<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sun, 30 Aug 2026 13:32:47 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 30 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">197709fa-b7be-4f14-952f-71d97d446d53</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:00:27 +0000</pubDate><atom:updated>2026-08-30T13:31:29.700Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/4knayp7t/30082026LiveUpdates.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks" rel="nofollow">சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!</a></p><p>*  நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.</p><p>* சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-china-erases-tibetan-records">நேபாள வெள்ளப் பேரழிவு: திபெத் மக்களின் பதிவுகளை நீக்கி உண்மையை மறைக்கும் சீனா!... </a></p><p>*திபெத்தின் கைரோங் எல்லைப் பகுதியில் வெள்ளம் வீடுகளையும் சுங்கச் சாவடியையும் அடித்துச் செல்லும் பயங்கர காட்சிகளை திபெத்திய மக்கள் விசாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். </p><p>*ஆனால், அந்த வீடியோக்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days">நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</a></p><p>* நாளைமறுதினம் காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு செல்கிறார்.</p><p>* 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</a></p><p>* 219 தமிழர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு தமிழகம் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.</p><p>* 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-flood-disaster-plan-to-bury-unidentified-bodies">நேபாள வெள்ளப் பேரழிவு: அடையாளம் தெரியாத சடலங்களை அடக்கம் செய்யத் திட்டம்... </a></p><p>*நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.</p><p>*உடல்கள் அடக்கம் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களது குடும்பத்தினரை அடையாளம் கண்டுகொள்ளப் பல நவீன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nepal-flash-floods-death-toll-rises-to-734">நேபாளத்தில் பாய்ந்தோடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 734 ஆக உயர்வு; நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்... </a></p><p>*இந்த இயற்கை சீற்றத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இதுவரை சுமார் 2,500 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three">3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</a></p><p>* திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார்.</p><p>* ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery">என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pregnant-woman-pleaded-they-will-kill-me-dies-with-baby-after-delivery"> </a>* அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.</p><p>* அரசு மருத்துவமனை ஊழியர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என கர்ப்பிணி கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/no-true-hindu-can-think-muslims-should-not-be-in-india-mohan-bhagwat">இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்... </a></p><p>* இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.</p><p>* ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nepal-floods-97-year-old-grandmother-heroic-rescue">நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்...</a></p><p>* நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.</p><p>* அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor">தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</a></p><p>* தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்</p><p>* கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவுக்கு தப்பிய குரோம்பேட்டை குழுவினர்?- டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chrompet-pilgrims-missing-after-nepal-trip-travel-owner-speaks#comments</comments><guid isPermaLink="false">eba0b6c5-b0e7-4c4f-90a4-022c222c9edb</guid><pubDate>Sun, 30 Aug 2026 12:56:37 +0000</pubDate><atom:updated>2026-08-30T12:56:37.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil people,Travels Owner,டிராவல்ஸ் உரிமையாளர்,nepal flood,தமிழர்கள் மாயம்,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Travels agency]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/oc4t83xu/travels.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை குரோம்பேட்டையில் இருந்து நேபாளம் யாத்திரை சென்ற தமிழர்கள் 49 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை என டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>நேபாளத்திற்கு சென்று வந்த குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மறவேள் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வெள்ளத்தால் மூடப்பட்ட சீன குடியுரிமை மையத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>நீல நிற உடையில் தப்பியோடும் மக்கள், யாத்திரை சென்ற குரோம்பேட்டை குவினர்தான்.</p><p>மலை மீது ஏறி சீனாவுக்கு தப்பி சென்றிருக்கலாம். தற்போது வரை நேபாள அரசு மட்டுமே தகவல் தெரிவிக்கிறது. சீன அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.</p><p>சீன அரசு தகவல் தெரிவித்தால் மட்டுமே குரோம்பேட்டை குழுவினர் பற்றி தகவல் தெரிய வாய்ப்புள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian#comments</comments><guid isPermaLink="false">ee7c96b7-80da-41f7-9f67-b471a3ba6b66</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:32:08 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:32:08.797Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,Communist Party of India,Government of Tamil Nadu,M. Veerapandian,மு. வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் நீக்கம்: திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டியுள்ளது - மு. வீரபாண்டியன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ketfzs27/New-Project-2026-08-30T151811.712.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இது தவறுதலாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெற்றது அல்ல, திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>விடை இல்லை</h2><p>பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூகநீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. </p><p>இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. கண்டனக் கணைகளின் தாக்கத்திற்குப் பிறகு, தற்பொழுது அத்தலைவர்களின் பெயர்கள் குறிப்பேட்டில் சேர்க்கப்படும் என அமைச்சர் வி.சம்பத்குமார் கூறியுள்ளார். எனினும், இதற்குக் காரணமானவர்கள் யார் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை.</p><h2>மகத்தான தலைவர்கள்</h2><p>தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு ஆகியோர் மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் ஆவர். பிற்போக்குத் தனங்களை, இந்துத்துவ மதவெறி அரசியலை, வகுப்புவாதத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடியவர்கள் ஆவர். </p><p>நவீன இந்தியாவை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை தத்தம் வழிகளில் செலுத்தியவர்கள் ஆவர். அவர்களை சமூக நீதிக்காகப் போராடியவர்கள் என்று மட்டுமே பார்த்து விட முடியாது. அதற்கும் மேலாக உண்மையான சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னதக் கோட்பாட்டை இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டவர்கள் ஆவர்.</p><h2>தற்செயலானது அல்ல</h2><p>அப்படிப்பட்ட மகத்தானத் தலைவர்களின் பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. அதை ஒரு திட்டமிட்டச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. </p><p>இந்த மாபெரும் தலைவர்களின் பெயர்கள் இந்துத்துவா சக்திகளுக்கு, மத அடிப்படை வாதிகளுக்கு,பிற்போக்குச் சக்திகளுக்கு எப்பொழுதுமே எட்டிக்காய் போன்று கசப்பதாகும். </p><p>அவர்கள் மீது வெறுப்பு எனும் நெருப்பை இச்சக்திகள் தொடர்ந்து அள்ளி வீசுகின்றன. அத்தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றன.</p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>எனவே, இந்நிலையில், இத்தலைவர்கள் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? இந்த நீக்கத்துக்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை ? என்பவை குறித்து முழுமையான நேர்மையான விசாரணையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும். </p><p>இத்தலைவர்களின் பெயர் நீக்கத்திற்குக் காரணமானவர்களை கண்டறித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>உசிலம்பட்டி அருகே சிறுமி தற்கொலை: திமுக எம்பி கனிமொழி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/16-year-old-dalit-girl-dies-by-suicide-near-usilampatti#comments</comments><guid isPermaLink="false">41b33bf0-4ea0-454c-8c78-7712dadece55</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:20:34 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:20:34.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,கனிமொழி எம்பி,Kanimozhi MP,girl suicide,சிறுமி தற்கொலை,உசிலம்பட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/i4yvwhxw/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.</p><p>பள்ளிச் சேர்க்கைக்காக சென்ற சிறுமி அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் நிலையில் மனவேதனையில் உயிரை மாய்த்துள்ளார் என கனிமொழி கூறினார்.</p><p>இதுகுறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>உசிலம்பட்டி அருகே 16 வயது தலித் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.</p><p>தனது எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் பள்ளிச் சேர்க்கைக்காகச் சென்ற அந்தச் சிறுமி, அங்கு அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மனவேதனையில் அச்சிறுமி உயிரை மாய்த்து கொண்டதால், அவரது குடும்பம் நிலை குலைந்து போயுள்ளது.</p><p>ஒவ்வொரு குழந்தைக்கும் மரியாதையும், கண்ணியமும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது அவர்களின் உரிமை.</p><p>இது போன்ற மனவேதனைக்கு எந்தக் குழந்தையும் தள்ளப்படக் கூடாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி, நீதி நிலைநாட்டப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திண்டுக்கல்லில் பால் வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/four-children-killed-as-milk-van-hits-them-in-dindigul#comments</comments><guid isPermaLink="false">687eebcc-8f78-4ed6-a3ee-6c447123aec9</guid><pubDate>Sun, 30 Aug 2026 11:03:45 +0000</pubDate><atom:updated>2026-08-30T11:03:45.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சாலை விபத்து,road accident,திண்டுக்கல்,Children Death,சிறுவர்கள் உயிரிழப்பு,Dindugul</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/zek4xzgo/acci.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p>விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/moderate-rain-forecast-for-western-ghats-districts#comments</comments><guid isPermaLink="false">a4d3da7d-7631-4c09-a7cd-9d4c50aa6ead</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:40:04 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:40:04.706Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,Rain,மழை,Meteorological Centre,Weather,மேற்குதொடர்ச்சி மலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ngmpl060/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>13 மாவட்டங்களில் மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கள்ளக்குறிச்சிணண, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,2ம் தேதியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2>3ம் தேதி மிதமான மழை</h2><p>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><p>விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 4, 5ம் தேதிகளில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-must-condemn-mustafas-toxic-remarks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">f923f2e9-190a-473c-b6c6-b7707dc8ffe6</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:28:12 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:28:12.524Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,TVK Mustafa,தவெக முஸ்தபா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘முஸ்தபாவின் நச்சுப் பேச்சை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/b1ebdqqp/New-Project-2026-08-30T155745.412.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தவெக சட்டமன்ற உறுப்பினர்  முஸ்தபா, அண்மையில் 'அமரன்' திரைப்படம் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. </p><p>இந்திய மண்ணைக் காக்கத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் போற்றும் 'அமரன்' திரைப்படத்தை, ஏதோ ஒரு சமூகத்திற்கு எதிரானது போலச் சித்தரிக்க முயலும் முஸ்தபாவின் வஞ்சக அரசியல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றிய உண்மைக்கதையைப் படமாக எடுத்தால், அது எப்படி இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதாக அமையும்? முஸ்தபா ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்படுவதை ஏன் சகித்துக்கொள்ள மறுக்கிறார்? பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு ஒரு இந்தியக் குடிமகனுக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட வேண்டுமே தவிர, முஸ்தபாவைப் போலக் கண்ணீர் வரக்கூடாது. </p><p>உங்களது அனுதாபம் இந்திய ராணுவத்திற்கா அல்லது எல்லையைத் தாண்டி வரும் பயங்கரவாதிகளுக்கா? மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான 'துப்பாக்கி' திரைப்படத்திலும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகளை நீக்க வைத்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்  முஸ்தபா. </p><p>திரையில் தீவிரவாதி தண்டிக்கப்படுவதை ஒரு சமூகத்திற்கு எதிரானதாகக் காட்டி, தமிழ்நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கத் துடிக்கும் முஸ்தபாவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. முஸ்தபா போன்றவர்களின் இத்தகைய நச்சுப் பேச்சுக்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாகக் கண்டிக்க வேண்டும். </p><p>இல்லையெனில், இதுதான் தவெகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பதாக தமிழ்நாடு மக்கள் மக்கள் புரிந்துகொள்வார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அரக்கோணம் அருகே  2 மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-mother-two-sons-die-by-suicide-arakkonam#comments</comments><guid isPermaLink="false">56868c30-f768-405a-b000-8728cc7147e0</guid><pubDate>Sun, 30 Aug 2026 10:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-30T10:04:17.399Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரக்கோணம்,Arakkonam,3 Person Suicide,PoliceInvestigation,Family Tragedy,Mangammapetai,Tragic Incident</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Family-Tragedy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/qpcewinr/Family-Tragedy?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, கணவனை இழந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் ரெயில் முன் பாய்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தற்கொலை </a>செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>பின்னணி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ranipet">ராணிப்பேட்டை </a>மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவருக்கு, வள்ளி (23) என்ற மனைவியும், பரத் (7), சந்தோஷ் (3) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். </p><p>கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவரின் மறைவுக்குப் பின், வள்ளி தனது இரண்டு குழந்தைகளுடன் மங்கம்மாபேட்டையில் வசித்து வந்தார்.</p><h2>ரெயில் முன் பாய்ந்து கோர முடிவு</h2><p>இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்த தனது இரண்டு மகன்களையும் வள்ளி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அரக்கோணம் - திருத்தணி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மங்கம்மாபேட்டை வழித்தடத்தில், அரக்கோணத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற மின்சார ரெயிலின் முன், வள்ளி தனது இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி திடீரென பாய்ந்துள்ளார்.</p><p>இதில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ரெயில்வே போலீசார்</a> சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். </p><p>உயிரிழந்த வள்ளி மற்றும் அவரது மகன்களான பரத், சந்தோஷ் ஆகிய மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p><h2><strong>தற்கொலைக்கான காரணம் என்ன?</strong></h2><p>கணவர் இறந்ததால் ஏற்பட்ட வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வள்ளி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பக் கருத்து வேறுபாடு காரணமா? என்ற பல கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இரண்டு சிறுவர்கள் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் மங்கம்மாபேட்டை மற்றும் அரக்கோணம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை பள்ளிக்கரணையில் சதுப்புநில பாதுகாப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection#comments</comments><guid isPermaLink="false">5cc3d0c7-c382-4c74-b1b1-1fc4477e7b50</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:30:32 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:30:32.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Sowmiya Anbumani,சதுப்பு நிலம்,Pallikaranai,பள்ளிக்கரணை,Wetland,Pasumai Thaayagam,Save Pallikaranai</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss  - Sowmiya Anbumani ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/t11sdro8/Anbumani-Ramadoss-Sowmiya-Anbumani?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பாதுகாப்பது குறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> சென்னை பள்ளிக்கரணை பகுதியில் இன்று அதிரடி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.</p><h2><strong>பள்ளிக்கரணையில் அன்புமணி பிரச்சாரம்</strong></h2><p>சென்னை மாநகரின் மிக முக்கியமான இயற்கை அரணாக விளங்கும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை </a>சதுப்பு நிலப் பகுதி ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.</p><p>இந்நிலையில், இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பள்ளிக்கரணை பகுதியில் நேரடியாகக் களமிறங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.</p><h2><strong>சௌமியா அன்புமணியும் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> அவர்களுடன், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும் பாமக முக்கிய நிர்வாகியுமான <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF">சௌமியா அன்புமணியும்</a> இணைந்து கலந்துகொண்டார்</strong>.</p><p>அவரும் அங்கிருந்த பொதுமக்களிடமும், பெண்களிடமும் சதுப்பு நிலத்தை ஏன் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.</p><h2><strong>சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பு</strong></h2><p>பிரச்சாரத்தின் போது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அப்பகுதி பொதுமக்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் முக்கியக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்தனர்</p><p>சென்னை பெருநகரப் பகுதியை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88">பள்ளிக்கரணை சதுப்பு நிலம்</a> எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கினர். </p><p>இப்பகுதியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு இந்த சதுப்பு நிலமே அடித்தளமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.</p><p>அழியும் நிலையில் உள்ள இந்த இயற்கைச் சூழலையும், அங்கு வாழும் பறவைகள் உள்ளிட்ட பல்லுயிரினங்களையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.</p><h2><strong>பொதுமக்கள் பங்கேற்பு</strong></h2><p>இந்த விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகிகளும், பெருந்திரளான தொண்டர்களும் கலந்துகொண்டனர். </p><p>அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணியின் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது விவகாரத்தில் அரசு அலட்சியம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்- டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-mekedatu-issue-all-party-meeting-must-be-convened-immediately-says-dr-anbumani#comments</comments><guid isPermaLink="false">8f6614b6-3e9c-48aa-8a17-9aa224d65b60</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:27:21 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:27:21.076Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="269" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg" width="480"><media:title type="html"><![CDATA[  Anbumani condemns LPG Price Hike]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-07/w5gcs7m4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</p><p>மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது.</p><p>நேபாளத்தில் இமய மலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல.</p><p>தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் காய்கறி மாலைகள் அணிந்து போராட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-in-vandavasi-over-spiralling-vegetable-prices#comments</comments><guid isPermaLink="false">208b684e-ff1d-4ecb-91d3-663d04dc4460</guid><pubDate>Sun, 30 Aug 2026 08:26:35 +0000</pubDate><atom:updated>2026-08-30T08:26:35.014Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>essential commodities,விலைவாசி உயர்வு,price rise,vegetable price hike,Vandavasi,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி,வந்தவாசி,CPIM Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPIM Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1oxbqvra/CPIM-Protest?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் கடுமையான விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசியில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a>யினர் காய்கறி மாலைகளை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2><strong>கிடுகிடுவென உயர்ந்த விலைவாசி</strong></h2><p>கடந்த சில வாரங்களாகவே அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் தக்காளி, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வெங்காயம் </a>உள்ளிட்ட அன்றாட சமையல் காய்கறிகளின் விலைகள் சந்தையில் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. </p><p>இந்த திடீர் விலை ஏற்றம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டை பதம் பார்த்துள்ளதுடன், பொதுமக்களைப் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.</p><h2><strong>காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்</strong></h2><p>விலைவாசி உயர்வை கவனித்து அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D">மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சரமரமாகக் கோர்த்து மாலையாக அணிந்து கொண்டு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.</p><p>காய்கறிகளின் விலை உயர்வால் அவை நகையாகவும் மாலையாகவும் மதிக்கும் நிலைக்கு வந்துவிட்டதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.</p><h2><strong>முக்கிய கோரிக்கைகள்</strong></h2><p>ஆர்ப்பாட்டத்தின் போது, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மாநில அரசுகளுக்கு</a> எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.</p><p>ஓயாமல் உயர்ந்து வரும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி விலைகளைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>வெளிச்சந்தையில் விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் தரமான மளிகைப் பொருட்களை வழங்க அரசு முன்வர வேண்டும். </p><p>உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை உயர்த்தும் பெரு முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்று கோரிக்கைளை முன்வைத்தனர்.</p><h2><strong>மக்கள் ஆதரவு</strong></h2><p>வந்தவாசியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் விலைவாசி உயர்வாலும், பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் பெண்ணை தீர்த்துக் கட்டினோம்- வடமாநில தம்பதி வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancheri-woman-murder-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancheri-woman-murder-case#comments</comments><guid isPermaLink="false">194a6100-72e0-4706-9b5d-7f089a4f5bf7</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:45:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:45:20.799Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பெண் கொலை,woman murder,பிரியாணி அண்டா,கூடுவாஞ்சேரி,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,Guduvancherry,Guduvancheri woman murder</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3dl60pt6/Guduvancheri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3dl60pt6/Guduvancheri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் ஆக்ராவில் மீட்கப்பட்டது.</p><p>இதை தொடர்ந்து அங்குள்ள  போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி</strong></h2><p>கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவை, ராகுல் என்கிற மொனிருதின் லஸ்கர் அவரது மனைவி பகவதி மாஜி ஆகிய இருவரும் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.</p><p>பின்னர் ஹயாத் நிஷாவின் உடல் சதை பகுதியை பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில் போட்டு அதனை சமைத்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பெண்ணை கொன்று இருவரும் நரமாமிசம் சாப்பிட்டார்களா? என்கிற திகிலூட்டும் கேள்வியும் எழுந்தது.</p><h2><strong>கைது</strong></h2><p>இதை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிப்பதற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக இருவரும் நேற்று சிக்கினர். அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் மணிப்பூரில் பதுங்கியிருந்த ராகுல் கைது செய்யப்பட்டார்.</p><p>அதைதொடர்ந்து ஒடிசாவில் வைத்து பகவதி மாஜியையும் போலீசார் கைது செய்தனர்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/3z6ivy7p/Guduvancherii.jpg" /></figure><h2><strong>சென்னைக்கு</strong></h2><p>இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த உள்ளனர். போலீசில் சிக்கியதும் கொலைக்கான காரணம் குறித்து இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.</p><p>அப்போது கள்ளக்காதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டியதாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ராகுல் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>தகாத உறவு</strong></h2><p>நான் எனது மனைவி பகவதிமாஜியுடன் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்தேன். அப்போது ஹயாத் நிஷாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவர் அடிக்கடி எனது வீட்டுக்கு வந்து சென்றார். இருவரும் நெருங்கி பழகியது எனது மனைவி பகவதி மாஜிக்கு பிடிக்கவில்லை. அவர் என்னையும், ஹயாத் நிஷாவையும் கண்டித்தார். இதனால் நான் ஹயாத் நிஷாவுடனான தொடர்பை துண்டித்து விட முடிவு செய்தேன். இதுபற்றி அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன். அதற்கு ஒத்துக்கொள்ளாத ஹயாத் நிஷா எங்களை மிரட்டினார்.</p><p>இது இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் ஹயாத் நிஷாவை கொலை செய்ய திட்டமிட்டோம்.</p><h2><strong>வெளியில் தெரியாது</strong></h2><p>சம்பவத்தன்று எங்களது வீட்டில் வைத்து ஹயாத் நிஷாவுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டியதால் ஆத்திரத்தில் துண்டு துண்டாக வெட்டி கொன்றோம்.</p><p>கொலையை மறைப்பதற்காக சூட்கேசில் உடலை வைத்து ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த கொலை தொடர்பாக எதுவும் வெளியில் தெரியாது, தப்பித்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தோம்.</p><p>இவ்வாறு கைதான ராகுல் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-level-touches-90-feet-after-194-days#comments</comments><guid isPermaLink="false">c9af8457-f3f1-4f74-b61f-85bb3016a1fa</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:42:07 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:42:07.054Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,Mettur Dam,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர்வரத்து அதிகரிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/sno16eke/Mettur0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூர் அணையை திறப்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை மறுதினம் சேலம் செல்கிறார். அங்கிருந்து மேட்டூர் அணைக்கு சென்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்க உள்ளார்.</p><p>கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.</p><h2>11 ஆயிரத்து 312 கனஅடி</h2><p>அதன்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 6,600 கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4712 கன அடி வீதமும் என மொத்தம் 11 ஆயிரத்து 312 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.</p><h2>ஒகேனக்கல்</h2><p>இந்த தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக தொடர்ந்து வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.</p> <h2>பரிசல் இயக்க தடை</h2><p>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சீராக இல்லாமல் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றுடன் தடை 15-வது நாளாக நீடிக்கிறது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளிலும், காவிரி ஆற்றங்கரை ஓரங்களிலும் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகா ரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>ஒகேனக்கல்லில் இருந்து தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 6702 கன அடியாக இருந்த நிலையில் மாலையில் 7022 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 6,887 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.</p><p>அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 89.95 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 90.07 அடியாக உயர்ந்தது.</p><h2>194 நாட்களுக்கு பிறகு அடி</h2><p>கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நீர்மட்டம்  90.07 அடியாக இருந்த நிலையில் அப்போது அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 27 கன அடி மட்டுமே இருந்தது. இந்த நிலையில் 194 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும்  90 அடியை எட்டியது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 90.30 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.99 டி.எம்.சி. உள்ளது. </p><p>நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையின் 16 கண் மதகு பகுதியில் நீரின் பரப்பு அதிகரித்து, பாறை திட்டுகள் படிப்படியாக நீரின் மூழ்கி வருகின்றன.</p><p>அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து    தண்ணீர் திறந்து வைக்க மேட்டூருக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>அம்பேத்கர், பெரியார் பெயர் நீக்கம்: அமைச்சர், அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ambedkar-periyar-name-removal-minister-officials-must-give-proper-explanation-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">59c0c27b-36cc-464c-9629-8be1717007c0</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:28:57 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:28:57.694Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக சட்டசபை,TN assembly,அம்பேத்கர்,பெரியார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொல் திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/iny056ep/Thirumavalavan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி விமான நிலையத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>உள்நோக்கம்</h2><p>சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளதா?  என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சரும் இதற்கு உரிய விளக்கம் அளிப்பார்கள் என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.</p><p>முன்னாள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல. அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரை அச்சுறுத்த நினைத்து, தன்னிச்சையாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அந்த கோரிக்கையை நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.</p><h2>தனிச்சட்டம்</h2><p>தமிழக அரசு தலித் மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. தலித் மக்களை பாதுகாக்க தனிச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதனை தற்போதைய அரசு செய்யும் என்று நம்புகிறோம். செய்யச் சொல்லித் தொடர்ந்து வலியுறுத்துவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்கள் 100 பேரை தேடும் பணி தீவிரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-100-tamils-still-missing-as-rescue-efforts-intensify#comments</comments><guid isPermaLink="false">917c2021-554e-4488-a1c1-199582aee664</guid><pubDate>Sun, 30 Aug 2026 06:02:15 +0000</pubDate><atom:updated>2026-08-30T06:02:15.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாளம் வெள்ளம்,Rasuwa,ரசுவா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாளம் பெரு வெள்ளம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/y0p3s5ca/NepalFlood.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் 219 தமிழர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்த நிலையில், 100 பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.</p><p>நேபாளத்தில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பெரு வெள்ளம் உலகையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இமயமலையில் பனிச்சிகரம் உடைந்து போதோகோஷி, திரிசூலி, நாராயணி ஆகிய 3 நதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வாரி சுருட்டியது.</p><p>இதில் 2 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் காணாமல் போனார்கள். இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 2,362 பேர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி கண்டு பிடித்து மீட்டு வருகிறார்கள். வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியதால் பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன.</p><h2>பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு</h2><p>பெருவெள்ளத்தால் கடும்பாதிப்பை சந்தித்துள்ள இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேருடன் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு படையினர் களத்தில் உள்ளனர். அவர்கள் உயிர் இழந்தவர்களின் உடல்களை ஒவ்வொரு நாளும் மீட்டு வருகிறார்கள். இதுவரை 682 உடல்கள்  மீட்கப்பட்டுள்ளன. அதே வேளையில் பாதிக்கப்பட்ட இமயமலை பகுதி முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்து உள்ளது.</p><p>வெள்ளத்தில் சிக்கிய 3,700 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்தியர்கள், சீனர்கள், தென்கொரிய நாட்டினர் உள்பட வெளிநாட்டினரும் அடங்குவார்கள். காயங்ளுடன் மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க துன்சே, திரிசூலி ஆகிய இடங்களில் அவசரகால சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் 275 இந்தியர்கள் அடங்குவர். அவர்களை தேடும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.</p><h2>தமிழர்கள்</h2><p>நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் அடங்கிய குழு டெல்லி சென்றது. அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள். இதன் மூலம் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் படிப்படியாக மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். ஏற்கனவே 21 தமி ழர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பி இருக்கிறார்கள்.</p><h2>சென்னை திரும்பினர்</h2><p>இந்த நிலையில் டெல்லியில் இருந்து மூன்று அமைச்சர்கள் நேற்று இரவு சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>கடந்த 3 நாட்களாக முதல்-அமைச்சர் விஜய் ஆணைக்கிணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொண்டோம். தற்போது அயலக தமிழர் துறை அமைச்சர் தென்னரசு டெல்லியில் தங்கி மீட்பு பணிகளை கண்காணித்து கொண்டிருக்கிறார்.</p><p>இந்திய வெளியுறவு துறை செயலாளரை நேரில் சந்தித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் இருந்து 319 பேர் பல்வேறு குழுக்கள் மூலமாக நேபாளம் சென்று உள்ளனர். இதில் 219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். வருகிற 31-ந்தேதி (நாளை) இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள்.</p><h2>100 தமிழர்கள்</h2><p>மீதமுள்ள 100 தமிழர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் மாயமானவர்கள் பட்டியலில் இருந்து வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சர்வதேச பேரிடர்</h2><p>நேபாள வெள்ளம் சர்வதேச பேரிடராக உள்ளது. பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் கூட உடைமைகள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. 2 நாடுகளின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளன.</p><p>கும்பகோணம் ஏஜென்சி முலம் சென்ற 57 பேரில் 21 பேர் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழுவில் சென்ற 36 பேரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.</p><h2>சீன எல்லை</h2><p>மற்றொரு குழுவாக சென்ற 150 பேர் சீன எல்லை வழியாக காத்மாண்டு வந்து உள்ளனர். இவர்கள் பல்வேறு விமானங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 39 பேர் குழுவாக சென்றவர்கள் பத்திரமாக உள்ளனர். இதில் 33 பேர் 31-ந்தேதி மாலை கோவைக்கு வந்து சேருகிறார்கள். 6 பேர் சென்னைக்கு வந்து சேருவார்கள்.</p><p>மகாதேவி யாத்திராவின் சேர்ந்த 49 பேர் எங்கு இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தகவல் தெரியவில்லை. 100 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். இந்த நேரத்தில் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><h2>பெங்களூரு</h2><p>சென்னையில் இருந்து பெங்களூரு வழியாகவும் சென்று உள்ளனர். மத்திய அரசின் வார் ரூம் முலமாக விரைவாக நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவத்தில் அனைவரும் ஒன்று இணைந்துதான் செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்பது ஒரே நோக்கமாக உள்ளது.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</p><h2>கலக்கம்</h2><p>நேபாள வெள்ளபாதிப்பு ஏற்பட்டு 5 நாட்கள் ஆகியும் தமிழர்கள் 100 பேரின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நேபாளத்திற்கு சென்று மாயமானவர்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>திண்டுக்கல்</h2><p>திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகள் தங்கமதி (வயது 49). தஞ்சாவூரில் வசித்து வரும் இவர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கேரளத்தில் வசித்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த 23-ந்தேதி தங்கமதி நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். 26-ந்தேதி வரை குடும்பத்தினருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.</p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் தங்கமதியை மீட்டுத்தரக் கோரி அவரது குடும்பத்தினர் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம், தலைமை செயலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் நேபாள தூதரக உதவி எண்களை தொடர்பு ெகாண்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2>தேனி தம்பதி</h2><p>இதேபோல் தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த செல்வம் (48). அவரது மனைவி சித்ரா தேவி (40), தாய் சரஸ்வதி ஆகியோருடன் ெசன்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் நேபாளத்திற்கு கடந்த 14-ந்தேதி ஆன்மீக சுற்றுலா சென்றனர். அவர்களுடன் 49 பேர் சென்றனர். 27-ந்தேதி பயணத்தை நிறைவு செய்து ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேபாளத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்திற்கு பின்னர் சுற்றுலா குழுவினர் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>இதுகுறித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருந்தபோதும் ஆன்மீக சுற்றுலா சென்ற 3 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் உறவினர்கள், கோடாங்கிபட்டி கிராமத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்ைகை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-bharati-challenge-to-tn-cm-vijay-you-open-three-files-i-open-three#comments</comments><guid isPermaLink="false">517d77de-dc63-4ff0-ae2a-40762e8e38e5</guid><pubDate>Sun, 30 Aug 2026 04:32:51 +0000</pubDate><atom:updated>2026-08-30T04:32:51.847Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,RS Bharati,tn cm vijay,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- ஆர்எஸ் பாரதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/ipwqapqe/RSBharati001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேலுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-political-clash-rs-bharathi-counters-adhav-arjunas-challenge-over-local-body-polls-and-mayor-post">ஆர்.எஸ். பாரதி</a> கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார். அவிழ்ப்பதுதான் உன்னோட வேலை. இந்த பூச்சாண்டி காட்டுவதெல்லாம் வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டது என்கிறார்.</p><p>ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சிஏஜி அறிக்கை வைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதேபோல் சட்டசபையில் சிஏஜி ரிப்போர்ட்டை வைப்பார்கள். அந்த சிஏஜி ரிப்போர்ட்தான் இந்த மூன்றும்.</p><p>எந்தவொரு சிஏஜி ரிப்போர்ட்டும் அரசாங்கத்தை பாராட்டி இருக்காது. ஆடிட் என்பது மாநகராட்சி முதல் அரசாங்கம் வரை நடக்கக் கூடியது. உடனே ஊடகங்கள் எல்லாம், பத்திரிகை எல்லாம் மூன்று பைல்கள் இருக்கிறது..,</p><h2>ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி</h2><p>நான் கூட திருவொற்றியூர் கூட்டத்தில் தைரியமாக சொன்னேன். நீ அவிழ் மூன்ற, நான் அவிழ்க்கிறேன் மூன்ற. நான் மோசமான ஆளு. இப்படிதான் முதன்முதல் ஜெயலலிதா என்கிட்ட வால் ஆட்டிச்சி. அதன் விளைவு என்ன என்பதை அந்த அம்மா உயிரோடு இருந்தா கேட்டு தெரிஞ்சுக்கோங்க.</p><p>இதேபோல்தான் ஆணவமாக பேசினார். அன்னைக்கு ஜெயலலிதா பெரிய தப்பு எதுவும் செய்யல. டான்சி நிலத்தை வாங்கினாங்க. அரசு நிலத்தை வாங்கக் கூடாது. நான் டான்சி நிலத்தை வாங்கியது தவறு என ஒரு அறிக்கை கொடுத்தது. திமுக-வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடையாது. கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளை காணவில்லை என்று சொன்னார்.</p><h2>வாய்க்கொழுப்பு</h2><p>மூன்று பேர்தான் திமுக-வில் வெற்றி பெற்றார்கள். கலைஞர் ராஜினாமா செய்துவிட்டார். இருவர் அவைக்கு சென்றார்கள். அந்த தைரியத்தில் அந்த அம்மா, நான் டான்சி நிலத்தை வாங்கினேன். வாங்கினால் என்ன தப்பு என்று சொன்னார்.</p><p>வாம்மா மாட்டினியா நீ என்று சொல்லி., போட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்று உள்ளே சென்றார்கள். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. எந்த கொழுப்பும் இருக்கலாம். வாய்க்கொழுப்பு மட்டும் இருக்கக் கூடாது. அந்த அம்மா பெரிய தப்பு ஏதும் செய்துவிடல. எனக்கு வேண்டாம் என்று அந்த நிலத்தை திருப்பி கொடுத்திருந்தாலம் முடிஞ்சி போச்சு.</p><p>இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பணியின்போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வழிகாட்டுதல்களை உருவாக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-directs-guidelines-on-cash-held-by-government-staff#comments</comments><guid isPermaLink="false">3e1d88df-13be-43f0-bee2-98cef7bf97b4</guid><pubDate>Sun, 30 Aug 2026 02:17:20 +0000</pubDate><atom:updated>2026-08-30T02:17:20.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,மதுரை ஐகோர்ட் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மதுரை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/akmpk2g4/MaduraiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு ஊழியர்கள் பணியின்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய வழிகாட்டுதல்களை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.</p><h2>லஞ்ச வழக்கு</h2><p>நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-</p><p>நெல்லை மாவட்டம் முக்கூடலில் சார்பதிவாளராக கடந்த 2021-ம் ஆண்டில் பணியாற்றினேன். அப்போது எனது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினர். இந்த நடவடிக்கை தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் என் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.</p><p>இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.</p><p>இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், அந்த தொகை திருமண செலவுக்காக மனுதாரர் வைத்திருந்த பணம்தான். எனவே அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என வாதாடினார்.</p><h2>சுற்றறிக்கை</h2><p>இந்த வழக்கை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-</p><p>லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச பண அளவு குறித்து எந்தவொரு வழிகாட்டுதலோ அல்லது நிபந்தனையோ இல்லை என்றே தெரிகிறது.</p><p>இதே கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பிற வழக்குகளில், வெறும் 1,500 ரூபாயை வைத்து இருந்ததற்காகக்கூட லஞ்ச ஒழிப் புத்துறையால் வழக்குகள் தொடரப்பட்டு இருப்பது தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உதவுமாறு கோரப்பட்டது. இதையடுத்து பதிவுத்துறை சார்பில் 2009-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.</p><p>அதில், பதிவுத்துறையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது பணம் வைத்திருப்பது தொடர்பான சில வழிகாட்டுதல்களை இந்த சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. இதுதொடர்பாக பதிவேடுகளை பராமரிக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.</p><h2>சாத்தியக்கூறுகள்</h2><p>இது பதிவுத்துறைக்கு மட்டுமே அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டுதலோ அல்லது அரசாணையோ வெளியிடப்படவில்லை என்றே தெரிகிறது.</p><p>எனவே இந்த விவகாரம் குறித்து அரசு மட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அந்தந்தத் துறைகளில் ஏதேனும் வழிகாட்டுதல்கள் உள்ளதா என்பது குறித்தும், பணியில் இருக்கும்போது அரசு ஊழியர்கள் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவை நிர்ணயிக்கும் வகையில் சீரான வழிகாட்டுதல்கள் அல்லது அரசா ணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அரசின் கருத்துகளை இந்த கோர்ட்டு எதிர்பார்க்கிறது.</p><h2>வழிகாட்டுதல்கள்</h2><p>ஏறக்குறைய அனைத்து கட்டணங்களையும் டிஜிட்டல் மூலம் மக்கள் செலுத்தக்கூடிய இன்றைய காலகட்டத்தில், அலுவலகத்திற்கு செல்லும்போது கணிசமான அளவு ரொக்கப் பணத்தை எடுத்து செல்வது தொடர்பான நடைமுறை குறித்து, அரசு ஒரு பொருத்தமான வழிகாட்டுதலை நிர்ணயிப்பதன் மூலம் தீர்வு காணவேண்டும். இத்தகைய நிபந்தனை விதிக்கப்பட்டால், அது அரசு அலுவலகங்களில் ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தக்கூடும். அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்.</p><p>ஊழலை ஒழிப்பதை அரசு தனது நோக்கமாக கொண்டுள்ளது. இதுதொடர்பாக வகுக்கப்படும் வழிகாட்டுதல்களானது, ஊழலற்ற நிர்வாகத்தை அடைவதற்கான அரசின் நோக்கத்தை வலுப்படுத்தக்கூடும். அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு வருகிற வருகிற 3-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kiran-kumar-reddy-likely-appointment-tamil-nadu-governor#comments</comments><guid isPermaLink="false">3136cecd-2cbe-44ec-b5dc-4c6324aa4a42</guid><pubDate>Sun, 30 Aug 2026 01:35:23 +0000</pubDate><atom:updated>2026-08-30T01:35:23.414Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,TN Governor,தமிழக அரசு,kiran kumar reddy,தமிழ்நாடு கவர்னர்,கிரண் குமார் ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1jzd0ev4/KirenKumarReddy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கிரண் குமார் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-30/1jzd0ev4/KirenKumarReddy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கிரண் குமார் ரெட்டி</h2><p>தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் கவர்னர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.</p><p>இந்த நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்து உள்ளன.</p><h2>மத்திய மந்திரி சபையில் மாற்றம்</h2><p>கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி சபையில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் கவர்னர் நியமனம் பற்றிய பேச்சு எழுந்துள்ளது.</p><p>பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு: முதலமைச்சர் விஜய் உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-orders-to-open-water-from-amaravati-dam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-orders-to-open-water-from-amaravati-dam#comments</comments><guid isPermaLink="false">de762ffa-31ed-49d1-8928-092d5b14cc45</guid><pubDate>Sat, 29 Aug 2026 19:43:12 +0000</pubDate><atom:updated>2026-08-29T19:43:12.622Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Amaravati dam,அமராவதி அணை,நீர் திறப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/sfxmvtw1/amaravati-dam-and-vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amaravati Dam and vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/sfxmvtw1/amaravati-dam-and-vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> அரசு ஆணையிட்டுள்ளது. எல்.நினோ பாதிப்பினால் மழை பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர்  திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.</p><h2>தண்ணீர் திறந்துவிட ஆணை:</h2><p>இதுதொடர்பாக அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் அமராவதி ஆற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நிலத்தடி நீர் உயர்வதற்கும், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்வதற்கும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக 30.08.2026 முதல் வரை, 07.09.2026 வரை நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 அடி வீதம் 8 நாட்களுக்கும் போதிய மழைப்பொழிவு காரணமாக வரும் நாட்களில் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து, அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 ஆகஸ்ட் 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-29-august-2026#comments</comments><guid isPermaLink="false">18607955-3bbe-49aa-abf1-a6d73cdd86bd</guid><pubDate>Sat, 29 Aug 2026 04:04:14 +0000</pubDate><atom:updated>2026-08-29T16:58:29.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/om47bexj/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-car-accident-4-college-students-death">மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து விபத்து - 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு</a></p><p>* ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. </p><p>* இந்த விபத்தில் மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/a38d2012-cf1b-4f8b-b29d-45b7bcf362f9">600-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை.. U டர்ன் அடித்த நேபாள அரசு - வெளிநாட்டு மீட்பு குழுக்களுக்கு அனுமதி</a></p><p>* சுமார் 1,500 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர்.</p><p>*சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் மாட்டிக்கொண்டனர்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e0806bf7-ac8b-4e79-a62c-a0d782ba38dc">உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்.. அமெரிக்கா கட்டுப்பாட்டுக்கு வரும் வெனிசுலா எண்ணெய் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இருப்பை அமெரிக்கா, கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்</p><p>*, ஈரான் போர் தொடங்கி ஆறு மாதங்களைக் கடந்துள்ளது</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/a6819e51-84ba-49d1-9c0f-574b54b98586">நேபாள வெள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த பெண்.. அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம் - அதிரவைக்கும் வீடியோக்கள்</a></p><p>*சீறிப் பாயும் நீரால் சூழப்பட்ட போதிலும் ஒரு பச்சை வீடு எவ்விதச் சேதமும் இன்றி அப்படியே நின்றது.</p><p>*மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/38db2f44-0d69-4039-8e5d-b660bab57679">அமெரிக்காவிடம் இருந்து ஜாவலின் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்து</a></p><p>*அமெரிக்காவுடன் இந்திய ராணுவம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>*ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-29-8-2026"> GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.14,505-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-left-for-uzbekistan-and-kyrgyzstan-on-a-4-day-trip">4 நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி!</a></p><p>* பயணத்தின் போது முதலாவதாக அவர் உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.</p><p>*உச்சிமாநாட்டில் ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள்</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india">விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</a></p><p>* விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p><p>* ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</a></p><p>* எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>*  நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues">எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சினைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள்.</p><p>* குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/0a2602fc-afa0-4738-abe3-981f6935c2f9">626 பேர் பலி.. நிறம் மாறிய புதிய ஏரி - நேபாளத்திற்கு சீனா எச்சரிக்கை</a></p><p>*2,500 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>*திபெத்திலும் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram">பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</a></p><p>* கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>* இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe">திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</a></p><p>* 21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. </p><p>* திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a></p><p>* விளையாட்டு விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது.</p><p>* விளையாட்டு என்பது ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools">அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</a></p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p>* கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai">இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</a></p><p>* இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 மீனவர்களையும் கைது செய்தனர்.</p><p>* கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/gas-cylinder-subsidy-to-be-increased-by-rs-50-in-puducherry-cm-rangasamy-announces"> புதுச்சேரியில் கியாஸ் சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்த்தப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு</a></p><p>* புதுவையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>* பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 93 முதல் 96 சதவீத நிதி செலவிடப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory">விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய்</a></p><p>* இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>* இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam">மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர்</a></p><p>* நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும்?</p><p>* நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th">தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami">த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</a></p><p>* சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது.</p><p>* மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw">முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</a></p><p>* இன்று முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>* எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் மு.க. ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-grand-festival-mk-stalin-introduces-110-district-incharges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-grand-festival-mk-stalin-introduces-110-district-incharges#comments</comments><guid isPermaLink="false">0a006589-7c47-4141-9687-46719b2d9377</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:58:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:58:51.928Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j3dmjul0/MKStalin0002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j3dmjul0/MKStalin0002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு காரணங்கள் குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க.வை வலுப்படுத்த 77 ஆக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.</p><p>அதன்படி, நேற்று கட்சி ரீதியாக தி.மு.க.வில் பிரிக்கப்பட்ட 110 மாவட்டங்கள் எவை? என்பதும், அதில் என்னென்ன சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன? என்பதுவும் வெளியானது.</p><h2>மாவட்ட செயற்குழு கூட்டம்</h2><p>தற்போதுள்ள 77 மாவட்ட செயலாளர்கள், புதிதாக உதயமாகும் 110 மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியம், நகரம், பேரூர் பகுதிகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மாவட்ட செயற்குழுவை கூட்டி, அதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>பொதுவாக, தி.மு.க.வில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தேர்தல் நடத்தியே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்பாக குறிப்பிட்ட மாவட்டத்தை கவனிக்க பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் மூலம் மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை பொறுப்பாளர்களே நிர்வகிப்பார்கள்.</p><h2>தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம்</h2><p>அந்த வகையில், தி.மு.க.வில் புதிதாக உதயமாகியுள்ள 110 மாவட்டங்களுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்கள் அனைவரையும் செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்து வைக்க, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முப்பெரும் விழா நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-former-cm-minister-mk-stalin-z-security-withdraw#comments</comments><guid isPermaLink="false">1cd7345a-c277-45be-ad4d-cafe3ad1cf2e</guid><pubDate>Sat, 29 Aug 2026 15:21:16 +0000</pubDate><atom:updated>2026-08-29T15:21:16.649Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/su1v2o3u/MKStalin0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க. ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/su1v2o3u/MKStalin0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. ஆட்சி மாறியதும் இசட் பிரிவு வழங்கப்பட்டது.</p><p>இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு, இன்று முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இதே எஸ்கார்ட் பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.</p><p>இசட் பிளஸ் பிரிவில் ஒரு நாளில் சுழற்சி முறையில் 58 காவலர்களும், இசட் பிரிவில் 33 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.</p>]]></content:encoded></item><item><title>&quot;மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்திக்கக் கூட முடியாது!&quot; - தமிழிசை சவுந்தரராஜன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-no-other-prime-minister-can-match-modi#comments</comments><guid isPermaLink="false">e3f9e81b-5262-48c8-b103-1347e6294957</guid><pubDate>Sat, 29 Aug 2026 14:04:17 +0000</pubDate><atom:updated>2026-08-29T14:04:17.073Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilisai Soundararajan,pm modi,தமிழிசை சவுந்தரராஜன்,மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilisai Soundararajan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/mne24hqg/Tamilisai-Soundararajan?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடிக்கு</a> இணையாக நாட்டின் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை தற்போது யாராலும் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது" என்று தமிழக பாஜக மூத்த தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.</p><p>சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியின் அரசியல் அனுபவம் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.</p><h2><strong>25 ஆண்டுகால அரசியல் அனுபவம்</strong></h2><p>இதுகுறித்து <a href="https://www.maalaimalar.com/topic/tamizhisai-soundararajan">தமிழிசை சவுந்தரராஜன்</a> பேசுகையில், "நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று முறை நாட்டின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பு 12 ஆண்டுகள் மாநில முதல்-மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். </p><p>இதன் மூலம் <strong>25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அரசியல் அனுபவத்தை</strong> அவர் பெற்றுள்ளார். எனவே, அவரது ஆளுமைக்கும் அனுபவத்துக்கும் இணையாக வேறு யாரையும் ஒப்பிட முடியாது" என்று குறிப்பிட்டார்.</p><h2><strong>பாகுபாடற்ற வளர்ச்சி &amp; தமிழ் மீதான பற்று</strong></h2><p>மேலும், ஜனநாயக நாட்டில் அனைவரும் தங்களது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க உரிமை இருந்தாலும், பிரதமர் மோடிக்கு இணையாகச் செயல்படுவது எளிதான விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.</p><p> "<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> தென் மாநிலங்கள், வட மாநிலங்கள் என எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை. குறிப்பாகத் <strong>தென் மாநிலங்களின் வளர்ச்சியில் அவர் அதிக அக்கறை</strong> செலுத்தி வருகிறார். </p><p>தமிழர்களின் பெருமையான திருக்குறளை உலக அளவில் பிரதமர் மோடி கொண்டு சென்ற அளவுக்கு வேறு யாரும் செயல்பட்டதில்லை" என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-government-will-not-complete-five-years-eddappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">bc9d3b6e-8bdb-44c2-b768-5e8e3f754b09</guid><pubDate>Sat, 29 Aug 2026 13:36:30 +0000</pubDate><atom:updated>2026-08-29T13:36:30.435Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/h7rmpmue/EPS0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-</p><p>சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது. மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.</p><p>இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. இந்த ஆட்சியில் கடன்தான் அதிகரிக்கும். தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கம் என்றால் அது அதிமுகதான். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களுடைய பிரச்சினையை முதன்முதலாக கொண்டு செல்லும் கட்சி அதிமுக.</p><h2>கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும்</h2><p>எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட் ஆனது. இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியின் லட்சணம் இதுதான். கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டிற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம். </p><p>த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை. அப்படி இருந்தால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தாளவாடியில் வாகனங்களை வழிமறித்து சாலையில் உலா வந்த ஒற்றை யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">1ffeecab-bef4-4938-85ba-7a485d5fffd4</guid><pubDate>Sat, 29 Aug 2026 11:05:43 +0000</pubDate><atom:updated>2026-08-29T11:05:43.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elephant,தாளவாடி,Thalavady,யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t3vhabvb/Elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t3vhabvb/Elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2><strong>சத்தியமங்கலம்</strong></h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.</p><p>சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.</p><h2><strong>வாகன ஓட்டிகள் அச்சம்</strong></h2><p>நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி சாலையில் வாகனங்களை வழிமறித்து கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் உலா வந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.</p><h2><strong>தாளவாடி</strong></h2><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகம் வசிக்கின்றன. தற்போது இந்த வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காட்டு யானைகள் சாலையில் உலா வருவதும் கரும்பு லாரிகளை வழிமறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.</p><h2><strong>ஒற்றை காட்டு யானை</strong></h2><p>மேலும் அந்த வழியாக வரும் மற்ற வாகனங்களையும் வழி மறிப்பதும் வாகனங்களில் கரும்பு உள்ளதா என சோதனை செய்வதும் தொடர்கதையாகி வரும் நிலையில் தாளவாடி கும்டாபுரம் வனச்சாலையில் ஒற்றை காட்டு யானை கம்பீர நடைபோட்டு நீண்ட தூரம் சாலையில் உலா வந்தது.</p><h2><strong>போக்குவரத்து பாதிப்பு</strong></h2><p>இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி நீண்ட தூரம் இயக்கினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட தூரம் உலா வந்த யானை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் செல்ல தொடங்கின. </p><h2><strong>வனப்பகுதி சாலையில்</strong></h2><p>தொடர்ச்சியாக கும்டாபுரம் வனப்பகுதி சாலையில் கரும்பு லாரிக்காக காத்திருக்கும் ஒற்றை யானையை அடர்ந்த வனப் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 4-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-4th#comments</comments><guid isPermaLink="false">819d25ab-d26b-4810-896e-0272414a56fc</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:28:27.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/qyfk0ngx/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி மற்றும் 02ந்தேதிகளில் வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>03-ந்தேதி வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>04-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே, இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்...</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 ° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 02-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மோடி அரசும், பிரகலாத் ஜோஷியும் மாணவர் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்!- மாணிக்கம் தாகூர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-govt-govt-for-neet-exam#comments</comments><guid isPermaLink="false">2dbe83cb-b9ea-45f1-ac59-a598445860a6</guid><pubDate>Sat, 29 Aug 2026 10:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-29T10:08:52.063Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,நீட் தேர்வு,மாணிக்கம் தாகூர்,Neet exam,மாணவி தற்கொலை,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/n8y1nn2a/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்! என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது. மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்த ஒரு இளம் மகளை நாம் இழந்திருப்பது தாங்க முடியாத வேதனையளிக்கிறது. </p><p>மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் அவர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவர்.</p><h2><strong>எப்போது முடிவுக்கு வரும்?</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கனவோடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">நீட்</a> தேர்வெழுதுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களோ வெறும் 13,999 மட்டுமே. தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2025-இல் 76,181 ஆக இருந்து, 2026-இல் 61,306 ஆகக் குறைந்து 19.5% கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சுமார் 15,000 தகுதியுடைய மாணவர்கள் குறைந்து போயிருப்பது, இந்த முறைகேடான தேர்வு முறையின் மீது மாணவர்களுக்குத் துளியும் நம்பிக்கையற்றுப் போய்விட்டதையே காட்டுகிறது.</p><p>நீட் தேர்வு என்ற கொடூரமான முறை தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களையும் கனவுகளையும் தொடர்ந்து பறிப்பது எப்போது முடிவுக்கு வரும் ?</p><p>நீட் கொடுமையால் இனி எந்தவொரு மாணவரின் உயிரும் பறிபோகக் கூடாது. தமிழ்நாடு தொடர்ந்து போராடியும் மாணவர்களின் மரணங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் நரேந்திர மோடி அரசின் கல் நெஞ்சமும், பிடிவாதமுமே இந்த தொடர் துயரங்களுக்குக் காரணம். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசும், ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் உடனடியாக நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் !- முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-let-us-grow-through-sports-let-us-shine-in-victory#comments</comments><guid isPermaLink="false">4e5b9e79-21f9-42d7-b034-7dd8783bacf0</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:55:35 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:55:35.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3levmrdn/Vijay05.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/தேசிய-விளையாட்டு-தினம்">தேசிய விளையாட்டு தினம்</a> (National Sports Day) கொண்டாடப்படுகிறது. </p><p>அந்த வகையில் இன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes">விளையாட்டு வீரர்கள்</a>, வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.</p><p>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.  </p><p>சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன்.</p><p>விளையாட்டில் வளர்வோம் ! வெற்றியில் மிளிர்வோம் ! என கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.<br> <br>விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு… <a href="https://t.co/2PDvmOIngQ">pic.twitter.com/2PDvmOIngQ</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2093612370937663954?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு: தான் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-karuppaiah-clarifies-remarks-on-jallikattu-and-youth#comments</comments><guid isPermaLink="false">703e276b-5b7e-4a2a-ab46-6fb62c248e83</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:44:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:44:55.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பையா எம்.எல்.ஏ.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/j60fd4y4/Karuppaiahmla001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. கருப்பையா நேற்று சட்டசபையில் பேசும்போது, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-condemns-tvk-mla-speech">அதிமுக </a>உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>இந்த நிலையில் கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கருப்பையா எம்.எல்.ஏ. கூறியதாவது:-</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அவர்கள் தவறான வழிக்கு போகக் கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு பில்டிங்கிற்குள் அடைக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரியம் மிக்கது. வரலாறு மிக்கது. தொன்மை வாய்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்கு முன் நம்முடைய சமூகம் கொண்டு வந்தது என்பது தெரியும்.</p><p>ஜல்லிக்கட்டு மறையாமல், மங்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நானும் ஒருவன். 2008 முதல் 2011 வரை நான்கு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு தடைபட்டது. நான் சட்டமன்ற உறுப்பினரான பின், அம்மாவிடம் கடிதம் கொடுத்து உயர்நீதிமன்றத்தை நாடி 84 நிபந்தனைகளுடன் மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்தான். அப்போது இருந்து மாவட்ட ஆட்சியர் உதவி புரிந்தார்.</p><p>இளைஞர் சமூதாயத்தை நல்வழிப்படுத்தனும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் சொன்னனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது.</p><h2>84 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்தியவன் நான்</h2><p>நான் சொன்னது அம்மா அரசு நடக்கும்போது. 4 வருடம் தடைபட்டிருக்கும்போது 84 நிபந்தனைகளுடன் நடத்தியது சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான்தான். தடை போடுவதற்கு என்ன இருக்கு? தடையே கிடையாது. ஜல்லிக்கட்டு நடைபெறும். </p><p>இளைஞர்கள் அவர்களுடைய வீரத்தை சந்தோசமான பறைசாற்றுவார்கள். சர்க்கரை ஆலை 10 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. நான் எம்.எல்.ஏ.-வாக இருந்தபோது சர்க்கரை ஆலை நன்றாக செயல்பட்டது. அங்கு (ஜல்லிக்கட்டு அரங்கம்) செலவழிக்கப்பட்ட பணம் சர்க்கரை ஆலைக்கு செலவு செய்யப்பட்டிருந்தால், 5 மாவட்ட விவசாயிகள், அவர்களுடைய வாழ்வாதாரம், மில் நன்றாக ஓடியிருக்கும். அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>கலைஞர் நூற்றாண்டு விழா என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை செய்தது. அது மேச்சல் தரிசு நிலம். இந்த பகுதியில் எந்தவொரு கல்லூரியும் கிடையாது. 90 ஏக்கர் நிலத்தில் கால்நடை பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது நான். அப்போது அரசு தரப்பில் இது தொடர்பாக பதிலும் அளிக்கப்பட்டது.</p><p>அந்த மேச்சல் நிலத்தை சுற்றுலாத் துறைக்கு கொடுத்து, சுற்றுலாத்துறைக்கு நிலம் இல்லாமல் உள்ளது. சுற்றுலாத்துறை வேறொரு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.</p><h2>இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும்</h2><p>இளைஞர்களை ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது. இளைஞர்கள் வீரத்தை காட்ட வேண்டும். ஒரு மாடு வந்தது என்றால் திமிலை இழுத்து பிடிக்க வேண்டும். ஸ்பெயின் போன்ற ஐரோப்பா நாடுகள் மாதிரி ஒரு கட்டடத்திற்குள் விட்டு அதை ஒருவர் பிடிக்கிற மாதிரி ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல. இது நம்முடைய பாரம்பரியம். கலாசாரம். நம் முன்னோர்கள் வளர்த்து வைத்துள்ள பாரம்பரியம், பண்பாடு, தமிழர்களின் உணர்வு. அதை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.</p><p>தவெக-வின் தலைவர் இளைஞர்களை நம்பி இருக்கிறார். அவர்களை கொச்சை படுத்துவோமா?. அவர்களை சுதந்திரமாக விடுங்கள் என்று சொல்கிறோம்.</p><p>இவ்வாறு சோழவந்தான் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்ணை கொன்று பிரியாணி அண்டாவில் சமைத்தார்களா?- கைதான தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/did-they-kill-a-woman-and-cook-her-in-a-biryani-cauldron-shocking-confession-by-the-arrested-couple#comments</comments><guid isPermaLink="false">973b3ff0-ae63-42c4-899f-9d01849323d1</guid><pubDate>Sat, 29 Aug 2026 09:14:51 +0000</pubDate><atom:updated>2026-08-29T09:14:51.218Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பிரியாணி அண்டா,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/253grnax/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.</strong></em> </p><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவப்பு நிற சூட்கேசில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>ஆக்ராவில் போலீசார் அதனை கண்டுபிடித்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. </p><h2><strong>கூடுவாஞ்சேரியில்</strong></h2><p>இதை தொடர்ந்து ஆக்ரா போலீசார் சென்னைக்கு வந்து அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation">சென்னை சென்ட்ரல் ரெயில்</a> நிலைய போலீசாருடன் இணைந்து விசாரித்த ஆக்ரா போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து  நடத்திய விசாரணையில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது.</p><p>அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அவரை கூடுவாஞ்சேரியில் வைத்து வடமாநில வாலிபரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. </p><p>தாம்பரம் போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் அசாம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சென்று விசாரித்தார்கள்.</p><p>கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் பெண்ணின் உடல் பாகங்களை பெரிய பிரியாணி அண்டாவில் போட்டு வாலிபரும், அவருடன் இருந்த பெண்ணும் சமைத்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதால் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.</p><p>இதையடுத்து பெண்ணை கொலை செய்த மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடினார்கள். ஆனால் இருவரும் சென்னையில் இருந்து தப்பியோடி தலைமறைவானது தெரியவந்தது.</p><p>இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அசாம் மற்றும் ஒடிசாவுக்கு சென்ற 2 தனிப்படை போலீசார் அங்கு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில் கொலையாளியான மொனிருதின் லஸ்கர் மணிப்பூர் மாநிலத்திற்கு தப்பிச்சென்று அங்கு பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கைது</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மொனிருதின் லஸ்கரை கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அசாம் மாநிலத்தில் கிருஷ்ணாபூரில் வசித்து வந்ததை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் முதலில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் மணிப்பூருக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு வைத்து மொனிருதின் லஸ்கரை பிடித்துள்ளனர். </p><p>மொனிருதின் லஸ்கர் கைதான நிலையில் அவரது மனைவி பகவதி மாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதனால் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்கள்  மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி பதுங்கி இருந்த பகவதி மாஜியை போலீசார் கைது செய்தனர். </p><p>இதை தொடர்ந்து கைதான மொனிரு தின் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகியோரிடம் கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. </p><p>ஒரே இடத்தில் வேலை செய்த மொனிரு தின் லஸ்கர்- நிஷா இடையே பழக்கம் ஏற்பட்டு நிஷா கர்ப்பம் ஆகி உள்ளார். மொனிரு தின் லஸ்கரிடம் திருமணம் செய்யுமாறு நிஷா கூறிய போது தனக்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியுள்ளார். </p><p>இதனால் தனது மனைவியுடன் மொனிரு தின் லஸ்கர் நிஷா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொனிரு தின் லஸ்கர் தனது இளம் மனைவியுடன் சென்று நிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வாக்குவாதமாக மாறி அடித்து கொன்றனர். நிஷாவின் தலையை வெட்டிய தம்பதி ரத்தம் வெளியில் செல்லாதவாறு பிரியாணி அண்டாவில் பிடித்துள்ளனர். </p><p>இதனையடுத்து உடலில் உள்ள சதையை வெட்டி பிரியாணி அண்டாவில் வைத்து எலும்பை மட்டும் சூட்கேசில் அடைத்து ஆக்ரா ரெயிலில் நிலையத்தில் சூட்கேசை விட்டுவிட்டு இருவரும் மணிப்பூர் தப்பிய நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-admk-ministers-to-pay-tribute-on-1st</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-admk-ministers-to-pay-tribute-on-1st#comments</comments><guid isPermaLink="false">5e0d13ae-5c9b-46ea-bc8a-941c06e6b997</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:50:12 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:50:12.500Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,பூலித்தேவன் பிறந்தநாள்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g5gsr17j/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/g5gsr17j/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி வருகிற 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்துவார்கள்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a> பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p> <p>மாமன்னர் பூலித்தேவன் 311-வது பிறந்தநாளான வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு, `தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும் செவல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, பாஸ்கரன், ராஜலெட்சுமி, சி.த. செல்லப்பாண்டியன், சண்முகநாதன், இன்பதுரை எம்.பி., ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-tn-fishermen-released-from-a-sri-lankan-prison-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">3df9cd1b-b985-4f92-8996-a34f0d55e92d</guid><pubDate>Sat, 29 Aug 2026 08:23:39 +0000</pubDate><atom:updated>2026-08-29T08:23:39.127Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,TN fishermen,தமிழக மீனவர்கள்,இலங்கை சிறை,SriLanka Jail</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/4u44u0x4/fishermen.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். </p> <h2>தமிழக மீனவர்கள்</h2><p>ஒரு மாதத்திற்குப் பின்பு, இலங்கை நீதிமன்றம் அவர்களில் 3 மீனவர்களை, விடுதலை செய்தது. ஒரு மீனவர் 2-வது முறையாக, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்ய ப்பட்டிருந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். </p><p>இந்த நிலையில் அந்த மீனவர் கடந்த 17-ந் தேதி விடுதலை செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மே மாதம் 10-ந் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் கடலில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். </p> <h2>சென்னை வந்தனர்</h2><p>அப்போது இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி,6 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">மீனவர்களையும் கைது</a> செய்தனர். அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்திய அரசின் அறிவுறுத்தறையின் பெயரில், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>அதன் பின்பு கடந்த 22-ந் தேதி 6 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் விமானம் மூலம், 7 மீனவர்களையும், நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் 7 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 17-ந்தேதி விருதுநகரில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-started-morning-breakfast-extension-in-govt-schools#comments</comments><guid isPermaLink="false">fd6ee79d-a9c7-4780-8540-f11f5350f467</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:49:29 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:49:29.584Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,govt schools,அரசு பள்ளிகள்,காலை உணவு திட்டம்,Morning Breakfast</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/49xr7wuo/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</strong></em> </p><p>தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டம் அடுத்தடுத்து வந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.</p><h2><strong>விரிவாக்கம்</strong></h2><p>இந்த நிலையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">காலை உணவு திட்டத்தை</a> அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாரத்தின் 5 நாட்களும் மாணவ, மாணவிகளுக்கு ரவா உப்புமா, ரவா கிச்சடி, வெண் பொங்கல், சேமியா கிச்சடி, ரவா கேசரி மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு விரிவாக்கம் செய்தது. </p><p>இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">காலை உணவு திட்டத்தை</a> ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டம் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ.268 கோடி நிதி நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. </p><p>வருகிற செப்டம்பர் 17-ந்தேதி பெரியார் பிறந்தநாளன்று மதிய உணவு திட்டத்தை தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகரில் இந்த திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) நடுநிலைப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. எனினும் விழா நடைபெறுவதாக கூறப்படும் கே.வி.எஸ். பள்ளியில் தற்போது இருந்தே முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. </p><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கே.வி.எஸ். பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முதலமைச்சர் வரும் வழித்தடங்கள், விழா நடைபெறும் இடம், மாணவ, மாணவிகளை சந்திப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.</p><p>விருதுநகர் கே.வி.எஸ். (காமராஜ் வித்யாசலா) பள்ளியில் ஒருபுறம் இதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரின் வருகை குறித்து தற்போது வரை அரசு சார்பில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டை போற்றுவோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-sports-day-minister-aadhav-arjuna-wishes#comments</comments><guid isPermaLink="false">5b71f544-0823-4dbc-b365-d74c5cdeafdf</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:26:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:26:05.974Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Aadhav Arjuna - National Sports Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/x4he97gx/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-candidates-voters-to-respond-in-court-on-cm-vijay-adhav-arjuna-election-cases">ஆதவ் அர்ஜுனா</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>விளையாட்டு என்பது ஒருவருக்கு வெற்றியையோ, தோல்வியையோ தருவதில்லை. மாறாக, விளையாடுபவர்கள் அனைவருக்கும் மன அமைதியைக் கொடுக்கிறது; உடல் வலிமையை உறுதிப்படுத்துகிறது; மகிழ்வான பொழுதுகளை வழங்குகிறது; போதைப்பொருள் பயன்பாடு போன்ற தீங்கான வழிகளிலிருந்து பாதுகாக்கிறது; இறுதியாக, ஒவ்வொரு மனிதர்க்கும் அவர்கள் யார் என்கிற சிறப்பை அடையாளம் காட்டுகிறது.</p> <p>ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்குத் தொடர் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மேஜர். தியான் சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டின் தனித்துவ சிறப்பான விளையாட்டைப் போற்றுவோம்.</p> <p>தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விளையாட்டைச் சென்றடையச் செய்வதும், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதுமே தமிழ்நாடு அரசின் முதன்மை நோக்கமாகும்; இதற்காக 8-18 திட்டம், 10 ஒலிம்பிக் சிறப்புப் பயிற்சி மையங்கள், வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள், குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவித்துள்ளோம். தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale">முதலமைச்சர் விஜய்</a> அவர்களின் வழிகாட்டுதலில் விரைவில் ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றி, இந்தியத் திருநாட்டிற்கு பெருமை சேர்ப்போம்.</p><p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு நாள் நல்வாழ்த்துகள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர பெண் கொலையில் வாலிபர் சிக்கினார்- 3 தனிப்படையினர் தீவிர விசாரணை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-woman-murder-case-youth-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-woman-murder-case-youth-arrested#comments</comments><guid isPermaLink="false">7d6ef0c1-eb26-4794-a3bf-d59449f0d407</guid><pubDate>Sat, 29 Aug 2026 07:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-29T07:07:53.660Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,பெண் கொலை,woman murder,ஆசிட் வீச்சு,Acid throw,Andhra Woman Murder,ஆந்திர பெண் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/0us28myg/aruna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருணா]]></media:title><media:description type="html"><![CDATA[ அருணா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/0us28myg/aruna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.</strong></em> </p><p>ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நகரி அருகே உள்ள நின்றறை சவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் மனைவி அருணா (வயது 43). இவர் சம்பவத்தன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வந்தார். </p><h2><strong>பெண் கொடூர  கொலை</strong></h2><p>பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் அவர் ஊத்துக்கோட்டை அருகே தொட்டாரெட்டி குப்பம் கிராமம் அருகெ எவயல்வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது முகம் திராவகம் ஊற்றி சிதைக்கப்பட்டிருந்தது. </p><p>தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அருணாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. அவர் அணிந்திருந்த தாலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் அப்படியே இருந்தன. </p><p>இதனால் இது திருட்டுக்காக நடந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">கொலை</a> அல்ல என்பது தெரியவந்தது. மேலும், இது பாலியல் வன்கொடுமையால் நடந்த கொலையும் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் அருணாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அவரது அடையாளத்தை அழிப்பதற்காக முகத்தில் ஆசிட் அல்லது சிதைவை ஏற்படுத்தும் வேதிப்பொருளை ஊற்றி உள்ளனர். </p><h2><strong>3 தனிப்படைகள்</strong></h2><p>அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட அருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-murder-near-periyapalayam">கொலையாளிகளை</a> பிடிக்கவும், கொலை பற்றி துப்பு துலக்கவும் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. வினோத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அருணாவின் பிணத்திற்கு அருகில் ஒரு செல்போன் கிடந்தது. அதில் பதிவான அழைப்பு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு, அவரது உறவினர்கள் மற்றும் சில முக்கிய சந்தேக நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அருணா கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் தொட்டாரெட்டி குப்பம், வெள்ளக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அருணா திருமண வீட்டிலிருந்து கிளம்பியது முதல் கொலை நடக்கும் வரை யார் யாரைச் சந்தித்தார் என்பதை இதன் மூலம் கண்டறிய முயல்கின்றனர்.</p><h2><strong>வாலிபர் சிக்கினார்</strong></h2><p>அருணாவின் முகத்தில் ஊற்றப்பட்டது ஆசிட் மட்டும்தானா அல்லது அடையாளம் தெரியாமல் இருக்க கல் உப்பு மற்றும் பிற வேதிப்பொருட்களைக் கலந்து ஊற்றினார்களா என்பது குறித்தும், அவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே உடல் வீசப்பட்டதா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து இங்கு கொண்டு வரப்பட்டாரா? என்றும் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.</p><p>அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதால், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.</p> <p>இதற்கிடையே அவரது செல்போன் அழைப்பு பதிவான விவரங்களை வைத்து ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-government-information-another-39-tamils-stranded-in-tibet-are-safe#comments</comments><guid isPermaLink="false">7f565151-e836-4f82-a3a7-913a082b07e4</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:59:24 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:59:24.390Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,தமிழர்கள்,Tamil people,TN Government,Nepal Floods,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/6pfaph48/tibet.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> <em><strong>திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</strong></em></p> <h2>நேபாள பெருவெள்ளம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/nepal-flash-floods-320-indians-missing">நேபாளத்தில்</a> கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானார் மாயமாகி உள்ளனர்.</p><p>நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பேரிடரில் சிக்கியவர்களை தேடி மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.</p> <h2>சுற்றுலா சென்ற தமிழர்கள்</h2><p>நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-21-tamil-people-return-chennai-safely">தமிழர்களும்</a> இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கினார்கள். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.</p><p>இதற்கிடையே, நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க தமிழக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.</p> <h2>21 தமிழர்கள் மீட்பு</h2><p>21 தமிழர்கள் தமிழகம் திரும்பிய நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசுடன் இணைந்து தொடர் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அமைச்சர்கள் குழு ஈடுபட்டுள்ளது.</p><p>இந்நிலையில் திபெத்தில் சிக்கியுள்ள மேலும் 39 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.</p> <h2> 39 தமிழர்கள் பாதுகாப்பு</h2><p>திபெத்தில் சிக்கி உள்ள 39 தமிழர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில் நாளை நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு டெல்லி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.</p><p>நேபாளத்திலிருந்து டெல்லி வந்தடைந்ததும் 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>எங்களை வழிமறித்து கூட பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்லலாம்: அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmalkumar-says-members-of-the-public-can-even-stop-us-to-voice-their-issues#comments</comments><guid isPermaLink="false">04b342cc-ee31-4e82-8d0b-7ee881f16f91</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:04:19.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,Drugs,போதை பொருள்,tvk,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/grmkemng/nirmalkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.</strong></em></p><p>மதுரை காந்தி மியூசியத்தில்  தனியார் பள்ளி சார்பில் இன்று போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை சட்டத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-நிர்மல்குமார்">அமைச்சர் நிர்மல்குமார்</a> கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2><strong>உரிமை உள்ளது</strong></h2><p>போதை பொருட்கள் சாக்லெட் உள்ளிட்ட எல்லா வடிவிலும் கிடைக்கிறது. இதுகுறித்து தெரிந்தால் மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். இது உங்கள் அண்ணனோட அரசு. நீங்கள் எல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு தான் இது. 100 சதவீத உரிமை உங்களுக்கு உள்ளது.</p><p>மாணவ-மாணவிகளாகிய நீங்கள் பள்ளிக்கு செல்லும்போது இடையூறு வந்தாலோ, போதை பொருள் விற்பனை தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தால், எந்த பயமுமின்றி ஆசிரியர்களிடம் கூறுங்கள். உங்களுக்கு வேலை பார்க்க தான் த.வெ.க. அரசு உள்ளது. போதை பொருள் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் எடுத்து கூற வேண்டும். காவல்துறை முன்புபோல இல்லை.</p><p>குழந்தைகளின் பாதுகாப்பு தான் முதலமைச்சர் விஜய்யின் முதல் முன்னுரிமை. பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் செல்லும்போது எங்களை வழி மறித்து கூட சொல்லுங்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கோபிசன், மதார் பதூருதின் என்ற முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  </p><h2><strong>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம்</strong></h2><p>அண்மையில் தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விழாவில் முதலாவதாக பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் முதலாவதாக பள்ளியின் பாடலும், அதனை தொடர்ந்து கடவுள் வாழ்த்தும் பாடப்பட்டது. 3-வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நடைமுறை விழாவில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>பல்லாவரம் அருகே விசிக நிர்வாகி கொலையில் 7 பேர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/7-arrested-case-of-murder-vck-functionary-near-pallavaram#comments</comments><guid isPermaLink="false">779dc20b-15e6-46bb-a636-7938597d6106</guid><pubDate>Sat, 29 Aug 2026 06:02:33 +0000</pubDate><atom:updated>2026-08-29T06:02:33.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>murdered,விசிக,vck,Pallavaram,பல்லாவரம்,விசிக நிர்வாகி கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3ddziton/arrested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/3ddziton/arrested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பல்லாவரம் அருகே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</strong></em></p><p>பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் நேற்று மாலை விசிக நிர்வாகி அன்பழகன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அன்பழகன் கொலை வழக்கில் ஈடுபட்ட 7 முக்கிய கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்</p><p>தொழில் போட்டி காரணமாக விசிக நிர்வாகி அன்பழகனை அவரது நண்பர் வீனஸ் என்பவர் தலைமையிலான கூலிப்படையினர் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் </p>  <p>கடந்த 2021-ம் வருடம் பம்மல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அன்பழகன் மற்றும் வீனஸ் சிறையில் இருந்துள்ளனர்.</p><p>ஆரம்ப காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்த அன்பழகன் மற்றும் வீனஸ் இருவரும் நில அபகரிப்பு கட்டப்பஞ்சாயத்து, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.</p> <p>இதனை அடுத்து குறுகிய காலத்தில் அன்பழகனின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே அவ்வப்போது தொழில் போட்டிகள் நடந்துள்ளது.</p><p>ஒரு கட்டத்தில் வீனஸ் செய்து வரும் தொழில்களுக்கு அன்பழகன் முட்டுக்கட்டையாக இருப்பதால் அவரை கொலை செய்ய வேண்டும் என்னும் நோக்கில் நேற்றைய தினத்தில் வீனஸ் தலைமையிலான கூலிப்படையினர் அன்பழகனை திருநீர்மலையில் உள்ள திமுக மண்டல அலுவலகத்தில் வைத்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p> <p>தற்போது நாகல்கேணி பகுதியை சேர்ந்த வீனஸ், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், காஞ்சிபுரத்தை சேர்ந்த விமல், நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த முகேஷ் கண்ணா, குரோம்பேடை பகுதியை சேர்ந்த ஹரிஹரன், பல்லாவரம் விஷ்னுகுமார், மண்ணிவாக்கம் கார்த்திகேயன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் என் அருகில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-chief-minister-vijay-sat-next-to-me-in-the-legislative-assembly-and-boosted-everyones-morale#comments</comments><guid isPermaLink="false">33881fcd-38d3-430f-8930-cb3c56fc5034</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:52:05 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:52:05.058Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/t5lv3hva/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் செங்கோட்டையன்</a> கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியாவுக்கே வழிகாட்டும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதே இலக்கு என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஒவ்வொரு துறையாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.</p><h2><strong>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தும், சென்னை புழல் சிறைக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். சென்னை குடிநீர் திட்டப்பணிகளையும் நேரில் ஆய்வு செய்து, மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நேபாள துயர சம்பவம் தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கு நடைபெற்று வரும் கள நிலவரங்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருகிறோம். நேபாளத்தில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 4 அமைச்சர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மத்திய அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.</p><p>எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சட்டசபையில் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> என் அருகில் அமர்ந்து இருந்தது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மாற்றத்தை உருவாக்கும் ஆட்சியாக தமிழக வெற்றிக் கழக அரசு  செயல்பட்டு வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்! - நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-says-let-us-make-sports-a-part-of-life-and-build-a-strong-india#comments</comments><guid isPermaLink="false">e4871e37-a5e7-41cf-9246-a3f248e1fbe5</guid><pubDate>Sat, 29 Aug 2026 05:41:55 +0000</pubDate><atom:updated>2026-08-29T05:41:55.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,National Sports Day,தேசிய விளையாட்டு தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-29/zvfxphmz/nainarnagendran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தேசிய விளையாட்டு தினம்</h2><p>இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) கொண்டாடப்படுகிறது.</p><h2>மேஜர் தியான் சந்த்</h2><p>இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. </p> <p>மேஜர் தியான் சந்த் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, 1928, 1932 மற்றும் 1936 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தது.</p><p>இந்தியாவில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், ஆரோக்கியமான உடல் உறுதியைப் பேணுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக தேசிய விளையாட்டு தினம் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.  </p> <h2>துரோணாச்சார்யா விருது</h2><p>இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அல்லது சிறப்பு விழாக்களில், விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைக்கும் தலைசிறந்த வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள்.</p><p>விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது நம் வாழ்வில் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல்நலத்தை வளர்க்கும் ஒரு அத்தியாவசியக் கலை என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதே இந்நாட்டின் முக்கிய நோக்கமாகும்.</p> <p>பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு வாழ்வியலாக மாற்றும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன.</p><h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இந்நிலையில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95">பா.ஜ.க.</a> மாநில தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">நயினார் நாகேந்திரன்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்</p> <p>அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின நல்வாழ்த்துகள்!</p><p>விளையாட்டு என்பது வெற்றிக்கான பாதை மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை வளர்க்கும் சிறந்த களம்.</p> <p>பாரத இளைஞர்கள் அனைவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணி, தங்கள் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இருக்கும் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் போற்றுவோம்.</p> <p>விளையாட்டை வாழ்வின் ஒரு பகுதியாக்கி, ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>