<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 22 Aug 2026 19:13:53 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-22-august-2026#comments</comments><guid isPermaLink="false">e2a2597d-07a4-4e47-9c79-e9f341ff896c</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:03:13 +0000</pubDate><atom:updated>2026-08-22T17:24:52.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/7a7fqmxz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies">தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்</a></p><p>* &nbsp;ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening">சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</a></p><p>* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.</p><p>* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times">ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி... </a></p><p>*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். </p><p>*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history">சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</a></p><p>* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம்</p><p>* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-22-8-2026">GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-canada-trade-talks-fail-canada-to-impose-retaliatory-tariffs">அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!... </a></p><p>*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்</p><p>*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people">ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</a></p><p>*  ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>* மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes">சென்னையின் வரங்களை பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி</a></p><p>* தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p><p>* ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award">தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</a></p><p>* தேசிய நல்லாசிரியர் விருதிற்கு  தேர்வான ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>* தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</a></p><p>* மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. </p><p>* மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother">387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!... </a></p><p>*வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். </p><p>*அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/abijeet-dipke-warns-of-massive-delhi-jantar-mantar-style-protest-in-jaipur">டெல்லி ஜந்தர் மந்தர் பாணியில் ஜெய்ப்பூரில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அபிஜீத் திப்கே எச்சரிக்கை!</a></p><p>* மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப்பள்ளியை ஆய்வு செய்ய சென்ற சி.ஜே.பி தொண்டர்கள் மீது தாக்குதல்.</p><p>* தாக்குதலை பா.ஜ.க குண்டர்கள் நடத்தியதாகவும், பெண் தொண்டர் உட்பட பலர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டு.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/lausanne-diamond-league-rumesh-pathirage-hattrick">லோசான் டைமண்ட் லீக்: 9 செ.மீ இடைவெளியில் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி ருமேஷ் பத்திரகே ஹாட்ரிக் சாதனை! </a></p><p>*இரண்டாவது சுற்றில் நீரஜ் சோப்ரா அபாரமாகச் செயல்பட்டு 88.05 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தற்காலிகமாகப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். </p><p>*மூன்றாவது சுற்றில், இலங்கை வீரர் ருமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் தூரம் எறிந்து மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police">செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை</a></p><p>* டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.</p><p>* 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk"> திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்</a></p><p>* தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped">வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</a></p><p>* இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார்.</p><p>* பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-165-for-8-wickets-in-first-day-against-bangladesh-second-test">2வது டெஸ்ட்: 64 ரன்னில் சுருண்ட வங்கதேசம்: முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 165/8</a></p><p>* ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>* 2வது டெஸ்டின் முதல் நாளில் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sikhs-protest-outside-rahul-gandhis-residence-against-cong-leaders-calling-sajjan-kumar-hero">ராகுல் காந்தி வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்ட சீக்கியர்கள்: காரணம் என்ன?</a></p><p>* சஜ்ஜன் குமாரின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கள் நாயகன் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை.</p><p>* சஜ்ஜன் குமார் தங்கள் நாயகனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்று தெளிவுபடுத்த வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/former-cm-pinarayi-vijayan-says-his-hands-clean-denies-hawala-dealings">என் கைகள் சுத்தமானவை..! ஹவாலா பரிவர்த்தனை குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன்</a></p><p>* வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன.</p><p>* ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-to-meet-srilanka-in-second-test-for-colombo">நாளை கடைசி டெஸ்ட்: இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்தியா?</a></p><p>* முதல் டெஸ்டில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.</p><p>* காயமடைந்த தினேஷ் சண்டிமால் இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/japanese-father-leaves-7-year-old-alone-on-mount-fuji">7 வயது மகன் ஃபூஜி மலை ஏறும்போது சோர்வடைந்ததால் தனியாகத்தவிக்கவிட்டுச் சென்ற ஜப்பானியத் தந்தை!</a></p><p>* புஜி மலையில் 2490 மீட்டர் உயரத்தில் சோர்வடைந்த 7 வயது மகனை தந்தை தனியே விட்டுச் சென்றார்.</p><p>* தவறான முடிவுக்கு வருந்துவதாக தந்தை மன்னிப்பு கேட்டார், பாதுகாப்பு விதிகளை போலீசார் வலியுறுத்தினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russia-double-drone-attack-on-ukraine-mall-kills-16">உக்ரைனின் வணிக வளாகம் மீது தாக்குதல்: ரஷியாவிற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!</a></p><p>* ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் வணிக வளாகம் மீது ரஷ்யா இரட்டை ட்ரோன் தாக்குதல்.</p><p>* இது மனிதாபிமானமற்ற பயங்கரவாதம் என ஜெலன்ஸ்கி கண்டனம், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/indian-pair-get-bronze-in-world-championship-badminton-womens-doubles">உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெண்கலம் வென்றது திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி</a></p><p>* இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்லும் 2-வது இந்திய ஜோடி என்ற சாதனை படைத்தது.</p><p>* 2011-ல் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/salem-spartans-beat-tirupur-tamizhans-in-tnpl-2026">டிஎன்பிஎல்: திருப்பூரை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது சேலம்</a></p><p>* சேலம் அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. </p><p>* திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/mitchell-starc-has-moved-past-dale-steyn-in-the-test-wickets-tally">டெஸ்டில் 441 விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்</a></p><p>* டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் 10-வது இடம் பிடித்தார் ஸ்டார்க்.</p><p>* டேல் ஸ்டெயின் 93 டெஸ்டில் விளையாடி 439 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>கம்யூனிஸ்டுகள் ஆதரவில் தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது - சிபிஎம் சண்முகம் ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam#comments</comments><guid isPermaLink="false">12707b5b-56fc-4b61-ada6-41c414624a73</guid><pubDate>Sat, 22 Aug 2026 14:39:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T14:39:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,Communist protest,P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,Chief Secretary Saikumar IAS,தலைமை செயலாளர் சாய்குமார்,Saidapet Protest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shanmugam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/zrttdfqq/CPI-Shanmugam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"தற்போதைய தமிழ்நாடு அரசு அமைவதற்கும், அது தொடர்ந்து நீடிப்பதற்கும்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி</a> தான் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த அரசியல் அடிப்படை கூட தெரியாமல் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராகச் சுற்றறிக்கை அனுப்பிய தலைமைச் செயலாளர் மற்றும் வட்டாட்சியர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சிபிஎம் மாநிலச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/p-shanmugam">பெ. சண்முகம்</a> ஆவேசமாக முழங்கினார்.</p><p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் எம். சாய்குமார் ஐஏஎஸ் அவர்களின் சித்தாந்த சாய்மானத்தைக் கண்டித்தும், அவரைப் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டையில் இன்று <a href="https://www.maalaimalar.com/topic/cpim">சிபிஎம் </a>சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><h2>இந்த ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறியிருப்பதாவது:</h2><p>நாங்கள் என்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?</p><p>ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், "அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாணவர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது, இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து சுற்றறிக்கையில் முடக்க நினைப்பது ஏன்? நாங்கள் ஒன்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான அமைப்போ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்போ அல்ல. </p><p>கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரத்திற்கு முன்பும், தற்போதும் பல்வேறு தடைகளைச் சந்தித்த வரலாறு கொண்டது. அதிகாரிகளுக்கு உத்தரவு போடத் தெரியும் என்றால், அதை மதிக்க வேண்டுமா அல்லது மிதிக்க வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். </p><p>அதிகாரிகள் முதலில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று எச்சரித்தார்.</p><h2>"மிரட்டுவது காவல்துறை... பொதுநலனுக்காகப் போராடுவது மாணவர்கள்!"</h2><p>ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவது மாணவர் அமைப்புகள் அல்ல, மாறாகக் காவல்துறையினர்தான் என்று சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். "எங்கள் மாணவர்கள் பொதுநலன் கருதி, மாணவர்களின் நலனுக்காக மட்டுமே போராட்டங்களை நடத்துகிறார்கள். </p><p>அதைத் தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த உரிமையும், அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது உண்மையா அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்வது உண்மையா என்பதை அரசு தெளிவுபடுத்தி, பொய் சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.</p><h2>தேர்தல் ஆணையம் நியமித்த சாய்குமாரை உடனே நீக்குங்கள்!</h2><p>தலைமைச் செயலாளர் எம். சாய்குமார் ஐஏஎஸ் இந்த அரசால் நேரடியாக இங்கு நியமிக்கப்பட்டவர் அல்ல, அவர் தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டிய சண்முகம், "உயர் கல்வித்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நேற்று மாலை நோட்டீஸ் அனுப்பிய அரசு, அதேபோல் தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். </p><p>நீங்கள் யாரை வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலாளராகக் கொண்டு வாருங்கள், ஆனால் சாய்குமார் அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது மட்டுமே எங்களின் ஒற்றை இலக்கு" என்றார்.</p><h2>முழுமையாகத் திரும்பப் பெறப்படாத பல்கலைக்கழக சுற்றறிக்கை!</h2><p>தவறு செய்த குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளரின் வாய்மொழி உத்தரவைக் கேட்டு, உயர் கல்வித்துறை செயலாளர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிய சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை இன்னும் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.</p><p>"காவல்துறை கமிஷனர் போட்ட உத்தரவு மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது; மற்றபடி பல்கலைக்கழகங்களுக்குச் சென்ற சுற்றறிக்கைகள் அப்படியேதான் உள்ளன. அரசாங்கம் இதில் முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.</p><h2>யார் கையில் ஆட்சி? முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும்!</h2><p>மிக முக்கியமான அரசியல் கேள்வியாக, "தற்போது தமிழ்நாட்டில் அரசிடம் அதிகாரிகள் கட்டுப்பட்டு இருக்கிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இயங்குகிறதா? இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள்தான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" என்று சண்முகம் வலியுறுத்தினார்.</p><p>மேலும், "இடதுசாரிகளின் ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது. எனவே, இத்தகைய அதிகாரிகளை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சி நடத்தப்போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்து ஆட்சியைத் தொடரப்போகிறீர்களா? இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>மாணவர் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைக்குப் பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, காவல்துறை தரப்பில் உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டாலும், பல்கலைக்கழக உத்தரவுகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனக் கூறி சிபிஎம் தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று <a href="https://x.com/hashtag/CPIM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPIM</a> சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற… <a href="https://t.co/T0VZSUXp99">pic.twitter.com/T0VZSUXp99</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2091088457808646388?ref_src=twsrc%5Etfw">August 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure>]]></content:encoded></item><item><title>மாமா- மச்சான் என சட்டமன்றத்தில் பேசக்கூடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dont-say-uncle-cousin-in-assembly-duraimurugan-advice-to-dmk-mlas#comments</comments><guid isPermaLink="false">59b09fb8-5c0a-4780-9669-3dc748682e2f</guid><pubDate>Sat, 22 Aug 2026 12:28:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T12:28:47.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துரை முருகன்,DMK,திமுக,Durai Murugan</media:keywords><media:content height="1948" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg" width="3464"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துரைமுருகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bf6j8kd0/DuraiMurugan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றத்தில் மாமா- மச்சான் என்று பேசக்கூடாது என்று திமுக பொதுச் செயலாளர் அக்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><h2>தமிழக சட்டசபை கூட்டத்தொடர்</h2><p>தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லும் காட்சிகள், ரீல்ஸ் ஆக வெளியிடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p>மேலும், தவெக- திமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சில சமயங்களில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யக்கூடிய வகையில் சில வார்த்தைகளை உறுப்பினர்கள் பேசி விடுகிறார்கள். இது தொடர்பாக அடிக்கடி சலசலப்பு ஏற்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin">திமுக </a>சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பேசும்போது, மாமா என்று கூறினார். இந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார். சில உறுப்பினர்கள் இவ்வாறு உறவு முறை குறித்து பேசுகிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.</p><p>அப்போது "சட்டப்பேரவையில் மாமா, மச்சான் என்ற உறவு முறை எல்லாம் வைத்து பேசக்கூடாது" என்று திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்ற செயல்பாடுகளை பார்த்தால் தானும், மு.க. ஸ்டாலினும் தற்போது பேரவைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது என தோன்றுகிறது எனக் கூறியுள்ளார்.</p><h2>இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p><p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.</p><p>தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>387-வது மெட்ராஸ் தினம்: ‘சென்னை டு மெட்ராஸ்’ சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/387th-madras-day-chennai-to-madras-photo-exhibition-opening#comments</comments><guid isPermaLink="false">e6f08638-ba4f-4970-80e7-972827378e35</guid><pubDate>Sat, 22 Aug 2026 11:39:27 +0000</pubDate><atom:updated>2026-08-22T11:39:27.475Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மெட்ராஸ் தினம்,அமைச்சர் ராஜ்மோகன்,MadrasDay387,ChennaiToMadras,MadrasHistory,ChennaiTourism,AnnaCentenaryLibrary,சென்னை டு மெட்ராஸ்,அமைச்சர் செ.ராஜேஷ்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 387th Madras Day]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/im9a7wqg/aaaa.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையின் தொன்மையான வரலாறு, செழுமையான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் 387-வது மெட்ராஸ் தினக் கொண்டாட்டங்களை தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. </p><p>இதன் முக்கிய நிகழ்வாக, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், “<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life">சென்னை முதல் மெட்ராஸ்</a>” என்ற தலைப்பிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (22.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டனர்.</p><h2>கருப்பு-வெள்<strong>ளை புகைப்பட</strong>ங்களின் அரிதான தொகுப்பு</h2><p>சர்வதேசப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் டாக்டர் எல்.ராமச்சந்திரன், கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்த அரிதான கருப்பு-வெள்ளை புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பு இக்கண்காட்சியின் முதன்மைச் சிறப்பம்சமாகும். இவை சென்னையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலை, நகரின் தனித்துவமான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகளை கலைநயத்துடன் வெளிப்படுத்துகின்றன. 22.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகப் பார்வையிடலாம்.</p><h2>பாரம்பரிய நடைப்<strong>பயணங்</strong>கள் </h2><p>மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை சார்பில் ‘மெட்ராஸ் போட்டோ பிளாகர்ஸ்’ இணைந்து நடத்திய புகைப்படப் போட்டி, ‘இன்ஸ்டாகிராம் மெட்ராஸ் தினம் - 2026’ கட்டுரைப் போட்டி, ‘கலைகள் நாம்’ குழுவின் சுவர் ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bamfnhwf/jjj.jpg" /></figure><p>மேலும், வரலாற்று அறிஞர் வி.ஸ்ரீராம் தொகுத்து வழங்கிய புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று நடைப்பயணம், ‘நம் வீடு, நம் ஊரு, நம் கதை’ குழுவினர் செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, விக்டோரியா பொது மண்டபத்தில் ஒருங்கிணைத்த பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் ‘சைக்ளிங் யோகிஸ்’ குழுவின் சைக்ளிங் பேரணி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றன.</p><h2>புதுமையான இ<strong>லச்சினை மற்றும்</strong> நூல்கள் வெளியீடு</h2><p>சென்னை விக்டோரியா பொது அரங்கத்தில் அமைச்சர் செ.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாடகி மீனாட்சி இளையராஜா மற்றும் முத்துவின் மண்ணிசைப் பாடல்கள், கரகம், ஒயில் மற்றும் மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. </p><p>சென்னையின் உணவு மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் ‘டேஸ்ட் ஆஃப் சென்னை’ இலச்சினை, காமிக் லைப்ரரி தயாரித்த ‘தி லாஸ்ட் டிராம்’ புத்தகமும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவான காணொளிகளும் வெளியிடப்பட்டன. இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா, இணை இயக்குநர் திரு. மு.சேக் மன்சூர் உட்பட உயர் அலுவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-rain-in-chennai-at-night-2#comments</comments><guid isPermaLink="false">eb10ac32-134d-467c-9630-d5d81c428fa8</guid><pubDate>Sat, 22 Aug 2026 10:06:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T10:06:34.760Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3cjq1x0p/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25-ந்தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27 மற்றும் 28-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p>]]></content:encoded></item><item><title>வீ த லீடர்ஸ் அமைப்பின் இணைய தளம் மாற்றி அமைப்பு - அண்ணாமலை அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annamalai-announces-we-the-leaders-organization-website-revamped#comments</comments><guid isPermaLink="false">fc9f570f-93da-4cfa-ac56-5fc6b3571c1c</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:01:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:01:57.044Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,annamalai,We the Leaders,வீ த லீடர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Annamalai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3yi03or2/annamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">வீ த லீடர்ஸ்</a> அமைப்புக்கு தனி இணைய தள பக்கத்தை அண்ணாமலை உருவாக்கி வெளியிட்டு இருந்தார். இதன் வழியே உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.</p> <p>இதுவரை உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்களுடன் இருந்த இந்த பக்கத்தை இப்போது மாற்றி அமைத்துள்ளார். இப்போது கட்சியின் இந்த மாத பணிகள், ஏற்கனவே நடத்தி முடித்து இருக்கும் பணிகள், அடுத்து திட்டமிட்டுள்ள பணிகள் ஆகியவை முகப்பு பக்கத்திலேயே இடம் பெற்றுள்ளது.</p> <p>பொதுமக்கள் அவற்றை பார்த்து பணிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.</p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a> வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-</p><p>எங்கள் இணைய தளம் புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.</p><p>புதிய அம்சங்களை அலசி, ஆராய்ந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்?- அரசுக்கு அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-why-the-reluctance-to-release-the-thirupugazh-committee-report#comments</comments><guid isPermaLink="false">ab828108-5118-4fbd-b06b-511225c77f9a</guid><pubDate>Sat, 22 Aug 2026 09:00:11 +0000</pubDate><atom:updated>2026-08-22T09:00:11.581Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,chennai flood,திருப்புகழ் குழு அறிக்கை,சென்னை வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/dchextp0/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த  பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.</p><p>தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக  அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.</p><p>அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்,  ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர்  முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை &amp;வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின்  பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.</p><p>2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.</p><p>நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய  அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு  வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.</p><p>என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின்  அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை  யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?</p> <p>திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு  பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.</p><p>சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும்  இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு  திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.</p><p>திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை  முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு  திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் - செயற்குழுவில் தீர்மானம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-passed-at-executive-committee-meeting-an-individual-can-hold-post-of-dmk#comments</comments><guid isPermaLink="false">8149cdc4-21e7-4022-8da4-37002b75c1d1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:49:14 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:49:14.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2x1eupnb/mkstalin2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</strong></em></p><p>தமிழக சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95"> தி.மு.க. </a>தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p><p>குறிப்பாக இளைஞர்களுக்கும் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றும் அனைவருக்கும் பொறுப்புகள் கிடைக்கும் வகையில் கட்சி பதவிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளராக 3 முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p> <p>இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.</p><p>செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-</p><h2>புது ரத்தம்</h2><p>* கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.</p><h2>சென்னை</h2><p>* சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <p>* பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>நகர செயலாளர்கள்</h2><p>* நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.</p><p>* சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.</p> <h2>மாவட்ட செயலாளர்கள்</h2><p>* வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.</p> <p>* கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்க ழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். </p><p>தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.</p><p>மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p> <h2>திருத்தப்பட்டது</h2><p>தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஆளை மாற்றுவதைவிட சுய பரிசோதனை முக்கியம்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/focus-on-self-review-not-personnel-change-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">86b1fb65-8301-454a-a6f6-c67480b443f1</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:47:12 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:47:12.108Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,MKStalin,செயற்குழு கூட்டம்,DMK meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ug1kxz44/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.</p><p>திமுக வலுமையாக இருக்க காரணம் அமைப்பு முறை தான். நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.</p><p>ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுய பரிசோதனை முக்கியம்.</p><p>மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.</p><p>ஊருக்கே வெளிச்சம் விளக்கிற்கு அதன் கீழ் இருக்கும் இருட்டு தெரியாது. </p><p>புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். தனக்கு இணையாக யாரும் இருக்க கூடாது என எண்ணுகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருவொற்றியூரில் மண் சரிந்து ஒப்பந்த தொழிலாளி பலி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/contract-worker-dies-in-soil-collapse-in-thiruvottiyur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/contract-worker-dies-in-soil-collapse-in-thiruvottiyur#comments</comments><guid isPermaLink="false">67319f1c-4029-4cfd-b501-e8c420119f2b</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:29:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:29:33.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொழிலாளி பலி,Worker Dead</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/urz74lpv/tiruvottiyur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/urz74lpv/tiruvottiyur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</strong></em></p><p>சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராமத் தெருவில் வினோத் குமார் என்பவரின் வீட்டில் 4-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீட்டுக்குள் தேங்கியதால் அவதி அடைந்த அவர்கள்  முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்தனர்.</p><h2><strong>மண் சரிந்தது</strong></h2><p>புகாரின் பேரில் சாத்துமா நகர் தெருவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி மூலம் புதியதாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேரைக் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தன.</p><p>இந்த பணியில் ஒப்பந்த ஊழியர்களான மனோகர், சேட்டு, சந்தியா, ராணி, செல்வம், பூமி நாதன் ஆகியோர் நேற்று இரவு 10 மணியளவில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய பொழுது திடீரென  மண் சரிவு ஏற்பட்டது.</p><p>தோண்டப்பட்ட பள்ளத்தில் மளமளவென மண் சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர். 2 பேர் உடனடியாக மேலே ஏறிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 32) என்பவர் மண் சரிவில் சிக்கிக்கொண்டார். </p><h2><strong>தொழிலாளி பலி</strong></h2><p>உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமி நாதனை மீட்கும் முயற்சியில் சக ஊழியர்கள் ஈடுபட்டனர். அவரை மீட்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். </p><p>சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பூமி நாதனை பிணமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p>கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர் - டாஸ்மாக் முறைகேடு பற்றி விசாரணை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-before-vigilance-and-anti-corruption-police#comments</comments><guid isPermaLink="false">3edce0f7-8422-4c0f-b942-50927300d263</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:24:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:24:34.190Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac scam,டாஸ்மாக் முறைகேடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/tc5ct60u/New-Project-2026-07-30T213623.378.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் ஆனார்.</strong></em></p> <h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81">டாஸ்மாக் முறைகேடு</a> தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.</p> <h2>செந்தில்பாலாஜி</h2><p>இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன. சென்னையில் ஆழ்வார் பேட்டையில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடமும் அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.</p> <p>டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குவதில் மதுபானங்களை கொள்முதல் செய்தல், மதுபானங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் முறைகேடு நடந்திருப்பதாக கூறியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.</p><p>இந்த நிலையில் இன்று ஆஜர் ஆன செந்தில்பாலாஜியிடம் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-387th-birthday-cm-vijay-vows-better-quality-of-life#comments</comments><guid isPermaLink="false">ab466092-cb8f-4a20-b713-6251c6bbf725</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:08:34 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:08:34.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,சென்னை தினம்,Chennai Day,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/98aycde3/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்”  நல்வாழ்த்துகள்!</p><p>வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது.</p><p>சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம்.  அனைவருக்கும் சமவாய்ப்பும்,  பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். </p><p>வளரட்டும் சென்னைப் பெருநகரம்!</p><p>உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தை​யூ​ரில் காதல் விவகாரத்தில் இளை​ஞர் ஆண​வக் கொலை: நீலம் பண்பாட்டு மையம் கடும் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/honour-killing-over-love-affair-in-thayur-neelam-cultural-centre-condemns#comments</comments><guid isPermaLink="false">2dca97b4-101e-40f6-8d02-9f7a90832640</guid><pubDate>Sat, 22 Aug 2026 08:06:45 +0000</pubDate><atom:updated>2026-08-22T08:06:45.683Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நீலம் பண்பாட்டு மையம்,ThaiyurHonourKilling,PraveenKumar,NeelamCulturalCentre,CasteViolence,ஆண​வக் கொலை,தை​யூர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thaiyur HonourKilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ihvu1okw/neela.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார், மாற்​றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒரு​வரைக் காத​லித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் வீட்​டா​ரின் கடும் எதிர்ப்​பையும் மீறி தொடர்ந்த காதலால் ஆத்திரமடைந்த கும்பல், பிர​வீன் குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்​டியது. அப்​பகு​தி வாசிகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், சிகிச்சை பல​னின்றி பரி​தாபமாக உயி​ரிழந்தார்.</p><h2>4 பே<strong>ர் கை</strong>து </h2><p>இச்​சம்​பவம் குறித்து வழக்​குப்​ப​திவு செய்த திருப்​போரூர் காவல்​துறை அதிகாரிகள், தை​யூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழு​மலை, மணி​கண்​டன், நந்​தீஸ், கவு​தம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த படுகொலையில் தொடர்​புடைய தலை​மறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்​படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><h2>OMR சாலை<strong>யில் திடீர்</strong> மறியல்</h2><p>பிர​வீனின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு பழைய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly">மகாபலிபுரம் </a>சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.</p><h2>நீலம் பண்பாட்<strong>டு மையம்</strong> கண்டனம்</h2><p>இயக்​குநர் பா.ரஞ்​சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ இக்கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ள அம்மையம், சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்! - செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-executive-meeting-mk-stalin-says-we-are-specialists-at-making-a-comeback#comments</comments><guid isPermaLink="false">f65978a4-0615-40a8-925d-659fe3c0a771</guid><pubDate>Sat, 22 Aug 2026 07:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-22T07:00:31.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,திமுக செயற்குழு கூட்டம்,DMK Executive Meeting,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/bqxetd53/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.</p><h2>செயற்குழு கூட்டம் </h2><p>இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">மு.க.ஸ்டாலின்</a> தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சியை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.</p> <p>தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. </p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக </a>தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:</p><p>* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.</p> <h2>தேர்தல் தோல்வி</h2><p>* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை. </p><p>* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.</p><p>* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது. </p><p>* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!</p> <p>* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.</p><p>* திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.</p><p>* இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.</p><p>* தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.</p> <p>* தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.</p><p>* அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சூட்கேசில் உடல் பாகங்கள்... பிரியாணி அண்டாவில் மைதா மாவு தடவிய சதை! சென்னை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/guduvancherry-woman-murder-case-police-investigation#comments</comments><guid isPermaLink="false">a20ce649-31fd-424e-97d7-e4340688d0cd</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:35:57 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:35:57.982Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Guduvancherry Woman Murder,Northstate Couple,கூடுவாஞ்சேரி பெண் கொலை,வடமாநில தம்பதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை புறநகர் ரெயிலில் ஒடிசா வாலிபர் பெண்ணின் உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை கையில் எடுத்து சென்ற காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/fjgdvg1p/guduvancherry.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையை அடுத்த கூடுவாஞ்ரிசேயில் வெளிமாநில பெண் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதி இந்த கொடூரக் கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.</p><h2><strong>ஆக்ராவில்</strong></h2><p>வண்டலூரில் இருந்து பெண்ணின் உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து எடுத்துச் சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆக்ராவுக்கு அவர்கள் அனுப்பி வைத்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p>பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>சென்ட்ரல் ரெயில் நிலையம்</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 5-ந்தேதி சிகப்பு நிற சூட்கேசை அம்மாநில போலீசார் மீட்டனர்.</p><p>சந்தேகத்தின் பேரில் அதனை திறந்து பார்த்த போது அதில் தலை இல்லாத பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருந்த உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்திய போலீசார் சென்னைக்கு வந்தும் சென்ட்ரல் ரெயில்வே போலீசார் துணையுடன் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.</p><p>இதில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது தெரிய வந்தது. அவரது பெயர் ஹயாத் நிஷா என்பதும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சூட்கேசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்து விட்டு சென்றது யார்? என்பதை முதலில் கண்டறிந்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஒன்றில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த சூட்கேசை ஒரு ஆணும், பெண்ணும் எடுத்து வந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைத்துவிட்டு செல்வது அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது.</p><h2><strong>பூங்கா ரெயில் நிலையம்</strong></h2><p>அந்த கேமரா காட்சிகளை பதிவு செய்து கொண்ட போலீசார் அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்து கொண்டு வழக்கு விசாரணையை வேகப்படுத்தினார்கள்.</p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெளியில் வந்து சம்பந்தப்பட்ட பெண்ணும், ஆணும் எந்தப்பக்கமாக சென்றுள்ளார்கள் என்பதை அறிவதற்காக ரெயில் நிலையம் முன்பு உள்ள சாலையில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை போட்டுப்பார்த்தனர். இதில் இருவரும் பூங்கா ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மின்சார ரெயிலில் கூடுவாஞ்சேரிக்கு சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் இளம்தம்பதி என்பதும் தெரிய வந்தது.</p><h2><strong>ஒரே வீட்டில்</strong></h2><p>கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கிய இந்த தம்பதி அங்கிருந்து கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக கண்டுபிடித்த போலீசார் தாங்கள் வைத்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அக்கம் பக்கத்தில் காட்டி விசாரித்தனர்.</p><p>இதில் போலீசார் அடையாளம் கண்ட தம்பதி ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களுடன் பெண் ஒருவரும் தங்கி இருந்துள்ளார். அவர் தான் கொலை செய்யப்ப்டட ஹயாத் நிஷா என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.</p> <h2><strong>கொடூர கொலை</strong></h2><p>ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹயாத் நிஷா திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவரது 19 வயது மகன் ஏ.சி. மெக்கானிக்காக தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். ஹயாத் நிஷா மட்டும் இளம் தம்பதியோடு ஒரே வீட்டில் வசித்து வந்தபோது தான் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.</p><p>இதை தொடர்ந்து போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பிரியாணி தயாரிக்கும் பெரிய அண்டாவில், ஹயாத் நிஷாவின் துண்டிக்கப்பட்ட உடலின் சதை பாகங்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தது.</p><figure><img alt="கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/5pqg0dgn/guduvan.jpg" /><figcaption>கொலையுண்ட பெண்ணின் உடல் பாகங்கள் வைக்கப்பட்டிருந்த பிரியாணி பாத்திரத்தை போலீசார் மீட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.</figcaption></figure><h2><strong>மைதா மாவு</strong></h2><p>அந்த சதைகள் மீது மைதா மாவையும் தடவி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.  வீடு முழுவதும் ரத்த கறை படிந்து இருந்த நிலையில் அண்டாவில் போட்டு வைக்கப்பட்டிருந்த சதை பாகங்களுடன், காய்கறிகளும் காணப்பட்டது. சதை மற்றும் காய்கறிகள் வேக வைத்தது  போன்று இருந்தது. இதுவும் போலீசாரை மிகுந்த அதிர்ச்சி அடைய செய்தது.  </p><p>இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அண்டாவில் போட்டு தம்பதி சமைத்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. </p><p>சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து உடல் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்ட இடம் கூடுவாஞ்சேரி என்பதால் இந்த வழக்கு விசாரணையை கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.</p><h2><strong>தேடுதல் வேட்டை</strong></h2><p>கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை உறுதி செய்துள்ள போலீசார் கொலையாளிகளான தம்பதியை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>கடந்த 5-ந்தேதி சூட்கேசில் உடல் மீட்கப்பட்ட நிலையில் கொலை நடந்து தற்போது 2 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தப்பிச் சென்று எங்காவது பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.</p><h2><strong>செல்போன் எண்கள்</strong></h2><p> இதை தொடர்ந்து இளம் தம்பதி பயன்படுத்திய  செல்போன் எண்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். கொலையாளிகள் சிக்கினால் மட்டுமே அவர்கள் தலையை எங்கு வீசினார்கள் என்பது தெரிய வரும் என்பதால் அவர்களை தேடி கண்டு பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.</p><h2><strong>அழுகி இருக்கும்</strong></h2><p>இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பெண் கொலை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் கொலையாளிகள் தலையை வெளியில் எங்காவது வீசி இருந்தால் இந்நேரம் அது அழுகிப் போயிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தலையை தேடி கண்டுபிடிக்கும் பணியையும் தீவிரப்படுத்தி உள்ளோம்.</p><h2><strong>மின்சார ரெயில்</strong></h2><p>கூடுவாஞ்சேரியில் இருந்து பெண்ணின் உடலை சூட்கேசில் அடைத்து மின்சார ரெயிலில் தான் எடுத்துச் சென்று உள்ளனர். பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் இறங்கி பின்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு நடந்து சென்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூட்கேசை வைத்து விட்டு சத்தமில்லாமல் ரெயில் நிலையத்தை விட்டு இருவரும் வெளியேறி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் சேகர்பாபு தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p>கூடுவாஞ்சேரி மசூதி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>387-ல் அடியெடுத்து வைக்கும் நம்ம  சென்னை: வளர்ப்பு அன்னையைக் காக்க நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-steps-into-387th-year-our-pledge-to-protect-the-foster-mother#comments</comments><guid isPermaLink="false">313e9ee0-e4d1-49ac-bed8-53510b5b32bf</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:19:52 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:19:52.237Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai387,MadrasDay,NammaChennai,ProtectChennai,ChennaiHeritage,சென்னை387,மெட்ராஸ்டே,நம்மசென்னை,சென்னையைக்காப்போம்,சென்னைதினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai day 387]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/96fa5c85/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் தலைநகரமும், தென்னிந்தியாவின் முதன்மைப் பெருநகரமுமான சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையிலேயே ஆண்டுதோறும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. </p><p>கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர் மற்றும் பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களிடம் இருந்து நிலத்தை வாங்கி நகரை உருவாக்க அடித்தளமிட்டார். இச்சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கரின் நினைவாகவே இம்மாநகரம் '<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai">சென்னை</a>' என்று பெயரிடப்பட்டது.</p><h2>தோற்றமும் <strong>வளர்ச்சியும்</strong></h2><p>முன்னணிப் பத்திரிகையாளர்களான சசி நாயர், வின்சண்ட் டி சொஸா மற்றும் முத்தையா ஆகிய மூவரின் சிந்தனையில் உதித்து, 2004 ஆம் ஆண்டு முதல் இந்நாள் சிறப்பாக நினைவுகூரப்பட்டு வருகிறது. </p><figure><img alt="chennai central" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/etg8ir7u/centrel.jpg" /></figure><p>தொடக்கத்தில் சில கருப்பு-வெள்ளைப் புகைப்படக் கண்காட்சிகளுடன் எளிய முறையில் தொடங்கப்பட்ட இக்கொண்டாட்டம், இன்று புகைப்படக் கண்காட்சிகள், பிரம்மாண்ட உணவுத் திருவிழாக்கள், பாரம்பரிய நடைப்பயணங்கள் மற்றும் மாரத்தான் ஓட்டங்கள் எனப் பல பரிமாணங்களில் நகரின் மூலைமுடுக்கெல்லாம் விமரிசையாகக் கொண்டாடப்படும் மக்கள் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.</p><h2>நம்ம சென்னை<strong>யின் பெருமை</strong>மிக்க வரலாறு</h2><p>வாழ்வு தேடி வந்த கோடிக்கணக்கான மக்களைத் தன் மடியில் ஏந்தி, வாழ்வாதாரம் அளித்து பேணிக்காக்கும் தாயாகத் திகழ்கிறது சென்னை மாநகரம். இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றான சென்னை, இன்று தனது 387-வது பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடுகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/rarjf9wr/uu.jpg" /></figure><p>மதராசப்பட்டணம், மெட்ராஸ் எனக் காலப்போக்கில் உருமாறி இன்று அதிநவீன தொழிற்கேந்திரமாக வளர்ந்து நிற்கும் இம்மாநகரம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பழமையான வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்களையும், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கே கொண்டு கம்பீரமாக விளங்குகிறது.</p><h2>நகரக் <strong>கட்டமைப்</strong>பு</h2><p>வானுயர்ந்த கட்டிடங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், முன்னணி கல்வி நிறுவனங்கள் எனச் சென்னை அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மாண்டமானது. இருப்பினும், நகரக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாகப் பல கடுமையான நெருக்கடிகளை இம்மாநகரம் எதிர்கொண்டு வருகிறது. ஒரு மாநகரத்தின் செழுமையைக் குறிக்கும் முக்கிய அடையாளங்களான நீர்வழித்தடங்களும் நிலவழித்தடங்களும் இன்று பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. </p><p>1935-ஆம் ஆண்டு வரை கண்ணாடி போலத் தெளிந்த நீரைக் கொண்டிருந்த கூவம், அடையாறு ஆறுகளும் பக்கிங்காம் கால்வாயும் இன்று கழிவுநீர் செல்லும் வழிகளாக மாறிப்போயின. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/gdheai9h/yoga.jpg" /></figure><p>மற்றொரு புறம், நகரின் பல பகுதிகளில் முறையற்ற ஆக்கிரமிப்புகளால் சாலைகள் சுருங்கி, வாகனப் பெருக்கத்தின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அன்றாடப் பிரச்சனையாக மாறியுள்ளது. மழைக்காலத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும், கோடையில் குடிநீருக்கு லாரிகளை நம்பி நிற்கும் அவலமும் தொடர்கிறது.</p><h2>எதிர்கா<strong>லத் தேவைகள்</strong></h2><p>சென்னை மாநகரத்தை வாழத் தகுதியுள்ள உயிர்ப்பான நகரமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல உடனடியாகப் பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவையாகின்றன. ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் மீட்டெடுத்து, கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதே முதன்மைப் பணியாகும். நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடி நிவாரணம் காண முடியும். </p><p>அத்துடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிப்பது அவசியமாகிறது. </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/q38u61dp/merina.jpg" /></figure><p>அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தாலும், மக்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் இன்றி முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.</p><h2>பிறந்த நா<strong>ளில் நாம் அனைவ</strong>ரும் ஏற்க வேண்டிய உறுதிமொழி</h2><p>பெற்றெடுத்த தாயைப் போற்றிப் பாதுகாப்பதைப் போல, நமக்கு வாழ்வளித்த வளர்ப்பு அன்னையான சென்னை மாநகரையும் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் முதன்மையான கடமையாகும். இந்த 387-வது பிறந்தநாளில் கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், கீழ்க்கண்ட உறுதிமொழிகளை நாம் அனைவரும் மனதார ஏற்போம்:</p><p>* நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளையோ நெகிழிப் பொருட்களையோ எறியாமல் நகரைத் தூய்மையாக வைப்போம்.</p><p>* இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், வெள்ள அபாயங்களைத் தடுக்கவும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க மாட்டோம்.</p><p>* சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றி, ஆக்கிரமிப்புகளைத் தவிர்த்துப் போக்குவரத்து சீராக இயங்க ஒத்துழைப்போம்.</p><p>* அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாத்துச் சிங்காரச் சென்னையின் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.</p>]]></content:encoded></item><item><title>இந்தியா கூட்டணியில் தவெக இணையும்..!- அமைச்சர் ஷாஜகான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-to-join-india-alliance-says-minister-shajahan#comments</comments><guid isPermaLink="false">5e60b5a2-9063-4860-88c1-787ebb79770c</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:16:41 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:16:41.916Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,இந்தியா கூட்டணி,India alliance,tvk,அமைச்சர் ஷாஜகான்,minister shajahan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MInister Shajahan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/ive1eu8i/shajahan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும் என அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து நெல்லையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும்.</p><p>திமுகவை இத்தனை ஆண்டுகாலம் பல்லக்கில் தூக்கி சுமந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.</p><p>திமுகவுடன் நீண்ட கால அரசியல் பயணம் செய்தோம், தற்போது ஏற்பட்ட அரசியல் சூழல் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் உள்ளோம்.</p><p>தவெக அரசில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் பங்கேற்றுள்ளதை திமுகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் முடிவு என்பது மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது.</p><p>தவெக இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.</p><p>திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-constructive-debates-should-take-place-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">a0c797bc-87a6-4c3b-b192-c919d5b1bf3a</guid><pubDate>Sat, 22 Aug 2026 06:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T06:12:03.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,தமிழக சட்டசபை,Viduthalai chiruthaigal katchi,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/x54yr3wk/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது என்றார்.</strong></em></p><p>திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்‌ <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">தொல். திருமாவளவன்</a> அளித்த பேட்டியில் கூறியதாவது:- </p><p>தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த லட்சக்கணக்கான வி.சி.க.வினருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>தேர்தலுக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கரைந்துவிட்டது என சிலர் வதந்திகளை பரப்பினர். வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ஜென்சி தலைமுறையினர் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டனர். </p><p>மாநாட்டில் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது, உயிர் சேதம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் எனது உரையை 2 நிமிடத்தில் முடித்துக்கொண்டேன். வி.சி.க.வினர் ஒழுங்கீனமானவர்கள் என சமூக ஊடகங்களில் சித்தரிக்க தொடங்கினர்.தமிழக அரசியல் களத்தில் ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தியை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>முதலமைச்சரை நேரில் சந்தித்தபோது இந்த மாநாடு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது என பாராட்டினார். வருகிற 29-ந் தேதி மாநாட்டு மலர் சென்னையில் வெளியிடப்படும். </p><h2><strong>மாநில சுயாட்சி</strong></h2><p>மாநில சுயாட்சி என்ற கோரிக்கை முழக்கத்தை உரக்க பேசவே இந்த மாநாடு நடைபெற்றது. மாநில சுயாட்சி என்பது தி.மு.க.வால் முன் நிறுத்தப்பட்ட ஒரு மகத்தான கோட்பாடு. இதை வி.சி.க. உரக்க பேசி வருகிறது. மாநில சுயாட்சி கோரிக்கை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. </p><p>சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பது வி.சி.க.வின் நிலைப்பாடு. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை வி.சி.க. வரவேற்கிறது.</p><h2><strong>அ.தி.மு.க.</strong></h2><p>தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க.விடம் தனித்து நில்லுங்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்து நின்றாலே உங்கள் செல்வாக்கு நிலைத்து நிற்கும் என கூறினேன். அந்த நேரத்தில் எங்களுக்கு புத்திமதி சொல்ல நீங்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். த.வெ.க.வின் 100 நாள் ஆட்சியை வி.சி.க. பாராட்டுகிறது. இந்த 100 நாள் என்பது த.வெ.க.விற்கு கற்று கொள்ளும் காலம். 100 நாள் த.வெ.க. ஆட்சியில் எந்த துறையிலும் லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்ற பெயரை சம்பாதித்து சாதித்துள்ளார்கள். பலர் மனம் திறந்து இந்த நிலைப்பாட்டை பாராட்டுகிறார்கள். இதே நிலை நீடிக்க வேண்டும், ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு த.வெ.க. சாதனை படைக்க வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். </p><p><a href="https://www.maalaimalar.com/topic/சௌகார்-ஜானகி">சௌகார் ஜானகி</a> மறைவு எனக்கு துயரம் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-congratulates-teachers-selected-for-national-teachers-award#comments</comments><guid isPermaLink="false">811cdc0e-3c77-45b2-bff8-004fde612411</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:57:39 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:57:39.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,teachers day,ஆசிரியர் தினம்,தேசிய நல்லாசிரியர் விருது,National Teachers Awards</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lf64y07h/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">ஆசிரியர் தினத்தை</a> முன்னிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p>மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.</p> <p>இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!  </p><p>நல்வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>நள்ளிரவில் மெட்ரோ ரெயிலில் மெட்ராஸ் தின கொண்டாட்டம்: கேக் வெட்டி இசை நிகழ்ச்சியுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-day-celebration-in-chennai#comments</comments><guid isPermaLink="false">5a74636a-a1f7-4db6-b8f7-6c9ca383764c</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:55:33 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:55:33.341Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras Day,மெட்ராஸ் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ சின்ன வேடத்துடன் வந்தவர் கேக் வெட்டிய காட்சி.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/qnvgozkq/madrasday01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/மெட்ராஸ்-தினம்">சென்னைக்கு</a> வயது 387.</p><p>அன்றைய சென்னை முதல் இன்றைய சென்னை வரை இந்த நகரத்தின் தோற்றத்தையும், மாற்றத்தையும் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவெடுத்து வரும் மாற்றங்கள் ஆஹா... நம்ம சென்னை என்று கர்வப்பட வைக்கிறது.</p><p>வரலாற்று சிறப்புமிக்க சென்னையின் வயது ஆங்கிலேயர்கள் 1639-ம் ஜார்ஜ் கோட்டை கட்ட இடம் வாங்கிய காலத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. சென்ன பட்டணம், மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட நமது நகரம் 1996-ல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.</p><p>சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் போல் கொண்டாடி மகிழ்கிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.</p><h2><strong>கொண்டாட்டம்</strong></h2><p>இந்த ஆண்டு புதுமையாக மெட்ரோ ரெயிலையே இசை கச்சேரி அரங்கமாக மாற்றி  கொண்டாட திட்டமிட்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த தனியார் நிறுவனம் சமூக வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்ட 30 நிமிடங்களிலேயே முன்பதிவும் முடிந்தது.</p><p>இரவு 11 மணிக்கு வழக்கமான மெட்ரோ ரெயில் சேவை முடிந்ததும் கொண்டாட்டத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் திரண்டார்கள்.</p><figure><img alt="கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/2ubejr0a/Madrasday.jpg" /><figcaption>கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் கேக் வெட்டிய போது எடுத்தபடம்.</figcaption></figure><p>நள்ளிரவு 12 மணிக்கு ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் அடையாள சின்னத்துடன் வந்தவர் பிறந்தநாள் கேக்கை வெட்டினார். அப்போது ‘ஹேப்பி பர்த்டே டூ சென்னை’ என்று உற்சாகமாக பாடினார்கள்.</p><p>அதன் பிறகு அனைவரும் மெட்ரோ ரெயிலில் ஏறினார்கள். அந்த ரெயில் நகரும் அரங்கமாக மாற்றப்பட்டு இருந்தது. கானா இசைக் குழுவினர் ரெயிலுக்குள் கச்சேரியை தொடங்கியதும் ரெயில் புறப்பட்டது.</p><p>விமான நிலையம் வரை சென்று விட்டு மீண்டும் கோயம்பேட்டுக்கு திரும்பியது. சுமார் 2 மணி நேரம் ரெயிலில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது ஆட்டம் பாட்டத்துடன் சென்னையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த பயணத்தில் பொதுமக்கள் ஈடுபாடு அதிகமாக இருந்தது.</p><p>வித்தியாசமாக நடந்த இந்த நிகழ்ச்சி இந்தியாவிலேயே முன்மாதிரி நிகழ்ச்சியாக அமைந்ததாக கூறினார்கள். இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்று கூறினார்கள்.</p><p>வழக்கமாக அமைதியான பயணத்திற்கு பெயர் பெற்ற மெட்ரோ ரெயில் இன்று சென்னைவாசிகளின் உற்சாகக் குரல்களாலும் கானா பாடல்களாலும் விழா கோலம் பூண்டது. இந்தியாவில் முதல் முறையாக ஓடும் ரெயிலிலேயே இப்படி ஒரு கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பது பயணிகள் மத்தியிலும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. </p><p>பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் சென்னை மெட்ரோவின் இந்த முயற்சி இந்த ஆண்டின் மெட்ராஸ் டே கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய சிறப்பம்சமாக மாறியுள்ளது.</p><p>‘மெட்ராஸ் டே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பேட்டி வருமாறு:-</p><h2><strong>வேதாந்தன் - வேளச்சேரி</strong></h2><p>மெட்ரோ ரெயிலில் நடந்த சென்னை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது நேரம் போனதே தெரியவில்லை. கானா பாடல்கள் உட்பட பழைய காலத்துப் பாடல்கள் முதல் தற்போதைய டிரெண்டிங் பாடல்கள் வரை அனைத்தும் அருமையாகப் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சி மனதிற்குப் பெரு மகிழ்ச்சியளித்தது. அடுத்தமுறை விமானத்தில் இதுபோன்று சென்னை தினத்தைக் கொண்டாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.</p><h2><strong>அரவிந்தன் - கோயம்பேடு</strong></h2><p>சூப்பர் சென்னை இணையதளத்தின் மூலம் மெட்ரோ ரெயிலில் கொண்டாட்டம் நடக்கவிருப்பதை அறிந்து நண்பர்களுடன் வந்தேன். மெட்ரோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் முதன் முறையாகப் பார்க்கிறேன். என்றும் மறக்க முடியாத இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அடுத்த முறை இதைவிடப் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்  மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளைக் கொண்டாடியது சென்னை வாசிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது’ என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தை சிறப்பாக நடத்துகிறார் ஜே.சி.டி பிரபாகர்..! மு.க.ஸ்டாலின் பாராட்டியதை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jcd-prabhakar-hailed-by-stalin-says-vairamuthu#comments</comments><guid isPermaLink="false">24a0af8e-e7fe-4321-85b3-21b9acb33a4e</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:35:06 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:35:06.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Vairamuthu,கவிஞர் வைரமுத்து,முக ஸ்டாலின்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ JCD Prabhakar- Vairamuthu-MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/kfdxzph2/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>முன்னாள் முதலமைச்சர்</p><p>மு.க.ஸ்டாலின் அவர்களை</p><p>நட்பின் நிமித்தமாய்</p><p>நலம்கேட்கச் சென்றேன்;</p><p>பொன்னாடை அணிவித்தேன்</p><p>ஞானபீடத்தின் பெருமையறிந்து</p><p>வீட்டுக்கே வந்து வாழ்த்திய</p><p>அந்நாள் முதலமைச்சர்,</p><p>பெற்றுவந்த விருதுக்காக</p><p>மீண்டுமொரு</p><p>பொன்னாடை அணிவித்தார்</p><p>பொன்னாடைக்குப்</p><p>பொன்னாடை</p><p>“எதைக் கொடுக்கிறாயோ</p><p>அதையே பெறுவாய்”</p><p>என்ற முதுமொழி</p><p>என் மூளைக்குள் ஓடியது</p><p>ஒருவரை ஒருவர் </p><p>கொண்டாடிக் கொண்டோம்</p><p>சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை</p><p>முக்கால் மணிநேரம் </p><p>இருவரும் கண்டுகொண்டிருந்தோம்</p><p>"ஜே.சி.டி பிரபாகர்</p><p>சிறப்பாக நடத்துகிறார்</p><p>சட்டமன்றத்தை" என்றார்</p><p>தி.மு.க தலைவர்</p><p>"சட்டமன்றத்தின்</p><p>ஆட்ட நாயகன்" என்று</p><p>சமூக ஊடகங்கள் </p><p>சபாநாயகரைப் பேசுகின்றன</p><p>என்றேன்</p><p>"அப்படியா" என்றார்</p><p>ஓர் அழகான காஃபி </p><p>குடித்து முடித்து</p><p>வாழ்த்தி விடைகொண்டேன்</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஏழை எளிய மக்களின் சேமிப்பு கணக்கிற்கு கட்டணம் விதிக்கும் மோடி அரசு- மாணிக்கம் தாகூர் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-modi-government-imposes-charges-on-the-savings-accounts-of-the-poor-and-the-common-people#comments</comments><guid isPermaLink="false">82df1885-1389-427c-97a4-c2d919721c7b</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:25:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:25:53.450Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yjytc7t4/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மோடி அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">மாணிக்கம் தாகூர்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>வங்கித் துறையில் ஏழை எளிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் உருவாக்கப்பட்டது தான் அடிப்படை வங்கி கணக்கு. நோ பிரில்ஸ் அக்கவுண்ட் அதாவது அலங்காரம் இல்லாத வங்கி கணக்கு என்ற பெயரில் ஏழை மக்களுக்காகவே இந்த கணக்கு துவங்கப்பட்டது. பின்னாளில் இந்த கணக்கிற்கு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா என்று பாஜக அரசாங்கம் பெயரிட்டது. 56 கோடி அத்தகைய கணக்குகளில் 53 கோடி கணக்குகள் அரசு வங்கிகளால் திறக்கப்பட்டன. அத்தகைய கணக்குகளுக்கு அபராதம் விதிக்க வங்கிகள் முடிவெடுத்துள்ளன.</p><h2><strong>ஏழை மக்களை வதைக்கிறது</strong></h2><p>மாதம் நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து நேரடியாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணம் எடுக்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் 15 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; இதற்கு ஜிஎஸ்டி 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஆக ஒவ்வொரு முறையும் 17 ரூபாய் 70 பைசா அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதாக தெரிகிறது.</p><p>எனவே ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கும் என்று தெரிகிறது. ஒருபுறம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இந்த அரசு கடந்த பாராளுமன்ற தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பண பரிவர்த்தனைக்கு மீண்டும் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அவ்வாறு வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் மக்களுக்கும் அபராதம் என்று விதித்து எல்லா வகையிலும் ஏழை மக்களை வதைக்கிறது இந்த அரசு.</p><p>2016 ஆம் ஆண்டு பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பெரும்பாலான மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனை நோக்கி இந்த அரசு தள்ளியது. இருப்பினும் 2017 ஜனவரி மாதம் இருந்த பணப்புழக்கமான 9 லட்சம் கோடியில் இருந்து இன்று 43 லட்சம் கோடி அளவிற்கு</p><p>பணப்புழக்கம் உயர்ந்துள்ளது. அதாவது இன்றளவிலும் கணிசமான பகுதி மக்கள் இன்டர்நெட் வசதி இல்லாமல் மின்சார வசதி இல்லாமல் பனப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உண்மை நிலையை தான் இது பிரதிபலிக்கிறது. இந்த மக்களை கட்டணம் என்ற பெயரில் தண்டிக்க மோடி அரசு முயற்சிக்கிறது.</p><p>ஏழை எளிய மக்களிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இந்த வங்கிகள் தான் கடந்த 10 ஆண்டுகளில் பெரு முதலாளிகளுக்கு 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளது.</p><p>எனவே, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickamtagore-says-anbumani-ramadoss-goes-to-silent-mode-mention-bjp">மோடி</a> அரசின் ஏழை மக்கள் மீதான இந்த கட்டண கொள்ளை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் வரங்களை  பாதுகாக்க சென்னை நாளில் உறுதியேற்போம்! - அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-day-anbumani-ramadoss-wishes#comments</comments><guid isPermaLink="false">747f592f-c3af-432f-9765-b36b6175fa64</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:19:47 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:19:47.454Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,சென்னை தினம்,Chennai Day</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/08/22/17522338-pmk.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக பாமக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் தலைநகராக வளர்ந்து நிற்கும் சென்னை மாநகரம் அதன் 387-ஆம் உருவாக்க நாளைக் கொண்டாடும் நிலையில், சென்னை மாநகர மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>சென்னை மாநகரமாக பிறக்கவில்லை. பாட்டாளிகள் மற்றும் பூர்வகுடி மக்களின் கிராமங்கள் இணைக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு தான் இன்றைய சென்னையை உருவாக்கியிருக்கிறது. சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி அதில் சென்னை மாநகரத்தை அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை தான்.</p> <p>ஆனால், சென்னையின் வரமாக கிடைத்தவற்றையெல்லாம் பாதுகாக்காமல் சாபமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இயற்கையின் கொடையான பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை பத்தில் ஒன்றாக குறைத்து விட்டார்கள். ஆங்கிலேயர்கள் படகு சவாரி சென்ற அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவற்றை சாக்கடைகளாக மாற்றி விட்டோம். ஏரிகளையும் அழித்து கான்கிரீட் காடுகளை உருவாக்கி வருகிறோம். இதை விட மோசமாக இயற்கையை சூறையாட முடியாது.</p> <p>இந்த நிலையை மாற்றி சென்னையின் வரங்களான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆறுகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது தான் சென்னை மாநகர மக்களின் இன்றைய தலையாயக் கடமையாகும். இந்தப் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக கடுமையாக உழைக்க <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration">சென்னை நாளில்</a> நாம் அனைவரும் உறுதியேற்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்..!- சென்னை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mk-stalin-chennai-387th-birthday-celebration#comments</comments><guid isPermaLink="false">28292802-a1e1-497b-9e7f-d08486f3bcb2</guid><pubDate>Sat, 22 Aug 2026 05:05:10 +0000</pubDate><atom:updated>2026-08-22T05:05:10.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,சென்னை தினம்,Chennai Day,mk staiin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/conmy0lh/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/conmy0lh/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மாநகரம் தனது 387வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதைமுன்னிட்டு பல்வேறு முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>அதன்படி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.</p><p>அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-</p><p>இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!</p><p>101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள் இருக்கும்; தி.மு.க.வின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!</p><p>மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை - நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.</p><p>சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!</p><p>தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-cherish-and-preserve-chennai-history#comments</comments><guid isPermaLink="false">ac118da6-1afd-49cb-a349-6699f5e408b7</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:32:19 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:32:19.150Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,சென்னை தினம்,Chennai Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yh1zeqm0/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/yh1zeqm0/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் என்று திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.</strong></em> </p><h2>மெட்ராஸ் மாகாணம்</h2><p>சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22-ம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். </p><p>வணிகம் செய்வதற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் சென்னையை விலைக்கு வாங்கியது. அப்போது, 'மதராசபட்டிணம்' என்று அழைக்கப்பட்ட சென்னை விடுதலை பெற்ற பின்னர் 'மெட்ராஸ் மாகாணம்' என அழைக்கப்பட்டது.</p> <h2>சென்னப்ப நாயக்கர் </h2><p>கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.</p> <h2>சென்னை தினம்</h2><p>பத்திரிகையாளர்கள் சசி நாயர், வின்சென்ட் டி சோஸா மற்றும் வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா ஆகியோரின் முயற்சியால் 2004-ம் ஆண்டு முதன்முதலில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சென்னை தினம்</a> கொண்டாடப்பட்டது.</p><p>இதனை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் 1996-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி 'சென்னை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.</p> <h2>சென்னை மாநகரம்</h2><p>சென்னை மாநகரம் இன்று தனது 387-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 387 ஆண்டுகள் ஆகிறது.</p><h2>கனிமொழி</h2><p>சென்னை தின கொண்டாட்டத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate">திமுக</a> எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி </a>வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த  மெட்ராஸ் மாநகரம், இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.</p><p>வந்தவர் அனைவருக்கும் இடமளிக்கும் சகோதரத்துவமும், பேதங்கள் கடந்த பன்மைத்துவமும் நிறைந்த சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம்.</p><p>சென்னை நாள் வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-flight-fares-from-chennai-to-kerala-surge-multiple-times#comments</comments><guid isPermaLink="false">08d8bae2-eabc-421e-b798-0daaa96159c8</guid><pubDate>Sat, 22 Aug 2026 04:19:17 +0000</pubDate><atom:updated>2026-08-22T04:19:17.381Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,kerala,ஓணம் பண்டிகை,onam festival,chennai airport,கேரளா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/94lexwei/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai Airport  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/94lexwei/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கேரளாவின் பாரம்பரிய மற்றும் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வாழும் மலையாளி மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இதன் காரணமாகத் தென் மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் ரெயில், பேருந்து மற்றும் விமான போக்குவரத்துச் சேவைகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.</p><h2>விமான கட்ட<strong>ணங்கள் கி</strong>டுகிடு உயர்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/technology/mobilephone/vivo-t5-5g-india-launch-confirmed">ரெயில்</a> மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. </p><p>சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களான கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் விமானங்களின் கட்டணப் பட்டியல் விவரம்:</p><h2>செ<strong>ன்னை - கொச்சி வழித்த</strong>டம்</h2><p>வழக்கமாக சென்னை - கொச்சி இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் சராசரியாக ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், ஓணம் பண்டிகை நெருங்கியதை ஒட்டி தற்சமயம் ஒரே நாளில் ரூ.14,843 வரை உயர்ந்துள்ளது.</p><h2>சென்னை - <strong>திருவனந்தபுரம் வழி</strong>த்தடம்</h2><p>அதேபோல், சென்னை - திருவனந்தபுரம் இடையேயான சாதாரண விமானக் கட்டணம் ரூ.5,853 ஆக உள்ள நிலையில், தற்போதைய பயணிகள் நெருக்கடியால் இதன் கட்டணம் ரூ.14,700 ஆக உச்சத்தை தொட்டுள்ளது.</p><h2>ப<strong>யணிகள் வேதனை மற்றும் அரசு நடவடிக்கைக்கான எதிர்பார்</strong>ப்பு</h2><p>திடீரென விமானக் கட்டணம் 2 முதல் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்ட பயணிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். கட்டண உயர்வு அதிகமாக இருந்தாலும், குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வேறு வழியின்றி கூடுதல் தொகையைக் கொடுத்துப் பயணிப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர். </p><p>பண்டிகைக் காலங்களில் இதுபோன்ற செயற்கையான கட்டண உயர்வுகளைக் கட்டுப்படுத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், மாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-pays-tribute-to-sowcar-janaki-funeral-this-evening#comments</comments><guid isPermaLink="false">95b1717b-d1f4-48db-9529-1ba17e49127f</guid><pubDate>Sat, 22 Aug 2026 03:12:22 +0000</pubDate><atom:updated>2026-08-22T03:12:22.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sowcar janaki,சௌகார் ஜானகி,Veteran actress,பழம்பெரும் நடிகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/rhpe7cfj/sowgarjanaki.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sowcar Janaki]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/rhpe7cfj/sowgarjanaki.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>தமிழ் திரையுலகில் ஒரு தலைமுறையின் அடையாளமாகவும், தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் திகழ்ந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, தமிழ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.</strong></em></p> <h2>சங்கரமஞ்சி ஜானகி</h2><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது கலைப்பயணத்தில், கதாநாயகி, குணச்சித்திர நடிகை, நாடகக் கலைஞர் என பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் அவர்.</p><p>சௌகார் ஜானகியின் இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. 1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகி, இளம் வயதிலேயே கலை மீது ஆர்வம் கொண்டிருந்தார். வானொலி கலைஞராகவும், நாடகக் கலைஞராகவும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/xbktqbm0/sowgarjanaki1.jpg" /></figure><h2>சௌகார் ஜானகி</h2><p>சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு. இளமையிலேயே அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். வானொலியில் அவரது ஏற்ற-இறக்கமான பேச்சை கண்டு மகிழ்ந்த ஒரு தயாரிப்பாளர், ஒரு புதிய படத்தில் நடிக்க அணுகினார். ஆனால் அவரது குடும்பத்தார் சம்மதிக்காததால், அந்த படம் கைவிட்டு போனது. இதற்கிடையில் திருமணமும் நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் ஜானகி என்ற பெயரில் மற்றொரு நடிகை இருந்ததாலும், 'சௌகார்' படத்தில் அறிமுகமானதாலும் சங்கரமஞ்சி ஜானகி, 'சௌகார்' ஜானகியாக ஆனார்.</p> <h2>சினிமா வாய்ப்பு</h2><p>பின்னர் குடும்ப சூழலால் கைக்குழந்தையுடன் சினிமா வாய்ப்புகளை தேடினார், ஜானகி. அதன்பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்பும் கைகூடியது. 1950-ம் ஆண்டில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் என்.டி.ராமாராவ் நடித்த 'சௌகார்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். </p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/8n7dl72s/sowgarjanaki2.jpg" /></figure><h2>வளையாபதி திரைப்படம்</h2><p>அதன்பிறகு 1952-ம் ஆண்டு வெளியான 'வளையாபதி' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் கால் பதித்தார் சௌகார் ஜானகி. அந்த காலகட்டத்தில் தமிழ் மொழியில் சரளமாக பேச முடியாத நிலையிலும், வசனங்களை மனப்பாடம் செய்து, அதை ஏற்ற-இறக்கத்துடன் பேசி நடித்து பாராட்டு பெற்றார்.</p><p>1950 மற்றும் 1960-களில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக சௌகார் ஜானகி உயர்ந்தார். தமிழ் சினிமாவிலும் அவர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.</p> <h2>நீண்ட திரைப்பயணம்</h2><p>தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்த அவர், வெறும் கதாநாயகியாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையால் தனி முத்திரை பதித்தார். </p><p>தமிழில் 'குமுதம்', 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'உயர்ந்த மனிதன்', 'பாபு'. 'புதிய பறவை', 'என் கடமை', 'ஒளிவிளக்கு', 'மாலையிட்ட மங்கை', 'காவியத்தலைவி', 'இருகோடுகள்', 'நீர்க்குமிழி', 'எதிர்நீச்சல்', 'பாமாவிஜயம்', 'பார்த்தால் பசி தீரும், 'பாலும் பழமும்', 'இரு கோடுகள்', 'தில்லு முல்லு'. 'வெற்றி விழா' உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது நீண்ட திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கவை.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/127m2qao/puthiyaparavai.jpg" /></figure><h2>புதிய பறவை</h2><p>சௌகார் ஜானகி என்றதும் 'புதிய பறவை' படத்தில் வரும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ...' என்ற பாடல் வரிகளே முதலில் நினைவுக்கு வரும். அந்த பாடலில் அவரது உதடுகள் தாண்டி கண்களும் காதலை கொட்டியது. சினிமாவில் வயது மற்றும் கால மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டது சௌகார் ஜானகியின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று.</p><p>கதாநாயகியாக புகழின் உச்சியில் இருந்தவர், பின்னர் குடும்பத் தலைவி, தாய், பாட்டி என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். நகைச்சுவை வேடங்களையும் சிறப்பாக செய்தார்.</p> <h2>கே.பாலசந்தர் நாடகம்</h2><p>சௌகார் ஜானகியின் கலைப்பயணம் திரைப்படங்களுடன் முடிந்துவிடவில்லை. வானொலி, மேடை நாடகம், திரைப்படம் என கலைத்துறையின் பல்வேறு தளங்களில் அவர் பயணித்துள்ளார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்துள்ளார். பல ஆண்டுகள் மேடை நாடகங்களிலும் தீவிரமாக பங்கேற்றார். இதன் மூலம் அவர் ஒரு திரைப்பட நடிகை மட்டுமல்ல, முழுமையான மேடை கலைஞர் என்பதையும் நிரூபித்தார்.</p> <h2>பிஸ்கோத் திரைப்படம்</h2><p>'தில்லுமுல்லு', 'வெற்றி விழா'. 'ஹே ராம்' போன்ற திரைப்படங்களில் அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'ஹே ராம்' திரைப்படத்திலும் அவர் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அவரது நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டத்திலும் நடிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை.</p><p>2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவே அவரது தமிழ் சினிமாவின் கடைசி படமும் ஆகும்.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/amp4jveg/padmashri.jpg" /></figure><h2>பத்மஸ்ரீ விருது</h2><p>சௌகார் ஜானகியின் திறமைக்கு பல்வேறு விருதுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சிறந்த நடிகைக்கான மாநில அரசின் (தமிழ்நாடு, ஆந்திரா) விருதுகளை பெற்றுள்ளார். விருதுகளின் சிகரமான பத்மஸ்ரீ விருது 2022-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்தது.</p><p>70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சௌகார் ஜானகி மறைந்தாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும், அவர் விட்டுச் சென்ற கலை மரபும் என்றென்றும் வாழும்.</p> <h2>உடல்நலக்குறைவு</h2><p>சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, சாச்சி ராவ் என்ற இரு மகள்களும், வெங்கடரமண சங்கரமஞ்சி என்ற மகனும் உள்ளனர். இதில் யக்னா பிரபாவின் மகள் வைஷ்ணவி நடிகை ஆவார். ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.</p><p>சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சௌகார் ஜானகி, வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக்குறைவுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் வந்தார்.</p> <h2>மரணம்</h2><p>சௌகார் ஜானகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.</p><p>சௌகார் ஜானகி உடல்நிலை நேற்று காலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார்.</p> <h2>முதலமைச்சர் விஜய் இரங்கல்</h2><p>சௌகார் ஜானகியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், ஜி.கே.வாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,</p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசி யல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர் டி.ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.</p> <h2>பொதுமக்கள் அஞ்சலி</h2><p>தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் நிலை உயர்வு- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jitendra-singh-hails-indias-rise-in-technology-development</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jitendra-singh-hails-indias-rise-in-technology-development#comments</comments><guid isPermaLink="false">f06b4468-9f69-4f28-89e0-fdf579e5cab3</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:47:03 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:47:03.056Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Union Minister,ஜிதேந்திர சிங்,பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாடு,Jithendra singh,Bricks conference</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lcoo6md0/brick2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bricks Ministers Conference in Chennai]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/lcoo6md0/brick2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பிரிக்ஸ் அறிவியல் அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது. அதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் நிலை உயர்வு அடைந்து இருக்கிறது என்றார்.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>சென்னையில் 14-வது பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மந்திரிகள் கூட்டம் நடை பெற்றது. இதில் பிரிக்ஸ் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா உள்பட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் வரவேற்று பேசினார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:-</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. </p><p>இதற்காக, 'மீண்டு எழும் திறன், புதிய கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி' என்ற கருப்பொருளை இந்தியா தேர்வு செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, குவாண் டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களால் உலகம் வேகமாக மாறி வருகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.</p><h2>புதிய கண்டுபிடிப்பு</h2><p>அதேநேரத்தில், இந்த புதிய தொழில்நுட்பங்களின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அவை மலிவானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும். இதற்கு நாடுகளுக்கு இடையிலான ஒத்து ழைப்பு அவசியம்.</p><p>அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. தேசிய குவாண்டம் இயக்கம், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம், பயோஇ3 கொள்கை, தேசிய புவிசார் கொள்கை உள்ளிட்ட திட்டங்கள் இதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p>இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நாட்டின் அறிவியல் திறனை வளர்க்கவும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><p>பிரிக்ஸ் நாடுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்படுவதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். </p><p>சென்னையில் நடைபெற்ற இந்த மாநாடு, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான அறிவியல் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-gold-ring-scheme-tender-2-famous-jewellery-companies#comments</comments><guid isPermaLink="false">e30954b1-73f4-4288-9a81-661761e99a46</guid><pubDate>Sat, 22 Aug 2026 02:12:02 +0000</pubDate><atom:updated>2026-08-22T02:12:02.274Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Government,தமிழக அரசு,தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்,thaimaman gold ring scheme</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3l0c9gqz/gold.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3l0c9gqz/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் தயாரித்து வழங்க 2 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>இதுதொடர்பாக<a href="https://www.maalaimalar.com/search?q=%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> தமிழக அரசு</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-</p><p>'<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/launch-of-thaaymaaman-seer-scheme-on-annas-birthday-rs-560-crore-allocation-for-1-gram-gold-ring">தாய்மாமன் தங்க மோதிரம்</a>' திட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் தாயையும் கவுரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.</p> <p>இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலையை தவிர்த்து செய்கூலி, காப்பீடு போன்ற அனைத்து கூடுதல் கட்டணங்களுக்கும் சேர்த்து ரூ.0.01 என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியினை அளித்துள்ளது. மற்ற 10 நிறுவனங்களிடம் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்தின் விலையை ஒப்பிட்டு இசைவு தெரிவிக்க கோரியதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் மட்டுமே இசைவு தெரிவித்துள்ளது. </p> <p>இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளதால், ஜூன் மாதத்திலிருந்து 4 மாதங்களுக்கு தேவையான 1 லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு வழங்குவதற்காக மேலே குறிப்பிட்ட குறைந்த விலைப்புள்ளி அளித்து தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-petrol-diesel-prices-in-chennai-3</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-petrol-diesel-prices-in-chennai-3#comments</comments><guid isPermaLink="false">c59f6b8a-a3d0-4430-98e3-2b6549662a7e</guid><pubDate>Sat, 22 Aug 2026 01:11:53 +0000</pubDate><atom:updated>2026-08-22T01:11:53.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கச்சா எண்ணெய்,டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,Brent Crude oil</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3fawkvkn/petrol-price.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Petrol- Diesel price]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-22/3fawkvkn/petrol-price.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (22.08.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 94.39 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: 2026 தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது- முதலமைச்சர் விஜயை மேற்கோள் காட்டி விளக்கிய அமைச்சர் ரமேஷ்- 21 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026#comments</comments><guid isPermaLink="false">ac47dc11-4fb4-4fd1-9107-7bf9bddc91e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:42:15.618Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> <p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - எடப்படி பழனிசாமி</p><p>மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை தேவை.</p><p>எண்ணூர் கழிமுகத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு.</p><p>முகத்துவாரத்தில் ரசாயனம் கலப்பால் மீன்கள் இறப்பு  - எடப்படி பழனிசாமி</p> <p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.</p><p>விசாரணை ஆணையம் அமைத்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><h2>அமைச்சர் ராஜீவ் விளக்கம்</h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம்.</p><p>ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது.</p><p>இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீனவளத்துறைக்கு அனுப்பு வைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை.</p><p>முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை. கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்க - பாமக</p><p>தவறு செய்வது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்.</p><p>மணலி, எண்ணூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை, சரி செய்யும் பணி நடக்கிறது. </p><p>மனித கழிவு கலந்தால் தான் நீரில் ஆக்சிஜன் தன்மை குறையும், ஆலை கழிவு தற்போது வரை கலக்கவில்லை என தகவல் - அமைச்சர் ராஜீவ் </p><p>சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார்.</p><p>ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது - சி.வி. சண்முகம்</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது. </p><p>லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் அடிப்படி வசதி தேவை, துறையூரில் உள்ள ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள துறையூர் சின்ன ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>காவல்நிலையம், மருத்துவமனை, பெண்கள் உடைமாற்றும் இடம் இல்லை - பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர்</p><p>விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பூசாரி காவலர்கள் தாக்கியதால் உயிரிழப்பு குறித்து திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம்.</p><p>பர்வதமலைக்கு செல்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் சட்டசபையில் கோரிக்கை</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.</p><p>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.</p><p>முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?</p><p>முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><p>2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?</p><p>பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை - அமைச்சர் ஆதவ்</p> <p>நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - அமைச்சர் ஆனந்த்</p><p>யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.</p><p>கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - சபாநாயகர்</p><p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர். </p><p>ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது தவெக அரசு.</p><p>அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது - உதயநிதி</p><p>முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது - உதயநிதி</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் - உதயநிதி</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை</p><p>சட்டசபை கேள்வி நேரத்தை முதன்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சி தான் - உதயநிதி</p><p>ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசு தான் கொடுக்கிறது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - சபாநாயகர்</p><p>கோப்பு திறப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை என சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்</p><p>கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? - ஓ.பன்னீர்செல்வம்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்.</p><p>அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய மரியாதை தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதம் - செந்தில் பாலாஜி உரை</h2><p>திமுக ஆட்சியில் கரூருக்கு 5 வருடங்களில் ரூ.5,000 கோடியில் திட்டங்கள்.</p><p>மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி - மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக லட்சக்கணக்கானோர் புகார்.</p><p>மின்துறையில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் விநியோக இயக்குநர் பணியிடமே காலியாக உள்ளது.</p> <p>எண்களை மாற்றாமல் ஏர் டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறவில்லை?</p><p>மின்துறையும் அமைச்சரும் ஒன்றாக இணைந்து மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி குறித்து தீர்வு காண வேண்டும்.</p><p>தவெக ஆட்சியில் மின்துறையில் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது - செந்தில்பாலாஜி</p><p>3.70 லட்சம் மறுமதிப்பீடு என்பது புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டது அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>2719 நுகர்வோருக்கும் குளறுபடி ஏற்பட டேபிள் ரீடிங் தான் காரணம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கரூர் கம்பெனி ஓனர் சாரி சாரி கரூர் முன்னாள் எம்எல்ஏ - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சார் திமுக அமளி</p><p>திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்பது போல் நாங்கள் எழுந்தால் அவை நடைபெறாது - ஆதவ்</p><p>பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் என கணக்கெடுக்க ஒரு அமைச்சரா? - உதயநிதி</p> <p>ஒரு அமைச்சர் சிறைக்கு சென்ற பிறகு தங்கம் தென்னரசு மின்சாரத்துறை அமைச்சராகிறார் - நிர்மல்குமார்</p><p>செந்தில்பாலாஜி குறித்த வார்த்தையை திரும்ப பெறுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தகவல்</p><p>கடந்த  திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறைக்கு புதிதாக தேர்வு.</p><p>திமுக ஆட்சியில் போதுமான மின்மாற்றிகள் வாங்கப்படவில்லை.</p><p>மின்துறை அதிகாரிகளின் செல்போன் எண்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகம் மின்கட்டணம் வந்த நுகர்வோரை மின்வாரியம் தானாக மறுமதிப்பீடு - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுக ஆட்சியில் மின்சாரத்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஊழியர்கள் பற்றாக்குறை என தவெக அமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார் - செந்தில்பாலாஜி</p><p>கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் இதே ஊழியர்களை வைத்து தான் தடையின்றி மின்சாரம் வழங்கினோம்  - செந்தில்பாலாஜி</p><p>திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் குறைபாடு என கூறிய நிலையில் 5 ஆண்டில் 99,000 மின்மாற்றி அமைப்பு  - செந்தில்பாலாஜி</p><p>கொள்கை விளக்க குறிப்பு இரவு 10 மணிக்கு தான் கொடுத்தனர். படித்து முடிக்கவே 3.30 ஆகி விட்டது. 834 பக்கங்களை படித்து விட்டு வந்திருக்கிறேன்.</p><p>மின் வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க் மாயமானதாக கூறப்படும் நிலையில் 38 ஹார்டு டிஸ்க் கிடைத்ததாக சொல்கின்றனர்  - செந்தில்பாலாஜி</p> <p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் - உதயநிதி</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.</p><p>என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.</p><p>எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.</p><p>எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல.</p><p>ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.</p> <h2>திமுக எம்எல்ஏ கே.என்.நேரு</h2><p>கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம்.</p><p>அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள்.</p><p>கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் - தளி ராமச்சந்திரன்</p><p>அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி - ஆதவ்</p><p>நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா? - கே.என்.நேரு</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல.</p><p>கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது - அமைச்சர் ஷாஜகான்</p><p>அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள்.</p><p>திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே - எ.வ.வேலு</p><p>திமுக ஆட்சியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது - சேகர்பாபு</p><p>மிகவும் பொருத்தமான ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக நியமித்துள்ளார் முதலமைச்சர் விஜய் - நத்தம் விஸ்வநாதன்</p><p>திருவள்ளுவரின் கூற்று ஜேசிடி பிரபாகருக்கு நன்றாக பொருந்தும் - நத்தம் விஸ்வநாதன்</p><p>சிறுமலைக்கு அதிக சுற்றுலா பயணியர் வருகை.</p><p>மின்வெட்டில் இருந்து தமிழ்நாட்டை அதிமுக ஆட்சியில் மீட்டெடுத்தோம்.</p><p>மின்சாரத்துறை இடியாப்ப சிக்கல் நிறைந்த துறை - நத்தம் விஸ்வநாதன்</p><p>நத்தம் செந்துறையில் புதிய காவல்நிலையம் அமைத்து தர வேண்டும்.</p><p>ஆயத்த ஆடைப் பூங்கா நத்தத்தில் அமைத்து தர வேண்டும்.</p><p>நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் - நத்தம் விஸ்வநாதன்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தொகுதி மறுவரையறை குறித்து தவறான பிரசாரம்.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு.</p><p>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் அரசு உறுதியாக உள்ளது.</p><p>தென்மாநிலக் குழு கூட்டம் குறித்து ஊடகங்களில் பொய் பரப்புரை.</p><p>தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543  எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை - உதயநிதி</p><p>543 எம்பிக்கள் தான் தவெக நிலைப்பாடு என நேற்றே தெளிவுபடுத்தி விட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>543 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு - உதயநிதி</p><p>தேர்தலுக்கு முன் எண்ணிக்கை மாற்றம் வேண்டாம் என நகல் எரிப்பு போராட்டம் நடத்தியது திமுக.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவும் 25 ஆண்டுகள் மேலும் கால அவகாசம் வழங்கியது தொடர வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு - எடப்பாடி பழனிசாமி</p><p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு என்றால் நமக்கு 59 எம்பிக்கள் கிடைப்பார்கள் - பாஜக</p><p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை - பாமக</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார்.</p><p>மசோதாவில் இல்லாததை நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.</p><p>543 இடங்களில் தென்மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறி உள்ளார்.</p><p>தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை.</p><p>அன்புமணியை காப்பாற்றுவதைவிட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார்.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாமக எம்எல்ஏ பேசியதை எதிர்த்து அமைச்சர் வன்னிஅரசு பேசிய நிலையில் சட்டசபையில் அமளி.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>எம்பி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தீர்வு அல்ல.</p><p>தமிழ்நாடு கேட்காமலேயே மத்திய அரசு ஏன் 50% எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது? </p><p>12 வருடங்களாக தமிழ்நாட்டிற்கு எதிராகவே மத்திய அரசு சட்டங்களை கொண்டு வருகிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு எதிரான சட்டங்களை திமுக எதிர்த்தது.</p><p>50 சதவீதம் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு என்பதையும் திமுக எதிர்க்க வேண்டும்.</p><p>மாநில கோரிக்கை என்று வரும்போது திமுக, காங்கிரஸ், விசிக என எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்க வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>அன்புமணியை காப்பாற்றுவதை விட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் பாமகவுக்கு இல்லை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதிகளை மக்கள் கேட்கிறார்களா?</p><p>தொகுதி மறுவரையறையில் விசிக முதலில் ஒரு நிலைப்பாடு தற்போது வேறு நிலைப்பாடு  - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>இறைவனுக்கு வந்த சோதனையாக கருதி என் உரையை தொடங்குகிறேன்- சேகர்பாபு</p><p>மக்கள் நலப்பணிக்கு விடப்பட்ட டெண்டரை தான் தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதை மக்கள் பார்த்து கொள்வர் - சேகர்பாபு</p><p>மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம், தேவையற்றதை தான் தடுத்து நிறுத்தினோம் - அமைச்சர் ரமேஷ்</p><p>கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் பல தொடங்கப்படவில்லை.</p><p>நிதிநிலை கருத்தில் கொண்டு எண்ணிக்கையை உயர்த்தி கூறாமல் என்ன செய்ய முடியுமோ அவற்றை கூறி உள்ளோம் - அமைச்சர் ரமேஷ்</p><h2>சேகர்பாபு உரை</h2><p>கடந்த ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகள் இந்த ஆட்சியில் கட்டப்படுமா?</p><p>திமுக ஆட்சியில் 4,641 கோவில்களில் குடமுழுக்கு நடத்தினோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.2,000 கோடி உபயதாரர் நிதி வந்தது. அன்னதான திட்டத்திற்கு ரூ.300 கோடி அளவுக்கு நிதியை பெற்றோம்.</p><p>திமுக ஆட்சியில் திருக்கோவில்களுக்கான நிதி அதிகரித்து வழங்கப்பட்டது.</p><p>ஒருகால பூஜை அர்ச்சகர் பிள்ளைகள் 2,000 பேருக்கு மாதம் ரூ.10,000 கல்வி நிதி தந்தோம்.</p><p>106 அறிவிப்புகளை எத்தனை ஆண்டுகளில் நிறைவேற்றுவீர்கள் என பார்ப்போம்.</p><p>எங்களுக்கு இடைவேளை முடிந்து தொடர் வேலை வரும், மீண்டு வருவோம் - சேகர்பாபு</p><p>844 அறிவிப்புகளை தந்த சேகர்பாபு 79 அறிவிப்புகளுக்கான பணியை தொடங்கவில்லை - அமைச்சர் ரமேஷ்</p><h2>அதிமுக ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தரப்பட்டது.</p><p>தவெக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.</p><p>எப்போது தவெக அரசு மேட்டூர் அணையை திறக்கும்?</p><p>மாதாந்திர மின் கணக்கீடு எப்போது தொடங்கும்?</p><p>சவுக்கு உள்ளிட்ட மரங்கள், பயிர்கள் கருகி விட்டன.</p><p>கருகிய 1 லட்சம் ஏக்கல் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அறநிலையத்துறைக்கு என தேசிய அளவில் பொதுச்சட்டம் இல்லை.</p><p>இனாம் ஒழிப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இனாம் நிலங்கள் கோவில் நிலங்கள் அல்ல - அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்</p><p>முதலமைச்சர் விஜயின் அழகிய முகத்தைப் பார்க்க பேரவையில் தனி SCREEN வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் தவெக எம்.எல்.ஏ. விஜய் அன்பன் கல்லாணை கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>"எதிர்க்கட்சிகள் தன் அரசைப் பற்றி விமர்சித்தாலும் அதில் காமெடி இருந்தால் குலுங்கி குலுங்கி சிரிக்கும் தலைவன்" என புகழாரம்.</p><p>சட்டசபையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- </p><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்து, அதில் 4 கல்லூரிகளைத் திறந்துவைத்தோம்</p><p>கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்து தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, 4 கல்லூரிகளைக் கட்டி முடித்துள்ளோம்; மீதமுள்ள கல்லூரிகளையும் கட்டி முடிக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா?.</p><p>2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது என சட்டசபையில் அமைச்சர் ரமேஷ் பேசினார். முதலமைச்சர் விஜய் வேலேந்தி, சூரனை வீழ்த்தினார்.</p><p>பெரியாரின் பேரனாக முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் புகழாரம்.</p><p>அண்ணாவின் தம்பிகள் போல இன்று அண்ணனின் தம்பிகளாக தவெக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>சாதி, மத அரசியலை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஜனநாயகத்தின் ஆட்சியை நடத்தி வருகிறார்.</p><h2>அறநிலையத்துறை- புதிய அறிவிப்புகள்</h2><p>152 திருக்கோவில்களில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும்.</p><p>3 கோவில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பொங்கல் மண்டபங்கள் அமைக்கப்படும்.</p><p>சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும.</p><p>சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.</p><p>9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.- அமைச்சர் ரமேஷ்.</p><p>திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>1000 ஆண்டுகள் பழமையான 64 கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் கூடிய பாதுகாப்பு திறனாளர்களை உருவாக்கும் பயிற்சி வழங்கப்படும். உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தொழிற்துறை சார்ந்த சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படும்.</p><p>வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும்- அமைச்சர் ரமேஷ்.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் அருண் ராஜ் பதிலுரை வழங்கினார்.</p><p>மக்கள் நல்வாழ்வு துறை மூலம் எப்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தங்கம் வாங்க முடியும் என்று கேட்டார்கள். கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கான பெட்டகங்கள் மருத்துவ கழகம் மூலமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கழகம் மூலம் மருந்துகள், மருத்துவ கருவிகள் அல்லாத பொருள்களையும் வாங்க முடியும்</p><h2>அமைச்சர் ரமேஷ்: </h2><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் செய்யப்பட்ட ஊழல்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்துள்ளோம். அதை விரைவில் வெளியிடுவோம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு: </h2><p>'சிவன் சொத்து குல நாசம்' என்பதை உணர்ந்தவன் நான். ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.</p><p>சட்டசபையில் மின்துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.</p><p>ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.</p><p>புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறை எளிதாக்கப்படும்.</p><p>50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்.</p><p>சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்னூட்டிகள் அமைக்கப்படும்.</p><p>அதிக சுமை உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும்.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.</p><p>ரூ.8 லட்சம் மின்மாற்றியை ரூ.13 லட்சத்திற்கு வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.</p><p>மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புகார்கள், குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி விளக்கம்.</p><p>திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதற்கு தவெக அரசின் வெள்றை அறிக்கையே சாட்சி.</p><p>மின்சார துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.</p><p>திமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சிவன் சொத்து குல நாசம் என்பது தெரியும்: சேகர்பாபு Vs ரமேஷ் சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate#comments</comments><guid isPermaLink="false">09fad261-47f2-4639-a77e-8f7661705284</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:13:49 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:13:49.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar babu MLA,சேகர்பாபு எம்எல்ஏ,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xfaeajc6/SekarBabuvsRamesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Minister Ramesh vs Sekar Babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xfaeajc6/SekarBabuvsRamesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ரமேஷின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு- தற்போதைய த.வெ.க. அமைச்சர் ரமேஷ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.</p><p>அமைச்சர் ரமேஷ்: திருக்கோவில் நிலங்களை மீட்டதாக சொன்னார்கள். ஆனா, இன்னொரு விசயத்தை சொல்ல மறந்து விட்டார்கள். இன்றைக்கு 40 ஆயிரத்து 245 ஏக்கர் தனி நபர் பெயரில் பட்டா மாறியிருக்கிறது. அதை மீட்கும் பெரும்பணி இந்த ஆட்சிக்கு இருக்கிறது. கணினி சிட்டா பதிவுகளின்போது ஏறத்தாழ 33,949 ஏக்கர் தவறுதலாக தனி நபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கு. அதை மீட்பதில் த.வெ.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து வகையிலான நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்த அரசு பணி செய்து கொண்டிருக்கிறது.</p><h2>வள்ளலார் திட்டம்</h2><p>வள்ளலாருக்காக மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வந்ததாக சொன்னார்கள். கூடவே உண்மைக்கு மாறாக ஒன்றை சொல்லிவிட்டார்கள். அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம், எதிர்த்து விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்த விசயத்தில் யானை சபையின் பின்புறம் பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில், பெரிய திட்டத்திற்கான செயல்பாட்டை செய்திருந்தார்கள்.</p><p>இந்த பெருவழியை தவிர்த்து வேறு எங்கே வேண்டுமென்றாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்ற வள்ளலாரின் பக்தர்கள் கூறினார்கள். இதை துறை சார்பான அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பேசி முடிவு எடுக்கிறோம் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறோம். அதை கைவிடப்போறோம் என்று சொல்லவில்லை. பெருவழியை தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சருக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.</p><h2>வாடகை கலெக்ஷன்</h2><p>வாடகை கலெக்ஷன் உள்ளிட்டவைகளை பற்றி பேசினார்கள். 100 நாட்களில் ஏறத்தாழ 108 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2000 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் நிலுவையில் உள்ளது. அதையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 464 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கணினி சிட்டாவில் 349 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நகையை உருக்கியது பற்றி பேசினார்கள். அதில் எனக்கு எந்த மாற்ற கருத்தும் இல்லை. ஆனால், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. கடந்த பல வருடங்களாக நகையை மறுமதிப்பீடு செய்யாமல் வைத்துள்ளனர். 5 ஆண்டுக்கு ஒருமுறை நகையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என HRA சட்டத்தில் உள்ளது.</p><p>நகையை மறுதிப்பீடு செய்யாமல் நகையை உருக்கிவிட்டோம் என்று சொன்னால் எப்படி?. நகை மதிப்பீடு பணியை யார் செய்வது?. அதை மறுதிப்பீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொண்டிருக்கிறது.</p><p>மதுரை உறுப்பினர் அறங்காவலர்குழு பற்றியெல்லாம் பேசினார்கள். அறங்காவர்குழு நியமனம் எப்படி நடந்தது என்று சொன்னார்கள். விதிமுறை எல்லாம் பின்பற்றினார்கள். அதெல்லாம் சரிதான். மறைமுகமாக என்னவெல்லாம் நடந்துச்சி என்று கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில ஈடுபட்டனர். இதனால் மறைமுகமாக என்ற வார்த்தை நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><h2>பின்னர் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில் அளித்தார்.</h2><p><strong>சேகர்பாபு:</strong> சிவன் சொத்து குலம் நாசம் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்தவர்கள். ஆடிட் செய்வது அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகள் சார்ந்தது. ஆடிட்டை மத்திய அரசு செய்ய வேண்டும் என நினைத்தபோது, அதை நாம்தான் ஆடிட் செய்ய வேண்டும் என போராடி பெற்றது நாங்கள். எந்த அறங்காவலர் இவரிடம் அழுதார் என்பதை விளக்கினால் பொறுப்பேற்க தயாராக இருக்கிறோம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற குற்றத்தை அவைத் தலைவர்கள் பதிவு செய்யக் கூடாது.</p><p>அமைச்சர் ரமேஷ்: சிவன் சொத்து குலம் நாசம் என்கிறார்களே, நிறைய விசயங்களை எடுத்து வைத்துள்ளோம். விரைவில் ஆதாரங்களை வெளியிடுகிறோம்.</p><p>இவ்வாறு இருவருக்கும் இடையில காரசார விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுகாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes#comments</comments><guid isPermaLink="false">11120911-1276-4554-ac42-c7c532df6814</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:40:57.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,TN Government,தமிழக அரசு,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மகளிர் நலன்' என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.</p><p>அதன்படி, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய், குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>தவெக ஆட்சி</h2><p>சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறுபவர், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்குவதற்கான தங்கம் கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.</p><p>தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.</p><p>இந்தத் திட்டத்திற்கு 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்காக டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியானது.</p><h2>ஒப்பந்தப் புள்ளி</h2><p>இதில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து என அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் (குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம்) கோரியுள்ளது.</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave#comments</comments><guid isPermaLink="false">62a6615b-7af0-42d8-8412-cff01d0ecde7</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:10:59.657Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,கருணாநிதி,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,Yellow shawl,மஞ்சள் துண்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் நீண்டநாட்களாக மூன்று கோப்பைகளை திறந்துவிடுவதாக கூறிவருகிறார். அதை உடனடியாக திறக்கவேண்டும், அதற்கு ஜோசியக்காரர் சொல்லவேண்டுமா” எனப் பேசியிருந்தார்.</p><p>இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “யார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டார் என்பதை அனைவரும் அறிவர்” என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை குறிக்கும் வகையில் பதிலளித்தார். </p><p>ஆனால் உண்மையில் கருணாநிதி ஜோசியம் பார்த்துதான் மஞ்சள் துண்டு அணிந்தாரா, அந்த மஞ்சள் துண்டு குறித்து அவரே கூறியது குறித்து இங்கு காண்போம்.</p><p>இதுதொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது;</p><p>சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது.</p><p>உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். </p><p>வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.</p><p>வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு - மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர்.</p><p>அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கு இடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.</p><p>வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் - கழகக் கண்மணிகள்!</p><p>கழுத்துப் பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.</p><p>இப்படிக் கம்பளிச் சால்வையை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.</p><p>அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது.</p><p>தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக, இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.</p><p>அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப்போல - சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன்.</p><p>இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும், கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை.” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளை சென்றடையாத குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation#comments</comments><guid isPermaLink="false">4ed59668-5a82-40a9-a066-30d4a98183f5</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:52:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:52:02.422Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Kuruvai Special Package,குறுவைத் தொகுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளை சென்றடையாக குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்புத் தொகுப்பு நிதி விரைவில் விவசாயிகளை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.</p><p>வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.</p><p>ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. </p><p>இது தொடர்பான செய்திகள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த திறனற்ற அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.</p><p>விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. </p><p>குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அறுவடைக்கு முன்பாவது குறுவைத் தொகுப்பை வழங்குங்கள்!- அரசுக்கு அன்புமணி கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-farmers-must-be-provided-with-it-at-least-before-the-harvest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-farmers-must-be-provided-with-it-at-least-before-the-harvest#comments</comments><guid isPermaLink="false">0957c98b-6f07-47d2-811a-28e38fca93e3</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:40:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:40:13.955Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/w272nx2l/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/w272nx2l/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு  உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி  செய்யும் உழவர்களுக்கு  உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத்  தொகுப்பு அறிவிக்கப்பட்டு,  70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து  காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை  விரைந்து வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான  அரசாணை பிறப்பிக்கப்பட்டது.</p><p>குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு  செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும்.  ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது.  இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.</p><p>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு  உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2#comments</comments><guid isPermaLink="false">0cfc0016-fcea-4fde-b053-c2460142545e</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:21:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:21:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என கணிக்கப்பட்டது. </p><p>அதன்படி, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மாலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று  கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து இன்று காலையும் <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026">தங்கம்</a> விலை அதிரடியாக உயர்ந்தது.  அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>ஜெட் வேகத்தில் உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>சௌகார் ஜானகி மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">ee7d077f-fb92-41ba-9430-6fe99d850081</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:17:22.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowcar Janaki,Vijay,விஜய்,condolence,இரங்கல்,சௌகார் ஜானகி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Sowcar Janaki- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் இரங்கல்</h2><p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away" rel="nofollow">சௌகார் ஜானகி</a> அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. </p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/nikhil-murugan-who-worked-as-a-public-relations-officer-for-575-films-receives-kalaimamani-award-792492" rel="nofollow">கலைமாமணி</a> விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மறைவு</h2><p>நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.</p><p>தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.</p><p>94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><p>இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.</p><h2>விருதுகள்</h2><p>கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.</p><h2>திரையுலகினர் இரங்கல்</h2><p>பழம்பெரும் நடிகை சௌவுக்கார் ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வியாசர்பாடி கணேசபுரத்தில் 3½ ஆண்டாக நடைபெறும் ரெயில்வே மேம்பால பணியால் மக்கள் அவதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-ganesapuram-vyasarpadi-face-hardship-due-to-ongoing-railway-overbridge-construction-work-that-has-been-underway-for-three-and-a-half-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-ganesapuram-vyasarpadi-face-hardship-due-to-ongoing-railway-overbridge-construction-work-that-has-been-underway-for-three-and-a-half-years#comments</comments><guid isPermaLink="false">990b9469-8e2c-4fc9-8795-25b2f2aa9f1d</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:08:52.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வியாசர்பாடி,Vyasarpadi,வியாசர்பாடி ரெயில்வே மேம்பால பணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rg2gkw8c/vyasarpadi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில்வே மேம்பால பணி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்வே மேம்பால பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rg2gkw8c/vyasarpadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சி மூலம்  கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.</strong></em> </p><p>சென்னை  மக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. </p><h2><strong>பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டம்</strong></h2><p>ரூ.226.55 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணியை அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டிபகுதியில் தொடங்கி  கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையை கடந்து இந்த மேம்பாலம் அமைகிறது. 678 மீட்டர் நீளமும், 15.52 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரெயில்வே மேம்பாலம் 4 வழி பாதையாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லக்கூடிய  பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இரவு பகலாக இந்த வழித்தடத்தில் நீண்ட தூரம் செல்லக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன.</p><p>வியாசர்பாடி கணேசபுரம்  சுரங்கப் பாதையில் மழைக்காலங்களில் மழை நீர் கடல் போல் தேங்கி ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்தை தடை செய்து விடுகிறது. இதனால் வடசென்னை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. </p><p>சென்னை மாநகராட்சி மூலம்  கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 2 ஆண்டுகளில்  கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று டெண்டர் விடப்பட்ட நிலையில்  நிலம் கையகப்படுத்துதல், மின்சாரம் மற்றும் கழிவுநீர் பாதை  கட்டுதல் போன்றவற்றிற்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதனால் திட்டம் தொடங்கிய பல மாதங்கள்  ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்து வந்தன.  கடந்த ஆட்சியில் எப்படியாவது இந்த பணியை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் ரெயில்வே துறையால் அது தாமதமானது. ரெயில்வே பாதை அமைந்துள்ள பகுதியை மட்டும் துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று ஒவ்வொரு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.  58 மீட்டர் நீளம் 15.2 மீட்டர் அகலம் கொண்ட ரெயில்வே பாதையின் மேலே இரும்பு கருடர்கள் மூலம் பிரம்மாண்டமான வளைவு அமைக்கப்படுகிறது.</p><p>பேசின் பாலத்தில் அமைந்துள்ள இரும்பு கர்டர்கள் போன்று இந்த மேம்பாலத்திலும் அமைக்கப்பட உள்ளன.  இந்த இரும்பு கர்டர்கள் அமைக்கப்படும் பணி மட்டுமே தற்போது தாமதமாகி வருகிறது.  மற்ற பணிகள் இருபுறமும் முடிக்கப்பட்டு விட்டன.  68 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை ரெயில்வே துறையின் ஒப்புதல் மூலமே செய்ய வேண்டிய இருப்பதால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. </p><p>3½ ஆண்டுகளாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேதனையான விஷயமாகும். இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள்  தினமும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.</p><p>ரெயில்வே பகுதியில் நடைபெற வேண்டிய ஒவ்வொரு வேலையையும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு தொடங்க முடியும், இதுவே தாமதத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-  58 மீட்டர் நீளத்திற்கு இரும்பு கர்டர் வளைவு புதுக்கோட்டையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 4 எண்ணிக்கை கொண்ட இந்த கர்டர்கள் தயாரிக்கும் பணி முடிந்து விட்டன. அதனை ரெயில்வே அதிகாரிகள் முதல் கட்டமாக ஆய்வு செய்து விட்டனர். </p><p>அடுத்ததாக லக்னோவில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து  ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் அந்த இரும்பு கர்டர்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அதனை சென்னைக்கு கொண்டு வர முடியும்.</p><p>மேலும் மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் அங்கு 2  கிணறுகள் தோண்டப்படுகின்றன. ஒவ்வொரு கிணறும் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும். </p><p>மழைநீர் தேங்கினால் இந்த கிணற்றின் வழியாக கொண்டுவரப்பட்டு  கால்வாய்க்குள் வெளியேற்றப்படும். மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில்  இந்த பிரம்மாண்ட கிணறுகள் ஆட்டுத்தொட்டி பகுதியில் அமைகிறது.  இந்த 2 கிணறுகளும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கட்டி முடிக்கப்படும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">71f7df86-7609-4bb8-a393-5f0a2fa97133</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:32.448Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government,Chief Secretary Saikumar,தலைமைச் செயலாளர் சாய்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவரை நீக்க வலியுறுத்தி நாளை (ஆக.22) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறி வைத்ததன் மூலம் தலைமைச் செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். </p><p>நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. </p><p>ஒன்றிய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதலமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குநர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. </p><p>உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. </p><p>ஆனால், தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி, மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><p>அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><ul><li><p>தமிழக முதலமைச்சரும், அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p></li><li><p>தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p></li><li><p> குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p></li></ul><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. </p><p>அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item></channel></rss>