<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 20 Jul 2026 12:36:18 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-20-july-2026#comments</comments><guid isPermaLink="false">a891028b-8923-40ff-9440-b41df422083d</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:31:44 +0000</pubDate><atom:updated>2026-07-20T12:18:35.582Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/xyqaz6vp/WhatsApp-Image-2026-07-20-at-10.03.28-AM.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-cockroach-janata-party-chief-held">கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே கைது?</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-leaders-meet-union-minister-jp-nadda-submit-letter-of-demands">மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்த CJP தலைவர்கள்: முன்வைத்த முக்கிய 3 கோரிக்கைகள்</a></p><figure><img alt="CJP Leaders Meets JP Nadda" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/c99mr7jp/CJPProtest001.jpg" /></figure><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-parliament-siege-protest-section-163-restrictions">டெல்லியில் பரபரப்பு: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தால் 163 தடை உத்தரவு அமல்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/venizula-earthquake-death-toll-passes-5000">வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/75b67448-3134-400e-9b4c-161914f5ca29">சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/kolkata-court-orders-the-arrest-of-delhi-capitals-player-abishek-porel">டெல்லி கேப்பிட்டல்ஸ வீரர் அபிஷேக் போரலை கைது செய்ய கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு!</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/ec5f7594-ab41-4837-8f1f-0a4aa280ff83">துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2.30 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/1cb43aff-8acd-465e-b970-b406ec103fb1">மாநிலங்களவையில் எதிரொலித்த CJP போராட்டம்.. போராட்டக் களத்தில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு</a> </p><p><a href="https://maalai-malar.quintype.com/story/4cdbf461-721a-437e-a832-36244f78c95f">விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/06fdd6cb-ef0d-4c7b-a9b8-bfad79c1d376">நலமாக உள்ளேன்.. பேரணியில் பங்கேற்க என்னை டிஸ்சார்ஜ் செய்யுங்கள் - மருத்துவ அறிக்கைக்கு இடையில் வாங்சுக் வேண்டுகோள்</a></p><p>எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/454180a1-952a-429d-9307-925bdaf59cb4">பா.ம.க.வின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt">தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</a></p><p>நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p> <p>நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p><p>மேகதாது விவகாரம் குறித்து 'போராடுவோம் போராடுவோம்' என திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.</p> <p>டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் குறித்து கார்கே பேச ஆரம்பித்ததும் மாநிலங்களவையை ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தார்.</p><p>நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திமுக எம்பிக்கள் புறக்கணித்தனர்.</p> <p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச ஆரம்பித்ததும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/04774660-0332-4384-b7fe-ffffc97c38d6">நீட், ராமர் கோவில் முறைகேடு.. எதிர்க்கட்சி அமளியால் தொடங்கிய சில நிமிடங்களில் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f2396a00-20a1-4788-a8ef-47068797740b">திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc">சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</a></p><p>எதிர்க்கட்சியினர் அமளி காரணமாக மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.</p> <p>மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.</p>  <p>மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து  திமுக எம்பிக்கள் பச்சை துண்டு அணிந்து சென்றுள்ளனர்.</p> <p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.</p><p>கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/d29a6d2a-ac90-492f-96b9-936f1e06b538">தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7128e287-4e58-4a06-b295-7271896099ab">VIDEO: பாராளுமன்றம் நோக்கி பேரணிக்கு ஆயத்தம்.. ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி</a></p><p>பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/86db5eea-b71a-48ff-b13e-a8cb62e6892e">விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது - பிரதமர் மோடி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f">சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e5ab64bf-f201-41ca-8550-d9577780d25d">மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.261 கோடி செலவு: RTI-யில் தகவல்!</a></p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7hsdt38x/modi.jpg" /></figure><p>சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரெயிலை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. உலகின் எந்த போர்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது - பிரதமர் மோடி</p> <p>விண்வெளி துறையில் வானளாவிய வளர்ச்சியை இந்தியா தொட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் வெற்றியை அடுத்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் - பிரதமர் மோடி</p> <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/hnb3g8hj/modi1.jpg" /></figure><p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என நம்புகிறேன் - பிரதமர் மோடி</p><p><a href="https://maalai-malar.quintype.com/story/76bc8537-d996-44b1-8933-1f9769709c7b">என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/dc277594-7acd-4341-9e39-17e9e465efe2">அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04">விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e987724e-e437-406b-93b4-a72b467fd1fb">விளாத்திகுளம் எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/7824cb9d-6d11-4fb8-8b69-3182b2e561f0">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3">முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-scam-protest-sonam-wangchuk-hunger-strike-at-jantar-mantar-with-three-key-demands">இன்றே உண்ணாவிரதத்தை கைவிட தயார்.. மூன்று நிபந்தனைகள் விதித்த சோனம் வாங்சுக்!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/fifa-world-cup-spain-clinch-second-title-as-trump-hands-trophy-after-1-0-win-over-argentina">FIFA Worldcup: ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-spain-beat-argentina-in-extra-time-to-claim-second-title-as-messi-bids-farewell-in-tears">நேசிக்கிறோம் லியோ.. மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி - அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு சமாதானம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/sports/football/football-world-cup-full-details-on-prize-money-and-golden-and-silver-awards">உலகக்கோப்பை கால்பந்து.. பரிசுத்தொகை, கோல்டன், சில்வர் விருதுகள் முழு விவரம்</a></p> <p><a href="https://maalai-malar.quintype.com/story/44c7459f-2679-4b16-a8a1-ec3118c9c686">மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53">GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29">பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996">அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</a></p>]]></content:encoded></item><item><title>CJP போராட்டம்: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-slams-centre-over-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">c2e40369-de04-4732-99ec-728d3aaf3c77</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:17:56 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:17:56.655Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,DMK,திமுக,Union Ministry,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockroach Janata Party</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DMK Anna Arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/25szpkql/DMK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பு, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் இன்று ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி 'சலோ சன்சாத்' என்ற பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.</p><p>காவல் துறை அனுமதி மீறி, போராட்டம் நீடித்த நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p>இந்நிலையில், “தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு.</p><p>கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும். மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும். அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது” என திமுக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.</p><p>இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-</p><p>நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.</p><p>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதக் காலமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றவர்கள் மீது அடக்குமுறை ஏவி விடப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதலைக் காவல்துறை மூலம் நிகழ்த்தியிருக்கிறார்கள்.</p><p>அமைதியான அறவழியில் போராடியவர்கள் மீது அதிகாரத் துஷ்பிரயோகத்தை ஏவி விட்டிருக்கிறார்கள். உரிமைகளுக்காக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை அடக்குமுறையால் என்றும் ஒடுக்கிவிட முடியாது.</p><p>தலைநகரில் மிகப் பெரிய போராட்டமாக மாறியிருக்கும் இளைஞர்கள் போராட்டத்தைக் கண்ணீர்ப் புகை வீச்சு, இணையதள முடக்கம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் ஆகியவற்றால் முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. கல்விக்காகப் போராடுகிறவர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும்! </p><p>மாணவர்களின் உயிர்ப் பறிக்கும் நீட் தேர்வு அறவே ஒழியட்டும்!</p><p>இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு திமுக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.<br><br>நீட் தோ்வு உள்படப் பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்… <a href="https://t.co/jsOdVDS2Te">pic.twitter.com/jsOdVDS2Te</a></p>&mdash; DMK (@arivalayam) <a href="https://x.com/arivalayam/status/2079123740814901485?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/karnataka-fails-to-release-water-eps-condemns-chief-minister-dk-shivakumar#comments</comments><guid isPermaLink="false">e504d393-6838-4a10-960f-d473afe9296d</guid><pubDate>Mon, 20 Jul 2026 11:15:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T11:15:25.601Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,கர்நாடகா,Karnataka,டி.கே.சிவகுமார்,D.K. Shivakumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் திறக்காத கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/914jktud/New-Project-2026-07-20T164444.744.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரசியல் சாசன சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை இன்னும் திறக்கவில்லை. இதற்காக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக காவிரி தண்ணீரை நம்பித்தான் உள்ளனர். உச்ச நீதிமன்றமும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், கர்நாடக ஆட்சியாளர்கள் காவிரியில் தமிழ்நாட்டிற்க்குரிய பங்கு நீரை வழங்குவதில்லை. வெள்ள உபரிநீர் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>கர்நாடக அரசு, காவிரியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பங்கு நீரை முழுமையாக விடுவிக்கிறதா என்பதை கண்காணிப்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் மற்றும் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் பணியாகும்.</p><p>சென்ற மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய தண்ணீரைத் தரும்படி கர்நாடக அரசிற்கு அறிவுறுத்திய பிறகும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீரைத் திறக்க உத்தரவிடவில்லை; </p><p>தமிழ்நாடு அரசும் தண்ணீரைத் திறக்கும்படி கேட்கவில்லை; எனவே, தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீரை தரமுடியாது என்று 10 நாட்களுக்கு முன்பு கர்நாடக அமைச்சர் உண்மைக்கு மாறாகக் கூறியிருந்தார். </p><p>உடனடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க த.வெ.க. அரசையும் வலியுறுத்தினோம். ஆனால், த.வெ.க. அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். </p><p>ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர், கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. </p><p>இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள்.</p><p>ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. </p><p>பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழ்நாடு மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர், கர்நாடக அரசுடன் தொடர்புகொண்டு காவிரியில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைப் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.</p><p>ஏற்கெனவே, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் பரப்புரையின்போது த.வெ.க. தலைவர், சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் கடனில் 50 சதவீதம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>ஆனால், ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின், குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 75,000/- வரை பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000/-க்கு மேல் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 35,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார். </p><p>இதனால், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் த.வெ.க. அரசு, டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். </p><p>மேலும், விவசாயத் தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி, அவர்களின் வாழ்வாதாரமும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் மாலை, இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-weather-update-details#comments</comments><guid isPermaLink="false">75b67448-3134-400e-9b4c-161914f5ca29</guid><pubDate>Mon, 20 Jul 2026 10:34:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T10:34:13.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1b8qv1a4/rain007.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>24-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>25 மற்றும் 26-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><h2>அதிகபட்ச வெப்பநிலை</h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content:encoded></item><item><title>அரசு இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரதம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/e-service-centre-employees-hunger-stike</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/e-service-centre-employees-hunger-stike#comments</comments><guid isPermaLink="false">d548ba35-28e2-40d4-8835-8a83f0ffba5f</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:50:06 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:50:06.978Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அரசு இ சேவை மையம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/i8s8aky5/chennai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/i8s8aky5/chennai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய  ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. </aside><h2><strong>போராட்டம்</strong></h2><p>தமிழ்நாடு தரவு உள்ளிட்டாளர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. </p><p>தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுமுறை காலங்களில் ஊதியம் வழங்கிடு, ஆதார் சேவை மைய  ஊழியர்களின் ஐடி முடக்கம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. </p><h2><strong>பலர் பங்கேற்பு</strong></h2><p>போராட்டத்திற்கு மாநில தலைவர் கோபி குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி. மாநில தலைவர் சுகுமாரன் தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் மனோஜ் குமார் கோரிக்கை உரையாற்றினார். மாலதி சிட்டிபாபு, குப்புசாமி, முருகேஷ், செந்தில்குமார், கண்ணன், சசிரேகா, சபரீஷ் சுகுமார் எம்எஸ் பாண்டி சையத் வினோலியா அப்துல் பால விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். </p><p>கடந்த ஆட்சி காலத்தில் நிறைவேற்ற  வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தள்ளிப் போடப்பட்டது. புதிய அரசும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெருங்குடி அருகே தாயை உரலால் அடித்து கொன்ற மகன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-near-perungudi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/son-arrested-for-mother-murder-case-near-perungudi#comments</comments><guid isPermaLink="false">dd629166-fb80-4749-8602-c90f969cbfe8</guid><pubDate>Mon, 20 Jul 2026 09:29:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T09:29:36.076Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Police Investigation,போலீசார் விசாரணை,தாய் கொலை,மகன் கைது,mother murder,Son Arrest</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9hx18s8p/murder.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9hx18s8p/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெருங்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் பாபு லால் (வயது 48). இவர் அதே பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். </p><p>இவரது மனைவி சென்னி தேவி(43). இவர்களுக்கு ராகேஷ்(19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.</p><h2><strong>படுகொலை</strong></h2><p>மகன் ராகேஷ் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டில் உள்ளார். ராகேசுக்கு சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.  </p><p>இதற்காக  தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.  இந்த நிலையில் பாபுலால் தனது உறவினர் இறந்து விட்டதால் ராஜஸ்தான் சென்று விட்டார்.</p><p>நேற்றிரவு சென்னி தேவி உள்ளிட்ட 3 பேரும் வீட்டில் ஒரே அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.  </p><p>இன்று அதிகாலையில்  திடீரென  எழுந்த ராகேஷ் தூங்கிக் கொண்டிருந்த தாயார் சென்னிதேவியை துண்டால் கழுத்தை நெறித்து காய்கறி வெட்டும் கத்தியால் குத்தினார். பின்னர் உரலால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. </p><p>இதனை கண்டு சென்னிதேவியின் மகள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார். </p><p>தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட சென்னி தேவி உடலை  பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>ராகேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  </p><h2><strong>ரவுடி குத்திக்கொலை</strong></h2><p>சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம்.நகரை சேர்ந்த நாகராஜ் மகன் பலி ஆடு என்ற அஜய் (வயது 20). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரை சேர்ந்த காஜல் (24) என்ற திருநங்கையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ராமதாஸ் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் திருநங்கையை இறக்கி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் வந்தனர்.</p><p>அவர்கள் திடீரென்று அஜய்யை சுற்றி வளைத்து தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அஜய் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில்  கீழே விழுந்தார்.  சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.</p><h2><strong>பரபரப்பு</strong></h2><p>சினிமாவில் வருவது போல கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வண்ணாரபேட்டை  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.  அஜய்யை  கொன்றவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அஜய்யும், அவரது நண்பரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வந்தனர். பின்னர் இருவரும் இன்ஸ்டாவில் தனித்தனியாக ரீல்ஸ் போட தொடங்கினர்.</p><p>இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலை நடந்திருப்பதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரனை நடைபெற்று வருகிறது.</p><p>சென்னையில் ஒரே  நாளில் ரவுடி, பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வாகனம் மோதி விபத்து - காயம் அடைந்த குரங்கை சுற்றி நின்று பாசப்போராட்டம் நடத்திய பிற குரங்குகள் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vehicle-collision-monkeys-gathered-around-an-injured-monkey</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vehicle-collision-monkeys-gathered-around-an-injured-monkey#comments</comments><guid isPermaLink="false">f57c86c7-c3f7-4bd6-9ed2-2c45ec5587fd</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:51:30 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:51:30.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>accident,விபத்து,Monkey injury,குரங்கு காயம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rm84ewck/monkey.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Monkeys]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/rm84ewck/monkey.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>அடையாளம் தெரியாத கார் ஒன்று குரங்கின் மீது மோதியதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. </p><h2>ஆழியாறு அணை</h2><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அருகே பூங்கா உள்ளது. </p><p>இன்று காலை பூங்கா அருகே உள்ள சாலையோரம் 5 வயது மதிக்கத்தக்க குரங்கு நின்று கொண்டு இருந்தது. </p><p>அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, அந்த குரங்கின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் குரங்கின் கால் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. </p><h2>பிஸ்கட் கொடுக்க முயன்ற குரங்கு </h2><p>இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப்பயணிகள் அங்கு ஓடிச் சென்று பார்த்தனர். வலியால் துடித்த குரங்கு, அங்கிருந்து மெதுவாக ஒரு மரத்தின் அடியில் வந்து படுத்துக் கொண்டது. அந்த குரங்கால் அடுத்த எழும்பவே முடியவில்லை. ஒரே இடத்தில் படுத்து கிடந்தது. </p><p>இதனை பார்த்த சக குரங்குகள், காயம் அடைந்த குரங்கை தடவி தேற்றுவதும், அதனை எழும்பச் சொல்லி முயற்சித்ததும் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு ஒரு படிமேலாக குட்டி குரங்கு ஒன்று பிஸ்கெட் எடுத்துச் சென்று காயம் அடைந்த குரங்குக்கு கொடுக்க முயன்றது. ஆனால்  காயம் அடைந்த குரங்கால் சாப்பிட முடியவில்லை. </p><h2>வனத்துறையினர் சிகிச்சை</h2><p>இந்த காட்சியை பார்த்து அங்கு நின்ற பெண்கள் கண் கலங்கினர்.  இதற்கிடையே பூங்கா ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். </p><p>வனத்துறை ஊழியர்கள் காயம் அடைந்த குரங்கை மீட்டுச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். </p> ]]></content:encoded></item><item><title>திருப்பூரில் இரவும் பகலுமாக தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijays-exclusive-t-shirt-is-being-produced-in-tiruppur#comments</comments><guid isPermaLink="false">7cdbf3a7-f253-4c3a-ae00-20d3e1640ec5</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:45:29 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:45:29.922Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,விஜய்,vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/feeaifes/Jananayagan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</aside><h2><strong>ஜனநாயகன்</strong></h2><p>தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள கடைசித் திரைப்படமான ‘<a href="https://www.maalaimalar.com/topic/ஜன-நாயகன்">ஜனநாயகன்</a>’ வருகிற 23 -ந்தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், திருப்பூரின் ஜவுளித்துறை புதிய வர்த்தக உச்சத்தைத் தொட்டுள்ளது.</p><h2><strong>அசுர வேகம்</strong></h2><p>​திரைத்துறையில் இருந்து அரசியல் உலகிற்குள் நுழைந்து, தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய்யின் தற்போதைய அதிகாரப்பூர்வ கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்களிடமும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தொண்டர்களிடமும் விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக, முதல் நாள் முதல் காட்சியைக் காண வரும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அணிவதற்காகப் பிரத்தியேக டி-ஷர்ட்கள் தயாரிக்கும் பணி திருப்பூரில் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.</p><p>திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ளதால், மிகக்குறுகிய காலக்கட்டமே இருப்பதால், தமிழகத்தின் முன்னணி ஜவுளி மையமான திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் முழு வீச்சில் டி-ஷர்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளன. முதலமைச்சர் விஜய்யின் கம்பீரமான புகைப்படங்கள் மற்றும் கட்சியின் இலச்சினைகள் தாங்கிய வண்ணமயமான ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><figure><img alt="ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன." src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mr4eq1f5/tirupur.jpg" /><figcaption>ஆடைகள் இரவும் பகலுமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</figcaption></figure> <h2><strong>குவியும் ஆர்டர்கள்</strong></h2><p>​இந்த அவசரத் தேவையை எவ்விதத் தொய்வுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மேலும், தயாரிக்கப்படும் ஆடைகளை உடனடியாகக் கொண்டு சேர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அதிவேக கூரியர் மற்றும் பார்சல் சேவைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.</p><p>​இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள் அனைத்தும், இந்த பிரத்தியேக ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரம்  ஒதுக்கி, தொழிலாளர்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.</p><p>முதலமைச்சர் விஜய்யின் இந்த இறுதித் திரைப்படத்திற்கான வரவேற்பு தமிழக எல்லையைத் தாண்டியும் எதிரொலித்து வருகிறது. கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர் மன்ற அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கான ஆடைகளுக்கான ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வந்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.</p><figure><img alt="திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/w3pplyvb/Jana02.jpg" /><figcaption>திருப்பூரில் தயாராகும் விஜய்யின் பிரத்தியேக டி-ஷர்ட்</figcaption></figure> <p>அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெள்ளித்திரையில் முதலமைச்சரைக் காணப்போகும் ஆவலில், ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த டி-ஷர்ட் கலாச்சாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலுக்கும் இது ஒரு மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தைத் தந்துள்ளதாகத் தொழில்துறையினர் பெருமிதம் கொள்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ஊழல் இல்லாத த.வெ.க.வின் காமராஜர் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர வேண்டும் - ப.சிதம்பரம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/p-chidambaram-says-tvk-corruption-free-kamaraj-style-rule-must-continue-for-five-years#comments</comments><guid isPermaLink="false">249e1dfe-24f8-4c3c-aef3-bc827fa75546</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:42:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:42:13.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தவெக,P Chidambaram,ப சிதம்பரம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Chidambaram]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/y26gg40e/chidambaram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.</p><h2>காமராஜர் பிறந்தநாள் விழா</h2><p>மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் என்ற பிரசாரத்தின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-</p><h2>காங்கிரஸ் ஆட்சி</h2><p>தமிழ்நாட்டில் நடைபெற்ற காமராஜரின் 9 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சமே கிடையாது. காமராஜரின் ஆட்சிக்காலம் அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியது. </p><p>அந்த ஒன்பது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்ற பேச்சே இல்லை. எந்தவொரு அமைச்சருக்கு எதிராகவும், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எழவில்லை. அதேபோல் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பில் தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் மாத செயல்பாடுகள், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தைப் போன்றது.</p> <h2>த.வெ.க. ஆட்சி</h2><p>புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் பத்திரப் பதிவு அலுவலகம் முதல் தனியார் உதவி பள்ளி பெறும் பள்ளிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம், இடமாறுதல் வரை லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வருகிறார். </p><p>நிச்சயம் முதலமைச்சர் விஜய்யின் அரசு அதனையும் சாதிக்கும் என்று தான் நம்புகிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத இந்த காமராஜர் ஆட்சி, 5 ஆண்டுகள் தொடர வேண்டும் என்றார். காங்கிரசின் ஆதரவும், அரசுடனான அதன் உறவும், தமிழகத்தில் லஞ்சமில்லாத ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தைப் பெற உதவும்.</p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p><h2>மாணிக்கம் தாகூர்</h2><p>நிகழ்ச்சியில் தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon">காங்கிரஸ்</a> கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், காமராஜர் வாழ்நாள் முழுவதும் மாணவர்களின் கல்விக்காக உழைத்தார். ‘காமராஜர் மாடல்’ அரசை யாராலும் கொண்டு வர இயலாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது, என்றார்.</p>]]></content:encoded></item><item><title>திருடு போன அம்மனின் 10 சவரன் நகை- சாமியாடி கண்டுபிடித்த பூசாரியின் மனைவி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/amman-jewelry-theft-priests-wife-acting-as-a-trance-medium-locates-it#comments</comments><guid isPermaLink="false">3303220c-f05a-4073-a86a-b8c6ffa25071</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:31:26 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:31:26.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அம்மன் நகை திருட்டு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திருடு போன நகையை சாமியாடி கண்டுபிடித்த பெண்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/7zfqndj3/tiruvallur0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் திரவுபதி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. </p><h2><strong>நகை திருட்டு</strong></h2><p>இதையொட்டி கடந்த 2 நாட்களாக திரவுபதி அம்மன் மற்றும் அம்மன் சிலைகள் அனைத்தையும் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்து இருந்தனர். இதனால் திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் சென்று பார்த்தபோது அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்க செயின் மாயமாகி இருந்தது. கோவிலில் பல இடங்களில் தேடியும் செயினை கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மனை வழிபட வந்ததுபோல் நடித்த மர்மநபர் செயினை திருடி சென்று இருப்பது தெரிந்தது. </p><p>இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் தங்க செயினை கண்டு பிடிக்க முடியவில்லை.</p><h2><strong>அருள்வாக்கு</strong></h2><p>இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதற்காக கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து இருந்தார்கள். </p><p>அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்து சாமியாடினார். மேலும்  அருள்வாக்கும் கூறினார்.</p><p>அவர் சாமியாடியபடி “எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது” என்று கூறியபடி கோவிலை சுற்றி வந்தார். பின்னர் அவர் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது அவரது கையில் திருடுபோனதாக கூறப்பட்ட அம்மன் நகை இருந்தது.  “என் நகை திருடு போல... இங்க தான் இருக்கு...” என்று சொல்லிய படி பக்தர்களிடம் காண்பித்தார். இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.</p><h2><strong>பக்தர்கள் பரவசம்</strong></h2><p>அம்மன் சிலையில் இருந்து திருடப்பட்ட நகை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதி அடைந்தனர். சாமி சிலையில் இருந்த நகையை திருடியதால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற பயத்தில் மர்மநபர்கள் திருடிய நகையை எடுத்துவந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர். </p><p>மேலும் சிலர் சாமியாடிய பெண் மாயமான நகையை எப்படி கண்டுபிடித்தார்? என்ற பதில் தெரியாமலும் கேள்விகள் எழுப்பினர். எது எப்படியோ? கோவிலில் திருடுபோன நகை கிடைத்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். </p><p>பின்னர் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருடு போன அம்மன் நகையை சாமியாடிய பெண் கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் கூண்டோடு ராஜினாமா </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/1000-supporters-of-cve-shanmugam-in-villupuram-district-resign-en-masse#comments</comments><guid isPermaLink="false">4cdbf461-721a-437e-a832-36244f78c95f</guid><pubDate>Mon, 20 Jul 2026 08:05:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T08:05:09.008Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,சிவி சண்முகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதற்காக சென்னை செல்ல திண்டிவனத்தில் திரண்டிருந்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்.]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ccp87hfa/villupuram.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</aside><p>சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">சி.வி.சண்முகம்</a> தலைமையில் எம்.எல். ஏ.க்கள் அணி திரண்டனர்.</p><p>இவர்களில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் பின்னர் மனம் மாறி எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து விட்டனர். </p><h2><strong>கட்சி பதவிகள் பறிப்பு</strong></h2><p>இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.</p><p>தொடர்ந்து மோதல் போக்கு நீடித்த நிலையில் கடந்த 16-ந்தேதி சி.வி. சண்முகத்தின் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">ஆதரவாளர்கள்</a> 11 பேரின் கட்சி பதவிகளை பறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். </p><h2><strong>கூண்டோடு ராஜினாமா</strong></h2><p>இந்த நிலையில், திண்டிவனம் முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 1000-த்திற்கும் மேற்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.</p><p>அதன்படி இன்று காலை முன்னாள் எம்.எல்.ஏ. அர்ஜூனன் தலைமையில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திரண்டனர். </p><p>பின்னர் அவர்கள் 5 வேன்கள், 50-க்கும் மேற்பட்ட கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு செல்லும் அவர்கள் அங்கு தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர். </p><p>முன்னதாக அவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு நேரில் சென்றும் முறையிட இருக்கிறார்கள். சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் இன்றைய சென்னை பயணம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-office-bearers-for-the-tamil-nadu-congress-soon#comments</comments><guid isPermaLink="false">91e43621-4260-4d6e-a68b-3951a98df00e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:53:08 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:53:08.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,TN Congress,தமிழக காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1cou2g6w/TNCongress.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழக காங்கிரஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1cou2g6w/TNCongress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>வட்டார, நகர, பேரூர் தலைவர்களை பொறுத்தவரை சுமார் ஆயிரம் பேர் பொறுப்புக்கு வருவார்கள். புதிய ரத்தம் பாய்ச்சும் போது கட்சி வளர்ச்சி அடையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</aside><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-காங்கிரஸ்">தமிழக காங்கிரசுக்கு</a> புதிய மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேரடியாக தேர்வு செய்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 77 மாவட்ட தலைவர்களுக்கும் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை மகாபலிபுரத்தில் நடக்கிறது. முகாம் நடைபெறும் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாள் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.</p><h2><strong>புதிய நிர்வாகிகள்</strong></h2><p>இந்த பயிற்சி முகாம் முடிந்ததும் வட்டார, நகர, பேரூர் தலைவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு வட்டார அளவிலும் நேரில் சென்று விசாரிப்பார்கள். அப்போது தகுதியானவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் மாநில தலைவர் ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த பணிகளை இன்னும் 2 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.</p><p>வட்டார, நகர, பேரூர் தலைவர்களை பொறுத்தவரை சுமார் ஆயிரம் பேர் பொறுப்புக்கு வருவார்கள். புதிய ரத்தம் பாய்ச்சும் போது கட்சி வளர்ச்சி அடையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.</p><p>அதே நேரம் மாநில நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் மாநில நிர்வாகிகள் நியமித்து சுமார்  8 வருடங்கள் ஆகி விட்டது. எனவே மாநில நிர்வாகிகளையும் விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு - வன்னி அரசு பதிலடி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-speech-vanni-arasu-condemned#comments</comments><guid isPermaLink="false">1f8bbfc9-0341-4360-9d1e-5d91ca03e89e</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:38:34 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:38:34.041Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,vanni arasu,வன்னி அரசு,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/1nwatcxx/vanniyarasu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.</p><h2>அனிதா ராதாகிருஷ்ணன்</h2><p>ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.</p><p>மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.</p> <p>சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர் மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.</p><p>எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான்  நினைவுபடுத்த விரும்புகிறோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections">மார்க்கண்டேயன்</a> முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்து பேசி இருந்தார்.</p><p>கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதாவது, விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.</p> <h2>எலும்பை உடைப்போம்</h2><p>சட்டமன்றத்தை கூட்டும் போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம். சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும்.</p><p>கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.</p><p>கொத்து பரோட்டா போட போறாராம். உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை. இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>இதையடுத்து முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>பா.ம.க.வின்  19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-release-pmk-19th-agricultural-shadow-budget#comments</comments><guid isPermaLink="false">454180a1-952a-429d-9307-925bdaf59cb4</guid><pubDate>Mon, 20 Jul 2026 07:13:18 +0000</pubDate><atom:updated>2026-07-20T07:13:18.889Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,வேளான் நிழல் நிதிநிலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பா.ம.க.சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/3lqolaap/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று வெளியிட்டார்.</aside><p>பின்னர் நிருபர்களிடம் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அவர்</a> கூறியதாவது:-</p><p>2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மொத்தம் ரூ.93,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.68,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத் திட்டங்களுக்காக நீர்வளத்துறை மூலம் ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><h2><strong>வேளாண் துறை</strong></h2><p>2025 மற்றும் 26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் (தி.மு‌.க) நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15,230.30 கோடியுடன் ஒப்பிடும் போது, இது 446 சதவீதம் அதிகம்.</p><p>வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.13,000 கோடி உழவர்கள் இடுபொருள் மானியத்திற்கு செலவிடப்படும்.</p><p>வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ரூ.25,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.30,000 கோடி செலவிடப்படும்.</p><p>தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் 25 சதவீதம் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதன்படி, நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கை மதிப்பான ரூ.6 லட்சம் கோடியில் ரூ.1.5 லட்சம் கோடி வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>வேளாண்மை, நீர்வளத்துறைக்கு மட்டும் ரூ.93,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வேளாண்மை சார்ந்த கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றில் வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக மட்டும் ரூ.57,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலையில், பாசனத் தேவைகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.5,000 சிறப்பு மானியம் வழங்கப்படும்.</p><p>நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால் ஏற்படும் இழப்பைக் கருத்தில் கொண்டு, உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும்.</p><h2><strong>பாமக தேர்தல் அறிக்கை</strong></h2><p>கூட்டுறவு வங்கிகளில் இருந்து உழவர்கள் வாங்கிய பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இதற்கான தொகையை அரசே வெளிச் சந்தையில் இருந்து கடனாக வாங்கி, கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தும்.</p><p>பொதுத்துறை வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே ஏற்றுக் கொண்டு நேரடியாக செலுத்தும்.</p><p>கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெறும் குறுகியகால கடன்களுக்கு 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், ரூ.90,000 திருப்பி செலுத்தினால் போதுமானது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/பாமக">பாமக</a> தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் வகையில், வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இது 3 தவணைகளில் வழங்கப்படும். </p><p>உழவர்களின் வாரிசுகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டணத்தை அரசே செலுத்தும்.</p><p>நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும்.</p><h2><strong>நெல் கொள்முதல்</strong></h2><p>வேளாண் விளைபொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்தப்படும்.</p><p>நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய 6,000 நிலையங்கள் அமைக்கப்படும்.</p><p>கொள்முதல் பணிகளை மேற்கொள்ள 38,866 பருவகாலப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள். 12,000 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள்.</p><p>தமிழ்நாட்டில் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாகும் வகையில், வேளாண் விளைபொருள்கள் சட்டம் 2026 இயற்றப்படும்.</p><p>கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், உழவர்கள் கொண்டுவரும் நெல் மூட்டைகள் அதே நாளில் கொள்முதல் செய்யப்படும்.</p><p>கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாத்து வைப்பதற்காக, அரசு கிடங்குகளின் எண்ணிக்கை இப்போதுள்ள 302-லிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 1000ஆக உயர்த்தப்படும்.</p><p>காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வீணாகாமல் பாதுகாத்து வைக்க அனைத்து வட்டங்களிலும் குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.</p><p>அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.</p><p>நெல் கொள்முதல் அளவு ரூ.70 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்.</p><p>தமிழ்நாட்டில் துவரம்பருப்பு சாகுபடி செய்யப்படும் பரப்பு இப்போதுள்ள 1.25 இலட்சம் ஏக்கரில் இருந்து அடுத்த 3 ஆண்டுகளில் 3 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>துவரம் பருப்பு சாகுபடி செய்யும் உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களான எள் சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 50 ஆயிரம் ஏக்கர் வீதமும், சூரியகாந்தி சாகுபடி பரப்பு ஆண்டுக்கு 25 ஆயிரம் வீதமும் அதிகரிக்கப்படும்.</p><p>நிலக்கடலை சாகுபடி பரப்பு 5.62 லட்சம் ஏக்கரில் இருந்து 7 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.</p><p>எண்ணெய் வித்துப் பயிர்களை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.</p><p>மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு உழவர்களிடம் இருந்து நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும்.</p><p>நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவையும் நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும்.</p><p>நீர்ப்பாசனம் திட்டம் மற்றும் கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை திமுக, அரசால் பாதுக்காக்க முடியவில்லை.  தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?- மு.க.ஸ்டாலின் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-question-to-tvk-govt#comments</comments><guid isPermaLink="false">38fac6f0-6cb4-47b4-af57-e554afb49bb7</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:42:54 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:42:54.062Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,TN Govt,தமிழக அரசு,முக ஸ்டாலின்,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gjfb9us9/MKstalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.</aside><h2><strong>கண்டனம்</strong></h2><p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F">மார்க்கண்டேயன்</a> அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன</strong></h2><p>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.</p><p>"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?</p><p>கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>கைது செய்வது ஏன்?</strong></h2><p> தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?</p><p>மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?</p><p>ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br><br>ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்,…</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://x.com/mkstalin/status/2079089859294310618?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மசினகுடி, மாயார், சிங்காரா சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் தடை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-tourist-vehicles-on-masinagudi-mayar-and-singara-roads-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ban-on-tourist-vehicles-on-masinagudi-mayar-and-singara-roads-starting-today#comments</comments><guid isPermaLink="false">fd674f56-07f8-42b2-9a31-4e6ef3ff0e7c</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:39:04 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:39:04.714Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ban,Tourist vehicles,masinagudi,சுற்றுலா வாகனங்கள் தடை,முதுமலை புலிகள் காப்பகம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cziwahim/vehiclesban.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகனங்களுக்கு தடை
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/cziwahim/vehiclesban.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன. இந்த பாதை அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது.</p><h2>கிராம சாலைகள்</h2><p>இதனால் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி செல்ல வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஊட்டி நோக்கி வரும் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.</p><h2>ஐகோர்ட் உத்தரவு</h2><p>இந்த நிலையில் அந்த சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கவும், இணைப்பு சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்ட சவாரி வாகனங்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.</p> <h2>வாகனங்களுக்கு தடை</h2><p>இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி மசினகுடி சாலையில் அங்கீககரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மட்டுமே செல்ல ஏதுவாக, அந்த சாலையில் வனத்துறையினர் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.</p><p>இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உலக சதுரங்க நாள் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/world-chess-day-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">e93913c8-1048-4b2b-9e4f-a8c2845ee326</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:12:51.336Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,World Chess Day,உலக சதுரங்க நாள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay -  Praggnanandhaa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/4gyzaz9h/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>உலக சதுரங்க நாளான இன்று முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2>மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்</h2><p>இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இளம் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது. 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி, குகேஷ், பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி உள்ளிட்ட பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களுக்கு இந்நாளில் எனது நல்வாழ்த்துகள். </p><p>உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு முன்னேறி வரும் நிலையில், இளைய தலைமுறையினர் சதுரங்க நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்து, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு நமது அரசு அனைத்து வகையிலும் துணை நின்று எல்லா உதவிகளையும் வழங்கும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <h2>சர்வதேச சதுரங்க தினம்</h2><p>ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. 1924 ஆம் ஆண்டு இதே நாளில் உலக சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த நாளை சதுரங்க விளையாட்டுக்கான சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.</p><h2>பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு</h2><p>1924-ம் ஆண்டு ஜூலை 20 பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் 'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு' (FIDE) தொடங்கப்பட்டது.</p><p>'பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், 1966-ம் ஆண்டு முதல் ஜூலை 20-ஐ சர்வதேச சதுரங்க நாளாகக் கொண்டாட யுனெஸ்கோ (UNESCO) முன்மொழிந்தது.</p><p>2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக சதுரங்க நாளாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது.</p><h2>சதுரங்கம்</h2><p>சதுரங்கம் வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. இது வியூகங்களை வகுத்தல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் மூளையின் உடற்பயிற்சிக் கூடமாகும்.</p><p>மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைக்கவும், முடிவெடுக்கும் திறனை வளர்க்கவும் பள்ளிகளில் சதுரங்கத்தை ஒரு கல்விச் கருவியாக மாற்றுவதை இந்நாள் ஊக்குவிக்கிறது.</p> ]]></content:encoded></item><item><title>திருவள்ளூர் மாவட்டத்துக்கு 6-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் கவிதா அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/local-holiday-for-thiruvallur-district-on-aug-6th#comments</comments><guid isPermaLink="false">f2396a00-20a1-4788-a8ef-47068797740b</guid><pubDate>Mon, 20 Jul 2026 06:01:53 +0000</pubDate><atom:updated>2026-07-20T06:01:53.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உள்ளூர் விடுமுறை,aadi krithigai,Tiruttani Murugan Temple,திருத்தணி முருகன் கோவில்,ஆடிக்கிருத்திகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருவள்ளூர் மாவட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/n8lh46fh/tiruvallur.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</aside><h2><strong>ஆடிக்கிருத்திகை</strong></h2><p>முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் திகழ்கிறது.</p><p>கோவிலில் ஆண்டு தோறும் <a href="https://www.maalaimalar.com/topic/ஆடிக்கிருத்திகை">ஆடிக்கிருத்திகை</a> விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா அடுத்த மாதம் 6-ந்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.</p><p>இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோவிலுக்கு திரளாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2><strong>உள்ளூர் விடுமுறை</strong></h2><p>இதையடுத்து ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வருகிற 6-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.</p><p>இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-</p><p>திருத்தணியில் உள்ள முருகப்பெருமானின் 5-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.</p><p>இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு 6.8.2026 அன்று செயல்பட வேண்டும். </p><p>இந்த விடுமுறைநாளை ஈடுசெய்யும் பொருட்டு 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சோழிங்கநல்லூர் அருகே சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பேருந்து- 6 பேர் படுகாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/municipal-bus-overturns-in-marshland-near-sholinganallur-6-injured#comments</comments><guid isPermaLink="false">cb17767b-2d99-40a0-950c-c4a779e423bc</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:58:40 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:58:40.559Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>bus accident,சாலை விபத்து,road accident,பேருந்து விபத்து,சோழிங்கநல்லூர்,sozhinganallur</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/9jesai93/bus2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் சாலையில் லாரிக்கு வழிவிட இடது புறம் திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ், சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.</p><p>மாநகர பேருந்து</p><p>சென்னை அடையாறில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி நேற்று பகல் சுமார் 1.30 மணியளவில் மாநகர பஸ்(தடம் எண் 99) சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாமிதாஸ்(வயது 50) ஓட்டினார். கண்டக்டராக ராமச்சந்திரன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 20 பேர் பயணம் செய்தனர்.</p><p>பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக வந்த பஸ், பின்னர் சோழிங்கநல்லூரில் இருந்து பெரும்பாக்கம் வழியாக மேடவாக்கம் செல்லும் செம்மொழி பூங்கா சாலையில் சென்று கொண்டிருந்தது.</p><p>பெரும்பாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. மேலும், சதுப்பு நிலத்தில் இருந்து மழைநீர் செல்ல சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் ஒருவழி பாதையாக சென்று வருகின்றன.</p><h2>சதுப்பு நிலத்தில் கவிழ்ந்தது</h2><p>அப்போது, எதிரே லாரி ஒன்று வந்தது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக டிரைவர் சாமிதாஸ், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் இடதுபுறம் உள்ள சதுப்பு நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.</p><p>உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களின் உதவியுடன் பஸ்சில் இருந்த சுமார் 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரை மீட்டனர்.</p><h2>6 பேர் காயம்</h2><p>இந்த விபத்தில் டிரைவர் சாமிதாஸ் காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், லேசான காயம் அடைந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்டக்டர் மற்றும் இதர 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.</p><p>விபத்து காரணமாக அந்த சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், சரவணன், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ் பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.</p><h2>போக்குவரத்து பாதிப்பு</h2><p>மாநகர போக்குவரத்து அதிகாரிகள், பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், செம்மஞ்சேரி போலீசார் ஆகியோர் 2 ராட்சத கிரேன்களை வரவழைத்து சதுப்பு நிலத்தில் கவிழ்ந்த மாநகர பஸ்சை மீட்டனர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதி சேதமடைந்தது.</p><p>இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-to-hold-further-consultations-for-five-days-starting-today#comments</comments><guid isPermaLink="false">f8312ac4-143d-4ef2-afbf-5c142d2fee6f</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:27:36 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:27:36.373Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,Edappadi Palaniswami,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,அதிமுக நிர்வாகிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:title><media:description type="html"><![CDATA[ எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/gb12uu4u/EdappadiPalaniswami004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</aside><p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.</p><p>கடந்த 15-ந்தேதி முதல் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடையில் சில நாட்கள் ஆலோசனை நடைபெறாமல் இருந்தது.</p> <h2><strong>மீண்டும் ஆலோசனை</strong></h2><p>இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-take-action-party-posts-of-11-cve-shanmugam-supporters-stripped">எடப்பாடி பழனிசாமி</a> இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும்  ஆலோசனை மேற்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். </p><h2><strong>தென்காசி</strong></h2><p>நாளை தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22-ந்தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23-ந்தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.</p><p>24-ந்தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும் 25-ந்தேதி கள்ளக்குறிச்சி மற்றும் சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். </p><h2><strong>அதிரடி மாற்றங்கள்</strong></h2><p>சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>சட்டமன்ற தேர்தலில் தலைநகரில் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன்? என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட இருக்கிறார்.</p><p>எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/engineering-counselling-for-degree-programmes-begins#comments</comments><guid isPermaLink="false">76bc8537-d996-44b1-8933-1f9769709c7b</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:02:12 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:02:12.367Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பொறியியல் படிப்பு,Engineering,கலந்தாய்வு,Engineering councilling,பொது கலந்தாய்வு,General councilling</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Englineering Coluncilling]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/mjq4ljqz/Engineer.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>என்ஜினீயரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக அடுத்த மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.</p><h2>என்ஜினீயரிங் படிப்பு</h2><p>என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.</p><p>இதில் விளையாட்டு பிரிவில் 3 ஆயிரத்து 210 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 500 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 1,176 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.</p><p>அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேரும், விளையாட்டுப் பிரிவில் 416 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் பிரிவில் 139 பேரும் என மொத்தம் 813 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.</p><h2>பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்</h2><p>இதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.</p><p>மொத்தம் 3 சுற்றுகளாக <strong><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81" rel="nofollow">கலந்தாய்வு</a></strong> நடக்க இருக்கும் நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கிய நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.</p><p>இதில் பொது தரவரிசையில் 1 முதல் 37,976 வரையிலான இடங்களில் உள்ள மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>2-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரையில் நடக்கிறது. அதில் பொது தரவரிசையில் இடம்பெற்ற 37,977 முதல் 1,31,093 வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள்.</p><p>3-வது சுற்று கலந்தாய்வு அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 31-ந்தேதியுடன் நிறைவு பெறு கிறது. அதில் பொது தரவரிசையில் 1,31,094 முதல் 2,33,812 வரையில் இடம்பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>31-ந் தேதியுடன் நிறைவு</h2><p>அதேபோல், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக் கும் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடக்கிறது. அந்த கலந்தாய்வும் இன்று தொடங்கி அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.</p><p>மொத்தத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு நடத்தப்படும்.</p>]]></content:encoded></item><item><title>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-let-us-pledge-to-secure-complete-social-justice-for-all-communities#comments</comments><guid isPermaLink="false">dc277594-7acd-4341-9e39-17e9e465efe2</guid><pubDate>Mon, 20 Jul 2026 05:01:25 +0000</pubDate><atom:updated>2026-07-20T05:01:25.579Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nyw9rda2/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.</aside><p>பா.ம.க.  தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>வாழ்த்துகள்</strong></h2><p>தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை சமூகங்களுக்கு முழுமையான சமூகநீதியை வென்றெடுக்கும் நோக்கத்துடன்  46 ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் இன்று.  சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் 47-ஆம் தொடக்க நாளில் பாட்டாளி சொந்தங்களுக்கும், சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>உறுதியேற்றுக் கொள்வோம்</strong></h2><p>வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள் தான் தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த நாளில் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சாதிக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்;  தமிழ்நாட்டில் 2 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய சமுதாயமாக இருக்கிற வன்னியர்களுக்கு மாநிலத்தில் இருபது சதவிகிதமும் மத்தியில் இரண்டு சதவிகிதமும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் ; தமிழ்நாட்டில்  தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் ஆகிய 3 புரட்சிகரமான தீர்மானங்களை மருத்துவர் அய்யா அவர்கள் நிறைவேற்றச் செய்தார்.</p><p>மருத்துவர் அய்யா அவர்களால் அப்போது  தொடங்கப்பட்ட சமூகநீதி போராட்டம் இப்போது முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  இவை நமது சமூகநீதி போராட்டத்தில்  எட்டப்பட்ட முதல் மைல்கல் தான்.  அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்.</p>]]></content:encoded></item><item><title>பண்ணாரி, தாளவாடி பகுதிகளில் சுற்றும் ஒற்றை யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/motorists-fear-elephants-roaming-bannari-and-thalavadi-areas</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/motorists-fear-elephants-roaming-bannari-and-thalavadi-areas#comments</comments><guid isPermaLink="false">693109e0-2913-4a7f-834b-6e1ba3a4d716</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:44:19 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:44:19.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரோடு,Elephant,Erode,ஒற்றை யானை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nj48woaj/elephant.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Elephant]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/nj48woaj/elephant.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீபகாலமாக உணவு தண்ணீர் தேடி யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது. இதைபோல் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.</p><p>இந்நிலையில், நேற்று இரவு தாளவாடி அடுத்த பைனாபுரம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.</p> <p>வனத்துறை வாகனத்தில் இருந்த சைரன் ஒலியை எழுப்பி யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் யானை மிரண்டு ஓடியது யானை பின்னால் வனத்துறையினர் வாகனத்தில் சென்று தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பி பின்னால் விரட்டி சென்றனர். சிறிது தூரம் ஓடிய யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.</p><p>இதை போல் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்த சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே நெடுஞ்சாலையை கடந்து சென்றனர். நீண்ட நேரமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வன பகுதிக்குள் சென்றது.</p><p>பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை , தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகளின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-20-07-2026#comments</comments><guid isPermaLink="false">e1474dd3-bd53-4fc3-92e3-55391f386b53</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:23:38 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:23:38.317Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/iohywn5g/gold07.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.</aside><p>சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.</p><p>இதனால் <a href="https://www.maalaimalar.com/topic/தங்கம்">தங்கத்தின்</a> விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 135-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. </p><h2><strong>தங்கம் விலை உயர்வு</strong></h2><p>இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,150-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080</p><p>17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800</p><p>16-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200</p><p>15-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,440</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-</strong></h2><p>19-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>18-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>17-07-2026- ஒரு கிராம் ரூ.235</p><p>16-07-2026- ஒரு கிராம் ரூ.240</p><p>15-07-2026- ஒரு கிராம் ரூ.240</p>]]></content:encoded></item><item><title>பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்- ஜி.கே.வாசன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-wishes-to-pv-sindhu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/gk-vasan-wishes-to-pv-sindhu#comments</comments><guid isPermaLink="false">6bd77b89-90ea-4147-9ccc-2530e0701e29</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:08:55 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:08:55.571Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>GK Vasan,Tamil maanila congress,ஜிகே வாசன்,தமிழ் மாநில காங்கிரஸ்,pv sindhu,பிவி சிந்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r4c503mb/vasan.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஜி.கே.வாசன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/r4c503mb/vasan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.</aside><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-</p><p>ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81">பி.வி.சிந்து</a> தனது முதல் Super 750 பட்டத்தையும், ஜப்பான் ஓபன் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.</p><p>நேற்று டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியை தோற்கடித்து வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார்.</p><p>இறுதிப்போட்டியில் 21-17, 21-17 என்ற கணக்கில் தனது முதல் 'சூப்பர் 750' பட்டத்தைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் பெற்றவரான பி.வி. சிந்து தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். </p><p>இந்தத் தொடரில் ஆரம்பம் முதலே மிகவும் திறமையாக விளையாண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றதால் ஜப்பான் ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். </p><p>தனது ஈடுபாடு, கடின உழைப்பு, தொடர் பயிற்சி, விடா முயற்சி, திறமை ஆகியவற்றால் பி.வி.சிந்து அவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதனால் இந்தியாவில் விளையாட்டில் இளைஞர்களுக்கு ஆர்வம் கூடுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title">பி.வி.சிந்து</a> அவர்களின் விளையாட்டிற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களும், பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.</p><p>உலக பேட்மிண்டனில் இந்தியாவின் பெருமையை மீண்டும் உயர்த்தியிருப்பதால் இந்தியாவின் விளையாட்டுத் திறமையை உலகமே உற்றுநோக்குகிறது.</p><p>தனது சர்வதேச பயணத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்து உலக அளவில் இந்தியர்களுக்கும், இந்திய நாட்டிற்கும் பேரும் புகழும் பெற்றுத்தந்திருக்கிறார்.</p><p>பி.வி.சிந்து அவர்கள் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும். ஜப்பான் ஓபன் 2020 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பி.வி .சிந்து அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.</p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-vilathikulam-dmk-mla-under-three-sections#comments</comments><guid isPermaLink="false">baa765ee-bf4b-47d5-8399-db6be4615c04</guid><pubDate>Mon, 20 Jul 2026 04:01:20 +0000</pubDate><atom:updated>2026-07-20T04:01:20.966Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/e5vrqpke/VilathikulamMLA.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>திமுக பொதுக்கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>முதலமைச்சர் விஜய்யை குறித்து விமர்சித்தும், சர்ச்சைக்குரிய வகையிலும், மிரட்டும் தொனியிலும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.</p><h2>தவெக புகார்</h2><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்த புகாரின் அடிப்படையில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயன்</a> கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.</p><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.</p><h2>போலீசார் விசாரணை</h2><p>தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம்  போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மீது தூத்துக்குடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.</p><h2>வழக்குப்பதிவு</h2><p>கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மார்க்கண்டேயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.</p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a>வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-19-july-2026-2#comments</comments><guid isPermaLink="false">e2e450c1-256f-496a-b860-25faf5d7b70f</guid><pubDate>Sun, 19 Jul 2026 02:32:13 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:59:03.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Today Live News]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-18/8tgkqbac/live01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-chief-minister-dk-shivakumar-said-pressure-to-release-water-to-tamil-nadu">தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/us-military-launches-new-airstrikes-to-swiftly-punish-iran-for-deaths-of-us-troops">இரண்டு வீரர்கள் பலி: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்திய அமெரிக்கா</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/amarnath-pilgrimage-halted-due-to-bad-weather">அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: காரணம் இதுதான்</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/tsitsipas-advances-to-swiss-open-final">சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-shoot-and-arrest-rowdy-who-attacked-officer">போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்ற ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/petrol-diesel-prices-in-chennai">சென்னையில் பெட்ரோல், டீசல் விலை - இன்றைய நிலவரம்...</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-to-return-in-delhi-heavy-rain-alert-for-himalayan-states">டெல்லியில் மீண்டும் தொடங்கும் பருவமழை: இமயமலை மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!... </a></p><p>இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று மதியம் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/delhi-parliament-march-ban-police-deployment-jantar-mantar">சி.ஜே.பி-யின் நாடாளுமன்ற பேரணிக்கு அதிரடி தடை: ஜந்தர் மந்தரில் போலீஸ் குவிப்பு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/los-angeles-knight-riders-win-major-league-cricket-title">மேஜர் லீக் கிரிக்கெட்: கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது லாஸ் ஏஞ்சல்ஸ்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cpm-shanmugam-we-left-parties-are-set-to-function-as-a-separate-bloc">இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட இருக்கிறோம்: சி.பி.எம். சண்முகம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-it-woman-jumps-naked-into-lake-with-temple-idol-dies-by-suicide">ஹைதராபாத்தில் பரபரப்பு: அம்மன் சிலையோடு நிர்வாணமாக ஏரியில் குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/who-will-win-world-cup-golden-boot-mbappe-surpasses-messi">உலகக் கோப்பை கால்பந்து: கோல்டன் பூட் விருது பெறப்போவது யார்?-மெஸ்சியை முந்திய எம்பாப்பே</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/pv-sindhu-clinches-japan-open-badminton-championship">ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/71-year-old-ashok-bahar-seeks-mbbs-quota-for-senior-citizens">மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!...</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-wins-10-national-awards-cm-vijay-congratulates">10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/monsoon-session-all-party-meeting-starts-dmk-stage-walkout">நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/central-government-salicylic-acid-face-wash-goes-viral">இணையத்தில் வைரலாகும் மத்திய அரசின் ‘ஃபேஸ் வாஷ்’: மிகக் குறைந்த விலை-எவ்வளவு தெரியுமா?...</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/sudarshan-patnaik-sand-sculpture-honours-world-cup-final-and-messi">உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennaiites-get-double-dhamaka-new-rail-line-between-tambaram-and-chengalpattu">'சென்னைவாசிகளுக்கு டபுள் தமாக்கா'! தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/moorthy-slams-nirmal-kumar-over-land-registration-scam">எந்த இடத்தில் எனக்கு கட்டிங் கொடுத்தார்கள்?: முன்னாள் அமைச்சர் மூர்த்தி ஆவேசம்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/president-murmus-tri-nation-tour">வரலாற்றில் முதன்முறை: குடியரசுத் தலைவர் முர்முவின் முத்தரப்புப் பயணம்!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuk-wife-petitions-delhi-high-court-over-safdarjung-hospital">'சஃப்தர்ஜங் மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை'-டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சோனம் வாங்சுக்கின் மனைவி!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/facebook-down-only-on-computers-users-face-inconvenience">கணினிகளில் மட்டும் முடங்கிய ஃபேஸ்புக் - பயனர்கள் அவதி!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-protest-ink-attack-woman-throws-ink-at-cockroach-janata-party-founder-abhijit-deepke-during-jantar-mantar-agitation">நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் - பெண் பொறுப்பேற்பு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-congratulates-pv-sindhu-on-historic-japan-open-title" rel="nofollow">பி.வி.சிந்துவின் சாதனை நம் இளம் வீரர்களை ஊக்குவிக்கும்..!- பிரதமர் மோடி வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/heavy-rains-trigger-deadly-floods-and-landslides-in-kashmir">காஷ்மீரில் காலை முதல் தொடர் மழை- வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பரிதமாக உயிரிழப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/bihar-robbery-gang-cuts-womens-hair">பீகாரில் தலைமுடியை வெட்டும் கொள்ளை கும்பல் - மக்களிடையே பீதி</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/hyderabad-woman-trapped-in-oman-forced-to-work-15-hours-a-day-without-salary">ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: 15 மணி நேர கட்டாய வேலை, சம்பளமின்றி தவிப்பதாக கண்ணீர் வீடியோ!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/will-messi-retire-after-the-world-cup">உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் ஓய்வுபெறும் மெஸ்ஸி?</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/cheran-wins-film-writers-association-election">திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் சேரன் வெற்றி!</a> </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-high-court-refuses-to-transfer-sonam-wangchuk-to-a-private-hospital">சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!</a></p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ticket-booking-for-jana-nayagan-has-started-in-tamil-nadu">தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!</a></p><p><a href="https://www.maalaimalar.com/sports/football/world-cup-final-support-netanyahu-backs-messi-led-argentina-against-spain">உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி - அர்ஜென்டினா அணிக்கு இஸ்ரேல் பிரதமர் முழு ஆதரவு</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/madhya-pradesh-rain-ritual-bhopal-donkeys-fed-gulab-jamun-in-unique-prayer-for-monsoon">மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி கழுதைகளுக்கு குலாப் ஜாமூன் ஊட்டி சிறப்பு வழிபாடு!</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/tattoo-hiv-alert-woman-contracts-hiv-after-getting-tattoo-at-delhi-parlour">பார்லரில் டாட்டூ குத்திய பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று - அதிர்ச்சி சம்பவம்</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/sonam-wangchuks-father-undertook-a-five-day-fast-indira-gandhi-herself-traveled-to-ladakh-to-pacify-him-historical-background">5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் தந்தை.. லடாக்கிற்கே சென்று சமாதானம் செய்த இந்திரா காந்தி! - வரலாற்று பின்னணி</a></p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/ken-betwa-river-link-protest-tribal-activists-detained-amid-forest-loss-corruption-allegations">நதிநீர் இணைப்புக்கு எதிராக பழங்குடியினரின் 15 நாள் போராட்டத்தை வலுக்கட்டாயமாக கலைத்த போலீஸ் | Madhya pradesh</a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/b1b94abf-07ac-4c5c-abaf-64430fa84dde">தனுஷ் முதல் TS ஹரிஹரசுதன் வரை..!- தேசிய விருது வென்றவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-re-exam-row-student-alleges-omr-number-change-and-drastic-score-variation">2 மணி நேரத்தில் 540-லிருந்து 167 ஆகக் குறைந்த மதிப்பெண்.. நீட் மறுதேர்வு ரிசல்டில் குளறுபடி - மாணவி குற்றச்சாட்டு  </a></p><p><a href="https://maalai-malar.quintype.com/story/2d93f8ca-a4ae-4465-971d-922317d3dbdf">ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்</a></p>]]></content:encoded></item><item><title>விளாத்திகுளம்  எம்எல்ஏ கைது: தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-mla-arrested-dmk-mp-kanimozhi-condemned#comments</comments><guid isPermaLink="false">e987724e-e437-406b-93b4-a72b467fd1fb</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:37:15 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:37:15.629Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,Kanimozhi,கனிமொழி,tvk,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/pa06j0ra/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.</p><p>விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். </p><p>உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <p>முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியபோது, சட்டமன்றத்தை கூட்டும்போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.</p><p>விளாத்திக்குளம் எம்எல்ஏ <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested">மார்க்கண்டேயனின்</a> இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.</p> ]]></content:encoded></item><item><title>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-shall-we-start-the-next-innings#comments</comments><guid isPermaLink="false">52b8a0d4-0cab-43aa-a5dd-05f76c447996</guid><pubDate>Mon, 20 Jul 2026 03:24:09 +0000</pubDate><atom:updated>2026-07-20T03:24:09.609Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,திமுக இளைஞர் அணி,Udhayanidhi Stalin,DMK Youth Wing</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/famso83x/udhayanidhistalin004.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தி.மு.க. இளைஞர் அணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.</aside><h2><strong>47-வது ஆண்டு</strong></h2><p>திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான <a href="https://www.maalaimalar.com/topic/திமுக-இளைஞர்-அணி">தி.மு.க. இளைஞர் அணி</a> இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். </p><p>அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- </p><h2><strong>அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!</strong> </h2><p>கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க. இளைஞர் அணி இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. </p><p>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..! என கூறியுள்ளார். </p><p>மேலும் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கியது தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் <a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் தலைமையிலான <a href="https://x.com/hashtag/MISA_Batch?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MISA_Batch</a>-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் <a href="https://x.com/dmk_youthwing?ref_src=twsrc%5Etfw">@dmk_youthwing</a> , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. <br><br>கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக்… <a href="https://t.co/W4aRR7yr6T">pic.twitter.com/W4aRR7yr6T</a></p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2079035337486270716?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2><strong>தி.மு.க. இளைஞர் அணி</strong></h2><p>1980 ஜூலை 20 அன்று மதுரையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ துணை அமைப்பாக 'இளைஞர் அணி' முறைப்படி அறிவிக்கப்பட்டது. இதன் முதல் மாநில அமைப்பாளராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார். சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (1980 முதல் 2017 வரை) அவர் இந்த அணியை வழிநடத்தி, கட்சியின் மிக வலுவான அடித்தளமாக மாற்றினார்.  </p><p>தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், 2019 ஜூலை 4 முதல் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.  இவரின் தலைமையின் கீழ் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கை, நீர்நிலைகள் தூர்வாருதல் மற்றும் பல்வேறு சமூகப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.</p><p>கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, இல்லந்தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குவது மற்றும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துவது போன்ற பணிகளை இவ்வணி முன்னெடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் நாளை (21.07.2026) மின்தடை ஏற்படும் இடங்கள்...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tomorrow-power-cut-areas-in-chennai-29#comments</comments><guid isPermaLink="false">5b33a5fc-825f-40e7-a24b-9fe745d34aee</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:55:23 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:55:23.612Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மின்தடை,TNEB,மின்சார வாரியம்,Power Cut,தமிழ்நாடு மின்சார வாரியம்,சென்னையில் மின்தடை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மின்தடை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/ezfadze1/powercut0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை:</p><p>சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.</p><p>அந்த வகையில், நாளை <a href="https://www.maalaimalar.com/topic/சென்னையில்-மின்தடை">மின் தடை</a> செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  அதன்படி, </p><h2><strong>ரெட்ஹில்ஸ்</strong></h2><p>புதுநகர், நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, கோமதி அம்மன் நகர், ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ, பாடியநல்லூர், கும்மனூர், ஜெயதுர்கா நகர், பாலவாயில், மனிஷ்நகர், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவூர், சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுனியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை விச்சூர்.</p><h2><strong>திருமுல்லைவாயல்</strong> </h2><p>மாகரல், கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி.</p><h2><strong>சோழிங்கநல்லூர்</strong></h2><p>கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியார் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திர நகர், தேவி கருமாரி அம்மன் நகர்.</p><h2><strong>தாம்பரம்</strong></h2><p>நூத்தஞ்சேரி பிரதான சாலை, காந்தி நகர் மற்றும் விரிவாக்கம், அக்ஷயம் ரோஹிலைன், ஆர்.கே.ஜே. எலைட், பஜனை கோவில் தெரு, கம்பர் தெரு, வேலவன் காலனி, தென்றல் நகர், தங்கம் நகர், அன்னை அவந்திகா அபார்ட்மெண்ட், பழனி நகர், வேங்கைவாசல்.</p><h2><strong>பல்லாவரம்</strong></h2><p>மல்லிகை நகர், பி.வி. வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக்கழகம், ரோஜா தெரு, விக்னேஷ் தெரு, கோகுல் தெரு, மனோரஞ்சிதம் தெரு.</p><h2><strong>பாலவாக்கம்</strong></h2><p>விஜிபி லேஅவுட், அண்ணா சாலை, ராம் கார்டன், சாரி அவென்யூ, சீ ஷெல் அவென்யூ, காயிதே மில்லத் தெரு, ஜீவரத்தினம் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, சங்கராபுரம் 1வது மற்றும் 2வது தெரு, பாலவாக்கம் குப்பம் 1வது முதல் 5வது தெரு, ஃபாதர் ஹவுஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை, சிவசாமி அவென்யூ, புஷ்பா அவென்யூ, தாகூர் தெரு, எம்.ஜி.ஆர் சாலை 5வது, 6வது மற்றும் 7வது தெரு, சுப்பராவ் தெரு, சின்ன நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு.</p><h2><strong>நசரத்பேட்டை</strong></h2><p>அகரமேல், ஸ்ரீவாரி நகர், காமராஜர் பிரதான சாலை, பாலாஜி நகர், அம்பாள் சிட்டி, சோழன் நகர், வெங்கடேஸ்வரா நகர், மலையம்பாக்கம், 400 அடி வண்டலூர் நெடுஞ்சாலை.</p><h2><strong>சித்தாலப்பாக்கம்</strong></h2><p>ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டி.வி. நகர், மகேஸ்வரி நகர், டி.என்.எச்.பி காலனி, மேடவாக்கம் பாபு நகர், பாம் கார்டன், ராயல் கார்டன், ஐஸ்வர்யா நகர், ஆர்.ஜி. நகர், மாடம்பாக்கம், பிரதான சாலை, கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி, ஜாய் நகர், பாலா கார்டன், தெற்கு மாட வீதி, காந்தி நகர்.</p><h2><strong>ஆவடி</strong></h2><p>சிவ சக்தி நகர், 60 மற்றும் 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், அந்தோனி நகர், ஈ.எஸ்.ஐ அண்ணா நகர்.</p><h2><strong>பெருங்களத்தூர்</strong></h2><p>காந்தி தெரு, நேரு நெடுஞ்சாலை, சேரன் தெரு, ஆர் எம் கே நகர், கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூர்.</p><h2><strong>முடிச்சூர்</strong></h2><p>கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், இ.பி காலனி மேற்கு, லட்சுமி நகர்.</p><h2><strong>அடையாறு</strong></h2><p>சாஸ்திரி நகர் 1வது மற்றும் 3வது சீவார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பம் பீச் சாலை, ராஜா ஸ்ரீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி 1வது முதல் 4வது தெருக்கள், வேம்புலியம்மன் கோவில் தெரு, சிஜிஇ காலனி, ஜெயராம் தெரு.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vilathikulam-dmk-mla-arrested#comments</comments><guid isPermaLink="false">aa19a0cc-e556-4402-8eb8-f9e0a9087dc3</guid><pubDate>Mon, 20 Jul 2026 02:47:45 +0000</pubDate><atom:updated>2026-07-20T02:47:45.577Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,விஜய்,vijay,Vilathikulam MLA,விளாத்திகுளம் எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-20/zn2a7cj5/mla.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்.</p><h2>திமுக கூட்டம்</h2><p>தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. </p><p>தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனும் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசும்போது, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு வருமாறு:-</p><h2>முதலமைச்சர் விஜய்</h2><p>விஜய் போன்ற ஒருவரை இதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பெற்றது கிடையாது. இனி வரும் தேர்தல்களில் 5 சதவீத வாக்குகள் கூட பெற முடியாமல் விஜய் மற்றும் அவருடைய கட்சி தோற்று போகும்.</p><p>பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் தேர்தலில் தோற்றபோது அப்போது இருந்த தலைவர்கள் நாகரீகமாக பேசினார்கள்.</p><p>சட்டமன்றத்தில் உங்கள் அப்பாவை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று எப்படி பேச முடிகிறது. சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம் . நாங்கள் கோமாளி பயல்கள் என்று நினைக்கிறீர்களா?</p> <h2>எலும்பை உடைப்போம்</h2><p>சட்டமன்றத்தை கூட்டும்போது உங்கள் எலும்பு இருக்காது, உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை கூட்டிப் பாருங்கள். யார் ஓடியது? என்பது தெரியும். கரூரில் கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கேரவனில் யாரை வைத்துக் கொண்டு ஓடுனீர்கள். பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களே.</p><h2>விளாத்திகுளம் சிறுமி</h2><p>கொத்து பரோட்டா போட போறாராம், உங்களை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.</p><p>விளாத்திகுளத்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தார். அது தேர்தலில் எதிரொலித்ததால் எங்களுடைய அமைச்சர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.</p><p>இன்றைக்கு தமிழகத்தில் அந்த அன்பு மகளை போன்று, 3 வயது குழந்தை முதல் 95 வயது பாட்டி வரை யாரும் சுதந்திரமாக நடக்க முடியவில்லை.</p><h2>பாதுகாப்பு இல்லை</h2><p>இன்று தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. 2000 ரூபாய் காசு வாங்கி விட்டதாக அய்யரை பிடிக்கிறார்கள். பழனியில் 100 கோடி ரூபாய் சொத்தை எழுதிக் கொடுக்கிறாங்க. இப்படிப்பட்டவர்கள் தான் அமைச்சர்களாக உள்ளனர்.</p><p>எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம். </p><p>இவ்வாறு அவர் பேசினார்.</p> <p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும்போது முதலமைச்சர் விஜய்யை கடுமையான வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. த.வெ.க.வினர் அவரை கடுமையாக விமர்ச்சித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டார்கள்.</p><h2>3 பிரிவுகளில் வழக்கு</h2><p>மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்தார். </p><p>அதில், முதலமைச்சர் பற்றி அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><p>புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 351(3)-கொலை மிரட்டல் விடுத்தல், 352- அவதூறாக பேசுதல், 353(2)- மக்களிடையே பகை வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.</p><h2>மார்க்கண்டேயன் கைது</h2><p>இதைத்தொடர்ந்து இன்று காலை விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. இல்லத்திற்கு டி.எஸ்.பி.க்கள் கண்ணன், சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜானி தலைமையிலான போலீசார் சென்றனர். பின்னர், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p>  <p>இந்த தகவல் பரவியதும், ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வீட்டின் முன்பு திரண்டனர். அவர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><p>போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, எம்.எல்.ஏ.வை பாதுகாப்புடன் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><h2>தி.மு.க.வினர் தர்ணா</h2><p>இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் திரள தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததால் எஸ்.பி. அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. </p><p>இந்நிலையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி, பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திரண்டபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதைத்</p><p>தொடர்ந்து, தி.மு.க.வினர் எஸ்.பி. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள், நாங்கள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை பார்க்க செல்ல வேண்டும். காலையில் அவரை கைது செய்த பின்னர் இதுவரை அவரது நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே அவரை பார்க்க அனுமதிக்க வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. </p><p>எம்.எல்.ஏ.க்களை மட்டுமாவது உள்ளே அனுமதித்து மார்க்கண்டேயனை பார்க்க செய்ய வேண்டும் என தி.மு.க.வினர் ஆவேசமாக கூறினர். அதற்கு போலீசார் வக்கீல்களை மட்டும் அனுமதிப்போம். மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள். இல்லாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் போராடும்..!- அமைச்சர் ராஜேஷ் குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-fights-to-end-neet-exam-minister-rajesh-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congress-fights-to-end-neet-exam-minister-rajesh-kumar#comments</comments><guid isPermaLink="false">c14db9a4-d1f4-47c7-afd5-ffd9d4bf00b3</guid><pubDate>Sun, 19 Jul 2026 16:30:26 +0000</pubDate><atom:updated>2026-07-19T16:30:26.741Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Neet exam,அமைச்சர் ராஜேஷ் குமார்,Minister Rajesh Kumar,நீர் தேர்வு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k9j7lnce/Rajesh-kumar1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajeshkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/k9j7lnce/Rajesh-kumar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். </p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><h2>நீட் வினாத்தாள் கசிவு</h2><p>நீட் வினாத்தாள்கள் கசிவு முறைகேடை கண்டித்து மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை ராகுல்காந்தி கேட்டறிந்து வருகிறார். </p><p>அதன்படி ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அவர் கலந்துரையாடியபோது பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த நீட் தேர்வு என்பது சமத்துவம், சமூக நீதி, சுயாட்சிக்கு எதிரானது.</p><p>கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதே எதிர்த்தார்கள். முன்பு பள்ளி இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.</p><h2>தனியாருக்கு சாதகமாக</h2><p>இப்போது நீட் தேர்வின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தேர்வு முறை தனியாருக்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி பெறுவது சாமானிய மக்களுக்கு சாதாரண விஷயமல்ல.</p><p>கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் வித்தியாசம் இருக்கக் கூடாது. எனவே தான் நாடு தழுவிய அளவில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிகப் பெரிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து உள்ளது.</p><p>வினாத்தாள் கசிவு என்பது இந்த ஒரு முறை அல்ல, பலமுறை நடந்து உள்ளது. இந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டிலும் மாணவர்களை ஒருங்கிணைத்து காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினைக்காக தொடர்ந்து போராடும்.</p><p>தமிழக அரசு நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்பதை கவர்னர் உரையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறது. பேட்டியின்போது பீட்டர் அல்போன்ஸ் கோபண்ணா, சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, செழியன், காந்திபன் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-returned-to-chennai-after-concluding-his-london-trip</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-returned-to-chennai-after-concluding-his-london-trip#comments</comments><guid isPermaLink="false">e0073bf1-46d9-4603-b592-648a53b4a35b</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:53:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:53:10.047Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,Graduation Ceremony,பட்டமளிப்பு விழா,லண்டன்,london,மு.க.ஸ்டாலின்,இன்பநிதி,Inbanidhi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/50ir3r1x/New-Project-2026-07-19T212237.756.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/50ir3r1x/New-Project-2026-07-19T212237.756.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை.19)சென்னை திரும்பினார். </p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பன் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பத்தோடு திமுக தலைவர்கள் லண்டனுக்கு சென்றிருந்தனர். </p><p>கடந்த ஜூலை 3-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு அங்கேயே சில நாட்கள் ஓய்வும் எடுத்தார்.</p><p>இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று அதிகாலை அல்லது காலை 7 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைவதாக இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலையிலேயே திரண்டு உற்சாக வரவேற்பளிக்கக் காத்திருந்தனர். </p><p>ஆனால், லண்டனில் இருந்து அவர் வரவிருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், வருகை தள்ளிப்போனது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். </p>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை: சென்னை டூ கேரளாவுக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-special-trains-from-chennai-to-kerala-from-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-special-trains-from-chennai-to-kerala-from-tomorrow#comments</comments><guid isPermaLink="false">2d93f8ca-a4ae-4465-971d-922317d3dbdf</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:29:37 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:29:37.312Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,kerala,ஓணம் பண்டிகை,onam festival,கேரளா,சிறப்பு ரெயில்கள் இயக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f5vbzuve/kerala.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam special train to kerala]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/f5vbzuve/kerala.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவனந்தபுரம், கொல்லத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.</p><h2>சென்னை எழும்பூரில் இருந்து</h2><p>அதன்படி நாளை (திங்கட்கி ழமை), 27-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 3,10,17, 24,31-ந்தேதிகளில் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூ ருக்குக்கும், வருகிற 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் மாதம் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மங்களூ ருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.</p><p>அதேபோல் சென்னை சென்ட்ரல், கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் (06117/06118) அறி விக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் வடக்கு, மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் (06093/06094) இயக்கப்படுகின்றன.</p><p>வரும் ஆகஸ்ட் 9, 16, 23, 30, செப்டம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 10, 17, 24, 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரெயில்கள் (06147/06148) இயக்கப்படுகின்றன.</p><p>இந்த ரெயில்கள், அலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><h2>சென்னை சென்ட்ரலில் இருந்து</h2><p>வருகிற ஆகஸ்ட் 13, 15, 20, 22, 27, 29, செப்டம்பர் 3, 5 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ர லில் இருந்து கொல்லத்திற்கும், மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 14, 16, 21, 23, 28, 30, செப்டம்பர் 4, 6 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து சென்னை சென்ட்ர லுக்கும் சிறப்பு ரெயில்கள் (06117/06118) இயக்கப்படுகின்றன. வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படு கின்றன.</p><p>இந்த ரெயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.</p><p>இந்த சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senji-ezhumalai-appointed-as-aiadmk-organizing-secretary</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senji-ezhumalai-appointed-as-aiadmk-organizing-secretary#comments</comments><guid isPermaLink="false">ad0a9f6c-41a6-4ab4-8db8-866ca9b45200</guid><pubDate>Sun, 19 Jul 2026 15:25:25 +0000</pubDate><atom:updated>2026-07-19T15:25:25.334Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,Senji Ezhumalai,செஞ்சி ஏழுமலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/j02ic7vs/New-Project-2026-07-19T204048.069.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/j02ic7vs/New-Project-2026-07-19T204048.069.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. செஞ்சி. ஏழுமலையை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். </p><p>ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏழுமலை அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் இருந்தார். ஆனால் 2021-ல் கட்சிக்கு எதிராகப் பேசியதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். </p><p>பின்னர் ஓபிஎஸ்-ன் உரிமை மீட்புக் குழுவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராக இருந்தார். ஓபிஎஸ் திமுகவில் இணைய கடந்த மார்ச் மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>தனுஷ் முதல் TS ஹரிஹரசுதன் வரை..!- தேசிய விருது வென்றவர்களுக்கு இபிஎஸ் வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-eps</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/congratulations-to-all-the-national-award-winners-eps#comments</comments><guid isPermaLink="false">b1b94abf-07ac-4c5c-abaf-64430fa84dde</guid><pubDate>Sun, 19 Jul 2026 13:45:55 +0000</pubDate><atom:updated>2026-07-19T13:45:55.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhanush,தனுஷ்,எடப்பாடி பழனிசாமி,Edappadi pazhanisamy,தேசிய விருது,national award</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5pnntfe5/EPS.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK Edappadi Pazhanisamy]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/5pnntfe5/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,</p><p>சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்கள் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,</p><p>தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஷ் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும்,</p><p>கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ராஜ்குமார் அவர்களுக்கும்,</p><p>அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைவாணன் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள செல்வி. சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,</p><p>மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள அனல் அரசு அவர்களுக்கும்,</p><p>மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள சுரேன் G அவர்களுக்கும்,</p><p>Non-Feature Films பிரிவில் #Blue படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள TS ஹரிஹரசுதன் அவர்களுக்கும்,</p><p>விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fifth-world-tamil-conference-periyar-arch-demolished#comments</comments><guid isPermaLink="false">f649aab5-4767-4845-9574-2e50ac521bcf</guid><pubDate>Sun, 19 Jul 2026 12:10:51 +0000</pubDate><atom:updated>2026-07-19T12:10:51.679Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Corporation,World Tamil Conference,மாநகராட்சி நடவடிக்கை,உலகத் தமிழ் மாநாடு,பெரியார் தோரண வாயில்,periyar arch</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madurai Periyar arch]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7uinzs84/Madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி மதுரை மாநகரின் நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய இடங்களில் பிரமாண்ட தோரண நுழைவாயில் கட்டப்பட்டது. </p><p>தற்போது மாநகர பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பட சாலைகள் விரிவாக்க பணிகள் ஆங்காங்கே மும்முரமாக நடைபெற்று வருகிறது.</p><p>இதற்கிடையே நெருக்கடியை தவிர்க்கும் விதமாக மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள தோரண நுழைவாயில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் ஆகியவற்றை அகற்றவேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மேற்கண்ட 2 தோரண நுழைவாயில்களையும் இடிக்க அகற்ற உத்தரவிட்டது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போக்குவரத்து இடையூறு இல்லாமல் தோரண நுழைவாயில்கள் கட்டிக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.</p><p>இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மாட்டுத்தாவணி சாலை நடுவே இருந்த நக்கீரர் தோரண வாயில்  இடித்து அகற்றப்பட்டது. அப்போது தோரண வாயில் இடிந்து பொக்லைன் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p>இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் இடிக்கும் பணி நடைபெற்றது.</p><p>பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தோரணவாயில் இடிக்கும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. </p><p>அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் பெரியார் தோரணவாயில் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.</p> <p>மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அமைக்கப்பட்ட நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகரின் பிரதான சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதியில் உள்ள தோரண வாயில்களும் அகற்றப்பட்டு புதிய தோரண வாயில்கள் போக்குவரத்து இடையூறின்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/alliance-with-tvk-to-continue-in-by-elections-and-local-body-elections-too-minister-shahjahan#comments</comments><guid isPermaLink="false">54689179-bd3b-4c10-8c1f-f12f85a2ccff</guid><pubDate>Sun, 19 Jul 2026 11:31:19 +0000</pubDate><atom:updated>2026-07-19T11:31:19.647Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by-election,IUML,tvk</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் தவெகவுடனான கூட்டணித் தொடரும் - அமைச்சர் ஷாஜஹான்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/ywdlwkql/New-Project-2026-07-19T170104.548.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இதில் நான்குமுனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி, நாம் தமிழர், தவெக என நான்குமுனைப் போட்டி நிலவியது.</p><p>இதில் திமுக அணியில் இடதுசாரிகள், ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக, மதிமுக உள்ளிட்டக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. </p><p>தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாக திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பலக் கட்சிகள் தவெக பக்கம் சென்றன. தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தன. ஆனால் கூட்டணி குறித்தும், தேர்தலில் தவெக உடன் இணைந்து போட்டியிடுவது குறித்தும் தெளிவான முடிவை பல கட்சிகளும் எடுக்கவில்லை.</p><p>இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஐயூஎம்எல் தவெகவுடன் இணைந்தே போட்டியிடும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதில் தாமதம்..! வரவேற்க திரண்ட தொண்டர்கள் ஏமாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-leader-mk-stalin-delays-return-to-chennai#comments</comments><guid isPermaLink="false">5680fc1a-f532-4cc9-8afc-d0de95be3931</guid><pubDate>Sun, 19 Jul 2026 10:01:10 +0000</pubDate><atom:updated>2026-07-19T10:01:10.642Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்,முக ஸ்டாலின்,london visit</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN EX CM MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/wp9x9btw/mk-stalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் 2 வாரங்களுக்கு முன்பு வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.</p><p>மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார்.</p><p>இதற்கான பட்டமளிப்பு விழாவிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேரனை வாழ்த்தினார். அதன் பிறகு லண்டனில் ஓய்வெடுத்து வந்தார்.</p><h2>தொண்டர்கள் திரண்டனர்</h2><p>மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்புகிறார். காலை 8 மணிக்கு அவர் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதையடுத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து இருந்தனர். காலை 7 மணி முதல் விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரள தொடங்கினார்கள்.</p><p>சிறிய மேடை ஒன்று அமைத்து அதில் நின்று தொண்டர்கள் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக மேடை அமைப்பதற்கு பலகைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மேடை அமைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.</p><p>தாரை-தப்பட்டை போன்ற இசைக் கருவிகளுடன் வந்த கலைஞர்கள் வாத்தியங்களை வாசிக்க தொடங்கினார்கள். அதற்கும் மு.க.ஸ்டாலின் வரும்போது வாசிக்கும்படி போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். இதனால் இசைப்பது நிறுத்தப்பட்டது.</p><h2>தாமதம்</h2><p>இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது மு.க.ஸ்டாலின் வரும் விமானம் லண்டனில் இருந்து புறப்படுவது தாமதம் ஆனது. எனவே இன்று இரவு 8 மணிக்குதான் அவர் சென்னை திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.</p><p>இதனால் விமான நிலையத்தில் திரண்டு இருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் அன்பகம் கலை, தாயகம் கவி, எம்.கிருஷ்ணமூர்த்தி உள்பட திரண்டு இருந்த நிர்வாகிகள், கட்சியினரை திரும்பி செல்லும்படியும், இரவில் திரும்பி வருமாறும் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அனைவரும் திரும்பி சென்றார்கள்.</p>]]></content:encoded></item><item><title>திருப்பூரில் ஜனநாயகன் டி-ஷர்ட் தயாரிப்பு பணி தீவிரம்: 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/over-700-tiruppur-garment-units-rush-to-meet-demand-for-vijay-democratic-t-shirts#comments</comments><guid isPermaLink="false">999d6a8d-1d73-485b-807f-1964cfd8455c</guid><pubDate>Sun, 19 Jul 2026 08:31:38 +0000</pubDate><atom:updated>2026-07-19T08:31:38.339Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>JanaNayagan,ஜனநாயகன்,ஜனநாயகன் டிஷர்ட்,Jananayagan Tshirt,திருப்பூர் டெக்ஸ்டைல்,Tiruppu Textile</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Tiruppur Textile Jananayagan T-shirt Boom]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/24y0np6l/Untitled-design-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பு, கடைசியாக நடித்த திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ளதால், திருப்பூரில் ரசிகர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் உற்பத்தி அதிகரித்துள்ளது.</p><p>இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p>ஜூலை 23இல் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சுமார் 1,000 திரையரங்குகளில் திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. </p><p>ஜனநாயகன் திரைப்படத்தை கொண்டாடும் விதமாக, முதல்வர் விஜய்யின் ரசிகர்களும் தவெக தொண்டர்களும், பிரத்தியேக டி-ஷர்ட் அணிந்து முதல் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர். </p><p>இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், 700-க்கும் மேற்பட்ட பின்னல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் டி-ஷர்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.</p><p>இந்த அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய, பெரும்பாலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூரியர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.</p><p>நடிகராக இருந்து முதலமைச்சராக உருவெடுத்துள்ள விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய பிரத்தியேக டி-ஷர்ட்களுக்கு, தமிழகத்தின் ஜவுளி மையமான திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் பெருமளவில் ஆர்டர்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதுகுறித்து திருப்பூர் ஜவுளி ஆலைகள் சங்கத்தின் உறுப்பினர் கே. பிரபாகரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பு திரைப்பட வெளியீடு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இங்குள்ள திருப்பூர் ஜவுளி ஆலைகள், பிரத்தியேகமான ஜனநாயகன் டி-ஷர்ட்களைத் தயாரிப்பதற்காகக் கூடுதல் நேரத்துடன் பணியாற்றி வருகின்றன,” என்று கூறினார்.</p><p>மேலும் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான கே. சேவா நாதன் கூறுகையில், “பல ஆண்டுகளாக இந்த அளவிலான உற்சாகத்தை நாங்கள் கண்டதில்லை.</p><p>தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றது,” என்று கூறினார்.</p>]]></content:encoded></item></channel></rss>