<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 07:27:47 +0000</lastBuildDate><item><title>தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime#comments</comments><guid isPermaLink="false">ec1c3493-c2d0-4886-81c2-ccbbf8af423e</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:26:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:26:44.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,vijay,Udhayanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்டை</a> வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவும் புதிதில்லை.</p> <h2>வேளாண் பட்ஜெட்</h2><p>* தவெக ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு இல்லை.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.</p><p>* திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்களின் கட்சி பெயரை சேர்த்து புதியதை போல் அறிவித்துள்ளனர்.</p> <p>* மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுகின்றனர்.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><h2>கருப்பு சட்டை</h2><p>* தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.</p><p>* குறுவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்.</p> <p>* அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.</p><p>* விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>* காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்துள்ளோம்.</p><p>* சட்டசபையில் நாளை முதல் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் வாய் திறப்பாரா என்று பார்ப்போம்.</p><p>* எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
 - 6 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026#comments</comments><guid isPermaLink="false">cea48297-4a0d-4b97-9bab-77c908ac9582</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:22:43.542Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</a></p><p>* முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும்.</p><p>* செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.</p><p>சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் முழு விவரம் வருமாறு:</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jug0dj1h/ministervinoth.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது முதலமைச்சர் குறித்து பேசிய அமைச்சர் வினோத் இறுதியாகவும் முதலமைச்சர் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.</p><p>அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் மட்டும் நீக்குவதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.</p><p>கடந்த 2 மணி நேரமாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><p>பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் - அமைச்சர் வினோத்</p><p>நடப்பாண்டில் கூடுதலாக 2.50 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் - அமைச்சர் வினோத்</p> <p>விதை இருப்பை அதிகரிக்கும் வகையில் மேலும் 150 விதை பயிர் தொகுப்பு ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 லட்சம் சந்தன மரம், 50,000 தேக்குமரம் உள்ளிட்ட மரங்களை நடுவதற்கு திட்டம்</p><p>மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் தருவதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு</p><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25% மூலதன மானியம் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்குவதற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு</p><p>வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கால்நடை தீவனம் ஒரு கிலோ ரூ.2 மானிய விலையில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு</p><p>2026-2027 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>உதகையில் வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம்</h2><p>உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி, 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பலகை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</p> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.4.8 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்ட 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்ட, மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>225 ஏக்கர் பரப்பளவு வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கத்திற்காக ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><p>மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னையில் 100% மானியத்தில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்த திட்டம்.</p><p>தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சமபங்கு நிதியாக உறுப்பினருக்கு தலா ரூ.5000 வழங்க ரூ.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பொறியியல் விரிவாக்க, பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி ஒதுக்கீடு.</p><p>வேளாண்மையில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்தும் திட்டங்களுக்கான செயல்விளக்கங்ளுக்கு ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><h2>வேளாண் இயந்திரங்கள் </h2><p>உழவர்களுக்கு வேளாண் பொருட்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த ரூ.20.31 கோடி ஒதுக்கீடு</p><p>புதிதாக 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிக்காக வான் மகள் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும்.</p><p>57,000 மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் மற்றும் கருவி வழங்க ரூ.227.2 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு </p><p>தென்னை பதப்படுத்தும் கழகம்  ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/gi2bnhlf/coconut.jpg" /></figure><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும் என அறிவிப்பு</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>அளவு கடந்த ஊட்டச்சத்து உள்ள தமிழ்நாடு தளிர்கீரை திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு</p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.</p> <p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்</p><p>மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p> <p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு  - அமைச்சர் வினோத்</p><p>நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.</p><p>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு</p><p>பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு</p> <p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/phbqf2zv/paddy.jpg" /></figure><p>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ogk40j0p/compost.jpg" /></figure><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு -  வேளாண் அமைச்சர்</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p> <p>5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத் </p><p>மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p> <p>பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.</p><p>இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத் </p><p>விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது. </p><p>நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.</p><p>டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.</p> <p>செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.</p><p>வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்   - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம்  - அமைச்சர் வினோத்</p> <p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8smd7lya/vinoth2.jpg" /></figure><p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/baakw511/speaker.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5ady734p/udhayanidhi.jpg" /></figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/x2lizk1n/vijay.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xpjmrorm/dmk2.jpg" /></figure><p>சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.</p> <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</p><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha#comments</comments><guid isPermaLink="false">5be938f7-a086-4a88-94f5-379f3a04e281</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:20:30.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>பின்னர், இதுதொடர்பாக தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை.</p><p>நெல்லை மூட்டைகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.</p><p>100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு நிறுத்தாமல் அதனை விளைநிலங்களாக மாற்றுவதையே தேமுதிக விரும்புகிறது.</p><p>ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நமது விளைபொருளை வெளிநாட்டில் வாங்க மறுக்கின்றனர்.</p><p>நேற்றும், இன்றும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்து திட்டங்களை அறிவித்துள்ளனர்.</p><p>இந்திய வேளாண் பொருட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.</p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால்,முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும், எதற்கு அடுத்த ஜென்மம்.</p><p>கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். </p><p>மாவட்டந்தோறும் நலிவுற்ற பதப்படுத்தும் ஆலைகளை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.</p><p>செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத், இது செயலாக்கம் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled#comments</comments><guid isPermaLink="false">7ddf467d-b479-4184-963c-09fd2575f222</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:54:23.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced">வேளாண் பட்ஜெட்</a> தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.</p> <h2>திமுக ஆட்சி</h2><p>* சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* கடந்த கால திமுக ஆட்சியில் 20 துறைகளை இணைத்து வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலத்தான் தவெக பட்ஜெட்டும் உள்ளது.</p><p>* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கரும்பு டன்னுக்கு ஆதார விலை ரூ.4,500 வழங்கப்படும் என்றார்கள் அந்த அறிவிப்பு என்னவானது?</p> <h2>உழவர் உரிமை அட்டை</h2><p>* சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விதைப்பு கால நிதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p><p>* உழவர் உரிமை அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?</p><p>* தொடக்க வேளாண் வங்கிக்கடன்களில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p> <h2>தவெக அரசு</h2><p>* தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக தற்போது விவசாயிகளை ஏமாற்றி விட்டது.</p><p>* வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தரும் பட்ஜெட் இல்லை.</p><p>* அதிமுக அரசு முன்னதாக அறிவித்த குடிமராமத்து திட்டத்தில் நீர் நிலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.</p> <h2>குடிமராமத்து திட்டம்</h2><p>* மகத்தான குடிமராமத்து திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.</p><p>* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் நீர் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">981be373-b7aa-4945-89bc-3812b3af8afb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:53:49.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்,Minister Bussy Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் உடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளனர்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்த் உடன் சந்தித்துள்ளனர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>பசுமை தமிழ்நாடு இயக்கம்: மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம்!-அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative#comments</comments><guid isPermaLink="false">ae9c4bbe-16d5-4350-86b2-ccfb0ba6c6eb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:37:43.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கால்நடை பராமரிப்பு &amp; பால் பண்ணை மேம்பாடு:</strong></h2><h2><strong>நடுத்தர பால் பண்ணைகள்:</strong></h2><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>சிறு பால் பண்ணைகள்:</strong></h2><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க 4 சதவீத வட்டி மானியமாக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மகளிர் சுய உதவிக்குழுக்கள்:</strong></h2><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியாகத் தலா ரூ.5,000 வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மானிய விலையில் தீவனம்:</strong></h2><p>வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குக் கால்நடைத் தீவனம் ஒரு கிலோ ரூ.2 என்ற மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>விதை பயிர் தொகுப்பு:</strong></h2><p>மாநிலத்தில் விதை இருப்பை அதிகரிக்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 150 விதை பயிர் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><h2><strong>வேளாண் காடுகள் திட்டம்</strong>:</h2><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் சந்தன மரங்கள் மற்றும் 50,000 தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>பசுமை தமிழ்நாடு இயக்கம்:</strong></h2><p>பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai#comments</comments><guid isPermaLink="false">8efb705f-951c-4fa3-8585-b859f460a2ec</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:26:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:26:09.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவித்து விவசாய விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்க ஆராய்ச்சி மையம். </p><p>தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீலகிரி மாவட்டம் உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. </p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியம்- வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">59cf6bfc-b6f3-447a-9120-e1b693845e71</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:09:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:09:32.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் தானியங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கவும் பல முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>ரூ.7.10 கோடியில் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்:</strong></h2><p>மாநிலத்தில் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், 3 முக்கிய இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.</p><h2><strong>அமைக்கப்படும் இடங்கள்:</strong></h2><p>சேலம் மாவட்டம் (கங்கவல்லி), தூத்துக்குடி மாவட்டம் (கிள்ளிகுளம்) மற்றும் விழுப்புரம் மாவட்டம் (இருவேல்பட்டு).</p><h2><strong>நிதி ஒதுக்கீடு:</strong></h2><p> ரூ. 7 கோடி 10 லட்சம் (மாநில நிதி).</p><h2><strong>சர்க்கரைத் துறை: கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகைகள்:</strong></h2><p>கரும்பு சாகுபடிச் செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இரண்டு முக்கிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>விதைக்கரும்பு மானியத் திட்டம் (ரூ.9.36 கோடி):</strong></h2><p>இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பு ரகங்களைச் சாகுபடி செய்ய முன்வரும் கூட்டுறவு/பொதுத்துறை சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறுவர். இவர்களுக்கு 50% மானியத்தில் பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணைகள் வழங்கப்படும்.  இத்திட்டம் 17,315 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் (ரூ. 9 கோடி):</strong></h2><p>வல்லுநர் விதைக்கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், சோகை உரித்தல், நிழல் வலைக்கூடம் அமைத்தல், சோகை தூளாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து-உயிர் உரங்கள் வழங்க மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.9 கோடி மானியம் வழங்கப்படும்.</p><h2>எத்தனால் <strong>உற்பத்தி</strong> ஆய்வு (ரூ. 20 லட்சம்):</h2><p>கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 மற்றும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பில், நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எத்தனால் வடிப்பாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தோட்டக்கலைத் துறை: ரூ.22 கோடியில் வெங்காய சேமிப்பு கிடங்கு:</strong></h2><p>காய்கறிகள், பழங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் தொடர்ந்து வருமானம் பெறவும் தோட்டக்கலைத் துறை மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அறுவடைக்குப் பின் வெங்காயம் அழுகி வீணாவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய '57,000 மெட்ரிக் டன்' கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள்.. வெற்றி வான் மகள் திட்டம் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced#comments</comments><guid isPermaLink="false">4fb34331-553b-45e5-baba-b490d66a93d0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:55:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:55:18.358Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><h2>வெற்றி வான் மகள் திட்டம்</h2><p>அதில் குறிப்பாக பெண்களை டிரோன்களை இயக்குபவர்களாக மாற்றுவதற்கு ‘வெற்றி வான் மகள் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் டிரோன்கள் வழங்கப்படும்.</p><p>ரூ.4 கோடியில் டிரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேநேரம் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells#comments</comments><guid isPermaLink="false">4036f6d6-63c1-43f4-8ebd-0b1492e0ba28</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:52:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:52:19.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக 56.72 லட்சம் கோடி ஒதுக்கீடு. </p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஜாக்பாட்: &apos;அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched#comments</comments><guid isPermaLink="false">3c7e5558-83c8-4af1-b66f-0cc6f3790783</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:48:43.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation">வேளாண் பட்ஜெட்</a>டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும் பல முக்கியச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்டப் பலன்களைச் சிரமமின்றி பெறவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிக் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் "அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும்.</p><h2><strong>20% கூடுதல் மானியம்:</strong></h2><p>உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயனாளி பங்களிப்புத் தொகையைக் குறைக்கும் வகையில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.</p><h2><strong>70% மானியத் திட்டங்கள்:</strong></h2><p>ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல் வலைக்குடில்கள், சூரியக்கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு 70% மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>80% மானியத்தில் பம்புசெட்டுகள்:</strong></h2><p>சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க 80% மானியம் தரப்படும்.</p><h2><strong>100% மானியத்தில் பாசன வசதி:</strong></h2><p>பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளை/குழாய்க்கிணறுகள், மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் 100% முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.</p><h2><strong>விளைபொருட்களைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டம்:</strong></h2><p>மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து அறுவடை செய்த விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், தானியங்களை எளிதாக உலர்த்துவதற்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2026-27ஆம் நிதியாண்டில் ரூ. 10 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில், மொத்தம் 43,500 விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">ba7f7be0-300e-4808-b6a6-4bdb4b7e0cba</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:34:28.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுத்து, விவசாயிகளின் பொருளாதார இழப்பைக் குறைக்கும் வகையில் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.7.35 கோடி நிதியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>காட்டுப்பன்றி விரட்டி (ரூ.1.35 கோடி):</strong> </h2><p>தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கியுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி, 14,000 ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>சூரிய சக்தி மின்வேலி (ரூ.2 கோடி):</strong></h2><p>காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை மற்றும் மான் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க, நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்குச் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் அமைக்கப்படும்.</p><h2><strong>சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் (ரூ.4 கோடி):</strong> </h2><p>காட்டுப்பன்றிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்து அகற்றி, மண் வளத்தையும் சுற்றுச்சூழைலையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழகம்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">09bd4b36-937c-417d-87e2-5c7c0fc7c39b</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:28:27.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு.</p><p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு. </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம்.</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்புத்திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் அமைக்கப்படும்.</p><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும். </p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சிறந்த விவசாயிகளுக்கு வெற்றி விவசாயி, அஞ்சலை அம்மாள், நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers#comments</comments><guid isPermaLink="false">a20384fc-858b-4c35-8358-93db8ce717f0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:21:17.825Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான விருதுகள்  பின்வருமாறு:-</p><h2>வெற்றி விவசாயி விருது</h2><p>நெல், சோளம், கம்ப், மக்காசோளம் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு நிலக்கடலை விவசாயத்தில் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  </p> <h2>அஞ்சலை அம்மாள் விருது</h2><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்வதும், தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும் என்பது பரிசுகளுக்கான தகுதி அளவாகும்.</p><h2>நம்மாழ்வார் விருது</h2><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>வாழை முதல் தென்னை வரை: தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிதி மழை பொழிந்த பட்ஜெட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers#comments</comments><guid isPermaLink="false">e79fa81c-0047-4c3d-8aac-64f699de4369</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:16:35.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth"> அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், தோட்டக்கலை மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:</p><h2><strong>சாமந்தி சாகுபடிக்கு LED விளக்குகள்:</strong></h2><p>சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் LED விளக்குகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>சீமை கருவேல மரங்கள் அகற்றம்:</strong></h2><p>நிலத்தடி நீரைக் குடிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வாழைக்கு முட்டுக்கொடுக்கும் திட்டம்:</strong></h2><p>காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வாழை மரங்கள் சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தென்னை மேம்பாட்டுச் சிறப்புத் திட்டம்:</strong></h2><p> தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>AI தொழில்நுட்பத்தில் உழவர் செயலி- ரூ.2 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app#comments</comments><guid isPermaLink="false">5320a74c-d087-41d9-bf95-b53c38f8a3c7</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:08:32.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="616" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg" width="1090"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வானிலை</a>, பாசனம், சந்தை விலை நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ஏஐ உழவர் செயலி.</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி.</p><p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-revokes-announcement-abolishing-separate-fee-for-seat-selection-on-flights" rel="nofollow">பருத்தி உற்பத்தி</a>யை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு.</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூப்பர் எல் நினோவால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - வேளாண் அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister#comments</comments><guid isPermaLink="false">27692622-34ea-4c55-b677-54e8a44236d2</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:00:31.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு, </p><p>பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.648 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8.26 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2>எல் நினோ</h2><p>விவசாயிகளை வாழ வைப்பது மழை தரும் வானம் தான் என்றாலும், அவர்களை வருந்துவதும் அதே வானமாக தான் உள்ளது. </p><p>இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. </p><p>எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு  அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்ளூரா ரக மாம்பழத்திற்கு கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காத சூழல் கடந்த ஆண்டு இருந்தது. எனவே அந்த வகை மாம்பழத்திற்கு ஒன்றிய அரசின் சந்தை இடையீட்டு திட்டத்தில் விலை வித்தியாசத் தொகையை வழங்க ஒன்றிய அரசுக்கு உரிய கருத்துரை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது. </p><p>6 மெட்ரிக் தன் மட்டுமே மேலும் இதற்கு உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருங்காலங்களில் இத்தகு சூழலை எதிர்கொள்ள அரசு முற்றிலும் தயாராக உள்ளது. </p><h2>உற்பத்தி</h2><p>மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் 2026-27 ஆம் ஆண்டிற்கு 125 லட்சம் மெட்ரிக் டன் ஆக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. </p><p>இதுதவிர ஊட்டச்சத்து வழங்கும் பயிர்கள், காய்கறிகள் உணவு வகைகளிலும் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவை எட்டி ஊட்டச்சத்து பாதுகாப்பு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம்- ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">02e09bb1-2efd-441c-a5ad-b0a73c0e4978</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:33 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:33.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு.</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">5e1d36b5-470f-41bc-ab83-ac0e990012c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:09.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod">அமைச்சர் வினோத் </a>உரை நிகழ்த்தினார். மண்வளப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:</p><h2><strong>1 லட்சம் பசுந்தாள் உரம்:</strong></h2><p>மண் வளத்தை மேம்படுத்தி, இயற்கை முறையில் விவசாயத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p><h2><strong>மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி:</strong> </h2><p>மண்வளப் பாதுகாப்பிற்காகச் சிறப்பு ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">49626a4c-7e14-441b-b53c-cf160d880241</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:50:12 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:50:12.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod#comments</comments><guid isPermaLink="false">947145af-4751-4d88-8637-4688c354c774</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:42:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:42:01.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் -அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">4ebf182d-a371-4993-baff-a273ac326d13</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:30:31.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action">அமைச்சர் வினோத்</a> இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..</p><h2><strong>வெற்றி தமிழ்நாடு இலக்கு:</strong></h2><p>"வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் முதன்மை இலக்கு" என அமைச்சர் வினோத் தனது உரையில் குறிப்பிட்டார்.</p><h2><strong>தனி பட்ஜெட் நடைமுறை:</strong></h2><p>விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.</p><h2><strong>நவீன தொழில்நுட்பம் &amp; AI</strong></h2><p>செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறை புதிய பரிணாமத்தையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது.</p><h2><strong>பாதுகாப்பு &amp; உறுதிப்பாடு:</strong></h2><p>தமிழகத்தில் வேளாண்மையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முழு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள்.. முதல்வர் விஜய்க்கு புகழுரை வாசித்த வேளாண் அமைச்சர் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு - சபாநாயகர் செய்த செயல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action#comments</comments><guid isPermaLink="false">104efff9-0acb-4cbb-9101-af98b934aa2e</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:29:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:29:29.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> வேளாண் பட்ஜெட்டை </a>வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பேச்சை தொடங்கிய வேளாண் அமைச்சர் ரமேஷ், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கிறேன். </p><p>வெற்றி தமிழ்நாட்டை மிளிர செய்வதை நோக்கமாக கொண்டுள்ள மாண்புமிகு முதல்வருக்கும் வெற்றிப் பாதையில் உள்ள முற்களை மலர்களாக்கி காய்களை கனிகளாக்கி முன்னே அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வணக்கம். </p><p>பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள் (என இருமுறை கூறி) திரைமன்றங்களில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள்தான் (இருமுறை). </p><p>உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் கலையெடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.</p><p>விசில் என்பது ஒலி அல்ல, அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொது மொழி. விசில், காற்று இசைத்த முதல் ராகம். விசில், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி. விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. </p> <p>அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது. ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. ஒற்றுமையோடு சாதி சமயம் மறந்து நாங்கள் கொண்டாட உங்களை போல் ஒரு வரம் இல்லை. </p><p>இனிமேல் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும். இல்லை நீங்கள் பேசப்படுவதால் இருக்கும். ஆழிப்பேரலையாய் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெருங்கடலை....</p><p>என பேசிக்கொண்டிருக்க எதிர்கட்சிகள், வேளாண் படஜெட்டை தாக்கல் செய்யாமல் சொந்த கட்சி மற்றும் தலைவர் துதி பாடுவதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்எல்ஏக்கள் கூச்சல் எழுப்பினர். </p><p>அவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை அமைதியுடன் இருக்க வலியுறுத்திய சபாநாயகர் பிரபாகர், வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்கும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார். அதான் நானே சொல்லிட்டேனே, அமைதியா இருங்க என எதிர்கட்சியினரை இருக்கைகளில் அமர சொல்லி பிரபாகர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested#comments</comments><guid isPermaLink="false">0868fc3b-916c-40d6-a8f9-cc8df87125f6</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:23:15.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srilankan Navy,TN fishermen,தமிழக மீனவர்கள்,மீனவர்கள் கைது,இலங்கை கடற்படை,Fishermen Arrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</strong></em></p><p>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">தமிழக மீனவர்கள்</a> இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.</p> <p>இந்நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</p><p>கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. </p> ]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் - சட்டசபையில் இன்று தாக்கல்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-be-presented-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-to-be-presented-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">a3da343e-8b28-451d-863c-1218f9ec5c6c</guid><pubDate>Thu, 06 Aug 2026 02:21:42 +0000</pubDate><atom:updated>2026-08-06T02:21:42.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/dvt9luz8/vinoth1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paddy - Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/dvt9luz8/vinoth1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</strong></em></p><h2>பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் '<a href="https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee">பட்ஜெட்</a>' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> பட்ஜெட்</a> தாக்கல் செய்யப்பட இருக்கிறது. </p><h2>தமிழக சட்டசபை</h2><p>தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திருக்குறள் வாசித்தவுடன் கூட்டம் தொடங்கும். </p> <h2>அமைச்சர் வினோத்</h2><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரம், விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் அரசியல், விவசாய சங்கங்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் வேளையில் வேளாண்மை 'பட்ஜெட்' முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு பட்ஜெட் 2026-27: ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/tn-budget-2026-27-breakdown-of-income-and-expenditure-for-each-rupee#comments</comments><guid isPermaLink="false">95200614-beda-4d3c-b0b4-3c7afc0d1194</guid><pubDate>Wed, 05 Aug 2026 20:22:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T20:22:15.770Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TVK Vijay,TN budget,தமிழக பட்ஜெட்,தவெக விஜய்,Budget 2026,மரிய வில்சன்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM VIjay with Maira Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/m1fdm39x/CM-VIjay-with-Maira-Wilson.png?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/tvk">த.வெ.க.</a> அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (ஆகஸ்ட் 05) தாக்கல் செய்தார்.</p><p>தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a> தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு தங்களது முதல் பட்ஜெட்டை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>காலை 10.00 மணிக்கு பட்ஜெட் தாக்கலை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன் சுமார் இரண்டரை மணி நேரம் பட்ஜெட் தாக்கல் செய்து மதியம் 12:31 மணிக்கு உரையை முடித்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒரு ரூபாயின் வரவு மற்றும் செலவு விவரங்களை தொடர்ந்தும்.</p><h2>ஒரு ரூபாயில் வரவு:</h2><ul><li><p>பொதுக்கடன் -33.1%</p></li><li><p>கடன்களின் வசூல் மற்றும் மூலதன வரவு -0.1%</p></li><li><p>மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள்- 6.3%</p></li><li><p>மத்திய வரிகளில் பங்கு - 11.9%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி வருவாய் -43.3%</p></li><li><p>மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் - 5.3%</p></li></ul><h2>ஒரு ரூபாயில் செலவு:</h2><ul><li><p>மூலதனச் செலவு -10.9%</p></li><li><p>வட்டி செலுத்துதல் -15.0%</p></li><li><p>உதவித் தொகைகளும் மானியங்களும் - 33.2%</p></li><li><p>கடன்களை திருப்பிச் செலுத்துதல் -9.9%</p></li><li><p>சம்பளங்கள் - 17.3%</p></li><li><p>ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள் - 8.0%</p></li><li><p>கடன் வழங்குதல் - 1.9%</p></li><li><p>செயல்பாடுகளும் பராமரிப்புகளும் -3.8%</p></li></ul><h2>2 ஆண்டுகள் அவகாசம்:</h2><p>பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் தனது உரையில், "போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும். போதிய நிதி ஆதாரங்களை பெருக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் வெற்றி பெறுவோம்.</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தேவைப்படும். கடந்த ஆட்சியை போல் குறுகிய அரசியல் ஆதாயம் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-to-the-department-of-tamil-development-a-budget-that-disappoints-the-people-thangam-thennarasu#comments</comments><guid isPermaLink="false">deadc17b-3c5a-4722-97af-bb8886b653d4</guid><pubDate>Wed, 05 Aug 2026 16:05:15 +0000</pubDate><atom:updated>2026-08-05T16:05:15.541Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தங்கம் தென்னரசு,Thangam Thennarasu,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ் வளர்ச்சித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களுக்கு ஏமாற்றத்தை தரும் பட்ஜெட் - தங்கம் தென்னரசு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/nsdkj1x3/New-Project-2026-08-05T212629.158.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;</p><p>“தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர். </p><p>தமிழ்நாட்டின் ரூ.10 லட்சம் கடன் சுமையை திமுகதான் ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போதே நிதியமைச்சர் ஏற்படுத்த முயன்றார். நான் அப்போதே கடன் வாங்குவதற்கான அளவுகோல்களை விளக்கியிருந்தேன்.  </p><p>தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என நான் அப்போது கூறியிருந்தேன். </p><p>இன்று பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடன் வாங்குவது அதிகரிக்கும் என ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் கோடி இந்த ஆண்டு நிகர கடன் வாங்கியுள்ளனர். இதே அளவு சென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தவெக அரசு கடனாக வாங்குவார்கள். </p><p>நாங்கள் ஆட்சியை விட்டு போகும்போது ரூ.1 லட்சம் நிகர கடன்தொகை வாங்கினோம். இப்போது அவர்கள் கூடுதலாக ரூ.22 ஆயிரம் கோடி வாங்கியுள்ளார்கள். ரூ.7000 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. </p><p>மூலதனச் செலவுகளையே திமுக செய்யாததைப் போல ஒரு தோற்றத்தை வெள்ளை அறிக்கை வெளியீட்டில் அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், திமுகவின் இடைக்கால பட்ஜெட்டில் மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 59,662 கோடி. தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவிற்கு ரூ.56,985 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.3000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. </p><p>திமுக செல்லும் வேளையில் மாநில வரி வருவாய் ரூ. 2 லட்சத்தி 29 ஆயிரம். இப்போது ரூ.2 லட்சத்தி 26 ஆயிரம் கோடி. அதிலும் ரூ.3000 கோடி ரூபாய் குறைவாக காட்டுகிறார்கள். வெள்ளை அறிக்கையில் எந்தெந்த விஷயங்களை திமுகவிற்கு எதிராக கூறினார்களோ, பட்ஜெட்டில் அந்த துறைகள் அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளனர். </p><p>திமுக திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டிருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறைக்கு எவ்வளவு நிதி என்றுக்கூட அறிவிக்கவில்லை. தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளார்கள். அதைவைத்து என்ன செய்யமுடியும்?</p><p>டெல்டா மாவட்டங்களில் தடுப்பணைகளை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சொற்ப நிதியினை ஒதுக்கியுள்ளனர். இதுதான் நிலைமை. பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-reply-to-dmk-leader-stalin-slams-tamil-nadu-budget#comments</comments><guid isPermaLink="false">2108b207-9e99-4c5e-87d3-0cbca419acf0</guid><pubDate>Wed, 05 Aug 2026 15:16:55 +0000</pubDate><atom:updated>2026-08-05T15:16:55.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,முக ஸ்டாலின்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin- TVK IT Wing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/zfue4ozj/MKStalinITing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசு வாங்கிய கடன் எல்லாம் எங்கே போனது என்று தெரியாமல் அருமையான நிர்வாகத்திறன் ஆட்சி நடத்திய ஸ்டாலின் சார் தன் ஆட்சியை வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு அறிக்கை விட்டுள்ளார்.</p><p>மகளிர் உரிமைத்தொகையை ஆட்சிக்கு வந்த 28 மாதங்கள் வரை தூங்கிவிட்டு அறிவித்ததை மறந்துவிட்டு ஸ்பீட் முதலமைச்சர் போல ஃபேக் நரேட்டிவ் செய்ய முற்படுகிறார்.</p><h2>ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார்</h2><p>ஆட்சி முடியும்போது அவசர அவசரமாக ஓட்டுக்காக லேப்டாப் வழங்கிய ஸ்டாலின் சார் ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப் வழங்கப்படப் போவதைப்பொறுக்காமல் சொந்தமாக யோசிக்கத் தெரியாத அரசு தன் அரசு என்பதை சுரத்தே இல்லாமல் ஒரு சூப்பர் சொதப்பல் அறிக்கை விட்டிருக்கிறார்.</p><p>எங்கே தான் நடத்திய ஊழல் மாடல் உதார் ஆட்சியின் ஊழல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்கிலீஷ் மாடல் அறிக்கை விட்டு தடுமாறி இருக்கிறார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின் கூறும்போது மாற்றம் மாற்றம் என்ற பெயரைத்தான் மாற்றியுள்ளனர் என்று விமர்சித்திருந்தார். இதற்கும் த.வெ.க. ஐ.டி. விங் பதில் கொத்துள்ளது.</h2><p>மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?. திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த  மீள்வதற்கான மாற்றம்தான். அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.</p><p>மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.</p><p>ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுக-வின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை உதயநிதி ஸ்டாலின் உணர்ந்தால் நல்லது.</p>]]></content:encoded></item><item><title>நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/makkal-kavalan-starring-manikandan-produced-by-neelam#comments</comments><guid isPermaLink="false">55c71ebb-c79f-402b-8793-3497bb646890</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:28:06 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:28:06.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>manikandan,neelam productions,மணிகண்டன்,மக்கள் காவலன்,Makkal Kavalan,நீலம் புரொடக்ஷன்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/6psymmv4/New-Project-2026-08-05T195744.046.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் புதியப் படத்திற்கு மக்கள் காவலன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.</p><p>சந்தோஷ் குமார் எழுதி, இயக்கும் இப்படத்திற்கு நிவாஷ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் எனும் வசனம் அதில் இடம்பெற்றுள்ளது. </p><p>படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படம் குறித்த பிற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-cut-in-the-budget-allocation-for-the-education-sector-is-disappointing-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">6c875a8a-dad9-4e78-9210-c3b92f10b948</guid><pubDate>Wed, 05 Aug 2026 14:16:19 +0000</pubDate><atom:updated>2026-08-05T14:16:19.736Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/ut0ttdxx/New-Project-2026-08-05T194545.707.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் நல அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதேநேரம் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, பல துறைகள் தனியார் உடன் கூட்டிணைவது ஏற்கத்தக்கத்தல்ல எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“2026-27 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசு - தனியார் கூட்டு வினை என்ற அடிப்படையில் நவீன தாராளமய பாதையை ஒட்டியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதையும், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்பதையும் அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறது.</p><p>புதிய கட்டண உயர்வுகள் ஏதும் முன்மொழியப்படவில்லை. அதே நேரத்தில் வருவாய் கசிவை தடுப்போமென்று உறுதிபடக் கூறியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் அரசியல் உறுதியோடு இது நிறைவேற்றப்பட வேண்டும்.</p><h2>வரவேற்கத்தக்க அறிவிப்புகள் </h2><p>பள்ளிகளின், மாணவர் விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, 500 புதிய அங்கன்வாடி கட்டிடங்கள், போதை ஒழிப்பு, சுகாதாரத் துறையில் கருவுற்ற மகளிர் பராமரிப்பு மையங்கள், 5 மண்டலங்களில் புற்று நோய் சிகிச்சை மையங்கள், மூத்த குடிமக்களுக்கான நடமாடும் மருத்துவகங்கள் - பாதுகாப்பு இல்லங்கள், </p><p>அறிதல் திறன் குறைபாடு உடையோருக்கு நம்பிக்கை இல்லங்கள், புதிய கால்நடை காப்பீடு, ஜென் இசட் மாணவர்களுக்கு நவீன மிதி வண்டிகள், திருநர்களுக்கு சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பு, பொது நூலகங்கள் டிஜிட்டல் மயம், கிராமிய விளையாட்டு ஊக்குவிப்பு, ஒலிம்பிக் சிறப்பு மையங்கள், நாட்டுப் புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.</p><h2>கல்வித்துறையில் ஏமாற்றம்</h2><p>மக்கள் நல அறிவிப்புகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படவில்லை. முதியோர் உதவித் தொகையும் உயர்த்தப்படவில்லை. பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு விழுந்திருப்பது என்பதும் ஏமாற்றம் அளிப்பதாகும். 10,000 அரசுப் பள்ளிகளில் "சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க துவக்கம் ஆகும். </p><p>இது நடைமுறைப்படுத்தும் போது நிரந்தர துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு பள்ளிக்கு ஒரு நாளைக்கு ரூ.380/- மட்டுமே கிடைக்கிறதென்பது ஒதுக்கீட்டின் போதாமையை வெளிப்படுத்துகிறது. </p><p>பகுத்தறிவு, பாலின சமத்துவம், சுற்றுச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கிய முற்போக்கான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது. </p><p>ஆனால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட் ஆவணம் காண்கிற கனவுக்கு ஈடு கொடுப்பதாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.</p><h2>வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இல்லை</h2><p>இளைஞர்களிடம் வேலை வாய்ப்பு குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உள்ள நேரத்தில் வேலை உருவாக்கம் குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் ஏதுமில்லை. வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்கப்படுமென்ற எதி ர்பார்ப்பும் இடம்பெறவில்லை. 20000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி, உதவித் தொகை என்கிற திட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இது தனியார்கள் மலிவான உழைப்பை பெற்றுக் கொள்வதற்கே பயன்படும்.</p><p>அரசு - தனியார் கூட்டு வினை என்பது மாணவர் விடுதி மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, மின் பகிர்மான பாதை, போக்குவரத்தில் மொத்த செலவின ஒப்பந்தம் ஆகியவற்றில் முன்மொழியப்பட்டுள்ளது. இது நவீன தாராளமய பாதையை அடியொற்றிய நடவடிக்கையே ஆகும். தனியார்கள் லாபம் பெறவே இந்த கூட்டு வினைகள் உதவுமே தவிர சமூகப் பொறுப்புடனான செயலாக்கத்திற்கு பயன்படாது.</p><h2>விபிஜி - ராம்ஜி திட்டம்</h2><p>விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வரம்பு அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இதில் இடம் பெறவில்லை. அனைத்து விவசாயிகளும் பயன்பெறத்தக்க வகையில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும். </p><p>விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள, 125 நாட்களை நிறைவு செய்பவர்களுக்கு கூடுதல் 25 நாட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சராசரி வேலை நாட்கள் 44 முதல் 59 ஆகவே இருக்கிற சூழலில் சட்டப்படியான வேலை நாட்களை உறுதி செய்வதும், அதற்கு மேலாக 25 நாட்கள் வேலை தருவதுமே பெரும் பகுதி மக்களுக்கு பயனளிக்கும். </p><p>இதற்கான நிதிப் பகிர்வுக்கு ஒன்றிய அரசின் வஞ்சனையை எதிர்த்து குரல் கொடுத்து மாநில நிதி உரிமையை உறுதி செய்ய வேண்டும். காவிரி, கொள்ளிடம் குறுக்கே தடுப்பணை கட்டுவது பற்றி நீரியல் நிபுணர்கள் ஆலோசனை பெற்று கதவணைகளை உறுதி செய்ய வேண்டும். வைகை குண்டாறு இணைப்புத்திட்டம் தாமதம் பற்றி பட்ஜெட் குறிப்பிட்டு இருப்பது சரியானது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து காலவரையறை தீர்மானித்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>'திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்' அறிவிப்பு வரவேற்கத்தக்கது. டெண்டர் முறையில் வெளிப்படைத்தன்மை பற்றி பட்ஜெட் பேசி இருப்பது நடைமுறையில் அமலாக வேண்டும். கிரானைட், மணல் மற்றும் கனிம வளங்கள் அனைத்தும் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தனியார், ஒப்பந்த முறை தடுக்கப்பட வேண்டும். அரசின் வருவாய் உயர்வதற்கான வழியாகும் இது. </p><p>சுற்றுலா ஊக்குவிப்பிற்கான அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்தை போல சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியும் சுற்றுலா மேம்பாட்டில் இணைக்கப்பட வேண்டும். நதி நீர் சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, சூழல் சுற்றுலா ஆகியன அரசின் வருவாய் பெருக்கத்திற்கு உதவும். மாநிலம் முழுமைக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா கொள்கை உருவாக்குவதும் முக்கியம். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பற்றி பட்ஜெட் பேசியிருப்பது முக்கியமானது.</p><p>தொழிலாளர் உரிமைகள் பற்றி பட்ஜெட் எந்தக் குறிப்பையும் கொண்டதாக இல்லை. தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை ஒன்றிய அரசு உருவாக்கிய வடிவில் தமிழ்நாட்டில் அமலாக்க மாட்டோமென்றும், மாநில அரசின் அதிகார வரம்பைப் பயன்படுத்தி தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வோமென்றும் அறிவித்திட வேண்டும்.</p><p>பழைய பென்சன் திட்டம் பரிசீலிக்கப்படுமென்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.</p><p>ஆதிதிராவிடர், பழங்குடி சிறப்பு உட்கூறு திட்டங்களின் கோட்பாடுகள் உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டு மடைமாற்றம் இல்லாத, இலக்கிடப்பட்டதாக, ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்ததக்கதாக அமலாக்கப்பட வேண்டும். </p><p>ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர் அயல்கல்வி ஊக்குவிப்பு வரவேற்கத்தக்கது. ஜூன் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்ற காலவரம்பு நீக்கப்பட வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடி தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, வட்டி மானியம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை.</p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையில் உயர்வு இல்லை என்பதும் ஏமாற்றம் தருகிறது. பணியில்லா கால மீன்பிடித் தொகை தற்போது ரூ.8000 வழங்கப்பட்டு வருகிறது. அதைவிட குறைவாக அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.</p><p>சிறுபான்மையினர் நலனுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புனித ஹஜ் மானியம், கிறித்தவ இஸ்லாமிய மகளிர் சங்கங்கள், கபர்ஸ்தான், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாராட்டத்தக்கது.</p><p>புதிய வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய கட்டுமான செலவுகளின் நிலைமையை ஒப்பிடும் போது அது போதுமானதல்ல. ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். </p><h2>அறிவிப்புகள் வரவேற்க்கத்தக்கது... ஆனால்,</h2><p>மொத்தத்தில் பட்ஜெட் மக்கள் நல அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் சார்ந்தும், அது வெளிப்படுத்தி இருக்கிற எண்ணங்கள் சார்ந்தும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் அவற்றின் அமலாக்கம், நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் உள்ள போதாமை களையப்பட வேண்டும். </p><p>நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் இருந்து விலகாமல் சாதாரண எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. நிதி கூட்டாட்சி குறித்த வலுவான குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப வேண்டும். </p><p>தேர்தல் வாக்குறுதிகள் சார்ந்து மக்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/receipts-must-be-issued-for-all-liquor-sold-at-tasmac-shops-high-court#comments</comments><guid isPermaLink="false">aabf1062-a482-4e37-b006-c23dc450ddb0</guid><pubDate>Wed, 05 Aug 2026 13:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-05T13:30:40.588Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் - உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/9v7ud1ff/New-Project-2026-08-05T183426.636.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் அனைத்து மதுபாட்டில்களுக்கும் ரசீது வழங்கப்பட வேண்டும் எனவும், அனைத்து கடைகளும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>சென்னை முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வழக்கறிஞர் தேவரஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரித்தபோது, ​​நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.</p><p>இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.</p><h2>நுகர்வோர்க்கான பலன்கள்</h2><p>நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கு மேல் வசூலிக்கும் முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்படும்.</p><p>மதுபானங்களின் சரியான விலை மற்றும் விவரங்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியவரும். கூடுதல் விலைக்கு விற்கும் ஊழியர்கள் மீது பெறப்படும் புகார்களுக்கு இந்த ரசீதுகள் முக்கிய ஆதாரமாக விளங்கும்.</p>]]></content:encoded></item><item><title>‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/only-the-name-spells-success-the-budget-statement-is-merely-an-empty-one-seemans-criticism#comments</comments><guid isPermaLink="false">5728041e-3da7-4074-9ea7-7c514afa3ee7</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:56:54 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:56:54.886Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,சீமான்,TVK budget,தவெக பட்ஜெட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பெயர் மட்டும்தான் வெற்றி... நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கைதான்’ - சீமான் விமர்சனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/z3z6nv7p/New-Project-2026-08-05T182616.305.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என இன்றைய தவெக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்., </p><p>“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது. மாநிலத்தின் வருவாய் பெருக்கத்திற்கோ, புதிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கோ, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கோ, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கோ என எந்த ஆக்கப்பூர்வ நோக்கங்களும், திட்டங்களும் இல்லாத வெற்று அறிக்கையாக நிதிநிலை அறிக்கையை தயாரித்திருப்பது தவெக அரசின் நிதி நிர்வாக மேலாண்மையின்மையையே காட்டுகிறது. </p><p>தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது அவற்றைத் திட்டமும், நோக்கமுமின்றி தறிகெட்டு நிற்பது வெட்கக்கேடானது. </p><p>முந்தைய 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டதைவிட 2,240 கோடி ரூபாய் குறைவான நிதியை ஒதுக்கியிருக்கிறது தவெக அரசு. இத்தோடு, உயர் கல்வித்துறைக்கு 100 கோடி ரூபாய் குறைவாகவும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சி துறைக்கு 1,419 கோடி ரூபாயும், கைத்தறி துறைக்கு 302 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 196 கோடி ரூபாயும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>அதுமட்டுமின்றி, மின்துறைக்கான நிதியையும்கூட 5,350 கோடி ரூபாய் அளவுக்குக்குக் குறைத்துள்ளது. இவ்வாறாக, கல்வி, மின்துறை, தொழில் வளர்ச்சி, கைத்தறி, நீர்வளத்துறை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைக் குறைத்திருப்பது பெரும் நிர்வாக வீழ்ச்சியை நோக்கி தமிழ்நாட்டைக் கொண்டு செல்லுமென்பது தெளிவாகிறது. </p><p>தொழிலாளர் நலத்துறைக்கு கூடுதலாக 30 கோடி ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கூடுதலாக 50 கோடி ரூபாயும், சமூகநீதித்துறைக்கு கூடுதலாக 13 கோடி ரூபாயும் எனக் குறைவான அளவாக நிதியைக் கூட்டி ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானதல்ல!</p><p>தவெக தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளான 2,500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 எரிகாற்று உருளைக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துதல், வேலை இல்லாத இளைஞர்களுக்கு 4,000 ரூபாய் நிதியளிப்பு, </p><p>பெண்களுக்கான இலவசப் போக்குவரத்துப்பயணம் உள்ளிட்டவைக் குறித்து எந்தவொரு அறிவிப்பையும் இந்நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாததன் மூலம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களை முற்றாக ஏமாற்றியிருக்கிறது தவெக அரசு. </p><p>மீன்பிடி தடைக்காலத்தில் 20,000 உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த தவெக, தற்போது 7,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் எனக் கூறியிருப்பது ஏமாற்று வேலையாகும்.</p><p>சமூகநீதியை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருக்கிறோம் எனக் கூறிவிட்டு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுப்பது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் அளிக்காதது மோசடித்தனமாகும். </p><p>பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றிய நிலையில், குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை விவசாயிகள் ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு கேட்டு நிற்கும் நிலையில், அதனைப் பற்றிப் பேசாது கடந்துபோவது உழவர் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். </p><p>பதிவுத்துறையில் தவெக அரசு செய்த சீர்திருத்தங்கள் மூலம் ஆண்டுக்குக் கூடுதலாக 15,000 கோடி வருவாய் கிடைக்கும் என அரசுத்தரப்பில் கூறப்படுவது உண்மையென்றால், அதிமுக்கிய துறைகளுக்கு நிதியைக் குறைத்தது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில்  பிரசவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறுவது அவமானகரமானது. </p><p>மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி, மக்களை அரசு மருத்துவமனைகளின் பக்கம் திருப்பாது, தங்க மோதிரம் மூலம் நாடச் செய்வதாகக் கூறுவது அவல நிலையின் உச்சம்.</p><p>மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத் தவெகவின் ஆட்சியில் ஏறக்குறைய 25,000 கோடி ரூபாய்வரை கடனை வாங்கி வைத்திருப்பதுதான் இவ்வாட்சியின் நிதிநிர்வாக மேலாண்மையின் இலட்சணமாகும். </p><p>தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2031ஆம் ஆண்டிற்குள் 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ள தவெக அரசு, அந்த இலக்கை எப்படி அடைவோம்? என்பது குறித்து எவ்வித தெளிவான வழிமுறையையும் குறிப்பிடவில்லை. </p><p>நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையைத் தங்கு தடையின்றி வாசிக்கத்தான் தடுமாறுகிறாரென்று பார்த்தால், நிதிநிலை அறிக்கையின் உள்ளடக்கம் அதனைவிடத் தடுமாற்றமாக இருக்கிறது. </p><p>மொத்தத்தில், தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் ஏதும் இல்லாது, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கோ, மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கோ, நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கோ, கடன் சுமையைக் குறைப்பதற்கோ பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள், நடவடிக்கைகள் ஏதும் இல்லாது, பெயரில் மட்டுமே வெற்றியைக் கொண்டுள்ள வெற்று நிதிநிலை அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கையாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-cm-vijay-give-prize-money-to-triple-jump-medal-winners-in-commonwealth-games#comments</comments><guid isPermaLink="false">d3996c5b-605b-433f-b4c6-7eee8d26aca1</guid><pubDate>Wed, 05 Aug 2026 12:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-05T12:15:49.304Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commonwealth games,காமன்வெல்த் போட்டி,Price Money,ஊக்கத்தொகை,cm vijay,முதல்வர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/mq40vbm2/cm1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>விளையாட்டு (Sports)</category><content:encoded><![CDATA[ <p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p><h2>பதக்கப் பட்டியலில் 4-வது இடம்</h2><p>சமீபத்தில் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். செல்வ பிரபு வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஆண்டு பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடம் பிடித்தது.</p><p>காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்மைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.</p><p>இதுதொடர்பாக, முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியவதாவது:</p><p>ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை</h2><p>இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.</p><h2>தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்</h2><p>ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.</p><p>இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலைமைச் செயலகத்தில் நேரில் வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை  கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-dr-anbumani-ramadoss-online-pre-booking-of-tasmac-liquor-is-dangerous-the-government-must-withdraw-this-harmful-scheme#comments</comments><guid isPermaLink="false">1ed913d9-63a5-41df-a287-9aca36b5d5f1</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:38:42 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:38:42.586Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ டாஸ்மாக்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/21x4g3h2/Tasmacanbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-bar-rules-relaxed-new-move-by-tamil-nadu-govt"> டாஸ்மாக்</a> மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் &nbsp;தொடங்கப்பட்டிருப்பதாகவும் &nbsp;வெளியாகியுள்ள செய்திகள் &nbsp;அதிர்ச்சி அளிக்கின்றன. &nbsp;மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.</p><p>மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் &nbsp;<a href="https://tasmace2e.in/">https://tasmace2e.in/</a>&nbsp;என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.</p><p>இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.</p><h2>மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</h2><p>மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக &nbsp;டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் &nbsp;அதிகரிக்கச் செய்யும்.</p><p>தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.<br><br>மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். &nbsp;ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும்.</p><h2>35039 நியாய விலைக் கடைகள்</h2><p>தமிழ்நாட்டில் உள்ள 35,039 &nbsp;நியாயவிலைக் கடைகள் &nbsp;செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் &nbsp;உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத &nbsp;அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.</p><p>டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது என்பது விதி. இது குறித்த அறிவிப்பு பலகைகளும் மதுக்கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி &nbsp;அவர்களுக்கு மது விற்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தால் ஒருவரின் கணக்கில் முன்பதிவு செய்து பலரும் மது வாங்கிச் செல்லும் நிலை உருவாகும்.</p><p>மாணவர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதை தடுத்து வருவது &nbsp;மதுக்கடைகளில் வரிசையில் நின்று மது வாங்கினால் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் தான். அது தான் அவர்களை மதுக்கடைகளுக்கு செல்வதைத் தடுக்கிறது. இப்போது ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்து &nbsp;மதுக்கடைகளில் சில வினாடிகள் மட்டுமே நின்று மதுவை வாங்கிச் செல்லலாம் என்ற நிலை உருவானால் அவர்கள் மதுப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகி விடுவார்கள்.</p><h2>வாதம் அபத்தானது</h2><p>மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதும் தவறான வாதம் ஆகும். மதுக்கடைகளில் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்ற அரசின் தோல்வியையே இது காட்டுகிறது. கள்ளச்சாராய வணிகத்தைத் தடுப்பதற்காகத் தான் மதுக்கடைகளை நடத்துகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுவது எந்த அளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு இந்த வாதமும் அபத்தமானது.<br><br>தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடுவதற்கு ஆணையிட்டார். அது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், &nbsp;அதை சிதைக்கும் வகையில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குதல், ரெஸ்டோ பார்களை அனுமதித்தல் போன்ற செய்திகள் வெளிவருவதும், ஆன்லைனில் மதுவை முன்பதிவு செய்வதை அனுமதிப்பதும் அரசுக்கு பெருமை சேர்க்காது. எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் &nbsp;மது முன்பதிவு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.</p><p>&nbsp;இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி- அமைச்சர்: 05 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-05-august-2026#comments</comments><guid isPermaLink="false">26a830e4-6e1c-496e-877c-f6d4a71ea964</guid><pubDate>Wed, 05 Aug 2026 04:04:45 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:34:59.889Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:title><media:description type="html"><![CDATA[ நிதி அமைச்சர் மரிய வில்சன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/7e49t1zq/maria.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-today-another-shock-gold-rates-jump-second-time-today" rel="nofollow">GOLD PRICE TODAY: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! ஒரே நாளில் 2வது முறையாக எகிறிய தங்கம் விலை</a></p><p>* காலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360க்கு விற்பனை.</p><p>* வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கு விற்பனை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast" rel="nofollow">'Blast Blast' இல்ல..‘Waste Waste' என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</a></p><p>* திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>* தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-comments-tn-budget">தவெக அரசின் பட்ஜெட்டுக்கு '0' மார்க்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை. </p><p>* மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>2026-2027ம் ஆண்டிற்கான நிதிநிலை குறித்த பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டசபையில் தாக்கல் தாக்கல் செய்தார். அதன் விவரம்:-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-comments-tn-budget">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி</a></p><p>* யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.</p><p>* நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?</p><p>அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.12 லட்சம் வரை காப்பீடு. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி. இதற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் உலகத்தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படும். விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்ழுடும். சென்னையின் புதிய அடையாளமாக கூவம் மற்றும் அடையாளு ஆறுகள் உருவாக்கப்படும்- அமைச்சர்</p><p>அனைத்து தேர்வு முகமைகளின் ஆண்டு தேர்வுத் திட்டம் வெளியிடப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>அனைவருக்கும் தரமான வீடு: ரூ. 1,253 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>நிதி நிலையை சீரமைக்க இரண்டு ஆண்டுகள் தேவை- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக உள்ளது. 2026-27ஆண்டில் மாநில வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடி இருக்கும் என கணிப்பு. தமிழ்நாடு அரசின் மொத்த கடன் 10.98 லட்சம் கோடி ரூபாய் என நிதி அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 3000 கோவில்களில் திருப்பணி மற்றும் திருமுழுக்கு நடத்தப்படும்</p><p>தமிழர் பாரம்பரியத்தை உலகறிய செய்வோம் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நாட்டுப்புற கலைஞர் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>ஆண்டுதோறும் 2.5 லட்சம் முதியவர்கள் புனித பயணம் மேற்கொள்ள பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்மிகப் பயணிகளின் வசதிக்காக திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணியில் ஓய்வு இல்லங்கள் நிறுவ ரூ.60 கோடி ஒதுக்கீடு</p><p>நகர்புறத்தை ஒட்டிய கிராம மேம்டபாட்டுத்திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தின் பல பகுதிகளில் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் உணவு சுற்றுலா வழித்தடம் அறிமுகம்</p><p>தமிழ்நாட்டின் உணவு சுற்றுலா வழித்தடங்கள் ரூ.20 கோடியில் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.14,830கோடி ஒதுக்கீடு</p><p>உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு</p><p>உணவு மற்றும் கலைத்திருவிழாக்கள் நடத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>காவல்துறை புதிய குடியிருப்பு வளாகத் திட்டம் ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் நதிச்சுற்றுலா திட்டத்திற்காக ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு</p><p>வணிக வரிகள் துறைக்கு ரூ.651 கோடி ஒதுக்கீடு</p><p>பத்திர பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு</p><p>மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலா தளமாக மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களை ஒருங்கிணைத்து நீதிமன்ற வளாகம் உருவாக்கப்படும்.</p><p>சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஒருங்கிணைக்க ரூ.1375 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு</p><p>தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ஒதுக்கீடு</p><p>மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடற்கரை பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைக்கும் வகையில் 2500 ஹெக்டரில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம். </p><p>கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுமுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, குமரியில் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்கம்.</p><p>தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற பெயிால் புதிய அலையாத்தி காடுகளை உருவாக்க புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>விளையாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என ஆய்வு செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு</p><p>நதிகள் மறுசீரமைப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, நதி மேற்பரப்பு சுத்தம் செய்ய திட்டம். </p><p>பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு- பாலாறு, தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>நதி இணைப்பு திட்டங்களுக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு</p><p>நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி ஒதுக்கீடு</p><p>காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>முல்லைபெரியாறு, ஆனைமலையாறு திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை</p><p>மேகதாது உள்ளிட்ட தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை உறுதியாக எதிர்ப்போம்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி, மின்மானியத்திட்டம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழகத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விமானநிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு- பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார் சத்திரம் மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. </p><p>நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,252 கோடி ஒதுக்கீடு</p><p>போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.7,657 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவிக்கு ரூ.2,650 கோடி ஒதுக்கீடு</p><p>சென்னை பயணிகளின் வசதிக்காக புதிதாக ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். புதிய ஏசி மின்சார பேருந்துகள், பேருந்து பணிமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>சாலை விபத்துகளை தடுக்க, சாலைகளை பராமரிக்க, வாகன ஓட்டிகளை கண்காணிக்க பாதுகாப்பான சாலைஇயக்கம் அறிமுகம். AI மூலம் வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமீறல் கண்காணிப்பு, ரோந்து பிரிவு மற்றும் தீவிர காய சிகிச்சை மையம் அமைக்க திட்டம். </p><p>நம்ம சாலை திட்டத்திற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு. நம்ம சாலை செயலி மூலம் சாலை குறைபாடு பற்றி புகாரளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,117 கோடி ஒதுக்கீடு</p><p>பனை விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பையும், வருவாயையும் உறுதி செய்ய பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.16 கோடி நிதியுடன் தமிழ்நாடு பனை மேம்பாட்டுக் கழகம் நிறுவப்படும்</p><p>செயற்கை நுண்ணறிவு பாடத்திட்ட வடிவமைப்புக்கான குழு அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கு ரூ. 1,678 கோடி ஒதுக்கீடு</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவுத்திறனை ஊக்குவிக்க ரூ.163 கோடி ஒதுக்கீடு</p><p>நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>மாவட்டம் தோறும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>ஆழ்கடல் மீன்பிடி தொழில் ஊக்குவிப்பிற்காக ரூ.12கோடி ஒதுக்கீடு</p><p>விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டததிற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.57 கோடி ஒதுக்கீடு</p><p>பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்திற்காக ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் உள்ள மேய்ச்சல் நிலங்களை மீட்க பட்ஜெட்டில் ரூ.13 கோடி ஒதுக்கீடு</p><p>தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் அமைக்க ரூ.6.7 கோடி ஒதுக்கீடு</p><p>41 கால்நடை மருத்துவமனை கட்டடங்கள், 25 கால்நடை பல்நோக்கு மருத்துவமனைகள், 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள்  அமைக்கப்படும். </p><p>கால்நடை மருத்துவத்திற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு. கால்நடைகள் காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு.</p><p>1.39 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும் பணியில்லா கால உதவித்தொகைக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு</p><p>மீனவர்களுக்கு பணியில் இல்லாத கால உதவித்தொகை ரூ.6ஆயிரத்தில் இருந்து ரூ.7ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிப்பு</p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் 5 வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு 100 சதவீத மானித்துடன் வழங்கப்படும். </p><p>வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பெண்களுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். </p><h2><strong>எந்த துறைக்கு எவ்வளவு நிதி</strong></h2><p>பள்ளிக்கல்வித்துறை ரூ.44,527 கோடி, உயர்கல்வித்துறை ரூ.8,393 கோடி, தொழிலாளர் நலத்துறை ரூ.2,022 கோடி, சிறப்பு திட்ட செயலாக்கம் ரூ.44,527 கோடி, கூட்டுறவுத்துறை ரூ.8,028 கோடி, வேளாண் துறை ரூ.14,984.</p><p>சமூக நீதித்துறை ரூ.3,937 கோடி, மாற்றுத்திறனாளி நலத்துறை ரூ.1,485 கோடி, சமூக நலத்துறை ரூ.9,818 கோடி, மருத்துவத்துறை ரூ.3937 கோடி.</p><p>டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டம்-ரூ.134 கோடி ஒதுக்கீடு</p><p>விவசாயிகளின் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>டெலி மெடிசன் நெட்வொர்க் உருவாக்க ரூ.18.5 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு</p><p>சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கீடு- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு</p><p>5 ஆண்டுகளில் 1000 தொலை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் - ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய கேர் மையங்கள் அமைக்கப்படும்- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழகம் முழுவதும் ஆயிரம் நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள்- ரூ.33 கோடி ஒதுக்கீடு</p><p>மண்ணின் மகள் திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு</p><p>ஆன்றோர் மேம்பாட்டுத்திட்டம் ரூ.250 கோடி ஒதுக்கீடு</p><p>சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு</p><p>திருநர்களுக்கு திறன்பயிற்சி சுயத்தொழிலுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>திருநர்களுக்காக 5 மாவட்டங்களில் அரண் தங்குமிடங்கள் அமைக்கப்படும். </p><p>திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிகளில் சுயதொழில் தொடங்க ரூ.50,000 கடன் வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த 500 அங்கன்வாடி அமையங்களுக்கு புதிய கட்டிடம்- பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>யோகா உள்ளிட்டவையுடன் உருவாக்கப்படும் முதியோருக்கான இல்லங்கள் 12 மாவட்டங்களில் அமைக்க ரூ.6.6 கோடி ஒதுக்கீடு</p><p>தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி ஒதுக்கீடு</p><p>இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு</p><p>கிராமிய விளையாட்டு போட்டித்திட்டம் ரூ.42 கோடி ஒதுக்கீடு</p><p>10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்- ரூ.50 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் அமல்படுத்தப்படும். </p> <p>காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. </p><p>அண்ணனின் சீர் திட்டத்திற்காக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் திட்டம் என பெயர்வைத்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் விஜய்- மரிய வில்சன்</p><p>காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.170 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் ஒரு மணி நேரம் முறைப்படுத்தப்பட்டு விளையாட்டு பயிற்சி வழங்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட், வாட்டர்பாட்டில் வசதியுடன் ரூ.277 கோடி மதிப்பில் சைக்கிள் - பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>5 ஆண்டுகளில் 24 ஆயிரம் மாணவர்களுக்கு AI வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு</p><p>TN சுடர் திட்டத்தில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்க ரூ.3200 கோடி ஒதுக்கீடு</p><p>போட்டி தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகளுக்காக ரூ.3.38 கோடி ஒதுக்கீடு</p><p>ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்- நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு</p><p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது- நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு</p><p>பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,524 கோடி நிதி ஒதுக்கீடு- மரிய வில்சன்</p><p>பள்ளி பாடத்திட்டம் மறு சீரமைப்பிற்காக கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு</p><p>போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு</p><p>பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு- தரமான கல்வி வழங்க காமராஜர் சிறப்பு பள்கிள திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் அறிவிப்பு</p><p>மாடர்ன் பள்ளிகளை மேம்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு</p><p>அரசு பள்ளிகளில் தூய்மையை பாதுகாக்கும் விதமாக சூப்பர் கிளீன் கேம்பஸ் திட்டம் என்ற புதிய அறிமுகம்- இத்திட்டத்திற்கு ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மதுபான உற்பத்தியாளர்களுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>3,734 அரசுப்பள்ளிகளில் ரூ.2132 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கல் திட்டம் - இந்த ஆண்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு</p><p>பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்பிற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் சீர் திட்டம் தொடங்கப்படும் - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>டெண்டர்களை கண்காணிப்பதன் மூலம் அரசுக்கு ரூ.15ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்பு- மரிய வில்சன்</p><p>த.வெ.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் மரிய வில்சன்</p><p>தமிழக அரசின் கடனுக்கான வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது- மரிய வில்சன்</p><p>மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்பு தொட்டவர்களையும் விடமாட்டோம்- மரிய வில்சன்</p><p>முதலமைச்சரின் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி நடுங்குகின்றனர்- மரிய வில்சன்</p><p>தமிழகத்தில் அரசு டெண்டர்களில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>டெண்டர் விதிமுறைகள் பலவற்றை தளர்த்தி முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>தவெக அரசு பொறுப்பேற்ற நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதை வெள்ளை அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்- மரிய வில்சன்</p><p>நிதி நெருக்கடியில் இருந்து தமிழகத்தை மீட்க தவெக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது- மரிய வில்சன்</p><p>புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் மிக குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்</p><p>வெற்றிக்கொள்கை ஆவணத்தில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவது உறுதி- மரிய வில்சன்</p><p>தவெக வெற்றி என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் வெற்றி-மரிய வில்சன்</p><p>2036-ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட  மாநிலமாக மாற்ற திட்டம் </p><p>சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் நிகழ்த்தி காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய்-மரிய வில்சன்</p><p>குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது த.வெ.க. அரசு</p><p>தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன- மரிய வில்சன்</p><p>விலையில்லா மின்சாரம் 200 யூனிட்களாக த.வெ.க அரசில் உயர்த்தப்பட்டுள்ளது- மரிய வில்சன்</p><p>தன்னை உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சூழ்ச்சிகளை வென்று ஜனநாயகனாக நிற்கும் முதலமைச்சருக்கு நன்றி- மரிய வில்சன்</p><p>3 மாதங்களில் சொன்னதை செய்து காட்டியுள்ளது த.வெ.க. அரசு- மரிய வில்சன்</p><p>பிறப்பால் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுடன் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் முதலமைச்சர்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>நன்றி கடன் செலுத்துவதற்காக மட்டும் அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்- நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><figure><img alt="முதலமைச்சர் விஜய்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/32znrfa9/vijay.jpg" /><figcaption>முதலமைச்சர் விஜய்</figcaption></figure><p>2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.</p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை கூடியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உதயநிதி ஆலோசனை.</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முண்டகக்கண்ணி ம்மன் கோவிலில் அமைச்சர்கள் என்.ஆனந்த், விஜய் பாலாஜி ஆகியோர் சாமி தரிசனம்.</p><p>முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் அறையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவில்லை.</p><p>எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபைக்கு வருகை</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை</p><p>த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் சட்டசபைக்கு வருகை</p><p>சட்டசபைக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை</p><p>2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/how-much-funding-has-been-allocated-for-the-tvk-governments-name-change-plan-mp-kanimozhi-asks#comments</comments><guid isPermaLink="false">0f90c6a1-9f93-41fe-bec9-52cf54e89571</guid><pubDate>Wed, 05 Aug 2026 11:21:14 +0000</pubDate><atom:updated>2026-08-05T11:21:14.267Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி எம்பி,Kanimozhi MP,Tamil Nadu budget,தமிழ்நாடு பட்ஜெட்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தவெக அரசின் பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? - கனிமொழி எம்.பி. கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/q14wglr1/New-Project-2026-08-05T165046.482.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட், இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனால்  தாக்கல் செய்யப்பட்டது.</p><p>இதில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பெயர் மாற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.</p><p>பட்ஜெட் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த எதையும் செயல்படுத்தப் போவதில்லை என்பதையே இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.</p><p>இந்த அரசின் முக்கிய திட்டமான பெயர் மாற்றத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.</p><p>மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் தி.மு.க செயல்படுத்தியதாகவே உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பள்ளிக் கல்வித்துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடா?: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-budget-tamil-nadu-school-education-funding-rajmohan-defends-budget#comments</comments><guid isPermaLink="false">47c88557-c9cf-4a5f-a6c9-ea9cf17c0b3a</guid><pubDate>Wed, 05 Aug 2026 10:15:51 +0000</pubDate><atom:updated>2026-08-05T10:15:51.681Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhyanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உயதநிதி ஸ்டாலின்- ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/r8dbf95g/UdhyanidhiStalinRajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான் என அமைச்சர் ராஜ்மோகன் &nbsp;தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இது குறைவு என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.</p><h2>இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-</h2><p>&nbsp;வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக் கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!</p><p>&nbsp;2025-26 திமுகபட்ஜெட்டில்பள்ளிக்கல்விக்குஒதுக்கப்பட்டநிதி 46,767 கோடிரூபாய். இதில், இடைக்காலபட்ஜெட்டுக்குமுன்புவரைசெலவிடப்பட்டதொகை 42,351 கோடிரூபாய்மட்டும்தான்.</p><p>இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.</p><p>&nbsp;அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.</p><h2>2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு</h2><p>வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.&nbsp;</p><p>வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&nbsp;</p><p>இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.</p><p>இவ்வாறு ராஜ்மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ் விலை உயர்வு- கிலோ ரூ.100-க்கு விற்பனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-6</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vegetable-price-hike-in-koyambedu-market-6#comments</comments><guid isPermaLink="false">0e8bfbc5-47ac-4a7c-9c5b-f6bfc078e76d</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:18:18 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:18:18.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu Market,கோயம்பேடு மார்க்கெட்,காய்கறி விலை,Vegetable price</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/d7ozu5d3/vegetable.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்]]></media:title><media:description type="html"><![CDATA[ விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/d7ozu5d3/vegetable.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/கோயம்பேடு-மார்க்கெட்">கோயம்பேடு மார்க்கெட்டுக்கு</a> தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது. இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்தன. </p><h2><strong>வரத்து குறைவு</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. எனினும் நாளை ஆடி கிருத்திகை என்பதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறையவில்லை. இதனால் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் காய்கறி விற்பனை விறுவிறுப்பாகவே நடந்தது.  </p><p>வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் மற்றும் பீன்சின் விலை இன்று மேலும் அதிகரித்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் மற்றும் கேரட் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. </p><h2><strong>கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விபரம் (கிலோவில்) வருமாறு:-</strong> </h2><p>தக்காளி-ரூ.8முதல் ரூ.16 வரை, நாசிக் வெங்காயம்-ரூ.28 முதல் ரூ.36வரை, சின்ன வெங்காயம்- ரூ.50முதல் ரூ.75வரை, உருளைக்கிழங்கு-ரூ.16, கத்தரிக்காய் -ரூ.30, வெண்டைக்காய்-ரூ.40, அவரைக்காய் -ரூ.40,ஊட்டி பீட்ரூட் -ரூ.60, முருங்கைக்காய்-ரூ.35, பீர்க்கங்காய்-ரூ.40, பன்னீர் பாகற்காய்-ரூ.40, கோவக்காய்-ரூ.40, கொத்தவரங்காய்-ரூ.30, முட்டை கோஸ்-ரூ.17, சவ்சவ் -ரூ.10, சுரக்காய்-ரூ.10, புடலங்காய்-ரூ.20, வெள்ளரிக்காய்- ரூ.25, பச்சை மிளகாய்-ரூ‌.35, இஞ்சி-ரூ.75முதல் ரூ.150வரை.</p>]]></content:encoded></item><item><title>&apos;Blast Blast&apos; இல்ல..‘Waste Waste&apos; என சொல்லும்படியாக இருக்கிறது தமிழக பட்ஜெட்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-calls-tamil-nadu-budget-waste-waste-not-blast-blast#comments</comments><guid isPermaLink="false">81d38a15-c21c-4f4a-9e2a-8b116406cf69</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:11:46 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:11:46.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/b2ym0gyv/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/two-years-needed-for-fiscal-reforms-montek-singh-ahluwalia-panel" rel="nofollow">நிதிநிலை அறிக்கை</a>யை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினா்.</p><p>காலை 10.01 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மரிய வில்சன் 12.31 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.</p><h2>Waste waste..</h2><p>இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்து முன்னா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், </p><p>'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!</p><p>அதுமட்டுமல்ல, இது <a href="https://www.maalaimalar.com/search?q=dravida%20model" rel="nofollow">திராவிட மாடல்</a> அரசின் திட்டங்களின் Remake Version budget! </p><p>மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!</p><p>அதுமட்டுமல்ல, </p><p>- ரூ.2,500 <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88" rel="nofollow">மகளிர் உரிமைத் தொகை</a>,</p><p>- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,</p><p>- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,</p><p>- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!</p><p>மொத்தத்தில், </p><p>சொந்தமாகவும் யோசிக்காத - </p><p>சொன்னதையும் செய்யாத - </p><p>சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தமிழக பட்ஜெடுக்கு '0' மார்க்</h2><p>தமிழக பட்ஜெட் குறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,"த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க். தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.</p><p>மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95" rel="nofollow">திமுக</a> அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.</p><p>திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?</p><p>தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பரஸ்பரம் வணக்கம் தெரிவித்த முதலமைச்சர் விஜய்- உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-and-udhayanidhi-exchanged-greetings#comments</comments><guid isPermaLink="false">e3fe0fcd-9155-462f-881b-d4c98fa59f08</guid><pubDate>Wed, 05 Aug 2026 09:05:47 +0000</pubDate><atom:updated>2026-08-05T09:05:47.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/58ekxqij/udhaya.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்- முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/58ekxqij/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வின் போது, முதலமைச்சர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு அவை உறுப்பினர்களிடையே கவனத்தை பெற்றது.</aside><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபை</a> கூட்டத்தொடர் தொடங்கியதும், காலை 9:57 மணி அளவில் முதலமைச்சர் விஜய் சபை மண்டபத்திற்குள் நுழைந்தார். அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவாறு அவர் தனது இருக்கையை நோக்கிச் சென்றார்.</p><p>அதனைத் தொடர்ந்து, காலை 9:58 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவைக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item></channel></rss>