<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 06 Aug 2026 18:30:04 +0000</lastBuildDate><item><title>கீழடி அகழாய்வு முடிவுகளில் இலங்கைத் தமிழ் வம்சாவளியினருக்கு தொடர்பு: மரபியல் துறைத் தலைவர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/keeladi-excavation-links-sri-lankan-tamils-genetics-head#comments</comments><guid isPermaLink="false">fe79bd08-91bf-455f-a44a-5aa9c9314e74</guid><pubDate>Thu, 06 Aug 2026 16:38:03 +0000</pubDate><atom:updated>2026-08-06T16:38:03.724Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Excavation,அகழ்வாராய்ச்சி,keezhadi,Sivagalai excavation,கீழடி,சிவகலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Keeladi-Adichanallur DNA Analysis: South Asian and Sri Lankan Tamil ancestry connection revealed]]></media:title><media:description type="html"><![CDATA[ Keeladi-Adichanallur excavation]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-05/8pmh7fi9/Untitled-design-19.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF">கீழடி</a> மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">ஆதிச்சநல்லூர்</a> பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மனித டி.என்.ஏ பகுப்பாய்வில், அங்கு வசித்தவர்கள் தென்னிந்திய, இலங்கைத் தமிழ் மற்றும் தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையில் உள்ள பண்டைய டிஎன்ஏ ஆய்வகம், முக்கிய தொல்பொருள் தளங்களிலிருந்து சிதைந்த டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து 75,000-க்கும் மேற்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னரே இந்த கண்டுபிடிப்புகளை எட்டியுள்ளது.</p><h3>மரபியல் துறைத்தலைவர் பேட்டி </h3><p>இதுகுறித்து மரபியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி. குமரேசன் கூறுகையில், “கீழடி மக்கள் பயன்படுத்தி வந்த  சுடுகாடான கொந்தகையிலிருந்து சுமார் 75,000 தரவுகளும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலையில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளிலிருந்து முறையே சுமார் 9,000 மற்றும் 6,000 தரவுகளையும் நாங்கள் பிரித்தெடுத்துள்ளோம். </p><p>இந்த தரவுகள் தென்னிந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் தெற்காசியர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அல்லீல் அதிர்வெண்களைக் (allele frequencies) காட்டுகின்றன.</p><p>நாங்கள் மேலும் பல தரவுகளை பிரித்தெடுத்து பதப்படுத்த விரும்புகிறோம். மேலும் சில மாதிரிகளிலிருந்தே அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். </p><p>பல்வேறு முறைகளை பயன்படுத்தி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதைச் சாதித்துவிடுவோம் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.</p><p>நாங்கள் மேலும் இரண்டு சுற்றுகளுக்கு செல்வோம், தரவுகள் உறுதியானவுடன், அதன் கண்டுபிடிப்புகளை சர்வதேச இதழ்களில் வெளியிடுவோம். </p><p>ஆராய்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்வதற்காக, அதன் கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் பொதுமக்களுக்கு வெளியிட விரும்புகிறோம்.</p><p>சங்க இலக்கியம் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. அதன் குறிப்புகளைப் பயன்படுத்தி பல விஷயங்களில் எங்களால் ஒரு முடிவுக்கு வர முடிகிறது. அது இல்லாமல், இந்தப் பணி மிகவும் கடினமாக இருந்திருக்கும்,” என்று அவர் கூறினார்.</p><h3><strong>கீழடி மற்றும் சிவகலை அகழாய்வுகள்</strong></h3><p>கீழடி என்பது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையைச் (ASI) சேர்ந்த கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவால் 2014-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சங்க கால தளமாகும். இது கார்பன் காலக்கணிப்பின்படி 2,600 ஆண்டுகள் பழமையானது எனத் தேதியிடப்பட்டுள்ளது.</p><p>சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புக் கருவிகள் கி.மு. 3345-ஆம் ஆண்டைச் சேர்ந்தவை எனத் தேதியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், உருக்கப்பட்ட இரும்பிற்கான அறியப்பட்ட மிகப்பழமையான தேதிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.</p><p>டிஎன்ஏ பகுப்பாய்வுக்கு இணையாக, மனித இடம்பெயர்வைத் தவிர, வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகளின் இனங்களையும், அதன் மூலம் அவற்றின் இடம்பெயர்வு முறையையும் அடையாளம் காண்பதற்காக, அந்த ஆய்வகம் புரதங்களையும் வரிசைப்படுத்தியுள்ளது. </p><p>பயன்படுத்தப்பட்ட பானைகளில் கொலஸ்ட்ரால் இருப்பது, அங்கு வசித்த மக்கள் இறைச்சியை உட்கொண்டனர் என்பதற்கு சான்றாக அமைகிறது.</p><p>புதிய உயிர்வேதியியல் பகுப்பாய்வுகள், பண்டைய தமிழர்கள் பல்வேறு வகையான அரிசி மற்றும் தினையைப் பயிரிட்டு, குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நுட்பமான சமையல் மரபுகள் தோன்றியதைக் காட்டி, பண்டைய விவசாயப் பழக்கவழக்கங்களை வெளியே கொண்டுவந்துள்ளது.</p><p>தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகலை ஆகிய இடங்களிலிருந்து பெறப்பட்ட அரிசி மாதிரிகளிலும், கொடுமணலில் இருந்து பெறப்பட்ட தினையிலும் கண்டறியப்பட்ட கரிம மூலக்கூறுகள், நெய், பீன்ஸ், கீரை, பால், வெள்ளரிக்காய், நிலக்கடலை மற்றும் தேங்காய் ஆகியவற்றுடன் அரிசி உட்கொள்ளும் ஒரு உணவுமுறையை வெளிப்படுத்துகின்றன.</p><p>குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கிய மேற்கோள்களை பயன்படுத்தி இந்தக் கருத்துக்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது - அமைச்சர் ஜெய்சங்கருக்கு  முதலமைச்சர் விஜய் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-the-external-affairs-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested-chief-minister-vijay-writes-to-the-external-affairs-minister#comments</comments><guid isPermaLink="false">2767d815-b8a5-403c-8d8e-377a629e001b</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:53:06 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:53:06.605Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Fishermen,Sri Lankan navy,இலங்கை கடற்படை,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,தமிழ்நாடு மீனவர்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxwvh3qp/New-Project-2026-08-06T212224.402.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jxwvh3qp/New-Project-2026-08-06T212224.402.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிகளைப் பெற்ற பிறகு, மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். </p><p>கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது பலத்த நீரோட்டம் காரணமாகப் படகு நெடுந்தீவு கடல் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>உடனே மீனவர்கள் படகை இந்தியக் கடல் பகுதிக்கு திருப்ப முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அங்குவந்த வந்த இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் அவர்களை வழிமறித்து, சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டி,  11 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.</p><p>கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாடு மீனவர்களையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>அதில், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைதானவர்களையும், படகையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். </p><p>மேலும் இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே, இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-prime-minister-urging-the-speedy-implementation-of-the-godavari-cauvery-gundar-linking-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-writes-to-the-prime-minister-urging-the-speedy-implementation-of-the-godavari-cauvery-gundar-linking-project#comments</comments><guid isPermaLink="false">8caa5d26-b1fc-4eb9-9e0e-f6b05f190dbf</guid><pubDate>Thu, 06 Aug 2026 15:33:39 +0000</pubDate><atom:updated>2026-08-06T15:33:39.995Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,பிரதமர் மோடி,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Cauvery-Godavari-Gundar Link Project,காவிரி - கோதாவரி -குண்டாறு இணைப்புத் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bkcu7aqs/New-Project-2026-08-06T210312.645.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bkcu7aqs/New-Project-2026-08-06T210312.645.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட மத்திய ஐல்சக்தி அமைச்சகம் மற்றும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆகியவற்றிற்கு உத்தரவிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். </p><h2>நீர்த்தேவைக்கு அண்டை மாநிலத்தை சார்ந்திருக்கும் தமிழ்நாடு</h2><p>அக்கடிதத்தில், தமிழ்நாடு மாநிலம் இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளது. </p><p>மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், </p><p>தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது. என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முன்னுரிமை அடிப்படையில் கோதாவரி- காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை பரிசீலிக்கவும்</h2><p>மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி - காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீரை பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை, கோதாவரி - பெண்ணாறு -பாலாறு - வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள விஜய், இந்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டருக்கு முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி- காவிரி -குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். </p><h2>தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்</h2><p>ஆகவே, தேசிய நலனைக் கருத்தில்கொண்டு, ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான கருத்துவேறுபாடுகளைத் தீர்த்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதில் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி -காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட, அதற்கு 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்" என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>ஒருங்கிணைந்து செயல்படுத்துதல், உத்திரவாதமான நிதி ஒதுக்கீடு மற்றும் குறித்த காலத்தில் திட்டத்தை முடிப்பது ஆகிய நோக்கத்திற்காக ஒன்றிய அரசு மற்றும் பயன்பெறும் மாநிலங்களின் பங்கேற்புடன் ஒரு பிரத்யேக சிறப்பு நோக்கு அமைப்பை (Special Purpose Vehicle) உருவாக்குவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் மிகவும் பயனளிக்கும் என்றும், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தை விரைவாகவும், வெற்றிக்கரமாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு அர்ப்பணிப்புடன் அனைத்து ஒத்துழைப்பும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலமைச்சர் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் </h2><ul><li><p>எனவே ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும், தேசிய மேம்பாட்டு முகமைக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். </p></li><li><p>தொடர்புடைய பயன்பெறும் மாநிலங்களுடன் ஆலோசனைகளை விரைவுபடுத்தி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளில் விரைவான உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். </p></li><li><p>காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கட்டளைக் கதவணை வரை இந்த இணைப்பை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யவேண்டும்.</p></li><li><p>இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக விரைவான முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுத்தல் மற்றும்</p></li></ul><ul><li><p>இத்திட்டத்தை ஒருங்கிணைந்த மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்திட ஒரு சிறப்பு நோக்கு அமைப்பை நிறுவுவது குறித்துப் பரிசீலிப்பது மற்றும் இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்தல்</p></li></ul><p>இத்திட்டம் தொடர்பாக பிரதமர் தனிப்பட்ட கவனம் செலுத்தி தென்னிந்தியாவின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீண்டகால நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், நமது சிறப்பான நீர் வளங்களைச் சமமாகவும் நிலையான முறையிலும் பயன்படுத்துவது என்ற தேசிய குறிக்கோளை முன்னோக்கி எடுத்துச்செல்வதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்
 - 6 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-6-august-2026#comments</comments><guid isPermaLink="false">cea48297-4a0d-4b97-9bab-77c908ac9582</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:39:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:58:33.170Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/0lx0tsgt/vinoth3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-pakistan-clash-headlines-womens-asia-cup-2026-schedule">மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதி அறிவிப்பு</a></p><p>* மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் தொடங்குகிறது.</p><p>* முதல் போட்டியில் தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet">தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</a></p><p> * தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு.</p><p>* இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bangladesh-to-hold-presidential-election-on-august-20-ec">வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையம்</a></p><p>* அதிபர் பதவியில் இருந்து முகமது ஷஹாபுதீன் ஜூலை 24-ம் தேதி ராஜினாமா செய்தார்.</p><p>* நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/medvedev-zverev-lose-second-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் மெத்வதேவ், ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது.</p><p>* முன்னணி வீரர்கள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/carlos-alcaraz-withdraws-from-cincinnati-open-tennis">சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 2 வீரர் விலகல்</a></p><p>* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.</p><p>* கார்லோஸ் அல்காரஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-want-to-kill-people-i-just-want-a-deal-with-iran-says-trump">"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!</a></p><p>* டிரம்ப் மக்கள் உயிரை காக்க ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்</p><p>* அமெரிக்கா இஸ்ரேல் ஆயுதம் வைத்திருக்கும் வரை நாங்களும் தொடர்வோம் என்றது ஈரான்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rbi-to-roll-out-plastic-rs-10-rs-20-notes">அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்</a></p><p>* காகித நோட்டுகளுடன் பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும்.</p><p>* பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tanvi-sharma-ashmita-chaliha-enter-qf-in-korea-mastesr-badminton">கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தன்வி ஷர்மா, அஷ்மிதா சலிஹா காலிறுதிக்கு முன்னேற்றம்</a></p><p>* கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடர் கொரியாவில் நடந்து வருகிறது.</p><p>* ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் அனைவரும் வெளியேறினர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/coco-gauff-rybakina-enter-next-round-in-canada-open-tennis">கனடா ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் கோகோ காப், ரிபாகினா வெற்றி</a></p><p>* கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோவில் நடந்து வருகிறது</p><p>* முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-beat-west-indies-in-second-test">2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி: சமனில் முடிந்த டெஸ்ட் தொடர்</a></p><p>* பாகிஸ்தானின் அப்துல்லா ஷபிக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.</p><p>* இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism" rel="nofollow">வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்</a></p><p>* வேளாண் பட்ஜெட்டில் ரூ.470.92 கோடி அளவிற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டு.</p><p>* இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again" rel="nofollow">மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</a></p><p>* தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் நிகழ்வு நடைபெற்றது.</p><p>* அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day">சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</a></p><p>* சுதந்திர தினம் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை</p><p>* பாதுகாப்பு அதிகரிப்பு, பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வருவதற்கு உத்தரவு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha" rel="nofollow">வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</a></p><p>* முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும்.</p><p>* செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத்.</p><p>சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் முழு விவரம் வருமாறு:</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/jug0dj1h/ministervinoth.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தபோது முதலமைச்சர் குறித்து பேசிய அமைச்சர் வினோத் இறுதியாகவும் முதலமைச்சர் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.</p><p>அமைச்சர் பேச்சுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் மட்டும் நீக்குவதாக சபாநாயகர் உறுதி அளித்தார்.</p><p>கடந்த 2 மணி நேரமாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><p>பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் - அமைச்சர் வினோத்</p><p>நடப்பாண்டில் கூடுதலாக 2.50 லட்சம் தென்னங்கன்று உற்பத்தி செய்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் - அமைச்சர் வினோத்</p> <p>விதை இருப்பை அதிகரிக்கும் வகையில் மேலும் 150 விதை பயிர் தொகுப்பு ரூ.1 கோடியில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் திட்டத்தில் 5 லட்சம் சந்தன மரம், 50,000 தேக்குமரம் உள்ளிட்ட மரங்களை நடுவதற்கு திட்டம்</p><p>மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் தருவதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கீடு</p><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25% மூலதன மானியம் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்கு சிறப்பு நிதியாக ரூ.5000 வழங்குவதற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு</p><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைக்க 4 சதவீதம் வட்டி மானியம் வழங்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு</p><p>வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கால்நடை தீவனம் ஒரு கிலோ ரூ.2 மானிய விலையில் வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு</p><p>2026-2027 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க ரூ.17,000 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><h2>உதகையில் வேளாண் ஆராய்ச்சி பயிற்சி மையம்</h2><p>உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி, 50 உழவர் சந்தைகளில் மின்னணு விலைப்பலகை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு</p><p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு</p> <p>2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகளை ஏற்படுத்த ரூ.4.8 கோடி ஒதுக்கீடு</p><p>வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்ட 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்ட, மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>225 ஏக்கர் பரப்பளவு வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் செயல்விளக்கத்திற்காக ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><p>மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னையில் 100% மானியத்தில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்த திட்டம்.</p><p>தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி சமபங்கு நிதியாக உறுப்பினருக்கு தலா ரூ.5000 வழங்க ரூ.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பொறியியல் விரிவாக்க, பயிற்சி மையங்கள் அமைக்க ரூ.4.6 கோடி ஒதுக்கீடு.</p><p>வேளாண்மையில் முழுமையான இயந்திரமயத்தை புகுத்தும் திட்டங்களுக்கான செயல்விளக்கங்ளுக்கு ரூ.46.37 லட்சம் ஒதுக்கீடு</p><h2>வேளாண் இயந்திரங்கள் </h2><p>உழவர்களுக்கு வேளாண் பொருட்களை வாடகைக்கு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த ரூ.20.31 கோடி ஒதுக்கீடு</p><p>புதிதாக 463 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.20.31 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர்</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு</p><p>பெண்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சிக்காக வான் மகள் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு ரூ.4 கோடி ஒதுக்கீடு</p><p>100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும்.</p><p>57,000 மெட்ரிக் டன் சேமிக்கும் வகையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு</p><p>24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் மற்றும் கருவி வழங்க ரூ.227.2 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு </p><p>தென்னை பதப்படுத்தும் கழகம்  ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/gi2bnhlf/coconut.jpg" /></figure><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும் என அறிவிப்பு</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.22 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>அளவு கடந்த ஊட்டச்சத்து உள்ள தமிழ்நாடு தளிர்கீரை திட்டத்திற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்காக ரூ.41 கோடி ஒதுக்கீடு</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு</p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.</p> <p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சார்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் - அமைச்சர் வினோத்</p><p>மழை, வெயிலில் இருந்து விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p> <p>தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு  - அமைச்சர் வினோத்</p><p>நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.</p><p>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்காக ரூ.56.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு</p><p>பருத்தி உற்பத்தியை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு</p> <p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி - அமைச்சர் வினோத்</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/phbqf2zv/paddy.jpg" /></figure><p>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம் அறிவித்து ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ogk40j0p/compost.jpg" /></figure><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு - வேளாண் அமைச்சர் வினோத்</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு -  வேளாண் அமைச்சர்</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> <p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும் - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p> <p>5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் - அமைச்சர் வினோத் </p><p>மண்வள பாதுகாப்புக்கான ஐந்தாண்டு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு</p><p>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p> <p>பயிர் காப்பீட்டிற்காக பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 14 தொகுப்புகளில் ரூ.648 கோடி மாநில நிதி விடுவிப்பு.</p><p>இலவச மும்முனை மின்சாரம் திட்டத்திற்கு கட்டண தொகையாக மின்வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும் - அமைச்சர் வினோத்</p><p>எல்-நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p>சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது - அமைச்சர் வினோத் </p><p>விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண்மை துறையில் பழைய திட்டங்களுடன் சில புதிய திட்டங்களும் தொடங்கப்பட உள்ளது. </p><p>நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது.</p><p>டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்று அமைச்சர் வினோத் கூறினார்.</p> <p>செயற்கை நுண்ணறிவின் வருகையால் 2021-ம் ஆண்டு முதல் புதிய பரிணாமம் பெற்றது.</p><p>வேளாண்மை, விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது - அமைச்சர் வினோத்</p> <p>வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்   - அமைச்சர் வினோத்</p><p>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம்  - அமைச்சர் வினோத்</p> <p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்யுங்கள் என அமைச்சர் வினோத்துககு சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.</p><p>தமிழகத்தின் தலைப்பு செய்தி முதலமைச்சர் பேசுவதாக இருக்கும் அல்லது முதலமைச்சரை பற்றி பேசுவதாக இருக்கும் - அமைச்சர் வினோத்</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யும் அமைச்சர் வினோத் முதலமைச்சர் குறித்து புகழ்ச்சியாக பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>கோட் சூட் அணிந்த விவசாயி முதலமைச்சர் விஜய் என வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் வினோத் புகழாரம்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/8smd7lya/vinoth2.jpg" /></figure><p>சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/baakw511/speaker.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5ady734p/udhayanidhi.jpg" /></figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/x2lizk1n/vijay.jpg" /></figure><p>வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் சட்டசபைக்கு முதலமைச்சர் விஜய் வருகை.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xpjmrorm/dmk2.jpg" /></figure><p>சட்டசபைக்கு திமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வருகை. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சாடல்.</p> <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.</p><p>வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். </p> ]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-invites-tamil-nadu-mps-for-constituency-delimitation-meet#comments</comments><guid isPermaLink="false">fe1a75ab-dbec-4be5-b390-5a02a0a2a227</guid><pubDate>Thu, 06 Aug 2026 14:13:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T14:13:35.095Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,தொகுதி மறுவரையறை,Delimitation,cm vijay,முதலமைச்சர் விஜய்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை - தமிழ்நாடு எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/l0gmqrcp/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். </p><p>இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. </p><p>நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. </p><p>இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. </p><p>இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாட்டின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைவருக்கும் அழைப்பிதழும் அனுப்பப்படுகிறது.</p><p><strong>தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்</strong></p><p>சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் வருகின்ற ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. </p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. </p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் பட்ஜெட் இல்லை - பெ. சண்முகம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-agriculture-report-does-not-satisfy-farmers-p-shanmugam#comments</comments><guid isPermaLink="false">5eccd42c-9d50-4a1a-b748-3147bc0001b9</guid><pubDate>Thu, 06 Aug 2026 13:16:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T13:16:49.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,P. Shanmugam,பெ.சண்முகம்,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் வேளாண் அறிக்கை இல்லை - பெ. சண்முகம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ej0u3ptn/New-Project-2026-08-06T184611.608.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தவெக அரசு நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று வேளாண்துறை அமைச்சர் வினோத், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். </p><p>இந்நிலையில் வேளாண் அறிக்கை விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><h2>வரவேற்கத்தக்கது</h2><p>“வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சிறுதானிய உற்பத்தி மற்றும் கொள்முதல் ஊக்கப்படுத்தும் அறிவிப்பு, பனை பாதுகாப்பு இயக்கம், வாழைக்கு முட்டுக் கொடுக்கும் திட்டம், பூச்சி மற்றும் நோய் பாதிப்பிலிருந்து தென்னையை பாதுகாக்க தென்னை டானிக் வழங்குவதுடன் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது,</p><p>வாழை, மஞ்சள், வெங்காயம், தக்காளி, மா, மிளகாய் ஆகிய விளைபொருட்கள் சேமிப்புக்கான குளிர்ப்பதன கிடங்குகள் அமைக்கப்படும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 1000 விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்படும், உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும், வாரத்திற்கு ஒரு நாள் இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனைக்கு ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>நிதிநிலை அறிக்கையில், விவசாயத்தில் இயந்திரமயம் என்பதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>ஏற்கனவே, விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலை கிடைக்காமல் புலம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உள்ளது. இந்த நிலையில், விவசாயத்தை முழுமையாக இயந்திரமயமாக்குவது, மனித உழைப்பை முற்றிலும் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு விவசாயத்தில் வேலையே கிடைக்காது என்ற நிலையை உருவாக்கும் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.</p><p>விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது தமிழ்நாடு விவசாயிகள் போராடிப் பெற்ற உரிமை ஆகும். மின் இணைப்புக் கோரி பல ஆண்டுகளாக சில லட்சம் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அதேபோல், ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி போதுமானது அல்ல என்று விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><h2>தொடர்கதை</h2><p>விவசாயத்திற்கு முக்கியம் தரமான விதை, உரம், பாசன உத்தரவாதம், சந்தை வாய்ப்பு கொள்முதல் உத்தரவாதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான குடோன் வசதிகள் இல்லாமல் திறந்தவெளியில் வைக்கப்படுவதும், மழையில் நனைந்து வீணாவதும் தொடர்கதையாக உள்ளது. </p><p>ஆனால், இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். மேலும், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.</p><p>காட்டுப்பன்றி மட்டுமல்லாமல் பலவிதமான வன விலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது, மனித உயிரிழப்புகள் உட்பட ஏற்படுகிறது. நிதி நிலை அறிக்கையில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்கு யோசனை சொல்லப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.</p><h2>தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை</h2><p>சட்டப்பேரவை தேர்தலின்போது தவெகவால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை செலுத்தவில்லை. குறிப்பாக, நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4500ம், சந்தை விலையில் சரிவு ஏற்படும்போது அதை அரசு ஈடுசெய்யும் என்பதும், </p><p>விதைப்பு கால உதவியாக ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் ரூ. 15,000 வழங்கப்படும் என்பதும், 100 சதவிகிதம் பயிர்க்காப்பீடு உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை ஏற்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை உள்ளாக்கியிருக்கிறது. </p><p>பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மேட்டுப்பாளையம்-கோவை இடையே 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் விரைவில் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettupalayam-coimbatore-memu-train</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettupalayam-coimbatore-memu-train#comments</comments><guid isPermaLink="false">c0b11d04-e9b5-484f-b81e-34ba023c0033</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:48:00 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:48:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,Memu Train,மெமு ரெயில்,Mettupalayam,மேட்டுப்பாளையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xe8chdx6/trainmemu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ memu train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/xe8chdx6/trainmemu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>உள்ளூர் செய்திகள் (District News)</category><content:encoded><![CDATA[ <p>சேலம் ரெயில்வே கோட்டத்தில் போத்தனூர் ரெயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-</p><p>மேட்டுப்பாளையம்-கோவை இடையே 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.</p><h2><strong>மெமு ரெயில்</strong></h2><p>பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, இந்த சேவையை 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயிலாக மாற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><h2><strong>ரெயில்வே நிர்வாகம்</strong></h2><p>இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கோவைக்கு 12 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் அறிமுகம் செய்து அடுத்த வாரம் 10 அல்லது 12-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.</p><h2><strong>8 ரெயில் பெட்டிகள்</strong></h2><p>அதே நேரத்தில், 12 பெட்டிகள் கொண்ட மெமு சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தற்போது இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகள் மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><h2><strong>திண்டுக்கல்</strong></h2><p>கோவை மண்டலத்தில் ஏற்கனவே மெமு ரெயில் பெட்டிகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த காலங்களில் கோவையில் இருந்து சேலம் மற்றும் கோவையிலிருந்து திண்டுக்கல் வரை மெமு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் அவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>ரெயில் சேவை</strong></h2><p>அதே சமயம், கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை மெமு ரெயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். எனவே, தற்போது பயன்பாட்டில் உள்ள 8 பெட்டிகள் கொண்ட மெமு ரெயில் பெட்டிகளை சென்னைக்கு திருப்பி அனுப்பாமல், அவற்றை கோவையிலேயே தக்கவைத்து, கோவையில் இருந்து பொள்ளாச்சி அல்லது பழனி அல்லது திண்டுக்கல் அல்லது சேலம் ஆகிய வழித்தடங்களில் புதிய மெமு ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><h2><strong>நடவடிக்கை</strong></h2><p>இதன்மூலம் தினமும் பயணிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயனடைவார்கள். எங்களின் இந்த கோரிக்கையை பரிசீலித்து, சாதகமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thiruvallur-ammonia-gas-leak-accident-factory-owner-ordered-to-pay-rs-10-lakh-to-the-families-of-the-deceased#comments</comments><guid isPermaLink="false">30c68336-4319-40d8-9078-c4dc2948c086</guid><pubDate>Thu, 06 Aug 2026 11:37:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T11:37:23.315Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,compensation,இழப்பீடு,Tiruvallur ammonia leak,திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவு விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க ஆலை உரிமையாளருக்கு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5kmazyl5/New-Project-2026-08-06T165937.864.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவள்ளூர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>மூன்று பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>ஜூன் 21ம் தேதி ஆலையில் ஏற்பட்ட இந்த அமோனியா கசிவில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.</p><p>முன்னதாக மூவரின் ஜாமின் மனுவையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணி: மூலக்கடையை வந்தடைந்தது &apos;நீலகிரி&apos;!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neelagiri-tbm-completes-phase-2-tunnel-reaches-moolakadai#comments</comments><guid isPermaLink="false">7366444b-c6e4-4cce-98a1-a58a1df38830</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:43:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:43:43.299Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Rail,Chennai Metro Rail,சென்னை மெட்ரோ ரெயில்,Nilagiri,மெட்ரோ ரெயில்,நீலகிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chennai metro rail]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wxm09bms/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் நீலகிரி எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்தது.</p><p>சுரங்கம் தோண்டும் இயந்திரமான நீலகிரி வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.</p><p>இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல்  நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. </p><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.</p><p>சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக மொத்தம் 7 சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>இதில், 'நீலகிரி' என்று பெயரிடப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம், மாதவரம் நெடுஞ்சாலை ரெயில் நிலையத்திலிருந்து மூலக்கடை இரயில் நிலையம் வரையிலான (up line) பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியைத் தொடங்கியது.</p><p>மொத்தம் 819 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை முடித்து மூலக்கடை மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தது. இது TU01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 11-வது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் வெற்றிகரமான பணி நிறைவு ஆகும்.</p><p>ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-ல் இதுவரை 24 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை முடித்து இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.</p><p>இந்தத் திட்டத்தின் TU-01 ஒப்பந்தப் பிரிவின் கீழ் வரும் மாதவரம் நெடுஞ்சாலை முதல் மூலக்கடை வரையிலான சுரங்கப் பாதை பகுதி பல பெரிய சவால்கள் நிறைந்ததாக அமைந்தது; குறிப்பாக, 'நீலகிரி' (S 96) என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பக்கிங்ஹாம் கால்வாயின் அடியிலும், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையின் அடியிலும் வெற்றிகரமாகப் பாதையை அமைத்ததோடு, அப்பகுதியில் இருந்த 14-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாதவாறு தடையின்றி மாற்று நீர் ஆதாரங்களை அமைத்துக் கொடுத்து இப்பணிகள் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.</p><p>சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவதும், அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச நில அதிர்வு மற்றும் மாற்றங்களுக்குள் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேலும், இப்பணி நடைபெற்ற காலம் முழுவதும் விரிவான கண்காணிப்புக் கருவிகள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிசெய்யப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் திரு. கொள்ளி வெங்கட ரமணா (சுரங்கப் பாதை), பொது ஆலோசகர் குழுவின் முதன்மை வரைபடப் பொறியாளர் திரு. PSS நாயுடு, டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு. விஜய குமார், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrangements-must-be-made-to-sing-the-tamil-thai-vazhthu-first-at-state-functions-21-tamil-nadu-mps-jointly-write-to-the-governor#comments</comments><guid isPermaLink="false">cb5e13c2-f58b-4b0e-a73a-1472a27568c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 10:09:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T10:09:44.735Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>வந்தே மாதரம்,Vande Mataram,தமிழ்த்தாய் வாழ்த்து,Rajendra Vishwanath Arlekar,ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,Tamizh Thai Vaazhthu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மாநில நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வழிவகை செய்யவேண்டும் - ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கூட்டாக கடிதம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/drt2q338/New-Project-2026-08-06T151214.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் நடைபெறும் பட்டமளிப்பு, பல்கலைக்கழக விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் மாநிலத்தின் கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை தொடக்கத்திலும், இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படவும் வழிவகை செய்யுமாறு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு எம்.பி.க்கள் 21 பேர் கடிதம் எழுதியுள்ளனர். </p><p>ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், தொல் திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தெளிவான மற்றும் முன்கூட்டிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். </p><p>2021ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மாநில கீதமாக இப்பாடலே இருந்து வருவதாகவும், 5 தசாப்தங்களுக்கும் மேலாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இந்த பாடலே முதலில் இசைக்கப்பட்டு வருவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய போது கூட, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்ததை எம்.பி.க்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p>தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியது தமிழ் மக்களையும், அந்தப் பல்கலைக்கழகம் யாருடைய பெயரால் அமைந்துள்ளதோ, அந்தப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையையும் அவமதிப்பது போல் உள்ளதாகப் பலரும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>அரசு நிறுவனங்கள் “கண்ணியத்துடனும், சர்ச்சைகள் இன்றியும்” தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக, தாங்கள் இந்தக் கோரிக்கையை ஒரு புகாராக அல்ல, மாறாக ஒரு வேண்டுகோளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். </p><h2>கடிதத்திற்கான காரணம் என்ன?</h2><p>முதலமைச்சர் விஜய் பதவி ஏற்பு விழாவிலேயே இந்த சர்ச்சை தொடங்கியது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். இச்சூழலில் கடந்த 2026 ஜூலை 28 அன்று திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.</p><p>இந்த விழாவில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவது தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் மாநிலப்பாடலும், அப்பாடலை எழுதியவருமான மனோன்மணியம் பெயரைக் கொண்ட பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பலதரப்பிலிருந்தும் கண்டனங்களை பெற்றது. </p><p>இதனிடையே விழாவிற்கு முன்னரே பல்கலைக்கழக வேந்தர் இதுதொடர்பாக பேசியிருந்தார். இதனால் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இணைந்து இந்தக் கடிதத்தை பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு எழுதியுள்ளனர். </p>]]></content:encoded></item><item><title>அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? - சி.வி.சண்முகம் விளக்கம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-explains-why-did-meet-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cv-shanmugam-explains-why-did-meet-minister-anand#comments</comments><guid isPermaLink="false">d0ae046e-edc8-4870-8e55-5f95df5b5802</guid><pubDate>Thu, 06 Aug 2026 09:23:10 +0000</pubDate><atom:updated>2026-08-06T09:23:10.435Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,CV Shanmugam,சிவி சண்முகம்,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bnm53yyz/cvshanmugam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CV Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/bnm53yyz/cvshanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள்.</strong></em> </p><p>அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்கிறது. </p><h2>எஸ்.பி.வேலுமணி- சி.வி.சண்முகம்</h2><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled">எடப்பாடி பழனிசாமி</a>யிடம் இன்னும் சமாதானமாக செல்லாமல் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.</p> <p>எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை திருப்திப்படுத்தும் விதத்தில் புதிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் த.வெ.க. அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  வாக்களித்தனர்.</p><p>பின்னர் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும் அளித்தனர். இதன் பிறகும் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கும் இடையேயான பிரச்சனை நீண்டுக் கொண்டே செல்கிறது. </p> <h2>போர்க்கொடி</h2><p>இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரையும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று கோரி இருந்தார். இப்படி தலைமைக்கு எதிராக தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் செயல்பட்டு வரும் நிலைமையிலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமலேயே எடப்பாடி பழனிசாமி பொறுமைக் காத்து வருகிறார்.</p> <h2>எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம்</h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளரான அமைச்சர் என்.ஆனந்தை திடீரென சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. </p><p>சட்டமன்ற வளாகத்தில் வைத்து இன்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்காத நிலையில் அவர்கள் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்</h2><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">அ.தி.மு.க.</a>வில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இதனால் 6 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. </p><p>இந்த நிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் மேலும் சிலர் த.வெ.க. பக்கம் சாயும் வகையில் அமைச்சர் என்.ஆனந்தை  சந்தித்து பேசி இருப்பது மீண்டும் அ.தி.மு.க.வில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.</p> <h2>எஸ்.பி.வேலுமணி</h2><p>இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,</p><p>அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடர்பாகவும், தொகுதி பிரச்சனைகள் பற்றியும் பேசினோம். தவெகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அதிமுக எங்களுடைய கட்சி என்றும் திட்டவட்டமாக கூறினார்.</p><h2>சி.வி.சண்முகம்</h2><p>இந்நிலையில் அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்தது தொடர்பாக சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:</p> <p>தொகுதி மக்களின் நலனுக்கான கோரிக்கைகளுடன் அமைச்சர் ஆனந்தை சந்தித்தோம். அத்திக்கடவு அவிநாசி திட்டம், தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளுக்காக அவரை சந்தித்து பேசினோம்.</p><p>நான் ஏன் இபிஎஸ்-ஐ சந்திக்க வேண்டும். தேவையற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றமே..!- அன்புமணி விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/agriculture-budget-a-disappointment-for-farmers-anbumani-criticism#comments</comments><guid isPermaLink="false">b6b505dc-a55d-4b09-b595-1dcd96c32abc</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:59:25 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:59:25.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அன்புமணி ராமதாஸ்,தமிழக பட்ஜெட்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48bjjivj/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48bjjivj/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொள்முதல் விலை, பயிர்க்கடன் அறிவிப்பு இல்லாத நிலையில் நோக்கத்தை நிறைவேற்றாத வேளாண் பட்ஜெட் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>தமிழ்நாடு அரசின் சார்பின் ஆறாம் முறையாகவும், த.வெ.க. அரசின் சார்பில் முதல் முறையாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.</p><p>வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளைப் பார்க்கும் போது எந்த நோக்கத்திற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பாமக 13 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றதோ, அந்த நோக்கத்தில் ஒரு  விழுக்காடு கூட நிறைவேறவில்லை. இந்த நிதிநிலை அறிக்கை உழவர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.</p><p>சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பும், வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. </p><p>வேளாண்துறைக்கு மட்டும் திமுக அரசில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.15,167.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அதை விட ரூ.470.92 கோடி குறைவாக ரூ.14,696.70 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.58,374 கோடி என்றும், இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.11,126 கோடி அதிகம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.</p><p>உண்மையில் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள 20 துறைகளில் ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மதிப்பான ரூ.6,329.29 கோடியிலிருந்து ரூ.11,774 கோடி உயர்த்தி மொத்தம் ரூ.18,103.02 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>கடந்த ஆண்டு வரை நடைமுறையிலிருந்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கு பதிலாக 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம் செய்யபட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கு குறைக்கப்பட்டு, மாநில அரசின் பங்கு உயர்த்தப்பட்டிருப்பதால் தான் இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>இதனால் கள அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த கூடுதல்  ஒதுக்கீட்டை கழித்துப் பார்த்தால் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.46,600 கோடி மட்டும் தான். இது இடைக்கால நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.47,248 கோடியை விட ரூ.648 கோடி குறைவு ஆகும்.</p><p>நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பில் 25% வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்படி நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவு மட்டும் தான் வேளாண்மைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் வேளாண்மைத் துறைக்கு மட்டும் வெறும் ரூ.14,696.70 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை ஏற்கவே முடியாது.</p><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.4500 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.</p><p>ஆனால், அது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நெல் கொள்முதலை கையாளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.18 கோடி மட்டும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும் போது நடப்பாண்டில் நெல்லுக்காக தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை உயர்த்தப்படாது என்றே தோன்றுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்றம்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுடன் உழவர்கள் காத்துக் கிடப்பதைத் தடுக்கவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாவதைத் தடுக்கவும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.</p><p>ஆனால், அதற்கான திட்டங்களை அறிவிக்காத அரசு, 43,500 விவசாயிகளுக்கு  ரூ.10 கோடியில்  தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ரூ.2298 மதிப்புள்ள தார்ப்பாய்களைக் கொண்டு பல டன் எடையுள்ள நெல்லை எவ்வாறு நனையாமல் பாதுகாக்க முடியும்? என்பது தெரியவில்லை.</p><p>பயறு வகைகளின் சாகுபடியை  15.19 லட்சம் ஏக்கரில் இருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் சாகுபடி பரப்பை 9.26 லட்சம் ஏக்கரில் இருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்த சிறப்புத் திட்டம்  செயல்படுத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக உழவர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கப் படவில்லை. </p><p>பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு மற்றும் எண்ணெய் வித்துகள் சாகுபடியில் இலாபம் குறைவாகவே கிடைக்கும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காத நிலையில், இந்த முயற்சி வெற்றி பெறாது. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பல அறிவிப்புகள்  திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் &amp; அறிவிப்புகளின் நீட்சியாகவே உள்ளன. புதிதாக எதுவும் இல்லை.</p><p>நெல் உள்ளிட்ட 10 வகையான பயிர்களில் அதிக விளைச்சல் ஈட்டும் 3 உழவர்கள் வீதம் மொத்தம் 30 பேருக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு கடலூர் அஞ்சலையம்மாள் பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போதாவது பயனுள்ள அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மீண்டும்.. மீண்டுமா..!- தவறுதலாக உதயநிதியின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-mistakenly-tries-to-enter-udayanidhi-stalin-vehicle-again#comments</comments><guid isPermaLink="false">02463d57-5eb2-4faa-9c87-a7b414301fe3</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:30:13 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:30:13.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி,Car,Edappadi pazhanisamy,கார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin- Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/rz4cy4yz/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரும், அதற்கு முன்னால் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p><p>சட்டசபை கூட்டம் முடிவடைந்த போது இருவரும் நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர். அதன்பிறகு  அவரவர் அலுவலகத்துக்கு சென்று  எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்தனர்.</p><p>இதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு செல்வதற்காக கார் நிற்கும் இடத்திற்கு வந்தார். அப்போது, அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த  உதயநிதி ஸ்டாலினின் காரை தனது கார் என்று நினைத்து அதில் ஏற முயன்றார்.</p><p>உடனே பாதுகாவலர்கள் நமது கார் முன்னால் நிற்கிறது. இந்த கார் இல்லை என்று தெரிவித்தனர். உடனே சுதாரித்து கொண்ட எடப்பாடி பழனிசாமி  அதன்பிறகு தனது காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.</p><p>ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதும் இதே போல் உதயநிதி ஸ்டாலின் காரில்  அப்போது எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-visitors-at-coimbatore-airport-ahead-of-independence-day#comments</comments><guid isPermaLink="false">9d49b760-d91f-488e-b933-3c04e7188210</guid><pubDate>Thu, 06 Aug 2026 08:27:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T08:27:09.350Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>coimbatore airport,கோவை விமான நிலையம்,IndependenceDay2026,சுதந்திர தினம்2026,Airport Security</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coimbatore Airport ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/qwujj51g/Coimbatore-Airport?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டின் முக்கிய பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து முனையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு, பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>பார்வையாளர்களுக்குத் தடை:</strong></h2><p>கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். </p><p>கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த விமான நிலையத்தையே நம்பியுள்ளனர்.</p><p>இந்நிலையில் வழக்கமாக பயணிகளை வழிஅனுப்ப வருபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தி, பிரத்யேக 'பார்வையாளர் பாஸ்' பெற்று விமான நிலையத்தின் உள்ளே சென்று வருவது வழக்கம். </p><p>ஆனால், சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, இந்த பார்வையாளர் அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அதிகாரிகள் விளக்கம்:</strong></h2><p>இது குறித்து கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:</p><p>"சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் உத்தரவுப்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் பிரத்யேக பாஸ்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெளிவாக கூறியுள்ளனர்.</p><h2><strong>பாதுகாப்பு அதிகரிப்பு:</strong></h2><p>சுதந்திர தினக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. </p><p>விமான நிலைய நுழைவாயில், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் வெவ்வேறு நிலைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. </p><p>மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வழக்கம் போல் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சைப் பேச்சு வழக்கு: பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponmudi-hate-speech-case-chennai-george-town-court-issues-arrest-warrant#comments</comments><guid isPermaLink="false">34f93599-a1f8-4818-800a-668dd4746992</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:32.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,ponmudi,பொன்முடி,George Town Court,ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ george town]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/93dsywx6/george.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்களைக் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பிடிவாரண்ட்  பிறப்பித்துள்ளது.</p><h2><strong>சர்ச்சைப் பேச்சு:</strong></h2><p>சென்னையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.</p><p>இது தொடர்பாக சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த புகாரை விசாரித்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த புகார் மனு எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.</p><h2><strong>வழக்கை ரத்து செய்ய மனு:</strong></h2><p>தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக தனி நபர் புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்யும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்பதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது" என வாதிட்டார்.</p><h2><strong>மனு தள்ளுபடி:</strong> </h2><p>புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், தனது பேச்சு ஊடகங்களில் பரவும், பிற மதத்தினர் பார்ப்பார்கள் என்று தெரிந்தே பொன்முடி இந்த வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். இதே விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், பொன்முடியின் பேச்சால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை என கூறி, புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், பொன்முடிக்கு எதிரான வழக்கை தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் வாதிடப்பட்டது.</p><p>இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்ய கோரிய பொன்முடியின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 2ஆம் தேதி  தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p><h3><strong>வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட காரணம்:</strong></h3><p>இந்த நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணைக்கு பொன்முடி தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டது. பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்ட் உத்தரவின்படி, பொன்முடியைக் கைது செய்து செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வே வேளாண் பட்ஜெட் 2026 - மு.க.ஸ்டாலின்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-agriculture-budget-2026-budget-is-merely-another-instance-of-a-name-change#comments</comments><guid isPermaLink="false">6f6daca4-9301-462b-b529-009425192e29</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:42:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:42:09.835Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,முக ஸ்டாலின்,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/5zroo9vk/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p>தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்</a> தாக்கல் செய்தது குறித்து திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் 2026.</p> <p>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.</p><h2>வெற்றி லேபிள்</h2><p>திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?</p><p>குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.</p> <p>உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் <a href="https://x.com/hashtag/TNAgriBudget2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TNAgriBudget2026</a>.<br><br>மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.<a href="https://x.com/hashtag/DravidianModel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DravidianModel</a> அரசின் திட்டங்களின் மேல் &#39;வெற்றி&#39; என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு… <a href="https://t.co/YlD3WedXB3">pic.twitter.com/YlD3WedXB3</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2085263496539959504?ref_src=twsrc%5Etfw">August 6, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தொலைநோக்கு பார்வையுடன்கூடிய பட்ஜெட்- முதலமைச்சர் விஜய் பாராட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-hails-visionary-budget#comments</comments><guid isPermaLink="false">183e2962-7175-4b41-8fe1-632b1d6868bf</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:41:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:41:23.291Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Budget 2026,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/26cn1ozb/TN-CM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026-2027ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்க செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத்திற்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.</p><h2>வேளாண் பட்ஜெட்</h2><p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இதில், விவசாயிகளுக்கான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.</p><h2>முதலமைச்சர் விஜய் பாராட்டு</h2><p>இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோரை முதலமைச்சர் விஜய் பாராட்டியுள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.</p><p>தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. </p><p>வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் - உதயநிதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-farmers-most-affected-during-tvk-regime#comments</comments><guid isPermaLink="false">ec1c3493-c2d0-4886-81c2-ccbbf8af423e</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:26:44 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:26:44.438Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,vijay,Udhayanidhi Stalin,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/f8td3eos/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative">வேளாண் பட்ஜெட்டை</a> வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதுவும் புதிதில்லை.</p> <h2>வேளாண் பட்ஜெட்</h2><p>* தவெக ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை, வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு இல்லை.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.</p><p>* திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அவர்களின் கட்சி பெயரை சேர்த்து புதியதை போல் அறிவித்துள்ளனர்.</p> <p>* மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுகின்றனர்.</p><p>* கடந்த 4 மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை.</p><h2>கருப்பு சட்டை</h2><p>* தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்.</p><p>* குறுவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம்.</p> <p>* அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.</p><p>* விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்த குரலுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே இல்லை.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>* காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்துள்ளோம்.</p><p>* சட்டசபையில் நாளை முதல் நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் வாய் திறப்பாரா என்று பார்ப்போம்.</p><p>* எங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருக்கிறோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை- பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-major-announcements-in-agriculture-budget-says-premalatha#comments</comments><guid isPermaLink="false">5be938f7-a086-4a88-94f5-379f3a04e281</guid><pubDate>Thu, 06 Aug 2026 07:20:30 +0000</pubDate><atom:updated>2026-08-06T07:20:30.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/lonxk6lr/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>பின்னர், இதுதொடர்பாக தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-</p><p>விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை.</p><p>நெல்லை மூட்டைகளை பாதுகாக்கும் சேமிப்பு கிடங்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகவில்லை.</p><p>100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு நிறுத்தாமல் அதனை விளைநிலங்களாக மாற்றுவதையே தேமுதிக விரும்புகிறது.</p><p>ரசாயன உரங்களை விவசாயிகள் அதிகம் பயன்படுத்துவதால் நமது விளைபொருளை வெளிநாட்டில் வாங்க மறுக்கின்றனர்.</p><p>நேற்றும், இன்றும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்து திட்டங்களை அறிவித்துள்ளனர்.</p><p>இந்திய வேளாண் பொருட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்ல இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.</p><p>அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். அது மகிழ்ச்சி தான். ஆனால்,முதலமைச்சர் விஜய் நினைத்தால் இப்போதே விவசாயிகளுக்கு நன்மை செய்ய முடியும், எதற்கு அடுத்த ஜென்மம்.</p><p>கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். </p><p>மாவட்டந்தோறும் நலிவுற்ற பதப்படுத்தும் ஆலைகளை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.</p><p>செய்தித்தாள் வாசிப்பதைபோல் பட்ஜெட்டை வாசதித்துள்ளார் அமைச்சர் வினோத், இது செயலாக்கம் பெற வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-promises-made-to-farmers-have-not-been-fulfilled#comments</comments><guid isPermaLink="false">7ddf467d-b479-4184-963c-09fd2575f222</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:54:23 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:54:23.352Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/muk0bjei/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced">வேளாண் பட்ஜெட்</a> தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p><p>* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது.</p> <h2>திமுக ஆட்சி</h2><p>* சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.</p><p>* கடந்த கால திமுக ஆட்சியில் 20 துறைகளை இணைத்து வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் போலத்தான் தவெக பட்ஜெட்டும் உள்ளது.</p><p>* ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கரும்பு டன்னுக்கு ஆதார விலை ரூ.4,500 வழங்கப்படும் என்றார்கள் அந்த அறிவிப்பு என்னவானது?</p> <h2>உழவர் உரிமை அட்டை</h2><p>* சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு விதைப்பு கால நிதியாக ரூ.15,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p><p>* உழவர் உரிமை அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 தரப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?</p><p>* தொடக்க வேளாண் வங்கிக்கடன்களில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?</p> <h2>தவெக அரசு</h2><p>* தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க பேசிய தவெக தற்போது விவசாயிகளை ஏமாற்றி விட்டது.</p><p>* வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி உள்ளனர். இது விவசாயிகளுக்கு நன்மை தரும் பட்ஜெட் இல்லை.</p><p>* அதிமுக அரசு முன்னதாக அறிவித்த குடிமராமத்து திட்டத்தில் நீர் நிலைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.</p> <h2>குடிமராமத்து திட்டம்</h2><p>* மகத்தான குடிமராமத்து திட்டத்திற்கு வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.</p><p>* ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளில் நீர் உள்ளது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுகவில் மீண்டும் சலசலப்பு -  அமைச்சர் ஆனந்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rebel-mlas-meet-water-resources-minister-anand#comments</comments><guid isPermaLink="false">981be373-b7aa-4945-89bc-3812b3af8afb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:53:49 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:53:49.594Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,sp velumani,எஸ்பி வேலுமணி,அமைச்சர் ஆனந்த்,Minister Bussy Anand</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Secretariat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/y14bp0vz/TN-Sec.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.</p><p>இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் உடன் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்தனர்.</p><p>அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேசினர்.</p><p>வேளாண் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஆனந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>பசுமை தமிழ்நாடு இயக்கம்: மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்ட திட்டம்!-அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-to-plant-3-million-saplings-under-green-initiative#comments</comments><guid isPermaLink="false">ae9c4bbe-16d5-4350-86b2-ccfb0ba6c6eb</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:37:43.401Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/48w5sus4/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கால்நடைப் பராமரிப்பு, பால் உற்பத்தி மற்றும் பசுமைப் போர்வையைப் பெருக்கவும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கால்நடை பராமரிப்பு &amp; பால் பண்ணை மேம்பாடு:</strong></h2><h2><strong>நடுத்தர பால் பண்ணைகள்:</strong></h2><p>500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>சிறு பால் பண்ணைகள்:</strong></h2><p>மாநிலம் முழுவதும் சிறு பால் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க 4 சதவீத வட்டி மானியமாக ரூ.4.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மகளிர் சுய உதவிக்குழுக்கள்:</strong></h2><p>மகளிர் சுய உதவிக்குழு சார்ந்த கால்நடை பராமரிப்புக்காகச் சிறப்பு நிதியாகத் தலா ரூ.5,000 வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>மானிய விலையில் தீவனம்:</strong></h2><p>வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்குக் கால்நடைத் தீவனம் ஒரு கிலோ ரூ.2 என்ற மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>விதை பயிர் தொகுப்பு:</strong></h2><p>மாநிலத்தில் விதை இருப்பை அதிகரிக்கும் நோக்கில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 150 விதை பயிர் தொகுப்புகள் ஏற்படுத்தப்படும்.</p><h2><strong>வேளாண் காடுகள் திட்டம்</strong>:</h2><p>வேளாண் காடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 5 லட்சம் சந்தன மரங்கள் மற்றும் 50,000 தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2><strong>பசுமை தமிழ்நாடு இயக்கம்:</strong></h2><p>பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மொத்தம் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' மூலம் மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும் மாநிலம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-agricultural-technology-research-centre-in-udagai#comments</comments><guid isPermaLink="false">8efb705f-951c-4fa3-8585-b859f460a2ec</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:26:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:26:09.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/cr3p6o59/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>நஞ்சில்லா வேளாண் முறையை ஊக்குவித்து விவசாய விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்க ஆராய்ச்சி மையம். </p><p>தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீலகிரி மாவட்டம் உதகையில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு. </p><p>கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் களப்பயிற்சிக்காக 6 பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியம்- வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/50-subsidy-for-sugarcane-farmers-onion-storage-warehouse-to-be-set-up-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">59cf6bfc-b6f3-447a-9120-e1b693845e71</guid><pubDate>Thu, 06 Aug 2026 06:09:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T06:09:32.708Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் தானியங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கவும் பல முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>ரூ.7.10 கோடியில் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்:</strong></h2><p>மாநிலத்தில் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், 3 முக்கிய இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.</p><h2><strong>அமைக்கப்படும் இடங்கள்:</strong></h2><p>சேலம் மாவட்டம் (கங்கவல்லி), தூத்துக்குடி மாவட்டம் (கிள்ளிகுளம்) மற்றும் விழுப்புரம் மாவட்டம் (இருவேல்பட்டு).</p><h2><strong>நிதி ஒதுக்கீடு:</strong></h2><p> ரூ. 7 கோடி 10 லட்சம் (மாநில நிதி).</p><h2><strong>சர்க்கரைத் துறை: கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகைகள்:</strong></h2><p>கரும்பு சாகுபடிச் செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இரண்டு முக்கிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>விதைக்கரும்பு மானியத் திட்டம் (ரூ.9.36 கோடி):</strong></h2><p>இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பு ரகங்களைச் சாகுபடி செய்ய முன்வரும் கூட்டுறவு/பொதுத்துறை சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறுவர். இவர்களுக்கு 50% மானியத்தில் பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணைகள் வழங்கப்படும்.  இத்திட்டம் 17,315 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் (ரூ. 9 கோடி):</strong></h2><p>வல்லுநர் விதைக்கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், சோகை உரித்தல், நிழல் வலைக்கூடம் அமைத்தல், சோகை தூளாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து-உயிர் உரங்கள் வழங்க மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.9 கோடி மானியம் வழங்கப்படும்.</p><h2>எத்தனால் <strong>உற்பத்தி</strong> ஆய்வு (ரூ. 20 லட்சம்):</h2><p>கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 மற்றும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பில், நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எத்தனால் வடிப்பாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தோட்டக்கலைத் துறை: ரூ.22 கோடியில் வெங்காய சேமிப்பு கிடங்கு:</strong></h2><p>காய்கறிகள், பழங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் தொடர்ந்து வருமானம் பெறவும் தோட்டக்கலைத் துறை மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அறுவடைக்குப் பின் வெங்காயம் அழுகி வீணாவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய '57,000 மெட்ரிக் டன்' கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள்.. வெற்றி வான் மகள் திட்டம் அறிவிப்பு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/drones-for-women-at-a-50-subsidy-vetri-vaan-magal-scheme-announced#comments</comments><guid isPermaLink="false">4fb34331-553b-45e5-baba-b490d66a93d0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:55:18 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:55:18.358Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:title><media:description type="html"><![CDATA[ வெற்றி வான் மகள் திட்டம் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ofmb94d4/tn-25.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. இன்றைய வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><h2>வெற்றி வான் மகள் திட்டம்</h2><p>அதில் குறிப்பாக பெண்களை டிரோன்களை இயக்குபவர்களாக மாற்றுவதற்கு ‘வெற்றி வான் மகள் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும். பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் டிரோன்கள் வழங்கப்படும்.</p><p>ரூ.4 கோடியில் டிரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் டிரோன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>அதேநேரம் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-6-crore-for-farmers-irrigation-wells#comments</comments><guid isPermaLink="false">4036f6d6-63c1-43f4-8ebd-0b1492e0ba28</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:52:19 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:52:19.392Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/yao2080f/well.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறு அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.</p><p>பொதுப்பிரிவை சார்ந்த 500 விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக 60% வரை வழங்குவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.</p><p>100% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் உருவாக்குதல், 75% மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகளை தூர்வார ரூ.8.5 கோடி ஒதுக்கீடு.</p><p>நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் 100 சதவீத மானியத்தில் மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக 56.72 லட்சம் கோடி ஒதுக்கீடு. </p><p>1000 விவசாயிகளுக்கு மானியத்தில் மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.</p><p>பயிர் சாகுபடி, மதிப்பு கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்க ரூ.8.13 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஜாக்பாட்: &apos;அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்&apos; அறிமுகம்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/jackpot-for-adidravidar-tribal-farmers-annal-ambedkar-agricultural-assistance-scheme-launched#comments</comments><guid isPermaLink="false">3c7e5558-83c8-4af1-b66f-0cc6f3790783</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:48:43 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:48:43.850Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/2au16ubd/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகச் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 நிதியாண்டிற்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation">வேளாண் பட்ஜெட்</a>டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் விளைபொருட்கள் வீணாவதைத் தடுக்கவும் பல முக்கியச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்:</strong></h2><p>ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் திட்டப் பலன்களைச் சிரமமின்றி பெறவும், புதிய நீராதாரங்களை உருவாக்கிக் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் "அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்" செயல்படுத்தப்படும்.</p><h2><strong>20% கூடுதல் மானியம்:</strong></h2><p>உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயனாளி பங்களிப்புத் தொகையைக் குறைக்கும் வகையில் 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.</p><h2><strong>70% மானியத் திட்டங்கள்:</strong></h2><p>ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில்கள், நிழல் வலைக்குடில்கள், சூரியக்கூடார உலர்த்திகள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பண்ணை இயந்திரங்களுக்கு 70% மானியம் வழங்கப்படும்.</p><h2><strong>80% மானியத்தில் பம்புசெட்டுகள்:</strong></h2><p>சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க 80% மானியம் தரப்படும்.</p><h2><strong>100% மானியத்தில் பாசன வசதி:</strong></h2><p>பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளை/குழாய்க்கிணறுகள், மின் மோட்டார் அல்லது சூரிய சக்தி பம்புசெட்டுகளுடன் 100% முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.</p><h2><strong>விளைபொருட்களைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் வழங்கும் திட்டம்:</strong></h2><p>மழை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து அறுவடை செய்த விளைபொருட்கள் வீணாகாமல் பாதுகாக்கவும், தானியங்களை எளிதாக உலர்த்துவதற்கும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2026-27ஆம் நிதியாண்டில் ரூ. 10 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில், மொத்தம் 43,500 விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் தார்ப்பாய்கள் வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-boar-damage-prevention-scheme-rs-7-35-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">ba7f7be0-300e-4808-b6a6-4bdb4b7e0cba</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:34:28 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:34:28.813Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/m94hsp07/rr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காட்டுப்பன்றிகள் மற்றும் வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுத்து, விவசாயிகளின் பொருளாதார இழப்பைக் குறைக்கும் வகையில் 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.7.35 கோடி நிதியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என <a href="https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers">வேளாண் பட்ஜெட்</a>டில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>காட்டுப்பன்றி விரட்டி (ரூ.1.35 கோடி):</strong> </h2><p>தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) உருவாக்கியுள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவிலான காட்டுப்பன்றி விரட்டி, 14,000 ஏக்கர் பரப்பளவில் பயன்படுத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.</p><h2><strong>சூரிய சக்தி மின்வேலி (ரூ.2 கோடி):</strong></h2><p>காட்டுப்பன்றி, யானை, காட்டெருமை மற்றும் மான் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க, நடப்பாண்டில் 134 விவசாயிகளுக்குச் சூரிய சக்தியால் இயங்கும் மின்வேலிகள் மானியத்தில் அமைக்கப்படும்.</p><h2><strong>சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் (ரூ.4 கோடி):</strong> </h2><p>காட்டுப்பன்றிகள் தங்குமிடமாகப் பயன்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்து அகற்றி, மண் வளத்தையும் சுற்றுச்சூழைலையும் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.5.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழகம்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/coconut-processing-corporation-worth-rs-5-30-crore-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">09bd4b36-937c-417d-87e2-5c7c0fc7c39b</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:28:27 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:28:27.053Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ooid37rw/Minister-Vinoth2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>விதை சுத்திகரிப்புத்திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.</p><p>17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியத்திற்கு ரூ.9.36 கோடி ஒதுக்கீடு.</p><p>8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக நடத்தப்படும் வேளாண் கண்காட்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு. </p><p>பனைவிதை, பனங்கன்று விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்தி கூடாரம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு</p><p>வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.</p><p>வீடுகளின் மாடிகளில் தோட்டம் அமைக்க மானியம் வழங்கும் வகையில் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் என்ற புதிய திட்டம்.</p><p>தென்னை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தென்னை சிறப்புத்திட்டத்திற்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் அமைக்கப்படும்.</p><p>கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை ரூ.48 லட்சத்தில் அமைக்கப்படும். </p><p>நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.8.43 கோடி ஒதுக்கீடு.</p><p>தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.5.30 கோடியில் அமைக்கப்படும்.</p><p>தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>சிறந்த விவசாயிகளுக்கு வெற்றி விவசாயி, அஞ்சலை அம்மாள், நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vetri-vivasayi-anjalai-ammal-and-nammalvar-awards-announced-for-outstanding-farmers#comments</comments><guid isPermaLink="false">a20384fc-858b-4c35-8358-93db8ce717f0</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:21:17 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:21:17.825Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் பட்ஜெட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/6wd60h7a/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகளுக்கான விருதுகள்  பின்வருமாறு:-</p><h2>வெற்றி விவசாயி விருது</h2><p>நெல், சோளம், கம்ப், மக்காசோளம் துவரை, உளுந்து, பச்சைப்பயிறு நிலக்கடலை விவசாயத்தில் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் வெற்றி விவசாயி விருது வழங்கப்படும்.</p><p>மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்படும்.</p><p>மாவட்டந்தோறும் வழங்கப்படும் வெற்றி விவசாயி விருதுக்கு ரூ.67.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  </p> <h2>அஞ்சலை அம்மாள் விருது</h2><p>மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.</p><p>அஞ்சலையம்மாள் விருதில் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.</p><p>சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி செய்வதும், தினை, சாமை, குதிரைவாலி மற்றும் எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி செய்திருக்க வேண்டும் என்பது பரிசுகளுக்கான தகுதி அளவாகும்.</p><h2>நம்மாழ்வார் விருது</h2><p>5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>வாழை முதல் தென்னை வரை: தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிதி மழை பொழிந்த பட்ஜெட்!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/from-banana-to-coconut-budget-brings-financial-rain-for-horticulture-farmers#comments</comments><guid isPermaLink="false">e79fa81c-0047-4c3d-8aac-64f699de4369</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:16:35 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:16:35.251Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/umrqzobx/rrrr.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth"> அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், தோட்டக்கலை மற்றும் பயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள்:</p><h2><strong>சாமந்தி சாகுபடிக்கு LED விளக்குகள்:</strong></h2><p>சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் LED விளக்குகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>சீமை கருவேல மரங்கள் அகற்றம்:</strong></h2><p>நிலத்தடி நீரைக் குடிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றி, நிலங்களை விளைநிலங்களாக மாற்ற ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>வாழைக்கு முட்டுக்கொடுக்கும் திட்டம்:</strong></h2><p>காற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களால் வாழை மரங்கள் சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>தென்னை மேம்பாட்டுச் சிறப்புத் திட்டம்:</strong></h2><p> தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தென்னை சாகுபடி ஊக்குவிக்க ரூ.16 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>AI தொழில்நுட்பத்தில் உழவர் செயலி- ரூ.2 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-budget-allocates-rs-2-crore-for-ai-farmer-app#comments</comments><guid isPermaLink="false">5320a74c-d087-41d9-bf95-b53c38f8a3c7</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:08:32 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:08:32.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="616" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg" width="1090"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/j2dtgujq/Minister-Vinoth1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்காக ரூ.203.64 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வானிலை</a>, பாசனம், சந்தை விலை நிலவரம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ஏஐ உழவர் செயலி.</p><p>ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகளை வழங்க ஏஐ அடிப்படையிலான செயலிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு.</p><p>சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.63.81 கோடி.</p><p>அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத்தினை, பாப்பரை, குலசாமை பயிர்களின் செயல்விளக்கத் திடல்களுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.</p><p>சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்சாகுபடியை இருமடங்காக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கத்திற்கு ரூ.7.61 கோடி ஒதுக்கீடு.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-revokes-announcement-abolishing-separate-fee-for-seat-selection-on-flights" rel="nofollow">பருத்தி உற்பத்தி</a>யை பெருக்கிட பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்காக ரூ.27.21 கோடி ஒதுக்கீடு.</p><p>விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமையை உறுதிப்படுத்த வேளாண் காடுகள் திட்டத்திற்காக ரூ.170.70 கோடி ஒதுக்கீடு.</p><p>மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி ஒதுக்கீடு.</p><p>காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி ஒதுக்கீடு.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சூப்பர் எல் நினோவால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு - வேளாண் அமைச்சர் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/12-districts-likely-to-face-severe-impact-due-to-super-el-ni%C3%B1o-agriculture-minister#comments</comments><guid isPermaLink="false">27692622-34ea-4c55-b677-54e8a44236d2</guid><pubDate>Thu, 06 Aug 2026 05:00:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T05:00:31.228Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/hh7mc2g4/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D">வேளாண் பட்ஜெட்</a>டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பட்ஜெட்டில் எல் நினோ மற்றும் பயிர் சாகுபடி குறித்து அமைச்சர் பேசியவை பின்வருமாறு பின்வருமாறு, </p><p>பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.648 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 8.26 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. </p><h2>எல் நினோ</h2><p>விவசாயிகளை வாழ வைப்பது மழை தரும் வானம் தான் என்றாலும், அவர்களை வருந்துவதும் அதே வானமாக தான் உள்ளது. </p><p>இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள சூப்பர் எல் நினோ நிகழ்வினால் நாடு முழுவதும் பெரும் தாக்கம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அதிக தாக்கம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. </p><p>எனவே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டுள்ள மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாட்டு திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு  அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மாம்பழத்திற்கு, குறிப்பாக பெங்ளூரா ரக மாம்பழத்திற்கு கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போதிய விலை கிடைக்காத சூழல் கடந்த ஆண்டு இருந்தது. எனவே அந்த வகை மாம்பழத்திற்கு ஒன்றிய அரசின் சந்தை இடையீட்டு திட்டத்தில் விலை வித்தியாசத் தொகையை வழங்க ஒன்றிய அரசுக்கு உரிய கருத்துரை அனுப்பி முதல் முறையாக ஒப்புதல் பெறப்பட்டது. </p><p>6 மெட்ரிக் தன் மட்டுமே மேலும் இதற்கு உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருங்காலங்களில் இத்தகு சூழலை எதிர்கொள்ள அரசு முற்றிலும் தயாராக உள்ளது. </p><h2>உற்பத்தி</h2><p>மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ள நிலையில் 2026-27 ஆம் ஆண்டிற்கு 125 லட்சம் மெட்ரிக் டன் ஆக இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. </p><p>இதுதவிர ஊட்டச்சத்து வழங்கும் பயிர்கள், காய்கறிகள் உணவு வகைகளிலும் உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவை எட்டி ஊட்டச்சத்து பாதுகாப்பு அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். </p><p>முன்னதாக நேற்று 2026-2027 பொது பட்ஜெட்டில், வரவிருக்கும் 'சூப்பர் எல் நினோ' மற்றும் வறட்சிச் சூழலின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. </p> ]]></content:encoded></item><item><title>நெல் விதை உற்பத்தி மானியத்திற்கு சிறப்பு திட்டம்- ரூ.34.72 கோடி ஒதுக்கீடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-72-crore-allocation#comments</comments><guid isPermaLink="false">02e09bb1-2efd-441c-a5ad-b0a73c0e4978</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:33 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:33.574Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,Budget 2026,பட்ஜெட் 2026</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/ile6qs0y/MInister-Vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். </p><p>பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-</p><p>ரூ.4 கோடி மதிப்பீட்டில் 1 கோடி விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்படும்.</p><p>உயிர்ம வேளாண் பரவலாக்க சிறப்பு திட்டத்தில் 20,000 ஏக்கருக்கு தலா ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>இயற்கை உரங்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.4.5 கோடி ஒதுக்கீடு.</p><p>மத்திய மாநில அரசின் பங்களிப்பில் புதிய வேளாண் இயற்கை தொகுப்பை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு.</p><p>மண்புழு உரக்கூடம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்- அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-lakh-green-manure-to-protect-soil-fertility-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">5e1d36b5-470f-41bc-ab83-ac0e990012c0</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:53:09 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:53:09.123Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod">அமைச்சர் வினோத் </a>உரை நிகழ்த்தினார். மண்வளப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்:</p><h2><strong>1 லட்சம் பசுந்தாள் உரம்:</strong></h2><p>மண் வளத்தை மேம்படுத்தி, இயற்கை முறையில் விவசாயத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு 1 லட்சம் பசுந்தாள் உரம் வழங்கப்படும்.</p><h2><strong>மண்வளப் பாதுகாப்புக்கு ரூ.600 கோடி:</strong> </h2><p>மண்வளப் பாதுகாப்பிற்காகச் சிறப்பு ஐந்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">49626a4c-7e14-441b-b53c-cf160d880241</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:50:12 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:50:12.138Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்க முடிவு - அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/100-percent-crop-insurance-for-agri-produce-vinod#comments</comments><guid isPermaLink="false">947145af-4751-4d88-8637-4688c354c774</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:42:01 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:42:01.224Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/nk62ew8m/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth">அமைச்சர் வினோத்</a> உரையாற்றினார்.</p><p>வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதன்மை நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:</p><h2><strong>வேளாண் வளர்ச்சி &amp; பாதுகாப்பு:</strong></h2><p>"நாட்டின் வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்தத் துறையும் சரியான பாதையில் செல்ல முடியாது" என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், பழைய திட்டங்களுடன் விவசாயிகளுக்கான சில புதிய திட்டங்களும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.</p><h2>ப<strong>யிர் காப்பீடு:</strong></h2><p>வேளாண் விளைபொருட்களுக்கு 100% பயிர் காப்பீடு வழங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதமர் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14 தொகுப்புகளுக்கு மாநில அரசின் நிதியாக ரூ.648 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>உணவு உற்பத்தி &amp; மண்வளம்:</strong></h2><p>அடுத்த 5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மண்வளப் பாதுகாப்புக்கான ஐந்தாண்டுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>இலவச மின்சாரம்:</strong></h2><p>விவசாயிகளுக்கான இலவச மும்முனை மின்சாரத் திட்டக் கட்டணத் தொகையாக மின்சார வாரியத்திற்கு ரூ.7,432.58 கோடி வழங்கப்படும்.</p><h2><strong>குறுவை தொகுப்பு &amp; தூர்வாரும் பணிகள்:</strong> </h2><p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ.132 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவோம் -அமைச்சர் வினோத்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/let-us-build-a-vetri-tamilnadu-with-successful-farmers-minister-vinoth#comments</comments><guid isPermaLink="false">4ebf182d-a371-4993-baff-a273ac326d13</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:30:31 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:30:31.665Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,vijay,TN budget,தமிழக பட்ஜெட்,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026,பட்ஜெட்2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ minister vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/3y42ddpb/Untitled-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை <a href="https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action">அமைச்சர் வினோத்</a> இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு..</p><h2><strong>வெற்றி தமிழ்நாடு இலக்கு:</strong></h2><p>"வெற்றி விவசாயிகளை கொண்ட வெற்றி தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் முதன்மை இலக்கு" என அமைச்சர் வினோத் தனது உரையில் குறிப்பிட்டார்.</p><h2><strong>தனி பட்ஜெட் நடைமுறை:</strong></h2><p>விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.</p><h2><strong>நவீன தொழில்நுட்பம் &amp; AI</strong></h2><p>செயற்கை நுண்ணறிவின் (AI) வருகையால் 2021-ம் ஆண்டு முதல் விவசாயத் துறை புதிய பரிணாமத்தையும் வளர்ச்சியையும் பெற்றுள்ளது.</p><h2><strong>பாதுகாப்பு &amp; உறுதிப்பாடு:</strong></h2><p>தமிழகத்தில் வேளாண்மையையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு முழு உறுதியுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள்.. முதல்வர் விஜய்க்கு புகழுரை வாசித்த வேளாண் அமைச்சர் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு - சபாநாயகர் செய்த செயல்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/you-are-a-farmer-in-a-suit-agriculture-minister-heaps-praise-on-chief-minister-vijay-opposition-parties-object-samayanayagars-action#comments</comments><guid isPermaLink="false">104efff9-0acb-4cbb-9101-af98b934aa2e</guid><pubDate>Thu, 06 Aug 2026 04:29:29 +0000</pubDate><atom:updated>2026-08-06T04:29:29.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,விஜய்,vijay,TN budget,Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,tvk,Budget 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:title><media:description type="html"><![CDATA[ வேளாண் அமைச்சர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/4ivse0jh/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D"> வேளாண் பட்ஜெட்டை </a>வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். </p><p>பேச்சை தொடங்கிய வேளாண் அமைச்சர் ரமேஷ், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்கிறேன். </p><p>வெற்றி தமிழ்நாட்டை மிளிர செய்வதை நோக்கமாக கொண்டுள்ள மாண்புமிகு முதல்வருக்கும் வெற்றிப் பாதையில் உள்ள முற்களை மலர்களாக்கி காய்களை கனிகளாக்கி முன்னே அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கு வணக்கம். </p><p>பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள் (என இருமுறை கூறி) திரைமன்றங்களில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள்தான் (இருமுறை). </p><p>உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி ஊழல் ஒவ்வொன்றையும் கலையெடுத்து சமத்துவம் எனும் செடி வளர்த்து மக்களாட்சி எனும் பெரும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் அணிந்த விவசாயி நீங்கள்.</p><p>விசில் என்பது ஒலி அல்ல, அது பாமரர்களின் மொழி. அதுவும் உலகின் பொது மொழி. விசில், காற்று இசைத்த முதல் ராகம். விசில், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி. விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. </p> <p>அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது. ஊரெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை. ஒற்றுமையோடு சாதி சமயம் மறந்து நாங்கள் கொண்டாட உங்களை போல் ஒரு வரம் இல்லை. </p><p>இனிமேல் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தி ஒன்று நீங்கள் பேசுவதாக இருக்கும். இல்லை நீங்கள் பேசப்படுவதால் இருக்கும். ஆழிப்பேரலையாய் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெருங்கடலை....</p><p>என பேசிக்கொண்டிருக்க எதிர்கட்சிகள், வேளாண் படஜெட்டை தாக்கல் செய்யாமல் சொந்த கட்சி மற்றும் தலைவர் துதி பாடுவதாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எம்எல்ஏக்கள் கூச்சல் எழுப்பினர். </p><p>அவர்கள் எதிர்ப்பை தொடர்ந்து அவர்களை அமைதியுடன் இருக்க வலியுறுத்திய சபாநாயகர் பிரபாகர், வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிக்கும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார். அதான் நானே சொல்லிட்டேனே, அமைதியா இருங்க என எதிர்கட்சியினரை இருக்கைகளில் அமர சொல்லி பிரபாகர் வலியுறுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேர் கைது 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/11-tamil-nadu-fishermen-arrested#comments</comments><guid isPermaLink="false">0868fc3b-916c-40d6-a8f9-cc8df87125f6</guid><pubDate>Thu, 06 Aug 2026 03:23:15 +0000</pubDate><atom:updated>2026-08-06T03:23:15.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Srilankan Navy,TN fishermen,தமிழக மீனவர்கள்,மீனவர்கள் கைது,இலங்கை கடற்படை,Fishermen Arrested</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fishermen]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/09/23/4821493-fisherman.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</strong></em></p><p>எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81">தமிழக மீனவர்கள்</a> இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.</p> <p>இந்நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.</p><p>கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. </p> ]]></content:encoded></item></channel></rss>