<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 04 Sep 2026 06:13:38 +0000</lastBuildDate><item><title>கனடா பெண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாண பூஜை- ஆபாச காட்சியை காட்டி மிரட்டிய ஜோதிடர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/astrologer-arrested-over-nude-puja#comments</comments><guid isPermaLink="false">701f021a-9d3c-419d-a194-d4f414781b4c</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:10:49 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:10:49.706Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்வாண பூஜை,ஜோதிடர் கைது</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கைது]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2urs1fry/arrest1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</strong></em></p><p>கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>கிளி ஜோதிடம்</strong></h2><p>இந்த நிலையில் அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார்.</p><p>அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன். நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள்.</p><p>நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.</p><h2><strong>நிர்வாண பூஜை</strong></h2><p>இதனைத் தொடர்ந்து கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார். நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம். அப்படி செய்து விட்டால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.</p><p>இதனை உண்மை என்று நம்பிய கனடா நாட்டுப் பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p>ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><h2><strong>பணம் கேட்டு மிரட்டல்</strong></h2><p>இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் ரூ.20 ஆயிரம் பணம் வாங்கி உள்ளார். இதன் பின்னர் கனடா பெண்ணிடம் போனில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன்.</p><p>அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். மாம்பலம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த கனடா பெண் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இது பற்றி மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி செல்போன் நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள். இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. </p><p>இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கிளி ஜோதிடர் இதுபோன்று வேறு எந்த பெண்களையாவது மிரட்டி வீடியோ எடுத்து இருக்கிறாரா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - சிறுவனிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/harassment-issue-stray-dogs-saved-a-woman-from-a-young-man#comments</comments><guid isPermaLink="false">f06384c3-b191-4b38-b23e-75945a52b774</guid><pubDate>Fri, 04 Sep 2026 06:07:17 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:07:17.010Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>harassment issue,தெரு நாய்கள்,சிறுவன் கைது,Boy arrested,Street dogs,பாலியல் வன்கொடுமை முயற்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/k5vbqw4f/woman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <p>கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி அசோகபுரம் பகுதியில் ஒரு பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.</p><h2>அதிர்ச்சி சம்பவம்</h2><p>தகவலின்பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் ஒருபகுதியாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.</p> <h2>கண்காணிப்பு கேமரா</h2><p>பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி தரும் வேறு ஒரு கொடூர சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-</p><p>கோவை அசோகபுரம் ரெயில்வே மேம்பால சாலையோரம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து உள்ளார். அப்போது அந்த வழியாக கஞ்சா-மதுபோதையுடன் ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும்   அங்கு நின்றிருந்த 2 நாய்கள் இடைவிடாமல் தொடர்ந்து  குரைத்தன.</p> <h2>போதை நபர்</h2><p>இதனால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணிடம், "இது உங்களின் நாயா? எனக்கு பின்னால் வந்து கொண்டு உள்ளது" என்று கேட்டார். அதற்கு அந்த பெண், "கல்லை எடுத்து அடியுங்கள். நாய்கள் ஓடிவிடும். இந்த விஷயம் கூட உங்களுக்கு தெரியாதா?" என்று கூறினார்.</p><p>இதனை கேட்டு அந்த நபரும் உடனடியாக கல்லை எடுத்து வீசினார். தொடர்ந்து அந்த நாய்கள் சில அடி தூரம் ஓடி சென்றுவிட்டன. இருந்தபோதிலும் அந்த நாய்கள் மீண்டும் அந்த நபரை பார்த்து குரைத்து கொண்டே நின்றன.</p> <h2>பாலியல் வன்கொடுமை முயற்சி</h2><p>​அந்த நேரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நபருக்கு, சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை பார்த்ததும் சபலம் ஏற்பட்டது. இதனால் அவன் அந்த பெண்ணை திடீரென கற்பழிக்க முயன்றான். </p><p>எனவே அதிர்ச்சி அடைந்த பெண், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் உதவிக்கு யாரும் வரவில்லை.</p> <p>இந்த நிலையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் போதையில் இருந்த நபர் அத்துமீறுவதை பார்த்த தெருநாய்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்தன. பின்னர் அந்த நபரை சுற்றி வளைத்து குரைத்தபடி இருந்தன. </p><h2>சிறுவன் கைது</h2><p>மேலும் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றவரின் கால்களை அந்த நாய்கள் கடித்து இழுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்க விடாமல் தடுத்தன. தெரு ​நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து</p><p>போன அந்த நபர் உடனடியாக கற்பழிப்பு முயற்சியை கைவிட்டு அந்த பெண்ணிடம் அங்கு விலகியதுடன், தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தான். இருப்பினும் அந்த நாய்கள் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்றன.</p> <p>அசோகபுரம் மேம்பாலத்தில் கற்பழிக்க முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதித்த பெண்ணை தெரு நாய்கள் காப்பாற்றிய காட்சி, சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த துடியலூர் போலீசார், அந்த கேமராவில் பதிவாகி இருந்த நபர் தொடர்பாக விசாரணை நடத்தினர்.</p> <h2>போலீசார் விசாரணை</h2><p>போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மனநலம் பாதித்த பெண்ணிடம் அத்துமீற முயன்றது, கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும், அசோகபுரம் மேம்பாலத்தில் தனியாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை மதுபோதையில் பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவனை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒப்படைத்தனர்.</p><p>கோவை துடியலூர் அருகே போதை ஆசாமியிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெரு நாய்கள் போராடி காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 4 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-4-september-2026#comments</comments><guid isPermaLink="false">acd0fb12-0d4b-4cd6-aa47-ddb31fcdc0f5</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-04T06:04:41.372Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/fhfb2j51/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/estonian-defence-minister-resigns-over-768-crore-arms-procurement-scandal-involving-an-indian-company">இந்திய நிறுவனத்துடன் ரூ. 768 கோடி ஆயுத கொள்முதல் ஊழல் - எஸ்டோனிய பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா</a><br></p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.</p><p>*ரஷியா உடனான போரில் கடும் ஆயுத பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு உதவ எஸ்டோனியா முன்வந்தது.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/a-first-step-for-india-gslv-f17-rocket-successfully-launched-into-space-pm-modi-expresses-pride">இந்தியாவுக்கு முதல் படி.. விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த GSLV-F17 ராக்கெட் - பிரதமர் மோடி பெருமிதம்</a></p><p>*மோடி பெருமிதம் பொங்க எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>*நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தரவுகளை வழங்கும்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f78f143f-34cc-428d-abcc-b733ecc013f5">FCRA மசோதாவை ஆய்வு செய்ய 31 எம்.பி.க்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. பின்னணி என்ன?</a></p><p>*எப்சிஆர்ஏ மசோதாவை கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர எத்தனித்தது.</p><p>* மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day">அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</a></p><p>* உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். </p><p>* கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026">GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration">பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: "மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!"- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</a></p><p>* இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>* பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/krishna-jayanthi-president-droupadi-murmu-and-pm-modi-wish">கிருஷ்ண ஜெயந்தி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p>* கிருஷ்ணர் சத்தியம், நேர்மை, நீதி, கருணை மற்றும் தன்னலமற்ற செயல் ஆகியவற்றின் பாதையைக் காட்டினார்.</p><p>* பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்திகளில் தன்னலமற்ற செயலுக்கான ஆழ்ந்த உத்வேகம் அடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes">கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்</a></p><p>* அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும்.</p><p>* ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p>]]></content:encoded></item><item><title>அரசு மதிப்பிட்டதை விட 32% குறைவு: முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு தேர்வான பிரபல நிறுவனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-ministers-new-office-tender-selected-at-32-under-government-assessed-cost#comments</comments><guid isPermaLink="false">e36017b4-c676-4292-a25f-71285bcf5949</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:48:40 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:48:40.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,tender,முதலமைச்சர் விஜய்,டெண்டர் தேர்வு,CM New Office</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bpc6ojgk/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சரின் அலுவலகம் புதுப்பிப்பதற்கான டெண்டரில் ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது.</p><h2>CM புதிய அலுவலகம்</h2><p>முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><p>முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.</p><p>தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது.</p><p>ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை <a href="https://www.maalaimalar.com/ampstories/web-stories/vasthu-fish" rel="nofollow">வாஸ்து</a>படி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.</p><h2>ராசி பில்டர்ஸ்</h2><p>புனித ஜார்ஜ் கோட்டையின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சரின் புதிய அலுவலகம் அமையவுள்ள நிலையில், டெண்டர் தேர்வாகியுள்ளது.</p><p>அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாக ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைவரையும் முன்னேற்றும் ஆசிரியர்கள் வாழ்வும் ஏற்றம் பெற வகை செய்ய வேண்டும்! அன்புமணி ராமதாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-wishes-to-teachers-day#comments</comments><guid isPermaLink="false">e8e11445-3249-4375-adf4-4ddaa93e4f86</guid><pubDate>Fri, 04 Sep 2026 05:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T05:17:10.901Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,teachers day,ஆசிரியர் தினம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/ceojmvnu/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>ஏணியாகவும், தோனியாகவும் இருந்து மாணவர்களை ஏற்றம் பெறவும், வாழ்வில் கரை சேரவும் வகை செய்யும்  ஆசிரியர்களை பெருமைப்படுத்துவதற்கான <a href="https://www.maalaimalar.com/topic/ஆசிரியர்-தினம்">ஆசிரியர்கள் நாளைக்</a> கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும்  எனது நல்வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>உலகில் அனைவரின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் ஆத்மாக்கள் ஆசிரியர்கள் தான்; அதேபோல், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படாமல், மகிழ்ச்சியடையும் மகாத்மாக்களும் ஆசிரியர்கள் தான். அதனால் தான் அவர்கள் அனைவராலும் வணங்கப்படுபவர்களாக உள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களை இந்த சமுதாயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.</p><p>உலகில் அனைவராலும் கொண்டாடப்படுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசர்களாலும் மதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். ஆனால், அவர்கள் வாழ்க்கை மட்டும் கொண்டாட்டமானதாக இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு என பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத கோரிக்கைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு புதிய நெருக்கடி ஒன்றும் உண்டாகியுள்ளது. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது தான் இதற்கு காரணமாகும். ஆசிரியர்களின் இந்த நெருக்கடியைப் போக்க கடந்த திமுக ஆட்சி மட்டுமின்றி, புதிய தவெக ஆட்சியும் எதுவும் செய்யாததால் ஆசிரியர்களின் நெருக்கடிகள் தொடர்கின்றன.</p><p>ஆசிரியர்கள் கவலையின்றி வாழ்ந்தால் தான் மாணவர்களை முன்னேற்ற முடியும். அதற்கு வசதியாக  ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களையும் குறைந்தபட்சம் 35% ஆக குறைக்க வேண்டும்.  இதன் மூலம் ஆசிரியர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெற அரசு வகை வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : இன்றும் உயர்ந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-04-09-2026#comments</comments><guid isPermaLink="false">a2fa9f91-3886-45d8-886d-e39c1a40bb1d</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:22:06 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:22:06.305Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/bxvt918k/gold.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது.</p><h2><strong>தொடர் உயர்வில் தங்கம்</strong></h2><p>இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நேற்று, இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>03-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,920</p><p>02-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600</p><p>01-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,400</p><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>03-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>02-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>01-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p>]]></content:encoded></item><item><title>பள்ளிக்கரணை சதுப்புநிலத் தடுப்புச் சுவர்: &quot;மீட்சி அல்ல, அழிவுத் திட்டம்!&quot;- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-pallikaranai-marshland-retaining-wall-a-plan-for-destruction-not-restoration#comments</comments><guid isPermaLink="false">4b3d4e27-76f1-4fb4-8bea-9edf69f211a6</guid><pubDate>Fri, 04 Sep 2026 04:11:53 +0000</pubDate><atom:updated>2026-09-04T04:11:53.725Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,பள்ளிக்கரணை சதுப்பு நிலம்,Pallikaranai Marshland</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ பள்ளிக்கரணை சதுப்பு நிலம்- அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/brfsypwp/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/பள்ளிக்கரணை-சதுப்பு-நிலம்">பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்</a> நெய்தல்  மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், இப்போதைய தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை.</p><h2><strong>பேரழிவுத் திட்டம்</strong></h2><p>தமிழ்நாட்டின் கடலோர வளங்களை மீட்டெடுப்பதாகக் கூறி, தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்ற புதியத் திட்டத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில் திமுக அரசு தொடங்கியது. உலக வங்கியின் நிதியுதவியுடன்  ரூ.1675 கோடி செலவில் தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ நீளமுள்ள கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது. பள்ளிக்கரணை உள்ளிட்ட கடற்கரையோர ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பும் இந்தத் திட்டத்தின் முதன்மையான 4 நோக்கங்களில் ஒன்றாக திமுக அரசு அறிவித்தது.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலோ, மீட்க வேண்டும் என்றாலோ, அதற்காக உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இரு நடவடிக்கைகள், ஒரு காலத்தில் 15,000 ஏக்கராக இருந்து இப்போது 1750 ஏக்கராக சுருங்கி விட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை இயன்றவரை அகற்றுவதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்வதும் தான். ஆனால், அதற்கு பதிலாக மீதமுள்ள சதுப்பு நிலத்தையும் அழிக்கும் முயற்சியை திமுக அரசு தொடங்கியது. இந்த பேரழிவுத் திட்டத்திற்காக மட்டும் வனத்துறை மூலம் திமுக அரசு ரூ.21 கோடியை ஒதுக்கியுள்ளது.</p><h2><strong>ஏற்க முடியாதவை</strong></h2><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தமிழக அரசு, அதன் பங்குக்கு  ஆக்கிரமிப்பு செய்து 3 கி.மீ நீளத்திற்கு 6 அடி உயரத்தில் தடுப்புச் சுவரையும், அதற்கு உட்புறத்தில் 2 கி.மீ நீளத்திற்கு  நடைபாதையும் அமைத்து வருகிறது. தடுப்புச் சுவர், நடைபாதை ஆகிய இரண்டுமே நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த பகுதியிலும், சென்னை மாநகரத்தின் பிற பகுதிகளிலும் பெய்யும் மழையால் ஏற்படும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்ல முடியாமல் தேங்கி வெள்ளம் ஏற்படும். கடந்த சில நாள்களில் பெய்த லேசான மழைக்கே அப்பகுதியில் மழை நீர் தேங்குவதே இதற்கு சான்றாகும்.</p><p>பள்ளிக்கரணையின் ஆகப்பெரும் சிறப்பே மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீரை ஈர்த்துக் கொண்டு, சென்னை மாநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாப்பதும் தான். இந்த இரு நோக்கங்களையும் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் சிதைத்து  விடும். இப்படி ஒரு திட்டத்தை ஊழல் செய்யும் நோக்கத்துடன் தான் திமுக அரசு அறிவித்தது. ஆனால்,  ஊழலுக்கு இடம் கொடுக்கும் திட்டங்களையும், மக்களை பாதிக்கும் திட்டங்களையும் ரத்து செய்வதே தங்களின் கொள்கை என்று கூறி, ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை நிறுத்தியும், ரத்து செய்தும் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு இந்தத் திட்டத்தை மட்டும் தொடருவது ஏன்?</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியின் எல்லைக்குட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வசதியாக தனியார் கட்டுமான நிறுவனம் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்தது.  இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தின் எல்லைகள் வரையறுத்து அறிவிக்கை செய்யப்படாததைக் கண்டித்து, சதுப்பு நில எல்லை அறிவிக்கை செய்யப்படும் வரை ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானங்களைக் கட்ட இடைக்காலத் தடை விதித்தது. இந்த உண்மைகள் தெரிந்தும் இந்த அழிவுத் திட்டத்தை திமுக அரசு தொடங்கியதும், தவெக அரசு தொடர்வதும் ஏற்க முடியாதவை.</p><p>பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்குள் இத்தகைய தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை அமைப்பது 2017-ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இத்தகைய தடுப்பு சுவர் அமைக்கப்படுவதால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவது மட்டுமின்றி, சதுப்பு நிலத்தின் சூழலியல் தன்மையும் பாதிக்கப்படும். அதனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் அங்கமாக உள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவைச் சந்திக்கும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில்  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது முழுமையாக நின்று விடும்.</p><p>கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து மத்திய மற்றும் மாநில அரசு அலுவகங்கள் கட்டப்பட்டன. பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் சதுப்பு நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு, பறவைகளின் வருகை நின்று விட்டது. நெய்தல் மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் ஒட்டுமொத்த பள்ளிக்கரணைக்கும் அதே நிலை தான் ஏற்படும்.</p><p>சென்னை மாநகரத்தின் இன்றைய முதன்மைத் தேவையும், தமிழக அரசின் இன்றைய முதன்மைக் கடமையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதும் தான். அதை செய்வதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு  நிலத்தை அழிக்கும் வகையிலும், அதையொட்டியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்புச் சுவர், நடைபாதை பணிகளை மேற்கொள்ளக்கூடாது. உடனடியாக அந்தப் பணிகளை தமிழக அரசு நிறுத்துவதுடன், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றி அந்தப் பகுதிகளை ஏற்கனவே இருந்த இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கும் மேலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளை உடனடியாக வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதை செய்யத் தவறினால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் காப்பதற்காக சென்னை மாநகர மக்களைத்  திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>புதிய தலைமைச் செயலகம் எங்கு?- 4 இடங்கள் பரிசீலனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/where-will-the-new-secretariat-be-located-4-sites-under-consideration#comments</comments><guid isPermaLink="false">c3d05b56-daee-4562-a8cd-b6b6d128be0d</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:29:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:29:10.096Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,புதிய தலைமை செயலகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தலைமைச் செயலகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/2rmptqvy/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், கோயம்பேடு ஆகிய 4 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</strong></em></p><h2><strong>கடலோர பகுதி</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/புதிய-தலைமை-செயலகம்">புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய கட்டிடத்துக்கு போதுமான இடம் உள்ளதா, போக்குவரத்து வசதி எப்படி உள்ளது, எதிர்காலத்தில் மேலும் கட்டிடங்களை அமைக்க இடம் கிடைக்குமா, சுற்றுச்சூழல் மற்றும் சட்டப் பிரச்சனைகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.</p><p>பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளுக்கு அருகில் இருப்பது இந்த இடத்தின் சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இது கடலோரப் பகுதி என்பதால், கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. அடையாறு முகத்துவாரம் அருகில் இருப்பதால், மழைக்காலத்தில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. மேலும் இதன் அருகில் மீனவர்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.</p><h2><strong>கிண்டி</strong></h2><p>கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதுதவிர, கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதால், இந்த பகுதியும் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது. சர்தார் படேல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அருகில் உள்ளன. ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் வசதிகளும் இருப்பதால், சென்னையின் பல பகுதிகளில் இருந்து எளிதாக வந்து செல்ல முடியும். ஆனால் கிண்டி ஏற்கெனவே பரபரப்பான பகுதியாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, கிங்ஸ் ஆஸ்பத்திரி, கவர்னர் மாளிகை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. கிண்டி ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் மற்றும் முக்கிய சாலைகள் காரணமாக ஏற்கெனவே அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது.</p><h2><strong>நந்தம்பாக்கம்</strong></h2><p>நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையம் அருகில் இருப்பதும், தெற்கு மற்றும் மேற்கு சென்னையில் இருந்து எளிதாக வந்து செல்ல முடிவதும் இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். நந்தம்பாக்கம் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டு வருவதற்கான பின்டெக் சிட்டி திட்டமும் இப்பகுதியில் உருவாகி வருகிறது. எனவே இங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் உருவாகும் புதிய பொருளாதார மையத்துடன் அது எவ்வாறு இணைந்து செயல்படும் என்பதும், ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டில் மாற்றம் ஏற்படுமா என்பதும் ஆய்வு செய்ய வேண்டியதாக உள்ளது.</p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>கோயம்பேட்டில் உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையப் பகுதி சுமார் 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெரிய நிலப்பரப்பு, மெட்ரோ ரெயில் வசதி மற்றும் சென்னையின் பல பகுதிகளுடன் உள்ள சாலை இணைப்பு ஆகியவை இந்த இடத்தின் முக்கிய சாதகங்கள். ஆனால் கோயம்பேடு ஏற்கெனவே சென்னையின் மிகப்பெரிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் வணிகப் பகுதிகள் காரணமாக இங்கு எப்போதும் அதிகமான போக்குவரத்து காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கூடுதல் வாகனப் போக்குவரத்தை சமாளிப்பது சவாலாக இருக்கலாம். மேலும் பழைய பேருந்து நிலையப் பகுதியை எதிர்காலத்தில் வேறு வகையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.</p><h2><strong>எங்கு அமையும்?</strong></h2><p>புதிய தலைமைச் செயலகத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் நிலத்தின் அளவு மட்டும் முக்கியம் இல்லை. போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. பட்டினப்பாக்கத்தில் கடலோரப் பிரச்சனை, கிண்டியில் போக்குவரத்து நெரிசல், நந்தம்பாக்கத்தில் ஏற்கெனவே உள்ள வளர்ச்சித் திட்டங்கள், கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து என ஒவ்வொரு இடத்திலும் சாதகமும், சவாலும் உள்ளன. இந்த 4 இடங்களைத் தவிர கூடுதல் இடங்களும் பரிசீலிக்கப்படலாம். இறுதி இடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை எந்த இடமும் உறுதி செய்யப்பட்டதாக கூற முடியாது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (05.09.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-39#comments</comments><guid isPermaLink="false">27c154a8-910d-4dd5-a9dc-4cdd7b0ce4e7</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:04:11 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:04:11.048Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/11ovgaqt/powercut.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><h2><strong>கீழ்கட்டளை</strong></h2><p>சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், அம்பாள் நகர், அன்பு நகர், ரோஸ் நகர், மணிகண்டன் நகர், வீரமணி நகர், செல்ஃப் ஹெல்ப் இண்டஸ்ட்ரியல், பூபதி நகர், பெருமாள் நகர், 'இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல்' நகர், குமரன் நகர், என்ஜினீயர்ஸ் அவென்யூ, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், பாலமுருகன் நகர்.</p><h2><strong>கோட்டூர்புரம்</strong></h2><p>ஸ்ரீநகர் காலனி, தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள், தெற்கு அவென்யூ, கோவில் அவென்யூ, ரங்கராஜபுரம் 1-வது முதல் 6-வது தெரு வரை.</p><h2><strong>மாங்காடு</strong></h2><p>ரகுநாதபுரம், கொழுமணிவக்கம், சிவன்தாங்கள், சிக்கராயபுரம், பட்டூர், பத்ரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அட்டிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே கே நகர்.</p>]]></content:encoded></item><item><title>கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanthi-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">f63b361d-7e02-4a28-a92a-64361a4b9150</guid><pubDate>Fri, 04 Sep 2026 03:03:19 +0000</pubDate><atom:updated>2026-09-04T03:03:19.810Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/of1uiuqi/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p> <h2>கிருஷ்ணர் அவதாரம்</h2><p>உலகில் அநீதி தலைதூக்கும் போதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட இறைவன் பூமியில் அவதரிப்பான் என்பது பகவத்கீதையின் உபதேசம் ஆகும். அதன்படி, திருமாலின் அவதாரமான கிருஷ்ணரின் வாழ்க்கை, மக்களின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். தெய்வீக குணங்கள் முழுமையாக வெளிப்பட்ட அவதாரம் என்பதால், கிருஷ்ணரின் அவதாரம் 'பூர்ணவதாரம்' (முழுமையான அவதாரம்) என்று கருதப்படுகிறது.</p> <h2>கிருஷ்ண ஜெயந்தி</h2><p>கிருஷ்ணரின் அவதாரம், மனித குலத்திற்கு வாழ்வியல் நெறிகளையும், அறம், கடமை, பக்தி ஆகியவற்றின் உயர்ந்த தத்துவங்களையும் உணர்த்துகிறது. இத்தகைய மகத்தான கீதோபதேசத்தை வழங்கிய கண்ணனின் பிறப்பைத் தான் பக்தர்கள்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-tomorrow-eps-anbumani-greetings"> கிருஷ்ண ஜெயந்தி</a>, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப் பல பெயர்களில் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அந்த வகையில், நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், </p><p>அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் கோட் சூட் அணிந்த விநாயகர் சிலை... 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-assembly-action-vinayagar-statue#comments</comments><guid isPermaLink="false">0cc13bd4-7eda-4652-8915-adb0baeede89</guid><pubDate>Fri, 04 Sep 2026 02:17:10 +0000</pubDate><atom:updated>2026-09-04T02:17:10.662Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,Vinayagar statue,விநாயகர் சிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vijay ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-04/6mvjht1r/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments">முதலமைச்சர் விஜய்</a> சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.</p><p>விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பலவிதமான வடிவமைப்புகளுடன் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.</p> <p>இந்தநிலையில், முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றன. சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் செய்த சைகை வைரல் ஆனது.</p> <p>விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது உண்மையான சிலையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்ப படமா என்பது உறுதியாகவில்லை.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr"><a href="https://x.com/hashtag/Vijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vijay</a> Vinayagar Chathurthi! ✨ <a href="https://t.co/p05OMWpBrf">pic.twitter.com/p05OMWpBrf</a></p>&mdash; KARTHIK SK (@KARTHIKSK07) <a href="https://x.com/KARTHIKSK07/status/2095362311397724171?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 3 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-3-september-2026#comments</comments><guid isPermaLink="false">ea8bcccc-7a9b-4b92-af1a-1b1e45c9f097</guid><pubDate>Thu, 03 Sep 2026 03:50:13 +0000</pubDate><atom:updated>2026-09-04T01:50:56.618Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/40phxesb/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மீதான  மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் பதில் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.</p><p>சூலூர் மையப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு முன்வருமா? - உறுப்பினர் கேள்வி</p><p>சூலூரில் உயர்மட்ட பாலம் - ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திருச்சி - கோவை இடையே பசுமை வழித்தடத்திற்கு DPR தயாரிப்பு - அமைச்சர் ஆதவ்</p><p>30 நொடிகளில் சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும் - சபாநாயகர்</p> <p>ரெயில்வே பாலங்கள் தேவை என பல எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>மாநிலம் முழுவதும் 42 இடங்களில் ரெயில்வே பாலம் கட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை, அதுகுறித்து பரிசீலிக்கப்படும்.</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>மொடக்குறிச்சி: நால்ரோடு பகுதிகளில் பாலம் தேவை - சண்முகம்</p><p>அனைத்து கோரிக்கைகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை - அமைச்சர் ஆதவ்</p><p>துரைப்பாக்கம் to நீலாங்கரை வரையிலான மேம்பாலப்பணிகள் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை - சரவணன்</p><p>புவனகிரி தொகுதியில் புறச்சாலையில் மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் - எம்எல்ஏ அருள்மொழித்தேவன் வேண்டுகோள்</p><p>செய்யாற்றின் குறுக்கே, விருகண்டா நதியின் குறுக்கே  மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>குளித்தலையில் ரெயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் - எம்எல்ஏ சந்திரன் கோரிக்கை</p><p>திமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. பாலம் அமைக்கும் பணிகள் தவெக ஆட்சியில் தொடர்கிறதா? - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>அனைத்து பாலங்களின் பணிகளும் தொடர்வதாகவும் எந்த பணியும் நிறுத்தப்படவில்லை - அமைச்சர் ஆதவ்</p><p>திருத்தணியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் தொகுதியில் எந்த தொழிற்சாலையும் இல்லை.</p><p>ஜவுளி பூங்கா அமைந்தால் 500 - 1000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்  - எம்எல்ஏ கோ அரி </p><p>தொழில் முதலீட்டாளர்கள் முன்வரும் பட்சத்தில் திருத்தணியில் புதிய ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>வேதாரண்யத்தில் வேதா ஜவுளி பூங்கா முழுமை பெறுமா? மாநில அரசின் நிதியில் வேதா ஜவுளி பூங்கா முடிக்கப்படுமா? - ஓ.எஸ்.மணியன்</p><p>வேதாரண்யத்திற்காகவும் வேதா ஜவுளி பூங்கா, வேதா நிலையத்தை நினைவில் வைத்தும் வேதா ஜவுளி பூங்கா என்று வைத்தீர்கள்.</p><p>இதில் 40 சதவீதம் மத்திய அரசு பங்கு, 9 சதவீதம் மாநில அரசு பங்கு.</p><p>தொழில் முதலீட்டாளர்கள் முழு மானியம் போட்டு தொழில் தொடங்க முடியாது என்று தெரிவித்தனர்.</p><p>உடனடியாக டெல்லி சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.</p><p>நீங்களும் கூட்டணியில் உள்ளீர்கள். நீங்களும் முயற்சி செய்தால் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி விடலாம் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தவெக அரசு தொடருமா? - எடப்பாடி பழனிசாமி </p> <p>சாய ஆலைக்கழிவுகளை சுத்திகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். ரூ.11 ஆயிரம் கோடி செலவில் நடந்தாய் வாழி காவிரி திட்டம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டது - எடப்பாடி பழனிசாமி </p><p>அரசு அதிகாரிகள், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p><p>அதானி துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும்போது காற்றுமாசு உருவாகிறது - ஜவாஹிருல்லா</p><p>நிலக்கரியை சாலைகளில் கொண்டு செல்வதற்கு விதிகள் உள்ளன. </p><p>துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>கடந்த ஆட்சியில் சுற்றுச்சூழல் துறையில் சரியான நடவடிக்கை இல்லை.</p><p>பவானி, ஈரோடு தொகுதிகளில் தான் எனக்கு அதிக சவால்கள்.</p><p>விதிகளை மீறி சாயக்கழிவுகளை வெறியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜீவ்</p><p>திண்டுக்கல்லில் முறையாக அனுமதி பெற்று மோர் மிளகாய் தயாரிப்பு. மோர் மிளகாய் தயாரிப்பால் நிலத்தடி நீர் பாதிப்பு என சில விவசாயிகள் புகார் - ஐ.பெரியசாமி</p><p>20% அளவுக்கு அனுமதி பெறாமல் மோர் மிளகாய் தயாரிக்கப்படுகிறது -  அமைச்சர் ராஜீவ்</p><p>தென்பெண்ணையாற்றில் கர்நாடக ஆலைக்கழிவுகள் கலப்பு - பாலகிருஷ்ணாரெட்டி</p><p>பெங்களூருவில் இருந்து 1400 எம்எல்டி கழிவுநீர் தென்பெண்ணையில் திறக்கப்படுகிறது. கர்நாடக அரசிடம் பேசி தீர்வு காணப்படும் - அமைச்சர் ராஜீவ் உறுதி</p> <p>தொழில் வளமும், சுற்றுச்சூழலும் உறுதி செய்யப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>சுற்றுச்சூழல் மாறு ஏற்படுத்தாத நிறைய நிறுவனங்கள் கொண்டு வருவோம் - அமைச்சர் ராஜீவ்</p><p>தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.</p><p>ஒலிம்பிக் நகரத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய் </p> <p>மோட்டார் ஸ்போர்ட் சிட்டி உருவாக்கப்படும்.</p><p>இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளை அறிந்து பயிற்சி அளிக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>தற்போது தலைமைச் செயலகம் 2 கட்டடங்களில் இயங்கி வருகிறது. 2 கட்டிடங்களில் 6000 பேர் பணியாற்றும் நிலை உள்ளது  - முதலமைச்சர் விஜய் </p>  <p>ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்  - முதலமைச்சர் விஜய் </p><p>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்</p><p>தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.</p><p>பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி -  முதலமைச்சர் விஜய் </p> <p>வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.</p><p>தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.</p><p>ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் </p> <p>மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.</p><p>தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.</p><p>வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும்  - முதலமைச்சர் விஜய் </p> <p>இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.</p><p>குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.</p><p>தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <p>நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.</p><p>மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது - முதலமைச்சர் விஜய் </p> <h2>தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி உரை</h2><p>தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுப்பு.</p> <p>சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் - திமுக எம்எல்ஏ ரகுபதி</p><p>இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம் - ரகுபதி</p><p>சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது.</p><p>ஐகோர்ட்டில் ஒரே மொழியாக தமிழை கொண்டு வர முடியாது. ஆங்கிலம் உடன் இருக்கத்தான் செய்யும் - ரகுபதி</p><p>ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>இது யாருடைய குழந்தையும் கிடையாது என ரகுபதிக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி</p> <p>எதிர்க்கட்சி கொறடா எழுந்தவுடன் திமுகவினர் எழுந்து நிற்பதை ஏற்க முடியாது - சபாநாயகர்</p><p>என்னை பேச அழைக்காமல் தளவாய் சுந்தரத்தை அழைக்கலாமா? </p><p>என்னை விட தளவாய் சுந்தரம் அதிகம் பேசி விடுவாரா? - டென்ஷன் ஆன சி.வி.சண்முகம்</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு</p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு, அதிமுக ஆதரவு</p><p>மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை இன்று வரை மாற்ற முடியவில்லை. ஜென் Z இளைஞர்களுக்கு மெட்ராஸ் என்பதே தெரியாது.</p><p>தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரை மாற்ற தனி தீர்மானம் தேவை. சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும் - சி.வி.சண்முகம்</p> <p>ராஜஸ்தான், உ.பி., ம.பி. உயர்நீதிமன்றங்களில் இந்தி அலுவல் மொழி - சி.வி.சண்முகம்</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்பு</p><p>பழமையாக நெல் ரகங்களில் பெயர், நாட்டு மாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு சட்டசபையில் சவுமியா அன்புமணி பேச்சு</p><p>உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.</p><p>10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை.</p><p>மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் - சவுமியா அன்புமணி </p> <p>மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரி சென்னை உயர்நீதிமன்றமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக,  ஆதரவு</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கும் எல்லா அறிவிப்புகளும் மிகச் சிறப்பாக வரவேற்றும் வகையில் உள்ளது.</p><p>புதிய தலைமை செயலகத்தை யார் ஆட்சிக்கு வந்தாலும் தடை செய்யாத வகையில் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்.</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு - பிரேமலதா</p><p>முதலமைச்சர் விஜய் ஆட்சியில் தமிழுக்கு தான் எப்போதும் முதலிடம் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு விசிக ஆதரவு.</p><p>கலைஞரால் எப்போதும் பிள்ளையார் சுழி போட முடியாது பெரியார் சுழி தான் போட முடியும்.</p><p>தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என கோரிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர் என ரகுபதி பேசியதற்கு பதிலடி</p><p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார் முதலமைச்சர் விஜய்</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்- முதலமைச்சர் விஜய்</p><p>கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நடப்பாண்டில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் விஜய்</p><p>காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவீனம் உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியத்தில் உள் விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்  - முதலமைச்சர் விஜய்</p> <h2>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p> <p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது -  உதயநிதி</p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்  -  உதயநிதி</p><p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம் - உதயநிதி</p><p>கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்? - உதயநிதி</p> <p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல் - உதயநிதி</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.</p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன - உதயநிதி</p><p>ஆணவ கொலைகள் தற்போது காதல் மரணங்களாக மாறிவிட்டன.</p><p>தவெக எம்எல்ஏ மீதான பாலியல் வன்கொடுமை புகார் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை - உதயநிதி</p><p>ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதான புகாருக்கு அமைச்சர் ஆனந்த் பதில்</p><p>பெண் அளித்த புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>பாலியல் வன்கொடுமை புகாரில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை.</p><p>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.</p><p>புலன் விசாரணையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவுக்கு தொடர்பில்லை என தெரிய வந்தது - அமைச்சர் ஆனந்த்</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும்போது குறுக்கீடு வேண்டாம் - சபாநாயகர்</p> <p>திமுக ஆட்சியில் கட்சியினர் தவறு செய்தால் வழக்கு பதியலாமா? வேண்டாமா? என 10 நாள் யோசிப்பீர்கள், நாங்கள் அப்படியில்லை.</p><p>தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த்</p><p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேச்சு</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின் </p><p>திங்கள்கிழமை உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும். முதலமைச்சர் அமைதியாக இருப்பதே அவர் தயாராக இருப்பதற்கு சமம்  - சபாநாயகர் விளக்கம்</p><p>முதலமைச்சர் தயாரானதால் தான் முதலமைச்சராக இருக்கிறார், நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறீர்கள் - உதயநிதிக்கு ஆதவ் பதிலடி</p><p>எங்கள் முதலமைச்சருக்கு யாரும் உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.</p><p>2020-ல் 1,597 கொலைகள், 2021-ல் 1,597 கொலைகள், 2022-ல் 1,597 கொலைகள் - அமைச்சர் ஆதவ்</p><p>சட்டசபையில் தவெகவினர் - திமுகவினர் இடையில் கடும் வாக்குவாதம்</p><p>3 ஆண்டுகளில் ஒரே மாதிரி 1,597 கொலைகள் பதிவானது எப்படி?- அமைச்சர் ஆதவ்</p> <p>டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி-க்கும் அன்றைய திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது - உதயநிதி</p><p>அனைத்து கேள்விகளுக்கும் திங்களன்று பதில் கூறுகிறேன். நான் பதில் கூறும்போது யாரும் ஓடிவிடக்கூடாது - முதலமைச்சர் விஜய்</p><p>நான் பதிலளிக்கும் போது யாரும் ஓடிவிடக்கூடாது என பிராமிஸ் தர வேண்டும் என புன்னகையுடன் கூறிவிட்டு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்</p> <p>சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும் - உதயநிதி</p><p>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத்தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளி</p><p>பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களில் அடையாளம் வெளியிடப்பட்டது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>அண்ணா பல்கலை மாணவி வழக்கின் எப்ஐஆர்-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது திமுக அரசு. </p><p>புகார் அளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு அவரை அச்சுறுத்தியது திமுக அரசு- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்களே நடக்காததுபோல் நாடகம் ஆடினார்கள் என அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கப்பட்டது- அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>நான் பதிலளிக்கும்போது யாரும் ஓடிவிடக்கூடாது என முதமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்.</p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். </p><p>மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய திமுக அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக பீச்சிற்கு பூட்டு போடுவதில் பிஎச்டி செய்தவர்கள் திமுக தான்.</p><p>திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார். </p><p>தவெக ஆட்சியில் சிங்கப்பெண்களுக்கே பாதுகாப்பில்லை என எதிர்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.</p><p>நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள். </p><p>பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார்- உதயநிதி ஸ்டாலின்.</p><p>பட்டிமன்றத்திற்கு பேசிய என்னை சட்டமன்றத்திற்கு அழைத்து வந்தவர் முதலமைச்சர் விஜய்.</p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>பட்டிமன்றத்தில் பேசியவர் என உதயநிதி கூறியதை இழிவாக பேச வேண்டாம் - அமைச்சர் ராஜ்மோகன்.</p><p>இழிவாக பேசவில்லை, நான் பட்டிமன்றத்தை விரும்பிப் பார்ப்பவன் என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி விளக்கம்.</p><p>நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறற எதிர்கட்சி தலைவருக்கும் 3 நாள் அவகாசம் உள்ளது.</p><p>காவல்துறையில் தவறு நடந்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் அரசு தவெக அரசு.</p><p>கன்னியாகுமரி காவல்நிலைய மரணத்தில் தொடர்புபகைய அனைத்து காவலர்களும் கைது செய்யப்பட்டனர்.</p><p>போதைப்புழக்கம், மதுப்பழக்கத்தால் திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிவிட்டனர்- ஆதவ் அர்ஜூனா. </p><p>தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் உத்தரவிட்ட அதிகாரிகள் மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயிரிழந்த மக்களுக்கு என்ன பதில்?- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.</p><p>தவெக அரசுக்கு தைரியம் இருந்தால் நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கட்டும் என உதயநிதி சவால் விடுத்துள்ளார்.</p><p>அமைச்சர் ஒவ்வொருவரும் பாடம் எடுப்பதுபோல் ஒரு மணி நேரம் பேசினால் எப்படி?- கே.என்.நேரு</p><p>தவெக ஆட்சியை மைக்ரோ ஸ்கோப் வைத்து பார்த்து 100 நாள் தயார் செய்த ஸ்கிரிப்டை உதயநிதி வாசித்துள்ளார்.</p><p>கேள்வி கேட்டுகும் இடத்தில் மட்டும் தான் திமுக இருக்கும்- சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.</p><p>ஆபத்து இருக்கும்போது தயாராக இருப்பது நல்லதுதான், தவெக ஆட்சியில் அதிக ஆபத்து உள்ளதால் தயாராக உள்ளோம்- உதயநிதி ஸ்டாலின்.</p><h2>சட்டசபையில் பிரேமலதா உரை</h2><p>நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.</p><p>இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.</p> <p>இது சட்டசபை, சண்டை சபை இல்லை.</p><p>தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் - பிரேமலதா</p><p>காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் - பிரேமலதா</p><p>நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் - உதயநிதி</p><p>காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.</p><p>8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்  - பிரேமலதா</p> <p>திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.</p><p>அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.</p><p>போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் -  பிரேமலதா</p> <p>உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை</p><p>சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.</p><p>அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.</p><p>எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.</p><p>அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.</p><p>காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள் -  எடப்பாடி பழனிசாமி</p> <p>காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.</p><p>காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p> <p>காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி</p> <p>சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும் -  எடப்பாடி பழனிசாமி</p><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கருவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும்.</p><p>இன்னும் பல இடங்களில் பைக் ரேஸ் நடப்பதாக செய்திகள் வருகிறது, அதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- இபிஎஸ்</p><p>மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது. அதை தடுக்க வேண்டும்.</p><p>வாகன ஓட்டிகளிடம் வசூலித்த அபராதத்தை கரூவூலத்தில் செலுத்தாமல் வட்டிக்கு விடுவதாக செய்தி வருகிறது, கண்காணிக்க வேண்டும்- இபிஎஸ்.</p><p>இணையவழி குற்றங்களை ஆரம்ப காலத்திலேயே தடுக்க தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- இபிஎஸ்</p><p>நியாயமான போராட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>பொது மக்களின் பிரச்சனைகளுக்காக தான் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன- இபிஎஸ்.</p><p>தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்- இபிஎஸ்.</p><p>தமிழகத்தில் முதியவர்கள் தனியாக வகிக்கும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.</p><p>சேலத்தில் உள்ள எனது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர்- இபிஎஸ்.</p><p>தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றச்சாட்டு.</p><p>தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. </p><p>எம்எல்ஏக்கள் நினைத்தால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்கலாம்.</p><p>அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களுக்கு தெரியாமல் அந்த தொகுதியில் நடக்காது என முதல்வர் கூறினார்- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.</p><p>நான் பயன்படுத்துவது சாதாரண கண்ணாடிதான். இதை அணிந்துகொண்டுதான் பேரவைக்கு செல்கிறேன். இதில் கேமரா இருப்பதாகப் பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>META AI கேமரா கொண்ட மூக்குக்கண்ணாடி மூலம் பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அமைச்சர் பர்வேஸ் விளக்கம்.</p><p>பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு இருக்கா? ஆண்களுக்கு கற்பு இல்லையா? இனிமேல் அந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். </p><p>எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் கற்பழிப்பு எனும் வார்த்தை இடம்பெற்றதாகக் கூறி, ‘பாலியல் துன்புறுத்தல்' என குறிப்பிடுமாறு சிபிஎம் எம்எல்ஏ லதா வலியுறுத்தினார்.</p><p>காவல்துறையினர் அடிப்படை ஊதியம் 25 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.</p><p>சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். உணவு படி 300 ரூபாய் என்று இருப்பதை உயர்த்தி கொடுக்க வேண்டும்.</p><p>மேலும், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்- காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட்</p><p>என் வேட்புமனுத்தாக்கலில் ரூ.1 கோடி சொத்து காட்டியிருக்கிறேன். இன்று நான் போட்டுள்ள சட்டை, எல்லாமே அவர் கொடுத்தது தான்.</p><p>அவர் பணம் கொடுத்தாரா என நீங்கள் கேட்கலாம்... சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை தேடி செல்லும் போது, அப்பா, அம்மா யார் என்று கேட்காமல், தளபதி விஜய்யோடு ஆளு என்ற காரணத்திற்காக தொழில் கொடுத்தார்கள்.</p><p>அந்த வருவாயில் கட்சியில் பொறுப்பு பெற்றேன்- விருதுநகர் தவெக எம்எல்ஏ செல்வம்.</p><p>இன்னொரு பிறவி இருந்தால் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என முதல்வர் விஜய் சொன்னார், நான் சொல்கிறேன் எனக்கும் இன்னொரு பிறவி இருந்தால் முதல்வர் விஜய்யின் உதவியாளராக பிறக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை- உத்திரமேரூர் தவெக எம்எல்ஏ முனிரெத்தினம்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-kolathur-victory-dismissed-dmk-to-move-the-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-kolathur-victory-dismissed-dmk-to-move-the-supreme-court#comments</comments><guid isPermaLink="false">12f5a5cc-1341-42e5-bff0-40515d7e1357</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:41:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:41:39.256Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,Kolathur,கொளத்தூர்,மு.க.ஸ்டாலின்,M.k. stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/f8nneypk/New-Project-2026-09-03T210609.718.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/f8nneypk/New-Project-2026-09-03T210609.718.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.</p><p>இந்த வழக்கை இன்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/madras-high-court-orders-the-quashing-of-two-cases-against-edappadi-palaniswami">உயர் நீதிமன்றம்</a> தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் என். ஆர். இளங்கோ கூறியதாவது;</p><p>“கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதுபட்டுள்ளது தொடர்பாக ஏற்கனவே ஆதரங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம். தேர்தல் ஆணையம் மொத்தம் 19 மின்னணு இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு 14 இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றன என்று மட்டும் ஒரு அறிக்கையை கொடுத்துள்ளார்கள். </p><h2>5 இயந்திரங்கள் பழுது</h2><p>இதில் ஐந்து இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், ஏறக்குறைய 32.33% வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருக்கிறது என்பதை நாங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.</p><p>எனவே கொளத்தூர் தொகுதியினுடைய அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும். அந்த விவி பேட்டில் இருக்கக்கூடிய வாக்கு சீட்டுகளை எண்ணி பார்க்க வேண்டும் என்று ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தோம். </p><p>இதனுடைய விளைவாக கான்சிகவன்சியல் பிரேயராக எங்களது  தலைவர் வெற்றி பெற்றதாக  அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆக இரண்டு பிரேயர்கள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக அதிக குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கை தொடுக்க வேண்டும் என கட்சியின் சட்டத்துறைதான் முன்னெடுத்தது.  </p><p>கட்சித் தலைவரிடம் எடுத்துச் சொல்லி அவருடைய ஒப்புதலை பெற்று நாங்கள் அந்த இயந்திரங்களை சரிபார்த்தோம். அதில் ஐந்து இயந்திரங்கள் குறைபாடு உடையவதாக இருக்கவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம். </p><h2>இவிஎம்-க்கு பிறகு சட்டத்திருத்தம் இல்லை</h2><p>மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 100ன் படி இந்தெந்த காரணங்களுக்காகத்தான் தேர்தலை தள்ளுப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இல்லை என்றால், பழுதடைந்திருந்தால் தேர்தலை தள்ளுபடி செய்யலாம் என்ற காரணம் சொல்லப்படவில்லை. </p><p>ஏனென்றால் அது 1951ல் இயற்றப்பட்ட சட்டம். மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு, அந்த சட்டம் திருத்தம் செய்யப்படவில்லை. இரண்டாவதாக அரசியல் அமைப்பு சட்டம், எல்லா தேர்தல் வழக்குகளையும் தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்ய முடியும் என்று சொல்லி சொல்லியிருக்கிறது. </p><h2> மனு தாக்கல் செய்ய அனுமதி</h2><p>தேர்தல் மனுவை 45 நாட்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரைக்கும் நாங்கள் தேர்தல் முடிவு வந்த மூன்றாவது தினமே அதற்குரிய பணத்தைக்கட்டி தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு இந்த 14 இயந்திரங்களை சரிபார்க்க  வேண்டும் என கேட்டிருந்தோம்.</p><p>ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்களுக்கு பிறகு தான். சொல்லப்போனால் மூன்று மாதங்களுக்கு பிறகுதான் அந்த இயந்திரங்களை எடுத்து பரிசோதனை செய்தார்கள். எனவே தேர்தல் மனுவை ஒரு எதிர்பார்க்கும் நோக்கில் தாக்கல் செய்ய முடியாது.</p><p>இதை வைத்துதான் இந்த வழக்கை தேர்தல் மனுவாகத்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. </p><p>எனவே அது நிலைக்கதக்கது அல்ல. இருப்பினும் கூட அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்ப்பது குறித்து உரிய மனுவை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கி இன்றைக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள்.</p><p>எனவே இது குறித்து நாங்கள் கட்சித் தலைவரிடம், தலைமைக் கழகத்திடம் எடுத்துச் சொல்லி இதை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல நாங்கள் கேட்போம். தலைமைக் கழகத்தினுடைய அறிவுறுத்தல் படி நாங்கள் செயல்படுவோம்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு உள்ளதா ? ஆணுக்கு இல்லையா? சிபிஎம் எம்எல்ஏ லதா ஆவேசம் 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-virginity-only-for-women-cpm-mla-latha-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-virginity-only-for-women-cpm-mla-latha-asks#comments</comments><guid isPermaLink="false">edd51a40-0782-4858-960a-4c7ef866f5cf</guid><pubDate>Thu, 03 Sep 2026 15:10:40 +0000</pubDate><atom:updated>2026-09-03T15:10:40.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPIM,assembly,Adhav Arjuna,minister Latha</media:keywords><media:content height="248" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s3e5y5eb/images-1.jfif" width="345"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cpim mla Latha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s3e5y5eb/images-1.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர், இனி அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/current-tamil-nadu-government-runs-on-communist-support-says-cpm-shanmugam">சிபிஎம்</a> எம்எல்ஏ லதா கேட்டுக்கொண்டுள்ளார்.</p> <p>சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது ,அதில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ‘கற்பழிப்பு ‘என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.</p><h2>ஆண்களுக்கு கற்பு இல்லையா ?</h2><p>கற்பழிப்பு என்ற வார்த்தையை சட்ட மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஏன் பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதா?ஆண்களுக்கு கற்பு இல்லையா  என்ற  கேள்வியை முன்வைத்தார்.</p><p>கற்பழிப்பு என்ற வார்த்தை கடந்துபோய் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்குப் பதிலாக 'பாலியல் வன்புணர்வு' போன்ற புதிய மாற்று வார்த்தைகள் வந்துவிட்டன.</p><p>பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்முறை என்று கூறுவதே சரியான வார்த்தை பயன்பாட்டு முறையாகும் என்று சட்டப்பேரவையில்  தெரிவித்தார்.</p><h2>அவையில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது </h2><p> எம்எல்ஏ-வின் பேச்சிற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நம் சகோதரியின் கோரிக்கை நியாயமானது  இதை அவையில் பதிவு  செய்ய வேண்டியது கட்டாயம் என்றும் , அதற்கான பொறுப்பு இருக்கிறது . அதற்கான வருத்தத்தை தெரிவித்தார். </p><p>இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தை ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும்  எம்எல்ஏ லதா மற்றும் பாமக அமைச்சர் சவுமியா அன்புமணி அகியோர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்மொழி தனித்தீர்மானம் : இது எங்களுடைய  குழந்தை-முன்னாள் அமைச்சர் ரகுபதி  </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-should-be-made-court-language-this-is-our-child-says-minister-raghupathi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-should-be-made-court-language-this-is-our-child-says-minister-raghupathi#comments</comments><guid isPermaLink="false">f4cff524-3664-4a29-a7ff-e2297990028f</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:26:29 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:26:29.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,Minister Ragupathy,tamilnadu assembly,CMVIJAY,former minister ragupathy</media:keywords><media:content height="379" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/o9h992pp/ragupathy.avif" width="766"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ former minister ragupathy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/o9h992pp/ragupathy.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழ்மொழி தனித்தீர்மானம் </h2><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க  வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக  கூறி முன்னாள் அமைச்சர் ரகுபதி செயல்பாடுகளை பட்டியலிட்டார்.</p><h2>தனித்தீர்மானத்திற்கு குரல் கொடுத்த கலைஞர் </h2><p> சட்டபேரவையில் தமிழ் மொழியை  வழக்காடு மொழியாக்குவதற்கான தனிதீர்மானத்தை ஒட்டி பேசிய திமுக முன்னாள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-thai-vazhthu-issue-tamil-nadu-govt-give-private-law-former-minister-regupathy">அமைச்சர் ரகுபதி</a> ,தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததே எங்கள் தலைவர்  கலைஞர் தான் என்று தெரிவித்தார். </p><h2>பிள்ளையார் சுழி போட்டது திமுக தான்</h2><p>தொடர்ந்து பேசிய அமைச்சர் தன்னுடைய ஆட்சியில் 2006ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை  ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர் தான் என்று தெரிவித்தார். </p><h2>நீதிமன்ற விஷயங்கள்,அனைத்து மக்களுக்கும் புரிய கோரிக்கை </h2><p>நீதிமன்றத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளும் அனைத்து தரப்பு  மக்களுக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்திருந்தார் என்று திமுகவின் செயல்பாடுகளை குறிப்பிட்டார். </p><p>குறிப்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பங்கேற்றபோதுஅன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை நேரடியாக முன்வைத்தார் என்று தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நாளை கிருஷ்ண ஜெயந்தி: இபிஎஸ்- அன்புமணி வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-tomorrow-eps-anbumani-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/krishna-jayanti-tomorrow-eps-anbumani-greetings#comments</comments><guid isPermaLink="false">92fdfaed-5bb9-4085-9658-14b74011c260</guid><pubDate>Thu, 03 Sep 2026 13:07:22 +0000</pubDate><atom:updated>2026-09-03T13:07:22.639Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>anbumani,அன்புமணி,EPS,இபிஎஸ்,கிருஷ்ண ஜெயந்தி,krishna jayanthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/if2i0fzq/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS- Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/if2i0fzq/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். </p><h2>எடப்பாடி பழனிசாமி:</h2><p><a href="https://www.maalaimalar.com/sirappukatturaigal/krishna-worship-14" rel="nofollow">ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி</a>யைக் கொண்டாடும் ஒவ்வொருவரும் அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்.</p><p>'அறம் பிறழ்கின்றபோது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்' என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, அறத்தை வளர்ப்பதே நமது கடமை என்ற உயரிய குறிக்கோளுடன் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.</p><p>ஸ்ரீகிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், மக்கள் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை வரை அரிசி மாவு கரைசலால் குழந்தையின் பாதங்களை பதித்து, ஸ்ரீ கிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள்.</p><p>இந்த இனிய நாளில் நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.</p><h2>பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி: </h2><p>அநீதியை ஒழிப்பதற்காகவும், நீதியை நிலை நிறுத்து வதற்காகவும்  கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதாரம் எடுத்த நாளான கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>தமிழ்நாட்டில் அமைதி, வளம், <a href="https://www.maalaimalar.com/news/national/onam-festival-bring-joy-unity-prosperity-says-pm-modi" rel="nofollow">மகிழ்ச்சி</a>, சகோதரத்துவம், அன்பு, அறம் உள்ளிட்ட அனைத்தும் செழிக்க வேண்டும் என்று  கூறி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாடு தனி நாடானால் விஜய் பிரதமராகலாம்’: தவெக - காங்கிரஸ் மோதலுக்கு தீர்வு சொன்ன திமுக! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-tamil-nadu-becomes-a-separate-nation-vijay-could-become-prime-minister-dmk-offers-a-solution-to-the-tvk-congress-clash</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-tamil-nadu-becomes-a-separate-nation-vijay-could-become-prime-minister-dmk-offers-a-solution-to-the-tvk-congress-clash#comments</comments><guid isPermaLink="false">e22fad95-c46b-4900-b58a-fe797260a9c1</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:55:56 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:55:56.555Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,பிரதமர் வேட்பாளர்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Prime Ministerial candidate</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/1q4in4yb/New-Project-2026-09-03T182027.163.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாடு தனி நாடானால் விஜய் பிரதமராகலாம்’: தவெக - காங்கிரஸ் மோதலுக்கு தீர்வுசொன்ன திமுக! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/1q4in4yb/New-Project-2026-09-03T182027.163.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் ஒரே கூட்டணியில் உள்ள தவெக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. </p><p>மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளரா அல்லது முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா என்பதுதான் அந்த வாதம். </p><p>தவெக எம்.எல்.ஏக்கள் பலரும் விஜய் பிரதமர் ஆவார் எனக்கூறிவரும் நிலையில், அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே இருப்பதாக காங்கிரஸார் விமர்சித்து வருகின்றனர். </p><p>இதனிடையே காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரும், எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தியும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.</p><p>இந்நிலையில் தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வேண்டுமானால் விஜய் பிரதமர் ஆகலாம் என திமுக செய்தித்தொடர்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-delayed-arrival-was-the-reason-for-the-loss-of-life-tks-elangovan">டி.கே.எஸ். இளங்கோவன் </a>தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“விஜய் தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையை பெறவில்லை. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியே அமைத்துள்ளார். அப்படியிருக்க, அவரால் எப்படிப் பிரதமராக முடியும்? </p><p>ஒருகாலத்தில் தமிழ்நாட்டை தனிநாடாக்கும் கோரிக்கையை முன்வைத்தோம். அப்படி விஜய் வேண்டுமானால் தமிழ்நாட்டை தனி நாடாக்கினால் பிரதமர் ஆகலாம். </p><p>ஒரு மாநிலத்திலேயே அவரால் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை நடத்திவருகிறார். அதிலும் காங்கிரஸ் ஆதரவோடு; 5 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ராகுல் காந்தி பிரதமர் ஆகவேண்டும் என இருக்கிறார்கள்.</p><p>நாளையே அவர்கள் ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்றுக்கூறினால், இந்த ஆட்சியே கவிழ்ந்துவிடும். பின் மற்ற மாநிலங்களில் எப்படி வெல்லமுடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே புதிய ஏ.சி. மின்சார ரெயில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-central-arakkonam-new-ac-electric-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-central-arakkonam-new-ac-electric-train#comments</comments><guid isPermaLink="false">39123629-68b5-4d49-8701-8938fde4e957</guid><pubDate>Thu, 03 Sep 2026 12:47:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T12:47:17.408Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஏசி மின்சார ரெயில்,அரக்கோணம்,சென்னை சென்ட்ரல்,chennai central,AC Electric Train,Arokkanam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/h278gkbz/Train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AC Electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/h278gkbz/Train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது.</p><p>முற்றிலும் குளிர்சாதன வசதி உள்ள இந்த ரெயிலுக்கு ஆரம்பக் கட்டத்தில் பயணிகளிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது  இந்த ஏ.சி. ரெயிலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.</p><p>குறிப்பாக,  அரசு தனியார் அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வேலைக்கு வரவும் அவர்கள் பணி முடிந்து வீடு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது.</p><p>இந்த நிலையில் மேலும் ஒரு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/another-ac-electric-train-in-chennai" rel="nofollow">மின்சார ஏ.சி. ரெயில்</a> பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>புதிய ஏ.சி. மின்சார ரெயில் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம்  வரை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கால அட்டவணை தயாரித்து வைத்து ரெயில்வே துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>திருவள்ளூர், ஆவடி திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளன.   புறநகர் பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரக்கோணத்திற்கு விடப்பகிறது.</p><p>அரசு அலுவலக வேலை நேரத்தை கணக்கிட்டு இயக்கவும் அட்டவணை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இன்னும் ஒரு வாரத்தில் ஏ.சி. மின்சார ரெயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>விசேஷ நாட்களில் விதிவிலக்கு..
கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு கோவில்களில் செல்போன் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-allows-mobile-phones-for-pregnant-elderly-on-special-temple-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-minister-allows-mobile-phones-for-pregnant-elderly-on-special-temple-days#comments</comments><guid isPermaLink="false">29a63a96-d094-4daa-ba1c-eec5c7f4f086</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:42:14 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:42:14.998Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>cellphone,Temples,கோவில்கள்,செல்போன்,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qdgoj75u/Minister-Ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/qdgoj75u/Minister-Ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவில்களில் விசேஷ நாட்களில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் செல்போன் எடுத்துச்செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர்களிடம் மொபைல்போன்களை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.</p><p>அமைச்சர் ரமேஷ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>செல்போனுக்கு தடை</h2><p>கோவிலில் செல்போனுக்கு தடை விதித்திருப்பது  புதிய நடைமுறை கிடையாது. 2022 டிசம்பர் மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="nofollow">நீதிபதிகள்</a> மகாதேவன், சத்திய நாராயணா ஆகியோர் தீர்ப்பு கொடுத்தனர். திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த வழக்கு ஒன்று போட்டிருந்தனர்.</p><p>அந்த வழக்கில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தனர்.</p><p>அந்த தீர்ப்பின்படி பல கோவில்களில் செல்போன்களுக்கு தடை அமல்படுத்தப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழனி, ராமேசுவரம் கோவில்களில் அப்போதே செல்போன் கவுண்டர் வைத்து 5 ரூபாய் கட்டணம் வசூலித்தனர்.</p><p>அதன் பிறகு எல்லா கோவில்களிலும் செல்போனுக்கு தடை என்பது இருந்தது. அதற்கான பாதுகாப்பு பெட்டகம் இல்லாத 52 முதுநிலை கோவில்களிலும் அந்த தடையை கொண்டு வந்து அமல்படுத்தி இருக்கிறோம்.</p><h2>அறிவுறுத்தல்</h2><p>பொதுமக்களை கஷ்டபடுத்த வேண்டும் என்பதற்காக இதை செய்யவில்லை. </p><p>பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி விட கூடாது என்று மிக தெளிவாக எல்லா கோவில்களுக்கும் அறிவுறுத்தி இருக்கிறோம். மொபைல் போனை பாதுகாப்பாக வைப்பது பெரிய பாரமாக மாறிவிடக்கூடாது.</p><p>இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்தந்த <a href="https://www.maalaimalar.com/spirituality/aanmiga-kalanjiyam/kula-deivam-worship-15" rel="nofollow">கோவில்கள்</a> அதற்குதகுந்தாற் போல் முடிவுகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளோம்.</p><h2>கர்ப்பிணிகளுக்கு</h2><p>கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டுப்பாடு இல்லை. அவர்களிடம்<a href="https://www.maalaimalar.com/technology/youtube-reaches-80-of-internet-users-in-india" rel="nofollow"> மொபைல்போன்</a>களை வாங்கி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.</p><p>கோவில்களில் செல்போன் வாங்கி வைப்பற்காக மகளிர் சுய உதவிக்குழுவினரை வேலைக்கு எடுத்து அவர்களை பயன்படுத்துகிறோம். அவர்களுக்கு சம்பளம் அதில் இருந்து கொடுக்க போகிறோம்.</p><p>செல்போனுக்கு டோக்கன் பிரிண்ட் செய்து கொடுக்கிறோம். அதற்காக பேப்பர் ரோல் வாங்குகிறோம். இந்த மாதிரி விஷயங்களுக்காகத்தான் செல்போனுக்கு கட்டணமாக பெறப்படும் ரூ.5 பயன்பட போகிறது.</p><p>அன்னதானத்துக்கு பயன்படுத்துவோம்</p><p>அதில் வருமானம் மிச்சம் இருந்தால் அந்த கோவிலுக்கு வழங்கக்கூடிய ஏழை எளிய பக்தர்கள் அன்னதானத்தில் சாப்பிட அந்த பணத்தை பயன்படுத்த போகிறோம்.</p><p>இதை தனி நபர்கள் எடுத்து செல்வது போலவோ, கோவிலில் கொள்ளையடிப்பது போலவோ பலர் பேசிக்கொள்கிறார்கள். அவர்களின் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது.</p><p>அரசாங்கம் ஒரு விஷயத்தை செய்யும்போது அதை எதிர்ப்பவர்கள் கண்மூடித்தனமாக எதிர்க்க கூடாது. இதை அமல்படுத்தும்போது உண்மையிலேயே பொதுமக்களுக்கு சிக்கல்கள் இருக்கிறது. பிரச்சினைகள் இருக்கிறது. மனஅழுத்தம் இருக்கிறது என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை முதலில் அரசாங்கம்தான் செய்யும். </p><h2>மாற்று ஏற்பாடுகள்</h2><p>அதில் நாங்கள் தயக்கம் காட்ட மாட்டோம். பொது மக்களுக்கு ஒரு கஷ்டம் இருந்தால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்களே செய்வோம். பொதுமக்கள் இதை செய்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசாங்கம் இது கிடையாது.</p><p>இது மக்களுக்கான அரசாங்கம் தான். இதை தவறாக சிலர் வெளியே கொண்டு செல்கிறார்கள். அவர்களின் நோக்கம் இந்து சமய அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என்று யோசிக்கக் கூடிய கும்பல் அவர்கள்.</p><p>கோவிலில் நடைமுறையாக என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நடைமுறையில் பிரச்சினைகள் இருந்தால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக  இருக்கிறது.</p><p>இதை கோவில்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். கோவில்களின் நிதிநிலையை கருத்தில் கொண்டு 5 ரூபாய் வாங்கலாமா, வேண்டாமா? என்பதை வருங்காலத்தில் கோவில்களே முடிவு எடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம்.</p><h2>அரசியல் செய்கிறார்கள்</h2><p>அதில் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. எதுவுமே இல்லாத விஷயத்தை பெரிதுப்படுத்தி கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். கோவில் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.</p><p>அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அமைதியாக தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதை நடைமுறைப்படுத்துகிறோம்.</p><p>இந்த 52 கோவில்களும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள். அந்த கோவில்களில் உள்ளே செல்லும்போது கல்வெட்டுகள், தமிழ் எழுத்துக்கள், தமிழ் பக்தி இலக்கியங்களை நிறைய இடங்களில் வைத்திருக்கிறோம்.</p><p>அதையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டும். படிக்க வேண்டும். சிற்பக் கலையை ரசிக்க வேண்டும். கட்டுமான  கலையை ரசிக்க வேண்டும்  ஆகியவை கோவிலில் செல்போன் பயன்படுத்துவதால் தடைபட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களிடம் கருத்து பா.ஜ.க. ஆளக்கூடிய வடமாநிலங்களிலும் கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. எனவே இதை வைத்து அரசியல் செய்யும் வேலையை செய்ய வேண்டாம்.</p><p>இது சம்பந்தமாக பக்தர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். அவர்களின் கருத்துக்களை பொறுத்து நிச்சயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும்.</p><p>கோவில்களில் கூட்டம் அதிகமாக வரக்கூடிய விசேஷ நாட்களில் மொபைல்போன் கவுண்டர்களில் செல்போன் வாங்குவதை வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கும்பகோணம்: 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து முதியவர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-10-dogs-maul-elderly-man-to-death</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-10-dogs-maul-elderly-man-to-death#comments</comments><guid isPermaLink="false">2649562d-f270-4c60-9c71-4a348dc110f0</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:35:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:35:37.561Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கும்பகோணம்,தெருநாய் தாக்குதல்,தெருநாய்கள்,தெருநாய்</media:keywords><media:content height="168" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/fk5bbtwk/images.jfif" width="351"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ street dog ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/fk5bbtwk/images.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>நாய்கள் கடித்து முதியவர் மரணம்</h2><p>கும்பகோணம்: பாலக்கரை - சென்னை சாலையில் 10க்கும் மேலான நாய்கள் கடித்ததில் அரியலூர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சின்னதுரை(75) என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். </p><h2>மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு</h2><p>சாலையில் யாசகம் பெற்று வந்ததாக கூறப்படும் சின்னதுரையை 10 நாய்கள் கடித்துள்ளன. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>இதற்கு முன் ஒரே நாளில் 27 பேரை கடித்த <a href="https://www.maalaimalar.com/news/national/girl-rabies-death-case-4-doctors-booked-for-medical-negligence">தெருநாய்</a></h2><p>கடந்த மாதம்  புவனகிரியில்  சாலையில் நடந்து சென்றவர்கள், பைக்கில் சென்றவர்கள் என ஒரே நாளில் மொத்தம் 27 பேரை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய் கடி பிரச்சனைக்கு தீர்வு எப்போது?</h2><p>தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய் கடி பிரச்சனைக்கு தீர்வு எப்போது என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகவும் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>என்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும்: ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-show-his-dissatisfaction-the-assembly-opposing-aiadmk-thalavai-sundaram-speaking-first</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-show-his-dissatisfaction-the-assembly-opposing-aiadmk-thalavai-sundaram-speaking-first#comments</comments><guid isPermaLink="false">1b621df4-b17a-4209-b2d3-61f426cb695c</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:25:45 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:25:45.070Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,CV Shanmugam,சிவி சண்முகம்,TN assembly,thalavai sundaram,தளவாய் சுந்தரம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/aocyej46/CVS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cv shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/aocyej46/CVS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழக சட்டசபையில் தன்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் ஆவேசம் அடைந்தார்.</strong></em> </p><h2>தனித்தீர்மானம்</h2><p>தமிழக சட்டசபையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் </p><p>தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் தெரிவித்தனர்.</p><p>அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.</p><p>அரசின் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் பேசினர். தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசினார்.</p><p>அதன்பின், அ.தி.மு.க. சார்பாக தளவாய் சுந்தரத்தைப் பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்தார்.</p><h2>சி.வி.சண்முகம் ஆவேசம்</h2><p>அப்போது ஆவேசமாக எழுந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் தன்னைப் பேச அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கோபம் அடைந்தார்.</p><p>தனக்கு பேச அனுமதி தரவேண்டும் என ஆவேசமாக கேட்ட சி.வி.சண்முகம் அவையில் இருந்து கிளம்பி வெளியே போவதுபோல சென்றார்.</p><p>உடனே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சிவி சண்முகத்திடம் உங்களுக்கு அடுத்து பேச வாய்ப்பு தருகிறேன் எனக்கூறி சமாதானம் செய்தார்.</p><p>அப்போது முன் இருக்கையில் இருந்த எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகனும் எழுந்து சென்று சி.வி.சண்முகத்தை இருக்கையில் அமர வைத்தார். அதன்பிறகே சி.வி.சண்முகம் சமாதானம் ஆனார். தளவாய் சுந்தரத்தை தொடர்ந்து, சி.வி.சண்முகத்திற்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? - சீமான் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-all-schemes-are-to-be-announced-under-rule-110-then-what-is-the-need-for-a-separate-budget-seeman-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/if-all-schemes-are-to-be-announced-under-rule-110-then-what-is-the-need-for-a-separate-budget-seeman-asks#comments</comments><guid isPermaLink="false">46218fb8-f83a-4465-b1dd-c7c8fe567428</guid><pubDate>Thu, 03 Sep 2026 11:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-03T11:19:37.016Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,தமிழ்நாடு சட்டப்பேரவை,சீமான்,Tamil Nadu Legislative Assembly,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jlvs7tqf/New-Project-2026-09-03T164805.104.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? - சீமான் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/jlvs7tqf/New-Project-2026-09-03T164805.104.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் விஜய், அதனை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார். </p><p>இந்நிலையில் அனைத்து திட்டங்களும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால், தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன்மீதான விவாதங்கள் எதற்கு? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/why-is-chief-minister-vijay-showing-such-urgency-regarding-the-arrest-when-he-failed-to-show-similar-speed-in-the-cauvery-river-water-dispute-seeman-asks">சீமான்</a> கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,</p><h2>மக்களுக்கு எதிரானது</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.</p><p>நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.</p><p>ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வருவது ஏன்? எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? </p><p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?</p><h2>இதுதான் மாற்றமா?</h2><p>மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன்<sub> </sub>நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை? பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள். </p><p>அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?</p><p>சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?</p><h2>இதற்கு மட்டும் எதற்கு முதலமைச்சர்?</h2><p>முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? </p><p>இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா?</p><h2>ரூ.73,900 கோடி திட்டங்கள்</h2><p>கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. </p><p>அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?</p><h2>உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்</h2><p>நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?</p><p>மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ரேசன் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: இன்று முதல் வினியோகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onions-sold-at-rs-35-in-ration-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onions-sold-at-rs-35-in-ration-shops#comments</comments><guid isPermaLink="false">ffc1d1df-81c5-4446-b6aa-cfb2d36457ab</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:39:17 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:39:17.819Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Onion,வெங்காயம்,ரேஷன் கடை,ration shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7wo67o72/onion.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/7wo67o72/onion.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.</strong></em></p><p>சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருந்து வரும் பெரிய <a href="https://www.maalaimalar.com/topic/வெங்காயம்">வெங்காயத்தின்</a> விலை கடந்த சில நாட்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது.</p><p>இதனால் தமிழகத்தில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்ய முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார். </p><p>இதன்படி நகர்புறங்களில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>2 அமைச்சர்கள்</strong></h2><p>இதற்கான முதல் விற்பனையை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் காந்தி ராஜன் ஆகியோர் இன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள ரேசன் விலைக் கடையில் தொடங்கி வைத்தனர். </p><p>இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் செயலாளர் அமுதா,  மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.</p><p>இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-</p><h2><strong>குறைந்த விலையில்</strong> </h2><p>முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொது மக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதார சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><h2><strong>ஆயிரம் மெட்ரிக் டன்</strong></h2><p>இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம்  மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு  ஆகியவற்றின் மூலம் முதற் கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><p>நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகள் உள்ளிட்ட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.</p><h2><strong>தடையின்றி கிடைக்க</strong></h2><p>இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்படும். நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொது மக்கள் அனைவரும் இன்று முதல் தங்களுக்குரிய ரேசன் விலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35- என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 251 ரேசன் கடைகளிலும், நுகர்வோர் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 350 அமுதம் கூட்டுறவு ரேசன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை வாங்கி கொள்ளலாம்.</p>]]></content:encoded></item><item><title>சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு... முதுமலை காப்பகத்தில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை - வனத்துறை அதிரடி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-for-tourists-in-mudumalai-tiger-reserve</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-mobile-phones-for-tourists-in-mudumalai-tiger-reserve#comments</comments><guid isPermaLink="false">ac4c321b-a707-4087-aba5-c6a319fd6b16</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:34:45 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:34:45.956Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புலிகள் காப்பகம்,Mudumalai,முதுமலை வனவிலங்குகள்,முதுமலை பகுதி,செல்போன்</media:keywords><media:content height="407" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/tbsrdlzq/ksp7862.webp" width="611"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Muthumalai tiger reserve]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/tbsrdlzq/ksp7862.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>செல்போன் பயன்பாட்டிற்கு தடை </h2><p>புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், செல்போன்  பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. </p> <h2>தென்னிந்தியாவின் பழைமையான வனவிலங்கு சரணாலயம் </h2><p>தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அடர்ந்த காடுகள் நிறைந்த வனவிலங்குகள் சரணாலயமாக இருந்து வருகிறது.</p><p>குறிப்பாக இங்கு பல்வேறு வன விலங்குகளும், 260 ரக பறவையினங்களும், ஆசியாவின் மிகப்பெரிய வளர்ப்பு யானைகள் முகாமும் இங்கே அமையப்பெற்றுள்ளது. இந்த நிலையில் இவற்றினைக் காண ஜீப் சவாரி மூலம் பல்வேறு சுற்றுலா பயணிகள் அனுதினமும் குவிந்து வருகின்றனர்.</p><h2>விலங்குகளுக்கு ஏற்படும் இடையூறு </h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/muthumalai-near-wild-elephant-chases-and-attacks-tourist-783838">முதுமலை</a>  புலிகள் காப்பகத்திற்கு பல சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து ஜீப் சவாரி மூலம் விலங்குகளை காண செல்கின்றனர். அப்போது அதிக ஒலியுடன் செல்போனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு கடும் அச்சுறுத்தலையும், தொந்தரவையும் ஏற்படுத்தி வருகிறது.</p><h2>செல்போன் பயன்பாட்டிறகு தடை - வனத்துறை அறிவிப்பு </h2><p>இந்நிலையில் வனவிலங்குகளுக்கு ஏற்படும் இடையூறை தடுக்கும் நோக்கில், முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வனத்துறை அறிவிப்பு </h2><p>இது குறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா தெரிவித்துள்ளதாவது.. </p><p>உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வன விலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்”.</p>]]></content:encoded></item><item><title>வறட்சியால் தேயிலை மகசூல் சரிவு: நீலகிரியில் தேயிலை எஸ்டேட்டுகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nilgiris-tea-estates-5-day-closure-workers-livelihood-hit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nilgiris-tea-estates-5-day-closure-workers-livelihood-hit#comments</comments><guid isPermaLink="false">2d9e3723-a901-4b5e-8175-e9c66b24fae8</guid><pubDate>Thu, 03 Sep 2026 10:18:58 +0000</pubDate><atom:updated>2026-09-03T10:18:58.148Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Nilgiris,Tea Estate,நீலகிரி,தேயிலை எஸ்டேட்,Nilgiris Farmers,AVD Groups,Kothari Estate</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ycy3q8ia/Tea-Estate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tea Estate ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ycy3q8ia/Tea-Estate?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF">நீலகிரி </a>மாவட்டத்தில் ஏ.வி.டி. குழுமத்தின் நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு உட்பட்ட சட்டன், லூசியானா, பவானி, காட்டேரி, வாட்டர்பால் உள்ளிட்ட எஸ்டேட்டுகள் மற்றும் கோத்தாரி நிறுவனத்திற்குட்பட்ட கிரேக்மோர், வுட்லேண்ட்ஸ், மானார், பழனியப்பா, தைமலை, சாம்ராஜ், கோரக்குந்தா, சன்னிசைடு, ஆலாடா வேலி, குன்னக்கொம்பை, பில்லி மலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் தொடாந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>வறட்சி</h2><p>போதிய மழையின்மை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் மண்ணின் ஈரப்பதம் குறைந்து, <a href="https://www.maalaimalar.com/topic/tea-estate">பச்சைத்தேயிலை </a>கொழுந்துகளின் வரத்து கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் தேயிலைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.</p><p>வழக்கமாக ஒரு ஏக்கரில் மாதந்தோறும் சுமார் 500 கிலோ பச்சைத் தேயிலை கிடைக்கும் இடங்களில் தற்போது சுமார் 200 கிலோ அளவுக்கே கிடைப்பதாகவும், இதனால் எஸ்டேட்டுகளின் உற்பத்தி மற்றும் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2>மழை குறைவு</h2><p>நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றமும் தேயிலை சாகுபடிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. </p><p>குறுகிய காலத்தில் அதிக மழை பெய்துவிட்டு, அதன்பின் நீண்ட நாட்களுக்கு வறண்ட வானிலை நீடிப்பது தேயிலை செடிகளின் இளம் தளிர்களின் வளர்ச்சியை பாதிப்பதாக தேயிலைத் துறையினர் கூறுகின்றனர்.</p><h2>வாழ்வாதாரம்</h2><p>நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் தேயிலைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.</p><p>இந்தநிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் எஸ்டேட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது தொழிலாளர்களின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும் என தொழிற்சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>தேயிலை உற்பத்தி தொடர்ந்து குறைந்தால் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் மேலும் குறைவதுடன், சிறு தேயிலை விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.</p><h2>கோரிக்கை</h2><p>“நீலகிரி தேயிலைத் துறைக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையை அரசு ஆய்வு செய்து, பாதிக்கப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். </p><p>தேயிலை விவசாயிகளையும் பாதுகாக்க நீண்டகால திட்டங்களை செயல்படுத்த வேண்டும்” என தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் மானியக்கோரிக்கை மீது எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-and-premalatha-debate-on-the-demand-for-grants-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-and-premalatha-debate-on-the-demand-for-grants-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">aead1f74-a02c-4fcc-8b22-cc968e0da179</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:44:20 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:44:20.024Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,தமிழக சட்டசபை,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p2fwp6f8/eps.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி- பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி- பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/p2fwp6f8/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள் என கூறியுள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</p><p>* நாங்கள் எதிர்க்கட்சிகள் தான் எதிரி கட்சிகள் இல்லை. கடந்த 2 மணி நேரத்தில் விவாதம் மட்டும் நடந்து வருகிறது.</p><p>* இன்று சட்டசபையில் உதயநிதி மட்டும் தான் பேசியிருக்கிறார். எந்த உறுப்பினரும் பேசவில்லை.</p><p>* இது சட்டசபை, சண்டை சபை இல்லை.</p><p>* தங்களுக்கான அறிவிப்புகள் வரப்போகிறது என ஆயிரக்கணக்கான காவலர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>* காவல்துறைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்றார். </p><p>இதற்கிடையே குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், நான் 2 மணி நேரம் பேசவில்லை. வெறும் 35 நிமிடங்கள் தான் பேசி உள்ளேன் என அக்கா பிரேமலதாவிற்கு கூறிக்கொள்கிறேன் என்றார். </p><p>இதையடுத்து பேச்சை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த், </p><p>* காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* காவல்துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி புதியவர்களை நியமிக்க வேண்டும்.</p><p>* 8 மணி நேரம் வேலை, வார விடுப்பு போன்றவற்றை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.</p><p>* திருநங்கைகள் மிகவும் தைரியமானவர்கள், அவர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையில் சேர்க்க வேண்டும்.</p><p>* அதிக வழக்குகளை கையாளும் காவல்நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும்.</p><p>* போக்குவரத்து காவலர்களுக்கு உணவு, பழச்சாறு, கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.</p><p>* உலகத்தரத்தில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சீருடை வழங்க வேண்டும் என்றார். </p><p>இதையடுத்து பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, </p><p>* கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினர் சிறப்பாக கணியாற்றினர். அவர்களால் பல உயிர்கள் காக்கப்பட்டது.</p><p>* அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது.</p><p>* எடப்பாடி தொகுதியில் ஜலகண்டபுரத்தில் புறவழிச்சாலை அமைக்க 80% நிலம் எடுப்பு பணிகள் முடிந்து விட்டது.</p><p>* திமுக ஆட்சியில் கைவிட்ட புறவழிச்சாலை திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்.</p><p>* அதிமுக ஆட்சியை போல் விவசாயிகள் 22 மணி நேரம் மின் மோட்டாரை இயக்க அனுமதி வழங்க வேண்டும்.</p><p>* மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.</p><p>* அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு முறையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. பணியிடங்கள் நிரப்பப்பட்டன.</p><p>* காவலர்கள் எண்ணிக்கையை அதிகரியுங்கள், ஒருவர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் ஓராண்டு முன்பே பணியிடத்தை நிரப்புங்கள்.</p><p>* காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என தவெக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.</p><p>* காவல் ஆய்வாளர்கள் பலர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும்.</p><p>* பெண் காவலர்களை இரவு நேரங்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.</p><p>* காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக ஆட்சியில் அளித்தது போல தவெகவும் சிறப்பு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும். </p><p>* காவல் நிலையங்களின் உள்ளே 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>* சாலைகளில் உள்ள சிசிடிவி-களில் தூசுகள் படிந்து பதிவுகள் முறையாக கிடைப்பதில்லை, அதை பராமரிக்க வேண்டும்.</p><p>* சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து, அதனை சரி செய்ய வேண்டும்.</p><p>* மக்களிடம் ஆதாரங்கள் இருந்தாலும் போக்குவரத்து காவல்துறை அபராதம் வசூலிப்பதாக புகார் வருகிறது, அதை தடுக்க வேண்டும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை: மேலும் மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... தமிழ்நாடு? - அன்புமணி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-karnataka-government-forging-ahead-what-about-tamil-nadu-anbumani-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-karnataka-government-forging-ahead-what-about-tamil-nadu-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">a9674411-aa44-4fe4-812b-6199ebdeb893</guid><pubDate>Thu, 03 Sep 2026 09:38:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T09:38:42.436Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,தமிழ்நாடு அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Government of Tamil Nadu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s0tm4m56/New-Project-2026-09-03T150628.962.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணை: மேலும் மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... தமிழ்நாடு? - அன்புமணி கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/s0tm4m56/New-Project-2026-09-03T150628.962.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>தொடர் முன்னேற்றத்தில் கர்நாடக அரசு</h2><p>காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மேலும், மேலும் முன்னேறி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து அமைதி காப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேகதாது அணை கட்டப்படவுள்ள இடத்தை மத்திய நீர்வள ஆணையத்தின் குழு உடனடியாக நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; ஆய்வுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இந்த சந்திப்பின் போது கர்நாடக அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் கோரும் கூடுதல் தொழில்நுட்பத் தகவல்களை உடனுக்குடன் வழங்கவும் கர்நாடக அரசு தயாராக இருக்கிறது என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். </p><p>இதன் மூலம் மேகதாது அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.</p><h2>தீவிரம்</h2><p>மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை  கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. </p><p>அந்த அறிக்கையின் சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் கூறுகளுக்கு எதிராக இருப்பதால், அதை திருத்தி வழங்கும்படி கடந்த ஜூன் 29ஆம் தேதி மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியது. </p><p>அடுத்த 50 நாள்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 19&amp;ஆம் தேதிக்கு முன்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து விட்டது.</p><p>அடுத்த 10 நாள்களில், அதாவது ஆகஸ்ட் 29ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்குடன் அணைக்கு அனுமதி கோரி மத்திய நீர்வள ஆணையத்தை கர்நாடகம் அணுகும் என்று கூறியிருந்தார். </p><p>அடுத்த நான்காம் நாளில் கர்நாடக அமைச்சர் மத்திய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்து புதிய அணைக்கு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று கோரியிருக்கிறார். மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் காட்டும் தீவிரத்தை இது உணர்த்துகிறது.</p><h2>தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்</h2><p>அதே நேரத்தில், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அதை சுட்டிக்காட்டி, கர்நாட அரசின் முயற்சிகளை முறியடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தி வருகிறேன். </p><p>கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. </p><p>மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. </p><p>தமிழ்நாடு அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். </p><p>எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.</p><p>இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழ்நாடு அரசு அதன் அலட்சிய அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.</p><h2>கண்டும் காணாமல் இருக்கும் அரசு</h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டுக்கு பாசனத் தேவை, குடிநீர்த் தேவை உள்ளிட்டவற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும், கர்நாடகத்தில் சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து இதுவரை 100 முறைகளுக்கு மேல் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். </p><p>அதன் பயனாக, மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதையும், சென்னை உள்பட 28 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பதையும் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். </p><p>இவ்வளவுக்கும் பிறகும் மேகாதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நகர்வுகளை கண்டும் காணததைப் போல தமிழ்நாடு அமைதி காப்பதன் காரணத்தை  புரிந்து கொள்ள முடியவில்லை. இது என்ன வகையான அரசியல் உத்தி என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை.</p><h2>தமிழ்நாடு அரசு எப்போது கடமையை நிறைவேற்றும்?</h2><p>மேகதாது அணை கட்ட விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டப்படுவது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையத்தை வலியுறுத்த வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படையானக் கடமை ஆகும்.</p><p>அந்தக் கடமையை தமிழ்நாடு அரசு எப்போது நிறைவேற்றி, காவிரியை பாதுகாக்கப் போகிறது?</p><h2>விழித்துக்கொண்டால்தான்...</h2><p>அரசியலாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், மாநில உரிமைகளை பாதுகாப்பதாக இருந்தாலும் விழித்துக் கொண்டவர்கள் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலட்சியமாக இருந்தவர்கள் உரிமைகளை இழந்திருக்கிறார்கள். </p><p>1970ஆம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் காவிரி துணை ஆறுகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டது தான் இதற்கு சான்றாகும். </p><p>அந்த அணைகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை இன்று வரை நம்மால் சரி செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் இன்னும் ஒரு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களின் நிலை என்னவாகும்?</p><p>தமிழ்நாடு அரசிடம் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவதெல்லாம் காவிரி விவகாரத்தில் கடைபிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை உடனடியாக கைவிடுங்கள் என்பது தான். </p><p>மத்திய நீர்வள ஆணையர், மத்திய நீர்வள அமைச்சர், பிரதமர் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி தரக் கூடாது; அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்ய 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெறும்படி வலியுறுத்த வேண்டும்.</p><p>அவ்வாறு செய்யும் போது மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடத்தும் போது இதை சுட்டிக் காட்டி வாதிட முடியும் என்பதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றம்... பட்டிமன்றம்... ராஜ்மோகன் Vs உதயநிதி- சட்டசபையில் நடந்த காரசார விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-vs-udhayanidhi-stalin-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">5d8ef164-3243-49a5-8255-2cee40eec32d</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:59:18 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:59:18.282Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ ராஜ்மோகன்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/662rwe6g/assembly06.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டங்களுக்கு கட்டுபாடு விதிக்கும் அரசு தாய் மாமன் காது குத்தும் திட்டம் என மொத்தமாக பெயரிடலாம் என கூறினார். </p><p>இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், உண்மையில் நீட் ஒழிப்பு ரகசியம் எனக்குத் தெரியும் என்று உதயநிதி கூறியது தான் மிகப்பெரிய காதுகுத்து என்றார். </p><p>அமைச்சர் ராஜ்மோகன் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதைதொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தி.மு.க. உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலை மாணவி வழக்கின் FIR-ஐ ஆன்லைனில் பதிவிட்டு அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியது தி.மு.க. அரசு. </p><p>புகாரளித்த அரைமணி நேரத்தில் மாணவி பெயர், வீட்டின் முகவரியை வெளியிட்டு வரை தி.மு.க. அரசு அவரை அச்சுறுத்தியது. தி.மு.க. ஆட்சியில் குற்றங்களே நடக்காதது போல் நாடகம் ஆடினார்கள். </p><p>த.வெ.க. ஆட்சியில் குற்றங்களை தடுக்க வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பெண் அதிரப்படை உருவாக்கப்பட்டது. தரமான பதிலடி முதலமைச்சர் மூலமாக தரப்படும். போன வருடம் நடைபெற்ற சட்டசபையில் துணை முதலமைச்சர் அவைக்கு வரவே இல்லை. அவருக்கு பதில் அன்றைய முதலமைச்சரே எழுந்து நின்று அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மானியக்கோரிக்கையை நானே வாசிக்கிறேன் என்றார். </p><p>மேலும், மெரினாவுக்கு எப்படி பூட்டு போடுவது என சொல்லிக்கொடுத்தது முந்தைய தி.மு.க. அரசு தான். கடந்த 5 ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் PHD செய்தவர்கள் தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் மெரினா கடற்கரையில் எந்த போராட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் அவைக்கு சரியாக வருவதில்லை என அமைச்சர் கூறினார், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளேன், பாருங்கள்.  அமைச்சர் ராஜ்மோகனின் வரவலாறு எங்களுக்கு தெரியும். பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் அமைச்சராவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசினார். தற்போது தவெகவில் இருப்பதால் அமைச்சர் ராஜ்மோகன் மாற்றி பேசி வருகிறார் என்றார். </p><p>இதனிடையே பேசிய  ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு முதலமைச்சர் பதலளிக்க கால அவகாசம் உள்ளது. நான் பதிலளிக்கும் போது யாரும் ஒடிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். </p><p>அந்த வார்த்தையை எல்லாம் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நிராகரித்தார். </p>]]></content:encoded></item><item><title>யாரும் ஓடிவிடக்கூடாது... முதலமைச்சர் விஜய் Vs உதயநிதி: சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-vs-udhayanidhi-stalin-arguments#comments</comments><guid isPermaLink="false">f9cb10f7-44fb-49be-be6f-e4176b15fd57</guid><pubDate>Thu, 03 Sep 2026 08:18:07 +0000</pubDate><atom:updated>2026-09-03T08:18:07.141Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/eb35vanq/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என முதலமைச்சர் விஜய் பேசினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-</p><p>சட்டம் ஒழுங்கு பிரச்சனை சார்ந்த நான் வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் உரிய பதிலை வழங்குவார் என நம்பி எனது உரையை தொடங்குகிறேன். திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள தகவலுக்கு நன்றி. </p> <p>தற்போதைய ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியமைந்த பின் பெயர் மாற்ற அறிவிப்பு வருகிறது இல்லை என்றால் திட்டமே இல்லை என்ற அறிவிப்பு தான் வருகிறது.</p><p>இதுவரை எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு மற்றொரு அமைச்சர் பதில் சொல்கிறார். டிவி சீரியலில் வரும் கதாபாத்திரம் போல அவருக்கு பதில் இவர், இவருக்கு பதில் அவர் என்பது போல அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்.</p><p>காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக நம்பி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.  முதலமைச்சரின் பதிலுரைக்கு மூன்று நாட்கள்  நேரம் இருக்கு. நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க.</p><p>சபாநாயகர் ஜே சி.டி.பிரபாகர் :- முதலமைச்சரை பார்க்கும் போது தயார் படுத்துபவர் போல அல்ல, தயாரான நிலையில் தான் வந்திருக்கிறார் என தெரிகிறது.</p><p>இவ்வாறு சட்டசபையில் த.வெ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே காரசார விவாதம் நடைபெற்று வந்தது. </p><p>அதனை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளை மேற்கொண்ட அமல்ராஜ் ஐபிஎஸை இன்றைக்கு சென்னை மாநகர காவல் ஆணையராக ஏன் பதவி உயர்வு கொடுத்து வைத்தீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசுக்கு வைக்கிறேன் என்றார். </p><p>இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும், அதற்கான தெளிவான விளக்கத்தை நான் திங்கட்கிழமை பேசுகிறேன். நான் இங்கே இல்லை என்றாலும் கூட யார், யார் என்னென்ன கேள்வி கேட்குகிறார்கள் என்பது குறித்து எனக்கு வந்துவிடும். எல்லாத்துக்கும் நான் தெளிவா பதில் சொல்றேன். உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என்றார். </p><p>இதனால் த.வெ.க. தரப்பில் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு முதலமைச்சர் விஜய் அவையில் இருந்து சென்றுவிட்டார். </p><p>இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என அனைவருக்கும் தெரியும். 3 நாட்கள் நன்றாக தயாராகிவிட்டு முதலமைச்சர் வரட்டும் என்றுதான் நான் முன்னதாகவே கூறினேன் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பதிலுரைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன.. நன்றாக தயார் செய்து வாருங்கள்- முதலமைச்சருக்கு சவால்விட்ட உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/three-days-left-for-response-udayanidhi-throws-challenge-at-chief-minister#comments</comments><guid isPermaLink="false">75e3d91a-aa61-4af0-84ba-36ecc794853a</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:59:13 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:59:13.512Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/3uzu5bfx/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 106 நாட்களில் தவெகவினர் சிக்கிய பல்வேறு புகார்களை சட்டசபையில் குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>106 நாட்களில் ஆளுங்கட்சியினர் பெண்களுக்கு எதிராக செய்த அட்ரா சிட்டிக்கு பெரிய லிஸ்டே உள்ளது.</p><p>தவெகவின் 106 நாளில் 8 காவல், சிறை மரணங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஒரு Sorry கூட சொல்லவில்லை.</p><p>திமுக ஆட்சியின் காவல்நிலைய மரணத்தின்போது Sorry  வேண்டாம் நீதி வேண்டும் என்றவர் இப்போது Sorry கூட சொல்லவில்லை.</p><p>காவல் மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, சாரியும் கிடைக்கவில்லை.</p><p>முதல்வரை விமர்சித்தால் கைது, ஆனால் பாஜகவினர் விமர்சித்தால் தவெக அரசு கண்டுகொள்வதில்லை.</p><p>எங்களுக்கு வந்தால் ரத்தம், உங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா?</p><p>உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான் - உதயநிதி ஸ்டாலின்</p><p>நாங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் என்றும் நேரடியாக உடனடியாக பதில் கூறவில்லை.</p><p>டிவி சீரியலில் இனி இவருக்கு பதில் அவர் என கார்டு போடுவதுபோல குறிப்பிட்ட அமைச்சர்கள் மட்டும் தான் பதில் கூறுகிறார்கள்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறுவதில்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>திங்கட்கிழமை அன்று உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறப்படும் என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.</p><p>தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்," நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு 3 நாட்கள் தயாராகி வந்து முதலமைச்சர் திங்களன்று பதிலளிப்பார் என நினைக்கிறேன். நன்றாக தயார் செய்து வாருங்கள், தேவையற்ற குட்டிக்கதைகள் கூறாமல் லாஜிக்கின்றி பேசாமல் உரிய ஆதாரத்துடன் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். டேக் டைவர்ஷன் இன்றி முதலமைச்சர் எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்றார்.</p><p>முதலமைச்சர் தயாராகி வரவேண்டிய அவசியமில்லை. முதலமைச்சர் தயாராகி முதலமைச்சர் விஜய் தற்போதே தயாராக தான் இருக்கிறார். தங்கட்கிழமை பதில் அளிப்பார்.</p><p>அமைதியாக அமர்ந்திருக்கிறார் என நினைக்க வேண்டாம், அவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று சபாநாயகர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை: உதயநிதி பேச்சுக்கு சட்டசபையில் அமைச்சர் ஆனந்த் பதிலடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-bussy-anand-reply-udhayanidhi-speech#comments</comments><guid isPermaLink="false">d1ed84c0-106c-4370-a4ba-5846703417a5</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:29:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:29:01.568Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,Bussy Anand,TN assembly,அமைச்சர் புஸ்சி ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆனந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/4pzxjlp5/bussy.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் புஸ்சி ஆனந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முதலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>தற்போதை ஆட்சியில் சட்டம் இருக்கிறது, ஆனால் ஒழுங்கு இல்லை, பெண்களுக்கு Tragedy ஆக ஆட்சி மாறிவிட்டது.  தவெக அரசு ரிவர்ஸ் கியரில் தற்போது சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்தது ஏன்?</p><p>பாலியல் வழக்கில் கைதான தவெக பிரமுகர் தவெக எம்எல்ஏ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பெண்ணின் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்தும் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை என்று பேசினார். </p><p>அப்போது நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதாவது:-</p><p>த.வெ.க.வை சேர்ந்த பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகாரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண் பிரமுகரிடம் அத்துமீறிய நபர் த.வெ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். த.வெ.க பெண் அளித்த புகாரில் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணனுக்கு தொடர்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த போது அமைச்சர் புஸ்சி ஆனந்த் குறுக்கிட்டு பேசியதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் செல்லும் தமிழ்நாடு- உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-moving-in-reverse-gear-under-tvk-rule-udayanidhi#comments</comments><guid isPermaLink="false">3368fceb-862b-43dd-b053-87b4fa4fa2db</guid><pubDate>Thu, 03 Sep 2026 07:12:15 +0000</pubDate><atom:updated>2026-09-03T07:12:15.165Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/2tyc55pc/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார். அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>இதைதொடர்ந்து, காவல்துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் மீதே பழி போடாமல் முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.</p><p>திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறி உள்ளீர்கள்.</p><p>பெயர் மாற்ற அறிவிப்பு அல்ல திட்டம் ரத்து என்ற அறிவிப்பு தான் வருகிறது. </p><p>முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள் குறைந்ததாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.</p><p>தவெகவின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள், இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள்.</p><p>திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்த தவெக ஆட்சியில் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது.</p><p>தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம். கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன்?</p><p>வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர் என வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 சிலிண்டர் மட்டும் தான் என்கிறீர்கள்.</p><p>இதுவரை இல்லாத அளவில் திமுக ஆட்சியில் போதை பொருட்கள் பறிமுதல். நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும்.</p><p>பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து தீர்ப்பு வாங்கி கொடுத்தோம்.</p><p>தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை. </p><p>தவெக ஆட்சியில் 10 ஆணவ கொலைகள் நடந்துள்ளன.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றம்- சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-moved-by-the-chief-minister-passed-unanimously-in-the-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">82b8b633-472d-4b2e-80a4-9359c92ca62b</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:59:39 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:59:39.030Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/c52lbsei/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>இதைதொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. விவாத்தில் தீர்மானத்தை வரவேற்பதாக தி.மு.க.வும், தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக உள்ளிட்ட பெரும்பாலான  கட்சிகள் தெரிவித்தனர். </p><p>அதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். </p><p>முன்னதாக, தனித்தீர்மானம் மீதான விவாதத்தின் போது திமுக- த.வெ.க. இடையே காரசார விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  </p>]]></content:encoded></item><item><title>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்- புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-police-to-be-modernised-with-rs-212-crore-announces-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">74c3c525-29b6-4113-8468-53d18a758d56</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:56:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:56:43.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,காவல்துறை,தமிழக சட்டசபை,TN assembly,Police department,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/9ybdtimu/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் வஜய் தாக்கல் செய்தார்.</p><p>அப்போது, புதிய அறிவுப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><p>அதன் விவரம்:-</p><p>காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.</p><p>போதைப்பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.</p><p>ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" rel="nofollow">காவல்துறை</a> நவீனமயமாக்கப்படும்.</p><p>பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.</p><p>பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்திற்கு தரப்படும் கருணைத்தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்.</p><p>வண்டலூரில் உள்ள காவலர் உயர்பயிற்சியகத்தில் உள்விளையாட்டு அரங்கு, விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் ஏற்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாஜக அரசின் தவறான கல்விக் கொள்கையால் 84,318 பள்ளிகள் மூடல்- மாணிக்கம் தாகூர் விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-leader-manickam-thakur-slams-bjp-over-84318-school-closures#comments</comments><guid isPermaLink="false">adc7db26-6e6f-4eff-862b-eb85bb8b7995</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:41:42 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:41:42.914Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசுப் பள்ளிகள்,govt schools,பாஜக அரசு,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,bjp govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manickam Tagore]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/b6xefi61/manickam-tagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தவறான கல்விக் கொள்கைகளாலும் நம் நாட்டின் அரசுப் பள்ளிக் கல்வி கட்டமைப்பு மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.</p><p>கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 84,318 பள்ளிகள் காணாமல் போயுள்ளன. இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், மூடப்பட்டவற்றில் 93 சதவீதப் பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். </p><p>சுமார் 78,502 அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு மூடுவிழா நடத்தியுள்ள அதே வேளையில், 15,461 தனியார் சுயநிதிப் பள்ளிகள் காளான்கள் போலப் பெருகியிருப்பது இவர்கள் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.</p><p>சமூக நீதியையும் பொதுக் கல்வியையும் உயிர்மூச்சாகக் கொண்ட நமது தமிழ்நாட்டிலும் கூட, இந்த ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் சுமார் 1,976 பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><p>கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்து மாணவர்களின் ஒரே புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கு உரிய நிதி ஒதுக்காமல், பள்ளிக் கல்வியை திட்டமிட்டுச் சீரழிக்கும் வேலையை பாஜக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.</p><p>குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்கவில்லை என்பதற்காகவே, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய மொத்தம் ₹5,109 கோடி கல்வி நிதியை மோடி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.</p><p>நீதிமன்றம் தலையிட்டதால் வேறு வழியின்றி RTE-க்கு மட்டும் ₹714 கோடியை கிள்ளிப் போட்டுவிட்டு, ஒட்டுமொத்த பள்ளி கல்வி நிதியையும் தடுத்து வைத்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தோடு பிளாக்மெயில் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது! </p><p>"பள்ளி சீரமைப்பு மற்றும் முறைப்படுத்துதல்" என்ற போலி அறிக்கையை வைத்துக்கொண்டு, ஒற்றை ஆசிரியர் பள்ளி, குறைவான மாணவர்கள் என்ற காரணங்களைக் கூறி எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.</p><p>பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடி, ஒட்டுமொத்தக் கல்வியையும் கார்ப்பரேட் மற்றும் தனியார் கல்வி மாஃபியாக்களின் கைகளில் தாரைவார்ப்பதே மோடி அரசின் உண்மையான நோக்கம்.</p><p>அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்கி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்குத் திறனற்ற ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கான சட்டப்பூர்வ நிதிப் பங்கையும் வஞ்சகமாக மறுத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.</p><p>இதை மாற்ற #RahulGandhiForPM</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் அறிவிக்கின்ற அறிவிப்புகள் எல்லாம் வரவேற்கத்தக்கது- பிரேமலதா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-all-announcements-made-by-the-chief-minister-are-welcome#comments</comments><guid isPermaLink="false">edd6f6a6-a64c-4c51-b09c-e31e6c37ff3e</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:36:11 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:36:11.233Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/szy5acvr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. தனித்தீர்மானத்தை திமுக வரவேற்றது. , அதிமுக ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-</p><p>ஐகோர்ட்டில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரி முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாமக முழு மனதுடன் வரவேற்கிறது. உலகில் மக்கள் அதிகம் பேசும் முதல் 25 மொழிகளில் தமிழும் உள்ளது. ஒரு வாரத்திற்கு 2 மொழிகள் அழிகிறது.  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மொழிப்பாடம் என்ற வார்த்தையே இல்லை. மொழிப்பாடம் என்று தான் இருக்கிறது, அதை சரி செய்ய வேண்டும் என்றார். </p><p>தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-</p><p>முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற எல்லா அறிவிப்புகளும் மிக மிக சிறப்பாக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. இன்று மட்டும் இல்லை தினந்தோறும் பார்க்கிறேன். அந்த அறிவிப்புகள் எல்லாம் ஆக்கப்பூர்வமாக வெகு விரைவில் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதையும் இந்த அவையில் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்பு இருந்தே உருவானது தான் தமிழ். நான் முதல்வரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். இது தமிழ்நாடு தமிழ்மொழிக்கு மிகமிக முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் மொழி தமிழ்நாட்டில் முக்கிய இடத்தை பெற வேண்டும் என்றால் பள்ளிகளில் இருந்தே அதை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். </p><p>புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. எந்த ஆட்சி வரட்டும், போகட்டும் ஆனால் நீங்கள் உருவாக்கப்போகும் புதிய தலைமைச் செயலகம் யார் வந்தாலும் எந்த காலத்திற்கும் தடை செய்யவே முடியாத அளவிற்கு கடுமையான சட்டத்தை உருவாக்கி விட்டு அந்த பணிகளை நீங்கள் தொடங்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அனைத்து தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>Reels-க்காக &quot;தூய்மை தேவதைகள்&quot; என்பதா?- தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reels-praise-vs-job-security-ttv-dhinakaran-attacks-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">8b53fe97-2fec-42b2-9e09-c510cbbb2427</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:08:12 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:08:12.771Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>டிடிவி தினகரன்,Sanitation workers,TTV Dinakaran,தவெக அரசு,TVK Govt,தூய்மை பணியாளர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TTV Dinakaran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/z8tfix3u/TTV-Dinakaran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>15 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடும் நிலையில், Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  </p><p>15 நாட்களுக்கும் மேலாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் – Reels-க்காக “தூய்மை தேவதைகள்” எனப் புகழாரம் சூட்டினால் மட்டும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுமா? </p><p>தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைத் தொடர்ந்து போராட விடுவது எந்த விதத்தில் நியாயம்?</p><p>பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-rajinikanth-praise-to-padma-807774" rel="nofollow">தூய்மைப் பணியாளர்</a>களின் போராட்டம் 15 நாட்களையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாநகரின் தூய்மைப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதியளித்த தவெக, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்தும், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கையான பணிநிரந்தரம் குறித்து விவாதிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>15 நாட்களுக்கும் மேலாக நீடித்துவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, அவர்கள் போராடுவதற்கு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்ததையே பெருமையாகப் பேசுவது வெட்கக்கேடானது.</p><p>ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்ன <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் ஜோசப் விஜய்</a> அவர்கள் தற்போது சட்டமன்றத்திற்கு அருகேயே உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுபவர்களை சந்திப்பதற்கு என்ன தயக்கம்?</p><p>சென்னை மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காப்பதிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை, குறைந்தபட்சம் அமைச்சர்களாவது நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவதில் என்ன தயக்கம்?</p><p>எனவே, சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோடு, தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாகப் பணியாற்றி வரும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan" rel="nofollow">ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்</a> அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>தீர்மானம் எங்கள் குழந்தை... இது யாருடைய குழந்தையும் கிடையாது: சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-dmk-and-tvk-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">1424405c-dd87-48fb-a60c-9bca3c50b153</guid><pubDate>Thu, 03 Sep 2026 06:03:01 +0000</pubDate><atom:updated>2026-09-03T06:03:01.389Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் நிர்மல்குமார்- ரகுபதி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/55rpg7ti/Assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் விஜய் பேசினார். </p><p>இதனை தொடர்ந்து தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. முதலில் தனி தீர்மானத்தின் மீது திமுக எம்எல்ஏ ரகுபதி பேசியதாவது:-</p><p>* தமிழ் வழக்காடு மொழி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி.</p><p>* தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.</p><p>* சட்ட சொற்களஞ்சியம் இல்லாத காரணத்தால் 2006-ல் தீர்மானத்தை ஏற்க மறுக்கப்பட்டது. </p><p>* சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை வேண்டும் என முதலில் கேட்டவர் ஸ்டாலின்.</p><p>* 2022-ல் பிரதமரிடம் நேரடியாக தைரியமாக குரல் எழுப்பியர் ஸ்டாலின்.</p><p>* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கேட்டார் ஸ்டாலின் என்றார். </p><p>அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தீர்மானம் குறித்து சுருக்கமாக சொல்லும்படி கேட்டார். </p><p>இதையடுத்து பேசிய ரகுபதி, </p><p>* இந்த தீர்மானம் எங்கள் குழந்தை, இதை வரவேற்கிறோம்.</p><p>* மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டிருப்பதால் வரலாறு முக்கியம்.</p><p>* ஆங்கிலத்திற்கு பிறகே தமிழ் என்று தான் திமுக ஆட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.</p><p>* சட்ட சொற்களஞ்சியங்களை உருவாக்கினால் உச்சநீதிமன்றம் மறுக்காது என்றார். </p><p>அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், கோரிக்கை விடுப்பது எல்லாம் வரலாறு ஆகாது. எப்போது செயல்வடிவத்திற்க வருதோ யார் செயல்படுத்துகிறாரோ அதுதான் வரலாறு. இதுவரை ஆயிரம் கோரிக்கைகள் வந்து இருக்கலாம்.  இது யாருடைய குழந்தையும் கிடையாது என்றார். </p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும்- தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-moves-a-special-resolution-to-make-tamil-the-primary-language-in-the-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-moves-a-special-resolution-to-make-tamil-the-primary-language-in-the-high-court#comments</comments><guid isPermaLink="false">dd5b596e-84fe-4075-85ac-1d72ee1f3efc</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:45:36 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:45:36.238Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,சென்னை ஐகோர்ட்,Madras HC,தமிழக சட்டசபை,தனித்தீர்மானம்,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/65vywx6i/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/65vywx6i/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்றைய நிகழ்வில் முதலில் வினாக்கள்-விடை நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வந்தார். </p><p>அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>* தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.</p><p>* பல்லாயிரம் ஆண்டுகள் உயிர்ப்புடன் பேசப்படும் மொழி தமிழ் மொழி. </p> <p>* வருங்கால தலைமுறைக்கும் தமிழ் மொழியின் வளத்தையும் பெருமையையும் கொண்டு சேர்ப்பது நமது கடமை.</p><p>* தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.</p><p>* ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. </p><p>* மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது.</p><p>* தீர்ப்பு, தீர்ப்பாணை, உத்தரவுகளை தமிழில் வழங்க வேண்டும்.</p><p>* வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும் வழங்க வேண்டும். </p><p>* இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை.</p><p>* குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும்.</p><p>* தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம்.</p><p>* மாநில மொழியை நீதிமன்றங்களில் பயன்படுத்த சட்ட வாய்ப்புள்ளது என்றார். </p><p>முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெறுகிறது. </p>]]></content:encoded></item><item><title>பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய மேலும் 157 பேர் சஸ்பெண்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/157-more-tasmac-staff-suspended-for-collecting-rs10-per-bottle</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/157-more-tasmac-staff-suspended-for-collecting-rs10-per-bottle#comments</comments><guid isPermaLink="false">de7f9bd7-752e-401c-a34c-a2e34b8f22b7</guid><pubDate>Thu, 03 Sep 2026 05:38:43 +0000</pubDate><atom:updated>2026-09-03T05:38:43.858Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamilnadu,suspension,Tasmac,டாஸ்மாக்,ஊழியர்கள் சஸ்பெண்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ol9kpy2w/TASMAC-PIC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TASMAC]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-03/ol9kpy2w/TASMAC-PIC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று பிற்பகலுக்கு மேல் இரவு வரை பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய புகாரில் 150-க்கும் மேற்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D" rel="nofollow">ஊழியர்கள் சஸ்பெண்ட்</a> செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூடுதலாக பணம் வாங்கிய 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.</p><h2>ரூ.10 வசூல்</h2><p>இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.</p><p>இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p>செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.</p><h2>ஊதிய உயர்வு</h2><p>இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.</p><p>அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vinoth-announces-pay-rise-for-tasmac-staff" rel="nofollow">டாஸ்மாக்</a> ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 313-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து 23 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 413-ல் இருந்து ரூ.30 ஆயிரத்து 284 ஆகவும், உதவி விற்பனையாளர் களுக்கு ரூ.17 ஆயிரத்து 925-ல் இருந்து ரூ.28 ஆயிரத்து 680 ஆகவும் மாத ஊதியம்உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.</p><h2>சலுகைகள்</h2><p>மேலும், ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் பண்டிகை போனஸ் வழங்கப்படும். ஆண்டு தோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.</p><p>கடைகளுக்கு பராமரிப்புத் தொகை, 8 மணி நேர சுழற்சி முறையில் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடு முறை உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>இதுதவிர தகுதியுள்ள 250 டாஸ்மாக் பணியாளர்கள் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ. சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அமைச்சர் எச்சரிக்கை</h2><p>செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.</p><p>அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்.</p><p>அதே தவறை மீண்பரவைடும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சட்டசபையிலும் அமைச்சர் அறிவித்தார்.</p><p>இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.</p><p>இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.</p><h2>67 ஊழியர்கள் மீது நடவடிக்கை</h2><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது. </p><p>இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ்மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><h2>மேலும் 157 ஊழியர்கள்</h2><p>டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 224 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது.</p><p>அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>