<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 11:56:35 +0000</lastBuildDate><item><title>‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f4f14f3-8c6b-4bf7-a382-3415522374d1</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:44:35.109Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,President Donald Trump,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,</p><p>“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது. </p><h2>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்</h2><p>திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.</p><p>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?</p><h2>தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது</h2><p>இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை. </p><p>அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது. </p><p>விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-chance-today-and-tomorrow-in-chennai#comments</comments><guid isPermaLink="false">a1141394-d3c2-450a-8717-e6dc577da6c7</guid><pubDate>Tue, 01 Sep 2026 10:25:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T10:25:53.020Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,Chennai Rain,சென்னை மழை,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/q6mn1lo5/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em> </p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மற்றும் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>3-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 3-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காதலன்: திருமணம் நின்றதால் இளம்பெண் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-suicide-case-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/woman-suicide-case-police-investigation#comments</comments><guid isPermaLink="false">6103087d-9209-4bfb-ad92-2b6f2f75140a</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:57:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:57:51.185Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,young woman suicide,இளம்பெண் தற்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e0nj8ynt/suicide.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தற்கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ தற்கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/e0nj8ynt/suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.</strong></em></p><p>ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த மூப்பன்வலசை கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபால்-மணிமேகலை. இவர்களது மூத்த மகள் சரிதா. பி.எஸ்சி. பட்டதாரி. </p><h2><strong>வாலிபருடன் காதல்</strong></h2><p>பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவருடன் சரிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது நெருக்கமாக இருப்பது போன்று செல்போனில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.</p><p>காதலன் லோகேஷின் நடத்தை சரி இல்லாததை அறிந்த சரிதா அவருடன் இருந்த காதலை வெறுத்தார். லோகேஷின் செல்போன் அழைப்புகளையும் தவிர்த்தார். அவரிடம் இருந்து முழுவதுமாக விலகினார்.</p><h2><strong>திருமணம் நிச்சயம்</strong></h2><p>இந்த நிலையில் சரிதாவுக்கு ஏர்வாடி அருகேயுள்ள மெய்யன் வலசை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். அதற்கு சரிதாவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. </p><p>தன்னை விட்டு வேறொருவரை சரிதா திருமணம் செய்யப்போவதை அறிந்த லோகேஷ் ஆத்திரம் அடைந்தார். சரிதாவிடம் பேசிய அவர், உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவேன். அவ்வாறு செய்யக்கூடாது என்றால் நான் கேட்கும்போதெல்லாம் நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அதற்கு சரிதா ஒப்புக்கொள்ளாததால் லோகேஷ், சரிதாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.</p><p>மேலும் அந்த புகைப்படத்தை சரிதா திருமணம் செய்துகொள்ள இருந்த மணமகனுக்கும் அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாப்பிள்ளை உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.</p><h2><strong>திருமணம் நின்றது</strong></h2><p>இதையடுத்து மணமகன் வீட்டார், சரிதாவின் பெற்றோரை செல்போனில் அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று கூறியதுடன், அவரது செயல்பாடுகள் குறித்து புகார்களையும் தெரிவித்துள்ளனர். இதனால் சரிதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திருமணம் நின்று விட்டதாக உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. </p><h2><strong>மணப்பெண் தற்கொலை</strong></h2><p>திருமணத்திற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்கள் திருமணம் நின்று போனதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையே திருமணம் நின்று போனதால் அவமானம் தாங்காமல் மன உளைச்சலில் இருந்த சரிதா நேற்று வீட்டு அறையின் கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். </p><p>இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காதலன் லோகேசை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை சரிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.</p><p>இதற்கிடையே தலைமறைவான லோகேசை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>கருத்துச் சுதந்திரம் முதல் நீதித்துறை வரை முடக்கம்: வி-டெம் அறிக்கையைச் சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-indictment-bjp-govt#comments</comments><guid isPermaLink="false">37ea99b8-76d6-4718-be31-3591494b3d47</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:35:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:35:27.101Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/smi3n5o5/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஸ்வீடனின் கோத்தன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வி-டெம்’ (V-Dem Institute) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜனநாயக அறிக்கையில், இந்தியாவில் மக்களாட்சி நெறிமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்தியுள்ளது; பா.ஜ.க. அரசின் இந்த ஜனநாயக விரோத, அடக்குமுறைப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிக வன்மையாகக் கண்டிக்கிறது!</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/மாணிக்கம்-தாகூர்">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>அண்ணல் அம்பேத்கரும், பண்டித ஜவஹர்லால் நேருவும் தொலைநோக்குப் பார்வையோடு கட்டமைத்த இந்திய ஜனநாயகத்தை, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் திட்டமிட்டுச் சிதைத்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு ‘தேர்தல் சர்வாதிகார நாடாக’ சீரழிய வைத்து தலைகுனியச் செய்துள்ளது.</p><p>சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இனப்பாகுபாடு ஒழிப்புக்கான குழுவும் (UN CERD) வாக்காளர் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவது குறித்தும், சட்ட அமலாக்க அமைப்புகளின் முறைகேடுகள் குறித்தும் சுட்டிக்காட்டி கடும் கவலையைத் தெரிவித்துள்ளது.</p><p>வி-டெம் அறிக்கையின்படி, தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106- வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயகக் குறியீட்டில் 105-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஜனநாயகத்தை நோக்கித் தொடங்கிய சரிவு, மோடி ஆட்சிக் காலத்தில் உச்சகட்ட சர்வாதிகாரமாக உருவெடுத்து, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வரலாற்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><h2><strong>வி-டெம் அறிக்கையில் அம்பலமாகியுள்ள பா.ஜ.க. அரசின் முக்கிய ஜனநாயகப் படுகொலைகள் :</strong></h2><h2><strong>1. கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரப் படுகொலை</strong></h2><p>ஆளும் பா.ஜ.க. அரசின் தவறுகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டும் சுயேச்சையான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் தணிக்கைகளும் அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உலகளவில் பத்திரிகைத் தணிக்கை மற்றும் ஊடக ஒருதலைப்பட்சப் போக்கு மோசமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.</p><h2><strong>2. கல்வி மற்றும் கருத்துப் பரிமாற்றச் சுதந்திரம் முடக்கம்</strong> </h2><p>பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வகங்களின் தன்னாட்சி சிதைக்கப்பட்டு, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரமான ஆய்வு மற்றும் கருத்துப் பகிர்வுக்கான உரிமை திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கல்வி மற்றும் கலாச்சார வெளிப்பாட்டுச் சுதந்திரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள 41 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><h2><strong>3. அரசியலமைப்பு நிறுவனங்களின் தன்னாட்சி பறிப்பு</strong></h2><p>மக்களாட்சியின் தூண்களாக விளங்கும் தேர்தல் ஆணையம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சுதந்திரமான தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் ஆளும் கட்சியின் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தன்னாட்சி உலகளவில் வீழ்ச்சியடைந்துள்ள 28 நாடுகளில் இந்தியாவும் தீவிரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. </p><h2><strong>4. நீதித்துறை சுதந்திரம் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் முடக்கம்</strong></h2><p>நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்ப்புகளைப் புறந்தள்ளுவதுடன், மக்கள் பிரச்சினைகளைப் பேசும் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பும் விவாதங்களும் திட்டமிட்டு முடக்கப்பட்டு வருகின்றன. அரசின் அத்துமீறல்களை நாடாளுமன்றம் விசாரித்துத் தட்டிக்கேட்கும் அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ள 20 முன்னணி நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளது.</p><h2><strong>5. தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் மீதான ஒடுக்குமுறை</strong></h2><p>சமூக நீதிக்காகவும், சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும் களத்தில் நிற்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் குரல்வளை நெரிக்கப்பட்டு முடக்கப்படுகிறது. மக்கள் உரிமை அமைப்புகளை ஒடுக்குதல் மற்றும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ள நாடுகளில் இந்தியா முக்கியக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.</p><h2><strong>6. தேர்தல் சர்வாதிகாரப் போக்கு</strong></h2><p>பெயரளவில் தேர்தல்களை நடத்திக் கொண்டு, மறுபுறம் உண்மையான கருத்துச் சுதந்திரம், அமைப்புகள் கூடும் உரிமை, குடிமை உரிமைகள் மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் ஆகியவற்றை அடியோடு வேரறுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்தியா ‘தேர்தல் சர்வாதிகார நாடாகவே’ வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2008 முதல் தாராளவாத ஜனநாயகக் குறியீட்டில் (LDI) -0.309 புள்ளிகள் வரை சரிந்து, உலகளவில் அதிக மக்களாட்சிச் சரிவைச் சந்தித்த டாப்-3 நாடுகளில் ஒன்றாக இந்தியா பதிவாகியுள்ளது.</p><p>‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்’ என்று உலக நாடுகளின் மத்தியில் வெற்று முழக்கமிடும் பிரதமர் நரேந்திர மோடி, உலக அரங்கில் நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கும் தலைகுனிவிற்கும் என்ன பதில் சொல்லப் போகிறார்?</p><p>இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் மக்களாட்சி மாண்புகளையும் காக்க தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கம் சமரசமின்றி களத்தில் நின்று போராடும்! சர்வாதிகார மோடி அரசின் அதிகாரக் குவிப்புக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேட்டூரில் விவசாயி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-surprise-visit-farmer-house-in-mettur#comments</comments><guid isPermaLink="false">e180d857-19e4-43fd-84cc-3d7c802feffd</guid><pubDate>Tue, 01 Sep 2026 09:21:05 +0000</pubDate><atom:updated>2026-09-01T09:21:05.869Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,விவசாயி,Farmer</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/lcvs4t7t/vijay5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation">மேட்டூர் அணை</a> மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர்  ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.</p> <p>மேலும் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த காலக்கட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும்.</p> <h2>மழை குறைவு</h2><p>மேட்டூர்அணையில் தண்ணீர் இருப்பை தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் குடிநீருக்காக திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது.</p> <p>இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.</p> <h2>90 அடியை தாண்டிய நீர்மட்டம்</h2><p>இதன்காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.</p> <p>அதன்படி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சேலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு   காலை 9.30 மணிக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், எம்.எல்.ஏக்கள் மற்றும் கலெக்டர் இளம்பகவத் மற்றும்  போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். </p> <p>வரவேற்பை பெற்றுக்கொண்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வேன் மூலம் மேட்டூர் புறப்பட்டார். அப்போது வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பொதுமக்களை பார்த்த முதலமைச்சர் விஜய் வணக்கம் தெரிவித்தப்படி சென்றார்.</p><p>மேலும் விஜய்யை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டு மேட்டூர் அணை பகுதிக்கு வந்தடைந்தார். </p><h2>தண்ணீர் திறப்பு</h2><p>பின்னர் முதலமைச்சர் விஜய் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மின்விசையை 11.40 மணிக்கு இயக்கி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரில் பூக்கள், நெல் மணிகளை தூவி வணங்கி வரவேற்றார். </p> <h2>புகைப்பட கண்காட்சி</h2><p>தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில் மேட்டூர் அணை குறித்த விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் அணையின் இதய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீராய்வு நிலவறையை பார்வையிட்டார். மேலும் மேட்டூர் அணையின்  இடது புறமுள்ள  மின்நிலையத்தையும் முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நின்ற கட்சி நிர்வாகிகள், விவசாயிகளை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு முதலமைச்சர் நெல் மணியை கொடுத்தார். விவசாயிகள் அவருக்கு பச்சை துண்டை அணிவித்தனர். அப்போது அவர்களுடன் நின்று புகைப்படமும் எடுத்து கொண்டார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/buls44qh/vijay4.jpg" /></figure><h2>முதல் முறையாக</h2><p>முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய், முதல்முறையாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். </p><p>இன்று மேட்டூர் அணையில் இருந்து முதலில் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்து  விடப்பட்ட நிலையில் பின்னர் நீர்திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் நீர்திறப்பு 12ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இதனால் அணையின் மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் மின்உற்பத்தி தொடங்கப்படும். </p> <h2>விவசாயி வீட்டில் முதலமைச்சர்</h2><p>இந்நிலையில் மேட்டூரில் இருந்து சென்னை திரும்பும்போது விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்றார். சேலம் மாவட்டம் சின்னக்காவூரில் உள்ள விவசாயி வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றார். அங்கிருந்த மூதாட்டி முதலமைச்சர் விஜயின் கையை பிடித்து அழைத்து சென்றார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய், வேளாண் பணிகள் குறித்து விவசாயியிடம் கேட்டறிந்தார். சின்னக்காவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார். </p><p>இதுதொடர்பாக விவசாயி கூறுகையில், முதலமைச்சர் திடீரென எங்களது வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>கோவில்களில் இன்று முதல் செல்போன்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-in-temples-from-today#comments</comments><guid isPermaLink="false">4a0cac46-804b-4f42-b26d-303c3c832c2e</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:48:29 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:48:29.379Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>செல்போன் தடை,இந்து சமய அறநிலையத்துறை,HRCE Department,Mobile Ban,Devotees Notice,TN Temple Mobile Ban</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mobile Ban ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ob2vhtnh/Mobile-Ban?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி, ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தடுப்ப தற்காக கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்துசமய அறநிலையத்துறை</a> இன்று முதல் தடை விதித்துள்ளது.</p><h2>தொடரும் தடை உத்தரவு</h2><p>ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 52 பெரிய கோவில்களில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன் தடை </a>விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>இன்று முதல் தடை அமல்</h2><p>சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று காலையில் செல்போன் பாதுகாப்பு மையத்தில் செல்போன்களை வைக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். </p><p>அவர்கள் செல்போன்களை கொடுத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்று சென்றனர்.</p><h2>சென்னையில் தடை அமல்</h2><p>இதேபோல் சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீர ராகவர் கோவில், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு பெட்டகத்தில் கொடுத்து விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.</p><h2>தமிழகம் முழுவதும் தடை</h2><p>பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும் செல் போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட தால் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு பெட்டகத்தில் பக்தர்கள் செல்போன்களை கொடுத்து விட்டு கோவிலுக்குள் சென்றனர்.</p><p>உள்ளூர் பக்தர்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் சென்ற வாகனத்திலும் செல்போன்களை வைத்து விட்டு சென்றதை காணமுடிந்தது.</p>]]></content:encoded></item><item><title>முழுநேர தலைவர், உறுப்பினர்-செயலாளரையும் நியமனம் செய்ய வழிவகை செய்யும் சட்ட மசோதா: அமைச்சர் தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/legislative-bill-providing-for-the-appointment-of-a-full-time-chairperson-and-a-member-secretary#comments</comments><guid isPermaLink="false">9b0c5edc-babf-4404-aa55-ca659061c339</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:45:51 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:45:51.850Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/69plcop6/rajkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது,</p><p>1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 9-எப்  பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில மேம்பாடு, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p>நகர்ப்புற வளர்ச்சியின் அளவும் அதன் சிக்கல் தன்மைகளும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செலுத்துவதும், உரிய நேரத்தில் முடிவுகளை எடுப்பதும் அவசியமாகிறன.</p><p>எனவே, நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முழுநேரத் தலைவரையும் முழுநேர உறுப்பினர்-செயலாளரையும் நியமிப்பது அவசியமெனக் கருதப்படுகிறது.</p><p>இதன் மூலம், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் செயல்பணிகளில் அதிக கவனம், தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதிசெய்ய இயலும். அதேவேளையில், மாவட்ட நிர்வாகத்துடன் பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்படுவார்.</p><p>திட்டப் பரப்பிடம் அல்லாத பிற, பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலை கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும்.</p><p>இந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும்,</p><p>நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.</p><p>அதற்கு ஏற்ப சட்ட  திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.</p><p>இவ்வாறு  கூறப்பட்டுள்ளது </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:32:51.679Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடி- இளைஞர் தற்கொலை: தடுக்கத் தவறிய காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility#comments</comments><guid isPermaLink="false">0883208d-4789-4919-aebc-7bd3fd793273</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:29:32.784Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,காவல்துறை,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,நிதி நிறுவன மோசடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4ckj2y7k/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டு</strong></h2><p>மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை இலட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.</p><h2><strong>மோசடி</strong></h2><p>தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய  3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன. கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம்  ரூ.2000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.</p><p>ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.</p><p>ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும்  அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.</p><h2><strong>பொறுப்பேற்பு</strong></h2><p>இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.</p><p>கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.</p><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>ஒரு நாளில் உயிர் தப்பினோம் - நேபாள வெள்ளத்தில் இருந்து மீண்ட கோவை பக்தர்களின் பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/narrow-escape-coimbatore-pilgrims-recount-nepal-flood-ordeal#comments</comments><guid isPermaLink="false">8e2eec39-afe8-4d81-b71a-6aba84714d4f</guid><pubDate>Tue, 01 Sep 2026 08:15:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T08:15:13.676Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>rescue,nepal flood,நேபாள பெருவெள்ளம்,தமிழர்கள் மீட்பு,Coimbatore Devotees,கோவை பக்தர்கள்,Kailash Yatra</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal Flood ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/frel71dw/Nepal-Flood?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nepal-flood">நேபாளத்தில்</a> கடந்த மாதம் 26-ந் தேதி ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.</p><h2>தமிழர்கள் மீட்பு</h2><p>வெள்ள பாதிப்பில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">தமிழகத்தில்</a> இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற பலரும் சிக்கி நேபாளம், திபெத் போன்ற இடங்களில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். </p><p>அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் பலனாக ஒவ்வொரு குழுவினராக மீட்கப்பட்டு சொந்த ஊர் திரும்பிய வண்ணம் உள்ளனர்.</p><p>அந்த வகையில் கோவை, திருப்பூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த 28 பேர் விமானம் மூலமாக இன்று கோவை வந்தனர்.</p><h2>கோவை விமான நிலையம்</h2><p>கோவை விமான நிலையத்தில் அவர்களுக்கு உறவினர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>ரோஜா பூக்களை கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களை உறவினர்கள் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.</p><p>சொந்த ஊர் திரும்பியவர்கள் பதட்டத்துடனேயே இருந்தனர். அவர்கள் நேபாளத்தில் அவர்கள் சந்தித்த பெரும் துயரம் குறித்து கண்கலங்கியபடி பேசினர்.</p><h2>பிரேமா (திருப்பூர் கணியம்பூண்டி)</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து அறிந்து பெரும் துயரம் அடைந்தோம். நாங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை பாதிப்புக்கு முன்னதாக ஒரு நாளைக்கு முன்பு தான் கடந்திருந்தோம். </p><p>அதனால் உயிர் தப்பினோம். பாதிப்பு நடந்த மறுநாள் தான் எங்களுக்கு விவரமே தெரியவந்தது. இதைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.</p><p>ஆனால் நாங்கள் இருந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது பத்திரமாக அனைவரும் ஊருக்கு திரும்பி விட்டோம்.</p><h2>தனசேகரன் (புஞ்சை புளியம்பட்டி, ஈரோடு)</h2><p>நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தோம். நாங்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து அதன் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்ட படி கைலாஷ் யாத்திரை மேற்கொண்டோம். </p><p>தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் போது தான் இந்த தகவல் கிடைத்தது. உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம்.</p><p>எங்கள் உறவினர்கள் எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பிறகு எங்கள் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு நாங்கள் பயணத்தை தொடர்ந்தோம். </p><p>நேற்று காலை தான் நேபாளத்திலிருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். இதற்காக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>மோகனா (திருப்பூர் ஊத்துக்குளி)</h2><p>நாங்கள் அனைவரும் 18-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு நேபாளம் சென்றோம். நாங்கள் சுற்றுப் பயணத்தில் இருந்தபோது இந்த தகவல் எங்களது உறவினர்கள் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.</p><p>உடனே அனைவரும் பதட்டம் அடைந்தோம். சம்பவம் நடந்த வெள்ள பகுதியை நாங்கள் அதற்கு முன்பு 3 நாட்களுக்கு முன்புதான் கடந்து வந்து இருந்தோம். அதன் பிறகு சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்து விட்டன.</p><p>ஆனாலும் நாங்கள் திட்டமிட்டபடி பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். இதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவியாக இருந்தன. இதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><h2>சரோஜா, ரதி (சத்திய மங்கலம்)</h2><p>நாங்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்று இருந்தோம். எங்களுக்கு உதவியாக நேபாளத்தைச் சேர்ந்த 7 வழிகாட்டிகள் வந்தனர்.</p><p>இந்த வெள்ள சம்பவத்தில் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உதவியாளர் ஒருவரின் உடன் பிறந்த அண்ணன் ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டதாக சுற்றுப்பயணத்தில் இருந்த போது தகவல் கிடைத்தது. </p><p>அந்த உதவியாளர் அவரது அண்ணனை இழந்தாலும் கடைசி வரை எங்களுடன் இருந்து வந்தார்.</p><p>நாங்கள் இருந்த பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததால் நைலம் வழியாக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளோம். எங்களை சீன ராணுவம் 2 வாகனத்தில் வந்து பத்திரமாக கொண்டு வந்து விட்டனர்.</p><p>இந்த சம்பவத்தில் எவ்வளவு பேர் இறந்தனர், மாயமானார்கள் என்பது குறித்து அங்குள்ள மக்கள் பதட்டத்துடன் பேசிக் கொண்டனர். மொழி தெரியாததால் எங்களுக்கு புரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.</p><h2>நேபாளத்தில் இருந்து திரும்பிய பெற்றோரை வரவேற்க வந்த திருப்பூரைச் சேர்ந்த அஜய் என்பவர் கூறியதாவது:-</h2><p>நாங்கள் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர் மோகனா (47), சந்திரகுமார் (57) கடந்த 18-ந் தேதி திருப்பூரில் இருந்து 39 பேருடன் நேபாள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றனர்.</p><p> 2 வாரம் அவர்கள் அங்கு சுற்றுப்ப யணம் செய்து ஆன்மீக தரிசனம் மேற்கொண்டிருந்தனர்.</p><p>26-ந் தேதி நேபாளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்து பெற்றோரை தொடர்பு கொண்டோம். அவர்களுடன் செல்போனை எடுத்து பேசினர். </p><p>அதன்பிறகே நாங்கள் சற்று நிதானம் ஆனோம். அவர்கள் மானசரோவர் என்ற இடத்தில் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சம்பவம் நடந்த போது ஏதோ நிலச்ச ரிவு ஏற்பட்டது போன்ற உணர்வை சந்தித்ததாகவும் கூறினர்.</p><p>சீனா எல்லையில் இருந்த தால் எனது பெற்றோர் உள்ளிட்ட குழுவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதன் பிறகு சாலைகள் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் திட்டமிட்ட படி திரும்ப முடியவில்லை. சீன ராணுவம் எல்லையை கடக்க உதவியுள்ளனர். </p><p>அதன் பிறகு எனது பெற்றோர் மற்றும் குழுவி னர் டெல்லி வந்து கோவைக்கு விமானத்தில் வந்தனர். இன்று காலை அவர்களை நேரில் பார்த்தபிறகு தான் நிம்மதி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல்  மலிவு விலையில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-venkatramanan-says-onions-to-be-sold-at-subsidized-prices-in-ration-shops-starting-from-the-3rd#comments</comments><guid isPermaLink="false">8166eb79-70c7-48ae-b34a-ee81a6677170</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:54:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:54:26.514Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,Onion,வெங்காயம்,ரேஷன் கடை,TN assembly,onion price,வெங்காயம் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வெங்கட்ரமணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/ko6qixyq/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.</strong></em> </p><p>அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன்  <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> பேசியதாவது, </p><p>கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தும் வகையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது. </p><p>ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றதால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயங்கள்</a> போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதிக வெங்காய உற்பத்தியை கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> <p>முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் பிரதான விற்பனை பண்டகசாலைகள் உறுப்பினர் அவர்களுக்கு அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட 8739 நியாய விலை கடைகளில், வரும் 3ஆம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காமராஜருக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் கொடுக்கவில்லை- காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு விளக்கம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina#comments</comments><guid isPermaLink="false">c97ac038-192e-41be-93ac-9efdca842916</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:08.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,காமராஜர்,TN assembly,Tharahai Cuthbert,தாரகை கத்பட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thangam Thennarasu - Tharahai Cuthbert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vbrcm9xf/thangamthennarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தாரகை கத்பட்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district">சட்டசபையில்</a> காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D">தாரகை கத்பட்</a> பேசுகையில், திமுக ஆட்சிக் காலத்தில் காமராஜருக்கு மெரினா கடற்கரையில் உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார். இதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசியதாவது:</p> <h2>தங்கம் தென்னரசு</h2><p>வரலாற்றில் இந்த பேரவையின் பிழையான செய்திகள் பதிவாகி கூடாது என்ற நோக்கத்தோடு விளக்கம் அளிக்கிறேன்.</p><p>1975-ம் ஆண்டு காமராஜர் இயற்கை எழுதினார். அவர் மரணமடைந்த செய்தியை கேட்டவுடன் அன்றைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை செலுத்தினார்.</p><h2>காமராஜர்</h2><p>இங்கு இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது உடலை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய காமராஜர் இல்லத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். காமராஜர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.</p> <h2>ராஜாஜி மண்டபம்</h2><p>அவரது உடலை ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டு வந்து உரிய அரசு மரியாதை அளிக்கப்பட்டது. கிண்டியில் காந்தி மண்டபத்தில் அருகில் அவருக்கும் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஆக இருந்தவர் இதனை பாராட்டினார்.</p> <h2>ராஜா ராம் நாயுடு</h2><p>பெருந்தலைவர் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழவில்லை. அப்பொழுதே உறுப்பினர் ராஜா ராம் நாயுடு மேலவையில் பேசியதை அவையில் மேற்கோள் காட்டி</p><h2>கலைஞர்</h2><p>காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் அந்த இடத்தை கேட்டார்கள். ஆகையால் கிண்டியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. காமராஜர் சமாதி மேற்கொள்ள அப்போதைய முதலமைச்சர் கலைஞர் இரவெல்லாம் தூங்காமல் அந்த பணியை மேற்கொண்டார் என ராஜாராம் நாயுடு சட்ட மேல் அவையில் பேசியதே சாட்சி. திமுக ஆட்சியில் காமராஜருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>சபாநாயகர்:-</h2><p>அந்த காலத்தில் கட்சி மாறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள்.</p><h2>காங்கிரஸ் தாரகை கத்பட்:-</h2><p>நான் பேசியது மெரினாவில் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றுதான், சமாதி மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் அவர்கள் மேற்கொண்டார்கள்.</p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் கூடாது - காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesh-chaturthi-idol-size-limit-kanchipuram-collector-sneha#comments</comments><guid isPermaLink="false">d5652352-a818-44a3-b9a2-c4359c159861</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:34:02 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:34:02.866Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Tamil Nadu Pollution Control Board,Vinayagar Chaturthi 2026,Kanchipuram Collector Sneha,கலெக்டர் சினேகா,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chaturthi 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/hultb4s9/Vinayagar-Chaturthi-2026?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி </a>விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.</p><p>இந்தநிலையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D">காஞ்சீபுரம் </a>மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் சிலை அமைப்பாளர்களுடன் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D">மாவட்ட கலெக்டர்</a> சினேகா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.</p><h2>கூட்டத்தில் கலெக்டர் சினேகா கூறியதாவது,</h2><p>எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலையை நிறுவ விரும்பும் எந்த ஒரு அமைப்பாளரும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தீயணைப்பு துறை போன்ற அரசு அலுவலகங்களின் தடையின்மைச் சான்று பெற்று சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளரிடம் முன்கூட்டியே சமர்ப்பித்து சிலை நிறுவுவதற்கான அனுமதியை சிலை அமைப்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.</p><h2>சுற்றுச்சூழல் பாதுகாப்பு</h2><p>மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளும், சிலைகளுக்கு வண்ணங்கள் பயன்படுத்துவதையும் ரசாயனங்கள் இல்லாத வகையில் சிலைகள் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p> சிலைகள் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்கு மிகாமல் நிறுவுவதை உறுதி செய்ய வேண்டும்.</p><h2>பாதுகாப்பு உறுதி</h2><p>கூடாரங்கள் தீப்பற்றக் கூடிய வகையில் இல்லாத வகையில் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.</p><p>பூஜையின் போது ஒலி பெருக்கி அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலையின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். போதிய மின் வசதிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.</p><h2>நல்லிணக்கம் அவசியம்</h2><p>அரசியல் கட்சிகள் வகுப்புவாத தலைவர்களுக்கு ஆதரவாக பேனர்கள் போர்டுகள் அமைக்கக் கூடாது. பிற மதத்தினரின் உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். </p><p>பொது அமைதி, பொது பாதுகாப்பு மத நல்லிணக்கத்தை பேணுவதற்காக வருவாய் துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வகுத்துள்ள நிபந்தனைகளை சிலை அமைப்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.</p><h2>கரைப்பு கட்டுப்பாடு</h2><p>மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்படும் இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.</p><p>சிலைகள் கொண்டு செல்லும் வாகனங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சிலைகள் கரைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.</p><h2>சுத்தம் வலியுறுத்தல்</h2><p>சிலைகள் கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் போன்றவற்றின் கரையோரங்களில் உள்ள சிலைகளை கரைக்கும் இடங்களில் எஞ்சியிருக்கும் பொருள்களை உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்து அகற்ற வேண்டும். </p><p>சிலைகள் கரைக்கும் நீரின் தரம் மதிப்பீட்டை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கரைப்பதற்கு முன்னும் கரைத்த பின்பும் தரத்தினை ஆய்வு செய்ய வேண்டும்.</p><h2>அனுமதி கட்டாயம்</h2><p>சிலை அமைப்பாளர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை துறை சார்ந்த அலுவலர்கள் தனி பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும். </p><p>கள ஆய்வு மேற்கொண்டு அரசின் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். </p><p>பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.</p><p>அவர்களிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் அனுமதியின்றி சிலைகள் வைக்கக் கூடாது என்று கூறினார்.</p><h2>அதிகாரிகள் பங்கேற்பு</h2><p>கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) ரெங்கநாதன் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த புதிய அறிவிப்புகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-announcements-made-by-ministers-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">9b5d1de7-0a74-4e51-bf76-7cd82efd4074</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:28:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:28:42.607Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் விஜய் பாலாஜி- முகமது பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/661f6dfm/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</strong></em></p><p>கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் விஜய் பாலாஜி அறிவித்த  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">புதிய அறிவிப்புகள்</a> :-</p><p>1) திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் கதர் அங்காடிகள் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர் அங்காடிகள் "கதர் வாரியத்தின் முகம்" என்பதை கருத்தில் கொண்டு அவற்றை நவீனப்படுத்துவது அவசியமாகும். அதன்படி ஏற்கனவே திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் இயங்கும் கதரங்காடிகள் புதிய வடிவமைப்பு மற்றும் உட்புற அலங்காரங்களுடன் கூடிய நவீன அனுபவ அங்காடியாக ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.</p><p>2) கதர் மற்றும் பட்டு உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கான நலநிதி பங்குத் தொகை 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.</p><p>3) திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலைத்தேன் அலகு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மத்திய கதர் ஆணை குழு உதவியுடன் அமைக்கப்படும்.</p><p>4) திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் வள்ளியூர் பனை பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.</p><p>5) தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்திற்குச் கூட்டுறவு சொந்தமான இடங்களில் 10 விற்பனை அங்காடிகள் ரூபாய் 80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><h2><strong>தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் முகமது பர்வேஸ்  புதிய அறிவிப்புகள்...</strong></h2><p>1) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல பதிவு செய்துள்ள வாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமானத் திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 76 கோடியே 46 இலட்சம் ரூபாய் செலவில் "கட்டுமானத் தொழில் திறன்மிகு மையங்கள்" நிறுவப்படும்.</p><p>2) தமிழ்நாடு தொழிலாளர்களின் கட்டுமானத் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழிற்பிரிவுகளில் போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பெறும் வெற்றியாளர்களுக்கு ஆண்டுதோறும் "முதலமைச்சரின் கட்டுமானத் தொழிலாளர் வெற்றி விருதுகள்" பரிசுத்தொகையுடன் வழங்கப்படும்.</p><p>3) தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கான நிதியினை 3 கோடியே 4 இலட்சம் ரூபாயிலிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>4) பெருநகரங்ளுக்கு வேலை தேடி வரும் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் தங்குவதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய இடை நேர தங்குமிடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பெருநகரங்களில் 14 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>5) பதிவு பெற்ற 1000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தரத்திலான சிறப்பு திறன் பயிற்சி அளித்து, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு "அயலகம் செல்லும் தமிழ்நாடு கட்டுமான வெற்றி கரங்கள்" திட்டம் 15 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.</p><p>6) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் 10 இலட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.</p><p>7) தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட 1000 தொழிலாளர்களுக்கு, இ-பைக் வாங்குவதற்கு வங்கி மூலம் பெறப்படும் கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.</p><p>8) தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் தானியங்கி மோட்டார் மற்றும் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களில், 1000 தொழிலாளர்களுக்கு புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கிட 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் மற்றும் 1000 தொழிலாளர்களுக்கு பயன்பாட்டில் இருக்கும் ஆட்டோக்களை சி.என்.ஜி முறைக்கு மாற்றுவதற்கு 50 சதவீத மானியத் தொகை அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.</p><p>9) கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமான வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வர்ணம் பூசுதல் வேலை உள்ளிட்ட பல தொழில் இனங்களில், நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதிய இழப்பீட்டுத் தொகையுடன் கூடிய ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி,50,000 தொழிலாளர்களுக்கு 48 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.</p><p>10) கட்டுமானத்தொழிலாளர்களுக்கு செயல்முறை பயிற்சி மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வினை மேம்படுத்தி விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்புமாதிரிகள் மற்றும் சுயபாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு நடமாடும் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மையங்கள் 2 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.</p><p>11) தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சேவைகளை திறம்பட வழங்கும் பொருட்டு இவ்வாரியத்தின் மறுசீரமைப்பு இணையதளம் செய்யப்படும்.</p><p>12) ஆசிரியர் தேர்வு வாரியம்  நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு மென்பாடக் குறிப்புகள்  வழங்குவதற்காக, மெய்நிகர் கற்றல் வலைதளத்திற்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு 15 68 இலட்சத்து ஆயிரம் ரூபாயிலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>13) கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்கள் அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வாரியத்தின் இணையதள சேவைகளை வழங்கும் வகையில் 50 வசதி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>14) அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 1 கோடி ரூபாய் செலவில் உயர் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்.</p><p>15) "ஐடிஐ வெளிநாட்டு வேலைவாய்ப்பு வெற்றி திட்டம்" மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை உறுதி செய்ய 7 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பதிலளிக்க திணறிய அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jagadeeshwari-struggled-to-answer-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">6b77c1e5-0a68-4ebd-806a-8f5284a59bf6</guid><pubDate>Tue, 01 Sep 2026 07:17:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T07:17:35.465Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,Minister Jagadeeshwari</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஜெகதீஸ்வரி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/jlf6tp17/minisgerjegadeeshwari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று கேள்வி நேரத்தின் போது விளையாட்டுத்துறை சம்பந்தமாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 23 கேள்விகளுக்கு சளைக்காமல் தொடர்ச்சியாக பதில் அளித்தார்.  </p><p>அதன் பிறகு பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம் கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர்  நேரடியான பதில் அளிக்காமல் தன்னிடம் இருந்த ஒரு குறிப்பை பார்த்து  பதிலை வாசிக்க ஆரம்பித்தார். </p><p>தொடர்ந்து துணை கேள்விகள் கேட்கும் போதும் அதே பதிலை மீண்டும் கூற ஆரம்பித்தார்.</p><p>அப்போது அருகில் இருந்த அமைச்சர்கள் காந்திராஜ், வினோத்  மற்றும் முன்னிருக்கையில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா அவரிடம் சில  ஆலோசனை கூறினர்.</p><p>இதையடுத்து அவர் எல்லா கேள்விகளுக்கும் முதலமைச்சரின் ஆலோசனைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரே பதிலை கூறி  சமாளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கள்ளக்காதலை கைவிட மறுப்பு- விஷம் வைத்து கொலை... ரம்பத்தால் உடல் துண்டு துண்டாக வெட்டு! அதிர வைத்த கூடுவாஞ்சேரி கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-full-details#comments</comments><guid isPermaLink="false">8a7519c4-f376-41ac-a83e-92cb76fc7f27</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:58:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:58:35.576Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,affair,தம்பதி கைது,Couple Arrest,கள்ளக்காதல்,Guduvancherry Woman Murder,கூடுவாஞ்சேரி பெண் கொலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ மணிப்பூரில் கைதான தம்பதியையும் அம்மாநில போலீசார் ஏ.கே.47 துப்பாக்கியுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/4rrspo75/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர். ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கூடுவாஞ்சேரி-பெண்-கொலை">கூடுவாஞ்சேரி</a> மசூதி தெருவில் ஒடிசாவை சேர்ந்த ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அசாமை  சேர்ந்த ராகுல் அவரது  மனைவி பகவதி மாஜி ஆகியோர் இந்த கொடூர கொலையை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><h2><strong>ரெயிலில்</strong></h2><p>கடந்த மாதம் ஹயாத் நிஷாவை கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில்  வைத்து கொலை செய்த பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டியதுடன் தலையையும் துண்டித்து அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து சூட்கேசில் அடைத்து சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்தது.</p><p>இது தொடர்பாக ஆக்ரா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய நிலையில் கூடுவாஞ்சேரி போலீசார் கொலையாளிகள் இருவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.</p><h2><strong>மணிப்பூரில் கைது</strong></h2><p>இதை தொடர்ந்து ராகுல், பகவதி மாஜி இருவரையும் மணிப்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது.</p><p>போலீஸ் விசாரணையில் இந்த கொலை தொடர்பான பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><p>கொலையுண்ட ஹயாத் நிஷாவுக்கு முறைப்படி ஒடிசா மாநிலத்தில் பெற்றோர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹயாத் நிஷா அவரை பிரிந்துள்ளார்.</p><p>இதன் பிறகு தான் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் ஒடிசாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். 2-வது கணவருடன் ஒன்றாக ஒடிசாவில் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹயாத் நிஷா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார்.</p><h2><strong>சென்னையில் காதல்</strong></h2><p>இதன் பின்னர் கூடுவாஞ்சேரிக்கு வந்து தனது 19 வயது மகனுடன் தங்கி இருந்துள்ளார். மகன் ஏ.சி. மெக்கானிக்காக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.</p><p>ஹயாத் நிஷாவும் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போதுதான் 3-வதாக அவருக்கு ராகுலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகினார்கள். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து சென்னையில் பல இடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.</p><h2><strong>மனைவிக்கு தெரியாமல்</strong></h2><p>ராகுல் மனைவிக்கு தெரியாமலேயே ஹயாத் நிஷாவுடனான காதலை வளர்த்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் பல முறை சந்தித்து பேசியதின் விளைவாக ஹயாத் நிஷா கர்ப்பமானார்.</p><p>இதை தொடர்ந்து அவர் ராகுலிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் ராகுலோ எனக்கு திருமணமாகி நான் மனைவியுடன் வசித்து வரும் நிலையில் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து வந்துள்ளார். </p><h2><strong>மிரட்டல்</strong></h2><p>ஆனால் ஹயாத் நிஷா தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீதான் தந்தை. எனவே அதற்கு பொறுப்பேற்று என்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் வேறு வழியின்றி ராகுல் தனது மனைவி பகவதி மாஜியிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதன் பிறகு பகவதி மாஜியும் ஹயாத் நிஷாவை கண்டித்துள்ளார். </p><p>எங்கள் குடும்ப வாழ்க்கையில் நீ தலையிடாதே. எங்களை நிம்மதியாக வாழ விடு என்று கூறியிருக்கிறார். ஆனால் ஹயாத் நிஷா அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து இருவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>உங்கள் இருவருடன் ஒரே வீட்டில் கூட நான் தங்கி கொள்கிறேன் என்று ஹயாத் நிஷா கூறியுள்ளார். இப்படி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்தனர். </p><p>இதன்படி கடந்த 3-ந்தேதி கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் வைத்து சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து ஹயாத் நிஷாவை ராகுலும், பகவதி மாஜியும் சேர்ந்து  சத்தம் இல்லாமல் கொலை செய்துள்ளனர். </p><h2><strong>ரம்பம்</strong></h2><p>இதற்காக கடைக்கு சென்று கத்தி, ரம்பம் ஆகியவற்றை புதிதாக வாங்கி உள்ளனர். அதை வைத்து தான் கொலை செய்த பிறகு ஹயாத் நிஷாவின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்து உள்ளனர். </p><p>ரம்பத்தை வைத்து தலை மற்றும் கை,கால்களை துண்டித்து சூட்கேசில் அடைத்து இருக்கிறார்கள். கத்தியை வைத்து சதை பாகங்களை அறுத்துள்ளனர். இதற்காக யூடியூப் மூலம் வீடியோ காட்சிகளை இருவரும் போட்டு பார்த்து உள்ளனர்.</p><p>சூட்கேசில் எளிதாக உடல் பாகங்களை அடைப்பதற்காகவே சதை பகுதி முழுவதையும் வெட்டி எடுத்ததுடன் தலை முடியையும் வழித்து எடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னர் சதை பாகங்களை பெரிய அண்டாவில் போட்டு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக அதில் வினிகர் உள்ளிட்ட திரவங்களை ஊற்றி உள்ளனர்.</p><p>யூடியூப் பார்த்து உடல் அழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என வீடியோக்களை ராகுலும், பகவதி மாஜியும் தெரிந்து கொண்டனர். இப்படி பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து ரெயிலில் அனுப்பி வைத்ததுடன் உடல் சதையையும் தனியாக துண்டித்தன் மூலம் நிச்சயம் நம்மை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்றே எண்ணி இருந்துள்ளனர்.</p><p>ஆனால் கூடுவாஞ்சேரி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி துப்பு துலக்கி கொலையாளிகள் இருவரையும் கைது செய்து சாதித்து காட்டி இருக்கிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே எங்கள் கனவு - அமைச்சர் ஆதவ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-says-our-dream-is-to-build-a-sports-stadium-like-nehru-stadium-in-every-district#comments</comments><guid isPermaLink="false">227698bb-ba84-4932-93df-ee269690fdfa</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:57:18 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:57:18.784Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ஜவகர்லால் நேரு ஸ்டேடியம்,Jawaharlal Nehru stadium,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/y8oahl3i/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சட்டசபை</h2><p>சட்டசபையில் வினா–விடை நேரத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament">அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</a>, விளையாட்டு கட்டமைப்புகள் தொடர்பாக சுமார் 23 எம்எல்ஏக்கள் கேட்ட துணை கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது </p> <h2>பாரம்பரிய விளையாட்டுகள்</h2><p>தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து, அனைத்து விளையாட்டு கட்டமைப்புகளும் இடம்பெறும் வகையில் உருவாக்க பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாநில அளவிலான போட்டிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p> <h2>விளையாட்டு வீரர்கள்</h2><p>கிராமப்புறங்களில் மைதானங்களில் மண் தரையில் விளையாடுவதால் மாணவ மாணவிகளுக்கு காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க, மேட் அமைத்து விளையாடும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன் காவிரியில் வளர்ந்தவன். டெல்டா பகுதிகளில் இருந்து அதிகளவில் வேகமாக ஓடக்கூடிய வீரர்கள் உருவாகின்றனர்.</p> <h2>கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம்</h2><p>தூத்துக்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் நீச்சல் வீரர்களும், தென் மாவட்டங்களில் கபடி வீரர்களும் அதிகளவில் உள்ளனர். கபடிக்கு சிறப்பு ஸ்டேடியம் உருவாக்கப்படும் </p><h2>நேரு ஸ்டேடியம்</h2><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்னை நேரு ஸ்டேடியம் போன்று விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது கனவு. மற்ற மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என அரசு கருதுகிறது . எதிர்காலத்தில் 36 ஆயிரம் பேர் அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கி பயிற்சி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p> <p>நன்னிலம் பகுதியில் விளையாட்டுகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறினார் நன்னிலம் பகுதியில் இருந்து ஒரு ஒலிம்பிக் வீராங்கனை உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைக்க முடியாது. குறைந்தபட்சம் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் முழுமையான வசதிகளை செய்து கொடுக்க முடியும் </p> <p>ஆனாலும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நிதி கேட்காமல் மினி ஸ்டேடியம் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.</p><p>சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம். கல்வராயன் மலை, உதகை, குன்னூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் விளையாட்டுக்கான சிறப்பு நிகழ்வுகள் போதிய அளவில் நடைபெறவில்லை.</p> <h2>விளையாட்டு அரங்கம்</h2><p> இப்பகுதிகளில் மதுப்பழக்கம் அதிகமாக உள்ள நிலையில், விளையாட்டை மலைவாழ் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p> ஒவ்வொரு மாவட்டத்திலும் அமையும் விளையாட்டு அரங்கில் நீச்சல் குளம், ஜிம், ஓடுதளம் உருவாக்கும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>2029-ல் தேர்தல் சூழல் மாறும் போது நாடாளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக மாறும்- ஆதவ் அர்ஜூனா பேச்சு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-says-when-the-electoral-landscape-shifts-in-2029-it-will-mark-the-day-neet-is-cast-out-of-parliament#comments</comments><guid isPermaLink="false">06f869b5-88ba-4081-9fbe-e1081b6c3a24</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:31:26 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:31:26.666Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,நீட் தேர்வு,Neet exam,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/63h97zdf/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது :-</p><p>இன்றைய தினம் தங்கை அனிதாவின் நினைவு தினம், 2017 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு மாநில பாடத்திட்டத்தில் படித்த அனிதா 1176 மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் 196.75 பெற்றிருந்தாலும், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து  தன்னுடைய கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி பெற முடியாத போது, நம்முடைய தங்கை உயிர் மாய்த்தார் </p><p>மூன்று  முதலமைச்சர்கள்  இந்த அவையிலும், திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும்  இன்றைய முதலமைச்சர் விஜய்யும் நீட்டுக்கு எதிராக இதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், செவி சாய்க்காத  அரசாக மத்திய அரசு  உள்ளது.</p><p>அண்ணா கனவு கண்ட இருமொழி கொள்கைக்காக போராடி இருக்கிறோம் அண்ணா கனவு கண்ட இட ஒதுக்கீட்டிற்காக போராடி இருக்கிறோம், ஆனால் அனைவரும் சேர்ந்து இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்தை வர இருக்கும் காலகட்டத்தில்  அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.</p><p>2029 ஆம் ஆண்டு தேர்தல் சூழல் மாறும் பொழுது, அனிதாவின் நினைவு நாளான இன்று பாராளுமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/நீட்-தேர்வு">நீட்</a> தூக்கி எறியப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும்.</p><p>இனி வரும் காலங்களில் நம் மாணவ- மாணவிகள் நம்பிக்கையாக இருங்கள், உறுதியாக இருங்கள் இன்னொரு உயிர் போகக்கூடாது, வெற்றி நம் பக்கம் ஒரு நாள் வரும்,</p><p>இந்த உயிரிழப்புகளுக்கு ஒரு நாள் பதில் அளிக்கும் வகையில் அரசியல் சூழல் மாறும், அனிதாவின் கண்ணீருக்கு விடை தேடி  நாம் ஒரு அரசியலை மேற்கொள்வோம்  என்றார்.</p><p>அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:- </p><p>தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் அனிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். எந்த அரசியல் சார்பும் இல்லாமல் நடத்தப்பட இருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு மற்றும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளனர். </p><p>15 நாட்களுக்கு முன்பாகவே நினைவேந்தல்  கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் காவல்துறை இதனை ஆர்ப்பாட்டம் என்று கூறி அனுமதி மறுத்துள்ளனர் .</p><p>அனிதாவின் சகோதரர் மணி  என்னை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>நீட் எதிர்ப்பு மரண தொடர்பாக இந்தியாவில் நேரிட்ட முதல் மரணம் அனிதாவின் மரணம். </p><p>அனிதா மரணம் அடைந்தபோது நம்முடைய  முதலமைச்சர் அன்றைக்கு வீட்டில் நேரடியாக சென்று விசாரித்தார்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அன்று சென்றிருந்தார்,</p><p>ஆளும் கட்சியும் இன்று நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஜனநாயக முறையில் அமைதியாக நடக்க இருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசாங்கம் அனுமதி  மறுத்து இருக்கிறது.</p><p>ஏன் அனுமதி மறுத்திருக்கிறது என்ற கேள்வியும் கேட்க விரும்புகிறேன். அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்திற்கு இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். </p><p>இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதில் கூறியதாவது,</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் திருவிழா நடைபெறுவதால், இன்னும் சில நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற உள்ளதால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p><p>வேறொரு நாளில் அனுமதி கேட்டால் அனுமதி அது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். அனிதாவின் நினைவு நாளான  இன்றாவது அரசியல் செய்யக்கூடாது என்று தெரிவித்தார்.</p><p>எதிர்க்கட்சித்  தலைவர் உதயநிதி ஸ்டாலின்:-</p><p>பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றம் கடந்த வாரம் முடிந்துவிட்டது, இத்தோடு செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தான் கூட்டம் வரும் நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் அங்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை.</p><p>நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில் அங்கு பெரிய கூட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p>நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது. அதனால் அரசு மாற்று இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா:-</p><p>உடனடியாக இந்த சூழல் தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுடன் பேசி மாற்று  இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சிவகாசி அருகே பூட்டப்பட்ட பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/horrific-fire-at-locked-firecracker-shop-near-sivakasi#comments</comments><guid isPermaLink="false">8d4e4562-cb93-432e-a9b6-ff7a1e9cde77</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:26:07 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:26:07.612Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சிவகாசி,Sivakasi,firecracker explosion,Virudhunagar district,firecracker shop,பட்டாசு கடை தீ,விருதுநகர் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Firecracker shop ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/qp7pywob/fire.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான <a href="https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion">பட்டாசு கடைகள்</a> மற்றும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே பூட்டப்பட்டிருந்த ஒரு பட்டாசு கடையில் எதிர்பாராதவிதமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><h2>ரூ.20 லட்சம் பட்<strong>டாசுகள் எரிந்து</strong> சாம்பல்</h2><p>கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒன்றன்பின் ஒன்றாக மிகக் கொடூரமாக வெடித்துச் சிதறின. இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எரிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் முற்றிலும் வெடித்து சிதறி சாம்பலாகின.</p><p>சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பல மணி நேரம் போராடி எரியும் தீயைக்ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பூட்டப்பட்ட கடை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.</p><h2>போ<strong>லீசார் தீவிர விசாரணை</strong></h2><p>விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கடையில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் வெப்பம் காரணமாக விபத்து நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">e8817533-71fe-4da5-afbd-33f9ad464cdd</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:09:01 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:09:01.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay - mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <h2>கர்நாடகாவில் மழை</h2><p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய் </h2><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார்.</p><p>சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.</p> <h2>உற்சாக வரவேற்பு </h2><p>பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலமைச்சர் விஜய்</a> திறந்து வைத்தார்.  காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.</p><p>மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p> <p>முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside#comments</comments><guid isPermaLink="false">9661ae8a-b754-46b6-9be4-a4e44c22d2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:58.008Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,சென்னை ஐகோர்ட்,Madras HC,H raja,எச் ராஜா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்.பி., கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/எச்-ராஜா">எச்.ராஜா</a>, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். </p><p>இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் , எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. </p><p>இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச்ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026#comments</comments><guid isPermaLink="false">f39e5adb-650a-4c5b-96e8-cc82fc561033</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:44:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:44:56.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து960-க்கும் விற்றது. </p><h2><strong>சற்று உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை குறைவு</strong></h2><p>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect#comments</comments><guid isPermaLink="false">080b7fa5-c0c6-46b0-b23b-e69286bb509b</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:25:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:25:40.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பூலித்தேவர்,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Puli thevar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டும்செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராகப் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> விளங்கினார்.</p> <p>இவரது காலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையின் வீரம் செறிந்த காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர்.</p><p>ஆற்காடு நவாப் முகமது அலியும் அவனுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயக் கம்பெனியும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முயன்றபோது, பூலித்தேவன் திறை (வரி) செலுத்த மறுத்துவிட்டார்.</p> <p>ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கருதி, பிற பாளையக்காரர்களான மேற்குப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டமைப்பை உருவாக்கினார். இதில் மாவீரன் ஒண்டிவீரன் போன்ற தளபதிகள் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.</p><p>பூலித்தேவனை அடக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட முகமது யூசுப்கான் பலமுறை நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டார். ஆரம்பத்தில் பூலித்தேவனின் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் கான்சாஹிப் திணறினார்.</p> <p>நீண்ட போர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப் படைகளின் உதவியோடு 1761-இல் நெற்கட்டும்செவல் கோட்டையைக் கான்சாஹிப் கைப்பற்றினார்.</p><p>கோட்டையை இழந்தாலும் பூலித்தேவன் சோர்வடையாமல், மறைவிடங்களில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.</p><p>இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாகப் போராடிய மாவீரர்களில் பூலித்தேவன் குறிப்பிடத்தக்கவர். </p> <p>இந்நிலையில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p> <p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>செப்.6-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை அலுவலகம் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-district-secretaries-meeting-on-september-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/admk-district-secretaries-meeting-on-september-6#comments</comments><guid isPermaLink="false">6dcabbcc-b176-4e89-b1af-37930ddd344f</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:23:23 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:23:23.937Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/tk6ntec8/ADMK.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிமுக தலைமை கழகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக தலைமை கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/tk6ntec8/ADMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெற இருப்பதாக கட்சித் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.</strong></em></p><h2><strong>தொடர் தோல்வியால் அதிருப்தி</strong></h2><p>பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/அதிமுக">அ.தி.மு.க. </a>தொடர் தோல்விகளை சந்தித்து வந்துள்ளது. இதனால், அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி பல முக்கிய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதே நேரத்தில், அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது குறித்து அதிருப்தி நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.</p><h2><strong>பொதுக்குழு தொடர்பாக...</strong></h2><p>ஆனால், அவர்களை புறந்தள்ளி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை புதிய ரத்தம் பாய்ச்சி வலுவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் புதிய மாவட்டச் செயலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி தலைமையின் வழிகாட்டுதல்களை, கட்சி பொதுச்செயலாளர் எடுக்கும் முக்கிய முடிவுகள் மற்றும் கட்டளைகளை மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி உள்ளார்.</p><p>இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டுவது தொடர்பாகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.</p><h2><strong>அறிவிப்பு</strong></h2><p>மாவட்ட செயலாளர் கூட்டம் குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வருகிற 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">427091d5-926c-4ef7-b4dd-790c137e4fe8</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:21:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:21:41.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சேலம் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை </a>மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. </p><p>இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>இன்று தண்ணீர் திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் விஜய் சேலம் செல்வதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 10-ந்தேதி பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th#comments</comments><guid isPermaLink="false">744f8d39-c67c-4904-9c24-b3433ea36b50</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:12:53.106Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again">விஜய்</a> வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>செமிகான் மாநாடு</strong></h2><p>இதனிடையே, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ (Semicon) மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது.</p><p>இதில் பங்கேற்பதற்காகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தைவான் புறப்பட்டுச் செல்கின்றனர். இம்மாநாட்டின் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தென் மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: சினிமா, டாஸ்மாக் துறையில் ஊழல்- அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு.. திமுகவினர் அமளி- 31 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-august-2026#comments</comments><guid isPermaLink="false">8cbab00b-8cfb-4b49-bbe3-619e9e0b783c</guid><pubDate>Mon, 31 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:54:53.957Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/u9t6egb8/AAdhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna- Ex Minister Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/u9t6egb8/AAdhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. </p><p>கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.</p> <p>சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.</p><p>மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்</p><p>டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.</p><p>சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை</p><p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்</p> <p>பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p> <p>இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </p><p>நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.</p><p>சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை</p><p>நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><p>புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.</p><p>கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்</p><p>தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? - எம்எல்ஏ காமாட்சி கேள்வி</p><p>நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அரூர் தொகுதி தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? - சம்பத் குமார்</p><p>தீர்த்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள பழைய மடத்தை சுற்றலாத்தலமாக கருதி பாதுகாக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்</p><p>ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்</p><p>ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்</p><p>ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்</p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு </p><p>திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை  எடுக்கப்படும்.</p><p>ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்</p><p>எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும்.</p><p>150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம். </p><p>கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு வன்னி அரசு பதில்</p><p>வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு</p><p>அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு</p><p>கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு</p><p>புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்</p><p>கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்ற மூத்த உறுப்பினர்களுக்கு சட்டசபையின் முன்வரிசையில் இடம் வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>எந்த கட்சி, சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள் என்ற அடிப்படையில் தான் உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கீடு - சபாநாயகர்</p><p>எ.வ.வேலு கேட்டுக்கொண்டதன்படி மூத்த உறுப்பினர்களுக்கு முன்வரிசையில் இடம் தருவது குறித்து ஆராய்ந்து முடிவு  எடுக்கப்படும் - சபாநாயகர்</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். </p><p>பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும்.</p><p>ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஏற்கெனவே உயர்த்திய நிலையில் தற்போது ரூ.3 உயர்த்தி அறிவிப்பு.</p><p>பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலை ரூ.44 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு.</p><p>பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால் ஆவினுக்கு ஏற்படும் கூடுதல் செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் புதிதாக இரண்டு நியூ தெர்மல் பவர் ஸ்டேஷன் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய அனல் மின், நீர்மின் நிலையங்கள் அமைக்க கடந்த ஆட்சியில் பெரிய அளவிலான நடவடிக்கை முன்னெடுக்கவில்லை.</p><p>தமிழ்நாட்டில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் தனியார் பங்களிப்புடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும்.</p><p>தூத்துக்குடியில் 1,600 மெகாவாட் திறனுடன் அனல்மின் நிலையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடியில் சிப்காட் மூலம் செமி கண்டெக்டர் நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை ரத்து செய்யவில்லை. அதனை மறுஉருவாக்கம் செய்து வருகிறோம்.</p><p>விளையாட்டு நகரத்தை ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும்.</p><p>திமுக அரசு அறிவித்த திட்டத் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறிய நிலையில் அமைச்சர் ஆதவ் விளக்கம் அளித்தார்.</p> <p>ஸ்போர்ட்ஸ் சிட்டிக்காக புதிய கட்டமைப்பு கொள்கை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.</p><p>விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விடுதிகள் உருவாக்க உள்ளோம் - அமைச்சர் ஆதவ்</p> <p>6 மாதத்தில் ஒலிம்பிக் நகரம் குறித்த நல்ல செய்தி வரும்.</p><p>ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்க வேண்டுமெனில் ஒலிம்பிக் தரத்தில் உருவாக்க வேண்டும், அதுதான் அரசின் கொள்கை - அமைச்சர் ஆதவ்</p><p>உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். அவை மாண்பை குலைக்கும் எம்எல்ஏக்களை அம்பலப்படுத்துவதில் தவறில்லை என மக்கள் கருத்து. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது மீம்ஸ் ஆக வருகிறது என புகார் கூறினர் - சபாநாயகர்</p> <p>நேரலை வழங்குவது இளைஞர்களுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அவைக்குறிப்பில் நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏக்கள் சிந்திக்கக்கூடாதா? </p><p>நான் கூறிய பின்னும் ஓ.எஸ்.மணியன் நின்றுகொண்டே இருக்கிறார்.</p><p>10 பேர் சேர்ந்து எழுந்து நிற்பதை ஏற்க முடியாது. கொறடா உத்தரவை உறுப்பினர்கள் கேட்க வேண்டும்  சபாநாயகர்</p> <p>பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலை தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>பெஞ்ச் மேல் ஏறியும் கவனத்தை ஈர்க்கலாம் என எ.வ.வேலு கூறுகிறார் - தங்கம் தென்னரசு</p><p>பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் வழங்க மாட்டேன்.</p><p>சபாநாயகர் இருக்கையில் முன்னர் அமர்ந்தது போல் அமராமல் இருக்கும் வரை அனைவரையும் அனுமதிக்க தயாராக இருக்கிறேன் - சபாநாயகர்</p><p>விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி குறித்து எம்எல்ஏக்கள் ஆஸ்டின் நித்யானந்தன் பேரவையில் கவனஈர்ப்பு கொண்டு வந்தார்.</p><p>விலையில்லா வேட்டி 8 முழத்திற்கு பதிலாக 4 முழ வேட்டி வழங்கப்படும் என்ற அரசின் ஆணையால் விவசாயிகள் பாதிப்பு - ஆஸ்டின்</p><p>8 முழ வேட்டிக்கு மாற்றாக 4 முழ வேட்டி கொடுப்பது குறித்து நெசவாளிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை - ஆஸ்டின் குற்றச்சாட்டு</p><p>நெசவாளர் சங்கத்தின்ருக்கு முறையாக அழைப்பு விடுத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியிருக்க வேண்டும் - ஆஸ்டின் </p><p>கைத்தறி நெசவாளர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் விலையில்லா வேட்டி-சேலை திட்டம் - ஆஸ்டின்</p> <h2>அமைச்சர் விஜய் பாலாஜி பதில்</h2><p>மக்களுக்கு பிடித்த பொருளை தரமாக வழங்குவதே எங்களது நோக்கம்.</p><p>பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது.</p><p>பொங்கலுக்கு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம்.</p><p>கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும்.</p><p>எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.</p> <h2>நேபாள பெருவெள்ளம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரை</h2><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த 28-ந்தேதி 21 தமிழர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டு சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p>கைலாஷ் யாத்திரை சென்றவர்களில் 84 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p>வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து தமிழர்களை மீட்பது குறித்து ஆலோசித்தோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>பிற மாநிலம், நாடுகளில் இருந்து சுற்றுலா சென்ற தமிழர்கள் 34 பேர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன  - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தமிழர்களை மீட்பது குறித்து திபெத், சீன அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுகிறது.</p><p>305 பேர் கைலாஷ் யாத்ரா பயணம் மேற்கொண்டனர். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் உரை</p><p>தூய்மைப் பணியாளர்கள் உண்மையில் பாவம் தான். அவர்கள் தூய்மை ஊழியர்கள் அல்ல தூய்மை தேவதைகள்.</p><p>போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் கூடாது என காவல்துறையிடம் கூறப்பட்டுள்ளது. </p><p>பணியின்போது பலியான தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>பலியான தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15-ந்தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும். வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>காலை சிற்றுண்டிக்கு மாற்றாக பணமாக தருவது பற்றி பரிசீலனை. உணவிற்கு பதில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரைவில் உணவுப்படி வழங்கப்படும்.</p><p>உடை மாற்றும் அறையுடன் மூடிய பிரத்யேக கழிப்பட வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p> <p>வார விடுப்பு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, முதல்வரை சந்திப்பது தொடர்பாக நல்ல செய்தி வரும்.</p><p>தூய்மைப் பணியாளர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறையில் அமைச்சர் விக்னேஷ் புதிய அறிவிப்புகள்</p><p>சட்டசபையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் விக்னேஷ் 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கு தரப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நவீன உபகரணம் வழங்கப்படும்.</p> <p>டாஸ்மாக் பணியாளர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>கள்ளச்சாராயம் விற்று திருந்தியவர்களுக்கான ரூ.1 லட்சம் நிதி வழங்குவதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்திற்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்வு.</p><p>கள்ளாச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் - அமைச்சர் விக்னேஷ்</p><h2>சமூக நலன் மகளிர் உரிமைத்துறை புதிய அறிவிப்புகள்</h2><p>அரசு கட்டடங்களில் குழந்தை மையங்களில் ரூ.12 கோடியில் பாதுகாப்பு அம்சம் மேம்படுத்தப்படும்.</p><p>ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஏஐ கூறுகளுடன் கூடிய கல்விசார் காணொளிகள் உருவாக்கப்படும்.</p><p>உயரக்குறைவு மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 சிறப்பு இல்லங்கள் ரூ.1.82 கோடியில் கட்டப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்பயிற்சி அளிக்க 10 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 3 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.</p><p>புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு புதிதாக 2 இல்லங்கள் அமைக்கப்படும்.</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்காக கடலூர் அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் ரூ.10 கோடியில் 2 இல்லங்கள் அமைக்கப்படும்  - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>6 முதல் 8-ம் வகுப்பு பயிலும் செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் திட்டம் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p> <p>பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.</p><p>வாசிப்பாளருக்கான உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு</p><h2>வேளாண் துறையின் கீழ் அமைச்சர் வினோத் அறிவித்த புதிய அறிவிப்புகள்</h2><p>தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 9 இடங்களில் புதிய விதை நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.</p><p>திருவாரூர், தருமபுரி, ஈரோடு, ராணிப்பேட்டையில் புதிய துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள் அமைக்கப்படும்.</p> <p>மூங்கில்துறைப்பட்டு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.8.58 கோடியில் மின் மோட்டார்கள் நிறுவப்படும்.</p><p>தேனி வளர்ப்பினை ஊக்கப்படுத்த ரூ.6.84 கோடியில் தேனி வளர்ப்பு பெட்டி விவசாயிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p> <p>செங்கல்ராயன், திருத்தணி, வேலூர், பெரம்பலூர் சர்க்கரை ஆலைகள் ரூ.6 கோடியில் தானியங்கி மயமாக்கப்படும்.</p><p>285 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 600 விற்பனை முனையக்கருவிகள் வழங்கப்படும் -  அமைச்சர் வினோத்</p><p>பரிமிளகாய், பொய்யூர் கத்தரி, சிதம்பரம் உளுந்து, கருமந்துறை கடுக்காய் உள்ளிட்ட 10 வேளாண் பொருளுக்கு புவிசார் குறியீடு</p><p>அதிக சாகுபடி செய்யும் 40 கரும்பு விவசாயிகள் மகாராஷ்டிரா அழைத்துச் செல்லப்படுவர்.</p><p>பாராமதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் கண்டுணர்வு பயணம் அழைத்துச்செல்லப்படுவர் - அமைச்சர் வினோத்</p> <p>மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு - தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டு</p><p>திமுக ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டில் 5 அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டனர்  - கே.என்.நேரு</p><p>கடந்த ஆட்சியில் மாநகராட்சிகளில் ஊழல் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுங்கள் ரைவில் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்துவோம்  - கே.என்.நேரு</p> <p>மதுரையில் மட்டுமல்ல அனைத்து மாநகராட்சிகளிலும் முறைகேடு நடந்துள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>கடந்த ஆட்சியில் தவறு செய்த யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் வெளிவந்தது என்றால் மேலிடத்திற்கு பங்கு சரிவர செல்லாததே காரணம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>மத்திய அரசு அறிவுறுத்தலால் கடந்த ஆட்சியில் வரி உயர்த்தப்பட்டது - கே.என்.நேரு</p><p>மக்களின் அடிப்படைத் தேவைகள் ஏதும் முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை - த.வெ.க.</p><p>ஒவ்வொரு நகரிலும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் லாரியை எதிர்நோக்கி நிற்கின்றனர்.</p><p>ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டு சேர்க்கப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>இப்போது நடவடிக்கை எடுக்கலாம் என்றால் மேயர்கள், நகராட்சி தலைவர்கள் எங்களுடன் இணைந்து செயல்படுவதில்லை.</p><p>திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால், அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர் - அமைச்சர் ஆதவ் </p> <p>சென்னை மேயர் அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை, குற்றச்சாட்டு மட்டும் தான் சொல்கிறார்.</p><p>அனைத்து மாநகராட்சிகளையும் தவெக விரைவில் கைப்பற்றும் - அமைச்சர் ஆதவ்</p><p>நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கறுப்பு உடை அணிந்து வந்தனர் - கே.என்.நேரு</p><p>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் டாஸ்மாக்கில் அதிக வருவாய் எப்படி என்ற திமுகவினரின் கேள்விக்கு அமைச்சர் வினோத் விளக்கம்</p><p>திமுக ஆட்சியில் காலத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடிய போதும் வருவாய் அதிகரித்தது எப்படி? என அமைச்சர் வினோத் பதில் கேள்வி</p> <p>கிருதுமால் நதி சாக்கடையாக மாற்றிவிட்டது.</p><p>மதுரையில் கழிவுநீர் அடைப்பு பிரச்சனை அதிகமாக உள்ளது, பாதாள சாக்கடையை மேம்படுத்த வேண்டும் -  எம்எல்ஏ தங்கபாண்டியன்</p><p>மல்லாச்சிபுரம் ஊராட்சியில் 300 பேர் வசிக்கும் நிலையில் நீர், கழிப்பிடம் சாலை உள்ளிட்ட வசதிகளின்றி அவதி.</p><p>கடந்த ஆட்சியில் திருச்சி மல்லாட்சிபுரத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.</p><p>தவெக ஆட்சி அமைந்த பிறகு மல்லாச்சிபுரம் மக்களிடம் சென்று கோரிக்கை கேட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் ரமேஷ்</p> <p>நகராட்சியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற ஆய்வு செய்துவிட்டு அமைச்சர் ரமேஷ் பேச வேண்டும்.</p><p>மல்லாச்சிபுரம் கிராமம் ஊராட்சியில் இருந்த நிலையில் தற்போதுதான் நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.</p><p>மல்லாச்சிபுரம் தற்போதுதான் நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை - கேஎன்.நேரு</p><p>மினி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும் - பாமக எம்எல்ஏ சவுமியா வேண்டுகோள்</p><p>கிராமங்களுக்கான மினி பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் - சவுமியா வேண்டுகோள்</p><p>பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை கிராமப்புறங்களுக்கும் நீட்டித்த தவெக அரசுக்கு நன்றி - சவுமியா</p><p>தருமபுரியில் பேருந்து நிலையம் ஊருக்கு வெளியில் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் - சவுமியா</p><p>603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது. மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை - செந்தில் பாலாஜி</p><p>மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது - செந்தில்பாலாஜி</p><p>டாஸ்மாக் விற்பனையை தொடங்கியதும் திமுக தான், மூடியதும் திமுக தான் - கே.என்.நேரு</p><p>சினிமா மற்றும் டாஸ்மாக் துறையில் ஊழல் என அமைச்சர் ஆதவ் குற்றச்சாட்டு</p><p>சட்டசபையில் அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு எதிர்ப்பு - திமுக உறுப்பினர்கள் அமளி </p><p>போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து போர்க்கால அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.</p><p>தமிழக வெற்றிக் கழக ஆட்சியை உருவாக்கியது பெண்களும், இளைஞர்களும் தான்- ஆதவ் அர்ஜூனா</p><h2>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி</h2><p>603 டாஸ்மாக் கடைகளை திமுக மூடியது, மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என செயல்படவில்லை- </p><p>மதுபானங்களின் விலை உயர்த்தியதால் ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக வருவாய் அதிகரித்தது.</p><p>ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குபோட்டுள்ளீர்கள்.</p><p>கடந்த திமுக ஆட்சியில் தவறு நடந்ததா? இல்லையா? என்பது குறித்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தெரியும்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு </h2><p>டாஸ்மாக் விற்பனையை தொடங்கியதும் திமுக தான், மூடியதும் திமுக தான்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>திமுக ஆட்சியில் டாஸ்மாக் தொழிற்சாலை லைசென்ஸ் வழங்கியதில் இதுவரை வெளிப்படைத்தன்மை இருந்ததே இல்லை. </p><p>அரசியல் இல்லாமல், அதிகாரம் இல்லாமல், டாஸ்மாக் தொழிற்சாலை உரிமம் வாங்க முடியுமா?</p><p>ஒரு சாமானியன் டாஸ்மாக் தொழிற்சாலையின் உரிமம் வாங்க முடியுமா?</p><p>தமிழக வெற்றிக் கழகத்தினர் எப்போதும் டாஸ்மாக் ஆலையை எடுக்க மாட்டோம், மதுபான தொழில் செய்யமாட்டோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>பாட்டிலுக்கு ரூ.10 என்று சொன்னீர்கள், தவெக ஆட்சியில் நீங்கள் வாங்காமல் உள்ளீர்களா?</p><h2>அமைச்சர் விக்னேஷ்</h2><p>டாஸ்மாக் கடைகளில் ரூ.10 வாங்க சொன்னதே திராவிட முன்னேற்றக் கழகம்தான். ரூ.5 வாங்க சொல்லி அதிகாரிகள் சொன்னார்கள், அதை ரூ.10-ஆக வாங்க வேண்டும் என திமுகவினர் சொன்னார்கள்.</p><p>டாஸ்மாக் கடைகளில் 20 ஆண்டுகாலமாக ஊழல் வேரூன்றி உள்ளது. சீரமைக்க சில காலம் ஆகும்.</p><p>ரூ.14,000 ஊதியம் கொடுத்தால் டாஸ்மாக் பணியாளர்கள் அதை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்?</p><p>சிண்டிகேட் கரூர் கேங்க் என்று குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>ஒரு நபர் 44 முதல் 50 டெண்டர்கள் போட்டு ஊழல் செய்தார்கள் என்று கடந்த வாரம் வந்த ஆர்டர்களில் உள்ளது.</p><p>பாட்டிலுக்கு ரூ.10, டாஸ்மாக்கில் ஆண்டு வருமானம் ரூ.50,000 கோடி என்றால் அதில் 10 சதவீதம் ரூ.5000 கோடி ஊழல்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>விதி 92-ல் நீதி விசாரணையில் இருக்கும் எப்பொருள் பற்றியும் விவாதிக்கக்கூடாது என்று உள்ளது.</p><p>தகுதி இருந்தால் தான் லைசென்ஸ் கொடுப்பார்கள், கொடுத்தால் ஊழல் என்று சொல்ல முடியுமா?</p><p>பணம் வசதி இருப்பவர் தான் தொழிற்சாலை வைத்து இருப்பார்கள், அது ஊழலாக இருக்க வாய்ப்பில்லை.</p><h2>சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்</h2><p>ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் குறித்து சட்டசபையில் பேச வேண்டாம்.</p><p>சட்டசபையில் நிகழ்வு முழுமையாக நேரலை செய்யப்படுவதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசக்கூடாது.</p><p>ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லும்போது ஏற்படும் தவறான அபிப்பிராயத்தை எப்படி திருத்தி கொள்ள முடியும்?</p><p>டாஸ்மாக் ஊழல் பற்றி நீண்ட நேர விவாதம் தேவைதானா? நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது விளக்கி கூற தேவையில்லை.</p><h2>நெல்லை சட்டமன்ற உறுப்பினர் முருகன்</h2><p>அவையை வழிநடத்தும் ஆதவ் அர்ஜூனா என சட்டசபையில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் முருகன் பேசினார்.</p><p>அவையை வழிநடத்தும் ஆதவ் என எம்எல்ஏ முருகன் பேசியதை அடுத்து அவை முனைவர் கோபித்துக் கொள்ளக்கூடாது என சபாநாயகர் கருத்து.</p><p>என்மீது உள்ள அன்பில் அப்படி சொல்லிவிட்டார், அவையை வழிநடத்துபவர் என்று.. எங்களை வழிநடத்துபவர் எங்கள் தலைவர் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டசபையில் பேசினார். </p><h2>எம்எல்ஏ சவுமியா அன்புமணி</h2><p>விவசாயிகளின் பயிர் கடனை தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>விவசாயிகளை பாதுகாத்தால் தான் விவசாயம் பாதுகாக்கப்படும்.</p><p>மின்சாரம் கேட்டு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அது எப்போது அவர்களுக்கு வழங்கப்படும்.</p><p>தருமபுரி பகுதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டுவர வேண்டும்.</p><p>16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் பயன்படுத்தாமல் தடுக்க சில மாநிலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.</p><p>தமிழக அரசும் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மதுபானம், போதைப்பொருட்கள், செல்போன் காரணமாக குழந்தை தனத்தை இழக்கின்றனர்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா </h2><p>திமுகவின் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து நீங்கள் அறிவிக்கவில்லை.</p><p>காரணம் என்ன தெரியுமா? 200க்கு 200 வெற்றி பெறுவோம் என்று நீங்கள் நம்பினீர்கள்.</p><p>ஜெயித்து வந்திருந்தாலும், நீங்கள் விவசாய கடன் தள்ளுபடி செய்திருக்க முடியாது. நாங்கள் ஜெயிப்போம் என்று தெரிந்தும், அறிவித்தோம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>மதுரையில் மட்டுமல்ல, அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் உள்ளது. எந்தெந்த மாநகராட்சிகளில் ஊழல் நடைபெறுகிறது என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>ஆட்சி உங்களிடம் உள்ளது, காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் உள்ளனர். தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். எந்தத் தவறு நடந்தாலும், உங்களிடம் அதிகாரம் உள்ளது. ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு, ஊழல், ஊழல் என்று சொன்னால் எப்படி?</p><h2> தவெக எம்.எல்.ஏ. சத்யா</h2><p>இளவயது திருமணத்தால் பெண்கள் உடலாலும், மனதாலும் துன்பங்களை சந்திக்கின்றனர். குழந்தை திருமணங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.</p><p>பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 20 அல்லது 21 வயதாக உயர்த்த வேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.</p><p>வேளாண் துறை அமைச்சருக்கு ஒரே ஒரு கோரிக்கை..." என அமைச்சர் கீர்த்தனா பேச முயன்றபோது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “காலையில் தானே சொன்னேன், அமைச்சர் கோரிக்கை வைக்கக் கூடாது என்று" என கூறி, அமைச்சர் கீர்த்தனாவை அமர வைத்தார்.</p><p>"மதுவால் வரும் வருவாய் என்பது விற்பனையால் மட்டும் வருவது அல்ல. லீக்கேஜ், இதர ஃபண்ட் ஆகியவற்றை சரிசெய்து தான் வருவாயை உயர்த்துகிறோம். மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” என பாமக சட்டமன்ற குழு உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் விக்னேஷ் பதில்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">4a51aed7-af51-414c-807c-ddc86f1f72fc</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:30:39.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,Onion prices,கோயம்பேடு,வெங்காய விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வரும் வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் வெங்காயத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. </p><p>மத்திய அரசு வெங்காயம் அனுப்பி வைக்கவில்லை என்றால், ஒரு கிலோ ரூ.100ஐத் தொடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>வழக்கமாக ஒரு நாளைக்கு 1600 டன் வெங்காயம் வரும் என்றும், தற்போது ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வெங்காய வரத்தே இருப்பதாகவும் இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.60 வரைக்கும், சில்லறை விலையில் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.100</h2><p>“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, நகரில் வெங்காய விலை உயர்வு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து வரத்து சீராக இருந்தது, அதன் பிறகு வரத்து குறைந்துவிட்டது,” என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி. சுகுமாரன் தெரிவித்தார். </p><p>இதே நிலையில் சென்றால் அடுத்த 15 நாட்களில் விலை கிலோவிற்கு ரூ.100 என உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய அரசின் நடவடிக்கை</h2><p>தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து சென்னைக்கு 840 முதல் 850 டன் வெங்காயத்தை அனுப்பியுள்ளது.</p><p>மத்திய கிடங்கு கழகம் மூலம் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் வாயிலாக இந்த வெங்காயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் இருந்து லாரிமூலம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படும். </p><p>இந்த வெங்காயம் நாபெட் (NAFED), என்சிசிஎப் (NCCF) மற்றும் கேந்திரிய பண்டார் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.</p><h2>திடீர் விலை உயர்வு ஏன்?</h2><p>மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் இருந்து கோயம்பேட்டிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>நாசிக் மற்றும் பல்லாரியில் பெய்த கனமழையால் அங்கு விநியோகம் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வரத்து குறைந்துள்ளது. </p><p>அடுத்த 10 முதல் 15 நாட்களில் அங்கு விநியோகம் அதிகமானால் மீண்டும் வரத்து சுமூகமாகி இயல்புநிலை திரும்பும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers#comments</comments><guid isPermaLink="false">7de31164-f4c0-4d14-960d-53b850941fb1</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:41:52.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். </p><ul><li><p>அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li><li><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer#comments</comments><guid isPermaLink="false">6e9a3d64-ab9c-42e6-9a61-647f133ac32d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:54:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:54:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,குடிநீர் குழாய் உடைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் குழாய் உடைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.</p><h2>பொதுமக்கள் குற்றச்சாட்டு</h2><p>இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் குழாய் உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்- வைகோ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-rahul-gandhi-fit-for-pm-role</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vaiko-says-rahul-gandhi-fit-for-pm-role#comments</comments><guid isPermaLink="false">cb1c95ef-d4f5-4ef6-84d1-eb45bcb0e7fc</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:36:58 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:36:58.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,MDMK,மதிமுக,பிரதமர் வேட்பாளர்,PM Candidate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gn46oif/vaiko.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MDMK Leader Vaiko]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/5gn46oif/vaiko.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார் கூறுகிறார்.</p><p>தமிழக முதலமைச்சரின் கற்பனையில் கூட அவருக்கு இதுபோன்ற கருத்து இருக்காது.</p><p>அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல்காந்தி தான் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">பிரதமர் வேட்பாளர்</a> அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும்.</p><p>இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் தான் பிரதமர் வேட்பாளராக முடியும்.</p><p>மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்து களை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர், அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.</p><h2>ஊழலற்ற அரசு</h2><p>தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.</p><p>எந்த அலுவலகத்துக்கு சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.</p><h2>த.வெ.க. ஆட்சிக்கு 80 மதிப்பெண்</h2><p>100 நாட்களை கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன். ஊழலை முழுமையாக ஒழிப்பது சாதாரணமான காரியம் அல்ல. அது இமயமலையை நகர்த்துவது போன்ற கடினமான பணி.</p><p>அதே நேரத்தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனது நற்சான்றை தமிழக அரசுக்கு வழங்குகிறேன்.</p><p>அரசின் நிர்வாகத்தில் எந்தவிதமான முறைகேடு</p><p>களுக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்ற தமிழக அரசு நிலைப்பாடு வர வேற்கத்தக்கது.</p><p>அவ்வாறு முறைகேடுகள் நடை பெற்றால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்து ழைக்கவில்லை என்பது எனது கருத்து.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ஜல்லிக்கட்டு போட்டி குறித்த த.வெ.க. எம்.எல்.ஏ. கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்- சபாநாயகர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-remarks-on-the-jallikattu-competition-expunged-from-the-house-records-speaker-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-mla-remarks-on-the-jallikattu-competition-expunged-from-the-house-records-speaker-announces#comments</comments><guid isPermaLink="false">292113ab-846d-4c2c-a7db-8e5d7ff835c3</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:28:45 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:28:45.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,jallikattu,ஜல்லிக்கட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/db30egku/spreakerJCDPrabakar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் JCD பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/db30egku/spreakerJCDPrabakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் வீட்டு வசதி துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் த.வெ.க. எம்.எல்.ஏ. கருப்பையா பேசுகையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு பணம் செலவழிக்க தேவையில்லை என்றும், அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார். அப்போது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-protest-announced-over-jallikattu-controversy">ஜல்லிக்கட்டு</a> குறித்து பேசிய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><h2>எதிர்ப்பு</h2><p>இவரது கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், த.வெ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கருப்பையா எம்.எல்.ஏ. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்தார். இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசியதாவது:-</p><h2>நீக்கம்</h2><p>சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ஜல்லிக்கட்டு குறித்து பேரவையில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் இருப்பவர்கள் என்னிடம் விளக்கத்தை கேட்டார்கள். மேலும் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பிலும் இது குறித்து கடிதம் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>பேரவையில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருப்பையா பேசிய குறிப்பிட்ட வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து தவறான அர்த்தத்தில் பேசவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்னிடம் விளக்கம் அளித்துள்ளார்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>மறுப்பு</h2><p>இதை தொடர்ந்து கருப்பையா எம்.எல்.ஏ. எழுந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசியது குறித்து விளக்கம் அளிக்க முயன்றார். உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதி கிடையாது என கூறி கருப்பையா எம்.எல்.ஏ. பேச அனுமதி மறுத்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.</p>]]></content:encoded></item><item><title>திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-is-deceiving-the-public-by-creating-a-false-impression-against-the-dmk-clash-erupts-between-aadhav-arjuna-and-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-is-deceiving-the-public-by-creating-a-false-impression-against-the-dmk-clash-erupts-between-aadhav-arjuna-and-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">9fc644a8-5506-42a4-8476-cf34ef8c815a</guid><pubDate>Mon, 31 Aug 2026 11:10:40 +0000</pubDate><atom:updated>2026-08-31T11:10:40.848Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac,டாஸ்மாக்,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o8uqgcs2/New-Project-2026-08-31T163741.004.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் தவெக அரசு: ஆதவ் அர்ஜூனா - செந்தில் பாலாஜி இடையே வெடித்த மோதல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o8uqgcs2/New-Project-2026-08-31T163741.004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பெரும் விவாதம் வெடித்தது. அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;</p><h2>நினைத்தால் ஒரேநாளில் மதுவிற்கு தடை</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors">அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</a>: தமிழ்நாட்டை 5 மண்டலங்களாக பிரித்தால், வட மண்டலத்தில்தான் டாஸ்மாக் விற்பனை அதிகம் நடக்கிறது. அங்கு வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் அதிகம் இருப்பதால் விற்பனை அதிகம் நடக்கிறது. </p><p>கடந்த ஆட்சியில் இருந்த ஒரு அமைச்சர், உடல்வலிக்காக பலர் குடிக்கின்றனர் எனக்கூறுகிறார், விளையாட்டுத்துறையில் இருப்பவர்கள் உடல்வலி எனக்கூறி விட்டு மதுவை எடுத்துக்கொள்ள முடியுமா?</p><p>இன்று ஒரேநாளில் மதுவிற்பனையை தடை செய்யலாம் என்று நினைத்தால்கூட, பெண்களுக்கு எதிராகத்தான் அதன் விளைவு திரும்பும். இதை சரிசெய்ய மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்.</p><p>சினிமாத்துறை, டாஸ்மாக் துறையில் ஊழல் நடந்துள்ளது. (ஆதவ் அர்ஜூனாவின் பேச்சால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.)</p><p>உடனே அமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி பேசினார். </p><h2>பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை, உண்மையாக 603 மதுக்கடைகள் மூடல்</h2><p>செந்தில் பாலாஜி: திமுகவின் கொள்கையும் பூரண மதுவிலக்கே. அதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் படிப்படியாக 603 கடைகளை குறைத்தோம். அது வெறும் பெயரளவில், பேப்பர் அளவில் இல்லை. முழுமையாக அந்த கடைகள் மூடப்பட்டன.</p><p>அந்த பட்டியலை அமைச்சர் துறைசார்ந்த செயலர்களிடம் வாங்கிப் பார்த்துகொள்ளலாம். பொதுப்பணித்துறை அமைச்சர் ஊழல், ஊழல் என்றுக் கூறுகிறார். நான் ஒன்றை சட்டமன்றத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெறும் வழக்குகளை மட்டும்தான் தற்போது போட்டுள்ளீர்கள்.</p><h2>உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் வெளிவரும்</h2><p>திமுகமீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும். மக்களிடம் கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஒரு மாயையை உருவாக்குகிறீர்கள். பூதக்கண்ணாடி போட்டு தேடுகிறீர்கள். இப்போது உங்கள் அரசு நடக்கிறது. நன்றாக விசாரிக்கலாம், தீவிர விசாரிக்கலாம், நீதிமன்றத்தில் உங்கள் ஆதாரங்களை சமர்பிக்கலாம். </p><p>நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர்தான் யார் போட்டது தவறான வழக்கு, உண்மைக்கு புறம்பானது, திரித்து கூறப்பட்டது என்பது தெரியவரும். நீதிமன்றம் இறுதிமுடிவை எடுக்கும். கடந்த காலங்களில் தவறுகள் நடந்தது என்பதைப்போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் கடந்த ஆட்சிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்த இந்த அரசு முயற்சிக்கிறது. </p><p>நீங்கள் போட்டுள்ள இந்த வழக்கு உண்மைக்கு புறம்பானது. நீதிமன்றத்தில் இதை சட்டப்படி எதிர்கொண்டு, நீங்களும் எதிர்கொள்ளுங்கள், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மக்களுக்கு புரியும்.</p>]]></content:encoded></item><item><title>பேரழிவுகளும்..., 26-ந்தேதியும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/catastrophes-and-the-26th#comments</comments><guid isPermaLink="false">60b0f2bd-f24c-431e-81d9-bd8ec11c9168</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:26:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:26:52.500Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Tsunami,சுனாமி,nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ இயற்கை பேரழிவுகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/igok57md/diaster.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரும்பாலான <a href="https://www.maalaimalar.com/topic/இயற்கை-பேரழிவு">பேரழிவுகள்</a> 26-ந்தேதி–யிலேயே நடந்துள்ளன. அதன் விவரம்-</p><p>2001-ம் ஆண்டு  ஜனவரி 26 : புஜ் / குஜராத் நிலநடுக்கம் (இந்தியா)</p><p>2003 டிசம்பர்26: பாம் நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2004 டிசம்பர் 26: இந்தியப் பெருங்கடல் சுனாமி (இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்)</p><p>2005 ஜூலை 26: மும்பை பெருவெள்ளம் (இந்தியா)</p><p>2006 மே 26: ஜாவா/யோக்யகர்த்தா நிலநடுக்கம் (இந்தோனேசியா இந்த நாளிலும் தாக்கம் நீடித்தது)</p><p>2006 டிசம்பர் 26: ஹெங்சுன் நிலநடுக்கம் (தைவான்)</p><p>2006 மே 26: ‘ஐலா’ புயலின் தாக்கம் &amp; கடுமையான வெள்ளப்பெருக்கு (இந்தியா, பங்களாதேஷ்)</p><p>2015 அக்டோபர் 26: இந்து குஷ் நிலநடுக்கம் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா)</p><p>2018 ஆகஸ்ட்26: ஈரான்-ஈராக் எல்லை நிலநடுக்கம் (ஈரான்)</p><p>2019 டிசம்பர் 26: ‘பான்போன்’ (உர்சுலா) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2022 செப்டம்பர் 26: ‘நொரு’ (கார்டிங்) சூறாவளிப் புயல் (பிலிப்பைன்ஸ்)</p><p>2024 மே 26: ‘ரெமால்’ சூறாவளிப் புயல் (இந்தியா &amp; பங்களாதேஷ்)</p><h2><strong>இந்தியாவை உலுக்கிய 3 மிகப்பெரிய பேரழிவுகள்</strong> </h2><p>2001 ஜனவரி 26 குஜராத் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த மிகச்சக்திவாய்ந்த நிலநடுக்கம், குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் பகுதிகளை ஒட்டுமொத்தமாக உருக்குலைத்தது. சுமார் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின; பல லட்சக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.</p><p>2004 டிசம்பர் 26 இந்தியப் பெருங்கடல் சுனாமி: சுமத்ரா அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட 9.1 முதல் 9.3 வரையிலான அதிதீவிர நிலநடுக்கம், ஆழிப்பேரலையாக உருவெடுத்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான்-நிகோபார் கடலோரப் பகுதிகளைச் சூறையாடியதோடு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளையும் சீரழித்தது. இந்த கோரத் தாண்டவத்தில் உலகளவில் சுமார் 2,30,000 பேர் உயிரிழந்தனர்.</p><p>2005 ஜூலை 26 மும்பை பெருவெள்ளம்: மும்பையில் பெய்த வரலாறு காணாத மழை, நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. சாண்டாக்குரூஸ் பகுதியில் ஒரே நாளில் 944 மி.மீ மழை பதிவாகி பேரழிவை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.</p><p>நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய பேரழிவுகளாகப் பார்க்கப்படும் இந்த மூன்றும் வெறும் 4½ ஆண்டுகளுக்குள்ளேயே, அதுவும் 26-ந் தேதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது ஒரு மர்மத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது அறிவியல் பூர்வமாக உண்மையல்ல; இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். </p><p>இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில்,  வரலாற்றில்  மிகப்பெரிய இயற்கை பேரழிவுகள் மாதத்தின் பிற தேதிகளிலும் அதிகமாக நடந்துள்ளன.</p><p>உதாரணத்திற்கு 1960-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி சிலி நிலநடுக்கம்,  2011-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி ஜப்பான் சுனாமி, 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ல் நேபாள நிலநடுக்கம், 2005-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தெடெஹி  காஷ்மீர் நிலநடுக்கம் போன்றவற்றை கூறலாம். </p><p>நிலநடுக்கம், புயல், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் பூமியின் புவித்தட்டு நகர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களால் ஏற்படுகின்றன. </p><p>நாட்காட்டியின் தேதிகளுக்கும், புவியியல் மாற்றங்களுக்கும் எந்தவித அறிவியல் தொடர்பும் இல்லை. எனவே, 26-ந் தேதிக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் இடையே எவ்வித அறிவியல் தொடர்பும் இல்லை; இது முற்றிலும் ஒரு தற்செயலான ஒற்றுமையே என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>2026-ம் ஆண்டு இயற்கை பேரிடர்கள், உயிரிழப்பு அதிகரிப்பு: உலகம் அஞ்சி நடுங்கும் 26-ந்தேதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/2026-rise-in-natural-disasters-and-fatalities-the-26th-that-has-the-world-trembling-in-fear#comments</comments><guid isPermaLink="false">27239df4-48e3-4721-8aca-d2af0a658590</guid><pubDate>Mon, 31 Aug 2026 10:18:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T10:18:37.588Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>nepal flood,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/94q7jjxj/nepal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</strong></em></p><h2><strong>2026-ம் ஆண்டு...</strong></h2><p>வெள்ளம்… புயல்… நிலநடுக்கம்… வெப்பம்… உருகும் பனிப்பாறைகள் என  இந்த ஆண்டு இயற்கை பேரழிவுகள் அதிகம் கொண்ட ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த பேரழிவுகள் தனித்தனி சம்பவங்களா? அல்லது வேகமாக மாறிவரும் நமது பூமியின் புதிய முகமா? 2026-ம் ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் எதைக் கொண்டு வரப்போகின்றன? என்ற அச்ச உணர்வு பலருக்கு ஏற்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகளையும் சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது எனலாம். </p><p>அதிலும் 26-ந்தேதி சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஒரு மாதத்தில் மற்ற தேதிகளைப் போலவே 26-ந் தேதியும் சாதாரணமான நாள் தான்.  ஒவ்வொரு தேதிக்கும் ஒவ்வொரு விதமான தன்மை, ஜோதிட ரீதியாக, எண்ணியல் ரீதியாக கிரகங்களின் ஆளுமை இருக்கும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, உலகையே உலுக்கிய சில, மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளின் தேதிகளைத் பார்க்கும்போது, ‘26’ என்ற எண் மீண்டும் மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது.</p><p>உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய பேரழிவுகளை உற்றுநோக்கினால், அவற்றின் பின்னணியில் 26 என்ற எண் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருக்கிறது.</p><p>2026-ம் ஆண்டின் ஆரம்பமே தென்னாபிரிக்காவுக்கு பெரும் சோகத்துடன் தொடங்கியது. மொசம்பிக், தென்னாபிரிக்கா, ஜிம்பாப்வே  உள்ளிட்ட நாடுகளில் பல வாரங்களாக கொட்டித் தீர்த்த மழையால் ஆறுகள் கரைபுரண்டு பெருவெள்ளம் ஏற்பட்டது. சில பகுதிகளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை சில நாட்களுக்குள் பெய்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. சுமார் 200 பேர் உயிரிழந்ததுடன், நூறாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். காலநிலை மாற்றமும் லா நினா வானிலை மாற்றமும் மழையின் தீவிரத்தை அதிகரித்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.</p><p>அதற்கு அடுத்ததாக மடகாஸ்கர். பிப்ரவரி மாதத்தில் 10 நாட்கள் இடைவெளியில் 2 புயல்கள் அந்தத் தீவைத் தாக்கின. முதலில் பிதியா சூறாவளி; அதைத் தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்த ஜிசானி  சூறாவளி. ஜிசானி சூறாவளியால் மட்டும் குறைந்தது 59 பேர் உயிரிழந்தனர்.  800-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  பிதியா புயல் மேலும் 14 உயிர்களைப் பறித்திருந்தது.</p><p>மார்ச் மாதம் கொங்கோவின் ருபாயா பகுதியில் உள்ள கோல்டன் சுரங்கத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சுமார் 70 பேர் குழந்தைகள். மண்ணுக்கடியில் கனிமத்தைத் தேடிச் சென்றவர்கள், சில நொடிகளில் மண்ணுக்குள்ளேயே புதைந்து போனார்கள்.</p><p>2026-ன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவாக வெப்பத்தை கூறலாம். இந்த கோடையில் ஐரோப்பா தொடர்ச்சியாக 4 கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டது. பல இடங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியசைக் கடந்தது.  ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கிடைத்துள்ள தகவல்களின்படி, வெப்ப அலைகள் இடம்பெற்ற காலங்களில் வழக்கமாக நிகழ்வதைவிட 35 ஆயிரம் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நேரடியாக வெப்ப அலையால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல. கடும் வெப்பமானது இதயம் மற்றும் சுவாச நோய்கள் போன்ற ஏற்கனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளை மோசமாக்குவதாலும் நிகழ்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.</p> <p>அடுத்து வெனிசுலாவில்  ஜூன் 24-ந்தேதி சில நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவு கொண்ட 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டை உலுக்கின. குறிப்பாக கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில்  6,125 பேர் உயரிழந்தனர். சுமார் 61,000 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 2026-இல் இதுவரை பதிவான மிகக் கொடிய நிலநடுக்கப் பேரழிவு இதுவாகும்.</p><p>ஆகஸ்ட் 15 அன்று இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா பகுதியை 7.7 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொடர் அதிர்வுகள் பதிவாகின. குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர்; 73,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன; சுமார் 180,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.</p><p>இந்த பேரழிவுகளின் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பது <a href="https://www.maalaimalar.com/topic/நேபாள-வெள்ளம்">நேபாள</a> – திபெத் எல்லையின் இமயமலைப் பேரழிவு. இதில் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. </p><p>கடந்த 26-ந்தேதி லாங்டாங் லிருங் அருகிலுள்ள பனிப்பாறையின் ஒரு பெரிய பகுதி உடைந்து, நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே பள்ளத்தாக்கில் சரிந்தது. பனி, பாறை, சேறு ஆகியவை பெரும் பனிப்பாறைச் சரிவாக மாறி ஆற்றுக்குள் பாய்ந்தன. பின்னர் அது பலத்த திடீர் வெள்ளமாக மாறி பொங்கிவந்து கிராமங்கள், வீடுகள், பாலங்கள், மின் திட்டங்களை அடித்துச் சென்றது.</p><p>ஆரம்பத்தில் இது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு என்று செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமானது, இது நிலநடுக்கத்தால் உருவானது அல்ல; பனிப்பாறையும் பாறைகளும் பெருமளவில் சரிந்ததால் உருவான அதிர்வே நிலநடுக்கம் போல பதிவானது என்று தெளிவுபடுத்தியது.</p><p>உலகம் எதை நோக்கி செல்கிறது. ஒருகாலத்தில் இயற்கையின் ஓட்டத்தில் பயணித்த ஆறுகள், இன்று மனிதனின் திட்டங்களுக்கேற்ப கட்டுப்படுத்தப்படுகின்றன. மலையைக் குடைந்து சாலைகள் அமைக்கப்படுகின்றன.  சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக மலைப்பகுதிகளில் கட்டுமானங்கள் பெருகுகின்றன. இயற்கையை வெல்லலாம் என்று நினைத்த மனிதனின் தந்திரம், இயற்கை சீற்றத்தின் முன் தவிடு பொடியாகிறது. இனியாவது இயற்கையோடு இணைந்து பயணிப்போம் என்ற உறுதியுடன் இயற்கையை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>52 கோவில்களில் நாளை முதல் செல்போன்களுக்கு தடை- அமைச்சர் ரமேஷ் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-ban-on-mobile-phones-in-52-temples-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">fa9f7287-1ec5-42a7-a095-066dcb9b7767</guid><pubDate>Mon, 31 Aug 2026 09:59:37 +0000</pubDate><atom:updated>2026-08-31T09:59:37.320Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Temples,கோவில்கள்,செல்போன் தடை,cellphone ban,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ செல்போன்களுக்கு தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/seghg5eb/cellphoneban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.</strong></em> </p><p>தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாக்கும் வகையில், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கோவில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள். </p><h2><strong>புகார்கள்</strong></h2><p>மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.</p><p>இதனால் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன், கோவில்களின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது.</p><h2><strong>தடை செய்யப்படும்</strong></h2><p>இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘செப்டம்பர் 1-ந்தேதி முதல், முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88">செல்போன்</a> கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்படும். </p><p>முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.</p><p>அதன்படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. </p><h2><strong>பாதுகாப்பு பெட்டகம்</strong></h2><p>கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.</p><h2><strong>அறிவிப்பு</strong></h2><p>ஒலிபெருக்கி மூலமாகவும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை பக்தர்களுக்கு அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கும், பக்தர்கள் திரும்பி செல்லும்போது அவற்றை ஒப்படைப்பதற்கும் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்ட செயல்களை கண்காணிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த விதிகளை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>கோவில்களில் புகைப்படம், வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.</p><p>மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது கோவிலுக்குள் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்து கோவில்களிலும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை மண்டல இணை ஆணையர்கள் வழங்கி உள்ளனர்.</p><h2><strong>சினிமா பிரபலங்கள்</strong></h2><p>மேலும் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது பொது பக்தர்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையிலும், கோவில்களின் புனிதத்தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><p>சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வருகை தருவது தெரியவந்தால், ஒரு நாளுக்கு முன்பாகவோ அல்லது தகவல் கிடைத்த உடனேயோ, அவர்கள் வரவிருக்கும் கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>பெரிய கோவில்</strong></h2><p>முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அனைத்துமே பெரிய கோவில்களில் நாளை முதல் அமலுக்கு வர உள்ளன.</p><p>சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் நாளை முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.</p><h2><strong>அமைச்சர் ரமேஷ்</strong></h2><p>கோவில்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ரமேஷ்">அமைச்சர் ரமேஷ்</a> இன்று, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-</p><p>தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களில் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>தங்கும் அறைகள்</strong></h2><p>உள்ளூர் பக்தர்கள் தங்கள் வீடுகளிலும், வெளியூர் பக்தர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதி அறைகளிலும் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்ய செல்லலாம். மேலும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் செல்போன்களை வைத்து விட்டு கோவிலுக்கு வரலாம். </p><p>அப்படி முடியாத பட்சத்தில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செல்போனை கொடுத்து விட்டு செல்லலாம். தரிசனம் முடிந்து வரும்போது அதனை பாதுகாப்பாக பெற்று செல்லலாம்.</p><p>செல்போன்களை தாங்கள் தங்கி இருக்கும் அறைகளில் வைத்து விட்டு வருமாறு கூறுவதற்கு முக்கிய காரணம் உள்ளது. உதாரணமாக பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்கள் வைத்திருக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். </p><h2><strong>தவிக்க நேரிடும்</strong></h2><p>திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தால் அவர்கள் செல்போனை வைக்க இடமில்லாமல் தவிக்க நேரிடும். இதனால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே அறைகளிலோ அல்லது கார்களிலோ செல்போன்களை வைக்குமாறு அறிவுறுத்துகிறோம்.</p><p>பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலை முன்பு ரீல்ஸ் எடுப்பது மற்றும் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலஸ்தானத்தில் சாமி தரிசனம் செய்யும் போது, ஊடகத்தினர் அங்கு வரை சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். இனி அதற்கும் அனுமதி இல்லை. </p><p>எனவே பிரபலங்களை கோவிலுக்கு வெளியே கோபுரம் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். கோவில் வளாகத்துக்குள் சென்று புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விழா காலங்கள்</strong></h2><p>விழா காலங்கள் மற்றும் கோவில்களில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் போது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினர் கோவிலுக்குள் சென்று நிகழ்ச்சிகளை புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் ரூ.1 கோடி - சத்குரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-fait-un-don-de-1-crore-de-roupies-au-fonds-de-secours-n%C3%A9palais-sadhguru</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-fait-un-don-de-1-crore-de-roupies-au-fonds-de-secours-n%C3%A9palais-sadhguru#comments</comments><guid isPermaLink="false">ab55930e-6b33-482d-94b8-c550a1e0660d</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:47:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:47:06.907Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா யோகா,sadhguru,nepal flood,சத்குரு,நேபாள வெள்ளம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tcw6ly1j/sadhguru.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சத்குரு]]></media:title><media:description type="html"><![CDATA[ சத்குரு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tcw6ly1j/sadhguru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாள</a> நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு, “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார். </p><p>இந்நிகழ்வில் <a href="https://www.maalaimalar.com/topic/சத்குரு">சத்குரு</a> பேசுகையில், "இமயமலைத் தொடர்கள் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடர்கள் எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாமல், 'சரி, இது நேபாளத்தின் பிரச்சனை, அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்' என்று நினைத்துக் கொண்டிருந்தால், இதற்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது.</p><p>மலைகளுக்கு உங்களது அரசியல் தொடர்புகள் தெரியாது. நீங்கள் பேசும் மொழியோ அல்லது செய்யும் அபத்தமான காரியங்களோ தெரியாது. இதை ஒரே அமைப்பாக உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கலந்தாலோசனை செய்வதாவது ஒரே அமைப்பாக நடக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களில் ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டும். ஏனெனில் இமயமலை பூமியின் மிகவும் அற்புதமான மற்றும் கம்பீரமான அமைப்பாகும். அதே நேரத்தில், அது மிக உறுதியானதும் அல்ல. </p><p>ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால் இப்போது இது நடந்துவிட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். </p><p>இந்தப் பேரழிவிற்கு ‘தெய்வீக காரணங்களை’ கூறுவதோ அல்லது ‘நம்ப முடியாத மாய சக்தி’ என்று சித்தரிக்கவோ வேண்டாம். வாழ்க்கையின் ஆன்மீகப் பரிமாணங்களுக்கும், இயற்கை நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பௌதிக விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். எனவே தத்துவங்கள், கருத்தியல்கள் அல்லது ஆன்மீக விளக்கங்களை அளித்து மனித துயரத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. </p><p>மிகப்பெரும் பேரிடரைச் சந்தித்திருக்கும் நேபாளத்திற்கு உதவும் வகையில், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ரூ.1 கோடி’ வழங்கப்படும். மேலும் கோவை ஈஷா யோக மையத்தில், நேபாள பெருவெள்ள பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்காக 'கால பைரவ கர்மா' செய்யப்படும்” எனக் கூறினார்.</p><p>இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மனிஷா கொய்ராலா, இதுபோன்ற பேரழிவில் இருந்து மக்கள் என்ன படிப்பினையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த சத்குரு, "ஒரு மனிதனாக, பேரிடர்கள் வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. மனிதனாக வாழ்வதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டிய முதன்மையான விஷயம் என்னவென்றால், நாம் அனைவரும் நிலையற்றவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து விழிப்புணர்வுடன் உணர்ந்திருந்தால், நமது வாழ்க்கையை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிட்டு வாழ்வோம். ” எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளம்: 84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nepal-floods-84-tamils-unreachable-minister-athav-arjuna#comments</comments><guid isPermaLink="false">02add709-3ddd-4145-8f51-bf29426a31ae</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:38:22 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:38:22.078Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜுனா,nepal flood,Minister Adhav Arjuna,நேபாள பெருவெள்ளம்,Tamil Pilgrims</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[    Adhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/4v1mj441/Adhav-Arjuna?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BE">ஆதவ் அர்ஜுனா</a>, நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.</p><h2><strong>வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்</strong></h2><p>கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் உத்தரவிட்டார். </p><p>இதையடுத்து, அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புதுடெல்லி இல்லத்தில் உதவி மையங்கள் மற்றும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.</p><p>ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. </p><p>இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, புதுடெல்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.</p><h2><strong>சிறப்பு அதிகாரி நியமனம்</strong></h2><p>இந்திய மற்றும் நேபாள அரசுகளுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அதிகாரியாக ஆஷிஸ் குமார், ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.</p><p>அன்றைய தினமே அமைச்சர்கள் குழு புதுடெல்லி சென்று கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்ததுடன், மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தியது.</p><p>ஆகஸ்ட் 28 ஆம் தேதி நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழர்கள் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். </p><p>பின்னர் அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><h2><strong>தொடர்பு மீட்பு முயற்சி</strong></h2><p>அதேபோல், வழிதவறியவர்கள் அல்லது பல்வேறு காரணங்களால் தொடர்பு கொள்ள முடியாத தமிழர்களை கண்டறிந்து மீட்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 5 பயணிகளின் உறவினர்களை அமைச்சர்கள் குழுவினர் நேரில் சந்தித்து, அவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.</p><h2><strong>பாதுகாப்பான மீட்பு</strong></h2><p>இதுவரை கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாச யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை தற்போது வரை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா நிறுவனம் மூலம் 57 பேர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">நேபாளம்</a> சென்றுள்ளனர். இவர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><h2><strong>யாத்திரை பயணம்</strong></h2><p>சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் யாத்ரா நிறுவனம் மூலம் 49 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்ள இந்திய தூதரகம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>ஆத்ம யோகா மையம் மூலம் 150 பேர் நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>பாதுகாப்பு உறுதி</strong></h2><p>சுற்றுலாவுக்காக நேபாளம் சென்ற 39 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். இவர்களில் 3 பேர் ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 36 பேர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.</p><p>அரசு உதவி எண்கள் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, மேலும் 10 பேர் சுற்றுலாவுக்காக நேபாளம் சென்றுள்ளனர். </p><p>இவர்களில் ஒருவர் தமிழகம் திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரையும் தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><h2><strong>அரசு உதவி எண்கள்</strong></h2><p>மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன. அவர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.</p><p>நேபாளத்தில் சிக்கியுள்ள தங்களது உறவினர்கள் குறித்து தகவல் அறிய விரும்புபவர்கள், அரசு உதவி எண்களைத் தொடர்புகொள்ளலாம். </p><p>அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.</p><h2><strong>தமிழர்கள் மீட்பு</strong></h2><p>இதுவரை அரசு உதவி எண்கள் மூலம் 2,161 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>நேபாளம் மட்டுமின்றி திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>தொடர்பு கொள்ள முடியாத 84 தமிழர்களையும் பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இணைந்து செயல்பட மறுக்கும் மேயர்கள்- சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadhav-arjuna-indictment-mayors#comments</comments><guid isPermaLink="false">b53ab144-a409-4a14-9e56-b95d70b1cda8</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:36:27 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:36:27.422Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,கேஎன் நேரு,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/69o4ksx2/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பாக தவெக எம்எல்ஏ தங்கப்பாண்டி குற்றச்சாட்டினார். </p><p>இதற்கு திமுக எம்எல்ஏ கே.என் நேரு பதிலளிக்கையில், ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் கூட ரூ.5000 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 30 ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா பணிகளும் செய்யப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் எல்லோரும் சொல்கிறார்கள், முந்தைய தி.மு.க. ஆட்சியில் ஊழல்... ஊழல் என்று. ஊழல் இருந்தால் அதிகாரம் உங்க கிட்ட இருக்கு. அதைக் கண்டுபிடிங்க. செய்யுங்க. எடுத்த உடனே ஊழல், ஊழல் என்றால் அது எப்படி? அது சரியாக இருக்காது என்றார். </p><h2><strong>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</strong></h2><p>நமக்கான பிரச்சனையை சொல்றேன். நகராட்சி துறையில் திட்டங்கள் தீட்டி விட்டோம். ரூ.5 ஆயிரம் கோடிக்கான திட்டத்தை போட்டாச்சு.எல்லாம் போட்டுட்டும். ஆனால் இன்றைக்கும் நம்முடைய தாய்குலமான பெண்கள் குடத்தை தூக்கிட்டு லாரிக்காக ஒவ்வொரு ரோட்டிலும் வெய்ட் பண்ணிட்டு தான் இருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் தாய்மார்கள் தண்ணீருக்காக வெய்ட் பண்ணிட்டுதான் இருக்காங்க.</p><p>எதிர்க்கட்சி துணை தலைவர் அண்ணா நீங்க பனையூர் சொன்னா, நாங்க கோபாலபுரம்-ன்னு பேச வருவோம். நாங்க அதைப்பற்றி பேச வரலை. மக்கள் பிரச்சனைகளை பற்றி  பேச வந்திருக்கோம். தண்ணீர் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் குழாயில் கொண்டு சென்று சேர்க்க முடியாத அரசாக இருக்கோம். ஒவ்வொரு பிரச்சனையையும் சட்டமன்ற உறுப்பினர் சொல்லும் போது ஆதாரம் இருக்கா, ஆதாரம் இருக்கா என்று கேட்கிறார். இன்றைக்கு அரசினுடைய பிரச்சனை என்று சொல்கிறேன். </p><p>உள்ளாட்சி துறை இன்றைக்கும் உங்களுடைய கன்ட்ரோலில்தான் இருக்கு. உங்களுடைய மேயர்தான், உங்களுடைய மண்டல பொறுப்பாளர்கள்தான். 25 மாநகராட்சி உங்கக்கிட்ட தான் இருக்கு. நாங்கள் திட்டத்திற்கு நிதி ஒதுக்கினால் அதனை செயல்படுத்தும் இடத்தில் திமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தான் உள்ளனர். இந்த அரசு மாறிவிட்டது, அதிகாரம் மாறிவிட்டது, ஆனால் உள்ளாட்சி துறையில் இன்னும் அதிகாரம் மாறாததால் தான் இந்த அரசுடன் மேயர்களுடன், மண்டல பொறுப்பாளர்கள் இணைந்து செயல்படுவதில்லை. சென்னையில் இருக்கிற மேயர் இந்த அரசுடன் இணைந்து செயல்படுவதில்லை. குற்றச்சாட்டை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. எங்களுடைய கோரிக்கை குற்றச்சாட்டை தூக்கி எறிவோம். இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு. இந்த தேர்தலில் 90 சதவீதம் இல்ல 100 சதவீதம் நாங்கள்தான் ஜெயிக்கப்போறோம். அதை இங்க பதிவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் 25 மாநகராட்சிகளிலும் நாங்கள் வெற்றி பெறும்போது, மேயர்களும், எல்லா தலைவர்களும் மாறும்போது எல்லா ஆதாரங்களும் வெளிவரும் என்பதை பதிவு செய்கிறோம் என்றார். </p><h2><strong>கேஎன் நேரு</strong> </h2><p>கிட்டத்தட்ட 2500 எம்எல்டி கொடுத்த இடத்தில் 4 ஆயிரம் எம்எல்டி புதிய திட்டங்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. புதிய ஆட்சி அமைந்த பின் நிதி ஒதுக்கீடு நிறுத்தம், மாநகராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்கியதாக கூறுவது தவறு, சென்னை மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை என கருப்பு உடை அணிந்து வந்தனர். மாநகராட்சி மேயர்கள் திமுகவினர் என்றாலும் ஒத்துழைக்காமல் இருக்க முடியாது, ஆட்சி அதிகாரம் உங்களிடத்தில் உள்ளது. உங்களுடைய செயலாளரை அழைத்து எந்தெந்த திட்டத்தில் எல்லாம் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை கேளுங்கள். கேட்டு உடனே நடத்தச் சொல்லுங்கள். கவுன்சிலரோ, மேயரோ அரசு சொல்கிற ஒரு திட்டத்தை செயல்படுத்தத்தவறினால் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. ஆணையரே அத்திட்டத்தை செயல்படுத்த சொல்லலாம் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகள்- அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-jegatheswari-unveils-nine-new-measures-for-disabled-welfare#comments</comments><guid isPermaLink="false">f023259f-69e2-4b15-86ad-af3eb100f533</guid><pubDate>Mon, 31 Aug 2026 08:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T08:15:55.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஜெகதீஸ்வரி,மாற்றுதிறனாளி நலத்துறை,Minister Jagadeeswari,Department of Welfare of the Disabled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Jagatheswari]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/o85fl5f9/Jagatheeswari.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் மாற்றுதிறனாளிகள்  நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி  வெளியிட்டார்.</p><p>அவை வருமாறு: </p><p>1. மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D" rel="nofollow">பெட்ரோல்</a> அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணம் வழங்கும் திட்டம்</p><p>உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>2. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்</p><p>தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 10 இல்லங்கள் அமைக்க ரூ.1.82 கோடி நிதி</p><p>அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 10 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.82 கோடி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்படும்.</p><p>3. அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் – ரூ.1.77 கோடி ஒதுக்கீடு</p><p>அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.77 கோடி நிதி ஒதுக்கப்படும்.</p><p>4. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 இல்லங்கள் – ரூ.49 லட்சம் நிதி</p><p>முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>5. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்</p><p>மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் – ரூ.97 லட்சம்</p><p>அறிவுசார் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sureshkumar-realizes-his-dream-of-studying-medical-at-51" rel="nofollow">மாற்றுத்திறனாளி</a> குழந்தைகளுக்கென 3 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 2 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள், பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென 1 ஆண்டு நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆண்டு நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>6. கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்.</p><p>கடலூரில் 100 பேர் பயன்பெறும் வகையில் 2 இல்லங்கள் – ரூ.10 கோடி நிதி.</p><p>கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 100 பேர் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 2 இல்லங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>7. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்</p><p>UDID அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்</p><p>தனித்து செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், UDID அட்டையைப் பயன்படுத்தி தங்களுடன் ஒரு துணையாளருடன் மாநகர/நகர தாழ்தள பேருந்துகள், விரைவு பேருந்துகள், டீலக்ஸ், புறநகர் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும்.</p><p>8. செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு Virtual Reality Learning திட்டம்</p><p>செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் மெய்நிகர் கற்றல் முறையில் கல்வி கற்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.</p><p>9. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி</p><p>பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை உயர்வு. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களைப் படிக்க உதவும் வாசிப்பாளருக்கு வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுகிறது.</p><p>2013–14ஆம் ஆண்டிலிருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3,000, இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.5,000, தொழில்கல்வி மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.</p><p>2026–27ஆம் ஆண்டு முதல் இந்த வாசிப்பாளர் உதவித்தொகை மேலும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>