<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 15 Aug 2026 20:25:45 +0000</lastBuildDate><item><title>கரூர்: 4 வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-grandmother-chases-down-and-hacks-with-a-sickle-the-young-man-who-sexually-assaulted-her-4-year-old-granddaughter#comments</comments><guid isPermaLink="false">ebb5148e-5468-45ff-842c-b523da1719b0</guid><pubDate>Sat, 15 Aug 2026 18:15:21 +0000</pubDate><atom:updated>2026-08-15T18:15:21.909Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறுமி பாலியல் வன்கொடுமை,கரூர்,Karur,KULITHALAI,குளித்தலை,sexual assault on a minor girl</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:title><media:description type="html"><![CDATA[ பாலியல் வன்கொடுமை ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/c612fw7l/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது பேத்தியை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88">பாலியல் வன்கொடுமை </a>செய்த இளைஞனை பாட்டி அரிவாளால் வெட்டிய  சம்பவம் அரங்கேறியுள்ளது. </p> <h2>பாலியல் வன்கொடுமை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">கரூர் </a>மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கிராமத்தில் தாய் தந்தையுடன் அந்த 4 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறாள். நேற்று சிறுமியை பக்கத்துக்கு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பக்கத்து வீட்டு இளைஞனிடம் கேட்டுள்ளார்.</p><p>சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் சிறுமியை பாட்டியின் வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான்</p><p>வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தைப் பாட்டியிடம் கூறியிருக்கிறாள்.</p> <h2>அரிவாள் வெட்டு</h2><p>இதனால் ஆத்திரமடைந்த 55 வயது பாட்டி, உடனடியாக அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த இளைஞனைத் தேடிச் சென்றுள்ளார்.</p><p>குளித்தலை பகுதியில் உள்ள ஒரு டீக் கடை அருகே நின்றுகொண்டிருந்த அந்த இளைஞனை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி, காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளார்.</p><p>10க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டு விழுந்ததால் மாணிக்கத்தின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.</p> <h2>போலீஸ் விசாரணை</h2><p>பாதி வழியில் செல்லும்போது தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், சிறுமியின் பாட்டியை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்தனர்.</p><p>சிறுமியின் பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.</p><p>படுகாயம் அடைந்த இளைஞன், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.</p> <p>பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p>தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்து அரிவாளைப் பறிமுதல் செய்து, தாக்குதலில் ஈடுபட்ட 55 வயது பாட்டியைக் கைது செய்தனர்.</p><p>சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மருத்துவமனையில் உள்ள வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உள்நோக்கம் இல்லை.. முதல்வர் விஜய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் சொன்ன விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-leader-defends-controversial-remarks-on-vijays-assembly-speech-amid-widespread-criticism#comments</comments><guid isPermaLink="false">15343f8d-4d2b-43bb-bc84-73f249570674</guid><pubDate>Sat, 15 Aug 2026 17:35:46 +0000</pubDate><atom:updated>2026-08-15T17:35:46.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,விஜய்,vijay,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/fz8d5x9j/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் "அப்பாவை காணோம்" என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark">கண்டனங்கள் </a>எழுந்து வரும் நிலையில் அதற்கு அவர் வில்லகம் அளித்துள்ளார். </p><p>பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. </p> <h2>சர்ச்சை பேச்சு</h2><p>இதில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p>நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள்.</p><p>வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.</p> <h2>கண்டனம்</h2><p>நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகமானது என தவெக தரப்பில் இருந்தும் பிற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த நடிகை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">குஷ்புவும் </a>நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.</p> <h2>விளக்கம்</h2><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில்,</p><p>"ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. </p><p>தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/today-news-in-tamil-live-updates-15-august-2026#comments</comments><guid isPermaLink="false">c6da5784-7244-49ec-aad8-b0af519a1d11</guid><pubDate>Sat, 15 Aug 2026 01:53:31 +0000</pubDate><atom:updated>2026-08-15T15:23:49.053Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/umtv98iy/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி ராஜ்காட்டில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Prime Minister Narendra Modi pays floral tributes to the Father of the Nation, Mahatma Gandhi, at Rajghat on the 80th Independence Day<br><br>(Video source: PM Modi/ YouTube) <a href="https://t.co/xIcfLPeDol">pic.twitter.com/xIcfLPeDol</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088441067771494821?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.</p><p>டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வரவேற்றார்.</p><p>நாட்டின் சுதந்திர தினவிழாவை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் பிரதமர் மோடிக்கு முப்படை, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை </p><p>13-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்ற  உள்ளார் பிரதமர் மோடி.</p><p>சுதந்திர தினவிழா கொண்டாட்ட வரலாற்றில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.</p><p>நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஏற்றி வைத்த தேசியக்கொடிக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.</p><p>செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day. <br><br>The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… <a href="https://t.co/rbaiIKQpPU">pic.twitter.com/rbaiIKQpPU</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088448119566676389?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.</p><p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு நிகழ்வை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது.</p><p>நாட்டு மக்கள் அனைவரது இல்லங்களிலும் இன்று மூவர்ண கொடி பறந்து கொண்டிருக்கிறது.</p><p>வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை அனைவரும் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.</p><p>நாட்டின் விடுதலைக்காக எண்ணற்றோர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.</p><p>கனவுகள் உயர்வாக இருக்கும்போது தான் திறன்களும் உயர்ந்ததாக இருக்கும்.</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் தான் தற்போது நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது.</p><p>உலகம் இன்று நம்மை பார்க்கும் விதம் மாறி உள்ளது - பிரதமர் மோடி</p><p>நாட்டில் எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தி 7 மடங்கு உயர்ந்துள்ளது.</p><p>தேசத்தின் அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர் - பிரதமர் மோடி</p><p>12 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை 100 சதவீதத்தை எட்டி உள்ளது.</p><p>நமது வாழ்வில் பெரிதாக சாதிக்க வேண்டும் எனில் ஒவ்வொரு இந்தியரும் கனவு காண வேண்டும் - பிரதமர் மோடி</p><p>இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி</p><p>2047-ல் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>இந்தியா தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>நமது நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 12 ஆண்டுகளில் 100 மடங்கு அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: From the ramparts of the Red Fort, Prime Minister Narendra Modi says, &quot;... Over the past 12 years, countless citizens—whether Dalits, the downtrodden, the marginalized, or tribals; whether rural or urban dwellers; the poor or the middle class; youth or the… <a href="https://t.co/YT8btWXU6S">pic.twitter.com/YT8btWXU6S</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088452942542365128?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>அனைவரது மனதிலும் மூவர்ணம் நிறைந்துள்ளது. நாடெங்கிலும் வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கிறது - பிரதமர் மோடி</p><p>அனைத்து பிரிவு மக்களும் நாட்டை முன்னேற்றி கொண்டிருக்கின்றனர். நமது கனவுகளை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது - பிரதமர் மோடி</p><p>இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளது. </p><p>மிகப்பெரிய செமி கண்டக்டர் ஆலைகள் வர உள்ளன - பிரதமர் மோடி</p><p>ஒவ்வொரு இந்தியரும் இணைந்து இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என்ற கனவை 2047-ம் ஆண்டில் நனவாக்குவோம் - பிரதமர் மோடி</p><p>கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது  - பிரதமர் மோடி பெருமிதம்</p><p>நாட்டு மக்கள் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி</p><p>உற்பத்தி துறையில் மேலும் வளர்வது கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>உலகளவில் ஈர்க்கும் வகையில் பொருட்களை தயாரிக்க வேண்டும் - பிரதமர் மோடி</p><p>நமது தேவைகளுக்காக பிற நாடுகளை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நாம் தற்சார்பு அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் - பிரதமர் மோடி</p><p>வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி</p><p>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம். வர்த்தக ஒப்பந்தத்தால் மீனவர்கள், விவசாயிகள் பயன் - பிரதமர் மோடி</p><p>நாம் கண்ட மிகப்பெரிய கனவுகள் நமது எண்ணங்களை விரிவாக்கி உள்ளது. கனவு உயர்வாக இருந்தால் திறனும் உயரும் - பிரதமர் மோடி</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் விஜய் வருகை.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சர் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை.</p><p>தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். </p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் வாழ்த்து - முதலமைச்சர் விஜய்</p><p>லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது தவெக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கும் நன்றி - முதலமைச்சர் விஜய்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/q8bvaih9/vijay3.jpg" /></figure><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்  - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதுடன் 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவோம் - முதலமைச்சர் விஜய்</p> <p>தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் விஜய்</p><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000-ல்  இருந்து ரூ.50,000ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p> <p>மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்வு முதலமைச்சர் விஜய்</p><p>விடுதலை போராட்ட வீரர்கள் ஓய்வூதியம் ரூ.25,000 ஆக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>எம்.கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது, நீரிழிவு நோய் நிபுணர் மோகனுக்கு அப்துல் கலாம் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய் </p><p>உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற நவ்ஷீனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை நீலகிரி ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யாவுக்கு வழங்கினார் முதலமைச்சர்</p><p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிருஷ்டி பவுண்டேஷனுக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதை வழங்கினார் - முதலமைச்சர் விஜய்</p> <p>விருதாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் முதலமைச்சர் விஜய்</p><p>காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றவாறு மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்</p><p>சாலையின் இருபுறமும் உள்ள மக்களை பார்த்து கை அசைத்தவாறு நடந்து சென்றார் முதலமைச்சர் விஜய்</p><p>முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆண்களில் 3 பேருக்கும், பெண்களில் இருவருக்கும் வழங்கப்பட்டது.</p><p>திருப்பூர் இம்மானுவேல் நெல்சன், தூத்துக்குடி சரவண குமார், சேலம் நிர்மல் கதிர்வேலு, மயிலாடுதுறை ராஜேஸ்வரி மகாதேவன், மதுரை சிந்தாவுக்கு முதலமைச்சரின் இளைஞர் விருது வழங்கப்பட்டது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice" rel="nofollow">சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய்</a></p><p>* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். </p><p>* மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-second-consecutive-year">சுதந்திர தின விழாவை 2-வது ஆண்டாக புறக்கணித்த கார்கே, ராகுல் - காரணம் இதுதான்!</a></p><p>* டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>* மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/internet-services-disrupted-in-taiwan">சீன அச்சுறுத்தல்: தைவானில் முடங்கிய இணைய சேவை! போர்க்கால அவசரநிலை சோதனை</a></p><p>*இணையம் மற்றும் 4G/5G நெட்வொர்க் முற்றிலும் முடங்கும் போது, நாட்டின் மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தொடர்பில் இருப்பது என்பதைத் தைவான் பரிசோதித்தது. </p><p>*பல பயனர்களுக்கு டிக்டாக் செயலி திறக்கவே இல்லை; இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் செல்ல 30 வினாடிகளுக்கு மேல் ஆனதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/equal-opportunity-for-digital-media-centre-removes-12-minute-tv-ad-cap">டிஜிட்டல் ஊடகங்களுக்கு இணையான சமவாய்ப்பு: டிவியின் 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு!... </a></p><p>*தற்போதுள்ள காலகட்டத்தில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களுக்கு எந்தவித கால வரம்பும் கிடையாது. </p><p>*இதனால் பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடும் வருவாய் இழப்பும் சமமற்ற போட்டியும் ஏற்பட்டு வந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands">24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!... </a></p><p>*11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p>*என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-century-in-first-innings-against-srilanka-first-test">இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் சதத்தை பதிவு செய்தார் தேவ்தத் படிக்கல்</a></p><p>* டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-426-all-out-in-first-innings-against-australia-first-test">டார்வின் டெஸ்டில் வங்கதேசம் 426 ரன்கள் குவிப்பு: 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா திணறல்</a></p><p>* வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.</p><p>* ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pok-would-have-joined-jammu-and-kashmir-if-omar-abdullah-on-special-status">மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா</a></p><p>* என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.</p><p>* மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement">இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</a></p><p>* வயது வரம்பு: 70க்கு மேல் உள்ளவர்கள் நீக்கம், இளைஞர்களுக்கு மாவட்ட பொறுப்பு கிடைக்கும்.</p><p>* புதிய நியமனங்கள்: 78 மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech">அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</a></p><p>* எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><p>* ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய் அல்ல: நயினார் நாகேந்திரனுக்கு குஷ்பு கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/khushbu-sundar-condemn-nainar-nagendran-against-cm-vijay-speech#comments</comments><guid isPermaLink="false">1904e4d4-7bc0-4386-93a6-3dff7b9414cf</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:37:07 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:37:07.204Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,குஷ்பு,Khushbu,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ khushbu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/syfy9k4n/kushboo.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.</p><p>'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாகப் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தரக்குறைவான கருத்து</h2><p>இந்நிலையில் நடிகையும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்த தரக்குறைவான கருத்து அருவருப்பானது. எந்த ஒரு தளத்திலும் இத்தகைய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.</p><h2>அதிர்ச்சியும், ஏமாற்றமும்</h2><p>எனது தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் 'நாரி சக்தி' (பெண் சக்தி) குறித்தே பேசி வருகிறார். பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி வருகிறார். இத்தகைய கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை.</p><p>பெண்களின் கண்ணியம் மற்றும் நேர்மையை அவமதிப்பதையோ அல்லது கேள்விக்கு உள்ளாக்குவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவள் நான். எப்போதும் என் கருத்துகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்துள்ளேன். இதைக் கேட்டு நான் இன்று அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன்.</p><h2>பெண்கள் பகடைக்காய் அல்ல</h2><p>கட்சியை விமர்சியுங்கள், மக்களுக்காகக் குரல் கொடுங்கள், அரசு செயல்படத் தவறினால் அதைத் தாக்குங்கள். ஆனால் உங்கள் கருத்தை முன்வைக்க ஒருபோதும் ஒரு பெண்ணைப் பயன்படுத்தாதீர்கள். அரசியல் விளையாட்டில் பெண்கள் பகடைக்காய்கள் அல்ல.</p><p>ஒவ்வொரு கட்சியும், அக்கட்சியின் உறுப்பினர்களும், ஒவ்வொரு ஆணும் ஒரு பெண்ணை அவமதிக்கும் முன் சிந்திக்க வேண்டும். </p><p>நினைவில் கொள்ளுங்கள், ஒரு பெண்ணின் - ஒரு தாயின் - காரணமாகவே நீங்கள் இந்த உலகில் இருக்கிறீர்கள். ஒரு தாய்க்கு இழைக்கப்படும் இத்தகைய அவமரியாதை மிகுந்த வேதனையையும் மனக்காயத்தையும் ஏற்படுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி - ஸ்டாலின் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-change-district-secretary-posts-for-youth-stalin-announcement#comments</comments><guid isPermaLink="false">7e0e97f5-781c-4b81-8497-b3bc393f1f4c</guid><pubDate>Sat, 15 Aug 2026 14:03:33 +0000</pubDate><atom:updated>2026-08-15T14:03:33.267Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,M.K.Stalin,தமிழக அரசியல்,Secretary,DMK.,மு.க.ஸ்டாலின்,இளைஞர்கள்,youthsDistrict,மாவட்ட செயலாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ M.K. Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/3ndomn1f/M.K.-Stalin?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய தி.மு.க. தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வருகிற 22-ந் தேதி நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.</p><h2><strong>தொண்டர்களின் கருத்துக்கள்</strong></h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தலில் நடந்த தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சியின் நிர்வாக கட்டமைப்புகளை மாற்றுவது குறித்தும், மாவட்டம் வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் குழு அமைத்து கட்சியில் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. </p><p>இவை அனைத்தையும் தொகுக்கப்பட்டு, அறிக்கையாக தயாரித்து திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதில் இருக்கும் பல்வேறு பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதன் அடிப்படையில் கட்சியில் நிர்வாக கட்டமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.</p><h2>புதிய மாவட்ட செயலாளர்கள்</h2><p>தற்போது தி.மு.க.வில் கட்சியில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் சரியான முறையை கடைபிடிக்காதவர்களின் பதவி பறிக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.</p><p>தற்போது இருக்கும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்று கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்குவது தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>இளைஞர்களுக்கு வாய்ப்பு</strong></h2><p>இதனிடையே கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் இருப்பவர்களும் மாற்றப்படுவர் என்றும், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளாக 60 வயது வரை இருக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், முன்னாள் அமைச்சர்களின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>தற்போது, எம்.எல்.ஏ.க்களாக உள்ள சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு தலைமை நிர்வாகத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளன என்றும், துணை பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்கள் என நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>மேலும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் வாயிலாக 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும், இது குறித்து வரும் 22ம் தேதி நடக்கும் தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம்</strong></h2><p>இதனிடையே தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>தேர்தல் தோல்விக்கு பின்னர் நடைபெறக்கூடிய முதல் செயற்குழு கூட்டம் இது என்பதாலும், புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாலும் கட்சியினர் மத்தியில் இந்த செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொடர்ந்து சரிந்து வரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்- சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/veeranam-lake-water-level-decreased-3#comments</comments><guid isPermaLink="false">994871da-dc36-416d-bf9a-069405a1020b</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:26:41 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:26:41.013Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Veeranam Lake,வீராணம் ஏரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:title><media:description type="html"><![CDATA[ வீராணம் ஏரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/1to31nn5/veeranam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</strong></em></p><p>கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே <a href="https://www.maalaimalar.com/topic/வீராணம்-ஏரி">வீராணம் ஏரி</a> அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 24 கி.மீ தூரம் பயணம் செய்து தண்ணீர் ஏரியை வந்தடைகிறது.</p><h2><strong>சிக்கல்</strong></h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் தண்ணீர் திறந்து விடுவதால் அதனை கொண்டு சென்னைக்கு தேவையான குடிநீரை வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வந்தனர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.  அதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. </p><p>எனவே சிறப்பு கவனம் செலுத்தி  கடந்த மாதம் ஆயிரம் கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது தடைப்படாமல் நடைபெற்றது.</p><p>தற்போது ஏரியில் 41.25 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. தினமும் வினாடிக்கு 73கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியில் தண்ணீர் குறைந்து ஆங்காங்கே திட்டுகளாக காணப்படுகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீரை  நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது.</p><p>அந்த தண்ணீரும் போது முடியும் தருவாயில் உள்ளது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை தொடர்ந்து நயினார் நாகேந்திரன்.. அரசியல் களத்தில் தொடரும் நாகரிகமற்ற பேச்சுகள்..!- அண்ணாமலை கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/uncivilized-speeches-continue-in-the-political-arena-annamalai-condemns#comments</comments><guid isPermaLink="false">a0fe0110-bcf2-4e53-9392-6f6a945fdfb6</guid><pubDate>Sat, 15 Aug 2026 10:10:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T10:10:35.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,annamalai,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/6o0psznc/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- </p><p>தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow"> திமுக</a>வின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. </p><p>அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம்.  ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சேலத்திலிருந்து வெளிமாநில விமான சேவை தொடர &apos;உடான்&apos; திட்டத்தை 7 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-udan-scheme-must-be-extended-by-7-years-to-continue-inter-state-air-services-from-salem#comments</comments><guid isPermaLink="false">17cd6b02-173f-4ded-9fdd-fb098cb4c8b6</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:53:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:53:13.516Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,விமான சேவை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h9x7bgpi/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம்  விமான நிலையத்தில்  இருந்து  கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான விமான சேவை  தொடர்வதை உறுதி செய்வதற்காக, அந்த விமான நிலையத்திற்கான  உடான் 5.2 திட்டத்தை மேலும் 7 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.</strong></em></p><p>சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் கே. இராம் மோகன் நாயுடுக்கு  மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:</p><p>மாண்புமிகு விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. இராம்மோகன் நாயுடு அவர்களுக்கு,</p><p>வணக்கம்!</p><p>தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சேலத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.</p><p>சேலம் கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் 33 ஆண்டுகளுக்கு முன் 1993-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்றாலும், அங்கிருந்து வணிகரீதியிலான விமானப்போக்குவரத்து சேவை அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அதே ஆண்டில்  தொடங்கப்பட்டாலும் கூட அது நீடிக்கவில்லை. அதன்பிறகும் பல முறை விமான சேவை தொடங்கப்பட்ட போதிலும், அவை போதிய ஆதரவின்றி அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்படுவதே வாடிக்கையானது.</p><p>எளிய மக்களும் விமானத்தில் பறப்பதை சாத்தியமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட உடான் ((UDAN-Ude Desh ka Aam Naagrik) ) திட்டத்தின் கீழ் 2018&amp;ஆம் ஆண்டில் சேலம் &amp; சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டாலும் 2021&amp;ஆம் ஆண்டில் மீண்டும் நிறுத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்த உடான் 5.2 திட்டத்தின் படி 2023&amp;ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26&amp;ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இவை தவிர உடான் திட்டத்தில் இல்லாமல் சென்னைக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது.</p> <p>சேலத்திலிருந்து பெங்களூருக்கு வாரத்தில் 11 முறையும், சென்னை மற்றும் கொச்சிக்கு வாரத்தில் 7 முறையும், ஐதராபாத்துக்கு வாரத்தில் 4 முறையும் தனியார் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  சேலம் விமான நிலைய வரலாற்றில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பல நகரங்களுக்கு விமான போக்குவரத்து நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு காரணம் உடான் 5.2 திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி உள்ளிட்ட சலுகைகள் தான்.</p><p>சேலம் போன்ற நகரங்களில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் போது தொடக்க நிலையிலேயே அதற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்காது. காலப்போக்கில் தான்   அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணிக்கத் தொடங்குவார்கள். அதுவரை தனியார் விமான  நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்வதற்காக நிதி உதவி உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதனால் தான் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்தாலும் தனியார் விமான நிறுவனங்கள் தொடர்ந்து விமானங்களை இயக்கி வருகின்றன.</p><p>உடான் 5.2 திட்டம் வரும் அக்டோபர் 25&amp;ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கான சேவையை நிறுத்த தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. அந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு மட்டுமே  விமான சேவை இயக்கப்படும். அது சேலம் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.</p><p>இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து விமானங்களை இயக்குவதற்கான  உடான் திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். ஆனால், அந்தத் திட்டத்தின் காலவரையறை தான் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படுவதை தடுக்கிறது. உடான் திட்டம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே   செயல்படுத்தப்படுகிறது. ஒரு இரண்டாம் நிலை நகரத்திலிருந்து தொடங்கப்படும் விமான சேவை தற்சார்பு நிலையை அடைய 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம். அவ்வாறு இருக்கும் போது 3 ஆண்டுக்கு மட்டுமே உடான் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.</p><p>சேலத்திலிருந்து கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் விமான சேவை தொடங்கப்பட்ட போது ஒவ்வொரு விமானத்திலும் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை, இப்போது 30% முதல் 40% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது   60% முதல் 70% என்ற அளவுக்கு உயரும் போது விமான நிறுவனங்கள் அரசின் நிதி உதவியின்றி  விமானங்களை இயக்க முடியும். சேலம் &amp; சென்னை சேவை அப்படித் தான் நடைபெற்று வருகிறது.</p><p>உடான் 5.2 சேவை நிறுத்தப்படுவதால் சேலம் விமான நிலையம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களின் சிறிய விமான நிலையங்களும் பாதிக்கப்படும். கர்நாடகத்தில் கல்புர்கி, சிவமோகா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உடான் திட்ட சலுகைகள் அக்டோபர் மாதம் கைவிடப்பட இருப்பதற்கு அம்மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்போதுள்ள உடான் 5.2 திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்; அதன்பின் மேலும் 5 ஆண்டுகள் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டால், அதற்காக ஆகும்  செலவில் பாதியை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.</p><p>தமிழ்நாட்டிலும் சேலத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் தொடர்வதை உறுதி செய்வதற்காக உடான் 5.2 திட்டத்தை 2028&amp;ஆம் ஆண்டு வரை இரு ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும். கர்நாடக அரசு முன்வைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், 2028&amp;ஆம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் உதவியுடன் உடான் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்தும் ஆராய வேண்டும்; சேலம் நகரிலிருந்து மும்பை, தில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவைகளை  தொடங்குவதற்கு தனியார் விமான நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>அரசியல் விரக்தியின் உச்சம்..!- நயினாரின் சர்ச்சை பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/political-frustration-peak-manickam-thakur-slams-nainar-remarks#comments</comments><guid isPermaLink="false">7c59db67-a391-4c69-b720-c5e147420b64</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:47:28.086Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/66at4uck/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அப்பாவை காணோம் என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல. தொடர் வாடிக்கையாகிவிட்டது.</p><p>பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதலமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வரும் 17-ந்தேதி 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-4-districts-on-17th#comments</comments><guid isPermaLink="false">5d6220dd-18cb-470b-8275-1393057da1b1</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:21:47 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:21:47.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,TN,Heavy Rain,தமிழ்நாடு,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/15/14313826-rain1.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p> <h2>புதுவை மற்றும் காரைக்கால்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu">மழை </a>பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>4 மாவட்டங்களில் கன மழை</h2><p>17-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.</p> <p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><p>வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதி</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது- அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainars-controversial-speech-is-disgusting-minister-rajmohan-condemns#comments</comments><guid isPermaLink="false">1ad3c2b3-339c-413b-8031-071817d3dfeb</guid><pubDate>Sat, 15 Aug 2026 09:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-15T09:09:59.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,அமைச்சர் ராஜ்மோகன்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Raj mohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/w4s75nqx/Raj-mohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் "அப்பாவை காணவில்லை" என <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights" rel="nofollow">முதலமைச்சர்</a> கூறியதற்கு எதிராக நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்," பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நாகரிகமாக பேச வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பாஜக மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark" rel="nofollow">நயினார் நாகேந்திரன்</a> நாகரிகமாக பேச வேண்டும். நயினாரின் சர்ச்சை பேச்சு அருவருக்கத்தக்கது.</p><p>திமுக- பாஜகவின் மறைமுக நட்பு வெளிப்படுகிறது. ஒரு கட்சியின் தலைவராக நயினார் பேசவில்லை.</p><h2>அமைச்சர் வினோத்</h2><p>நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தை வெளிப்படுத்துகிறது.</p><p>அரசியல் களத்தில், கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லை. நயினார் முதல்வரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><h2>டிஜிபி அலுவலகத்தில் புகார்</h2><p>முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக பேசிய நயினார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">குற்றவியல் நடவடிக்கை</a> எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! - அமைச்சர் வன்னிஅரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark#comments</comments><guid isPermaLink="false">a39310c7-e973-4a29-9a10-f432241366e4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:51:57 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:51:57.093Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,cm vijay,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni arasu - Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/n7k728iq/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice">முதலமைச்சர் விஜய்</a> மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது டிஜிபி அலுவலகத்தில் வழக்கறிஞர் வர்த்தினி ஆன்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். </p> <h2>வன்னி அரசு</h2><p>இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சிற்கு அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.</p><p>பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?</p> <h2>பாஜக</h2><p>காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?</p><p>காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல்  வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பாஜகவினர்.</p> <p>பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.</p><p>நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் அண்ணாமலை தலைமையில் நாளை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/environmental-awareness-rally-led-by-annamalai-in-chennai-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa5285d8-ce14-47ac-8b30-90d59ef02f2a</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:46:13 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:46:13.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணாமலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/merozl0g/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.</strong></em>  </p><p>வீ த லீடர்ஸ் அமைப்பை <a href="https://www.maalaimalar.com/topic/அண்ணாமலை">அண்ணாமலை</a> தொடங்கியது முதல் சமூக முன்னேற்றத்துக்கு தேவையான அடிப்டை காரணங்களை கண்டறிந்து அதுபற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மாதம் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரங்கள், மாரத்தான், இளைஞர்களை சந்தித்து உரையாடுதல் போன்றவற்றை நடத்தினார்கள்.</p><h2><strong>50 லட்சம்  மரக்கன்றுகள்</strong></h2><p>இந்த மாதம் சுற்றுச்சூழல் மேம்பாடு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஏரி, கால்வாய்கள் தூர் வாருதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதில் இந்த மாதம் மட்டும் சின்னக் கலைவாணர் மறைந்த விவேக் பெயரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அந்த பணிகள் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.</p><p>கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரி முதல் உவரி, குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி கடற்கரைகளை தூய்மை படுத்தும் பணிகளை அண்ணாமலை தொடங்கி வைத்தார். 3-ந்தேதி மதுரையில் வைகை ஆற்றை தூய்மை படுத்தும் பணிகளையும், மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கி வைத்தார்.  சென்னையில் நாளை (16-ந்தேதி) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.</p><p>நாளை மாலை 3 மணியளவில் எழும்பூர் ராணி மெய்யம்மை ஹால் அருகில் வீ த லீடர்ஸ் அமைப்பினரும், பொதுமக்களும் திரள்கிறார்கள். அங்கிருந்து அண்ணாமலை தலைமையில் பேரணி புறப்படுகிறது.  பேரணிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார். இதில் நிர்வாகிகள் மாதவரம் எம்.மனோகரன், கிருஷ்ண மூர்த்தி, வெங்கடேஸ்வரா, லயன். பி.செல்லதுரை, எஸ்.தியாகராஜன், ஏ.செல்வ குமார், பி.மகாலிங்கம்,  ஏ.நிர்மல்ராஜ், கிஷோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். மேலும்  நடிகர் விவேக் மனைவி அருள் செல்வி விவேக், ஆங்கிலிட்டன் சர்ச் அருட்தந்தை சாமுவேல் குணசேகரன் ஆகியோரும் உடன் நடந்து செல்கிறார்கள்.</p><p>ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பேரணி நிறைவடைந்ததும் அண்ணாமலை உரையாற்றுகிறார். பேரணியில் பங்குபெறும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.</p><p>பேரணியில், மரங்களை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பசுமையான தமிழகத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது ஆகியவை குறித்து வலியுறுத்தப்படுகிறது.</p><p>நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலை முறையையும் பாதுகாக்க வேண்டியது மிக முக்கிய பொறுப்பு ஆகும். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று முகப்பேர் வெங்கடேஸ்வரா லயன் பி.செல்லத்துரை, எஸ்.தியாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">573bb2a9-c377-4aab-98ca-0433c3688bc6</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:25:08 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:25:08.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:title><media:description type="html"><![CDATA[ அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் சுதந்திர தின விழா நடந்தது. ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/t96pii2k/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாட்டின் 80-வது  சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி  மரியாதை செலுத்தப்பட்டது.</strong></em></p><h2><strong>தி.மு.க.</strong></h2><p>அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தின விழா</a> நடந்தது. அவர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, முன்னாள் எம்.எல்.ஏ. தாயகம் கவி, அன்பு துரை, வி.எஸ். ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p><h2><strong>பா.ஜ.க.</strong></h2><p>பா.ஜ.க.  கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில செயலாளர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>கம்யூனிஸ்டு</strong></h2><p>தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை  அலுவலகத்தில் மாநில செயலாளர் வீர பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் (அகில இந்திய பொதுச் செயலாளர்) ராஜா, நிர்வாகிகள் வகிதா நிஜாம், டாக்டர் ரவீந்திரநாத், சிவா, ஏழுமலை, டாக்டர் சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><h2><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு</strong></h2><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றினார். கட்சியின் செங்கொடியை சம்பத் ஏற்றினார். நிர்வாகிகள் குணசேகரன், வேல்முருகன், செல்வா, ஜான்சிராணி, ராஜசேகரன் வில்சன் ஆகியோர் பங்கேற்றனர்.</p><h2><strong>அரசு அலுவலகங்கள்</strong></h2><p>கோகுல மக்கள் கட்சி சார்பில் உள்ளகரத்தில் அதன் நிறுவனத் தலைவர் எம் .வி. சேகர்  தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்.</p><p>தெற்கு ரெயில்வே சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் பொது மேலாளர்  சுப்பாராவ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ரெயில்வே பாதுகாப்பு படையின்  அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.  சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர்  சைலேந் திர சிங் தேசியக்கொடி ஏற்றி  இனிப்பு வழங்கினார். </p><p>சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இயக்குனர்  பர்வீஸ், பொது மேலாளர் சுகுமாரன், தலைமை பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், வைதேகி, புஷ்பலதா, சித்ரா, சுகந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.</p><p>ஐ.சி.எப். ஸ்டேடியத்தில் ஐ.சி.எப். பொது மேலாளர் மனிஷ் அகர்வால் தேசியக்கொடி ஏற்றினார். ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்தா ராம்  தேசியக்கொடியை ஏற்றினார்.</p><p>எழும்பூர் ரெயில் நிலையத்தில் நிலைய இயக்குனர் ஜெய காந்தன் தேசியக் கொடி யேற்றினார்.</p><h2><strong>சார்பு நீதிபதி</strong></h2><p>திருவொற்றியூர் கோர்ட்டில்  நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் கொடியேற்றினார். நிகழ்ச்சியில்  உரிமையியல் நீதிபதி ரேவந்த் கலந்து கொண்டார்.  மணலி மண்டலத்தில் மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். அவருடன் உதவி ஆணையர் அரவிந்த் செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் திலிப் குமார் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.</p><p>திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சார்பில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை தலைவர் மதுரை வீரன் ஏற்றி வைத்தார். விழாவில், செயலாளர் எம். காமாட்சி, ராமசாமி சேகர் சோலையப்பன் கே.ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா  மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார். இதில் நிர்வாகிகள் ராஜ்குமார், பாண்டிய ராஜன், ராஜேந்திரன், பாலன் பழனியப்பன் பால்ராஜ் ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.</p><p>மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்லவன் இல்லத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மேலாண்மை இயக்குனர் மோகன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொழிலாளர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.</p><h2><strong>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம்</strong></h2><p>திருவள்ளுவர் நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில் இன்று சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் திருவள்ளுவர் நகர் குடியிருப்புவாசிகள்  கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>24 மணி நேரத்திற்குள் மாற்றம்: என்ரிகா நிறுவனத்தின் 11 மதுபான வகைகளுக்கான தடையை நீக்கியது டாஸ்மாக் நிர்வாகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/24-hour-turnaround-tasmac-lifts-ban-on-11-enrica-liquor-brands#comments</comments><guid isPermaLink="false">f0bc7817-a1ce-4715-ae22-199cfd2bb0b4</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:22:28 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:22:28.409Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Tasmac,டாஸ்மாக் நிர்வாகம்,Brands Enrica,என்ரிகா நிறுவனம்,மதுபானக்கடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Brands Enrica]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/2pwidhja/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான என்ரிகா எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விற்பனைத் தடையை, உத்தரவிட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராண்டுகளின் விற்பனை மற்றும் கிடங்கு விநியோகம் மீண்டும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.</p><h2>உணவு <strong>பாதுகாப்புத் து</strong>றை ஆய்வு</h2><p>முன்னதாக, பூந்தமல்லி பகுதியில் இயங்கி வரும் என்ரிகா நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிர ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறி, 10 பிராந்தி வகைகள் மற்றும் 1 ரம் வகை உள்ளிட்ட 11 பிராண்டுகளை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெற FSSAI பரிந்துரைத்திருந்தது.</p><h2>டாஸ்மாக் நி<strong>ர்வாகத்தின்</strong> முந்தைய நடவடிக்கை</h2><p>FSSAI அமைப்பின் அறிக்கையைத் தொடர்ந்து, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac">மதுவிலக்கு </a>மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின்படி டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கே.நந்தகுமார் அனைத்து மண்டல மற்றும் டிப்போ மேலாளர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், குறிப்பிட்ட 11 மதுபான வகைகளையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், FL-2 மற்றும் FL-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் கிளப்புகளுக்கும் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><h2>மீண்டும் <strong>விற்பனைக்கு அனும</strong>தி </h2><p>தடை விதிக்கப்பட்ட குறுகிய கால இடைவெளியில், உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடைமுறை மறுபரிசீலனைகளுக்குப் பிறகு, அந்த 11 மதுபான வகைகளின் மீதான தடையை நீக்கி டாஸ்மாக் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, கிடங்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ரிகா நிறுவனத்தின் தயாரிப்புகளை மீண்டும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-youth-should-not-give-in-to-the-culture-of-drugs-and-violence#comments</comments><guid isPermaLink="false">b11f6f15-df47-45b7-b36b-8d7e0a371ebd</guid><pubDate>Sat, 15 Aug 2026 08:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-15T08:12:03.423Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/h1k389wm/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.</strong></em></p><p>80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/ஜிகே-வாசன்">ஜி.கே.வாசன்</a> தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.</p><p>இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.</p><p>பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது, </p><p>சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.  தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.</p><p>சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார். </p><p>மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>வயது முதிர்ந்த அளவுக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லை..!- ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajeshkumar-criticizes-rs-bharathi-controversial-remarks#comments</comments><guid isPermaLink="false">b16d31c2-2ac6-4055-b1cf-470ccf5352af</guid><pubDate>Sat, 15 Aug 2026 07:16:36 +0000</pubDate><atom:updated>2026-08-15T07:16:36.898Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,அமைச்சர் ராஜேஷ்குமார்,Minister rajeshkumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi- Minister Rajesh kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/v92tbia3/Rajesh-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சிறப்பாக செயல்பட்டும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியம் ஆகியோரை தோற்கடித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><p>அவர்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.</p><p>இதுபற்றி அமைச்சர் ராஜேஷ்குமார் கூறியதாவது:- </p><p>ஆர்.எஸ்.பாரதி தி.மு.க.வில் மூத்த தலைவர், வயது முதிர்ந்தவர். அவருக்கு வயது முதிர்ச்சி அடைந்த அளவுக்கு அரசியல் முதிர்ச்சி அடையவில்லை  என்பதையே இது காட்டுகிறது.</p><p>அரசியலில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் இந்த மாதிரி தரம் தாழ்ந்து கருத்துக்களை தெரிவிப்பது, மக்கள் மத்தி யில் பேசுவது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் சார்ந்த இயக்கத்துக்கும் இழுக்கை தான் ஏற்படுத்தும்.</p><p>ஜனநாயகத்தில் எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராஜர் கூட தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். அன்னை இந்திரா காந்தியும் தோற்கடிக்கப்பட்டார்.</p><p>ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. அதை அரசியல் கட்சிகளால் ஏற்றுக் கொள்ள தங்களை தாங்களே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் மக்களை வாயார புகழ்வதும், தோல்வி அடைந்ததும் வாய்க்கு வந்தபடி பேசுவதும் சரியானது அல்ல.</p><p>ஒரு இயக்கம் தோற்றா லும், அந்த இயக்கத்தினுடைய முக்கிய தலைவர்கள் தோற்றாலும், அந்த தோல் விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதன் பின்னர் மக்கள் கருத்து அறிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல அரசியல் தலைவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகாக இருக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில்- ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai#comments</comments><guid isPermaLink="false">ac3ca49a-46bb-4cfb-b846-cbd3543eb1eb</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:56:53 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:56:53.305Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,ஏசி மின்சார ரெயில்,AC Electric Train</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. மின்சார ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/yqezq0ym/ACTrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது.</strong></em> </p><p>சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- </p><p>2025-26 நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.26 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும். சென்னை கோட்டம் 43.2 98 கோடி பயணிகளை ஏற்றி சென்றதுடன் 11.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 6.20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 3559  சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதுடன் 1557 கூடுதல் பெட்டிகள்  இணைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார</a> ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ரெயில் சேவை தொடங்கும்.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மறு சிரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை 2 மாதம் தாமதமாகலாம். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 26  ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 13  ரெயில் நிலையங்களில் புதிதாக வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  26 லிப்ட்டுகள், 7 எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. </p><p>மாற்றுத்திறனாளிகளுக்காக 16 ரெயில் நிலையங்களில் அடிப்படையான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார சேவையில் ஆதம்பாக்கம் ரெயில்  நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வளைவான பகுதி என்பதால் ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் ஏறி இறங்குவதில்  அதிக சிரமம் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>தாம்பரம்- கடற்கரை மின்சார ரெயில் இயக்கத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேத்துப்பட்டு நிலையத்தில் சிக்னல் காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. பாஸ்ட் மின்சார  ரெயிலுக்காக மற்ற மின்சார ரெயில்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் தெரியவந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி- உதயநிதி ஸ்டாலின் சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-indictment-tvk-govt-3#comments</comments><guid isPermaLink="false">a86f17f4-4630-40c7-8ee5-f71949b071b8</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:23:39.540Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,TN Govt,Udhayanidhi Stalin,தமிழக அரசு,போதைப்பொருள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/686ac0hl/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested">தனுஷ்</a>, 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.</p><h2><strong>தோல்வி</strong></h2><p>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது.</p><p>சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி.</p><p>போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை.</p><p>நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.</p><p>குறிப்பாக, பள்ளிகளில் – கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு.</p><p>மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். </p><p>இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? </p><p>இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் Counselling வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>கோவையில் போதை கும்பலை தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2088504581903008194?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரக் கொலை-இருவரை கைது செய்து போலீஸ் விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-three-people-including-plus-two-student-brutally-killed-two-arrested#comments</comments><guid isPermaLink="false">a0a3611d-9962-49fe-9243-5b6a5c8c8098</guid><pubDate>Sat, 15 Aug 2026 06:18:54 +0000</pubDate><atom:updated>2026-08-15T06:18:54.483Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,student murdered,Crime,பிளஸ்-2 மாணவர் கொலை,கொடூரக் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ student murdered]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/nhfw9ito/mur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஒரே நாளில் பிளஸ்-2 மாணவர் உட்பட 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பீகார் வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2><strong>‘சீனியர்’ தகராறு: பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சோகம்</strong></h2><p>சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் தனுஷ் (16), விம்கோ நகரில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மாணவர்களிடையே யார் ‘சீனியர்’ என்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பள்ளி முடிந்து அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் வைத்து பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் அடங்கிய கும்பல் தனுஷை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. </p><p>இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>மெரினா <strong>கடற்கரை அரு</strong>கில் வாலிபர் சடலமாகக் கண்டெடுப்பு</h2><p>சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தின் பின்புறப் பகுதியில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக அண்ணா சதுக்கம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கொலையானவர் நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சாகா (27) என்பதும், பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறில் அவர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say"> அடித்துக் கொலை </a>செய்யப்பட்டதும் தெரியவந்தது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ope72x7n/murdere.jpg" /></figure><p>இக்கொலை தொடர்பாக, மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பீகாரைச் சேர்ந்த சன்னிசதா (26) என்பவரைக் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டுக் கைது செய்தனர்.</p><h2>வயல்வெ<strong>ளி சமாதியில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜாவின் மூத்த மகன் ரஞ்சன் (18). இவர் தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி ஒன்றின் மீது ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். </p><p>விசாரணையில், இரும்பு உருக்கு ஆலையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய ரஞ்சனும், அவரது நெருங்கிய நண்பரான காமேஷ் (22) என்பவரும் சம்பவத்தன்று இரவு ஒன்றாக மது அருந்தியதும், போதையில் ஏற்பட்ட முன்பகைத் தகராறில் காமேஷ், ரஞ்சனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷை பாதிரிவேடு காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்க உறுதி ஏற்போம்- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-pledges-to-build-an-india-of-equality-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b7210659-da6f-416b-bdde-a539d5296185</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:40:25.096Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,flag hoist,கொடியேற்றம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/m6h419r6/TN-CM-VJ1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனித்த நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் விஜய் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியதாவது:- </p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம். </p><p>நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா கோலாகலம்: வானில் மிதந்த வண்ணமயமான பட்டங்களை ரசித்த பொதுமக்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mamallapuram-kite-festival-celebration#comments</comments><guid isPermaLink="false">92a47d7b-710a-43ee-b1c2-337cf189abb2</guid><pubDate>Sat, 15 Aug 2026 05:32:40 +0000</pubDate><atom:updated>2026-08-15T05:32:40.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mamallapuram,பட்டம் விடும் திருவிழா,மாமல்லபுரம்,Mamallapuram  Kite flying festival,giant kites,Tamil Nadu Tourism Development,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mamallapuram  Kite flying festival]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/wwxk18y4/mamallapuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில், 5-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா மிகக் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. </p><p>சுதந்திர தின வார இறுதியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பட்டம் பறக்கவிடும் வல்லுநர்கள் கலந்துகொண்டு தங்கள் கைவண்ணத்தில் உருவான பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டுப் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.</p><h2>திருவி<strong>ழா தொடக்</strong>கம் </h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக மைதானத்தில் 5-வது சர்வதேச <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters">பட்டம் விடும் திருவிழா </a>நேற்று தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வீரப்பன், சுற்றுலாத்துறை கமிஷனர் ஜெயசீலன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பா.விஜயராஜ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பட்டம் பறக்கவிடும் வீரர்களுக்கு அமைச்சர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.</p><p>இந்த விழாவில் இந்தியா (தமிழ்நாடு, பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம்) மட்டுமின்றி தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட சர்வதேச பட்டம் பறக்கவிடும் நிபுணர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>வானை அல<strong>ங்கரித்த பட்டங்கள்</strong></h2><p>கடற்கரைக் காற்று சாதகமாக வீசியதால், சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட ராட்சத பட்டங்கள் மாமல்லபுரம் வானில் வண்ணமயமாகப் பறந்தன.</p><h2>கடல்வாழ் <strong>உயிரினங்</strong>கள்</h2><p>ஆக்டோபஸ், டால்பின், ஆமை, டிராகன், சூப்பர்மேன், மிக்கி மவுஸ், லபுபு மற்றும் ராட்சத ஷார்க் போன்ற பல்வேறு வடிவங்களிலான காற்று நிரப்பப்பட்ட பட்டங்கள் பொதுமக்களையும் குழந்தைகளையும் பெரிதும் கவர்ந்தன.</p><h2>த<strong>மிழர்களின் பாரம்பரியக் கலை பட்டங்கள்</strong></h2><p>தமிழ்நாட்டின் "ஸ்கைட்டர்ஸ்"  குழுவினர் தங்களின் விருது பெற்ற பொய்க்கால் குதிரை மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வடிவ பட்டங்களை வானில் பறக்கவிட்டு நமது பாரம்பரிய பெருமையை பறைசாற்றினர். மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, ஒளிரும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்புப் பட்டங்கள் வானில் ஜொலித்து இரவை மேலும் அழகாக்கின.</p><h2>குடும்பங்களு<strong>க்கான கொண்</strong>டாட்டம்</h2><p>இந்த பட்டம் விடும் திருவிழா முற்றிலும் இலவச அனுமதி கொண்ட ஒரு குடும்பக் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களுக்கான கடற்கரை உணவு அரங்குகள், கைவினைப் பொருட்கள் விற்பனைச் சந்தை, குழந்தைகள் புகைப்படப் பகுதிகள் மற்றும் ஃபார்முலா 1 கார் மாதிரி காட்சிப்படுத்தல் போன்றவை இடம்பெற்றுள்ளன.</p><p>விழாவிற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவதால் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகன நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் சிறப்புத் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உரிமையை பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்..!- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mp-kanimozhi-hails-kalaignar-for-winning-flag-hoisting-rights#comments</comments><guid isPermaLink="false">f7b3787b-30ca-4b1d-b276-aa4748fb6139</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:45:42 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:45:42.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/lemy6kd1/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.</p><p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:-</p><p>எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.</p><p>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.</p><p>தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்!</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.<br><br>அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர… <a href="https://t.co/cdkC6Psq0x">pic.twitter.com/cdkC6Psq0x</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2088454865311936800?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!- மு.க.ஸ்டாலின் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-independence-day#comments</comments><guid isPermaLink="false">e103d90e-1e4f-4555-ace3-f6680a88f03e</guid><pubDate>Sat, 15 Aug 2026 04:11:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T04:11:16.416Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Independence Day,சுதந்திர தினம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/drpu10xi/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்! என்று கூறியுள்ளார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினம்</a> இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!</p><p>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!</p><p>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!</p><p>அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!  என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!<br><br>கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!<br><br>நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம்… <a href="https://t.co/TeA3zZ0SQ9">pic.twitter.com/TeA3zZ0SQ9</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2088464998813319176?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presented-the-thagaisal-tamizhar-award-to-senior-congress-leader-krishnasamy#comments</comments><guid isPermaLink="false">b8e4e90b-deb5-43b1-ba54-1b5207e3429c</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:54:35 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:54:35.349Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/ksplz5wv/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார். மேலும் விருது பெற்றவர்களின் விவரம்:- </p><p>* மாநில இளைஞருக்கான விருது இம்மானுவேல் நெல்சன், சரவணகுமார், நிர்மல் கதிரவேலுக்கு வழங்கப்பட்டது. </p><p>* மாநில இளைஞருக்கான விருதை பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி மகாதேவன், சிந்தா பெற்றுக்கொண்டனர்.</p><p>* கே.கே. நகர் அரசு மருத்துவனை மருத்துவர் திருநாவுக்கரசுக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருது நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்த் என்பவருக்கு கல்பனா சாவ்லா விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை கோவை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கீதாஞ்சலிக்கு வழங்கப்பட்டது. </p><p>* முதலமைச்சரின் நல் ஆளுமை விருதை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சதீஷ் பிரபு மற்றும் குழுவினருக்கு வழங்கப்பட்டது. </p><p>* கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான விருது. </p><p>* திருவிடைமருதூர், கருங்கல், செட்டிப்பாளையத்துக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருதும், போடிநாயக்கனூர், ஆரணி, விழுப்புரத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருதும் வழங்கப்பட்டது. </p><p>* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிருஷ்டி பவுண்டேஷன் சிறந்த நிறுவனத்துக்கான விருதைப் பெற்றது. </p><p>* திருவண்ணாமலை மாவட்டத்தின் பா.மணிமாறனுக்கு சிறந்த சமூகப் பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. </p><p>* அதிகளவில் பணியமரித்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதை திருப்பூரின் SCM கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. </p><p>* மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த கூட்டுறவு வங்கிக்கான விருதை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p><p>இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு முதலமைச்சர் விஜய் இனிப்புகளை வழங்கினார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p>]]></content:encoded></item><item><title>சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவம்..!- ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தி அறிவித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-raises-pension-to-rs-25000-in-tribute-to-freedom-fighters#comments</comments><guid isPermaLink="false">4dca3263-4a38-49f6-8b2e-f3f8a64b6f8e</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:53:16 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:53:16.301Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pension,Independence Day,சுதந்திர தினம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,சுதந்திர போராட்ட வீரர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/5e83b1lg/VJ-New.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் பிரபலமானவர்கள் உள்பட பெயர் தெரியாத ஒவ்வொரு சுதந்திர வீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.</p><p>அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி</p><p>வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.</p><h2>நிதியுதவி உயர்வு</h2><p>முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு.</p><p>விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது.</p><p>மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும்- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-tvk-government-will-oppose-anything-that-poses-a-threat-to-state-rights#comments</comments><guid isPermaLink="false">c9d109e8-bc7f-4999-aa95-4e2f8bb4f764</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:36:29 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:36:29.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Independence Day,சுதந்திர தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/muzqnh9l/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும் என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தினத்தையொட்டி</a> சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>* தங்களது உயிரை, வாழ்க்கையை இழந்து சுதந்திரம் வாங்கித்தந்த சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தனிப்பட்ட வீர வணக்கங்கள். </p><p>* கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்த மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். </p><p>* அடிமையாக இருப்பதை எதிர்த்து ஒன்றுசேரும்போது சாதி, மதம், இனம் அனைத்தும் உடைத்து நொறுங்கும். மதம், மொழி என அனைத்தும் உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம். </p><p>* உடைந்து நொறுங்கும்போதுதான் சுதந்திரம் கிடைக்கும், அதை கெட்டியாகப் பிடித்து முன்னேறுகிறோம். </p><p>* லஞ்சம், ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது த.வெ.க. அரசு செயல்பட்டு வருகிறது. வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>* தமிழக நலனுக்கு எதிராக, மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் த.வெ.க. அரசு எதிர்க்கும். </p><p>* பொது வாழ்வில் சமரம் இருக்கக்கூடாது, மக்கள் நலன் முக்கியம் என்ற அடிப்படையில் த.வெ.க. அரசு செயல்படுகிறது. </p><p>* அம்மா உணவகம் திட்டம், காலை உணவுத் திட்டத்தை இன்னும் மெருகேற்றி விரிவுபடுத்தி செயல்படுத்துகிறோம். </p><p>* தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, கணினி மயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. </p><p>* விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துக்கு நிதி தரப்பட்டுள்ளது. </p><p>* தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம்.</p><p>* அரசின் வருமானம் தனிநபருக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது, லஞ்சம் லாவண்யம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. </p><p>* தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. </p><p>* தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாக, உலகளவில் வளர்ந்த நாட்டுக்கு இணையாக உயர்த்த உறுதியேற்போம். </p><p>* அரசு அலுவலகம் தேடி வரும் மக்களை அலையவிடாமல் அன்பாக கண்ணியமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். </p>]]></content:encoded></item><item><title>80வது சுதந்திர தினம்: கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-cm-vijay-hoists-tricolour-at-fort-st-george#comments</comments><guid isPermaLink="false">cce06d55-5b1e-46fd-950c-a63c41f901e6</guid><pubDate>Sat, 15 Aug 2026 03:22:45 +0000</pubDate><atom:updated>2026-08-15T03:22:45.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,தேசியக்கொடி,Indian flag,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-15/cardncu9/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றுவதற்காக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> வருகை தந்தார்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்ற தலைமைச் செயலாளர் அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.</p><p>புனித ஜார்ஜ் கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றார்.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு முப்படை மற்றும் சிறப்பு காவல் படை உள்ளிட்ட படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.</p><p>திறந்தவெளி வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பினை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.</p><p>பின்னர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், செயின்ட் <a href="https://www.maalaimalar.com/news/district/tn-legislative-assembly-will-convene--january-5" rel="nofollow">ஜார்ஜ் கோட்டை</a> கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Tamil Nadu Chief Minister C Joseph Vijay hoists the tricolour at the state Secretariat in Chennai on the occasion of 80th Independence Day. <a href="https://t.co/QFKUtuvUjl">pic.twitter.com/QFKUtuvUjl</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2088466594729214122?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானை சார்ந்ததா?: தமிழக அரசை சாடிய சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-ask-questions-to-police-department-about-flag-parade-permission-issue-in-kovai#comments</comments><guid isPermaLink="false">8e7d0d1d-2842-416f-b7b5-fe1d721241b1</guid><pubDate>Fri, 14 Aug 2026 14:11:39 +0000</pubDate><atom:updated>2026-08-14T14:11:39.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,கோவை,Chennai High court,சென்னை ஐகோர்ட்,kovai,Flag Parade,police dept,தேசிய கொடி பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/02k5263g/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரணி நடத்த தி.க., பா.ஜ.க.விற்கு அனுமதியில்லை, த.வெ.க.விற்கு மட்டும் அனுமதியா? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.</p><h2>அவசர வழக்கு</h2><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. சார்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது என பா.ஜ.க.வின் கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் தெரிவித்திருந்தார்.</p><h2>த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது தமிழக அரசுக்கு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.</p><p>அதில், பேரணி நடத்த திராவிடர் கழகத்திற்கு அனுமதி இல்லை, பா.ஜ.க.வுக்கு அனுமதி இல்லை, த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் தேசியக் கொடியை பிடித்து உயிர் நீத்தார். அப்படிப்பட்ட நாட்டில் தேசியக் கொடி பிடித்துச் செல்ல தடை விதிப்பது ஏன்? தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? </p><p>அமைதியாக கொடி பிடித்துச் செல்லவே அனுமதி கேட்கிறார்கள். அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சனை உள்ளது?</p><p>அவர்களும் இந்தியாவில் தான் உள்ளார்கள். தேசியக் கொடியை பிடித்து பேரணி செல்வது என்ன பாவச் செயலா? பேரணிக்கு அனுமதி கேட்டுள்ள கோவை என்ன பாகிஸ்தானா அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்ததா?</p><p>தி.க. ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை. பா.ஜ.க. ஊர்வலம் செல்லக்கூடாது. த.வெ.க.வுக்கு மட்டும் அனுமதியா?</p><p>பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்களா? மற்றவர்கள் கலந்துகொள்ள மாட்டார்களா?</p><p>ஆங்கிலேயர் காலத்தில் இருந்த நடைமுறையில் மாவட்ட ஆட்சியர் செயல்படக் கூடாது என கூறிய நீதிபதி, தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.</p><p>முன்னதாக, பா.ஜ.க. கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ரமேஷ்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>தேசியக் கொடி பேரணி</h2><p>சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், 4 நாளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தது.</p><p>அதன்பிறகு சிவானந்தா காலனி முதல் பவர்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜர்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம்.</p><p>அதிகாரிகளுடனான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது.</p><p>காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையர், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.</p><p>காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை தேநீர் விருந்து கிடையாது: ஆளுநர் மாளிகை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-tamilnadu-governor-tea-party-cancels-on-tomorrow#comments</comments><guid isPermaLink="false">aaccb31f-a792-4758-8e9d-0dee8a973b1a</guid><pubDate>Fri, 14 Aug 2026 12:12:58 +0000</pubDate><atom:updated>2026-08-14T12:12:58.558Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tea party,தேநீர் விருந்து,ஆளுநர் மாளிகை,Independence Day,சுதந்திர தினம்,lok bhavan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ lok bhawan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/jf729pbw/lokbawan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் மாளிகையில் நாளை தேநீர் விருந்து கிடையாது என தெரிவித்துள்ளது.</p><h2>சுதந்திர தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மாநில ஆளுநர்கள் அங்குள்ள ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.</p><p>தேசத்தின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையிலும், அரசு, அரசியல் கட்சியினர் உடன் ஆளுநர் மாளிகைக்கு இருக்கும் உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.</p><p>தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டார். அதன்பின், தமிழகத்துக்கு தனியாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர்தான் உள்ளார். கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.</p><h2>தேநீர் விருந்து</h2><p>தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தபோது அவருடனான மோதல் காரணமாக தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தேநீர் விருந்தை புறக்கணித்த சம்பவங்கள் நடந்தன.</p><p>இந்நிலையில், தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் முதலாக நாளை அவர் பங்கேற்பார் என்ற நிலையில் தேநீர் விருந்து இல்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p><p>பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து</p><p>கிடையாது. நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் தோல்விக்குப் பின் முதல்முறையாக..  வரும் 22-ல் திமுக செயற்குழு கூட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalin-led-dmk-executive-session-on-22nd-after-election-defeat#comments</comments><guid isPermaLink="false">bd638139-f808-48d9-92c5-d1137465199b</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:41:41 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:41:41.878Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/vh19gehg/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><p>சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.</p><p>அமைப்பு ரீதியாக தி.மு.க.வுக்கு 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் சரியாக செயல்படாத 10 மாவட்ட செயலாளர்கள் வரை பதவி பறிக்கப்படலாம்.</p><p>தற்போது இருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டப்படும் செயற்குழுவில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.</p><p>செயற்குழு கூட்டம் பற்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சைதை வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது -  ஆர்.எஸ்.பாரதி சாபம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharathi-curse-voters-of-saidai-will-not-have-a-good-death#comments</comments><guid isPermaLink="false">39106f1f-89f8-4111-9617-b38e740a1108</guid><pubDate>Fri, 14 Aug 2026 09:37:11 +0000</pubDate><atom:updated>2026-08-14T09:37:11.522Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,RS Bharathi,ஆர்எஸ் பாரதி,Ma Subramanian,மா சுப்பிரமணியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ RS Bharathi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/tldsjv7h/rsbharathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சாபமிட்டுள்ளார்.</strong></em></p><p>சென்னை காரம்பாக்கத்தில் நடந்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/75-percent-of-mous-finalised-under-dmk-rule-says-former-minister-trp-raja">திமுக</a> விழாவில் பேசிய அக்கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: </p><h2>தவெக ஆட்சி</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95">தவெக</a> ஆட்சிப் பொறுப்பேற்றதும் வீட்டு வரி எல்லாம் உயர்ந்து விட்டதாம். அதுபற்றி நமக்கு என்ன கவலை. </p><p>இனிமேல் நாம் அனைவரும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் வாக்களித்தவர்கள் தான். அவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட பிறகு தான் புத்தி வரும். </p> <h2>மா.சுப்பிரமணியன்</h2><p>மா.சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது.</p><p>மா.சுப்பிரமணியன் கொண்டுவந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டுபோட்டே தவெக வெற்றி பெற்றுள்ளது.</p><h2>போதைப்பொருள் பயன்பாடு</h2><p>இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள். 5 ஆண்டுகள் ஓய்வெடுப்போம்.</p><p>பேருந்து நிலையங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>80-வது சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gold-medals-and-cash-awards-for-15-police-officers#comments</comments><guid isPermaLink="false">bd2384a6-b8b5-424b-b3d8-f17e72062fd9</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:31:15 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:31:15.871Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Independence Day,சுதந்திர தினம்,Police department,காவல் துறை அதிகாரிகள்,சிறப்பு பதக்கம்,Special awards</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/l5l2chnl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p><h2>சிறப்பு பதக்கம்</h2><p>2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு  சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள், சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். </p><p>அவர்கள் விவரம் வருமாறு:-</p><h2>திருவள்ளூர்</h2><p>1. சி.ஜெயஸ்ரீ,  காவல் துணை கண்காணிப்பாளர்,  கும்மிடிபூண்டி  உட்கோட்டம்,   திருவள்ளுர் மாவட்டம்.</p><p>2.  நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர்,  திருவள்ளுர் உட்கோட்டம், திருவள்ளுர்  மாவட்டம்.</p><p>3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம்,  கோவை மாநகரம்.</p><p>4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு,  குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வு துறை,  திருச்சி மாநகரம்.</p><h2>கோவை-சென்னை</h2><p>5. சே.லதா, காவல் ஆய்வாளர், தனி சிறுவர் காவல் உதவி பிரிவு,  கோவை மாநகரம்.</p><p>6. வி.கோமதி, காவல்துறை உதவி தலை வர், நிர்வாகம்,   காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், சென்னை.</p><p>7. மா.சித்ரா, காவல் ஆய்வாளர், கைகளத்தூர் காவல் நிலையம்,  பெரம்ப லூர் மாவட்டம்.</p><p>8. ரா.வினதா, காவல் ஆய்வாளர், மேல்மலைய னூர் காவல் நிலையம்,   விழுப்புரம் மாவட்டம்.</p><p>9.கோ.மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம்,   சிவகங்கை மாவட்டம்.</p><p>10. ச.விஜயகுமார், காவல் துணை ஆணையர், மேற்கு, திருநெல்வேலி  மாநகரம்.</p><h2>காவல் பதக்கம்</h2><p>இதே போன்று பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள், சார் நிலை அலுவலர்களுக்கு  2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு  அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-</p><p>1. டாக்டர் வி.சசி மோகன்,  காவல்துறை துணைத் தலைவர், திண்டுக்கல் சரகம்.</p><h2>சென்னை-கரூர்</h2><p>2.தெ.சண்முக பிரியா,  காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், மேற்கு சரகம்,  சென்னை. </p><p>3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.</p><p>4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில் நுட்பம்), மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை, சென்னை.</p><p>5. மு.ரவிக்குமார், தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம்,  கரூர் மாவட்டம்.</p><h2>தங்கப் பதக்கம்</h2><p>விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்க வெகுமதியும் வழங்கப்படும்.</p><p>மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் விஜய்யால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மதுக்கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-liquor-brands-banned-in-tasmac#comments</comments><guid isPermaLink="false">02299041-60df-454d-8b69-83354c2a55dd</guid><pubDate>Fri, 14 Aug 2026 08:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-14T08:09:44.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>alcohol,மதுபான விற்பனை,liquor sale,Tasmac,டாஸ்மாக்,மதுக்கடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w93lfsb1/TASMAC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் மதுபான உற்பத்தி நிறுவனத்தில் உணவு பாதுகாப்புத்துறை தெற்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த 11ம் தேதி ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது செயற்கை சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்," டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, சில்லறை விற்பனைக் கடைகளில் 11 வகைகளின் விற்பனையை நிறுத்தவும், மேலும் எப்.எல். 2 மற்றும் எப்.எல். 3 உரிமதாரர்களுக்கு அவற்றின் விற்பனையை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த உத்தரவின் கீழ் வி.எஸ்.ஓ.பி. எக்சா கோல்ட் பிராந்தி, லூயிஸ் வெர்னன்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் 1 மெக்டொவல்ஸ் பைன் பிராந்தி, மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி மற்றும் என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் ஆகிய 11 ரகங்கள் வருகின்றன.</p><p>இவற்றின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அடையாளம்  நுகர்வோருக்கு விற்கக் கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.</p><p>இது தொடர்பான வழிகாட்டுதல்களை மதுவிலக்கு மற்றும் கலால் ஆணையர்  டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ireland-engineer-adopted-a-boy-from-mamallapuram-for-his-education-while-visiting-as-a-tourist#comments</comments><guid isPermaLink="false">ffe373a5-cedc-4935-9484-23cfbc87bcfa</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:39:09 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:39:09.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ireland,அயர்லாந்து,Education,Engineer,என்ஜினீயர்,boy adopted,சிறுவன் தத்தெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Boy - Michael]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/c63c90ia/sudent.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது படிப்புக்காக 5 வயது சிறுவனை தத்தெடுத்த அயர்லாந்து என்ஜினீயர்  அவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</strong></em></p> <h2>மைக்கேல் சாப்ட்வேர் என்ஜினீயர்</h2><p>அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் மைக்கேல். சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு உதவுவதை மனிதநேய சேவையாக செய்து வருகிறார். </p> <h2>மாமல்லபுரம் சுற்றுலா </h2><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மாமல்லபுரம் சுற்றுலா வந்தபோது பூஞ்சேரியை சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சர்வேஸ் (வயது 5) என்ற சிறுவன் ஒருவன் கல்வி கற்க முடியாமல் வறுமையிலும், பொருளாதாரம் இல்லாமலும் சிரமப்படுவதை அறிந்தார். </p><p>இதையடுத்து சிறுவன் சர்வேசை கல்விக்காக மைக்கேல் தத்தெடுத்தார். சிறுவனை ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை படிக்க வைப்பதாக கூறி உறுதி அளித்து அதற்கான உதவிகளை செய்தார்.</p> <h2>சிபிஎஸ்இ </h2><p>இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் அடுத்த வட கடம்பாடியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் தன் சொந்த செலவில் சிறுவன் சர்வேசை சேர்த்தார். தொடர்ந்து படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் அனுப்புவது, போனில் தன்னம்பிக்கை ஊட்டுவது, ஆங்கிலம் சரளமாக பேச ஆன்லைன் பயிற்சி கொடுப்பது என மாணவனை ஊக்கப்படுத்தி வந்தார். </p> <h2>மழலையர் பட்டமளிப்பு விழா</h2><p>இந்த நிலையில் அந்த பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் நன்னடத்தை, எழுத்தழகு, விடுப்பு எடுக்காமை, ஆங்கில உச்சரிப்பு உள்ளிட்ட நற்குணங்களுக்காக சிறுவன் சர்வேசுக்கு மழலையர் பட்டம் வழங்கப்பட்டது. </p> <h2>பட்டமளிப்பு நிகழ்ச்சி</h2><p>இதை நேரில் பார்பதற்காக மைக்கேல் அயர்லாந்து நாட்டில் இருந்து மாமல்லபுரம் வந்தார். பள்ளியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். </p><p>மேலும் மைக்கேல், தான் தத்தெடுத்து படிக்க வைக்கும் சிறுவன் சர்வேசை மேடையில் பாராட்டி மகிழ்ந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மற்ற மாணவர்களின் பெற்றோர்களை வியக்க வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-eliminating-alcohol-which-destroys-human-lives-should-be-the-governments-duty#comments</comments><guid isPermaLink="false">6e7ec2bf-ff8a-49d7-9303-33794cb6711a</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:14:31 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:14:31.689Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,alcohol,டாஸ்மாக் கடைகள்,Tasmac,மதுக்கடைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/w6ezbdmz/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் மருத்துவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மது அருந்தும் மாணவிகள்</h2><p>கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து துணை உணவுகளுடன் மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலையளிக்கிறது.</p> <h2>இளைய சமுதாயம் எங்கே செல்கிறது?</h2><p>அரசு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்துவது இப்போது தான் புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகள் ஒவ்வொருமுறையும் வெளிவரும் போதெல்லாம் இளைய சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற கவலையும், அதை விட அதிகமாக, எதிர்காலத் தூண்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும், சமூகமும் சீரழிக்கின்றனவே? என்ற ஆத்திரமும் தான் ஏற்படுகின்றன.</p> <h2>என்ன தண்டனை?</h2><p>இத்தகைய நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இளைய தலைமுறையினருக்கான பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தவெக ஆட்சியிலும் இத்தகையக் கொடுமைகள் தொடர்கின்றன. அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மிகவும் எளிதாக மது கிடைக்கும் சூழலை உருவாக்கிய ஆட்சியாளர்களையும், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்துவதை ஒரு சாகசமாகக் கருதும் மனநிலையை மாணவர்களிடம் ஏற்படுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை?</p> <h2>மதுக்கடைகள்</h2><p>ஒரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு வெளியிலும், சுடுகாடுகளுக்கு அருகிலும் தான் விற்பனை செய்யப்படும். அங்கு மது அருந்துவதற்காக செல்பவர்கள், யார் கண்களிலும் படாமல் பதுங்கி, பதுங்கி தான் செல்வார்கள். அந்த நிலையை மாற்றி பள்ளிகளுக்கும் மக்கள் கூடும் இடங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை அமைத்து அவற்றுக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யும் நிலையை உருவாக்கியது யார்? பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதாக ஆட்சியாளர்கள் அறிவித்த பிறகும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குறைந்தது இரு மதுக்கடைகளையாவது கடந்து செல்ல வேண்டிய சூழல் இப்போதும் நிலவுவது யாருடைய தவறு?</p> <h2>ஆன்லைனில் முன்பதிவு</h2><p>ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவ்வளவு இருக்கும்போது, ஆன்லைனில் முன்பதிவு செய்து, வரிசையில் நிற்காமல் எளிதாக மது வாங்குவதற்கான இணையதளத்தை ஆட்சியாளர்கள் உருவாக்கியது தான் சீர்திருத்தமா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு எல்லாம் ஆட்சியாளர்கள் விடையளித்து தீர்வு காண வேண்டும். மனிதர்களை ஒழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும்.</p> <h2>மதுவிலக்கு</h2><p>எனவே, மக்களுக்கும், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை- மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-police-teams-hunt-8-year-old-assault-suspects#comments</comments><guid isPermaLink="false">49ccc8dd-008e-442f-add3-bb4ebd3e84d1</guid><pubDate>Fri, 14 Aug 2026 07:04:32 +0000</pubDate><atom:updated>2026-08-14T07:04:32.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாலியல் வன்கொடுமை,கிருஷ்ணகிரி,Krishnagiri,தனிப்படைகள் அமைப்பு,Sexual Harassment,Special team</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Krishnagiri Sexual Harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/e1tiz4tv/Krishnagiri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 8 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களைப் பிடிக்கக் போலீசார் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2>கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை</h2><p>கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மலை கிராமத்தைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை மாலையில் பள்ளி வகுப்பு முடிந்து மற்ற குழந்தைகளுடன் நடந்து வீடு திரும்பினார். </p><p>மற்ற குழந்தைகள் முன்னதாகவே தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட, அந்தச் சிறுமி மட்டும் தனியாக வந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அச்சிறுமியை அருகில் உள்ள புதர் மற்றும் வனப்பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தனர்.</p><h2>சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை</h2><p>வீடு திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தை அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் குழந்தைகளுக்கான உதவி எண் 1098-க்குத் தகவல் தெரிவித்தனர். </p><p>உடனடியாக அன்று இரவில் 108 அவசர ஊர்தி மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><h2>3 தனிப்படை அமைப்பு</h2><p>இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹதிமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.</p><p>தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, 3 தனிப்படை போலீஸ் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karur-government-job-cancellation-interim-stay#comments</comments><guid isPermaLink="false">1f6b3a46-0c4a-4c05-a9ee-bdebef648ac8</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:48:20 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:48:20.896Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,கரூர்,Highcourt,Karur,Tamilnadu Government,madurai bench,tvk,உச்சநீதிமன்றம்,InterimStay,இடைக்காலதடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TamilNaduGovernment  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/esw925us/TamilNadu-Government?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த செப்டெம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D">கரூரில் நடைபெற்ற</a> தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு வேலையை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கினார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மனு</h2><p>இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த மதுரைக்கிளை, வேலை வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கும் உத்தரவிட்டது. </p><p>இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.</p><h2>நீதிபதிகள் கேள்வி</h2><p>இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அரசு வேலையினை ரத்து செய்ய மதுரை கிளையினுடைய உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். </p><p>மேலும், எதிர் மனுதாரர்களான சீனி மற்றும் அகமது ஆகியோரும் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்த முடிவு அரசு எடுத்த கொள்கை முடிவு, இதை எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆணை வழங்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கூற முடியும்? நீங்கள் யார்? என்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிபதிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தை கேள்வி எழுப்பினர்.</p><h2>விசாரணை ஒத்திவைப்பு</h2><p>தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்தும், எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்திரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>வந்தே மாதரம் பாடலுக்கு பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் - உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-to-be-hoisted-after-vande-mataram-song-high-court-registrar-circular#comments</comments><guid isPermaLink="false">485efbe3-49bd-4ac7-aa3a-f6578b394d67</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:16:42 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:16:42.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,Madras High Court,சென்னை ஐகோர்ட்,national flag,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras high court - National Flag]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/mwlpae3p/highcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><strong>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</strong></p><h2>உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை</h2><p>வந்தே மாதரம் பாடல் பாடப்பட்ட பிறகு தேசியக்கொடி ஏற்றப்படும் என உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.</p><p>முதலில் வந்தே மாதரம் பாடலும், தேசியக்கொடி ஏற்றப்பட்டு விழா நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>சுதந்திர தின கொண்டாட்டம்</h2><p>உயர்நீதிமன்றத்தின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்த அறிவிப்பு இல்லை.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 10-ந்தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தியாவின் சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. </p><p>சென்னை கோட்டை கொத்தளத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoisting-national-flag-at-fort-tomorrow">முதலமைச்சர் விஜய்</a> நாளை கொடி கம்பத்தில் மூவர்ண தேசியக் கொடியை முதல்முறையாக ஏற்றி வைக்கிறார். </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>சட்டசபையில் தீர்மானம் நிறைவேறிய நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">உயர்நீதிமன்றத்தில்</a> நாளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்ற தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை.</p><p>உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் வந்தே மாதரம், தேசிய கீதம் குறித்து மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளின் துயரத்தை பார்க்காமல் அறை மாற்றத்தில் கவனம் செலுத்துகிறார் முதலமைச்சர் விஜய்!- இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-prioritises-office-room-change-over-farmers-eps#comments</comments><guid isPermaLink="false">df79a00e-f168-454f-941a-b85e2a9bd1a9</guid><pubDate>Fri, 14 Aug 2026 06:15:53 +0000</pubDate><atom:updated>2026-08-14T06:15:53.484Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-14/asd7as3o/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>பயிர்க்கடன் தள்ளுபடி, மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்து.</p><p>அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-</p><p>காவிரியில் நமக்குரிய நீரை பெற்றுத் தராத தவெக அரசு ரீல்ஸ் போடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>ரீல்ஸ் மட்டும் போட்டு வரும் தவெக அரசானது விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.</p><p>ரீல்ஸ் போடுவதும் ரீல் விடுவதும் தமிழக வெற்றிக்கழக அரசின் வேலையாக உள்ளது. </p><p>விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு கிடக்கின்றன.</p><p>தலைமைச் செயலகத்தில் தனக்கான அறை மாற்றம் தான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியம். மக்கள் முக்கியமில்லை.</p><p>நானும் அங்கு இருந்தேன், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் அறை மாற்றுகிறார்.</p><p>நடிகர் என்பதால் அறை நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலமைச்சர் விஜய் அறையை மாற்றுகிறார்கள்.</p><p>விவசாயிகள் உணவுக்கே வழியின்றி உள்ள நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?</p><p>நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசு, முதலமைச்சர் விஜய் சென்று பேசினால் நீர் திறக்கும் என்பது நகைச்சுவை. 50 ஆண்டுகாலமாக காவிரி விவகாரத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். அந்த வரலாறு தெரியாமல் தவெக அரசு செயல்படுகிறது.</p><p>போராடி, வாதாடி பெற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகா மதிப்பதில்லை. பேச்சுவார்த்தை நடத்தினால் நீர் திறப்பார்களா?</p><p>வேண்டுமென்று காலம் தாழ்த்துவதற்காகவே கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் முயற்சிக்கிறார்.</p><p>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் தவெக அரசுக்கு விவசாயிகள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.</p><p>கட்சி தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகும் நிலையில் தவெகவுக்கு காவிரி போராட்ட வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. கூட்டணியில் கட்சிகள் கூட அனைத்து கட்சி கூட்டம் கூட்டுமாறு வலியுறுத்தியும் தவெக அரசு கேட்கவில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>