<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 09:10:54 +0000</lastBuildDate><item><title>புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-site-for-the-new-airport-must-be-identified-and-announced-quickly#comments</comments><guid isPermaLink="false">e7c82704-81b2-461c-b830-c56e1fe4f3d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 09:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T09:04:15.510Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/06gims2h/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>புதிய இடம்</strong></h2><p>சென்னைக்கு அருகில் <a href="https://www.maalaimalar.com/topic/பரந்தூர்-விமான-நிலையம்">பரந்தூரில்</a> புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். தமிழக வளர்ச்சிக்கு சென்னையில்  இரண்டாம் விமான நிலையம் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், அதற்கான இடத்தை விரைந்து கண்டறிந்து அறிவிக்க வேண்டும்.</p><p>சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதே நேரத்தில் வேளாண் விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் அமைப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை.  பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என்று  முந்தைய திமுக அரசு அறிவித்தவுடனேயே, 4 ஆண்டுகளுக்கு முன் 2022-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி பாதிக்கப்படும் மக்களை எனது தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி குழு  சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்து நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தது.</p><p>அதே நேரத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சென்னைக்கு அருகில் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். மீனம்பாக்கம் விமான நிலையம் வரும் 2031-ஆம் ஆண்டில்  அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என்பதால், அதற்கு முன்பாக புதிய விமான நிலையம் கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.  சென்னை மாநகருக்கான இரண்டாவது விமான நிலையம் 2007-08 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு தடைகளைக் கடந்து 2022-ஆம் ஆண்டில் தான் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளன.</p><h2><strong>ஆறாம் இடம்</strong></h2><p>பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லி, மும்பை ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய விமான நிலையமாக திகழ்ந்து வந்தது. ஆனால், சென்னை விமான நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், விரிவாக்கப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவும் அந்த இடத்தை இழந்து விட்ட சென்னை விமான நிலையம் இப்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு கொல்கத்தா விமான நிலையத்தை விட பின்தங்கி ஆறாம் இடத்தில் இருந்த சென்னை விமான நிலையம் ஜூலை மாதத்தில் தான் மீண்டும் ஐந்தாம் இடத்தை பிடித்தது. எந்த நேரமும் சென்னை விமான நிலையம் மீண்டும் ஆறாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் 380 ஆகும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 853 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானங்களை இயக்குவது விமான நிலையங்களின் கவுரவமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் இருந்து மட்டும் தான் இந்த வகை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இந்த வகை விமானங்களை இயக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்த விமானங்களை இயக்க 60 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதைகள்  தேவை; ஆனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் அகலம் 45 மீட்டர் தான். அதேபோல், ஏர்பஸ் 350, போயிங் 777 வகை விமானங்களில் வரும் பயணிகளை கையாளுவதற்கான வசதிகள் மட்டும் தான் சென்னை விமான நிலையத்தில் உள்ளது. அதனால், ஏர்பஸ் 380 விமானங்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்க முடியாது. புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால் மட்டும் தான் இந்த வகை விமானங்கள் மற்றும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படக் கூடிய புதிய வகை விமானங்களை சென்னையிலிருந்து இயக்க முடியும்.</p><h2><strong>வல்லுனர்கள் கவலை</strong></h2><p>2031-ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் கட்டப்படவில்லை என்றால், சென்னைக்கு புதிய விமானங்கள் வராது. அவை பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்கு சென்றால், அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்று வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அடுத்த ஐந்தாண்டுகளில் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இப்போதே பணிகளைத் தொடங்கினால் கூட, அது சாத்தியமாக இன்னும் 8 ஆண்டுகள் ஆகக்கூடும். எனவே, அவசர நிலையைக் கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அரசு விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.</p><p>சென்னை விமான நிலையம் அமைக்கும் விஷயத்தில் இத்தனைக் குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணம்  நிலங்களை கையகப்படுத்தும் கொள்கையில் தெளிவு இல்லாதது தான். வேளாண்மை சாராத எந்தப் பணிக்கும் நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்பதை கொள்கை முடிவாத தமிழ்நாடு அரசு எடுத்திருந்தால், பரந்தூர் விமான நிலையத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்காது. எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க தமிழ்நாட்டில் எந்தவொரு திட்டத்திற்காவும்  வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும்.</p><p>அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக ஒரு கைப்பிடி மண்ணை கூட கையகப்படுத்திக் கொடுக்க மாட்டோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அவர்கள் வாக்குறுதி அளிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பரந்தூர் விமான நிலையத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைத்தல் உள்ளிட்ட எந்த திட்டத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் - 24 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:52:10.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேகதாது அணை விவகாரம் என்றாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலும் சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறோம். </p><p>தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது. முதலமைச்சருடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை ஆதரித்தது திமுக - செங்கோட்டையன்</p><p>தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது. வேறு விவாதங்கள் வேண்டாம் - சபாநாயகர்</p><p>எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? </p><p>தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக.</p><p>ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக - கே.என்.நேரு</p> <p>2024 திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் - தாரகை கத்பட்</p><p>யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு - அமைச்சர் ஆதவ்</p><p>உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள் - கே.என்.நேரு</p><p>எங்கள் கூட்டணி கட்சிகளால் தான் உங்கள் ஆட்சி அமைந்துள்ளது - கே.என்.நேரு</p><p>பூஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார் - கோவி.செழியன்</p><p>திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள்.</p><p>திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சிகள் தான் காரணம்.</p><p>கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது.</p><p>சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது திமுக.</p><p>தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் வாங்கினர் - அமைச்சர் மரிய வில்சன்</p><p>கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆதவ் விட்ட சவால்... சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-dmk-and-congress-members-arguments-in-assembly#comments</comments><guid isPermaLink="false">eb119c01-46f5-4957-a401-669b99a4923a</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:48:00.553Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/51q5vwyp/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a>, அடுத்த தேர்தலில் திமுக தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்க முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். </p><p>தி.மு.க.வால் காங்கிரஸ் வென்றது என்றும், காங்கிரஸ் தயவால் தி.மு.க. வென்றது என்றும் 2 கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.</p><p>இதற்கு பதில் அளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.கோவி. செழியன், பூஜ்யத்தில் இருந்து வந்தது தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தி.மு.க. தயார் என்று கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. இன்று ஆட்சியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள். கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு தனியா நின்று ஆட்சி நடத்துங்கள் என்றார். </p><p>இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப்பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றார். </p><p>இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், 2024-ல் தி.மு.க.விற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கூறினார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது தி.மு.க., ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது தி.மு.க. என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை திமுக ஆதரித்தது என்றார். </p><p>இதற்கிடையே பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார். </p><p>இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-comment-parandur-airport-project-cancelled#comments</comments><guid isPermaLink="false">5bf9ea32-7aa8-4723-9e1c-6903387a07d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:22:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:22:27.420Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ முக ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6tv6mr4e/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</strong></em> </p><p>முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர்</a> பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.</p><h2><strong>பெருத்த ஏமாற்றம்</strong></h2><p>மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.</p><p>மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">தமிழ்நாட்டின்</a> தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!</p><p>சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும். </p><p>முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!</p><p>தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Dropping Parandur is not Change. It&#39;s an irreversible setback for Tamil Nadu&#39;s growth<br><br>The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s… <a href="https://t.co/QHZdVdK21L">pic.twitter.com/QHZdVdK21L</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2091799886542815579?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>கூடலூரில் மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படும்- வனத்துறை அமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/forest-department-minister-says-tiger-terrorizing-the-people-in-gudalur-will-soon-be-captured-and-handed-over-to-a-sanctuary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/forest-department-minister-says-tiger-terrorizing-the-people-in-gudalur-will-soon-be-captured-and-handed-over-to-a-sanctuary#comments</comments><guid isPermaLink="false">6f16aa44-1a75-4e80-a14e-75408e4fdff7</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:07:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:07:29.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,வனத்துறை அமைச்சர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zjbs22jq/ranjithkumar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார்]]></media:title><media:description type="html"><![CDATA[ வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zjbs22jq/ranjithkumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது  புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> கூடலூரில் புலி தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் திராவிட மணி, "கூடலூர் பகுதியில் புலி தாக்கி 2 பேர் இறந்ததால் அந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். உடனடியாக புலியை சுட்டு பிடிக்க வேண்டும், அல்லது மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும். நீலகிரியில் இரண்டு மாதங்களில் 8 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.</p><p>இதை தொடர்ந்து பேசிய பா.ஜ.க உறுப்பினர் போஜராஜன்," கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் புலித் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது.  குண்டு வைத்து புலியை பிடித்து இருந்ததால் உயிரை காப்பாத்திருக்க முடியும்.  பழைய திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலியை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.</p><p>அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம்," புலிகள் தொடர்ந்து  மக்களை தாக்கி வரும் நிலையில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><p>மேலும், பாமக உறுப்பினர் கணேஷ் குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் மட்டுமல்ல அரசு வேலை வழங்க வேண்டும். புலியை கொல்லாமல் மயக்க மருத்து கொடுத்து பிடித்து புலிகள் காப்பகத்தில் அடைக்கவேண்டும் என்றார். </p><p>இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார், " கூடலூரில் இரண்டு பேரை  கொன்ற  புலியை பிடிக்க முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க உடனே உத்தரவிடப்பட்டதாகவும், 3 வனப்படை அமைக்கப்பட்டுள்ளது அத்துடன், 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலும் ஒரு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளது.</p><p>கேமரா மூலம் புலியை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 9 பேர் உயிரிழந்த பிறகு தான் புலி பிடிக்கப்பட்டது. ஆனால் தவெக அரசு 2 பேர் உயிரிழந்தவுடன் புலியை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது  புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-challenges-tvk-candidate-vs-babu-victory-in-kolathur#comments</comments><guid isPermaLink="false">c952113f-8e5e-44f2-b6d1-41d9d2765790</guid><pubDate>Mon, 24 Aug 2026 08:04:29 +0000</pubDate><atom:updated>2026-08-24T08:04:29.482Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,kolathur assembly,தமிழக சட்டமன்ற தேர்தல்,முக ஸ்டாலின்,கொளத்தூர் தொகுதி,TN Assembly elction 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/u01trzf3/MKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளரும், கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பில் போட்டியிட்ட விஎஸ் பாபு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.</p><p>கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டது. </p><p>அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்தனர்.</p><p>குறிப்பாக வாக்கு பதிவு மையங்களான 1, 17,28 ,32 ,75 ,78, 79 ,84 ,87 ,112 ,122 157 ,170 உள்ளிட்ட வாக்கு சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவி பேட், வாக்கு பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.</p><p>அப்போது பெல் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட என்ஜினீயர் உடன் இருந்தார். நூறு சதவீத விவி பேட் மற்றும் வாக்கு பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. </p><p>இதில் ஆறு வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. </p><p>இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் பிரதிநிதி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>தேர்தல் எந்திரம்  தொடர்பாக புகார் செய்வது தொடர்பான வெளிப்படையான ஒரு நடை முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். பல வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு முறைகேடு நடந்துள்ளது. </p><p>குறிப்பாக பல வாக்குப்பதிவு எந்திரங்களில்  ஹார்டுவேர் என்று சொல்லக்கூடிய மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. </p><p>தொழில்நுட்ப கோளாறுகளை சுட்டிக்காட்டிய பின்பும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றுள்ளது. </p><p>எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால்</p><p>அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும்.</p><p>மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும், நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதன்முறையாக எம்எல்ஏக்கள் பேசுவதை &apos;கன்னிப் பேச்சு என்று குறிப்பிட வேண்டாம்!- பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/female-mlas-request-do-not-refer-to-the-first-speeches-made-by-mlas-as-kanni-speech#comments</comments><guid isPermaLink="false">aca0502a-2d0b-46ea-9c97-4b042c01ed9f</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:53:03.242Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,கன்னிப் பேச்சு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக சட்டசபை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qkid2vkd/TNGovt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> எம்.எல்.ஏ.க்களின் முதல் உரையை கன்னிப் பேச்சு என்று  குறிப்பிடுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால் அப்படி குறிப்பிட வேண்டாம் என்று சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.</p><p>பாராளுமன்றம் அல்லது சட்டசபையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பேசும் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று கூறுவார்கள்.</p><p>தமிழக சட்டசபையில் இன்றும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><h2><strong>அறிமுக உரை</strong></h2><p>இந்நிலையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று சபாநாயகரிடம் பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.</p><p>அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.லதாவும் இதனை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், "கன்னிப் பேச்சு என்ற வார்த்தை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும்" என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்," கடந்த சட்டப்பேரவையிலேயே வானதி சீனிவாசன் இதுபற்றி பேசியுள்ளார். கடந்த அவையிலும் இதனை பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். சௌமியா சொன்னது நல்ல ஆலோசனை. இது ஒரு மரபாக உள்ளது. எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதனை பரிசீலனை செய்யுமாறு வழிமொழிகிறேன்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி தரம் உயர்த்தப்படும்- ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-promises-upgrade-of-government-schools-in-a-year#comments</comments><guid isPermaLink="false">a0a7bf89-3217-46f0-bc5d-cd222555d2d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:36:52 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:36:52.746Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஆதவ் அர்ஜூனா,Aadhav Arjuna,govt schools,தமிழக அரசு பள்ளிகள்,TN assembly,தமிழக சட்டசபை |</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hvplvu71/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p><p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை. பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை.</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>பள்ளிகளில் பூட்டப்பட்ட கதவுகள் உடைய கழிப்பறை கட்டுவதற்கு தான் முதல் கையெழுத்து போட்டேன்.</p><p>முறையான கழிவறை இல்லாததால் 8 மணி நேரம் வரை பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>குற்றம் நடப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><h2>திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம்</h2><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது.</p><p>இவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரை பற்றி தரக்குறைவு பேச்சு... திமுக எம்எல்ஏவை சாடிய பெண் அமைச்சர் - சபாநாயகர் சொன்னது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-appropriate-for-a-dmk-mla-to-make-derogatory-remarks-about-the-chief-minister-what-did-the-minister-and-the-speaker-say-in-condemnation#comments</comments><guid isPermaLink="false">88ef3458-9fdb-4488-95cd-c9ad149be9a5</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:33:49.024Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,தமிழக சட்டசபை,TN assembly,tvk,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/w8ctjy99/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார்.</strong></em> </p><p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில்  நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழா மேடையில் உதயநிதி இருக்கும் போது, மணமக்களை வாழ்த்தி, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும் போது, "முதலமைச்சர் விஜய் பற்றியும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பற்றியும் ஒருமையில்  பேசினார்.</p><p>இந்த பேச்சுக்கு வில்லங்கம் வரும் என்று மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். நான் பேச விட்டாலும் என்னை வம்பில் இழுத்து விடுகிறீர்கள் என்றார்.</p><p>இது சம்பந்தமாக  <a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">சட்டசபையில்</a> இன்று பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்து பேசியதாவது,</p><p>திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று பொது வெளியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் குறித்து மரியாதை இன்றியும் தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. தொழில்துறை அமைச்சரையும் பெண் என்றும் பாராமல் மரியாதை இல்லாமல் பேசியது கண்டனத்துக்குரியது; திமுகவினர் தேர்தல் தோல்வி மற்றும் ஆற்றாமையால் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.</p><p>அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது:- </p><p>நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலையில் எனது அலுவலகத்துக்கு வந்து இது சம்பந்தமாக கவனத்திற்கு கொண்டு வந்து இது உரிமை மீறலில் வருமா? என்று கேட்டார் . </p><p>அவர்கள் வெளியில் பேசி இருந்தாலும் அது நம்முடைய மாண்பை குலைப்பதாக இருந்தாலும், முதலமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும், அமைச்சரின் மாண்பை குலைப்பதாக இருந்தாலும் அதை படித்து பார்த்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றி நல்ல முடிவு எடுப்பேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>கொடுத்த வாக்கை காப்பாற்றி எங்கள் கண்ணீரை முதலமைச்சர் விஜய் துடைத்துவிட்டார் - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பேட்டி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-has-kept-his-promise-and-wiped-away-our-tears-interview-with-the-leader-of-the-parandur-airport-opposition-committee#comments</comments><guid isPermaLink="false">56211c9d-d0c0-46b2-bf62-2f40ca67c812</guid><pubDate>Mon, 24 Aug 2026 07:05:58 +0000</pubDate><atom:updated>2026-08-24T07:05:58.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/lhgr1owp/cmparandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.</strong></em></p><p>பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் விமான நிலைய திட்டம்</a> கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்து இருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.</p><p>அவர் எங்களது கண்ணீரையும், துன்பத்தையும் துடைத்துள்ளார். அவர் எங்களை சந்தித்த போது என்ன கூறினாரோ அதனை முழுவதுமாக நிறைவேற்றி இருக்கிறார். எங்கள் பகுதியில் விவசாயம், கிராம மக்களின் குடியிருப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எங்களது மனக்குழப்பம், துன்பங்கள் நீங்கி உள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூரைச்</a> சுற்றி உள்ள  கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ள கொண்டாட்டத்தில் உள்ளனர். முதலமைச்சர் விஜய்யை சந்தித்து நன்றி கூற முடிவு செய்துள்ளோம்.</p><p>2019-ம் ஆண்டு பரந்தூர் விமான நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். 1,100 நாட்கள் தாண்டியும்  எங்களது போராட்டம் நீடித்தது. தற்போது முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஏகானபுரம் ஊராட்சியில் சுதந்திரத்தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போது அப்பகுதியில் உள்ள சாலைக்கு “தளபதி விஜய் சாலை” என்று பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மாடர்ன் உடை அணிந்து பெண் சென்ற விவகாரம்: ஆணாதிக்க அரசியலை கடந்து பெண்கள் வெற்றி பெற வேண்டும்!- கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-women-must-triumph-over-patriarchal-politics#comments</comments><guid isPermaLink="false">0f200107-facd-4311-b533-832215ad2f98</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:53:12 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:53:12.711Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கனிமொழி]]></media:title><media:description type="html"><![CDATA[ கனிமொழி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j6lyz7ew/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும் என கனிமொழி கூறியுள்ளார்.</strong></em> </p><p>காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் கருப்பு உடை அணிந்து, செல்வது  போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என விமர்சித்து சிலர் பதிவு போட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், வீடியோ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. </p><p>இது பிற்போக்குத்தனமான, மனநிலையை காட்டுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றார்.</p><p>இதுகுறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/கனிமொழி">கனிமொழி</a> எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>பிற்போக்குத்தனமான மனநிலை</strong></h2><p>காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.</p><p>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.</p><p>பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.<br><br>ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2091751746834194664?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி- எஸ்.பி.வேலுமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sp-velumani-thanks-cm-vijay-for-jayalalithaa-scheme-continuation#comments</comments><guid isPermaLink="false">5033f1e5-d957-40fc-a6a7-a683bd6ae8d0</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:49:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:49:20.551Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,தமிழக சட்டசபை,sp velumani,TNAssembly,எஸ்பி வேலுமணி,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- SP Velumani]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/azv4315u/SP-Velumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார்.</p><p>அப்போது, அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி இபிஎஸ் கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார்.</p><p>மேற்கொண்டு அவர் கூறியதாவது:-</p><p>ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்களை தொடரும் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. </p><p>அதிமுக ஆட்சியில் கோவையின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டது. </p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக. திமுக ஆட்சியில் கோவைக்கன திட்டங்கள் இல்லை. சிட்காட், சாலை, மேம்பாலம் என அதிமுக செய்து நிலுவையில் இருந்த திட்டங்களை திமுக தொடரவில்லை.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்தது திமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் </p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றியை சுடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.</p><p>இவ்வாறு கூறினார்.</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.</p><p>பேச அனுமதி கேட்டபோது பலமுறை முகத்தை கூட திருப்பமாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் என எஸ்.பி.வேலுமணி கூறினார்.</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு என சபாநாயகர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என அறிவித்த முதலமைச்சர்- மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-village-peoples-welcome-to-cm-vijay-announcement#comments</comments><guid isPermaLink="false">0b3975de-d024-49f8-8eee-d19f5038abe6</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:40:46 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:40:46.372Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,தமிழக சட்டசபை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பரந்தூர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/zo4b2twb/parandur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</strong></em></p><p>சென்னையின் 2-வது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில்</a> அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. </p><p>இதற்காக சுமார் 5,300 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் களம் இறங்கிய பிறகு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் தான் நேரடியாக களம் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.</p><h2><strong>மகிழ்ச்சி வெள்ளம்</strong></h2><p>இந்த நிலையில் சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து இருப்பது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project">பரந்தூர்</a> மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு கிராம மக்கள் நன்றியும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.</p><p>இதற்கான கொண்டாட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு நற்செய்தி!- எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி இலவசப் பயணம்: முழு விவரம் இதோ... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details#comments</comments><guid isPermaLink="false">277e857a-0acd-48f5-b3e0-3e6702585840</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:25:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:25:11.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பெண்களுக்கு இலவச பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. </p><p>எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.</p><h2><strong>அக்டோபர் 2-ந்தேதி வெற்றிப் பயணம்</strong></h2><p>இதனை கருத்தில் கொண்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">மகளிர் கட்டணமில்லா</a> பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.</p><p>அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><p>மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><h2><strong>படிப்படியாக விரிவு</strong></h2><p>இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண  எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.</p><p>இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில்  கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</p><h2><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></h2><p>வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின்  வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.</p><p>தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து  குடும்பங்கள்  முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ரூ.6 ஆயிரம் கோடி</strong></h2><p>இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-that-happened-in-tamil-nadu-has-become-a-disappointment-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">6183491e-debb-4c13-a618-6f227147e479</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:20:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:20:32.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,முக ஸ்டாலின்,திராவிட இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK leader MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/tzmp3hfl/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவான்மியூரில்  நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.</p><p>அப்போது அவர் பேசியதாவது:</p><p>தமிழ்நாட்டில் வீட்டில் ஒரு பட்டதாரி இருப்பதற்கு திராவிட இயக்கங்களே காரணம்.</p><p>திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை.</p><p>சில லட்சம் பேர் செய்த தவறால் கோடிக்கணக்கானர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாகி விட்டது.</p><p>இவ்வாறு அவ்வாறு கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்- கே.என்.நேரு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kn-nehrus-remark-stop-sewage-mixing-at-540-points-to-restore-cooum#comments</comments><guid isPermaLink="false">ce5cc9ae-e709-4893-b01d-ca866cc226f1</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:56:27.002Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>kn nehru,தமிழக சட்டசபை,sewage,TN assembly,கே.என்.நேரு,கழிவுநீர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ex Minister KN Nehru]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b948cptd/KN-Nehru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரையாற்றினார்.</p><p>அப்போது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.</p><h2>கே.என்.நேரு உரை</h2><p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">மு.க.ஸ்டாலின்</a>. </p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர். தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-allocates-rs-264-14-crore-forms-65-special-forces-to-fight-drugs" rel="nofollow">நிதி ஒதுக்கீடு</a> செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. கூவத்தை சீரமைக்க வேண்டும் என்றால் 540 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர்.</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government" rel="nofollow">மத்திய அரசு</a> ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY :  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை: சவரன் ரூ.1,20,240-க்கு விற்பனை!</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-24-08-2026#comments</comments><guid isPermaLink="false">676ed5f2-a6a6-44cd-9d36-b5f8bbcf541b</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:51:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:51:43.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwvetvrf/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100-ம். சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 850-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து சனிக்கிழமை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong> </h2><p>இந்த நிலையில், வார தொடக்கநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 30-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,480 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong> </h2><p>தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 275 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கடந்த 15-ந்தேதியில் இருந்து இன்று வரை வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>22-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600</p><p>21-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,800</p><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>23-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>22-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>21-08-2026- ஒரு கிராம் ரூ.270</p><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p>]]></content:encoded></item><item><title>சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்களின் சேவையில் நாளை முதல் மாற்றம் </title><link>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/changes-to-electric-train-services-starting-tomorrow#comments</comments><guid isPermaLink="false">24d7b276-5125-4d82-a401-b019c4fd3038</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:48:43.166Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>electric train,மின்சார ரெயில்,Train,ரெயில்,மின்சார ரெயில்கள் ரத்து,electric train cancelled</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ electric train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-01/0u6nxpab/train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக நாளை (25-ந்தேதி) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை 25 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.</p><h2><strong>மின்சார ரெயில்கள்</strong></h2><p>சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வார நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>திருமால்பூர் - சென்னை கடற்கரை</strong></h2><p>திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ெரயில், தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை</strong></h2><p>கூடுவாஞ்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே அதே தேதிகளில் இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரெயில்கள், தாம்பரம் - கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளன.</p><h2><strong>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி</strong></h2><p>சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 9.45 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் அதே தேதிகளில் இரவு 10.20 மணிக்கு பதிலாக, 5 நிமிடம் முன்னதாக, இரவு 10.15 மணிக்கு புறப்படும்.</p><h2><strong>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு</strong></h2><p>சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை மறுநாள் (புதன் கிழமை) முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை இயக்கப்பட வேண்டிய மின்சார ரெயில், வார நாட்களில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 4 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே 2 மின்சார ரெயில்களும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே ஒரு மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 மின்சார ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ெரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் பெறப்போகும் குடும்பங்கள் எவை?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/annapoorani-super-6-scheme-which-families-will-receive-3-free-cylinders-annually#comments</comments><guid isPermaLink="false">9fee30cb-deea-4bad-b04c-2bfaa0a9ce13</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:27:27 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:27:27.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,Gas cylinder,கியாஸ் சிலிண்டர்,TN assembly,Annapoorani Super 6 Scheme,அன்னபூரணி சூப்பர் 6 திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:title><media:description type="html"><![CDATA[ கியாஸ் சிலிண்டர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/dwtmqj0y/gas.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><h2><strong>பெண் முன்னேற்றத்திற்கு</strong></h2><p>நமது அரசின் பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p>மேலும் நமது அரசு மக்களின்  வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாக கொண்டு வெற்றி தொலை நோக்கு திட்ட ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. அந்த திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு திட்டங்கள், அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும்.</p><h2><strong>வங்கி கணக்கில்</strong></h2><p>கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">சிலிண்டர்</a> கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும் பொது மக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலாக தொகையினை செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.</p><p>இதனை கருத்தில் கொண்டு நிதி நெருக்கடியான சூழலிலும் பொது மக்களிடம் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காக செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க இவ்வரசு முடிவு செய்துள்ளது.</p><h2><strong>3 சிலிண்டர்</strong></h2><p>எனவே குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில்  முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.</p><p>எரிவாயு சிலிண்டருக்கான விலை பயானிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்ட பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து சிலிண்டர் பெற்றவுடன், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.</p><h2><strong>1 கோடியே 30 லட்சம் பேர்</strong></h2><p>இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தினர், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் போன்ற சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயன் அடைவார்கள்.</p><h2><strong>ஜனவரி மாதம் முதல்</strong></h2><p>இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்துக்காக ஆண்டு தோறும் தோராயமாக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தால் பொருளாதாரம் பாதிக்கும்- தங்கம் தென்னரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parandur-airport-cancellation-will-impact-economy-says-thenarasu#comments</comments><guid isPermaLink="false">581b78ad-5d1b-4d2f-9f45-b1ce547d3993</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:13:03 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:13:03.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பரந்தூர் விமான நிலையம்,தங்கம் தென்னரசு,தமிழக சட்டசபை,Thangam Thennarasu,Parandhur Airport,TN assembly</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Thangam thennarasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mmurvxhg/Thangam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேசுவதற்கு திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.</p><h2>திட்டம் ரத்து</h2><p>பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்படுகிறது என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><h2>திமுக வெளிநடப்பு</h2><p>பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம், இப்போது கைவிட்டால் எப்படி? என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திமுகவினர் அனைவரும் எழுந்துநின்று கோஷம் எழுப்பினர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்துநின்று முழக்கமிட்டு எழுப்பிய திமுகவினரை சபாநாயகர் கண்டித்தனர்.</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கல் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.</p><h2>முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தங்கம் தென்னரசு</a> கூறியதாவது:-</p><p>பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் குறித்து விவாதிக்க ஏற்கனவே 55 விதியின் கீழ் திமுக தீர்மானம் கொண்டு வந்தது.</p><p>பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தனர்.</p><p>முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்ததால் கவனஈர்ப்பு தீர்மானத்தில் விவாதிக்க மறுத்துவிட்டனர்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டு மறுக்கப்பட்டால் எத்தகைய பொருளாதார விளைவு ஏற்படும் என விளக்கமறிக்க வாய்ப்பு தரவில்லை.</p><p>பல நாட்களாக கவனஈர்ப்பு தீர்மானத்தில் எடுக்காது இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.</p><p>பரந்தூர் ஏர்போர்ட்டை நம்பித்தான் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-reviews-industrial-parks-in-kanchipuram" rel="nofollow">ஸ்ரீபெரும்புதூர்</a> பகுதிகளில் வந்தன.</p><p>ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் உற்றதால் பரந்தூரில் விமான நிலையம் அமைவது அவசியம்.</p><p>பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர் தான் பரந்தூரை விமான நிலையத்திற்காக தேர்வு செய்தோம்.</p><p>பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தால் பொருளாதாரத்தை பாதிக்கும், அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.</p><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-drawing-motion-seeking-an-increase-in-milk-procurement-prices-ministers-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attention-drawing-motion-seeking-an-increase-in-milk-procurement-prices-ministers-explanation#comments</comments><guid isPermaLink="false">5994736a-cd71-4d59-9853-934b1c594a14</guid><pubDate>Mon, 24 Aug 2026 05:12:43 +0000</pubDate><atom:updated>2026-08-24T05:12:43.834Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,பால் கொள்முதல் விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o94eji9x/vijayalakshmi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி]]></media:title><media:description type="html"><![CDATA[ பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o94eji9x/vijayalakshmi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இன்று 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதனை தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு கூறுகையில், </p><p>பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாங்கம் கூடுதலாக 45 ரூபாய் கொடுத்தால் தான் ஆவின் நிறுவனத்திற்கு பால் வரும். தனியாருக்கு பால் செல்லாமல் தடுக்க முடியும். எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார். </p><p>அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், </p><p>அரசு அறிவித்த விலை போதாது என தமிழ்நாடு முழுவதும் பால் முகவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஒரு லிட்டருக்கு பசும்பால் 50 ரூபாயும், எருமை பால் 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகையால் அரசு பரிசீலித்து உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><h2><strong>தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.</strong></h2><p>பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கின்றனர். இன்றைக்கு கால்நடைகள் பராமரிப்பு, தீவனம் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளதால் லிட்டருக்கு 46 ரூபாயில் இருந்து 48 ரூபாய் வரை வழங்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். </p><h2><strong>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி</strong></h2><p>கடந்த ஆட்சியின் நிர்வாக குளறுபடிகளால் ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளது. பால் பொருட்கள் விற்பனை குறைந்து ஆவின் நிறுவனத்துக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.  நிதி நெருக்கடி உள்ளபோதும் பால் கொள்முதல் விலையை முதலமைச்சர் உயர்த்தி வழங்கியுள்ளார். பால் லிட்டர் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு தற்போது உற்பத்தியாளர்களுக்கு ரூ.41 வழங்கப்படுகிறது. பால் கொள்முதல் விலையை ரூ.44 ஆக உயர்த்த முதலமைச்சருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அதிரடி அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-makes-a-surprise-announcement-in-the-assembly-abandoning-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">bbd5e00f-5ed4-45de-8bfd-cc88efd103ab</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:38:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:38:14.891Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,மீனம்பாக்கம் விமான நிலையம்,Meenambakkam Airport</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:title><media:description type="html"><![CDATA[ விஜய், பரந்தூர் விமான நிலையம் 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/xyv9dwml/tn-37.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூரில் விமான நிலையம்</a> கட்டும் முயற்சியை தனது அரசு கைவிடுவதாக<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam"> முதலமைச்சர் விஜய்</a> அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், </p><p>"சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டும் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும், சரக்கு போக்குவரத்தை அதிகரித்தும் நோக்கத்திலும் புதிய விமான நிலயத்திற்கான தேவை ஏற்பட்டுள்ளது. </p> <p>புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும். </p><p>ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது.</p><h2>பரந்தூர் விமான நிலையம் கைவிடல்</h2><p>ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20.1.2025 அன்று அப்பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.</p><p>சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.</p><p>நீண்ட நாட்களுக்கு இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.</p> <p>விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. இந்த விவசாய நிலையங்களை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.</p><p>விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கு விமான நிலையங்களின் பங்களிப்பு பற்றி நான் நன்கு அறிவேன். அதற்கு என் முழு ஆதரவும் உண்டு.</p><p>ஆனால் பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அப்போது நான் வலியுறுத்தியிருந்தேன்.</p> <p>மக்கள் மத்தியிலே நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும்பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளிடமும் துறை வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன்.</p><p>ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.</p><p>துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைக்க பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.</p><p>அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலயத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p> <h2>மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்</h2><p>இதற்கிடையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய டெர்மினல் 5 என்ற புதிய முனையம் அமைக்க ஏர்போர்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து சாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p> <p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் முடிவுற்ற பின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக இருக்கும்.</p><p>மேலும் புதிய டெர்மினல் 5 செயலாக்கத்திற்கு பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளை கையாள கூடியதாக விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்." எனத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam#comments</comments><guid isPermaLink="false">8d7d9428-8def-46d4-9ca7-5640b645aa82</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:24:47.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும். </p><p>* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். </p><p>* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும். </p><p>* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. </p><p>* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். </p><p>* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. </p><p>* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். </p><p>* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.</p><p>* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.</p><p>* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.</p>]]></content:encoded></item><item><title>180 கோவில்களில், ஒரே நாளில் 1,200 திருமணம்- உறவினர்கள் திரண்டதால் பக்தர்கள் திணறல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1200-weddings-in-180-temples-on-a-single-day#comments</comments><guid isPermaLink="false">e6612f4f-f56a-4c12-b11c-195457eb5359</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:53:59 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:53:59.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திருமணம்,marriage,ஆவணி மாதம்,Avani Month,சுபமுகூர்த்த நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் நடைபெற்ற திருமணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/anfczlxi/marriage.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று 180 கோவில்களில் ஒரே நாளில் 1,200 திருமணங்கள் நடந்தன. உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திணறினர்.</strong></em></p><h2><strong>ஆவணி மாத முதல் முகூர்த்தம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/ஆவணி-மாதம்">ஆவணி மாதம்</a> பிறந்து முதல் முகூர்த்த நாள் நேற்று வந்தது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடந்தன.</p><p>இதனால் கோவில்களில் மணமக்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.</p><h2><strong>வடபழனி முருகன்</strong></h2><p>சென்னை வடபழனி முருகன் கோவிலில் காலை முதலே மணமக்கள் வருகையும், திருமண சடங்குகளும் நடந்தன. மணமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் திருமணம் முடிந்ததும், மூலவர் தரிசனமும் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் மணமக்களின் பெற்றோர். உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் நிரம்பி காணப்பட்டது.</p><h2><strong>திருத்தணி-திருப்பரங்குன்றம்</strong></h2><p>முருகனின் 5-வது படை வீடான திருத்தணி கோவிலில் 30 திருமணங்கள் நடந்தன. இதேபோல் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று 101 திருமணங்கள் நடந்தது.</p><p>கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் ஒரே நாளில் 136 திருமணங்கள் நடந்தன.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qy8jn7gf/marriage0.jpg" /></figure><h2><strong>திருச்செந்தூர்</strong></h2><p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 50 திருமணங்களும், பழனி திருஆவினன்குடி கோவிலில் 64 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.</p><p>திருச்சி வயலூர் முருகன் கோவிலில் 60 திருமணங்களும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமார் 50 திருமணங்களும் நடைபெற்றுள்ளன. சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று 35 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.</p><p>திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 51 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. சேலம் சுகவனேசுவரர் கோவிலில் 100 ஜோடிகளுக்கும், வாழப்பாடி பேளூர் தானதோன்றஸ்வரர் கோவிலில் 64 ஜோடிகளுக்கும், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் 61 ஜோடிகளுக்கும் என சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 279 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 108 திருமணங்களும் நடந்துள்ளன.</p><h2><strong>விடுமுறை நாள்</strong></h2><p>இதேபோல் வடபழனி மற்றும் குன்றத்தூர் போன்ற பிரபல முருகன் கோவில்களில் முகூர்த்த நாட்களில் அதிக அளவிலான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வடபழனி கோவிலில் 61 திருமணங்களும், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் 60 திருமணங்கள், திருப்போரூர் கந்தசாமி கோவிலில் 75 திருமணங்கள் நடந்தன.</p><h2><strong>1,200 திருமணங்கள்</strong></h2><p>இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள 11 மண்டலங்களுக்கு உட்பட்ட 180 முக்கிய கோவில்களில் நேற்று 1,200 திருமணங்கள் நடந்துள்ளன. இதன்மூலம், ரூ.13 லட்சத்து 98 ஆயிரத்து 527 வருவாயாக பெறப்பட்டது' என்றார்.</p><p>கோவில்களில் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் களைகட்டின.</p><h2><strong>குருவாயூர் கோவிலில்...</strong></h2><p>கேரளம் மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடப்பது வழக்கம்.</p><p>கடந்த 8.9.2024-ந்தேதி 334 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. ஆவணி மாத முகூர்த்த நாளான நேற்று 437 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>பல விதமான வடிவமைப்புகளுடன் சென்னைக்கு வந்த விநாயகர் சிலைகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-in-various-designs-arrived-in-chennai#comments</comments><guid isPermaLink="false">cf0b0209-712d-4575-beb2-7954590a6e4a</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:30:23 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:30:23.525Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar statue,Kosapet,கொசப்பேட்டை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vinayagar statue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/hocpf2jk/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>விநாயகர் சதுர்த்தியையொட்டி வித விதமான விநாயகர் சிலைகள் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.</strong></em></p><h2>விநாயகர் சதுர்த்தி</h2><p>இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்திக்கு</a> முக்கிய இடம் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர் 14-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.</p> <h2>கொசப்பேட்டை</h2><p>கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்தும் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் தற்போது சென்னைக்கு வர தொடங்கியுள்ளன. சென்னை புரசைவாக்கம் கொசப்பேட்டை பகுதியில் இப்போதே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2>விநாயகர் சிலைகள்</h2><p>3 முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் அந்தப் பகுதி சாலையோரத்தில் தற்போது கம்பீரமாக வீற்றிருக்கின்றன. குழந்தை வடிவ விநாயகர், லட்டுடன் கூடிய விநாயகர் சிலைகள் கண் கவரும் வகையில் இருக்கின்றன.</p> <h2>மாசு கட்டுப்பாட்டு வாரியம்</h2><p>மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி சிலைகள் தயாராகி வந்துள்ளன என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களில் மேலும் பல விநாயகர் சிலைகள் சென்னைக்கு வர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.</p>  <p>அணிவகுத்து நிற்கும் விநாயகர் சிலைகளை அந்தப் பகுதிகள் பார்த்து, ரசித்து சென்று வருகின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மழையில் நனைந்து விடாமல் இருக்க விநாயகர் சிலைகள் பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கப்பட்டுள்ளன.</p><p>கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.5 ஆயிரத்தில் ரூ.25 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 10 பேர் த.வெ.க.வில் இணைய உள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-sengottaiyan-says-10-more-admk-mlas-are-set-to-join-tvk#comments</comments><guid isPermaLink="false">4350f5e2-89b5-4dba-9888-f056839ecae4</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:27:50 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:27:50.493Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,ADMK,அதிமுக,tvk,அமைச்சர்   செங்கோட்டையன்,ministers sengottaiyan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் செங்கோட்டையன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/n7srqe4t/sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.</strong></em> </p><p>ஈரோடு மாவட்டம் கோபியில் த.வெ.க. சார்பில் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வருவாய்த்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-செங்கோட்டையன்">அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்</a> பேசினார். அவர் கூறியதாவது:-</p><h2><strong>சிறப்பான ஆட்சி</strong></h2><p>தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். இதே இடத்தில் தேர்தலின் போது செங்கோட்டையன் நடமாட முடியுமா? என்று ஒருவர் கேட்டார். தற்போது அவர் சட்டமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் அமர்ந்துள்ளார். தமிழகத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை என்னால் கணிக்க முடியும். அதனால் தான் த.வெ.க.வில் முதலமைச்சர் விஜய் முன்பு இணைந்தேன். அப்போது என்னை பலர் இவர் இந்த கட்சியில் சேர்ந்துவிட்டாரே என பேசினார்கள், 11 முறை தேர்தலில் தோல்வி கண்டவருக்கு என்ன தெரியும்? விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தில் நிரந்தர முதலமைச்சர்.</p><p>அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் கொடுப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என கூறியுள்ளார். அரசு கொடுக்கின்ற காரில் சென்றால்தான் பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அ.தி.மு.க.வில் 47 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அதில் இன்னும் 10 பேர் எங்கள் த.வெ.க. கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள். அதன் பின்னர் அ.தி.மு.க. பூஜ்ஜியமாகிவிடும். இதை நான் சொல்லவில்லை. கட்சியில் இருப்பவர்கள் என்னிடம் கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. வெற்றி பெறாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள்: முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/phase-2-electric-buses-in-chennai-cm-vijay-to-launch-them-tomorrow#comments</comments><guid isPermaLink="false">cdd1bbe2-68db-439b-8a0c-5cedae606335</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:06:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T03:06:14.126Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு,electric bus,மின்சார பஸ்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jk21mauf/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் 2-ம் கட்ட மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்.</p><h2><strong>2-ம் கட்டமாக 750 மின்சார பஸ்கள்</strong></h2><p>சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p>இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்</strong></h2><p>இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/விஜய்">விஜய்</a> சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் 5 மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதைத் தொடர்ந்து இதர மின்சார பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படும்.</p><p>இந்த நிலையில், ஆலந்தூர் மின்சாரப் பஸ் பணிமனைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று நேரில் சென்று மின்சார உள்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, மின்னேற்றிகளின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.</p><p>இந்த ஆய்வின்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் த.மோகன், இணை மேலாண் இயக்குனர் ராம.சுந்தரப்பாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">e8e0ceec-e78d-48cd-a865-32ae9fc85201</guid><pubDate>Mon, 24 Aug 2026 02:59:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T02:59:04.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,TN,sugar,சர்க்கரை,central government,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b2a614kv/sugar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sugar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b2a614kv/sugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><h2>பண்டிகை காலம்</h2><p>தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a> விலை உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 20-ந்தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p> <p>இந்த நிலையில், ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளதால் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது.</p><h2>இ-20 பெட்ரோல்</h2><p>இது ஒரு புறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நமது நாட்டில் இ-20 வகை பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இ-20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாகக் கொண்ட எத்தனால் பயன்படுத்தப்படுகிறது.</p> <p>எனவே அதற்கு கரும்பு தேவை அதிகமாக இருப்பதால் சர்க்கரை விலை கூடுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இ-20 பெட்ரோல் விற்பனைக்கும். சர்க்கரை விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.</p><h2>கிலோ ரூ.72-க்கு விற்பனை</h2><p>எது எப்படியாக இருந்தாலும் சர்க்கரைத் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சர்க்கரைப் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது. </p><p>அதன்படி நேற்று தமிழ்நாட்டில் சர்க்கரை ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த <a href="https://www.maalaimalar.com/news/national/removal-of-tv-ad-duration-cap-central-government">மத்திய</a>, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 23 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-august-2026#comments</comments><guid isPermaLink="false">6d7f3163-989e-430c-80b7-807a84f93590</guid><pubDate>Sun, 23 Aug 2026 04:56:09 +0000</pubDate><atom:updated>2026-08-24T01:41:02.700Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கியச் செய்திகள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/ykyip0uq/TodayLiveNews001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-minister-says-vijay-as-future-pm-manickam-thakur-sharp-reply">வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!</a></p><p>* தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்- அமைச்ரச் ஜெகதீஸ்வரி</p><p>* காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/ticket-checker-praised-for-returning-rs-25000-and-documents-left-on-train">ரெயிலில் தவறவிட்ட ரூ.25,000 பணம் மற்றும் ஆவணங்களை பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்த டிக்கெட் பரிசோதகருக்கு பாராட்டு!... </a></p><p>*கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் எண் 26402-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றது.</p><p>*தனது உடைமைகளும் பணமும் எவ்வித சேதமுமின்றி திரும்பக் கிடைத்ததால், அந்தப் பயணி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/daring-robbery-near-vandalur-railway-station-7-sovereigns-gold-chain-snatched-from-teacher-on-census-duty">வண்டலூர் ரெயில் நிலையம் அருகே துணிகரம்: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு!... </a></p><p>*செல்வி தனியாக நடந்து வந்ததைப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி அணிந்த வாலிபர் ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளான். </p><p>*கொள்ளையன் சங்கிலியைப் பலமாக இழுத்துப் பறித்ததில், சங்கிலி அறுந்து அதிலிருந்த 2 பவுன் மாங்கல்யம் மட்டும் தனியாகக் கீழே விழுந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-says-sekar-babu-spying-what-is-happening-in-hindu-religious-charitable-endowments">இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்று வேவு பார்க்கும் சேகர்பாபு: அமைச்சர் ரமேஷ்</a></p><p>* கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.</p><p>* 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ops-speech-in-dmk-district-secretary-meeting">தி.மு.க.வில் நான் எல்.கே.ஜி.: செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு</a></p><p>* தி.மு.க.வில் 70 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்பது கட்சி தலைமைக்கு மட்டும் விதிவிலக்கு.</p><p>* ஓபிஎஸ் பேசுகையில் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு கட்சியில் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today">மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!... </a></p><p>*வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/australia-beat-bangladesh-in-second-test">2வது டெஸ்டில் அபார வெற்றி: வங்கதேசத்தை நசுக்கி பழி தீர்த்தது ஆஸ்திரேலியா</a></p><p>* வங்கதேசம் 2வது இன்னிங்சில் 95 ரன்னுக்கு சுருண்டது.</p><p>* ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் வென்றார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-playoff-madurai-panthers-trichy-grand-cholas-to-meet-today">டிஎன்பிஎல் பிளே ஆப்: முதல் தகுதிச்சுற்றில் மதுரை, திருச்சி அணிகள் இன்று மோதல்</a></p><p>* புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடம்பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.</p><p>* டிஎன்பிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/likelihood-of-20-dmk-district-secretaries-losing-their-posts">வயது மற்றும் ஆண்டு வரம்பு எதிரொலி: தி.மு.க.வில் 20 மாவட்ட செயலாளர்கள் பதவி இழக்க வாய்ப்பு?</a></p><p>* தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.</p><p>* இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage">இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!</a></p><p>* சென்னை பெரம்பூரில் நடந்த தவெக நிகழ்ச்சியில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு பரபரப்பு பேச்சு.</p><p>* கருணாநிதியே நின்றிருந்தாலும் தோற்கடித்திருப்பேன் என சவால் விடுத்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day">திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</a></p><p>* ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது.</p><p>* காலை முதலே பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/linda-noskova-marie-bouzkova-won-the-title-in-cincinnati-open-tennis-womens-doubles">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது செக் குடியரசு ஜோடி</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/padikkal-gill-cross-half-century-against-srilanka-second-test">2வது டெஸ்டில் இந்தியா நிதான ஆட்டம்: அரை சதம் கடந்த படிக்கல், சுப்மன் கில்</a></p><p>* டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.</p><p>* 3வது விக்கெட்டுக்கு இணைந்த தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் ஜோடி 100 ரன்களைக் கடந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/reservation-is-a-constitutional-right-chirag-paswan-responds-to-jantar-mantar-protest">இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல உரிமை.. இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராடுபவர்களுக்கு சிராக் பஸ்வான் பாடம்</a><br><br>*சமூக பாகுபாடு என்பது இன்னும் நம் சமூகத்தில் புரையோடியுள்ளது.</p><p>*இடஒதுக்கீட்டின் நோக்கம் குறித்தும், அது ஏன் தொடர வேண்டும் என்பது குறித்தும் புரிய வைப்போம் </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் மகளின் கண் முன்னே சுட்டுக் கொலை</a></p><p>*சுரேஷ் படேல் சமீபத்தில்தான் அந்தக் கடையை வாங்கியிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>*பணத்தைப் பெற்ற பிறகு, அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/f254e3a1-ccc2-4f1b-9b12-f7ae39c8310b">ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 37 பேர் காயம்</a></p><p>*குடிநீர் செல்லும் குழாய்கள் உடைந்து சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p>*டோக்கியோ நகரில் நிலநடுக்க அதிர்வுகள் மிகவும் பலமாக உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/deadline-extended-for-submitting-documents-for-gas-cylinder-booking" rel="nofollow">கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ஆவணங்கள் சமர்ப்பிக்க காலக்கெடு மேலும் நீட்டிப்பு</a></p><p>* ‘இ-கே.ஒய்.சி.’ ஆவணங்களை ஆகஸ்டு 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.</p><p>* இ-கே.ஒய்.சி. பதிவு தொடர்பாக வாடிக்கையாளர்கள் எந்தவித அச்சமும் படவேண்டாம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iran-warns-gulf-countries-against-aiding-america" rel="nofollow">அமெரிக்காவுக்கு உதவக்கூடாது..!- வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை</a></p><p>* டிரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.</p><p>* டிரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-vacancies-over-823-lakh-posts-lying-vacant-across-ministries-revealed-by-rti-data">8.23 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.. RTI-யில் அம்பலம்</a><br><br>*ஒவ்வொரு 5 பணியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.</p> <p>* மத்திய நிதி அமைச்சம் தந்துள்ள பதிலில் இதன் தரவுகள் இடம்பெற்றுள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/piyush-goyal-japan-visit-to-attract-investments" rel="nofollow">முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்</a></p><p>* இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் குழுவுடன் ஜப்பான் பயணம்.</p><p>* ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>வேவு பார்ப்பது திமுக-வின் வேலை அல்ல..! அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு சேகர் பாபு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-works-for-people-not-spying-sekar-babu-slams-ramesh-remarks#comments</comments><guid isPermaLink="false">ec39c6f2-bf7c-4238-9c23-6d36c774bfc6</guid><pubDate>Sun, 23 Aug 2026 15:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-23T15:37:23.928Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,சேகர் பாபு,sekar babu,tvk,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh- Sekar babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/8nu5cdsc/sekar-babu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும் என்று முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.</p><p>இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>ஜனநாயகம்</h2><p>சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை. அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது. எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது.</p><p>சட்டசபையில் சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? நாங்கள் எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.</p><p>எங்கள் அரசின் மீதும் முதல்-அமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு?</p><h2>முன்னாள் அமைச்சருக்கு பயம்</h2><p>முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் இந்து சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார்.</p><p>தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.</p><p>கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துவிட்டார்கள். அதில் தொடங்கப்படாத பல பணிகள் உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்துமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். </p><p>எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை. அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.</p><h2>சினிமா கிடையாது</h2><p>கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.</p><p>தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>இந்நிலையில், அமைச்சர் ரமேஷின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது:-</p><p>வேவு பார்ப்பது திமுக வேலை இல்லை, மக்களுக்கு வேலை பார்ப்பதே திமுகவின் வேலை.</p><p>அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அதிகாரிகளை கடுமையாக மிரட்டுகிறார்.</p><p>திமுகவின் 5 ஆண்டுகள் அதிகாரிகளுடன் அன்புடன் பழகி உள்ளோம். இப்போதைய அமைச்சர் மிரட்டுகிறார்.</p><p>அறநிலையத்துறை அறிவிப்பு குறித்து அனுமானத்தில் கூறினேன், கோவிலில் தணிக்கை செய்வது எப்படி தெரியாமல் இருக்கும்.</p><p>திமுக மக்கும் குப்பை, தவெக மக்காத குப்பை. மக்கும் குப்பை என்பது பூமிக்கு உரமாகும், நன்மை தரும்.</p><p>திமுக எப்போதும் மக்களுக்கு நன்மையே செய்யும். தவெக மக்காத குப்பை போல உள்ளது. இதனால் எப்போதும் ஆபத்து தான்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>காதல் விவகாரத்தால் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை, தம்பி கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/law-college-student-hacked-to-death-over-love-affair#comments</comments><guid isPermaLink="false">e049adbe-8790-4339-a9da-f8a6233b12f7</guid><pubDate>Sun, 23 Aug 2026 14:48:42 +0000</pubDate><atom:updated>2026-08-23T14:48:42.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,Murder,போலீஸ் விசாரணை,law student,வெட்டிக்கொலை,சட்டக்கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ youth murder- police investigation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/m4fan9mg/Arrest.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிவகங்கை மாவட்டம் சின்ன புதுக்கோட்டை கிராமத்தில் காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவுக்கார பெண்ணின் தந்தை முருகேசன், சகோதரர் அருண்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>படுகொலை</h2><p>சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன்(வயது 35).</p><p>மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் முருகேசன் (வயது 50) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார்.</p><p>ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரியவந்து, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை. மேலும் பெண்ணின் தம்பி அருண்ராஜா(19) இவர்கள் காதலுக்கு எதிராக இருந்து வந்ததாக தெரிகிறது.</p><p>இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன் பெண்ணின் தம்பியை கொலை செய்வதற்காக சென்றுள்ளார் . இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சிவபாலனை வழிமறித்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலன் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில், கொலையில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சிவபாலன் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office#comments</comments><guid isPermaLink="false">cfd603a3-91ea-43d8-8b1d-b69cd5b20c6e</guid><pubDate>Sun, 23 Aug 2026 13:35:39 +0000</pubDate><atom:updated>2026-08-23T13:35:39.910Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Arrest,கைது,காவல்துறை,police,Sanitation workers,தூய்மைப் பணியாளர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை  முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள் குண்டுகட்டாக கைது]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/p7ejlmgy/New-Project-2026-08-23T190510.487.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பணி நிரந்தரம், தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட இதர கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலம் 4,7,8, ஆகியவற்றைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில் இன்று முதலமைச்சரின் பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் பெரம்பூர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். </p><p>இதனால் தண்டையார்பேட்டை மண்டலத்தை சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு விரைந்த போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p><p>கலைந்து போக மறுத்து, சாலையிலேயே அமர்ந்து போராடிய பெண் பணியாளர்கள் உள்ளிட்ட பலரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.</p>]]></content:encoded></item><item><title>‘அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் அவர்களை காக்க வேண்டும்’ - இபிஎஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-who-wishes-to-be-born-as-a-farmer-in-the-next-life-must-protect-farmers-in-this-lifetime-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-chief-minister-who-wishes-to-be-born-as-a-farmer-in-the-next-life-must-protect-farmers-in-this-lifetime-eps#comments</comments><guid isPermaLink="false">6547a793-7e92-4a83-b33b-d1c900254748</guid><pubDate>Sun, 23 Aug 2026 12:14:32 +0000</pubDate><atom:updated>2026-08-23T12:14:32.292Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,farmers,விவசாயிகள்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f2hp0s3b/New-Project-2026-08-23T174340.794.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘அடுத்த பிறவியில் விவசாயியாக பிறக்க ஆசைப்படும் முதலமைச்சர், இந்த ஜென்மத்தில் விவசாயிகளை காக்க வேண்டும்’ - இபிஎஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f2hp0s3b/New-Project-2026-08-23T174340.794.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 2000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><p>கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையினால் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.</p><p>விவசாயத்திற்கு ஆதாரம் தண்ணீர். தண்ணீருக்கு மழைதான் ஆதாரம்! கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் பெய்த கன மழை, சுமார் 2000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்டுள்ளது.</p><p>கன மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்கதிர்கள் எதிர்பாராத மழையால் சேதமடைந்ததை எண்ணி அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவர்களின் கண்ணீரைத் துடைப்பது த.வெ.க. கூட்டணி அரசின் கடமையாகும். </p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க கனவு காணும் பொய்க்கால் அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த ஜென்மத்தில் அல்லலுறும் விவசாயிகளைக் காக்கும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.</p><p>இந்த அரசு ஜூன் 12-ல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நிலத்தடி நீரை நம்பி கடன் வாங்கி வேளாண் பயிர் செய்திருந்த விவசாயிகள், தற்போது கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையினால், பாடுபட்டு விளைவித்திருந்த நெற்கதிர்கள் மழையில் மூழ்கிய நிலையைப் பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p>ஏற்கெனவே, த.வெ.க. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய வேளாண் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு, தவணை முறையில் சிறிது, சிறிதாக வேளாண் கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிடும் த.வெ.க. அரசின் முதலமைச்சரின் செய்கைகளைக் கண்டு விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர்.</p><p>தற்போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கைக் கொடுக்க இந்த அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். </p><p>பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று பொய்க்கால் த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/isha-gramotsavam-sports-competitions-mla-kanimozhi-santhosh-inaugurates#comments</comments><guid isPermaLink="false">e0a01fa7-cc22-4b9f-824f-672a3de7ee0b</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:32:56 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:32:56.083Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈஷா,Sports,விளையாட்டுப் போட்டிகள்,ISHA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Isha Gramahotsavam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/dpkxjyht/isha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈஷா சார்பில் நடத்தப்படும் 'ஈஷா கிராமோத்சவம்' 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சிறப்பாக நடைபெற்றன.</p><p>தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் இன்று மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றன.</p><p>இதில், கோவையில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் கொங்குநாடு கல்லூரியின் செயலாளர் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.</p><p>இதில் முதற்கட்ட கிளஸ்டர் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். </p><p>கனிமொழி சந்தோஷ் பேசுகையில்,“சமூகத்தில் பலரும் பல்வேறு சங்கங்களையும் இயக்கங்களையும் தொடங்குகிறார்கள். ஆனால், அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவது இல்லை. ஒரு நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய மற்றும் கடினமான செயலாகும். </p><p>ஆனால், ஈஷாவிடம் நான் கண்ட ஒரு முக்கியச் சிறப்பு அவர்களின் ஒருங்கிணைப்புத் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகும். 18 ஆண்டுகளாக இளைஞர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஒரு சமூக நோக்கத்தோடு ஈஷா கிராமோத்சவத்தை தொடர்ந்து நடத்துவது என்பது மிகப்பெரிய செயலாகும். </p><p>நமது முதலமைச்சர் அவர்களும், விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்குள்ள இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வெளிக்கொண்டு வருவதில் நமது முதலமைச்சர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். </p><p>தற்போதைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்கிறதோ, அந்த அளவிற்கு நமது உடல்நலனும் குறைந்துகொண்டே வருகிறது. இன்றைய சூழலில், குழந்தைகள் காலை முதல் இரவு வரை அலைபேசியிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.</p><p>மது மற்றும் புகைப்பழக்கத்தை விட, அலைபேசியின் அதீதப் பயன்பாடு குழந்தைகளின் சிந்தனைத் திறனைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. எனவே, குழந்தைகளுக்கு அலைபேசியை அளவோடு பயன்படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p>பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் தற்போதைய சூழலில், குழந்தைகளின் கவனத்தைத் சரியான திசையில் செலுத்த ஈஷா நடத்தும் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. </p><p>விளையாட்டை ஊக்குவிப்பது என்பது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், மனத்தெளிவையும், எதிர்கால இலக்குகளை நோக்கிய கவனத்தையும் குழந்தைகளுக்கு வழங்குகிறது. </p><p>விளையாட்டுத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது போல் உங்களின் வேலைப்பளு எவ்வளவு இருந்தாலும், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது விளையாட்டிற்காக நேரம் ஒதுக்க வேண்டும்" எனக் கூறினார். </p><p>இதில் வெற்றி பெற்ற வாலிபால் மற்றும் த்ரோபால் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக த்ரோபால் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகள் நடைபெற்ற 6 மண்டலங்களிலும் ஒரு சிறந்த த்ரோபால் வீராங்கனைக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p><p>கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சத்குருவின் வழிகாட்டுதலில் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டுத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. </p><p>கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா கிளஸ்டர், டிவிஷனல் மற்றும் இறுதிப் போட்டிகள் ஆகிய நிலைகளில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் கிளஸ்டர் அளவிலான முதற்கட்ட போட்டிகள் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாத முதல் 2 வாரங்களில் நடைபெற்றது. </p><p>தற்போது மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட இறுதிப்போட்டி செப்டம்பர் 6 அன்று கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் நடைபெறும்.</p><p>ஈஷா கிராமோத்சவம் 2026-இன் இறுதிப் போட்டியில் வெல்லும் கைப்பந்து மற்றும் எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.3 லட்சமும் பரிசாக வழங்கப்படும். மூன்று மற்றும் நான்காம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.1 லட்சமும், ரூ.50,000-மும் வழங்கப்படும். </p><p>மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுத் திருவிழாவில், கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மொத்தம் ஒரு கோடிக்கும் மேல் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. </p><p>ஈஷா கிராமோத்சவம் இந்தாண்டு புதிதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதனுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.</p><p>இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில், சுமார் 7,005 அணிகள் மூலம் 40,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கிட்டத்தட்ட 20,000 பெண்கள் உட்பட 80,352 கிராமப்புற மக்கள் பங்கேற்றுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-it-a-government-or-a-circus-troupe-i-cannot-tell-udhayanidhi-stalin-criticizes-the-tvk-administration#comments</comments><guid isPermaLink="false">35a6bab0-b377-44e2-9eb4-af26dc4b96fe</guid><pubDate>Sun, 23 Aug 2026 10:19:57 +0000</pubDate><atom:updated>2026-08-23T10:19:57.613Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என தெரியவில்லை’ - தவெக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/f92wf4oe/New-Project-2026-08-23T154937.040.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் திமுக நிர்வாகி வி.கே.வெங்கடேசன் என்பவரின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>தொடர் தஞ்சாவூர் பயணம்</h2><p>கடந்த சில மாதங்களாகவே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடிக்கடி வந்துகொண்டிருக்கிறேன். கடந்த மூன்று மாதங்களில், நான்கு முறை வருகை தந்துள்ளேன். அப்படியே நான் வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னைக் கைது செய்து, அவர்களே இந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அழைத்து வருகிறார்கள். </p><p>இரண்டு வாரங்களுக்குள் மூன்று முறை வந்துவிட்டேன். கடந்த 3-ஆம் தேதி என்ன நடந்தது என்பதை, நீங்கள் அனைவரும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் எங்கு பேசினாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேசும்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும். </p><p>நாம் பேசவில்லை என்றாலும், பரவாயில்லை, கீழே இருந்து பேசி, நம்மை மாட்டிவிட்டுவிடுவார்கள். இன்றைக்கு அந்தமாதிரி அண்ணன் துரை.சந்திரசேகரன் அவர்கள் சில வார்த்தைகளைக் கூறி, என்னை மாட்டிவிட்டிருக்கிறார்.</p><p>அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும். பரவாயில்லை, இந்தக் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது, இந்த உதயநிதி என்பது இந்த அரசுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும்.</p><h2>கைதுக்கு அஞ்சுபவன் அல்ல</h2><p>கடந்த 3-ஆம் தேதி, தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களின் கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். </p><p>நான் கலந்துகொண்டு என் தலைமையில் நடந்தது. நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து கலந்துகொண்டார்கள். நான் தலைமை தாங்கி கடைசியாகப் பேசினேன்.  </p><p>கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னேன். அதுமட்டும் சொல்லவில்லை, இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் என்றேன், ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு வெட்கங்கெட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு அமைந்திருக்கிறார் என்று சொன்னேன். </p><p>தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதையெல்லாம் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு வக்கில்லை என்று சொன்னேன். அதற்கெல்லாம், அவர்களுக்கு கோபம் வரவில்லை. காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும், கோபம் வந்துவிட்டது. </p><p>அதற்காக, என்னை இரவோடு இரவாக தஞ்சாவூரில் இருந்து காவல்துறையினரை அனுப்பி, அதிகாலையில் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைக் கைது செய்தார்கள். </p><h2>சர்க்காரா அல்லது சர்க்கஸ் கம்பெனியா? </h2><p>சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை இதைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று நாங்களெல்லாம் குறிப்புகளெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோம். </p><p>ஆனால், நாங்கள் கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் எழுந்து பதில் சொல்வது கிடையாது. நீங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள், தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.</p><p>ஒரு மூன்று அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அனைத்துக் கேள்விகளுக்கும் அந்த மூன்று அமைச்சர்கள்தான் எழுந்து பதில் சொல்கிறார்கள். அதுவும் நாங்கள் கேட்கக்கூடிய கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புவது போலத்தான் இருக்கிறது. திசை திருப்பும் உத்திகள் அவ்வளவுதான்.</p><p>உதாரணத்திற்கு, அன்று செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் மானியக் கோரிக்கையில் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்? மின்சாரக் கட்டணம் இந்த மூன்று மாதங்களில் அதிகமாகிவிட்டது. அளவீட்டைச் சரியாக எடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. </p><p>ஆனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், அந்தப் பிரச்சினையைத் திசை திருப்புவது போல ஒரு பதிலைக் கூறுகிறார். </p><p>தொடர்ந்து இந்த அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. அமைச்சர் பெருமக்களும் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரச்சினையைப் பேசுவதற்கு வரவில்லை. </p><p>அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அன்று ஒரு நான்கு ரீல்ஸ் கிடைத்தால் போதும். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா என்று கேட்கும் அளவுக்குத்தான் இன்று அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.</p><h2>இந்தியாவின் முதன்மை மாநிலம்</h2><p>இதையே சற்றுப் பின்னோக்கி பாருங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நம்முடைய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் தமிழ்நாட்டைக் கொண்டுவந்தார். </p><p>11.19 சதவிகித வளர்ச்சியோடு இந்தியாவில் வளரும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. இன்று அதைக்கொண்டு போய் பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். </p><p>இன்றைக்கு இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-tamil-nadu-government-must-abandon-the-practice-of-appointing-forest-department-personnel-as-rural-development-project-directors-anbumani-urges#comments</comments><guid isPermaLink="false">1ac5ae58-4864-40e0-b5af-11b9a8d5545e</guid><pubDate>Sun, 23 Aug 2026 09:13:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T09:13:36.289Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Forest Service officers,Project Directors,DRDA,ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்,வனப்பணி அலுவலர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக வனத்துறையினரை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/yyzildno/New-Project-2026-08-23T144310.513.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வனப்பணி அலுவலர்களை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;</p><h2>மக்களுடன் நேரடியாக தொடர்புள்ளத் துறை</h2><p>தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக  இந்திய வனப்பணி அலுவலர்களை (Indian Forest Service - IFS) நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>கிராமப்புற மக்களுக்கு நேரடியாக சேவை வழங்க வேண்டிய பொறுப்புகளில், அத்துறைக்கு எந்த வகையிலும்  தொடர்பில்லாத வனப்பணி அலுவலர்களை நியமிப்பது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும்.</p><p>தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக மக்களுடன் நேரடியாக தொடர்புள்ள துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தான். </p><h2>வனப்பணிக்கும், கிராம ஊரகப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத</h2><p>கிராமப்பகுதிகளில் சாலைகள், பாலங்கள், வீட்டு வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இந்தத் துறை தான் ஏற்படுத்தித்  தருகிறது. இவை அனைத்தையும் விட, கடந்த காலங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தையும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 150 நாள் வேலைத் திட்டத்தையும் இந்தத் துறை தான் செயல்படுத்துகிறது. </p><p>இந்தத் துறையின் மாவட்ட அளவிலான தலைமை அதிகாரிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநரும் தான். </p><p>வனப் பணி அலுவலர்களுக்கும் இந்தப் பணிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அவர்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குநர்களாக நியமித்தால் ஊரக வளர்ச்சித் துறையின் செயல்பாடுகள் மெச்சத்தக்கதாக அமையாது.</p><h2>டிஎன்பிஎஸ்பி மூலம் பணித்தேர்வு</h2><p>ஊரக வளர்ச்சித் துறைக்காக தனியாக பணியாளர் படிநிலைகள் உள்ளன. இந்தத் துறையின் தொடக்க நிலை பணி என்பது இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் தான். </p><p>இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். </p><p>அடுத்தடுத்த நிலைகளில் அவர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர் என பதவி உயர்வு பெறுகிறார்கள். இந்தப் பணிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுபவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார்கள்.</p><h2>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமனம்</h2><p>இதுதவிர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் ஊரக வளர்ச்சித் துறைக்கு நேரடியாக உதவி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். </p><p>அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் இணை இயக்குனர் நிலைக்கு உயரும் போது ஊரக வளர்ச்சி முகமையின்  திட்ட இயக்குனர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படும் போது ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள், கிராமப்புற மக்களின் தேவைகள் ஆகியவற்றை மிகவும் நன்றாக அறிந்திருப்பார்கள் என்பதால் சிறப்பாக பணியாற்ற முடியும். </p><p>ஆனால், அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்காமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நேரடியாக திட்ட இயக்குநர்களாக நியமிப்பதை தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்திருந்தது.</p><p>இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இப்பணிக்கு நியமிக்கப்பட்டதற்குக் கூட ஓரளவு ஏற்கத்தக்க வகையில் ஒரு காரணம் கற்பிக்கப்பட்டது. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் பிற்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களாக பணி செய்ய வேண்டியிருக்கும் என்பதால், அதற்கு இந்தப் பணி சிறந்த பயிற்சிக் களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. </p><p>ஆனால், இப்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமிப்பதை விட்டு விட்டு, இந்திய வனப்பணி அதிகாரிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர்களாக நியமிப்பதற்கு எந்த  நியாயமான காரணங்களும் இல்லை. </p><p>இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும்.</p><h2>துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடங்கும் நிலை</h2><p>ஊரகப்பகுதி மக்களின் தேவைகள் என்னவென்பதை அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான  அனுபவம் இந்திய வனப்பணி அலுவலர்களுக்கு இருக்காது. அதனால் ஊரக வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். </p><p>இந்த நியமனங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளின் திட்ட இயக்குநர்களுக்கும் இடையே சரியான  ஒத்துழைப்பு இல்லாத நிலை உருவாகி அது ஒட்டுமொத்த துறையின் செயல்பாடுகளையும் முடக்கி விடும்.</p><p>இன்னொருபுறம், தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு  வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பதவி என்பது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் பதவிக்கு ஒப்பானதாகும். </p><p>இந்தப் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் நியமித்தால் தான் அவர்களுக்கு உதவி இயக்குநர், துணை இயக்குநர், இனை இயக்குநர், கூடுதல் இயக்குநர் என பல்வேறு நிலைகளுக்கு பதவி உயர்வு பெற முடியும். </p><p>மாறாக, திட்ட இயக்குநர் பணிக்கு  அகில இந்திய பணி அலுவலர்களை தொடர்ந்து நியமித்து வருவதால்,  ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 35 ஆண்டுகள் என பணி செய்தாலும் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவி  உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த அநீதி போக்கப்பட வேண்டும்.</p><p>எனவே, ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அதிகாரிகளை நியமிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். </p><p>அதற்கு பதிலாக திட்ட இயக்குநர் பதவியை ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் நிரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/attack-on-communist-leaders-in-kallakurichi-p-shanmugam-condemns-it#comments</comments><guid isPermaLink="false">a4ee280e-d5bc-417d-9bc2-d14d00313afc</guid><pubDate>Sun, 23 Aug 2026 08:56:45 +0000</pubDate><atom:updated>2026-08-23T08:56:45.106Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,சிபிஎம்,CPI(M)</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கள்ளக்குறிச்சியில் கம்யூனிஸ்ட் தலைவர்கள்மீது தாக்குதல் - பெ.சண்முகம் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/4td6n8s4/New-Project-2026-08-23T142519.136.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சியில் சிபிஎம் கட்சி தலைவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.,</p><p>“கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் டி.எம்.ஜெய்சங்கர், முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை, </p><p>மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் டி.எஸ்.மோகன் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.</p><p>உளுந்தூர்பேட்டையில் நடைபெறவிருந்த போராட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 21 அன்று இரவு கிளியூர் கிராமத்தைக் கடந்து காரை நிறுத்தியிருந்தபோது, வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சித் தலைவர்களையும், கட்சியின் பெயரையும் மிக அசிங்கமாகத் திட்டி, காரிலிருந்த கட்சிக் கொடி மற்றும் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். </p><p>மேலும், தோழர்கள் அனைவரையும் கொலைவெறியோடு தாக்கியுள்ளனர். வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், 'பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்' கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார். </p><p>இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் போராடி வருகின்றனர். </p><p>இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உட்பட 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் குறித்து களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், காயமடைந்த தோழர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறை இதுவரை ஒரே ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளது.</p><p>பொதுமக்களுக்கு ஆதரவாகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட வடமாம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவரின் மகன்கள் இருவர் உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து, </p><p>கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>இனி திமுக, அதிமுக கிடையாது-ஒரே கட்சி தவெக மட்டும்தான்: வி.எஸ்.பாபு ஆவேசம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vs-babu-fires-at-dmk-aiadmk-from-perambur-stage#comments</comments><guid isPermaLink="false">139ce1b0-8026-4f4d-b548-f3b5e472da41</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:43:25 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:43:25.894Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>EPS,MKStalin,Perambur,tvk,Kolathur MLA,கொளத்தூர் எம்எல்ஏ,விஎஸ்பாபு,VSBabu</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sr5l8v2c/VS-Babu" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ VS Babu  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/sr5l8v2c/VS-Babu?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெரம்பூரில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வொன்றில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF">கொளத்தூர் தொகுதி </a>சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு கலந்துகொண்டு பேசினார். </p><p>மேடையில் தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் ஆவேசமாக உரையாற்றிய அவர், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும், அதன் தலைவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>தளபதி 5 நிமிஷம் வந்தாரு... 'கொத்து பரோட்டா' போட்டாரு!</h2><p>மேடையில் வி.எஸ்.பாபு பேசுகையில், "எல்லோரும் சொல்கிறார்கள் விஜய் பேச மாட்டேன்கிறார் என்று. ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் இவர்கள் அனைவரும் ஓடிப் போய்விடுவார்கள். </p><p>தேர்தல் நேரத்தில் எனக்காகப் பிரச்சாரம் செய்ய நமது தலைவர் விஜய் வெறும் 5 நிமிடம் தான் கொளத்தூருக்கு வந்தார். தளபதி வந்தாரு, ஒரு 'கொத்து பரோட்டா' போட்டாரு, அத்தோடு தேர்தல் முடிந்தது! அவர் வந்த அன்றே கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகள் எல்லாம் ஜொலித்தன. </p><p>கூட்டத்தில் கூடிய 25,000 முதல் 30,000 பேரைப் பார்த்த போதே நான் ஜெயிப்பது உறுதி என்று கணித்துவிட்டேன்" என்றார்.</p><h2>"கருணாநிதி நின்றிருந்தால் கூட தோற்கடித்திருப்பேன்"</h2><p>தொடர்ந்து திமுக தலைமைக்கு சவால் விடுத்த அவர், "எதிரே நின்றது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, அவரது அப்பாவாக (கலைஞர் கருணாநிதி) இருந்தாலும் சரி, நமது தலைவர் விஜய்யின் அலைக்கு முன்னால் தவெக தான் ஜெயித்திருக்கும். </p><p>இந்தத் தேர்தலில் கருணாநிதியே நின்றிருந்தால் கூட நான் அவரைத் தோற்கடித்திருப்பேன்" என்று கூறினார்.</p><h2>திமுக விற்கு சவால்!</h2><p>திமுகவின் வாரிசு அரசியலைச் சாடிய வி.எஸ்.பாபு, "திமுகவில் கடைசி வரைக்கும் அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மடடும்தான் பதவியில் இருப்பார்கள். </p><p>முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது இனி ஒரே ஒருமுறை எம்.எல்.ஏ ஆகிவிட்டால் கூட, என் ஒரு பக்க மீசையை நான் எடுத்துக் கொள்கிறேன்" என்று மேடையில் பகிரங்கமாகச் சவால் விடுத்தார்.</p><h2>ஸ்டாலினுக்கும் தெரியாது, உதயநிதிக்கு பூஜ்ஜியம்!</h2><p>தொடர்ந்து பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கே ஒன்றும் தெரியாது. இப்போது இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு பூஜ்ஜியம், ஒன்றுமே தெரியாது. </p><p>இதற்கெல்லாம் அவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம். எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் அவர்களைப் பற்றியும், எடப்பாடியாரைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். இனி அவர்கள் யாரும் தேற மாட்டார்கள்" என்று சாடினார்.</p><h2>இனி தமிழ்நாட்டில் ஒரே கட்சி தவெக தான்!</h2><p>"தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துவிட்டன. யாரும் வரமாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஊரையே குட்டி ஒன்றாகத் திரட்டி மாபெரும் கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளார் உறுப்பினர் சிவா அவர்கள். </p><p>இதுதான் தவெக! இதுதான் நம் கட்சி! இனி தமிழ்நாட்டில் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது; இருக்கப்போவது ஒரே ஒரு கட்சி, அது நமது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதல்வர் ஜோசப் விஜய்</a>யின் தவெக மட்டும்தான்" என்று கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் முருகன் கோவிலில் 200 திருமணம்: பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rush-in-murugan-temples-for-muhurtham-day#comments</comments><guid isPermaLink="false">529f9f86-5b0b-44de-b5e0-abb9f181d34b</guid><pubDate>Sun, 23 Aug 2026 07:14:48 +0000</pubDate><atom:updated>2026-08-23T07:14:48.515Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கூட்ட நெரிசல்,Murugan temples,சுபமுகூர்த்தம்,முருகன் கோவில்கள்,Muhurtham,heavy rush</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rush]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/h0lpm35p/rush.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆவணி மாத முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடை பெற்றது. </p><p>திருப்போரூர், திருத்தணி, குன்றத்தூர் முருகன் கோவில்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஜோடிகளின் திருமணத்தால் கோவில் வளாகங்களில் கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் வருகையும் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.</p><p>திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை முதலே  ஏராளமானோர் சென்றதால் பஸ், மின்சார ரெயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.</p><h2>திருப்போரூர்</h2><p>திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசாமி கோவில் வளாகத்தில் இன்று 75 திருமணங்கள் நடந்தன. கோயிலையொட்டி பதிவு செய்யப்படாத திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருமணத்துக்கு வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள் குவிந்ததால்  கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. </p><p>கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் திருமணத்துக்கு வந்தவர்கள் பக்தர்கள் திணறினர். கோயில் வெளிப்புற வளாகம் முழுவதும் திருமணங்கள் நடைபெற்றதால் சுற்றி வரக் கூட முடியாத சூழ்நிலை நிலவியது.</p><p>இதேபோல், கோவில் மாடவீதியைச் சுற்றி உள்ள 15-க்கும் மேற்பட்ட  மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றது. போலீசார் காலை முதல் மாட வீதிகளில் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் கோயில் வாகன நிறுத்தும் இடங்களுக்கு அனுப்பியதால் மாட வீதிகளில் ஓரளவு நெரிசல் குறைந்து காணப்பட்டது.</p><h2>திருத்தணி</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் இன்று 75-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. மணமக்களின் உறவினர்கள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர் கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.</p><figure><img alt="heavy rush" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/egkfqr28/rush-2.jpg" /></figure><p>அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வீதியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனர். மேலும் திருத்தணி நகரம் முழுவதும் உள்ள தனியார் திருமண மண்டபங்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றதால் மலைப்பாதை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.</p><h2>குன்றத்தூர்</h2><p>குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று மட்டும் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. </p><p>இதுகுறித்து திருமணத்திற்கு வந்தவர்கள் கூறும்போது, கோவில் நிர்வாகம் சார்பில் போதிய ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோவிலில் திருமணம் முடிந்த புதுமண ஜோடிகள் கூட்ட நெரிசல் காரணமாக வெளியே செல்லவே திணறினர் என்றனர்.</p>]]></content:encoded></item><item><title>மக்களே உஷார்! இன்றோடு முடிகிறது அவகாசம்- உடனே செய்யாவிட்டால் கேஸ் புக் பண்ண முடியாது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/people-alert-deadline-for-lpg-e-kyc-ends-today#comments</comments><guid isPermaLink="false">02db3332-fcd3-4c7d-94f5-878b4c6aa393</guid><pubDate>Sun, 23 Aug 2026 06:37:36 +0000</pubDate><atom:updated>2026-08-23T06:37:36.446Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியன் ஆயில்,LPG gas cylinder,Oil companies,சமையல் எரிவாயு சிலிண்டர்,e-KYC,e-KYC நடைமுறை,எண்ணெய் நிறுவனங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ LPG Gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-23/hi7i8rx3/lpg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) இணைப்புகளுக்கு மின்னணு முறையில் வாடிக்கையாளர் விவரங்களைச் சரிபார்க்கும் e-KYC நடைமுறையை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஆகஸ்ட் 23) நிறைவடைகிறது. இந்தச் சரிபார்ப்பை உடனடியாக முடிக்காவிட்டால் சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படுவதோடு, சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் சிக்கல்கள் ஏற்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.</p><h2><strong>இன்றே கடைசி நாள்</strong></h2><p>இந்தியன் ஆயில், <a href="https://www.maalaimalar.com/news/topnews/indias-russian-crude-oil-imports-hit-record-50-8-percent-in-july">பாரத் பெட்ரோலியம்</a> மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரும் e-KYC நடைமுறையை உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. முறைகேடான எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய வேண்டிய மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்தச் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனைச் செய்யாத பட்சத்தில், வீட்டு உபயோக விலையில் சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, வர்த்தக ரீதியிலான அதிகக் கட்டணம் செலுத்த நேரிடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.</p><h2>மானி<strong>யம் நிறுத்தப்படும் அ</strong>பாயம்</h2><p>மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சமையல் எரிவாயு மானியத் தொகையானது பயனாளி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. e-KYC நடைமுறை முடிவடையாவிட்டால், இந்த மானியத் தொகை ரத்து செய்யப்படும். மேலும், புதிய சிலிண்டர் முன்பதிவு செய்ய முயலும் போது, கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டி முன்பதிவு நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.</p><h2>சரி<strong>பார்ப்பை எளிதாக நிறை</strong>வு செய்வது எப்படி?</h2><p>வாடிக்கையாளர்கள் தங்களின் எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, தங்களின் ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்பு அட்டையைக் காண்பித்து கைரேகை அல்லது விழித்திரை பதிவு மூலம் e-KYC சரிபார்ப்பை உடனடியாக முடித்துக் கொள்ளலாம்.</p><p>இதுதவிர, அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி செயலி மூலமாகவும், ஆதார் முக அடையாளச் சரிபார்ப்பு முறையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலும் சில நிமிடங்களில் இச்சேவையை நிறைவு செய்ய முடியும்.</p><p>கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், சமையல் எரிவாயு சேவையில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் உடனடியாகத் தங்களின் e-KYC நடைமுறையை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item></channel></rss>