<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 07:26:30 +0000</lastBuildDate><item><title>காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance#comments</comments><guid isPermaLink="false">c85e5b1d-8c39-4885-9d95-dcd34a3de133</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:24:38.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,மனு தாக்கல்,Tasmac,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,new plea</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.</p><p>முன்ஜாமின் நபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு அளிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த மனுவில்,"டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முனஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது. </p><p>அதனால், நேரில் ஆஜராக இயலாது என்று இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு செந்தில் பாலாஜ நேற்று கடிதம் எழுதியுள்ளதாக" செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.</p><p>முன்ஜாமின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வரும் ஆகஸ்டு 5ம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரவேன் என செந்தில் பாலாஜி உத்தரவாதம் அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">d8cd286b-4c31-474c-af85-099af23fd194</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:53:28.635Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</a></p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p><p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns">இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</a></p><p>* இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p> <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops">மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</a></p><p>* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><p>* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை</a></p><p>* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case">பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு<br></a><br>*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது</p><p>*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india" rel="nofollow">இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</a></p><p>* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces">ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti">ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</a></p><p>*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்</p><p>*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</a></p><p>*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.</p><p>*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education">நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை</a></p><p>*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை</p><p>*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே</a></p><p>*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்</p><p>*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead"> மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி  குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு</a></p><p>*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026">GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple">ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</a></p><p>* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent">இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</a></p><p>* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது.&nbsp;</p><p>* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</a></p><p>* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை</p><p>* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a></p><p>* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops#comments</comments><guid isPermaLink="false">d7271818-1db0-490e-a972-9fffbbb6863f</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:02:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:02:51.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p> <p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. </p> <p>இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில் இன்றைய தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை இராஜாஜி அவர்கள் ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் இராஜாஜி அவர்களின் எச்சரிக்கையையும் மீறி சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector"> மதுக்கடைகள்</a> இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200&amp;க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p> <p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-30-july-2026#comments</comments><guid isPermaLink="false">bf0c91f5-aaf3-410c-a1d3-867674186d8c</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:27:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:00:41.355Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f9fzok5j/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/notice-issued-to-woman-who-worked-for-125-days-demanding-tax-payment-of-rs-2-75-crore">ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி செலுத்தும்படி நோட்டீஸ்</a></p><p>* தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் அதில் இருந்து கூலி பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி உள்ளார்.</p><p>* 125 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.75கோடி ஜி.எஸ்.டி. செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">டாஸ்மாக் முறைகேடு வழக்கு- செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி மனு</a></p><p>* டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் எம்.டி.விசாகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. </p><p>* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தி.மு.க. முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-30-07-2026">GOLD PRICE TODAY : இன்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?</a></p><p>* சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. </p><p>* ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/telegram-international-warrant-shock-russia-targets-pavel-durov-over-alleged-terror-support">பயங்கரவாதத்திற்கு உதவியதாக டெலிகிராம் நிறுவனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ரஷியா</a></p><p>*ரஷியாவில் பிறந்த பாவெல் தற்போது பிரஞ்சு, ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையைக் கொண்டு வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.</p><p>*பிரான்சிலும் துரோவ் மீது விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-diesel-prices-in-chennai">சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்</a></p><p>*பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.</p><p>*கடல்வழிப்பாதையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-airstrikes-us-hits-iranian-targets-after-jordan-base-missile-attack">ஜோர்டான் சம்பவத்துக்கு பதிலடி.. ஈரான் மீது மீண்டும் முழுவீச்சில் அமெரிக்கா தாக்குதல்</a></p><p>*டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன</p><p>* குடியிருப்புப் பகுதி மீது ஏவுகணை தாக்கியதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-human-rights-abuses-over-30-civilians-killed-in-pakistan-security-forces-firing">POK பேரணி.. பாகிஸ்தான் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 30 பொதுமக்கள் பலி</a></p><p>*இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை பாகிஸ்தான் அரசு முற்றிலும் முடக்கியுள்ளது.</p><p>* 33க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion">சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!... </a></p><p>*கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><p>*முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nasa-to-livestream-total-solar-eclipse-on-august-12">ஆகஸ்ட் 12-ல் முழு சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!</a></p><p>*சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழுவதால் இந்த முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.</p><p>*இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி இரவு இந்த நிகழ்வு நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் பார்க்க முடியாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-new-protest-warning-delhi-jantar-mantar-security">CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!</a></p><p>*தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><p>*பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday">டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</a></p><p>* முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  </p><p>* பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/assam-flood-death-toll-rises-to-78-heavy-rain-warning-issued">அசாம் வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்வு: கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்!...</a></p><p>*மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>*அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/ajinkya-rahane-retirement-india-batter-quits-all-formats-of-international-cricket">சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!<br></a></p><p>*அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.</p><p>* கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.   <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</a></p><p>* முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. </p><p>* குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</a></p><p>* மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</p><p>* ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/grammy-racism-row-bts-to-boycott-after-recording-academy-adds-separate-best-asian-pop-category">இனப்பாகுபாடு?.. அடுத்த ஆண்டு கிராமி விருதுகளை புறக்கணித்த BTS இசைக்குழு</a></p><p>*ஜின், சுகா, ஜே ஹோப், ஜிமின், வி, ஜங்குக் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>*கிராமி விருதுகளுக்கு தங்கள் படைப்பை சமர்ப்பிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</a></p><p>*  திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>* கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd">த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு</a></p><p>* மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>* அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call" rel="nofollow">சென்னையில் சிக்கன் கடைகள் நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</a></p><p>* சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. </p><p>* ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/nyt-india-protests-pakistani-kashmir-reference-in-nyt-report">POK-ஐ 'பாகிஸ்தானி காஷ்மீர்' என குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ்.. இந்தியா கடும் கண்டனம்<br></a><br>*உள்ளாட்சித் தேர்தல் தொடங்கும் வேளையில் 'பாகிஸ்தானி காஷ்மீரில்' வன்முறை வெடித்தது.</p><p>*'பாகிஸ்தானி காஷ்மீர்' என்று ஒன்று கிடையாது. 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' மட்டுமே உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-clash-opposition-uproar-over-july-20-student-protest-crackdown-stalls-lok-sabha">மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.. அமளியால் மக்களவை ஒத்திவைப்பு</a></p><p>*அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு நேரில் வந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும்</p><p>* பெல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பயன்படுத்ததட்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact">’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!... </a></p><p>*தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>*‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow">முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</a></p><p>* முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</p><p>* முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-bypoll-tension-jan-suraaj-leaders-held-in-pankipur-as-prashant-kishor-challenges-bjp-stronghold">3 மாநில இடைத்தேர்தல் விறுவிறுப்பு.. பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதியில் பரபரப்பு</a></p><p>*இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.</p><p>*தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport">கத்திப்பாரா மேம்பாலம் To விமானநிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</a></p><p>* தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>* திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ்</a></p><p>* தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும்</p><p>* ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-in-commonwealth-games-today">காமன்வெல்த் விளையாட்டு: இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா இன்று களம் காணுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery" rel="nofollow">சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</a></p><p>*  1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>*   தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges">தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்... </a></p><p>*தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><p>*ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august">9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!... </a></p><p>*இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>*இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india" rel="nofollow">இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</a></p><p>* ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>* மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/neymar-retires-from-the-brazil-national-team">பிரேசில் உடனான பயணம் முடிந்தது: ஓய்வு அறிவித்த நெய்மர்</a></p><p>* உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் ரவுண்டு 16 சுற்றிலேயே வெளியேறியது.</p><p>* பிரேசில் அணிக்காக 129 போட்டிகளில் விளையாடி 80 கோல்கள் அடித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/kiran-george-enter-qf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th">தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p>* மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/balochistan-girl-killed-body-displayed-on-military-vehicle" rel="nofollow">சிறுமியை கொன்று உடலை வாகனத்தின் முன் வைத்து ஊர்வலம் சென்ற பாகிஸ்தான் ராணுவம்</a></p><p>* சிறுமியின் உடலை ஒரு ராணுவ கவச வாகனத்தின் முன்புறத்தில் வைத்தபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். </p><p>*  8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/stephen-fleming-appointed-england-mens-test-coach-joe-root-returns-as-captain">இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமனம்</a></p><p>* சிஎஸ்கே அணியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த 13-ம் தேதி விலகினார்.</p><p>* இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bmw-to-cut-several-thousand-jobs-in-latest-blow-to-german-auto-sector">அடுத்த ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை நீக்கும் BMW நிறுவனம்</a></p><p>* ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.</p><p>* மந்தமான பொருளாதார சூழலாலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/neeraj-chopra-qualifies-for-javelin-throw-final-in-commonwealth-games">காமன்வெல்த் விளையாட்டு: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா</a></p><p>* இந்திய அணி இதுவரை மொத்தம் 15 பதக்கங்கள் வென்றுள்ளது.</p><p>* இந்தியாவின் ரோகித் யாதவ், யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/lorenzo-musetti-enter-qf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers">விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்து வருகிறது தவெக அரசு.</p><p>* திமுக சார்பில் தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>*  தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon#comments</comments><guid isPermaLink="false">2f51a6cb-41be-4811-b6ec-8c7e03591360</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:55:57.765Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை விவகாரம்,Megadatu dam,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-</p><p>சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்த ரொட்டீன் செக் அப் செய்கிறோம்.</p><p>மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. </p><p>கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.</p><p>மேகதாது பிரச்சனை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. </p><p>மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.</p><p>தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation#comments</comments><guid isPermaLink="false">85bd1c2f-6361-48a4-a8cc-f2807d168fd7</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:30:33 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:30:33.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mekedatu Dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-25/4l6xsfoh/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.</strong></em></p><p>காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.</p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><h2>நாடாளுமன்றம்</h2><p>இந்தநிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.</p> <h2>மத்திய மந்திரி பதிலால் சர்ச்சை</h2><p>இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதி லில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங் கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.</p><p>மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.</p> <h2>பிரதமருக்கு முதல்வர் கடிதம்</h2><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">பிரதமர் மோடி</a>க்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருந்தார். அதில், </p><p>காவிரி நதி வெறும் நீருக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையும், நீதித்துறை முடிவுகளையும் நிலைநாட்ட பிரதமர் இதில் தலையிட வேண்டும்.</p> <p>மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவது, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கையைத் தக்கவைக்க உதவும். நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் எதிர்பார்ப்பாகும் என்ற தெரிவித்து இருந்தார்.</p> <p>இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.</p> <h2>ஆலோசனை</h2><p>இந்நிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple#comments</comments><guid isPermaLink="false">0b0d36cd-abed-4e9b-81af-9196f7e87448</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:21:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:21:00.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாபநாசம்,aadi amavasai,Karaiyar Sorimuthu Ayyanar Temple,ஆடி அமாவாசை,காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Karaiyar Sorimuthu Ayyanar Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/d8c6f9vo/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு அரசு பஸ்களில் மட்டுமே சென்று வர பக்தர்களுக்கு அனுமதி அளிக் கப்படும். வனப்பகுதியில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.</em></p> <p>மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2>சொரிமுத்து அய்யனார் கோவில்</h2><p>பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, 4 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.</p><h2>சோதனைச்சாவடி</h2><p>கூட்ட நெரிசலால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி 6 நாட்கள் வரை வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஆகஸ்டு 9-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்டு 7 மற்றும் 8 ஆகிய நாட்கள் முழுவதும் கோவில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பஸ், தனியார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <h2>அரசு பஸ்களில் மட்டுமே அனுமதி</h2><p>ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது. பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் மட்டுமே கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது.</p> <p>ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்டு 14-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும். கீழே இறங்கும் பக்தர்களுக்காக அரசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்.</p> <p>ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 17-ந் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி கோவிலுக்கு சென்று வரலாம்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam#comments</comments><guid isPermaLink="false">bc163fba-c454-463d-943e-5b53eed5facb</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:05:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T04:05:57.397Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,tambaram railway station,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தாம்பரம் ரெயில் நிலையம்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/pmhymsr8/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்களை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே</a> அறிவித்துள்ளது. </p><p>அதன்படி, வழக்கமாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூர்</a> வரை இயக்கப்படும் 5 முக்கிய ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களுடன் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ளவும், அங்கிருந்தே மீண்டும் புறப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. </p><p>இந்த மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><h2><strong>தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் ரெயில்கள்</strong></h2><p>வழக்கமாக சென்னை எழும்பூர் வரை வந்து செல்லும் கீழ்க்கண்ட ரெயில்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">தாம்பரத்துடன்</a> நிறுத்தப்பட்டு, மீண்டும் அங்கிருந்தே மறுமார்க்கமாக இயக்கப்படும்.</p><p>*  தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16866)  மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16160) கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 20636) சேலம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22154).  </p><h2><strong>மாம்பலம் வரை இயக்கப்படும் ரெயில்</strong></h2><p>திருச்சியிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12654) தற்காலிகமாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கிருந்தே மீண்டும் திருச்சிக்குப் புறப்படும்.  </p><h2><strong>பயணிகளுக்கு அறிவுறுத்தல்</strong></h2><p>மறுசீரமைப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குப் பதிலாக, தங்களின் பயணத் திட்டத்திற்கு ஏற்ப தாம்பரம் அல்லது மாம்பலம் ரெயில் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தற்போதைய உடனடி தேவை, அவசியத் தேவை காவிரி தண்ணீர்- ஜி.கே.வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-says-the-immediate-and-essential-requirement-for-tamil-nadus-samba-cultivation-is-cauvery-water#comments</comments><guid isPermaLink="false">a7903532-b596-4895-964c-211d7e1f1d7b</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:32:05 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:32:05.724Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,ஜிகே வாசன்,காவிரி நீர்,Cauvery water,காவிரி மேலாண்மை ஆணையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g6hrxy79/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</aside><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D">காவிரியில் </a>தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது நியாயமானது. அதாவது காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2><strong>மறுக்கக்கூடாது</strong></h2><p>குறிப்பாக <a href="https://www.maalaimalar.com/topic/காவிரி-மேலாண்மை-ஆணையம்">காவிரி மேலாண்மை ஆணையம்</a> ஏற்கனவே கொடுத்த உத்தரவின்படி தண்ணீர் திறக்க மறுத்து மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசின் நியாயமற்ற போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழகத்திற்கான காவிரி நீர் தமிழக விவசாயிகளின் பயிர் தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் மிக மிக அவசரமானது மட்டுமல்ல</p><p>அவசியமானதும் கூட.</p><p>ஏற்கனவே குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போதைய சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் உடனடி தேவையாக இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு கடைபிடிக்க வேண்டுமே தவிர அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒத்த கருத்து என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கக்கூடாது.</p><h2><strong>கர்நாடக அரசு</strong></h2><p>எனவே தமிழக விவசாயிகள், கர்நாடக விவசாயிகள் எனப்பிரித்துப் பார்க்காமல் விவசாய வர்க்கம் என எண்ணி அவர்களைப் பாதுகாக்கக்கூடிய நிலையை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் நியாயமான உரிமையை கர்நாடக அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.</p><p>மேலும் நேற்றைய தினம் கர்நாடக அரசின் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது கர்நாடக அரசின் வீண்முயற்சியை, பின்னடவை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>எனவே கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (01.08.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-35#comments</comments><guid isPermaLink="false">eca887a6-7bf8-4789-8715-d1a8e34d5b01</guid><pubDate>Fri, 31 Jul 2026 03:20:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T03:20:27.238Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/3wpvse0h/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (01.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>மாங்காடு</strong></h2><p>அம்பாள் நகர், பத்மாவதி நகர், அட்டிசன் நகர், மணலி ராமகிருஷ்ணா நகர், பாலாஜி அவென்யு, எஸ்எஸ் கோவில் தெரு, மேலண்டை மாட வீதி, பெருமாள் கோவில் தெரு, பள்ளி தெரு, நரிவன சாலை, நியூ போலீஸ் ஸ்டேஷன், எம்ஜிஆர் நகர், ஏஎஸ் நகர் பட்டூர், அப்பாவு நகர், வெள்ளீஸ்வரன் நகர், சரஸ்வதி நகர், பாண்டியன் நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெரு.</p><h2><strong>மாடம்பாக்கம்</strong></h2><p>ராஜ்பாரிஸ் பிளாட்ஸ், மாம்பாக்கம் பிரதான சாலை, ராகேஷ் ஷர்மா நகர், விக்டோரியா பார்ம் ஹவுஸ், கோவிலஞ்சேரி, கிரஞ்ச் அண்ட் கரி, குறிஞ்சி நகர், அகரம் தென், திரௌபதி அம்மன் கோவில் தெரு, ஜி.கே. அவென்யூ.</p><h2><strong>பள்ளிக்கரணை</strong></h2><p>காமகோட்டி நகர், ஐஐடி காலனி, நாகம்மாள் அவென்யூ, விஜிபி ராஜேஷ் நகர், மா.பொ.சி. நகர், என்ஐஓடி.</p><h2><strong>திரிசூலம்</strong></h2><p>பிவிஆர் மால், சந்தை சாலை, ஆறுமலைச் சாவடி, ஹார்பர் ஆர்ட்டர்ஸ், முக்கண்ணி அம்மன் கோவில் தெரு, ராணி அண்ணா நகர், கென்னடி வெளி, மூவரசன்பேட்டை பிரதான சாலை.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>ஜி.இ. நிறுவனம், ராணுவக் குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் ஃப்ளைட் கிச்சன், பிபிசிஎல், எல் &amp; டி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பம்மல் காமராஜபுரம், திருநீர்மலை பிரதான சாலை, எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம், ராஜீவ் காந்தி நகர், விக்டோரியா தெரு, பெரியார் தெரு, நியூஸ்மேன் தெரு, மரியன் தெரு, அன்னை மேரி தெரு, வினாய நகர், இபி காலனி, அமர்சன் நகர், த்ரீ ரோசஸ் அபார்ட்மெண்ட்ஸ், திருவள்ளுவர் பிரதான சாலை, பக்தவச்சலம் 1வது முதல் 3வது தெருக்கள் வரை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>வரதராஜ பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் பிரதான சாலை, பிஎஸ்சிபிஎல், போலினேனி ஹில்சைடு அபார்ட்மென்ட்ஸ், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், பாசில் அவென்யூ, விவேகானந்தா நகர் நூக்கம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெயா நகர், வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசங்கழனி பிரதான சாலை, கரணை பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், மகாலட்சுமி நகர், ஜோன்ஸ் காசியா, நேசமணி நகர் மால்ஸ் மற்றும் கே.ஜி. அபார்ட்மென்ட், ஆர்.சி. பிளாசம் அபார்ட்மென்ட், நேசமணி நகர், ஏரிக்கரை சாலை, வரதபுரம்.</p><h2><strong>வேளச்சேரி</strong></h2><p>பேபி நகர், தரமணி 100 அடி பிரதான சாலை, விஜயா நகர், பார்க் அவென்யூ, டாஸ் அவென்யூ, ராமகிரி நகர்.</p><h2><strong>பூவிருந்தவல்லி</strong></h2><p>பூவிருந்தவல்லி பகுதியில் 33/11 கி.வோ துணை மின் நிலையத்தில் 33 கி.வோ மற்றும் 11 கி.வோ அத்தியாவசிய மற்றும் அவசர பணிகளான பழைய பஸ்பார் குழாய்கள் மற்றும் சேதமடைந்த கிளாம்ப்களை மாற்றும் பணிகள் நடைப்பெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office#comments</comments><guid isPermaLink="false">13a6d5ed-da70-49b4-a3b3-becbb7f09d1a</guid><pubDate>Fri, 31 Jul 2026 02:02:20 +0000</pubDate><atom:updated>2026-07-31T02:02:20.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-05-07/1dxebw23/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</em></p><h2>மின் தடை</h2><p>தமிழகத்தில் நிலவும் தொடர் மின் தடை மற்றும் குறைந்த மின்னழுத்தப் பிரச்சனையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். </p><p>பராமரிப்புப் பணிகள் மற்றும் மின்மாற்றிக் கோளாறுகள் தாமதமாவதே இதற்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்து உள்ளது.</p> <h2>சென்னையில் மின்வெட்டு</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது.</p><p>பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இரவில் வீட்டிற்கு வந்தால் மின் வெட்டு என்ற நிலை சென்னை மற்றும் புறநகர் மக்களை குமுற வைத்துள்ளது.</p> <h2>பொதுமக்கள் மறியல்</h2><p>இரவில் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல், மின்வாரியத்தை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>இந்நிலையில், திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery">த.வெ.க. ஆட்சி</a> அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...</p><p>முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை.</p> <p>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.</p><p>இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p>இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...<br><br>முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.<br><br>3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில்… <a href="https://t.co/6FubNiIFPa">https://t.co/6FubNiIFPa</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2083002205204852971?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>ஏசி பயன்பாடு</h2><p>வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><p>மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.</p> <h2>மின் வாரியம்</h2><p>மின்தடை தொடர்பாக பொதுமக்கள் "மின்னகம்" மையத்திற்கு தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பை சரி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது.</p><p>பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மின்மாற்றி பழுது காரணமாக ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-moves-supreme-court-for-anticipatory-bail-directorate-of-vigilance-and-anti-corruption-files-caveat-petition#comments</comments><guid isPermaLink="false">166c7ac5-6e7f-4db0-9f33-783655edeef2</guid><pubDate>Thu, 30 Jul 2026 16:07:00 +0000</pubDate><atom:updated>2026-07-30T16:07:00.264Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Supreme Court,உச்ச நீதிமன்றம்,DVAC,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்ஜாமினுக்கு உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில்பாலாஜி - கேவியட் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமின் மனுவிற்கு எதிராக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது. </p><p>தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் எவ்வித இடைக்கால உத்தரவோ அல்லது முன்ஜாமினோ வழங்கிவிடக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. </p><h2>முன்ஜாமினை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்</h2><p>கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக்  நிறுவனத்தின் மதுபான ஒப்பந்தங்கள், பார் டெண்டர்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் ரூ. 17 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகக் கூறி, செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் முக்கிய தகவல்களுக்காக செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்யவேண்டியது அவசியம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு </h2><p>உயர் நீதிமன்றம் முன்ஜாமினைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையும் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், இவ்வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்கும் வரை செந்தில் பாலாஜிக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denial-of-permission-to-dravidar-kazhagam-rally-if-you-look-at-the-protests-it-is-dveka-who-is-more-afraid-than-bjp-mkstals-criticism#comments</comments><guid isPermaLink="false">83c469b8-e369-417a-a7ee-f0414322e962</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:57:38 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:57:38.968Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,திராவிடர் கழகம்,dravidar kazhagam,மு.க.ஸ்டாலின்,tvk,M.k. stalin</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இருசக்கர பேரணிக்கு அனுமதி மறுப்பு: ‘போராட்டங்களைப் பார்த்தால் பா.ஜ.க.வைவிட, த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8tc411om/New-Project-2026-07-30T202705.675.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வையும், EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பாக இன்று சென்னை வேப்பேரியில், இருசக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.</p><p>வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் திடலில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். </p><p>இதனைத்தொடர்ந்து இந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திராவிடர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. கடந்த 18ம் தேதியே அனுமதி கேட்டநிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; </p><h2>போராட்டத்தைக் கண்டு பா.ஜ.க.வைவிட த.வெ.க.தான் அதிகம் அஞ்சுகிறது</h2><p>“தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் த.வெ.க. அரசு, பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்? </p><p>திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?</p><p>கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. </p><p>அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, கி.வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் த.வெ.க. அரசு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/she-is-a-goddess-the-madurai-bench-of-the-high-court-grants-legal-personhood-to-the-thamirabarani-river</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/she-is-a-goddess-the-madurai-bench-of-the-high-court-grants-legal-personhood-to-the-thamirabarani-river#comments</comments><guid isPermaLink="false">7e8b2443-b308-4b5e-8ec9-b1c25a922927</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:35:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:35:35.440Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,தாமிரபரணி,tamirabarani river,HC of Madurai Bench</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5vjgzb2t/New-Project-2026-07-30T200508.587.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அவள் ஒரு தெய்வம்’ - தாமிரபரணி ஆற்றுக்கு ஆளுமை அந்தஸ்து வழங்கிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5vjgzb2t/New-Project-2026-07-30T200508.587.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் விடுவதற்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றை ஒரு சட்டபூர்வ நபராக அங்கீகரித்தும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. </p><p>தாமிரபரணி வெறும் நதி மட்டுமல்ல, அது இந்துக்களால் தெய்வமாக வழிபடப்படுவதால் அதற்கு ஆளுமை அந்தஸ்து வழங்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.</p><h2>அவள் ஒரு தெய்வம்</h2><p>“தாமிரபரணி நதி இந்துக்களால் ஒரு தெய்வமாக வணங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, அது ஒரு நபரின் தன்மையைக் கொண்டுள்ளது. ஆகையால், தாமிரபரணி ஒரு நதி என்பதால் அல்ல, மாறாக அவள் ஒரு தெய்வம் என்பதால் நாங்கள் அவளது ஆளுமையை அங்கீகரிக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். </p><p>அவளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை. அது பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களில் காணப்படும் சட்டப்பூர்வ விதிகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும், நதியின் சொந்த உரிமைகளையும் மீறுவதாகும். இதன்மூலம் அவள் தனது உள்ளார்ந்த மதிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறாள்.” என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. </p><h2>அஸ்திக்கும் மட்டும் அனுமதி </h2><p>நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், மே 7 முதல் மே 28 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளின்போது, ​​86 முதல் 90 டன் வரையிலான ஆடைகள், 2.2 டன்  சாம்பல், 1,385 கிலோகிராம் நெகிழி கழிவுகள், 220 கிலோகிராம் கண்ணாடிப் புட்டிகள் மற்றும் 374 கிலோகிராம் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கபட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து, மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது எனக்கூறிய நீதிமன்றம், தாமிரபரணியில் துணிகள் மற்றும் இதரப் பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதித்தது.</p><p>ஆனால் இந்தியர்கள் ஆறுகள் மற்றும் கடல்நீருடன் கொண்டுள்ள ஆன்மிகரீதியான உணர்வுகளையும், அதற்காக அங்கு அவர்கள் செய்யும் சடங்குகளையும் கருத்தில்கொண்டு இறந்தவர்களின் சாம்பலை மட்டும் ஆற்றில் கரைக்க அனுமதி அளித்துள்ளது. </p><p>சுடப்படாத பானையில் மட்டுமே சாம்பலை எடுத்து செல்லவேண்டும் எனவும், மேலும் பானைகளுடன் சாம்பலை ஆற்றில் வீசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது. </p><h2>மனிதன் மாறவேண்டும்</h2><p>இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும், மனிதர்கள் அதை கடைபிடித்து அவர்களது இயல்பை மாற்றினால்தான் மாற்றம் நிகழும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. </p><p>“இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க சட்டங்கள் மட்டும் போதாது. கடுமையான அமலாக்கம்கூட நோக்கத்தை அடையாது. மனித இயல்பு மாற வேண்டும். மேலும், அது தார்மீகத் தலையீடுகளால் மட்டுமே சாத்தியமாகும். ஓர் உதாரணம் உடனடியாக நினைவுக்கு வருகிறது. முட்டையிடுவதற்காக மேற்குக் கடற்கரைக்கு வரும் ஆமைகள் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன. ஒரு பிரபலமான மத போதகர், பிரசவத்திற்காகத் தாய்வீட்டிற்கு வரும் மகள்களுடன் அந்த ஆமைகளை ஒப்பிட்டார். </p><p>இவ்வாறு, அந்தச் செய்தி ஆழமாகப் பதியவைக்கப்பட்டது. சட்டத்தால் தடுக்க முடியாததை, கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் தடுத்தது. எனவே, நீதித்துறை ஆன்மீகச் சூழலியலுடன் தன்னை மேலும் மேலும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ,” என நீதிபதிகள் தெரிவித்தனர். </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பாபநாசம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான 'ஆனந்தவிலாஸ்' மண்டபத்தை நிர்வகித்து வந்த சீவனுபாண்டியன் என்பவருக்கு, அது ஆக்கிரமிப்பு நிலம் எனக் கூறி அரசு சார்பில் நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில்தான் மேல்குறிப்பிட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த இடம் "ஆற்றுப் புறம்போக்கு" என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ஆற்றின் கரையை ஆற்றிலிருந்து பிரிக்க முடியாது என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.</p>]]></content:encoded></item><item><title>விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-allegation-tvk-government-betraying-farmers#comments</comments><guid isPermaLink="false">57b51e1e-ba1f-4a9a-9970-fa16dbb36a0d</guid><pubDate>Thu, 30 Jul 2026 14:18:35 +0000</pubDate><atom:updated>2026-07-30T14:18:35.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,farmers,விவசாயிகள்,Udhayanidhi Stalin,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2mq29fgi/udayaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/2mq29fgi/udayaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசைக் கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>மாபெரும் ஆர்ப்பாட்டம்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:</p><p>பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி, மேகதாட்டு பிரச்சனையை கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்காதது, காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட மறுப்பது, கர்நாடக முதல் மந்திரியை சந்திக்கப் போவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது...</p><p>இப்படி தமிழக விவசாயிகளுக்கு துரோகத்துக்கு மேல் துரோகம் செய்யும் ஷூட்டிங் மாடல் தவெக அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், திமுக சார்பில் தஞ்சை மாநகரில் ஆகஸ்ட் 3 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம். தஞ்சையில் கூடுவோம்... விவசாய விரோத கால்ஷீட் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என தெரிவித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின் அறிக்கை</h2><p>முன்னதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத தவெக அரசு. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்</p>]]></content:encoded></item><item><title>‘அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது’ - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-aiadmk-has-ended-poovai-jaganmoorthy-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-aiadmk-has-ended-poovai-jaganmoorthy-announces#comments</comments><guid isPermaLink="false">acd85e82-3c2d-46d7-89b4-98c051d2f9dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 13:31:14 +0000</pubDate><atom:updated>2026-07-30T13:31:14.028Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அதிமுக,AIADMK,புரட்சி பாரதம் கட்சி,puratchi bharatham katchi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ymrosgy/New-Project-2026-07-30T190049.553.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அதிமுகவுடனான கூட்டணி முறிந்தது’ - பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0ymrosgy/New-Project-2026-07-30T190049.553.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறிவிட்டதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணி முடிந்துவிட்டதாகவும், இப்போது யாருடனும் கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். </p><h2>அதிமுகவுடனான கூட்டணி</h2><p>நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணியில் இருந்துவருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதத்திற்கு போட்டியிட சீட்டு வழங்காவிடினும் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது. </p><p>அதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் இடம்பெற்றது. இத்தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தி 4 இடங்களை கோரியநிலையில், அதிமுக 1 சீட்டு மட்டுமே வழங்கியது. அந்த ஒரு இடத்திலும் தோல்வியைத் தழுவியது.</p><h2>வெறியேறிய கட்சிகள்</h2><p>தற்போதுவரை அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் வெளியேறியுள்ளன. </p>]]></content:encoded></item><item><title>15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி ஆணையம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cwma-orders-the-release-of-3500-cusecs-of-water-to-tamil-nadu-for-15-days#comments</comments><guid isPermaLink="false">3c535016-e598-47aa-ab61-96b3ae17cb69</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:39:42 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:39:42.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,காவிரி நீர் மேலாண்மை ஆணையம்,தமிழ்நாடு,CWRC</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி தண்ணீர் திறக்க CWMA உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ueu2bg12/New-Project-2026-07-30T160834.540.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நேற்று காவிரி ஒழுங்குமுறைக்குழு தமிழ்நாட்டிற்கு 3500 கன அடி நீர் திறக்க பரிந்துரைத்ததை எதிர்த்து கர்நாடகா மேல்முறையீடு செய்தநிலையில், இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது.</p><p>இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த 15 நாட்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகவிற்கு காவேரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. </p><p>இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.</p><h2>கூட்டத்தில் கர்நாடகா முன்வைத்த வாதம் என்ன?</h2><p>காவிரிப் படுகை முழுவதும் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாகவும், தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா வாதிட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30,748 கன அடி நீர் பாய்ந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை பிலிகுண்டுலுவில் 178 கன அடி நீர் மட்டுமே பாய்வதாக கர்நாடகா தெரிவித்தது. </p><p>காவிரிப் படுகை நீர்த்தேக்கங்களில் தற்போது 36.69 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 99 டிஎம்சி அளவை விடக் கணிசமாகக் குறைவு என்றும் தெரிவித்தது. </p>]]></content:encoded></item><item><title>வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">d7a730ab-aa9e-4a59-9402-7c8da398df03</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:37:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:37:13.176Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Leopard,வாகன ஓட்டிகள்,Pollachi,Motorists,பொள்ளாச்சி,சிறுத்தை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vt0wjbei/Leopard.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Leopard]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/vt0wjbei/Leopard.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஐயர்பாடி மற்றும் ரொட்டிக்கடை பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைகள் இரவு நேரங்களில் மட்டும் அல்லாமல் பகலிலும் உலா வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ரொட்டிக்கடையில் செல்வக்குமார் என்பவருடைய வீட்டில் உள்ள கோழியை பிடிப்பதற்காக சிறுத்தை வந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதமே வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.</p><h2><strong>வைரல்</strong></h2><p>இந்நிலையில் நேற்று இரவு ஐயர்பாடி துணை மின் நிலையம் அருகில் இரவு நேரத்தில் சர்வ சாதாரணமாக சாலையை கடந்து கம்பீரமான நடையுடன் சிறுத்தை சென்றுள்ளதை கண்ட சுற்றுலா பயணிகள் படம்பிடித்து தற்போது வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். அது வைரலாகி வருகிறது.</p><h2><strong>சிறுத்தை</strong></h2><p>எனவே வனத்துறை இதனை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சிறுத்தைகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி அருகே உள்ள வெட்டிக்குழி பகுதியில் கடந்த சில வாரங்களாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோழிகள், ஆடுகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.</p><h2><strong>சிக்கியது</strong></h2><p>இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூண்டு அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டனர். இதன் பலனாக நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.</p><p>பின்னர் சிறுத்தையை பரியாரம் வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்ற வனத்துறையினர், வன விலங்கு மருத்துவர் டாக்டர் மிதுன் தலைமையிலான குழுவின் மூலம் மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டனர்.</p><h2><strong>காயம்</strong></h2><p>அப்போது, கூண்டின் இரும்பு கம்பியில் மோதியதால் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது தவிர, சிறுத்தை முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சாலக்குடி வனக்கோட்ட அலுவலர் வெங்கடேஸ்வரன் மேற்பார்வையில், சிறுத்தை பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் கோழிகளை வேட்டையாடியது இதைவிட பெரிய சிறுத்தை என்றும், அப்பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடக்கூடும் என்றும் வெட்டிக்குழி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உறுதியானால், கூடுதல் கூண்டுகள் அமைத்து பிடிக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை டவுன், பேட்டையில் நாளை மறுநாள் மின்தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88#comments</comments><guid isPermaLink="false">2f9a7185-60e6-43ff-9e20-931126ad85f9</guid><pubDate>Thu, 30 Jul 2026 11:00:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T11:00:15.707Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,நெல்லை,Tirunelveli,Power Cut,petta,பேட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ power cut]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/08/20/1935283-4powercut.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>நெல்லை நகர்ப்புற கோட்ட மின் செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>மின் நிலையம்</strong></h2><p>கொக்கிரகுளம், பழையபேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. </p><h2><strong>மின்தடை</strong></h2><p>எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், பரணி நகர், திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர், நெல்லை டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர்,</p><h2><strong>பேட்டை</strong></h2><p>திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோட்டீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன் நகர், திருமங்கை நகர், செந்தமிழ் நகர், பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுன் கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, நயினார் குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு பகுதியில் பகுதியில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-appeal-to-be-heard-in-the-supreme-court-tomorrow#comments</comments><guid isPermaLink="false">1c102744-ce1d-48d4-8560-376fd2f3c8c9</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:54 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:54.702Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Anticipatory bail,முன்ஜாமின் மனு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/frke6b8f/New-Project-2026-07-30T154740.572.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஜூலை.28 அன்று வழக்குப்பதிவு செய்தது. </p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. </p><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நாளை வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 5-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-tamil-nadu-until-the-5th#comments</comments><guid isPermaLink="false">6183edef-b964-4e28-9bff-9bc3a9245b18</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:17:52 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:17:52.884Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/u5i9mmex/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>லேசான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>1-ந்தேதி கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.</p><p>2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><h2><strong>தமிழக கடலோரப்பகுதிகள்</strong></h2><p>இன்று தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>1-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>2 மற்றும் 3-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவில் ஒற்றை ஆசிரியருடன் இயங்கும் ஒரு லட்சம் பள்ளிகள்- முதலிடத்தில் ஆந்திரா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-pradesh-tops-list-of-single-teacher-schools-in-india#comments</comments><guid isPermaLink="false">5c2ebc1f-6903-4c2b-a401-f2173fd52722</guid><pubDate>Thu, 30 Jul 2026 10:06:15 +0000</pubDate><atom:updated>2026-07-30T10:06:15.225Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Andhra Pradesh,Union Ministry,மத்திய அரசு  India,one teacher,ஆந்திரா,ஒற்றை ஆசிரியர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ School class room]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1g1ex9e5/school.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் மட்டுமே இயங்கி வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் வெளிப்படுத்தி உள்ளன.</p><h2>மாணவர்-ஆசிரியர் விகிதம்</h2><p>தேசிய கல்விக்கொள்கையின்படி மாணவர்-ஆசிரியர் விகிதம் தேசிய அளவில் வரம்பிற்குள் இருந்தபோதிலும், ஆசிரியர் நியமனத்தில் கடுமையான உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை இந்த தரவு சுட்டிக்காட்டுகிறது.</p><p>மத்திய கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, தேசிய அளவிலான மாணவர்-ஆசிரியர் விகிதம் பின்வருமாறு கட்டுக்குள் உள்ளது, தொடக்க நிலை 19, நடுநிலைப்பள்ளி நிலை 17, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF" rel="nofollow">உயர்நிலைப்பள்ளி</a> நிலை 15, மேல் நிலைப்பள்ளி நிலை 23 என்ற விகிதாச்சாரப்படி உள்ளது.</p><h2>ஆந்திரா முதலிடம்</h2><p>ஒற்றை ஆசிரியர் பள்ளி கள் அதிகம் உள்ள மாநில ங்களில் ஆந்திரப் பிரதேசத்தில் 16,357 பள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவிலான மொத்த எண்ணிக்கையில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்காகும். நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பங்கினை 7 மாநிலங்கள் மட்டுமே கொண்டுள்ளன.</p><p>மாநிலங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கைப்படி ஆந்திரப் பிரதேசத்தில் 16,357, ஜார்க்கண்ட் 9,827, மகாராஷ்டிரா 9,269, கர்நாடகா 8,042, உத்தரப்பிரதேசம் 7,874, ராஜஸ்தான் 7,200, மேற்கு வங்காளம் 6,769 என்ற நிலையிலும், நடுத்தர எண்ணிக்கை உள்ள மாநிலங்களில் தெலுங்கானா 4,793, தமிழ்நாடு 3,957, அசாம் 3,159, </p><p>இமாச்சலப்பிரதேசம் 3,128, உத்தரகாண்ட் 2,655, சத்தீஸ்கர் 2,461 என்ற எண்ணிக்கையிலும், குறைந்த எண்ணிக்கை உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின்படி கேரளா 67, நாகாலாந்து 35, சிக்கிம் 31, லடாக் 28, டெல்லி 7, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1 என்ற எண்ணிக்கையிலும் பள்ளிகள் உள்ளன.</p><h2>காலிப்பணியிடங்கள்</h2><p>மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இந்த புள்ளி விவரங்களை வழங்கி பதிலளித்தார். <a href="https://www.maalaimalar.com/news/national/kerala-to-ban-religion-names-for-new-govt-schools-colleges-810941" rel="nofollow">அரசுப் பள்ளி</a>களுக்கான தரவு கோரப்பட்டிருந்தாலும், இந்த இணைப்பில் அனைத்து வகை நிர்வாகங்களின் (அரசு, உதவிபெறும், தனியார்) கீழ் இயங்கும் பள்ளிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p>வெளிப்படையான, தகுதியின் அடிப்படையிலான நியமனங்கள் மூலம் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பவும், எதிர்கால ஆசிரியர் தேவையை முன்கூட்டியே கணிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/9999-mbbs-seats-counselling-in-second-week-of-august#comments</comments><guid isPermaLink="false">4fd92567-3f4c-4cdb-b262-4bdc9be77b87</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:53:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:53:59.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,medical colleges,மருத்துவக் கல்லூரிகள்,MBBS Counselling,தமிழ்நாடு,எம்பிபிஎஸ் கலந்தாய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MBBS Counselling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/5wnvux05/mbbs.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே. நகர் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.</p><h2><strong>கூடுதலாக 50 இடங்கள்:</strong></h2><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 349 மருத்துவ இடங்கள் உள்ளன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,650 உள்ளன. மொத்த 9,999 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.</p><p>இவற்றையும் சேர்த்து இந்த மொத்த இடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>எண்ணிக்கை உயர வாய்ப்பு:</strong></h2><p>தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ்  இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது  உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 9,999 ஆகும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை அகில இந்திய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற்று   வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது. </p><h2><strong>முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு:</strong></h2><p>இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தின் தொடக்கத்தில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார். </p><p>இந்திய மருத்துவ ஆணையத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும். மாநில பொது கலந்தாய்வுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்கள் நியமனம்: உயர்கல்வித் துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-appoints-over-100-new-principals-in-arts-and-science-colleges#comments</comments><guid isPermaLink="false">ab734995-0679-4c52-ab9e-ff48c05b7e61</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:24:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:24:50.961Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,government arts colleges,உயர்கல்வித் துறை,Principals appointed,தமிழக அரசு கலை கல்லுரி,முதல்வர்கள் நியமனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Principals appointed]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/igpg7qnl/dd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள கல்லூரி முதல்வர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 100-க்கும் மேற்பட்ட புதிய முதல்வர்களை நியமிப்பதற்கான பட்டியலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>நீண்ட நாள் கோரிக்கை:</strong></h2><p>தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 7 அரசு கல்வியல் கல்லூரிகளில் சுமார் 125-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் நிரந்தர முதல்வர்கள் இன்றி பொறுப்பு முதல்வர்கள் மூலமே இயங்கி வந்தன. இதனால் கல்வி நிர்வாகம், மாணவர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.</p><h2><strong>பணிமூப்பு பட்டியல் பிரச்சனை தீர்வு:</strong></h2><p>பேராசிரியர்களின் பணிமூப்பு சார்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடைகள் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவி உயர்வுக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>அரசாணை வெளியீடு:</strong></h2><p>இரண்டாம் நிலை கல்லூரிகளுக்கு முதல்வர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்காக 129 இணைப் பேராசிரியர்கள் கொண்ட தகுதிப் பட்டியலுக்கு  உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>கலந்தாய்வு நடைமுறை:</strong></h2><p>தேர்வான இணைப் பேராசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆகஸ்ட் இறுதிக்குள் பணி நியமனம்:</strong></h2><p>ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிய நிரந்தர முதல்வர்கள் பணியில் பொறுப்பேற்பார்கள் என்று கல்லூரி கல்வி ஆணையரகம் மற்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நியமனங்களின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாகச் சிக்கல்கள் தீர்ந்து, கல்வித் தரம் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வேளச்சேரியில் ரூ.125 கோடியில் சர்வதேச பல்கலைக்கழக வளாகம்!- முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-oversees-mou-for-rs-125-crore-international-university-in-velachery#comments</comments><guid isPermaLink="false">819049a6-c8c0-4e76-a683-504d677c614b</guid><pubDate>Thu, 30 Jul 2026 09:19:59 +0000</pubDate><atom:updated>2026-07-30T09:19:59.440Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Memorandum of Understanding,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,புரிந்துணர்வு ஒப்பந்தம்,சர்வதேச பல்கலைக்கழக வளாகம்,international university campus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/64s4yf2s/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><p>இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை அங்கு நேரில் சென்றிருந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.</p><p>அதன் பிறகு நிகழ்ச்சிகளில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழிகாட்டி நிறுவனத்துக்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>இந்த உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF" rel="nofollow">உயர்கல்வி</a> உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஒப்பந்தங்கள்</h2><p>சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை  தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன.</p><p>சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலை வாய்ப்பு கள் உருவாக்கப்பட உள்ளன.</p><p>இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலக ளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மையமாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும். </p><p>புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலி யாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல் கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது. இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்ல கலைக்கழக வளாகமாகும்.  1911-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், உலகப்பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் 77-வது இடத்தைப் பிடித்துள்ளது. </p><p>சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>தொழில்துறை அமைச்சர்  கீர்த்தனா கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க், காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளை ப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p>இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.</p><p>மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இனி ஆன்லைனில்.. அனைத்து கோவில்களுக்கும் பொதுவான டெண்டர் முறை- அமைச்சர் ரமேஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/common-tender-system-for-all-temples-through-online-minister-ramesh#comments</comments><guid isPermaLink="false">679f7206-3f75-4c3f-bb2a-56e59b3cb992</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:41 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:41.394Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அறநிலையத்துறை,tender,Hindu Religious Charities Department,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh,டெண்டர் முறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/s9esz1zo/Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>பொதுவான டெண்டர்</h2><p>அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் வழிகாட்டுமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">டெண்டர்</a> முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.</p><p>அனைத்து கோவில்களுக்கும் உறுதிமொழி படிவங்கள் டெண்டருக்கான விண்ணப்பங்கள் எல்லாவற்றுக்கும் முறையான ஒரே மாதிரியான படிவங்களை கொண்டு வந்துள்ளோம். </p><p>தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அதை கொண்டு வந்துள்ளோம். <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/hindu-religious-charitable-endowments-department-extension-of-deadline-to-apply-for-trustee-posts-in-214-temples" rel="nofollow">இந்து சமய அறநிலையத்துறை</a>யில் இருக்கக் கூடிய அனைத்து டெண்டர்களும் இனிமேல் ஆன்லைனில் நடைபெறும்.</p><p>ஆன்-லைனில் டெண்டருக்கான ஒப்பந்தப் புள்ளி  கோருதலும் நடக்கும், அதற்கான ஏலமும் ஆன்-லைனில் நடைபெறும். </p><p>இதற்கு முன்பு பல கோவில்களில் இ.எம்.டி. என்கிற வைப்புத்தொகை கோவிலுக்கு கோவில் சில இடங்களில் மாறுபட்டு இருந்தது. இப்போது தமிழ்நாடு முழுவதும் பொதுவாக கொண்டு வந்துள்ளோம். </p><p>அனைத்து டெண்டர்களுக்கும் ஜி.எஸ்.டி, பான் கட்டாயம். அது இல்லாமல் எந்த டெண்டரையும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஒருவருக்கே காண்டிராக்ட் கொடுக்காமல் 2-3 பேருக்கு பிரித்து கொடுப்பதற்கான வழிமுறைகளை கொண்டு வந்துள்ளோம். டெண்டரில் உள்ள விதிகளை மீறினால் அபராதம் விதிக்கும் நடைமுறையும் கொண்டு வந்துள்ளோம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல் காந்தி ஒரு வரி கூறினால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்- அன்புமணி ராமதாஸ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance#comments</comments><guid isPermaLink="false">11b5ca90-a677-4c62-a0fb-67bf7eac4d9d</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:35:11 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:35:11.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/p9xxte5o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம் என்று அன்புமணி கூறியுள்ளார்.</aside><h2><strong>தமிழ்நாட்டுக்கு பாதகம்</strong></h2><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> இன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும். </p><p>மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும். </p><h2><strong>தமிழ்நாடு விழக்கூடாது</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணை</a> கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு, தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால், நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. மத்தியில் உள்ள பா.ஜ.க., கர்நாடகத்தின் காங்கிரஸ் கூட்டு சதி செய்கின்றனர். இந்த சதியில், தமிழ்நாடு விழக்கூடாது. </p> <p>கர்நாடகா அணையே கட்டக்கூடாது என்று நாம் கூறிக் கொண்டு இருக்கையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? முதலமைச்சர் விஜய்யை யார் அவ்வாறு வழி நடத்துகிறார்? என்று தெரியவில்லை. இது தவறான ஒரு போக்கு. இது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>தைரியம் இருக்கிறதா?</strong> </h2><p>மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம். </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எங்களை டெல்லிக்கு, பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். </p><p>அந்தமான் நிக்கோபார் தீவுகளில், காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும்.</p><p>எனவே மேகதாது அணையை கட்டக்கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூர் ஆவது, அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? </p><p>ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று, ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்.டி.ஏ.வில் இருந்து விலகுகிறோம்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கத்திப்பாரா மேம்பாலம் To விமான நிலையம் வரை அழகுபடுத்தும் சென்னையின் கேட்-வே திட்டம்: ரூ.10.50 கோடி ஒதுக்கிய மாநகராட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennais-gateway-project-to-beautify-the-stretch-from-kathipara-flyover-to-the-airport#comments</comments><guid isPermaLink="false">a07e2f0b-aa35-48fb-b382-b77183e4482f</guid><pubDate>Thu, 30 Jul 2026 08:22:13 +0000</pubDate><atom:updated>2026-07-30T08:22:13.709Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சென்னை விமான நிலையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கத்திப்பாரா மேம்பாலம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/bpbbaqd8/guindy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னைக்கு விமானம் மூலம் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, நகரத்திற்குள் நுழையும் போதே மறக்க முடியாத மற்றும் வரவேற்கும் விதமான அழகிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் சென்னை மாநகராட்சி புதிய பொலிவூட்டும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.</aside><h2><strong>‘கேட்-வே ஆப் சென்னை’</strong></h2><p>கத்திப்பாரா மேம்பாலம் முதல் சென்னை சர்வதேச விமான நிலையம் வரையிலான 4.8 கி.மீ தூரப் பகுதியை ரூ.10.50 கோடி மதிப்பீட்டில்  ‘கேட்-வே ஆப் சென்னை’ என்ற பெயரில் நவீன முறையில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>இத்திட்டத்திற்கான பணிகளை விரைவாகவும் திறம்படவும் முடிக்கும் வகையில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">சென்னை மாநகராட்சி</a> இதை இரண்டு முக்கியப் தொகுப்புகளாகப் பிரித்து உள்ளது.</p><p>முதலாவதாக, விமான நிலையத்திலிருந்து கத்திப்பாரா வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் மின் விளக்கு அமைப்புகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.5.65 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>‘வி.ஐ.பி. பூங்கா’</strong></h2><p>2-வதாக விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் பரப்புடைய ‘வி.ஐ.பி. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">பூங்கா</a>’ மற்றும் அதன் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா ஆகியவற்றை அதி நவீன வசதிகளுடன் புதுப்பிப்பதற்காக ரூ. 4.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் வழியில் தனித்துவமான வரவேற்புப் பகுதிகள் இருப்பது போல, சென்னைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் எமது ஊரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உணரும் வகையிலான சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p>இதற்காக தமிழ்நாடு மற்றும் சென்னையின் வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் தீம் கலைப் படைப்புகள் மற்றும் சின்னங்கள் இங்கு நிறுவப்படவுள்ளன.</p><p>இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த சிமெண்ட் நடைபாதைகள், பயன்பாடற்ற தடுப்புகள், காடாக மண்டிக்கிடக்கும் தேவையற்ற செடிகள் மற்றும் உடைந்த கட்டிடப் பகுதிகள் முற்றிலும் அகற்றப்படும்.  </p><p>அதற்குப் பதிலாக அகலமான நடைபாதைகள், பூச்செடிகள், அலங்கார மரங்கள், புல்வெளிகள் மற்றும் தானியங்கி நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி பசுமையாக்கப்படும். மேலும், இரவு நேரங்களில் அழகூட்டும் அலங்கார மின்விளக்குகள், பயணிகள் அமரப் பெஞ்சுகள், தகவல் பலகைகள் மற்றும் சிற்பங்கள் நிறுவப்படும். நங்கநல்லூர் சிக்னல் அருகில் உள்ள பழமையான காவல் சாவடி மற்றும் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, பழுதடைந்த கழிப்பறைகளும் புனரமைக்கப்படும்.</p><p>இப்பணிகளைத் தொடங்குவதற்கு முன், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மின்கம்பிகள் அல்லது குழாய்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, விரைவில் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் நாளை போலீசாருக்கு பதக்கங்கள் வழங்குகிறார்- அணிவகுப்பு மரியாதையும் நடைபெறுகிறது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-will-present-medals-to-police-personnel-tomorrow#comments</comments><guid isPermaLink="false">46a95fd1-f6d9-42dc-b464-2e1d11ce2364</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:57:36 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:57:36.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,முதலமைச்சர் பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/k5t8vwjn/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய் நாளை மாலை 4 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறும் போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று பதக்கங்கள் வழங்க உள்ளார்.</aside><h2><strong>முதலமைச்சர் பதக்கம்</strong></h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">முதலமைச்சர்</a> பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் நாளை பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2><strong>பொதுமக்களுக்கு அனுமதி</strong></h2><p>முதலமைச்சர் விஜய் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வந்ததும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது. அதை அவர் பார்வையிட்டு அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. போலீஸ் டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். </p><p>இந்த விழாவில் போலீஸ் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பதக்கங்கள் வழங்கப்பட்ட பிறகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதை பொதுமக்களும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>’எல் நினோ’ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: தமிழகஅரசு அதிரடி உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-forms-7-member-expert-panel-on-el-nino-impact#comments</comments><guid isPermaLink="false">d44ccae2-21a0-4b46-b403-0fbaa19b36dc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:52:16 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:52:16.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,Pradeep John,பிரதீப் ஜான்,எல் நினோ,El Niño</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EL NINO]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ctfpvdgb/el-nino.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காலநிலை மாற்றமான ‘எல் நினோ’ தாக்கத்தால் நிகழும் வறட்சி, வெப்ப அலை, பருவமழை மாற்றங்கள் மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர் சூழல்களை அறிவியல் பூர்வமாகக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் 7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.</p><p>‘பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005’-இன் பிரிவு 17(1)-ன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>குழுவின் தலைவரும் உறுப்பினர்களும்:</strong></h2><p>தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் முருகானந்தம் இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார். அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் முனைவர் எஸ். கண்மணி உட்பட துறை சார்ந்த 7 காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.</p><h2><strong>சிறப்பு உறுப்பினர்:</strong></h2><p>எளிய முறையில் மக்களிடம் வானிலை தகவல்களைக் கொண்டு சேர்த்து பிரபலமான ‘தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்' இக்குழுவின் முக்கிய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2><strong>அரசு வகுத்துள்ள குழுவின் முதன்மைப் பணிகள்:</strong></h2><p>*தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிலவும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி சூழல்களைத் தொடர்ந்து கண்காணித்து, அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது.</p><p>*‘தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை’க்கு அதிநவீன தொழில்நுட்ப முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்குவது.</p><p>* பருவமழை பொய்க்கும்போது ஏற்படும் வறட்சியை எதிர்கொள்வதற்கும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் திடீர் பெருமழை-வெள்ளப் பெருக்கைச் சமாளிப்பதற்கும் உரிய நீர் மேலாண்மை ஆலோசனைகளை வழங்குவது.</p><p>*இக்குழு '2026-27 மற்றும் 2027-28' ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்படும்.</p><h2><strong>எல் நினோ என்றால் என்ன?</strong></h2><p>மத்திய பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்போது 'எல் நினோ' உருவாகிறது. இதன் காரணமாக உலகளவில் வானிலை சீர்குலைந்து, சில இடங்களில் கடும் வறட்சியும், சில இடங்களில் வழக்கத்திற்கு மாறான பெருமழையும் புயலும் ஏற்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் இதன்காரணமாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் விவசாயப் பகுதிகளில் நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளதால், அரசு போர்க்கால அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: படங்களில் நடித்த திருநங்கையை திருமணம் செய்த ஆவடி வாலிபர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/avadi-man-marries-transgender-woman-who-acted-in-films#comments</comments><guid isPermaLink="false">8e53cab0-6f62-49b5-ba1f-439c3ec7f916</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:45:03 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:45:03.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,Instagram,இன்ஸ்டாகிராம் காதல்,இன்ஸ்டாகிராம்,திருநங்கை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9dld8yq8/insta.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரும், திருச்செங்கோட்டை சேர்ந்த திருநங்கை ஒருவரும் 7 வருடங்களாக பழகி நேற்று கோபியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.</aside><h2><strong>இன்ஸ்டாகிராம் மூலம் காதல்</strong></h2><p>திருநங்கையை திருமணம் செய்து கொண்டது குறித்து தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் ராஜ் கூறும்போது, நான் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்தவன். கணினி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகிறேன். </p><p>இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம்  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழி என்பவர் அறிமுகமானார் .</p><p>அவர் திருநங்கை என்பது எனக்கு முதலிலேயே தெரியும். முதலில் எங்களது பழக்கம் சாதாரண நட்பாக தொடங்கியது. தொடர்ந்து இரண்டு வருடம் நட்பாக பழகி வந்தோம். அவரை திருச்செங்கோடு நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறேன். அவரை பார்த்ததும் எனக்கு பிடித்து விட்டது . இருந்தாலும் இரண்டு வருடமாக நல்ல நட்புடன் பழகி வந்தோம். பின்னர் நான் தான் எனது காதலை முதல் முதலாக அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் உடனடியாக காதலை ஏற்கவில்லை நண்பர்களாகவே பழகலாம் என்று கூறிவிட்டார். </p><p>பின்னர் அவருக்கும் என்னை பிடித்து நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம் . இந்நிலையில் எங்கள் காதல் விவகாரத்தை எங்கள் வீட்டில் தெரிவித்தேன். கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் அவரது வீட்டில் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடு நடந்ததால் இனியும் தாமதிக்கக்கூடாது என்பதால் கோபியில் சட்டப்படி சுயமரியாதை செய்து கொண்டோம் என்றார் .</p><p>இதுகுறித்து திருநங்கை கயல்விழி கூறும்போது,</p><p>நான் சினிமாவில் தோற்றம், கந்தமலை, ராவண ராமணன் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் தோற்றம், கந்தமலை படம் ரிலீஸ் ஆகிவிட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரியலான டாசிக் பார்ட்டியில் நடித்து வருகிறேன்.</p><p>முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம். அவர்தான் முதன்முதலில் காதலை என்னிடம் சொன்னார். நான் அப்போது சூழ்நிலை காரணமாக காதலை ஏற்கவில்லை. அதன்பிறகு நானும் காதலை ஏற்றுக்கொண்டேன் . </p><p>எங்கள் காதல் விவகாரம் பிரவீன் ராஜ் வீட்டிற்கு தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் கோவிலில் நாங்கள் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்கு திருமணம் செய்து வைத்ததில்லை என்று கூறி சான்றிதழ் தரவில்லை. </p><p>இதனை அவர்கள் வீட்டில் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எங்களை பிரிப்பதற்காக பிரவீன் ராஜை கட்டாயப்படுத்தி சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கே அவர் 3  வருடமாக தங்கியிருந்தார். எனினும் நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம் . இந்நிலையில் பிரவீன் ராஜிக்கு அவசரமாக வேறொரு பெண்ணை திருமணத்துக்காக நிச்சயம் செய்தனர்.</p><p>இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருச்செங்கோடு வந்தார். அதனை அடுத்து நாங்கள் சட்டப்படி திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை நாடினோம். எனது பெற்றோர் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டோம் . தற்போது நாங்கள் திருச்செங்கோட்டில் இருக்கிறோம். கண்டிப்பாக எனது மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜிக்கு நல்ல மனைவியாகவும், அவரது குடும்பத்தினருக்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன், என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் சிக்கன் கடைகள் 
நாளை வழக்கம் போல் செயல்படும்- வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-chicken-shops-to-remain-open-despite-shutdown-call#comments</comments><guid isPermaLink="false">454ac728-5da0-48ec-8fe4-3f1197af4b11</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:30:19 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:30:19.636Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Chicken,சிக்கன் தடை,வியாபாரிகள் சங்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chicken]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/ec2vg0iu/chicken.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு  தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர். </p><p>திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் அதிக அளவு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF" rel="nofollow">கோழி கறி</a> விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால்  கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று  தெரிவித்துள்ளது. </p><p>சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.  அதாவது 6 லட்சம் கிலோ  கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை  பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். </p><p>பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். </p><p>ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால்  எங்களது கோரிக்கை குறித்து  கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். </p><p>இவ்வாறு அவர் கூறினார். </p><p>சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது. </p><p>சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது. </p><p>சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consult-with-chicken-biryani-with-nutritious-meal-for-government-school-students" rel="nofollow">கோழி இறைச்சி </a>பயன்பாடு உள்ளது.  அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசைக் கண்டித்து ஆக. 3-ல் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-announced-dmk-protest-against-tvk-govt-on-august-3rd#comments</comments><guid isPermaLink="false">54e136d7-8591-468e-8e0d-23d3e0117b09</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:18:30 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:18:30.140Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,மேகதாது அணை,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/1vdvj5cl/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.</p><h2><strong>கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்</strong></h2><h3><strong>தேர்தலுக்கு முன்பு</strong></h3><p>“5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும்.”</p><h2><strong>தேர்தலுக்குப் பின்பு</strong></h2><p>50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி என்ற வெற்று அறிவிப்பை வெளியிட்டு, அதன் காரணமாக விவசாயிகள் வெகுண்டெழுந்து தற்போது வரை போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதால், 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.</p><p>சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும்.</p><h2><strong>மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படா நிலை</strong></h2><p>தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.</p><p>ஜூன் 11: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை கர்நாடக முதலமைச்சர் நேரில் சந்தித்து மேகதாது நிதியுதவி கோரி மனு அளித்துள்ளார்.</p><p>ஜூன் 12: ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது</a> திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.</p><p>ஜூலை 27: டெல்லியில் கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கூட்டம் நடத்தி, மேகதாது அணை கட்டக் கடைமடை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய ஜல்சக்தி துறை தெரிவித்த பதிலை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.</p><p>அதேநாளில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மேகதாது அணை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தியுள்ளார்.</p><p>ஊடகங்களிடம் தொடர்ந்து மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் எனவும், தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை எனவும் பேசி வருகிறார்.</p><p>இதற்கு மாறாக, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மவுனம் காத்து வருகிறார்.</p><p>இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று வேளாண் துறை அமைச்சர் சொன்னார். பின்னர் அவரும் இன்னும் சிலரும் இல்லை என்று மறுத்தார்கள்.</p><p>இப்போது தமிழ்நாடு சார்பில் சில விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக, கர்நாடக முதலமைச்சரே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக செல்வதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், காவிரியில் நமக்கு உரிய பங்கினை வழங்க காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும், அதனை நிறைவேற்ற முடியாது என்று கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார்.</p><p>அதுமட்டுமல்ல, மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தின் மூலம் வலியுறுத்தி இருக்கின்ற நிலையில், இந்த கர்நாடக பயணம் இதனை நீர்த்துபோகச் செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.</p><p>இப்படி இந்த அரசைப் பொறுத்தவரையில் எந்தத் தகவல்களிலும் தெளிவு இல்லை; எதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. எதற்கெடுத்தாலும் குழப்பம்; எல்லாவற்றிலும் ஏமாற்றம். இதுவே இந்த அரசின் வழக்கமாக மாறியிருக்கிறது.</p><p>தனது திரைப்படம் கர்நாடகம் வெளியாவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காகவே முதலமைச்சர் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசாமல் அமைதி காப்பதாக ஊடகங்களில் ஓயாமல் செய்திகள் வெளியாகின்றன. அதற்கும் எந்தப் பதிலும் இல்லை.</p><h2><strong>அனைத்துக் கட்சிக் கூட்டம்</strong></h2><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்தோடு, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டச் சொல்லி, முதலமைச்சருக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் உட்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும், விவசாயச் சங்கங்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார் முதலமைச்சர்.</p><p>மாநிலத்தின் முக்கியப் பிரச்சனையில் யார் குரலையும் கேட்காமல் indifferent ஆகவும், inactive ஆகவும் இந்த அரசு இருப்பது நல்லதல்ல.</p><p>அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கும் தி.மு.க.தான் அழைப்பு விடுக்க வேண்டும் என முதலமைச்சர் எதிர்பார்க்கிறாரா? அரசால் முடியாது என்றால் சொல்லிவிடுங்கள்; அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.</p><h2><strong>விவசாயிகளின் அடுத்த பெரும் பிரச்சனை</strong> </h2><h3><strong>குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு</strong></h3><p>கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி மட்டுமே நடப்பதாகச் செய்திகள் வருகிறது.</p> <p>இதனால் 2,500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு 14 இலட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். எனவே அவர்களுக்குக் கீழ்க்கண்ட வகையில் தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகுப்பினைக் காலம் தாழ்த்தாமல் அறிவித்திட வேண்டும்.</p><p>1) ஏக்கர் ஒன்றுக்குக் குறுவை நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய்.</p><p>2) காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்பீடு கிடைக்க உதவி.</p><p>3) சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியமாக வழங்குதல்.</p><h2><strong>கழகம் சார்பில் டெல்டா மண்ணில் போராட்டம்</strong></h2><p>இப்படி, விவசாயப் பெருமக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும் வரும் 03-08-2026 அன்று காலை 10.00 மணியளவில், தஞ்சாவூர், பனகல் கட்டடம் அருகில் கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தி.மு.க. முடிவெடுத்துள்ளது.</p><p>இப்போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழகத் துணை அமைப்புகளானப் பல்வேறு சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த தோழர்களும், இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் கட்சிகளின் தோழர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் விரைவில் வென்றிடத் துணை நிற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது, விவசாயிகளின் குரலைக் கேட்காமல் இருக்கும் த.வெ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கைதான். அரசின் இந்த மெத்தனப்போக்குத் தொடர்ந்தால், மிகப்பெரிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-pays-tribute-on-dr-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">dd58ed12-4ff8-4f85-9c86-ecb58623d7bc</guid><pubDate>Thu, 30 Jul 2026 07:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-30T07:08:55.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,பிறந்தநாள் வாழ்த்து,birthday wish,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி,Doctor muthulakshmi reddy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanismy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/03/29/10980480-eps.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்ட மேலவை உறுப்பினராகவும், தலைசிறந்த மருத்துவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்வி, பெண்ணுரிமை, குழந்தைகள் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-seats-to-central-pool-controversy#comments</comments><guid isPermaLink="false">a1283d03-266e-4dfe-adf1-5d0b7ef5a97e</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:35:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:35:28.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,மருத்துவ இடங்கள்,Medical seat,முக ஸ்டாலின்,Minister Arunraj,அமைச்சர் அருண் ராஜ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Arunraj]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/8an8kzmb/Arun-raj.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மருத்துவ இடங்கள் மத்திய தொகுப்பிற்கு சென்ற விவகாரம் தொடர்பாக,"தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக" முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பதில் அளித்துள்ளார்.</p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.</p><p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-super-speciality-medical-seats-lost-mk-stalin-questions-dmk-government" rel="nofollow">சூப்பர் ஸ்பெஷாலிட்டி</a> இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.</p><p>தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?</p><p>மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?</p><p>நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?</p><p>அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?</p><p>தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">தீர்மானம்</a> நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?</p><p>29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?</p><p>இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.</p><p>எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.</p><p>த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><h2>அமைச்சர் அருண்ராஜ்</h2><p>முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:-</p><p>2024-ல் 119 இடங்களும், 2025-ல் 149 இடங்களும் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் எந்த எதிர்ப்பும் இன்றி மத்திய அரசிற்கு சரண்டர் செய்யப்பட்டன.</p><p>கட் ஆஃப் அதிகமாக இருப்பதால் மாணவர்களை முழுமையாக சேர்க்க முடியவில்லை; மத்திய அரசு கட் ஆஃப்-ஐ குறைத்து மாணவர்களை சேர்த்து கொள்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு: கைதாகிறாரா செந்தில் பாலாஜி...?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-scam-case-will-senthil-balaji-be-arrested#comments</comments><guid isPermaLink="false">919a0d93-b0f5-454e-aafc-411830e83a53</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:34:40 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:34:40.039Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,wineshops,டாஸ்மாக்,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,TASMAC irregularities</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/0vnadxhv/senthil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong></h2><p>முன்ஜாமீன் கோரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed">செந்தில் பாலாஜி</a> தாக்கல் செய்த மனுவை விசாரித்த 'நீதிபதி ஜி.கே.இளந்திரையன்', மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். விசாரணையின் போது, "டாஸ்மாக் நிறுவனத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதற்கும், அதன் மூலம் அரசு கருவூலத்திற்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதற்கும் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததற்கான ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் தெளிவாக உள்ளன." இந்நிலையில், எதனடிப்படையில் முன்ஜாமீன் கோருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.</p><h2><strong>11 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு:</strong></h2><p>தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகளும், 3,240 மதுக் கூடங்களும் (பார்கள்) இயங்கி வருகின்றன. 2021 முதல் 2025 வரை மது விற்பனை உயர்ந்தபோதிலும், அரசுக்கான வருவாய் கணிசமாகக் குறைந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை  தீவிர விசாரணை நடத்தி, 11 பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட '7 பேர்' குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>போலி டெண்டர் மற்றும் கூட்டுச்சதி:</strong></h2><p>2021-ஆம் ஆண்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கிக் கிளையிலிருந்து தொடர்ச்சியான எண்களில் வரைவு காசோலைகளை பிணையத் தொகையாகச் செலுத்தியதன் மூலம் கூட்டுச்சதி அம்பலமாகியுள்ளது.</p><h2><strong>பாட்டில் சேகரிப்பு முறைகேடு:</strong></h2><p>45 கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் நடைமுறையிலும் முறைகேடு நடந்துள்ளது. மேலும், பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களைச் சேகரித்து மதுபான ஆலைகளுக்கு வழங்குவதில் ரூ.143 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>14 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:</strong></h2><p>வழக்கின் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், சென்னை, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2><strong>கைது செய்யப்படுகிறாரா?</strong></h2><p>வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியை விசாரணைக்காகக் கைது செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். </p>]]></content:encoded></item><item><title>மின் கட்டண உயர்வு புகார்: 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய திட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses#comments</comments><guid isPermaLink="false">50812a59-11f7-47e0-b935-022b7d159d75</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:20:50 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:20:50.867Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,EB Charge Hike,தமிழ்நாடு மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/v8jaghsv/EB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மின் கட்டண உயர்வு புகார் வந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீடுகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.</aside><h2><strong>மின் கட்டண உயர்வு</strong></h2><p>தமிழகத்தில் ஜூலை மாத மின் கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார்கள் வந்தது. இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/topic/தமிழ்நாடு-மின்சார-வாரியம்">மின் நுகர்வு</a> கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மூத்த அதிகாரிகள் மூலம் மறு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.</p><p>கடந்த மே மாதம் வழங்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதம் மின் நுகர்வில் அதிக மாற்றம் காணப்பட்ட 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வை ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>இணைப்புகள் ஆய்வு</strong></h2><p>இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் 25 இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 இணைப்புகளையும், கோட்டப்பொறியாளர் 75 இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>அதேபோல், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50, உதவி கோட்டப் பொறியாளர் 100, வருவாய் புலனாய்வு பிரிவு கணக்கு அலுவலர் 150, மூத்த மதிப்பீட்டு அலுவலர் 150, வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர் 100, மதிப்பீட்டு அலுவலர் 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>இந்த ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.அருண் ராய் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு வழக்கு : செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-anticipatory-bail-petition-dismissed#comments</comments><guid isPermaLink="false">8cb450a7-a222-4137-a71f-f22739fbdc01</guid><pubDate>Thu, 30 Jul 2026 06:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-30T06:06:28.364Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac case,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/gimmnvvk/senthilbalaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது.</aside><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>தி.மு.க. ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">செந்தில்பாலாஜி</a> மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கூட்டுச் சதி மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். 120, 167, 409, 109, 420, 61 (2), 201, 316 (5), 13 (2) ஆகிய சட்டப்பிரிவுகளில் செந்தில் பாலாஜி மற்றும் டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் கார்த்திக் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.</p><h2><strong>சம்மன்</strong></h2><p>இது தொடர்பாக 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியிடம் நேரில் சென்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டி இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாகவும் அப்போது அவரிடம் நேரில் பல்வேறு தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர். </p><h2><strong>டிஜிட்டல் ஆவணங்கள்</strong></h2><p>இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. </p><p>இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-case-senthil-balajis-anticipatory-bail-plea">முன் ஜாமின்</a> கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. </p><h2><strong>முகாந்திரம் உள்ளது</strong></h2><p>அப்போது, முதல் தகவல் அறிக்கையில் தன் மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. </p><p>காவல்துறை தரப்பில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் விரிவான விசாரணை தேவை என கூறப்பட்டது. </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜிகே. இளந்திரையன்,  முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாரந்திரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது. இதனால் முன் ஜாமின் தர மறுப்பு தெரிவித்து செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள்- முதலமைச்சர் விஜய் புகழாரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-to-doctor-muthulakshmi-reddy-birthday#comments</comments><guid isPermaLink="false">32716fed-6e34-446e-93c0-445eb9967389</guid><pubDate>Thu, 30 Jul 2026 05:01:43 +0000</pubDate><atom:updated>2026-07-30T05:01:43.283Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Dr Muthulakshmi Reddy,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/9inpxa9a/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a>, இந்தியாவின் மிக முக்கிய சமூகப் போராளியும் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.  அதில், பெண்களின் சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய மகத்தான சேவைகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>சமூகப் போராளி</strong></h2><p>தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!</p><p>டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.</p><p>அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர்… <a href="https://t.co/wip3GFieSA">pic.twitter.com/wip3GFieSA</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2082681800778981759?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-phase-2-works-cm-vijay-orders-speedy-completion#comments</comments><guid isPermaLink="false">eb20e855-6883-46b2-8c50-eb948dd67c33</guid><pubDate>Thu, 30 Jul 2026 04:52:06 +0000</pubDate><atom:updated>2026-07-30T04:52:06.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை மெட்ரோ,cm vijay,முதலமைச்சர் விஜய்,CM Vijay Inspects,Chennai Metro Phase 2,முதலமைச்சர் விஜய் ஆய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay Inspects Travel by Train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/nn7wv915/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். கள ஆய்வின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் சக பயணியாக ரெயிலில் பயணம் செய்து அவர்களுடைய கருத்துகளையும் கேட்டறிந்தார்.</p><h2><strong>அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணம்:</strong></h2><p>தலைமைச் செயலகத்தில் அன்றாடப் பணிகளை முடித்துக் கொண்டு புறப்பட்ட முதலமைச்சர் விஜய், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தார். அங்கு தானே டிக்கெட் பெற்றுக்கொண்டு ரெயிலில் ஏறினார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை பயணிகளுடன் சேர்ந்து பயணித்த அவர், மக்களிடம் உரையாடினார். முதலமைச்சரைக் கண்ட பயணிகள் அவருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.</p><h2><strong>பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வு:</strong></h2><p>நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள், அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை விரிவாகக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.</p><h2><strong>101 அடி உயர மேம்பாலத்தில் பிரம்மாண்ட பாதை:</strong></h2><p>கிண்டி கத்திப்பாரா பகுதியில் சுமார் 101 அடி உயரத்தில், 1,354 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ரெயில் பாதையின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டு மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.</p><h2><strong>ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்:</strong></h2><p>தொடர்ந்து போரூர் மெட்ரோ ரெயில் நிலையம் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா  மெட்ரோ ரெயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றுப் பார்வையிட்டார்.</p><h2><strong>காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவு:</strong></h2><p>ஆய்வின் நிறைவாக, மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item></channel></rss>