<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தமிழ்நாடு</title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/tamilnadu-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 02 Sep 2026 13:51:54 +0000</lastBuildDate><item><title>“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-alone-is-permanent-it-endures-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">18f9eb73-bf86-488f-b7bb-fac3c38589a4</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:51:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:51:19.460Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,மு.க.ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்... நிலைத்து நிற்கும்” - மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/697l8lxq/New-Project-2026-09-02T191731.964.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்.,</p><p>“நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி, அப்கிரேட் ஆவதுதான்.</p><p>‘மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்’ என்று சொல்லி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.</p><p>நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.</p><p>முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன்.</p><p>அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம்.</p><p>அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.</p><p>கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும், காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.</p><p>நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, மறுசீரமைப்புக் குழு வகுத்துத் தந்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.</p><p>முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,“கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான, நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். </p><p>அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்” என்று சொல்ல வேண்டும்.</p><p>அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும், ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும்பொறுப்புகள் பறிபோகும்.</p><p>“அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்” என்பதையும் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.</p><p>வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களில் விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இதையெல்லாம் நீங்கள் செய்து முடித்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும். அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். </p><p>வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.</p><p>இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.</p><p>கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் – போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்!</p><p>கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும்!</p><p>கழகத்தை மறுசீரமைப்போம்!</p><p>மீண்டு வருவோம்! மீண்டும் வெல்வோம்!</p><p>நன்றி! வணக்கம்!” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>எங்களை தற்குறி என்றனர், தற்குறி இப்போது அம்புக்குறியாக மாறி தீய சக்தியை அழித்துள்ளது-அமைச்சர் ஸ்ரீநாத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/they-called-us-target-now-arrow-destroys-evil-forces-minister-srinath#comments</comments><guid isPermaLink="false">5f8e9512-0c76-45bd-acfa-62494c2ede6a</guid><pubDate>Wed, 02 Sep 2026 13:40:56 +0000</pubDate><atom:updated>2026-09-02T13:40:56.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,assembly,சட்டசபை கூட்டத்தொடர்,TNAssembly,Minister Srinath,அமைச்சர் ஸ்ரீநாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Srinath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wg867gfy/sri.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றிய  அமைச்சர் ஸ்ரீநாத், தமிழகக் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார். </p><p>சர்வதேச கடல் எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி மீனவர்கள் மீது விதிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதாகவும், இதற்கு நிரந்தர தூதரகத் தீர்வை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காண வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 8 வி<strong>சைப் படகுகள்</strong> மீட்பு முயற்சி</h2><p>இலங்கை எல்லைப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, ஆந்திர மாநில எல்லைப் பகுதிக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 8 விசைப் படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் ஆந்திரக் கடலோரக் காவல் படையினர் அண்மையில் சிறைபிடித்துள்ளனர். மாநில எல்லைப் பகிர்வு தொடர்பான இந்தச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு, ஆந்திர அரசோடு பேசி விசைப் படகுகளையும் மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்க மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>"தற்குறி இப்<strong>போது அம்புக்குறியா</strong>க மாறியுள்ளது"</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues">சட்டப்பேரவை </a>விவாதத்தின் போது எதிர்த்தரப்பினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், அரசியல் களத்தில் தங்களை அற்பமாகப் பேசியவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் காட்டமான பதிலடியைக் கொடுத்தார். "எங்களை தற்குறி என்று சிலர் கேலி செய்து எள்ளி நகையாடினார்கள். ஆனால், அந்தத் தற்குறி தான் இப்போது கூர்மையான அம்புக்குறியாக மாறி, மக்கள் விரோத மற்றும் தீய சக்திகளை அழித்து வீழ்த்தியுள்ளது," என்று பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் சக்திகளுக்<strong>கு எதிரான</strong> எச்சரிக்கை</h2><p>தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு பாடமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். தங்களை தற்குறி எனக் விமர்சித்தவர்கள், தற்போது தங்களின் ஊழல் தவறுகளுக்காகப் பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எவ்வித சமரசமும் இன்றி ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கியச் செய்திகள் - 2 செப். 2026 </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-2-september-2026#comments</comments><guid isPermaLink="false">83338c15-7a2e-4b27-825a-a67aff274e36</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:53:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T12:35:29.985Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ubfkhzxf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, அனைத்து வடமாநிலங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தளபதி விஜய் போல, நமக்கும் ஒரு முதல்வர் அமையமாட்டாரா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்- பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி.</p><h2>பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி </h2><p>சினிமா படங்களை தான் பிறமொழிகளில் டப்பிங் செய்து மக்கள் பார்த்து ரசிப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் தலைவரின் சட்டமன்ற உரையையும், பொதுகூட்ட பேச்சையும் டப்பிங் செய்து பிறமொழி பேசும் வேற்று மாநிலத்தினரும் கேட்கின்றனர்.</p><p>நான் தடுமாறிக்கொண்டிருந்தபோது, எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்று நினைத்தபோது, என்னைத் தூக்கிப்பிடித்து வருவாய்த் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் இன்றைய முதலமைச்சர்- அதிமுக எம்.எல்.ஏ ராகேஷின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.</p><h2>சங்கராபுரம் அதிமுக எம்எல்ஏ ராகேஷ்</h2><p>அதிமுகவும் தவெகவும் ஒன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஒரு தலைவர் கொண்டு வரும் திட்டம், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசப்பட வேண்டும். அதை எங்கள் தலைவர் செய்துள்ளார். </p><p>இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்த் துறை அமைச்சர், சபாநாயகர் எல்லாமே நாங்கள் கொடுத்ததுதான். தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அதிமுக விளங்கி வருகிறது.</p><h2>அமைச்சர் நிர்மல் குமார்</h2><p>கலைஞர் தன் வழக்குக்காக கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தார். கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் போட்டு என்ன பயன்?</p><p>உண்மையை சொன்னால் திமுகவினருக்கு கோபம் வருகிறது, Reels போடுவதற்காக பேசுகிறோம் என்கிறார்கள். மக்களுக்கு செய்த துரோகத்தைதான் சொல்கிறோம்.</p><h2>முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்</h2><p>எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை அமைச்சரும் நீண்ட நேரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.</p><p>விவாதம் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதைத் திசைதிருப்ப வேண்டும் என்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அது குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும். </p><p>பின்னர், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து, வெளியில் அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும், திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் ஒரு Reels வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்</p><p>எங்கள் பகுதியை மட்டும் காட்டாமல், ஆளுங்கட்சியினரையும் காட்டினால்தான் அவர்களின் செயல் என்ன என்பது வெளியே புரியும்.</p> <h2>காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்</h2><p>கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். அதை கொடுத்துவிட்டு 25 லட்சம் ஏக்கர் கொண்ட வாட்ஜ் பேங்க் (Wadge Bank) வாங்கினோம். அதனால் எவ்வளவு வளம் கிடைக்கிறது? முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள், இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி ஏன் பேசுவதில்லை?</p><p>கச்சத்தீவை கொடுத்ததே திமுக தான் என அமைச்சர் என்.ஆனந்த் கூறு. திமுகவினர் ஆக்ரோஷமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் நடந்த உரையாடல்</p><h2>திமுக கொறடா எ.வ.வேலு</h2><p>கச்சத்தீவு குறித்து இந்த சபையில் பலமுறை விவாதித்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இந்திராகாந்தி தான் கச்சத்தீவை வழங்கினார்.</p><h2>அமைச்சர் நிர்மல்குமார்</h2><p>கச்சத்தீவை தாரை வார்க்க அன்றைய மத்திய அரசு முடிவு செய்த போது, அன்று இருந்த மாநில அரசு என்ன செய்தது? கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பிறகு தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. வழக்கை காட்டி மிரட்டி தான், அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப் </h2><p>Work like a horse, live like a hermit ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புரவி(குதிரை) போல வேலை செய்ய வேண்டும், துறவி போல வாழ வேண்டும் என்று சொல்வார்கள். புரவி போல தமிழக மக்களுக்காக உழைக்கிறார், அவரது வாழ்க்கையில் துறவி போல எளிமையாக இருக்கிறார்.</p><h2>நாமக்கல் தவெக எம்எல்ஏ திலீப்</h2><p>நல்லவர்களை காப்பாற்றவும், தீயோரை ஒதுக்கி தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது தோன்றுவேன் என கண்ணபிரான் சொன்னது போல, தமிழகத்தின் அவதார புருஷனாக அவதரித்து, கடந்தகால ஆட்சியை அகற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்.</p><p>பாமக சட்டமன்ற குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி," என பாமக எம்எல்ஏ சிவக்குமார் பேச, குறுக்கிட்டு எழுந்த சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்தும் கட்சி மக்கள் நீதி மய்யம், நான் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் மனிதநேய மக்கள் கட்சி என்பதை கூறிக்கொள்கிறேன்" என தெரிவித்தார். இதை கேட்டு, பாமகவினர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.</p><h2>அமைச்சர் ஸ்ரீநாத்</h2><p>மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுக்குப் பொருத்தமான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வருவாயை ஈட்டும் வகையில் வலுப்படுத்தப்படும்.</p><p>20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடையும் வகையில், 18 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.</p><p>TAFCOFED வாயிலாக 55 மீன்வளக் கூட்டுறவுச் கூட்டுறவுச் சங்கங்கள் ‘மீன் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FFPOS) வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன. </p><p>தமிழ்நாட்டின் 50 கடலோர கிராமங்களுக்கு உட்பட்ட பொருத்தமான கடற்பகுதியில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.</p><p>மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப்படும்.</p><p>கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணைகளில் ரூ.24 லட்சத்தில் மீன் விரலிகள் உற்பத்திப்பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்</p><p>திருச்சியில் ரூ.34 கோடியில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் - அமைச்சர் கமலி</p><p>பருத்தி பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம்</p><p>தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுமா? - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்</p><p>வழக்குகள் வாபஸ் என்பது இதுதான் முதல்முறை என அமைச்சர் கூறியது தவறு. 5,000-க்கும் மேற்பட்ட போராட்டம் சார்ந்த வழக்குகளை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - உதயநிதி </p><p>முந்தைய ஆட்சி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>முதலமைச்சரின் அறிவிப்பை திமுகவும் வரவேற்கும் - சபாநாயகர்</p><p>முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டாதா? இல்லை? - சபாநாயகர்</p><p>திமுக ஆட்சியிலும் வழக்குகள் வாபஸ் என்பதற்கு வன்னிஅரசு சாட்சி - எ.வ.வேலு</p><p>முந்தைய அரசு என கூறினால் விவாதம் எழத்தான் செய்யும்  - எ.வ.வேலு</p><p>போராட்டத்தை ஒடுக்குவதற்கு திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு - நிர்மல்குமார்</p><p>வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.</p><p>முதல்வர் பரந்த உள்ளத்துடன் விவசாயிகள் பக்கம் நின்று அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார்.</p><p>அரசு கூறும்போது நீதிமன்றம் நிச்சயம் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>110 விதிகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - சபாநாயர் விளக்கம்</p><p>110 விதியின் கீழ் அறிவிப்புகளை மட்டும் தான் முதலமைச்சர் வெளியிட முடியும், வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை எப்படி வெளியிடலாம்.</p><p>110 விதியின் கீழ் பேசும் முதல்வர் முந்தைய ஆட்சி குறித்த  தவறான கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?</p><p>ஒரு திட்டத்திற்காக நிலம் எடுக்கும்போது போராட்டங்கள் நடக்கும், நீங்கள் செய்தாலும் அதுதான் நடக்கும்.</p><p>சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதியை நிலைநாட்டத்தான் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது  - எ.வ.வேலு</p><p>அரசியல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்</p><p>நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்</p><p>அறிவிப்புகளை வரவேற்க ராமச்சந்திரன் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை</p><p>ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வருக்கு நன்றி கூறுகிறேன் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூரில் ரூ.236 கோடியில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.</p><p>கடலூரில் ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.</p><p>கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.</p><p>ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p>டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.</p><p>விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து.</p><p>திருவண்ணாமலை மேல்மா சிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து - முதலமைச்சர் விஜய்</p> <p>பள்ளிகளை சுற்றியுள்ள சாலையில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.</p><p>ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.</p><p>மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை திட்டம் ரூ.2,400 கோடியில் மேற்கொள்ளப்படும்.</p><p>நாகர்கோவிலில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடியில் செயல்படுத்தப்படும்.</p><p>சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.</p><p>ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</p><p>பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.</p> <p>பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.</p><p>பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்</p><p>மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.</p><p>அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்</p><p>ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார் </p> <p>உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்</p> <p>வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்</p> <p>மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்</p><p>வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்</p><p>காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல. </p><p>பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு</p><p>காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார் </p><p>காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்</p><p>தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்</p> <p>தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்</p> <p>அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்</p><p>விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா</p><p>திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. </p><p>செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை</p><p>இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி</p><p>மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்</p> <p>நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்</p><p>ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி</p> <p>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம். </p><p>ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்</p> <p>அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்</p><p>விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்</p><p>முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். </p><p>ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்</p><p>ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.</p><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.</p><p>பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்</p> <p>ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்</p> <p>பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.</p><p>விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.</p> ]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadus-tax-collection-is-low-if-this-trend-continuestrb-rajaa-warns#comments</comments><guid isPermaLink="false">2391caef-e912-47d8-8a60-a322007abed1</guid><pubDate>Wed, 02 Sep 2026 11:32:23 +0000</pubDate><atom:updated>2026-09-02T11:32:23.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,டிஆர்பி ராஜா,TRB Rajaa,Government of Tamil Nadu,வரி வசூல்,Tax collection</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தமிழ்நாட்டின் வரி வசூல் குறைவு... இதே நிலை தொடர்ந்தால் - டி.ஆர்.பி. ராஜா எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/061ws30n/New-Project-2026-09-02T170155.867.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின் வருவாய் நிலை மோசமான நிலையில் இருப்பதாக முன்னாள் திமுக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,</p><p>“தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது. இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!</p><p>ஆகஸ்ட் மாத சரக்கு மற்றும் சேவை வரி புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. 2025 ஆகஸ்டில் ரூ.10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வரி வசூல், 2026 ஆகஸ்டில் ரூ.10,189 கோடியாகக் குறைந்துள்ளது.</p><p>அதாவது - 1% சரிவு! </p><p>ஆனால் இதே காலகட்டத்தில்:</p><p>இந்தியா +9%</p><p>கர்நாடகா +13%</p><p>குஜராத் +15%</p><p>தெலங்கானா +16%</p><p>உத்தரப் பிரதேசம் +19%</p><p>மகாராஷ்டிரா +8%</p><p>தமிழ்நாடு மட்டும் -1%!</p><p>சாதாரண மக்களுக்கு இந்த சேவை மற்றும் சரக்கு வரி எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மட்டுமே வருகிறது !</p><p>வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும். ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும்.</p><p>ஆனால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!</p><h2>தமிழ்நாட்டை மட்டும் கடந்து செல்லமுடியாது</h2><p>“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். </p><p>ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது, தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.</p><p>இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை! </p><h2>அரசு விளக்க வேண்டும்</h2><p>இந்த நிலை தொடர்ந்தால், பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்?</p><p>மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?</p><p>அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா? வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்! </p><p>இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா?</p><p>இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்லவேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை பாராட்டிய சபாநாயகர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-praise-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/speaker-praise-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">d317bdb4-bbed-42e4-8b62-c19e94e9e4c6</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:31:58 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:31:58.692Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,தமிழக சட்டசபை,TN assembly,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fh4yk8ph/jcd.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்- உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/fh4yk8ph/jcd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-இன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார். </p><p>முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள் வரவேற்று பேசினர். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வழக்குகள் வாபஸ் பெறுவது இதுதான் வரலாற்றில் முதன்முறை என அமைச்சர் ஒருவர் பேசினார். இது சரியான தகவல் இல்லை. எங்களுடைய தலைவர் எங்களுடைய ஆட்சியின் போது, குடியுரிமை திருத்தச்சட்டம், வேளாண் சட்டசம், 8 வழிச்சாலை போராட்டம், கூடங்குளம் போராட்டம், மீத்தேன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றுள்ளார். அப்போது எங்கள் தலைவர், முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரிகளை அழைத்து சொல்லிவிட்டு இந்த அவையில் வழக்குகள் வாபஸ் என்று அறிவித்தார். எனவே இந்த அறிவிப்பு முதன்முறை அல்ல என்றார். </p><p>இதை அடுத்து சில மணி நேரம் கழித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது நான் எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று சொல்லியிருந்தேன். நீங்கள் அதை அவைக்குறிப்பில் எடுத்துக்காட்டினீர்கள். அதில் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். இதனால் நான் பேசிய குறிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், எதிர்க்கட்சி தலைவரிடம் அந்த ஆதாரத்தைக்காட்டியவுடன், இதனை உடனே கவனத்திற்கு கொண்டு வந்தீர்கள், நான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று சொன்ன பெருந்தன்மைக்காக அவரை பாராட்டுகிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-in-20-districts-of-tamil-nadu-meteorological-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/rain-likely-in-20-districts-of-tamil-nadu-meteorological-department#comments</comments><guid isPermaLink="false">ec9d5f9b-b8b5-4af7-89ef-3f702c10dfbf</guid><pubDate>Wed, 02 Sep 2026 09:31:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T09:31:36.606Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD,Rain,மழை,தமிழ்நாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3ostojdi/imd.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Regional meteorological centre]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3ostojdi/imd.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">வானிலை ஆய்வு மையம் </a>வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:</p><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.</p> <h2>மழைக்கு வாய்ப்பு</h2><p>தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p>  <p>தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p> <p>தமிழகத்தில் 4-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>வரும் 5-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p> <h2>அதிகபட்ச வெப்பநிலை </h2><p>இன்று முதல் வரும் 5-ந்தேதி வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்</p><p>பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் உள் தமிழகத்தில் சற்று உயரக்கூடும்.  உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில</p><p>இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்</p><p>காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p> <h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை</h2><p>இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><h2>வங்கக்கடல் பகுதிகள்:</h2><p>இன்று மற்றும் நாளை தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கம்: தமிழக அரசு உடனடியாக தலையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dismissal-of-nlc-contract-workers-anbumani-ramadoss-urges-tamil-nadu-government-to-intervene-immediately</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dismissal-of-nlc-contract-workers-anbumani-ramadoss-urges-tamil-nadu-government-to-intervene-immediately#comments</comments><guid isPermaLink="false">af22cccf-1a66-44ea-a1b2-f638862a98de</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:56:50 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:56:50.366Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,NLC,என்எல்சி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ebdwfl4r/Anbumaniramadoss0.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/ebdwfl4r/Anbumaniramadoss0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக  சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி  செயல்படுத்தும்படி என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின்  1, 1ஏ, 2 ஆகிய  நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த  347 ஒப்பந்தத்  தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பணி நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.</p><h2><strong>பணி நீக்கம்</strong></h2><p>என்.எல்.சி நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களை என்.எல்.சி நிறுவனம் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்து வருகிறது. கடந்த  ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை  6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதன் காரணமாக 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.  நாளை, செப்டம்பர் 3-ஆம் தேதி இரு நிறுவனங்களின் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கப்படவுள்ளனர்.  </p><p>நவம்பர் 16 ஆம்  தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு மொத்தம் 1060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், அவர்களின் குடும்பங்கள்  வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகும். என்.எல்.சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு இந்த நிலை நேராது. வட இந்தியர்களை நிரந்தரப் பணிகளில் அமர்த்தும் என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மட்டுமே அமர்த்தி கொத்தடிமைகளாக நடத்துகிறது.</p><h2><strong>என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை</strong></h2><p>என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுத்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டி வருகிறது. அதற்கு அடிப்படை நிலங்கள் தான். ஆனால், என்.எல்.சி  நிறுவனத்திற்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கும் அந்த நிலங்களை வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அவற்றில் 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.  நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கூட வழங்காமல் நன்றி மறந்த துரோக நிறுவனமாகவே என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்றாகும். இது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தான் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறி வருகிறது.</p><p>என்.எல்.சி நிறுவனத்தின் இந்த அத்துமீறல்களையும்,  துரோகங்களையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு  பணி நீக்கப்பட்ட ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கச் செய்ய வேண்டும்.  அங்கு பணியாற்றி வரும் தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்வதற்காக  சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி  செயல்படுத்தும்படியும் என்.எல்.சி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>புதுக்கோட்டை பேருந்து விபத்து: பழங்குடியின மக்கள் என்பதால் அலட்சியம் என குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/pudukkottai-school-girls-fall-from-bus-tribal-community-alleged-neglect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/pudukkottai-school-girls-fall-from-bus-tribal-community-alleged-neglect#comments</comments><guid isPermaLink="false">64e7409c-6bee-478d-919e-1d57ef015990</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:55:44 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:55:44.066Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tamilnadu,Government bus accident,school students,Government School Students,pudukkadai</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/r01xoi2a/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ government bus accident ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/r01xoi2a/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p><strong>பேருந்தில்  இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் </strong></p><p>புதுக்கோட்டை அருகே திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல 8-ம் எண் அரசு நகர பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட ஆதி பழங்குடியின பள்ளி மாணவிகள் பயணித்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக நடத்துநர் ஒரு மாணவியை கீழே தள்ளவே அதை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் ஓடும் பேருந்தில் இருந்து கதவு திறந்து கீழே விழுந்துள்ளனர். </p> <p><strong>காயமடைந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி </strong></p><p>பேருந்தின் கதவு திறந்து  8 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த மாணவிகளின் கை, கால் மற்றும் தலை பகுதியில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.</p><p><strong>சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்</strong></p><p>இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்களும் பழங்குடியின மக்களும் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>அப்போது மாணவிகள் பேருந்தில் பயணிக்கும் போது பழங்குடியின மக்கள் என்பதாலும் இலவச பயணம் என்பதாலும் சிலர் அலட்சியமாகவும் அவதூறாகவும் பேசுவதாக வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.</p> <p><strong>இச்சம்பவம்  குறித்து  அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் கூறும்போது </strong></p><p>இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளை அனுப்பி உள்ளேன். விசாரணை முடிவில் தவறு உறுதிசெய்யப்பட்டால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.</p><p><strong>கவன குறைவாக செயல்பட்ட ஓட்டுநர் , நடத்துநர் மீது நடவடிக்கை </strong></p><p>சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் , பழங்குடியின மாணவிகள் பேருந்தில் ஏறிய பின்பு ஓட்டுநர் அருகே உள்ள கதவை திறப்பதற்கான பட்டனை யாரோ ஒருவர் அழுத்தி விட்டதால் கதவு திறந்ததில் மாணவிகள் விழுந்துள்ளனர் எனவும், இதில்தான் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விவாகரத்தில் கவன குறைவாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செயல்பட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழக பொது மேலாளர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். </p> <p><strong>பணியிடை நீக்கம் தீர்வாகாது, பயணத்திற்கான பாதுகாப்பு சூழலை உருவாக்க வேண்டும் என மக்கள்  கோரிக்கை </strong></p><p>சம்பவம் குறித்து பேசிய அப்பகுதி மக்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போதுதான் தங்கள் பகுதியில் உள்ள பிள்ளைகள் முதல் தலைமுறையாக பள்ளிக்கும் கல்லூரிக்கும் படிக்க வருகின்றனர். நடத்துநரை பணிநீக்கம் செய்வது மட்டும் தீர்வாகாது. </p><p>தங்களை சக மனிதர்களாக மதித்து தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக படிக்க செல்லக்கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தூய்மை பணியாளர்கள் போராட்டம்: உதயநிதி  கேள்விக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cleanliness-workers-protest-rajmohan-response-udayanidhi-question</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cleanliness-workers-protest-rajmohan-response-udayanidhi-question#comments</comments><guid isPermaLink="false">b468bf2e-9751-41a2-ac45-dacbafcc8783</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:19:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:19:52.879Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,உதயநிதி ஸ்டாலின்,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7w22dzce/udhay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan- Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7w22dzce/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில்  இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  பேசியதாவது:-</p><p>ஆளும் கட்சி தேர்தல் அறிக்கையில்  கொடுத்த முக்கியமான ஒரு வாக்குறுதி, தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு. இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இன்றோடு சேர்த்து அவர்களுடைய போராட்டம் 15-வது நாளை எட்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்திற்கு நாங்கள் எடுத்து வரும்போது, அமைச்சர்கள், பள்ளிக்  கல்வித் துறை அமைச்சர்  விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். </p><p>ஆனால் இதுவரைக்கும் எந்த முடிவும், சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.</p><p>இந்தத் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய முதலமைச்சரை அவர்கள் நேரடியாகச் சந்தித்து கோரிக்கையை வைக்க வேண்டும் என்று  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>இன்றைய முதலமைச்சர் சென்ற ஆண்டு இதே மாதிரி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/sanitation-workers-forcibly-arrested-while-attempting-to-lay-siege-to-the-chief-ministers-mla-office" rel="nofollow">தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</a> பண்ணும்போது அவர்களுடைய கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவர்களை எல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.</p><p>எனவே என்னுடைய கோரிக்கை, நாங்கள் கேட்க விரும்புவது, அரசின் கவனத்திற்கு எடுத்து வருவது... தூய்மைப் பணியாளர்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார்? தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதலமைச்சர்  பேசுவாரா? </p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசும்போது எங்கள் ஆட்சியில் 100 நாட்களை தாண்டிப் போராட்டம் நடைபெற்றது என்று சொன்னார்கள்.</p><p>இப்போது நீங்களும் 100 நாட்களைத் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா? அந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் .</p><p>அதேபோல, எங்களுடைய ஆட்சியில் போராட்டம் நடந்தபொழுது எங்களுடைய அப்போதைய அமைச்சர்  சேகர்பாபு , மேயர் பிரியா அவர்களெல்லாம் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.</p><p>இப்போது  ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர் கூட அந்த போராட்டக்களத்திற்கு யாரும் சென்று அவர்களை இதுவரைக்கும் சந்திக்கவில்லை. </p><p>ஆட்சியில் இல்லாதபோது  தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதலமைச்சர்  இப்போது  தூய்மைப் பணியாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்?</p><p>இவ்வாறு  எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.</p><p>இதற்கு பள்ளி கல்வித்துறை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/they-are-not-cleaners-they-are-cleanliness-angels-minister-rajmohan" rel="nofollow">அமைச்சர் ராஜ்மோகன்</a> பதில் அளித்ததாவது :-</p><p>அவர்கள் கேட்கும் கோரிக்கை நிதி சார்ந்து உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் </p><p>100 நாட்களை தாண்டி போராடினார்கள்.</p><p>இந்த ஆட்சியில் இரண்டு முறை அவர்களை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. </p><p>கடந்த திமுக ஆட்சியில் அவர்கள் நடைபாதையில் அமர்ந்துதான் போராடினார்கள். ரிப்பன் மாளிகைக்கு உள்ளே கூட அனுமதிக்கவில்லை தற்போது ரிப்பன் மாளிகைக்கு உள்ளே அமர்ந்து தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.</p> <p>அவர்களது போராட்டத்திற்கு விரைவில் நல்ல தீர்வு காணப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>நவம்பர் 8-ந்தேதி கொண்டாட்டம்: தீபாவளி சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 6-ந்தேதி தொடக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/reservations-for-special-diwali-trains-begin-on-the-6th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/reservations-for-special-diwali-trains-begin-on-the-6th#comments</comments><guid isPermaLink="false">b1092479-4eaa-493e-91ab-b31790ec9ab7</guid><pubDate>Wed, 02 Sep 2026 08:07:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T08:07:13.438Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>special train,சிறப்பு ரெயில்,முன்பதிவு,Diwali,தீபாவளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gvhnkchu/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gvhnkchu/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</strong></em></p><p>இந்த ஆண்டு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF">தீபாவளி</a> பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால் இந்த 2 நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வெளியிடங்களில் இருந்து நெல்லை உள்ளிட்ட தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.</p><h2><strong>முன்பதிவு</strong></h2><p>தீபாவளியை ஒட்டி சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் வருகிற 6-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரெயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ந்தேதி அன்று சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர், வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நவம்பர் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புறப்பட விரும்புவோர், வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள  வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/resolution-passed-in-california-legislature-to-celebrate-diwali">தீபாவளிக்கு</a> முந்தைய தினமான நவம்பர் 7-ந்தேதி பயணத்துக்கு தயாராக இருப்பவர்கள், வருகிற 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று முன்பதிவு செய்ய வேண்டும்.</p><p>தீபாவளியை ஒட்டி ஊர்களுக்கு திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் அதிகமாக முன்பதிவுகளை மேற்கொள்வர். எனவே தீபாவளி முன்பதிவுக்கு பயணிகள் தங்களை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை</strong></h2><p>அதேபோல் மறுமார்க்கத்தில் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் வரும் 9-ந்தேதி முதல் முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி முடிந்து மறுதினமே பணிக்கு செல்வோர், தீபாவளி தினமான நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே புறப்பட வேண்டும். அதற்கு வருகிற 9-ந்தேதி முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. </p><p>அதன்படி 9-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், அன்று மாலையில் பலர் நகரங்களுக்கு புறப்பட்டு செல்வர். அதன்படி நவம்பர் 9-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டு செல்வோர், வருகிற 10-ந்தேதி (வியாழக்கிழமை) முன்பதிவு  செய்ய வேண்டும். தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.  இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பொன்னேரி ஜெயிலில் ஆய்வு- திருக்குறள் புத்தகம் வாசித்த கைதியை பாராட்டிய நீதிபதி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ponneri-jail-inspection-judge-lauds-inmate-reading-thirukkural#comments</comments><guid isPermaLink="false">5f277aff-9053-4842-8351-69b8ac525289</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:52:01 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:52:01.004Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Justice,திருக்குறள்,Thirukural,பொன்னேரி சிறை,நீதிபதி ஆய்வு,ponneri jail</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief District Judge Juliet Pushpa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/96y6r3cg/justice.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொன்னேரி கிளை சிறையில் திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>பொன்னேரி கிளை சிறையில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா தலைமையில் முதன்மை சார்பு நீதிபதி மகேஸ்வரி, தலைமை குற்றவியல் நீதிபதி தீன தயாளன் (பொறுப்பு) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நளினி தேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.</p><p>அப்போது கிளைச் சிறையில் கைதிகளுக்கு முறையான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D" rel="nofollow">குடிநீர்</a>, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? எனவும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.</p><p>கிளைச் சிறைக்குள் கைதிகள் அடைக்கப்படும் அறைகளையும், கைதிகள் நேர்காணல் அறையையும் நேரில் சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து சிறைச்சாலையில் பராமரிக்கப்படும் கைதிகள் ஒப்படைப்பு பதிவேடு, பாரா பதிவேடு, சிறை பதிவேடு, ஆயுத அறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். </p><p>சிறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களின் எடை உள்ளிட்டவற்றை ஆய்வு  செய்து கைதிகளுக்கு தேவையான சட்ட உதவிகள், கல்வி மருத்துவம் குறித்தும் கேட்டிருந்தனர்.</p><p>அப்போது திருக்குறள் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த ஒரு கைதியை பார்த்து  மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து பாராட்டினார். </p><p>ஜெயிலில் அனைவரும் புத்தகம் படிக்க வேண்டும், கைதிகள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இனி சிறைக்குள் வரக்கூடாது நல்ல மனிதனாக சமுதாயத்தில் வாழ வேண்டும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், சட்ட உதவிகள் தேவைப்பட்டால் குழு வினரிடம் தெரிவிக்கவும் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார். </p><p>மேலும் அனைத்து கைதிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது கிளை சிறை கண் காணிப்பாளர் சசிகுமார் (பொறுப்பு) மற்றும் வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர்.</p> ]]></content:encoded></item><item><title>விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்:  திமுக குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் அளித்த பதில் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-assembly-speaker-reply-to-dmk-indictment#comments</comments><guid isPermaLink="false">aab57c29-79eb-489a-b7a9-98ae69c914a1</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:48:30 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:48:30.116Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,வழக்குகள் வாபஸ்,JCD Prabhakar,ஜேசிடி பிரபாகர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/3jq7s1cr/JCDPrabhakar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் இன்று  110 விதியின் கீழ் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான கடந்த ஐந்து ஆண்டில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது  தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக  திமுக கொறடா எ.வ.வேலு  சில விளக்கங்களை கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார். </p><p>அவர் கூறுகையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அறிவிப்பதை யாரும் மறுக்கவில்லை.</p><p>பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, முந்தைய அரசு போட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn">வழக்குகளைத்</a> திரும்பப் பெறுவதாகக் கூறி, முந்தைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டும் வகையில் 110 விதியை அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.</p><p>சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவே காவல் துறை மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த ஒரு அரசுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தனிப்பட்ட முறையில் விவசாயிகள் மீதோ அல்லது ஆசிரியர்கள் மீதோ எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இருக்க முடியாது.</p><p>இதுபோன்ற வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக 110 விதியில் அறிவிப்பதன் மூலம், இனி இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வழக்கே பதிவு செய்யப்பட மாட்டாதா அல்லது நில எடுப்பு போன்ற பணிகளின் போது சட்டம்-ஒழுங்கை அரசு கண்டு கொள்ளாதா?</p><p> முந்தைய அரசைக் குறை கூறுவதற்காக 110 விதியைப் பயன்படுத்துவது சட்டமன்ற நடைமுறைகளுக்கு எதிரானது</p><p>இவ்வாறு எ.வ.வேலு கூறினார்.</p><p>இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் விதிப்படி தான் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் எந்த தவறும் கிடையாது. வேண்டுமானால் 110 விதியின் கீழ் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்று பட்டியல் தரவா? என்று  சபாநாயகர் எதிர் கேள்வி எழுப்பினார்.</p>]]></content:encoded></item><item><title>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை கொள்ளை - மர்ம கும்பல் துணிகரம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-idol-stolen-from-nadu-palani-temple-near-acharapakkam#comments</comments><guid isPermaLink="false">7270fb4c-dfcc-47dd-ab4a-4b243d8211fc</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:41:33 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:41:33.412Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Acharapakkam,nadu palani temple,முருகன் சிலை கொள்ளை,அச்சரப்பாக்கம்,நடுபழனி கோவில்,murugan statue stolen</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோவிலில் இருந்த மரகத முருகன்  சிலை - சிலை மாயமானதால் காலியாக உள்ள பீடம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/bz96wkue/murugan1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அச்சரப்பாக்கம் அருகே நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p><h2>மரகத முருகர் சிலை</h2><p>செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அடுத்த பெருங்கருணை கிராமத்தில் உள்ள கனக மலை குன்றின் மீது தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு முத்து சுவாமிகள் தண்டாயுத பாணி சிலையை நிர்மாணம் செய்து முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.</p><p>சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கும் நடுவில் இருப்பதால் இந்த கோவிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோவில் என்று அழைத்து வந்தனர். கோவிலில் சுமார் 3 அடி உயரத்தில் மூலவர் மரகத முருகர் சிலை இருந்தது.</p> <p>வளர்பிறை, சஷ்டி, கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விசேஷ நாட்களிலும் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலின் மேற்கு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையும் உள்ளது.</p> <p>இந்தக் கோவிலை உருவாக்கிய முத்து சுவாமிகள் முக்தி அடைந்த பின்னர் கோவிலின் நிர்வாகத்தினை பெருங்கருணை கிராம மக்களோடு இணைந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. கன ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் திருக்கருணை நடுபழனி தண்டாயுதபாணி கோவிலில் இருந்த கற்சிலையை நீக்கி விட்டு மரகத கல்லால் ஆன தண்டாயுதபாணி மூலவர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.</p>  <h2>தண்டாயுதபாணி சிலை</h2><p>இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை ஊழியர்கள் பூட்டி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறந்தபோது கருவறையில் இருந்த மூலவர் மரகத கல்லாலான தண்டாயுதபாணி சிலை திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.</p><p>இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கும், சித்தாமூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். </p><p>கோவிலின் பின்பக்க மலையின் வழியாக வந்து மர்ம கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. மூலவர் சிலை உள்ள இடத்தில் 3 கதவுகளின் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். </p> <h2>போலீசார் விசாரணை</h2><p>கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்படவில்லை. விலை மதிப்பு இல்லாத மரகத முருகன் சிலையை மட்டும் குறிவைத்து கொள்ளையர்கள் இச்சம்பத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலில் காவலாளி உள்ளார். அவர் கோவிலின் கீழ் பகுதியில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு கோவிலில் சிலை கொள்ளை போனது தெரியவில்லை. இன்று காலை தான் கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து சிலையை தூக்கி சென்று இருந்தது தெரிந்தது.</p><p>கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p> <p>கோவில் மண்டபம் மற்றும் கருவறையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து உள்ளனர். கோவிலின் பின்பக்கம் உள்ள கண்காணிப்பு கேமராவில் மட்டும் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தன. </p><p>சம்பவ இடத்தை டி.எஸ்.பி.தீபக் ரஜினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை கும்பல் நீண்ட நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.</p><p>நடுபழனி கோவிலில் மரகத முருகன் சிலை திருடு போன சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>வரும் 15-ந்தேதி முதல் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-digital-driving-licenses-from-the-15th-of-this-month#comments</comments><guid isPermaLink="false">a3c2b27e-905a-47f6-a815-a3914cf3db76</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:32:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:32:46.567Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,ஓட்டுநர் உரிமம்,TN assembly,driving license</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/gxissycm/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> முதலமைச்சர் விஜய் 110 கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-</p><p>நமது அரசு ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்வதுடன், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் எளிமையான முறையில் மக்களைச் சென்றடையும் வகையில் தொடர்ந்து நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.</p><p>தற்போது, தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்று பெறுவதற்குக் கட்டணமாக 250 ரூபாய் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட்டு, சிப் (Chip) பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்களுக்குக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது.</p><p>இந்தக் காலதாமதத்தினால் பொதுமக்களுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தினைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச்சான்றிதழ் ஆகியவை Digital முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில், அதாவது Digital Driving License மற்றும் Digital Registration Certificate வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.</p><p>மின்னணு வாகனப் பதிவுச்சான்றிதழ் முறை (Digital RC) அறிமுகம் செய்வதன்மூலம், புதிய வாகனம் வாங்குவோர், வாகனப் பதிவை அதாவது, Digital RC–யை இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோன்று ஓட்டுநர் தேர்வில்  தேர்ச்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, அன்றைய தினமே ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.</p><p>அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களைச் சரிபார்க்க முடியும். இதன்மூலம் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும். இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக்கொள்ளவும் முடியும்.</p><p>ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், வாகனத்தைப் பதிவு செய்வதற்கும், வாகனப்பதிவு புதுப்பித்தல் மற்றும் படிப்படியாக போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் தமிழ்நாட்டில் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பித்து “Anywhere Registration / Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>இவ்வாறு முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>2029-ல் பிரதமர் யார்?- தவெக Vs காங்கிரஸ் இடையே முற்றும் வார்த்தை மோதல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-vijay-will-be-pm-in-2029-congresss-tharakai-katpat-counters-with-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">08489f79-3c83-4c2e-8888-c357261cf486</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:21:16 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:21:16.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கனிமொழி,Kanimozhi MP,பிரதமர் வேட்பாளர்,PM Candidate,தாரகை கத்பட்,Tharagai katpat</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi- Congress MLA Tharagai katpat]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/hwnjdq87/Congress.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2029ல் பிரதமர் வேட்பாளர் முதலமைச்சர் விஜய்தான். தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த ராகுல்காந்தி தான், பிரதமராகவும் அமர வைப்பார் என தவெக MLA கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழக கவுண்டம்பாளையம் எம்எல்ஏ  கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-</p><p>2029-ல் பிரதமர் வேட்பாளர் தலைவர் விஜய் தான். தளபதிதான். 2025-ல் நான் கணித்ததைப் போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026-ல் இப்போது  சொல்கிறேன் 2029-ல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார் .</p><p>மேலும், 2029-ல் இந்திய அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது. பிரதமரை இனி டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவது இல்லை. </p><p>ராகுல் காந்திதான் தளபதியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தார். அதேபோல் <a href="https://www.maalaimalar.com/news/national/fir-registered-against-rahul-gandhi-over-haldwani-purification-remarks" rel="nofollow">ராகுல் காந்தி</a>யே தலைவர் தளபதியை பிரதமராக அமர வைப்பார் </p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மன்ற மனப்பான்மையில் உள்ளனர் என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர்  தாரகை கத்பட்  பேட்டி அளித்துள்ளார். </p><p>இதுகுறித்து தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ  கனிமொழிக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பட் கூறியதாவது:-</p><p>அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்திதான். முதலமைச்சர் விஜய் இதுவரை ராகுல் காந்திதான் பிரதமர் என்று கூறியுள்ளார்.</p><p>தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள் ராகுல் காந்திதான் பிரதமர்.</p><p>இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எந்த சோர்வும் கிடையாது. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். </p><p>காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது என கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>தி.மு.க. முப்பெரும் விழா - திருச்சி சிவா எம்.பி.க்கு கலைஞர் விருது அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-kalaignar-award-announced-for-mp-trichy-siva</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mupperum-vizha-kalaignar-award-announced-for-mp-trichy-siva#comments</comments><guid isPermaLink="false">1c531c7f-14e0-48d4-99c5-720768d9dbb2</guid><pubDate>Wed, 02 Sep 2026 07:20:52 +0000</pubDate><atom:updated>2026-09-02T07:20:52.763Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,Kalaignar Award,முக ஸ்டாலின்,திமுக முப்பெரும் விழா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/02/1942997-dmk.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna arivalayam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2023/09/02/1942997-dmk.webp?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <h2>தி.மு.க. முப்பெரும் விழா</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn">தி.மு.க.</a> முப்பெரும் விழா வருகிற 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகள் பெறுவோர் பட்டியலை தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.</p> <h2>திருச்சி சிவா</h2><p>பெரியார் விருது-கு.செல்லப்பா (விவசாய அணி துணை செயலாளர்), அண்ணா விருது-சேலம் ஜி.கே.சுபாஷ் (சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்), கலைஞர் விருது-திருச்சி சிவா எம்.பி. (தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்), பாவேந்தர் விருது- கனிமொழி என்.வி.என்.சோமு (மருத்துவ அணி தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் விருது- மிசா எஸ்.அகமது தம்பி (தலைமை செயற்குழு உறுப்பினர்), மு.க.ஸ்டாலின் விருது- நா.இளையராஜா (இளைஞர் அணி துணை செயலாளர்).</p><h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இந்த விருதுகளை வருகிற 15-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 6 மாவட்டங்களில் நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-new-nursing-colleges-tamil-nadu-arunraj-announces#comments</comments><guid isPermaLink="false">b02e059b-fefc-4b91-996e-5636a7b544d0</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:53:03 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:53:03.473Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj,Govt Nursing College,அரசு நர்சிங் கல்லூரி,270 Crore Allocation</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Minister Arunraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/7rel8u40/Minister-Arunraj?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் 2014-க்கு பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகளே இல்லாத நிலையில், 6 மாவட்டங்களில் புதிய கல்லூரிகள் தொடங்க <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D">அமைச்சர் அருண்ராஜ்</a> <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில் </a>அறிவித்துள்ளார். </p><p>முதல்வரின் விதி 110 அறிவிப்பின்படி 7 கல்லூரிகள், 270 கோடி ஒதுக்கீட்டில், 600 புதிய BSc நர்சிங் இடங்களுடன் வருகிறது.</p><h2><strong>புதிய செவிலியர் கல்லூரிகள்</strong></h2><p>இது குறித்து அமைச்சர் பேசியதாவது,</p><p>சென்னை, செங்கல்பட்டு, கடலூர், சேலம் மதுரை மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு செவிலியர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு புதிய செவிலியர் கல்லூரியில் தொடங்கப்படவில்லை. </p><p>மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110 கீழ் 7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2><strong>270 கோடி ஒதுக்கீடு</strong></h2><p>இந்திய செவிலியர் கவுன்சில் விதிமுறைகளின் படி ஒரு புதிய செவிலியர் கல்லூரி துவங்க போதிய படுக்கை வசதிகள் கொண்ட தேவையான மருத்துவ பிரிவுகள் கொண்ட போதிய புறநோயாளிகள் எண்ணிக்கை வெளிநோயாளிகள் எண்ணிக்கை, மகப்பேறு சேவை மற்றும் அதற்கு தேவையான கட்டுமானங்கள் அவசியம்.</p><p>மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை இணைப்பு மருத்துவமனையாக கொண்டு புதிய செவிலியர் கல்லூரியில் துவங்கப்பட உள்ளன.</p><p>திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 100 இடங்கள் விதம் ஆண்டுக்கு மொத்தம் 600 பிஎஸ்சி நர்சிங் பட்டய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.</p><p>இந்த 6 செவிலியர் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து நடத்திட தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூ. 270 கோடி முன்மொழியப்பட்டுள்ளது.</p><h2>440 இடங்கள் கூடுதல்</h2><p>மேலும் கோயம்புத்தூர், ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநில அரசு நிதியில் 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களுடன் புதிய செவிலியர் கல்லூரி ஒன்றும் தொடங்க முன்மொழிவுபட்டது.</p><p>ஏற்கனவே உள்ள ஆறு பிஎஸ்சி நர்சிங் பணியிடங்கள் கொண்ட மருத்துவ செவிலியர் மருத்துவ கல்லூரியில் கூடுதல் இடங்கள், 440 கூடுதல் இடங்கள் உருவாக்கி இருக்கிறோம் எனக் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>தொகுதிகளுக்கு அமைச்சர்களும் எங்களுடன் வந்தால் மக்கள் பிரச்சனைகள் தெளிவாக புரியும் - பிரேமலதா விஜயகாந்த்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-says-if-ministers-also-accompany-us-to-the-constituencies-they-will-clearly-understand-the-peoples-issues#comments</comments><guid isPermaLink="false">d0d8d53b-d088-495b-b840-b02dc3cdef8c</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:41:49 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:41:49.931Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,பிரேமலதா விஜயகாந்த்,TN assembly,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரேமலதா விஜயகாந்த்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/wgui0cgf/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். </p><p>அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு மண்டபமும், இலவச இருசக்கர வாகன நிறுத்தமும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தவெக எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் கூறுகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கட்டணமில்லா இருசக்கர வாகன நிறுத்தம் வசதி இருந்தது. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது. காவல்துறை தரப்பில் புகாரும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விரிவான ஆய்வினை மேற்கொண்டு கோவிலின் நிதி நிலைமையும் ஆலோசித்து உறுப்பினர் கூறிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். </p><p>* திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை. செவ்வாய் கிழமை தோறும் காலை, மாலை என இருவேளையும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று எம்எல்ஏ ஹாரி கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், திருத்தணி கோவிலில் உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளது. உள்ளூர் மக்களை அனுமதிப்பது தொடர்பாக அறங்காவலர் குழு தலைவரின் பரிந்துரைக்காக காத்துள்ளோம். இணையதளம் மூலமாக தரிசன டிக்கெட் பெறுவதற்கான இணையதளம், செயலிகளை உருவாக்கம் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் இணையதள வசதிகள் வரும்போது உள்ளூர் மக்களுக்கான தரிசனத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* விருத்தாசலம் என்றாலே கோவில் மாநகரம். விருத்தாசலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். விருத்தாசலம் தொகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து உள்ளது அதனை சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நாங்கள் எல்லாம் தொகுதிக்குள் போகும்போது துறை சார்ந்த அமைச்சர்கள் வந்தால் மக்களோடு சேர்ந்து அங்கு உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடியாக சொல்லும்போது உங்களுக்கு தெளிவாக புரியும். அமைச்சரும் எங்களோடு சேர்ந்து வரும் போது அந்த பணிகளும்சிறப்பாக செய்ய முடியும் என்பதை என் கருத்தாக கூறுகிறேன் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், உறுப்பினரின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்பட்டு இந்த கூட்டத்தொடர் முடிந்த பிறகு உறுப்பினரோடு சேர்ந்து ஆய்வு செய்ய நான் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக ஆய்வு செய்து அனைத்து கோவில்களுக்கும் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். </p><p>* தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதான திட்டத்தை தன்னார்வலர்களும் செய்ய முன்வரும் நிலையில், அந்த கோவிலில் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே தங்கு தடை இல்லாமல் அன்னதானத்தை வழங்கும் வகையில் கோவிலின் பக்கவாட்டில் தமிழக அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கட்டிடங்களை புனரமைத்து அதில் அன்னதான கூடத்தை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கோவில்களில் இந்த அன்னதான சேவையை விரிவுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொள்ள ஆய்வு செய்து வருகிறோம். கூடிய விரைவில் உரிய அனுமதி பெற்று அன்னதான திட்டம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p>]]></content:encoded></item><item><title>நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/hc-directs-centre-state-to-submit-detailed-report-on-rescue-of-missing-indians-in-nepal-floods#comments</comments><guid isPermaLink="false">38213716-9de6-4fb6-a50c-b37af95c8c6f</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:32:31 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:32:31.699Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt,அறிக்கை தாக்கல்,report submit,nepal flood,நேபாளம் வெள்ளம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nepal flood- Chennai highcourt]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/tyvdlaje/Nepal-HC.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.</p><p>கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23-ந்தேதி கும்பகோணத்தில் இருந்து நேபாளத்திற்கு சென்றனர்.</p><p>ஆகஸ்ட் 26-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இவர்களில் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" rel="nofollow">சென்னை ஐகோர்ட்டு</a> ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போயுள்ளனர். </p><p>நேபாளம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரில் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை, அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். </p><p>மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வக்கீல்  பர்வேஷ் முஷ்ரப், ஐகோர்ட்டு  மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில், 220 பேர் மீட்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். </p><p>மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/murugan-conference-made-foreigners-realize-what-thirumoor-said-chennai-high-court-judge-sivagnanam-735525" rel="nofollow">நீதிபதி சிவஞானம்</a> உள்பட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.</p><p>இதையடுத்து, நேபாள வெள்ளத்தில் சிக்கி, காணாமல் போனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>முந்தைய ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-cases-registered-against-farmers-and-teachers-during-the-dmk-regime-withdrawn#comments</comments><guid isPermaLink="false">5403c0a3-9fe5-42b3-a14e-c6cdef360ea8</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:29:46 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:29:46.853Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0yf2t7s0/vijay01.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0yf2t7s0/vijay01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவுச்சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும். </p><p>* லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். </p><p>* டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம். </p><p>* திமுக ஆட்சியில் வாழ்வாதாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. </p><p>* திமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். </p><p>கடந்த ஆட்சியின் போது போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டதை <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly">முதலமைச்சர் விஜய்</a> சுட்டிக்காட்டிய போது தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். </p><p>இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய்,  வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது மனிதநேயமற்ற முறையில் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். </p><p>* விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார். </p><p>ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்ததை கட்சியினர் வரவேற்றனர். </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-made-important-announcements-under-rule-110-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">9cae4f6a-fff5-4a14-86da-759994d1dd12</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:16:26 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:16:26.220Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0ox22b72/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/0ox22b72/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வந்தது. இதனிடையே முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* தமிழ்நாட்டின் நகரக்ஙளில் சுகாதாரமான நகரங்களாக மாற்ற பாதுகாப்பான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். </p><p>*  வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கம் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படும். </p><p>* பழமையான 33 குடிநீர் திட்டங்களை சீரமைக்கப்படும். </p><p>* குன்றத்தூர், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* ரூ.1000 கோடி செலவில் மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர்  அமைப்புகளை ரூ.210 கோடியில் மேம்படுத்தப்படும். </p><p>* நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். </p><p>* சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். </p><p>* ரூ.2400 கோடியில் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும். </p><p>* நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்உற்பத்திக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு</p><p>* பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும். </p><p>* மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும். </p><p>* ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். </p>]]></content:encoded></item><item><title>மழைக்காலங்களில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை- த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-warns-tvk-members-over-rainy-season-cutouts-and-banners-ban</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-anand-warns-tvk-members-over-rainy-season-cutouts-and-banners-ban#comments</comments><guid isPermaLink="false">b5d62573-c038-4136-ae77-33c37f6ffb05</guid><pubDate>Wed, 02 Sep 2026 06:08:13 +0000</pubDate><atom:updated>2026-09-02T06:08:13.352Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,தடை உத்தரவு,tvk,MInister N Anand,அமைச்சர் என் ஆன்ந்த்,cut outs</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iaxa431t/Anand.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister N Anand]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/iaxa431t/Anand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் த.வெ.க.வினர் பேனர் மற்றும் கட் அவுட் வைக்க கூடாது என தமிழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D" rel="nofollow">முதலமைச்சர் விஜய்</a> உத்தரவுபடி பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் ஏற்கனவே நிர்வாகிகளுக்கு உத்தவிட்டுள்ளார்.</p><p>மீறி வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.</p><h2>மழைக்காலங்களில்</h2><p>இந்நிலையில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் அமைச்சர் என்.ஆனந்த் மழைக்காலம் வருவதால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை, கட் அவுட்களை அகற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>இது குறித்து த.வெ.க.வினருக்கு அமைச்சர் என்.ஆனந்த், நம் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலிலும் த.வெ.க.வினர் ஈடுபட கூடாது.</p><p>பேனர்கள், <a href="https://www.maalaimalar.com/sports/cricket/ipl-news-in-tamil/sanju-samson-to-play-in-his-hometown-for-first-intl-match-807441" rel="nofollow">கட் அவுட்</a>கள் வைத்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார். </p><p>எனவே பருவமழை தொடங்க இருக்கும் நேரத்தில் தங்களது பகுதியில் ஏதேனும் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைத்திருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும்.</p><p>பேனர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. மழைக் காலங்களில் பொது மக்களுக்கு த.வெ.க.வினர் பாதுகாப்பாக இருந்து பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும். மக்கள் பாது காப்பே நமக்கு முக்கியம் என அமைச்சர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-to-get-six-new-power-substations-says-minister-nirmalkumar#comments</comments><guid isPermaLink="false">405d1a70-f417-4532-a87a-030b2e232001</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:48:20 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:48:20.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |,substations,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar,துணை மின் நிலையங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/geqa47hw/Nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம். </p><p>தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.</p><p>அப்போது, துணை மின்நிலையம் அமைத்துத் தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார்," குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.</p><p>தொடர்ந்து, திருத்துறைப்பூண்டியில் 110KV <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D" rel="nofollow">துணை மின்நிலையம்</a> தேவை என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது" என்றார். </p><p>பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் என எம்எல்ஏ செல்லசாமி கோரிக்கை வைத்தார்.</p><p>இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்,"ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.</p><p>சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.</p><p>கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது என எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றம்சாட்டினார்.</p><p>சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள் என பவர்கட் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார்.</p><p>மேலும் அவர்,"இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும்" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>பாம்பு கடிக்கு மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் உள்ளது- அமைச்சர் அருண்ராஜ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-arunraj-says-there-is-an-adequate-supply-of-snakebite-medicines-in-government-hospitals#comments</comments><guid isPermaLink="false">453b2bad-995a-4584-ae30-861755d1c8c7</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:29:32 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:29:32.576Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/u2ygzmj9/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">சட்டசபையில்</a> இன்று பாம்பு கடிக்கு அரசு  ஆஸ்பத்திரிகளில் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அதன் விவரம் வருமாறு,</p><p>பண்ருட்டி மோகன்:- பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க அரசு முன்வருமா?</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-பாம்பு கடிக்கு சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் போதுமான அளவு அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது.</p><p>முன்னாள் அமைச்சர் கே என் நேரு :-    </p><p>திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதி புள்ளம்பாடி ஒன்றியம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டு வருகிறது. நிறைய கிராமங்களை கொண்ட பகுதி. அதை தரம் உயர்த்தி முழு நேர ஆரம்ப நிலை  மருத்துவமனையாகமாற்றி தர வேண்டும். அப்படி தந்தால் அந்த பகுதியில் இருக்கிற பாம்பு கடிக்கான  மருந்துகள் எல்லாம் 24 மணி நேரம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும். கட்டிட வசதி இருக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது. அதை தரம் உயர்த்தி தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :-</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly">மருத்துவத்துறை</a> சார்பில் நலம் செயலி உள்ளது. அதன் மூலம் மருந்துகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க எடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி:-</p><p>ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் :</p><p>இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசும் திட்டத்தில் வைத்துள்ளது.  எனவே அனைத்து நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும்.</p><p>முஸ்தபா (த வெ க ):- மதுரை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே அதற்கு தரமான வசதிகளை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ்:- </p><p>உறுப்பினரின் கோரிக்கையின் படி ஆய்வு செய்து அவர் கேட்ட வசதி செய்து தரப்படும்.</p><p>பெரியகுளம் சபரி ஐங்கரன்:- </p><p>தேனி அரசு மருத்துவமனையில் போதுமான பாம்புக்கடி சிகிச்சைக்காக வருவோருக்கு படுக்கை வசதி இல்லை அதனை செய்து தர வேண்டும்.</p><p>அமைச்சர் அருண்ராஜ் - கூடுதல் படுக்கை வசதிகள் நிச்சயம் செய்து கொடுக்கப்படும்.</p><p>முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்:-</p><p>பாம்பு கடிக்கு சமீபத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் இறந்துள்ளார். எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கான தடுப்பு மருந்து உள்ளதா? தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு எத்தனை பேர் இறந்துள்ளனர்? எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p> <p>அமைச்சர் அருண் ராஜ் :-</p><p>இந்த ஆண்டு பாம்பு கடிக்கு 9,519பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் 15 ஆயிரத்து 837 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டனர். அதில் 26 பேர் இறந்துள்ளனர். பாம்பு கடிக்கான விஷ முறிவு மருந்து அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கைவசம் உள்ளது. </p><p>இவ்வாறு விவாதம் நடந்தது.</p><p>40 நிமிடம் மொத்த கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மூர்மார்க்கெட்- சூலூர்பேட்டை இடையே பயணிகள் ரெயில் ரத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/passenger-trains-cancelled-between-moore-market-and-sulurpet#comments</comments><guid isPermaLink="false">821babad-3ef2-420b-a4c5-3de5fa2c30f8</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:26:39 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:26:39.527Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Southern Railway,ரெயில் சேவை,rail service,தெற்கு ரெயில்வே,பயணிகள் ரெயில் ரத்து,passenger rail cancel</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Passenger train]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/aqalxypa/local-train.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p>சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பெதபரியா- நாயுடுபேட்டை இடையே நாளை (3-ந்தேதி) மற்றும் 5 ஆகிய தேதிகளில் மதியம் 12.20 மணி முதல் மாலை 6.50 மணி வரையில் (6 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. </p><p>அதன் விவரம் வருமாறு:-</p><p>* மூர்மார்க்கெட்டில் (சென்னை சென்டிரல்) இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" rel="nofollow">சூலூர்பேட்டை</a>யில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.</p><p>* சூலூர்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் வரும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்துசெய்யப்படுகிறது.</p><p>* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கரும்பு சாகுபடியை பெருக்கி படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண்டும்!- அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-sugarcane-cultivation-must-be-increased-to-ensure-the-continued-operation-of-the-padalam-cooperative-sugar-mill#comments</comments><guid isPermaLink="false">7161e74d-9200-4144-a17e-5b3fa775ed0b</guid><pubDate>Wed, 02 Sep 2026 05:09:36 +0000</pubDate><atom:updated>2026-09-02T05:09:36.964Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,சர்க்கரை ஆலை,கரும்பு சாகுபடி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/51yeb0m9/Anbumaniramadoss01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளில் அக்டோபர் ஒன்றாம்  தேதி முதல் அரவைப் பருவம் தொடங்கவுள்ள நிலையில், படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஒப்பந்த பணியாளர் நியமனம் உள்ளிட்ட எந்தப் பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் சர்க்கரைக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், கூட்டுறவு ஆலைகள் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை தமிழக அரசின் சர்க்கரைத் துறை தவற விடுவது சரியானதல்ல.</p><h2><strong>ஐயம்</strong></h2><p>செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் 1961-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழ்நாட்டின் பழமையான மற்றும் அதிக அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு 2500 டன் கரும்பு அரவைத் திறன் கொண்ட படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி நடைபெறும். அதற்கான முதல் நடவடிக்கையாக ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை ஜூலை மாதத்தில் தொடங்கும். ஆனால், நடப்பாண்டில் ஜூலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதமும் நிறைவடைந்து  செப்டம்பர் மாதம் பிறந்து விட்ட நிலையில், இன்று வரை ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் நடைமுறை தொடங்கவில்லை. அதனால் படாளம் ஆலையை மூட அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.</p><p>அதுமட்டுமின்றி, நிதிப்பற்றாக்குறை காரணமாக படாளம் சர்க்கரை ஆலையை நடப்பாண்டில் இயக்கும் முடிவை அரசு கைவிட்டு விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளும் இந்த ஆலையை நம்பியுள்ள 30 ஆயிரம் விவசாயிகளையும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் தொழிலாளர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் சர்க்கரைத் துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்த படாளம் சர்க்கரை ஆலையை மூட அரசு முடிவு செய்திருந்தால், அதற்கு ஒரே ஒரு நியாயமான காரணம் கூட கிடையாது. அதனால், அப்படி ஏதேனும் திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.</p><h2><strong>கரும்பு சாகுபடி பரப்பு குறைவு</strong></h2><p>படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திண்டிவனம்,  வானூர், மேல்மருவத்தூர், படாளம், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 10 கரும்பு கோட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 62,327 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு இந்த ஆலைக்கு வழங்கப்பட வேண்டும். அதன்படி, தொடக்கத்தில் ஆண்டுக்கு 90 ஆயிரம் டன் கரும்பு அரவையுடன் உற்பத்தியைத் தொடங்கிய படாளம் ஆலை, ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்து சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் கரும்பு அரவை படிப்படியாக குறைக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டில் படாளம் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.</p><p>அதன்பின் ஆலையை இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 2008-09 ஆம் ஆண்டுகளில்  பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் அடுத்தடுத்து இரு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பயனாக அப்போதிருந்த அரசு ரூ.34 கோடியில் ஆலையை சீரமைத்து 2010-ஆம் ஆண்டு முதல் இயக்கத் தொடங்கியது. அதன்பின் கரும்பு அரவை 2022-23ஆம் ஆண்டில் 2 லட்சம் டன் என்ற அளவைக் கடந்தது. அதன்பின், கடந்த இரு ஆண்டுகளாக கரும்பு அரவை  69,360 டன், 53,928 டன்னாக குறைந்தது. நடப்பாண்டில் குறைந்தது 67,500 டன் கரும்பு அரவை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தான், அதை கைவிட்டு ஆலையை மூட முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.</p><p>தமிழக அரசு நினைத்தால் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளில் 60 லட்சம் டன் வரை கரும்பு சாகுபடி செய்ய வைக்க முடியும். ஆனால், அதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகமும்,  அரசும் மேற்கொள்ளவில்லை. ஒரு சர்க்கரை ஆலையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடியை  அதிகரிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட ஆலையின் கரும்பு அலுவலர், துணை கரும்பு அலுவலர் ஆகியோரின் பணி ஆகும். ஆனால், இந்த இரு பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், கரும்பு சாகுபடியை எவ்வாறு அதிகரிக்க முடியும்? மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்தது தான் ஆலையின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.</p><p>மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாண் இயக்குனர், அலுவலக மேலாளர், தொழிலாளர் நல அதிகாரி, தலைமைப் பொறியாளர் ஆகிய 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆலையில் மொத்தம்  535 பணியிடங்கள் இருக்கும் போதிலும் கூட, மேற்கண்ட நால்வரைத் தவிர வேறு எவரும் பணியில் இல்லை. தேவையின் போது பயன்படுத்திக் கொள்ள 381 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே  ஓய்வு அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் அரவைக் காலத்திலும், இவர்களில்  244 பேர் அரவையில்லா காலத்திலும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இவர்களில் ஒருவர் கூட நடப்பாண்டில் பணிக்கு அழைக்கப்படவில்லை. அதனால் தான் படாளம் சர்க்கரை ஆலை முடங்கிக் கிடக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான், கடந்த ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையான டன்னுக்கு 3290.50 ரூபாயுடன், ஊக்கத்தொகையாக  ரூ.709.50 சேர்த்து  டன்னுக்கு ரூ.4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நடப்பாண்டில்   இது ரூ.4300 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இனிவரும் காலங்களில் கரும்பு சாகுபடி அதிகரிக்கும். இத்தகைய சூழலில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஆலையை மூட நினைப்பது நியாயமல்ல.</p><p>இந்திய சந்தையில் சர்க்கரைக்கான தேவை அதிகரித்து, 50% வரை விலை உயர்ந்துள்ள நிலையில், படாளம் ஆலைக்கு புத்துயிரூட்டப்பட்டால், அது அடுத்த சில ஆண்டுகளில் இலாபம் ஈட்டத் தொடங்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு பணியாளர்களின் தேவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் முதலில் ஒப்பந்த பணியாளர்களையும், பின்னர் படிப்படியாக நிரந்தர பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரித்து படாளம் ஆலை தொடர்ந்து இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>நாக தோஷம்... ஜலதோஷம்... சட்டசபையில் கலகல விவாதம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/naga-dosham-common-cold-lively-debate-in-the-assembly#comments</comments><guid isPermaLink="false">70e4947b-a7a3-49c4-84c3-b6f9c9b7d092</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:58:09 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:58:09.750Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>O Panneer Selvam,தமிழக சட்டசபை,TN assembly,ஓ பன்னீர்செல்வம்,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்- ஓ.பன்னீர்செல்வம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/x8h568pa/assembly0.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபையில்</a> இன்று வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. முதலில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்து வருகிறார். </p><p>தி.மு.க. எம்.எல்.ஏ.ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், </p><p>சட்டசபை ஆரம்பித்து அமைச்சர் பாம்பு கடி தொடர்பாக உரிய விளக்கத்தை அளித்து வருகிறார். இன்றைக்கு நான் அறிந்தது, பல்வேறு நிறைய தொகுதிகளில் பாம்பு கடி உள்ளதாக அறிகிறேன். அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். ஆகவே, பேரவை தலைவர் முன்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார். </p><p>இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் பூர்வமான அரசாக  மேற்கொண்டு இருக்கிறோம். தோஷம், பில்லி சூனியம் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுடைய தொகுதிக்கு தோஷம் நிவர்த்தி மேற்கொள்ளலாம். மாநில அளவில் அறிவியல் பூர்வமான முயற்சிகள் மட்டும் தான் நாம் எடுப்போம். ஜலதோஷம் தான் அதிகம் இருக்கு. பாம்பு கடி தோஷம் எல்லாம் இருக்குற மாதிரி நாம் கேள்விபடலை என்றார்.</p><p>இதனை தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் இந்த தோஷம் கழிப்பதற்கு உரியவர்களை அனுப்பி வைப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், தோஷத்தில் நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். </p><p>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக இன்று, தோஷம் பற்றி பேசிக்கிட்டு இருக்காங்க. நாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுக கூடியவர்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன் என்றார். </p><p>இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையாகவே ஜலதோஷத்தை பற்றி தான். எங்களுடைய துணை தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம். அவருக்கு 2 நாட்கள் உடல்நிலை சரியில்லை. அதற்கும் தீர்வு காணவேண்டும் என்றார். </p><p>இவ்வாறு விவாதம் நடைபெற்றது. </p>]]></content:encoded></item><item><title>தமிழக சட்டசபையில் சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் பதில்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-replies-to-members-questions-regarding-the-health-department-in-the-tamil-nadu-legislative-assembly#comments</comments><guid isPermaLink="false">982aaba5-0e13-4c0a-92e2-a952b20fb50a</guid><pubDate>Wed, 02 Sep 2026 04:32:19 +0000</pubDate><atom:updated>2026-09-02T04:32:19.358Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் அருண்ராஜ்,Minister Arunraj</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் அருண்ராஜ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/b0it186o/arunjar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/தமிழக-சட்டசபை">தமிழ்நாடு சட்டசபை</a> கூட்டம் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்கள் நலத்துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறுகிறது. மேலும் திருமருகல் பகுதியில் மாவுப்பூச்சி தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். </p><p>முதலில் வினாக்கள் விடை நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முதலில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு உள்ளன. ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் என்றார். </p><h2><strong>எம்எல்ஏ மோகன்</strong> </h2><p>பண்ருட்டி மருத்துவமனைக்கு Freezer Box மற்றும் CT Scan வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 Freezer Box மற்றும் தேவை இருப்பின் CT Scan வசதி ஏற்படுத்தி தரப்படும். கடலூர் மருத்துவமனைக்கு நிகராக பண்ருட்டி மருத்துவமனையை தரம் உயர்த்த ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். </p><p>மேலும், வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>தலைவாசல் தாலுகாவிற்கு புதிய மருத்துவமனை வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு தலைவாசல் தாலுகாவுக்கு மருத்துவமனை கட்டிக்கொடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>ரிஷிவந்தியத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படுமா? என்ற உறுப்பினர் கேள்விக்கு தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். </p><p>முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு, மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தம்- மாநகராட்சி தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/corporation-announcement-ac-bus-shelters-at-11-locations-in-chennai#comments</comments><guid isPermaLink="false">4c5f7599-0fa4-44f6-a407-25e52ffcf660</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:40:35 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:40:35.175Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Chennai Corporation,சென்னை மாநகராட்சி,AC Bus Station,ஏசி பஸ் நிறுத்தம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:title><media:description type="html"><![CDATA[ ஏ.சி. பஸ் நிறுத்தம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/mr9l1h1c/ACBusstand.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/சென்னை-மாநகராட்சி">சென்னை மாநகராட்சி</a> பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. </p><h2><strong>ஏ.சி. பஸ் நிறுத்தங்கள்</strong></h2><p>இந்த நிலையில், பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சென்னையில் 11 இடங்களில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் சமீரன், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.</p><p>சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. </p><p>இந்த பஸ் நிறுத்தங்களில், கண்காணிப்பு கேமராக்கள், வைபை வசதி, சாய்வுதளப் பாதை, பஸ் வழித்தடத் தகவல்கள், மின்விளக்கு வசதி, பாதுகாப்பான கண்ணாடி, சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்- அடுத்த மாதம் முதல் அமல்படுத்த முடிவு</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/hallmarking-silver-jewellery-may-become-mandatory-from-october#comments</comments><guid isPermaLink="false">48e05f7d-b562-4f61-a52c-05f0643f3ce4</guid><pubDate>Wed, 02 Sep 2026 03:31:21 +0000</pubDate><atom:updated>2026-09-02T03:31:21.254Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Silver,ஹால்மார்க்,வெள்ளி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:title><media:description type="html"><![CDATA[ வெள்ளி நகை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-02/581qi5pe/silver.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை வருகிற அக்டோபர் மாதம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</strong></em></p><h2><strong>ஹால்மார்க் முத்திரை</strong></h2><p>வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் வருகிற அக்டோபர் மாதம் முதல் <a href="https://www.maalaimalar.com/topic/வெள்ளி">வெள்ளி</a> நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல, வெள்ளி நகைகளுக்கும் ஒவ்வொரு கட்டமாக அமல்படுத்தப்பட இருக்கிறது.</p><p>இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (எச்.யு.ஐ.டி.) முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பான 'பி.ஐ.எஸ்.' 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் பி.ஐ.எஸ். அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது.</p><h2><strong>தூய்மை தரம்</strong></h2><p>2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விருப்பத்தின் அடிப்படையில் இருந்த இந்த திட்டத்தில் அதே ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி எச்.யு.ஐ.டி. இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, 'SILVER' என்ற வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்.யு.ஐ.டி. எண் இடம்பெறும். இதனை 'பி.ஐ.எஸ். கேர்' செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம்.</p><p>ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியைப் பெறுவதை உறுதி செய்யும். மேலும் தூய்மை உத்தரவாதத்தை வழங்கி சந்தைக்கு அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.</p><h2><strong>தண்டனை-அபராதம்</strong></h2><p>பி.ஐ.எஸ். சட்டம் 2016-ன் படி, விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அபராதம் (பொருட்களின் மதிப்பில் 5 மடங்கு வரை) விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் பெரும்பாலான நகைக் கடைகள் 92.5 சதவீத ஸ்டெர்லிங் வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை: அமைச்சர் வெங்கட்ரமணன் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:27:14.642Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/b48fqijv/venkatramanan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> <p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்காயம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p> <p>ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்க ஒரு கிலோ வீதம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>தனியார் மருத்துவ கல்லூரிகளில் நான்கரை ஆண்டுக்கு பதிலாக ஜந்தரை ஆண்டுக்கான கட்டணம் வசூல்.</p><p>பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார்</p><p>மருத்துவ கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது அதிக கட்டணம் வசூல் குறித்தஎந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.</p><p>அதிக கட்டணம் வசூலிக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம்</p><p>நெசவாளர்கள் நலனை கருத்தில் கொண்டு கூலி மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p><p>உயர்தர பட்டு ரகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காஞ்சிபுரத்தில் ரூ.2 கோடியில் பட்டு ஏற்றுமதி வர்த்தக மையம்.</p><p>கைத்தறி நெசவாளர் மின்செலவை குறைக்க 1,000 தனிநபர் கூடங்களில் 100% மானியத்தில் சூரிய ஒளி மின் தகடு அமைக்கப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>மாநிலம் முழுவதும் உள்ள கதர் அங்காடிகள் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.</p><p>கதர், பட்டு உற்பத்தியில் ஈடுபடும் நூற்பாளர், நெசவாளருக்கான நலநிதி பங்குத்தொகை 12-ல் இருந்து 16% ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் விஜய் பாலாஜி</p> <p>முதலீட்டு மானியம் கோரியவர்களுக்கு வழங்குவதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு, சென்சார் தொழில்நுட்பங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான மானியம் ரூ.30 கோடி ஒதுக்கீடு.</p><p>குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத்தொகை உதவித்தொகை திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் மதன்ராஜா </p><p>விருத்தாச்சலம் தொகுதியில் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தை தரம் உயர்த்த வேண்டும் - பிரேமலதா</p><p>பழைய ரக சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கைத்தறி நெசவிற்கு அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் - பிரேமலதா</p>]]></content:encoded></item><item><title>CMDA உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appoint-tvk-mla-revanth-charan-member-of-cmda#comments</comments><guid isPermaLink="false">b8b68a3e-3696-426b-b2dd-24c94f5655d2</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:26:19 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:26:19.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிஎம்டிஏ,CMDA,MLA Revanth Charan,எம்.எல்.ஏ. ரேவந்த் சரண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Revanth Charan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/vfjddraf/RevanthCharan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரவாயல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.</p><p>சென்னை பெருநகரப் பகுதிக்கான திட்டமிடல், வளர்ச்சிப் பணிகள், கட்டிட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ் வழங்குதல் இதன் முதன்மையான பணியாகும். தலைமையகம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.</p><p>தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை  வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.</p><p>1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/what-authority-does-the-dgp-have-to-ban-cockfighting-madras-high-court-asks#comments</comments><guid isPermaLink="false">05f4f282-9fcc-41fb-8e6f-3908ed72e18f</guid><pubDate>Tue, 01 Sep 2026 16:01:34 +0000</pubDate><atom:updated>2026-09-01T16:01:34.133Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,தமிழ்நாடு காவல்துறை,Tamil Nadu Police,சேவல் சண்டை,Cockfighting</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/49bjg7m4/New-Project-2026-09-01T213111.641.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சேவல் சண்டைக்கு தடை விதிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><h2>சேவல் சண்டை</h2><p>தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்தார். </p><p>இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோடைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p>அந்த மனுவில், “கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது, ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயங்கள் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். </p><p>போலீசார் விதிக்கும் நிபந்தனைகளப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்டம் இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. </p><p>எனவே, சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.</p><h2>என்ன அதிகாரம்?</h2><p>இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.</p><p>இதை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது? </p><p>போலீசுக்கு எத்தனையோ பணிகள் இருக்கும்போது, ஆடு சண்டை எங்கே நடக்கிறது? சேவல் சண்டை எங்கே நடக்கிறது? என கண்காணிப்பதுதான் வேலையா? என கேள்வி எழுப்பினார். </p><p>இதையடுத்து இந்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். </p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இரண்டாம் கருவறை: அமைச்சர் பர்வேஸ் உருக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-parvez-calls-cm-vijay-second-womb#comments</comments><guid isPermaLink="false">97ea5aa1-07db-4f52-a1e2-a60d0554cdb5</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:40:47 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:40:47.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் பர்வேஸ்,TN Minister Parvesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமைச்சர் பர்வேஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7x5wqjtf/MinisterPravesh.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டமன்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிய பின்னர், பதிலுரை அளித்தார். அப்போது அவர் முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசினார்.</p><h2>அமைச்சர் பர்வேஸ் பேசியதாவது:-</h2><p>புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர் ஆன இந்த எளியவனை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர வைத்த இரண்டாம் கருவறையாம் தளபதிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.</p><p>எல்லோரும் உயிலை எழுதி தருவார்கள். நான் அவருக்கு என் உயிரையே எழுதி தருகிறேன். விஜய்தான் எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம்</p><p>Ever Rest இல்லாமல் உழைக்கும் Everest ஆக உயர்ந்து நிற்கிறார் முதல்வர்.</p><p>காலத்தை குறிப்பிட கி.மு., கி.பி. சொல்வார்கள். அரசியலில் இனி விஜய்க்கு முன், விஜய்க்கு பின்  (வி.மு., வி.பி.,) என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழலும், லஞ்சமும் விஜயின் சாட்டை அடிக்கு பயந்து தலை தெறித்து ஓடிவிட்டது.</p><p>இவ்வாறு அமைச்சர் பர்வேஸ் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/no-provision-to-withdraw-resignation-by-election-is-the-only-solution-high-court-refuses-to-accept-isakki-subbiahs-petition#comments</comments><guid isPermaLink="false">88802761-962c-4915-8f45-ac358650a2b6</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:27:13 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:27:13.084Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Resignation,Ambasamudram,அம்பாசமுத்திரம்,இசக்கி சுப்பையா,ராஜினாமா,Esakki Subaya</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை... இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு - இசக்கி சுப்பையாவின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suasbgy7/New-Project-2026-09-01T205359.421.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டமன்றப் பேரவை விதிகளின்படி, ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட ராஜினாமா கடிதத்தை  திரும்பப் பெறுவதற்கு எந்தவொரு விதியும் இல்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p>முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டாம் என்றும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதாகவும் பேரவைச் செயலரிடம் கடிதம் அளித்திருந்த நிலையில் இந்த விளக்கமும், அறிவிப்பும் வெளியாகியுள்ளது.</p><h2>இடைத்தேர்தலே தீர்வு</h2><p>இசக்கி சுப்பையா பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது அங்கு இடைத்தேர்தல் நடத்துவது மட்டுமே சட்டப்படியான ஒரே தீர்வு எனச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.</p><h2><strong>சபாநாயகரின் பதில்</strong></h2><p>இந்த விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர் தரப்பிலிருந்து இசக்கி சுப்பையாவிற்கு அதிகாரப்பூர்வப் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளது.</p><h2>இசக்கி சுப்பையாவின் மறுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு</h2><p>இதற்கிடையே, அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. </p><p>அப்போது தனது ராஜினாமா மனுவை திரும்பப் பெறுவதாகவும், இடைத்தேர்தல் வரும்வரை தனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் இசக்கி சுப்பையா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. </p><p>இதுதொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர்.</p><h2>வழக்கு ஒத்திவைப்பு</h2><p>தொடர்ந்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மலைவாழ் மக்களுக்கு நீங்கள் செய்த வேலை எந்த லட்சணத்துல இருக்கு... திமுக, அதிமுகவை வெளுத்துவிட்ட அமைச்சர் வன்னி அரசு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-vanni-arasu-lashes-out-at-dmk-and-aiadmk-hill-tribes-welfare-issues#comments</comments><guid isPermaLink="false">cd2cb305-f51f-42b3-8196-4d6166ffbeae</guid><pubDate>Tue, 01 Sep 2026 15:08:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T15:08:55.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழக அரசு,தமிழக சட்டசபை,TN assembly,vanni arasu,வன்னி அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vanni Arasu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/p601onpi/VanniArasu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thangam-thennarasu-clarifies-congress-allegation-land-not-provided-for-kamarajar-memorial-at-marina">தமிழக சட்டசபை</a>யில் இன்றைய மானியக் கோரிக்கையின்போது மலைவாழ் மக்கள் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவும் ஆன எ.வ. வேலு பேசும்போது "மலைவாழ் பகுதி என்பது நீண்ட நெடிய ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அதன்பின் அரசு வந்தபோதுதான் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.</p><h2>திமுக-தான் அதிகமாக செய்தது</h2><p>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுனாமரத்தூர் என்ற மலை உள்ளது. அங்கு 200 கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையிலும் அதுபோன்ற எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. சில நேரங்களில் போக்குவரத்திற்குக் கூட வசதி இல்லை. ஒத்தையடி பாதை கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் உண்டு.</p><p>அந்தந்த ஆட்சிகள் வந்தபோதுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவர்கள் சொல்கிற பகுதி முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அங்கு காலம் காலமாக இருந்தார்கள். உழுதார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தம் கிடையாது. இப்படிப்பட்ட நிலைதான்.</p><p>கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டபோது, நான் நேரடியாக சென்று 13 ஆயிரம் பேருக்கு நில உரிமை பட்டா கொடுத்திருக்கிறேன். அதனால் முழுமை அடைந்ததாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று செய்ய வேண்டியுள்ளது. நாங்களும் ஜாதி சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கொடுத்தோம். தேவை இருக்கிறது. நீங்களும் முடிக்க முடியாது. மலைப்பகுதியில் அவ்வளவு கிராமங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியில் முடிந்த அளவிற்கு சொய்திருக்கிறோம். அதிகம் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான்" என்றார்.</p><p>அதன்பின் "மலைாவாழ் மக்கள் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேர்தான். 5 வருடத்திற்குள் கொடுக்க முடியும். திரும்ப திரும்ப சொல்கிறேன். நான் குறைகளை சொல்லவில்லை. போதாமைகளை சொல்கிறேன்" என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.</p><h2>அதிமுக அமைச்சர் கால் படாத இடமே இல்லை</h2><p>பின்னர் அதிமுக உறுப்பினர் எழுந்து "2011 முதல் 2016 வரை அதிமுக அமைச்சர் காலடி படாத இடமே மலையில் கிடையாது. மலைக்கு தேவையான அனைத்தையும் அதிமுக செய்து கொடுத்தது. இந்த அளவிற்காவது இருப்பதற்கு அம்மாவின் அதிமுகதான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பீல்டிங்கிலும் அம்மா பெயரும், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் பெயரும் இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.</p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p>உடனே வன்னி அரசு "செய்தியை திரித்தி திருப்பு வாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள். கீழ் தீவனூர், மேல் தீவனூரில் இப்போதும் நீங்கள் சென்று பார்க்கலாம்., 10 கி.மீ. சாலைகள் இல்லை. நாங்கள் நடந்து சென்றோம். ஆட்சியர் உள்ளிட்டோர் வந்தார்கள். இன்றும் சாலை இல்லாத கிராமம் இருக்கு.</p><p>இப்படிப்பட்ட ஒரு கிராமத்தைதான் நீங்கள் தத்தெடுத்திருக்கீங்க, நீங்கள் வேலை பார்த்திருக்கீங்க, அப்படின்னா, என்ன லட்சணத்தில் இருக்குன்னு இந்த இடத்தில் நான் சொல்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நாங்கள் செய்தோம், நீங்கள் செய்தோம் என்பதல்ல, தேவைப் பற்றி சொல்கிறோம். கோரிக்கைகள் பற்றி சொல்கிறோம். மக்கள் வலியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வலியை பற்றி பேசாமல், செய்தோம் என்று சொன்னால், சாவல் விடுகிறேன். நீங்க வாங்க, மேல் தூவனூர், கீழ் தூவனூரில் சாலை இல்லை. நாங்கள் போட சொல்லியிருக்கிறோம். தொடங்கியிருக்கிறோம்." என்றார்.</p>]]></content:encoded></item><item><title>அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்புக்கு எதிரான வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-against-acceptance-aiadmk-mlas-resignations-verdict-reserved-without-a-date#comments</comments><guid isPermaLink="false">0a5355db-679c-415a-b4db-154c0f053cea</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:24:27 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:24:27.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சென்னை உயர்நீதிமன்றம்,chennai highcourt</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சென்னை உயர்நீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/r93dftkk/ChennaiHighcourt001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அதிமுக-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.</p><p>த.வெ.க. தலைவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்போது கொறடா உத்தரவை மீறி, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆனால், இந்த விசாரணை என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. அரசியல் சாசன கடமை. அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.</p><p>ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக-வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><h2>அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை</h2><p>ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதி நீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டினர்.</p><p>சபாநாயகர் தரப்பில் ஆஜரான சி.எஸ். வைத்தியநாதன் ராஜினாமா ஏற்றுக் கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகிவிடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும் எனக் குறிப்பிட்டார்.</p><h2>சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை</h2><p>சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும்தான் விசாரிக்க முடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதி நீக்க நடவடிக்கையில்தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும்போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாக்குவாதம் மற்றும் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. தரப்பிலான வாக்குவாதம் ஆகியவற்றிக்குப் பிறகு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sterlite-shooting-firm-action-needed-against-officials-responsible-for-the-killings-cpm-insists#comments</comments><guid isPermaLink="false">e5dde014-c9c2-4814-8800-5dffb8bc7850</guid><pubDate>Tue, 01 Sep 2026 13:02:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T13:02:00.936Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,சிபிஎம்,Thoothukudi Sterlite firing case,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை - சிபிஎம் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/v19it82n/New-Project-2026-09-01T182841.257.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவ வழக்கில் காவல்துறை அதிகாரிகள்மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக தமிழ்நாடு அரசு நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. </p><p>இந்நிலையில் கொலைக்கு காரணமான அதிகாரிகள்மீது உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><p>“2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக கொல்லப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். </p><p>இதற்கென அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி தனது பரிந்துரையை அரசுக்கு அளித்தது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் இதற்கு காரணமானவர்கள் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். </p><p>அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கையும், குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. </p><p>31.08.2026 அன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள கருத்துக்கள் கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது. இவர்களில் யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நேற்றைய நீதிமன்ற நிகழ்வின் வெளிப்பாடாகும்.</p><p>இது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவியாக அரசு அமைப்புகள் செயல்படும் என்பதற்கான மிக வெளிப்படையான நிகழ்வாகும். அந்த வகையில் திமுகவும், தவெகவும் அதிகாரிகளுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்துள்ளன. </p><p>சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்து மக்கள் சுட்டிக்காட்டியபோதே, ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய கொடூரம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. </p><p>பன்னாட்டு முதலாளி ஒருவரின் நலனை பாதுகாப்பதற்காகவே ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. </p><p>இத்தகைய நிலைமை நீடிப்பது நிர்வாகத்தாலும், நீதித்துறையாலும், அரசாங்கத்தாலும் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காது என்று குடிமக்களை நிராதரவாக நிற்க வைக்கும். ஜனநாயக நாட்டில் இத்தகைய நிலையை அரசாங்கம் எடுத்திருப்பது முற்றிலும் ஏற்கத் தக்கதல்ல. </p><p>எனவே, தமிழ்நாடு அரசு முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, 13 பேர் கொலைக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து  சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், </p><p>உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கிரிப்டோகரன்சி மோசடி: முதலீட்டாளர்கள் நெருக்கடியால் திண்டுக்கலில் 25 வயது வாலிபர் தற்கொலை; பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cryptocurrency-fraud-investor-crisis-25-year-old-man-suicide-dindigul-case-moved-to-economic-offences-wing#comments</comments><guid isPermaLink="false">4900ec49-ef34-4636-ad7f-9d64f29b72c9</guid><pubDate>Tue, 01 Sep 2026 12:26:49 +0000</pubDate><atom:updated>2026-09-01T12:26:49.657Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Dindigul,திண்டுக்கல்,cryptocurrency scam,கிரிப்டோகரன்சி மோசடி,Multi-Level Marketing,FQL Investment Trading,பொருளாதார குற்றப்பிரிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cryptocurrency scam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/78lo14gr/raja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பல அடுக்கு சந்தைப்படுத்தல் பெயரில் நடைபெற்ற பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கில், முதலீடு செய்தவர்களின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான ராஜா என்ற 25 வயது வாலிபர் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>40 நா<strong>ட்களில் பண</strong>ம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை</h2><p>மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களாக 'எஃப்.க்யூ.எல் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-rs-1000-crore-financial-company-fraud-youth-commits-suicide-the-police-having-failed-to-prevent-it-must-bear-responsibility">இன்வெஸ்ட்மென்ட் டிரேடிங்</a>', 'எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலி' மற்றும் 'வி.ஜி இன்வெஸ்ட்மென்ட் குரூப் சிண்டிகேட்' ஆகிய அமைப்புகள் இயங்கி வந்துள்ளன. இதில் முதலீடு செய்தால் தினமும் அதிகபட்ச லாபம் கிடைக்கும் என்றும், 40 முதல் 45 நாட்களுக்குள் முதலீட்டுத் தொகை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் உள்ளூர் முகவர்கள் மூலம் மக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டுள்ளது.</p><h2>கிரிப்டோ <strong>வாலட்க</strong>ளுக்கு மாற்றப்பட்ட பணம்</h2><p>பொதுமக்களிடம் இருந்து ரொக்கம், கூகுள் பே மற்றும் யுபிஐ மூலமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதி 'டெதர்'  எனப்படும் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு, சந்தேகத்திற்குரிய எஃப்.க்யூ.எல் டிஜிட்டல் வாலட்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, செயலி மூலம் பணத்தை எடுக்க முடியாமல் முடங்கியது. கூடுதல் பணம் செலுத்தினால்தான் கணக்கை இயக்க முடியும் எனக் கூறிய நிறுவனத்தினர், திடீரென செயலியை முற்றிலுமாக முடக்கிவிட்டு தலைமறைவாகினர்.</p><h2>பணத்தை இ<strong>ழந்தவர்கள் முற்</strong>றுகை</h2><p>இந்தத் திட்டத்தை நம்பி தனது பகுதி மக்களை பெருமளவில் முதலீடு செய்ய தூண்டியவர்  ராஜா நிதி நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு ராஜாவின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். முதலீட்டாளர்களின் தொந்தரவைத் தாங்க முடியாமலும், பணத்தைத் திரும்பத் தர வழியில்லாமலும் மன உலைச்சலுக்கு ஆளான ராஜா, தனது வீட்டிலேயே உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட பிறகும், அவரிடம் கொடுத்த பணம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அவரது வீட்டின் முன் திரண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.</p><h2>பொருளா<strong>தார குற்றப்பிரிவு</strong>க்கு விசாரணை மாற்றம்</h2><p>பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் திரண்டு புகார்களை அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் ரூ.25 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள், 'பைனான்ஸ்' வாலட்கள் மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகள் இந்த மோசடியில் இருப்பதால், வழக்கு விசாரணையை தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைவர் டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.</p><h2><strong>21 பேர் கைது</strong></h2><p>இவ்வழக்கு தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முதன்மை அமைப்பாளர் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முக்கிய நபர் அமெரிக்காவில் இருந்து அண்மையில் இந்தியா திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு, கிரிப்டோ வாலட்களை முடக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vijay-could-become-us-president-instead-of-trump-edappadi-palaniswami#comments</comments><guid isPermaLink="false">1f4f14f3-8c6b-4bf7-a382-3415522374d1</guid><pubDate>Tue, 01 Sep 2026 11:44:35 +0000</pubDate><atom:updated>2026-09-01T11:44:35.109Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,President Donald Trump,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ட்ரம்புக்கு பதில் விஜய் அமெரிக்க அதிபராகலாம்’ - எடப்பாடி பழனிசாமி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/z05srh8o/New-Project-2026-09-01T165005.394.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர்.,</p><p>“அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது. தவெக ஆட்சிக்கு வந்த இரண்டு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் திமுக ஆட்சியில் (மகளிருக்கு இலவசப் பேருந்து) கொண்டுவரப்பட்டது. </p><h2>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான்</h2><p>திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி. கட்சி நிதி உண்மையா, பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும். எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும். ஊழல் என்றால் ஆதாரத்தை காட்டி நிருபீக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுகிறார்கள்.</p><p>ஊழல் அதிகமாக இருப்பதே தவெக ஆட்சியில்தான். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றியுள்ளனர். அப்போது ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது? இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக்கூற முடியும்?</p><h2>தமிழ்நாட்டில் ரீல்விடலாம், அமெரிக்காவில் முடியாது</h2><p>இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால், உடனே ரீல்ஸ். ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுகிறார்கள். ரீல்ஸ் (வீடியோ) போட்டே வண்டியை ஓட்டுகிறார்கள், ரியல் (உண்மை) எதுவும் இல்லை. </p><p>அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், தவறில்லை. ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை. அது அவருடைய விருப்பம். இங்கு ரீல் விடலாம், அங்கு அது நடக்காது.</p><p>தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம். தவெக ஆட்சி செல்லும்போக்கை பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே தெரியும். எவ்வளவு போராட்டங்கள்? அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்ந்துள்ளது. </p><p>விலை உயர்வை கட்டுபடுத்த அரசு என்ன செய்தது? ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் கையில் இல்லை? கடன் மட்டுமே வாங்குகிறது, வருவாய்க்கு வழி இல்லை.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item></channel></rss>