<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 12 Aug 2026 14:29:33 +0000</lastBuildDate><item><title>குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/online-coaching-for-group-2-and-2a-exams-starts-on-august-17#comments</comments><guid isPermaLink="false">be8e6818-f869-426c-a348-57a4f6e76169</guid><pubDate>Wed, 12 Aug 2026 14:28:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T14:28:38.382Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>குரூப் 2 தேர்வு,Group 2 Exam,Aatchi Tamil IAS Academy,ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குரூப்-2, 2ஏ தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி - ஆகஸ்ட் 17-ந்தேதி தொடங்குகிறது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/03034yk4/New-Project-2026-08-12T195542.631.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் தொடங்குகின்றன. </p><h2>குரூப்-2, 2ஏ தேர்வு</h2><p>சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. </p><p>இங்கு பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.</p><p>இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II, சிறை அலுவலர் உள்ளிட்ட மொத்தம் 821 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.</p><h2>ஆன்லைன் பயிற்சி</h2><p>நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திட்டமிட்ட பயிற்சியை வழங்கும் வகையில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 17-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகின்றன.</p><p>மொத்தம் 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொடர் மாதிரித் தேர்வுகள் மற்றும் தேர்வு நோக்கிலான பயிற்சிகள் நடத்தப்படும்.</p><p>மேலும், தேர்வுக்குத் தேவையான ஆதார நூல்கள் மற்றும் இ-புத்தகங்கள் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படும்.</p><p>வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ.12,500 ஆகும்.</p><h2>முன்பதிவு செய்யலாம்</h2><p>இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், ‘TNPSC GROUP II, IIA ONLINE COACHING-2026’ என்று டைப் செய்து, தங்களது பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை 7550151584 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்யலாம்.</p><p>இந்த தகவலை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் ச. வீரபாபு தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-perambur-election-victory-chief-minister-vijay-ordered-to-respond-by-august-25#comments</comments><guid isPermaLink="false">410c162a-3f07-4045-9c0b-1b552b1f808f</guid><pubDate>Wed, 12 Aug 2026 13:43:08 +0000</pubDate><atom:updated>2026-08-12T13:43:08.051Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தேர்தல் வழக்கு,Election case,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zch9w1e7/New-Project-2026-08-12T191239.317.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கில் ஆக.25ம் தேதிக்குள் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய் பிரமாணப் பத்திரத்தில் சில தகவல்களை மறைத்ததாகவும், இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். </p><p>கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p>அப்போது விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி. மசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, விஜய் தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த மனுக்களைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரி, இந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கக் கோரினர். </p><p>ஆனால் நான்குவார கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு மனுக்களை தாக்கல் செய்யக்கோரி, வழக்கு விசாரணையை ஆக.25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.</p><p>தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-delimitation-hurts-tamil-nadu-interest-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">b6fb782a-d841-43f3-8eb8-6a507c756fbb</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:19:25 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:19:25.122Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,தொகுதி மறுவரையறை,Delimitation,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நயினார் நாகேந்திரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8mpuo0rp/NainarNagendran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள </p><p>த.வெ.க. அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.</p><p>ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும். இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல. மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.</p><h2>மத்திய அரசு உறுதி அளித்துள்ளது</h2><p>பிரதமர் தலைமையிலான மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், த.வெ.க. அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல. கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் விஜய் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமிழக சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. ஆனால், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவுக்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>என்றபோதிலும் குரல் வாக்கெடுப்பால் இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.</p>]]></content:encoded></item><item><title>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/was-student-amudhan-murdered-for-exposing-drug-sales-heated-debate-in-the-legislative-assembly-what-do-the-parents-say#comments</comments><guid isPermaLink="false">6b3f7b52-cbe9-4836-90dd-cad4b0ce29c8</guid><pubDate>Wed, 12 Aug 2026 12:09:59 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:09:59.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Coimbatore,கோவை,போதைப்பொருள்,Drugs,College student,கல்லூரி மாணவர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் மாணவர் அமுதன் கொலை? சட்டப்பேரவையில் முற்றிய விவாதம்... பெற்றோர் கூறுவது என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/j8ygezto/New-Project-2026-08-12T173914.064.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். </p><p>இந்த நிலையில் விடுதியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அமுதன் விடுதியில் இருந்து வெளியேறி ஒத்தக் கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறையில் தங்கியிருந்துள்ளார். </p><p>இச்சூழலில் நேற்று முன்தினம் (ஆக.10) காலை அமுதன், அவரது நண்பரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமன் (19) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று உள்ளார். அப்போது சில மாணவர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். </p><p>அவர்கள் நடந்து சென்ற அமுதன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோரை தங்களுடன் அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.   பின்னர் எங்கள் அறைக்கு வந்து செல்போன் பறித்து சென்றது நீங்கள் தானே எனக்கூறி அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.   </p><p>இதில் காயம் அடைந்த அமுதன், வேதனை தாங்க முடியாமல் தனது அறைக்கு சென்று ஓய்வெடுத்துள்ளார். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பிய நண்பர்கள், அமுதன் காயங்களுடன் அசைவற்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். </p><p>உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். </p><h2>5 மாணவர்கள் கைது   </h2><p>இதுகுறித்து செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. </p><p>சக மாணவர்கள் 5 பேர் அவரை அடித்ததில் அவர் இறந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். </p><p>கைதானவர்கள் திருவள்ளூர், கடலூர், சிவகங்கை, திருவாரூரை சேர்ந்தவர்களாவர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். </p><p>அமுதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒரு மாணவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.  இதற்கிடையே கொலை செய்யப்பட்ட அமுதன் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>கோவையில் கல்லூரி மாணவரை சக மாணவர்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இது செல்போன் விவகாரம் இல்லை, போதைப்பொருள் விவகாரம் என தகவல் வெளியாகி வருகிறது. </p><h2>போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் கொலையா?</h2><p>மாணவர் அமுதன் போதைப்பொருள் விற்பனையை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நிகழ்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அமுதனின் பெற்றோர்.,</p><p>“கல்லூரி விஷமருந்தி என் மகன் இறந்ததாக பொய் சொல்கின்றனர். இந்த கல்லூரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். என் பிள்ளைக்கு நடந்தாவறு எந்தப் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது. </p><p>என் மகனிடம் கஞ்சா விற்பவர்கள் தொடர்பாக போலீசார் கேட்டனர். நீங்கள் கூறும் தகவல் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே தெரியும் எனக்கூறிவிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் போலீசார் தெரிவித்துவிட்டனர். </p><p>அவர்கள் இருபது பேர் சேர்ந்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் அடித்து துடிதுடிக்க என் பையனை கொன்றுவிட்டனர்.” என கண்ணீர்மல்க கதறுகின்றனர். </p><h2>சட்டப்பேரவையில் அமுதன் கொலை தொடர்பாக விவாதம் </h2><p>மாணவன் அமுதன் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.,</p><p>“கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்த அமுதன் எனும் மாணவர், அவருடன் படித்துவரும் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். காரணம், வழக்கு விசாரணைக்காக மாணவர் அமுதனை கோவை செட்டிப்பாளையம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி அமுதனிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுள்ளனர். </p><p>இந்தத் தகவலை ரகசியமாக வைத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டிய காவல்துறை, போதைப் பொருள் விற்பனை செய்த நபர்களை அழைத்து, புகார் கொடுத்தவர் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளனர். </p><p>அந்த கோபத்தில்தான் மாணவர் அமுதனை அந்தக் கும்பல் அடித்துக் கொன்றுள்ளது. காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்கிறது என அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவர் அமுதனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என தெரிவித்தார். </p><h2>அரசு விளக்கம்</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன் இது ஒரு கோஷ்டி மோதலால் வந்த விளைவு என்று தெரிவித்தார். </p><h2>காவல்துறை கூறுவது என்ன?</h2><p>மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி அளித்த விளக்கத்தின்படி, அமுதன் கல்லூரியில் தங்கியிருந்தபோது விடுதி சமையலாளரை தாக்கியதாகவும், அதனால் அவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். </p><p>மேலும் சம்பவத்தன்று அதிகாலை விடுதிக்கு சென்ற அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் முகமூடி அணிந்து மற்றொரு மாணவர் அறைக்குள் புகுந்து செல்போன்களைப் பறித்ததாகவும், அப்போது அமுதன் மட்டும் முகமூடி அணியாததால் எதிர் தரப்பினர் அவரை அடையாளம் கண்டதாகவும்,</p><p>இந்த செல்போன் பறிப்பு சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர் தரப்பு மாணவர்கள் அன்றே அமுதனை வழிமறித்து மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் அவர் உயிரிழந்தார். என காவல்துறை தெரிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 ஆகஸ்ட் 2026
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-12-august-2026#comments</comments><guid isPermaLink="false">2688edc8-8b1b-44e4-a900-ccc79547ce8d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:59:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T12:04:24.488Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Vinoth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/movxczzi/vinoth.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகன வசதி செய்து தருமாறு விசிக எம்எல்ஏ ஜோதிமணி கோரிக்கை.</p><p>இதற்கு பதிலளித்த சபாநாயகர்,"கிள்ளி கொடுப்பவர் அல்ல, அள்ளி கொடுப்பவர் முதல்வர்; எம்எல்ஏ கோரிக்கையை முதல்வர் கவனம் கொண்டு செல்கிறேன்" என்றார்.</p><p>சூரியனுக்கே வியர்த்தது என்ற அமைச்சரின் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி</p><p>இதுவரை யாரும் நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார் - ஓ.பன்னீர்செல்வம்</p><p>அனைவருக்கும் சூரியனால் வியர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது - அமைச்சர் வினோத்</p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - அமைச்சர் வினோத்</p><p>ரூ.134 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்கு காப்பீடு - அமைச்சர் வினோத்</p>  <p>பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தி உள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றி உள்ளோம்.</p><p>தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது - அமைச்சர் வினோத்</p><h2>வேளாண் அமைச்சர் வினோத் உரை</h2><p>திமுக தலைவர் ஸ்டாலின் தவெக வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார்.</p><p>தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்.</p><p>இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார்.</p><p>வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும்.</p><p>விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.</p><h2>நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்</h2><p>ஆயத்தீர்வு துறை மூலமாக ரூ.1,500 கோடி, மோட்டார் வாகன வரி ரூ.750 கோடி வருவாய் வந்துள்ளது.</p><p>அதிக கடன் வாங்கக்கூடாது என்பதில் முதலமைச்சர்  விஜய் உறுதியாக உள்ளார்.</p><h2>திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு</h2><p>3 மாதத்தில் ரூ.15,000 கோடி வருவாய் என சொன்ன நிலையில் எதன் வழியாக வந்தது என விளக்கம் தருக.</p><p>தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் ரூ.7,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறை.</p><p>60 நாளில் சொந்த வரி வருவாயை உயர்த்தி இருக்கிறோம் - நிதி அமைச்சர் மரிய வில்சன்</p><p>திருத்த பட்ஜெட்டில் வருவாய் அதிகரிக்க வேண்டுமே? </p><p>ரூ.16,000 கோடி அதிக வருவாய் என்றால் பட்ஜெட்டில் ஏன் வித்தியாசம்? - எடப்பாடி பழனிசாமி </p><p>முதல்முறையாக அமைச்சர் பொறுப்பேற்று சிறப்பாக விளக்கம் தந்த நிதியமைச்சர் மரியவில்சனுக்கு பாராட்டு - சபாநாயகர்</p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது.</p><p>திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>விபி ஜிராம்ஜி திட்டம், கடன் தள்ளுபடி, 200 யூனிட் மானியத்துக்கு ரூ.18,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p> <p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும்.</p><p>எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம்.</p><p>திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p> <p>மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும் - அமைச்சர் மரிய வில்சன் </p> <h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு.</p><p>தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒரு வெற்றி பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் </p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது - அமைச்சர் மரிய வில்சன் </p><h2>அமைச்சர் மரிய வில்சன் உரை</h2><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு.</p><p>குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>பேரவையில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி உரை தொடங்கினார் நிதியமைச்சர் மரிய வில்சன்</p><p>சட்டரீதியான போராட்டம் நடத்தி தேனி மக்களுடன் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் வெளியேற்றம் என அறிவிப்பு, முதல்வர் அறிவுறுத்தல்படி சட்டரீதியில் போராடுவோம் - அமைச்சர் ஆதவ்</p><p>மலை கிராம மக்கள் வெளியேற்றம் தொடர்பாகவும் திங்கட்கிழமை விவாதத்திற்கு ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு</p><p>3 தலைமுறையாக அப்பகுதியில் வசிக்கும் மக்களை வனப்பகுதி என கூறி வெளியேற்றும் நடவடிக்கையை எதிர்த்து முற்றுகை - திமுக எம்எல்ஏ</p><p>தேனி ஆட்சியர் அலுவலகம் முன் மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் - அதிமுக கவனஈர்ப்பு</p> <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை திங்கட்கிழமை எடுத்து கொள்கிறேன் - சபாநாயகர்</p><p>போதைப்பொருள் குறித்து புகார் தந்த மாணவன் குறித்து காவல்துறை தகவலை கசியவிட்டதால் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.</p><p>போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் தந்த அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை.</p><p>புகார் தந்தவரின் தகவலை அலட்சியமாக போலீசார் கசியவிட்டது தொடர்பாக விளக்கம் தர வேண்டும் - உதயநிதி</p><p>கோவையில் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேறியது.</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p> <p>5, 6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது, அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p> <h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p> <p>2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். </p><p>ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது.</p><p>Delimitation அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறும் கூறினோம்.  </p><p>33% மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனமுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது. 7.18 விகிதாசாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி தவெக அரசு கொண்டுவந்த தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது - உதயநிதி</p> <p>திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.</p><p>Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின் - உதயநிதி</p><p>மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது திமுக தான்.</p><p>தொகுதி மறுவரையறையின் ஆபத்தை இந்தியாவிற்கே கூறியது திமுகதான்.</p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாசாரம் குறையக்கூடாது என திமுக பேரவையில் தீர்மானம் - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p> <h2>முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உரை</h2><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்பட கூடாது என்பதே திமுக நிலைப்பாடு.</p> <p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது - ராஜேஷ்குமார்</p><h2>தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் ஏன்? - சபாநாயகர் விளக்கம்</h2><p>வரும் முன் காக்க எச்சரிக்கை நடவடிக்கையாகவே தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய் - சபாநாயகர்</p><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு - ராஜேஷ்குமார்</p><p>2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்கக்கூடாது - மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு - ஜவாஹிருல்லா</p><h2>தமிமுன் அன்சாரி  உரை</h2><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது, அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு.</p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>மத்திய பாஜக அரசு கொண்டு வரும் சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. பாஜக வெற்றி பெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.</p> <p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவது வேறு. பிரதமர மோடியும் அமித்ஷாவும் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை.</p><p>மகளின் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்.</p><p>இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர் - அமைச்சர் வன்னிஅரசு</p> <h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் விஜய் கொண்டுவந்துள்ள தீர்மானம் தனித்துவமானது, மகத்துவமானது.</p><p>தமிழ்நாட்டின் உரிமையை, தென்னிந்தியாவின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரித்தார்.</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p> <p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது - எடப்பாடி பழனிசாமி</p> <p>செவி வழி செய்தியை வைத்து தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை தொடர்பாக கொண்டு வந்த தனித்தீர்மானத்தை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும் -  பாமக எம்எல்ஏ</p><p>மக்கள்தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பாமக எதிர்க்கும். </p><p>தொகுதி மறுவரையறையை 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்தால் பாமக கடுமையாக எதிர்க்கும் - எம்எல்ஏ கணேஷ்குமார்</p> <p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான தவெகவில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை உயர்த்துகிறார்கள் - பாமக எம்எல்ஏ கணேஷ்குமார்</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை</h2><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டுவரும் அவசரம் என்ன?</p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது. அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரிதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>பெண்ணுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p> <h2>தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா உரை</h2><p>சட்டமுன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது?</p><p>தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. அது சிறப்பானது என்பதில் மாற்றில்லை.</p><p>10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர்.</p><p>முதல்வருக்கும் அரசியலில் பெண்களை ஊக்கப்படுத்தும் கட்சியினருக்கும் என் வாழ்த்துகள்.</p><p>தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7:2 என்ற வகையிலேயே தொடர வேண்டும். அது மாற்றப்படக்கூடாது.</p> <p>தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவில் மத்திய அரசு சட்டமுன்வடிவு இதுவரை கொண்டுவரப்படவில்லை - பிரேமலதா</p><p>தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா. நிதிப்பகிர்வில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது -  எம்எல்ஏ ராமச்சந்திரன்</p> <p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ ராமச்சந்திரன்</p><h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ செல்லசாமி</h2><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன்ற தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p><p>நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்களே எல்லோரும் பேச நேரம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 800-க்கு மேல் உயர்த்தினால் எப்படி பேச முடியும்?</p><p>பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.</p><p>மக்கள்தொகையில் குறைவாக உள்ள தமிழகம் போன் தென்பகுதி மாநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.</p> <p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு திமுக  உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில்</p><p>முதல்வர் தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது - செல்லசாமி</p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும். வரும் பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 3ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. </p><p>தற்போதைய மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 என்ற அளவிலேயே தொடர வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனையில் 6 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம் - முதலமைச்சர் விஜய்</p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகு மறுவரையறை குறித்து விவாதித்தோம்.</p><p>நாட்டின் மக்கள்தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><p>மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது. மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் விஜய்</p><p>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.</p><p>ஒரு பெண் அதிகாரம் பெற்றால் ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது நாடே உயர்கிறது - முதலமைச்சர் விஜய்</p> <p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கு தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது.</p><p>உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை  அல்ல சமூக நீதி.</p><p>மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ , பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயரி வந்துவிடும் என நினைப்பர் - முதலமைச்சர் விஜய்</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது - முதலமைச்சர் விஜய்</p><p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் கொண்டு வருகிறார்.</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p>தமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியதுதமிழ்நாடு சட்டசபை நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் அமர்வு தொடங்கியது</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today">தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</a></p> ]]></content:encoded></item><item><title>இந்து சமய அறநிலை, ஊரக வளர்ச்சி மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நியமனங்களில் நடப்பு நிலையே தொடர வேண்டும்: சி.பி.எம்.</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-hindu-religious-charities-rural-development-health-postings-should-continue#comments</comments><guid isPermaLink="false">3276f3f6-6d6e-4752-a907-cee8a7cd8809</guid><pubDate>Wed, 12 Aug 2026 11:29:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T11:29:22.648Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>CPM,சிபிஎம்,பெ சண்முகம்,P Shanmugam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெ. சண்முகம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vbl6ccmh/Pshanmugam0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</h2><p>இந்து சமய அறநிலையத் துறையில் இதுவரை கிரேடு 1 செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தில் சட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்வெழுதி அலுவலர்களாக முடியும் என்ற நிலை இருக்கிறது. கோயில் சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளை நிர்வகிக்க சட்ட அறிவு அவசியமானதாக இருக்கிறது என்பதால், துறையின் இணை ஆணையர் பதவிக்கு சட்டம் படித்து இருப்பது அவசியமானதாகும்.</p><p>நீதிபதியாக இருந்து வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு பூசல்களை தீர்க்கும் இடமாக இணை ஆணையர் பொறுப்பு நீதித்துறை சார்ந்து முக்கியமானதாக இருக்கிறது. இந்நிலையில் சட்டம் பயிலாதவர்களும் நேரடி நியமனத்தின் மூலம் உதவி ஆணையர்களாக, கிரேடு 1 செயல் அலுவலர்களாக நியமிப்பதற்கும், மேலும், அவ்விடங்களை வருவாய்த் துறையினரை வைத்து நிரப்புவதற்கும் தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 9-வது சட்டப் பிரிவை திருத்தி பிரிவு 2-ஐ ரத்து செய்ய உள்ளதாக அறிகிறோம்.</p><p>இது பொருத்தமற்றதும், அறநிலையத்துறை செயல்பாடுகளை முடக்குவதுமாகும். எனவே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><h2>ஊரக வளர்ச்சித் துறை</h2><p>இதேபோன்று, ஊரக வளர்ச்சித் துறையில் இதுவரை திட்ட இயக்குநர் பொறுப்புகள் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்டோ நிரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. தற்போது அந்த பணியிடங்களில் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர்களாக ஐ.எப்.எஸ். அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த பொறுப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லாத அதிகாரிகளை இப்படி நியமிப்பது தங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்கு உதவாது. எனவே, இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 2731 நாள் 28.07.2026-ஐ ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.</p><h2>மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை</h2><p>இதேபோன்று, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி, ஊரக மருத்துவ நலத்துறை மற்றும் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு துறை ஆகிய துறைகளின் இயக்குநர் பொறுப்புகளுக்கு தற்போதுவரை பதவி உயர்வின் மூலம் மருத்துவர்களால் நிரப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது, இந்த பொறுப்புகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.</p><p>இது மருத்துவத்துறையை சார்ந்த பணிகளை வேறு துறையில் பயின்றவர்களால் திறம்பட நிர்வகிக்க வாய்ப்பில்லை. எனவே, மேற்கண்ட 3 துறைகளிலும் தற்போதைய நிலையையே தொடர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு பெ. சண்முகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வடகிழக்குப் பருவமழை: முழு வீச்சில் தயாராகிறது பெருநகர சென்னை மாநகராட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/northeast-monsoon-chennai-corporation-prepares#comments</comments><guid isPermaLink="false">e310e33f-78d3-4302-b05b-d7dd799b800a</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:52:21 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:52:21.690Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Northeast Monsoon,சென்னை மாநகராட்சி,Flood Damage,வெள்ளப் பாதிப்பு,Greater chennai corporation,வடகிழக்குப் பருவமழை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Greater Chennai Corporation ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/bd4vniu8/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளவும், பொதுமக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுத் தயார் நிலையில் இயங்கி வருகிறது. மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத பாதிப்புகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மாநகராட்சி முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>உபகரணங்கள் <strong>மற்றும் இயந்திர</strong>ங்கள் தயார் நிலை</h2><p>மழைக்காலத்தில் வழக்கமாக ஏற்படும் நீர் தேக்கம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுதல் போன்ற புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அனைத்து விதமான கனரக உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் உடனடியாகப் பயன்படுத்தப்படும் ரம்பங்கள், மரம் அறுக்கும் கருவிகள், மின்சாரத் தேவைகளுக்கான ஜெனரேட்டர்கள், கழிவுநீர் மற்றும் மழைநீரை விரைவாக உறிஞ்சி வெளியேற்றும் அதிநவீன மோட்டார் பம்புகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவை பயன்பாட்டிற்குத் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>பாதிப்புகளை உடனுக்குடன் <strong>சரி செய்யத் தி</strong>ட்டம்</h2><p>மழைநீர் தேங்கும் இடங்களில் இருந்து தண்ணீரை உடனடியாக உறிஞ்சி வெளியேற்ற அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தயார் நிலையில் உள்ளன. சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பலத்த காற்றினால் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை நொடிப் பொழுதில் அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்க சிறப்பு மீட்புக் குழுக்களும் இயந்திரங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.</p><h2>துறைகள் <strong>ஒருங்கிணைப்பு</strong> மற்றும் கண்காணிப்பு</h2><p>சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மின்சார வாரியம் ஆகியவை இணைந்த மீட்பு ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைக்கால நிவாரணப் பணிகள் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய தாழ்வானப் பகுதிகளில் முதல் நிலை மீட்பர்களும் முன்னெச்சரிக்கையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>அரசினர் தீர்மானம் அவசியமற்றது!- டி.டி.வி.தினகரன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-says-government-resolution-is-unnecessary#comments</comments><guid isPermaLink="false">f44c21b5-f8d2-4c85-836e-b0fa6815afcb</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:33:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:33:13.355Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>AMMK,அமமுக,டிடிவி தினகரன்,TTTV Dhinakaran,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டி.டி.வி.தினகரன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wzwnxrae/TTVDhinakaran001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு எந்த ஒரு மசோதாவையும்  நாடாளுமன்றத்தில் கொண்டு வராத நிலையில் அதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசினர் தீர்மானம் அவசியமற்றது!</strong></em></p><p>அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நாடாளுமன்ற மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகவே இருக்க வேண்டும், மாநிலங்களுக்கான விகிதாச்சார அளவில் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் உள்ளிட்டவை அடங்கிய <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்துள்ளார்.</p><p>மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடாத நிலையில், காவிரி நீர், மேகதாது அணை, விவசாயிகள் பெற்ற முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் குளறுபடி, போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம்  மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற தமிழகத்தின் தற்போதைய தலையாய பிரச்சனைகளை மறைக்க, தொகுதி மறுவரையறை தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டியதோடு, தற்போது சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் என்ற மற்றொரு நாடகத்தையும் தவெக அரசு அரங்கேற்றியுள்ளது.</p><p>தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை தொடர்பாக பேசிவிட்டுச் சென்ற அடுத்த வாரமே எம்.பி.க்கள் கூட்டம், அதற்கு அடுத்த வாரமே அரசினர் தீர்மானம் என அவசரகதியில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, ஆளும் தவெக அரசை காங்கிரஸ் கட்சிதான் இயக்குகிறதோ? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உட்பட எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்பதோடு, நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவிகிதத்திலிருந்து 7.23 சதவிகிதமாக அதிகரிக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்திய பின்பும், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிப்படையும் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை தமிழக மக்கள் மத்தியில் தற்போது தவெக அரசு திட்டமிட்டு பரப்புவது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>எனவே, கடந்த மூன்று மாத கால தவெக ஆட்சியில் தினந்தோறும் எழும் மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பவும், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தனது இயலாமையை மறைக்கவும், இதுபோன்ற தற்போதைய அவசியமற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் கொண்டு வந்து காலத்தை வீணாக்காமல், தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும், அதன் முதலமைச்சர் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்: மெரினா காமராஜர் சாலை- அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/traffic-diversion-on-marina-kamarajar-salai-and-anna-salai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/traffic-diversion-on-marina-kamarajar-salai-and-anna-salai#comments</comments><guid isPermaLink="false">e6cbe685-d20f-4950-99d7-b16030aae921</guid><pubDate>Wed, 12 Aug 2026 10:16:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T10:16:44.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>போக்குவரத்து மாற்றம்,Independence Day,சுதந்திர தினம்,மெரினா காமராஜர் சாலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fbdx4jj6/traffic.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:title><media:description type="html"><![CDATA[ போக்குவரத்து மாற்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/fbdx4jj6/traffic.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தினத்தையொட்டி</a> மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றியதை பற்றி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை-அண்ணா சாலை- முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.</p><p>பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை -தலைமைச் செயலகம் வழியாக காமராஜா சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர்- வடக்கு கோட்டை பக்க சாலை-ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- முத்துசாமி சாலை- முத்து சாமி பாலம்- அண்ணாசாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.</p><p>அண்ணாசாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரி முனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை -வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.</p><p>சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days">வாகன</a> அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.</p><p>சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் போர் நினைவுச் சின்னம் கொடிமரச்சாலை முத்துசாமி பாலம்- முத்து சாமி ரோடு-வடக்கு கோட்டை பக்க சாலை- பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை- போர் நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்து சாமி பாலம் -முத்துசாமி சாலை- வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி கரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை - உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை, முத்து சாமி பாலம் -வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.</p><p>அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மின்கட்டண உயர்வு புகார்கள் குறித்து சிறப்பு ஆய்வு- தமிழக மின்சார வாரியம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-review-regarding-electricity-tariff-hike-complaints-tamil-nadu-electricity-board-statement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/special-review-regarding-electricity-tariff-hike-complaints-tamil-nadu-electricity-board-statement#comments</comments><guid isPermaLink="false">2b83246e-b9d6-4738-b63f-9c9e3b0bfb83</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:48:29 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:48:29.606Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TNEB,தமிழக மின்சார வாரியம்,மின் கட்டணம் உயர்வு,EB Hike</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8z9wxy01/TNEB.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தமிழக மின்சார வாரியம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக மின்சார வாரியம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/8z9wxy01/TNEB.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ  அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.</strong></em></p><p>மின்நுகர்வோர்களுக்கு கூடுதலாக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81">மின் கட்டணம்</a> வந்திருப்பதாக பொது மக்கள் பரவலாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டு உள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>மின் வாரியம் மாநிலம் முழுவதும் உள்ள 3.74 லட்சம் மின் இணைப்புகளை சிறப்பு ஆய்வு  செய்ய எடுத்துக்கொண்டது. இதில் நேற்று வரை 3.43 லட்சம் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/plan-for-officials-to-conduct-on-site-inspections-of-370-lakh-houses">மின் இணைப்புகள்</a> ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 0.75 சதவீதம் மின் இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. </p><p>மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணிலோ  அல்லது எக்ஸ் வலைத்தளத்தின் மூலமாகவோ தெரிவித்தால் உடனடியாக சிறப்பு ஆய்வு செய்யப்படும்.</p><p>200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1  கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்து உள்ளனர். இந்தத் திட்டத்தினால் ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். </p><p> மின் கட்டணத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மின் கட்டணம்  குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வருடம் ஜூலை மாதம் வரை தொடர்ந்த கோடை வெயிலினால் மின் பயன்பாடு அதிகரித்ததே பெரும்பாலோருக்கு மின் கட்டணம் உயர்ந்ததற்கு மூல காரணமாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆடி அமாவாசையான இன்று திருச்செந்தூரில் கடல் 80 அடி உள்வாங்கியது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-sea-receded-by-80-feet-at-tiruchendur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-sea-receded-by-80-feet-at-tiruchendur#comments</comments><guid isPermaLink="false">5b70bda2-45df-40c7-a7da-d1c312ef2089</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:17:22 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:17:22.378Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,aadi amavasai,ஆடி அமாவாசை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1lkhjbn5/sea.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruchendur temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1lkhjbn5/sea.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.</p><p>அந்தவகையில் ஆடி அமாவாசையான இன்று காலையில் கடல் 80 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பாக காணப்பட்டது.</p> <p>ஆடி மாத அமாவாசையான இன்று அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி கடற்கரையில் அந்தணர்கள் மூலம் எள், தண்ணீர் வைத்தும் சிலர் பிண்டம் வைத்தும் தர்ப்பணம் செய்து பின்னர் சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்தனர்.</p><p>இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.</p> <p>இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்- மாணிக்கம் தாகூர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-people-will-not-forgive-the-political-parties-of-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-people-will-not-forgive-the-political-parties-of-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">18ab3b65-7154-4568-8320-6968824b10a7</guid><pubDate>Wed, 12 Aug 2026 09:05:28 +0000</pubDate><atom:updated>2026-08-12T09:05:28.717Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,மாணிக்கம் தாகூர்,Manickam Tagore,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vwowdak3/manickamtagore.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:title><media:description type="html"><![CDATA[ மாணிக்கம் தாகூர்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vwowdak3/manickamtagore.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.</strong></em></p><p>தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2><strong>வரவேற்கிறேன்</strong></h2><p>மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, முதலமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.</p><p>கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட ‘<a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறை</a> மசோதா”வை, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டு வர ஒன்றிய பா.ஜ.க. அரசு திட்டமிட்டு வருகிறது.</p><h2><strong>அநீதி</strong></h2><p>ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்து விடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்.</p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். எனவே, அப்படிப்பட்ட கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் மன்னிக்க மாட்டார்கள்.</p><p>தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து பா.ஜ.க. அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்பிக்கவே முடியாது. தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச இளைஞர் தினம்- முதலமைச்சர் விஜய் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-international-youth-day</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-wishes-international-youth-day#comments</comments><guid isPermaLink="false">8b05ffc1-4737-4e40-abea-8626c764a0fd</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:45:12 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:45:12.244Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,International Youth Day,சர்வதேச இளைஞர் தினம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tkq80gax/Vijay07.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tkq80gax/Vijay07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.</strong></em> </p><p>ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ந்தேதி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சர்வதேச இளைஞர் தினம்</a> கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில், முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த <a href="https://www.maalaimalar.com/news/world/today-is-international-youth-day-best-wishes-to-the-young-community">சர்வதேச இளைஞர் நாள்</a> வாழ்த்துகள்!</p><p>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால்  உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!</p><p>உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்! </p><p>கனவுகள் நனவாகட்டும்! </p><p>சாதனைகள் தொடரட்டும்! என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!<br><br>புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால்  உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள்…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2087454361274470521?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சென்னையில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை- மாநகராட்சி கமிஷனர் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-commissioner-clarifies-property-tax-has-not-been-hiked-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-commissioner-clarifies-property-tax-has-not-been-hiked-in-chennai#comments</comments><guid isPermaLink="false">b2d1c566-6507-4fba-bc1f-2e07e7dfbbc8</guid><pubDate>Wed, 12 Aug 2026 08:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-12T08:32:05.617Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,சொத்து வரி,property tax</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o0136tll/chennaicorporation.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை மாநகராட்சி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o0136tll/chennaicorporation.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை மாநகராட்சியில் பொதுவான சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்றும், உண்மைக்கு மாறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.</strong></em></p><p><a href="https://www.maalaimlar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- </p><p>பெருநகர சென்னை மாநகராட்சியில், ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சொத்துவரி செலுத்தி வருபவர்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில், திருத்திய மதிப்பீடு செய்து அறிவிப்பு வழங்கப்பட்டவர்கள் இதன் மீது ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையருக்கு மேல்முறையீடு செய்திட வாய்ப்பளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.</p><p>எனவே சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக வரப்பெரும் உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: போலீசார் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-drone-fly-in-chennai-for-4-days#comments</comments><guid isPermaLink="false">7a33dfdc-e1d3-47c3-aa0f-e29b2ba64766</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:57:20.987Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DRONES,Independence Day,சுதந்திர தினம்,டிரோன்கள் பறக்க தடை,டிரோன்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ டிரோன்]]></media:title><media:description type="html"><![CDATA[ டிரோன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/p9h8fmzo/dron.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.</strong></em> </p><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி 80-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">சுதந்திர தின விழா </a>கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2><strong>தமிழகத்தில்</strong></h2><p>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் முதல் முறையாக  தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.</p><p>சென்னை மாநகரில் பி.என்.எஸ். பிரிவு 14 (2)படி டிரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள்  ஆகியவை பறப்பதற்கு கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. </p><p>இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் சுதந்திர தின பாதுகாப்பை கருத்தில் கொண்டு வருகிற 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களும் (அரசு ஏற்பாடுகள் தவிர ) தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் விஜய்  தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வரை உள்ள வழித்தடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும்  சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>4 நாட்கள்</strong></h2><p>இந்த நிலையில் வருகிற 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/80th-independence-day-5-layer-security-at-chennai-airport">சென்னைக்கு</a> வருகை தர உள்ளார். இதையொட்டி அந்த நாட்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 14-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகர பகுதிகளில் டிரோன்களை பறக்க விடக்கூடாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.</p><p>பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி,  தி.நகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக  அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்களுடன் ஆளில்லா வான்வழிகருவிகள் பறப்பதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த 4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  வாகன சோதனையையும் தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;சூரியன்&apos; குறித்து கருத்து சொன்ன அமைச்சர்- பதிலடி கொடுத்த ஓ.பன்னீர்செல்வம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/o-panneer-selvam-replay-to-minister-vinod#comments</comments><guid isPermaLink="false">162f5472-1b11-41ae-b7a7-42bc715a0ffe</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:51:47 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:51:47.045Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN Agriculture Budget,வேளாண் பட்ஜெட்,TN assembly,அமைச்சர் வினோத்,Minister Vinodh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் வினோத்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/vgh2zblx/OPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அரசின் பதிலுரை தொடங்கியது. இதில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர் வினோத் பதில் அளித்து பேசியதாவது:-</p><h2><strong>தொலைநோக்கு திட்டங்கள்</strong></h2><p>தி.மு.க. தலைவர் ஸ்டாலின் த.வெ.க. வேளாண் பட்ஜெட்டை வெற்று பட்ஜெட் என விமர்சித்திருந்தார். த.வெ.க.வின் வேளாண் பட்ஜெட் வெற்ற பட்ஜெட் அல்ல அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என கேட்டனர். லஞ்சம் இல்லாத ஆட்சியை முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தமிழகத்தின் இதயம் விவசாயிகளிடத்தில் உள்ளது.  ஓரிரு நாட்களில் தீர்க்க முடியும் என்றால் கடந்த ஆட்சி காலங்களில் ஏன் செய்யவில்லை? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதிய கால அவகாசத்தை எதிர்க்கட்சியினர் வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க தொலைநோக்கு திட்டங்கள் தேவை. </p><p>கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.  பொது ரகம், சன்ன ரகம் நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகை உயர்த்தியுள்ளார் முதலமைச்சர் விஜய். எங்கள் திட்டங்களை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. </p><p>விவசாயிகள் கோரிக்கைக்கேற்ப சிலவற்றை மேம்படுத்தி திட்டங்களின் பெயரை மாற்றியுள்ளோம். திட்டங்களின் பலனை மேம்படுத்தும் நோக்கில் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சியை விட கூடுதல் நிதி. அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட பரப்பளவை கண்டறியுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதம் மேல் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு முடித்த பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். </p><p>அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. நீங்கள் வந்தபிறகு சூரியனுக்கே வேர்த்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய முதலமைச்சருக்கும், பேரவை தலைவருக்கும் நன்றி. </p><p>இவ்வாறு அமைச்சர் வினோத் உரையை நிறைவு செய்தார். </p><p>அமைச்சர் வினோத் கூறியதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், வேளாண்துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார்கள். அதனை நாங்கள் எல்லோரும் கூர்மையாக கேட்டுக்கொண்டு இருந்தோம். அவருடைய பதிலுரை முடிவில் சூரியனுக்கே வேர்த்தது என்ற கருத்தை கூறியுள்ளார். இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறார். எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும் அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>இடைத்தரகர்கள் செலவினம், ஊழல் முற்றிலும் தடுப்பு..!- தவெக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட நிதியமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/completely-curbing-middlemens-spending-and-corruption-tvk-finance-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/completely-curbing-middlemens-spending-and-corruption-tvk-finance-minister#comments</comments><guid isPermaLink="false">4b57edac-c04b-45f1-9e0f-ad33a61705d9</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:17:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:17:13.029Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தவெக அரசு,TVK Govt,அமைச்சர் மரிய வில்சன்,Minister Mariya Wilson</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z955emp3/wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/z955emp3/wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வெற்றி அடைவதற்கு குறுக்கு வழியை அடையாமல் உண்மையுடன் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதற்கு முதல்வரே எடுத்துக்காட்டு.</p><p>அன்றும் இன்றும் என்றும் உண்மைக்கு புறம்பாக தவெகவினர் பேசுவதில்லை.</p><p>30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு முதல்வர் விஜய் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><p>குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்ற எம்ஜிஆர் வசனத்தை ரீ-டிரெண்ட் செய்து சாதித்தவர் முதல்வர்.</p><p>கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம் பாடலுக்கு முதல்வரே உதாரணம்.</p><p>எங்கள் தவறை திருத்தி உங்களிடம் இருந்து சிலவற்றை கற்றுக்கொண்டு மீண்டும் வலிமையாக நாங்கள் வருவோம்.</p><p>தமிழ் மொழி விவகாரத்தில் அன்று ஆவேசப்பட்டு விட்டேன். முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் என்னையும் ஒப்பிட்டு பேசினார்கள்.</p><p>நான் பிறந்தது திருவாரூர், வளர்ந்தது புதுச்சேரி, படித்தது சென்னை, தற்போது ஆர்.கே.நகர் தத்தெடுத்துள்ளது.</p><h2>வெற்றி பட்ஜெட்</h2><p>இடைத்தரகர்களுக்கு சென்ற வீணான செலவினம் தவெக அரசில் நிறுத்திவைப்பு. மத்திய அரசிடம் இருந்து நியாயமான நிதிப்பகிர்வு கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.</p><p>வரி மற்றும் வரி அல்லாத வருவாயில் அரசுக்கு ரூ.15,000 கோடி கிடைக்கும். எந்த பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி திட்டமும் நிறுத்தப்படவில்லை.</p><p>நடைமுறை திட்டங்கள் தொடர்வதுடன் தவெக அரசு புதிய திட்டங்களையும் செயல்படுத்தும். தவெக அரசு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.</p><p>சொந்த வரி வருவாய் வளர்ச்சி 12 சதவீதம் தான் சாத்தியம். திட்டம் அனுமதி பெறுவதற்கான ஊழல் தவெக அரசால் தடுக்கப்பட்டுள்ளது. </p><p>மாநிலத்தின் நிதிநிலை காரணம் காட்டி 28 மாதங்களுக்கு பின்னரே ஒரு திட்டத்தை நிறைவேற்றியது முந்தைய அரசு.</p><p>திட்டங்கள், அதன் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் தான் பெயர் மாற்றம், வெற்றி வீடு திட்டத்தில் முந்தைய ஆட்சி விட நிதி உயர்வு.</p><p>கடந்த ஆட்சியில் மேற்கொண்டுள்ள திட்டங்களை நகல் எடுக்காமல் பலன்களை மட்டும் மேம்படுத்தி உள்ளோம்.</p><p>பொதுமக்களும் பயனளிக்கும் திட்டங்களின் அறிவிப்பால் செலவினம் அதிகரித்துள்ளது. திமுக அரசு வழங்கிய டெண்டரில் உள்ள முறைகேடுகளை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>வட தமிழக கடலோர பகுதியில் அடுத்த வாரம் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-coastal-north-tamil-nadu-next-week</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chance-of-heavy-rain-in-coastal-north-tamil-nadu-next-week#comments</comments><guid isPermaLink="false">d71f850c-c8a4-4971-9262-c93dd0db7cf4</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:02:51 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:02:51.188Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,Southwest Monsoon,தென்மேற்கு பருவமழை,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/090pq3tz/rain003.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ கோப்புப்படம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/090pq3tz/rain003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல்  வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.</strong></em> </p><p>வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெயில் சுட்டெரித்த போதிலும் இரவு நேரத்தில் ஆங்காங்கே  லேசான மழை பெய்து வருகிறது.</p><p>மழை குறித்து சென்னை மண்டல வானிலை இயக்குனர் துரை கூறியதாவது:- </p><p>வட தமிழக  மாவட்டங்கள் தொடங்கி திருநெல்வேலி வரை  என 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இயல்பை விட 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடல் காற்று உள்ளே வந்து நில காற்றுடன் சேர்ந்து வீசுவதால் மாலை நேரங்களில் மழை பெய்கிறது. </p><p>தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும் அடுத்த வாரம் முதல்  வட தமிழக கடலோர மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/topic/கனமழை">கனமழைக்கு</a> வாய்ப்பு உள்ளது. வடமேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதிகளில் 17-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை இன்னும் 2 நாட்களுக்கு பெய்யக்கூடும்.</p><p>தென்மேற்கு பருவமழை குறையும் போது வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். வெப்பம் அதிகரிப்பதற்கு எல் நினோவும் ஒரு காரணம். </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>எங்கள் தலைவரே சாட்சி..!- குட்டிக்கதை சொல்லி உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-leader-as-witness-minister-maria-wilsons-moral-tale-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/our-leader-as-witness-minister-maria-wilsons-moral-tale-in-assembly#comments</comments><guid isPermaLink="false">12a1f1dc-052e-4e0d-85d3-110efe12018b</guid><pubDate>Wed, 12 Aug 2026 07:00:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T07:00:56.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,short story,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்,குட்டிக்கதை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/2fjc6jig/Maria-wilson.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Maria Wilson]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/2fjc6jig/Maria-wilson.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கினார்.</p><p>சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான பதிலுரையில் குட்டிக்கதை சொல்லி தனது உரையை நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.</p><h2>குட்டிகதையில்..</h2><p>அடுத்து இந்த தேசத்தை ஆளப்போவது யார்? என்று பெரியவர் ஒருவர் போட்டி வைத்திருக்கிறார். அதற்கு இஞைர்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். </p><p>அங்கு வந்த இளைஞர்கள் பெரியவரிடம் விதிமுறைகள் குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டனர்.</p><p>விதிமுறைகள் எல்லாம் கேட்ட பிறகு, அந்த பெரியவர், அனைவருக்கும் ஒரு விதையை கொடுத்தார். அப்போது, நீங்கள் 3 மாதங்களுக்கு பிறகு இந்த விதையை செடியாக வளரச்செய்து வாருங்கள் என்றார்.</p><p>3 மாதம் முடிந்து, இளைஞர்கள் வந்தார்கள். செடிகள் வளர்ந்து பூக்கள் வளர்ந்த நிலையில பெரியவரிடம் வந்தார்கள்.</p><p>ஆனால் ஒருத்தர் மட்டும், ஒன்றுமே வளர முடியாத நிலையில் தொட்டியை எடுத்து வந்து கொடுத்தார். அதை பார்த்து நிறையபேர் சிரிக்கிறார்கள். நகைக்கிறார்கள்..</p><p>அப்போது, அந்த பெரியவர் சொல்கிறார். இவர் தான் வெற்றி பெற்றார் என்று சொல்கிறார். அப்போது, மற்ற இளைஞர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த வெற்றி ஒரு பெரிய கேள்விக்குறியாகிறது? எப்படி இது சாத்தியம் என்று?</p><p>அதற்கு அந்தபெரியவர் சொன்னாராம். நாம் கொடுத்தது வேகவைத்த விதை. அது ஒருபோதும் முளைக்காது.</p><p>வெற்றி அடைவதற்காக பொய் சொல்லாமல் நேர்மையாக வந்த இவரை தான் நாங்கள் தேர்வு செய்கிறோம் என்று சொன்னாராம்.</p><p>வெற்றி அடைவதற்காகபொய் சொல்லாமல் குறுக்குவழியை கடைப்பிடிக்காமல், நேர்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி..</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் கனிமச் சட்டத்திருத்தம் தேவையற்றது!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mineral-law-amendment-that-causes-revenue-loss-to-states-is-unnecessary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-mineral-law-amendment-that-causes-revenue-loss-to-states-is-unnecessary#comments</comments><guid isPermaLink="false">8b1a3706-9db4-467e-b01c-932120cc3cc4</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:57:13 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:57:13.560Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,கனிம சட்டத்திருத்தம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1dt5xu2o/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/1dt5xu2o/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமையைப் பறிக்கும் வகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9டி என்ற புதிய பிரிவை சேர்ப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தக் கூடிய இச்சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.</p><h2><strong>அரசுக்கு வருவாய் இழப்பு</strong></h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவின் மூலம் சேர்க்கப்படவுள்ள 9டி பிரிவு மிகவும் ஆபத்தானது. அந்த பிரிவின்படி, கனிம வளங்கள் உரிமை மீது எந்த வரியையும், கூடுதல் வரியையும், தீர்வைகளையும் மாநில அரசுகள் தன்னிச்சையாக  விதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, மாநில அரசுகளால் ஏற்கனவே இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு, அதை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் இருந்தால், இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வரும் போது, நிலுவையில் உள்ள வரித் தொகையை செலுத்தத் தேவையில்லை. கனிமங்கள்,  அவை கிடைக்கும் நிலங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மத்திய அரசால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் மட்டும் தான் வரி விதிக்க முடியும்.</p><p>சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்த முன்வரைவு மாநில அரசின் வரி விதித்து, வருவாய் ஈட்டும் அதிகாரத்தைப் பறிக்கிறது. நிலங்கள், கனிமங்கள் ஆகியவை மாநிலப் பட்டியலில் இருந்தாலும் கூட, வரி விதிப்பை முறைப்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதை பயன்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.</p><p>2025-26ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட அம்சங்கள் மூலம் தமிழ்நாடு அரசு ரூ.4100 கோடி வருவாய் ஈட்டியது. 2026-27ஆம் ஆண்டில் இந்த வருவாயை ரூ.11 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழ்நாட்டின் கனிமவளங்கள் முறையாக கையாளப்பட்டால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு ஆகும். எந்தெந்த வகைகளில் எல்லாம் இந்த வருவாயை ஈட்ட முடியும் என்பதை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தெளிவாக விவரித்திருக்கிறது.</p><h2><strong>வருமானம் தடைபடும் ஆபத்து</strong></h2><p>சரக்குகள் மற்றும் சேவை வரி விதிப்பு சட்டம் 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பிறகு மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டு விட்டது. மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் மூலமாகத் தான் மாநில அரசுகள் தங்களுக்கான வருவாயைத் திரட்ட வேண்டியுள்ளது. அதையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றுவது மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களை முடக்கி மக்களுக்கு எந்த வகையான நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.</p><p>அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தான் இந்த சட்டத் திருத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றது. கனிமக் கொள்ளையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்ததைத் தொடர்ந்து கனிமக் கொள்ளைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றின் மீது பல்வேறு வரிகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தவணை முறையிலும் செலுத்தலாம் என்று சலுகை வழங்கப்பட்டதால், அவற்றில் பெரும்பாலான தொகை இன்னும் வசூலிக்கப்படவில்லை. இப்போது கனிமச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கனிமக் கொள்ளை நடத்தியவர்களிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய வருமானம் தடைபடும் ஆபத்து உள்ளது.</p><p>கனிமங்களைத் தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கில் கடந்த 25.07.2024ஆம் நாள் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாக அறிவித்தது. அந்தத் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தான் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தங்கள் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர, மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது. எனவே, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தின் உரிமைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-athav-arjuna-urges-unity-for-tamil-nadus-rights#comments</comments><guid isPermaLink="false">cfbcd6a8-9da9-4153-a4a4-7e1110de5ccc</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:21:48 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:21:48.187Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,Minister Adhav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Aadhav Arjuna]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/yozo3dxy/Adhav-arjuna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்தனர்.</p><p>இதில், திமுக, காங்கிரஸ், மஜக, மமக, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.</p><p>தொடர்ந்து, சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றியதாவது:-</p><p>மாநில சுயாட்சி இல்லாமல் இந்தியாவை உருவாக்க முடியாது என அண்ணா கூறி உள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதபோது அரசியலமைப்பில் முதல் தீர்மானம் கொண்டு வந்தது தமிழ்நாடு.</p><p>அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்தில் இருந்தாலும் தனித்தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.</p><p>அண்ணாவின் கொள்கை திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, அவரது கொள்கை வழியில் வந்தவர்கள் தவெகவினர்.</p><p>உயிருள்ள வரை மாநில சுயாட்சிக்காக இதே பேரவையில் குரல் கொடுத்தவர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா.</p><p>உள்ளாட்சி, கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றம் செய்யும்போது நாடாளுமன்றத்தில் ஏன் மாற்றம் கூடாது என கேட்கின்றனர்?</p><p>மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற விகிதாசாரத்தை உருவாக்கவில்லை அமெரிக்கா.</p><p>5,6 வடமாநிலங்கள் சேர்ந்தாலே ஒரு பிரதமரை உருவாக்கும் நிலையில் உள்ளது. அது மாற்றப்பட வேண்டும்.</p><p>அதிகாரம் குஜராத், உ.பி.க்கு மட்டுமல்ல, நமது குரல் அதிகாரம் பிரதமராக ஒலிக்க வேண்டும். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும்.</p><p>இன்றைய தீர்மானம் என்பது காங்கிரஸ் பாஜக என்பதல்ல, மாநில சுயாட்சியை நிலைநிறுத்துவதற்கு தீர்மானம்.</p><p>பேரவையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள பாஜக, காங்கிரசின் நிலை நாளை நாடாளுமன்றத்தில் நமக்கு வரக்கூடாது.</p><p>பாஜக உறுப்பினராக இருந்தாலும் இந்த தீர்மானத்தில் தமிழன் என்ற முறையில் செயல்படுங்கள்.</p><p>தொகுதி மறுவரையறையில் மு.க.ஸ்டாலின் தான் இதற்கு முதலில் குரல் கொடுத்தார் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். தென்னிந்திய விகிதாசாரம் குறைவதை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.</p><p>தமிழ்நாட்டிற்கான விகிதாச்சாரம் உயர்ந்தாலும் கூட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். வடகிழக்கு மாநிலங்களின் நிலை நமக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர்.</p><p>ரூ.1 தந்தால் நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறார்கள், நாம் உழைத்தாலும் நம்மால் அதிகாரத்தை உருவாக்க முடியா நிலை.</p><p>2026-க்கு பின் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தற்போது வேறு நிலை இருக்கலாம். ஆனால் மாநில சுயாட்சி பிரச்சனை ஒன்று சேருக.</p><p>தமிழ்நாட்டிற்கான பிரச்சனை என்றால் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்க வேண்டும்.</p><p>ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். தமிழக எம்பிக்கள் 39 பேரும் அவையில் இருந்த வெளிநடப்பு செய்யாமல், சட்டத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு அமைச்சர் வேண்டுகோள்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-announces-resolution-moved-by-the-chief-minister-in-the-assembly-passed#comments</comments><guid isPermaLink="false">4416fa4c-6bb4-43a9-a2ce-0fbbed1dce74</guid><pubDate>Wed, 12 Aug 2026 06:20:11 +0000</pubDate><atom:updated>2026-08-12T06:20:11.205Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/83p1jt8x/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுசீரமைப்பு</a> மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.</p><p>அதன்படி இன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்து முன் மொழிந்தார்.</p><p>அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><h2><strong>இதயத்தில் இருந்து பேசுகிறோம்</strong></h2><p>நமது குடும்பத்தில் இருக்கிற, நமது வீட்டில் இருக்கிற நமது பாட்டி, அம்மா, அக்காவை, தங்கையை பற்றிய ஒரு தீர்மானம். அதைபற்றி அவர்களுக்காக நமது இதயத்தில் இருந்து பேசுகிறோம்.  இதற்கு முன்னாடி இந்த விஜய்க்கு கிடைத்த இடத்துக்கும் இன்னிக்கு இந்த விஜய்க்கு கிடைத்திருக்கிற இடத்துக்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது என்னுடைய பாட்டி, அம்மா, தங்கைகள்தான். </p><p>அவர்கள் மிகப்பெரிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது.  அந்த நன்றி, விசுவாதத்தோடு, அப்படி ஒரு உணர்வோடுதான் இங்கு நின்று பேசுகிறேன். பெரிதாக பணம் இருந்தால் ஒரு வீட்டுக்கோ, பெரிதாக பொருளாதாரம் இருந்திட்டால் ஒரு நாட்டுக்கோ பெரிய பெயர் வந்து விடும் என்று சிலபேர் நினைக்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு நாட்டுக்கோ, வீட்டுக்கோ எப்போது பெரிய பெயர் கிடைக்கும் தெரியுமா?</p><p>அந்த வீட்டு பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால்தான் பெரிய பெயர் ஒட்டுமொத்த சமூகத்துக்கே கிடைக்கும். நமது தமிழ்நாட்டு மண்ணில் சங்க காலத்தில் இருந்து அன்றும் சரி, இன்றும் சரி மிகப்பெரிய ஆளுமையாக பெண் ஆளுமைகள் நிறைய பேர் இருக்கிறாங்க. </p><p>இன்று இந்த பேரவையின் வாயிலாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.  இது பெண்களுக்கான சலுகை அல்ல. அவர்களின் ஜனநாயக உரிமை. இது ஒருவருக்கான வெற்றி அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் வெற்றி. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயருகிறது. </p><p>ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம்பெறும்போது ஒரு நாடே உயருகிறது. மக்கள் தொகை மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை இணைப்பதால் ஏற்படும் காலதாமத்தின் காரணமாக பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டை ஒத்திவைக்கக் கூடாது என்றும், அதை விரைவாக அமல்படுத்த தகுந்த அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister">திமுக</a>, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், மனிதநேய ஜனநாயக கட்சி,  மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. </p><p>அதனை தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்பு, தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-supports-the-resolution-moved-by-the-chief-minister#comments</comments><guid isPermaLink="false">2fcee17a-e88d-4b59-ad30-3daa239fd312</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:49:35 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:49:35.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/wrkhcacw/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>தமிழக சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்தால் என்ன பாதிப்பு என நாட்டுக்கே முதலில் கூறியது தி.மு.க. தான். </p><p>எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். திமுக அமைச்சரவை கூட்டம் நடத்திய பின்னர் கடந்தாண்டு மார்ச்சில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. Fair Delimitation தலைப்பில் 5 மாநில முதல்வர்கள், 10 கட்சிகளுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுத்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க.வின் எதிர்ப்பால் தான் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support">தொகுதி மறுவரையறை</a> மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்ப்பட்டது. </p><p>2026 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழக எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். ஏப்.16-ல் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலை எரித்து திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை நடத்தக்கூடாது. 7.18 விகிதாச்சாரத்தை குறைக்கக்கூடாது எனக்கூறி த.வெ.க. அரசு கொண்டு வந்த தனித்தீர்மானத்தை தி.மு.க. ஆதரிக்கிறது. </p><p>மேலும், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதுடன் திமுக ஆதரிக்கிறது வரவேற்கிறது என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-motion-against-delimitation-mjk-mmk-support#comments</comments><guid isPermaLink="false">a7400be3-f821-462f-9ea9-87c564cfd722</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:45:46 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:45:46.348Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,மஜக,தொகுதி மறுவரையறை,Delimitation,tn cm vijay,மமக</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thamimun Ansari- Jawahirulla ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/b5gjf3o8/MJK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><h2>மனிதநேய ஜனநாயக கட்சி</h2><p>இந்நிலையில், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:-</p><p>தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. அதே சூழல் இங்கும் வரும்.</p><p>மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.</p><p>தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மனிதநேய மக்கள் கட்சி</h2><p>தொடர்ந்து, தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளார்.</p><p>மேலும்,"2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.</p><p>அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்க கூடாது" என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.</p><h2>காங்கிரஸ்</h2><p>தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.</p><p>வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு : அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engine-malfunction-indigo-flight-makes-emergency-landing-at-chennai-airport#comments</comments><guid isPermaLink="false">0f2bf13f-3205-4861-a840-73c9bb8e419e</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:40:30 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:40:30.229Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை விமான நிலையம்,Indigo Flight,chennai airport,Engine Malfunction,என்ஜின் கோளாறு,இன்டிகோ விமானம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IndiGo flight]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dyw98dtl/tt.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொல்கத்தாவில் இருந்து 224 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானத்தில், தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென இடதுபுற என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு 11:29 மணியளவில் விமான ஓட்டுநர் எஞ்சின் செயலிழந்ததை உணர்ந்து உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தி அனுப்பினார்.</p><h2>அவ<strong>சரநிலை பிரக</strong>டனம்</h2><p>இதனைத் தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உடனடியாக முழு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவ மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. என்ஜின் பழுது ஏற்பட்ட போதிலும், விமானி திறம்படச் செயல்பட்டு இரவு 11:37 மணியளவில் விமானத்தை ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><h2>பாது<strong>காப்பாக தரையிறக்க</strong>ப்பட்டது</h2><p>விமானத்தில் இருந்த 224 பயணிகளும் எவ்வித காயமுமின்றி பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து, இரவு 11:47 மணியளவில் அவசரநிலை திரும்பப் பெறப்பட்டு, விமான நிலையச் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: வி.சி.க., ஐயூஎம்எல் ஆதரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-vck-and-iuml-extend-support#comments</comments><guid isPermaLink="false">ddb1a40c-3a88-498f-8fa2-d95a0ca0a19f</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:33:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:33:03.844Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vck,தமிழக சட்டசபை,TN assembly,விடுதலை சிறுத்தைகள் கட்சி,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர்கள் வன்னி அரசு- ஷாஜகான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/zc2qcmvh/IUML.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.</strong></em> </p><p>அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி போன்றோர் நாடாளுமன்றத்திற்குள் பேசுவது வேறு, வெளியே பேசுவதும் வேறு. பிரதமர் மோடியும், அமித்ஷாவுடம் 2 வித நாடகம் நடத்துவதை வெளிப்படுத்தும் விதமான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகளிர் இடஒதுக்கீடுக்கு தடை இல்லாத போதும் <a href="https://www.maalaimalar.com/topic/தொகுதி-மறுவரையறை">தொகுதி மறுவரையறையுடன்</a> இணைத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டம். வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சமத்துவ நிலையை நீக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. இந்தி பேசும் மாநில எம்பிக்கள் எண்ணிக்கை உயரும். எனவே அவர்கள் மட்டுமே நாட்டை ஆளும் வாய்ப்பை பெறுவர். தொகுதி மறுவரையறை அனுமதிக்கக்கூடாது, அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு என்று தெரிவித்தார். </p><p>விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் கூறுகையில், </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution">தொகுதி மறுவரையறை</a> தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு IUML ஆதரவு தெரிவிக்கிறது. மத்திய பாஜக அரசு கொண்டு வரம் சட்டங்களும், திட்டங்களும் மக்களுக்கு விரோதமானதாகவே உள்ளது. நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்ச்சியில் தொகுதி மறுவரையறை. பாஜக வெற்றிபெறவே முடியாத தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் வகையில் தொகுதி மறுவரையறை. பல ஆண்டுகளை கடந்த அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தொகுதி எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படாத நிலையிலும் வருமுன் காக்கும் நோக்கிலேயே முதலமைச்சர் தனித்தீர்மானம் நிறைவேற்றம்.</p><p>இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-rejects-tn-govt-special-resolution-on-delimitation#comments</comments><guid isPermaLink="false">89047a35-1fc4-474d-b08a-9a1c2a894d1a</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:20:44 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:20:44.983Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/dvjtssl3/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு தொகுதி மறுவரையறை விகிதாசாரம் குறையக்கூடாது. </p><p>விகிதாசாரம் பாதிக்கப்படாததை உறுதிசெய்யுமாறு மத்திய அமைச்சரிடம் அதிமுக வலியுறுத்தி உள்ளது. </p><p>அதிமுகவின் கோரிக்கையை ஏற்று உறுப்பினர் எண்ணிக்கை குறையாது என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். 7.18 விகிதாசாரம் குறையக்கூடாது என்ற அதிமுகவின் நிலைப்பாட்டால், எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.</p><p>தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும்.</p><p>அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளது.</p><p>தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில் தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும்- பாமக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-member-says-chief-minister-must-withdraw-the-resolution#comments</comments><guid isPermaLink="false">56261064-1dee-4bd5-a8ba-a125f4559f9d</guid><pubDate>Wed, 12 Aug 2026 05:08:16 +0000</pubDate><atom:updated>2026-08-12T05:08:16.623Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,PMK,பாமக,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் - முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/5ywns5lx/PMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார்.</strong></em> </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறை</a> தொடர்பான தீர்மானத்தின் மீது பா.ம.க. எம்.எல்.ஏ.கணேஷ் குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-</p><h2><strong>பா.ம.க. எதிர்க்கும்</strong></h2><p>தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.வில் கூட ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வைத்துள்ளது. பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். உள்ளாட்சிகளிலேயே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support">தொகுதி மறுவரையறை</a> செய்யப்படுகிறது.</p><p>மக்கள் தொகை அடிப்படையில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் பா.ம.க. எதிர்க்கும். ஒவ்வொரு தொகுதியிலும் 14 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர்.  தொகுதி மறுவரையறையை 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி செய்தால் பா.ம.க. கடுமையாக எதிர்க்கும்.</p><p>செவி வழி செய்தியை வைத்து தொகுதி மறுவரையறை தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.  தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தாக்கல் செய்த தீர்மானத்தை முதலமைச்சர் திரும்பப் பெற வேண்டும். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏற்கனவே இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு என்றது போல் ஆகி விடும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர என்ன அவசரம்?- பாஜக எம்.எல்.ஏ கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/bjp-mla-questions-urgency-of-resolution-against-constituency-delimitation#comments</comments><guid isPermaLink="false">3b360caa-0c04-4611-9dc0-0900980e3f3d</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:56:40 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:56:40.022Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,எம்.எல்.ஏ போஜராஜன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP MLA Bhojarajan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/gyu7q8zl/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>இந்நிலையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டசபையில் பேசியதாவது:-</p><p>சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டு வரும் அவசரம் என்ன? </p><p>மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம ஒன்றே மாறாதது.</p><p>அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது.</p><p>மாற்றத்தை நாம்  ஏற்க வேண்டும். அதே வேளையில் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். </p><p>தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் உள்ளது. அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்தே கொண்டு வரப்படுகிறது. </p><p>பெண்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.</p><p>தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித்தீர்மானம்: சிபிஐ, சிபிஎம் ஆதரவு- தே.மு.தி.க. நிலை? </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/separate-resolution-against-constituency-delimitation-cpi-and-cpm-extend-support#comments</comments><guid isPermaLink="false">cf4accac-7eae-41d0-a485-9e8d9f7ad8c7</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:50:52 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:50:52.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ தீர்மானத்தின் மீது உரையாற்றிய உறுப்பினர்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/eah4i4oj/cpi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறையை</a> எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.  அப்போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும். பெண்களுக்கான அரசாக, அவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அரசாக இந்த அரசு இருக்கும்.  பெண்களுக்கான அரசியல் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கானது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி வரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைக்கக் கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் சமஅளவில் பெண்கள் உள்ளதால் அவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். ஆகையால் உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament">முதலமைச்சர்</a> தனித்தீர்மானத்தின் மீது முதலில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை. பேச அனுமதிக்குமாறு எ.வ.வேலு கோரிக்கை விடுத்தார். </p><p>மற்ற கட்சிகள் பேசிய பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் பேசலாம் என அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் கூறினார். </p><h2><strong>ஆதரவு</strong></h2><p>இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது. முதலில் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ செல்லசுவாமி பேசினார். </p><p>அப்போது, முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது, வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்கள் எல்லோரும் பேச நேரம் இல்லை. பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலக்ஙளில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம்.  மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய நமக்கு மத்திய அரசு இதை ஒரு தண்டனையாக கொடுக்கிறது. மக்கள் தொகையை கணக்கெடுக்காமலேயே புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநில உரிமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. வடமாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதே பாஜகவின் நோக்கம் என்றார். </p><p>இதையடுத்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை  ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், </p><p>தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கு பாதிப்பாக அமையும். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் தொகுதிவரையறை மசோதா. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் சவால். குடும்பக் கட்டுப்பாட்டை கறாராக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உ.பி., பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சாதகமாகிவிடும் என்றார். </p><p>இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், </p><h2><strong>எதன் அடிப்படையில் தனித்தீர்மானம்?</strong></h2><p>தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்ட முன்வடிவை மத்திய அரசு இதுவரைகொண்டு வரவில்லை. சட்ட முன்வடிவை கொண்டுவராத நிலையில் எதன் அடிப்படையில் தமிழக அரசு தனித்தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது? மக்கள் தொகையை காரணம் காட்டி தமிழ்நாட்டு எம்.பி.க்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது. 815 எம்.பி.க்கள் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டால் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும். தமிழ்நாட்டுக்கான எம்பிக்கள் உயரும்போது நமது மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் பேசமுடியும். 10 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி. என இருக்கும் நிலையில் அது 8 லட்சம் பேருக்கு ஒரு எம்பி என மாறும். தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் இது- முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-time-to-boost-womens-representation-in-assembly-and-parliament#comments</comments><guid isPermaLink="false">e9b8157f-60b8-4449-9565-f94792f167e9</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:29:24 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:29:24.519Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை கூட்டம்,தொகுதி மறுவரையறை,Delimitation Bill,முதலமைச்சர் விஜய்,tn cm vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/o4x8h2b4/Vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.</p><p>அதில், மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>மாநிலங்களுக்கு இடையிலான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி தனித் தீர்மானம்.</p><p>மக்களவை, சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.</p><p>முன்னதாக, தீர்மானம் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-</p><p>நமது குடும்பத்தில் உள்ள பாட்டி, அம்மா, அக்கா, தங்கையை பற்றிய தீர்மானம் இது. மிகப்பெரிய பணம் இருந்தால் வீட்டுக்கோ, பொருளாதாரம் இருந்தால் நாட்டுக்கோ பெரிய பெயர் வந்துவிடும் என நினைப்பர். </p><p>பெண்கள் தனிப்பட்ட முறையில் சமூகத்தில் உயர்ந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நல்ல பெயர் வரும்.</p><p>பெண்கள் இடஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, சமூக நீதி. </p><h2>2026 சட்டமன்றத்தில்..</h2><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில், 2026 சட்டமன்றத்தில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில் ஆண்டுகளை விட பெண்கள் தான் அதிக ஓட்டு போட்டுள்ளனர். பெண்களுக்கான முன்னுரிமை வழங்குவதில் இந்தியாவுக்கே தவெக அரசு முன்னுதாரணமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டால் பெண்களின் தலைமை பண்பும் நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>2021-ல் 12 பெண்கள் இருந்த நிலையில் 2026 சட்டசபையில் 26 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பெண்களின் வெற்றி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. </p><p>அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் நடத்திய ஆலோசனையில் தொகுதிமறுவரையறை குறித்து விவாதித்தோம். நாட்டின் மக்கள்தொகையில் சம அளவில் பெண்கள் உள்ளதால் அவர்களும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.</p><h2>மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு</h2><p>மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்க கூடாது, மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே தொடர வேண்டும். 543 என்ற அளவிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக வைக்க வேண்டும்.</p><p>வரும் பொதுத்தேர்தல்களில் பெண்களுக்கு 3-ல் 1 என்ற அளவில் இடமளிக்க வேண்டும். </p><p>இவ்வாறு அவர் கூறி, தொகுதி மறுவரையறைவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். </p>]]></content:encoded></item><item><title>ரேஷன் கடை வேலை நேரம் மாற்றம்?- ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/change-in-ration-shop-working-hours-officials-ordered-to-review-the-matter#comments</comments><guid isPermaLink="false">17acbf8d-1c98-466a-a2eb-ac667dfddd63</guid><pubDate>Wed, 12 Aug 2026 04:04:03 +0000</pubDate><atom:updated>2026-08-12T04:04:03.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,ரேஷன் கடை,ration shop</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:title><media:description type="html"><![CDATA[ ரேஷன் கடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/04r2jmko/rationshop.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரேஷன் கடை வேலை நேரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</strong></em></p><h2><strong>மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்</strong></h2><p>தமிழ்நாடு அரசு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88">ரேஷன் கடை</a> பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது ரேஷன் கடைகள் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதிய இடைவேளை நேரம் நீட்டிக்கப்பட்டு, பணி நேரம் சுமார் 12 மணி நேரமாக உள்ளது. இதனால் பணியாளர்கள் மனச்சோர்வுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு வெள்ளிக்கிழமை வேலை நாளாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் உள்ளது. ஆனால், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் இருப்பதால், விடுமுறை நாட்கள் யாருக்கும் பயனுள்ளதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆய்வு செய்ய உத்தரவு</strong></h2><p>எனவே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-procedure-for-quality-rice-at-ration-shops">ரேஷன் கடை</a> வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மாதத்தின் முதல் 2  வெள்ளிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.</p><p>இந்த கோரிக்கை மனுவின்படி, மாற்றங்களைச் செயல்படுத்தினால் கள அளவில் ஏற்படும் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து, அது குறித்து அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட துணைப்பதிவாளர்களுக்கு பொது வினியோகத்திட்டத்தின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>அருகாமையில் வசிப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாமா?- நெடுஞ்சாலை ஆணையம் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/highways-authority-inform-can-nearby-residents-travel-through-toll-plazas-without-paying-a-fee#comments</comments><guid isPermaLink="false">f1e92d79-c477-41ce-b5ed-d4aed1d21ded</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:46:20 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:46:20.572Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,National Highways Authority,Toll plaza,சுங்கச்சாவடி,கட்டணம்</media:keywords><media:content height="350" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg" width="615"><media:title type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சுங்கச்சாவடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/7m0ie7mr/tollgate.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா? என்பது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><h2><strong>சுங்கச்சாவடிகள்</strong></h2><p>தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஒட்டிகளிடம் இருந்து <a href="https://www.maalaimalar.com/topic/சுங்கச்சாவடி">சுங்கச்சாவடி</a> மூலமாக வசூலித்து வருகிறது.</p><p>நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.</p><h2><strong>கட்டணம் இன்றி...</strong></h2><p>இந்தநிலையில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.</p><p>சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.</p><h2><strong>உள்ளூர் மாதாந்திர பாஸ்</strong></h2><p>அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்து. உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது.</p><p>ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.</p><p>சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சென்னை - மதுரையில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-7-locations-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nia-raid-at-7-locations-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">051aa7c4-ff19-40c7-8048-391149c7a22d</guid><pubDate>Wed, 12 Aug 2026 03:03:56 +0000</pubDate><atom:updated>2026-08-12T03:03:56.667Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,போதைப்பொருள் கடத்தல்,Drug trafficking,NIA Raid,என்ஐஏ சோதனை,தமிழ்நாடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NIA Raid]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2024/04/22/2097618-nia.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.</p><h2>என்.ஐ.ஏ.</h2><p>போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் தீவிரவாத குழுக்களும் செயல்பட்டு வருவதால் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">என்.ஐ.ஏ.</a> என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு தொடர்ந்து அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.</p><p>இதுபோன்ற சோதனை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே பல முறை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.</p> <h2>தமிழகத்தில் சோதனை</h2><p>அந்த வகையில் தமிழகத்தில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் இன்று காலை 7 மணியில் இருந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.</p><p>சென்னையில் வண்ணாரப்பேட்டை, திருமுல்லைவாயில், போரூர் உள்பட 6 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p> <h2>மதுரை</h2><p>மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்  தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். </p><p>3 மணி நேரம் வரை நடத்தப்பட்ட இந்த  சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>சோதனையை முடித்து  என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சோதனை காரணமாக தனியார் குடியிருப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. </p> <h2>அந்தமான்</h2><p>அந்தமானில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ.அதிகாரிகள் மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் தடுப்பு சோதனை யை மேற்கொண்டனர். இதில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் நாடு முழுவதும் பல்வேறு நபர்களோடு தொடர்பில்  இருந்தபடி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. </p> <h2>தொழில் அதிபா்கள் </h2><p>அந்தமானில் பிடிப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்திற்கும் போதைப் பொருட்களை கடத்தி புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்று சென்னையில் 6 இடங்களில் ஒரே நேரத்தில் டெல்லி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.</p><p>தொழில் அதிபா்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சோதனை தொடர்பான விரிவான தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p>சோதனை முடிவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p> <h2>தமிழக அரசு நடவடிக்கை</h2><p>தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கு தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைப்புகளில் ஒன்றான என்.ஐ.ஏ.வும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் - சட்டசபையில் இன்று தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/resolution-against-constituency-delimitation-to-be-tabled-in-assembly-today#comments</comments><guid isPermaLink="false">e0228e91-0042-4d3e-95fb-e9223bdc030d</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:38:06 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:38:06.154Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,தொகுதி மறுவரையறை,Delimitation,Constituency Delimitation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN Assembly]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/tx5fkhcs/tnassembly.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadav-arjuna-answer-to-eps-speech-in-tn-assembly">தமிழக சட்டசபையில்</a> நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. </p><p>நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வெளிநாட்டு நன்கொடை மசோதாவுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் நேற்று 2 தீர்மானங்கள் நிறைவேறின. இந்த மசோதாக்களுக்கு பா.ஜ.க. தவிர அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.</p> <p>சட்டசபையில் இன்று இதுதொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.</p><p>நாடாளுமன்ற <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88">தொகுதி மறுவரையறைக்கு</a> எதிராக கடந்த 8-ந்தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. புறக்கணித்தது.</p><p>இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.</p> <p>இந்நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய இருக்கிறார். இதை வழிமொழிந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். ஏற்கனவே, தி.மு.க., அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானத்தின் மீது கடுமையான விவாதங்கள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-august-2026#comments</comments><guid isPermaLink="false">a3c449d5-f099-414e-8242-4ebc0475b347</guid><pubDate>Tue, 11 Aug 2026 03:54:39 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:18:18.362Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/lbx76f8s/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/special-resolution-against-neet-exam-and-fcra-tn-assembly-toady">நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித்தீர்மானம்!</a></p><p>* நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p>* நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் மருத்துவ கனவு கொண்ட லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&nbsp;</p><p>சட்டசபையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.</p><p>சட்டசபையில் இன்று 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.</p><p>3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>செய்வதை மட்டும் தான் சொல்வோம் என கூறி அள்ளித்தெறித்த வாக்குறுதிகளை தவெக அரசு மறந்துவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்</p><p>பெயர் மாற்ற பட்டியல் போல் வெளியாகி உள்ளது தமிழக பட்ஜெட் - ஓபிஎஸ்</p><p>திருப்புகின்ற பக்கமெல்லாம் திமுக ஆட்சியின் திட்டங்களே பட்ஜெட்டில் உள்ளன - ஓபிஎஸ்</p><p>புதிய அரசின் திட்டங்களை தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன் - ஓபிஎஸ்</p><p>உரிமைத்தொகை உயரவில்லை, 6 சிலிண்டர் என எந்த அறிவிப்பும் வராததால் மகளிர் ஏமாற்றம்  - ஓ.பன்னீர்செல்வம்</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்க்க நிதி ஒதுக்கீடு திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகவில்லை - ஓ.பன்னீர்செல்வம்</p><p>இடம் மாறியதால் துதி பாட வேண்டாம் என ஓபிஎஸ்-க்கு அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.</p><p>முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் பதில்</p><p>படத்தை காட்டி ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை - ஓபிஎஸ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன்</h2><p>செங்கோட்டையன் இடம் மாறினாலும் அவரது பாக்கெட்டில் புகைப்படம் மாறவில்லை.</p><p>ஓபிஎஸ் இடத்தை மட்டும் அல்ல இதயத்தையும் மாற்றிவிட்டார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓபிஎஸ், யார் படத்தை தற்போது வைத்துள்ளார் - ஆதவ்</p><p>அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் இதயத்தில் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய தேவையில்லை - ஓபிஎஸ்</p><p>மாணவர் இடைநிற்றலை தவிர்ப்பதற்கான திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பில்லை -  ஓபிஎஸ்</p><p>மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்திலும் இலவச பயணம் என்ற விடியல் பயண திட்டம் அறிவிக்கப்படவில்லை - ஓபிஎஸ்</p> <p>5 ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நிறைவேற்றுவோம், ஓபிஎஸ் சொல்வதை போல் 3 மாதத்தில் சரித்திரம் படைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் ஸ்டாலின், எனவே அவர் படத்தை வைத்துள்ளேன் - ஓபிஎஸ்</p><h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் நிலை இருக்கும், நான் எப்படிப்பட்டவன் என அனைவருக்கும் 200% தெரியும்.</p><p>பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வரவில்லை.</p><p>வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கி கொண்டிருக்கின்றன.</p><p>கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர்.</p><p>தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என முதலமைச்சருக்கு இப்போது தெரிந்திருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p><p>மின் கட்டணம், நூல் கட்டணம் உயர்வு, நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் தூங்குகிறது. மாநிலத்தை திராவிட மாடல் அரசு கடன் கடலில் ஆழ்த்திவிட்டதாக பிரசாரம் செய்கிறது தவெக அரசு.</p><p>அடுத்த 50 ஆண்டுகள் வரை கடன் இன்றி யாரும் ஆட்சி செய்ய முடியாது என நிதித்துறை செயலரே கூறுகிறார். கடன் குறித்த முதலமைச்சர் விஜயின் விமர்சனம் தவறு என்பது தற்போது புரிகிறதா? என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <h2>ஓ.பன்னீர்செல்வம்</h2><p>மாநில வரி வருவாயை உயர்த்த புதிய திட்டமோ அணுகுமுறையோ இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை. வெள்ளை அறிக்கை தயாரிக்க காட்டிய முனைப்பை வருவாய் உயர்த்தும் திட்டத்திற்கு காட்டவில்லை.</p><p>திராவிட மாடல் அரசில் பொறுப்பான நிதி மேலாண்மை செய்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை குறை சொல்லக்கூடாது. அரசு கடன் வாங்காமல் இருக்க முடியாது, கடன் வாங்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியது என்பதுதான் முக்கியம்.</p><p>தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்டத்தின் அடிப்படையில் எல்லை கோட்டை மீறி எந்த அரசும் கடன் வாங்க முடியாது. வருவாய் மதிப்பீட்டை கணிப்பது தொடர்பான தவெக அரசின் கணக்கீட்டில் நம்பிக்கை இல்லை.</p><p>மூலதன செலவு குறைவாக இருக்கும்போது கடன் பெறுவதற்கு என்ன காரணம் என கேள்வி எழுகிறது. திராவிட மாடல் உருவாக்கிய வலுவான அடித்தளத்தில் நிற்கும் தவெக அரசு அதன் பலனை பயன்படுத்தி வருகிறது.</p><p>மத்திய அரசின் மானியங்களும் மூலதன செலவில் குறைப்பும் தான் வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க காரணம். நிதி, அதிகார பகிர்வுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.</p><p>மக்கள் நலனில் ஸ்டாலினை மிஞ்சி யாரும் சிந்திக்க முடியாது என்பதை புலப்படுத்துகிறது தவெகவின் பட்ஜெட் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.</p> <p>திமுகவினர் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் என தவெக எம்எல்ஏ சுகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.</p><p>உங்களுக்கும் சிபிஐ வழக்குகள் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பதில் அளித்தார்.</p><p>வார்த்தைகள் மற்றவரை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என எம்எல்ஏ சுகுமாருக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார்.</p><p>மக்கள் குறையை சரிசெய்ததன் விளைவு தான் தவெக ஆட்சியில் உள்ளது - சூலூர் எம்எல்ஏ சுகுமார்</p><p>முதல்வர் எப்போது அழைப்பார் என்ற நிலை மாறி தற்போது முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தாலே பயமாக இருக்கிறது - அமைச்சர் ஆனந்த்</p><p>முன்னர் ஆட்சியில் இருந்தோர் பட்டா வழங்கியதாக கூறினார்கள். பட்டா உள்ளது இடம் எங்கே என கேட்கின்றனர் மக்கள்.</p><p>பட்டாவுடன் இடத்திற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என கூறி உள்ளோம் - கால்நடைத்துறை அமைச்சர்</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.</p><p>பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள் - சவுமியா</p><p>பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>வேளாண் பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு பாமக சார்பில் நன்றி, வாழ்த்துகள்.</p><p>கால்நடை, பால்வளம், நீர்ப்பாசனம் வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் மிகமிக குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வீட்டில் பெண்கள் பட்ஜெட் போடும்போது சாப்பாடுக்கு உரிய நிதி ஒதுக்காமல் இருப்பார்களா?</p><p>ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம்  நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.</p><p>ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை - சவுமியா அன்புமணி</p> <p>தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>கானல் நீராக அரசு வேலை இருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.</p><p>3000 பணியிடத்திற்கு 30,000 பேர் தேர்வெழுதும் நிலை, அந்தளவுக்கு வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்கள் தவிக்கின்றனர்.</p><p>அரசு பணிக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும் கூட பணி கிடைப்பதில்லை  - சவுமியா அன்புமணி</p> <p>நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.</p><p>முதல்வருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  - அமைச்சர் ஆனந்த்</p><p>மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும் - கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி</p><p>பட்ஜெட் மீதான விவாதத்தில் கொமதேக எம்எல்ஏ நித்தியானந்தன் உரையாற்றினார்.</p><p>விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் குறைவு தான்.</p> <p>பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும். முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாதது ஏமாற்றம் - நித்தியானந்தன் </p><p>பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம் குறித்து தவறான புரிதல் உள்ளது. ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் 2.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்.</p><p>பிஏபி பிரதான மற்றும் கிளை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும்.</p><p>தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் -  நித்தியானந்தன் </p> <p>வேட்டி, சேலை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் மைக்ரோ டெக் பார்க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீர்த்தனா</p><p>தமிழ்நாட்டை வழிநடத்திய திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்களின் அனுபவ பாடங்களை இளம் தலைமுறையினர் கேட்க வேண்டும்.</p><p>அரசியல் களத்தில் பார்வைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் அனுபவசாலிகளின் அறிவுரைகளை கேட்கலாம் -  நித்தியானந்தன் </p> <p>நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.</p><h2>சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உரை</h2><p>மருத்துவக்கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும். மருத்துவக் கல்வி வசதி படைத்தவர்களுக்கான மட்டும் அல்ல.</p><p>முன்னர் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.</p><p>பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை - கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டது.</p><p>நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்து விட்டது. ஒரு நாள் நடக்கும் தேர்வு மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது.</p><p>நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பலன் பெறுகின்றன.</p><p>நீட் தேர்வால் பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. நீட் தேர்வு - விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பயிற்சி கிடைப்பதில்லை. சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.</p><p>நீட் தேர்வில் தோல்வி அடைபவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் உள்ளது.</p><p>தமிழக சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்</p><p>நீட் தேர்வு எழுதாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவர் ஆனவன் நான். ஐஆர்எஸ் ஆவதற்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றியவன் நான் - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>நமது மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிடாதீர்கள். தரமான கல்வியை கொடுத்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்.</p><p>நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது.</p><p>தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் தாழ்வுமனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.</p><p>நீட் பயிற்சி முகாமை அரசே நடத்த வேண்டும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏ போஜராஜன் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.</p><h2>சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் உரை</h2><p>நீட் தேர்வால் ஏற்படும் மனஅழுத்தத்தால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>சமூக நீதியின் வேரில் வெந்நீரை ஊற்றுகிறது நீட்.</p><p>நாடு முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல் போல் முறைத்துள்ளன.</p><p>நீட் மட்டுமல்ல எந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.</p><p>நீட் ரத்து தீர்மானத்தை ஆதரிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.</p><h2>சிபிஐ எம்எல்ஏ செல்லசுவாமி உரை</h2><p>கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது பெரிய துரோகம். அரசுப்பள்ளி மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை</p><h2>சவுமியா அன்புமணி உரை</h2><p>நீட் ரத்து தீர்மானத்தை பாமக ஆதரிக்கிறது.</p><p>2006-ம் ஆண்டே நீட் தேர்வு கொண்டு வர இருந்தபோது அன்புமணி அதனை தடுத்தார்.</p><p>நீட்டில் 110 மதிப்பெண் எடுத்த மாணவர் வசதியாக இருந்தால் மருத்துவராகலாம்.</p><p>590 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவரால் மருத்துவராக முடியவில்லை.</p><p>ஆண்டுக்கு 23 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே சீட் கிடைக்கிறது.</p><p>மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நீட், CUTE உள்ளிட்ட எந்தவிதமான நுழைவுத்தேர்வும் வைக்கக்கூடாது.</p><p>சமூக நீதி, அரசு பள்ளி மாணவர், கிராமப்புற மாணவர், ஏழை மாணவர்களுக்கு எதிரானது நீட் தேர்வு. நீட் கோச்சிங் என்பது மிகப்பெரிய வணியமயமாகி விட்டது.</p><p>இதுவரை நீட் தேர்வால் நாடு முழுவதும் 500 மாணவர்கள் உயிரிழப்பு, தமிழ்நாட்டில் மட்டும் 50 பேர் உயிரிழப்பு. இந்த முறை நீட் வினாத்தாள் கசிவு, அதன்பின் நடந்த தேர்வு நடைமுறைகளால் மட்டும்  13 மாணவர்கள் பலியாகி உள்ளனர் - சவுமியா அன்புமணி</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு - ஓ.எஸ்.மணியன்</p> <h2>ஓ.எஸ்.மணியன் உரை</h2><p>நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது.</p><p>திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p>மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக.</p><p>நீட் பாதிப்பில் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக 31 பேர் உயிரிழந்துள்ளது.</p> <p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக்கட்சி ஆதரவு - தமிமுன் அன்சாரி</p><h2>தமிமுன் அன்சாரி உரை</h2><p>நீட் ரத்து கருத்தியலை நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும்.</p><p>நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவருவதை ஒரு சடங்காக செய்யக்கூடாது. நிரந்தர தீர்வு தேவை.</p><p>பாஜக ஆளாத இதர மாநிலங்களிலும் தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.</p><h2>திமுக எம்எல்ஏ முத்துராஜா உரை</h2><p>நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியபடி தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.</p><p>இந்தியாவிலேயே நீட் தேர்வை முதல்முதலில் எதிர்த்தவர் கலைஞர் கருணாநிதி. 2017-ல் அமலுக்கு வந்த நீட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக.</p><p>நீட் விலக்கு தொடர்பாக 12 மாநில முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.</p> <p>நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்திற்கு சரியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனரா? என தவெக அரசு விளக்கம் தர வேண்டும்.</p><p>நீட் மட்டும் தான் உலகமா? என தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்.</p><p>மருத்துவம் மட்டும் தான் படிப்பா? பிளம்பர், கார்பெண்டருக்கு நிறைய தேவை இருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார் - திமுக எம்எல்ஏ முத்துராஜா</p><p>நீட் தொடர்பான தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை. இதில் மாணவர் நலனே முக்கியம். </p><p>நீட் விவகாரத்தில் பாஜகவை தவிர தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளோம். </p><p>நீட் விவகாரத்தில் திமுக என்ன செய்துள்ளது என்பது எங்களுக்கும் தெரியும், ஆதாரம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>பலனடையும் ஒரு சில குழந்தைகளை விட பாதிக்கப்படும் குழந்தைகளே அதிகம்.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா வீட்டின் தரையில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் விஜய்.</p><p>அனிதாவின் மதிப்பெண்ணை டீசர்ட்டாக அணிந்தவர் நமது முதலமைச்சர் விஜய்.</p><p>ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசினாலும் அந்த மாமனிதன் முதலமைச்சர் விஜயை அவமதிக்க முடியாது - அமைச்சர் ராஜ்மோகன் </p><p>நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் திமுகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் காந்தி செல்வன் - அமைச்சர் ஆதவ்</p><p>நீட் இந்தியா முழுவதும் கொண்டு வந்தார்கள். ஆனால் அதனை தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஏற்கவில்லை. </p><p>நீட் தேர்வு இந்தியா முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் கலைஞர் கருணாநிதி  - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி</p><p>நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு - உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்</p><p>மாணவர்கள் சமூகத்திற்கு இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என தனித்தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக்களத்தில் ராகுல்காந்தி நின்று கொண்டிருக்கிறார் - அமைச்சர் விஸ்வநாதன்</p> <p>டெல்லி போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p><p>பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.</p><p>வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும்.</p><p>மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்.</p><p>FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். FCRA மசோதாவிற்கு எதிராக தவெக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.</p><p>மத்திய அரசு கொண்டுவந்த FCRA மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறது.</p><p>இன்று 2 முக்கியமான தீர்மானங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு தேமுதிக சார்பில் நன்றி.</p><p>நேரலையில் பேரவை நிகழ்வை காண்பிக்க வேண்டுமென கேப்டன் விஜயகாந்த் கோரிக்கை வைத்த நிலையில் இன்று நிறைவேற்றம் - பிரேமலதா</p><h2>பிரேமலதா உரை</h2><p>தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து நேற்று இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் தேமுதிக சார்பில் ஆதரவு.</p><p>தமிழ்மொழி தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காதவர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் மொழி மட்டுமே பேசினார்.</p><p>இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து உரித்தாகும்.</p><p>நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு.</p><p>நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் இறுதி சடங்கில் தகனமேடைக்கு அருகே நின்று அஞ்சலி செலுத்தினார் கேப்டன்.</p> <p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு - எம்எல்ஏ போஜராஜன்</p><h2>பாஜக எம்எல்ஏ போஜராஜன் உரை </h2><p>FCRA வேண்டாம் என சொல்லவில்லை. திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியதால் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நல்ல சமூக திட்டங்களுக்காக வரும் பணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு இல்லை, அதனை வரைமுறைப்படுத்துவதே நோக்கம்.</p><h2>அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி</h2><p>வெளிநாட்டில் இருந்து வரும் பணம் முறையாக செலவழிக்கப்படுகிறதா? என கண்காணிக்கவே மசோதா.</p><p>FCRA பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றால் சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் அபாயம் உள்ளது. நேர்மையாக நடத்தப்படும் நிறுவனங்கள் நடைமுறை சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.</p> <h2>மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா உரை</h2><p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்க்கும் தீர்மானத்திற்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு.</p><p>தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிக்க வருமான வரித்துறை இருக்கும்போது FCRA எதற்கு?</p><p>FCRA சட்டமே தேவையற்றது. அதில் சட்டத்திருத்தமும் தேவையற்றது.</p><p>தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் தான் பணம் வருகிறது. அதுவும் கண்காணிக்கப்படுகிறது.</p><p>வெளிநாட்டு நிதி வங்கிகள் மூலம் தான் வரும் போது புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?</p> <p>நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு சிபிஎம் ஆதரவு</p><p>சிறுபான்மை அமைப்புகளுக்கு வரும் நிதி பறிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் - சிபிஎம்</p><p>சிறுபான்மையினருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது - சிபிஎம்</p><p>நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த FCRA மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு திமுக ஆதரவு - எம்எல்ஏ ஆஸ்டின்</p><h2>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் உரை</h2><p>சிறுபான்மையினரால் நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலே FCRA திருத்த மசோதா </p><p>16 சிறுபான்மை நல அமைப்பினருடன் திமுக எம்பி வில்சன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மசோதா குறித்த பேசினார்.</p><p>சிறுபான்மை அமைப்புகளின் தொண்டு நிறுவனங்களை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போல் செயல்படுகிறது FCRA.</p><p>50 ஆண்டுகளாக நாம் கட்டிக்காத்த சமூக நல அமைப்புகள் ஒரே கையெழுத்தில் மத்திய அரசின் கைக்கு சென்று விடும்.</p><p>இது சட்டத்தின் பெயரில் துப்பாக்கி முனையில் அடிக்கப்படும் கொள்ளை மட்டுமல்ல சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் கொள்ளை. இந்த தீர்மானத்தை மத்திய பாஜக அரசு திரும்பப்பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு ஐயுஎம்எல் ஆதரவு - அமைச்சர் ஷாஜகான்</p><h2>அமைச்சர் ஷாஜகான் உரை</h2><p>தமிழ்நாட்டில் 50% உயர்கல்வி அடைவதற்கு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் காரணம்.</p><p>வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.</p><p>உயர்கல்வியில் 50% படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தான் காரணம்.</p><p>முதல்வர், பேரவை தலைவர், அமைச்சர், நான் உள்பட பலர் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனத்தில் தான் படித்தோம்.</p><p>FCRA திருத்த மசோதா சட்டமானால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். மத்திய அரசின் நோக்கம் நாட்டை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்வதா? சிறுபான்மை நிறுவங்களை முடக்குவதா? அமைச்சர் ஷாஜகான் </p><p>FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டசபையில் இயற்றிய தீர்மானத்திற்கு விசிக ஆதரவு - அமைச்சர் வன்னிஅரசு</p><h2>அமைச்சர் வன்னிஅரசு உரை</h2><p>நீட் விலக்கு, FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானம் இரண்டுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள்.</p><p>FCRA மசோதா எதிர்ப்பு தீர்மானத்தை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம்.</p><p>நேற்று தான் சிறுபான்மை அமைப்பினருடன் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இன்று தீர்மானம்.</p><p>கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என விவிலியத்தில் கூறியதை  நிஜத்தில் நிறைவேற்றி உள்ளார் முதல்வர்.</p><p>RSS திட்டங்களை கொண்டுவருவதை தான் பாஜக அரசு வேலையாக வைத்துள்ளது.</p><p>அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக வைப்பதுதான் பாஜகவின் வேலை.</p><p>கிறிஸ்தவர்களை குறிவைத்து தான் FCRA திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.</p><p>தொண்டு நிறுவனங்களை முடக்க, சொத்துக்களை அபகரிக்க ஏற்கனவே 4 முறை பாஜக அரசு சட்டத்திருத்தம். 4 முறை சட்டத்திருத்தம் கொண்டு வந்த பாஜக இப்போது கிறிஸ்தவ அமைப்பை முடக்குவதை நோக்கமாக புதிய சட்டம் கொண்டுவர முயற்சி</p><p>காலம் காலமாக கல்வி நிறுவனங்களை நடத்திவரும் கிறிஸ்தவ அமைப்புகள் நடைமுறையில் சிறு தவறு செய்தால் சொத்தை முடக்குவதா? - அமைச்சர் வன்னிஅரசு</p><p>FCRA சட்டதிருத்த மசோதா மூலம் இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிகம் பாதிக்கப்படும் - அமைச்சர் வன்னிஅரசு</p><p>FCRA சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.</p><p>வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்</p><h2>எடப்பாடி பழனிசாமி (அதிமுக) உரை</h2><p>புதிய அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.</p><p>தவெகவை போல திமுகவும், அதிமுகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளன - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாள்கள் தான்.</p><p>100 நாள் செயல் திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும்.</p><p>வெள்ளை அறிக்கையில் மாநில வரி வருவாய் கணிசமாக கசிந்துள்ளதாக தவெக அரசு கூறியுள்ளது.</p><p>2026-2027 வரி வருவாயைப் பார்க்கும்போது நிதி மேலாண்மையை சீர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது - எடப்பாடி பழனிசாமி</p><p>அடுத்த 6 மாதங்களில் 8000 கோடி கிடைக்க வேண்டுமென்றால் அது ஏன் வரி வருவாயில் சேரவில்லை -எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி.</p><p>ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும்.</p><p>வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை.</p><p>நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.</p><p>இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்தி விடுவீர் என்பதில் சந்தேகமில்லை.</p> <p>பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p> <h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.</p><p>பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் சில இடங்களில் பேசினால் தான் தீர்வு காண முடியும்.</p><p>தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும் </p><h2>எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு</h2><p>தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.</p><p>காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால் தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.</p><p>ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக்கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.</p><h2>பணியிடங்கள்</h2><p>மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாக தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.</p><p>ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை 5 முதல் 7% வரை உள்ளதால் காலி பணியிடம் அதிகரித்துள்ளது.</p><p>விரைந்து செயல்பட்டால் தான் காலிப்பணியிடங்களை நிரப்ப முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>அனைத்து குக்கிராமங்களையும் இணைக்கும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளையும் ஏசி பேருந்துகளாக தரம் உயர்த்த முதலமைச்சர் கூறி உள்ளார் - அமைச்சர் தமிழன் பார்த்திபன்</p><p>ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கி கண்டமான பேருந்துகளை ஒதுக்கிவைத்து விட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்.</p><p>நெல், கரும்புக்கு தவெக அரசு அறிவித்த ஊக்கத்தொகை போதாது.</p><p>அதிமுக அரசு இருந்தபோது 2 முறை விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். இப்போது விவசாயிகள் காத்திருக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி </p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>தவெக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.</p><p>வறட்சியால் தவிக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>உழவன் செயலி</h2><p>அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.</p><p>விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.</p><p>தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும்.</p><p>சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><h2>எடப்பாடி பழனிசாமி உரை</h2><p>கலப்பின பசுக்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகள் நலனை காக்கும் வகையில் அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>3 மாவட்டங்களை உள்ளடக்கிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் உள்ள சிறுசிறு குறைபாடுகளை நீக்க வேண்டும்.</p><p>அத்திக்கடவு-அவினாசி திட்டம் கட்டம் 2-ஐ செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p><p>மாசடைந்த அமராவதி, நொய்யல் ஆறுகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> <p>நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.</p><p>மத்திய அரசு 60% மாநில அரசின் 40% பங்களிப்புடன் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.</p><p>காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்திற்கு தேவையான திட்ட அறிக்கை முன்னதாக தயாரிக்கப்பட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>இந்த ஆட்சியில் ஒரு கட்சியில் வெற்றி பெற்று ராஜினாமா செய்கிறார்கள். உடனே வேறு கட்சியில் சேருகிறார்கள். 'குதிரை பேரம்' இதனை தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.</p> <p>ஜெயலலிதா இருந்த வரை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உங்களுடைய நலனுக்காக டெல்லியில் சரணடைந்தீர்கள். எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைகின்றனர். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக்கழகத்தில் பயணிக்கின்றனர்- ஆதவ் அர்ஜூனா</p><p>குதிரை பேரம் குறித்து அதிமுக- தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மாறி மாறி முழக்கமிட்டதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>திமுகவும், அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>திமுக, அதிமுக ஒன்றாக சேர்ந்து பேசுகிறோம் என்று சபாநாயகர் கூறினார், அது தேவையற்றது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>எடப்பாடி பழனிசாமி இறுதியாக பேசியது ஆத்திரம் மூட்டும் வகையில் இருந்தது- முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</p><p>பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தேவையில்லாத கருத்துகளை சட்டசபையில் பதிவு செய்திருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி</p><p>நாங்கள் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியது போல், அமைச்சர் ஆதவ் கூறியதையும் சபாநாயர் நீக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி</p><p>சட்டசபையில் சபாநாயகர் எழுந்து நின்ற பின்பும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சல் போடுவது சரியல்ல- ராஜ்மோகன்</p><p>ஆக்கப்பூர்வ, ஆரோக்கியமாக கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம்- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>குதிரைபேரம் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது, கூவத்தூரில் நடந்தது பற்றி நாங்கள் யாரும் பேசவில்லை- அமைச்சர் ராஜ்மோகன்</p><p>மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார், அவ்வாறு உயர்த்தப்படவில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-regulation-committee-urges-daily-release-to-tamil-nadu">தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தலா 1 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!</a></p><p>* டெல்லி கூட்டத்தில் தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறக்க பரிந்துரை</p><p>* ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் விரைவில் இறுதி முடிவு</p>]]></content:encoded></item><item><title>சுதந்திர தின விழா - மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/independence-day-celebrations-5-layer-security-for-madurai-airport#comments</comments><guid isPermaLink="false">5013d0c3-6eb1-46e4-9c2b-566ec9475475</guid><pubDate>Wed, 12 Aug 2026 02:17:38 +0000</pubDate><atom:updated>2026-08-12T02:17:38.674Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>madurai airport,மதுரை விமான நிலையம்,Independence Day,சுதந்திர தினவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai airport]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-12/70wi82rw/maduraiairport.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 20-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.</strong></em></p> <h2>சுதந்திரதின விழா</h2><p>நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE">சுதந்திர தின விழா</a>, கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு <a href="https://www.maalaimalar.com/news/national/modi-urges-people-to-take-developed-india-pledge-on-i-day">மத்திய அரசின்</a> அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.</p><h2>மதுரை விமான நிலையம்</h2><p>மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலைய உள்வளாகம், விமான நிலைய ஓடுபாதை, விமான நிலைய சுற்றுப்புற கண்காணிப்பு கோபுரங்கள், விமான நிலைய வெளிவளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p> <h2>சோதனை</h2><p>24 மணி நேரமும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும், மோப்பநாய் படை பிரிவினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் உடைமைகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.</p>  <h2>பார்வையாளர்களுக்கு தடை</h2><p>இதுதவிர விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளான பெருங்குடி, சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு வருகிற 20-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையே, மதுரை மாநகர பகுதியில் உள்ள விடுதிகள் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோல, ரெயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிர்த்த வழக்கு - எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-the-dropping-of-disqualification-proceedings-against-aiadmk-mlas-high-court-issues-warning</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-challenging-the-dropping-of-disqualification-proceedings-against-aiadmk-mlas-high-court-issues-warning#comments</comments><guid isPermaLink="false">c92f3cf4-de11-4604-93a6-d9c5b26d3e74</guid><pubDate>Tue, 11 Aug 2026 16:04:26 +0000</pubDate><atom:updated>2026-08-11T16:04:26.310Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தகுதி நீக்க நடவடிக்கை,disqualification proceedings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bn4rgc22/New-Project-2026-08-11T213401.942.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதை எதிர்த்த வழக்கு - எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/bn4rgc22/New-Project-2026-08-11T213401.942.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம்மீது, கொறடா உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவாக 25 அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.</p><p>இதையடுத்து 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. </p><p>அதே போல, தங்கள் தரப்பு கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.</p><p>இதனிடையே தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களில் 21 பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால், அவர்கள் மீதான தகுதி நீக்க புகாரையும் இபிஎஸ் திரும்பப் பெற்றார். மீதமுள்ள 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.</p><p>அதே போல, 22 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் விஜயபாஸ்கர் அளித்த மனுவையும் திரும்பப் பெறுவதாகக் கூறி கடிதம் அளித்தார். இரு கடிதங்களையும் ஏற்றுக் கொண்ட சபாநாயகர், 43 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தார்.</p><p>இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர்,&nbsp; சட்டப்படி 15 நாட்களுக்குள் மன்னிப்பளித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளதால் தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. </p><p>இதனால் மனுதாரர் கட்சி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளது?&nbsp; இந்த பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளோம் என்று எச்சரிக்கை செய்தனர்.</p><p>நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து,&nbsp; தள்ளுபடி செய்து&nbsp; உத்தரவிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-order-allocating-constituency-funds-for-mlas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-order-allocating-constituency-funds-for-mlas#comments</comments><guid isPermaLink="false">1e9406e3-2556-44e2-abd8-1e51cab020b0</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:45:35 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:45:35.791Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Government of Tamil Nadu,Constituency Fund,தொகுதி நிதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3rnly1ic/New-Project-2026-08-11T211438.452.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/3rnly1ic/New-Project-2026-08-11T211438.452.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.3.54 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. </p><p>234 சட்டமன்ற தொகுதிக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.54 கோடி வீதம் ரூ.828.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. </p><p>பொதுமக்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றவும், தொகுதிப் பங்கீட்டுப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நிதி விடுவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான 18% ஜிஎஸ்டி வரியை அரசே ஏற்கும் கடந்த திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ளுதல், சுகாதாரம், தொகுதிக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், பொதுக்கட்டடம் தொடர்பான பணிகள் இந்த நிதியின் கீழ் மேற்கொள்ளப்படலாம். </p>]]></content:encoded></item><item><title>குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/notification-for-the-group-2-and-group-2a-preliminary-examination-candidates-can-apply-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/notification-for-the-group-2-and-group-2a-preliminary-examination-candidates-can-apply-starting-today#comments</comments><guid isPermaLink="false">42c99e75-f494-479e-bcbf-b01db3a01beb</guid><pubDate>Tue, 11 Aug 2026 15:12:03 +0000</pubDate><atom:updated>2026-08-11T15:12:03.860Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TNPSC,Group 2,குரூப் 2,டிஎன்பிஎஸ்சி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v2u2awkz/New-Project-2026-08-11T204134.961.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு அறிவிப்பு... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-11/v2u2awkz/New-Project-2026-08-11T204134.961.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. </p><p>இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் ΙΙΑ பணிகள்) க்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (11.08.2026) வெளியிடப்பட்டுள்ளது.</p><p>தேர்வர்கள் 11.08.2026 முதல் 09.09.2026 பி.ப. வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். </p><p>ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) க்கான முதல் நிலைத் தேர்வு 01.11.2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குரூப் 2 மற்றும் குரூப் 2A என்பது தமிழ்நாடு மாநில அரசுப் பணிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தால் நடத்தப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வாகும். </p><p>துணைப் பதிவாளர் மற்றும் நகராட்சி ஆணையர் முதல் வருவாய் அலுவலர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் வரையிலான பதவிகளுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.</p>]]></content:encoded></item></channel></rss>