<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 21 Aug 2026 16:13:51 +0000</lastBuildDate><item><title>சிவன் சொத்து குல நாசம் என்பது தெரியும்: சேகர்பாபு Vs ரமேஷ் சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sivan-soththu-kula-nasam-theriyum-sekarbabu-vs-ramesh-assembly-heated-debate#comments</comments><guid isPermaLink="false">09fad261-47f2-4639-a77e-8f7661705284</guid><pubDate>Fri, 21 Aug 2026 16:13:49 +0000</pubDate><atom:updated>2026-08-21T16:13:49.918Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sekar babu MLA,சேகர்பாபு எம்எல்ஏ,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xfaeajc6/SekarBabuvsRamesh001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Minister Ramesh vs Sekar Babu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xfaeajc6/SekarBabuvsRamesh001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் ரமேஷின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு- தற்போதைய த.வெ.க. அமைச்சர் ரமேஷ் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.</p><p>அமைச்சர் ரமேஷ்: திருக்கோவில் நிலங்களை மீட்டதாக சொன்னார்கள். ஆனா, இன்னொரு விசயத்தை சொல்ல மறந்து விட்டார்கள். இன்றைக்கு 40 ஆயிரத்து 245 ஏக்கர் தனி நபர் பெயரில் பட்டா மாறியிருக்கிறது. அதை மீட்கும் பெரும்பணி இந்த ஆட்சிக்கு இருக்கிறது. கணினி சிட்டா பதிவுகளின்போது ஏறத்தாழ 33,949 ஏக்கர் தவறுதலாக தனி நபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டிருக்கு. அதை மீட்பதில் த.வெ.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து வகையிலான நிலங்களை பாதுகாப்பதிலும், மீட்பதிலும் இந்த அரசு பணி செய்து கொண்டிருக்கிறது.</p><h2>வள்ளலார் திட்டம்</h2><p>வள்ளலாருக்காக மிகப்பெரிய திட்டங்கள் கொண்டு வந்ததாக சொன்னார்கள். கூடவே உண்மைக்கு மாறாக ஒன்றை சொல்லிவிட்டார்கள். அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம், எதிர்த்து விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்த விசயத்தில் யானை சபையின் பின்புறம் பெருவழி என்று சொல்லக்கூடிய இடத்தில், பெரிய திட்டத்திற்கான செயல்பாட்டை செய்திருந்தார்கள்.</p><p>இந்த பெருவழியை தவிர்த்து வேறு எங்கே வேண்டுமென்றாலும் கட்டிக் கொள்ளுங்கள் என்ற வள்ளலாரின் பக்தர்கள் கூறினார்கள். இதை துறை சார்பான அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பேசி முடிவு எடுக்கிறோம் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறோம். அதை கைவிடப்போறோம் என்று சொல்லவில்லை. பெருவழியை தவிர்த்து மற்ற இடங்களில் கட்டுக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சருக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள்.</p><h2>வாடகை கலெக்ஷன்</h2><p>வாடகை கலெக்ஷன் உள்ளிட்டவைகளை பற்றி பேசினார்கள். 100 நாட்களில் ஏறத்தாழ 108 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் 2000 கோடி ரூபாய் டிசிபி கலெக்ஷன் நிலுவையில் உள்ளது. அதையும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். 464 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கணினி சிட்டாவில் 349 ஏக்கர் நிலத்தை மீட்க மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நகையை உருக்கியது பற்றி பேசினார்கள். அதில் எனக்கு எந்த மாற்ற கருத்தும் இல்லை. ஆனால், ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. கடந்த பல வருடங்களாக நகையை மறுமதிப்பீடு செய்யாமல் வைத்துள்ளனர். 5 ஆண்டுக்கு ஒருமுறை நகையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என HRA சட்டத்தில் உள்ளது.</p><p>நகையை மறுதிப்பீடு செய்யாமல் நகையை உருக்கிவிட்டோம் என்று சொன்னால் எப்படி?. நகை மதிப்பீடு பணியை யார் செய்வது?. அதை மறுதிப்பீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை செய்து கொண்டிருக்கிறது.</p><p>மதுரை உறுப்பினர் அறங்காவலர்குழு பற்றியெல்லாம் பேசினார்கள். அறங்காவர்குழு நியமனம் எப்படி நடந்தது என்று சொன்னார்கள். விதிமுறை எல்லாம் பின்பற்றினார்கள். அதெல்லாம் சரிதான். மறைமுகமாக என்னவெல்லாம் நடந்துச்சி என்று கண்ணீர் விட்டு அழுதார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.</p><p>இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அமளியில ஈடுபட்டனர். இதனால் மறைமுகமாக என்ற வார்த்தை நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><h2>பின்னர் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில் அளித்தார்.</h2><p><strong>சேகர்பாபு:</strong> சிவன் சொத்து குலம் நாசம் என்பதை நாங்கள் தெளிவாக அறிந்தவர்கள். ஆடிட் செய்வது அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகள் சார்ந்தது. ஆடிட்டை மத்திய அரசு செய்ய வேண்டும் என நினைத்தபோது, அதை நாம்தான் ஆடிட் செய்ய வேண்டும் என போராடி பெற்றது நாங்கள். எந்த அறங்காவலர் இவரிடம் அழுதார் என்பதை விளக்கினால் பொறுப்பேற்க தயாராக இருக்கிறோம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற குற்றத்தை அவைத் தலைவர்கள் பதிவு செய்யக் கூடாது.</p><p>அமைச்சர் ரமேஷ்: சிவன் சொத்து குலம் நாசம் என்கிறார்களே, நிறைய விசயங்களை எடுத்து வைத்துள்ளோம். விரைவில் ஆதாரங்களை வெளியிடுகிறோம்.</p><p>இவ்வாறு இருவருக்கும் இடையில காரசார விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுகாஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thaimaman-thanga-mothiram-scheme-joy-alukkas-gold-tender-free-1-gram-gold-ring-cm-vijay-schemes#comments</comments><guid isPermaLink="false">11120911-1276-4554-ac42-c7c532df6814</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:40:57 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:40:57.589Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,தவெக,TN Government,தமிழக அரசு,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4i2qje66/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்காக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 1 பைசாவுக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மகளிர் நலன்' என்ற தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.</p><p>அதன்படி, "தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம், மென்மையான துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 'தாய்மாமன் சீர் பெட்டகம்' வழங்கப்படும்" என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய், குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>தவெக ஆட்சி</h2><p>சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' என்ற பெயரில் அது அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறுபவர், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும், அரசு மருத்துவமனை மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.</p><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி மதிப்பில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.</p><h2>தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h2><p>தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான தங்கத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரியது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்குவதற்கான தங்கம் கொள்முதலுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.</p><p>தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.</p><p>இந்தத் திட்டத்திற்கு 4.41 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்காக டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியானது.</p><h2>ஒப்பந்தப் புள்ளி</h2><p>இதில் தங்கத்தின் சந்தை விலையைத் தவிர்த்து செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு மற்றும் போக்குவரத்து என அனைத்துக் கூடுதல் செலவுகளுக்கும் சேர்த்து வெறும் 1 பைசா மட்டுமே கோரி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் (குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனம்) கோரியுள்ளது.</p><p>பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-is-the-story-behind-karunanidhis-yellow-shawl-the-explanation-he-himself-gave#comments</comments><guid isPermaLink="false">62a6615b-7af0-42d8-8412-cff01d0ecde7</guid><pubDate>Fri, 21 Aug 2026 12:10:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T12:10:59.657Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karunanidhi,கருணாநிதி,அமைச்சர் நிர்மல்குமார்,minister nirmal kumar,Yellow shawl,மஞ்சள் துண்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மஞ்சள் துண்டிற்கு பின்னிருக்கும் கதை என்ன? அவரே கொடுத்த விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/0e72tp7w/New-Project-2026-08-21T174032.850.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் விஜய் நீண்டநாட்களாக மூன்று கோப்பைகளை திறந்துவிடுவதாக கூறிவருகிறார். அதை உடனடியாக திறக்கவேண்டும், அதற்கு ஜோசியக்காரர் சொல்லவேண்டுமா” எனப் பேசியிருந்தார்.</p><p>இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “யார் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டார் என்பதை அனைவரும் அறிவர்” என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை குறிக்கும் வகையில் பதிலளித்தார். </p><p>ஆனால் உண்மையில் கருணாநிதி ஜோசியம் பார்த்துதான் மஞ்சள் துண்டு அணிந்தாரா, அந்த மஞ்சள் துண்டு குறித்து அவரே கூறியது குறித்து இங்கு காண்போம்.</p><p>இதுதொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது;</p><p>சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது.</p><p>உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். </p><p>வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.</p><p>வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு - மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர்.</p><p>அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கு இடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.</p><p>வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் - கழகக் கண்மணிகள்!</p><p>கழுத்துப் பகுதியும், முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார்.</p><p>இப்படிக் கம்பளிச் சால்வையை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.</p><p>அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது.</p><p>தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் - இது நன்றாக இருக்கிறது - இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக, இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.</p><p>அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப்போல - சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல - சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல - நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன்.</p><p>இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும், கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர, சீற்றம் பிறக்கவில்லை.” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: 2026 தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது- முதலமைச்சர் விஜயை மேற்கோள் காட்டி விளக்கிய அமைச்சர் ரமேஷ்- 21 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-21-august-2026#comments</comments><guid isPermaLink="false">ac47dc11-4fb4-4fd1-9107-7bf9bddc91e2</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:54:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:53:29.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/h2dj8zu4/ramesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த 5 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.</p><p>ரூ.8 லட்சம் மின்மாற்றியை ரூ.13 லட்சத்திற்கு வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.</p><p>மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புகார்கள், குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி விளக்கம்.</p><p>திமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதற்கு தவெக அரசின் வெள்றை அறிக்கையே சாட்சி.</p><p>மின்சார துறையில் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.</p><p>திமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்றார்.</p><p>சட்டசபையில் மின்துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார்.</p><p>ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.</p><p>புதிய மின் இணைப்பு கோரும் வீட்டு விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறை எளிதாக்கப்படும்.</p><p>50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்.</p><p>சென்னை பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்னூட்டிகள் அமைக்கப்படும்.</p><p>அதிக சுமை உள்ள துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும்.</p><h2>அமைச்சர் ரமேஷ்: </h2><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் செய்யப்பட்ட ஊழல்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்துள்ளோம். அதை விரைவில் வெளியிடுவோம்.</p><h2>திமுக எம்எல்ஏ சேகர் பாபு: </h2><p>'சிவன் சொத்து குல நாசம்' என்பதை உணர்ந்தவன் நான். ஆதாரத்தோடு எந்த குற்றச்சாட்டை சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.</p><p>மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் அருண் ராஜ் பதிலுரை வழங்கினார்.</p><p>மக்கள் நல்வாழ்வு துறை மூலம் எப்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு தங்கம் வாங்க முடியும் என்று கேட்டார்கள். கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கான பெட்டகங்கள் மருத்துவ கழகம் மூலமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ கழகம் மூலம் மருந்துகள், மருத்துவ கருவிகள் அல்லாத பொருள்களையும் வாங்க முடியும்</p><p>திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>1000 ஆண்டுகள் பழமையான 64 கோவில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களுடன் கூடிய பாதுகாப்பு திறனாளர்களை உருவாக்கும் பயிற்சி வழங்கப்படும். உயர் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தொழிற்துறை சார்ந்த சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படும்.</p><p>வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும்- அமைச்சர் ரமேஷ்.</p><p>சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும.</p><p>சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும்.</p><p>9 திருக்கோயில்களில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.- அமைச்சர் ரமேஷ்.</p><h2>அறநிலையத்துறை- புதிய அறிவிப்புகள்</h2><p>152 திருக்கோவில்களில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.</p><p>குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்படும்.</p><p>3 கோவில்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பொங்கல் மண்டபங்கள் அமைக்கப்படும்.</p><p>சட்டசபையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- </p><p>திமுக ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்து, அதில் 4 கல்லூரிகளைத் திறந்துவைத்தோம்</p><p>கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டக்கூடாது என வழக்குத் தொடர்ந்து தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் முறியடிக்கப்பட்டு, 4 கல்லூரிகளைக் கட்டி முடித்துள்ளோம்; மீதமுள்ள கல்லூரிகளையும் கட்டி முடிக்க த.வெ.க. அரசு நடவடிக்கை எடுக்குமா?.</p><p>2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூரசம்ஹாரம் போன்றது என சட்டசபையில் அமைச்சர் ரமேஷ் பேசினார். முதலமைச்சர் விஜய் வேலேந்தி, சூரனை வீழ்த்தினார்.</p><p>பெரியாரின் பேரனாக முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் புகழாரம்.</p><p>அண்ணாவின் தம்பிகள் போல இன்று அண்ணனின் தம்பிகளாக தவெக எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.</p><p>சாதி, மத அரசியலை வீழ்த்தி எங்களுடைய வேலன் ஜனநாயகத்தின் ஆட்சியை நடத்தி வருகிறார்.</p><p>முதலமைச்சர் விஜயின் அழகிய முகத்தைப் பார்க்க பேரவையில் தனி SCREEN வைக்க வேண்டும் என சபாநாயகரிடம் தவெக எம்.எல்.ஏ. விஜய் அன்பன் கல்லாணை கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>"எதிர்க்கட்சிகள் தன் அரசைப் பற்றி விமர்சித்தாலும் அதில் காமெடி இருந்தால் குலுங்கி குலுங்கி சிரிக்கும் தலைவன்" என புகழாரம்.</p><p>கருகிய 1 லட்சம் ஏக்கல் குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அறநிலையத்துறைக்கு என தேசிய அளவில் பொதுச்சட்டம் இல்லை.</p><p>இனாம் ஒழிப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இனாம் நிலங்கள் கோவில் நிலங்கள் அல்ல - அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்</p><h2>அதிமுக ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தரப்பட்டது.</p><p>தவெக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.</p><p>எப்போது தவெக அரசு மேட்டூர் அணையை திறக்கும்?</p><p>மாதாந்திர மின் கணக்கீடு எப்போது தொடங்கும்?</p><p>சவுக்கு உள்ளிட்ட மரங்கள், பயிர்கள் கருகி விட்டன.</p><p>844 அறிவிப்புகளை தந்த சேகர்பாபு 79 அறிவிப்புகளுக்கான பணியை தொடங்கவில்லை - அமைச்சர் ரமேஷ்</p><p>106 அறிவிப்புகளை எத்தனை ஆண்டுகளில் நிறைவேற்றுவீர்கள் என பார்ப்போம்.</p><p>எங்களுக்கு இடைவேளை முடிந்து தொடர் வேலை வரும், மீண்டு வருவோம் - சேகர்பாபு</p><h2>சேகர்பாபு உரை</h2><p>கடந்த ஆட்சியில் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரிகள் இந்த ஆட்சியில் கட்டப்படுமா?</p><p>திமுக ஆட்சியில் 4,641 கோவில்களில் குடமுழுக்கு நடத்தினோம்.</p><p>திமுக ஆட்சியில் ரூ.2,000 கோடி உபயதாரர் நிதி வந்தது. அன்னதான திட்டத்திற்கு ரூ.300 கோடி அளவுக்கு நிதியை பெற்றோம்.</p><p>திமுக ஆட்சியில் திருக்கோவில்களுக்கான நிதி அதிகரித்து வழங்கப்பட்டது.</p><p>ஒருகால பூஜை அர்ச்சகர் பிள்ளைகள் 2,000 பேருக்கு மாதம் ரூ.10,000 கல்வி நிதி தந்தோம்.</p><p>கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் பல தொடங்கப்படவில்லை.</p><p>நிதிநிலை கருத்தில் கொண்டு எண்ணிக்கையை உயர்த்தி கூறாமல் என்ன செய்ய முடியுமோ அவற்றை கூறி உள்ளோம் - அமைச்சர் ரமேஷ்</p><p>மக்களுக்கு பயன்படாத திட்டங்களை தான் ரத்து செய்தோம், தேவையற்றதை தான் தடுத்து நிறுத்தினோம் - அமைச்சர் ரமேஷ்</p><p>மக்கள் நலப்பணிக்கு விடப்பட்ட டெண்டரை தான் தவெக அரசு ரத்து செய்துள்ளது. அதை மக்கள் பார்த்து கொள்வர் - சேகர்பாபு</p><p>இறைவனுக்கு வந்த சோதனையாக கருதி என் உரையை தொடங்குகிறேன்- சேகர்பாபு</p><p>உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதிகளை மக்கள் கேட்கிறார்களா?</p><p>தொகுதி மறுவரையறையில் விசிக முதலில் ஒரு நிலைப்பாடு தற்போது வேறு நிலைப்பாடு  - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் பாமகவுக்கு இல்லை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>அன்புமணியை காப்பாற்றுவதை விட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>50 சதவீதம் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வு என்பதையும் திமுக எதிர்க்க வேண்டும்.</p><p>மாநில கோரிக்கை என்று வரும்போது திமுக, காங்கிரஸ், விசிக என எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்க வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>எம்பி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தீர்வு அல்ல.</p><p>தமிழ்நாடு கேட்காமலேயே மத்திய அரசு ஏன் 50% எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது? </p><p>12 வருடங்களாக தமிழ்நாட்டிற்கு எதிராகவே மத்திய அரசு சட்டங்களை கொண்டு வருகிறது.</p><p>தமிழ்நாட்டிற்கு எதிரான சட்டங்களை திமுக எதிர்த்தது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக பாமக எம்எல்ஏ பேசியதை எதிர்த்து அமைச்சர் வன்னிஅரசு பேசிய நிலையில் சட்டசபையில் அமளி.</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார்.</p><p>மசோதாவில் இல்லாததை நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.</p><p>543 இடங்களில் தென்மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறி உள்ளார்.</p><p>தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை.</p><p>அன்புமணியை காப்பாற்றுவதைவிட மோடியை காப்பாற்றும் நோக்கில் பாமக எம்எல்ஏ செயல்படுகிறார்.</p> <p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு கொடுத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை - பாமக</p><p>தொகுதி மறுவரையறையில் 50% உயர்வு என்றால் நமக்கு 59 எம்பிக்கள் கிடைப்பார்கள் - பாஜக</p><p>7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு - எடப்பாடி பழனிசாமி</p><p>தேர்தலுக்கு முன் எண்ணிக்கை மாற்றம் வேண்டாம் என நகல் எரிப்பு போராட்டம் நடத்தியது திமுக.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவும் 25 ஆண்டுகள் மேலும் கால அவகாசம் வழங்கியது தொடர வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>543 எம்பிக்கள் தொடர வேண்டும் என்பது தான் திமுக நிலைப்பாடு - உதயநிதி</p><p>543 எம்பிக்கள் தான் தவெக நிலைப்பாடு என நேற்றே தெளிவுபடுத்தி விட்டோம் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543  எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை - உதயநிதி</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>தொகுதி மறுவரையறை குறித்து தவறான பிரசாரம்.</p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு.</p><p>சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் அரசு உறுதியாக உள்ளது.</p><p>தென்மாநிலக் குழு கூட்டம் குறித்து ஊடகங்களில் பொய் பரப்புரை.</p><p>நத்தம் செந்துறையில் புதிய காவல்நிலையம் அமைத்து தர வேண்டும்.</p><p>ஆயத்த ஆடைப் பூங்கா நத்தத்தில் அமைத்து தர வேண்டும்.</p><p>நத்தம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் - நத்தம் விஸ்வநாதன்</p><p>சிறுமலைக்கு அதிக சுற்றுலா பயணியர் வருகை.</p><p>மின்வெட்டில் இருந்து தமிழ்நாட்டை அதிமுக ஆட்சியில் மீட்டெடுத்தோம்.</p><p>மின்சாரத்துறை இடியாப்ப சிக்கல் நிறைந்த துறை - நத்தம் விஸ்வநாதன்</p><p>திருவள்ளுவரின் கூற்று ஜேசிடி பிரபாகருக்கு நன்றாக பொருந்தும் - நத்தம் விஸ்வநாதன்</p><p>மிகவும் பொருத்தமான ஜேசிடி பிரபாகரை சபாநாயகராக நியமித்துள்ளார் முதலமைச்சர் விஜய் - நத்தம் விஸ்வநாதன்</p><p>திமுக ஆட்சியில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது - சேகர்பாபு</p><p>அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள்.</p><p>திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே - எ.வ.வேலு</p><p>கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல.</p><p>கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது - அமைச்சர் ஷாஜகான்</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா? - கே.என்.நேரு</p><p>அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி - ஆதவ்</p><p>கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் - தளி ராமச்சந்திரன்</p><h2>திமுக எம்எல்ஏ கே.என்.நேரு</h2><p>கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம்.</p><p>அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.</p><p>என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.</p><p>எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.</p><p>எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல.</p><p>ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.</p> <p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் - உதயநிதி</p><p>கொள்கை விளக்க குறிப்பு இரவு 10 மணிக்கு தான் கொடுத்தனர். படித்து முடிக்கவே 3.30 ஆகி விட்டது. 834 பக்கங்களை படித்து விட்டு வந்திருக்கிறேன்.</p><p>மின் வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க் மாயமானதாக கூறப்படும் நிலையில் 38 ஹார்டு டிஸ்க் கிடைத்ததாக சொல்கின்றனர்  - செந்தில்பாலாஜி</p> <p>திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் குறைபாடு என கூறிய நிலையில் 5 ஆண்டில் 99,000 மின்மாற்றி அமைப்பு  - செந்தில்பாலாஜி</p><p>கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் இதே ஊழியர்களை வைத்து தான் தடையின்றி மின்சாரம் வழங்கினோம்  - செந்தில்பாலாஜி</p><p>ஊழியர்கள் பற்றாக்குறை என தவெக அமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார் - செந்தில்பாலாஜி</p><p>திமுக ஆட்சியில் மின்சாரத்துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கடந்த  திமுக ஆட்சியில் 343 பேர் மட்டுமே மின்துறைக்கு புதிதாக தேர்வு.</p><p>திமுக ஆட்சியில் போதுமான மின்மாற்றிகள் வாங்கப்படவில்லை.</p><p>மின்துறை அதிகாரிகளின் செல்போன் எண்கள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. </p><p>கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகம் மின்கட்டணம் வந்த நுகர்வோரை மின்வாரியம் தானாக மறுமதிப்பீடு - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>செந்தில்பாலாஜி குறித்த வார்த்தையை திரும்ப பெறுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தகவல்</p><p>ஒரு அமைச்சர் சிறைக்கு சென்ற பிறகு தங்கம் தென்னரசு மின்சாரத்துறை அமைச்சராகிறார் - நிர்மல்குமார்</p><p>பாத்ரூமில் யார் யார் எவ்வளவு நேரம் என கணக்கெடுக்க ஒரு அமைச்சரா? - உதயநிதி</p> <p>திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நிற்பது போல் நாங்கள் எழுந்தால் அவை நடைபெறாது - ஆதவ்</p><p>கரூர் கம்பெனி ஓனர் சாரி சாரி கரூர் முன்னாள் எம்எல்ஏ - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சார் திமுக அமளி</p><p>2719 நுகர்வோருக்கும் குளறுபடி ஏற்பட டேபிள் ரீடிங் தான் காரணம்- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>3.70 லட்சம் மறுமதிப்பீடு என்பது புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டது அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>எண்களை மாற்றாமல் ஏர் டெல்லில் இருந்து ஜியோவிற்கு மாறவில்லை?</p><p>மின்துறையும் அமைச்சரும் ஒன்றாக இணைந்து மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி குறித்து தீர்வு காண வேண்டும்.</p><p>தவெக ஆட்சியில் மின்துறையில் பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது - செந்தில்பாலாஜி</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதம் - செந்தில் பாலாஜி உரை</h2><p>திமுக ஆட்சியில் கரூருக்கு 5 வருடங்களில் ரூ.5,000 கோடியில் திட்டங்கள்.</p><p>மின்கட்டண கணக்கீட்டில் குளறுபடி - மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக லட்சக்கணக்கானோர் புகார்.</p><p>மின்துறையில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. மின் விநியோக இயக்குநர் பணியிடமே காலியாக உள்ளது.</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக்கொண்டிருக்கும்போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்.</p><p>அமைச்சர் பதவிக்கு இணையான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குரிய மரியாதை தர வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார். இது எந்த வகையில் நியாயம்? - ஓ.பன்னீர்செல்வம்</p><p>பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை என சபாநாயகரிடம் திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்</p><p>கோப்பு திறப்பதில் முதல்வருக்கு எந்த தயக்கமும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்றுவார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை - சபாநாயகர்</p><p>ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசு தான் கொடுக்கிறது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சட்டசபை கேள்வி நேரத்தை முதன்முறையாக நேரலை செய்தது திமுக ஆட்சி தான் - உதயநிதி</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் - உதயநிதி</p><p>முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது - உதயநிதி</p><p>நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர். </p><p>ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது தவெக அரசு.</p><p>அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது - உதயநிதி</p><p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.</p><p>கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - சபாநாயகர்</p><p>நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - அமைச்சர் ஆனந்த்</p><p>பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை - அமைச்சர் ஆதவ்</p> <h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><p>2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.</p><p>சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.</p><p>முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?</p><p>முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>பர்வதமலைக்கு செல்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என அதிமுக சார்பில் சட்டசபையில் கோரிக்கை</p><p>விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பூசாரி காவலர்கள் தாக்கியதால் உயிரிழப்பு குறித்து திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம்.</p><p>புளியஞ்சோலை சுற்றுலாத்தலத்தில் அடிப்படி வசதி தேவை, துறையூரில் உள்ள ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள துறையூர் சின்ன ஏரியை பராமரிக்க நடவடிக்கை தேவை.</p><p>காவல்நிலையம், மருத்துவமனை, பெண்கள் உடைமாற்றும் இடம் இல்லை - பேரவை துணைத்தலைவர் ரவிசங்கர்</p><p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது. </p><p>லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஸ்வநாதன்</p><p>சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார்.</p><p>ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது - சி.வி. சண்முகம்</p><p>தவறு செய்வது எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்.</p><p>மணலி, எண்ணூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தவில்லை, சரி செய்யும் பணி நடக்கிறது. </p><p>மனித கழிவு கலந்தால் தான் நீரில் ஆக்சிஜன் தன்மை குறையும், ஆலை கழிவு தற்போது வரை கலக்கவில்லை என தகவல் - அமைச்சர் ராஜீவ் </p><p>ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்க - பாமக</p><h2>அமைச்சர் ராஜீவ் விளக்கம்</h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம்.</p><p>ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது.</p><p>இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீனவளத்துறைக்கு அனுப்பு வைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை.</p><p>முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை. கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.</p><p>விசாரணை ஆணையம் அமைத்து சுற்றுச்சூழலை பாதிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை தேவை - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><p>மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க உரிய நடவடிக்கை தேவை.</p><p>எண்ணூர் கழிமுகத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறப்பு.</p><p>முகத்துவாரத்தில் ரசாயனம் கலப்பால் மீன்கள் இறப்பு  - எடப்படி பழனிசாமி</p> <p>எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் - எடப்படி பழனிசாமி</p><p>எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.</p><p>தமிழக சட்டசபையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை), சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை (வணிக வரிகள், பதிவு மற்றும் அறநிலையங்கள் துறை) ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடித்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p><p>நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள். இதில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதலமைச்சர் விஜய்யிடம் உள்ளது. அவர் அல்லது அவரது சார்பில் அமைச்சர்கள் யாரேனும் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகளை சென்றடையாத குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kuruvai-special-package-fails-to-reach-farmers-udhayanidhi-stalin-condemns-the-situation#comments</comments><guid isPermaLink="false">4ed59668-5a82-40a9-a066-30d4a98183f5</guid><pubDate>Fri, 21 Aug 2026 11:52:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T11:52:02.422Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Kuruvai Special Package,குறுவைத் தொகுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளை சென்றடையாக குறுவை சிறப்புத் தொகுப்பு - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/b2903z4h/New-Project-2026-08-21T172139.137.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குறுவை சிறப்புத் தொகுப்பு நிதி விரைவில் விவசாயிகளை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.</p><p>வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத்தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதலமைச்சர் விளக்கினார்.</p><p>ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை. </p><p>இது தொடர்பான செய்திகள்  ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த திறனற்ற அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?</p><p>எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.</p><p>விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. </p><p>குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அறுவடைக்கு முன்பாவது குறுவைத் தொகுப்பை வழங்குங்கள்!- அரசுக்கு அன்புமணி கோரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-farmers-must-be-provided-with-it-at-least-before-the-harvest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-farmers-must-be-provided-with-it-at-least-before-the-harvest#comments</comments><guid isPermaLink="false">0957c98b-6f07-47d2-811a-28e38fca93e3</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:40:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:40:13.955Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/w272nx2l/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/w272nx2l/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு  உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அலட்சியம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி  செய்யும் உழவர்களுக்கு  உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என பல வடிவங்களில் ஏக்கருக்கு ரூ.4000 கிடைக்கும் வகையில் குறுவைத்  தொகுப்பு அறிவிக்கப்பட்டு,  70 நாள்களாகியும் இன்று வரை உழவர்களுக்கு வழங்கப்படவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்தில் உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.</p><p>மேட்டூர் அணையில் இருந்து  காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் இன்று வரை மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், உழவர்கள் குறுவை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில், எப்போதும் வழங்கப்படும் குறுவைத் தொகுப்பை  விரைந்து வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவைத் தொகுப்பு வழங்குவதற்கான  அரசாணை பிறப்பிக்கப்பட்டது.</p><p>குறுவை சாகுபடி தொகுப்பு என்பதே நெற்பயிர்களை நடவு  செய்யும் காலத்திலும், அதைத் தொடர்ந்து வரும் சில நாள்களிலும் வழங்கப்பட வேண்டியதாகும்.  ஆனால், நடவு முடிந்து விரைவில் அறுவடை தொடங்கவுள்ளது.  இன்னும் 10 நாள்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பருவம் தொடங்கவுள்ள நிலையில், இன்று வரை குறுவைத் தொகுப்பு வழங்கப்படாமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.</p><p>உழவர்களுக்கான உதவி என்பது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயருக்கு ஆக்சிஜன் வழங்கப்படும் வேகத்தில் அளிக்கப்பட வேண்டும். இதை அரசு உணர்ந்து கொண்டு  உழவர்களுக்கான குறுவைத் தொகுப்பை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மீண்டும் ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- இல்லத்தரசிகள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026-2#comments</comments><guid isPermaLink="false">0cfc0016-fcea-4fde-b053-c2460142545e</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:21:13 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:21:13.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/htle9kc1/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a>... என்றால் தற்போது நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய விலையில் விற்பனை செய்யப்படுவதால் உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. ஆடி மாதம் முடிந்து சுபமுகூர்த்த தினங்கள் நிறைந்த ஆவணி மாதம் பிறந்துள்ளதால், இனி வரும் நாட்களில் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை மேலும் உயரும் என கணிக்கப்பட்டது. </p><p>அதன்படி, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மாலை திடீரென உயர்ந்தது. கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று  கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.</p><p>இதனை தொடர்ந்து இன்று காலையும் <a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026">தங்கம்</a> விலை அதிரடியாக உயர்ந்தது.  அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்பட்டது. </p><h2><strong>ஜெட் வேகத்தில் உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,850-க்கும் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>சௌகார் ஜானகி மறைவு: முதலமைச்சர் விஜய் இரங்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-condoles-death-of-veteran-actress-sowcar-janaki#comments</comments><guid isPermaLink="false">ee7d077f-fb92-41ba-9430-6fe99d850081</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:17:22.294Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Sowcar Janaki,Vijay,விஜய்,condolence,இரங்கல்,சௌகார் ஜானகி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Actress Sowcar Janaki- TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rpgi0kim/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் இரங்கல்</h2><p>முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-</p><p>பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/veteran-actress-sowcar-janaki-passes-away" rel="nofollow">சௌகார் ஜானகி</a> அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.</p><p>திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. </p><p>தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/nikhil-murugan-who-worked-as-a-public-relations-officer-for-575-films-receives-kalaimamani-award-792492" rel="nofollow">கலைமாமணி</a> விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.</p><p>திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மறைவு</h2><p>நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.</p><p>தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.</p><p>94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். </p><p>அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.</p><p>இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.</p><h2>விருதுகள்</h2><p>கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.</p><h2>திரையுலகினர் இரங்கல்</h2><p>பழம்பெரும் நடிகை சௌவுக்கார் ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>வியாசர்பாடி கணேசபுரத்தில் 3½ ஆண்டாக நடைபெறும் ரெயில்வே மேம்பால பணியால் மக்கள் அவதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-ganesapuram-vyasarpadi-face-hardship-due-to-ongoing-railway-overbridge-construction-work-that-has-been-underway-for-three-and-a-half-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/residents-of-ganesapuram-vyasarpadi-face-hardship-due-to-ongoing-railway-overbridge-construction-work-that-has-been-underway-for-three-and-a-half-years#comments</comments><guid isPermaLink="false">990b9469-8e2c-4fc9-8795-25b2f2aa9f1d</guid><pubDate>Fri, 21 Aug 2026 10:08:52 +0000</pubDate><atom:updated>2026-08-21T10:08:52.730Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வியாசர்பாடி,Vyasarpadi,வியாசர்பாடி ரெயில்வே மேம்பால பணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rg2gkw8c/vyasarpadi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரெயில்வே மேம்பால பணி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்வே மேம்பால பணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/rg2gkw8c/vyasarpadi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சி மூலம்  கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.</strong></em> </p><p>சென்னை  மக்களின் நீண்ட கால பிரச்சனையாக இருந்து வரும் வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. </p><h2><strong>பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டம்</strong></h2><p>ரூ.226.55 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டப்பணியை அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டிபகுதியில் தொடங்கி  கணேசபுரம் ரெயில்வே சுரங்கப் பாதையை கடந்து இந்த மேம்பாலம் அமைகிறது. 678 மீட்டர் நீளமும், 15.52 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரெயில்வே மேம்பாலம் 4 வழி பாதையாக கட்டப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லக்கூடிய  பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இரவு பகலாக இந்த வழித்தடத்தில் நீண்ட தூரம் செல்லக்கூடிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன.</p><p>வியாசர்பாடி கணேசபுரம்  சுரங்கப் பாதையில் மழைக்காலங்களில் மழை நீர் கடல் போல் தேங்கி ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்தை தடை செய்து விடுகிறது. இதனால் வடசென்னை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. </p><p>சென்னை மாநகராட்சி மூலம்  கட்டப்பட்டு வரும் இந்த ரெயில்வே மேம்பாலம் தொடங்கியதில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். 2 ஆண்டுகளில்  கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று டெண்டர் விடப்பட்ட நிலையில்  நிலம் கையகப்படுத்துதல், மின்சாரம் மற்றும் கழிவுநீர் பாதை  கட்டுதல் போன்றவற்றிற்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதனால் திட்டம் தொடங்கிய பல மாதங்கள்  ஆமை வேகத்திலேயே பணிகள் நடந்து வந்தன.  கடந்த ஆட்சியில் எப்படியாவது இந்த பணியை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் ரெயில்வே துறையால் அது தாமதமானது. ரெயில்வே பாதை அமைந்துள்ள பகுதியை மட்டும் துறையின் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று ஒவ்வொரு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.  58 மீட்டர் நீளம் 15.2 மீட்டர் அகலம் கொண்ட ரெயில்வே பாதையின் மேலே இரும்பு கருடர்கள் மூலம் பிரம்மாண்டமான வளைவு அமைக்கப்படுகிறது.</p><p>பேசின் பாலத்தில் அமைந்துள்ள இரும்பு கர்டர்கள் போன்று இந்த மேம்பாலத்திலும் அமைக்கப்பட உள்ளன.  இந்த இரும்பு கர்டர்கள் அமைக்கப்படும் பணி மட்டுமே தற்போது தாமதமாகி வருகிறது.  மற்ற பணிகள் இருபுறமும் முடிக்கப்பட்டு விட்டன.  68 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை ரெயில்வே துறையின் ஒப்புதல் மூலமே செய்ய வேண்டிய இருப்பதால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. </p><p>3½ ஆண்டுகளாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேதனையான விஷயமாகும். இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. எந்த வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியாது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள்  தினமும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.</p><p>ரெயில்வே பகுதியில் நடைபெற வேண்டிய ஒவ்வொரு வேலையையும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு தொடங்க முடியும், இதுவே தாமதத்திற்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-  58 மீட்டர் நீளத்திற்கு இரும்பு கர்டர் வளைவு புதுக்கோட்டையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 4 எண்ணிக்கை கொண்ட இந்த கர்டர்கள் தயாரிக்கும் பணி முடிந்து விட்டன. அதனை ரெயில்வே அதிகாரிகள் முதல் கட்டமாக ஆய்வு செய்து விட்டனர். </p><p>அடுத்ததாக லக்னோவில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து  ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் அந்த இரும்பு கர்டர்களை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே அதனை சென்னைக்கு கொண்டு வர முடியும்.</p><p>மேலும் மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் அங்கு 2  கிணறுகள் தோண்டப்படுகின்றன. ஒவ்வொரு கிணறும் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும். </p><p>மழைநீர் தேங்கினால் இந்த கிணற்றின் வழியாக கொண்டுவரப்பட்டு  கால்வாய்க்குள் வெளியேற்றப்படும். மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில்  இந்த பிரம்மாண்ட கிணறுகள் ஆட்டுத்தொட்டி பகுதியில் அமைகிறது.  இந்த 2 கிணறுகளும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கட்டி முடிக்கப்படும். </p><p>இவ்வாறு அவர்கள் கூறினர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-chief-secretary-unfit-to-continue-in-the-post-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">71f7df86-7609-4bb8-a393-5f0a2fa97133</guid><pubDate>Fri, 21 Aug 2026 09:41:32 +0000</pubDate><atom:updated>2026-08-21T09:41:32.448Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government,Chief Secretary Saikumar,தலைமைச் செயலாளர் சாய்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் - பெ.சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/4li5nbb2/New-Project-2026-08-21T151104.102.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவரை நீக்க வலியுறுத்தி நாளை (ஆக.22) மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறி வைத்ததன் மூலம் தலைமைச் செயலாளரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டு நிற்கிறது. அரசு எந்திரத்தை அவரது நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தும் எல்லைக்கு அவர் சென்றிருக்கிறார். </p><p>நியாயமான நிர்வாகத்தை இனிமேலும் அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. கடிதத்தின் 'பொருள்' இடதுசாரி இயக்கங்கள் குறித்து இருந்தாலும், உள்ளடக்கத்தில், மாணவர்களின் போராட்ட உரிமைகளையே அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார மனோபாவமே அதில் பிரதிபலிக்கிறது. இது மிக ஆபத்தானது. </p><p>ஒன்றிய அரசின் பாணியை அடியொற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இது முதலமைச்சரின் அனுமதியுடன் நடந்ததா என்கிற கேள்வி எழுகிறது.</p><p>கல்லூரி கல்வி இயக்குநர் தம் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். ஆனால், சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தின் முடிவும், அதனை அறிவுறுத்தி தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளர் அனுப்பிய கடிதமும் நீடிக்கின்றன. </p><p>உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்ககம் தவிர, மற்ற இயக்ககங்களோ, பல்கலைக்கழகங்களோ இந்த சுற்றறிக்கையை அனுப்பவில்லை என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்குக் கூறியிருப்பதாக தகவல் உள்ளது. </p><p>ஆனால், தமிழ்நாடு அரசின் சிறப்பு செயலாளரின் கடிதம், கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>அவையும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. 'டாப் பிரையாரிட்டி, மோஸ்ட் இம்மீடியட்' என்ற வார்த்தைகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளதானது, எவ்வளவு தீவிரத் தன்மையுடன் திட்டமிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே தவறு செய்தது என்பது உண்மையல்ல. எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.</p><p>இப்பிரச்சனை சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கமானது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். கல்வி வளாக அமைதி, மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் தான் இருக்கிறதா என அவர் விளக்க வேண்டும். சில வார்த்தைகள் தவறாக வந்துவிட்டன என்கிறார். மொத்த உள்ளடக்கமே மோசமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிரச்சனையிலும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர், நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் குறிப்பு, பயிற்சி முடிந்து விட்டதால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பயிற்சி முடிந்த பின் விடுவிக்கப்பட்டு, வேறு பணியில் சேர்வதற்கு பெயர், தவெக ஆட்சியில், நடவடிக்கையா?</p><p>அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவதைத் தற்செயலானது என எடுத்துக் கொள்ள முடியாது.</p><ul><li><p>தமிழக முதலமைச்சரும், அரசும் தம் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்.</p></li><li><p>தலைமைச் செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்ற முறையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p></li><li><p> குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p></li></ul><p>என வலியுறுத்தி நாளைய தினம் (22.08.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வலிமையான கண்டனம் முழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. </p><p>அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டது. </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டசபையில் காரசார விவாதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-heated-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/constituency-delimitation-issue-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">a268b6e0-1ff6-4769-9be8-721f522d79bb</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:40:50 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:40:50.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Fair Delimitation,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/lcxyacjc/aadhavarjuna.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/lcxyacjc/aadhavarjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், </p><p>பேரவைத் தலைவர் அவர்களே... ஒரு சிறு விளக்கம். நேற்று தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடந்தது. சில ஊடகங்கள், சில பத்திரிகைகள், சில கட்சிகள் தொகுதி மறுவரையறை பற்றி ஒரு தவறான பிரசாரத்தையும், கண்ணோட்டத்தையும் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை தீர்மானம் இங்கு இருக்கக்கூடிய உறுப்பினர்களுடன் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக எங்களுடைய நன்றியை தெரிவித்தோம். </p><p>அதில் நேற்று பரப்பப்பட்ட போலி பிரசாரங்கள் தவறானது. தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்த விவாதமும் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் வரவில்லை.  நம்முடைய தொகுதி மறுவரையறை கொள்கை சட்டமன்றத்தில் தீர்மானத்தில் என்ன நிறைவேற்றினோமோ அதில் அரசும் முதலமைச்சரும் உறுதியாக இருக்கிறார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது தான் த.வெ.க.வின் நிலைப்பாடு. 25 ஆண்டுகள் 543 சீட் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்யக்கூடாது என்பதில் த.வெ.க. உறுதியாக இருப்பதை அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தென்மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டில் 543 எம்பி சீட்டை மாற்றக்கூடாது என முதல்வர் எங்கும் கூறவில்லை என்பதை இந்த அவையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்னவோ அது தான் அரசின், தவெகவின் நிலைப்பாடு என்றார். </p><p>இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, 7.18 என்ற விகிதத்தில் தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கையில் மாற்றம் கூடாது என்பதே அதிமுக நிலைப்பாடு என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நகலை எதிர்த்த திமுக, எதிர்க்கட்சியாக மாறிவிட்டதால் நிலைப்பாட்டை மாற்றியது. வாஜ்பாய் கொண்டு வந்ததை போல் 25 ஆண்டுகள் நீட்டிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார். </p><p>இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், 50% உயர்வு என வரம் போது தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும், தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு நல்லது. தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை உயர்த்தும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.  </p><p>பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசுகையில், விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் எம்பிக்கள் தான் கிடைப்பார்கள், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. முதலில் Fair Delimittation என கூறிய காங்கிரஸ் தற்போது ஏன் No Delimitation என சொல்வது ஏன்? 7.18 என்ற விகிதம் குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதாக த.வெ.க.வும் கூறியது. முந்தைய திமுக ஆட்சியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலர் பங்கேற்றார். திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் த.வெ.கவும் கையெழுத்திட்டது. தவெகவும், காங்கிரசும் Fair Delimitation என கூறிவிட்டு இப்போது நிலைப்பாட்டை மாற்றுகின்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் கொடுத்துள்ளார் என்றார். </p><p>அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், மக்களவையில் ஒன்று பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவைக்கு வெளியே ஒன்று பேசுகிறார். 543 இடங்களில் தென் மாநிலங்களுக்கான 129 எம்பி என்ற எண்ணிக்கை 195 என உயரும் என அமித்ஷா கூறியுள்ளார். தென்மாநில எம்பிக்கள் எண்ணிக்கை தொடர்பான அமித்ஷாவின் கருத்து தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லை. பாமக உறுப்பினர் ராமதாஸை காப்பாற்றுவதை விட மோடியே காப்பாற்றுவதில் தீவிரம் காட்டுகிறார். அமித்ஷா மாற்றி மாற்றி பேசுவதாக ஆங்கில நாளிதழில் வந்த கட்டுரையை ஆதாரமாக வைத்து குற்றம்சாட்டினார். </p><p>இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.</p>]]></content:encoded></item><item><title>வங்கக்கடலில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்துக- அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-intensified-search-for-missing-andhra-fishermen</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-intensified-search-for-missing-andhra-fishermen#comments</comments><guid isPermaLink="false">aae63499-a0fd-43ec-a008-9a44a484bc06</guid><pubDate>Fri, 21 Aug 2026 07:29:47 +0000</pubDate><atom:updated>2026-08-21T07:29:47.487Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,மீனவர்கள்,Fishermen</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/t4zhncyw/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/t4zhncyw/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>வங்கக்கடலில் காணாமல் போன 7 ஆந்திர மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஒடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3-ம்  தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. </p><p>அவர்களைத் தேடும் பணிகளைத்  தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.</p><p>ஒடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே ராமகிருஷ்ணா, எஸ் தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீனிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11-ம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும்.</p><p>ஆனால், கடைசியாக கடந்த 7-ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு  ஒதிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p><p>காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. </p><p>அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில்  தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒடிசா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. </p><p>ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.</p><p>கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p>இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>அதனால், தேடுதல் தொலைவை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீணாகிவிடும்.</p><p>எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை  கேட்டுக் கொள்கிறேன். </p><p>காணால் போல மீனவர்கள் குடும்பத்தினருக்குஇ வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என சொன்ன உதயநிதி... பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadhav-arjuna-reply-to-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">5322950a-757d-4b1f-a2ed-1e70f4bf9aa8</guid><pubDate>Fri, 21 Aug 2026 06:59:02 +0000</pubDate><atom:updated>2026-08-21T06:59:02.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,ஆதவ் அர்ஜூனா,தமிழக சட்டசபை,Aadhav Arjuna,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u53eejob/aadhav.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ஆதவ் அர்ஜூனா- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/u53eejob/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று சட்டம், எரிசக்தி துறை, அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.</p><p>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று கூறினார்.</p><p>இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, </p><p>* ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.</p><p>* என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.</p><p>* எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.</p><p>* எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல. ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.</p><p>* முதல்வர் அறிவிப்பு வெளியிடும்போது குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டும் தர முடியாது, பொது அறிவிப்பாக தான் இருக்கும் என்று கூறினார்.</p><p>இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம். அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள் என்று கூறினார்.</p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.</p><p>கே.என்.நேரு: நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா?</p><p>அமைச்சர் ஷாஜகான்: கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல. கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது.</p><p>எ.வ.வேலு: அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள். திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே என்று கூறினார்.</p><p>கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் என்று தளி ராமச்சந்திரன் கூறினார்.</p><p>பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் என்று பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அடுத்த ஆண்டே மேகதாது அணைக்கு  அடிக்கல் நாட்ட திட்டம்: அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-plan-to-lay-the-foundation-stone-for-the-mekedatu-dam-next-year-the-government-must-not-show-any-further-negligence</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-plan-to-lay-the-foundation-stone-for-the-mekedatu-dam-next-year-the-government-must-not-show-any-further-negligence#comments</comments><guid isPermaLink="false">50be157e-db2d-4ef1-a221-ad2fd1f7b3c9</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:27:15 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:27:15.192Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yf4ay2m9/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/yf4ay2m9/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அலட்சியம்</strong> </h2><p>காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேகதாது அணைக்கு கர்நாடகம் இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.</p><p>மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை.</p><p>புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி <a href="https://www.maalaimalar.com/topic/மேகதாது-அணை">மேகதாது அணையின்</a> கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்;  அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>விரிவான திட்ட அறிக்கை</strong></h2><p>மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான  காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்;  பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.</p><p>அதேபோல், பெங்களூர் நகரத்தின் குடிநீர் தேவைக்காக 4.75 டி.எம்.சி நீர் எடுப்பதற்காக 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டுவது தேவையற்றது. பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக கூறி வருவதைப் போல, அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சி என கூறப்பட்டாலும் நீர்த்தேக்கப்பகுதி அதிகமாக இருப்பதால் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக தேக்கி வைக்க முடியும். ஏற்கனவே, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகரம், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். இப்போது மேகதாது அணையையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 185 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது தவிர ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் 40 டி.எம்.சி நீரையும் சேர்த்து 225 டி.எம்.சி நீரை காவிரியின் குறுக்கே கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது. அதனால் காவிரி பாசன மாவட்டங்கள் விரைவில் பாலைவனமாகி விடும். மேலும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போகும்.</p><p>திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தேவையான அனுமதிகளைப் பெற்று 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சாலுவராயசாமி தெரிவித்துள்ளார். இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் தான் உள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தான் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தி வருவதாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கூறிவருகிறது. கர்நாடகத்தில் 2028-ஆம்  ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2027&amp;ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டால், அதையே பரப்புரையின் முக்கிய அம்சமாக மாற்றி, அரசியல்   இலாபம் தேடலாம் என்பது தான் கர்நாடக காங்கிரசின் திட்டம். மேகதாது அணை விவகாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எதையெல்லாம் கணித்ததோ, அவையெல்லாம் நடந்து வருகின்றன.</p><p>மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியப் போக்கைத் தொடரக்கூடாது. மேகதாது அணை கட்டப்படுவதையும், காவிரியில் தமிழக உரிமைகளை பாதுகாக்கவும் அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில்  எடுக்கப்படும் முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழு பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போது தான் மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2018&amp;ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தரத் தவறினால், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அது நடந்தால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும். அதற்கான பழியை காலம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் சுமக்க நேரிடும்.</p><p>எனவே, மேகதாது அணை விவகாரத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் அவர்கள் கூட்ட வேண்டும். அதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் தில்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>ஜோசியக்காரர் சொன்னால்தான் முதலமைச்சர் கோப்புகளைத் திறப்பாரா?- உதயநிதி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/will-chief-minister-open-files-only-if-astrologer-says-udhaynidhi-asks#comments</comments><guid isPermaLink="false">a9587db0-4aa8-44fa-891a-b83e900c1d6a</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:09:25 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:09:25.097Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக முதலமைச்சர்,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/m6d8x5nq/TVK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/m6d8x5nq/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதாவது:-</p><h2>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">சூப்பர் சிங்கர்</a> நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்று சிந்திக்கும் வகையில் பேரவை நடக்கிறது.</p><p>முதலமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஜோசியக்காரன் சொன்னால் தான் திறப்பாரா?</p><p>முதல்வர் முன் உள்ள ஊழல் தொடர்பான கோப்புகளை திறக்கலாம், உடனடி நடவடிக்கை எடுக்கட்டும்.</p><h2>அமைச்சர் ஆதவ் உரை</h2><p>நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>நேர்மையான வெளிப்படைத்தன்மையான சட்டமன்றத்தை நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><p>2021 தேர்தல் அறிக்கைப்படி சட்டசபை நிகழ்வை நேரலை செய்யாதது ஏன்?</p><p>பெரும்பான்மை கட்சியாக தன்னை நிரூபித்த தவெகவுக்கு எந்த பயமும் இல்லை. சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யும் தைரியம் திமுகவுக்கு இல்லை.</p><h2>அமைச்சர் ஆனந்த்</h2><p>நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை, நாங்கள் சட்டசபை நேரலையை பார்க்கிறோம் என 70 வயது முதியவர் சொன்னார் - </p><p>யாரையும் கன்சல்ட் செய்யாமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கிறார் முதலமைச்சர் என்பதை மக்கள் அறிவர்.</p><h2>சபாநாயகர்</h2><p>கருத்து கூறும்போது அதனை ஒட்டி பாடல் பாடுவதில் எந்த தவறும் இல்லை, சூப்பர் சிங்கர் வார்த்தை அவசியம் இல்லை - </p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதை எல்லாம் தமிழ்நாடு பார்த்துவிட்டது.</p><h2>உதயநிதி</h2><p>நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தான் ஆளுங்கட்சியினர் பதில் அளிக்கின்றனர். </p><p>ஜோசியக்காரன் என்பது தவறான வார்த்தையல்ல, ஜோசியக்காரணை அரசு பணியில் நியமித்து நீக்கியது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed" rel="nofollow">தவெக அரசு</a>.</p><p>அவை குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவை எல்லாம் நேரலையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டு, ரீல்ஸ் ஆக பரவுகிறது.</p><p>முதல்வருக்கு ஓபன் சேலஞ்சாக சொல்கிறேன், கோப்புகளை திறந்து பார்க்கட்டும், ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.</p><p>சட்டசபையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது போல் பேசக்கூடாது.</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது, ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்யும் அனைத்தையும் கேமராமேன்கள் காட்ட வேண்டும் என சபாநாயகரிடம் அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை வைத்தார்.</p><p>அமைச்சர் ராஜ்மோகனின் கோரிக்கையை ஏற்று ஔிப்பதிவாளர்கள் திரையில் காட்டினர்.</p><p>ஆளுங்கட்சிக்கு சாதகமானவை மட்டுமின்றி முழுமையாக நேரலையாக தவெக அரசுதான் கொடுக்கிறது.</p><h2>சபாநாயகர்</h2><p>சட்டப்சபை நிகழ்வுகளில் நீக்கப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ஜெயலலிதா சிலைக்கு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது- அமைச்சர் விஸ்வநாதன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-says-government-is-according-due-respect-to-jayalalithaas-statue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-says-government-is-according-due-respect-to-jayalalithaas-statue#comments</comments><guid isPermaLink="false">df99b7bf-a574-4c6d-b1ef-45c6517c291f</guid><pubDate>Fri, 21 Aug 2026 05:02:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T05:02:27.780Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jayalalithaa,தமிழக சட்டசபை,TN assembly,Jayalalithaa Statue,ஜெயலலிதா சிலை,ஜெயலலிதா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/p13369hr/viswanathan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/p13369hr/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று நடைபெற உள்ள மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன் எண்ணூர் கழிமுகம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதத்தை தொடர்ந்து அமைச்சர் விளக்கமும் அளித்தார். </p><p>அதனை தொடர்ந்து பேசிய எம்எல்ஏ சண்முகம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா மாளிகை வளாகத்தில் உள்ள சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை. பிறந்தநாள் அன்று மட்டுமே மாலை போடப்படுகிறது. ஜெயலலிதா சிலையை தினமும் பராமரித்து மாலை அணிவிக்க வேண்டும், செலவை கூட நாங்கள் ஏற்க தயார். ஜெயலலிதா பலகலைக்கழகத்தை மீண்டும் தொடங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், எங்கள் அரசு, மேடம் ஜெயலலிதா அவர்களுக்கு என்றும் உரிய முக்கியத்துவத்தை இழந்து விடாது. லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை முறையாக தான் பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள், நினைவு நாளில் சிலை அலங்கரிக்கப்பட்டு உரிய மரியாதையை அரசு அளித்து வருகிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : தொடர் உயர்வில் தங்கம், வெள்ளி விலை- எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-21-08-2026#comments</comments><guid isPermaLink="false">ae6dbf4a-9224-4250-a511-67a5037b79ab</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:34:27 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:34:27.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/peze1y95/gold04.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/peze1y95/gold04.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</strong></em></p><p>சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 10-ந்தேதி கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர், தங்கம் விலை ஏற்றத்துடனே பதிவாகி வந்தது. </p><p>இதற்கிடையே, கடந்த 18-ந்தேதி கிராம் ரூ.14 ஆயிரத்து 290-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செயப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14 ஆயிரத்து 205 எனவும், சவரனுக்கு ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. காலையில் குறைந்த தங்கம் விலை மாலை திடீரென உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று  கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.</p><h2><strong>தொடர் உயர்வு</strong></h2><p>இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,710-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.</p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800</p><p>19-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,200</p><p>18-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,320</p><p>17-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160</p><p>16-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>20-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>19-08-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>18-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>17-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>16-08-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>மேலிட அழைப்பு - டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-tn-chief-nainar-nagendran-rushes-to-delhi-for-talks-on-new-office-bearers-and-reinducting-annamalai-loyalists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-tn-chief-nainar-nagendran-rushes-to-delhi-for-talks-on-new-office-bearers-and-reinducting-annamalai-loyalists#comments</comments><guid isPermaLink="false">0e8d945e-dc45-4c17-a9b4-1b097bbbd11e</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:27:59 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:27:59.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அண்ணாமலை,நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,டெல்லி பயணம்,Delhi visit,annamalai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ycgxj5ra/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/ycgxj5ra/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மேலிடம் அழைப்பு விடுத்த நிலையில்,<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanniarasu-says-nainar-nagendran-must-apologize-for-his-uncivilized-remark"> நயினார் நாகேந்திரன்</a> டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பேசவும், பாஜகவில் இருந்து பிரிந்த சென்ற அண்ணாமலை ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்தும் தலைமையிடம் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. </p> <h2>அண்ணாமலை</h2><p>கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இருந்து விலகிய <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">அண்ணாமலை</a>, வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்திற்கு அதிக ஆதரவு குவிந்து வருகிறது.</p><p>ஒரு காலத்தில் தமிழகத்தின் பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலையின் விலகல் மற்றும் அவர் தொடங்கியுள்ள இயக்கம் பாஜகவுக்கு தமிழகத்தில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.</p> <h2>நயினார் நாகேந்திரன்</h2><p>இதனிடையே தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த சில காலமாக சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளார். </p> <p>அண்மையில் முதலமைச்சர் விஜய் குறித்து அவர் தெரிவித்த கருத்து சொந்த கட்சியினரியிடையேயும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவும் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.</p><p>இந்த சூழலில் அவரின் டெல்லி பயணத்தில் இதுகுறித்த விளக்கம் ஏதும் கேட்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p>முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தென் மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு சென்னை வந்த நிலையில் அவரை நயினார் நாகேந்திரன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>எண்ணூர் கழிமுகம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்... உறுப்பினர்கள் விவாதமும், அமைச்சரின் விளக்கமும்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-calling-attention-motion-regarding-the-ennore-estuary-debate-by-members-and-the-ministers-explanation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-calling-attention-motion-regarding-the-ennore-estuary-debate-by-members-and-the-ministers-explanation#comments</comments><guid isPermaLink="false">7c9eae03-598f-4a4d-a81f-af9673207315</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:25:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:25:06.618Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mtqm62ma/rajiv.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜீவ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/mtqm62ma/rajiv.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் ஆகியோர் பதிலுரை அளிக்க உள்ளனர். </p><p>முன்னதாக, எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிமுகம் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி முதலில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>எண்ணூர்  முகத்துவாரத்தில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆலை கழிவு ஆற்றில் கலப்பதால் நீர் நிறம் மாறியுள்ளது, மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது நடவடிக்கை தேவை என கூறினார். </p><h2><strong>பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</strong> </h2><p>கொசஸ்தலை ஆற்றில் பல நிறுவனத்தின் கழிவுகள் கலப்பத்தால் மீன்கள் செத்து மிதக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் அமைத்து கடும் நடவடிக்கை தேவை என்றார். </p><h2><strong>திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு</strong></h2><p>சென்னை மற்றம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகள் வாழ்வாதாரம் மட்டுமல்ல பல உயிர்களுக்கும் தேவையான ஒன்று. சென்னையின் சுற்றுவட்டார பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம். எண்ணூர் பகுதியில் தொடர் நடவடிக்கை இது நடக்கிறது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். </p><h2><strong>அமைச்சர் ராஜீவ்</strong></h2><p>ஆற்றில் மீன்கள் செத்து கிடந்தது தொடர்பாக 5 இடங்களில் ஆய்வு நடத்தினோம். ஆய்வு செய்ததில் 2 இடங்களில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது கண்டறியப்பட்டது. இறந்த மீன்களும் ஆய்வுக்காக மீன்வளத்துறைக்கு அனுப்பிவைப்பு, ஆய்வு முடிவுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகத்துவார பகுதியில் எந்த ரசாயனமும் இல்லை, கழிவு நீர் கலப்பும் இதுவரை கண்டறியப்படவில்லை. மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாக ஆய்வு செய்து உண்மை கண்டறிவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். </p><p>இதனிடையே பா.ம.க. எம்எல்ஏ கூறுகையில், ரசாயனம் கலக்கவில்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால் ரசாயனம் கலந்தால் தான் நீர் தரம் மாறும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் வலியுறுத்தினார். </p>]]></content:encoded></item><item><title>புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/photography-day-cm-vijay-enjoyed-filming-photographers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/photography-day-cm-vijay-enjoyed-filming-photographers#comments</comments><guid isPermaLink="false">a5bbd275-e70f-4ee0-9e0e-b3de740fa525</guid><pubDate>Fri, 21 Aug 2026 04:04:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T04:04:06.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,உலக புகைப்பட தினம்,photographers,புகைப்பட கலைஞர்கள்,Photography day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fqjqebjd/vijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/fqjqebjd/vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது.</p><p>புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/6twbgpks/vijay3.jpg" /></figure> <p>1839-ம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/xnt2ytic/vijay3.jpg" /></figure><p>முதன்முதலில் 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.</p><p>நேற்று முன்தினம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census">முதலமைச்சர் விஜய்</a> புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/kgpa7eti/vijay4.jpg" /></figure><p>இந்நிலையில்  புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் விஜய்  சந்தித்தார். புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னை கடற்கரை - தாம்பரம் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து தேதியில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-dates-for-the-cancellation-of-chennai-beachtambaram-night-time-electric-trains-southern-railway-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-dates-for-the-cancellation-of-chennai-beachtambaram-night-time-electric-trains-southern-railway-announces#comments</comments><guid isPermaLink="false">b51a4694-0abb-456b-9f15-693e19680789</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:33:49 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:33:49.157Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,electric train,மின்சார ரெயில்,Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1p9iowxz/electrictrain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்சார ரெயில்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1p9iowxz/electrictrain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பராமரிப்பு பணி</strong></h2><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.</p><h2><strong>வாரநாட்களில்...</strong></h2><p>அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் <a href="https://www.maalaimalar.com/topic/மின்சார-ரெயில்">மின்சார ரெயிலும்</a>, கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.</p><h2><strong>26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை</strong></h2><p>* சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><h2><strong>ஞாயிற்றுக்கிழமை</strong></h2><p>இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும். இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-3-special-trains-for-onam-festival</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announced-3-special-trains-for-onam-festival#comments</comments><guid isPermaLink="false">c7a43bc8-0c11-4770-a0e1-9e0dedea61ed</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:19:43.872Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,special train,சிறப்பு ரெயில்,ஓணம் பண்டிகை,onam festival,தெற்கு ரெயில்வே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/tcohlp08/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ சிறப்பு ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/tcohlp08/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரத்திற்கு 3 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தெற்கு-ரெயில்வே">தெற்கு ரெயில்வே</a> வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>* கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து இன்று (21-ந்தேதி) இரவு 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06573), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06574), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும்.</p><p>* பெங்களூருவில் இருந்து நாளை (22-ந்தேதி) மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06575), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (23-ந்தேதி) மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06576), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.</p><p>* பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து வருகிற 28-ந்தேதி மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06579), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந்தேதி மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06580), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாளை சென்னையில் மின் தடை: பூந்தமல்லி பகுதி மக்களின் கவனத்திற்கு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-38</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-38#comments</comments><guid isPermaLink="false">d18ba1d7-06fd-431b-9047-2c824df8c165</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:06:17 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:06:17.663Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/9dbftl12/powercut0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மின்தடை]]></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/9dbftl12/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.08.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-</p><p>பூந்தமல்லி பகுதியில் சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ்நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/suger-price-hike-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">d5161aee-2331-473b-b660-b22a984a90dc</guid><pubDate>Fri, 21 Aug 2026 03:00:06 +0000</pubDate><atom:updated>2026-08-21T03:00:06.364Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>sugar,சர்க்கரை,sugar price,சர்க்கரை விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z52kzi6z/sugar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சர்க்கரை]]></media:title><media:description type="html"><![CDATA[ சர்க்கரை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/z52kzi6z/sugar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை 67 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88">சர்க்கரை</a> விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இது குறித்து சென்னை கோயம்பேட்டை சேர்ந்த மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி சாமுவேல் ராஜ் கூறியதாவது:-</p><h2><strong>சர்க்கரை பதுக்கல்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-announces-ban-on-sugar-exports">சர்க்கரை</a> விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதற்கு முக்கியக் காரணமாக தமிழ்நாட்டிற்கு சர்க்கரை அனுப்பும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சர்க்கரை உற்பத்தி ஆலைகள் சர்க்கரையை பதுக்கி வைப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்து உள்ளது.</p><h2><strong>இ-20 பெட்ரோல்</strong></h2><p>இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விழா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வர இருப்பதால் இனிப்பு பண்டங்கள் தயாரிக்க சர்க்கரை தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு சர்க்கரை ஆலைகள் பதுக்கலில் ஈடுபடுகின்றனர்.</p><p>மேலும் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கு கரும்பில் இருந்து எத்தனால் எடுக்கப்படுவதால் அதிக அளவில் கரும்பு தேவைப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து சர்க்கரை பதுக்கலில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவில் சர்க்கரை இருப்பு குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதியை செய்தால் தான் சர்க்கரை விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-august-2026#comments</comments><guid isPermaLink="false">93b3f2e7-5044-4111-8cf3-3a4d554048e3</guid><pubDate>Thu, 20 Aug 2026 03:51:46 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:54:15.759Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EV Velu-MInister Adhav arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/99wd9z5p/Adhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுகிறது. </p><p>இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி முடிந்தவுடன் அவர்களுடைய கேள்விகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். நிறைவாக, தங்களுடைய துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p><p>சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>சட்டசபை கூடியது - அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>5 நாட்களுக்கு பிறகு மீனவர் உயிரிழப்பு தொடர்பாக பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைப்பு, அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>சவுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்.</p><p>நேரமில்லா நேரத்தில் தமிழ்நாட்டில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதை பதிவு செய்வது வழக்கம் தான்.</p><p>அவசரம் என்பதால் தான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறோம் - எ.வ.வேலு</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தந்தாலும் அமைச்சர் தரப்பில் பதில் வந்தால் தான் விவாதம்.</p><p>சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பதிவு செய்ய மட்டும் அனுமதி தருகிறேன், பதில் வந்த பின் விவாதம் நடத்தலாம் - சபாநாயகர்</p> <p>மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் ஈரான் துப்பாக்கிச்சூட்டில் பலி, அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தர வேண்டும் - சிவக்குமார்</p><p>சவுதி தாக்குதலில் ஒரு மீனவர் பலி, 3 பேர் படுகாயம், இலங்கை கடற்படையும் மீனவர் மீது தாக்குதல்.</p><p>மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் - சிபிஐ ராமச்சந்திரன்</p><h2>மீனவர் பலி - அமைச்சர் ஆதவ் விளக்கம்</h2><p>சவுதி அரேபியாவில் 10-ந்தேதி ஈரானிய கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழக மீனவர் பலி.</p><p>புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம்.</p><p>மீனவர் உடலை தாயகம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p> <p>அண்ணா பல்கலை. உள்ளிட்ட 9 கல்லூரிகளுக்கு டீன் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம்</p><p>மாணவர்கள் போராடுவதை கண்காணிக்க கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாகவும் கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>உயர்கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை தொடர்பாக கம்யூ. எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்.</p><p>இடதுசாரி அமைப்புகளுடன் செயல்பட்டு போராடுவோர் தொடர்பாக கணக்கெடுப்பு எடுக்க சொல்லி உள்ளனர் - மாரிமுத்து</p><p>குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியரை சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டவர். வட்டாட்சியர் தேவையில்லாமல் கடிதம் எழுதி உள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்</p><h2>உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்</h2><p>மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கண்காணிக்க  சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.</p><p>சுற்றறிக்கையில் தவறுதலாக சில வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.</p><p>மாணவர்களின் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசிற்கு இல்லை.</p><p>ஒழுங்கு அமைதி பராமரிப்பது குறித்து உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி கல்வி இயக்கத்திற்கு சுற்றறிக்கை.</p><p>அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தவறுதலாக குறிப்பிடப்பட்ட வார்த்தை அறிந்ததும் வாபஸ்.</p><p>மாணவர்களின் நியாயமாக போராடும் உரிமைகளை காக்கும் அரசாக தவெக அரசு செயல்படும் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <p>அம்பேத்கர் அயலக உதவி திட்டத்தின் கீழ் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு.</p><p>மலேசியாவில் பயின்று வரும் மாணவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் வன்னி அரசு பதில்</p> <p>10 மாதங்கள் ஆகியும் மாணவர் தனது ஆவணங்களை பதிவு செய்யவில்லை.</p><p>அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.</p><p>மாணவருக்கு அரசு வழங்கி உள்ள நிதியை தேதி வாரியாக குறிப்பிட்டு வன்னி அரசு பதில்</p><p>இதுவரை மாணவரின் கல்வி நலனுக்காக ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நாண்டு உதவித்தொகைக்கான உரிய ஆவணங்களை சமர்பிக்காமல் மாணவர் குற்றச்சாட்டு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தில் ரூ.135 கோடி வழங்கப்பட்டுள்ளது.</p><p>முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கப்பட்ட ரூ.31 லட்சத்திற்கு 10 மாதங்கள் கடந்தும் ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை - அமைச்சர் வன்னி அரசு</p><p>மற்ற மாணவர்களுக்கு வந்து விட்டது, தனக்கு நிலுவை தொகை வரவில்லை என்றே மாணவர் குற்றம்சாட்டி உள்ளார்.</p><p>திமுக ஆட்சியில் நிதி தரப்பட்டதை தான் அமைச்சர் தேதி வாரியாக வாசித்தார், குற்றச்சாட்டுக்கு பதில் தரவில்லை  - கோவி செழியன்</p> <h2>அமைச்சர் வன்னி அரசு உரை</h2><p>மாணவனுக்கு நிதி கொடுத்தது திமுக ஆட்சியில் என்பது ஒத்துக்கொள்கிறேன்.</p><p>கடந்த ஆட்சியில் தான் மாணவனுக்கு நிதி வழங்கப்பட்டது என சரியாக குறிப்பிட்டு தான் பேசி உள்ளேன்.</p><p>தான் சமூக நீதித்துறை அமைச்சரான பின்னர் தான் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை 3 மடங்கு உயர்வு.</p><p>500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் குறைந்த நபர்களுக்கு தான் திமுக வழங்கியது. நான் துறைக்கு வந்த பின் 3 மடங்கு உயர்வு.</p> <p>திமுக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவி தொகைக்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு. தவெக ஆட்சியில் ரூ.131 கோடி ஒதுக்கீடு.</p><p>தவெக ஆட்சியில் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கம் வழங்க நடவடிக்கை.</p><p>வெளிநாடுகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார் - அமைச்சர் வன்னி அரசு</p><p>ஆந்திரா - தமிழக மீனவர்கள் மோதல் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டசபையில் விளக்கம்</p><p>ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை.</p><p>சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 2 மாதமாக ஆந்திராவில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குங்கள். </p><p>ஆந்திராவில் மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட 7 விசைப்படகுகளையும் ஆந்திர அரசு விடுவிக்கவில்லை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>மயிலம் தொகுதியில் மூடப்பட்ட மதுக்கடையை எந்தவித அறிவிப்பும் இன்று மீண்டும் திறந்துள்ளனர்.</p><p>செஞ்சியில் மூடிவிட்டு தற்போது கிராம பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை தேவை - எம்எல்ஏ சிவி சண்முகம்</p><p>மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி, நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி வழங்கவில்லை.</p><p>நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக்கொள்ள எந்த என்எல்சி தேர்வு வைக்க வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>விவசாயிகளுக்கு எப்போதும் தவெக அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>கேள்விகள் கொடுத்து பல நாட்கள் ஆகிறது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம்.</p><p>குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.</p><p>உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தாமதப்படுத்துவது அவையை அவமதிக்கும் செயல் - திமுக எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>கொள்கை விளக்க குறிப்பு நள்ளிரவில் வருகிறது. 3 நாட்களுக்கு முன் கொடுத்தால் படித்துவிட்டு பேசலாம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி</p><p>மின்கட்டண உயர்வு, மின் கணக்கீடு முறையில் குழப்பம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி</p><p>முந்தைய காலத்தில் ஆண்டு கணக்கில் பதில் இல்லா கேள்விகளுக்கு உள்ளது, முந்தைய காலம் என்றதும் பயப்பட வேண்டாம் - சபாநாயகர்</p><h2>பட்டாசு ஆலை விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் - திமுக எல்எல்ஏ தங்கம் தென்னரசு</h2><p>பட்டாசு ஆலை உரிமம் ரத்து, சீல் விவகாரத்தில் திமுக மட்டுமல்ல பொது அமைப்புகளும் போராட்டம் நடத்துகிறது.</p><p>விதிமுறை மீறி ஆலைகளை ஆய்வு செய்வதை யாரும் தடுக்கவில்லை, ஆனால் சிறு ஆலையையும் ஆய்வு செய்வதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.</p><p>பட்டாசு ஆலை உள்ளிட்ட விவகாரத்தில் பிரச்சனை முடிந்தும் போராட்டம் நடத்துவதால் தான் அரசியல் என்கிறோம் - அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடல், எங்கெங்கு மூடல் என்பதை முகவரியுடன் பட்டியலாக தரவும் அரசு தயார் - அமைச்சர் விக்னேஷ்</p><p>நேரடி கொள்முதல் நிலையத்தில் அதிகமாக கொள்முதல் செய்ததாக திமுக மார்தட்டி கொள்கிறது. ஆனால் சாலையில் உள்ளது நெல் - உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன்</p><p>திமுக ஆட்சியில் எந்த கொள்முதல் நிலையங்களிலும் அதிகாரிகளின் செல்போன் எண், புகார் பெட்டி இல்லை.</p><p>நெல் கொள்முதல் நிலையத்தின் வெளியே உள்ள நெல்லையும் உரிய முறையில் பயன்படுத்த தவெக அரசு நடவடிக்கை - அமைச்சர் வெங்கடரமணன்</p> <p>இந்தியாவிலேயே முதல்முறையாக நுகர்பொருள் வாணிப கழகம் தொடங்கியது திமுக அரசு தான்.</p><p>தவெக ஆட்சியில் அதிகமாக நெல் திறந்தவெளியில் தான் உள்ளது. திமுக குடோனில் வைத்து நெல்லை முளைக்கவிடாமல் பாதுகாத்தது - எம்எல்ஏ சக்கரபாணி</p><p>திமுக ஆட்சியில் ரேஷன் கடையில் வாங்கிய அரிசியை ஆட்டுக்கும் கோழிக்கும் தான் மக்கள் பயன்படுத்தினர்.</p><p>சன்னரக நெல்லுக்கு உற்பத்தி உயர செய்யும் நோக்கில் ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதல்வர் விஜய் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தூய்மையான வெள்ளையான அரிசி ரேஷன் கடையில் தரும் வகையில் நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக நடவடிக்கை.</p><p>கே.என்.நேரு உள்ளிட்டோர் சுகர் குறையும் என்பதால் ரேஷன் அரிசி தான் உண்கின்றார் - எம்ஆர்கே பன்னீர்செல்வம்</p><p>ஆட்டுக்கும் கோழிக்கும் ரேஷன் அரிசி என அமைச்சர் செங்கோட்டையன் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு</p><p>ரேஷன் அரிசியை எல்லா மக்களும் உண்கின்றனர், சர்க்கரை அளவு குறைவதால் சாப்பிடுகின்றனர் - கே.என்.நேரு</p><p>சுகர் குறைவதற்காக ரேஷன் அரிசியை கஞ்சி வைத்து குடிக்கும் கே.என்.நேருவை வாழ்த்துகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>நெல் பயிரிட்டு சாப்பிடும் அண்ணன் கே.என்.நேரு, ரேஷன் அரிசி சாப்பிடுவதாகவும் பரமஏழை போன்றும் பேசுகிறார். நான் சிறுவயதில் இருக்கும்போது ரேஷன் அரிசியை தான் சாப்பிட்டேன், அப்போது பெரிய அளவில் நிறம் மாறிய அரிசி தான் கிடைக்கும்.</p><p>இந்த ஆட்சி அந்த ஆட்சி என பேசவில்லை, அவரவர் மனசாட்சிக்கு தெரியும் ரேஷனில் கிடைக்கும் அரிசியை பற்றி. பேரவையில் பெரும்பான்மையானோர் ரேஷன் அரிசி சாப்பிடவில்லை, மனசாட்சிப்படி உண்மையை பேச வேண்டும்.</p><p>மற்ற ஆட்சியை விட்டுவிடுங்கள், நமது ஆட்சியில் ரேஷன் கடையில் சன்னரக அரிசியை கொடுங்கள் என முதல்வர் கூறினார்.</p><p>எனது அம்மாவும் அக்காவும் ரேஷன் கடையில் வாங்கி சாப்பிடும் அரிசி தரமாக இருக்க வேண்டும் என முதல்வர் நினைத்தார்.</p><p>ரேஷன் கடைகளில் வாங்கும் அரிசியை மக்கள் சாப்பிடும் நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>ரேஷன் கடைகளில் வழங்க தரமான சன்னரக அரிசி தேவை, அதனால் தான் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காகத்தான் சன்னரக அரிசிக்கான ஊக்கத்தொகை முதல்வர் அதிகரித்து அறிவித்துள்ளார் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இலவச மருத்துவமனை, இலவச கல்விமுறையை எந்த எம்எல்ஏவும் எந்த அமைச்சரும் பயன்படுத்துவதில்லை.</p><p>எந்த அமைச்சருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அரசு மருத்துவமனை செல்வாரா?</p><p>எம்எல்ஏவுக்க உடல்நிலை சரியில்லை என்றால் கூட  சிங்கப்பூர் செல்கின்றனர்.</p><p>இலவசங்கள் என்ற வார்த்தையே தவறு, மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு நிலையங்களை அனைவரும் பயன்படுத்தும் நிலைவர வேண்டும்.</p><p>சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை - கே.என்.நேரு திட்டவட்டம்</p><p>சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் ரேஷன் கடைகளில் தரப்படுகிறது.</p><p>சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம்.</p><p>தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது.</p><p>அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா - எ.வ.வேலு</p><p>திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார்.</p><p>எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?</p><p>ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? - எ.வ.வேலு</p><p>ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் - அதிமுக எம்எல்ஏ காமராஜ்</p><p>ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது.</p><p>ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும்.</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>அமைச்சர் வெங்கட்ரமணன் உரை</h2><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும்.</p><p>வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும்.</p><p>தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.</p><p>தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது.</p><p>ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை.</p><p>ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும்.</p><p>பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை.</p><p>இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசு ரேஷனுக்கு வாங்கப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p><p>மகளிரை தொழில் முனைவோராக்க சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்</p><p>அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 5 சேவைகள் வழங்கும் சங்கங்களாக தரம் உயர்த்தப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக கூட்டுறவு அமைப்புகளை மாற்ற மாநில கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படும்- அமைச்சர் காந்திராஜ்.</p><p>விவசாயிகளுக்கு ரூ.5000 கோடியில் ஊரக தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும்- - அமைச்சர் காந்திராஜ்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops">மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</a></p><p>* 717 கடைகள் மூடல்: பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதன் முகவரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.</p><p>* 10 ரூபாய் கூடுதல் கட்டண எச்சரிக்கை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதல் 10 ரூபாய் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார்.</p>]]></content:encoded></item><item><title>விஜய் பிரதமர் வேட்பாளரா?.. டி.கே. சிவகுமார் சொன்ன பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/south-india-cm-conference-amit-shah-led-kovalam-meet-seeks-delimitation-based-on-1971-census#comments</comments><guid isPermaLink="false">31a2a489-fd15-4d69-b2e5-06bb0e02488d</guid><pubDate>Fri, 21 Aug 2026 01:33:51 +0000</pubDate><atom:updated>2026-08-21T01:33:51.321Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Aadhav Arjuna,ஆதவ் அர்ஜுனா,டிகே சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/aizixx3x/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ டி.கே. சிவகுமார் ]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.கே. சிவகுமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/aizixx3x/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அருகே கோவளம் தனியார் ஓட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. </p><p>இதில் தமிழக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய்</a>, கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதலமைச்சர் விடி சதீசன், தெலுங்கானா சார்பில் துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி சார்பில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். </p> <p>மாநாடு நிறைவடைந்தபின் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் ராஜிவ் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.</p><p>இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் <a href="https://www.maalaimalar.com/topic/dk-shivakumar">டிகே சிவகுமார் </a>பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.</p> <p>விஜய் பிரதமரா?</p><p>அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக சிலர் முன்னிறுத்துவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? எனக் கேட்டார்.</p><p>இதற்கு பதிலளித்த சிவகுமார், 'அது எனக்கு தெரியாது. நான் எது பற்றியும் பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.</p> <p>தென்னிந்திய முதலமைச்சர்கள் மீட்டிங்கில் முக்கிய விஷயம் பேசப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்'' என்று கூறி நழுவினார்.</p><p>முன்னதாக அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/aadhav-arjuna">ஆதவ் அர்ஜுனா</a>, தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்று சட்டசபையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vignesh-releases-list-of-717-closed-tasmac-shops#comments</comments><guid isPermaLink="false">d706d07d-3f97-41b8-b7c5-54547fe5f1bd</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:30:27 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:30:27.433Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டாஸ்மாக்கடை,tasmac closure,cm vijay,முதலமைச்சர் விஜய்,tvk government,அமைச்சர் விக்னேஷ்,Minister Vignesh,717 Tasmac Closed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vignesh ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/pqgx982q/Minister-Vignesh?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் மதுக்கடைகள்</a> முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D">அமைச்சர் விக்னேஷ்</a> இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.</p><p>தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். </p><p>அந்த அறிவிப்பின்படி, தற்போது 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.</p><h2>இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,</h2><p>"முதலமைச்சரின் உத்தரவின்படி 717 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D">டாஸ்மாக் கடை</a>களும் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம். </p><p>இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.</p><p>மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தகுதி நீக்க நடவடிக்கை - மனுவை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-mlas-disqualification-case-dismissed-by-madras-high-court#comments</comments><guid isPermaLink="false">eedf42e4-a28d-40d3-bee0-50fe10b60f5d</guid><pubDate>Thu, 20 Aug 2026 13:17:12 +0000</pubDate><atom:updated>2026-08-20T13:17:12.786Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,ADMK MLA,floor test,அதிமுக எம்.எல்.ஏ.க்கள்,நம்பிக்கை தீர்மானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ AIADMK MLA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jn7u2tal/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அதிமுக</a> எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D">சென்னை உயர் நீதிமன்றத்தில்</a> தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.</p><h3><strong>நம்பிக்கை கோரும் தீர்மானம்</strong></h3><p>தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 13 அன்று தமிழக வெற்றி கழகம் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது அதற்கு ஆதவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.</p><p>தவெக-விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதையடுத்து அதிமுக-வில் இருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.</p><h3><strong>அதிமுக எம்.எல்.ஏ.க்கள்</strong></h3><p>இதற்கிடையே மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கோரி கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி, சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.</p><p>இந்த மனுவை ஏற்று, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.</p><p>அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு நீதிபதிகள் தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது நீதிபதிகள் அமர்வு, கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அதிமுக பொதுச் செயலாளர் மனு அளித்திருப்பதால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை தொடர வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினர்.</p><p>மேலும், சட்டப்படி 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ.க்களை மன்னித்து கடிதம் அளித்து விட்டால், தகுதி நீக்கம் என்ற கேள்வியே எழாது என்றும் நீதிபதிகள் கூறினர்.</p><p>இதைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை மனுவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் நலனுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது: முதல் மந்திரி சிவக்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-interview-in-kovalam-after-summit#comments</comments><guid isPermaLink="false">198ebf7d-c1b2-4c82-8e55-e4614f536f4e</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:15:00 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:15:00.151Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/q6lorf31/DKS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது என கர்நாடகா முதல் மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்.</p><p>தென் மாநில முதல் மந்திரிகள் மாநாடு முடிந்து கர்நாடக முதல்மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-</p><p>கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் நலன் கருதி நாங்கள் பல்வேறு விஷயங்களை முன்வைத்துள்ளோம்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்றும், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே முக்கிய கோரிக்கையாக இருந்தது.</p><p>தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அனைத்தும் இதில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என நான் கருதுகிறேன். அதனால்தான் நாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தோம்.</p><p>எங்களின் பல்வேறு நீர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து, தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி சுமூகமாகத் தீர்வு காண அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>மேகதாது அணை விவகாரத்தைப் பொறுத்தவரை குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைத் தவிர, அணையில் உள்ள மற்ற அனைத்து நீரும் — ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் — தமிழ்நாட்டிற்கே திறந்துவிடப்படும் என உள்துறை அமைச்சரின் முன்னிலையில் நான் உறுதி அளித்துள்ளேன்.</p><p>எனவே, தமிழ்நாடும் புதுச்சேரியும் இதுகுறித்து முழு நம்பிக்கையுடன் இருக்கலாம். இந்த அணை எங்களுக்காக அல்ல, உங்களுக்காக மட்டுமே கட்டப்படவுள்ளது என தெரிவித்தார்.</p><p>முன்னதாக, மேகதாது அணை குறித்து பேசிய கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:</p><h2>மேகதாது அணையால் தமிழகத்துக்கே  பலன்</h2><p>மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணை கட்டப்படாததால் உபரிநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதால் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பயனடையும். மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாடுக்குத்தான் அதிக பலன்.</p><p>நீரை சேமித்து வைப்பதால் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் பயன்படுத்த முடியும். ஆந்திரா எதிர்ப்பால் கிருஷ்ணா நீரை கர்நாடகா முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை.</p><p>கிருஷ்ணா நதி நீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நதிநீர்ப் பங்கீடு என்ற நிலையில் இருந்து நதிநீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நகரவேண்டிய நேரம்.</p><p>தண்ணீர் நம்மை ஒன்றுசேர்க்க வேண்டும், பிரித்து விடக்கூடாது. மாநிலங்களுக்கு நியாயமான வரிப்பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடகா முன்வைத்தது என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டெஸ்ட் டிரைவுக்காக தலைமை செயலகத்திற்கு வந்த மகேந்திரா கார்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-cars-for-mlas-mahindra-test-drive-at-secretariat#comments</comments><guid isPermaLink="false">c09bea12-8f24-49f0-9bf4-77924a1887d5</guid><pubDate>Thu, 20 Aug 2026 12:11:57 +0000</pubDate><atom:updated>2026-08-20T12:11:57.289Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Test Drive,Bolero Neo,XUV700,CMVIJAY,முதலமைச்சர் விஜய்,MLA Cars,புதிய கார் அறிவிப்பு,Mahindra Cars,மகேந்திரா கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Mahindra Cars - Test Drive]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/hfq63r5f/Mahindra-Cars-Test-Drive?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88">தமிழ்நாடு சட்ட</a>சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.</p><h2><strong>முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</strong></h2><p>தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தின் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்காக அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">முதலமைச்சர் விஜய்</a> வெளியிட்டார்.</p><p>கார்கள் மட்டுமின்றி, அவற்றை முறையாகப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் ரூ. 75,000 பராமரிப்புப் படி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.</p><h2><strong>சட்டசபையில் எழுந்த கோரிக்கை</strong></h2><p>முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று பேரவையில் பேசிய சில உறுப்பினர்கள், "கார்கள் வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மக்கள் பிரதிநிதிகளின் நீண்டதூரப் பயணங்களுக்கும், பாதுகாப்பு வசதிகளுக்கும் ஏதுவாக 'டொயோட்டா இன்னோவா' ரக கார்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><h2><strong>தலைமைச் செயலகத்தில் குவிந்த கார்கள்</strong></h2><p>உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கார் நிறுவனங்களின் மாடல்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் தலைமைச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. </p><p>அங்கு மகிந்திரா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான XUV, 7XO, பொலிரோ நியோ ஆகிய கார்களை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பார்வைக்காகவும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்காகவும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அடுத்தகட்ட நடவடிக்கை</strong></h2><p>இந்தக் கார்களின் மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொகுசுப் பயணம் ஆகியவற்றைக் கணக்கிட்டு, எந்த கார் இறுதி செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா? எ.வ.வேலுவின் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-notification-on-farm-loan-waiver-in-tn-assembly#comments</comments><guid isPermaLink="false">f125b0fb-a7c5-459e-98c5-1fbb4fd103c5</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:53:04 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:53:04.212Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ev velu,எவ வேலு,தள்ளுபடி,Farm Loan Waiver,பயிற்கடன்,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Adhav arjuna- EV Velu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/gyssw59w/EV-velu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?</p><p>5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றுவீர்களா?</p><h2>அமைச்சர் ஆதவ்</h2><p>தவெக தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்றும், அதில் கருத்து வேறுபாடே இல்லை. தவெக தேர்தல் அறிக்கையில் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவோம்.</p><p>அரசியல் மேடையில் இருப்பதை போன்றே தற்போது வரை பேரவையில் பேசுகிறார் எ.வ.வேலு.</p><h2>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</h2><p>பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் நாங்கள் பேசவில்லை, நிறைய சொல்லியுள்ளீர்கள் நிறைவேற்றுவீர்களா? என தான் கேட்டேன். 4வது முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று தான் கேட்கிறோம். </p><p>மக்கள் எங்களை கேள்வி கேட்கும்போது நாங்கள் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக தான் பேரவையில் நாங்கள் கேட்கிறோம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</h2><p>நேற்று ரூ.1 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.</p><p>விவசாயிகளுக்காக உயிரை கொடுப்பதுபோல் பேசுகின்றனர். ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்றத்தில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது- டிடிவி தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-resolution-drama-staged-by-the-tvk-government-in-the-legislative-assembly-has-been-exposed#comments</comments><guid isPermaLink="false">37927f62-6f95-4480-aebf-a633129bec14</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:25:23 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:25:23.085Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,AMMK,அமமுக,டிடிவி தினகரன்,tvk,TTTV Dhinakaran</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qlvgjmz/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிடிவி தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qlvgjmz/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">டி.டி.வி.தினகரன்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2><strong>முற்றிலும் முரண்பாடு</strong></h2><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.</p><p>தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதலமைச்சர் ஜோசப் விஜயின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் முன்னிலையிலேயே, முதலமைச்சர் ஜோசப் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.</p><p>ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை வடபழனி முருகன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/complete-ban-on-mobile-phones-at-chennai-vadapalani-murugan-temple-from-september-1#comments</comments><guid isPermaLink="false">e48428f5-7d5a-4182-a92e-46c4a8da8668</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:15:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:15:55.460Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வடபழனி முருகன் கோவில்,vadapalani,HRCE Department,VadapalaniMuruganTemple,MobilePhone Ban,செல்போன்தடை,இந்து சமயஅறநிலையத்துறை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vadapalani Murugan Temple ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/jrfv6rj5/Vadapalani-Murugan-Temple?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF">வடபழனி</a> அருள்மிகு ஆண்டவர் முருகன் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88">இந்து சமய அறநிலையத்துறை</a>யின் புதிய வழிகாட்டுதலின்படி, கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கவும், ஆன்மீக அமைதியை நிலைநாட்டவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?</strong></h2><p>கோவிலின் கருவறை, பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளுக்குள் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-devotees-carrying-mobile-phones-into-temples">ரீல்ஸ் செய்வது</a> முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அல்லது திரைத்துறையினரை கோவில் வளாகத்திற்குள் வைத்து வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ அனுமதி இல்லை.</p><p>தடையை மீறி ரகசியமாக செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் சென்றால், அவை பாதுகாப்பு ஊழியர்களால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பக்தர்கள் போன்களை எங்கு ஒப்படைக்க வேண்டும்?</strong></h2><p>கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.<strong> பக்தர்களின்</strong> வசதிக்காக தெற்கு கோபுரம் அருகில் ஏற்கனவே இருந்த காலணி பாதுகாப்பு இடம் தற்போது செல்போன் பாதுகாப்பு மையமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p><p>இங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்று செல்லலாம். சாமி தரிசனம் முடித்து திரும்பும்போது மீண்டும் டோக்கனை காண்பித்து செல்போனை பெற்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. </p><p>கோவில் முன்புற பகுதியில் இடது மற்றும் வலது புறத்தில் 2 இடங்களில் காலணி வைக்கும் இடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வார இறுதி நாள்: சென்னையில் இருந்து வெளியூருக்கு நாளை அரசு சிறப்பு பஸ் வசதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-government-bus-services-from-chennai-to-outstations-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-government-bus-services-from-chennai-to-outstations-tomorrow#comments</comments><guid isPermaLink="false">7f60bb4e-27e2-4360-af5d-54b81c5eeae7</guid><pubDate>Thu, 20 Aug 2026 10:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-20T10:07:55.235Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறப்பு பஸ்கள்,TN Govt,தமிழக அரசு,weekly holiday,வார விடுமுறை,Speical Bus</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7nhdnvwc/Buskilampakkam.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அரசு சிறப்பு பஸ்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அரசு சிறப்பு பஸ்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/7nhdnvwc/Buskilampakkam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</strong></em> </p><h2><strong>சிறப்பு பஸ்கள்</strong></h2><p>சென்னையில் இருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி  நாட்களில் <a href="https://www.maalaimalar.com/topic/சிறப்பு-பஸ்கள்">சிறப்பு பஸ்கள்</a> இயக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) 22 மற்றும் 23-ந் தேதி விடுமுறை நாட்களையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. </p><p>சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 890 பஸ்களும் 22-ந்தேதி சனிக்கிழமை 820 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2><strong>கோயம்பேடு</strong></h2><p>கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 110 பேருந்துகளும் 22-ந்தேதி 110 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் விடப்படுகிறது. </p><h2><strong>மாதவரம்</strong></h2><p>மாதவரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஒவ்வொரு நாளும் 80 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக 465 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்கு 18,762  பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 10,461 பேரும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 17,678 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். </p><p>கூட்ட நெரிசலை தவிர்க்க <a href="https://www.tnstc.in/OTRSOnline/">www.tnstc.in</a>  மற்றும் டி.என்.எஸ்.டி.சி. மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-chance-of-moderate-rain-in-tamil-nadu-until-the-26th#comments</comments><guid isPermaLink="false">2a59159a-4b28-4039-b251-1f93360488b2</guid><pubDate>Thu, 20 Aug 2026 09:35:05 +0000</pubDate><atom:updated>2026-08-20T09:35:05.789Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/tgd3jzmc/rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</strong></em></p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது.</p><p>இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>23-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>24 மற்றும் 25-ந்தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>இதனிடையே இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>20-ந்தேதி முதல் 24-ந்தேதிகளில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள், இளைஞர்கள் உரிமைகளை காக்க அரசு நடவடிக்கை: அமைச்சர் விஸ்வநாதன்  விளக்கம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-explain-government-takes-action-to-protect-the-rights-of-students-and-youth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-viswanathan-explain-government-takes-action-to-protect-the-rights-of-students-and-youth#comments</comments><guid isPermaLink="false">e37b3068-a318-40f9-99ce-f78daadde33f</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:50:20 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:50:20.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/twgum574/viswanathan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் விஸ்வநாதன் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/twgum574/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழக சட்டசபையில்</a> இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.மாரிமுத்து பேசும்போது, இடதுசாரிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம், மேலும், உயர் கல்வித்துறை இடதுசாரி மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை சேகரித்து அனுப்ப அரசு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இப்படி உரிமைக்காக போராடும் சுதந்திர நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்ளலாமா? என்றார்.</p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், குஜிலியம்பாளையம் வட்டாட்சியர் தலைமை இடத்திலிருந்து தகவல்கள் சேர்க்க அனுப்பப்பட்டவர் தேவையில்லாமல் இதுபோன்ற கடிதத்தை எழுதி விட்டார். எனக்கு தகவல் தெரிவித்தவுடன் அவர் பணியிட மாற்றம் செய்து விட்டோம், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.</p><h2><strong>உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்</strong> </h2><p> அனைத்து அரசு கல்லூரிகளின் கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு அமைதி பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரி இயக்குனரகம் உடனடியாக மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையினை  திரும்ப பெறப்பட்டது.  மாணவர்கள் இளைஞர்கள் நியாயமான உரிமைகளை காக்கும் அரசாக இந்த அரசு செயல்படும் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஏற்காடு பண்பலை வானொலியில் வேளாண்மை, காலநிலை சார்ந்த உள்ளூர் நிகழ்ச்சிகளை  ஒலிபரப்ப வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-local-programs-related-to-agriculture-and-the-weather-should-be-broadcast-on-the-yercaud-fm-radio-station#comments</comments><guid isPermaLink="false">ac149770-fa3b-425f-ac22-5cc64dd36f63</guid><pubDate>Thu, 20 Aug 2026 08:40:36 +0000</pubDate><atom:updated>2026-08-20T08:40:36.223Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/mt5ylna6/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>நோக்கத்தை நிறைவேற்ற உதவாது</strong></h2><p>சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  உள்ள பண்பலை வானொலி நிலையம் (அலைவரிசை: 103.7 மெகா ஹெர்ட்ஸ் ) தரம் உயர்த்தப்பட்டு, கடந்த  மார்ச் ஒன்றாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில்,  அதில் இன்னும் உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவில்லை. மாறாக,  தேசிய அளவிலும், மாநில அளவிலும் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ரிலே ஒலிபரப்பாக செய்யப்படுகின்றன. இது ஏற்காடு பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும்.</p><p>பண்பலை வானொலிகள் மேம்படுத்தப்பட்ட சமூக வானொலிகள் தான். சமூகத்திற்கு தேவையான தகவல்களை வழங்குவது தான் அவற்றின் நோக்கம். ஏற்காட்டில் பண்பலை வானொலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சுற்றியுள்ள  சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின்  வேளாண்மை, கல்வி, வானிலை உள்ளிட்ட காலநிலை ஆகியவை சார்ந்த தேவைகளை நிறைவேற்றுவது தான் அதன் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதிலும் குறிப்பாக  சென்னை மற்றும்  டெல்லியில் இருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்புவது அந்த வானொலி நிலையங்களின் வருவாயைப் பெருக்க உதவுமே தவிர, பண்பலை வானொலி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்ற உதவாது.</p><p>அதிலும் குறிப்பாக  ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அங்கு நிலவும் காலநிலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட விவரங்கள் பண்பலை வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டால், அது அங்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக இருக்கும்.</p><p>எனவே, ஏற்காடு பண்பலை வானொலி மூலம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது  உள்ளூர் தயாரிப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதை பிரசார் பாரதி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.  சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் கல்வி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுலா சார்ந்த தகவல்களையும்,  கலை, இலக்கியச் செழுமையையும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-urges-cauvery-water-to-neet-issues-till#comments</comments><guid isPermaLink="false">63efacc9-c1ff-4979-989f-ca6c7dcd95fc</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:57:11 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:57:11.596Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,நீட் தேர்வு,Neet exam,காவிரி நீர்,Cauvery water,தென் மாநில முதல்-மந்திரிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/f5ox0wxt/vijay0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் <a href="https://www.maalaimalar.com/topic/தென்-மாநில-முதல்-மந்திரிகள்">தென் மாநில முதல்-மந்திரிகள்</a> மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. </p><p>இந்த மாநாட்டில், வலுவான மாநிலங்கள்- வலுவான இந்தியா என கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், </p><p>* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் தான் முக்கிய பங்களிப்பு தரும் இயந்திரம். </p><p>* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. </p><p>* <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dk-shivakumar-speech-mekedatu-dam-in-south-states-chief-ministers-conference">காவிரி</a> விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும். </p><p>* காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும். </p><p>* மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது. </p><p>* தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை.</p><p>* கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம். </p><p>* மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம். </p><p>* போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும். </p><p>* போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள்  இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும். </p><p>* 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.  மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். </p><p>* முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். </p><p>* பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சனையை அணுக வேண்டும். </p><p>* கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்க வேண்டும். </p><p>* வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை  மீட்டெடுக்க வேண்டும். </p><p>* சிறப்பு சலுகை கேட்கவில்லை, நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம் என்று பேசியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கடன் வாங்கி எம்.எல்.ஏ-க்களுக்கு இலவச கார் எதற்கு?- சீமான் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-slams-tamil-nadu-govt-over-free-cars-for-mlas#comments</comments><guid isPermaLink="false">08709dd9-c6e8-457f-874e-fee99c48d782</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:51:06 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:51:06.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,TN Govt,தமிழக அரசு,சீமான்,தவெக அரசு,TVK Govt,எம்எல்ஏக்களுக்கு கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Seeman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/3qorkqz3/seeman.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நல திட்டங்கள் நிறைய உள்ள நிலையில் கடன்வாங்கி அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><p>நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து (car) எதற்கு?</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து வழங்கப்படும் எனவும், அதோடு தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ஒரு லட்சம் ரூபாய்க் கூடுதலாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>மகிழுந்து இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் அரசு மகிழுந்து வழங்கினால்கூட அதில் ஒரு நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 190 சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கனவே சொந்தமாக மகிழுந்து உள்ளதாகத் தங்களின் வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், புதிதாக இலவச மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன?  </p><p>ஒரு மகிழுந்தின் விலை குறைந்தபட்சம் 30 இலட்சம் என்றாலும் 70 கோடி தேவைப்படுகிறது அதைத்தவிர, மாதம் ஒரு இலட்சம் ரூபாய் 234 உறுப்பினர்களுக்கும் வழங்குவதால் மேலும் ஆண்டிற்கு 28 கோடி ரூபாய் தேவை. இதுபோக எரிபொருள், வாகனப் பழுது என ஆண்டிற்கு பல நூறு கோடிகள் தேவைப்படுகிறது. அவையெல்லாம் யாருடைய வரிப்பணம்? இதுதான் மக்கள் பணத்தைத் தொடாத, வீணடிக்காத செயலா?</p><p>ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனப்படி 25000 ரூபாய் உட்பட, மாதம் ஒரு இலட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிற நிலையில், ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி கடன் வாங்கும் நிலையில் கூடுதலாக மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய தேவை என்ன?</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நிதியமைச்சர் மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியே உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் வாகனம் கேட்டால் உங்கள் சொந்த செலவிலோ உங்கள் கட்சி செலவிலோ வாங்கிக்கொடுங்கள். மக்கள் பணத்தை எடுத்து ஏன் தருகிறீர்கள்?</p><p>அனைத்துக்கட்சி உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கினால் இனி எந்தக் கட்சி உறுப்பினர் உங்களை எதிர்த்து பேசுவார்? ஆட்சி நிர்வாகச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை எப்படி சுட்டிக்காட்டுவார்கள்? அரசை விமர்சிக்காமல் இருக்கக் கொடுக்கப்படும் மறைமுக கையூட்டா? இதுதான் ஊழல் இலஞ்சத்தை ஒழிக்கும் முறையா? </p><p>விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை. வெட்டவெளியில் கொட்டி வீணாகிறது. அதனைப் பாதுகாக்க விவசாயிகள் கோரினால், வெறும் 10 கோடிக்கு தார்ப்பாய்களை தரும் தவெக அரசு, ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு மகிழுந்து வைத்துள்ள தீயசக்தி, தூயசக்தி சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும் சேர்த்து சொகுசு வாகனங்கள் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பது தேவைதானா? </p><p>மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு என மக்கள் பாதிக்கப்படுகையில் அதைச் சரி செய்யாமல் அவர்களின் பணத்தை எடுத்து இந்த ஊதாரித்தனம் தேவை தானா?</p><p>தேர்தல் பரப்புரையில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 2500 உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளை அறிக்கை வெளியிட்டு பணம் இல்லை என்றீர்கள். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மகிழுந்து வழங்க மட்டும் எங்கிருந்து பணம் வந்தது?</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் சேவைக்கு வந்தார்களா? தங்களின் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வந்தார்களா? மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? அதற்குத் தனியே சம்பளம் எதற்கு?</p><p>அரசு அறிவிக்கும் எந்தவொரு திட்டத்தின் நன்மை தீமைகளையும் விவாதிப்பதற்கே சட்டமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனும் நிலையில், 110 விதி என்ற பெயரில் புதிய திட்டங்களைச் சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு, அதைப்பற்றி யாரும் எவ்வித விமர்சனமும் செய்யக்கூடாது என்பதுதான் சனநாயகமா? விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் கேட்கவே கூசும் அளவிற்கு முதலமைச்சரைப் புகழ்ந்து மட்டும் பேசலாமா?</p><p>மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்துவதா?- சட்டசபையில் காரசார விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/denigrating-ration-rice-heated-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">41201b23-1652-4f96-9d24-0d0aca06e04d</guid><pubDate>Thu, 20 Aug 2026 07:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-20T07:27:22.704Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,ரேஷன் அரிசி,ration rice,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் அரிசி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-20/x73974l3/ration.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-</p><p>எம்எல்ஏ கே.என்.நேரு :- சன்னரக நெல்லை ரேஷன் அரிசியாக தருவது சாத்தியம் இல்லை என்றார். </p><p>எம்எல்ஏ எ.வ.வேலு :- சத்தீஸ்கர், ஆந்திராவில் இருந்து மத்திய தொகுப்பின் மூலம் கிடைக்கும் அரிசி தான் <a href="https://www.maalaimalar.com/news/topnews/vijay-is-firm-on-the-stance-that-quality-rice-must-be-supplied-at-ration-shops-minister-aadav-arjuna">ரேஷன்</a> கடைகளில் தரப்படுகிறது. சத்தீஸ்கரில் இருந்து வரப்படும் அரிசி தான் நிறம் மாறி இருக்கும், அதனால் வேண்டாம் என கூறிவிட்டோம். தமிழ்நாட்டில் விளையும் அரிசி சற்று என்னை போல் நிறம் குறைந்து தான் இருக்கும், ஆதவை போல் நிறமாக இருக்காது. அவை முன்னவரே ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? திமுக அரசின் ரேஷன் அரிசி திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதியே பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ரேஷன் அரிசி பற்றி பேசியுள்ளாரா செங்கோட்டையன்?. ஏழைகள் சாப்பிடும் ரேஷன் அரிசியை ஆடு, கோழி சாப்பிடுவது என கொச்சைப்படுத்தி செங்கோட்டையன் பேசலாமா? என்று கேள்வி எழுப்பினார்.</p><p>அதிமுக எம்எல்ஏ காமராஜ் கூறுகையில், ரேஷன் அரிசியை அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்றார். </p><p>அமைச்சர் செங்கோட்டையன்: ரேஷன் அரிசி சாப்பிடுபவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் எதையும் பேசவில்லை, உண்மை நிலையை கூறுகிறோம் என்றார். </p><p>எடப்பாடி பழனிசாமி:- நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை நேரடியாக அரவை ஆலைக்கு அனுப்பினால் கருப்பு அரிசி வராது. ஆந்திராவில் அருமையான அரிசி தயாரிக்கின்றனர். நமது தமிழகத்திலும் பாலீஷ் செய்த பின் கொடுக்க கூடுதல் செலவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளில் கொடுத்தால் கூடுதலாக பல கோடி ரூபாய் செலவாகும்.</p><p>அமைச்சர் வெங்கட்ரமணன் </p><p>டிசம்பர், ஜனவரி மாதத்திற்குள்ளாக ரேஷன் கடைகளில் தரமான அரிசி கிடைக்கும். வரும் காலங்களில் சோறுக்கும் பயன்படும் வகையில் ரேஷன் அரிசி வழங்கப்படும். தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லை பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப நடவடிக்கை. கையில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விரைந்து பாலிஷ் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். தவெக அரசு ரேஷன் கடை மூலம் தரமான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி கொடுக்க முயற்சிக்கிறது. ஈரமான நெல்லாக இருந்தால் கொள்முதல் நிலையங்களிலேயே ஹீட்டர் வைத்து காய வைத்து எடைபோட்டு வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஈரமான நெல்லை சேமித்து பாலிசுக்கு அனுப்பும் முன்னரே நிறம் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் முறையாக ட்ரை செய்து வாங்கப்படும். பெரும்பாலும் இட்லி, தோசைக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை வருங்காலத்தில் சோறுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை. இம்முறை தமிழக அரிசி போதுமானதாக இல்லை என்றால் மட்டுமே பிற மாநில அரிசி ரேஷனுக்கு வாங்கப்படும் என்றார். </p>]]></content:encoded></item></channel></rss>