<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 15 Sep 2026 06:57:08 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 15 செப். 2026...
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-15-september-2026#comments</comments><guid isPermaLink="false">f4009f82-0bcd-4c6f-adcc-cb203382a7f8</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:08:57 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:52:13.310Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/xuyvvatv/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/shocking-video-of-a-car-hitting-a-female-biker-young-man-arrested-for-attempted-murder">பெண் Biker மீது கார் மோதிய பரபரப்பு வீடியோ.. கொலை முயற்சி வழக்கில் இளைஞர் கைது<br></a></p><p>*சக பைக்கர்களுடன் தனது Aprilia RS 457 பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.</p> <p>*திட்டமிட்ட கொலை வழக்கு பதிவு செய்த குருகிராம் போலீசார் அவரை தேடி வந்தனர்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening">லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்</a></p><p>* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார்.</p><p>* நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/international-democracy-day-2026-democracy-thrives-when-every-voice-is-heard-un-appeal">சர்வதேச ஜனநாயக தினம் 2026: அனைத்து குரல்களும் கேட்கும்போது ஜனநாயகம் சிறக்கும்- ஐ.நா முக்கிய அழைப்பு!... </a></p><p>*சர்வதேச ஜனநாயக தின கொண்டாட்டங்களின் பின்னணியில் பல தசாப்தகால சர்வதேச முயற்சிகள் உள்ளன. </p><p>*தனிநபர்களின் முடிவெடுக்கும் உரிமைகளைப் பாதுகாத்தல், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan">அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</a></p><p>* தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>* இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn">தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</a></p><p>* திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule">அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>* தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-oscars-of-television-list-of-winners-at-the-78th-emmy-awards-ceremony">தொலைக்காட்சியின் ஆஸ்கார்.. 78வது எம்மி விருதுகள் விழா வெற்றியாளர்கள் பட்டியல்<br></a><br>*விடோஸ் பே (Widow's Bay) சிறந்த காமெடி சீரீஸ் உட்பட 14 பிரிவுகளில் விருது வென்றுள்ளது.</p><p>*அடுத்ததாக தி பிட் (The Pitt) தொடர் சிறந்த டிராமா சீரீஸ் விருதை வென்றது. <br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day">தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! </p><p>* தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna">அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</a></p><p>* முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>* சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/please-help-taliban-arrests-indian-female-vlogger-traveling-alone-in-afghanistan">தயவுசெஞ்சு உதவுங்க.. ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரள பெண் Vlogger-ஐ கைது செய்த தாலிபான்கள்<br></a></p><p>*'பேக்பேக்கர் அருணிமா' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். </p><p>*ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாகப் பயணம் செய்ய சட்டப்படி அனுமதியில்லை</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn">மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</a></p><p>* 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>* இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</a></p><p>*  சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். </p><p>*  தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</a></p><p>* நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>* உன் பெயர் சொல்லாமல் அரசாள இயலாது உன் கொள்கை இல்லாமல் அரசியல் கிடையாது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/today-gold-price-in-chennai-15-9-2026">GOLD PRICE TODAY: தொடர் சரிவில் தங்கம் விலை - எவ்வளவு குறைந்தது தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</a></p><p>* பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p><p>* இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/ai-companies-gather-to-call-for-curbing-the-pace-of-ai-technology-trump-posts-in-a-panic">ஏஐ தொழில்நுட்பத்தின் வேகத்தை கட்டுப்படுத்தனும் - ஒன்றுகூடிய ஏஐ நிறுவனங்கள் - பதறியடித்து டிரம்ப் போட்ட பதிவு</a></p><p>*ஏஐ இல் யார் வெல்கிறார்களோ, அவர்களே உலகை வெல்வார்கள்</p><p>*ஒரு வலுவான, அறிவார்ந்த - High IQ கொண்ட அதிபர் மட்டுமே தேவை, அது அமெரிக்காவிடம் உள்ளது</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/the-curious-case-of-maharashtras-richest-bjp-mla-turning-into-a-beggar-what-happened">மகாராஷ்டிராவின் மிகப் பணக்கார பாஜக எம்எல்ஏ பிச்சைக்கரராக மாறிய வினோதம்.. என்ன ஆனது?</a></p><p>*ஒரு நபர் அவரிடம் ரூ.20 கொடுத்து "போய் சாப்பிடு பாபா" என்று கூறியுள்ளார்.</p><p>*ஒரு ஏழை சமோசா வியாபாரி இன்முகத்துடன் இலவசமாக சமோசா வழங்கியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-has-decided-to-supply-654-mw-of-electricity-to-flood-affected-nepal-for-18-hours-a-day-until-december">வெள்ளத்தால் பாதித்த நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வீதம் டிசம்பர் வரை  654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு</a></p><p>*2 வாரங்கள் கடந்தும் மீட்பு பணிகள் தொடந்து வருகின்றன. செப்டம்பர்</p><p>*சுமார் 130 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/security-lapse-three-italians-boarded-a-flight-without-immigration-checks-central-ministry-calls-urgent-meeting">பாதுகாப்பு குளறுபடி.. குடிவரவு சோதனையின்றி டெல்லியில்  விமானம் ஏறிச் சென்ற 3 இத்தாலியர்கள் - மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அவசர கூட்டம்</a></p><p>*சோதனைக்கு செல்லாமலேயே அவர்கள் முனிச் விமானத்தில் ஏறிச் சென்றுள்ளனர்.</p> <p>*அவர்களை குடியேற்ற சோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/absolutely-not-bihar-raises-the-banner-of-revolt-against-the-implementation-of-the-uniform-civil-code">முடியவே முடியாது.. பொது சிவில் சட்டம் அமலுக்கு பீகாரில் போர்க்கொடி!</a></p><p>*21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.</p> <p>*ஷா பேசியிருந்த நிலையில் பீகார் அதற்கு போர்க்கொடி தூக்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/technology/techfacts/the-bitter-truth-behind-creating-retro-style-ai-images">ரெட்ரோ ஸ்டைல்‌ ஏஐ படங்களை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை!</a></p><p>*ஒரே நபர்‌ ஏராளமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில்‌ உலவ விட்டு வருகின்றனர்‌.</p><p>*புகைப்படத்தை உருவாக்குவதற்கான முக்கிய கம்ப்யூட்டிங்‌ செயல்முறை தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</a></p><p>* ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்டனர்.</p><p>* திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! </p><p>* தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p>]]></content:encoded></item><item><title>லண்டன் வாழ் தமிழர்களை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-is-meeting-london-based-tamils-this-evening#comments</comments><guid isPermaLink="false">0109e3e8-83d8-4c64-900c-0a86bdd86b8d</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:30:30 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:30:30.618Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/w5i8rrr6/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</strong></em></p><p>தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> லண்டன் சென்றுள்ளார்.  அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார்.</p><h2><strong>புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</strong> </h2><p>இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு சுமார் ரூ.12ஆயிரத்து 300 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்  ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>சந்திப்பு</strong> </h2><p>இந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பை தொடர்ந்து இன்று மாலை லண்டன் வாழ் தமிழர்களை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்.</p><p>முறையான சந்திப்பு 15ஆம் தேதி இருக்கும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்று லண்டனில் உள்ள ரசிகர்களை அவர் தங்கியுள்ள தி ஷார்ட் நட்சத்திர விடுதியில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து இன்று லண்டன் வாழ் தமிழர்களை அவர் சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அங்கு விரிவாக செய்யப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-dismisses-election-case-against-minister-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">2fb9bf68-bb6b-4b02-838d-ee6f83041cfc</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:17:53 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:17:53.102Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,சென்னை ஐகோர்ட்,Madras HC,tvk,அமைச்சர் செங்கோட்டையன்,minister sengottaiyann</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ஐகோர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/k6d3j3et/MadrasHC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.</strong></em></p><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோபி செட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">செங்கோட்டையன்</a> வெற்றி பெற்றார். வருவாய்த்துறை அமைச்சரான செங்கோட்டையனின் வெற்றிக்கு எதிராக அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், செங்கோட்டையனின் வேட்புமனுவில் சான்றளித்துள்ள நோட்டரி வக்கீலின் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த வேட்புமனுவை ஏற்றதே தவறு எனக் கூறியிருந்தார். இதேபோல், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-ஐகோர்ட்">சென்னை ஐகோர்ட்டில்</a> மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>இந்தநிலையில், இந்த தேர்தல் வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீது அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுக வேட்பாளர் பிரபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  </p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமைச்சர் செங்கோட்டையன் மனுவை தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். இந்தநிலையில் இந்த மனு மீது நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், அமைச்சர் செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-it-is-true-there-are-power-cuts-tn#comments</comments><guid isPermaLink="false">5b45e763-00af-48b7-ac81-d849155f6672</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:15:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:15:52.843Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/2l19wbxt/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்வதாக திருமாவளவன் கூறினார்.</p> <p>திருச்சியில் விசிக தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections">திருமாவளவன்</a> செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>* தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மைதான்.</p><p>* மின்வெட்டு பிரச்சனையை சீர்செய்ய தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p> <p>* அதிகாரிகள் கூறுவதை கேட்டு தான் அமைச்சர்கள் பதிலளித்து கொண்டிருக்கின்றனர். அதிகாரிகள் உண்மை தகவலை கூற வேண்டும்.</p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu">திமுகவினர் </a>ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் அவதூறாக பேசுவது தவறு.</p><p>* விசிக துரோகம் செய்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்கின்றனர்.</p> <p>* பதவிக்காக விசிக கூட்டணி மாறியதாக திமுக ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.</p><p>* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியாக வேண்டும்.</p><p>* பேருந்துகளுக்கு தவெக கொடி நிறத்தில் வண்ணம் பூசுவது ஏற்புடையதல்ல.</p><p>இவ்வாறு அவர் கூறினார்</p>]]></content:encoded></item><item><title>தேசிய பொறியாளர்கள் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-national-engineers-day#comments</comments><guid isPermaLink="false">a2e8692f-1cb1-4a9f-b5e9-87d835ee453c</guid><pubDate>Tue, 15 Sep 2026 06:02:49 +0000</pubDate><atom:updated>2026-09-15T06:02:49.919Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,National Engineers Day,தேசிய பொறியாளர்கள் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/g5m402pj/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! </p><p>அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.</p><p>பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! என கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! <br><br>அறிவியல், தொழில்நுட்பம்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099735682273210573?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-praise-perarignar-anna#comments</comments><guid isPermaLink="false">a35eaaf7-8ab4-4d94-b6f8-291d5c9b34b3</guid><pubDate>Tue, 15 Sep 2026 05:14:52 +0000</pubDate><atom:updated>2026-09-15T05:14:52.245Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,Perarignar Anna,tvk,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/3kdq2bog/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பேரறிஞர்-அண்ணா">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதனிடையே, அரசியல் தலைவர்கள் அண்ணாவை நினைவு கூர்ந்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>தனி முத்திரை பதித்தவர்</strong></h2><p>தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். </p><p>எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.</p><p>“கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்"  போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக்  குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். <br><br>எழுச்சியூட்டும்… <a href="https://t.co/ii2pkrkIxm">pic.twitter.com/ii2pkrkIxm</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099723590484815955?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-let-us-pledge-to-restore-anna-rule#comments</comments><guid isPermaLink="false">7d0cdbb8-0fb1-4493-9e5e-c629cfa13ce6</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:53:51 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:53:51.562Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/nacryiul/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> மலர்தூவி மரியாதை செலுத்தினார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை விதைத்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில உரிமைகள் என திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தெடுத்த ஒப்பற்ற தலைவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். </p> <p>அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மக்களையும், தனிமனிதப் புகழை விட சமூகத்தின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்வு, தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.</p><p>தமிழினத்தின் தன்மானக் குரலான நம் கொடியாகவும் கொள்கையாகவும் என்றும் வீற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை, அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன்.</p> <p>மக்கள் நலனுக்கு முற்றிலும் எதிரான ரீல்ஸ் அரசியல் மோகத்தில் இருந்து தமிழகத்தை விடுவித்து, தமிழகத்தின் வளர்ச்சியை கட்டமைக்கும் நம் அண்ணா ஆட்சியை மீண்டும் நிறுவிட இந்நாளில் உறுதியேற்போம்!</p><p>வாழ்க அண்ணா நாமம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/durai-murugan-announced-dmk-mupperum-vizha-adjourn#comments</comments><guid isPermaLink="false">cd103674-104e-44cf-9076-cae5ede779ea</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:43:27 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:43:27.668Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Durai Murugan,துரைமுருகன்,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/bc0hbr5q/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.</strong></em> </p><h2><strong>தி.மு.க. முப்பெரும் விழா</strong></h2><p>தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-முப்பெரும்-விழா">முப்பெரும் விழா</a> கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது. </p><p>அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. </p><h2><strong>ஒத்திவைப்பு</strong></h2><p>இந்த நிலையில், இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். </p><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலினுக்கு</a> ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க. முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் முப்பெரும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. </p><p>அதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அண்ணா சிலைக்கு மாலை போடவில்லை என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்கு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-case-filed-against-a-rasa-and-sekhar-babu#comments</comments><guid isPermaLink="false">92268d81-3b27-407d-aba5-9d9eaaa9698c</guid><pubDate>Tue, 15 Sep 2026 04:00:18 +0000</pubDate><atom:updated>2026-09-15T04:00:18.582Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ஆ ராசா,A Rasa,அவதூறு பேச்சு,சேகர்பாபு,Sekhar Babu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:title><media:description type="html"><![CDATA[ ஆ.ராசா- சேகர்பாபு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/iybitfe9/dmk.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>ஆர்ப்பாட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/திமுக">தி.மு.க.</a> சார்பில் கடந்த 12-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>அந்த வகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். </p><h2><strong>விமர்சனம்</strong></h2><p>இதே போல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். </p><p>ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.பி.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து பேசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. </p><h2><strong>வழக்கு பதிவு</strong></h2><p>இந்த நிலையில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஜெகதீஸ்வரி என்பவர் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் சேகர்பாபு மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். </p><p>இதேபோல், தி.மு.க. எம்.பி.ஆ.ராசா மீதும் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை குலைக்க முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணாவின் பொன்னடிகளுக்குப் புகழ் வணக்கம் - வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-vairamuthu-tribute#comments</comments><guid isPermaLink="false">53ce6900-a2e0-45d7-9086-e1b35d0bf1d0</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:49:16 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:49:16.780Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vairamuthu,Perarignar Anna,வைரமுத்து,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Vairamuthu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/ehh2djos/vairamuthu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீ செய்த சாதனை புரிய 300 ஆண்டு வாழ்ந்தவனாலும் முடியாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி கவிஞர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">வைரமுத்து</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>அண்ணா! </p><p>காலவெளியில்</p><p>உன் இருப்பு சிறிதுதான்</p><p>நீ வாழ்ந்தது</p><p>59.4 ஆண்டுகள்</p> <p>உன் பொதுவாழ்வு</p><p>35 ஆண்டுகள்</p><p>கட்டியெழுப்பிய கட்சியோடு </p><p>19.5 ஆண்டுகள்</p><p>ஆட்சிப் பொறுப்பில்</p><p>வெறும் 22 மாதங்கள்</p> <p>ஆனால்,</p><p>நீ செய்த சாதனை புரிய</p><p>300 ஆண்டு</p><p>வாழ்ந்தவனாலும் முடியாது</p><p>உன் பெயர் சொல்லாமல்</p><p>அரசாள இயலாது</p><p>உன் கொள்கை இல்லாமல்</p><p>அரசியல் கிடையாது</p> <p>நீ</p><p>சாமானியர்க்காகவே வாழ்ந்தவன்;</p><p>சாமானியனாகவே மரித்தவன்</p><p>பூமியின் மீது</p><p>அதிகச் சிலைகள் புத்தருக்கு;</p><p>இந்தியாவில் அம்பேத்கருக்கு;</p><p>தமிழ்நாட்டில் உனக்கு</p> <p>பொன்னடிகளுக்குப் </p><p>புகழ் வணக்கம்</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பேரறிஞர் அண்ணா தான் அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-perarignar-anna-who-rules-tamil-nadu-yesterday-today-and-forever#comments</comments><guid isPermaLink="false">1a3df343-9dba-453e-9171-a1ab64d8cc8e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:36:10 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:36:10.848Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna -  Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/zaiszeiw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> வெளிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>பேரறிஞர் அண்ணா எனவும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!</p> <p>கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!</p><p>தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.</p> <p>தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் -  மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.</p><p>வாழ்க அண்ணாவின் புகழ்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-inspection-kilambakkam-bus-stand#comments</comments><guid isPermaLink="false">19bf33ce-fb4a-410f-8e13-5110265c3977</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:23:55 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:23:55.157Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,Kilambakkam Bus Terminus,விஜய் தமிழன் பார்த்திபன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/cchell3v/minister.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று காலை 6 மணி முதல் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.</strong></em> </p><h2><strong>அமைச்சர் ஆய்வு</strong></h2><p>தொடர் விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் இன்று சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அப்படியாக வரக்கூடிய பொதுமக்களின் போக்குவரத்து பாதுகாப்பாக இருக்கிறதா மேலும் பேருந்துகள் குறித்து ஏதேனும் புகார் வருகிறதா என்று இன்று காலை 6 மணி முதல் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். </p><p>போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உடன் போக்குவரத்து துறை செயலாளர் நிர்மல்ராஜ் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மாநகரப் பேருந்து அதிகாரிகள் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.</p><h2><strong>ஆய்வு கூட்டம்</strong></h2><p>நேற்றைய தினம் இதே <a href="https://www.maalaimalar.com/topic/கிளாம்பாக்கம்-பேருந்து-நிலையம்">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்</a> வரப்போகிற ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு கூட்டம் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்திற்கு போக்குவரத்துச் செயலாளர் நிர்மல்ராஜ் தாம்பரம் மாநகர துணை ஆணையர் கார்த்திகேயன் தாம்பரம் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் மற்றும் போலீசார் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்வதை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>அண்ணா விதைத்து பெருமரமாக்கிய தி.மு.க. பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-kanimozhi-says-dmk-must-endure-and-serve-the-people-for-many-generations#comments</comments><guid isPermaLink="false">9cb8f4d9-bd41-4d5f-8a0a-34fc565d826e</guid><pubDate>Tue, 15 Sep 2026 03:03:23 +0000</pubDate><atom:updated>2026-09-15T03:03:23.545Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Perarignar Anna,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/r76n71ha/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute">பேரறிஞர் அண்ணாவின்</a> 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.</p> <p>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.<br><br>கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம்… <a href="https://t.co/NGE7IDb6lU">pic.twitter.com/NGE7IDb6lU</a></p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2099683993079943306?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perarignar-anna-birthday-mk-stalin-tribute#comments</comments><guid isPermaLink="false">2dc05e0c-4697-46b7-9e8b-42ab2722ddeb</guid><pubDate>Tue, 15 Sep 2026 02:19:11 +0000</pubDate><atom:updated>2026-09-15T02:19:11.420Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Perarignar Anna,முக ஸ்டாலின்,பேரறிஞர் அண்ணா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Perarignar Anna - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/59q4310m/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p> <p>பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case">திமுக</a> தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின் </a>வெளிட்டுள்ள பதிவில்,</p><p>தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!</p> <p>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!</p><p>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!<br><br>தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!<br><br>பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் -… <a href="https://t.co/G35C7yx7j8">pic.twitter.com/G35C7yx7j8</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2099668270509125809?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-15T01:31:31.330Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet">முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...</a></p><p>*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate">ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!...</a></p><p>*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்... </a></p><p>* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். </p><p>* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!... </a></p><p>*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother">22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!... </a></p><p>*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.</p><p>*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan"><br></a>*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead">மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</a><br></p><p>*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்... </a></p><p>*பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>* கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed">ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்</a><br><br>*41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p><p>*இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe">பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம் </a><br></p><p>*அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.</p><p>* இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission">ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3ஆம் அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி!</a><br><br>*இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல.</p><p>*திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/cm-vijay-attracts-rs-12300-crore-investments-in-london" rel="nofollow">லண்டனில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* முதலமைச்சராக விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.</p><p>*  இங்கிலாந்து நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland">நாகலாந்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு...</a> </p><p>நாகலாந்தில் விஷ கள்ளச்சாரயம் அருந்தியதால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர்.. மின்வெட்டை சரிசெய்யாதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி. </a></p><p>அமைச்சர் செங்கோட்டையின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டுருந்த போது மின்வெட்டு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/security-reduced-for-ex-cm-o-panneerselvam#comments</comments><guid isPermaLink="false">c94b388a-9311-4610-a279-ac26cce88214</guid><pubDate>Tue, 15 Sep 2026 00:36:06 +0000</pubDate><atom:updated>2026-09-15T00:36:06.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneerselvam,ஓபிஎஸ்,OPS,ஓ பன்னீர்செல்வம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-15/0v27enl0/OPS.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளார். <a href="https://www.maalaimalar.com/topic/aiadmk">அ.தி.மு.க.</a> ஆட்சிக்காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். மேலும் துணை முதலமைச்சர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். </p><p>அ.தி.மு.க.-வில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் <a href="https://www.maalaimalar.com/topic/ops">ஓ. பன்னீர்செல்வம்</a> தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் போடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p><h2>திடீர் பாதுகாப்பு குறைப்பு:</h2><p>முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திடீரென பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறை சார்பில் அவருடைய வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப் பட்டுள்ளது.</p><p>அவருடைய வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆயுதப்படை பிரிவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். அதுபோல், 'வி.ஐ.பி.' வாகன பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்பு 'ஒய்' பிரிவில் இருந்து 'எக்ஸ்' பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. 'எக்ஸ்' பிரிவு என்பது அடிப்படை பாதுகாப்பு ஆகும்.</p><h2>காவல் துறை விளக்கம்:</h2><p>இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் 'அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வு' மேற்கொள்ளப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.</p><p>மத்திய பாதுகாப்பு அமைப்புகளால் அச்சுறுத்தல் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்ட 'ஒய்' பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றனர்.</p><p>முன்னதாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">62b534a7-0abf-4e9b-9ddd-93f27a9d2926</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:19:37.588Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Ajith,லண்டன்,london,அஜித்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNCM Vijay-Actor Ajith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><h2>அஜித் கார் பந்தயம்</h2><p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார்.</p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><h2>பரிசுகள் பரிமாற்றம்</h2><p>இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார்.</p><h2>வீடியோ வெளியிட்ட விஜய்</h2><p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><p>நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.</p><p>அந்த வீடியோவில், விஜயும்- அஜித்தும் ஆரத்தழுவியது முதல், சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜயை அமரவைத்து நடிகர் அஜித்குமார் காரை ஓட்டியுள்ளது வரை இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வீடியோவை கண்டு, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">7ddfac11-3358-4191-a966-d9f28dde0ba4</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:28:25.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,oil wells,எண்ணெய் கிணறுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பக்கத்தில்;</p><p>வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி  அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன்  நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. </p><p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலைக் கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும்  அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில்  எண்ணெய்க் கிணறுகளும், எரிவாயுக் கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டன. </p><p>பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம்  ஓ.என்.ஜி.சி  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில்  இந்த எண்ணெய்க் கிணறுகளை பராமரித்து வந்தது.  </p><p>2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய்க் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. </p><p>அந்த எண்ணெய்க் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.</p><h2>மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுசூழல் பாதிப்பு</h2><p>வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்;  ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  எண்ணெய்க் கிணறுகளால்  கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. </p><p>இப்போது கூடுதலாக எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது</h2><p>ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்  மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. </p><p>அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன.</p><p>இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி,  அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய்க் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.</p><p>ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட,  எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி  கட்டாயம் ஆகும்.</p><p>இந்த அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கக் கூடாது.</p><p>இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம்  சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி விண்ணப்பித்தது. </p><p>அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை.  அதே அணுகுமுறையைத் தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர்.. மின்வெட்டை சரிசெய்யாதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani#comments</comments><guid isPermaLink="false">36407d4e-1d25-49f0-986c-6c02339ee9a4</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:23:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:23:31.557Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Power Cut,அன்புமணி ராமாதாஸ்,Anbumani Ramaddos,மின்வெட்டு,Anbumani condemns</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kgv06aef/images-8.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kgv06aef/images-8.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மின்வெட்டு</h2><p>வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan">செங்கோட்டையன்</a> நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது  திடீரென மின்தடை ஏற்பட்டதால்  செல்பேசி வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்கப்பட்டது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- </p><p>சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perambur-is-the-number-1-constituency-in-the-power-outage-issue-udhayanidhi-stalin">மின்வெட்டு </a>நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை,  வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. </p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.</p><h2>மின்சாரப் பற்றாக்குறை </h2><p>சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். </p><p>ஆனால்,  அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடைபடுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.</p><p>சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.</p> <h2>நடவடிக்கை தேவை </h2><p>மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p>என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்</p>]]></content:encoded></item><item><title>காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">d9ca7ce2-f075-4138-8c50-3a0ba584b4aa</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:05:04.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna Medals,cm vijay,முதலமைச்சர் விஜய்,அண்ணா பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/medals-awarded-to-193-police-officers-and-employees-chief-minister-mk-stalins-order-788651">அண்ணா பதக்கம்</a> வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>முதலமைச்சர் பதக்கங்கள் </h2><p>தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும்,  பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>180 பேருக்கு அண்ணா பதக்கம் </h2><p>அந்த வகையில், இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும்;</p><p>சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும்,  ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத் தளபதி வரையிலான 5 நபர்களுக்கும்;</p><p>விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும்  தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும், அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். </p><h2>அண்ணா வீரதீர பதக்கம்</h2><p>மேலும், கடந்த மே மாதம் 19-ந்  தேதி அன்று நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை  மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய  நிலையில்,  9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கட லுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். </p><p>இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர்  மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி,  தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து  அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.</p><p>கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு “முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்”  வழங்கிட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.</p><p>மேற்கண்ட பதக்கங்கள், முதலமைச்சர் விஜய்யால் பின்னர் விழாவில் வழங்கப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து நிற்பது அவர்களுக்கான உரிமை சுதந்திரம்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections#comments</comments><guid isPermaLink="false">a9971f49-790a-4b68-8d3f-b2c2999232c5</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:48:12 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:48:12.247Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,சிபிஐ,CPI,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம் உப்பளம் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தமிழக அரசு</a> ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதில் உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ் சண்முகவேல்,சிவாகர்  பால்ராஜ், பாலசுப்ரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் செய்யும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹூண்டாய் தென்கொரிய நிறுவனம் தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.</p><p>கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உப்பள தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>இந்த கோரிக்கையை விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இந்த மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இடதுசாரி கட்சிகள் தொடக்கத்தில் இருந்து த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறி வந்தார்கள். அதன் அடிப்படையில் ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.</p><p>ஆனால் நாங்கள் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்து நிற்போம் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.</p><p>இது அவர்களுக்கான உரிமை சுதந்திரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். இந்த 2 தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம். </p><h2>ஆ.ராசா பேச்சு</h2><p>தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.வின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.</p><p>அவர் இதுபோன்ற உரையை ஆர்ப்பாட்டத்தில் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது தி.மு.க.வுக்கு எதிராக போய் முடியும்.</p><p>அண்மையில் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எங்கள் இயக்கத் தோழர்கள் பேச மாட்டார்கள், அந்த மாண்பு பாதுகாக்கப்படும் பொருளில் பேசி இருந்தார்.</p><p>ஆனால், ஆ.ராசா மற்றும் முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட உரை என்பது முதலமைச்சரையே ஓருமையில் பேசுவது மற்றும் அவர்களின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது  எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் பேச்சாக தெரியவில்லை. </p><p>தி.மு.க. மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains#comments</comments><guid isPermaLink="false">2ba416ed-d7b5-4934-8078-ffa8d8e8fcf9</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:36:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:36:16.527Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,communists,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்,M Veerapandian,மு வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் தங்களின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">வீரபாண்டியன்</a> விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்;</p><h2>வாக்குறுதி </h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் இடது சாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். த.வெ.க. அரசுக்கு ஆதரவு நிலை நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.  </p><p>ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட வேண்டும். </p><p>அதற்காக வெளியில் இருந்து ஆதரவு தருகின்றோம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசு  என்னென்ன வாக்குறுதிகளை தருவதாக கூறியிருந்ததோ, அதனை நிறைவேற்ற வேண்டும்.</p><p>ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று  எம்.எல்.ஏ.வாக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு  மற்றொரு கட்சியில் இணைந்து செயல்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. </p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>அ.தி.மு.க.வில் வெற்றி  பெற்றவர்கள்   ராஜிநாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்தது தவறு என்பதை நாங்கள் ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. </p><p>அதனால் ஏற்பட்டுள்ள அந்த காலி இடத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில்  த.வெ.க.வை ஆதரித்தால் தவறான  முன் உதாரணமாக மாறிவிடும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். </p><p>மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை  கூட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் தனித்துப் போட்டியிடு கின்றோம். </p><p>இடைத்தேர்தல் பிரசாரத்தை, அரசியல் பிரசார களமாக பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். </p><h2>மக்கள் குரல்</h2><p>மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை   இந்த அரசு செயல்படுத்த வேண்டும், தமிழ்நாடு திட்டங்களுக்கு   முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்வது போன்றவை இந்த தேர்தல் பிரசாரத்தின் மையமாக அமையும்.  </p><p>மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு குரலாக எங்கள் பிரச்சார வியூகம் இருக்கும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மட்டுமல்ல.  நல்ல விஷயங்களை எடுத்து சொல்வோம். </p><p>த.வெ.க. அரசு தவறான முடிவுகளை எடுத்தால் அதனை கண்டிப்போம். பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களை  தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது போன்ற நல்ல விஷயங்களை வரவேற்கின்றோம்.  </p><p>இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடை பெறுகிறது. அதில் எங்கள் இரு கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிப்போம். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளை தொடங்குவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் தவெகவுக்கு பின்னடைவு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">c81dc6be-af3d-4621-9450-b906c85cd20b</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:12:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:12:24.257Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்,communist parties,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்ட் கட்சிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் த.வெ.க.வுக்கு பின்னடைவு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து வேலூரில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார். </p><p>தமிழ்நாட்டை பொறுத்த வரையில், மத நல்லிணக்கம் நிறைந்த நாடு. ஜாதி, மத பாகுபாடு இன்றி இந்த அரசு இயங்கி வருகிறது.</p><p>எல்லோரும் சமம் என்ற அடிப்படையில், அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>2 இயக்கங்களும் தேவையில்லை. ஒரு புதிய ஆட்சி வேண்டும், மலர வேண்டும் என்று பெண்களும், இளைஞர்களும் நல்ல மனது கொண்ட அத்தனை பேரும் ஆதரவின் அடிப்படையில், இன்று சிறந்த ஆட்சி தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார்.</p><p>நிலவரி இங்கு அமலில் இல்லை. நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய் துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் 1500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஆட்சியைப் போல் அல்லாமல் அனை வருக்கும் விரைந்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>வெறும் பட்டா என்று காகித அளவில் இல்லாமல், இடத்தை தேர்வு செய்து எல்லை கல் அமைத்த பிறகுதான் பட்டா வழங்குகிறோம்.</p><p>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர். கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா..?- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case#comments</comments><guid isPermaLink="false">f41a5c23-b227-4e1b-91a9-ebf046002fb8</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:41:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:41:05.189Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,மாணவன் மரணம்,kanimpzhi mp</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.</p><p>உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘கல்வியே கடவுள்’, ‘போய் படிடா தம்பி’ வாசகங்களுடன் அசத்தும் வினோத விநாயகர் சிலை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue#comments</comments><guid isPermaLink="false">3754dbdf-eb8f-4fd1-aecc-b1895194bc5a</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:23:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:23:19.363Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vinayagar idol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு விழாவையொட்டித் தமிழகத்தின் பல பகுதிகளில் விதவிதமான மற்றும் வினோதமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். சினிமா, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, நடப்புச் சூழலுக்கு ஏதுவாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விநாயகர் சிலை ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p><h2><strong>கல்வியின் அவசிய</strong>ம் </h2><p>சென்னை மணலி பெரியதோப்பு பகுதியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கைகளில் புத்தகங்கள் ஏந்தியவாறும், வழிபாட்டுடன் சேர்த்துப் படிப்பே வாழ்வின் மிக முக்கிய தெய்வம் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘கல்வியே தெய்வம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், செல்போன் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடும் இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பும் வகையில் ‘போய் படிடா தம்பி’ என்ற சுவாரஸ்யமான அறிவுரை வாசகமும் விநாயகர் சிலையின் பீடத்திலும் பின்புறத்திலும் இடம்பெற்றுள்ளது.</p><p>பக்தியோடு சேர்த்து இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை அப்பகுதி மக்களும், குறிப்பாக மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்சிலையின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுபோன்ற அர்த்தமுள்ள விழிப்புணர்வு சிலைகளே இக்காலத்திற்குத் தேவை" எனக் கருத்து தெரிவித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாவடக்கம் தேவை, இல்லையெனில் மக்கள் ஓரங்கட்டுவார்கள்..!- தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">ac5c6079-bc91-45e9-82ff-49b2665d8677</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:06:05.268Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் அவர்களைப் பற்றி திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் தரக்குறைவான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.</p><p>ஆனால், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் அரசியல் நாகரிகமாகாது.</p><p>‘பாரம்பரிய கட்சி’ என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுக, தனது அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அந்தப் பாரம்பரியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டாமா?</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயக அரசியலின் அடிப்படை என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். ஒருவரை விமர்சிக்கும்போது அவரது பதவிக்கும், தனிப்பட்ட மரியாதைக்கும் மதிப்பளிக்க வேண்டும்.</p><p>குறிப்பாக, பெண்களை மதிப்போம் என்று பேசும் அரசியல் கட்சியினர், பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் எந்த அளவுக்கு தரக்குறைவாக இருக்கின்றன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல. உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, பொதுவெளியில் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது எந்த வகையான அரசியல் பண்பாடு என்பதை திமுக தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே மதிக்காமல் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும். அரசியல் விமர்சனங்கள் மக்கள் பிரச்சினைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p>நாவடக்கம் தேவை. இல்லையெனில், மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தேர்தல் மூலம் மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>தொடர்ந்து அவதூறான மற்றும் மரியாதைக்குறைவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டால், மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நிலை விரைவில் உருவாகும்.</p><p>எனவே, தனிநபர் தாக்குதலையே அரசியலாகக் கருதும் போக்கை திமுக கைவிட்டு, மக்கள் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும்.</p><p>அரசியல் நாகரிகத்தை காப்பதும், ஜனநாயக மாண்பை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பொறுப்பு என்பதை திமுக தலைமை உணர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns#comments</comments><guid isPermaLink="false">b347ee35-e430-4806-83f0-5f637437f50a</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:41:01 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:41:01.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>periyar,உதயநிதிஸ்டாலின்,UdayanidhiStalin,பெரியார்</media:keywords><media:content height="270" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோட்டில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளான செப்.17 அன்று, விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். திராவிடர் கழகம் சார்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்படும்.</p><p>இந்நிலயில் இந்தாண்டு இந்த பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் இந்து முன்னணியினர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தை காரணம் காட்டி, ஈரோடு காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. </p><p>இந்த அனுமதி மறுப்பு விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day">பேரறிஞர் அண்ணா</a> பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><h2>யாருக்காக இந்த மடைமாற்றம்?</h2><p>முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian">பெரியார்</a>, அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p>பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? </p><h2>காவி எஜமானர்கள்</h2><p>காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கீழ் சென்றுவிட்டதா? </p><p>பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3வது அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission#comments</comments><guid isPermaLink="false">e1af1315-61fb-47c6-8f7b-b3175627a547</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:24:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:24:43.828Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கனிமொழி,மு.க. ஸ்டாலின்,இந்தியா கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தேசிய அளவில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.</p> <p>தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைத்து <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p>108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இரு இடதுசாரி கட்சிகள் ஆதரவில் ஆட்சி நடத்தி வருகிறது. </p><p>தங்கள் பக்கம் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட மேற்கூறிய கட்சிகள் தவெக வசம் சென்றதால், திமுக கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக தேசிய அரசியலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் பயணித்த திமுக தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் உள்ளது. </p><p>2029 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. </p> <h2>மூன்றாம் அணி</h2><p>எனவே பாஜகவின் என்டிஏ, காங்கிரசின் இந்தியா கூட்டணியை தவிர்த்து மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடொன்று அதிகம் ஒட்டாமலேயே இருந்து வருகின்றன. </p><p>ஜம்மு காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் சிவசேனா, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா என இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அதிகம் காங்கிரசோடு இணக்கம் காட்டாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்தி பூத்தாற்போலவே இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கிறது.</p> <p>இதுதவிர மேற்கு வங்கத்தில் தோல்வியுற்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கம்பேக் கொடுக்க காத்து கிடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தோற்றதனால் தேசிய அரசியலில் மம்தா கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் வெளியான செய்தியும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. </p><p>மம்தாவுக்கு காங்கிரஸ் எப்போதுமே வேப்பங்காய் தான். அதேபோல் கேரளாவில் தோல்வியை சந்தித்த பினராயி விஜயனின் சிபிஐஎம் அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரசுக்கு எப்போதும் எதிரணியே. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதுவும் காங்கிரஸ் - பாஜக இரண்டுக்கும் ஆகாது.</p><h2>ஸ்டாலின் பிளான்</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">ஸ்டாலின் </a>தமிழக முதல்வராக இருந்தபோது இந்தியா கூட்டணியில் முக்கியஸ்தராக செயல்பட்டார். அதேநேரம் பினராயி விஜயன், மம்தா பானர்ஜியோடும் நல்ல உறவை பேணினார். மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆகியோரும் ஸ்டாலினுக்கு நெருக்கம்.</p><p>அதுபோல கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.</p><p>திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றவுடன் காங்கிரஸ் அத்துக்கொண்டு சென்றதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல" என எக்ஸ்சில் பதிவிட்டிருந்தார்.</p><p>இவ்வாறு முதல்வராக இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் ஒரு முகத்தை சம்பாதித்து வைத்துள்ளார். தற்போது காலமும் காட்சியும் மாறிய சூழலில் அதுவே அவருக்கு கை கொடுக்கிறது.</p> <h2>கனிமொழி தூது</h2><p>தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியதுதான் தற்போதைய டாக்.</p><p>மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.</p> <p>தொகுதி மறுவரையரை, மூன்றாவது அணி உருவாக்குவது ஆகியவை குறித்து கனிமொழி தாக்கரேவிடம் பேசியதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.</p><p>அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷின் மனைவியான மக்களவை எம்.பி., டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார். அடுத்ததாக மம்தா பானர்ஜியையும் சந்திக்க உள்ளார்.</p> <h2>திமுக தலைமையில் டீம்</h2><p>இதன்மூலம் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளையும், என்டிஏ - இந்தியா கூட்டணி என இரண்டிலும் இல்லாமல் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் அணி போடுவதே திமுகவின் மாஸ்டர் பிளான் என அரசியல் நோக்கர்கள் நினைக்கின்றனர்.</p><p>இதற்கான அச்சாரமே கனிமொழி மேற்கொண்ட சந்திப்புகள் எனலாம். இது தேசிய அளவில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் முதலமைச்சர் விஜய்-அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள் - புகைப்படங்கள் வைரல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral#comments</comments><guid isPermaLink="false">525f1482-7caa-4df6-8280-988c00fc7488</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:25:14 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:25:14.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Ajith,முதலமைச்சர் விஜய்,நடிகர் அஜித்,Chief Minister Vijay-,London Car race</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Actor Ajith ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார். </p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><p>இந்த சந்திப்பின்போது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">முதலமைச்சர் விஜய்</a> நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை  வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை  அன்பு பரிசாக வழங்கினார்.</p><p>திரையுலகில் பல ஆண்டுகளாக இருவேறு பாதைகளில் பயணித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜயும் அஜித் குமாரும், வெளிநாட்டில் அதுவும் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வில் சந்தித்து கொண்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் விளையாட்டு தளங்களில் இரு பெரும் பிரபலங்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவித்துக் கொண்ட இந்தக் காட்சி, சர்வதேச அளவில் தமிழர்களின் பெருமையை உயர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year#comments</comments><guid isPermaLink="false">492ce286-4e71-48c9-b385-2a4e311c8fcd</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:22:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:22:38.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,Captain Vijayakanth,தேமுதிக கட்சி,DMDK 22ndYear,Captain Legacy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha - Vijayakanth ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> அக்கட்சியின் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான மடல் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அதில், கட்சியின் வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்ததோடு, மறைந்த தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் லட்சியங்களை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2><strong>ஊழலற்ற நேர்மையான மக்கள் ஆட்சி!</strong></h2><p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான மக்கள் ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சிதான் நமது <a href="https://www.maalaimalar.com/topic/dmdk">தேசிய முற்போக்கு திராவிட கழகம்</a>. </p><p>நமது கழகம் வெற்றிகரமாக 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று பெருமையுடன் 22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தொண்டர்களின் அர்ப்பணிப்பு</strong></h2><p>கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கழகக் கொடியைக் கொண்டு சேர்த்த தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.</p><p>"தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து சாதனை படைத்த நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. </p><p>கட்சியின் தொடக்க மாநாட்டில் சுமார் <strong>28 லட்சம் பேர்</strong> திரண்டு கலந்து கொண்டது இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது" என பிரேமலதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.</p><h2>2026 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற சாதனைகள்!</h2><p>கட்சியின் தற்போதைய அரசியல் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர், முதல் முறையாக இந்த ஆண்டு (2026) நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினரை தே.மு.தி.க. பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். </p><p>அதேபோல், இந்த 2026-ஆம் ஆண்டில் மீண்டும் <strong>விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்</strong> நம்கட்சி வெற்றி பெற்று, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">கேப்டனின் </a>கம்பீரக் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளோம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><h2>தெய்வமாக வாழும் கேப்டன் விஜயகாந்த்!</h2><p>மறைந்த தலைவர் விஜயகாந்த் குறித்து பிரேமலதா விஜயகாந்த் எழுதியுள்ளதாவது:</p><p><br>"என்றென்றும் நமக்குத் துணையாக நின்று நம்மையும் நமது கழகத்தையும் வழிநடத்திய நமது அன்புத் தலைவர், புரட்சிக் கலைஞர் கேப்டனை வணங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவோம்.</p><p>நமது தலைவர் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, இன்று நம்மிடையே தெய்வமாக இருக்கிறார். அவரது புகழும் மனிதநேயமும், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் தமிழக மக்கள் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.</p><p>"கேப்டன் வாழ்ந்தார், இருந்தார், அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்று உருகி எழுதியுள்ளார்.</p><p>தலைவர் எதற்காகக் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே தற்போதைய தே.மு.தி.க. தொண்டர்களின் முதன்மையான கடமை என்று கூறி, அனைவரும் இந்த நன்நாளில் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு பிரேமலதா விஜயகாந்த் தனது கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin#comments</comments><guid isPermaLink="false">c9883d78-843d-42bf-ac4e-8a5edda35216</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:24:18.805Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,M.K.Stalin,மு.க.ஸ்டாலின்,தி.மு.க,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க தலைவர்களின் விவாதங்கள் மேடைப்பேச்சுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழ<strong>னிசாமிக்கு கண்</strong>டனம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a> வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்றும், பொறுப்புள்ள தலைவர்கள் பேசும் பேச்சில் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>தி.மு.க<strong>-வின் அரசியல் கலாசார</strong>ம்</h2><p>தி.மு.க-வினரின் மேடைப் பேச்சுகளை கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார். தி.மு.க-வினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். ஆபாசப் பேச்சுதான் தி.மு.க-வின் DNA. எதிர்கட்சித்தலைவர் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. பேச்சில் சிறிதும் அறமில்லாத ஒருவர் எப்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>கட்சியை <strong>எப்படி ஒழுங்காக வை</strong>த்திருப்பார்?</h2><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காத மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும்?</p><p>தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசு, மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையின்  நீர்வரத்து 8,618 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs#comments</comments><guid isPermaLink="false">f84c0004-5015-404f-81cb-73fb66b9b522</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:20:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:20:02.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,நீர்வரத்து,டெல்டா பாசனம்,Delta Irrigation,Cauvery river,Hogenakkal Water,mettur dam water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்லில் பரிசல் தடை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்லில் </a>நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. </p><p>இன்று சற்று குறைந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லில் வந்து கொண்டிருக்கிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் <a href="https://www.maalaimalar.com/topic/cauvery-water">காவிரி ஆற்றில்</a> பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. </p><p>இந்த தடை தொடர்ந்து 3-வது நாளாக அமலில் உள்ளது.</p><p>தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த தண்ணீர் நேராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு </a>வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 2,495 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 5,227 கன அடியாகவும், மாலையில் 7,598 கன அடியாகவும் அதிகரித்தது.</p><p>இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது. நீர் மட்டம் 88.21 அடியாகவும், நீர் இருப்பு 50.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.</p><p>அணையிலிருந்து காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசன</a> சம்பா சாகுபடிக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள் குவிந்தனர்</h2><p>விடுமுறை நாளான இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். </p><p>மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நின்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p>இதேபோல் மேட்டூர் அணையை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகை தந்தனர். அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு அருகாமையில் உள்ள அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-9</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-9#comments</comments><guid isPermaLink="false">9ebfcaf4-18ee-4643-a875-ac35533abe44</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:11:22 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:11:22.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vinayagar Chaturthi,கொழுக்கட்டை,உச்சிப்பிள்ளையார்,விநாயகர்,விநாயகர்   சதுர்த்தி,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ictert92/MALAIKOTTAI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ictert92/MALAIKOTTAI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 150 கிலோ எடையுள்ள மாபெரும் கொழுக்கட்டை தயாரித்து, மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ வீதம் படையல் செய்யப்பட்டது. </p><p>திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் எழுந்தருளியுள்ள உச்சிப்பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று மாபெரும் கொழுக்கட்டை நிவேதனம் செய்யப்படுவது வழக்கம்.</p><h2><strong>கொழுக்கட்டை படையல்</strong></h2><p>அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் சமையல் கூடத்தில் 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. இந்த பிரமாண்ட கொழுக்கட்டை இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இன்று காலை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ வீதம் கொண்டு செல்லப்பட்டது. தொட்டில் கட்டி சுமந்து செல்லப்பட்ட கொழுக்கட்டையை சுவாமிக்கு படைத்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.</p><h2><strong>பூஜைகள்</strong></h2><p>பூஜைகள் முடிந்த பின்னர், கொழுக்கட்டை பிரசாதமாக உடைக்கப்பட்டு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விநாயக பெருமானுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே திரளான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.</p><h2>விநாயகர் சதுர்த்தி விழா</h2><p>முன்னதாக இன்று காலை 4.30 மணிக்கு கண–பதி ஹோமத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மலைக்கோட்டை கோவிலில் தரிசனம் செய்ய திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p><h2><strong>பிள்ளையார்பட்டி</strong></h2><p>சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.</p> <h2><strong>சிறப்பு அலங்காரம்</strong></h2><p>அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.</p><h2><strong>மோதகம் படையல்</strong></h2><p>அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில் அங்குச தேவரும், சிவனின் அஸ்திர தேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.</p><h2><strong>சாமி தரிசனம்</strong></h2><p>சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கல்பட்டு மாவட்டத்தில் 628 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-8</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-worship-8#comments</comments><guid isPermaLink="false">ba103ae9-b693-4f3b-91af-941c03f3765e</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:49:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:49:24.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/r87mr6b5/Vinayagar-statue.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுஇடங்களில் பொதுமக்கள், இந்து அமைப்பினர் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்தனர். இந்த சிலைகள் கடல், ஏரிகள், குளங்களில் கரைக்கப்பட உள்ளன.</p><h2><strong>வழிபாடு</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மொத்தம் 628 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு மேற்பார்வையில், 7 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 25 காவல் ஆய்வாளர்களுடன் மொத்தம் 790 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.</p><p>மேலும் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழி காட்டி நெரிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது  - திருமாவளவன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">7a550d3c-43ab-4778-8354-ef07a801745a</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:41:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:41:29.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,புதிய தலைமை செயலகம்,New Secretariat,pattinapakkam,பட்டினம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.</p> <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam"> புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம்</h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p> <h2>எதிர்ப்பு</h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance">திருமாவளவன்</a>, “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான்.</p><p>அதேபோன்று, பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை.  </p><p>அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet#comments</comments><guid isPermaLink="false">5c63894d-fb4f-4535-a476-a3c26f51a10a</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:14:55.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idols ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தி </a>விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுப் பூஜிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.</p><p>கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதில், சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாகப் பேசுவது போன்ற பாணியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், தேர்தல் சமயங்களில் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரம் செய்ததை நினைவூட்டும் வகையில் சைக்கிள் ஓட்டுவது போல் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் நடித்த 'கில்லி' படத்தின் பிரபல கபடி காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><h2>ரசிக<strong>ர்க</strong>ள் வரவேற்பு</h2><p>இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க சிலைகளைக் காண அப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். 'விஜய் விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்தச் சிலைகளுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா மற்றும் அரசியலின் தாக்கம் வழிபாட்டு முறைகளிலும் எதிரொலிப்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ad882bdc-39fb-411a-856c-e6b5833e6fa7</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:13:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:13:54.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,cm vijay,முதலமைச்சர் விஜய்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay extends Vinayagar Chaturthi greetings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தியை</a> கொண்டாடும் வகையில் பக்தர் பெருமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தியும் வழிபட்டு வருகின்றனர். </p><p>அந்த வகையில் தமிழகத்தில் விநாயகரை வழிபடும் மக்களுக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><h3><strong>விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p>மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!</p><p>இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு, அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">968dfb94-7717-46c2-a2a2-1085c2a1005c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:00:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:00:20.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிள்ளையார்பட்டி,Pillaiyarpatti,விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று (விநாயகர் சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தமிழகத்தில் இவ்விழா வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டும் விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு இன்று காலையிலேயே மாநிலம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.</p><h2>வழிபாடு</h2><p>குறிப்பாக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புலியகுளம் முந்தி விநாயகர் கோயில், தாமிரபரணி நதிக்கரை உச்சிஷ்ட மகா கணபதி கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டன.</p><p>தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 3,000 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.</p><p>விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் மற்றும் பூ, பழம், வாழை இலை உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar">பொருட்களின் விலை</a>யும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance#comments</comments><guid isPermaLink="false">9d8cec7a-593d-4002-a9e2-24849e5788cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 22:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T22:38:52.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/vck">விடுதலை சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும அவர் கூறினார்.</p><p>சிவகாசியில் வி.சி.க. தலைவர் தொல். <a href="https://www.maalaimalar.com/topic/thirumavalavan">திருமாவளவன்</a> செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, "மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருந்தார். </p><p>ஆனால், தி.மு.க. போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது த.வெ.க.விற்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க.வுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.</p><h2>பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது:</h2><p>நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தி.மு.க.வின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.</p><p>த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். </p><p>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:22:22.912Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed">பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </a></p><p>*இந்த நெடுஞ்சாலை கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p><p>*பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit">இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்</a><br></p><p>*இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை</p><p>* பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series">ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா <br></a></p><p>*36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>* பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days">3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</a> </p><p>*ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>*செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated">என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</a></p><p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்<br></a></p><p>*அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>* அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் <br><br></p>]]></content:encoded></item></channel></rss>