<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 19 Sep 2026 12:11:38 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 19 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-september-2026#comments</comments><guid isPermaLink="false">879b7072-039f-46f2-9fb1-c5b930ad6945</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:03:44 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:27:56.572Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/4sus048d/LIVE.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/on-this-day-yuvraj-singh-hits-six-sixes-in-an-over">வரலாற்றில் இன்று: ஓரே ஓவரில் ஆறு சிக்ஸ்ர்கள் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங்.!.</a></p><p> யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த அதிரடியான ஆல் ரவுண்டர்களில் திகழ்ந்தவர்களில் ஒருவர் ஆவார்.</p><p>இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இதே தினத்தில் யுவராஜ் சிங் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை ப்டைத்தார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/new-cat-species-found-in-bolivia-after-100-years">பொலியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்..!</a></p><p> பொலிவியாவின் அடர்ந்த யுங்காஸ் மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>வீட்டுப் பூனைகளை விடச் சிறியதுமான அந்த காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த விலங்கிற்கு லியோபார்டஸ் டில்காயோ என பெயரிடப்பட்டுள்ளது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/sports/manu-bhaker-pawan-sehrawat-lead-indian-contingent-in-asian-games-opening-ceremony">கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு: தேசியக்கொடி ஏந்தி வந்த மனு பாக்கர், பவன் ஷெராவத்</a></p><p>* கடந்த ஆசிய போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.</p><p>* இதில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் அடங்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu">தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம்.</a></p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. </p><p>கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p> <p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/humanity-could-be-wiped-out-by-ai-technology-by-2030-what-does-nvidia-ceo-jensen-say">"2030-க்குள் ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலமே அழியும்" - NVIDIA சி.இ.ஓ ஜென்சன் சொல்வது என்ன?</a></p><p>*செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொள்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான முயற்சிகளை, அதன் வளர்ச்சி வேகம் மிஞ்சிவிடக்கூடும் </p><p>*முழுமையாகத் தயாராகாத மற்றும் பாதுகாப்பற்ற ஏஐ மாடல்கள் சந்தைக்குக் கொண்டுவரப்படக்கூடாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure">தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</a></p><p>* அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். </p><p>* சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</a></p><p>* த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>* புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd">காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார்</a></p><p> * காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>* திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud">திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</a></p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue">டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</a></p><p>* டெங்கு காய்ச்சல் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  </p><p>* டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed">சோதனை மேல் சோதனை.. மம்தா அறிவித்த மற்றொரு வேட்பாளரும் வாபஸ் வாங்குவதாக அறிவிப்பு - அடுத்த நடந்த டுவிஸ்ட் </a></p><p>* கிளர்ச்சி அணியின் ரிதர்பா பானர்ஜி எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-shock-for-mamata-announcement-that-the-second-candidate-is-also-withdrawing-from-the-by-election-and-the-twist-that-followed"><br></a>*மம்தா தரப்பினர் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மிரட்டப்படுகிறார்கள்</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign">இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</a></p><p>*  தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><p>* 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue">பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</a></p><p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport">சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</a></p><p>* தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>* மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit">சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</a></p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p><p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately">குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன.</p><p>* திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea">அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு </a></p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p><p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/iit-student-dies-by-suicide-after-using-chatgpt-in-exam">தேர்வில் ChatGPT பயன்படுத்திய IIT மாணவர் தற்கொலை - சக மாணவர்கள் போராட்டம்!</a></p><p>* ஐஐடி பாம்பேயில் ChatGPT பயன்படுத்திய மாணவர் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>* நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது, மாணவர்கள் மிரட்டல் தான் காரணம் என போராட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-white-house-ban-on-cnn-denounced-as-assault-on-press-freedom">வெள்ளை மாளிகையில் சில செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்...</a> </p><p>* அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.</p><p>* இந்த நிறுவனங்கள் போலி செய்திகளை வெளியிட்டு வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-19-9-2026">GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா? </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா? - கனிமொழி கண்டனம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/incompetent-government-fails-to-stop-murders-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">f1ac31ed-8530-443d-b128-1e7e5a260723</guid><pubDate>Sat, 19 Sep 2026 11:17:58 +0000</pubDate><atom:updated>2026-09-19T11:17:58.177Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,கண்டனம்,Condemn,கொலைகள்</media:keywords><media:content height="898" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/dtf6en8j/bjp-raises-katchatheevu-issue-for-election-not-for-peoples-welfare-dmk-mp-kanimozhi.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டம் ஒழுங்கு சீரழிவு</h2><p>கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது. நீதி கேட்டு போராடியவர்களையும் இந்த அரசு ஒடுக்குகிறது என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism">கனிமொழி எம்.பி</a> கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது </p><p>ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.</p><p>தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?</p><h2>போராடினால் ஒடுக்குவதா?</h2><p>தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-condemn-tvk-government">தவெக</a> அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.</p><p>நேற்றைய தினம் மதுரையில்  மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டுப் போராடியவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/double-murder-in-kotturpuram-764713"> இரட்டைக் கொலை </a>செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கைது செய்திருக்கிறது.</p><p>குற்றவாளிகளை ஒடுக்கச் சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்தத் திறனற்ற அரசு?</p><p>என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரூரில் அதிர்ச்சி சம்பவம்: கள்ளக்காதலை கண்டித்ததால் மாணவி  அடித்து கொலை- காதலனோடு சேர்ந்து சகோதரி வெறிச்செயல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-student-murder-case-2-arrested-in-karur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-2-student-murder-case-2-arrested-in-karur#comments</comments><guid isPermaLink="false">250133ac-ff20-47a0-9456-9f5594a2e8fd</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:36:35 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:36:35.523Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,போலீசார் விசாரணை,Murder,கொலை,affair,Police Investigaiton,கள்ளக்காதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/hb4gdn0l/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/hb4gdn0l/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள்கள் வினோதினி (வயது 21),  தர்ஷினி (17). இவர்களில் வினோதினி  கரூர் வெங்கமேட்டில்  உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி  வந்தார். தர்ஷினி அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.</p><p>இந்த நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தர்ஷினி திடீரென மாயமானார். இதுபற்றி வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை தேடி வந்தனர். தர்ஷினியின் சகோதரி வினோதினி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து  தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரது குடும்பத்தினரின் செல்போன்கள் உள்ளிட்டவையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள்.</p><h2><strong>கொடூர கொலை</strong></h2><p>இதில் மாணவியின் சகோதரியான வினோதினி வாலிபர் ஒருவரோடு பழகியது தெரிய வந்தது. அவருக்கு திருமணமான நிலையிலும் வினோதினி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பிளஸ்-2 மாணவியான தர்ஷினி கண்டித்துள்ளார். உனது தொடர்பு பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விடுவேன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த வினோதினியும், கள்ளக்காதலனான மோகன்ராஜ் என்ற வாலிபரும் பிளஸ்-2 மாணவியை கொடூரமாக <a href="https://www.maalaimalar.com/topic/கொலை">கொலை</a> செய்து வீசி இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வினோதினியையும், மோகன்ராஜையும் அதிரடியாக கைது செய்துள்ளனர். </p><p>வினோதியின் கள்ளக்காதலனான மோகன்ராஜ் கரூர் அருகே உள்ள நெரூர் வடபாகம் காலனி பகுதியை  சேர்ந்தவர் ஆவார். இவரும், வினோதினியும் செல்போனில் பேசி அதன் மூலமாக தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த விஷயம் தர்ஷினிக்கு தெரிந்த பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்கை என்றும் பாராமல் தர்ஷினியை கள்ளக்காதலனோடு சேர்ந்து வினோதினி தீர்த்துக் கட்டியுள்ளார்.</p><p>இதை தொடர்ந்து மோகன்ராஜை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.</p><h2><strong>காட்டுப்பகுதியில்</strong></h2><p>தர்ஷினியை கொலை செய்து,  உடலை கரூர் வெங்கமேட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை வீசியதாக மோகன்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார், தீயணைப்பு வீரர்களுடன்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உடலை தேடும் பணியையும் முடுக்கி விட்டார்.</p><p>மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு அங்குலம் அங்குலமாக மாணவியின் உடலை தேடினார்கள்.</p><p>சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மாணவியின் தர்ஷினியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலையொட்டிய பகுதியில் புதர் மண்டிய  இடத்தில் அழுகிய நிலையில் தர்ஷினியின் உடல் கிடந்தது. அருகில் தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதையும் போலீசார் கைப்பற்றினர். உடல் அழுகியதில் தனியாக தலை துண்டிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.</p><p>உடல்  மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்கேயே வைத்து  பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.  இதையடுத்து இன்று காலையில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் வைத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.</p><p>மாணவியை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி கைதான மோகன்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.  அதன் விவரம் வருமாறு:-</p><p>நான் திருப்பூர் மாவட்டம்  காங்கேயத்தில்  உள்ள  தனியார் நெய் கம்பெனியில் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தேன். வினோதினி வெங்கமேட்டில்  உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி  வந்தார். எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம்  ஏற்படவே நெருங்கி பழகி வந்தோம். இது காதலாக மாறியது. 2 வருடங்களாக பழகி வந்தோம். எனக்கு திருமணமான நிலையிலும் நான் வினோதியுடன் பழகி வந்தேன். </p><p>கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி வினோதினியின் வீட்டிற்கு  சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த அவரது தங்கை தர்ஷினி யார் நீ? இங்கு என்ன செய்கிறாய்? என்று  கேட்டு என்னுடன் தகராறு செய்தார். எனது அக்காவுடன் உனக்கு என்ன பேச்சு? இது சரியில்லை என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நடப்பதே வேறு என்றும் எச்சரித்தார்.  இதனால் இருவருக்கும் இடையே கடுமையான  வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>அப்போது ஆத்திரத்தில் நான்  தர்ஷினியின் கன்னத்தில் ஓங்கி அடித்து விட்டேன். அப்போது அருகில்  இருந்த  பிரிட்ஜில் மோதி தலையில் அடிபட்டது. இதில் தர்ஷினி மயங்கி கீழே விழுந்தார். </p><h2><strong>மோட்டார் சைக்கிளில்</strong></h2><p>தர்ஷினி மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தார். இதையடுத்து வினோதியும், நானும் வீட்டில் இருந்து தர்ஷினியின் உடலை எனது மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்றோம். பின்னர் வெங்கமேடு-வாங்கல்  இணைப்பு சாலையில்  காமதேனு நகர் பகுதியில்  உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டோம். </p><p>இவ்வாறு மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>இதை தொடர்ந்து மோகன் ராஜூடன் வினோதினியையும் கைது செய்தனர். </p><p>கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக!- சிபிஐ(எம்) வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-m-urges-withdraw-the-government-orders-that-undermine-tamil-nadus-medical-infrastructure#comments</comments><guid isPermaLink="false">476e6730-e24c-4f46-b578-8518762f8d12</guid><pubDate>Sat, 19 Sep 2026 10:09:13 +0000</pubDate><atom:updated>2026-09-19T10:09:13.746Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN Govt,தமிழக அரசு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,tvk,பெ சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/n21dbxgt/shanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/n21dbxgt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு அரசு வெளியிட்ட இரண்டு அரசாணைகள் மூலம் புதிய செவிலியர் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது நிரந்தர பணியிடங்களை மறுக்கும் வகையில் இருப்பதாகவும், மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவும் சிபிஐ(எம்) கட்சி கடுமையாக எதிர்த்து, அரசாணைகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.</strong></em></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">தமிழ்நாடு</a> முதல்வர் சட்டமன்றத்தில் 110 விதிகளின் கீழ் B.Sc (Nursing) படிப்புக்கான 7 செவிலியர் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அந்த செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 16.9.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இந்த செவிலியர் கல்லூரிகளில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மையங்களில் உள்ள செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி உள்ளார்.</p><h2><strong>எதிரானது</strong></h2><p>அந்த வழிகாட்டுதல் நெறிமுறையில் செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் கண்டிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியம் அல்லது வேறு எந்தத் தொடர் பொறுப்புகளும் இதனால் ஏற்படாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே செவிலியர் கல்லூரியை தொடங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இது அரசு பணியில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் நிரந்தரம் செய்வோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிரானதாகும். அதேபோன்று படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் செவிலியர்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும் 11.09.2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இவையெல்லாம் படித்து முடித்து வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பெண்களை அத்த கூலிக்கு தான் அமர்த்துவேன் என்று சொல்வதாகும். அதேபோன்று, இந்தியாவில் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை சீர்குலைப்பதாகும். இது சாதாரண ஏழை எளிய மக்களின் அரசு மருத்துவமனை பயன்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும்.</p><p>எனவே மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் அரசு திரும்பப்பெற்று செவிலியர்களை நிரந்தரமாக நியமிப்பதற்கும், செவிலியர் ஆசிரியர்களையும் நிரந்தர பணியாளர்களாக்குவதற்கும் உரிய உத்தரவு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-final-list-of-candidates-released#comments</comments><guid isPermaLink="false">ebebc879-e944-4c6b-b20e-b14521f8efd0</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:54:30 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:54:30.248Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்,இறுதி வேட்பாளர் பட்டியல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/aldijwc5/election.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.</strong></em> </p><h2><strong>மதுராந்தகம் இடைத்தேர்தல்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/இடைத்தேர்தல்">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p><h2><strong>தாராபுரம்</strong></h2><p>அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.</p><p>இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது</p><h2><strong>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</strong></h2><p>இதனை தொடர்ந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மதுராந்தகம் தொகுதியில் 27 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 27-ஆக ஆனது.  தாராபுரம் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். </p><p>ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளதால் இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் விஜய் திருவான்மியூரில் 22-ந்தேதி தொடங்கி வைக்கிறார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-to-launch-it-in-thiruvanmiyur-on-the-22nd#comments</comments><guid isPermaLink="false">e1f7b900-1a56-48d5-8863-7240573ff141</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:38:33 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:38:33.203Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,காலை உணவு திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/xksxo3i7/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக அரசு பள்ளிகளில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் இப்போது 8ம் வகுப்பு வரை விரிவாக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வரும் 22ம் தேதி திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் நேரில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.</strong></em></p><p>தமிழக அரசு பள்ளிகளில் கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/காலை-உணவு-திட்டம்">காலை உணவு திட்டம்</a> 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.</p><h2><strong>காலை உணவு திட்ட விரிவாக்கம்</strong></h2><p>திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் அன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.</p><p>இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை உணவு திட்டத்தின் விரிவாக்க தொடக்க விழா முதலில் விருதுநகரில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் பெரம்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.</p><p>இந்த நிலையில் தான் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் அந்த திட்டத்தை தொடங்கி வைப்பது உறுதி ஆகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திமுக அலுவலகம் ஸ்ரீரங்கம் கோவில் நிலமே... மோசடி பின்னால் இருப்பவர்கள் யார்? - அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-dmk-office-situated-on-srirangam-temple-land-who-is-behind-this-fraud#comments</comments><guid isPermaLink="false">57b8169c-d398-4213-bdc7-019bd938537e</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:32:18 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:32:18.331Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,srirangam temple,ஸ்ரீரங்கம் கோவில்,நிலம் அபகரிப்பு,land issue,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/c54vv4et/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் ரமேஷ் கூறினார்.</p><p>ஸ்ரீரங்கம் கோவில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் ரமேஷ்</a> விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.</p> <p>* ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை மோசடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் கோவில் நிலத்தை முறைகேடாக அபகரித்துள்ளார்.</p> <p>* கோவில் நிலத்திற்கான மூலப்பத்திரத்தை காணவில்லை என முன்னதாக பதிவு செய்து பின்னர் அந்த இடத்தை அபகரித்துள்ளனர்.</p><p>* போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.</p><p>* கோவில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> நிர்வாகி அந்த இடத்தில் கட்சி அலுவலத்தையும் நடத்தி வருகிறார்.</p> <p>* சாதாரண பகுதி செயலாளரால் ஒரு கோவில் நிலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முடியுமா? இவரின் பின்னால் இருப்பவர்கள் யார்?</p><p>* திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படியொரு மோசடி நடத்தியிருக்க வாய்ப்பில்லை.</p> <p>* கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்தவரின் பின்னால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவர்.</p><p>* யார் சொல்லி யாருடைய ஆதரவில் இப்படியொரு மோசடி நடந்திருக்கிறது என விசாரணையில் கண்டறியப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-awareness-must-be-created-regarding-the-measures-to-be-taken-to-prevent-and-recover-from-dengue#comments</comments><guid isPermaLink="false">ba64b2d9-0624-44a6-98e7-8d4ba612d32c</guid><pubDate>Sat, 19 Sep 2026 09:18:17 +0000</pubDate><atom:updated>2026-09-19T09:18:17.075Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,dengue fever,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/m2c2he3o/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>முதன்மைத் தேவை</strong></h2><p>சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாலும்,  இதுவரை 9  பேர் உயிரிழந்திருப்பதாலும் மக்களிடம் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் அளிப்பது ஒருபுறம் இருக்க, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன? அவை தென்பட்டால்   என்ன செய்ய  வேண்டும்  என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தான் இன்றைய முதன்மைத் தேவை ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 16,830 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு என்றால் குறைந்தபட்சம் இதை விட 10 மடங்கு பேருக்கு  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, அது குறித்த புரிதலும்,  விழிப்புணர்வும் இல்லாமல் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கக் கூடும். மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு டெங்கு காய்ச்சலுக்கான  மருத்துவத்தை பெறாததால் தான்  உயிரிழப்புகள்  அதிகரித்திருக்கின்றன.</p><h2><strong>உயிரிழப்புக்கு காரணம்</strong></h2><p>அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் மூவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  அவர்களில் கடைசியாக இறந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் டெங்கு அல்ல... விஷக்காய்ச்சல் என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்த மாணவரின் உயிரிழப்புக்கு காரணம் அலட்சியமும்,  விழிப்புணர்வு இல்லாமையும் தான்.  மாணவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு  2 அல்லது 3 நாள்களில் குணமடையாத  நிலையில், மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் காய்ச்சலின்  தன்மையைக் கண்டறிந்து  மருத்துவம் அளித்திருக்க முடியும். அதை செய்யுமாறு அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கத் தவறியது தான் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/டெங்கு-காய்ச்சல்">டெங்கு காய்ச்சல்</a> குணப்படுத்த முடியாத நோய் அல்ல. அதற்கான சிகிச்சை வசதிகளும், மருந்துகளும்  அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் உள்ளன.  டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்புடன் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தினால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முடியும்.</p><p>பொதுமக்களும்,  அரசு அமைப்புகளும்  இணைந்து நீர் தேங்குவதற்கான வாய்ப்புகளை சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாக நடத்த வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.</p><p>டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இத்தகவல்களை முதன்மை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நாடாளுமன்ற தேர்தலுக்கு குறி... 2027-ல் அரசியல் கட்சி தொடங்கும் அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-to-launch-a-political-party-in-2027#comments</comments><guid isPermaLink="false">6b8a564a-9b8a-456c-b224-3b7ccf4bee7d</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:46:27 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:46:27.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,Parliament election,நாடாளுமன்ற தேர்தல்,annamalai,We the Leaders,வி த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/o49wfpim/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் அண்ணாமலை புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.</p> <h2>அண்ணாமலை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modis-thank-you-note-for-birthday-wishes">பா.ஜ.க.வில்</a> இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> ‘வி த லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் மக்கள் சேவையை அடிப்படையாக வைத்து போதையில்லா தமிழகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான பிரசாரம், மதுவால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்களில் மக்களை ஈடுபடுத்தினார்.</p> <p>அடுத்ததாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல், கடலோரம் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை முன்னெடுத்தார். இதில் கன்னியாகுமரியில் கடற்கரை தூய்மைப்படுத்துவதிலும், மதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியிலும் அண்ணாமலையே நேரில் கலந்து கொண்டார்.</p> <h2>20 லட்சம் பேர்</h2><p>அக்டோபர் மாதத்தை மகளிர் மாதமாகவும், நவம்பர் மாதத்தை இளைஞர் மாதமாகவும் மையப்படுத்தி பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளார். அண்ணாமலையின் தலைமை ஏற்று ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். </p><p>உறுப்பினர்களாக சேரக் கூடியவர்கள் இணைய தளத்தில் உள்நுழைந்து பிறந்த தேதி, மொபைல் எண்ணை கொடுத்து ஓ.டி.பி. பெற்றுதான் உறுப்பினராக சேர முடியும். இது சாதாரண மக்களுக்கு கடினமாக இருப்பதால் ‘மிஸ்டு கால்’ கொடுத்து உறுப்பினராக சேரும் வசதி வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதுபற்றி அண்ணாமலை விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளார். பல்வேறு பணிகள் மூலம் மக்கள் மத்தியில் அமைப்பை கொண்டு சேர்த்து விட்டதால் அடுத்தகட்டமாக அரசியல் கட்சி தொடங்கும் பணிகளை தொடங்கி உள்ளார்.</p> <h2>அரசியல் கட்சி</h2><p>அமைப்பு பொது செயலாளராக கரு.நாகராஜனை நியமித்துள்ளார். மேலும் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.</p> <h2>உள்ளாட்சி தேர்தல்</h2><p>உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டில் (2027) புதிய கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 2029-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தொடங்கும் கட்சியின் பலத்தை காட்டவும் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அதே நேரம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி அண்ணாமலை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல் பிரசாரம்: த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேருக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-tvk-star-speakers-to-campaign#comments</comments><guid isPermaLink="false">93959d93-3110-41b0-b38a-832ab3c74951</guid><pubDate>Sat, 19 Sep 2026 08:13:55 +0000</pubDate><atom:updated>2026-09-19T08:13:55.016Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,Election Commission,தேர்தல் ஆணையம்,by election,dharapuram,தாராபுரம்,மதுராந்தகம்,Madurantakam,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/5gj6sjty/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி அளித்துள்ளது.</strong></em> </p><h2><strong>அக். 6-ல் இடைத்தேர்தல்</strong></h2><p>மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன் மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. </p><p>மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். </p><h2><strong>தலைவர்கள் பிரசாரம்</strong></h2><p>2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.  இதை தொடர்ந்து நாளை முதல் அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு உள்ளனர். </p><p>அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.</p><h2><strong>40 பேருக்கு அனுமதி</strong></h2><p>இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும்,  பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும்  தேர்தல் ஆணையம்  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.</p><p>அந்த வகையில் <a href="https://www.maalaimalar.com/topic/தவெக">த.வெ.க.</a> நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>த.வெ.க. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் முதலமைச்சர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன், எம்பிக்கள் ரவிக்குமார், துரை வைகோ, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத், வன்னிஅரசு  உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.  </p>]]></content:encoded></item><item><title>பாரதிதாசன் விவகாரத்தில் அரசியல் செய்கிறது திமுக - அமைச்சர் வன்னி அரசு குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-accusation-dmk-playing-politics-over-bharathidasan-issue#comments</comments><guid isPermaLink="false">a4aeeebf-e710-413a-9a03-c049df6961a6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:52:21 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:52:21.546Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/2mxm8dg1/vanniarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.</p> <p>விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan">பாரதிதாசன்</a> தற்போது வரை பில் அனுப்பாத நிலையிலும் முழு உதவித்தொகையையும் தவெக அரசு அனுப்பி விட்டது.</p> <p>* திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட வழிமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.</p><p>* திமுக அரசு கேட்டதைப்போல் தான் தற்போது தவெக அரசும் உதவித்தொகைக்கான பில் உள்ளிட்டவற்றை கேட்கிறது.</p> <p>* திமுக ஆட்சியில் தலித் இளைஞர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர்.</p><p>* திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வித்தொகைக்கு விண்ணப்பித்த 609 பேரில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டும் திமுக உதவித்தொகை கொடுத்தது ஏன்?</p> <p>* பாரதிதாசன் மீது அக்கறை இருப்பதுபோல் திமுக நாடகமாடுகிறது.</p><p>* மாணவர் பாரதிதாசனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.</p><p>* மாணவன் பாரதிதாசன் கல்வி உதவித்தொகை விவகாரத்தில் திமுக தான் அரசியல் செய்கிறது.</p> <p>* திமுக ஆட்சி காலத்தில் நடந்த கவின் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி அரசியல் செய்வது திமுக தான்.</p><p>* கவின் ஆணவப்படுகொலை விவகாரத்தில் விசிக போராடிய பிறகே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.</p> <p>* கவின் படுகொலை விவகாரத்தில் விசிக தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே எப்ஐஆர் போட்டது திமுக அரசு. பாதிக்கப்பட்டோர் மீது எப்படி வழக்கு பதிவீர்கள் என ஸ்டாலினை சந்தித்து கேள்வி எழுப்பினோம்.</p><p>* வேங்கைவயல் விவகாரத்தில் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்- வலுக்கும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-writes-to-prime-minister-regarding-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">e57ce181-dd37-42e8-a704-0ae0c6a9eaa2</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:39:05 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:39:05.876Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TTV Dhinakaran,டிடிவி தினகரன்,சென்னை விமான நிலையம்,pm modi,chennai airport,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை விமான நிலையம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/udll9p8q/chennaiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். பொதுத்துறை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது பயணிகள், ஊழியர்கள் மீது சுமை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-விமான-நிலையம்">சென்னை விமான நிலைய</a> நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p><h2><strong>பிரதமருக்கு கடிதம்</strong></h2><p>இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதலமைச்சர்  விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. </p><h2><strong>கண்டனம்</strong></h2><p>ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். </p><p>சென்னை விமான நிலையம் தனியார்மயமாக்க முதல்வர் விஜய் பிரதமருக்குக் கடிதம் எழுதியதாக வெளியான செய்திக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், மத்திய அரசின் தனியார்மயமாக்கலுக்குத் துணைப்போகக்கூடிய வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதத்தை எழுதி இருந்தால் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில், </p><p>இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.</p><p>பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும் என்பதோடு, பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.</p><p>எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/educational-scholarship-of-rs-23-95-lakh-released-for-student-bharathidasan#comments</comments><guid isPermaLink="false">00ed0913-d804-48ee-b711-845013a323f6</guid><pubDate>Sat, 19 Sep 2026 07:02:40 +0000</pubDate><atom:updated>2026-09-19T07:02:40.466Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Bharathidasan,பாரதிதாசன்,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு,அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Student Bharathidasan - Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ub1or8vp/student1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உத்தரவின்படி, மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">பாரதிதாசன்</a> என்பவர் இந்த கல்வி உதவித்தொகை இழுத்தடிக்கப்படுவதாக கண்ணீர் மல்க சமூக வலைத்தளத்தில் 'வீடியோ' பதிவு வெளியிட்டு இருந்தார்.</p> <p>இதையடுத்து வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் வன்னிஅரசு உறுதி அளித்து இருந்தார்.</p><p>இந்நிலையில், மாணவன் பாரதிதாசனுக்கு அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ரூ.12.21 லட்சம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சிய ரூ.23.95 லட்சமும் நேற்று ஒரேநாளில் விடுவிக்கப்பட்டது.</p><p>ஆராய்ச்சி படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ரூ.36 லட்சத்தை 2-வது ஆண்டாக முழுமையாக மாணவர் பாரதிதாசன் பெற்றுள்ளார். </p><p>மாணவரின் கோரிக்கையை ஏற்று, அவரது படிப்பு எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற நோக்கத்திலும், சமூக நீதித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">அமைச்சர் வன்னி அரசு</a> அவர்களின் உத்தரவின்படியும் எஞ்சிய தொகையான ரூ.23.95 லட்சமும் போர்க்கால அடிப்படையில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது இயல்பான பழக்கமாகவே இருக்க வேண்டும் -  ஆளுநர் அர்லேகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/international-coastal-cleanup-day-governor-arlekar-says-keeping-surroundings-clean-should-be-a-natural-habit#comments</comments><guid isPermaLink="false">9aa707b3-6eaf-41fb-8004-5bcfae6bee7f</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:09:20 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:09:20.431Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மெரினா கடற்கரை,Chennai Marina Beach,Governor Arlekar,ஆளுநர் அர்லேகர்,International Coastal Cleanup Day,சர்வதேச கடற்கரை தூய்மை தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marina beach - Governor Arlekar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/pwmnpzr0/governor.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் கூறினார்.</p><p>சர்வதேச கடற்கரை தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச கடற்கரை தூய்மை தினமான இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு தூய்மைப் பணி நிகழ்ச்சி நடைபெற்றது. </p> <p>இந்த நிகழ்ச்சியில், தமிழக பொறுப்பு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D">ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்</a>, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">ஆளுநர் அர்லேகர்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* இன்று நாங்கள் அனைவரும் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் கூடியுள்ளோம். </p> <p>* <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">மெரினா கடற்கரையை</a> சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.</p><p>* இருப்பினும், உலகம், நாடு மற்றும் மாநிலம் முழுவதும்  ‘கடற்கரை தூய்மைப்படுத்தும் நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், நாம் மீண்டும் இங்கு கூடியுள்ளோம்.</p><p>* கடற்கரை, சுற்றுப்புறம், வீடுகளை தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.</p>  <p>* தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு தொடர்ச்சியான கூட்டு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-plan-to-set-up-a-garbage-incinerator-must-be-abandoned-immediately#comments</comments><guid isPermaLink="false">195c22fc-676c-4bfc-a7cc-a1cdd253e7f2</guid><pubDate>Sat, 19 Sep 2026 06:00:15 +0000</pubDate><atom:updated>2026-09-19T06:00:15.377Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/rj73cjv5/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 92 ஏக்கரில் குப்பை எரிஉலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழக அரசு அறிவித்ததை அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்க்கிறார். உலகளவில் தோல்வியடைந்த இந்த எரிஉலைகள் டையாக்சின், சல்பர் டையாக்சைடு, பாதரசம் போன்ற நச்சு வாயுக்கள் மூலம் புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களை ஏற்படுத்தும் பேரழிவு திட்டம் என எச்சரிக்கிறார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>பேரழிவு</strong></h2><p>சேலம் மாநகரம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா, குப்பை எரியுலை உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி சேலம் மாநகர மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி அவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் விஜய் அவர்கள், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடியில் 10 மெகாவாட் திறனுக்கும், நெல்லையில் ரூ.256 கோடியில் 9 மெகாவாட் அளவுக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வெள்ளக்கல்பட்டியில் கொங்கு எஸ்.ஆர்.வி பள்ளிக்கு எதிரில் உள்ள அரசுக்கு சொந்தமான 92.49 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவு குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சேலம் மாநகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்திவிடும்.</p><h2><strong>ஆபத்தானவை</strong> </h2><p>குப்பை எரிஉலைகள் உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம் ஆகும். உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. குப்பை எரிஉலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும் என்பதால், அதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு, ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் PM 2.5, PM 10  நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள்  ஆகியவை வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலுடன் கலந்து அழியாமல் நிலைத்திருக்கக் கூடிய மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை; இவை மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை.</p><p>மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு  டையாக்சின், 3 மடங்கு  நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு  சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.</p><p>இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்து தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், கோவை வெள்ளலூர் ஆகிய இடங்களில் ஆபத்தான குப்பை எரிஉலை திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, அதன் பங்குக்கு சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் குப்பை எரிஉலை அமைக்கத் துடித்து வருகிறது.</p><p>சேலம் ஜாகிர் அம்மாபாளையம் குப்பை எரிஉலைத் திட்டம் கூட கடந்த ஆட்சியில் கருவாக்கப்பட்ட திட்டம் தான். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டது முதல் இடம் அடையாளம் காணப்பட்டு, இறுதி செய்யப்பட்டது வரை அனைத்தும் திமுக ஆட்சியில் தான் இறுதி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்த தவெக அரசு, இந்த பேரழிவுத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தத் துடிப்பது ஏன்?</p><h2><strong>பா.ம.க.வின் வினா</strong></h2><p>சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தும், கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் இருந்தும் திடக்கழிவு குப்பைகள் சாலைவழியாக் கொண்டு வரப்பட்டு சேலம் குப்பை எரிஉலையில் எரிக்கப்படும். இவற்றில் 60% வரை ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் ஒன்றரை லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் ஒரு பகுதி கழிவுநீரை சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் என்றாலும், பெரும்பகுதி நீர்  நிலத்திலிருந்து தான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டத்தின் மீது மிகப்பெரும் அழுத்தம் ஏற்படும்.</p><p>சேலம் ஜாகிர்பாளையத்தில் ஏற்கனவே 119 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப் ட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.800 கோடியில் அமைக்கப்படும் இந்த ஜவுளி பூங்காவில்  60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ஒருபுறம் நிலத்தடி நீர் பெருமளவில்  உறிஞ்சப்படுவது மட்டுமின்றி, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருள்களும், நச்சுப் பொருள்களும் கலந்த கழிவுநீர் நிலம், நீர், வாயு ஆகிய மூன்றையும் நஞ்சாக்கி விடும். அதே பகுதியில் தான் இப்போது குப்பை எரிஉலை அமைக்கப்படவுள்ளது என்பதால், அதையொட்டி 30 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்று, குடிநீர் ஆகியவையே புற்றுநோய், இதயநோய் என பட்டியலிட முடியாத எண்ணிக்கையில் நோய்களை ஏற்படுத்தி விடும். இவ்வளவு பேரழிவுகளையும் ரூ.291 கோடி மக்களின் வரிப்பணத்தைக் கொட்டிக் கொடுத்து வாங்க வேண்டுமா? என்பது தான் பா.ம.க.வின் வினா.</p><p>இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஸி படைகளால் பிடிக்கப்பட்ட  யூதர்கள் ஜெர்மனியில் அமைக்கப்பட்டிருந்த கொலை முகாம்களில் அடைக்கப்பட்டு, நச்சுவாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும் குப்பை எரிஉலைகளும் அவற்றுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. எனவே, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றம் ஆணையிடவாறு, வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து  கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து  சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-low-pressure-area-forming-over-andaman-sea#comments</comments><guid isPermaLink="false">5b65645f-4a39-40c7-919b-596f4fcfbeef</guid><pubDate>Sat, 19 Sep 2026 05:21:03 +0000</pubDate><atom:updated>2026-09-19T05:21:03.204Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,இந்திய வானிலை ஆய்வு மையம்,Low pressure,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அந்தமான்,Andaman sea</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ imd satellite image]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/g9pg6jk5/andaman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>இந்திய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning">வானிலை ஆய்வு மையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>* வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. </p><p>* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை ஒரு குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.</p>  <p>* குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.</p><p>* தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 தினங்களுக்கு நகரக்கூடும்.</p><p>* கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலையோடு 7 பவுன் நகையை தவறவிட்ட மூதாட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/elderly-woman-loses-gold-jewelry-along-with-vinayagar-idol#comments</comments><guid isPermaLink="false">9ecb0fc9-cca4-4de1-83e1-1b505eb8daf2</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:36:02 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:36:02.195Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலை,Vinayagar idol,jewel recovery,நகை மீட்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ police handover woman gold jewel ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/3b33b8ga/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்கள் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி தேடிய போலீசார் ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். </p> <p>சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் கோகிலா (வயது 65). <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a>யையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டார். அந்த விநாயகர் சிலைக்கு 7 பவுன் தங்க நெக்லஸ் அணிவித்து பூஜை செய்தார். பூஜை முடிந்ததும் அந்த விநாயகர் சிலையை, அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய <a href="https://www.maalaimalar.com/news/national/vinayagar-chaturthi-special-golden-modak-worth-rs-27000-per-kg-in-maharashtra">விநாயகர் சிலை</a> அருகே வைத்துவிட்டு கோகிலா வீட்டுக்கு வந்துவிட்டார்.</p> <p>சிறிது நேரத்துக்கு பிறகுதான் விநாயகர் சிலைக்கு அணிவித்திருந்த 7 பவுன் தங்க நெக்லஸ் அவரது நினைவுக்கு வந்தது. பதறியடித்து அங்கு சென்று பார்த்தபோது, தனது விநாயகர் சிலை மற்றும் நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். </p> <p>இது குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், அங்கு பெரிய விநாயகர் சிலை வைத்திருந்த பலராமனிடம் கேட்டபோது, அங்கிருந்த சிறிய சிலைகளை பள்ளிக்கரணை ஏரியில் கரைத்து விட்டதாகவும், பூக்களை அருகில் உள்ள குப்பையில் கொட்டியதாகவும் தெரிவித்தார்.</p> <p>இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குப்பை மற்றும் ஏரியில் இறங்கி போலீசார் தேடினர். அப்போது ஏரியில் கிடந்த 7 பவுன் தங்க நெக்லசை மீட்டு மூதாட்டி கோகிலாவிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.  நகையை மீட்ட போலீசாருக்கு கோகிலா கண்ணீல் மல்க நன்றி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் அதிகரிப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-in-tamil-nadu-increased-by-25-to-30-percent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-in-tamil-nadu-increased-by-25-to-30-percent#comments</comments><guid isPermaLink="false">aabd84c6-576b-44be-aa77-c989575e6267</guid><pubDate>Sat, 19 Sep 2026 03:18:23 +0000</pubDate><atom:updated>2026-09-19T03:18:23.048Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,அரிசி,விலை உயர்வு,Rice,price rise,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ueshirla/rice.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ueshirla/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கிடுகிடு உயர்வு</h2><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF">அரிசி</a> விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் பருவமழை பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பே என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p> <p>விலை உயர்வு குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் டி.துளசிங்கம் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.</p> <h2>தட்டுப்பாடு ஏற்படாது</h2><p>கடந்த சில மாதங்களில் அரிசி விலை சுமார் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்வாக இருக்கக்கூடும். மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுவது சரியல்ல. தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இன்னும் 90 நாட்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் வந்துவிடும். எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> <h2>பொன்னி அரிசி</h2><p>சென்னையில் அரிசியின் நேற்றைய மொத்த விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் கடந்த 4 மாதத்திற்கு முந்தைய விலை):- </p><p>26 கிலோ பொன்னி அரிசி - ரூ.1,800 (ரூ.1,400). இதன்படி ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.69-க்கு விற்பனை ஆகிறது. 26 கிலோ இட்லி அரிசி - ரூ.1,040 (ரூ.850), 26 கிலோ சன்னரக அரிசி ரூ.1,600 (ரூ.1,200), 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி விலை ரூ.1,450 முதல் ரூ.1,550 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த விலை ரூ.1,250 முதல் ரூ.1,450 வரை இருந்ததாக கூறப்படுகிறது.</p> <h2>பாசுமதி -சீரகச்சம்பா அரிசி</h2><p>அதேபோன்று 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,450 முதல் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.4,900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி நேற்று ரூ.5,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p> <h2>ரேஷன் அரிசி</h2><p>தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடைகளில்</a> இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை வெளிச்சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரத்திற்கு ஏற்ப சன்னரக பொன்னி அரிசியாக வழங்கினால் மக்களுக்கு வெளிச்சந்தையில் அரிசியை விலை கொடுத்து வாங்கும் தேவை பெருமளவு குறையும். அரிசி விலை உயர்வும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-election-final-list-of-candidates-to-be-released-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-by-election-final-list-of-candidates-to-be-released-today#comments</comments><guid isPermaLink="false">d1989fb5-cbbb-4d3a-bdce-fb7d947efc1b</guid><pubDate>Sat, 19 Sep 2026 02:51:10 +0000</pubDate><atom:updated>2026-09-19T02:51:10.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,dharapuram,தாராபுரம்,Maduranthakam,மதுராந்தகம்,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ewetknvj/byelection.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Maduranthakam - Dharapuram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-19/ewetknvj/byelection.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.</p> <h2>மதுராந்தகம் இடைத்தேர்தல்</h2><p>செங்கல்பட்டு மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign">மதுராந்தகம்</a> (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு வேட்பாளர்களாக த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது.</p> <h2>தாராரபுரம்</h2><p>அதேபோல் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">இடைத்தேர்தல்</a> நடைபெறும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தொடங்கியது. கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன்படி, த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு மற்றும் நா.த.க. வேட்பாளர்கள் என மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந் தேதி நடந்தது.</p> <p>இதில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்பட 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.</p> <h2>இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு</h2><p>இன்று (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். எனவே இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.</p><p>ஏற்கனவே வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்கி விட்ட நிலையில், இனி பிரசாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 18 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-18-september-2026#comments</comments><guid isPermaLink="false">f7bc1909-9f6e-45cd-ab52-a2e557cf3a39</guid><pubDate>Fri, 18 Sep 2026 04:10:11 +0000</pubDate><atom:updated>2026-09-19T01:38:03.990Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/93e5ueb1/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/student-bharathidasan-again-clarifies-overseas-scholarship-scheme-was-not-misused">அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை - மாணவர் பாரதிதாசன் விளக்கம்</a></p><p>* 2-ம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என மாணவர் கூறுவது தவறானது.</p><p>* ஆராய்ச்சி செலவுகளுக்கான பில் அனைத்தும் ஆக.26-ந்தேதியே அனுப்பிவிட்டேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/governor-arlekar-granted-assent-to-12-bills-passed-in-legislative-assembly">சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல்</a></p><p>* சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.</p><p>* தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/amid-war-russia-parliament-election-begins-today" rel="nofollow">போர் சூழலுக்கு இடையே.. ரஷியாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடக்கம்</a></p><p>* உக்ரைன் உடனான போரில் ரஷியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. </p><p>* புதின் தனது அதிகார பலத்தால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/48-dead-from-poisonous-alcohol-in-nigeria" rel="nofollow">நைஜீரியாவில் விஷச்சாராயம் குடித்த 48 பேர் உயிரிழப்பு</a></p><p>* ஒண்டோ மாகாணத்தில் ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல சாராயம் வாங்கி அருந்தியுள்ளனர்.</p><p>* விஷசாராயம் காய்ச்சிய முக்கிய நபர் உள்பட 15 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/womens-cricket-india-japan-quarterfinal-today" rel="nofollow">பெண்கள் கிரிக்கெட்: கால் இறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்</a></p><p>* போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் நேரடியாக கால் இறுதியில் கால் பதித்தன.</p><p>*  அரை இறுதியில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-18-9-2026">GOLD PRICE TODAY: ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/irattaimalai-seenivasan-memorial-day-dmk-mp-kanimozhi-tribute" rel="nofollow">இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள்: திமுக எம்பி கனிமொழி புகழஞ்சலி!</a></p><p>* 'திராவிட மணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>* சமத்துவமும் சமூக நீதியும் தழைத்திட அயராது பாடுபட்ட அன்னாரின் நினைவைப் போற்றி வணங்குகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-sees-rapid-dengue-surge-with-over-200-daily-cases" rel="nofollow">தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு- தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு</a></p><p>* மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை அதிகரப்படுத்த உத்தரவு.</p><p>* இதுவரை 16,577 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-asking-cm-vijay-going-to-do-for-tn-water-management">தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்காக முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார் - அன்புமணி</a></p><p>* அனைத்து சாதிகளிலும் உள் ஒதுக்கீடு நிறைய உள்ளது.</p><p>* தண்ணீருக்காக நாம் அடுத்த மாநிலத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-jothimani-writes-to-letter-finance-minister-charges-for-upi-merchant-transactions">யுபிஐ வணிக பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: நிதியமைச்சருக்கு ஜோதிமணி கடிதம்</a></p><p>* ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும்.</p><p>* நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/additional-special-buses-from-chennai-to-outstations">சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு  கூடுதல் சிறப்பு பேருந்துகள்- அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு</a></p><p>* பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>*  சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-and-dharapuram-by-election-cm-vijay-campaign-4-days">மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். </p><p>* எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பிரசார திட்டமும் தயாராகி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/by-election-election-commission-grants-permission-for-40-aiadmk-star-speakers-to-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம்  அனுமதி</a></p><p>* மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. </p><p>* 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க, அ.திமு.க, கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-financial-assistance-will-be-provided-to-student-bharathidasan-within-two-days">மாணவர் பாரதிதாசனுக்கு 2 நாட்களில் உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு உறுதி</a></p><p>* தம்பி பாரதிதாசனை படிக்க வைப்போம்.</p><p>* பாரதிதாசன் மட்டுமின்றி அனைத்து மாணவர்களின் கல்விக்கும் தவெக அரசு உதவும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-nirmal-kumar-says-no-violations-regarding-madurai-meenakshi-amman-temple-kumbhabhishekam-pass-issue">மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக பாஸ் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை - அமைச்சர் நிர்மல்குமார்</a></p><p>* கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்து முடிந்த நிலையில் தேவையின்றி திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்.</p><p>* இபிஎஸ்-ஐ வீழ்த்துவது தான் என் வாழ்நாள் லட்சியம் என்று கூறிய தினகரன் தற்போது அவரை முதல்வராக்க துடிக்கிறார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/trp-raaja-indictment-tvk-govt">முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் ரீல்ஸ்தான் வந்தது, முதலீடு வரவில்லை- டி.ஆர்.பி.ராஜா</a></p><p>* புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருந்தால் அதைக் காட்டலாமே? நிறுவனத்தின் பெயரைக் கூட ஏன் சொல்லவில்லை?</p><p>*  ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல் விட்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly">நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது:  அன்புமணி</a></p><p>* உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்.</p><p>* முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/princess-diana-brother-claims-on-charles">டயானா சகோதரர் எழுதிய புத்தகத்தில் மன்னர் சார்லஸ் மீது குற்றச்சாட்டு - பக்கிங்காம் அரண்மனை மறுப்பு</a></p><p>* டயானாவின் மரணம் உறுதி செய்யப்பட்ட உடனேயே சார்லஸ் என்னுடன் பேசினார்.​</p><p>* ஒரு சிறுவன் தன் தாயின் உடலுக்குப் பின்னால் நடந்து செல்வது எவ்வளவு பெரிய மன அதிர்ச்சியைத் தரும்?</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan">22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</a></p><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/football-vs-envelope-mamata-banerjee-party-rebels-get-new-name-symbol">மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்</a></p><p>* மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. </p><p>* அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-srilanka-womens-teams-enter-sf-in-asian-games">ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா, இலங்கை அரையிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* இந்தியாவின் ஷபாலி வர்மா 40 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>* இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/at-45-speech-and-hearing-impaired-jammu-woman-clears-class-10-exam-with-82-percent">சாதிக்க எதுவும் தடையில்லை: 45 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மாற்றுத்திறனாளி தாய்</a></p><p>* சைகை மொழியை நன்கறிந்த நமன், தனது தாய்க்கு தானே ஆசிரியராக மாறினார்.</p><p>* என் கனவு நனவாகி உள்ளது. என் மகனால்தான் இவை அனைத்தும் சாத்தியமானது என்றார் ரேணு.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</a></p><p>* 107 மையங்களில் (Hubs)  தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>* இத்திட்டம் தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/first-shiv-sena-ncp-now-tmc-rahul-gandhi-sees-ec-bjp-pattern-in-theft-of-parties">சிவசேனா, என்சிபி வரிசையில் திரிணாமுல்: கட்சி திருட்டு என பாஜகவை சாடிய ராகுல் காந்தி</a></p><p>* ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன.</p><p>* ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign">மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</a></p><p>* மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி</p><p>* தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn">இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி</a></p><p>* பா.ம.க. நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. </p><p>* அன்புமணியின் அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed">நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது.</p><p>* இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>மேல்மா சிப்காட்..  நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/melma-sipcot-tvk-government-withdraws-land-acquisition-notification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/melma-sipcot-tvk-government-withdraws-land-acquisition-notification#comments</comments><guid isPermaLink="false">2b384f42-ad3c-45fa-9a6c-d8d563e4c0a6</guid><pubDate>Fri, 18 Sep 2026 23:33:23 +0000</pubDate><atom:updated>2026-09-18T23:33:23.794Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருவண்ணாமலை,சிப்காட்,மேல்மா சிப்காட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/px8l2gq4/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மேல்மா ]]></media:title><media:description type="html"><![CDATA[ மேல்மா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/px8l2gq4/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.</p> <p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D">சிப்காட் </a>தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை முந்தைய திமுக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. </p><h2>எதிர்ப்பு</h2><p>மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர்களுக்கு தவெக ஆதரவு தெரிவித்தது. </p><p>2025 ஜூலை மாதம் நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.</p><p>ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின்  தவெக அரசு, மேல்மா கிராமத்தில் 22 எக்டேர் புன்செய் நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.</p><p>கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது தவெக அரசு அதிலிருந்து பின்வாங்கியுள்ளது.</p><h2>அரசிதழில்</h2><p>நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட அரசிதழில், "சிப்காட் செய்யார் தொழிற்பூங்கா நிலை-3 க்காக திருவண்ணாமலை மாவட்டம்,செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் அலகு 1 பிளாக் 2-ல் 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய, தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டப் பிரிவு 3(1)ன் கீழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது.</p><p>திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் அந்த அரசிதழில் உள்ள 22.16.00 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை திரும்பப் பெறப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நிறைவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-maternal-uncles-gold-ring-scheme-review-meeting-chaired-by-chief-minister-vijay-concludes#comments</comments><guid isPermaLink="false">aad04445-e3cd-4e37-b461-9820ba755831</guid><pubDate>Fri, 18 Sep 2026 16:59:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T16:59:01.431Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/rcposhf7/tn-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  </p> <p>முதலமைச்சர் ஜோசப் விஜய் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th">தாய்மாமன் தங்க மோதிரம் </a>திட்டத்தை 28.9.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.</p><p>இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p> <p>அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், </p><p>"<a href="https://www.maalaimalar.com/topic/tvk-govt">தமிழ்நாடு அரசு</a> தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. </p><p>கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p> <h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p> <h2>பிரசவங்கள்</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 இலட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல்பதிவாகியுள்ளது. </p><p>இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. </p><p>இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><h2>தங்க மோதிரம்</h2><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். </p><p>இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICMEயில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் பெற்றிருக்க வேண்டும்.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் தினமும்100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இத்திட்டம் முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p> <h2>செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் தவிர்த்து</h2><p>இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அத்தொகுதிகள் இடம்பெற்றுள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் இத்திட்டம் 28.9.2026 அன்று தொடங்கி வைக்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p> <h2>கூட்டம் </h2><p>இக்கூட்டத்தில், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் மரு. அனீஷ் சேகர், இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு. ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நவோதயா பள்ளிகள் வேண்டாம்: தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவோம்- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-no-to-navodaya-schools-special-assembly-session-if-needed#comments</comments><guid isPermaLink="false">9f77bde9-7ec9-42c1-ae1f-248735ee20c6</guid><pubDate>Fri, 18 Sep 2026 15:22:50 +0000</pubDate><atom:updated>2026-09-18T15:22:50.564Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,நவோதயா பள்ளிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4kfyeqvi/UdhayanidhiStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.</p><p>இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனி நாடாக இயங்கவில்லை. தனித்தன்மையுடன் இயங்குகிறது.</p><h2>இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை</h2><p>இந்தியைத் திணிப்பதுதான் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து தனித்தீவாக அந்நியப்படுத்தும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மதித்து, அந்தந்த மாநிலங்கள் தாங்கள் விரும்பும் மொழிக் கொள்கையைப் பின்பற்ற அனுமதிப்பதே, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமையும்.</p><p>இந்திய சீனப் போர், வங்கதேச விடுதலைப் போர், கார்கில் போர், குஜராத் நிலநடுக்கம் என நம் நாடு சந்தித்த ஒவ்வொரு இக்கட்டான சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய நாட்டுப்பற்றை, வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குறைவில்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>எனவே, இந்தி மொழித் திணிப்பு வேண்டாம் என்று கூறுவதாலேயே தமிழர்கள் தனி நாடாக இயங்குவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியைக் கற்பதற்கும் நாட்டுப் பற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.</p><h2>இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை</h2><p>இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே, தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலமாகத் திகழ்கிறது. நோபல் விருதாளர்கள் முதல் இஸ்ரோவின் முன்னணி அறிவியலாளர்கள் வரை, இந்தி தெரியாமலேயே தமிழர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.</p><p>எனவே, இந்தி தெரியாததால் தமிழ்நாடு எந்தவிதத்திலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாகத் தமிழ்நாடு விளங்குகிறது.</p><p>நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.</p><h2>அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை</h2><p>அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.</p><p>அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றிபெற்று, நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.</p><p>மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, சமக்ர சிக்‌ஷா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.</p><p>தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.</p><h2>உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்</h2><p>இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும். மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>பேரறிஞர் அண்ணா அவர்களால் இம்மண்ணில் விதைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையை, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உச்ச நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகளைத் தடுத்து நிறுத்துவோம்!</p><p>இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல்: அன்புமணி அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-no-support-for-byelection-in-tn#comments</comments><guid isPermaLink="false">1c9c4a2c-20fc-4a51-9b33-2ab4aa5b856e</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:58:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:58:24.074Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,அன்புமணி ராமதாஸ்,ByElection,Anbumani Ramadass,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anbumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/pxehockw/anbu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை போட்டியிடுகின்றன. அங்கு 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது எனக்கூறிய அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>பா.ம.க. நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. நிர்வாகிகளின் ஆலோசனைக்கு பிறகு எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என முடிவெடுக்கப்பட்டது.</p><p>பா.ம.க. தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அன்புமணியின் இந்த அறிவிப்பால் அ.தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurantakam-dharapuram-byelection-edappadi-palaniswami-6-day-campaign#comments</comments><guid isPermaLink="false">3c642763-99a9-4cba-a414-55a86edddb21</guid><pubDate>Fri, 18 Sep 2026 14:46:34 +0000</pubDate><atom:updated>2026-09-18T14:46:34.172Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-10/0znsb7yy/EPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர்.</p><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராஜினாமா செய்த இந்த இரண்டு தொகுதி எம்.எல்.ஏ.க்களும், த.வெ.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி 6 நாட்கள் தேர்தல் பிரசாரம்</h2><p>அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் கே. பானுமதியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இரண்டு தொகுதிகளிலும் தலா 3 நாட்கள் என 6 நாட்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 24, 25 மற்றும் அக்டோபர் 3-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 27, 28 மற்றும் அக்டோபர் 2-ந்தேதி என மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.</p><p>சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் வழித் தடங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளார்.</p><p>த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தவெக சார்பில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.</p><p>தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் இ. பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பரவலை தடுக்காதது அரசின் அலட்சிய போக்கு : சீமான் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-negligence-on-rapidly-spreading-dengue-in-tamil-nadu-seeman-condemns#comments</comments><guid isPermaLink="false">ade8befa-0260-4fd8-b942-bb96e0737ce6</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:35:55 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:35:55.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,dengue fever,டெங்கு ஒழிப்பு நடவடிக்கை,dengue fever death,dengue fever Tamil Nadu,சீமான் கண்டனம்,டெங்கு,சீமான்,டெங்கு காய்ச்சல்</media:keywords><media:content height="280" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif" width="478"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nv3vjife/images-13.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>டெங்கு</h2><p>தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு அனைத்து மாவட்டங்களிலும்  நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது மிகுந்த கவலையும், வேதனையும் அளிப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>16 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்திருக்கிறார். </p><h2>அலட்சியபோக்கு கண்டனத்திற்குரியது</h2><p>தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. </p><p>தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் தற்போதுவரை, தமிழ்நாட்டில் 16,577  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. </p><h2>ஆறுதல்</h2><p>சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும்  நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச்செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். </p><h2>தீவிர நடவடிக்கை வேண்டும் </h2><p>மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல், தலைநகர் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். </p><p>தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 300 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதால், டெங்கு காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றன. டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காக்க முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்து வருகிறார்கள். </p><p>டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல், என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு சுகாதாரத்துறை? மிக மெத்தனமாக செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சிய அணுகுமுறை நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று தெரிவித்துள்ளார்.</p><h2>விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்</h2><p>தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு காய்ச்சல் குறித்த விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் உடனடியாக வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.</p> <p>மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழ்நாட்டின் மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-urgent-plea-supreme-court-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">f4affd7a-b471-4247-8b18-82d78471d60b</guid><pubDate>Fri, 18 Sep 2026 13:08:33 +0000</pubDate><atom:updated>2026-09-18T13:08:33.885Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Cauvery Water Issue,உச்சநீதிமன்றம்,காவிரி நீர் விவகாரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் விவகாரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/4ps4eco8/CaiuveryIssues.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.</p><p>அந்த மனுவில் "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 நாட்களுகு்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் போரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முறையான விசாரணை நடத்தாமல் நீக்கியது கண்டனத்திற்குரியது: கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karuppu-muruganandam-condemns-removal-without-due-investigation#comments</comments><guid isPermaLink="false">42cb0003-7aa6-4f9d-b60d-71b597086c22</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:46:37.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1n0v12yx/BJPKaruppuMuruganantham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கருப்பு முருகானந்தம் குற்றச்சாட்டு</h2><p>இந்த நிலையில், முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் முறையான விசாரணை நடத்தாமல் என்னை உடனடியாகப் பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது கண்டனத்திற்குரியது.</p><p>AI மூலம் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், புனையப்பட்ட போலிப் புகார் மனுவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கருப்பு முருகானந்தம் குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>28-ந்தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-to-launch-thaaymaaman-gold-ring-scheme-on-28th#comments</comments><guid isPermaLink="false">e012354f-feca-4961-a902-90c3283de520</guid><pubDate>Fri, 18 Sep 2026 12:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T12:33:00.451Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TVK Govt,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/qgjlyt7h/TNVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் </p><p>தாய்- சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.</p><p>தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.</p><p>இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.</p><h2>ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன</h2><p>தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEmONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>தினமும் 100 குழந்தைகள்</h2><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs)  தினமும் </p><p>100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்கமோதிரம் வழங்கப்படும்.</p><p>இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.</p><p>இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலைகளை கரைப்பதை பார்த்து கதறும் சின்னஞ்சிறுசுகள்.... அப்பா தண்ணீரில் போடாதீங்க பிளீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-11#comments</comments><guid isPermaLink="false">fd261211-0f85-4383-9390-e0f915deccf4</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:55:00 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:55:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chatuthi,vinayagar,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/xf8rsp7q/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>வீடுகளிலும், பொதுஇடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச்சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள்.</p><p>அழகிய வேலைப்பாடுகளுடன் விதவிதமாக வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் தூக்கிப்போடும் போது அது ஐதீகமாக தெரிந்தாலும், மனதில் லேசான கவலையும் தோன்றாமல் இருப்பதில்லை. கண் எதிரில் விநாயகர் சிலைகள் தண்ணீரில் உடைந்து நொறுங்கி சிதறுவது ஒன்றிரண்டு நாட்கள் மனக்கண் முன்பு வந்து செல்ல தவறுவதில்லை. அந்த உணர்வை பெரியவர்கள் வெளிக்காட்டுவதில்லை.</p><h2><strong>விநாயகர் சிலை</strong></h2><p>ஆனால் பிஞ்சு மனங்கள் விநாயகர் சிலைகளை பிரிய மனமில்லாமல் தவிப்பதும், அடம் பிடிப்பதும் நீர்நிலைகள் அருகில் நித்தமும் அரங்கேறும் காட்சிகளாகிவிட்டன.</p><p>விநாயகர் சதுர்த்திக்காக சிறு பிள்ளையார் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். அப்போது அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளும் விளையாட்டு தனத்தோடு வழிபட்டாலும் அந்த சிலைகளோடு ஒன்றிவிடுகிறார்கள். பின்னர் கரைப்பதற்காக பூக்களால் அலங்காரம் செய்து சிலைகளை எடுத்து வந்து நீர்நிலைகளின் அருகில் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். வீட்டில் நடக்கும் பூஜையை போல்தான் வெளியிலும் எடுத்து வந்து அப்பா-அம்மா பூஜை செய்கிறார்கள் என்று அதுவரை சந்தோஷமாக இருக்கும் குழந்தைகள் சிலையை எடுத்து தண்ணீரில் போடப்போகும் போதுதான் உடைந்து நொறுங்கி விடுகிறார்கள்.</p><h2><strong>சென்னை பட்டினப்பாக்கம்</strong></h2><p>சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒரு விநாயகர் சிலையை கரைக்க விடாமல் குழந்தை ஒன்று அடம்பிடித்தது. ஒரு வழியாக சிலையை கடலில் போட்டு திரும்பினாலும் ‘எனக்கு பிள்ளையார் சாமி’ வேணும்... என்று கண்ணீர் விட்டு அழுத குழந்தையிடம்,</p><p>“நீ எங்க செல்லக்குட்டித்தானே?”</p><p>“ம்”</p><p>“அப்போ அப்பா சொல்றதை கேட்பியா...”</p><p>“ம்”</p><p>“நம்ம செல்ல விநாயகரும் கடலில் குளித்துவிட்டு வந்து விடுவார்.. சரியா...?”</p><p>“அப்போ... நாம நின்னு கூட்டிட்டு போவோப்பா...”</p><p>“நாம வெயிட் பண்ண வேண்டாம்... அவர் வேகமாக வருவார்.”</p><p>நாம் வீட்டுக்கு போவதற்குள் அவர் வந்துவிடுவார் பாரேன் என்று அந்த குழந்தையை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/2jvd26jz/vinayaga.jpg" /></figure><h2><strong>குழந்தை</strong></h2><p>ஆந்திர கடலோரங்களில் நடந்த காட்சிகள் மிகவும் உருக்கமாக இருந்தது. ஒரு குழந்தை விநாயகர் சிலையை கட்டித் தழுவியபடி ‘நான் விடமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது. அந்த குழந்தையை சமாதானப்படுத்தி சிலையை எடுத்து சென்று கரைப்பதற்கு பெற்றோர் பெரும்பாடுபட்டனர்.</p><p>ஒரு குழந்தைக்கு தாவணி எல்லாம் போட்டு அழைத்து வந்திருந்தார்கள். அதுவரை உற்சாகமாக இருந்த அந்த குழந்தையும் விநாயகர் சிலையை கடலில் போடப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ‘பிளீஸ்பா... வேண்டாம்பா... வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்று சிலையை கட்டிப்பிடித்து கதறியது.</p><h2><strong>விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்</strong></h2><p>இன்னொரு குட்டிகுழந்தை அவளது தந்தை விநாயகர் சிலையை தூக்கியதும் கொண்டு செல்லவிடாமல் தடுத்து தன்னிடம் கொடுத்து விடும்படி கெஞ்சி அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. தாய் அந்த குழந்தையை பிடித்து வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டார். இன்னொரு குழந்தையின் சிறு பிள்ளைத்தனமான எதிர்ப்பையும் மீறி அந்த குழந்தையின் பெற்றோர் சிலையை கடலில் கொண்டு போட்டனர். அதை பார்த்து ஏங்கி ஏங்கி அழுத அந்த குழந்தையை சிறிது நேரம் சமாதானப்படுத்தவே முடியவில்லை. சிலை கரைக்க வந்திருந்த பலரும் அந்த குழந்தையை சமாதானப்படுத்த நீண்டநேரம் போராடினார்கள்.</p><p>விநாயகரோடு ஒன்றிவிட்ட குழந்தைகள் விநாயகரை பிரியமனமில்லாமல் நடத்திய பாச போராட்டம்தான் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.</p>]]></content:encoded></item><item><title>பெண் ஊழியருக்கு கத்திக்குத்து: சட்டம்- ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு- கனிமொழி எம்.பி. சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-employee-stabbed-tvk-govt-destroying-law-and-order-kanimozhi-mp-criticism#comments</comments><guid isPermaLink="false">b3ebf810-6f76-4750-aa55-01d96f41290c</guid><pubDate>Fri, 18 Sep 2026 11:29:40 +0000</pubDate><atom:updated>2026-09-18T11:29:40.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kanimozhi MP,கனிமொழி எம்.பி.,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/uvu5iylr/KanimozhiMP001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>த.வெ.க. அரசு ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது.</p><p>பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.</p><p>பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா?</p><h2>நடந்தது என்ன?</h2><p>கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகம் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.</p><h2>கத்திக்குத்து</h2><p>இங்கு காடாம்புலியூர் அடுத்த புறங்கணியை சேர்ந்த திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல வேலைக்கு வந்தார். மருந்தகத்தை திறந்து பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.</p><h2>சிகிச்சை</h2><p>வலியால் அலறி துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார். சத்தம் கேட்டு அருகே இருந்த ஊழியர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அருகே அந்த வாலிபர் நின்றிருந்தார்.</p><p>உடனடியாக அவர்கள், அந்த வாலிபரை பிடித்து வைத்து கொண்டு காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை மாநகராட்சி பகுதியில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/applications-for-new-drinking-water-and-sewage-connections-in-the-chennai-corporation-area-can-be-submitted-only-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/applications-for-new-drinking-water-and-sewage-connections-in-the-chennai-corporation-area-can-be-submitted-only-online#comments</comments><guid isPermaLink="false">f9f844a4-daa2-42b3-b328-f14ae75f350e</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:38:24 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:38:24.492Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Drinking water,சென்னை குடிநீர் வாரியம்,sewage,Chennai Water Board,குடிநீர்,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ycyw86fh/online.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/ycyw86fh/online.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை உள்ளிட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் புதிய இணைப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். சரியான ஆவணங்கள் சமர்ப்பித்தால் 15 நாட்களில் செயல்முறை நிறைவு செய்யப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.100 மட்டுமே கட்டணம்.</strong></em></p><p>சென்னை பெருநகர பகுதியில் எல்லை விரிவாக்கம் காரணமாக வட சென்னை மற்றும் தென் சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர கட்டமைப்புகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து உள்ளது. </p><h2><strong>திட்டங்கள்</strong></h2><p>மக்கள் தொகை மற்றும் வணிக நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அப்பகுதிகளில் பாதுகாப்பான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">குடிநீர் வழங்குதல்</a> மற்றும் முறையான கழிவுநீர் அகற்றுதல் வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகி உள்ளது. </p><p>இதனை கருத்தில் கொண்டு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் புதிதாக இணைக்கப்பட்ட வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் குடிநீர் விநியோகத் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்களை கட்டமைக்கும் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது. </p><p>இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக மணலி மண்டலத்திற்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடையன் குப்பம், கடப்பாக்கம், மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, மாதவரம், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட போரூர், நெற்குன்றம், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோக குழாய்கள் அமைக்கப்பட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் தரக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இதேபோல சின்ன சேக்காடு, போரூர், நெற்குன்றம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம்,  உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><h2><strong>விண்ணப்பிக்கும் முறை</strong> </h2><p>புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரியத்தின் (<a href="https://wsc.chennaimetrowater.in/#/nc/login">https://wsc.chennaimetrowater.in/#/nc/login</a>) என்ற  இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். </p><p>பெறப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய பொறியாளரால் விண்ணப்பதாரரின் வளாகம் ஆய்வு செய்யப்படும். விண்ணப்பதாரர் இணைய வழி மூலம் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும். </p><p>விண்ணப்பதாரர் வழங்கும் விபரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால் விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்ட பின்னர் களப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.</p><p>ஏற்கனவே உள்ள குடிநீர் அல்லது கல்லூரி இணைப்புகளை புதுப்பித்தல் அல்லது வேறு இடத்திற்கு மாற்றுதல் போன்றவற்றிற்கு ஒவ்வொரு இணைப்புக்கும் ஒரு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும். </p><p>பொதுமக்களின் வசதிக்காகவும் அனைவரும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைகளை பெற்றிட ஊக்குவிக்கும் வகையிலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இணைப்பு கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். </p><p>எனவே புதிதாக குடிநீர், கழிவு நீர் இணைப்பு பெற விரும்புவோர் சென்னை குடிநீர் வாரியத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/districts-in-tamil-nadu-likely-to-experience-rain-accompanied-by-thunder-and-lightning#comments</comments><guid isPermaLink="false">710e3bde-ad57-470f-8990-93222a27c027</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:21:26 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:21:26.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/mwt9ytkb/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, வடக்கு உள் தமிழகம் மற்றும் மராத்வாடா-அரபிக்கடல் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக இன்று முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழை, மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாயிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>20 மற்றும் 21-ந்தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலின் தென் பகுதிகள் மற்றும் அந்தமான் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>பெண் நிர்வாகி புகார்: கருப்பு முருகானந்தம் மீது பாஜக நடவடிக்கை..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-removes-karuppu-muruganandam-after-female-member-complaint#comments</comments><guid isPermaLink="false">34531e1b-63bb-43c7-956a-2d45905c0fef</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:13:53 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:13:53.729Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,karuppu muruganantham</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கருப்பு முருகானந்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/n2qy20uj/KaruppuMuruganandham.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகபெண் புகாரளித்ததை அடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>பா.ஜ.க-வின் மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக இருப்பவர் திவ்யா சேஷாத்ரி. பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தன்னை உடல் ரீதியான தாக்கியதாகவும், மனரீதியான துன்புறுத்தியதாகவும், தனக்கு மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்திருந்தாா். தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாவும் கட்சி மேலிடத்திற்கு புகார் அளித்திருந்தார்.</p><p>இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். </p><h2>விளக்கம்</h2><p>இதனிடையே, கருப்பு முருகானந்தம் "அந்தப் புகார் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அது குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் மீதான புகாரோ அல்லது குற்றச்சாட்டுகளோ என்னவென்று தெரியாமல் என்னால் எதற்கும் பதிலளிக்க முடியாது. விவரங்களை அறிந்த பிறகு, இது குறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே இயக்க சென்னைக்கு வந்த 35 புதிய மெட்ரோ ரெயில்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/35-new-metro-trains-have-arrived-in-chennai-to-operate-between-poonamallee-and-lighthouse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/35-new-metro-trains-have-arrived-in-chennai-to-operate-between-poonamallee-and-lighthouse#comments</comments><guid isPermaLink="false">b2ff5217-0056-43a2-9d37-efe85747f0fa</guid><pubDate>Fri, 18 Sep 2026 10:08:01 +0000</pubDate><atom:updated>2026-09-18T10:08:01.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,Chennai metro,சென்னை மெட்ரோ,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1xta24y7/chennaimetro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/1xta24y7/chennaimetro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.</strong></em> </p><h2><strong>மெட்ரோ ரெயில்</strong></h2><p>சென்னையில் <a href="https://www.maalaimalar.com/topic/மெட்ரோ-ரெயில்">மெட்ரோ ரெயில்</a> 2-ம் கட்ட திட்டப் பணிகள் 5 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் 4-வது வழித்தடத்தில்   மெட்ரோ ரெயில் இயக்க தயாராக உள்ளது. பூந்தமல்லி -கலங்கரை விளக்கம் வரை  உள்ள இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை அனைத்து பணிகளும் முடிந்து ரெயில்களை இயக்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>இறுதி கட்ட பணிகள்</strong></h2><p>ஆனால் மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான உத்தரவு வரவில்லை. இதனால் 4 மாதமாக  இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க  முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வழித்தடத்தில் போரூர் சந்திப்பு முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர் மட்ட பாதையில் 92 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது கட்டிட அலங்காரப் பணிகள் மற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. </p><p>சுரங்கப்பாதையில் 54 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அங்கு ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த  வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு தேவையான 35 ரெயில்கள் சென்னைக்கு வந்துள்ளன. பூந்தமல்லியில் உள்ள பணிமனையில் இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. சோதனை ஓட்டங்களும் நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-expand-kamarajar-breakfast-scheme-statewide-on-22nd-rajmohan#comments</comments><guid isPermaLink="false">295fa2f5-f2af-4b55-9758-eac983b4dbae</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:54:21 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:54:21.442Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காலை உணவு திட்டம்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/25fowcvp/MinisterRajmohan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>* ஏற்கனவே, 19 லட்சத்து 34 ஆயிரத்து 230 மாணவர்கள் காலை உணவு திட்டத்தின் மூலம் பலன் அடைகிறார்கள். 37,440 பள்ளிகள் மூலமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.</p><p>* காலை உணவு திட்டம் விரிவாக்கம் மூலமாக மேலும் 15,450 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.</p><h2>பயனடையும் மாணவர்கள் எண்ணிக்கை 34.64 லட்சம்</h2><p>* புதிதாக 15 லட்சத்து 30 ஆயிரத்து 141 மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். மொத்தமாக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மூலமாக 34 லட்சத்து 64 ஆயிரத்து 371 மாணவர்கள் காலை தோறும் உணவு பெறுவார்கள்.</p><p>* 22-ந்தேதி தமிழ்நாடு முழுவதும்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced"> காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் </a>தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. 38 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.</p><p>* தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றும் இன்றும் இருமொழிக் கொள்கைதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்ற நீதிபதி கருத்துதான் தெரிவித்துள்ளார். தீர்ப்பு கிடையாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது. எந்த மொழிக்கும் எதிரானது தமிழ்நாடு அரசு அல்ல. இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.</p><h2>உணவு மெனு தயாரிக்க கமிட்டி</h2><p>* அனைவருக்கும் உணவு, ஆரோக்கியமான உணவு என்பதுதான் எங்களுடைய அனைவருடைய எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு என்ற வகையில் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். என்னென்ன வகையிலான உணவு என்ற மெனுவை தயாரிக்க புதிய கமிட்டியை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாளில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.</p><p>* வருங்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குற்றங்களைத் தடுக்கத் தவறிய காவல்துறை, நீதி கேட்போரைக் கைது செய்வதா?- டி.டி.வி.தினகரன் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-condemns-tn-police-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-condemns-tn-police-department#comments</comments><guid isPermaLink="false">3363679c-dc81-4647-bac6-d50c2feda8c1</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:34:03 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:34:03.278Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,AMMK,TTV Dhinakaran,அமமுக,டிடிவி தினகரன்,இரட்டை கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nok96c28/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/nok96c28/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/டிடிவி-தினகரன்">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>கைது</strong></h2><p>சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பழமலைநகர்–கொடிக்காடு கண்மாயில் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இரு இளைஞர்களின் உடல்களை வாங்க மறுத்துப் போராடிய உறவினர்களும், பொதுமக்களும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>மேலும், மதுரை மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரையும் காவல்துறையினர் கைது செய்து அடக்கி ஒடுக்கியுள்ளனர்.</p><p>ஒட்டுமொத்த தமிழகத்தையும் பதற்றமடையச் செய்யும் அளவிற்கு நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதோடு, குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்களைக் காக்க வேண்டிய காவல்துறையோ, தனது முழு அதிகாரத்தையும் நீதி கேட்டு போராடும் மக்கள் மீது ஏவி கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><h2><strong>கேள்விக்குறி</strong></h2><p>தவெக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததிலிருந்தே கொலைச் சம்பவங்கள் அரங்கேறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தலைநகர் சென்னையில் தொடங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்கச் செய்வதோடு, பொதுமக்களின் உயிர்ப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>அதோடு, காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, சட்டத்தை மதிக்காமல் கொடிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு மாறாக, அக்குற்றங்கள் நடைபெறுவதற்கான பின்னணிக் காரணங்களை எடுத்துரைப்பதும், அன்றாடம் நடைபெறும் குற்றங்களுக்கும் சட்டம்-ஒழுங்கிற்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல பேசிக் கொண்டிருப்பதுமே, குற்றம் செய்வோருக்கு அறவே பயமில்லாத ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>எனவே, சிவகங்கை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் மதுரையில் மாணவர் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு, குற்றங்களில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் எனக் கூறுவதா?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/can-police-keep-cctv-recordings-only-15-days-asks-madurai-high-court#comments</comments><guid isPermaLink="false">ad7e05ad-627b-46ca-8acc-ffd9256bc812</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:19:22 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:19:22.393Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CCTV,highcourt madurai branch,சிசிடிவி,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அலங்காநல்லூரைச் சேர்ந்த பெண்ணை மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் 36 மணி நேரம் சட்ட விரோதக் காவலில் அடைத்து வைத்தது தொடர்பான வழக்கில், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவிடக்கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoothukudi-shooting-incident-high-court-madurai-bench-key-order-to-government">உயர்நீதிமன்ற மதுரைக்கிளை</a>யில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.</p><p>உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி..</p><p>அப்போது போலீஸ் தரப்பில் 15 நாட்கள் மட்டுமே சிசிடிவி பதிவுகளை பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். CCTV கேமராக்களைப் பராமரிக்க வேண்டிய கடமை எஸ்.பி.க்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வங்கி ஊழியரை மிரட்டி ரூ.11 லட்சம் பறிப்பு: பிரபல ரவுடிகள் உள்பட 4 பேர் கைது </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-employee-money-robbery-4-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bank-employee-money-robbery-4-arrested#comments</comments><guid isPermaLink="false">7f589471-9f8d-41f1-9436-a2ee2a6664cc</guid><pubDate>Fri, 18 Sep 2026 09:17:05 +0000</pubDate><atom:updated>2026-09-18T09:17:05.616Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,பணம் கொள்ளை,money robbery,ரவுடிகள் கைது,bank employee,வங்கி ஊழியர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tdv7yz17/arrested1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arrested]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/tdv7yz17/arrested1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நேற்று முன்தினம் சென்னை பாரிமுனை பகுதியில் இவருக்கு தெரிந்த நபரிடம் செலவுக்காக ரூ.11 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் அங்கு இருந்து புறப்பட்டு தியாகராய நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.</p> <p>அப்போது 4 பேர் கும்பல் கார்த்திகேயனை வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து கார்த்திகேயன் சென்னை பாண்டிபஜார் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். </p><p>புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சென்னை தேனாம்பேட்டை உதவி ஆணையர் ஜமால் மற்றும் பாண்டிபஜார் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம கும்பலின் இரு சக்கர வாகனத்தின் எண்களை வைத்து விசாரணை செய்ததில் சென்னை வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. </p><p>இதனையடுத்து தனிப்படை போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண்கு மார் (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவர் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகள் ஆனந்த செல்வன் ( 32 ) சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பப்லு (32) திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முகமது பாசில் (32) என்பது தெரிய வந்தது.</p><p>இவர்களிடம் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரம் பணம் மற்றும் ஒரு பைக், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட ஆனந்த செல்வன் மற்றும் பப்லு ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பது தெரியவந்தது. </p><p>பின்னர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி ரூ.11 லட்சத்துக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்த பணம் ஹவாலா பணமா? என்றும் கார்த்திகேயன் ரூ.11 லட்சம் பணம் வைத்து இருப்பது இந்த கும்பலுக்கு எப்படி தெரியவந்தது யாராவது தகவல் கொடுத்தார்களா? எனவும் பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-property-taxes-in-urban-areas-should-not-be-raised-repeatedly#comments</comments><guid isPermaLink="false">b896709e-de23-458e-aa46-ddcc2c75c571</guid><pubDate>Fri, 18 Sep 2026 08:33:41 +0000</pubDate><atom:updated>2026-09-18T08:33:41.722Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-18/y4nkl4g4/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என அன்புமணி கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.</p><p>சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக <a href="https://www.maalaimalar.com/topic/சொத்து-வரி">சொத்து வரி</a> உயர்வு, வரி அல்லாத வருவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.</p><h2><strong>விலக்கு</strong></h2><p>உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்து வரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச் சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.</p><p>தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை  சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை  மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில  அரசும்  கடைபிடிக்கிறது.</p><p>உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.</p><p>எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை  மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என கூறியுள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>