<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Sat, 01 Aug 2026 11:27:30 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 1 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-august-2026-2#comments</comments><guid isPermaLink="false">6db1f91d-b4f2-4888-b10e-353b9e4cce34</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:01:38 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:21:09.669Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/4ievmxyy/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver">பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</a></p><p>* தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். </p><p>* இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/e20-fuel-policy-petrol-would-have-hit-rs125-per-litre-during-iran-war-centre">E20 எரிபொருள் கொள்கை: ஈரான் போரின் போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.125 ஆக உயர்ந்திருக்கும்- மத்திய அரசு விளக்கம்!... </a></p><p>*சர்வதேசப் பொருளாதாரப் பாதுகாப்பைக் காரணம் காட்டி E20 கொள்கையை மத்திய அரசு தீவிரமாக நியாயப்படுத்தி வருகிறது.</p><p>*ஒரே வாரத்தில் 4-வது முறையாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu">தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: 'உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை'-ராகுல் காந்தி பரபரப்பு.</a>.. </p><p>*தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம்.</p><p>*அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/nature-belongs-to-no-one-karnataka-cm-dk-shivakumar">'இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல..': கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல... </a></p><p>*அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.</p><p>*காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் வழிகாட்டுதல்கள் மற்றும் அணைகளின் நீர்வரத்து சூழலைக் கருத்தில் கொண்டு, இயல்பான நீர் திறப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk">எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</a></p><p>* ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. </p><p>* கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-released-tax-share-of-rs-4466-crore-to-tamil-nadu">தமிழ்நாட்டிற்கான  ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு</a></p><p>* அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p><p>* பீகாருக்கு ரூ.10,845 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/el-nino-threat-southwest-monsoon-india-weather-centre-warning">எல் நினோ அச்சுறுத்தல்: இந்தியாவின் தென்மேற்கு பருவமழை மீண்டும் பாதிக்குமா?-வானிலை மையம் எச்சரிக்கை!... </a></p><p>*பசிபிக் பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாற்றத்தால் உருவான 'சூப்பர் எல் நினோ' மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.</p><p>*இந்தியாவின் விவசாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்குவது தென்மேற்கு பருவமழையாகும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-aftermath-cji-event-postponed-at-last-minute">CJP போராட்டம் எதிரொலி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ஒத்திவைப்பு!... </a></p><p>*மும்பையில் உள்ள நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனமான 'டாட்டா சமூக அறிவியல் கழகத்தின்' (TISS) 86வது பட்டமளிப்பு விழா, பாதுகாப்பு மற்றும் போராட்ட அச்சம் காரணமாகக் கடைசி நிமிடத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>*நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் விமானம் மற்றும் ரெயில்கள் மூலம் மும்பை வந்து சேர்ந்துவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today" rel="nofollow">3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</a></p><p>* திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. </p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>* பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/only-reel-apology-cjp-chief-abhijit-deepke-slams-modi-video">'ரீலில் மட்டும்தானா மன்னிப்பு?'- பிரதமர் மோடியின் வீடியோவுக்கு CJP தலைவர் அபிஜீத் தீப்கே சரமாரி கேள்வி!... </a></p><p>*ஜந்தர் மந்தர் போராட்டத்தில் தமக்கு எதிராகவும், தமது மறைந்த தாயார் குறித்தும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய மாணவர்களை மன்னிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டார். </p><p>*போராட்டங்களில் பங்கேற்ற சாதாரண மாணவர்கள் மற்றும் குற்றப்பின்னணி இல்லாத இளைஞர்கள் மீதான வழக்குகளை விடுவிக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/russian-missile-drone-attack-on-ukraine-capital">உக்ரைன் தலைநகர் மீது டிரோன் தாக்குதல் - 3 பேர் பலி!</a></p><p>* கீவ் குடியிருப்புகள் சேதம், வணிக கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன </p><p>* இடிபாடுகளில் சிக்கிய பலர் படுகாயம், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case" rel="nofollow">த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</a></p><p>* செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>* முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>* கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... </p><p>* தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி</a></p><p>* காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார்.&nbsp;</p><p>* கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/new-mega-international-airport-in-andhra-pradesh-opened-by-modi" rel="nofollow">இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்- ஆந்திராவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்</a></p><p>* பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு. </p><p>* பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/jammu-kashmir-kulgam-attack-on-migrant-workers-two-killed">ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி... </a></p><p>*பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>*இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-independence-day-drone-ban-till-aug-16">சுதந்திர தின பாதுகாப்பு: டெல்லியில் ஆகஸ்ட் 16 வரை டிரோன்கள் பறக்கத் தடை-காவல்துறை உத்தரவு!... </a></p><p>*இந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>*சம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/swaraj-is-my-birthright-father-of-indian-nationalism">சுயராஜ்யம் எனது பிறப்புரிமை: தேசியவாதத்தின் தந்தை லோக்மான்ய திலகரின் நினைவு தினம் இன்று!... </a></p><p>*மக்களிடையே ஒற்றுமையையும் தேசபக்தியையும் உருவாக்க, வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த 'விநாயகர் சதுர்த்தி' வழிபாட்டைப் பொதுமக்களுக்கான விழாவாக மாற்றினார். </p><p>*சிறையில் இருந்த காலத்தில் அவர் எழுதிய 'கீதா ரஹஸ்யம்' என்ற நூல், பகவத் கீதையின் கடமை மற்றும் தியாகக் கருத்துக்களை விளக்கும் ஒரு தலைசிறந்த படைப்பாக இன்றளவும் போற்றப்படுகிறது.</p><p>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை-தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</p><p>* மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><p>*   நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post" rel="nofollow">திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</a></p><p>* தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல்?</p><p>* ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing" rel="nofollow">முறைகேடு விவகாரம்: டாஸ்மாக் முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</a></p><p>* சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.</p><p>* டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டம்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tnpl-cricket-ticket-sale-starts-today">டி.என்.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்</a></p><p>* போட்டி வருகிற 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2 கட்டமாக நடத்தப்படுகிறது. </p><p>*  கல்லூரி நுழைவுவாயிலில் அமைக்கப்பட்ட கவுண்ட்டரில் இன்று தொடங்குகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-cylinder-price-reduced-by-rs200" rel="nofollow">வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது!</a></p><p>*  வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை.</p><p>*  வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/this-is-my-first-and-last-mistake-15-year-old-girl-apologises-for-remarks-against-pm-modi">'இதுவே எனது முதல் மற்றும் கடைசி தவறு': பிரதமர் மோடியை விமர்சித்த 15 வயது சிறுமி பகிரங்க மன்னிப்பு!...</a></p><p>*எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்த தவறு மன்னிப்புக்கு உரியது அல்ல. நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை.</p><p>*சிறுமி நோய்டாவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-1-8-2026">GOLD PRICE TODAY: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம் </a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rainfall-in-keralam-two-death">கேரளத்தில் மீண்டும் நிலச்சரிவு - 2 பேர் உயிரிழப்பு</a></p><p>* அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். </p><p>* கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப்பகுதிகிளில் நிலச்சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</a></p><p>* முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><p>* ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today">தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</a></p><p>* அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன.</p><p>* 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். </p>]]></content:encoded></item><item><title>பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pmk-president-anbumani-ramadoss-how-can-farmers-be-forced-to-repay-crop-loans-with-interest-after-announcing-a-loan-waiver#comments</comments><guid isPermaLink="false">d4161871-0f37-4e35-9474-b8d5e96674b7</guid><pubDate>Sat, 01 Aug 2026 11:19:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T11:19:44.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தவெக அரசு,TVK Govt</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்கள் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், கடன் பெற்ற விவசாயிகள் அதற்கான தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்கள் அறிவிக்கை அனுப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வறட்சி பாதிப்பால் ஏற்கனவே வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை இத்தகைய அறிவிக்கைகள் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது கண்டிக்கத்தக்கது.</p><h2>வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்</h2><p>மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் பெற்ற  விவசாயிகள் அனைவருக்கும் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், அரசால் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியை பெறுவதற்கு தகுதி பெற்ற உழவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை அரசால்  விடுவிக்கப்படும் வரை, கடன் பெற்ற உழவர்கள் தவறாமல் தவணை செலுத்த வேண்டும்.</p><p>அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்களின் கடன்கள் தவணை தவறிய கடன்களாக கருதப்படும். கடன் தொகை இறுதி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு விடுவிக்கும்போது அந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளிம் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதே போன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களும் பயிர்க்கடன் பெற்ற உழவர்களுக்கு இதே போன்ற  அறிவிக்கையை அனுப்பியுள்ளன. இதனால் உழவர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த நிர்வாக அணுகுமுறை மிகவும் தவறானது.</p><h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>கடந்த காலங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து சில நாள்களில் அரசாணை பிறப்பிக்கப்படும். அந்த நாளில் உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விடும். அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதனால், உழவர்கள் நிம்மதி அடைவதுடன் அடுத்த பருவத்திற்கு பயிர்க்கடன் பெறுவதற்கும் தகுதி பெறுவார்கள்.</p><p>ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அரசு கடன் தொகையை செலுத்தும் வரை விவசாயிகள் கடன் தவணையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதும், தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை உழவர்களின் சேமிப்புக் கணக்கில்தான் செலுத்தப்படும் என்பதும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாகும்.</p><h2>நேர்மையுடன் செயல்படாத த.வெ.க. அரசு</h2><p>பயிர்க்கடன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலாகவே நேர்மையுடன் செயல்படவில்லை. சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும்  எதிர்ப்பு தெரிவித்ததால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையின் அளவை ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது. இப்போது  கடன் தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.</p><p>தமிழக உழவர்கள் ஏற்கனவே வாழ முடியாத அளவுக்கு துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு, குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு அரசுத் தரப்பில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை பயிர்க்கடன்களை செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும்.</p><p>தமிழக அரசு மற்றும் கூட்டுறவுத் துறையின் தவறான அணுகுமுறையும், நிர்வாகக் குளறுபடிகளும்தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, உழவர்களிடம் பயிர்க்கடன் தவணைகளைக் கேட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என கூட்டுறவு சங்கங்களுக்கு ஆணையிட வேண்டும். கடன் தள்ளுபடி தொகையை உடனடியாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும்.</p><p>இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் பல பிரிவுகளாகச் செயல்படும் காங்கிரஸ்: &apos;உட்கட்சிப் பூசலே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை&apos;-ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rahul-gandhi-warns-factionalism-blocking-congress-progress-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">173dea37-2db9-4612-bffb-1f2cf2070fbd</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:46:02 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:46:02.215Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Tamil Nadu,தமிழ்நாடு காங்கிரஸ்,Congress Party,காங்கிரஸ் அணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/o0xbzbsn/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். </p><p>இந்த நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிந்து தனித்தனியாகச் செயல்பட்டு வருவது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2><strong>உட்கட்சிப் பூசல் தான் பெரிய சவால்:</strong></h2><p>பயிற்சி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்குப் பிரதானக் காரணம் உட்கட்சிப் பூசல்களும், பல்வேறு அணிகளாகக் நிர்வாகிகள் தனித்து இயங்குவதுமே ஆகும் என வேதனை தெரிவித்தார். "கட்சியின் உட்கட்சிப் பிரச்சனைகளே காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன" என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>ஒற்றுமையின் முக்கியத்துவம் :</strong></h2><p>மாநில அளவில் தலைவர்களிடையேயும் தொண்டர்களிடையேயும் ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுவது, களத்தில் கட்சியின் செயல்பாடுகளைப் பாதிப்பதாக மேலிடத்திற்குப் பல்வேறு புகார்கள் சென்ற வண்ணமாக இருந்தன. இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் இந்த நேரடி விமர்சனம் மற்றும் எச்சரிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.</p><p>அரசியல் களத்தில் வலுவான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டுமானால், தலைவர்கள் தங்கள் சொந்த நலன்களைத் தாண்டி கட்சியின் ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் எனவும், அனைத்து கோஷ்டிப் பூசல்களையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவே புதிய மாவட்ட செயலாளர்கயை நியமித்துள்ளோம் என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை கட்டி வைத்து விடுவார்கள்- அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anitha-radhakrishnan-again-controversy-speech#comments</comments><guid isPermaLink="false">fdef7b80-fd9d-4d42-b60e-cf5ed9670bb2</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:26:37 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:26:37.713Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,கர்நாடகா,Karnataka,vijay,அனிதா ராதாகிருஷ்ணன்,Anitha Radhakrishnan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அனிதா ராதாகிருஷ்ணன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/855fg9b6/anitharadhakrishnan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை.</aside><p>தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் தி.மு.க. அமைச்சரும், திருச்செந்தூர்  தொகுதி எம்.எல்.ஏ.வுமான <a href="https://www.maalaimalar.com/topic/அனிதா-ராதாகிருஷ்ணன்">அனிதா ராதாகிருஷ்ணன்</a> கலந்து கொண்டு தி.மு.க. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார். </p><h2><strong>சர்ச்சை பேச்சு</strong></h2><p>அவர் பேசுகையில் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தற்போதுள்ள தமிழக முதலமைச்சரால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆடுகிறார் பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயம் செய்வது இல்லை. தற்போது காவிரி பிரச்சனையில் என்ன பாடு படுது. நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்கிறார். முதலமைச்சர் விஜய் கர்நாடகாவிற்கு சென்றால் அவரை அங்கு பிடித்து கட்டி வைத்து விடுவார்கள் என்பதால் ஹெலிகாப்டரில் செல்வேன் என்கிறார். தேவையில்லாமல் அந்த மாநிலத்திற்கு சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டுப் போய் விடக்கூடாது. காமராஜர் பெயரை சொல்லி கதை விட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><p>ஏற்கனவே முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் முதலமைச்சர் விஜயை விமர்சித்தும், ஒருமையிலும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சாதி, மதமற்றவர் என உடனடியாக சான்றிதழ் வழங்க சட்டம் நிறைவேற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் நடிகர் பார்த்திபன் வழக்கு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/parthiban-seeks-legal-mandate-for-caste-religionless-certification#comments</comments><guid isPermaLink="false">72d31710-2cee-4b92-9d10-5e112ddf55c0</guid><pubDate>Sat, 01 Aug 2026 10:14:57 +0000</pubDate><atom:updated>2026-08-01T10:14:57.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>பார்த்திபன்,Parthiban,Chennai High court,சென்னை உயர்நீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்-பார்த்திபன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ous7h7r1/Parthiban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற்றுள்ளார் பார்த்திபன்</h2><p>சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் சான்றிதழ் பெற்றார். அந்த சான்றிதழை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகி காண்பித்தார். அப்போது நீங்கள் மட்டும் பயன் அடைந்தார் போதாது, இதுபோன்று சான்றிதழ் பெற விரும்புவோர் பயனடைய வேண்டும் என்று கூறியிருந்தார்.</p><p>இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சாதி, மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனடியாக சான்று வழங்கும் வகையில் சட்டம் இயற்ற அல்லது அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>2025-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநருக்கும் அப்போதைய அரசுக்கும் சுமூக உறவு இல்லாததால் சட்டம் இயற்றப்படவில்லை. தற்போது அதுபோன்ற நிலை இல்லை. இதனால் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்த மனு ஆகஸ்ட் 3-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறும் திமுக- தவெக சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-it-wing-indictment-dmk#comments</comments><guid isPermaLink="false">2e8a4f2a-36f8-48ee-8362-49d7ed6b3c96</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:55:16 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:55:16.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,தவெக,mekedatu dam,மேகதாது அணை,tvk,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தவெக]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/k4ns9dv2/TVK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/தவெக">தமிழக வெற்றிக்கழக</a> தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><h2><strong>மக்களாட்சி</strong></h2><p>விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.</p><p>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.</p><p> தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?</p><h2><strong>மக்கள் ஏற்கமாட்டார்கள்</strong></h2><p>அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.</p><p> ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.</p><p>எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.</p><p> எனவே, காவிரிப் பிரச்சனையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting">ஸ்டாலின்</a> அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை என்று கூறப்பட்டுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விவசாயிகள் நலன்களுக்காகவும்<br>கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.<br><br>திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை,…</p>&mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) <a href="https://x.com/TVKHQITWingOffl/status/2083479568040751234?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்களா?- அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajmohan-question-will-children-be-spoiled-by-eating-chicken-biryani#comments</comments><guid isPermaLink="false">0379050c-adf1-4ee3-8590-2faba072b8c5</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:42:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:42:52.826Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Biryani,பிரியாணி,Chicken Biryani,சிக்கன் பிரியாணி,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் ராஜ்மோகன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/m1f84hwx/rajmohan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும்.</aside><p>ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/topic/அமைச்சர்-ராஜ்மோகன்">அமைச்சர் ராஜ்மோகன் </a>நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</p><p>ஈரோட்டில் பள்ளிகளில் ஆய்வு செய்தேன். சில பள்ளிகளில் மைதானம், கழிப்பிடம், காற்றோட்டம், விசாலமான வகுப்பறை கூட இல்லாமல் கடந்த ஆட்சியாளர்கள் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை . இவற்றை ஆய்வு செய்து சீரமைக்க முதலமைச்சர் கூறியுள்ளார் .</p><h2><strong>விரைவில் அறிவிப்பு</strong></h2><p>நான் அறிந்தவரை 50 சதவீத பள்ளிகளில் பி.டி. ஆசிரியர்கள் இல்லை. 250 குழந்தைகள் ஒரு பி.டி.ஆசிரியர் தேவை என்ற நிலையில் ஆயிரம் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் ஒரு பி.டி. ஆசிரியர் கூட இல்லாததை பார்த்தேன். நூலகர்களும் இல்லை. இவ்விரு பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளிவரும்.</p><p>கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும். அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான ஆய்வு நடந்து வருகிறது.</p><p>அதற்குள் முன்னாள் எம்.பி., .டி .கே .எஸ் .இளங்கோவன், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கினால் அங்குள்ள சைவம் சாப்பிடும் குழந்தைகள் என்ன ஆவார்கள் என கேள்வி எழுப்புகிறார். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். பள்ளிகளில் படிக்கும் 90 சதவீத குழந்தைகள் சிக்கன் சாப்பிடுகின்றனர்.</p><p>சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு குழந்தை கெட்டுப் போய் விடுவார்களா என்ன?. அதை உணவாக பார்க்காமல், ஒரு உயிர் பொருளாக, புரோட்டின் உணவாக பார்க்கிறேன். அதில் அரசியலை திணிக்காதீர்கள். விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-began-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-began-in-chennai#comments</comments><guid isPermaLink="false">7ddbc143-f7be-4f74-962c-4a98e9d0d0f9</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:25:42 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:25:42.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,Census,மக்கள்தொகை கணக்கெடுப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ewa9x9v5/chennaicensus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள்தொகை கணக்கெடுப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/ewa9x9v5/chennaicensus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகை கணக்கெடுப்பின்</a> ஒரு பகுதியாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. </p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த கணக்கெடுப்பில் 19 ஆயிரம் அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபடுகிறார்கள். </p> <p>சென்னையில் இந்தப் பணி இன்று தொடங்கியது. ஒவ்வொரு வார்டு வாரியாக மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கீழ் கணக்கெடுப்பாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். </p><h2>சென்னை மாநகராட்சி</h2><p>சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் 152 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து புள்ளி விவரங்களை சேகரிக்கிறார்கள். </p><p>ஒரு சூப்பர்வைசருக்கு கீழ் 6 முதல் 8 பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று குடும்ப தலைவரிடம் 33 கேள்விகளை கேட்டு அதனை தங்கள் செல்போனில் உள்ள செயலியில் பதிவு செய்கின்றனர். </p> <p>வீடு குறித்த தகவல்கள், செல்போன் எண், குடும்பம் பற்றி அடிப்படை தகவல்கள், குடும்பத் தலைவரின் பெயர், சாதி, வீட்டின் உரிமை நிலை, அறைகளின் எண்ணிக்கை, வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை போன்ற கேள்விகள் கேட்கப்படும். இது தவிர வீட்டில் உள்ள வசதிகள் என்னென்ன இருக்கின்றன என்பதையும் கேட்டு பதிவு செய்கிறார்கள். குடிநீர், கழிவு நீர் வசதி, என்னென்ன வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள், இணையதள வசதி, கம்ப்யூட்டர், லேப்டாப், ரேடியோ, தொலைக்காட்சி உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த செயலில் பதிவு செய்யப்படுகிறது. </p> <p>இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் செயலியில் பதிவு செய்யப்படும். ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 வீடுகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவாக சென்று இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வீட்டில் கணக்கெடுப்பு செய்து முடிக்க குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும். நாள் ஒன்றுக்கு பத்து வீடுகள் வரை சென்று புள்ளி விவரங்களை சேகரிக்கலாம் என்றார்.</p> ]]></content:encoded></item><item><title>தலைமைச் செயலகத்தில் குயிக் பைட்ஸ் துரித உணவகம்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-inaugurates-quick-bites-at-secretariat</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-rajesh-kumar-inaugurates-quick-bites-at-secretariat#comments</comments><guid isPermaLink="false">e3989572-85fd-4941-abbb-be4c5ab128c8</guid><pubDate>Sat, 01 Aug 2026 09:06:22 +0000</pubDate><atom:updated>2026-08-01T09:06:22.019Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Quick Bites,குயிக் பைட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/eemo1403/QuickBItes.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Quick Bites]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/eemo1403/QuickBItes.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஹோட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. </p><p>மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் படகு குழாம்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரமான சிறு உணவுகள், தின்பண்டங்கள் கிடைக்கச் செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் என்ற சிற்றுண்டி துரித உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.</p><h2>99 ரூபாய்க்கு பிரியாணி</h2><p>அதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக டீ, காபி, கேக் வகைகள், பப்ஸ், குளிர் பானங்கள், ஜஸ்கிரீம்கள் உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் ரூ 99/-க்கு பிரியாணி விற்பனை செய்யும் வகையில் குயிக் பைட்ஸ் சிற்றுண்டி துரித உணவகத்தை சுற்றுலாத்துறை செ. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர்/மாவட்ட வருவாய் அலுவலர் சி. லட்சுமி பிரியா மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/orange-alert-issued-for-three-districts-today#comments</comments><guid isPermaLink="false">cace66cc-5456-43a1-a4ef-5abbb9bc1574</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:30:40 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:30:40.347Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,orange alert,ஆரஞ்சு அலர்ட்,பருவமழை,monsoon,கனமழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Orange alert]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/0bjnxl3x/orange-alert.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகத்தின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பலத்த <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu" rel="nofollow">மழை</a> பதிவாகி வருகிறது.</p><h2>ஆரஞ்சு அலர்ட்</h2><p>தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>மழை தீவிரமடையும்</h2><p>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>24 மணி நேரத்தில் 11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>திருத்தணி மலைக்கோவிலுக்கு 13 நாட்கள் ஆட்டோக்கள் செல்ல தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/autos-banned-to-the-thiruttani-hill-temple-for-13-days</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/autos-banned-to-the-thiruttani-hill-temple-for-13-days#comments</comments><guid isPermaLink="false">da3cba1f-8dec-4931-9d9a-da93202584a7</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:24:52 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:24:52.527Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruttani temple,Aadi Kiruthigai,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை,கிருத்திகை திருவிழா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tmypz55m/tiruttanitemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருத்தணி கோவில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tmypz55m/tiruttanitemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>ஆடி கிருத்திகை திருவிழா</h2><p>திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 4-ந் தேதி முதல் ஆடி கிருத்திகை திருவிழா தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்ய உள்ளனர். </p> <h2>பக்தர்கள் வருகை</h2><p>இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), 4-ந்தேதி ஆடி அஸ்வினி, 5-ந்தேதி ஆடி பரணி, 6-ந்தேதிஆடி கிருத்திகை, 7-ந்தேதி 2-ம் தெப்பல், 8-ந்தேதி 3-ம் தெப்பல், 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 14-ந்தேதி ஆடிப்பூரம், 15-ந்தேதி சுதந்திர தினம் , 16, 23, 30-ந்தேதி ஞாயிற்றுக்கிழமைகள் ஆகிய 13 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள். </p><h2>ஆட்டோக்கள் செல்ல தடை</h2><p>இதனால் இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். </p> <p> மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படும். இதர பஸ்கள் கோவில் வாகன நிறுத்தும் இடங்களில் இலவசமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் ஆகஸ்டு மாதத்தில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/august-rain-expected-above-normal-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">787b88c4-2255-4e08-80e3-7b39979ceaa1</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:05:49 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:05:49.186Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Heavy Rain,chennai Meteorological Centre,August,வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை,கனமழை,ஆகஸ்டு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/l2wyrnyg/Rain.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதமும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 21 சதவீதம் இயல்பை விட குறைவாக மழை பெய்து உள்ளது.</p><p>சென்னை உள்பட 34 மாவட்டங்களில் 35 சதவீதம் மழை இயல்பை விட பற்றாக்குறையாக பதிவாகியுள்ளது. </p><p>இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆகஸ்டு மாத வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் துரை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் கூறியிருப்பதாவது:- </p><p>ஆகஸ்டு  மாதத்தில் வட தமிழ்நாடு பகுதியில் மழை பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர பகுதியில் இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.</p><p>வட உள்மாவட்டங்கள், மற்றும் தென் உள்மாவட்டங்களில் மழைப் பொழிவு இயல்பானதாக இருக்கக் கூடும்.</p><h2>வெப்பநிலை </h2><p>ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88" rel="nofollow">வெப்பநிலை</a>  இயல்பான அளவிலோ அல்லது இயல்பைவிட சற்று அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>அடிக்கடி மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவையொட்டி இருக்க வாய்ப்புள்ளது. </p><p>குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு முதல் செப்டம்பர் வரை வடகடலோர தமிழக பகுதியில் மழைப்பொழிவு இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். தென் கடலோர தமிழகத்தில் மழை இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடும்.</p><h2>மழைப்பொழிவு இயல்பை விட குறைவு</h2><p>வட உள்மாவட்டங்கள் தென் உள்மாவட்டங்களில் மழை பொழிவு இயல்பானதாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.</p><p>ஆகஸ்டு, செப்டம்பர் கால கட்டத்தில் நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu" rel="nofollow">மழைப்பொழிவு</a> இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்றாலும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் சாதகமான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அதே வேளையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.</p><p>பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான  எல்-நினோ சூழல் நிலவுகிறது. தென்மேற்கு பருவமழைக் காலத்தின் எஞ்சிய நாட்களில் இது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஜூலை மாதத்தில் 1.06 கோடி பேர் மெட்ரோவில் பயணம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/106-crore-people-traveled-by-metro-in-july</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/106-crore-people-traveled-by-metro-in-july#comments</comments><guid isPermaLink="false">5be56e89-ad35-463f-a89c-045bf5815975</guid><pubDate>Sat, 01 Aug 2026 08:05:48 +0000</pubDate><atom:updated>2026-08-01T08:05:48.099Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Metro Train,Chennai metro,சென்னை மெட்ரோ,மெட்ரோ ரெயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bgoze5n8/metro.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ மெட்ரோ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bgoze5n8/metro.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.</aside><p>சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>அதிகபட்சம்</strong></h2><p>சென்னையில் உள்ள மக்களுக்கும், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">மெட்ரோ ரெயில் </a>பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,06,37,647 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.</p><p>அதிகபட்சமாக 24.07.2026 அன்று 3,84,412 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p><p>2026, ஜூலை மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை)பயன்படுத்தி 55,87,494 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி(Single Journey Paper QR 19,66,202; Online QR – 1,47,760; Static QR 2,24,701; Whatsapp - 4,51,715; Paytm 2,99,228; ONDC – 12,68,411; PhonePe – 2,84,121; CMRL Mobile App(SVP) 95,430; Chennai One App – 2,98,702; HCL 50 Year Celebration Music Concert Event QR – 13,883) பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.</p><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cmrl-floats-tender-for-dpr-to-extend-metro-line-from-kilambakkam-to-chengalpattu">மெட்ரோ ரெயில்</a> நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. </p><p>மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித QR பயணச்சீட்டுகளுக்கு (Single Journey Paper QR tickets) இந்தத் தள்ளுபடி கிடையாது.</p><p>மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு:
செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-appears-at-thiruvallikeni-police-station-in-dmk-mla-bribery-bargain-case#comments</comments><guid isPermaLink="false">b2fe6ea9-3b9d-48f0-9a76-c7d576223c38</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:26:25 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:26:25.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>செந்தில் பாலாஜி,பேரம் வழக்கு,காவல் நிலையத்தில் ஆஜர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/lfn09f0d/senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா விடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் பெற்று திருவல்லிக் கேணி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார்.</p><h2>கையெழுத்து</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக செந்தில் பாலாஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்து வந்தார்.</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார்.</p><p>அதே நேரத்தில் செந்தில் பாலாஜி த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் வருகிற 4-ந்தேதி வரை கையெழுத்து போடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.</p><p>கடந்த 25-ந்தேதி முதல் செந்தில் பாலாஜி தினமும் கையெழுத்து போட்டு வரும் நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>டாஸ்மாக் முறைகேடு</h2><p>செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் அது தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p>இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடி முன்ஜாமீன் பெற்றார். இருப்பினும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.</p><h2>விரைவில் விசாரணை</h2><p>செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசா்ா விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>இதற்கிடையே செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இரு வரும் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி சேர்க்கப்பட்டுள்ளார்.</p><h2>ஆவணங்கள்</h2><p>டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அது தொடர்பான ஆவணங்களை  கைப்பற்றி இருக்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியின் நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். </p><p>போலீஸ் விசாரணையில் அவர்களிடமும் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளது. அதனை மையமாக வைத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-rain-raises-dam-levels-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">c5696618-875f-44d7-80fc-edb0c813c61b</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:15:31 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:15:31.702Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rainfall,மேற்கு தொடர்ச்சி மலை,western ghats,Tamilnadu Dams,தொடர் மழை,தமிழ்நாடு அணைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tamilnadu Dams]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/rjaot7qm/servalaaru.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால், குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p><h2><strong>தென் மாவட்ட அணைகள்:</strong></h2><p>நெல்லை, தென்காசி மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் பல அடிகள் உயர்ந்துள்ளதால், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><h2><strong>கோவை &amp; பொள்ளாச்சி மண்டலம்:</strong></h2><p>கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையினால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதேபோல், ஆழியாறு மற்றும் அமராவதி அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து சீராக வந்து கொண்டிருக்கிறது.</p><h2><strong>கன்னியாகுமரி &amp; தேனி மாவட்ட அணைகள்:</strong></h2><p>பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பு அதிகரித்து காணப்படுகிறது.</p><h2><strong>குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு:</strong></h2><p>கோடைக்காலத்திற்குப் பின் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்போது பெய்துள்ள மழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க உதவியாக இருக்கும்.</p><h2><strong>பாசனப் பணிகள் தீவிரமடைதல்:</strong></h2><p>குறுவை / முதல்போக சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் நாற்று நடும் பணிகளையும் நில ஆயத்தப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். வானிலை ஆய்வு மையத் தகவலின்படி., வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை தொடர வாய்ப்புள்ளது.</p><h2><strong>ஆற்றோர மக்களுக்கு எச்சரிக்கை:</strong></h2><p>அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும், ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா முடியாதா? - முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-mk-stalin-question-to-cm-vijay-all-party-meeting#comments</comments><guid isPermaLink="false">e1184a52-e648-4cbf-8817-ecfffffa2430</guid><pubDate>Sat, 01 Aug 2026 07:09:01 +0000</pubDate><atom:updated>2026-08-01T07:09:01.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,mekedatu dam,மேகதாது அணை,All Party Meeting,அனைத்து கட்சி கூட்டம்,Cauvery Issue,காவிரி விவகாரம்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/pwz88hyx/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.</p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். </p> <p>தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.</p><h2>காவிரி விவகாரம்</h2><p>இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சனையான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move">காவிரி விவகாரத்தை</a> முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.</p> <h2>அனைத்துக் கட்சிக் கூட்டம்</h2><p>நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders">முதலமைச்சர்</a> அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காவிரியில் நீர் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழகம் முடிவு: சரியான நடவடிக்கை! - அன்புமணி
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-tn-decides-to-move-supreme-court-to-secure-cauvery-water-right-move#comments</comments><guid isPermaLink="false">ae05b230-7877-4d30-98ed-2102d52cf24f</guid><pubDate>Sat, 01 Aug 2026 06:44:03 +0000</pubDate><atom:updated>2026-08-01T06:44:03.240Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Supreme Court,mekedatu dam,மேகதாது அணை,சுப்ரீம் கோர்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/bo11tqfa/anbumaniramadoss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக நடைபெறவிருந்த இரு தரப்பு பேச்சுகளுக்கான கதவுகளை கர்நாடக அரசு மூடியதற்கு பிறகு மிகவும் தாமதமாகத் தான் இந்த முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது என்றாலும், காவிரி சிக்கலில் இது தான் சரியான நடவடிக்கையாகும்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>காவிரி நீர்ப் பகிர்வு, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> சிக்கல் ஆகியவை குறித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை  தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் பெங்களூருவில் சந்தித்து பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கர்நாடகத்திலும் வெடித்துள்ள போராட்டங்களைக் காரணம் காட்டி, இரு தரப்பு பேச்சுகளுக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு செல்லும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கைவிட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. </p> <h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>அதற்கு மாறாக, காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்திருக்கிறார். ஆகஸ்ட் ஐந்தாம் தேதிக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p> <h2>கர்நாடக அரசு</h2><p>தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுக்கும் சிக்கலாக இருந்தாலும், மேகதாது அணையை கட்ட கர்நாடகம் சதி செய்யும் சிக்கலாக இருந்தாலும் அதை சட்டப்படியாக எதிர்கொள்வது தான் சரியானதாக இருக்கும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு மாறாக இந்த விவகாரத்தில் தவறான பாதையில் பயணித்த தமிழக அரசு, இப்போதாவது சரியான பாதைக்கு திரும்பி இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இனிவரும் காலத்திலும் கூட <a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">காவிரி நீர்ப்பகிர்வு</a>, மேகதாது விவகாரம்  ஆகியவற்றில் கர்நாடக அரசுடன் எந்த வகையிலும் பேசுவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.</p> <p>தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியலுக்கு புதிது என்பதால், புதுமையாக எதையாவது செய்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க அம்மாநில முதலமைச்சர்கள் முன்வர மாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். </p> <p>காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். 1995-ஆம் ஆண்டில் கடுமையான வறட்சி நிலவிய சூழலில் உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் வழங்கவில்லை. அதன்பின் இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகு, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கர்நாடக முதலமைச்சர் தேவகவுடா ஆகியோரை அழைத்து பேச்சு நடத்தினார். அதன்பயனாக நடுவர் மன்றம் ஆணையிட்ட 11 டி.எம்.சிக்கு பதிலாக 6 டிஎம்சி நீரை மட்டும் கர்நாடகம் திறந்து விட்டது.</p> <p>அதன்பின், 2002-ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் எலிக்கறி சாப்பிடும் அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அப்போது சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் ஆணையிட்டது. ஆனால், கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து விட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கு  தினமும் 0.8 டி.எம்.சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. ஆனால், அதையும் மதிக்காத கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தண்ணீர்  திறக்க முடியாது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழகம் தொடர்ந்தது.</p> <h2>டி.கே.சிவக்குமார்</h2><p>அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடாவிட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும்; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை வழங்கவும் தயங்க மாட்டோம் என்று 26.10.2002-ஆம் நாள் ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தான் கர்நாடகம் தமிழகத்திற்கு  காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. அதன்பிறகும் எஸ்.எம். கிருஷ்ணா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்காமல் நிலுவையில் வைத்துக் கொண்டே நவம்பர் 15-ஆம் தேதி வரை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மிதவாதிகள் என்று அறியப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவும்,  எச்.டி.தேவகவுடாவுமே உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முன்வராத நிலையில், காவிரி சிக்கலை தீவிரமாக்கியே அடுத்த தேர்தலிலும் முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் டி.கே.சிவக்குமார் கேட்டவுடன் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவார் என்று எதிர்பார்ப்பது அரசியல் அறியாமையாகவே இருக்கும். இந்த அணுகுமுறையை அரசு கைவிட வேண்டும்.</p> <h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடும்படி உச்சநீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர்ந்து நீரைப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது அணை விவகாரத்திலும் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்யும் கூட்டுச் சதியை உரிய தரவுகளுடன் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கூடலூர் அருகே சோதனை சாவடி பகுதியில் உலா வந்த காட்டு யானை
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-elephant-near-checkpoint-area-in-gudalur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/wild-elephant-near-checkpoint-area-in-gudalur#comments</comments><guid isPermaLink="false">d245de2a-0aa0-4122-afd4-eeffb2edb14b</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:35:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:35:41.498Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>gudalur,கூடலூர்,காட்டு யானை,wild elephant,சோதனை சாவடி,Checkpost</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/6s684gr9/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காட்டு யானை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/6s684gr9/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>காட்டு யானை சாலையில் சர்வ சாதாரணமாக நடந்த சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.</strong></em> </p><h2>காட்டு யானை</h2><p>நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாட்டவயல் சோதனைச்சாவடி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை அமைதியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டு வாகனங்களை பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி காத்திருந்தனர். சிலர் தங்களது செல்போன்களில் இந்த காட்சியை பதிவு செய்தனர்.  </p> <h2>வாகன ஓட்டிகள் அச்சம்</h2><p>சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை, பின்னர் தானாகவே அருகிலுள்ள வனப்பகுதிக்குள் திரும்பிச்</p><p>சென்றது. இதனால் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. காட்டு யானை சாலையில் சர்வ சாதாரணமாக நடந்த சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். </p> <h2>வனத்துறை அறிவுறுத்தல்</h2><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து, வனப்பகுதியைஒட்டிய சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், காட்டு யானைகள் தென்பட்டால் அவற்றை நெருங்கவோ, தொந்தரவு செய்யவோ, புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கவோ கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சென்னை வருகை- தொண்டர்கள் உற்சாக வரவேற்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-mp-rahul-gandhi-visits-chennai#comments</comments><guid isPermaLink="false">de61fb4b-c7f6-4217-8080-b32071689021</guid><pubDate>Sat, 01 Aug 2026 05:15:44 +0000</pubDate><atom:updated>2026-08-01T05:15:44.616Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்,சென்னை வருகை,Chennai visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/i0orud0n/RG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்துள்ளார்.</p><p>சென்னை விமான நிலையத்தில் மக்களவை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><h2>உற்சாக வரவேற்பு</h2><p>தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க வருகைத் தந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/manickam-tagore-says-mekedatu-dam-issue-let-us-unite-avoid-politicizing-matter" rel="nofollow">மாணிக்கம் தாகூர்</a>, அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.</p><h2>பயிற்சி முகாம்</h2><p>பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.</p><p>இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance" rel="nofollow">ராகுல் காந்தி</a>க்கு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.</p><p>பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு செல்கிறார். அங்கு, மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார்.</p><h2>நிர்வாகிகளுடன் சந்திப்பு</h2><p>பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.</p><h2>நீட்</h2><p>அதே போன்று, கோவை மற்றும் சேலம் பகுதிகளில் நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. பின்னர் சென்னை வந்து இரவு 7 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p>]]></content:encoded></item><item><title>திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thoppu-venkatasalam-relieved-from-dmk-post#comments</comments><guid isPermaLink="false">c9245c2c-874f-4f25-9f69-a6db1eaa4b32</guid><pubDate>Sat, 01 Aug 2026 04:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-01T04:39:19.568Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,duraimurugan,தோப்பு வெங்கடாசலம்,துறைமுருகன்,Thoppu venkadachalam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoppu Venkadasalam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/tuuj5jwt/thoppu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து <a href="https://www.maalaimalar.com/news/tamil-news-former-aiadmk-minister-thoppu-venkatachalam" rel="nofollow">தோப்பு வெங்கடாசல</a>ம் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p>அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அதிமுக டூ திமுக</h2><p>ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.</p><p>அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF" rel="nofollow">பெருந்துறை தொகுதி</a>யிலிருந்து  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராகவும் பணியாற்றினார்.</p><p>இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.</p><h2>காரணம் என்ன?</h2><p>உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனால், கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.</p><h2>தவெக-ல் இணைய முடிவு?</h2><p>அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதனால், திமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆளுங்கட்சியான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed" rel="nofollow">தவெக</a>வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.</p>]]></content:encoded></item><item><title>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/perunthalaivar-kamarajar-breakfast-scheme-tender-announced#comments</comments><guid isPermaLink="false">12588aee-a6b6-454c-b487-9bc699333776</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:22:41 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:22:41.064Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Breakfast Scheme,பெருந்தலைவர் காமராஜர்,காலை உணவு திட்டம்,தவெக அரசு,tvk government,Perunthalaivar Kamarajar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/8cjo1acu/food.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/8cjo1acu/food.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>காமராஜர்</h2><p>ஏழை மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து வரும் வகையில், மதிய உணவு திட்டத்தை, முதலமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அந்த திட்டம் மூலம் அதிகமான ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கினர். எனவே அந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.</p> <h2>எம்.ஜி.ஆர்.</h2><p>காமராஜருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த கட்சிகள், அந்த திட்டத்தை பொலிவுபடுத்த தொடங்கின. அந்த வகையில், எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலையில், அனைத்து மாணவர்களுக்குமான சத்துணவு திட்டமாக அதை கொண்டு வந்தார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி, சத்துணவோடு முட்டையையும் சேர்த்து வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.</p> <h2>மு.க.ஸ்டாலின் </h2><p>மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கடந்த தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் புதிய வகையில், மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக முதலமைச்சர் காலை உணவு திட்டம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.</p> <p>இந்த திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. </p> <h2>பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்</h2><p>முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயர் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந் தேதி முதல், காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.</p> <p>இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆன்லைன் டெண்டர் </h2><p>காலை உணவு திட்டத்திற்கான உணவு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்ய புதிய ஆன்லைன் டெண்டர் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ரவை, சம்பா ரவை தலா 1,000 மெட்ரிக் டன், சேமியா 1,100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது  </p> ]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: முன்னாள் மேலாண் இயக்குனர் விசாகன் தலைமறைவு?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmac-irregularities-former-md-visakan-missing#comments</comments><guid isPermaLink="false">35ccca80-cfd1-4456-a3d6-75badd3ed3f8</guid><pubDate>Sat, 01 Aug 2026 03:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-01T03:22:23.028Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,லஞ்ச ஒழிப்பு துறை,Tasmac,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,விசாகன்,visagan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1l3n0pro/visagan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Visagan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/1l3n0pro/visagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.</p><h2>செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு</h2><p>முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, புதிய வழக்கு ஒன்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கையொட்டி தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடைய 45 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையும் மேற்கொண்டனர்.</p><p>இந்த புதிய வழக்கில், செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 2-வது குற்றவாளியாக டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர், ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன் இருக்கிறார். 3-வது மற்றும் 4-வது குற்றவாளிகளாக சீனியர் மேலாளர்கள் ராமதுரைமுருகனும், பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டு உள்ளனர்.</p><p>5-வது குற்றவாளியாக செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர் உள்ளார். இவர்களை தொடர்ந்து 6-வது மற்றும் 7-வது குற்றவாளிகளாக செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல் என்பவரும், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><h2>2 பேர் கைது</h2><p>ரத்தேஷ் ராஜ் சண்முகவேலும், மூலநூர் கார்த்திக் என்பவரும்தான் 'கரூர் கேங்' என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்டது. </p><p>ஆனால் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனைகளுடன், அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது. முன்ஜாமின் கிடைத்துவிட்டதால், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாரணைக்கு ஆஜராவார்.</p><p>இந்தநிலையில் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக கூறப்படும், கார்த்திக் என்பவரும், ரமேஷ் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.</p><p>கார்த்திக்கின் பெயர் ஏற்கனவே போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், 7-வதாக இடம்பெற்றுள்ளது. கைதான ரமேஷ் என்பவர் புதிதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக, லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். கைதாகி உள்ள இவர்கள் இருவரும் ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறப்பிடத்தக்கது.</p><h2>விசாகன் தலைமறைவு</h2><p>டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் மேலாண் இயக்குநர் விசாகன் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>டாஸ்மாக் முறைகேடு புகாரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாகனை விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>விசாரணை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அணுகியபோது விசாகனின் செல்ஃபோன் அணைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>டாஸ்மாக் முறைகேட்டில் இரண்டாவது குற்றம்சாட்டப்பட்ட நபராக விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>நேற்று முன்தினம் கைதானோர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் விசாகனை விசாரிக்க போலீசார் தேடி வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/census-operations-begin-across-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">9751cc09-cee6-431c-8e07-93163ce1fd5d</guid><pubDate>Sat, 01 Aug 2026 02:14:15 +0000</pubDate><atom:updated>2026-08-01T02:14:15.764Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN,Census,மக்கள்தொகை கணக்கெடுப்பு,Digital Technology,தமிழ்நாடு,டிஜிட்டல் தொழில்நுட்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/2k27g8dz/census.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ People]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-01/2k27g8dz/census.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.</strong></em> </p><p>மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p> <h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>தமிழ்நாடு முழுவதும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online">மக்கள்தொகை</a> கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்டு 1-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.</p><h2>டிஜிட்டல் தொழில்நுட்பம்</h2><p>அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்டப்பட உள்ளன. இந்தியாவில் முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். </p> <h2>சுய கணக்கெடுப்பு</h2><p>1948-ம் ஆண்டு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81">மக்கள்தொகைக் கணக்கெடுப்புச்</a> சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். சுய-கணக்கெடுப்பு செய்தவர்கள் தங்கள் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். இந்த வசதியைப் பயன்படுத்தாத குடும்பங்களும் களப்பணியின் போது கணக்கெடுக்கப்படுவார்கள்.</p> <p>வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">d8cd286b-4c31-474c-af85-099af23fd194</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:27:01.093Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a></p><p>* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</a></p><p>* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை</p><p>* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent">இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</a></p><p>* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது.&nbsp;</p><p>* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple">ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</a></p><p>* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026">GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead"> மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி  குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு</a></p><p>*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே</a></p><p>*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்</p><p>*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education">நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை</a></p><p>*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை</p><p>*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</a></p><p>*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.</p><p>*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti">ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</a></p><p>*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்</p><p>*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces">ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india" rel="nofollow">இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</a></p><p>* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case">பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு<br></a><br>*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது</p><p>*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை</a></p><p>* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <p> <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops">மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</a></p><p>* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><p>* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns">இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</a></p><p>* இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</a></p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p><p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute" rel="nofollow">அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!</a></p><p>* தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினர்.</p><p>* இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji" rel="nofollow">செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு </a></p><p>* பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. </p><p>* அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-india-in-commonwealth-games">காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்: இன்று தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-elena-svitolina-enter-qf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா, எலினா ஸ்விடோலினா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue">காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* கர்நாடக முதல்-மந்திரி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். </p><p>* பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation">தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்</a></p><p>* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.</p><p> * கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/masood-ruled-out-of-second-test-against-west-indies-with-finger-injury">வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: காயத்தால் விலகிய ஷான் மசூத்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 9-வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்: நூதன போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்</a></p><p>* ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.</p><p>* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா</a></p><p>* 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என உத்தரவு</p><p>* தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகாவில் போராட்டம்</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-sf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* அரையிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly">மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</a></h2><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்.</p><p>* ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</a></p><p>*  பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>*  600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்கினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">சிறப்பாக பணியாற்றிய கவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>*  மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/glasow-commonwealth-games-asmita-dey-storms-into-the-women-48kg-semi-finals">காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை அஸ்மிதா டே</a></p><p>* இந்தியா பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது.</p><p>* ஆஸ்திரேலியா 51 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/anirudh-chandrasekar-pair-enter-sf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அனிருத் ஜோடி</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* நம்பர் 1 ஜோடியான இத்தாலியின் ஆண்ட்ரியா வவசோரி-சைமோன் பொலேலி ஜோடி தோல்வி அடைந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept">செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</a></p><p>* கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை.</p><p>* டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu">திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்</a></p><p>* முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.</p><p>* 5 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview">மின்கட்டண உயர்வு விவகாரம்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சிவசங்கர் பதிலடி</a></p><p>* தன் இயலாமையை மறைக்க தி.மு.க. திட்டங்களின் பெயரை மாற்றுகிறது தமிழக அரசு.</p><p>* மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/vijay-jana-nayagan-screening-stopped-across-karnataka-amid-cauvery-water-dispute">காவிரி விவகாரம்: கர்நாடக தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட ஜன நாயகன் படம்</a></p><p>* தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>* கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online">மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.</p><p>* சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay">அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க: முதலமைச்சர் விஜயை எச்சரிக்கும் அன்புமணி</a></p><p>* முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறாங்க.</p><p>* மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திருவாங்க. அப்படின்னு ஏதோ ஒரு எண்ணத்துல இருக்கிறாரு. எவ்வளவு பேர பார்த்துட்டாங்க.</p>]]></content:encoded></item><item><title>அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க: முதலமைச்சர் விஜயை எச்சரிக்கும் அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-issue-and-mekedatu-dam-anbumani-warning-tn-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">c692df20-4d71-40eb-83f4-825ae352ef5c</guid><pubDate>Fri, 31 Jul 2026 16:05:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T16:05:42.856Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery Issue,காவிரி அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/bjf1xqp6/TVKVijay0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்- அன்புமணிராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/bjf1xqp6/TVKVijay0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேகதாது அணை விவகாரம், காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுப்பது குறித்து பேசினார்.</p><h2>அப்போது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-</h2><p>நாளை ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். அந்தமானில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் ஒரு திட்டத்தை அவர் எதிர்க்கிறார். காடுகள் அழிக்கப்பட இருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.</p><p>அதேபோல்தான் மேகதாது அணை திட்டமும். சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும். 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழித்து அணை கட்ட வேண்டுமா?. அதற்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்புங்கள்.</p><h2>ராகுல் காந்தி சொல்லத் தயாரா?</h2><p>இந்த ஒரேயொரு கேள்வியை அவரிடம் கேளுங்கள். அந்தமானில் காடுகளை அழிக்கக்கூடாது என்கிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல் மேகதாதுவில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் காடுகளை அழிக்கக் கூடாது என்று அவர் சொல்வாரா?. சொல்லனும்.</p><h2>விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யணும்</h2><p>முதலமைச்சருக்கு விவசாயிகள் எல்லாரும் சேர்ந்து வாக்களித்தார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் அவர்கள் சோர்ந்து போய் உள்ளனர். இன்னும் 15 முதல் 16 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிச்சா கூட்டுறவு வங்கி கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். அதை செய்யனும். அது ஒருபக்கம்.</p><p>காவிரி முழுவதும் வறண்ட பகுதியாக இருக்கு. கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக சுமார் ஆறரை லட்சம் ஏக்கரில் பயிர் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒன்றரை லட்சத்திற்கு மேல் போகுமா? என்று தெரியவில்லை. அடுத்து சம்பா வருது, அதற்கு தண்ணீர் இருக்குமா? என்று தெரியவில்லை.</p><h2>அப்படி என்ன நமக்கும் கர்நாடகாவுக்கும் ஃபிரண்ட்ஷிப்</h2><p>இப்போது நமக்கு தண்ணீர் வேண்டும். முறைப்படை, ஒப்பந்தத்தின்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி நமக்கு தண்ணீர் கொடுத்திருக்கனும். கொடுக்கல. அதைக்கூட கேட்கல. அப்படி என்ற நமக்கும் கர்நாடகாவுக்கும் ஃபிரண்ட்ஷிப்.</p><p>தற்போது அரிசி விலை 10 ரூபாய் ஏறியிருக்கு. குறுவை சாகுபடி இல்லை என்றால் 30 ரூபாய் ஏறும். இதுபோன்ற மறைமுக பிரச்சினை வரும். இதை முதலமைச்சர் புரிந்து கொள்ளனும். Back Door பேச்சுவார்த்தை என்ன வென்று எனக்குத் தெரியவில்லை.</p><h2>தேர்தல் வரை டி.கே. சிவக்குமார் விடப்போவது கிடையாது</h2><p>இவை இரண்டும் வெளிப்படையான பிரச்சினை. வெளிப்படையாக அணுக வேண்டும். முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறாங்க. மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திருவாங்க. அப்படின்னு ஏதோ ஒரு எண்ணத்துல இருக்கிறாரு. எவ்வளவு பேர பார்த்துட்டாங்க. இப்போது இருப்பது டி.கே. சிவக்குமார். அவரது தொகுதியில வருது மேகதாது அணை. அவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று திட்டமிட்டிருக்காரு.</p><p>தேர்தல் வரை அவர்கள் விடப்போவது கிடையாது. இன்னும் பிடிவாதமா இருப்பாரு. இன்னும் பதற்றமான சூழ்நிலையை கொண்டு வருவாரு. இதை வைத்துதான் தேர்தலில் வெற்றி திட்டமிட்டுள்ளார். இந்த சூழ்ச்சியில் போய் விஜய் விழக்கூடாது.</p><p>இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>டாஸ்மாக் முறைகேடு - 2 பேரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmak-corruption-two-arrested-by-anti-corruption-officials</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tasmak-corruption-two-arrested-by-anti-corruption-officials#comments</comments><guid isPermaLink="false">3814061e-f3f1-46fd-983d-0ca89f04a775</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:20:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:20:42.805Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Tasmac,Vigilance Department,டாஸ்மாக்,லஞ்ச ஒழிப்புத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh1e7c1e/Untitled-design-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Two close aides of ex-minister Senthil Balaji arrested in Tasmac Scam]]></media:title><media:description type="html"><![CDATA[ Ex-minister Senthil Balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh1e7c1e/Untitled-design-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேட்டில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.</p><p>டாஸ்மாக்கில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கோவை, நாமக்கல், திருப்பூர், சிவகங்கை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.</p><h3>டாஸ்மாக் முறைகேட்டில் 7 பேர் மீது வழக்குப்பதிவு</h3><p>இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாகன், முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரைமுருகன், பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ரத்தேஷ்ராஜ் சண்முகவேல், கார்த்திக் என்ற மூலநூர் கார்த்திக் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. </p><p>இவர்கள் 2021 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.</p><p>இதற்கிடையில் த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் நடந்ததாக, ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.</p><p>இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீதும், அவரது தம்பி அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.</p><p>மேலும் இந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.</p><p>இதையடுத்து செந்தில்பாலாஜியும், அவரது தம்பியும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமீன் நிபந்தனைப்படி அவர்கள் இருவரும், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார்கள்.</p><h3><strong>2 பேர் கைது</strong></h3><p>இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் என்பவர்களை போலீசார் கைது செய்தனர்.</p><p>இவர்களை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>86% வாக்குப்பதிவு: தமிழ்நாடு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/86-voter-turnout-election-commissioner-gyanesh-kumar-praises-tamil-nadu-voters</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/86-voter-turnout-election-commissioner-gyanesh-kumar-praises-tamil-nadu-voters#comments</comments><guid isPermaLink="false">d71366ea-f878-4244-86e9-10d5530363b1</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:12:09 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:12:09.264Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamil Nadu,Gyanesh Kumar,தமிழ்நாடு,ஞானேஷ்குமார்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hhosw2mt/New-Project-2026-07-31T201028.560.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 86% வாக்குப்பதிவு: தமிழ்நாடு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாராட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hhosw2mt/New-Project-2026-07-31T201028.560.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பட்டமளிப்பு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது மனைவியுடன் கோவை வந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,</p><p>“தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான சுமார் 4.93 கோடி வாக்குகள் என்பது, சுதந்திரத்திற்குப் பிறகு மாநிலத்தில் பதிவான மிக அதிகபட்ச வாக்குகள் ஆகும். அதேபோல, சுமார் 86 சதவீத வாக்குப்பதிவை எட்டியதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்து வாக்காளர்களையும் நான் பாராட்டுகிறேன்.</p><p>இதுவும் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும். அமிர்தா விஸ்வா வித்யபீடம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக எனது மனைவி அனுராதாவுடன் இன்று கோவை வந்துள்ளேன். </p><p>தென்னிந்தியாவில் வளர்ந்துவரும் முக்கிய நகரங்களில் மட்டும் கோவை இல்லை, உலகத்தரம் வாய்ந்த கல்விமுறை, ஜவுளித் தொழில்கள், பொறியியலிலும் சிறந்து விளங்குகிறது.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-registered-census-details-in-online#comments</comments><guid isPermaLink="false">325c3654-c986-43c9-bfd2-b54f26b3aa57</guid><pubDate>Fri, 31 Jul 2026 15:03:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T15:03:46.621Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,Online,Census,மக்கள் தொகை கணக்கெடுப்பு,ஆன்லைன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/1jmhryct/udhaya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ udhayanidhi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/1jmhryct/udhaya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்கள்தொகை கணக்கெடுப்பு</h2><p>இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக இணைய தளம் வழியாக சுய கணக்கெடுப்பு செய்யும் பணியானது கடந்த 17-ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரு கட்டமாக நடத்தப்படும். சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரையிலும், அதனைத் தொடர்ந்து வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரையிலும் நடைபெறும்.</p><p>2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு பணி தொடங்கினாலும், அதற்கு முன்னதாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நடைபெறுகிறது.</p><h2>சுயவிவரக் கணக்கெடுப்பு</h2><p>இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களுக்குப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்பு தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலும்.</p><p>இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவரின் விவரங்களை இணைய தளத்தில் பதிவுசெய்து, பொதுமக்களையும் தங்களின் தரவுகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.</p><p>அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களின் தரவுகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.</p><h2>மக்கள் பங்கேற்க அழைப்பு</h2><p>இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் #Census2027-இல் பங்கேற்று என்னுடைய விவரங்களை இணைய வழியில் பதிவு செய்தேன். </p><p>மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்று அவரவர் விவரங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மின்கட்டண உயர்வு விவகாரம்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு சிவசங்கர் பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/former-minister-sivasankar-slams-minister-nirmal-kumar-interview#comments</comments><guid isPermaLink="false">c6b6dfea-cc9c-44fc-af74-c52df00320f4</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:09:43 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:09:43.615Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்கட்டணம்,EB Bill,SS Sivasankar,எஸ்.எஸ்.சிவசங்கர்,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/syr3exak/sivasankar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sivasankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/syr3exak/sivasankar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.</p><p>தி.மு.க. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:</p><p>தமிழ்நாட்டில் தற்போது எழுந்துள்ள மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எங்களது தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழ்நாடு மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார். </p><p>கேள்வி கேட்ட நிருபர்களில் ஒருவரே, “என்னுடைய நண்பரின் வீட்டிற்கே கூடுதல் மின் கட்டணம் வந்திருக்கிறது” என்று கூறினார். அதற்குப் பதில் சொல்லாமல், “வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்” என்று அமைச்சர் கூறுகிறார்.</p><h2>வாட்ஸ்அப்பில் வந்தால் நம்பகமற்றதா?</h2><p>வாட்ஸ்அப்பில் வந்த செய்தியைப் பார்க்கக் கூடாதா? இன்ஸ்டாகிராமில் வந்த செய்தியைத்தான் பார்க்க வேண்டுமா? இன்ஸ்டாகிராமில் வந்தால் நம்பகமானது, வாட்ஸ்அப்பில் வந்தால் நம்பகமற்றதா?</p><p>என்னிடமும் ஒரு வாட்ஸ்அப் செய்தி இருக்கிறது. அதில் தமிழ்நாடு மின்வாரியத்தின் CMD அருண்ராய் IAS வெளியிட்டுள்ள அறிக்கையில், “In view of widespread complaints regarding high electricity bills during the month of July, Tamil Nadu Electricity Board has decided to conduct a re-inspection of high variation in consumption cases through responsible senior officers” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.</p><p>இதைப் பார்த்து பேசக்கூடாதா? இதை ஆதாரமாகக் கொண்டு கருத்து சொல்லக்கூடாதா? ஒரு பொறுப்பான அமைச்சர், கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், எதிர்க்கட்சியினரை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசுவது சரியல்ல. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரின் அரசியல் அனுபவம், வயது, வகித்த பதவிகள் ஆகியவற்றை அறிந்த பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். இன்று நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அந்தப் பொறுப்பை சிறப்பாகச் செய்யவேண்டும்; அதற்கான வாழ்த்துகள். ஆனால், அதை விட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது பொருத்தமல்ல.</p><p>நிர்மல் குமார் பல துறைகளில் கருத்து சொல்லும் “multi-talented minister” ஆகவும், அமைச்சரவையின் “mouthpiece minister” ஆகவும் செயல்படுகிறார். ஒரு நாள் மருத்துவம் குறித்து பேசுவார்; மற்றொரு நாள் தச்சு வேலை, பிளம்பிங் போன்றவற்றை தொழிலாகத் தேர்வு செய்யுமாறு ஆலோசனை வழங்குவார்; பிறகு சட்டத்துறையைப் பற்றிப் பேசுவார். ஆனால், தன்னுடைய துறையில் வெளியாகியுள்ள CMD-யின் அதிகாரப்பூர்வ அறிக்கையே அவருக்குத் தெரியாமல் பேசுவது வருத்தமளிக்கிறது.</p><p>“எந்தப் புகாரும் வரவில்லை” என்று அவர் கூறுகிறார். ஆனால் CMD அறிக்கையில் “widespread complaints” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகார்கள் இல்லையென்றால், மீள் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?</p><p>ஒருபுறம் “புகாரே வரவில்லை” என்கிறார்; மறுபுறம் ஆய்வு நடத்த உத்தரவிட்டதாகச் சொல்கிறார். இது முரண்பாடான நிலைப்பாடு அல்லவா? முதலில் மின்துறை எவ்வாறு இயங்குகிறது, அதில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதை ஒரு மாதமாவது, இரண்டு மாதமாவது முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகு பேட்டியளிக்க வேண்டும்.</p><h2>மின்வெட்டுக்கு ஒவ்வொரு காரணம் கூறும் அமைச்சர்</h2><p>மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணம் கூறுகிறார். ஒரு நாள் அதிகாரிகளையே குற்றம்சாட்டுகிறார். மற்றொரு நாள் எதிர்க்கட்சியினரே ஃபியூஸ் கேரியர்களை திருடிச் சென்றதாகச் சொல்கிறார். பிறகு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்கிறார். இவ்வாறு மாறிமாறி காரணங்களைச் சொல்வதற்குப் பதிலாக, முழுமையான ஆய்வு நடத்தி உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டும்.</p><p>மின்துறை என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடியாக தொடர்புடைய மிக முக்கியமான துறை. சில நாட்களுக்கு முன் தொழில் முனைவோர்களைச் சந்தித்தபோது, “இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது; எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.</p><p>எனவே, பிறருக்கு அறிவுரை கூறுவது, நையாண்டி செய்வது போன்றவற்றை விடுத்து, மக்களின் பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணும் நடவடிக்கைகளில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>CMD வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையையே அடிப்படையாகக் கொண்டு, “புகார்கள் வந்துள்ளதால் ஆய்வு நடத்துகிறோம்” என்று வெளிப்படையாகச் சொல்லலாம். அதற்கு பதிலாக உண்மையை மறைத்து, முரண்பட்ட விளக்கங்களை அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.</p><p>மொத்தத்தில், இந்த அரசு பல பிரச்சனைகளை மறைத்து சமாளிக்க முயல்கிறது என்ற எண்ணமே மக்களிடம் உருவாகியுள்ளது. முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை, பொதுமக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு நேரடியாக பதில் அளித்து, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே நல்லாட்சிக்கான அடையாளமாக இருக்கும்.</p><h2>காரணமில்லாமல் விமர்சிக்க மாட்டோம்</h2><p>தவிர்க்க முடியாத, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பொதுமக்களின் பிரச்சனைகள் இன்று அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒரு அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள்தான் ஆகிறது என்பதற்காக அதை விமர்சிக்கக் கூடாது என கூறுகிறார்கள். நாங்களும் காரணமில்லாமல் விமர்சிக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஏனெனில் நாங்களும் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களாக, அவர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எங்கள் கடமை.</p><p>அந்தக் கடமையின் அடிப்படையில்தான் எங்கள் தலைவர் மின்துறை பிரச்சனைகள் குறித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு உரிய பதில் அளிக்காமல், தேவையற்ற விமர்சனங்களில் ஈடுபடுவது சரியான அரசியல் அணுகுமுறை அல்ல. அதனால், அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டி பேச்சை தவிர்த்து, மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>தனது இயலாமையை மறைக்க திட்டங்களின் பெயரை மாற்றி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியும் என்று இந்த அரசு நினைக்கிறது. ஆனால் அது சாத்தியமல்ல. தேர்தலில் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களே முழுமையாக தங்களது செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டார்கள் என்று கருதுவது தவறான எண்ணம்.</p><p>அதனால்தான் இன்று திட்டங்களின் பெயர்களை மாற்றுவது, நிறங்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம், தாயுமானவர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம், அவற்றின் வரலாற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைப்பது தவறாகும். உண்மையில், அந்தத் திட்டங்களைப் பார்த்தாலே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுதான் மக்களுக்கு நினைவிற்கு வருகிறது.</p><p>அதேபோல், இணையதளங்களின் நிறங்களை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது போன்றவை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடிய வேலைகள். ஆனால் ஆட்சி மாறினால் அவை மீண்டும் மாற்றப்படலாம். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், பெயர் மாற்றங்களால் அல்ல; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே முடியும்.</p><h2>வரலாற்றில் பெயர் பெற...</h2><p>இன்றும் மக்களைக் கேட்டால், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், உரிமைப் பெண் திட்டம் போன்றவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டவை என்று கூறுவார்கள். அதைப் போலவே, தமிழ்நாட்டுக்கு “தமிழ்நாடு” என்ற பெயரை வழங்கியவர் அண்ணா என்பதையும், மாநில முன்னேற்றத்தில் கலைஞர் அவர்களின் பங்களிப்பு என்ன என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். வரலாற்றில் பெயர் பெற வேண்டுமென்றால் செயல்களால் பெற வேண்டும்; பெயர் மாற்றங்களாலும், நிறம் மாற்றங்களாலும் அல்ல. </p><p>மின்வெட்டு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்பதையே பலவீனமாகக் கருதி அரசு செயல்படக் கூடாது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர்களே முரண்பட்ட கருத்துகளை வெளியிடுவது அரசின் ஒருங்கிணைப்பின்மையைக் காட்டுகிறது. ஒரு அமைச்சர் ஒரு கருத்தைக் கூற, மற்றொரு அமைச்சர் அதை மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>மறைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன?</h2><p>விஜய் அவர்கள் இங்கே வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் கூறுகிறார். அப்படி என்றால் இங்கிருந்து யாரவாது முதல்வர் விஜய் அங்கு வர இருப்பதாக தெரிவித்திருக்க வேண்டும். அதனால்தான் தற்போது வர வேண்டாம் என அந்த முதல்வர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் இப்படி மறைத்து மறைத்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? தவெக கூட்டணி கட்சிகளே அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் இப்போதும் கள்ள மவுனம் காத்து வருகிறது இந்த அரசு.</p><p>எல்லாவற்றிற்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சனை வெடிக்காது என நினைக்கின்றனர் ஆனால் அந்த அமைதியே ஒருகட்டத்தில் அரசிற்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் புரட்சியாக வெடிக்கும் என தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rs-340-crore-allocated-for-drinking-water-and-other-essential-works-chief-minister-vijay-orders#comments</comments><guid isPermaLink="false">406b961e-63d9-45d8-9cde-1e1ee07d2064</guid><pubDate>Fri, 31 Jul 2026 14:02:29 +0000</pubDate><atom:updated>2026-07-31T14:02:29.917Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Drinking water,நிதி ஒதுக்கீடு,Fund Allocation,குடிநீர்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gzjqdypk/New-Project-2026-07-31T193156.661.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் விஜய் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gzjqdypk/New-Project-2026-07-31T193156.661.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து ஆய்வுசெய்து குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். </p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. </p><p>இகூட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு / நீர்த்தேக்க அளவு, தமிழ்நாட்டில் தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, மழை அளவு குறைவாகப் பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம், நகர மற்றும் கிராமப்பகுதிகளில் குடிநீர் விநியோகம், நடைபெற்றுவரும் வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம், </p><p>கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு,  குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.</p><p>இதனைத்தொடர்ந்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்  மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்படுத்திட மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்திட 330 கோடி ரூபாயும், கால்நடை பராமரிப்பு,  பால்வளம், மீன்வளம் - மீனவர் நலத்துறைக்கு 10 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். </p><p>இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் வினோத், மரிய வில்சன் மற்றும் துறைவாரியான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">e82d6ce7-04c7-475e-9325-168e1732ee86</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:36:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:36:15.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Medal,Police department,ஜோசப் விஜய்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவலர்களுக்கு பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- DGP Maheshkumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தி் நடைபெற்ற காவல்துறை விருது வழங்கும் விழாவில் காவல்துறை அணிவகுப்புடன் முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><p>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</p><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தா் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.</p><h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><h2>பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு</h2><p>ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>புதிய ரோந்து வாகனங்கள்</h2><p>கடலோரற காவல் நிலையங்களின் ரோந்து, கண்காணிப்பு பணிக்கக 42 மகேந்திரா தார் வாகன சேவைய முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p>96 ஹோண்டா யூரிகார்ன் இருசக்க வாகனங்களின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சாகச நிகழ்ச்சிகள்</h2><p>காவல்துறை விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகளை முதலமைச்சர் விஜய்  கண்டு ரசித்தார்.</p><h2>மோப்ப நாய் ராக்கி</h2><p>முதலமைச்சர் விஜய்க்காக பூங்கொத்து எடுத்து வந்த மோப்பநாய் ராக்கி.</p><h2>நினைவு பரிசு</h2><p>தமிழக காவல்துறை சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கி கவரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">dca8573e-81b3-4ddb-8e45-eafc1a326628</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:32:21 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:32:21.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election commision,Chennai High court,சென்னை ஐகோர்ட்,by election,ban extend,தடை நீட்டிப்பு,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</p><h2>முதல்வர் விஜய் ராஜினாமா</h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.</p><p>அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>5 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இதற்கிடையே, இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.</p><h2>தேர்தல் ஆணையத்துக்கு தடை</h2><p>மனுதாரர், தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><h2>தடை நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals#comments</comments><guid isPermaLink="false">1ea9daee-4f56-4c7e-96cf-1364ab03e25f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:12:51.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,medals,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,காவலர்களுக்கு பதக்கம்,CM Vijay Honour</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி வருகிறார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.</p><p>முன்னதாக, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know#comments</comments><guid isPermaLink="false">59130b1f-fe3a-4a35-92d1-a56e93cca63f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:06:28.015Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,Seenu Ramasamy,சீனு ராமசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு... ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு இன்னும் சுற்றுசூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் வன அனுமதி கோரியும் எந்த முன்மொழிவும் தங்களிடம் வைக்கப்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தியது. </p><p>இந்நிலையில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்னும் பெறாத முக்கிய அனுமதிகள் என இயக்குநர் சீனு ராமசாமி, தற்போதைய தமிழ்நாடு சூழலுக்கு தேவையான சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><ul><li><p>வன அனுமதி: மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட (Stage I &amp; Stage II) வன அனுமதிகள் பெறப்படவில்லை.</p></li><li><p>சுற்றுச்சூழல் &amp; வனவிலங்கு அனுமதி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (EC) அனுமதியும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதியும் பெறப்படவில்லை.</p></li><li><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல் நிலுவையில் உள்ளது.</p></li><li><p>தொழில்நுட்ப அனுமதிகள்: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆகியவற்றின் இறுதித் தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.</p></li><li><p>நீதிமன்ற வழக்குகள்: உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழ்நாடு அரசு மற்றும் 'பூவுலகின் நண்பர்கள்' உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p></li></ul><p>இத்தனை சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்கின்றன தரவுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">d354dd0a-4aaa-4a6a-af44-2ba68a5a1973</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:54:41 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:54:41.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">மேகதாது</a> அணையை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கையை எதிர்த்து என தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>தனி நடுவர் மன்றம்</h2><p>தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><h2>அதிமுக வழக்கு</h2><p>பின்னர் அதிமுக, பாமக கட்சிகள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தேவையில்லாதது எனக் கூறினர். இந்த நிலையில் தீர்மானத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>இவ்வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர், சட்டமன்றச் செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>* 2018-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p>* தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர வாரியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.</p><p>* உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை. தமிழக அரசு போராடித்தான் தண்ணீரை பெறக் கூடிய நிலை இருந்து வருகிறது.</p><p>* கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணை கட்டுவோம் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.</p><p>* மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டின் டெல்லா பகுதி பாலைவனமாகிவிடும். </p><p>* காவிரி 20 மாவட்டங்ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.</p><p>* த.வெ.க. அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஏதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சட்டசபையில் தனித்தீர்மானம் வைக்கப்பட்டது.</p><h2>முதல்வர் விஜய் முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்</h2><p>* முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.</p><p>* எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஒரு கருத்தை முன்வைத்தார்.</p><p>* முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். இது தவறானது.</p><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p>* பிறகு விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாகத்தான் நாங்கள் சட்டமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour#comments</comments><guid isPermaLink="false">e66ae593-5db5-4142-8b3a-6d96719641f6</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:50:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:50:59.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல்துறை பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் பதக்கம்</h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்குகிறார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்குகிறார்.</p><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெக கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors#comments</comments><guid isPermaLink="false">ba7a9247-5b82-421a-8240-2e7eb94fe3fb</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:48:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:48:28.511Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tnstc,tvk,டிஎன்எஸ்டிசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெகவின் கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளன.</p><p>செயலி மட்டுமின்றி, தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறத்தையும் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>நிறங்களைத் தாண்டி, கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களையும் தவெக அரசு மாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">af6f0be1-4ee7-4e4b-8d42-bdee9a6ce6b8</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:33:16 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:33:16.859Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,vijay,mekedatu dam,மேகதாது அணை,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>த.வெ.க. ஆட்சி</h2><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.</p> <p>குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க.வின் சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.</p> <p>கர்நாடக முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">காவிரி மேலாண்மை ஆணையம்</a> பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார். </p> <p>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளி வந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p><h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>முதலமைச்சர் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை மந்திரி அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சரின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed#comments</comments><guid isPermaLink="false">0b86b1de-e4d4-43e0-8b45-265e77a8d086</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:08:45 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:08:45.550Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கடந்த ஆட்சியில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்பதற்கு பதில் பொது விநியோகத் திட்டம் என குறிப்பிட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><h2>தொடர்ந்து மாற்றப்படும் திட்டப் பெயர்கள்</h2><p>தவெக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. முன்னதாக, நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அறிக்கை வெளியாகி உள்ளது.</p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக நியாய விலைக்கடைப்  பொருட்களை வழங்கும் ஒரு சிறப்புச் சமூக நலத் திட்டமாகும்.</p><p>கூட்டுறவுத் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி நாளை சென்னை வருகை - நீட் தேர்வால் பலியான மாணவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">927ec171-3941-4572-a12f-e012d4cf8db6</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:47:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:47:02.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார்.</em> </p><h2>பயிற்சி முகாம்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23 -ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.</p><p>இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது. </p><h2>ராகுல் காந்தி</h2><p>முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல்காந்தி</a> நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.</p> <p>அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.</p><p>அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.</p> <p>அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கின்றனர். </p> <h2>உளவுத்துறை தகவல்</h2><p>ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item></channel></rss>