<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 10 Aug 2026 17:26:41 +0000</lastBuildDate><item><title>பக்தர்கள் கோரிக்கை ஏற்பு: திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாட்டில் தளர்வு..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotees-request-accepted-tiruchendur-temple-darshan-time-relaxed#comments</comments><guid isPermaLink="false">fd8db5c1-5d27-4013-8525-cf707e61747a</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:37:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:37:30.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,நேரக்கட்டுப்பாடு,தரிசனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருச்செந்தூர் கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/529exynk/Tiruchendur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p><p>பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.</p><p>இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>இதனால் ஏற்கனவே இருந்து முறைப்படி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த நிலையில் பழைய அறிவிப்பு பலகை மாற்றப்பட்டு புதிய பலகை வைக்கப்பட்டுள்ளது.</p><p>அதில்,</p><p>* தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.</p><p>* ஞாயிறு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுார்கள்.</p><p>* விசேஷ நா்களில தரிசன நேரங்கள் மாறுதலுக்குட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-right-to-compare-religion-with-the-stature-of-a-language-nainar-questions-minister-maria-wilson#comments</comments><guid isPermaLink="false">f36a38db-27e0-43ab-a243-0f214c930689</guid><pubDate>Mon, 10 Aug 2026 16:17:51 +0000</pubDate><atom:updated>2026-08-10T16:17:51.398Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,கிறிஸ்தவம்,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mary Wilson,Christianity</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மொழியின் ஆளுமையுடன் மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? - அமைச்சர் மரிய வில்சனுக்கு நயினார் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/czp1r1iz/New-Project-2026-08-10T214717.083.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அமைச்சர் மரியவில்சனிடம் அவரது தமிழ் உச்சரிப்புத்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஒரு அறிவுரையாக கூறினார். </p><p>இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரியவில்சன் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், தனக்கு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரியும் என்றும் ஆவேசமாகப் பேசியிருந்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின் போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம். </p><p>ஆனால், “எனது மதம் எனக்கு கற்று கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்து கொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத் தான் தெரிகிறது. </p><p>“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழி தான் நம் தாய் மொழி தமிழ். “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்? </p><p>“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாக படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கும். </p><p>பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சட்ட மன்றத்தில் கூட உங்கள் கட்சி தலைமையும் அதைத் தானே சுட்டிக்காட்டினார்? </p><p>அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 10 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026#comments</comments><guid isPermaLink="false">1bbee6de-4ec6-459e-bfff-1b842e60b35a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:09:30 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:20:09.777Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/803u20uo/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11">M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</a></p><p>* தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும்.</p><p>* மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-speaks-onjharkhand-protest-crackdown-use-of-force-against-students-is-wrong">ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி</a></p><p>* ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* சட்டசபை நோக்கி பேரணி சென்றபோது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/child-among-13-killed-in-one-of-deadliest-ukraine-drone-strikes-in-russia">ரஷியா மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்: 13  பொதுமக்கள் உயிரிழப்பு- பலர் காயம்</a></p><p>* உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல்.</p><p>* உக்ரைன் மீதும் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants">MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!... </a></p><p>*மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><p>*இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</a></p><p>* தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும்.</p><p>* ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம்.</p><p>மேட்டூர் அணை திறப்பு எப்போது? விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வீர்களா? மாட்டீர்களா? என எம்எல்ஏ ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். </p><p>சட்டமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் இவ்வளவு கோபப்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்,"நிதியமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதை பர்சனலாக எடுத்துக்கொள்கிறார். கடையநல்லூர் எம்எல்ஏ தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அப்படிக்கூறினார், அவர் அவைக்கு புதியவர்" என விளக்கம் அளித்தார்.</p> <p>சட்டமன்றத்தின் அலுவல் மொழி தமிழோ, ஆங்கிலத்திலோ.. இரு மொழியிலும் பேசலாம் என விதி உள்ளது. தனக்கு எதிரே இருந்தவர் தெலுங்கில் பேசியபோது அனுமதித்து தெலுங்கிலேயே பதில் தந்தவர் ஜெயலலிதா- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்</p><p>அந்தந்த மாவட்ட பழக்க வழக்கத்திற்கு ஏற்றார்போல் தமிழ் மொழி பேசும் விதம் மாறும்- திமுக எம்எல்ஏ எ.வ.வேலு </p><p>அமெரிக்காவில் இருந்து வந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தபோதும் இந்த நிலைதான் இருந்தது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>நிதியமைச்சர் வரும் காலத்தில் பிழையின்றி தமிழில் பட்ஜெட் வாசிக்க வேண்டும் என்று ராஜேந்திரன் கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,"எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்?" என்றார்.</p><p>தமிழில் நன்றாக பேச அமைச்சர் ராஜ்மோகனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜேந்திரன் கூறியதால் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமடைந்தார்.</p><p>தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரடைந்த நிதியமைச்சர்,"சாதி ரீதியாக கேலி செய்வது அதிகரித்துள்ளது, தற்போது மொழி ரீதியாக கேலி செய்வதும் அதிகரித்துவிட்டது. என்னால் இப்படிதான் பேச முடியும், வேண்டும் என்றால் ஏற்று கொள்ளுங்கள் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது" என பதில் அளித்தார்.</p><p>நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கை மிக தெளிவாக இருந்தது  - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>கடந்த திமுக ஆட்சியில் நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>பால் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க காரணம் திமுக, 90 நாட்களில் தவெக எப்படி கொண்டுவர முடியும்.</p><p>விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின் இணைப்புகள் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை - ராஜேந்திரன்</p><p>கைது செய்யப்பட்ட நாளை தனது நாளாக்கியவர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.</p><p>கொரோனா பாதித்த நோயாளிகளை நேரில் பார்த்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ராஜேந்திரன்</p><p>கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் உரையாற்றினார்.</p><p>மதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர். நான் சார்ந்திருக்கும் திமுக சார்பில் நன்றி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு நன்றி.</p><p>வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்ய கூடாது என முடிவெடுத்தவன் நான்.</p><p>தமிழுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த பாரதியார் கோட் சூட் அணிந்து தான் வாழ்ந்தார். தமிழ் எங்கள் உயிர் என்பது எங்களது சொல்லில் அல்ல செயலில் இருக்கும், முதல்வர் அத்தகையவர் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்எல்ஏ</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் உரையாற்றினார்.</p><p>பேரவைக்கு முதல்வர் வேஷ்டி சட்டையுடன் வருவது பொங்கல், தீபாவளியை போல் ஒரு மகிழ்ச்சி வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றி இன்றும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் வேட்டி, சட்டையில் வந்திருக்கலாம்.</p><p>இடைவெளி இல்லாமல் சட்டசபை நடப்பதால் உறுப்பினர்களுக்கு உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது. உடல் சோர்வால் உறுப்பினர்கள் பாதி பேர் வெளியே சென்று விட்டார்கள் - தமிமுன் அன்சாரி</p><p>தேவைப்பட்டால் சட்டசபை மாலை நேரத்திலும் நடத்த முடிவு - சபாநாயகர்</p><p>கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு தடை விதிக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி </p> <p>காமராஜர் திட்டமிட்ட ராசிமணல் அணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p><p>ராசிமணலில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். ராசிமணலில் அணை கட்டினால் இரு மாநிலத்துக்கு பிரச்சனை ஏற்படாது  - தமிமுன் அன்சாரி </p><p>நீட் தேர்வு  வேண்டாம் என்பது தான் தவெக அரசின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது திக பரப்புரைக்கு அனுமதி மறுத்தது ஏன்?</p><p>புதிய முஸ்லீம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்று  கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை தேவை.</p><p>ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிமுன் அன்சாரி கோரிக்கை</p><h2>தமிமுன் அன்சாரி</h2><p>புதிய சட்டமன்றத்தை கட்டுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.</p><p>திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகளா?</p><p>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை ஒடுக்கியது நியாயமா?</p><p>சிஏஏ சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வலியுறுத்த வேண்டும்.</p><p>ஈழ தமிழர்கள் தாங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.</p><p>காவிரி விவகாரத்தில் மாற்று நடவடிக்கை குறித்து ஏன் பேச கூடாது.</p> <p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டசபை உறுப்பினர் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.</p><p>சட்டசபை விவாதங்களால் அழகுப்படுத்த வேண்டும்.</p><p>விவாதங்களின் முடிவில் வெற்றி பெறுவது மக்களின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும்.</p><p>சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக உடனுக்குடன் ஒளிபரப்பப்படுவதால் உறுப்பினர்கள் நேர்த்தியாக பேச வேண்டும்.</p><p>முன்பு பேரவையில் நடந்தது மறுநாள் காலை செய்தி தாளில் வரும். ஆனால் தற்போது நேரலையில் மக்கள் பார்க்கின்றனர்.</p><p>ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் விவாதத்தில் ஈடுபட்டாலும் வெல்வது மக்களாக இருக்க வேண்டும்.</p> <p>சட்டசபை உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பேசினால் இப்படி நேரம் இழுக்காது.  உறுப்பினர்கள் தங்கள் புகார்களை ஆதாரத்துடன் வைத்தால் சரியான நேரத்தில் பேசி, அதற்கு பதிலும் சரியாக கிடைக்கும் - சபாநாயகர்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2lsd8hib/ministerkeerthana.jpg" /></figure><h2>அமைச்சர் கீர்த்தனா</h2><p>சிப்காட்டிற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. பெருந்துறை சிப்காட்டில் எந்த விதமான பெரிய மாற்றங்களையும் நான் பார்க்கவில்லை.</p><p>நேரு சொன்னதை போல் எவ்வித மாற்றத்தையும் திருச்சி சிப்காட்டில் நான் பார்க்கவில்லை.</p><p>திருச்சி சிப்காட் நன்றாக நடைபெறுவதாக நேரு கூறினார். நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.</p><p>திமுக அல்வா கொடுத்ததாக பேசிய தவெகவினருக்கு கே.என்.நேரு பதில் அளித்தார்.</p><p>திருச்சியின் பெரிய தொகுதியான மணப்பாறைக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் கிடைத்தவை.</p><p>புதிய கல்லூரி திறப்பு, கிராமங்களுக்கு புதிய சாலை, சிப்காட்டில் வேலை ஏற்படுத்தியது திமுக ஆட்சியில் தான்.</p><p>புதிதாக வந்த தம்பி... முதல்வர் விஜயிடம் கேட்டு இன்னும் நிறைய செய்யுங்கள். அல்வா என்றெல்லாம் சொல்லாதீர்கள்.</p><h2>மணப்பாறை தவெக எம்எல்ஏ கதிரவன்</h2><p>மணப்பாறை முறுக்கு பிரபலம் என்றாலும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு அல்வாவே அதிகம் கிடைத்தது.</p><p>திமுக ஆட்சியில் மணப்பாறை மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.</p><p>பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அனைவரும் வரவேற்பு - மணப்பாறை எம்எல்ஏ கதிரவன்</p><p>நெய்யாறு பிரச்சனை குறித்து முதலமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் பேசி நெய்யாறு பிரச்சனையை தீர்க்க வேண்டும் - பிரவீன்</p><p>விளவங்கோடு தொகுதி மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><h2>அமைச்சர் ரஞ்சித் குமார்</h2><p>யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின நபருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மனித - விலங்கு மோதலை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்.</p><p>யானைகள் 3000 கி.மீ. நடந்து செல்லும், அது செல்லும் பாதை காடுகளை வளப்படுத்தும் - அமைச்சர் ரஞ்சித்</p><p>தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உரையாற்றினார்.</p><p>மனிதர் - வனவிலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>நீலகிரியில் இருந்த புல்லட் ராஜா யானை தற்போது குமரியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிப்பு.</p><p>யானை புல்லட் ராஜா குமரிக்கு வந்ததில் இருந்து பொதுமக்கள் மீது அதிகளவில் தாக்குதல்.</p><h2>காங்கிரஸ் எம்எல்ஏ ஜமால் யூனுஸ் உரை</h2><p>காவிரி நீர் விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்க தவெக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.</p><p>65 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு கிடைத்துள்ளது. நிச்சயம் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்.</p> <p>காங்கிரஸ் அல்லாத ஆட்சி என கூறிய காமராஜூக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் அமமுக எம்எல்ஏ காமராஜ் உரையாற்றினார்.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் நல்ல தொடக்கம். வருவாயை பெருக்க அலுவாலியா தலைமையில் குழுவுக்கு வரவேற்பு</p><p>தமிழ்நாடு மீண்டும் மின்மிகை மாநிலமாக மாறும். விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். மேலும் ரூ.8,000 கோடி மட்டுமே விவசாய கடன்  உள்ளது. ரூ.8000 கோடி கடனை தவெக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்காக கடன் வாங்கியாவது திட்டங்களை நிறைவேற்றுங்கள்.</p><p>நீங்கள் இருக்கும் வரை நீங்கள் தான் முதலமைச்சர். பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி மத்தியில் அமைக்க வேண்டும்.</p> <p>முதலமைச்சர் கர்நாடகா செல்ல நினைத்தது தவறானது. உபரி நீரை மட்டும் திறந்து விட தமிழகம் கர்நாடகாவின் வடிகாலா?</p><p>மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காமராஜ் வேண்டுகோள் விடுத்தார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில்,</p><p>தமிழக அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கியத்துவமில்லை. விவசாயம் என்பது வெறும் தொழில் அல்ல, விவசாயிகளின் வாழ்க்கை முறை. மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>கர்நாடகத்திடம் உரிய நீரை கேட்கிறோம், உபரி நீரை அல்ல. தண்ணீர் இல்லை என கூறி 2 நாட்கிில் அணை நிரம்பி விட்டதாக கூறுகின்றனர்.</p> <h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>திமுக அரசு முதல் காலாண்டில் வாங்கிய கடனை விட குறைவாகவே தவெக ஆட்சியில் ரூ.29,881 கோடி கடன்.</p><p>முதல் காலாண்டில் கடன் வாங்கும் தொகையை தவெக அரசு சற்று குறைத்துள்ளது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடன் அளவை 0.54-ல் இருந்து 0.51 ஆக குறைத்துள்ளோம்.</p><p>கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2>அமைச்சர் மரிய வில்சன்</h2><p>தேர்தல் அறிக்கையில் கூறிய 125 அறிவிப்புகள் தவெக அரசின் முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்துள்ளோம். துறை ரீதியான மாற்றங்களை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளார். கடனை நாங்கள் குறைத்துக்கொண்டே தான் வருகிறோமே தவிர அதிகரிக்கவில்லை.</p><h2> அதிமுக எம்எல்ஏ காமராஜ்</h2><p>பட்ஜெட் தாக்கல் என்ற பெயரில் வெற்றி என்ற பெயரை ஒவ்வொரு திட்டத்திற்கு சூட்டும் விழா தான் நடைபெற்றது.</p><p>தவெக அரசின் முதல் பட்ஜெட் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த புதிய திட்டமும் இல்லை.</p><p>மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம்.</p><p>நிதி நிலையை சரி செய்ய 2 ஆண்டு தேவை என தவெக அரசு சொல்கிறது. ஆனால் 50 ஆண்டு தேவை என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்.</p><p>நன்னிலம் அதிமுக எம்எல்ஏ காமராஜ் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றினார். </p><p>அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி, கடன் கட்டுக்குள் இருந்தன.</p><p>தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.</p><p>தவெகவின் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வரவில்லை.</p> <p>கரும்புக்கு என கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது மராட்டிய மாநிலம். விரைவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணிக்கு வரும் - அமைச்சர் ஆதவ்</p><h2>சைதாப்பேட்டை எம்எல்ஏ அருள்பிரகாசம்</h2><p>தவெக ஆட்சியில் தமிழ்நாடு மின்னல் வேகத்தில் முன்னேறுகிறது. சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டையில் மாசுவை நீக்கி தூய்மை கிடைத்துள்ளது.</p><p>நமது மண்ணில் விளையும் கரும்புக்கு சர்க்கரைத்தன்மை குறைவு - முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பழைய கள்ளு. புதிய மொந்தை.</p><p>திமுக அரசின் பட்ஜெட்டை தான் தவெக அரசு அப்படியே வாசிக்கிறது என கிராமத்தில் பேசுகிறார்கள் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>ரேஷன் கடைகளில் தரமான அரிசி கொடுத்தால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என எம்ஜிஆர் கூறினார்.</p><p>ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியை வைத்து ஆட்சியை மதிப்பிடலாம் என எம்ஜிஆர் கூறினார் - சபாநாயகர்</p><p>திறந்த வெளியில் உள்ள 10 லட்சம் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. </p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><h2>சொன்னால் செய்பவர் முதலமைச்சர் விஜய்</h2><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசா சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p> <p>திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டது. ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது - சக்கரபாணி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன்</h2><p>நெல் கொள்முதலுக்கு விவசாயிகளிடம் திமுக ஆட்சியில் கையூட்டு பெறப்பட்டது. திமுக ஆட்சியில் ரேஷனில் தரப்பட்ட அரிசியை பயன்படுத்த முடியவில்லை என மக்களே கூறினர்.</p><p>ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரிசெய்ய தொடர் நடவடிக்கை எடுக்கிறோம்.</p> <h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் நடந்துள்ளது. திமுக 2 லட்சம் மின் இணைப்பு கொடுத்தது விவசாயிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இலவச மின்சாரம் தொடர்பாக அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. தவெக ஆட்சியில் மின்சாரமே வரமேட்டேங்குது.</p><p>நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரத்திற்கு திமுக ஆட்சியைவிட கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் குறித்து மானிய கோரிக்கையில் அறிவிப்பு - நிர்மல்குமார்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு.</p><p>திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டதாக அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p> <p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p>நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.</p><h2>அமைச்சர் ரமேஷ்</h2><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.</p><p>கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர் -  அமைச்சர் ரமேஷ்</p> <p>திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.</p><p>பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்றோம் -  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள்.</p><p>ரூ.21,000  கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6,000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக் திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது.</p><p>நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.</p><p>திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது. தவெக ஆட்சியில் மழையே பெய்யவில்லை.</p><p>நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக - திமுக காரசார விவாதம் நடைபெற்றது.</p><h2>எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</h2><p>எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்து தான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>திமுக இடைக்கால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறி இருந்தோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை படிப்படியாகவே திமுக அரசு உயர்த்தியது.</p><p>திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் நெல்லுக்கு ரூ.2500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை.</p><p>புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். ஆனால் கிள்ளி தருகிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்து விட்டீர்களா என இரவு பகல் பாராது போன் செய்கிறார் முதல்வர் விஜய்.</p><p>நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறோம்.</p><p>கரும்பு டன்னுக்கு ரூ.4,500 கொடுப்போம் என தவெக வாக்குறுதி அளித்தது.</p><p>எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம். நீங்கள் ரிலா்்ஸாக இருக்கிறீர்கள் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொடுத்தது வரலாற்றில் முதல்முறை. விவசாயிகள் நலனுக்காக வரலாறு படைத்துள்ளார்  முதலமைச்சர் விஜய் - செங்கோட்டையன்</p><p>விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட ஆட்சி திமுக ஆட்சி - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார் -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p> <p>திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.</p><p>கொள்கையை பேசி பேசி மக்கள் மனதை பிடித்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.</p><p>பட்ஜெட்டில் மாற்றத்தை காணவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.</p><p>கடந்த 5 ஆண்டுகாலம் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் இன்றி வாழ்ந்தார்கள்.</p><p>தமிழக பட்ஜெட் மீதான 2-ம் நாள் விவாதம் தொடங்கியது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாக இல்லை என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2.600 வழங்கப்படும்.</p><p>கரும்புக்கான ஊக்கத்தொகை ஒரு டன்னுக்கு ரூ.709.50 உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.156 வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p> <p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு</p><p>தனித் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்காது என்பதால் சட்டமாக இயற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கோரிக்கை.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் ராஜ்மோகன் உரையாற்றினார்.</p><p>மொழியின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகு பார்க்கும் கூட்டம் இது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது உலகத்தாய் வாழ்த்து.</p><p>இனி பொது நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்கள், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ  அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும் அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும் அவரை வாழ்த்தும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்.</p><p>தனித்தீர்மானத்தின் மீது ஐயூஎம்எல் எம்எல்ஏவும் அமைச்சருமான ஷாஜகான் ஆதரவு அளித்து உரையாற்றினார்.</p><p>மொழி உணர்வை சீண்டி பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.</p> <p>முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்தது.</p><p>மாநில அரசுகள் பின்பற்றும் தனித்துவ விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு இருக்கக்கூடாது.</p> <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது பாமக எம்எல்ஏ சிவகுமார் உரையாற்றினார்.</p><p>பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும்.</p><p>பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.</p><h2>வன்னி அரசு</h2><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி.</p><p>தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் தீர்மானம் இது.</p><p>தமிழ் தேசியமும் திராவிடமும் வேறு வேறு என பேசும் அபாயகரமான அரசியல்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது அமைச்சர் வன்னிஅரசு உரையாற்றினார். </p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>தமிழ்நாடு, தமிழர் என்ற அரசியல் தான் இன்றும் தொடர்கிறது.</p>   <p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான விஸ்வநாதன் உரையாற்றினார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் 8.5 கோடி தமிழ் மக்களால் ஏற்கப்பட்டுள்ளது.</p><p>மனேன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தமிழுக்கு ஏற்பட்ட அவமானம்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.</h2><p>1981-ல் மதுரையில் 5-வது தமிழ்நாட்டை நடத்தியவர் எம்.ஜி.ஆர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல.</p><p>தமிழ் என்ற வரும்போது இந்த பேரவை ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம்.</p><p>தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ கோவி செழியன் உரையாற்றினார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும்போது அவமானமாக இருக்கிறது.</p><p>தமிழ்மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர்.</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளித்தது.</p><p>தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வகையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்</p> <p>1891-ம் ஆண்டு சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணீயம் நாடக நூலின் பாயிரம்.</p><p>1970 நவம்பர் 23-ல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என அரசாணை கொண்டுவரப்பட்டது.</p><p>2021 டிச.12-ல் தமிழ்நாட்டின் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.</p><p>பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தின் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தமிழின் பெருமையை சொல்ல திருக்குறள் ஒன்று போதாதா?</p><p>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் கொடுப்பது தானே மாநில உரிமை.</p><p>தமிழ் என்று சொன்னாலே ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒன்றாக வந்து நிற்கும்.</p><p>தமிழ் மொழியின் பெருமைய பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.</p> <h2>முதலமைச்சர் விஜய்  உரை</h2><p>தாய் எப்படி புனிதமோ, அதை போன்றே தாய் மொழியும்.</p><p>தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் எனில் நாம் எல்லோரும் போற்றும் தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும்.</p><p>தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.</p><p>இந்தியாவின் நெற்றில் இருக்கும் பொட்டு தான தமிழ் மொழி.</p><p>தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது?</p> <p>தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என சட்டசபை ஏகமனதாக தீர்மானிக்கிறது.</p><p>சட்டசபை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் என்சிற கோமுகி மணியனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய தனித்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-resolution-priority-tamizh-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்</a></p> ]]></content:encoded></item><item><title>M.Ed. மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-m-ed-admissions-online-registration-from-august-11#comments</comments><guid isPermaLink="false">6a3b4443-9827-4d72-ae24-57a0ad07cae7</guid><pubDate>Mon, 10 Aug 2026 15:16:14 +0000</pubDate><atom:updated>2026-08-10T15:16:14.550Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் சேர்க்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xjccxkvk/Vishwanathan001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>2026-27-ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும்.</p><p>மாணாக்கர்கள் <a href="https://www.tngasa.in">www.tngasa.in</a> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p><h2>தரவரிசை பட்டியல்</h2><p>பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும்.</p><p>இவ்வாறு உயர் கல்வித்துறை பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/i-am-a-christian-i-know-both-how-to-attack-and-how-to-defend-minister-maria-wilson-speaks-passionately-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a1008beb-bbd5-43ab-91b0-af3bc9b81510</guid><pubDate>Mon, 10 Aug 2026 13:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T13:19:02.088Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்,tamil,Minister Maria Wilson,அமைச்சர் மரியவில்சன்,MLA Rajendran,எம்எல்ஏ ராஜேந்திரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நான் கிறிஸ்தவன்... தாக்குதல், தற்காப்பு இரண்டும் தெரியும்’ - சட்டப்பேரவையில் ஆவேசமான அமைச்சர் மரியவில்சன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2deowv9h/New-Project-2026-08-10T183204.163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடர்பான விவாத கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய கடையநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்.,</p><p>“நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நான் ஒரு சொற்பொழிவாளன், தமிழ் ஆர்வலன் என்ற முறையில் உன்னிப்பாக கவனித்தேன். அவர் ஆங்கிலத்தில் பெரும்புலமை பெற்றவராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தது.</p><p>தமிழில் சில சொற்றொடர்களை பேசாமல் விட்டுவிட்டார். சில தொடர்கள் இலக்கண பிழையுடன் அமைந்தன. இதை குறையாகவோ, குற்றச்சாட்டாகவோ அவையில் வைக்க விரும்பவில்லை. </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கட்சிக்காக வெகுவாக வாதாடி, பலம் சேர்க்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வருங்காலத்தில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் நிலை இருக்குமானால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர் பிழையின்றி பேச முயற்சிகள் எடுக்கவேண்டும்.” என தெரிவித்தார்.</p><p>அதற்கு சபாநாயகர்,  “எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது பட்ஜெட் என்று சொல்கிறார். தமிழில் நிதிநிலை அறிக்கை என்று சொன்னால் நன்றாக இருக்கும்” என்றார்.</p><p>தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன்.,</p><p>நான் ஒரு கூடைப்பந்து விளையாட்டாளர். தாக்குதல், தற்காப்பு இரண்டும் எனக்குத் தெரியும். எப்போது தாக்கவேண்டும், எப்போது தடுக்கவேண்டும் என எனக்குத் தெரியும். நீங்கள் கத்தினால் நானும் கத்துவேன். நான் 25 முதல் 30 ஆண்டுகளாக கல்வித்துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய தொடர்புமுறை எல்லாம் ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கின்றன.</p><p>இந்த மாமன்றத்தில் அவர் கூறியவாறு கொஞ்ச நாளாகவே உருவ கேலி, சாதி மற்றும் பெண்களைக் கேலி செய்தவர்கள், இப்போது மொழி கேலிக்கு வந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மொழியை எங்கள் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி. எவ்வளவு தமிழ் படித்தாலும், பாதி பேருக்கு இது தெரியாது.</p><p>நான் பைபிள் படித்திருக்கிறேன். கிறிஸ்தவனாக பிறந்துள்ளேன். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டும் என்றால், உங்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐந்து வருடமாக மக்களவையில் இருந்துள்ளார். அவர் பேசியதே கிடையாது. நான் முயற்சி செய்கிறேன். </p><p>நான் உங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன். என்னுடைய ஸ்டைல் இதுதான். ராஜேந்திரனுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா? என  கோவமாக பதிலளித்தார். </p>]]></content:encoded></item><item><title>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-mistreat-those-taken-in-for-questioning-madras-high-court-orders-police#comments</comments><guid isPermaLink="false">2811056b-8722-47c1-9097-cfdf413ef38b</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:20:27 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:20:27.619Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,police,விசாரணை,investigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/67d47jtz/New-Project-2026-08-10T174958.091.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களை துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>விசாரணைக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு, அதில் விசாரணை தேதி, நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும், விசாரணை குறித்த விவரங்கள் காவல் நிலையப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.</p><p>விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன்,  “விசாரணை என்ற பெயரில் மக்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. </p><p>காவல் துறையின் விசாரணையில் வழக்கமாக நீதிமன்றம் தலையிடுவதில்லை; அதேநேரம் துன்புறுத்தல்களை பார்த்து கண்மூடி கொண்டிருப்பதும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-order-has-been-issued-mandating-that-the-tamil-thai-vazhthu-be-sung-last-central-government#comments</comments><guid isPermaLink="false">0e2f7477-1049-4ddb-979c-611c6e7c302f</guid><pubDate>Mon, 10 Aug 2026 12:00:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T12:00:43.911Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras HC,Centre,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vaazthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியாக பாட வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/rzg4xpuy/New-Project-2026-08-10T172703.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>அதாவது அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப்பாடல் எப்போது பாடப்பட வேண்டும் என எந்த உத்தரவும் மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கப்படவில்லை எனவும், தேசியப் பாடலும் தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரி, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநலமனு இன்று தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, “தேசியப் பாடலும், தேசிய கீதமும் பாடப்படும் பட்சத்தில், முதலில் தேசியப் பாடலையும், அதைத் தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதே வழிகாட்டுதல் என, 2026 ஆகஸ்ட் 9 அன்று மத்திய அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டது," என மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர். எல். சுந்தரேசன் தெரிவித்தார்.</p><p>இதன்மூலம் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. </p><h2>தொடங்கிய சர்ச்சை</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். </p><p>இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது.</p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். </p><h2>தீர்மானம்</h2><p>இவ்வாறு இவ்விவகாரம் பெரும் பேசுபொருளாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று தவெக தலைமையிலான அரசு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.</p><p>ஆனால் இதற்கு முன்னரே, 2021-ம் ஆண்டே திமுக அரசு மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2026-27 மருத்துவப் படிப்புகளுக்கு 72,633 பேர் விண்ணப்பம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mbbs-bds-admissions-2026-27-rank-list-72633-applicants#comments</comments><guid isPermaLink="false">edf6cf5d-de74-4c88-a1e3-e1521802950e</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:58:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:58:18.281Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MBBS,பல் மருத்துவம்,MBBS, BDS Rank List Released,Minister Dr. Arunraj,MBBS, BDS தரவரிசைப் பட்டியல்,அமைச்சர் டாக்டர் அருண்ராஜ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS, BDS Rank List Released]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xg3i98uz/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Allied &amp; Health Care Courses) பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2026-27ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்ப விவரங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டன.</p><h2>72,633 பேர் <strong>விண்ணப்</strong>பம்</h2><p>MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 72,633 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் 4,860 விண்ணப்பங்களும், விளையாட்டுப் பிரிவில் 468 விண்ணப்பங்களும், முன்னாள் படைவீரர் பிரிவில் 524 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.</p><h2>அரசு <strong>ஒதுக்கீட்டில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்</strong>பு</h2><p>2026-27ஆம் ஆண்டுக்கான MBBS மற்றும் BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,726 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 35,926 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 12,551 பேர் மாணவர்கள்; 23,375 பேர் மாணவிகள். 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில் 4,860 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3,625 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 981 மாணவர்களும், 2,644 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். </p><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,907 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 26,956 விண்ணப்பங்கள் தகுதியானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 9,105 மாணவர்களும், 17,851 மாணவிகளும் உள்ளனர்.</p><h2>MBBS-க்<strong>கு 7,157 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்</strong></h2><p>2026-27ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்புக்கு மொத்தம் 7,157 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 4,473 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,684 இடங்களும் உள்ளன.</p><p>BDS படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 1,383 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 213 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,170 இடங்களும் உள்ளன.</p><h2><strong>7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு 641 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள்</strong></h2><p>7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் MBBS படிப்பில் மொத்தம் 537 இடங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 335 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 202 இடங்களும் உள்ளன. BDS படிப்பில் இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 104 இடங்கள் உள்ளன. இதில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.</p><h2>நிர்வா<strong>க ஒதுக்கீட்</strong>டில் MBBS-க்கு 1,966 இடங்கள்</h2><p>சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 1,966 MBBS இடங்களும், 580 BDS இடங்களும் உள்ளன.</p><h2>Allied <strong>Health Care படி</strong>ப்புகளுக்கும் தரவரிசைப் பட்டியல்</h2><p>மருத்துவம் சார்ந்த Allied &amp; Health Care படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. B.Sc. Nursing, B.Pharm, இணை மருத்துவப் படிப்புகள், Pharm-D, DGNM மற்றும் Diploma in Pharmacy உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 21 முதல் ஜூலை 12, 2026 வரை பெறப்பட்டன.</p><p>Allied and Healthcare Degree Courses-க்கு 66,525 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 65,475 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்புக்கு 12,657 விண்ணப்பங்களில் 12,263 விண்ணப்பங்களும், Pharm-D 3 ஆண்டு படிப்புக்கு 32 விண்ணப்பங்களில் 29 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. DGNM படிப்புக்கு 18,308 விண்ணப்பங்களில் 17,676 விண்ணப்பங்களும், Diploma in Pharmacy படிப்புக்கு 13,018 விண்ணப்பங்களில் 12,718 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>மருத்துவ<strong>ம் சார்ந்த படிப்</strong>புகளில் ஆயிரக்கணக்கான இடங்கள்</h2><p>Allied and Healthcare Degree Courses-ல் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2,786 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 3,969 இடங்களும் உள்ளன. B.Sc. Nursing-ல் அரசு ஒதுக்கீட்டில் 400 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 11,807 இடங்களும் உள்ளன. B.Pharm படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 120 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 7,234 இடங்களும் உள்ளன. Pharm-D 6 ஆண்டு படிப்பில் 1,011 இடங்களும், 3 ஆண்டு படிப்பில் 72 இடங்களும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன. DGNM படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 2,080 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 5,455 இடங்களும் உள்ளன. Diploma in Pharmacy படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 240 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 6,540 இடங்களும் உள்ளன.</p><h2>MBBS இடங்கள் <strong>அதிகரிப்பு</strong></h2><p>2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருப்பூர், திருவள்ளூர் மற்றும் நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்கள் வீதம் மொத்தம் 150 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 700 கூடுதல் MBBS இடங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த MBBS இடங்களின் எண்ணிக்கை 9,999 ஆகவும், BDS இடங்களின் எண்ணிக்கை 2,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.</p><h2>தமிழக அளவி<strong>ல் விழு</strong>ப்புரம் முதலிடம் </h2><p>நீட் நுழைவுத்தேர்வில் தமிழக அளவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார், புதுக்கோட்டை ஸ்ரீனிகா 700 மதிப்பெண்களுடன் 2 ஆம் இடத்தையும், விருதுநகர் சுடர் 696 மதிப்பெண்ணுடன் 3ஆம் இடத்தையும் பிடித்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நாகையை சேர்ந்த தினேஷ் 599 மார்க்குடன் முதலிடம், சேலம் தரணீஷ் 595 மதிப்பெண்ணுடன் 2ஆம் இடம் பிடித்தார். </p><p>இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வா. லோகநாயகி மற்றும் தேர்வுக்குழு துணை இயக்குநர்கள் டாக்டர் கராமத், டாக்டர் பாலநாக நந்தினி, டாக்டர் சாந்தினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். </p> ]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஒன்றிய அரசு என உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா? முன்னாள் அமைச்சர் ரகுபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy#comments</comments><guid isPermaLink="false">d84c5dfe-a89f-48cf-b4a7-caf049c50e02</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:31:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:31:07.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,தமிழ்த்தாய் வாழ்த்து,ரகுபதி எம்.எல்.ஏ.,தவெக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் அமைச்சர் ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/qej1nkiw/Regupathy0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.</p><h2>தனித் தீர்மானம்</h2><p>இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>தமிழ்நாடு அரசு இன்று தமிழ்த்தாய் வாழ்த்தினை முதலில் பாட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. கடந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதை சொந்த குரலிலே பாட வேண்டும் என்கின்ற உத்தரவு மூலம் அமல்படுத்தப்பட்டது.</p><p>ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் அர்லேகர் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டார். திமுக ஆட்சியிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு எல்லா நிகழ்ச்சிகளிலேயும் அது அமல்படுத்தப்பட்டது.</p><h2>ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்</h2><p>எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.</p><p>எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.</p><p>தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.</p><h2>சட்டம் கொண்டு வர வேண்டும்</h2><p>ஒன்றிய அரசு என்று சொல்லவே அவர்கள் பயப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு என்று உச்சரிக்கவே பயப்படுகிற இந்த அரசு சட்டம் கொண்டு வருமா என்பது சந்தேகம். கொண்டு வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். கொண்டு வர வேண்டும். கொண்டு வந்தால்தான் அது நிலைத்து நிற்கும்.</p><p>இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>போதை பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகள்- ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs#comments</comments><guid isPermaLink="false">ea68d024-163d-410c-a822-5e808d3609fd</guid><pubDate>Mon, 10 Aug 2026 11:30:45 +0000</pubDate><atom:updated>2026-08-10T11:30:45.217Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,போதைப்பொருள்,சிறப்பு படை,Anti drugs,Tamil Nadu Anti-Drugs Force</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/2y49i088/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்புக்கு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்பேரில் போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்பு படைகளை உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>சிறப்பு படைகளில் 65 காவல் ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p><p>37 மாவட்டங்களில் தலா ஒரு சிறப்பு படையும், சென்னையில் மட்டும் 12 சிறப்பு படைகளும் உருவாக்கப்படும்.</p><p>ஆவடி, தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை மற்றும் நெல்லை ஆகிய முக்கிய மாநகரங்களில் தலா 2 படைகள் வீதம் உருவாக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-to-chennai-5#comments</comments><guid isPermaLink="false">57affb1f-d167-4536-b976-8583537e951e</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:26:54 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:26:54.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>IMD,Chennai Rain,சென்னையில் மழை,சென்னை வானிலை ஆய்வு மையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/ae7mhdlx/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இதனால் இன்று மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>லேசான மழை</strong> </h2><p>நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>12-ந்தேதி மற்றும் 13-ந்தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>14-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் வட உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 14-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை: பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-does-the-congress-which-holds-meetings-of-mps-with-a-proxy-government-in-place-remain-silent-in-the-states-where-it-is-in-power-dayanidhi-asks#comments</comments><guid isPermaLink="false">58b1b29e-7618-4155-bfdc-0d291db048a2</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:17:34 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:17:34.677Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தயாநிதி மாறன்,Dayanidhi Maran,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், ஆளும் மாநிலங்களில் அமைதி காப்பது ஏன்? - தயாநிதி கேள்வி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcowkp1d/New-Project-2026-08-10T154702.760.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவது ஏன் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலங்களிலும் இதுதொடர்பாக எந்த ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டில் மட்டும் தொகுதி மறுவரையறை தேவையில்லை எனும் நாடகம் ஏன்? தங்கள் பதிலி அரசை வைத்து எம்.பி.க்கள் கூட்டம் நடத்தும் காங்கிரஸ், தான் ஆளும் நான்கு மாநிலங்களில் ஏன் அமைதியாக இருக்கிறது? தொகுதி மறுவரையறையை ஆதரித்த ரேவந்த் ரெட்டி அவர்களைக் கேள்வி கேட்கத் துணியுமா?</p><p>த.வெ.க. அரசைத் தூண்டிவிட்டு, தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் எம்.பி.க்கள் கூட்டம் என்று நாடகமொன்றை அரங்கேற்றிய காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன?</p><p>நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டிலிருந்து தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று அடித்திருக்கும் பல்டி தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துமா?</p><p>அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் இப்படியான எம்.பி.க்கள் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை?</p><p>தொகுதி மறுவரையறை தேவையில்லை என்று இங்கு நாடகமிடும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர்களில் ஒருவரான ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை நடந்தால் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநித்துவம் அதிகரிக்கும் என்று பேசியிருப்பது ஏன்?</p><p>தொகுதி மறுவரையறையில் தெளிவான நிலைப்பாடின்றி இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் செய்வது அற்ப அரசியல் அன்றி வேறல்ல.</p><p>நச்சுப்பாம்பாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பதிலி அரசை நடத்திக் கொண்டிரும் ரீல்ஸ் கட்சியின் ரீல்களை மக்கள் நம்பமாட்டார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 150 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/150-govt-special-buses-running-for-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/150-govt-special-buses-running-for-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">d706b5b4-1825-401f-9bf8-2277e3711336</guid><pubDate>Mon, 10 Aug 2026 10:08:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T10:08:03.296Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcgorj7c/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/pcgorj7c/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.</strong></em> </p><p>நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு <a href="https://www.maalaimalar.com/topic/சொரிமுத்து-அய்யனார்-கோவில்">சொரிமுத்து அய்யனார் கோவிலில்</a> ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.</p><p>விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.</p><p>இந்த கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.</p><p>இதன் காரணமாக நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுடன் சொரிமுத்து அய்யனார் கோவில் நோக்கி நேற்று படையெடுத்தனர்.</p><p>தொடர்ந்து இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.</p><p>திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், போதை பொருட்கள், மதுபானங்கள், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் பஸ்களை நிறுத்தி பக்தர்களின் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-says-may-the-glory-of-mother-tamil-rise-high-across-the-world#comments</comments><guid isPermaLink="false">dd54dbf3-372e-4279-805a-a409c71fb4fe</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:55:43 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:55:43.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/js750yq9/Vijay03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்.</strong></em></p><p>தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்து</a> முதலில் பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தமிழ் நம் உயிர்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.</p><p>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.</p><p>இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!</p><p>தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.<br><br>மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2086745353290965207?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பூனையை காப்பாற்ற முயன்ற போது சோகம்: 8 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-year-old-boy-dies-saving-pet-cat-from-snakebite#comments</comments><guid isPermaLink="false">3b08506d-9902-47ae-9468-e5a02f7b0070</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:49:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:49:18.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thiruvallur,Snakebite,ஆவடி,Avadi,திருவள்ளூர்,விஷப்பாம்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ snakebite  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tv0l1cke/snakr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலையில் நிச்சிஷ் தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் இல்லாததால் வீட்டின் உட்பகுதி இருட்டாக இருந்துள்ளது. </p><p>இந்நிலையில், திடீரென வீட்டில் இருந்த வளர்ப்புப் பூனை பயங்கரமாகச் சத்தமிட்டு கத்தியுள்ளது. பூனைக்கு ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த நிச்சிஷ், அதனைத் தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளான். அப்போது, பூனையைத் தாக்க வந்த விஷப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் நிச்சிஷைக் கடித்தது.</p><p>பாம்பு கடித்ததில் வலியால் அலறித்துடித்த சிறுவனை, அவனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டார் உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நான் மட்டும் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கும்- ஆர்.பி. உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-says-had-i-alone-gone-to-the-legislative-assembly-tvk-mlas-would-have-suffered-chest-pain#comments</comments><guid isPermaLink="false">54894c4b-a7e2-4c87-9c88-f79d027602db</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:34:10 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:34:10.603Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்பி உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/miir0drh/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம்.</strong></em> </p><p>தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார்</a> விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-</p><h2><strong>ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு</strong></h2><p>தமிழகத்தில் இன்னும் ரீல்ஸ் ஆட்சி தான் நடக்கிறது. தமிழக முதல்வருக்கு மேகதாது அணை, காவிரி பிரச்சனை, முல்லைப்பெரியாறு குறித்து ஏதாவது தெரியுமா? இதுபோன்றவர்களைத்தான் தமிழக மக்கள், இளைஞர்கள் தேர்வு செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி உள்ளனர்.</p><p>தேனி மாவட்டத்தில் மேகமலை புலிகள் சரணாலயத்தை காரணம் காட்டி வருசநாடு மற்றும் 60-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சருக்கு ஏதாவது தெரியுமா? தேனி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சருக்காவது தெரியுமா? தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்து இங்குள்ள மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லாத த.வெ.க. அரசு எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்துகிறது. </p><h2><strong>வேதனை</strong></h2><p>2029-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அப்போது இந்த ஆட்சி நிச்சயம் இருக்காது. தற்போதைய சூழலில் என்னைப்போன்றவர்கள் சட்டமன்றத்துக்கு சென்றிருந்தால் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">த.வெ.க.</a> எம்.எல்.ஏ.க்களுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்தி இருப்போம். எதிர்கட்சியின் கேள்விகளுக்கு ஆளும் கட்சியினர் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால் தற்போதயை அரசுக்கு அது புரியவில்லை. 75 சதவீத மக்கள் ஏன் இந்த அரசுக்கு வாக்களித்தோம் என்ற வேதனையில் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வில் ராஜாபோல் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் தரையில் அமர்ந்து போராடும் சாதாரண நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் இயங்கி வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அ.தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தையொட்டி திருப்பூரில் தேசியக்கொடி வண்ணத்தில்  ‘டி-சர்ட்டுகள் விற்பனை’ </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-colored-t-shirts-on-sale-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/national-flag-colored-t-shirts-on-sale-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">9c7f5c22-10af-4308-a589-cf2c8095efa5</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:21:13 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:21:13.546Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>national flag,Independence Day,சுதந்திர தினம்,தேசியக்கொடி,t shirts,டி சர்ட்டுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/75sebh4g/Tirupur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தேசியக்கொடி வண்ணத்தில் டி-சர்ட்டுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தேசியக்கொடி வண்ணத்தில் டி-சர்ட்டுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/75sebh4g/Tirupur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவர்களையும் இளைஞர்களையும் சுண்டி இழுக்கும் வகையில் மூவர்ண தேசியக்கொடி அச்சடிக்கப்பட்ட சிறப்பு 'டி-ஷர்ட்கள்' விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</strong></em></p><p>நாட்டின் 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/சுதந்திர-தினம்">சுதந்திர தின விழா</a> வரும் 15-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேசபக்தி அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற பின்னலாடை நகரமான திருப்பூரும் தனது பங்கிற்குத் தேசபக்தி வண்ணத்தில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டுத் திருப்பூரின் ஆடை உற்பத்தித் துறை புதுப்புது ஆடைகளை சந்தைக்குக் கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, இளைஞர்களையும் மாணவர்களையும் கவரும் வகையில் ஆடை வடிவமைப்பாளர்கள் விதவிதமான மூவர்ண ஆடைகளைத் தயார் செய்து களமிறக்கியுள்ளனர்.</p><h2><strong>விற்பனை விறுவிறுப்பு</strong></h2><p>​திருப்பூரில் புகழ்பெற்ற காதர்பேட்டை ஜவுளிச் சந்தை, நெசவாளர் காலனி, கோல்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வணிகப் பகுதிகளில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் சுதந்திர தினத்தை மையப்படுத்திய சிறப்பு ஆடை விற்பனை தற்போது விறுவிறுப்படைந்துள்ளது.</p><p>​குறிப்பாக, மாணவர்களையும் இளைஞர்களையும் சுண்டி இழுக்கும் வகையில் மூவர்ண தேசியக்கொடி அச்சடிக்கப்பட்ட சிறப்பு 'டி-ஷர்ட்கள்' விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூய வெள்ளை நிற ஆடையின் பின்னணியில், கம்பீரமான மூவர்ணக் கொடி, நடுநாயகமாகத் திகழும் அசோக சக்கரம், இதய வடிவிலான மூவர்ண டிசைன்கள் மற்றும் 'சுதந்திர தின நல்வாழ்த்துகள்' போன்ற தேசியப் பற்றை வெளிப்படுத்தும் கம்பீரமான வாசகங்கள் பொறிக்கப்பட்டு விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. கடைகளின் முகப்பில் வரிசையாகத் தொங்கவிடப்பட்டுள்ள இந்த ஆடைகள், அந்த வழியாக செல்லும் அனைவரின் பார்வையைக் கவர்ந்து வருகிறது.</p><p>​பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நண்பர்களுடனான கொண்டாட்டங்களில் அணிவதற்காக, இளைஞர்களும் மாணவ-மாணவிகளும் தங்களின் பெற்றோருடன் வந்து ஆர்வத்துடன் இந்த மூவர்ண ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.</p><p>​இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில்:- </p><p>பொதுவாகப் பாலியஸ்டர் மற்றும் காட்டன் கலந்த ரகங்களில் இந்த டி-ஷர்ட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாக வாங்கும் வகையில் 120 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலான பட்ஜெட் விலையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சுதந்திர தினம் நெருங்குவதால் வரும் நாட்களில் இதன் விற்பனை மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/archana-kalpathi-on-the-temple-trustee-selection-committee#comments</comments><guid isPermaLink="false">ba969419-b085-4a37-86c3-03d89746d858</guid><pubDate>Mon, 10 Aug 2026 09:06:03 +0000</pubDate><atom:updated>2026-08-10T09:06:03.229Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்து சமய அறநிலையத்துறை,Temple Trustee,Archana Kalpathi,HR&amp;CE,அர்ச்சனா கல்பாத்தி,கோயில் அறங்காவலர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயில் அறங்காவலர் தேர்வுக்குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/foynms2o/New-Project-2026-08-10T143457.808.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களில் ஒருவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைக்கப்பட்டும் இந்தக் குழுவில் இவர் இடம்பெற்றுள்ளார். மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் இக்குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.</p><p>இந்தத் தேர்வுக் குழுவில் மொத்தம் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ப.ரா. சம்பத், ஓய்வு பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர் இராமநாதன் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>இந்தக் குழுவின் பணி</h2><p>கோயில்களின் நிர்வாகம், சொத்துக்களைப் பராமரித்தல் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக நியமிப்பதே இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.</p><h2>யார் இந்த அர்ச்சனா கல்பாத்தி?</h2><p>ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், 'பிகில்', 'கோட்' போன்ற நடிகர் விஜய்யின் பிரம்மாண்டத் திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். </p>]]></content:encoded></item><item><title>சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை..!- சி.வி.சண்முகம் விளாசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-influence-in-own-district-for-edappadi-palanisamy#comments</comments><guid isPermaLink="false">ac7f1c89-676a-48c6-b8be-277aac588fc5</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:42:50 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:42:50.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,CV Shanmugam,சிவி சண்முகம்,TN assembly,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS- CV Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/y41210tv/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் சிலர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். </p><h2>சி.வி.சண்முகம்</h2><p>இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று அவர்கள் கூறியிருந்தனர்.</p><p>அதற்கு பதிலளிக்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,"சில மாவட்ட செயலாளர்களே அ.தி.மு.க. தோல்விக்கு காரனம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>தொடர் தோல்வி</h2><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளையே அ.தி.மு.க. சந்தித்துள்ளது. சென்னையில் அ.தி.மு.க. துடைத்து எறியப்பட்டுவிட்டது. </p><p>வலுவான தலைமை வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம். அவரது தலைமையில் அ.தி.மு.க.வால் வெற்றிபெற முடியவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. </p><p>பழனிசாமியின் சொந்த செல்வாக்கில்தான் 47 தொகுதிகளில் வென்றதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார். 47 தொகுதிகள் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி காரணம் என்றால் 187 தொகுதிகளில் அவர் செல்லாக்காசாகி விட்டாரா?. </p><p>வெற்றிபெற்றால் அவர் செல்வாக்கு, தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பா? விழுப்புரத்தில் எனக்கு 6 தொகுதிகள் உள்ளன. அதில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. </p><h2>சொந்த மாவட்டத்தில்</h2><p>சொந்த மாவட்டமான சேலத்தில் 7 தொகுதியில் ஏன் அவருக்கு செல்வாக்கு இல்லை? சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 தொகுதிகளில் மட்டும்  அ.தி.மு.க. வென்றுள்ளது.  கூட்டணியில் பா.ம.க. இருந்ததால் வட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை என்னால் சொல்ல முடியும். </p><p>தேர்தல் தோல்விக்காக எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று பல தலைவர்கள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்கள். காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். </p><p>திருமாவளவனை முதலமைச்சராக்க வேண்டும் என்று மாற்று திட்டத்தை நான் கூறினேன். தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்யும் த.வெ.க.வை ஏன் நாம் ஆதரிக்கக் கூடாது என்று பழனிசாமியிடம் கேட்டேன்.</p><h2> த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை</h2><p>தி.மு.க. ஆதரவில் பழனிசாமி முதலமைச்சராக முயன்றபோது, தி.மு.க.வை எதிர்க்கும் த.வெ.க.வை ஆதரிப்பதில் தவறு இல்லை.</p><p>தே.மு.தி.க.வை திட்டமிட்டு வெளியேற்றினார். தி.மு.க. வுடன் கூட்டணி பேசவில்லை என்று அவர் சத்தியம் செய்ய முடியுமா? </p><p>அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அவரே இருக்கட்டும். தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும் என்று கோருகிறோம். தோல்விக்கான காரணங்களை உண்மையாக ஆராயாமல் எங்கள் மீது பழிபோடுவதை நிறுத்துங்கள். தைரியம் இருந்தால் எங்களை அழைத்து பேசுங்கள். </p><p>ஜெயலலிதா அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி. அதிகாரி தற்கொலை செய்த விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தவர் ஜெயலலிதா. </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஓராண்டில் ரூ.1,800 கோடி ஆன்லைன் மோசடி: ஈரோடு, கோவையில் பாதிப்பு அதிகம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-loses-rs1800-crore-to-online-scams-in-a-year-erode-coimbatore-most-affected#comments</comments><guid isPermaLink="false">995deadf-0f1f-4564-a838-09dc9e4f8aad</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:37:23.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,நிதி மோசடி,Cybercrime,Online Fraud,ஆன்லைன் மோசடி,Erode,cybersecurity,சைபர் குற்றங்கள்,SylendraBabu,சைலேந்திரபாபு,FakeFinance</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sylendra Babu ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/456gtttv/Sylendra-Babu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/erode">ஈரோடு</a>, கோவை மாவட்டங்களை குறிவைத்து போலி நிதி நிறுவனங்களின் மோசடி மீண்டும் தலைதூக்கியுள்ளது. சைபர் குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் ரூ.1,800 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">ஆன்லைன் மோசடி</a> முதல் போதைப்பொருள் வரை சமூகத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு முன்னாள் டி.ஜி.பி. <a href="https://www.maalaimalar.com/topic/sylendra-babu">சைலேந்திரபாபு </a>பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>பொய்யான நிதி நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி .ஜி. பி.ஆக இருக்கும் பொழுது 5 நிதி நிறுவனங்களை மூடினோம். </p><p>ஆனால் தமிழகத்தில் துரதிஷ்டவசமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிறுவனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு, கோவை, சேலம் மக்கள்தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றார்கள்.</p><h2><strong>நிதி நிறுவனம்:</strong></h2><p>ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ரூ.3 லட்சம், ரூ 4 லட்சம் கிடைக்கும் என்றெல்லாம் கூறி ரூ.10 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என முதலீடு பெற்று ஏமாற்றுகின்றனர். </p><p>கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்வார்கள். ஆரம்பத்தில் பணத்தை கொடுக்கும் நிதி நிறுவனம் அதிக பணம் கிடைத்ததும் ஏமாற்றி விடுவார்கள்.</p><p>இத்தகைய பெரும் மோசடியில் மக்கள் ஏமாற கூடாது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.</p><h2><strong>ரூ.1800 கோடி மோசடி:</strong></h2><p>சைபர் மோசடியில் ஓராண்டில் தமிழ்நாட்டில் 1800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது மற்ற திருட்டு வழக்குகளில் மொத்தமாக கூட்டினால் 100 கோடி கூட தாண்டாது. </p><p>ஆனால் மொபைல் போன் மூலமாக மட்டும் ஆண்டிற்கு 1800 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதற்காகத்தான் சைபர் செக்யூரிட்டி ஹெட் குவாட்டர்ஸ் துவங்கப்பட்டது. </p><p>லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்ற தயாராக இருக்கிறார்கள் வட இந்தியாவில் இதற்காக ஐ.டி கம்பெனி போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எளிதில் ஏமாறக்கூடாது.</p><h2><strong>காவல் மரணம்:</strong></h2><p>காவல் மரணம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே இருக்கிறது. இதில் பெரும்பளவு கட்டுப்படுத்தப்ப ட்டது ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் நடந்து வருகிறது. </p><p>இந்த நிகழ்வுகள் காவலர்கள் தாக்கி தான் இறந்தார்களா இயற்கையில் இறந்தார்களா என்பதெல்லா ம் தெரியாது. திருட்டு போன்ற குற்றங்களில் காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்டவர்கள் அழுத்தம் தருவார்கள் அதை தாங்காமல் காவலர்கள் பலம் பிரயோகிக்கலாம்</p><p>ஆனால் அது பெரும்பாலும் குறைவு காவல் நிலையத்தில் இறந்தால் அவர்கள் குடும்பமும் கஷ்டப்படுகிறது. அதில் காவலர்களும் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களும் கைது செய்யப்படுகிறார்கள் அவர்கள் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. </p><p>அனைத்து காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது 1680 காவல் நிலையங்களிலும் கேமரா இருக்கிறது துன்புறுத்தல் குறைந்து விட்டது .</p><p>இது இல்லாமல் ஆக வேண்டும் நாகரீகமான சமூகமாக இருக்க வேண்டும். காவலர்கள் மீது பொது மக்களுக்கும் நம்பிக்கை வருவதில்லை பாதிக்கப்பட்டார்கள் கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம்.</p><h2>போதை பொருள்:</h2><p>போதை பொருள் புழக்கம் தொடர் நிகழ்வாக உள்ளது 45 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற போதை பொருட்கள் இருந்தன.</p><p>பெரும் அளவில் காவல்துறை கட்டுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது நான் டிஜிபி ஆக இருக்கும் போது சொத்துக்களை பறிமுதல் செய்தோம் நல்ல அதிகாரிகள் வந்துள்ளார்கள் சில மாற்றங்கள் இருக்கின்றன.</p><p>ஆனால் நூறு சதவீதம் ஒழிக்க வேண்டும். சட்டம் கடுமையாகத் தான் இருக்கிறது இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நபர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். </p><p>தொடர்ச்சியாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் மனநல பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் டி அடிக்சன் மையங்களை பெருமளவில் கொண்டு வர வேண்டும் இதற்கு அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டும். </p><p>இது மிகப்பெரிய போர் சமுதாயத்தில் டிமாண்ட் இருக்கும்போது சப்ளை எப்படியும் வந்து விடும் இதற்கு பலமுனை தாக்குதல் நடத்த வேண்டும் அப்பொழுதுதான் போதை பொருளை கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு:  கொள்முதல் விலையை உயர்த்தாமல் கோடை வெயிலை குறை கூறுவதா?- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-blaming-the-summer-heat-instead-of-raising-the-procurement-price-for-aavin-milk-shortage#comments</comments><guid isPermaLink="false">fd9652dc-f4a8-4e82-885f-c69b999fc9e1</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:33:20 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:33:20.209Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,aavin milk,ஆவின் பால்,கோடை வெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆவின் பால்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/tsfso6ot/aavinm.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாள்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏழைகள் மற்றும் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தவறியிருப்பது கவலையளிக்கிறது.</p><p>ஆவின் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் தினமும் 16 லட்சம் லிட்டருக்கும் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே ஆவின் பால் விற்பனை படிப்படியாக குறைந்து விட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் ஆவின் பால் விற்பனை மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டு விட்டதாகவும், சென்னையில் 20% அளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2><strong>தரமான பால்</strong></h2><p>ஆவின் பால் தட்டுப்பாட்டால் தமிழக மக்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் தான் ஒப்பீட்டளவில் தூய்மையானதாகவும், கலப்படம் இல்லாததாகவும் உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆவின் பாலை வழங்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் தரமான பாலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இரண்டாவதாக, ஆவின் பால் விலை தட்டுப்பாட்டால் தனியார் நிறுவன பால்களை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்க வேண்டியுள்ளது. ஆவின் பாலுடன் ஒப்பிடும் போது தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.16 முதல் 24 வரை அதிகம் ஆகும். ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் ஏழைகள் மாதத்திற்கு குறைந்தது ரூ.750 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டும். இது அவர்களுக்கு பெரும் சுமை.</p><h2><strong>கொள்முதலை அதிகரிக்க முடியாது</strong></h2><p>ஆவின் பாலுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கவலையும், கோபமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆவின் நிறுவனம் எந்தக் கவலையும் பட்டதாக தெரியவில்லை. கொடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்திருப்பது தான் இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறி இந்த விவகாரத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல ஆவின் நிறுவனம் முயல்கிறது. இது உண்மையல்ல.</p><p>கடந்த ஐந்தாண்டுகளாகவே ஆவின் பால் கொள்முதல் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில்  ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினமும் 41 லட்சம் லிட்டராக இருந்தது.  2022-ஆம் ஆண்டில்  38 லட்சம் லிட்டர்,  2023-ஆம் ஆண்டில் 30 லட்சம் லிட்டர் என குறைந்த ஆவின் பால் கொள்முதல், இப்போது 28 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. அதாவது மூன்றில் இரு பங்காகி விட்டது.</p><p>ஆவின் பால்கொள்முதல் 13 லட்சம் லிட்டர் குறைந்திருப்பதற்கு காரணம் அதன் கொள்முதல் விலைகள் உயர்த்தப்படாதது தான். பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35, எருமைப்பாலுக்கு  லிட்டர் ஒன்றுக்கு ரூ.44  என்ற அளவில் ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அதை விட லிட்டருக்கு 12 வரை கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்கின்றன. அதற்கு இணையாக ஆவின்  நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் அதன் கொள்முதலை அதிகரிக்க முடியாது.</p><p>ஆனால், ஆவின் நிறுவனமும், அரசும் இதை உணரவில்லை.  ஆவின் பால் கொள்முதல் குறையவில்லை  என்றும், கோடை வெப்பத்தால் குறைந்த அளவு மட்டும் தான் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறி வருகிறது. இந்த மாயையில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். ஆவின் பால் கொள்முதல் வீழ்ச்சி அடைந்திருப்பதற்கான உண்மையான காரணத்தை அறிந்து கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.</p><p>ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் ஆவின் பால் மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நடப்பாண்டில் ரூ.3000, அடுத்த ஆண்டில் ரூ.3500 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-procurement-price-of-3000-must-be-paid-this-year-and-3500-next-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-procurement-price-of-3000-must-be-paid-this-year-and-3500-next-year#comments</comments><guid isPermaLink="false">e8e8a837-7f94-42ee-ab09-ae90eb611199</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:16:31 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:16:31.447Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,நெல் கொள்முதல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/yll9voia/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/yll9voia/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், கடந்த ஆண்டில்  கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.709.50 ஆக உயர்த்தப்பட்டு டன்னுக்கு ரூ.4000 ஆக வழங்கப்படும் என்று தவெக அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை ரூ.28 மட்டும் தான் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது போதுமானதல்ல.</p> <p>நெல்லுக்கான ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு பெரிய அளவில் உயர்த்தவில்லை. நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,441, சன்ன வகை நெல்லுக்கு ரூ.2,461 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்துடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு ரூ.156, சாதாரண ரக நெல்லுக்கு  131 வீதம் கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது தவெக அரசு சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை குவிண்டாலுக்கு ரூ.28, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane">சன்னரக</a> நெல்லுக்கு ரூ.133 உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக நெல்லுக்கான கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு ரூ.2750, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2600 ஆக உயர்ந்திருக்கிறது. இது  போதுமானதல்ல.</p><h2><strong>கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்</strong></h2><p>சாதாரண நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு அதன் ஊக்கத்தொகையை, மத்திய அரசால் உயர்த்தப்பட்டதை விட பாதிக்கும் குறைவாகவே உயர்த்தியுள்ளது. சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.289 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல் வகைகளில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலான நெல்  சாதாரண ரகங்களைச் சேர்ந்தவை ஆகும். அதனால் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை தான் கூடுதலாக உயர்த்தப்பட வேண்டும்.</p><p>அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய சாதாரண ரக நெல்லுக்கான ஊக்கத்தொகையை வெறும் ரூ.28 மட்டும்  உயர்த்தி விட்டு, மிகக் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கான  ஊக்கத்தொகையை ரூ.133 உயர்த்துவதால் யாருக்கும் பயனில்லை. ஊக்கத்தொகையை உயர்த்தி விட்டோம் என்று கணக்கு காட்டி பெருமிதம் பேசுவதற்காக மட்டும் தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பயன்படும்.</p><p>ஒதிஷாவில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு  ரூ.800  வீதமும், கேரளத்தில் ரூ.650 வீதமும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அந்த மாநிலங்களில்  ஊக்கத்தொகை இன்னும் கூடுதலாக உயர்த்தப்படலாம். அவற்றுடன் ஒப்பிடும் போது தமிழக அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதல்ல.</p><p>தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2300 முதல் ரூ.2400 வரை செலவாகிறது. அத்துடன் கூடுதலாக ரூ.200 மட்டும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. எனவே, நடப்பாண்டில் சாதாரண வகை நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில்  ஊக்கத் தொகையை ரூ.559 ஆக உயர்த்த வேண்டும். அதேபோல், அடுத்த ஆண்டில் தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூ.3500 ஆக உயர்த்த வேண்டும்.</p><p>கரும்புக்கான கொள்முதல் விலையை பொறுத்தவரை 2025- 26 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து  வழங்கப்பட்ட கரும்புக்கு மத்திய அரசால்   டன் ஒன்றுக்கு ரூ. 3290.50  கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் சார்பில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முன் 2024-25ஆம் ஆண்டில் கரும்புக்கு வழங்கப்பட்ட  ஊக்கத் தொகையான ரூ.349 -யுடன்  கூடுதலாக ரூ.360.50  சேர்த்து ரூ.709.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு விவசாயிகளுக்கு முழுமையான மகிழ்ச்சியை அளிக்காது என்றாலும், மனநிறைவு அளிக்கும்.</p> <p>2026-27 ஆம் ஆண்டுக்கான  அரவைப் பருவம் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. வரும் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு மத்திய அரசின் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ..3383 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஆண்டுக்கு தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகையை சேர்த்தால் டன்னுக்கு ரூ.4092 கிடைக்கும். கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையுடன் நடப்பாண்டில் ரூ.408 உயர்த்தி வழங்கினால் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.4500 கிடைக்கும். எனவே வரும் அரவைப் பருவத்தில் கரும்புக்கான கொள்முதல் விலையுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையாக ரூ. 1117  சேர்த்து வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இப்போதே வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தால் பதற்றம் :  தமிழக-கர்நாடக எல்லை மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-mekedatu-row-sparks-tamil-nadu-karnataka-border-closure</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-mekedatu-row-sparks-tamil-nadu-karnataka-border-closure#comments</comments><guid isPermaLink="false">7f5e3050-591f-46e8-8ff3-7330c3557bb1</guid><pubDate>Mon, 10 Aug 2026 08:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-10T08:08:52.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu,வாட்டாள் நாகராஜ்,Cauveryissue,Vatal Nagaraj Protest,KarnatakaBandh,AttibeleBorder,BorderAlert,தமிழக கர்நாடக எல்லைப் பதற்றம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/btivwsyw/Karnataka-Bandh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ KarnatakaBandh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/btivwsyw/Karnataka-Bandh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினை மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது</a>வில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, தமிழக-கர்நாடக எல்லையான ஓசூர் அடுத்த அத்திப்பள்ளியில் இன்று காலை முதல் கன்னட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடகா</a>வில் மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>எல்லையில் இன்று நடந்தது என்ன?</h2><p>கன்னட வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை 11 மணியளவில் அத்திப்பள்ளி எல்லைப் பகுதிக்கு வந்தனர். </p><p>தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரிகள், கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அதேபோல், கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரவிருந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. </p><p>எல்லையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லையில் இருமாநில போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>ஆகஸ்ட் 13 கர்நாடகா பந்த்: முக்கியக் காரணங்கள்:</h2><p>கர்நாடகாவில் உள்ள விவசாய மற்றும் கன்னட அமைப்புகள் இணைந்து இந்த மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளன. </p><p>இதற்கான 3 முக்கியக் காரணங்கள்: மேகதாது அணைக்குத் தமிழகத்தின் எதிர்ப்பு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய நீர் தேக்க அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாகக் கன்னட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. </p><p>மழைப்பொழிவு பற்றாக்குறை மற்றும் காவிரி நீர் திறப்பு, நடப்பு ஆண்டில் கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், தங்களின் சொந்த விவசாயத் தேவைகளுக்கே தண்ணீர் இல்லை என்றும், இந்தச் சூழலில் தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது என்றும் அம்மாநில விவசாயிகள் கோருகின்றனர்.</p><h2>பந்த் நேரம் மற்றும் அரசு பேச்சுவார்த்தை தோல்வி:</h2><p>ஆகஸ்ட் 13 அன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த பந்த் அமலில் இருக்கும். தற்போது வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கன்னட விழிப்புணர்வு அமைப்புகள், ஆட்டோ சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆதரவு தந்துள்ளன. </p><p>பந்த் நாளுக்குள் இந்த எண்ணிக்கை 3,000-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மாநிலத்தின் அமைதியைக் கருதி பந்த் போராட்டத்தைக் கைவிடுமாறு வாட்டாள் நாகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால், "எந்தக் காரணத்தைக் கொண்டும் போராட்டத்தைத் திரும்பப் பெற முடியாது" என கன்னட அமைப்புகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன.</p><h2>பொதுமக்களுக்கான பாதிப்புகள்: எது இயங்கும்? எது இயங்காது?</h2><p>ஆகஸ்ட் 13 அன்று கர்நாடகாவில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தால் KSRTC, BMTC அரசுப் பேருந்துகள், கடைகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் முற்றிலும் மூடப்பட வாய்ப்புள்ளதுடன், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை அறிவிப்பு ஆகஸ்ட் 12 மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோ, டாக்சி, ஓலா, உபெர் போன்ற வாடகை வாகனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயங்கும் அல்லது முற்றிலும் நிறுத்தப்படலாம். </p><p>இருப்பினும், பெங்களூரு மெட்ரோ ரயில் பலத்த பாதுகாப்புடன் இயங்க வாய்ப்புள்ளதுடன், பொதுமக்களின் நலன் கருதி மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், மருந்தகங்கள், பால் விநியோகம், காய்கறி மற்றும் பழக் கடைகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எப்போதும் போல தடையின்றி இயங்கும்.</p><h2>பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!</h2><p>தமிழகத்தில் இருந்து பெங்களூரு, மைசூர் அல்லது கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு ஆகஸ்ட் 13 அன்று செல்லத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள், தங்களின் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. </p><p>இன்றே எல்லையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், லாரி உரிமையாளர்கள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் எல்லை நிலவரத்தைக் கண்காணித்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>&quot;சாமி அமைச்சர்&quot; என்று அழைத்த எம்.ஆர்.கே..!- அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-mrk-god-minister-remark-vijay-bursts-into-laughter#comments</comments><guid isPermaLink="false">710b9ef5-a107-4f1e-9a4b-673ecf6f3b7e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:53:08 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:53:08.342Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எம்ஆர்கே பன்னீர்செல்வம்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் ரமேஷ்,MRK Paneerselvam,Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/3btefm5y/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,"முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞராக இருந்தாலும், ஸ்டாலின் ஆக இருந்தாலும் செய்தித்தாளை  பார்த்து காலையிலேயே தொலைபேசியில் அழைப்பார்கள்.</p><p>5 ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம் ஆனால் நீங்கள் ரிலாக்சாக இருக்கிறீர்கள்” என்றார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,"சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும்   முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசுகிறார். பிரச்சினையை சரி செய்து விட்டார்களா என்று போன் செய்து கேட்கிறார்.</p><p>உங்களுக்கு 5 வருடம்தான் டென்ஷன். ஆனால் ஒரு பயத்தோடுதான் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினசரி டென்ஷன்தான் என்று கூறினார்.</p><p>இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த உரையாடலை முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்தார்.</p><p>சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.</p><p>இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.</p><p>எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.</p><p>கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார். </p><p>இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட  முதலமைச்சர்  விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.</p>]]></content:encoded></item><item><title>கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! - மு.க.ஸ்டாலின் பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-tweet-for-murasoli-is-the-eldest-child-nurtured-by-kalaignar-with-his-own-blood#comments</comments><guid isPermaLink="false">960b7eff-a3d7-451c-a465-ca8424b7da6e</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:24:32 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:24:32.226Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,murasoli,முரசொலி,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/kyqzv3s9/MKStalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</strong></em></p><h2><strong>85-வது ஆண்டு</strong></h2><p>‘முரசொலி’ நாளிதழின் 85-வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் அலுவலகத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! </p><p>அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!</p><p>தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.</p><p>அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க! என்று கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடும் வகையில் தரம் உயர்த்தவே ஊக்கத்தொகை உயர்வு– அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/subsidy-hike-to-improve-ration-rice-quality-says-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">a02fedf8-789f-4f7b-8eba-ac933ec4fd80</guid><pubDate>Mon, 10 Aug 2026 07:14:47 +0000</pubDate><atom:updated>2026-08-10T07:14:47.466Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,Adhav Arjuna,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/du0lfbrj/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:-</p><p>நீங்கள் 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது.</p><p>5 வருடங்கள் ஆட்சியில் இருந்த திமுக 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா?</p><p>200 தொகுதிகளில் வெல்வோம் என அடிக்கடி சொன்ன திமுக, விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி தேர்தல் அறிக்கையில் பேசவே இல்லை.</p><p>பிரசாரத்தின்போது விவசாயியாக பிறக்க வேண்டும் என 3 முறை சொன்னார் முதல்வர் விஜய். அதை அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.</p><p>சொன்னால் செய்பவர் முதல்வர். நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய். பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களுடன் பேச்சு நடத்திய நிலையில் கரும்பு ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர்.</p><h2>இலவச ரேஷன் அரிசி </h2><p>திமுக ஆட்சியில் இதுவரை ரேஷன் கடைகளில் அரிசி வாங்கி அதை நாம் சமைத்து சாப்பிட்டோமா?</p><p>இலவசமாக தரும் அரிசி, சாப்பிட முடியாத நிலையில் உள்ளதால் தான் சன்னரக நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்வு. ரேஷன் அரிசி வீட்டில் சாப்பிடும் அளவுக்கு தரம் உயர்த்தப்படுவதற்காக தான் நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தினார் முதலமைச்சர் விஜய்.</p><p>திமுகவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடியின் பரப்பளவு குறைந்துள்ளது.</p><p>கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடத்தில் 70% குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையின்றி தவித்ததால் தவெக அரசு நடவடிக்கை.</p><p>விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இந்த 5 ஆண்டு கால ஆட்சியை முதல்வர் விஜய் மாற்றுவார் என அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் ஆட்சியில் ஆக்டிங் கிடையாது, ஆக்ஷன் மட்டுமே!- சட்டமன்றத்தில் திமுக - தவெக சுவாரசிய விவாதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/in-our-rule-no-acting-only-action-dmk-tvk-interesting-assembly-debate#comments</comments><guid isPermaLink="false">ac092886-5a94-49d0-b4d6-fc0f39a3f8c3</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:47:24 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:47:24.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,தமிழக சட்டமன்ற கூட்டம்,பட்ஜெட் விவாதம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Ex Minister MRK Paneer selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/1dq8r81r/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று 2வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,"திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு போராட்டம் கூட நடத்தியது இல்லை" என்றார்.</p><p>இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> திரைக்கதையை தயார் செய்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்ததாக சிறந்த திரைக்கடை எழுதி உள்ளார். கிடங்குகள் வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.</p><p>ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்னாச்சு?</p><p>நெல்லுக்கும் கரும்புக்கும் அரசு ஒரு விலை நிர்ணயித்தால் அதிகாரிகள் ஒரு விலை நிர்ணயித்தார்களே அது தெரியாதா?</p><p>திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்களா? துன்பப்பட்டார்களா? என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும்.</p><p>மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதற்காக கரும்பு தோட்டத்திற்குள் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயியை எம்ஆர்கே பன்னீர்செல்வம்  மறந்துவிட்டார்.</p><p>திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு முன்னாள் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.</p><p><strong>முன்னாள் அமைச்சர் சக்கரபாணி:</strong>  நெல் கிடங்குகள் கட்டவில்லை என அமைச்சர் ரமேஷ் தவறாக கூறினார். திமுக ஆட்சியில் 18 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டன.</p><p>பின்னர், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது குறித்து அமைச்சர் போசும்போது டெக்னிக் தெரிகிறது என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.</p><p>எம்ஆர்கே பன்னர்செல்வம்: தவெகவினர் படத்தை பார்த்து வந்தவர்கள், திமுகவினர் முரசொலி படித்து வந்தவர்கள். வேளாண்மை துறைக்கு திமுக ஆட்சியை விட குறைவாக ஒதுக்கி உள்ளது தவெக.</p><p>திமுக ஆட்சியில் ஆக்டிங் கிடையாது. ஆக்ஷன் மட்டுமே இருந்தது. தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது அமைச்சர் பேசும்போது டெக்னிக்  தெரிகிறது.</p><p><strong>அமைச்சர் ரமேஷ்:</strong> அந்த டெக்னிக்கை 10 நிமிடங்கள் முன்பு தான் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கற்றுக்கொண்டேன்.</p><p><strong>எம்ஆர்கே பன்னர்செல்வம்:</strong> விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்த போகிறதா அரசு? நுண்ணீர் பாசனத்திட்டம், மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட குறைவான நிதி ஒதுக்கீடு ஏன்?</p><p>வேளாண் துறைக்கு திமுக ஆட்சியை விட ரூ.279 கோடி குறைத்து நிதி ஒதுக்கி உள்ளது தவெக அரசு. திமுக ஆட்சியில் வேளாண் துறைக்கான செலவை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>திமுக ஆட்சியை விட தவெக ஆட்சியில் வேளாண் துறைக்கு ரூ.481 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>சாமி அமைச்சர்</h2><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை சாமி அமைச்சர் என எம்ஆர்கேபி கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அப்போது, முதலமைச்சர் விஜயும் சிரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;தமிழகத்திற்குப் பெருமை! அமெரிக்க  பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.3.55 கோடி ஸ்காலர்ஷிப் வென்ற ஈரோடு மாணவர்!&quot;</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/proud-moment-for-tamil-nadu-erode-student-wins-rs-3-55-crore-scholarship-to-study-at-us-university#comments</comments><guid isPermaLink="false">beb40341-edac-4b78-87f0-1e4935ccdd20</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:33:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:33:28.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>scholarship,Erode,Pranav Ilango,பிரணவ் இளங்கோ,Brown University,பிரவுன் பல்கலைக்கழகம்,Ivy League,Scholarship Success,Education Matters,Erode teenager</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Erode Pranav Ilango ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/07tftjcm/Erode-Pranav-Ilango?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81">ஈரோடு</a> மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் பிரணவ் இளங்கோ, அமெரிக்காவின் மிக உயரிய மற்றும் புகழ்பெற்ற ‘ஐவி லீக்’ கல்வி நிறுவனங்களில் ஒன்றான ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் ரூ. 3.55 கோடி முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்கத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவன்.</p><p>அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அவரது முழு படிப்புச் செலவு மற்றும் அமெரிக்காவில் தங்கிப் படிப்பதற்கான அனைத்துச் செலவுகளையும் இந்த ஸ்காலர்ஷிப் முழுமையாக ஏற்கும் என்பது.</p><h2>என்ன படிக்கப் போகிறார் பிரணவ்?</h2><p>பிரணவ், ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் 'பொது சுகாதாரம் மற்றும் பயன்பாட்டு கணிதம்' ஆகிய துறைகளைத் தேர்வு செய்து படிக்கவுள்ளார். </p><p>கணிதம், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகின் மிக முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இவரது முக்கிய நோக்கமாகும்.</p><h2>சர்வதேச அளவில் குவிந்த வாய்ப்புகள்:</h2><p>பிரணவின் கல்வித் திறமையைப் பாராட்டி அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஆசியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனமான ஹாங்காங் பல்கலைக்கழகமும் அவருக்கு 100% முழு கல்வி உதவித்தொகையுடன் படிக்க அனுமதி வழங்கியது. இதன் மூலம் உலக அளவில் பிரணவின் திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><h2>பள்ளிப் பருவமும் உலக சாதனையும்:</h2><p>ஈரோட்டில் உள்ள சிஎஸ் அகாடமியில் பள்ளிப் படிப்பை முடித்த பிரணவ், சிறு வயது முதலே சர்வதேசக் கல்விக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>தனது 13 வயதிலேயே 'டெக்ஸ்டெரிட்டி குளோபல்' அமைப்பின் தேசிய மாணவர் மேம்பாட்டுத் திட்டத்தில் இணைந்து முறையான வழிகாட்டுதலை பெற்றார். </p><p>கேம்பிரிட்ஜ் சர்வதேசப் பள்ளித் தேர்வுகளில் கணிதப் பாடத்தில் 'உலக அளவில் முதலிடம்' பிடித்து சாதனை படைத்தார்.</p><h2>சமூக நோக்குடன் கூடிய கணித அறிவு:</h2><p>கணிதத்தை வெறும் மதிப்பெண்களுக்கான பாடமாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாக பிரணவ் கருதுகிறார். </p><p>செயற்கை நுண்ணறிவு, புரோகிராமிங் மற்றும் தரவு அறிவியல் மூலம், குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைக்காத கிராமப்புற மற்றும் பின்தங்கிய மக்களின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது நீண்டகால லட்சியம் என்று பிரணவ் தெரிவித்துள்ளார்.</p><h2>வழிகாட்டுதலின் முக்கியத்துவம்:</h2><p>இந்த அசாத்திய வெற்றி குறித்துப் பேசிய பிரணவ், முறையான வழிகாட்டுதலும் கடின உழைப்பும் இருந்தால், எந்தவொரு சிறிய நகரத்தில் இருந்து வரும் மாணவனும் உலக அளவில் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்குத் தனது இந்தப் பயணமே சாட்சி என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் VS தனுஷ்: தமிழக அரசியலின் புதிய களமும், ஸ்டாலினின் எதிர்காலமும்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-vs-dhanush-the-new-arena-of-tamil-nadu-politics-and-stalins-future#comments</comments><guid isPermaLink="false">3eef04c4-d92e-4967-83be-7a41665faed9</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:27:09.763Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,விஜய்,vijay,Dhanush,தனுஷ்,முக ஸ்டாலின்,ஜோதிடர் ரத்தன் பண்டிட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- நடிகர் தனுஷ்- ஜோதிடர் ரத்தன் பண்டிட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/zly97krw/Astrology.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும்.</strong></em> </p><p>பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.</p><p>இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் முதலமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.</p><p>சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து, “வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.</p><p>பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியானதில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, ரத்தன் பண்டிட்டின் ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றதுடன், அவரது கணிப்பு பரவலாக பேசப்பட்டது.</p><p>இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜோதிடர் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மீண்டும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும் அரசியலில் யார் யாரெல்லாம் சாதிப்பார்கள். யாரெல்லாம் ஜொலிக்க மாட்டார்கள் என்றும் அவர் தனது கணிப்பை தெரிவித்தார்.</p><p>விழாவில் ஜோதிடர் ரத்தன் பண்டிட் பேசியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong> </h2><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> கையில் கட்டி இருக்கும் சிகப்பு கயிறு முருகப்பெருமானின் அருளின் அடையாளம். அந்த சிகப்பு கயிறு வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்.</p><h2><strong>மு.க.ஸ்டாலின்</strong></h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனி வெற்றி யோகம் இல்லை. அவருடைய அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின்</strong></h2><p>விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியே அமையும்.</p><h2><strong>அண்ணாமலை</strong></h2><p>அண்ணாமலைக்கு தமிழக அரசியலில் முதலமைச்சர் யோகம் இல்லை. இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக இருப்பவர் முதலமைச்சர் விஜய் தான்.</p><h2><strong>நடிகர் தனுஷ்</strong></h2><p>எதிர்காலத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை தமிழக முதலமைச்சர் விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது. தனுசின் அரசியல் வருகைக்கு பிறகே தமிழக அரசியல் புதிய கட்டத்தை நோக்கி செல்லும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்த இந்த கணிப்புகள் விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அள்ளித் தருவார்கள் என பார்த்தால் கிள்ளித் தருகிறீர்கள்..!- தவெக அரசை சாடிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mrk-panneerselvam-says-dmk-promised-to-shower-benefits-on-farmers-but-pinches-them-instead#comments</comments><guid isPermaLink="false">4a74e822-5ced-4aff-8bee-71ce56e2a5c4</guid><pubDate>Mon, 10 Aug 2026 06:01:55 +0000</pubDate><atom:updated>2026-08-10T06:01:55.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN assembly,tvk,எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ,தமிழக சட்டமன்ற கூட்டம்,MRK Paneerselvam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Bussy Anand- DMK MLA MRK Panner selvam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/jdo70si7/MRK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>காரசார விவாதம்</h2><p>இதைதொடர்ந்து, சட்டமன்றத்தில் நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகை தொடர்பாக தவெக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.</p><p>அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்," திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் போராடவே இல்லை" என்றார்.</p><p>இதற்கு, பதிலடி கொடுத்த தவெக அமைச்சர் நிர்மல் குமார்,"5 ஆண்டுகால திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது" என்றார்.</p><h2>நாங்களும் பிஸிதான்</h2><p><strong>எம்ஆர்கே பன்னீர்செல்வம்:</strong> எந்த போராட்டம் என தெரியாமல் அமைச்சர் பேசுகிறார், அது சிப்காட் தொடர்பான போராட்டம்.</p><p>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாகவே இருக்கிறார். எங்கள் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் டென்ஷனாகத்தான் இருப்போம், நீங்கள் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்.</p><p><strong>அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:</strong>  நாங்களும் தினந்தோறும் டென்ஷனாகத்தான் இருக்கிறாம். வாய்க்கால் தகராறுக்கு கூட சரிசெய்துவிட்டீர்களா என இரவு பகல் பாராதுபோன் செய்கிறார் முதலமைச்சர் விஜய்.</p><p><strong>எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்:</strong> புதிய ஆட்சி அள்ளி தருவார்கள் என எதிர்பார்த்தனர் விவசாயிகள், ஆனால் கிள்ளி தருகிறீர்கள். அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியதால் விவசாயிகள் நம்பிவிட்டனர்.</p><p>திமுக இடைகால பட்ஜெட்டில் கரும்புக்கு ரூ.4000 கொடுப்போம் என கூறியிருந்தோம். </p><h2>விவசாய ஊக்கத்தொகை</h2><p>அமைச்சர் வினோத்: திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் நெல்லுக்கு ரூ.2,500, கரும்பிற்கு ரூ.3500 உயர்த்தி தரவில்லை என்றும், விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை படிப்படியாக திமுக அரசு உயர்த்தியது. திமுக படிப்படியாக உயர்த்திய நிலையில் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு விவசாய ஊக்கத்தொகை உயர்த்தியது தவெக தான்.</p><p>எம்ஆர்கே பன்னீர்செல்வம்: திமுக ஆட்சியில் ரூ.19,500 கோடி கடன் தள்ளுபடி செய்தோம். ரூ.21 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறோம் எனக்கூறிவிட்டு வெறும் ரூ.6000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்துள்ளீர்கள்.</p><p>விவசாயிகள் வாங்கிய ரூ.21,000 கோடி கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயக்கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் தான் சொன்னீர்கள். எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்துதான் வாக்குறுதி அளிக்க வேண்டும்.</p><p>தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக்கு திமுக அரசு உரிமைத்தொகை கொடுத்தது. தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல், கரும்பு ஊக்கத்தொகை அதிகரிப்பு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-increase-in-incentive-payments-for-paddy-and-sugarcane#comments</comments><guid isPermaLink="false">b772a505-490a-4ce4-9260-556eb0e9b0e7</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:15:48 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:15:48.099Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/je1eqtza/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p><p>இதையடுத்து, முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பேசியதாவது:-</p><p>* நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். </p><p>* பொதுரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.159 அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ.2,600 வழங்கப்படும். </p><p>* நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.2,750 வழங்கப்படும்.</p><p>* வரலாற்றிலேயே முதல் முறையாக நெல்லுக்கான ஊக்கத்தொகை ரூ.159 வரை உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>* கரும்புக்கான ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.709.50 வழங்கப்படும்.</p><p>* மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ஒரு டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு ரூ.4000 கிடைக்கும். </p><p>* விவசாயிகளை நம் அரசு எப்போதும், விட்டுவிடாது, தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கும்.. முதல்வரின் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும் - அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-resolution-tamil-nadu-assembly-declares-anthem-as-global-mother-tribute#comments</comments><guid isPermaLink="false">1a4e4bef-753b-4c49-8b8c-f6d74f3ba8de</guid><pubDate>Mon, 10 Aug 2026 05:14:18 +0000</pubDate><atom:updated>2026-08-10T05:14:18.545Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rajmohan,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,ராஜ்மோகன்,தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்,Tamil Nadu Legislative Assembly session</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன், விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/lm6lrc53/tn-8.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்த்தாய் வாழ்த்து</a> தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.</p><h2>ராஜ்மோகன் பேச்சு </h2><p>இந்த தீர்மானத்தின் மீது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், </p><p>தாயே தமிழே வணக்கம். தாய்ப் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம். </p><p>தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. </p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது இந்த தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு.</p><p>அது இந்த தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா, அது வாசமும் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.</p><h2>உலகத் தாய் வாழ்த்து</h2><p>ஆனால் இத்தனாயிரம் ஆண்டுகள் வளர்ந்த பின்னும் நீ எப்படி இன்னும் இளமையாக இருக்கிறாய்! உன் இளமையை வாழ்த்துகிறேன் என்று, தமிழை, தமிழ்நாட்டை வாழ்த்தி, தென்னிந்தியாவை சொல்லி, பாரத்தாயை வாழ்த்தி, உலகத் தாயையே வாழ்த்தும் இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை உலகத் தாய் வாழ்த்து என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்.</p><p>இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-special-resolution-passed-unanimously#comments</comments><guid isPermaLink="false">ce930b5d-9641-47c1-afcf-c32f7e2359a3</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:58:42 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:58:42.444Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/xak7c49c/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><h2><strong>தனித்தீர்மானம்</strong></h2><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்த்தாய்-வாழ்த்து">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும்- வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-standalone-resolution-to-project-tamil-identity-worldwide-vanni-arasu#comments</comments><guid isPermaLink="false">5c491c1c-0b27-4526-80a0-68f289d1cc1a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:55:07 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:55:07.517Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>resolution passed,தனித்தீர்மானம்,vanni arasu,தமிழ்த்தாய் வாழ்த்து,வன்னி அரசு,Tamilthai vaazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/649rkbts/vanni-arasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.</p><p>இந்நிலையில், சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்.</p><p>ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்காக தேசிய இனங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானம் தமிழர் அடையாளத்தை உலகுக்கு பறைசாற்றும் விதமாக உள்ளது.</p><p>இந்து, இந்தி, இந்து ராஷ்டிரியம் என்ற போக்கை எதிர்க்கும் விதமான இந்த தீர்மானத்திற்கு விசிக தரப்பில் ஆதரவு.</p><p>தீர்மானம் குறித்து முதலமைச்சர் பேசியபோது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே அதிகமாக கைதட்டி வரவேற்றனர்.</p><p>தனித்தீர்மானம் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து என்பதால் எதிர்க்கட்சி தரப்புமே கைதட்டி வரவேற்கலாமே..</p><p>தமிழ்தேசியமும், திராவிடமும் ஒன்றென சொல்லும் அபாய சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானம் சிறப்புக்குரியது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்: நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-admk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">daa3a564-d614-44a4-8b2e-a08543736a1e</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:50:16 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:50:16.356Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/d8wyciot/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறினார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். </p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution">தி.மு.க. வை</a> தொடர்ந்து அ.தி.மு.க.வும் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,  </p><h2><strong>தமிழர்கள் உணர்வு</strong></h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியின் தொன்மை, பண்பாட்டின் அடையாளம். 1981-ல் மதுரையில் 5-வது தமிழ் மாநாட்டை நடத்தியவர் எம்ஜிஆர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனம், அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்கள் உணர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது நமது தாய்மொழிக்கான மரியாதை; யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழன்னைக்கான மரியாதை. தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை, தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இந்தியர் என்பதில் நாம் பெருமை அடைகிறோம், தமிழர் என்பதில் அதே அளவுக்கு பெருமை அடைகிறோம். அரசியலில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், தமிழ் என்று வரும் போது நாம் அனைவரும் ஒரே குரலாக இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவளிப்பதாக கூறினார்.</p><p>முன்னதாக, தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்- தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/priority-for-tamil-thai-vazhthu-dmk-supports-the-special-resolution#comments</comments><guid isPermaLink="false">b14f4880-7d05-4252-b173-47cce55749a9</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:33:44 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:33:44.710Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தமிழ்த்தாய் வாழ்த்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/931z5mim/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது என்றார்.</strong></em> </p><p>தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">தமிழ்த்தாய் வாழ்த்துக்கு</a> முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு... தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர்.  ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu">தமிழ்</a> நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். </p><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ கோவி. செழியன் பேசுகையில், </p><p>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கிறது. தமிழ்தாய் வாழ்த்திற்கு 3-ம் இடம் என்று சொல்லும் போது அவமானமாக இருக்கிறது. தமிழ் மொழியை தேசிய மொழியாக்கி செம்மொழியாக்கியவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அரசு அலுவலகங்களில் பாட அரசாணை வெளியிட்டவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவர் பெயரிலான பல்கலையில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது வேதனை. தமிழ்த்தாய் விவகாரத்தில சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ் என்றால் கெத்து, பவர்.. தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானத்தில் முதல்வர் விஜய் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-means-swagger-and-power-cm-vijay-speaks-on-the-resolution-regarding-the-tamil-thai-vazhthu#comments</comments><guid isPermaLink="false">bf81b7e7-8efd-4b6d-9246-eae3303c7f4a</guid><pubDate>Mon, 10 Aug 2026 04:21:28 +0000</pubDate><atom:updated>2026-08-10T04:21:28.526Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu,தமிழக சட்டமன்ற கூட்டம்,Tamil Nadu Legislative Assembly session</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/my1so0pq/tn-7.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல்வர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல்வர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/my1so0pq/tn-7.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று (ஆகஸ்ட் 10) <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-10-august-2026">தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்</a> கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. </p><p>முதலாவதாக இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் உரையாற்றினார். </p><h2>விஜய் உரை</h2><p>அவர் பேசியதாவது,</p><p>மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும். ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. அது நமது உயிர். நமது உணர்வு. </p><p>நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம் நேசம் எல்லாமும் நமக்குள் உணர்வாக தோன்றுவதுபோல தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படியோ அதுபோல தான் தாய் மொழியும். </p><p>நம் தாய் நமக்கு மிகப்பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற சமூகம் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விடும். விடாது. விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்தை 1891 இல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார். </p><p>இந்திய துணை கண்டதை இந்திய ஒன்றியதை அழகிய முகமாக கூறிய சுந்தரனார் அந்த முகத்தோட நெத்தியில் வைக்கிற திலகம் தான் தமிழ்நாடு என்றார். இந்தியாவோட நெற்றியில் இருக்குற பொட்டு மாதிரி ஒரு வெற்றி பொட்டு தான் தமிழ்நாடு. அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல தமிழோட புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்றார். </p><h2>தமிழ் என்றால் கெத்து, பவர்</h2><p>இன்று தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது?. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு. அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தோம்பல். சுருக்கமாக தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். </p><p>அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறதே எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை.</p><p>நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி பெயர் இருக்கும். கூட்டத்தில் நம் பெயரை சொல்லி கூப்பிட்டால் நாம் மட்டுமே திரும்பிப் பாப்போம். ஆனால் தமிழ் என்றால் ஒட்டுமொத்தமாக நாம் எல்லாருமே திரும்பிப்பார்ப்போம் . அப்படி நமக்கு இருக்கும் பொதுப் பெயர் அது. </p><p>நமக்கு தமிழ் என அடையாளம் கொடுத்ததே தமிழ் தான். ஒரே பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது நம் தமிழ்தான். அப்படி உயர்த்திப்பிடிக்கும் தமிழை பின்னே தள்ளினால் தமிழ்நாடு எப்படி பொறுக்கும். ஒரு கட்சிக்கு பிரச்சனை என்றால் அந்த கட்சி மட்டுமே போராடும். </p><p>ஆனால் தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து நிற்கும். அதனால் தான் தமிழ் என்றால் உயிர், உணர்வு. உலகில் தோன்றிய பல மொழிகள் காலப்போக்கில் மறைந்தன. ஆனால் தமிழ் நீடித்து நிற்கும் ஒன்று.</p><p>தமிழில் என்ன இல்லை?, இலக்கியம் இலக்கணம் என பல்லாயிர வருடமாக இருப்பது நம் தாய் மொழிக்கு தான். தொல்காப்பியம், சங்க இலக்கியம், உலகம் முழுவதும் தெறிந்த திருக்குறள் ஒன்று போதும் தமிழின் பெருமையை சொல்வதற்கு. இப்படிப்பட்ட தமிழுக்கான அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து. </p><p>ஒட்டுமோத்த இந்தியாவுடைய பன்முகத்தன்மையை உயர்த்தி பேசும் நம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில தான் இருக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு மாநில மொழி, பண்பாடு, பாரம்பரியத்திற்கு பாதுகாப்பு உரிமையை கொடுத்திருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் கொடுத்து தான் ஆக வேண்டும். அதுதான் மாநில உரிமை.</p><p>அப்படிப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து தான் 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அரசாணை போடபட்டு செயல்பாட்டுக்கு வந்தது. பின்னர் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது நிறுவன நிகழ்வுகளில் தமிழ்த்தாய் பாட வேண்டும் என அரசாணை உள்ளது.</p><p>2026 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஒன்றிய அரசின் கடிதத்தில் அரசு விழாக்களில் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் வெளியிடப்பட்டது. அந்த ஆணையில் மாநில பாடல் குறித்து எந்த வழிமுறையும் இல்லாமல் இருந்தது. நம் அரசு பொறுப்பேற்றும் கடந்த மே 27 ஆம் தேதி பிரதமருக்கு, மாநில பாடல்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அறிக்கையில் திருத்தம் வேண்டும் என்றும் மாநில விழாக்களில் மாநில பாடல்களை முதலில் பாடுவதற்கான அங்கீகாரம் வேண்டும் என கடிதம் எழுதியிருந்தோம்.</p><p>அதைத்தொடர்ந்து ஜூலை 9 அன்று கடிதத்தில் மாநில பாடல் பாடப்படுவதுபற்றி இருந்தது. ஆனால் நம் தமிழ்நாட்டில் 1970களில் இருந்து எல்லா அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபாக இருக்கிறது. அதற்கான அரசாணையும் இருக்கிறது. தமிழ் நம் அடையாளம். பண்பாடு. எனவே அதை பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழக அரசு சமரசம் செய்யாது. </p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல. மாறாக இந்தியாவின் உயர்ந்த கொள்கையான ஒற்றுமையை வெளிப்படுத்துவது. இது அரசியல் தொடர்பான விவதாக மாற அவசியமில்லை. </p><p>இது தமிழரின் பொது அடையாளம். நம்மை வேறுபடுத்துவது அல்ல, ஒன்றிணைப்பது. தமிழ்த்தாய் வாழ்த்தின் கண்ணியத்தையும் தமிழின் தொன்மையையும், தமிழர் பண்பாட்டின் பெருமையையும் பாதுகாக்கும் உயரிய பணியில் இந்த பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து, அனைத்து பல்கலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவன நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கொண்டுவரப்படும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்தார் </p> ]]></content:encoded></item><item><title>மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-hugged-trees-and-wept-protest-against-their-felling</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-hugged-trees-and-wept-protest-against-their-felling#comments</comments><guid isPermaLink="false">a18e1d61-9a64-468a-b96b-906a14ab6739</guid><pubDate>Mon, 10 Aug 2026 03:11:02 +0000</pubDate><atom:updated>2026-08-10T03:11:02.422Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>trees,woman,கள்ளக்குறிச்சி,kallakurichi,மரங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/eh89b1r7/tree.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Selvi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-10/eh89b1r7/tree.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்வி கதறி அழுதார்.</strong></em></p><h2>மகோகனி, தேக்கு மரங்கள்</h2><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி செல்வி (வயது 58). இவர், தனது விவசாய நிலத்தில் மகோகனி, தேக்கு, தென்னை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்களை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்து பராமரித்து வந்தார். </p><h2>உயர் அழுத்த மின்கோபுரம்</h2><p>கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதாக மின்வாரிய துறை அதிகாரிகள் செல்வியிடம் தெரிவித்தனர்.</p> <p>இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இங்கு மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதால், இந்த வழியாக மின்பாதை அமைக்க வேண்டாம் என அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது. </p><h2>இழப்பீட்டு தொகை</h2><p>இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வியின் நிலத் தில் உயர் அழுத்த மின் கம்பத்திற்கான கோபுரம் அமைக்கப்பட்டு, மின் கம்பிகளும் பொருத்தப்பட்டது. அப்போது மரங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.97 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளனர். </p> <p>இந்தநிலையில் விவசாய நிலத்தில் இருந்த 89 மரங்களை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெட்டி அகற்றினர். </p><p>இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி குழந்தையைப்போல் வளர்த்த மரங்களை ஈவு இரக்கமில்லாமல் வெட்டாதீர்கள் என்று கூறி மரங்களை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதார்.</p><h2>நிலம் தானம்</h2><p>இச்சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. செல்வி அதே பகுதியில் அரசுப் பள்ளி கட்டுவதற்காக 10 சென்ட் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் - முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoist-national-flag-for-first-time</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-cm-vijay-to-hoist-national-flag-for-first-time#comments</comments><guid isPermaLink="false">f578de1d-ffdc-478a-bdac-26f9f9d8faf6</guid><pubDate>Mon, 10 Aug 2026 02:56:06 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:56:06.911Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,national flag,Independence Day,தேசியக்கொடி,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6x3o1h60/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-31/6x3o1h60/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந் தேதி முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற இருப்பதையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.</strong></em></p> <h2>சுதந்திர தின விழா</h2><p>நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். முன்னதாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-wide-anti-drug-pledge-campaign"> விஜய்</a>, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார்.</p> <h2>இளைஞர்களுக்கு விருது</h2><p>அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல்ஆளுமை விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணிகளுக்கான விருதுகள். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வழங்கி கவுரவிக்க உள்ளார்.</p> <h2>ஏற்பாடுகள் தீவிரம்</h2><p>இந்தநிலையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திரத் தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் எதிரில் மேடை அமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வர்ணம் பூசும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.</p> <h2>அணிவகுப்பு ஒத்திகை</h2><p>சுதந்திரதின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை மெரினா கடற்கரையில் கடந்த 7-ந்தேதி நடந்தது. தொடர்ந்து, அணிவகுப்பு ஒத்திகை நாளை (செவ்வாய்கிழமை) மற்றும் 13-ந் தேதிகளிலும் நடக்கிறது. அணிவகுப்பு ஒத்திகை நடக்கும் நாட்களில் தலைமைச் செயலகம் மற்றும் மெரினா சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அணிவகுப்பு ஒத்திகை மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மர சாலை ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கு உரிய அனுமதி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.</p> <h2>கண்காணிப்பு தீவிரம்</h2><p>அனுமதி அட்டை இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலை பகுதிகளை பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 9 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-9-august-2026#comments</comments><guid isPermaLink="false">76352f68-a6e0-4f69-bc17-bafdc013c0fd</guid><pubDate>Sun, 09 Aug 2026 03:12:36 +0000</pubDate><atom:updated>2026-08-10T02:27:07.288Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Today News Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-09/omtx1at6/TodayNews0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/turkiye-says-defence-pact-with-saudi-arabia-and-pak-is-not-aimed-at-iran-or-any-other-country">சவுதி அரேபியா, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் ஈரானை குறிவைத்தது அல்ல: துருக்கி சொல்கிறது</a></p><p>* பொதுவான அச்சுறுத்தல் என்று வரையறுக்கும் வகையில் நாங்கள் எதையும் எழுதவோ அல்லது அதில் கையெழுத்திடவோ இல்லை. </p><p>* எங்களைத் தாக்காத எந்தவொரு நாடும் எங்களுக்கு இலக்கு அல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-won-the-title-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இந்திய வீராங்கனைகள் பேட்மிண்டன் தொடரில் சிறந்து விளங்குவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-makes-new-strait-demands-uae-says-ship-was-targeted">ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனை..!</a></p><p>* அமெரிக்கா இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது.</p><p>* போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு முழுமையான இழப்பீடு" வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-receives-warm-reception-in-puducherry" rel="nofollow">பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை.. புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு!</a></p><p>* புதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.</p><p>* விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/savarkar-question-in-kerala-school-quiz-sparks-big-political-row">பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி: கேரளாவில் வெடித்தது அரசியல் சர்ச்சை</a></p><p>* பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>* சாவர்க்கரின் "உண்மையான வரலாற்றை" மறைத்து அவரைப் பெருமைப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக பினராயி விஜயன் விமர்சனம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-pays-tribute-to-quit-india-movement-heroes">வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்: போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி</a></p><p>* ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற செய் அல்லது செத்து மடி என்ற உறுதியை இந்தியர்களுக்கு வழங்கியது.</p><p>* 'வெள்ளையனே வெளியேறு' எனும் இயக்கம் 1942-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-inside-temples-from-september-1-minister-ramesh">செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* திமுக ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.</p><p>* செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-15-new-judges-sworn-in-today" rel="nofollow">சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு </a></p><p>*  15 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.</p><p>* 15 நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்வு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-police-officers-faint-at-amit-shah-event-in-puducherry" rel="nofollow">அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி</a></p><p>* அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.</p><p>* வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-slams-8-month-delay-in-power-connections-for-60000-farmers" rel="nofollow">தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா?- அன்புமணி </a></p><p>*  தவெக அரசு பதவியேற்ற நிலையில், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.</p><p>* 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-bjp-tries-to-bring-back-delimitation-bill-with-50-percent-hike">50% உயர்வு என ஆசை காட்டி மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி: மாணிக்கம் தாகூர்</a></p><p>* மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி.</p><p>* சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/brett-lee-admits-vaibhav-sooryavanshis-age-still-doubted-outside-india-is-he-15">எங்களுக்கு இன்னும் சந்தேகம் இருக்கு: சூர்யவன்ஷி வயது குறித்து பிரெட் லீ</a></p><p>* நடப்பு ஐபிஎல் தொடரில் 776 ரன்களை குவித்த சூர்யவன்ஷி 4 முக்கிய விருதுகளை கைப்பற்றினார்.</p><p>* வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து வெளிநாடுகளில் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ns-chaturved-says-this-is-my-best-game-in-my-life">எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த போட்டி: சதமடித்த மதுரை வீரர் சதுர்வேத் பேட்டி</a></p><p>* மதுரை பாந்தர்ஸ் அணி கோவை அணிக்கு எதிராக 240 ரன் இலக்கை எடுத்து சாதனை வெற்றி பெற்றது.</p><p>* ஆட்ட  நாயகன் விருதை குடும்பத்தினருக்கும், முக்கியமாக எனது  தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/bcci-secretary-to-meet-vvs-laxman-over-player-injuries">முன்னணி வீரர்களின் காயத்தால் திணறி வரும் இந்திய அணி</a></p><p>* இந்திய அணி இலங்கையில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.</p><p>* வீரர்களின் காயம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-group-attacks-saudi-arabia-israeli-media-report">சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடத்திய ஹவுதி</a></p><p>* சவுதி அராம்கோவில் ஏற்பட்ட தீ விபத்தை தொழில்துறை பாதுகாப்பு தீயணைப்புக் குழுக்கள் பாதிப்பின்றி அணைத்தனர்.</p><p>* சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகள் தேவையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sarathkumar-urges-supporters-nattamai-family-tattoos">'நாட்டாமை குடும்பம்' என பச்சை குத்திக் கொள்ள ஆதரவாளர்களுக்கு நடிகர் சரத்குமார் வேண்டுகோள்!... </a></p><p>*தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உருவாக்கவும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.</p><p>*எனது சிந்தனையில் திடீரென தோன்றியதுதான் இந்த பச்சை குத்தும் எண்ணம். 'நாட்டாமை குடும்பம் என கையில் பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என தோன்றியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-says-modis-goal-is-stronger-union-territories" rel="nofollow">யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே பிரதமர் மோடியின் இலக்கு- அமித்ஷா</a></p><p>* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.</p><p>* மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி  ஓய்வு எடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rajasthan-village-celebrates-first-government-bus-like-festival" rel="nofollow">சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரசு பேருந்து வசதி..! திருவிழா போல் கொண்டாடிய கிராம மக்கள்!</a></p><p>* சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அரசு பஸ் வசதி கிடைக்கவில்லை.</p><p>*  மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு நடந்தே பயணித்துள்ளார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/fifteen-new-judges-take-oath-at-madras-high-court">சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!... </a></p><p>*சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 15 நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.  </p><p>*15 நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்கள் 9-ஆக குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-supreme-leader-mojtaba-khamenei-alive-new-video-ends-health-rumours">வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் வீடியோ வெளியீடு!</a></p><p>*"மொஜ்தபா காமெனியின் மரணம் குறித்து விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" - தி ஜெருசலேம் போஸ்ட்</p><p>*ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/spain-to-replace-ambassador-to-india">இந்தியாவுக்கான தூதரை மாற்ற ஸ்பெயின் முடிவு!</a></p><p>* நிதி முறைகேடு புகாரால் ஜுவான் அன்டோனியோவை மாற்ற ஸ்பெயின் முடிவு</p><p>* கனடா தூதர் ஆல்பிரடோவை இந்தியாவுக்கு நியமிக்க ஸ்பெயின் இந்தியாவிடம் ஒப்புதல் கேட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/suresh-gopi-travels-by-auto-as-official-car-delayed-in-alappuzha-event">கார் வர தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி!</a></p><p>* கார் தாமதமானதால் மந்திரி சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணம் செய்தார்</p><p>* கூட்டம் காரணமாக கார் தொலைவில் நிறுத்தப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/698d0cc7-b3f4-4343-b134-726625ea4077">ஏர் இந்தியா விமான பயணிகள் காயமடைந்த சம்பவத்தில் திருப்பம் - போதைப்பொருள் பயன்படுத்தினாரா விமானி? - சோதனையில் ஷாக்</a></p><p>*விமானி மருத்துவக் காரணங்களுக்கான உட்கொண்ட வழக்கமான மருந்துகள் இந்த முடிவுக்குக் காரணமா?</p><p>*விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட விமானிகள் பணி செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rank-list-for-mbbs-and-bds-courses-in-tamil-nadu-to-be-released-tomorrow">தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு-அமைச்சர் அருண்ராஜ்... </a></p><p>*நாளை மதியம் 3 மணியளவில் அமைச்சர் தரவரிசை வெளியிட்ட பின்னர், மாணவர்கள் தங்களது தரவரிசையை tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விண்ணப்ப எண் மற்றும் விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7204c776-3f5f-47f3-a66a-e1c9aded98c8">சீனாவை சுத்துப் போட்ட 'டால்பின்' புயல்.. 10 லட்சம் மக்கள் முகாம்களுக்கு மாற்றம் - 1,400 விமானங்கள் ரத்து</a></p><p>*சீனாவுக்கு வருவதற்கு முன், ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் புயல் தாக்கியது.</p><p>*ஆகஸ்ட் 12 வரை தொடர்ந்து மிகக் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் இருக்கும் என சீன வானிலை மையம் எச்சரித்துள்ளது.</p><h3> </h3><p><a href="https://maalai-malar.quintype.com/story/a2f56612-4c22-429f-bad4-eac4a1479e70">என் தலையே பிளந்திருக்கும்.. மம்தா பானர்ஜியின் கார் மீது தாக்குதல் - மேற்கு வங்கத்தில் பரபரப்பு</a></p><p>*போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த கட்சித் ஊழியரின் குடும்பத்தினரை மம்தா சந்திக்க சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.</p><p>*திருடி என்றும் கொள்ளையர்களின் தலைவி என்றும் முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/2baa2ab1-aecf-417a-8fb7-db9d11f2fb15">சென்னை: கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த அமித் ஷாவின் ஹெலிகாப்டர்.. தாம்பரத்தில் தரையிறக்கம்</a></p><p>*தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.</p> <p>* இன்று காலை புதுக்சேரி வந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-tn-govt-on-cauvery-delta-paddy-crisis">காவிரி டெல்டா கொள்முதல் நிலையங்களில் ரூ.10 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: உடனடி கொள்முதல் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்!</a></p><p>* மழைக்கு முன் நெல்லை கொள்முதல் செய்ய அரசு உடனடி நடவடிக்கை வேண்டும்</p><p>* அரிசி விலை ₹10-15 உயர்வு விவசாயிகள் நெல் வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-meets-medal-winning-boxers-prime-minister-interacts-with-indian-commonwealth-champions-in-delhi">காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி - இன்ஸ்டாவில் செல்பி வீடியோ</a><br><br>*39 பதக்கங்களில் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் அடங்கும்.</p><p>*Always Cheer For Bharat, பாரத மாதா கி ஜே! என்று கூறுவது இடம்பெற்றுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/if-iran-opens-hormuz-strait-trump-may-drop-nuclear-deal-plan">ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை!... </a></p><p>*ஈரானுடன் விரிவான அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையே தனது முதன்மை இலக்காக டிரம்ப் கருதுவதாகக் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>