உரை</h2><p>வாயால் வடை சுட்ட காலம் போய் சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>தவெக ஆட்சி ஊழலற்ற உண்மையான மக்கள் ஆட்சி.</p><p>அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது - ஆதவ்</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவகளை நினைத்துதான் அறையை மாற்றுகிறார் - அமைச்சர் ஆதவ்</p> <p>கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர் - அமைச்சர் ஆதவ்</p> <p>5 வருடத்தில் நடைபெற்ற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு</p><p>கடந்த 5 வருட பத்திரிகை செய்திக எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை.</p><p>தவெக அரசின் வாக்குறுதி புத்தகத்தில் அறம் திட்டத்தின் 25-வது பக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி கூறி உள்ளீர்கள்.</p><p>எந்த ஓய்வூதிய திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி அளிக்கப்போகிறது, அரசு அதிகாரிகளுக்கு தெளிவான விளக்கம் தேவை.</p><p>முதல்வர் அறையை தயார் செய்ய ரூ.5.54 கோடி மதிப்பிலான பணிக்கு டெண்டர் விடப்படவில்லை என்ற செய்தியை சுட்டிக்காட்டி எ.வ. வேலு பேச்சு</p><p>காலை உணவுத்திட்டத்தின் பெயர் காமராஜர் பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பெயர் மாற்றம் என்பது கலைஞர் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.</p><p>அந்த மைக், சேர், டேபிள் செய்தது நாங்கள் தான் என்கிறார்கள். இவை அனைத்தும் செய்தது மக்கள் வரிப்பணத்தில் தான்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறி உள்ளது.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p> மானியக்கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசுங்கள் - சபாநாயகர்</p><p>2003-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டது - எ.வ.வேலு</p><p>அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள்.</p><p>நேற்று எங்களுக்கு சல்யூட்... இன்று உங்களுக்கு சல்யூட் - எ.வ.வேலு </p><h2>எ.வ.வேலு உரை</h2><p>இந்த நிதி ஆண்டுக்கான எதிர்கால திட்டமிடல் குறித்து எதுவும் இல்லை.</p><p>வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து கொள்ளை விளக்க குறிப்பில் இல்லை.</p><p>சட்டசபையை கலைநயமிக்கதாக மாற்றியது திமுக தான்.</p><p>4 வழித்தடம், 2 வழித்தடம் சாலைகள் இந்த நிதி ஆண்டில் எவ்வளவு அமைக்கப்பட்டது? - எ.வ.வேலு</p><p>முதலமைச்சருக்கு அதிக திறமை இருக்கிறது என்பதை ஏற்கிறேன் - எ.வ.வேலு</p><p>டெண்டர் விலையை உயர்த்தி முறைகேடு செய்யத் தெரியாது என முதல்வர் கூறுகிறார் - எ.வ.வேலு</p><p>அமைச்சர் போல் திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியல் போடுகிறீர்கள் - சபாநாயகர்</p><p>மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம்.</p><p>முதலமைச்சர் என்பது பொதுவான சொற்றொடர் - எ.வ.வேலு</p><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம் - எ.வ.வேலு</p><p>கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும் - எ.வ.வேலு கோரிக்கை</p><p>அண்ணா அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை.</p><p>எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது - ஆதவ் அர்ஜூனா</p><p>3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்? - எ.வ.வேலு</p><p>பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது - எ.வ.வேலு</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம் - எ.வ.வேலு</p><p>மானியக் கோரிக்கை மீது விவாதம் - எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு உரை</p><p>சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை - எ.வ.வேலு</p><p>4 துறைகள் மீதான மானிய கோரிக்கை தொடங்கியது.</p><p>மனிதவள மேலாண்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் சரத்குமார்.</p><p>பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தவெக அரசு அனுமதிக்காது - அமைச்சர் ராஜீவ்</p><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ராஜீவ்</p><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் -  சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</p><h2>எம்எல்ஏ தமிமுன் அன்சாரி உரை</h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறி உள்ளார்.</p><p>புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம்.</p><p>பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.</p><h2>கடலூர் பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.</h2><p>பரங்கிப்பேட்டையில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டம்.</p><p>மீனவர்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் முதலமைச்சர் விஜய் அரசு அனுமதிக்காது.</p><p>சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.</p><p>பரங்கிப்பேட்டையில் இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோஷன் நிறுவன கிணறுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு என கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதில் தமிழ்நாடு அரசின் மேல் நடவடிக்கை என்ன? </p><p>தமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு கோரியுள்ளதா?  - திமுக</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - அமைச்சர் ரஞ்சித்</p><p>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு நிதி வழங்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடக அரசின் விசாரணையை தமிழ்நாடு அரசு கண்காணிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>சிபிஐ விசாரணை தேவை என்கிறோம் - தவெக அரசின் நிலைப்பாடு என்ன? - பாமக</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - தவெக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பாமக</p><p>யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு சபாநாயகர் கண்டிப்பு</p><p>அமைச்சர் நிர்மல்குமார் இனி தேவையற்றதை பேச அனுமதிக்க மாட்டேன் - சபாநாயகர்</p><p>திமுகவை விமர்சித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியவை அவை குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே நம்பிக்கை முதலமைச்சர் விஜய் - அமைச்சர் நிர்மல்குமார்</p><h2>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்</h2><p>சுட்டுக்கொல்லப்பட்ட தமிழகர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்குவது குறித்து கர்நாடகா பரிசீலனை.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறை மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.</p><p>தமிழர்களை சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்.</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன்</h2><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். </p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும்.</p><p>தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி - கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா</p><p>தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது.  சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் - தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை - அதிமுக, பாமக, காங்கிரஸ், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்.</p><p>கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை - காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட்</p><p>தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஏதோ இருக்கிறது என கர்நாடக எம்எல்ஏவே கூறுகிறார். கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - பாமக எம்எல்ஏ கணேஷ் </p><h2>பாமக எம்எல்ஏ கணேஷ் உரை</h2><p>மேட்டூர் கட்டப்பட்டதால் கர்நாடகாவிற்கு புலம்பெயர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை.</p><p>தங்கள் கால்நடைகளை தேடிச்சென்றவர்களை சுட்டுக்கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது ஏற்புடையது அல்ல.</p><p>மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.</p><p>2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.</p><p>வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும்  - எடப்பாடி பழனிசாமி</p> <h2>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுககொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிக்சை.</p><p>அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் - மனோஜ்பாண்டியன் </p><h2>கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள்  - கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மனோஜ்பாண்டியன் உரை</h2><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால்  சுட்டுக்கொலை.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் வாய்ப்பு: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-says-engineering-students-to-participate-pwd-tenders#comments</comments><guid isPermaLink="false">0041543c-4de4-4f1e-875a-637b78e8043a</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:44:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:44:22.900Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பொதுப்பணித்துறை,PWD,TN Assembl,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/iw6cwos2/arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><h2>பொதுப்பணித் துறை</h2><p>தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:</p><p>அனுமதிக்கத்தக்க அதிகபட்ச பிரிமியம் FSI முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு பன்னடுக்கு எழில் மிகு மற்றும் உலகத்தரமான கட்டடங்களை அமைத்தல்.</p><p>இந்த அறிவிப்பின் மூலம் விலைமதிப்பிட முடியாத அரசு நிலங்கள் சேமிக்கப்பட்டு, அவற்றின் உச்சபட்ச பயன்பாடு உறுதி செய்யப்படும்.</p><p>பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் சலுகையுடன் வாய்ப்பு வழங்குதல்.</p><p>ஒரு கோடி ரூபாய்வரை திட்ட மதிப்புள்ள பொதுப்ப்பணித்துறை ஒப்பந்தங்களில் பணி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தகுதிவாய்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு சலுகையுடன் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.</p><p>ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் தமிழ்நாடு உள் கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம் நிறுவுதல்.</p><p>இந்தக் கழகம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் உலகத் தரத்துடன் அமைக்கப்படும். இதன்மூலம் பெருநகரங்கள், தொழிற்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>பணி முன்னேற்றம், தரக் கட்டுப்பாட்டைக் கண்காணித்தல் மற்றும் வெளிப்படைத் தன்மைக்காக ஒரு செயலி உருவாக்குதல்.</p><h2>ஒப்பந்ததாரர் பதிவு முறையில் மேலும் எளிமை</h2><p>பொதுப் பணித்துறையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு முறையை மேலும் எளிமையாக்குதல்.</p><p>அரசு மருத்துவமனைகளின் பராமரிப்புப் பணிகளை நவீனப்படுத்தும் நோக்கில் AI தொழில்நுட்பத்துடன் கட்டட மேலாண்மையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோவுடன் இணைகிறது பறக்கும் ரெயில் திட்டம் – ரெயில்வே வாரியம் ஒப்புதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-flying-train-service-to-merge-with-metro-rail-railway-board-nod#comments</comments><guid isPermaLink="false">7251a269-6fd0-4362-9b59-19ca2129a4fd</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:26:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:26:36.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SouthernRailway,சென்னைமெட்ரோ,ChennaiMetro,MRTSChennai,பறக்கும்ரயில்,CMRLUpdates,MetroMRTSMerge,மெட்ரோஇணைப்பு,தமிழக போக்குவரத்துக் கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CMRL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/k9nwzddb/CMRLUpdates?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88">சென்னை</a>யின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சென்னை பறக்கும் ரெயில் சேவையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் முழுமையாக இணைப்பதற்கான இறுதி ஒப்புதலை ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.</p><h2><strong>அடுத்த 2 ஆண்டுகளில் முழு மாற்றம்!</strong></h2><p>சென்னையில் தற்போது தெற்கு ரெயில்வேயால் இயக்கப்பட்டு வரும் கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரெயில் சேவை, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில்</a> நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்படும். </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, பறக்கும் ரெயிலின் செயல்பாடுகள், ரெயில்களை இயக்குதல் மற்றும் அனைத்து சொத்துக்களின் பராமரிப்பு உரிமைகளும் மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ளன.</p><h2><strong>15 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு</strong></h2><p>பறக்கும் ரெயில் திட்டத்தை மெட்ரோவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு மற்றும் மத்திய ரெயில்வே துறைக்கு இடையே நடைபெற்று வந்தன. </p><p>பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இணைப்பிற்கு ரெயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து</strong></h2><p>மெட்ரோ நிறுவனத்துடன் பறக்கும் ரெயில் திட்டத்தை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்,</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88">பறக்கும் ரெயில்</a> நிலையங்கள், தண்டவாளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் சொத்துக்களை மெட்ரோவிடம் ஒப்படைத்தல். எதிர்காலத்தில் ரெயில்களை இயக்குவது மற்றும் பராமரிப்பது தொடர்பான முக்கிய விவரங்கள். ரெயில் நிலையங்களைப் புதுப்பித்து மெட்ரோ தரத்திற்கு உயர்த்துவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன?</h2><p>இந்த இணைப்பின் மூலம் சென்னை மக்களுக்குப் பல்வேறு போக்குவரத்து வசதிகள் மேம்படவுள்ளன.</p><p>பயணிகள் மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே டிக்கெட் அல்லது ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தும் வசதி கொண்டு வரப்படும்.</p><p>தற்போது போதிய பராமரிப்பின்றி இருக்கும் பறக்கும்ரெயில் நிலையங்கள் அனைத்தும் மெட்ரோ ரெயில் நிலையங்களைப் போலத் தூய்மையாகவும், நவீன வசதிகளுடனும் (லிஃப்ட், எஸ்கலேட்டர், பாதுகாப்பு வசதிகள்) மாற்றப்படும்.</p><p>மெட்ரோ மற்றும் பறக்கும் ரெயில் சேவைகள் ஒன்றோடொன்று தடையின்றி இணைக்கப்படுவதால் பயண நேரம் பெருமளவு குறையும்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-proposes-a-plan-to-pay-off-indias-debt-today-itself#comments</comments><guid isPermaLink="false">53f6ce25-9375-4881-bfc4-2ccf596d4f28</guid><pubDate>Tue, 18 Aug 2026 14:14:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T14:14:17.924Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்,INDIA’S DEBT,இந்தியக் கடன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இந்தியாவின் கடனை இன்றே அடைக்க யோசனைக்கூறிய அமைச்சர் சரத்குமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/3gzutpp2/New-Project-2026-08-18T191757.409.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 2027ம் ஆண்டில் ரூ. 214 லட்சம் கோடியாக இருக்கும் என 2026-27ம் ஆண்டு நிதியாண்டு அறிக்கை தாக்கலில் மத்திய அரசு தெரிவித்தது. </p><p>மார்ச் 2026 வரை மொத்தக் கடன் ரூ.197 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், மொத்த நிலுவைக் கடன்கள் ஓராண்டில் கிட்டத்தட்ட ரூ. 17.6 லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இதனிடையே தமிழ்நாடு அரசின் கடனும் சமீப காலமாக பெரும் விவாதப்பொருளாக மாநில அரசியலில் உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மொத்த கடன்தொகை தற்போதுவரை ரூ.13.18 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில் இந்தியாவின் கடனே இன்றே அடைக்கலாம் என தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஒரு யோசனையை வழங்கியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய அவர்.,</p><p>“முதலமைச்சரின் சேவையை பாராட்டுவோருக்கு சேவை வரி விதித்தால், இந்தியாவின் கடனை இன்றே அடைக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.  </p>]]></content:encoded></item><item><title>‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-being-part-of-the-coalition-government-we-too-are-the-ruling-party-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">8ea53d88-a05b-4243-bb75-ea5af1d114a4</guid><pubDate>Tue, 18 Aug 2026 13:28:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T13:28:42.226Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதான் மூலம் நாங்களும் ஆளுங்கட்சிதான்’ - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6am3cfmf/New-Project-2026-08-18T185820.306.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக - விசிக கூட்டணித் தொடர்பாக முதலமைச்சர் விஜய்யை, விசிகத் தலைவர் திருமாவளவன் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது;</p><p>“தவெகவோடு நாங்கள் இணைந்து 100 நாட்கள் ஆகின்றன. அவர்களோடு இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்பதை நேற்று (ஆக.17) மாநாட்டிலேயே நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.</p><p>ஆளுங்கட்சியோடு பயணத்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற முழக்கத்தையும் மாநாட்டில் முன்வைத்தேன். இன்று கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன்மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி.</p><p>இதனை தமிழ்நாடு மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்களது அரசின் நிலைப்பாடு இருக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-announce-tn-assembly-for-triangle-road-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6932b807-6052-4e03-be35-ec95a15adb2e</guid><pubDate>Tue, 18 Aug 2026 12:29:59 +0000</pubDate><atom:updated>2026-08-18T12:29:59.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister aadav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/5ou1flwr/aadav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a> கூறியதாவது:</p><p>சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.</p><p>சென்னை கன்னியாகுமரி 8 வழிச்சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரியை இணைக்கும் கடல்வழி உயர்மட்ட சாலைத் தொடர், மும்பை - நவி மும்பை கடல் இணைப்புச் சாலை போல் கட்டம் கட்டமாக உருவாக்கப்படும்.</p><p>வெற்றி சட்டமன்ற உறுப்பினர் சாலை மேம்பாட்டுத் திட்டம்.</p><p>நம்ம சாலை செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டம் ரூ.250 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கடல்வழிப் பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையின் கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திருவிக பாலம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும்,</p><p>வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.</p><p>தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து</p><h2>கடுமையாகும் சாலை விதிகள்</h2><p>சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.</p><p>நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.</p><p>ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை</p><p>45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.</p><p>பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை</p><p>நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ஒரே குடும்பத்தில் 3 டாக்டர்கள்! நீட் தேர்வில் வென்று நெசவாளர் மகன்கள் அசத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-doctors-in-one-family-weaver-sons-crack-neet#comments</comments><guid isPermaLink="false">05ef3ac8-f141-4e96-ab8b-c5e092d49692</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:45:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:45:17.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நெல்லை,NeetExam,Tirunelveli,மருத்துவக்கல்லூரி,தமிழ்நாடு,GovtSchoolStudents,MedicalSeats</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ GovtSchoolStudents]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/90uxfu6m/neet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி ராம்குமார் - மங்கையர் திலகம் தம்பதியின் மூன்று மகன்கள், அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துப் பெருமை சேர்த்துள்ளனர்.</p><h2>விடாமுயற்சி<strong>யால் வெ</strong>ன்ற மூத்த மகன்</h2><p>ராம்குமாரின் மூத்த மகனான வெங்கட் ஸ்ரீ, கடந்த 2023-ஆம் ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து 2 ஆண்டுகள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-controversy-aiadmk-congress-clash">நீட் தேர்வு </a>எழுதியும் போதிய மதிப்பெண் கிடைக்காத சூழலில், சோர்ந்து போகாமல் விடாமுயற்சியுடன் மீண்டும் தேர்வு எழுதி 440 மதிப்பெண்கள் பெற்றார்.</p><h2>ஒரே முயற்<strong>சியில் சாதித்த</strong> இரட்டையர்கள்</h2><p>அண்ணன் வழியைப் பின்பற்றி, அவரது இரட்டைச் சகோதரர்களான அருண் மற்றும் தரண் ஆகிய இருவரும் இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்து முதன்முறையாக நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்று அசத்தினர்.</p><h2>மருத்து<strong>வக் கல்லூரிக</strong>ளில் இடம்</h2><p>அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சகோதரர்களுக்கும் சேர்க்கை உறுதியானது. மூத்த மகன் வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்துள்ளன. வறுமை சூழலிலும் விடாமுயற்சியால் சாதித்த இந்தச் சகோதரர்களுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sports-is-my-caste-religion-language-family-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">9029d015-b6da-47b8-aa0b-5088545ba032</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:40:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:40:51.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tvk,TNassembly meeting,AadhavArjuna,ஆதவ்அர்ஜுனா,SportsDevelopment,OlympicMission,தமிழகசட்டப்பேரவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/524pxsc2/Aadhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது விளையாட்டுக்கான முக்கிய அறிவிப்புகளையும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும் விளையாட்டு துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா </a>கூறியுள்ளார்.</p><h2>இது குறித்து அவர் கூறியதாவது:-</h2><h2>ஜெயலலிதாவை போல் தனித்து நின்று வெற்றி</h2><p>"2016-ல் புரட்சித்தலைவி ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றார். அதேபோல் 2026-ல் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து நின்று முதல்வர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்" என அமைச்சர் ஆதவ் தெரிவித்தார். "மக்கள் துணையுடன், இளைஞர்கள் துணையுடன், தமிழக மக்கள் துணையுடன் ஆட்சியை பிடித்துள்ளார் முதல்வர் விஜய். </p><p>3 வருடத்தில் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற முடியுமா, பூத் இருக்கா, ஏஜெண்ட் இருக்கா என கேட்டார்கள். ஆனால் 41 எதிர்கட்சிகளை எதிர்த்து இந்த வெற்றி சாத்தியமானது" என அவர் பேசினார்.</p><h2>அண்ணாவின் கனவு நிறைவேறியது</h2><p>"அண்ணாவை போல் ஒரு இளைஞர் கூட்டத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் முதல்வர் விஜய். அண்ணா கூறியதை போல இளைஞர்களுக்கு வேகமும் அதிகம், விவேகமும் அதிகம்" என ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.</p><p>"சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாத அண்ணா கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் இருப்பவர்கள் பண்ணையாரின் பிள்ளைகள் அல்ல, மன்னர் ஆட்சியின் பிள்ளைகள் அல்ல. அம்பேத்கர் கண்ட கனவு இன்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. </p><p>21 தலித் உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்" என்றார்."1 ரூபாய் காசு செலவு செய்யாமல் இங்குள்ள தவெக எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்" என்றும் அவர் பெருமையுடன் கூறினார்.</p><h2>விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் - புதிய திட்டங்கள்</h2><p>விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, "விளையாட்டுதான் என்னுடைய சாதி, மதம், மொழி, குடும்பம்" என்றார். புரட்சித்தலைவி அம்மாவின் Sports Development Authority திட்டத்தின் கீழ் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாணவர்களில் ஒருவராக தான் இருந்ததாகவும், நேரு ஸ்டேடியத்தில் மாநிலத்திற்காக விளையாடிய தேசிய அளவிலான பாஸ்கெட்பால் வீரர் என்றும் தெரிவித்தார்.</p><p>"இங்கேயே 3 பாஸ்கெட்பால் வீரர்கள் உள்ளனர். நிதியமைச்சர் மரிய வில்சன்,  முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி, சபாநாயகர் ஜெ.எஸ்.டி பிரபாகர் உட்பட பலரும் விளையாட்டு பின்னணியில் இருந்து வந்தவர்கள்" என கூறினார்.</p><p>"100 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் ஒலிம்பிக் பதக்கம் வாங்கவில்லை. இதை மாற்ற '8 to 18' என்ற புதிய திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும். </p><p>விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படும். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்கும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள்- 17 ஆகஸ்ட் 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-17-august-2026#comments</comments><guid isPermaLink="false">e5056155-d3e7-4ac5-831d-27ef01f8d24e</guid><pubDate>Mon, 17 Aug 2026 04:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:19:16.665Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/obhwuvef/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-today-debates-on-demands-forg-grants-session-begin">மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டசபையில் இன்று தொடக்கம்</a></p><p>4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று சட்டசபை கூட்டத்தொடர் கூடியது.</p><p>சட்டசபையில் இன்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>100-வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள தவெக ஆட்சிக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>மக்களின் நாடித்துடிப்பை அறிந்து தவெக அரசு பல துறைகளில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது - சபாநாயகர்</p><p>வளமான சமத்துவமான ஊழலற்ற தமிழ்நாடு என்ற கட்டமைப்பை முதல் 100 நாட்களில் செயல்படுத்தி உள்ளது தவெக அரசு  - சபாநாயகர்</p><p>கோவை அமுதன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம் - திமுக எம்எல்ஏ வேலு</p><p>கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் ஏற்கப்பட்டுள்ளது - சபாநாயகர்</p><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி</p><h2>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரை</h2><p>கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளது.</p><p>கோவை கல்லூரி மாணவன் கொலையை ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகன் கோஷ்டி மோதலால் கொலை என கூறினார். இரு தரப்பாக பிரிந்து அடித்துக்கொண்டால் தான் கோஷ்டி மோதல், அமுதனை 20 பேர் அடித்துள்ளனர், இது கொலை. </p><p>அமுதனின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஆதரவு கூறினேன்.</p><p>போதைப்பொருள் புழக்கம் பற்றி தகவல் அளித்ததால் தான் அமுதன் கொலை என அவரின் பெற்றோர் திட்டவட்டம்.</p><p>கோவையில் மட்டுமல்ல சென்னை திருவொற்றியூர் பள்ளி மாணவன் தனுஷ் போதை பழக்கத்தை தட்டிக்கேட்டதால் கொலை.</p><p>சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கழுத்தறுத்து கொலை.</p><p>கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொலைகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>கொலை மட்டுமல்ல பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.</p><p>100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு, 100 நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும் - உதயநிதி</p><p>போதைக்கு எதிரான தொடர் விழிப்புணர்வு, வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி கோரிக்கை விடுத்தார்.</p><h2>அதிமுக எம்எல்ஏ காமராஜ் உரை</h2><p>விடுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை, பயன்பாட்டை புகார் தந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>மாணவன் தாக்கப்பட்ட பின் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.</p><p>மைதானத்தில் வைத்து மாணவன் அமுதனை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் 20 பேர் கொண்ட கும்பல் கொலை செய்துள்ளது.</p><p>செல்போன் சம்பந்தப்பட்ட சீனியர் ஜூனியர் சம்பவம், கோஷ்டி மோதல் என காவல்துறை அதிகாரியே சொல்கிறார்.</p> <h2>பாமக எம்எல்ஏ கணேஷ் குமார்</h2><p>போதைப்பொருள் 15 வயது மாணவர்கள் இடையே புழக்கத்தில் உள்ளது.</p><p>கடந்த ஆட்சியில் இருந்த போதைப்பொருள் புழக்கம் போன்றவை தற்போது தவெக ஆட்சியிலும் தொடர்வது வேதனை தருகிறது.</p><p>மாணவர்கள் கொலை விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் கடும் தண்டனை வழங்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ போஜராஜன்</p><p>கஞ்சா போதை பழக்கமே கல்லூரி, பள்ளிகளில் மாணவர்கள் தாக்குதலுக்கு காரணமாக உள்ளது - எம்எல்ஏ செல்லசாமி</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல்   காவல்துறையை களை எடுத்து கரைபடியாத கரங்களாக கொண்டு வர வேண்டும் - எம்எல்ஏ செல்லசாமி</p> <h2>காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கட்பட் உரை</h2><p>இரும்புக்கரம் கொண்டு அடக்கினாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் போதைப்பொருளால் அசம்பாவிதம் நடக்கிறது.</p><p>பள்ளி, கல்லூரிகளில் மாணவ அமைப்புகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்.</p><p>மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும் -  தாரகை கட்பட்</p><p>கோவை அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>இரண்டாமாண்டு பயிலும் அமுதனின் நண்பனுக்கும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையிலான மோதலில் தாக்கி உள்ளனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>அமுதன் இறந்ததை தொடர்ந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>அமுதன் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. பழிவாங்கல் காரணமாகவே கொலை என தெரிய வந்துள்ளது.</p><p>போதைப்பொருள் புகார் தந்தவரின் தகவலை போலீசார் கசிய விட்டது என எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்.</p><p>போதைப்பொருள் குறித்து புகார் அளித்தவரின் தகவலை போலீசார் கசியவிட்டதாக கூறுவதில் உண்மையில்லை. போதைப்பொருள் தொடர்பாக புகாரளித்தால் கொலை என சித்தரித்து உண்மையை திசை திருப்ப வேண்டாம்.</p><p>கோவை மாணவன் அமுதன் கொலையில் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை.  கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் எப்படி இருந்தது என நாம் அறிந்ததே.</p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஜாபர் சாதிக் உடன் கடந்த ஆட்சியில் முதல்வரின் குடும்பத்தினரிடம் தொடர்பு உள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஜாபர் சாதிக் உடன் திமுக ஆட்சியில் இருந்த முதல்வர் உடன் தொடர்பு என அமைச்சர் குற்றம்சாட்டியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>ஒரு அமைச்சரே ஐபிஎல் போட்டியின்போது போதைப்பொருள் பயன்படுத்தியது வீடியோவாக வெளியாகி உள்ளது - உதயநிதி</p><p>ஐபிஎல் போட்டியில் தவெக அமைசசர் பவுடர் என உதயநிதி பேசியதும் தவெக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மாத்திரை நுணுக்கியதாக கதைவிட்ட தவெக அமைச்சரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? </p><p>போதைப்பொருள் கடத்தல் மன்னன் விவகாரத்தில் திமுக உடனடி நடவடிக்கை எடுத்தது - உதயநிதி</p><p>ஸ்டேடியத்தில் நடந்தவற்றை பற்றி விளக்கம் அளித்துவிட்டேன், ஆதாரம் இன்றி தேவையின்றி பேசக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் தான் அந்த நிகழ்வு நடந்தது, அப்படியென்றால் ஸ்டேடியம் வளாகத்தில் போதைப்பொருள் விற்றார்களா?  - அமைச்சர் சரத்</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்கப்பட்டது என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என் அமைச்சர் சரத் கேள்வி எழுப்பினார்.</p><p>கோர்ட்டில் இருக்கும் வழக்கு பற்றி ஏன் பேசுகிறார்? பவுடர் பயன்படுத்தியது பற்றி மட்டும் அமைச்சர் பதில் தரட்டும் - கே.என்.நேரு</p><h2>கோவை மாணவர் விவகாரம் - அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>கோவை மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மாணவர் தனுஷ் கொலையில் எந்தவித சார்பும் இன்றி காவல்துறை விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>மாணவர் கொலை விவகாரத்தில் சார்பு தன்மை இன்றி நேர்மையாக காவல்துறை விசாரணை நடைபெறும்.</p><p>கொல்லப்பட்ட மாணவர்ன தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தவெகவின் 100 நாள் ஆட்சி, அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளம். தவெக ஆட்சியை உருவாக்கிய இளைஞர்கள், பெண்களுக்கு நாங்கள் என்றும் உண்மையாக இருப்போம்.</p><p>மாணவர் கொலை வழக்கு விசாரணையில் எவ்வித அழுத்தம் இருக்காது. முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு குழு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க தவெக அரசு உறுதியாக உள்ளது.</p><p>நாங்கள் எழுந்தால் நீங்கள் பேசவே முடியாது என்று அமைச்சர் ஆதவ் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் உறுதியாக இல்லை.</p><p>போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால் தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>திமுக ஆட்சியில் தான் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் 40 சதவீத போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இது காவல்துறை கொடுத்த அறிக்கை - அமைச்சர் ஆதவ்  </p><p>போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாக தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தனர் என்ற அமைச்சர் ஆதவின் பேச்சுக்கு பேரவையில் அமளி</p><p>கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கக்கூடாது - எ.வ.வேலு</p><p>கேள்வி நேரத்திலும் கவன ஈர்ப்பு தீர்மான நேரத்திலும் குற்றச்சாட்டு கூறக்கூடாது என்பது தான் பேரவை விதி - எ.வ.வேலு</p><p>கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானத்தில் அரசு விளக்கம் தான் கூற வேண்டும், பதில் குற்றச்சாட்டு கூறுவது அவை மரபு அல்ல - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஆதவ் பேச்சிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி?</p><p>திமுக ஆட்சியை குறை சொல்ல புகைப்படம் காட்டும் அமைச்சரே நாங்கள் எடுத்த நடவடிக்கை குறித்து சான்று தருகிறார் - உதயநிதி</p><p>இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.</p><p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எதற்காக நாங்கள் அமர்த்திய அதிகாரிக்கு முக்கிய பதவி தந்தீர்கள்?  - உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு தவெக அரசே விருது தந்தது ஏன்?- உதயநிதி</p><p>எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என கூறி பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><p>சட்டசபையில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சம்பந்தமே இல்லாமல் பேசுவதால் நேரம் வீணாகிறது - எடப்பாடி பழனிசாமி</p><h2>மேகமலை விவகாரம் - தொடர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</h2><p>மேகமலையில் வசித்து வரும் பழங்குடியினர் உள்ளிட்ட மக்களை வெளியேற்றக்கூடாது - அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><h2>அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>மேகமலையில் 98 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.</p><p>மேகமலை விவகாரத்தில் அரசு கொள்கை முடிவெடுத்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை.</p><p>மேகமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்து அப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.</p><h2>எம்எல்ஏ செல்லசாமி உரை</h2><p>மேகமலையை காப்புக்காடு என அறிவித்த நிலையில் வனத்துறை அதிக கட்டுப்பாடு விதித்துள்ளது.</p><p>வனத்துறையினர் கெடுபிடிகள் காரணமாக விளைபொருளை விற்க கூட முடியாமல் மேகமலை மக்கள் தவிக்கின்றனர்.</p><p>சாலை, போக்குவரத்து, குடிநீர், பள்ளிக்கூடம், ரேஷன் உள்ளிட்ட வசதிகளை தமிழ்நாடு அரசே செய்து கொடுத்துள்ளது.</p> <p>உச்சநீதிமன்றமே சொந்த நாட்டு மக்களை துணை ராணுவம் கொண்டு வெளியேற்ற கூறியது வேதனை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் பட்டா வழங்கியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா உரை</h2><p>மேகமலை - வருசநாடு மலைகிராம மக்களை வெளியேற்றுவததை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>உச்சநீதிமன்றத்தில் கடந்த கால அரசு சரியாக வாதாடாததே இந்த நிலைக்கான காரணம்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார் உரை</h2><p>2009 திமுக ஆட்சியில்தான் மேகமலை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டது.</p><p>2009-ல் காப்புக்காடாக அறிவித்தபோது திமுக முறையாக கையாண்டிருந்தால் இந்த இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்காது.</p><p>மேகமலை விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த தவறுகளை தவெக அரசு செய்யாது.</p><p>மேகமலை விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் தவெக அரசு மேற்கொள்கிறது. </p><p>15 ஆண்டுகளாக மக்கள் போராடுகின்றனர். கடந்த கால ஆட்சியில் இந்த வழக்குகள் முறையாக கையாளப்படவில்லை.</p><p>2025 முதல் 2026-ம் ஆண்டு வரை ஆய்வு செய்தபோது முறையான ஆதாரம் கொடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுகவை குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>திமுக அளித்த இறுதி அறிக்கை பெயரில் தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்து அறிவித்துள்ளது.</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக செய்த ஒட்டுமொத்த தவறின் காரணமாகத்தான் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.</p><p>திமுக தவற விட்ட நிலையில் எதை வைத்து மேகமலை மக்களை காப்பாற்ற போகிறோம் என 3 நாட்களில் தெரிவிப்போம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மேகமலை விவகாரத்தில் திமுக குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்</p><p>சட்டசபையில் 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 100-வது நாள் இன்று.</p><p>மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற மாபெரும் தூணை தூக்கிப் பிடிக்க என்னிடம் ஒப்படைத்த முதல்வருக்கு நன்றி.</p><p>சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மீதான மானிய கோரிக்கை மீதும் விவாதம் தொடங்கியது. திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>கலைஞரின் கொள்கை பிடிப்பும் மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் கொண்ட இளம் தலைவர் உதயநிதி.</p><p>திமுக ஆட்சியில் 400 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்க குறிப்பு தவெக ஆட்சியில் 300 பக்கமாக குறைந்துள்ளது. </p><p>பக்கங்கள் தான் குறைந்துள்ளன. தவெக ஆட்சியில் கொள்கை, லட்சியங்கள் குறையவில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி</p><p>தவெக அரசின் லட்சியங்கள் குறையவில்லை. லட்சியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசாக தவெக அரசு உள்ளது - செங்கோட்டையன்</p><h2>திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன் உரை</h2><p>திமுக ஆட்சியில் 27 லட்சம் பேருக்கு பட்டா வழங்கினோம். சொன்னது எதையும் தவெக அரசு நிறைவேற்றவில்லை.</p><p>கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சியில் 77,000 பேருக்கு பட்டா வழங்கினோம்.</p><p>சென்னையில் மீட்கப்படாமல் இருந்த தோட்டக்கலை சங்கம், கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தவர் ஸ்டாலின்.</p><p>திமுக ஆட்சிக்காலத்தில் கனமழை, வெள்ளம், புயல் ஏற்பட்ட நிலையில் ரூ.5,000 கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>தவெக அளித்த வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகை வழங்காதது ஏன்? - திமுக எம்எல்ஏ சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>100 நாட்கள் தான் முடிந்தது, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>மகளிர் உரிமைத்தொகையை 28 மாதங்களுக்கு திமுக தரவில்லை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் தான் தந்தது - செங்கோட்டையன்</p><p>கொரோனா பெருந்தொற்றின் காரணமாகத்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக தாமதமாக தந்தது - சாத்தூர் ராமச்சந்திரன்</p> <p>திமுக ஆட்சியின் முந்தைய அதிமுக காலத்தில் தான் கொரோனா பெருந்தொற்று வந்தது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>கொரோனா காலத்தில் கைகொடுக்காதீர் என்று தான் சொன்னார்கள். உரிமைத்தொகை தராதீர் என சொல்லவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் கிண்டல்</p><p>பட்டா கொடுத்தீர்கள், ஆனால் இடம் இல்லையே என்று கேள்வி எழுப்பிய மக்கள் தான் திமுகவுக்கு ஓட்டு போடவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கலாம், ஆனால் திமுக ஆட்சியில் நாங்கள் 27 லட்சம் பட்டா வழங்கி உள்ளோம் - சாத்தூர் ராமச்சந்திரன்</p><p>முறைகேடு நடந்ததாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஒப்புக்கொண்டதற்கு நன்றி - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>தவெக அரசு பொறுப்பேற்ற 100-வது நாளையொட்டி 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.</p><p>தமிழ்நாட்டு விவசாயிகள் நமது உயிர்நாடி - முதலமைச்சர் விஜய்</p> <p>திமுக தலைவர் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியதற்காக முதலமைச்சர் விஜய் பேரவையில் வருத்தம் தெரிவித்தார்.</p><p>தமிழக மக்கள் நம் உயிர் என்றால் விவசாயிகள் நம் உயிர்நாடி, சாதி மதம் என அனைத்திற்கும் அப்பாற்பட்ட தொழில் விவசாயம் - முதலமைச்சர்</p><p>தமிழ்நாட்டில் விவசாயிகளின் பயிர்க்கடன் கூடுதலாக தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு </p><p>75 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி.</p><p>ரூ.75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி.</p><p>ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35,000 தள்ளபடி - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு கற்றுக்கொடுங்கள்  </p><p>சட்டமன்ற கண்ணியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஓ.பன்னீர்செல்வம் கற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p>முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சி தலைவர் எழுந்திருக்க வேண்டும் - அமைச்சர் ரமேஷ் பேச்சால் அவையில் சலசலப்பு</p><p>முன்னாள் முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்றதில்லை. அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை - கே.என்.நேரு</p><p>அதிமுக ஆட்சியில் நீட் கொண்டு வரப்படவில்லை. 2011, 2012ல் தான் நீட் தொடர்பான அறிவிக்கை வந்தது - தளவாய் சுந்தரம்</p><h2>தளவாய் சுந்தரம் உரை</h2><p>தமிழ்நாட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p><p>அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி.</p> <p>2017-ம் ஆண்டு தான் நீட் தேர்வு வந்தது - அமைச்சர் ராஜேஷ் தளவாய் சுந்தரம்குமார்</p><p>நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோரை ராகுல் சந்தித்தார் - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><p>விரும்பாத மாநிலங்களுக்கு நீட் இல்லை 2014-ல் ராகுல் காந்தி வாக்குறுதி - அமைச்சர் ராஜேஷ் குமார்</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>2010-ம் ஆண்டு டிசம்பரில் நீட் அறிவிக்கை வந்தது.</p><p>காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது.</p><p>நீட் தேர்வுக்கு விலக்கு தேவை என்பதே அதிமுகவின் கொள்கை.</p> <p>மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறது.</p><p>மதுரவாயல் தொகுதியில் பட்டா பிரச்சனை அதிகமாக உள்ளது - தவெக எம்எல்ஏ ரேவந்த் சரண்</p><h2>ஓ.பன்னீர்செல்வம் உரை</h2><p>பேரவைக்கு சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது தான் மரபு. </p><p>முதலமைச்சர் வரும்போது அவையில் அனைவரும் எழுந்து நிற்பது மரபு இல்லை. </p> <p>சபாநாயகருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை - சபாநாயகர்</p><h2>சபாநாயகர் பேச்சு</h2><p>தமிழர் பண்பாட்டை கடைபிடித்து மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம்.</p><p>முதலமைச்சர் விஜய் வரும்போது இ.பி.எஸ். எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.</p><p>எழுந்து நிற்பது அவரவர் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. </p> <h2>அமைச்சர் ஆனந்த் உரை</h2><p>அம்மா முதலமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுந்து நிற்பார். குனிந்தபடி நிற்பார் அதை உலகமே அறியும்.</p><p>தலைவர் தளபதிக்காக மட்டுமே எங்கள் எல்லோருக்கும் மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.</p><p>ஏனென்றால் தளபதி முதலமைச்சராக வர வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  அதன்  அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்தார்கள்.</p> <p>நீட் தேர்வை இந்த அரசு எந்தளவிற்கு எதிர்க்கிறதோ அந்த அளவிற்கு நெக்ஸ்ட் தேர்வையும் கண்டிப்பாக எதிர்ப்போம் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும் - வைத்தியலிங்கம்</p><h2>பாமக எம்எல்ஏ வைத்தியலிங்கம் உரை</h2><p>கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் பொன்னேரிக்கு நீர் கொண்டு வர வேண்டும்.</p><p>முந்திரியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். </p><p>விருத்தாசலம் - கும்பகோணம் சாலை 4 வழிச்சாலையாக்க வேண்டும்.</p><p>இயற்கை சீற்றங்களுக்கு நிரந்தர நிவாரண திட்டம் தேவை.</p><p>கும்பகோணம், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும்.</p> <h2>அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</h2><p>அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுப்படுத்தி காங்கேயம் பகுதியை இணைக்க வேண்டும்.</p><p>காங்கேயத்தில் தேங்காய், அரிசி உற்பத்திக்காக புதிய தொழிற்பேட்டை அவசியம்.</p><p>தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ.3 கோடியை ரூ.7 கோடியாக உயர்த்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.</p><p>வெள்ளவயலை தனி வட்டாரமாக அறிவிக்க வேண்டும்.</p><p>அமராவதி ஆற்றின் உபரி நீரை நீரேற்றம் செய்து காங்கேயம் தொகுதிக்கு வழங்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நடராஜ் உரை</p><h2>திமுக எம்எல்ஏ லெட்சுமணன் உரை</h2><p>3.2% மட்டுமே மருத்துவ கட்டமைப்புக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>செவிலியர்கள் பணி நிரந்தரம் - பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.</p> <h2>அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ். மணியன் உரை</h2><p>15 வகையான நோயாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை போதாது, ரூ.10,000- ஆக உயர்த்த வேண்டும்.</p><p>எந்த நேரத்திலும் உடல் கூறு ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டும். </p><h2>வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பதிலுரை</h2><p>வருவாய்த்துறை சேவை துறையாக மாறி உள்ளது. வருவாய்த்துறையில் 26 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><p>15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>100 நாட்களில் சுமார் 39 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி உள்ளது வருவாய்த்துறை.</p><p>முதலமைச்சர் விஜய் ஒரு தீர்க்கதரிசி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/shock-in-assam-tribal-schoolgirl-sexual-assault-accused-shot">அசாமில் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர் மீது துப்பாக்கிச்சூடு!... </a></p><p>* விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிக்க முயன்றதால் காவல்துறை அவரைக் காலில் சுட்டுப் பிடித்துள்ளது. </p><p>*அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிராங் மாவட்ட சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் துருபா போரா தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/546-crimes-in-100-days-dmk-legal-wing-deputy-secretary-parandhaman">100 நாளில் 546 குற்றச் சம்பவங்கள்: திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்</a></p><p>* இந்த 100 நாள் ஆட்சி மக்களுக்கான சர்க்கார் அல்ல, வெறும் சர்க்கஸ் சர்க்கார்!</p><p>* நாளுக்கு நாள் நாசமாகும் தமிழ்நாடு இது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangkok-gun-market-thailand-tightens-rules-traders-protest">பாங்காக் துப்பாக்கி சந்தையில் தாய்லாந்து அரசின் புதிய கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் கொந்தளிப்பு!... </a></p><p>*அரசின் இந்தத் தொடர் கட்டுப்பாடுகள் காரணமாகப் பல தசாப்தங்களாகத் இயங்கி வந்த பாரம்பரிய துப்பாக்கிக் கடைகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன.</p><p>*ஆசிய கண்டத்திலேயே அதிகளவில் பொதுமக்களிடம் துப்பாக்கிகள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து தாய்லாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு: அமைச்சர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sarathkumar-speech-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">0ae4a793-bddb-4dc4-9ab2-b23e6dce8b8f</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:10:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:10:46.182Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Govt employees,TN assembly,தமிழக சட்டசபை |,அரசு ஊழியர்கள்,Minister Sarathkumar,அமைச்சர் சரத்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister sarathkumar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/fodn4hk5/sarath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் பதிலளித்துப் பேசியதாவது:</p><p>அரசு பெண் ஊழியர்களின் 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும்.</p><p>போட்டித் தேர்வுக்கு தயாராகும் ஆர்வலர்களுக்காக வெற்றி பாதை செயலி உருவாக்கப்படும்.</p><p>ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சமூக ஊடக கண்காணிப்பு மையம் ஏற்படுத்துதல்.</p><p>தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கண்காணிப்பு அறையுடன் கூடிய சிசிடிவி கேமரா அமைப்பு ஏற்படுத்துதல்.</p><p>பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் நவீன கணினி மையம் உருவாக்குதல்.</p><p>பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைத்தல்.</p><p>அரசுப் பணியாளர்களுக்கான இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சியில் கூடுதலாக சட்டம் மற்றும் விதிகளை இணைத்தல்.</p><p>போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அறிவுசார் மையங்களுடன் இணைத்தல்.</p><p>எளிமை ஆளுமைத் திட்டத்தின்கீழ் 150 அரசு சேவைகள் வழங்குதல்.</p><p>டிஎன்பிஎஸ்சி கூடுதல் இணைப்பு கட்டிடம் ரூ.5.12 கோடி செலவில் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>காந்தி, நேரு மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும்: கார்கே தடாலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vante-mataram-issue-case-should-be-filed-against-gandhi-and-nehru-too-kharge-slams#comments</comments><guid isPermaLink="false">0da8de1a-643b-499c-aa5b-e544b6a69387</guid><pubDate>Tue, 18 Aug 2026 11:00:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T11:00:17.331Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,கார்கே,Kharge,sonia gandhi,சோனியா காந்தி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கார்கே- சோனியா காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8ln9aiea/Kharge001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன உள்ளது. தேசிய பாடலாக வந்தே மாதரம் உள்ளது. தேசிய கீதம் பாடலுக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அத்துடன் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.</p><h2>வந்தே மாதரம்</h2><p>தேசிய பாடலான வந்தே மாதரம் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கும், தேசிய கீதத்திற்கும் இணையான சட்டப் பாதுகாப்பை வழங்குவதற்கும் 2026 ஜூலை மாதத்தில் (The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற வந்தே மாதரம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று சட்டமாகியுள்ளது.</p><p>இச்சட்டத்தின் கீழ் இப்பாடலை வேண்டுமென்றே பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், பாடலின் ஆறு பத்திகளையும் (Stanzas) முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சட்டம் நிறைவேற்றதுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின்போது பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.</p><h2>காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றியபோது சர்ச்சை</h2><p>அந்த வகையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது இரண்டு பத்திகள் பாடப்பட்ட பின்னர், அவற்றை சோனியா காந்தி நிறுத்தச் சொல்வது போன்று சைகை காட்டியது போன்ற செய்தி வெளியானது. ஆனால், சோனியா காந்தி, கார்கேவுக்கு நாற்காலிதான் கேட்டார். பாடலை நிறுத்தச் சொல்லவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.</p><p>இதற்கிடையே வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகார் அளிக்கப்பட்டது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-</h2><p>அவர்கள் என்ன புகாரை பதிவு செய்யப் போகிறார்கள்? மகாத்மா காந்தி பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் நாங்களும் பாடினோம். ஜவஹர்லால் நேரு பாடியதையும் நாங்கள் பாடினோம். கடந்த 18 ஆண்டுகளாக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பாடியது உட்பட, அவர்கள் பாடியவற்றையே நாங்களும் பாடி வருகிறோம். மேலும், 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், இத்தனை ஆண்டுகளாக அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பாடி வரும் அதே வந்தே மாதரம் பாடலைத்தான் அவரும் பாடினார்.</p><p>இது ஒரு குற்றம் என்றால், கடந்த 18 ஆண்டுகளாக அவர்களும் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம். இதுவே குற்றம் என்றால், மகாத்மா காந்தி மீதும் வழக்குத் தொடருங்கள். நேரு மீதும் வழக்குத் தொடருங்கள்.</p><p>மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-districts-likely-to-experience-heavy-rain-today-and-tomorrow#comments</comments><guid isPermaLink="false">a3059989-dd9a-4205-9a2c-2fabcec3394a</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:23:44.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/17rnn3gv/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p><p>திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 22-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 22-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு உள்ளது? - உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-wrong-with-dropping-the-disqualification-proceedings-against-the-aiadmk-mlas-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-wrong-with-dropping-the-disqualification-proceedings-against-the-aiadmk-mlas-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">c98d755d-67bc-4079-b83f-c47fba182351</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:03:03.338Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6hjx1wij/New-Project-2026-08-18T153231.546.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை கைவிட்டதில் என்ன தவறு? - உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6hjx1wij/New-Project-2026-08-18T153231.546.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு, கடந்த மே 13-ந்தேதி நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. </p><p>இந்நிலையில், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைக் கோரிய மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு கடிதம் அளித்தார். </p><p>இதை ஏற்று சபாநாயகர், 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக தெரிவித்ததை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், கட்சி மாறி வாக்களித்தவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை. கொறடா உத்தரவை மீறியதன் மூலம், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள், தாமாக முன்வந்து தங்கள் பதவியை துறந்து விடுகின்றனர். அவர்களின் மன்னிப்பை ஏற்று, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது, அரசியல் சாசன கேலிக்கூத்து என வாதிடப்பட்டது. </p><p>அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த பிரச்னை கட்சிக்கும், உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்னை. பொதுச்செயலாளர் மன்னித்து விட்டதால் அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இதுசம்பந்தமாக மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றார்.</p><p>விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களை மன்னித்து விட்டதால், அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். அவர்கள் ராஜினாமா செய்யவில்லை. மனுதாரர் மூன்றாம் நபர். கட்சி வழக்கு தாக்கல் செய்யவில்லை. </p><p>சட்டப்படி 15 நாட்களில் மன்னித்து, தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதை சபாநாயகர் ஏற்றுள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. தற்போதைய நிலையில் எந்த கட்சித்தாவல் நடவடிக்கையும் இல்லை எனத் தெரிவித்தனர்.</p><p>பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். </p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு! எழும்பூருக்கு பதிலாக தாம்பரம், கடற்கரை நிலையங்களில் இருந்து இயங்கும் ரெயில்கள்- முழு விவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/trains-operating-from-tambaram-and-beach-stations-instead-of-egmore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/trains-operating-from-tambaram-and-beach-stations-instead-of-egmore#comments</comments><guid isPermaLink="false">52059fa4-60a8-4ee5-a6ba-8399fbe457c8</guid><pubDate>Tue, 18 Aug 2026 10:00:45 +0000</pubDate><atom:updated>2026-08-18T10:00:45.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தாம்பரம் ரெயில் நிலையம்,Tambram Railway Station,Beach Station,கடற்கரை ரெயில் நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xamj4p0d/tambaram.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தாம்பரம் ரெயில் நிலையம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/xamj4p0d/tambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து, கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.</strong></em></p><h2><strong>தாம்பரத்தில் இயக்கம்</strong></h2><p>மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம் பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 13-ந்தேதி வரை மன்னார்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக <a href="https://www.maalaimalar.com/topic/தாம்பரம்-ரெயில்-நிலையம்">தாம்பரத்தில்</a> நிறுத்தப்படும். </p><p>திருச்சி-எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம்பர் 9-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையிலும் செப்டம்பர் 21- ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரையிலும்  இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும். </p><p>மும்பை சி.எஸ்.டி- எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை  மும்பையில் இரவு 10.52 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும். </p><h2><strong>சேலம் எக்ஸ்பிரஸ்</strong></h2><p>சேலம்-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை சேலத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும். </p><p>எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 5-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும். </p><p>எழும்பூர்-சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இரவு 11.30 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும். </p><p>தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும் செப்டம்பர் 22-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த ரெயில் மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>“கூடுதலாக உழைத்து த.வெ.க.வைப்போல நாங்களும் ஆட்சிக்கு வருவோம்” - அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-too-will-work-harder-and-come-to-power-just-like-tvk-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-too-will-work-harder-and-come-to-power-just-like-tvk-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">32337ba2-f34d-4e6e-bb3a-9a8c1b564233</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:48:08 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:48:08.393Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ggmmfkik/New-Project-2026-08-18T151731.099.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ File image]]></media:title><media:description type="html"><![CDATA[ “கூடுதலாக உழைத்து த.வெ.க.வைப்போல நாங்களும் ஆட்சிக்கு வருவோம்” - அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ggmmfkik/New-Project-2026-08-18T151731.099.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா டுடே கான்கிலேவ் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டுப் பேசினார். அப்போது.,</p><h2>சாதி கட்சி அல்ல</h2><p>“பாட்டாளி மக்கள் கட்சியை சாதிக் கட்சி என முத்திரை குத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் சமூக நீதிக்கான கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்துள்ள கட்சி. தொடர்ந்து சமூக நீதிக்காக எங்கள் இயக்கம் போராடி வருகிறது.</p><p>இதுபோன்ற கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் கடந்த அறுபது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி ஆட்சி செய்து வந்தார்கள். அதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மூலமாக ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் என்பது தமிழ்நாட்டு மக்கள் கலந்த 20 ஆண்டு காலமாக எதிர்பார்த்த ஒரு மாற்றம்.</p><p>இந்த மாற்றத்தின் மூலமாக பாட்டாளி மக்கள் கட்சி போன்ற வர துடிக்கும் புதிய கட்சிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.</p><h2>சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்படும் கட்சி</h2><p>நீங்கள் தமிழ்நாட்டில் எங்கு சென்று யாரை கேட்டாலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு எங்கள் உறுப்பினர்கள் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை கொல்லி விவரங்களோடு எடுத்து பேசி வருகிறார்கள். </p><p>2031-ல் பாடி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு நாங்கள் மிகத் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறோம். நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கை பிறந்துள்ளது. </p><p>தொகுதி மறுவரையறை  விவகாரத்தை பொருத்த வரையில் நியாயமான தொகுதி மறுவரையறை  வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாடு மக்கள் தொகையை பொருத்தவரையில் உலக மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது தனி நாடாக இருந்தால் 25வது பெரிய நாடாக இருந்திருக்கும். </p><h2>தொகுதி மறுவரையறையில் பாமக நிலைப்பாடு</h2><p>நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 39 எம்பிகளுக்கு பதிலாக 59 எம்பிக்கள் கிடைப்பார்கள். இதன் மூலமாக 20 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்லக்கூடிய நல்ல சூழல் உருவாகும். ஆறரை கோடி மக்கள் இருக்கக்கூடிய இங்கிலாந்து நாட்டில் 650 எம்பிக்கள் இருக்கிறார்கள். </p><p>அங்கு ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 20 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி என்ற நிலை இருக்கிறது. 20 லட்சம் பேருக்கு ஒரு எம்பி எப்படி போதுமானதாக இருக்கும்? சீனாவிலே 3000 எம்பிக்கள் இருக்கும்போது, 145 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய இந்தியாவில் ஏன் 543 எம்பிக்கள் மட்டுமே இருக்க வேண்டும்? </p><p>தொகுதி மறுவரையறை என்பது காலத்தின் அவசியம். அது நியாயமாக நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வலியுறுத்தல். மேலும் தான் மத்திய அமைச்சராக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த அன்புமணி ராமதாஸ், 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட தாக குறிப்பிட்டார். </p><h2>மீண்டும் மத்திய அமைச்சர்?</h2><p>“பிரதமர் மோடியிடம் என்னை அடுத்த மத்திய சுகாதார அமைச்சராக்குங்கள் என்று கேட்கிறீர்களா?” என ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்ப, அதற்கு அன்புமணி ராமதாஸ் “இல்லை, இல்லை, அப்படி இல்லை”.. எங்களுடைய இலக்கு தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் 2031-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர என்று நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். </p><p>அதனால் மத்திய அமைச்சர் பதவி எல்லாம் தேவையில்லை என குறிப்பிட்டார். காவிரி நீர் விவகாரம் குறித்து பேசிய அன்புமணி, “நாம் அனைவரும் அரசியல் ரீதியாக நண்பர்கள். தண்ணீரை அடிப்படையாக வைத்து கர்நாடகாவையும் தமிழ்நாட்டையும் பிரிக்க வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்- பிரேமலதா வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-urges-attacks-on-tamils-must-be-prevented</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-urges-attacks-on-tamils-must-be-prevented#comments</comments><guid isPermaLink="false">add2a516-a611-43a5-880b-bf60e683874f</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:46:12 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:46:12.571Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jn75fqqs/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/jn75fqqs/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று மானியக் கோரிகை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியதாவது:-</p><p>* பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து சட்டமன்ற உறுப்பினராக இந்த அவையில் என்னுடைய கருத்துக்களை தைரியமாக நான் பேசுகிறேன் என்றால், என்னுடைய பெற்றோர் மற்றும் கணவர் கேப்டன் அவர்களிடம் இருந்து வந்த தைரியம் தான்.</p><p>* விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒரு விளையாட்டு வீராங்கனையாக நான் உணர்ந்துள்ளேன்.</p><p>* இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் வருங்காலம்.</p><p>* போதையில் இருந்து இளைஞர்களை மீட்க விளையாட்டு அவசியம்.</p><p>* இளைஞர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவது விளையாட்டு.</p><p>* கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>* சேதமடைந்த மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மேம்படுத்த வேண்டும்.</p><p>* பல இடங்களில் அரசு அலுவலகங்கள் மிகவும் மோசமாக உள்ளன.</p><p>* விருத்தாசலம் அரசு அச்சகத்தை புனரமைக்க வேண்டும்.</p><p>* அரசு கட்டிடங்கள் தனியார் கட்டிடங்கள் போன்று பராமரிக்கப்பட வேண்டும்.</p><p>* சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.</p><p>* நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும். </p><p>* தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை கலைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். </p><p>* அரசு விடுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு தரப்பட வேண்டும். </p><p>* அரசு விடுதிகள் சுத்தம், சுகாதாரம் இல்லாத கட்டிடங்களில் இயங்குகிறது, அதனை சீரமைக்க வேண்டும். </p><p>* தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போதைப்பொருளே காரணம். </p><p>* இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வு.</p><p>* லாக்அப் மரணங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.</p><p>* சபரிவர்மன் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதியுதவி, அரசு பணி வழங்க வேண்டும். </p><p>* தமிழர்கள் கொல்லப்படுவது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கிறது.</p><p>* பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? - அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-says-tvk-government-following-dmk-path#comments</comments><guid isPermaLink="false">6f621f4b-84e0-4543-af3c-11e6ee48e225</guid><pubDate>Tue, 18 Aug 2026 09:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-18T09:02:27.912Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,அண்ணாமலை,annamalai,தவெக அரசு,tvk government,வீ தி லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/gckgrywv/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் கவனத்திற்கு,</p><p>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.</p> <p>கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.</p> <p>சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.</p> <p>நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதலமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழக முதலமைச்சர் திரு <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a> அவர்களின் கவனத்திற்கு,<br><br>திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற… <a href="https://t.co/gaAgiDwJcB">pic.twitter.com/gaAgiDwJcB</a></p>&mdash; K.Annamalai (@annamalai_k) <a href="https://x.com/annamalai_k/status/2089610893688758391?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-meet-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">e44d99a2-a92f-4504-9280-872e15d080f2</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:42:51 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:42:51.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,vijay,Viduthalai chiruthaigal katchi,tvk,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hh0tmwal/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.</strong></em> </p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/திருமாவளவன்">தொல்.திருமாவளவன்</a> சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-</p><p>* அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது தொடர்பான தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்தேன். </p><p>* விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினேன். </p><p>* த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு எப்போதும் உண்டு என முதலமைச்சரிடம் கூறினேன். </p><p>* மக்களின் பார்வையில் தான் முடிவு எடுக்கிறோம், கட்சியின் நலனுக்காக முடிவெடுப்பதில்லை. </p><p>* மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும், அதனை வலுவாக முன்னெடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* மேகமலை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன். </p><p>* போதைப்பொருள் ஒழிப்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. </p><p>* போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப்படையை உருவாக்க முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்தேன். </p><p>* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். </p><p>* த.வெ.க.வுடன் கைகோர்த்துள்ளோம், கூட்டணி அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார்கள். சட்டமன்ற கூட்டத்துக்குப் பின் த.வெ.க. கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறும். </p><p>* த.வெ.க.வுடன் இணைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என மாநாட்டில் உறுதி செய்துள்ளோம். </p><p>* அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் விசிகவுக்கும் ஆளுங்கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தஞ்சையில் நடந்தது என்ன? வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் முதலில் தாக்கினாரா?-வைரல் வீடியோவுக்கு போலீஸ் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-happened-in-thanjavur-did-sub-inspector-attack-youth-first-police-clarifies-viral-video#comments</comments><guid isPermaLink="false">19c5b92f-7e7d-46f9-8059-58bf071efa54</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:16:26 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:16:26.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,Thanjavur,தஞ்சாவூர்,ThanjavurPolice,TamilNaduNews,VCKProtest,தமிழ்நாடுசெய்திகள்,விசிக சாலைமறியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thanjavur-VCKProtest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/nbhkxj9k/tanjay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரைத் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டக் காவல் துறை அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது.</p><h2>விசிகவி<strong>னர் சாலை ம</strong>றியல்</h2><p>தஞ்சை ரெயில் நிலையம் முன்பாக <a href="https://www.maalaimalar.com/news/topnews/alliance-with-tavega-visika-and-tavega-to-journey-together-in-this-political-arena-thirumavalavan">விடுதலைச் சிறுத்தைகள் </a>கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். இதைக் கண்டித்து, அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்கக் கோரி விசிகவைச் சேர்ந்த சுமார் 40 பேர் மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><h2>வாக்குவா<strong>தத்தில் முடிந்த ஹா</strong>ரன் சத்தம்</h2><p>போராட்டம் காரணமாகப் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்த வேளையில், விளார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்துள்ளார். பணிக்குச் செல்ல தாமதமானதால், அவர் தொடர்ந்து ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளார். இதனால் ஆகாஷுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உருவானது.</p><h2>நி<strong>லைமையைக் கட்டுப்படுத்</strong>த முயன்ற காவல் துறை</h2><p>இச்சம்பவம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக மாறாமல் தடுக்கும் பொருட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், ஆகாஷ் காவல்துறையினரை நோக்கித் தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><h2>காவல் துறை அளி<strong>த்த விளக்க</strong> அறிக்கை</h2><p>சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் குறைந்தபட்ச பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தியதாகவும், உடனே ஆவேசமடைந்த ஆகாஷ் அவரது கன்னத்தில் அறைந்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் ஆகாஷைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.</p><p>மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசிய வழக்கு நிலுவையில் இருப்பதை காவல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. காவல்துறை தேவையின்றி வாலிபரைத் தாக்கியதாக வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்றும், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலையத்துறையில் 80 பேருக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் விஜய் வழங்கினார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-provided-appointment-orders-issued-to-80-individuals-in-the-hindu-religious-and-charitable-endowments-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-provided-appointment-orders-issued-to-80-individuals-in-the-hindu-religious-and-charitable-endowments-department#comments</comments><guid isPermaLink="false">ad36af19-ca24-4479-a319-7f4d5cddf72e</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:14:53 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:14:53.353Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,இந்து சமய அறநிலையத்துறை,பணி நியமன ஆணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a837ifbq/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன் முதலமைச்சர் விஜய் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.]]></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/a837ifbq/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</strong></em>  </p><p>விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், 125 நபர்கள் ஒரேநேரத்தில் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம்,  25 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையிலான 24 விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பக்தர்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> இன்று திறந்து வைத்தார். </p><h2><strong>பணிநியமன ஆணைகள் வழங்குதல்</strong></h2><p>இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சமய நிறுவனங்களை நிர்வகித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், சொத்துகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.  </p><p>அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 36 உதவிப் பொறியாளர்கள்  (கட்டுமானம்),  38 உதவி ஸ்தபதிகள், 6 செயல் அலுவலர்கள் (நிலை-1 மற்றும் நிலை-3) என மொத்தம் 80 பேருக்கு  பணி  நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.  </p><figure><img alt="முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/bjj0ybbb/vijay0.jpg" /><figcaption>முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.</figcaption></figure><p>இந்து சமய அறநிலையத் துறைக்காக முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்) மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  </p><p>இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தலைமைச் செயலாளர் சாய் குமார்,  வணிகவரி, பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் குமரகுருபரன், ஆணையர் டாக்டர் டி.ஜி. வினய், கூடுதல் ஆணையர்கள்  துரை ரவிச்சந்திரன்,  ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: முதல்வர் விஜயை சந்தித்துப் பேச கர்நாடக முதல்-மந்திரி சிவக்குமார் திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivkumar-plan-to-meet-tn-cm-vijay-in-chennai-for-south-states-cm-summit#comments</comments><guid isPermaLink="false">d1d7ad21-b056-43f4-9d38-08276eb2c371</guid><pubDate>Tue, 18 Aug 2026 08:07:46 +0000</pubDate><atom:updated>2026-08-18T08:07:46.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DK Shivakumar,டிகே சிவக்குமார்,தமிழக முதல்வர்,tn cm,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay, dk shivkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/8xroe4kn/tn-cm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், முதலமைச்சர் விஜயைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2>நீடிக்கும் பிரச்சனை</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் சொன்னபடி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதில்லை. இதனால் 2 மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை நீடித்து வருகிறது.</p><p>இந்தப் பிரச்சனையை கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் நேரில் சந்தித்துப் பேசி முடிவு காண  முதலமைச்சர் விஜய் திட்டமிட்டார். இந்தச் சந்திப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. </p><p>ஆனால் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. அவரது படத்தின் பேனர்களைக் கிழித்து எறிந்தார்கள். இதனால் பெங்களூரு, மைசூரு உள்பட பல இடங்களில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பயணத்தை தவிர்க்கும்படி கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். இதனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.</p> <p>இந்நிலையில், அமித்ஷா தலைமையில்  நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நாளை இரவு சென்னை வருகிறார். அவர் மாநாடு நடைபெறும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்குகிறார். மறுநாள் மாநாட்டில் பங்கேற்கிறார். </p><h2>சந்திக்க திட்டம்...</h2><p>இந்தத் தருணத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>காவிரியில் அறிவித்தபடி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. மேலும், மேகதாது அணை கட்டும் விஷயத்திலும் சிவக்குமார் உறுதியாக இருக்கிறார்.</p><p>ஆனால் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.</p><p>அதேபோல், காவிரி நீர் தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்.</p><p>இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருவரும் சந்தித்தால் என்ன மாதிரி பலன் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.</p><h2>எம்.ஜி.ஆர். முதல்...</h2><p>ஏற்கனவே, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி குண்டுராவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, 1997-ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுப்ரீம் கோர்ட் ஆலோசனையின்படி அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜே.எச்.பாட்டீலைச் சந்தித்துப் பேசினார். அதேபோல், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2012-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்-மந்திரி ஜெகதீஸ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார். </p><p>இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்-மந்திரியைச் சந்தித்துப் பேசுவது சரியாக இருக்காது என பல எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.</p>]]></content:encoded></item><item><title>மானியக் கோரிக்கையில் எழுந்த நீட் தேர்வு விவகாரம்: காங்., பாஜக உறுப்பினர்கள் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-exam-issue-congress-vs-bjp-members-arguments#comments</comments><guid isPermaLink="false">fd7f7e50-6457-47cb-9230-7f888f04064f</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:52:03 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:52:03.361Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட்- பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6w4e0udr/NEET.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் பேசுகையில், </p><p>* எனது வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சியினருக்கு நன்றி.</p><p>* ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுத்து, கூட்டணி கட்சிக்கு மரியாதை தந்தவர் விஜய்.</p><p>* தவெக பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கான பட்ஜெட்.</p><p>* தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>* காலை உணவுத்திட்டத்திற்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly">காமராஜர்</a> பெயர் சூட்டியதற்கு நன்றி. </p><p>* காங்கிரஸ் திட்டங்களை மாற்றும் பாஜக, நீட் தேர்வை ஏன் மாற்றவில்லை?</p><p>* 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக முயற்சி செய்கிறது.</p><p>* இருமொழிக் கொள்கையை பாதுகாப்பதிலும் காங்கிரஸ் உறுதியாக இருக்கும்.</p><p>* IREL அரிய வகை கனிம நிறுவனத்தால் கடல் அரிப்பு, கடற்கரை சுருங்கி விட்டது.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். </p><p>* மீனவர்கள் கைது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>* கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க கடல் ஆம்புலன்ஸ் தேவை.</p><p>* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அரசு அடக்க வேண்டும்.</p><p>* குளச்சல் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.</p><p>* தாமிரபரணி, கோதையாறு, பரளியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தேவை.</p><p>* கன்னியாகுமரியில் உள்ள அனைத்து குளங்களையும் இணைக்க வேண்டும் என்றார். </p><p>இதனை அடுத்து பேசிய பா.ஜ.க. எம்.எம்.எல்.ஏ. போஜராஜன், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் நீட் வந்தது என தாரகை கத்பட் கூறி விட்டார் என்றார். </p><p>அதற்கு  பதில் அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், </p><p>* நீட் எந்தெந்த மாநிலத்திற்கு தேவையோ அந்த மாநிலத்திற்கு கொண்டு வரலாம் என்று தான் சொன்னோம்.</p><p>* காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஒவ்வொரு சட்டத்தையும் பில் திருத்தம் என்ற பெயரில் அனைத்து சட்டத்தையும் பாஜக அரசு திருத்திக்கொண்டு இருக்கிறது.</p><p>* மக்களுக்கு எது தேவையோ அதை காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்தோம்.</p><p>* அனைத்து திட்டங்களையும் திருத்திக்கொண்டு இருக்கும்போது மாணவர்களுக்கான இந்த திட்டத்தை திருத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? என கேள்வி எழுப்பினார். </p>]]></content:encoded></item><item><title>மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிப்பதற்கு சிபிஐ(எம்) கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-condemns-the-appointment-of-conductors-through-an-external-agency-in-the-metropolitan-transport-corporation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpim-condemns-the-appointment-of-conductors-through-an-external-agency-in-the-metropolitan-transport-corporation#comments</comments><guid isPermaLink="false">83dc3df6-25f6-443d-9215-ca3fada5f0cf</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:27:36 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:27:36.265Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மாநகர போக்குவரத்து கழகம்,பெ சண்முகம்,நடத்துனர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/eypwzwpq/shanmugam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/eypwzwpq/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டுமென  தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</strong></em></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாடு அரசுப் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">போக்குவரத்து கழகங்களில்</a> சுமார் 30,000 காலி இடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அரசுப் போக்குவரத்து கழகங்கள் மக்களின் அன்றாட பயணத் தேவைகளை நிறைவேற்றும் அடிப்படையான சேவை நிறுவனமாகும். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பேர் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயணம் செய்து வருகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவது போக்குவரத்துக் கழகங்களின் மிக முக்கியமான கடமையாகும்.</p><h2><strong>பயன்படாது</strong></h2><p>50 ஆண்டுகளாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து முறையான பயிற்சி வழங்கி சிறப்பான சேவையை போக்குவரத்துக் கழகங்கள் செய்து வந்தன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தனர். இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடர்ந்தது. ஒப்பந்தப் பணியாளர் முறை இடஒதுக்கீட்டை மறுப்பது, சமூக நீதிக்கு எதிரானது, பாதுகாப்பான பயணத்திற்கு பயன்படாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-to-tvk-govt">அரசின்</a> கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி திமுக அரசு மேல்முறையீடு செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்று தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். வழக்கு இப்போதுஉச்சநீதிமன்றத்தில் உள்ளது.</p><p>திமுக அரசு காலிப்பணியிடங்களைப் நிரப்பாமல், ஒப்பந்தப் பணியாளர்களை ‘சால்வாட்’ என்ற நிறுவனம் மூலம் நியமனம் செய்தது. தவெக அரசு தற்போது “எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ்” என்ற உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும்போது, அவர்களுக்கு வாய்ப்பை மறுக்கும் வகையில் உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு ஒப்பந்தம் முறையில் நியமனம் செய்ய ஆணை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் கைவிடப்பட்டு சமூக நீதியும் பாதிக்கப்படும். எனவே, மாநகரப்போக்குவரத்து கழகத்தில் வெளி முகமை மூலம் நடத்துனர்களை நியமிக்க உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிந்தூரி மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ் என்கிற நிறுவனத்திற்கு நிர்வாக பணியாளர்கள் 250 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ஆணை வழங்கியிருப்பதையும் ரத்து செய்ய வேண்டுமெனவும், போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக</p><p>நிரந்தரமான முறையில் பூர்த்தி செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>கட்சி கொடி நிறத்தில் உடை அணிந்திருப்பது  ஏன்? - எம்எல்ஏ தாஹிரா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mla-thahira-explain-why-are-you-wearing-an-outfit-in-the-party-flags-colors#comments</comments><guid isPermaLink="false">f1d18dce-7160-425f-bb50-222d9dbe12c7</guid><pubDate>Tue, 18 Aug 2026 07:04:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T07:04:22.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,தவெக எம்எல்ஏ,TVK MLA</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:title><media:description type="html"><![CDATA[ எம்எல்ஏ தாஹிரா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/qhxmpy17/Thahira.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ராணிப்பேட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. தாஹிரா பேசுகையில், </p><p><em><strong>‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை</strong></em></p><p><em><strong> ஆரிருள் உய்த்து விடும்’</strong></em> </p><p>சட்டசபையில் கம்பீரத்துடன் அமர்ந்திருக்கும் எங்கள் தளபதி அவருக்கே இத்திருக்குறள் பொருந்தும். </p><p>* வாயால் வடை சுட்ட காலம் போய், சுவையான வடை சுட்டு கையில் கொடுக்கும் காலம்.</p><p>* முதலமைச்சரை பேச சொல்லும் கூட்டம், அவர் பேசத் தொடங்கினால் ஓடுகிறது.</p><p>* தலைவருடன் கடந்த 27 ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டில் முதல் பெண் ரசிகர் மன்றத்தில் நான் அந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன்.</p><p>* என்னைப்போன்ற பெண்களுக்கு முக்கிய இடத்தை கொடுத்து இந்த இடத்தில்  நிற்க வைத்து இருக்கிறார்.</p><p>* எந்த அரசியல்வாதிகளும், எந்த அமைப்பில் இருப்பவர்களும் இஸ்லாமிய பெண்களுக்கு முதல் இடம் கொடுத்தது இல்லை.</p><p>* எங்கள் தலைவர் ஆட்சி தொடங்கிய அன்றே எனக்கு கட்சியில் கொள்ளை பரப்பு இணை செயலாளராக பதவி கொடுத்தபோது அவர்களுடன் அமர வைத்து கவுரவித்தார். </p><p>* அந்த கவுரம் என்னை சார்ந்தது மட்டும் அல்ல. இஸ்லாமியர்கள் அனைவருக்குமான பெருமை அளிப்பதுபோல் அன்று நடத்தினார்.</p><p>* அன்றே முடிவு செய்தேன். எந்த கட்சிக்காக இந்த இடத்திற்கு நான் வந்தேனோ சாகும் வரை இந்த ஆடை தான் அணிந்து இருப்பேன். இது என் அடையாளம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தளபதியால் நான்... தளபதிக்காகவே நான்... என்றும் தலைமைக்கும் தளபதிக்கும் விசுவாசத்துடன் என் உயிர் உள்ளவரை நன்றியுடன் நடந்து கொள்வேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-we-must-not-make-promises-to-weavers-and-then-let-them-down#comments</comments><guid isPermaLink="false">246de2c8-2842-4e46-824a-6e1bb6b9e536</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:43:33 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:43:33.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vhm9rl7a/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தல்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி  உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம்,  மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,  கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.</p><h2><strong>சீரழிக்கப்பட்டதன் விளைவு</strong></h2><p>விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில்  விற்பனையும்,  மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.</p><p>கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர் தான் . 1935-ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.</p><p>2025-16ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67  என மொத்தம் 200 விற்பனையகங்களுடன்  கோ-ஆப்டெக்ஸ்  செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.</p><p>தவெக  ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள்.  அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு- மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/conference-of-southern-state-chief-ministers-led-by-amit-shah-begins-tomorrow-in-mamallapuram#comments</comments><guid isPermaLink="false">cb909c4b-2f9a-4568-9330-2e7d7231a802</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:36:01 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:36:01.734Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,அமித்ஷா,Amitshah,தென்மாநில முதல்வர்கள் மாநாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித்ஷா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/l318vib0/amitshah01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</strong></em></p><p>மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் தென் மாநில முதல்- மந்திரிகள் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.</p><p>இந்த நிலையில் இந்த ஆண்டு தென் மாநில முதல்வர்கள் மாநாடு நாளை (19-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆகிய 2 நாட்கள் மாமல்லபுரத்தில் நடக்கிறது.</p><h2><strong>அமித்ஷா</strong></h2><p>மாமல்லபுரத்தை அடுத்துள்ள கோவளம் நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> தலைமை தாங்குகிறார்.</p><p>மாநாட்டில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கேரளம் முதல்-மந்திரி சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி ஆகிய 5 பேரும் பங்கேற்கிறார்கள்.</p><p>மேலும் அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.</p><h2><strong>ஒத்துழைப்பு-பிரச்சனைகள்</strong></h2><p>இந்த <a href="https://www.maalaimalar.com/news/topnews/conference-of-south-indian-chief-ministers-chaired-by-amit-shah">கூட்டத்தில்</a> மாநிலங்களுக்கு இடையயோன ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நாளை (19-ந் தேதி) மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கிறார்கள். பின்னர் காரில் கோவளம் செல்கிறார்.</p><p>இரவு 9 மணி முதல் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரவில் அந்த ஓட்டலில் தங்குகிறார்.</p><h2><strong>தென்மாநில முதல்வர்கள் மாநாடு</strong></h2><p>மறுநாள் (20-ந்தேதி) காலை 10.30 மணிக்கு தென்மாநில முதல்-மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது. மதியம் 1.30 மணி வரை நடக்கும் இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் பல்வேறு விசயங்கள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.</p><p>பின்னர் அனைத்து முதல்-மந்திரிகளுடன் அமித்ஷா மதிய  உணவு அருந்துகிறார். மாலை 2.30 மணி முதல் 3 மணி வரை முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார்.</p><p>மாநாட்டை முடித்துக் கொண்டு மாலை 3 மணிக்கு கார் மூலம் சென்னை விமான நிலையம் புறப்படுகிறார். சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2><strong>பலத்த பாதுகாப்பு</strong></h2><p>மத்திய மந்திரி அமித்ஷா 2 நாட்கள் கோவளம் ஓட்டலில் தங்கி இருப்பதால் ஓட்டல் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>அமித்ஷா மற்றும் முதல்-மந்திரிகள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதல்வர் அறை மாற்றம் ஏன்?- விளக்கம் அளித்த அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-explain-why-is-the-chief-ministers-room-being-changed#comments</comments><guid isPermaLink="false">8b6b5ab6-af23-44ef-b82a-4b168c804555</guid><pubDate>Tue, 18 Aug 2026 06:15:17 +0000</pubDate><atom:updated>2026-08-18T06:15:17.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/oh2q0ytv/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> மானியக் கோரிகை மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து முதல்வர்களும் இருந்த அறையை எதற்காக மாற்ற வேண்டும்?. தமிழ்நாட்டை முன்னேற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்த அறையில் இருந்ததான் இயற்றப்பட்டன. கலைஞர் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதல்வர் செல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். நாமக்கல் கவிஞர் மாளிகை சென்றால் அரசு அலுவலர்கள் உணவு அருந்துவது உள்ளிட்டவற்றில் சிரமம் ஏற்படும் என்றார். </p><p>இதனை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>* வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி அதனை மக்களுக்கே கொடுப்பது போல் சிரித்துக்கொண்டு பேசியிருக்கிறார் எ.வ.வேலு.</p><p>* கடந்த 5 வருட பத்திரிகை செய்திகளை எடுத்து பார்த்தால் பொதுப்பணித்துறையில் ஊழல் மட்டுமே நிறைந்திருக்கும்.</p><p>* முதல்வர் அறை மாற்றத்திற்கான டெண்டர் இன்னும் முடியவில்லை. முதல்வர் அறையை மாற்றுவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரில் கோளாறு என வெளியான செய்தி தவறு.</p><p>* 200 பேர் வரை அமரக்கூடிய வகையில் அறை இருக்க வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார். </p><p>* கலைஞரும், ஜெயலலிதாவும் புதிய தலைமைச்செயலகத்தை கட்ட வேண்டும் என நினைத்தனர்.</p><p>* முதலமைச்சர் தன்னுடைய வசதிக்காக அறையை மாற்றவில்லை, அனைவருக்காகவும் மாற்றுகிறார். </p><p>* தான் மட்டும் நல்ல அறையில் அமர்ந்திருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கவில்லை.</p><p>* முதல்வரை சுற்றி பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரை காண வருவோர் வசதிக்காகத்தான் அறை மாற்றம்.</p><p>* எளிமையை விரும்பும் முதலமைச்சர் விஜய், தன்னை சுற்றி இருப்பவர்களை நினைத்துதான் அறையை மாற்றுகிறார்.</p><p>* முதல்வர் இப்போது இருக்கும் அறையில் முறையான கழிப்பறை வசதி கூட இல்லை என்பதால் மாற்றுகிறோம். </p><p>* அதிகாரிகள் எந்த திட்டத்தை தீட்டினாலும் அமைச்சரின் கவனத்திற்கு வராமல் வெளியிடப்படாது.</p><p>* 5 வருடத்தில் நடைபெற டெண்டர் குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளோம்.</p><p>* நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையிலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தென்னகத்து சூரியன் கலைஞர்.. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் தான் பொருத்தம்  - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kamarajar-name-row-opposition-and-minister-spar-over-renaming-cm-breakfast-scheme-in-tamil-nadu-assembly#comments</comments><guid isPermaLink="false">f31552ba-6af6-4b3d-b7bb-43bfea8416f0</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:59:32 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:59:32.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,rajmohan,Tamil Nadu Legislative Assembly,ராஜ்மோகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/hmf6qc4y/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி கொறடா எ.வ. வேலு முந்தைய ஆட்சியின் சாதனைகளை பற்றி விரிவாக பேசினார். </p><p>மேலும் முதல்வரின்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly"> காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் </a>வைத்தது ஏன்? புதிய திட்டத்தை தொடங்கி அதற்கு காமராஜர் பெயர் வைத்திருந்தால் வரவேற்றிருப்போம் என தெரிவித்தார். </p> <h2>ராஜ்மோகன்</h2><p>இதற்கு பதிலளிக்க எழுந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்,</p><p>"கலைஞரை நாங்கள் மதிக்கிறோம். நேற்று எங்கள் கட்சி உறுப்பினர் அவர் பெயரை சொன்னபோது அதற்கு எழுந்து நின்று வாஞ்சையோடு தாய்மையோடு எழுந்து நின்று வருத்தம் தெரிவித்த முதல்வர் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்.</p> <h2>கலைஞர்</h2><p>தென்னநாடு பெர்னாட்ஷா என்றால் அது அறிஞர் அண்ணா தான். தெற்கில் இருந்து உதித்த சூரியன் என்றால் அது கலைஞர் தான். </p><p>ஆனால் இங்கே பேசும்போது அந்த டேபிள் செய்தது நாங்கள் தான், மைக் செய்தது நாங்கள் தான் என பேசிக்கொண்டிருக்கிறார். இது மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.</p><p>பெயர் மாற்றம் பற்றி பலரும் பலமுறை சொல்கிறீர்கள். நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். 96 க்கு பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி அமையும்போது அவர் பெயர் மாற்றம் பற்றி பேசியிருந்தார்.</p><p>திரைப்பட நகர் ஜேஜே சினி சிட்டி ஆரம்பிக்கப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியும், இந்த பெயரை கலைஞர் ஆட்சி அமைந்த பிறகு ஜேஜே சினி சிட்டியை அதற்கு பொருத்தமான பெயர் மாற்றமாக எம்ஜிஆர் திரைப்பட நகராக மாற்றுகிறேன் என அறிவித்திருக்கிறார்.</p> <p>எனவே பெயர் மாற்றம் காலங்காலமாக நடந்து வருகிறது. அம்மா பசுமை வீடு, கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது. அம்மா மருந்தகம் முதல்வர் மருந்தகமாக மாறியிருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் மினி கிளினிக் ஆக மாறியிருக்கிறது.</p><h2>காமராஜர்</h2><p>ஆனால் நான் 10 இடத்திற்கு போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பார் என்ற கொள்கை தலைவர் காமராஜர் பெயர் தான் இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பொருத்தமானது.</p><p>இந்த திட்டம் ரூ.203 கொடியே 72 லட்சம் செலவில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இரு குறிப்பிட்ட வகுப்பு வரை இருந்த திட்டம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமாக பெயர் இந்த உலகிலேயே இருக்காது.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ev-velu-says-i-acknowledge-that-chief-minister-vijay-is-aware-of-all-the-details#comments</comments><guid isPermaLink="false">64fc62b0-543f-4349-ba4d-ee237d1141f3</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:56:55 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:56:55.848Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தமிழக சட்டசபை,ev velu,எவ வேலு,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- எ.வ.வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/odn4cbfv/evvelu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று 3 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொருளாதரத்தை முன்னேற்ற சாலைகள் தேவை, தி.மு.க. ஆட்சியில் 67,000 கி.மீ. தொலைவு சாலைகள் அமைக்கப்பட்டது. டெண்டர் விலை உயர்த்தி முறைகேடு செய்ய தெரியாது என முதலமைச்சர் விஜய் கூறுகிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார். </p><p>உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், </p><p>முதலமைச்சரை யாரும் வழிநடத்த தேவையில்லை, விரல் நுனியில் தகவல் வைத்துள்ளார் முதலமைச்சர் என்றார். </p><p>இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார். </p><p>இதனை தொடந்து பேசிய எ.வ.வேலு, நடப்பு ஆண்டில் எவ்வளவு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது, எவ்வளவு நிதி ஒதுக்கீடு என விவரம் இல்லை. ஒரு திட்டம் போட்டால் அதற்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு என கொள்கை குறிப்பில் சொல்ல வேண்டும். வெள்ள தடுப்பு பணிகள் குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இல்லை. </p><p>நேற்று எங்களுக்கு சலாம் போட்டவர் தான் இன்று உங்களுக்கு சலாம் போடுகின்றனர், அரசு அலுவலர்கள் பொதுவானவர்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் அப்போதைய அரசு ரத்து செய்தது, பல போராட்டங்கள் நடைபெற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை திமுக அரசின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டது.  அரசு ஊழியர்களுக்காக கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.</p><p>அப்போது குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கிறார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்ததற்கு எ.வ. வேலு எதிர்ப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/velu-raises-periyar-library-delay-and-cm-breakfast-scheme-naming-issue-in-assembly#comments</comments><guid isPermaLink="false">4ec75a39-f4fa-427d-8f1c-853a64c3aefa</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:36:21 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:36:21.989Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Tamil Nadu Legislative Assembly,காமராஜர் காலை உணவுத் திட்டம்,எ.வ. வேலு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:title><media:description type="html"><![CDATA[ எ.வ. வேலு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ylljt2l7/tn-10.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.  </p><p>இதில் எதிர்க்கட்சி திமுகவை சேர்ந்த கொறடா <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81">எ.வ.வேலு </a>பேசுகையில், </p><p>"சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லா ஊரே இல்லை.</p> <h2>பெரியார்</h2><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்து தந்தோம். பெரியார் கொள்கை தலைவர் என தவெக தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 3 மாத காலமாக பெரியார் நூலகத்தை கிடப்பில் போட்டது ஏன்?</p><p>அறிவாலயத்தில் பெரியார் சிலை இல்லை. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியாருக்கு சிலை இருக்கிறது. கோவை தந்தை பெரியார் நூலகத்தை திறக்க வேண்டும்.</p> <h2>காமராஜர்</h2><p>மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தோம். காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?.</p><p>புதிய திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைத்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் முதலமைச்சர் என்ற பொதுவான சொற்றொடரை நீக்கிவிட்டு காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டபோது ஏன் இதற்கு மு.க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என பெயர் வைக்கக்கூடாது எனக் கேட்டேன்.</p> <h2>மு.க. ஸ்டாலின்</h2><p>அதற்கு அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், முதலமைச்சர் என்று வைத்தால் ஒரு தனிப்பட்ட நபரை குறிக்காமல் அடுத்து வரும் அனைத்து முதல்வர்களையும் குறிக்கும், அந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறியதாக எ.வ. வேலு தெரிவித்தார்.</p> <p>உடனே எழுந்த அவை முன்னவர் செங்கோட்டையன், "மானியக்கோரிக்கையை விட்டுவிட்டு காலை உணவு குறித்து பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் கண்டித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு  அரசு முடிவு கட்ட வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-government-must-put-an-end-to-the-continuing-deaths-in-police-custody#comments</comments><guid isPermaLink="false">fec904da-0dd9-4c67-8c4d-f322355cc0cb</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:20:22 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:20:22.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,காவல் நிலைய மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/aynl8f9p/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து  கொடூரமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்  தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பூசாரி பரமசிவம் அவர்களை இழந்து வாடும்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமை மீறல்கள்</strong> </h2><p>காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம்  19-ஆம் தேதி  அழைத்துச் சென்ற  சிந்தாமணி காவல் நிலைய காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம்  மதுரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி  உயிரிழந்திருக்கிறார். காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர்  தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே  மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை  அதிகரித்துள்ளது.</p><p>ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த  பரமசிவம்  குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மீன்வளம், சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது- அமைச்சர் ராஜீவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeev-says-tvk-government-will-not-permit-any-project-that-harms-fisheries-or-the-environment#comments</comments><guid isPermaLink="false">c5bc84b0-446f-4a1f-8da8-19937d314e20</guid><pubDate>Tue, 18 Aug 2026 05:04:42 +0000</pubDate><atom:updated>2026-08-18T05:04:42.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/6r806m9g/rajeev.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து, கடலூரில் இந்துஸ்தான் ஆயில் நிறுவனம், மேம்பாட்டுக் கிணறுகள் அமைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேச்சைத் தொடர்ந்து அமைச்சர் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி</strong></h2><p>சுற்றுச்சூழல் பாதிப்பை கூர்ந்தாய்வு செய்து அரசு நடவடிக்கை என அமைச்சர் கூறியுள்ளார். புதிதாக 4 கிணறு தோண்டினால் மீனவர் நலன் என பல பாதிப்பு உள்ளதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான HOEC நிறுவன விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். </p><h2><strong>சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து</strong> </h2><p>ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்தால் புதுவை முதல் கன்னியாகுமரி வரை கடல் வளம் பாதிக்கப்படும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>3 கிணறுகளுக்கு திமுக ஆட்சியிலும், ஒரு கிணறுக்கு அதிமுக ஆட்சியிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ல் HOEC நிறுவனம் மேலும் கிணறு அமைக்கும் விண்ணப்பத்தை கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மீன்வளம் சுற்றுச்சூழலை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் த.வெ.க. அரசு அனுமதிக்காது. சுற்றுச்சூழலுக்கு எதிரான, மீனவர்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் இன்றி த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். </p><h2><strong>தமிமுன் அன்சாரி</strong> </h2><p>சுற்றுச்சூழுல் விழிப்புணர்வு ஏற்படும் முந்தைய காலத்தில் முந்தைய ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியிருக்கலாம்.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கிணறு அமைக்க அனுமதி தரவில்லை. எந்த அரசு செய்தது என்ற வாதத்திற்கு செல்லாமல், மண் வளத்தை காக்கும் வகையில் தான் பேரவையில் இதுகுறித்து பேசுகிறோம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் கொலையில் சிபிஐ விசாரணை வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-demands-justice-parties-seek-higher-compensation-and-cbi-probe-into-killing-of-3-tamils-in-karnataka-forest#comments</comments><guid isPermaLink="false">d5b47a8d-4fd1-4052-b9fa-b8282c097b4b</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:41:00.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,Karnataka Forest Department,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/7tw3jsfb/tn-6.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">கர்நாடகாவில் </a>சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் சட்டசபையில் கொண்டு வந்தார். </p><h2></h2><h2>காங்கிரஸ்</h2><p>இதன் மீதான விவாதத்தில் பேசிய குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாமரை தீட்சித்,</p><p>"கர்நாடகா சாம்ராஜ் மாவட்ட வனப்பகுதியில் தமிழர்களை சுட்டுத் தள்ளியுள்ளார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.</p><p>மனித உயிருக்கு இன்று விலை இல்லாமல் போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எப்பொழுதும் எந்த பிரச்சனை என்றாலும் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்ட சூழ்நிலை உள்ளது.</p><p>இதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-condemns-killing-of-three-tamils-in-karnataka">முதலமைச்சர் கண்டித்துள்ளார்</a>. கர்நாடக அரசு கொடுத்துள்ள இழப்பீடு நியாயமானது அல்ல. </p><p>எனவே இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு இதற்கு தகுந்த சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.</p> <p>அதைப்போல இன்றைக்கு மகிமி தாஸ் என்பவர் அங்கே உயிருக்கு போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. </p><p>அதற்கும் கர்நாடக அரசு அவருவடைய சிகிச்சைக்கான செலவுகளை முழுமையாக ஏற்க வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் நிலைப்பாடு.</p><p>இறந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் ஆணித்தனமான சிபிஐ விசாரணை வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூற விழைகிறேன். "என்றார்.</p><h2>கம்யூனிஸ்ட்</h2><p>தொடர்ந்து தளி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், "தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. </p><p>சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதலமைச்சரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.</p> <p>கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ லதா பேசுகையில், " மான் வேட்டைக்கு சென்றவர்கள் சுட்டுக்கொலை என்பது பொய்யான செய்தி. </p><p>துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.</p><p>பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசும் நிதி வழங்க வேண்டும். </p><p>இந்த விஷயத்தில் தமிழர்கள் நலனுக்கு கட்சி வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைய வேண்டும்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: அமைச்சரின் விளக்கமும்... தி.மு.க. எதிர்ப்பும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-explain-three-tamils-shot-dead-in-karnataka-incident#comments</comments><guid isPermaLink="false">22c0f8f5-0642-4d42-b9df-b3330da4d3e9</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:38:41 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:38:41.160Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ii6i0mp6/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று  கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 3 பேர் வனத்துறையால் சுட்டுக்கொலை, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். </p><p>* ஆக.12-ல் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. </p><p>* உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>* இடைக்கால நிவாரணம் ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடக அரசு விசாரணைக்கு பின் கூடுதல் நிவாரணம் தருவதாக கூறியுள்ளது. </p><p>* கர்நாடக வனத்துறை நடத்தியது படுகொலை என குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். </p><p>* 3 தமிழர்கள் கொலை தொடர்பாக கர்நாடக அரசின் விளக்கம் ஏற்கத்தக்கதல்ல, விசாரணை தேவை என முதலமைச்சர் கூறியுள்ளார். </p><p>*ஒரு சிலருக்கு திடீரென தமிழ் பாசம் தமிழர் பாசம் இருக்கும் என்றார். </p><p>அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் எனத் தெரியவில்லை. கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான அமைச்சரின் பதில் மட்டுமே அவைக்குறிப்பில் இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamils-shot-dead-in-karnataka-mlas-speak-during-special-calling-attention-motion#comments</comments><guid isPermaLink="false">b639043d-19a7-40aa-b12d-be5475fb64ec</guid><pubDate>Tue, 18 Aug 2026 04:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-18T04:21:16.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தமிழர்கள் சுட்டுக்கொலை,சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மனோஜ் பாண்டியன்- எடப்பாடி பழனிசாமி-கணேஷ் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/ooatftz3/assembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று இளைஞர் நலன், விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாட்டுத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதானம் நடைபெறுகிறது.  </p><p>முதலில், கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் முதலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையால் போலி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார். </p><h2><strong>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி</strong></h2><p>பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை. 2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்களக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். </p><h2><strong>பா.ம.க. எம்.எல்.ஏ. கணேஷ்குமார்</strong></h2><p>கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தற்காப்புக்காக கொலை, இதில் உரிமை மீறல் எதுவுமில்லை என கர்நாடக வனத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ரீல்ஸ் படுத்தும் பாடு... நண்பர்களோடு சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-arrested-for-petrol-bomb-throw-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-arrested-for-petrol-bomb-throw-case#comments</comments><guid isPermaLink="false">e05e345a-6a02-4f8c-8259-3cc6cc48da5f</guid><pubDate>Tue, 18 Aug 2026 03:26:13 +0000</pubDate><atom:updated>2026-08-18T03:26:13.453Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>youth arrest,பெட்ரோல் குண்டு வீச்சு,Petrol Bomb Throw,reels,ரீல்ஸ்,வாலிபர் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vb1wcykw/villupuram.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை படத்தில் காணலாம். (உள்படம்: கைதான வாலிபர் தயா)]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை படத்தில் காணலாம். (உள்படம்: கைதான வாலிபர் தயா)]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-18/vb1wcykw/villupuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விழுப்புரத்தில் வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</strong></em></p><p>இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் மனநிலையையும் எந்தளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. அது குறித்து பார்ப்போம்...</p><h2><strong>வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு</strong></h2><p>விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ் (வயது 48). இவர் விழுப்புரம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காளிதாஸ். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார்.</p><p>இந்த கட்டிடத்தின் அருகில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் அமர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறியதும் அவர்கள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதனை காலி மதுபாட்டிலில் நிரப்பி திரி போட்டு பற்ற வைத்து அந்த வீட்டின் முன்புற சுவற்றில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.</p><h2><strong>போலீசார் விசாரணை</strong></h2><p>இதில் அந்த <a href="https://www.maalaimalar.com/topic/பெட்ரோல்-குண்டு-வீச்சு">பெட்ரோல் குண்டு</a> பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. இந்த சத்தத்தை கேட்டதும் அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தயா (21) மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசியதும், இவர்கள் ரீல்ஸ் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவு செய்வதற்காக பெட்ரோல் குண்டு தயாரித்து அதை வெடிக்கச்செய்ததும் தெரியவந்தது.</p><h2><strong>வாலிபர் கைது</strong></h2><p>இதையடுத்து தயா உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தயாவை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. </p>]]></content:encoded></item><item><title>உயிரோடு இருக்கும் பெண்ணிற்கு இறந்ததாக சான்றிதழ்: கலெக்டரின் புகார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/certificate-declaring-living-woman-dead-collectors-complaint#comments</comments><guid isPermaLink="false">23127582-a5af-4918-a629-fced1d610b5b</guid><pubDate>Mon, 17 Aug 2026 16:02:37 +0000</pubDate><atom:updated>2026-08-17T16:02:37.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,madurai,இறப்பு சான்றிதழ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இறப்பு சான்றிதழ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-17/h1g3p1m8/complaint001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரோடு இருக்கும்போது வி.ஏ.ஓ. இறந்ததாக சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மதுரையில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது பெருமாள் என்பவர் யார்? என்று கேட்டுள்ளனர். அதற்கு என்னுடைய மகன்தான் என அந்த பெண்மணி கூறியுள்ளார். அப்போது பெருமாளுடைய அம்மா இறந்து விட்டதாகவும், இறந்து போன பெருமாளின் அம்மாவிற்கு நிலமும், நகையும் உள்ளது. அதை பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு கொடுத்துள்ளார். அதன் விசாரணை நடத்த வந்துள்ளோம் என போலீசார் சென்னதை கேட்டு அந்த பெண் அதிர்ந்துள்ளார்.</p><p>நான் இங்கு உங்கள் முன் உயிரோடு நிற்கிறேன். நான் இறந்ததாக எப்படி கூறலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் என்னுடைய மகன் பெருமாள் சுமார் 6 மாதத்திற்கு முன் இறந்து போனார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு ரிப்போர்ட் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. அப்போது போலீசார் நீங்கள் இறந்ததாக சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாங்க. இதுதான் சான்றிதழ் என காண்பித்துள்ளனர். ஆனால், அந்த பெண் நான் உயிரோடு இருக்கிறேன் என அடித்துச் சொல்லியுள்ளார். பின்னர்தான் சுந்தரி என்ற தனது மருமகள் போலியாக சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.</p><p>அப்படி என்றால் ஆதார் கார்டு உடன் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர். அங்கு போலீசாரிடம் தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் காட்டியுள்ளார். உடனே போலீசார், விஏஓ-வை சென்று பாருங்கள் என்று கூறியுள்ளனர்.</p><p>அந்த பெண்மணியும் வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று, நான் உயிரோடு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கியுள்ளீர்கள். என்ன நியாயம் என்று கேட்டுள்ளார்.</p><h2>வி.ஏ.ஓ.-விடம் முறையீடு</h2><p>அதற்கு வி.ஏ.ஓ. நாங்கள் ஆதாரத்துடன்தான் சான்றிதழ் வழங்கியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். நான் 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் செல்கிறேன் என்று கூறிய பின்னரும் வி.ஏ.ஓ. சொன்னதை திரும்பவும் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இறப்பு சான்றிதழை தாருங்கள் என்று கேட்க, அவரும் வழங்கியுள்ளார்.</p><p>இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை. நாங்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை செய்கிறோம் என சமாதானம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஏதும் தேவையில்லை. ஏன் வழங்கப்பட்டது என்று கேட்டு தீர்வு வேண்டும் எனக் கூறியுள்ளார்.</p><h2>கலெக்டரிடம் புகார்</h2><p>இறுதியாக கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரோடு இருக்கும் பெண்மணிக்கு இறந்ததாக சான்றிதழ் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>