<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 08 Aug 2026 14:27:32 +0000</lastBuildDate><item><title>எட்டப்பர்கள் யார், முதுகில் குத்தியது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்: கனிமொழி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/who-are-traitors-and-backstabbers-tamil-people-know-well-kanimozhi#comments</comments><guid isPermaLink="false">2ca388e5-0855-4a90-b07c-bd6963a071ab</guid><pubDate>Sat, 08 Aug 2026 14:05:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T14:05:03.307Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி எம்பி,மேகதாது அணை,Kanimozhi MP,Megadadu Dam,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi M.P]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/fn8owe9t/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி எம்.பி.க்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில், திமுக அந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.</p><p>இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் மக்களவை எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-  </p><h3><strong>தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு</strong></h3><p>திராவிட முன்னேற்ற கழகம் மிகத்தெளிவாக, முதன்முதலில் இந்த தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஐந்து மாநில முதல்வர்களை ஒன்றிணைத்து சென்னையில் ஒரு கூட்டத்தை நடத்தினார். </p><p>அந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட சில முதலமைச்சர்கள் கலந்துகொண்டு, அந்த தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டார்கள். </p><p>அந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நாங்கள் எதிர்க்கவில்லை. நியாயமான தொகுதி மறுவரையறை என்பது தான் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது.</p><p>இதையடுத்து தேர்தல் நேரத்தில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்ட போது, எங்களுக்கு தேர்தல் முக்கியமில்லை, தமிழ்நாட்டின் உரிமைகள் தான் முக்கியம் என திமுக தலைவர் கூறினார்.</p><p>மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எங்களிடம், இந்த மசோதாவிற்கு எதிராக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் கூறினார்.</p><p>கடந்த காலத்தில் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, திமுக-வால் ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களை எடுத்து கூறினோம்.</p><p>அப்போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அந்த மசோதாவில், எந்த இடத்திலும் தமிழ்நாட்டிற்கான பங்கு எந்த விதத்திலும் மாறாது என்று குறிப்பிடப்படாமல் இருந்தது.</p><p>அதனால் அந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் நிராகரித்தோம்.</p><p>இதுவரையில் ஒன்றிய அரசாங்கம் எங்களை அழைத்து பேசியதாக தகவல் இல்லை. ஒருவேளை ஒருசில நபரிடம் பேசி இருக்கலாம். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை அழைத்து, இந்த மசோதா குறித்து கருத்து கேட்கவில்லை.</p><p>தற்பொழுது இந்த மசோதா அறிமுகம் செய்யப்படமாட்டாது என்பது தான் எங்களுக்கு வந்த தகவலாக உள்ளது.</p><p>மேலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இருக்கும் மசோதா குறித்து, எந்தவிதமான தகவலோ அல்லது மசோதாவின் நகலோ எங்களிடம் இல்லை.</p><h3><strong>மேகதாது விவகாரத்தை திசை திருப்ப முயற்சி</strong></h3><p>அப்படி இருக்கும்போது தமிழகத்தில் எதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.</p><p>ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அரசாங்கம் கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுத வேண்டும். ஆனால் தலைமை செயலாளர் தனிப்பட்ட முறையில் எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.</p><p>எங்கள் திமுக தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு, கட்சி தலைமைக்கு தான் கடிதம் எழுதினார். எனவே, இதுவே முறையில்லாத ஒன்றாக உள்ளது.</p><p>மேகதாது மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அதை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட கூடாது என்று தான் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.</p><h3><strong>யார் எட்டப்பர்கள்</strong></h3><p>யார் எட்டப்பர்கள் என்றும், தேர்தலுக்கு பின்பு யார் முதுகில் குத்தினார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.</p><p>திமுகவும், அதிமுகவும் மேகதாது விஷயத்தில் ஒருமித்த கருத்தைதான் கொண்டுள்ளோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. 14-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announces-statewide-aiadmk-protest-against-tvk-farm-loan-policy#comments</comments><guid isPermaLink="false">7c6c4608-dcb2-43e0-8fb2-29eceeee9393</guid><pubDate>Sat, 08 Aug 2026 13:27:24 +0000</pubDate><atom:updated>2026-08-08T13:27:24.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>எடப்பாடி பழனிசாமி,EPS,பயிர்க்கடன்,மேகதாது அணை விவகாரம்,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ibvhmre1/EPS00001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, த.வெ.க. தனது தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசு குறு, சிறு விவசாயிகள் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ. 75,000/-க்குமேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும், விவசாயிகளை தரம் பிரித்து ஒரு பகுதி கடனை தள்ளுபடி செய்து அறிவித்தது. இது, தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முழு வேகத்துடன் முயற்சிகள் மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கப் பார்க்கிறது.</p><h2>மேகதாது அணை விவகாரம்</h2><p>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் த.வெ.க. கூட்டணி அரசைக் கண்டித்து, அதிமுக சார்பிலும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.</p><p>த.வெ.க. அரசு சட்டமன்றத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்த அரசு வெளியிட வேண்டும் என்றும், அப்படி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றால் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.</p> <p>இந்நிலையில், த.வெ.க. கூட்டணி அரசு 6.8.2026 அன்று தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில், பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கவில்லை. எனவே, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு, மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில், வருகின்ற 14.8.2026- வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில், தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.</p><p>தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன். சென்னை மாவட்டம் நீங்கலாக, ஏனைய வருவாய் மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>விவசாயிகள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட, கழக அமைப்பு ரீதியான மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களை மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-8-august-2026#comments</comments><guid isPermaLink="false">b54f04e3-e267-4cba-9339-bc533284a1e5</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:51:00 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:49:35.531Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/272sbpdk/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/charlie-chauhan-marries-cricketer-ramandeep-singh">நடிகையை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்</a></p><p>* சார்லி சவுகானும், ரமண் தீப்பும் கடந்த 8 ஆண்டாகக் காதலித்து வந்தனர்.</p><p>* ஐ.பி.எல். கோப்பையை கே.கே.ஆர். வென்றபோது அந்த அணியில் ரமண்தீப் சிங் இடம்பெற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!... </a></p><p>*மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும்.</p><p>*கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case">காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</a></p><p>* பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>* அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/why-india-opposes-chinas-new-map">சீனா வெளியிட்ட புதிய வரைபடம் – இந்தியா ஏன் எதிர்ப்பு?</a></p><p>* சீனா அருணாச்சலத்தை ஸாங்னான் என பெயரிட்டு வரைபடம் வெளியிட்டது.</p><p>* லாங்ஜூ தக்லா போர் நினைவிடங்கள் வரைபடத்தில் முக்கியமாக சேர்கப்பட்டன</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/womens-team-star-ashleigh-gardners-ex-wife-blasts-cricket-australia-over-cheating-scandal">சக வீராங்கனையுடன் தொடர்பு: ஆஸ்திரேலிய மகளிர் அணி துணை கேப்டன்மீது முன்னாள் மனைவி புகார்</a></p><p>* ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர்</p><p>* மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணி கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/maharashtra-new-rules-for-swiggy-zomato-zepto-electric-vehicles-compulsory">ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!</a></p><p>* மகாராஷ்டிரா டெலிவரி நிறுவனங்களுக்கு மின்சார பைக் பயன்படுத்த கட்டாயமாக்கியது.</p><p>* ஒவ்வொரு ஆர்டரிலும் 2% ஓட்டுநர் நல நிதிக்கு செல்லும், ஜிபிஎஸ் காப்பீடு உரிமம் கட்டாயம் கட்டண உச்சவரம்பு விதிக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey">ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</a></p><p>* ஈரோட்டில் ஆடு மேய்த்து படித்து தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மகாராட்டிராவில் பணியாற்றுகிறார்.</p><p>* வறுமையிலும் பெற்றோர் ஆதரவுடன் கணினி முதுகலை பட்டம் முடித்து 2015 UPSC தேர்வில் அகில இந்திய 152-வது இடம் பிடித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-message-to-gen-zs-at-iit-event-have-courage-to-seek-solutions">கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு</a></p><p>* இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.</p><p>* சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun">தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</a></p><p>* த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>* ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-woman-guinness-record-for-longest-hair">மிக நீண்ட கூந்தலுடன் கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்</a></p><p>* ரேணுவின் கூந்தல் ஹல்த்வானியில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவிடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>* இந்திய கலாச்சாரத்தில், நீண்ட கூந்தல் என்பது பாரம்பரியத்தின் அடையாளமாகவும், மிகுந்த அழகாகவும் கருதப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rain-continue-in-kerala-orange-alert-for-7-districts"> கேரளத்தில் தொடரும் கனமழை - 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை </a></p><p>* கேரளத்தில் பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டன.</p><p>*  மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian">நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</a></p><p>* மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p> * மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/sai-sudharsan-has-been-ruled-out-of-the-test-series-against-sri-lanka">இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முன்னணி வீரர் திடீர் விலகல்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்குகிறது.</p><p>* ஏற்கனவே காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விலகினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss">கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</a></p><p>* 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. </p><p>* 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan">கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன்... </a></p><p>*மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><p>*உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry">55 அடி உயர மரத்தில் ரூ.60,000 செலவில் இரும்புப் படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</a></p> <p>* தூத்துக்குடி இளைஞர் தினகர் 55 அடி பனை மரத்தில் இரும்பு படிக்கட்டு அமைத்தார்.</p><p>* பாதுகாப்பான பதநீர் இறக்க ரூ.60,000 செலவில் வளைவு படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice">சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</a></p><p>* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p><p>* மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/afghanistan-beat-ireland-in-second-odi">2வது ஒருநாள் போட்டி: ரஷித் கான் அசத்தலான பந்துவீச்சில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்</a></p><p>* முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 299 ரன்கள் குவித்தது.</p><p>* 6 விக்கெட் வீழ்த்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/ashmita-chaliha-enter-final-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அஷ்மிதா சலிஹா</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* இறுதிப்போட்டியில் அஷ்மிதா சலிஹா, சீன வீராங்கனை உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/who-will-pay-upi-transaction-fees-nirmala-sitharaman-clarifies">யுபிஐ பணப்பரிவர்த்தனைக் கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்?-குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்மலா சீதாராமன்!... </a></p><p>*மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. </p><p>*சாதாரணக் நுகர்வோர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக மேற்கொள்ளும் நபர்-நபர் மற்றும் வணிகர்களுக்கானக் கட்டணங்கள்  போன்ற யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent">தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 60% வரை உயர்வு: அரசு அதிரடி நடவடிக்கை!</a></p><p>* ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>* சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities" rel="nofollow">சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p>* நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தல்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/mojtaba-khameneis-health-raises-concerns-in-iran" rel="nofollow">ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உடல்நிலை கவலைக்கிடம்?</a></p><p>* மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று இஸ்ரேலிய ஊடகம் தகவல்.</p><p>* எந்த நேரத்திலும் அவர் இறக்கக்கூடும் என்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களிடையே தகவல்கள் பரவி வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல்</a></p><p>* முதலமைச்சர் விஜய் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><p>* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue">எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி</a></p><p>* தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். </p><p>* த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!... </a></p><p>*தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை: 1-ந்தேதி முதல் பாதுகாப்பு பெட்டகம் அமைக்க உத்தரவு</a></p><p>* தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><p>* ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-senate-approves-100-percent-tariff-on-russian-oil-buyers-what-it-means-for-india">ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி: அமெரிக்க செனட் சபை மசோதா ஒப்புதல்-இந்தியாவிற்குப் பெரும் சவாலா?... </a></p><p>*ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கும் அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>*உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இந்தியா மலிவு விலையில் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur" rel="nofollow">எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</a></p><p>* தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>* சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">GOLD PRICE TODAY: தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்: நகை வாங்குவோர் கலக்கம்!</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.13,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/death-threat-audio-targeting-mla-zeeshan-siddique-goes-viral" rel="nofollow">உனது தந்தைக்கு அடுத்து நீதான்.. ஜீஷான் சித்திக் எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்</a></p><p>*  மிரட்டல் விடுக்கப்பட்ட அந்த ஆடியோ பதிவின் உண்மைத்தன்மை என்ன? </p><p>* கொலை மிரட்டல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today">2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</a></p><p>* அமித்ஷா மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார்.</p><p>* அமித்ஷா திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk">தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</a></p><p>* தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>* மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: திருமாவளவன் எம்பி பேட்டி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-mps-meet-oppose-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">b5738a8c-9f5e-426f-a70e-66a984589653</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:12:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:12:29.534Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தொகுதி மறுவரையறை,Delimitation,தொகுதி மறுவரையறை மசோதா,MP Thirumavalavan,TamilNadu loksaba,திருமாவளவன் எம்பி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MP Thirumavalavan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pfiqd78q/mp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப் பாட்டை வலியுறுத்தி, தமிழக முதல்வர் விஜய்  தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.</p><h2><strong>மக்களவை எம்பிக்கள் எண்ணிக்கை மாறக்கூடாது</strong></h2><p>மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென் மாநிலங்கள், தொகுதி மறுவரையறை காரணமாகக் கூடுதல் இழப்பைச் சந்திக்க நேரிடும். எனவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆக மட்டுமே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், புதிய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.</p><h2><strong>எம்பிக்களின் ஒற்றைக் குரல்</strong></h2><p>கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடின்றித் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே குரலில் தொகுதி மறுவரையறையை எதிர்த்துள்ளனர்.</p><h2><strong>திமுக, அதிமுக நிலைப்பாடு</strong></h2><p> "தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் உரிமையையும் காக்கும் இந்த விவகாரத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இதே வலுவான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் அரசியல் அதிகாரப் பாதிப்பைத் தடுக்கவே இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் கூட்டப்பட்டுத் தொடர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாமல் கூட்டத்தை கூட்டுவது கேலிக்கூத்து: ஆ. ராசா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-rasa-says-about-tn-cm-all-party-mp-meeting-about-delimitation-bill#comments</comments><guid isPermaLink="false">9b8c0fe1-05fe-49e0-b44b-9328a88b0605</guid><pubDate>Sat, 08 Aug 2026 12:04:35 +0000</pubDate><atom:updated>2026-08-08T12:04:35.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆ ராசா,A Rasa,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆ ராசா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/i8n1axvf/Aarasa0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வர உள்ள நிலையில், இதுதொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதலமைச்சர் விஜய் அனைத்து எம்.பி.களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். திமுக எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.</p><h2>ஆ.ராசா</h2><p>இது தொடர்பாக தி.மு.க. எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆ. ராசா, "தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாம கூப்பிடுகிறார்களே, நியாயமா இது. இது கேலிக்கூத்தாக இல்ல. சிறப்பாக இல்ல உங்களுக்கு" என்றார்.</p><p>நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின் போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2>முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கூட்டம்</h2><p>இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.</p><h2>திமுக, அதிமுக புறக்கணிப்பு</h2><p>முதல்-அமைச்சர் விஜய் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது.</p><p>எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.</p><h2>காங்கிரஸ், விசிக எம்.பி.க்கள் பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதல்-அமைச்சர் விஜய் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.</p>]]></content:encoded></item><item><title>காவல்நிலையம், சிறையில் குற்றவாளிகள் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது: நயினார் நாகேந்திரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nainar-nagendran-questions-custodial-death-in-palani-land-scam-case#comments</comments><guid isPermaLink="false">6f9cf4fb-3eb4-4a34-8833-c8e33d6bf1ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:22:32.376Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்வர்தீன்- நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vr4sj5x0/NainarNagendran0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பழனி நிலமோசடி வழக்கில் தொடரும் மர்மங்கள்!</p><p>பழனியில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன.</p><p>முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?</p><p>த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.</p><p>எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக்காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும். இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மோசடி வழக்கு கடந்து வந்த பாதை</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.</p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக்கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு ஏற்றி சென்ற லாரியை மடக்கிய ஒற்றை யானை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/erode-single-elephant-truck-tasted-sugarcane</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/erode-single-elephant-truck-tasted-sugarcane#comments</comments><guid isPermaLink="false">849d86a3-88b3-4b05-bc3a-616a6eb38881</guid><pubDate>Sat, 08 Aug 2026 11:08:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T11:08:21.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Elephant,sugarcane,Erode,ஒற்றை யானை,கரும்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a9pm9k7b/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a9pm9k7b/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <h2><strong>சத்தியமங்கலம்</strong></h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.</p><p>சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.</p><h2>லாரிகள்</h2><p>இதேபோல் சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் ஒற்றை யானை கரும்பு லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் காய்கறிகளோடு ஏற்றி வரும் லாரிகளை வாசனை பிடித்து வழிமறித்து கரும்பு காய்கறிகளை பறித்து சாப்பிடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.</p><h2><strong>ஒற்றை யானை</strong></h2><p>இந்நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை யானை ஒன்று வனப்பகுதி விட்டு வெளியேறி உலா வந்து கொண்டிருக்கிறது. கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளை தின்று வருகின்றன.</p><h2><strong>போக்குவரத்து பாதிப்பு</strong></h2><p>இந்நிலையில் நேற்று திம்பம் மலைப்பகுதியில் கரும்பு லோடுகளை ஏற்றி வந்த லாரியை அந்த ஒற்றை யானை மடக்கியது இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p><h2><strong>வனத்துறை</strong></h2><p>யானை வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்தினார். பின்னர் அந்த ஒற்றை யானை தும்பிக்கையால் லாரியின் மேற்பகுதியில் இருந்த கரும்பு கட்டிகளை எடுத்து கீழே போட்டு சாவகாசமாக சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்து சென்றது இதன் பிறகு அந்தப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து சீரானது. வனத்துறையினர் தாளவாடி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-and-tomorrow-rain-chance-to-chennai#comments</comments><guid isPermaLink="false">57bc842d-8eca-4461-b081-dac377f22058</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:43:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:43:27.822Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Chennai Rain,சென்னை மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/8fknetyg/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">சென்னை வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><h2><strong>லேசான மழை</strong></h2><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>10-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.</p><p>11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong> </h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று மற்றும் நாளை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை, பூங்காக்களில் இலவச வைபை வசதி செய்ய ஏற்பாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-being-made-to-provide-free-wi-fi-facilities-at-chennai-beaches-and-parks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-being-made-to-provide-free-wi-fi-facilities-at-chennai-beaches-and-parks#comments</comments><guid isPermaLink="false">8e367fee-5349-4457-abac-a766c4c0ffa6</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:29:26 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:29:26.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Beach,சென்னை கடற்கரை,இலவச வைபை வசதி,WIFI facility,வைபை வசதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bu37ihnr/wifi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/bu37ihnr/wifi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.</p><h2><strong>இலவச வைபை வசதி</strong></h2><p>இதன் ஒரு பகுதியாக சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகள், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைப் பகுதிகளிலும், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைபை வசதியினை ஏற்படுத்திட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு உள்ளார். </p><p>இதற்கான சேவை வழங்குநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>ஈரோட்டில் ஆடு மேய்த்த பெண்... இன்று மாவட்ட கலெக்டர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/from-goat-herder-to-district-collector-vanmathis-inspiring-journey#comments</comments><guid isPermaLink="false">01c82450-180a-4021-a2e3-4ef5298bdd0f</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:12:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:12:05.048Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>women empowerment,VanmathiIAS,வான்மதிஐஏஎஸ்,Wardha Collector,UPSC SuccessStory,ஈரோடு சாதனைப்பெண்,Inspirational Story</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanmathi IAS ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/2rj5220y/Vanmathi-IAS?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறு வயதில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படித்து, இன்று தனது கடுமையான உழைப்பால் மகாராஷ்டிர மாநிலத்தின் மாவட்ட ஆட்சியராக உயர்ந்து சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி வான்மதி ஐ.ஏ.எஸ். </p><p>வறுமையைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் கைவிடும் பலருக்கு, இவரது இந்தச் சாதனைப் பயணம் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.</p><h2>ஆடு மேய்த்துக் கொண்டே தொடர்ந்த பள்ளிப் படிப்பு!</h2><p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதியின் தந்தை ஒரு சாதாரண ஓட்டுநர். அவர்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, வான்மதிக்குச் சிறு வயதிலேயே கூடுதல் பொறுப்புகள் சேர்ந்தன. </p><p>தினமும் காலையில் பள்ளிக்குச் சென்று நன்றாகப் படிக்கும் வான்மதி, மாலை பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகளைப் போல விளையாடச் செல்ல மாட்டார். மாறாக, தனது குடும்பத்தின் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார். </p><p>அந்தப் பகுதியிலேயே ஆடுகளை மேய்த்துக் கொண்டே, கையில் புத்தகத்தை வைத்துத் தனது பள்ளிப் படிப்பைத் தீவிரமாகப் படித்து முடித்தார்.</p><h2>திருமணப் பேச்சுகளுக்கு நடுவே முதுகலை பட்டம்!</h2><p>பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வான்மதியின் குடும்பத்தினர் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். </p><p>ஆனால், தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற வான்மதியின் ஆசையை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு உறுதுணையாக நின்றனர். </p><p>இவ்வளவு வறுமைக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று அசத்தினார்.</p><h2>தோல்விகளைத் தாண்டிய UPSC சாதனை!</h2><p>முதுகலை பட்டம் பெற்ற பிறகும் வான்மதியின் கனவு ஓயவில்லை. உயரிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற இலக்கோடு யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார்.</p><p>பல மணிநேர உழைப்பு, ஆரம்பக்கட்ட தோல்விகள் எதற்கும் அவர் தொய்வடையவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில், வான்மதி அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தைப் பிடித்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வானார்.</p><h2>மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்!</h2><p>தேர்ச்சி பெற்ற பின் மகாராஷ்டிர மாநிலப் பிரிவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தின் வர்தா மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுச் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றி வருகிறார்.</p><p>சாதாரண கிராமத்தில் ஆடு மேய்த்த சிறுமி, இன்று நாட்டின் மிக உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் வான்மதியின் இந்த வெற்றிக் கதை, தடைகளை உடைத்துச் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.</p>]]></content:encoded></item><item><title>அதிக அளவில் சீனி சேர்ப்பு: உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் 5 பேருக்கு ரூ.38 கோடி அபராதம்..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/excess-sugar-mixing-udangudi-karupatti-traders-fined-rs-38-crore#comments</comments><guid isPermaLink="false">173753bf-7da9-4f95-b98e-0c2ec9e3cad9</guid><pubDate>Sat, 08 Aug 2026 10:01:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T10:01:19.261Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udangudi Karupatti,உடன்குடி கருப்பட்டி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடன்குடி கருப்பட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/a4b32by2/Karupatti.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"கற்பகத்தரு" என்று அழைக்கப்படும் பனையில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்றனர். பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் உடன்குடி பகுதியில் பலரும் பனைத்தொழிலில் ஆர்வமுடன் ஈடுபட்டு கருப்பட்டி தயாரித்து விற்கின்றனர்.</p><p>பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்துள்ளது. எனினும் அவற்றை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யும்போது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.</p><h2>சீனி மூட்டைகள் விற்பனை அதிகம்</h2><p>ஆனால் பதநீரில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பனை பொருட்களை சில்லறையில் விற்பனை செய்தால் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் உடன்குடி பகுதியில் ஆய்வு செய்தனர்.</p><h2>ஜி.எஸ்.டி. மோசடி</h2><p>இதில், உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்ததும், பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.</p><p>மேலும் சீனி கலந்து தயாரித்த கருப்பட்டிகளை அசல் கருப்பட்டி என்று கூறி கடைகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையிலும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். இதன் மூலம் சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படாமல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.</p><h2>ரூ.38 கோடி அபராதம்</h2><p>இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறைகேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை- முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/delimitation-issue-meeting-of-mps-from-all-parties-led-by-chief-minister-vijay-has-begun#comments</comments><guid isPermaLink="false">02f9f9eb-dbe4-40ff-bd6b-75cf2a72d199</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:40:25 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:40:25.378Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,MPs Meeting,எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c82yj883/Vijay06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.</strong></em></p><p>நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  </p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out">தொகுதி மறுவரையறையின்</a> போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் தலைமையில்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/q94c6j9k/vijay.jpg" /></figure><h2><strong>புறக்கணிப்பு</strong></h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p><h2><strong>கூட்டம்</strong></h2><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று மதியம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது</p><h2><strong>பங்கேற்பு</strong></h2><p>த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து  கொண்டனர்.</p><h2><strong>ம.தி.மு.க.</strong></h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல் சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 4 மேல் சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>திருவண்ணாமலை கோவிலில் கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்- போலீசார் தீவிர விசாரணை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/young-men-filmed-using-a-secret-camera-hidden-in-eyeglasses-at-the-tiruvannamalai-temple#comments</comments><guid isPermaLink="false">d452c51b-d0f1-45e0-90ba-8fe83c01cdba</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:22:32 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:22:32.105Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,திருவண்ணாமலை கோவில்,Tiruvannamalai temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ கண் கண்ணாடி ரகசிய கேமராவில் படம் பிடித்த வாலிபர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/vwlrq7l8/Tiruvannamalai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வாலிபர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.</strong></em> </p><h2><strong>அமித்ஷா வருகை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/திருவண்ணாமலை-கோவில்">திருவண்ணாமலை</a> அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா இன்று மாலை வருகை தர உள்ளார். இதனால் திருவண்ணாமலை மாநகர் மற்றும் கோவில் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. </p><h2><strong>பாதுகாப்பு பணி</strong></h2><p>இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற வாலிபர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோவிலில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தனர். மேலும் சாமி சன்னதி முன்பு சந்தேகப்படும் படியாக நின்றனர். கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். </p><p>வாலிபர்கள் அருகே சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபர்களை சோதனை செய்தனர். </p><p>அவர்கள் அணிந்திருந்த கண் கண்ணாடியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது தெரிந்தது. அதனை ஆய்வு செய்து பார்த்தபோது பாதுகாப்பு பணிகளை மீறி கோவிலில் படம் பிடித்தது தெரியவந்தது.  பின்னர் அந்த கேமரா பொருத்திய கண் கண்ணாடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.</p><p>இந்த சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>கல்விக்கான ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைப்பு: அரசு பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/education-allocation-reduced-to-one-third-in-25-years-anbumani-ramadoss#comments</comments><guid isPermaLink="false">478d859b-cee7-4151-9df2-11b381faa1c9</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:08:13 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:08:13.687Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/78u35kap/AnbumaniRamadosss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறதா, உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் பங்காக குறைக்கப்பட்டிருக்கிறது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.</p><p>இந்தியாவில் கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட தவுலத் சிங் கோத்தாரி தலைமையில் 1964-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஆணையம், 1966-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 6% என்ற அளவை எட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது இந்தியாவில் கல்விக்கான அரசின் செலவு சுமார் 3% என்ற அளவிலும், தமிழ்நாட்டில் அதை விட சற்றுக் கூடுதலாகவும் இருந்தது.</p><p>கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கல்விக்கான அரசின் செலவுகள் குறித்த இலக்கு இன்று வரை எட்டப்படவில்லை. மாறாக, கல்விக்கான அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகின்றன. கல்வியில் சிறந்த மாநிலம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது.</p><p>புத்தாயிரமாண்டின் தொடக்கமான 2000-01-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பார்த்தால் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் ஒரு பங்காக குறைந்திருக்கிறது. 2000-01 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி ஆகிய இரு அமைச்சகங்களும் ஒன்றாக இருந்தன. அப்போது கல்வித்துறைக்கு ரூ.4,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அன்றைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.1,26,099 கோடியில் 3.92% ஆகும்.</p><h2>2010-11-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>அடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2010-11ஆம் ஆண்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்றில் இரு பங்காக குறைக்கப்பட்டு விட்டது. 2010-ஆம் ஆண்டில் கல்வித்துறை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுக்கு முறையே ரூ.10,148 கோடி, ரூ.1751 கோடி என மொத்தம் ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது. இது அந்த ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பான ரூ.4,50,474 கோடியில் 2.64% ஆகும்.</p><h2>2020-21-ம் ஆண்டுகளில் எவ்வளவு ஒதுக்கீடு</h2><p>மேலும் 10 ஆண்டுகள் கழித்து 2020-21ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.34,181.73 கோடி, உயர்கல்விக்கு ரூ.5052.84 கோடி என மொத்தம் ரூ.39,233 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ரூ.17,88,074 கோடியாக தமிழகத்தின் பொருளாதாரம் அப்போது வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதில் கல்விக்கு 2.19% மட்டுமே ஒதுக்கப்பட்டது.</p><p>புத்தாயிரமாண்டின் கால் நூற்றாண்டு முடிவடைந்து விட்ட நிலையில், 2026-27ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.44,527 கோடி, உயர்கல்விக்கு ரூ.8393 கோடி என மொத்தம் ரூ.52,920 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்தி ரூ.40,67,312 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இந்த ஒதுக்கீடு மிக மிகக் குறைவு ஆகும்.</p><h2>3.92 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு 1.30 சதவீதமாக குறைப்பு</h2><p>2000-ஆம் ஆண்டில் 3.92% ஆக இருந்த கல்விக்கான ஒதுக்கீடு இப்போது 1.30% ஆக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% அளவுக்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தால், கல்வித்துறைக்கு மட்டும் ரூ.1,59,439 கோடி நிதி கிடைத்திருக்கும். ஆனால், இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, அதை விட ரூ.1,06,519 கோடி குறைவு ஆகும்.</p><p>பரிந்துரை வழங்கிய கோத்தாரியோ, ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனோ இப்போது இருந்திருந்தால், இந்த நிலையைக் கண்டு வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள். இந்த அவல நிலைக்கு தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த, ஆட்சி செய்யும் அனைத்துக் கட்சிகளும்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.</p><p>ஓர் அரசோ, ஒரு சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவதுதான். அதற்காகத்தான் காமராசர் காலத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் அரசு பள்ளிகள் அறிவுத் திருக்கோயில்களாக திகழ்ந்தன.</p><h2>அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு</h2><p>ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் வாயிலாக, அரசாங்க பள்ளிகளில் ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2015-16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது, 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது.</p><p>கல்வித்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும், அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை இந்த புள்ளி விவரங்களின் மூலம் அறிய முடியும். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பள்ளிக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதனால் கல்வித்தரம் உயரும்; அதன் காரணமாக மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஆனால், கல்விக்கான நிதி குறைக்கப்படுவதால் தான் அரசு பள்ளிகள் மிக வேகமாக சீரழிந்து வருகின்றன.</p><h2>தனியார் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு</h2><p>இதே காலகட்டத்தில் பார்த்தால், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 62.03 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியில் தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத் தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.</p><p>அரசு பள்ளிகள் தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் குறைந்தது வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.  இதற்காக கலவித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3% என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கணக்கு பாடங்களின் தலைப்புகள் மாற்றம்: இனி கதைகள் வழியே கணித பாடம்!- அமைச்சர் ராஜ்மோகன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-math-curriculum-storytelling-rajmohan#comments</comments><guid isPermaLink="false">9f81d42c-e9aa-4a14-b835-f4154137958e</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:07:33 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:07:33.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mathematics lesson,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan,Mathematic Stories,கணித பாடம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/lmnqxytq/RAJMOHAN.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பள்ளி மாணவர்களுக்குக் கணித பாடத்தின் மீதான அச்சத்தைப் போக்கி, சுலபமாகக் கற்றுக் கொடுக்கும் வகையில் கணித பாடங்களின் தலைப்புகளை மாற்றவும், கதைகள் வழியே கணிதத்தைக் கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.</p><h2>த<strong>லைப்புகள் மாற்றம்</strong></h2><p>மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆர்வம் தூண்டும் வகையிலும் கணித பாடப்புத்தகங்களிலுள்ள சிக்கலான தலைப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.</p><h2><strong>கதைகள்</strong> வழியே கணக்கு</h2><p>உலர்வான சூத்திரங்களாக இல்லாமல், கதைகளின் ஊடே கணிதக் கருத்துகளை விவரிக்கும் (Story-based Learning) புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.</p><h2><strong>ஆசிரியர்களுக்கான</strong> புதிய வழிகாட்டுதல்</h2><p> புதிய புத்தகங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்கத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.</p><h2>கற்றல் திறன் <strong>மேம்பாடு</strong></h2><p>தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணக்குப் பாடத்தைப் பற்றிய பயத்தை நீக்கி, அவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிந்தனைத் திறனை இயல்பாகவே வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.</p><p>மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கணிதத் கருத்துகளைப் பிணைத்துப் புரிந்து கொள்ளவும், மகிழ்ச்சியான சூழலில் பாடங்களைக் கற்கவும் இந்த புதிய பாடத்திட்ட மாற்றம் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>55 அடி உயர பனை மரத்திற்கு படிக்கட்டு அமைத்த தூத்துக்குடி இளைஞர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-builds-safe-access-on-55-feet-palm-tree-for-palm-industry#comments</comments><guid isPermaLink="false">94da7efc-976b-44b8-ac80-539dd32679b9</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:03:03 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:03:03.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தூத்துக்குடி,Thoothukudi,PalmTree,பனைமரம்,இரும்புபடிக்கட்டு,YouthInnovation,PalmTree Innovation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/gh7a9n4c/PalmTree-YouthInnovation" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PalmTree Innovation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/gh7a9n4c/PalmTree-YouthInnovation?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பனைத் தொழில் செய்யும் இளைஞர் ஒருவர் 55 அடி உயர பனை மரத்திற்கு ரூ. 60000 செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்து அசத்தியுள்ளார்.</p><p>பனைத் தொழிலைப் பாதுகாக்கவும், ஆபத்துகளைக் குறைக்கவும் அந்த இளைஞர் மேற்கொண்டுள்ள இந்த நூதன முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p><h2><strong>ரூ.60,000 செலவில் இரும்பு வளைவு படிக்கட்டு!</strong></h2><p>தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பனை மரத்தைத் தேர்ந்தெடுத்த தினகர், அதற்குப் பிரத்யேகமாக இரும்பு படிக்கட்டுகளை வடிவமைத்துள்ளார்.</p><p>இரும்பு கம்பிகளைக் கொண்டு, மரத்தைச் சுற்றிலும் வளைவு வடிவில் பாதுகாப்பான முறையில் இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>இந்த படிக்கட்டுகளின் வழியாக மிகவும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பனை மரத்தின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும்.</p><p>இதற்காக அந்த இளைஞர் தனது சொந்தப் பணத்திலிருந்து சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.</p><h2><strong>குவியும் பாராட்டுகள்!</strong></h2><p>நவீனத் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும், அழியாமல் இருக்கும் தங்களது பாரம்பரியப் பனைத் தொழிலைக் கைவிடாமல், அதனைப் பாதுகாக்கும் நோக்கில் இளைஞர் தினகர் செய்துள்ள இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் பரவிப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.</p><p> "அறிவியல் வசதிகளைப் பயன்படுத்திப் பாரம்பரியத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதற்கு இந்த இளைஞரின் முயற்சியே சாட்சி" என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை திடீரென ஏன் இப்படி உயருது?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/why-is-the-price-of-gold-suddenly-rising-like-this#comments</comments><guid isPermaLink="false">07fcfdce-d802-40d1-80ae-af04e7469ff4</guid><pubDate>Sat, 08 Aug 2026 09:00:22 +0000</pubDate><atom:updated>2026-08-08T09:00:22.013Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4pjzk3rb/gold06.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/4pjzk3rb/gold06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நகை வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுப காரியங்களுக்கான தேவைகள் மற்றும் திட்டமிட்ட நகைக் கொள்முதலுக்கு இதுவே ஏற்ற சூழலாகப் பார்க்கப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொடுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் பெரிய மாற்றமின்றி விற்பனையானது. </p><p>இதனிடையே, நேற்று காலை விலையில் மாற்றமின்றி விற்பனையான தங்கம், மாலையில் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><p>அதனை தொடர்ந்து இன்று காலையும் தங்கம் விலை உயர்ந்தது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,965-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 720-க்கும் விற்பனையாகிறது. </p><p>ஆபரணத் <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-8-8-2026">தங்கம்</a> கடந்த 7 தினங்களில் ரூ.6,000 அளவில் அதிகரித்துள்ளது. சவரன் விலை இப்போது ரூ.1.12 லட்சத்தை நெருங்கிவிட்டது. </p><h2><strong>காரணம்</strong></h2><p>சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.14 ஆக உள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் சற்று தணிந்துள்ளதும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் தங்கம் விலை மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>நகை வாங்குவோருக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுப காரியங்களுக்கான தேவைகள் மற்றும் திட்டமிட்ட நகைக் கொள்முதலுக்கு இதுவே ஏற்ற சூழலாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-grab-case-charges-framed-against-former-minister-ma-subramanian#comments</comments><guid isPermaLink="false">02af5f8c-602f-4300-b637-9863fb95bcd4</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:58:16 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:58:16.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,சென்னை ஐகோர்ட்,Ma Subramanian,மா சுப்பிரமணியன்,நில அபகரிப்பு வழக்கு,land grab case</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/17/14409678-masu1706.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ma Subramanian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/06/17/14409678-masu1706.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மா.சுப்ரமணியன்</h2><p>சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81">நிலத்தை</a>, முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்து உள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">ஐகோர்ட்டில்</a> வழக்கு தொடர்ந்திருந்தார்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>வழக்கை விசாரித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுசதி, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக தள்ளி வைக்கப்பட்டது.</p> <p>இந்த நிலையில் சிறப்பு கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்து கூறினார்.</p><p>இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மறுப்பதாகவும் இது முற்றிலும் தவறு எனவும் தெரிவித்தனர்.</p><p>இதனையடுத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணை வருகிற 31-ந்தேதிக்கு நடைபெறும் என்று கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய ரோஜா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/actress-roja-kavadi-at-thiruttani-murugan-temple#comments</comments><guid isPermaLink="false">df359d8f-1997-418d-87e5-34abccacfefc</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:40:02 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:40:02.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,roja,kavadi,ரோஜா,காவடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Roja]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/1npfqz7e/roja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகையும், அரசியல்வாதியுமான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE">ரோஜா</a> முருகனின் தீவிர பக்தை ஆவார்.</p><h2>நேர்த்திக்கடன்</h2><p>அடிக்கடி திருத்தணி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆடி கிருத்திகையின் போது ஒவ்வொரு ஆண்டும் காவடி சுமந்து சாமியை வழிபடுவார். கடந்த 14 வருடங்களாக காவடி எடுத்து வந்து ரோஜா நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.</p> <h2>காவடி</h2><p>அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு நடிகை ரோஜா காவடி எடுத்து வந்தார். பக்தி பரவசத்துடன் ‘முருகனுக்கு அரோகரா அரோகரா’ என்ற பக்தி கோஷத்துடன் காவடியை சுமந்தபடி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. </p> <h2>திருத்தணி முருகன் கோவில்</h2><p>ரோஜா காவடி எடுத்து வந்த காட்சிகளை கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் செல்போனில் படம் பிடித்தனர். ரோஜா காவடி எடுத்தது குறித்து அவரது கணவரும் இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ரோஜா முருகனின் தீவிர பக்தர் ஆவார். கடந்த 14 ஆண்டுகளாக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருத்தணி முருகன் கோவிலில் </a>காவடி எடுத்து தரிசனம் செய்து வருகிறார். அதுபோல் இந்த ஆண்டும் திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>TNEA : இன்ஜினியரிங் கவுன்சிலிங் ரவுண்ட் 2 ரிசல்ட்! அடுத்து மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tnea-2026-engineering-admission-round-2-results-and-next-steps#comments</comments><guid isPermaLink="false">4a4d9975-f3f1-4cce-9409-0a3fc14b6577</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:38:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:38:47.811Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Engineering Counseling,tnea,TNEA 2026,இன்ஜினியரிங் சேர்க்கை,இன்ஜினியரிங் கவுன்சிலிங்,டிஎன்இஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Engineering Counseling  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pnwpabxw/engineering.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இரண்டாம் சுற்று கலந்தாய்வின் தற்காலிக ஒதுக்கீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்ய மாணவர்களுக்கு 5 வெவ்வேறு தேர்வுகள் வழக்கம் போல் வழங்கப்பட்டுள்ளன. கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, 'Accept and Upward' (ஏற்றுக்கொண்டு மேல்நோக்கி நகர்தல்) ஆப்ஷனைத் தேர்வு செய்வதற்கு முன் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள்:</p><h2>யார் 'அக்செப்ட் அண்ட் <strong>அப்வர்ட்' தேர்வு செய்யக் கூடாது?</strong></h2><p>உங்களின் சாய்ஸ் ஃபில்லிங் பட்டியலில், தற்போது கிடைத்த கல்லூரிக்கு மேலே உள்ள கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்க விருப்பமில்லை என்றால் அப்வர்ட் தேர்வு செய்யக் கூடாது. அப்வர்ட் தேர்வில் மேல்வரிசையில் உள்ள கல்லூரிகளில் ஏதேனும் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டால், தற்போது கிடைத்துள்ள சீட் தானாகவே ரத்தாகிவிடும்.</p><h2>கட் ஆ<strong>ஃப் சாத்தியக்கூறு இல்லாதபோ</strong>து</h2><p>உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு மேலே நீங்கள் குறிப்பிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகத் தெரிந்தால் அப்வர்ட் கொடுப்பதைத் தவிர்க்கலாம். தற்போது ஒதுக்கப்பட்ட கல்லூரியின் கட்டண விவரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை உங்களுக்கு முழு திருப்தியளித்தால், அதை அப்படியே 'Accept and Join' செய்து உறுதிப்படுத்துவதே பாதுகாப்பானது.</p><h2>Ac<strong>cept &amp; Upward தேர்வு செய்தவர்களுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள்</strong></h2><p>1. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, '5 நாட்களுக்குள்' அருகிலுள்ள TNEA உதவி மையத்திற்குச் சென்று நேரில் சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்.</p><p>2.TFC மையத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதுடன் ரூ. 25,000 முன்பணக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.</p><p>3. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, 5 நாட்களுக்குள் உங்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிடப்படும்.</p><p>4. இறுதி ஒதுக்கீட்டு ஆணை கிடைத்த 7 நாட்களுக்குள் குறிப்பிட்ட கல்லூரிக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும்.</p><h2>TFC <strong>மையத்தில் சமர்</strong>ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்</h2><p>* TNEA தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை (Tentative Allotment Order)</p><p>* 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets)</p><p>* மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate -TC)</p><p>* சாதிச் சான்றிதழ் (Community Certificate)</p><p>* முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate - பொருந்துமாயின்)</p><p>* வருமானச் சான்றிதழ் (Income Certificate)</p><p>* மாணவரின் வங்கி கணக்கு புத்தக நகல் (Bank Passbook)</p><p>* பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்</p><p>* சேர்க்கைக் கட்டணம் (ரூ. 25,000)</p><p>மாணவர்கள் தங்களது சாய்ஸ் லிஸ்ட்டை மீண்டும் ஒருமுறை கவனமாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கும் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/twenty-allied-mps-attend-vijay-delimitation-consultation#comments</comments><guid isPermaLink="false">a7ec8c39-dea5-4ba5-905e-2f9011978499</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:31:05 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:31:05.682Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,TN MPs,tvk,தமிழக எம்பிக்கள் கூட்டம்,தவெக ஆதரவு எம்பிக்கள்,TVK support</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/qw611etl/TN-CM-Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் தொகுதி  மறுவரையறை காரணமாக தமிழகம் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.</p><p>கடந்த தி.மு.க. ஆட்சியிலும் தொகுதி மறுவரையறையின்போது தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப் டக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சி களும் குரல் கொடுத்தன.</p><h2>முதலமைச்சர் விஜய் தலைமையில்..</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று  மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. </p><p>இதன்படி இந்த கூட்டம் இன்று நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையால் தமிழக எம்.பி. தொகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது.</p><p>இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? என்பது பற்றி நேற்று சட்டமன்றத்தில் த.வெ.க. அமைச்சர்களும் கேள்வி எழுப்பினார்கள். </p><h2>புறக்கணிப்பு</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன.</p><p>தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதேபோன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது.</p><p>தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று உள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை. </p><h2>பங்கேற்பு</h2><p>அதே நேரத்தில் த.வெ.க. ஆதரவு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் முதலமைச்சர் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 3 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட 12 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், இந்திய கம்யூ னிஸ்டு கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்களும், மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் இருவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.</p><h2>ம.தி.மு.க.</h2><p>ம.தி.மு.க. சார்பில் துரை வைகோ எம்.பி.யாக உள்ளார். மேல்சபை எம்.பி.யான இவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.பி.யும் விஜய் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதன் மூலம் த.வெ.க. ஆதரவு எம்.பி.க்கள் 20 பேர் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.</p><p>தமிழகத்தில் மொத்தம் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளையும் சேர்த்து 57 பேர் உள்ளனர்.  இவர்களில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.</p><p>தி.மு.க.வில் 8 மேல் சபை எம்.பி.க்களும், 20 மக்களவை எம்.பி.க்களும் உள்ளனர்.</p><p>அ.தி.மு.க.வுக்கு 4 மேல்சபை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… எந்தெந்த ரெயில்கள் ரத்து?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/changes-in-rapid-suburban-train-services-for-renovation-work-at-chennai-egmore#comments</comments><guid isPermaLink="false">001622d1-319d-42e8-b1e8-72dde41a5e5e</guid><pubDate>Sat, 08 Aug 2026 08:26:39 +0000</pubDate><atom:updated>2026-08-08T08:26:39.116Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,electric train,மின்சார ரெயில்,ரெயில் சேவை,train service,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/23r9a3bi/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><h2>பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு</h2><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. புதிய இரும்பு நடைமேம்பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் காரணமாக பாதுகாப்பு மற்றும் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில், சென்னையில் இரவு நேர புறநகர் ரெயில்களை நம்பி பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளால் ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சில ரெயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுகின்றன. </p><h2>இரவு நேர ரெயில்கள் ரத்து</h2><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 24, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் (வார நாட்களில்) இரவு 11:20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே பகுதிநேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11.20, 11:40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 23. 30 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>இந்த மாற்றங்கள் இரவு நேர பணிகளை முடித்து வீடு திரும்புவோர், தாம்பரம் வழித்தட பயணிகள் மற்றும் அதிகாலை ரெயில்களை பயன்படுத்துவோரை பாதிக்கக்கூடும் என்பதால், மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>எழும்பூர் ரெயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதற்காக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 60% வரை உயரும் நில வழிகாட்டி மதிப்பு: அரசு அதிரடி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/land-guideline-value-in-tamil-nadu-hiked-by-up-to-60-percent#comments</comments><guid isPermaLink="false">75eca9f8-3ac5-4b67-acbd-c74b15b3a7eb</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:33:21 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:33:21.492Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,நில வழிகாட்டி மதிப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/jtxf0pbw/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</strong></em></p><p>தமிழகத்தில் மனைப் பிரிவுகள், விவசாய நிலங்கள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், பல பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-அரசு">அரசு</a> பதிவுத் துறையின் நில வழிகாட்டி மதிப்பு தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.</p><p>இந்த இடைவெளியைச் சரிசெய்யும் வகையில், தமிழக அரசு சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக மாநிலம் முழுவதிலும் உள்ள நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>கிராமவாரியாக பட்டியல் தயாரிப்பு</strong></h2><p>வருவாய்க் கிராமங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற சொத்துப் பதிவுகள் மற்றும் சந்தை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.</p><p>ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பதிவாளர் தலைமையில், மண்டல வாரியாகக் கிராமங்களின் நில விவரங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><p>உள்கட்டமைப்பு வளர்ச்சி அடைந்த பகுதிகள், புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் மெட்ரோ/தொழில்நுட்பப் பூங்காக்கள் அருகில் உள்ள கிராமங்களில் நில மதிப்பு அதிகபட்சமாக 60 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.</p><h2><strong>இந்த உயர்வால் ஏற்படும் மாற்றங்கள்</strong></h2><p>சொத்துப் பதிவு மூலம் கிடைக்கும் முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகரிக்கும் என்பதால், அரசின் வருவாய் கணிசமாக உயரும்.</p><p>நிலத்தின் உண்மையான சந்தை மதிப்புக்கும் பதிவு மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு குறைவதால், சொத்து வாங்குவதில் நிலவும் முறையற்றப் பணப் பரிவர்த்தனைகள் குறையும்.</p><p> அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வதால், வங்கிகளில் நிலத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் கடன் தொகையின் வரம்பு அதிகரிக்கும்.</p>]]></content:encoded></item><item><title>சமநீதியும், சமூகநீதியும் கிடைக்க செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்! - புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-to-new-judges-may-your-work-excel-in-ensuring-equal-justice-and-social-justice#comments</comments><guid isPermaLink="false">b8da7410-2d9c-4af9-bc69-81ece2bf0759</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:28:27.480Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Madras High Court,சென்னை ஐகோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3swxby2k/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</strong></em></p><p>இதுதொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p> <p>இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D">சென்னை உயர்நீதிமன்றத்திற்குப்</a> புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே.முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவீக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி.சுமதி, எஸ்.அல்லி, சி.திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். </p> <p>நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறுபான்மையினர் நலன் காக்க FCRA மசோதாவை திரும்பப் பெற வேண்டும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-demands-withdrawal-of-fcra-bill-to-protect-minorities#comments</comments><guid isPermaLink="false">1aee2b18-194f-4f59-b241-c1ce431998cf</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:08:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:08:45.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,FCRA Bill,எப்சிஆர்ஏ மசோதா,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/e8rbnfl8/mks.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை))சட்ட மசோதாவை திரும்பப் பெற, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை தேவை என்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மசோதாவை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-  </p><p>நமது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தலைமையிலான சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள் குழுவும், இந்தியாவில் உள்ள பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த உயர்மட்ட மதத் தலைவர்களும், 6.8.2026 அன்று  உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.</p><p>மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், FCRA-வின் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் அல்லது வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுடன்  நாடாளுமன்ற கூட்டுகுழுவிற்குப் பரிந்துரைக்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.</p><p>முன்மொழியப்பட்ட இந்த மசோதாவின் நீண்டகால விளைவுகள் காரணமாக, அதன் விதிகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.</p><p>சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பருவகாலக் கூட்டத்தொடரில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழக மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரும்: உத்தேச பட்டியல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-lok-sabha-constituencies-may-increase-from-39-to-59-under-delimitation-draft-list-out#comments</comments><guid isPermaLink="false">c0ae8cb2-08ff-454b-8bda-eec9e8cdf26a</guid><pubDate>Sat, 08 Aug 2026 07:04:19 +0000</pubDate><atom:updated>2026-08-08T07:04:19.481Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தொகுதி மறுவரையறை,Delimitation,முதலமைச்சர் விஜய்,TamilNadu LokSabha,தமிழக மக்களவை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delimitation TamilNadu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/m9b2qu52/tamiklnadu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற தொகுதி எல்லைகளை மக்கள் தொகை அடிப்படையில் மாற்றி அமைக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டின் தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>தொகுதி மறுவரையறை</strong></h2><p>நடைபெற்று வரும் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட இருப்பதால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2><strong>நாடு தழுவிய இடங்கள் உயர்வு</strong></h2><p>தற்போதைய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. மறுவரையறைக்குப் பிறகு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><h2><strong>தமிழகம் எதிர்ப்பு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership">தொகுதி மறுவரையறை</a> சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், நாடு முழுவதும் தற்போதுள்ள 543 தொகுதிகள் 850 ஆக உயரும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், 59 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஆனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு இதைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>மக்கள் <strong>தொகை</strong> கட்டுப்பாடு</h2><p>தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடந்த சில தசாப்தங்களாக குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன.</p><h2>அரசியல் <strong>கட்சிகளின்</strong> நிலைப்பாடு</h2><p>இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><h2>எம்பிக்கள் <strong>ஆலோசனை</strong> கூட்டம்</h2><p>இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க தமிழக எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டியுள்ளார். ஆனால், இந்த கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகள் 59 ஆக உயரும். அவ்வாறு உயர்ந்தால் என்னென்ன பெயர்களில் மக்களவை தொகுதிகள் இருக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.</p><h2><strong>உத்தேச 59 மக்களவை தொகுதிக</strong>ளின் பட்டியல்</h2><p>புதிய மறுவரையறை திட்ட வரைவின்படி அமையக்கூடிய உத்தேச 59 தொகுதிகள் இதோ:</p><p>1. திருத்தணி</p><p>2. திருவள்ளூர்</p><p>3. சென்னை வடக்கு</p><p>4. சென்னை கிழக்கு</p><p>5. சென்னை மத்திய</p><p>6. சென்னை தெற்கு</p><p>7. சென்னை மேற்கு</p><p>8. தாம்பரம்</p><p>9. செங்கல்பட்டு</p><p>10. காஞ்சிபுரம்</p><p>11. வேலூர்</p><p>12. திருப்பத்தூர்</p><p>13. ராணிப்பேட்டை</p><p>14. திருவண்ணாமலை</p><p>15. வந்தவாசி / ஆரணி</p><p>16. திண்டிவனம்</p><p>17. விழுப்புரம்</p><p>18. கள்ளக்குறிச்சி</p><p>19. கடலூர்</p><p>20. சிதம்பரம்</p><p>21. ஓசூர்</p><p>22. கிருஷ்ணகிரி</p><p>23. தர்மபுரி</p><p>24. சேலம்</p><p>25. மேட்டூர்</p><p>26. ராசிபுரம்</p><p>27. நாமக்கல்</p><p>28. ஈரோடு</p><p>29. கோபிசெட்டிபாளையம்</p><p>30. திருப்பூர்</p><p>31. தாராபுரம் / பழனி</p><p>32. பொள்ளாச்சி</p><p>33. கோவை கிழக்கு</p><p>34. கோவை மேற்கு</p><p>35. நீலகிரி</p><p>36. கரூர்</p><p>37. பெரம்பலூர்</p><p>38. அரியலூர் / லால்குடி</p><p>39. திருச்சிராப்பள்ளி</p><p>40. தஞ்சாவூர்</p><p>41. கும்பகோணம்</p><p>42. மயிலாடுதுறை</p><p>43. நாகபட்டினம்</p><p>44. திருவாரூர்</p><p>45. புதுக்கோட்டை</p><p>46. சிவகங்கை</p><p>47. ராமநாதபுரம்</p><p>48. தூத்துக்குடி</p><p>49. திருச்செந்தூர்</p><p>50. திருநெல்வேலி</p><p>51. நாங்குநேரி / கன்னியாகுமரி</p><p>52. கன்னியாகுமரி / நாகர்கோவில்</p><p>53. தென்காசி</p><p>54. சிவகாசி</p><p>55. விருதுநகர்</p><p>56. தேனி</p><p>57. மதுரை கிழக்கு</p><p>58. மதுரை மேற்கு</p><p>59. திண்டுக்கல்</p><p>மறுவரையறை ஆணையத்தின் இறுதி முடிவுகள் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு பின்னரே இறுதி வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>லிப்ட் வசதி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய பணிகள் தாமதத்தால் மக்கள் அவதி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/public-inconvenienced-by-delays-in-gummidipoondi-railway-station-works#comments</comments><guid isPermaLink="false">9b292d33-8d23-4e71-bea6-1b475d303d87</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:57:04 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:57:04.253Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்,மறுசீரமைப்பு பணி,Gummidipoondi Railway Station</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/k2blz18l/gummidipoondi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சுமார் ரூ.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>மேம்பாட்டு பணிகள்</strong></h2><p>அவ்வாறு புதுப்பிக்கப்படும் போது ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகளை இணைத்தப்படி பஜார் பகுதியில் இருந்து சிப்காட் பகுதியான பைபாஸ் சாலைக்கு லிப்ட் வசதியுடன் கூடிய புதிய நடைமேம்பாலம், பிரமாண்டமான நுழைவு வாயில் கட்டிடங்கள், எக்ஸ்லேட்டர் மற்றும் 4 வாகன நிறுத்துமிடங்கள் என பல்வேறு அடிப்படை வசதிகள்  அமைய உள்ளது.</p><p>இந்த திட்டத்திற்கான  பூமி பூஜை கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய வளாகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அதன் பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி  பிரதமர் மோடி இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை காணொலி வாயிலாக நாட்டினார். </p><p>இதில்  ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். அந்த நிகழ்வின் போது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில்  <a href="https://www.maalaimalar.com/topic/கும்மிடிப்பூண்டி-ரெயில்-நிலையம்">கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம்</a> புதுப்பிக்கும் பணி முழுமையாக நிறைவடைந்து சேவைகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வரும் என மண்டல ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.</p><h2><strong>75 சதவீத பணிகள்</strong></h2><p>ஆனால் அந்த பணியில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் இந்த திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் திட்டவட்டமாக  தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை 75 சதவீத பணிகள் கூட நிறைவு பெறாத நிலையே தொடர்கிறது.</p><p>மேலும், கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வந்தால் செங்குத்தான படிகளில் ஏறி தான் 1, 2, 3, 4 ஆகிய பிளாட்பரங்களுக்கு செல்லவேண்டிய சூழல் உள்ளது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் வயதான பயணிகள் கால்கடுக்க படிகளில் ஏறி இறங்க வேண்டிய அவல நிலை உள்ளது. </p><p>கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து ரெயில் நிலையத்திற்குள் வருகிற பயணிகள் வசதிக்காகவும்,  ரெயில் நிலையத்திற்குள் நுழைய ஏதுவாக எந்த ஒரு லிப்ட் வசதியும் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையம் மேம்படுத்தும் இந்த சமயத்தில் லிப்ட் வசதியை ரெயில்வே நிர்வாகம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><h2><strong>ஆமை வேகத்தில்</strong></h2><p>ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆமை வேகத்தில் பல வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருவதால் தினமும் புறநகர் மின்சார ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அம்ரித் பாரத் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து பணிகளையும், உடனடியாக நிறைவேற்றி தாம்பரம் ரெயில் நிலையம் போல கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திர மற்றும் வடமாநிலங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரெயில்களை நின்று செல்லவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் -  திமுக தலைமைக்கு கடிதம் எதுவும் அரசு அனுப்பவில்லை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-all-party-mps-meeting-government-not-send-any-letter-to-dmk-leadership#comments</comments><guid isPermaLink="false">a425184a-ebe9-41fa-b647-f857a1efacac</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:31:47 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:31:47.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3fexkhs0/annaarivalayam1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/3fexkhs0/annaarivalayam1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting">தி.மு.க.</a>, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் புறக்கணித்து உள்ளன. </p> <h2>கனிமொழி</h2><p>இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது என்றும் தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p> <h2>அதிமுக</h2><p>அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று பா.ம.க.வும் விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக கூறி உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. வழங்கப்பட்டு உள்ளது. எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இன்று டெல்லியில் இருப்பதாகவும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியூரில் இருக்கிறார். அதனால் அவரும் பங்கேற்கவில்லை.</p> <h2>திமுக தலைமை</h2><p>இந்நிலையில், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விவகாரத்தில் திமுக தலைமைக்கு அரசு தரப்பில் கடிதம் எதுவும் எழுதவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.</p><p>எம்.பி.க்களுக்கு மட்டும் அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், பலருக்கும் அது நேற்று மாலை தான் சென்று சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. </p><p>திமுக தலைமை சொல்லாமல் நாங்கள் எப்படி கலந்து கொள்ள முடியும்? என அக்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு! இன்றும், நாளையும் கைரேகை பதிவு சிறப்பு முகாம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-ration-shops-ekyc-fingerprint-camp-august-8-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-ration-shops-ekyc-fingerprint-camp-august-8-9-2026#comments</comments><guid isPermaLink="false">ba37e119-0633-4a20-932a-45b1e06f67bd</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:27:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:27:49.954Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>special camp,Ration Card,சிறப்பு முகாம்,Fingerprint,கைரேகை பதிவு,ரேஷன் கார்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/brsam5hs/finger-print.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Finger print]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/brsam5hs/finger-print.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்  இன்றும், நாளையும் இகேஒய்சி (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.</p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-</p><h2>கைவிரல் ரேகை</h2><p>தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகைஅடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. </p><h2>2 நாட்களுக்கு முகாம்</h2><p>அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 (இன்று) மற்றும் 09.08.2026 (நாளை) ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.</p><h2>கைரேகை பதிவு</h2><p>ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் (eKYC) பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை! பிரபலங்களுக்கும் கட்டுப்பாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples#comments</comments><guid isPermaLink="false">a5744571-42a4-4d02-83a5-f23b567e72b8</guid><pubDate>Sat, 08 Aug 2026 06:01:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T06:01:34.164Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Temples,கோவில்கள்,இந்து சமய அறநிலையத்துறை,CELLPHONES,செல்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/85yj38ic/temple.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/85yj38ic/temple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.</strong></em></p><p>தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.</p><h2><strong>ரீல்ஸ் அதிகரிப்பு</strong></h2><p>ஆனாலும் சில கோவில்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் சமீப காலமாக சில பக்தர்கள் கோவில்களுக்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல், சமூக வலைதளங்களுக்கான குறும்படம் (ரீல்ஸ்) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதோடு இறை வழிபாடு செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.</p><h2><strong>செல்போனுக்கு தடை</strong></h2><p>எனவே கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும் வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பெற்று பாதுகாத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பது குறித்த நடைமுறையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/46-projects-worth-rs-24585-crore-cancelled-government-announcement">இந்து சமய அறநிலையத்துறை</a> அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க  சில முக்கிய கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a> ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>அறிவிப்பு பலகை</strong></h2><p>கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.</p><p>ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.</p><h2><strong>பெட்டக வசதி</strong></h2><p>பக்தர்கள் கோவிலுக்குள்  நுழையும் முன் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் கைபேசி பாதுகாப்பு பெட்டக வசதியினை கோவில் நிர்வாகம் உடனே ஏற்படுத்த வேண்டும்.</p><p>இந்த மையங்கள் கோவில் நுழைவு வாசல் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.</p><h2><strong>ரூ.5 கட்டணம்</strong></h2><p>செல்போன்களை பெற்று பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.5 தொகை வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்பட வேண்டும்.</p><p>வருகிற 1-ந்தேதி முதல்  அனைத்து முதுநிலை கோவில்களிலும் பக்தர்கள் செல்போனை கோவிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.</p><h2><strong>பணியாளர் நியமனம்</strong></h2><p>பக்தர்களிடம் இருந்து செல்போனை பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணிக்கு தேவையான பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.</p><h2><strong>போலீசில் புகார்</strong></h2><p>கோவில் வளாகத்துக்குள் செல்போனை பயன்படுத்துவது புகைப்படம், வீடியோ எடுப்பது குறித்து கண்காணித்திட போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.</p><p>அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>முக்கிய பிரமுகர்களுக்கு தடை</strong></h2><p>கோவிலுக்குள் இறைவனின் உருவங்களை புகைப்படம் எடுப்பது, கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுப்பது, வீடியோ ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் வி.ஐ.பி.க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோவிலுக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-are-watching-those-who-boycott-mps-meeting-manickam-thakur#comments</comments><guid isPermaLink="false">df79da8f-d5a3-43f5-a71b-ec83de613c34</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:47:28 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:47:28.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN MPs,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation,தமிழக எம்பிக்கள் கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/pbwf6wy9/Manickam-tgore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பவர்களை மக்கள் கவனிக்கின்றனர் என்றும் புறக்கணித்தவர்களை நினைவில் கொள்வர் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழக நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் கலந்துகொள்ளாமல் இருக்கலாம்.</p><p>ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும், அரசியலுக்கு இரண்டாமிடமும் கொடுப்பவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.</p><p>இது கட்சி அரசியல் பற்றியது அல்ல.</p><p>இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் பற்றியது.</p><p>தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்ட நேரத்தில் தமிழகத்துடன் நின்றவர்கள் யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.</p><p>இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Those who place their politics above Tamil Nadu’s interests may choose not to attend.<br><br>But those who put Tamil Nadu first, and politics second, will attend the all-party meeting called by the Hon’ble <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> .<br><br>This is not about party politics. <br>It is about Tamil Nadu’s…</p>&mdash; Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) <a href="https://x.com/manickamtagore/status/2085946567107002548?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>எம்பிக்கள் கூட்டம்: காவிரி பிரச்சனையை திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம் - கனிமொழி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-constituency-delimitation-mps-meeting-tvk-government-drama-divert-attention-from-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">b3991184-e57c-42b5-ace5-74540c0b0c80</guid><pubDate>Sat, 08 Aug 2026 05:46:31 +0000</pubDate><atom:updated>2026-08-08T05:46:31.839Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Kanimozhi,கனிமொழி,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/c5o0bp7n/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-consultation-with-tamil-nadu-mps-on-delimitation"> முதலமைச்சர்</a> கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p> <h2>காவிரி பிரச்சனை</h2><p>காவிரிக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.</p> <h2>மேகதாது அணை</h2><p>உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பழனி நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-arrested-lawyer-anwardeen-death#comments</comments><guid isPermaLink="false">d4e0f825-f54f-4615-9480-b52171d6dd95</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:49 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:49.773Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உயிரிழப்பு,dead,pazhani,பழனி நில மோசடி,வழக்கறிஞர் அன்வர்தீன்,Anwardheen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Advocate Anwardeen- Palani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/24gxm0us/pazhani2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கே வந்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.</p><h2>மோசடி பத்திரப்பதிவு</h2><p>பழனி கோவில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சுவாமிகள் மடத் தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த மாதம் 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில், தனி நபர்களுக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.</p><p>தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை (60), சேதுபதி (67) அவர்களுக்கு உதவிய பழனி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வக்கீல் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரை கைது செய்தனர். </p><p>அவர்களை போலீஸ் காவலில் எடுத்து கடந்த 3 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><h2>நேரில் விசாரணை</h2><p>அதேநேரம் இந்த வழக்கில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நெஞ்சுவலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். </p><p>இதனால் அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாஜிஸ் திரேட் பாக்கியராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுச்சென்றார்.</p><p>திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மதுரை சிறைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதனிடையே ஆசிரியர் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் ஜாமீன் கேட்டு திண்டுக் கல் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. </p><p>அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மாலையில் ஆசிரியர் முருகதாஸ் உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p><h2>அன்வர்தீன் உயிரிழப்பு</h2><p>இந்நிலையில், பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்துள்ளார்.</p><p>நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் உயிரிழந்துள்ளார்.</p><p>சர்க்கரை நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீனுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் இதுகுறத்து விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம் - விஜய் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக - அதிமுக
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-dmk-and-admk-to-boycott-meeting#comments</comments><guid isPermaLink="false">34619411-edfb-416b-b268-80202383a1a3</guid><pubDate>Sat, 08 Aug 2026 04:30:29 +0000</pubDate><atom:updated>2026-08-08T04:30:29.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay  - Inbadurai - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/xeghepke/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விஜய் தலைமையிலான கூட்டத்தை திமுக - அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.</strong></em></p><h2>தொகுதி மறுவரையறை</h2><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p> <h2>தமிழக அரசு</h2><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p>  <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கின்றன. திமுக, அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவை சேர்ந்த எம்.பி.க்கள் இன்பதுரை, தம்பிதுரை, தனபால், தர்மர் ஆகிய 4 பேரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-and-udhayanidhi-stalin-argument-in-tn-assembly">திமுக</a> பங்கேற்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தேமுதிகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுதீஷூம் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் பாதிப்பு - தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-rises-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rice-prices-rises-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">5a651e09-fced-4eac-9408-7f0795703305</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:49:51 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:49:51.658Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,TN,Rice,விளைச்சல் பாதிப்பு,அரிசி விலை உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/d690cuf9/rice.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rice]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/d690cuf9/rice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.</strong></em> </p><p>அரிசி விலை உயர்வு குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரி சாமுவேல் கூறியதாவது:-</p> <h2>பொன்னி சன்னரக அரிசி</h2><p>தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">பொன்னி சன்னரக அரிசி</a> தான் அதிகளவில் விற்பனையாகிறது.</p><h2>பாசுமதி அரிசி</h2><p>அதேபோன்று, சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியை சுற்றி இருக்கும் அரிசி ஆலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் நெல் அரவைக்கு வரும். ஆனால், தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், அம்மாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் சென்று அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அரிசி விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னி சன்னரக அரிசி அதிகபட்சமாக 25 சதவீதமும், மோட்டா ரக அரிசி 10 சதவீதமும், பாசுமதி அரிசி 10 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.</p><p>அதன்படி, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.800 ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.</p> <h2>பாசுமதி அரிசி</h2><p>அதே போன்று கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் ஸ்டீம் வகை (சிங்கிள் பாயில்) பொன்னி அரிசி 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இந்த அரிசி விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்கு பிறகு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-special-train-between-tambaram-to-thiruvananthapuram#comments</comments><guid isPermaLink="false">7134b44e-716c-4ada-a2d2-fe4a18fe10ce</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:20:45.184Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம்,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/hf3lirs7/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87">தெற்கு ரெயில்வே </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>56 சிறப்பு ரெயில்கள்</strong></h2><p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் அடுத்த மாதம் 6-ந்தேதி வரை தெற்கு ரெயில்வே சார்பில் 56 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06119) இயக்கப்படுகிறது. அதே போல, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது.</p><h2><strong>தாம்பரம்-திருவனந்தபுரம்</strong></h2><p>திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை (புதன்கிழமை மட்டும்) தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் (06110) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">தாம்பரத்தில்</a> இருந்து வருகிற 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை (வியாழக்கிழமை மட்டும்) திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06109) இயக்கப்படுகிறது.</p><p>மங்களூரு சென்ட்ரலில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை (திங்கட்கிழமை மட்டும்) சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (06126) இயக்கப்படுகிறது.</p><p>அதே போல, சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் அடுத்த மாதம் 1-ந்தேதி வரை (செவ்வாய்க்கிழமை மட்டும்) மங்களூரு சென்ட்ரலுக்கு சிறப்பு ரெயில் (06125) இயக்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amit-shah-visit-tn-today#comments</comments><guid isPermaLink="false">99c6bdd2-2d47-4c55-bfd7-ba6c22d4463c</guid><pubDate>Sat, 08 Aug 2026 03:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-08T03:12:43.650Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Amit Shah,அமித்ஷா,Tiruvannamalai,திருவண்ணாமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/12/26372197-amit.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை மந்திரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE">அமித்ஷா</a> மகாராஷ்டிர மாநில நிகழ்ச்சிகளை இன்று முடித்தபின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலைக்கு வருகிறார்.</p> <h2>அருணாசலேஸ்வரர் கோவில்</h2><p>ஹெலிகாப்டரிலிருந்து இறங்கும் அமித்ஷா காரில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">திருவண்ணாமலை</a> கிரிவலப்பாதையில் உள்ள ரமண ஆசிரமத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் நடைபெற உள்ள சிறப்பு பூஜையில் பங்கேற்கும் அவர் பின்னர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். </p> <h2>அமித்ஷா</h2><p>இதைத்தொடர்ந்து அமித்ஷா மாலை 6 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு கார் மூலம் சாலை மார்க்கமாக புதுச்சேரி செல்கிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் ஹெலிபேடு தயார் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;ஜனநாயகன்&apos; திரைப்படத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடுமை: போக்சோ சட்டத்தில் சிக்கிய முதியவர்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/jananayagan-movie-awareness-elderly-man-arrested-under-pocso-act#comments</comments><guid isPermaLink="false">869cca78-822f-44c5-9294-a117bce5c856</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:46:45 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:46:45.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrested,போக்சோ சட்டம்,pocso act,JanaNayagan,ஜனநாயகன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Girl harassment]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/byko4mnv/girlmolested.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் வேலை செய்து வந்த வீட்டின் உரிமையாளரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.</strong></em></p><h2>வீட்டு வேலை</h2><p>சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வசித்து வருகின்றனர். இவர்களது 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.</p><p>குழந்தைகளின் தாய், கோடம்பாக்கத்தில் உள்ள சண்முகப்பிரியன் (வயது 50) என்பவரது வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது குழந்தைகளை அந்த வீட்டுக்கு அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.</p> <h2>சிறுமிக்கு பாலியல் சீண்டல்</h2><p>இந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை, முதலமைச்சர் விஜய் நடித்த '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jananayagan-success-due-to-vijays-magic-producer-k-venkat-narayana-interview">ஜனநாயகன்</a>' திரைப்படத்தை பார்க்க அழைத்துச் சென்றார். அந்த படத்தில் குழந்தைகளுக்கு 'நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்' குறித்து விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>அந்த காட்சியை பார்த்த சிறுமி, தனது தந்தையிடம், "நான் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னை திட்டக்கூடாது" என்று கூறிவிட்டு, தாய் வேலை செய்யும் வீட்டில் தங்கியிருந்தபோது. அந்த வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.</p> <h2>உரிமையாளர் கைது</h2><p>இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதால் சண்முகப்பிரியனை போலீசார் கைது செய்தனர்.</p><p>அவர் மீது <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">போக்சோ சட்டத்தின்</a> கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p> <h2>ஜனநாயகன்</h2><p>'ஜனநாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சியால் சிறுமி தைரியமாக நடந்த சம்பவத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்து, போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பயோமெட்ரிக் முறை விரைவில் அறிமுகம்- சபாநாயகர் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-to-introduce-biometric-system-soon-says-speaker#comments</comments><guid isPermaLink="false">d8667789-ee6b-46da-83b1-e56969033e3b</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:36:10 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:36:10.885Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,Biometric system,TN Assembly speaker,சபாநாயகர்,பயோமெட்ரிக்,தமிழக சட்டமன்ற கூட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Speaker JCD Prabhakarar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/arxooeh3/JCD.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தற்போது பதிவேடுகளில் எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டியதுள்ளது. அதை பயோமெட்ரிக் முறையில் நவீனப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.</p><p>அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பயோமெட்ரிக் முறை ஆய்வில் உள்ளது. விரைவில் அது அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>பின்னர் பேசிய பிரேமலதா, அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் தரப்படுகிறது.</p><p>பாதுகாப்பான நீரை பெறுவதற்காக அனைவருக்கும் பாட்டிலில் தண்ணீர் தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டேன். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் (தி.மு.க. எம்.எல்.ஏ.) தடை போடுகிறார் என்று கூறினார்.</p><p>அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், நான் தடை போடவில்லை. அவர் கேட்பதை கொடுத்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-thirumavalavan-calls-upon-dmk-and-admk#comments</comments><guid isPermaLink="false">f09c8c03-4204-4315-9056-02823619e130</guid><pubDate>Sat, 08 Aug 2026 02:13:34 +0000</pubDate><atom:updated>2026-08-08T02:13:34.843Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,thirumavalavan,திருமாவளவன்,ADMK,அதிமுக,vijay,தொகுதி மறுவரையறை,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-08/ltw459cl/thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</strong></em></p><p>மத்திய பா.ஜ.க. அரசு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-very-bad-chief-minister-not-amma-government-just-summa-government-os-manian-slams">விஜய்</a> தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.</p><p>இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>இந்த ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. எம்.பி.க்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.</p> <h2>தொகுதி மறுவரையறை</h2><p>இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்பிக்கள் பங்கேற்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>திமுக - அதிமுக</h2><p>பாஜக அரசின் சட்டத்தை எதிர்க்க திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.</p> ]]></content:encoded></item></channel></rss>