<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 28 Jul 2026 06:38:59 +0000</lastBuildDate><item><title>தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-governor-conduct-which-hurts-sentiments-of-tamils#comments</comments><guid isPermaLink="false">0e3a6dbd-fb23-4ff6-854c-1a988ff15ac7</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:38:31 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:38:31.264Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,Convocation Ceremony,தமிழ்த்தாய் வாழ்த்து,Tamil Thai Vazhthu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/lb4n43zv/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். </p><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">பட்டமளிப்பு விழா</a> நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p> <p>இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது.</p><p>இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!</p> <p>மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-28-july-2026#comments</comments><guid isPermaLink="false">1e79a0a3-1015-4103-952c-60d74fc8dee8</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:26:26 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:28:53.729Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/wjfprp8x/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event">ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</a></p><p>* தமிழக ஆளுநர் அர்லேக்கர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.</p><p>* தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-celebration-row-viral-cjap-dance-videos-after-pradhan-resignation-draw-criticism-wangchuk-urges-humble-victory">வெற்றி எப்போதும் அடக்கத்துடன் சேர்ந்தே வர வேண்டும் - CJP கொண்டாட்டங்களை கண்டித்த சோனம் வாங்சுக்?</a></p><p>*இதுவே ஜென் இசட் தலைமுறையின் குணம்</p><p>*26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram">ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</a></p><p>* பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். </p><p>* தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-violence-report-ai-identifies-2873-attackers-989-with-serious-criminal-records-in-student-march">கொலை, கொள்ளை.. ஜூலை 20 பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் 989 பேருக்கு குற்றப் பின்னணி - டெல்லி காவல்துறை</a></p><p>*101 பேர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p>*டெல்லி காவல்துறை ஆணையர் அனுராக் குமார் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome">கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</a></p><p>* இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும்.</p><p>* கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses">பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!... </a></p><p>*அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.</p><p>•கட்டாயம் இயர்போன் (Earphones) ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today">ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</a></p><p>* ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>* பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </p><p><strong><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt">சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</a></strong></p><p>* டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sc-status-cancelled-on-conversion-supreme-court-upholds-ap-hc-ruling-on-reservation-and-certificates">மதம் மாறிய மறு கணமே பட்டியலின அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும் - உச்சநீதிமன்றம்</a></p><p>*பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒரு நபர் மதம் மாறிய மறு கணமே, அவரின் எஸ்சி அந்தஸ்து முடிவுக்கு வந்துவிடும்</p><p>* இந்து, சீக்கியர் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எஸ்சி அந்தஸ்திற்குத் தகுதியானவர்கள் என்று தெரிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cases-withdrawn-assam-bihar-and-rajasthan-grant-amnesty-to-demonstrators">மீண்டும் போராடுவோம் என எச்சரித்த CJP.. பீகார், அசாம், ராஜஸ்தானில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!</a></p><p>*எந்தவொரு இளைஞரையும் தனித்து விடமாட்டோம்</p><p>*பீகாரில் ஜூலை 25 அன்று நடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 694 பேர் உட்பட அனைவர் மீதான வழக்கு ரத்து </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/over-1000-attacks-in-6-months-surge-in-violence-by-israeli-settlers-in-the-west-bank-un">6 மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள்.. மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா</a></p><p>*மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>*இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.</p><p><a href="https://alaimalar.com/news/world/greta-thunberg-hails-indian-students-protest-victory-over-neet-exam-scam">இந்திய மாணவர்களின் வீரமிக்க போராட்டம் உலகம் முழுமைக்கும் நம்பிக்கை அளித்துள்ளது - கிரேட்டா துன்பெர்க்</a></p><p>*நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் உயிரிழந்த 21 மாணவர்களுக்கு அஞ்சலி.</p><p>* பிரபல இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/pok-election-boycott-empty-polling-stations-protests-and-violence-rock-pok">POK: தேர்தலை புறக்கணித்து மக்கள் போராட்டத்தில் வன்முறை - பலர் காயம்</a></p><p>*பல பகுதிகளில் மொபைல் மற்றும் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.</p><p>*பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-telugu-character-actress-dies-pavala-shyamala-passes-away-in-hyderabad-after-health-issues-and-viral-kokku-scene-fame">வைரல் தெலுங்கு நடிகை ஸ்யாமலா மறைவு</a></p><p>*போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர்.</p><p>*நள்ளிரவில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</a></p><p>* பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p><p>*  முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tatkal-booking-new-rules-process-coming-august-1st">ஆகஸ்ட் 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய டோக்கன்- நெரிசலை குறைக்க ரெயில்வே நடவடிக்கை</a></p><p>* ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.</p><p>* ஆதார் அட்டை அல்லது பிற செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university">மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</a></p><p>* தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது.</p><p>* தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-famous-model-files-complaint-mumbai-police">CJP PROTEST: போலீஸ் வேனை மறித்த புகழ்பெற்ற மாடல் அழகி மும்பை போலீசில் புகார்!... </a></p><p>*சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகத் தொடர் அவதூறுகளையும் மனரீதியான தாக்குதல்களையும் தொடுக்கத் தொடங்கினர்.</p><p>*"இந்த அநீதிக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளேன்" </p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-28-07-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக சரிந்த தங்கம் விலை</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august">வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம்</a></p><p>*&nbsp;பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்</p><p>* அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money">மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</a></p><p>* லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>* தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை - டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-mahesh-kumar-agarwal-clarifies-not-boycott-governor-event#comments</comments><guid isPermaLink="false">8ef67113-a6bf-46e1-bed8-121cb5a8f6be</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:07:45 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:07:45.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,Convocation Ceremony,Tamil Thai Vazhthu,DGP Mahesh Kumar Agarwal,ஆளுநர் விழா,டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DGP Mahesh Kumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/fna1kru8/dgp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>பட்டமளிப்பு விழா</h2><p>திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேகர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க இருக்கிறார்.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ் தாய்க்கான வாழ்த்துப் பாடல் பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார். </p><p>தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.</p> <h2>அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event">அமைச்சர் விஸ்வநாதன்</a> அறிவித்துள்ளார். </p><p>இதேபோல் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி இருந்தது.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>இந்நிலையில், காவல்துறை ஆலோசனைக்கூட்டம் மற்றும் அலுவலக பணி காரணமாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்றும் ஆளுநர் விழாவை புறக்கணிக்கவில்லை என்றும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ராகுலை பின்னுக்கு தள்ளிய முதலமைச்சர் விஜய்... இன்ஸ்டாகிராமில் 1.87 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-surpasses-rahul-187-million-followers-on-instagram#comments</comments><guid isPermaLink="false">601be04c-23e7-46af-ab93-fbca9fbc4a4e</guid><pubDate>Tue, 28 Jul 2026 06:01:36 +0000</pubDate><atom:updated>2026-07-28T06:01:36.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,விஜய்,vijay,Instagram,இன்ஸ்டாகிராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/nsmlifw7/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</aside><p>தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பிறகு இன்ஸ்டாகிராமில் விஜய்யை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.</p><p>இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் அதிகமாகவே இருந்து வருகிறது. அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.</p><p>இதன் மூலமாக பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பலர் வருவாயும் ஈட்டி வருகிறார்கள். இதுபோன்று இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களையும் பின் தொடர்கிறார்கள். </p><p>அந்த வகையில் பிரதமர் மோடி உலக அளவில் இன்ஸ்டாகிராமில் முன்னிலையில் இருந்து வருகிறார். அவரை 10.2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். மத்திய மந்திரிகளில் அமித்ஷாவை 3.22 கோடி பேரும், நிதின் கட்கரியை 66 லட்சம் பேரும் பின் தொடர்கிறார்கள். </p><h2><strong>எண்ணிக்கை உயர்வு</strong></h2><p>எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின் தொடர்ந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்யை</a> பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளது. </p><p>மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசியை 1.25 கோடி பேரும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை 40 லட்சம் பேரும் பின் தொடரும் நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை 23 லட்சம் பேரும் பின் தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><h2><strong>பிரசார களம்</strong></h2><p>இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில் இன்று அது மிகப்பெரிய பிரசார களமாகவே மாறியுள்ளது என்று கூறலாம். டெல்லியில் சமீபத்தில் இளைஞர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலமாகவே மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினார்கள்.</p><p>த.வெ.க.வினர் பலரும் இன்ஸ்டாகிராம் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் ஆகியவற்றையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். இளைஞர்களின் ஆதரவு சட்டமன்ற தேர்தலில் அதிக அளவு கிடைத்ததால் தான் விஜய் முதலமைச்சராக முடிந்தது. அந்த வரிசையில் தான் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-3month-ban-on-transporting-minerals-to-other-states-is-welcome#comments</comments><guid isPermaLink="false">658ce874-710f-48e2-a290-2fd6e5b921bf</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:34:49 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:34:49.827Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/xj4dsft9/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வரவேற்பு</strong></h2><p>தமிழ்நாட்டிலிருந்து  கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்  வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டின்  நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது.  இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே  வலியுறுத்தியிருந்தேன். அதைத்  தொடர்ந்து சில குவாரிகளுக்கு  கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும்  கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.</p><h2><strong>சிபிஐ விசாரணை</strong></h2><p>அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.</p><p>அதுமட்டுமின்றி, இப்போது 3  மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக  மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>விழுப்புரத்தில் கோர விபத்து: அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள் - 2 பேர் பலி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-in-viluppuram-two-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/accident-in-viluppuram-two-death#comments</comments><guid isPermaLink="false">40f52814-8b82-4eef-8afa-17f06c9cba7f</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:33:29 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:33:29.936Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,Death,விழுப்புரம்,accident,Viluppuram,விபத்து</media:keywords><media:content height="216" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-17/e2027d2q/New-Project-2026-04-17T181635.312.jpg" width="360"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-17/e2027d2q/New-Project-2026-04-17T181635.312.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் லாசர்(வயது26). </p><h2>விபத்து</h2><p>இவர் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை முத்தோப்பு நரசிங்கபுரத்தை சேர்ந்த பூபதி(45) என்பவருடன் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.</p><p>இவர்களது மோட்டார் சைக்கிள் விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.</p><p>அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த வாகனம் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது.</p> <h2>சொகுசு பஸ்</h2><p>இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற லாசரும், பூபதியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பின்னால் சென்னையில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நோக்கி சொகுசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை ராணிப்பட்டையே சேர்ந்த டிரைவர் சரவணன் இயக்கி வந்தார்.</p><p>அவர் விபத்தில் சிக்கி இளைஞர்கள் சாலையில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்ததும் அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ்சை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார்.  ஆனால் அதற்குள்ளாகவே பஸ் சாலையில் விழுந்து கிடந்த பூபதியின் மீது ஏறிவிட்டது. </p> <h2>வாலிபரின் மீது ஏறியது</h2><p>இதில் பூபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். லாசர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.</p><p>விபத்து நிகழ்ந்ததும், சொகுசு பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டார். அப்போது சொகுசு பஸ்சின் பின்னால் வந்த   காரும், அதன்பின்னால் வந்த டெம்போ டிராவலரும் அடுத்தடுத்து வந்து பஸ்சின் மீது மோதி விபத்தில் சிக்கி கொண்டன.</p> <p>இதில் காரின் முன்பகுதி முழுவதும் சொகுசு பஸ்சின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.</p><h2>அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்</h2><p>அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் காரில் பயணித்த சென்னை முடிச்சூரை சேர்ந்த ஜான் அன்பழகன்(வயது50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் காரில் வந்த சாலமன்(55), டிரைவர் பாலாஜி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.</p><p>இந்த விபத்து குறித்து அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த லாசர், சாலமன், டிரைவர் பாலாஜி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p> <h2>2 பேர் உயிரிழப்பு</h2><p>உயிரிழந்த ஜான் அன்பழகன், பூபதி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.</p><p>தொடர்ந்து சொகுசு பஸ்சின் அடியில் சிக்கிய காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய கார், மோட்டார் சைக்கிள், டெம்போ டிராவலர் உள்ளிட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.</p><p>இந்த விபத்தால்  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டது எப்படி, மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? அதனை ஓட்டி வந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>அதிகாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி &apos;நோ சவுண்ட்&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-travellers-no-sound-in-government-buses#comments</comments><guid isPermaLink="false">73f8a45a-6f0b-4ed2-9e36-2e8cb2d6fdcd</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:25:56 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:25:56.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,government buses,Tamilnadu Government,tnstc,போக்குவரத்து கழகம்,அரசுப் பேருந்துகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Government Buses ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/hqh9kncr/tnstc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் பலர் செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சிலர் ஹெட்போன், இயர்போன் மூலம் இசை கேட்பார்கள். ஆனால் ஒரு சிலர் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது அல்லது படம் பார்ப்பது உண்டு. செல்போனில் பேசும் போது கூட மிகவும் சத்தமாக பேசுவதை காண முடியும். இது சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் அரு கருகே இருக்கும் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.</p><p>இதுபோன்ற தகராறுகள் பஸ்களில் நடைபெறாமல் இருக்க பஸ்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக செயலாளர் நிர்மல்ராஜ், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்</strong>:</h2><p>பொதுப் போக்குவரத்து வாகனங்களில்  பயணிகள் பயணிக்கும்போது,  மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-ன் விதி 5(10)-ன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-ன் படி, சக பயணி களுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும். </p><p>இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன், ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் வீடியோ படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.</p><h2><strong>இயர்போன், ஹெட்போன் மூலம் பாடல்:</strong></h2><p>‘புளூடூத்’ அல்லது இயர்போன், ஹெட்போன் பயன்படுத்தி சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்கு வரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். </p><h2><strong>விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:</strong></h2><p>பேருந்தினுள் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 'கைபேசியில் 'ஸ்பீக்கர் ஒலி' வேண்டாம் - அமைதியான பயணம், பாதுகாப்பான பயணம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அறிவுறுத்தல்:</strong></h2><p>பேருந்தைக் கிளப்பும் முன்பும், பயணத்தின்போதும் பயணிகள் இந்த நடைமுறையைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்து அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபகாலமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பலர், தங்கள் கைபேசியில் சத்தமாக ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், உரத்த குரலில் பேசுவதும் அதிகரித்துள்ளதாகக் கடலூர், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன. அமைதியான மற்றும் அசவுகரியமில்லாத பயண அனுபவத்தை உறுதிசெய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமேசுவரம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rameswaram-mechanized-and-traditional-boat-fishermen-are-barred-from-venturing-out-to-sea-today#comments</comments><guid isPermaLink="false">ae8e71c2-d68d-4814-b553-48df2a7c6c6e</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:21:25 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:21:25.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கடலுக்கு செல்ல தடை,ராமேசுவரம் மீனவர்கள்,Rameswaram Fishermens</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/g37ezrr7/rameshwaram.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/g37ezrr7/rameshwaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. </aside><h2><strong>மீன்பிடிக்க செல்ல தடை</strong></h2><p>தமிழகத்தில் சூப்பர் எல் நினோ காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப தாக்குதல் இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக கோடை காலத்தை மிஞ்சும் வகையில், தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.</p><p>இந்தநிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் நேற்று முதல் அதிகமாக இருந்து வருகிறது. இது இன்று உயர்ந்து 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>இதன் எதிரொலியாக தென்கடல் பகுதியான மன்னார்வளைகுடாவுக்கு பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று காலை கடலுக்கு செல்ல தயாராக இருந்தனர். ஆனால் அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.</p><h2><strong>வேலையிழப்பு</strong></h2><p>இதையடுத்து பாதுகாப்பு கருதி ராமேசுவரம் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். அதேபோல் ஒரு படகு மற்றொரு படகுடன் மோதி சேதமடையாமல் இருப்பதற்காக நாட்டுப்படகுகள் கரைக்கு இழுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பருவநிலை மாற்றம், இலங்கை கடற்படையினரால்  மீனவர்கள் சிறைப்பிடிப்பு, விரட்டியடிப்பு, வேலை நிறுத்த போராட்டம், தற்போது சூறாவளி காற்றால் கடலுக்கு செல்ல தடை போன்ற காரணங்களால் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள ராமேசுவரம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடியில் தவித்து வருகிறார்கள். இந்த மீன்பிடி தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த  சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டத்தின் பாதையில் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டும்- ஆர்.பி.உதயகுமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rb-udhayakumar-indictment-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">df8285ae-a575-486a-81f8-c4959b161654</guid><pubDate>Tue, 28 Jul 2026 05:10:12 +0000</pubDate><atom:updated>2026-07-28T05:10:12.838Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,RB Udhayakumar,ஆர்பி உதயகுமார்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆர்.பி.உதயகுமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/0s4fu4e1/RBUdhayakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.</aside><p>முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">ஆர்.பி.உதயகுமார் </a>இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது. கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை த.வெ.க. அரசு எடுத்திருக்கிறது.</p><p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா? மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது தமிழகம்.</p><h2><strong>நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சி</strong></h2><p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க. அரசின் உத்தரவை ரத்து செய்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">சென்னை ஐகோர்ட் மதுரை கிளை</a> அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து, சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.</p><p>கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு ஐகோர்ட் தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க. கட்சியை வளர்ப்பதற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பே சாட்சியாக இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா - அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nellai-manonmaniam-sundaranar-university-convocation-minister-viswanathan-skips-event#comments</comments><guid isPermaLink="false">0ceb1613-c7e5-4002-9b5c-53c3f3ae5d55</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:52:04 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:52:04.570Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பட்டமளிப்பு விழா,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,Convocation Ceremony,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan,nellai manonmaniam sundaranar university</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/klrv4ivc/univeersity.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.</p><h2>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா</h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார். </p> <h2>அமைச்சர் விஸ்வநாதன்</h2><p>இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">பட்டமளிப்பு விழா</a>வை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார்.</p> <h2>டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்</h2><p>மதுரையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தற்போது வரை நெல்லைக்கு புறப்படவில்லை. இன்று முனைவர் பட்டம் வாங்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பட்டம் வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p> <h2>தமிழ்த்தாய் வாழ்த்து</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் அறிவித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெறும் நிலையில் ஆளுநரை கண்டித்து புறக்கணிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.</p><p>பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ ராஜேந்திரன் அறிவித்த நிலையில் நெல்லை எம்எல்ஏ முருகனும் அறிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-regularize-the-services-of-consolidated-pay-employees-at-manonmaniam-sundaranar-university#comments</comments><guid isPermaLink="false">3ddf92d1-7dde-4bed-a8bb-a3ea89fbab72</guid><pubDate>Tue, 28 Jul 2026 04:41:00 +0000</pubDate><atom:updated>2026-07-28T04:41:00.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Manonmaniam Sundaranar University,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/icxnmrh1/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அறமும், மனிதநேயமும் மீறல்</strong></h2><p>நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும்  53  தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள்,  அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில்  தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில்  17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை  பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து  எந்தப் புகாரும் இதுவரை  எழவில்லை.</p><p>மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள்  தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது.</p><h2><strong>பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்</strong></h2><p>தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும்  53  பேரும்  50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும்  சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள்  2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.</p><p>பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்;  ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார்.  இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது.</p><p>தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும்  மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்; பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை- தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/come-only-with-petitions-entry-is-not-permitted-if-you-bring-money#comments</comments><guid isPermaLink="false">759c7085-57f0-4762-b6cc-7e8540acf0b5</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:44:37 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:44:37.710Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>லஞ்சம்,bribery,petitions,taluk office,தாலுகா அலுவலகம்,மனுக்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:title><media:description type="html"><![CDATA[ தாலுகா அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீசை படத்தில் காணலாம்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/jg6w6sra/manamadurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மனுக்களுடன் மட்டுமே வாருங்கள்: பணத்துடன் வந்தால் அனுமதி இல்லை என மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஓட்டிய நோட்டீசால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</aside><h2><strong>தாலுகா அலுவலகம்</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறிவித்ததாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டது. அதில் "தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வரவேண்டும். பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை" என்று கூறப்பட்டிருந்தது.</p><p>பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டாமாறுதல், சான்றிதழ்கள் பெறுதல், நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் சிலர் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய இந்த வினோத கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>வலைதளங்களில் வைரல்</strong></h2><p>தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள் பணத்துடன் வருவதை தவிர்த்து, கோரிக்கை மனுக்களை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை தாசில்தாரின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்திற்கு எதிராக தாசில்தார் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி- அடுத்த மாதம் அறிமுகப்படுத்த திட்டம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/upi-linked-pf-claim-roll-out-now-in-august#comments</comments><guid isPermaLink="false">8d6a229e-c132-444e-b854-6ab8084e9a65</guid><pubDate>Tue, 28 Jul 2026 03:19:30 +0000</pubDate><atom:updated>2026-07-28T03:19:30.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UPI,யுபிஐ,EPFO,வருங்கால வைப்பு நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-28/re530xwl/UPI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமான வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</aside><h2><strong>கோளாறு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF">தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி</a> நிறுவனம் (இ.பி.எப்.ஓ.) தனது சேவைகளில் யு.பி.ஐ. மூலம் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை (சைட்ஸ் 2.01) நடைமுறைப்படுத்தியது. இந்த தளத்தை அறிமுகப்படுத்திய பிறகு, அதில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்தாக உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறிப்பாக, பழைய வைப்பு நிதி கணக்குகளில் இருந்த தரவுகள் புதிய தளத்தில் விடுபட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இணையதளத்தில் உள்ளே நுழைவதில் சிக்கல், வருங்கால் வைப்பு நிதி இணையதளம் மெதுவாக இயங்குகிறது. கோரிக்கைகளை பரிசீலிப்பதில் தாமதம் போன்ற புகார்களும் எழுந்துள்ளன.</p><h2><strong>குற்றச்சாட்டு</strong></h2><p>வழக்கமாக விண்ணப்பித்த 3 நாட்களில் (குறைந்தபட்சம்) <a href="https://www.maalaimalar.com/news/national/labour-ministry-makes-epf-contributions-beyond-rs-1800-voluntary">சந்தாதாரர்களுக்கு</a> பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இது அவர்களுடைய அவசர தேவையை பூர்த்தி செய்ய உதவிக்கரமாக இருந்தது. ஆனால் சமீப நாட்களில் விண்ணப்பித்து 1% மாதம் ஆகியும் சந்தாதாரர்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்தநிலையில், தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்யும் பணியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p><p>அனைத்து முக்கிய தொழில்நுட்ப கோளாறுகளும் முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அதன் பின்னரே தற்போதைய நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்திற்குள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.</p><h2><strong>நோக்கம்</strong></h2><p>வருங்கால வைப்பு நிதியில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி 'பீம்' செயலி மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை, வங்கி கணக்குகளுடன் இணைத்து, தகுதியான கோரிக்கைகளுக்கான பணத்தை உடனடியாக பெறமுடியும். பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பண பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, சந்தாதாரர்களின் கோரிக்கைகளை விரைவாக தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் அறை இடம் மாற்றம் - நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-office-shifting-to-namakkal-kavignar-maligai-official-government-announcement#comments</comments><guid isPermaLink="false">ac67d8d3-82b5-4b9e-b829-ec119b8621f3</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:16:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:16:03.271Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>vijay,முதலமைச்சர் விஜய்,St George building,Namakkal Kavignar Maligai,நாமக்கல் கவிஞர் மாளிகை,புனித ஜார்ஜ் கோட்டை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதலமைச்சர் அறை - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/6kuaiels/New-Project-2026-07-27T214533.749.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது. </p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வருவாயை பெருக்க தமிழக அரசு குழு அமைப்பு: 3 மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/montek-singh-led-committee-to-identify-new-revenue-sources-for-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">7964c801-77f7-432c-8b4e-30b00670d610</guid><pubDate>Mon, 27 Jul 2026 16:10:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:10:18.875Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திட்டக்குழு,montek singh ahluwalia,தமிழ்நாடு வருவாய்,Planning commission,tamilnadu income,மான்டேக் சிங் அலுவாலியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamil Nadu Govt forms Montague Singh Ahluwalia panel to identify new income sources]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/oghofcx9/Untitled-design-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் மாநில வருவாயை பெருக்குவதற்காக, மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p>பொருளாதார நிபுணரான மான்டேக் சிங் அலுவாலியா, மத்திய திட்டக்குழுவின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தார். </p><p>தமிழ்நாடு பட்ஜெட்டின் நிதி நிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.</p><p>இதையடுத்து தமிழ்நாடு அரசின் வருவாயை பெருக்கும் குழுவின் தலைவராக மான்டேக் சிங் நியமிக்கட்டுள்ளார். </p><p>இவர் தலைமையிலான குழுவினர்கள், மாநிலத்தில் வருவாய் ஆதாரங்களை பெருக்க, வழிமுறைகளை ஆராய்ந்து தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மான்டேக் சிங் தலைமையிலான குழு, வரி மற்றும் வரியில்லா வருவாயை அதிகரிக்க கொள்கை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை அரசுக்கு வழங்க உள்ளது.</p><p>மேலும் மாநிலத்திற்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்த குழு, தமிழ்நாடு அரசிடம் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-27-july-2026#comments</comments><guid isPermaLink="false">8b4780d9-1157-4420-b1d3-5493e3a0aec3</guid><pubDate>Mon, 27 Jul 2026 04:28:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T16:06:26.523Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/po8rkawb/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-mariya-wilson-says-a-list-of-dmks-acts-of-corruption-will-be-released-during-the-upcoming-budget-session">நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. ஊழல் பட்டியல் வெளியாகும்- அமைச்சர் மரிய வில்சன்</a></p><p>* முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போதே, ஊழல் இல்லாத வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அரசாக இருக்கும் என்று உறுதியளித்தார்.</p><p>* '100 சதவீதம் மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய பட்ஜெட்டாக த.வெ.க. அரசின் பட்ஜெட் இருக்கும்' என்று தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/plans-for-womens-premier-league-cricket-in-tamil-nadu" rel="nofollow">தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் 'பெண்கள் பிரீமியர் லீக்' போட்டி?</a></p><p>* தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக உள்ளது.</p><p>* போட்டியுடன் பெண்களுக்கான இரண்டு கண்காட்சி போட்டி நடத்தப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/seattle-food-festival-shooting-two-killed-five-injured-at-space-needle-event">அமெரிக்கா: உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி - ஐவர் காயம்</a></p><p>*தப்பிக்கும் முயற்சியில், மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டபடி சென்றதால் பலர் கீழே விழுந்தது பதிவாகியுள்ளது.</p><p>*இருவர் கைது என சியாட்டில் நகர மேயர் கேட்டி வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-ban-student-assault-row-dmk-congress-push-for-heated-debate-in-parliament">நீட் தேர்வு தடை, மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க தி.மு.க நோட்டீஸ்</a></p><p>*தொடர்ச்சியான தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும்</p><p>* கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 2 வரை நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-27-07-2026">GOLD PRICE TODAY: வார தொடக்கத்திலேயே தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: அதிரடியாக உயர்ந்த விலை!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kavin-first-death-anniversary-minister-vanni-arasu-meets-family">கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் - குடும்பத்தினரை சந்தித்து  அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்</a></p><p>* காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். </p><p>* கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/abdul-kalam-memorial-day-11th-death-anniversary-collector-and-annamalai-pay-tribute">11-ம் ஆண்டு நினைவு நாள் - அப்துல் கலாம் நினைவிடத்தில் கலெக்டர், அண்ணாமலை மரியாதை</a></p><p>* ஏபிஜே அப்துல் கலாம் நினைவை போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது. </p><p>* பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டு வந்து  அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/hattrick-gold-for-india-brings-immense-joy-mirabai-chanu" rel="nofollow">இந்தியாவுக்காக ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி- மீராபாய் சானு</a></p><p>* நான் 48 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் போது அதில் கடினமாக இருக்கிறது. </p><p>* நான் 3 நாட்களாக தண்ணீர் கூட குடிக்கவில்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/what-events-will-india-participate-in-at-the-commonwealth-games-today" rel="nofollow">காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் எவை?</a></p><p>* ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் முதல் சுற்று - குரிந்தர்விர் சிங். </p><p>* ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்று, (பி பிரிவு)-லோகேஷ் சத்யநாதன். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/parliament-disruption-both-houses-adjourned-as-opposition-demands-debate-on-neet-leak-and-student-assault">தர்மேந்திர பிரதானுக்கு ராஜ வரவேற்பு.. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி - அவைகள் ஒத்திவைப்பு</a></p><p>*கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், மக்களவை எம்.பி.யாக இன்று அவைக்கு வருகை புரிந்தார்.</p><p>*அவையின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/11th-death-anniversary-of-peoples-president-dr-apj-abdul-kalam">"மக்கள் ஜனாதிபதி" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி!</a></p><p>* இராமேஸ்வரத்தில் பிறந்த எளிய செய்தித்தாள் விற்பனையாளர் மகன்</p><p>* மக்களின் ஜனாதிபதி, மாணவர்களுக்கு கனவு காண கற்றுக்கொடுத்தவர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-congratulates-raja-muthupandi-on-commonwealth-games-silver-medal" rel="nofollow">காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்: தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.</p><p>* ராஜா முத்துப்பாண்டியின் வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.  </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/supreme-court-slams-excessive-police-force-on-peaceful-delhi-student-march">போராட்டம் நடத்தினாலே தடியடியா? மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்</a><br><br>*போராட்டம் என்பது வன்முறை என்று அர்த்தமாகாது.</p><p>*தாக்குதல் குறித்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india" rel="nofollow">இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்..!- யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?</a></p><p>* ராஜா தனது பள்ளி காலத்தில் இருந்தே பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று வந்துள்ளார்.</p><p>* 2018-ம் ஆண்டில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 6-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online">இணையத்தில் 'ஜன நாயகன்' பார்த்தவருக்கு முன்ஜாமின்</a></p><p>* படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்</p><p>* வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/desilting-of-water-bodies-minister-anand-conducts-field-inspection-after-arriving-on-a-motorcycle">நீர்நிலைகள் தூர்வாரும் பணி - மோட்டார் சைக்கிளில் வந்து கள ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த் </a></p><p>* கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஆனந்த் தனது காரில் சென்றார்.</p><p>* கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-must-withdraw-highway-toll-robbery"> சுங்கக் கட்டண கொள்ளையை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் - மாணிக்கம் தாகூர்</a></p><p>* கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக கட்டணம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது.</p><p>* தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது மோடி அரசு. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon">ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு</a></p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* பிரதமர் மோடி அமைத்துள்ள உயர்மட்ட குழுவே ஒரு ஏமாற்ற வேலைதான். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-government-introduces-strict-exam-malpractice-prevention-bill-in-parliament">கடும் அமளிக்கு மத்தியில் 'தேர்வு முறைகேடுகளை தடுக்கும் மசோதா' மக்களவையில் தாக்கல்.. அம்சங்கள் என்ன? </a></p><p>பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026' அவையில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p>*சட்ட விதிமுறைகளை கடுமையாகும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dr-apj-abdul-kalam-11th-death-anniversary-leaders-pay-tribute">"ஏவுகணை நாயகனின் கனவுகள் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டுகின்றன" - கலாமுக்கு தலைவர்கள் புகழஞ்சலி!</a></p><p>* தலைவர்கள் கலாமின் எளிமை, தேசபக்தி, அறிவியல் பங்களிப்பை புகழ்ந்தனர்</p><p>* இளைஞர்களுக்கு கனவு, புதுமை வழிகாட்டியாக கலாம் இன்றும் வாழ்கிறார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-ethanol-row-nitin-gadkari-moves-bombay-high-court">E20 எத்தனால் விவகாரம்: பொய் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி வழக்கு!... </a></p><p>*சமீபகாலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் E20 பெட்ரோல் பயன்பாட்டினால் வாகனங்களின் என்ஜின் பழுதடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. </p><p>*தனது குடும்பத்தினரின் வணிக வருவாயில் எத்தனால் உற்பத்தி மூலம் கிடைக்கும் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned">தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு</a></p><p>* வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><p>* ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு  ஐகோர்ட் உத்தரவு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-shooting-bihar-cop-suspended-for-firing-ak-47-at-students">VIDEO: பீகாரில் போராடிய மாணவர்களை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்டு!</a></p><p>*குறைந்தபட்சம் 4 முதல் 5 சுற்றுகள் வரை சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>*15 வயது சிறுவன் முகமது ஆரிப் கழுத்தில் குண்டடிபட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</a></p><p>* விவசாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>* குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture">‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்</a></p><p>* தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். </p><p>* சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான் என்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments">முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</a></p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd">தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</a></p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests" rel="nofollow">சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>* ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan">கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!...</a></p><p>*கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. </p><p>*மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled">கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/vvs-laxman-urges-vaibhav-sooryavanshi-to-improve-fitness-after-first-player-of-the-series-win">வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்</a></p><p>* வைபவ் சூர்யவன்ஷி மிகவும் இளம் வயதுடையவர். விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள அவரே விரும்புகிறார்.</p><p>* டீப் ஸ்கொயர் லெக் (deep square leg) பகுதியிலிருந்து ஓடிவந்து டைவிங் கேட்ச் (diving catch) பிடிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், அவர் தொடர்ந்து களத்தில் இருக்கவே விரும்பினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects">கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!...</a> </p><p>*தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும்.</p><p>*தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit">பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!... </a></p><p>*பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><p>*பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/if-cases-not-withdrawn-protests-will-return-cockroach-janata-party-deadline-to-centre">வழக்குகள் வாபஸ் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம்: மத்திய அரசுக்கு 'காக்ரோச் ஜனதா கட்சி' கெடு!... </a></p><p>*டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்</p><p>*போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், மத்திய அரசு மற்றும் காவல்துறை அளித்த வாக்குறுதிகளை மீறி வருவதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government">மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/gyaneshwari-yadav-won-silver-weightlifting-women-53-kg-commonwealth-games">காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனை ஞானேஷ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்</a></p><p>* நைஜீரியா வீராங்கனை Snatch முறையில் 93 கிலோவும், Clean and Jerk முறையில் 113 கிலோவும் என மொத்தமாக 206 கிலோ பளு தூக்கி முதல் இடம் பிடித்தார்.</p><p>* கனடா வீராங்கனை 178 (83+95) கிலோ தூக்கி வெண்கல பதக்கம் வென்றார்.</p> ]]></content:encoded></item><item><title>விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/virudhunagar-firecracker-accident-rs-4-lakh-relief-announced-for-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">68164548-be22-457c-aad8-5c8120a51d23</guid><pubDate>Mon, 27 Jul 2026 15:42:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T15:42:16.989Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>relief,நிவாரணம்,Virudhunagar Firecracker Accident,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விருதுநகர் பட்டாசு வெடிவிபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/utj3z9rb/New-Project-2026-07-27T211151.390.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>”விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ்(வயது 32) த/பெ ரவீந்திரன், </p><p>ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன். இன்னாசிமுத்து (வயது 44) த/பெ. சிங்கராஜ் மற்றும் நாராணாப்புரத்தைச் சேர்ந்த  பாண்டித்துரை (35) த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.</p><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.</p><p>மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய கட்டாயமில்லை - மத்திய அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-does-not-need-to-obtain-tamil-nadus-permission-to-build-the-mekedatu-dam-central-government#comments</comments><guid isPermaLink="false">c3007898-f7f7-4fca-aa1b-7f8306f31e5e</guid><pubDate>Mon, 27 Jul 2026 14:25:47 +0000</pubDate><atom:updated>2026-07-27T14:25:47.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,mekedatu,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணைகட்ட கர்நாடகா தமிழ்நாட்டின் அனுமதியை பெறவேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/p23aj9cl/New-Project-2026-07-27T195526.653.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு, தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>மாநிலங்களவையில் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பூஷன் சௌத்ரி, </p><p>“காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி போன்ற எந்த மாநில அரசின் ஒப்புதலையும் கர்நாடகா பெறவேண்டும் என்ற அவசியமில்லை என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். </p><p>இதுபோன்ற திட்டங்களுக்கு கீழ்நிலை ஆற்று மாநிலங்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற எந்த விதியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகளின் ஒப்புதலை கர்நாடகா பெற்றுள்ளதா? மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் தான் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பக்தர் உயிரிழந்த விவகாரம்: திருவண்ணாமலை இடுக்கு கோயிலுக்கு செல்ல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/devotee-death-issue-key-guidelines-for-thiruvannamalai-idukku-temple-visit#comments</comments><guid isPermaLink="false">6f1b30b3-e90f-451f-b720-0a0bfeb871aa</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:29:18 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:29:18.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Tiruvannamalai,திருவண்ணாமலை,Tiruvannamalai temple,Idukku Temple,திருவண்ணாமலை கிரிவலப்பாதை,இடுக்கு பிள்ளையார் கோயில்,Idukku Pillaiyar Temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruvannamalai Idukku Temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hp5vze6p/thiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் கோயில்.  இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.</p><p>குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.</p><h2><strong>பக்தர் உயிரிழப்பு:</strong></h2><p>இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.</p><p>பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><h2><strong>கோயில் நிர்வாகம் அறிவிப்பு:</strong></h2><p>இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>பிரசித்தி பெற்ற இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழிப்பாதை மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்டதாகும். இதனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான வழிப்பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பக்தர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\</p>]]></content:encoded></item><item><title>கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-job-granted-by-chief-minister-to-vijay-in-the-karur-case-cancelled-tamil-nadu-government-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">96b2f9f7-d2e6-43e5-9a40-4d3873361de1</guid><pubDate>Mon, 27 Jul 2026 13:10:35 +0000</pubDate><atom:updated>2026-07-27T13:10:35.929Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karur Stampede,தமிழ்நாடு அரசு,Madras High Court,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Government of Tamil Nadu,government jobs,அரசுப்பணி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் விவகாரத்திற்கு முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசுப்பணி ரத்து - உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழ்நாடு அரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/n666w22f/New-Project-2026-07-27T183729.488.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ஆணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. </p><p>பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாதங்களை கேட்காமலேயே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் நாளையே மேல்முறையீடு செய்யப்போவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். </p><h2>நீதிமன்றம் கூறியது என்ன?</h2><p>“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவோராக மாற்றக்கூடாது. அரசு பணி வழங்குவதற்கு பதில் அது பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த பணியும் சாதரண பணியல்ல. அது ஒவ்வொருவரின் குடும்பத்துக்கு உதவும் பணியே.</p><p>கருணை அடிப்படையில் வேலை கிடைக்க பலர் காத்திருக்க கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? சிவகாசி வெடிவிபத்தில், பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசுப்பணி வழங்குவீர்களா? தினமும் சாலை விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-inspection-at-koyambedu-industrial-water-treatment-plant#comments</comments><guid isPermaLink="false">6d629442-691c-4e87-abab-975642cda654</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:37:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:37:03.494Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,சுத்திகரிப்பு நிலையம்,cm vijay,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,கோயம்பேடு,RO plant</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay inspects reviews Chennai Sewage Plant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0g4iqeh/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.</p><p>தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்பு சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனை, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதி, சேத்துப்பட்டு எரிவாயு உற்பத்தி மையம் ஆகிய இடங்களில் திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>நெம்மேலியில் உள்ள கடல்நீர் குடிநீராக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிந்தார்.</p><p>ஏற்கனவே நான்கு இடங்களில் ஆய்வு செய்த நிலையில், தற்போது தொழில்துறை தேவைக்கு வழங்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்தார்.</p><p>இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலையில், ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p><p>இந்த சுத்திகரிப்பு ஆலையில் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கொள்ளளவு செயல்பாட்டில் உள்ளது.</p><p>இங்கு சுத்திகரிக்கப்படும் நீரின் தரம் சரியான அளவில் இருப்பதால், அந்த நீரை கொண்டு வாகனங்கள் மற்றும் ரெயில் பெட்டிகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா, புரளியா?- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-claim-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">69ebd9f7-8f47-4cc6-90b6-657091cf5527</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:31.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டாஸ்மாக் கடைகள்,Tasmac,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nainar Nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hkg4jg5n/Nainar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், RTI சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா? அல்லது எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>"மூடப்பட்ட” டாஸ்மாக் கடைகளில் தொடரும் மர்மங்கள், வெள்ளையறிக்கை வெளியிடுமா தவெக அரசு?</p><p>"நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்" என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>“மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், RTI- இடம் பதிலில்லை. விஜய் அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு. </p><p>மொத்தத்தில் மூடப்பட்டதாக கூறிய 717 டாஸ்மாக் கடைகள் பற்றி எது கேட்டாலும்,"அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு அணுகவும்" என்றே ஒரே பதில் மட்டும் தான் RTI இடமிருந்து கிடைக்கிறது.</p><p>அந்தந்த மாவட்ட மேலாளரிடம் தரவுகள் இருக்குமாயின், அவற்றை சேகரித்து RTI மூலம் எளிதாக மக்கள் பார்வைக்கு வெளிப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்? தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?</p><p>உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு CPI வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpi-urges-immediate-approval-for-coimbatore-madurai-metro-projects#comments</comments><guid isPermaLink="false">6e6d268e-444f-4814-8972-4c1dc30f58bc</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:34:28 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:34:28.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore metro train,Madurai Metro,மதுரை மெட்ரோ,CPI Veerapandiyan,கோயம்புத்தூர் மெட்ரோ,CPI வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CPI  Veerapandiyan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/4ptxrj2s/veerapandian.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகளை (DPR), போதுமான மக்கள் தொகை இல்லை மற்றும் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை எனக் கூறி ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.</p><p>ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இரு நகரங்களின் வேகமான வளர்ச்சி மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. </p><h2><strong>கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை:</strong></h2><p>மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் தொகை இல்லை என்று கூறி மதுரை ,கோவை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு மீண்டும் அனுமதி தர மறுத்துள்ளது.</p><p>2017 மெட்ரோ ரெயில் கொள்கையின் குறைந்தபட்ச விதிமுறையான 20 லட்சம் மக்கள் தொகை இருக்கவேண்டும் என்பதை காரணமாக சுட்டிக் காட்டி, சுமார் 15.8 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூர், சுமார் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மதுரை&nbsp;ஆகியவற்றுக்கான மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.</p><h2><strong>மாற்றாந்தாய் மனப்பான்மை:</strong></h2><p>ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏறக்குறைய கோவை மற்றும் மதுரைக்கு சமமான&nbsp;மக்கள் தொகையைக் கொண்ட ஆக்ரா,போபால்,பாட்னா போன்ற வட இந்திய நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களுக்கு இந்த அனுமதி மறுத்திருப்பது என்பது ஒன்றிய அரசின் பாரபட்ச போக்காகும். இது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டுக்கு எதிரான இத்தகைய போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.</p><p>உடனடியாக கோவை,மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ,ஒன்றிய பாஜக அரசை&nbsp;&nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு&nbsp;வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசு இத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி மீண்டும் விண்ணப்பித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு எவ்வித அரசியலும் செய்யாமல் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/government-jobs-granted-to-the-families-of-those-who-died-in-the-karur-stampede-have-been-cancelled#comments</comments><guid isPermaLink="false">5ee8aa82-9606-4abd-a1a8-1fb1f3cd6af1</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:10:16 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:10:16.726Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,கரூர்,Karur,Madurai Bench of the High Court,கரூர் கூட்ட நெரிசல்  வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப்பணி ரத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/hozfbunj/New-Project-2026-07-27T173947.313.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய்யை காண ஒரேநேரத்தில் அதிகளவிலான மக்கள் திரண்டதால்  கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி பிஞ்சு குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். </p><p>இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில் கடந்த 10ம் தேதியன்று கரூருக்கு சென்ற முதலமைச்சர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார். தகுதியுடைய 31 பேருக்கு அரசுப்பணியும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார். </p><p>இந்த பணி நியமன ஆணைகளுக்கு பெரும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. ஒருதரப்பினர் இதனை ஆதரிக்கவும் செய்தனர். இந்நிலையில் இந்த பணி வழங்கலை எதிர்த்து நாதக மற்றும் மஜக தரப்பு நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். </p><p>இந்தமனு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>தினந்தோறும் சாலை விபத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அரசு வேலை வழங்க முடியுமா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. </p><p>சாதாரண அரசு வேலையே வழங்கப்பட்டதாக அரசுத்தரப்பு வைத்த வாதத்திற்கு, “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என்றும் நீதிபதிகள் பதில் அளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு: யூடியூபர் இர்ஃபானை மீண்டும் விசாரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-on-fetal-gender-reveal-health-officials-to-requestion-youtuber-irfan#comments</comments><guid isPermaLink="false">60ae3c81-0ad6-4bec-bc80-7501ecbab3bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 12:08:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T12:08:03.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Youtuber Irfan,தமிழக சுகாதாரத்துறை,யூடியூபர் இர்ஃபான்,Tamil Nadu health department,PCPNDT Act,பாலினத் தேர்வு தடை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ YouTuber Irfan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/7649lds1/irfan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரபல யூடியூபரும் உணவு விமர்சகருமான இர்ஃபான் மீது ஏற்கனவே பதிவான மருத்துவ விதிமீறல் புகார்கள் தொடர்பான விவகாரத்தில், அவரை மீண்டும் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்த தமிழக மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.</p><h2><strong>தொப்புள் கொடி அறுவை சிகிச்சை சர்ச்சை:</strong></h2><p>தனக்குக் குழந்தை பிறந்தபோது, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று, தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் சுயமாகக் கத்தரித்து அதனை வீடியோவாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மருத்துவப் பயிற்சி பெறாத ஒருவர் அறுவை சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து மருத்துவ நடைமுறையைச் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.</p><h2><strong>மருத்துவமனை மீது நடவடிக்கை:</strong></h2><p>இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் உரிமத்தை 10 நாட்களுக்குத் தற்காலிகமாக ரத்து செய்த சுகாதாரத்துறை, ரூ.50,000 அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தது.</p><h2><strong>கருவின் பாலினம் அறிவித்த வழக்கு:</strong></h2><p>இதற்கு முன்பாகவும், வெளிநாட்டில் தனது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் பிறந்த குழந்தையின் பாலினத்தை அறிந்து, அதை வீடியோவாக வெளியிட்டு பாலினத் தேர்வு தடைச் சட்டத்தை (PCPNDT Act) மீறியதாக இர்ஃபான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>கடந்த திமுக ஆட்சியில் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அடுத்தடுத்து மருத்துவத்துறை விதிகளை மீறிச் செயல்பட்டது குறித்தும், இது தொடர்பான வழக்குகள் மற்றும் விளக்கங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தவே யூடியூபர் இர்பான் பைலை  மீண்டும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு  எடுத்துள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivakasi-fireworks-factory-accident-death-toll-rises-to-5#comments</comments><guid isPermaLink="false">3276549d-b9a2-42b7-a950-8795cc512145</guid><pubDate>Mon, 27 Jul 2026 11:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T11:55:37.363Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sivakasi,பலி எண்ணிக்கை உயர்வு,பட்டாசு விபத்து,Firecrackers Explosion,சிவகாசி பட்டாசு ஆலை,Death rate raise</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ fireworks blast in sivakasi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/2alrq4ga/sivakasi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தனது இடத்தில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார். </p><p>இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அங்கு 5 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். </p><h2>வெடி விபத்து</h2><p>அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியது. இதில் அந்த பட்டாசு தயாரிக்க அமைக்கப்பட்டிருந்த தகர செட்டுகள் முழுவதும் வெடித்து சிதறி தரைமட்டமானது.</p><p>இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உரிமையாளர் ராம் பிரகாஷ் (வயது 32), மீனம்பட்டியை சேர்ந்த இன்னாசி முத்து (42) ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தனர். </p><p>இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்களை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இதில் ராமச் சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். </p><h2>5 பேர் பலி</h2><p>மேலும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அய்யப்ப ராஜா (38), பாண்டித்துரை (35) ஆகிய இரண்டு பேரை</p><p>யும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரங்களுக்கு பின்பு அவரது உடல்கள் சிதறிய நிலையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. இதனால் 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>மேலும், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் மூலம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 2-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-2nd#comments</comments><guid isPermaLink="false">47670048-d20c-4d56-ac46-c77bc1588526</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:29:19 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:29:19.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lc4ndtdt/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>30-ந்தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>31-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>01-ந்தேதி கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மற்றும் வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>02-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>30 மற்றும் 31-நதேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-never-fears-sofa-government-arrests#comments</comments><guid isPermaLink="false">946286cd-89ea-423b-9452-24c204f433e7</guid><pubDate>Mon, 27 Jul 2026 10:22:25 +0000</pubDate><atom:updated>2026-07-27T10:22:25.678Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Markandeyan MLA,மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/gnph5rf6/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.</p><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-</p><p>சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம். </p><p>சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.</p><p>அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.</p><p>மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.</p><p>விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் வரும் அக்.15-ல் அரசியல் அறநெறி மையம் தொடக்கம்..!- அண்ணாமலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-the-leaders-political-ethics-center-launch-oct-15-annamalai#comments</comments><guid isPermaLink="false">47554ef2-2d03-4022-b7b5-b913c3902cd5</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:52:00 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:52:00.010Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்,அறநெறி மையம்,ethics centre</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1pmgyhga/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திய, ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>மலரஞ்சலி</h2><p> அப்துல் கலாமின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவரது மறைவுக்கு பிறகு அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி துவா செய்து வருகின்றனர்.</p><p>இந்த ஆண்டு நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். அதனைத் தொடர்ந்து கலாம் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன்.</p><p>அறிவியலும், ஆன்மீகமும் கலந்து இருக்க வேண்டும் என்று கலாம் விரும்பினார். நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அப்துல் கலாம். நான் மாணவராக இருக்கும்போதே அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன்.</p><p>கலாம் வழியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பை நல்வழியில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். இங்கு வந்து உரம் ஏற்றிக் கொண்டு செல்வதற்காக வந்திருக்கிறேன்.</p><h2>அரசியலில் அறநெறி</h2><p>அரசியலில் நன்நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் அப்துல் கலாம். அரசியலில் அறநெறி என்பதை விரும்பி அதற்காக அன்றே புத்தகம் எழுதியவர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர். கலாம் வழியில் எங்களது பயணம் தொடரும்.</p><p>அக்டோபர் 15-ந்தேதி கோவையில் அப்துல் கலாம் பிறந்த நாளில் அரசியல் அறநெறிக்கான மையம் என்ற பெயரில் மையம் ஒன்றை தொடங்கி  வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க இருக்கிறோம். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேர் அதில் தகுதி பெற்று வருவார்கள். கலாம் அய்யாவின் கனவுகளை நனவாக்க பாடுபடுவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பின்னர் அவரிடம் தமிழக அரசின் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருப்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கர்நாடகா பயணம்: உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் ஏன் கெஞ்ச வேண்டும் - துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-visit-to-karnataka-duraimurugan-comments#comments</comments><guid isPermaLink="false">1609cadc-fa9e-4043-9e3c-348f8fdc1e89</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:18:50 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:18:50.469Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,மேகதாது அணை,துரைமுருகன்,duraimurugan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Durai Murugan - Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1kgde3d4/duraimurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em>காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும் என்று திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.</em></p><p>தமிழகத்துக்கு காவிரி நீரில் உரிய பங்கை தருவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் செயல்படுத்த மறுக்கிறது.</p> <h2>விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால் போதிய மழை பெய்யாததால் அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளது. வறட்சி நிலவுகிறது என்ற காரணத்தை சொல்லி காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை.</p><p>காவிரி நீரில் உரிய பங்கு கிடைக்காததால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்து வருகிறது.</p> <h2>மேகதாது அணை</h2><p>இந்த சூழ்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு, புதிதாக அணை கட்டுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.</p><p>மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறிவிடும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய் கடிதம்</h2><p>மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் கடிதமும் எழுதி உள்ளார்.</p><p>மேலும் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் அனைத்து முயற்சிகளையும் சட்டரீதியாக தடுப்பது குறித்து முதலமைச்சர் விஜய், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த சூழலில் டெல்லியில் சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தமிழக நீர்வளத்துறை செயலாளர், கர்நாடகத்தில் உள்ள 4 முக்கிய அணைகளில் 48.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பை சுட்டிக்காட்டியதுடன், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தண்ணீரை திறக்கவும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.</p><p>அதற்கு கர்நாடக அரசு, தங்கள் மாநிலத்தில் உள்ள 4 முக்கிய அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதால் தங்களால் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டது.</p><p>இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.</p> <h2>பெங்களூரு செல்லும் விஜய்</h2><p>இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எழுதி உள்ள கடிதத்தில், வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி, தான் பெங்களூரு வந்து காவிரி நீர் பிரச்சனை, மேகதாது விவகாரம் குறித்து உங்களுடன் பேச விரும்புகிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>இதற்காக பெங்களூரு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருடன் காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறுவது குறித்தும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.</p> <h2>துரைமுருகன்</h2><p>இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* முதலமைச்சர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>* எம்ஜிஆர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்திய காலம் என்பது நீதிமன்ற உத்தரவு இல்லாத காலம்.</p><p>* உச்சநீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருக்கும்போது நாம் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.</p> <p>* காவிரி பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை குழு, ஒழுங்காற்று குழுவை தான் நாட வேண்டும். நேரடியாக சென்றால் கோர்ட் உத்தரவு வீணாகும்.</p><p>* மேகதாது, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.</p><p>* என்ன நடக்கிறது என்பது முதலமைச்சர் சென்று வந்த பின்னர் தான் தெரியும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chicken-meat-will-not-be-sold-starting-july-31-tamil-nadu-chicken-merchants-federation-announces#comments</comments><guid isPermaLink="false">8fad5759-b3e8-406a-bf7a-28f2619aed0b</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:15:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:15:04.397Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu Chicken Traders Federation,Chicken Sales,கோழி விற்பனை,தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜூலை.31 முதல் கோழி இறைச்சி விற்கப்படாது - தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/j0p6xec3/New-Project-2026-07-27T144444.929.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கடைகளில் கோழி விற்பனை செய்யப்படாது என தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி இந்த கடையடைப்பை அறிவித்துள்ளனர்.</p><p>தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்., “கறிக்கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற நெறிமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிப்பதில்லை.</p><p>கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால், அவற்றின் உடலில் தீவனம் தங்கி ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது. இதனால் நுகர்வோருக்கு கூடுதல் எடையுடன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன.</p><p>தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, இறைச்சியின் தன்மையும், தரமும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.” என கோழி விற்பனையாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். </p><p>தொடர்ந்து கோழி உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் அரசு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்தனர். </p><p>இதனை வலியுறுத்தி தற்போது இந்த விற்பனை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காதலிக்க மறுத்த ப்ளஸ் 1 மாணவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய வாலிபர் தற்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/plus-one-student-stabbed-for-rejecting-love-youth-dies-by-suicide#comments</comments><guid isPermaLink="false">a3826c9b-8d4d-491c-98b6-cf4f78932f05</guid><pubDate>Mon, 27 Jul 2026 09:08:04 +0000</pubDate><atom:updated>2026-07-27T09:08:04.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வாலிபர் தற்கொலை,Chidambaram,சிதம்பரம்,youth suicide,Student Attack,மாணவி கொலை முயற்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Youth Suicide]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/qbzrgrvq/Suicide.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது28). எலக்ட்ரீசியன்.</p><h2>ஒருதலைக்காதல்</h2><p>இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அய்யப்பன், பலமுறை அந்த மாணவியை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார்.</p><p>ஆனால் அந்த மாணவியோ, அய்யப்பனை காதலிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் மாணவி மீது அய்யப்பன் கோபத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார்.</p><h2>கத்திக்குத்து</h2><p>இதனை அறிந்து கொண்ட அய்யப்பன் மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியை சந்தித்த அய்யப்பன், என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.</p><p>தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். ஆனால் இந்த மிரட்டலுக்கு எல்லாம் மாணவி பயப்படாமல் உன்னை காதலிக்க முடியாது என்று கூறினார்.</p><p>இதனால் கடும் கோபம் அடைந்த அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியை எடுத்து மாணவியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.</p><p>இதில் மாணவி பலத்த காயம் அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.</p><h2>விசாரணை</h2><p>மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அய்யப்பனை தேடி வந்தனர்.</p><p>இந்த நிலையில் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக  சிதம்பரம் தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கியவர் யார் என விசாரணை நடத்தினர்.</p><h2>வாலிபர் தற்கொலை</h2><p>அப்போது அது மாணவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான அய்யப்பன் என்பது தெரியவந்தது. தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் மாணவியை கத்தியால் குத்திய அய்யப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.</p><p>எப்படியும் போலீசார் தன்னை பிடித்து விடுவர் என்று நினைத்த அவர் அரசுகலைக்கல்லூரி பின்பு றம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.</p>]]></content:encoded></item><item><title>‘ரீல்ஸ்’ கலாச்சாரத்திற்கு எதிராக கண்ணீர் விட்டு கதறி அழுத இளம்பெண்- அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbil-mahesh-poyyamozhi-comfort-young-woman-sobs-and-wails-against-reels-culture#comments</comments><guid isPermaLink="false">90df8396-701c-46f5-b0e6-e655b346b576</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:40:34 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:40:34.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:title><media:description type="html"><![CDATA[ கண்ணீர் விட்டு அழுத இளம்பெண்ணுக்கு அன்பில் மகேஷ் ஆறுதல் கூறினார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/uh0tanxo/anbilmahesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம் என்றார்.</aside><h2><strong>ஆலோசனைக் கூட்டம்</strong></h2><p>திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான <a href="https://www.maalaimalar.com/topic/அன்பில்-மகேஷ்-பொய்யாமொழி">அன்பில் மகேஷ் பொய்யாமொழி </a>தலைமையில் பொன்மலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.</p><p>நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்த போது இளம்பெண் நிர்வாகி ஒருவரின் பேச்சு அங்கிருந்தோரை உலுக்கியது.</p><h2><strong>ரீல்ஸ் மோகம்</strong></h2><p>அவர் பேசுகையில், "இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பலரும் 'ரீல்ஸ்' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் கிண்டலாகவும், விளையாட்டுத்தனமாகவும் பகிர்ந்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான நாகரிகம்?, இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது என்று  பேசினார்.</p><p>மேலும், "திறமையான ஆளுமைகளும், மாபெரும் தலைவர்களும் கண்ணியம் காத்த தமிழக சட்டமன்றம் இது. தமிழ் சங்கங்கள் தாங்கிப்பிடித்த நமது பாரம்பரிய தமிழ் சமூகம், வெறும் 'ரீல்ஸ்' மோகத்திற்காக இப்படி தரம் தாழ்ந்து போகலாமா?" என  உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.  அவரது இந்த  கேள்வி கூட்டத்தில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலரையும் சிந்திக்க வைத்ததுடன், அங்கு ஒரு நிமிடம் பெரும் அமைதியை ஏற்படுத்தியது.</p><h2><strong>அன்போடு திருத்துவோம்...</strong> </h2><p>அழுத பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாகப் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, "அழாதீர்கள், உங்கள் ஆதங்கம் நியாயமானது. சமூக ஊடக மோகத்தால் தடம் மாறும் அந்த இளைஞர்களும் நமது பிள்ளைகள் தான். அவர்களுக்குப் பண்பாட்டையும், சட்டமன்றத்தின் கண்ணியத்தையும் எடுத்துச்சொல்லி, அன்போடு திருத்துவோம்" என்று கூறி  தேற்றினார்.</p>]]></content:encoded></item><item><title>தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் உடல் மீட்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-students-body-recovered-drowned-in-sea-near-thoothukudi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/two-students-body-recovered-drowned-in-sea-near-thoothukudi#comments</comments><guid isPermaLink="false">e76488ac-b696-4406-a96c-598fce253d78</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:40:03 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:40:03.404Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>students death,தூத்துக்குடி,Thoothukudi,Sea,மாணவர்கள் உயிரிழப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/56f0dogf/death.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/56f0dogf/death.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவரது மகன் ஜோஸ்வா (வயது 16). அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் மனோஜ்(16). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர். </p> <p>இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் தங்களது நண்பர்களான 5 சிறுவர்களுடன் சேர்ந்து கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைபர் படகில் கடலை சுற்றி வர திட்டமிட்டு சென்றுள்ளனர்.</p><p>அப்போது திடீரென படகு பழுதான நிலையில் படகில் இருந்த சிறுவர்கள் ஜோஸ்வா, மனோஜ் மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கடலில் நீந்தி கரைக்கு சென்று விடலாம் என நினைத்து கடலில் குதித்து நீந்த தொடங்கி உள்ளனர். </p><p>இந்த நிலையில் படகில் இருந்த மற்றொரு சிறுவர் இது குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவர் விரைந்து சென்று படகில் இருந்த 3 பேரையும் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 2 சிறுவர்கள் என 5 பேரை மீட்டார்.</p> <p>தொடர்ந்து கடலில் குதித்து நீந்தி சென்று காணாமல் போன ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய 2 பேரை தருவைகுளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 படகுகளில் கடல் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். </p><p>இந்நிலையில், இரவு நேரம் என்பதால் அவர்கள் 2 பேரையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அனைவரும் கரை திரும்பினர்.</p> <p>இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தருவைகுளம் மீனவர்கள் பல்வேறு படங்களுடன் சென்று கடலில் தேடியபோது ஜோஸ்வா மற்றும் மனோஜ் ஆகிய இருவரின் உடல்கள் கடலில் மிதப்பதை கண்டனர். பின்னர் மீனவர்கள் அவர்களது உடல்களை மீட்டு தருவைகுளம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுது கிராமமே சோகத்தில் மூழ்கிய சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.</p><p>தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடலுக்குச் சென்ற 2 சிறுவர்கள் கடலில் குதித்து உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-feature-key-announcements-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">423ae281-36a1-48b0-ad5f-b92d9ae43f34</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:32:37 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:32:37.131Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,வேளாண் பட்ஜெட்,அமைச்சர் வினோத்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/1i9k83hl/minister-vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், சட்ட சபையில் வேளாண்மைத் துறைக்காக வரும் 6-ந் தேதி தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>இந்த பட்ஜெட்டை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன், வினோத், ஸ்ரீநாத், ராஜ லட்சுமி, கமலி, விஜய் பாலாஜி, ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p>கூட்டத்தில் வேளாண்மைத் துறை  அமைச்சர் வினோத் பேசியதாவது:- </p><p>வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்கான மக்கள் கருத்துக்கணிப்பு கூட்டம் இதுவரை மண்டல அளவிலான 4 கூட்டம் நடத்தி உள்ளோம். </p><p>இதில் சென்னை தவிர மற்ற மாவட்ட விவசாயி களிடம் கருத்துக்கள் கேட்டு முதலமைச்சரிடம் வழங்கி உள்ளோம். விவ சாயிகள்   கருத்துகளின்  அடிப்படையில்  வேளாண் பட்ஜெட்  தயாரிக்கப்பட உள்ளது.</p><p>கால்நடை, மீன்வளம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும்.</p><p>குளிர்சாதன கிடங்குகள், நெல் சேகரிப்பு கிடங்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.  விவசாயிகளின் உற்பத்தி மட்டும் அதிகரித்தால் போதாது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயர வேண்டும்.</p> <p>பெண் விவசாயிகளுக்கும் இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். விவசாயிகள் வைக்கும் அனைத்து கோரிக்கையும் கவனமாக பரிசீலித்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் இந்த ஆண்டு எல் நினோ ஆண்டாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகள் ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>2031-ஆண்டுக்குள் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க திட்டமா?- ரசிகர்கள் எதிர்பார்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-dhanush-planning-to-launch-a-political-party-by-2031-fans-await-the-move#comments</comments><guid isPermaLink="false">907c871e-417f-4cec-ba84-58e83b72e0f9</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:31:11 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:31:11.922Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ரசிகர்கள்,Dhanush,தனுஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தனுஷ்]]></media:title><media:description type="html"><![CDATA[ தனுஷ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/iy31eja0/dhanush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</aside><h2><strong>நலத்திட்ட உதவிகள்</strong></h2><p>திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/தனுஷ்">தனுஷ்</a> பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. </p><p>இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். </p><p>நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் ரசிகர்கள் சிலர் கூறியதாவது:-</p><h2><strong>முதலமைச்சர் விஜய்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தனித்து நின்று சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளார். தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு மாற்றாக 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.</p><h2><strong>கொடி அறிமுகம்</strong></h2><p>இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தனது ரசிகர் மன்றத்திற்கு வெள்ளை - சிகப்பு நிறத்தின் நடுவில் நட்சத்திரம் குறிக்கப்பட்டு, அதன் நடுவே தனது உருவப்படம் இருப்பது போன்று கொடியினை அறிமுகப்படுத்தினார். </p><p>தற்போது விஜய் வழியில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திட்டத்துடன் தனது ரசிகர் மன்றங்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.</p><h2><strong>எதிர்பார்ப்பு</strong> </h2><p>தமிழகம் முழுவதும் விரைவில் மாவட்டம் வாரியாக சென்று ரசிகர்களை சந்தித்து, தனது மன்றங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் மக்களை சந்திப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறார். எனவே 2031-ம் ஆண்டுக்குள் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.</p><p>இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தேர்தல் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-mk-stalin-for-allegedly-concealing-information-in-election-nomination-papers-hearing-adjourned#comments</comments><guid isPermaLink="false">6e34b1c0-4e19-4d48-8762-77d0c1f4da54</guid><pubDate>Mon, 27 Jul 2026 08:02:42 +0000</pubDate><atom:updated>2026-07-27T08:02:42.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Madras High Court,சென்னை ஐகோர்ட்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/y0s90ena/madrashighcourt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை ஐகோர்ட்டில் திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-birthday-wishes-to-uddhav-thackeray">மு.க.ஸ்டாலின்</a> மீது தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. </p><h2>கொளத்தூர் தொகுதி</h2><p>சட்டசபை தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை தலைவராக உள்ள விவரம், சொத்து விவரங்களை மறைத்தது குறித்து தேர்தல் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  திருஞானசம்பந்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>வழக்கு விசாரணையின்போது, வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என மு.க.ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>இந்நிலையில், ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் வழக்கின் விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!- ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-wishes-to-raja-muthupandi#comments</comments><guid isPermaLink="false">f3f26e88-16ef-461b-81e4-f433f689406c</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:38:06 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:38:06.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,காமன்வெல்த் போட்டி,முக ஸ்டாலின்,Raja Muthupandi,ராஜா முத்துப்பாண்டி,Common wealth games 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜா முத்துப்பாண்டி- மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/lhe7qrft/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.</aside><h2><strong>வெள்ளிப்பதக்கம்</strong></h2><p>23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 126 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போட்டியில் தமிழக பளு தூக்கும் வீரர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">ராஜா முத்துப்பாண்டி</a> வெள்ளிப்பதக்கம் வென்றார். </p><p>ஆண்களுக்கான 65 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்ட அவர் ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் மற்றும் ஜெர்க் முறையில் 160 கிலோவும் ஆக மொத்தம் 286 கிலோ தூக்கி 2-வது இடத்தை பிடித்தார். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். </p><h2><strong>பாராட்டுகள்...</strong></h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்க புரத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும், <a href="https://maalaimalar.com/sports/tamil-nadu-weightlifter-raja-muthupandi-brings-pride-to-india">ராஜா முத்துப்பாண்டிக்கு </a>வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>இந்தியாவுக்குப் பெருமை</strong></h2><p>#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.</p><p>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a>-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.<br><br>தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா… <a href="https://t.co/hWc8PIZHHK">pic.twitter.com/hWc8PIZHHK</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2081636929226104915?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் - அமைச்சர் வன்னி அரசு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-says-law-against-honor-killing-soon#comments</comments><guid isPermaLink="false">747547db-dfb6-46ec-b258-39679ac5f87b</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:15:44 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:15:44.015Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>honour killing,ஆணவ படுகொலை,minister vanni arasu,அமைச்சர் வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வன்னி அரசு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/8aiycqxm/vanniarasu1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணவப்படுகொலை</h2><p>காதல் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி நெல்லையில் கவின் படுகொலை செய்யப்பட்டார். கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு ஓராண்டான நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆறுதல் கூறினார்.</p> <h2>சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம்</h2><p>இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும்.</p><p>* சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.</p><p>* ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் தொடர்பாக அரசு அதிகாரிகளின் கருத்தின்படி விரைவில் முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.</p> <h2>தர்மேந்திர பிரதான்</h2><p>* நீட் விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது சரியல்ல. பிரதமரே பதவி விலக வேண்டும். ஏனென்றால் அவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.</p><h2>நீட் தேர்வு ரத்து</h2><p>* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். பிரதமர் மோடி அமைத்துள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/panel-formed-to-restore-prime-ministers-tainted-image-jairam-ramesh">உயர்மட்ட குழுவே</a> ஒரு ஏமாற்ற வேலைதான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் இதுதான் நம்முடைய இலக்கு. தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இணையத்தில் &apos;ஜன நாயகன்&apos; பார்த்தவருக்கு முன்ஜாமின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anticipatory-bail-for-person-who-watched-jana-nayagan-online#comments</comments><guid isPermaLink="false">ea6334ca-8a2c-46c7-b964-98e6249a84bb</guid><pubDate>Mon, 27 Jul 2026 07:12:41 +0000</pubDate><atom:updated>2026-07-27T07:12:41.474Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,சென்னை ஐகோர்ட்,Madras HC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜன நாயகன் பட காட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-27/tb80akb6/jana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</aside><h2><strong>இணையதளத்தில்...</strong></h2><p>சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D">ஜனநாயகன்</a> படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின்  ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3-ந்தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.</p><p>பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை  சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.</p><h2><strong>முன் ஜாமின்</strong></h2><p>இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, மனுதாரர் தரப்பில், <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/3-big-films-starring-mamitha-baiju-are-releasing-within-a-same-month">ஜனநாயகன்</a> படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டபோது சாட்சியாக இருந்த மனுதாரர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றச்சாட்டிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேற்கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மற்ற சிலரும் ஜாமின், முன் ஜாமின் பெற்றுள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென் வாதிடப்பட்டது.</p><p>போலீஸ் தரப்பில், "படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரரை கைது செய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். படத்தின் சட்டவிரோத வெளியீட்டு அதிகம்பேர் பார்த்து, படக்குழுவினருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மனுதாரரும் இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பதால், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டபோது காவல்துறை தரப்பு சாட்சியாக ​​மனுதாரர் இருந்ததிலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>